ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
————
தொண்ணூற்று ஏழாம் வார்த்தை
ப்ராப்யாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் சாஸ்திரம் சிலுகிடும் -(வருந்தி சண்டை இடும்) –சாதனாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் பாரதந்த்ர்யம் சிலுகிடும் –சித்தோ உபாய ஸ்வீகாரத்தில் கை வைத்தான் ஆகில் ஸ்வரூபம் சிலுகிடும் –
(பாரர்த்த அனுபவ கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -ஸ்ருதி சிரஸ் -இவற்றையே சொல்லும் -ஐஸ்வர்யம் கைவல்ய ஸ்வார்த்த கைங்கர்யங்கள் கூடாதே -நம் ப்ரவர்த்தி நிவ்ருத்தி அவன் ஆதீனம் என்பதே பாரதந்தர்யம் -நம் பற்றும் பற்றும் கார்யகரம் அல்லவே -இசைவித்து தன் தாளிணைக்கீழ் வைத்தான் என்பதை உணர வேண்டுமே)
———————————————————-
தொண்ணூற்று எட்டாம் வார்த்தை
பிள்ளை திரு நறையூர் அரையரும் நம்பி திரு வழுதி வளநாடு தாசரும் –
வேம்பு முற்ற முற்ற கைக்குமா போலே
இவ் வாத்மாவும் ஒரு நாளைக்கு ஒரு நாள் விஷயாந்தரங்களிலே மண்டா நின்றது –
இதுக்கு பகவத் பிராப்தி கூடுமோ -என்று -பட்டரைக் கேட்க –
சரீர வியோக சமயத்திலே யாகிலும் இஸ் சரீரத்தில் உபேக்ஷையை பிறப்பிக்கையாலும் –
ஸ்ரீ மாலாகாரருக்கு தன் வடிவு அழகைக் காட்டினால் போலே –
இவனுக்கும் வடிவு அழகை காட்டுகையாலும் -அது கூடும் -என்று அருளிச் செய்தார் –
இதுக்கு பிரமாணம் –
ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி – (பகவத் பக்தர்கள் யமனுடைய நாட்டுக்குச் செல்ல மாட்டார்கள் அன்றோ)
(ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி -என்று சாஸ்திரம் சொல்லுகையாலும்-வேண்டாமை நமன் தமர் என்றமரை வினவப் பெறுவார் அலர்-(பெரிய திருமொழி 10-6-5 )என்கிற பகவத் யுக்தியாலும்-உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -(பெரிய திருமொழி -8-10-7)என்று அபியுக்தர் சொல்லுகையாலும் பரிஹர மதுசூதன ப்ரபன்னான்-என்று எமன் தானே சொல்லுகையாலும் – பாகவதர் ஆனவர்களுக்கு யமவச்யத்தை வரக் கூடாது என்னும் இடம் பிரசித்தம்)
(அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் —55)
——————————————————
தொண்ணூற்று ஒன்பதாம் வார்த்தை –
சம்சார பீதியும் –
ப்ராப்ய ருசியும் –
ஆகிஞ்சன்யமும் –
அநந்ய கதித்வமும் –
ஸ்வ தோஷ ஞாபனமும் – –
ஸ்வரூப பிரகாசமும் –
ஸ்வரூப ஞானமும் –
இவை இறே அதிகாரிக்கு ஸ்வரூபம் –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வரூப நிரூபணம் பண்ணுகையாவது –
ஸ்வதஸ் சர்வஞ்ஞன் பக்கல் உண்டான நித்ய கைங்கர்ய அந்விச்சா விசேஷ பிரதிபத்தி நிவ்ருத்தி –
(ஞாத்ருத்வம் என்றாலே போக்த்ருத்வம் தானே வருமே -அது நீங்க வேண்டுமே-தன்னுடைய அத்யந்த பரதந்த்ர ஸ்வரூபத்தையும் -ப்ராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்கிற எம்பெருமான் ஸ்வரூபத்தையும் அறிந்தவன் தனது ஸ்வரூபத்தை நன்கு ஆராய்ந்தால் ஸர்வஞ்ஞனான எம்பெருமான் விஷயத்தில் ஒழிவில் காலம் எல்லாமே உடனாய் மன்னி வழிவிலா அடிமை செய்யும் போது அந்த அடிமை தனது ஆனந்தத்துக்கு உறுப்பாகும் என்னும் எண்ணம் நீங்கப்பெறுவான் – இந்த எண்ணம் நீங்கப்பெறாதவனாகில் இவன் ஸ்வரூபஞ்ஞனாக முடியாது -ஸர்வஞ்ஞனான சர்வேஸ்வரன் இவனது உள் மனதை அறிந்து மோக்ஷ நிலையிலும் ஸ்வார்த்த கைங்கர்யத்தை அருளி விடுவான் -)
————————————————————
நூறாம் வார்த்தை
உபாசகனை ஈஸ்வரன் புஜிப்பிக்க வேணும் என்று நினைத்து இருக்கும் –
பிரபன்னரை ஈஸ்வரன் புஜிக்க வேணும் என்று நினைத்து இருக்கும் –
(ஸ மஹாத்மா ஸூ துர்லப-பெறற்கரிய அவனைப்பெற்று தான் அனுபவிப்பதில் ஊற்றமுடையவனாய் இருப்பான் அன்றோ-என்னையும் முற்றப்பருகினான் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -)
—————————————————–
நூற்றோராம் வார்த்தை –
அவித்யை அந்தர்பூதனான சேதனனுக்கு அநுபாவ்யமான போகம் (சப்தாதி போகங்கள் -விஷயாந்தரங்கள்)-அவித்யை நிவ்ருத்தி பூர்வகமான அநுபவேச்சை உடையவனுக்கு அநுபாதேயம் (பொருத்தமில்லாதது)-
அநுபாதேய போக ஸித்திக்கு காரணமான கர்ம காரணம் த்ரி விதம் –
ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் –
தேகாத்ம அபிமானம் –
அந்ய சேஷத்வம் –
அதில் சிறிது -ஸ்வ ஸ்வா தந்த்ர்யம்-சிர காலத்தோடே கூட-அவித்ய நிவ்ருத்தியை பிறப்பிக்க கடவதாய் இருக்கும்
அல்லாதவை –
தேகாத்ம அபிமானம் –
அந்ய சேஷத்வம் —
அவித்ய வர்த்தகங்களாய் இருக்கும்
(ஸ்வா தந்தர்யத்தில் ஒரு சிறிய ஸூஷ்ம அம்சம் -தன்னை ரஷித்துக் கொள்ள தானே முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பக்தி யோகம் போன்ற உபாயாந்தரங்களிலே மூட்டி பிராரப்த கர்மம் முடியும் வரையில் எண்ணிறந்த ஜென்மங்கள் எடுத்து முயற்சி செய்யும்படி பண்ணி அஞ்ஞானத்தைப் போக்கி இவன் விரும்பிய ஸ்வார்த்த மோக்ஷத்தைச் சாதித்துத் தரும் -என்றவாறு)
————————————————————–
நூற்று இரண்டாம் வார்த்தை
எம்பார் வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணுமதிலும்
ஸ்வயம் ஸ்வ தோஷ தர்சனம் பண்ணுகை ஸ்வ சாமர்த்யம் –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணினால்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனுக்கு கூட கூடாத படியான ஸ்வபாவம் உண்டாய் இருக்கும் –
(சேஷத்வ பாரதந்தர்ய பெருமை அவனாலும் முழுவதாக உணர முடியாதவையாய் இருக்கும் -ஆகவே நம் தோஷங்கள் -மலைபோல் இருக்கவே -இவற்றை ஆராய்ந்து விண்ணப்பம் செய்யவே பேற்றை அடையலாம்)
புருஷனுக்கு பும்ஸ்த்வ நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த நிரூபணம் பண்ணுமதிலும்
புருஷ தேக நிரூபணம் பண்ணுகையே புருஷார்த்தம் –
(புருஷோத்தமன் தேஹமான பாகவதர்கள் உலாவும் பெருமாள் -சங்கம பரதேவதை அறிவது எளிது அன்றோ)
ஸ்வரூபஞ்ஞனுக்கு அவித்யா சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமான அப்ராக்ருத தேச விசேஷத்திலும்
அவித்யா சம்பந்தத்தில் ஆர்த்தி அத்யந்த அபேஷிதம் –
(அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஆர்த்தி ஹரத்வம் முக்கியம்)
ஸ்வரூப வைசைத்ய தசையாவது –
பர ஸ்வரூப விசேஷத்தில் ஸ்வீகார பிரதிபத்தி பிரவ்ருத்தி நிவ்ருத்தியில் அவ்யவசிதனாய் போருகை –
ஸ்வரூபஞ்ஞனுக்கு ஸ்தூல தேகாந்திர நிவ்ருத்தி பூர்வகமாக(அப்ராக்ருத -அங்கு சென்று பெறப்போகும்)ஸ்வ தேக பரிக்ரஹ இச்சாதிசயமும் தேக போக்யதையும் சத்ருசம் –
ஸ்வ ஸ்வரூப விஷய ஞான பூர்த்தி நிஷ்டையாவது —
பர ஸ்வரூப விஷய தர்சநாதி பிரகார பிரதிபத்தி பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமாக
பர ஸ்வரூபத்தில் ஆர்த்தி விசேஷ பிரதிபத்தி நிவ்ருத்தி விசேஷ நிஷ்டை –
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமாவது
பர ஸ்வரூப வைசைத்ய ஸ்மரண பூர்வகமாக-
பர ஸ்வரூப விஷய வ்யதிரிக்த விஷய கைங்கர்ய ருசி நிவ்ருத்தி பிறக்கை(உண்டியே உடையே என்று உகந்தோடும் –இம்மண்டலுடன் கூடாமல்) ஸ்வகத ஞானம்
ஸ்வரூபம் -பர கத ஞானம் -உபாயம் –
இதர பல போக்த்ருத்வ பிரதிபத்தி நிவ்ருத்தி பூர்வகமான சம்யக் பல போக்த்ருத்வ பிரதிபத்தி விசேஷ நிஷ்டனானவன் –
சர்வோத்க்ருஷ்ட ஜாதனுமாய் (விண்ணுளாரிலும் சீரியர்)-சர்வ விஸஜாதீயனுமாய் –
சர்வ உபாய நிவ்ருத்தி பூர்வகமாக சித்தோ உபாயாந்தர்க்க தனானவன் –
சஜாதீத்வ பிரதிபத்தியும் -சஜாதீத்யத்வ வ்யாவ்ருத்தி விசேஷ நிஷ்டையும் உண்டு என்று –
புத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –
இவ்வார்த்தையால் அஞ்சர்த்தம் பிரதிபாதிகப் படுகிறது —
1-இதர விஷய ராக நிவ்ருத்தியும் –
2-விகித விஷய ராக பிரவ்ருத்தியும் –
3-இதர உபாய த்யாகமும் –
4-சித்தோ உபாய ஸ்வீகாரமும் —
5-ஹித பரன் பக்கல் யதா பிரதிபத்தியும் –
(சேஷத்வ பாரதந்தர்யமாகிற ஸ்வரூபம் ஆராய்ந்து நிரூபணம் பண்ணுவதே சால அரிதாகும் -ஸ்வ தோஷம் நிரூபணம் அறிந்து எம்பெருமான் திரு முன்பே விண்ணப்பம் செய்வது எளிது -அதுவே அவன் இரக்கத்துக்கு ஹேதுவாகும் –
எம்பெருமான் உகந்த வாழும் தேஹங்களான பாகவதர்கள் பெருமைகளை ஆராய்வது மிகவும் எளிதாகும் -மோக்ஷ ப்ராப்தியில் ஆசையைவிட அஞ்ஞானம் ப்ராக்ருத தேகம் நீங்க த்வரையே பிரதானம் -பரார்த்த அனுபவ கைங்கர்யங்களே பரம புருஷார்த்தம் என்றும் இருக்கும் – ஞானீ த்வாத்மைவ மே மதம்
வானவர்க்காவர் நற் கோவையே –
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே –
சீதனையே தொழுவார் விண்ணுள்ளாரிலும் சீரியரே -பிரமாணங்கள் அனுசந்தேயம்
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் -எண்ணம் மாறாமல் இருக்க வேண்டும் -)
————————————————————————
நூற்று மூன்றாம் வார்த்தை
நஞ்சீயர் சரம தசையில் அருளிச் செய்த வார்த்தை –
ஸ்வ விஷயமான வியாதி சாந்த்யர்த்தமான பிரபதநமும் ஸ்வரூப ஹானி —
இது தான் பாரதந்த்ர்யத்துக்கு தூஷணம்
பர விஷய வியாதி சாந்த்யர்த்தமான சாங்க பிரபதநமும் ஸ்வரூப ஹானி –
இது ஈஸ்வரனுடைய பர ரஷண விஷயமான சர்வஞ்ஞத்வாதிகளுக்கு தூஷணம்
(ஹித பரனான எம்பெருமான் நம்முடைய கர்மம் கழிவதற்கும் ஆத்மாவின் நன்மையின் பொருட்டும் இந்த நோயை அளித்திருக்கிறான் -இதை நீக்குவதும் அவன் பொருப்பே என்றும் இருக்காமல் கால்கட்டி அவனை நிர்பந்திப்பது பாரதந்தர்யத்துக்கு முரணாகுமே -பிறர் நோயைப் பரிஹரிக்கவும் அவனை வேண்டுவது அவன் ஸ்வரூபத்தை அழிப்பதாகும்)
—————————————————
நூற்று நாலாம் வார்த்தை –
அனந்தாழ்வான் நஞ்சீயரைக் கண்டு
இது என் ஜீயா -ஸூகுமாரராய் இருக்கிற நீர் –
வேர்த்த போது நீராடி -பசித்த போது அமுது செய்து -பட்டரை சேவித்து இருந்தால் –
சந்யசித்து வந்திலீர் என்று உம்மைப் பரம பதத்தில் நின்றும் தள்ளுவார் உண்டோ –
இனி என் என்று பார்த்து மந்த்ராந்தரங்களை அடைய விட்டு –
திரு மந்த்ரத்திலே பிறந்து -த்வயத்திலே வளர்ந்து -த்வயைக நிஷ்டர் ஆவீர் -என்று வாழ்த்தி –பின்னை அருளிச் செய்த வார்த்தை
த்ருஷ்டத்தில் உள்ளது எல்லாம் பட்டருக்கு ஆக்கினோம் –
த்ருஷ்டத்துக்கு கடவார் பட்டர் என்று இருப்பதோர் இருப்பு உண்டு
அது பூர்வ தசையிலும் அநர்த்தாயவாம் (கீழ் நின்ற வேதாந்தி தசையை விட அநர்த்தமாகும்)-என்று பார்த்து –த்ருஷ்டதுக்கு கடவார் பெருமாள் – அத்ருஷ்டத்துக்கு கடவார் பட்டர் -என்று இரும்
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் என்னில்
த்ருஷ்டத்தில் கர்மாதீனமாக ஏதேனும் சுருங்கு உண்டாகில்
ஆசார்யனை வெறுத்த போது பெருமாளைக் கொண்டு தீர்த்துக் கொள்ள ஒண்ணாது –
பெருமாளை வெறுத்தான் ஆகில் ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் –
(தேஹ யாத்ரையாய் பெரிய பெருமாள் பொறுப்பு -ஆத்மயாத்ரை ஆச்சார்யர் பொறுப்பு என்றும் இருக்க வேண்டும் -தேஹ யாத்திரையில் கர்மம் அனுகுணமாக குறைகள் ஏற்படுவதற்கு ஆச்சார்யர் ஹேதுவாக மாட்டாரே -தேஹ யாத்திரையும் ஆச்சார்யர் என்றும் நினைப்பவனுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படலாம் -ஆச்சார்யராக வெறுத்தவனுக்கு பெருமாள் கை கொடுக்க மாட்டார்-பெருமாளை வெறுத்தால் ஆச்சார்யர் புருஷகாரம் செய்து கோபத்தை தணித்து கதி அருளப் பண்ணுவார் என்பதே இவ் வார்த்தையின் கருத்து -)
—————————————————
நூற்றஞ்சாம் வார்த்தை
எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரித்ததொரு ஸ்ரீ வைஷ்ணவருடைய பிள்ளைக்கு ஏகாயனரோட்டை (த்வைதி -சேஷி மிதுனம் இல்லை -சரீராத்ம பாவமும் இவர்களுக்கு இல்லை)சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன் வ்யபசரித்து அநர்த்த பட ஒண்ணாது என்று –
பெருமாள் திருவடிகளிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
அவனும் அங்கே சந்நிஹிதனாக –
வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யமில்லை
நாம் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள் –
இவ் வாத்மாவுக்கு தஞ்சமாக இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை
என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து சத்யம் பண்ணிக் கொடுத்து (நின் ஆணை திருவாணை அருளிச் செய்து)அருளினார் –அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டர் ஆனார் –
——————————————————————
நூற்று ஆறாம் வார்த்தை
பட்டர் த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி
சப்தாந்தரத்தாலே இவ் வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ –
என்று உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –
அதுக்கு குறை இல்லை –
ஆகிலும் இப் பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம்
வேறொரு பாசுரத்துக்கு சுரவாதே -என்று அருளிச் செய்தார் –
(ஷட் பதம் சேர்த்துப் பார்த்தால் -பிரித்து பார்த்தால் அஷ்ட பதம் -25 அக்ஷரங்கள் -மந்த்ர ரத்னம் -ஆச்சார்ய பரிஹீருதம்)
——————————————————————-
நூற்று ஏழாம் வார்த்தை
நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –
த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –
திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் –
த்வயம் சிஷ்ய வாக்கியம் –
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால்
ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்த துரும்பு எடுத்துப் பொகட பிராப்தி இல்லை –
உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை
மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –
(எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் த்வய சரீரத்தை வெளியிடாமல் அத்ர த்வயம் என்றும் சாதித்து அருளிச் செய்துள்ளது நோக்கத் தக்கது-ஸூவ ரக்ஷண நிவ்ருத்தியும் வேண்டும் -கைங்கர்ய த்வரையும் வேண்டுமே -)
————————————————————–
நூற்று எட்டாம் வார்த்தை –
பகவத் சரணாரவிந்த சரணாகதனாய் -ஞாநினாம் அக்ரேசரனாய் -விலஷண அதிகாரியான -பிரபன்னனுக்கு
உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –
உபேயத்தில் நிவ்ருத்தி ருசி விரோதி –
உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப ஹானி –
உபேயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –
(ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -இரண்டும் கொத்தை -யாவையும் யாவரும் தானாய் -உபாயமாக தேவதாந்த்ர சம்சர்க்கம் ஹானி தானே-உபாயத்துக்கு இரண்டுக்கும் பிராட்டி த்ருஷ்டாந்தம் -உபேயத்துக்கு இரண்டுக்கேமே இளையபெருமாள் திருஷ்டாந்தம் -நில் என்றாலும் வந்ததார்- வந்து பெருமாள் உகப்பாகாக கைங்கர்யம் செய்தார் அன்றோ)
இவ்விரண்டு அர்த்தத்துக்கும் நிதர்சன பூதர் –
ஸ்வ ரஷண ஷமையாய் இருக்கச் செய்தே –
ஸ்வ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து –
அசோக வநிகையில் எழுந்து அருளி இருந்த பிராட்டியும் –
பெருமாள் -நில் -என்னச் செய்தேயும் -தம்முடைய செல்லாமையைக் காட்டி –
அவருடைய வார்த்தையை அதிக்ரமித்து
காட்டிலே தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளும் –
சம்சார சம்பந்தம் அற்று திரு நாட்டிலே போய் இருக்கும் அளவும் -த்வயத்தில் இரண்டு கண்டத்தில் அர்த்தத்தையும் கொண்டு -பிரபன்னனாவன் கால ஷேபம் பண்ணும்படி –
(த்வய பதார்த்தங்கள் அழகாக அருளிச் செய்கிறார் மேல்)பெரிய பிராட்டியாரை பின் செல்லும் -ஸ்வபாவன் ஆகையாலே
இவள் புருஷகாரமாக கொண்டு ஆஸ்ரயிக்கிற நம் பெரும் பிழைகள் பாராதனுமாய் –
ஆஸ்ரயிப்பாருக்கு மிகவும் எளியனான நாராயணனுடைய திருவடிகள் இரண்டையும் –
எனக்கு அத்யந்தம் அநிஷ்டமாய் அநாதியாக இன்றளவும் வர வடிம்பிட்டு வருகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கி
எனக்கு இஷ்ட தமமாய் -நிரதிசய ஆனந்தவஹமாய் -அனந்தமாய் -அபுநாவ்ருத்தி லஷணமான மோஷத்தை பெறுகைக்கு அவ்யஹித சாதனமாகப் பற்றி நின்றேன் –(இதுவரை பூர்வார்த்தம் -மேல் உத்தரார்த்தம்)
பெரிய பிராட்டியாரோடு கூடி -சர்வ ஸ்வாமி யான நாராயணன் திருவடிகளிலே –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ணப் பெறுவேன் ஆகவுமாம் –
அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்கள் தவிருவதாகவும் –
இதனுடைய அநுக்ரமணம் -இருக்கும்படி(கீழ் சொன்னதை விளக்கிச் சொல்வது)
சாபராதானனான சம்சாரி சேதனனுக்கு சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனைக் கிட்டும் இடத்தில் –இவனுடைய அபராதம் அவன் திரு உள்ளத்தில் படாதபடி –
அழகாலும் குணங்களாலும் -அவனைத் துவக்கி இவனை திருவடிகளில் சேர விடுகைக்கு –
கண் அழிவு அற்ற புருஷகாரமான பிராட்டி ஸ்வரூபம் சொல்லி –
மதுப்பாலே –
இவளுக்கு அவனைப் பிரிய சம்பாவனை இல்லாதா மகா சம்பத்தான நித்ய யோகம் சொல்லி –
நாராயண பதத்தாலே –
இவள் புருஷகாரமும் மிகை யாம் படியாக –
அவன் ஆஸ்ரித விஷயத்தில் பண்ணும் வாத்சல்யாதி குண யோகம் சொல்லி –
சரணவ் -என்கிற பதத்தாலே –
இவன் குற்றங்களை இட்டுக் கை விடும் என்று -வரையாதே மேல் விழுந்து
ஸ்வீகரிக்கும் திருவடிகளினுடைய சேர்த்தி அழகைச் சொல்லி –
சரணம் -என்கிற பதத்தாலே –
அவை தான் இவனுக்கு
அநிஷ்ட நிவ்ருதிக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் -சாதனம் என்னும் இடம் சொல்லி -ப்ரபத்யே என்கிற வர்த்தமானத்தாலே –
சேதனன் நெடும் காலம் பண்ணின பராதி கூல்யம் தவிர்ந்து -இன்று இசைந்து பற்றுகிற பற்றைச் சொல்லி –
உத்தர கண்டத்திலே
ஸ்ரீமத் பதத்தாலே –
உபேயத்திலும் பிராட்டி புருஷகார பூதையுமாய் (இங்கும் ஒன்றைப் பத்தாக்க புருஷகாரம் வேண்டுமே)ஸ்வாமிநியுமாய்க் கொண்டு –
அவனோடே நித்ய வாசம் பண்ணுகிற படியை சொல்லி –
நாராயண பதத்தாலே
அவனுடைய சர்வ ஸ்வாமித்வம் சொல்லி –
ஆய -என்கிற சதுர்த்தியாலே –
இவ்விருவருமான சேர்த்தியிலே இப் ப்ரபன்னனான சேதனன் –
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை பிரார்த்தித்து –
அத்யாஹார்யமான ஸ்வ சப்தத்தாலே
பெற்றபடி சொல்லி –
நமஸ் ஸாலே
அடிமை செய்யும் இடத்து அவன் உகந்த உகப்பைக் கண்டு
உகக்கும் அது ஒழிய தன் உகப்பு தவிர்ந்தபடி சொல்லித் தலைக் கட்டுகிறது
(பாரதந்தர்ய அனுரூபமான ஸூவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி கீழ் -இங்கு சேஷத்வ அனுரூபமான ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா ஸர்வ வித கைங்கர்யங்களைப்பண்ண வேண்டுமே
புகளின்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் -பூர்வ வித அத்யாஹாரம்
அடிமை செய்ய வேண்டும் நாம் உத்தர வாக்கியத்தில் அத்யாஹாரம் -கைங்கர்யம் பெற நம்மையும் சேர்த்துக்கொள்ளுவார்)
(பற்றும் பற்றில் உபாயத்வ புத்தி வைப்பது அநந்ய சரணத்வமாகிய சேதன ஸ்வரூபத்துக்கு முரண்பட்டதாகும் -கைங்கர்ய அனுபவ போக்யதையை அறிந்து வைத்தும் அதில் நின்றும் மீள்வது ப்ராப்ய ருசியோடு முரண்படும் -பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகளே விடாது திண் கழலாய் இருக்கும் -முமுஷுப்படி -146-)
———————————————–——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .