Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ ஷட் பதீ ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதி சங்கரர் இயற்றியது ….

February 27, 2025

ஷட்பதீ ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதி சங்கரர் இயற்றியது ….

1.அவினய மபநய விஷ்ணோதமய மந:சமயம் ருகத்ருஷ்ணாம்!
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: !!

ஹே விஷ்ணோ!எனது பண்வின்மையைப் போக்கு!மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

2.திவ்யதுனீ மகரந்தே பரிமல பரிபோகஸச்சிதானந்தே !
ஸ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே !!

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வைசனையாகக் கொண்டதும், உலகில் துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகின்றேன்.

3.ஸத்யபிபேதாப்கமே நாத!தவாஹம் நமாமகீனஸ்த்வம்!
ஸாமுத்ரோ U தரங்க:க்வசன ஸமுத்ரோ ந தாரங்க: !!

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான எனக்கும் உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே:தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டிது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

4.உத்ருதநக நகபிதனுஜ தனுஜகுலாமித்ர மித்ரசசித்ருஷ்டே !
த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார: !!

கோவர்தன மலையை தூக்கியவரே!இந்திரனின் இளையவரே!அசுரக்கூட்டத்தை அழித்தவரே!சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே!தாங்கள் கண்ணுக்கெதிரே வந்து திறமையைக் காட்டும் பொழுது எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

5.மத்ஸ்யாதிபிரவதாரை ரவதாரவதாஷிவதாஸதா வஸுதாம் !
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாப பீதோஷிஹம் !!

மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ!ஹே பெருமாளே!

6.தாமேதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த!
பவஜலதிமதன மந்தர பரமம் தரமபநய த்வம் மே !!

தாமோதரனே!குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையத்த முகம் கொண்டவனே!கோவிந்த!ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

7.நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ
சரணௌ !
இதி ஷட்பதீ மதீயே வதன ஸரோஜே ஸதா வஸது !!

ஹே நாராயண!கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

ஷட்பதீ ஸ்தோத்திரம் முற்றுப் பெறுகிறது. 

பதங்கள் ஒவ்வொன்றும் அந்தாதி வடிவில் அமைந்த ஸ்லோகம்-நான்காவது ஸ்லோகம்

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே சங்கர பகவத் பாதாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ துளசிதாஸ் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஹனுமான் சாலிஸாவின் மூலம்-ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

February 3, 2025

ஶ்ரீ ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து பக்தி பாடலாகும். 16 ஆம் நூற்றாண்டு கவிஞரான துளசிதாஸ் அவதி மொழியில் ஹனுமான் சாலிஸா எழுதியுள்ளார் என்று நம்பப்படுகிறது – தேவநகரி (முக்கியமாக உத்திரப் பிரதேசத்தில் அவந்த் பிராந்தியத்திலும் நேபாளத்தின் டெரேய் பகுதியிலும் பேசப்படும் இந்திய-ஆரிய மொழி).

“சாலிசா” என்ற வார்த்தை ஹிந்தி சொல் “சாலிஸ்” என்பதிலிருந்து பெறப்பட்டது, இதன் பொருள் நாற்பது (40). இது பாடல்களில் இடம்பெறும் 40 பத்திகளை பிரதிபலிக்கிறது (பூர்வாங்க ஸ்லோகங்கள் 2 பத்திகளை தவிர).

ஸ்ரீ துளசிதாஸ் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஹனுமான் சாலிஸாவின் மூலம்:

தோஹா

ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமனு முகுரு ஸுதாரி
பரனஊ ரகுவர விமல ஜஸு ஜோ தாயகு பல சாரி
புத்தி ஹீன னனு ஜானிகே ஸுமிரௌ பவன குமார
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஸ பிகாரி

த்யானம்

அதுலித ப³லதா⁴மம் ஸ்வர்ண ஶைலாப⁴ தே³ஹம் ।
த³னுஜ வன க்ருஶானும் ஜ்ஞானினா மக்³ரக³ண்யம் ॥
ஸகல கு³ண நிதா⁴னம் வானராணா மதீ⁴ஶம் ।
ரகு⁴பதி ப்ரிய ப⁴க்தம் வாதஜாதம் நமாமி ॥

கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம்
ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம்
யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்த காம்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம்

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

மனோஜவம் மாருத துல்யவேக³ம் ।
ஜிதேந்த்³ரியம் பு³த்³தி⁴ மதாம் வரிஷ்டம் ॥
வாதாத்மஜம் வானரயூத² முக்²யம் ।
ஶ்ரீ ராம தூ³தம் ஶிரஸா நமாமி ॥

ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர
ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1
ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)

ராமதூத அதுலித பலதாமா
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)

மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தியாக வீரன் தயா வீரன் வித்யா வீரன் தான வீரன் ரண வீரன் -ஐந்தும் இருப்பதால் மஹா வீரன் இவரே –

கம்சன வரண விராஜ ஸுவேஶா
கானன கும்டல கும்சித கேஶா || 4
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)

ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை
காம்தே மூம்ஜ ஜனேஊ ஸாஜை || 5
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)

ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)

வித்யாவான குணீ அதி சாதுர |
ராம காஜ கரிவே கோ ஆதுர || 7
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)

ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா
ராமலகன ஸீதா மன பஸியா || 8
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திகாவா
விகட ரூபதரி லம்க ஜராவா || 9
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)

லாய ஸம்ஜீவன லகன ஜியாயே
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே || 11
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)

ரகுபதி கீன்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாஈ || 12
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)

ஸஹஸ வதன தும்ஹரோ ஜாஸ காவை
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா
னாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14

மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)

ஜம(யம) குபேர திகபால ஜஹாம் தே
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15

எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)

தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா
ராம மிலாய ராஜபத தீன்ஹா || 16

சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா
லம்கேஶ்வர பஏ ஸப ஜக ஜானா || 17

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18

கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ
ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19

முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)

துர்கம காஜ ஜகத கே ஜேதே
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20

உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)

ராம துஆரே தும ரகவாரே
ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21

ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)

ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா
தும ரக்ஷக காஹூ கோ டர னா || 22

சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)

ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை
தீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23

உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)

பூத பிஶாச னிகட னஹி ஆவை |
மஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||

உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

னாஸை ரோக ஹரை ஸப பீரா
ஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)

ஸம்கட தேம்(ஸேம்) ஹனுமான சுடாவை
மன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26

மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)

ஸப பர ராம தபஸ்வீ ராஜா
தினகே காஜ ஸகல தும ஸாஜா || 27

பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)

ஔர மனோரத ஜோ கோஇ லாவை
ஸோஈ அமித ஜீவன பல பாவை || 28

அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)

சாரோ யுக பரிதாப தும்ஹாரா
ஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29

நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)

ஸாது ஸன்த கே தும ரகவாரே
அஸுர னிகன்தன ராம துலாரே || 30

ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)

அஷ்டஸித்தி னௌ(னவ) னிதி கே தாதா
அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31

அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32

ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

தும்ஹரே பஜன ராமகோ பாவை |
ஜனம ஜனம கே துக பிஸராவை || 33

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)

அம்த கால ரகுவர புரஜாஈ
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாஈ || 34

ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)

ஔர தேவதா சித்த ன தரஈ
ஹனுமத ஸேஇ ஸர்வ ஸுக கரஈ || 35

என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)

ஸம்கட கடை மிடை ஸப பீரா
ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36

நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)

ஜை ஜை ஜை ஹனுமான கோஸாஈ
க்றுபா கரோ குருதேவ கீ னாஈ || 37

ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)

ஜோ ஶத வார பாட கர கோஈ
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோஈ || 38

“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)

ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39

சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)

துலஸீதாஸ ஸதா ஹரி சேரா
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40

அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

தோஹா

பவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப்
ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப்
ஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாஈ ஸப ஸன்தனகீ ஜய

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர்,
பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே… எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்” என்றார்.

நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!” என்று துளசிதாசர் சொல்ல,
கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.
‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர்,
தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார்.
இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள்
அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.
படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.
துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.
அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.
துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.
இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்!

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன் ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)
உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)
மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)
“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மண பரத சத்ருக்ந ஆழ்வார்கள் சமேத ஸீதா பத்தி சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜர் கவசம்-ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்

January 27, 2025
  1. ஸ்ரீபெரும்புதூர் ஆளும் அரசே திருவடி அழகே தெள்ளிய துறவே
    மாபெரும் தருவாம் வைணவம் அதனை மண்ணில் வளர்த்த ராமானுஜனே
    2.உபய விபூதி செல்வமனைத்தும் உத்தமன் அரங்கன் அள்ளி வழங்க அபயம் அளிக்க அடியவர் மீது அருள் விழி காட்டும் ராமானுஜனே
    3.ஆம் இவன் முதல்வன் என்றொரு வார்த்தை ஆளவந்தாரின் திருவாய் மலர தாம் முதல்வன் என வைணவம் காத்து தரணியை ஆளும் ராமானுஜனே
    4.தன் குருவாகிய பெரிய நம்பியின் அன்பினை ஏற்ற சீடனும் நீயே தன் குருவும் தன் குருவாய் கண்ட தன்னிகரில்லா ராமானுஜனே
    5.திருக்கோட்டியூரின் நம்பியின் வாயால் திருமந்திரத்தின் பொருளை அறிந்து பெரு உலகத்தின் செவியில் உரைத்து பெருமை கண்ட ராமானுஜனே
    6.ஆண்டாண் அரையர் திருமலை நம்பி ஆசிரியர் குழு யாவும் உகந்து வேண்டிய ஞானம் யாவும் அளித்து வேண்டிய குருவே ராமானுஜனே
  1. அஞ்சலி செய்து அருகில் அழைத்து அன்புடன் எங்கள் துயர்கள் அழித்து அஞ்சேல் என்றே அபயம் அளிக்கும் அழகே யதியே வருக வருக!
  2. பரமபதத்தில் மாலவனுடனே பாக்கியம் கொண்டு நித்தமும் வாழ்வார் அமரர் அனைவரின் தலைவனும் ஆகிய அற்புத ராமானுஜனே வருக
    3.நரகம் அழுந்தா நற்கதி அருளும் நானிலமெங்கும் நன்மைகள் புரியும் உரமென அமையும் உயரிய அடிகள் உடையவன் நீயே வருக! வருக
    4.சடகோபனுக்கு முன்னே எழுந்த சத்திய உருவே ராமாநுஜனே கடலாம் பிறவியைக் கடந்து செல்ல கருணை காட்டிட வருக !வருக!
  3. தாமரை மலரால் தாங்கிய மார்பை தாங்கிய ஹரியை பாடிய முனியின் மாமலர் விந்தம் மாண்புடன் பணிந்த வடிவே ராமானுஜனே வருக
  4. காவிரி அழகன் நம்பெருமாளை கண்களில் வைத்து நெஞ்சில் நிறுத்தி பாவிரி கலியன் திருவடிபணியும் பரமா ராமானுஜனே வருக.

1.திசைகளில் ஒளிரும் கமலச்செங்கதிர் திரளும் அழகாய் திருவடி அழகும் இசைவுடன் அதிலே இணைந்து அமைந்த இனிமை கூட்டிடும் இடது கழலும்

  1. இடது துடை மேல் வளரும் விரியும் ஈடிணையில்லா வலமேற் கழலும் திடமெனஅழகை எல்லாம் சேர்த்த திவ்வியமான கணுக்கால் எழிலும்
  2. அதிசய ஒளி முகம் சுருளாய் இறங்கும் அழகைப் போலிரும் முழந்தாள்களும் புதிரென அமையும் திருத்தொடைகளும் பொன்னரை நாணைப் பூண்ட அழகும்
  3. அந்தி நிறத்தில் அமையும் ஆடையும் அஞ்சலி செய்யும் தடைக்கைகளும் உந்தி மலரும் உயரிய கரமும் உடன் இணைந்திடும் கணுக்கைகளும்
  4. தங்க வளையலை தாங்கிய அழகும் தானாய் மடிந்த முழங்கைகளும் அங்கம் விரிந்து நீண்டு அமைந்த அழகிய புஜங்கள் ஆடும் அழகும்
  5. பள பளவென்று பரவிய வகையில் பாரை மயக்கும் அழகிய மார்பும் வளமாய் பிரிந்த முந்நூல் அழகும் வளர்ந்து உயர்ந்த திண்தோள்களும்
  1. வலம்புரி சங்கின் சுழி போல் அமையும் வளப்பமான கழுத்தின் அழகும் உலகை மயக்கும் மந்திர முகமும் உரையை வழங்கும் திருப்பவளமும்
  2. மந்தஹாசமும் ஸ்படிக மயத்தில் மண்டலம் போன்றிரும் கபோலங்களும் செங்கணகத்தில் செழித்து வளர்ந்து செவிமெல் அமைந்த கர்ணபாசமும்
  3. கொடி மூக்கழகும் கோலத் தாமரை குடி கொண்டாலும் இரு நயனங்களும் வடிவில் வில்லாய் வண்ணம் காட்டும் வளைந்த வட்டத் திருப்புருவமும்
  4. சந்திர கிரணம் ஒன்று கலந்து சரியும் அழகாய் தாமரை நாமமும் இந்திரை மலராள் திருவடி போலே இலங்கி வரும் ஸ்ரீ சூர்ணமும்
  5. உயர்ந்து வளர்ந்த திருமுடி அழகும் உறைந்து தழைந்த திருக்கேசமும் நயந்து சுற்றிய நல்ல குழலினை நன்றாய் சுற்றிய சிகாபந்தமும்
  6. பின் எடுத்ததோர் பிடரியின் அழகும் பிரிந்து கூடிய முக்கோல் அழகும் கண்ணுடன் பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும்
  7. காணக் காண திகட்டிடாது கவினாய்த் தோன்றும் ராமாநுஜனே தேனாம் உன் அடி சரணம் அடைந்தோம் தினமும் எம்மை காத்தருள் என்றே
  1. பெரியோய் உந்தன் திருவடி நிலைகள் பெரிய மனதுடன் எங்களை காக்க ஹரியின் அணையாய் அமையும் வடிவே அடியார் கால்களை அன்புடன் காக்க
  2. பாஷ்யகாரரே உங்கள் பரிவு பாதநிலைகளை பதமாய் காக்க பரமபதத்தை அருளும் முனியே பணியும் இடையை பரிந்து காக்க
  3. வயிற்றுப் பகுதியை ராமானுஜனே வண்ணத் திருவருள் வலிந்து காக்க அயர்வே அறியா இளையாழ்வாரே அன்புடன் மார்பு பகுதியை காக்க
  4. எம்பெருமானார் என்றும் துறவே எங்கள் முதுகுப் பகுதியை காக்க உம்பர்கள் போற்றும் உபய வேதமே உன்னை காணும் கண்களை காக்க
  5. பூதப் புரியிலே வாழும் அரசே புகழை கேட்கும் செவிகளைக் காக்க யாதுமாகிய எதிராஜா நீ எங்கள் நாசியை என்றும் காக்க
  1. உன்னை காணும் வதனம் தன்னை உயர்வே யதீந்த்ர முனியே காக்க உன்னைப் பேசும் வாயை நாவை உணர்வே லக்ஷ்மண முனியே காக்க
  2. பொன்னடி வணங்கும் சென்னிப்பகுதியை பூமன்னு மார்பன்அடியே காக்க உன்னிரு கண்ணின் கடைவிழியாலே உள்ளப்பிணிகள் வராது காக்க
  3. அரவின் வடிவே விஷங்கள்எதுவும் அடியார் பக்கம் வராது காக்க வரமாய் அருளும் உனது கரங்கள் வாழ்வில் பிணிகள் வராது காக்க
  4. மஞ்சனம் ஆடும் மறைமாமுனியே மண்டிய தோஷம் அகற்றிக் காக்க தஞ்சமளிக்கும் ராமானுஜனே சாபம் விலக்கி சதிருடன் காக்க
  5. முப்புரி அணிந்த முக்கோல் முனியே முப்பொழுதும் எனை முனைந்து காக்க அப்பனுக்கு சங்காழி அளித்தாய் அல்லல் ஏதும் வராது காக்க
  6. காக்க கனிவுடன் காக்க காக்க காக்க காரேய் கருணை முனியே காக்க காக்க பூதூர் கோனே காக்க காக்க கமலப் பதத்தால் – கமல பதத்தால்
  7. வேண்டிய எம்மை ஆண்டருள் செய்வாய் வேதச் செறிவாய் யோகம் புரிவாய் நீண்ட கரத்தால் நாளும் அருள்வாய் நின் திருவடியால் ஞானம் தருவாய்
  8. ராமானுஜனே என்னாரமுதே ராமானுஜனே என் உறுதுணையே ராமானுஜனே என் மாநிதியே ராமானுஜனே என் பெருந்தகையே
  9. சரணம் சரணம் ராமானுஜனே சரணம் சரணம் உனது மலர்த்தாள்சரணம் சரணம் ஸ்ரீ எதிராஜா சரணம் ஸ்ரீபெரும்பூதூர் முனியே

———————

ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்

சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.

ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்

ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்

ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும்,

சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்

மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.

தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்

த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்

மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,

ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும்,

ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான

சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.

ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:

நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே

வாஸரேஸ்வர:

என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன்

காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே

ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.

க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:

ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே

ஸுரவந்தித:

என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட

ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.

ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:

பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:

என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும்.

மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு

உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும்.

அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.

ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே

ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:

யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ

அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்

ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:

ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி.

யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார்.

இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும்

சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி

மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:

சூர்ய மங்கள ஸ்லோகம் !

பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ

குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:

சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ

மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !

சூரிய பகவான் !

காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும்

வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

சூர்யன் த்யான ஸ்லோகம் !

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்

தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

சூரியன் காயத்ரி !

அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி

——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் கடிகை எம்பெருமானுடைய திரு மஞ்சனக் கட்டியம்–திரு அஷ்டோத்தர சத நாமாவளி-ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்-ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி-

December 5, 2024

நாயிந்தே நாயிந்தே
த்வம் மே அஹம் மே குதஸ் தஸ் ததபிகுத
இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சானாதி ஸித்தாத் அனுபவ விபவாத்
ஸோ அபி சாக்ரோஸ ஏவ
க்வாக்ரோஸ கஸ்ய கீதாதிஷு மம விதித
கோ அத்ர ஷாஷீ ஸூதீஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷ பாதீ ஸ இதி
ந்ரு கஹே ம்ருக்ய மத்யஸ்தவத்வம்

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானைக் கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

யஸ்மாதேதத் ஜகதுதயதே ரஷிதம் யேன பூயஸ்
யஸ்மின்நேதி ப்ரலய மகிலம் யன்மயம் யச்சரீரம்
யஸ் ஸர்வாத்மா மஹதி கடிகா பூதரே யோக பாஜாம்
ஸப்தர் ஷீணாம் நர ஹரி வபுஸ் ஸன்னி தாத்ஸோ அவ்தான்ந
ஸ்ரித கடிகாசல ஸ்ருங்கம் சீதல கருணா தரங்கிதா பாங்கம்
மனசி மமோல்லஸ தங்கம் வசதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்
பராக் பராக் ஸ்வாமீ பராக் பராக்
மா மலையாம் கடிகை மலை உச்சியின் மேல் மன்னு இந்து அமர்ந்த தேவா பராக் பராக்
ஸ்வாயம்புவ மன்வந்தர க்ருதயுக மூன்றாம் பாதத்தில் வைசாக சுக்ல பூர்ணிம பிருகுவாஸர ஸ்வாதி நக்ஷத்ர யுக்த ப்ராதஸ் சந்தியிலே இனிது அமர்ந்த தேவா பராக்
தேவாரி பஞ்சனான சிறிய திருவடிக்கு சங்கு சக்கரம் அளித்த தேவா பராக் பராக்

நீலாஞ்சனா த்ரி நிப முன்னதம் ஆயதாக்ஷம்
ஆஜானு ஜைத்ர புஜம் ஆயத கர்ண பாசம்
ஸ்ரீ வத்ஸ லக்ஷண முதார கபீர நாபிம்
பஸ்யேம தேவ சரதச் சத மீத்ருசம் த்வாம்

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று விகல்பிக்கலாம் படி இருக்கிற திரு அபிஷேகமும்
மாயன் குழல் என்னும்படியான திருக்குழலும்
வேரி மயிர் பொங்க என்னும்படியான அழகிய அடர்ந்த பிடரி மயிர்களும்
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழையாக யுடைய கொழுஞ்சோதி வட்டங்கள் என்னும்படியான அழகிய திரு முகமும்
மன்னு திரு நுதலில் சாத்தின முத்தின் திரு நாமமும்
நாச்சிமாருடைய ஹஸ்த ஆபரணங்களாலே முத்ரிதமாய் க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிதமான திருக்கழுத்தும்
கற்பகக் காவென நற் பணைத் தோள்களும்
வைத்தஞ்சல் என்ன அபய ப்ரத ஆஹ்வான ஹஸ்தங்களும்
பெரிய பிராட்டியாருக்குக் கோயில் கட்டணமாய் நித்ய அநுபவம் பண்ணச் செய்தேயும் இறையும் அகலகில்லேன் என்று அவனைப் பித்தேறிப்பித்துக்
குரு மா மணிப் பூண் குழலார் குலாவித் திரியும் திரு மார்பும்
மின்னு நூல் என்னும்படியான மின்னல் கொடி போல் இருக்கிற திரு யஜ்ஜோபவீதமும்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையும் உள்ளத்துள் நின்று உலாவுகின்றதே –என்கிறபடியே
நித்ய முக்தர் ஹ்ருதயங்களிலே அழகு செண்டேறுகிற திரு உதர பந்தமும்
ஸுந்தர்ய ராக ரஞ்சிதமான ஆகாசம் போல் திருவரை பூத்தால் போல் இருக்கிற அந்தி போல் நிறத்தாடையும்
அறச்சிவந்த ஆடையின் மேல் நெளிந்து கொண்டு நிகு நிகு என்னும் பொன்னரை நாணும்
ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத்தொடைகளும்
தாமரை நாளம் போலே கண்டகிதமான திருக் கணுக் கால்களும்
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாம் குச வஜ்ர லாஞ்சனமாய்
நாச்சிமார்களும் கூட கூசித்திட வேண்டும்படியாய்
தேனே மலரும் என்கிறபடியே நிரதிசய போக்யங்களான சேதனர் ஆஸ்ரயிக்கும்படியான
திருவடிகளை யுடையனான தேவரீர்

ஸூதா வல்லீ ஸமேதனாய்
திருமஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் இவ்வழகில்
ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக
பக்தோசிதனே

பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அளித்திட்ட வேர்வை யாறவோ
சினமேவும் அடலரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியானது அகல் மார்வம் கீண்ட வேர்வை யாறவோ
மாணுருவாய் மா வலியை மண் வேண்டி மூ வுலகும் மூ வடியால் அளந்திட்ட வேர்வை யாறவோ
கும்ப மிகு மதயானை மருப்பொசித்துக் குஞ்சி பிடித்தடித்த வேர்வை யாறவோ
வானோர்கள் தவப் பயனாய் வானோர் போற்று மா நகராம் கடிகை நகர் வந்துதித்த வேர்வை யாறவோ

வானவரும் மண்ணவரும் போற்றி செய்யும் அக்காரக் கனியே
தூதில் வாதுல குலம் துலங்கலந்த மஹா ஆச்சார்யராலே நித்ய உத்ஸவாதிகள் கண்டருளின பக்தோசிதனே
ஸர்வ ஜகத் ரூபியாய் எப்பொழுதும் தன் ஆராதனத்தை
ப்ருகு மரீச் யத்ரி கஸ்ய போக்தங்களாகிய வைகானஸ ஸூத்ரத்தினாலே செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
ஷோடஸ உபசாரம் கண்டு அருளின தேவரீர்
அண்டம் எங்கும் அகம் குளிரத் தொண்டர் மனம் வெவ்வளிடத் திருமஞ்சனம் கண்டருளவே
ஓம் ஜய விஜயீ பவ
ஸ்வாமீ எச்சரிக்கை

—————

திரு அஷ்டோத்தர சத நாமாவளி-

ஓம் ஹேம கோடி விமானஸ் தாய நம
ஓம் ஜானு ந்யஸ்த ப்ரகோஷ்டகாய நம
ஓம் சங்கு சக்ர தராய நம
ஓம் பீத வாஸோத் பாஸி கட தடாய நம
ஓம் யோகாஸநே ஸமா ஸீனாய நம

ஓம் கிரீடிநே நம
ஓம் அனா மயாய நம
ஓம் தூர்வா நீலோத் பல வன ஸ்யாமலாய நம
ஓம் கோமலா க்ருதயே நம
ஓம் ப்ரஸன்ன வதனாய நம

ஓம் லஷ்மீ பாஸி தோரஸ்காய நம
ஓம் உஜ்வலாய நம
ஓம் நதமர்த்ய ப்ரஸன்னார்த்தி ஹாரிணே நம
ஓம் வன மாலிநே நம
ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம

ஓம் சந்த்ர ஸூர்ய விலோசநாய நம
ஓம் ஸிம்ஹஸ் கந்தாய நம
ஓம் ஸிம்ஹ முகாய நம
ஓம் ப்ரஹ்லாத ப்ரிய காரிணே நம
ஓம் தான வேந்த்ர விபேத்ரே நம

ஓம் ஜகதாம் கர்த்ரே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் ப்ரேணத்ரே நம
ஓம் அநிந்திதாய நம

ஓம் தம்ஷ்ட்ரிணே நம
ஓம் கேஸரிணே நம
ஓம் நர கேஸரிணே நம
ஓம் விபவே நம
ஓம் ஸப்தரிஷி வந்திதாய நம

ஓம் பீமாய நம
ஓம் கதா தராய நம
ஓம் அதீஸ்வராய நம
ஓம் வ்யக்தனனாய நம
ஓம் மஹோரஸ்காய நம

ஓம் ஜீவாலாமாலா விபூஷணாய நம
ஓம் ஷட்கோண மத்ய நிலயாய நம
ஓம் உன்னதஸ்ருதயே நம
ஓம் உத்ததாய நம
ஓம் உதக்ர நாஸாய நம

ஓம் உச்சண்ட காலாய நம
ஓம் உத்தம மஸ்தகாய நம
ஓம் வாம தேவாதி ப்ரஹ்ம ரிஷி ஸேவிதாய நம
ஓம் சிவ ஸேவிதாய நம
ஓம் ஸர்வ காம ப்ரதாய நம

ஓம் வய க்யாத நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் புருஷோத்தமாய நம
ஓம் ஸிம்ஹ காமிநே நம
ஓம் ஈஸாநாய நம

ஓம் நிதயே நம
ஓம் அச்யுதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பிங்க லாஷாய நம
ஓம் ப்ருது க்ரீவாய நம

ஓம் விமலாய நம
ஓம் ஸ்தம்ப ஸம்பவாய நம
ஓம் முக்திதாய நம
ஓம் புகதிதாய நம
ஓம் சாந்தாய நம

ஓம் தாந்தாய நம
ஓம் ஆனந்த கந்த லாய நம
ஓம் மந்தார மாலாபரணாய நம
ஓம் அஷ்ட பாஹவே நம
ஓம் மஹா உதாராய நம

ஓம் ஸநகாதி நுதாய நம
ஓம் தேவராஜ பூஜிதாய நம
ஓம் ஈஸ்வராய நம
ஓம் ஸூர்ய கோடி ப்ரதீகாஸாய நம
ஓம் சந்த்ர கோடி சமத்யுதயே நம

ஓம் ஸ்ருங்க கோடி மஹா சைல வாஸிநே நம
ஓம் ஹ்ருதி வாஸிநே நம
ஓம் ஹநுமத் வந்திதாய நம
ஓம் லோக சங்கராய நம
ஓம் சங்கர ப்ரியாய நம

ஓம் பக்த அர்ச்சிதாய நம
ஓம் பக்தி தாயினே நம
ஓம் ஸூப தாயினே நம
ஓம் சடாலம் க்ருதாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் உக்ர சாஸநாய நம
ஓம் உத்ததாய நம
ஓம் விஸ்தீர்ண வதனாய நம
ஓம் தீன ரஷகாய நம
ஓம் ஸூர ரக்ஷகாய நம

ஓம் ஜபா குஸூம வர்ணா பாய நம
ஓம் ஹேம யஜ்ஜோப வீதினே நம
ஓம் த்ருத ஹேம கடீ ஸூத்ராய நம
ஓம் ஹேமாங்காய நம
ஓம் ஹேம குண்டலாய நம

ஓம் பரிஷ்க்ருத புஜாந்தராய நம
ஓம் ஹேம புஷ்ப மஹா மாலா நம
ஓம் மாலாபரணாய நம
ஓம் தைத்ய ராஜவஸா நம
ஓம் ந்ருணாம் சரணாய நம

ஓம் உத்தமாய நம
ஓம் அநுத்தமாய நம
ஓம் தேவாய நம
ஓம் ராஜா நம
ஓம் ஆஜாநு பாஹு காய நம

ஓம் ஜகதாம் போஷணாய நம
ஓம் பூத பாவனாய நம
ஓம் பத்ரி வாஹனாய நம
ஓம் வேதாந்த வேத்யாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் வைகானஸ ஸூ பூஜிதாய
ஓம் ஸம் ஸ்துதாய நம
ஓம் வாலகில்யாதி யோகீந்த்ர நம
ஓம் பரமார்த்தயா நம
ஓம் மஹாஷாய நம

ஓம் ஹிரண்யாக்ஷ சிஷகாய நம
ஓம் பக்த ரக்ஷகாய நம
ஓம் அபராஜிதாய நம
ஓம் அஷோப்யாய நம
ஓம் அநந்தாய நம

ஓம் பராய நம
ஓம் பரம் நம
ஓம் அநேக ரூபாய நம
ஓம் ஆதித்ய மண்டலஸ்த்தாய நம
ஓம் அக்ருத்ரிமாய நம

ஓம் ஹிரண்யாய நம
ஓம் ஹிரண்ய ஸ்மஸ்ருகாய நம
ஓம் ப்ரபவே நம

ஓம் கடிகாத்ரி யோக நரஸிம்ஹ ஸ்வாமினே நம

——————————-

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்

அதி பாடல வக்த்ராப்ஜம் த்ருத ஹேமாத்ரி விக்ரஹம்
ஆஞ்சநேயம் சங்க சக்ர பாணிம் சேதஸி தீமஹி –1-

பாரிஜாத ப்ரியோ யோகீ ஹநுமான் ந்ரு ஹரி ப்ரிய
ப்லவ கேந்த்ர பிங்கலாஷா சீக்ர காமீ த்ருட விரத –2-

சங்க சக்ர வரா பீதி பாணிர் ஆனந்த தாயக
ஸ்தாயீ விக்ரம ஸம்பந்நோ ராம தூதோ மஹா யஸா –3-

ஸுமித்ரிர் ஜீவனகர லங்கா விஷோபகாரக
உததிஹ் க்ரமணஸ் ஸீதா சோக நாசகரோ ஹரி –4-

பலீ ராஜஸ ஸம் ஹர்த்தா தச கண்ட மதாபஹா
புத்திமான் நைருதவதூ கண்ட ஸூத்ர விதாரக –5-

ஸூக்ரீவ ஸசிவோ பீம பீம சேன ஸஹோதர
ஸாவித்ரி வித்யா ஸம் ஸேவீ சரிதார்த்தோ மஹோதர –6-

வாஸவா பீஷ்டதோ பவ்ய ஹேம சைல நிவாஸவான்
கிம் சுகாபோ வ்யக்ர தநூ ருஜுரோமா மஹா மதி –7-

மஹா க்ரமோ வநஸர ஸ்திர புத்ர பீசுமான்
ஸிம்ஹிகா கர்ப நிர்பேத்தா பேத்தாலங்கா நிவாஸினாம் –8-

அஷக்ன ஸத்ரு நிக்னச்ச ரஷோ மாத்ய பயாவஹ
வீரஹா ம்ருது ஹஸ்தஸ்ச பத்ம பாணிர் ஜடாதர –9-

ஸர்வ ப்ரிய ஸர்வ காம பிரத ப்ராம்சு முகஸ் ஸூசி
விசுத்தாத்மா விஜ்வரஸ் ச ஸடாவான் பாடலாதர –10-

பரத ப்ரேம ஜனக சீர வாஸா மஹா க்ஷதக்
மஹாஸ்த்ர பந்தன ஸஹோ ப்ரஹ்மசாரீ வ்ரதேஸ்வர -11-

மஹா ஒவ்ஷத உப ஹர்த்தா ச வ்ருஷ பர்வா வ்ருஷோதர
ஸூர்யோ பலாளிதஸ் ஸ்வாமீ பாரிஜாதாவதம்ஸக –12-

ஸர்வ ப்ராண தரோ அநந்த ஸர்வ பூதாதி கோமனா
ரௌத்ரா க்ருதிர் பீம கர்மா பீமாஷோ பீம தர்சன –13-

ஸூதர்சன கரோ வ்யக்தஸ் வ்யாத்தாஸ்யோ துந்து பிஸ்வன
ஸூ வேல ஸாரீ மைநாக ஹர்ஷதோ ஹர்ஷண ப்ரிய –14-

ஸூலபஸ் ஸூவ்ரதோ யோகீ யோகி ஸேவ்யோ பயாபஹ
வாலாக்னிமதி தானே க லங்கா வாஸி க்ருஹோச்சயா –15-

வர்த்தனோ வர்த்த மானாச்ச ரோஸிஸ் நூ ரோமஸோ மஹான்
மஹா தம்ஷ்ட்ரோ மஹா ஸூரஸ் ஸத் கதிஸ் ஸத் பாராயண –16-

————–

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி

ஸ்ரீ பஞ்சமுகி  ஹனுமான் ஸ்துதி  என்பது ஐந்து வடிவங்களில் ஒவ்வொன்றையும் போற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரம் தொல்லைகளைப் போக்கவும் தீய சக்திகளை விலக்கவும் உதவுகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் கோஷமிடும் பக்தர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பூர்வ கபி முகே

ஸகல சத்ரு ஸம்ஹார்ணாய ஸ்வாஹா

எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பக்தர்களைக் காக்கும் அனுமனின் கிழக்கு முக வடிவம். அவர் மகிழ்ச்சியைத் தருகிறார், விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய தக்ஷிண முகே

கரால வதனாய நரசிம்ஹாய ஸகல பூத ப்ரேத பிரமதனாய ஸ்வாஹா

நரசிம்மரின் தெற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான பயங்களையும், பாவங்களையும், ஆவிகள் மற்றும் பேய்களின் சாதகமற்ற தாக்கங்களையும் நீக்கி, நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பஸ்சிம முகே

கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

கருடனின் மேற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான வியாதிகள், எதிர்மறைகள், சூனியம், விஷம் மற்றும் பயம் ஆகியவற்றை நீக்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உதர முகே

ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா

வராஹ பகவான் வடக்கு நோக்கிய வடிவம் அஷ்ட ஐஸ்வர்யத்தை (எட்டு விதமான செல்வங்களை) வழங்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய ஊர்த்வ முகே

ஹயக்ரீவாய ஸகல ஜந வஶீகரணாய ஸ்வாஹா ॥

ஹயக்ரீவரின் மேல்நோக்கிய வடிவம் பக்தர்களின் நல்லெண்ணத்தை ஈர்க்க உதவுகிறது. அவரது பக்தர்களின் வார்த்தைகள் உண்மையாக மாறுகின்றன. அவர் அவர்களுக்கு அறிவைத் தேடுவதில் முன்னேற்றம், நல்ல நண்பர்களின் சகவாசம், புத்திசாலித்தனம், நல்ல பிள்ளைகள் மற்றும் இரட்சிப்பை வழங்குகிறார்.

பஞ்சமுகி ஹனுமான் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தனது பக்தர்களை தீய சக்திகள், எதிரிகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. ஹனுமான் மிகவும் வலிமையான மற்றும் வலிமையான கடவுள்களில் ஒருவராக எளிதில் கருதப்படுகிறார், அதனால்தான் அவர் துன்பம் மற்றும் பிரச்சனையின் போது வணங்கப்படுகிறார். துன்பத்தில் இருக்கும் சீதாதேவியை அனுமன் காப்பாற்றுவது போல, வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் கடந்து செல்வதற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து தனது பக்தர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்

ஶ்ரீ ஸரயூ அஷ்டகம்

November 25, 2024

ஶ்ரீ சக்ரவர்தீ த³ஶரத² உவாச ।

நமஸ்தே ஸரயூ தே³வி வஸிஷ்ட² தநயே ஶுபே⁴ ।
ப்³ரஹ்மாதி³ ஸகலைர்தே³வைர்ரு’ஷிபி⁴ர்நாரதா³தி³பி:⁴ ॥ 1॥

ஸதா³ த்வம் ஸேவிதா தே³வி ததா² ஸுக்ரு’திபி⁴ர்நரை: ।
மாநஸாச்ச ஸமாயாதே ஜக³தாம் பாப ஹாரிணி ॥ 2॥

ஸ்மரதாம் பஶ்யதாம் தே³வி பாபநாஶே படீயஸி ।
யே பிப³ந்தி ஜலம் தே³வி த்வதீ³யம் க³தமத்ஸரா: ॥ 3॥

ஸ்தநபாநம் ந தே மாது: கரிஷ்யந்தி கதா³சந ।
மநு ப்ரப்⁴ரு’திபி⁴ர்மாந்யைமாநிதாஸி ஸதா³ ஶுபே⁴ ॥ 4॥

த்வத்தீர மரணேநைவ த்வந்நாம ரடநேந ச ।
யே த்யஜந்தி தநும் தே³வி தே க்ரு’தார்தா² ந ஸம்ஶய: ॥ 5॥

த்வம் து நேத்ரோத்³ப⁴வா தே³வி ஹரேர்நாராயணஸ்ய ஹி ।
மஹிமா தவ தே³வைஶ்ச கீ³யதே ச முஹுர்முஹு: ॥ 6॥

தத்ர கா ஹி மந: ஶக்தி: ஸ்தவநே மாநுஷஸ்ய ச ।
த்வத்தீரே ஸர்வ தீர்தா²நி நிவஸந்தி சதுர்யுகே³ ॥ 7॥

நமோ தே³வி நமோ தே³வி புநரேவ நமோ நம: ।
ஹே வாஸிஷ்டி² மஹாபா⁴கே³ ப்ரணதம் ரக்ஷ ப³ந்த⁴நாத் ॥ 8॥

இதி ஶ்ரீஸரயூ அஷ்டகம் ஸம்பூர்ணம் ।

————–

அயோத்தியின் அணிகலன் சரயு

சரயு நதிக்கரையிலேயே ஸ்ரீராமர் பிறந்தார். சரயுவில் நீராடியே வளர்ந்தார். சரயுவைக் கடந்தே கானகம் புகுந்தார். சரயுவில் கலந்தே வைகுந்தம் புகுந்தார் என ஸ்ரீராம காவியத்தின் சத்திய சாட்சியாக, அன்றும், இன்றும், என்றும் கம்பீரத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறாள் சரயு மாதா.

அசுரர்களின் இம்சைகளைத் தாங்க முடியாத தேவர்களும் ரிஷிகளும் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுகோள் வைத்தனர். துஷ்ட நிக்ரகம் செய்ய ராமாவதாரம் எடுக்க விரும்பிய ஸ்ரீமகாவிஷ்ணு வைகுந்தத்தின் ஒரு பகுதியையே அயோத்தியாக்கினார். அந்த அயோத்தியை மனு, சரயு நதியின் அருகே ஸ்தாபித்தார் என வரலாறு கூறுகிறது. திருமாலோடு மண்ணுலகில் சேர்ந்திருக்க விரும்பிய அவரின் தர்மபத்தினியான நீளாதேவியே சரயுவாகத் தோன்றி அயோத்திக்கு அருகே பிரவாகம் எடுத்தாள் என்கின்றன புராணங்கள். சரத்தைப் போல விரைந்து ஓடுபவள் என்பதால் சரயு என்றானாள்.

இன்றும் சுத்தமான குளிர்ந்த நதியாக ஓடும் சரயு அன்னையின் 14 படித்துறைகள் அயோத்தியில் முக்கியமானவை. அதில் குப்த்வார் காட், கைகேயி காட், கௌசல்யா காட், பாப விமோச்சன் காட், லக்ஷ்மண் காட் போன்றவை சில. ஸ்ரீராம நவமி நாளில் சரயுவில் நீராடினால் மோட்சம் உறுதி என்பது நம்பிக்கை. கங்கைக்கு ஆரத்தி எடுப்பதைப் போல சரயுவுக்கும் ஆரத்தி பூஜை அன்றாடம் நடைபெறுகிறது.

ராமாயணத்தின் தொடக்கம் சரயு நதிக்கரையில் இருந்தே தொடங்குகிறது. நடக்க முடியாத, பார்வை இழந்த பெற்றோர்களைத் தூக்கிச் சுமந்த சிரவணன், சரயுவில் குடுவை ஒன்றில் நீரை எடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ மிருகம் நீர் குடிக்கிறது என்று எண்ணிய தசரத மன்னர், சப்தம் வந்த திசை பார்த்து அம்பெறிய அது சிரவணனைக் கொன்றது. மகனை இழந்த பெற்றோர், தசரதனும் அவ்வாறே மகனைப் பிரிந்து புத்திர சோகத்தில் வாடவேண்டும் என்று சாபம் பெற்றார். ராம அவதாரத்தின் தொடக்கமாக இந்த நிகழ்வே அமைந்தது எனலாம். தசரதனின் அம்பு சிரவணனைக் கொன்ற பகுதி சர்வாரா என்றும், சிரவணன் பெற்றோரோடு வாழ்ந்த பகுதி சமதா என்றும் அயோத்தியிலேயே உள்ளது. இன்றும் சரயூவில் நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

அயோத்தி திரும்பிய ஸ்ரீராமர் தசரதருக்காகவும் சிரவணனுக்காகவும் சரயுவில் பித்ருக் கடன்களை செய்தார் எனவும் ராமாயண நூல்கள் கூறுகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தின் சர்முல் என்ற இடத்தில் சரயு அன்னை தோன்றுகிறாள். அவளே அயோத்தியை அழகுற வளர்க்கிறாள். அயோத்தி சென்று ராமநவமி நாளில் சரயுவில் நீராடினால் மோட்சம் பெறலாம் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.

சூரிய வம்ச அரசர்களுடைய வீரமும் துணிவையும் தாண்டி அவர்கள் நல்லொழுக்கதோடு இருப்பதைப்போல அலைபுரண்டு சரயு பாய்ந்தாலும் கரைக்குள் மட்டுமே அடங்கி ஓடுவாள். கோசலை நாட்டில் ஒவ்வொரு ஜீவனும் தழைத்து வளரப் பாலூட்டும் தாயின் தனங்களைப்போன்றது சரயு என்கிறார் கம்ப ராமாயணத்தில் கம்பர். சரயு நதிக்கரையில் அமர்ந்தே துளசி தாசர் ராமாயணம் எழுதினாராம். பல நூறு ரிஷிகளையும் மகான்களையும் தனது கரையில் அமர வைத்து ஞானமும் மோட்சமும் அளித்தவள் சரயு.

ராம அவதார நோக்கம் முடிவடைந்ததும் தம்பி இளைய பெருமாளைத் தொடர்ந்து ஸ்ரீராமர் மூழ்கி வைகுண்டம் அடைந்ததும் சரயு நதியில்தான் என்கிறது வால்மீகி ராமாயணமும் துளசி ராமாயணமும். அவரைத் தொடர்ந்து பரதன், சத்ருக்கனனும் சரயுவில் புகுந்தே சங்கு சக்கரமாக வைகுந்தம் புகுந்தார்கள் என்றும் காவியங்கள் கூறுகின்றன. அதேபோல லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவும் சரயுவில் மூழ்கி மோக்ஷம் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

சரயு நதிக்கரையிலேயே ஸ்ரீராமர் பிறந்தார். சரயுவில் நீராடியே வளர்ந்தார். சரயுவைக் கடந்தே கானகம் நுழைந்தார். சரயுவில் கலந்தே வைகுந்தம் புகுந்தார் என ஸ்ரீராம காவியத்தின் சத்திய சாட்சியாக, அன்றும், இன்றும், என்றும் கம்பீரத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறாள் சரயு மாதா. அவளைப் பணிந்து சகல பாவங்களும் நீங்கி உயர்ந்த வாழ்வைப் பெறுவோம்!

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ நாராயண ஸ்தோத்ரம்

November 25, 2024

நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே
ஜெய கோவிந்த ஹரே
நாராயண நாராயண ஜெய கோபால ஹரே
ஜெய கோபால ஹரே(1)

கோவிந்தன் எனப்படும் நம்மைக் காக்கும் கடவுளான ஹரி நாராயணனுக்கு வெற்றி கூறுவோம். கோபாலனாய் பசு’க்களாகிய நம்மைக் காத்து ரக்ஷிக்கும் ஹரி நாராயணனுக்கு வெற்றி

கருணாபாரவார வருணாலயகம்பீர
நாராயணா (2)

கநநீரதஸங்காச’ க்ருதகலிகல்மஷநாச’ந
நாராயணா (3)

கருணைக் கடலானவரும், நிறைந்த மேகக் கூட்டம் போன்றவரும், கலியின் தோஷங்களை நீக்குபவரும், நாராயணனே!

யமுநாதீரவிஹார த்ருதகௌஸ்துபமணி
ஹார நாராயணா (4)

யமுனா தீரத்தில் விளையாடி மகிழ்ந்தவரும்,
கௌஸ்துபமணியினை ஹாரமாய்த் தரித்தவரும் நாராயணனே!

பீதாம்பரபரிதாந ஸுரகல்யாண நிதான
நாராயணா (5)

பொன்னிற பட்டாலான பீதாம்பரம் அணிந்து, தேவர்களுக்கு அளப்பரிய நன்மைகளை அருள்பவர் நாராயணனே!

மஞ்ஜுலகுஞ்ஜாபூஷ மாயாமானுஷ வேஷ
நாராயணா (6)

குஞ்ஜ மணிகளாலான மாலையை அணிந்து, மானுட வேடம் தரித்து மாயையால் நம்மை ஆட்கொள்பவரும் நாராயணனே!

ராதாதரமதுரஸிக ரஜநீகரகுலதிலக
நாராயணா (7)

ராதையின் அருகாமையில் இதழினின்று தேனைச் சுவைத்து மகிழ்ந்திருப்பவரும், சந்திர வம்சத்தின் மணிமகுடமாய்த் திகழ்பவரும் நாராயணனே!

முரளீகானவிநோத வேதஸ்துதபூபாத
நாராயணா
பர்ஹிநிபர்ஹாபீடநடநாடக ஃபணிக்ரீட
நாராயணா (9)

குழலூதி மகிழ்ந்திருப்பவரும், நாராயணனே!
இவரின் திருவடிகளையே வேதங்கள் போற்றுகின்றன.

வாரிஜபூஷாபரண ராஜீவருக்மிணீரமண
நாராயணா (10)

பாரிஜாத மலர் மாலை அணிந்து, ருக்மிணியிடம் ரமித்திருப்பவரும் நாராயணனே!

ஜலருஹதளநிபநேத்ர ஜகதாரம்பகஸூத்ர
நாராயணா (11)

மயிற்பீலி அணிந்து, காளிங்கன் தலைமீது நர்த்தனம் ஆடியவரும் நாராயணனே!

பாதகரஜநீஸம்ஹார கருணாலய மாமுத்தர
நாராயணா (12)

தாமரை மலர்களால் ஆன மாலையை ஆபரணமாய் அணிந்து, தாமரை மலரில் உதித்த திருமகளுடன் மகிழ்ந்துறைபவரும் நாராயணனே!

பாப இருளை நீக்கி, கரைத்தேற்றுபவரும் நாராயணனே!

தாமரை மலர் போன்ற அழகிய விழிகளுடன், இவ்வுலகம் உருவாகக் காரணமாய் விளங்குபவரும் நாராயணனே!

அகபகஹயகம்ஸாரே கேச’வக்ருஷ்ண
முராரே நாராயணா (13)

அகன், பகன், மற்றும் கம்சனை, முரனை வதைத்த கேசவனும் நாராயணனே!

ஹாடகநிப பீதாம்பர அபயம் குரு மே மா
வர நாராயணா (14)

மஞ்சள் பட்டாலான பீதாம்பரமணிந்த லக்ஷ்மீ தேவியின் பர்த்தாவான நாராயணனே எம்மைக் காப்பாற்றும்!

தச’ரதராஜகுமார தானவமதஸம்ஹார
நாராயணா (15)

தசரதனின் மைந்தனும், அசுரர்களின் அஹங்காரத்தை அழித்தவரும் நாராயணனே!

கோவர்தனகிரி ரமண கோபீமானஸஹரண
நாராயணா (16)

கோவர்த்தனமலையைத் தாங்கி அருளியவரும், கோபிகைகளின் மனம் கவர்ந்தவரும் நாராயணனே!

ஸரயூதீரவிஹார ஸஜ்ஜநருஷிமந்தார
நாராயணா (17)

சரயூ நதி தீரத்தில் விளையாடி, கற்பக மரம் போல் வேண்டும் வரங்களை அருள்பவரும் நாராயணனே!

விச்’வாமித்ரமகத்ர விவிதவராநுசரித்ர
நாராயணா (18)

விச்வாமித்திரரின் யாகங்களைக் காத்து, பலவித அவதார வரலாற்றை உடையவரும் நாராயணனே!

த்வஜவஜ்ராங்குச’பாத தரணீஸுதஸஹ
மோத நாராயணா (19)

த்வஜ, வஜ்ர அங்குச பாச ரேகைகளைப் பாதங்களில் உடையவரும், பூமகளால் மகிழ்ந்திருப்பவரும் நாராயணனே!

ஜநகஸுதாப்ரதிபால ஜய ஜய ஸம்ஸ்ம்ருதி
லீல நாராயணா (20)

ஜனகரின் மகளை அடைய காத்திருந்தவரும், வாழ்க்கை நாடகங்களை ரசித்து மகிழ்பவரும் நாராயணனே! இவருக்கு வெற்றி கூறுவோம்!

தச’ரதவாக்த்ருதிபார தண்டகவனஸஞ்சார
நாராயணா (21)

தசரதனின் சொல்லுக்குப் பணிந்தவரும், தண்டகாரண்யத்தில் சஞ்சரித்தவரும் நாராயணனே!

முஷ்டிகசாணூரஸம்ஹார முனிமானஸ
விஹார நாராயணா (22)

முஷ்டிக, சாணூரர்களை வதைத்து, முனிவர்களின் மனத்தில் உறைந்திருப்பவரும் நாராயணனே!

வாலிவிநிக்ரஹசௌ’ர்ய வரஸுக்ரீவ –
ஹிதார்ய நாராயணா (23)

வாலியை வதைத்து, நல் சுக்ரீவனுக்கு அருளியவரும் நாராயணனே!

மாம்முரளீதர தீவர பாலய பாலய ஸ்ரீதர
நாராயணா (24)

வலிமை மிக்கவராய் குழலூதி மகிழும் லக்ஷ்மீ தேவியின் பதியே, நாராயணா! எம்மைக் காப்பாற்றும்!

ஜலநிதிபந்தந தீர ராவணகண்டவிதார
நாராயணா (25)

நதியின் மீது அழகிய பாலம் அமைத்து, ராவணனை ஸம்ஹரித்தவரும் நாராயணனே!

தாடீ மத தலநாட்ய நடகுணவிவித நாட்ய
நாராயணா (26)

தாடகையின் கர்வம் அழித்து, தேவர்களால் போற்றி பாடப்படுபவரும் நாராயணனே!

கௌதமபத்நீபூஜந கருணாகநாவலோகந
நாராயணா(27)

கௌதமரின் மனைவியான அகலிகையினால் பூஜிக்கப்படுபவரும், காருண்யமூர்த்தியும் நாராயணனே!

ஸம்ப்ரமஸீதாஹார ஸாகேதபுரவிஹார
நாராயணா (28)

சீதா தேவியின் மனம் கவர்ந்தவரும், அயோத்தியில் ஆட்சி புரிந்தவரும் நாராயணனே!

அசலோத்ருதசஞ்சத்கர பக்தாநுக்ரஹ
நாராயணா (29)

மலையையும் விரலால் தாங்கும் வலிமை கொண்டவரும், பக்தர்களுக்கு அருள்வதில் எப்பொழுதும் நாட்டம் கொண்டவரும் நாராயணனே!

நைகமகானவிநோத ரக்ஷ: ஸுதப்ரஹ்லாத
நாராயணா (30)

ஸாம கானத்தில் மகிழ்பவரும், அரக்கனின் மகனான ப்ரஹ்லாதனை காத்தவரும் நாராயணனே

பாரதீயதிவரச’ங்கர நாமாம்ருதமகிலாந்தர
நாராயணா

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம்

November 25, 2024

ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 ||

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கின்ற பெருமாளே! ஒளிரும் நிறம் கொண்ட அழகிய திருமேனி உடையவரே! ரிஷி, முனிவர்களை காத்து அருள்பவரே! உம்மை சரணாகதி அடைந்த பக்தர்களையும் காக்கின்ற அருள் வடிவானவர் நீர்தானே! இந்த வாழ்க்கை எனும் பெருங்கடலை கடக்க படகாக இருந்து பாதுகாப்பு தருமாறு அருள்புரிய வேண்டுகிறோம் நரசிம்மரே!! என் கைபிடித்து தூக்கிவிட்டு அருள்புரிய வேண்டும்

ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி
ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்த
லக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 2 ||

ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு
ஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்ய
த்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 3 ||

ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்ய
ப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 4 ||

ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்
ஸம்ப்ராப்ய துக்க சதஸர்ப்ப ஸமாகுலஸ்ய
தீநஸ்ய தேவ க்ருபணாபத மாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 5 ||

ஸம்ஸார பீகர கரீச கராபிகாத
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷஸ் ஸகலார்த்திநாச
ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 6 ||

ஸம்ஸார ஸர்ப்ப கநவக்த்ர பயோக்ர தீவ்ர
தம்ஷ்ட்ரா கராள விஷதக்த விநஷ்ட மூர்த்தே
நாகாரி வாஹந ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 7 ||

ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்தகர்ம
சாகா சதம் கரணபத்ர மநங்க புஷ்பம்
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 8 ||

ஸம்ஸார ஸாகர விசால கரால கால
நக்ர க்ரஹ க்ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யாக்ரஸ்ய ராக ரஸநோர்மி நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 9 ||

ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமாநம்
தீநம் விலோகய விபோ கருணாநிதே மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹார பராவதார
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 10 ||

ஸம்ஸாரகோர கஹநே சரதோ முராரே
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்திதஸ்ய
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 11 ||

பத்வா களே யமபடா பஹு தர்ஜயந்த :
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர் யுதம்ச மாம்
ஏகாகிநம் பரவசம் சகிதம் தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 12 ||

லக்ஷ்மீபதே கமலநாப ஸுரேச விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண மதுஸூதந புஷ்கராக்ஷ
ப்ராஹ்மண்ய கேச வஜநார்தந வாஸு தேவ
தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம் || 13 ||

ஏகேந சக்ர மபரேண கரேண சங்கம்
அந்யேந ஸிந்து தநயா மவலம்ப்ய திஷ்டந்
வாமேதரேண வரதாபய பத்ம சிஹ்ந
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 14 ||

அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதநஸ்ய
சோரை: ப்ரபோ பலிபி ரிந்த்ரிய நாமதேயை:
மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 15 ||

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ
பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 16 ||

லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண
யே தத் படந்தி மநுஜா ஹரிபக்தி யுக்தா:
தே யாந்தி தத்பத ஸரோஜ மகண்ட ரூபம் || 17 ||

நரசிம்ம காயத்ரி

வஜ்ர நகாய வித்மஹே, தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ம ப்ரசோதயாத்.

Srimat Payonidhi Nikethana Chakra Pane,
Bhogeendra Bhoga Mani Rajitha Punya Moorthe,
Yogeesa Saswatha Saranya Bhabdhi Potha,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 1

Oh Great God Lakshmi Nrsimha,
Who lives in the ocean of milk,
Who holds the holy wheel as weapon,
Who wears the gems of the head,
Of Adhisesha as ornaments,
Who has the form of good and holy deeds,
Who is the permanent protection of sages,
And who is the boat which helps us cross,
This ocean of misery called life,
Please give me the protection of your hands.

Brahmendra, Rudra Arka Kireeta Koti,
Sangattithangri Kamala Mala Kanthi Kantha,
Lakshmi Lasath Kucha Saroruha Raja Hamsa,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 2

Oh Great God Lakshmi Nrsimha,
Whose feet is touched by the crowns,
Of Brahma, Indra, Shiva and Sun,
Whose shining feet adds to his effulgence,
And who is the royal swan playing,
Near the breasts of Goddess Lakshmi,
Please give me the protection of your hands.

Samsara Gora Gahane Charathe Murare,
Marogra Bheekara Mruga Pravardhithasya,
Aarthasya Mathsara Nidha Chain Peedithasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 3

Oh Great God Lakshmi Narsimha,
Oh Lord who killed the Asura called Mura,
I have been traveling in the dark forests of day to day life,
Where I have been terrified by the lion called desire,
And scorched by the heat called competition, and so,
Please give me the protection of your hands.

Samsara Koopam Adhi Ghora Magadha Moolam,
Samprapya Dukha Satha Sarpa Samakulasya,
Dheenasya Deva Krupana Padamagadasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 4

Oh Great God Lakshmi Narasimha,
I have reached the very dangerous and deep,
Bottom of the well of day to day life,
And also being troubled by hundreds,
Of miseries which are like serpents,
And am really miserable and have,
Reached the state of wretchedness and so,
Please give me the protection of your hands.

Samsara Sagara Vishala Karala Kala,
Nakra Graham Grasana Nigraha Vigrahasya,
Vyagrasya Raga Rasanormini Peedithasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 5

Oh Great God Lakshmi Nrsimha,
I have reached this wide unfathomable ocean of day to day life,
And I have been caught by black deadly,
Crocodiles called time which are killing me
And I am also afflicted by waves of passion,
And attachments to pleasures like taste and so,
Please give me the protection of your hands.

Samasra Vrukshamagha Bheeja Manantha Karma,
Sakha Satham Karana Pathramananga Pushpam,
Aroohasya Dukha Phalitham Pathatho Dayalo,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 6

Oh Great God Lakshmi Nrsimha,
I have climbed the tree of worldly life,
Which grew from the seed of great sin,
Which has hundreds of branches of past karmas,
Which has leaves which are parts of my body,
Which has flowers which are the result of Venus,
And which has fruits called sorrow,
But I am falling down from it fast and so,
Please give me the protection of your hands.

Samsara Sarpa Ghana Vakthra Bhyogra Theevra,
Damshtra Karala Visha Daghdha Vinashta Murthe,
Naagari Vahana Sudhabhdhi Nivasa Soure,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 7

Oh Great God Lakshmi Nrsimha,
Oh, Lord who rides on the enemy of snakes,
Oh, Lord who lives in the ocean of nectar,
The serpent of family life has opened,
Its fearful mouth with very dangerous,
Fangs filled with terrible venom,
Which has destroyed me and so,
Please give me the protection of your hands.

Samsara Dava Dahanathura Bheekaroru,
Jwala Valee Birathi Dhighdha Nooruhasya,
Thwat Pada Padma Sarasi Saranagathasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 8

Oh Great God Lakshmi Nrsimha,
I have been scarred badly by the fire of daily life,
And even every single hair of my body,
Has been singed by its fearful flames,
And I have taken refuge in the lake of your lotus feet, and so,
Please give me the protection of your hands.

Samsara Jala Pathithasya Jagan Nivasa,
Sarvendriyartha Badisartha Jashopamasya,
Proth Ganditha Prachoora Thaluka Masthakasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 9

Oh Great God Lakshmi Nrsimha,
I have been caught in this net of daily life,
And all my organs are caught in that web,
And the five senses which is the hook,
Tears apart my head from me, and so,
Please give me the protection of your hands.

Samsara Bheekara Kareeendra Karabhigatha,
Nishpishta Marmma Vapusha Sakalarthi Nasa,
Prana Prayana Bhava Bhhethi Samakulasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 10

Oh Great God Lakshmi Nrsimha,
I have been struck by the fearful king of elephants,
Which is the worldly illusion, and my vital parts,
Have been completely crushed, and I suffer,
From thoughts of life and death, and so,
Please give me the protection of your hands.

Andhasya Me Viveka Maha Danasya,
Chorai Prabho Bhalibhi Rindriya Nama Deyai,
Mohanda Koopa Kuhare Vinipathathasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 11

Oh Great God Lakshmi Nrsimha,
I have become blind because, the sense of discrimination,
Has been stolen from me by the thieves of ‘senses’,
And I who am blind, have fallen in to the deep well of passion, and so,
Please give me the protection of your hands.


Baddhvaa Gale Yamabhataa Bahutarjayantah,
Karshhanti Yatra Bhavapaashashatairyutam Maam.
Ekaakinam Paravasham Chakitam Dayaalo
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 12

Oh Great God Lakshmi Nrsimha,
I have been tied by the soldiers of the God of death,
By numerous ropes of worldly attachments,
And they are dragging me along by the noose around the neck,
And I am alone, tired and afraid, and so Oh merciful one,
Please give me the protection of your hands.


Lakshmi Pathe Kamala Nabha Suresa Vishno,
Vaikunta Krishna Madhu Soodhana Vishwaroopa,
Brahmanya Kesava Janardhana Chakrapane,
Devesa Dehi Krupanasya Karavalambam 13

Oh King of Devas,
Who is the Lord of Lakshmi, who has a lotus on his belly,
Who is Vishnu, the lord of all heavenly beings, who is Vaikunta,
Who is Krishna , who is the slayer of Madhu,
Who is one with lotus eyes, Who is the knower of Brahman,
Who is Kesava, Janardhana, Vasudeva,
Please give me the protection of your hands.

Ekena Chakramaparena Karena Shamkha-
Manyena Sindhutanyaaamavalambya Tishhthan,
Vaame Karena Varadaabhayapadmachihnam,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 14

Oh Great God Lakshmi Nrsimha,
Who holds Sudarshana, the holy wheel in one hand,
Who holds the conch in the other hand,
Who embraces the daughter of ocean by one hand,
And the fourth hand signifies protection and boons, and so,
Please give me the protection of your hands.

Samsaara Saagara Nimajjana Muhyamaanam
Diinam Vilokaya Vibho Karunaanidhe Maam,
Prahlaada Kheda Parihaara Paraavataara
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 15

Oh Great God Lakshmi Nrsimha,
I am drowned in the ocean of day to day life,
Please protect this poor one, oh, Lord, Oh treasure of compassion,
Just as you took a form to remove the sorrows of Prahlada, and so,
Please give me the protection of your hands.

Prahlaada Naarada Paraashara Pundariika-
Vyaasaadi Bhaagavata Pungavah Rinnivaasa ,
Bhaktaanurakta Paripaalana Paarijaata,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 16

Oh Great God Lakshmi Nrsimha,
Who dwells in the hearts of great sages like Prahlada,
Narada, Parashara, Pundarika and Vyasa,
Who loves his devotees and is the wish giving tree,
That protects them, and so,
Please give me the protection of your hands.

Lakshminrisimha Charana Abja Madhuvratena
Stotram Kritam Shubhakaram Bhuvi Shankarena
Ye Tatpathanti Manujaa Haribhakti Yuktaa-
Ste Yaanti Tatpada Saroja Makhandaruupam 17

This prayer which blesses earth with good things,
Is composed by Sankara who is a bee,
Drinking deeply the honey from the lotus feet of Lakshmi Nrsimha,
And those humans who are blessed with devotion to Hari,
Will attain the lotus feet of the Brahman.

Sri Lakshmi Narsimha Padarpanamasthu

Dedicated to the feet of Lord Lakshmi Narsimha !!

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ பிராட்டியார் ஸமேத ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஶ்ரீஹயக்³ரீவஸ்தோத்ரம் – ஸம்ஸ்க்ரு’த வ்யாக்²யாநம்

November 25, 2024

ஶ்ரீமாந் வேங்கடநாதா²ர்ய: கவிதார்கிககேஸரீ ।
வேதா³ந்தாசார்யவர்யோ மே ஸந்நித⁴த்தாம் ஸதா³ ஹ்ரு’தி³ ॥

ஸ்வத:ஸித்³த⁴ம் ஶுத்³த⁴ஸ்ப²டிகமணிபூ⁴ப்⁴ரு’த்ப்ரதிப⁴டம்
ஸுதா⁴ஸத்⁴ரீசீபி:⁴ த்³யுதிபி⁴ரபதாபதிபு⁴வநம் ।
அநந்தை: த்ரய்யந்தைரநுவிதி³தஹேஷாஹலஹலம்
ஹதாஶேஷாவத்³யம் ஹயவத³நமீடீ³மஹி வஹ: ॥

————–
வ்யாக்²யாநம்
இந்தி³ராமந்தி³ரோரஸ்கமிந்தா³தி³ஸுரவந்தி³தம்வந்தா³ருப்³ரு’ந்த³மந்தா³ரம் வந்தே³ கோ³விந்த³பா³லகம் ॥ 1॥
கந்த³ர்பஸம்வராகாரம் ப்³ரு’ந்தா³வநவிபூ⁴ஷணம் ।
ஆநந்த³கந்த³ஜம் நந்த³நந்த³நம் வந்தி³ஷீமஹி ॥
ப்ரணிபத்ய கு³ரூத்தம்ஸம் ஶ்ரீமத்³வேதா³ந்ததே³ஶிகம் ।
ஹயக்³ரீவஸ்தவவ்யாக்²யாம் குர்வேऽஹம் தத்ப்ரஸாத³த: ॥

இஹ க²லு ஶ்ரீமாந் வேதா³ந்ததே³ஶிக:, ஸம்யகு³பாஸநவிஶேஷவஶீக்ரு’த
ஹ்ரு’த³ய புண்ட³ரீகமத்⁴யமண்ட³நாயித தாண்ட³வப்ரசண்ட³துரங்க³முக²
மார்தாண்ட³மண்ட³ல:, ஸகல பண்டி³தநிகுரும்ப³முக்தாதபத்ரிதகீர்திமண்ட³ல:,
ஸர்வதந்த்ரஸ்வதந்த்ர:, கவிதார்கிககேஸரீ, பரமகாருணிக:,ப⁴க³வத்மல்யாணகு³ணக³ணாநுஸந்
அநாதி³ஸம்ஸார ஸஞ்சிததௌ³ஷ்கர்ஶ்ய பாஶப³ந்தீ³க்ரு’த ப்ராணிப்³ரு’ந்த³ம்
ஸந்திதாரயிஷு:, ஶ்ரீஹயக்³ரீவமபி⁴ஷ்டோதும் ப்ரதிஜாநீதே (ஸ்வத) இதி ।
ஸ்வதஸ்ஸித்³த⁴ம் – ஸ்வப்ரகாஶம், நநு ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய பா⁴வார்த²விஹித
க்ரு’த்ப்ரத்யயாந்தத்வே ஸ்வத இதி பஞ்சம்யர்த²பூ⁴தஹேத்வர்த²விஹித தஸில்ப்ரத்யயஸ்யாநந்ஸ்யாத் – ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய ப்ரகாஶமாத்ரார்த²கத்வேந, ஸ்வஶப்³த³ஸ்யாபி
“ப்ரகாஶார்த²கத்வேந தஸி: பஞ்சம்யர்த²ஹேத்வர்த²கத்வேந ச ப்ரகாஶாதீ⁴நப்ரகாஶார்த²லாபா⁴த1

ப்ரக்ரு’தே ப்ரகாஶஸ்ய நித்யத்வேந ஸ்வாத்மாநம் ப்ரதி ஸ்வஸ்ய ஹேதுத்வாஸம்ப⁴வேந
ச தத³ஸம்ப⁴வாத், கர்த்ரர்த²விஹித க்ரு’தக்ரு’த்ப்ரத்யயாந்தத்வே பூர்வோக்தரீத்யா ।
ஸ்வாதீ⁴ந ப்ரகாஶவத்த்வமர்த²ஸ்ஸ்யாத்। ததா² ச ஸ்வஸ்யேவ ஸ்வப்ரகாஶஸ்யாபி
நித்யத்வேந பூர்வோக்த தூ³ஷணக்³ராஸாதி³தி சேத், மைவம்। உப⁴யதா⁴ऽபி
தோ³ஷாபா⁴வாத்। ததா²ஹி।ஆத்³யபக்ஷே-ப்ரகாஶஸ்ய ஸ்வாதீ⁴நத்வே தாத்பர்யாபா⁴வாத்।
அந்யாநதீ⁴நத்வே தாத்பர்யாத், த்³விதீயபக்ஷே- ஸ்வாதீ⁴நப்ரகாஶவத்த்வே
தாத்பர்யாபா⁴வாத், அந்யாநதீ⁴நப்ரகாஶவத்த்வே தாத்பர்யாத், உப⁴யதா²பி மணி
ப்ரகாஶமண்யாதி³ வ்யாவ்ரு’த்திஸித்³தே:⁴। ஸ்வத: – ஸ்வஸ்மாத், ஸித்³த⁴ம் – ஸித்³தி:⁴

  • ஜ்ஞாநம், ப்ரகாஶ ஸ்வரூபம்; ஸித்³த⁴ம் ஜ்ஞாதம் ப்ரகாஶிதம் வா; ஸ்வாதீ⁴ந
    ப்ரகாஶாபி⁴ந்நம் அந்யாதீ⁴ந ப்ரகாஶ ரஹிதம் வேத்யர்த:²। ஸார்வவிப⁴க்திகதஸில்
    ப்ரத்யயாந்தத்வே து ப்ரத²மார்த⁴ வர்ணநஸம்ப⁴வேந ஸ்வயம் ப்ரகாஶார்த²லாபா⁴ந்ந
    கோऽபி தோ³ஷக³ந்த:⁴। யத்³வா – ஸ்வத: – ஸ்வஸ்மாத், ஸித்³த⁴ம் – உத்பந்நம்,
    காரணாந்தராபாதி³தோத்பத்தி ஶூந்யமித்யர்த:²। நித்யமிதி யாவத்। அத²வா,
    நித்யத்வம் நாந்யாதீ⁴நமித்யாவா – (ஸ்வத) இதி। அநேந நித்யமுக்த தி³வ்யாவ்ரு’த்தி:,
    தேஷாம் ஸ்வரூப ஸ்வபா⁴வஸ்தி²திப்ரவ்ரு’த்தீநாம் ப⁴க³வதா³யத்தத்வாத்। நநு
    நித்யமுக்தஸ்வரூவ ஸ்வபா⁴வாதீ³நாமபி நித்யத்வாத்கத²ம் ப⁴க³தா³யத்தத்வமிதி
    சேந்ந, நித்யாநாமபி தத்³வதிரேக ப்ரஸஞ்ஜிதவ்யதிரேக ப்ரதியோகி³த்வரூப
    ப⁴க³வதா³யத்தத்வஸம்ப⁴வாத்। ததா² ச ஶ்ருதி:- “கோ ஹ்யேவாந்யாத்ம ப்ராண்யாத்,
    யதே³ஷ ஆகாஶ ஆநந்தோ³ ந ஸ்யாத்” இதி – பரமாணுக³தபாரிமாண்ட³ல்யஸ்ய
    நித்யத்வேऽப்யாஶ்ரயாதீ⁴நாவஸ்தா²யா ந்யாயவித்³பி⁴ரங்கீ³காராச்ச। நநு ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய
    நித்யபர்யாயத்வம் கத²மிதி சேது³ச்யதே – “ஸித்³தே³ ஶப்³தா³ர்த²ஸம்ப³ந்தே⁴”
    இத்யத்ர மஹாபா⁴ஷ்யே ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய நித்யபர்யாயத்வேந வ்யாக்²யாநாத்।
    ததா² ஹி। ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய க: பதா³ர்த:²? நித்யபர்யாயவாசீ ஸித்³த⁴ஶப்³த:³
    கத²ம் புந: ஜ்ஞாயதே? மத்கூட ஸ்தே²ஷ்வவிசாலிஷு பா⁴வேஷு வர்ததே
    தத்³வச்ச ஸித்³த⁴ம்। ஸித்³தா⁴ ப்ரு’தி²வீ, ஸித்³த⁴ மாகாஶ மித்யலம் ப³ஹுநா।
    (ஶுத்³த⁴ஸ்ப²டிகமணிபூ⁴ப்⁴ரு’த்ப்ரதிப⁴ட) மிதி। ஶுத்³த⁴ஸ்ய – நிர்மலஸ்ய,
    ஸ்ப²டிகமணிபூ⁴ப்⁴ரு’த: – ஸ்ப²டிகமயபர்வதஸ்ய, ப்ரதிப⁴டம் – ததோऽப்யதிஶயித
    காந்திமத்த்வேந தம் திரஸ்குர்வந்தமித்யர்த:² । ஸுதா⁴ஸத்⁴ரீசீபி:⁴ – அம்ரு’தஸஹசரீகி:²,
    த்³யுதிபி:⁴ – காந்திபி:⁴, (அபதாபத்ரிபு⁴வநம்) அபக³த: தாப: -ஆத்⁴யாத்மிகாதி⁴தை³விகாதி⁴பௌ⁴திஸமஸ்தது:³கா²த்மகஸ்தாபோ யஸ்மிந் தத்; த்ரயாணாம் பு⁴வநாநாம் ஸமாஹார
    ஸ்த்ரிபு⁴வநம், பாத்ராதி³த்வாந்ந ஜீப்। அபதாபம் த்ரிபு⁴வநம் யஸ்ய ததோ²க்த:;
    ஹயக்³ரீவகாந்தயஶ்சந்த்³ரமண்ட³லமத்⁴யவ்ரு’த்திஸுதா⁴ஸ ஹிதாஸ்ஸத்ய
    ஸ்த்ரிலோகீஸந்தாபஹாரிண்யோ ப⁴வந்தி। மண்ட³லஸ்த²ஸ்ஸுதா⁴ம்ஶோ: “பும்ஸாம்
    கர்மாநலார்தாநாம் பாபிநாம் க்லேஶஶாந்தயே, ஸ்வதே³தேந்து³ஸ்ஸமுத்³ரேண
    ஹ்லாத³யந்கோ³க³ணேநவே” த்யாதி³வசநாத்। அநந்தை:- நிரவதி⁴கை:,த்ரய்யந்தை: வேதா³ந்தை:, (அநுவிஹிதஹேஷாஹலஹலம்), அநுவிஹித: – அநுஸ்ரு’த:, ஹேஷா ஹேஷாப்⁴யோ ஹலஹல:, அஶ்வத்⁴வநிவிஶேஷோ யஸ்ய ததோ²க்தம்। யதோ²க்தம்
    பா⁴க³வதே த்³விதீய ஸ்கந்தே⁴ ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ – “வாசோ ப³பூ⁴வு ருஶதீ
    ஶ்வஸதோऽஸ்ய ந ஸ்த” இதி। “தஸ்ய ஹ வா தஸ்ய மஹதோ பூ⁴தஸ்ய நிஶ்வஸித
    மேதத்³ரு’க்³வேத³” இதி ஶ்ருதி:। (ஹதாஶேஷாவத்³யம்) ஹதாநி – பரிஹ்ரு’தாநி,
    அஶேஷாவத்³யாநி – நமஸ்ததோ³ஷா:, யேந தத்ததோ²க்தம்। ஆஶ்ரிதாநாமிதி ஶேஷ:।
    யத்³வா – ஆஶ்ரிதாபராதோ⁴பேக்ஷகத்வமத்ர விவக்ஷிம்। “ந ஸ்மரத்யபகாராணாம்
    ஶதமப்யாத்மவத்தயே” த்யுக்தே:।ஹதாநி- அத்யந்தாஸம்ஶ்லிஷ்டாநி, அஶேஷாவத்³யாநி
  • ஸமஸ்தஹேயாநி, யஸ்மிந் ததோ²க்தம்। நிகி²லஹேயப்ரத்யநீகத்வாத்தத்ர
    தோ³ஷா ந ஸம்ப⁴வந்தீதி பா⁴வ:। ததா² ச ஶ்ருதி: – “அபஹதபாப்மா விரஜோ
    விம்ரு’த்யுர்விஶோகோ விஜிக⁴த்ஸோऽபிபாஸஸ்ஸத்யகாமஸ்ஸத்யஸங்கல்ப”
    இதி। ஹயவத³நம் – ஹயஸ்ய வத³நமிவ வத³நம் யஸ்ய ததோ²க்தம், ஶாக
    பார்தி²வாதி³த்வாந்மத்⁴யமபத³லோபீ ஸமாஸ:। (மஹ) இதி। பரம் ப்³ரஹ்ம
    ஜ்யோதிஷா மபி ஜ்யோதிரயம் புருஷஸ்ஸ்வயஞ்ஜ்யோதி:। “தேஜஸ்தேஜஸ்விநாமஹ”
    மித்யாத்³யுக்தே:। ஈடீ³மஹி – ஸ்துவீமஹி। (ஈட³- ஸ்துதௌ லடா³த்மநேபத³ம்)
    நித்யத்வ- தேஜிஷ்ட²த்வ -ஸகலதோ³ஷாபஹாரித்வ- வேத³ப்ரவக்த்ரு’த்வநிர்தோ³ஷத்வாதி³கு³ணகம் ஶ்ரீஹயக்³ரீவம் ஸ்தும இத்யர்த:²। ஸ்வபா⁴வோக்திரலங்கார:।
    “ஸ்வபா⁴வோக்திரலங்காரோ யதா²வத்³வஸ்துவர்ணந” மிதிலக்ஷணாத்। அத்ர
    ஸ்வாதந்த்ர்யாபி⁴மாந நிவ்ரு’த்தயே கர்துரநுபாதா³நம் ।
  • ப்ராசீ ஸந்த்⁴யா காசித³ந்தர்நிஶாயா: ப்ரஜ்ஞாத்³ரு’ஷ்டே ரஞ்ஜநஶ்ரீ ரபூர்வா ।
    வக்த்ரீ வேதா³ந் பா⁴து மே வாஜிவக்த்ரா வாகீ³ஶாக்²யா வாஸுதே³வஸ்ய மூர்தி: ॥ 2॥

  • ப⁴க³வந்தம் ஸ்தோதும் ததா³விர்பா⁴வப்ரார்த²நயா தமபி⁴முகீ²கரோதி। ப்ராசீதி।
    வாஸுதே³வஸ்ய – “ஸர்வத்ராஸௌ ஸமஸ்தம் ச வஸத்யத்ரேதி வை யத:, தத
    ஸ்ஸ வாஸுதே³வேதி வித்³வத்³பி:⁴ பரிபட்²யத” இத்யாத்³யுக்தஸ்ய பரமாத்மந:,
    வாஜிவக்த்ரா -ஹயவத³நா, வாகீ³ஶாக்²யா – வாகீ³ஶேதி ஆக்²யா யஸ்யா
    ததோ²க்தா; வேதா³ந் -ரு’க்³யஜுஸ்ஸாமாத⁴ர்வணரூபாந், வக்த்ரீ – வ்யஞ்ஜயந்தீ,
    “ரு’சஸ்ஸாமாநி ஜஜ்ஞிரே ச²ந்தா³ங்க்³ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்” இதி, “ப்ரவக்தா
    ச²ண்ட³ஸாம் வக்தா பஞ்சராத்ரஸ்ய ய ஸ்ஸ்வய”மித்யாதி³வசநாத்। அத்ர
    “ந லோகாய நிஷ்டா²க²லர்த²த்ரு’ணா”மிதி ஷஷ்டீ²நிஷேத:⁴। அந்தர்நிஶாயா:
  • அஜ்ஞாநநிஶீதி²ந்யா:, காசித்-விலக்ஷணா ஸந்த்⁴யா, ப்ராசீ ஸந்த்⁴யா விபா⁴தஸந்த்⁴யா, அஜ்ஞாநாந்த⁴கார நிவர்திநீதி யாவத்। (ப்ரஜ்ஞாத்³ரு’ஷ்டே:)
    ப்ரஜ்ஞா – தத்த்வஹிதபுருஷார்த²விஷயிணீ தீ:⁴, ஸைவ, த்³ரு’ஷ்டி: – ஈக்ஷணம்,
    தஸ்யா:, அபூர்வா – ப்ரஸித்³தா⁴ விலக்ஷணா, அஞ்ஜநஶ்ரீ: – அஞ்ஜநஸம்பந்மூர்தி:,
    தநு: மே, பா⁴து – ஸ்பு²ரது, பா⁴ -தீ³ப்தௌ லோட்। தாத்³ரு’ஶமூர்திஸாக்ஷாத்காரே
    ஸ்வஸ்யாப்யஜ்ஞாநநிவ்ரு’த்திபூர்வக ஜ்ஞாநவ்ரு’த்³தி⁴ர்பூ⁴யாதி³த்யாஶய:। ரூபகாலங்கார:।
    “ஆரோப்யவிஷயஸ்ய ஸ்யாத³திரோஹிதரூபிண:, உபரஞ்ஜிதமாரோப்யமாணம்
    ததூ³ப்ரகம் மத” மிதி லக்ஷணாத் ।
  • ஜ்ஞாநாநந்த³மயம் தே³வம் நிர்மலஸ்ப²டிகாக்ரு’திம் ।
    ஆதா⁴ரம் ஸர்வவித்³யாநாம் ஹயக்³ரீவமுபாஸ்மஹே ॥ 3॥

  • பூர்வஸ்மிந் ஶ்லோகே ஹயமுக²ஸந்நிதா⁴நம் ப்ரார்தி²தம்। இதா³நீம் ஸந்நிஹிதம்
    ப⁴க³வந்தமுபாஸ்மஹ இத்யாஹ (ஜ்ஞாநாநந்தே³தி)। ஜ்ஞாநாநந்த³மயம் ஜ்ஞாநாநந்த³ப்ரசுரம்। “தத் ப்ரக்ரு’தவசநே மயடி³தி ப்ராசுர்யார்தே² மயட்। யத்³வா
  • ஜ்ஞாநாநந்த³மயம் – ஜ்ஞாநாநந்த³ஸ்வரூபம், “ஸ்வார்தே² மயட், ப்ராணமய
    இத்யாதி³வத்। “ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்³ரஹ்ம, கோ ஹ்யேவாந்யாத்க: ப்ராண்யாத்
    யதே³ஷ அகாஶ ஆநந்தோ³ ந ஸ்யா” தி³த்யுக்தே:। (நிர்மலஸ்ப²டிகாக்ரு’திம்)
    நிர்மல:- ஜாஜ்வல்யமாந:, ஸ்ப²டிக: – ஸ்ப²டிகமணி:, தஸ்யாக்ரு’திரிவாக்ரு’திர்யஸ்ய
    தம்; ஸர்வவித்³யாநாம் – ஸகலகலாநாம், ஆதா⁴ரம் – நிலயம், “ச²ந்தோ³மயோ
    மக²மயோऽகி²லதே³வதாத்மே” த்யுக்தே:। ஹயக்³ரீவம் தே³வமுபாஸ்மஹே த்⁴யாயாம:, “ஆஸ- உபவேஶநே” ।
  • விஶுத்³த⁴விஜ்ஞாந க⁴நஸ்வரூபம் விஜ்ஞாநவிஶ்ராணநப³த்³த⁴தீ³க்ஷம் ।
    த³யாநிதி⁴ம் தே³ஹப்⁴ரு’தாம் ஶரண்யம் தே³வம் ஹயக்³ரீவமஹம் ப்ரபத்³யே ॥ 4॥

  • கு³ருலகூ⁴பாயபூ⁴தயோர்ப⁴க்தி ப்ரபத்த்யோர்மத்⁴யே ப்ரசராமீத்யாஹ (விஶுத்³த⁴) மிதி।
    அஹம் – தா³ஸபூ⁴த:, த³யாயா: நிதி⁴ம் – அக்ஷயஸ்தா²நம், தம், அத ஏவ தே³ஹப்⁴ரு’தாம்
  • ப்ராணிநாம், ஶரண்யம் – ரக்ஷகம், (விஶுத்³த⁴விஜ்ஞாநக⁴நஸ்வரூபம்) விஶுத்³தே⁴ந
  • நிர்மலேந, விஜ்ஞாநேந, க⁴நம் – நிபி³ட³ம், அந்தர்ப³ஹிர்ஜ்ஞாநமயமித்யர்த:²।
    யத்³வா, விஜ்ஞாநரூபோ க⁴ந: -பிண்ட:³, தத்³ரூபமித்யர்த:²। “விஜ்ஞாநக⁴ந ஏவே”தி
    ஶ்ருதே:, ஸ்வரூபம் யஸ்ய, தம்। (விஜ்ஞாநவிஶ்ராணநப³த்³த⁴தீ³க்ஷம்) விஜ்ஞாநஸ்ய
  • ஜ்ஞாநயோக³ஸ்ய, விஶ்ராணநே – விதரணே, ப³த்³தா⁴ -த்⁴ரு’தா, தீ³க்ஷா ஸங்கல்ப:, யஸ்ய தம்। “தேஷாம் ஸததயுக்தாநாம் ப⁴ஜதாம் ப்ரீதிபூர்வகம், த³தா³மி
    பு³த்³தி⁴யோக³ம் தம் யேந மாமுபயாந்தி த” இத்யாதி³வசநாத்। ஹயக்³ரீவம்,
    ப்ரபத்³யே – ஶரணம் யாமி, “பத்³ல் -க³தௌ” லடா³த்மநேபத³ம்। ஜ்ஞாநஸ்வரூபஸ்ய
    ஜ்ஞாநப்ரத³ஸ்ய த³யாளோ: ஸர்வபூ⁴தஶரண்யஸ்ய ஶரணாக³தா அஸ்மத்ஸம்ரக்ஷணம்
    கியதி³தி பா⁴வ: ।
  • ஸமாஹாரஸ்ஸாம்நாம் ப்ரதிபத³ம்ரு’சாம் தா⁴ம யஜுஷாம்
    லய: ப்ரத்யூஹாநாம் லஹரிவிததிர்போ³த⁴ஜலதே:⁴ ।
    கதா²த்³ரு’ப்யத்கௌதஸ்குதகலஹ கோலாஹலப⁴வம்
    ஹரத்வந்தர்த்⁴வாந்தம் ஹயவத³நஹேஷாஹலஹல: ॥ 5॥

  • ப⁴க³வதி ஹயாஸ்யே ப⁴க்திப்ரபத்திரூபோபாயத்³வயம் விதா⁴ய,ஸம்ப்ரதி சிகீர்ஷிதஸ்தோத்ரபரிஸ
    ப்ரதிப³ந்த⁴காஜ்ஞாநாந்த⁴காரநிவ்ரு’த்திம் ஸர்வவிக்⁴நோபஶமாத்³த⁴யமுக²
    ஹேஷாரவஸகாஶாத் ஸ்வஸ்ய ப்ரார்த²யதே (ஸமாஹர) இதி। ஸாம்நாம் ஸாமஶாகா²நாம்,ஸமாஹார: -ஸங்கா⁴த:, தத்ஸ்வரூபமிதி யாவத்। “ப்ரணவோத்³கீ³த²வசஸ”
    இத்யுக்தே:। ரு’க்ஸாகா²நாம், ப்ரதிபத³ம்- தத³ர்த²போ³த⁴கபர்யாயபத³ம், யஜுஷாம் தைத்திரீயஶாகா²நாம், தா⁴ம – வாஸப்தா²நம், ப்ரத்யூஹாநாம் – வித்³யாப்ரதிப³ந்த⁴கவிக்⁴நாநாம்,லய: – த்⁴வம்ஸ:, போ³த⁴ஜலதே:⁴ – ஜ்ஞாநஸாக³ரஸ்ய, லஹரிவிததி: – தரங்க³பரம்வரா,(ஹயவத³நஹேஷாஹலஹல:) ஹயவத³நஸ்ய – ஹயக்³ரீவஸ்ய, ஹேஷாக்²யோ ஹலஹல: அஶ்வத்⁴வநி:, (கதா²த்³ரு’ப்யத்கௌதஸ்குதகலஹ கோலாஹலப⁴வம்) கதா²ஸு
  • வாத³கதா²ஸு, த்³ரு’ப்யந்த: கௌதஸ்குதா: – குத: குத இதி வாதி³ந:, ஸ
    “கஸ்காதி³த்வாத்ஸ:”, தேஷாம், கலஹகோலாஹலேந – அயதா²ர்த²வாத³கலஹேந,
    ப⁴வ: – ஜந்ய:, அந்தர்த்³வாந்தம், ஹரது – நிவர்தயது, “ஹ்ரு’ஞ்- ஹரணே”।
    ஹேஷாஹலஹலஸ்ய ஸமாஹாராத்³யபே⁴தோ³க்த்யா பே⁴த³ரூபகாலங்கார: ।
  • அபௌருஷேயை ரபி வாக்ப்ரபஞ்சை ரத்³யாபி தே பூ⁴திமத்³ரு’ஷ்டபாராம் ।
    ஸ்துவந்நஹம் முக்³த⁴ இதி த்வயைவ காருண்யதோ நாத² ! கடாக்ஷணீய: ॥ 6॥

  • ஸாக்ஷாத்க்ரு’தே ப⁴க³வதி விவித⁴ விசித்ராநந்தாஶ்சர்ய ஸநகஸநந்த³நாதி³
    த்⁴யாநாகோ³சர தி³வ்யஸ்வபா⁴வம் த்³ரு’ஷ்ட்வாऽஸ்ய ப⁴க³வத்³கு³ணாநுவர்ணநே
    ப்ரயத்ந: பரிஹஸாஸ்பத³ இத்யபி⁴ப்ரேத்யாஹ (அபௌருஷேயை ரிதி)। ஹே நாத² ஹே ஹயக்³ரீவ, அத்³யாபி – இதா³நீ மபி, அபௌருஷேயை: – நித்யை:, “அநாதி³நித⁴நா
    ஹ்யேஷா வாகு³த்ஸ்ரு’ஷ்டா ஸ்வயம்பு⁴வே” த்யாத்³யுக்தே:। வாக்ப்ரபஞ்சைரபி வேத³ஜாலைரபி, (அத்³ரு’ஷ்டபாராம்) அத்³ரு’ஷ்டம் – ப்ரதிபாத³நாவிஷயீபூ⁴தம், பாரம்அவதி:⁴, யஸ்யா ஸ்ஸா ததோ²க்தா “யதோ வாசோ நிவர்தந்தே, அப்ராப்ய மநஸா
    ஸஹே” தி ஶ்ருதே: । “நாந்தோऽஸ்தி ம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் பரந்தபே” த்யாதி³

    ஸ்ம்ரு’தேஶ்ச । பூ⁴திம் – கு³ணாத்³யைஶ்வர்யம், ஸ்துவந் – வர்ணயந், அஹம், முக்³த:⁴
  • பா³ல:, க்ரு’த்யஸாத்⁴யே யதமாந இதி யாவத்; இதி – ஹேதோ:, த்வயா, காருண்யத
    ஏவ – க்ரு’பாவஶாதே³வ, ந ஹ்யஸ்மதா³தி³ஷு கடாக்ஷநிமித்தம் கிஞ்சித³ஸ்தீதி
    பா⁴வ:। கடாக்ஷணீய: – பா³லேஷ்வகிஞ்சித்குர்வத்ஸ்வபி பரமகாருணிகஸ்ய பிது:
    கருணாகடாக்ஷ: ஸ்வாபா⁴விக இதி பா⁴வ: ।
  • தா³க்ஷிண்யரம்யா கி³ரிஶஸ்ய மூர்திர்தே³வீ ஸரோஜாஸநத⁴ர்மபத்நீ ।
    வ்யாஸாத³யோऽபி வ்யபதே³ஶ்யவாச ஸ்ஸ்பு²ரந்தி ஸர்வே தவ ஶக்திலேஶை: ॥ 7॥

  • லோகே யே வித்³யாதி³கா: தே ஸர்வேऽபி ப⁴வதீ³யஶக்த்யம்ஶை: ஸ்ப்ரு’ஶந்தீத்யாஹ
    (தா³க்ஷிண்யே) தி । ஹே நாத² – ஹே ஹயக்³ரீவ, கி³ரிஶஸ்ய – ருத்³ரஸ்ய,
    (தா³க்ஷிண்யரம்யா) தா³க்ஷிண்யீந – ஸுக²ப்ரியவசநாதி³நா, ரம்யா -மநோஹரா,
    யத்³வா, தா³க்ஷிண்யேந – வித்³யாப்ரதா³ந ஸாமர்த்²வேந, ரம்யா – மநோஜ்ஞா,
    மூர்தி:, ஸரோஜாஸநஸ்ய – சதுர்முக²ஸ்ய, த⁴ர்மபத்நீ – ஸஹத⁴ர்மசரீ, தே³வீ
  • ஸரஸ்வதீ, வ்யபதே³ஶ்யவாச: – ப்ரஸித்³த⁴ க்³ரந்த²கர்தாரோ வ்யாஸாத³ய:,
    வ்யாஸவால்மீகிஶுக பராஶராத³யோऽபி, ஸர்வே – பூர்வஸமுதி³தவ்யதிரிக்தா:, தவ
    ஶக்திலேஶை: – வித்³யாஶக்த்யம்ஶை:, ஸ்பு²ரந்தி – பா⁴ந்தி। “ந தத்ர ஸூர்யோ பா⁴தி
    ந சந்த்³ரதாரகம், நேமா வித்³யுதோ பா⁴ந்தி குதோऽயமக்³நி:, தமேவ பா⁴ந்த மநுபா⁴தி
    ஸர்வம் தஸ்ய பா⁴ஸா ஸர்வமித³ம் விபா⁴தீ” தி ஶ்ருதே:। “யத்³யத்³விபூ⁴திமத்ஸத்வம்
    ஶ்ரீமதூ³ர்ஜிதமேவ வா, தத்ததே³வாவக³ச்ச² த்வம் மம தேஜோऽம்ஶஸம்ப⁴வ” மிதி
    ஸ்ம்ரு’தேஶ்ச ।
  • மந்தோ³ ப⁴விஷ்யந்நியதம் விரிஞ்சோ வாசாம் நிதே⁴! வஞ்சிதபா⁴க³தே⁴ய: ।
    தை³த்யாபநீதாம் த³யயைவ பூ⁴யோऽப்யத்⁴யாபயிஷ்யோ நிக³மாந்நசேத்த்வம் ॥ 8॥

  • ப்³ரஹ்மாதீ³நாமபி ப்ரமாத³காலே த்வமேவ க³திரித்யாஹ (மந்த³) இதி। ஹே வாசாம்
    நிதே⁴ – வாகீ³ஶ, த்வம் – ப⁴வாந், (தை³த்யாபநீதாந்) தை³த்யேந – அஸுரேண,
    அபநீதாந் – அபஹ்ரு’தாந், நிக³மாந் – வேதா³ந், பூ⁴யோऽபி – புநரபி, த³யயா காருண்யேநைவ, நாத்⁴யாபயிஷ்யோ யதி³, விரிஞ்ச: – ப்³ரஹ்மா, வஞ்சிதபா⁴க³தே⁴ய:
  • ப்ரதாரிதபா⁴க்³யஸ்ஸந், மந்த:³ – ஜட:³, கார்யாகார்யவிவேகஶூந்ய:; அப⁴விஷ்யத்।
    ஹேதுஹேதுமதோர்ல்ரு’ஜ்। நியதம் – த்⁴ருவம்। “ஆபந்நாநாம் பரா க³தி” ரித்யுக்தரீத்யா
    ப்³ரஹ்மதீ³நாமப்யாபத்காலே த்வமேவ க³தி ரிதி பா⁴வ:। அத்ர மது⁴கைடபா⁴ப்⁴யாம்
    சதுர்முக²ம் ப்ரதார்ய வேதா³ அபஹ்ரு’தா:, தத: ப்ரபு³த்³தே⁴ந ப்³ரஹ்மணா ப⁴க³வாந்
    ப்ரஸாதி³த: மத்ஸ்யரூபேணாவதீர்ய, தௌ ஹத்வா வேதா³ந் ஸங்க்³ரு’ஹ்ய தா⁴த்ரே
    வ்யதரதி³தி பௌராணிகீ கதா²ऽநுஸந்தே⁴யா ।
  • விதர்கடோ³லாம் வ்யவதூ⁴ய ஸத்த்வே ப்³ரு’ஹஸ்பதிம் வர்தயஸே யதஸ்த்வம் ।
    தேநைவ தே³வ! த்ரித³ஶேஶ்வராணாமஸ்ப்ரு’ஷ்டடோ³லாயிதமாதி⁴ராஜ்யம் ॥ 9॥

  • இந்த்³ராதீ³நாமபி சாதி⁴காரஸ்ய ஸ்தி²ரீகரணம் த்வதா³யத்தமேவேத்யாஹ
    (விதர்கே) தி। ஹே தே³வ – ஹே ஹயக்³ரீவ, யத: – யஸ்மாத்³தே⁴தோ:, த்வம்,
    ப்³ரு’ஹஸ்பதிம் – தி⁴ஷணம், (விதர்கடோ³லாம்) விதர்கை: – து³ரூஹை:, டோ³லாம்
  • சித்தசஞ்சலதாம், ரஜஸ்தம:கார்யபூ⁴தாம்; தாம், வ்யவதூ⁴ய – நிவார்ய, ஸத்வே ஸத்வமார்கே³, வர்தயஸே – ப்ரதிஷ்டா²பயஸே, தேநைவ – த்ரித³ஶேஶ்வராணாம் இந்த்³ராதீ³நாம், ஆதி⁴பத்யம் – ஸ்வர்கா³தி⁴பத்யம், (அஸ்ப்ரு’ஷ்டடோ³லாயிதம்)
    அஸ்பஷ்டம் – அநதி⁴க³தம், டோ³லாயிதம் யேந தத்ததோ²க்தம், ஸ்தி²ரமிதி யாவத்।
    அபூ⁴தி³தி ஶேஷ: ப்³ரு’ஹஸ்பதி: தத்ப்ரத³ர்ஶித ஸந்மார்க³ நிஷ்ட²ஸ்ஸந் தேநைவ
    மார்கே³ண இந்த்³ராதீ³ந் வர்தயதே அந்யதா² அஸுரவம்ஶை: ஸுரவம்ஶோऽபி
    அலப்³த⁴ஶ்ரீராஜ்யகோஶ: க்ஷயம் யாதி³த்யாஶய:, ஸம்ஶயோ ஹி ஹேயகு³ண:।
    “அஜ்ஞஶ்சா ஶ்ரத்³த⁴தா⁴நஶ்ச ஸம்ஶயாத்மா விநஶ்யதி, நாயம் லோகோऽஸ்தி ந பரோ
    ந ஸுக²ம் ஸம்ஶயாத்மந:, யோக³ஸந்ந்யஸ்த கர்மாணம் ஜ்ஞாந ஸஞ்சி²ந்நஸம்ஶயம்,
    ஆத்மவந்தம் ந கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய” இத்யாதி³ ப⁴க³வது³க்தே: ।
  • அக்³நௌ ஸமித்³தா⁴ர்சிஷி ஸப்ததந்தோ ராதஸ்தி²வாந் மந்த்ரமயம் ஶரீரம் ।
    அக²ண்ட³ஸாரைர்ஹவிஷாம் ப்ரதா³நைராப்யாயநம் வ்யோமஸதா³ம் வித⁴த்ஸே ॥
    10॥

  • இந்தா³த்³ரீநாம் ஹவிர்பா⁴க³ப்ரதா³நமுகே²ந த்ரு’ப்திகரோऽபி ப⁴வாநேவேத்யாஹ(அக்³நா)விதி।ஹே தே³வ – ஹே ஹயக்³ரீவ, ஸப்ததந்தோ: ஸம்ப³ந்தி⁴நி, (ஸமித்³தா⁴ர்சிஷி)
    ஸமித்³தா⁴நி – ப்ரஜ்வலிதாநி, அர்சீம்ஷி – தேஜாம்ஸி, யஸ்ய தஸ்மிந்நக்³நௌ
    மந்த்ரமயம் – மந்த்ராத்மகம், ஶரீரம் – விக்³ரஹம், ஆதஸ்தி²வாந் – ஸம்ப்ராப்நுவந்
    ஸந்। “அஹம் க்ரது ரஹம் யஜ்ஞ ஸ்ஸ்வதா⁴ஹ மஹமௌஷத⁴ம், மந்த்ரோऽஹமஹமேவாஜ்ய
    மஹமக்³நி ரஹம்ஹுத” மித்யாத்³யுக்தே:, (அக²ண்ட³ஸாரை:) அக²ண்டா:³
  • அவிச்சி²ந்நா:, ஸாரா: – மாது⁴ர்யாதி³ரஸா:, யேஷு தை:; ஹவிஷாம் புரோடா³ஶாதி³ஹவிஷாம், ப்ரதா³நை: – விதரணை:, வ்யோமஸதா³ம் – இந்த்³ராதி³தே³வாநாம்,
    ஆப்யாயநம் – த்ரு’ப்திம், வித⁴த்ஸே – வித³தா⁴ஸி, “டு³- தா⁴ஞ்தா⁴ரணபோஷணயோ:”।
    “அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ ரேவ ச, ஸத்ரே மமாஸ ப⁴க³வாந்
    ஹயஶீர்ஷ ஏஷ:,
    ஸாக்ஷாத்ஸயஜ்ஞபுருஷஸ்தபநீயவர்ண:, ச²ந்தோ³மயஸ்ஸோऽகி²லதே³வதாத்மா
    வாசோ ப³பூ⁴வு ருஶதீஶ்ஶ்வஸதோऽஸ்ய நஸ்த” இத்யாதி³வசநாத் ।
  • யந்மூலமீத்³ரு’க்ப்ரதிபா⁴தி தத்த்வம் யா மூலமாம்நாயமஹாத்³ருமாணாம் ।
    தத்த்வேந ஜாநந்தி விஶுத்³த⁴ஸத்த்வா ஸ்தாமக்ஷராமக்ஷரமாத்ரு’காம் தே ॥ 11॥
  • ப்ரபஞ்சஸ்ய மூலகாரணமபி த்வமேவேத்யாஹ (யந்மூலமிதி)। ஹே தே³வ,
    (விஶுத்³த⁴ஸத்த்வா:) விஶுத்³த⁴ம் – நிர்மலம், ஸத்த்வம் – ஸத்த்வகு³ண:, யேஷாம்
    தே ததோ²க்தா:; ஈத்³ரு’க் – தே³வதிர்யங்மநுஷ்ய ஸ்தா²வராத்மநா அபா³தி⁴ தத்வேந
    ப்ரமாணஸித்³த⁴ம், தத்த்வம் – சதுர்விம்ஶதிமஹதா³தி³தத்த்வம், (யந்மூலம்) யத்
    மூலம் யஸ்ய ததோ²க்தம்; (ஆம்நாய மஹாத்³ருமாணாம்) ஆம்நாயா: – வேதா³
    ஏவ, மஹாத்³ருமா: – வ்ரு’க்ஷா:, தேஷாம், யா மூலம், தாம், அக்ஷராம்- நித்யாம்,
    அக்ஷரமாத்ரு’காம் – அகாராத்³யக்ஷரஸமஷ்டிம், தே – த்வத்ஸம்ப³ந்தி⁴நம், தத்த்வேந
  • யாதா²ர்த்²யேந, ஜாநந்தி- வித³ந்தி। “ஜ்ஞா – அவபோ³த⁴நே। “வேதே³ந ரூபே
    வ்யகரோத்ஸதா ஸதீ ப்ரஜாபதி:”, “வேத³ஶப்³தே³ப்⁴ய ஏவாதௌ³ தே³வாதீ³நாம் சகார
    ஸ:” இதி வேத³ஸ்ய ஜக³த்ஸ்ரு’ஷ்டி ஹேதுத்வாத்தந்மூலபூ⁴தாயா அக்ஷரமாத்ரு’காயா
    அபி த்வத³தீ⁴ந
    த்வாத்ஸாக்ஷாத்பரம்பரயா வா க்ரு’த்ஸ்நமபி ப்ரபஞ்சஜாதம் த்வத்த ஏவோத்பந்நமிதி
    பா⁴வ:। “யதோ வா இமாநி பூ⁴தாநி ஜாயந்தே”, “ததை³க்ஷத, ப³ஹுஸ்யாம்
    ப்ரஜாயேயேதி, தத்தேஜோऽஸ்ரு’ஜத”, “யந்மூலாஸ்ஸோம்யேமாஸ்ஸர்வா: ப்ரஜாஸ்ஸதா³யதநாஸ“ரு’சஸ்ஸாமாநி ஜஜ்ஞிரே ச²ந்தா³ங்க்³ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்”, “கார்யாணாம் காரணம்
    பூர்வ”மித்யாத்³யத்ராநு ஸந்தே⁴யம் ।
  • அவ்யாக்ரு’தாத்³வ்யாக்ரு’தவாநஸி த்வம் நாமாநி ரூபாணி ச யாநி பூர்வம் ।
    ஶம்ஸந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டா²ம் வாகீ³ஶ்வர! த்வாம் த்வது³பஜ்ஞவாச: ॥
    12॥

  • உத்பந்ந ப்ரபஞ்சஸ்ய பர்யவஸாந ஸ்தா²நமபி த்வமேவேத்யாஹ (அவ்யாக்ரு’தாதி³)தி।
    ஹே வாகீ³ஶ்வர, த்வம், அவ்யாக்ரு’தாத் – ப்ரதா⁴நாத், பூர்வம் – ப்ரத²மம், யாநி
    நாமாநி – வாசகாநி, ரூபாணி – ப்ரு’தி²வ்யாதி³ஸம்ஸ்தா²நாநி ச, வ்யாக்ரு’தவாந்
  • ப்ரணீதவாநஸி, “இமா ஸ்திஸ்ரோ தே³வதா: அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய
    நாமரூபே வ்யாகரவாணீ” தி ஶ்ருதே:। தேஷாம் – நாமரூபாணாம், சரமாம் ப்ரதிஷ்டா²ம்
  • பர்யவஸாநபூ⁴மிம், ப⁴வந்தம், (த்வது³பஜ்ஞ வாச:) த்வத் – தவ, உபஜ்ஞாநி த்வயா ஆதௌ³ த்³ரு’ஷ்டாநி, “உபஜ்ஞோऽபக்ரமம் “ததா³த்³யா சிக்²யாயா”மிதி
    நபும்ஸகத்வம்। தாநி, வாசஶ்ச ததோ²க்த:, வேதா³ இத்யர்த:²; ஶம்ஸந்தி – வத³ந்தி,
    “ஶம்ஸு – ஸ்துதௌ”। ஶரீரபூ⁴தாநாம் ப்ரு’தி²வ்யாநாம் ஶரீர்யாயத்தஸ்தி²தித்வாத்;
    நாம்நாம் வாசகாநாம் ப்ரகாரத்³வாரா ப்ரகாரிபர்யந்தவ்ரு’த்திகத்வாதி³தி
    பா⁴வ: “யஸ்ய ப்ரு’தி²வீ ஶரீரம் யஸ்யாபஶ்ஶரீரம் யஸ்ய தேஜஶ்ஶரீரம் யஸ்ய
    வாயுஶ்ஶரீரம் யஸ்யாகாஶஶ்ஶரீரம் யஸ்யாக்ஷரம் ஶரீர”மித்யாதி³ ஶ்ருதே:; “வசஸாம்
    வாச்யமுத்தம”மித்யாதி³ ஸ்ம்ரு’தேஶ்ச ।
  • முக்³தே⁴ந்து³நிஷ்யந்த³விலோப⁴நீயாம் மூர்திம் தவாநந்த³ஸுதா⁴ப்ரஸூதிம் ।
    விபஶ்சிதஶ்சேதஸி பா⁴வயந்தோ வேலாமுதா³ராமிவ து³க்³த⁴ஸிந்தோ:⁴ ॥ 13॥

  • யோகி³நோ மோக்ஷரூபப²லாவாப்தயே த்வாமேவ சிந்தயந்தீத்யாஹ (முக்³தே⁴)
    தி। ஹே வாகீ³ஶ்வர, தவ, (ஆநந்த³ஸுதா⁴ப்ரஸூதிம்) ஆநந்த³ ஏவ, ஸுதா⁴ அம்ரு’தம், தஸ்யா: ப்ரஸூதிர்ஜந்ம யஸ்யாஸ்தாம் ததோ²க்தாம்; “ரஸோ வை
    ஸ:, ரஸங்க்³ ஹ்யேவாயம் லப்³த்⁴வா நந்தீ³ ப⁴வதி, ஏஷ ஹ்யேவாநந்த³யாதி” இதி
    ஶ்ருதே: ।(முக்³தே⁴ந்து³நிஷ்யந்த³விலோப⁴நீயாம்) முக்³தே⁴ந்தோ:³, நிஷ்யந்த³வத் ப்ரவாஹவத், அபூ⁴தோபமா। விலோப⁴நீயாம் – ஸ்ப்ரு’ஹணீயாம், து³க்³த⁴ஸிந்தோ:⁴,
    உதா³ராம்- ஶ்ரேஷ்டா²ம், வேலாமிவ – ஸேதுமிவ ஸ்தி²தாம், மூர்திம் – விக்³ரஹம்,
    விபஶ்சித: – ஜ்ஞாநிந:, சேதஸி – ஹ்ரு’த³யே, பா⁴வயந்தி – பரிஶீலயந்தி, ஆநந்த³
    ஸுதா⁴கரத்வாதி³தர விஷயாந் பரிஹ்ரு’த்ய தத்ரைவ ரமந்த இத்யர்த:²।
    “மஹாத்மாநஸ்து மாம் பார்த² தை³வீம் ப்ரக்ரு’திமாஶ்ரிதா:, ப⁴ஜந்த்யநந்யமநஸோ
    ஜ்ஞாத்வா பூ⁴தாதி³மவ்யயம், ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஶ்ச த்³ரு’ட⁴ப்ரதா:,
    நமஸ்யந்தஶ்ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே, தத்ரைகாக்³ரம் மந: க்ரு’த்வா
    யதசித்தேந்த்³ரியக்ரிய:, “ரமந்தே யோகி³நோऽநந்தே நித்யாநந்தே³ சிதா³த்மநீ” த்யாதி³
    வசநாத்; தது³க்தம் ப⁴க³வதா -“அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே,
    தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹ” மிதி ।
  • மநோக³தம் பஶ்யதி ய ஸ்ஸதா³ த்வாம் மநீஷிணாம் மாநஸராஜஹம்ஸம் ।
    ஸ்வயம் புரோவாத³விவாத³பா⁴ஜ: கிங்குர்வதே தஸ்ய கி³ரோ யதா²ர்ஹம் ॥ 14॥

  • ஹயக்³ரீவமுபாஸீந: புமாந் ப்ரயத்நம் விநைவ வித்³யாம் லப⁴த இத்யாஹ (மநோக³த)
    மிதி। (மாநஸராஜஹம்ஸம்) மாநஸம் – மந ஏவ மாநஸம், மாநஸாக்²யஸர:;
    தத்ர, ராஜஹம்ஸம் – ராஜஹம்ஸவத்³விஹரணோத்ஸுகமித்யர்த:²; த்வாம்
    மநீஷிணாம் மத்⁴யேய: – புமாந், ஸதா³ – ஸர்வதே³ஶஸர்வகாலஸர்வாவஸ்தா²ஸு,
    “தஸ்மாத்ஸர்வேஷு மாமநுஸ்மர யுத்⁴ய ச”, “யந்முஹூர்தம் க்ஷணம் வாபி
    வாஸுதே³வோ ந சிந்த்யதே, ஸா ஹநிஸ்தந்மஹச்சி²த்³ரம் ஸா ப்⁴ராந்தி ஸ்ஸா ச
    விக்ரியே” த்யாத்³யுக்தை:; மநோக³தம் – ஹ்ரு’த³யஸ்த²ம், பஶ்யதி – ஸாக்ஷாத்கரோதி,
    மநஸா சிந்தயதீத்யர்த:²। தஸ்ய – ஜநஸ்ய, கி³ர: – வாச:, ஸ்வயம் – யத்நம் விநைவ,
    (புரோவாத³ விவாத³பா⁴ஜ:) புரோவாதே³ – ப்ராத²மிகோபஸ்தி²தௌ, விவாத³ம் அந்யோந்யகலஹம், பா⁴ஜ: – ப⁴ஜந்த:, அஹமஹமிகயா ப்ரத²மம் ஸ்பு²ரந்த இத்யர்த:²;
    தாஸ்ஸத்ய:, யதா²ர்ஹம் – யதா²யோக்³யம், கிங்குர்வதே – கிங்கரத்வம் ப⁴ஜந்தே,
    “டு³க்ரு’ஞ் – கரணே” ।
  • அபி க்ஷணார்த²ம் கலயந்தி யே த்வாமாப்லாவயந்தம் விஶதை³ர்மயூகை:² ।
    வாசாம் ப்ரவாஹைரநிவாரிதை ஸ்தே மந்தா³கிநீம் மந்த³யிதும் க்ஷமம் தே ॥ 15॥

  • ந கேவலம் த்வாமுபாஸீநஸ்ய வித்³யாப²லமாத்ரமபி த்வதிவாசாலகத்வமபீத்யாஹ
    (அபீ) தி। ஹே வாகீ³ஶ, விஶதை:³ – ஸ்வச்சை:² மயூகை:² – கிரணை:, ஆப்லாவயந்தம்
  • ஹ்லாத³யந்தம், ஸேவகாநிதி ஶேஷ:। த்வாம், யே – ப⁴க்தா:, க்ஷணார்த²மபி
  • ஸூக்ஷ்மகாலமபி, கலயந்தி – த்⁴யாயந்தி, தே – ப⁴க்தா:, அநிவாரிதை: ப்ரதிவாதி³பி⁴ர்நிரோத்³து⁴மஶக்யை:, வாசாம் – கி³ராம், ப்ரவாஹை: – பரம்பராபி:⁴,
    மந்தா³கிநீம் – க³ங்கா³ம், மந்த³யிதும் – அல்பவேகா³ம் கர்தும்,க்ஷமந்தே – ஶக்நுவந்தி,
    தேஷாம் வாக்³வேகோ³ க³ங்கா³ ப்ரவாஹவேகா³த³ப்யதிஶயிதஸ்ஸ்யாதி³தி பா⁴வ: ।
  • ஸ்வாமிந்! ப⁴வத்³யோக³ஸுதா⁴பி⁴ஷேகாத்³வஹந்தி த⁴ந்யா: புலகாநுப³ந்த⁴ம் ।
    அலக்ஷிதே க்வாபி நிரூட⁴மூலமங்கே³ஷ்விவாநந்த³து⁴மங்குரந்தம் ॥ 16॥

  • த⁴ந்யாநாமேவ த்வயி லாப⁴ இத்யாஹ (ஸ்வாமிந்நி) தி। ஹே ஸ்வாமிந்
  • வாகீ³ஶ, (ப⁴வத்³யோக³ ஸுதா⁴பி⁴ஷேகாத்) ப⁴வதஸ்ஸம்ப³ந்தீ⁴ யோக:³ ப⁴க்தியோக:³, ஸ ஏவ ஸுதா⁴, தயா, அபி⁴ஷேக: – ஸ்நபநம், தஸ்மாதி³த்யர்த:²;
    அலக்ஷிதே – அத்³ரு’ஷ்டே, க்வாபி – க்வசித்ப்ரதே³ஶேऽபி, “யோகீ³ யுஞ்ஜீத
    ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தி²த:, ஏகாகீ யதசித்தாத்மா நிராஶீரபரிக்³ரஹ:,
    ஶுசௌ தே³ஶே ப்ரதிஷ்டா²ப்ய ஸ்தி²ரமாஸநமாத்மந:, நாத்யுச்ச்²ரித்ரம் நாதிநீசம்
    சேலாஜிநகுஶோத்தர”மித்யாத்³யுக்தே:; (நிரூட⁴மூலம்) நிரூட⁴ம் – த்³ரு’ட⁴தரம், மூலம்
    யஸ்ய தம்; அங்கே³ஷு – அவயவேஷு, அங்குரந்தம் – உத்³யந்தம், அநந்த³து⁴மிவ
    ஸ்தி²தம் – ஆநந்த³ மிவ ஸ்தி²தம், “ஸ்யாதா³நந்த³ து⁴ ராநந்த³” இத்யமர:।
    புலகாநுப³ந்த⁴ம் – ரோமாஞ்சம், த⁴ந்யா: – பா⁴க்³யவந்த:, வஹந்தி – ப்ராப்நுவந்தி।
    “வஹ – ப்ராபணே”। உபமாலங்கார: ।
  • ஸ்வாமிந்! ப்ரதீசா ஹ்ரு’த³யேந த⁴ந்யாஸ்த்வத்³த்⁴யாந சந்த்³ரோத³யவர்த⁴மாநம் ।
    அமாந்தமாநந்த³பயோதி⁴மந்த: பயோபி⁴ரக்ஷாம் பரிவாஹயந்தி ॥ 17॥

  • த்வாம் சிந்தயந் பரமாநந்த³மநுப⁴வதீத்யாஹ (ஸ்வாமி) ந்நிதி। ஹே ஸ்வாமிந் ஹயக்³ரீவ, த⁴ந்யா: – பா⁴க்³யவந்த:, ப்ரதீசா “அப்⁴யாஸயோக³யுக்தேந சேதஸா
    நாந்யகா³மிநே” த்யுக்தரீத்யா அந்தர்முகே²ந, ஹ்ரு’த³யேந – மநஸா, த்வத்³த்⁴யாநம்
    சந்த்³ரோத³ய:, தேந வர்த⁴மாநம் -ஜ்ரு’ம்ப⁴மாணம், அத ஏவ, அந்தர்ஹ்ரு’த³யே,
    அமாந்தம் – அபர்யாப்தம், உத்³வேலமிதி யாவத்; ஆநந்த³பயோதி⁴ம் – ஸுதா⁴ப்³தி⁴ம்,
    அக்ஷாம் பயோபி:⁴ – ஆநந்த³பா³ஷ்பை:, பரிவாஹயந்தி – ப்ரஸ்ரவந்தி ।
  • ஸ்வைராநுபா⁴வத்வத³தீ⁴நபா⁴வாஸ்ஸம்ரப்³த⁴வீர்யாம் த்வத³நுக்³ரஹேண ॥
    விபஶ்சிதோ நாத²! தரந்தி மாயாம் வைஹாரிகீம் மோஹநபிஞ்சி²காம் தே ॥ 18॥

  • ப⁴வத்³யோகி³ந: த்வத்கடாக்ஷேணைவ மாயாம் தரந்தீத்யாஹ (ஸ்வைராநுபா⁴வே) தி
    ஹே நாத² – ஹே ஹயக்³ரீவ, (ஸ்வைராநுபா⁴வத்³வத³தீ⁴நபா⁴வா:) ஸைராநுபா⁴வஸ்ய ஸ்வேச்சா²விஹாரஸ்ய, த்வத், தவ, அதீ⁴நம் – வஶம்வத:³, பா⁴வ: – அபி⁴ப்ராய: யேஷாம்
    தே ததோ²க்தா:; விபஶ்சித: – ஜ்ஞாநிந:, த்வத³நுக்³ரஹேண – த்வத்ஸங்கல்பேந,
    ஸம்ருத்³த⁴வீர்யாம் – நிருத்³த⁴ஶக்திம், வைஹாரிகீம் – லீலோபகரணபூ⁴தாம்,
    மோஹநபிஞ்சி²காம் – ஸகலலோகவ்யாமோஹநகரீம் மயூராதி³ பிஞ்ச²பூ⁴தாம்। லோகே
    இந்த்³ரஜாலிகவித்³யாவதாம் விவித⁴விசித்ராநந்தாஶ்சர்யகரகார்யஜநந ஸமர்த:²
    கஶ்சந பிஞ்ச²விஶேஷ: ப்ரஸித்³த:⁴। “மயாம் து ப்ரக்ரு’திம் வித்³யாந்மாயிநம்
    து மஹேஶ்வர” மித்யாத்³யுக்தே:; த்வத³நுக்³ரஹேண – த்வத்ப்ரஸாதே³ந, தரந்தி அதிக்ராமந்தி ।
  • ப்ராங்நிர்மிதாநாம் தபஸாம் விபாகாத்ப்ரத்யக்³ர நி:ஶ்ரேயஸ ஸம்பதோ³ மே ।
    ஸமேதி⁴ஷீரந் தவ பாத³பத்³மே ஸங்கல்பசிந்தாமணய: ப்ரணாமா: ॥ 19॥

  • ஜந்மாந்தர க்ரு’த தபஶ்ஶாலிநாம் மாயாதரணே த்வத்பாதா³ரவிந்த³ ப்ரணமநமேவ
    ஶரணமித்யாஹ (ப்ராகி³)தி। ஹே நாத²- ஹே ஹயக்³ரீவ, (ப்ரத்யக்³ரநி:ஶ்ரேயஸஸம்பத:³)
    ப்ரத்யக்³ரா – நூதநா, நிஶ்ரேயஸஸம்பத் யேஷு ததோ²க்தா:; (ப்ராங்நிர்மிதாநாம்)
    ப்ராக் – பூர்வஜந்மநி, நிர்மிதாநாம் – க்ரு’தாநாம், தபஸாம், விபாகா: – பரிபாகபூ⁴தா:,
    (ஸங்கல்பசிந்தாமணய:) ஸங்கல்பஸ்ய – இச்சா²யா:, சிந்தாமணய:, ப்ரணாமா:,
    தவ – ப⁴வத:, பாத³பத்³மே – பாதா³ரவிந்தே³, ஸமேதி⁴ஷீரந் – ஸமபி⁴வ்ரு’த்³தா⁴
    பூ⁴யாஸுரித்யர்த:², “ஏத⁴-வ்ரு’த்³தௌ⁴”। “ஹரத்யக⁴ம் ஸம்ப்ரதி ஹேதுரேஷ்யதஶ்ஶுப⁴ஸ்ய
    பூர்வாசரிதை: க்ரு’தம் ஶுபை:⁴, ஶரீரபா⁴ஜாம் ப⁴வதீ³யத³ர்ஶநம் வ்யநக்தி
    காலத்ரிதயேऽபி யோக்³யதா” மித்யுக்தரீத்யா பூ⁴தப⁴விஷ்யத்³வர்தமாநகாலேஷு
    ப⁴வதீ³ய பாதா³ரவிந்த³ஸேவா யஶஸ்கரீதி பா⁴வ: ।
  • விலுப்தமூர்த⁴ந்யலிபிக்ரமாணாம் பூ⁴யாந் ப்ரஸாதோ³ மயி நாத² பூ⁴யாத் ।
    த்வத³ங்க்⁴ரிராஜீவ ரஜ:கணாநாம் ஸுரேந்த்³ரசூடா³பத³ லாலிதாநாம் ॥ 20॥

  • பூர்வஸ்மிந்ஶ்லோகே ப்ரணாமாதிவ்ரு’த்³தி:⁴ ப்ரார்தி²தா; இதா³நீம் பாதா³ரவிந்த³
    ப்ரணாமாநந்தரம் பாத³ரஜஸாம் ப்ரஸாத:³ ப்ரார்த்²யதே (விலுப்தை)ரிதி। ஹே நாத² ஹே ஹயக்³ரீவ, (விலுப்தமூர்த⁴ந்யலிபிக்ரமாணாம்) விலுப்த: – ப்ரம்ரு’ஷ்ட:, மூர்த⁴ந்ய: மூரி ஜாத:, (ஶரீராவயவாத்³யத்) லிபீநாம் – அக்ஷராணாம், க்ரம: – பங்த்கி:, யேஷாம் தே
    ததோ²க்தா:; “பரிஸரவிநதாநாம் மூர்த்⁴நி து³ர்வர்ணபங்த்கிம் பரிணமயஸி ஶௌரே:
    பாது³கே த்வம் ஸுவர்ணம்” – “அயம் த³ரித்³ரோ ப⁴விதேதி வைத⁴ஸீம் லிபிம்
    லலாடேऽர்தி²ஜநஸ்ய ஜாக்³ரத்ரீம், ம்ரு’ஷா ந சக்ரேऽல்பிதகல்பபாத³ப: ப்ரணீய
    தா³ரித்³யத³ரித்³ரதாம் நள:” இத்யுக்தரீத்யா (ப்³ரஹ்மணா தத்கர்மாநுகு³ண்யேந
    லிகீ²தாம் தா³ரித்³யாத்³ரிஸூசக லலாடலிபிம் ஸ்வயமதிஶய ப்ரதா³நேநாந்யதா²
    நயதீத்யர்த:²; அத ஏவ, (ஸுரேந்த்³ரசூடா³பத³ லாலிதாநாம்) ஸுரேந்த்³ரை:
    ப்³ரஹ்மாதி³பி:⁴, சூடா³பதை:³- மௌளிபி:⁴, லாலிதாநாம் – ஶ்லாகி⁴தாநாம்,
    த்வத்பாதா³ரவிந்த³ப்ரணதிகாலே விரோபூ⁴ஷணத்வேந உஹ்யமாநாநாமித்யர்த:²;
    (த்வத³ங்க்⁴ரிராஜீவ ரஜ:கணாநாம்) த்வத் – தவ, அங்க்⁴ரிராஜீவஸ்ய – பாதா³ரவிந்த³ஸ்ய,
    ரஜ:கணாநாம் – பராக³லேஶாநாம், பூ⁴யாந் – மஹாந், ப்ரஸாத:³ – அநுக்³ரஹ:, மயி,
    பூ⁴யாத், “பூ⁴- ஸதாயா” மாஶிஷி லிங் ।
  • பரிஸ்பு²ரந்நூபுர சித்ரபா⁴நு ப்ரகாஶநிர்தூ⁴த தமோऽநுஷங்கா³ம் ।
    பத³த்³வயீம் தே பரிசிந்மஹேऽந்த: ப்ரபோ³த⁴ராஜீவ விபா⁴தஸந்த்⁴யாம் ॥ 21॥

  • அஜ்ஞாநாந்த⁴கார நிவர்தகம் ஜ்ஞாநோத³யஹேதும் த்வத்பாதா³ரவிந்த³ம் மநஸா
    த்⁴யாயாமீத்யாஹ (பரிஸ்பு²ரந்நி) தி। ஹே நாத² – ஹே ஹயக்³ரீவ, பரிஸ்பு²ரந்நூபுர
    ஏவ சித்ரபா⁴நு: – ஸூர்ய:, தஸ்ய ப்ரகாஶேந – தேஜஸா, நிர்தூ⁴த: – ப்ரதிக்ஷிப்த:,
    தமோऽநுஷங்க:³ – தமஸ்ஸம்யோக:³, யஸ்யா ஸ்தாம், ததோ²க்தாம்;(ப்ரபோ³த⁴ராஜீவ
    விபா⁴தஸந்த்⁴யாம்) ப்ரபோ³த:⁴ – ஜ்ஞாநமேவ, ராஜீவம் – தஸ்ய, விபா⁴தஸந்த்⁴யாம்
  • பூர்வஸந்த்⁴யாம், தே, பத³த்³வயீம் – சரணயுக³ளம், அந்த: – மநஸி, பரிசிந்மஹே பரிஶீலயாமஹே, “சிஞ் – சயநே” ।
  • த்வத்கிங்கராலங்கரணோசிதாநாம் த்வயைவ கல்பாந்தரபாலிதாநாம் ।
    மஞ்ஜுப்ரணாத³ம் மணிநூபுரம் தே மஞ்ஜூஷிகாம் வேத³கி³ராம் ப்ரதீம: ॥ 22॥

  • நூபுரமபி⁴வர்ணயதி (த்வத்கிங்கரே) தி। ஹே நாத²! (த்வத்கிங்கராலங்கரணோசிதாநாம்)
    த்வத் – தவ, கிங்கராணாம் – ப⁴க்தாநாம், அலங்கரணம் – த்வத்பாதா³ரவிந்த³ரூப
    ஶிரோபூ⁴ஷணம், தஸ்ய, உசிதாநாம் – ப்ரதிபாத³நயோக்³யாநாம், யத்³வா,
    த்வத்கிங்கராணாம் – ப்³ரஹ்மாதீ³நாம், அலங்கரணே – அலங்காரகரணே, உசிதாநாம் யோக்³யாநாம்। அநேந விஶேஷணேந வேத³கி³ராமாப⁴ரணத்வாகாரோ வ்யஜ்யதே;
    அத ஏவ நூபுரமஞ்ஜூஷிகாத்வேந ரூபணம் ஸங்க³ச்ச²தே। த்வயைவ ப⁴வதைவ, கல்பாந்தரபாலிதாநாம் – ரக்ஷிதாநாம், வேத³கி³ராம் – வேத³வாக்யாநாம்,
    (மஞ்ஜுப்ரணாத³ம்) மஞ்ஜு – மநோஹர:, ப்ரணாத:³- ஶிஞ்ஜாரவ:, யத: மணிநூபுரபேடிகாக³ர்ப⁴க³தவஶிஞ்ஜாரவத்வேந நிக³த்³யந்த இதி பா⁴வ:; மணிநூபுரம் – மணிமயஶிஞ்ஜீரம்,மஞ்ஜூஷிகாம்
  • பேடிகாம், ப்ரதீம: – ஜாநீம:, “இண் – க³தௌ”। லோகே யதா² த⁴நவாந்
    புத்ரபௌத்ராதீ³நாம் ரக்ஷணார்த⁴ம் ஸர்வாப⁴ரணஜாதம் ஸங்கோ³ப்ய பேடிகாம்
    ஸங்க்³ரு’ஹ்ணாதி தத்³வதி³திபா⁴வ: ।
  • ஸஞ்சிந்தயாமி ப்ரதிபா⁴த³ஶாஸ்தா²ந் ஸந்து⁴க்ஷயந்தம் ஸமயப்ரதீ³பாந் ।
    விஜ்ஞாநகல்பத்³ருமபல்லவாப⁴ம் வ்யாக்²யாநமுத்³ராமது⁴ரம் கரம் தே ॥ 23॥

  • இத: பரம் த்ரிபி:⁴ ஶ்லோகை: பாணிபங்கஜமபி⁴வர்ணயதி (ஸஞ்சிந்தயாமீ)தி। ஹே
    நாத²!, (ப்ரதிபா⁴த³ஶாஸ்தா²ந்) ப்ரதிபா⁴ – தாத்காலிகோபஸ்தி²தி:, ஸைவ, த³ஶா வர்தி:, தஸ்யாம் வர்தமாநாந், ஸமயப்ரதீ³பாந் – வேதா³விருத்³த⁴ஸித்³தா⁴ந்தப்ரதீ³பாந்,
    ஸந்து⁴க்ஷயந்தம் – அபி⁴வர்த⁴யந்தம், வ்யாக்²யாநகாலே ஆவஶ்யகப்ரபோ³த⁴முத்³ரயா
    அங்கு³ள்யா தீ³பவத்ஸகலஸித்³தா⁴ந்த ரஹஸ்யார்த²ப்ரகாஶநேந ஸர்வே
    ஸித்³தா⁴ந்தா அபி⁴வ்ரு’த்³தா⁴ ப⁴வந்தீத்யர்த:²। (விஜ்ஞாநகல்பத்³ரும பல்லவாப⁴ம்)
    விஜ்ஞாநமயப⁴க³வச்ச²ரீரமேவ கல்பத்³ரும: – கல்பதரு:, தஸ்ய, பல்லவாநாம் கிஸலயா நாம், ஆபே⁴வாபா⁴ யஸ்ய தம்; (வ்யாக்²யாநமுத்³ராமது⁴ரம்) – வ்யாக்²யாந
    முத்³ரயா- போ³த⁴முத்³ரயா, மது⁴ரம் – மநோஹரம், கரம் – பாணிம், ஸஞ்சிந்தயாமி த்⁴யாயாமி। ரூபகோபயோஸ்ஸங்கர: ।
  • சித்தே கரோமி ஸ்பு²ரிதாக்ஷமாலம் ஸவ்யேதரம் நாத²! கரம் த்வதீ³யம் ।
    ஜ்ஞாநாம்ரு’தோத³ஞ்சநலம்படாநாம் லீலாக⁴டீயந்த்ரமிவாஶ்ரிதாநாம் ॥ 24॥

  • (சித்த) இதி – ஹே நாத:²!, த்வதீ³யம் – ப⁴வதீ³யம், (ஸ்பு²ரிதாக்ஷமாலம்)। ஸ்பு²ரிதா
  • ப்ரகாஶமாநா, ஆக்ஷமாலா – ஜபமாலா யஸ்ய தம்। (ஜ்ஞாநாம்ரு’தோத³ஞ்சந
    லம்படாநாம்) ஜ்ஞாநாம்ரு’தஸ்ய, உத³ஞ்சநே – உத்³த⁴ரணே, லம்படா: – ஆஸக்தா:,
    ஆயாஸவந்த இதி யாவத்; தேஷாம், ததோ²க்தாநாமாஶ்ரிதாநாம், லீலாக⁴டீயந்த்ரமிவ
    ஸ்தி²தம் – லீலாசரணார்த²ம் நிர்மிதோ யோ க⁴டீயந்த்ரவிஶேஷ:, தமிவ ஸ்தி²தம்,
    ஸவ்யேதரம் – த³க்ஷிணம், சித்தே – ஹ்ரு’த³யே, கரோமி – ப்ரதிஷ்டா²பயாமி ।
  • ப்ரபோ³த⁴ஸிந்தோ⁴ரருணை: ப்ரகாஶை: ப்ரவாளஸங்கா⁴தமிவோத்³வஹந்தம் ।
    விபா⁴வயே தே³வ! ஸபுஸ்தகம் தே வாமம் கரம் த³க்ஷிணமாக்³ரிதாநாம் ॥ 25॥

  • (ப்ரபோ³தே⁴)தி। ஹே தே³வ – ஹயவத³ந, தே – தவ, ப்ரபோ³த⁴ஸிந்தோ:⁴ ஜ்ஞாநஸாக³ரஸ்ய, அருணை: – தாம்ரை:, ப்ரகாஶை: – காந்திபி:⁴, ப்ரவாளஸங்கா⁴தம்
  • வித்³ருமஸங்க⁴ம், உத்³வஹந்தமிவ ஸ்தி²தம் – பி³ப்⁴ரதமிவ ஸ்தி²தம், ஸபுஸ்தகம்
  • புஸ்தகஸஹிதம், ஆஶ்ரிதாநாம் த³க்ஷிணம் – வித்³யாப்ரதா³நஸமர்த²ம், வாமமபி
    த³க்ஷிணமிதி விரோத:⁴ – தத்பரிஹார: பூர்வோக்தரீத்யா। ஸவ்யம் கரம், விபா⁴வயே த்⁴யாயாமி ।
  • தமாம்ஸி பி⁴த்வா விஶதை:³ ப்ரகாஶைஸ்ஸம்ப்ரீணயந்தம் விது³ஷ ஶ்சகோராந்
    நிஶாமயே த்வாம் நவபுண்ட³ரீகே ஶரத்³க⁴நே சந்த்³ரமிவ ஸ்பு²ரந்தம் ॥ 26॥

  • அவயவஸௌந்த³ர்யமபி⁴வர்ண்ய, விக்³ரஹ ஸௌந்த³ர்யமபி⁴வர்ணயதி (தமாம்ஸீ)
    தி। ஹே தே³வ!, தமாம்ஸி-அந்தர்பா³ஹ்யந்த⁴காராந், விஶதை:³ – ஸ்வச்சை:,
    ப்ரகாஶை:, பி⁴த்வா – சி²த்வா, விது³ஷஶ்சகோராந் – பண்டி³தாநேவ சகோராக்²யஶகுநிவிஶேஷாந்ஸம்ப்ரீணயந்தம் – ஸந்தோஷயந்தம், நவபுண்ட³ரீகே – நூதந ப்ரபுல்லபத்³மே,
    ஸ்பு²ரந்தம், அத ஏவ ஶரத்³க⁴நே- ஶரத்மால மே ,ஸ்பு²ரந்தம் சந்த்³ரமிவ ஸ்தி²தம்,
    த்வாம், நிஶாமயே-ஸாக்ஷாத்குர்வே। உபமாலங்கார: ।
  • தி³ஶந்து மே தே³வ! ஸதா³ த்வதீ³யா த³யாதரங்கா³நுசரா: கடாக்ஷா: ।
    ஶ்ரோத்ரேஷு பும்ஸாமம்ரு’தம் க்ஷரந்தீம் ஸரஸ்வதீம் ஸம்ஶ்ரிதகாமதே⁴நும் ॥ 27॥

  • ப⁴க³வதோ வித்³யாம் ப்ரார்த²யதே (தி³ஶந்த்வி)தி। ஹே தே³வ, த்வதீ³யா:,
    த³யாதரங்கா³நு சரா: – க்ரு’பாகல்லோல ஸஹசரா:, கடாக்ஷா:, பும்ஸாம்
    ஶ்ரோத்ரேஷு, அம்ரு’தம் -ஸுதா⁴ம்,க்ஷரந்தீம் -ஸ்ரவந்தீம், ஶ்ரோத்ராநந்த³கரீமித்யர்த:²
    ஸம்ஶ்ரிதகாமதே⁴நும் – ஆஶ்ரிதாநாமபீ⁴ஷ்டதா³யிநீம், ஸ்வர்தே⁴நுமிவ ஸ்தி²தாம்,
    ஸரஸ்வதீம், ஸதா³ மே, தி³ஶந்து – விதரந்து, தி³ஶ – அதிஸர்ஜநே ।
  • விஶேஷவித்ஸாரிஷதே³ஷு நாத²! வித³க்³த⁴கோ³ஷ்டீ² ஸமராங்க³ணேஷு ।
    ஜிகீ³ஷதோ மே கவிதார்கிகேந்த்³ராந் ஜிஹ்வாக்³ர ஸிம்ஹாஸநமப்⁴யுபேயா: ॥ 28॥

  • குமதிவாத³ப⁴ஞ்ஜநார்த²ம் வாத³காகாலேஷு ப⁴க³வத்ஸந்நிதா⁴நம் ப்ரார்த²யதே
    (விஶேஷ வித்பாரிஷதே³ஷ்வி)தி। ஹே நாத² – ஹயக்³ரீவ, த்வமித்யத்⁴யாஹர:;
    விஶேஷவிதா³ம் – வாத³ப்ரதிவாத³விஶேஷஜ்ஞாநாம், பாரிஷதே³ஷு – பரிஷத்³யுக்தேஷு,
    (வித³க்³த⁴கோ³ஷ்டீ² ஸமராங்க³ணேஷு) வித³க்³தா⁴நாம் – ஸமர்தா²நாம்,
    கோ³ஷ்ட்²யா: -ஸமாஜஸ்ய,ஸமராங்க³ணேஷு – வாத³ஶாலாஸு, (கவிதார்கிகேந்த்³ராந்)
    கவீநாம் – க³த்³யபத்³ய ரசநாஸமர்தா²நாம், தார்கிகாநாம் – ஊஹபோஹாதி³
    நாநாவித⁴யுக்திசதுராணாம், இந்த்³ராந் – ஶ்ரேஷ்டா²ந், ஜிகீ³ஷத: – ஜேதுமிச்ச²த:,
    மே, (ஜிஹ்வக்³ர ஸிம்ஹாஸநம்) – ஜிஹ்வாயா: – ரஸநாயா:, அக்³ரமேவ ஸிம்ஹாஸநம்
  • ஸிம்ஹபீட²ம், அப்⁴யுபேயா: – ப்ராப்நுயா:, “இண் – க³தௌ” ।
  • த்வாம் சிந்தயம் ஸ்த்வந்மயதாம் ப்ரபந்நஸ்த்வாமுத்³க்³ரு’ணந் ஶப்³த³மயேந தா⁴ம்நா

    ஸ்வாமிந்! ஸமாஜேஷு ஸமாதி⁴ஷீய ஸ்வச்ச²ந்த³வாதா³ஹவப³த்³த⁴ஶூர: ॥ 29॥

  • த்வத்ஸந்நிதா⁴நவஶாதே³வ ப்ரதிவாதிகோலாஹலாந் ஸ்தம்ப⁴யாமீத்யாஹ(த்வாமி)தி।
    ஹே ஸ்வாமிந் – ஹயக்³ரீவ, த்வாம் – ப⁴வந்தம், சிந்தயந், த்⁴யாயந், த்வந்மயதாம் த்வதா³த்மத்வம், ப்ரபந்ந: – ப்ராப்த:, ஶப்³த³மயேந – மந்த்ரமயேந, தா⁴ம்நா – தேஜஸா,
    த்வா முத்³க்³ரு’ணந் – ஸ்துவந், அஹமிதி ஶேஷ:। ஸமாஜேஷு – மஹத்ஸபா⁴ஸு,
    (ஸ்வச்ச²ந்த³ நாதா³ஹவப³த்³த⁴ஶூர:) ஸ்வச்ச²ந்த³வாதா³நாமாஹவேஷு யுத்³தே⁴ஷு, ப³த்³த:⁴ – ஸந்நத்³த:⁴, ஶூர: – நிபுண:, ஸமேதி⁴ஷீய – வ்ரு’த்³தி⁴ம்
    ப்ராப்நுயாம், “ஏத⁴-வ்ரு’த்³தௌ⁴” ஆத்மநேபத³ம்। ப⁴வந்தம் த்⁴யாயதாம் ஸ்துவதாம் ச
    வாத³கதா⁴தா³ஸு விஜயஸ்ஸ்வாதி³தி பா⁴வ: ।
  • நாநாவிதா⁴நாமக³தி: கலாநாம் ந சாபி தீர்தே²ஷு க்ரு’தாவதார: ।
    த்⁴ருவம் தவாநாத²பரிக்³ரஹாயா நவம் நவம் பாத்ரமித³ம் த³யாயா: ॥ 30॥

  • ப⁴க³வதஸ்ஸர்வாபீ⁴ஷ்டம் ஸம்ப்ரார்த்²ய, தஸ்ய க்ரு’போத³யாய ஸ்வஸ்யாநந்யக³திகத்வமநுஸ(நாநாவிதா⁴நா)மிதி। ஹே ஸ்வாமிந், நாநாவிதா⁴நாம் – நாநாப்ரகாராணாம், கலாநாம்
  • வித்³யாநாம், அக³தி: – அப்ராப்யஸ்தா²நம், (ந சாபி தீர்தே²ஷு க்ரு’தாவதார:)
    தீர்தே²ஷு – க³ங்கா³தி³புண்யதீர்தே²ஷு, க்ரு’தாவதார: – க்ரு’த: – அநுஷ்டி²த:,
    அவதார: – அவகா³ஹநம் யேந ஸ ததோ²க்த:, ஸ்நாத இதி யாவத்; தாத்³ரு’ஶோऽபி
    நேத்யர்த:²। ஈத்³ரு’ஶோऽஹம் தவ, அநாத²பரிக்³ரஹாயா: – அநாதா²நாம் -தீ³நாநாம்,
    பரிக்³ரஹாயா: – அநுக்³ரஹ ஹேதுபூ⁴தாயா:, த்வதீ³யாயா, த³யாயா: – க்ரு’பாயா:,
    நவந்நவம் – அத்யந்தாபி⁴ நவம், அத்யந்தவிலக்ஷணமிதி யாவத்। பாத்ரம் – விஷய:,
    அஸ்தீதி ஶேஷ:; த்⁴ருவம் – நிஶ்சய:, த்வதே³க ஶரணாவயம் ந ஸாத⁴நாந்தராவலம்பி³ந
    இதி பா⁴வ: ।
  • அகம்பநீயாந்யபநீதிபே⁴தை³ரலங்க்ரு’ஷீரந் ஹ்ரு’த³யம் மதீ³யம் ।
    ஶங்காகளங்காபக³மோஜ்வலாநி தத்த்வாநி ஸம்யஞ்சி தவ ப்ரஸாதா³த் ॥ 31॥

  • இதா³நீம் த்வதே³கஶரணஸ்ய மே த்வத்ப்ரஸாதா³தே³வ ஸமஸ்ததத்த்வாநி
    கரதலாமலகா நீத்யாஹ (அகம்பயாநீ)தி। ஹே ஸ்வாமிந், தவ, ப்ரஸாதா³த்
  • அநுக்³ரஹாத், அபநீதிபே⁴தை:³ – நாநாவிதா⁴ந்யாயைரபி, அகம்பநீயாநி அப்ரம்ரு’ஜ்யாநி, (ஶங்காகளங்காபக³ மோஜ்வலாநி) ஶங்கா – அப்ராமாண்யஶங்கா,
    ஸைவ களங்க:, தஸ்யாபக³ம: – நிராஸ:, தேந உஜ்ஜ்வலாநி – ப்ரகாஶமாநாநி,
    ஸம்யஞ்சி – யதா²ர்தா²நி, தத்த்வாநி, மதீ³யம் – மத்ஸம்ப³ந்தி⁴, ஹ்ரு’த³யம் – மாநஸம்,
    அலங்க்ரு’ஷீரந் – அலங்குர்வந்து, தவ ப்ரஸாத³வஶாத்ஸர்வ தத்த்வஸாக்ஷாத்காரோ
    பூ⁴யாதி³த்யர்த:²। “டு³க்ரு’ஞ்-கரணே।”
  • வ்யாக்²யாமுத்³ராம் கரஸரஸிஜை: புஸ்தகம் ஶங்க²சக்ரே
    பி³ப்⁴ரத்³பி⁴ந்நஸ்ப²டிகருசிரே புண்ட³ரீகே நிஷண்ண: ।
    அம்லாநஶ்ரீரம்ரு’தவிஶதை³ரம்ஶுபி:⁴ ப்லாவயந்மாம்
    ஆவிர்பூ⁴யாத³நக⁴மஹிமா மாநஸே வாக³தீ⁴ஶ: ॥ 32॥

  • அத² ஹயக்³ரீவமூர்தே ரஸாதா⁴ரண ஸ்வரூப த்⁴யாநபத³வீமதி⁴ரோஹதி (வ்யாக்²யா
    முத்³ராமி)தி। கரஸரஸிஜை: – சதுர்பி:⁴ கராரவிந்தை:³, ஶங்க²சக்ரே, புஸ்தகம் ஶ்ரீகோஶம், வ்யாக்²யாமுத்³ராம் – போ³த⁴முத்³ராம் சேதி ஶேஷ:; பி³ப்⁴ரத் – வஹந்,
    பி⁴ந்நஸ்ப²டிகருசிரே – த³ளிதஸ்ப²டிகமநோஹரே,புண்ட³ரீகே – ஸிதாம்போ³ஜே,
    நிஷண்ண: – ஆஸீந:, அம்லாநஶ்ரீ: – நித்யஶ்ரீ:, நித்யஶோப:⁴; அத ஏவ (அநக⁴மஹிமா)
    அநக:⁴ – நிர்து³ஷ்ட:, மஹிமா – மாஹாத்ம்யம், யஸ்ய ஸ ததோ²க்த:; வாகீ³ஶ:
  • ஹயக்³ரீவ:, அம்ரு’தவிஶதை:³ – அம்ரு’தஸ்வச்சை:², அம்ஶுபி:⁴ – கிரணை:,
    மாம் – ஸம்ஸாராபி⁴தப்தம், ப்லாவயந் – ஸேசயந், மமேத்யத்⁴யாஹர:; மாநஸே சித்தே, ஆவிர்பூ⁴யாத் = ஸந்நிதே⁴யாத், “பூ⁴ ஸத்தாயா” மாஶிஷி லிஜ்। மநஸி
    ஹயகீ³வாவிர்பா⁴வே அம்ரு’த கல்பதத்கிரணஜாலைர்மநோக³த ஸகல ஸந்தாப
    நிவ்ரு’த்திர்மே ப⁴வேதி³த்யாஶய: ।
  • வாக³ர்த²ஸித்³தி⁴ஹேதோ: பட²த ஹயக்³ரீவஸம்ஸ்துதிம் ப⁴க்த்யா ।
    கவிதார்கிககேஸரிணா வேங்கடநாதே²ந விரசிதாமேதாம் ॥ 33॥

  • இதி கவிதார்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய ஶ்ரீமத்³வேங்கடநாத²ஸ்ய
    வேதா³ந்தாசார்யஸ்ய க்ரு’திஷு
    ஶ்ரீஹயக்³ரீவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

  • கவிதார்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஶாலிநே ।
    ஶ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம: ॥

  • ஶ்ரீமதே நிக³மாந்த மஹாதே³ஶிகாய நம: ।

  • ஸ்வக்³ரந்த²ஸ்ய விஶ்வஸநீயத்வாய ஸ்வநாம ப்ரகடயந் ஸ்வக்ரு’தஸ்தோத்ரஸ்ய
    ப²லம ப்யாஹ(வாக³ர்தே⁴)தி। ஹே ஸுதி⁴ய இத்யத்⁴யாஹர:; கவிதார்கிககேஸரிணா
  • கவிதார்கிக ஶ்ரேஷ்டே²ந, வேங்கடநாதா²ஹ்வயேந; விரசிதாம் – நிர்மிதாம்,
    ஏதாம், ஸம்யக்பத³வாக்ய ரசநோஜ்வலாம், (வாக³ர்த⁴ ஸித்³தி⁴ ஹேதும்) வாசாம்
  • வாக்³ரூபாணாம், அர்தா²நாம், ஸித்³தௌ⁴ – ஜ்ஞாநே, ஹேதும் – காரணம்,
    ஹயக்³ரீவஸம்ஸ்துதிம் – ஹயக்³ரீவஸ்தவம்; ப⁴க்த்யா பட²த – அநுஸந்த⁴த³த்⁴வம்

    இதி ஶ்ரீஹயக்³ரீவஸ்தோத்ரஸ்ய வ்யாக்²யா ஸமாப்தா ।
    ஶ்ரீமதே நிக³மாந்த மஹாதே³ஶிகாய நம: ।

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டக கவச ஸ்தோத்ரம்-இதி ஸ்ரீமச் ச²ங்கராசார்ய க்ருʼதம்ʼ

October 10, 2024

|| ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ ||

பக்தியின் மூலம் ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்பது மஹா வேதாந்தியான ஆதி சங்கராச்சாரியார் நம்பிக்கை. அதன் விளைவு, அவரால் இயற்றப்பட்ட, விலை மதிக்க இயலாத அவரின் ஸ்தோத்ர ரத்னங்கள்.

ஸ்ரீமத் சங்கராச்சாரியார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்த போது, கிருஷ்ணனின் லீலா விநோதங்களை புகழ்ந்து போற்றும் இந்த கிருஷ்ண அஷ்டக கவசத்தை அருளினார். மகத்தான இந்த ஸ்தோத்ரத்தில் இருக்கும் ஸ்லோகங்களின் ஒவ்வொரு வார்த்தையும் தந்திர, மந்திர சக்தி வாய்ந்தது.

ஒவ்வொரு ஸ்லோகமும் உள்ளார்ந்த (ஆழமான) அர்த்தங்களை கொண்டது. கிருஷ்ண மந்திரத்துடன் சம்பூதிதமான (இணைந்த) இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரத்யேக ஸ்லோகம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அருளை வேண்டி செய்யப்படும் பிரார்த்தனையில் (சாதனா) பல்வேறு விதமாக பயன் தரவல்லது.

இக்கவச ஸ்தோத்ரத்தை விதிப்பூர்வமாக ப்ராணப்ரதிஷ்டை செய்து பாராயணம் செய்து வந்தால் மந்திரசித்தி அளிக்கவல்லது. க்ருஷ்ண மந்திரம், தேவ மந்திரம், குரு மந்திரம் இம்மூன்றும் நிலையானது மட்டுமல்லாமல் நியமத்துடன் ஜபம் செய்ய வேண்டும். விசேஷமான தருணங்களில் கவச, ஸ்தோத்ர பாராயணமும் செய்ய வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டக கவச ஸ்தோத்ரம். எட்டு ஸ்லோகங்கள் வாயிலாக கிருஷ்ணனின் லீலா விநோதங்களை புகழ்ந்து போற்றும் அரிய கவசம். இந்த ஸ்தோத்ரமானது இசைக்க உகந்ததாக இயற்றப்பட்டுள்ளதால், இதை பாராயணம் செய்வதை விட கீர்த்தனையாக பாடுவது மிகவும் நல்லது.

பகவான் மஹாவிஷ்ணு, நாரதரிடம் இந்த ஸ்தோத்ரத்தின் மஹிமையைப் பற்றி கூறும் பொழுது, “நாரதா எங்கெல்லாம் ஸ்ரீ கிருஷ்ண கவச ஸ்தோத்ரமானது பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுகிறேன்.” என்று கூறுகிறார்.

ஸ்ரீ க்ருʼஷ்ணாஷ்டக – ஸ²ங்கர பகவத் பாத³

ப⁴ஜே வ்ரஜைகமண்ட³னம்ʼ ஸமஸ்த பாப க²ண்ட³னம்ʼ
ஸ்வ ப⁴க்த சித்தரஞ்ஜனம்ʼ ஸதை³வ நந்த³னந்த³னம்|
ஸுபிச்ச²கு³ச்ச²மஸ்தகம்ʼ ஸுனாத³வேணு ஹஸ்தகம்ʼ
அனங்க³ரங்க³ஸாக³ரம்ʼ நமாமி க்ருʼஷ்ணனாக³ரம் ||1||

1. கோகுலத்தின் (வ்ரஜ பூமி) (நந்தகுலத்தின்) சர்வ ஆபரணமாக விளங்கும் கிருஷ்ணா, பக்தர்களின் சகல பாபங்களையும் அழித்து ரட்சிப்பவனே, பக்தர்களின் சித்தத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தி மகிழ்விப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
குழல் கற்றைகள் நெற்றியில் நடனமாட, மயிற்பீலி அசையும் கிரீடத்துடன், கைகளில் இனிய நாதம் எழுப்பும் புல்லாங்குழல் ஏந்தி காட்சி அருளுபவனே, ப்ரேமம் என்னும் காதல் சமுத்திரத்தின் (சாகரம்) உருக் கொண்டவனே, லீலா விநோதங்களால் மகிழ்விக்கும் கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

மனோஜ க³ர்வமோசனம்ʼ விஸா²ல லோல லோசனம்ʼ
விதூ⁴தகோ³பஸோ²சனம்ʼ நமாமி பத்³ம லோசனம் |
கராரவிந்த³பூ⁴த⁴ரம்ʼ ஸ்மிதாவலோக ஸுந்த³ரம்ʼ
மஹேந்த்³ரமான தா³ரணம்ʼ நமாமி க்ருʼஷ்ண வாரணம் ||2||

2. மன்மதனின் கர்வத்தை அடக்கியவனே, விசாலமான விழிகளைக் கொண்டவனே, நந்தகோபியர்களின் சோகத்தை அழித்தவனே, தாமரை மலரை ஒத்த நயனங்களைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
கோவர்த்தனகிரியை கரங்களில் தூக்கி விரலில் ஏந்தியவனே, காண்பவர் கவரும் காந்தப்பார்வையும், புன்னகையும் கொண்டவனே, இந்திரனின் கர்வத்தை அழித்தவனே, கஜராஜனின் உருக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

கத³ம்ப³ ஸூன குண்ட³லம்ʼ ஸுசாரு க³ண்ட³ மண்ட³லம்ʼ
வ்ரஜாங்க³னைக வல்லப⁴ம்ʼ நமாமி க்ருʼஷ்ண து³ர் லப⁴ம் |
யஸோ²த³யா ஸமோத³யா ஸகோ³பயா ஸநந்த³யா
யுதம்ʼ ஸுகை²கதா³யகம்ʼ நமாமி கோ³ப நாயகம் ||3||

3. கதம்ப மலரினால் ஆன குண்டலங்களை காதில் அணிந்தவனே, அழகிய கன்னங்களைக் கொண்டவனே, கோகுலத்தில் வாழும் கோபிகைகளின் ப்ரேமையின் தலைவனே, ப்ரேம பக்தியை தவிர வேறெந்த மார்க்கத்தாலும் அடைய முடியாதவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
கோபர்கள், நந்தகோபர் மற்றும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் யசோதாவினால் எக்கணமும் சூழப்பட்டு இருப்பவனே, தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, கோபர்களின் பிரபுவான ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

ஸதை³வ பாத³பங்கஜம்ʼ மதீ³ய மானஸே நிஜம்ʼ
த³தா⁴னமுக்தமாலகம்ʼ நமாமி நந்த³பா³லகம் |
ஸமஸ்த தோ³ஷ ஸோ²ஷணம்ʼ ஸமஸ்த லோக போஷணம்ʼ
ஸமஸ்தகோ³பமானஸம்ʼ நமாமி நந்த³லாலஸம் ||4||

4. தன் கமல பாதங்களை பக்தர்களின் சித்தத்தில் (மனஸ் என்னும் சரோவரில்) ஸ்தாபிதம் செய்பவனே, அழகிய சுருண்ட கேசத்தைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
சகல தோஷங்களையும் நீக்குபவனே, அனைத்து லோகங்களையும் காத்து ரட்சிப்பவனே, கோகுலத்தின் கோபர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவனே, நந்தகோபனின் மைந்தனான சிவப்பு நிற திருமேனியையுடைய ஸ்ரீ கிருஷ்ண சந்த்ரா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

பு⁴வோ ப⁴ராவதாரகம்ʼ ப⁴வாப்³தி⁴கர்ணதா⁴ரகம்ʼ
யஸோ²மதீகிஸோ²ரகம்ʼ நமாமி சித்த சோரகம் |
த்³ருʼக³ந்தகாந்தப⁴ங்கி³னம்ʼ ஸதா³ ஸதா³லிஸங்கி³னம்ʼ
தி³னே தி³னே நவம்ʼ நவம்ʼ நமாமி நந்த³ஸம்ப⁴வம் ||5||

5. கணக்கில்லா அரக்கர்களையும், தீயசக்திகளையும் அழித்து புவியின் பாரத்தை குறைப்பவனே, துக்கமயமான சம்சார சாகரத்தை கடக்க உதவுபவனே, யசோதையின் மைந்தனான நீ, அனைவரின் உள்ளங்களையும் கவருகின்றாய். உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
அருள் கடாக்ஷத்தை பொழியும் கவர்ச்சியான கண்களை கொண்டவனே, திவ்யமான தோழர்களால் (புனித பக்தர்களால்) சதா சூழப்பட்டு இருப்பவனே, நித்தம் நூதனமான லீலா விநோதங்களை நடத்தும் நந்தகுமாரா, (என்றும் புதிதாகத் தோன்றும் பரம்பொருளே!) ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

கு³ணாகரம்ʼ ஸுகா²கரம்ʼ க்ருʼபாகரம்ʼ க்ருʼபாபரம்ʼ
ஸுரத்³விஷன்னிகந்த³னம்ʼ நமாமி கோ³பனந்த³னம் |
நவீன கோ³பனாக³ரம்ʼ நவீன கேலிலம்படம்ʼ
நமாமி மேக⁴ஸுந்த³ரம்ʼ தடி³த் ப்ரபா⁴ல ஸத் படம் ||6||

6. நற்குணங்கள், ஆனந்தம், கருணை இவற்றின் களஞ்சியமாக விளங்குபவனே, தேவர்களின் எதிரிகளை அழித்து கோபர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
நித்தம் குறும்புத்தனமான லீலைகளை நூதனமாக புரிபவனே, லீலா விநோதங்களின் விளைவுகளில் மகிழ்ச்சி கொள்ளும் இடையர் தலைவனே, கருமேக நிறத்தை கொண்ட உள்ளம் கவர் அழகிய கள்வனே, மின்னல் ஒளியை போல் ஜொலிக்கும் மஞ்சள் பட்டு பீதாம்பரத்தை அணிந்தவனே, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

ஸமஸ்தகோ³பனந்த³னம்ʼ ஹ்ருʼதாம்பு³ஜைகமோத³னம்ʼ
நமாமி குஞ்ஜமத்⁴யக³ம்ʼ ப்ரஸன்னபா⁴னு ஸோ²ப⁴னம் |
நிகாமகாமதா³யகம்ʼ த்³ருʼக³ந்தசாரு ஸாயகம்ʼ
ரஸால வேணுகா³யகம்ʼ நமாமி குஞ்ஜனாயகம் ||7||

7. கோகுலத்தின் கோபியர் அனைவருக்கும் ஆனந்தம் அளிப்பவனே, பக்தர்களின் இதயக்கமலத்தை ஆனந்தத்தால் மலரச் செய்பவனே, உலகுக்கு ஒளியூட்டும் சூரியனைப் போன்று பிரகாசத்துடன், கவரும் புன்னகையுடன் தோன்றுபவனே, பிருந்தாவனம் என்னும் தோப்பின் மத்தியில் கோபியருடன் நடனமாடும் பிருந்தாவன கிருஷ்ணா, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
பக்தர்களின் ஆசைகளை முற்றிலும் நிறைவேற்றுபவனே, அம்பை ஒத்த, பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய பார்வையை கொண்டவனே, இனிய, மதுரமான கானத்தை புல்லாங்குழலில் இசைப்பவனே, ஸ்ரீகிருஷ்ணா, பிருந்தாவன நாயகா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

வித³க்³த⁴கோ³பி காமனோ மனோஜ்ஞதல்ப ஸா²யினம்ʼ
நமாமி குஞ்ஜகானனே ப்ரவ்ரத்³த⁴வன்ஹிபாயினம் |
கிஸோ²ரகாந்திரஞ்ஜிதம்ʼ த்³ருʼக³ஞ்ஜனம்ʼ ஸுஸோ²பி⁴தம்ʼ
க³ஜேந்த்³ர மோக்ஷகாரிணம்ʼ நமாமி ஸ்ரீவிஹாரிணம் ||8||

8. நின்னை எக்கணமும் நினைத்து உருகும் சாதுர்யமான (புத்திசாலித்தனமான) கோபிகைகளின் மனதின் மென்மையான படுக்கையின் மீது உறங்குபவனே, பிருந்தாவனத்தில் (குஞ்ச்வன் – கொடிகளும், மரங்களும் நிறைந்த தோப்பு) கொழுந்து விட்டெரியும் அக்னியை (தாவானல்) விழுங்கி கோபர்களை காப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
பிள்ளைப்பருவ கவர்ச்சிகரமான தோற்றத்தில் ஜொலிக்கும் ஒளி நிரம்பிய விழிகளை உடையவனே, அந்த விழிகளுக்கு மை (அஞ்சனம்) மேலும் அழகு ஊட்டுகிறது. கஜேந்திரன் என்னும் கஜராஜனை முதலையின் பிடியில் இருந்து விடுவித்ததோடு மோட்சமும் அளித்தவனே, ஸ்ரீ என்னும் மஹாலட்சுமியின் மணாளா, கிருஷ்ணசந்த்ரா, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

யதா³ ததா³ யதா² ததா² ததை²வ க்ருʼஷ்ண ஸத்கதா²
மயா ஸதை³வ கீ³யதாம்ʼ ததா² க்ருʼபா விதீ⁴யதாம் |
ப்ரமாணிகாஷ்டகத்³வயம்ʼ ஜபத்யதீ⁴த்ய ய​: புமான்
ப⁴வேத்ஸ நந்த³னந்த³னே ப⁴வே ப⁴வே ஸுப⁴க்திமான் ||9||

9. என் மீது உங்கள் கருணை என்றும் நிலைத்து இருக்க அருள் புரியுங்கள். நான் எந்நிலையில் இருப்பினும், தங்களின் லீலா விநோதங்களின் புகழை எப்போதும் பாடிக் கொண்டிருக்க என்னை ஆசீர்வதியுங்கள். எவர் ஒருவர் இந்த ஸ்ரீகிருஷ்ண அஷ்டகத்தை பாராயணம் அல்லது ஜபம் செய்கிறாரோ, அவர் தன் அனைத்துப் பிறப்புகளிலும், கிருஷ்ணனின் மீது பக்தியுடன் பிறப்பர்.

|| இதி ஸ்ரீமச்ச²ங்கராசார்யக்ருʼதம்ʼ ஸ்ரீக்ருʼஷ்ணாஷ்டகம்ʼ ஸம்பூர்ணம் ||
|| ஸ்ரீ க்ருʼஷ்ணார்பணமஸ்து||

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

॥ ஶ்ரீஹரிவாயுஸ்துதி: ॥॥ அத² ஶ்ரீநக²ஸ்துதி: ॥

October 10, 2024

ஸ்ரீ வாயு ஸ்துதி – -ஸ்ரீ வாயு கீதை

பாந்த்வஸ்மாந் புருஹூதவைரி ப³லவந்மாதங்க³ மாத்³யத்³க⁴டா
கும்போ⁴ச்சாத்³ரி விபாடநாதி⁴கபடு ப்ரத்யேக வஜ்ராயிதா: ।
ஶ்ரீமத்கண்டீ²ரவாஸ்ய ப்ரதத ஸுநக²ரா தா³ரிதாராதிதூ³ர
ப்ரத்³த்⁴வஸ்தத்⁴வாந்த ஶாந்த ப்ரவிதத மநஸா பா⁴விதாநாகிவ்ரு’ந்தை:³ ॥ 1॥
பா⁴விதா பூ⁴ரிபா⁴கை:³
லக்ஷ்மீகாந்த ஸமந்ததோऽபிகலயந் நைவேஶிதுஸ்தே ஸமம்
பஶ்யாம்யுத்தம வஸ்து தூ³ரதரதோபாஸ்தம் ரஸோயோऽஷ்டம: ।
யத்³ரோஶோத்கர த³க்ஷ நேத்ர குடில ப்ராந்தோத்தி²தாக்³நி ஸ்பு²ரத்
க²த்³யோதோபம விஸ்பு²லிங்க³ப⁴ஸிதா ப்³ரஹ்மேஶஶக்ரோத்கரா: ॥ 2॥
இதி ஶ்ரீமதா³நந்த³தீர்த²ப⁴க³வத்பாதா³சார்யவிரசிதா
ஶ்ரீந்ரு’ஸிம்ஹநக²ஸ்துதி: ஸம்புர்ணா ।
॥ அத² ஶ்ரீஹரிவாயுஸ்துதி: ॥
ஶ்ரீமத்³விஷ்ண்வங்க்⁴ரி நிஷ்டா² அதிகு³ணகு³ருதம ஶ்ரீமதா³நந்த³தீர்த²
த்ரைலோக்யாசார்ய பாதோ³ஜ்ஜ்வல ஜலஜலஸத் பாம்ஸவோऽஸ்மாந்புநந்து ।
வாசாம்யத்ரப்ரணேத்ரீத்ரிபு⁴வநமஹிதா ஶாரதா³ ஶாரதே³ந்து:³
ஜ்யோத்ஸ்நாப⁴த்³ரஸ்மித ஶ்ரீத⁴வளிதககு பா⁴ப்ரேமபா⁴ரம்ப³பா⁴ர ॥ 1॥
உத்கண்டா²குண்ட²கோலாஹலஜவவிதி³தாஜஸ்ரஸேவாநுவ்ரு’த்³த⁴
ப்ராஜ்ஞாத்மஜ்ஞாந தூ⁴தாந்த⁴தமஸஸுமநோ மௌலிரத்நாவளீநாம் ।
ப⁴க்த்யுத்³ரேகாவகா³ட⁴ ப்ரக⁴டநஸக⁴டாத்கார ஸங்க்⁴ரு’ஷ்யமாண
ப்ராந்தப்ராக்³ர்யாங்க்⁴ரி பீடோ²த்தி²த கநகரஜ: பிஞ்ஜராரஞ்ஜிதாஶா: ॥ 2॥
ஜந்மாதி⁴வ்யாத்⁴யுபாதி⁴ப்ரதிஹதிவிரஹப்ராபகாணாம் கு³ணாநாம்
அக்³ர்யாணாம் அர்பகாணாம் சிரமுதி³தசிதா³நந்த³ ஸந்தோ³ஹதா³நாம் ।

ஏதேஷாமேஶதோ³ஷ ப்ரமுஷிதமநஸாம் த்³வேஷிணாம் தூ³ஷகாணாம்
தை³த்யாநாமார்தி²மந்தே⁴ தமஸி வித³த⁴தாம் ஸம்ஸ்தவேநாஸ்மி ஶக்த: ॥ 3॥
அஸ்யாவிஷ்கர்துகாமம் கலிமலகலுஷேऽஸ்மிந்ஜநேஜ்ஞாநமார்க³ம்
வந்த்³யம் சந்த்³ரேந்த்³ரருத்³ர த்³யுமணிப²ணிவயோ: நாயகத்³யைரிஹாத்³ய ।
மத்⁴வாக்²யம் மந்த்ரஸித்³த⁴ம் கிமுதக்ரு’தவதோ மாருதஸ்யாவதாரம்
பாதாரம் பாரமேஷ்ட்யம் பத³மபவிபத:³ ப்ராப்துராபந்ந பும்ஸாம் ॥ 4॥

உத்³யத்³வித்³யுத்ப்ரசண்டா³ம் நிஜருசி நிகரவ்யாப்த லோகாவகாஶோ
பி³ப்⁴ரத்³பீ⁴மோ பு⁴ஜேயோऽப்⁴யுதி³த தி³நகராபா⁴ங்க³தா³ட்⁴ய ப்ரகாண்டே³ ।
வீர்யோத்³தா⁴ர்யாம் க³தா³க்³ர்யாமயமிஹ ஸுமதிம்வாயுதே³வோவித³த்⁴யாத்
அத்⁴யாத்மஜ்ஞாநநேதா யதிவரமஹிதோ பூ⁴மிபூ⁴ஷாமர்ணிமே ॥ 5॥

ஸ்ரீ வாயு தேவரின் காந்தி¸ எல்லா திக்குகளையும் பிரகாசப்படுத்துகிறது. அவர் பீமனாக அவதரித்துக் கையில் ஏந்திய கதை எப்படிப்பட்டது? மின்னும் மின்னலைப் போல உக்ரமானது. பலம் மிகுந்த பீமன் ஒருவரால் மட்டுமே அதைத் தூக்க முடியும். அதைத் தாங்கும் அவரது கையில் இருக்கும் கை-ஆபரணம் சூரியப் பிரகாசத்தைப் போல ஜொலிக்கின்றது. அவ்வளவு அழகு பொருந்திய கையில் அந்தச் சிறந்த கதையைத் தாங்கி நிற்கும் பீமாவதாரமான ஸ்ரீ வாயு பகவான் எனக்குச் சிறந்த ஞானத்தைக் கொடுத்து அனுக்ரஹிக்கட்டும்.

மேலும் அந்த வாயுதேவர்¸ மத்வராக அவதரித்தபோது¸ சிரேஷ்டமான ஸன்யாஸிகளெல்லாம் அவரைப் பூஜித்தனர். பரமாத்மாவின் உண்மையான ஞானத்தைப் பிரகாசப்படுத்த 37 நூல்களை இயற்றி¸ உலகத்திற்கு க்ஞான ஒளி வீசும் அலங்கார ரத்னமாகத் திகழ்ந்தார். அப்பேற்பட்ட மஹிமை பொருந்திய ஸ்ரீ வாயு பகவான் எனக்குத் தூயமான ஞானத்தை அளித்து என்னைக் காப்பாற்றட்டும்.


ஸம்ஸாரோத்தாபநித்யோபஶமத³ ஸத³ய ஸ்நேஹஹாஸாம்பு³பூர
ப்ரோத்³யத்³வித்³யாவநத்³ய த்³யுதிமணிகிரண ஶ்ரேணிஸம்பூரிதாஶ: ।
ஶ்ரீவத்ஸாங்காதி⁴ வாஸோசித தரஸரலஶ்ரீமதா³நந்த³தீர்த²
க்ஷீராம்போ⁴தி⁴ர்விபி⁴ந்த்³யாத்³ப⁴வத³நபி⁴மதம்பூ⁴ரிமேபூ⁴தி ஹேது: ॥ 6॥
மூர்த⁴ந்யேஷோऽந்ஜலிர்மே த்³ரு’ட⁴தரமிஹதே ப³த்⁴யதே ப³ந்த⁴பாஶ
க்ஷேத்ரேதா⁴த்ரே ஸுகா²நாம் ப⁴ஜதி பு⁴வி ப⁴விஷ்யத்³விதா⁴த்ரே த்³யுப⁴ர்த்ரே ।
அத்யந்தம் ஸந்ததம் த்வம் ப்ரதி³ஶ பத³யுகே³ ஹந்த ஸந்தாப பா⁴ஜாம்
அஸ்மாகம் ப⁴க்திமேகாம் ப⁴க³வத உததே மாத⁴வஸ்யாத² வாயோ: ॥ 7॥
ஸாப்⁴ரோஷ்ணாபீ⁴ஶு ஶுப்⁴ரப்ரப⁴மப⁴யநபோ⁴ பூ⁴ரிபூ⁴ப்⁴ரு’த்³விபூ⁴தி:
ப்⁴ராஜிஷ்ணுர்பூ⁴ர்ரு’பூ⁴ணாம் ப⁴வநமபி விபோ⁴ऽபே⁴தி³ப³ப்⁴ரேப³பூ⁴வே ।
யேநப்⁴ரோவிப்⁴ரமஸ்தே ப்⁴ரமயதுஸுப்⁴ரு’ஶம் ப³ப்⁴ருவத்³து³ர்ப்⁴ரு’தாஶாந்
ப்⁴ராந்திர்பே⁴தா³வ பா⁴ஸஸ்த்விதிப⁴யமபி⁴ போ⁴ர்பூ⁴க்ஷ்யதோமாயிபி⁴க்ஷூந் ॥ 8॥
யேऽமும்பா⁴வம்ப⁴ஜந்தே ஸுரமுக²ஸுஜநாராதி⁴தம் தே த்ரு’தீயம்
பா⁴ஸந்தே பா⁴ஸுரைஸ்தே ஸஹசரசலிதைஶ்சாமரைஶ்சாருவேஶா: ।
வைகுண்டே² கண்ட²லக்³ந ஸ்தி²ரஶுசி விலஸத்காந்தி தாருண்யலீலா
லாவண்யா பூர்ணகாந்தா குசப⁴ரஸுலபா⁴ஶ்லேஷஸம்மோத³ஸாந்த்³ரா: ॥ 9॥
ஆநந்தா³ந்மந்த³மந்தா³ த³த³தி ஹி மருத: குந்த³மந்தா³ரநந்த்³யாவர்தா
ऽமோதா³ந் த³தா⁴நாம் ம்ரு’து³பத³ முதி³தோத்³கீ³தகை: ஸுந்த³ரீணாம் ।
வ்ரு’ந்தை³ராவந்த்³ய முக்தேந்த்³வஹிமகு³ மத³நாஹீந்த்³ர தே³வேந்த்³ரஸேவ்யே
மௌகுந்தே³ மந்த³ரேऽஸ்மிந்நவிரதமுத³யந்மோதி³நாம் தே³வ தே³வ ॥ 10॥

உத்தப்தாத்யுத்கடத்விட் ப்ரகடகடகட த்⁴வாநஸங்க⁴ட்டநோத்³யத்³
வித்³யுத்³வ்யூட⁴ஸ்பு²லிங்க³ ப்ரகர விகிரணோத்க்வாதி²தே பா³தி⁴தாங்கா³ந் ।
உத்³கா³ட⁴ம்பாத்யமாநா தமஸி தத இத: கிங்கரை: பங்கிலேதே
பங்க்திர்க்³ராவ்ணாம் க³ரிம்ணாம் க்³லபயதி ஹி ப⁴வத்³வேஷிணோ வித்³வதா³த்³ய
॥ 11॥
அஸ்மிந்நஸ்மத்³கு³ரூணாம் ஹரிசரண சிரத்⁴யாந ஸந்மங்க³ளாநாம்
யுஷ்மாகம் பார்ஷ்வபூ⁴மிம் த்⁴ரு’தரணரணிக: ஸ்வர்கி³ஸேவ்யாம்ப்ரபந்ந: ।
யஸ்தூதா³ஸ்தே ஸ ஆஸ்தேऽதி⁴ப⁴வமஸுலப⁴ க்லேஶ நிர்மூகமஸ்த
ப்ராயாநந்த³ம் கத²ம் சிந்நவஸதி ஸததம் பஞ்சகஷ்டேऽதிகஷ்டே ॥ 12॥
க்ஷுத் க்ஷாமாந் ரூக்ஷரக்ஷோ ரத³க²ரநக²ர க்ஷுண்ணவிக்ஷோபி⁴தாக்ஷாந்
ஆமக்³நாநாந்த⁴கூபே க்ஷுரமுக²முக²ரை: பக்ஷிபி⁴ர்விக்ஷதாங்கா³ந் ।
பூயாஸ்ரு’ந்மூத்ர விஷ்டா² க்ரிமிகுலகலிலேதத்க்ஷணக்ஷிப்த ஶக்த்யாத்³யஸ்த்ர
வ்ராதார்தி³தாந் ஸ்த்வத்³விஷ உபஜிஹதே வஜ்ரகல்பா ஜலூகா: ॥ 13॥
மாதர்மேமாதரிஶ்வந் பிதரதுலகு³ரோ ப்⁴ராதரிஷ்டாப்தப³ந்தோ⁴
ஸ்வாமிந்ஸர்வாந்தராத்மந்நஜரஜரயித: ஜந்மம்ரு’த்யாமயாநாம் ।
கோ³விந்தே³ தே³ஹிப⁴க்திம் ப⁴வதிச ப⁴க³வந்நூர்ஜிதாம் நிர்நிமித்தாம்
நிர்வ்யாஜாம் நிஶ்சலாம் ஸத்³கு³ணக³ண ப்³ரு’ஹதீம் ஶாஶ்வதீமாஶுதே³வ ॥ 14॥
விஷ்ணோரத்த்யுத்தமத்வாத³கி²லகு³ணக³ணைஸ்தத்ர ப⁴க்திங்க³ரிஷ்டா²ம்
ஸம்ஶ்லிஷ்டே ஶ்ரீத⁴ராப்⁴யாமமுமத² பரிவாராத்மநா ஸேவகேஷு ।
ய: ஸந்த⁴த்தே விரிஞ்சி ஶ்வஸந விஹக³பாநந்த ருத்³ரேந்த்³ர பூர்வே
ஷ்வாத்⁴யாயம்ஸ்தாரதம்யம் ஸ்பு²டமவதி ஸதா³ வாயுரஸ்மத்³கு³ருஸ்தம் ॥ 15॥
தத்த்வஜ்ஞாந் முக்திபா⁴ஜ: ஸுக²யிஸி ஹி கு³ரோ யோக்³யதாதாரதம்யாத்
ஆத⁴த்ஸே மிஶ்ரபு³த்³தி⁴ம் ஸ்த்ரிதி³வநிரயபூ⁴கோ³சராந்நித்யப³த்³தா⁴ந் ।
தாமிஸ்ராந்தா⁴தி³காக்²யே தமஸிஸுப³ஹுலம் து:³க²யஸ்யந்யதா²ஜ்ஞாந்
விஷ்ணோராஜ்ஞாபி⁴ரித்த²ம் ஶ்ரு’தி ஶதமிதிஹாஸாதி³ சாகர்ணயாம: ॥ 16॥
வந்தே³ऽஹம் தம் ஹநூமாநிதி மஹிதமஹாபௌருஷோ பா³ஹுஶாலி
க்²யாதஸ்தேऽக்³ர்யோऽவதார: ஸஹித இஹ ப³ஹுப்³ரஹ்மசர்யாதி³ த⁴ர்மை: ।
ஸஸ்நேஹாநாம் ஸஹஸ்வாநஹரஹரஹிதம் நிர்த³ஹந் தே³ஹபா⁴ஜாம்
அம்ஹோமோஹாபஹோ ய: ஸ்ப்ரு’ஹயதி மஹதீம் ப⁴க்திமத்³யாபி ராமே ॥ 17॥

ப்ராக்பஞ்சாஶத்ஸஹஸ்ரைர்வ்யவஹிதமஹிதம் யோஜநை: பர்வதம் த்வம்
யாவத்ஸஞ்ஜீவநாத்³யௌஷத⁴ நிதி⁴மதி⁴கப்ராணலங்காமநைஷி: ।
அத்³ராக்ஷீது³த்பதந்தம் தத உத கி³ரிமுத்பாடயந்தம் க்³ரு’ஹீத்வா
யாந்தம் கே² ராக⁴வாங்க்⁴ரௌ ப்ரணதமபி ததை³கக்ஷணே த்வாம்ஹிலோக: ॥ 18॥
க்ஷிப்த: பஶ்சாத்ஸத்ஸலீலம் ஶதமதுலமதே யோஜநாநாம் ஸ
உச்சஸ்தாவத்³விஸ்தார வம்ஶ்ச்யாபி உபலலவைவ வ்யக்³ரபு³த்³த்⁴யா த்வயாத: ।
ஸ்வஸ்வஸ்தா²நஸ்தி²தாதி ஸ்தி²ரஶகல ஶிலாஜால ஸம்ஶ்லேஷ நஷ்ட
சே²தா³ங்க: ப்ராகி³வாபூ⁴த் கபிவரவபுஷஸ்தே நம: கௌஶலாய ॥ 19॥
த்³ரு’ஷ்ட்வா த்³ரு’ஷ்டாதி⁴போர: ஸ்பு²டிதகநக ஸத்³வர்ம க்⁴ரு’ஷ்டாஸ்தி²கூடம்
நிஷ்பிஷ்டம் ஹாடகாத்³ரி ப்ரகட தட தடாகாதி ஶங்கோ ஜநோऽபூ⁴த் ।
யேநாஜௌ ராவணாரிப்ரியநடநபடுர்முஷ்டிரிஷ்டம் ப்ரதே³ஷ்டும்
கிம்நேஷ்டே மே ஸ தேऽஷ்டாபத³கட கதடித்கோடி பா⁴ம்ரு’ஷ்ட காஷ்ட:² ॥ 20॥
தே³வ்யாதே³ஶ ப்ரணீதி த்³ரு’ஹிண ஹரவராவத்³ய ரக்ஷோ விகா⁴தா
ऽத்³யாஸேவோத்³யத்³த³யார்த்³ர: ஸஹபு⁴ஜமகரோத்³ராமநாமா முகுந்த:³ ।
து³ஷ்ப்ராபே பாரமேஷ்ட்²யே கரதலமதுலம் மூர்தி⁴விந்யஸ்ய த⁴ந்யம்
தந்வந்பூ⁴ய: ப்ரபூ⁴த ப்ரணய விகஸிதாப்³ஜேக்ஷணஸ்த்வேக்ஷமாண: ॥ 21॥
ஜக்⁴நேநிக்⁴நேநவிக்⁴நோ ப³ஹுலப³லப³கத்⁴வம்ஸ நாத்³யேநஶோசத்
விப்ராநுக்ரோஶ பாஶைரஸு வித்⁴ரு’தி ஸுக²ஸ்யைகசக்ராஜநாநாம் ।
தஸ்மைதேதே³வ குர்ம: குருகுலபதயே கர்மணாசப்ரணாமாந்
கிர்மீரம் து³ர்மதீநாம் ப்ரத²மம் அத² ச யோ நர்மணா நிர்மமாத² ॥ 22॥
நிர்ம்ரு’த்³நந்நத்ய யத்நம் விஜரவர ஜராஸந்த⁴ காயாஸ்தி²ஸந்தீ⁴ந்
யுத்³தே⁴ த்வம் ஸ்வத்⁴வரே வாபஶுமிவத³மயந் விஷ்ணு பக்ஷத்³விடீ³ஶம் ।
யாவத்ப்ரத்யக்ஷ பூ⁴தம் நிகி²லமக²பு⁴ஜம் தர்பயாமாஸிதா²ஸௌ
தாவத்யாயோஜி த்ரு’ப்த்யாகிமுவத³ ப⁴க⁴வந் ராஜஸூயாஶ்வமேதே⁴ ॥ 23॥
க்ஷ்வேலாக்ஷீணாட்டஹாஸஹம் தவரணமரிஹந்நுத்³க³தோ³த்³தா³மபா³ஹோ:
ப³ஹ்வக்ஷௌஹிண்ய நீகக்ஷபண ஸுநிபுணம் யஸ்ய ஸர்வோத்தமஸ்ய ।
ஶுஷ்ரூஶார்த²ம் சகர்த² ஸ்வயமயமத² ஸம்வக்துமாநந்த தீர்த²
ஶ்ரீமந்நாமந்ஸமர்த²ஸ்த்வமபி ஹி யுவயோ: பாத³பத்³மம் ப்ரபத்³யே ॥ 24॥
த்³ரு’ஹ்யந்தீம்ஹ்ரு’த்³ரு’ஹம் மாம் த்³ரு’தமநில ப³லாத்³ராவயந்தீமவித்³யா
நித்³ராம்வித்³ராவ்ய ஸத்³யோ ரசநபடுமதா²பாத்³யவித்³யாஸமுத்³ர ।

வாக்³தே³வீ ஸா ஸுவித்³யா த்³ரவிணத³ விதி³தா த்³ரௌபதீ³ ருத்³ரபத்ந்யாத்
உத்³ரிக்தாத்³ராக³ப⁴த்³ரா த்³ரஹயது த³யிதா பூர்வபீ⁴மாஜ்ஞயாதே ॥ 25॥
யாப்⁴யாம் ஶுஶ்ரூஷுராஸீ: குருகுல ஜநநே க்ஷத்ரவிப்ரோதி³தாப்⁴யாம்
ப்³ரஹ்மப்⁴யாம் ப்³ரு’ம்ஹிதாப்⁴யாம் சிதஸுக² வபுஷா க்ரு’ஷ்ணநாமாஸ்பதா³ப்⁴யாம்

நிர்பே⁴தா³ப்⁴யாம் விஶேஷாத்³விவசந விஶயாப்⁴யாமுபா⁴ப்⁴யாமமூப்⁴யாம்
துப்⁴யம் ச க்ஷேமதே³ப்⁴ய: ஸரிஸிஜவிலஸல்லோசநேப்⁴யோ நமோऽஸ்து ॥ 26॥
க³ச்ச²ந் ஸௌக³ந்தி⁴கார்த²ம் பதி² ஸ ஹநுமத: புச்ச²மச்ச²ஸ்ய
பீ⁴ம: ப்ரோத்³த⁴ர்தும் நாஶகத்ஸ த்வமுமுருவபுஷா பீ⁴ஷயாமாஸ சேதி ।
பூர்ணஜ்ஞாநௌஜஸோஸ்தே கு³ருதமவபுஷோ: ஶ்ரீமதா³நந்த³தீர்த²
க்ரீடா³மாத்ரம் ததே³தத் ப்ரமத³த³ ஸுதி⁴யாம் மோஹக த்³வேஷபா⁴ஜாம் ॥ 27॥
ப³ஹ்வீ: கோடீரடீக: குடலகடுமதீநுத்கடாடோப கோபாந்
த்³ராக்சத்வம் ஸத்வரத்வாச்சரணத³ க³த³யா போத²யாமாஸிதா²ரீந் ।
உந்மத்²யா தத்த்²ய மித்²யாத்வ வசந வசநாந் உத்பத²ஸ்தா²ம்ஸ்ததா²ऽயாந்
ப்ராயச்ச:² ஸ்வப்ரியாயை ப்ரியதம குஸுமம் ப்ராண தஸ்மை நமஸ்தே ॥ 28॥
தே³ஹாது³த்க்ராமிதாநாமதி⁴பதி ரஸதாமக்ரமாத்³வக்ரபு³த்³தி:⁴
க்ருத்³த:⁴ க்ரோதை⁴கவஶ்ய: க்ரிமிரிவ மணிமாந் து³ஷ்க்ரு’தீ நிஷ்க்ரியார்த²ம் ।
சக்ரே பூ⁴சக்ரமேத்ய க்ரகசமிவ ஸதாம் சேதஸ: கஷ்டஶாஸ்த்ரம்
து³ஸ்தர்கம் சக்ரபாணேர்கு³ணக³ண விரஹம் ஜீவதாம் சாதி⁴க்ரு’த்ய ॥ 29॥
தத்³து³த்ப்ரேக்ஷாநுஸாராத்கதிபய குநரைராத்³ரு’தோऽந்யைர்விஸ்ரு’ஷ்டோ
ப்³ரஹ்மாஹம் நிர்கு³ணோऽஹம் விதத²மித³மிதி ஹ்யேஷபாஶண்ட³வாத:³ ।
தத்³யுக்த்யாபா⁴ஸ ஜால ப்ரஸர விஷதரூத்³தா³ஹத³க்ஷப்ரமாண
ஜ்வாலாமாலாத⁴ரோऽக்³நி: பவந விஜயதே தேऽவதாரஸ்த்ரு’தீய: ॥ 30॥
ஆக்ரோஶந்தோநிராஶா ப⁴யப⁴ர விவஶஸ்வாஶயாச்சி²ந்நத³ர்பா
வாஶந்தோ தே³ஶநாஶஸ்விதி ப³த குதி⁴யாம் நாஶமாஶாத³ஶாऽஶு ।
தா⁴வந்தோऽஶ்லீலஶீலா விதத² ஶபத² ஶாபா ஶிவா: ஶாந்த ஶௌர்யா:
த்வத்³வ்யாக்²யா ஸிம்ஹநாதே³ ஸபதி³ த³த்³ரு’ஶிரே மாயி கோ³மாயவஸ்தே ॥ 31॥
த்ரிஷ்வப்யேவாவதாரேஷ்வரிபி⁴ரபக்⁴ரு’ணம் ஹிம்ஸிதோநிர்விகார:
ஸர்வஜ்ஞ: ஸர்வஶக்தி: ஸகலகு³ணக³ணாபூர்ண ரூபப்ரக³ல்ப:⁴ ।
ஸ்வச்ச:² ஸ்வச்ச²ந்த³ ம்ரு’த்யு: ஸுக²யஸி ஸுஜநம் தே³வகிம் சித்ரமத்ர த்ராதா யஸ்ய த்ரிதா⁴மா ஜக³து³தவஶக³ம் கிங்கரா: ஶங்கராத்³யா: ॥ 32॥
உத்³யந்மந்த³ஸ்மித ஶ்ரீர்ம்ரு’து³ மது⁴மது⁴ராலாப பீயூஷதா⁴ரா
பூராஸேகோபஶாந்தா ஸுக²ஸுஜந மநோலோசநா பீயமாநம் ।
ஸந்த்³ரக்ஷ்யேஸுந்த³ரம் ஸந்து³ஹதி³ஹ மஹதா³நந்த³ம் ஆநந்த³தீர்த²
ஶ்ரீமத்³வக்தேந்த்³ரு பி³ம்ப³ம் து³ரதநுது³தி³தம் நித்யதா³ஹம் கதா³நு ॥ 33॥
ப்ராசீநாசீர்ண புண்யோச்சய சதுரதராசாரதஶ்சாருசித்தாந்
அத்யுச்சாம் ரோசயந்தீம் ஶ்ரு’திசித வசநாம்ஶ்ராவ காம்ஶ்சோத்³யசுஞ்சூந் ।
வ்யாக்²யாமுத்கா²த து:³கா²ம் சிரமுசித மஹாசார்ய சிந்தாரதாம்ஸ்தே
சித்ராம் ஸச்சா²ஸ்த்ரகர்தாஶ்சரண பரிசராம் ச்²ராவயாஸ்மாம்ஶ்சகிஞ்சித் ॥ 34॥
பீடே²ரத்நோகபக்ல்ரு’ப்தே ருசிரருசிமணி ஜ்யோதிஷா ஸந்நிஷண்ணம்
ப்³ரஹ்மாணம் பா⁴விநம் த்வாம் ஜ்வலதி நிஜபதே³ வைதி³காத்³யா ஹி வித்³யா: ।
ஸேவந்தே மூர்திமத்ய: ஸுசரிதசரிதம் பா⁴தி க³ந்த⁴ர்வ கீ³தம்
ப்ரத்யேகம் தே³வஸம்ஸத்ஸ்வபி தவ ப⁴க⁴வந்நர்திதத்³த்³யோவதூ⁴ஷு ॥ 35॥
ஸாநுக்ரோஷைரஜஸ்ரம் ஜநிம்ரு’தி நிரயாத்³யூர்மிமாலாவிலேऽஸ்மிந்
ஸம்ஸாராப்³தௌ⁴நிமக்³நாம்ஶரணமஶரணாநிச்ச²தோ வீக்ஷ்யஜந்தூந் ।
யுஷ்மாபி:⁴ ப்ர்ராதி²த: ஸந் ஜலநிதி⁴ஶயந: ஸத்யவத்யாம் மஹர்ஷே:
வ்யக்தஶ்சிந்மாத்ர மூர்திநக²லு ப⁴க³வத: ப்ராக்ரு’தோ ஜாது தே³ஹ: ॥ 36॥
அஸ்தவ்யஸ்தம் ஸமஸ்தஶ்ரு’தி க³தமத⁴மை: ரத்நபூக³ம் யதா²ந்தை:⁴
அர்த²ம் லோகோபக்ரு’த்யை: கு³ணக³ணநிலய: ஸூத்ரயாமாஸ க்ரு’த்ஸ்நம் ।
யோऽஸௌ வ்யாஸாபி⁴தா⁴நஸ்தமஹமஹரஹ: ப⁴க்திதஸ்த்வத்ப்ரஸாதா³த்
ஸத்³யோ வித்³யோபலப்³த்⁴யை கு³ருதமமகு³ரும் தே³வதே³வம் நமாமி ॥ 37॥
ஆஜ்ஞாமந்யைரதா⁴ர்யாம் ஶிரஸி பரிஸரத்³ரஶ்மி கோடீரகோடௌ
க்ரு’ஷ்ணஸ்யாக்லிஷ்ட கர்மாத³த⁴த³நு ஸராணாத³ர்தி²தோ தே³வஸங்கை:⁴ ।
பூ⁴மாவாக³த்ய பூ⁴மந்நஸுகரமகரோர்ப்³ரஹ்மஸூத்ரஸ்ய பா⁴ஷ்யம்
து³ர்பா⁴ஷ்யம் வ்யாஸ்யத³ஸ்யோர்மணிமத உதி³தம் வேத³ஸத்³யுக்திபி⁴ஸ்த்வம் ॥
38॥
பூ⁴த்வாக்ஷேத்ரே விஶுத்³தே⁴ த்³விஜக³ணநிலயே ரௌப்யபீடா²பி⁴தா⁴நே
தத்ராபி ப்³ரஹ்மஜாதிஸ்த்ரிபு⁴வந விஶதே³ மத்⁴யகே³ஹாக்²ய கே³ஹே ।
பாரிவ்ராஜ்யாதி⁴ ராஜ: புநரபி ப³த³ரீம் ப்ராப்ய க்ரு’ஷ்ணம் ச நத்வா
க்ரு’த்வா பா⁴ஷ்யாணி ஸம்யக் வ்யதநுத ச ப⁴வாந் ப⁴ரதார்த²ப்ரகாஶம் ॥ 39॥

வந்தே³ தம் த்வாம் ஸுபூர்ண ப்ரமதிமநுதி³நா ஸேவிதம் தே³வவ்ரு’ந்தை:³
வந்தே³ வந்தா³ருமீஶே ஶ்ரிய உத நியதம் ஶ்ரீமதா³நந்த³தீர்த²ம் ।
வந்தே³ மந்தா³கிநீ ஸத்ஸரித³மல ஜலாஸேக ஸாதி⁴க்ய ஸங்க³ம்
வந்தே³ऽஹம் தே³வ ப⁴க்த்யா ப⁴வ ப⁴ய த³ஹநம் ஸஜ்ஜநாந்மோத³யந்தம் ॥ 40॥
ஸுப்³ரஹ்மண்யாக்²ய ஸூரே: ஸுத இதி ஸுப்⁴ரு’ஶம் கேஶவாநந்த³தீர்த²
ஶ்ரீமத்பாதா³ப்³ஜ ப⁴க்த: ஸ்துதிமக்ரு’த ஹரேர்வாயுதே³வஸ்ய சாஸ்ய ।
த்வத்பாதா³ர்சாத³ரேண க்³ரதி²த பத³ல ஸந்மாலயா த்வேதயாயே
ஸம்ராத்⁴யாமூநமந்தி ப்ரததமதிகு³ணா முக்திமேதே வ்ரஜந்தி ॥ 41॥
இதி ஶ்ரீத்ரிவிக்ரமபண்டி³தாசார்ய விரசிதம்
ஶ்ரீஹரிவாயுஸ்துதி: ஸம்பூர்ணம் ।

॥ அத² ஶ்ரீ நக²ஸ்துதி: ॥
பாந்த்வஸ்மாந் புருஹூதவைரி ப³லவந்மாதங்க³ மாத்³யத்³க⁴டா
கும்போ⁴ச்சாத்³ரி விபாடநாதி⁴கபடு ப்ரத்யேக வஜ்ராயிதா: ।
ஶ்ரீமத்கண்டீ²ரவாஸ்ய ப்ரதத ஸுநக²ரா தா³ரிதாராதிதூ³ர
ப்ரத்³த்⁴வஸ்தத்⁴வாந்த ஶாந்த ப்ரவிதத மநஸா பா⁴விதாநாகிவ்ரு’ந்தை:³ ॥ 1॥
லக்ஷ்மீகாந்த ஸமந்ததோऽபிகலயந் நைவேஶிதுஸ்தே ஸமம்
பஶ்யாம்யுத்தம வஸ்து தூ³ரதரதோபாஸ்தம் ரஸோயோऽஷ்டம: ।
யத்³ரோஶோத்கர த³க்ஷ நேத்ர குடில: ப்ராந்தோத்தி²தாக்³நி ஸ்பு²ரத்
க²த்³யோதோபம விஸ்பு²லிங்க³ப⁴ஸிதா ப்³ரஹ்மேஶஶக்ரோத்கரா: ॥ 2॥
இதி ஶ்ரீமதா³நந்த³தீர்த²ப⁴க³வத்பாதா³சார்யவிரசிதம்
ஶ்ரீந்ரு’ஸிம்ஹநக²ஸ்துதி: ஸம்புர்ணம் ।
॥ பா⁴ரதீரமணமுக்²யப்ராணாந்தர்க³த ஶ்ரீக்ரு’ஷ்ணார்பணமஸ்து ॥
வாயுர்பீ⁴மோ பீ⁴மநாதோ³ மஹூஜா: ஸர்வேஶாம் ச ப்ராணிநாம் ப்ராணபூ⁴த: ।
அநாவ்ரு’த்திர்தே³ஹிநாம் தே³ஹபாதே தஸ்மாத்³வாயுர ்தே³வதே³வோ விஶிஷ்ட: ॥ ॥
ஜ்ஞாநே விராகே³ ஹரிப⁴க்திபா⁴வே த்⁴ரு’திஸ்தி²திப்ராணப³லேஷி யோகே³ ।
பு³த்³தௌ⁴ ச நாந்யோ ஹநுமத்ஸமாந: புமாந் கதா³சித் க்வசகஶ்ச நைவ ॥ ॥
வாதேந குந்த்யாம் ப³லவாந் ஸ ஜாத: ஶூரஸ்தபஸ்வீ த்³விஷதாம் நிஹந்தா ।
ஸத்யே ச த⁴ர்மே ச ரத: ஸதை³வ பராக்ரமே ஶத்ருபி⁴ரப்ரத்⁴ரு’ஷ்ய: ॥ ॥

யோ விப்ரலம்ப⁴விபரீதமதிப்ரபூ⁴தாந் வாதா³ந்நிரஸ்த க்ரு’தவாந்பு⁴வி தத்த்வவாத³ம் ।
ஸர்வேஶ்வரோ ஹரிரிதி ப்ரதிபாத³யந்தமாநந்த³தீர்த² முநிவர்யமஹம் நமாமி ॥ ॥
யஸ்ய த்ரீண்யுதி³தாநி வேத³வசநே ரூபாணி தி³வ்யாந்யலம் ।
ப³ட் தத்³த³ர்ஶநமித்த²மேவ நிஹிதம் தே³வஸ்ய ப⁴ர்கோ³ மஹத் ।
வாயோ ராமவசோநயம் ப்ரத²மகம் ப்ரு’க்ஷோ த்³விதீயம் வபு: ।
மத்⁴வோ யத்து த்ரு’தீயமேதத³முநா க்³ரந்த:² க்ரு’த: கேஶவே ॥ ॥
மஹாவ்யாகரணாம்போ⁴தி⁴ மந்த²மாநஸமந்த³ரம் ।
கவயந்தம் ராமகீர்த்யா ஹநூமந்தமுபாஸ்மஹே ॥ ॥
ப்³ரஹ்மாந்தா கு³ரவ: ஸாக்ஷாதி³ஷ்டம் தை³வம் ஶ்ரிய: பதி: ।
ஆசார்யா: ஶ்ரீமதா³சார்யா: ஸந்து மே ஜந்ம ஜந்மநி ॥ ॥
ப்ரத²மோ ஹநுமாந்நாமா த்³விதீயோ பீ⁴ம ஏவ ச ।
பூர்ணப்ரஜ்ஞ த்ரு’தீயஸ்து ப⁴க³வத்கார்யஸாத⁴க: ॥ ॥
முக்²யப்ராணாய பீ⁴மாய நமோ யஸ்ய பு⁴ஜாந்தரம் ।
நாநா வீரஸுவர்ணாநாம் நிகஷாஶ்மாயிதம் ப³பௌ⁴ ॥ ॥
ஸ்வாந்தஸ்தா²நந்தஶையாய பூர்ணஜ்ஞாநரஸார்ணஸே ।
உத்துங்க³வாக்தரங்கா³ய மத்⁴வது³க்³தா⁴ப்³த⁴யே நம: ॥ ॥
யேநாஹம் இஹ து³ர்மார்கா³த் உத்³த்⁴ரு’த்யாதி³ நிவேஶித: ।
ஸம்யக் ஶ்ரீவைஷ்ணவே மார்கே³ பூர்ணப்ரஜ்ஞம் நமாமி தம் ॥ ॥
ஹநூமாநஞ்ஜநாஸூநு: வாயுபுத்ரோ மஹாப³ல: ।
ராமேஷ்ட: ப²ல்கு³ணஸக:² பிங்கா³க்ஷோऽமிதவிக்ரம: ॥ ॥
உத³தி⁴க்ரமணஶ்சைவ ஸீதாஸந்தே³ஶஹாரக: ।
லக்ஷ்மணப்ராணதா³தா ச த³ஶக்³ரீவஸ்ய த³ர்பஹா ॥ ॥
மாருதி: பாண்ட³வோ பீ⁴மோ க³தா³பாணிர்வ்ரு’கோத³ர: ।
கௌந்தேய: க்ரு’ஷ்ணதூ³தஶ்ச பீ⁴மஸேநோ மஹாப³ல: ॥ ॥
ஜராஸந்தா⁴ந்தகோ வீரோ து:³ஶாஸந விநாஶந: ।
பூர்ணப்ரஜ்ஞோ ஜ்ஞாநதா³தா மத்⁴வோ த்⁴வஸ்த து³ராக³ம: ॥ ॥
தத்த்வஜ்ஞோ வைஷ்ணவாசார்யோ வ்யாஸஶிஷ்யோ யதீஶ்வர: ॥ ॥
ஶுப⁴தீர்தா²பி⁴தா⁴நஶ்ச ஜிதாமித்ரோ ஜிதேந்த்³ரிய: ।

ஶ்ரீமதா³நந்த³ ஸந்நாம்நாமேவ த்³வாத³ஶகம் ஜபேத் ।
லப⁴தே வைஷ்ணவீம் ப⁴க்திம் கு³ருப⁴க்தி ஸமந்விதம் ॥ ॥
மநோஜவம் மாருததுல்யவேக³ம் ஜிதேந்த்³ரியம் பு³த்³தி⁴மதாம் வரிஷ்ட²ம் ।
வாதாத்மஜம் வாநரயூத²முக்²யம் ஶ்ரீராமதூ³தம் ஶிரஸா நமாமி ॥ ॥
பு³த்³தி⁴ர்ப³லம் யஶோ தை⁴ர்யம் நிர்ப⁴யத்த்வம் அரோக³தா ।
அஜாட்³யம் வாக்படுத்த்வம் ச ஹநூமத்ஸ்மரணத்³ப⁴வேத் ॥ ॥
ந மாத⁴வஸமோ தே³வோ ந ச மத்⁴வ ஸமோ கு³ரு: ।
ந தத்³வாக்யஸமம் ஶாஸ்த்ரம் ந ச தஸ்ய ஸம: புமாந் ॥ ॥
பீ⁴மஸேந ஸமோ நாஸ்தி ஸேநயோருப⁴யோரபி ।
பாண்டி³த்யேச படுத்வே ச ஶூரத்வே ச ப³லேபி ச ॥ ॥
ஆசார்ய: பவநோऽஸ்மாகம் ஆசார்யாணீ ச பா⁴ரதீ ।
தே³வோ நாராயண: ஶ்ரீஶ: தே³வீ மங்க³ள தே³வதா ॥ ॥
இதி த்ரிவிக்ரமபண்டி³தாசார்யவிரசிதா வாயுஸ்துதி: ஸமாப்தா ।

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-