ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

புலம்பலில் விவரணம் இதில்

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் ஒண் சுடர் துயின்றதால் யென்னும்
ஆழி யும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிதாம்
தோழியோ வென்னும் துணை முலை யரக்கும் சொல்லுமின் என் செய்கேன் யென்னும்
ஏழை என் பொன்னுக்கு  என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-4-

ஏழை என் பொன்னுக்கு-அதி சபலையான ஸ்லாக்யையான ஏன் பெண் விஷயத்தில்

——————————————-

வியாக்யானம் –

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் –
ஒரு கல்பம் ஆகிலும் சம்ஹ்ருதமாய்க் கிடக்கிறது
பாடாற்றலாம் அந் நாழிகைகளை-
காவலாய் இருக்கிறது இல்லை –
நேதி நேதி என்கை ஒழிய -இன்னத்தொடு ஒக்கும் என்று சொல்ல ஒண்ணாது
ஊழி பெருத்து நாழிகை சிறுத்து இறுகக் கடவதான
மரியாதை குலைந்தது –

ஒண் சுடர் துயின்றதால் யென்னும் –
நாழிகையை அளந்து தருகிற ஆதித்யனும்
போய் முடிந்தான் என்கிறாள் –
கல்பத்திலும் உப சம்ஹ்ருதமாம் பதார்த்தங்கள் உடன்
சம்ஹர்யன் ஆனான் இறே ஆதித்யன் –
இப்போது அங்கன் இன்றிக்கே உளனாய்
சஞ்சரியா நிற்கச் செய்தேயும்
கார்யம் பிறக்க காண்கிறிலோம்-
தன்னுடைய சந்நிதியாலே ராத்ரி வியசனத்து அடைய போக்கிக் கொடு வந்து தோற்றக் கடவ
ஆதித்யனும் வந்து தோற்று கிறிலன்-பீஷோதேதி சூர்ய-என்கிற ஈஸ்வர ஆஞ்ஞை குலைந்தது போலே –
நித்ரையை நினைத்தல்
தீர்க்க நித்ரையை நினைத்தல்

ஆழியும் புலம்பும் –
நம்மில் சிறியது பாதகமாகா நிற்க
நாம் தான் பேசாது இருக்கிறது என்
என்று கடலானது பாதகமாய்ப் புக்கது –
பேர் அளவுடைய கடலானது தைர்ய பங்கம் பிறந்து புலம்புகிறபடி –
பேர் அளவுடையவன் தன்னளவிலே தைர்ய பங்கம் பிறந்து
பேசும் பேச்சுக்கும் ஷமரமாய் நலியா நின்றதாயிற்று –
(கடல் போன்ற கம்பீரம் உள்ள ராமன் புலம்பினது போல் )

அன்றிலும் உறங்கா –
அன்றில் அடைய உறங்காமல்
சம்ஸ்லேஷ சமயத்தில்
நித்ரா விரஹத்துக்கு ஸ்மாரகமாக நின்றது ஆயிற்று –

தென்றலும் தீயினில் கொடிதாம் –
தென்றலின் குளிர்த்தி யானது
நாயகனுடைய சம்ஸ்லேஷத்துக்கு–காந்தனுடைய கர ஸ்பர்சத்துக்கு -ஸ்மாரகமாய் பாதகமாக நின்றது
தென்றல் உடைய வெம்மை ஆற்ற வேண்டில்
கேவல அக்னியில் பொகட்டு ஆற்ற வேண்டும்படி நின்றது –

தோழியோ வென்னும் –
தாம் ஓன்று பாதகம் ஆனால்
அம்மே என்கைக்கு நான் பாக்கியம் பண்ணிற்றிலேன்
அவனோடு சேரவே சகல பதார்த்தங்களும் அனுகூலமாய் குட நீர் வார்க்கும் -காண் –
ஊர் பகையாம் படி பண்ணினாயே -பாவீ

இவள் தோழியோ என்னப் பார்த்து இராதே பருவம்
துணை முலை யரக்கும்-
முலைகள் ஆனவை என்னுடைய விஷயத்தை நீ காட்டு என்று
நலியப் புக்கவாறே
ஷாம காலத்தில் பிரஜைகள் சோறு சோறு என்றால்
வாய் வாய் என்பாரைப் போலே
முலை அரக்காய் நிற்கும் ஆயிற்று-

முன்னிருந்து மூக்கின்று –
காக்கக் கடவை பருவத்தை கழியா நின்றதாயிற்று
பருவம் கழிதானால் பின்னை இவள் முதுகிலே ஆனால் ஆகாதோ –

சொல்லுமின் என் செய்கேன் யென்னும் –
தென்றல் துடக்கமான பதார்த்தங்கள் போலும் அன்றி  இறே முலைகள் நெருக்கப் புக்கால் உண்டான நலிவு
அவை பாதகம் ஆகிற போது தோழியோ என்றாள்-
இவை பாதகமாக புக்கவாறே
தோழிமார் உடன் தாய் மார் உடன் வாசி அற
எல்லாரையும் சேர்த்து சொல்லுங்கோள் என்கிறாள்-

ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-
ஏழை
கிடையாதது தான் என்றால்
கிடைக்கும் அதில் போலே சாபலத்தை
பண்ணுமவள்

பொன்னுக்கு
இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று
ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –

இடவெந்தை –
உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற
இவளைப் போல் அன்றிக்கே
கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ
நினைத்து இருக்கிறது என்
(கிரியை-இடந்து எடுத்து இடது பக்கம் வைத்துள்ளாய் )

———————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading