ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் -சரம சந்தேசம் –
1-ஒருவன் பிரபன்னன் ஆனால் அவனுடைய ஆத்மயாத்ரை ஈஸ்வர ஆதீனம் ஆகையால் அதுக்குக் கரைய வேண்டா
2-இனி இவனுடைய தேக யாத்ரை கர்மாதீனம் ஆகையாலே அதுக்குக் கரைய வேண்டா -கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் இத்தனை –
3- உபயாம்சத்திலே அந்வயியாதே ப்ராப்யமான பகவத் பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து கால ஷேபம் பண்ண வேண்டும்
4-ப்ரபன்ன அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டியது மூன்று விஷயங்கள் உண்டு
அவை யாவன -அனுகூலர் என்றும் ப்ரதிகூலர் என்றும் அனுபயர்-இரு வகுப்பிலும் சேராதவர் –
அனுகூலராவார் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பிரதிகூலராவார் -பகவத் த்வேஷிகள்
அனுபயராவார் -சம்சாரிகள்
5-இவருள் அனுகூலரைக் கண்டால் சந்தன குசூம தாம் பூலங்களைக் கண்டால் போலேயும்
அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் உகந்து போர்க் கடவன்
பிரதிகூலரைக் கண்டால் சர்பாதிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திக்க கடவன்
அனுபயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே த்ருணீ கரித்து வர்த்திக்கக் கடவன்
அந்த சம்சாரிகள் அனுகூலித்தார்கள் ஆகில் ஆத்மஜ்ஞானத்தை உபதேசிக்கவும்
அனுகூலியார்கள் ஆகில் ஐயோ என்று கிருபை பண்ணிப் போரவும்
6-இப்படி செய்ய ஒட்டாது ஒழிகிறது-அர்த்த காம ப்ராவண்யம் –
அர்த்த காமம் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களை அனாதரிக்கும் ஆகில் –
சார்வ பௌமனான ராஜ புத்ரனை ராஜ சந்நிதியில் பரிபவித்தால் ராஜா வெறுத்து இருக்குமா போலே எம்பெருமான் திரு உள்ளம் வெறுக்கும்
அர்த்த காமம் அடியாக பிரதிகூலரை ஆதரிக்குமாகில் சார்வ பௌமனான ராஜாவின் மகிஷி ஷூத்ர ஜந்துக்கள் பக்கல் மடி பிச்சை புக்கால்
ராஜாவுக்கு அவத்யமாகையால் ராஜா வெறுக்குமா போலே
அனுபயரை ஆதரிக்குமாகில் ரத்தத்துக்கும் பல கறைக்கும் வாசி அறியாதா போலே
பியாந்த ஜ்ஞானம் கார்யகரமாய்த்து இல்லை என்று எம்பெருமான் இவனை அநாதரிக்கும்-
7- பின்பு பட்டரைப் பார்த்தருளி -கூரத்தில் ஆழ்வானையும் கந்தாடை ஆண்டானையும் போலே கூரகுலதிலகரான நீரும்
வாதூலகுல திலகரான கந்தாடை யாண்டானும் நம்மதியாக யுண்டான
சௌப்ராத்ரத்தை யுடையராய்
மச்சித்தா மத்கத ப்ராணா போதயந்த பரஸ்பரம் -என்னும்படியாக இருக்க அருளிச் செய்தார்
8-ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து இருக்கும் நாள் பண்ணலாம் கைங்கர்யங்கள் ஆறு யுண்டு –
அவை யாவன –
1-ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை
2-அதற்கு யோக்யதை இல்லாவிடில் அருளிச் செயலை ஓதியும் ஒதுவித்தும் போருகை
3-அதற்கும் யோக்யதை இல்லா விடில் உகந்து அருளின நிலங்களில் அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றை யுண்டாக்கி நடத்திக் கொண்டு போருகை –
4-திரு நாராயண புரத்திலே ஒரு குடில் கட்டிக் கொண்டு இருக்கை
5-அதற்கும் யோக்யதை இல்லையாகில் த்வயத்தை அர்த்தானுசந்தானம் பண்ணிப் போருகை
6-அதற்கும் யோக்யதை இல்லையாகில் -என்னுடையவன் -என்று அபிமாநிப்பான்
ஒரு பரம பாகவதன் -அவனுடைய அபிமானத்தில் ஒதுங்கிப் போருகை –
9-பிரிய பிரியதர பிரியா தாமங்கள் இன்னது என்றும்
ப்ராப்தி பிரதிபந்தகமான பகவத் பாகவத ஆச்சார்யா விஷயங்களில் அபசாரத்தை வருந்தியும் பரிஹரித்து போருங்கோள்-
10-ஸ்ரீ வைஷ்ணவ அதிகாரிக்கு த்வயத்தை ஒழிய மந்த்ரம் இல்லை
ஒரு மிதுனம் ஒழிய பற்றும் வஸ்து இல்லை
கைங்கர்யத்தை ஒழிய புருஷார்த்தம் இல்லை
ஆச்சார்யா அபிமானம் ஒழிய மோஷ யுபாயம் இல்லை
பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதி இல்லை-
இவை முதலானவைகளாய் உள்ள அநேக ஹிதங்களையும் பிரசாதித்து உபசம்ஹரித்து அருளினார் –
————————————————————————–
ஸ்ரீ வைஷ்ணவான் சமாஹூய தத்ததத்ர ஸ்திதான் பஹூன்
க்ருபாமாத்ரா பிரசந்தார்யோ யதிராஜோ ஜகத்குரு
சார்வ சாஸ்த்ரார்த்த சாராணி ஸூ வாக்யாநி த்விசப்ததி
சமாஹ்ருத்ய விதாயாசு பூரிதா நம் மகாயஸா
வைஷ்ண வேப்ய ப்ரோவாச சிஷ்யேப்ய கருணார்ணவா-
பிரபன்னாம்ருதம் படி ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த -72 வார்த்தைகள் –
1-ஆசார்யர் திருவடி பணிந்து போவது போல்
அனைத்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடம் நடக்க வேண்டும் –
2-சம்ப்ரதாய குருக்கள் வார்த்தையில் நம்பிக்கை வேணும் –
3-புலன்கள் இழுத்த வழி செல்லாமல் இருக்க வேண்டும் –
4-மதசார்பற்ற ஞானம் அறிவுடன் போதும் என்று இராமல் இருக்க வேண்டும்
5 -பகவத் சரித்ரங்கள் சேஷ்டிதங்கள் வாக்யங்களில் உகந்த
ஈடுபாடுடன் இருக்க வேண்டும்
6-ஆசார்யர் உயர்ந்த பிரம ஞானம் அருளிய பின்பு -மீண்டும்
புலன்கள் கவர்ச்சியில் ஈடு படாமல் இருக்க வேண்டும் –
7-அனைத்து இந்திரிய வியாபாரங்களிலும் ஒதுங்கி
இருக்க வேண்டும்
8-சந்தனம் மலர் நறு மணம் இவற்றில் அதிக ஈடுபாடு
கொண்டு இருக்க கூடாது
-9-கைங்கர்ய பரர் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது
அவன் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது
அடையும் இன்பம் அடைய வேண்டும் –
10-அடியார் அடியானே அவனை அவன் அடியானை விட
சீக்கிரம் அடைகிறான் என்பதில் உறுதி கொள்ள வேண்டும் –
11-ஞானவான் அவன் கைங்கர்யாமோ அவன் அடியார் கைங்கர்யாமோ
இன்றி அழிவான் –
12-வைஷ்ணவர் வாழ்வுமுறை அவனை அடையும்
உபாயம் என்று கருத கூடாது –
13-அவன் ஒருவனே அடையும் குறிக்கோள் –
14-கைங்கர்ய பரர்களை மரியாதை இன்றி நடத்த கூடாது –
15-ஸ்ரீ வைஷ்ணவரை பார்த்ததும் முதலில் அடி பணியாமல்
இருக்க கூடாது –
16-பகவத் சன்னதியிலோ அவன் அடியார்கள் இருந்தாலும்
ஆன்மிகர் கூட்டத்திலோ காலை நீட்டி இருக்க கூடாது-
17-திரு கோவிலை நோக்கியோ -ஆசார்யர் திரு மாளிகை நோக்கியோ –
கைங்கர்ய பரர் திரு மாளிகை நோக்கியோ -காலை நீட்ட கூடாது –
18-காலையில் எழுந்ததும் குரு பரம்பரை அனுசந்திகவும் –
19-பெருமாள் எழுந்து அருளும் பொழுது முன் வரும் திவ்ய பிரபந்த கோஷ்டி
பார்த்ததும் த்வயம் மகா மந்த்ரம் அனுசந்தித்து கொண்டு
சேவிக்கவும் –
20-திருநாம சந்கீர்தனத்தின் நடுவிலோ -கைங்கர்ய பரர் களை பாராட்டும் பொழுதோ
நன்றாக அடிபணிந்து வணங்க வேண்டும் -நடுவில் கூட்டத்தில் இருந்து போவது
மிக பெரிய பாவமாகும்
21-உன்னை தேடி ஸ்ரீ வைஷ்ணவர் வருகிறார் என்று அறிந்தால் முன்னமே
சென்று வர வேற்க வேண்டும் -அவர் விடை கொள்ளும் பொழுது நடுவழி வரை கூட
செல்ல வேண்டும் -இதை செய்யாவிடில் மிக பெரிய பாவமாகும்
22-அடியார் அடியானாக இருக்க ஆசை கொள்ள வேண்டும் -அவர்கள்
திருமாளிகை சென்று கைங்கர்யம் செய்து -அவர்களை உனக்கு முன் மரியாதையாக நடத்த வேண்டும்
23-திருகோவிலையோ-திரு கோபுரத்தையோ -திரு விமானத்தையோ
கண்டால் கை கூப்பி வணங்க வேண்டும்
24-மறந்தும் புறம் தொழாமல் – அப்படி பட்ட கோவில்கள் கலை நயங்களுடன் இருந்தாலும்-காணாமல் இருக்க வேண்டும்
25-மற்றை தெய்வ செஷிடிதங்கள் ஆச்சர்யமாக இருந்தாலும்
ஈர்க்க கூடாதவை
26-அவனை புகழ்ந்து பேசி கொண்டு இருக்கும் பொழுதோ –
அவன் அடியார் கைங்கர்ய பரர்களை புகழ்ந்து பேசிக் கொண்டு
இருக்கும் பொழுதோ நடுவில் குருக்கேபேசி தடங்கல் செய்ய கூடாது
27-ஸ்ரீ வைஷ்ணவர் நிழலை கூட தாண்ட கூடாது –
28-நம் நிழலும் அவர்கள் மேல் படாமல் இருக்கும் படி கவனம் வேண்டும் –
29-நன்றாக நீராடிய பின்பே ஸ்ரீ வைஷ்ணவரை தொட்டு பரிமாற்ற வேண்டும் –
30-ஏழை ஸ்ரீவைஷ்ணவன் உன்னை முதலில் வணங்கினால்
அவரை அவமரியாதை உடன் நடத்த கூடாது -அப்படி நடத்தினால்
மிக பெரிய பாபம் வரும் –
31-ஸ்ரீவைஷ்ணவர் உன்னை முதலில் வணங்கி -அடியேன் என்றால் –
அவருக்கு அவமரியாதை காட்ட கூடாது -அப்படி செய்தால் மிக பெரிய பாபம் ஆகும் –
32-ஸ்ரீ வைஷ்ணவர் பற்றிய குற்றம் குறைகள்-சோம்பல்தனம் -தூங்கி வழிவது –
தாழ்ந்த பிறவி -போன்றவை -அறிந்தால் அது பற்றி மற்றவர் இடம் பேசாமல் நமக்கு உள்ளேயே வைத்து-கொள்ள வேண்டும் -அவர்களின் நல்ல பண்பை மட்டுமே பேச வேண்டும் –
33- பெருமாள் தீர்த்தமும் ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தமும் சமாச்ரண்யம் ஆகாதவர் முன்னிலையில்-சுவீகரித்து கொள்ள கூடாது
34-தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறியாத ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம்
சுவீகரித்து கொள்ள கூடாது
35-ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத
தீர்த்தம் நித்யம் எப்பாடு பட்டாலும் சுவீகரிக்க வேண்டும் –
36-கைங்கர்ய பரர்கள் உடன் நம்மை தாழவே பண்ணி கொள்ள வேண்டும் –
37-அறியாமல் நாஸ்திகர் மேல் தீண்ட பெற்றால் நீராடி ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பாத
தீர்த்தம் சுவீகரித்து சுத்தி படுத்தி கொள்ள வேண்டும்
38-பற்றற்ற ஞானவான்கள் பகவான் ஒக்க எண்ணி அவர்களுக்கு
கைங்கர்யம் செய்ய வேண்டும் –
39-அப்படி பட்டவர்களின் பிறப்பு போன்றவற்றை மதியாமல்
நம்மை உய்ய கொள்ள வந்தவர்கள் என்று எண்ணி போக வேண்டும் –
40-நாஸ்திகன் வீட்டில் பெருமாள் தீர்த்தம் சுவீகரிக்க கூடாது –
41-அப்படி பட்டவர்கள் வீட்டில் பெருமாளை சேவிக்க கூடாது-
42-ஆனால் திரு கோவில்களில் அப்படி பட்டவர்கள் இருந்தாலும்
பெருமாள் பிரசாதம் ச்வீகரிக்காமல் இருக்க கூடாது-
43-விரதம் அனுஷ்டிக்கும் பொழுதும் திரு கோவில் பிரசாதம் கொடுத்தால்
மறுக்க கூடாது –
44–பெருமாள் பிரசாதம் மிகவும் புனிதம்-பாபங்களை போக்கும் –
மறுக்க கூடாது -வேண்டாதவர் கொடுக்கும் பிரசாதம் என்றாலும் –
45-ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டத்தில் தற் புகழ்ச்சி கூடாது –
46-மற்றவரை வெட்க படுத்தும் படி செய்ய கூடாது –
47-அவன் அடியாரை புகழவும் கைங்கர்யம் செயவும் எல்லா
பொழுதும் போக வேண்டும் –
48-நித்யம் ஒருமணி நேரமாவது ஆசார்யர் புகழை பாட வேண்டும் –
49-திவ்ய பிரபந்தங்களிலும் குருபரம்பரையிலும் நித்யம் பல
மணி நேரம் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டும் –
50-தன்னை பற்றியே எண்ணி இருப்பாருடன் சேர வேண்டாம் –
51-வெளியில் மட்டும் ஸ்ரீ வைஷ்ணவ சின்னம் கொண்டு உள்ளே
ஸ்ரீ வைஷ்ணவ சிந்தனை இல்லார் உடன் நட்பு கூடாது –
52-பழி சொல்வார் வதந்தி பரப்புவார் உடன் நட்பு கூடாது –
53-மற்ற சமயத்தார் உடன் கலந்த பாபம் போக்க நல்ல ஸ்ரீ வைஷ்ணவர் சேர்க்கை வேண்டும் –
54-அவன் அடியாரை களங்க படுத்தும் -ஆச்சர்யர்களை இகழும் –
புலி தோல் போத்திய மானிடரை -மதிக்க கூடாது –
55-த்வயம் அனுஷ்டான நிஷ்டர்கள் கூட்டம் நாடி போக ஆசை பட வேண்டும் –
56-உபாயாந்தரன்களை நாடுவாரி விட்டு பிரபத்தி நிஷ்டர் சகவாசம் கொள்ள வேண்டும் -57-தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறிந்தார் உடன் சேர ஆசை கொள்ள வேண்டும் –
58-ஐச்வர்யார்திகள் சேர்க்கை தவிர்த்து பகவல் லாபார்திகள் சேர்க்கைக்கு ஆசை பட வேண்டும் –
59-ஸ்ரீ வைஷ்ணர் நம் பக்கல் செய்த குற்றம் கணிசியாமல் -அவர்களை
பழி வாங்க எண்ணாமல் கட்டு பட்டு இருக்க வேண்டும் –
60-பரம பத கைங்கர்யம் ஆசை பட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் நலத்துக்கு
பாடு பட வேண்டும் –
61-சரணாகதன்-கைங்கர்ய பரர் விதிக்கும் கட்டளை படிக்கு மாறாக
-தனக்கு நன்மையே பயத்தாலும் -நடக்க கூடாது –
62-பெருமாள் கண்டு அருளாத பிரசாதமோ -பெருமாளுக்கு சாத்தாத
சந்தனமோ -வெத்தலையோ புஷ்பமோ பானகமோ-சுவீகரித்து கொள்ள கூடாது –
63-ஐச்வர்யார்திகள் தானாகவே கொடுப்பவற்றை சுவீகரித்து
கொள்ள கூடாது –
64-நல்ல அனுஷ்டானம் குல பிறப்பு கொண்டவர் பிரசாதம் மட்டுமே
ச்வீகரிகலாம்
65-சாஸ்திரம் விதித்த ஒன்றையே பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்
-கண்ணுக்கு அழகாக இருப்பவை விதிக்க படாவிடில் சமர்ப்பிக்க கூடாது –
66-சாஸ்திரம் விதித்த படியே கண்டு அருள பண்ண வேண்டும் –
67-பெருமாள் பிரசாதம் -புஷ்பம் -புனிதம் என்ற உணர்வுடன்
சுவீகரிக்க வேண்டும் -போக பொருளாக கொள்ள கூடாது –
68-சாஸ்திரம் விதித்த படி நடப்பதே அவனுக்கு நாம் செய்யும் கடமை என்று உணர வேண்டும் –
69-ரகஸ்ய த்ரய நிஷ்டர்களை அவமதித்தால் பேறு இழப்பு நிச்சயம் –
அவர்கள் அனுக்ரகத்தால் பேறு சீக்கிரம் நிச்சயம் பெறுவோம் –
70-அடியார் அடியார் கைங்கர்யமே நமது குறிக்கோள் ஆக கொள்ள வேண்டும் –
அவர்கள் மனம் கோணும் படி நடந்தால் நாம் இழப்போம் –
71-திவ்ய திருமேனியை வெறும் கல் என்றோ -ஆசார்யரை வெறும் மனிதர் என்றோ –
பாகவதர்கள் பிறப்பை இழிவாக எண்ணுபவனோ -புனித நீரை வெறும் தண்ணீர் என்று நினைப்பவனோ -திருமந்த்ரங்களை சொல் கூட்டம் என்று மட்டும் நினைபவனோ -பரமாத்மாவை தேவர்களில் ஒருவன் என்று-எண்ணுபவனோ -அகல பாதாள இருட்டு நரகம் புகுவான் –
72-ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் -பெருமாளை திரு வடிகளை விட ஆச்சார்யர் அடி பணிபவனே-நிச்சயம் பேறு பெறுவான் -ஆச்சர்யர்களை மதிக்காதவன் பெருமாளை மதிகாதவனை விட அதிக-பாபம் செய்தவன் ஆகிறான் -ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் அவன் திருவடி தீர்த்தம் விட புனிதம் ஆனது –
இதை நன்றாக நெஞ்சில் பதித்து கொண்டு ஆச்சார்யர் அடி பணிந்து வாழ வேண்டும் –
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply