ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அதுக்கும் முன்னே உண்டான ராம வ்ருத்தாந்த்தைச் சொல்லுகிறது –

ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

தேரா வரக்கர்-பெருமாள் எவ்வளவு பலவான் என்று ஆராயாத அரக்கர்-

———————-

வியாக்யானம் –
ஊரான் –
திரு ஊரகத்தை தனக்கு இருப்பிடமாக உடையவன்-

குடந்தை உத்தமன்
அவர்கள் அபேஷை இன்றிக்கே -ஆஸ்ரித ரஷணத்துக்காக
தானே திருக் குடந்தையிலே வந்து சாய்ந்தருளி
நீர்மையில் ஏற்றத்தை உடையவன்

அன்றிக்கே
திருக்குடந்தை ஊரான் உத்தமன் -என்றும் சொல்லாம்

ஒரு கால்
ஒரு கால் நுனி
இரு கால் சிலை வளைய
வில் இரண்டு கோடியும் வளையும்படியாக
ராவணன் தான் வளையாமலே வில்லை வளைத்தான்

தேரா வரக்கர்-இத்யாதி-
சக்கரவர்த்தி திரு மகன் இறே நமக்கு எதிரியாக வருகிறான் என்று
மதிக்க அறியாத ராஷசர் உடைய தேர் வெள்ளத்தை அழியச் செய்தான் ஆயிற்று
(அசஹாய ஸூ ரனாக கர தூஷணாதிகளைச் சொன்னதாகவும்)

வற்றா-இத்யாதி–
நின்ற நீர் வற்றக் கடவது அன்றிக்கே
மேன்மேலும் வாரா நின்றுள்ள
புனலை உடைத்தாய் இருக்கிற
திருப் பேரைத் தனக்கு வாசஸ்தானமாக உடையவன்-

பேர் ஆயிரம் உடையான்–
தன் குண  சேஷ்டிதங்களுக்கு வாசகமான
அநேகம் திருநாமங்களை உடையவன் –
அந் நாம த்வாரா அனுபவிக்கும் வடிவைச் சொல்லுகிறது-

பிறங்கு -இத்யாதி–
நெருங்கி இருந்துள்ள சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை
மது பானம் பண்ணி
அறையா நின்றுள்ள
மாலையை உடையவன்

தாரா வயல்–இத்யாதி—
ஊர் அடங்கலும் மனுஷ்யர் குடி இருப்பு நெருங்கி இருக்குமா போலே
தாராவாகிற பஷிகளாலே
நெருங்கி இருந்துள்ள வயலாலே சூழப் பட்டு இருந்துள்ள
சாளக்கிராமம் அடை நெஞ்சே-

————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading