Archive for the ‘Thirumangai Aazlvaar’ Category

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -7–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப்பாட்டில் ”அமரர் சென்னிப் பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக் காட்டும்‘ என்ன;
என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தை செய்யுந் தொண்டர்களே
என் தலை மிசை மன்னுதற்கு உரியார் என்கிறார் போலும்.

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே

பதவுரை

எமக்கு–நமக்கு
இம்மையை–இவ் வுலகத்து இன்பத்தைத் தருமவனும்
மறுமை தன்னை–பரலோகத்து இன்பத்தைத் தருமவனும்
விரிந்த சோலை–பரந்த சோலைகளை யுடையதாய்
வியன்–ஆச்சரியமான
திரு அரங்கம்–ஸ்ரீரங்கத்திலே
மேய–நித்ய வாஸம் பண்ணுமவனும்
செம்மையை கருமை தன்னை திருமலை–(யுக பேதத்தாலே) செந் நிறத்தையும் கரு நிறத்தையுங் கொண்டுள்ளவனும்
திருமலை–திருவேங்கடமலையிலே நின்று கொண்டு
ஒருமையானை–(மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்) ஒருமைப்பட்டிருப்பவனுமான எம்பெருமானுடைய
தன்மையை–சீலத்தை
நினைவார்–நினைக்க வல்லவர்கள்
என் தன்–என்னுடைய
தலை மிசை–தலையிலே
மன்னுவார்–பொருந்தத் தக்கவர்கள்

இம்மையை மறுமை தன்னை –
இஹ லோக ஸுகம், பர லோக ஸுகம் என்ற இருவகை யின்பத்தையும் அளிப்பவனென்றபடி.
எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பற்றின ஞான விகாஸம் பெற்றுக் களிப்பதே
ஆழ்வார் திருவுள்ளத்தினால் இம்மையின்பமாகும்;
திருவனந்தாழ்வானைப்போலே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும் அந்தரங்க கைங்கரியம்
பண்ணப் பெற்றுக் களிப்பதே மறுமையின்பமாகும்;
ஆக, இஹ லோகத்திலே தன்னைப் பற்றின ஞான விகாஸத்தையுண்டாக்கி இன்பம் பயந்தும்,
பர லோகத்திலே நித்ய கைங்கரியத்திலே மூட்டி இன்பம் பயந்தும் அடியார்களை வாழ்விப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.

எமக்கு வீடாக நின்ற மெய்ம்மையை-
இங்கு வீடு என்றது இலக்கணையால் மோக்ஷாபாயத்தைச் சொன்னபடி.
கீழ்ச் சொன்ன பிராப்யங்களுக்கு ப்ராபகனாயிருப்பவனென்கை.
அவ் வுபாயம் ஸுலபமான விடத்தைப் பேசுகிறார் வியன் திருவரங்க மேய என்று.

செம்மையைக் கருமை தன்னை –
எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொள்வன்;
கிருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வ குணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே
அவர்கட்காகப் பால் போன்ற நிறத்தைக் கொள்வன்;
த்ரேதா யுகத்திலே சிவந்த நிறத்தைக் கொள்வன்,
த்வாபர யுகத்திலே பசுமை நிறத்தைக் கொள்பவன்;
கலி யுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தோடிருப்பவன்.

(இது ”பாலினீர்மை செம்பொனீர்மை” என்ற திருச்சந்த விருத்தப் பாசுரத்திலும்
”நிகழ்ச்தாய் பால் பொன் பசுப்புக் கார்வண்ணம் நான்கும்” என்ற நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்திலும்
திருமழிசைப் பிரானாலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.)

இங்கு ”செம்மையைக் கருமை தன்னை” என்று இரண்டு யுகங்களின் நிறத்தைச் சொன்னது
மற்றவர்க்கும் உபலக்ஷணமென்க.

திருமலை யொருமையானை =
”தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே”
என்றும் சொல்லுகிறபடியே திருமலையிலே நின்று நித்ய ஸூரிகளுக்கும் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் ஒக்க
முகங்கொடுக்கும் அவன் என்றவாறு.

ஒருமையான் –
ஒருமைப்பட்டிருப்பவன், பொதுவாயிருப்பவன்,
திருமலையானது நித்ய விபூதிக்கும் லீலா விபூதிக்கும் நடு நிலை என்பதாகத் திருவுள்ளம்.
இங்குள்ளார் சென்று பரத்வ குணத்தை அநுபவிப்பர்கள்;
அங்குள்ளார் வந்து சீல குணத்தை அநுபவிப்பர்கள்; ஆக இருபாடர்க்கும் வைப்பாயிருப்னென்க.

தன்மையை நினைவார் =
கீழும் இரண்டாம் வேற்றுமையாய் இங்கும் இரண்டாம் வேற்றுமையாயிருத்தால் எங்ஙனே அந்வயிக்குமென்னில்;
கீழிலவற்றை உருபு மயக்கமாகக் கொள்க;
திருமலை யொருமையானுடைய தன்மையை என்றவாறு.
எம்பெருமானடைய தன்மையாவது, அடியவர்களிட்ட வழக்காயிருக்குந் தன்மையென்க.
அதனை அநுஸந்தித்து ஈடுபடுமவர்கள் என் தலை மேலார் என்றாராயிற்று.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -6–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

பகவத் விஷயத்தை அநுபவிக்கப் புகுமவர்கள் வாயாலே ஏதோ சில பாசுரங்களைச் சொல்லிப் புகழ்கின்றார்களே,
என்ன பாசுரஞ் சொல்லிப் புகழ்வது! பெரு வெள்ளத்திலே புகுந்து முழுகுமவர்கள் குமிழ் நீருண்டு கிடக்குமத்தனை போல,
பகவத் விஷய ஸாகரத்திலும் அழுந்திக் கிடக்கலாமே யொழிய ஏதேனும் பாசுரமிட்டுச் சொல்லப் போமோ? என்கிறார்.

மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?–6-

பதவுரை

மூவரில்–த்ரி மூர்த்திகளுள்
முதல்வன் ஆய ஒருவனை-முதற் கடவுளாகிய அத்விதீயனும்
உலகம் கொண்ட கோவினை–(மாவலியிடத்தில்) உலகங்களை இரந்து பெற்ற ஸ்வாமியும்
குடந்தை மேய–திருக்குடந்தையில் நித்ய வாஸம் செய்பவனும்
குரு மணி திரளை–சிறந்த நீல ரத்னக் குவியல் போன்றவனும்
இன்பம் பாவினை–இன்பந்தரும் பாட்டுக்களைப் போலே சுவை மிக்கவனும்
பச்சை தேனை-பசுந்தேன் போலே நாவுக்கு இனியனும்
பைம் பொன்னை–பசும் பொன் போல் விரும்பத் தக்க கவனும்
அமரர் சென்னி பூவினை–நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருப்பவனுமான பெருமானை
புகழும்–புகழ்கின்ற
தொண்டர் தாம்–தொண்டர்கள்
என் சொல்லி புகழ்வர்-எதைச் சொல்லிப் புகழ்வார்கள்?

மூவரில் முதல்வனாய வொருவனை –
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கடவர்களென்றும் த்ரிமூர்த்திகளென்றுஞ் சொல்லப்படுகிற
அரி அயன் அரன் என்னுமிவர் தம்முள் முழுமுதற் கடவுளாயிருப்பவன். அன்றியே,
ஏகமேவ அத்வதீயம் ப்ரஹ்ம -என்ற சுருதியின்படி
இந்திரனைக் கூட்டி மூவராக்கி அம்மூவர்களிற் காட்டிலும் முழுமுதற் கடவுளாயிருப்பவன்
என்றும் பொருள் கூறுவர்.

உலகங் கொண்ட கோவினை – மூவர்க்கும் முதற்கடவுளாயிருந்தால் அவர்களுக்கு ஆக வேண்டிய
காரியத்தைத் தலைக் கட்டிக் கொடுக்க வேணுமே;
அவர்களுள் ஒருவனான இந்திரனுக்குக் காரியஞ்செய்து கொடுத்தமை சொல்லுகிறது.
மஹாபலி அபகரித்த பூமியை மீட்டுக்கொடுத்தமை சொன்னடி.

குடந்தை மேய குருமணித் திரளை – இன்னும் ஸம்ஸாரிகள் இடர்ப் பட்டாருண்டாகிலும் துவளலாகாதென்று
அவர்கட்குக் கதியாகத் திருக் குடந்தையிலே படுக்கை பொருந்திப் பள்ளி கொள்ளும் நிலையை நோக்குங்கால்
சிறந்த நீல ரத்னங்களைக் குவிந்திருக்குமா போலே புகர்த்து விளங்கும்படி.
‘குரவ் ’ என்னும் வடசொல் குருவென்று கிடக்கின்றது. சிறந்த வென்று பொருள்.

இன்பப் பாவினை –
”அந்தமிழினின்பப் பாவினை” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அருளிச் செயல் போலே செவிக்குத் தித்திப்பவன் எம்பெருமான் என்றவாறு.

பச்சைத் தேனை –
செவிக்கு மாத்திரமன்றியே நாவுக்கும் இனியனா யிருப்பவன்;
நாள் பட்ட தேன் போலல்லாமல் அப்போதுண்டான தேன் போலே பரம போக்யன்.

பைம் பொன்னை –
உடம்புக்கு அணையலாம்படி விரும்பத் தக்கவனென்க.

அமரர் சென்னிப் பூவினை-நித்ய ஸூரிகள் தலைமேற் புனைந்து கொண்டாடும் தத்துவம்.
”எம்மா வீட்டுத் திறமும் செப்பம், நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து …….. அம்மா வடியேன் வேண்டுவதே”
என்று நாமெல்லாரும் பிரார்த்தித்துப் பெற வேண்டிய பேறு சிலர்க்குக் கை வந்திருக்கின்றதே யென்று தலை சீய்க்கிறார்.

ஆக இப்படிப் பட்ட எம்பெருமானைப் புகழ்கின்ற தொண்டர்கள் என் சொல்லிப் புகழ்வரென்கிறார்.
இத்தால், தாம் பாசுரம் பேசுவதும் எம்பெருமானுடைய பெருமையின் எல்லையைக் கண்டன்று;
போது போக்க வேண்டியத்தனை என்றதாம்.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -5–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப்பாட்டிலுள்ள ”கேட்கயானுற்றதுண்டு” என்ற வாக்கியத்தை இப் பாட்டிலும் இயைத்துக் கொள்ளலாம்.
”தீர இரும்புண்ட நீரது போல என்னாருயிரை யாரப் பருக, எனக்காராவமுதானாயே” என்ற
திருவாய்மொழிப் பாசுரத்தையே பெரும்பாலும் அடியொற்றி அருளிச் செய்வது இப்பாசுரம் என்க.

இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன்
அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே.–5-

பதவுரை

இரும்பு–இரும்பானது
அனன்று–பழுக்கக் காய்ந்து
உண்ட நீர் போல்–(அக்காய்ச்சலடங்கும்படி) உட் கொண்ட ஜலம் போலே
எம்பெருமானுக்கு–எம்பெருமான் திறத்திலே
என் தன்–என்னுடைய
அரு பெறல் அரு பெறல் அன்பு புக்கேட்டு–பெறுதற்கரிதான அன்பைச் செலுத்தி
அடிமை பூண்டு–கைங்கரியம் பண்ணி
உய்ந்து போனேன்–உஜ்ஜீவிக்கப் பெற்றேன்;
(அன்றியும்)
வரும்-(அடியார் இருக்குமி்டந்தேடி) வருகி்ன்ற
புயல் வண்ணனாரை–மேக வண்ணனான அப்பெருமானை
மருவி–கி்ட்டி
என் மனத்து வைத்து–என்னெஞ்சிலே பொருந்த வைத்து
கரும்பின் இன் சாறு போல–கரும்பினுடைய இனிய ரஸம் போலே
பருகினேற்கு–அநுபவிக்கப் பெற்ற எனக்கு
இனிய ஆறே–போக்யமாயிருக்கிறபடி என்னே!.

இரும்பானது அக்நியாலே மிகவும் காய்ச்சப்பட்டு அக்காய்ச்சலடங்க நீரைப் பருகுமா போலே
நானும் என்னுடைய தாபமடங்க பகவத் விஷயத்தில் அன்பாகிற தண்ணீரைப் பருகி,
ப்ராப்தமான அவ் விஷயத்திலே அடிமை செய்யப் பெற்று
உஜ்ஜீவித்தேனென்பன முன்னடிகள்.

தகாத விஷயங்களில் அன்பு உண்டாவதே சஹஜமாய்,
பகவத் விஷயத்தில் அன்பு உண்டாவது மேட்டுமடையா யிருத்தல் பற்றி அரும்பெறலன்பு எனப்பட்டது.
நெருப்பிலே தாமரை பூத்தாலும் பூக்கும்;
அஹங்காரப் பெரு நெருப்பிலே எம்பெருமான் விஷயமான அன்பு விளைவது மிகவுமரிது.

‘அடிமைப்பூண்டு‘ என்றதனால் ஆத்மாவுக்கு அடிமையே ஆபரணமென்பது பெறப்படும்.

(வரும்புயல் வண்ணனாரை இத்யாதி.)
இருந்தவிடத்தே யிருந்து வர்ஷித்து இன்பம் பயக்கும் மேகம் போலே அடியாருள்ள விடங்களிலே சென்று வர்ஷித்து
இன்பம் பயக்கும் மேகம்போலே அடியாருள்ள விடங்களிலே சென்று ஈரக்கையாலே தடவி
விடாய் தீர்க்குமவன் எம்பெருமான்.

அன்னவனை என் மனத்திலே பொருந்த வைத்துக் கருப்பஞ்சாறு போலே பருகினேன்;
பருகின மாத்திரத்திலே வாயாற்சொல் வொண்ணாத இனிமையாயிருக்கின்றதே! ;
இதற்கென்ன காரணம்! தெரியவேணுமென்றாராயிற்று.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கிறே னென்கிறார் சமத்காரமாக.
மஹா வாரஹ மூர்த்தியாகத் திருவவதரித்துப்
பூமியை எயிற்றிற் கொணர்ந்த எம்பெருமான் கனவிலெழுந்தருளிக் காட்சி தந்தவாறே
அப்பெருமானை மன மொழி மெய்களால் அன்போடு பிடித்து விழுங்கி விட்டேன்;
விஷயாந்தரங்களை யநுபவித்து ரஸித்துப் போந்த எனக்கு இவ் விஷயம் பரமரஸ்யமாயிருந்தது;
இப்படி இருந்ததற்குக் காரணமருளிச் செய்ய வேணுமென்று கேட்கிறேனென்கிறார்.

கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!-4-

பதவுரை

யான் கேட்க உற்றது உண்டு–அடியேன் (ஒரு விஷயம்) கேட்க வேண்டியதுண்டு; (மறு மாற்ற மருளிச் செய்ய வேணும்)
கேழல் ஆய்–வராஹரூபியாகி
உலகம் கொண்ட–பூமியைக் கோட்டில் எடுத்துக் கொண்டேறின
பூ கெழு வண்ணனாரை–பூப் போன்ற மெல்லி வடிவுடையரான பெருமாளை
கனவில் போதர கண்டு –கனவில் எழுந்தருளக் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால்–மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களாலும்
சிரத்தை தன்னால்–ச்ரத்தையோடு
வேட்கை மீதுர–ஆசை மிக
வாங்கி விழுங்கினேற்கு–பிடித்து அநுபவித்த வெனக்கு
இனிய ஆறே–போக்யமாயிருக்கிறவிதம் என்னே!

கேட்க யானுற்றதுண்டு= நம்மாழ்வார் தம்முடைய திவ்ய ப்ரபந்தங்களிலே எம்பெருமானை நோக்கிச் சில கேள்விகள் கேட்டிருக்கிறார்;

பெரிய திருவந்தாதியில் ”அருகுஞ்சுவடுந் தெரிவுணரோம், அன்பே பெருகும் மிக இதுவென் பேசீர்” என்றும்,

”புவியுமிருவிசும்பும் நின்ன கத்த, நீயென் செவியின்வழி புகுந்தென்னுள்ளாய்,
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை யென்பதை யாரறிவார், ஊன்பருகுநேமியா யுள்ளு“ என்றும்,

திருவாய்மொழியில். ”இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள் வைத்தாய்,
அன்றென்னைப் புரம்போகப் புணர்த்ததென் செய்வான், குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ் திருப்பேரான்,
ஒன்றெனக்கருள் செய்ய உணர்த்தலுற்றேனே” என்றும்
இங்ஙனே சில கேள்விகள் கேட்டார்;

அவற்றுக்கு எம்பெருமான் ஒரு மறுமாற்றமும் அருளிச்செய்திலன்; அப்படிப்பட்டவன்
இவ்வாழ்வாருடைய கேள்விக்கு மாத்திரம் மறுமொழி கூறப்புகுகிறானோ?
மாட்டானென்றோ இவர் அறிந்து வைத்தும், நசையாலே கேட்கிறாராயிற்று.

‘உன்னையநுபவித்த எனக்கு நீ பரம போக்யனாயிருக்கின்றாயே, இதற்கு என்ன காரணம் சொல்லு என்று கேட்கிற
இவரது கேள்விக்கு ஸர்வஜ்ஞனான எம்பெருமான்றானும் என்ன மறுமாற்றம் அருளிச் செய்யக் கூடும்?
இவர் கேட்கிற இவரது கேள்விக்குத் தான் அர்த்தமுண்டோ?

”அண்ணிக்கு மமுதூறு மென்னாவுக்கே” என்று மதுரகவியாழ்வார் தம்முடைய ஆனந்தத்தை வெளியிடடுக் கொண்டது போல
இவர் தாமும் கேள்வியென்னும் வியாஜத்தினால் தமது பரமாநந்தத்தையே பிரகாசிப்பித்துக் கொள்ளுகிறாரத்தனை என்று உணரக் கடவது.

‘சர்க்கரையை நாக்கில் போட்டவுடனே தித்திக்கின்றதே, அதற்கு என்ன காரணம்? என்று
ஒருவர் கேட்டால் அக் கேள்விக்குக் கருத்து யாது?

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -3–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும்
திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிரா நி்ன்றான் எம்பெருமான்;
விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய
திருப்பதிகளிலே கோயில் கொண்டிரா நின்றான்;
அன்னவனை வணங்கி யுய்ந்தேனென்கிறார்.

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே.–3-

பதவுரை

பாய் இரு பரவை தன்னுள்–பரந்து ஆழ்ந்த திருப்பாற்கடலிலே
பரு வரை–பெரியதான (மந்தர) மலையை
திரித்து–சுழலச்செய்து (கடல் கடைந்த)
வானோர்க்கு ஆய் இருந்து–தேவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அமுதம் கொண்ட–அமுதமெடுத்துக் கொடுத்தருளின
அப்பனை–உபகாரகனும்
எம் பிரானை-எமக்கு ஸ்வாமியானவனும்
இரு–மிகப்பெரிய
வேய் சோலை சூழ்ந்து–மூங்கிற் சோலைகளாலே சூழப்பட்டு (அதனால்)
விரி கதிர் இரிய நின்ற–ஸூர்யன் கண்ணுக்குத் தெரியாதபடி யிருக்கப்பெற்ற
மாயிருஞ் சோலை–திருமாலிருஞ்சோலை மலையிலே
மேய–நித்ய வாஸம் செய்தருள்கிற
மைந்தனை–மிடுக்கனுமான ஸர்வேச்ரனை
வணங்கினேன்-வணங்கப்பெற்றேன்.

கடல் கடையும் போது மந்தரமலையை மத்தாக நாட்டிக் கடைந்தனனாதலால் ‘பருவரைதிரித்து‘ எனப்பட்டது.
எம்பெருமான் அவாப்த ஸமஸ்த காமனாகையாலே அவன் செய்தருளுங் காரியமெல்லாம் பிறர்க்காகவே யிருக்கும்;
நிலா தென்றல் சந்தனம் முதலிய பொருள்கள் பிறர்க்கு உபயோகப்படுவதற்கென்றே யிருப்பது போலவே
எம்பிரானுமிருப்பனென்பது விளங்க வானோர்க்காயிருந்து என்றது.

”அமுதம் தந்த” என்ன வேண்டியிருக்க கொண்டே என்றது – எம்பெருமானது நினைவாலென்க.
கடல் கடைந்து அமுதமெடுத்தது அவர்களுக்காக வல்லாமல் தன் பேறாக நினைத்திருந்ததனால்.

விரிகதிர் இரியநின்ற = ஸூர்ய கிரணங்கள் உள்ளே புக வொண்ணாமல் நிழல் செய்திருக்கையைச் சொன்னபடி.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -2–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார்;
நெஞ்சே!
எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை அநுஸந்திக்கப் பார் என்றார்;
அப்படியே அது அநுஸந்திக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு
‘நெஞ்சே! நீ அநுஸந்திக்கும் விதம் என்னே!‘ என்று ஈடுபடுகிறார்.

காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற
ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப
ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட
கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.–2-

பதவுரை

காற்றினை புனலை தீயை–காற்று நீர் தீ முதலான பஞ்ச பூதமயமான ஜகத்தை சரீரமாக வுடையவனும்
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை–அரணாகப் போரும்படியான மதிளை யுடைத்தான இலங்காபுரியை முடித்த காளை போன்றவனும்
இமயம் மேய–இமயமலையில் (திருப்பிரிதியிலே) பொருந்தி வாழ்கிறவனும்
எழில் மணி திரளை–அழகிய மணித்திரள் போன்றவனும்
இன்பம் ஆற்றினை–(வடிவெடுத்த) ஆனந்த வெள்ளமாயிருப்பவனும்
அமுதம் தன்னை–போனவுயிரை மீட்கவல்ல அமுதம் போன்றவனும்
அவுணன்–(இரணியனென்னும்) அசுரனுடைய
ஆர் உயிரை–அருமையான உயிரை
உண்ட–கவர்ந்த
கூற்றினை–ம்ருத்யுவமான எம்பெருமானை
உள்ளம்-நெஞ்சமே!
குணம் கொண்டு–திருக்குணங்களை முன்னிட்டு
கூறு–அநுஸந்திக்கப்பார்;
(என்று தாம் சொன்னதும் அப்படியே அநுஸந்தித்த நெஞ்சை நோக்கி)
நீ கூறும் ஆறே–நீ அநுஸந்தித்த விதம் என்னே! (என்று ஈடுபடுகிறடி.)

காற்றினைப் புனலைத் தீயை=
பஞ்ச பூதங்களில் மூன்று பூதங்களைச் சொன்னது மற்ற பூமியும் ஆகாசமுமாகிற இரண்டு பூதங்களுக்கும் உபலக்ஷணமென்க.
பஞ்ச பூதங்களின் காரியமாகிய உலகங்களைச் சொல்லிற்றாய், உலகங்களைச் சரீரமாகக் கொண்டுள்ளவ னென்ற தாகிறது.
சரீரத்தைச் சொல்லும்படியான சொற்கள் சரீரி பர்யந்தமாகச் சொல்லி நிற்குமென்பது வேதாந்திகளின் கொள்கை யென்றுணர்க.

கடிமதிளிலங்கை செற்ற ஏற்றினை=
பல மதிள்களை அரணாகக் கொண்டிருந்த இலங்கா புரியைச் சுடுகாடாக்கின. மஹாவீரன் என்றவாறு.-
இந்த ப்ராக்ருதமான சரீரம் இலங்காபுரியாகக் கொள்ளத் தக்கது.
அது கடலால் சூழப் பட்டிருக்கும்; இது ஸம்ஸாரமாகிற பெருங்கடலினால் சூழப் பட்டிருக்கும்.
அது பத்துத் தலைகளை யுடையனான ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப் பட்டிருந்தது;
இது பத்து இந்திரியங்களாகிற தலைகளைக் கொண்ட மநஸ்ஸென்கிற ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப் பட்டிருக்கிறது;
அதில் சீதா பிராட்டி தீன தசையை யடைந்திருந்தாள், இதில் ஜீவாத்மா சிறை வைக்கப்பட்டு வருந்திக் கிடக்கிறான்.
அங்குச் சிறிய திருவடி வந்து ஸ்ரீ ராம குணகீர்த்தநம் பண்ணி க்ரமேண சிறை விடுத்தது போல,
இங்கும் அத் திருவடியைப் போல் மஹா பண்டிதர்களும் விரக்தர்களுமான ஆசாரியர்கள் பகவத் குணங்களை உபதேசித்துச் சிறை விடுவிக்க முயல்வார்கள்.
முடிவில் எம்பெருமானால் அவ்விலங்கை அழிந்தது போல இந்த ப்ராக்ருத சரீரமும் எம்பெருமானருளால் தொலையும் என்றுணர்க.

இமயமேய எழில்மணித் திரளை=
இமயம் என்று பொன்னுக்கப் பெயருண்டாதலால் அப்பொருளும் இங்குக் கொள்ளக்கூடியதே;
அப்போது மேற்பதத்தை ‘ஏயு‘ என்று பிரித்து பொன் போலப் புகர் கொண்டவனென்று உரைத்துக் கொள்க.
அன்றியே,
“எண் கையான் இமயத்துள்ளான்“ என்ற விடத்துப் போல,
இமயமலையின் கணுள்ள திருப் பிரிதியில் நித்ய வாஸம் பண்ணுமவனென்னவுமாம்.
அழகிய நீல ரத்னங்களைக் குவித்து வைத்தாற்போல் இனியனாயிருப்பவனென்கிறது எழில் மணித்திரளை யென்றதனால்.

இன்பவாற்றினை =
ஆனந்த வெள்ளமே வடிவெடுத்திருப்பவன். விடாய்த்தவர்களின் விடாயை யெல்லாம் தீர்க்கும் ஆறு;
எம்பெருமான் தாப த்ரயத்தையும் தணிப்பன். குளம் முதலானவை இருந்தவிடத்தே யிருந்து உதவும்;
ஆறு அங்ஙனல்லாமல் வேண்டினவிடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்ளலாம் படியிருக்கும்;
எம்பெருமானும் அப்படியே. வேண்டுவோர் வேண்டுமிடங்களிலே யெழுந்தருளிக் காதல் கடல்புரைய விளைவிப்பன்.

அமுதந்தன்னை = அன்பர்கட்கு ஆராவமுதமாயிருப்பவன்.
கடலில் தோன்றிய உப்புச் சாறாகிற அமுதம் வாய் கொண்டு பருகலாயிருக்கும்;
இவ் வாராவமுதம் கண்கொண்டு பருகத்தக்கது.
ஏததேவாம்ருதம் த்ருஷ்டவாத்ருப்பந்தி“ என்றது காண்க.

அவுணானாயிரையுண்ட கூற்றினை = கீழ்ச் சொன்னபடியே அமுதமாயிருக்குந் தன்மை அன்பர்களின் திறத்தேயத்தனை;
பிரதிகூலர் திறத்திலோ வென்னில் ம்ருத்யுவாயிருப்பன்;
ப்ரஹலாதாழ்வானுக்குப் பரம போக்யமான அமுதமாயிருந்தவன் தானே இரணியனுக்குக் கூற்றமாயிருந்தானிறே.
அவுணனார் என்று அசுரவர்க்கத்தை யெல்லாம் சொல்லிற்றாகக்கொண்டு உரைத்தலுமாம்.
கூற்று-உடலையும் வேறு கூறார்க்கு யவன் என்று யமனுக்குக் காரணப் பெயர்.

உள்ளம் – அண்மைவிளி; உள்ளமே! என்றபடி.
“உள்ளம்! குணங்கொண்டு நீ கூறு“ என்று அருளிச் செய்தவுடனே
“நீ கூறுமாறு!“ என்று ஈடுபட்டு அருளிச் செய்திருத்தலால், இடையில் திருவுள்ளத்தில் ஒரு விலக்ஷணமான
அநுஸந்தானம் சென்றமை தோன்றும்.

“உள்ளம்! குணங்கொண்டு நீ கூறுமாறே கூறு“ என்று ஒரு வாக்கியமாகவே அந்வயித்து,
‘நெஞ்சமே! எம்பெருமானுடைய திருக்குணங்களை உனக்கு அநுஸந்திக்கத் தெரிந்த வகையிலே அநுஸந்தானம் செய்‘
என்று உரைக்கலாமாயினும் அது அத்துணைச் சிறவாது.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -1–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 21, 2021

எம்பெருமானுடைய பெருமைகளைப் பன்னி யுரைத்து,
என்னெஞ்சிலே வந்து புகுந்த இப்பெருமானை
இனி நான் ஒருநாளும் விடமாட்டுகின்றிலே னென்கிறார்–

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி யென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே!–1-

பதவுரை

நிதியினை-(அன்பர்கட்கு) நிதிபோன்றவனும்
பவளம் துணை–பவளம்போல் இனியேனும் தூண் போல் தாரகனும்
நெறிமையால்–ஒரு நெறிப்பட்டுச் சிந்திக்க வல்ல வர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும்
முன்–முன்பு
கஞ்சன் மாளகண்டு–கம்ஸன் முடிந்து போம்படி செய்து
அண்டம்–உலகங்களை
ஆளும்–ரக்ஷித்தருளினவனும்
மதியினை–(அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும்
மாலை–அடியார் திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும்
வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை–நான் வாழ்த்தி வணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை
கண்டு கொண்ட–ஸேவிக்கப் பெற்ற
தொண்டனேன்–அடியேன்
விடுகிலேன்–(இனி ஒருநாளும்) விடமாட்டேன்.

நிதியினை =
புதைந்து வைக்கப்படும் பொருள் நிதியெனப்படும்.-
யோ வேத நிஹிதம் குஹாயாம்–தைத்திரீய உபநிஷத்தினால் எம்பெருமான நிதியாக அறியப்படுவன்;
“வைத்த மா நிதியாம் மதுசூதன்“ என்பர் நம்மாழ்வாரும்.
நிலத்தினுள் புதைந்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி;
எம்பெருமானுகிற நிதி அங்ஙனல்லாமல் நெஞ்சிலே புதைந்து ஆளத்தக்கதென வாசி காண்க.

நிதியானது தன்னையுடையவர்களை இரவும் பகலுங் கண்ணுறங்கவொட்டாது;
எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோவென்று துஞ்சாதிருப்பர் நிதியுடையார்;
எம்பெருமானை யுடையவர்களும்படியே,
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பும், உறக்கமில்லை; கண்டாலும் கையாலே உறக்கமில்லை.

நிதியானது ஸித்தாஞ்ஜனமணிந்த சில பாக்யசாலிகளுக்கே கிடைக்கும்;
எம்பெருமானும் பக்தி ஸித்தாஞ்ஜனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்யவான்களுக்கே-
இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.

பவளத் தூணை=
தூணானது பலவற்றையும் தரித்துக் கொண்டிருந்து தன் கீழே ஒதுங்குவார்க்கு நிழல் கொடுக்குமா போலே
எம்பெருமானும் ஸகல லோக யோக ஷேம துரந்தரனாய்த் தன்னடிச் சார்ந்தாரெல்லார்க்கும் தரபுங்களைத்
தணிக்குமவனா யிருத்தலால் தூண் என்றது.
கல்தூண் தூண் என்பதற்காகப் பவளத் தூண் என்றது.

நெறிமையால் நினைய வல்லார் கதியினை =
மற்ற பொருள்களை நினைப்பதற்கும் எம்பெருமானை நினைப்பதற்கும் நெடு வாசி யுண்டு;
“நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்துகும்“ என்கிறபடியே எம்பெருமானைச் சிந்தித்த மாத்திரத்திலே
* உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாங் கண்ண நீர் சோர நிற்கை ப்ராப்தமாகையாலே
இவ் வண்ணமாக நினைத்தலே நெறிமையால் நினைத்தலாம்; அப்படி நினைப்பார்க்கு உபாயமாயிருப்பவன் எம்பெருமான் என்க.

கஞ்சன்மாளக் கண்டு முன் அண்டமாளும் =
சாதுசனத்தை நலியுங் கஞ்சன் உயிரோடிருக்குமளவும் எம்பெருமானுடைய ஆட்சி குன்றி நின்றமையால்
அவனை உயிர் மாய்த்துத் தன்னுடைய ஜகத் ரக்ஷகவத்தை நிலை நிறுத்திக் கொண்டானென்கிறது.
“நாட்டை ஈரக் கையாலே தடவிக் கம்ஸனால் பட்ட நோவு தீர ரக்ஷித்து“ என்ற வியாக்கியான வாக்கியம் நோக்கத் தக்கது.

மதியினை=
மதி யென்பது வடசொல்; புத்தியென்று பெயர்.
“எய்ப்பென்னை வந்து நலியும் போது அங்கேதும் நானுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தே னரங்கத் தரவணைப் பள்ளியானே!“ என்றும்
“ஆமிடத்தே யுன்னைச் சொல்லி வைத்தேன்“ என்றும் சொல்லுகிறபடியே
நாம் பாங்காயிருக்கும் போது எம்பெருமானைச் சிந்தித்து வைத்தால் பிறகு நாம் சிந்திக்கப் பெறாத குறை தீர
அவன் தானே நம்மைச் சிந்தித்துக் கொண்டிருப்பவன் என்றவாறு.
வராஹ சரம ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
புத்திக்கு வாசகமான மதி யென்னுஞ் சொல் இவ்வளவு அர்த்தத்தைத் தருவது லக்ஷணையால்.
புத்தியின் காரியமாகிய நினைத்தலைத் தானே செய்பவனென்றபடி.

மாலை=
மால் என்னுஞ்சொல்-பெருமையுள்ளவன் கருநிறம் உள்ளவன்,
(அடியாரிடத்தில்) வியாமோஹமுள்ளவன் என்ற பல பொருள்களைக் கொண்டது.
”ஆசா லேஸமுடையார் பக்கல் வ்யாமுக்தனாயிருக்குமவனை” என்பது வியாக்கியான வாக்கியம்.
அடியார்க்கு எத்தனை உபகரணங்கள் செய்திருந்தாலும் ஒன்றும் செய்திலனாகவே தன்னை நினைத்துக் கொண்டு
‘என் செய்வோம், என் செய்வோம்‘ என்றே பாரிப்புக் கொண்டிருக்கை யாய்த்து எம்பெருமானுடைய வியாமோஹத்தின் பரிசு.

வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை=
‘வணங்கி‘ என்றதை எச்சத் திரிபாகக் கொள்க:
வணங்க என்றபடி; நான் வாழ்த்தி வணங்கும்படியாக என் மனத்தே வந்து சேர்ந்தவிதியை என்றவாறு.
அன்றியே,
“என் மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்“ என்று அந்வயிக்கவுமாம்.
விதி யென்னும் வட சொல் பாக்கியத்தைச் சொல்லும்.
தம்முடைய பாக்கியமே எம்பெருமானாக வடிவெடுத்ததென்கிறார்.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று காணப்பெற்ற அடியேன் இனி விடமாட்டேன் என்றார் ஆயிற்று .

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ -கலியன் ஒலி – சப்தம் இல்லாத சாற்றுப் பாசுரங்கள் –

November 16, 2020

கலி கன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை -1-1-10-

திருவேம்கடத்துறை செல்வனை மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்-1-8-10-

வேங்கட வேதியனை திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்து-1-9-10-

வேங்கட மா மலை மேய மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை -1-10-10-

கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல்-2-1-10-

எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும்-2-2-10-

திருவல்லிக்கேணி நின்றானை கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்து-2-3-10-

கடல் மல்லை தல சயனத்துத் தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
திடமாக விவை யைந்தும் ஐந்தும்-2-5-10-

அட்டபுயகரத்து ஆதி தன்னை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை-2-8-10-

பரமேச்வர விண்ணகர் மேல் கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன்
கலி கன்றி குன்றாதுரைத்த சீர் மன்னு செந்தமிழ் மாலை -2-9-10-

தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி
விரித்து உரைத்த பாவு தண் தமிழ் பத்திவை-3-1-10-

சித்திர கூடம் அமர்ந்த– ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் தானிவை –3-3-10-

காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை சங்க முத்தமிழ் மாலை பத்து–3-4-10-

வயலாலி கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை –3-6-10-

வைகுந்த விண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல்
துணிய வாள் வீசும் பரகாலன் கலி கன்றி சொன்ன சங்கமலி தமிழ் மாலை பத்து இவை — –3-9-10-

திருத் தேவனார் தொகை மேல் கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும்-4-1-10-

வண் புருடோத்தமத்துள் ஆலி மன் அருள் மாரி பண்ணுளார் தரப்பாடிய பாடல் இப்பத்து -4-2-10-

செம் பொன் செய் கோயிலினுள்ளே வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையர்
வாள் கலி கன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் –4-3-10-

திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் -4-4-10-

நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன பாவளம் பத்து-4-6-10-

திரு வெள்ளக் குளத்து உறைவானைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-4-7-10-

நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்து-4-8-10-

புள்ளம் பூதங்குடி தன் மேல் கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை -5-1-10-

கூடலூர் மேல் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பா–5-2-10-

திரு வெள்ளறை அதன் மேய அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்–5-3-10-

அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும்-5-4-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் பத்திவை-5-8-10-

திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை-5-9-10-

விண்ணகர் மேல் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை -6-1-10-

நறையூர் தொழு நெஞ்சமே என்ற கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்-6-4-10-

திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப் பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன்
புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் -6-6-10-

திருநறையூர் நின்றானை வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்து-6-9-10-

நறையூர் நின்ற நம்பியைக் கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை-7-2-10-

மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை பாடல் பத்திவை-7-3-10-

அழுந்தூர் நின்றானை வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை -7-5-10-

தென் அழுந்தையில் மன்னி நின்ற அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்-7-6-10-

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன்
மங்கைக் குல வேந்தன் சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை-7-7-10-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை-7-10-10-

கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும்-8-1-10-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை-8-2-10-

திருக் கண்ண புரத் துறையும் வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை நா மருவி யிவை -8-3-10–

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் -8-9-10-

நாகை யழகியாரை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் -9-2-10-

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

திருக் குறுங்குடி சேருவதே பயன்
இலங்கை பாழாளாகப் படை பொருதவன் -பெரிய பிராட்டியாரை இடைவிடாமல் அனுபவிக்கச் செய்தேயும்
என் பக்கல் விருப்பம் செய்து என்னுடன் சேர்ந்து கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இலக்காக்கி அருளி
ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல் இங்கே நித்ய வாசம் செய்து அருளும் திருக் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
காமரு சீர் கலியன் -என்னை -என்று சொல்வதால் -பரகால நாயகி – வேறே வ்யக்தி போலே-

திரு மாலிருஞ்சோலை நின்ற ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன பாடல் பனுவல் பத்து–9-9-10-

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில் சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந் நாலும் ஆறும்–9-10-10-

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த சொல்-10-1-10-

இலங்கை யழித்தவன் தன்னைப் பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம்-10-2-10-

எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை-10-4-10-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

நிகமன பாசுரத்திலும் வழக்கத்துக்கு மாறாக யசோதை பாவனை தொடருகிறது
என் நெஞ்சிலே போலேவே திரு மங்கை ஆழ்வார் திரு உள்ளத்திலும் குடி கொண்டு இருக்கும் திருமாலே
சப்பாணி கொட்ட வேணும் -என்று யசோதை பிராட்டி சொல்வதாகவே அமைந்துள்ளது
இப்படிப் பட்ட பிரார்த்தனையே பயன் என்று ஸூசிப்பித்து வேறு பயன் சொல்லாமல் தலைக் கட்டி அருளுகிறார்-

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே -10-7-14-

அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-10-8-10-

அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே -11-1-10-

வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை
மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்–11-2-10-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

ஷீராப்தி நாதனே
திரு வேங்கடத்தானே
ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாசம் செய்து அருளி பரத்வ சௌலப்ய திருக் கல்யாண குணங்களைக் காட்டி அருளினவன்
இவரைப் பெறவே அங்கு எல்லாம் இருந்து வந்தவன் -பரம உத்தேச்யம்
இது சித்தித்து விட்டால் அங்கு ஆதாரம் மட்டமாய் விடுமே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவமே
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்தகம் -பெரிய திருவந்தாதி
குணாநுபவம் செய்வதே பரம போக்கியம் என்பதால் பல சுருதி தனியாக அருளிச் செய்ய வில்லை-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-11-8-10-

விளக்கின் முன் இருள் போலே
காட்டுத் தீயின் முன் பஞ்சுத்துப் போலேயும்
இத் திருமொழி ஒதுகையாகிய ஞானத்துக்கு முன் வினைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் —

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை –
ரஷ்ய வர்க்கம் ஏதேனும் ஒரு படி நின்றாலும் ரஷணம் தான் மிறுக்கு உடைத்தான் ஆகையாலும்
ஒரு குறைகள் வாராது காணும் -என்று
அதுக்கு உடலாகத் தான் கோவர்த்தன உத்தாரணம் பண்ணின படியைக் காட்டி அருளினான்

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும் வாசனையோடு கழியும் படி
அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டி அருளினான் –

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியாழ்வார்-பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல் பதிகம் -2-9–/ ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் — வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே – பதிகம்-10-6-/களவு காணும் பருவமாய் இருக்கிற படியை அனுசந்திக்கும் பதிகம்-10-7–

June 30, 2020

ஸ்ரீ திருவரங்கத்தில் பகல் பத்து முதல் நாள் திருப்பல்லாண்டு தொடங்கி –
இந்த பண்டு அவன் செய்த க்ரீடை பதிகம் வரை முதல் நாள் அரையர் சேவை உண்டு

அவதாரிகை
கீழ் பூ சூட்டி -காப்பிட்டு -தனக்கு வசவர்த்தியாக்கி -தன் அருகே இவனை உறக்கி -நிர்ப்பரையாய் –
மாதாவான யசோதை பிராட்டி தானும் உறங்கி -உணர்ந்து -தன்னுடைய கரஹகார்யா பரவசையாய் வ்யாபரியா நிற்க
இவனும் உணர்ந்து போய் -ஊரில் இல்லங்களிலே புக்கு –
அங்குண்டான வெண்ணெய்களை விழுங்கி –
அவை இருந்த பாத்ரங்களை உருட்டி -உடைத்து –
காய்ச்சி வைத்த பாலை சாய்த்து பருகி –
அவர்கள் சமைத்து வைத்த பணியாரங்கள் முதலானவற்றை நிச்சேஷமாக எடுத்து ஜீவித்து –
சிறு பெண்ணை அழைத்து -அவள் கையில் வளையலை கழற்றிக் கொண்டு போய் –
அத்தை கொடுத்து நாவல் பழம் கொண்டு –
இப்படி தீம்புகள் செய்கையாலே -அவ்வவ க்ரஹங்களில் உள்ளார்கள் தனித்தனியே வந்து முறைப்பாட்டு –
உன் பிள்ளையை இங்கே அழைத்துக் கொள்ளாய் -என்ற பிரகாரத்தையும் –

இவளும் இவர்கள் சொன்ன அனந்தரத்திலே இவனை இங்கே அழைத்துக் கொள்கைக்காக
பல காலும் இவனை ஸ்தோத்ரம் பண்ணுவது –
உன்னை பிறர் சொலும் பரிபவம் எனக்கு பொறுக்க போகிறது இல்லை -வாராய் -என்பதாய்-இப்புடைகளிலே
பலவற்றையும் சொல்லி இவனை அழைத்த பிரகாரத்தையும்
தத் அவஸ்தா பன்னராய் கொண்டு பேசி
முன்பு அவன் செய்த க்ரீடைகள் எல்லாவற்றையும் அனுபவித்து ஹ்ர்ஷ்டராகிறார் -இத்திருமொழியில்

——————————————————–
முதல் பாட்டு –
ஊரில் ஸ்திரீகளில் சிலர் தங்கள் கிருஹங்களிலே இவன் செய்த தீம்புகளை
தாயாரான ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு வந்து சொல்லி
அவனை நீ இங்கு அழைக்க வேணும் என்ற படியை சொல்லுகிறது

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான் மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 – –

அண்ணற்கு அண்ணான் -தமையான பல ராமனுக்கு சேஷ்டித்தால் ஒத்து இராதவனாய் -தூரஸ்தன்
பிரான் -உபகாரகன் -இது வெறுத்து சொல்லும் வார்த்தை அபகாரகன் -என்று -விபரீத லக்ஷணையால் பொருள் –

வெண்ணெய் விழுங்கி —
கடைந்து எடுத்த தாழிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை நிச்சேஷமாக களவிலே விழுங்கி –
அவ்வளவும் இன்றிக்கே –
வெறும் கலத்தை வெற்ப்பிடை இட்டு
அது இருந்த பாத்தரத்தை கல்லிலே இட்டு உடைத்து
வெண்ணெய் தான் விழுங்கினான் ஆகிறான் -வெறும் கலங்களை வெற்ப்பிடை இட்டு உடைக்குமோ –

இத்தால் இவனுக்கு பிரயோஜனம் என் என்ன –
அதனோசை கேட்கும் –
அது உடைகிற போதை ஓசை கேட்கை ஆய்த்து இவனுக்கு பிரயோஜனம் –
அதுக்காக செய்யும் என்ன –
ஆனால் உங்கள் க்ரஹங்களை இவனுக்கு புகுர அவகாசம் இல்லாத படி அடைத்து நோக்கிக் கொள்ளும் கொள்-என்ன –

கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்ககில்ளோம்-
கிருஷ்ணான உபகாரகன் கற்ற க்ரித்ரிம வித்யையை நாங்கள் காக்க மாட்டுகிறிலோம்
எல்லாருடைய களவும் காக்கலாம் -இவனுடைய களவு எங்களால் காக்கப் போகாது என்கை-
பிரான் என்கிறது வ்யதிரேக உக்தி -சர்வஸ்வ அபஹாரி என்கிறபடி –
உந்தம் க்ரஹங்களை நீங்கள் காக்க மாட்டி கோள் ஆகில் ஆர் காப்பார் என்ன –

உன் மகனை காவாய் –
உன்னுடைய பிள்ளையை நீ காத்து கொள்ளுவுதி யாகில் எல்லாம் காவல் படும்
நீ அத்தை செய்யாய் என்றவாறே
சிறு பிள்ளைகள் தீம்புகளை செய்யார்களோ –
அவன் அறியாமல் ஏதேனும் சில செய்தது உண்டாகில் நீங்களும் சற்று பொறுக்க வேண்டாவோ –
இப்படி அலர் தூற்றலாமோ என்ன –

புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை –
புண்ணிலே புளியை குறந்திட்டால் கரிக்குமா போலே துஸ்ஸகமான தீமைகளை செய்யா நின்றால் எங்கனே பொறுப்பது –
நீங்கள் ஓரகத்தில் உள்ளார் அன்றோ இப்படி சொல்லுகிறிகோள்
உங்கள் ஓரகத்திலும் இப்படி நின்று இவன் தீம்புகளை செய்கிறான் ஆகாதே என்ன –
எங்கள் அகம் ஒன்றிலும் அன்று –

புரை புரையால் இவை செய்ய வல்ல –
அகம் தோறும் இப்படி இருந்துள்ள தீமைகளை செய்ய வல்லவன் காண் இவன் என்கிறார்கள் –
புரையாவது -க்ரஹம்-வீப்சையால் அகம் தோறும் என்றபடி -ஆல்-அசை

அண்ணல் கண்ணான் –
அண்ணல் என்றது ஸ்வாமி வாசகம்
அண்ணல் கண்ணான் என்றது ஸ்வாமித்வ சூசுகமான கண்ணை உடையவன் என்றபடி –
இத்தால் இவ்விடத்தில் ஸ்வாமி என்றது -க்ரித்ரிமர்க்கு தலைவன் என்றபடியாய்
இதுக்கு பிரகாசமான கண்ணை உடையவன் என்றது ஆய்த்து –
அன்றிக்கே –
அண்ணற்கு என்றது அண்ணனுக்கு என்றபடியாய்
அண்ணான் என்றது -அண்ணியன் ஆகாதவன் என்றபடியாய்
இப்படி தீம்புகளை செய்கையாலே
தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான் -என்கிறபடியே
சாதுவாய் திரியும் நம்பி மூத்த பிரானுக்கும் தனக்கும் ஒரு சேர்த்தி இல்லாதவன் என்னவுமாம் –

ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் –
இப்படி அத்விதீயனான பிள்ளையை பெற்ற பூர்த்தியை உடையவளே
உன் மகனைக் கூவாய் –
இப்படி தீம்புகளை செய்து திரியாமே உன் மகனை உன் பக்கலிலே அழைத்து கொள்ளாய்-

————————————————-

இரண்டாம் பாட்டு
இப்படி இவர்கள் சொன்ன அநந்தரம் ஸ்ரீ யசோதை பிராட்டி தன் புத்ரனானவனை
அழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது –

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசலகத்தார்
பரிபவம் பேச தரிக்க கில்லேன் பாவியேன் உனக்கு இங்கே போதராயே -2 9-2 –

வாமன நம்பீ –
குறள் பிரமச்சாரியாய் கொண்டு -அபிமதம் பெற்று பூரணன் ஆனவனே
நங்காய் -உன் மகனை புகழ்ந்து அழைக்கிறாய் அல்லது அச்சம் உறும்படி கடிந்து
பேசுகிறது இல்லையே -என்று என்னை பொடிகிற நங்காய்
பரிபவம் பேச -கள்ளன் தீம்பன் என்றால் போலே உன்னை பரிபவித்துப் பேச
பாவியேனுக்கு—உன் மேல் ஊரார் தூரேற்றக் கேட்க்கும் படியான பாபத்தைப் பண்ணின
என் மனக் கவலை தீரும்படி

வருக வருக வருக இங்கே –
அங்கே இருந்து தீம்புகளை செய்து -கண்டார் வாயாலே பரிபவம் கேளாதே –
இங்கே வா என்கிறாள் -வருக என்றது வா என்றபடி –
அவன் கடுக வருகைக்காக பல காலும் சொல்லுகிறாள் –
இப்படி அழைத்த இடத்திலும் வாராமையாலே –

வாமன நம்பீ வருக இங்கே –
நீ வாமன நம்பீ அன்றோ -ஆஸ்ரித ரஷணம் செய்யும் குண பூர்த்தியை உடைய நீ இங்கே வாராய் -என்கிறாள் –
அவ்வளவிலும் வாராமையாலே –

கரிய இத்யாதி –
கறுத்த திருக் குழலையும் -சிவந்த திருப் பவளத்தையும் -உபமான ரஹிதமாய் கொண்டு
இரண்டுக்கும் நடுவே விளங்கா நின்ற திரு முகத்தை உடையவனாய் –
மாதா பிதாக்கள் சொல்லிற்று செய்யும் குண பூர்த்தியை உடைய காகுத்தன் அன்றோ நீ –
இங்கே வாராய் என்ன –
முறைப்பட்டு வந்து நின்றவர்களில் ஒருத்தி -அஞ்ச உரப்பாள் யசோதை -என்கிறபடியே
நீ நியமியாமல் கொள் கொம்பு கொடுத்து அன்றோ -இப்படி இவன் தீம்பிலே தகண் ஏற வேண்டிற்று –
இப்போது இவனை புகழ்ந்து கொண்டு -அழைக்கிறாய் இத்தனை போக்கி நியமித்து
ஒரு வார்த்தை சொல்லுகிறது இல்லையே என்ன –

அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் -என்கிறாள் –
பிள்ளை பெற்று சிநேகித்து வளர்த்து போரும் பூர்த்தியை உடையவளே –
இவன் எனக்கு இன்று பெறுவதற்கு அரியவன் அன்றோ –
இப்படி இருக்கிறவனை நான் கருக நியமிக்க மாட்டேன் -என்கை
இப்படி இவள் சொன்னதற்கு உத்தரம் சொல்லி -மீளவும் தன பிள்ளையானவனைக்
குறித்து பரிபவம் பொறுக்க மாட்டாமையால் வந்த தன் க்லேசத்தை சொல்லி அழைக்கிறாள்-

அஞ்சன வண்ணா –
கண்டவர்கள் கண் குளிரும்படி -அஞ்சனம் போன்ற திரு நிறத்தை உடையவனே

அசலகத்தார் பரிபவம் பேச தரிக்க கில்லேன் –
அசலகத்தார் ஆனவர்கள் -கள்ளன்-தீம்பன் -என்றால் போலே உன்னை பரிபவங்கள் சொல்லக் கேட்டு
பொறுக்க மாட்டுகிறிலேன்
பாவியேனுக்கு இங்கே போதராயே
இச் சொலவுகள் கேட்க்கும் படியான பாபத்தை பண்ணின எனக்கு இந்த க்லேசம் தீரும்படி இங்கே வாராய்-

—————————————–

மூன்றாம் பாட்டு –
முன்புத்தை அவர்களை ஒழிய -வேறு சிலர் வந்து தங்கள் க்ரஹத்திலே அவன் செய்த
தீம்புகளை சொல்லி -இப்படி அருகிருந்தாரை அநியாயம் செய்யலாமோ –
உன் பிள்ளையை உன் பக்கலிலே அழைத்துக் கொள்ளாய் என்ற
பிரகாரத்தை சொலுகிறது –

திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிச்சி உடைத்திட்டு போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ யசோதாய்
வருக என்று உன் மகன் தன்னை கூவாய் வாழ ஒட்டான் மது சூதனனே -2 9-3 – –

தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன் –
தீம்புகள் செய்யும் வகைகிளில் சிறிதேனும் தேங்குதல் இல்லாதவனாய் –
அது தன்னையே தனக்கு தேஜஸ்ஸாக உடையனாய் இரா நின்றான்
உறிச்சி-உறிஞ்சி
வாழ ஒட்டான் மது சூதனனே –
முன்பு விரோதியான மதுவை நிரசித்தவன் -இப்போது தானே விரோதியாய் நின்று –
எங்கள் குடி வாழ்ந்து இருக்க ஒட்டுகிறிலன்

திரு உடைப் பிள்ளை –
ஐஸ்வர்யத்தால் குறைவற்றவன் என்கை -இத்தால்
ஸ்வ க்ரஹத்தில் ஜீவனம் அற்று வயிறு வாழாமல் செய்கிறான் அன்றே
செல்வக் கிளர்ப்பாலே செய்கிற தீம்புகள் இறே இவை என்கை

தான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் –
தான் தீம்பு செய்யும் பிரகாரங்களில் -தன் பிறப்பையும் ஐஸ்வர்யத்தையும் பார்த்து –
நாம் இத்தை செய்யும்படி என்-என்று தேங்குதல் அல்பமும் உடையவன் அல்லன் –
தடை அற செய்யா நிற்கும் என்கை
தேசுடையன் –
தேக்கம் இல்லாத அளவேயோ -இது தன்னையே தனக்கு தேஜசாய் உடையனாய் இரா நிற்கும்
இத்தால் –
பிறர் சொலும் பழிச் சொல்லுக்கு அஞ்சான் என்கை –
இப்படி நீங்கள் சொல்லுகைக்கு இவன் தான் செய்தவை என் என்ன –

செய்தவற்றில் ஒன்றை சொல்லுகிறாள் -உருக -இத்யாதி
உருக்குவதாக வைத்த பாத்ரத்தோடே-வெண்ணெயை உறிஞ்சி -பாத்ரத்தையும் உடைத்து –
தான் அல்லாதாரைப் போலே இவ்வருகே போந்து நில்லா நின்றான் –
அருகு இத்யாதி –
உன் அயலிலே குடி இருந்த எங்களை -உன் பிள்ளையை கொண்டு வேண்டிற்று செய்கிறது
இது தான் நியாயமோ

யசோதாய் வருக என்று உன் மகன் தன்னை கூவாய் –
உன்னுடைய பிள்ளையானவனை-இங்கே நின்று இன்னமும் தீம்புகளை செய்யாமல் உன் அருகே வா
என்று அழைத்துக் கொள்ளாய் –
வாழ ஒட்டான் மது சூதனனே –
நீ இது செய்யாய் ஆகில் எங்களை அவன் குடி செய்து குடி வாழ்ந்து இருக்க ஒட்டான் காண்-என்கை
மது சூதனன் -என்றது முன்பு விரோதி நிரசனம் செய்து போந்தவன் இப்போது
தான் விரோதியாய் நின்று நலியா நின்றான் என்கிற வெறுப்பாலே –

———————————————

நான்காம் பாட்டு –
வருக என்று உன் மகன் தன்னை கூவாய் -என்றவாறே
இவள் அவனை ஸ்துதி பூர்வகமாக அழைக்க –
அவனும் ப்ரீதனாய் ஓடி வந்து –
அகத்திலே புகுர –
இவள் எதிரே சென்று எடுத்துக் கொண்ட படியை சொல்லுகிறது

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம்புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே -2 9-4 – –

தெண் திரை சூழ்—நிர்மலமான அலைகளை உடைய புனலாலே சூழப்பட்ட
இங்கே போதராயே -இங்கே அம்மம் உண்ண வா என்று பஹுமாநித்து அழைக்க
அம்மம் -என்பது முலைப்பாலுக்கும் அன்னத்துக்கும் பர்யாய நாமம் -அடைய வளைந்தான்
கொண்டல் இத்யாதி –
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவனே
அங்கு நின்று இங்கே போதராயே
போதராய் -என்றது வாராய் என்றபடி
கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
கொண்டல் வண்ணன் வெண்ணெய் உண்ட வாயன் -என்னும்படி
ஸ்ரீ கோவிலிலே வசிக்கிற பிள்ளை யானவனே இங்கே போதராயே

தெண் திரை இத்யாதி –
தெளிந்த திரைகளை உடைத்தான புனலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருப் பேரிலே கண் வளர்ந்த ஸ்ரீ மானான
நாராயணனே -இங்கே அம்மம் உண்ணப் போதராயே –
உண்டு இத்யாதி –
இப்படி ஸ்துதி பூர்வகமாக அவள் அழைத்தவாறே -கிட்டே வந்து அம்மம் உண்டு வந்தேன் காண் –
என்று சொல்லி ஓடி வந்து அகத்திலே புகுந்து –
தாயாரான இவளும் இவன் வந்த வரத்தையும் முகத்தில் பிரசன்னத்தையும் கண்டு
ப்ரீதையாய் எதிரே சென்று எடுத்து கொள்ள
கண்ண பிரான் அவன் கற்ற கல்வி இருந்தபடியே -என்று ப்ரீதர் ஆகிறார்

அன்றிக்கே –
ஆய்ச்சி தானும் கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ள என்றது –
பிறர் சொல்லுமா போலே தன் செயலை தானே சொன்னபடியாய்-அம்மம் உண்ண வர வேண்டும் என்று அழைத்தால் –
அருகே வந்து நின்று -வேணும் வேண்டா -என்ன அமைந்து இருக்க –
உண்டு வந்தேன் அம்மம் என்ற படியும் -ஓடி வந்து உள்ளே புகுந்த படியும் –
அந்த உக்தி வர்த்திகளைக் கொண்டு வித்தையாய் –
தாயாரான தானும் -முன் தான் செய்த தீம்புகளை மறந்து -எதிரே வந்து எடுத்துக் கொள்ளும்படியாக பண்ணின படியும் –
இவை எல்லாம் அனுசந்தித்து -கண்ண பிரான் கற்ற கல்வி தானே -என்று
ஒருவன் கற்ற கல்வி இருந்தபடியே-இப்பருவத்தில் இத்தனை விரகு எல்லாம் இவன் அறிவதே –
என்று தன்னில் ஸ்லாகித்து ப்ரீதையாகிறாள் என்று யோஜிக்கவுமாம்
இப்படி ஆனபோது பூர்வோத்தார்தங்கள் சேர்ந்து கிடக்கும் –

————————————-

ஐந்தாம் பாட்டு –
இப்படி க்ரஹத்தில் வந்து புகுந்து -இவளை உகப்பித்து நின்று -அவன் முன்பு போலே அசலகங்களிலே
போய் தீம்புகளை செய்ய -அதிலே ஒருத்தி வந்து தன் அகத்திலே அவன் செய்த தீம்புகளை சொல்லி
முறைபட்டு -உன் மகனை இங்கே அழைத்துக் கொள்ளாய் என்ற படியை சொல்லுகிறது –

பாலைக் கறந்து அடுப்பேற வைத்து பல் வளை யாள் என் மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9- 5-

பாலைக் கறந்து –
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களினால் உண்டான பாலை எல்லாம் கறந்து –
அடுப்பேற வைத்து –
அந்த பாலை எல்லாம் காய்ச்சுகைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றி வைத்து
பல் வளை யாள் என் மகள் இருப்ப
பல் வளைகளையும் உடையாளான என் மகள் இதுக்கு காவலாக இரா நிற்க
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று –
உன் அகத்துக்கு மேலையான அகத்திலே இது காய்ச்சுகைக்கு நெருப்பு எடுத்து கொள்வதாகப் போய்
இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
ஷண காலம் அங்கே அவர்களோடே வார்த்தை சொல்லி நின்றேன்
இதுவே அவகாசமாக
சாளக்ராமம் இத்யாதி –
ஸ்ரீ சாளக்ராமத்தில் நித்யவாசம் செய்கிற பூரணன்
அபூர்ணனைப் போலே அத்தனை பாத்ரங்களையும் மறித்து பருகி -தான் –
அல்லாதாரைப் போலே இடைய போந்து நில்லா நின்றான்
ஆலைக் கரும்பு இத்யாதி –
ஆடுகைக்கு பக்குவமான கரும்பு போலே இனிதாய் இருக்கிற மொழியையும் பூர்த்தியையும் உடையவளே
உன் மகனைக் கூவாய் –
உன் பிள்ளை யானவனை -அங்கு நின்று தீமை செய்யாதே உன் பக்கலிலே வரும்படி விரைந்து அழையாய்

—————————————————

ஆறாம் பாட்டு
அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -என்றவாறே தன் மகனை
இவள் அழைத்த படியை சொல்லுகிறது

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

போதரு -என்கிற இது போதர் என்று கிடக்கிறது
போதர் கண்டாய் இங்கே –
அங்கே நின்று தீம்பு செய்யாதே இங்கே போரு கிடாய் –
போதர் என்ற இது போதரு என்றபடி
போதர் கண்டாய்
இவள் கடுக வருகைக்காக மீளவும் ஒருக்கால் சொல்லுகிறாள் –
இப்படி இவள் அழைக்கச் செய்தே -அவன் வர மாட்டேன் என்ன –
போதரேன் என்னாதே போதர் கண்டாய் –
வாரேன் என்னாதே வா கிடாய் என்கிறாள்
என் செய்யத்தான் நீ இப்படி நிர்பந்தித்து அழைக்கிறது என்ன –

ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –
அசலகத்தானவர்கள் உன் விஷயமாக வாசாமகோசரமான தோஷங்களை தங்களிலே சொல்லி –
அவ்வளவும் அன்றிக்கே –
என் பக்கலிலே வந்து என் செவியால் கேட்கவும் வாக்கால் சொல்லவும் ஒண்ணாதவற்றை
சொல்ல நான் கேட்டு இருக்க மாட்டேன்

கோதுகுலமுடைய குட்டனே ஒ
எல்லாரும் கொண்டாடும்படி சீரை யுடைய பிள்ளாய்
இப்படி இருந்துள்ள நீ எல்லாரும் பழிக்கும்படி ஆவதே என்று விஷண்ணையாய் ஒ என்கிறாள்-
குன்று எடுத்தாய் –
கோக்களையும் கோப குலத்தையும் கோவர்த்தன கிரியையும் எடுத்து ரஷித்தவனே
குடமாடு கூத்தா –
கோ ச்ம்ரத்தியால் வந்த ஐஸ்வர்ய செருக்குக்கு போக்கு வீடாக
குடக்கூத்து ஆடினவனே-குடம் எடுத்து ஆடின கூத்தை உடையவன் -என்றபடி –
இவ்விரன்டாலும் இக்குலத்துக்கு ரஷகனாய் -இக்குலத்தில் பிறப்பால் வந்த
ஐஸ்வர்யமே உனக்கு ஐஸ்வர்யம் என்று நினைத்து இருக்குமவன் அன்றோ
நீ இதுக்கு ஈடாக வர்த்திக்க வேணும் காண் – என்கை –

வேதப் பொருளே –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே சகல வேத பிரதிபாத்யன் ஆனவனே
என் வேம்கடவா –
அப்படி சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே -கண்ணாலே காணலாம்படி
வானோர்க்கும் வைப்பான திரு மலையிலே இரண்டு விபூதியில் உள்ளாரையும்
ஒரு துறையிலே அனுபவித்து கொண்டு என்னுடையவன் என்னும்படி நிற்கிறவனே
வித்தகனே
இப்படி நிற்கையாலே விஸ்மயநீயன் ஆனவனே
இங்கே போதராயே –
உன்னுடைய குணஹானி சொல்லுவார் வர்த்திக்கிற இடத்தில் நின்றும்
உன் குணமே பேசா நிற்கும் நான் இருக்கிற இடத்தில் வாராய் –

————————————–

ஏழாம் பாட்டு –
வித்தகனே இங்கே போதராயே -என்று இவள் அழைத்த இடத்தில் வாராமல் –
வேறு ஓர் அகத்தில் போய் புக்கு -அவர்கள் வ்ரதார்தமாக சமைத்து வைத்த
பதார்த்தங்களை அடைய ஜீவிக்கையாலே -ஒருத்தி வந்து அத்தைச் சொல்லி
முறைப்பட்டு -உன் மகனை அழைத்து கொள்ளாய் என்ற படியைச் சொல்லுகிறது-

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்கார நறு நெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே – 2-9 7-

செந்நெல் இத்யாதி –
உர நிலத்திலே -ஸார ஷேத்ரம் -பழுதற விளைந்து சிவந்து சுத்தமான செந்நெல் அரிசியும் –
அப்படிப்பட்ட நிலத்தில் விளைந்த சிறு பயறு நெரித்து உண்டாக்கின பருப்பும் –
பாக தோஷம் வாராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச் செய்த கறுப்புக் கட்டியும் –
நல்ல பசுவின் பாலாய் -நால் ஒன்றாம்படி காய்ச்சித் தோய்த்து செவ்வி குன்றாமல் கடைந்து உருக்கின நெய்யும்
நல்ல பசுக்களில் கறந்த பாலும் ஆகிற இவற்றினாலே –

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் –
பன்னிரண்டு திருவோணம் வ்ரதாங்கமாக பாயாசபூபங்கள் சமைத்தேன் –
பண்டு இப்பிள்ளை பரிசு அறிவன்
முன்பும் இப்பிள்ளை பிரகாரம் அறிவன்
அதாவது -திருவோண வ்ரதத்துக்கு என்று ஆரம்பித்து -இவை சமைத்த போதே –
இவனும் தீம்பிலே ஆரம்பித்து -தேவார்ச்சனம் செய்வதற்கு முன்பே இவற்றை வாரி ஜீவித்து விடும் -என்கை –
இப்போதும் அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –
இத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி –
அதிலும் த்ருப்தி பிரவ்பாமல் -இன்னமும் வேண்டி இருப்பன் நான் என்று சொல்லி –
போந்து நின்றான் –
அந்ய பரரைப் போலே அங்கு நின்றும் விடப் போந்து நில்லா நின்றான் –

உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –
யசோதை பிராட்டீ-அங்கு நின்று தீமை செய்யாமல் -உன்னுடைய பிள்ளையை
உன் பக்கலிலே அழைத்துக் கொள்ளாய் –
இவையும் சிலவே –
பிள்ளை பெற்றார்க்கு பிள்ளை தீம்பு செய்யாமல் பேணி வளர்க்க வேண்டாவோ –
இவையும் சில பிள்ளை வளர்க்கையோ –

—————————————–

எட்டாம் பாட்டு –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –என்றவாறே
தன் மகனை அவள் அழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- – –

கேசவனே இங்கே போதராயே –
பிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை
அழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்
இப்படி இவள் அழைத்த இடத்தில் –
நான் இப்போது வர மாட்டேன் -என்ன –

கில்லேன் என்னாது இங்கே போதராயே –
மாட்டேன் என்னாதே இங்கே வாராய் -என்கிறாள்
நான் இங்கு சற்று போது இருந்து விளையாடி வருகிறேன் -என்ன –

நேசம் இத்யாதி –
விளையாடும் போதைக்கு உனக்கு வேறு இடம் இல்லையோ –
உன் பக்கல் சிநேகம் இல்லாதார் அகத்தில் இருந்து நீ விளையாடாதே இங்கே வாராய்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும் –
இவ்வளவேயோ -இடைச்சிகளுக்கு அடிச்சிகளாய் போருகிறவர்களும்
இடையருக்கு அடியாராய் போருகிறவர்களும்
உனக்கு சொல்லுகிற தூஷணங்களுக்கு ஓர் அவதி இல்லை காண் –
அவர்கள் நின்ற இடத்தில் நில்லாதே போராய் –
இப்படி சொன்ன இடத்திலும் அவன் வாராமையாலே

தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்- என்று இரக்கிறாள்
பெற்ற தாய் வசனம் கொள்ளுகை பிள்ளைகளுக்கு தர்மம் காண்
நீ தான் பிறந்த போதே -மாதா வசன பரிபாலனம் பண்ணினவன் அன்றோ –
சதுர்புஜ ரூபோப சமஹரனத்தை-திரு உள்ளம் பற்றி அருளி செய்கிறார் –
தாமோதரா –
கயிற்றை விட்டு வயிற்றிலே கட்டலாம்படி எனக்கு தான் முன்பு பவ்யனாய் இருந்தவனும் அன்றோ –
இங்கே போதராயே –
ஆன பின்பு என் சொல்லை மாறாதே-திரச்கரியாமல்- இங்கே வாராய் –

————————————–

ஒன்பதாம் பாட்டு –
தாமோதரா இங்கே வாராய்-என்று அழைத்த இடத்திலும் வாராதே -வேறே ஒரு க்ரஹத்தில்
போய் புக்கு -அவர்கள் சமைத்து வைத்த -அபூபாதிகளை அடைய வாரி ஜீவிக்கை முதலான
தீம்புகளை செய்ய -அவ்வகத்துக்கு கடவள் ஆனவள் வந்து முறைப்பட்டு
உன் பிள்ளையை இங்கே அழைத்து கொள்வாய் -என்றபடியை சொல்கிறது –

கன்னல் இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளில் உண்டை கலத்திலிட்டு
என்னகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்தி போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே -2 9-9 – –

பெறுத்தி -நான் பெறும்படி பண்ணி -இது வ்யதிரேக உக்தி -அதாவது அவற்றில் எனக்கு
ஒன்றும் சேஷியாதபடி தானே களவு கண்டான் -என்கை

கன்னல் -கருப்புக்கட்டி -இது மேல் சொல்லுகிறவை எல்லாவற்றிலும் அன்வயித்து கிடக்கிறது
கருப்பு வட்டோடு சமைத்தவை -வட்டிலும் காட்டிலும் ரசிக்கும் இறே
இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளிளுண்டை-
இலட்டுகம் ஆவது -ஓர் பூப விசேஷம்
அத்தோடே சீடையும் கார் எள்ளோடு வாரின எள்ளுண்டையும்
கலத்திலிட்டு –
அவற்றுக்கு அனுரூபமான பாத்ரங்களிலே இட்டு
என்னகம் என்று நான் வைத்துப் போந்தேன் –
என்னகம் அன்றோ இங்கு புகுவார் இல்லையே என்று வைத்து நான் புறம் போந்தேன்

இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் –
நான் போந்ததே அவகாசமாக இவன் சென்று புக்கு அவற்றை நான் பெறும்படி பண்ணிப் போந்தான்
என்று வ்யதிரேகமாக சொல்லுகிறாள்
அதாவது
அவற்றில் எனக்கு ஒன்றும் லபியாதபடி தானே ஜீவித்து போந்தான் என்கை –

பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி –
அது போராமல் மீண்டும் அகத்திலே புக்கு -உறியைப் பார்த்து
பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணெயும் உண்டோ என்று ஆராயா நின்றான் –

உன் மகன் இத்யாதி –
யசோதை பிராட்டீ -உன்னுடைய பிள்ளை யானவனை அங்கு நின்றும் தீமை செய்யாதே உன் அருகே
அழைத்துக் கொள்ளாய்
இவையும் சிலவே –
இப்படி இவனை தீம்பிலே கை வளர விட்டு இருக்கிற இவையும் ஒரு பிள்ளை வளர்க்கையோ –
அன்றிக்கே –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் என்று
குண பூர்த்தியை உடைய யசோதாய் -அவனும் உன்னைப் போலே குண பூர்த்தி
உடையனாம்படி உன் அருகே அழைத்து கொள்ளாய் என்றவாறே
என்னுடைய குண பூர்த்தியும் அவனுடைய தோஷங்களும் சொல்லிக் கதறுகையோ உங்களுக்கு உள்ளது –
சிறு பிள்ளைகள் படலை திறந்து -திறந்த -குரம்பைகளிலே புக்கு -கண்டவற்றை
பொறுக்கி வாயிலே இடக் கடவது அன்றோ -உங்கள் பிள்ளைகள் தானோ உங்களுக்கு
வச வர்த்திகளாய் திரிகிறன என்று இவள் இவர்களை வெறுத்து விமுகையாக –
அவள் செய்தவற்றுக்கு மேலே இவையும் சிலவே என்று இவள் இன்னாப்பாலே சொல்லுகிறாள் ஆகவுமாம்-

————————————–

பத்தாம் பாட்டு –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் -என்று
ஒருத்தி சொல்லி வாய் மாறுவதற்கு முன்னே வேறு ஒருத்தி வந்து
தன்னுடைய க்ரஹத்தில் இவன் செய்த தீமைகளை முறைப்பட்ட படியை சொல்லுகிறது –

சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிகின்றானே -2 9-10 – –

அரசிப்படுதி -கோபியா நின்றாய்
சூழல் உடையன் -பற்பல வஞ்சக செயல்களை உடையனாய் இரா நின்றான்
சொல்லிலரசிப் படுதி நங்காய் –
முன்பே ஒருத்தி சொன்னதுக்கு மேலே -புண்ணின் மேல் புண்ணாக -இவளும் ஒருத்தி வந்து –
தன் மகன் குறைகளை சொல்லப் புக்கவாறே -இதுவும் ஒரு சிலுகோ-என்று தாயான யசோதை பிராட்டி
குபிதையாக -நங்காய் -உன் பிள்ளை செய்த வற்றை சொல்லில் நீ கோபியா நின்றாய் –

சூழல் உடையன் உன் பிள்ளை தானே –
உன் பிள்ளையானவன் தானே -துஸ்ஸஹமாய் உனக்கு வந்து சொல்லி அல்லது நிற்க
ஒண்ணாத படியான சூழல்களை உடையனாய் இரா நின்றான் –
சூழல் ஆவது -சூழ்ச்சி -அதாவது நானாவான கரித்ரிம வகைகள்
அவற்றில் இவனுக்கு இல்லாதது இல்லை காண் என்ன –
இப்படி சொல்லுகைக்கு அவன் இப்போது துச்சகமாய் செய்தது தான் ஏது-அத்தை சொல் என்ன –
சொல்கிறாள் மேல் –

இல்லம் புகுந்து என் மகளைக் கூவி –
என் அகத்திலே புகுந்து -என் மகளைப் பேரைச் சொல்லி அழைத்து
கையில் வளையை கழற்றிக் கொண்டு –
அவள் கையில் அடையாள வளையை கழற்றிக் கொண்டு போய் –
கொல்லை இத்யாதி –
கொல்லையில் நின்றும் கொடு வந்து -அங்கே நாவற் பழம் விற்கிறாள் ஒருத்திக்கு அவ் வளையைக் கொடுத்து

நல்லன நாவற் பழங்கள் கொண்டு –
தனக்கேற அழகிதான நாவற் பழம் கொண்டு -போரும் போராது என்று சொல்லுகிற அளவில் –
நான் கண்டு -இவ்வளை உனக்கு வந்தபடி என் -என்று அவளைக் கேட்க –
அவள்-இவன் தந்தான் -என்ன –
நீயோ இவளுக்கு வளை கழற்றி கொண்டு கொடுத்தாய் -என்ன

நான் அல்லன் என்று சிரிக்கின்றானே –
நான் அல்லேன் காண் -என் கையில் வளை கண்டாயோ -நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ –
உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறதைக் கேட்டாயோ -வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ
கண்டாயாகில் உன் வளையை அங்கே பறித்து கொள்ளா விட்டது என் -என்றாப் போலே
எனக்கு மறு நாக்கு எடுக்க இடம் இல்லாதபடி சில வார்த்தைகளைச் சொல்லி நின்று சிரியா நின்றான்
இதில் காட்டில் உண்டோ துஸ்ஸகமான தீம்பு -என்கை –

—————————————————-

நிகமத்தில் இத்திரு மொழி கற்றார் நமக்கு ப்ராப்யர் ஆவார் என்கிறார் –

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 11- –

வண்டு இத்யாதி
வண்டுகள் ஆனவை மது பானத்தால் களித்து பாடுகிற கோஷத்தை உடைத்தான பொழில்களாலும்
பொழில்களுக்கு தாரகமாக பெருகி வாரா நின்றுள்ள புனலை உடைத்தான காவிரியாலும் சூழப்பட்டு
திரு மதிள்களும் – திருக் கோபுரங்களும் -திரு வீதிகளும் -மாட மாளிகைகளுமான -இவற்றோட சேர்த்தியால் வந்த
அழகை உடைத்தாய் இருந்துள்ள -ஸ்ரீ திருவரங்கப் பெரு நகரிலே நித்யவாசம் பண்ணும் வைபவத்தை உடையனானவன்
முன்பு -விபவ அவதாரத்திலே -செய்த லீலா சேஷ்டிதங்கள் எல்லாவற்றையும்

பட்டர் பிரான் இத்யாதி –
சர்வ வ்யாபகனான விஷ்ணுவை மனசிலே உடையராய் -ப்ராஹ்மன உத்தமரான
ஸ்ரீ பெரியாழ்வார் பாடின பாடலான இவற்றைக் கொண்டு
பாடிக் குனிக்க வல்லார் –
ப்ரீதி ப்ரேரிதராய் பாடி -உடம்பு இருந்த இடத்திலே இராதே -விகர்தராய் ஆட வல்லவர்களாய்
கோவிந்தன் இத்யாதி –
இந்த சேஷ்டிதங்கள் எல்லாம் செய்த கோவிந்தனுக்கே அடியார்களாய்–தங்களுடைய சந்நிதி விசேஷத்தாலே
எட்டு திக்கிலும் உண்டான அந்தகாரம் போம்படி பிரகாசராய் கொண்டு -நிற்கும் அவர்களுடைய
இணை அடி என் தலை மேலனவே
சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகள் ஆனவை என் தலை மேலே சர்வ காலமும் வர்த்திக்கும் அவைகள் என்கிறார் –

இத்தால்
ஓத வல்ல பிராக்கள் நமை ஆளுடையார்கள் பண்டே -என்னுமா போலே
இத்தை அப்யசித்தவர்கள் உடைய வைபவத்தையும்-அவர்கள் பக்கல்
தமக்கு உண்டான கௌரவ பிரதிபத்தியும் அருளி செய்தார் ஆய்த்து-

—————————————————-

எங்கானும் -பிரவேசம் –

சப்பாணி கொட்டி விளையாடும் பருவத்தை அனுபவித்தார் கீழ் –
அதுக்கு அனந்தரமாக வெண்ணெயும் தயிரையும் களவு கண்டு
அமுது செய்த படியை -பரிவுடைய யசோதை பிராட்டி பாசுரத்தாலே
அனுபவிக்க வென்று –
வார்த்தை மறந்து –
தாம் அதிலே ஈடுபட்டு
அவனுடைய –
சர்வேஸ்வரத்தையும்-
பராபிபவன சாமர்த்யத்தையும்
வேண்டப்பாட்டையும் –
சர்வ பிரகாரத்தால் உண்டான உத்கர்ஷத்தையும் –
அடைய அனுபவித்து –
அப்படிப்பட்ட மேன்மை உடையவன் -இன்று
இங்கனே -ஓர் அபலையாலே
கட்டுண்டு –
அடியுண்டு –
நோவு படுவதே -என்று
இவன் சௌலப்யத்தை அனுசந்தித்து –
இனியராகிறார் –

———————————————-

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1-

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே-
எங்கேனும் ஓர் இடத்திலே தான்
இத்தோடு ஒத்து இருப்பதோர் ஆச்சர்யம் உண்டோ –

இப்படி பட்ட ஆச்சர்யம் தான் என் என்னில் –
நர நாரணனாய் யுலகத் தற நூல் சிங்காமை விரித்தவன் –
நர நாராயண ரூபியாய்க் கொண்டு லோகத்திலே அற நூல் உண்டு –
ஹிதானுசாசனம் பண்ணப் போந்த வேதம் –
அது சிங்காதபடியாக-அது சங்குசிதம் ஆகாமே
விஸ்த்ருதமாம் படி பண்ணிணவனே –
உபதேசத்தாலும்
அனுஷ்டானத்தாலுமாக
விஸ்த்ருதமாம் படி பண்ணினான் –

எம்பெருமான் –
தான் ஹிதகாமனாய் இருக்கும் இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவனே –

அதுவன்றியும் –
அத்தை ஒழியவேயும் –

செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது-
சந்திர சூரியர்களும்
பூமியும்
திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும்
மலைகளும்
அக்னியும்
இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக
ஸ்லாக்கியமான மிடற்றை –
இவை புகும் அளவும் –

அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –
விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர்
இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு
அமுது செய்து
ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு
அடியுண்டு
ஒரு பிரதிகிரியை அற்றுப்
போக மாட்டாதே -இருக்கிறான் –
காரேழ் -திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே –

——————————————————–

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –10-6-2-

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
அத்விதீயமான மலையை மத்தாகக் கொண்டு –
வாசூகி யினுடைய உடலை அங்கே கடை கயறாகச் சுற்றி –
கோஷத்தை உடைத்தான் பெரும் கடலை கடைந்தான் –

நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் –
முன்பு நின்ற நிலையிலே நின்று
வில்லில் உண்டான உண்டைகளை நடத்தி
வலிய கூன் நிமிரும்படி செய்த சர்வேஸ்வரன் –

அதுவன்றியும் –
அதுக்கு மேலே –

முன் -நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி அன்றுண்டவன் காண்மின்-
அங்கே இங்கே சில பிறிகதிர் படாமே
அழகியதாக தன்னுள்ளே அடங்குகை யாகிற நிரவதிக சம்பத்தை உடைத்தாய்
மகரங்களை உடைத்தான கடல் ஏழும்
மலை ஏழும்
உலகு ஏழும்
இவை ஒன்றும் தப்பாத படி யாக ஆதரித்து
தன திரு வயிற்றிலே வைத்தவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –
அந்த பிரளய காலத்து
அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம்
இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு
அமுது செய்தான் –

—————————————————————-

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-3-

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்
உலப்பில் வலியராய் கொண்டு எழுந்த மதுகைடபரோடே
வைரம் விளைந்தது என்று எண்ணி

விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் –
விண்ணோர் விளைந்திட்டு பரவ –
மிக்க பலத்தை உடையராய்க் கொண்டு
பெரிய கிளற்றியோடே தோன்றின மதுகைடபர்களோடே
நினை நின்ற சாத்ரவ மானது விளைந்தது என்று
புத்தி பண்ணி -தேவர்கள் நடுங்கி வந்து
திருவடிகளில் தொழுது ஏத்த –
அவர்களுக்காக அந்த மதுகைடபர்கள்
ஆயுஸ்ஸை கழித்த சர்வேஸ்வரன் –

முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
சத்ரு பஷமானது முடியும்படி வளைந்த வில்லை
கையிலே உடைய பெரிய மிடுக்கன்
வன்மையையும் ஒளியையும் உடைத்தான எயிற்றை உடையனாய்
மலை போலே இருக்கிற வடிவை உடையனான
ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை
வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர்
பெரு மிடுக்கனான ஹிரண்யனை நிரசித்தவன் கிடீர் –

அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான் –

————————————————————————

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-4-

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் –
தேவர்கள் அசுரர்களால் நெருக்குண்டு
போரத் தளர்ந்து வந்து
நீ எமக்கு ரஷகனாக வேணும் -என்ன
ரஷகனாய் –

முரணாயவனை உகிரால் பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் –
பெரு மிடுக்கனான ஹிரண்யனை
திரு உகிராலே பிளந்து
தேவர்களுக்கு கிருபை பண்ணி –
அவர்கள் விரோதி போக்கப் பெற்றோம் இறே என்று உகந்த
சர்வேஸ்வரன் –

அதுக்கு நிபந்தனம் என் என்னில் –
திருமால்
ஸ்ரீ யபதியாகை –

விரி நீருலகை –
கடல் சூழ்ந்த பூமியை –

வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை –
மேன் மேல் என்று வளரா நின்றுள்ள
நிரவதிக சம்பத்தை உடைய
பெரு மிடுக்கனான மகா பலியை –

மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய் –
பூமியை கொள்ளுகைக்காக
தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு
க்ருத்ரிமித்து லோகத்தை அளந்தவன் கிடீர் –
மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் –

அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
ஓர் அபலை இட்ட சிறை
விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான் –

————————————————————

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் –
வாமன வேஷத்தோடு வந்து தோற்றி
பரப்புடைத்தான ஆகாசம் எங்கும்
இடம் அடையும் படி வளர்ந்தான் –

அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம் –
தன் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்கும் சேஷ பூதருக்கு
அனுபவித்தால் அல்லது நசியாத பாபங்கள் எல்லாம்

தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன் –
அவர்களை ஸ்பர்சியாத படி யாக மநோ ரதித்து
விரோதியைப் போக்கிக் கொடுத்து
அவ்வளவே அன்றிக்கே
நித்ய சூரிகள் அளவும் செல்லும்படியாக வைத்த உபகாரகன் –

வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று
யமனுடையார் நம்முடையாரை ஆராயக் கடவர் அல்லர் –
அதுக்கு நிபந்தனம் என் என்னில்
வேண்டாமை
அல்லாதாரை இவன் ஆராயக் கடவன்
என்று இட்ட நாமே இத்தைக் கழித்துக் கொடுத்தோம் -என்று
இப்படியாலே

உலகேழ் ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே
நடத்தினவன் கிடீர்
இன்று
தன் ஆஞ்ஞை அழிந்து
ஓர் அபலை கையிலே கட்டுண்டு
அடி யுண்கிறான் –

——————————————————————-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் –
சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப் பட்ட
ஐஹிக சுகமாகிற பிரயோஜனங்களை
வாசனையோடு கழித்து
திருவடிகளிலே விழுந்து ஏத்த வல்லவர்களுக்கு
கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்து முடிய ஒண்ணாத படியான
பாபங்களை யடையக்

ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் –
கழித்து —
அவர்கள் தாங்களே -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
என்னப் பண்ண வல்ல சர்வேஸ்வரன் –

அதுக்கு நிபந்தனம் –
திருமால் –
ஸ்ரீ யபதியாகையாலே –

அதுவன்றியும் முன்=

தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால் -அழித்திட்டவன் காண்மின்-
பெரிய ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு
மிக்க கிளர்த்தியோடே
நான் எதிரி என்று பொருவதாக முன்னே வந்து நின்ற மன்னன் உண்டு –
சஹஸ்ர பாஹ் வர்ஜுனன் –
அவனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும்
அழகுக்குப் பிடித்த மழுவாலே துணித்துப் பொகட்டவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –
இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான் –

———————————————————

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே—10-6-7-

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் -துடைத்திட்ட வரைத்-
முன்பு இது அடங்கலும் பிரளயம் கொண்டு
உப சம்ஹ்ருதயமாய்க் கிடக்க
இவற்றுக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
சிருஷ்டித்து
அவை வழி படுகைக்கு உடலாக
அது பலித்து
திருவடிகளிலே விழுந்து யேத்துமவர்கள் உடைய
பாபம் என்று பேர் பெற்றவை அடையப் போக்கி –

தனக்காக வென்னத் –
அவர்களை அடையத் தான் இட்ட வழக்காக என்ன –

தெளியா வரக்கர் திறல் போயவிய –
ஈஸ்வர அபிப்ராயம் இது வாகாதே என்று தெளிய மாட்டாதே
துஷ்ப்ரக்ருதிகளான ராஷசர் மிடுக்கு அழியும் படியாக-

மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை –
நெருக்கிக் கொண்டு தோற்றின
ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு
மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி
கடலை அணை செய்தவன் கிடீர் –

அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர்
இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –

——————————————

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
நெறித்து
மிருதுவான
மயிர் முடியை உடையளாய்
விலஷணமான ஆபரணங்களாலே அலங்க்ருதையான
பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்
பிரசித்தியை உடைத்தாய்
மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –
இவ்வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே
உடையனாய் -என்கிறது
அல் -என்று இருளாய் -இருண்ட வில் என்னவுமாம்

இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு செறித்திட்டு-
இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
அந்த வில்லை முறித்து
அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து
யுவ ராஜாவாய்
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி

லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின்-
இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக
ராவணன் உடைய முடியோடு
தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான் –

——————————————

சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது
திரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-9-

சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி –
சுருண்டு
சிவந்த நிறத்தை உடைத்தாய் –
கேழ் -என்று நிறம்
உளை மயிரை உடைத்தாய்க் கொண்டு
களித்து வருகிற கேசி முடியும்படியாக
அத்தை விடாதே சென்று கிட்டி

எய்தாது-திரிந்திட்டு –
ஒரு காலும் வந்து கிட்டாதே அங்கே இங்கே திரிந்து –

இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் –
அவகாசம் கொடாதே
அபவ்யமாய் திரிகிற அதனுடைய வாயை
இரு பிளவாம்படி பண்ணின சர்வேஸ்வரன் –

முன நாள்-
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு-அரிந்திட்டவன் காண்மின்-
கட்டுடைத்தான வில்லாலே
மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக
மராமரங்கள் ஏழையும் எய்து –
மலை போலே இருக்கிற வடிவை உடையளாய் இருக்கச் செய்தேயும்
பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி
வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே
வைரூப்யத்தை விளைத்து விட்டது –
அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே –

—————————————————————————–

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே —10-6-10-

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் –
களவோடு கண்டு பிடித்து கட்டினவாறே
பலரும் பார்க்க வருவார்களே
அவர்கள் முகத்தை பார்த்து
லஜ்ஜிக்குமது ஏக தேசமும் இல்லை –

வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய் –
இது ஒன்றையும் ஆயிற்று எப்போதும் நினைத்து இருப்பது –

அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல் –
உறிகளிலே இடைச்சிகள் சேமித்து வைத்த
பால் தயிர் நெய் வெண்ணெய் –
இவற்றை அமுது செய்து
அவர்கள் உரலோடு சேர்த்துக் கட்ட
கட்டுண்டவன் மேலே சொல்லிற்று –

நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார் –
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –
ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –
நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து
ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார் –

———————————————————

மானம் -பிரவேசம் –

வெண்ணெய் களவு காணும் பருவத்தைத் தப்பி –
வெண்ணெயும் பெண்களையும் களவு காணும் பருவமாய் இருக்கிற படியை அனுசந்தித்து
யசோதைப் பிராட்டி யானவள் விளைவது அறியாமையாலே
இது எவ்வளவாய் புகுகிறதோ -என்று அஞ்சி இருக்க
இவனாலே நோவு பட்டு
ஊரில் உள்ளார் அடங்கலும்
அது போயிற்று இது போயிற்று -என்று இங்கனே முறைப்பட
அவளும் -அவர்களுமாக
பரிமாறின அப் பெரிய குழாங்களை
தாம் அனுபவிக்கிறார் –

———————————————————

ஒருத்தியைப் பார்த்து வார்த்தை சொல்கிறார் இதில் –

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை ஊனமுடையன செய்யப் பெறாய் என்று -இரப்பன் –
எங்கேனும் ஓர் இடத்தில் -ஸூரு ஸூரு -என்னக் கேட்டால்
பின்னைக் கொண்டு ஜீவியார்கள் மானத்தாலே –
ஆகையால் பிறர் உடைய பெண்களை சம்போக சிஹ்னங்களை விளைத்து
விடப் பெறாய் என்று -இங்கனே இரப்பன்

உரப்பகில்லேன் -நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன்
பொடியில் தீம்பிலே இரட்டிக்குமே –
காலைப் பிடித்து இரப்பன் –
பொடிகிறிலேன்-
நான் சொல்லிற்று செய்தல்
தமப்பனார் சொல்லிற்றைச் செய்தல்
செய்யாத பருவம் இறே உன் பருவம் –
நானும் சொல்லிற்றிலேன்
தமப்பனாரும் அருளிச் செய்திலர் –

நங்கைகாள் நான் என் செய்கேன் –
நீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே –
நான் இனிச் செய்வது என் –

தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –
ஸூசக மாத்ரமே அன்றிக்கே
காரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம் –

——————————————————————————————–

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து
ஹித சிந்தனை பண்ணுவாரைப் போலே –
கடைந்த –
இவை அடைய பாழிலே போக்க ஒண்ணாதே –
போகா நிற்கச் செய்தே நடு வழியிலே கண்டு
இது எவ்வளவாய் விளையைக் கடவதோ -என்று அஞ்சிப் போனேன் –

மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை –
ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய
செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய
இது செய்யக் கடவார் இல்லை –

மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த-பாலும் பதின் குடம் கண்டிலேன்-
வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து
அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –
கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே
கடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –

பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –
கோ தனர் ஆகையாலே
உபஜீவ்யம் கவ்யமாய் இருக்கும் இறே
அத்தை இழந்தால் பின்னைப் பொறுக்க மாட்டார்கள் இறே –

———————————————————-

தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ —10-7-3-

தெள்ளியவாய்ச் சிறியான் –
கண்ணுக்கு இருக்கிறபடியும்
செயல் இருக்கிற படியும் காண் –

நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு –
மேலே தடாத் தன்னிலே வெள்ளி மலை போலே
சேமித்து வைத்த வெண்ணெயை வாரி அமுது செய்து

கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு –
இவனை இங்கனே இது சொல்லும்படி -என்னும்படி யாகத்தான்
அறியாதாரைப் போலே கிடந்தது உறங்கா நின்றான் –
நீங்கள் எல்லாம் இத்தை வந்து பாருங்கோள்-
இவன் மறைக்கப் பார்த்தாலும் பிரயோஜனம் இல்லை –
கை எல்லாம் நெய்யாய் இருக்க –

பிள்ளை பரமன்று –
இவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை –
வெண்ணெயே அன்றிக்கே –

இவ் வேழ் உலகும் கொள்ளும் –
இவ் வேழ் உலகும் கொள்ளும் –

இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது –
அவன் இப்பது அமுது செய்தான் ஆகில்
நீ இப்பாடு படுகிறது என் -என்ன –
பேதையேன் என் செய்கேனோ –
அவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என்
என்று அன்றோ அஞ்சுகிறது நான் –

——————————————————-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்ற –
அஞ்சனம் பற்றின வேல் போலே யாயிற்று
கண்ணில் கருமையும் புகரும் இருக்கிறபடி –
அவ்வளவு அல்லாத ஆத்ம குணத்தை உடையவள் பெற்ற –

வளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான் –
சங்கு வர்ணனாய் இறே நம்பி மூத்த பிரான் இருப்பது –
தன் தமையன் தீம்பாலே குறையற்றான் ஒருவன் இறே –
அவன் முற்காலத்திலே இங்கே விளையாடித் திரியும் போது
நாங்கள் இப்பாடு பட்டு அறியோம் –

பொய்ந்நம்பி –
பொய்யால் குறைவற்று இருக்கிறவன் –

புள்ளுவன் –
கண்ணி வைப்பாரைப் போலே
கடைகிற போதே துடங்கி
இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று -கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ராம கிருஷ்ணர்கள்
-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –

கள்வம் பொதியறை –
களவிட்டு வைக்கைக்கு ஒரு கொள்கலம் –

போகின்றவா தவழ்ந்திட்டு –
இக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே
தவழா நிற்கும் –

இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை –
நிரபேஷனான இவன்
இவனாக
இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –

என் செய்கேன் என் செய்கேனோ –
இவர்கள் கீழே எங்கனே நான்
இவ்வூரில் குடி இருக்கும் படி –

—————————————————–

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5-

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் –
சொன்ன படியே தலைக் கட்டிற்று-
இவர்கள் தமப்பனார் புகுந்திலர் –
நானும் இங்கே இருந்திலேன் –

தோழிமார் ஆரும் இல்லை –
கூட்டிக் கொடுக்கைக்கு தோழி மாரும் இல்லை –

சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி –
இவன் தான் பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம்
பார்த்துக் கொடு திரியும் –

பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப்
அவர்களோடு சென்று கிட்டி
பந்தைப் பறித்தும்
பரியட்டங்களைக் கிழித்தும் –

படிறன் படிறு செய்யும் —
பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –

நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –
பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –

————————————————————

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ—-10-7-6-

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் –
தாய்மாரும்
தாய்மாரோடு ஒரு கோவையாய் இருப்பாரும்
உகக்கும் பாசுரம் –
மண் மகள் நாதனோ –
மா மலராள் நாயகனோ-என்று ஆயிற்று உகப்பது –
அன்றிக்கே –
ப்ரணய தாரையிலே அவர்களுக்கு தேசிகன் ஆனவன் கிடீர்
இவளைப் இப்படிப் படுத்தினான் -என்னவுமாம் –

அதுக்கு மேலே
நந்தன் பெற்ற மதலை-
பிறப்பால் உண்டான ஏற்றம்

அண்ணல்-
எல்லாரையும் எழுதிக் கொண்டு இருக்குமவன் –

இலைக் குழலூதி —

நஞ்சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை
ராத்ரியிலே வந்த பின்னை –

கண் மலர் சோர்ந்து -முலை வந்து விம்மிக்-
சம்போக அநந்தரம்

கமலச் செவ்வாய் வெளுப்ப
தாமரை போலே இருக்கிற அதரமானது
வெளுத்த -என்றபடி –

என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –
இவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன் –

—————————————————–

ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-

ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
தான் ஆயிரம் கண் உடையவன் ஆகையாலே
இதர விசஜாதியனாய்
தான் தேவ யோநியிலே பிறந்தவனாய்
அத்தாலே துர்மானியாய் இருக்கிறவனுக்கு
இடையவர் உத்சவமாகப் போத்தி

பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
நல்ல பாஜனங்களிலே சோற்றை எடுத்து
சகடத்தாலே கொடு வந்து தள்ள –

போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் -மாயன் –
அத்தை அடங்கலும்
கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் –

அதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –
அத்தை அடங்கலும் அமுது செய்தானாய்
அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று –

—————————————————–

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே—10-7-8-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
நின்ற நின்ற அவஸ்தைகள் தோறும் சேஷியாத படி பண்ணினான் ஆயிற்று –
தோய்த்து அட்டின தயிரையும் –
புத்துருக்கு நெய்யையும் –
நெய் வாங்குகைக்கு யோக்யமான பாலையையும் –
சேஷியாத படி அமுது செய்யும் என்று

ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் –
ஆய்ச்சியர் எல்லாரும் கூப்பிடச் செய்தேயும்

நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்-
நான் இதற்கு ஈடுபட்டு
இவனை ஆக்ரஹியாதே –

சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்-
பிரானே சோத்தம்-
இங்கனே செய்யல் ஆகாது காண்-என்றும் இரவா நிற்பன் –

என் செய்ய –
உன் மகனான பின்பு நிக்ரஹிக்க லாகாதோ -என்ன –
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே —–
இவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு
என்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன் –

——————————————

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல்
ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே —10-7-9-

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில் ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன் –
கனம் உடைமையும்
மிடுக்கும் உடைய இப்பிள்ளை
ஏழா மாசத்திலே குளிப்பாட்டி
செவ்வியை உடைய மாலையைச் சூட்டி
வளர்த்தி வைத்துப் போந்தேன்-
யமுனையிலே நீராட –

சேடன் திரு மறு மார்பன் கிடந்தது –
அத்யந்த சைசவத்தை உடையவன் –
இவன் செய்யும் செயல்கள் அடைய
சர்வேஸ்வரன் உடன் ஒக்கும் –

திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே –
திருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச்
சாடித்
துகளாக்கின பின்பு
இவனைப் பொடிய அஞ்சுவன் –

———————————————————-

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை
நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ —10-7-10-

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
பஞ்சு போலே மிருதுவான அடியை உடையராய் இருக்கிற
பிள்ளைகள் ஆயிர நாழி நெய்யை உண்கிற இடத்தில்
பாதியும் சேஷியாத படி யாயிற்று புஜித்தது-

கஞ்சன் கடியன் –
கம்சன் ஆனவன் சாலக் கொடியவன் –

கறவெட்டு நாளில் –
கற வென்று இறைக்குப் பெயர்
எட்டு நாளில் இறை இடையர் பால் இருக்கக்
கடவதாய் இருக்கும் இறே-

என்கை வலத்தாது மில்லை –
எனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –
அன்றிக்கே
என் கையில் பலமில்லை -என்னவுமாம் –

நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ –
என் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் –
நான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி –

————————————————–

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர் இடையர் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –10-7-11-

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை –
சொல்ல ஒண்ணாத படி யான தீம்புகளை விளைக்கக் கடவதோ –
ஒரு குடியிலேபிறந்த பெண் பிள்ளைகளை செய்யும் தீம்பு –

பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து –
தாமரைப் பொய்கையிலே சென்று
ஒளிந்து இருந்து –

அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு –
அவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு –

அரவு ஏர் இடையர் இரப்ப-
அரவு போலே நுண்ணிய இடையை உடைய
ஸ்திரீகள் இரக்க-

மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –
வேணுமாகில் இங்கனே
ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள்-
என்று இருந்தாய் –

——————————-

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-12-

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு –
பயம் ஏக தேசம் கூட இல்லை -இப்பிள்ளைக்கு –

ஆண்மையும் சேவகமும் –
ஆண் பிள்ளைத் தனமும்
சேவகப்பாடுமே யாயிற்று -உள்ளது –

உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்-
உச்சி மோந்து வளர்த்து எடுத்தேனுக்கு
ஒன்றும் உரைத்திலன் தான்
இன்று போய் –

பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு –
திருவடிகளால் உண்டான ஸ்பர்சத்தாலே
தழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப்
பெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –

ஆயிர வாய் -நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
ஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய்
தான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி
வந்தாய் போலே இருந்தது –

—————————————————-

தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-

தம்பர மல்லன –
ஒரோ கார்யங்க ளிலே இழிவார் தம்தாமால் செய்து
தலைக் கட்டலாம் கார்யங்க ளிலே அன்றோ இழிவது –

வாண்மைகளைத் –
ஒரோ ஒன்றையே தலை காண ஒண்ணாதபடி இருக்கை –

தனியே நின்று –
நம்பி மூத்த பிரானோடே கூட நின்று செய்தான் ஆகில்
கண் எச்சில் வாராத படி
அவன் தலையிலே ஏறிடலாம் –

தாம் செய்வரோ –
தம்தாமையும் பார்க்க வேண்டாவோ –

எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் –
உன்னைப் பெற்ற இதுவே அமையாதோ
வயிறு எரிச்சலுக்கு வேண்டுவது –
நீ ஒரு செயலைச் செய்ய வேணுமோ –

அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை –
உபரிதன லோகங்கள் அதிரும்படியான
த்வனியை உடைத்தாய்
அகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி
நெருப்புப் போலே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற –

வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
வ்ருஷபங்களோடு கூட
நித்ய வசந்தமான சோலைக்குள்ளே
பிணங்கி வந்தாய் போலே இருந்தது -என்கிறாள் –

————————————————-

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14-

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச –
ஆகர்ஷகமான நடையை உடையளாய்
ஆத்ம குணோபேதையாய் இருக்கிற –
யசோதைப் பிராட்டி யானவள் வயிற்றிலே அடித்துக் கொள்ள –

அருவரை போல் மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை –
மலை கால் கொண்டு நடந்தால் போலேயாய்
கண்டார் கண்கள் பிணிப்படும் படி இருக்கிற ஆனையை
முடித்து பொகட்ட மிடுக்கனை –

மா கடல் சூழ் கன்னி நன் மா மதில் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி –
கடலை அகழாக உடைத்தாய்
அரணாகப் போரும்படியான மதிளை உடைத்தான
திருமங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் –

இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –
இத்திரு மொழியை வல்லவர்களுக்கு யசோதைப் பிராட்டியார் உடைய
அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார்-சப்பாணி பதிகம் -1-7–/ ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் — சப்பாணி பதிகம்-10-5–

June 30, 2020

அவதாரிகை-
கீழில் திருமொழி யிலே
சப்பாணி கொட்டுகை யாகிற அவனுடைய பால சேஷ்டிதத்தை -தத் காலத்திலேயே யசோதை பிராட்டி
அனுபவித்தாப் போலே -பிற் பாடராய் இருக்கிற தாமும் -அதிலே ஆதார அதிசயத்தாலே –
அவளுடைய பாவ யுக்தராய் கொண்டு -பேசி அனுபவித்தாராய் நின்றார் –
அவன் தளர் நடை நடக்கை ஆகிற சேஷ்டிதத்தை தத் காலம் போலே -அனுபவித்து இனியர் ஆகிறார் இதில் –

துடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும் மதப்புனல் சோர வாரணம் பைய நின்ற்றூர்வது போலே
உடன் கூடி கிண் கிணி ஆரவாரிப்ப வுடை மணி பறை கறங்க
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ -1 7-1 –

தளர் நடை ஆவது -திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் அன்றிக்கே –
நடை கற்கும் பருவம் ஆகையாலே தவறி தவறி நடக்கும் நடைமதாதி அதிசயத்தாலே –

கம்பத்தை முறித்து -காலில் துடரை இழுத்து கொண்டு -நடக்கையாலே –
காலில் கிடந்த சங்கிலித் துடரானது -சலார் பிலார் என்று சப்திக்க –
துடர் என்று விலங்கு-ஆனை விலங்கு சங்கிலியாய் இறே இருப்பது -சலார் பிலார் என்கிறது சப்த அநு காரம் –
தூங்கு இத்யாதி -முதுகில் கட்டின பொன் கயிற்றால் தூங்குகிற மணியானது த்வநிக்க-
பொன் மணி -என்கிற இடத்தில் -பொன் என்கிற இத்தால் -பொற் கயிற்றை சொல்லுகிறது –
படு இத்யாதி -உண்டாக்கப் பட்ட மூன்று வகையான மத ஜலம் அருவி குதித்தால் போலே வடிய –
மும் மதப் புனலாவது -மதத்தாலே கபால த்வ்யமும் மேட்ர ஸ்தானமுமாகிற த்ரயத்தில் நின்று வடிகிற ஜலம்-

வாரணம் இத்யாதி -ஆனையானது அந்த மத பாரவச்யத்தாலே -அலசமாய் கொண்டு -மெள்ள நடக்குமா போலே –
உடன் இத்யாதி -சேவடிக் கிண் கிணி-என்றபடி -திருவடிகளில் சாத்தின சதங்கைகள் யானவை –
தன்னிலே கூடி சப்திக்க –
அன்றிக்கே –
திருவரையில் சாத்தின சதங்கை வடமானது -நழுவி விழுந்து -திருவடிகளோடு சேர்ந்து –
இழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள் தன்னிலே கூடி சப்திக்க என்னவுமாம் –

உடை இத்யாதி -திருவரையில் கட்டின மணியானது பறை போல் சப்திக்க –
தடம் தாள் இத்யாதி -பருவத்துக்கு ஈடாய் -விகாச யுக்தமாய் -பரஸ்பரதர்சமாய் -இருக்கிற திருவடிகளைக் கொண்டு –
சாரங்க பாணி -ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையிலே உடையவன் -இது ஈஸ்வர சிக்னங்களுக்கு எல்லாம்
உப லஷணம்-அவதரிக்கிற போதே ஈஸ்வர சிக்னங்கள் தோன்றும் படியாக இறே அவதரித்தது –

———————————

செக்கர் இடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பறை முளைப் போல்
நக்க செந்துவர்வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடம் உடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – 1-7 2-

செக்கர் வானத்து இடையிலே சாகாரத்திலே தோன்றும்படி உன்நேயமான பால சந்தார்ங்குரம் போலே –
ஸ்மிதம் செய்கையாலே -மிக சிவந்து இருந்துள்ள திரு அதரமாகிற உயர்ந்த நிலத்தின் மேலே
குளிர்ந்து வெளுத்து இருக்கிற திரு முத்தின் அங்குரத்தினுடைய தேஜசானது பிரகாசிக்க –
அக்கு வடம் உடுத்து -சங்கு மணி வடத்தை திருவரையிலே தரித்து
ஆமைத்தாலி பூண்ட -கூர்ம ஆகாரமான ஆபரணத்தை திருக் கழுத்திலே சாத்திக் கொண்டவனாய்
அனந்த சயனன் -அவதாரத்தின் உடைய மூலத்தை நினைத்து சொல்கிறது –
நாக பர்யங்க முத்சர்ஜ்ப ஹ்யாகத -என்னக் கடவது இறே
தகுதியான நீல ரத்னம் போன்ற திரு நிறத்தை உடையவன் -ஸ்ரீ வாசு தேவர் திருமகன் –
தளர் நடை நடவானோ –

—————————————

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசு இலையும் பீதகச் சிற்றாடையோடும்
மின்னில் பொலிந்ததோர் கார் முகில் போல கழுத்தினில் காறையோடும்
தன்னில் பொலிந்த இடுடீகேசன் தளர் நடை நடவானோ – 1-7 3-

மின்கொடியும் அத்தோடு சேர்ந்ததோர் அகளங்க சந்திர மண்டலமும் அத்தை சூழ்ந்த பரிவேஷமும் போலே –
திருவரையில் சாத்தின பொன் பின்னாலும் -அதிலே கோவைபட்டு பிரகாசிக்கிற வெள்ளி அரசிலைப் பணியும் –
இவற்றுக்கு மேலே சாத்தின பொன்னின் சிற்றாடையும் ஆகிற இவற்றோடும் –
மின்னாலே விளங்கப் பட்டதொரு -காள மேகம் போலே -திருக் கழுத்தில் -சாத்தின காறையோடும் –
இவ் ஒப்பனைகள் மிகை யாம்படி தன் அழகாலே சமர்தனாய் இருப்பனாய்-அவ் வழகாலே கண்டவர்கள்
உடைய இந்திரியங்களை தன் வசமாக கொள்ளுமவன் தளர் நடை நடவானோ –

——————————————

கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி கண கண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்க்குத் தன் திருவாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலை கண் மீதே தளர் நடை நடவானோ -1 7-4 –

கன்னல் இத்யாதி -கரும்பு சாறு குடம் இந்த பதங்கள் சேர்ந்து -கருப்பம் சாற்றுகுடம் -என்று கிடக்கிறது –
இல்லி திறந்தால் பொசிந்து புறப்படுமா போலே -திருப் பவளத்தில் ஜலம் ஆனது ஊறி வடிய –
கண கண என சிரித்து ப்ரீதனாய்க் கொண்டு –
கண கண என்றது -விட்டு சிரிக்கிற போதை சப்த அநு காரம் –

முன் இத்யாதி -முன்னே வந்து நின்று -தன்னுடைய அதராச்வாதத்தை தாரா நிற்கும் –
முத்தம் -அதரம்
என் இத்யாதி -எனக்கு பவ்யனாய் -காள மேகம் போன்ற வடிவை உடையனாய் -அந்த பவ்யதைக்கு
ஊற்று வாயான ஸ்ரீ லஷ்மி சம்பந்தத்தை உடையவன் –

தன்னை இத்யாதி -தன்னை பிள்ளையாக பெற்ற பாக்யத்தை உடைய எனக்கு தன்னுடைய
வாகம்ர்தத்தை தந்து -என்னைத் தழைப்பியா நின்றான் –
இங்கே -வாய் அமுதம் தந்து தளர்ப்பிக்கின்றான் -என்று வர்தமானமாக சொல்லுகையாலே –
முன்பு -முத்தம் தரும் என்றது -எப்போதும் தன் விஷயத்தில் அவன் செய்து போரும்
ஸ்வபாவ கதனம் பண்ணினபடி –
தன் எற்றி-இத்யாதி -தன்னோடு எதிர்ந்த சத்ருக்கள் ஆனவர்களுடைய தலைகள் மேலே தளர் நடை நடவானோ

————————————

முன்னலோர் வெள்ளிப் பெரு மலை குட்டன் மோடு மோடு விரைந்தோடே
பின்னை தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல்
பன்னி உலகம் பரவி யோவாப் புகழ் பல தேவன் என்னும்
தன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ -1 7-5 –

உலகம் எனபது -உயர்ந்தோர் மாட்டே -தொல்காப்பிய சூத்தரம் –
உலகம் பன்னி பரவி -உயர்ந்தவர்கள் ஆராய்ந்து துதித்து –
முன்னே விலஷணமாய்-அத்வீதியமாய் -பெரிதாய் இருந்துள்ள -வெள்ளி மலை ஈன்ற
குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோடே
பின்னை இத்யாதி -அந்தக் குட்டியின் பின்னே -தன் செருக்காலே அத்தை பிடிக்கைக்காக தொடர்ந்து –
அஞ்சன கிரி ஈன்றதொரு குட்டி தன் சைசவ அநு குணமாக காலுக்கு கால் பேர்ந்து அடி இட்டு
செல்லுமா போலே –
பன்னி இத்யாதி -லோகம் எல்லாம் கூடி -தங்கள் ஞான சக்திகள் உள்ள அளவெல்லாம் கொண்டு
ஆராய்ந்து ஸ்துத்திதாலும் முடி காண ஒண்ணாத புகழை உடையவனாய் –
பல தேவன் என்னும் பெயரை உடையனான தன்னுடைய தமையனாவன் செருக்கி முன்னே ஓட –
அவன் பின்னே அவனை கூட வேணும் என்று தன் சைசவ அநு குணமாக
த்வரித்து நடக்குமவன் தளர் நடை நடவானோ –

—————————————–

ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த
இருகாலும் கொண்டு அங்கு அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கருகார் கடல் வண்ணன் காமர்தாதை தளர் நடை நடவானோ -1 7-6 –

ஒரு கால் இத்யாதி -ஒரு திருவடிகளிலே ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -ஒரு திருவடிகளிலே திரு ஆழி
ஆழ்வானுமாக உள்ளடி களிலே ரேகா ரூபேண பொறித்து சமைந்த இரண்டு திருவடிகளையும் கொண்டு –
அங்கு அங்கு இத்யாதி -அடி இட்ட அவ்வவ ஸ்தலங்களிலே தூலிகை கொண்டு
எழுதினால் போல் அடையாளம் படும்படி நடந்து –

பெருகா இத்யாதி -இந்த நடை அழகையும் வடிவு அழகையும் கண்டு மேன்மேல் என்று
பெருகா நின்ற -ஆனந்த சாகரத்துக்கு மேலே -பின்னையும் உத்தரோத்தரம் –
ஆனந்தத்தை உண்டாக்கி –
கரு கார் இத்யாதி -இருண்டு குளிர்ந்து இருக்கிற கடல் போன்ற நிறத்தை உடையவன் –
கருமை -இருட்சி
கார் -குளிர்த்தி
அன்றிக்கே
கருமை -பெருமையாய்
கார் -இருட்சியாகவுமாம்
அன்றிக்கே
கார் என்று மேகமுமாய் –
காள மேகம் போலேயும் கடல் போலேயும் இருக்கிற திரு நிறத்தை உடையவன் என்னவுமாம் –

காமர் தாதை இத்யாதி -அழகால் நாட்டை வெருட்டி திரிகிற காமனுக்கு -உத்பாதகன் ஆனவன் –
காமனைப் பயந்த காளை-இறே
பிரசவாந்தஞ்ச யவ்வனம் -என்னும் படி அன்றிக்கே
காமனைப் பயந்த பின்பு கீழ் நோக்கி பிராயம் புகும் ஆய்த்து-

காமர் தாதை இன்ப வெள்ளத்தின் மேல் -பின்னையும் பெய்து பெய்து –
தளர் நடை நடவானோ -என்று அந்வயம்-

———————————–

படர் பங்கயமலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி இற்று இற்று வீழ நின்று
கடும் சேக் கழுத்தின் மணிக் குரல் போலுடை மணி கண கண என
தடம் தாள் இணை கொண்டு சாரங்கபாணி தளர் நடை நடவானோ – 1 7-7-

படர் இத்யாதி -பெருத்து இருந்துள்ள தாமரை பூவானது -முகுளிதமாய் இருக்கை அன்றிக்கே –
வாய் நெகிழ்ந்த அளவிலே குளிர்த்தியை உடைத்தான அகவாயில் மதுவானது
சிறுக துளித்து -விழுமா போலே –

இடம் கொண்ட இத்யாதி -இடம் உடைத்தாய் -சிவந்து இருந்துள்ள -திருப் பவளத்தில்
ஜலமானது -நிரந்தரமாக ஊறி முறிந்து விழும்படி நின்று –

கடும் சேக் கழுத்தின் -இத்யாதி -கடிதான சேவின் கழுத்தில் -கட்டின மணி உடைய
த்வனி போலே -திருவரையில் கட்டின மணியானது -கண கண என்று சப்திக்கும்படி –

தடம் தாள் இத்யாதி -சவிகாசமாய் பரஸ்பர சதர்சமான திருவடிகளைக் கொண்டு
சாரங்க பாணியானவன் தளர் நடை நடவானோ

———————————

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

பக்கம் இத்யாதி -கருத்த நிறத்தை உடைத்தாய் -சிறுத்தி இருந்துள்ள மலையினுடைய
பார்ச்வத்திலே நிம்நோன் நதமான அருவிகள் ஒளி விடுமா போலே –
பகர் -ஒளி
அக்கு இத்யாதி -திருவரையில் சாத்தின வளை மணி வடமானது -தாழ்ந்தும் உ
மக்கள் இத்யாதி -லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –
தக்க இத்யாதி -தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர்
திருமகன் தளர் நடை நடவானோ –

———————————————

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்தது ஒரு வேழத்தின் கரும் கன்று போல்
தெள் புழுதி யாடி திருவிக்ரமன் சிறு புகர் விட வியர்த்து
ஒண் போது அலர் கமல சிறுக் கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ -1 7-9 –

வெண் புழுதி இத்யாதி -வெளுத்த புழுதியை மேலே ஏறிட்டு கொண்டு அளைந்த
ஒரு ஆனைக் கன்று போலே
தெள் இத்யாதி -தெள்ளிய புழுதியை திருமேனியிலே ஏறிட்டு கொண்டு
திருவிக்ரமன் -ஆஸ்ரிதனான இந்த்ரன் அபேஷிதம் செய்க்கைக்காக –
திருவடிகளின் மார்த்த்வம் பாராதே லோகத்தை அளந்தவன்
சிறு புகர் பட வியர்த்து -ஏறிட்டு கொண்ட புழுதி ஸ்வேத பிந்துக்களாலே
நனைந்த இடங்களிலே திருமேனி சிறிது புகர்த்து தோன்றும்படி வியர்த்து
ஒண் போது இத்யாதி -அழகியதாய் -தனைக்கடைத்த காலத்திலே அலர்ந்த தாமரை பூ போலே
இருக்கிற சிறியதான திருவடிகள் மிதித்த இடத்திலே -ஓன்று உறுத்தி நோவாதபடி யாக
தண் இத்யாதி -குளிர்ந்த பூக்களை உடைத்தான மெத்தை மேலே தளர் நடை நடவானோ –
தவிசு -மெத்தை –

—————————————

திரை நீர் சந்திர மண்டலம் போல் செம்கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-

சண்ணம் -குஹ்ய அவயவம்
திரை நீர் இத்யாதி -திரைக் கிளப்பத்தை உடைத்தான சமுத்திர மத்யத்திலே சலித்து தோற்றுகிற
சந்திர மண்டலம் போலே –
செம்கண் மால் இத்யாதி -சிவந்த திருக் கண்களையும் அதுக்கு பரபாகமான கருத்த
நிறத்தையும் உடையவனாய் -பிரசச்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –
தன் இத்யாதி -தன்னுடைய அழகியதாய் -நீர்மையை உடைத்தான திரு முக மண்டலத்தில் –
விளங்குகிற திரு சுட்டியானது -எங்கும் ஒக்க பிரகாசித்து -இடம் வலம் கொண்டு அசைய –
பெருநீர் இத்யாதி -தீர்த்தங்களில் பிரசித்தமாய் -ப்ரவாஹா ஜலம் மாறாமல் –
அலை எரிகிற கங்கையிலும் காட்டிலும் -பெரியதாய் அத்வீதியமான தீர்த்த பலத்தை
தரும் ஜலத்தை உடைத்தான சிறுச் சண்ணம் ஆனது துளிக்க துளிக்க தளர் நடை நடவானோ –

————————————-

அவதாரிகை
நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தொடர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே – 1-7 11- –

ஆயர் இத்யாதி -கோப குலத்தில் வந்து ஆவிர்பவித்த -ராஜ குலத்தில் ஆவிர்பவித்த வித்தமை –
அடி அறிவார் அறியும் இத்தனை இறே-இது இறே எல்லாரும் அறிந்தது –
அஞ்சன வண்ணன் தன்னை -கண்டவர் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருக்கிற
திரு நிறத்தை உடையவனை –
தாயர் இத்யாதி -பெற்ற தாயான யசோதையும் -அவளோபாதி ஸ்நேஹிகள் ஆனவர்களும்
ப்ரீதராம் படியாகவும் -தொட்டில் பருவத்திலே பூதன சகடாதிகள் நிரஸ்தர் ஆனமை அறிந்த –
கம்சாதிகளான சத்ருக்கள் தலை எடுத்து நடக்க வல்லன் ஆனமை கண்டு -என் செய்ய புகுகிறோம் –
என்று பீதராய் அவசன்னராம்படி யாகவும் தளர்நடை நடந்த பிரகாரத்தை –

வேயர் இத்யாதி -வேயர் தங்கள் குலத்து உதித்தவர் ஆகையாலே –
அக்குடியில் உள்ள எல்லோரும் தம்முடைய வைபவத்தை சொல்லி புகழும்படியான ஸ்ரீ பெரியாழ்வார் –
சீரால் இத்யாதி -சீர்மையோடே விஸ்தரித்து சொன்ன -இவற்றை ஏதேனும் ஒருபடி சொல்ல வல்லவர்கள் –

மாயன் இத்யாதி -ஆச்சர்யமான குணங்களை உடையவனாய் -நீல ரத்னம் போன்ற வடிவை
உடையவன் ஆனவனுடைய திருவடிகளிலே ஸ்வ சேஷத்வ அநு ரூபமான வ்ருத்தி
விசேஷத்தை பண்ணும் -சத்புத்ரர்களைப் பெறுவர்-
மக்கள் -என்று அவி விசேஷமாக சொல்லுகையாலே -வித்தையாலும் ஜன்மத்தாலும் வரும் –
உபய வித புத்ரர்களையும் சொல்லுகிறது –

—————————————

பூங்கோதை -பிரவேசம் –

முலையில் வாசி அறிந்து உண்ணும்
பிள்ளைப் பருவத்தை அனுபவித்து
இனியரனார் -கீழ்
அதுக்கு அநந்தரம்
லீலையிலே இழிந்து
சப்பாணி கொட்டும் பருவத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –

————————————————

பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-

பூங்கோதை ஆய்ச்சி –
செவ்வி மாலையாலே அலங்க்ருதமான மயிர் முடியை உடைய
யசோதை பிராட்டி கடைகிற வெண்ணெயை –
ஒப்பித்து நின்றாயிற்று தயிர் கடைவது
வாச நறும் குழல் ஆய்ச்சியர் -என்னக் கடவது இறே –

கடை வெண்ணெய் புக்கு உண்ண –
கடைந்து திரட்டிச் சேமித்து வைத்தால் களவு காண்கை அன்றிக்கே
கடைகிற போதே நிழலிலே ஒதுங்கி
களவு கண்டாயிற்று அமுது செய்வது –

ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு –
அவளுக்கு தயிர் கடைகையில் அன்றே அந்ய பரதை-
இவனை நோக்குகையிலே இறே
ஆகையாலே அவள் கண்டு பிடித்து
கட்டி
அடிக்க
அடி உண்டு –

ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஒங்கோத வண்ணனே சப்பாணி
பிரதம பரிபவம் ஆகையாலே முந்துற ஏங்கி
அநந்தரம்
அது ஆறிச் சீராட்டி
பின்னை லீலையோடே தலைக் கட்டும்
தேங்கின கடல் போலே யாயிற்று அப்போது இருக்கும் இருப்பு
விரலோடு இத்யாதி -முதல் திருவந்தாதி -24

யொளி மணி வண்ணனே சப்பாணி –
அவ்வளவே அன்றிக்கே புகரை உடைத்தான
மணி போலே இருக்கிறவனே –

சப்பாணி –
வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே
சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

————————————————

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்
டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம்
ஆயர் அழக வடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி-10-5-2

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்டு
பெற்று வளர்த்த தன்னோடு ஒத்த பிராப்தியை உடையவர்கள் –
அமூர்த்தமான நெஞ்சு -கண்ணுக்கு தோற்றும் படி துடியா நின்றது –
சரீரத்வாரா தோற்றும் இறே-
தயிரையும் நெய்யையும் உண்டு –

ஏய் எம்பிராக்கள் –
தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே
இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே
தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய்
அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே –
தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய்
செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது –

இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக –
பரப்பை உடைத்தான பூமியில் எங்களிடை
ஜாதியில் உள்ளாரில் மிக்க அழகை உடையவனே –

வடிகள் அரவிந்த வாயவனே கொட்டாய் சப்பாணி-
திருவடிகளும் திரு அதரமும் செவ்வித் தாமரை போல் இருக்கிறவனே
அன்றிக்கே
அடிகள் அரவிந்த வாயவனே -என்ற பாடம் ஆகில்
திருவடிகள் தாமரையாய் இருக்கிறவன் -என்கிறது
எம்பிராக்கள் -என்பான் என்-அழகா -வாயவன் -என்று ஏக வசனமாய் இருக்க என்னில்
பத்துடை அடியவர்க்கு எளியவன் –அரும் பெறல் அடிகள் -என்றால் போலே-

மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
அதுக்கு பரபாகமான நிறத்தை உடையவனே
சப்பாணி கொட்ட வேணும் –

————————————————

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —10-5-3-

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தயிரையும் நெய்யையும் மோரையும் சேர வைப்பார்கள் –
பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –
இங்கனே தாவா மோரை உருட்டி
பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று-

தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் –
அப்பெரிய செயலைச் செய்யா -பின்னை தவழா நிற்பார் –
முன்பு எல்லாம் கிடந்தது உறங்கி
அவர்கள் பேர நின்ற அநந்தரம் –
இவனை இங்கனே சொல்லும்படி எங்கனே -என்னும்படி தவழா நிற்கும் –

தாமோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த –
நீ எல்லாம் செய்து -மறைக்கப் பார்க்கிலும்
உன்னை ஒழிய இச் செயலை செய்வார் உண்டோ
என்று இடைச்சிகள் தாம்பாலே
மோதரக் கையாலே கட்ட -என்னுதல் –
அன்றிக்கே
அலங்க்ருதமான கையால் கட்ட –
தாமோதரக் கையால்-என்று பிரித்து மோதரத்தை
மோதிரம் என்று வ்யவஹரித்தது இத்தனை
படாகை கணறு -என்கிற இவற்றை பிடாகை கிணறு -என்கிறாப் போலே –

தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி –
உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே
தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –
எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

———————————————–

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-4-

பெற்றார் தளை கழலப் பேர்ந்து –
மாதா பிதாக்கள் காலில் விலங்கு கழலும்படி வந்து
அவதரித்து –
பேருகை யாவது -முன்பு இருந்த இருப்பின்றும் போருகை –
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -இத்யாதி –

அங்கு அயல் இடத்து -உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட –
அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே
லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற
மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –

கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே
கன்றுகள் மேய்க்குமவனே –

————————————————

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5-

சோத்தென நின்னைத் தொழுவன் –
சோத்தம் என்று வாயாலே சொல்லா நின்று கொண்டு
உன்னைத் தொழுவன் –

எதுக்காக என்னில் –
வரம் தரப் —
என்னுடைய பிரார்த்திதங்களை நீ தருகைக்காக –

பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன ஆய்ச்சியர் அப்பம் தருவர் –
பருவம் நிரம்பாத அளவில் உபகரித்தவனே
உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –

அவர்க்காகச் -சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி –
அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் –

தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி —
கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால்
சப்பாணி கொட்ட வேணும் –

———————————————–

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நானவலப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி —10-5-6-

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு-நானவலப்பம் தருவன்-
ஓர் அப்பம் தந்தோம் என்று கை வாங்கி இருக்க ஒண்ணாது –
உன் வயிற்றுக்குப் போரும்படி
நான் அவல் அப்பம் தருவன் –

கருவிளைப் பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே –
கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் –
ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு
ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க
வளர்ந்த செருக்கை உடையவனே –

கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி –
ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ
சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

———————————————-

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி -10-5-7-

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத் –
வாயை அங்காந்து கொண்டு வந்த பகாசூரன் வாயைக் கிழித்து
அடியே துடங்கி தலை யளவும் தர்ச நீயமாய் பூத்து நின்ற
குருந்தை வேரோடு பறித்து –

துள்ளி விளையாடித்-
சசம்பிரம ந்ருத்தம் பண்ணி
லீலா ரசம் அனுபவித்து –

தூங்குறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் –
தூங்கா நின்றுள்ள உறியிலே
சேமித்து வைத்த வெண்ணெயை அள்ளி அமுது செய்த கையில்
முடை நாற்றத்தோடு கூட
உன்னுடைய செயலிலே மோஹிக்கிற
என்னுடைய முலைக் கண்களைப் பால் சுரக்கைக்காக நெருடுகிற –

பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி –
பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே
உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே –

பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி —
அன்று பூதனை தன்னை முடித்து உன்னை
நோக்கித் தந்த நீ
இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ –

———————————————————

யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-

யாயும் பிறரும் அறியாத யாமத்து –
பெற்ற தாயும்
மற்று உள்ளவாள் ஒருவரும்
இவர்கள் ஒருவரும் அறியாத நடுச் சாமத்திலே –

மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்-
வஞ்சனத்தை உடையளாய் இருக்கச் செய்தேயும்
யசோதை பிராட்டி பரிவு தோற்ற ஏத்திக் கொண்டு வருமா போலே
பூதனையானவள் ஜல்ப்பித்துக் கொண்டு வந்து முலையைக் கொடுக்க –

பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட –
பேய் என்று அவளை புத்தி பண்ணி
முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு
அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே –

வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
உகவாதாரை அழியச் செய்வுதி
உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ –

————————————————–

கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை
மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9-

கள்ளக் குழவியாய்க் –
பிள்ளைப் பருவத்திலே க்ருத்ரிமத்தை யுடையையாய் –

காலால் சகடத்தை தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை –
முலை வரவு தாழ்த்தது என்று
திருவடிகளை நீட்டின வ்யாஜ்யத்தாலே நலியக் கோலி
மேலிட்ட சகடத்தை பொடியாம்படி தள்ளி உதைத்து –
யசோதை பிராட்டி வடிவு உடையளாய் வந்து தோற்றின
பூதனையை –

மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட -வள்ளலே-
அவள் வரும் அளவும் ஆறி இருந்து
கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு
அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே –

கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ –

——————————————-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன் –
கார் காலத்திலே
கழுத்தே கட்டளையாக
நீரைப் பருகின காள மேகம் போலே
சர்வாதிகாரமாம் படி பிரபந்தத்தைப் பண்ணின மகோ தாரராய் –
திருமங்கையில் உள்ளாருக்கு நிர்வாஹகருமான –

பேராளன் –
நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா
அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே
கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே
பேராளன் -என்கிறார் –

பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட சீராளா –
இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே
நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது –
பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று –

செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்தாராளா -கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி-
இவை எல்லாம் ஐஸ்வர்ய சூசகமாய் இருக்கிறது –
இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது
தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே
பிறருக்கும் பலமாய் இருக்கிறது –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்