ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

வென்றி விரலாழி வலவன்-பரமாத்மன்-சங்கு சக்ர கதாதர -மண்டோதரி
பவான் நாராயண தேவ நான்முகன் -தேவர்களும் இவனே திருமால்
இவற்றை திரு உள்ளம் கொண்டு இப்பாசுரம்-

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே—1-5-3-

ஆய் நின்றான்–சாமாநாதி கரண்யம்-காரண காரிய பாவம் -மண் குடம் தங்கச் சங்கிலி பட்டு வேஷ்டி போலே
சரீரம் சரீரீ பாவமும் ஆகவுமாம்-நீராய் –அயனாய் -இத்யாதி போலே

————————————————————————

வியாக்யானம் –
உலவு -இத்யாதி –
சஞ்சரியா நின்றுள்ள திரையை உடைத்தாய் –
பெரிய கோஷத்தை உடைத்தான கடலும் மலையும் துடக்கமாக-

ஊழி முதலா வெண் திக்கும்-
காலோ பலஷிதமான சகல் பதார்தங்களுமான எட்டுத் திக்கும் –

சில நாள் வர்த்திக்க கடவராய் இருக்கிற சந்திர சூர்யர்களும்
அதற்க்கு எதிரான இருளுமாய்
அதடைய -தான் -என்கிற சொல்லாலே சொல்லலாம் படி
தனக்கு பிரகாரமாக உடையானாய்  நின்றான் –
இத்தால் ஜகதாகாரனாய் நிற்கும் நிலை சொல்லிற்று-
(பரன் திறம் அன்றி மற்று இல்லை பல்லுலகீர்)
மேல் அசாதாராண திவ்ய விக்ரஹ உக்தனான நிலையைச் சொல்லுகிறது-

வென்றி -இத்யாதி –
ஆஸ்ரித ரஷணத்துக்கு பரிகரமான
திரு ஆழியை வலவருகே உடையவன்

வானோர் தம் பெருமான் –
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயனானவன் –

மருவா –
கண் வளர்ந்து அருளும் போதும் தன்னோடு பொருந்தாத ஆசூர வர்க்கத்துக்கு –
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து-திரு நெடும் தாண்டகம் -என்கிறபடியே
சாத்ரவத்தையை உடையனாய் இருக்குமவன்
ஏவம் விதன் ஆனவன் வந்து சந்நிதி பண்ணுகிற
ஜல சம்ருத்தியை உடைத்தாய்
தர்ச நீயமாய் இருக்கிற
ஸ்ரீ சாளக்கிராமத்தை அடைந்து ஆஸ்ரயிக்கப் பாராய்

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading