திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-9-4–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

மனக்கே ஆட்செய்எக் காலத்தும்’ என்று,என்
மனக்கே வந்துஇடை வீடுஇன்றி மன்னித்
தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.

    பொ-ரை : ‘எல்லாக் காலத்திலும் எனக்கே அடிமை செய்வாய்,’ என்று என் மனத்தின்கண் வந்து பிரிதலின்றி நிலை பெற்று நின்று, தனக்கே நான் உரியவனாம்படி என்னை ஏற்றுக்கொள்ளுமிதுவே, தனக்குத் தகுதியாகக் கிருஷ்ணனிடத்தில் யான் விரும்பிக் கொள்ளுகின்ற பயனாகும்.

    வி-கு : ‘எனக்கே தனக்கே’ என்பனவற்றிலுள்ள ஏகாரங்கள்; பிரிநிலைப்பொருளில் வந்தன. ‘மனக்கு’ என்பது ‘மாடக்கு’ என்பது போன்ற விகாரம். ‘என்று, வந்து, மன்னி, கொள்ளும் ஈதே சிறப்பு’ என முடிக்க. ‘கொள்சிறப்பு’ – வினைத்தொகை. கண்ணனை-வேற்றுமை மயக்கம்; ‘கண்ணனிடத்தில்’ என்பது பொருள்.ஈடு : நான்காம் பாட்டு. 1இத்திருவாய்மொழியில், இவர் அறுதியிட்ட பிராப்பியமாவது, 2மலர்மாலை, சந்தனம் முதலியவைகளைப் போன்று ‘தனக்கேயாக என்னைக்கொள்ளும் ஈதே’ என்பதே அன்றோ? அதனை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். 3‘சர்வேஸ்வரன் மூன்று விதமான சேதநரையும் சொரூபத்திற்குத் தகுதியாக அடிமை கொள்ளுகின்றான்; நாமும் அப்படியே சொரூபத்திற்குத் தகுதியான பேறு பெறுவோமே!’ என்று அருளிச்செய்கிறார் என்று இவ்விடத்திலே எம்பார் அருளிச்செய்வர். 4‘முத்தரும் நித்தியரும், தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பிப்பார்கள்; பத்தர், தாங்கள் ஆனந்தியாமல் அவனை ஆனந்திப்பிப்பர்; ‘இன்புறும் இவ்விளையாட்டு உடையான்’ அன்றே? மயர்வு அற மதி நலம் அருளப் பெற்றவர்கள், ‘இறைவன் திருவுள்ளமானபடி செய்கிறான்’ என்று

இராமல், ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ என்று பிரார்த்தித்தல் என்?’ என்று பிள்ளை திருநறையூர் அரையர் எம்பாரைக் கேட்க, ‘அது கேளீர்; முன்பு பிரிந்து அன்று; பின்பு பிரிவிற்குக் காரணமுண்டாய் அன்று; இரண்டும் இன்றி இருக்கச்செய்தே, 1‘அகலகில்லேன் அகலகில்லேன்’ என்று கூறும்படி செய்வது விஷயத்தின் தன்மையே அன்றோ? அப்படியே, பேற்றிலே உள்ள ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறதுகாணும்’ என்று அருளிச்செய்தார்.

    2எம் மா வீட்டில் எம் மா வீடாய், வைஷ்ணவர்கள் அனைவர்க்கும் செல்வமுமாய், உபநிடதத்தின் இரகசியப் பொருளாய், சர்வேஸ்வரன் பக்கலிலே விரும்பிப் பெறுமதாய், இவ்வாத்துமாவுக்கு வகுத்ததுமான பாரதந்திரியத்தை அவன் பக்கலிலே விரும்புகிறார்.

    எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி – முதலிலே ‘ஆள் செய்’ என்னவேண்டும்; இதனால்,  ஸ்வாதந்திரியத்தை வேறுபடுத்தி நீக்குகிறார்; ‘எனக்கு ஆள் செய்’ என்ன வேண்டும்; இதனால்,  அடையத் தகுதி இல்லாத மற்றையோரை வேறுபடுத்தி நீக்குகிறார்; ‘எனக்கே ஆள்செய்’ என்ன வேண்டும்; இதனால், தனக்கும் அவனுக்கும் பொதுவான நிலையைத் தவிர்க்கிறார். இதுதான் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்க வேண்டியதாதலின், ‘எக்காலத்தும்’ என்கிறார். 3’எனக்காக இதனைச் செய் என்று கூறுக, என்கிறபடியே, ‘இன்னதைச் செய்’ என்று ஏவிக்கொள்ள வேண்டியிருத்தலின், ‘என்று’ என்கிறார். ‘இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது; என்னுடைய மனத்திலே வந்து புகுதல் வேண்டும்’ என்பார், ‘என் மனக்கே

வந்து’ என்கிறார். ‘புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது, நிலையியற்பொருள் போன்று எழுந்தருளியிருக்க வேண்டும்’ என்பார், ‘இடைவீடின்றி மன்னி’ என்கிறார். ‘இருந்து கொள்ளும் காரியம் என்?’ எனின், ‘தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே’ என்கிறார்; அதாவது, மலர் மாலை, சந்தனம் முதலியவைகளைப் போன்று கொள்ள வேண்டும். ‘அவை, பிறர்க்கேயாக இருக்கும் பொருள்களாமோ?’ எனின், அவை, சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய், மிகுதியைக் கழித்துப் போகடுமித்தனையே அன்றோ?’ ஆயின், அடிமையாய் உள்ள ஒருவனுக்கு, தான் ஒன்றை விரும்பிக் கேட்பதற்கு இடம் உண்டோ?’ எனின், ‘இருவர் கலக்குமிடத்துக் கலவியால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்குமன்றே? அங்ஙனம் என்னுடைய பிரீதிக்கு நான் சேர்ந்தவனாக ஒண்ணாது,’ என்கிறார் என்றபடி.

    ‘இதுகாறும், ‘அம்மா’, ‘நின்’ என்பன போன்று முன்னிலையாகக் கூறிவந்தவர், இப்பாசுரத்தில், ‘தனக்கே’ என்றும், ‘கண்ணனை’ என்றும் படர்க்கையாக அருளிச்செய்வதற்குக் காரணம் என்?’ எனின், ‘பேற்றினை அறுதியிடும் சமயத்தில் திருமுகத்தைப் பார்க்கில் உறுதி குலையும்’ என்று கவிழ்ந்திருந்து கையோலை செய்து கொடுக்கிறார்.

    1மேல் ‘தனக்கேயாக’ என்ற பின்புத்தை ‘எனக்கே’ என்ன வேண்டுமன்றே? ஆதலின், ‘எனக்கே’ என்கிறார். இனி, புருஷார்த்தம் ஆகைக்காகச் சொல்லுகிறார் எனலுமாம். 2‘விரும்பிப் பெறவேண்டியவன் ஒரு சேதநனே ஆவன். நீர் விரும்புகிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்ய வேண்டுங்காணும்’ என்ன, ‘யான் கொள்’ என்கிறார்; அதாவது, ‘சொரூப ஞானத்தை நீ பிறப்பிக்க, அதனாலே சொருப ஞானமுடைய நான் ஒருவனும் பெறும்படி செய்யவேண்டும்’ என்றபடி. ‘உமக்கும் நம்மால் எப்போதும் செய்யப்போகாது’ என்ன, ‘சிறப்பே’ என்கிறார்;அதாவது 1பலகால் வேண்டா; ஒருகால் அமையும்; அதுதன்னிலும், திருவாசலைக் காப்பிட்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாவது, ஏற்றம். அதாவது, புருஷார்த்தம். ‘சொரூபத்திற்குத் தக்கதான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேண்டும்’ என்றபடி. ‘இனி, சிறப்பாவது, முத்தியும், செல்வமும், நன்றியும்’, என்றது, ‘நான் உன்பக்கல் கொள்ளும் மோக்ஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே’ என்னுதல்; அன்றிக்கே, ‘உன் பக்கல் கொள்ளும் செல்வம் உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே’ என்னுதல்; அன்றிக்கே, நன்றி உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே’ என்னுதல் என்றபடி.

. இத்திருவாய்மொழிக்கு நிதானம் இப்பாசுரம் என்னுமிடம் தோன்ற அருளிச்செய்கிறார்.
‘இத்திருவாய்மொழியில்’ என்று தொடங்கி.

2. ‘பலவுறு நறுஞ்சாந்தம் யடுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;

  ‘சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;                        

  ‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.’                  

(கலித். 9)

  என்னும் தாழிசைகள் ஈண்டு ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

3. ‘சர்வேஸ்வரன் மூன்று வகைப்பட்ட சேதனரையும் தங்களுக்கு அனுபவத்தின் பயன்
இன்றிக்கே தனக்கே உறுப்பாம்படி ஸ்வரூப அநுரூபமாக அடிமை கொள்ளாநின்றான்
அன்றோ? நாமும் அப்படியே ஸ்வரூப அநுரூபமான பேறு பெறுவோமே!’ என்று
அருளிச்செய்கிறார் என்றபடி.

4. மூன்று வகைப்பட்ட சேதனரும் அத்தலைக்கு உறுப்பாம் படியை விரிக்கிறார், ‘முத்தரும்
நித்தியரும்’ என்று தொடங்கி. முத்தரும் நித்தியரும் ‘அஹமந்நம் அஹமந்நம்’ என்று
அவனை ஆனந்திப்பித்து, அவன் உகந்த அவ்வழியாலே ‘அஹமந்நாத’ என்று
தாங்களும் ஆனந்திப்பர்கள் என்றபடி. பத்தர், ‘அறிவில்லாத சம்சாரிகள் தங்களுடைய
சுக துக்கங்களுக்குத் தாம் காரணர்  அல்லர்; ஈஸ்வரனாலே ஏவப்பட்டே
சுவர்க்கத்தையோ நரகத்தையோ அடைகிறார்கள்;’ என்கிறபடியே, தாங்கள்
ஆனந்தியாமல் அவனுக்கு லீலா விஷயமாய்க்கொண்டு அவனை ஆனந்திப்பிப்பர்கள்
என்றபடி. பத்தர்கள் ஈஸ்வரனுடைய ஆனந்தத்திற்குக் காரணமாயிருப்பர்கள் என்பதற்குக்
காட்டும் மேற்கோள் ‘இன்புறும் இவ்விளையாட்டு உடையான்’ என்பது. இப்பாசுரம்,
திருவாய். 3. 10 : 7. பத்தர் – கட்டுப்பட்டவர்.

2. ‘எம் மா வீட்டில் எம் மா வீடாய்’ என்றது முதல் ‘விரும்புகிறார்’ என்றது முடிய,
பாசுரத்திற்கு அவதாரிகை. ‘எம் மா வீட்டில் எம் மா வீடாய்’ என்றது. திருவாய்மொழி
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு பேற்றினை அறுதியிடுதலைப் பற்றிக் கூறுகின்ற ‘எம்
மா வீடு’ பத்துப் பாட்டும் சாரமாயிருக்கும்; அவற்றில் இது நிதானமான பாசுரமாகையாலே
சார தமமாயிருக்கும் என்றபடி. ‘வைஷ்ணவர்களனைவர்க்கும் செல்வமாய்’ என்றது. ‘ஸ்ரீ
வைஷ்ணவ அதிகாரிக்கு இப்பாசுரப்பொருள் அவசியம் அபேக்ஷிதம’ என்றபடி.
‘உபநிடதத்தின் இரகசியப்பொருளாய்’ என்றது, கடவல்லியுபநிக்ஷத்துச் சித்தமான
துவயத்தில் ‘நம்:’ என்னும் பதத்தின் பொருள் இங்குக் கூறப்படுகின்றது என்றபடி.

’எனக்கே’ என்று அகங்காரம் தோன்றச் சொல்லுதல் குற்றம் அன்றோ?’ என்னும்
வினாவிற்கு விடையாக, ‘மேல் ‘தனக்கேயாக’ என்றார்’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.

2. ‘புருஷார்த்தமானால், ‘எனக்கு’ என்னவேண்டுமோ?’ என்னும் வினாவிற்கு விடையாக,
‘விரும்பிப் பெற வேண்டியவன்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ஆக, ‘எனக்கு’
என்பதற்குப் பொருள், ‘உனக்கே உறுப்பான எனக்கு’ என்பதாம்.

. ’சிறப்பு’ என்பது, ஒருகால விசேஷத்திலே ஒருகால் செய்யப்படுவதாதலின், ‘பலகால்
வேண்டா; ஒருகால் அமையும்,’ என்கிறார். ‘கண்ணனை யான்’ என்ற ஒருமைக்கு பாவம்,
‘அதுதன்னிலும்’ என்று தொடங்கும் வாக்கியம்.

நிதான பாசுரம் –
நிஷ்கரிஷித்த பிராப்யம் -செய்கிறார் இதில் –
மாலை சந்தனாதிகளோ பாதி -அவன் ஆனந்ததுக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிறார் –
நிலா தென்றல் சந்தனம் புஷ்பம் போலே –
சைதன்யம் இருந்தாலும் –
தனக்கே யாக
எம்பார் அருளிச் செய்த வார்த்தை -திரிவித செதனரை -பக்த முக்த நித்ய -மூன்று வித கைங்கர்யம்
முக்தரும் நித்தியரும் தாங்களும் ஆனந்தம் அவனும் ஆனந்தம் அடைய செய்பவர்கள்
இன்புறும் விளையாட்டு உடையவர் -அவன் மட்டும் ஆனந்தம் கேவல லீலை -பக்தர்
இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை -சிருஷ்டியாகிற வியாபாரத்துக்கு பிரயோஜனம் –
எப்படி ஆனந்தம் நாம் சம்சாரத்தில் உழன்றால் -கரண களேபரங்கள் கொடுத்து –
குழந்தை ரூபாய் நோட்டை கிழிக்கும் பொழுது வேடிக்கை உண்டாக்கி ஆனந்தம் –
முக்தர் -கேவலர் -எம்பெருமானை ஆனந்திக்காமல் தாங்கள் மட்டும் -ஆனந்திக்க –
ஆழ்வார் நித்யர்  இருக்க ஆசைப்படுகிறார் –
தனக்கே யாக எனைக் கொள்ளும்
பிள்ளை திரு நறையூர் அரையர் -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் தனியாக பிரார்த்திக்க வேண்டுமா -என்று கேட்க
எம்பார் -பேறு உயர்ந்தத்தால் -மீண்டும் சொல்லி
பெரிய பிராட்டியார் திரு மார்பில் எழுந்து அருளி இருக்கச் செய்தேயும் -அகல கில்லேன் இறையும் -சொல்வது போலே –
விஷய வை லஷண்யம் -முன்பு பிரிந்து அன்றும் பிரிய பிரசக்தி இன்றி இருந்தும் பிராட்டி அருளுவது போலே –
இட்ட படி பண்ணிக் கொள்ள பிரார்த்திக்கிறார் பிராப்ய ருசியில் ஈடுபாடு -அதிகம் இருப்பதால்
எ ம்மா வீட்டில் எ ம்மா வீடு பாசுரம்
சார திருவாய் மொழியில் சாரம் பாசுரம் –
அஹம் அன்னம் -உபநிஷத்குஹ்யம் சாரம் -புசிக்கும் ஆனந்தம் அவனது தானே –
ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய முழு விஷயம் இது தானே –
வகுத்த பாரதந்த்ர்யம் பிரார்த்தி பெற வேண்டியது –
எனக்கே ஆட் செய்யும் எக்காலத்தும் என்று சொல்ல வேண்டும்
மனத்தே வந்து இடை வீடு இன்றி மன்னி –
நான் பெற வேண்டிய சிறப்பு இது தான்
முதலிலே ஆட் செய் -ஸ்வா தந்த்ர்யம் வ்யாவர்த்திக்கிறது
அடுத்து எனக்கு ஆட் செய் -அந்ய சேஷத்வம் அபிராப்த விஷயம் வ்யாவர்த்திக்கிறது
எனக்கே ஆட் -தனக்கும் எனக்கும் பொதுவான நிலை தவிர்ந்து -என்னுடைய ஆனந்ததுக்கே மட்டுமே –
என்னுடைய பிரயோஜனத்துக்கு மட்டுமே கைங்கர்யம் செய் -சொல்ல வேண்டும் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இல்லா அடிமை
உமக்கு எது இஷ்டமோ அங்கு பர்ண சாலை அமையும் -சொல்லி ஏவி கார்யம் கொள்ள வேண்டும் –
கூவிப் பணி கொள்ளாய் -அருளிப்பாடி -இன்றும் –
சாதித்து அருள -எம்பெருமான் பிரதி நிதியாக சொல்லி -சேவ காலம் சாதிக்க நியமித்து –
ஆக்ஞை பின் பற்ற வேண்டும்
இந்த வார்த்தை அருளிச் செய்து நெடும் கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என் மனக்கே வந்து
புகுந்தாலும் போக்கு வரத்து இன்றி ஸ்தாவர பிரதிஷ்டை மூலவர் போல்
இருந்து கொள்ளும் கார்யம்
தனக்கே யாக எனைக் கொள்ளும்
சூடுவாருக்கும் -பூசிக் கொள்வாருக்கும்
மாலை சந்தானம் -போலே
மிதுனமாக -பேற்றுக்கு இனிமை இரண்டு தலைக்கும் ஒக்கும் பார்த்தா பார்யை
என் ப்ரீதிக்கு அந்வயம் இன்றி -உனக்கே யாக
முன்னிலையாக பேசிய ஆழ்வார் நின் செம்மா பாதம் -நின் கழல் –
அம்மா என்றும் சம்போதித்து -இங்கே தனக்கேயாக -உனக்கேயாக சொல்லாமல் –
படர்க்கையில் -சொல்லி –
திரு முகம் பார்த்தால்  வ்யாவச்யம் குலைந்து அப் பாஞ்ச ஜன்யம் போலே –
தலை குனிந்து -பாசுரம் -கையும் பாஞ்ச ஜன்ய பர பாக அழகை பார்க்க மாட்டாமல் –
உறுதி குலையுமே பார்த்தால்
தளிகை மூக்கை மூடிக் கொண்டே போய் சமர்ப்பிக்க வாசனை கூட முகரக் கூடாது
புஷ்பம் திருவரங்கத்தில் இன்றும் இப்படி எழுந்து அருளிக் கொண்டு போவார்கள் –
திரு முகம் அழகின் காரணமாக உறுதி குலையும் -கவிழ்ந்து இருந்து பாசுரம் அருளுகிறார் –
கையோலை செய்து கொடுக்கிறார்
எனக்கே கண்ணனை –
தனக்கே பின்புத்தல் அந்த ஆனந்தம் தமக்கு
அஹம் அன்னம் -அஹம் அன்னாதாக புஜிக்க படுகிறேன் –
அன்னம் சைதன்யம் பிரவசிக்க வில்லையே –
ஆனந்தம் மேலும் வளர்க்கும் –
முந்திரி பருப்பு சக்கரைப் பொங்கலில்  போடுவது போலே
எதிர் விழி கொடுத்து –
தொடர்ந்து போகும் தொல்லை இன்பம் chain action
மற்றை நம் காமங்கள் மாற்று -நீக்கு இல்லை -போக்கு இல்லை மாற்று –
அனைவருக்கும் கொடுக்கிறாயோ
எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே
ஸ்வரூப ஞானத்தை பிறபித்த பின்பு கொடுத்து தான் வேண்டும்
சிறப்பே பல கால் வேண்டும் ஒரு தடவை திருக் காப்பு சாத்தி ஒருவரும்
அறியாதபடி ஏகாந்தமாக ஊமை தலையில் எம்பெருமானார் திருவடி சிறப்பாக
புருஷார்த்தம் ஸ்வரூப அனுரூபமாக
முக்தி செல்வம் – யாக
சிறப்பாக அருள வேணும் –

இந்த அர்த்தம் திருப்பாவை சாரம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் –
விபரமாக திருப்பாவை சாரம் பார்ப்போம் –

திருப்பாவை சார அர்த்தம் உபநிஷத் உக்ய தம அர்த்தம் –
அவனது ஆனந்தத்துக்கு செய்யும் கைங்கர்யமும் அவன் அருளாலே -பெற -பெறுவோம் –
அவன் ஆனந்தம் கண்டு நாம் ஆனந்தம் பெற சைதன்யம்
திருவாய் மொழியின் எம்மா வீட்டு அர்த்தம்
எம்மா வீட்டில் எம்மா வீடு -பாசுரம் இது –
எஞ்ஞான்றும் -ஐயார் கண்டம் அடக்கிலும் இதே வேண்டுவது –
நிஷ்கரிஷித்த -பிராப்யம் -நிலா சந்தானம் போலே அசித் பதார்த்தம் போன்ற
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
த்ரிவித சேதனரையும் பக்தர் முக்தர் நித்யர் -எம்பார் பணிப்பர்
அவனை ஆனந்திப்பித்து தாங்கள் ஆனந்தம் முக்தர் நித்யர்
பக்தர் தாங்கள் ஆனந்தியாதே அவனை ஆனந்தித்து லீலா கைவல்யம் –
ஸ்வா தந்த்ர்யமும் கொடுத்து -அது தான் லீலை -சம்சாரிகள்
இன்புறும் இவ்விளையாட்டு உடையான் –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே பிரார்த்திப்பது எதற்கு –
பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரை கேட்க -உயர்ந்த புருஷார்த்தம் என்பதால் பிரார்த்திக்கிறார் –
அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி சொல்வது போலே –
சமுத்திர ராஜ புத்ரி பிராட்டி -அவதாரத்தில் பிரிந்தது –
ஸ்வாபாவிகமாக பார்த்தால் பிரிவே இல்லையே -பிரிவதற்கு பிரசங்கமும் இல்லை –
விஷய வை லஷன்யத்தால் -அருளிய வார்த்தை -பிராப்ய ருசியால் –
கிடைத்தா ல் அல்லது தரிக்க முடியாதே –
எம்மா வீட்டில் எம்மா வீடு -அமுதில் வரும் பெண்ணமுது போலே -இந்த பாச்ய்ரம்
உபநிஷத் குக்யம் அஹம் அன்னம் வார்த்தையால் -ரத்ன ஹாரம் -பாதுகாத்து வைத்து –
சர்வேஸ்வரன் பக்கலில் அபெஷித்து பெறுவது ஆத்மாவுக்கு இது தான் வகுத்தது
உனக்கே நாம் ஆட் செய்வோம் -மற்றை நம் காமங்கள் மாற்று -அவனுக்கு சொல்லி கொடுக்கிறார்
ஆட்  செய் ஸ்வா தந்த்ர்யம் தவிர்த்து
எனக்கு  ஆட செய் /-அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது அந்ய சேஷத்வம் கழித்து
எனக்கே ஆட்  செய் -தனக்கும் எனக்கும் பொதுவான நிலை கழித்து -அவனுடைய ஆனந்துக்கு மட்டுமே
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -எக்காலத்தும் வேண்டும் என்கிறார் –
ஏவிப் பணி கொள்ள வேண்டும் -பிரியதாம் மாம் வத -காட்டி நியமிக்க வேண்டும்
இப்படி வார்த்தை அருளி நெடும் கை நீட்டாமல் -மனக்கே வந்து ஹிருதயத்தில் புகுந்து
போக்கு வரத்து இன்றி -இடைவீடு இன்று மன்னி ஸ்தாவர பிரதிஷ்டை போலே எழுந்து அருளி இருக்க வேண்டும்
இருந்து கொள்ளும் கார்யம் என்னது -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
மாலை சந்தனம் சூடிக் கொள்ளும் ஆனந்தம் -மிகுதி கழுத்து வலிக்கும் இத்தனை இ றே
சேதனர் -என்பதால் -மிதுனமாய் பரிமாறா நின்றால் -இன்பம் இருவருக்கும் இருக்கும்
உனக்கே யாக இருக்க வேண்டும் –
நின் செம்மா பாதம் முன்னிலை சொல்லி –
நின் கழல் யான் எய்த -இரண்டாம் பாட்டில்
நின் கழல்-மூன்றாவது
பிரத்யஷ உத்தேச்யம் -உனக்கேயாக சொல்லாமல் தனக்கே யாக -படர்க்கையில் சொல்லுவான் என் என்னில்
திரு முகம் பார்த்தால் வய்வசாயம் குறையுமே -உறுதியை குலைக்குமே என்று பயந்து
பிராப்ய நிஷ்கர்ஷம் கவிழ்ந்து கை யோலை செய்து கொடுக்கிறார் –
அப்பாஞ்ச ஜன்யம் போலே -தனது கண் எச்சில் படாமல் இருக்க -கவிழ தலை
இட்டு எனக்கே கண்ணனை -தனக்கே யாக என்று பின்புத்தை  எனக்கே என்பதால் –
புருஷார்த்தம் ஆக்குவதற்காக சொல்லுகிறார்
புருஷனால் ஆர்த்திக்க பட வேண்டுமே -சேதனன் தான் அபேஷிக்க வேண்டும் –
எல்லாருக்கும் செய்ய வேண்டுமே சர்வ முக்தி பிரசங்கம்
யான் கொள்ளும் சிறப்பே -ஸ்வரூப ஞானம் நீ பிறப்பிக்க அத்தாலே
ஸ்வரூப ஞானம் உடைய நான் பெற வேண்டுமே
பல கல் வேண்டா ஒரு கால் அமையும்
அது தன்னிலும் யாவரும் அறியாமல் ஏகாந்தமாக அருளினால் போதும்
சிறப்பே -புருஷார்த்தம் கொண்டு அருள வேண்டும் -கொடுத்து அருள வேண்டும் சொல்ல வில்லை
சிறப்பு -முக்தி சம்பத் நன்றி -மூன்றும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading