உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே அவலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-
வளங்கனி–சீதாபிராட்டி / இளங்கனி-பரகால நாயகி
————————————————————————
வியாக்யானம் –
உளம் கனிந்து இருக்கும்
உள்ளமானது இங்கனே பக்வமாய்
அகவாயில் ஓடுகிறது வாய் விட மாட்டாதே இருக்கும் –
ஹிருதயம் பரி பக்குவமாகையாது என் என்னில் –
புஜிக்க கடவ அவன் புஜித்தது இல்லை யாகில் ஆஸ்ரயம் இல்லையாய் இருக்கை –
உன்னையே பிதற்றும் –
இது தான் பாவ பந்தத்தாலேயோ -யென்று இருந்தாள் இவள் வாய் விடும் அளவும் திருத் தாயார் –
(வாய் விட்ட பின்பு தான் ஒருதலைக்காதல் என்று அறிந்தாள்)
உம்முடைய பக்கலிலும் ஒரு அபிசந்தி இன்றிக்கே
ஜாமதக்ய யஸ்ய ஜல்பத -என்கிறபடி
அடைவு கேடாக சொல்லா நின்றாள் –
(பீஷ்மர் அர்ஜுனன் இடமும் துரியோதனன் இடம் சொல்லும் வார்த்தை -பரசு ராமர் அடைவு கேடாக சொல்லக் கேட்டுள்ளேன்)
ஒரு அபிசந்தி பூர்வகமாக வந்ததாகில் அடைவு பட்டு இருக்கும் இறே-
உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்-
நம்மையும் ஒரு கால் சொல்லாளே-யென்னும் நசை அறுத்தாள்-
அவனுக்காம்படி இவ்வளவாக்கினார் பக்கலிலே யாதல்
அவன் பக்கலிலே யாதல் இறே
பாவ பந்தம் இவளுக்கு –
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
இவ்வளவான பிரேமத்துக்கு அவன் கிருஷி
பண்ணின படியைச் சொல்லி வாய் வெருவும் –
சம்ருத்தமான பழங்களை உடைத்தாய்
பொழிலாலே சூழப்பட்ட திருமலையிலே
ஆர்யர்கள் இழந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு
முகம் கொடுத்து நிற்கிற
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை அனுசந்தித்து
பின்னை வாசனையே உபாத்யாயராக சொல்லுமது ஒழிய
உணர்த்தியுடன் சொல்லுவது ஒரு வார்த்தையும் இல்லை –
வாய் வெருவும் –
விசிந்தயா வாசா ப்ருவதீதமேவ
முற்பட அனுசந்தியா
பின்னை அது தானும் மாட்டாதே
வாசனையாலே சில சொல்லும் அத்தனை-
களங்கனி முறுவல்
பிள்ளாய் -ஆர் வாய் வெருவ கடவத்தை
ஆர் வாய் வெருவுகிறார்
சீதேதி சாருததீம் -யென்று அவன் இறே வாய் வெருவுவான்-
எதிர் தலையை தோற்பித்தோம் ஆக வேணும் யென்று
இருக்கிறவர்களாய்-விலஷணமாய்-பக்வமாய்
தோற்றினது போலே யாயிற்று -முறுவல் இருப்பது
அஸ்மி-அஸ்மின் -மயா தார்த்தம்-உதார சீலா-சிலாதலே பூர்வம்- ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா-
உபோபவிஷ்டா-காந்த ஸ்மிதா -த்வாமாஹா-பீதா பஹு வாக்ய ஜாதம்
அஸ்மி –
முன்பு தாமும் பிராட்டியுமும் ஜல க்ரீடாதிகள் பண்ணி
ரம்யமாய் பரிமாறிற்று ஓர் இடத்தில்
பிராட்டியைப் பிரிந்து தாமும் இளைய பெருமாளுமாய்
தேடிக் கொடு வாரா நிற்கச் செய்தே
அவ்விடத்தைக் கண்டு இளைய பெருமாளைப் பார்த்து
அருளிச் செய்கிறார் –
அஸ்மின் –
இப்படி வெறும் தரையாய் இருக்கிற இடத்திலே காண்
அன்று நாம் எடுப்பு எடுத்தது –
மயா தார்த்தம் -ப்ரணய தாரையிலே தம்மைத் தாம் சால மதித்து இறே இருப்பது
நாமும் கூட காண வந்த சோழரோபாதியாக கடக்க நிற்கும்படி
அவளுடைய அளவுடைமையும் விதக்த்தமாக பரிமாறின
படியும் காண் –
உதார சீலா -படை வீட்டில் இருந்த நாள்
மாமனார் மாமியாருக்கு கூசி
சிறிது படி விடுவாரோபாதி அளவு பட வாயிற்று போகம் செல்லுவது –
இப்போது அவ்வளவு இன்றிகே ஏகாந்தமான ஸ்தலம் ஆகையாலே
தன்னை முற்றூட்டாக சர்வ ஸ்வதானம் பண்ணிக் கொண்டு
இருந்தால் ஆயிற்று –
சிலாதலே பூர்வம் -ஜலக்ரீடை பண்ணுகறதோர் இடத்தில்
சிலா தலமாய் இளைத்த இடத்திலே அதிலே ஏறுவதாக பெருமாள்
முற்கோலிக் கணிசிக்க
ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா -என்கிற அதிலும் ஒரு
சம்பந்தம் உண்டு இறே இவளுக்கு –
அத்தை இவருடைய இங்கிதாதிகளைக் கொண்டு அறிந்து
இவரை இளைப்பிக்க வேண்டும் யென்று பார்த்து
பெருமாள் ஏறுவதாக கணிசித்த துறையை
அடைத்துக் கொண்டு இருந்தாள்-
உபோபவிஷ்டா
அப்படியேயாய் இருக்கும் இறே எங்கும் –
காந்த ஸ்மிதா –
வெறும் புறத்திலே தாமே துவக்க வல்லவள்
முறுவலைச் சேர்த்தாப் போலே ஆயிற்று முகம் தான் இருப்பது
அதுக்கு மேலே அப்போது பிறந்த வெற்றியாலே
ஜாத ஹாசை யானாள் யாயிற்று
த்வாமாஹா-
இதுக்கு முன்பு துடங்கின கார்யத்தில்
தலைக் கட்டாதே மீளுமது இல்லை இறே பெருமாள் –
இது ஒன்றும் தலைக் கட்டப் பெற்றது இல்லை –
அத்தாலே லஜ்ஜித்து கவிழ தலை இட்டார் பெருமாள் –
அவரை விடா இவரைப் போரப் பொலிய கொண்டாடுகிற இளைய பெருமாள் முகத்தைப் பார்த்தாள்-
பாரீரோ தம்பியார் -நீங்கள் நினைத்தது எல்லாம் தலைக் கட்டினி கோள் இறே –
நீங்கள் வலிய வல்ல ஆண் பிள்ளைகள்
நாங்கள் பெண் பெண்டுகள்
நீங்கள் வேட்டைக்கும் வினைக்கும் போய் வ்யாபரிக்குமவர்கள்
நாங்கள் வீடு விட்டு புறப்பட்டு அறியோம்
உங்களுக்கு நினைத்த வகைகள் எல்லாம் தலைக் கட்டலாம் இறே
உங்கள் தமையனார் வென்றார் இறே -யென்று
பஹூ முகமாகக் கொண்டு வார்த்தை அருளிச் செய்தாள் ஆயிற்று-
இப்படி பெருமாள் புலம்பினத்தை அறிவோம் இவள் அன்றோ புலம்புகிறாள்-
காரிகை –
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –
பெரிது இத்யாதி –
கவலையும் அவலமும் ஆகிறது
மானசமையும் சாரீரமாயும் வரும் வ்யதை-
கவலை யாகிறது நெஞ்சில் தடுமாற்றம் –
அவலம் ஆகிறது வடிவைப் பேணாமை –
இளங்கனி –
நீர் வில்லை முறித்துச் சென்று கைப்பிடித்த
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளிலும் இளையவள் இவள் –
உம்மைப் பிரிந்தால் அவளைப் போலே
சமா த்வாதச தத்ராஹம் –அமானுஷன் போகான் -யென்று ஆசை இட்டு தரிக்க வல்லவள் அன்று
இப்படி பருவம் இளையாள் ஆகில்
முன்பே சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தம் ஆகில் அன்றோ
இப்படி படக் கடவது என்றில் –
இயற்கையிலே அவள் கலந்து வைக்குமே –
அத்தை தாயார் அறியாளே-
என் இத்யாதி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக
ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே
விட்டுக் கொண்டு இருந்தால் போலே
இவளைப் பெறுகைகாக
திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர்
இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –
———————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்