Archive for the ‘Thirumangai Aazlvaar’ Category

ஸ்ரீ பெரியாழ்வார்-அம்மம் உண்ண–அழைக்கும் பதிகம் —2-2-/ அம்மம் தர அஞ்சுவன் பதிகம் -3-1- / ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –என் அம்மம் சேமம் உண்ணாயே பதிகம்-10-4–

June 30, 2020

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாபதேசம்
அரவணை பிரவேசம் –

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்-என்று அல்வழக்கு ஒன்றும் இல்லாதே
அறுதியிட்டது தேசமாக்கி-தத் தேசிகனை அவதார கந்தமாக வஸ்து நிர்த்தேசம் செய்து
நாவ கார்யம் சொல் இல்லாதவர்களை தேசிகராக்கி
கார்ய பூதனானவன் அவதரித்த ஊரில் கொண்டாட்டம் ஒக்க நின்று கண்டால் போலே
மிகவும் உகந்து மங்களா சாசனம் செய்து
அவதரித்தவனுடைய திவ்ய அவயவங்களை பாதாதி கேசாந்தமாக நிரவத்யமான வளவன்றிக்கே
இதுவே பரம புருஷார்த்தம் என்று வஸ்து நிர்த்தேசம் செய்து
தாமும் மிகவும் உகந்து தம் போல்வார்க்கும் காணீர் –காணீர் -என்று -காட்டி அருளி
இவனுக்கு ஆஞ்ஞா ரூபமாகவும் அனுஜ்ஞ்ஞா ரூபமாகவும்
ப்ராப்தி நிபந்தனமான அபிமான ரூபமாகவும்
உபய விபூதியில் உள்ளாரும் உபகரித்த பிரகாரங்களை அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற
அவர்கள் வரவிட்ட வற்றையும்
அவர்கள் கொடுவந்த வற்றையும்
மேன்மையும் நீர்மையுமான மெய்ப்பாடு தோன்ற அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து-

அவன் அங்கீ கரித்த பின்பு
தொட்டிலேற்றித்
தாலாட்டி
ஜ்ஞானத்துக்கு ஆஸ்ரயத்தில் காட்டிலும் ஜஞேய ப்ராதான்யத்தைக் கற்ப்பித்து
அவற்றுக்கு ஜஞேய சீமை இவ்விஷயமாக்கி விஷயீ கரித்த ஜ்ஞானத்தை –
விஜ்ஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற ந்யாயத்தாலே ஜ்ஞாதாக்கள் ஆக்கி
இள மா மதீ -1-5-1-என்றும் –
விண்டனில் மன்னிய மா மதீ -1-5-6-என்றும்
உபய விபூதியில் உள்ளாரையும் உப லஷண நியாயத்தாலே இவன்
புழுதி அளைவது தொடக்கமான வ்யாபாரங்களைக் கண்டு
தாமும் மிகவும் உகந்து தம் போல்வாரையும் அழைத்துக் காட்டி

நோக்கின கண் கொண்டு போக வல்லீர்கள் ஆகில் போங்கோள்-என்று
முன்பு பச்சை வரவிட்டுத் தாங்கள் வாராதவர்களையும் வந்து கண்டு போங்கோள் -என்று
உய்ய உலகு படைத்து -என்று ஜகத் காரண பிரகாசகமான பரமபதம் முதலாக
கீழே அருளிச் செய்த திவ்ய தேசங்களையும்
இதில் அருளிச் செய்த திருக் குறுங்குடி முதலான திவ்ய தேசங்களிலும் சந்நிஹிதனாய் நின்றவனும்
நாநாவான அவதாரங்களும் அபதாநங்களுமாக பிரகாசித்தவனும்
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -கீதை -15-15-என்கிறபடியே
சகல வேத சாஸ்திர இதிஹாச புராணாதிகளாலும் அறியப்படுமவன் நான் -என்றவனை -கீழே

நாராயணா அழேல் அழேல் -என்றவர் ஆகையால் –
நான் மறையின் பொருளே -1-6-3-
ஏலு மறைப் பொருளே -1-6-9-
எங்கள் குடிக்கு அரசே -1-6-10-என்று வாசகத்துக்கு வாச்யமும் -வாச்யத்துக்கு வாசகமுமாக அறுதியிட்டு அவனை
செய்யவள் நின்னகலம் சேமம் எனக்கருதி –ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை -1-6-1- என்கையாலே
லோகத்தில் உள்ளாருக்கு பீதி பக்தி பிராப்தி மூலமான ஆசாரங்கள் பிரமாண அனுகுனமாகத் தோன்றும்படி யாகவும்
சொல் வழுவாத ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தோன்றும்படியாகவும்
செங்கீரை என்கிற வ்யாஜ்யம் முதலாக
சப்பாணி
தளர்நடை
அச்சோ அச்சோ
புறம் புல்கல்
அப்பூச்சி என்கிற வியாபார விசேஷங்களைப் பிரார்த்தித்து

அவன் இவை செய்யச் செய்ய அவற்றுக்குத் திருவடிகள் நோம் -என்றும்
தளர் நடையில் விழுந்து எழுந்து இருக்கையாலே திரு மேனி நோம் -என்றும்
அச்சோ புறம் புல்குகளாலே தம்முடைய திரு மேனியை வன்மை என்று நினைத்து
அத்தாலும் திரு மார்பு நோம் என்று அஞ்சி
நாம் பிரார்த்தித்து என்ன கார்யம் செய்தோம் -என்று அனுதபிக்கிற அளவில்

தன் நிவ்ருத்த அர்த்தமாக தன் திருத் தோள்களையும் ஆழ்வார்களையும் காட்ட
அவையும் பயா அபாய ஹேது வாகையாலே அவற்றை அமைத்து திரு மேனியில் வாட்டத்தை நினைத்து
படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் இத்தனை என்று உறங்குகிறவனை எழுப்பி
அநச்னன்-என்கிற பிரதிஜ்ஞ்ஞையைக் குலைத்து
அஸ்நாமி -என்கிறபடியே அமுது செய்ய வேணும் -என்கிறார் –

————————————————————————————

ஸ்ரீ மணவாள மா முனிகள்

அவதாரிகை –
ஆழ்வார்கள் எல்லாரும் ஸ்ரீ கிருஷ்ண அவதார ப்ரவணராய் இருந்தார்களே ஆகிலும் –
அவர்கள் எல்லாரையும் போல் அன்றிக்கே –
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அதி ப்ரவணராய் –
அவ்வதார ரச அனுபவத்துக்காக கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்கிறபடியே
அவ்வதார ரசம் உள்ளது எல்லாம் அனுபவிக்கிறவர் ஆகையாலே –

முதல் திருமொழியிலே அவன் அவதரித்த சமயத்தில் -அங்குள்ளார் செய்த உபலாவன விசேஷங்களையும் –

அநந்தரம்-1-2-
யசோதை பிராட்டி அவனுடைய பாதாதி கேசாந்தமான அவயவங்களில் உண்டான அழகை
ப்ரத்யேகம் பிரத்யேகமாக தான் அனுபவித்து –
அனுபுபூஷுக்களையும் தான் அழைத்துக் காட்டின படியையும் –

அநந்தரம் -1-3-
அவள் அவனைத் தொட்டிலிலே ஏற்றித் தாலாட்டின படியையும் –
பிற்காலமாய் இருக்க தத் காலம் போலே பாவனா பிரகர்ஷத்தாலே யசோதாதிகளுடைய
ப்ராப்தியையும் சிநேகத்தையும் உடையராய் கொண்டு -தாம் அனுபவித்து –

அநந்தரம் –
அவன் அம்புலியை அழைக்கை-1-4-
செங்கீரை ஆடுகை -1-5-
சப்பாணி கொட்டுகை -1-6-
தளர் நடை நடைக்கை -1-7-

அச்சோ என்றும் -1-8-
புறம் புல்குவான் என்றும் -1-9-
யசோதை பிராட்டி அபேஷிக்க
முன்னும் பின்னும் வந்து அணைக்கை ஆகிற பால சேஷ்டிதங்களை-
தத் பாவ யுக்தராய் கொண்டு அடைவே அனுபவித்துக் கொண்டு வந்து –

கீழ்த் திரு மொழியிலே -2-1-
அவன் திரு ஆய்ப்பாடியில் உள்ளோரோடு அப்பூச்சி காட்டி விளையாடின சேஷ்டிதத்தையும் –
தத் காலத்திலேயே அவள் அனுபவித்து பேசினால் போலே தாமும் அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டரானார் –

இனி -2-2-
அவன் லீலா வ்யாபாரச்ராந்தனாய் -முலை உண்கையும் மறந்து -நெடும் போதாக கிடந்தது உறங்குகையாலே –
உண்ணாப் பிள்ளையை தாய் அறியும் -என்கிறபடியே யசோதை பிராட்டி அத்தை அறிந்து –
அம்மம் உண்ணத் துயில் எழாயே-என்று அவனை எழுப்பி –
நெடும் போதாக முலை உண்ணாமையை அவனுக்கு அறிவித்து –
நெறித்து பாய்கிற தன முலைகளை உண்ண வேண்டும் என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் -விடாதே நிர்பந்தித்து முலை ஊட்டின பிரகாரத்தை
தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு –
தத் பாவ யுக்தராய் கொண்டு -அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்து
பேசி ஹ்ர்ஷ்டராகிறார் இத் திரு மொழியில் –

—————————————-

அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே -2 2-1 –

அரவணையாய் ஆயரேறே–
திரு வநந்த ஆழ்வான் படுக்கை வாய்ப்ப்பாலே கண் வளர்ந்த வாசனையோ
ஆயர் ஏறான இடத்திலும் பள்ளி கொள்ள வேண்டுகிறது

மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமானவற்றை பிரகிருதியாக உடைய
திரு அனந்தாழ்வானைப் படுக்கையாய் உடையனாய் இருந்து வைத்து –
நாக பர்யங்கம் உத்சர்ஜ்ய ஹ்யாகத -என்கிறபடியே அப்படுக்கையை விட்டு -போந்து -அவதீரணனாய்-
ஆயருக்கு பிரதானன் ஆனவனே -அப்படுக்கை வாய்ப்பாலே பள்ளி கொண்டு போந்த வாசனையோ –
ஆயர் ஏறான இடத்திலும் படுக்கை விட்டு எழுந்து இராதே பள்ளி கொள்ளுகிறது –
அவன் தான் இதர சஜாதீயனாய் அவதரித்தால்-
சென்றால் குடையாம் -என்கிறபடி -சந்தானுவர்த்தயாய் அடிமை செய்யக் கடவ –
திரு வனந்தாழ்வானும் அவனுடைய அவஸ்த அனுகுணமாக பள்ளி கொள்வதொரு திருப் படுக்கையான
வடிவைக் கொள்ளக் கூடும் இறே -ஆகையால்-அங்கு உள்ள சுகம் எல்லாம் இங்கும் உண்டாய் இருக்கும் இறே
கண் வளர்ந்து அருளுகிறவனுக்கு-

அம்மம் உண்ணத் துயில் எழாயே –
சோறு -என்றாலும்
பிரசாதம் -என்றாலும்
அறியான் என்று நினைத்து -அம்மம் உண்ணத் துயில் எழாயே என்கிறார் –
முலை உண்ண- என்னாதே- அம்மம் உண்ண -என்றது
சைசவ அனுகுணமாக அவள் சொல்லும் பாசுரம் அது ஆகையாலே
துயில் -நித்தரை
எழுகையாவது-அது குலைந்து எழுந்து இருக்கை-
எழாய்-என்கிற இது எழுந்து இருக்க வேணும் என்கிற பிரார்த்தனை-

இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ –
பகல் யுண்டத்தை மறந்தார் போலே காணும்
பகல் உண்ணாதார் இரவும் உண்ணார்களோ
எழுப்பின அளவிலும் எழுந்து இராமையாலே -கன்ற எழுப்ப ஒண்ணாது -என்று விட்டேன்
இன்றும் போய் உச்சிப் பட்டது என்கிறார் விடிந்த மாத்ரத்தையே கொண்டு –

நீ ராத்திரி உண்ணாதே உறங்கி -அவ்வளவும் இன்றிக்கே இன்றும் போது உச்சிப் பட்டது –
ராத்திரி அலைத்தலாலே கிடந்தது உறங்கினால் -விடிந்து ஆற்றானாகிலும் உண்ண வேண்டாவோ –
விடிந்த அளவேயோ போது உச்சிப் பட்டது காண்
ஆலும் ஓவு மாகிற அவ்யயம் இரண்டும் விஷாதாதிசய சூசகம்

வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாயத் –
உண்ண வேண்டா -என்னும் போதும் எழுந்து இருந்து வந்து
வேண்டா என்ன வேண்டாவோ -என்ற அளவிலே
எழுந்து இருந்து வருகிறவனைக் கண்டு
வயிறு தளர்ந்து முகம் வாடிற்று -என்று எடுத்து அணைத்துக் கொண்ட அளவிலே
அழகிய முலைகள் நெறித்துப் பாயத் தொடங்கிற்று –
வனப்பு -அழகும் பெருமையும்-

நீ எழுந்து இருந்து அம்மம் உண்ண வேண்டும் என்று வரவும் கண்டிலேன் –
அபேஷை இல்லை என்ன ஒண்ணாதபடி வயிறு தளர்ந்து இரா நின்றாய்
முலைகள் ஆனவை உன் பக்கல் சிநேகத்தால் நெறிந்து-பால் உள் அடங்காமல் வடிந்து பரக்க-
உனக்கு பசி உண்டாய் இருக்க -இப்பால் இப்படி வடிந்து போக -உண்ணாது ஒழிவதே -என்று கருத்து –

திருவுடைய வாய் மடுத்துத் –
பிராட்டிக்கு அசாதரணமான வாய் என்னுதல்-
திருவாய்ப்பாடியில் சுருட்டார் மென் குழல் -3-1-7-என்கிறபடியே குழல் அழகு படைத்தார்க்கு எல்லாம்
அம்ருத பானம் பண்ணும்படி சாதாரணமான வாய் -என்னுதல்
அழகிய வாய் -என்னுதல்
திரு-அழகு

அழகிய திருப் பவளத்தை மடுத்து -திரு-அழகு –
இவ்வண முலையிலே உன்னுடைய திரு உடைய வாயை அபிநிவேசம் தோற்ற மடுத்து –

திளைத்து உதைத்துப் பருகிடாயே –
முலையிலே வாய் வைத்து
முழுசி
வயிற்றிலே உதைத்து
அமுது செய்ய வேணும் என்று பிரார்த்திக்கிறார்-

முலை உண்ணுகிற ஹர்ஷம் தோற்ற கர்வித்து கால்களாலே
என் உடம்பிலே உதைத்து கொண்டு -இருந்து உண்டிடாய் –
பருகுதல்-பானம் பண்ணுதல் –

————————————-

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உணாயே- 2-2 2- –

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
நறு வெண்ணெய்-பழுதற உருக்கி வைத்த நெய்யும்
செறிவுறக் காய்ந்த பாலும்
பனி நீர் அறும்படி நன்றாகத் தோய்த்த தயிரும் -சாய்த்தால் வடிவத்தை இருக்கிற தயிர் என்னவுமாம் –
நறு வெண்ணெயும் -செவ்வி குன்றாமல் கடையும் பக்வம் அறிந்து கடைந்து வைத்த நறு வெண்ணெயும்-

பழுதற உருக்கி வைத்த நெய்யும் -செறிவுறக் காய்ந்த பாலும் –
நீர் உள்ள்து வடித்து கட்டியாய் இருக்கிற தயிரும் -செவ்வையிலே கடைந்து எடுத்த நறுவிய வெண்ணையும்

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
ஒன்றும் பெற்று அறியேன் -என்னுதல்
இவை வைத்த பாத்ரங்களில் சிறிதும் பெற்று அறியேன் என்னுதல்

அன்றிக்கே –
இத்தனையும் என்றது -ஏக தேசமும் என்றபடியாய்-இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்-
இப்படி என்னை களவேற்றுவதே-என்னைப் பிடித்தல் அடித்தல் செய்ய வன்றோ நீ இவ்வார்த்தை
சொல்லிற்று என்று குபிதனாக –

ஆரோ கொண்டு போனார் -என்று அறிகிலேன் -என்றவாறே –
எம்பிரான் -என்ற போதை முக விகாரத்தாலும்
நீ பிறந்த பின்னைப் பெற்று அறியேன் -என்றதாலும்
என்னைக் குறித்து அன்றோ நீ இவை இவை எல்லாம் சொல்லுகிறது -என்று கோபத்தோடு போகப் புக்கவனை
வா -என்று அழைத்த வாறே
என்னைப் பிடித்து அடித்தல் செய்ய வன்றோ நீ அழைக்கிறாய்
நான் எது செய்தேன் -என்ன –

எத்தனையும் செய்யப் பெற்றாய்-
உனக்கு வேண்டினது எல்லாம் செய்யக் கடவை -என்ன
இப்போது சொல்லுகிறாய் உன் வார்த்தை அன்றோ -என்ன

ஏதும் செய்யேன் கதம் படாதே –
நான் யுன்னை அடித்தல் கோபித்தல் செய்யேன்
நீ கோபியாதே வா -என்ன -என்றவாறே-
நான் உன்னைப் பிடித்தல் அடித்தல் ஒன்றும் செய்யக் கடவேன் அல்லேன் –
நீ கோபிக்க வேண்டா -கதம்-கோபம்

முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே
முத்துப் போலே இருக்கிற திரு முத்து தோன்ற மந்த ஸ்மிதம் செய்து நின்ற அளவிலே
சென்று எடுத்துக் கொண்டு
இவனை சிஷிப்பதாக நினைத்தவை எல்லாம் மறந்து
அந்த முறுவலோடு வந்து
முத்துப் போலே ஒளி விடா நிற்கும் முறுவலை செய்து –
அதாவது -கோபத்தை தவிர்ந்து ஸ்மிதம் பண்ணி கொண்டு -என்கை

மூக்காலே முழுசி
முலை மார்புகளிலே முகத்தாலும் மூக்காலும் உரோசி முலை யுண்ணாய் -என்கிறார்-
முலைக் கீழை -முழுசி -முட்டி -மூக்காலே உரோசி இருந்து
முலையை அமுது செய்யாய் –

இத்தால்
வைத்த நெய்யால் -சாஷாத் முத்தரையும்
காய்ந்த பாலால் -சொல்லுவதே ஓத்தின் சுருக்கு -என்றும்
நாம நிஷ்டோசம் யஹம் ஹரே -என்றும் இருக்கிறவர்களையும்
வடி தயிரால் -சதுர்த்தி உகாரங்களிலே தெளிந்து -தந் நிஷ்டராய் –
மகாரத்திலே ப்ர்க்ருத்யாத்ம விவேக யோக்யரானவர்களையும் –
நறு வெண்ணெயால் -செவ்வி குன்றாமல் இவ்வடைவிலே ப்ரக்ருத்யாத்ம விவேகம் பிறந்து
அஹங்கார மமகார நிவ்ருத்தமான ஆத்ம குணங்களால் பூரணராய்
மோஷ சாபேஷராய்-இருக்கிறவர்களையும் சொல்லுகிறது –

—————————————————————————-

தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்க கில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன் திறத்தர் அல்லர் உன்னை நான் ஓன்று உரப்ப மாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே -2-2-3 –

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் வந்து நின் மேல் பூசல் செய்ய –
தெருவிலே விளையாடுகிற பிள்ளைகள் முதலானோர் பலரும் -உன் மகன் எங்களை அடித்தான் -என்று முறைப்படுவதாக
பிள்ளைகளையும் கொண்டு வந்து தீம்பேற்றிக் காட்டின அளவிலே
ஆய்ச்சி நான் ஒன்றும் செய்திலேன்
இவர்கள் தாங்களாக்கும் இவை எல்லாம் செய்தார்கள் -என்று இவர் பீதனாய் அழப் புகுந்தவாறே
இவள் அமுது கொடு வந்தவர்களை அழுகை மாற்றுதல்
இவனை சிஷித்தல் செய்யாதே
தன்னைத் தானே நலிந்து கொள்ளப் புக்கவாறே
அவர்கள் தாய்மார் வந்தவர்கள் -இது என் என்று விலக்கப் புக்கவாறே
இந் நேரிலே தம் தாம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ -என்றது கேட்டு
அவர்கள் போனவாறே இவனைப் பிடித்து நலிவதாகத் தேடி -இவன் அழுகையைக் கண்டு
உன் மேல் எல்லாரும் தீம்பேற்றி அலர் தூற்ற -அதுவே யாத்ரையாக –

ஊரில் பிள்ளைகளோடே விளையாடப் புக்கால் எல்லாரையும் போல் அன்றிக்கே –
நீ அவர்களை அடித்து குத்தி விளையாடா நின்றாய் -இப்படி செய்யலாமோ -தம் தம் பிள்ளைகள் அழுது சென்றால் –
அவர்கள் தாய்மாரானவர்கள் பொறுக்க மாட்டார்கள் –
வந்து நின் மேல் பூசல் செய்ய -அவர்கள் தாங்கள்-தங்கள் பிள்ளைகளையும் பிடித்து கொடுவந்து உன் மேலே
சிலுகு -சண்டை -இட்டு பிணங்க

வாழ வல்ல வாசுதேவா -உந்தையார் உன் திறத்தரல்லர்-
பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ-என்று கோபித்து –
வாழ வல்ல -அதிலே ஒரு சுற்றும் இளைப்பு இன்றிக்கே -பிரியப்பட்டு -இதுவே போகமாக இருக்க வல்ல –
வாசுதேவா -வாசுதேவன் புத்திரன் ஆனவனே -பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ
அத்தை மறந்து

நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –
நந்த கோபனுக்கு என்றே வாய்த்த பிள்ளாய் -என்று கோபித்து
உந்தையரான ஸ்ரீ நந்தகோபர் உன் திறத்தல்லர் -உன்னை சிஷித்து வளர்க்க மாட்டார்-
உன்னுடைய தமப்பன் ஆனவர் உன்னிடையாட்டம் இட்டு எண்ணார்-என்றபடி –
ஸ்ரீ நந்த கோபர்க்கு வாய்த்த பிள்ளாய் -அணி -அழகு –
இவன் தீம்பிலே உளைந்து சொல்லுகிற வார்த்தை

உன்னை நான் ஓன்று இரப்ப மாட்டேன் –
நானும் உன்னை அதிரக் கோபித்து -நியமிக்க மாட்டேன் –
தீம்பனான உன்னை -அபலையான நான் -ஒரு வழியாலும் தீர நியமிக்க மாட்டேன் –

அத்தையும் மறைத்து -இவனை எடுத்து
சுரந்த முலையை -நான் தர -நீ உண்ணாய்-என்று பிரார்த்திக்க வேண்டி நில்லா நின்றது இறே-
அவை எல்லாம் கிடக்க -இப்போது நான் சுரந்த முலையை அமுது செய்யாய் –

—————————————

கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
பஞ்சி அன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர்கோவே ஆயர் கூட்டத்து அளவு அன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை உணாயே -2-2-4-

பஞ்சி என்கிற இது பஞ்சு என்பதற்கு போலி –

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு-
பிறப்பதற்கு முன்னே கொலை கருதிப் பார்த்து இருக்கிறவன்
திருவாய்ப்பாடியிலே வளருகிறான் -என்று கேட்டால் கொலை கருதி விடாது இரான் இறே
இனி -இதுக்காவான் இவன் -என்று தன் நெஞ்சில் தோன்றின க்ருத்ரிம வியாபாரங்கள் எல்லாத்துக்கும் தானே
சப்தமிட்டுப் புணர்ந்து சகடாசூரனைக் கற்பித்து வரவிட வருகையாலே -கள்ளச் சகடு -என்கிறார் –
பூதனையிலும் களவு மிகுத்து இருக்கும் காணும் -ஆவேசம் ஆகையாலே சகடாசுரனுக்கு-
உன் மேலே கறுவதலை உடையனான கம்சனாலே உன்னை நலிகைக்காக –
கற்ப்பிக்கப் பட்ட க்ர்த்ரிமமான சகடமானது -அசூரா விஷ்டமாய் வருகையாலே -கள்ளச் சகடு -என்கிறது –

கலக்கழியப்பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது -நொந்திடும் என்று-அஞ்சினேன் காண்
கலக்கழிய –
தளர்ந்தும் முறிந்தும் உடல் வேறாக பிளந்து வீய -என்கிறபடியே கட்டுக் குலைந்து உரு மாய்ந்து போம்படியாக
பஞ்சி இத்யாதி –
பஞ்சு போன்ற மிருதுவான திருவடிகளாலே உதைத்த போது -திருவடிகள் நோம் -என்று பயப்பட்டேன் காண் –
சாடு கட்டுக் குலைந்து அச்சு தெறித்து போம்படி பஞ்சிலும் காட்டிலும் அதி மார்த்வமான
திருவடிகளால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண்-

அமரர் கோவே -தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே –
அமரர் கோவே –
அமரருடைய பாக்யத்தாலே இறே நீ பிழைத்தது -என்னுதல்-
அன்றிக்கே
பிரதிகூலித்து கிட்டினார் முடியும்படியான முஹூர்த்த விசேஷத்திலே நீ பிறக்கையாலே -என்னுதல் –
இப்படி பய நிவர்த்தகங்களைக் கண்டாலும் பயம் மாறாது இறே இவருக்கு –
உன்னைக் கொண்டு தங்கள் விரோதியைப் போக்கி –
வாழ இருக்கிற அவர்கள் பாக்யத்தால் இறே -உனக்கு ஒரு நோவு வராமல் இருந்தது -என்கை –

ஆயர் கூட்டத்து அளவன்றாலோ-
பஞ்ச லஷம் குடி இருப்பிலும் திரண்ட பிள்ளைகள் அளவன்றாகில்
ஒ ஒ உன்னை எங்கனே நியமித்து வளர்ப்பேன்
ஆயருடைய திரள் அஞ்சின அளவல்ல காண் -நான் அஞ்சின படி –
ஆல் ஒ என்றவை விஷாத சூசகமான அவ்யயங்கள்

இங்கனே இவர் ஈடுபட புகுந்தவாறே -நம் கையில் கம்சன் பட்டது அறியீரோ -என்ன
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை யுணாயே-
கம்சன் பட்டது உன் பக்கல் பண்ணின வஞ்சனை ஆகிய பாப வலை சூழ்ந்து அன்றோ பட்டது
நீ வலைப்படுத்தாய் -என்கிறது வ்யாஜம் மாதரம் அன்றோ –
அன்றைக்கு நீ பிழைத்தது என் பாக்கியம் அன்றோ -என்னுதல் –
அன்றிக்கே
நீ வஞ்சனை செய்து சிறைப்படுத்திக் கொல்ல-அவன் பிராணன் இழந்த படியால் -நான் பிராணன் பெற்றேன்
என்று தேறி முலை யுண்ணாய் என்கிறார்-
உன் திறத்திலே வஞ்சனைகளை செய்த கம்சனை -நீ அவன் திறத்தில் செய்த வஞ்சனையாலே
தப்பாதபடி அகப்படுத்தி முடித்தவனே
முலை உணாயே -இப்போது முலையை அமுது செய்ய வேணும் –

—————————————————————————–

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2 -2-5 – –

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் –
ஜன்மாந்தர வாசனையாலும்
அசத் சஹ வாசங்களாலும்
துஷ்ட மந்த்ரிகள் வார்த்தை கேட்கையாலும்
சாதுவான அக்ரூரர் வார்த்தை கேலாமையாலும்
ராஜ குலத்தில் பிறந்து இருக்கச் செய்தேயும் தனக்கு என்று ஓர் அறிவு இல்லாமையாலும்
சகல பிராணி விருத்தமான அசன் மார்க்க நிரூபகன் ஆகையாலும்
இவை எல்லாத்துக்கும் ஹேதுவான கர்ப்ப தோஷத்தாலும் -தீய புந்திக் கஞ்சன் -என்கிறார் –

தீய புந்தியாவது –
அஹங்கார மமகார நிபந்தனமாக
தன்னைத் தானே முடிக்க விசாரித்து அத்யவசித்து இருக்கை-
இப்படிப்பட்ட புத்தியை யுடையவன் நிர் நிபந்தனமாக உன் மேல் அதி குபிதசலித ஹ்ருதயனாய்
விபரீத தர்மங்களான மாயா ரூபிகளை பரிகாரமாக யுடையவனாய்

தீய புந்திக் கஞ்சன் -துர் புத்தியான கம்சன் -பிள்ளைக் கொல்லி இறே-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாபிஷ்டன் இறே –
உன் மேல் சினமுடையன் -தேவகி உடைய அஷ்டம கர்ப்பம் உனக்கு சத்ரு -என்று
அசரீரி வாக்யத்தாலே கேட்டு இருக்கையாலும் –
பின்பு துர்க்கை சொல்லிப் போந்த வார்த்தையாலும் –
நமக்கு சத்ரு வானவன் கை தப்பிப் போய் நம்மால் கிட்ட ஒண்ணாத ஸ்தலத்திலே புகுந்தான் –
இவனை ஒரு வழியாலே ஹிம்சித்தாய் விடும்படி என் -என்று இருக்கையாலும் –
உன்னுடைய மேலே மிகவும் குரோதம் உடையவன் –

எப்போதோ இடம் -என்று சோர்வு பார்த்து மாயா ரூபிகளை வரவிட்டு
அவர்களுடைய சூட்சி யாகிற வலையிலே அகப்படில் நான் உயிர் வாழ்ந்து இரேன்-முடிவன் –
சோர்வு பார்த்து-மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா-
தனியே புறப்படுகை –
உன்னாலே இறே சாதுவான வாசுதேவன் முதலானாரையும் அவன் நலிகிறது
உன்னைக் கண்டால் அவன் வர விட்ட மாயா ரூபிகள் விடுவார்களோ –

சோர்வு பார்த்து -அவிழ்ச்சி பார்த்து -அதாவது நீ அசஹாயனாய் திரியும் அவசரம் பார்த்து -என்கை-
மாயம் தன்னால் வலைப் படுக்கில் -உன்னை நலிகைக்காக மாயா ரூபிகளான ஆசூர பிரகிருதிகளை
திர்யக்காகவும் ஸ்தாவரமாகவும் உள்ள வடிவுகளை கொண்டு நீ வியாபாரிக்கும்
ஸ்தலங்களில் நிற்கும் படி பண்ணியும் -நீ அறியாமல் வஞ்சனத்தால் நழுவாதபடி பிடித்து கொள்ளில் –
வாழ கில்லேன் -நான் பின்னை ஜீவித்து இருக்க ஷமை அல்லேன் -முடிந்தே விடுவேன் –
வாசுதேவா -உன்னாலே இறே சாதுவான அவரும் சிறைப்பட வேண்டிற்று

தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா-
கீழே -தேவகி சிங்கமே -என்று சொல்லி வைத்து
இப்போது தன்னை மாதாவாக சொல்லும் போது
பித்ருத்வம் நோபலஷயே -அயோத்யா -58-31-
உந்தை யாவன் என்று உரைப்ப -பெருமாள் திரு மொழி -7-3-
நந்த கோபன் மைந்தன்
நந்த கோபன் பெற்றனன் –
எங்கு இங்கிதத்தாலே காட்டினானாக வேணும் இறே
பிறந்த அன்றே மாத்ரு வசனம் கார்யம் -என்று கொண்ட யுனக்கு
என் வார்த்தையும் கார்யம் என்று கைக் கொள்ள வேணும் காண்-
பலரும் அறியும்படி பல காலும் சொன்னேன்
லீலா ரசத்தை நச்சியும் போகாதே கொள்-
உத்தேச்யதையாலும் பரிவாலும் தாய்மார் வாக்கால் சொல்லுவது பிள்ளைகளுக்கு அவசிய கரணீயம் காண் -என்கை-
சாற்றிச் சொன்னேன் போக வேண்டா -இது தன்னை குன்னாம் குருச்சியாக -ரகஸ்யமாக -அன்றிக்கே
எல்லாரும் அறியும் படி பிரசித்தமாக சொன்னேன் -லீலா அர்த்தமாகவும் நீ தனித்து ஓர் இடத்தில் போக வேண்டா

ஆயர்பாடிக்கு அணி விளக்கே –
என் அளவேயோ
இவ் ஊரில் உள்ள எல்லாரும் உன்னையே காணும்படி அழகிதான தீபம் போலேயான
சௌந்த்ர்யாதி குணங்களாலே பிரகாசிதன் ஆனவனே –
விளக்குக்கு அழகு தூண்டாமையும் நந்தாமையும் –
இப்படி இருப்பதொரு விளக்கு யுண்டோ என்னில்
ப்ரதீதியில் ப்ரத்யஷ மாத்ரத்தாலே யுண்டு என்னவுமாம் –
அனுமானம் ப்ரத்யஷ சாபேஷம் ஆனாலும் ப்ரத்யஷம் அனுமானம் சாபேஷம் ஆகாது
ஆயிருக்க இரண்டும் ஸ்மாரக தர்சனத்தாலே ஏக ஆஸ்ரயத்திலே காண்கையாலே
இவை நிரூபியாமல் கண்ட மாத்ரமே கொண்டு -அணி விளக்கு -என்னுதல்
அன்றியிலே
அபூதம் என்னுதல் –

ஆயர்பாடிக்கு அணி விளக்கே -திரு வாய்ப்பாடிக்கு ஒரு மங்கள தீபம் ஆனவனே –
அணி-அழகு
இத்தால்-எனக்கே அன்று -உனக்கு ஒரு தீங்கு வரில் -இவ்வூராக இருள் மூடி விடும் கிடாய் -என்கை

யமர்ந்து என் முலை யுணாயே —
உன் இஷ்டத்திலே போக்குவரத்து சீகர கதி யானாலும்
அழைக்க வரும் போது மந்த கதியாக வேணும் காண் –
ஆனபின்பு பரபரப்பை விட்டு பிரதிஷ்டனாய் வந்து உனக்கு என்று சுரந்து இருக்கிற முலையை
அமுது செய்ய வேணும் –

இனி இவர்க்கு முலைப்பால் ஆவது
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமாய் –
மங்களா சாசன பர்யந்தமான பக்தி ரூபா பன்ன ஜ்ஞான ப்ரவாஹம் இறே
பக்தி உழவன் ஆனவனுக்கு தாரகாதிகள் எல்லாம் இது தானே இறே-

————————————————————————–

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –

மின்னனைய நுண்ணிடையார் –
மின்கொடி ஒரு வகை ஒப்பாயிற்று ஆகிலும் -அது போராமை இறே நுண்ணிடையார் என்கிறது –

மின்னோடு ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்-
மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே சூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –

விரி குழல் மேல் நுழைந்த வண்டு –
விரி குழல் -என்கையால் -நீண்டு பரந்து இருண்டு சுருண்டு நெய்தது-என்றால் போலே
சொல்லுகிற எல்லா வற்றுக்கும் உப லஷணம்
விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –
குழல் மேல் வந்து படிந்து உள்ளே முழுகின வண்டுகள் மது பானம் செய்த செருக்கால் –

இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
இனிதான இசைகளைப் பாடா நிற்கிற ஸ்ரீ வில்லிபுத்தூரை-
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே –
ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே-
பரம சாம்யாபந்யருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே –

இனிது அமர்ந்தாய் –
பரமபதத்திலும் காட்டிலும் மிகவும் விரும்பி அந்த இசையைக் கேட்டு
இனிது அமர்ந்து இறே- வட பெரும் கோயில் யுடையான் கண் வளர்ந்து அருளுகிறது –
நித்ய நிர்தோஷ
ஸ்வயம் பிரகாச
அபௌருஷேய
ஏகாரத்த நிர்ணயமான
சகல வேதங்களையும் மங்களா சாசன பர்யந்தமாக நிர்ணயித்து
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் -என்று பிரசித்தரான இவர்
வேறு ஒரு வ்யக்தியில் சேர்க்கவும் அரிதாய்
அசாதாரணங்களான-விஷ்ணு வாசுதேவன் -நாராயணன் -என்னும் திரு நாமங்கள் யுண்டாய் இருக்க
வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் -என்று வஸ்து நிர்த்தேசம் செய்தார் இறே
இது இறே பிரமாணிகருக்கும் சாஷாத் கர பரருக்கும் உத்தேச்யம் –

யுன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த –
உன்னைக் கண்ட பாக்யாதிகர் -ஸூக தாதம் -என்னும்படி யான வ்யாசாதிகள் உடைய உபாசன மாத்ரங்கள் அன்றிக்கே
இதுவே இறே ஒரு படியாய் இரா நின்றதீ -என்று விஸ்மிதராய்
இவனைப் பெற்ற வயிறு யுடையாள்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ-என்று
பலகாலும் சொல்லும்படியான வார்த்தையால் வந்த பிரசித்தியை யுன்டாக்கித் தந்த –

நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால் வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் –
நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும் உண்டு இறே –
அவ்வளவு அன்றிக்கே லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் –
இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை –
எனக்கு உண்டாக்கித் தந்த

இருடீ கேசா முலை யுணாயே-
இந்த்ரியங்கள் வ்யக்தி அந்தரங்களிலே செல்லாதபடி சௌந்தர்யாதிகளாலே அபஹரிக்க வல்லவனே –
இருடீகேசா -கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாதபடி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –
முலை உணாயே-

இடையாலே
ஒன்றையும் பொறாத வைராக்யமும் –
இடை நோக்குவது
முலைகள் விம்மி பெருத்தல் ஆகையாலே மிக்க பக்தியையும்
விரி குழல் -என்கையாலே –
நாநா வானப் பிரபத்திகளை ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் -ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்
மேல் நுழைந்த வண்டு -என்கையாலே இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்
இன்னிசை -என்கையாலே
ஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்
இவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது திரு மாளிகையிலே ஆகையாலே இத்தை உகந்து அருளி
இனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-

—————————————————————————

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்கி நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 7- –

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
புத்ர சாபேஷராய் வர்த்திக்கிற ஸ்திரீகள் உன்னைக் கண்டால் அபஹ்ருத சித்தைகளாய்-
நாம் இப்படி ஒரு பிள்ளை பெறப் பெறுகிறோம் இல்லையே நமக்கு இது கூடுமோ என்கிற ஆசையோடு –
ஸ்வ பர்த்தாக்களுக்கு பார்யைகளாய் வர்த்திப்பராய் உன்னைக் கண்டவர்கள் –
உன்னைப் போலே இருக்கும் பிள்ளைகளை பெற வேணும் என்னும் ஆசையாலே கால் வாங்கி
போக மாட்டாதபடியாய் விட்டார்கள் –

கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
தம்தாமுடைய உத்தியோகங்களை மறந்து நில்லா நின்றார்கள் –

வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக் கொண்டு போவான் வந்து நின்றார்-
வேறு யுவதிகளாய் இருப்பார் வண்டு முழுகி முழுசும்படியான செவ்வி மாறாத மாலைகளாலே
அலங்க்ருதமான குழல்களையும் யுடையார் சிலர்
தம் தாமுடைய அபிமதங்களாலே ஸ்பர்சிப்பதாக நினைத்து
தங்கள் கண்களாலே சமுதாய சோபா தர்சனம் செய்து அணைத்து எடுத்து
வாக் அம்ருத சாபேஷைகளாய் கொண்டு போவதாக வந்து நில்லா நின்றார்கள் –
நீயும் அவர்களோடு போவதாக பார்த்து ஒருப்படா நின்றாய் –

வண்டுலாம் பூம் குழலினார் கண் இணையால் கலக்கி நோக்கி-பெருக்காற்றிலே இழிய மாட்டாமையால்
கரையிலே நின்று சஞ்சரிப்பாரைப் போலே
மதுவின் சமர்த்தியாலே உள்ளே அவஹாகிக்க மாட்டா வண்டுகள் ஆனவை மேலே நின்று சஞ்சரிக்கும் படி –
பூவாலே அலங்க்ர்தமான குழலை உடையவர்கள் –
தன்னுடைய கண்களால் உன்னுடைய சமுதாய சோப தர்சனம் செய்து –
கலக்க நோக்குகையாவது -ஓர் அவயவத்தில் உற்று நிற்கை அன்றிக்கே திருமேனியை எங்கும் ஒக்க பார்க்கை –

கீழ் -பெண்டிர் வாழ்வார் -என்று
பக்வைகளாய் பர்த்ர் பரதந்த்ரைதகளாய்-புத்திர சாபேஷைகளானவர்களை சொல்லிற்று –
இங்கு வண்டுலாம் பூம் குழலினார் என்று –
ப்ராப்த யவ்வனைகளாய்-போக சாபேஷைகளானவர்களை சொல்லுகிறது –
உன் வாக் அமிர்தம் புசிக்க வேண்டி -உன்னை எடுத்து கொண்டு போவதாக வந்து நின்றார்கள்-

கோவிந்தா நீ முலை யுணாயே –
நீ கோவிந்தன் ஆகையாலே அவர்களோடு போகவும் வேணும்
போம் போது- யுண்டு போகவும் வேணும் காண்-என்று பிரார்த்திக்கிறார் –
கோவிந்தா -சர்வ சுலபனாணவனே -உன் ஸுவ்லப்யத்துக்கு இது சேராது -நீ முலை உணாயே –

————————————————–

இருமலை போல் எதிர்ந்த மள்ளர் இருவர் அங்கம் எரி செய்தாய் உன்
திரு மலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே -2 2-8 – –

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய்-
ஷீராப்தியில் வந்து நலிவதாகக் கோலி
இரண்டு பெரிய மலை போலே கிளர்ந்து வந்த
மது கைடபர்கள் என்கிற இரண்டு மல்லரை
திரு வநந்த ஆழ்வானாலே உரு மாயும் படி எரித்துப் பொகட்டாய்-என்னுதல்-
கம்சனுடைய மல்லர் உன்னைக் கண்ட பய அக்னியாலே எரித்து விழும்படி செய்தாய் -என்னுதல் –
வடிவின் பெருமையாலும் -திண்மையாலும் இரண்டு மலை போலே வந்து
அறப் பொருவதாக எதிர்த்த சாணூர முஷ்டிகர் ஆகிற இரண்டு மல்லருடைய சரீரம் ஆனது
பய அக்னியால் தக்தமாம் விழும் படி பண்ணினவனே-

உன் திரு மலிந்து திகழ் மார்வு தேக்க –
திரு மலிந்து தேர்க்கும் உன் மார்வு திகழ –
மலிகை யாவது -க்ராம நிர்வாஹன் முதலாக
பஞ்சாசத் கோடி விச்தீர்ண அண்டாதிபதி பர்யந்தமான அளவன்றிக்கே
த்ரிபாத் விபூதியில் யுள்ளாரிலும் வ்யாவ்ருத்தையாய்
சர்வ பூதாநாம் ஈஸ்வரி -என்கிற சர்வாதிக்யத்தை யுடைய
பெரிய பிராட்டியாராலே நிரூபிக்கப் பட்ட உன் மார்பு திகழ –
இத்தால் -அவன் ஸ்ரீ யபதி -என்ன வேணுமே
மலிதல் -கிளப்பும்
தேர்க்கை -நிரூபகம்
திகழ்தல் -ஸ்ரீ யபதி -என்னும் விளக்கம்

உன் இத்யாதி -உன்னுடைய அழகு மிக்கு விளங்கா நின்று உள்ள மார்பானது
மலிதல் -மிகுதி —
திகழ்ச்சி -விளக்கம்
அன்றிக்கே-திரு என்று பிராட்டியை சொல்லுகிறதே -அவள் எழுந்து அருளி இருக்கையாலே
மிகவும் விளங்கா நின்று உள்ள உன்னுடைய மார்வு என்னவுமாம் –

தேக்க -தேங்க -முலைப்பாலாலே நிறையும்படியாக –
அன்றிக்கே
தேக்க -என்ற பாடம் ஆயிற்றாகில் -உன் மார்பில் முலைப்பால் தேங்க -என்கிறது –

என்னல்குல் ஏறி-
என் ஒக்கலையிலே வந்து ஏறி –என் மடியிலே வந்து ஏறி –

ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
ஒரு முலையைத் திருப் பவளத்திலே வைத்து-ஒரு முலையை திருக்கையிலே பற்றி நெருடிக் கொண்டு

இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே-
இரண்டு முலையையும் மாறி மாறி பால் வரவின் மிகுதி திருப் பவளத்தில் அடங்காமையாலே-விட்டு விட்டு என்னுதல்-
உடலை முறுக்கி ஏங்கி ஏங்கி என்னுதல்
அமர விருந்து யுண்ண வேணும் –
மிகுதி -திருப் பவளத்தில் அடங்காமையால் நடு நடுவே இளைத்து இளைத்து -அமர இருந்து –
அமுது செய்ய வேணும் –

———————————–

புழுதி அளைந்த ஆயாசத்தாலே வந்த வேர்ப்பு முகத்திலே காண வந்து
அமுது செய்ய வேணும் -என்கிறார் –

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வெயர்ப்ப தீமை செய்தீம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக வளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே -2 2-9 – –

போதகத்தில்-நிறத்தாலும் -மணத்தாலும் -செவ்வியாலும் -விகாசத்தாலும் அழகியதாய் இருக்கும் –
தாமரைப் பூவின் இடத்தில் -போது -புஷ்பம் -அகம் -இடம்
அணி இத்யாதி -நீர்மையாலும் -ஒளியாலும் -அழகாய் உடைத்தான முத்துக்கள் ஆனவை சிதறினால் போலே

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல் செங்கமல முகம் வியர்ப்பத் –
அழகிதாக மலர்ந்த தாமரைப் பூவினுள்ளே
செவ்வி மாறாத மது வெள்ளத்தை வண்டுகள் யுண்டு களித்து சிதறின மது திவலை முத்து போலே –
அச் செங்கமலம் போலே இருக்கிற திரு முகத்திலே வேர்ப்பு துளிகள் அரும்ப -என்னுதல்-
அங்கமலச் செங்கமல முகத்தில் ஒளியை யுடைத்தான முத்துக்கள் சிந்தினால் போலே வேர்ப்ப அரும்ப -என்னுதல்
அப்போது -கமலம் -என்று ஜலத்துக்கு பேராம்
அம் -என்று அழகு-

சிவந்து மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திரு முகமானது குறு வெயர்ப்பு அரும்பும்படியாக –

தீமை செய்து இம் முற்றத்தூடே அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா-
இப்போது முற்றத்தோடு அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா –
இப்போது திரு மேனி எல்லாம் புழுதியாக முற்றத்தின் நடுவே இருந்து அளைய வேண்டா-
இம்முற்றத்துள்ளே நின்று தீம்புகளை செய்து -உடம்பு எல்லாம் புழுதியாக இருந்து புழுதி அளைய வேண்டா –

வம்ம-
ஆச்சர்யம் -என்னுதல்
இவன் சேஷ்டித தர்சனத்தால் வந்த ஆசார்ய உக்தி ஆதல் –
ஸ்வாமி -என்னுதல் –

விம்ம அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை யுணாயே
அங்கு அமரர்க்கு விம்ம அமுதம் அளித்த அமரர் கோவானவனே
விம்மல் -நிறைதல் –
விம்ம-நிரந்தரமாக –
துர்வாச சாபோபஹதராய் அசுரர்கள் கையில் ஈடுபட்டு சாவாமைக்கு மருந்து பெறுகைக்கு
உன்னை வந்து ஆஸ்ரயித்த தேவர்களுக்கு -அத்தசையில் வயிறு நிரம்ப அம்ர்தத்தை இடுகையாலே
அவர்களுக்கு நிர்வாஹனானவனே-

முலை உணாயே –
அப்போது அவர்கள் அபேஷைக்கு அது செய்தால் போலே -இப்போது என்னுடைய
அபேஷைக்காக நீ முலை உன்ன வேணும் என்கை-

————————————————-

ஓட ஓட கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்து இட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி
ஓடி ஓடி போய் விடாதே உத்தமா நீ முலை உணாதே -2 2-10 – –

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே பாடிப் பாடி –
ஓசைக் கிண்கிணிகள் ஓடவோட ஆட ஒலிக்கும் பாணியாலே
பாணி -த்வனி –
கிண்கிணி ஒலிக்கும் பாணி தாளமாகப் பாடிப் பாடி –
அதனுக்கு ஏற்ற கூத்தை அசைந்து அசைந்து ஆடி –

ஓட ஓட இத்யாதி –
நடக்கும் போது மெத்தென நடக்கை அன்றிக்கே -பால்யத்துக்கு ஈடான செருக்காலே பதறி ஓட ஓட –
பாத சதங்கைகளான கிண் கிணிகள் த்வனிக்கும் -த்வநியாகிற சப்தத்தாலே
பாடிப்பாடி -அதனுக்கு ஏற்ற கூத்தை -அசைந்து அசைந்து இட்டு –
ஆடி ஆடி -அந்த பாட்டுக்கு தகுதியான ந்ர்த்தத்தை
திரு மேனி இடம் வலம் கொண்டு -அசைந்து அசைந்திட்டு நடக்கிற நடையாலே-ஆடி ஆடி –
கூத்தன் கோவலன் -இறே-நடக்கிற நடை எல்லாம் வல்லார் ஆடினால் போலே இறே இருப்பது –
ஆகையால் விரைந்து நடந்து வரும் போது -திருவடிகளில் சதங்கைகளின் உடைய ஓசைகள்
தானே பாட்டாய்-நடக்கிற நடை எல்லாம் ஆட்டமாய் இருக்கும் ஆய்த்து –
அன்றிகே –
கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசை தாளமாய் -வாயாலே பாடிப் பாடி -அதனுக்கு ஏற்ற
கூத்தை அசைந்து அசைந்திட்டு ஆடி ஆடி என்று பொருளாகவுமாம்

வருகின்றாயைப்
வருகிற யுன்னை –

பற்பநாபன் என்று இருந்தேன் –
கீழே பற்பநாபா சப்பாணி -1-7-5-என்றத்தை நினைத்து
பற்ப நாபன் என்று இருந்தேன் -என்கிறார் –
ஜகத் காரண வஸ்துவான மேன்மையை நினைந்து இருந்தேன் –
அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்றும்படி பிள்ளைத்தனத்தால் வந்த நீர்மை மாத்ரம் அன்றிக்கே
அதிமாத்ரமான இந்த லீலா ரசம் எல்லாம் வேணுமோ -வாராய் -என்ன –

வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் –
இப்படி என்னை நோக்கி வாரா நின்றுள்ள
உன்னை -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -என்கிறபடியே வேறு ஒரு ஆபரணம் வேண்டாதே –
திரு நாபி கமலம் தானே ஒரு ஆபரணம் ஆம்படி இருப்பான் ஒருவன் அன்றோ –
இவனுக்கு வேறு ஒரு ஆட்டும் பாட்டும் வேணுமோ –
சதங்கை ஓசையும் நடை அழகும் தானே பாட்டும் ஆட்டுமாய் இருந்தபடி என்-என்று
ஆச்சர்யப்பட்டு இருந்தேன் -என்னுதல்
அழிந்து கிடந்ததை உண்டாக்கும் அவனன்றோ -நம்முடைய சத்தியை தருகைக்காக வருகிறான் என்று
இருந்தேன் -என்னுதல்-

ஆடியாடி யசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே –
ஒடப்புகுந்தான் –
தாமும் அடிப்பதாக செல்ல ஓடி ஓடி போகிறதைக் கண்டு
போகாதே கொள்ளாய்-நீ உத்தமன் அன்றோ -முலை யுண்ண வாராய் -என்கிறார் –
புருஷோத்தமத்வம் ஆவது -ஆஸ்ரித பாரதந்த்ர்யம் போலே காணும்
இத்தால் அப்ராப்ய மனசா சஹ -என்று வேதங்களுக்கு எட்டாமல் போனால் போலே
பரம வைதிக அக்ரேசரராய் இருக்கிற இவர்க்கும் எட்டாமல் போகலாமோ என்று தோற்றுகிறது-

ஓடி ஓடி இத்யாதி -இவள் சொன்னதின் கருத்து அறியாதே -இவள் நம்முடைய நீர்மையை சொல்லாமல் –
ஸுவ்ந்தர்ய பிரகாசமான மேன்மையை சொல்லுவதே -என்று -மீண்டு ஓடிப் போக தொடங்குகையாலே-
இப்படி ஆடி ஆடி கொண்டு என் கைக்கு எட்டாதபடி -ஓடி ஓடி போய் விடாதே -நீ புருஷோத்தமன் ஆகையாலே –
ஆஸ்ரித பரதந்த்ரனான பின்பு -என் வசத்திலே வந்து -என் முலையை உண்ண வேணும் -என்கிறாள் –

ஓசை கிண்கிணிகள் ஓடவோட ஆடியாடி ஒலிக்கும் பாணியாலே
பாடிப் பாடி அதனுக்கு ஏற்ற கூத்தை யசைந்து யசைந்திட்டு
ஆடியாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே -என்று அந்வயம் –

———————————————————————–

நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்றசிந்தை பெறுவார் தாமே -2 2-11 – –

வாரணிந்த கொங்கை யாச்சி –
ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை
பரிசாரகர் ஆனவர்கள் கட்டி இலச்சினை இட்டு கொண்டு திரிவாரைப் போலே இறே
கிருஷ்ணனுக்கு அபிமதமான முலைகள் கச்சிட்டு சேமித்து வைத்து -என்னும் இடம் தோன்ற
வாரணிந்த கொங்கை யாச்சி -என்கிறார்
புத்ரவத் ஸ்நேஹம் நடக்கும் போது ராஜவத் உபசாரமும் வேணும் இறே
வார் -கச்சு –

ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை பரிசாரகரானவர்கள் கட்டி
இலச்சினை இட்டுக் கொண்டு திரியுமா போலே -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு போக்யமான முலைகள் பிறர்
கண் படாதபடி கச்சாலே சேமித்துக் கொண்டு திரிகையாலே -வாராலே அலங்க்ர்தமான முலையை
உடையவளான ஆய்ச்சி என்று ஸ்லாகித்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –

மாதவா யுண் என்ற மாற்றம் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே அவாப்த சமஸ்த காமன் ஆனவனை இறே
முலை யுண்ண வா -என்று ஆச்சி அழைத்ததும் –அவள் அளித்த பிரகாரங்களை-

மாதவா உண் என்ற மாற்றம் -ஸ்ரீ யபதி யாகையாலே -அவாப்த சமஸ்த காமனான அவனை –
அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு ஈடாக முலை உண் என்ற சப்தத்தை –

நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர் –
நீருக்கு அலங்காரமாக மலர்ந்த செங்கழு நீரில் மிக்க பரிமளம் ஒருபடிப்பட தோன்றுகிற
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகராய்-

பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார் –
பூமியில் யுண்டான ராஜாக்களுக்கு எல்லாம் பிரதானனான
ஸ்ரீ வல்லபன் -செல்வ நம்பி -முதலானோர் கொண்டாடும் படியுமாய்
அநாதி சித்தமான மங்களா சாசன பிரசித்தியையும் யுடையவர் –
பட்டர் பிரான் –
சத்ய வாதிகளான ப்ராஹ்மன உத்தமர்க்கு உபகாரகர் ஆனவர்
பாடல் வல்லார் –
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும்
இவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே பாட வல்லார்-

பூமியில் ராஜாக்களுக்கு பிரதானனான பாண்டியனும் –
ஞாதாக்களில் பிரதானரான செல்வ நம்பி தொடக்கமானவர்கள் அன்றிக்கே
பூமி எங்கும் கொண்டாடும்படி வ்யாப்தமாய் -வந்தேறி அன்றிக்கே -ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான
புகழை உடையராய் ப்ராஹ்மன உத்தமரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த பாடலை அப்யசிக்க வல்லவர்கள் –

சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே —
பாட வல்லார் தாமே சென்ற சிந்தை பெறுவார்
சீர் –
ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
செங்கண் –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த ஐஸ்வர்யம் -ஆதல்
பெருமை யாதல்
வ்யாமோஹம் ஆதல் –

ஆத்ம குணங்களாலே அலங்க்ர்தனாய்-அவயவ சோபைக்கு பிரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையனாய் –
இவை இரண்டையும் ஆஸ்ரிதர் அனுபவிக்கும்படி அவர்கள் பக்கல் வ்யாமோகத்தை உடையவனாய் -இருக்குமவன் விஷயத்தில் –
அன்றிக்கே –
சீர் இத்யாதிக்கு -ஆஸ்ரித பாரதந்த்ரம் ஆகிற குணத்தாலே அலங்க்ர்தனாய் -இந்நீர்மைக்கும் மேன்மைக்கும்
ப்ரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையவனாய் -சர்வ ஸ்மாத்பரனாய் -இருக்குமவன்
விஷயத்திலே என்று பொருளாகவுமாம்
சென்ற இத்யாதி -பாடல் வல்லார் தாம் செங்கண் மால் பக்கலிலே ஒருபடி படச் சென்ற மனசை உடையவர் ஆவர்

ஜல சம்ருதி மாறாத செங்கழு நீரைச் சொல்லுகையாலே
மங்களாசாசன குணத்திலே ஒருப்பட்ட ஸூமநாக்களையும்-
நிகழ் நாறும் -என்கையாலே -அவர்களுடைய பிரசித்தியையும் சொல்லுகிறது –

————————————————————————————-

அவதாரிகை –3-1-
திரு ஆய்ப்பாடியிலே ப்ராப்த யவனைகளாய் லீலா பரைகளாய் திரிகிற –
பெண்கள் திறத்திலே அவன் -துச்சஹமான தீம்புகளை செய்து -தணலை நலிகிற பிரகாரத்தை –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
தாமும் அவர்களைப் போலே பேசி –
அவனுடைய அந்த லீலா அனுபவ ரசத்தை அனுபவித்தாராய் நின்றார் கீழ் –2-10-

மாதர் ஸ்நேஹத்தாலே பலகாலும் அவனை அம்மம் உண்ண அழைத்தும் –
அம்மமூட்டியும் போரும் ஸ்ரீ யசோதை பிராட்டி –
அவனுடைய பருவத்தின் இளமையையும் –
அதுக்கு அநுரூபம் அல்லாதபடியான – அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் கண்டு –
அவனை -தன்னுடைய பிள்ளை -என்று நினைந்து இருக்கை தவிர்ந்து –
அநியாம்யனாய் அப்ரதிஹத லீலா ரச பரனான சர்வேஸ்வரன் -என்று அனுசநதித்து –
அவனைக் குறித்து அவை தன்னைச் சொல்லி –
உனக்கு அம்மம் தர அஞ்சுவன் -என்று பல காலும் பேசின பாசுரத்தை –
தத் அவஸ்தா பன்னராய் கொண்டு –
தாமும் அப்படி பேசி –
அந்த ரசத்தை அனுபவிக்கிறார்
இத் திருமொழியில் –

——————————————————-

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்
பொன் ஏய் நெய்யோடு பால் அமுதுண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 – –

அன்னே -அம்மே என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை
தன்னேர் இத்யாதி –
கிருஷ்ணன் திரு ஆய்ப்பாடியிலே வந்து அவதரித்த போது அவனோடு ஒக்க ஆயிரம் பிள்ளைகள்
சேரப் பிறந்தார்கள் -என்று சொல்லுவதொரு பிரசித்தி உண்டு இறே
பிறப்பாலும் வளர்ப்பாலும் வயஸ்சாலும் வளர்த்தியாலும் -அந்யோந்யம் உண்டான ஸ்நேகத்தாலும் –
தன்னோடு ஒக்க சொல்லலாம்படி இருப்பார் ஆயிரம் பிள்ளைகளோடு ஆய்த்து தளர் நடை இட்டு வருவது –
பால்யாத் பிரபர்த்தி சுச்நிக்த – என்று பால்யம் தொடங்கி ஸ்ரீ பெருமாளை
ஒழிய தரிக்க மாட்டாத ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே -இவர்களும் பால்யமே தொடங்கி
இவனை ஒழிய தரிக்க மாட்டாத சிநேகத்தை உடையராய் -எப்போதும் ஒக்க கூடித் திரிகையாலே
இவர்களோடு கூடியே தளர் நடை இட்டு வருமவனே -என்று சம்புத்தி

பொன் ஏய் நெய்யோடு பால் அமுதுண்டு –
செவ்வி குன்றாமல் உருக்கி துஞ்சினது ஆகையாலே பொன்னோடு ஒத்த நிறத்தை உடைத்தான
நெய்யோடு -ரச்ச்யமான பால் அமுதை உண்டு –

ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
புள்ளுவம் ஆவது -மெய் போல் இருக்கும் பொய் —
உண்டு இருக்க செய்தே -உண்டிலேன் -என்கையாலே -அசத்யவாதி -என்று தோற்றும் இறே –
ஒரு புள்ளுவன் -என்றது -களவுக்கு அத்வதீயன் -என்றபடி
பொய்யே தவழும் –
தளர் நடை இட்டுத் திரிகிறவன் -அதுக்கு ஷமர் அல்லாதாரைப் போலே –
தவழுகிறதும் -க்ரித்ரிமம் என்று தோற்றும் இறே -ஆகை இறே பொய்யே தவழும் -என்ற இது –
இதுவும் பொய்யே தவழும் ஒரு புள்ளுவனே-என்று சம்புத்தி

மின்னேர் இத்யாதி –
பெற்ற தாய் வருகையாலே மின்னொடு ஒத்த நுண்ணிய இடையும் வஞ்சனத்தையும்
உடையளான பேய்ச்சி யானவள் முடியும் படி -அவள் முலையிலே திருப் பவளத்தை வைத்துண்ட உபகாரகன் ஆனவனே
இவ்விடத்தில் உபகாரம் ஆவது –
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரான தன்னை முடிக்க வந்தவளை நிரசித்து -தன்னை நோக்கி தந்த இது இறே

அன்னே
அதாவது -அம்மே -என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை
உன்னை அறிந்து கொண்டேன் –
முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை
உனக்கு தாரகாதிகளாகவும் நினைத்து இருந்தேன் -உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன்
நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
இப்படி இருக்கிற உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
தவழுகை பொய் என்றவோபாதி அம்மம் என்கிற இவன் சொலவும் பொய் என்று தோற்றா நிற்கச் செய்தேயும்
அவன் சொலவை அனுசரித்து சொல்கிறாள்

—————————————

பொன் போல் மஞ்சனமாட்டி யமுதூட்டிப் போனேன் வரும் அளவு இப்பால்
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 – –

பொன் இத்யாதி
திருமேனி அழகு விளங்கும்படியாக திரு மஞ்சனம் செய்து –
என் இளம் கொங்கை அமுதூட்டி-என்கிறபடியே அமுது செய்யப் பண்ணி –
யமுனை நீராடப் போனேன் -என்கிறபடியே
யமுனை யாகிற ஆற்றிலே குளிப்பதாக போன நான் வருவதற்கு முன்னே –

வல் பாரச் சகடம் இறச் சாடி –
வலியதாய் கனவிதாய் இருக்கிற சகடமானது கட்டுக் குலைந்து முறியும் படியாக –
முலை வரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்த திருவடிகளாலே உதைத்து –
வடக்கில் அகம் புக்கு இருந்து -இவ்வகத்துக்கு வட அருகில் அகத்திலே புக்கு இருந்து –
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை –
மின் போலே நுண்ணியதான இடையை உடையளாய்-நவ யவ்னையாய் இருப்பாள் ஒருத்தியை

வேற்று உருவம் செய்து வைத்த –
சம்போக சிஹ்னங்களாலே விகர்த வேஷையாம்படி பண்ணி வைத்த
அன்பா
கண்டது ஒன்றிலே மேல் விழும்படியான சிநேகத்தை உடையவனே
இத்தால்
தீம்பன் -என்ற படி –
உன்னை அறிந்து கொண்டேன் –
இவன் நம்மோடு சஜாதீயன் அல்லன் -வ்யாவர்த்தன் என்று உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன் –
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————–

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3- –

கும்மாய இத்யாதி –
குழைய சமைத்து வைத்த -பருப்போடு வெண்ணெயையும் சேர விழுங்கி
குடத்தயிர் இத்யாதி –
குடத்திலே நிறைந்த தயிரை-அத்தோடு சாய்த்து -அமுது செய்தது –
பொய் இத்யாதி –
தங்கள் வேஷம் அது அன்றிகே இருக்க செய்தே -பொய்யே ஆஸ்ரயமான மருதுகளாய் நின்ற
அசுரர்களை மறிய விழுந்து முறியும்படி பண்ணி
இன்று நீ வந்தாய் –
இப்போது ஒன்றும் செய்யாதவரைப் போலே நீ வந்தாய்
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ –
இந்த ஆச்சர்யங்களை செய்ய வல்லவனாய்-பிள்ளைத் தனத்தால் பூர்ணம் ஆனவனே

உன் என் மகனே என்பர் நின்றார் –
இப்படி இருக்கிற உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்-என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் –
நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –
எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் -உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்

——————————————————–

மையார் கண் மட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்தவர் பின் போய்க்
கொய்யார் பூம் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்தக்குள் கேட்டேன்
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-4 – –

கொய்யார் பூம் துகிலாவது -புடைவைகளின் கொய்ச்சகம்
மையார் இத்யாதி –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமான கண்களையும் –
ஆத்ம குணங்களில் பிரதானமான மடப்பத்தையும் -குடிப் பிறப்பையும் உடையரான பெண்களை –
மையன்மை செய்து –
உன் பக்கலிலே ஸ்நேகிதிகளாய் -தாய்மார் முதலானாருக்கு வசவர்த்திநிகள் ஆகாதபடி
உன்னுடைய ஸௌந்தர்யாதிகளால் பிச்சேற்றி –
அவர் பின் போய் –
அவர்களுடையே பின்னே போய்
கொய்யார் பூம் துகில் பற்றி –
கொய்தல் ஆர்ந்து இருந்து உள்ள அழகிய பரியட்டங்களை பிடித்து –
இத்தால் –
அவர்கள் பரியட்டங்களின் கொய்சகங்களைப் பிடித்து கொண்டு -அவர்கள் பின்னே போய் -என்கை

தனி நின்று குற்றம் பலபல செய்தாய் –
ஏகாந்த ஸ்தலத்திலே நின்று -அவஸ்யமான வியாபாரங்களை அபரிகங்யமாம்படி செய்தாய்
ஆவது என் -நான் ஒரு குற்றமும் செய்திலன் -நீ மாற்றுக் கண்டாயோ என்ன –
பொய்யா -இத்யாதி –
க்ரித்ரிமனே -உன்னைப் பொல்லாங்கு பலவற்றையும் பிறர் சொல்லும் அவைகள்
ஒரு புஸ்தகம் நிறைய எழுத தக்கவை கேட்டேன்
அவர்கள் சொல்லுவதும் நீ கேட்டதுமேயோ சத்யம் -நான் சொன்னதன்றோ சத்யம் -என்ன
ஐயா இது என்ன தெளிவு தான் என்று கொண்டாடுகிறாள்
அன்றிக்கே
ஐயா என்று க்ரித்மர்க்கு எல்லாம் ஸ்வாமி யானவனே என்கிறாள் ஆதல்
உன்னை அறிந்து கொண்டேன்
உன்னை அதி லோகமான வுக்தி சேஷ்டிதங்களை உடையவன் என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————–

முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் யினோடு தயிரும் விழுங்கிக்
கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த காலத்தோடு சாய்த்துப் பருகி
மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மி விம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 5- –

கப்பால்-தோளாலே
முப்போதும் இத்யாதி –
எப்போதும் கறப்பன கடைவனவாய் செல்லும் போலே காணும் திரு ஆய்ப்பாடி –
சிறு காலையும் உச்சியும் அந்தியும் ஆகிற மூன்று பொழுதும் கடைந்து திரண்ட
வெண்ணெய் யோடே-அக்காலங்கள் எல்லாவற்றிலும் உண்டான செறிய தோய்த்த தயிரையும் விழுங்கி –
கப்பால் இத்யாதி –
தோளாலே இடையர் காவில் கொண்டு வந்த பால்களை -கொண்டு வந்த பாத்ரத்தோடே சாய்த்துப் பருகி
மெய்ப்பால் இத்யாதி –
உடம்பில் முலைப்பால் தாரகமாக உண்டு- அது பெறாத போது அழும் பிள்ளைகளைப் போலே
என் இளம் கொங்கை அமுது உண்கைக்கு நீ பொருமிப் பொருமி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் –
இந்த அதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய பெரியோனே -உன்னை
மனுஷ்ய ஜாதி அல்லன் -என்று அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி
ஆன பின்பு உனக்கு அஞ்சம் தர அஞ்சுவன்

——————————————-

கரும்பார் நீள் வயல் காய் கதிர் செந் நெலைக் கன்று ஆநிரை மண்டி தின்ன
விரும்பா கன்று ஓன்று கொண்டு விளம் கனி வீழ எறிந்த பிரானே
கரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும்
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 6- –

கரும்பு இத்யாதி –
பரந்த வயலிலே கரும்பு போலே எழுந்து பசும் காயான கதிரை உடைய செந் நெல்லை
கற்றாநிரை –
கன்றுகளோடு கூடின பசு நிரையானது –
மண்டித்தின்ன –
விரும்பி மேல் விழுந்து -தின்னா நிற்கச் செய்தே

விரும்பா கன்று ஓன்று கொண்டு –
தானும் தின்பாரைப் போலே பாவியா நிற்க செய்தே -தின்கையில் விருப்பம் இல்லாததொரு கன்றைக் கொண்டு –
விளம் கனி வீழ எறிந்த பிரானே –
ஆகர்ஷமாம்படி பழுத்து நின்ற விளாவினுடைய பழங்கள் சிதறி விழும்படி எறிந்த உபகாரகனே –
ஓர் அசுரன் கன்றாய் வந்து நிற்க -ஓர் அசுரன் விளைவாய் வந்து நிற்க –
இத்தை அறிந்து -ஒன்றை இட்டு ஒன்றை எறிந்து -இரண்டையும் நிரசித்து பொகட்ட -உபகாரத்தை சொல்லுகிறது –

கரும்பார் இத்யாதி –
எப்போதும் ஒக்க பூ மாறாமையாலே வண்டுகளானவை நெருங்கப் படிந்து –
கிடக்கும்படி இருப்பதாய் -மிருதுவாய் இருந்து உள்ள குழலை உடையளாய்-
நவ யவ்னையாய் இருப்பாள் ஒருத்திக்கு

சூழ் வலை வைத்து திரியும் அரம்பா –
வாசுதேவன் வலை -என்றும் –
தாமரைத் தடம் கண் விழிகளினகவலை -என்றும் –
காரத் தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு –என்றும் சொல்லுகிறபடியே
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் திருக் கண்கள் ஆகிற வலையை
எப்போதும் ஒக்க அவள் விஷயத்தில் வைத்து -அகப்படும் அளவும் –
அந்ய பரரைப் போலே சஞ்சரிக்கிற தீம்பன் ஆனவன்

உன்னை அறிந்து கொண்டேன் –
ஏவம் பூதனானவனை நன்றாக அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————-

மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லான் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-7 – –

மருட்டார் இத்யாதி –
கேட்டவர்களை மற்று ஓன்று அறியாதபடி மருளப் பண்ணுதலால் மிக்கு இருப்பதாய்
அவர்கள் செவியைப் பற்றி வாங்கும்படியாய் மிருதுவான த்வனியை உடைத்தான வேய்ங்குழலைக் கொண்டு –
போகத்துக்கு ஏகாந்தமான பொழிலிலே போய்ப் புக்கு திருப் பவளத்திலே வைத்தூதி
அவ்வாயர் இத்யாதி –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் -என்று பெண்களை காத்துக் கொண்டு திரியும் -அவ்விடையருடைய ஊரில்
சுருட்டார் இத்யாதி –
சுருண்டு பூவாலே அலங்க்ருதமாய் -மிருதுவாய் இருந்துள்ள குழலை உடைய பெண்கள்
ஆனவர்கள் குழலோசையாலே ப்ரேரிதராய் வந்து உன்னை சூழ நின்று தொழ –
அத்தால் வந்த தேஜசை உடையனாய் நின்றவனே –

பொருள் தாயம் இத்யாதி –
என்னுடைய நாதனானவனே-இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய
இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன -எறிவார்களோடு ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்
இப்படி தீம்பனானவனே-உன்னை நன்றாக அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

————————————

வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதவன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –

வாளா இத்யாதி
நீ தீம்பு செய்யாது இருக்கிலும் -உன் மினுக்கம் பொறாதவர்கள் வெறுமனே ஆகிலும்
உன்னை காண வேண்டார்கள் -அதுக்கு மேலே –
பிறர் மக்களை மையன்மை செய்து –
பிறருடைய பெண்களை உன்னுடைய இங்கிதாதிகளாலே அறிவு கேட்டை விளைவித்து
தோளால் இட்டவரோடு திளைத்து
தோளாலே அணைத்திட்டு அவர்களோடே நின்று விளையாடி
நீ சொல்லப்படாதன செய்தாய் –
வாக்கால் சொல்ல ஒண்ணாத வற்றை நீ செய்தாய்

கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி
இடைக்குலத்தில் உள்ளவர்கள் இப் பழி கேட்க பொறார்கள்
கெட்டேன் வாழ்வு இல்லை –
கெட்டேன் இவ் ஊரில் எனக்கு ஒரு வாழ்வு இல்லை
அதாவது இவ் ஊரில் வர்த்திக்கப் போகாது என்கை
கெட்டேன் என்றது -விஷாதி அதிசயத்தாலே கை நெரித்து சொல்லுகிற வார்த்தை

நந்தன் காளாய்
பசும் புல்லுசாவம் மிதியாதே ஸ்ரீ நந்தகோபர் பிள்ளையான நீ இப்படி செய்யக் கடவையோ
அன்றிக்கே –
அவர் உன்னை நியமித்து வளர்க்காமை இறே நீ இப்படி தீம்பனாய் ஆய்த்து என்னுதல்-
உன்னை அறிந்து கொண்டேன் –
பருவம் இதுவே இருக்க -செய்கிற செயல்கள் இது வாகையாலே உன்னை
நாட்டார் படி இல்லை -என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்

——————————————————-

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-9 – –

தாய்மார் இத்யாதி –
பெண்களை அகம் பார்க்க வைத்து -தாய்மாரானவர்கள் மோர் விற்க போகா நிற்ப்பார்கள் –
இடையர்க்கு ஐஸ்வர்யம் மிக உண்டானாலும் இடைச்சிகள் மோர் விற்று ஜீவிக்கும் அது இறே
தங்களுக்கு தகுதியான ஜீவனமாக நினைத்து இருப்பது -மோர் தான் விற்கை அரிதாய் இருக்கும் இறே
திரு ஆய்ப்பாடியில் பஞ்ச லஷம் குடியிலும் கறப்பன கடைவன குறைவு அற்று இருக்கையாலே
அசலூர்களிலே போய் விற்க வேண்டுகையாலே -இக்கால விளம்பம் இவனுக்கு அவகாச ஹேதுவாய் இறே இருப்பது

தமப்பன்மார் இத்யாதி –
தாய்மார் போனால் தமப்பன்மார் தான் இருந்தாலும் இவனுக்கு நினைத்தபடி செய்யப் போகாதது இறே –
அதுவும் இல்லாதபடி தமப்பன்மார் ஆனவர்கள் கற்றா ஆநிரையின் பின்னே போகா நிற்ப்பார்கள் –
அவை மேச்சல் உள்ள இடங்களிலே தூரப் போகையும்-
இவர்கள் வரத்தை நியமியாமல் அவற்றின் பின்னே போகையும் –
அவை மேய்ந்து வயிறு நிறைந்தால் அல்லது மீளாது ஒழிகையும்-
அவை மீண்டால் அவற்றின் பின்னே இவர்கள் வருகையுமாம் இறே இருப்பது –
ஆகையால் இந்த கால விளம்பமும் இவனுக்கு அவகாசம் இறே

நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர் படவே கொண்டு போதி –
நீ திரு ஆய்ப்பாடியிலே யுவதிகளான பெண்களை உன் நினைவுக்கு வாய்க்கும்படி கொண்டு போதி
அதாவது –
உனக்கு அபிமதமான ஸ்தலங்களிலே கொண்டு போகா நின்றாய் -என்றபடி –
தாய்மார் தகப்பன்மார் போகையாலும்-கால விளம்பம் உண்டாகையாலும் –
அவ்வகம் தானே அபிமத ஸ்தலமாய் இருக்க செய்தேயும் –
ப்ராமாதிகமாக ஆரேனும் வரக் கூடும் -என்று இறே ஸ்த்லாந்தரம் தேடித் போக வேண்டுகிறது –

காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து –
உன் குணத்திலும் தோஷத்தை ஆவிஷ்கரிக்கும் அவர்களாய்-உன் பக்கல் த்வேஷ பரராயே போரும்
சிசுபாலாதிகளுக்கு -சொல்லி பரிபவிக்கைக்கு – இடம் பெற்றோம் -என்று சர்வ காலமும்
உகக்கும்படியானவற்றை செய்து
கண்டார் கழறத் திரியும் மாயா –
காய்வார் அன்றிக்கே -உனக்கு நல்லவர்களாய் நீ செய்கிற வியாபாரங்களை கண்டவர்கள்
நீ செய்கிற தீம்பு பொறாமல் நியமிக்கும்படி திரியா நிற்கிற ஆயனே –
குல மரியாதை தன்னையும் பார்கிறிலையே என்கை –
உன்னை அறிந்து கொண்டேன் –
நீ இப்படி திரிந்தாய் ஆகிலும் உன்னுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை கண்ட பின்பு –
உன்னை மனுஷ்ய சஜாதீயன் அல்லன் -என்று அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி –
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————

தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –

தொத்தார் இத்யாதி
கொத்தாய் சேர்ந்து உள்ள பூக்களாலே அலங்க்ர்தமான குழலை உடையளாய் –
திரு ஆய்ப்பாடியில் உள்ள பெண்களில் காட்டிலும் -இன்னாள்-என்று குறிக்க படுவாள் ஒருத்தியை –
சோலைத் தடம் கொண்டு புக்கு –
இடம் உடைத்தான சோலையிலே கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து –
முத்து வடத்தாலே அலங்க்ர்தமான முலைகளிலே சம்ச்லேஷித்து
இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய் –
ராத்திரி மூன்று யாமம் அற்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை –
உன் செயல் இதுவாகையாலே வேண்டுவார்க்கு வேண்டுவது சொல்லுவர் உன்னை –
உனக்கு தோஷம் சொல்லுவார்க்கு எல்லாம் இடம் ஆம்படி செய்யா நின்றாய் -என்கை

உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன் –
இப்படி இருக்கிற உன்னை கோபிக்க என்றால் நான் ஏக தேசமும் ஷமை ஆகிறேன் அல்லேன் –
பிள்ளைகள் தீம்பு கண்டால் தாய்மார் சிஷியார்களோ –
உன்னுடைய முகம் கன்றும் -என்னும் அத்தாலே அது என்னால் செய்யப் போகிறது இல்லை
அத்தா
என்னுடைய நாதனை
உன்னை அறிந்து கொண்டேன் –
உன்னுடைய அதிமானுஷம் கண்ட பின்னை -அநியாம்யன் -என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

——————————————————-

நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

காரார் மேனித் நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே -3-1 11- –

காரார் இத்யாதி –
மேகத்தோடு சேர்ந்த திருமேனியின் நிறத்தை உடையனாய் -எனக்கு உபகாரகன் ஆனவனை –
கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி-
நறு நாற்றம் கமழா நின்று உள்ள அழகிய குழலை உடைய ளான யசோதை பிராட்டி
ஆரா இத்யாதி –
ஒருகாலும் தெகுட்டாததாய்-இனிதாய் இருந்துள்ள -என் இளம் கொங்கை அமுது
உண்ண முன்பும் தந்து மேலும் தருவாளாய் இருந்த நான் உன்னை அறிந்து கொண்ட பின்பு
உனக்கு அம்மம் தாரேன் அஞ்சுவன் -என்று சொன்ன சொலவை
பாரார் இத்யாதி –
விசேஷஞ்சரோடு அவிசேஷஞ்சரோடு வாசி அற-இருந்தார் இருந்த இடம் எங்கும் –
கொண்டாடுகையாலே பூமி எங்கும் நிறைந்து இருப்பதாய் -ஸ்வாபாவிகமான புகழை உடையராய் –
ஸ்ரீ திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான
ஏரார் இத்யாதி –
இயல் அழகால் மிக்கு -அதுக்கு மேலே இனிய இசையோடு கூடி இருந்து -உள்ள சந்தர்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்கள்
இருடீகேசன் அடியாரே –
இந்திரியங்களை பட்டி புகாமல் ஸ்வரூப அநுரூபமாக நடக்கும்படி நியமிக்கும் அவனுக்கு
நித்ய கிங்கராய் பெறுவர்-

————————————————————–

சந்த மலர்-10-4- -பிரவேசம் –

ஸ்ரீ ராமாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு இறே-ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –
த்வேஷத்துக்கு எல்லையானார்க்கும் இசைய வேண்டும்படி இருக்கிற
ஸ்ரீ ராமாவதாரத்தில் விஜயத்துக்கு தோற்றவர்கள் பாசுரத்தாலே
அனுபவித்தார் கீழ் –
ராகத்துக்கு எல்லையான யசோதைப் பிராட்டி பாசுரத்தாலே
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை
அனுபவிக்கிறார் இதில் –

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-

சந்த மலர்க் குழல் தாழத் தான்-
செவ்விப் பூக்களாலே அலங்கரித்து வைப்பார்கள் இறே திருக் குழல்களை –
சந்தம் -என்று அழகாயிற்று –
வெறும் புறத்திலே ஆகர்ஷகமான குழல் –

தாழ –
பூவாலே அலங்க்ருதமாய்
பேணாமையாலே அலைந்து வர-

உகந்தோடித் –
ஆதரித்து அபி நிவேசத்தாலே ஓடி –

தனியே வந்து –
பலதேவன் என்னும் தன தம்பியோடத் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் திரு மொழி -1-8-5-
என்கிறபடியே இருவரும் கூட வாயிற்று முலை உண்ண வருவது –
கூடவரில் இருவருக்கும் ஒரோ முலையாம் என்று தனியே வந்து –

என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து –
அவை தனக்கு போகமாய் இருக்கிறபடி –
பாலாலே நிரம்பின முலையை -தடத்தை என்னாதே –
தடம் தன்னை -என்கிறதால் பாலால் நிரம்பியவை என்றதாய்த்து –

நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே –
குணைர் தசரதோபம –
பரம பதத்தில் உள்ள ஸ்வாபாவிக குணங்களும்
அவதரித்து ஆர்ஜித்த குணங்களும்
கூடினால் சக்கரவர்த்தியோடு உபமானமாக மட்டமாய் நிற்கும் இத்தனை -என்று
இத்தை ஜீயர் அருளிச் செய்ய –
பரம புருஷனுக்கு ஓர் இடத்தே பிறந்து ஒரு குணம் தேட வேண்டுமோ -என்றார்
சுந்தர பாண்டிய தேவர் –
நாம் ஓடுகிற நரம்பு இவன் அறிந்திலன் -என்றத்தை விட்டு
பரம புருஷன் என்ற போதை அழகு இருந்தபடி என் -என்றாராம்
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் இல்லாதார்
பகவத் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் அர்த்தவாதம் என்று இருப்பார்கள் –
அது உடையவர்கள் பகவத் பிரபாவத்துக்கு அவதி இல்லாமையாலே
சொன்னவை சில சொன்ன அத்தனை -சொல்லாததுவே பெரிது -என்று இருப்பார்கள் –
சத்யே நாதி வததி-இறே –

நந்தன் பெறப்பெற்ற நம்பி –
ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி –
இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே –
பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது
தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் –
பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே
அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் –

நானுகந்து உண்ணும் அமுதே -எந்தை பெருமானே உண்ணாய்-
தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி –
என் குல நாதனே –
நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள் –

என் அம்மம் சேமம் உண்ணாயே –
என்னுடைய அம்மம் ஆகிற சேமத்தை –
சேமம் எடுத்தது -என்னக் கடவது இறே –
ராஜாக்களுக்கு காவலோடே வரும் சோறாயிற்று சேமம் ஆகிறது –

—————————————————–

வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே–10-4-2-

வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
மரக் கலங்களோடு கூடி
ஓதம் கிளர்ந்த கடல் போன்ற வடிவை உடையவனே –
வடிவு அழகுக்கு போலி தேடப் புக்கால்
அங்கும் இங்கும் கதிர் பொறுக்க வேண்டும்படியான
பூர்த்தியை உடையவனே

செங்கண்-
அவயவ சோபையோ தான் சொல்லி முடியலாய் இருக்கிறது –
நெடிய திருவே –
சர்வாதிக வஸ்துவை -திரு -என்று போலே காணும் சொல்லுவது –

செங்கமலம் புரை வாயா –
எல்லா அவயவமும் அப்படியேயாய் இருப்பது –

கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன் –
நீயோ பாவஞ்ஞனாய்
தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே
நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் –

எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே –
எங்கே புக்கிருந்து
உன் பக்கல் நிரபேஷரானார் உடன் –
சாபேஷையாய் நான் பார்த்து இருக்க –
என்ன விளையாட்டு விளையாடுகிறது –

—————————————————–

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய்—10-4-3-

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ –
சம்பத்தால் மிக்கு
வடிவு அழகிலும் உன்னோடு ஒத்த
தன்னேராயிரம் பிள்ளைகளோடு
தெருவிலே இருந்து விளையாடுகிற விளையாட்டுக்கு அவதி இல்லாதவனே
முலை உண்ணுகையும் விட்டு இறே அத்தை விரும்புகிறது
போகத்தையும் விட்டு லீலையை விரும்புமவன் நீ –

செய்கின்ற தீமைகள் கண்டிட்டு-
விளையாடுகிற படியை ஒளித்து கண்டு நின்றாள் போலே –

உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற –
உன் ஸ்வம் அடைய அன்றோ பாழ் போகிறது –
தீம் பால் -இனிய பால்

மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் –
அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா
முலை சுரக்கப் பண்ணாமல்
மடியிலே இருந்தாயிற்று உண்பது –
இது அடைய தரையிலே போகாமே
உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய் –

————————————————————

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4-

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார் மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா –
நாட்டிலே வர்த்திக்கிற ஸ்திரீகள்
மற்று உண்டான மனுஷ்யர்கள்
இவர்கள் கண்ணுக்கு பிள்ளை பெறுகைக்கு நோற்கும்
தபஸ்ஸூ தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிறவனே –

மதக் களிறன்னாய்-செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
சிவந்த ஆகாசம் இருக்கிறபடி கண்டாயே –
அதுக்கு பரபாகமான பிறை இருக்கிற படி கண்டாயே
அப்பிறை யை வாங்கி உன் சிவந்த கையிலே தருவேன் –

ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –
என் ஒக்கலையிலே இழியாது இருந்து
ஆதரித்து இனிதாக
அம்மம் உண்ண வாராய் –

———————————————————-

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே —10-4-5-

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் –
மையின் தன்மையை உடைத்தாய்
கண்ணுக்கு குளிர்ந்து
இருண்ட குழலை உடைய முக்த்தனே –
பெரிய மருதுகளின் நடுவே நடந்தாய் –

வித்தகனே-
பெரியவற்றை எல்லாம் செய்கைக்கு ஈடான
ஆச்சர்ய சக்தியை உடையவனே –

விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா –
இனி இதுசெய்யான் -என்னும்படி
படுக்கையிலே கிடந்தது
அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும்
விகிர்தமான செயலை உடையவனே –

இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா –
நெடும் போது உண்டாயிற்று
முலைக் கடுப்போடு இருக்கிறது –
இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது –

உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே –
உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –
வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ-

——————————————–

பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை
கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் —10-4-6-

பிள்ளைகள் செய்வன செய்யாய் –
உன் பருவத்தில் பிள்ளைகள் செய்வன
அன்று நீ செய்வது –

பேசில் பெரிதும் வலியை-
கண் எச்சில் ஆனவற்றை செய்யா நிற்புதி-
கண் எச்சிலாம் என்று சொல்லாது ஒழியும் இத்தனை –

கள்ள மனத்தில் உடையைக்-
சொல்லில் பெரிய மிடுக்கை உடைய உன் நெஞ்சில் நினைக்குமவை இன்னது என்று தெரியாது –

காணவே தீமைகள் செய்தி –
விலக்குவார்க்கும் கண்டு கொண்டு நிற்க வேண்டும்
தீமைகள் செய்யா நிற்புதி
கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி –

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற –
அத்தீமை காண என் ஹிருதயம் உருகி
முலை வழியே பாலாய் புறப்படா நின்றது –

பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் –
கண்கள் சிவப்பது
மூரி நிமிர்வது
கொட்டாவி கொள்வது
அழுவது -ஆகாதே –

——————————————

தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே —10-4-7-

தன் மகனாக –
யசோதை பிராட்டியாக வந்தாள் ஆயிற்று –

வன் பேய்ச்சி –
இவனைக் கண்ட விடத்திலும் நெகிழாத
நெஞ்சில் வன்மையை உடையவள் –

தான் முலை யுண்ணக் கொடுக்க –
பரிவோடே கொடுக்கிறாள் என்று தோற்றும் படி கொடுக்க –

வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ –
தானும் தாய் என்று பிரமியாதே
அவள் அபிசந்தியைப் புத்தி பண்ணி
அப்பருவத்திலே பெரிய ஆண் பிள்ளையாய்
அவள் பிராணன்களை முலை வழியே உண்டு
அவளை முடித்து இப்படிப் பட்ட செயல்களாலே
பூரணன் ஆனவனே –

நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா –
இப்படி பூதனை கையிலே அகப்பட்ட உன்னை
ஆராக நினைத்தாய் –
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய நப்பின்னை பிராட்டிக்கும்
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும்
வல்லபன் ஆனவனே –

என் மகனே –
அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும்
இவள் மகன் ஆனதுவும் –

அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –
அம்மம் என்று -புஜிக்கப் படும் எல்லாவற்றுக்கும் பெயர் –

—————————————————–

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் —10-4-8-

உந்தம் அடிகள் முனிவர்-
தாயாரைக் கண்டால் தீமையிலே ஓன்று பத்தாக பணைக்கும்-
ஸ்ரீ நந்த கோபர்க்காயிற்று அஞ்சுவது
அத்தாலே அவனுக்கு அச்சம் உறுத்துக்கைக்காக
யசோதை பிராட்டி சொல்லும் பாசுரம் ஆயிற்று –
உங்கள் முதலியார் சீறுவர் கிடீர் –

உன்னை நான் என் கையில் கோலால் -நொந்திட மோதவும் கில்லேன்-
தீம்பிலே கை வளருகிற உன்னை
நோக்க இருக்கிற நான் –
கண்டாய் இறே இதன் பேர்
இப்போதே சிவட்கு என்ன அடிக்கலாம் இறே
அது மாட்டு கிறிலேன் –

அடிக்க வேண்டும்படி செய்த தீமை தான் என்ன –
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது –
உபய விபூதியோபாதியும் பரப்புப் போருமாயிற்று
இவன் தன்னை ஒழிய வேயும் கண் எச்சிலாம் படி யாயிற்று
அவை வந்து புகுரும் போது இருப்பது –

இங்கு காண்கின்றார் உண்டோ -என்ன -வேண்டா
வானிடைத் தெய்வங்கள் காண –
எத்தனை தேவதைகள் ஆகாசத்தில் பார்த்து நிற்கக் கடவது –

அந்தியம்போது அங்கு நில்லேல்
அசுரர்களுக்கு பலம் வர்த்திக்கும் போது அங்கு நில்லாதே கொள் –
அங்கு
இவன் இவனின -என்று உன்னோடு சேர்த்து சொல்லலாம் படி அங்கு நில்லாதே கொள் –

ஆழி யங்கையனே வாராய் —
இவற்றை ஒழியவேயும்
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –
என்னும்படி யாயிற்று இருப்பது –

————————————————-

பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே—-10-4-9-

பெற்றம் தலைவன் என் கோமான் –
பசுக்களுக்கு பிரதானன் ஆனவனே –
மேல் விழுந்து முலை உண்ண ஏத்துகிறாள் –
எனக்கு ஸ்வாமி யானவனே –
இத்தால் ஐஸ்வர்யம் சொல்லுகிறது –

பேர் அருளாளன் மதலாய்-
அருளால் குறைவற்றவன் மகன் அன்றோ நீ
அவன் படி உனக்கும் உண்டாக வேண்டாவோ –

சுற்றக் குழாத்து இளங்கோவே
பந்து வர்க்கத்துக்கு எல்லாம்
யுவராஜா வானவனே –

தோன்றிய தொல் புகழாளா-
எங்கும் ஒக்க பிரசித்தமான
ஸ்வா பாவிக மான புகழின் உடைய வார்த்தைப் பாட்டையும் உடையவனே –

கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே –
கன்றின் உடைய திரள்
ஓன்று இரண்டு போராது –
கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது
ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –

எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே –
உனக்கு விடாய் இல்லாமையோ –
உனக்கு முலை தாராது ஒழியும் போது
நான் தரிப்பனாயோ –

——————————————————

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே —10-4-10-

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி –
இவள் முலை கொடுத்து அல்லது தரியாதாப் போலே
கவி பாடி அல்லது தரியாதாராய் பாடின கவி யாயிற்று –
மிக்க எழிலை உடைத்தான தோளை உடைய ஆழ்வார் –

செம்மைப் பனுவல் நூல் கொண்டு-
சாஸ்த்ரங்களில் பரக்கச் சொல்லுகிற லஷணங்களில் ஒன்றும் குறையாமல் செய்ததுமாய்-
இது தான் இவ்வருகு உள்ளாருக்கு சாஸ்த்ரமாய் எழுதிக் கொள்ளலாய் இருக்கிற இவற்றைக் கொண்டு
பனுவல் -என்றும் -நூல் -என்றும் -சாஸ்திரம் ஆகையாலே சொல்லிற்று –

செங்கண் நெடியவன் தன்னை
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –

அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –

மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –
அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு
வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே
அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம் –

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருப்பங்கள் தரும் திருநாங்கூர் கருட சேவை தரிசனம்-ஸ்ரீ திருக்குடந்தை டாக்ட ர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

January 25, 2020

இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று,
அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணை கொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.

அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும், கண்களாக காயத்திரி மந்திரமும், உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும்,
இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும், கால்களாக வேதத்தின் சந்தங்களும், நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,
வாலாக யஜ்ஞாயஜ்ஞம் எனும் வேதப்பகுதியும், ஆத்மாவாக ஸ்தோமம் எனும் வேதப்பகுதியும் வடிவெடுக்க,
அவ்வாறு உருவான வடிவமே வேதசொரூபியான கருடனின் வடிவம்.

கருட சேவை உற்சவத்தின் போது, இறைவனைத் தனது தோளில் சுமந்தபடி நம்மைத் தேடி வரும் வேத சொரூபியான கருட பகவான்,
நம்மைப் பார்த்து, “நீ வேதங்களின் துணைகொண்டு இறைவனைத் தேடிக் கொண்டிருந்தாயே!
இதோ அந்த இறைவனையே நான் உன்னிடம் அழைத்து வந்துவிட்டேன் பார்!” என்று சொல்லிப் பரமனின் பாதங்களைப் பாமரர்க்கும்
எளிதில் காட்டித் தந்து விடுகிறார்.
கச்யப மகரிஷிக்கும் வினதைக்கும் மகனாக ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி நன்னாளில்
சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார் கருடன்.
பருத்த உடல், பொன்மயமான சிறகுகள், வெண்மையான கழுத்துப் பகுதி,
உருண்டையான கண்கள், நீண்ட மூக்கு, கூரிய நகங்களுடன் கூடியவராய்க் கருடன் திகழ்கிறார்.
‘கரு’ என்றால் சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர். சிறகுகளைக் கொண்டு பறப்பதால் ‘கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘க்ரு’ என்பது வேத ஒலிகளைக் குறிக்கும். வேத ஒலிகளின் வடிவாய்த் திகழ்வதாலும் ‘கருடன்’ எனப் பெயர் பெற்றார்.

கருடனின் தாயான வினதை, தனது சகோதரியான கத்ருவிடம் ஒரு பந்தயத்தில் தோற்றாள்.
அதன் விளைவாகக் கத்ருவுக்கும் அவளது பிள்ளைகளான நாகங்களுக்கும் அடிமையாகிச் சிறைப்பட்டிருந்தாள் வினதை.
அவளை விடுவிக்க வேண்டும் என்றால், தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள் கத்ரு.
தேவலோகத்துக்குச் சென்று அமுதத்தைக் கொண்டு வந்து தன் தாயான வினதையைச் சிறையிலிருந்து மீட்டார் கருடன்.
தனது தாயைக் கத்ருவும் அவள் ஈன்றெடுத்த பாம்புகளும் சிறை வைத்தபடியால், பாம்புகளைப் பழிவாங்க நினைத்த கருடன்,
பாம்புகளை வீழ்த்தி அவற்றையே தனது திருமேனியில் ஆபரணங்களாக அணிந்தார்.
திருமால் ஒருமுறை கருடனிடம், “நான் உனக்கு ஒரு வரம் தரட்டுமா?” என்று கேட்டார்.
கருடனோ, “திருமாலே! எனக்கு வரம் வேண்டாம்! உமக்கு ஏதேனும் வரம் வேண்டுமென்றால், நான் தருகிறேன்! கேளுங்கள்!” என்றார்.
கருடனின் பிரபாவத்தைக் கண்டு வியந்த திருமால், “நீயே எனக்கு வாகனமாகி விடு!” என்று கருடனிடம் வரம் கேட்டார்.
கருடனும் அதற்கு இசைந்து, திருமாலுக்கு வாகனமானார்.

அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நதி இருப்பதைக் காணலாம்.
ஏனெனில், நாம் ஒப்பனை செய்து கொண்டால், கண்ணாடியில் அழகு பார்ப்போம் அல்லவா?
அதுபோல் அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க ஒரு கண்ணாடி வேண்டுமல்லவா?
இறைவனைக் காட்டும் கண்ணாடி வேதம்! கருடன் வேத சொரூபியாகவே இருப்பதால், கருடனையே கண்ணாடியாகக் கொண்டு
திருமால் அழகு பார்க்கிறார். அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கும்.
பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெறும் போது கருடன் படம் வரைந்த கொடி, கொடிமரத்தில் ஏற்றப்படுவதைக் காணலாம்.
திருமலையிலுள்ள ஏழு மலைகளுள் கருடனின் பெயரில் ‘கருடாத்ரி’ என்றொரு மலை உள்ளது.

ராம ராவணப் போரில், இந்திரஜித்தின் நாகபாசத்தால் தாக்கப்பட்டு ராமனும் வானர சேனையும் மயங்கிக் கிடந்த வேளையில்,
வானிலிருந்து தோன்றிய கருடன் அந்த நாக பாசங்களை உடைத்து, ராமனும் வானர வீரர்களும் மீண்டும் எழுவதற்கு உதவினார்.
இறைவனை நாம் அழைக்கும் போதெல்லாம், அவனை விரைவில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வாகனமாகக் கருடன் திகழ்கிறார்.
கருடனை வழிபடுவோர்க்குப் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் விலகி, குடும்பத்தில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.
இப்படி எண்ணற்ற உருவங்கள் உடையவராகக் கருடன் விளங்குவதால், கருட சேவை உற்சவங்களில் பற்பல உருவங்களோடு
கருடன் வருவதைக் காணலாம்.

தஞ்சையில் நடைபெறும் 24 கருட சேவை,
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலில் நடைபெறும் 15 கருட சேவை,
அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 12 கருட சேவை,
திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் 9 கருட சேவை,
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் 5 கருட சேவை உள்ளிட்ட உற்சவங்கள் இதற்குச் சான்றாகும்.
நாச்சியார்கோவிலில் கல் கருடனாகத் திகழும் கருடன், தானே உற்சவராகவும், மூலவராகவும், வாகனமாகவும் திகழ்கிறார்.

இப்படிப் பல ஊர்களில் கருட சேவை உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றாலும், தை அமாவாசைக்கு மறுநாளன்று,
சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவை உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
சுமார் 125 வருடங்களுக்கு முன்பு திருநாங்கூரில் வாழ்ந்த திருநாராயணப் பிள்ளை, இன்ஸ்பெக்டர் சுவாமி ஐயங்கார் போன்ற பெரியோர்கள்
இந்த உற்சவத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அன்று தொட்டு இன்று வரை வருடந்தோறும் இவ்வுற்சவம் செவ்வனே நடந்து வருகிறது.
ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் சீர்காழிக்கு அருகே உள்ள
திருநாங்கூர் எனும் ஊரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.
தட்சனின் யாகத்துக்குச் சென்ற சதிதேவியை தட்சன்
அவமானப் படுத்திய செய்தியைக் கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டபரம சிவன்,
சீர்காழிக்கு அருகிலுள்ள உபய காவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடத் தொடங்கினார்.
அவரது ரோமம் விழுந்த இடங்களில் எல்லாம் புதிய ருத்திரர்கள் தோன்றத் தொடங்கினார்கள்.
சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தேவர்கள் தவித்தபோது, திருநாங்கூரில் பதினொரு வடிவங்களோடு
திருமால் வந்து காட்சி கொடுத்து, பதினொரு வடிவங்களில் இருந்த பரமசிவனின் கோபத்தைத் தணித்தார்.
அதனால் தான் இன்றும் திருநாங்கூரில் 11 பெருமாள் கோவில்களும்,
அவற்றுக்கு இணையாக 11 சிவன் கோயில்களும் இருப்பதைக் காணலாம்.

1. திருமணிமாடக்கோயில் (ஸ்ரீநாராயணப் பெருமாள்)
2. திரு அரிமேய விண்ணகரம் (குடமாடுகூத்தர்)
3. திருச்செம்பொன்செய்கோயில் (செம்பொன் அரங்கர்)
4. திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால்)
5. திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள்)
6. திருவண்புருடோத்தமம் (புருஷோத்தமப் பெருமாள்)
7. திருமணிக்கூடம் (வரதராஜப் பெருமாள்)
8. திருவைகுந்த விண்ணகரம் (வைகுந்தநாதன்)
9. திருத்தேவனார்த் தொகை (மாதவன்)
10. திருப்பார்த்தன்பள்ளி (தாமரையாள்கேள்வன்)
11. திருக்காவளம்பாடி (கோபாலன்)
ஆகியவையே திருநாங்கூரைச் சுற்றியுள்ள பதினொரு திருமால் திருத்தலங்களாகும்.

1. திருநாங்கூர் மதங்கேஸ்வரர்
2. திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர்
3. திருயோகீஸ்வரம் யோகநாதசுவாமி
4. கார்த்தியாயினி இருப்பு (காத்திருப்பு) சுவர்ணபுரீஸ்வரர்
5. திருநாங்கூர் ஜ்வரஹரேஸ்வரர்
6. அல்லிவிளாகம் நாகநாதசுவாமி
7. திருநாங்கூர் நம்புவார்க்கு அன்பர்
8. திருநாங்கூர் கயிலாயநாதர்
9. திருநாங்கூர் சுந்தரேஸ்வரர்
10.பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர்
11.அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர்

எனப் பதினொரு வடிவங்களுடன் திருநாங்கூரைச் சுற்றி சிவபெருமான் காட்சி தருகிறார்.

திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் பகல்பத்து – இராப்பத்து உற்வசவங்களைப் பன்னிரு ஆழ்வார்களுள்
கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் நடத்தி வைத்தார். அது நிறைவடைந்த பின், தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரில்
கோவில் கொண்டிருக்கும் பதினொரு பெருமாள்களையும் இனிய தமிழ் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத்
திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார். அப்பாசுரங்களைப் பெறும் ஆர்வத்தில் பதினொரு பெருமாள்களும்
தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து, ஆழ்வாரிடம் பாடல் பெற்றுச் செல்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை நம் கண்முன்னே காட்டுவதுதான் திருநாங்கூர் பதினொரு கருட சேவை.

ஒவ்வொரு வருடமும் இந்தப் பெருமாள்களைப் பாடத் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு நேரே வருவதாக ஐதீகம்.
இந்தக் கருட சேவைக்கு முந்தைய நாள் நள்ளிரவில், திருநாங்கூர் வயல் வெளிகளில் காற்றினால் நெற்பயிர்கள் சலசலவென ஓசையிடும்.
இந்த ஓசையைக் கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் நுழைந்துவிட்டதாக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
திருமங்கையாழ்வாரின் பாதம் பட்ட வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படும் என்பது அவ்வூர் விவசாயிகளின் நம்பிக்கை.

திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவம் மூன்று நாள் உற்சவமாக நடைபெறுகிறது.
1. தை அமாவாசை அன்று நடைபெறும் திருமங்கை ஆழ்வாரின் மஞ்சள் குளி உற்சவம்.
2. தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் பதினொரு கருட சேவை.
3. அதற்கு மறுநாள் பெருமாள்களும் ஆழ்வாரும் தத்தம் திருக்கோவில்களுக்குத் திரும்புதல்
அன்றைய தினம் நள்ளிரவில், தோளுக்கினியானில் மணவாள மாமுனிகள் முதலில் மணிமாடக் கோவிலில் இருந்து வெளியே வருகிறார்.
அவரைத் தொடர்ந்து, அன்னப்பறவை (ஹம்ஸ) வாகனத்தில், குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கை ஆழ்வார் வெளியே வந்து,
பெருமாள்களை வரவேற்கத் தயாராக நிற்கிறார்.

1. மணிமாடக் கோவிலின் நாராயணப் பெருமாள்
2. அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்
3. செம்பொன்செய்கோவிலின் செம்பொன் அரங்கர்
4. திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்
5. திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்
6. திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்
7. திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்
8. வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்
9. திருத் தேவனார் தொகையின் மாதவப் பெருமாள்
10.திருப்பார்த்தன் பள்ளியின் தாமரையாள் கேள்வன்
11.திருக்காவளம்பாடியின் கோபாலக் கிருஷ்ணன்
ஆகிய பதினொரு பெருமாள்களும் விசேஷ அலங்காரங்களோடு தங்கக் கருட வாகனங்களில் திருநாங்கூர் மணிமாடக் கோவிலில்
இருந்து புறப்படுகிறார்கள்.பதினொரு பெருமாள்கள் மங்களாசாசனம் பெறும் வரிசை பற்றி
அழகான வடமொழி சுலோகம் ஒன்று உள்ளது:

“நந்தாதீப கடப்ரணர்தக மஹாகாருண்ய ரக்தாம்மக
ஸ்ரீநாராயண புருஷோத்தமதி ஸ்ரீரத்னகூடாதிபாந் |
வைகுண்டேச்வர மாதவௌ ச கமலாநாதம் ச கோபீபதிம்
நௌமி ஏகாதசாந் நாகபுரி அதிபதீந் ஸார்தம் கலித்வம்ஸிநா ||”

இதன்பொருள்:
மணிமாடக் கோவிலின் நாராயணப் பெருமாள், அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
செம்பொன்செய் கோயிலின் செம்பொன் அரங்கர், திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள், திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள், வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள், திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்,
திருக்காவளம்பாடியின் கோபாலக்கிருஷ்ணன் ஆகிய பதினொரு பெருமாள்களையும் திருமங்கை ஆழ்வாரையும் வணங்குகிறேன்.

மணிமாடக் கோவிலிலிருந்து வரிசையாக வெளியே வரும் ஒவ்வொரு பெருமாளுக்கும் கோவில் வாசலில் விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது.
ஒவ்வொரு பெருமாளாகத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார். பதினொரு பெருமாள்களுக்கும் மங்களாசாசனம் ஆனபின்,
கருட வாகனத்தில் வீதி உலா செல்லும் பெருமாள்களைப் பின் தொடர்ந்து, ஹம்ஸ வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் செல்கிறார்.
ஆழ்வாரின் பாடல்களைப் பெற்று அவருக்கு அருள்புரிந்தாற்போல், ஊர்மக்களுக்கும், உற்சவத்தைத் தரிசிக்க வந்த அடியார்களுக்கும்
அருள்புரிய வேண்டும் என்ற எண்ணத்தில், பக்தர்கள் வெள்ளத்துக்கு மத்தியில், பதினொரு பெருமாள்களும் கருட வாகனத்தில்
திருநாங்கூர் மாட வீதிகளைச் சுற்றி மேளவாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் வலம் வருகிறார்கள்.

நாங்கூர் வெள்ளாளத் தெருவையும், வடக்கு வீதியையும் கடக்கும் பெருமாள்கள், கீழ வீதியிலுள்ள
செம்பொன்செய் கோவில் வாசலை அடைகிறார்கள்.
அதன்பின் தெற்கு வீதி வழியாக வந்து மீண்டும் மணிமாடக் கோவிலை அதிகாலையில் அடைகிறார்கள்.
இந்த 11 கருட சேவையைத் தரிசிக்கும் அடியார்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதினொரு திவ்ய தேசங்களைத் தரிசித்த
பலன் கிட்டும் என்பது பெரியோர்களின் வாக்கு.
11 கருட சேவை உற்சவம் நடைபெற்ற மறுநாள் காலை, மணிமாடக் கோவிலிலிருந்து புறப்பட்டு,
அந்தந்தப் பெருமாள்கள் தத்தம் திருத்தலங்களுக்கு மீண்டும் எழுந்தருள்கிறார்கள்.

காலையில் மணிமாடக் கோவிலில் திருமஞ்சனம் கண்டருளும் திருமங்கையாழ்வார், மாலையில் குமுதவல்லியுடன் புறப்பட்டு,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாளை,
“அண்ணா அடியேன் இடரைக் களையாயே!” என்று மங்களாசாசனம் செய்து,
திருத்தேவனார்தொகை மாதவப் பெருமாளை, “தேதென என்றிசைப் பாடும் திருத்தேவனார்த் தொகையே!” என்று பாடி,
திருவாலியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமிநரசிம்மப் பெருமாளை “திருவாலி அம்மானே!” என்று பாடிவிட்டுத்
தனது இருப்பிடமான திருநகரியை அடைகிறார்.
திருநகரியில் எழுந்தருளியிருக்கும் வயலாளி மணவாளன் எனப்படும் பெருமாள், கருட வாகனத்தில் வந்து,
ராஜகோபுரத்தின் முன்னே திருமங்கையாழ்வாரையும் குமுதவல்லியையும் எதிர்கொண்டு அழைக்கிறார்.

“கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீள்வயல்சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே!”

என்று திருமங்கையாழ்வார் பாடி, வயலாலி மணவாளனோடு திருக்கோவிலுக்குள்ளே எழுந்தருளுவதோடு,
இந்தப் பதினொரு கருட சேவைத் திருவிழா இனிதே நிறைவடைகிறது.
திருநாங்கூர் மணிமாடக் கோவிலில் ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் ஒன்று கூடி
இறைவனை வணங்கும் ஒப்பற்ற உற்சவமாகிய இந்தப் பதினொரு கருட சேவை விழாவில் பங்கேற்று,
தங்கக் கருட வாகனத்தில் காட்சி அளிக்கும் பதினொரு பெருமாள்களையும், கருடன்களையும்,
அன்ன வாகனத்தில் வரும் திருமங்கையாழ்வார்-குமுதவல்லி நாச்சியாரையும், மணவாள மாமுனிகளையும் கண்ணாரக் கண்டு,
மனதாரத் தொழும் அனைத்து அன்பர்களுக்கும் உடல்நலம், மன அமைதி, நீண்ட ஆயுள், ஆற்றல், பொலிவு ஆகியவை பெருகும்.
நினைத்த நற்செயல்கள் கைகூடும். நோய்கள் அகலும். நற்செல்வம் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர் என்பதில் ஐயமில்லை.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -பதினொன்றாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

July 15, 2019

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1-பிரவேசம் –

பஷிகளின் காலிலே விழுந்து என்னையும் அவனையும் சேர விட வேணும் என்றாள்- கீழ்த் திரு மொழியிலே –
அவை இது செய்தன வில்லை –
அதுக்கு மேலே
தென்றல் தொடக்கமான பாதக பதார்த்தங்களின் கீழே-ஜீவிக்கப் போகாமையாலே
ஜீவனத்தில் நசை அற்று நோவு பட்டுச் சொல்லுகிற ஸ்ரீ பிராட்டி பாசுரத்தாலே தம் தசையைப் பேசுகிறார் –

——————–

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–11-2-1- பிரவேசம் –

என் செய்கேன் -என்ற இடத்திலும் இரங்காதே பாதக பதார்த்தங்கள் மிகைத்தன –
ரஷகன் ஆனவன் கை விட்டான் –
என் கார்யம் ஸ்வ யத்ன சித்தமாய் இருந்தது –
எனக்கு இனி ரஷகராக வல்லார் உண்டோ – என்கிறார் –

———————

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1- பிரவேசம் –

பிரிந்தவன்று தொடங்கி பாதக பதார்த்தங்களாலே நோவு பட்டு அத்தாலே மிகவும் அசந்நையாய்-
நம்மை உபாஸ்ய கோடியிலே நினைத்து -அவன் தான் – வேணுமாகில் நம்மை உபாஸித்து வந்து பெறுகிறான் – என்று
நாம் தலைமை கொண்டாடி இருந்தது அமையும் –
அவனை உபாச்யனாய்க் கொண்டு-நாம் உபாஸித்து போரும் இத்தனை என்று அதிலே ஒருப்பட்டார் கீழ் –

காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் -என்கிறபடியே இத்தனை பொறுப்பான் ஒருவன் அல்லனே அவன் –
அநந்தரம்
வந்து முகம் காட்டி அரை ஷணம் தாழ்க்கும் காட்டில் இத்தனை சாஹசத்தில் ஒருப்படக் கடவதோ
இத்தலை பெறுகைக்கு எதிர் சூழல் புக்கு திரிந்தேன் நான் அல்லேனோ –
என்னது அன்றோ கிலேசம் –
ஜன்ம வ்ருத்தாதிகளாலே குறைய நின்றார் ஆகிலும் நம்மை ஒழிய செல்லாமை உண்டானால்
பின்னை அவர்களை ஒழிய ஜீவிப்பேனோ நான் –
ஆஸ்ரித ஸ்பர்ச த்ரவ்யம் ஒழிய எனக்குத் தாரகம் உண்டோ -என்று
அவன் செல்லாமை அடங்கலும் காட்ட அவற்றை அடைய அனுசந்தித்து
பிபாசி தனுக்கு குடித்த தண்ணீர் தாக சாந்திக்கு உடலாகி தவிர்ந்து-மேன்மேல் என விடாய்க்கு உடல் ஆமா போலே
அவ்வனுசந்தானம் தான் மேலே விடாயைப் பிறக்க –
அத்தாலே போர நோவு பட்டு-பின்னையும் அவனைக் கிட்டி நித்ய அனுபவம் பண்ணப் பெற்றிலோமே யாகிலும்
இவ்விடாயும் த்வரையும் எல்லாம் இவ்விஷயத்தில் ஆகப் பெற்றோம் இறே -என்னும்
இவ்வளவால் வந்த திருப்தியோடு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –

———————

நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1-பிரவேசம் –

கார் முகில் வண்ணரை கண்களால் காணலாம் கொலோ -என்றும்
நெஞ்சுடலம் துயின்றால் நமக்கினி நல்லதே -என்றும் இவர் வெறுக்க –
நமக்கு உள்ள வெறுப்பு உண்டோ உமக்கு
உம்மைச் சுட்டி நாம் பிறந்த பிறப்பு அறியீரோ -யென்ன –
பரித்ராணாய சாதூனாம் – என்கிறபடியே
நமக்காக இறே வந்து பிறந்தது -யென்று ஹிருஷ்டராய்-அவனை ஆஸ்ரயிக்கப் பார் -யென்று
திரு உள்ளத்தை நோக்கி அருளிச் செய்கிறார் –

அங்கன் இன்றிக்கே
ஸ்ரீ திருவாலியிலே வந்து சந்நிஹிதனாகப் பெற்றோம்
அங்கே புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பெற்றோம் -யென்று இவர் ஆஸ்வசித்த படியைக் கொண்டு
நம்முடைமையான இஜ் ஜகத்தை விட மாட்டாமை வந்திருக்கிற இந்த அர்ச்சாவதாரமேயோ –
நாம் விபூதி ரஷணார்த்த மாகவும்
அவர்கள் விரோதிகளை நிரசித்து அவர்களுக்கு காட்சி கொடுக்கைக்காவும் அன்றோ நாம் அவதரித்தது –
அந்த அவதாரங்களையும் அனுசந்தித்து தரிக்க மாட்டீரோ யென்று தன் அவதாரங்களைக் காட்டிக் கொடுத்தான் –
அவற்றை அனுசந்தித்து
ஹ்ருஷ்டராய்-அந்த ஹர்ஷம் தன்னளவிலே அடங்காமையாலே பரோபதேசத்தில் ப்ரவர்த்தர் ஆகிறார் –
அவன் தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை கை விடாதவனாய் இருந்தான் – இனி நமக்கு ஒரு குறை உண்டோ -என்கிறார் –

————————-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1- பிரவேசம் –

கீழில் திரு மொழியில் ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணினத்தை அனுசந்தித்து –
அவ்வாஸ்ரித பாரதந்த்ர்யத்திலே ஈடுபட்டு –
தாமான தன்மை அழிந்து –
வேறே இரண்டு பிராட்டிமார் பேச்சாலே –
ஒருத்தி மேன்மையை அனுசந்திக்க –
ஒருத்தி சௌலப்யத்தை அனுசந்தித்து -இவனுடைய தாழ்வுகளைச் சொல்ல
அப்படி தாழ்வுகள் செய்தானே யாகிலும்
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு மேலானவன் கிடாய் இப்படிச் செய்கிறான் -என்று
இருவர் பேச்சாலுமாக-அவனுடைய மேன்மையையும் சௌலப்யத்தையும்-பேசுகிறார் –

இரண்டு ஸ்ரீ பிராட்டிமார் தசை ஏக காலத்தில் கூடும்படி என் –
என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க
தேச விசேஷத்திலே அநேக சரீர பரிக்ரஹம் ஏக காலத்தில் கூடும் படி எங்கனே
அப்படியே இவரையும் பார்த்து அருளினால் -ஸ்ரீ எம்பெருமான் கடாஷித்து அருளினால் -கூடும்
நதே ரூபம் நச ஆகாரோ ந ஆயுதானி ந சாஸ்பதம் ததாபி புருஷாகாரோ பக்தா நாம் த்வம் பிரகாசசே-
உன் ஸ்வரூப ரூப குண விபூதிகள் அடைய உனக்கு இல்லையாய்த் தோற்றுவதி -என்ன –
இப்படி இதடையே தனக்கு இன்றிக்கே இருந்தால்
இத்தடைய ஆருக்கு என்னும் அபேஷையில்
பக்தா நாம் –
ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் –
இப்படி ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் என்னும் இடம் எங்கே கண்டோம் என்னில்
த்வம் பிரகாசசே –
தூத்ய சாரத்யாதிகளிலே நீயே காட்டுவுதி
இதடைய ஆஸ்ரித அர்த்தமாக பெறுகையாலே நீ உஜ்ஜ்வலனாகா நிற்புதி -என்னவுமாம் –

இப்படி
பரத்வத்தையும்
அவதாரங்களையும்
அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களையும்
இவ்விடத்தே உண்டான மனுஷ்யத்வே பரத்வத்தையும் –-அனுசந்தித்து
தனக்காக்கிக் கொண்டு இருக்கும் இவ்விருப்பையும்
தனக்கு உதவுகைக்கும்
உறுப்பாக வந்து அவதரிக்கும் அவதாரத்தையும் அனுசந்தித்து
இப்படி அவதரித்து வ்யாபரிக்கிறதும்-ஆஸ்ரித ரஷண அர்த்தமாக –
அவன் பரா அவஸ்தனாய் இருக்கிறதும் ஆஸ்ரிதர் குறை தீர்க்கைக்காக –
இப்படி இது அடைய ஆஸ்ரித அர்த்தமான பின்பு
நமக்கு ஒரு குறை உண்டோ -என்று அனுசந்தித்த இத்தால்
பிறந்த ப்ரீதி பிரகர்ஷம்-ஓர் ஆஸ்ரயத்தில் அடங்காது இருக்கையாலே
அந்தபுர பரிகரமாய்-sதங்களில் தோழமையாய் இருப்பார்
ஒருவருக்கு ஒருவர்
பரத்வ அவதாரங்களில் இரண்டிலும் தனித் தனியே ஊன்றி அவற்றை அனுசந்தித்து
களித்துப் பேசுகிற இவர்கள் பேச்சாலே தாம் அவற்றையே பேசி அனுபவிக்கிறார் –

இவ்வாத்மாவின் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
தனாக்காய் இருக்கை -ஸ்வரூப விரோதியாய் –
அவனதாய் இருக்கும் இருப்பு -ஸ்வரூப அனுரூபமாய் – இருக்குமா போலே
அவன் ஸ்வரூபத்தை அனுசந்திக்கப் புக்காலும்
அதடைய ஆஸ்ரித அர்த்தமாக இருக்கும் இருப்பை அனுசந்தித்தால்
ஆனந்த நிர்பரராய் களிக்கும் படியாய் இருக்கும் இறே-
இப்படி பரத்வ சௌலப்யங்கள் இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கிறார் –

———————

மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1- பிரவேசம் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய வைலஷண்யத்தையும் சௌலப்யத்தையும் சேர
ஓர் ஒன்றே கரை காண ஒண்ணாத இரண்டையும் சேர அனுபவித்தார் –
அநந்தரம்
போதயந்த பரஸ்பரம் -பண்ணுகைக்கு சிலர் தேட்டமாயிற்று
அதுக்கு ஆவாரார் -என்று லோகத்தில் ஆராய்ந்தார் –
அவர்கள் அடைய ஸ்ருஜ்யத்வ -கர்ம வஸ்யத் வாதிகளால் தங்களோட்டையரான
இதர தேவதையை ஆஸ்ரயிப்பாரும்- ஸ்துதிப்பாருமாய்ச் செல்லா நின்றது –
இவர்கள் இப்படிச் செய்கிறது -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்ரீ சர்வேஸ்வரத்வ விஷயமாயும்
சௌலப்ய விஷயமாயும்
பிராப்தி விஷயமாயும்-உள்ள ஜ்ஞானம் இல்லாமை என்று பார்த்து –
கெடுவிகாள்-நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு-உங்களோடு வாசி இல்லை காணுங்கோள்
அவனுக்குக் குழைச் சரக்காம் இடத்தில் –
ஆனபின்பு அவனையே ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்- என்கிறார் –

———————–

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே —11-7-1-பிரவேசம் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்னை அனுபவிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு வ்யர்த்தமே திரிகிறவர்களை –
அவனுடைய செயல்களை அனுபவியாதவர்கள் கரணங்கள் – ஒன்றும் அன்று – என்கிறார் –

———————–

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-பிரவேசம் –

அடியிலே வாதி பிரதிவாதிகளாய் யாயிற்று இழிகிறது –
இவர் தாம் ஒரு வார்த்தை சொன்னால் இறே-அவனுக்கு மறு மாற்றம் உள்ளது –
இவர் சொன்ன வார்த்தை ஏது என்றல் –
இவ்வாத்ம வஸ்து வானது அங்குத்தைக்கு-
ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதியும் -பூணார மார்வனை –
ஸ்ரீ நாய்ச்சியார் திரு முலைத் தடத்தோபாதியும்-தட மலர்க் கண்ணிக்காய் –
ஸ்ப்ருஹ விஷயமுமாய்
போக்யமுமாய் இருந்தது –
அநாதி காலம் இழந்து அதபதிக்க வேண்டுவான் என் -என்று கேட்டால்
சொல்லலாவன சில வார்த்தைகள் உள-
அவ்வார்த்தைகள் தான் என் என்னில்
அங்கைத் தலத்திடை -இத்யாதி -என்றும் ஒக்க ஸ்ரீ ஈஸ்வரன் முகத்தில்
விழியேன் என்று பிரதிஞ்ஞையைப் பண்ணி
நம் பக்கலில் விமுகனாய்
சப்தாதிகளிலே பிரவணனாய்
நம் பக்கலிலே அத்வேஷமும் இன்றிக்கே
போருகையாலே சம்சரித்துப் போந்தான் -இது ஒரு வார்த்தை –

அநித்யம் சுகம் லோகம் -இத்யாதி
சம்சார பீதனாய்க் கொண்டு
நம் பக்கல் புகுராதே
நம் பக்கல் நிரபேஷனாய்
கர்ம சாபேஷையைப் பண்ணிப் போந்த
அநாதி கால வாஸிதமான புண்ய பாப ரூபமான கர்ம பரம்பரை யானது
ஜன்ம பரம்பரைகளிலே மூட்ட -அவ் வழிகளாலே சம்சரித்துப் போந்தான் –

இனி
கர்த்தா காரயிதா -என்றும்
கர்த்தா சாஸ்த்ரத்வாத் -என்றும்
சாஸ்திர பலம் பிரயோக்தரி -என்றும்
சொல்லுகிறபடியே
கர்த்த்ருத்வ போக்த்ருத்வங்கள்
சைதன்ய க்ருத்யமாய் யாயிற்று இருப்பது –
அது இல்லாமையாலே சம்சரித்துப் போந்தான் என்றாப் போலே சொல்லலாம் –
இவை உனக்கு வார்த்தை அல்ல –

ஆகிலும் சொல்லுவன்-
இது பக்நமாம் படி -இவற்றுக்கு மேலே உத்தரம் சொல்லுவன்-
எங்கனே என்னில் –
ருசி இல்லை என்றே முதல் வார்த்தை –
ருசி அசுருசிகளுக்கும் அடி ஏது என்னில் -மனஸ்ஸாயே யாய் இருப்பது –
அந்த மனஸ்ஸூ நீ இட்ட வழக்கு அன்றோ –
சர்வஸ் யசாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட –
தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று சொல்லுகிறபடியாலே-ருசி ஜனகன் நீயான பின்பு
ருசி இல்லை என்று சொன்ன இடம் வார்த்தை இல்லை –

அநந்தரம்
கர்மம் அடியாக சம்சரித்து போந்தான் என்னாதே –
கர்ம ஸ்வரூபத்தைப் பார்த்தால் -அது கிரியா ரூபம் ஆகையாலே அப்போதே நசிக்குமே –
கிரியாவான் மறக்குமே –
அது நிக்ரஹ அனுக்ரஹ ரூபேண உன் திரு உள்ளத்தில் கிடந்து அன்றோ அனுபாவ்யம் ஆவது –
உனக்கு நிவாரகர் இல்லாமையாலே -அத்தை ஷமிக்கத் தீருமே –
ஆகையால் அதுவும் வார்த்தை அல்ல –

இனி
கர்ம கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சைதன்ய க்ருத்யம்-
அது இல்லாமையாலே சம்சரித்துப் போந்தான் -என்னதுவும் வார்த்தை அல்ல –
உனக்கு இது சரீரதயா பரதந்த்ரம் ஆகையாலே –
ஸ்வ தந்திர க்ருத்யமான கர்த்ருத்வம் பரதந்த்ரனுக்கு கூடாமையாலே -அதுவும் வார்த்தை அல்ல –
சரீர ரஷணம் சரீரி அன்றோ பண்ணுவான் –
சம்பந்தத்தையும் மறந்தாயோ -என்கிறார்

ஆன பின்பு உன்னுடைய அநாதாரமே ஹேது –

இருவரும் என் நினைத்து சொன்னார்கள் -என்னில் –
அவன் -கர்மத்தைப் பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் ப்ரஹ்மத்தை பற்றி நின்று அத்தை அழித்தார்-
அவன் வேதத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் வேதாந்த தாத்பர்யத்தைப் பற்றி நின்று அத்தை அழித்தார் –
அவன் ஸ்வரூபத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் ஸ்வரூபய தாம்யத்தைப் பற்றி நின்று அத்தை அழித்தார் –
அவன் பாரதந்த்ர்யத்தைப் பற்றி நின்று சாத்திய உபாயத்தை பற்றி நின்று சொன்னான்
இவர் பாரதந்த்ர்யா காஷ்டையைப் பற்றி நின்று
சித்தோ உபாயத்தைப் பற்றி
அத்தை அழிக்கிறார்-
இது காணும் உபாசகனில் காட்டில் பிரபன்னனுக்கு ஏற்றம் –
மக்கள் தோற்றக் குழி -தொடங்கி
மேல் பாட்டு குறையும் இவற்றைச் சொன்னபடி –

மெய்நின்ற -இத்யாதி
போக்யதை அளவிறந்தது
அனுபவித்து வாழுங்கோள் நாடடைய -என்கிறார் –
மெய்நின்ற பாவம் அகல –
அனுபவித்து அல்லது நசியாத படியான பாபமானது போக -என்னுதல் –
தேஹோபாதிகமானது அகல -என்னுதல் –
திருமாலை –
விரோதி என்று பேர் பெற்றவை அடைய போக்குவிக்கும் பிராட்டியை அருகே உடையவனை –
கைநின்ற-
எப்பொழுதும் கை கழலா நேமியானாய் இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய போக்யதை மிக்கு இருந்துள்ள திருவடிகளை -என்னுதல்
ஸூலபமான திருவடிகளை சிரஸா வஹித்து -என்னுதல்
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஐஸ்வர்ர்ய ப்ரகாசகமான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே உடையவன் ஆனால் போலே
சேஷத்வ பிரகாசகமான வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தையும்
பாடுவது ஆடுவது ஆங்கோள்-
விரோதி போக்குகையில் பணி இல்லை –
அது தன்னடையே போம் –
மேல் உள்ளத்து உங்களுக்கு ஹர்ஷமே –

ஸ்ரீ பகவத் விஷயத்தில் அந்வயியாதார் உடைய கரணங்கள்
அவர்கள் அவற்றைத் தங்களுக்கு உறுப்பு என்று நினைத்தார்களே யாகிலும் –
அவை அவர்களுக்கு அடைத்தவை அல்ல வென்றும்
பகவத் ப்ராவண்யம் இல்லாதார் முதலிலே சேதனர் அல்லர் என்றும் சொன்னார் கீழில் திரு மொழியில் –
இவர் தாம் பிறர் குறை அறிந்து பரிஹரிப்பாராய் நின்றார் –
நாம் நின்ற நிலை ஏது என்று ஆராய்வோம்
இவர் தாம் தம் குறை கிடக்க பிறர் குறை பரிஹரிக்கப் பார்க்கிறது –
தான் குறைவற்றவராக நினைத்து இருந்தோ –
அன்றிக்கே –
தம்முடைய கிருபா குண ப்ராசுர்யத்தாலேயோ –
தயாவான்களாய் இருப்பார் தம்தாம் குறை கிடக்கச் செய்தேயும்
பிறர் குறையைப் பரிஹரிக்கப் பார்ப்பார்கள் இறே –
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பிராட்டியைப் பிரிந்து
தடுமாறி
கண்ணாஞ்சுழலை இட்டு வாரா நிற்கச் செய்தேயும்
ஸ்ரீ மகா ராஜர் இழவைக் கண்ட பின்பு அவற்றை மறந்து
அத்தைப் பரிஹரிக்கப் பார்த்தார் இறே –

இவை கிடக்க –
இவர் தாம் நின்ற நிலையை இவருக்கு அறிவிப்போம் –
சம்சாரத்தின் உடைய பொல்லாங்கை அறிவித்தால்
இதுவே அமையும் என்று அறிந்தார் ஆகில் இங்கே வைக்கிறோம்
இதில் பொருந்தாத படி ஆனார் ஆகில் அமர்ந்த நிலத்திலே கொடு போகிறோம் -என்று பார்த்து
பிறரை இகழ்கிற நீர் தான் நின்ற நிலையைப் பார்த்து காணீர் -என்ன
தம்மைப் பார்த்தார் –
ஜ்ஞான லாபம் உண்டே யாகிலும்
அவன் உபேஷித்த அன்று இவ்வருகே போகைக்கும் உடலாய்
அவன் ஆதரித்த போது அவ்வருகே போகைக்கும் உடலாம் படி
பொதுவான நிலத்திலே
தேக சம்ஸ்ருஷ்டராய் இருக்கிற இருப்பைக் கண்டார் –
குறைவற்றார் இருக்கிற் கோடியிலேயுமாகப் பெற்றது இல்லை –
இக்குறை நெஞ்சில் படாதே போது போக்கி இருக்கிறவர்கள் கோடியிலேயுமாகப் பெற்றது இல்லை-

இது தான் –
தேஹமாயும்
இந்த்ரியமாயும்
போக்யமாயும்
பந்தகமாயும் -தோற்றி இருந்தது –
இது தான் அசத் கல்பபாம் படி இறே பிறந்த ஜ்ஞானம் –
அந்த ஜ்ஞானம் தான் ஆறி இருக்கைக்கு உடல் அன்றிக்கே –
த்வரிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே –
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் -பாம்பு -என்றே பயம் அனுவர்த்திக்கும் இறே
ஆகையால் இது தான்
அவசியம் பரிஹரித்து கொள்ள வேண்டுவது ஒன்றாய் இருக்கிற படியும் –
தம்மால் பரிஹரித்து கொள்ள ஒண்ணாத படியாய் இருக்கிற படியும் –
அவனையே கால் கட்டி பரிஹரித்துக் கொள்ள வேண்டி இருக்கிற படியையும் –
அனுசந்தித்து –
த்வத் அனுபவ விரோதியான தேக சம்பந்தத்தை
அறுத்துத் தந்து அருள வேணும் என்று
ஸ்ரீ திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார் –

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-பதினொன்றாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

July 15, 2019

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1-

பசுக்களும் இடையரும் வர்ஷத்தைப் பரிஹரித்துக் கொள்ளுதல் –
ஸ்ரீ பிராட்டி -அதார்மிகனான ராவணன் நஷ்டன் ஆவான் -என்று சபித்து போரும் என்று ஆயிற்று –
இவளுக்கு தென்றல் பரிஹரித்துக் கொள்ள ப்ராப்தி உள்ளது –

———————

காரும் வார்பனிக் கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈரவாடை தான் ஈரும் என்னையே—–11-1-2-

தோளும் தோள் மாலையுமான மார்வும் கண்டு ஆசைப் பட்டு வந்த தண்டமோ –
இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் –
புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்கிறபடியே விநாசத்தைப் பலிப்பித்தான் –
இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் -இப்பிராப்த விஷயத்தை ஆசைப் பட்ட நாங்களும்

—————–

சங்கும் மாமையும் தளரும் மேனி மேல்
திங்கள் வெங்கதிர் சீறும் என் செய்கேன்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்
கொங்கலர்ந்த தார் கூவும் என்னையே —11-1-3-

ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய் இருக்கிறவருடைய – பரிமள பிரசுரமாய் இருக்கிற
தாரானது உள்ளே புக்கு ஸ்த்ரீத்வத்தை நோக்கிக் கொண்டு மறைய இருக்கிறது என் –
இங்கனே புறப்பட்டாயோ -என்று அறை கூவா நின்றது –

——————

அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று
அங்கோர் தாயிருவாகி வந்தவள்
கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே —11-1-4-

போன இடத்திலே நலிய வேணும் என்று தாய் வடிவு கொண்டு வந்தவளை அனுகூலை என்று புத்தி பண்ணாதே
அவளை பிரதிகூலை என்றே அறிந்து அவள் முலையை உண்டு முடித்த ஆராட்சி இல்லாத செயலோ –

———————

அங்கோர் ளரியாய் அவுணனைப்
பங்கமா விரு கூறு செய்தவன்
மங்குல் மா மதி வாங்கவே கொலோ
பொங்கு மா கடல் புலம்புகின்றதே —11-1-5-

அரியவற்றை வருத்தமறச் செய்து தலைக் கட்ட வல்லவன் தன்னை நெருக்கிக் கடைந்து உள்ளுண்டான மதியை
வாங்குகையோ-இக்கடல் இங்கனே கிடந்தது கூப்பிடுகின்றது என்னைப் போலே மதி இழந்தோ இக்கடலும் கூப்பிடுகின்றது –
மதி எல்லாம் உள் கலங்கி இறே இவளும் கிடக்கிறது –
ஒன்றுக்கும் விக்ருதையாகாத நான் கலங்கிக் கூப்பிடுகிறாப் போலே இருந்ததீ
இக்கடலும் தன் காம்பீர்யம் எல்லாம் அழிந்து கூப்பிடுகிறபடியும் –

———————

சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரல் அடரும் என்னையே –11-1-6-

அன்றிலின் உடைய த்வனி எனக்கு பாதகமாகா நின்றது – நான் இதுக்கு எத்தைச் செய்வேன் –
நான் இதுக்கு மார்விலே அம்பு ஏற்கவோ –

—————

பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ
வீவில் ஐங்ணை வில்லி யம்பு கோத்து
ஆவியே இலக்காக எய்வதே—11-1-7-

வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான ஆகர்ஷகமான வடிவை உடையவர் –
ஒரு மேருவை இனிய மேகம் படிந்தால் போலே ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே வர –
சிதிலை யாகாதே நின்று-நான் கண்டத்துக்கு தண்டமோ –காமன் ஆனவன் தன்னுடைய
புஷ்ப பாணங்களாலே-தோல் புரையே அன்றியே மர்மத்திலே எய்கிற இது –

———————-

மாலினம் துழாய் வரும் என்நெஞ்சகம்
மாலினந்துழாய் வந்து என்னுள் புகக்
கோல வாடையும் கொண்டு வந்ததோர்
ஆலி வந்தது ஆல் அரிது காவலே —11-1-8-

தேசிகனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நின்று வழி இட்டுக் கொடுக்கையாலே
ராஷசர்கள் வெல்ல மாட்டிற்று இலர்கள் இறே –
அப்படியே நிலவரே வழி காட்டி கொடு வந்து நலியா நிற்க நம்மால் பரிஹரிக்கப் போமோ –

——————

கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9-

அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –
மிக்க சீர் தொண்டர் இட்ட -என்பான் என் என்னில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே
இவளுக்கு கண் உறங்குவதும்-பழைய நிறம் வருவதுவும் –
அநந்ய பிரயோஜாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்குத்தைக்கு பரியா நின்றார்கள் என்று கேட்ட வாறே
இனி நமக்கு ஒரு குறை இல்லை என்று கண் உறங்கா நிற்கும்-நிறமும் பழைய படியேயாம்-

——————–

அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே
நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம் –

——————

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–11-2-1-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என்
அவனை என் முலையோடு கொடு வந்து சேர்க்க வல்லார் இல்லையோ -என்கிறாள் –

——————

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -11-2-2-

இந்த இடையனானவன் வாயிலே வைத்து-ஸ்த்தானே சத்தான நின்று
ஏங்கி ஊதுகிற குழலானது என்னோடே பாலிசமான வியாபாரங்களை பண்ணா நின்றது –

————————

மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்
அல்லி மலர்த் தண் துழாயை நினைந்து இருந்தேனையே
எல்லியின் மாருதம் வந்தடும் அதுவன்றியும்
கொல்லை வல்லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே —11-2-3-

அப்போது இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்கிற என்னை –
சந்த்யா சமயத்திலே தென்றல் ஆனது வந்து நலியா நின்றது –அதுக்கு மேலே –
வெளி நிலத்தில் நாகைத் தொடர்ந்து-அது கை புகுந்தால் அல்லது மீளாத படி இருக்கிற
வ்ருஷத்தின் உடைய கழுத்தில் மணி யோசையானது ஆராட்சி இல்லாத இடத்தில் செயலைச் செய்யா நின்றது –

———————-

பொருந்து மா மரம் ஏழு எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அதுவன்றி
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்—11-2-4-

அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் –
கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல் ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் –
அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது –
ஓர் அபலை இதுக்கு கடகிடவோ –

—————

அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்
பொன்னம் கலை அல்குல் அன்னம் மென்னடைப் பூங்குழல்
பின்னை மணாளர் திறத்த மாயின பின்னையே —11-2-5-

ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபரான அவர் இடையாட்டாத்தோமான பின்பு இறே இவை நமக்கு இப்படியாகப் புகுந்தது –
அவருடைய பிரணயித்வம் கண்டு நாம் அகப்பட்ட பின்பு இறே- இவை நமக்குப் பாதகமாகப் புக்கது –
பூர்வ அபராதங்களுக்கு சேர்த்தி போராதாகிலும்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பின்னை மணாளன் திறத்தோம் ஆன பின்பு அன்றோ-இவை இப்படி யாயிற்று –
சாமான்யன் என்று ஈடும் ஈடெல்லாம் இட அமையும் என்பாரைப் போலே
அவளோடு ஒரு சம்பந்தம் சொல்லி நலிகிறவை நலிந்தால் என்-என்பாராம் –

——————–

ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் தாம்
பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே –11-2-6-

கோழியும் கூகின்றது இல்லை –விடிவுக்கு பிராப்தமான இதுவும் கூட அரிதாக நின்றது –
கூர் இருள் ஆயிற்றே –விடிந்த பின்பும் இருள் கால் வாங்குகிறது இல்லை –

——————–

காமன் தனக்கு முறை யல்லேன் கடல் வண்ணனார்
மா மணவாளர் எனக்குத் தான் மகன் சொல்லில்
யாமங்கள் தோறும் எரி வீசும் என்னிளம் கொங்கைகள்
மா மணி வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே —11-2-7-

அந்த காமன் -எனக்கு நன் மகன் –சாமங்கள் தோறும் காமாக்னியை தூவா நின்றான் –
தனக்கு நான் அனுவர்த்த நீயையான ஆகாரம் கிடக்கச் செய்தே என்னுடைய இம்முலைகள் தாம்
அவனுக்கு என்றே யாயிற்று வளருகிறது –

——————-

மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சு நிறை கொண்டு போயினர் நினைக்கின்றிலர்
வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ
நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8-

ரஷகன் பாதகன் ஆனவாறே அவன் பரிகரமும் பாதகமாம் அத்தனை ஆகாதே –
அவன் பாதகனாய் புக்கவாறே அவனை அனுவர்த்தித்த அவன் பரிகரமும் பாதகமாகப் புக்கது –
இவள் சன்னதியிலே வர்த்திக்கில் இவளை அனுவர்த்தித்துக் கொண்டு பிராப்த காலத்தில் விடிய வேணும் என்று
நினைத்து அது செய்யாத போன விடம் தெரியாத படி போனான் –
இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி
இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே –

——————-

காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் நலத்தின் மிகு
பூமரு கோல நம் பெண்மை சிந்தித்து இராது போய்
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ –11-2-9-

அவன் முறை தப்பி நின்றான் – அவன் பரிகரமும் முறை தப்பி நின்றது –
இனி நாமும் முறை தப்பி நின்றாகிலும் ஜீவிக்கும் அத்தனை – என்கிறாள் –

——————

வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை
மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல்
என்றும் நில்லா வினை யொன்றும் சொல்லில் உலகிலே –11-2-10-

பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் சில நாள் போய் சில நாள் நிற்கை அன்றிக்கே
ஒரு நாளும் ஒன்றும் நில்லாது –இவ்வளவு அன்றிக்கே மேல் பெறப் புகுகிற பேற்றின் கனத்தைச் சொல்லப் புகில் –
வருந்தி பனை நிழல் போலே தங்கள் அளவிலே போகை அன்றிக்கே இவர்கள் இருந்த தேசத்திலும் கூட இன்றிக்கே ஒழியும் –
பாதக பதார்த்தங்களின் கையிலே நோவு படாதே அவை தானே அனுகூலமாம் படி அவனோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர் –

——————–

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-

நான் வந்தேறியாயும் ஸ்வா பாவிகமாயும் உண்டான என்னுடைய ஆபரணங்களை இழந்து இருக்கிற
இப்போது கிடிகோள்- அவர் ஆஸ்ரித அர்த்தமாக தம்மைத் தாழ விட்டு சாரத்தியம் பண்ணியும் -இரப்பாளனாகவும் –
தம்மைப் பேணாதே அம்பு ஏற்றும் பண்ணும் வியாபாரங்கள் அடைய நமக்குப் பலித்த படி இது கிடிகோள் –

————————

இருந்தான் என்னுள்ளத்து இறைவன் கறை சேர்
பருந்தாள் களிற்றுக் கருள் செய்த செங்கண்
பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட
வருந்தாது என் கொங்கை யொளி மன்னு மன்னே-11-3-2-

அகவாயில் வாத்சல்ய பிரகாசமான திருக் கண்களை உடையனாய் –
எல்லாம் பட்டுக் காண வேண்டும்படியான தோள் அழகை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி பாடுவதாக –ஒரு கிலேசம் இன்றிக்கே
என் முலைகள் சம்ச்லேஷ சமயத்தில் போலே தன் நிறம் பெற்று வாரா நின்றது –

———————-

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே —11-3-3-

அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –
தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து
அது பலிக்கும் அளவானவாறே ஸ்ப்ருஹநீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே
த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்மவஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –
இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –
உடைமை நாம் இட்ட வழக்கான தற்குப் பின்னே உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று
இருக்க மாட்டுகிறிலர்-

——————

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே ——11-3-4-

இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன –ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய
தமக்கு தாரகம் இல்லையாம் படி -யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் –
யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில் அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு
அறியப் போகாது யென்று சொல்லலாமே –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை
அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

———————

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே -11-3-5-

உபாசன வேளையிலே இப்படி புத்தி பண்ணி பின்பு வேறு ஒரு படியாகை அன்றிக்கே
உபாசநாநுகுணம் பலம் ஆகையாலே அவ்வளவும் போனால்
பெரும் பரம பிரயோஜனமாய்க் கொண்டு பற்றப்படுவதும் தாமேயாக மனசிலே வைத்தோம் –

——————

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும்
எய்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே -11-3-6-

அவன் தானே பிரதம ஸூஹ்ருதமாய் நின்று வ்யாபரிக்கை யாலே
பூமி அந்தரிஷாதிகளை அளந்து கொள்ளுகிற இடத்தில்-ஆகாசமானது எட்டுத் தொட்டாய் போந்தது
பூமியானது திருவடிகளுக்கு போராது ஒழிவதே -யென்று இதிலே வித்தராய் – ப்ரஹ்மாதிகள் எழுதிக் கொடுத்து –
கைத்தாமரை குவிக்கும் –ஸூக பிரதனான என்னுடைய ஸ்ரீ கிருஷ்ணனை வைத்தார் அடியார் மனத்தினில்
வைத்து இன்பம் உற்றார் –

———————–

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –11-3-7-

நம்முடைய விடாய்-அவனை ஹிருதயத்திலே வைத்து அனுசந்தித்து ஆனந்தித்தவர்கள் அளவன்றிக்கே இரா நின்றதி –
பிரத்யாசத்தி யன்றே சைதில்யத்துக்கு பரிகரம் –நான் கேட்டிருந்த படி ஒழிய கிட்டக் கொள்ள மற்றைப் படியேயாய் இருந்தது –
ஒரு வசன மாத்ரத்தாலே பிறககுமவை போல் அன்றிக்கே விஷயா தீனமாக பிறக்குமவையாய் இருப்பது –
இவை யென்ன ஆச்சர்யங்கள் –

——————-

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே –11-3-8-

பரம பிராப்ய பூதனானவனை கிட்டுகையில் அருமை உண்டோ –
அவன் நினையாமையாலே யன்றோ -என்னுதல் –
நமக்கு அவன் பக்கல் ருசி இல்லாமை அன்றோ -என்னுதல் –

———————–

நன்னெஞ்சே நம்பெருமான் நாளும் இனிதமரும்
அன்னம் சேர் கானல் அணியாலி கை தொழுது
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன்
பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே –11-3-9-

அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கப் பெற்றிலோமோ யாகிலும்
காதாசித்கமான கைங்கர்யத்திலே யாகிலும் அந்வயிக்க லாம் படி அவன் இங்கே சந்நிஹிதனாகப் பெற்றோமே
இது தான் முந்துற முன்னம் உண்டாகப் பெற்றோமே -யென்று இவ்வளவால் உண்டான திருப்தியோடு தலைக் கட்டுகிறது –

—————————

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
கற்றோர் முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10-

கற்றோர்கள் பூமி அடங்கலும் ஆள்வர்கள்- கற்க வேண்டா – இவை கேட்போம் யென்று செவி தாழ்த்தார்க்கு
அனுபவிக்க வேண்டியது ஒரு துயர் இல்லையே –

———————

நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1-

தன் திரு முதுகிலே மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம் தாரகமான வஸ்துவை –
சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை – அவன் அப்படி தன்னுருக் கொடுத்து வேற்றுருக் கொண்டு
அரியன செய்து ரஷியா நின்றான் –
உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை இத்தனையும் செய்யப் பாராய்
மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாது இருக்க வேண்டாவோ –

——————-

செருமிகு வாள் எயிற்ற வரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணுமுடனே
வெரு வர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய
பருவரை யொன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும்
அருவரை யன்ன தன்மை யடலாமையான திரு மால் நமக்கோர் அரணே –11-4-2-

ஒரு மலை சாய்ந்து கிடக்கிறாப் போலே இருக்கிற வலியை உடைய
ஆமையான ஸ்ரீ யபதி -இனி ஒரு ரஷகம் வேண்டாத அரண் –

———————-

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வடகுன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-

அனுரூபஸ் சவை நாத – என்னுமா போலே இதுக்கு அடைய-இவை அடையத் திருவடிகளிலே சேர்ந்து
அருளுவதற்கு தகுதியான காரணம் ஸ்ரீ வராஹ கல்பாதியிலே மஹா வராஹமாய் ரஷித்த ஸ்ரீ திரு மேனி –
அது நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹ வஸ்து –

———————-

தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அள வெழ வெம்மை மிக்க வரியாகி யன்று பரியோன் சினங்கள் அவிழ
வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒரு உகிரால்
விள வெழ விட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11-4-4-

வளைந்த திரு உகிர்களை உடையவன் -வலி மிக்க பெரிய மறத்தை உடைய ஹிரண்யன்
வடிவைக் கண்டு அத்தை ஒன்றாக மதியாதே கிட்டு ஸ்ரீ திரு வாழிக்கு இரை போதாது யென்று ஒரு ஸ்ரீ உகிராலே-
இரண்டு பிளவாம்படி இட்ட குழி மஹா பிரளயத்தில் மும்மடங்கு பெரிது –

——————–

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே —11-4-5-

மந்தரத்துக்கு மேல் போய் சந்த்ராதித்யர்கள் ஸ்தானத்து அளவிலே நின்று ஆதரிக்க
ப்ரஹ்மா-நம் இருப்பில் திருவடிகள் வந்தது -யென்று புறப்பட்டு ஆஸ்ரயிக்கும் படி – வளரா நிற்பதாய் –
சேரக் குடி ஏறி இருக்கிற உபரிதன லோகங்கள் ஏழும் நடுவே போம்படி நடத்தின திருவடிகள் நமக்கு ரஷகம் –

————————–

இரு நில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகியவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன்
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -11-4-6-

ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபர்-ஸ்ரீ யபதி -ஈஸ்வரன் உடைய சர்வ இந்த்ரியங்களையும்
அபஹரிக்க வல்ல நீளைப் பிராட்டிக்கு வல்லவர்-யச்யஸா -என்னும்படி இவளை உடையவர் -என்னும்
பெரும் புகழை உடையவர் –
சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ரஷித்து ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகத்வ பாரிப்பை உடையராய்
இப்படிக்கொத்தவர் நம்முடைய் ஆஸ்ரயணத்தின் சிறுமை பாராதே யாவதாத்மபாவியாக நம்மை அடிமை கொள்வர் –

——————–

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற் கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-

ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின –
இதடையச் செய்தது -ஸ்ரீ பிராட்டி பக்கல் பிச்சாலே இறே
இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –

————————

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

லோகத்தில் அஞ்ஞானம் தீர்ந்து தன்னைக் கண்டார் எல்லாரும் ஆனந்த நிர்பரராம் படியாக
கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாத ஸ்ரீ திர்யக்காய் – ஸ்ரீ சாரதியாய் உபதேசித்தால் போலே
ஹிதானுசந்தானம் பண்ணக் கடவ அவனே ரஷகன் –

————————

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைப்
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே —11-4-9-

ஸ்ரீ யசோதை பிராட்டி உரலோடு கட்ட அத்தைக் கொண்டோடின மிடுக்கை உடைத்தாய் –
ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக-நடை கற்ற தெள்ளியவன்
நம்முடைய பாபத்தை சவாசனமாக போக்கும்-இது நிச்சிதம்

————————

கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல்
ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே —11-4-10-

நெஞ்சாலே தரித்தும்-இதுவே யாத்ரையாக யுழலு கிறவர்கள்
ஸ்ரீ பரம பதத்தைப் பெற்று அனுபவிப்பார்கள்-

———————-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

காணேடீ — தோழமையால் ஏடீ -என்கிறது ஆதல் –
பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே ததிமுகனை குத்தினால் போலேஹர்ஷத்தாலே சொல்லுகிறாள் ஆதல் –
இப்படி தன் ஸ்வரூபத்தை அழிய மாறி ஆஸ்ரித ரஷணத்துக்காக கிலேசப் பட்டவன் ஆனால்
இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ –
அவன் நிரதிசய ஆநந்த பரி பூர்ணனாய் இருக்கிறது நமக்காகவாய் இருந்த பின்பு
இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ –

——————-

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே —11-5-2-

ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில்
இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் –
கர்ம வஸ்யர் உடைய ரஷணத்துக்கு வந்து பிறக்குமவன் ஆகையாலும்
அவன் தான் சர்வ காரண பூதன் ஆகையாலும்-நமக்கு ஓர் குறை உண்டோ -என்கிறது –

—————————–

ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3-

அவன் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் நேரே கிடையா விட்டால் களவு கண்டாகிலும் ஜீவிக்குமவன் ஆகையாலும்
ரஷணத்தில் பர்யாப்தி பிறந்து இராதவன் ஆகிலும் நமக்கு ஒரு குறை உண்டோ –

————————

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே —11-5-4-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே அது பின்னாட்டுகிறபடி –
மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே சேமித்து வைத்த அன்று
கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் –
சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது –
இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண் –

————————

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே —11-5-5-

இடைச்சிக்கு பரிச்சின்னனாய் இருந்தானே ஆகிலும் ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு
அபரிச்சின்னனாய் இருக்கும் –

——————

கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே —11-5-6-

கேட்டார் நெஞ்சு ஈரும் படி த்வனிக்க இடையர் மனஸ் களிப்ப மன்றிலே மரத்தைக் காலிலே கட்டி ஆடினான் காண் –
இப்படி இடையர் கண் வட்டத்திலே நிற்கிற வஸ்துவை ப்ரஹ்மாதிகள் கண் வட்டத்திலே கண்டு அறிவார் இல்லை –

——————–

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே –11-5-7-

துர் உக்தி பண்ணுவதற்கு ஒருவரும் இல்லாத சமயத்தில் துர்யோதனில் குறைந்தார் இல்லாத இஜ் ஜகத்தை
வயிற்றிலே வைத்து ரஷிததான் காண் –

——————

பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத்
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே —11-5-8-

இப்படி தாழ்வு செய்தவன் லோகத்தில் ராஜாக்கள் ஆனார் முடி மேல் மாலையிலே காண்
திருவடிகளை வைத்துக் கொண்டு இருப்பது – ராஜாதி ராஜ சர்வேஷாம் -இத்யாதி –

———————–

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —–11-5-9-

வடிவு அழகாலும் வரையாதே தீண்டும் படி யாலும் ஆஸ்ரிதர்க்கு தாழ்வு செய்யும்படியாலும் –
கிருஷணாவதாரத்தோடு போலியாய் இறே ஸ்ரீ வாமன அவதாரம் இருப்பது –
உதாரனாய் இருக்கிற மஹா பலி யஞ்ஞ பூமியிலே அவன் கண் வட்டத்துக்கு உள்ளே நின்று
மூன்றடி மண் இரந்தான் காண் –
அவன் கண் வட்டத்தே நின்ற இவனை நாட்டில் கண்டவர் இல்லை கிடாய் –

—————————–

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-

கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி
ஸ்ரீ திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது –
சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி ஸ்ரீ திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண்
அப்படி இருக்கிறவன் காண் ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும்
புறப்படாதே கிடக்கிறான் –

———————

மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1-

தமோ குணா அபிபூதராய் இருக்கையாலே ஸ்ரீ பரமாத்மாவுக்கு சரீரம் என்று
உபாசிக்கப் போகாதவர்களை –செய்ந்நன்றி குன்றேல்மின் –
அப்ராப்த விஷயங்களில் தாழ்வு செய்ய ஆசைப் பட்ட நீங்கள் –ஸ்ரீ சர்வேஸ்வரனையே ஏத்தப் பாருங்கோள் –

———————

நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று
எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர்களே —11-6-2-

இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி இவனைக் கை விட்டி கோளோ-
லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதாயத்தம் என்னும் இடம் அறியீர்களோ –

————————–

நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே —11-6-3-

ஐஸ்வர்ய சூசகமாய் எதிரிகளை முடிக்க வற்றான ஸ்ரீ திரு வாழியை உடையவன் உடைய குணங்களை
அடைவு கெடச் சொல்லாத தண்ணிய ஷூத்ரங்களை-சஹிக்க அரிதாய் இருக்கிறவவர்கள்
க்ரௌர்யம் இருந்த படி என் –

—————————

பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலேயான காலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித்தலைவன் முழங்கொளி சேர் திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –11-6-4-

இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே
சத்வஸ்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் முழங்கா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருந்து உள்ள
ஸ்ரீ திரு வயிற்றிலே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கனிந்து இருந்து களாம் போலே இருந்துள்ள
ஸ்ரீதிரு உடம்பை உடைய ஒருவனையே – கழல் தொழுமா கல்லீர்களே –

————————

பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலேயான காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே —-11-6-5-

சைதன்யம் உண்டாகில் வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து
அத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகனாய் –
அளவுடையவனாய் இருந்துள்ளவனுடைய பெயரான திரு நாமங்களையே பேசீர்களே –

——————-

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே —11-6-6-

நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க –
அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர் –
அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –

——————-

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே –11-6-7-

கிருபை பண்ணி சந்நிஹிதனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ணமங்கைக்கு நிர்வாஹகன்
ஆனவனுடைய திருவடிகளைப் பேணி –அவனை ஹிருதயத்தில் எண்ணாத மனுஷ்யரை –
பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அவைஷ்ணவர்களை நினையாத போது –
இனிது என்கை- –

————————

மறம் கிளர்ந்து கரும் கடல் நீர் உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்
புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே —11-6-8-

ரஷ்யத்தின் அளவில்லாத ரஷண தர்மத்தாலே விஞ்சின திரு வயிற்றின் உடைய உள்ளே வைத்து
உம்மை உய்யக் கொண்ட –கறுத்து இருந்துள்ள தேஜஸ்சை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை நினையாதார் தண்ணியவர்கள் –

———————

அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே –11-6-9-

பிரளயம் தேடுகின்றது என்று இளைத்துக் காட்டி அல்லாத அவயவத்தோடு ஒத்த திரு வயிற்றின் உள்ளே வைத்து
உம்மை உய்யக் கொண்ட –மேகம் போலே உதாரனான கையை உடையனாய்
மணி போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் ஸ்ரமஹரமான ஸ்ரீ திருக் குடைந்தையை பாடி ஆடீர்களே –

——————

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே —11-6-10-

இப்பாட்டுக்கு இதையே பொருள்
திரண்டு பரந்த சோலைகள் உடைய ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் அறிந்து உரைத்தார் –
இதையே பொருள் -ஸ்ரீ த்வயத்தின் க்ரமத்திலே பல சுருதி அருளுகிறார் –
சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் -என்றும்
குடந்தையே தொழுமின் என்றும் –உபக்ரமித்து –
தண் குடந்தை பாடி ஆடீர்களே என்று உபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –

—————-

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே —11-7-1-

அமுதம் கொண்டுகந்த- பிறருக்கு உபகரித்தானாய் இராதே தன் பேறாக உகந்தான் –
இப்படிச் செய்கிறது -உடையவன் ஆகையாலே –
பூணார மார்வனைப்-இவர் தம்முடைய -அம்ருதம் –சர்வாபரண பூஷிதனாய் பெரிய திருவடி தோளில் இருந்த இருப்பு –
ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே –
இதுக்கு முன்பு கண்டவை என்றும் கண் அல்ல –ஷேபமாகக் கண்டோமே -என்கிறார் முதல் பாசுரத்தில்

———————————

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே —-11-7-2-

உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று ஆஸ்ரிதர் ஈடுபட்டு
நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவனுடைய கீர்த்தி கேட்க வென்றால் கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல –
கேட்டோமே –ஷேபம் –

——————-

தூயானைத் தூய மறையானைத் தென்னாலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை வணங்கி யவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3-

கீழ் இரண்டு பாட்டாலே ஞாநேந்த்ரியன்களை நிரசித்த்தார்
இனி மூன்று பாட்டாலே கர்மேந்திரியங்களை நிரசிக்கிறார் –
இதில் அவனுடைய கீர்த்திகளை ஒழிய பேசுமவை கடலோசை பேச்சாய் இருக்கச் செய்தேயும் –
அர்த்தம் இன்றிக்கே இருக்கிறாப் போலே – கேட்டுத் திரிகிறிகோள் இறே -என்று ஷேபம் –

————————-

கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய் மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ —11-7-4-

சிறுக்கனுக்கு விரோதியைப் போக்கி மாலை இட்டு இருந்தவனை –பிரேம பரவசராய்
பாடும் பாட்டு அல்லது பாட்டு அல்ல –

——————-

மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே —11-7-5-

ஒன்றைச் சொல்லி இன்னது உபமானம் என்ன ஒண்ணாத வடிவு –
சொல்லும் இடத்தில் உபமானம் கொண்டு இழிய வேணும் – அவை தான் இதுக்குப் போராவாய் இருக்கும் –
காமினிக்கு காந்தனுடைய தேஹமும் –ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லாருக்கும் படி –
சங்கேந்தும் கையானைக் –தொழுகைக்கு இவன் கை போலே-தொழுவித்துக் கொள்ளுகைக்கு அவன் கை –
தமச பரம -இத்யாதி –
கை தொழாக் கையல்ல கண்டாமே –-தொழாக் கை கை யல்ல -என்று அந்வயம்-

———————

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-

அவனுக்கு என்று இராத-ஞான இத்ரியங்கள்-கர்ம இந்த்ரியங்கள்
அனைத்துக்கும் நிர்வாஹகமான மனஸ்ஸை இரண்டு பாசுரங்களால் நிரசித்து அருளுகிறார் –
தான் நினைக்கும் அவை ஒழிய நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் –
ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது –

——————–

கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே —11-7-7-

உபமானம் இல்லை என்று பேசாதே இருக்க மாட்டாரே – திவ்ய விக்ரஹத்துக்கு உபமானம் அபூமியானால்
ஆத்மா குணங்களுக்கு உள்ளுப் போகார் இறே-
இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை –
நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல –

———————–

வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானைச் செங்கண் நெடியானைச் சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமோ —-11-7-8-

ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்-இரண்டையும் அறியாதவர்கள்

———————-

தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9-

அவன் தன்னைப் பேணாது ஒழிய தங்களைப் பேணித் திரியுமவர்கள மானிடவர் அல்லர் –
பிரித்து அவயவங்களைச் சொல்லுகிறது என் – கட்டடங்க மனுஷ்யர் அல்லர் –
என்று என் மனத்தே வைத்தேனே –ஸ்ரீ சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே –
அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஸ்ரீ ஆழ்வார்
இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் –
மித்ர பௌ பிகம் கர்த்தும் -என்னும் அவளிலும் இவருக்கு வாசி உண்டு –
தலை தான் போனது அவனுக்கு ஸ்வரூபம் நசிக்கும் இவனுக்கு

—————–

மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-

எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை –
இத் திருவடிகளைச் சூடும் ஸ்ரீ ஆழ்வார் –சேஷித்வத்துக்கு அவன் ஸ்ரீ திரு வாழியைப் பிடித்தால் போலே
சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி-
முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் – இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்-

——————–

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

பயத்துக்கு பரிஹாரமும்-உத்பாதகனும் -நீயாய் இருந்தாய் – அதுக்கு பய ஸ்தானம் ஆறு –
உமக்கு பய ஸ்தானம் ஏது என்ன –
அதுக்கு ஆறு ஓன்று-எனக்கு ஐஞ்சு ஆறு அகழ்ந்து பொகடுகிறது –
அஞ்சும் ஆறும் ரசோக்தி விஷயங்கள் ஐந்தும் – தத் க்ராஹங்கள் ஆறும்
கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் -ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஆறும் –
ரூபத்தை சொல்லாமல் விட்டது -பயத்தாலே கண்ணாஞ்சுழலை இட்டமை தோற்றுகைக்கு –
உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் – அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் –
மமாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது-
என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்
வார்த்தையை நினைப்பது-

———————-

சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி
காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல்
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா —11-8-2-

பெரும் காற்றிலே அகப்பட்ட மரக் கலத்துக்கு உள்ளே சேதனர் உடைய நெஞ்சு போலே
பயப் படுக்கைக்கு மேற்பட பரிஹாரத்தில் அந்வயம் இல்லை இறே
அதுக்கு உட்பட்ட மனுஷ்யர் எல்லாருக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கிறது –
மிகவும் நடுங்கா நிற்பன் -சரீர வியோக மாத்ரத்திலே இவர்களுக்கு –
ஆழி வலவா –உன் கையில் திரு வாழிக்கும் எனது உள் நடுக்கத்துக்கும் சேர்த்திச் சொல்லிப் போ –
உனக்கு அசக்தி உண்டு என்று சொன்னாய் ஆதல் -என் நடுக்கைத்தை பரிஹரித்தல் செய் –

——————-

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3-

ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே இவ்விடம் த்யாஜ்யம் ஆவது
அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே –
இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும்
இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன்
சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே
அநந்தரம் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே
இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று
அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் ஸ்ரீ நஞ்சீயர் –
இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை
இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால் பொய்யாகாது என்ற படி –
இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது –

—————-

உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4-

இரண்டு தலையும் நெருப்பு பற்றி எரியா நிற்க நடுவே அகப்பட்டு நோவு படுகிற ஷூத்ர பதார்த்தம் போலே யாயிற்று
ஜன்ம மரணங்கள் இரண்டிலும் அகப்பட்டு நோவு படுகிற படி –
பிரளயத்தில் அகப்பட்டு அழிந்து போகப் புக்கதை எடுத்து ரஷித்தவன் அன்றோ –

———————–

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி முதல்வா —11-8-5-

நீ பரிஹரித்த பிரளய ஆபத்தின் அளவல்ல நான் நோவு படுகிற சம்சார பிரளயம் –
அங்கு ஒருவருமே அபேஷியாது இருக்க பரிஹரித்தாய் இங்கு நான் அபேஷிக்க வேண்டுகிற ஹேது என் –

———————-

படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன்தன் அருளே –11-8-6-

இப்பாட்டில் அருளிச் செய்யும் போது
இதுவே அமையும் என்னும் படி ஆர்த்தி தோற்ற அருளிச் செய்து அருள்வர் –
நான் உன்னை அடையும் படியாக அருள வேணும் –
அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் –
அது பின்னை செய்யப் போமோ என்னில்
வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது
முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் –
தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும் –

———————

வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7-

விசத்ருச த்ருஷ்டாந்தமாய் இருந்ததீ என்ன –அந்வயம் -விச்சேதத்தைப் பொறுக்கும்
வ்யதிரேகம் அப்படி விச்சேதத்தைப் பொறாது இறே-அத்தைப் பற்றச் சொல்லிற்று –
உன்னைக் கொண்டு விரோதியைப் போக்கிக் கொள்ள அமையும் என்று இருப்பாருக்கு விரோதியைப் போக்கிக் கொடுப்புதி –
உன்னோடு அணைய வேண்டும் என்று ஆசைப் பட்டாருக்கு நித்ய சம்ச்லேஷம் பண்ணுகைக்கு உடம்பு கொடுப்புதி –
நீ வேண்டா பிரயோஜனமே அமையும் என்று இருப்பாருக்கு அத்தைக் கொடுத்து
உன்னையே பெற வேணும் என்று இருப்பாருக்கு உன்னைக் கொடுப்புதி –
பரஞ்சோதீ – நீ அணைக்குக்கு உடம்பைக் கொடுக்காதே-ஷயத்தை வர்த்திப்பான் ஒருவன் ஆனாலும்
உன்னை விடலாயோ வடிவு அழகு இருப்பது –

———————-

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-

சோகித்த அர்ஜுனனைக் குறித்து உன்னுடைய சர்வ பரங்களையும் நம் தலையிலே ஏறிட்டு
நம்மையே தஞ்சமாக நினைத்து இரு –நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம் மாஸூச -என்னுமா போலே
நான் உஜ்ஜீவிக்கும் படி யெனக்கு ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேணும் –
பூ வலரும் போதை விகாசம் போலே வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண
வாயிற்று ஆசைப் படுகிறது –
ஆஸ்ரித பரதந்த்ரனாகை -வென்றால் உகப்பார் ஒருவர் ஆயிற்று –

———————

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-

பணியாய் என்றார் கீழ் பாட்டில்
தத் அனுஜாநந்தம் உதார வீஷணை-என்றும்
தூது செய் கண்கள் -என்ற படியும்
மலர விழித்துக் கடாஷிக்க -க்ருதார்த்தராய் –
சம்சார உத்தரணத்துக்கு சம்சயம் உண்டோ என்று கொண்டு
உமக்குத் திரு உள்ளம் ஆனபடி என் மநோ ரதத்தை தலைக் கட்டி அருள பிரார்த்திக்கிறார் -என்று சங்கதி –

————————–

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே —11-8-10-

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்-வாசனையோடு கழியும் படி
அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் –
இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்-அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும்
சொல்ல வல்லவர்களுக்கு –
பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து-மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று
ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு-ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி –
சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து
பின்னையும்-வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான
பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று பிரார்த்தித்த படியே சவாசனமாகக் கழியும் –

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் -பதினொன்றாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

July 15, 2019

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1-

பசுக்களும் இடையரும் வர்ஷத்தைப் பரிஹரித்துக் கொள்ளுதல் –
ஸ்ரீ பிராட்டி -அதார்மிகனான ராவணன் நஷ்டன் ஆவான் -என்று சபித்து போரும் என்று ஆயிற்று –
இவளுக்கு தென்றல் பரிஹரித்துக் கொள்ள ப்ராப்தி உள்ளது –என்கிறார் முதல் பாசுரத்தில்

தோளும் தோள் மாலையுமான மார்வும் கண்டு ஆசைப் பட்டு வந்த தண்டமோ –
இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் –
புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்கிறபடியே விநாசத்தைப் பலிப்பித்தான் –
இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் -இப்பிராப்த விஷயத்தை ஆசைப் பட்ட நாங்களும் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில் –

ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய் இருக்கிறவருடைய – பரிமள பிரசுரமாய் இருக்கிற
தாரானது உள்ளே புக்கு ஸ்த்ரீத்வத்தை நோக்கிக் கொண்டு மறைய இருக்கிறது என் –
இங்கனே புறப்பட்டாயோ -என்று அறை கூவா நின்றது –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

போன இடத்திலே நலிய வேணும் என்று தாய் வடிவு கொண்டு வந்தவளை அனுகூலை என்று புத்தி பண்ணாதே
அவளை பிரதிகூலை என்றே அறிந்து அவள் முலையை உண்டு முடித்த ஆராட்சி இல்லாத செயலோ –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அரியவற்றை வருத்தமறச் செய்து தலைக் கட்ட வல்லவன் தன்னை நெருக்கிக் கடைந்து உள்ளுண்டான மதியை
வாங்குகையோ-இக்கடல் இங்கனே கிடந்தது கூப்பிடுகின்றது என்னைப் போலே மதி இழந்தோ இக்கடலும் கூப்பிடுகின்றது –
மதி எல்லாம் உள் கலங்கி இறே இவளும் கிடக்கிறது –
ஒன்றுக்கும் விக்ருதையாகாத நான் கலங்கிக் கூப்பிடுகிறாப் போலே இருந்ததீ
இக்கடலும் தன் காம்பீர்யம் எல்லாம் அழிந்து கூப்பிடுகிறபடியும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அன்றிலின் உடைய த்வனி எனக்கு பாதகமாகா நின்றது – நான் இதுக்கு எத்தைச் செய்வேன் –
நான் இதுக்கு மார்விலே அம்பு ஏற்கவோ –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான ஆகர்ஷகமான வடிவை உடையவர் –
ஒரு மேருவை இனிய மேகம் படிந்தால் போலே ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே வர –
சிதிலை யாகாதே நின்று-நான் கண்டத்துக்கு தண்டமோ –காமன் ஆனவன் தன்னுடைய
புஷ்ப பாணங்களாலே-தோல் புரையே அன்றியே மர்மத்திலே எய்கிற இது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தேசிகனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நின்று வழி இட்டுக் கொடுக்கையாலே
ராஷசர்கள் வெல்ல மாட்டிற்று இலர்கள் இறே –
அப்படியே நிலவரே வழி காட்டி கொடு வந்து நலியா நிற்க நம்மால் பரிஹரிக்கப் போமோ –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –
மிக்க சீர் தொண்டர் இட்ட -என்பான் என் என்னில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே
இவளுக்கு கண் உறங்குவதும்-பழைய நிறம் வருவதுவும் –
அநந்ய பிரயோஜாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்குத்தைக்கு பரியா நின்றார்கள் என்று கேட்ட வாறே
இனி நமக்கு ஒரு குறை இல்லை என்று கண் உறங்கா நிற்கும்-நிறமும் பழைய படியேயாம்-
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே
நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————–

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–11-2-1-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என்
அவனை என் முலையோடு கொடு வந்து சேர்க்க வல்லார் இல்லையோ -என்கிறாள் முதல் பாசுரத்தில்

இந்த இடையனானவன் வாயிலே வைத்து-ஸ்த்தானே சத்தான நின்று
ஏங்கி ஊதுகிற குழலானது என்னோடே பாலிசமான வியாபாரங்களை பண்ணா நின்றது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அப்போது இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்கிற என்னை –
சந்த்யா சமயத்திலே தென்றல் ஆனது வந்து நலியா நின்றது –அதுக்கு மேலே –
வெளி நிலத்தில் நாகைத் தொடர்ந்து-அது கை புகுந்தால் அல்லது மீளாத படி இருக்கிற
வ்ருஷத்தின் உடைய கழுத்தில் மணி யோசையானது ஆராட்சி இல்லாத இடத்தில் செயலைச் செய்யா நின்றது –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் –
கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல் ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் –
அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது –
ஓர் அபலை இதுக்கு கடகிடவோ –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபரான அவர் இடையாட்டாத்தோமான பின்பு இறே இவை நமக்கு இப்படியாகப் புகுந்தது –
அவருடைய பிரணயித்வம் கண்டு நாம் அகப்பட்ட பின்பு இறே- இவை நமக்குப் பாதகமாகப் புக்கது –
பூர்வ அபராதங்களுக்கு சேர்த்தி போராதாகிலும்–என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பின்னை மணாளன் திறத்தோம் ஆன பின்பு அன்றோ-இவை இப்படி யாயிற்று –
சாமான்யன் என்று ஈடும் ஈடெல்லாம் இட அமையும் என்பாரைப் போலே
அவளோடு ஒரு சம்பந்தம் சொல்லி நலிகிறவை நலிந்தால் என்-என்பாராம் –

கோழியும் கூகின்றது இல்லை –விடிவுக்கு பிராப்தமான இதுவும் கூட அரிதாக நின்றது –
கூர் இருள் ஆயிற்றே –விடிந்த பின்பும் இருள் கால் வாங்குகிறது இல்லை –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அந்த காமன் -எனக்கு நன் மகன் –சாமங்கள் தோறும் காமாக்னியை தூவா நின்றான் –
தனக்கு நான் அனுவர்த்த நீயையான ஆகாரம் கிடக்கச் செய்தே என்னுடைய இம்முலைகள் தாம்
அவனுக்கு என்றே யாயிற்று வளருகிறது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ரஷகன் பாதகன் ஆனவாறே அவன் பரிகரமும் பாதகமாம் அத்தனை ஆகாதே –
அவன் பாதகனாய் புக்கவாறே அவனை அனுவர்த்தித்த அவன் பரிகரமும் பாதகமாகப் புக்கது –
இவள் சன்னதியிலே வர்த்திக்கில் இவளை அனுவர்த்தித்துக் கொண்டு பிராப்த காலத்தில் விடிய வேணும் என்று
நினைத்து அது செய்யாத போன விடம் தெரியாத படி போனான் –
இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி
இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அவன் செய்யக் கடவற்றை நாமும் செய்தால் அவன் தொழுமத்தை-நீ கொள்ள வேணும் என்று
என்னை இசைவிக்கைக்கு நீ படும் பாடு அறிதியே –
பிரணயிநி உடைய ஏற்றத்தோடு இருந்து பெறுமது தவிர்ந்தாலும் பக்திமான்கள் பெரும் பேறு பெறத் தட்டில்லையே –
முந்துற -பக்த்யா தவன் அன்யயா சக்ய-என்றானே-நமே மோகம் வசோ பவேத் -என்றும் உண்டே – அவன் பக்கலிலே –
ஸ்ரமஹரமான வடிவை உடையவரைக் காண வேணும் என்று விடாய்த்து பட்டினி விடுகிற கண்களால் காணலாம் ஆகில்
ஒரு முறை பார்த்து இருக்கிறது தான் என் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் சில நாள் போய் சில நாள் நிற்கை அன்றிக்கே
ஒரு நாளும் ஒன்றும் நில்லாது –இவ்வளவு அன்றிக்கே மேல் பெறப் புகுகிற பேற்றின் கனத்தைச் சொல்லப் புகில் –
வருந்தி பனை நிழல் போலே தங்கள் அளவிலே போகை அன்றிக்கே இவர்கள் இருந்த தேசத்திலும் கூட இன்றிக்கே ஒழியும் –
பாதக பதார்த்தங்களின் கையிலே நோவு படாதே அவை தானே அனுகூலமாம் படி அவனோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-

நான் வந்தேறியாயும் ஸ்வா பாவிகமாயும் உண்டான என்னுடைய ஆபரணங்களை இழந்து இருக்கிற
இப்போது கிடிகோள்- அவர் ஆஸ்ரித அர்த்தமாக தம்மைத் தாழ விட்டு சாரத்தியம் பண்ணியும் -இரப்பாளனாகவும் –
தம்மைப் பேணாதே அம்பு ஏற்றும் பண்ணும் வியாபாரங்கள் அடைய நமக்குப் பலித்த படி இது கிடிகோள் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

அகவாயில் வாத்சல்ய பிரகாசமான திருக் கண்களை உடையனாய் –
எல்லாம் பட்டுக் காண வேண்டும்படியான தோள் அழகை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி பாடுவதாக –ஒரு கிலேசம் இன்றிக்கே
என் முலைகள் சம்ச்லேஷ சமயத்தில் போலே தன் நிறம் பெற்று வாரா நின்றது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –
தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து
அது பலிக்கும் அளவானவாறே ஸ்ப்ருஹநீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே
த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்மவஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –
இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –
உடைமை நாம் இட்ட வழக்கான தற்குப் பின்னே உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று
இருக்க மாட்டுகிறிலர்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன –ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய
தமக்கு தாரகம் இல்லையாம் படி -யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் –
யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில் அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு
அறியப் போகாது யென்று சொல்லலாமே –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை
அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

உபாசன வேளையிலே இப்படி புத்தி பண்ணி பின்பு வேறு ஒரு படியாகை அன்றிக்கே
உபாசநாநுகுணம் பலம் ஆகையாலே அவ்வளவும் போனால்
பெரும் பரம பிரயோஜனமாய்க் கொண்டு பற்றப்படுவதும் தாமேயாக மனசிலே வைத்தோம் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவன் தானே பிரதம ஸூஹ்ருதமாய் நின்று வ்யாபரிக்கை யாலே
பூமி அந்தரிஷாதிகளை அளந்து கொள்ளுகிற இடத்தில்-ஆகாசமானது எட்டுத் தொட்டாய் போந்தது
பூமியானது திருவடிகளுக்கு போராது ஒழிவதே -யென்று இதிலே வித்தராய் – ப்ரஹ்மாதிகள் எழுதிக் கொடுத்து –
கைத்தாமரை குவிக்கும் –ஸூக பிரதனான என்னுடைய ஸ்ரீ கிருஷ்ணனை வைத்தார் அடியார் மனத்தினில்
வைத்து இன்பம் உற்றார் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இனி ஒரு ஸ்த்ரீத்வம் உண்டோ அது கிடக்க கிடீர் -யென்று அத்தை உபேஷித்து
அவன் நித்ய வாஸம் ஸ்வாமி ஸ்தானமான ஸ்ரீ திரு மலையையும் ஸ்ரீ கோயிலையும் பாடுதுமே –
அந்த உபேஷா கார்யம் இருக்கிறபடி –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நாம சஹஸ்ரவானவனை அவனுடைய திரு நாமத்தை ஸ்மரியா நின்று கொண்டு
அவன் சாத்திக் கழிக்கையினாலே சூடப் படுவதான திருத் துழாயை நாம் சிரஸா வஹியோமோ –
இப்படி சூடி நாம் அவனைக் கிட்டுகையில் ஒரு தட்டுண்டோ –
கூடக் குறிப்பாகில்-அவனுக்கு திரு உள்ளம் உண்டாகில் –நமக்கு ருசி உண்டாகில் – என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

சம்சார விபூதிக்கு ஆபரணமாய் இருக்கிற ஸ்ரீ திரு வாலியைத் தொழுது –
அநாதி காலம் சேர்ந்து இருந்துள்ள வல்வினைகள் போம்படிக்கு ஈடாக ஸ்ரமஹரமான வடிவை உடைய வனுடைய –
ஸ்ப்ருஹநீயமான திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களை அணியப் பெற்றோம் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

கற்றோர்கள் பூமி அடங்கலும் ஆள்வர்கள்- கற்க வேண்டா – இவை கேட்போம் யென்று செவி தாழ்த்தார்க்கு
அனுபவிக்க வேண்டியது ஒரு துயர் இல்லையே –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1-

தன் திரு முதுகிலே மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம் தாரகமான வஸ்துவை –
சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை – அவன் அப்படி தன்னுருக் கொடுத்து வேற்றுருக் கொண்டு
அரியன செய்து ரஷியா நின்றான் –
உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை இத்தனையும் செய்யப் பாராய்
மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாது இருக்க வேண்டாவோ –
என்கிறார் முதல் பாசுரத்தில்

ஒரு மலை சாய்ந்து கிடக்கிறாப் போலே இருக்கிற வலியை உடைய
ஆமையான ஸ்ரீ யபதி -இனி ஒரு ரஷகம் வேண்டாத அரண் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அனுரூபஸ் சவை நாத – என்னுமா போலே இதுக்கு அடைய-இவை அடையத் திருவடிகளிலே சேர்ந்து
அருளுவதற்கு தகுதியான காரணம் ஸ்ரீ வராஹ கல்பாதியிலே மஹா வராஹமாய் ரஷித்த ஸ்ரீ திரு மேனி –
அது நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹ வஸ்து –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

வளைந்த திரு உகிர்களை உடையவன் -வலி மிக்க பெரிய மறத்தை உடைய ஹிரண்யன்
வடிவைக் கண்டு அத்தை ஒன்றாக மதியாதே கிட்டு ஸ்ரீ திரு வாழிக்கு இரை போதாது யென்று ஒரு ஸ்ரீ உகிராலே-
இரண்டு பிளவாம்படி இட்ட குழி மஹா பிரளயத்தில் மும்மடங்கு பெரிது –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

மந்தரத்துக்கு மேல் போய் சந்த்ராதித்யர்கள் ஸ்தானத்து அளவிலே நின்று ஆதரிக்க
ப்ரஹ்மா-நம் இருப்பில் திருவடிகள் வந்தது -யென்று புறப்பட்டு ஆஸ்ரயிக்கும் படி – வளரா நிற்பதாய் –
சேரக் குடி ஏறி இருக்கிற உபரிதன லோகங்கள் ஏழும் நடுவே போம்படி நடத்தின திருவடிகள் நமக்கு ரஷகம் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபர்-ஸ்ரீ யபதி -ஈஸ்வரன் உடைய சர்வ இந்த்ரியங்களையும்
அபஹரிக்க வல்ல நீளைப் பிராட்டிக்கு வல்லவர்-யச்யஸா -என்னும்படி இவளை உடையவர் -என்னும்
பெரும் புகழை உடையவர் –
சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ரஷித்து ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகத்வ பாரிப்பை உடையராய்
இப்படிக்கொத்தவர் நம்முடைய் ஆஸ்ரயணத்தின் சிறுமை பாராதே யாவதாத்மபாவியாக நம்மை அடிமை கொள்வர் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின –
இதடையச் செய்தது -ஸ்ரீ பிராட்டி பக்கல் பிச்சாலே இறே
இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

லோகத்தில் அஞ்ஞானம் தீர்ந்து தன்னைக் கண்டார் எல்லாரும் ஆனந்த நிர்பரராம் படியாக
கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாத ஸ்ரீ திர்யக்காய் – ஸ்ரீ சாரதியாய் உபதேசித்தால் போலே
ஹிதானுசந்தானம் பண்ணக் கடவ அவனே ரஷகன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ யசோதை பிராட்டி உரலோடு கட்ட அத்தைக் கொண்டோடின மிடுக்கை உடைத்தாய் –
ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக-நடை கற்ற தெள்ளியவன்
நம்முடைய பாபத்தை சவாசனமாக போக்கும்-இது நிச்சிதம் -என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

நெஞ்சாலே தரித்தும்-இதுவே யாத்ரையாக யுழலு கிறவர்கள்
ஸ்ரீ பரம பதத்தைப் பெற்று அனுபவிப்பார்கள்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

காணேடீ — தோழமையால் ஏடீ -என்கிறது ஆதல் –
பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே ததிமுகனை குத்தினால் போலேஹர்ஷத்தாலே சொல்லுகிறாள் ஆதல் –
இப்படி தன் ஸ்வரூபத்தை அழிய மாறி ஆஸ்ரித ரஷணத்துக்காக கிலேசப் பட்டவன் ஆனால்
இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ –
அவன் நிரதிசய ஆநந்த பரி பூர்ணனாய் இருக்கிறது நமக்காகவாய் இருந்த பின்பு
இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில்
இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் –
கர்ம வஸ்யர் உடைய ரஷணத்துக்கு வந்து பிறக்குமவன் ஆகையாலும்
அவன் தான் சர்வ காரண பூதன் ஆகையாலும்-நமக்கு ஓர் குறை உண்டோ -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவன் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் நேரே கிடையா விட்டால் களவு கண்டாகிலும் ஜீவிக்குமவன் ஆகையாலும்
ரஷணத்தில் பர்யாப்தி பிறந்து இராதவன் ஆகிலும் நமக்கு ஒரு குறை உண்டோ –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே அது பின்னாட்டுகிறபடி –
மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே சேமித்து வைத்த அன்று
கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் –
சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது –
இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இடைச்சிக்கு பரிச்சின்னனாய் இருந்தானே ஆகிலும் ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு
அபரிச்சின்னனாய் இருக்கும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கேட்டார் நெஞ்சு ஈரும் படி த்வனிக்க இடையர் மனஸ் களிப்ப மன்றிலே மரத்தைக் காலிலே கட்டி ஆடினான் காண் –
இப்படி இடையர் கண் வட்டத்திலே நிற்கிற வஸ்துவை ப்ரஹ்மாதிகள் கண் வட்டத்திலே கண்டு அறிவார் இல்லை –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

துர் உக்தி பண்ணுவதற்கு ஒருவரும் இல்லாத சமயத்தில் துர்யோதனில் குறைந்தார் இல்லாத இஜ் ஜகத்தை
வயிற்றிலே வைத்து ரஷிததான் காண் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இப்படி தாழ்வு செய்தவன் லோகத்தில் ராஜாக்கள் ஆனார் முடி மேல் மாலையிலே காண்
திருவடிகளை வைத்துக் கொண்டு இருப்பது – ராஜாதி ராஜ சர்வேஷாம் -இத்யாதி –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

வடிவு அழகாலும் வரையாதே தீண்டும் படி யாலும் ஆஸ்ரிதர்க்கு தாழ்வு செய்யும்படியாலும் –
கிருஷணாவதாரத்தோடு போலியாய் இறே ஸ்ரீ வாமன அவதாரம் இருப்பது –
உதாரனாய் இருக்கிற மஹா பலி யஞ்ஞ பூமியிலே அவன் கண் வட்டத்துக்கு உள்ளே நின்று
மூன்றடி மண் இரந்தான் காண் –
அவன் கண் வட்டத்தே நின்ற இவனை நாட்டில் கண்டவர் இல்லை கிடாய் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி
ஸ்ரீ திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது –
சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி ஸ்ரீ திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண்
அப்படி இருக்கிறவன் காண் ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும்
புறப்படாதே கிடக்கிறான் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————

மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1-

தமோ குணா அபிபூதராய் இருக்கையாலே ஸ்ரீ பரமாத்மாவுக்கு சரீரம் என்று
உபாசிக்கப் போகாதவர்களை –செய்ந்நன்றி குன்றேல்மின் –
அப்ராப்த விஷயங்களில் தாழ்வு செய்ய ஆசைப் பட்ட நீங்கள் –ஸ்ரீ சர்வேஸ்வரனையே ஏத்தப் பாருங்கோள்
என்கிறார் முதல் பாசுரத்தில்-

இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி இவனைக் கை விட்டி கோளோ-
லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதாயத்தம் என்னும் இடம் அறியீர்களோ –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஐஸ்வர்ய சூசகமாய் எதிரிகளை முடிக்க வற்றான ஸ்ரீ திரு வாழியை உடையவன் உடைய குணங்களை
அடைவு கெடச் சொல்லாத தண்ணிய ஷூத்ரங்களை-சஹிக்க அரிதாய் இருக்கிறவவர்கள்
க்ரௌர்யம் இருந்த படி என் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே
சத்வஸ்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் முழங்கா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருந்து உள்ள
ஸ்ரீ திரு வயிற்றிலே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கனிந்து இருந்து களாம் போலே இருந்துள்ள
ஸ்ரீதிரு உடம்பை உடைய ஒருவனையே – கழல் தொழுமா கல்லீர்களே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

சைதன்யம் உண்டாகில் வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து
அத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகனாய் –
அளவுடையவனாய் இருந்துள்ளவனுடைய பெயரான திரு நாமங்களையே பேசீர்களே –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க –
அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர் –
அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

கிருபை பண்ணி சந்நிஹிதனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ணமங்கைக்கு நிர்வாஹகன்
ஆனவனுடைய திருவடிகளைப் பேணி –அவனை ஹிருதயத்தில் எண்ணாத மனுஷ்யரை –
பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அவைஷ்ணவர்களை நினையாத போது –
இனிது என்கை- –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ரஷ்யத்தின் அளவில்லாத ரஷண தர்மத்தாலே விஞ்சின திரு வயிற்றின் உடைய உள்ளே வைத்து
உம்மை உய்யக் கொண்ட –கறுத்து இருந்துள்ள தேஜஸ்சை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை நினையாதார் தண்ணியவர்கள் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

பிரளயம் தேடுகின்றது என்று இளைத்துக் காட்டி அல்லாத அவயவத்தோடு ஒத்த திரு வயிற்றின் உள்ளே வைத்து
உம்மை உய்யக் கொண்ட –மேகம் போலே உதாரனான கையை உடையனாய்
மணி போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் ஸ்ரமஹரமான ஸ்ரீ திருக் குடைந்தையை பாடி ஆடீர்களே –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பாட்டுக்கு இதையே பொருள்
திரண்டு பரந்த சோலைகள் உடைய ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் அறிந்து உரைத்தார் –
இதையே பொருள் -ஸ்ரீ த்வயத்தின் க்ரமத்திலே பல சுருதி அருளுகிறார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் -என்றும்
குடந்தையே தொழுமின் என்றும் –உபக்ரமித்து –
தண் குடந்தை பாடி ஆடீர்களே என்று உபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –

———————–

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே —11-7-1-

அமுதம் கொண்டுகந்த- பிறருக்கு உபகரித்தானாய் இராதே தன் பேறாக உகந்தான் –
இப்படிச் செய்கிறது -உடையவன் ஆகையாலே –
பூணார மார்வனைப்-இவர் தம்முடைய -அம்ருதம் –சர்வாபரண பூஷிதனாய் பெரிய திருவடி தோளில் இருந்த இருப்பு –
ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே –
இதுக்கு முன்பு கண்டவை என்றும் கண் அல்ல –ஷேபமாகக் கண்டோமே -என்கிறார் முதல் பாசுரத்தில்

உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று ஆஸ்ரிதர் ஈடுபட்டு
நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவனுடைய கீர்த்தி கேட்க வென்றால் கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல –
கேட்டோமே –ஷேபம் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

கீழ் இரண்டு பாட்டாலே ஞாநேந்த்ரியன்களை நிரசித்த்தார்
இனி மூன்று பாட்டாலே கர்மேந்திரியங்களை நிரசிக்கிறார் –
மூன்றாம் பாசுரத்தில் அவனுடைய கீர்த்திகளை ஒழிய பேசுமவை கடலோசை பேச்சாய் இருக்கச் செய்தேயும் –
அர்த்தம் இன்றிக்கே இருக்கிறாப் போலே – கேட்டுத் திரிகிறிகோள் இறே -என்று ஷேபம் –

சிறுக்கனுக்கு விரோதியைப் போக்கி மாலை இட்டு இருந்தவனை –பிரேம பரவசராய்
பாடும் பாட்டு அல்லது பாட்டு அல்ல –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஒன்றைச் சொல்லி இன்னது உபமானம் என்ன ஒண்ணாத வடிவு –
சொல்லும் இடத்தில் உபமானம் கொண்டு இழிய வேணும் – அவை தான் இதுக்குப் போராவாய் இருக்கும் –
காமினிக்கு காந்தனுடைய தேஹமும் –ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லாருக்கும் படி –
சங்கேந்தும் கையானைக் –தொழுகைக்கு இவன் கை போலே-தொழுவித்துக் கொள்ளுகைக்கு அவன் கை –
தமச பரம -இத்யாதி –
கை தொழாக் கையல்ல கண்டாமே –-தொழாக் கை கை யல்ல –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவனுக்கு என்று இராத-ஞான இத்ரியங்கள்-கர்ம இந்த்ரியங்கள்
அனைத்துக்கும் நிர்வாஹகமான மனஸ்ஸை இரண்டு பாசுரங்களால் நிரசித்து அருளுகிறார் –
தான் நினைக்கும் அவை ஒழிய நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் –
ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உபமானம் இல்லை என்று பேசாதே இருக்க மாட்டாரே – திவ்ய விக்ரஹத்துக்கு உபமானம் அபூமியானால்
ஆத்மா குணங்களுக்கு உள்ளுப் போகார் இறே-
இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை –
நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்-இரண்டையும் அறியாதவர்கள்
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அவன் தன்னைப் பேணாது ஒழிய தங்களைப் பேணித் திரியுமவர்கள மானிடவர் அல்லர் –
பிரித்து அவயவங்களைச் சொல்லுகிறது என் – கட்டடங்க மனுஷ்யர் அல்லர் –
என்று என் மனத்தே வைத்தேனே –ஸ்ரீ சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே –
அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஸ்ரீ ஆழ்வார்
இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் –
மித்ர பௌ பிகம் கர்த்தும் -என்னும் அவளிலும் இவருக்கு வாசி உண்டு –
தலை தான் போனது அவனுக்கு ஸ்வரூபம் நசிக்கும் இவனுக்கு-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை –
இத் திருவடிகளைச் சூடும் ஸ்ரீ ஆழ்வார் –சேஷித்வத்துக்கு அவன் ஸ்ரீ திரு வாழியைப் பிடித்தால் போலே
சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி-
முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் – இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்-
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————–

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

பயத்துக்கு பரிஹாரமும்-உத்பாதகனும் -நீயாய் இருந்தாய் – அதுக்கு பய ஸ்தானம் ஆறு –
உமக்கு பய ஸ்தானம் ஏது என்ன –
அதுக்கு ஆறு ஓன்று-எனக்கு ஐஞ்சு ஆறு அகழ்ந்து பொகடுகிறது –
அஞ்சும் ஆறும் ரசோக்தி விஷயங்கள் ஐந்தும் – தத் க்ராஹங்கள் ஆறும்
கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் -ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஆறும் –
ரூபத்தை சொல்லாமல் விட்டது -பயத்தாலே கண்ணாஞ்சுழலை இட்டமை தோற்றுகைக்கு –
உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் – அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் –
என்கிறார் முதல் பாசுரத்தில்
மமாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது-
என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்
வார்த்தையை நினைப்பது-

பெரும் காற்றிலே அகப்பட்ட மரக் கலத்துக்கு உள்ளே சேதனர் உடைய நெஞ்சு போலே
பயப் படுக்கைக்கு மேற்பட பரிஹாரத்தில் அந்வயம் இல்லை இறே
அதுக்கு உட்பட்ட மனுஷ்யர் எல்லாருக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கிறது –
மிகவும் நடுங்கா நிற்பன் -சரீர வியோக மாத்ரத்திலே இவர்களுக்கு –
ஆழி வலவா –உன் கையில் திரு வாழிக்கும் எனது உள் நடுக்கத்துக்கும் சேர்த்திச் சொல்லிப் போ –
உனக்கு அசக்தி உண்டு என்று சொன்னாய் ஆதல் -என் நடுக்கைத்தை பரிஹரித்தல் செய் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே இவ்விடம் த்யாஜ்யம் ஆவது
அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே –
இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும்
இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன்
சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே
அநந்தரம் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே
இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று
அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் ஸ்ரீ நஞ்சீயர் –
இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை
இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால் பொய்யாகாது என்ற படி –
இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இரண்டு தலையும் நெருப்பு பற்றி எரியா நிற்க நடுவே அகப்பட்டு நோவு படுகிற ஷூத்ர பதார்த்தம் போலே யாயிற்று
ஜன்ம மரணங்கள் இரண்டிலும் அகப்பட்டு நோவு படுகிற படி –
பிரளயத்தில் அகப்பட்டு அழிந்து போகப் புக்கதை எடுத்து ரஷித்தவன் அன்றோ –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நீ பரிஹரித்த பிரளய ஆபத்தின் அளவல்ல நான் நோவு படுகிற சம்சார பிரளயம் –
அங்கு ஒருவருமே அபேஷியாது இருக்க பரிஹரித்தாய் இங்கு நான் அபேஷிக்க வேண்டுகிற ஹேது என் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இப்பாட்டில் அருளிச் செய்யும் போது
இதுவே அமையும் என்னும் படி ஆர்த்தி தோற்ற அருளிச் செய்து அருள்வர் –
நான் உன்னை அடையும் படியாக அருள வேணும் –
அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் –
அது பின்னை செய்யப் போமோ என்னில்
வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது
முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் –
தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

விசத்ருச த்ருஷ்டாந்தமாய் இருந்ததீ என்ன –அந்வயம் -விச்சேதத்தைப் பொறுக்கும்
வ்யதிரேகம் அப்படி விச்சேதத்தைப் பொறாது இறே-அத்தைப் பற்றச் சொல்லிற்று –
உன்னைக் கொண்டு விரோதியைப் போக்கிக் கொள்ள அமையும் என்று இருப்பாருக்கு விரோதியைப் போக்கிக் கொடுப்புதி –
உன்னோடு அணைய வேண்டும் என்று ஆசைப் பட்டாருக்கு நித்ய சம்ச்லேஷம் பண்ணுகைக்கு உடம்பு கொடுப்புதி –
நீ வேண்டா பிரயோஜனமே அமையும் என்று இருப்பாருக்கு அத்தைக் கொடுத்து
உன்னையே பெற வேணும் என்று இருப்பாருக்கு உன்னைக் கொடுப்புதி –
பரஞ்சோதீ – நீ அணைக்குக்கு உடம்பைக் கொடுக்காதே-ஷயத்தை வர்த்திப்பான் ஒருவன் ஆனாலும்
உன்னை விடலாயோ வடிவு அழகு இருப்பது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

சோகித்த அர்ஜுனனைக் குறித்து உன்னுடைய சர்வ பரங்களையும் நம் தலையிலே ஏறிட்டு
நம்மையே தஞ்சமாக நினைத்து இரு –நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம் மாஸூச -என்னுமா போலே
நான் உஜ்ஜீவிக்கும் படி யெனக்கு ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேணும் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
பூ வலரும் போதை விகாசம் போலே வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண
வாயிற்று ஆசைப் படுகிறது –
ஆஸ்ரித பரதந்த்ரனாகை -வென்றால் உகப்பார் ஒருவர் ஆயிற்று –

பிதா ராஜ்யம் பண்ணி சுகித்துப் போரா நிற்க புத்ரனாவான் தரித்ரனாய் இருக்குமா போலே
அவனுடைய நைரபேஷத்தையும்-தம்முடைய தய நீய தசையையும் அனுசந்தித்து ஐயோ -என்கிறார் –
தய நீய தசையை ப்ராப்தனாய் இருக்கிற என் பக்கலிலே கொள்வார் தேட்டமாய் புறம்பு வழிந்து போம்படியான
உன்னருளைப் பண்ண வேணும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்-வாசனையோடு கழியும் படி
அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் –
இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்-அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும்
சொல்ல வல்லவர்களுக்கு –
பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து-மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று
ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு-ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி –
சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து
பின்னையும்-வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான
பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று பிரார்த்தித்த படியே சவாசனமாகக் கழியும் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -பத்தாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

July 13, 2019

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-பிரவேசம் –

தன்னை உகந்தாருக்கு தான் ஆஸ்ரயநீயனாய் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சுலபன் ஆனபடியை அனுசந்தித்து
தமக்கு நித்ய கைங்கர்யம் பண்ண வேணும் என்னும் அபேஷையிலே கண் அழிவு இல்லாமையாலும் –
அவன் தன்னை உகந்தாரை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய கைங்கர்யத்தைப் பண்ணுவித்துக் கொள்ளும்
நிருபாதிக பந்துவாகையாலும்
ஸ்ரீ திருப்பதிகளை அனுபவித்த ஆழ்வார்
ஸ்ரீ பரம பதத்துக்கும் போக்கு அணித்து என்று அத்யவசித்து –
நாவோடையான பெண் பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போம் போது ஜன்ம பூமியில் உள்ள
உறவுமுறையார் உள்ளிடம் எங்கும் புக்கு முகம் காட்டுமா போலே குணாநுபவம் ஸ்ரீ பரம பத்துக்கும் ஒக்குமே
ஆகையாலே சில ஸ்ரீ திருப் பதிகளிலே புக்கு -இங்கே புக்கோம்
இனி இன்ன ஸ்ரீ திருப் பதியிலே புக வேணும் என்று இப்படியே
உகந்து அருளின தேசங்கள் எங்கும் முகம் காட்டப் பார்க்கிறார் –

———————–

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-பிரவேசம் –

ஸ்ரீ திருப்பதிகளை அனுபவித்தார் கீழ் –
அது தலைக் கட்டி அவதாரங்களிலே போந்து அனுபவிக்கிறார் –
இதிலே -தமக்கு அபிமதமான -ஸ்ரீ ராம விஜயத்தை எதிரிகள் மேல் எழுத்திட்ட பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –
அங்குத்தை விஜயம் தமக்கு இஷ்டம் ஆகையாலே-அந்த விஜயத்துக்கு இலக்காய்த்-தோற்ற ராஷசர் தசை பிறந்து-
ஸ்ரீ பிராட்டிமார் தசை பிறந்து பேசுமா போலே தாமான தன்மை தோற்றாதே-தோற்ற ராஷசர் பாசுரத்தாலே
ஸ்ரீ ராம விஜயத்தை பேசி அனுபவிக்கிறார் –

—————————

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-பிரவேசம் –

குணாலைக் கூத்துப் போலே தோற்றார் தோல்விக்கு ஈடாக-குழமணி தூரக் கூத்து என்று ஒரு கூத்து உண்டு ஆடுவது –
அத்தை ராஷசர் செய்த படி பேசி அவர்கள் பாசுரத்தாலே ஸ்ரீ பகவத் விஷயத்தை அனுபவிக்கிறார் –

——————–

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-பிரவேசம் –

ஸ்ரீ ராமாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு இறே-ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –
த்வேஷத்துக்கு எல்லையானார்க்கும் இசைய வேண்டும்படி இருக்கிற
ஸ்ரீ ராமாவதாரத்தில் விஜயத்துக்கு தோற்றவர்கள் பாசுரத்தாலே அனுபவித்தார் கீழ் –
ராகத்துக்கு எல்லையான யசோதைப் பிராட்டி பாசுரத்தாலே ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கிறார் இதில் –

—————————

பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-பிரவேசம் –

முலையில் வாசி அறிந்து உண்ணும் பிள்ளைப் பருவத்தை அனுபவித்து இனியரனார் -கீழ்
அதுக்கு அநந்தரம் லீலையிலே இழிந்து சப்பாணி கொட்டும் பருவத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் –

————————-

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1- பிரவேசம் –

சப்பாணி கொட்டி விளையாடும் பருவத்தை அனுபவித்தார் கீழ் –
அதுக்கு அனந்தரமாக வெண்ணெயும் தயிரையும் களவு கண்டு அமுது செய்த படியை –
பரிவுடைய ஸ்ரீ யசோதை பிராட்டி பாசுரத்தாலே அனுபவிக்க வென்று –
வார்த்தை மறந்து –
தாம் அதிலே ஈடுபட்டு
அவனுடைய – ஸ்ரீ சர்வேஸ்வரத்தையும்-
பராபிபவன சாமர்த்யத்தையும்
வேண்டப்பாட்டையும் –
சர்வ பிரகாரத்தால் உண்டான உத்கர்ஷத்தையும் –-அடைய அனுபவித்து –
அப்படிப்பட்ட மேன்மை உடையவன் -இன்று
இங்கனே -ஓர் அபலையாலே
கட்டுண்டு –
அடியுண்டு –
நோவு படுவதே -என்று
இவன் சௌலப்யத்தை அனுசந்தித்து – இனியராகிறார் –

——————-

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1- பிரவேசம் –

வெண்ணெய் களவு காணும் பருவத்தைத் தப்பி –
வெண்ணெயும் பெண்களையும் களவு காணும் பருவமாய் இருக்கிற படியை அனுசந்தித்து
யசோதைப் பிராட்டி யானவள் விளைவது அறியாமையாலே
இது எவ்வளவாய் புகுகிறதோ -என்று அஞ்சி இருக்க இவனாலே நோவு பட்டு
ஊரில் உள்ளார் அடங்கலும் அது போயிற்று இது போயிற்று -என்று இங்கனே முறைப்பட
அவளும் -அவர்களுமாக பரிமாறின அப் பெரிய குழாங்களை தாம் அனுபவிக்கிறார் –
ஒருத்தியைப் பார்த்து வார்த்தை சொல்கிறார் இதில் –

———————-

காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ -10-8-1-பிரவேசம் –

பெண்களையும் வெண்ணெயும் ஒக்க களவு காணுமது தவிர்ந்து –அவர்களும் கை புகுந்து –
நினைத்த படியே சம்ஸ்லேஷமும் பிரவ்ருத்தமாய் நின்றது –கீழ் –
இனி – இது பிரசித்தமாம் படியானவாறே அகல நின்றான் –
இவர்களுக்கு பிரணய ரோஷம் தலை எடுத்து சம்ஸ்லேஷத்தின் உடைய மத்யந்த்தினமாய் –
அறமுருடு கொளுத்தி இருக்க –
அவனும் வருந்தி-காலைக் கையைப் பிடித்து-சம்ஸ்லேஷித்த படியை பேசுகிறதாய் -இருக்கிறது –

——————–

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே -10-9-1-பிரவேசம் –

ஊடல் கூடல் உணர்தல் -என்கிறபடியே
முன்பு விஸ்லேஷமாய்
அநந்தரம் சம்ஸ்லேஷமாய்
அது தான் விஸ்லேஷாந்தமாய் நின்றது –
ஆற்றாமை கரை புரண்டு
அவன் வருமளவும் கண்டு ஆறி இருக்க ஒண்ணாத் படி-ஆசை மிகுத்து
இவர் க்ரம பிராப்தி பற்றாத படியாய் இருக்கிற இவள் தசையை அனுசந்திக்கிற ஸ்ரீ திருத் தாயார்
இவள் ஆபத்துக்கு இரை இடுவதோ
அவனை அழைப்பிப்பதோ
ஊரார் சொல்லுகிற பழியை பரிஹரிப்பதோ -என்று பார்த்து
இனி அவிருத்தமாகப் போகலாம் வழி என்ன -என்று நினைத்து –
மிடுக்கன் அல்லனோ
நினைத்த கார்யங்கள் செய்து தலைக் கட்டுமவன் அல்லனோ
குணவான் அல்லனோ
வடிவு அழகால் துவக்க வல்லவன் அன்றோ என்று நினைத்து இருக்கிறாயோ -என்று
லோகத்தில் ஆற்றாமை உடையார் எல்லாரும் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை
இவளுடைய வ்யசனத்துக்கு நிதர்சனமாகச் சொல்லி இவள் இப்பாடு பட நீ ஆறி இருப்பாயோ என்று
இவள் தசையை அனுசந்தித்த ஸ்ரீ திருத் தாயார் பாசுரமாய் இருக்கிறது –

———————————-

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே –10-10-1- பிரவேசம் –

திருத் தாயார் ஓர் அளவிலே கூப்பிட்டு கை வாங்கினாளாய் நின்றது கீழ்த் திரு மொழியில் – இதில்
இப்பிராட்டி தான் தன்னுடைய ஆற்றாமையாலே அவனை என்னோடு சேர்க்க வேணும் என்று
கண்ணால் கண்ட பஷிகளின் காலிலே விழுகிறாள் –
இனி இவை தான் ஸூசகமாகை அன்றிக்கே
காரகமாகவும் வற்று என்று இருக்கிறாள் காணும் – வரவுக்கு சகுனங்களையும் பார்க்கிறாள் –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் -பத்தாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

July 13, 2019

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-

இதுக்கு முன்பு சம்சாரத்தில் இருக்கும் படி-இனி ஸ்ரீ பரமபத பிராப்தி இருக்கும்படி சொல்லுகிறது
இங்கே அர்த்த புருஷார்த்தம் தந்து விடுகை அன்றிக்கே சரீர சமனந்தரம் வரக் கடவதாய்-
ஆத்மானுபவம் அன்றிக்கே-இவ்வாத்மாவின் உடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிராப்ய பூமியைத் தருவானாய்
தானே பிராப்யமுமாய் –ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள ஸ்வரூப ஆவிர்பாவம் –
இன்று அது காண்பதும் காணக் கடவதும் இவ்வோ இடங்களாய் இருக்கை –என்கிறார் முதல் பாசுரத்தில்

அழகு மிக்கு ஏக ரூபமான மின் போலே உஜ்ஜ்வலனானவனை ஸ்ரீ திருமலை உச்சியின் மேலே கண்டு –
இன்று போய் என்னை அடிமையாக உடையவனாய்-எனக்கு நியந்தாவாய் –எனக்கு உபாகாரகனுமாய் -ஆனவனை –
நாம் சென்று ஸ்ரீ திருத் தண் காவிலே காணக் கடவோம் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஐஸ்வர்ய சூசகமாய் அழகிதான திருத் துழாயை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – ஸ்ரீ திரு வாலியிலே கண்டு உகந்து போய் –
ஜகத்துக்கு உத்தேயன் ஆனவனை –வரையாதே இன்னார் என்னாமல் ஆஸ்ரயிக்கும் படி இருக்கிறவனை ஸ்ரீ திரு நாங்கூரிலே
காணக் கடவோம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஜ்வலந்தம் -என்கிறபடியே ஏக ரூபமான ஒளியை உடையனாய் ஹிரண்யன் உடலைப் பிளக்க வல்ல சர்வ சக்தியை
ஸ்ரீ திருப் பேரிலே வணங்கி-போய் –அபரிச்சேத்யமான போக்யதையை உடையனாய் அத்தை அயர்வறும் அமரர்களுக்கு
அனுபவிக்கக் கொடுத்து அத்தாலே உஜ்ஜ்வலனானவனை –ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு பிரகாசமாய் இருப்பதோர்
அருளாய் இருக்கிறவனை ஸ்ரீ திரு வெள்ளறையிலே காணக் கடவோம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அனுபவித்த கிலேசத்தை தவிர்த்தவனை –ஸ்ரீ திரு நறையூரிலே கண்டு –என் சரீரத்துக்கு உள்ளே புகுந்து
நெஞ்சை உருக்கி உண்கிற வித்தகனை ஸ்ரீ திரு மெய்யத்திலே காணக் கடவோம்
விடலை -என்று பாலை வனத்தில் தலை மகனைச் சொல்லுகிறது
இப்பாலையான பூமியை தனக்கு இருப்பிடம் ஆக்கின படியாலே பாலை நிலமான சம்சாரத்துக்கு தலைவன் ஆனவனை
தம்முடைய ஹிருதயத்தில் காட்டில் பாலை நிலம் இல்லை என்று இருக்கிறார் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தன்னைக் கொடுக்குமா போலே எனக்குத் தன்னைத் தந்த உபகாரகனை –
தேன் போலே ரஸ்யன் ஆனவனை –நீண்ட வயலை உடைய ஸ்ரீ திருச் சேறையிலே கண்டு –
குவலயா பீடத்தை கொன்று ப்ரஹ்மாதிகளுக்கு குடி இருப்பு கொடுத்து அவர்களுக்கு தானே சேஷி என்னும் இடத்தை
பிரகாசிப்பித்தவனை-யான் ஸ்ரீ திருக் குடந்தையில் சென்று காண்டுமே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ கோவலனாய் வெண்ணெய் அமுது செய்து வர்த்திக்கிறவனை ஸ்ரீ திருவழுந்தூரிலே கண்டு உகந்து
ஸ்ரீ திருப் பாற் கடலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர ஆதரித்த
சர்வ ரஷகனானவனை – கண் வளரக் காணலாவது ஸ்ரீ திரு வெக்கா உள்ளே –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –ஸ்ரீ தெற்கு திருமலையிலே கண்டு போய் –
முத்து போலே உடம்பிலே அணைந்தால் விடாய் கெடும்படி குளிர்ந்து இருக்குமவனை
நீல மணி போலே கண்ணுக்கு ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் இருக்கை
பெரு விலையனான மாணிக்கம் போலே –தர்ச நீயமாய் இருக்கும் வடிவு அழகு அன்றிக்கே
இதுக்கு எல்லாம் சர்வ காரண பூதனாய் இருக்குமவனை ஸ்ரீ திரு விண்ணகர் காண்டுமே –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நித்ய வசந்தமாய் தழைத்த பொழிலை உடைய ஸ்ரீ திருக் கோட்டியூரிலே கண்டு போய்-
எல்லா தசைகளிலும் இவ்வாத்மாவுக்கு தஞ்சமானவனை தன்னை விஸ்வசித்தார் உகக்கும்
ஸ்ரீ திரு நாவாயிலே காண்டும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்சேதம் இல்லை –நச புனராவர்த்ததே
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-

ராஷசரில் இனி ஆடு போலேக் கூப்பிடக் கடவார் இல்லை -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று
ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர் – ஆடு -என்று வெற்றி
இந்த ராஷச ஜாதியிலே வெற்றி சொல்லக் கடவார் இல்லை -என்கிறது என்ன
இதுவே இறே பொருள் என்று அருளிச் செய்தார் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் –
தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு – அந்த சப்த அநுகாரம் –
பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது-என்கிறார் முதல் பாசுரத்தில்

ஒப்பாய் இருக்கிற தோள் இரண்டையும் ஒரு திரு அபிஷேகத்தையும் உடையராய் இருக்கிற உம்மைக் கண்டு
அடியாரான நாங்கள் ஒருவர் இருவர் அன்றிக்கே எல்லாரும் ஒக்க வாழ்ந்தோம்
எமக்கு ஜனகன் ஆனவனே –எங்கள் நாதனே –-அஞ்சினோம் என்றாரைக் கொல்லுகை உனக்குப் போருமோ-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நிரபதாரரைக் கொல்லாத இஷ்வாகு வம்சத்திலே பிறந்ததுக்கு தலை யன்றோ நீர்-விஷய ப்ரவணராய் கெடக் கடவ
இஜ் ஜாதியை எத்தைச் சொல்லுவது-ஸ்வர்க்கத்துக்கு வன்னியம் அறுத்தவன் மகனே
உனக்கு இஷ்டரான தேவர்கள் உகந்ததுவே செய்து விட்டாய் – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –ஸ்ரீ பிராட்டியை கொடு போங்கோள்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு
மனுஷ்யர்களை அநாதரித்தான்-அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி –
அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –
வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம்
என்று அவன் கையிலே ஸ்ரீ பிராட்டியை விட்டுக் கொடாதே
இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அப்ராப்த விஷயத்தில் சாபலத்தை பண்ணுமவனை –
நான் இவ்வூர்க்கு அதிபதி -நிர்வாஹகன் என்று இது ஒன்றுமையே நினைத்து இருந்தான் –
குற்றம் நின்ற இடத்தே வதம் பண்ணப் பார்த்தருள வேணும் –
நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ பிராட்டியை சிறை வைத்த ராவணன் உடைய தப்ப நினைத்த நெஞ்சில் –உறைக்க எய்ய வல்லனாய்
அழகிய வடிவையும் திண்ணிய தோளையும் உடைய ஸ்ரீ பெருமாளுக்கு அஞ்சினோம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ மகா ராஜர் புருஷகரமாகத் தொழுதோம் – எங்களுக்கு இரங்க வேணும் –
எங்கள் நாயகனே – லோகத்துக்கு அடைய பிரகாசனான ஆதித்யன் மகன் அன்றோ நீர் சர்வ நிர்வாககர் அன்றோ –
நாங்கள் சொல்லச் செய்தே எங்களைக் கொல்லில் உங்களுக்கு அவத்யமாம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது-ஜிதந்தே -என்றால் -எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே-
இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் ஸ்ரீ பரம பதம் –அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை –
எல்லாரும் அறியச் சொன்னோம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-

ஸ்ரீ சுக்ரீவா ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி ஏத்துவாருக்கு உம்மை ஆஸ்ரயிக்க வேணும் இறே –
அவர் இசைந்தாலும் -வத்த்யதாம் -என்று நீர் சொன்னால் உம்மை இசைப்பித்து -ஆனய -என்று உம்மை விட்டு
அழைப்பித்துக் கைக் கொள்ள வேண்டுகையாலே –
ஸ்ரீ ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று ஸ்ரீ முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் –
பண்டே சிஷித்து வைத்தவர்கள் போலே ஆடுகின்றோம்-எங்கள் செயல் அறுதியாலே –
என்கிறார் முதல் பாசுரத்தில்

எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல-உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் –
எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –
கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தர்ச நீயமான வில்லிலே அம்பைத் தொடுத்த ஸ்ரீ பெருமாள் தம்பியார் உடைய குணங்கள் பாடி ஆடுகின்றோம் –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்-
நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே-
எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் –
பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ –
எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய ஸ்ரீ திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே
ப்ராவண்யம் –இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை –
ஸ்ரீ திருவடியைச் சொன்னோம் ஆனால் ம்ருத்யு சத்ருசராய் இருப்பாரும் விலங்குவர்கள் போலே காணும் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு அயோத்யைக்கு கடவ ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் –ஸ்யாமமான நிறத்தை உடையவர் காண ஆடி கோள்-
ராஜா கூத்துக் காணா நின்றான் என்று உங்களை விடும்படி –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நாங்கள் உஜ்ஜீவிக்கைக்காக-கச்ச அநுஜா நாமி -என்று விட்டடித்தவர் உடைய
ஆஞ்ஞையை சிரஸா வஹித்துக் கொண்டு போந்தோம் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள்
வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள்
பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் –
இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை –
நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-

ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற நம்பி – ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி –
இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே – பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது
தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் –
பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் –
தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி –
ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் –
எங்கே புக்கிருந்து உன் பக்கல் நிரபேஷரானார் உடன் – சாபேஷையாய் நான் பார்த்து இருக்க –
என்ன விளையாட்டு விளையாடுகிறது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா முலை சுரக்கப் பண்ணாமல் மடியிலே இருந்தாயிற்று உண்பது –
இது அடைய தரையிலே போகாமே உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

என் ஒக்கலையிலே இழியாது இருந்து ஆதரித்து இனிதாக அம்மம் உண்ண வாராய் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இனி இதுசெய்யான் -என்னும்படி படுக்கையிலே கிடந்தது-அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும்
விகிர்தமான செயலை உடையவனே –
நெடும் போது உண்டாயிற்று முலைக் கடுப்போடு இருக்கிறது –
இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது –
உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ-
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தீமைகள் செய்யா நிற்புதி-கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி –
அத்தீமை காண என் ஹிருதயம் உருகி முலை வழியே பாலாய் புறப்படா நின்றது –
கண்கள் சிவப்பது-மூரி நிமிர்வது-கொட்டாவி கொள்வது -அழுவது -ஆகாதே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பூதனை கையிலே அகப்பட்ட உன்னை ஆராக நினைத்தாய் – நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் ஆனவனே –
அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும் இவள் மகன் ஆனதுவும் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –
உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –
உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு
வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே
அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான ஸ்ரீ நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-

வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –என்கிறார் முதல் பாசுரத்தில்

தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே
இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய்
அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே –
தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய்
செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –இங்கனே தாவா மோரை உருட்டி
பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று-
உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே ஸ்ரீ தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –
எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே
லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –
ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே கன்றுகள் மேய்க்குமவனே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் –
கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால் சப்பாணி கொட்ட வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் – ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு
ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க-வளர்ந்த செருக்கை உடையவனே –
ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே –
அன்று பூதனை தன்னை முடித்து உன்னை நோக்கித் தந்த நீ இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பேய் என்று அவளை புத்தி பண்ணி முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு
அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே –
உகவாதாரை அழியச் செய்வுதி-உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

பூதனை வரும் அளவும் ஆறி இருந்து கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு
அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே –
உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பேராளன் –ஸ்ரீ நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா-அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே
கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் –பத்தாம் பாசுரத்தில்
இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது –
ஸ்ரீ பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று –
இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது –

———————–

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1-

உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக அற நூல்-வேதம் விஸ்த்ருதமாம் படி பண்ணியவன்
சந்திர சூரியர்களும் பூமியும் திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும் மலைகளும் அக்னியும்
இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக ஸ்லாக்கியமான மிடற்றை – இவை புகும் அளவும் –
விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர்
இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு-அமுது செய்து-ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு
அடியுண்டு-ஒரு பிரதிகிரியை அற்றுப் போக மாட்டாதே -இருக்கிறான் –என்கிறார் முதல் பாசுரத்தில்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேன்
-திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே –

அந்த பிரளய காலத்து அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம்
இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு அமுது செய்தான் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர்
இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

பூமியை கொள்ளுகைக்காக தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு
க்ருத்ரிமித்து லோகத்தை அளந்து– மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் –
ஓர் அபலை இட்ட சிறை விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே நடத்தினவன் கிடீர் இன்று தன் ஆஞ்ஞை அழிந்து
ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி யுண்கிறான் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

சஹஸ்ர பாஹ் வர்ஜுனனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும் அழகுக்குப் பிடித்த மழுவாலே
துணித்துப் பொகட்டவன் கிடீர் –இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு
மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர் –
மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய்
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி
இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக ராவணன் உடைய முடியோடு
தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் –
இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக மராமரங்கள் ஏழையும் எய்து – மலை போலே இருக்கிற வடிவை
உடையளாய் இருக்கச் செய்தேயும் ஸ்ரீ பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி
வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் –
ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே வைரூப்யத்தை விளைத்து விட்டது –
அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் – நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து
ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-

நான் சொல்லிற்று செய்தல்-தமப்பனார் சொல்லிற்றைச் செய்தல் செய்யாத பருவம் இறே உன் பருவம் –
நானும் சொல்லிற்றிலேன் தமப்பனாரும் அருளிச் செய்திலர் –
நீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே – நான் இனிச் செய்வது என் –
ஸூசக மாத்ரமே அன்றிக்கே -காரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய
இது செய்யக் கடவார் இல்லை –
வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –
கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே கடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை – வெண்ணெயே அன்றிக்கே –இவ் வேழ் உலகும் கொள்ளும் –
இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது –
அவன் இப்பது அமுது செய்தான் ஆகில் நீ இப்பாடு படுகிறது என் -என்ன –
அவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என் என்று அன்றோ அஞ்சுகிறது நான் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

கண்ணி வைப்பாரைப் போலே கடைகிற போதே துடங்கி இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று –
கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணர்கள்-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –
இக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே தவழா நிற்கும் – நிரபேஷனான இவன்-
இவனாக இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
இவர்கள் கீழே எங்கனே நான் இவ்வூரில் குடி இருக்கும் படி –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம் பார்த்துக் கொடு திரியும் –
அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –
பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தாமரை போலே இருக்கிற அதரமானது வெளுத்து இருக்க –இவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அத்தை அடங்கலும் கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் –
அத்தை அடங்கலும் அமுது செய்தானாய்-அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு என்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அத்யந்த சைசவத்தை உடையவன் – இவன் செய்யும் செயல்கள் அடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கும் –
ஸ்ரீ திருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச் சாடித் துகளாக்கின பின்பு இவனைப் பொடிய அஞ்சுவன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

எனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –என் கையில் பலமில்லை -என்னவுமாம் –
என் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் –
நான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

தாமரைப் பொய்கையிலே சென்று ஒளிந்து இருந்து – அவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு –
வேணுமாகில் இங்கனே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள்- என்று இருந்தாய் –என்கிறார் பதினொன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருவடிகளால் உண்டான ஸ்பர்சத்தாலே தழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப்
பெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –ஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய்
தான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி வந்தாய் போலே இருந்தது –
என்கிறார் பன்னிரண்டாம் பாசுரத்தில்

உபரிதன லோகங்கள் அதிரும்படியான த்வனியை உடைத்தாய் அகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி
நெருப்புப் போலே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற –
வ்ருஷபங்களோடு கூட நித்ய வசந்தமான சோலைக்குள்ளே பிணங்கி வந்தாய் போலே இருந்தது –
என்கிறார் பதிமூன்றாம் பாசுரத்தில்

இத்திரு மொழியை வல்லவர்களுக்கு ஸ்ரீ யசோதைப் பிராட்டியார் உடைய
அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -–என்கிறார் பதினான்காம் பாசுரத்தில்

————————

காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ -10-8-1-

காலத்தைத் தப்பினான் ஆயிற்று -ஒப்பித்து வர வேண்டுகையாலே –
இவர்களுக்கு உடலாக ஒப்பிக்கிறத்தோடு-இவர்களோடு சம்ஸ்லேஷிக்கிறதோடு வாசி என் என்றாயிற்று -அவன் படி –
இருந்தபடியே உகக்கிற எங்களுக்கு ஒப்பிக்க வேணுமோ –
கிட்டி வரச் செய்தேயும் காலத்தைத் தப்பி வருகையாலே ஓர் அடியிலே பத்தடி இட்டான் ஆயிற்று –சாபராதன் ஆகையாலே
கிட்டி வர மாட்டுகிறிலன்-
ஆற்றாமையாலே புறம்பு போக மாட்டுகிறிலன்–ஒப்பித்துக் கொடு வர வேணுமோ –
காலத்தைத் தப்பி வர வேணுமோ – சாபராதனானால் மேல் விழ வன்றோ வடுப்பது –என்கிறார் முதல் பாசுரத்தில்

பிரத்யபிஜ்ஞார்ஹம் அல்லாத காலத்திலேயே வந்தார் இவர் –அந்ய பரதை பாவித்து வர வேணுமோ –
கதவுக்கு புறம்பே நிற்க வேணுமோ – தள்ளவும் போகாதே ஒழிய வேணுமோ –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியாக பண்ணை நுனுங்கிக் கொண்டு வந்து – ராத்ரியிலே பிரசித்தராய் இருப்பார்
அப்ரசித்தரைப் போலே வரக் கடவதோ பண்ணை ந னுக்கிக் கொடு வரக் கடவோதோ ராத்ரியிலே வரக் கடவதோ –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அரண் அழித்து வருவார் ஆதரம் உடையார் அன்றோ –
பூர்ணராய் இருப்பார் அபூர்ணரைப் போலே வரக் கடவதேயோ –
கலக்க வருவார் அப்ரசித்தமாக வன்றோ வருவது -அரண் அழித்து வர வேணுமோ –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

மயிர் முடி பேணாதே வர வேணுமோ –ஆயுதத்தோடு வர வேணுமோ –
பின்னை வெற்றி கொண்டாடி நிற்க வேணுமோ –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

வ்யதிரேகத்தில் முடிவார்க்கு அன்றோ நீ உதவுவது – பிரணயிநி பக்கல் ஆயுதத்தோடு வர வேணுமோ –
இடம் அறிந்து அன்றோ வருவது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உம்மை நீர் அறிந்தால் காலத்தைக் குறித்தே போவது எங்களை அறிந்தால் சொன்ன போதிலே வர வேண்டாவோ
உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் –இங்கே வாரீர் –
உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

உமக்கு சத்ருசராய் இருப்பவர் பலரும் அல்லையோ-இது தன்னைக் கொண்டாடும் அவர்கள் அன்றோ அவர்கள் –
இது என்ன கஷ்டமோ–சாஹாசங்களைச் செய்யக் கடவ நீர் இங்கே வந்தது என் – குறைவற்ற நீர் இங்கே வந்தது என் –
மேன்மை உடையார் வரக் கடவதோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

வ்யதிரேகத்தால் தரியாதவர்கள் இருக்க-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே இருப்பார்க்கு அன்றோ
நீ உதவுவது -என்று சொல்லப் புக்காள்-
இவ்வார்த்தை சொல்லித் தலைக் கட்டினால் பின்னை தனக்கு அவகாசம் அறும் -என்று பார்த்து
அதுக்கு முன்பே காலைப் பிடித்தான்
காலைப் பிடிக்கிறது என் –மார்வத்து எழுத்து என்கிறது என்-வாயிது விரல் இது என்கிறது என் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும்
ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே
இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே -10-9-1-

இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்டு நீர் காதலிக்கக் கடவ இத்தை அன்றோ
இவள் காதலிக்கிறது –பிராப்த விஷயத்தில் காதல் அன்றோ -என்று இராதே
இத்தைப் பழியாக சொல்லுகிற ஊரில் ஸ்திரீகள் உடைய துணிவையும் புத்தி பண்ணாதே –
பாலராய் இருப்பார் கையில் அது நினைத்த போது வாங்குகிறோம் -என்று
இருக்கிறாப் போலே ஆறி இருக்கிறாயோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

பசுக்களும் இடையரும் நோவு படாத படி ரஷித்த ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ -அறிகிறிலேன் –
அவ்வதாரத்தில் இழந்தாருக்கும் இழக்க வேண்டாத படி ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிறவனே-
ரஷகத்வத்தில் முற்பாடனாய் இருக்கும் நீ-உன்னுடைய ரஷகத்வமும் போராத படியான த்வரை உடைய இவளை –
கையும் வளையுமான சேர்த்தி கண்டு கொண்டாடும் நீயே-அனுபவித்து விடப் புக்காயோ-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பெறுதற்கு அரியல் ஆனவளை –இவளை இப்படிப் பண்ண வல்ல வடிவு அழகை உடையவனே –
கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இறே
அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

உன்னுடைய வடிவு அழகை ஒரு கால் காட்டிக் கொண்டு போகிறிலை
பாவன பிரகர்ஷத்தாலே -உருவு வெளிப்பாட்டாய் முன்னே நின்று போகிறிலை-
பரக்கச் சொல்வதால் என்ன கார்யம் உண்டு –
சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே-வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி
உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

மதுரா மதுராலாபா -என்னும்படியான பேச்சை உடையவளை – செவ்வி மாறாத மாலையையும் உடையவளை –
இவள் வாசி ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –இதுக்கு நான் எத்தைச் செய்வேன் –
பெரு வழிக் கரையிலே-நாவலில் விழுந்த பழமானது-குனிந்து எடுக்க்கவுமாய் தவிரவுமாய் இருக்கும் இறே
அவ்வோபாதியும் நினைத்து இறுக்கிறலை யாயிற்று இவளையும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஒரு கால் வடிவு அழகைக் காட்டிப் போகிறிலை -என்னுதல்-உருவு வெளிப்பாட்டாலே முன்னே நின்று போகிறிலை -என்னுதல் –
எந்தை பிரானே-தன்னடையே பழுத்து நெகிழ்ந்து விழுகிறத்தை எறி மழுவைக் கொண்டு வியாபாரிக்க வேணுமோ –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இவளுடைய –முன்னே உன்னுடைய வடிவை ஒரு கால் காட்டி போகிறிலை –
தன்னடையே உடைந்து போகிற இத்தை தடியை இட்டுத் தகர்க்க வேணுமோ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இவள் உடைய வைலஷண்யம் ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –
வாயில் பொகட்டின நீர் இழிச்சவும் கொப்பளிக்கவுமாய் இருக்கும்
அவ்வோபாதியாக நினையா நின்றாய் -இவளையும் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

இவளுடைய ஸ்லாக்யதையில் குறை யுண்டாய் இழக்கிறேன் அல்லேன்-இதுக்கடி நான் பண்ணின பாபம் இறே-
அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே –
வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

தான் ஓன்று கண்டு சொல்லுகை அன்றிக்கே-முன்பு உள்ளார் சொன்ன பாசுரத்தை யாயிற்று சொல்லிற்று –
யன் மங்களம் ஸூ பர்ணச்ய வினதாகல்ப யத்புரா அம்ருதம் ப்ரார்த்தயா நஸ- -பரம பக்தி இருந்த படியை சொன்ன படி –
அதுக்கு அநந்தரம் உண்டாம் கைங்கர்ய லஷ்மியைப் பெற்று விஸ்த்ருதமாம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே –10-10-1-

திருத்தாய் செம்போத்தே-போத்துத் திருத்துகை யாவது -அநு கூலிக்கை –
என்றும் ஒக்க இவற்றின் உடைய ரஷணமே பண்ணிப் போருகையாலே வந்த குணவத்தா ப்ரதையை உடையவன் –
ஸ்ரீ லஷ்மீ பதி என்கை அன்றிக்கே இது தானே தனக்குப் பேராய் இருக்கை –
ஒரு கால் சொன்னால் ஆதரம் மட்டம் என்று இருக்கிறதாய் கொண்டு இருகால் மாட்டுச் சொல்கிறாள் –முதல் பாசுரத்தில்

சப்த பூர்த்தியை உடைத்தாய்-நித்யமான புகழை உடையவனாய் இருக்கிறவனை –ஸ்ரீ ராமாயணத்துக்கு
பிரதிபாத்யனாய் இருக்குமவனை –ரஷிக்கையால் வந்த புகழை உடையவனை –
ஸ்ரீ பிராட்டிக்காக தன் மார்விலே அம்பேற்ற தீரோதாத்த நாயகனை –வரக் கூவாய் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும் விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு –
வரக் கூவாய் பூங்குயிலே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஒரு ஊரில் மன்று பாழ் தீரும்படியாக குடக் கூத்தாடினான் –
ஒரு லோகத்தில் பாழ் தீரும்படியாகவும் ஒரு கூத்தாடினான் ஆயிற்று –
தேன் மாறாத பூ மலரை உடைத்தான திருக் குழலை உடையவனை –
பரம பிரணயிநி ஆனவனை – வரக் கொட்டாய் பல்லிக் குட்டி –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஆயுதம் தானும் மிகையாம்படி யான திண்ணிய தோளை உடையவன் –
வட வேங்கடவனை வரச் –ரஷணத்துக்கு உறுப்பாக முதலடி இட்டுக் கொண்டு நிற்கிறவனை –
சொல்லாய் பைங்கிளியே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஆறாம் பாசுரத்துக்குப் பொருளாக ஜீயர் அருளிச் செய்தாராக பிள்ளை அருளிச் செய்யும் படி
ஸ்ரீ கிருஷ்ணன் கோழி கூவினவாறே வருமாய்-மீண்டு கோழி கூவினவாறே போமாய் –
வரவை ஸூசிப்பிக்கிற கோழி கூவா நின்றது –
பிரிவில் தரிக்க ஒண்ணாத படி கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவர் வரும் காலம் ஆயிற்று –
மீண்டு கோழி கூவப் போவர்–நடுவு சம்ஸ்லேஷத்துக்கு காலம் இல்லை-நான் என் செய்கேன் -என்கிறாள் -என்று
ஸ்ரீ கிருஷ்ணன் கோழியை மடியிலே இட்டுக் கொண்டு வரும் போலே காணும் – என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் -என்று பிரசித்தம் –

இதர விஷயத்துக்கு இறே அவன் பிரேரகன்-இவ்விஷயத்துக்கு அவன் பிரேரிக்க வேண்டா –
அவன் வடிவு தானே இறே ப்ரேரகம்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்னக் கடவது இறே

ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்-வேல் போல் நெடிதாய் இருந்துள்ள கண்கள் களிப்ப –
தேனார்ந்த சோலையை உடைத்தான ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்து அருளின வ்யாமுக்த்தன் –
இங்கே போதுங்கொலோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தேவத்வ ஸூசகமான ஸ்ரீ திரு ஆழியையும்-மனுஷ்யத்வைகாந்தமாய் ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய –
ஸ்ரீ ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பத்தாம் பாசுரத்தில் பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது-இது தானே பிரயோஜனம் -ஆகையாலே –

—————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-பத்தாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

July 13, 2019

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-

நமக்கு பிராப்ய பூமியைத் தருவானாய்
தானே பிராப்யன் ஆனவனை
திரு நீர் மலையிலே கண்டோம்
இனி திருக் கண்ண மங்கையிலே காணக் கடவோம் –
என்கிறார் –

———————-

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே —10-1-2-

சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனானவை ஸ்ரீ திருமலையிலே கண்டோம் –
இனி ஸ்ரீ திருத் தண் காவிலே சென்று காணக் கடவோம் – என்கிறார் –

———————

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே —10-1-3-

ஸ்ரீ வடதள சாயி யானவனை திருவாலியிலே கண்டோம் – இனி ஸ்ரீ திரு நாங்கூரிலே சென்று
காணக் கடவோம் என்கிறார் –

————–

துளக்கமில் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே —10-1-4-

ஸ்ரீ ப்ரஹ்லதா ஆழ்வானுக்கு விரோதியான ஹிரண்யனை போக்கினவனை ஸ்ரீ திருப் பேரிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு வெள்ளறையிலே காணக் கடவோம் என்கிறார் –

———————–

சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே —10-1-5-

ருத்ரனுடைய சாபத்தைப் போக்கினவனை ஸ்ரீ திரு நறையூரிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு மெய்யத்திலே காணக் கடவோம் என்கிறார் –

———————

வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே —10-1-6-

பிரயோஜனாந்த பரருக்கும் அபேஷிதம் செய்யும் பரம உதாரனை ஸ்ரீ திருச் சேறையிலே கண்டோம்
இனி ஸ்ரீ திருக் குடந்தையிலே காணக் கடவோம் என்கிறார் –

———————

கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெக்கா வுளே —10-1-7-

ஸ்ரீ கிருஷ்ணனாய் அனுகூல ஸ்பர்சம் உள்ள வெண்ணெயை விழுங்கினவனை ஸ்ரீ திருவழுந்தூரிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு வெக்காவில் காணக் கடவோம் –

———————-

பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8-

தன் திருவடிகளிலே நல்லாருக்கு ஆத்மாவனவனை ஸ்ரீ தெற்குத் திருமலையிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு விண்ணகரிலே காணக் கடவோம் என்கிறார் –

——————–

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக்
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே —10-1-9-

குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்தவனை ஸ்ரீ திருக் கோட்டியூரிலே கண்டு போய்
ஸ்ரீ திரு நாவாயிலே காணக் கடவோம் என்கிறார் –

———————

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே —10-1-10-

இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்சேதம் இல்லை –நச புனராவர்த்ததே
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள் –

——————

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-

ராஷசரில் இனி ஆடு போலேக் கூப்பிடக் கடவார் இல்லை -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று
ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர் – ஆடு -என்று வெற்றி
இந்த ராஷச ஜாதியிலே வெற்றி சொல்லக் கடவார் இல்லை -என்கிறது என்ன
இதுவே இறே பொருள் என்று அருளிச் செய்தார் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் –
தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு – அந்த சப்த அநுகாரம் –
பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது-

————————–

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2-

ஒப்பாய் இருக்கிற தோள் இரண்டையும் ஒரு திரு அபிஷேகத்தையும் உடையராய் இருக்கிற உம்மைக் கண்டு
அடியாரான நாங்கள் ஒருவர் இருவர் அன்றிக்கே எல்லாரும் ஒக்க வாழ்ந்தோம்
எமக்கு ஜனகன் ஆனவனே –எங்கள் நாதனே –-அஞ்சினோம் என்றாரைக் கொல்லுகை உனக்குப் போருமோ-

——————

தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி எங்கோமான்
கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குலவேந்தே
பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன்
அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —-10-2-3-

நிரபதாரரைக் கொல்லாத இஷ்வாகு வம்சத்திலே பிறந்ததுக்கு தலை யன்றோ நீர்-விஷய ப்ரவணராய் கெடக் கடவ
இஜ் ஜாதியை எத்தைச் சொல்லுவது-ஸ்வர்க்கத்துக்கு வன்னியம் அறுத்தவன் மகனே
உனக்கு இஷ்டரான தேவர்கள் உகந்ததுவே செய்து விட்டாய் – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –

——————–

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –ஸ்ரீ பிராட்டியை கொடு போங்கோள்-

—————-

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு
மனுஷ்யர்களை அநாதரித்தான்-அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி –
அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-

——————–

ஓதமாகடலைக் கடந்தேறி யுயர்கொள் மாக்கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடலிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-

அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –
வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம்
என்று அவன் கையிலே ஸ்ரீ பிராட்டியை விட்டுக் கொடாதே
இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ

———————–

தாழமின்றி முந்நீரை யஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை எங்களை யொழியக் கொலையவனைச்
சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-7-

அப்ராப்த விஷயத்தில் சாபலத்தை பண்ணுமவனை –
நான் இவ்வூர்க்கு அதிபதி -நிர்வாஹகன் என்று இது ஒன்றுமையே நினைத்து இருந்தான் –
குற்றம் நின்ற இடத்தே வதம் பண்ணப் பார்த்தருள வேணும் –
நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-

—————-

மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத்
தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று
புனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக வெய்த
அனங்கன் அன்ன திண தோள் எம்மிராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—10-2-8-

ஸ்ரீ பிராட்டியை சிறை வைத்த ராவணன் உடைய தப்ப நினைத்த நெஞ்சில் –உறைக்க எய்ய வல்லனாய்
அழகிய வடிவையும் திண்ணிய தோளையும் உடைய ஸ்ரீ பெருமாளுக்கு அஞ்சினோம் –

——————–

புரங்கள் மூன்றுமோர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில்
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம்
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-9-

ஸ்ரீ மகா ராஜர் புருஷகரமாகத் தொழுதோம் – எங்களுக்கு இரங்க வேணும் –
எங்கள் நாயகனே – லோகத்துக்கு அடைய பிரகாசனான ஆதித்யன் மகன் அன்றோ நீர் சர்வ நிர்வாககர் அன்றோ –
நாங்கள் சொல்லச் செய்தே எங்களைக் கொல்லில் உங்களுக்கு அவத்யமாம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-

——————–

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—10-2-10-

தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது-ஜிதந்தே -என்றால் -எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே-
இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் ஸ்ரீ பரம பதம் –அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை –
எல்லாரும் அறியச் சொன்னோம் –

———————–

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-

ஸ்ரீ சுக்ரீவா ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி ஏத்துவாருக்கு உம்மை ஆஸ்ரயிக்க வேணும் இறே –
அவர் இசைந்தாலும் -வத்த்யதாம் -என்று நீர் சொன்னால் உம்மை இசைப்பித்து -ஆனய -என்று உம்மை விட்டு
அழைப்பித்துக் கைக் கொள்ள வேண்டுகையாலே –
ஸ்ரீ ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று ஸ்ரீ முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் –
பண்டே சிஷித்து வைத்தவர்கள் போலே ஆடுகின்றோம்-எங்கள் செயல் அறுதியாலே –

———————–

எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே —10-3-2-

எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை –

————————-

ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கருமுகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3-

நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல-உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் –
எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –
கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ –

—————————

மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதாரத்தைப்
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால்
கணங்கள் யுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே—10-3-4-

தர்ச நீயமான வில்லிலே அம்பைத் தொடுத்த ஸ்ரீ பெருமாள் தம்பியார் உடைய குணங்கள் பாடி ஆடுகின்றோம் –

———————

வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே —10-3-5-

நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்-
நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே-
எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம் –

——————–

கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து
வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா
கொல்ல வேண்டா ஆடுகின்றோம் குழ மணி தூரமே —10-3-6-

பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் –
பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ –
எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும் –

—————————

மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே —10-3-7-

வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய ஸ்ரீ திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே
ப்ராவண்யம் –இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை –
ஸ்ரீ திருவடியைச் சொன்னோம் ஆனால் ம்ருத்யு சத்ருசராய் இருப்பாரும் விலங்குவர்கள் போலே காணும் –

—————————

கவள யானைப் பாய் புரவி தேரோடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாட நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணர் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-8-

ஸ்ரீ திரு அயோத்யைக்கு கடவ ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் –ஸ்யாமமான நிறத்தை உடையவர் காண ஆடி கோள்-
ராஜா கூத்துக் காணா நின்றான் என்று உங்களை விடும்படி –

————————–

ஏடு ஒத்து ஏந்தும் நீண் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப் போனார் நாங்கள் எய்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை துடரேன்மின்
கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-9-

நாங்கள் உஜ்ஜீவிக்கைக்காக-கச்ச அநுஜா நாமி -என்று விட்டடித்தவர் உடைய
ஆஞ்ஞையை சிரஸா வஹித்துக் கொண்டு போந்தோம் –

———————-

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்றமன்னார் ஆடியுய்ந்த குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே —10-3-10-

ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள்
வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள்
பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் –
இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை –
நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்-

—————–

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-

ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற நம்பி – ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி –
இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே – பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது
தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் –
பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் –
தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி –
ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள் –

——————-

வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே–10-4-2-

தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் –
எங்கே புக்கிருந்து உன் பக்கல் நிரபேஷரானார் உடன் – சாபேஷையாய் நான் பார்த்து இருக்க –
என்ன விளையாட்டு விளையாடுகிறது –

——————–

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய்—10-4-3-

அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா முலை சுரக்கப் பண்ணாமல் மடியிலே இருந்தாயிற்று உண்பது –
இது அடைய தரையிலே போகாமே உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய் –

———————–

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4-

என் ஒக்கலையிலே இழியாது இருந்து ஆதரித்து இனிதாக அம்மம் உண்ண வாராய் –

——————–

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே —10-4-5-

இனி இதுசெய்யான் -என்னும்படி படுக்கையிலே கிடந்தது-அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும்
விகிர்தமான செயலை உடையவனே –
நெடும் போது உண்டாயிற்று முலைக் கடுப்போடு இருக்கிறது –
இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது –
உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ-

————————-

பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை
கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் —10-4-6-

தீமைகள் செய்யா நிற்புதி-கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி –
அத்தீமை காண என் ஹிருதயம் உருகி முலை வழியே பாலாய் புறப்படா நின்றது –
கண்கள் சிவப்பது-மூரி நிமிர்வது-கொட்டாவி கொள்வது -அழுவது -ஆகாதே –

———————

தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே —10-4-7-

பூதனை கையிலே அகப்பட்ட உன்னை ஆராக நினைத்தாய் – நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் ஆனவனே –
அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும் இவள் மகன் ஆனதுவும் –

——————–

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் —10-4-8-

தாயாரைக் கண்டால் தீமையிலே ஓன்று பத்தாக பணைக்கும்–ஸ்ரீ நந்த கோபர்க்காயிற்று அஞ்சுவது
அத்தாலே அவனுக்கு அச்சம் உறுத்துக்கைக்காக ஸ்ரீ யசோதை பிராட்டி சொல்லும் பாசுரம் ஆயிற்று –

——————-

பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே—-10-4-9-

கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –
உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ –

—————————

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே —10-4-10-

அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு
வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே
அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான ஸ்ரீ நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம் –

———————-

பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-

வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

———————–

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்
டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம்
ஆயர் அழக வடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி-10-5-2-

தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே
இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய்
அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே –
தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய்
செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது –

———————-

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —10-5-3-

பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –இங்கனே தாவா மோரை உருட்டி
பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று-
உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே ஸ்ரீ தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –
எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

——————–

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-4-

அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே
லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –
ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே கன்றுகள் மேய்க்குமவனே –

———————

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5-

உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் –
கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால் சப்பாணி கொட்ட வேணும் –

———————–

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நானவலப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி —10-5-6-

கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் – ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு
ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க-வளர்ந்த செருக்கை உடையவனே –
ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

——————–

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி -10-5-7-

பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே –
அன்று பூதனை தன்னை முடித்து உன்னை நோக்கித் தந்த நீ இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ –

———————

யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-

பேய் என்று அவளை புத்தி பண்ணி முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு
அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே –
உகவாதாரை அழியச் செய்வுதி-உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ –

——————-

கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை
மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9-

பூதனை வரும் அளவும் ஆறி இருந்து கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு
அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே –
உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ –

—————

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

பேராளன் –ஸ்ரீ நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா-அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே
கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் –
இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது –
ஸ்ரீ பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று –
இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது –

————————

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1-

உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக அற நூல்-வேதம் விஸ்த்ருதமாம் படி பண்ணியவன்
சந்திர சூரியர்களும் பூமியும் திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும் மலைகளும் அக்னியும்
இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக ஸ்லாக்கியமான மிடற்றை – இவை புகும் அளவும் –
விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர்
இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு-அமுது செய்து-ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு
அடியுண்டு-ஒரு பிரதிகிரியை அற்றுப் போக மாட்டாதே -இருக்கிறான் –என்கிறார் முதல் பாசுரத்தில்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேன்
-திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே –

———————-

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –10-6-2-

அந்த பிரளய காலத்து அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம்
இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு அமுது செய்தான் –

————————

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-3-

ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர்
இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான் –

——————-

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-4-

பூமியை கொள்ளுகைக்காக தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு
க்ருத்ரிமித்து லோகத்தை அளந்து– மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் –
ஓர் அபலை இட்ட சிறை விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான் –

————————

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5-

லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே நடத்தினவன் கிடீர் இன்று தன் ஆஞ்ஞை அழிந்து
ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி யுண்கிறான் –

————————-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6-

சஹஸ்ர பாஹ் வர்ஜுனனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும் அழகுக்குப் பிடித்த மழுவாலே
துணித்துப் பொகட்டவன் கிடீர் –இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான் –

————————–

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே—10-6-7-

நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு
மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர் –
மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –

———————-

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-

அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய்
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி
இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக ராவணன் உடைய முடியோடு
தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் –
இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான் –

————————–

சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது
திரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-9-

ஸ்ரீ மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக மராமரங்கள் ஏழையும் எய்து – மலை போலே இருக்கிற வடிவை
உடையளாய் இருக்கச் செய்தேயும் ஸ்ரீ பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி
வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் –
ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே வைரூப்யத்தை விளைத்து விட்டது –
அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே –

————————-

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே —10-6-10-

ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து
ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார் –

————————–

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-

நான் சொல்லிற்று செய்தல்-தமப்பனார் சொல்லிற்றைச் செய்தல் செய்யாத பருவம் இறே உன் பருவம் –
நானும் சொல்லிற்றிலேன் தமப்பனாரும் அருளிச் செய்திலர் –
நீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே – நான் இனிச் செய்வது என் –
ஸூசக மாத்ரமே அன்றிக்கே -காரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம் –

————————-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-

ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய
இது செய்யக் கடவார் இல்லை –
வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –
கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே கடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –

————————

தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ —10-7-3-

இவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை – வெண்ணெயே அன்றிக்கே –இவ் வேழ் உலகும் கொள்ளும் –
இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது –
அவன் இப்பது அமுது செய்தான் ஆகில் நீ இப்பாடு படுகிறது என் -என்ன –
அவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என் என்று அன்றோ அஞ்சுகிறது நான் –

————————-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4-

கண்ணி வைப்பாரைப் போலே கடைகிற போதே துடங்கி இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று –
கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணர்கள்-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –
இக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே தவழா நிற்கும் – நிரபேஷனான இவன்-
இவனாக இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
இவர்கள் கீழே எங்கனே நான் இவ்வூரில் குடி இருக்கும் படி –

————————

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5-

பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம் பார்த்துக் கொடு திரியும் –
அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –
பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –

————————

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ—-10-7-6-

தாமரை போலே இருக்கிற அதரமானது வெளுத்து இருக்க –இவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன் –

———————

ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-

அத்தை அடங்கலும் கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் –
அத்தை அடங்கலும் அமுது செய்தானாய்-அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று –

————————-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே—10-7-8-

இவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு என்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன் –

———————–

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல்
ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே —10-7-9-

அத்யந்த சைசவத்தை உடையவன் – இவன் செய்யும் செயல்கள் அடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கும் –
ஸ்ரீ திருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச் சாடித் துகளாக்கின பின்பு இவனைப் பொடிய அஞ்சுவன் –

———————

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை
நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ —10-7-10-

எனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –என் கையில் பலமில்லை -என்னவுமாம் –
என் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் –
நான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி –

————————

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர் இடையர் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –10-7-11-

தாமரைப் பொய்கையிலே சென்று ஒளிந்து இருந்து – அவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு –
வேணுமாகில் இங்கனே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள்- என்று இருந்தாய் –

——————-

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-12-

ஸ்ரீ திருவடிகளால் உண்டான ஸ்பர்சத்தாலே தழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப்
பெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –ஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய்
தான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி வந்தாய் போலே இருந்தது –

——————-

தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-

உபரிதன லோகங்கள் அதிரும்படியான த்வனியை உடைத்தாய் அகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி
நெருப்புப் போலே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற –
வ்ருஷபங்களோடு கூட நித்ய வசந்தமான சோலைக்குள்ளே பிணங்கி வந்தாய் போலே இருந்தது -என்கிறாள் –

———————

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14-

இத்திரு மொழியை வல்லவர்களுக்கு ஸ்ரீ யசோதைப் பிராட்டியார் உடைய
அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார் –

———————–

காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ -10-8-1-

காலத்தைத் தப்பினான் ஆயிற்று -ஒப்பித்து வர வேண்டுகையாலே –
இவர்களுக்கு உடலாக ஒப்பிக்கிறத்தோடு-இவர்களோடு சம்ஸ்லேஷிக்கிறதோடு வாசி என் என்றாயிற்று -அவன் படி –
இருந்தபடியே உகக்கிற எங்களுக்கு ஒப்பிக்க வேணுமோ –
கிட்டி வரச் செய்தேயும் காலத்தைத் தப்பி வருகையாலே ஓர் அடியிலே பத்தடி இட்டான் ஆயிற்று –சாபராதன் ஆகையாலே
கிட்டி வர மாட்டுகிறிலன்-
ஆற்றாமையாலே புறம்பு போக மாட்டுகிறிலன்–ஒப்பித்துக் கொடு வர வேணுமோ –
காலத்தைத் தப்பி வர வேணுமோ – சாபராதனானால் மேல் விழ வன்றோ வடுப்பது –

———————-

துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ —10-8-2-

பிரத்யபிஜ்ஞார்ஹம் அல்லாத காலத்திலேயே வந்தார் இவர் –அந்ய பரதை பாவித்து வர வேணுமோ –
கதவுக்கு புறம்பே நிற்க வேணுமோ – தள்ளவும் போகாதே ஒழிய வேணுமோ –

——————–

கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்
மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என் இது என் இது வென்னோ—10-8-3-

நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியாக பண்ணை நுனுங்கிக் கொண்டு வந்து – ராத்ரியிலே பிரசித்தராய் இருப்பார்
அப்ரசித்தரைப் போலே வரக் கடவதோ பண்ணை ந னுக்கிக் கொடு வரக் கடவோதோ ராத்ரியிலே வரக் கடவதோ –

————————

நாமம் பலவுமுடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இது என் இது என் இது என்னோ –10-8-4-

அரண் அழித்து வருவார் ஆதரம் உடையார் அன்றோ –
பூர்ணராய் இருப்பார் அபூர்ணரைப் போலே வரக் கடவதேயோ –
கலக்க வருவார் அப்ரசித்தமாக வன்றோ வருவது -அரண் அழித்து வர வேணுமோ –

———————–

சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து
மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ —10-8-5-

மயிர் முடி பேணாதே வர வேணுமோ –ஆயுதத்தோடு வர வேணுமோ –
பின்னை வெற்றி கொண்டாடி நிற்க வேணுமோ –

———————-

ஆனாயரும் ஆநிரையும் அங்கு ஒழியக்
கூனாய தோர் கொற்ற வில் ஓன்று கை ஏந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6-

வ்யதிரேகத்தில் முடிவார்க்கு அன்றோ நீ உதவுவது –பிரணயிநி பக்கல் ஆயுதத்தோடு வர வேணுமோ –
இடம் அறிந்து அன்றோ வருவது –

———————–

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச்
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ–10-8-7-

உம்மை நீர் அறிந்தால் காலத்தைக் குறித்தே போவது எங்களை அறிந்தால் சொன்ன போதிலே வர வேண்டாவோ
உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் –இங்கே வாரீர் –
உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ –

——————–

புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்
எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8-

உமக்கு சத்ருசராய் இருப்பவர் பலரும் அல்லையோ-இது தன்னைக் கொண்டாடும் அவர்கள் அன்றோ அவர்கள் –
இது என்ன கஷ்டமோ–சாஹாசங்களைச் செய்யக் கடவ நீர் இங்கே வந்தது என் – குறைவற்ற நீர் இங்கே வந்தது என் –
மேன்மை உடையார் வரக் கடவதோ –

———————

ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ —10-8-9-

வ்யதிரேகத்தால் தரியாதவர்கள் இருக்க-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே இருப்பார்க்கு அன்றோ
நீ உதவுவது -என்று சொல்லப் புக்காள்-
இவ்வார்த்தை சொல்லித் தலைக் கட்டினால் பின்னை தனக்கு அவகாசம் அறும் -என்று பார்த்து
அதுக்கு முன்பே காலைப் பிடித்தான்
காலைப் பிடிக்கிறது என் –மார்வத்து எழுத்து என்கிறது என்-வாயிது விரல் இது என்கிறது என் –

——————–

அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே–10-8-10-

அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும்
ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே
இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை –

—————————–

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே -10-9-1-

கண் காண ஒண்ணாத ஆபத்தை பரிஹரித்த நமக்கு இது ஒன்றும் பழியாய்த் தலைக் கட்ட புகுகிறதோ –
என்று கொண்டு இருக்கிறாயோ –

———————

மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான்
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே —10-9-2-

ஒருவர் இருவர் அன்றிக்கே ஊராக அனுபவிக்கும் படி குருகுல வாஸம் பண்ணினார்க்கும்
ஆட ஒண்ணாத கூத்துக்களை அன்றோ நாம் உபகரித்தது
ஆனபின்பு நமக்கு இது ஒன்றும் பழி யாகப் புகுகிறதோ -என்று இருக்கிறாயோ –
ஊருக்காக உபகரித்த படி சொல்லிற்று -முன் –இனி ஒருத்திக்காக உபகரித்த படி சொல்லுகிறது-

——————

ஆர்மலி யாழி சங்கோடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடுந்திறல் தானோ
நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை-
ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3-

பெறுதற்கு அரியல் ஆனவளை –இவளை இப்படிப் பண்ண வல்ல வடிவு அழகை உடையவனே –
கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இறே
அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும் –

——————–

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த கரதலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங்கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4-

உன்னுடைய வடிவு அழகை ஒரு கால் காட்டிக் கொண்டு போகிறிலை
பாவன பிரகர்ஷத்தாலே -உருவு வெளிப்பாட்டாய் முன்னே நின்று போகிறிலை-
பரக்கச் சொல்வதால் என்ன கார்யம் உண்டு –
சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே-வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி
உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய் –

———————-

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும்
அரு வழி வான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான்
திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5-

மதுரா மதுராலாபா -என்னும்படியான பேச்சை உடையவளை – செவ்வி மாறாத மாலையையும் உடையவளை –
இவள் வாசி ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –இதுக்கு நான் எத்தைச் செய்வேன் –
பெரு வழிக் கரையிலே-நாவலில் விழுந்த பழமானது-குனிந்து எடுக்க்கவுமாய் தவிரவுமாய் இருக்கும் இறே
அவ்வோபாதியும் நினைத்து இறுக்கிறலை யாயிற்று இவளையும் –

———————–

அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனை
செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய்
எறிக்கிலைக்காக வெறி மழு வோச்சல் என் செய்வது எந்தை பிரானே —10-9-6-

ஒரு கால் வடிவு அழகைக் காட்டிப் போகிறிலை -என்னுதல்-உருவு வெளிப்பாட்டாலே முன்னே நின்று போகிறிலை -என்னுதல் –
எந்தை பிரானே-தன்னடையே பழுத்து நெகிழ்ந்து விழுகிறத்தை எறி மழுவைக் கொண்டு வியாபாரிக்க வேணுமோ –

———————

ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட
பாழி யம் தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ
மாழை மென்னோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா–10-9-7-

இவளுடைய –முன்னே உன்னுடைய வடிவை ஒரு கால் காட்டி போகிறிலை –
தன்னடையே உடைந்து போகிற இத்தை தடியை இட்டுத் தகர்க்க வேணுமோ –

—————-

பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ செய்ததின்று
பெரும் தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்
கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8-

இவள் உடைய வைலஷண்யம் ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –
வாயில் பொகட்டின நீர் இழிச்சவும் கொப்பளிக்கவுமாய் இருக்கும்
அவ்வோபாதியாக நினையா நின்றாய் -இவளையும் –

—————————

நீரழல் வானே நெடு நிலம் காலாய் நின்ற நின்நீர்மையை நினைந்தோ
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னதோர் தேற்றன்மை தானோ
பார் கெழு பவ்வத் தாரமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே —10-9-9-

இவளுடைய ஸ்லாக்யதையில் குறை யுண்டாய் இழக்கிறேன் அல்லேன்-இதுக்கடி நான் பண்ணின பாபம் இறே-
அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே –
வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய் –

——————-

வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே —10-9-10-

தான் ஓன்று கண்டு சொல்லுகை அன்றிக்கே-முன்பு உள்ளார் சொன்ன பாசுரத்தை யாயிற்று சொல்லிற்று –
யன் மங்களம் ஸூ பர்ணச்ய வினதாகல்ப யத்புரா அம்ருதம் ப்ரார்த்தயா நஸ- -பரம பக்தி இருந்த படியை சொன்ன படி –
அதுக்கு அநந்தரம் உண்டாம் கைங்கர்ய லஷ்மியைப் பெற்று விஸ்த்ருதமாம் –

——————

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே –10-10-1-

திருத்தாய் செம்போத்தே-போத்துத் திருத்துகை யாவது -அநு கூலிக்கை –
என்றும் ஒக்க இவற்றின் உடைய ரஷணமே பண்ணிப் போருகையாலே வந்த குணவத்தா ப்ரதையை உடையவன் –
ஸ்ரீ லஷ்மீ பதி என்கை அன்றிக்கே இது தானே தனக்குப் பேராய் இருக்கை –
ஒரு கால் சொன்னால் ஆதரம் மட்டம் என்று இருக்கிறதாய் கொண்டு இருகால் மாட்டுச் சொல்கிறாள் –

————-

கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில் போல் நிறத்தன்
உரையார் தொல் புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2-

சப்த பூர்த்தியை உடைத்தாய்-நித்யமான புகழை உடையவனாய் இருக்கிறவனை –ஸ்ரீ ராமாயணத்துக்கு
பிரதிபாத்யனாய் இருக்குமவனை –ரஷிக்கையால் வந்த புகழை உடையவனை –
ஸ்ரீ பிராட்டிக்காக தன் மார்விலே அம்பேற்ற தீரோதாத்த நாயகனை –வரக் கூவாய் –

——————

கூவாய் பூங்குயிலே
குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே —10-10-3-

விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும் விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு –
வரக் கூவாய் பூங்குயிலே –

——————-

கொட்டாய் பல்லிக் குட்டி
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

ஒரு ஊரில் மன்று பாழ் தீரும்படியாக குடக் கூத்தாடினான் –
ஒரு லோகத்தில் பாழ் தீரும்படியாகவும் ஒரு கூத்தாடினான் ஆயிற்று –
தேன் மாறாத பூ மலரை உடைத்தான திருக் குழலை உடையவனை –
பரம பிரணயிநி ஆனவனை – வரக் கொட்டாய் பல்லிக் குட்டி –

——————–

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே –10-10-5-

ஆயுதம் தானும் மிகையாம்படி யான திண்ணிய தோளை உடையவன் –
வட வேங்கடவனை வரச் –ரஷணத்துக்கு உறுப்பாக முதலடி இட்டுக் கொண்டு நிற்கிறவனை –
சொல்லாய் பைங்கிளியே –

—————-

கோழி கூவென்னுமால்
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக்
கோழி கூவென்னுமால் –10-10-6-

தோழி என்று சமான துக்கையாய்-உடன் கூடினவளை சம்போதித்து-
கோழி கூவென்னுமால் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் –
என் செய்கேன் -என்கிறாள் –

——————-

காமற்கு என் கடவேன்
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்யக்
காமற்கு என் கடவேன் —10-10-7-

இதர விஷயத்துக்கு இறே அவன் பிரேரகன்-இவ்விஷயத்துக்கு அவன் பிரேரிக்க வேண்டா –
அவன் வடிவு தானே இறே ப்ரேரகம்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்னக் கடவது இறே-

———————–

இங்கே போதுங்கொலோ
இனவேல் நெடுங்கண் களிப்பக்
கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால்
இங்கே போதுங்கொலோ —10-10-8-

ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்-வேல் போல் நெடிதாய் இருந்துள்ள கண்கள் களிப்ப –
தேனார்ந்த சோலையை உடைத்தான ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்து அருளின வ்யாமுக்த்தன் –
இங்கே போதுங்கொலோ –

———————

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9-

தேவத்வ ஸூசகமான ஸ்ரீ திரு ஆழியையும்-மனுஷ்யத்வைகாந்தமாய் ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய –
ஸ்ரீ ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –

———————

தொண்டீர் பாடுமினோ
சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ -10-10-10-

பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது-இது தானே பிரயோஜனம் -ஆகையாலே –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -ஒன்பதாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

July 10, 2019

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-1-பிரவேசம் –

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -என்று பாடின கவி தன்னை
நீரே மதிக்கும் படி கவி பாட வல்லீருமாய் இருந்தீர் –
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி -என்கிறபடியே
எங்கும் புக்கு அனுபவிக்க வேணும் எண்ணம் அபிநிவேசம் உண்டாய் இருந்தது –
இங்கு இருக்கும் நாள் தானே-வழு விலா யடிமை செய்ய வேண்டும் -என்று நீர் மநோ ரதித்த படியே
கவி பாடி அடிமை செய்கின்றீர்
பின்பு இத் தேக அவசானத்திலே அவ்வருகே கொடு போய்
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று நீர் பேசும் பேச்சு தன்னையும் அங்கே கேட்கிறோம்
ஆனபின்பு உமக்கு ஓர் இடத்திலும் ஒரு குறைகளும் இல்லை
நாம் உகந்த நிலங்கள் எங்கும் புக்கு கவி பாடும் -என்று
தான் ஸ்ரீ திருக் கண்ணங்குடியில் நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்க
கண்டு
வெள்ள நீர் வெள்ளத் தணைந்த வரவணை மேல் -என்கிறபடியே
நம்முடைய ரஷணத்திலே உத்யுக்தராய்க் கொண்டு
ஸ்ரீ திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினவன் தானே
இங்கே ஸ்ரீதிருக் கண்ணங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அங்கே கவி பாடி அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிறார் –

——————–

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-பிரவேசம் –

மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன் -என்று
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்தார்-கீழ்த் திரு மொழியில் –
இங்கே அவனோடு நினைத்த பரிமாற்றம் எல்லாம் பரிமாறலாம் என்று ஸ்ரீ திரு நாகையிலே போய்ப் புக்கார் –
அங்கு நிற்கிறவனுடைய
பருவத்தையும்
மேன்மையையும்
வடிவு அழகையும்
ஒப்பனையும் -கண்டார் –
அவன் பக்கலிலே கிட்டி எல்லா அடிமை செய்ய வேண்டும் என்னும் ஒரு வார்த்தை அருளச் செய்ய கண்டிலர் –
விஷயம் சந்நிஹிதமாய் இருக்க நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே அவசந்னராய்
அவ்வழகு தான் உருவு வெளிப்பாடாக நலிய
அத்தாலே நலிவு பட்டு
கலந்தவன் பேர நின்ற அநந்தரம்-அவன் அழகு மறக்க ஒண்ணாத படி உருவ வெளிப்பாட்டாலே நலிய
நோவு படா நின்றேன் காண்-என்று தோழிக்கு சொல்லுகிறாள்
ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தாலே தாம் மநோ ரதித்த கைங்கர்யம் பெறாதே இருந்து
நோவு படுகிற படியைச் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

———————————————————————–

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே —9-3-1-பிரவேசம் –

ஸ்ரீ நாயகனோடு இயற்கையிலே கலந்து பிரிந்து அந்த பிரிவோடு அவன் வர அபேஷிதமாய் இருக்க
அவன் வரக் காணாமையாலே ஆற்றாமை கரை புரண்டு நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி –
இனி அவன் தான் மேல் விழுந்து கலக்கக் கடவன் என்று முறை பார்த்து இருந்துண்டது அமையும் –
இனி ஸ்வ லாபத்துக்கு நாமே யாகிலும் பிரவர்த்திப்போம் என்று கொண்டு
தன்னுடைய ஸ்திரீ த்வபிரயுக்தமான நாண் மடம் அச்சம் தொடக்கமான வற்றை பொகட்டு
நம் ஸ்வ ரூபத்தையும் அழித்து
அவன் தனக்கும் ஸ்வ ரூப ஹானியை பண்ணி யாகிலும் முகத்தே விழிப்போம் என்று கொண்டு
அவன் இருந்த இடத்தே ஏறப் போக-ஒருப்பட்ட இத்தை கண்ட தோழி யானவள்
இது உன் தலைமைக்குப் போராது காண்-என்று ஹிதம் சொல்ல
அவளையும் அவளுக்கு முன்னே பிற்காலிக்கிற நெஞ்சையும் பார்த்து
பின்னையும் மீண்டு நின்று அங்கே போக ஒருப்பட்ட படியை நெஞ்சோடும் –
அந்த நெஞ்சு உதவாத போதும் உதவி கார்யம் செய்யும் தோழி யோடுமாக கூட்டுகிறாள் –

இவள் தான் புறப்பட்டு போகை யாகிறது அதி சாஹாசம் இறே
பிராண ரஷணம் ஒரு தலை யானால் மரியாதைகளை பார்த்து இருக்கலாம் படி இராது இறே
ஸ்வ ரூபம் நோக்குகைகாக இங்கேயே இருந்து நோவு படுமதில் காட்டிலும்-அங்கே போவது ஸ்வ ரூப ஹானியே யாகிலும்
பின்னையும் விழுக்காட்டிலே ஸ்வ ரூபத்தோடு சேர்ந்து தலைக் கட்டும்
ஆனபின்பு அங்கே போய் அனுபவிப்போம் என்று அத்யவசிக்கிறாள் –
அவன் இத்தலையில் பருவம் அறிந்திலன் ஆகிலும்-தன் வை லஷண்யம் அறிந்து இருக்குமே –

———————–

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே —9-4-1- பிரவேசம் –

ஸ்ரீ திருப் புல்லாணி ஏறப் போக வேணும் என்று கொண்டு உத்யோகித்து – கால் நடை தாராமல் தளர்ந்து
உண்ணப் புக்கவன் சோற்றிலே தோஷ தர்சனம் பண்ணினால்
எல்லாம் உண்டு சமைந்தோம் -என்னுமா போலே தொடங்கினது எல்லாம் அழகிதாக தலைக் கட்டினோம் என்று
கண்ணால் கண்ட பஷிகளைத் தூது விடுவது
முன்புள்ளார் நோவுபட உதவினபடி சொல்லுவது
பந்துக்கள் ஹித வசனம் கேளாத படியான தசையைச் சொல்லுவதாய் தலைக் கட்டுகிறார் –

————————-

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —9-5-1- பிரவேசம் –

அஹம் அஸ்ய அபராத ஆலய –
ஆத்மாவுக்கு ஞாந ஆனந்தாதிகள் நிரூபகமாய் இருக்கை தவிர்ந்து
அபராதங்களை இட்டு நிரூபிக்கும்படி யாயிற்று துருப்பற்றுக் கிடந்த படி –
ஜ்ஞாதாஹம் பகவத் சேஷதைக ரசோஹம்-என்று இறே
ஆகை இறே ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று ஸ்வரூபாபத்தி மோஷமாக சொல்லுகிறது –
இத்தால் இவனுக்கு பிரகிருதி சம்பந்தம் வந்தேறி என்னும் இடம் சொல்லுகிறது
ரத்நாதிகளை சாணையிலே ஏறிட்ட வாறே புகர் பெறா நின்றது-வந்தேறி யாகி இறே அழுக்கு கழிகிறது
அசித் சம்சர்க்கம் அநாதியாய் இருக்கச் செய்தே அந்தவத்தாகாவும் குறை வற்று இருந்தது
அகிஞ்சன –
இப்படி அபராதங்களுக்கு கொள்கலம் ஆகா நின்றேன் என்கிற அனுதாபம் இன்றிக்கே இருக்கை –
அநந்ய கதி –
இப்படி ஒரு கை முதலும் இல்லாத பின்பு
இவன் தய நீயன் என்று இரங்கி கைக் கொள்ளுகைக்கு தேவரை ஒழிய வேறு ஒருவர் இல்லை –
புகு வாசல் அற்ற படி –
த்வமேவ உபாய பூதோ மே பவ –
ஆராய்ந்து பார்த்த இடத்தே நானும் எனக்கு இன்றிக்கே இருந்து
பிறரும் எனக்கு இன்றிக்கே இருந்த பின்பு
நீ ஒருவனே உபாயமாக வேணும் –
இது பிரார்தனா மதி –
இது புருஷார்த்தமாக தலைக் கட்டுகைக்கு இந்த புத்தி விசேஷமே வேண்டுவது
ஆத்மா சத்தையோ பாதி இறே ஸ்வீகாரமும் –

மாம் –
என்னை -ஏகம் என்றால் போலே இருக்கிறது
சரணா கதிரித்யுக்தா –
இது சரணா கதி என்று சொல்லப் பட்டது
சா
அந்த சரணா கதி யானது
தேவேசமின் பிரயுஜ்யதாம்
சரண்யனான சர்வேஸ்வரன் பக்கலிலே இது செய்ய அடுப்பது
ஒரோ வ்யக்திகளிலும் இது தானே ஹனன ஹேதுவாகா நின்றது இறே
நீர்மையாலே ரஷிப்பாரும் உண்டோ-

கீழே சில பஷிகளை தூது விட்டு -நெஞ்சை தூது விட்டு –
அவை மீண்டு வருவதற்கு முன்பே பாதக பதார்த்தங்கள் கையிலே நலிவு பட்டு
தாய்மார் தோழிமார் அடைய ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க
உங்கள் உடைய ஹித வசனம் கேட்டு மீளாத படி நெஞ்சு அவன் பின்னே போயிற்று
அது வரும் அளவும் அவன் சொன்ன வார்த்தையை விஸ்வசித்து இருக்கும் அத்தனை என்று துணிந்த இடத்திலும்
அவன் வரக் கண்டிலள்
இவ்விடம் ஒருத்தி உடைய ஆற்றாமையை பரிஹரிக்கைக்காக வந்த இடம் ஆகையால் அங்கு ஆறி இருக்க்கவுமாம் –
இது அங்கன் அன்றிக்கே
நம்முடைய துக்க நிவ்ருதிக்காக வந்து இருக்கிற தேசம் இறே
ஆன பின்பு ஸ்ரீ திருக் குறுங்குடியிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள்-கால் நடை தருவார் -என்கிறாள் –

———————–

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —9-6-1-பிரவேசம் –

கால் நடை தாராதே இருக்கிற என்னை கால்நடை தருவார்-அவன் இருந்த தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் -என்றார் –
திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட ஸ்ரீபேரருளாளர் -என்று
ஸ்ரீ பிராட்டி சந்நிதியும் உண்டாகவும் அனுசந்தித்தார் –
தமக்கு புருஷகாரம் ஆவார் அங்கே உண்டு -என்று அனுசந்தித்தவாறே தமக்கு
கால்நடை தரும் அளவாய் வந்து விழுந்தது –
அத்தாலே –
அங்கு நிற்கிறவன் தான் சால சீலாவானாய்
நாம் தான் வருவது எப்போதோ -என்று -தாம் முற்பாடனாய்-
நம் அவசரம் பார்த்து நிற்பான் ஒருவன் –
அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் போருங்கோள் என்று கூட்டிக் கொண்டு தாமே போகப் பார்க்கிறார் –

—————-

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-பிரவேசம் –

வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் -என்று
பர உபதேசத்துக்கு உறுப்பாக இதர விஷயங்களின் தண்மையை அனுசந்தித்தார் –
அது தம் அளவிலேயாயிற்று –
பிறருக்கு உபதேசிக்கைக்கு நாம் தாம் இதில் நின்ற நிலை என்ன என்று தம்மைப் பார்த்தார் –
இன்னமும் சம்சார வாசனை கழிந்தது இல்லை –
இழக்கைக்கு ஹேதுவான சரீர சம்பந்தம் இன்னமும் அனுவர்த்தியா நின்றது –
போக்யமான விஷயங்கள் சந்நிஹிதமாய் இரா நின்றன –
ஆன பின்பு நாம் இன்னமும் இதில் நின்றும் அழகிதாக கால் வாங்கினமை போராது-
நாம் இதில் நின்றும் மீண்ட அளவு பார்த்து
நம் பேற்றுக்கு தாம் முற்பாடனாய் கொண்டு
மஹாபலியினுடைய யஞ்ஞா வாடத்திலே தம் உடைமை பெறுவதற்கு அர்தித்வம் எல்லாம் தோற்றி நின்றாப் போலே
ஸ்ரீ திரு வல்ல வாழிலே வந்து நின்றான் ஆயிற்று –
சம்சார வாசனை கழிந்தது இல்லை –
தேஹம் அஸ்திரமாய் இரா நின்றது –
விஷயங்கள் சந்நிஹிதமாய் இரா நின்றன –
ஐஸ்வர் யாதிகள் நிலை நில்லாதாய் இரா நின்றன –
இவை இத்தனையும் தப்பி –-அவ்வருகு பட்டால் – பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற விலக்கடிகள் தப்புகை
சாலப் பணி யுண்டாய் இரா நின்றது –
இவை இப்படி தண்ணிய வென்று புத்தி பண்ணி இருந்தாய் ஆகில்
அவன் நித்ய வாஸம் செய்து அருளும் ஸ்ரீ திரு வல்ல வாழை வாயாலே சொல்லுவதாக
நெஞ்சாலே மருவப் பார் -என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

———————–

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1- பிரவேசம் –

ஸ்ரீ திரு வல்ல வாழைச் சேரப் பாராய் -என்றார் தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
அது தம்முடைய த்வரைக்கு ஈடாக ப்ரவர்த்திதது இல்லை –
சர்வ ரஷகனாய் அர்த்தித்தார் உடைய சர்வ பலங்களையும் கொடுக்க கடவனாய்
சர்வாதிகனாய்
விரோதி நிரசன சீலனாய்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் சலிப்பிக்க ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையனாய் –
சர்வ சமாஸ்ரயணீயனாய் கொண்டு
ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் –
நாம் அங்கே போய் அனுபவிப்போம் –
அதிலே ஒருப்படு-என்று
பிதாவானவன் முந்துற நமஸ்கரித்துக் காட்டி
பின்னை
காட்சியிலே முற்பட்டு
தம் திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

—————————-

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-பிரவேசம் —

இவ்விருப்பைத் தவிர்த்து பரம பதத்தைத் தர வேணும் என்று அபேஷித்தார்-
அப்போதே அது பெறாமையாலே -இத்தைத் தவிர்த்து அத்தை தருகைக்காக வந்து நிற்கிற
இங்கே ஆஸ்ரயித்து நாம் அபேஷிதம் பெறாது ஒழிவோமோ என்று அவசந்னராய்
அந்த அவசாத அதிசயத்தாலே தாமான தன்மை அழிந்து
எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை பிராப்தராய்
அப்பிராட்டி தான் தம் தசையைத் தான் பேச மாட்டாதே கிடக்க
அவள் படியைப் பேசுகிற திருத் தாயார் தசையை ப்ராப்தராய் –
அவள் தன் மகள் தசையை அனுசந்தித்து
இவள் ஆற்றாமை இருந்த படியால் அவனோடு அணைந்து அல்லது தரிக்க மாட்டாள் போலே போலே இருந்தது –
அணைத்து விட வல்லளே
அன்றிக்கே இங்கனே நோவு படும் இத்தனையோ -என்று
பின்னையும் தானே அவனைக் கிட்டியே விடும் என்று
அறுதி இட்டு தரிக்கிறாளாய் இருக்கிறது –

——————–

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே —9-10-1-பிரவேசம் –

சர்வ அபேஷித பிரதானனாய்க் கொண்டு ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற நிலையை அனுசந்தித்தார் -கீழ் –
அத்தனை பொதுவான நிலை தவிர்ந்து ஆஸ்ரிதர்க்கே ஸ்வயமாகக் கொண்டு
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி நிற்கிற நிலையை அனுசந்திக்கிறார் –
அவன் பண்டு -பெற்ற தமப்பன் பகையாக ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானுக்கு உதவி
அவன் விரோதியைப் போக்கி
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உதிரம் அளந்த கையோடே நிற்கிற தேசம் என்றும் –
அவன் தானே அநேகம் அவதாரங்களைப் பண்ணி ஆஸ்ரிதர்க்கு உதவினவன் என்றும் நினைத்து
அத்தனை பொதுவான நிலை தவிர்ந்து-ஆஸ்ரிதர்க்கே ஸ்வயமாகக் கொண்டு
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கிறவனுடைய சௌலப்யத்தை அனுசந்தித்து ப்ரீதராய் அனுபவிக்கிறார் –
ஸ்ரீ ப்ரஹ்லாதிகளுக்கு -மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்னலாம்படி ஹிருதயத்தை விடாதே இருந்து
பிரசாதத்தைப் பண்ணுமவன் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

———————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் -ஒன்பதாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

July 10, 2019

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-1-

ஒரு கருமத்தை அனுஷ்டியா நின்றோம் அது நமக்கு ரஷகம் அன்று ஸ்ரீ சர்வேஸ்வரனே ரஷகன் -என்று
இருக்கும் இருப்பில் குலைத்தலை உடைய நெஞ்சை உடையார் அன்றிக்கே இருப்பாருமானவர்கள் வர்த்திக்கிற –
ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானே –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஆகாச அவகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு வந்து தோற்ற –
சாபத்தாலே திண்ணியதான நெஞ்சை உடைய முதலை-சின்னம் பின்னம் -என்கிறபடியே
துணி படும்படி பிரதி பஷததின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு ஆழியை ஏவினவன் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட-ஆகாசமும்-பூமியும் குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட –இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய ஸ்ரீ மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் –
பாண்டவர்களுக்கு சாரதி யானவன் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பூமிப் பரப்பை அடைய இரண்டடியாலே அளப்பதாக பரந்த திக்குகள் அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மழுவைக் கொண்டு பூமியில் ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து
அவர்கள் உடைய ருதிர வெள்ளத்திலே குளித்து உதக் கிரியையும் பண்ணி மிக்க கோபம் தவிர்ந்தவன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனை –ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே
வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை பனம் பழம் போலே உதிரும்படி வில்லை வளைத்தவன் –
மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி
ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

சர்ப்பத் த்வஜன்-என்னக் கடவது இ றே துரியோதனனை –அவன் தன ஓலகத்தினுள்ளே ஆசனத்தை
ஜகத்துக்கு வேர் பற்றானவனை அளிக்கப் புகா நின்றோம் என்று கூசாதே இட்டு
அதுவே ஹேதுவாக பெரிய வடிவானது அண்ட அவகாசத்தை ஊடுருவ
திக்குகள் தன பக்கலிலே அடங்கும்படியாக வளர்ந்தவன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

விஞ்சின பாரமானது ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி ஸ்ரீ மகா பாரதத்திலே
ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக ஸ்ரீ அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் –
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானை –
ஸ்ரீ ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்–லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு ஸ்ரீ பகவத் தாரித்ர்யம் இல்லை – என்கிறார் பத்தாம் பாசுரத்தில்-

——————

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-

மர்மங்களிலே கடாஷியா நின்றார் பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் –
நீ பின்னை செய்தது என் என்ன –இப்பார்வைக்கு நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று அஞ்சுகின்றேன் –
அவன் பார்வையும் அவள் பார்வையும் ஆனதாகிறது – அப்போதை அழகு இருந்த படி காண் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஒப்பித்துக் கொண்டு இரா நின்றார் –திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திருக் கையிலே உடையராய் இரா நின்றார் –
ஒப்பனை தான் வேண்டாத படி இரா நின்றது திருத் தோள்களை கண்டவாறே –
இவ் வழகு நம்மால் பேசப் போகாது-விஸ்மயப்பட்டு விடும் அத்தனை –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஓங்கி இருப்பதாய் பரந்து இருப்பதான மலை விளங்கினாப் போலே செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான –
ஆயிரம் தோளையும் உடையராய்-அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார்
கீழே நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது
ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை –
ஓர் ஒப்பனை வேணுமோ -அவ்வடிவு அழகு தானே அமையாதோ-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இவர் திரு வதரம் இருக்கிற படியை பார்த்தவாறே சிவந்த பவளம் என்னலாம் படி இருந்தது –
தேவர் இவர்-இதர விசஜாதியருமாய் இருந்தார்-மனிச்சரோடு கூட்டலாய் இருக்கிறிலர் –
இவர் வடிவு இருந்த படியைச் சொல்லில்-எங்கும் ஒக்க ஸ்ப்ருஹநீயமாய் இரா நின்றது –
உபமானம் இல்லாத விஷயத்தில்-உபமானம் சொல்லி இருப்போமோ -என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இவர் வடிவு இருக்கும் படியைச் சொல்லப் புக்கால் கடல் போலே இரா நின்றது –
பிரதி பஷத்தை கனல் எழக் காய்கிற ஸ்ரீ திரு ஆழியை ஒரு கையிலே ஏந்தி –தமக்கு அடங்காத ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
மற்றைக் கையிலே உடையராய் இருந்தார் –
இத்தைச்சொல்லி நம்மால் கரையிலே நிற்கும் அத்தனை அல்லது நம்மால் உள் இழிந்து பேசப் போகாது –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கண்டாரை தம் வசமாக்கி தன் காலிலே விழ விட்டுக் கொள்ள அஞ்சன கிரி போலேயுமாய் இரா நின்றார் –
வாக்குக்கு அவிஷயமான விஷயத்தில் நான் எத்தைச் சொல்லுவது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வடிவைப் பார்த்த வாறே மேக் சகலங்கள் அன்றிக்கே எல்லாம் ஒன்றாகத் திரண்டு வர்ஷிக்கையிலே ஒருப்பட்ட
மேகம் போலே இரா நின்றது –விசஜாதீயத்துக்கு சஜாதியங்களில் சில வற்றை சொன்ன இடம்
என் சொன்னோம் ஆனோம் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

என்னை விலக்கப் பார்க்கிற நீங்களும் வந்து-காணுங்கோள் -உங்களால் தான் விடலாமாகில் –
ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருந்தால் இருக்கும் அழகு தான் இப்படியேயோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

மேன்மையைப் பார்த்த வாறே ஸ்ரீ நித்ய சூரிகளும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இரா நின்றார்
மேன்மையை உடையார் கிட்டுகிற விஷயம் என்று நமக்கு கை வாங்கலாய் இருக்கிறது இல்லை
வடிவு அழகைப் பார்த்தவாறே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –ஸ்ரீ திரு நாகையிலே தன் அழகாலே
விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –
தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்-உயிர் தோழியும் தானுமாய் அனுபவித்த ஏழு பாடல்கள்
எல்லாரையும் குறித்த இரண்டு பாடல்கள்-பல ஸ்ருதி ஒன்றும்
இத்தை அப்யசிக்க வல்லார்கள் இங்கும் கோலின பலங்களும் பெற்று இது தன்னின் பலமான ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாய் இனியராகப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே —9-3-1-

ஒரு ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் போல்வாருக்கு அன்றோ அவன் தானே வரும் அளவும் ஆறி இருக்கிறோம் என்று தரிக்கல் ஆவது
பழையார் பாடாற்ற வல்லது புதியார் க்கும் ஆற்றப் போமோ
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -என்னக் கடவது இறே
அசாதாரணரான ஸ்ரீ நித்ய சூரிகளிலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் போல்வார் தான் பட்டார்களோ
நான் பட்டபடி -என்கிறார் என்று ஆயிற்று –
இதுக்கு ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்யும் படி –-இது தன்னை ஸ்ரீ ஆழ்வார் பாடா நிற்க
ஸ்ரீ எம்பெருமானார் -அங்கு ஆர் உயிர் பட்டது இங்கே எனது உயிர் பட்டது -என்று அருளிச் செய்தார் –முதல் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் உடைய அனுபவத்தை யாகில் ப்ராப்யமாக சொல்லுகிறதும்-ஆசைப் படுகிறதும்
அதுக்கு அவ்வருகே ஒரு ஏற்றம் சொல்லுவாரைப் போலே சொல்லுவான் என் என்று நான் ஸ்ரீ ஜீயரைக் கேட்க
நாவோடையான ஸ்திரீக்கு பர்த்தாவின் உடைய கர ஸ்பர்சம் உண்டானால்-வேர்ப்பது விடுவது ஆமாபோலே
அனுபவத்தில் புதுமையால் படுகிற அலமாப்பு காணும் என்று அருளிச் செய்தாராக ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர் –

அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே விபுத்வத்துக்கு அவ்வருகாம் படியாய் இருக்கை-
அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை கொள்ளுகிறது –
அப்படியே இருக்கும் இறே சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே –
பிரிகிற தமக்கும் அது உண்டாகில் பிரியான் இறே-இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது –இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு
கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் -போந்து காணாய் -என்கிறாள் –
இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது –-இவள் பேதை யாயிற்று –
இவன் தான் முக்த கண்ட மாய் பிரியேன் என்றாலும் அது தான் கலவியில் ஒரு பிரகாரமோ -என்று இருக்குமாயிற்று இவள்
பிரிவு -கலவி -என்கிற இவற்றுக்கு வாசி அறியாள் ஆயிற்று –பிரியேன் என்று சொன்ன போதே பிரிந்தான் இறே
பின்னை போனதும் மிகை-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே –
ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று –
பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

கீழே மறக்க ஒண்ணாது என்றது இறே-இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது –
மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது-அவை இரண்டும் அரிதாக நின்றது
உணரில் -உள்ளம் சுடுமால்–என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை-நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை
அவன் பண்ணுகிற விருப்பத்துக்கு நாம் விஷய பூதர் ஆகாத வன்று இரண்டு ஆஸ்ரயமும்
அழியும் என்னும் படி யாயிற்று பரிமாறின படி ––என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும் அரிது
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை –
வள்ளல் –சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வாதானம் பண்ணினவன் –
மாயன் – இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி அப்போது அப்படி பரிமாறினவன்
மணி வண்ணன் – இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன் –
எம்மான் –அவ் வடிவு அழகை காட்டி என்னை அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அவன் ருசி முன்னாக -இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது –
அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –
இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ இளைய பெருமாள் ஒரு கையாலே சத்ரத்தையும் மற்று ஒரு கையாலே சாமரங்களையும் பிடித்து பரிமாறும் போது
ஸ்ரீ சக்கரவர்த்தி ஆண்ட பரப்பில் அதுக்கு ஓர் ஆள் இல்லாமையால் அன்று இறே
அடிமையில் கலித்தனம் -பசியனாய் – இருக்கிறபடி –
பிரியமாகாத வன்று இவனுக்கு இது பிராப்யம் ஆகாது இறே
இவன் அவனுக்கு உகப்புச் செய்தால் இறே ஸ்வரூபம் சித்தி யாவது
ப்ரஹர்ஷயிஷ்யாமி-இலே இறே இவன் தனக்கு அந்வயம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

முறை உணர்ந்து திருவடிகளிலே விழுகைக்கு அவசரம் இல்லை
பிராப்யம் என்று இருக்கை தவிர்ந்து-ப்ராபகத்வ புத்தி பண்ணுவோம் –
சாதன விச்சேதத்தில் பல விச்சேதம் வரும் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம் –
இனி அத்தலைக்கு நன்மை பார்க்குமது எல்லாம் தவிர்ந்து நமக்கே நன்மை பார்க்கும் இத்தனை –
இதுக்கு முன்பு நம் இழவுகளும் பாராதே-அவனுக்கே நன்மை பார்த்து போவோம் இறே –
ஒன்றும் தாரேன் -என்று இவன் பிரதிஞ்ஞை பண்ணி இருந்தாலும்
பக்திலப்பயன் என்கிற வசனத்தை மாற்ற ஒண்ணாதே –
எல்லாம் செய்தாலும் அவன் ஆசனத்தை கிளப்பும் போது நம் ஆற்றாமை வேணும் காண் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம்
அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் –
இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் –
ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது –
அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே
இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர
அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே —9-4-1-

இவளுடைய பாரவச்யம் கண்டு-தன் இழந்து இவள் வியாபாரிக்க வேண்டும்படியாய் யாயிற்று அவள் இருக்கிறது
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் – திருவாய் மொழி –
நாம மாத்ரமே காணும் உள்ளது-நாயகன் பிரிந்ததுக்கு நோவு படும் இத்தனையே இவளுக்கு உள்ளது
இவள் ஆற்றாமைக்கும் -அவன் வாராமைக்கும் -இரண்டுக்கும் நோவு பட வேணுமே அவளுக்கு
இது ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாது காணும் –
பிரிந்த நிலத்திலே இருக்க ஒண்ணாது ஒழிவதே-பிராப்ய தேசத்திலே புக ஒண்ணாது ஒழிவது
உசாத் துணை இன்றிக்கே ஒழிவதான தசை இறே நமக்கு-இழவில் வந்தால் இருவருக்கும் ஒத்து இருக்கும் இறே –
மாறாடி வருமது இன்றிக்கே இது ஸ்வ பாவமாய் விட்டதே
நித்ய சூரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றார்கள்-இவ்வருகு உள்ளார் விஷயங்களில் அந்ய பரராகா நின்றார்கள்
மூன்றாம் விபூதியாக பண்ணி விட்டதாகாதே நோவு படுத்துகைக்கு நம்மை -என்கிறாள் முதல் பாசுரத்தில்

இந்த்ரனுக்காக செய்த செயல் என்று தோற்றிற்று இல்லை காணும் இவர்க்கு-உன்னைப் பிரமாணித்தார் பெற்றே பேறு-
ஆஸ்ரிதர் எல்லாருக்குமாக செய்த செயல் என்று இருக்கிறார் –
இவை தூது போக சமைந்தால் போலே யாய்த்து அவன் கிட்ட வந்து இருக்கிறபடியும் –
அன்னமாய் –தூது போகிற உங்களுக்கு அஞ்ச வேண்டா சஜாதீயராய் இருப்பார் –
இதனை –தன் தசை தன்னைப் பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது போலே காணும்
செப்புமினே –செப்பிக் கொடு வர வேண்டா – அறிவித்து விட அமையும் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஒருத்தி உடைய சிந்தா வ்யதையைப் போக்க என்றே வில் பிடித்தவர்க்கு என்னுடைய் சிந்தாவ்யதையும் அறிவியுங்கோள்-
என் சிந்தை நோய் – அவள் அத்தனை க்ரம பிராப்தி பொறுத்து இருக்குமவள் அன்று இறே-இவள் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஒரு பாலனுக்கு தமப்பன் பகையாக உதவிக் கார்யம் செய்தவன் அபலைக்குத் தன்னைப் பெறாமையாலே வந்த
வ்யசனத்துக்கு வாசி வைத்து உதவின படி காண் –என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான் –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நாட்டிலே பொய் மெய்கள் கொண்டு கார்யம் உண்டோ-அவன் பொய் ஆகையாலே அன்றோ எனக்கு ஆகர்கஷமுமாய் இருக்கிறது –
ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவன் உடைய பொய்யே – அவனுடைய பொய்யைக் கேட்டு அத்தாலே தரித்து இருந்தேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தன்னோட்டை சம்ச்லேஷத்தாலே-நிறமும் இரட்டித்து தன் பக்கல் உள்ள ஆபரணங்களும்
என் பக்கலிலே யாக வேணும் என்று ஆசைப் பட்டு-பரிசை ஆசைப் பட்டு முதலை இழப்பாரை போலே
முன்பு உள்ளவற்றையும் இழந்து விட்டேன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சௌபரி ஐம்பது வடிவு கொண்டு புஜித்தால் போலே ரத்னங்களால் பண்ணப் பட்ட மாடங்கள் தோறும்
தானும் அவனுமாய் அனுபவிக்கக் காணும் கோலிற்று – அது எல்லாம் செய்து சமைந்தேன் –
அப்ராப்யத்தை ஆசைப் படும்படியான பாபத்தை பண்ணின என் மேலே –
வேலையும் வெந்தழலே வீசுமே —இந்த த்வனிக்கு சேஷித்தது உண்டாகா கொண்டு பிரமியா நின்று
இவள் தன் விரஹ அக்னி தன் மேல் படாத படி கடக்க நின்று வீசா நின்றதாயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பிரபல விரோதிகளை ஆற்றி உகந்தாருக்கு தன்னைக் கொடுக்க கடவனாக ஆசைப் பட்ட
நமக்கு நம் விரோதிகளை மாற்றி நமக்கு தன்னை தந்தபடி காண் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஜகதா காரனாய் இருக்கிறவன் –அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன்
அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் –
சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே
நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழியை அப்யசிக்க வல்லார் –இங்கும் குறைவற அனுபவித்து
அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்

—————-

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —9-5-1-

இவள் ஒரு அபலை அன்றோ-இதுக்கு எல்லாம் இவள் ஆடல் கொடுக்க வல்லளோ -என்று
நம் பக்கலிலே கிருபை பண்ணுகிறிலன்-
அன்றிக்கே-தம்மை பிரிந்து பத்து மாசம் ஜீவித்து இருந்தவளோ பாதியாக நினைத்தி இரா நின்றார் –
வடிவைக் காட்டி கண்டது அடைய பகையாம்படி பண்ணி பொகட்டுப் போன இவ்விடம் போல அன்றிக்கே
இவை தான் அனுகூலமாம்படி அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்திலே கொடு பொய் பொகடுங்கள் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

நம்முடைய ப்ராவண்யத்தை குண ஹானியாக உப பாதிக்கை அன்றிக்கே –
ந கச்சின் ந அபராத்யதி -என்று பொறுப்பித்து அவன் திருவடிகளோடு சேர்க்குமவள்
இருந்த இடத்தே கொடுபோய் பொகடுங்கள் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நம் இனம் உள்ள ஊரிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தர்ச நீயமான மயில் நெருங்கி வர்த்திக்கிற பர்யந்தத்தை உடைத்தான
ஸ்ரீ திருக்குறுங்குடி யிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட –
அவனுடைய பெருமை பேசி-ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்-
பேச -என்றதாகில்-ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே
ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும் நின்று சொல்லும்படியாக -என்றாகிறது –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

கலந்த போதோடு பிரிந்த போதோடு வாசி அற ஆறி இருக்கலாம் விஷயம் அன்றிக்கே
பிரிந்து ஆற்ற ஒண்ணாத குணாதிக விஷயத்தோடே கலக்கும் படியான மகா பாபத்தைப் பண்ணினேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் –
கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினான் ஆயிற்று –
வ்யதிரேகத்தால் அறிந்து கொள்கிறாள் என்று –
இவர் பிரியேன் என்கிற பாசுரத்தாலே யாகிலும் சொன்னார்
அதுவும் வாய் கொண்டு சொல்ல மாட்டாமை -ஆது கொலோ -என்கிறாள் ஆயிற்று -இவள் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம்-என்கிற படியே தன்னோடு ஒத்த பருவத்து பிள்ளைகளை
மநோஹாரி சேஷ்டிதங்களாலே எழுதிக் கொண்டு இருக்குமவன் ஆயிற்று –
வன்னெஞ்சர் படுகிற பாடு இதுவானால் அபலைகளுக்கு சொல்ல வேண்டாம் இறே –
அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்
அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

கோவலர் கூத்தன் -என்றபடி இறே
இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன்
விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கோவலர் கூத்தன் -என்றபடி இறே
இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன்
விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பத்தாம் பாசுரத்தில் -அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் –
இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே –

———————–

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —9-6-1-

ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன்
அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ –
ரஷ்ய ரஷக பாவம் மாறாதே போரும் தேசமாயிற்று-சீலாவானாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –
அவ் ஊரில் மரங்களுக்கும் அவன் படி உண்டு என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகு எளியர்க்கு கிட்ட ஒண்ணாமை அன்றிக்கே
ப்ரஹ்மாதிகளுக்கும் அகப்பட இக்கரையிலே நின்று கூப்பிடும்படி ஸ்ரீ சர்வாதிகனாய் இருக்கிறவன்
எல்லாருக்கும் ஒக்க அனுபவிக்கலாம் படி வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருக் குறுங்குடி
திரு வநந்த வாழ்வான் மேலே ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கண் வளர்ந்து அருளுகிற –
இதுதான் ஸ்வயம் பிரயோஜநார்தம் அன்றிக்கே
ஆஸ்ரித அர்த்தம் ஆகையாலே வந்த சுத்தியை உடைத்தவன் வர்த்திக்கிற ஊர் போலே –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
கீழே நின்ற நம்பி அனுபவம்-இதில் கிடந்த நம்பி அனுபவம் –

மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து
முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தலைகள் பத்தும் சிதறும்படியாக சென்று அடை மதிள் படுத்தி ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும்
தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் –
முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

சாமாராதன உபகரணங்களைத் தரித்துக் கொண்டு அதிகாரிகளான நீங்கள்
அடைவு கெட ஏத்தி அஞ்சலியை பண்ணி உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற விஷயங்களைப் பற்றி இருக்கிற மநோ ரதத்தைத் தவிர்த்து
அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற ஊரைச் சென்று அடையுங்கோள்-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நம்மோடு ஒரு சம்பந்தம் உடைய நீங்கள் –பர பக்தி உக்தராய்க் கொண்டு -வகுத்த ஸ்வாமி யானவன்
இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை
அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————-

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-

சர்வமும் உப சம்ஹ்ருதம் ஆனவன்று இவற்றுக்கு லய ஸ்தானமாய்- சிருஷ்டி காலம் வந்தவாறே உத்பத்தி ஸ்தானமாய்
காரணாவஸ்திதமான சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய் கார்ய மத்யே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் –
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ திரு வல்ல வாழை வாயாலே சொல்லும்படியாக
நெஞ்சாலே நினைக்கப் பண்ணப் பாராய் -நெஞ்சே –என்கிறார் முதல் பாசுரத்தில்

பாண்டவர்களுக்காக பண்டு தன்னை தாழ விட்டு தூது போன மேன்மையை உடையவர் –
நம்மை யாரோ ஏவிக் கார்யம் கொள்வார் என்று வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை —என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

மகா பலியுடைய யாகத்திலே சென்று தன் அல்லாதத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க
இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையவர் –தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு ஸ்ரீ பரமபதத்திலே இருக்கிறவர்
அத்தோடு ஒரு போலியான ஒக்கத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையிலே வர்த்திக்கிறவர் –
தர்ச நீயமான கடல் போலே இருக்கிற வடிவை உடையவர் – வர்த்திக்கிற –ஸ்ரீ திரு வல்ல வாழை –
அங்கு உள்ளு நிற்கிறவர் வடிவு அழகு இருக்கிறபடி –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நஞ்சாலே நிறைந்து இருந்துள்ள முலையின் மேலே அழகிய கையையும் வாயையும் வைத்து
அவளுடைய ஆயுஸையும் முடித்த -மைந்தனார்
விரோதி நிரசனமே யாத்ரையாய் இருக்கிறவர் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ப்ராஹ்மண லஷணங்களால் குறைவற்று இருக்கிற-நாலு வகைப் பட்ட வேதம்-பஞ்சாக்னிகள் பஞ்ச மகா யஞ்ஞங்கள்
அங்கங்கள் ஆறு இவற்றை யாத்ரையாக உடையராய் இருப்பார் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடாக உஷ்ண கிரணனான ஆதித்யனாய்
அவனால் வந்த தாபத்தை ஆற்றுகைக்கு ஈடான தண்ணளியை உடைத்தான சந்த்ரனாய் –
மேக சஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசமாய் நிற்கிற ஆச்சர்ய பூதரானவர் –கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பொற்றாமரையை இருப்பிடமாக உடையாளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் அவளுக்குத் தகுதியான தாமும்
ரகவோஹர்த்தி வைதேஹீம் -என்னுமா போலே –அவன் வரக் கடவ வழி எல்லாம் வந்து நின்றான் –
வந்ததே -என்று ஒரு வார்த்தை சொல்லும் இத்தனை நீ செய்ய வேண்டுவது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கேவல தர்க்கம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அன்றிக்கே
பிரமாணம் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுமவர்கள்
தன்னை ஒழிய வேறு ஒன்றை போக்யமாக நினைத்து இருப்பார்க்கும் அத்தைக் கொடுக்கும் மகோதாரன் –
இவ்வமிர்தம் எனக்கு வேண்டா என்னாமை கிடாய் வேண்டுவது -என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இத்தைக் கற்று வல்லார் –பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய்
தேஹ சமனந்தரம்-நித்ய விபூதியிலே புக்கு-ஏஷஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே
நிரதிசய ஆநந்த யுக்தராவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1-

ஸ்த்ரீகளோட்டை சம்ஸ்லேஷத்தை நன்று என்று அது குவாலாக நினைத்து இருக்கும் அத்தை விட்டு –
ஸ்ரீ திருமலையை வணங்குவோம் வா என்னோடே ஒரு மிடறான நெஞ்சே –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகளும் அண்டாந்தர வர்த்திகளானவர்களும் ஆஸ்ரயிக்க ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு
ஆதி ராஜ்ய சூசகமான திரு அபிஷேகத்தை உடைய ப்ரதானர் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு –
அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன் பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம்
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-4-

ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே
ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று
அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் –
பின்னையும் பிற்பாடர் உடைய ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று விரும்பி -வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற பூசலிலே பொறுத்த
ஸ்ரீ ஸ்வாமிகள் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி – அங்கு நின்றும் போந்து அவதரித்து
விளாம் பழத்துக்காக ஒரு சிறு கன்றை வீசி
கையிலே குடங்களைக் கொண்டு கூத்தாடி -பெண்கள் உடைய குரவைக் கூத்திலே தன்னைக் கொடு வந்து கோத்து
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடைய ஸ்ரீ சுவாமி வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஆஸ்ரித விரோதிகளை போக்குகையில் உண்டான ப்ரீதியாலே உகந்து எறிந்த ஸ்ரமஹரமான வடிவை உடையவன்
ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்கு பாங்கான தேசம் என்று திரு உள்ளத்தாலே ஆதரித்து வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருப் பாற் கடலிலே திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –அங்கு நின்றும் போந்து – அவதரித்து
பதத்தாலே -பதற்றத்தாலே -அடி மேல் அடியாக விட்டுக் கொடு வருகிற குதிரையினுடைய
மிக்க சீற்றத்தைப் போக்கின -ஸ்ரமஹரமான வடிவை உடையவன் வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

என் குல நாதனாய் அப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவர்
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கலாம் தேசம் என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்வ ஹிருதயத்திலே அனுசந்தித்துக் கொண்டு பாடுகைக்கு ஈடான பாக்கியம் உடையவர்கள்
இக்கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகர் ஆகப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————–

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

ஸ்ரீ உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து – ஸ்ரீ கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் –
பிற்பாடராய்-இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக
ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்அணைந்தே விட வல்லளோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை –ரஷணத்துக்கு இட்ட வீரக் கழல் த்வனியா நின்றுள்ள
திருவடிகளை –அவற்றைக் காண்கைக்கு கண் படைத்த இவள் கண்டே விட வல்லளேயோ –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு மலையிலே நின்று அருளின –அண்டாந்தர வர்த்திகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை –
அவனுக்கு ஈடாக ஒப்பித்து இருக்கிற இவள்அவ் ஒப்பனையோடு சென்று அணுக வல்லளேயோ –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் –
நமக்கு எளியவன் ஆனவனை –அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள் கிட்ட வல்லளேயோ –
என்கிறார் நாலாம் பாசுரத்தில் –

ஸ்ரீ வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி அளந்தவன் –
ஸ்ரீ திருமலையிலே வந்து நின்ற –அயர்வறும் அமரர்கள் அதிபதியை அவர்களோடு ஒத்த ருசியை உடைய
இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை –
பர பக்தியையும் அத்வேஷத்தையும் பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –
அக் குழலுக்கு தகுதியான அவயவ சோபையை உடையவள் கிட்ட வல்லளேயோ –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று –
தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து எறடா நின்றுள்ள ஸ்ரீ திருமலையிலே –
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை –
அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற
இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகள் அனுபவித்த வடிவு அழகை இங்கு உள்ளார் இழவாத படி தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி
தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட ஸ்ரீ திருமலையிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –
தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல இவள் அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ரஷிக்கைக்கு பாங்காக ரஷ்ய வர்க்கம் உள்ள இடம் தேடி வேதைக சமதிகம்யனாய் வைத்து
கண்ணுக்கு இலக்காகும் படி ஸ்ரீ திரு மலையிலே நின்றவனை –
அது தன்னை பரதத்வோடு ஒக்கச் சொல்லலாம் படி எத்தனையேனும் சாலத் தண்ணியர்க்கும்
முகம் கொடுத்துக் கொடு நிற்கிற இடம் இறே இவ்விடம் –-ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க
அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய
ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற கல்யாண குணங்களாலும் உஜ்ஜ்வலிதனாகா நின்றுள்ள
சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கிட்டுக்கைக்கு யோக்யமான அழகை உடைய இவள்
அவனைக் கிட்டிவிட வல்லளேயோ –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் –
காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு
பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————–

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே —9-10-1-

தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அடியவர்க்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் –
கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே ஒழுகுமா போலே-மேகம் பொன்களையே சிந்த –
அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய் செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

இனிய நகையையும் சிவந்த அதரத்தையும் உடைய ஸ்ரீ பூமி பிராட்டியார் உடைய
செவ்வியை அனுபவிக்க வல்லனாய் அத்தாலே ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு இனியன் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றம் பொறுப்பிப்பாள் ஒருத்தியும்
பொறைக்கு உவாத்தாயிருப்பாள் ஒருத்தியும்
ஆக கூடி இனியனாய் இருக்கிறவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

எனக்கு வைத்த கண் வாங்க ஒண்ணாத படி தன் அழகைக் காட்டி பிரளய ஆபத்தில் ஜகத்தை உண்டு
ஆபத் சகனாய் உமிழ்ந்தவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்கிறபடியே
அவளோடு ஒக்க இவனுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்தவன் ஸ்ரீ திருக் கோட்டியூரானே
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பூ மாலையோடு கூடின ஆதி ராஜ்ய சூசகமான ஸ்ரீ திரு அபிஷேகத்தை உடையவனாய் ஸ்ரீ சர்வாதிகனாய்
பூமி எல்லாம் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ராவணன் உடைய -எய்ய வல்லார் என்னோரோடு ஒப்பார் இல்லை என்னும் மிடுக்கை தவிர்த்து
அச் செயலாலே என்னை அடிமை கொண்டிருக்கும் உபகாரகன் ஆனவன் –
ஜம்பூத் வீபத்தில் ராஜாக்கள் வந்து ஆஸ்ரயிக்க- ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து சந்நிதி பண்ணுகிறது இங்கே -என்று
ப்ரஹ்மாதிகள் வந்து ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ திருக் கோட்டியூரானே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பசுக்களையும் இடையரையும் காத்தால் உகபபாள் ஸ்ரீ பூமி பிராட்டியார் இறே-
பூ பாரத்தை போக்குகையாலே ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கு இனியன் ஆனவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

என்னை அடிமை கொள்ள விரும்பி அயர்வறும் அமரர்கள் அதிபதி யான மேன்மையைப் பாராதே
சம்சாரத்திலே என்னுள்ளே புகுந்தான் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயநீயரான அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வாமி யானவன் –
இங்கே வந்து வர்த்திக்கிறான் என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்களுக்கு ஸ்ரீபரமபதமே வாசஸ் ஸ்தானம் என்கிறார் –
பத்தாம் பாசுரத்தில்

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-