கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே—1-5-2-
————————————–
ராவணனை நிரசித்தபடியைச் சொல்லிற்று முதல் பாட்டில்
அதுக்கு உறுப்பாக அவனுடைய முதல் நாள் படை எழுச்சி சொல்லுகிறது -இதில்
வியாக்யானம் –
கடம் சூழ் இத்யாதி –
ருஷி தான் படை எழுச்சியை சொன்ன க்ரமத்திலே சொன்னார் இவரும் –
மத ஜலத்தை உடைத்தாய் -மலை வடிவு கொண்டு நடந்தாற் போலே இருக்கிற ஆனைத் திரளும்
அதுக்கு அநந்தரம்
குதிரைத் திரளும் –
கோஷத்தை உடைத்தாய் இருந்துள்ள பெரிய தேர்களும்
காலாளும்
இவை அடைய ஒன்றாகத் திரண்டு
பெரிய கிளர்த்தியோடே தோற்றின
அரண் உடைத்தான இலங்கை
ஸ்மசாந சத்ருசீ பவேத் -என்கிறபடியாய் போம்படிக்கு ஈடாக
வடித்த வாயை உடைத்தான சரத்தை நடத்தினான் ஆயிற்று –
இடம் -இத்யாதி –
பூமியில் அவகாசம் உள்ள இடங்கள் எல்லாம் பரந்து கொண்டு
பரப்பை உடைத்தான ஸ்வர்க்கத்தில் தேவர்கள்
ஆஸ்ரயிக்க பரிமள பிரசுரமான தடாகங்களை உடைத்தாய்
எங்கும் ஒக்க தர்ச நீயமாய் இருக்கிற
ஸ்ரீ சாளக்கிராமத்தை ஆஸ்ரயிக்கப் பார்
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply