ஸ்ரீ பெரிய திருமொழி-2-7-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

துளம்படு முறுவல் தோழியார்க் கருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம்படு குவளைக் கண்ணினை எழுதாள் கோல நன் மலர் குழற்கு அணியாள்
வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் மாலின மொழியாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-

—————————————————————

வியாக்யானம் –

துளம்படு முறுவல் –
துளம்பு என்று -மாதுளமாய்-அத்தை
தந்த பந்திக்கு ஒப்பாக சொல்லக் கடவது இறே-
அத்தை சொல்லிற்றாதல் –
துளம் என்று பீலிக் காம்பை சொல்லுகிறது -என்று ஒரு தமிழன்
சொன்னனான ஜீயர் அருளிச் செய்வர் என்று அருளிச் செய்வர் –
வெண்மையைப் பற்றி சொல்லாம் இறே –
படுகை யாவது உண்டாகையாய் –
துளம் தோற்ற முறுவல் –
இத்தைக் கண்டவாறே அதை ஸ்ம்ருதி விஷயமாகை-
அன்றிக்கே
படுகையாவது அழிகையாய்
இம் முறுவலுக்கு தோற்ற படியை சொல்லிற்று ஆதல் –
இரண்டு வகையாலும் உபமானம் சொல்லுவார்கள் இறே –

தோழியர்க்கு அருளாள்-
தாய்மார் முன்பு தன் வெறுப்பாலே ஸ்மிதம் பண்ணாளே-
இனி நாயகனுக்கு சர்வ ஸ்வம்மாய் இருப்பதும் இது தான் இறே –
காந்த ஸ்மிதா என்று அவன் ஈடுபடும் அது இறே –
(சீதா பிராட்டி முறுவலை நினைத்து பெருமாள் லஷ்மணன் இடம் சொல்லி வருந்தின வ்ருத்தாந்தம் )
அதுவே இறே தோழி யார்க்கு ஜீவனம் –
ஆக தன் கை பார்த்து இருக்கிற தோழி மாரை பட்டினி கொள்ளா நின்றாள் –
இவள் நாயகனோட்டை சம்ஸ்லேஷத்தால்
வந்த ஹர்ஷம் தோற்ற ஸ்மிதம் பண்ணினால்
அதுவே தாரகமாக வாயிற்று அவர்கள் இருப்பது –

துணை முலை இத்யாதி –
நாயகனையும் பட்டினி கொள்ளா நின்றாள் –
துணை முலை –
புறம்பு உபமானம் ஓன்று இன்றிக்கே
தன்னில் தான் ஒப்பாக சொல்ல வேண்டும்படி இருக்கிற முலைகள் –

சாந்து கொண்டு அணியாள் –
இவள் அவன் வரவை உத்தேசித்து
முலைகளை சாந்து கொண்டு அலங்கரிக்க புக்காள் இறே
இவளுக்கு இது அபேஷிதம் ஆகாதே -என்று
அவனுக்கு கிஞ்சித் கரிக்கைககு அவகாசம் உள்ளது –
ஆகையாலே அவனுக்கு அவகாச பிரதானம் பண்ணுகிறிலள்-

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் தனக்கு மேல்
என்னாவி தங்கும் -என்றாள் இறே ஆண்டாள்

குளம் இத்யாதி –
அறாக் கயத்திலே-( தண்ணீர் வற்றாத தடாகம் ) நின்று அலர்ந்த
குவளை போன்ற கண்களை மங்களார்த்தமாக அஞ்சனம்
கொண்டு அலங்கரிக்கிறிலள்
ரத்நாகாரம் போலே குணகரமான வஸ்துவை
அனுபவிக்கிற கண் ஆகையாலே ஓன்று கொண்டு
அலங்கரிக்க வேண்டா இறே –
(சமுத்திர இவ காம்பீரம் -அவனை அனுபவிக்கும் கண்கள் -வைத்த கண் வாங்காமல் பார்க்க –
மைப்படி மேனியான் இருக்க மை இட வேண்டாமே)
இனி அஞ்சனம் கொண்டு அலங்கரிப்பது மங்களார்த்தமாக விறே
இவள் அஞ்சனத்தாலே அலங்கரிக்கப் புகும் அன்று இறே
அவனுக்கு கிஞ்சித் கரித்தானாக அவகாசம் உள்ளது –
அது செய்கிறிலள்-

கோலம் இத்யாதி –
கலம்பகன் அல்லது தனிப் பூ சூட்டுப் பொறாத குழலைப்
புஷ்பம் கொண்டு அலங்கரிகிறிலள்-
வாசம் செய் பூங்குழலாள்-(நம்மாழ்வார்)-ஆகையாலே புஷ்பம் கொண்டு
அலங்கரிக்க வேண்டா விறே –
மங்களார்த்தமாக புஷ்பம் கொண்டு அலங்கரிகிறிலள்-
நாயகன் விரும்பி இருக்கும் இடங்களை
இவள் அலங்கரியாது ஒழிகை யாவது
அவனுடைய தாரக த்ரவ்யத்தை விலக்குகை இறே

வளம் இத்யாதி
சர்வ சாதாரணமான ரஷணத்தைப் பண்ணுமவன்
என்னளவிலே நெகிழ இரா நின்றான் –
(முன் அளந்த -கிருத யுகத்தில் ரஷித்தான் )
வளம் படு முந்நீர் –
ரத்நாகாரம் என்னுதல்-
வளம் படு வையம் -என்று வஸூ மதி என்னுதல்
மால் என்னும்
தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தின் உடைய
ரஷணத்தில் பிச்சேறி இருக்குமவன்
இவ் வ்யக்தி ஒன்றையும் உபேஷித்து இரா நின்றான் –
(நேராக இருக்க படர்க்கையில் பேசுகிறாள் )

மாலின மொழியாள் –
தன்னுடைய வ்யாமோஹத்துக்கு சேர்ந்த
பேச்சை உடையவள் –
வ்யாமோஹம் வழிந்து உறப்பட்டு அது
சொல் ஆனால்  போலே இருக்கை-
(மால் -உடையவள் இவள் -திருமால் -பக்தி -உள்ளத்தில் உடையவள் )

இளம்படி இவளுக்கு –
இளையதான படியை உடைய இவளுக்கு –
ம்ருது ஸ்வபாவையான இவளுக்கு –
உம்முடைய பக்கல் நின்றும் பிரித்து பத்து மாசம்
அசோகா வநிகையில் வைத்த விடத்திலும்
பின்னை -தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று இருந்த அவள் படி அல்லாத
மார்த்வத்தை உடைய இவளுக்கு –
பட்டர் அருளிச் செய்ததாக பிரசித்தம் இறே
உண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –
இருக்கும் ஸூ குமாரரைப் போலே
அதிகமான சம்ஸ்லேஷம் விஸ்லேஷம் பொறுக்க மாட்டாத படியான
திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும்  படி -என்று –

(முது படி சீதா பிராட்டி இவள் இள படி
சம்ஸ்லேஷத்தில் அனுபவிக்கவும் விஸ்லேஷத்தில் ஆறி இருக்கவும்
அமானுஷன் போகான் 12 வருஷம் அனுபவித்தேன்
பிரிந்தால் கடியன் கொடியன் நெடுமால் என்பவள்
பதறவும் வல்லவள்
குலசேகர பெருமாள் ராஜ குலா மஹாத்ம்யம் விஸ்லேஷத்தில் -சினம் தீர்வான் நானே பேசுவார்
பெரியாழ்வார் பெண் பிள்ளை விஸ்லேஷத்தில் தன்னை அலங்கரித்து காரை பூணும்
சம்ஸ்லேஷத்தில் மகிழ்ந்து பாடவும் வல்லவள்
திரு மங்கை நங்கை மார்த்தவமே ப்ரக்ருதி
பிரிந்தும் கலந்தும் பல பாசுரம் பாட வல்லவர் அல்லரே )

இவளுக்கு இத்யாதி –
இவளுடைய பிரகிருதி அறிந்து
கலக்கைக்காக
திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ
உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –

—————————————————————————– .

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading