திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-9-1–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஒன்பதாம் திருவாய்மொழி

‘எம் மா வீடு’

முன்னுரை

    ஈடு : மேல் திருவாழியிலே, ‘நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்’ என்று இவர்தாமும் அருளிச்செய்து, 1சர்வேஸ்வரனும் இவர்க்கும் இவர் உறவினர்கட்கும் 2பரமபதம் கொடுப்பானாகப்பாரிக்க, அதனைக் கண்டு, ‘தேவரீர் எனக்குப் பரமபதம் தந்தருளப் பார்த்ததாகில் இங்ஙனே தரப் பார்ப்பது; அதாவது, ‘உமக்காக மோக்ஷம் கொடுக்கிறோம் கொள்ளும்’ என்று எனக்காகத் தருகை அன்றி, ‘நமக்காகக் கொள்ளும்’ என்று தேவரீருக்கே ஆகும்படியாகத் தரவேண்டும்,’ என்று 3தாம் நினைத்திருந்தபடியை அவன் திருமுன்னர்ப் பிரார்த்திக்கிறார். ‘ஆயின், இதனை இத்தனை நாள் அறுதியிடாது ஒழிவான் என்?’ என்னில், அவன் மேலும் மேலும் குணங்களை நுகர்விக்கையாலே அதற்குக் காலம் போந்தது இத்தனை அல்லது, இதனை அறுதியிடுவதற்குக் காலம் பெற்றிலர். ‘ஆயின், 4இப்பொழுதும் குணானுபவமே அன்றோ பண்ணுகிறது?’ என்னில், ஆம், அப்படியே; இறைவன் தம் பக்கல் மேலும் மேலும் செய்கிற விருப்பத்தைக் கண்டு, ‘இவனுக்கு இந்தக் காதற்பெருக்கு முடியத் தொடர்ந்து செல்லுவது ஒன்றாய் இருந்தது; நாம் இவனை மீட்டாகிலும்

நம்முடைய பேற்றினை அறுதி இடுவோம்’ என்று பார்த்து, 1‘நீ இங்ஙனே நில்’ என்று அவனை நிறுத்தி வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார்.

    2எம்பார், இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால், இருந்தவர்களை ‘யார்?’ என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து, மிக இரகசியமாக அருளிச்செய்வர்.

    ‘நன்று; 3பெறத் தகுந்த பேறு என்பது இப்படி அன்றோ இருப்பது? இவர் அறுதியிட வேண்டுகிறது என்?’ என்னில், சர்வேஸ்வரன் இவ்வாத்துமாவுக்குத் தலைவனாய், இவனும் அடியவனாய், அவனுடைய உபாய பாவமும் நித்தியமாக இருக்கச் செய்தே அன்றோ இவனுக்கு இன்று 4ஸ்வீகாரம் வேண்டுகிறது? அப்படியே, அவன் ஸ்வதந்தரன் ஆகையாலே, 5நினைத்தபோது நினைத்தபடி கொள்வான் ஒருவன் ஆகையாலே, பேற்றினைப் பெறும் சமயத்தில் அனுபவம் இருக்கும்படியையும் அறுதியிட்டுப் பெறவேண்டும் என்க.

1பின் வாக்கியத்திலும் இவ்வர்த்தத்தைச் சொல்லாநின்றதே என்க ‘துவயந்தன்னில் அறுதியிட வேண்டுகிறது என்?’ என்னில், முன் வாக்கியத்தால் சொன்ன சாதனம், எல்லாப்பலன்களையும் கொடுக்கக் கூடியது ஆகையாலே, வேறு பலன்களை விரும்பி அடைக்கலம் புகுவார்க்கும் அவற்றைக் கொடுத்துவிடுவான் ஒருவன் அன்றோ சர்வேஸ்வரன்? ஆதலால், அறுதி இடுகிறது என்க

    ‘நன்று; இத்திருவாய்மொழியில் அறுதியிடும் பேறு என்?’ என்னில், 2‘முத்தனாய்த் தனக்கு மேல் ஒன்று இல்லாததான சுகானுபவத்தைப் பண்ணவுமாம்; ஆத்மப்பிராப்தியைப் பெறவுமாம்; ஆத்துமவிநாசமே ஆகவுமாம்; நரக அனுபவம் பண்ணவுமாம்; இவற்றில், எனக்கு ஒரு நிர்ப்பந்தம் இல்லை; உனக்காக வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம்; எனக்காக வருமன்று இவை இத்தனையும் வேண்டா; ஆன பின்னர், தேவர்க்கு உறுப்பாமிதுவே எனக்கு வடிவாம்படி பண்ணியருள வேண்டும்’ என்று, தம்முடைய பேற்றினை அறுதியிடுகிறார்.

    இப்படிப்பட்ட செயல்தான் உலகத்தில் நடைபெறுவது ஒன்று அன்று; இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல்; இராமாயண புருஷர்களில் ஸ்ரீபரதாழ்வான், இளையபெருமாள் இவர்கள் பக்கலிலேகாணுதல் செய்யுமித்தனை. கைகேயி 1‘ராஜந்’ என்ற சொல் பொறுக்கமாட்டாமல் இராஜசபையிலே கூப்பிட்டான் அன்றோ? 2‘விலலாப சபா மத்யே – ஒரு திரளாய் இருந்து என்னுடைய சேஷத்துவத்தைக் கொள்ளை கொள்வதே! திருடர்களாலே திருடப்பட்டவன் போன்று வாய்விட்டு இரைந்து அழுதற்குத் தகும்’ என்கிறபடியே, இழந்த பொருளுக்குத் தக்கபடியாக இருக்கும் அன்றோ கூப்பீடும்? ஜகர்ஹேச – சந்தியாவந்தனத்திற்குப் பிற்பாடரைச் 3சிஷ்டகர்ஹை பண்ணுவாரைப் போலே பழித்தான். புரோஹிதம் – அழகியதாக இக்குடிக்கு முன்னோடி இதம் பார்த்தாய். சபா மத்யே புரோஹிதம் ஜகர்ஹே – சபையின் மத்தியிலே புரோஹிதராகிய வசிஷ்டரை நிந்தித்தான்; 4‘ஆசாரியன் விதிகளை மீறுவானேயாயின் அதனை அவனிடத்தில் ஏகாந்தத்தில் கூறல் வேண்டும்’ என்கிற நிலையையும் பார்த்திலன். ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய – ஒருவனுக்கு இரண்டு பொருள்கள் அடிமை ஆனால் ஒன்றை ஒன்று நிர்வஹிக்குமோ? அப்படியாயின், ராஜ்யந்தான் என்னை ஆண்டாலோ? தர்மம் வக்தும் இஹார்ஹஸி -‘பெருமாள் காடு ஏறப்போனார்; சக்கரவர்த்தி துஞ்சினான்; நாடு அரசன் இன்றி இருத்தல் ஆகாது; நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்கவேண்டும்’ என்று பார்த்தாய் இத்தனை போக்கி, இதற்கு விஷயமாக இருக்கிற என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்றில்லை. கதம் தசரதாத் ஜாதோபவேத் ராஜ்ய அபஹாரக: – 5அவர் போகட்டுப் போன ராஜ்யத்தை

அபகரித்து, அவரைப் பிரிந்த அந்தக் கணத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே நான்?’ என்பது ஸ்ரீபரதாழ்வான் திருவார்த்தை.

    ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1‘குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத்தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி. மேலும், 4‘பரவா நஸ்மி – உம்முடைய அஸ்மிதை போல அல்ல

காணும் என்னுடைய அஸ்மிதை’ என்றார் இளையபெருமாள். இத்தகைய பராதந்திரியத்தை ஆயிற்று இவர் ஆசைப்படுகிறது.

    ‘இதுதான் ஒருவர் விரும்புவதும் அன்று; விரும்புவார் இன்மை யான் நான் கொடுத்துப் போருமதுவும் அன்று; அவ்வழி புல் எழுந்து போயிற்றுக் காணும்’ என்று இறைவன் அநாதரித்திருக்க, ‘புருஷன் அர்த்திக்க வருமது அன்றோ புருஷார்த்தமாவது? இப்பேறு இத்தனையும் நான் பெற்றேனாக வேண்டும்’ என்று இவர் விரும்ப, 1அவனுந் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக்கட்டுகிறார்.

201

        எம்மா வீட்டுத் திறமும் செப்பம்;நின்
செம்மா பாதபற் புத்தலை சேர்த்து;ஒல்லை
கைம்மாத் துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது இஃதே2.

    பொ-ரை : கையையுடைய யானையினது துன்பத்தை நீக்கிய உபகாரகனே! ஸ்வாமியே! எத்தகைய பெரிய மோக்ஷத்தின் தன்மையைப் பற்றியும் பேசோம்; நினது சிவந்த பெருமை பொருந்திய திருவடித் தாமைரைகளை என் தலையின்மீது விரைவில் சேர்க்கவேண்டும்; அடியேன் விரும்புவது இப்பேறேயாகும்.

    வி-கு : ‘எம்மா’ என்பதனை, எ-மா என்றும், எம்-மா என்றும் இருவகையாகவும் பிரித்தல் தகும். ‘ஒல்லை’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டி இடைநிலைத் தீவகமாகப் பொருள் கொள்க. செப்பம் – தனித்தன்மைப் பன்மை. ‘பத்மம்’ என்ற சொல், ‘பற்பம்’ எனத் திரிந்தது.

ஈடு : முதற்பாட்டில், 1‘எவ்வகையாலும் வேறுபட்ட சிறப்பினையுடைய மோக்ஷத்திலும் எனக்கு விருப்பம் இல்லை; உன் திருவடிகளை என் தலையிலே வைக்கவேண்டும்,’ என்கிறார்.

    2‘ஆழ்வீர்! மோக்ஷத்தைக் கொள்ளும்,’ என்றான் இறைவன்; ‘வேண்டா’ என்றார்; ‘மா வீடு – வேறுபட்ட சிறப்பினையுடைய மோக்ஷங்காண்’ என்றான்; ‘அதுவும் வேண்டா’ என்றார்; ‘எம் மா வீடுகாண் – செல்வம், ஆத்ம லாபம் என்று இருக்கவேண்டா; பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷங்காண்’ என்றான்; ‘அதுவும் எனக்கு வேண்டா’ என்கிறார். எம் மா வீட்டுத் திறமும் செப்பம் – எவ்வகையாலும் நன்றான மோக்ஷத்தைப் பற்றிய வார்த்தையும் பேசோம்.  நீ அதனைப் பற்றிப் பேசவும் உரியவன் அல்லை; நான் மறுக்கவும் உரியவன் அல்லேன் என்றபடி. இனி, ‘எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்பதற்கு, ஒரு புலவர் எம் மா வீட்டு விகல்பமும் செவ்வியவாம் என்று பொருள் கூறினர். அப்பொருளில், வீட்டு விகல்பமாவது – சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் என்கிற இவை. செவ்விய ஆகையாவது, சாலோக்யம் முதலானவைகள் எல்லாம்3 இம்மோக்ஷத்திலே உண்டாகை.

    ‘ஆயின், உமக்கு வேண்டுவது என்?’ என்னில், ‘நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து – மலர்ச்சி, செவ்வி, குளிர்த்தி, நாற்றங்களுக்குத் தாமரையை ஒரு போலி என்னலாம்படி இருக்கிற உன்னுடைய திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க வேண்டும். செம்மா பாதம் – செம் என்று சிவப்பாய், மா என்று கறுப்பாய், அகவாய் சிவந்து புறவாய் நீலமாய் இருக்கிற திருவடி என்றபடி. இனி, செம், மா பாதம் – என்பதற்குச் செம்மையால் நினைக்கிறது – செவ்வையாய், அடியார்கட்கு வருந்த வேண்டாதபடியான ஆர்ஜவத்தையுடைத்தாய் என்றும், மா என்று பெருமையாய் பூசிக்கத்தக்க மிக உயர்ந்த திருவடிகள் என்றும் பொருள் கூறலுமாம். சேர்த்து – சேர்க்க வேண்டும்; அதாவது, 1‘கொக்கு வாயும் படுகண்ணியும் போன்று, உன் திருவடிகளும் என் தலையும் சேரவேண்டும்,’ என்றபடி. ‘சேர்த்து’ என்பது வினையெச்சம் அன்று; வேண்டிக்கோடற்பொருண்மையின்கண் வந்த வியங்கோள் வினைமுற்று. ‘சேர்த்துக’ என்பது ஈறுகெட்டு நின்றது. 2‘பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்றார்கள்; ‘பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான். மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போன்று, இவரும் ஈறு இல் இன்பத்து இருவெள்ளத்திலே முழுகிப் பூச்சூட இருக்கின்றார் ஆதலின், ‘பற்புத்ததலை சேர்த்து’ என்கிறார்.

    ‘அப்படியே செய்கிறோம்’ என்றான்; அம்முறை பற்றாது. ஒல்லை -‘செய்துகொடு நின்று ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்; ‘இப்படி விரைய வேண்டும் இடம் உண்டோ?’ என்ன, கைம்மா துன்பம் கடிந்த பிரானே – நீ விரைந்து வந்து விழுந்தபடி அறியாயோ? 3பெரிய ஆபத்தை அடைந்தது, கூப்பிடுதற்கும் ஆற்றல் அற்று மனத்தினாலே நினைந்தது’ என்கிறபடியே, சர்வேஸ்வரனாகிய நீயும் உன்றன்னைப் பேணாமல் வந்து விழும்படியான ஆபத்தே அன்றோ?’ என்றபடியாம். யானையும் தன் அளவிலே படும் துன்பம் என்பார், ‘கைம்மாத் துன்பம்’ என்கிறார், இனி, துதிக்கை ஒழிய முழுகிற்று’ என்பார், ‘கைம் மா’ என்கிறார்’ எனலுமாம். ‘அப்படி, உமக்கு ஆபத்து உண்டோ?’ என்ன, ‘அங்கு முதலை ஒன்று; எனக்கு முதலை ஐந்து: அங்கு ஆயிரம் தெய்வ யாண்டு; இங்கு அநாதிகாலம்; அங்கு ஒரு சிறு குழி; இங்குப் பிறவி என்னும் பெருங்கடல்;அதற்குச் சரீர நாசம்; எனக்கு ஆத்தும நாசம்; அங்கு யானையின் காலை முதலை பற்றியது; இங்கு என்னுடைய நெஞ்சை அன்றோ அருவித் தின்றிடுகிறது? ஆதலால், அதற்கும் இதற்கும் உள்ள வாசி பாராய். கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கின அதுவும் தமக்குப் போக்கியது என்று இருக்கின்றார் ஆதலின் ‘பிரானே’ என்கிறார். ‘அதற்கு உதவினமை உண்டு; உமக்கு என்?’ என்ன, அம்மா -‘அதற்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரீருடைய சம்பந்தம்? நீர் சுவாமி அன்றோ?’ ‘நீர் யார்?’ என்ன, அடியேன்-நான் அடியவன். ‘நன்று; இவருடைய சொரூபத்தையும் பற்றித் ‘தவிர ஒண்ணாது’ என்று விரும்புகிறீரோ?’ என்ன, வேண்டுவது – வேண்டிப் பெறத்தக்கது. ‘இதுவாகில் வேண்டுவது, இது செய்கிறோம்; இதுவும் இன்னம் எதுவும் வேண்டும்?’ என்றான். இஃதே – 1‘நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து என்ற இதுவே’ என்கிறார்.          

பெருமாள் ‘நில்’ என்ன, இளையபெருமாள், குருஷ்வ மாம் அநுசரம் – நான் பின்
தொடர்ந்து வருவேனாகச் செய்ய வேண்டும்’ என்று சொன்னார் என்றபடி.

2. ’நீருள எனின்உள் மீனும் நீலமும்;
பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
யாருளர் எனின்உளேம்? அருளுவாய்’ என்றான்.                     

(கம்ப. நகர் நீங். 157)

  என்ற செய்யுளைச் ‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய’ என்று தொடங்கும்
வாக்கியத்தோடு ஒப்பு நோக்குக.

3. ஒருவன் ஒரு தொழிலைச் செய்தால், அத்தொழிலால் உண்டாகும் பயன் தன்னைச்
சார்வதாக இருந்தால், அத்தொழிலை உணர்த்துகின்ற சொல்லின் உறுப்பை ‘ஆத்மநே
பதம்’
என்றும், பயன் பிறன் ஒருவனைச் சார்வதாக இருந்தால் அத்தொழிலை
உணர்த்தும் சொல்லின் உறுப்பைப் ‘பரஸ்மை பதம்’ என்றும், கூறுப. அங்குக் ‘குரு’
என்பது பரஸ்மை பதம்;’ ‘குருஷ்வ’ என்பது ஆத்மநே பதம். ஆத்மநே பதமான
‘குருஷ்வ’ என்றதனை நோக்கி, ‘யாருடைய பிரயோஜனத்துக்காக யார் தான் இருக்கிறார்?
உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்று அருளிச்செய்கிறார். ‘சேதனன்
அடிமை செய்வதால் உளதாய பயன் இறைவனுக்கு’ என்னும் சாஸ்திரப் பொருளை இங்கு
நினைவு கூர்க. இங்கு, ‘உனக்கேநா மாட்செய்வோம்; மற்றைநம் காமங்கள் மாற்று’ என்று
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார் திருவாக்கின் சீரிய பொருளைச் சிந்தை செய்க.

4. ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்றதற்கு பாவம் ‘நீர்தாம்’ என்று
தொடங்கும் வாக்கியம். அந்தச் சுலோகத்தை முற்றும் ஈண்டுத் தருகிறேன்: –

  ‘குருஷ்வ மாம் அநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே
கிருதார்த் தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த! ப்ரகல்பதே.’

      ‘சேஷபூதனான என்னைப் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருள வேண்டும்
என்னைக் கூட்டிக்கொண்டு போவதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்க இல்லை;
தேவரீருக்கே பயன் சித்திக்கிறது; நான் தேவரீருக்குக் கைங்கர்யத்தைச் செய்து அத்தால்
வந்த கைங்கர்ய பலத்தை  அடைந்தவனாகப் போகிறேன்’ என்பதாம்.

பரவாநஸ்மி’ என்ற தலைப்பையுடைய சுலோகம் முழுதும் வருமாறு; –

  ‘பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே கிரியதாமிதி மாம் வத.’

      ‘ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்தவரே! தேவரீர் பல வருஷங்களாக இருக்கும் போதும்
நான் பரதந்திரனாகவே இருக்கிறேன்; தேவரீரே மனோகரமான ஓர் இடத்தைப் பார்த்து,
‘இந்த இடத்தில் பர்ணசாலை கட்டுக’ என்று என்னை நியமித்தருளவேண்டும்.

எ ம்மா வீடு திருவாய் மொழி
உயர்ந்த -சாரம் மிகுந்த
எம்மா வீட்டில் எம்மா வீடு நான்காவது பாசுரம்
இதுவாயிற்று திருவாய் மொழி
நலம் அந்தமில் நாடு புகுவீர் -உபதேசித்து –
இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாய் பாரிக்க வந்து
அத்தை கண்ட ஆழ்வார்
இங்கனே தரப் பார்க்கிறது –
அதாகிறது உனக்கு மோஷம் கொள் என்று எனக்காக தராமல் தனக்காக எனைக் கொள்ளும் ஈதே –
எனக்கே  கண்ணனை யான் கொள் சிறப்பே –
மோஷம் கேட்கும் பொழுதே –இனி யாம் உறாமை -அங்கெ கேட்காமல் இப்படி இங்கே கேட்க காரணம் –
கொஞ்சம் கொஞ்சமாக கடைசியில் கேட்க காரணம் –
இத்தனை நாள் நிர்ணயம் பண்ணாமல் இருக்க காரணம் –
அவன் மென்மேலும் குண அனுபவம் கொடுக்கையாலே -இதை சொல்ல காலம் இல்லை –
இதிலும் குணம் சொல்ல -அனுபவம் தானே
அது அப்படியே –
இவன் மென்மேலும் காட்டும் விருப்பம் கண்டு வியாமோகம் முடிய அனுபவிக்க முடியாதே
இவனை மீட்டாகிலும் பிராப்ய நிஷ்கர்ஷம்
கொஞ்சம் நிறுத்தி சொல்லி -அப்புறம் குண அனுபவம் செய்ய
இங்கனே நில் என்று நிறுத்தி வைத்து பிராப்ய நிஷ்கர்ஷம் அருளிச் செய்கிறார் –
எம்பார் -இந்த திருவாய் மொழியை அனுசந்திக்கும் பொழுது –
இருந்தவர்களை யார் என்று கேட்டு -கதவுகளை அடைத்து குக்ய த மமாக –
பக்தி -அந்வயம் அதிகாரி நிஷ்டை உண்டே
பிரபத்தி அந்வயம் அதிகாரி நிஷ்டை இல்லையே இருந்தும் -மறைத்து
வீடு முன் முற்றவும் பக்தி -விசுவாசம் அனைவருக்கும் உண்டாகாது
உய்யக் கொண்டாருக்கு உடையவர் அருளிச் செய்த வார்த்தை
உபேய கௌ ரவம் -வித்வான் அர்த்தம் அறிந்தீர் பாக்ய ஹீனர் ஈடுபாடு இல்லை –
அப்படி உள்ளவருக்கு உபதேசம் கூடாதே
திருக் கோட்டியூர் நம்பி அதனால் தான் பரிட்ஷை
தமிழன் வேதார்த்தி பலரும் கேட்க வருவார்கள் திரு வாய் மொழி கால ஷேபம் கேட்க –
தகுதி உண்டா என்று பார்த்து –
கைங்கர்யம் அவன் ஆனந்தத்துக்கு என்பது -குக்ய தமமான அர்த்தம் -திருவடி சம்பந்தம் -கேட்டு –
எம்பார் -கதவுகளை அடைத்து -வெளியில் போக விடாமல் அரை குறையாக கேட்டு போகாமல் இருக்க
அருளிச் செய்வது -சாரம் –
நிஷ்கரிஷிக்க வேண்டியது எதற்க்காகா -பிராப்யம் என்றாலே இது தானே
சர்வேஸ்வரன் சேஷி -இவரும் சேஷ பூதர் அநாதி -உபாய பாவமும் நித்யம்
ச்வீகாரம் செய்த பின்பு தான் கார்யகரம் ஆகும் –
ஞானம் ஏற்பட்ட பின்பு தான் பலன் –
அவன் ஸ்வ தந்த்ரன் -நினைத்த பொழுது வேண்டியதை கொள்வான்
பிராப்தி சமயத்தில் இப்படி கொடு சொல்ல வேண்டுமே
உத்தர அர்த்தத்திலும் இந்த அர்த்தம் –
உத்தர கண்டம் -த்வயத்தில் –
பூர்வ அர்த்தம் -சர்வ பலனுக்கும் சாதனம் –
பல நியமனம் இல்லையே எதற்கும் சரணாகதி செய்யலாமே
சர்வ பல பிரதானம்
பிரயோஜனாந்தர பரரும் சரண் அடையலாமே
ஸ்ரீ மதே நாராயண நம -அதுவும் அவன் ஆனந்தத்துக்கு
முக்தனாய் நிரதிசய ஆனந்தம் –ஆத்மா பிராப்தி கைவல்யமோ -ஸ்வர்க்கம் அனுபவம் –
நரகமோ -உனக்காய் வந்தால் இத்தனையும் பெறுவேன் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை –
எனக்காக ஒன்றும் வேண்டும்
தேவரீர் ஆனந்தத்துக்கு மட்டுமே –
எய்தாலும் எய்தாவிடிலும் -கீழே பாசுரம் வரும்
எம்மா வீட்டு திறமும் செப்போம் –

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார் -பிராப்ய நிஷ்கர்ஷம் செய்து அருளுகிறார்

சம்சாரம் நிவ்ருத்தி கழிந்து -பகவத் கைங்கர்யம் செய்து அவனை ஆனந்திப்பிக்க
நிர்ணயித்து -அருளுகிறார் -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
ஆம் பரிசு அறிந்து -தொண்டர் அடி பொடி ஆழ்வார்
மற்றை நம் காமங்கள் மாற்று
பிதிதாக நிஷ்கர்ஷம் செய்ய வேண்டியது எதற்கு
பிரபத்தி சொல்ல வேண்டியது போல் -கார்ய கரம் இல்லை
நித்யமாக இருந்தாலும் -உணர்ந்து இருக்கிறபடியே பேசினால் தான்கார்யகரம் ஆகும் –
உன் ஆனந்தமே முக்கியம் –
மோஷமோ நரகமோ உனக்காக என்றால் உத்தேச்யம் –
ஸ்ரீ பரத ஆழ்வான் -இளைய பெருமாள் -திரு உள்ளம் அநு சரித்து –
ஜலான் மஸ்த்யா போல் –
இழந்த வச்துவ்வுக்கு தக்கபடி கூப்பீடு -புரோகிதர் -வசிஷ்டர் பார்த்து பரதன –
நன்மையை பார்க்காமல் ஸ்வரூபம் அறியாமல் –
ஆசார்யர் இடமஏகாந்தமாக சொல்லாமல் –
ராஜ்யம்  பரிபாலிக்க வேண்டுமே –
அத்யந்த பாரதந்த்ர்யம்-ராஜ்யஞ்ச அஹமஞ்ச -ராமஸ்ய ராமனின் உடைமை –
பொகட்டு போன ராஜ்யத்தை தலையிலே கட்ட -ராஜ்ஜியம் என்னை ஆளலாமே –
இரண்டு வஸ்து செஷமானால் -ஒன்றை ஓன்று நிர்வகிக்குமோ –
ராஜ்ய தர்மம் பார்த்தீர் -என் தர்மம் பார்க்க வில்லையே
நின்றார் பிரதானர் தலையில் வைக்க பார்த்தீர்
விஷய பூதனரான என்னை பார்க்க வில்லையே
பிரிந்த அடுத்த ஷணம் முடிந்த தசரதர் பிள்ளையாக ஆவேனோ ராஜ்ஜியம் சூடினால்
அபகரித்தேன் என்ற பேர் வருமே -ராஜ்ய அபகாரி –
பிரிந்து 14 ஆண்டு ராஜ்ய பரிபாலனம் செய்தது திரு உள்ளம்
இளைய பெருமாளை நில் என்றால் -குருஷ்வ மாம் அனுசரம் -என்றார் இறே
அன்வயத்தாலே தான் தரிக்கும் வஸ்துவை நில் என்றால் அழியுமே
உன்னை பின் தொடர்ந்தவனாக நீ செய்வாய் -குரு என்னாதே  –
மோஷயிஷ்யமி பிரயோஜன கர்த்ருத்வம் இச்சாலே –
தொண்டையர் கோன் செய்த கோயில் சிற்பி கட்டினாலும் -குருஷ்வ பிரயோஜன
பலம் யாருக்கோ அவன் தான் -பிரயோஜன கர்த்தா –
அனுபவம் யாருக்கோ -பிரயோஜன கர்த்ருத்வம் –
ஆனந்தம் உனக்கு –
உம்முடைய இழவுக்கு நீ பதறாமல் இருப்பது ஏன் -என்கிறார் –
அடிமை கொள்வது தான் சேஷி ஸ்வரூபம் அது அழிய கூடாதே –
கொடி மூக்கும் இரா விடுத்தான் பெருமாள் நியமனத்தாலே -மூத்தானை வென்னகரம் சேர விடுத்தான்
ஒரு சேர அருளி –
குருஷ்யாமி உனக்கு -தனக்கேயாக எனைக் கொள்ளும் இதே
அநுசரம் -குருஷ்யாமி -நிற்கச் சொல்லுகைக்கு யோக்யதை
நிழலை பார்த்து சொல்ல முடியுமா -நில் என்று
அது போல் இல்லாம தனி வ்யக்தியாக இருப்பது என் குற்றம் தானே
எம்பார் -ராமானுஜா பத சாயா –
நிழல் போல் ஆக்கி பண்ணி அருளும்
சேஷத்வம் இளைய பெருமாள் -வற்புறுத்தி கொண்டார் மேல் எழுந்த பார்வை
பாரதந்த்ர்யா காஷ்டை -அத்யந்த  பாரதந்த்ர்யம் –
திருமேனி காவலுக்கு போக வேண்டுமே
ஸ்வரூபம் அழிந்தாலும் -பின் தொடர்ந்து போனது அத்யந்த பாரதந்த்ர்யம்
தன்னை அழித்துக் கொண்டு பெருமாளுக்கு கைங்கர்யம் இட்ட வழக்காய் இல்லாமல் –
காவலுக்கு போக வேண்டுமே
பரத ஆள்வான் பாரதந்த்ர்யம் -இளைய பெருமாள் அத்யந்த பாரதந்த்ர்யம்
துர்வாசர் விட்டது -விடாவிடில் குல நாசம் என்பதால்
தம்மை அழித்து கொண்டு உள்ளே போக விட்டாரே –
தண்ட காரண்யம் -நீரும் நிழலும் உள்ள இடத்தில் பர்ண சாலை அமையும்
நம் தலையில் ஸ்வா தந்த்ர்யம் காட்டி பெருமாள் கை விட்டார் அழ ஆரம்பித்தான்
பரதந்திர வஸ்து -சுயம் ருசி காட்டி -மாம்வாத –
ராமோ து நீ கூட சொல்லி பாவம் -லஷ்மன கைங்கர்ய லஷ்மி சம்பந்தம் அடையாளம் –
அஞ்சலி -ஷிப்ரம் தேவ பிரசாதம்
பண்ணின பாபம் விடுவிக்க
இங்கே எம்பெருமான் பண்ணின தப்புக்கும் அஞ்சலி செய்து –
அவனே தம் ஸ்வரூபம் அளிக்க பார்த்ததுக்கும் அஞ்சலி செய்து குறை தீர்க்க
ஸ்வரூபத்தை காப்பாற்ற கடவது
சர்வ அபிமத சாதனம் அஞ்சலி –
சீதா -பண்ணின அஞ்சலிக்கு தலை திருப்பிக் கொண்டால் திருப்பி விட அவள் உண்டே –
அந்ய பரதை பாவிக்க ஒண்ணாது
கோதா ஸ்துதி -பெரிய பிராட்டியார் -பூமிப்பிராட்டி -இரண்டு பக்கமும் திருப்ப ஒட்டாமல் –
காகுஸ்தன் -வம்சம் குடி பிறப்பும் சரண் அடைந்த –
புறாவுக்கு சிபி -சக்ரவர்த்தி -சிபார்சும் வேண்டாமே
உன்னுடைய அஸ்மி இருப்பை போல் இல்லை என்னுடைய அஸ்மிதி
அஹம் கிருகே அஸ்மி
இருப்பே பரதந்த்ர்யம் தானே நாம்
இப்படி பட்ட பாரதன்ர்யம் ஆழ்வார் ஆசைப்படுகிறார்
புதிசான வார்த்தை இல்லை
யாரும் அபேஷிப்பதும் இல்லை -கொடுத்து போனதும் இல்லை பெருமாள் வார்த்தை
அவன் அநாதரித்து இருக்க -புருஷன் ஆர்த்திக்க வருவது இறே புருஷார்த்தம் –

செப்போம் சொல்ல மாட்டோம் –
ஏம்மா வீட்டு திறமும்
பன்மையில் சொல்லி உன் திருவடி சீக்கிரம் சேர்த்து ஒல்லை –
கைம்மா துன்பம் கடிந்தாயே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –
மோஷத்தை கொள்ளும் வேண்டாம் என்றார்
மா வீடு கொள்வீர் அதுவும் வேண்டாம்
ஏம்மா வீடு ஐ ஸ்வர்யம் கைவல்யம் இல்லை
பரம புருஷார்த்த லஷண மோஷம் வேண்டாம்
இடையாட்டமும் வேண்டாம்
நீ பிரதி சந்கிக்கவும் வேண்டாம் நா தடுக்கவும் வேண்டாம்
விகல்பமும் -வீட்டு விகல்பம் -ச்சாலோக்யாதிகள் -போல்வன –
சாலோக்யம் -கைவல்யமும் சாலோக்யம் தாஎ
சாரூப்யம் -அவன் போலே ரூபம் சாமீப்யம் சமீபத்தில் –
சாயுஜ்யம் –சேர்ந்து அனுபவம்
நாலும் வேண்டாம் என்கிறார் –
திறம் விகல்பம் செப்பம் செம்மை அர்த்தம் தமிழன் அர்த்தம்
நின் செம்மா பாத
சிகப்பாய்
மா கருப்பு
பத்மம் போல் விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் -பாத பறப்பு
செம்மை செவ்வையாய் ஆஸ்ரிதர்க்கு வருந்தாமல் தானே வந்து
சிகப்புதேக குணம்
மா மகத்தை
சேர்த்து கொக்கு வாயும் படி கண்ணியம் போலே
கொக்கி -ஆபரணம்
உன் திருவடி தலையில்
சேர்த்து -சேர்க்க வேணும் விதி -கட்டளை இடுகிறார் வினை எச்சம் இல்லை
சரணவ் பிராது -வெஞ்சனங்கள் -பரத ஆழ்வான் சிரசா தாங்கி –
ஜனனி -கண்டு -இத்தை பண்ணினால் தீரும் உள் வெதும்பு ஆறுவது இத்தால்
பிள்ளாய் -கேட்க -எனக்கு வகுத்த முடி சூடி
அரசு சுமந்தான் அடி சூடும் இது அல்லால்
மயிர் கழுவி பூ சூடி -ஈறில் இன்பத்து -பிரகிருதி கழித்து பற்ற –
காலம் -ஆகட்டும் பார்க்கலாம்
அந்த க்ரமம் -பார்த்து இருக்காது
ஒல்லை
செய்து கொண்டே -கொடு நின்று –
த்வரிகை -கைம்மா துன்பம் -த்வரித்து வந்து ரஷித்தாய்
சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து -அரை குலைய தலை குலைய வந்து காத்த இடம் உண்டே
மனசால் சிந்தித்து
காத்த சக்தி இல்லை
துதிக்க -துதிக்கை மேலே வைத்து அதுவும் முழுகும் ஆபத்து
மூக்கு கீழ் மூச்சு விட முடியாதே
கைம்மா துன்பம் யானையின் -பெரியவன் துக்கம் பெரிய துக்கம் –
துதிக்கை மூழ்கின ஆபத்து
உமக்கு அது போல் உண்டோ
அங்கு ஓன்று எனக்கு ஐந்து முதலை அளித்து உண்ட
1000-தேவ சம்வச்த்ரம் இங்கே அநாதி காலம்
பிறவி என்னும் பெரும் கடல் -அங்கெ சிறு குழி
ஆத்மா நாசம் அங்கெ சரீர நாசம்
அங்கு காலை பற்ற -இங்கே நெஞ்சை பற்ற
பிரானே -கைம்மா துன்பம் கடிந்தது தமக்கு செய்த உபகாரம்
உமக்கு என்
அம்மா சுவாமி தேவரீரோட்டை சம்பந்தம் உண்டே
கஜேந்த்திரன் போல்
நீர் யார்
அடியேன் ஸ்வரூபம் சேஷ பூதன் இருவர் ஸ்வரூபத்தையும் பற்றி தவிர ஒண்ணாது

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading