ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே–1-4-9-

அவனி யாளலமர-பூமா தேவி அலமரும் படி-
ஊழி-கல்பங்கள்-
அண்டம் -இங்கு பிரம்மலோகம்-
பிந்து சரஸ் -பளிங்கு பாறை போலே -இங்கு தான் சிவன் தலையால் தாங்கிய இடம் –

வியாக்யானம் –
கொண்டல் மாருதங்கள் -இத்யாதி
மேகங்கள்
வாயுஸ் கந்தம் -குல பர்வதங்கள் -தங்கள் ஜலராசியை உடைத்தாய்
கோஷியா நின்றுள்ள  கடல் -லோகங்கள் உடைய சர்வ பதார்த்தங்களையும்-வைக்கப்பட்ட

மா வயிற்றோன்
இவற்றை வயிற்றில் வைத்த  இடத்திலும்
இவை தான் அளவு பட்டு பெருத்து இருக்கை
வல் வயிற்றுப் பெருமான் -என்னக் கடவது இறே-
(இத்தால் ஆபத்சகத்வம் சொல்லிற்று)

ஒண் சுடர்–இத்யாதி-
சந்திர சூர்யர்களை உடைத்தான உபரிதந லோகத்தையும்
கால விசேஷமான பிரளய காலத்தையும்
தான் – என்று சொல்லலாம்படி ஆனான்
இவை பிரகாரமாக -தான் பிரகாரியாக -நின்றான்-
(அவன் அஹம் என்றால் சர்வத்தையும் சொன்னபடி அன்றோ -நாராயணன் -நாரங்கள் அனைத்தும் இவனுக்குள்
பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம்)

அண்டமூடறுத்து–இத்யாதி-
அண்டம் உண்டு
ப்ரஹ்ம லோகம்
அதன் நடுவே வழி கண்டு போந்து
அதுக்கு இவ்வருகில் அந்தரிஷத்திலே போந்து இழிந்து
எல்லாவற்றையும் பொறுக்கக் கடவ
அவனியாள் உண்டு- பூமி -அவள் பொறுக்க மாட்டாதே
தடுமாறும் படி பெருகும் ஆயிற்று –

மண்டு மா மணி நீர் –
எங்கும் ஒக்க பரந்து பெரு நீராய்
அது அடைய தெளிந்து இருப்பதான
கங்கையின் கரை மேல்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading