சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக் கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே -2-7-3-
——————————————————–
வியாக்யானம் –
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் –
(எங்களால் நோக்கும் காலம் கழிந்தது )வாளா நோக்கும் காலம் எல்லை கழிந்தது
பழகப் புதைத்து ஆறி குளிர்ந்த சாந்தும்
முத்தாராமும் சந்தனக் குழம்பும் –
தட முலைக் கணியிலும் தழலாம்-
நிதானம் அறியாதே நாம் இருந்து
பரிஹாரம் பண்ணுகை யாவது என் என்று
முன்பு எல்லாரும் கை வாங்கி இருப்பார்கள் –
பின்னையும் இவள் பக்கல் ஒரு வாசி இன்றிக்கே நோவு படக் காண்கையாலே
இனி நாட்டார் செய்யுமவற்றை ஆகிலும்
செய்து பார்ப்போம் என்று இவற்றைக் கொண்டு
சிசு ரோபசாரம் பண்ணப் புகுவர்கள் –
புக்கால் அவை தானே இந்தனளமாய் வேவா நிற்கும் –
பூண் என்றால்
முத்தாரம் தோற்றுமோ என்னில்
ஆசுவாச கரமாய் பண்ணுகிறது ஆகையாலே
முத்தாரமாய் இருக்கும் இறே-
சாந்து
வெவ்விய பதார்த்தம் அன்றோ என்னில்
அதுக்காகா இறே ஆறிக் குளிர்ந்து என்றது
சந்தனம்-
இது சம்சார மக்களோடு கூடியது என்று தோற்றுமோ என்னில்
சிசிரோ உபசாரத்துக்கு சொல்லுகிறது ஆகையால்
வைரமும் வைரத்தோலும் ஒன்றாக வேமா போல் ஆயிற்று
இவை எல்லாம் ஒன்றாக வேவும்படி
உலர்ந்த விறகிலே நெருப்பைக் கொளுத்தினால் போலே
விரஹ க்ருரூமான சரீரத்திலே
இவை பட்ட வாறே பற்றி எரியா நின்றது ஆயிற்று-
பரதாழ்வான் விரஹ தாபத்தால் வெந்து இருப்பதால் சரயு காய்ந்து போகும் படி இருக்குமே என்றது போல்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் –
அப்போது தோன்றின சந்தரன் உடைய இள நிலா ஒளி பட
அத்தாலே மெலியா நின்றாள் –
நிலா சுடப் புக்கால் விலக்கலாவது ஓன்று இல்லையே –
இனி தான் கூடி இருந்த போது-முகிழ்த்த முகிழ் நிலா -பெரிய திரு மடல் -என்று அநு கூலமாம் இறே –
பொரு கடல் புலம்பிலும் புலம்பும் –
திரையொடு திரை பொரா நின்றுள்ள
கடல் கோஷிக்க புக்கவாறே
எதிரே ஒரு கடல் ஸ்பர்த்தித்து கூப்பிடுமா போலே
தம்மோடு கூப்பிடா நிற்கும் –
மாந்தளிர் மேனி வண்ணமும் –
மாந்தளிர் உடைய நிறம் போலே இருக்கிற நிறமும்
விவரணமாகா நின்றது ஆகா நின்றது –
வளைகளும் இறை நில்லா-
ஆகாசத்தில் நிற்பது ஒரு வளை இல்லையே
சைதில்யம் உபாயாந்த சுரேஷூ யாச்யபி -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -பக்தியால் -விரஹ தாபத்தால் )
இன்னம் இவற்றில் அவனுக்கு வாசி உண்டு
அவன் பிரியேன் என்று பிரிவை உணர்த்தி யாகிலும் போம் இறே
இவையோ சடக்கெட போய்க் கொடு நின்றது
என் தன் ஏந்திழை இவளுக்கு-
என்னுடையவள்- தரிக்கப்பட்ட ஆபரணத்தை உடையவள் –
இவள் ஆபரணங்களால் அலங்க்ருதையாய்
இருக்கும் இருப்பைக் கண்டு கொண்டு இருக்குமதே தாரகமாக
காணுமவள் தான் நினைத்து இருப்பது –
இவள் ஆபரணம் பூண்டு இருக்கும் இருப்பை
கண்டு அனுபவிக்க எனக்கு இவளோட்டை பர்யவசிக்குமா போலே இருந்தது –
என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
நை வார்த்தைர் ந ச பூஷணை-( ராக்ஷஸிகள் மத்யம் சீதாப்பிராட்டி புலம்பல் ) -என்னும்படி பண்ணுகைக்குகோ
நீ இங்கே வந்து இருக்கிறது
ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது
———————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply