சூரணை -289-
முன்பே நாலு தசை உண்டு –
முன்பு எத்தனை தசை உண்டு என்னும் மா காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –
————————————-
அந்த நாலு தசையும் தான் எது என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் –
சூரணை -290-
அதாவது
1-ஞான தசையும் –
2-வரண தசையும் –
3-பிராப்தி தசையும் –
4-பிராப்ய அனுபவ தசையும் –
1-ஞான தசையாவது -ஆசார்ய உபதேசத்தாலே தனக்கு ஞானம் பிறந்து செல்லுகிற தசை –
2-வரண தசையாவது -சித்த உபாய பூதனான சர்வேஸ்வரனை தனக்கு உபாயமாக வரிக்கை-
3-பிராப்தி தசை யாவது -சம்சாரிக சகல துரித நிவ்ருத்தி பூர்வகமாக அவன் திருவடிகளை ப்ராபிக்கிற தசை –
4-ப்ராப்ய அனுபவ தசை -யாவது -ப்ராப்ய பூதனான அவனைக் கிட்டு அனுபவிக்கிற தசை –
இவ் அனுபவ ஜனித ப்ரீதி காரித-கைங்கர்யம் இறே பரம புருஷார்த்தம் –
பிரதம அபேஷிதமான தத்வ ஞானமும் –
ஞான பலமான உபாய வரணமும் –
வரண பலமான பிராப்தியும் –
ப்ராப்தி பலமான அனுபவமும் -அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமுமாய் இறே க்ரமம் இருப்பது –
ஆகையால் கைங்கர்ய தசை சரம தசையாய் –
பூர்வ தசைகள் நாலும் இதிலே வந்து யேறுகைக்கு இட்ட படி ஒழுங்காய் இருக்கும் –
——————————————————-
இவ்வோ தசைகளில் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்கும் படியை தர்சிப்பிக்கிறார் மேல் –
சூரணை -291-
ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடும் –
வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும் –
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும் –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும் —
ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடுகை யாவது -ஆசார்யன் தனக்கு மேன்மேல் அஞ்ஞாத ஞாபனம் பண்ணும்படி -தத்வ ஹித புருஷார்த்தங்களில் தன்னுடைய அஞ்ஞானத்தை பலகாலம் விஞ்ஞாபிக்கை –
வரண தசையில் அ பூர்த்தியை முன்னிடுகை யாவது-நோற்ற நோன்பு இலேன் –
ந தர்ம நிஷ்டோஸ்மி –
சத் கர்ம நைவ கில கிஞ்சன சஞ்சி நோமி -(ஸ்ரீ வைகுண்டம் ஸ்தவம் 88)இத்யாதி படியே
பேற்றுக்கு ஹேதுவாகக் கொள்ளலாவதொரு ஸூஹ்ருதாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற -ஆகிஞ்சன்யத்தை புரஸ்கரிக்கை
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடுகையாவது -பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராதே
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
தரியேன் இனி-
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -இத்யாதிப் படியே விலம்ப அசஹத்வ நிபந்தனமான தன்னுடைய க்லேச அதிசயத்தை தர்சிப்பிக்கை –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடுகை யாவது –
பெரு விடாயனுக்கு கொடுத்த தண்ணீர் ஆராதாப் போலே -அனுபூதாம்சத்தால்
திருப்தி பிறவாதே மென்மேலும் தனக்கு விளைந்து செல்கிற அனுபவ அபிநிவேசத்தை
பிரகாசிப்பிக்கை –
ஆக –
ஞான தசை முதலான நாலு தசையிலும் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்குகையாவது –
இவ்வோ ஆகாரங்களை முன்னிடுகை என்று கருத்து –
———————————————-
இப்படி இவன் இவற்றை முன்னிட்டால் -இவனுக்கு இவை சமிப்பது எத்தாலே என்ன –
அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை-292-
அஞ்ஞானம் போவது ஆச்சார்ய ஞானத்தாலே –
அபூர்த்தி போவது ஈஸ்வர பூர்த்தியாலே –
ஆர்த்தி போவது அருளாலே –
அபிநிவேசம் போவது அனுபவத்தாலே –
அதாவது –
தத்வ ஹித புருஷார்த்தங்களில் இவனுக்கு உள்ள அஞ்ஞானம் ச வாசனமாக நிவ்ருத்தமாவது -அவற்றை அலகு அலகாக தர்சித்து –
அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகைக்கு ஈடான ஆசார்யனுடைய ஞானத்தாலே –
பேற்றுக்கு ஹேதுவாய் இருந்துள்ள சத் கர்மாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற அபூர்த்தி சமிப்பது -இத் தலையில் உள்ளது ஒன்றும் அபேஷியாமல்
கார்யம் செய்யும் உபாய பூதனான ஈஸ்வரனுடைய ஸஹகாரி நைர பேஷ்யம் ஆகிற பூர்த்தியாலே-
அவலம்பேன திருவடிகளைப் பெறாமையாலே உண்டான ஆர்த்தி தீருவது – ஆர்த்தி கண்டால் ஆற்ற மாட்டாதே -அப்போதே கார்யம் செய்து
தலைக் கட்டுகைக்கு உறுப்பான -பர துக்க அசஹிஷ்ணுத்வம் ஆகிற அவனுடைய கிருபையாலே –
அனுபவ தசையில் அநு ஷணம் பிறக்கும் அபிநிவேசம் அடங்குவது -அவ் விஷயத்தை மென்மேலும் அனுபவிக்கையாலே -என்கை –
—————————————————
இவ் அஞ்ஞா நாதி சதுஷ்டயத்துக்கும் ஹேது எது என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –
சூரணை -293-
அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் –
அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி –
ஆர்த்திக்கு அடி அலாபம் –
அபிநிவேசதுக்கு அடி அழகு –
அதாவது –
ஞான தசையில் -முன்னிடுகிற அஞ்ஞானத்துக்கு மூலம் -அநாதி கால க்ருத்ய அகரண அக்ருத்ய கரண ஆதி ரூபமான அபராதம்
வரண தசையில் முன்னிடுகிற அபூர்த்திக்கு நிதானம் -பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கலாவது ஒன்றும் தனக்கு இல்லாமையை தர்சிப்பிக்கைக்கு உடலான ஞான பூர்த்தி
ப்ராப்தி தசையில் முன்னிடுகிற ஆர்த்திக்கு ஹேது -ப்ராப்ய வஸ்துவை சீக்கிரமாகக் கிட்டப் பெறாமை யாகிற அலாபம் –
ப்ராப்ய அனுபவ தசையில் முன்னிடுகிற அபிநிவேசதுக்கு காரணம் அனுபவித்த அளவால் திருப்தி பிறவாதே மேன்மேலும் ஆசைப்படப் பண்ணும் அவன் வடிவழகு -என்கை –
——————————————-
ஆர்த்தி அபிநிவேசம் இருக்கும் படி என் -என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -294-
ஆர்த்தியும் அபிநிவேசமும் இருக்கும் படி
அர்ச்சிராதி கதியிலே சொன்னோம் –
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று துடங்கி
திருவாணை நின் ஆணை கண்டாய் -என்று
தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படி பரம பக்தி தலை எடுத்தது -என்னும் அளவாக ஆர்த்தி இருக்கும் படியையும் –
செய்ய உடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -என்கிறபடியே
முன்புற்றை அழகை அனுபவித்து -என்று துடங்கி -தன்னைப் பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை அனுபவித்து -என்னும் அளவாக அபிநிவேசம் இருக்கும் படியையும்
அந்த பிரபந்தத்திலே ஸூஸ்பஷ்டமான அருளிச் செய்தார் இறே –
ஆக
கைங்கர்ய தசைக்கு முன்னே நாலு தசை உண்டு-289- என்றும் –
அவை தான் இன்னது 290-என்றும் –
அவ் வவ் தசை அநு குணமான அஞ்ஞா நாதிகளை முன்னிடவே
அவ் வவ் தசைகளில் ஸ்வரூப உஜ்ஜ்வலம் ஆம்-291- என்றும் –
அவ் வஞ்ஞாநாதிகளைப் போக்குமவை ஆச்சார்ய ஞானாதிகள்-292 என்றும்
அவ் வஞ்ஞாநாதிகளுக்கு நிதானங்களும் சொல்லிற்று ஆயிற்று -293
—————————————-
இந்த தசை சதுஷ்டய பிரசங்கத்திலே -இவனுடைய குண சதுஷ்ட்யத்தையும்
அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -295-
இவன் தனக்கு
நாலு தசை போலே
நாலு குணம் உண்டு –
அதாவது
இவ் வதிகாரிக்கு ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்யதுக்கு உடலாக கீழ்ச் சொன்ன தச சதுஷ்ட்யம் போலே – ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவான குண சதுஷ்டயமும் உண்டு என்கை –
——————————————
அவை தான் எவை என்னும் ஆகாங்ஷையிலே எந்த எந்த குணங்கள் என்று அருளிச் செய்கிறார் –
சூரணை-296-
அதாவது
ஞானமும்
அஞ்ஞானமும்
சக்தியும்
அசக்தியும் –
—————————————-
இவனுடைய குண சதுஷ்டயம் சொன்ன பிரசங்கத்திலே ஈஸ்வரனுக்கும் இவை உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –
சூரணை -297-
இது தான்
அவனுக்கும் உண்டு —
இது தான் அவனுக்கும் உண்டு -அவன் -என்று கீழ்ச் சொல்லிக் கொண்டு வந்த
ஈஸ்வரனை பராமர்சிக்கிறது –
——————————————–
இப்படி இருந்துள்ள இருவருடைய குணங்களுக்கு விஷயங்கள் எவை என்ன அவற்றை விபஜித்து அருளிச் செய்கிறார் –
சூரணை -298-
அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –
கீழ் எடுத்த அடைவில் அன்றிக்கே ஈஸ்வர குண விசேஷங்களை முந்துற அருளிச் செய்தது
சேதன குண விசேஷங்களைச் சொல்லி முடித்தால்-அதின் தோஷத்தை சிஷிதாதா தசா துர் வித்யத்தை விஸ்தரேண அருளிச் செய்கைக்காக –
அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் -என்றது
-யஸ் சர்வஜ்ஞ என்றும் –
சகஸ்ராம்ஸூ -என்றும் -சொல்லுகிற படியே
சர்வஜ்ஞனான அவனுடைய திவ்ய ஞானத்துக்கு விஷயம் -அத்வேஷ ஆபி முக்கியம் தொடங்கி-இச் சேதனன் பக்கல் உண்டான ஆத்ம குணம் -என்கை
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் -என்றது –
அவிஞ்ஞாத சகஸ்ராம்ஸூ -என்றும்
அவிஞ்ஞாதா ஹி பக்தாநாம் ஆகஸ்ஸூ கமல லேஷணே சதா ஜகத் சமஸ்தஞ்ச பஸ்யன்நபி ஹ்ருதி ஸ்திதித-என்றும் சொல்லுகிற படியே
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே -அவிஜ்ஞாதாயாவாய் இருக்கும் அவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம்-பிரக்ருதி வஸ்யனான இவன் (புத்தி பூர்வகமாக)பண்ணும் அக்ருத்ய கரணாதி தோஷம் என்கை –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் -என்றது -பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிற படியே சர்வ சக்தியான
அவனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் ஆகிற சக்திக்கு விஷயம் –
இவனுடைய சகல அநிஷ்டங்களையும் போக்கி -ஸ்வரூப அநு குணமான சகல இஷ்டங்களையும் கொடுக்கிற -ரஷணம் -என்கை –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் -என்றது
அப்படி சர்வ சக்தியான அவனுடைய அசக்திக்கு விஷயம் துஸ் சஹமாக இவன் செய்யும் தோஷங்களாலே சீறிக் கை விடுகை -என்கை-
——————————————
இப்படி ஈஸ்வர குணங்களை அருளிச் செய்து -மேல் சேதன குண விஷயங்களை அருளிச் செய்கிறார் –
சூரணை -299-
இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —
இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் -என்றது –
இச் சேதனனுடைய ஞானத்துக்கு விஷயம் -மகோ உபாகாரனான ஆசார்யனுடைய சத் குண சமூகம் -என்கை —
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் -என்றது –
இவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம் -ஆசார்யன் திருமேனி ஸ்வபாவமாய் ஆகந்துகமாய் உள்ள தோஷம் என்கை –
சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் -என்றது-
இவன் பிரவ்ருத்தி சக்திக்கு விஷயம் -ஸ்வ ஆசார்யனுக்கு உகப்பாக செய்யும் கைங்கர்யம் என்கை
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் –என்றது –
இவனுடைய அசக்திக்கு விஷயம் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகளான (ப்ரபந்ந ) )சாஸ்திர- நிஷித்தங்களில் இவனுடைய அனுஷ்டானம் -என்கை –
————————————————
இப்படி இருந்துள்ள நிஷித்தத்தின் படியை அருளிச் செய்கிறார் –
சூரணை -300-
நிஷித்தம் தானும்
நாலு படியாய் இருக்கும் –
அதாவது
உபாதேயமான குண சதுஷ்டயம் போலே -ஹேயமான நிஷித்தம் தானும் சதுர் விதமாய் இருக்கும் -என்கை –
———————————
அந் நாலு படியான அது தான் எது என்னும் -அபேஷையிலே- அவை தன்னை உத்தேசிக்கிறார் -(நாமங்கள் மட்டுமே பெயர் அளவிலே அருளிச் செய்கிறார் )
சூரணை-301-
அதாவது
அக்ருத்ய கரணமும்
பகவத் அபசாரமும்
பாகவத அபசாரமும்
அசஹ்ய அபசாரமும் —
———————————————–
இவற்றினுடைய வேஷம் தான் என்னும் ஆகாங்ஷையிலே -இத்தை அடைவே விவரிக்கிறார்
சூரணை -302-
அக்ருத்ய கரணம் ஆவது –
பர ஹிம்சை -பர ஸ்தோத்ரம் -பர தார பரிக்ரகம் -பர த்ரவ்ய அபஹாரம் –
அசத்திய கதனம் -அபஷ்ய பஷணம்-துடக்கமானவை –
பர ஹிம்சை யாவது -ந ஹிம்ஸ்யாத் சர்வ பூதானி -என்கிற விதியை அதிக்ரமித்து பண்ணும் பிராணி பீடை –
பர ஸ்தோத்ரம் ஆவது -ப்ராப்த விஷய ஸ்தோத்ர அர்ஹமான வாக்கைக் கொண்டு – அப்ராப்த விஷயங்களை ஸ்துதிக்கை –
பர தார பரிக்ரகம் ஆவது -பிறர்க்கு அனந்யார்ஹமான ஸ்த்ரீ விஷயங்களை மோஹாதிகளாலே ஸ்வீகரிக்கை –
பர த்ரவ்ய அபஹாரம் ஆவது -பிறர் உடைமை யானவற்றை -அவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க -பிரகாசமாகவாதல் -அப்ராகாசமாகவாதல் -க்ரஹிக்கை-
அசத்திய கதன -மாவது -யாதாத் த்ருஷ்டார்த்த விஷயமும் -பூத ஹிதமும் அன்றிக்கே இருக்கும் வசனத்தைச் சொல்லுகை –
அபஷ்ய பஷணம் ஆவது -ஜாத்ய ஆஸ்ரம நிமித்த துஷ்டங்களாய் கொண்டு -தனக்கு அப்யபஷம் அன்றிக்கே இருக்கும் அவற்றை பஷிக்கை –
துடக்கமானவை -என்றது –
பர த்ரவ்யேஷ வபித்த்யானம் மனசா அநிஷ்ட சிந்தனம் விததாபி நிவேசஸ் ச த்ரிவிதம் கர்ம மானஸம்
பாருஷ்ய மன்ரு தஞ்சைவ பைசுநஞ்சைவ சர்வச அநீ பத்த ப்ரலாபஸ் ச வான்மயம் ஸ்யாஸ் சதுர்விதம்
அதத்தா நாமு பாதானம் ஹிம்சா சைவ அவிதானத பர தாரா அபஹாரஸ் ச சாரீரம் த்ரிவிதம் ஸ்ம்ருதம் -இத்யாதிகளாலே
மனு ஆதி ஸ்ம்ருதிகளிலே சொல்லப் படுகிறவை அநேகம் ஆகையாலே-
———————————————
அநந்தரம் பகவத் அபசாரத்தை விவரிக்கிறார் –
சூரணை -303-
பகவத் அபசாரமாவது –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையும் –
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் – மனுஷ்ய சஜாதீயதா புத்தியும் –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரமும் –
அர்ச்சா அவதாரத்தில் உபாதான நிரூபணமும் –
ஆத்ம அபஹாரமும் –
பகவத் த்ரவ்ய அபஹாரமும் -துடக்கமானவை
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையாவது –
யேது சாமான்ய பாவேன மான்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டி நோஞ்ஞேயா சர்வ கர்ம பஹிஷ் க்ருதா யஸ்து நாராயணம் தேவம் சாமான்யே நாபி மன்யதே சயாதி நரகம் கோரம் யாவச் சந்திர திவாகரம் -என்று தேவதாந்தரங்களோடு ஈஸ்வரனை சம புத்தி பண்ணலாகாது என்று சாஸ்திரம் சொல்லா நிற்க –
அந்தப் பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜாநாநாம் சர்வாத்மா -தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -நதஸ் சமஸ் சாப்ப் யதிகச்ச த்ருஸ் ஸயதே -என்கிறபடியே ஸ்வ இதர சகல நியாமகனாய் -சமாநாதிக ரஹீதனான -ஈஸ்வரனை -அங்கான் அந்ய தேவதா -என்று -தச் சரீர தயா பிரமாதி தேவதைகளோடு சம புத்தி பண்ணுகை-
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் மனுஷ்ய சஜாதீயதா புத்தி -ஆவது –
அஜோபிசந் நவ்யயத்மா பூதானாம் ஈஸ்வரோபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய சம்பவாமி யாத்மா மாயா -என்கிறபடியே
அஜகத் ஸ்வாபனாய்-அப்ராக்ருத -திவ்ய சமஸ்தானத்தை -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு –
துயரில் மலியும் மனிசர் பிறவி யில் தோன்றி -நிற்கிற நிலை அறியாதே அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக அவன் செய்து காட்டின
கர்ப்ப வாச -ஜனன -சோக -மோஹாதிகளை இட்டு -கர்ம வஸ்யரான மனுஷ்யரோடு சஜாதீயனாக நினைக்கை –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரம் ஆவது -தத் ஆராதன தசையில் -த்ரை வர்ணிக அர்ஹமான வைதிக மந்தரங்களாலே சதுர்த வர்ணரானவர்கள் ஆராதித்தல் -உத்தம ஆஸ்ரமிகள் முதலானோர் க்ருஹஸ்தவத் தாம்பூல நிவேதனாதிகளை பண்ணுதல் துடக்கமானவை –
அர்ச்சாவதாரத்தில் உபாதான நிரூபணம் ஆவது -தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -இத்யாதிப் படியே
ஆஸ்ரிதர்க்கு அபிமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை -திருமேனியாக அங்கீகரித்து -அதிலே அப்ராக்ருத விக்கிரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணி எழுந்து அருளி இருக்கிற இத்தை அறியாதே -மாத்ரு யோனி பரிஷிகரைப் போலே -இது இன்ன த்ரவ்யம் அன்றோ என்று விக்ரக உபதானத்தை நிரூபிக்கை-
ஆத்ம அபஹாரம் ஆவது –
யோ அந்யதா சந்த மாத்மான மன்யதா ப்ரதிபத்யதே கிந்தே ந நக்ருதுதம்பம் சோரேணே ஆத்ம அபஹாரிணா –என்று
சகல பாப மூலமாகச் சொல்லப் படுகிற -பகவத் ஏக சேஷ பூதமான ஆத்ம வஸ்துவில் -ஸ்வதந்திர புத்தி –
பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றை-பிரகாசமாகவாதல் -அப்ரகாசமாகவாதல் -தனக்கு ஆக்குகை-
துடக்கமானவை -என்றது –
இன்னும் இப்படி க்ரூரமாக சாஸ்த்ரங்களில் சொல்லுமவை பலவும் உண்டாகையாலே
த்வா த்ரிம்சத அபசாராதிகளும்-(32 அபசாரங்கள் )– உண்டு இறே
———————————————
கீழ் சொன்னவற்றோபாதி -பகவத் த்ரவ்ய அபஹாரமும் பகவத் அநிஷ்டமாய் இருக்குமோ
என்கிற சங்கையில் -தான் அபஹரிக்கிற மாத்திரம் அன்றிக்கே-அபஹரிப்பார்க்கு
சஹகரிக்கை முதலானவையும் அவனுக்கு அநிஷ்டமாய் இருக்கும் -என்கிறார் –
சூரணை -304-
பகவத் த்ரவ்யத்தல் தான் அபஹரிக்கையும் –
அபஹரிக்கிறவர்களுக்கு சஹகரிக்கையும் –
அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும் அயாசிதமாகவும் பரிக்கிரகையும் –
பகவானுக்கு அநிஷ்டமாய் இருக்கும்–
தான் அபஹரிக்கையாவது -நேர தானே இதுக்கு கர்த்தாவாகச் செய்கை –
அபஹரிப்பார்க்கு சஹகரிக்கை யாவது -நாம் அபஹரிக்கிறோம் இல்லை என்று நினைத்து அபஹர்த்தாக்களுக்கு அனுமத்யாதிகளாலே சஹாயம் பண்ணுகை –
அவர்கள் பக்கலிலே யாசிதமாக பரிக்கிரக்கை யாவது -நாம் இவ் அபஹாரத்துக்கு கூட்டு அன்றே என்று நினைத்து தான் அவர்கள் பக்கல் சிலவற்றை அபேஷித்து வாங்கிக் கொள்ளுகை
அவர்கள் பக்கலிலே அயாசிதமாக பரிக்கிக்ரகை யாவது-நாம் அபேஷித்திலோம் என்று நினைத்து அவர்கள் தரும் அவற்றை வாங்குகை
பகவானுக்கு அநிஷ்டமாய் இருக்கும் -என்றது இவை இத்தனையும் -இவனுடைய உஜ்ஜீவ பரனாய் கிருஷி பண்ணிப் போரும் சர்வேஸ்வரன் திரு உள்ளத்துக்கு அநபிமதமாய் இருக்கும் என்கை
——————————————
அநந்தரம் -பாகவத அபசாரத்தை விவரிக்கிறார் –
சூரணை -305-
பாகவத அபசாரமாவது
அஹங்கார அர்த்த காமங்கள் அடியாக
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பண்ணும் விரோதம் –
அதாவது
பர உத்கர்ஷம் கண்டு சஹியாமைக்கும் ஸ்வ உத்கர்ஷ புத்திக்கும் உடலான அஹங்காரம் அடியாகவும் – அவர்கள் வைஷ்ண ஆகாரத்தைப் புத்தி பண்ணி -இவர்கள் ஆசைப் பட்டது ஒன்றாகில் இவற்றை விட்டுப் பற்றுவோம் என்று இருக்க மாட்டாமல் -அர்த்த காமங்கள் அடியாகவும் – ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செய்யும் விரோதம் -என்கை —
——————————————
அநந்தரம் அசஹ்ய அபசாரத்தை விவரிக்கிறார் -(பகவானாலும் சஹிக்க முடியாமல் இருப்பது அன்றோ -)
சூரணை -306-
அசஹ்ய அபசாரம் ஆவது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் –
அசஹமானனாய் இருக்கையும் –
ஆசார்ய அபசாரமும் –
தத் பக்த அபசாரமும் –
அல்லாத அபசாரங்களில் காட்டிலும் -ஈஸ்வரனுக்கு இது அத்யந்த அசஹ்யமாய்
இருக்கையாலே -அசஹ்ய அபசாரம் -என்கிறது –
(அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-பவத் அஸஹநீய ஆகஸீ—ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்-)
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் அசஹமானனாய் இருக்கை யாவது –
கீழ்ச் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தனமாக அன்றிக்கே -ஹிரணியனைப் போலே பகவத் விஷயமும் பாகவத விஷயமும் என்றால் காண கேட்க பொறாதபடி இருக்கை-
ஆசார்ய அபசாரம் ஆவது -அவன் அருளிச் செய்த அர்த்தத்தின் படி அனுஷ்டியாமையும் -அவன் உபதேசித்த மந்திர தத் அர்த்தங்களை -அல்ப பிரயோஜனங்களை நச்சி
அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் -துடக்கமானவை –
தத் பக்த அபசாரமாவது -ஆச்சார்ய பக்தரான ச ப்ரமசாரிகளுடன் ஐக ரஸ்யம் உண்டாய் வர்த்திக்க வேண்டி இருக்க -அது செய்யாமல் –அவர்கள் திறத்தில் பண்ணும் அஸூயையும் அவஞ்சையும்-அவமரியாதையும் – துடக்கமானவை –
————————————————
இப்படி அக்ருத்ய கரணாதி சதுஷ்டைத்தையும் அடைவே விவரித்து அருளி
இவற்றினுடைய க்ரௌர்ய விசேஷங்களையும் -இவை தான் இன்னதுக்கு
விரோதியாய் இருக்கும் என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் மேல்-
சூரணை -307-
இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய்
இருக்கும்–
ஓன்றுக்கு ஓன்று க்ரூரங்களாகையாவது –
அக்ருத்ய கரணத்தில் -பகவத் அபசாரம் க்ரூரமாய் -அதிலும் பாகவத அபசாரம் க்ரூரமாய் -அது தன்னிலும் அசஹ்ய அபசாரம் க்ரூரமாய் இருக்கை-
இதுக்கடி பூர்வங்களில் காட்டில் உத்தர உத்தரங்களில் -பகவன் நிக்கிரஹம் அதிசயித்து இருக்கை –
அக்ருத்ய கரணத்தில் -ஸ்வ ஆஞ்ஞா அதிலங்கனம் அடியான சீற்றம் இறே-
அவ்வளவு அன்றிக்கே -இவ் ஆத்மாவுக்கு ஆத்மாவாய்-அதின் சத்தையே பிடித்துக் கொண்டு போரும் தன் திறத்தில் அபசாரத்தால் வரும் சீற்றம் –
அவ்வளவும் அன்று இறே -ஞாநீத்வாத்மைவ – என்கிற படியே -தனக்கு உயிர் ஆக நினைத்து இருக்கும் பாகவத விஷயங்களில் அஹங்காராதிகள் அடியாக பண்ணும் அபசாரத்தால் வரும் சீற்றம் –
அது தன்னளவும் அன்று இறே நிர் நிபந்தனமாக தன் பக்கலிலும் தன் அடியார் பக்கலிலும் ஆதல் -உபய வைபவ ஞாபகனாய் – உபய அபிமதனான ஆசார்யர் பக்கலிலே ஆதல் -மூவருக்கும் அபிமதரான தத் பக்தர் பக்கலிலே ஆதல் -செய்யும் அபதாரத்தால் வரும் சீற்றம்
ஆகையால் ஒன்றுக்கு ஓன்று க்ரூரமாய் இருக்கும் –
அக்ருத்ய கரணத்திலே-பகவத அபசாராதிகளும் அந்தர் பவிக்குமதாய் இருக்க தனித் தனி இப்படிப் பிரித்துச் சொல்லுகிறது இவற்றினுடைய க்ரூர விசேஷங்களைப் பற்ற இறே –
உபாய விரோதிகளுமாய் உபேய விரோதிகளுமாய் இருக்கை -யாவது –
இவ் ஆத்மாவினுடைய உஜ்ஜீவனத்தில் ஒருப்பட்டு -மென்மேலும் கிருஷி பண்ணுகைக்கு உறுப்பான எம்பெருமானுடைய கிருபைக்கும் –
எப்போதும் இவனுக்கு பிராப்யமாய் இருந்துள்ள அவனுடைய முகோல்லாசத்துக்கும் இலக்காய் இருக்கை –
இரக்கம் உபாயம்- இனிமை உபேயம்-என்னக் கடவது இறே –
ஆகையால் இவ் வக்ருத்ய கரணாதிகள்-நீரிலே நெருப்பு எழுமா போலே -அவன் திரு உள்ளத்திலே நிக்ரஹத்தைக் கிளப்பி -அவனுடைய கிருபையும் உகப்பும் –
இவன் பக்கல் அறும்படி பண்ணுகையாலே -அவற்றை உபாய உபேய விரோதிகள் என்னத் தட்டில்லை –
தனக்குத் தானே தேடும் நன்மை-160 -என்று துடங்கி நமஸ் சப்தார்த்தை விஸ்தரேண பிரதிபாதிக்கையாலும் –
உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயமும்-243 -என்று உகந்து அருளின நில பிரசங்கத்தாலும் –
மேலே -பகவத் கைங்கர்யமும்-274 -என்கிற இடத்தில் -பகவத் சப்தத்தாலும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தி பிரதிபாதகமான ஸ்ரீ மத் பத நாராயண -பதார்த்தங்களை ஸூசிப்பிக்கையாலும் –
244-258-மங்களா சாசன பிரகரணத்தாலும்-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும்
பகவத் கைங்கர்யமும் -274-என்று துடங்கி கிஞ்சித் கரித்தால் ஸ்வரூபம் நிறம் பெறுவது-286- -என்னும் அளவும் சதுர்த்த்யர்தத்தை அருளிச் செய்கையாலும் –
நிஷித்த சாதுர்வித்ய பிரதி பாதன முகேன ப்ராசங்கிகமாக-மீளவும் நமஸ் சப்தார்த்தை பேசுகையாலும்-
இவ்வளவும் உத்தர கண்டார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –
ஆக-
இப் பிரகரணத்தால்-
கீழ் உக்த உபாயத்தைக் கொண்டு-79-வரை -உபேயத்தை பெரும் சேதனனுக்கு
உபாய உபேய அதிகார பிரதான அபேஷிதங்களையும்-
மேல் 115-133 வரை -பிரபகாந்தர பரித்யாக ஹேதுவான ஸ்வரூப நாசகத்வாதியையும் –
பிரபத்தியின் ஸ்வரூப அனுகூலத்வாதியையும் –
ஸ்வ கத ஸ்வீகார அனுபாயத்வத்தையும் –
பரகத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
தத் பிராபல்யத்தையும் –
அவனே ஸ்வீ கரிக்கும் இடத்தில் புருஷகாரத்தை முன்னிடும் படியையும் –
உபயரும் முன்னிடும் அதுக்கு பிரயோஜன விசேஷங்களையும் –
உபேய தசையிலும் ப்ராப்தி தசையிலும் -இவன் சேஷத்வ பாரதந்த்ர்யங்களும் –
ஸ்வ தோஷ நிவ்ருத்தியும் –
பர அனுபவ விரோதியாம் படியையும் –
மேல் 160-தன்னால் வரும் நன்மை அவனால் வரும் நன்மைக்கும் உள்ள வாசியையும் –
ஈஸ்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் -என்னும் அத்தையும் –
தன்னைத் தான் நசிப்பிக்கும் பிரகாரத்தையும் –
அஹங்காரமும் விஷயங்களும் ஸ்வரூபேணவும் பாகவத விரோதத்தை விளைத்தும்
இவன் ஸ்வரூபத்தை நசிக்கும் படியையும் –
பாகவத அபசார க்ரௌர்யத்தையும் –
தத் பிரசங்கத்திலே பாகவத மகாத்ம்யத்தையும் –
இவன் தினசர்யையும் –
தினசர்யோக்தங்கள் அடைய சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு
அபேஷிதமான வஸ்தவ்யாதியையும் –
தத் சரம உக்த கர்தவ்ய ரூப கைங்கர்ய வேஷத்தையும் –
கைங்கர்ய தத் பூர்வ தசைகளிலே ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்கும் படியையும் –
இவனுக்கு உண்டான குண சதுஷ்ட்யத்தையும்-
தத் விஷய விபாகத்தையும் –
அதில் அசக்தி விஷய நிஷித்த சாதுர்வித்யத்தையும்
சொல்லுகையாலே –
அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லப்பட்டது –
ஆறு பிரகரணங்களில் மூன்றாவதான -அதிகாரி நிஷ்டா பிரகரணம் முற்றிற்று –
ஒன்பது பிரகரணங்களில் -ப்ரபந்ந தினசர்ய -ஐந்தாவது பிரகரணம் முற்றிற்று
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்