Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீமத் வரவர முநீந்த்ர ஷட்சதி-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -ஸ்ரீராமாநுஜன் 263-265-ஸ்ரீராமாநுஜன்-277-

July 8, 2025

ஸ்ரீராமாநுஜன் 263-265—30/58-ஸாதாரண ஐப்பசித் திருமூல மலர்-3-11-1970.

ஸ்ரீ சைலேச தயா பாத்ர ஸ்தோத்ரம்

இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரக்ரியை எப்படிப்பட்ட தென்றல்; ஸ்ரீசைலேச என்பதற்கு,
சகார -ரேப – ஈகார சகார -ஐகார, லகார-ஏகார, சகரர அகார-என்று வர்ண க்ரமம் சொல்லுவோம்; இதே ரீதியில் ஸ்ரீசைலேசதயாபாத்ர சுலோகத்திற்கு வர்ண க்ரம அடைவில்
ஒவ்வோரெழுத்தை ஆதியாக வைத்து
: இந்த ஸ்தோத்திரம் அமைக்கப் பட்டிருக்கிறது.

1-(சம் நேர மித்ர )* சம்நோ மித்ர: * என்றும் * சம்நோ பவத்வர்யமா-என்றும் சொல்லுமவர்கள் அப்படியே சொல்லிக் கொண்டிருக்கட்டும் : அடியேனுக்கு அத்தகைய உக்திகளில் சிறிதும் ஆஸ்தையில்லை ;* சம் நோ ரம்ய வரோ பயந்த்ரு யமிராட் பூயாத் * [மணவாள மாமுளிகளே நமக்கு க்ஷேமங்கரராகக் கடவர் என்னுமிந்த ருக்கையே எனது நாக்கு அநவரதம் ஆவ்ருத்தி செய்யும்.

2-( ரங்கம் ரங்கம். ) *ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத் க்ஷதப்ரஸ்கல நாதி *என்கிற சாஸ்திரத்தை யடி யொற்றி இருமல் தும்மல்களில் ரங்கம் ரங்கமென்பாரும், ஆசார்ய நாம ஸங்கீர்த்தனமே உத்தேச்ய மென்று கொண்டு ராமாநுஜ! என்பாரும், கேசவா மாதவா ! ! என்று பகவந் நாம கீர்த்தநம் பண்ணுவாரும் இவ்வுலகில் பலர் இருக்கட்டும். அப்படிப்பட்ட கீர்த்தனங்கள் என் காதில் விழவே வேண்டா: மணவாளமாமுனிகளென்கிற திருநாமமே எனக்குக் கர்ணாமிருதமாகும்.

3-(ஈசாநோபி ) ‘சிவன் பிரமன் இந்திரன் ஸூர்யன் இவர்கள் ஒருவரும் தெய்வமன்று,ஸ்ரீமந் நாராயணனே பரதெய்வம்” என்று வைதிகர்களின் ஸித்தாந்த மிருந்தாலும் அடியேனுள்ளத்திற் பதிந்த ஸித்தாந்தம் மணவாளமாமுனிகளே பரதெய்வமென்பதாம்.

4-(சத்தோநைவ ) எம்பெருமானே பரதெய்வமென்று கொண்டாடப்பட்டாலும் அப்பெருமான் செவிக்கினிய செஞ்சொற்களாலே விவேகிகளின் மனத்தைக் கவர வல்லவனல்லன்: ஏன்? ஸ்ரீ விஷ்ணு புராணம் பகவத்கீதை முதலியவற்றில் அப்பெருமானருளிச் செய்த திவ்ய கூக்திகள் பல இல்லையோ வென்னில் வ்யாஸ பராசராதி மஹர்ஷிகள் எதையோ எழுதிவைத்து பகவத்வாக்யமாக நம்மை வஞ்சிக்கிறார்களத்தனை;மணவாளமாமுனிகளோ வென்னில் அப்படி யல்லாமல் நேராகத் திருவவதரித்தருளி அமுதமன்ன மென்மொழிகளைத் தாமே யருளிச்செய்து அறிஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றார்.

5-(ஐஸ்வர்யம் ) சிலர் லக்ஷ்மீ கடாக்ஷத்தாலாகும் சிறிது செல்வத்தைப் பெற்றுத் தங்களை ஒப்பற்றவர்களாக மதிக்கின்றார்கள்; அந்த அழியுஞ் செல்வத்தினால் என்னாகும்? உபயவிபூதியிலும் நித்யபோக்யமும் எல்லை யற்றதுமான நிதி அடியேனுக்குக் கிடைத்திருக்கின்றது; அந்த நிதிக்கு மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியென்று பெயர்; அப்படிப்பட்ட நிதியைப் பெற்றுள்ள அடியேனே மிகவும் தன்யன்

6-(லக்ஷ்மீச:) எம்பெருமான் முன்பு இராமபிரானாயும் கண்ணபிரானாயும்.அவதரித்து விச்வாமித்ரர் ஸாந்தீபிநி போல்வாரிடத்தில் சிஷ்யனாயிருந்து, அவர்கள்
ஜிதேந்த்ரியர்களன்றிக்கே நித்ய ஸம்ஸாரிகளா யிருக்கும்படியைப் பிறகு தெரிந்து
கொண்டு அந்தோ! ஆசார்யத்வ பூர்த்தியில்லாத இவர்களையா நாம் ஆசார்யராக
வரித்தோமென்று எம்பெருமான் திருவுள்ளம் வெறுப்புற்றே யிருந்தது. அக்குறையை அர்ச்சாவதாரத்தில் தீர்த்துக்கொள்ள விரும்பி ஒரு நாளும் விடவொண்ணாத ஆசார்யரைப் பெற விரும்பி ஆசார்யத்வ பூர்த்தியுடைய மணவாளமாமுனிகளை ஆசார்யராக வரித்து க்ருதக்ருத்யனாயினன்.

7-(ஏஷஸ்ரீவரயோகி.) மணவாளமாமுனிகளுக்கு விசதவாக் சிகாமணியென்கிற விருது ப்ரஸித்தமானது; உண்மையில் இந்த விருது இவரொருவர்க்கே தகுமேயன்றி மற்றெவர்க்கும் ஏற்காது. ஏனெனில், ஸந்தேஹிக்க இடமில்லாமலும்
விபரீதார்த்தங்கொள்ள வொட்டாமலும் வீண்வம்புவார்த்தைகளுக்குச் சிறிதும்
இடமளிக்காமலும் மிகவும் லலிதமாய் பரமபோக்யமான ஸ்ரீஸுக்திகள் நிரம்பிய வியாக்கியானங்களை அருளிச் செய்தவரென்கிற புகழ் மாமுனிகளுக்கே
அஸாதாரணமாய் விளங்குமதன்றோ.

8-(ஏதத்பத்த்ய.) எனது செவிக்கினியதோர் செஞ்சொல்லைக் கேண்மின்; மண
வாளமாமுனிகளின் மதுரமான ஸ்ரீஸூக்திகளை இடைவிடாது ஸேவித்துப் பாருங்கள்: அவரைப் போன்ற வோராசிரியர் இதுகாறும் இந்நிலவுலகில் அவதரித்ததுண்டா? இனியாகிலும் அவதரிக்க முடியுமா வென்று, நன்மதியுடையீர்! நீங்களேசிறிது சிந்தித்துப்பாருங்கள்

9-(சாந்திர் தாந்தி:) சமம் தமம் முதலிய ஆத்ம குணங்கள் சேதநர்களுக்கு அவசியம் வேண்டியவை யென்றும் அவரவர்கள் தங்கள் நூல்களில் கம்பீரமாக எழுதிவைக்கிறார்கள். ஆனால், அந்தத் திருக்குணங்களுக்குக் கொள்கலமான ஆசிரியர்யாவர்? என்று சிலர்சிந்திக்கப் புகுந்தால் அவர்களின் உள்ளத்தில் மணவாளமாமுனிகளே குடிகொண்டிருக்கக் கூடியவர். மாமுனிகளைப் போன்ற சமதமஸம்பந்நர் வேறொருவருமிலர்.

10-அந்தர்வாணி ) அஸூயை யற்றவித்வான்களை அடிபணிந்து ஒன்று விண்ணப்பம் செய்கிறேன்; நீங்கள் பல பல ஆசாரியர்கள் இயற்றிய பல நூல்களைப் பார்த்திருக்கிறீர்களே; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளிலுள்ள இன்சுவை
எந்த ஆசிரியருடைய திருவாக்கிலாவது கண்டதுண்டா? உள்ளவாறுரையீர்.

11-(தம்பம் கேவலம்) சில ஆசாரியர்கள் தங்கள் வாக்கினால் டம்பத்தை மாத்திரமே வெளியிட்டுக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய வாக்குகளில் பெரும்பாலும்
பரநிந்தை தவிர வேறு என்ன காணமுடியும் ? நீறுபூத்த நெருப்பு என்னும்படியான மணவாளமாமுனிகள் ஒருவரே பரநிந்தாதிதோஷ லேசமுமற்ற பரமபோக்ய ஸ்ரீ ஸூக்திகளை யருளிச்செய்தவர்

12-(அந்தர்மாநஸம்) மற்றையோர்கள், நெஞ்சில் ஒன்றைவைத்துக் கொண்டுவாக்கில் வேறொன்றை வெளியிடுபவர்களாய் நூல்கள் எழுதிப் போருவர்கள்; பெரும்பாலும் அவர்கள் வஞ்சிக்க வல்லவர்கள்; அப்படிப்பட்ட துர்க்குண லேசமும் அற்றவரான மணவாளமாமுனிகள் ஸ்ரீரங்கநாதனுடைய தவப்பயனாகத்தோன்றினவர்:-அவர் எப்போதும் பக்தர்களின் உள்ளத்துள்ளே உறைபவர்.

13( யஸ் ஸர்வஜ்ஞ : ) (இந்தச்லோகத்தில் ஏழு வேற்றுமைகளும் வரிசையாக வரும்படி தொடையழகு காண்க.) எவர் ஸர்ஜ்ஞரென்று புகழ்பெற்றாரோ,எவரை ஸ்ரீரங்கநாதன் ஆசார்யராகக் கொண்டானே,எவரால் ஸ்ரீராமாநுஜதர்சநம் காக்கப்பட்டதோ, எவர் பொருட்டு நமஸ்காரம் நன்மை பயக்குமோ, எவரைக் காட்டிலும் மேம்பட்ட ஆசாரியர் இல்லையோ, எவருடைய தனியன் இவ்வுலகில் எஞ்ஞான்றும் வெற்றி பெற்று விளங்குமோ, எவரிடத்தில் ஸகல திருக் குணங்களும் பொருந்தி யுள்ளனவோ அந்த மணவாளமாமுனிகளைப் போற்றுகிறோம்

14-(ஆகாரம் வர) மணவாளமாமுனிகளின் பாற்கடல் போன்று பரமபோக்யமான திருமேனியை அடியேன் எப்போது ஸேவிக்கப்பெறுவேனென்று நெடுநாளாகக் கண்ணீர் விட்டழுது நைந்து கிடந்தேன்; அங்ஙனே துவண்டு கிடந்த அடியேனுக்கு மாமுனிகள் ஐயோவென்றிரங்கி அருள்செய்த படியை என்சொல்லுவேன்? எனக்குப் பெறாப்பேறு பெறுவித்தவரான அவரே மஹான்.

15-(பத்தயம் கிஞ்சந) காதோடு ஒரு இன்சொல் சொல்லுகேன் கேண்மின்-பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயத்திற்கு மிகச்சிறந்த வியாக்கியானத்தை யருளிச்செய்து தம்முடைய ஸர்வஜ் த்வத்தை விளங்கக் காட்டியருளின மணவாளமாமுனிகளையே அநவரதம் சிந்தை செய்மின் ; வேறுவழியால்
ஜன்மம் க்ருதார்த்தமாக விரகில்லை.

16-(ஆகாசே) சிறுவர்கள் (அவிவேகிகள்) சேற்றையெடுத்து ஆகாசத்தில் விட்டெறிந்தால் என்னாகிற தென்பதை அனைவரும் காணத் தட்டில்லையே.மண வாளமாமுனிகள் விஷயத்திலும் இந்த நியாயமே காணத்தகும். கருவிலே திருவிலாதார் மாமுனிகளின் அமுதமொழிகளில் தூஷணைகளைப் பிதற்றுவது அவர் களுக்கே அநர்த்தத்தை விளைக்குமதாம்.

17-(தம் தம் தேசிகம்) உலகில் புத்திமான்கள் அந்தந்த ஆசாரியரைத் துதிக்கும்போது ” மற்றஆசாரியர்களை விட்டு இவ்வாசிரியரையே தொழுங்கள்” என்று சொல்லுவதுண்டு; அடியேன் மணவாளமாமு களைத் துதிப்பது அந்த முறைமை யில் அல்ல; உண்மையில் மாமுனிகளைத் தவிர வேறு ஆசாரியர் இல்லை யென்று ஆணையிட்டுரைப்பேன்.

18-(ரங்கீ யஸ்ய) ஸ்ரீரங்கநாதன் யாவரொரு மணவாளமாமுனிகளின் திருக் குணங்களை நெடுநாள் ஆராய்ந்து நோக்கி சிஷ்யனானானோ அந்த மாமுனிகளுக்குப் பிறகு வேறொரு ஆசாரியர் இருக்கக் கூடாதென்று அவரோடு ஆசார்ய பரம்பரையை ஸமாப்தி செய்து விட்டான்; (அதாவது)பூருவாசாரியர்கள் என்கிற வியபதேசம் மாமுனிகளோடு முற்றுப்புள்ளி யடைந்திட்டது. இவ்விஷயம் உலகமெல்லாம்அறிந்ததேயாதலால் மாமுனிகளுக்குமேற்பட்ட ஆசார்யார் இல்லையென்று அடியேன் துணிந்து கூறுகின்றேன்.

19-(அத்யாச்சர்ய) பிள்ளைலோகாசார்யரின் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்யஹ்ருதயமென்னும் திவ்ய க்ரந்தத்தை உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகள் வியாக்கியானித்தருளினார்; பரம போக்யமான அந்த வியாக்கியானத்தை இடைவிடாது ஸேவித்தால் ஸர்வஜ்ஞராகப் பெறலாம்.

20-(மத்தாநாமபி) அறிவிலிகளுக்குங்கூட நிகரற்ற ஸந்தோஷத்தை விளைக்கவல்ல பல ஸ்ரீஸூக்திகளைத் தமது நிர்ஹேதுக க்ருபையினாலேயே யளித்து உலகத்தை உய்வித் தருள்பவரான மணவாளமாமுனிகள் திருவாய்மலர்ந்தருளிய யதிரா விம்சதியைக் கண்டபாடம் செய்லு ஸதா அநுஸந்தியுங்கள்.

21-(தந்யாஸ் ஸ்யாம்.) எப்போதும் நாம் பாக்யசாலிகளாகவே யிருக்க வேணு மென்னும் விருப்புடையீர்! கேண்மின் ; மணவாளமாமுனிகளருளிச் செய்த வியாக் கியானத்தோடு கூட ஸ்ரீ வசநபூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆசார்ய ஸந்நிதியில் அடிக்கடி ஸேவியுங்கள்; இதுவே பரமபாக்யம்; இதற்கு மேற்பட்ட பாக்யமில்லை

22-(ஈர்ஷ்யாதுர்க்குண) *பிறர்மினுக்கம் பொறாமையிலாப் பெருமைபெற்றுசமதமக் கடலாக விளங்குகின்ற மணவாளமாமுனிகளை விட்டு வேறொரு ஆசார்யரை ஆசரயிக்கின்றவற்கு என்னத்ரூப்தியுண்டாகும்? அன்னவற்கு ஆயுள் முழுவதிலும் உண்மைப்பொருள்களை யுணர்வதற்கு ப்ரஸக்தியில்லையாகுமன்றே

23-(பங்கோதைவ) மணவாளமாமுனிகளின் தனியனுக்கு இப்பூமண்டலத் தில் ஓரிடத்திலும் ஒருபோதும் பங்கம் விளைவதில்லையென்கிற (இந்தத்தத்துவத்தை நன்கு உணரவல்ல மஹான்களின் மனத்தில்மாமுனிகள் தவிர மற்றொரு ஆசாரியர் திருவடிவைக்கமுடியுமோ? அஸூயை யற்றவர்கள்இதனை ஆராய்ந்துணர்க

24-(அந்யாய்யார்த்த ) சிலர் தங்கள் சுவடிகளில் தப்பான அர்த்தங்களையேகூசாமல் பெரும்பாலும் எழுதிவைத்து, அவ்வளவோடும் நில்லாமல் “இதில் தப்பான அர்த்தம் ஒன்றுகூட இல்லை; எல்லாம் மஹாப்ராமாணிகமான அர்த்தமே எழுதிவைத்தோம்” என்றும் ஊடே யூடேயெழுதி உலகத்தை வஞ்சித்துக் கீர்த்தி பெறுவாருளர் ; அன்னவர்கள் கிடக்க ; மணவாள மாமுனிகளொருவரே பிராமாணிகர்களில் தலைவர்.

25-(கச்சிந்மாமிஹ) கீதையில் கண்ணபிரான் *கச்சிந்மாம் வேத்தி தத்வதஎன்று என்றைக்கோ சொல்லி வைத்தான்; ‘தன்னை யுள்ளபடி யறியவல்லவர்யாரோ வொருவர் ‘ என்று சொன்னஅந்தகீதையின்படி மணவாளமாமுனிகளொருவரே தத்வஜ்ஞராகத் திருவவதரித்தவர் ; அவருடைய ஸ்ரீஸூக்திகளில் ப்ராவண்யமுடையோமுக்கும் தத்வஜ் பாவனை உரியதேயாம்.

26-(தர்க்கவியாகரண . ) தர்க்கம் வியாகரணம் முதலான ஸகல சாஸ்த்ரங்களிலும் நிகரற்ற பாண்டித்யத்தைஸ்பஷ்டமாகக் காட்டவல்ல வியாக்கியானங்ககளை யருளிச் செய்தவரான மணவாளமாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய நிகரில்புகழ் வாய்ந்த முமுக்ஷஎப்படி வியாக்கியானத்தை நெஞ்சே! இடையறாது அநுஸந்திப்பாயாக.

27-(யஸ்ய ஸ்வாது ) தம்முடைய பரமமதுரமான ஸ்ரீஸுக்திகளில் தமது பரம பராமாணிகத்வத்தை விளங்க வைத்தவரும், குடில் புத்தியின்றிக்கே ருபுத்தியா யிருப்பவரும், பிள்ளை யுலகாசிரியருடைய ஸ்ரீஸூக்திகளைக் காக்கவே அவதரித்தவரும், ஸ்ரீரங்கநாதனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவருமான மணவாளமாமுனிகள் எனது உள்ளத்துள்ளே யுறைகின்றார்.

28-(ஆதாவாதி.) முதலில் ஆதிசேஷனாயிருந்து பிறகு இளையபெருமாளாகவும் அதன்பிறகு எம்பெருமானாராகவும் அதற்குப்பிறகு மணவாளமானிகளாகவும் இங்னே அடைவே திருவவதாரமாயிற்றென்று ஸத்துக்கள் உண்மையுணர்ந்துபேசப்பெற்ற மாமுனிகள் அடியேனுடைய அகவிருளைப் போக்கியருளினார்.

29-(த ஸ்ஸந்தி ) ஆச்சரியமான பந்தங்களுடன் கூடின பல கவிதைகளைச்கணப்பொழுதில் இயற்றவல்ல கவிச்ரேஷ்டர்கள் பலர் இவ்வுலகிலுளர் ; இது கிடக்கட்டும். அவற்றால் என்னபயன்? அவையெல்லாம் ஒன்றுகூடினாலும் மணவாளமாமுனிகளின் அமுதமென் மொழிகளில் ஒரு அக்ஷரத்திற்கு இணையாகாவென்பது ஸத்யம்.

30-(இந்தேஸந்ததம்) மணவாளமாமுனிகள் பாற்கடல் போன்ற தமது திருமேனியொளியை என்னெஞ்சினுள்ளே விளங்கக் காட்டியருளா நின்று கொண்டுஸேவைஸாதிக்கின்றார். கனவிலுங் காண வரிதான அத்திருமேனி விளக்கத்தைப் பாவியேன் நனவிற்காணுமாறு அருள்செய்த அதிசயம் என்னே.

31-(கச்ேயம் யதி) ஒருகால் அடியேன் பரமபதத்திற்குச் செல்வேனாயின் அங்கும் மணவாளமாமுனிகளின் திருவடி வாரத்திலேயே ஸகல கைங்கரியங்களையும் செய்துகொண்டு அவருடைய மதுர ஸ்ரீஸுக்திகளையே அநுபவித்துக்கொண்டு
வாழக்கடவேன்; இல்லையாகில் ஜூனர்ய மண்டலத்தைப் பிளந்து கொண்டு மீண்டும்
இந் நிலவுலகுக்கே வந்து விடுவேனென்பது திண்ணம்.

32-(உர்வ்யாமத்ர) இவ்விருள் தருமாஞாலத்தில் பிறப்பு வெறுக்கத்தக்கதென்று பெரியார்கள் கூறுகின்றார்களெனினும் அது அடியேனுக்கு ருசிக்கவில்லை;ஏனெனில், அடியேன் இவ்வுலகில் இருந்துகொண்டும் மணவாள மாமுனிகளின் திவ்யஸுக்தி யமுதத்தையே பருகிக்கொண்டு எப்போதும் ஆனந்தசாலியாகவே யிருக்கிறேனன்றோ! ( துன்பமுண்டானாலன்றோ உலகவாழ்க்கை வெறுக்கதக்கதாம்).

33-(உக்தம் யத் ) நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் “கலியுங்கெடுங் கண்டு கொண்மின்” என்றருளிச் செய்தது எம்பெருமானாரை நோக்கி யென்பர்கள்
அவ்வெம்பெருமானார் தாமே மீண்டும் மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்
தருளிக் கலி வித்வம்ஸநமாகிற ஸ்வக்ருத்யத்தைக் குறையறச் செய்து தலைக்கட்டி
அவ்வாழ்வார் ஸ்ரீஸூக்தியை யதார்த்தமாக்கி யருளினார்.

34-பாணிநி முனியின் சாஸ்த்ரமான வியாகரணத்தில் விபரீதங்கள் பலகாணப் படும்.ந-காரம் ண- காரமாய் மாறிவிடும், ஸ – காரம் ஷ-காரமாய்மாறிவிடும். ப்ர நயதி, ப்ரணயதி வி-ஸஹதே,விஷஹதே. இத்யாதிகள் காண்க. மணவாளமாமுனிகளின் திருவாக்குக்களில் இங்ஙனே ஒரு விபரீதங்கூடக் காணமுடியாது. எதுவும் யதாவத்தாகவேயிருக்கும். இது சாடூக்தி.

35-(ஆவேசம் ) பொய்கையார் முதலான ஆழ்வார்களனைவரும் ஸ்ரீமந்நாதமுனிகள் முதலான ஆசார்யர்களனைவரும் மணவாளமாமுனிகள் பக்கலில் ஆவேசித்தனர் என்னலாம், அல்லது, வடமொழி தென்மொழி மறைகளின் பாக்யஸர்வஸ்வமும் ஒன்றுசேர்ந்து மாமுனிகளாக வடிவு பூண்டு உதித்தது என்று நிஷ்கர்ஷிக்கத்தட்டில்லை.

36-(ரங்காதீச்வர) ஸ்ரீரங்கநாதனுடைய பாக்ய பரம்பரையே மணவாளமாமுனிகளென்கிற திருநாமங் கொண்டு உலகில் அவதரித்தது என்கிற ப்ரதிபத்தியே அடியேனது நெஞ்சில் கொழுந்துவிட்டோங்குகின்றது; இவ்விஷயத்தில் அதிகமான உபபத்தியிருப்பதால் இதுவே திடமான ஸித்தாந்தமாக வடுக்கும்.

37-(ணத்வம்பாததே.)மஹாபண்டிதரென்று புகழ் பெற்ற அப்பயதீக்ஷிதர் நாராயண நாமத்தை சிவபரமாக நயிப்பிக்கவேணுமென்று சிரமப்பட்டு ணத்வம்பாதிக்கிறது ‘ என்றுசொல்லிக் கையொழிந்தார் என்பது ப்ரஸித்தமான விஷயம்;அவர்க்கு ஸ்ரீமந்நாராயணனிடத்தில் இருந்த த்வேஷம் உலகமறிந்ததே.அதனால்நாராயணனுக்கு ஒருகுறைவு நேர்ந்ததாகவில்லை. இதுபோலவே, வித்வான்களென்று பேர் படைத்த பிறர்கள் மணவாளமாமுனிகளிடத்தில் மாச்சரியம் கொண்டாலும் அதனால் குறையொன்றுமில்லை; அன்னவர்கள் படும் பாடு சொல்லவேணுமோ?

38-(அல்பீயா நஹம்) உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகளை பக்தியிற் சிறந்த மஹான்கள் துதிக்கவேணுமே யன்றி நீசனேன் நிறையொன்றுமிலேன் துதிப்பது தகுதியே யன்று; ஆயினும் அடியேன் ஓயாமல் அவரையே துதித் துக்கொண்டிருக்கிறேன்; இதற்காக நான் சிறிதும் வெட்கப்படுகின்றிலேன்; ஏனெனில், மாமுனிகளின் ஸகல வைபவங்களையும் உள்ளபடி யுணர இவ்வுலகினுள் அடி யேனொருவனே பாக்யம் பெற்றேனன்றோ.

39-(வல்லீதுல்ய ) வல்லிசேர்நுண்ணிடை மாதர்களோடு அணைவதனால் இன்பமுள்ள தென்று நீசர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு இன்பமிருக்கலாம்; ஆனால் அது மிகவும் அற்பமானது; ஸ்ரீரங்கநாதனுக்கு ஆசார்யராக அமைந்த மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ஸாகரத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து உலகிலுள்ள ஸகலவித போகங்களாலும் விளையக்கூடிய ஸகலவிதமான இன்பங்களையும் நுகர்வோம் யாம்.

40-(அந்யாந்யேஷு ) உலகில் ஒவ்வொருவர்க்கும் லௌகிகமான பலபலகாரியங்க ளிருப்பதால் அவற்றில் போது போக்கநேர்ந்து அதிசுகாலம் வீணாகவே கழிந்து
போகிறது; மணவாளமாமுனிகளே! அடியேனுக்கு அப்படியல்லாமல் தேவரீருடைய
திவ்யஸ்ரீஸூக்திகளிலேயே ஸகல காலமும் செல்லும்படி அருள்புரிய வேணுமென்று
திருவடிவாரத்தில் வேண்டிக்கொள்கிறேன்.

41-(மஞ்ஜீராஞ்சித.) மாதர்கள் பாதச்சிலம்பு அணிந்துகொண்டு நடந்துசெல்லுமளவில் அச்சிலம்பொலி கேட்டு மயங்கிப்போவாருமுளர்; அதுகிடக்க; மணவாளமாமுகளின் தனியனை கோஷ்டிகளில் உரக்க அநுஸந்திக்கும்போது உண்டாகும் த்வநி விசேஷத்தைக் கேட்குமளவிலே அடியேன் வியாமோஹித்திருக்குமது ஸுப்ரஸித்தம்.

42-(யஸ்ய ஸ்யாநி ) மணவாளமாமுனிகளின் பரமபவித்திரமான திருக் கோலத்தைச் சிந்தைசெய்யும் பாக்கியமுடையார்க்குஎம்பெருமானார் தரிசனத்தில் நல்ல உணர்ச்சி விளையும். ஸகல தத்துவங்களையும் உள்ளபடி யுணரவல்ல யோக்யதை அவர்கட்கே உரியதாகும்

43-(யத்யப்யத்ர) இவ்வுலகில் நம்மாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் பட்டர் முதலான ஆசாரியர்களும் நம்முடைய பக்திக்குப் பாத்திரமாகக் கூடியவர்களாக விளங்குகின்றார் களெனினும்,அடியேனுக்கு விசதவாக்சிகாமணிகளான ம ணவாள மாமுனிகளிடத்தில் மாத்திரமே விலக்ஷணமாய் நவம்நவமான பக்திஒளிர்கின்றது.

44-(அத்வாதம்) மணவாளமாமுனிகள் காட்டியருளின பத்ததியைப் பற்றினவர்களுக்குத் தத்வார்த்தங்களில் தூய நன்மதி விளங்குவது ப்ரஸித்தம்; தெளர்ப்பாக்யவசத்தாலே அந்த நல்வழியில் விமுகராயிருக்குமவர்கள படும்பாட்டை என்சொல்வேன்? அன்னவர்களின் பிறவியே வெறுக்கத்தக்கது.

45-(தந்யாந்திஸ்துல) மணவாளமாமுனிகள் தம்முடைய திவ்ய ஸ்ரீஸுக்தி)களில் விமுகராயிருப்பார்கட்கும் அன்பு உண்டாகும்படி கடாக்ஷித்தருளவேணுமென்று அடியேன் வேண்டிக்கொள்ளுகிறேன். ஏனெனில் ஸ்ரீவைஷ்ணவர்களாகபிறந்து மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளில் மாச்சரியங் கொண்டிருந்தால் அவர்களுக்கு இடையறாத துர்க்கதிகளன்றோ நேரும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு துர்க்கதி நேருவதென்றால் இந்த துக்கம் ஸஹிக்கக் கூடிய தன்றே. ஆகவே, தீயவர்களையும் நல்லவர்களாக்கி யருள்க.

46-ஈஷத்பத்தி:)மண வாளமாமுனிகளின் திருவடிகளில் ஸ்வல்பபக்தியிருந்தாலும், பரமார்த்தங்களை உள்ளபடி உணர் தற்கு அவ்வளவே போதுமானது.இங்ஙனமே மாமுனிகள் திறத்தில் சிறிது மாச்சரியமுண்டானாலும் பல கொடிய நரகங்களில் விழுந்துழல்வதற்கு அவ்வளவேபோதும். அந்தோ! இவ்வுண்மையை அறிந்து வைத்தும் நசித்துப்போக நினைப்பார் பலருளரே!!

47-( நத்வா ஸ்ரீவரயோகி ) அடியேனுடைய தலை மணவாளமாமுனிகளின் திரு வடிகளைத் தொழுது தன்யமாகின்றது. வாக்கு அவருடைய திருக்குணங்களைத் துதித்து க்ருதார்த்தமாகின்றது. உள்ளம் அவருடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்தை செய்து பவித்திரமாகின்றது. கை அவருடைய பரந்த புகழை யெழுதி ஸத்தை பெறுகின்றது.

48-(தத்தேரம்யவர ) மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி உண்மையில் கட லென்னத்தகும். கடல் செய்வதெல்லாம் செய்கின்றது இதுவும். கடல் ஸ்ரீயைத் தந்தது.இந்தக்கடல் பக்தர்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தந்திடுகின்றது. கடல் ரத்னங்களைத் தருகின்றது; இக்கடல் ஸக்குணங்களாகிற ரத்னங்களைத் தருகின்றது. (மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைப் பயில்பவர்கட்கு நற்குணங்கள் விளையுமென்கை.)
கடல் அலைகளைத்தரும். இக்கடல் மதுரோபதேச தரங்கங்களைத் தரும். கடல் சந் திரனைத் தந்தது; இக்கடல் நல்ல கீர்த்தியாகிற சந்திரனைத் தருகின்றது. (மாமுனி களின் ஸ்ரீஸுக்திகளைப் பயில்பவர்கட்கு நல்லபுகழுண்டாமென்கை)அக்கடல் கல்ப வ்ருக்ஷத்தைப்பயந்தது. இக்கடல் ஞானமாகிற கற்பகத்தருவைத் தரும். அக்கடல் அமுதமளித்தது. இக்கடல் வேதாந்த விழுப்பொருளாகிற அமுதமளிக்கவல்லது அக்கடல் ஹாலாஹல மென்னும் நஞ்சை நல்கிற்று; இக்கடல் (தத்வத்ரய வ்யா க்யாநாதிகளில்) பரமத த்வம்ஸந ஸ்ரீஸுக்தியாகிற ஹாலாஹலத்தைத்தரும். ஆகவே கடலென்னப் பொருந்தும். ( பரமத த்வம்ஸந ஸ்ரீஸூக்திகளும்தொண்டர்க்கு அமுதமேயானாலும் பிறருடைய திருஷ்டியாலே ஹாலாஹலமென்றது.)

49-(ரக்ஷயாம் நிபுண: ரக்ஷிக்க வல்லவன் லக்ஷ்மீபதி என்றொரு ப்ரஸித்தி வீணாகவே உலகிற் பரவியது. உண்மையில் மணவாளமாமுனிகளே நம்மைரக்ஷிப்பவராவர். இஷ்டப்ராப்தியையும் அநிஷ்ட நிவாரணத்தையும் செய்பவரே ரக்ஷக ராதலால் மாமுனிகள் தாமே தமது ஸ்ரீஸூக்திகளால் அவ்விரண்டையும் செய்துகொண்டு ஸம்ஸாரிகளை நன்கு ரக்ஷித்தருளா நின்றார்.

50-(அந்தநாம் ரவி) குருடர்களுக்கு ஸூர்ய கிரணங்களால் ஒரு பலனுமில்லை யென்பதால் ஸூர்யனுக்கு ஏதேனும் குற்ற முண்டோ? அதுபோல கருவிலே திருவிலாதார் சிலர் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளால் பயன் பெற்றிலரென்றால்
அதனால் என்ன சேதம்? பயன் பெற்று வாழ்கிற புனிதர்களைக் கண்டு தெளிக.

51-(பர்ஜந்யோ ஜல) மேகமானது கடல்நீரைப் பருகிப் பரமமதுரமாக வர் ஷிப்பதுபோல மணவாள மாமுனிகளும் சாஸ்த்ரக் கடலில் நின்றும் அளவற்றவிஷயங்களை முகந்து கொண்டு அதிமதுரமாக வர்ஷித்து பாக்யசாலிகள் பலரும் பருகிக்களிக்குமாறு செய்தருளா நின்றார்.

52-(ரக்ஷாபேக்ஷண.) “ஸர்வஜ்ஞோபி ஹி விச்வேசஸ் ஸதா காருணிகோபி ஸந்
ஸம்ஸார தந்த்ரவாஹித்வாத் ரக்ஷ்யா பேக்ஷாம் ப்ர தீக்ஷதே”
என்கிறப யே ரக்ஷா
பேக்ஷ மாத்திரத்தையே எம்பெருமான் எதிர் பார்க்கிறானாதலால் நாம் பரக்கவொரு ஸாதநாநுஷ்டானம் பண்ணலாகாதென்று பிள்ளை லோகாசாரியர் அருளிச் செய்
ததை நன்கு விளக்குகின்ற மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ரத்னம் எம்பெருமானார் தரிசனத்திற்கு உயர்ந்த மணி விளக்காகவுள்ளது.

53-ந்தர்த்வாந்தம்.) அகவிருளையகற்றுவதற்கு உலகில் ஞானவிளக்கொன்று தவிர வேறொரு கருவி கிடையாதென்பது நிர்விவாதம். அப்படிப்பட்ட அணி விளக்கை இன்னருளால் ஏற்றிவைத்தவர் மணவாள மாமுனிகள் ஓருவரேயாவர். ஆயினும் அந்தோ! அவ்விளக்கில் சலபமாகி யொழிவாரும் சிலருளரே! அன்னவர் கட்கு நேரப்போகும் துர்க்கதியை என் சொல்வோம்!

54-(வந்தே ஸுந்தர.) க்ஷத்ர ஜனங்களுக்கு வியாமோஹத்தை விளைக்க வல்ல பலபல சுவடிகளை யெழுதி வைத்து உலகை வஞ்சிப்பார் பலருளர்; அன்னவர்களுடைய உக்திராசிகளால் அடியேனுடைய மனம் ஒருபோதும் விகாரமடையாதிருக்க வேணுமென்று மணவாளமாமுனிகளின் திருவடியிணையை இறைஞ்சுகிறேன்.

55-(அப்திர் லங்கித:) * அப்திர் லங்கித ஏவ வாநர படை:* என்று முராரிகவி பணித்தபடியே கடலைக்கடந்த வானர முதலிகளுக்குக் கடலின் ஆழம் தெரியாதாப்போலே உலகில் பண்டித்தரென்று பேர்படைத்தவர்களெல்லாரும் மேலெழுந்தவாரியாக அறிந்தவர்களே யன்றி சாஸ்த்ரார்த்த ஸாரங்களை உட்புகுந்து அறிந்தாரிலர்;மணவாள மாமுனிகளொருவரே ஆழ்ந்த அறிஞரென்று திண்ணமாகவெண்ணுக

56-(ண ஸ்த்ரு ) ண ஸ்த்ரு = தள” ” சச – லுதகதெள” என்றிப்படி தாது பாடங்களை நெட்டுருப் போட்டுக் கொண்டே வாணாளை யெல்லாம் வீணாளாகக் கழிக்கின்ற ஜடர்கள் அந்தோ! மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளை அறியப் பெற்றிலரே! நல்ல கதிக்கு வழி தேடுகின்றிலரே.

57-(அந்தஸ் ஸர்வ பதார்த்த) ஸகல பதார்த்தங்களிலும் உள்ளும் புறமுமொக்க வியாபித்திருக்கின்ற எம்பெருமானுடைய வ்யாப்தியாவது வஸ்துதோறும்
பரிஸமாப்ய வர்த்தமாநத்வமன்று என்று வாதிப்பவர்களும் பகவானுடைய விசித்திர சக்தியை ஸஹியாதவர்களுமான பிறரைத் தமது ஸ்ரீஸூக்தியால் உதறித்தள்ளுகின்ற மணவாள மாமுனிகளே ஸத்துக்களில் தலைவர்.

58-(மந்யந்தே வர) மணவாள மாமுனிகள் உடையவருடைய அபராவதாரமேயாவர். பெரும்பாலும் வியாக்யான ரூபங்களான கரந்தங்களையே அருளிச்செய் வதும், வீண் தூஷண பரிஹாஸ வாக்குக்களைப் பொழியாமலிருப்பதுமான தன்மைகள் இவ்விரண்டு ஆசார்யர்கள் பக்கலிலுமே நன்கு பொருந்தியிருப்பதால்

59-(வர்த்திஷ்ணூந்ப்ரதி) மேன்மேலும் ஞானவிளக்கம் பெறவேணு மென்றிருப் பார்க்கு ஒன்று சொல்லுகேன். சித்தப்ரமத்தை விளைக்கவல்ல பல்வேறு புத்தகங்களில் வீணாகப் போதைப் போக்குவது தகுதியற்றது : த்ராக்ஷரபாகத்திற்கு நிதர்சநமாக அமைந்த மணவாள மாமுனிகளின் அத்புத லலித திவ்ய ஸூக்திகளையே இடை வீடின்றி அனுபவியுங்கள்,

60-(அந்தஸ் ஸந்ததம்) என்னுள்ளத் துள்ளே மணவாள மாமுனிகளொருவர் தாமே தமது திருமேனி யொளியை விளங்கச் செய்தருளா நின்றுள்ளார்; வேறோ ராசிரியாக்காவது எம்பெருமானுக்காவது இனி என்னெஞ்சில் இடம் கிடைப்பரிது;-இல்லை யெனக்கெதிரில்லை யெனக்கெதிரில்லை யெனக்கெதிரே.

61-(நக்ஷத்ரேச) மணவாள மாமுனிகாள்! தேவரீருடைய திங்கள்போன்ற திருமுக மண்டல் தையும் நிலாப்போன்ற புன்முறுவலையும் செவியளவும் நீண்ட திருக்கண்களையும் திருவாய் மொழியின் மணம் கமழும் திருவதரத்தையும் திவ்யோர்த்வபுண்ட்ரஸுபகமான திருமேனியையும் நேரில் ஸேவிக்கப் பெற்றவர்களே பாக்யசாலிகள்.

62-.(தத்தேநிச்சல) மணவாள மாமுனிகள் என்னுள்ளத்துள் எப்போதுமெழுந்தருளியிருந்து தமது திருவடிகளில் ஸ்திரமான பக்தியை யளிக்கின்றார்:விரக்தியை விளைக்கின்றார்; பொருளாசையைப் போக்குகின்றார்; ஓ மனமே! குபேராதி பதவிகளைப் பெறுவதற்கும் நீ ஆசைகொள்ளாதே; விஷயாந்தரங்களில் ஓடநினைப்பதும் வேண்டா; மதயானைபோல் கண்டவிடமும் திரியாதே; மாமுனிகளிடத்தேஊன்றியிரு.

63-(ஏரண்டோபி ) * நிரஸ்தபாதபே தேசே ஏரண்டோபி திருமாயதே[மரமில்லாதவூரில் ஆமணக்கஞ் செடியும் மரமாம் ] என்றாப்போலே ஆங்காங்குப்பலரும் ஆசார்ய பீடத்தில் அமாந்து ஆசார்ய விருது வஹித்து விடலாம்-உண்மையில் மணவாள மாமுனிகளொருவர் பக்கலிலேயே ஆசார்யத்வ பூர்த்தியுள்ள தென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பேன்.

64-( ரக்ஷிஷ்யதி. ) உலகில் பலரும் எம்பெருமானையே ரக்ஷகனாக மயங்கி அவனையே துதிக்கின்றனர். அந்த பகவான் தானும் ஆசார்ய ஸம்பந்த மில்லா தாரைக் கடாக்ஷிக்க வல்லவனல்லன்; மணவாள மாமுனிகளிடத்திலேயே ஆசார்யத்வம் புஷ்கலமாதலால் இவருடைய ஸம்பந்தத்தை நோக்கியே அவன் ரக்ஷிக்கவல்லவன்; ஆதலால் மாமுனிகளே முமுக்ஷக்களுக்குத் தஞ்சம்.

65-(அத்வாத்வ ) நல்வழி தீ வழி தெரியாது திகைக்கின்றவர்களுக்குக் கை கொடுக்கவே பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்த ரஹஸ்யார்த்தக்ரந்தங்களை மணவாளமாமுனிகள் பரமகிருபையோடு விசதமாக வியாக்யானித்தருளாதிருந்தால், அந்தோ ! உலகம் முழுவதும் ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்தித் துவளுமே! மாமுனிகளின் பேரருள் பேச்சுக்கு நிலமோ?

66-(மக்நாநாம்) மணவாள மாமுனிகளின் திருவடிகள் பிறவிக்கடலுள் அழுந்தினார்க்கு நாவாய் போலும்; அவருடைய திருவாக்குக்கள் விஷயவிஷதரங்களாலே கடியுண்டார்க்கு கருட மந்த்ரம் போலும்; அவருடைய திருமேனிவிளக்கத்தைச் சிந்தை செய்வது பாவங்களாகிற காட்டுத் தீயில் வேகின்றவர்களுக்கு வர்ஷதாரை போலும், அன்னவர் வாழ்க-

67-(யத்நோவ யவிதேய) ‘சைதன்ய கார்யமான ஸாதநா நுஷ்டானங்களை அவசியம் பண்ணியே தீரவேண்டும்; இல்லையானால் முக்திபெற வழியில்லை’ என்பாருடைய அகவிருளைப் போக்குமதாய் ப்ரபந்நர்களுக்கு அருமருந்தான ஸ்ரீஸக்திகளைப் பணித்தருளின மணவாள மாமுனிகள் அடியேனை *ஆம்முதல்வனிவ னென்று கடாக்ஷித்தருளினார்.

68-(அஹ்தாயாச்ரயத ) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளை உகந்து விரைந்து பணிமின்: பின்னை அவருடைய திவ்ய ஸூக்திகளுள் ஆர்த்திப் பிரபந்தத்தை உரக்க அநுஸந்தித்து எல்லா ஆர்த்திகளையும் உடனே தொலையப் பெறுங்கள்; ஸகல ச்ரேயஸ்ஸுகளும் தன்னடையே வந்து சேரும்படி கண்டு மகிழுங்கள்.

69-(ஐந்மாந்யத்ர) அடியேன் இப்போது போலவே எப்போதும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளையே சுவைத்திருப்பேனாயின் அடியேன் மீண்டு மீண்டும் இவ்வுலகிலே பிறக்கப் பெறுவேனாக; பிறவிதோறும் இப்பெரும் பாக்கியம் வாய்க்குமாகில் பரமபதத்திலும் வாஞ்சை யுடையேனல்லேன்; மாமுனிகளே! இதுவே உண்மையுரை : பூர்ணமாகக் கடாக்ஷித்தருள வேணும்.

70-(ஆசாரா .) மணவாள மாமுனிகள் காத்தருளின ஸதநுஷ்டானங்களில் பக்யசாலிகள் ஊன்றிப் போருவர்கள் : அங்ஙனல்லாத மற்றையோர் தீயவழிகளில் அலமந்து துவள்க. பரமபவித்திரமான இந்த ஸத்ஸம்பிரதாயஸரணியில் பரம பாக்ய வசத்தினால் பிறக்கப் பெற்றோமே யென்கிற களிப்பு அடியேனுக்கே உள்ளது.

71-(மந்த்ராஸ் ஸந்திஹி) மணவாள மாமுனிகளே! உலகில் பலபல பகவந் மந்த்ரங்கள் உள்ளன; அவற்றிற்கு என்ன பெருமை ஏற்பட்டது? அவற்றைச் சிந்திப்பாரார்? அவற்றில் யாருடைய உள்ளம் ஊன்றியிருக்கிறது? ஸ்ரீரங்கநாதனுடைய முகாரவிந்தத்தில் தோன்றின மதுவென்னலான (தேவரீர் விஷயமான) ஸ்ரீசைலேச மந்திரத்தின் பெருமையேயன்றோ உலக முழுவது மோங்கி நிற்கின்றது.

72-(ஆசார்யப்ரவரம் ) மணவாள மாமுனிகளிடத்தில் எல்லாப் பெருமைகளும் விளங்க நின்றாலும் ஒரு குறை மாத்திரம் உள்ளதேயாம்: அது என்னெனில்; மிகச் சிறந்து பரமபாவனமாய் விளங்கும் ஸ்ரீசைலேச மந்திரத்தைச் சிந்தை செய்யும் பாக்கியம் அவர்க்கு இல்லையாயிற்றே.

73-( த்வம் கிஞ்சந.) மணவாளமாமுனிகளே! ஒரு உண்மைகேளீர் : தேவரீருடைய மஹோத்ஸவம் கச்சிநகர் முதலான பலதலங்களில் பெருக்க நடக்கிறதன்றோ. அந்த ஸமயங்களில் அடியேன் அனுபவிக்கும் ஆனந்தாதிசயத்தை தேவரீர் விபவத்தில் அனுபவிக்கப் பெற்றிலீரன்றோ ( அப்போது மணவாளமாமுனிகளுத்ஸவமென்று ஒன்று நடைபெறவும் அவ்வானந்தத்தை அநுபவிக்கவும் ப்ராப்தமாகவில்லையே.] ஆதலால் இவ்வகையால் தேவரீரைவிட அடியேனே பாக்யசாலியாவேன்.

74-(அத்யேஷாமபி) திவ்ய தேசங்களில் மற்றும் பல ஆசிரியர்களுக்கும் உத்ஸவம் நடைபெற்றாலும் மணவாள மாமுனிகளுத்ஸவத்தின் வீறு விலக்ஷணமானதே. ஐப்பசி மாதம் அவதரிக்கப் போகிறதென்னும்போதே பிடித்து எமது நெஞ்சில் நடைபெறும் உத்ஸாஹ மஹோத்ஸவத்தை என் சொல்வோம்.

75-(ரங்காதீச்வர ) மணவாள மாமுனிகளே! அர்ச்சா மூர்த்திகளில் ஸ்ரீரங்க நாதனொருவனே பாக்யசாலி. அப்பெருமானேயன்றோ தேவரீருக்கு சிஷ்யனாக அமைந்த பெருமையை நாளைக்கும் காப்பாற்றி வருகிறான். ஒரு ஆசிரியர்க்கும் நடைபெறாத திருவத்யயனத் திருநாளை மாசிமாஸ க்ருஷணலபக்ஷத்வாதசியன்று தேவரீருக்கு அப்பெருமான் நடத்திப் போருவது சிஷ்யக்ருத்யம் அவர்ஐநீயம் என்றுகொண்டன்றோ?

76-(அத்யாஹம்வரயோகி) மணவாளமாமுனிகளே! இன்று அடியேன் தேவரீரைத் துதிக்கவிழிந்து, சிறிதும் ஆலோசனையின்றியே இங்ஙனே ச்லோக மாலிகையை விரைவாகவே விண்ணப்பம் செய்து வருகிறேன்; இந்த ஸ்தோத்திரமோ முடிவு பெற்று விடும். தேவரீருடைய பெருமைக் கடலிலோ சில திவலைகள் மாத்திரமே அநுபவிக்கப்பட்டன, முழுவதும் அநுபவிக்க எங்ஙனே முடியும்?

77-(மந்தப்ரஜ் ): மணவாள மாமுனிகளே! அடியேன் மந்தமதி யென்று பேர் பெற்றவனாயினும், தேவரீருடைய பெருமைகளை விளக்கும் ச்லோகங்களையே இடைவீடின்றித் தொடுத்துக் கொண்டிருக்கி றேனாதலால் மஹாப்ராஜ்ஞ னென்று விருது பெற்றேனானேன்; தேவரீருடைய திருவருளை என் சொல்வேன்?

78-(மந்த்ரம் த்வத்விஷயம்) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய தனியனான ஸ்ரீசைலேசத் திருமந்த்ரம் ஸகல திவ்ய தேசங்களிலும் புகழ் பெற்றுவருவதைக் கண்டு பொறாதார் சிலர் தாம் வேறொரு பத்யத்தை ஸ்ருஷ்டித்து அடிக்கடி பிரபலமான பரிபவத்தைப் பெற்று வருகிறார்களென்பதை நன்கு அறிந்தேயிருக்குமவர்கட்கும் அந்தோ! தேவரீருடைய பெருமை தெரியவில்லையே!

79-(உத்திஸ்ஸத்யதமா) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸூக்திகளே பொய்யொன்றுமில்லாதவை என்கிற உண்மையை நன்கு அநுபவித்துத் தெரிந்து கொண்டவர்களான பூருவாசாரியர்கள் * பொய்யிலா தமணவாளமாமுனி புந்திவாழி * என்று வாழ்த்தினார்கள், தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை ஆராயு மளவில் அந்த வாழ்த்து ஸத்யமானதே யென்று பறைசாற்றத் தட்டில்லை.

80-(நந்தாஅந்ந்த) * ஸித்திர் பவதி வா நேதி ஸ சயோச்யுத ஸேவிநாம் என்று பகவானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹமே யுள்ளதாக சாஸ்த்ரம் முறையிடுகின்றது; அங்ஙனன்றிக்கே, மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றினார்க்கு ஸகல ச்ரேயஸ்ஸுக்களும் மல்குமென்று ஐயமற அறுதியிடப்பட்டதாம்,

81-(இந்த்ரஸ் ஸம்யமிநாம் ) பெரிய ஜீயர், மணவாளமாமுனிகள், அழகிய மணவாள மாமுனிகள், திருவாய்மொழிப்பிள்ளை மாதகாவால் வாழ்ந்தவர், திருவனந்தாழ்வான் திருவவதாரமானவர் என்றிங்ஙனே நாமாவளிகளை எனது நெஞ்சம் நிச்சலும் சிந்தை செய்து தூய்மை பெறுகின்றது.

82-(இந்தே ருத்ர வர) மணவாள மாமுனிகள் எங்கு எழுந்தருளியுள்ளாரென்று
கேட்டால். தம்மைச்சிந்திப்பார் சிந்தையினுள்ளும், திவ்ய தேசங்களிலும், திருவாய் மொழியின் இன்னிசை மன்னுமிடங்களிலும் எழுந்தருளியிருப்பதாகப் பலரும்
கூறுவர்; அடியேன் விண்ணப்பம் செய்வது அங்ஙனன்று; அவை யெல்லாவற்றோடுங்கூட என்னுள்ளத்துள்ளே யுறைகின்றா ரென்பதே உண்மை.

83-(மந்த்ரோ யஸ்ய) விவேகிகளான பாக்யசாலிகளுக்கு ஸர்வஸ்வமுமான தமது தனியனால் அர்ச்சாவதாரஸ்தலங்களை யெல்லாம் புனிதமாக்கி யருளாநின்ற
மணவாள் மாமுனிகளின் திருக்குணங்களைப் பன்னியுரைப்பதும் ஸகல பலன்களையு
மளிப்பதுமான இந்த ஸ்துதியானது வித்வான்களின் வாக்கிலே விளங்குக.

84-மந்யந்தாமிஹ) அடியேன் மணவாள மாமுனிகளொருவரையே பெருக்கத் துதிக்கிறேனென்பது பற்றிப்பொறாமையாளர் எதுவேனும் எண்ணுக ; ஸத்யமாக
விஜ்ஞாபிக்கிறேன்; மாமுனிகளைச் சிந்தை செய்யப் புகுந்தபின்பு, நம்மாழ்வார்
எம்பெருமானார் நம்பிள்ளை முதலானார் திறத்திலும் அடியேன் பக்தி குறையப் பெற்றேன், ஆதலால் மாமுனிகளையே துதிப்பது எனக்கு நித்யகால க்ஷேபமாயிற்று

85-(மந்தப்ரஜ் ஜநா )-இதன்மூலம் ஸம்ஸ்க்ருத ச்லோகங்களாயிருந்தாலும் அவற்றின் பொருளை ஸாதாரண வயுத்பந்நர்களும் எளிதாக அறிந்துகொள்ள வேணுமென்று நாரிகேளபாக மன்றிக்கே த்ராக்ஷாபாகமாக இத்தகைய ஸ்தோத்ரங்களை மணவாள மாமுனிகள் என்வாக்கில் நின்றும் அன்போடு வெளியிடுவித்தருள்கின்றார்; அப்பேராசிரியரின் பரம கிருபையை என்னென்பது!

ஸ்ரீ காஞ்சீ அண்ணங்கராசா ய ஸ்ரீ வைஷ்ணவதாஸன் விண்ணப்பஞ் செய்த ஸ்ரீ சைலேசதயாபாத்ர ஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது.

ஸ்ரீமத் வரவர முநீந்த்ர ச்லோக ஷட்சதியில்-இரண்டாவதுஸ்தோத்ரம்.-ஸ்ரீ வரவர முநிகர்ணாம்ருதம்

(அவதாரிகை )எம்பெருமான்விஷயத்தில் ஈடுபட்டவர்கள் * மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று சொல்லி மங்களாசாஸநம் செய்வது போல மணவாள மாமுனிகளிடத்தில் ஈடுபட்டவர்கள் * வரவரமுநி பத கமல! ஐயஎன்று (வடமொழியில்) சொல்லி மங்களா சாஸநம் பண்ண ப்ராப்த மாகையாலே அந்த வாக்ய ஸந்நிவேசத்தை யிட்டு அதிலுள்ள அக்ஷரங்களின் அடைவே ஒரு ஸ்தோத்ரம் விஜ்ஞா பிக்கலாயிற்று. இதற்கு ஸ்ரீமத் வரவரமுநிகாணாம்ருதமென்று ஒரு பெரியார் நாமமிட்டருளினார். மேலேவரும் ரஸாயந ஸ்தோத்ரமும் இதுவும் லகுவான அக்ஷரங்களே நிரம்பப் பெற்றது.

86-(வரவர) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரையே! நீ வாழ்க என்னும் பொருளதான * வரவரமுநிபதகமல! ஐய * என்கிற இந்த வொருபாதத்தையே சிந்தை செய்மின்; (அதற்குமேல் சக்தியிருந்தால்) இந்த பாதத்தின் எழுத்தடைவே அமைக்கப்பட்ட இந்த கர்ணாம்ருத ஸ்துதியையும் கண்ட பாடம் செய்து சொலலுமன். (வடமொழியிலுள்ளவது தேவநாகரலிபியிலுள்ளது)

87-(வரவர) மணவாள மாமுனிகளே! தேவரீருடைய திருவடிகள் அடியேனது மனத்தில் மாத்திரமே எப்போதும் ஸூர்யோதயமானாப்போலே விளங்கிக் கொண்டிருக்கின்றன என்னவே அடியேனுடைய ஜென்மம் ஸபலமாயிற்று.

88-(ரவிரிஹ) மணவாளமாமுனிகளே! ஸுர்யன் வெளியிருளை மாத்திரம் போக்க வல்லவனே யன்றி உள்ளிருளை யொழிக்க வல்லவனல்லன்; தேவரீர் அடியேனது அகவிருளையெல்லாம் அகற்றி யருள்கின்றீர்

89-(வசளிச) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய பரம மதுரமான ஸ்ரீஸூக்திகளையே ஸதா அடியேனுடைய வாக்குக்கும் நெஞ்சுக்கும் விஷயமாக்கி யருளிற்று; இனியெனக்கு ஸம்ஸார பயம் நடையாட விரகுண்டோ?

90-(ரகுவர) மணவாள மாமுனிகளே! இவ்வுலகில் ஸ்ரீராம க்ருஷ்ணாதி விக்ரஹங்களும் விளங்குகின்றன; தாராளமாக விளங்கட்டுமே ; தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹ மொன்றே அடியேனது கண்ணுக்குத் தோற்றுவதாம்

91-{முநிரிதி) முநியென்றும் குருவென்றும் யதியென்றும் இவ்வுலகில் மற்றும் பலரும் பேசப்பட்டிருந்தாலும் அந்த முநி -குரு – யதிபதங்களெல்லாம் மணவாளமாமுனிகள் திறத்திலே தான் அர்த்த புஷ்டியுடன் விளங்குவன

92-(நிதிமிவ) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்ய ஸ்ரீ ஸுக்திகளை உள்ளத்துள் நிதிபோல வைத்துக் காக்க வல்லவர்கள் பலபிறவிகளில் செய்தபாவங்களெல்லாம் ஒருநொடிப் பொழுதில் தொலையப்பெறுமவராவர்கள்.

93-(படுமதிரி ) இவ்வுலகில் விவேகியான வொருவன் தேவரீருடைய ஸ்ரீஸுக்திகளை ஓயாமல் வாய்க்கொள்வனாகில் அவன் ஹயக்ரீவனை வென்றவனென்று புகழ் பெற்றவனேயாவன்.

94-(தமசமமுக) சமதமாதி குணக்கடலென்று பெற்ற புகழினால் உலகத்தை யெல்லாம் பரிமளிக்கச் செய்தருளாநின்ற மணவாள் மாமுனிகளே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை என்னுடைய நெஞ்சகம் பால் எழுதியருள வேணும்.

95-(கலிபலம்) கலியின் கொடுமை நாள்தோறும் எவ்வனவு வளர்ந்து சென்றாலும் அதுபற்றி எனது நெஞ்சில் சிறிதும் அச்சமில்லை. ஏனென்றால். மணவாள மா னிகளின் ஸ்ரீஸக்திகளினால் என்னுள்ளம் தெளிவுபெற்றிருப்பதனால்.

96-(மம மதிரி ) மணவாள் மாமுனிகளே! அடியேன் எப்போதும் தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளையே நெஞ்சில் நிதியாகக்கொண்டிருக்கிறே னென்பதுபற்றி அடியேனது புத்தியைப் பலரும் கொண்டாடுகின்றனர், இஃது ஒக்கும்.

97-( லஸத்தி)மணவாளமாமுனிகளே! இவ்வுலகில் மற்றும் பல ஆசிரியர்களின் திருவாக்குகள் பல விளங்கினாலும் அவற்றால் பயனொன்றும் காணோம்; தேவரீருடைய ஸ்ரீஸூக்திகள் அவதரியாதிருந்தால் இருள் செறிந்தேயிருக்கும்.

98-(ஜகதிதம்) இவ்வுலகமானது அளவுகடந்த ஆசாரியர்களை நிரம்பக்கொண்டது; இன்னமும் லக்ஷக்கணக்கான ஆசாரியர்கள் தோன்றட்டுமே; அதனாலென்ன? மணவாளமாமுனிகளொருவரே ஒப்பற்ற ஆசாரியர்

99-(யதிபதிமதம்) எம்பெருமானார் தர்சனத்தை விளங்கச்செய்வதற்கெறேன்இந் நிலவுலகில் திருவவதரித்தருளின பேரருட்கடலான மணவாளமாமுனிகள் அடி
யேனுள்ளத்துள் மகிழ்ந்து உறைகின்றார்.

100-(வரவர) மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸ்தோத்ரமானது ஒருகுணமுமற்றதாயினும் வித்யான்களின் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியைத் தருமென்பது திண்ணம், என்று விஜ்ஞாபித்து இந்த வடமொழி ஸ்தோத்ரம் தலைக்கட்டப்பட்டது.

ஸ்ரீ மத்வரவரமுநீந்த்ரக்லோக ஷட்சதியில் இரண்டாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி கர் ணாமருதம் முற்றிற்று.

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ர ஷட்சதியில்:- மூன்றாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி வைபவ ஸ்தோத்ரம்

ஸ்ரீ சைலேசதயாபாத்ரம் “ என்கிற தனியனிலுள்ள முப்பத்திரண்டு அக்ஷரங்களில் ஒவ்வொரு அக்ஷரத்தையும் அடைவே ஒவ்வொரு ச்லோகத்தின் முதலெழுத்தாகக் கொண்டது இந்த ஸ்தோத்ரம்.

101-(ஸ்ரீமத்வர.) கற்பகக்கொடிபோல் விரும்பிய பொருளனைத்தையும் பதந்தோறும் அளிக்கவல்ல ஸ்ரீஸூக்திகளையருளிச் செய்தவரும் ஸமஸ்த திருக்கல்யாண
குணங்களுக்கும் கொள்கலமுமான மணவாளமாமுனிகளை எப்போதும் வணங்குவன்

102-(சைல இவ.) மணவாளமாமுனிகளே ! தேவரீர், ஸ்ரீஸூக்திகளாகிற புண்ணிய நதிகளுக்கு மலைபோல் உத்பதிஸ்தானமாயும், ஸம்ஸாரதாபங்களினால் வருந்தினவர்களுக்கு நிழல் தரும் வ்ருக்ஷம் போன்றவராயும், தீபநெறியாகிற இருளைத் தொலைப்பதில் இரவிபோன்றவராயும் விளங்கினீர்.

103-(லேசோபி ) தமது ஸ்ரீஸூக்திகளில் ஸ்வல்பபாகத்தைச் சிந்தனைசெய் தாலும் ஆனந்தம் பொங்கி வளரும்படியாக அவற்றைத் திருவாய்மலர்ந்தருளிய மணவாள மாமுனிகள் தமது திருவடித்தாமரைகளில் (அடியேன் போல்வார்க்கு) பக்தியை விளைத்தருளாநின்றார்.

104-(சமயதி ) தீவினைகளனைத்தையும் தொலைத்து நல்லறிவை நல்குகின்ற திவ்ய ஸூக்திகளைத் திருவாய் மலர்ந்தருளின மணவாளமாமுனிகள் எப்போதும் எனது உள்ளத்திலே விளங்கா நின்றார்.

105-தயயா)எம்பெருமான் தனது நிர்ஹேதுக கருணையினாலே நம்மைக் காத்தருள்கிறானென்னுமிடத்தை விளங்கக்காட்டும் ஸ்ரீஸூக்திகளை அருளிச் செய் தருளின மணவாளமாமுனிகள் என்னுள்ளத்தில் நிர்ஹேதுக கருணையோடு எழுந் தருளியுள்ளார்.

106-(யாது ஸகலோபி.) மணவாள மாமுனிகளின் வியாக்கியானங்கொண்டே ஸகலார்த்தங்களையும் அறியக் கூடியதாகவுள்ள ஸ்ரீவசநபூஷணமென்னும் திவ்ய சாஸ்த்ரத்தின் அநுபவத்திலேயே அடியேனுடைய வாழ் நாளெல்லாம் செல்ல துவணும்.

107-(பாது வாயோகி ) ரஹஸ்யத்ரயார்த்தவிவரணமாகப் பிள்ளையுலகாசிரியர் பணித்தருளின முமுக்ஷப்படியை மிகவழகிய புனிதமான திவ்யஸூக்திகளினால் ஸத் ஸம்ப்ரதாயப்படியே வியாக்கியானித்தருளின மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.

108-(த்ரய்யந்தார்த்தம்) பிள்ளையுலகாசிரியர் பணித்தருளிய தத்வத்ரய மென்னும் ரஹஸ்யக்ரந்தத்தை வியாக்கியானித்தருளும் முகத்தால் ஸகல வேதாந்தஸாரப் பொருள்களையும் எளிய நடையில் உபகரித்தருளின மணவாள மாமுனிகளே நமக்கு அகவிருளை அகற்றவல்ல பேராசிரியர்.

109-( ரிஹ ஜகதி.) இவ்வுலகில் அவதரித்துள்ள பலபலவாக்குக்களை அநுபவித்து ஓய்வு அடைகின்ற எனது புத்தியானது மணவாளமாமுனிகளின் திவ்யஸூக்திகளின் அநுபவத்திலிருந்து மாத்திரம் ஒருபோதும் ஒய்வடைகின்றதில்லை. “ எப்பொழுதும் நாள் திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதமே .’ என்னுமா போலே நித்யாபூர்வமானவை மாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளென்க.

110-(பவபயபேஷஜம்.)அழகியமணவாளப்பெருமாள் நாயனாரருளிச்செய்ததும்
பிறவியென்னும் நோய்க்கு மருந்துமான ஆசார்யஹ்ருதய மஹாசாஸ்த்ரத்தின்
ஸகலார்த்தங்களையும் விசதமாகக் காட்டவல்ல வியாக்கியானத்தைத் திருவாய்
மலர்ந்தருளிய மணவாளமாமுனிகள் வாழ்க.

111-(பக்த்யா)மணவாளமாமுனிகளின் முகாரவிந்தத்தின் மகரந்தம் போன்றதும் ஸத்துக்களின் ஹ்ருதயத்திற்கு சோபாவஹமுமான உபதேசரத்தினமாலையென்னும் திவ்ய ப்ரபந்தத்தை அன்புடன் ஓதுமின் [இதில் (க்த்யா) இரண்டமெழுத்து ]

112-(தி துமயி) திருவாய்மொழியின் உட்பொருள்களைத் திருவாய்மொழிநூற்றந்தாதி யென்னும் திவ்யப்ரபந்த மூலமாக வெளியிட்டருளின் மணவாள மாமுனிகள் அடியேனுக்கு திவ்ய சக்ஷஸ்ஸை அருளவேணும்.

113-(குருபிரிஹ) இவ்வுலகில் பல பல ஆசிரியர்களால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீஸூக்திகள் அளவு கடந்தவை யுண்டெனினும் மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளிலுள்ள இனிமை இணையற்றதேயாம்

114-(குணவை) ஒரு யோக்யதையும் சிறிதுமில்லாத அடியேனுக்கும் மணவாளமா முனிகளின் திவ்யஸூக்திகளின் ஆழ்பொருள்களெல்லாம் நன்கு தெரியும் படி அந்தமாமுனிகளின் திருவருளே வாய்க்கவேணும். [ இந்த ச்லோகத்தில் ணகலைரம் இரண்டாமெழுத்தாக அமைக்கப்பட்டது.

115-(அர்ணவ ) .’ அப்ரமேயோ மஹோததி:” என்னப்பட்ட, கடலின் காம்பீர்யத்தையும் அளவிடவல்லார் சிலருண்டு: மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திக்கடலின்காம்பீர்யம் மாத்திரம் ஒருவர்க்கும் நிலமன்று. I இந்த ச்லோகத்தில் (ர்ண ) என்கிற எழுத்து இரண்டாமக்ஷரமாக அமைக்கப் பட்டது .)

116-(வம்சே ஸூமஹதி ) மணவாளமாமுனிகளின் திவ்யஸூக்திகளில் பக்தி விசேஷம் இல்லாவிடினும் அத்வேஷமாவது இருந்திருக்குமாகில் அதன்பயனாக மாசில்குடிப்பிறப்பும் நல்லுணர்வின் மிகுதியும் சமதமாதி குணபூர்த்தியும் விளையுமென்று மஹான்கள் கூறுகின்றார்கள்.

117-( யதிபதி) மணவாளமாமுனிகள் எம்பெருமானாருடைய அபராவதாரமேயென்று அறுதியிடுவதற்குப் பலபல சான்றுகள் உள்ளனவாதலால் அவற்றையே எப்போதும் சிந்தை செய்வேனாக

118-(தீர்த்வா ) பிறவிக்கடலைக்கடந்து ஒருகால் விண்ணுலகம் சென்று சேரப் பெறுவேனாயினும் அங்கும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தியமுதமே அடியேனுக்கு உணவாக வேணும்.

119-(த்ரவதித்ருஷத பி) கேட்டவளவிலே கல்லும் உருகும்படியான நடையில் அமைந்த யதிராஜவிம்சதியை அருளிச்செய்தவரும் சமதமாதி ஸத்குண நிதியுமான மணவாளமாமுனிகள் உலகைக் காத்தருளவேணும்.

120-(ப்ரதயதி.) பகவத்கீதையின் அற்புதமான தாற்பரியத்தை விளங்கக்காட்ட வல்ல கீதாதாத்பர்ய தீபமென்னும் வியாக்கியானத்தை யருளிச்செய்த மணவாளமாமுனிகளின் சிறந்த திருநாமங்களையே என்வாய் உரைத்திடு .

121-(வரதாதிராஜ.) பேரருளாளன் விஷயமாகப் பரமபோக்யமான மங்களா சாஸந ஸ்துதியை அருளிச்செய்த மணவாள மாமுனிகளுக்கே என் வாக்கு அநவரதம் பல்லாண்டு பாடக்கடவது.

122-(ப்ரவணம்)எம்பெருமானாருடைய திருக்குணங்களை அழகாகப் பேசவல்லதும்
மணவாளமாமுனிகளின் வியாக்கியானத்தினால் சிறப்புற்றோங்குவதுமான இராமானுச நூற்றந்தாதியில் நெஞ்சே! எப்போதும் ஊற்றமுற்றிருப்பாயாக. (இந்த ச்லோகத்தில் ணகாரம் மூன்றாவது அக்ஷரமாக அமைக்கப்பட்டது.)

123-(வஞ்சயிதும்) கபடபக்தியினால் உலகை வஞ்சிக்க நினைத்தாலும் அந்தக் கபட பக்தியையும் மணவாளமாமுனிகள் விஷயமாகவே கொள்வது நலம். ஏனென்னில், மாமுனிகள் திறத்தில் பக்திபாவனை செய்யினும் ஆத்மா புனிதமாகுங்காணும்
“பொய்யேகைம்மைசொல்லி” இத்யாதி காண்க.

124-(தேயாத் வரவர.) மணவாளமாமுனிகள் பெரியாழ்வார் திருமொழிக்குத் தாமருளிச்செய்த இனிய வியாக்கியானத்தில் மிகவும் ஆழ்ந்து அவகாஹிக்கவல்ல
உள்ளத்தை எனக்கு அருள்புரியவேணும்.

125-(ரமயதிமம்) ஆசார்ய ஸார்வபெளமரான மணவாளமாமுனிகள் அருளிச்செய்த ஸகலப்ரமாண ஸங்க்ரஹமென்னும் [பிரமாணத்திரட்டு திவ்யகரந்தம் என்னுள்ளத்தை எப்போதும் உகப்பிக்கின்றது.

126-ய இ வரயோகி.) இந்நிலத்தில் அடிக்கொதிப்பால் ஆர்த்திப்பிரபந்த மருளிச் செய்தருளின மணவாளமாமுனிகள் ‘இன்னமொரு நூற்றாண்டிரும்‘ என்ற வாழ்த்துப்படியே இவ்வுலகில் எந்நாளுமெழுந்தருளியிருந்துகொண்டு நமது ஆர்த்திகளைத் தீர்த்தருளவேணும்.

127-(ஜாயாஜந்நீ) தாரமென்றும் தாயென்றும் தந்தையென்றும் ஸஹோதரனென்றும் பலரிடத்துப் பாலிபாயக் கூடிய அன்பு முழுவதும் அடியேனுக்கு மணவாளமாமுனிகளின் திருவடிகளிலேயே பதியக்கடவது. ஸகலவித பந்துக்களும்மாமுனிகளே யென்கை.

128-(மாதவ முகுந்த) எனது வாய், மாதவ! முகுந்த! முராரே! மதுஸு தந! கேசவ! என்சிற திருநாமஸங்கீர்த்தனங்களை விட்டிட்டு எப்போதும் மணவாள மாமுனிகளின் திருநாமங்களையே கூறப்பெற வேணும்.

129-(தலமபி) எனதுநெஞ்சு நின்றவாநில்லாது அலைபாய்வதேயானாலும் மணவாளமா முனிகளின் திருவடிகளில் மாத்திரம் ஒருபடிப்பட ஆழ்ந்த அன்பை யுடைத்தாயிருக்கின்றது. இங்ஙனே அருள்புரிந்த அந்த மாமுனிகளின் திருவருளை எங்ஙனே புகழ்வேன்.

130-(ரங்கீ ஸ்வயமி.) ஸ்ரீரங்கநாதனையும் தம்பக்கலிலே சிஷ்யனாகக்கொண்ட மாணவாள மாமுனிகளின் மஹிமை என்போன்ற சிறியோர்களின் இளைய புன்கவிதை களால் வருணித்துத் தலைக்கட்டக்கூடியதோ?

131-(முஹ ரிஹ) மணவாளமா னிகளின் ஸ்ரீஸத்தியமுதத்தைப் பருகிப் பருகிக் களித்த ஸ்ரீரங்கநாதன் சோதிவாய் திறந்து பணித்த* ஸ்ரீசைலேசத்தனியன் உலகிலுள்ள ஸகல மந்த்ரங்களையும் வென்று வீறுபெற்று விளங்குகின்றது.

132-(நிகில பி) ஆங்காங்குக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் எம்பெருமான்கள னைவரும் மணவாளமாமுனிகளையே தேவதையாகக்கொண்ட எந்த ஸ்ரீசைல மந்தரத்தையே நாடோறும் திருச்செவிசாத்தித் திருவுள்ளம் பூரிக்கின் றனரோ அந்த மந்த்ரத்தையே நான் எப்போதும் ஜபிக்கக்கடவேன்.

133-(மஹதாம் சுபகுல) ஸ்ரீவைஷ்ணவதாஸனானவடியேன் பெரியோர்களின் நற்குலத்திற் பிறந்ததனாலும் பேராசிரியர் திருவருளுக்கு இலக்காகப் பெற்றதனாலும் இந்த ஸ்தோத்ரத்தை விண்ணப்பஞ் செய்யலானேன்.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரஷ் சதியில் மூன்றாவதான ஸ்ரீவரவரமுநி வைபவ ஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷ்சதியில் நான்காவதான ஸ்ரீமத் வரவரமுநி ஸ்தோத்ரம் ரஸாயநம்

ஸ்ரீசைலேசதயாபாத்ரமென்னும் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே நெடிலெழுத்து இன்றியே குறிலெழுத்துக்களையே அமைத்து இந்த ஸ்தோத்ர ரஸாயநம்இயற்றப்படுகிறது. (பாதங்களின் முடிவில் மாத்திரம் நெடி லெழுத்து இருப்பது விருத்தமன்று) இந்த ஸ்தோத்ரத்தில் தீர்க்காக்ஷரம் புகாமையினாலே ஸ்ரீசைலேசத்தனியனில் தீர்க்கமாகவுள்ள அஷரங்களும் இதில் ஹ்ரஸ்வமாயிருப்பது பொருந்தும்.

134-(ச் தஜநீ) அடியார்கள் செய்த பாவங்ளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் தீயினில் தூசாக்குகின்ற மணவாளமாமுனிகள் தமது திருமேனியை எப் போதும் என்னுள்ளத்துள்ளே காட்டியருளா நின்றார்.

135-(சமதம) சமதமாதி குணக்கடலே! மிகத்தெளிவான வியாக்கியானாங்களை யருளிச் செய்யவல்லவரே! மணவாளமாமுனிகளே! அடியேன் இங்கு நாடேறும் தேவரீருடைய திருப்புகழ்களையே அநுபவியா நின்றேன்.

136-(லகுமயி )மணவாளமுனிகளே ! அடியேனுக்கு நல்ல புத்தியை நல்தவற்றான சிறந்த திருவருளை என்மீது விரைவில் செய்தருளவேணும். அந்தத் திருவருள் இல்லையேல் என் ஜன்மம் எப்படிஸபலமாகும்.

137-(சசதர ) திங்களைப்பழிக்கும் திருமுகமண்டலமுடையவரே! நற்குணங்களையெல்லாம் விளங்கக் காட்டியருளினவரே! சாந்தர்களான யதிகளுக்குள் தலைவரே அடியேனுக்கு நல்ல புத்தியுண்டாகும்படி நல்க வேணும்.

138-(தர தலத்) மணவாளமாமுனிகளே! சிறிது மலர்ந்த தாமரை போன்ற திருக் கண்ணோக்கத்தை அடியேன்மீது வீழ்த்தியருளவேணும்; இவ்வருள் வாய்க்காவிடில் என்னிற்காட்டில் வேறொரு மூடன் உலகில் தேறமாட்டான்.

139-( யதிபதி) தமது வியாக்கியான ஸ்ரீஸூக்திகளாலே ஸ்ரீராமாநுஜ தர்சந ஸாரார்த்தங்களை யெல்லாம் விளக்கினவரும் சிறந்த குணக்கடலென்று புகழ்பெற்ற வருமான மணவாள மாமுனிகள் வாழ்க.

140-(பவநஜ ) இளையபெருமாளாகத் திருவவதரித்து, திருவடி, ஸக்ரீவ மஹாராஜர் முதலான வானர முதலிகளோடு கூடப் பெருமாளுக்குக் கைங்கரியங்கள் செய்தருளினவரும் இந்திரஜித்தை அடர்த்தவருமான மணவாளமாமுனிகளே! அடியேன்மீது மிகவும் இரங்கியருள வேணும்.

141-(தநுரியம்) வணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருவருளால் தேவரீரதுதிருவடிகளில் அடியேனுக்கு இடையறாத சிந்தனை நிகழுமாயின் இப்புவியில் அடியேன் சிரஞ்ஜீவியாக வாழப்பெறுவேனாக.

142-(தியமஹம்) மணவாளமாமுனிகளே! ஒவ்வொரு நிமிஷமும் தேவரீருடையதிருக் குணங்களைத் துதிப்பதிலேயே என்னுடைய புத்தியையெல்லாம் உபயோகித்து வருகிறேன் ; தேவரீருடைய சிறந்த திருவருளே இதற்குக் காரணம்.

143-(பவமய) அருள்மிகுந்த மணவாள மாமுனிகளே! பிறவிக் கடலினுள்ளே விழுந்து துவளும் பலபல ஜனங்களுக்குக் கை கொடுக்க வல்லமையினாலே அவர்களெல்லாரும் துன்பம் தீர்ந்து இன்பம் பெறுமாறு செய்தருளாநின்றீர்.

144-யதிபதி)மணவாளமாமுனிகளே! எம்பெருமானாரும் தேவரீரும் வேற்றுருவ மல்லாமையாலே தேவரீரே எம்பெருமானாராக அவதரித்து அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களை யெல்லாம் என்னுள்ளத்துள் எழுதியருளவேணும்.

145-(திவி புவி )மணவாளமாமுனிகளே! அடியேனை விண்ணுலகில் கொண்டு வைத்தாலும் இம்மண்ணுலகிலேயே வைத்தாலும் என்மனத்தால் ஒருவாசியுமில்லை; எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களையே என்னுடைய ஸ்தோத்ரங்களுக்கு விஷயமாக்கிக் கொண்டிருக்க வேணுமென்பதொன்றே கோரிக்கை.

146-(குருவர ) மணவாளமாமுனிகளே! திருவாய் மொழியின் ஆழ்ந்த அழகியகருத்தை யெல்லாம் அடியேனது உள்ளத்தில் நன்கு பதிய வைத்தருளினீர்; அடியேன்பால் தேவரீருடைய திருவருள் மிகக்கனத்தது.

147-(ப்ரணமத.)(மாநிலத்தீர் !) மணவாள மாமுனிகளின் திருவடியை வணங்குமின், ஸ்ரீஸூக்திகளைச் செப்புமின், அவர்க்கேகைங்கரியம் செய்மின் ;இங்ஙனேயாகில் * நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர். (இந்த சலோகத்தில் முதலெழுத்தாக வரவேண்டிய ணகாரம் இரண்டாமெழுத்தாக அமைந்துளது.)

148-( ரசயிதும் ) மணவாள மாமுனிகளே! தேவரீரைத் துதிக்க வேணுமென்று அடியேன் நெஞ்சிற்கொண்டவனல்லேன்; ஆனாலும் தேவரீருடைய திருக்குணங்களெல்லாம் என்னெஞ்சில் அஹமஹமிகயா வந்து கூத்தாடுவதனால் இங்ஙனேதுதிகள் அமைகின்றன. ( இந்த ச்லோகத்தில் [ ர்ண )என்கிற எழுத்துக்கு பதிலாகரேபம் மாத்திரமே கொள்ளப்பட்டது.)

149-(வச ச.)மணவாளமாமு களே ! என்வாக்கிலும் மனத்திலும் எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களே விளங்குமாறு செய்தருளினீர் ; இனி வேறு எந்த ஆசாரியரும் என் மனத்தில் அடிவைக்க முடியாதபடி ஆய்விட்டது.

150-( யசஇ )மணவாளமாமுனிகளே ! தேவரீருடைய திருப்புகழ் இவ்வுலகமெங்கும்பரவி ” மணவ ள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்.” என்றுவீடுதோறும் நாடுதோறும் வாழ்த்தும்படியமைந்துளது. இப்பெருமையைச் சிலகுமதிகள் அபலாபம் செய்ய முயன்றதனால் என்ன சேதம்?

151-(த்திதிரிதி.) மணவாளமாமுனிகளே! * ஆண்டுகள் நாள் திங்களாய்நிகழ்காலமெல்லாம் என்கிறபடியே திதியாகவும் கிழமையாகவும் நக்ஷத்ரமாகவும் அயநமாகவும் கழிந்து செல்லுகின்ற நாட்களில் ஒருநொடிப் பொழுதும் தேவரீ ருடைய திவ்ய ஸக்தியின் அனுபவமின்றிக்கே யிருக்ககில்லேன்.

152-(த்ரவதிஹி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸுக்திகளை ஓய்வின்றிச் சித்தைசெய்கின்ற. என்மனம் நீர்ப்பண்டமாயுருகுகின்றது.மஹாஜ்ஞாதாக்கள் சொல்லவேண்டிய இவ்வார்த்தையை அல்பஜ்ஞனான அடியேன் சொல்லுவதற்காக வெட்கமும் படுகின்றிலேன்.

153-(ப்ரதயதி) மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விளக்குவது போலவே பல குத்ருஷ்டி மதங்களையும் கண்டித் தொழிக்கின்றன; இத்தகைய ஸ்ரீஸக்திகள் எனக்கு வாசோவிதேயமாக வேணும்.

154-(வபுஷிச.) மணவாளமாமுனிகளே! எனது மனமொழி மெய்களில் தேவர் ருடைய திவ்யமங்கள விக்ரஹவொளியே இடையறாது புரள்கின்றது; இப்படிப் பட்ட பாக்கியம் பாவியேனுக்கு எங்ஙனே வாய்த்ததோ?

155-(நதித்தி ) மணவாளமாமுனிகளே ! அடியேனுடைய த்ரிகரணவ்ருத்தியும் தேவரீர் திறத்திலேயே பெருகிச்செல்லுகின்றது; தேவரீரையே தொழுவது உட லின் பணி; தேவரீரையே மனனம் செய்வது மனத்தின் பணி,இந்த ச்லோகத்தின் முதலெழுத்து ணகாரத்திற்கு பதிலாக நகாரம் கொள்ளப்பட்டது.

156-(வரகவி) இப்புவியில் தைவ கடாக்ஷத்தாலே கவியியற்றும் வல்லமை வாய்ந்த பல பண்டிதர்கள் வரகவி யென்று விருது பெறுவதுண்டு; ஆனாலும் வரமு னிகவியென்று ஒருவரும் இதுகாறும் விருது பெறவில்லை; மணவாள மாமுனிகளையே இடைவிடாது துதிப்பதனால் அடியேனே அந்த உயர்ந்த விருதைப் பெற்றேனானேன்.

157-.(தச சக )மணவாளமாமுனிகளின் திருப்புகழைப் பேசுவதென்றால் அடி யேனுடைய கொண்டேயிருக்கும். வாக்கிலிருந்து ஆயிரமாயிரம் ஸ்துதிகளும் நாள்தோறும் அவதரித்துக் அவை ஸூர்ய சந்திரர்களுள்ளவளவும் விளங்கக் கூடும்.

158-(ரமயதி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனி யழகே அடி யேனது உள்ளத்தை மகிழ்விக்கிறது; எனது ஒப்பற்றவனுபவத்தை நான் எங்ஙனம் எடுத்துரைப்பேன்.

159 (யதிபதி .) மணவாளமாமுனிகளே! எம்பெருமானார் நம்மாழ்வார் உலகா சிரியர் முதலான ஆசாரியர்கள் விஷயமாகவும் கௌரவபுத்தியுடன் நான் பல ஸ்து திகளைப் பண்டு விண்ணப்பம் செய்திருக்கிறேன்; ஆயினும், ஐயோ! அதெல்லாம் எதற்குச் செய்தோமென்கிற அனுதாபமே மிகவுமடியேனுக்குள்ளது.

160-(ஜகதிதம்) இவ்வுலகில் பலபல காலங்களில் (பலபல மதங்களில்) பல பல ஆசிரியர் ஆசிரியர்கள் தோன்றியே வருகிறார்கள்: ஆயினும் மணவாள மாமுனிகளைப் போன்ற எந்த மதத்திலும் தோன்றவேயில்லையென்று ஆணையிடுவேன்.

161-(மஹிமஸு)மணவாள மாமுனிகளே! தேவரீருடைய பெருமைக்கடலில் ஒரு சிறு திவலையளவு கூட அடியேன் அநுபவிக்கவல்லவனல்லேன்; ஆயினும் ஓயாது தேவரீர் விஷயமான ஸ்துதிகளை எழுதுவதிலேஊன்றிக்கிடக்கிறேன்.

162-(தரலஹ்ருத்.) நான் சஞ்சலசித்தனேயானாலும் மணவாள மாமுனிகளிடத்தில் அன்பு இன்றிக்கே ஒரு நிமிஷமும் இருப்பதில்லை; தேவப் பெருமாளை ஸேவித்தாலுங் கூட மணவாளமாமுனிகளென்கிற நினைவோடு தான் ஸேவிக்கிறேன். (வரதன் என் கிற திருநாமத்தில் வரவர முனியின் திருநாமத்திலேகதேசம் கலந்திருப்பதனால்

163-(ரசயது.) இவ்வுலகில் பல கவிகள் மிகச் சிறந்த பல பல நூல்களை இயற்றட்டும்; யார் எந்த நூல் இயற்றினாலும் மணவாள மாமுனிகளின் திவ்யகுணங்களைப் பேசப் பிறந்த எனது நூல் தான் ஓங்கிநிற்கும்.

164-(முனி வர) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனியின் சிந்தனையே என்னுள்ளத்துள் இடைவீடின்றி யிருத்தலால் இவ்வுலகில் என் கைக்கு எட்டாதது ஒன்றுமில்லை; நானே அவாப்த ஸமஸ்த காமன்.

165-.(நிரவதி)ஒப்பற்ற எண்ணில் பல் புகழ் வாய்ந்த மணவாளமாமுனிகளே! தேவ ருடைய திருவருளால் நலம் மிகுந்த இத்தகைய ஸ்துதிகள் நாடோறும் நிமி ஷந்தோறும் அவதரித்துக் கொண்டே யிருக்க வேணும்.

ஸ்ரீமத் வரவர முநீந்தரஷட்சதியில் நான்காவதானஸ்ரீவரவரமுநிஸ்தோத்ர ரஸாயனம் முற்றிற்று

ஸ்ரீசைலேசதயாபாத்ரத் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே மணவாள மாமுனிகள் விஷயமான மங்களாசாஸநஸ்துதி இது.

166-(ஸ்ரீசமரிச ) ஆழ்வாரெம்பெருமானார் ஸ்ரீஸுக்திகளாகிற அமுதத்தையே பருகும் மணவாளமாமுனிகள் வாழ்க.

167-(சைசவாத்) இளமையே தொடங்கி பகவத்குணக் கடலில் ஆழ்ந்த மணவாளமாமுனிகள் வாழ்க.

168-(லேகநே.) மிகத்தெளிவான வியாக்கியானங்களை அருளிச்செய்ய வல்ல ஆதிசேஷாம்சமான மாமுனிகள் வாழ்க.

169-(சடாரி) நம்மாழ்வார் கலியன் முதலான ஆழ்வார்களின் அருளிச் செயல் மணம் கமழும் திருவாக்கையுடைய மணவாள மாமுனிகள் வாழ்க.

170-(தயாபால) அருளாளப் பெருமாளெம் பெருமானாரருளிச் செய்த ஞான ப்ரமேய ஸாரங்களை வியாக்கியானித்தருளின அருட்கடலான மணவாள மாமுனிகள் வாழ்க.

171-(யாதாயாத.) ஸம்ஸாரமென்னும் பாலைநிலத்தில் நாம் திரிந்துழல் வதைத் தொலைத்தருளின மணவாளமாமுனிகள் வாழ்க.

172-(பாதாப்ஜ.) திருவடி பணிந்தார்க்கு நித்யமும் ஸ்ரீபாத தீர்த்தமளித் தருளித் தூய்மை பெறுவித்த மாமுனிகள் வாழ்க.

173-(த்ரய்யந்தார்த்தார்.) தத்வத்ரய வியாக்கியான முகத்தால் வேதாந்தப் பொருள்களை விவரித்தருளின மாமுனிகள் வாழ்க.

174-(தீமத்பி) கோயிலண்ணன் முதலான பெரியார்கள் அடிபணியப்பெற்ற மஹா தீரரான ணவாளமாமுனிகள் வாழ

175-(பயம்பயாப்தி) பிறவிக் கடலில் மூழ்கினவர்களின் அச்சத்தை அறவே போக்கியருளின மணவாளமாமுனிகள் வாழ்க

176-(யாதநாம்) நரகத்தில் நேரக்கூடிய வேதனை யொன்றும் நமக்கு நேராதபடி யருள் செய்த மணவாளமாமுனிகள் வாழ்சு.

177-(திவ்யஸூக்தி) அருளிச் செயலமுதத்தை அநவரதமும் பருகிக்களிக்கின்ற
மணவாள மாமுனிகள் வாழ்க.

178-(குரூணாமபி.) ஸகல ஆசார்யர்கட்கும் முன்னே எண்ணத் தகுந்தவரும் ரஹஸ்யார்த்த தத்வநிதியுமானமாமுனிகள் வாழ்க

179-(குணாதாம்) அளவிறந்த திருக்குணங்கட்குக் கடல் போன்று அடியார் திறத்துப் பரிவு பூண்ட மாமுனிகள் வாழ்க.

180-(அர்ணவாய) சிறந்த அர்த்தங்களுக்குக் கடல்போன்று அற்புதமான ஞானச் செல்வம் படைத்தமாமுனிகள் வாழ்க.

181-(வந்தே ஸ்தெளமி.) இறைஞ்சுகின்றேன் ஏத்துகின்றேன் வணங்குகின்றேன்
என்பவற்றுக்கு முக்கிய இலக்கான மாமுனிகள் வாழ்க

182-(யச் சதே.) நூற்றந்தாதியினால் திருவாய்மொழி யாயிரத்தின் பொருளை
யளித்த, எம்பெருமானார் தரிசன விளக்கான யாமுனிகள் வாழ்க.

183-.தீர்த்வா.) பிறவிக்கடலைக் கடந்து பரவாஸுதேவனை ஸேவிக்க விருப்ப முடையவர்களால் ஸேவிக்கப்பட வேண்டிய மாமுனிகள் வாழ்க

184-(த்ரவீபவ.) தம்முடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்திப்பாருடைய உள்ளத்தை யுருக்குபவரும் அருளிச் செயல்களின் பாக்கியமே வடிவெடுத்தவருமான மணவாள மா முனிகள் வாழ்க.

185-(ப்ரலயேபி.) பிரளயத்திலும் அழியமாட்டாத தனியனால் வைபவம் பெற்ற
உலகம் நிறைந்த புகழாளரான மாமுனிகள் வாழ்க.

186-(வசோபூஷண.)ஸ்ரீவசன பூஷணத்தின் உண்மைப்பொருளை உணர்த்தும் வியாக்கியானத்தை யருளிச்செய்து புகழ்மிக்கவரும் ஸர்வஜ்ஞரும் பரமோதாரருமான மாமுனிகள் வாழ்க.

187-(ணமுதாத்வர்த்த.) ணமுதாதுவின் பொருளான வணக்கத்தில் ஊற்றமே
நெஞ்சிற்குடிகொண்டிருக்கப்பெற்ற ஆசார்யசிகாமணி வாழ்க.

188-(வஸிஷ்டாதி.) வஸிஷ்டாதி மஹர்ஷிகளின் வாக்கைக் காட்டிலும் மிகச் சிறந்த ஸ்ரீஸூக்திகள் யருளிச்செய்தமாமுனிகள் வாழ்க

189-(தேசிகாநாப்) ஸகல ஆசாரியர்களும் ஒன்று சேர்ந்து உதிக்கப்பெற்றவரிவர்
என்று மஹான்கள் போற்றும் மாமுனிகள் வாழ்க.

190-ரந்த்ராந்வேஷி) என்ன தப்பு தவறு கிடைக்குமென்று தேடிப்பார்த்து தூஷிப்பதிலேயே கண்ணானவர்களுக்கும் நிலமல்லாத நிரவத்ய ஸ்ரீஸூக்திகளை யளித்த மாமுனிகள் வாழ்க.

191-(யதிப்ரவர ) ஸ்ரீபாஷ்யார்த்தங்கள் நிரம்பிய ஸ்ரீஸக்திகளைத்தந்தருளினவரும், வானமாமலைஜீயர் பட்டர்பிரான் ஜீயர் திருவேங்கட ராமாநுஜீயராகிய மூவரால் துதி செய்யப் பெற்றவருமான மாமுனிகள் வாழ்க.

192-(ஜாக்ரத்தசாயாம்) கனவிலன்றிக்கே நனவிலேயே அடியேனுக்கு ஸேவை ஸாதித்தருளின மணவாள மாமுனிகள் வாழ்க.

193-(மாயா துரத்யயேத்யேவம்) *மம மாயா துரத்யயா க என்று கடக்க வரிதாகக் கீதையிற் சொன்ன மாயையைத் தொலைத்தருளின மாமுனிகள் வாழ்க.

194-(தத்வார்த்தம்) ஸகல சாஸ்த்ர தத்துவப் பொருள்களையும் கையிலங்குநெல்லிக் கனியாகக் கண்டு நிஸ் ஸந்தேஹமாக உரைத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.

195-(ரஞ்ஜிதாசேஷ) எல்லாருடைய நெஞ்சையும் உகப்பித்தவரும், அகவிருளை அகற்றினவரும், அழகிய திருவாக்குக்களை யளித்தவருமான மணவாளமாமுனிகள் வாழ்க.

196-(முகபங்கஜ திருவாய்மலர்ந்தருளும் தேன்மொழிகளாலே முமுக்ஷக்
களைக் காத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.

197-(நித்யகைங்கர்ய) *சென்றாற்குடையா மித்யா திப்படியே நித்யகைங்கரியங்களிலே நிரதரான திருவனந்தாழ்வானே வந்து திருவவதரித்தவரான மணவாளமாமுனிகள் வாழ்க வாழ்கவே.

198-(மங்களாசாஸநம்) மணவாள மாமுனிகளின் திருக்குணங்கள் திகழநின்ற இந்த மங்களாசாஸந ஸ்துதியைச் சிந்தை செய்வார்க்கு நித்யஸ்ரீர் நித்யமங்கள முண்டாம் என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.

ஸ்ரீசைலேசதயாபாத்ரமங்களாசாஸன ஸ்தோத்திரம் முற்றிற்று.

200 (ச்லோ) க்ருதம் பூய பாபம் ப்ரதி கிமிதி சிந்தா பவதி வ ?
கலத்ரே தாதே வா தநய உத பந்துஷ்வபி புந:, விரக்த்யா மத்வாக்யே ருசிரிஹ பவேத்வாபரமித: கலித்வர்ந்தத்வம்ஸ் வரவரமுநிர் வோ த்ருவமவேத்– இதில் நான்கு பாதங்களிலும் க்ருத த்ரேதாத்வாபர கலியுகங்களின் பெயர் (முத்ராலங்கார ரீதியில்) அமைந்திருப்பது காண்க. (இனி கருத்துக்கேண்மின்.) ஜனங்களே! நீங்கள் செய்த அபரிமிதமான பாபத்தைப்பற்றி உங்களுக்கு ஏதுக்கு விசாரம்? மனைவி தந்தை மகன் உற்றாருறவினர் என்னுமிவர்களிடத்தில் நசையற்று என் வார்த்தையில் உங்களுக்கு ருசியுண்டாகுமா? (அப்படியானால் ) இன்று தொட்டு மெழுமையும் கலிகல்மஷத்தைப் போக்கவல்லவரான மணவாளமாமுனிகள் உங்களை அப தபாப்மாக்களாக்கி ரக்ஷித்தே தீருவர். மூன்றாம்பாதத்தில் பவேத் வாபரமித: என்றதில் த்வாபரயுகஸ்பூர்த்திகாண்க. இத பரம் மத்வாக்யே ருசிர் பவேத் வா? என்று அந்வயக்ரமம் காண்பது . மேல்வரும் நக்ஷத்ரமாலா பர்யந்த ஸ்தோத்ரங்களிலெல்லாம் இவ்வண்ணமாகவே முத்ராலங்கார ரீதியிலே ஸம்வத்ஸராதி நாமங்களின் விந்யாஸ முணரத்தக்கது.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோக ஷட்சதியில் இரண்டாவது சதகம் முற்றுப்பெற்றது.

ஸ்ரீ வரவரமுநி ஸம்வத்ஸரமாலாஸ்தோதாம் ஏழாவது.-ப்ரபவ முதலான அறுபது ஸம்வத்ஸாங்களின் பெயர்களை முறையே அறுபது சுலோகங்களில் அமைத்து மாமுனிகளின் திவ்ய குணாநுபவமாகச்செய்த தோத்திரமிது. இந்தத் தோத்திரத்தில் (வடமொழியமைப்பில்) இரண்டு நிர்ப்பந்தங்கள் கொள்ளப்பட்டன; (1) ப்ரபவாதி ஸம்வத்ஸநாமத்தை ச்லோகங்களின் தொடக்கத்திலேயே வைப்பது. (2) சுலோகந்தோறும் முதலில் வரும் எழுத்தையே மற்றமூன்று பாதங்களிலும் முதலெழுத்தாக வைப்பது.

201-(ப்ரபவோ பஹவஸ் ஸந்தி.) இவ்வுலகின்கண் புகழ் பெற்ற ப்ரபுக்கள் பலருளர்; இருக்கட்டுமே. மஹாப்ராஜ்ஞரான மணவாள மாமுனிகளே விவேகிகளுக்கு அத்விதீய ப்ரபுவாவர்.

202-(விபவாந் விவிதாந்ஸத்ப்ய:) மணவாள மாமுனிகளின் வைபவங்களைச்
சிந்தை செய்வதில் ஊக்கமுண்டானால் அது ஸத்துக்களுக்குப் பலவகைப்பட்ட
விபவங்களை விளைக்கவல்லதாகும்.

203-(சுக்லபக்ஷேந்துவந்நித்யம்.) மணவாள மாமுனிகளின் திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தூயமனத்தில் வைத்துச் சிந்தை செய்பவர்களுக்கு சுத்தஸத்வ குணமானது சுக்லபக்ஷத்துச்சந்திரன் போல் மேன்மேலும் வளர்ந்து செல்லும்.

204-(ப்ரமோதோதநுரஸ்மாகம்) எங்கும் புகழ்பெற்ற மணவாள மாமுனிகளின் ப்ரபாவங்களைச் சிந்தை செய்வதனால் நமது உள்ளத்தினுள் பேரின்ப வெள்ளம் பெருகுகின்றது.

205(ப்ரஜோத்பத்திக்ருதௌ நித்யம்) பரமபுருஷன் நிச்சலும் ப்ரஜைகளைப் படைத்துக் கொண்டே போவதில் வல்லவனே யொழிய, பெற்ற ப்ரஜைகளுக்கு உணவளிக்கவல்லவனல்லன்; அவன் படைத்த ப்ரஜைகளுக்கெல்லாம் உணர்வாகிற உணவையளிக்க அவதரித்தவர் நம் மணவாள மாமுனிகள்.

206(ஆங்கீரஸக்ருதாநந்தம்) மணவாள மாமுனிகள் எனக்குஆனந்தத்தை விளைவிக்கவல்ல தமது திவ்யமங்கள விக்ர திவ்யகாந்திகளை எனது நெஞ்சினுள் அடிக்கடி விளக்கிக் கொண்டே யெழுந்தருளியிருக்கிறார்.

207- (ஸ்ரீமுகாம்போஜநிர்கச்சத்) தமது முகாரவிந்தத்தில் நின்றும் வெளி வருகின்ற ஸ்ரீஸூக்திகளாகிற அமுதவெள்ளத்தைப் பெருக்குவதனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தை வளர்த்தருளாநின்ற மணவாளமாமுனிகள் வாழ்க.

208- (பவஸாகரஸந்தார்:) அன்பர்களே! ஸம்ஸாரஸாகரத்தைக் கடந்து வாழவேணுமென்று விரும்புகின்றீர்களாகில், மணவாள மாமுனிகளின் திவ்ய ஸ்ரீஸக்திகளில் பக்தி செலுத்துங்கள்.

209(யுவத்வம் ப்ராபுஷாம் மாபூத்) பாலப்பிராயத்திலும் முதுமைப்பிராயத்திலும் பெறமுடியாத நன்மைகளை யௌவனபிராயத்தில்தான் பெறமுடியும்; அந்தப் பிராயத்தைப் பெற்றிருப்பவர்களே! அதனைப் பாழ்படுத்தாமல் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைச் சிந்தனை செய்வதே உந்தமக்குத் தக்கதாம்)

210 (தாதுஸாம்யே ஸதி ஸ்வைரம்) கை நாடிகளெல்லாம் விஷமநிலையிலன்றிக்கே ஸம நிலையிலிருக்கும்போதே (நல்லகாரியங்களை ஸாதிக்கவேண்டியிருக்க. அது செய்யாதே )யதேஷ்டமாகத் தீயவழிகளிற்சென்றுழல்வதனால் என்னபேறுபெற்றதாகும்? எப்போதும் கண்டபாடமாகத் தரிக்கவேண்டியதான மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் கண்டபாடமாக்கிக்கொள்ள முயலுங்கள்.

211 (ஈச்வரோ ஜகதாம் விஷ்ணு)ஜகத்துக்களுக்கெல்லாம் போஷகன்ஸ்ரீமஹாவிஷ்ணு வென்கிறார்கள்; அது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை; அந்த ஸர்வேச்வரனையும் போஷிப்பவர் மணவாள மாமுனிகளேயாவர். 

212(பஹுதாங்யநேச்சாபி 🙂 தனதான்யங்களை அபரிமிதமாக ஸம்பாதிக்க வேணுமென்று எங்கும் சுழன்று திரிகின்ற ஸம்ஸாரிகளின் சிந்தையில் மணவாள மாமுனிகள் பெரும்பாலும் எழுந்தருளியிருப்பதில்லை யந்தோ!

213 (ப்ரமா திவ்யப்ரபந்தேஷ ) ஆழ்வாரருளிச் செயல்களில் யதார்த்த ஜ்ஞானம் பெற வேணுமென்று விருப்பங்கொண்ட ப்ராஜ்ஞர்கள் மணவாளமாமுனிகளின் திவ்ய க்திகளை விசேஷித்துச் சிந்தைசெய்யக்கடவர்கள்.ப்ரமாதி சஞ்சலஞ்சேதி ) கீதையில் சஞ்சலம் ஹி ம : க்ருஷ்ண! ப்ரமாதிபலவத்த்ருடம், தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்” என்று(அர் னனால்) அடக்கவரித்தாகச் சொல்லப்பட்ட மனத்தை அடக்கியாண்டவர் புகழ் பெற்ற மணவாள மாமுனிகளே யாவர்.

214 (விக்ரமம் வாசி பிப்ராணா ) நா வீறு படைத்த நாவலர்களும் அஸூயை குடிகொண்ட நெஞ்சினராய் மணவாள மாமுனிகளின் பெருமைகளை மறைப்பதிலேயே குதூஹலங் கொண்டிராநின்றார்களந்தோ! .

215 (வ்ருஷபம் முநிவர்யாணாம்.) (விக்ரமவருஷத்திற்கு அடுத்தவருஷத்தை
வ்ருஷவர்ஷமென்று சிலரும் விஷ வருஷமென்று சிலரும் சொல்லுவர்கள்.
இரண்டுபடிக்குஞ்சேர இரண்டு சு லோகங்கள் விஜ்ஞாபிப்போம். (வ்ருஷ)
என்கிற பக்ஷத்திற்கு இந்த சுலோகம்.) முனிவர்களேறு என்றும் ஞானவ்ருத்த ரென்றும் புகழப்பெற்ற மணவாள மாமுனிகளை என்னுடைய ஸகலபாபங்களும் தீயினில் தூசாவதற்காகத் தஞ்சமாகப்பற்றுகிறேன்.-(விஷு என்பது வர்ஷநாம மென்னும் பக்ஷத்தில்){விஷ்வக்வ்யாபியச காய) எங்கும் பரந்த புகழ்த் திருமேனியினால் விளங்கா நின்ற நிரவத்யரான மணவாளமாமுனிகள் நூருண்டு வாழ வேணும்.

216 (சித்ரபா நுலஸத்பூ 🙂 எம்பெருமான் விசித்திரமான ஒளிகள் திகழும் திருவாபரணங்களை யணிந்து என்முன்னே நின்றாலும் அவனை விட்டு, என் சிந்தனைக்கினிய மணவாள மாமுனிகளை மட்டுமே யான் சித்தை செய்வேன். 

217 (ஸ்வபாநுபிஸ் தமோ பாஹ்யம்) கதிரவன் தனது கிரணங்களினால் வெளியிருளை மட்டும் போக்குகின்றான். பரமமதுர திவ்ய க்திகளையளித்த மணவாள மாமுனிகள் தமது திருவாக்குக்களினால் அகவிருளை அகற்றுகின்றார்.

218-.(தாரணோ பவவாராசே:) பிறவிக்கடலைக் கடக்கச் செய்பவரும்.திங்கள் போன்ற திருமுகத்தையுடையவரும், தாபத்ரயத்தையும் தணிக்க வல்லவருமான மணவாள மா முனிகள் என்னுடைய இருள்மலிந்த மதியை மாற்றி யருளவேணும். தெருள் கொள்ளச் செய்யவேணும்.

219- (பார்த்திவாந் தந்தர்ப்பாடயா ) செல்வச்செருக்குற்றபாமரப்ரபுக்களை நோக்கிச் செல்கின்றவர்கள் மணவாள மாமுகளின் பரமபவித்திரமான திருவடித் தாமரையை நோக்கிச் செல்லக்கடவர்கள்.

220 (வ்யயம் வாசாம் விதந்வந்தி) அறிஞர்களுங்கூட தங்களுடைய வாக்கை வீணாகவே அஸ்தானத்தில் விநியோகிக்கின்றார்கள்; அன்னவர்கள் தங்களது விவேக சக்தியைச் செலுத்தி, தாங்கள் படைத்த நாவீறுகொண்டு மணவாளமாமுனிகளைத் துதித்துத் துயர் தீர்வது நலம்.

221 (ஸர்வஜித் பகவாந் விஷ்ணு:) தனது மேன்மையினால் எங்கும் வெற்றி பெற்றவனான எம்பெருமான் ஸ்ரீரங்கநாதனாய் மணவாளமாமுனிகளுக்கு ஸச்சிஷ்யனாகி க்ருதார்த்தனாயினன்.

222 (ஸர்வதாரீ ஹரிஸ் ஸாக்ஷாத் )எல்லார்க்கும் ஆதாரபூதன் ஸாக்ஷாத் ஸர்வேச்வரனே யென்பதை நாம் மதிப்பதில்லை ; ஸர்வஜ்ஞரான மணவாளமாமுனிகளே தமது திவ்யஸூக்திகளால் அனைவர்க்கும் ஆதாரபூதராகிறார்.

223 (விரோதீதி கமப்யஸ்யாம்) இந்த நிலவுலகத்தில் ஒருவரையும் விரோதியென்று கொள்ளாதவராக ப்ரஸித்தரான மணவாளமாமுனிகள் விலக்ஷணரான ஆசாரியராவர். ( இந்த சுலோகத்தில் விபுலாயாம் – என்றது நிலவுலகத்திலென்றபடி விபுலா என்று பூமிக்குப்பெயர்; அமரகோசங்காண்க.)…

224( விக்ருதிம் யாந்தி பூயாம்:) பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ என்று ஆழ்வார் வெருவியருளிச்செய்த விஷயக்ராமங்களைக்கண்டு பலர் விகாரமடைகின்றார்கள்; நாம் விகாரமடைவது அவற்றலல்ல; மணவாளமாமுனிகளின் விசதவாக் விசேஷங்களாலேயாம். விகாரமடைவதாவது ககண்டேந ஸ்வரகத்கதேந நயநேநோத்தீர்ணபாஷ்பாம் புநா *காலாழும் நெஞ்சழியுங்கண் சுழலும் என்னும்படியான நிலைமை பெறுதல்.)

225 (வரா இவ விவேகாந்தா:) கழுதைகள்போல் விவேக சூநயர்களான சில தூர்த்தர்கள் மிகவும் மத்தர்களாய்க்கொண்டு மணவாளமாமுனிகளை தூஷிப்பது பொறாமை யினாலன்றோ. அதனாலென்ன ?

226(நந்தநந்தந க்ருஷ்ணேதி.).நந் தன்மைந்தனே! கண்ணனே! என்று பகவந்நாமங்கள் சொல்லுவதை யான் விட்டிட்டு மணவாள மாமுனிகளின் திரு நாமங்களைச் சிந்தை செய்வதிலேயே ஊன்றியிருந்து மகிழக்கடவேன்.

227 (விஜயோ விபுலஸ் தேஷாம்) மணவாளமாமுனிகளின் உலகமறிந்த பெருமைகளை யாவர் உபந்யஸிக்கின்றார்களோ, அவர்களுக்கு எங்கும் வெற்றியே விளையும் ; உலகம் பரந்த புகழுமுண்டாகும்.

228.(ஜய ஏவ பவேந்நித்யம்) ‘மணவாளமாமுனியே! வாழி வாழி’ என்று உரக்க அநுஸந்திக்குமவர்களுக்கு இந்நிலவுலகில் எங்கும் ஐயமே யொழிய பராஜய ப்ரஸக்தியேயிராது

229(மந்மதாஜ்ஞாபடா: ப்ராய:) மனிசர்கள் பெரும்பாலும் மதனனது செங்கோலுக்கு ஆட்பட்டவர்களாய் ஸம்ஸாரமண்டலத்தில் மதங்கொண்டு திரிகிறார்கள். அடியேனோவென்னில், மணவாள மாமுனிகளின் திவ்யஸூக்திகளாகிற மதுவைப் பருகுவதனாலுண்டாகிற மதமுள்ள வன்.

230 (துர்மு கீதி ப்ரஸித்தாநாம்) சுடுமூஞ்சிகளென்று யாவராலும் பழிக்கப் பெற்ற துஷ்டர்களைச் சென்று துக்க நிவ்ருத்திக்காகப் பணியவேண்டா ; மணவாளமாமுனிகளின் பாலன்னமென்மொழிகளைக்கொள்ளுமளவில் கைலதுக்கங்களும் தொலையும்.

231 (ஹே விலம்பிதுமர்ஹம் ந) த்யாஜ்யோபாதேயங்களைப் பகுத்தறியவல்ல விவேகிகளே! (நான் சொல்லுவதை நிறைவேற்றுதலில் ) சிறிதும் தாமதிக்கத்தகாது. மணவாள மாமுனிகளின் பொற்றாமரையடிகளை அநாயாஸ மாகத் துதிக்கக்கடவீர்கள்.

232(விலம்பிகுண்டலோல்லாஸி) * மகரஞ்சேர் குழையிருபாடிலங்கியாடப் பெற்ற திருமுகமண்டலத்தையுடைய எம்பெருமான் என் முன்னே நிற்க வேண்டா, நின்றாலும், எங்கும் மணவாள மாமுனிகளையே காணப்பெற்ற வடியேன் அவனைக் காணகில்லேன்.

233(விகாரிதா து ஹேயேதி) விகாரமடைவதுஹேயமென்று அறிஞர்களு மறிகின்றார்கள், மணவாள மாமுனிகளின் வைபவங்களைச் சிந்திப்பதனா லுண்டாகும் விக்ருதி ஹேயமன்று; விரும்பத்தக்கதேயாகும்.

234 (சார்வரீசப்ரபாஜிஷ்ணு) திங்களொளியை வென்று விளங்கும் திரு மேனியை யுடையவரும் கூமாநிதியுமான மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி களை ஸேவிப்பதனால் ஸகல பாபங்களும் தொலையும்.

235(பலவாலாபாத் ஸதா ச) ஸம்ஸார ஸாகரத்திலழுந்தி, கரை சேர்வதற் குத்தோணி கிடைக்காமையினால் துன்புற்று வருந்திக்கிடப்பவர்கள் மணவாள மாமுனிகளின் தளிர்போன்ற திருவடிகளைத் திடமான தோணியாகபற்றுக. 

236 (சுபக்ருத் ப்ரதிதோ விஷ்ணு:) நமக்கு நன்மைகள் செய்பவனென்று ப்ரஸித்தி பெற்றவனான எம்பெருமான் நமக்கு ஒரு நன்மையும் செய்தருளவில்லை;
மணவாள மாமுனிகளே தமது திவ்ய ஸூக்திகளினால் உலகுக்கெல்லாம் நன்மை செய்து விளங்கினார்.

237-(சோபக்ருத்தாமஸாஹாரை:) தாமஸாஹாரங்களென்று கழிக்கப்பட்ட உணவுகளை யுண்டு ஊன்மல்கி மோடுபருத்தவர்களாகி வருந்தத்தக்க நிலைமையில் நிற்குமவர்கள் மணவாள மாமுனிகளின் திருமேனியழகைச் சிந்திப்பதனால் தங்கள் உடலைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுக. ச்லோகத்தில் (சோபக்ருத்] என்ற விடத்தில் இரண்டாமெழுத்து பவர்க்கத்விதீயம் –சோபமாவது தடிப்பு; அதை யுண்டு பண்ணவல்ல உணவுகள் தாமஸாஹாரங்கள் )

238-(க்ரோதீ ஜநோ வ்ருதைவாத்ர) காமம் க்ரோதம் முதலிய துர்க்குணங்களைத் தொலைக்க வல்லவரான மணவாள மாமுனிகளிடத்தில் க்ரோத பரவசர்களானார்-அஸூயைக்கு வசப்பட்டு வீணாக எதையோ பிதற்றுகின்றன

239-(விச்வா வஸுமதீ தேஷாம் மணவாளமாமுளிகளின் ஸகலவைபவங் களையும் நன்குணர்வார்க்கு பூமண்டலம் முழுதும் வசப்பட்டதாகும்

240-(பராபவ: கதாப்யஸ்மாங்) பரமபாவனமான மணவாளமாமுனிகளின் பொன்னடியாஞ் செங்கமலப்போதுகளைப் பணிகின்ற நம்மை அங்குமிங்குமெங்கும் எவ்விதமான பரிபவமும் அணுகாது.

241- (ப்லவம்கவேஷமாணா யே) பிறவியென்னுங்கடலில் தோணி பெரு
துழல்கின்றவர்கள் மணவாளமாமுனிகளைத் தோணியாகப் பற்றினால் வானரமுதலி
கள் கடலைக்கடந்தது போல் பிறவிக்கடலை அநாயாஸமாகக் கடக்கவல்லராவர். 

242(கீலகோத்பாடநோத்யுக்த.) கீலோத்பாடீவ வாநர: என்னும் நியாயத்தின்படி (அதாவது, வெறுமனே யிருக்க மாட்டால் தன்னுடைய அனர்த் தத்தைத் தானே விளைவித்துக் கொண்டதொரு குரங்கின் கதையின்படி) சில பாமரர்கள் தங்கள் விபத்தைத் தாமே தேடுகிறவர்களாய் மணவாளமாமுனிகளைப் பழிக்கப் புகுகிறார்கள் அந்தோ !

243. (ஸௌம்யஜாமாத்ருபகவாந்) ஸௌம்ய ஜாமாதா ‘ என்று திருநாமம் பெற்ற அழகிய மணவாளன் மணவாளமாமுனிகள் பக்கல் மிகவழகிய ஸ்ரீஸூக்திகளைக் கேட்டுதிவ்யமான தனியனை வெளியிட்டருளினான்.

244 (ஸாதாரணாஹ்வயே வர்ஷே) பகவத்ராமாநுஜரான எம்பெருமானார் ஸாத்விகர்களை நன்கு காத்தருளவேண்டி ஸாதாரண ஸம்வத்ஸரத்தில் மணவாள மாமுனிகளாக மீண்டும் அவதரித்தனர்.

245 (விரோதிக்ருத்ஸ்நம் துர்த்வாந்தம்) விசத வாக்சிகாமணிகளான மணவாள மாமுனிகள் உண்மையுணர்ச்சிக்கு இடையூறான அகவிருளை யெல்லாம் நிரஸிக்க வேண்டி விலக்ஷணனான ஸூர்யனென்னும்படி தோன்றியருளினார். 

246 (பரிதாவீமுஹர்ஜந்ம) ஜன்மபரம்பரைகளிலேயே தோள்மாறித் திரிகின்ற பாமரஜனம் மணவாளமாமுனிகளின் செய்யதாமரைத் தாளிணையை ஸேவித்து இடர்நீங்கி மகிழ்கின்றது.

247 (ப்ரமாதீ சாதாஜ்ஜந்து: சிலர் மஹாப்ரலயமாகும்வரையில் அவதான மற்று ஸம்ஸார ஸாகரத்தில் சுழலட்டும்; என்றேனுமொருநாள் மணவாளமாமுனிகளிடத்தில் ப்ராவண்யங் கொள்ள நேர்ந்தால் அன்றோடு துயர்தீர்ந்ததாம்.

248(ஆநந்தமமிதம் திவ்யம்) அளவு கடந்த ப்ரஹ்மானந்தத்தைஅடையவிரும்புமவர்கள் மணவாளமாமுனிகளின் திருவடித்தாமரைகளை அன்போடு ஆராதிக்கக் கடவர்கள்.

249 (ராக்ஷஸாநாம் வதாயைவ) சக்ரவர்த்தி திருமகனார்அரக்கர்களை யழிக்கும் பொருட்டே அவதரித்தனர்; இளையபெருமாள் பாபிகளையும் காத்தருள்வதற்காக மணவாளமாமுனிகளாக வடிவெடுத்தார்

250– (நலக்ஷ்யம் யமதூதாநாம்) மணவாளமாமுனிகளைத் தொழுமவர்கள்,
நரகங்களில்- நகங்கள் ஆயுதங்கள் முதலானவற்றால் நலியுமவர்களான யமதூதர்
களுக்கு இலக்காகமாட்டார்கள்.

251-(பிங்கலாக்ரீதஸோமோத்தம் ) சுவர்க்கம் புகவேண்டி யாகஞ்செய்பவர்கள் ஸோமபானம் செய்வர்கள் ; அதற்காக ஸோமலதை ஸம்பாதிக்க வேண்டும்;-ஸோமலதையைக் காட்டிலிருந்து தாமாகக் கொண்டுவரக்கூடாது; * பிங்கலயைக ஹாயந்யா ஸோமம் க்ரீணாதி* என்று வேதத்தில் ஓதியிருக்கிறபடி பிங்கலவர்ணமான பசுவை விலையாகக்கொடுத்து ஸோமலதையை வாங்கவேணும். இத்தகையபரிச்ரமங்களைப் பிறர்வஹித்து ஸோமபானம் செய்யட்டும்: நாம் மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியமுதத்தைப் பருகிப்பூரித்திருக்கிறோம்.

252(காலயுக்திரசேஷாணாம்) மனிதர்காள்! அனைவர்க்கும் என்றேனுமொரு நாள் காலனோடு கூடவே நேரும்; வாழ்நாளில், என்றேனு மொருநாள் மணவாள மாமுனிகளின் கருணைக்கு இலக்காகிக் களித்திருங்கள்.

253-(ஸித்தார்த்தித்வம் து நைவாத்ர) உலகில் யாவர்க்கும் ஸாத்ய வஸ்துக்களில் அபேக்ஷை யுண்டாகுமே யொழிய ஸித்தவஸ்துக்களில் அபேக்ஷையுண்டாகாதென்று கொண்டு பிறர்ஸித்தோபாய பூதனான எம்பெருமானிடத்தில் அவிஸ்ரம்பத்தாலேஸாத்யோபாய விச்வாளிகளாகித் தடுமாறுகின்றனர். நாம் அப்படியன்றிக்கே மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸக்தியடியாக ஸித்தோபாயத்தின் கையையே பார்த்திருக்கின்றோம்.-(ஸித்தார்த்திதா யதி ஸ்ரீமத்) மணவாள மாமுனிகள் பக்கலிலே [அர்த்திதாஸித்தா யதி] அர்த்தித்வம் ஸித்திக்குமானால்- யாசிப்போமாகில்; ஸகலமான புருஷார்த்தங்களும் ஸித்தித்தே தீரும்; இது தடையற்ற ஸித்தாந்தம்.

254-(ரெளத்ரீம் தநுர்லதாமல்பாம் )இராமபிரான் அற்பமானதொரு சிவதநுஸ்ஸை யிறுத்தானென்பது பெரிதா? மணவாள மாமுனிகள் மிகக்கொடிய நமது ஸம்ஸாரப் புதர்களையெல்லாமன்றோ அரிந்து பொடுகிறார்.

255(துர்மதித்வம்ஸநீஸ் ஸூக்தீ:) மணவாளமாமுனிகள் தீயபுந்தியைத்
தொலைக்கவல்ல திவ்ய க்திகளை யளித்தருளினார். பிறர் அவற்றில் குறை
கூறிப்பாவங்களைக் கூடுபூரித்துக் கொள்கின்றனர்.

256-(துந்துபித்வா தத்துல்யை:) தோ ஷலவலேசமுமற்றுக் குணக்கடலாக விளங்குகின்ற மணவாள மாமுனிகளின் மீது தூஷணோக்திகளைப் பறையடிக்கின்ற பாவிகளை வையஞ்சுமப்பதும் வம்பு.

257-(ருதிரோத்காரி பாணொளகாந்) எம்பெருமான் (அவதாரங்களில் உதிரமொழுக நின்ற கொடியசரங்களைத்தான் வீசியெறியவல்லவன்; மணவாளமாமுனிகள் மதுரமான திவ்ய க்திகளாலே அநுகூலரோடு ப்ரதிகூலரோடு வாசியற எல்லாரையும் வசப்படுத்தியருள்கின்றார்.

258- (ரக்தா ப்ரம் ரஸஜ்ஞா மே ) என்னுடைய நாவானது எம்பெருமானைத்துதிப்பதை விட்டிட்டு அல்லும்பகலும் மணவாள மாமுனிகளைத் துதிப்பதிலேயே விரைந்து ஆசைக்கொண்டு கிளர்கின்றது.

259- (க்ரோதநோ தாருணோ மூர்க்க) மணவாளமாமுனிகளைத்தொழுமவர்
களின் வம்சத்தில் தோன்றுமவர்களெல்லாரும் ஸௌம்யமுகர்களாயும் நன்மை
செய்பவர்களாயும் சதுரர்களாயும் ஜனிப்பர்களேயொழிய ஒருவரும் மாருகத்
தோன்றார்.

260(அக்ஷயாஸ் ஸம்பதஸ் ஸாவா ) இங்குமங்கும்நீங்காத செல்வங்களையெல்லாம் நிறையப் பெறவிரும்புமவர்கள் மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸம்வத்ஸர மாலாஸ்தோத்ரத்தை அநுஸந்திக்கக் கடவர்கள்.

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷட்சதியில் ஸம்வத்ஸரமரலாஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது.

ஸ்ரீ வரவரமுநி அயநமாலா ஸ்தோத்ரம்-எட்டாவது.

261(பவாப்திஸந்தாரணதக்ஷிணா.) பிறவிக் கடலைக் கடத்த வல்லவைகளும் அமுதம் போன்றவைகளுமான சிறந்த திவ்ய ஸூக்திகளை யருளிச் செய்தவரான மணவாளமாமுனிகள் என்னுள்ளத்தைவிட்டு அகலகில்லே னென்றிருக்கிறார். (இது தக்ஷிணாயன ச்லோகம்.)

262- (ஸர்வோத்தர ஸ்ரீ சடவைரிவாசாம்) லோகோத்தரமான நம்மாழ்வாரருளிச்செயலின் பரமபோக்யமான பொருளை ஸமய விசேஷத்தில் திருவாய்மலர்ந்தருளி ஸ்ரீரங்கநாதனிடமிருந்து ஸ்ரீ சைலேசத்தனியனைப் பெற்றவரான
மணவாள மாமுனிகளே பரத்தைவம். (இது உத்தராயண ச்லோகம்.)

263-(அயநநாம நிவேச்ய.) தக்ஷிணாயனோத்தராயண நாமங்களை யிட்டு மணவாள மாமுனிகளின் துதியரக இயற்றப்பட்ட அயநமாலாஸ்துதியை உள்ளத்துக் கொள்ளுமவர்களுக்கு எம்பெருமான் இங்குமங்கும் அன்போடு நல்வழி நல்குவன் காண்மின்- என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று

264- இங்ஙனே அபூர்வமாயும் விலக்ஷணமாயுமுள்ள துதிகளை மணவாள
மாமுனிகள் விஷயமாக விஜ்ஞாபனம் செய்துபோருமடியேனே க்ருதார்த்த ஜன்மா.

ஸ்ரீ வரவரமுந்யயநமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர ச்லோகஷட்சதியில்-ருதுமாலா ஸ்தோத்ரம் ஒன்பதாவது-வஸந்தருது முதல் சிசிரருதுவீருக ஆறுருதுக்களின் பெயரையும் உள்ளீடாகக்கொண்டமாமுனிகளின் துதி.)

265-(ஸதைவஸந்த:) மணவரளமாமுனிகளின் திருவடியிணைகளையே எஞ்ஞான்றும் சிந்தை செய்பவர்களான ஸத்துக்கள் என்னுள்ளத்துள்ளே உறைபவர்களாகி எனக்குச்சிறந்த மகிழ்ச்சியை விளைத்து அருள்புரியக் கடவர்கள். 

266- (ஹாஹா! பவக்ரீஷ்மவிசேஷதப்தா:) ஸம்ஸாரமாகிற கொடியவேனிலில் தாபமுற்றவர்கள் விரைவில் ஸகல தாபங்களினின்றும் விடுபடுவதற்காக
மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரை நிழலிலொதுங்கிக் களிப்பார்களாக.

267-(ஸ்ரீமச்சடாராகி.) ஆழ்வாரெம்பெருமானார் முதலான பூர்வாசார்யர்
களனைவரும் திரண்ட திருவவதாரமான மணவாளமாமுனிகள் அன்பர்களுக்கு
இனியராய்க்கொண்டு பல்லாயிரமாண்டு வாழ்க.

268- (ஸ்ரீமத்வசோபூஷண.) ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்திற்கு வியாக்கியான மருளிச் செய்தது முதலானவற்றாலே பரந்த புகழ்பெற்றவரும் யதீந்த்ரப்ரவணருமான மாமுனிகள் இவ்வுலகில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

269- (யோகீந்த்ர! ஹேமந்தரி.) மணவாள மாமுனிகளே! மிகச்சிறந்த மந்த்ரமான தேவரீருடைய தனியனை ஸதா அநுஸந்தித்து வருகின்ற அடியேன் பால் காருண்ய மாருதாநீத கடாக்ஷ தாரைகளைப் பெருக்கிப் பல பல நன்மைகளை மேன் மேலும் வளரச் செய்தருளவேணும்.

270-காருண்யபூரைச் சிசிராந்தரங்க) தி ரு வருள் வெள்ளங்களினால் குளிர்ந்த திருவுள்ள முடையவரான மணவாளமாமுனிகள் இப்போது போலவே எப்போதும் தமது திருக்கல்யாண குணங்களை ய நுஸந்திப்பதிலேயே அடியேளைக் குதூஹலமுடையேனாகச் செய்தருளவேணும்.

ஸ்ரீமத் வரவரமுநிருதுமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.

(ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோகஷட்சதியில் பத்தாவதான.)மாஸமாலா ஸ்தோத்ரம்
(மேஷ மாஸம் முதல் மீன மாஸமளவும் பன்னிரண்டு மாதங்களின் நாமங்களை உள்ளீடாக்கி மணவாளமாமுனிகளைத் துதிப்பது.)

271- (கலா நா மேஷ ஸர்வாஸாம்) ஸகல கலைகளுக்கும் நிதி போன்றவரான நம் மணவாளமாமுனிகள் அருள் கூர்ந்து எஞ்ஞான்றும் என்னுள்ளத்துள்ளேஉறைவாராக.

272- (வலாநாம் மநாயை ) புருஷர்ஷபரென்று கொண்டாடத்தக்க வரும் தீயவர்களைத் தணிப்பதற்காகவே இந்நிலவுலகில் அவதரித்தவருமான மணவாளமாமுனிகள் மேன்மேலு மோங்குக.

273- (கதிரேஷ பணீந்த்ரோந ) திவ்ய தம்பதிகளின் திவ்யாஜ்ஞையினாலே
மணவாள மாமுனிகளாகத் திருவவதரித்து நம்மை வாழ்வித்தருளின திருவனந்
தாழ்வான் தான் நமக்குப் புகல். 

274- (சரந்து வக்ரகதய 🙂 கர்க்கடே குடிலா கதி: என்கிறபடியே நண்டுகள் போலே குடிலகதியையுடையரான சிலர் அப்படியே திரிந்துழலட்டும்; மணவாளமாமுனிகளின் பக்தர்களிடத்திலே ரு கதியுள்ளதென்பது உலகறிந்தது.

275- (ஜந்மமருத்யுஜராவ்யாதி) பிறப்பிறப்பு மூப்புப் பிணிகளுக்கு அஞ்சி
யிருப்பவர்கள் ஸ்ரீமத் வரவரமுநிஸிம்ஹத்தினுடைய திருவருளையே தஞ்சமாகக்
கொள்ளக்கடவர்கள்.

276- (ஐரீம் கவேரகங்யாயா 🙂 காவிரியின் பெருக்கையும் மந்தமாக்கவல்ல
தம்முடைய ஸ்ரீ ஸூக்தி ராசிகளினால் இந்நிலம் முழுவதையும் புனிதமாக்க வல்ல
மணவாளமாமுனிகள் வாழ்க. 

277-(தநோது வரயோகீந்த்ர.) ஆசார்ய ஹ்ருதயத்தின் சீரிய பொருள்களெல்லாம் அடியேனுள்ளத்தில் தங்குமாறு மணவாளமாமுனிகள் எனக்கு ஒப்பற்ற அருளைச் செய்தருள்க.

278- ாருணா ( வ்ருச்சிக ப்ராயா 🙂 தேள்களைப் போன்று விஷத்தைக் கக்குமவர்களான சில கொடியவர்கள் இந்நிலத்தைக் கெடுப்பவர்களுளர்; அன்ன வர்கள் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸக்திகளினால் திருத்தம் பெறுக

279- (தநுஷா பகவாந் சத்ரூந்) எம்பெருமான் அவதரித்து “வில்லாலிலங்கைமலங்க” என்னும்படி அஸ்த்ரசஸ்த்ரங்களாலே பகைவரை வென்றானென்பதில் என்ன வியப்பு? மணவாளமாமுனிகள் தமது திருக்குணங்களினாலேயே உலகை வென்றாராயிற்று.

280- (பரம் தாம கரக்ராஹ்யம்) நலமந்தமில்லதோர் நாட்டை அஸ்மதாதிகளுக்கும் கைக்கு எட்டினதாகப் பண்ணுகைக்கே எம்பெருமான் மணவாளமாமுனிகளைத் திருவவதரிப் பித்தருளினான். 

281- (பகவாந் கும்பஸம்பூதி:) கும்பஸம்பவரான அகஸ்த்யர், பராசரர், வியாஸர் இத்யாதிகளான முனிவர்களிற்காட்டிலும் மணவாளமாமுனிகள் மிகச் சிறந்த முனிவராவார்.

282- (யே படந்தி.) ஸ்ரீவரவரமுனிமாஸ மாலையென்னும் இந்த ஸ்துதியை மகிழ்ந்து ஓதுமவர்கள் யாவரோ, அந்த இந்த பக்தர்கள் ஒருபோதும் இறையும் இடர்ப்படார். (ச்லோகத்தில் “‘அமீ ந ஜாதுசித்” என்றவிடத்தில் மீ நமாஸ ஸ்பூர்த்திகாண்க.)

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷட்சதியில் மாஸமாலாஸ்தோத்ரம் முற்றிற்று.

பதினூேராவது பக்ஷமாலா ஸ்தோத்ரம்.

283-(யுகலம் வரமுநி.) மணவாளமாமுனிகளின் திருவடித்தாமரையிணையை
நிச்சலும் சிந்தை செய்பவர்கள் தங்களது கீர்த்தியினால் இவ்வுலகத்தையெல்லாம்
வெண்ணிறமாக்க வல்லவர்களாவர்.

284-(ஸ்யூதாம் வரவரமுநிவர.) மணவாளமாமுனிகளின் திருக்கல்யாண
குணங்களாகிற முத்துக்களால் கோக்கப்பட்ட இந்த ஸ்துதிமாலையை எப்போதும்
கண்ட பூஷணமாகக் கொள்ளுமளவில் ஸ்ரீ க்ருஷ்ணபகவான் உங்களுக்கு
மங்களங்களை யளிப்பன். 

285- (பக்ஷமாலாமிமாம் வாசி.) இந்த வரவரமு நிபக்ஷமாலாஸ்துதியைத்
திருந்தச் சொல்லுமவர்கள் பக்கலில் எம்பெருமான் ப பாதியாயிருப்பன?
மார்பாரப் புல்கியும் அருள்வன்.

ஸ்ரீமத்வரவர முநீத்த்ரஷட்சதியில் பக்ஷமாலாஸ்துதி முற்றிற்று.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர ஷட்சதியில் பன்னிரண்டாவதான ஸ்ரீவரவரமுநி திதிமாலா
(இந்தஸ்தோத்ரம் வடமொழியில் எழுத்தந்தாதியாக அமைக்கப்பட்டது.)

286-(ஸ்ரீமதி வரவரயோகிநி)-ப்ரதமை அத்புதமான வைதுஷ்யத்திற்கு நிதியான மணவாளமாமுனிகள் பக்கலில் பக்தியுள்ளவர்கள் யாவரோ அவர்கள்
ஸாத்விகர்களின் திரளில் தவருமல் ப்ரதமஸ்தானத்தில் எண்ணப்படுவர்கள். 

287-(நச்வரபுமர்த்தவாஞ்சாம்) த்விதீயை – நச்வரங்களான புருஷார்த்தங்களில் ஆசையை விட்டுத் தொலைத்து மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் அன்புமிக்கவர்கள் யாவரோ அவர்களுக்கு அத்விதீயமான நற்புகழ்விளையும். (சுலோகத்தில் நான்காம் பாதத்தில் சுபகீர்த்தி ரத்விதீயாஸ்யாத் என்பதில் த்விதீயாஸ்பூர்த்தி காண்க.) 

288-(ஸ்யாதிஹ வரவரயோகீ த்ருதீயா -மணவாள மாமுனிகளின் யாதொரு கருணையின் கனத்தினால் உள்ளே மூன்றாவது கண் (ஞானக்கண்) விகளிக்குமோ, அப்படிப்பட்ட கருணையை அவர் எஞ்ஞான்றும் என் பக்கலிலேயே செய்தருளவேணும்.

289 (திமிரம் நிரஸிதுமவநெள .) சதுர்த்தீ- இவ்வுலகின் கண் அகவிருளை அகற்றுவதற்காக ஸமய விசேஷங்களில் வந்து திருவவதரிக்கின்ற திருவனந்தாழ்வானுடைய நான்காவது மூர்த்தியான மணவாளமாமுனிகளை எஞ்ஞான்றும் வழுத்துவோம்.

290ஏதத்ப்ரபஞ்சமீச 🙂 – பஞ்சமி -இந்தப்ரபஞ்சத்தை ஸர்வேச்வரனென்று பேர்படைத்த எம்பெருமான் ரக்ஷித்தருள்கிறானென்பது உண்மையன்று; வஸ்து ஸ்திதியில் மணவாளமாமுனிகள்தாமே தமது திவ்ய க்திகளினால் உலகையெல்லாம் காத்தருள்கின்றார்.

291- (க்ஷித்யாம் வதந்தி போக்யம் – ஷஷ்டீ-இந்நிலவுலகில் பஞ்சாம்ருதமென்கிற போக்ய வஸ்து இருப்பதாகச் சொல்லுகிறார்கள்; அஃதிருக்கட்டும்;மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்தியானது ஆறாவதான அம்ருத தாரை யென்பது திண்ணம்.

292- (தமிதேந்த்ரியா : ப்ரஸித்தா:. ஸப்த மீ- ஜிதேந்த்ரியர்களென்று பேர் பெற்ற ஸப்தரிஷிகளும் கருப்புவில் மலர்க்கணைக்காமவேளுக்கு இலக்கானவர்களே ; மணவாளமாமுனிகளொருவரே விரக்தமு நிஸார்வபௌமர்.

293- (யஸ்யாஷ்டமீந்துஸந்கிப)-அஷ்டமி அஷ்டமீ சந்திரன் போன்ற தமது திருநெற்றியில் விளங்கும் ஊர்த்வபுண்ட்ர ரேகையே நெடுநாளாக ஸகல  திவ்ய தேசத் தெம்பெருமான்களும் உகந்து அணிந்து கொள்வதென்னும்படியான மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.

294-(கீர்வாணவாசி ஸததம்)- நவமீ-ஸம்ஸ்க்ருதபாஷையில் இங்ஙனேபுதிது புதிதான ஸ்துதிகளை விண்ணப்பஞ் செய்து கொண்டு மணவாளமாமுனிகளுக்குத் தொண்டுபூண்டமுதமுண்பவனாக வா க்கடவேன்.

295(சய்ாமபி சேதிஹ தசமீம்) – தசமி- அடியேன் மாளுமோரிடத்திலும் எனது நெஞ்சம் மணவாளமாமுனிகளின் சிந்தனையையிழவாமலிருக்கவேணும்

296- ( துஷ்யந் விவேகரேகாத். ஏகாதசி வடமொழிவேதத்தைப் பூர்த்தியாக ஓதினவர்களுக்கு அ தி அத்யாயிகளென்று பெயர் வழங்கும்; அந்தப்பெயர் பெறுவதனால்மட்டும் பயனில்லை; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸக்திகளில் வல்லமை பெற்றுவிட்டால் ஸர்வஜ்ஞதை யுண்டாகும்.

ஸாதாரணத் திருமூலமலர்-ஸாதாரணவாண்டு ஐப்பசித் திருமூலதன்னாள்.-3-11-1970

புண்யாபபோஜ விகாஸாய பாபத்வாந்த க்ஷயாயச, ஸ்ரீமாந் ஆவிரபூத்பூமெள ராமாநுஜ திவாகர ” என்றபடி எம்டெருமானாராகிற விலக்ஷண ஸ் ர்யன் இவ்வுலகில் திருவவதரித்து “கடலளவாய திசை யெட்டினுள்ளுங் கலியிருளே, மிடைதரு காலத்திராமானுசன் – மிக்க நான் மறையின் சுடரொளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை யுடையவன்
நாரணனென்று அறிவாரில்லை யுற்றுணர்ந்தே” என்ற அமுதனாரருளிச்செயலின்படியே மஹோபகாரம் செய்தருளும்படியாயிற்று. “தற்கச்சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன், சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும், நான்மறையும் நிற்கக் குறும்புசெய் நீசரும்மாண்டனர் நீணிலத்தே. பொற்கற்பகம் எம்மிராமானுசமுனி போந்த
பின்னே’ என்கிறபடியே ஸம்ஸ்க்ருத வேத பாஸ்குத்ருஷ்டிகளையெல்லாம் தம் ஒக்தி சரங்களாலே நிரஸித்தருளி,”வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரமும், ஈன்ற முதல் தாய் சடகோபன். மொய்ம்பால் வளர்த்த இதத்தாய்
இராமாநுசன்” என்னும்படியாக ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் ப்ரவர்த்திப்பித் தருளி, திவ்யதேசங்களையும் உத்தரிப்பித்து ஒருவாறு அவதார க்ருத்யத்தைத் தலைக்கட்டிக்கொண்டு சுடரொளிச் சோதிக்கு எழுந்தருளினபின், சிலகாலம் கடந்தபிறகு, அவ்வவதாரத்தில் சிதைந்தொழிந்த ஸம்ஸ்க்ருத வேத பாஹ்யகுத்ருஷ்டிகள் தாமே மீண்டும்
த்ராவிட வேத பாஹ்ய குத்ருஷ்டிகளாக ஜனித்து இவ்வுலகை நலியஅந்தஎம்பெருமானார் தாமே மீண்டும் வைகுந்தநாதனுடைய திருவாணையினால் இந்நிலவுலகில் திருவவதரித்து மணவாள மாமுனிகளென்கிறதிருநாமத்துடனே விளங்கி, முன்னவதாரத்திற் செய்த ளின மஹோபகாரங்களிற் காட்டிலும் பன்மடங்கு அதிசயித்தசேமங்களைச் செய்தருளி
இவ்விருள் தருமா ஞாலத்தைத் தெருள் தருமா ஞாலமாகத் திருத்திப்பணிகொண்டார். அவ்வாசார்ய சிகாமணியின் எண்ணில் பல் குணங்களைக் கூறுதற்கு அவர் தம்முடைய நிஜரூபமான ஆதிசேஷனும்அசக்தன் என்கிறவிது அதிசயோக்தியன்று

மதுரேண ஸமாபயேத் என்பது நியாயமாதலால் மாதுர்யமே வடிவெடுத்த மாமுனிகளோடு பூர்வாசார்ய பரம்பரையை எம்பெருமான் ஸமாபநம் செய்தது மிகப்பொருந்தும். மதுரம்
என்கிற வடசொல்லானது, ‘மகாரத்தை முன்னே யுடையது’ என்னும் பொருளையு முடைத்தாதலால் மகாராதியான திருநாமமணிந்த மணவாளமாமுனிகளோடே ஸமாபநம் செய்தருளின பகவான் ஸுஸமர்த்தனே.-*மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிற லயோத்தியெம்மரசாயும் கோவலனாய் வெண்ணெ யுண்டவாயனாயு முள்ள அழகிய மணவாளனான திருக்கோலத்தில், ஆசார்யத்வபூர்த்தி யுள்ள மணவாள மாமுனிகள் பக்கலிலே சிஷ்யவருத்தியை வஹிந்து க்ருதார்த்தனானான். இத்தகைய ஒப்புயர்வற்ற பெருமை வாய்ந்த மாமுனிகளின் வைபவம் ஸ்ரீ வைஷ்ணவஉலகுக்கெல்லாம் ஜீவாது-திருவனந்தாழ்வான் நல்லார் நவில் குருகூரெங்கிற ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடைய பிரான் தா ஸரண்ணர்என்கிறமஹாசா யனை-பிதரம்ரோசயாமாஸ என்கிற கணக்கிலே தந்தையாக வுகந்து அவருடைய திருக்குமாரராய் (கலியுகாதி
நாலாயிரத்து நானூற்றெழுபத்திரண்டாவதான ) ஸாதாரண வருடத்தில்
ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்திரத்தில் அந்தத் திருநகரியில் திருவவதரித்தருளினான்.

-இங்ஙனே உலகுக்கெல்லாம் ஓருயிராகத் திருவவதரித்தருளின திவ்யமூர்த்திக்கு ஸ்ரீரங்கநாதனுடைய திருநாமத்தைச் சாத்த விரும்பிய பெரியார் ‘அழகிய மணவாளன்’ என்று திருப்பெயரிட்டனர். அழகிய மணவாள நாயனார் என்று சிறப்புத்திருநாமமாக வழங்கி வந்தது.

அருகேயிருந்த முதலிகள்,
“வல்லார்கள்வாழ்த்துங்குருகேசர் தம்மை மனத்துவைத்துச்
சொல்லாரவாழ்த்தும் மணவாளநாயனார் தொண்டர்குழாம்
எல்லாந்தழைக்க எதிராசவிம்சதியின்றளித்தோன்
புல்லாரவிந்தத்திருத்தாளிரண்டையும் போற்றுநெஞ்சே’
-என்ற பாசுரத்தை விஜ்ஞாபித்தனர்.

அழகிய மணவாள் நாயனார் இங்ஙனே ஆசார்ய பரதந்திரராய் வாழ்ந்தருளாநிற்க, கூரார்ணவத்தில் சந்திரன் போலே ஒரு திருக்குமாரர் திருவவதரித்தார். அவர்க்கு இராமாநுசப்பிள்ளை என்று திருநாமமிடும்படி ஆசார்ய நியமனத்தையடியொற்றி நாயனார் நியமித்தருளினார்.-அப்ரதிம சிஷ்ய ஸம்பத்தோடே வாழ்ந்தருளாநின்ற திருவாய்மொழிப்பிள்ளை திருமேனி தளர்ந்து திருநாட்டுக் கெழுந்தருளுகையிலே விருப்பமுடையராய்
“உத்தமனேயுலகாரியனே! மற்றெப்பாரையில்லா
வித்தகனே நல்லவேதியனே! வண்முடும்பைமன்னா
சுத்தநன்ஞானியர் நற்றுணையே சுத்தசத்துவனே!
எத்தனை காலமிருந்துழல்வே னிவ்வுடம்புகொண்டே.”
என்று அநுஸந்தித்துக் கொண்டிருக்க, ஒருநாள் கனவிலே பிள்ளை லோகாசாரியர் ஸேவை ஸாதித்தருளி ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் “என்று பணிக்க, பிள்னையும் தேறியெழுந்து நித்ய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிக்கொண்டு முதலிக ளெல்லாரையும் வரவழைத்து “இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே” ‘வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே,நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே!‘ என்ற பாசுரங்களைப் பரக்க வுபந்யஸித்தருளி, ‘முதலிகாள்! இன்று எம்பெருமான் நம்மை ஆசாரியன் திருவடிவாரத்திற்கு அழைத்துக் கொள்வதாகத் திருவுள்ளம் பற்றியிரா நின்றான்; இனி நீங்க னை வரும் நம் அழகிய மணவாள நாயனாரை (மாமுனிகளை)ஸாமாந்யமாக ரதிபத்தி பண்ணியிராமல் நம்மிராமானுசனுடைய அபராவதாரமே யிவர் என்று ப்ரதிபத்தி பண்ணி`இவருடைய அபிமானத்திலே யொதுங்கி வாழ்வீராக” என்று நியமித்தருளி, நாயனாரையும் ஆசார்யபீடத்திலே எழுந்தருளச்செய்து, “வாரீர்குலக்கொழுந்தே! * ஜநகாநாம் குலே கீர்த்திம் ஆஹரிஷ்யதி மே ஸ தா, ஸீதா பர்த்தார மாஸாத்ய ராமம் தசரதாத்மஜம் என்று ஜநக சக்ரவர்த்தி பாரித்தாப் போலே நானும் உம்மை அண்டை கொண்டு கனக்கப் பாரியா நின்றேன்-நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸந்தாநம் உம்மாலே பரம விலக்ஷணமான-பெருமையையும்புகழையும் ப்ராப்தமாகக்கடவது; *ச்ரேயாம்ஸி ஸர்வாண்
ய ஜக்முஷஸ் தே
என்றாப்போலே ஒன்றிலுங் குறையில்லாத வுமக்கு இனி நாம் ஆசாஸிக்கவேண்டுவதொன்றில்லை. என் உள்ளத்திலே கிடந்த குறையைப் பண்டே உமக்குப் பேசிநின்றேன்; அக்குறைதீரஇன்றுகாறும் நீர் நடந்துவந்ததுபோலவே இனியும் நம் பூர்வசார்ய திவ்யாக்ரந்த ரவசநாநுபவங்களே போதுபோக்காக இருந்து வரக்கடவீர்; நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் ஒருமிடறாக மண்டியிருந்து தர்சந நிர்வாஹம் செய்தருளினவிடம் திருவரங்கம் பெரியகோவிலாதலால் நீரும் அவ்விடத்தேறச்சென்று முந்தின அவதாரத்திற் போலவே அறுசமயச்செடிய தனை யடியறுத்துச் செறுகலியைச் சிறிது மறத் தீர்த்துவிட்டுத் தென்னரங்கர் செல்லமுற்றுந் திருத்திவைத்து மறை யதனிற்பொருளனைத்தும் வாய்மொழிந்து மாறனுரை செய்ததமிழ்மறை வளர்த்து இந்த லீலாவிபூதியை நித்யவிபூதியாகவே ஆக்கிக்கொண்டு போரக்கடவீர்” என்று நாயனாரை நோக்கி நியமித்தருளி, அநந்தரம்ஸந்நிதிக்கெழுந்தருளிப் பொலிந்துநின்ற பிரானையும் ஆழ்வாரையும்மங்களாசாஸநம் செய்தருளி முதலிகளெல்லாரையும் நாயனார் திருக்
கையிலேகாட்டிக்கொடுத்துத் திருமாளிகையேற வெழுந்தருளிப் பிள்ளையுலகாசிரியர் திருவடிகளைச் சிந்தித்துக்கொண்டே திருநாட்டுக்கெழுந்தருளினார். நாயனார் தொடக்கமான முதலிகளெல்லரும்அவர்க்குத் திருவத்யயநாந்தமான சரம கைங்கர்யங்களைப் பெருக்கநடத்தினார்கள் .

வானமாமலையிலே மஹாஜ்ஞாநாதிகராயெழுந்தருளியிருந்த அழகிய வரதர் பரம விரக்தியினாலே ஆச்ரமஸ்வீகாரஞ் செய்து ஸ்ரீராமாநுஜஜீயர் என்று திருநாமம் பெற்று நாயனார்திருவடிகட்கு நிழலுமடிதாறும் போலே மிகவுமணுக்கராய் வந்து சேர்ந்து
வாழ்ந்தார். இவர்க்குப் பொன்னடிக்கால்ஜியர் என்றும் திருநாமம் வழங்கிவந்தது.-“ஸ்ரீமாந் ஸ்ரீபாஷ்யகாரோஸௌ பூதலே புநருத்தித:,
இதி நீச்சித்ய ஸந்துஷ்ய ப்ராவண்ய மதுலம் ததே.”
-என்கிறபடியே நாயனாரை எம்பெருமானாருடைய புநரவதாரமாகவே அறுதியிட்டுப் பரிஜந பரிபர்பரிச்சத புரஸ்கார விசேஷங்களுடனே ஸந்நிதியில் மங்களாசாஸநம் நடைபெறுமாறு ஸம்விதாநம் செய்து வைத்தார்.-பலபல பரிவாரங்களுடன் ஸந்நிதி மங்களாசாஸனத்திற்கு எழுந்தருளின நாயனார் முந்துறமுன்ளம் எம்பெருமானார் ஸந்நிதியிலே விடைகொண்டு ஸேவித்து உடையவர் திருக்கோலத்திலே மிகவும் ஈடுபட்டு,
“இவ்வுலகந் தன்னி லெதீராசர் கொண்டருளும்
எவ்வுயிரும் யான்சென்றிறைஞ்சினக்கால் அவ்வுருவம்
எல்லா மினிதேனு மீவ்வரங்கத் திற்போல
நில்லாதென் னெஞ்சில் நிறைந்து-
-என்கிற பாசுரத்தை அங்கு விண்ணப்பஞ்செய்து, பிறகு ஸபரிவாரரான பெரிய பெருமாளை அடைவே மங்களாசாஸனஞ் செய்து திருமாலை அமலனாதிபிரான் முதலான திவ்யப்ரபந்தங்களையும் ஸ்ரீரங்கராஜஸ்தவம் முதலானஸ்தோத்ரங்களையும் அநுஸந்தித்துக்கொண்டு நம்பெருமாள் திருமுன்பேநிற்க, பெருமாளும் நாயனாரைக் குளிரக் கடாக்ஷித்தருளி நமக்காவாரை நாமே தேடிக்கொண்டோம்; நம்முடைய அவாப்த ஸமஸ்த காமத்வம் இன்றே குறையற்ற தாய்த்து” என்றருளிச் செய்து ஸகல வரிசைகளும் ப்ரஸாதித்தருள், நாயனாரும் பெற்று க்ருதார்த்தராய், பெரியார்க் காட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு” என்று அண்ணனார் விஷயத்திலும் பட்டர் விஷயத்திலும் க்குதஜ்ஞதாநுஸந்தாநம் பண்ணிப் பேருவகையோடே திருமாளிகைக் கெழுந்தருளினார்.

விடுதியாகப் பல பாசுரங்கள்-”இதுவோ பெரும்பூதூர் இங்கே பிறந்தோ
எதிராச ரெம்மிடரைத் தீர்த்தார்-இதுவோதான்
தேங்கும் பொருநல் திருநகரிக்கொப்பான
ஒங்கு புகழுடைய வூர்.”
எந்தை யெதிராசர் எம்மை யெடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில் வந்தோமோ-சிந்தை
மருளோ தெருளோ மகிழ்மாலை மார்வ
னருனோ விப்பேற்றுக் கடி.”
–இத்யாதிகள்.

ஸ்ரீ யதோக்தகாரி யெம் பெருமான்ஸந்நிதியிலே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து ஸ்ரீபாஷ்ய பரவசநம் செய்தருளினார். (இதுபற்றியே திருவெஃகாவில் மணவாள
மாமுனிகள் வியாக்கியான முத்திரையோடு ஸேவை ஸாதித்தருளும்படி
யென்று பெரியார் பணிப்பது.)”செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்” என்கிற திருமங்கை யாழ்வாரருளிச் செயலுக்கு முக்கிய இலக்காக விளங்கினவர் கடல்சூழ்ந்த இம்மண்ணுலகில் இந்த வ்யக்திவிசேஷ மொன்றே யென்னத் தட்டில்லை.

அக்காலத்தில், ஸ்வாமிக்கு ஜ்ஞாதிகள் பலரிருந்தமையால் அடிக்கடி ஆசௌச ப்ரஸங்கம் நேர்ந்து கரந்த காலக்ஷேபத்திற்கும் பெருமாளுடைய மங்களாசாஸனத்திற்கும் இடையூறு விளைந்துவந்தது கண்டு கருஹஸ்தாச்ரமத்திலே வெறுப்புண்டாகி உத்தமாச்ரமஸ்வீகாரம் செய்தருளத் திருவுள்ளமாய், அப்போது கோயிலிலே ஸ்ரீசடகோபஜீயரென்றுப்ரஸித்தராய் ஞானமனுட்டான மிவை நன்றாகவே யுடையராயிருந்த மஹநீயர் பக்கலிலே துரீயாச்ரமம் ஸ்வீகரித்து நம்பெருமாளைமங்களாசாஸனம் செய்யச்சென்று நின்றவளவிலே, பெருமாளும்இவரை ஆதரித்தருளித் தம்முடைய திருநாமத்தையே இவர்க்கு
ப்ரஸாதித்தருளி [அழகிய மணவாள மாமுனிகள் என்றிட்டு] ஸகல மரியாதைச் சிறப்புகளையும் * யாவச்சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்ககேஸுகமாஸ்வ *
-என்று எம்பெருமானார்க்குப் போலே நியமனம் தந்தருளி,பல்லவராயன் மடத்தையும் ஸ்வாமிக்குப் ப்ரஸாதித்து அனைத்துக் கொத்துப்பரிகரங்களுடனே போகவிட்டருள, அழகிய மணவாள மாமுனிகளானநாயனார் பெருமாளுடைய திருவருள் நிரம்பிய நியமனத்தைச் சிரஸாவஹித்து மடமேற எழுந்தருளி அழகிய மணவாளனுடைய அருட்பெருக்குக்கு அதிமாத்ரம் உகந்து போந்தார்.

மாமுனிகள்சாடூக்தியாக “நீர் ப்ரதிவாதிபயங்கரர்; நாம் ஸாது; எங்ஙனே கூடுவது?”
என்று புன்முறுவலோடேயருளிச்செய்ய, உடனே அண்ணன் ஐயோவென்று அலமந்து தெண்டன் ஸமர்ப்பித்து, * ப்ரஸித்த: பரகோஷ்டீஷபரவாதி பயங்கர, ஸ்ரீவைஷ்ணவாநசம் கோஷ்டீ தத்தால இதி விச்ருத:என்று விண்ணப்பம் செய்து, ‘இத் திருவடி ஸம்பந்தமல்லது பாவியேனுக்கு உய்வுபாயம் மற்றொன்றில்லை’ என்று கண்ணீர் பெருக நின்று-ப்ரார்த்திக்க, மாமுனிகளும் இவருடைய ஆத்மகுண ஸம்பத்திக்குஅதிசயித்து இவருடைய பிரார்த்தனைக்குத் திருவுள்ள முகந்து ஸக்குடும்பரான விவர்க்குப்பஞ்ச ஸம்ஸ்காரங்களை ப்ரஸாதித்தருளி, ஸ்ரீவைஷ்ணவதாஸன் என்று விலணமான தாஸ்ய நாமத்தையும ரசாரப்படுத்தியருள அண்ணன் க்ருதார்த்தராய்,
“போதச்சிவத்து பரிமளம்வீசிப் புதுக்கணித்த சீதக்கமலத்தை நீரேறவோட்டிச் சிறந்தடியேன் ஏதத்தைமாற்று மணவாளயோகி யினிமைதரும்|
பாதக்கமலங்கள் கண்டேனெனக்குப் பயமில்லையே
“-என்று விண்ணப்பஞ்செய்து இப்பாசுரத்தையே முதலாகக்கொண்ட அமலனாதிபிரான்’ என்கிற பிரபந்தத்தை விஜ்ஞாபித்து அன்றுமுதல் மாமுனிகளின் திருவடிகட்கு அந்தரங்கராய் வர்த்தித்து ஸகல திவ்ய ப்ரபந்த ரஹஸ்ய வயாக்யானங்களையும்அதிகரித்துக்கொண்டு க்ருதார்த்தராயிருந்தார்

அர்த்த விசேஷங்களைக் கேட்டுஉவந்தார். அப்போது மாமுனிகளின் ஸர்வதோமுகமான வைதுஷ்யவிசேஷத்தைக் கண்டு விஸ்மயஸ்திமிதரான ஜநந்யாசார்யர்
“பூதூரில் வந்துதித்த புண்ணியனோ? பூங்கமழும்
தாதார் மகிழ்மார்பன் தானிவனோ? – தூதூர
வந்த நெடுமாலோ மணவாள மாமுனிவன்
எந்தையிவர் மூவரிலும் யார்?-
என்கிற வெண்பாவை யருளிச்செய்து மாமுனிகளை விலக்ஷணாவதார வ்யக்தி விசேஷமாக எங்கும் ப்ரஸித்தப்படுத்திப் போந்தார்.

அழகிய மணவாளன் நாலைந்து பிராயம் வாய்ந்த அர்ச்சக குமாரனான கோலம்பூண்டு கனவேகமாசுக் கோஷ்டியிடையிலே வந்து, அவரவர்கள் விலக்கினதையும் ல யம் பண்ணாமே புகுந்து கைகூப்பி நின்று]-ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம், யதீந்த்ர பரவணம் வந்தே ரம்யஜாமாதரம் மு ம் * என்கிற தனியனை விண்ணப்பஞ்செய்து மறைய, இவ்வதிசயத்தை நோக்கி அனைவரும் வியந்தனர்.

சரீராத்மபாவத்திற்கு ப்ரதான திதந்த்ர மென்று பெயரிடப்பட்டிருக்கின்றது.-சரீராத்மபாவ ஜ்ஞானமே வேதாந்திகளுக்குத் தலையானதென்றுதேறிற்று. இதை வேதாந்தத் திறவுகோல் என்று கொள்க.-சேதநனைப் பெறுவதுதான் ஸர்வேச்வரனுக்குப் பேறு’ என்று நிஷ்கர்ஷிப்பதுண்டே,இதுதான் ரஹஸ்யார்த்த நிர்வாஹத்திற்கு திறவுகோலாம்.-எம்பெருமானுடைய ருபை ஸஹேதுகமா? நிர்ஹேதுகமா? ப்ரபத்தி உபாயமா?அதிகாரி விசேஷணமா? இத்யாதி விசாரங்களைத் தனிப்படச் செய்ய வேண்டிய ஆவச்யகதையில்லை; “சேதநனைப் பெறுவது ஈச்வரனுக்குத் தான் புருஷார்த்தம்” என்று நிராபாதமாகத் தேறிவிட்டால் பகவத்க்ருபா நிர்ஹேதுகத்வமும் ப்ரபத்யநுபாயத்வமும் மற்றும் தன்னடையே தேறிற்றாகும். இம்மூன்று விஷயங்களிலும் ஸ்ரீலோகாசார்யாதிகளின் ஸித்தாந்தம் வேறென்றும் ஸ்ரீமத் வேதந்ததேசிகனுடைய ஹித்தாந்தம் வேறென்றும் இக்காலத்து ஒருவகுப்பினர் ( இரண்டொரு நூற்றாண்டாக)ப்ரசாரம் செய்யத் தலைப்பட்டனர். இஃது உண்மைக்கு மிகவும் மாறானது, அடியேனுடைய நூல்களில் நவீனர்களென்று பெயரிடப் பெற்றவர்களின் கொள்கையாம் இவை. இவற்றை தேசிகனுடைய சித்தாந்தமாகக் கூறுவதற்கு அணுமாத்ரமும் அவகாசமில்லை.

“கர்மஸ்வநாதிவிஷமேஷ ஸமோ தயாலு ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண , ஸ்வப்ராப்தயே தநுப் தாம் த்வரஸே முகுந்த! ஸ்வாபாவிகம் தவ ஸுஹ்ருத்தமிதம் க்ருணந்தி.“-சரணாகதி தீ பிகை-11-எம்பெருமான் தனது ஸஹஜ ஸெளஹார்த்த குணத்தினால் தான் சரணாகதியில் ஆபிமுக்க்யத்தை விளைவித்தருளுகிறானென்பதை
சுலோகத்தின் முடிவில் காட்டியருளினர். “ சோபநம் ஹ்ருத் யஸ்ய ஸ- ஹ்ருத்” என்று வ்யுத்பத்தியென்பதை வயுத்பந்தர் உணர்வர் சோபநாசம்ஸியான ஹ்ருதயத்தை யுடையவன் எம்பெருமான்.-தேசிகன் பரமபதஸோபானத்திலே நன்கு காட்டியிருக்கிறார். அதில் ஆரம்பத்திலேயே எழுதியுள்ள வாக்கியங்கள் இவை:-
“அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனைத் தினைத்தனையும்விடாதே அனுபவிக்க ப்ராப்தரான க்ஷேத்ரஜ்ஞர் அநாத்யவித்யாகர்மாதி ரவாஹத்திலொழுகிக் கரையேற விரகற்று அலமருகின்றபடியைக் கண்டருளின பரமகாருணிகனான பரமசேஷிதானே ஞானக்கைகொடுத்து இவர்களையெடுக்க இடம்பார்த்து அஜ்ஞாத யாத்ருச்சிகஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்யபுத்திமூல ஸுக்ருத விசேஷங்களைவயாஜமாகக்கொண்டு விசேஷ கடாக்ஷம்பண்ணி அத்வேஷ ஆபிமுக்க்ய ஸாவிக ஸம்பாஷணதிகளை யுண்டாக்கி” இத்யாதிகள்.இவை கிடக்க; ரகருதச்லோகத்தில் ஸ்வேநைவ கலப்தம் அபதேசம்அவேமாண: * என்றதை ஆழ்ந்து நோக்கவேண்டாம்; மேலெழபிபிநோக்கினாலும் போதும். பதத்தின்மேல் பொருள் என்ன,ஸ்வேநைவ -தானாகவே, கல்ப்தம் -கல்பித்துக்கொண்ட, அபதேசம்-வ்யா ஜவிசேஷத்தை, அவேக்ஷமாண கடாக்ஷித்தவனாய்.-

ஸ்ரீ வசனபூஷணத்தில்-
“என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக்கொடுத்தாய்என்றாப்போலே சிலவற்றைஏறிட்டு மடிமாங்காயிட்டு… … ஜன்மபரம்பரைகள் தோறும்யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருதவிசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்றுபத்தாக்கி நடத்திக்கொண்டு போரும்“-என்கிறஸ்ரீஸூக்தி ரத்னங்களை ஸந்தத் சிந்தனை பண்ணியே யென்பதில் ஐயுறவேண்டா. மேலே யெடுத்துக் காட்டிய வசனபூஷண ஸ்ரீஸூக்திகளில் காணும் பொருள்*ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண-என்கிற இந்த சலோகத்தில் கண்ணாடியிற்போல் அப்படியே பிரதி பலிக்க வில்லையா?

இதற்கு மேலும் நோக்கவேணும். ஸ்வப்ராப்தயே த ப்ருதாம்-த்வரஸே முருந்த! * என்பது மூன்றாவது பாதம். இதில் த்வரஸே என்கிற க்ரியாபதம் பேறு யாருடையதென்பதை நிஸ்ஸந்தேஹ விபரியமாகக் கரட்டித்தரவில்லையா? இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகிரு. என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை மொழிபெயர்த்தவத்தனையேயோ? சாஸ்த்ரார்த்தத்தைச் சந்தித்து உள்ளமுருகியன்றோஉரைத்திருக்கிறார்.-சுமாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து தொலையட்டுமிவன் என்று கைவாங்கிய யிராதே, கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ ! என்றுஇவன் கதறுவது அற்பமென்னும்படி ‘கூடி வாழுங்காலமின்னுங் குறுகாதோ ? என்று அவன் பதறியிருப்பது பெருங்கடல் போன்றது என்கிற தத்துவத் தையன்றோத்வரஸே என்பதனால் தெள்ளிதாக உணர்த்தியிருக்கின்றார் தேசிகன்-உபநிஷத்தானது, ரஸோ வை ஸ:,ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆநந்தீ பவதி என்றது. இதில் [அயம் லப்த்வா] என்று லாபத்தைசேதநகதமாக ஓதியிருக்கச் செய்தேயும், ஸ்வாமி பாயகாரர் அநா ருத்திஸ்த்ர ஸ்ரீபாஷ்யத்தில் ” பரம புருஷ: ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா” என்றருளிச்செய்துள்ள ஸ்ரீஸு க்தியானது ஸாம்பரதாயிக தத்வார்த்தங்களுக்கெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினது போலன்றோவுள்ளது-ெய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியவோதித்தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே என்று சொல்லியுள்ள ஸ்வாமி இத்தகைய விஷயத்தையன்றோ முக்கியமாக நெஞ்சிற்கொண்டது. வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் காணி லென்றுஆர்வுற்ற என்னையொழிய என்னில் முன்னம் பாரித்துத், தானென்னைமுற்றப் பருகினான் என்கிற திருவாய்மொழிப் பாசுரமன்றோ நமது
ஸ்ரீபாஷ்யகாரர்க்கு ஜீவாதுவாயிருந்தது.-ந ச பரமபுருஷஸ் ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞா நம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி”வேதாந்தா சார்யஸம்ஜ்ஞாம் அவஹித பஹுவித்ஸார்த்தம் அந்வர்த்தயாமி என்ற தேசிகன் இவ்வர்த்த தத்வத்தை யுணர்ந்தும் உணர்த்தியும் அந்வார்த்த ஸம்ஜ்ஞராகி இருக்கிறார்.

அஹமந்நம் அஹமந்நம் அஹமந்தம் என்று ஒரு தடவைக்கு மூன்று தடவையாக ஓதுவதனால்- என்னில் முன்னம்பாரித்து விடாய்த்திருக்கிற எம்பெருமானுடைய பசியைத் தீர்க்க அவனுக்கு நான் அன்னமாகிறேனென்றதாயிற்று. எம்பெருமானுக்கு மட்டுமன்றே விடாய்;சேத னுன இவனுக்கும் விடாயுண்டே; அவனுடைய விடாயைமுன்னம் தீர்த்தபிறகு தன்விடாயும் தீரப்பெறுகையை .அஹமந்நாதஅஹமந்நாத: அஹமந்நாத என்கிற அனுஸந்தான முணர்த்துகிறது.இங்ஙனே இரண்டு வாக்கியங்களினால் சொல்லப்பட்ட அர்த்தத்தைஅஹமந்நம் அந்நமதந்தம் அத்மி என்கிற மூன்றாவது வாக்கியம் நன்கு விவரிக்கின்றது.-நான் முந்துற முன்னம் எம்பெருமானுக்கு அன்னமாகியிருந்து, என்னையநுபவித்து மகிழ்கிற அவனை நானுமநுபவித்து மகிழ்கிறேன் என்பதாம்.படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே* என்கிற குலசேகரப்பெருமாள் பாசுரத்தில் & படியாய்க்கிடந்து * என்பதனால் அசேதநவ்ருத்தியை முன்னம் அபேக்ஷித்து, பின்னை உன்பவளவாய் காண்பேனே* என்று சேதனவருத்தியும் அபேக்ஷிக்கப்பட்டது. இத்
தலையை வி நியோகங்கொண்ட எம்பெருமானுக்கு விளையும் உகப்பைக்கண்டு உகப்பதுதவிர வேறு பயனில்லை சேதனனுடைய ஆனந்தித்வத்திற்கு- என்று நம் ஆசாரியர்களனைவரும் பணிக்கும்படி.

ப்ரபத்தி இன்னதென்பதைக் காட்டும் வசனம் யாவருமறிந்தது; த்வமேவ உபாயபூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி, சரணாகத்திரித்யுக்தா * என்பது. நீயே உபாயமாயிருக்க வேணுமென்கைதான் ப்ரபத்தி-என்னாநிற்க, ப்ரபத்தியும் உபாயமென்றால் இதற்கு ஏதேனும் அர்த்தமுண்டோ?-கீதார்த்த ஸங்க்ரஹத்தில்-நிஜகர்மாதி பாத்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவா காரித , உபாயதாம் பரித்யஜ்ய யஸ்யேத் தேவே து தாம் அபீ என்று ஸ்பஷ்டமாகச் சொல்லிவைத்தார்.-(ரக்ஷாயாம்] முக்தவ்யாபாரந்யாயேந ஸ்வயம்
ஸ்வாதுத்லாத் ணிகஸ்ய காலாந்தரபாவி பலஸாதநத்வ அநுப்பத்தி தர்சநாச்ச நாஸ்ய ஸ்வவ்யாபாரே மோக்ஷோபாயதாபுத்திரபி ஸ்யாத் இதி பாவ , அத: தைஸ்தைராராதிதோ பகவாநேவ ஸர்வத்ர உபாய?”
என்று கல்வெட்டாக எழுதியிருக்கிறார். இங்கு”முக்தவ்யாபாரந்யாயோ என்றெழுதியிருக்கிற இதுதான் இவ்விஷயத்தில் ஜீவநாடியானது.-கேவலம் பலாநுபவத்தில் ஊன்றின க்தனுக்கு ஸாதநாநுஷ்டான
ரூபமான செயல் லவலேசமுமில்லை, அது அபேக்ஷிதமுமன்று; ஆனாலும்
முக்தன் வாளாவிருப்பதில்லை. செய்வனவெல்லாம் ஸ்வயம் போக்ய மாகக்கொண்டு செய்கிறான். பரமைகாந்திகளான முமுக்ஷக்களின் வியாபாரங்களும் அப்படிப்பட்டவையே யென்று நிரூபித்திருக்கிறார்.

தேசிகனுக்கு வழிகாட்டியாக ரஹஸ்யக்ரந்தங்கள் பணித்தவர். “ஸ்வீகாரந்தானும் அவனாலே வந்தது; ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷிபலம்’ என்றருளிச்செய்ததை நிதியாகக் கொண்டே தேசிகன் கத்யபத்யங்களை அபரிமிதமாக எழுதிவைத்துள்ளார். அவற்றில் தலையானது உபாயஸ் ஸ்வப்ராப்தேருபநிஷததீதஸ்
ஸ பகவாந் ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ரபதந் நிதித்யாஸநகதீ, ததாரோஹ: பும்ஸாம் ஸுக்ருதபரிபாகேந மஹதா நிதாநாம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண
என்கிற (தேசிகனுடைய சலோகரத்னம்.-இதில் “நிதாநாளம் தத்ராபி ஸ்வயம் அகிலநிர்மாணநிபுண ” என்ற நான்காவதுபாதமானது “ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணினக்ரு பலம்’ என்கிற ஸ்ரீலோகாசார்ய திவ்ய ஸக்தியின் ப்ரதிச்சந்த ென்பதில் ஐயமுண்டோ? ஸ்வப்ராபதேஸ்ஸ்வயமேவ ஸாதநதயா ஜோகுஷ்யமாண: சருதெள*இத்யாதிகளும் அபரிமிதம். “எம்பெருமானை அடிபணிகின்றவர்களாகச் சொல்லப்படுமவர்கள் உண்மையில்தாமாக அடிபணிகின்றார்களல்லர் ; பின்னையோவென்னில், புழுகுறித்தது எழுத்தாமாப்போலே யத்தனை” என்கிற நம்பிள்ளை ஸூக்தியைப் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானங்களிலேகண்ட தேசிகன்| அதை ச்லோகபத்தமாக்கினார்; சகுணக்ஷதலிபிக்ரமாத் உபநிபாதிம் பாதி நா * என்று; இதைத்தான் குணாக்ஷரந்யாயமென்பது. இந்தகணக்கிலே தேறுகிற நம்முடையபகவதுபஸர்ப்பணத்தை உபாயமாகக் கொள்ளலாகாதென்று நிலையிட்டிருப்பவர் தேசிகன். நியாஸத்திலகத்தில் மத்வய்யேகஸ்மிந்நபி விஜஹதோ முக்தவத் ஸாதநத்வம் ஸுரயோ மே ஸ்வதந்தாம் என்று, எம்பெருமானைக்கூட உபாயமென்ன ஸஹியாத நித்ய முக்தகல்பர்களான மஹான்கள் திறத்திலே எனக்கு ப்ராவண்யாதிசயமுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

வரத! தவ கலு ப்ரஸாதாத் ருதே சரணமிதி வசோபி மே நோதியாந்-என்று ஆழ்வானருளிச் செய்ததை யடியொற்றி தேசிகனும் ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம் ஸ்வபரத்வேந நிர்ப்பரம், ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந் நயஸ்யதி மாம் ஸ்வயம் * என்று ந்யாஸ்தச
கத்தில் சொன்னார். இதில் ஸ்வசப்தத்தை எத்தனை தடவை ப்ரயோகித்திருக்கிறாரென்று எண்ணிப் பார்க்கவேணும். இதில் பூர்வார்த்த மிருக்கட்டும். உத்தரார்த்தத்தைஉற்று நோக்கவேணும். “ஸ்வதத்தயா தியா” என்னலாமே எளிதாக “ஸ்வதத்த ஸ்வதியா” என்று
சொல்லியிருப்பதை நோக்குவாரில்லையே.. மருவித்தொழும் மனமே தந்தாய் என்றார் ஆழ்வார். முன்னங்கொடுத்த மனம் தொழுமனமன் றிக்கே அழும்மனமா யிருந்தபடியால் அதைத் தவிர்த்து, தொழுகைக் காகப்புதியதொருமனம் தந்தருளினம் எம்பெருமான் அவ்வருளிச் செயலை யடியொற்றிதேசிகன் பேசியிருக்க, இந்தச் சுவடறியாதார்க்கு
என் சொல்லுவது? ஊமையரோடு செவிடர்வார்த்தை.-நியாயஸித்தாஞ்ஜனத்தில் இயம் கேவல லஷ்மீசோபாயத்வ சுரத்யயாத்மிகா* என்றதையும், உடனே ஸ்வஹேதுக்வதியம் ருந்தே என்றதையும் கிம் புநஸ் ஸஹகாரிணாம் என்றதையும் தனித்தனியே ஆழ்ந்து பார்க்க வேண்டாவா ? ப்ரபத்தி யென்கிற வஸ்துதேறும்போதே தன்னிடத்தில் உபாயத்வத்தை அணுவளவும் ஸஹியாமலே தேறுவத னால் ஸ்வஹேதுத்வதியம் ருந்தே என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லியுள்ளதன்றோ?

மாமேகம் சரணம் வரஜ என்று விதிக்கப்பட்டிருக் கின்ற ப்ரபத்திக்கு எப்படி உபாயத்வம் இல்லாமற் போகுமென்றும் சிலர் சங்கிப்பதுண்டு; இந்த சங்கையை நியாஸதிலகத்தில்தேசிகனே வேரற அரிந்து பொகட்டிருக்கிறார்; எங்ஙனேயென்னில்;-ஹேதுர் வைதே விமர்சேபஜநவத் இதரத், கிந்து அநுஷ்டாநகாலே வேத்யஸ் த்வத்ரூப
பேதோ விவித இஹ ஸதூபாயதா அந்யாநபேக்ஷாசு
என்று கையிலங்குநெல்லிக் கனியாகக்காட்டியிருக்கிறார் தத்துவத்தை. இதன் கருத்துயாதெனில்; ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் பக்திபோலே இதுவும் உபாயமென்று சொல்லக் கூடியதாயிருந்தாலும் இங்கு அங்ஙனே கொள்வதற்கிடமில்லை; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெரு மானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக்கடவதாயிருக்கிற கணக்கிலே இந்த ப்ரபத்திவித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் [அதாவது, பிறி தொன்றை எதிர்பாராத உபாயத்வம் வேத்யாகாரமாக இருக்கையாலே என்கை.

முப்பது வாக்யங்கள்கொண்ட ரஹஸ்ய ரத்நாவளியில் நான்காவது வாக்கியம்- ஸர்வஸ்வாமி நியாய் ஸர்வேசவரனுக்கு சேஷமாய் ஸஹதர்மசாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதி
சயத்தாலும் புருஷகாரமாக்கொண்டு இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள். இவளைப் புருஷகாரமாக்கவேண்டுகிறது ஈச்வரன் தண்ட தரனாகையாலே
” என்று பணித்தார். இதன் விவரணமான ரஹஸ்ய ரந்நாவலி ஹ் தயத்தில் “இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள்‘ என்றதற்கு- ” பவேயம் சரணம்ஹி வ என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷஹேதுவாகிறாளென்றபடி” என்று விவரணம் காட்டினார்தாமே. ரக்ஷகத்வமும் ரக்ஷாஹேதுத்வமும் பர்யாயமன்று ;ஈச்வரனை ராஹேதுவென்று யாரும் சொல்லுவதில்லையே. ரக்ஷாஹேதுத்வமேபிராட்டிக்குப் பொருந்துமென்று காட்டினாராயிற்று..

சோழநாட்டில் கண்டியூரையும் தஞ்சைமாமணிக் கோயிலையும் தென்கலையாக ஸேவித்தவர்கள் நாளைக்கும்பல்லாயிரவர் உளர். அடியேனும் பலகால் ஸேவித்தவன். இவைவடகலையாக மாறினது அறுபது வருஷங்களுக்கு மேல் இராது.
திருக்குடந்தை திருவயிந்திரபுரம் திருவெவ்வுளூர் முதலிய திருப்பதிகள்மாறுபட்டு 80, 85 ஆண்டுகட்கு மேலே ஆய்விட்டதென்று வடகலையார்களே சொல்லுகிறார்கள். எப்படியானாலும் கி.பி.பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இப்படி தேவாலயங்களில்திருமண்காப்பு மாறுபட ஆரம்பித்ததென்பது அனேக ஆதாரங்களால்
ஊர்ஜிதமான விஷயம்.

—————-

ஸ்ரீராமாநுஜன்-277-விரோதிஹ்ருத் ஐப்பசியில் திருமூலம்-24-10-71

நம்முடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயமானது ஆழ்வார்களாலும்
ஆசாரியர்களாலும் பெருமைபெற்றுப் பொலிகின்றது. இவ்வாழ்வாராசார்ய பரம்
பரையானது பொய்(கை யாழ்வார் தொடங்கிப் பொய்யிலாத மணவாளமாமுனிக
ளோடு தலைக்கட்டுகின்றது.

அஷ்டத்திக்கஜாசார்யர்களின் அஷ்டப் பிரபந்தங்களும் தமிழில்தோன்றியுள்ளன. எறும்பியப்பா வென்னுமாசிரியர் வடமொழியில் வரவரமுநி சதகமொன்றேயன்றி வரவரமுநி காவியம் வரவரமுநி சம்பூ வரவரமுநி கர்ணாம்ருதம் அம்ருதத்வநி இத்யாதிகளான பல துதிநூல்களையும் பணித்துள்ளார்.-ப்ரஹ்ம ஸத்ரத்திற்குப் பல வியாக்கியானங்களிட்டவர் ரஹஸ்யப்பொருள் விளக்கமாக ஒரு நூலும் பணித்திலர்.அது அவர்க்குப் பெரிய குறையேயாம். அக்குறையைத் தீர்த்துக்கொள்வதற்காகவே அவர்தாமே மாமுனி களாகத் திருக்கோலம் பூண்டார். இவ்வவதாரத்தில் செய்தருளின காரியங்களே
மிகமிகப் புகழத்தக்கவையாயின. ஆனதுபற்றியே இவ்வவதாரத் தனியன் வாழி களுக்கே நாடு நகரமும் நன்கறிந்த பெருமை விளைந்து அது சந்திர ஸூரியர்களுள்ள வரையில் விளங்குமதாயிற்று.-உடையவரை ஸூர்யனாகவும் மாமுனிகளைச் சந்திரனாகவும் அறுதியிடலாம். ஆனால் ஆகாசத்திலுள்ள சந்திரனுக்குக் கலைகள் குறைவதும் ஏறுவதுமாகவேயிருக்கும். மாதத்தில் ஒருநாள்தான் ஸகலகலாபரிபூர்ணனாகச்சந்திரனைப் பார்க்கமுடியும். ஸ்ரீமத்வரவரமுநி சந்திரனுக்கு எப்போதும் ஸகலகலாபரி பூர்ணஸ்திதியொழிய வேறில்லை. அந்தசந்திரனுக்குக் களங்க ஸம்பந்தமுள்ளது ப்ரஸித்தம்.சாஸ்த்ர ஸித்தமுமானது.-ஸ்ரீமத் வரவரமுனிசந்திரனுக்கு எவ்விதமான களங்கப்ரஸக்தியுமில்லை.

விசதவாக் சிகாகணியென்கிற விருது மாமுனிகளொருவர்க்கே அஸாதாரணம். கூறினது கூறல், மயங்கவைத்தல், நலிந்து பொருள்கொள்வைத்தல், இன்னது சொல்லிற்றென்று தெரியாதபடி பேசிவைத்தல்,பிறர்மனம்நோவப் பேசுதல், வீணாக வளர்த்துதல், முன்னோர் மொழிந்த மொழிகளுக்கு மாறாகப் பேசுதல் முன்பின் முரண்படப் பேசுதல்,நிந்தா பரிஹாஸங்களை நிரப்புதல் முதலிய குற்றங்குறைகளை இதர ஆசிரியர்களின் நூல்களில் பார்க்க இயலும்.

நாமார் பெரியதிரு மண்டபமார் நம்பெருமாள் தாமாக வெம்மைத் தனித்தழைத்து நீமாறன் செந்தமிழ்வேதத்தின் செம்பொருளை நாளுமிங்கே வந்துரை யென்றேவுவதே வாய்ந்து” என்று நைச்சியமாய் அநுஸந்தித்து மறுநாள் தொடங்கி ஓராண்டளவும் பகவத் விஷய பிரவசனம் நடத்திவந்தார், அவ்வாண்டில் ஸகல உத்ஸவங்களும் நிறுத்தப்பட்டன-பிறகு ஸமாப்தி தினத்தில் ஸ்ரீரங்கநாதன் ஒரு சிறு குமாரனாய்த் திருவோலக்கத்திலே வந்து நின்று,”ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்,யதீத்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்.”என்கிற திவ்ய பத்யத்தைக் கைகூப்பி நின்று விஜ்ஞாபித்தனனாக இதிஹாஸம் ப்ரஸித்தமாகவுள்ளது.-இத்தனியனில் சொற்கள் அமைந்திருக்கிற அமைப்பை
ஆராயுமிடத்தில் இது தெய்வவாக்கேயன்றி மானிட வாக்காக இருக்கமுடியாதென்
பதை ப்ராமாணிகர்கள் எளிதில் உணரலாம்.இராமபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் கண்ணபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் சில வியக்திகளிடத்தில் ஆச்ரயித்து, அவ்விடங்களில் திருவுள்ளத்திற்கு திருப்தியில்லாமலே முடிந்திருக்கிறது. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு குறைகண்டு வெறுப்புடனிருக்க நேர்ந்தது. அந்த வெறுப்பெல்லாந்தீர இப்போது மணவாளமாமுனிகளை ஆச்ரயித்து “ஸதாசார்ய லக்ஷணபூர்த்தியுள்ளஇவரை ஆச்ரயிக்கப் பெற்றோமே!” என்று மகிழ்ச்சிகொண்டமை இந்த ச்லோகத்தில் ஒவ்வொரு விசேஷணத்தினாலும் ஸ்புடமாகக் காட்டப்பட்டிருப்பதை நிரூபிக்கிறோங்காண்மின் :

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் என்பது முதல் விசேஷணம். ராமாவதாரத்தில்சைலேசதயா பாத்ரமானவொரு வ்யக்தியை வணங்கிக் கெட்டேன்; இப்போதுஸ்ரீசைலேசதயாபாத்ரமான வ்யக்திவிசேஷத்தை வணங்கி வாழ்கிறேன் என்கிறது. ராமாவதாரத்தில் வணங்கப்பட்ட சைலேசதயாபாத்ரமான வ்யக்தி யாரென்னில்; ஸு க்ரீவன். சைலமாவது ரிச்யமூக பர்வதம். அதற்கு ஈசர்- மதங்கமுனிவர். அவருடைய தயைக்குப் பாத்ரபூதன் ஸுக்ரீவன் என்பது ஸ்ரீராமாயணம் கிஷ்கிந்த-காண்டத்தில் பதினோராவது ஸர்க்கத்திலுள்ள கதையினால் ஸ்பஷ்டம். ஆயிரம் பலங்கொண்டவனான துந்துபியென்னுமரக்கன் எருமைக்காடா வடிவமெடுத் துக் கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைச் சண்டைக்கழைக்க, இருவர்க்கும் பிரபலமான போர் நடந்து வாலியினால் துந்துபியின் சரீரம் முழுதும் மடியும்படிபிசையப்பட்டு அவ்வரக்கன்யோசனைமரணமடைந்து தரையில்விழ, வாலி அவனுடையவுடலை ஒரு தூரம் போய் விழும்படி வீசியெறிய, அப்போது அவனது வாயிலிருந்து ரத்தத்துளிகள் காற்றினால் தள்ளுண்டு [சைலேசரான ] மதங்கமாமுனிவரின்
ஞானத்ருஷ்டியினால்ஆச்ரமத்தில்போய்விழ, அதைக்கண்ட அம்முனிவர் மிகுந்த சீற்றங்கொண்டு தன் இங்ஙனம் தீச்செயல் செய்தவன் வாலியென்றுணர்ந்து “பரிசுத்தமான எனது ஆச்ரமத்தை இவ்விதம் அபரிசுத்தமாக்கினவன் யாவனோ அவனும் அவனன்பர்களும் இவ்வாச்ரம பரிஸரங்களில் வந்தால் உடனே மரண மடையக் கடவர்கள்” என்று சாபமிட்டு அச்சாபம் நடத்தைக்கு வருவதற்கு ஒரு நாள்கெடு கொடுத்திருப்பதாகவும் சொல்ல, உடனே அவ்வனத்திலுள்ள [வாலி யைச்சேர்ந்த வானரர்களெல்லாரும் ஓடிச்சென்றனர். சாபபயத்தினால் வாலி அவ்விடம் வருவதற்கில்லாதபடியாயிற்று. அவனுடைய ஸம்பந்தமற்றவனான ஸுக்ரீவன்மாத்திரம் தனது அன்பர்களுடன் அவ்வாசரமத்தில் வாழ்ந்து வந்தன னாதலால் அவன் சைலேச தயாபாத்ரமாயினன். ” ஸு க்ரீவம் சரணம் கத என்கிற படியே அவனை வணங்கியிருந்த இராமன் பிறகு அவனோடே மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டது. அவ்விஷயம் கிஷ்கிந்தாகாண்டம் முப்பதாவது ர்க்கத்தில் விளங்கியதே. அதாவது-மாரிகாலம் முடிந்தபின்பும் ஸுக்ரீவன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு வராமற்போகவே பெருமாள் இளையோனை நோக்கி’லஷ்மணா! இன்னமும் சுக்ரீவன் என்னை அடியோடு மறந்துவாளாகிடக்கின்றனன்காண்; செய்ந்நன்றிமறந்த காதகனன்றோ சுக்ரீவன்; நீ உடனே அவனிடஞ்சென்று நான் சொன்னதாகச் சொல்லு; செய்ந்நன்றிமறந்த பாபிஷ்டன் புருஷர்களில் கடையான வன் அவன் மரணமடைந்தால் அவனது உடலை மாமிசந்தின்னும் ஜந்துக்களும் தின்னமாட்டா . லஷ்மணா; என் பராக்ரமத்தைச் சுக்ரீவன் நன்றாக அறிந்திருந்தும் சிறிதும் அச்சமில்லாமல் கிடக்கிறானே; வாலி சென்றவழி அவனுக்கும் திறந்திருக் கிறதென்று அவனிடம் கூறு. அவனை உற்றாருறவினரோடும் யமபுரமனுப்பச் சித்தமாயிருக்கிறேனென்று தெரிவி’ என்று கூறியிருப்பதேயாம். ” ஸு க்ரீவம் நாத மிச்சதி” என்றும் ” ஸுக்ரீவம் சரணம் கத ” என்றும் ஈடுபட்டவிடத்திலே இப்படி மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டதனால், முன்புசைலேச தயாபாத்ர பூதனானவொரு வனை வணங்கி வருந்தின குறைதீர இப்போது ஸ்ரீசைலேச தயாபாத்ர பூதரை வணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று. திருமலையாழ்வாரென்கிற திருவாய் மொழிப்பிள்ளையின் இன்னருளுக்கு இலக்கான மாமுனிகளை வணங்குகின்றே னென்கை.

இனி இரண்டாவது விசேஷணம் தீபக்த்யாதி குனார்ணவம். ஸ்ரீராமனாக அவதரித்திருந்த அக்காலத்திலே ஸுக்ரீவன் காலிலே குனிந்ததுபோலவே லவணார்ணவத்தின் காலிலும் குனிந்தமை யுத்தகாண்ட ப்ரஸித்தம். “ஸமுத்ரம் ராகவோராஜா சரணம் கந்துமர்ஹதி” என்ற விபீஷணாழ்வானுடைய வாக்கின்படி லவணார் ணவத்தை நோக்கிச் சரணகதி பண்ணியிருந்து அங்கும் மநஸ்தாபம் மிகுந்தது. அக்கடலரசன் முகங்காட்டிற்றிலனாக, மிகவும் சீறிச் சிவந்து “சாபமாநய ஸௌமித்ரே!…..ஸாகரம் சோஷயிஷ்யாமி – லக்ஷ்மணா! வில்லையும் கொடிய அம்புகளையும் கொண்டுவா; இதோ கடலை வெறுந்தரையாக்கி விடுகிறேன் என்று கூறி நிக்ரஹத்தி லேயன்றோ துணிந்து நின்றது. சரணாகதி பண்ணினவிடத்திலே இது தகுமோ ?-அப்படியான குறைதீர அந்த லவணார்ணவத்தைவிட்டு தீபக்த்யாதி குணார்ண வத்தை அடிபணிந்து வாழப்பார்க்கிறபடி. ஞானபக்தி விரக்திகளுக்குக் கடலானமாமுனிகளை வணங்குகின்றேனென்கை.)

இனி மூள்றாவது விசேஷணம் யதிந்த்ரப்ரவணம்.இப்போது ஸ்ரீரங்க நாதனாயிருக்கின்ற பெருமானே”மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்” என்கிறபடியே திருவேங்கடமுடையானாகவும் நின்ற நிலையிலே எம்பெருமானார்க்கு [ஸ்ரீராமாநுஜர்க்கு]சிஷ்யனாயினன். “அப்பனுக்குச் சங்காழியளித்தருளும் பெருமாள்” என்று போற்றப்படுகின்றஸ்ரீராமா நுஜரிடம் திருமலையப்பன் திருவாழி திருச்சங்கு பெற்றதனால் அந்த ய ந்த்ரரிடத்தில் சிஷ்யவருத்தி கொண்டிருந்தது ப்ரஸித்தம். ஆனால் அங்கு மநஸ்தாபமொன்றும் நேரவில்லையானாலும் இராம ச நூற்றந்தாதியில் ‘தன்னையுற்றாட்செய்யுந் தன்மையினார்” என்கிற பாட்டைத் திருச்செவி சாத்தினபின்பு “ய ந்த்ரரிடத் திலே சிஷ்யவருத்தி செய்வதிற்காட்டிலும் யதீந்த்ரப்ரவணரானார் திறத்திலே சிஷ்ய வருத்தி செய்வதுதான் சிறந்ததென்று தோன்றி விட்டது. அந்தப் பாசுரத்தில், தன்னையுற்றாட் செய்வதிற்காட்டிலும் தன்னையுற்றாட் செய்யுந் தன்மையினோர் மன்னுதாமரைத்தாள் தன்னையுற்று ஆட்செய்வாரே சிறந்தவரென்று எம்பெருமானார் திருவுள்ளம்பற்றியதாக வெளியிடப்பட்டுள்ள தன்றோ. அதனால் யதீந்த்ரப்ரவணரை யிறைஞ்சுகின்றே னென்கிறதாயிற்று.மணவாளமா முனிகளுக்கு யதீந்த்ர ப்ரவணரென்ற திருநாமம் சிறப்பாகக் கிடைத்ததென்றுணர்க.

இனிச்லோகத்தின் ஸமாப்தி . வந்தேரம்யஜாமாதரம் முனீம் + இராமனாயும் கண்ணனாயுமவதரித்த இரண்டவதாரங்களிலும் இரண்டு முனிகளிடத்திலே சிஷ்யவருத்தி செய்திருந்தானெம்பெருமான். ராமாவதாரத்தில் விச்வாமித்ர முனிவன் பக்கலிலும் க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபனி ழனிவன் பக்கலிலும் சிஷ்ய வருத்திசெய்திருந்து அவ்விருவரிடத்திலும் வெறுப்பேயாயிற்று எம்பெருமானுக்கு. எங்ஙனேயென்னில், விச்வாமித்திரர் ஸ்ரீராமலக்ஷ்மணர்களுடன் மிதிலையில் ஜனக சக்ரவர்த்தியினது வேள்விச் சாலையில் புகுந்தபின் கௌதம புத்திரரும் ஜநக புரோஹிதருமான சதாநந்தர் [பாலகாண்டம் 51 – ஆம் ஸர்க்கம் முதலாக ] விச்வா மித்ரருடைய பழைய கதைகளைச் சொல்லத்தொடங்கி அவர் ரஜோகுண தமோ குணங்களுக்கு வசப்பட்டுச் செய்த செயல்களை யெல்லாம் சொல்லிவர, அதெல்லாம் கேட்ட இராமன் இப்படிப்பட்ட வொருவரையா நாம் ஆசாரியனாகக் கொண்டோம்!என்று வெறுத்திருக்க நேர்ந்தது. கிருஷ்ணாவதாரத்தில் அவந்திகாபுரியில் வாழ்ந்துவந்த ஸாத்தீப நிமுனிவரிடத்தில் அறுபத்துநான்கு கலைகளையும் பயின்ற கண்ணபிரான் “ஆசார்யாய ப்ரீயம்தநமாஹ்ருத்ய” என்ற உபநிஷத்தின் கட்டளையிலே குருதக்ஷிணை ஸமர்ப்பிக்கின்றவளவிலே அம்முனிவர் “மாதவத்தோன் புத்திரன்போய்மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்“என்கிறபடியே என்றைக்கோ பிரபாஸ தீர்த்தத்தில் விழுந்து மாண்டுபோன மகனைமீட்டுத்தரவேணுமென்று வேண்ட அப்படியே கொடுத்தனன். கண்ணபிரானைஸாஷாத் நாராயணமூர்த்தியென்று அறியாதவனல்லன் அந்தஸாந்தீப நிமுனிவன்.அறிந்துவைத்தும் மோக்ஷபுருஷார்த்தத்தை விரும்பாதே மகனை மீட்டுத்தருகையாகிற க்ஷத்ர புருஷார்த்தத்தை விரும்பினபடியால் அவன் பக்கலிலும் வெறுப்பேயாயிருந்தது. இப்படி வெறுப்புக்கு இலக்ான இரண்டு முனிகளையும்விட்டு
ஸமஸ்த கல்யாண குணக்கடலாய் விரக்தாக்ரேஸரரான ரம்யஜாமா ருமுனியைவணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று.

ியாக்கியான மருளிச்செய்வதில் மாமுனிகளின் திறமை ஒப்புயர்வற்றது. ஒத்ரம் போன்ற ஸ்ரீ லோகாசார்ய திவ்ய க்திகளுக்கு அவதாரிகையிடுகிற அழகும், மூலத்திற்கு அர்த்தமருளிச் செய்கிற வைகரியும்,ஆங்காங்குஅர்த்தங்களைப் பிண்டீகரித்து நிகமித்தருளுகிற சைலியும், மதாந்தரங்களைக் கண்டித்தெழுதினாலும்கூட ஒருவருடைய மனமும் நோகாதபடிக்கும் வீணான தூஷணபரிஹாஸங்கள் சிறிதும் புகாதபடிக்கும் எந்த இடத்தை யெடுத்தாலும் சாஸ்த்ரார்த்தமே கைகொள்கனியாம் படிக்கும் ஸ்கல சாஸ்த்ரஸாகர பாரங்கதர் இவரொருவரே’ என்றுதிண்ணமாக எண்ணும்படிக்கும் மயங்கவைத்தல் முதலிய குற்றங்களுக்குச் சிறிதுமிடமில்லாதபடிக்கும் ஸூக்திகளருளிச் செய்தவர் மாமுனிகளொருவரே யென்பதை எத்தனை தடவை சொன்னாலும் எழுதினாலும் புநருக்தி துஷ்டமாகாது.-மாமுனிகளின் வியாக்கியானங்களை ஸேவிக்குமளவில் மாருதியைநோக்கி இராமபிரானருளிய வாசகமே நினைவுக்குவருகிறது. நாந்ருகவேத வி தஸ்ய நாயஜ ர்வேத்தாரிண , நாஸாமவேதவிதுஷா சக்யமேவம் ப்ரபாஷிதும் நூநம் வ்யாகரணம் க்ருத்ஸ்நம் அநேநபஹதா சருதம் இத்யாதி. இல்லாத வுலகத்தெங்கும் என்கிற கம்பர்

நம்மாழ்வார் தம்முடைய பெருமையைத் திருவாய்மொழியில் “துவளில்மாமணி மாடம்” ”உண்ணுஞ்சோறு பருகுநீர் “ முதலான பதிகங்களில் தாமேவெளியிட்டுக் கொண்டவாறு போல், மாமுனிகள் தாமும் ஆர்த்திப்பிரபந்தத்தில்ஒரு பாசுரத்தினால் தமது பெருமையைத் தாமே அருளிச் செய்யும்படியாயிற்று-நம்போல்வார்நிச்சலும் அநுஸந்தித்து உய்வதற்காக. அந்தப்பாசுரம் கேண்மின்:-
தென்னரங்கர் சீரருளுக்கிலக்காகப் பெற்ருேம்
தேவனுறை தீடுப்பதியே யிருப்பாகப் பெற்ருேம்*
மன்னியசீர் மாறன் கலையுணவாகப் பெற்நேம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றேம்*
முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்நேம்
முழுது நமக்கவை பொழுதுபோக்காகப் பெற்ருேம்
பின்னையொன்றுதனில் நெஞ்சு பேராமற்பெற்றேம்
பிறர்மினுக்கம் பொருமையிலாப் பெருமையும் பெற்ருேமே.

உலகில் பேசுவதெல்லாம் பேச்சல்ல, எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.-பட்டர் ஸ்ரீ குணரத்நகோசத்தில் “அநாக்ராதாவத்யம் பஹுருணபரீ ” என்றுஆரம்பித்து ஐந்து விசேஷணங்களிட்டுச்சிறப்பித்த வாக்வி ஸிதம் மாமுனிகளுடையதேயாகும் “பதாநாம் ஸௌப்ராத்ராத் அ மிஷ ஷேவ்யம் சரவணயோ:” என்று அந்தச்லோகத்தில் பட்டர் பணித்த அதிசயம் மாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் தவிரவேறெங்கும் காணக் கிடைக்காது. சொல்லமைப்பென்பதொன்றுண்டே அதுமற்றையோருடைய வியாக்கியானங்களில் ஸாதாரணமாகவேயிருக்கும். மணவாளமாமுனிகளின் வியாக்கியானங்களில் அது ஆச்சரியம் அற்புதம் அந்யாத்ருசம் என்றே சொல்லத்தக்கதாக விளங்கும். இதைத் தெரிந்து கொள்வது எல்லார்க்கும் எளிதன்று. முராரி யென்கிறவொரு மஹாகவி “அப்திர் லங்கீத ஏவ வானரபடை  கீந்த்வஸ்ய கம்பீரதாம் ஆபாதால மநபீவரதநுர் ஜாநாதி மந்தாசல ‘‘ என்கிறான். வானமுதலிகள் கடலைக் கடந்துவிட்டார்களானாலும் மேலெழச் சென்ற வவர்களுக்குக்
கடலின் ஆழம் சிறிதும் தெரியாதென்றும் மந்தரமலை யொன்றே அதனை அறியவல்லதென்றும் இந்தச்லோகத்தில் கூறப்பட்டிருப்பதுபோல, ஸாரஸ்வதஸரத்தை
உட்புகுந்து மர்மஸ்பர்சிபாக உணரப்பெற்றவர் கடல்சூழ்ந்த மண்ணுலகுக்குள்மணவாளமா முனிகளொருவரேயென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பர் அவருடைய திவ்ய ஸ்ரீஸக்திகளில் நன்கு ஆழ்ந்தவர்கள்.

அ யையினாலும் த்வேஷத்தினாலும் பலர் அவருடைய ஸக்தியமுதக்கடலில் அவகாஹிக்கப்புகுவதில்லை. அவகாஹிக்கும் பாக்யம் பெற்றவர்களிலும்
பலர் ‘மணிப்ரவாள ஸ்ரீஸூக்திதானே’ என்று ஸமான்யமாக நினைத்து மேலெழப்
பார்த்துச் செல்வர்கள்.”தேநாவலோக்ய கருதித பரிபஞ்ஜதே நம்” என்று பட்டர்
அருளிச்செய்தபடி அனுபவபாகிய பரிபாகசாலிகள் யாரோசில ஸுக்ருதிகளேயாவர் .

மாமுனிகளின் திவ்யகரந்தங்களுக்குள் தத்வத்ய வியாக்கியான
மொன்றைஸேவிக்குங்கால்- : கலசாஸ்த்ரங்களிலும் ஸ்ரீபாஷ்ய ஸதா நிதியிலும்
ஆழ அவகாஹித்தமஹாஜ்ஞான நிதி மாமுனிகளல்லது வேறு எவருமில்லை” என்று
சபதமிட்டுரைக்கலாம். ஞானம் என்பது வேறு, வ்யுத்பத்தி என்பது வேறு.அந்த
வ்யுத்பத்தியானது ஸகலதந்த்ரங்களிலும் மணவாளமாமுனிகளுக்கு மிகவும் அதி
சயிக்கத்தக்கது. இதை நிரூபிக்க அவருடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளில் பலபல
விடங்களுண்டு; பலகால் பரக்க நிருபித்துமிருக்கிறோம்.

மணவாள் மாமுனிகளை எம்பெருமானாருடைய அபராவதார மென்று
அஷ்டதிக்கஜாசாரயர்க னைவரும் ஸாக்ஷாதநுபவத்தினால் நிர்ணயித்துப் பல
பாசுரங்களும் ச்லோகங்களும் பணித்துள்ளார்கள். அவை ஜகத் ப்ரஸித்தமா
னவை. அவ்வளவு ப்ரஸித்தமல்லாமல் வித்வத் கோஷ்டியில்மட்டும் பரஸித்தமான
தொரு விஷயம் இங்கு விஜ்ஞாபிக்கப்படுகிறது . திருநாராயணபுரத்தில் மண்டயம்
அனந்தாழ்வாரென்று ஸுப்ரஸித்தரான மஹா வித்வான் எழுந்தருளியிருந்தார்.
மை ர் அனந்தாழ்வானென்றும் அவர் வழங்கப்படுவதுண்டு. வேதாந்த வாதாவளி
யென்று ஜகத்ப்ரஸித்தமான மஹா கரந்தரத்னங்களை யருளிச்செய்தவர் இவரே.
இவர் ஜீவித்திருந்த காலம் மிகவும் ஸமீபமானதே. (அதாவது சென்ற நூற்றாண்
டில் எழுந்தருளியிருந்தவர்.) இவருடைய சிஷ்யர்களை ஸேவித்திருக்கிறேன்.
இவருடைய சதுச் சாஸ்த்ரபாண்டித்யப்ரபாவங்களைக் கொண்டாடாதவர்களில்லை.
அவரிடத்தில் ஸாமாந்ய சாஸ்த்ரங்கள் பயின்ற வித்வான்களின் சிஷ்யர்கள் (பல
மதஸ்தர்கள்] கன்னட நாட்டில் ப்ரஸித்திபெற்று விளங்குகிறார்கள். இம்மஹாவித்
வான் மை ர் பரகாலமடத்தில் ஆஸ்தானவித்வானாக அமர்த்தப்பட்டிருந்தார்
அங்கு இதர ஸம்ரதாயஸ்தர்களான பல வித்வான்களிடையே இவரொருவரே
ஸ்ரீமத் வரவரமுநி ஸம்ப்ரதாயஸ்தராக விளங்கிவந்தார்.இவரையும் தம் ஸம்ப்ரதா
யஸ்தராக்கிக் கொள்ளவேணுமென்று அந்த ஸ்ரீ பரகால மடாதிபதி ஸ்வாமிக்குத்
தோன்றி அந்த அவாவை அடிக்கடி தெரிவித்துவர, இவர் அதற்கு இடங்கொடாது
வந்தார். கடைசியாக, விசேஷ த்ர யோபபத்திகளையும் ஜாகீர் ஜமீன்களையும்
கொடுப்பதாகச் சொல்லி நிர்ப்பந்திக்கவே இவரும் சிறிது இசைவுகாட்டியிருந்தார்.
நாளை காலைமுதல் திருமண் காப்பை மாற்றிக்கொள்வது’ என்று ஒருநாள் இவர்
எண்ணியிருக்கையில் அன்றிரவு கனவிலே எம்பெருமானார் ஆதிசேஷ ரூபேண
இவர்க்கு ஸேவைஸாதித்து உடனே மணவாளமாமுனிகளான திருக்கோலத்துட
னும் ஸேவைஸாதித்து நாமே அவர், அவரே நாம்’ என்று சொல்லி மறைந்தருளி
னார். இவரும் துயில் விழித்தெழுந்து எம்பெருமானாருடைய கருணைத் திறத்திற்கு
மிகவும் வியந்து தாம் எண்ணியிருந்த எண்ணத்திற்காக மிகவும் அநுதபித்து, காலை
யனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஒரு சலோகத்தையெழுதி அந்த மடாதிபதி
ஸ்வாமி ஸன்னிதியீலே ஸமர்ப்பித்தார். அந்த ச்லோகமாவது:-
சேஷ ஸ்ரீமாந் நிகமமகுடீயுக்மரக்ஷாப்ரவ்ருத்த ஸ்ரீமத்ராமாவரஜமுந்தாம் ரம்யஜாமாத்ருதாஞ் ச,-வீந்தத் திருப்யத்விமத படலீபாடநோத்தாம ஸூக்தி. பூயாத் பவ்யப்ரத்தமஹிமா ச்ரேயஸே பூயஸே ந | -என்பது.-அந்த ஸமயத்தில் அந்த அனந்தாழ்வான்ஸ்வாமி ந்யாய பாஸ்கரமென்கிற
மஹா கரந்தமெழுதிக்கொண்டிருந்தார் அதில் இரண்டாவது பரிச்சேதமெழுதி
வருகையில் இந்த மஹா நுக்ரஹம் நேர்ந்தபடியினால் அந்த மஹாக்ரந்தத்தோடு
கூடவே இவ்வநுக்ரஹ விசேஷமும் சாசவதமாக உலகில் விளங்கவேணுமென்றுகருதி மேலே குறித்தச்லோகத்தை அந்தக்ரந்தத்தில் இரண்டாவது பரிச்சேதத்தில் விந்யாஸம் செய்தருளித் தாமே அச்சிட்டு வெளியிட்டார். இந்த சுலோகத்தின்கருத்தாவது- உபய வேதாந்தங்களையும் காத்தருளவேணுமென்று திருவுள்ளங்கொண்ட திருவனந்தாழ்வான் எம்பெருமானாராகத் திருவவதரித்து ஸம்ஸ்க்ருத வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும், மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்து த்ராவிட வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும் இப்படி உபயவேதாந்த ப்ரதிஷ்டாபனம்செய்து பெருமைபெற்றனன்.-அத்திருவனந்தாழ்வான் நமக்கு ஸகலவிதநன்மைகளும் அளித்தருளவேணுமென்பதாம். 

மாமுனிகளருளிச்செய்த நூற்றந்தாதியின் பெருமையை விளக்கி இவ்
வநுபவத்தைத் தலைக்கட்டுகிறேன். உலகில் தோன்றியுள்ள அந்தாதி வெண்பா
நூல்களில் நிகரற்றது திருவாய்மொழிநூற்றந்தாதியொன்றேயாம். ஆசிரியர்களருளிய
எந்த நூலை யெடுத்துக்கொண்டாலும் இது நிகரற்றது” ‘இஃது ஒப்பற்றது’ என்றே
சொல்லும்படியாயிருக்கும். அப்படிச்சொல்லுவதன்று இது. இதன் சிறப்பையாவரு
மிசையும்படி நன்கு நிரூபிக்கிறேன் கேண்மின். திருவாய்மொழியாயிரமும்
அந்தாதியே; இயற்பாவில் எட்டு திவ்வியப் பிரபந்தங்கள் அந்தாதிய ;கண்ணி
நுண் சிறுத்தாம்பு அந்தாதியே; பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தம்தம்
திருமொழிகளில் ஒவ்வொரு பதிகம் அந்தாதி பாடியுள்ளார்கள். கிம் பஹ நா?
உலகில் பல்லாயிரம் அந்தாதிப் பிரபந்தங்கள் தோன்றியுள்ளன. அவை யெல்லா
வற்றினுடையவும் ப்ரக்ரியை எப்படிப்பட்டதென்றால் செய்யுளைத் தொடங்க)
வேண்டியது நூலாசிரியர்களின் தம்தம் இஷ்டத்தைப் பொறுத்தது.செய்யுளை
முடிக்கவேண்டியதும் தங்கள் தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. தங்களிஷ்டப்
படி முடித்தசீரையோ சொல்லையோ எழுத்தையோதொட்டுக்கொண்டு மேற்பாட்டு
ஆரம்பம் செய்வதென்பதொன்றே அந்தாதி பாடுகிறவர்களனைவருங்கொண்ட
நியதியாகும். (உதாரணம்) பொய்கையாழ்வார் * வையம் தகளியா * என்று
தொடங்கினார். (வையம்) என்று ஆரம்பம்செய்தது அவரிஷ்டமே கடையடியை
இடராழி நீங்குகவே யென்று” என்று முடித்தார். இதுவும் அவரிஷ்டமே.
“‘இடராழி நீங்குகவேயிங்கு’ என்றாலும் கேள்வியில்லை. அந்தாதி பாடுவார்
வெண்பாவிலோ கட்டளைக் கலித்துறையிலோ முடிக்குஞ்சொல்லை அவரவர்களிஷ்
டப்படி பாடலாம், பாடியிருக்கிறார்கள் என்பது நிர்விவாதம். இனி மணவாள
மாமுனிகளின் திருவாய்மொழி நூற்றந்தாதியின் அமைப்பைப்பற்றிக் கேண்மீன்;
நம்மாழ்வார் “உயர்வற” என்று திருவாய்மொழி தொடங்கினபடியால் அதற்குக்
கட்டுப்பட்டு உயர்வே பரன்படியை என்று தம்முடைய அந்தாதியைத் தொடங்கினார். (திருவாய்மொழியில்) அடுத்த பதிகம் (வீடுமின் முற்றவும்) என்று தொடங்குவதால் (மாமுனிகள் தம்முடைய அந்தாதி) அத்தோடும் சேரும்படி”வேராகவே விளையும் வீடு” என்று (வீடு) என்பதையே கடைச் சீராகவைத்துப் பாசுரத்தைமுடித்தார், அதற்கு மேற்பாட்டைத் தம் இஷ்டப்படி தொடங்காமல்தமது நூலுக்கும் அந்தாதியடைவு குலையாதபடிக்கு (வீடுசெய்து) என்றே தொடங் கினார். நூறுபாட்டும் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டே அவதரித்துள்ளன .செய்யுளுக்குரிய மோனையின்பமும் எதுகையின்பமுங்கூட தம்மிஷ்டத்தைப் பொறுத்ததல்லவென்பதை உற்றுநோக்கவேணும் . (வீடு) என்றதற்கு மோனை சேரும்படி (வேராகவே) என்னவேண்டிற்று. (வேராக)என்றதற்கு எதுகை சேரும்படி முன்னடியில் (வாராமல்) என்னவேண்டிற்று. இவ்வளவோடுங்கூட ஒவ்வொரு பதிகத்தின் ஸரத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் அடக்கவேண் டிற்று பாட்டுத்தோறும் நம்மாழ்வார் திருநாமமும்தவறாது வரவேண்டியதாயிற்று. இத்தனை நிர்ப்பந்தங்களைக்கொண்டு பாடின அந்தாதி நூல்இஃதொன்றுதவிர மாநிலத்தில் வேறொன்று கிடையாது.

யந்மூலமாச்வயுஜமாஸ்யவதாரமூலம் காந்தோபயந்த்ருயமிந கருணைகஸிந்தோ ,ஆ தஸத்ஸு கணிதஸ்ய மமாபி(ஸத்தாமூலம் ததேவ ஜகதப்யுதயைகமூலம்.
மன்னுயிர்காளிங்கே மணவாளமாமுனிவன் பொன்னடியாஞ்செங்கமலப் போதுகளை – உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் கரத்தாலே தீண்டல் கடன்.

ஸ்ரீமதே ரம்யஜாமாத்ருமுநீந்த்ராய மஹாத்மநே, ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்யமங்களம்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்–-Sri Jagannathastakam

June 29, 2025

The Lord of the Universe—Sri Jagannath Deva is also known as Purushottam. Puri is known as Purushottam Dhama. Sree Chaitanya Mahaprabhu used to sing Sri Jagannath-ashtakam, eight verses of the glory of Jagannatha in Puri. It is written by Sri Adi Sankaracharya, and is still being sung daily before the Deity of Lord Jagannatha for His pleasure. It is respected everywhere in India.

கதாசித் காலிந்தீ தட விபின சங்கீதகரவோ
முதாபீரீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப:
ரமா சம்பு ப்ரஹ்மாமர பதி கணேசார்ச்சித பதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 1

யமுனைக்கரையில் உள்ள சோலைகளில், சில வேலைகளில் பகவான் ஜெகந்நாதர் மிக்க ஆனந்தத்துடன், புல்லாங்குழலை ஊதி, இசைக்கச்சேரி நிகழ்த்துவார்.-அவர் விரஜபூமியிலுள்ள இடையர்குல கன்னியர்களின் தாமரை போன்ற, வதனங்களை சுவைக்கும், பெரும் வண்டு போன்றவர். அவருடைய தாமரைப் பாதங்கள் லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணேசன் போன்ற மகா ஜனங்களால், பூஜிக்கப்படுகின்றன.
அந்த ஜெகந்நாத ஸ்வாமியே, எனது காட்சிக்குரியவராக இருக்க வேண்டும்.

kadācit kālindī-taṭa-vipina-saṅgīta-taralo
mudābhīrī-nārī-vadana-kamalāsvāda-madhupaḥ |
ramā-śambhu-brahmāmara-pati-gaṇeśārcita-pado
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||1||

 Sometimes in great happiness Lord Jagannatha makes a loud concert with His flute in the groves on the banks of the Yamuna. He is like a bumblebee tasting the beautiful lotus like faces of the cowherd damsels of Vraja, and great personalities such as Laksmi, Siva, Brahma, Indra, and Ganesa worship His lotus feet. May that Jagannatha Svami be the object of my vision

புஜே சவ்யே வேணும் சிரசி சிகி பிச்சம் கடி தடே
துகூலம் நேத்ராந்தே சஹசரி கடாக்ஷம் விதததே
சதா ஸ்ரீமத் வருந்தாவன வசதி லீலா பரிச்சயோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே பதம் 2

பகவான் ஜெகந்நாதரின் இடது கரத்தில், புல்லாங்குழலை வைத்திருக்கின்றார். தலையில் மயிலிறகை அணிந்துள்ளார்.
இடுப்பில் மஞ்சள் நிறபட்டாடை உடுத்தியிருக்கிறார்.
அவருடைய கடைக்கண்கள், அவருடைய பிரேம பக்தர்களைப் பார்த்து அருளை பொழிந்து கொண்டிருக்கின்றன.
அவர் தனது நித்ய இருப்பிடமாகிய, விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்து கொண்டு, தன்னை வெளிப்படுத்திகிறார்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி எனக்கு காட்சிக்கொடுக்க மாட்டாரா ?

——–

bhuje savye veṇuṁ śirasi śikhi-piccham kaṭi-taṭe
dukūlaṁ netrānte sahacara-kaṭākṣaṁ vidadhate |
sadā śrīmad-vṛndāvana-vasati-līlā-paricayo
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||2||

In His left hand Lord Jagannatha holds a flute, on His head He wears peacock feathers, and on His hips He wears fine yellow silken cloth. From the corners of His eyes He bestows sidelong glances upon His loving devotees, and He always reveals Himself through His pastimes in His divine abode of Vrndavana. May that Jagannatha Svami be the object of my vision.

மஹாம்பேதேஸ் தீரே கனக ருசிரே நீல சிகரே
வசன் ப்ராசாதாந்த : சகஜ பல பத்ரேன பலினா
சுபத்ரா மத்யஸ்த சகல சுர சேவாவசர தோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 3

பெரிய சமுத்திரத்தின் கரையில், தங்கமயமான நீலாசல மலையின் உச்சியல், இருக்கும் பெரிய மாளிகையில்,
சக்தி வாய்ந்த சகோதரர் பலபத்ரருடனும் நடுவிலே, தங்கை சுபத்ரையுடனும் விற்றிருந்து, பகவான் ஜெகந்நாதர் தேவர்களைப் போன்ற,
தன்மை கொண்ட ஆத்மாக்களுக்கு, பக்தி சேவையாற்றும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது தான் என் வாழ்வின் நோக்கம்.

———

mahāmbhodhes tīre kanaka-rucire nīla-śikhare
vasan prāsādāntaḥ sahaja-balabhadreṇa balinā |
subhadrā-madhya-sthaḥ sakala-sura-sevāvasara-do
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||3||

On the shore of the great ocean, within a large palace atop the brilliant, golden Nilacala Hill, Lord Jagannatha resides with His powerful brother Balabhadra and His sister Subhadra, who sits between Them. May that Jagannatha Svami, who bestows the opportunity for devotional service upon all godly souls, be the object of my vision.

கிருபா பாராவார சஜல ஐலத ஸ்ரேணி ருசிரோ
ரமா வாணி ரமா ஸ்புரத் அமல பங்கேருஹ முக
சுரேந்திரைர் ஆராத்ய ஸ்ருதி கண சிகா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 4

பகவான் ஜெகந்நாதர் கருணாசமுத்திரம். மழை முகில்களின், கறுப்புக் கோடுகள் போன்ற அழகு நிறைந்தவர்.
லக்ஷ்மி தேவியின் இன்ப வார்த்தைகளால், திருப்தியடைபவர்.
அவருடைய வதனம், நன்றாக மலர்ந்த தாமரை மலர் போன்று அப்பழுக்கற்றது.
அவர் தேவர்களாலும், முனிவர்களாலும், பூஜிக்கப்படுகிறார். அவருடைய புகழ் உபநிஷத்துகளில் பாடப்படுகின்றன.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பதுதான் எனது ஆவலும், நோக்கமும்.

———-

kṛpā-pārāvāraḥ sajala-jalada-śreṇi-ruciro
ramā-vāṇī-rāmaḥ sphurad-amala-paṅkeruha-mukhaḥ |
surendrair ārādhyaḥ śruti-gaṇa-śikhā-gīta-carito
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||4||

Lord Jagannatha is an ocean of mercy and as beautiful as a row of blackish rain clouds. He is the storehouse of bliss for Laksmi and Sarasvati, and His face resembles a spotless full-blown lotus. The best of demigods and sages worship Him, and the Upanisads sing His glories. May that Jagannatha Svami be the object of my vision.

ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை
ஸ்துதி ப்ராதுர்பாவம் ப்ரதி பதம் உபாகர்ண்ய சதய
தயா சிந்துர் பந்து சகல ஜகதாம் சிந்து சுதயா
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 5

பகவான் ஜெகன்நாதர் ரதத்தில், வீதி வழியாக, அசைந்து பவனி வரும் பொழுது, ஒவ்வொரு அசைவிலும்,
உரக்க பாராயணம் பண்ணுகின்றவர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அத்துடன் பிராமணர்கள் ஓதும் வேதப் பாடல்களும் கேட்கும்.
அவர்களின் ஸ்லோகங்களை கேட்டுக்கொண்டு, பகவான் ஜெகன்நாதர் அவர்களுக்கு சாதகமாக அவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்.
அவர் கருணாசமுத்திரம். உலகனைத்திற்கும் உண்மையான நண்பன்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி, அமிர்தக் கடலிலிருந்து தோன்றிய லக்ஷ்மி சமேதராய் பார்ப்பது தான் எனது ஒரே ஆவல் ஒரே நோக்கம்.

———

rathārūḍho gacchan pathi milita-bhūdeva-paṭalaiḥ
stuti-prādurbhāvam prati-padam upākarṇya sadayaḥ |
dayā-sindhur bandhuḥ sakala jagatāṁ sindhu-sutayā
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||5||

When Lord Jagannatha moves along the road on His Rathayatra car, at every step large assemblies of brahmanas loudly chant prayers and sing songs for His pleasure. Hearing their hymns, Lord Jagannatha becomes very favorably disposed toward them. He is the ocean of mercy and the true friend of all the worlds. May that Jagannatha Svami, along with His consort Laksmi, who was born from the ocean of nectar, be the object of my vision.

பர ப்ரம்மா பீட : குவலய தலோத்புல்ல நயனோ
நிவாஸி நீலாத்ரி நிகித் சரணோ அனந்த சிரஸி
ரசானந்தீ ராதா சரஸ வபுர் ஆலிங்கன சுகோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 6

நீலத்தாமரை இதழ்களின் அடுக்குகளை போன்ற, அழகிய தலைப்பாகை அணிந்திருக்கும், பரப்பிரம்மமாகிய பிரபு ஜெகந்நாதரின் கண்கள்,
நன்கு மலர்ந்து சிவந்த தாமரை மலரைப் போன்று விரிந்து பரவசமூட்டுகிறது.
நீலாசல மலையில் வசிக்கும் அவரது பாதார விந்தங்கள், அனந்த தேவனின் தலையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
பகவான் ஜெகந்தாதர் மாதுர்ய ரசத்தில் திளைத்து, குளிர்ந்த குளம் போன்று திகழும்
ஶ்ரீமதி ராதா ராணியின் மேனியினைத் தழுவிப் பேரானந்தமடைகிறார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பது ஒன்றே எனது வாழ்வின் நோக்கமாகும்.

————

paraṁ-brahmāpīḍaḥ kuvalaya-dalotphulla-nayano
nivāsī nīlādrau nihita-caraṇo ’nanta-śirasi |
rasānandi rādhā-sarasa-vapur-āliṅgana-sukho
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||6||

Lord Jagannatha, whose eyes resemble full-blown lotus petals, is the ornament on Lord Brahma’s head. He resides on Nilacala Hill with His lotus feet placed on the heads of Anantadeva. Overwhelmed by the mellows of love, He joyfully embraces Srimati Radharani’s body, which is like a cool pond. May that Jagannatha Svami be the object of my vision.

ந வை யாசே ராஜ்யம் ந ச கனக மாணிக்ய விபவம்
ந யாசே அஹம் ரம்யாம் சகல ஜன காம்யாம் வர வதூம்
சதா காலே காலே பிரமத பதினா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 7-

இந்த ராஜ்யத்தை விரும்பியோ அல்லது பொன், மாணிக்கம் , போன்ற செல்வத்தை வேண்டியோ பாராயணம் செய்ய வில்லை.
திறமையும் அழகும் நிறைந்த மனைவி வேண்டும், என மற்றவர்கள் ஆசைப்படுவது போல, நான் ஆசைப்படவில்லை.
நான் ஜெகந்நாத ஸ்வாமியை விருப்பி பாராயணம் பண்ணுகிறேன். அவருடைய புகழை சிவபெருமான் எப்போதும் பாடுகின்றார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது ஒன்றே எனது நோக்கம்.

————

na vai yāce rājyaṁ na ca kanaka-māṇikya-vibhavaṁ
na yāce ’haṁ ramyāṁ sakala jana-kāmyāṁ vara-vadhūm |
sadā kāle kāle pramatha-patinā gīta-carito
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||7||

I do not pray for a kingdom nor do I pray for gold, rubies, or wealth. I do not ask for a beautiful wife as desired by all men. I simply pray that Jagannatha Svami, whose glories Lord Siva always sings, may be the constant object of my vision.

ஹர த்வம் சம்சாரம் த்ருததரம் அசாரம் சுர பதே
ஹர த்வம் பாபானாம் விததிம் அபராம் யாதவ பதே
அஹோ தீனே நாதே நிஹித சரணோநிச்சிதம் இதம்
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 8

தேவர்களுக்கு அதிபதியே ! தயவு செய்து இந்த பயனற்ற, பிரபஞ்ச வாழ்க்கையை விரைவில் நீக்கி விடுவீராக!
யது வம்சத்தின் தலைவனே! கரையற்ற சமுத்திரமாகிய பாவக் கடலை அழிப்பீராக !
ஐயஹோ வீழ்ச்சியடைந்தவர்களுக்கு வேறு கதியில்லை.
ஆனால் ஜெகந்நாதரின் பாதாரவிந்தங்கள், என்றும் தஞ்சம்ளிக்கும் என்பது நிச்சயம்.
அத்தகைய ஜெகந்நாதரை காண்பதே எனது நோக்கம்.

————-

hara tvaṁ saṁsāraṁ druta-taram asāraṁ sura-pate
hara tvaṁ pāpānāṁ vitatiṁ aparāṁ yādava-pate |
aho dīne ’nāthe nihita-caraṇo niścitam idaṁ
jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||8||

O Lord of the demigods, please quickly remove this useless material existence I am undergoing. O Lord of the Yadus, please destroy this vast, shoreless ocean of sins. Alas, this is certain Lord Jagannatha bestows His lotus feet upon those who feel themselves fallen and have no shelter in this world but Him. May that Jagannatha Svami be the object of my vision.

ஜகந்நாதாஷ்டகம் புண்யம்
ய : படேத் ப்ரயத : ஸுச்சி:
ஸர்வ பாப விசுத்தாத்மா
விஷ்ணு லோகம் ஸ கச்சதி–பதம் 9

தன்னுணர்வு பாதையில் வழுவாது முன்னேறிக் கொண்டிருக்கும், நல்லொழுக்கம் மிக்க ஒவ்வொரு ஜீவாத்மாவும்,
பகவான் ஜெகந்நாதரை போற்றும் எட்டு பாடல்கள் அடங்கிய, இந்த ஜெகந்நாதாஷ்டகத்தை, தினமும் ஓதுவதன் மூலம்,
தனது பாவ விளைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவதுடன் ,
இறுதியில் பகவத் தாமமான கோலோகத்( வைகுண்டத்)தை அடைவது நிச்சயம்.

—————————

jagannāthāṣṭakaṁ punyaṁ yaḥ paṭhet prayataḥ śuciḥ
sarva-pāpa-viśuddhātmā viṣṇu-lokaṁ sa gacchati ||9||

The self-retrained, virtuous soul who recites these eight verses glorifying Lord Jagannatha becomes cleansed of all sins and duly proceeds to Lord Visnu’s abode.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸூபத்ரா தேவி ஸ்ரீ நம்பி மூத்த பிரான் ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாஜ்ஞவல்க்ய க்ருத ஸ்ரீ ஸரஸ்வதீ ஸ்தவம்

June 23, 2025

யாஜ்ஞவல்க்ய உவாச
க்ருபாம் குரு ஜக³ன்மாதர்‌-மாமேவம் ஹததேஜஸம்‌ ।
கு³ருஶாபாத் ஸ்ம்ருதிப்⁴ரஷ்டம் வித்³யாஹீனம் ச து³:கி²தம்‌ ॥ 1 ॥

ஜ்ஞானம் தே³ஹி ஸ்ம்ருதிம் வித்³யாம் ஶக்திம் ஶிஷ்ய ப்ரபோ³தி⁴னீம்‌ ।
க்³ரந்த²கர்த்ருத்வ ஶக்திம் ச ஸுஶிஷ்யம் ஸுப்ரதிஷ்டி²தம்‌ ॥ 2 ॥

ப்ரதிபா⁴ம் ஸத்ஸபா⁴யாம் ச விசாரக்ஷமதாம் ஶுபா⁴ம்‌ ।
லுப்தம் ஸர்வம் தை³வ யோகா³-ன்னவீபூ⁴தம் புன: குரு ॥ 3 ॥

யதா²ங்குரம் ப⁴ஸ்மனி ச கரோதி தே³வதா புன: ।
ப்³ரஹ்மஸ்வரூபா பரமா ஜ்யோதீரூபா ஸனாதனீ ॥ 4 ॥

ஸர்வவித்³யாதி⁴தே³வீ யா தஸ்யை வாண்யை நமோ நம: ।
விஸர்க³ பி³ந்து³மாத்ராஸு யத³தி⁴ஷ்டா²னமேவச ॥ 5 ॥

தத³தி⁴ஷ்டா²த்ரீ யா தே³வீ தஸ்யை வாண்யை நமோ நம: ।
வ்யாக்²யாஸ்வரூபா ஸா தே³வீ வ்யாக்²யாதி⁴ஷ்டா²த்ருரூபிணீ ॥ 6 ॥

யயா வினா ப்ரஸங்க்³யாவான் ஸங்க்³யாம் கர்தும் ந ஶக்யதே ।
காலஸங்க்³யா ஸ்வரூபா யா தஸ்யை தே³வ்யை நமோ நம: ॥ 7 ॥

ப்⁴ரம ஸித்³தா⁴ந்தரூபா யா தஸ்யை தே³வ்யை நமோ நம: ।
ஸ்ம்ருதிஶக்தி ஜ்ஞானஶக்தி பு³த்³தி⁴ஶக்தி ஸ்வரூபிணீ ॥ 8 ॥

ப்ரதிபா⁴கல்பனாஶக்திர்‌-யா ச தஸ்யை நமோனம: ।
ஸனத்குமாரோ ப்³ரஹ்மாணம் ஜ்ஞானம் பப்ரச்ச² யத்ர வை ॥ 9 ॥

ப³பூ⁴வ மூகவத்ஸோஸ்பி ஸித்³தா⁴ந்தம் கர்து மக்ஷம: ।
ததா³ஷ்ஜகா³ம ப⁴க³வா-னாத்மா ஶ்ரீக்ருஷ்ண ஈஶ்வர: ॥ 1௦ ॥

உவாச ஸ ச தாம் ஸ்தௌஹி வாணீ மிஷ்டாம் ப்ரஜாபதே ।
ஸ ச துஷ்டாவ தாம் ப்³ரஹ்மா சாஜ்ஞயா பரமாத்மன: ॥ 11 ॥

சகார தத்ப்ரஸாதே³ன ததா³ ஸித்³தா⁴ந்த முத்தமம்‌ ।
யதா³ப்யனந்தம் பப்ரச்ச² ஜ்ஞானமேகம் வஸுந்த⁴ரா ॥ 12 ॥

ப³பூ⁴வ மூகவத்ஸோஸ்பி ஸித்³தா⁴ந்தம் கர்து மக்ஷம: ।
ததா³ தாம் ச ஸ துஷ்டாவ ஸந்த்ரஸ்த: கஶ்யபாஜ்ஞயா ॥ 13 ॥

தத ஶ்சகார ஸித்³தா⁴ந்தம் நிர்மலம் ப்⁴ரம ப⁴ஞ்ஜனம்‌ ।
வ்யாஸ: புராணஸூத்ரம் ச பப்ரச்ச² வால்மீகிம் யதா³ ॥ 14 ॥

மௌனீபூ⁴த ஶ்ச ஸஸ்மார தாமேவ ஜக³த³ம்பி³காம்‌ ।
ததா³ சகார ஸித்³தா⁴ந்தம் தத்³வரேண முனீஶ்வர: ॥ 15 ॥

ஸம்ப்ராப்ய நிர்மலம் ஜ்ஞானம் ப்⁴ரமாந்த்⁴ய த்⁴வம்ஸதீ³பகம்‌ ।
புராணஸூத்ரம் ஶ்ருத்வா ச வ்யாஸ: க்ருஷ்ணகலோத்³ப⁴வ: ॥ 16 ॥

தாம் ஶிவாம் வேத³ த³த்⁴யௌ ச ஶதவர்ஷம் ச புஷ்கரே ।
ததா³ த்வத்தோ வரம் ப்ராப்ய ஸத்கவீந்த்³ரோ ப³பூ⁴வ ஹ ॥ 17 ॥

ததா³ வேத³விபா⁴க³ம் ச புராணம் ச சகார ஸ: ।
யதா³ மஹேந்த்³ர: பப்ரச்ச² தத்த்வஜ்ஞானம் ஸதா³ஶிவம்‌ ॥ 18 ॥

க்ஷணம் தாமேவ ஸஞ்சிந்த்ய தஸ்மை ஜ்ஞானம் த³தௌ³ விபு⁴: ।
பப்ரச்ச² ஶப்³த³ஶாஸ்த்ரம் ச மஹேந்த்³ர ஶ்ச ப்³ருஹஸ்பதிம்‌ ॥ 19 ॥

தி³வ்ய வர்ஷ ஸஹஸ்ரம் ச ஸ த்வாம் த³த்⁴யௌ ச புஷ்கரே ।
ததா³ த்வத்தோ வரம் ப்ராப்ய தி³வ்யவர்ஷஸஹஸ்ரகம்‌ ॥ 2௦ ॥

உவாச ஶப்³த³ ஶாஸ்த்ரம் ச தத³ர்த²ம் ச ஸுரேஶ்வரம்‌ ।
அத்⁴யாபிதாஶ்ச யே ஶிஷ்யா யைரதீ⁴தம் முனீஶ்வரை: ॥ 21 ॥

தே ச தாம் பரிஸஞ்சித்ய ப்ரவர்தந்தே ஸுரேஶ்வரீம்‌ ।
த்வம் ஸம்ஸ்துதா பூஜிதா ச முனீந்த்³ரை ர்மனு மானவை: ॥ 22 ॥

தை³த்யேந்த்³ரை ஶ்ச ஸுரைஶ்சாபி ப்³ரஹ்ம விஷ்ணுஶிவாதி³பி⁴: ।
ஜடீ³பூ⁴த ஸ்ஸஹஸ்ராஸ்ய: பஞ்சவக்த்ர ஶ்சதுர்முக:² ॥ 23 ॥

யாம் ஸ்தோதும் கி மஹம் ஸ்தௌமி தாமேகாஸ்யேன மானவ: ।
இத்யுக்த்வா யாஜ்ஞவல்க்ய ஶ்ச ப⁴க்தினம்ராத்ம கந்த⁴ர: ॥ 24 ॥

ப்ரணனாம நிராஹாரோ ருரோத³ ச முஹுர்முஹு: ।
ஜ்யோதீரூபா மஹாமாயா தேன த்³ருஷ்டா7ப்யுவாச தம்‌ ॥ 25 ॥

ஸுகவீந்த்³ரோ ப⁴வேத்யுக்த்வா வைகுண்ட²ம் ச ஜகா³ம ஹ ।
யாஜ்ஞவல்க்ய க்ருதம் வாணீ ஸ்தோத்ரமேதத்து ய: படே²த்‌ ॥ 26 ॥

ஸ கவீந்த்³ரோ மஹாவாக்³மீ ப்³ருஹஸ்பதிஸமோ ப⁴வேத்‌ ।
மஹா மூர்க²ஶ்ச து³ர்பு³த்³தி⁴ர்‌-வர்ஷமேகம் யதா³ படே²த்‌ ।
ஸ பண்டி³தஶ்ச மேதா⁴வீ ஸுகவீந்த்³ரோ ப⁴வேத்³த்⁴ருவம்‌ ॥ 27 ॥

இதி ஶ்ரீ தே³வீ பா⁴க³வதே மஹாபுராணே நவமஸ்கந்தே⁴
ஸரஸ்வதீஸ்தவம் நாம பஞ்சமோத்⁴யாய: ।
ஸரஸ்வதீ கடாக்ஷ ஸித்³தி⁴ரஸ்து ।

இத³ம் மயாக்ருதம் பாராயணம்
ஶ்ரீஸத்³கு³ரு சரணாரவிந்தா³ர்பணமஸ்து ।

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ யாஜ்ஞவல்க்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸரஸ்வதீ தேவியார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-ஸ்ரீ பகவத் சங்கர பாதாள் ஸ்வாமிகள்-

May 12, 2025

ஸ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம்
முதல் இரண்டு ஸ்லோகங்கள் சரணாகதி
3-ராம நாம பெருமை –
4-7 திருமேனி த்யானம்
8-15- நமஸ்காரம் -உள்ளத்தில் கோயிலே கொள்ள பிரார்த்தனை
16-20 தனிப் பெருமை-அசாதாரண மஹாத்ம்யம்
21-28-பக்தி வளர்க்க பிரார்த்தனை -திருவடி போல் அனுக்ரஹிக்க வேண்டுதல்
29-பலன்

1.விசுத்தம் பரம் ஸச்சிதானந்த ரூபம்
குணாதாரமாதாரஹீநம் வரேண்யம்
மஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம்
சுகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரபத்யே

மேன்மை, தூய்மை பெற்று ஸத்-சித்-ஆனந்தம் என்றமைந்தவரும், குணங்களுக்கு ஆதாரமாயும், ஆனால் ஆதாரமேதுல்லாதவரும், சிறந்தவரும், பெரியவரும், விளங்குபவரும், சூக்ஷ்மம், குணம் இவற்றின் எல்லையாயும் ஸ்வயம் பிரகாசமாயுருக்கிற ராமரை சரணடைகிறேன்.

2.சிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம்
ஸுகாதார மாகாரசூன்யம் ஸுமான்யம்
மஹேசம் கலேசம், ஸுரேசம் பரேசம்
நரேசம் நரீசம் மஹீசம் ப்ரபத்யே

ஸ்ரீதராக ராமர் என்ற ஒருவரே நித்யமானவர், எங்கும் வியாபித்த மங்கல ரூபமானவர். அவர் உருவமற்றவரெனினும் ஆனந்தமே உருவானவர், அனைவரும் போற்றக்குரியவர் மஹேசர், கலைகளுக்கு ஈசர், தேவர்களுக்கு ஈசர், பர-ஈசர், நரர்களுக்கு ஈசர், பூக்கு ஈசர், ஆனால் தனக்குமேல் ஈசர் இல்லாதவர் அந்த ராமரை சரணடைகிறேன்.

3.யதாவர்ணயத் கர்ணமூலேsந்த காலே
சிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம்
ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம்
பஜேsஹம் பஜேsஹம் பஜேsஹம் பஜேsஹம்

காசியில் சிவன் உபதேசித்த வண்ணம் ( ராம ராம ராம ) என்ற ஒரே தாரக ப்ரஹம ரூபமான அந்த ராமனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.

4.மஹாரத்னபீடே சுபே கல்பமூலே
ஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்
ஸதாஜானகீ லக்ஷ்மணோபேத மேகம்
ஸதா ராமசந்த்ரம் பஜேsஹம் பஜேsஹம்

கல்பகமரத்தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஸுகமாக அமர்ந்திருப்பவரும் பலசூர்யர்கள் போன்று ப்ரகாசிக்கிறவரும், எப்பொழுதும் ஸ்ரீஸீதாலக்ஷ்மணர்களோடு சேர்ந்திருப்பவரும் ஆன ஸ்ரீராம சந்த்ரனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.

5.க்வணத்ரத்ன மஞ்ஜீர பாதாரவிந்தம்
லஸன் மேகலா சாருபீதாம்பராட்யம் மஹாரத்ன ஹாரோல்லஸத்கௌஸ்பாங்கம்
நதத் சஞ்சரீ மஞ்ஜரீலோல மாலம்

ஒலிக்கும் சதங்கை திருவடித்தாமரையில், அழகிய ஒட்டியாணமும் பீதாம்பரமும் இடையில், பெரிய வைரஹாரமும், கௌஸ்துபமும் மார்பில், தேனீக்கள் ரீங்காரம் செய்யும் மாலையும் அவனது மார்பில் அன்றோ!

6.லஸத் சந்த்ரிகா ஸ்மேர சோணாதராபம்
ஸமுத்யத்பதங்கேந்து கோடிப்ரகாசம்
நமத்ப்ரஹ்மருத்ராதிகோடீரரத்ன
ஸ்புரத்காந்தி நீராஜனா ராதிதாங்க்ரிம்

செவ்விய உதட்டில் தவழும் நிலவே போன்ற புன்சிரிப்புடையவர், உதயகால சூர்ய சந்த்ரர்களின் ஒளி போன்று ப்ராகாசிப்பவர், பிரம்மன், ருத்ரன் இவர்கள் வணங்கும் பொழுது அவர்களின் கிரீடரத்ன ப்ரபைபால் நீராஜனம் செய்விக்கப்பட்ட திருவடிகளையுடையவர் அப்பெருமான்.

7.புர:ப்ராஞ்ஜலீன் ஆஞ்ஜனேயாதிபக்தான்
ஸ்வசின் முத்ரயா பத்ரயா போதயந்தம்
பஜேsஹம் பஜேsஹம் ஸதா ராமசந்த்ரம்
த்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே

தன் எதிரில் கைகூப்பிய வண்ணம் நிற்கும் ஆஞ்ஜனேயர் முதலிய பக்தர்களை சீரிய சின்முத்ரையால் போதித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமசந்திரனை சேவிக்கிறேன். அவனன்றி வேறேவரையும் நினைக்கவில்லை. நினைக்கவில்லை.

8.யதா மத்யமீபம் க்ருதாந்த: ஸமேத்ய
ப்ரசண்டப்ரகோபை: படை: பீஷயேத்மாம்
ததாவிஷ்கரோஷி த்வதீயம் ஸ்வரூபம்
ஸதாபத்ப்ரணாசம் ஸகோண்ட பாணம்

என்னருகில் யமன் வந்து கோபங்கொண்ட தூதர்கள் மூலம் என்னை பயமுறுத்தும் பொழுது, ஆபத்தை நீக்கும், கோதண்டம், பாணம் இவற்றுடன் விளங்கும் உனது ஸ்வயரூபத்தைக் காட்டி யருள்வா யல்லவா?

9.த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம்
ஸுசைதன்யமேதத் த்வதன்யம் ந மன்யே
யதோsபூத் அமேயம் வியத்வாயுதேஜோ
ஜலோர்வ்யாதி கார்யம் சரம் ச அசரம்ச

ராம! எனக்கு நீர் ஒருவரே மேலான தைவம், உன்னை யன்றி வேறொரு சைதன்யத்தை மனதாலும் நினையேன். உம்மிடருந்து தானே இந்த அளவற்ற அப்தேஜோ வாயு ஆகாசாதி சராசர ப்ரபஞ்சம் தோன்றி யுள்ளது!

10.நம:ஸச்சிதானந்தரூபாய தஸ்மை
தமோ தேவதேவாய ராமாய துப்யம்
நமோ ஜானகூ ஜீவிதேசாய துப்யம்
நம:புண்டரீகாயதாக்ஷ£ய துப்யம்

ஸத்-சித்-ஆனந்த ரூபியான அந்தராமனுக்கு நமஸ்காரம், தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஜானகீபிராண நாதனான, வெண்தாமரை போன்ற கண்களையுடைய ராமனுக்கு நமஸ்காரம்.

11.நமோ பக்தியுக்தாணுரக்தாய துப்யம்
நம: புண்யபுஞ்ஜைக லப்யாய துப்யம்
நமோ வேத வேத்யாய ச ஆத்யாய துப்பம்
நம: ஸுந்தராயேந்திராவல்லபாய

பக்தியும், அன்பும் கொண்ட சேவகர்களையுடைய உமக்கு நமஸ்காரம். புண்யம் ஒன்றால் மட்டுமேயடைய முடிந்த உமக்கு நமஸ்காரம். வேதத்தால் அறியதக்க ஆதிபுருஷரான உமக்கு நமஸ்காரம். லக்ஷ்தேவியின் அழகிய மணாளனான உமக்கு நமஸ்காரம்.

12.நமோ விச்வகர்த்ரே நமோ விச்வஹர்த்ரேத
நமோ விச்வபோக்த்ரே நமோ விச்வமாத்ரே
நமோ விச்வநேத்ரே நமோ விச்வஜேத்ரே
நமோ விச்வபித்ரே நமோ விச்வமாத்ரே

உலகை ஆக்கியும், அழித்தும், வருகிற உமக்கு நமஸ்காரம். உலகை அனுபவிப்பவரும், அதை உள்ளவாரு அளப்பவரும், அதன் தலைவரும், அதையே வெற்றி கொள்பவரும், உலகத்தாயும் தந்தையுமான ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.

13.நமஸ்தே நமஸ்தே ஸமஸ்தப்ரபஞ்ச
ப்ரபோக ப்ரயோகப்ரமாண ப்ரண
மதீயம் மனஸ்த்வத் மதத்வந்த்வ ஸேவாம்
விதாதும் ப்ரவ்ருத்தம் ஸுசைத்ன்யஸித்யை

உலகமனைத்தையும் அனுபவிக்கவோ, இயக்கவோ, அளவிடவோ தக்கபடி அறிந்துள்ள உமக்கு, ஹேராம! நமஸ்காரம். நல்ல ஞானம் பெறுவதற்கு என்மனம் உன்திருவடிசேவையை மேற்கொண்டுள்ளது.

14.சிலாபி த்வதங்க்ரி-க்ஷமா-ஸங்கிரேணு-
ப்ரஸாதாத் U சைதன்ய மாதத்த ராம
நரஸ்த்வத் பதத்வந்த்வ ஸேவாவிதானாத்
ஸுசைதன்யமேதீதி கிம்சித்ரமத்ர

ஹே ராம! உனது திருவடிமண் தூசு பட்டதால் அல்லவா சிலைவடிவமாகிய அஹல்யை ஸ்வய உணர்வு பெற்றால். உனது திருவடி சேவைபுரிந்து மனிதன் நல்ல ஞானம் பெறுவதில் என்ன வியப்பு உள்ளது?

15.பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம்
நரா யே ஸ்மரந்த்யன் வஹம் ராமசந்த்ர
பவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ
லபந்தே: க்ருதாந்தம் நபச்யந்த்யதோsந்தே

உனது விசித்ரமான சரித்ரம் மிகப் புண்யம் வாய்ந்தது. ஹேராம! அந்த சரிரத்தை தினமும் ஸ்மரிக்கின்ற மனிதர்களும், போஷித்து வளர்க்கும் உன்னை சேவிப்பவரும் ஸம்ஸாரத்தை முடித்து விட்டு அதன் பின் யமனைக் காணவே மாட்டார்.

16.ஸ புண்ய: ஸ கண்ய: சரண்யோ மமாயம்
நரோ வேத யோ தேவசூடாமணிம் த்வாம்
ஸதாகாரமேகம் சிதானந்த ரூபம்
மனோவாக கம்யம் பரம் தாம ராம

ஹேராம! எந்த ஒரு மனிதர், தேவர் தலைவனாயும் ஸத் வடிவமாயும், சித் ஆனந்த ஸ்வரூபியாயும், மனம், வாக் இவற்றிற்கு எட்டாதவராயும், பெரும் ஒளியாயுருக்கிற உம்மை அறிந்துள்ளாரோ அவர் புண்யமானவர், மதிக்கத் தக்கவர்; எனக்கு சரணடையத் தகுந்தவர்.

17.ப்ரசண்ட் ப்ரதாபப்ரபாவாபிபூத-
ப்ரபூதாரிர ப்ரபோ ராமசந்த்ர
பலம் தே கதம் வர்ண்யதேsதீவ பால்யே
யதோsகண்டி சண்டீச கோதண்டதண்ட:

ஹே ப்ரபா! ராம சந்த்ர! கடிய ப்ரதாபத்தின் தாக்கம் மேலிட்ட பலப் பகைவரை வீழ்த்தியவரே! உமது பலம் வர்ணிக்க முடியாதது; ஏனெனில் சிறு வயதிலேயே மகேச்வரன் வில்லை ஓடித்தீரே!

18.தசக்ரீவமுக்ரம் ஸபுத்ரம் ஸத்ரம்
ஸரித் துர்க மத்யஸ்தரக்ஷே£கணேசம்
பவந்தம் விநா ராம! ரோ நரோவா
sஸுரோ வாsமரோ வா ஜயேத்க: த்ரிலோக்யாம்

ஸமுத்திரத்தின் நடுவில் இருந்த ராக்ஷஸத் தலைவனான கொடிய ராவனனை பிள்ளை யுடனும், நண்பர்களுடனும் ஜயிக்க வல்லவர் உம்மைத் தவிர வேறு யார் மூவுலகிலும் உள்ளனர்?

19.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம்
பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்
ஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம்

எப்பொழுதும் ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகி, வணங்கி, வாய்விட்டு சிரித்து சாதுக்களின் களிப்பிடமாயும், ஆனந்தப்பெருக்கின் வேறாகவும் இருக்கின்ற ஹனுமனை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்.

20.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதா ராம மானந்த நிஷ்யந்தகந்தம்
பிபன் அன்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ:
பிபே ப்ரஸாதாத் அஸாதாத் தவைவ

சாதுக்களைக் களிக்கச் தெய்யும் ஆனந்தப் பெருக்கின் வேர் போலிருக்கின்ற ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகிக் கொண்டு அனுதினமும் நான் இருப்பேன். உனது குறைவற்ற அருளால் மரணத்திற்காக பயப்பட மாட்டேன்.

21.அஸீதாஸமேதை ரகோதண்ட பூஷை:
அஸெளத்ரிவந்த்யை ரசண்யப்ரதாபை :
அலங்கேச காலை ரஸுக்ரீவ த்ரை:
அராமாபிதேயைரலம் தைவதைர்ந:

ஸீதையுடனில்லாத, கோதண்டத்தால் அழகுபெறாத, லக்ஷ்மணன் ஸேவிக்காத, ரல்லாத, ராவணனை அழிக்காத, சுக்ரீவனைத் தோழமை கொள்ளாத, ராமன் என்று பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்களுக்கு தெய்வல்லை.

22.அராஸனஸ்தை ரசின் முத்ரிகாட்யை :
அபக்தாஞ்ஜனேயாதி த்த்வப்ரகாசை :
அமந்தாரமூலை ரமந்தாரமாலை :
அராமாபிதேயைரலம் தைவதைர்ந:

ராஸனத்தில் அமராத, சின்முத்ரை தரிக்காத, பக்தஆஞ்ஜயர் முதலிய தத்வப்ரகாசகரில்லாத, மந்தாரமரத்தடியில் அமராத, மந்தாரமாலை யணியாத, ராமர் எனப்பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.

23.அஸிந்துப்ரகோபை ரவந்த்யப்ரதாபை :
அபந்துப்ரயாணை: அமந்தஸ்தாட்யை:
அதண்யப்ரவாஸை: அகண்டப்ரபோதை:
அராமாபிதேயை ரலம் தைவதைர்ந :

ஸமுத்ரராஜாவிடம் கோபங்கொள்ளாத புகழ்க்கப்ரதாபல்லாத, பரதன் போன்ற உறவினர் சந்திப்பில்லாத, புன்சிரிப்பு இல்லாத, தண்டகவனத்தில் பிரவாசம் கொள்ளாத, அகண்ட ஞானம் பெறாத ஸ்ரீ ராமர் என்ற பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.

24.ஹரே ராம ஸீதாபதே ராவணாரே
கராகே முராரேsஸுராரே பரேதி
லபந்தம் நயந்தம் ஸதா கால மேவம்
ஸமாலோகயா லோகயாசேஷபந்தோ

ஹே ஹரே ராம! ஸீதாபதே! ராவணனின் பகாவனே! கரனை யழித்தவனே! முராரே! அஸுரர்களை வீழ்த்தியவரே பரனே என்று எப்பொழுதும் ஜபித்துக் கொண்டு காலம் கழிக்கும் இந்த அடியேனை அனைவரையும் உறவு கொண்டாடும் ஹே ராம நன்கு கவனி, கவனி!

25.நமஸ்தே ஸுத்ராஸுபுத்ராபிவந்த்ய
நமஸ்தேஸதா கைகயாநந்தனேட்ய
நமஸ்தேஸதா வாநராதீசவந்த்ய
நமஸ்தே நமஸ்தேஸதா ராமசந்த்ர

ஸுத்ரையின் மகன் மக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டவனே! எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே ! வானரத்தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர! உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

26.ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்யப்ரதாப
ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்டாரிகால
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபன்னானுகம்பின்
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர

கோரப்ரதாபம் வாய்ந்த ஹேராம! எனக்கு அருள்செய். கொடியபகைவரை அழித்த ஹேராம! எனக்கருள்வாயாக சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே! எனக்கு அருள்செய். ஹேப்ரபோ ராமசந்த்ரா அருள்வாய் அருள்வாய்.

27.புஜங்கப்ரயாதம் பரம் வேதஸாரம்
முதாராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம்
படன் ஸந்ததம் சிந்தயன் ஸ்வாந்தரங்கே
ஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர: ஸ தன்ய:

எவனெருவன் ஸ்ரீ ராமனிடம் பக்தியுடன் இந்த வேதஸாரமான புஜங்கப்ரயாதஸ்தோத்ரத்தை படித்து வருகிறானோ அவனே ஸ்ரீ ராமனாகிவிடுகிறான் அவனே புண்யசாலியாகவும் ஆவான்.

ஸ்ரீ ராமபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.

———

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பகவத் சங்கர பாதாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ புருஷ ஸூக்த வ்யாக்யானம்‌-ஸ்ரீ உ. வே, K. ஸ்ரீ நிவாஸய்யங்கார்‌ ஸ்வாமிகள்–

April 15, 2025

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌, துருவன்‌ பரந்தாமனை ஸ்தோத்திரம்‌ செய்‌யும்‌ ப்ரகரணத்தில்‌, புருஷ ஸூக்த மந்த்ரங்களை அனுஸரித்து ஸ்தோத்‌ரம்‌ செய்வதாகக்‌ காணப்படுகிறது. அவ்விடத்தில்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரும்‌, “எங்களாழ்வான்‌ *” என்று கீர்த்தி பெற்றவருமான ஸ்ரீவிஷ்ணுசித்தாசாரியர்‌. விசேஷமாக வியாக்யானம்‌ செய்திருக்கிறார்‌.
அதை அனுஸரித்து செய்தருளிய வியாக்யானம்‌ –

“யோநூசாந த்‌,விஜம்‌ க,த்வா ஹதவாந்‌ அர்.த்த,லோப,த: | ஸ படேத்‌ பெளருஷம்‌ ஸூக்தம்‌ ஜலஸ்த்த,: சிந்தயங்‌ ஹரிம்‌ |”-எவனொருவன்‌ ஸாங்கமாக வேதாத்யனம்‌ செய்த ப்ராஹ்மணனை அடைந்து, பணப் பேயாட்பட்டு. அவனைக்‌ கொன்றானோ, அவன்‌ ஜலத்தில்‌ நின்றுகொண்டு ஹரியை நினைத்துக் கொண்டு புருஷஸு9க்தத்தைப்‌ படிக்கக் கடவன்‌.] என்றும்‌,
“ஜப்த்வாத, பெளருஷம்‌ ஸூக்தம்‌ முச்யதே கு,ருதல்பக_:’”[குரு பத்தியுடன்‌ சேர்ந்தவன்‌ புருஷ ஸூக்தத்தை ஜபித்து, அந்த மஹா பாபத்தினின்றும்‌ விடுபடுகிறான்‌.] என்றும்‌,
“ப்‌, ரஹ்ம யஜ்ஜஞே த்‌,விஐ: ஸூக்தம்‌ பெளருஷம்‌ சிந்தயந்‌ ஹரிம்‌ |
ஸ ஸர்வாந்‌ ஜபதே வேதாந்‌ ஸாங்க உபாங்காந்‌ த்‌;விஜோத்தம: lI”

[தினந் தோறும்‌ செய்ய வேண்டிய பஞ்ச மஹா யஜ்ஞத்தில்‌ ஒன்றான
ப்ரஹ்ம யஜ்ஞத்தில்‌ ஹரியை நினைத்துக் கொண்டு புருஷ ஸூக்தத்‌தைப்‌ படிக்கும்‌ பிராம்மணன்‌ ஸாங்கோபாங்கமான எல்லா வேதங்‌களையும்‌ ஐபித்தவனாகிறான்‌.] என்றும்‌ பெரியோர்கள்‌ இதன்‌ பெருமையைப்‌ பேசி யிருக்கிறார்கள்‌. – செளநக பகவானும்‌ புருஷ
ஸூுக்தத்தின்‌ ருக்குகளினால்‌ ஸ்ரீமன் நாராயணனை ஆராதனம்‌ பண்ண வேண்டுமென்று உபதேசித்து,“ அர்ச்சிதம்‌ ஸ்யாத்‌ ஜக,தி;தம்‌’”என்று அதனால்‌ ஸகல லோகங்களையும்‌ ஆராதனம்‌ செய்யப் பட்டதாகிறது என்றும்‌ வெளியிட்டிருக்கிறார்‌.-மேலும்‌, “புருஷ ஸூக்தத்தின்‌ ருக்குகளைக் கொண்டு நெய்யினால்‌ அக்னியில்‌ ஹோமம்‌ செய்பவன்‌
ஸம்ஸாரத்துக்குக்‌ காரணமான பாபங்களை விட்டு மோக்ஷத்தை அடைவான்‌”’ என்றும்‌, ஜகத் காரணனாய்‌, திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய்‌, ஸகல கல்யாண குண பூர்ணனாய்‌, தேவாதி தேவனாயிருக்கிற ஸ்ரீமந் நாராயணனை, புருஷ ஸுூ9க்தத்தினால்‌ : தியானம்‌ செய்பவன்‌ மோக்ஷத்தை யடைந்து, “ஸோஸ்நுதே ஸர்வாந்‌ காமாந்‌
ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா””
[முக்தி யடைந்தவன்‌, ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன்‌ கூட அவனுடைய ஸகல கல்யாண குணங்களையும்‌ அனுபவிக்கிறான்‌] என்றபடி ப்ரம்மாநந்தத்தை அடைகிறான்‌ என்றும்‌ இதன்‌ மஹிமை விஸ்தாரமாக வெளியிடப் பட்டிருக்கிறது.

——————–

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-

புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி-2-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–3-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி..| -4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.-7-

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:–11-

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே-12-

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–16-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே–4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-

———

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-
[புருஷனென்று சொல்லப்படும்‌ நாராயணன்‌ அநந்தமான தலைகளையும்‌, எண்ண முடியாத கண்களையும்‌, அநேகம்‌ கால்களையும்‌ உடையவர்‌. அவர்‌ பூமியை நான்கு புறத்திலும்‌ வியாபித்து அநந்த யோஜன ப்ரமாணமான ப்ரம்ஹாண்டத்தை ஆக்ரமித்தார்‌.
“ஸஹஸ்ர சீர்ஷா இத்யத்ர ஸஹஸ்ர அநந்த வாசக:-அநந்த யோஜநம்‌ ப்ராஹத,சாங்குலவசஸ்‌ ததா தஸ்ய ப்ரதமயா விஷ்ணோர்‌ தே சதோ வ்யாப்திருஸ்யதே”
[“ஸஹஸ்ர சீர்ஷா””
என்னுமிடத்தில்‌ ஸஹஸ்ர சப்தம்‌ அநந்தம்‌ என்னும்‌ அர்த்தத்தைச்‌ சொல்லுகிறது. தசாங்குல பதம்‌ அநந்த யோஜனையைச்‌ சொல்லுகிறது. புருஷ ஸூக்தத்தின்‌ முதல்‌ மந்திரத்‌தினால்‌ விஷ்ணுவினுடைய ஸர்வ தேச வ்யாப்தி சொல்லப்படுகிறது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த முதல்‌ மந்திரத்தின்‌ அர்த்தம்‌ சொல்லப்பட்டது.
(ஸஹஸ்ரசீர்ஷா)கணக்கற்ற தலைகளை உடையவன்‌, இங்கு தலை என்பது எல்லா அங்கங்களையும்‌ காட்டுகிறது. மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி என்னும்‌ ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்தையும்‌ உடைத்தாயிருப்பதால்‌ தலை முதலில்‌ எடுக்கப்படுகிறது. இங்கு சீர்ஷ சப்தம்‌ ஜ்ஞானேந்த்ரியங்களால்‌ உண்டாகும்‌ ஜ்ஞானத்தைக்‌ குறிக்கிறது.
ப்ராம்ஹணத்தில்‌ போத,ந மநந ஸ்ரவண ஸ்பர்சந தரர்சந ரஸந க்ராண ஜ்ஞாநாநி ஸ்ருதாநி ப,வந்தீத்யத: சிரஸ் ‘” .[அறிதல்‌, நினைத்‌தல்‌,கேட்பது, ஸ்பர்சம்‌, பார்ப்பது, ரசிப்பது, முகர்வது என்னும்‌ ஞானங்கள்‌ இதனால்‌ அறியப்படுவதால்‌ இது சிரஸ்‌ என்று சொல்லப்‌ படுகிறது] என்று “சிரஸ்‌’ என்னும்‌ சப்தத்தின்‌ பொருள்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறதன்றோ. இதனால்‌ அபரிமிதமான ‘அறிவை யுடையவன்‌ அநந்தன்‌ என்று அறிவிக்கப்பட்டதாயிற்று. இதையே (ஸஹஸ்‌ராக்ஷ:) என்று விவரித்திருக்கிறது வேதம்‌. ‘“ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயதம்‌ ப்ரதாதம்‌’” என்பதினால்‌ கண்‌ எடுக்கப்பட்டது. இவ்விடக்‌ தில்‌ கண்‌” என்னும்‌ பதம்‌ ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களையும் காட்டி புருஷோத்தமன்‌ அநந்தமான ஜ்ஞானத்தை யுடையவன்‌ என்று விளக்குகிறது. (ஸஹஸ்ரபாத்‌) அளவற்ற திருவடிகளை உடையவன்‌. இங்கு ‘பாத்‌’ என்னும்‌ சப்தம்‌ ஐந்து கர்மேந்த்ரியங்களையும்‌ காட்டுவதன் மூலம்‌ அளவற்ற சக்தியை யுடையவன்‌ என்று அச்யுதன்‌ அறிவிக்கிறது. இவ் விரண்டு பதங்களாலும்‌ அளவற்ற ஞான சக்திகளை யுடையவன்‌ பகவான்‌ என்று உரைக்கப்பட்டது.

பராஸ்ய சக்திர்‌ விவிதை,வ ஸ்ரூயதே ‘ஸ்வாபவிகீ ஜ்ஞாந ப,ல க்ரியா ச -ஸர்வேஸ்வரேஸ்வரனுடைய சக்தியும்‌, ஜ்ஞானமும்‌, பலமும்‌, செய்கைகளும்‌, ஸ்வாபாவிகமானதாகவும்‌, பலபடிப் பட்டதாகவும்‌, மேலானதாகவும்‌
‘சொல்லப் படுகிறது.] என்றல்லவோ உபனிஷத்‌ உத்கோஷித்தது.
(ஸஹஸ்ரசீர்ஷா): இதற்கு வேறு வகையாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஸகல ப்ராணிகளடங்கிய ப்ரம்மாண்ட்ம்‌ – நாராயணனுக்கு சரீரமானதினால்‌ இதற்குள்‌ளடங்கிய பிராணிகளுடைய தலை,கண்‌, கால்‌ முதலியவை இவனுடையவையே என்னத்‌ தட்டில்லை.
இவ் விடத்தில்‌ வித்யாரண்ய பாஷ்யத்திலும்‌ ஸர்வ ப்ராணிகளும்‌ இவருடைய சரீரத்தில்‌ அடங்கினபடியால்‌ அந்த அவயவங்களெல்‌லாம்‌ இவருடைய அவயவங்களாகும்‌ என்று காணப்படுகிறது ஸகல ப்ராணிகளுடைய அவயவங்களையும்‌ தனக்கு சேஷமாக உடையவன்‌ பகவான்‌ எனப்படுகிறது. அதனாலேயே அவன்‌ ஹ்ருஷீகேசன்‌
(இந்த்ரியங்களை நியமிப்பவன்‌) எனப்படுகிறான்‌. தலையால்‌ வணங்‌கப் படவேண்டியவன்‌ அவனே. வாயினால்‌ பேசத் தக்கவனும்‌ அவனே. புத்தியினால்‌ அறியப்பட வேண்‌டியவன்‌ ஹரியே: .கண்‌ களால்‌ பார்க்கத் தக்கவனும்‌ அவனே. செவிகளால்‌ கேட்க வேண்டியது அவனுடைய கீர்த்திகளையே. (ஸஹஸ்ரபாத்‌) என்று நம்முடைய கர்மேந்த்ரியங்களும்‌ அவனுடைய கைங்கர்யம்‌ செய்ய ஏற்பட்டவைகள்‌ என்று உணர்த்தப்படுகிறது. இவ்விடத்தில்‌,
வாய்‌ அவனை யல்லது வாழ்த்தாது கை உலகம்‌
தாயவனை யல்லது தாம்‌ தொழா–பேய்முலை நஞ்சு
ஊணாக உண்டான்‌ உருவோடு பேரல்லால்‌
காணா கண்‌ கேளா செவி,-
என்ற பாசுரம்‌ அனுஸந்திக்கத்தக்கது. (ஸஹஸ்ரசீர்ஷா) முதலிய
பதங்கள்‌ அர்ஜுனனுக்கு விஸ்வரூப தர்ஸசனத்தின் போது காட்டப்‌ பட்டது போன்ற அஸாதாரணமான விக்ரஹத்தை வர்ணிக்கின்றனஎன்றும்‌ கொள்ளலாம்‌. ஆழ்வாரும்‌ இதையே, “தோள்களாயிரத்தாய்‌! முடிகளாயிரத்தாய்‌! துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌! தாள்களாயிரத்தாய்‌!” என்று வர்ணித்தாரன்றோ.

(புருஷ:) இதில்‌ சொல்லப்படும்‌ புருஷன்‌ யார்‌? இது எந்த தெய்வத்தையும்‌ குறிக்கலாமே. புருஷ: என்பது ஸாமாந்ய சப்தமல்லவா? என்று சிலர்‌ கேட்கிறார்கள்‌.
“ப,கவாநிதி சப்தோயம்‌ ததா புருஷ இத்யபி | நிருபாதீ, ச வர்த்தேதே வாஸு தே,வே ஸ. நாதநே ||
ஸ ஏவ வாஸு தே,வோஸெள ஸாக்ஷாத்‌ புருஷ உச்யதே | ஸ்த்ரீ ப்ராயமிதரத்‌ ஸர்வம்‌ ஐகத்‌ ப்‌,ரஹ்ம புரஸ் ஸரரம்‌ |

[பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இத்த இரு சப்தங்களும்‌ இயற்கையாகவே ஸநாதனனான வாஸுதேவனைக்‌ குறிக்கின்றன. அந்த வாஸு தேவனே ஸாக்ஷாத்‌ புருஷனாகச்‌ சொல்லப் படுகிறான்‌. பிரம்‌மாவை முன்னிட்ட மற்ற ஸகல ப்ராணிகளும்‌ ஸ்த்ரி ப்ராயர்களே.] என்று பாத்ம புராணத்தில்‌ பேசப் பட்டிருக்கிறது. பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இவ்விரு பதங்களும்‌ முக்யமாக நாராயணனையே குறிக்கும்‌. அவன்‌ ஓருவனே புருஷன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்‌களே. ஸ்த்ரீ புருஷனை விட்டால்‌ ஜார ஸ்த்ரீயாவது போல்‌ இதர தெய்வங்களைத்‌ தொழும்‌ ஜீவனும்‌ அப்படியே கருதப் படுகிறான்‌.-புருஷன்‌ என்றால்‌ ஸகல சேதந அசேதநங்களிலும்‌ வியாபித்து நிறைந்து நிற்பவன்‌ என்று பொருள்‌. இது நாராயணனுக்கே அஸாதாரணமான குணம்‌. ஸுபாலோபநிஷத்தில்‌ “ஸஹஸ்ர சீர்ஷா…” என்னும்‌ மந்த்ரத்தைப்‌ பரம புருஷனைக்‌ குறித்து ப்ரயோகம்‌ செய்து அவனே ஸர்வ பூதாந்தராத்மாவான நாராயணன்‌ என்று நிர்ணயம்‌ செய்திருப்பதால்‌ இந்தப்‌ புருஷ சப்தம்‌ நாராயணனையே குறிக்கிறது என்பது ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி ஸித்திக்கிறது. கீதாசார்யனும்‌,
“யஸ்மாத்‌ க்ஷரமதீதோஹம்‌ அக்ஷராத,பி சோத்தம: |
தஸ்மாத்‌ வேதே; ச லோகே ச ப்ரதி,த: புருஷோத்தம: ||’”

[ஞானத்தில்‌ ஏற்றத் தாழ்வுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதி க்ரமித்தவனாகவும்‌, ஜ்ஞானத்தில்‌ ஸங்கோச விகாஸமற்றவனான முக்‌தனைக் காட்டிலும்‌ மேலானவனாகவும்‌ நான்‌ இருப்பதால்‌ லோகத்‌திலும்‌, வேதத்திலும்‌ புருஷோத்தமன்‌ என்று பிரஸித்தி பெற்றிருக்‌கிறேன்‌] என்று கீதையில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.

(ஸ:) இப்படி வேதத்தில்‌ ப்ரஸித்தி பெற்றவரான அந்த நாராயணன்‌.
(பூமிம்‌) “பூ,மிர்‌ பூ,ம்நா * என்று பூஸூக்தத்தில்‌ சொல்லியபடி பரப்பை உடைத்தாயிருப்பதால்‌ பூமி எனப்படுகிறது. இங்கு பூமி என்பதினால்‌ பதினாலு புவனங்களும்‌ சொல்லப்படுகின்றன. (விஸ்வதோ வ்ருத்வா…) இப்படிப்பட்ட கீழேழு மேலேழு லோகங்‌களையும்‌ நான்கு புறமும்‌ வியாபித்து, அவருடைய அங்குலத்தில்‌ பத்து அங்குலம்‌ ப்ரமாணமுள்ள ப்ரஹ்மாண்டத்தை ஆக்ரமித்தார்‌. இந்த ப்ரஹ்மாண்டம்‌ அவருடைய ஸ்வரூபத்தில்‌ ஒரு மூலையில்‌ அடங்கி விட்டது என்று பொருள்‌. (தசாங்குலம்‌) என்பதற்கு விஷ்ணு சித்தாசாரியர்‌ தசகுணம்‌” என்று பொருள் கூறி மஹா ப்ரமாணமான இந்த அண்டம்‌ என்று விளக்கி யிருக்கிறார்‌. புருஷ ஸம்ஹிதையிலும்‌ இந்த அர்த்தமே ஆதரிக்கப்பட்டது. மாத்வர்‌ பிரஹ்மா முதலிய ஜீவர்‌களுடைய பத்தங்குலம்‌ அளவுடைய ஹ்ருதய கமலத்தில்‌ அந்தர்‌யாமி யாயிருக்கிறார்‌ என்று அர்த்தம்‌ செய்தார்‌. நாபிக்கு மேல்‌ பத்தங்‌குலத்திற்கு மேற்பட்டிருக்கிற ஹ்ருதயத்தில்‌ வஸிக்கிறார்‌ என்றார்‌ மஹீ தரர்‌. வித்யாரண்யர்‌ பத்து என்பதற்கு அநேகம்‌ என்று பொருள் கொண்டு அண்டத்திற்கு வெளியிலும்‌ வியாபித்திருந்தார்‌ என்று சொல்லி யிருக்கிறார்‌.

இதனால்‌ பரம புருஷனுக்கு தேச பரிச்சேதம்‌ (தேசத்தினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று சொல்லப்பட்டது. அங்கும்‌ இங்கும்‌ எங்கும்‌ பரந்துளான்‌ புருஷோத்தமன்‌. இங்கு ஸர்வ வ்யாபகத்‌வத்தைக் கொண்டு இவன்‌ விஷ்ணுவே என்று காட்டப்பட்டது. ““விசதீதி விஷ்ணு:’” என்று எங்கும்‌ நுழைந்திருப்பதால்‌ விஷ்ணு எனப்படுகிறானன்றோ. இவ் விடத்தில்‌ பகவான்‌ ஜ்ஞானம்‌, சக்தி முதலிய கல்யாண குணங்களை உடையவனென்றும்‌, ஸகல லோகங்‌களையும்‌ வியாபித்து அவைகளை சரீரமாகக் கொண்டிருக்கிறான்‌
என்றும்‌, அஸாதாரணமான அப்ராக்ருத சரீரத்தை உடையவனென்‌ றும்‌ தெளிவாகச்‌ சொல்லப் பட்டிருக்கிறபடியால்‌, பூமி பொய்‌” என்‌றும்‌, **குணமில்லை ரூபமில்லை’” என்றும்‌ சொல்லும்‌ அத்வைத வாதங்‌கள்‌ அடியோடு அகற்றப் பட்டன.

———-

2-புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி,[எந்த ஐகத்தானது முன்‌ கல்பத்திலிருந்ததோ, எந்த ஜகத்தானது பின் வரும்‌ கல்பத்தில்‌ உண்டாகப் போகிறதோ, எது இந்தக்‌ கல்பத்‌திலிருக்கிறதோ, எந்த ஜகத்தானது அந்நத்தினால்‌ மறையாமலிருக்‌கிறதோ இந்த ஸமஸ்தமான ஜகத்தும்‌ புருஷனாகிற நாராயணனே. மேலும்‌, மோஷாத்துக்கு ப்ரபுவும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே.]“தீவிதீயயா சாஸ்ய விஷ்ணோ: கால தோ வ்யாப்தி ருஸ்யதே”” –[இரண்டாவது மந்த்ரத்தினால்‌ இந்த விஷ்ணுவுக்கு ஸர்வ காலத்‌திலும்‌ வ்யாப்தி சொல்லப்பட்டது. | என்று இந்த ருக்கின்‌ அர்த்தம்‌ புருஷ ஸம்ஹிதையில்‌ ஸங்க்ரஹிக்கப்பட்டது.

(புருஷ…… ) ‘போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌” எனப்படும்‌ மூன்று காலங்களிலும்‌: இருக்கும்‌ வஸ்துக்களெல்லாம்‌ புருஷனே என்று சொல்லப் படுகிறது. :முன்‌ மந்த்ரத்‌தில்‌ பரம புருஷன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான் என்று சொல்லப்‌பட்டது. ஆகாசம் போல்‌ வியாபித்திருப்பது மட்டுமல்ல; எல்லா வற்றையும்‌ சரீரமாகவும்‌ கொண்டிருக்கிறான்‌ பரமாத்மா என்பதை இது காட்டுகிறது.” என்று விஷ்ணுசித்தர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.
“இதம்‌ ஸர்வம்‌” என்றதினால்‌ புருஷோத்தமனுக்கு வஸ்து பரிச்சேதம்‌ (வஸ்துவினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று காட்டப்பட்டது. அவனில்லாத வஸ்துவே இல்லை யன்றோ. “யத்‌.பூ,தம்‌…ப,வ்யம்‌’” என்‌பதினால்‌ கால பரிச்சேதமில்லாதவன கேசவன்‌ என்று காட்டப்பட்டது.-ஆதி மத்‌,யாந்த ரஹிதனன்றோ அநந்தன்‌. “முன்‌ காலத்திலிருந்தான்‌; இப்பொழுதில்லை.” முதலிய குறைகள்‌ அவனைப் பற்றிச்‌ சொல்ல முடியாது. எல்லாம்‌ அவன்‌’ என்பதினால்‌ ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” என்று தெரிவிக்கப் படுகிறது.-அதனால்‌ மற்றவைகளில்லை என்று ஏற்படாது. மற்றவைகள்‌ அவனுக்கு சரீரமென்றும்‌, அவைகளுக்கு அவன்‌ அந்தர்யாமி என்றுமே ஏற்படும்‌. சரீரத்திற்குப்‌ பெயரான கிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ முதலியவைகள்‌ ஆத்மாவையும்‌ குறிக்கின்றன. அம் மாதிரியே இவ் வுலகத்தை யெல்லாம்‌ சரீரமாகக்‌ கொண்ட புருஷனை ‘எல்லாம்‌ அவனே” என்று சொல்வது பொருந்‌ தும்‌. *இந்தக்‌ குடம்‌ கருப்பு” ‘என்று சொன்னால்‌ :குடம்‌” என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ “கருப்பு என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ ஓன்றாகி விடுமோ? கருப்பு நிறமானது பிரிக்க முடியாதபடி குடத்‌தில்‌ ஒன்றி நிற்கிறது என்றே ஏற்படும்‌. அம் மாதிரியே *புருஷனே இவ் வுலகம்‌” என்று சொன்னால்‌ இவ் வுலகமானது பரமாத்மாவை விட்டுப்‌ பிரிக்க முடியாதபடி ‘ அவனுடன்‌ ஒடுங்கி நிற்கிறது என்றே பொருள்படும்‌. இவ் விஷயத்தை ::அந்பச்ச ராஜந்‌ ஸ பர: ததராந்ய:பஞ்ச விம்சக: தத்ஸ்த,த்வாதநு பஸ்யந்தி ஹ்யேக்‌ ஏவேதி . ஸாத,வ[ராஜனே! பரமாத்மா வேறானவன்‌. இருபத்தைந்தாவது தத்வமான ஜீவன்‌ வேறானவன்‌. அவனுக்குள்‌ அந்தர்யாமியாக இருப்பதால்‌,
ஸாதுக்கள்‌ ஓருவனென்றே நினைக்கிறார்கள்‌-] என்று வ்யாஸரால்‌ மோஷ தர்மத்தில்‌ சொல்லப்பட்டது. கீதையில்‌ அர்‌ ஜுனனும்‌ “ஸர்வம்‌ ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ:”” [நீ எல்லாவற்றினுள்ளும்‌ நிறைந்திருப்பதால்‌ எல்லாமாக இருக்கிறாய்‌-] என்று கண்ணனைத்‌ துதித்தான்‌. இங்கும்‌ புருஷோத்தமன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான்‌என்று சொன்ன பின்பல்லவோ புருஷனே எல்லாம்‌” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆழ்வாரும்‌ :’அவனே மற்றெல்லாமும்‌ அறிந்தனமே’‘ என்றும்‌, “வருங்காலம்‌ நிகழ் காலம்‌ கழி காலமாய்‌ உலகை ஒருங்காக அளிப்பாய்‌” என்றும்‌ பாடி யிருக்கிறார்‌.
(யத்‌ அந்நேந .அதி ரோஹதி) எந்த உலஃமானது அந்நத்தினால்‌ நசிக்காம லிருக்கிறதோ” என்று அர்த்தம்‌.-உலகத்திற்கு ஆஹாரத்தை அளித்து அவைகளை அழியாமல்‌ காக்கும்‌ இயல்வினன்‌ கண்ண பெருமான்‌‘. இங்கு அந்நம்‌’ என்பது . இந்திரியங்களால்‌ அனுபவிக்கப்படும்‌ விஷயங்களைக்‌ குறிக்கும்‌. தர்மார்த்த காமங்களாகிற இஹ லோக புருஷார்த்தங்களாக்‌ கொடுப்பவன்‌ பகவான்‌ என்று சொல்லப்படுகிறது. (உதாம்ருதத்வஸ்ய ஈசாந:) மோக்ஷ புரு ஷார்த்தத்தையும்‌ கொடுப்பவன்‌ பகவானே என்று சொல்லப்படுகிறது. இது பகவானுடைய அஸாதாரணமான லக்ஷணம்‌. இதர புருஷார்த்தங்களைக்‌ கொடுப்பதற்குப்‌ பல தேவதைகளை நாட்டி வைத்‌திருக்கிறான்‌ நாராயணன்‌. ஆனால்‌ மோக்ஷத்தையும்‌ கொடுப்பவன்‌ முகுந்தனே. “அம்ருதத்வம்‌ அஸ்நுதே‘ என்று வேதங்களில்‌ கோஷிக்கப்‌ பட்ட மோக்ஷத்திற்கு ப்ரபு நாராயணனே. வித்யாரண்யர்‌ ‘முக்காலங்‌களிலும்‌ உள்ள ஜகத்‌ எல்லாம்‌ விராட் புருஷனே. . எல்லாக் காலங்‌களிலுமுள்ள ஸஃல ப்ராணிகளுடைய தேஹங்களும்‌ விராட் புருஷனுடைய அவயவங்களே. ப்ரஹ்மா, இந்திரன்‌ முதலியவர்களும்‌ அவரை ஆஸ்ரயித்தே தங்களுடைய ஸ்தானங்களை யடைகிறார்கள்‌”*
என்று அர்த்தம்‌ செய்தார்‌. மேலும்‌, “தங்கக் கட்டி, குண்டலம்‌ முத லியஆபரணமாக ஆனாலும்‌, அந்தக்‌ குண்டலம்‌ முதலியவை உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப் பின்னும்‌ காணாப் படாமையால்‌ வாஸ்தவமாகாது. தங்கம்‌ எப்போதும்‌ காணப் படுவதால்‌ உண்மையானதாகக்‌ கொள்கிறோம்‌. அதுபோல்‌ இந்த உலகமும்‌ முன்‌ இல்லாமலிருந்து இப்போது தோன்றி சில நாளைக்குப் பின்‌ அழித்து போகிற படியால்‌ உண்மை யல்ல. விராட் புருஷனுடைய (ஸ்வரூபம்‌ எப்போதுமிருப்பதால்‌ உண்மையானது. அவரே, ஜீவாத்மாக்களுடைய புண்ய பாபங்களுக்குத்‌ தகுந்தபடி அவர்களுக்குப்‌ பலன்‌ கொடுப்பதற்காகத்‌ தன்னுடைய நிஜ ஸ்வரூபத்தை ‘விட்டு இந்த ஜகத் ரூபமாய்‌ ஆகி யிருக்கிறார்‌.” என்றும்‌ சொல்லி இருக்கிறார்‌. இது சரியன்று. உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப்‌ பின்னும்‌காணப் படாததால்‌ உலகம்‌” மாறுபாட்டை யுடையது என்றும்‌,அநித்யமானது (நிலை யற்றது) என்றும்‌ ஏற்படுமே யொழியப்‌ பொய்யானது என்று ஏற்படாது. இந்த ருக்கில்‌ இதம்‌” என்று சேதனாசேதனங்களடங்கிய ஜகத்தைக் காட்டுகிறது. புருஷனென்று
பரமாத்மா சொல்லப்படுகிறான்‌. ஜகத்‌ பொய்யான வஸ்துவானால்‌ பொய்யான வஸ்துவைப்‌ புருஷன்‌ என்று சொல்லுவது அர்த்தமற்ற பேச்சு. *இதம்‌’ என்றும்‌, ‘புருஷ:” என்றும்‌ தனித் தனியாக எடுக்கப்‌ பட்ட இரண்டும்‌ ஸத்யமானது என்றே ஏற்படும்‌. யத்‌ பூதம்‌…… ்‌என்று மூன்று காலங்களும்‌ குறிக்கப்படுவதால்‌ காலம்‌ என்னும்‌ தத்வமும்‌ உண்மை யானது என்று உணர்த்தப் படுகிறது. அம்ரு தத்வமென்றும்‌ அதற்கு ஈசனனென்றும்‌ இரண்டு சொல்லப்படு கின்றன. அம்ருதத்வம்‌ (மோக்ஷம்‌) என்று ஒன்றிருந்தால்‌ அதை அடைகிற வஸ்துவும்‌ இருந்தேயாக வேண்டும்‌. ஜகத்‌ பொய்யானால்‌“அது அந்நத்தினால்‌ நாசமடையாம லிருக்கிறது” என்பது அஸம்பாவிதம்‌. ஆகையால்‌ இங்கு அத்வைத வாதத்திற்கு அணு வளவும்‌ அவகாசமில்லை- இந்த மந்த்ரத்தின்‌ அர்த்தம்‌
புருஷோ நாராயண: பூ,தம்‌ ப,வ்யம்‌ ப,விஷ்யச்ச ஆஸீத்‌
ஸ ஏஷ ஸர்வேஷாம்‌ மோக்ஷத,ச்ச ஆஸீத்‌”?

[புருஷனாகிற நாராயணன்‌ சென்றவைகளும்‌, வருமவைகளும்‌, இருப்பவைகளுமாக ஆனார்‌. அவர்‌ எல்லோருக்கும்‌ மோக்ஷத்தைக்‌ கொடுப்பவராகவும்‌. ஆனார்‌.] என்று முத்‌கலோபனிஷத்தில்‌ சொல்லப் பட்டது.

———-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–
3-
[இந்தப்‌ புருஷனுடைய பெருமை இப் பேர்ப்பட்டது. ஆகையால்‌ புருஷோத்தமன்‌ மேலானவன்‌. எல்லா பூதங்களும்‌ இவனுடைய ஒரு பாகம்‌. போக்யமாயிருப்பதான மூன்று பாகம்‌ இவனுடைய பரம பதத்திலிருக்கிறது.]
ஏதாவாநிதி மந்த்ரேண வைப,வம்‌ கதி,தம்‌ ஹரே:’” [ஏதாவாந்‌……..” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ ஹரியினுடைய பெருமை பேசப்பட்டது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-

(ஏதாவாந்‌……) இந்தப்‌ புருஷோத்தமன்‌ தேசத்தினாலும்‌,காலத்தினாலும்‌, வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதவன்‌. போக மோக்ஷங்களைத்‌ தருபவன்‌ முகுந்தன்‌. இப்படிப்பட்டது அவனுடைய மஹிமை. ஆகையால்‌ அவனே மேலானவன்‌. (ஏதாவாந்‌ அஸ்ய
மஹிமா?…
) என்று வைத்துக் கொண்டு““இவ்வளவு தானே அவன்‌ மஹிமை? இதைக் காட்டிலும்‌ மேலானவனன்றோ புருஷன்‌”” என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. “ஸோ அங்க; வேத; யதி;வா ந வேத ” [தன்‌ பெருமையை, அவனே அறிவனோ? அறியானோ?] என்றது வேதம்‌.“தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை”:- நம்மாழ்வார்‌.
**யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவன்‌ பரமாத்மாவை அளவிட்டு அறிய முடியாத வனென்று நினைக்கிருனோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்று மறைகள்‌ முறை யிட்டன. ஆயிரம்‌ நாவு படைத்த ஆதி சேஷனாலும்‌, ‘ஸஹஸ்ர சீர்ஷா’ வான எம்பெருமானாலும்‌ அப்‌ பெருமையைப்‌ பேச முடியாது. எவ்வளவு வர்ணித்தாலும்‌ அதற்கும்‌ மேலானவனாகவே இருப்பான்‌ அநந்தன்‌.
(பாதோஸ்ய…… ) இவ் வுலகிலிருப்பவை களெல்லாம்‌ இவனுடைய ஏக தேசத்தில்‌ அடங்கி விடுகின்‌றன.*“யஸ்யா யுதாயுதாம்சாம்சே விஸ்வ சக்திரியம்‌ ஸ்திதா’ (எந்தப்‌ பரமாத்மாவினுடைய பல்லாயிரத்தில்‌ ஒரு பாகத்தில்‌ இந்த லீலா விபூதியானது அடங்கி விடுகிறதோ………] என்று பராசரர்‌ விஷ்ணு புராணத்தில்‌ விளக்கினார்‌… (த்ரிபாத்‌) அளவற்றதான இந்த லீலா விபூதியைக் காட்டிலும்‌ பன்‌ மடங்கு அளவற்றது நித்ய விபூதி.-இங்கு “மூன்று என்பது “அநந்தம்‌” என்பதைக்‌ குறிக்கும்‌.-இதனாலேயே பரம பதத்தை “த்ரிபாத் விபூதி” என்கிறோம்‌. (அம்ருதம்‌) அழியாதது. ::நச புநராவர்த்ததே’” [மோக்ஷமடைந்தவன்‌ மறுபடி திரும்பி வருவதில்லை.]என்று வேதம்‌ கோஷித்தது.-புணைக்‌ கொடுக்‌கிலும்‌ போக லொட்டான்‌” என்றார்‌ ஆழ்வார்‌. ஏற விட்டு ஏணி வாங்குபவனன்றோ எம்பெருமான்‌. இந்தப்‌ பரம பதத்திற்கும்‌ அதி லுள்ளார்க்கும்‌ அழிவு கிடையாது.-‘இனிமையானது”என்றும் பொருள்‌ கொள்ளலாம்‌. கனியைக்‌ கரும்பினின்‌ சாற்றைக்‌ கட்டியைத்‌ தேனை அமுதை” எனப்படும்‌ ஆராவமுதாகிய அச்யுதனை அனுபவிக்கும்‌ ப்ரதேசமாகையால்‌ “:அம்ருதம்‌’” எனப்படுகிறது. “ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்‌’” என்கிறபடி பகவத் குணங்களை அனுபவித்து “ப்ரஹ்மானந்தமடையும்‌ இடமன்றோ அது. (திவி) ப்ரகாசிக்கும்படியான பரம பதத்தில்‌ இருக்கிறது.

அத்யர்காநல தீப்தம்‌ தத்‌ ஸ்தராநம்‌ விஷ்ணோர்‌ மஹாத்மந :”[மஹாத்மாவான விஷ்ணுவினுடைய ஸ்தாநமானது ஸூர்யன்‌, அக்னி முதலியவர்களின்‌ ஓளியை அதிக்ரமித்த தேஜஸ்ஸை உடை யது.] என்றல்லவோ பாரதத்தில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-வித்யாரண்யர்‌ இதற்கு பாஷ்யம்‌ செய்யும் போது மஹிமை என்றால்‌ ஸாமர்த்யம்‌ என்றும்‌ ஆகையால்‌ இது வாஸ்தவமன்று என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. அப்படி யென்றால்‌ இது இந்த்ரஜாலமென்றே ஏற்படும்‌. இது ஸாஹஸமே யொழிய வேறல்ல. “மஹிமை” என்பது பெருமையைக்‌ காட்டுகிறது. ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்‌ருச்யதே”” என்கிறபடி ஓப்பாரும்‌ மிக்காரு மற்றவன்‌ மாதவன்‌ என்றே பொருள்படும்‌..அவனை விடத்‌ தாழ்ந்த வஸ்துக்களில்லா விடில்‌ பெருமையே ஏற்படாது. பெருமை யென்று சொன்னாலும்‌ கேலிக்‌கூத்தாகும்‌. பெருமையும்‌ சிறுமையும்‌ ஒன்றை யொன்று அபேக்ஷித்‌திருக்கும்‌ வார்த்தைகளன்றோ. மேலும்‌, பகவான்‌ உபய விபூதி நாயகன்‌ என்று சொல்லப் பட்டபடியால்‌ அத்வைத வாதத்திற்குச்‌ சிறிதும்‌ இங்கு இடமில்லை.
ஸச ஸர்வஸ்மாந் மஹிம்நோ ஜ்யாயாந்‌, தஸ்மாந் ந கோபி ஜ்யாயாந்‌”
[அவன்‌ எல்லா மஹிமைகளைக் காட்டிலும்‌ உயர்ந்தவன்‌. அவனைக்‌ காட்டிலும்‌ உயர்‌ந்தவனில்லை.] என்று முத்கலோபநிஷத்தில் இந்த மந்திரத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது.

————-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி
..| -4-பரம பதத்திலிருக்கும்‌ பரம புருஷன்‌ மூன்று அவதாரத்தை உடையவனாகி ஸங்கல்பித்தார்‌. இவருடைய ஒரு அவதாரமான (அநிருத்தன்‌) இவ் வுலகத்தில்‌ அவதரித்தார்‌. அதற்குப் பின்‌ எல்லாப் பக்கத்திலும்‌
ஜீவன்‌ ஜடம்‌ இவர்களைக்‌ குறித்து (அவதாரம்‌ செய்வதன்‌ மூலம்‌)வியாபித்தார்‌.]
த்ரிபாதி,த்யநயா ப்ரோக்தம்‌ அநிருத்‌தஸ்ய வைப,வம்‌”[“த்ரிபாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தில்‌ அநிருத்த நாராயணனுடைய வைபவம்‌ விளக்கப் படுகிறது.] என்று புருஷ ஸம்ஹிதை சொல்லிற்று.

(த்ரிபாத்‌……) பரம பதத்திலிருக்கும்‌ பர வாஸுதேவன்‌ ஸங்கர்‌ஷணன்‌, அநிருத்தன்‌, ப்ரத்யும்நன்‌ என்னும்‌ மூன்று வ்யூஹங்களை உடையவரா யிருக்கிறார்‌. இந்த வ்யூஹங்களைப் பற்றிப்‌ பாஞ்சராத்‌ரத்தில்‌ அஹிர் புத்ந்ய ஸம்ஹிதையில்‌ விசேஷமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
(உதைத்‌) “இவ் வுலகை யெல்லாம்‌ ரக்ஷிக்கக் கடவேன்‌” என்று ஸங்கல்பித்தார்‌.
(அஸ்ய பாத:) இவருடைய ஒரு அவதாரமான அநிருத்தன்‌.
(இஹ அபவாத்புந:) மறுபடியும்‌ இங்கு விஷ்ணுவாகத்‌ திருப் பாற்கடலில்‌ அவதரித்தார்‌.
(ததோ…வ்யக்ராமத்‌) அதன்‌ பிறகு அயோத்தி த்வாரகை முதலிய திவ்ய நகரங்களில்‌ ராமக்ருஷ்‌ணாதிகளாக அவதரித்தார்‌. அவைகளுக்கும்‌ பிற்பாடரானவர்களை உய்விப்பதற்காகத்‌ திருவரங்கம்‌, திருப்பதி முதலிய திவ்ய தேசங்‌ களிலும்‌, கிராமங்கள் தோறும்‌, பக்தர்களுடைய கிருஹங்கள் தோறும்‌ அர்ச்சா மூர்த்தியாக அவதரித்தார்‌. ‘விஷ்வக்‌’ என்றதால்‌ எண்ணிறந்த இடங்களில்‌ அவதாரம்‌ செய்திருப்பது தோற்றுகிறது–ஸ்வரூபவ்யாப்தி முதல்‌ மந்த்ரத்திலேயே சொல்லப்பட்டதால்‌ இங்கு “வ்யக்ராமத்‌” என்பதற்கு அவதாரம் செய்து வியாபித்தார்‌ என்றே பொருள் கொள்ளவேண்டும்‌. இவர்‌ எதற்காக இப்படி அவதாரம்‌ செய்ய வேண்டும்‌ எனில்‌: (ஸாசநாநசநே அபி) உணவருந்துபவர்‌களான தேவர்‌, மனுஷ்யர்‌ முதலியவர்களையும்‌, உணவருந்தாமல்‌ பாறை முதலியவையாய்க் கிடக்கும்‌ சேதனர்களையும்‌ உய்விப்ப்தற்கே–இப்படிப்‌ படாதன படுகிறான்‌ பரமபுருஷன்‌ என்று சொல்லப்படு கிறது. “உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌! இமை யோர்‌ தலைவா!” என்றார்‌ ஆழ்வார்‌. “*அஜாயமாநோ பஹுதா விஜாயதே”” [பிறப்பிவியான பகவான்‌ பல தடவை பிறக்கிறான்‌] என்றது வேதம் -புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஓன்றின்றியே்‌ நல்ல கதிக்கு அழைத்துச்‌ செல்ல வன்றோ அவதாரம்‌ செய்கிறான்‌ அச்யுதன்‌.-சேதநாசேதநங்களெல்லாம்‌ அவனுடைய உடைமைகளாயிற்றே.-உடைமையைப் பற்றிய கவலை உடையவனுக் கல்லவோ உண்டு.-விபவாவதாரங்களைப் பற்றி ராமாயணம்‌, பாரதம்‌, பாகவதம்‌ முதலியவைகளில்‌ விஸ்தாரமாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. அர்ச்சாவ தாரமாஹாத்ம்யங்கள்‌ பாஞ்சராத்ர வைகானஸ’ ஸம்ஹிதைகளிலும்‌,-வாராஹம்‌, ப்ரஹ்மாண்டம்‌ முதலிய புராணங்களிலும்‌ கீர்த்திக்கப்‌ பட்டிருக்கின்றன. ஆழ்வார்கள்‌ அருளிச் செயல்களிலும்‌ அனுபவிக்கிறோம்‌-இப்படி அவதாரம்‌ செய்தது ஸ்ரீமந்‌ நாராயணனே. வேறு தெய்வங்களல்ல,. பரித்ராணாய ஸாதூநாம்‌’”’ என்கிறபடி லோக ஸம் ரக்ஷணத்திற்காகப்‌ பல பிறப்புகளெடுத் திருக்கிறான்‌ பரந்தாமன்‌. உலகத்தைக்‌ காப்பதற்காக மற்ற தெய்வங்கள்‌ அவதாரம்‌ செய்ததில்லை. அவர்கள்‌ அவதாரம்‌ செய்ததாகச்‌ சொல்லுவதும்‌ அல்ப காரியங்களுக்கே. தாயில்லாப் பெண்‌ ப்ரசவ வேதனைப்படும் போது தாயும்‌ ஆகி ‘தாயுமானவர்‌’ என்று பெயர்‌ பெற்றதாகச்‌ சொல்லுகிறார்கள்‌. இப்படிச்‌ சில விருத்தாந்தங்கள்‌ சொல்லப்படுகின்றன–அவதாரங்கள்‌ செய்து மஹத்தான கீர்த்திய டைந்தவன்‌ மாதவனே.-வியூஹங்கள்‌ தேவர்களுக்குக்‌ கூப்பீடு கேட்குமிடங்கள்‌. நம்மால்‌ அணுக முடியாதவை.-விபவாவதாரங்களோ அக்காலத்திலிருந்த பாக்யவான்களுக்கே. ‘புல்லாய்ச்‌ சிலையாய்க்‌ கிடந்திலமே கழல்‌ தீண்டுகைக்கே”” என்றே நாம்‌ நினைக்க வேண்டி யிருக்கிறது. அவைகளைப் பற்றி இதிஹாஸ புராணங்களில்‌ கேட்டே ஆநந்தமடைகிறோம்‌. அவை ஒரு காலத்திலோடும்‌ பெருக்காறு போன்றவை.-அவற்றில்‌ தேங்கின மடுப் போலே சொல்லப்பட்ட அர்ச்சாவதாரமும்‌ வற்றி விட்டதோ என்று தோன்றுகிறது. அவைகட்கு யாதொரு தீங்‌கும்‌ ஏற்படாதென்று மநோ ரதித்திருந்தோம்‌. அவைகளும்‌ ஸமாப்தி யடைந்தனவோ என்றேங்கும்படி இருக்கிறது இப்போதிருக்கும்‌ நிலைமை. கூரத்தாழ்வாணையும்‌ பட்டரையும் போல்‌, கல்கி அவதாரத்தை இப்போதே எடுத்துச்‌ சீர்திருத்தும்படி பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை,

————

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:
–5-
[அந்த விஷ்ணுவிடமிருந்து ப்ரஹ்மாண்டம்‌ உண்டாயிற்று. ப்ரஹ்‌மாண்டத்தில்‌ பிரமன்‌ உண்டானான்‌. அத்த நான்முகன்‌ பூமியைப்‌ பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ ஆக்ரமித்தனன்‌.]
தஸ்மாத்‌, விராடி,த்யநயா பாத.நாராயணாத்‌ ஹரே:
ப்ரக்ருதே: புருஷஸ்யாபி ஸமுத்பத்தி : ப்ரதர்‌சிதா”
[(“தஸ்மாத்‌ விராட்‌…
” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ நாராயணனுடைய ஓர்‌ அவதாரமான ஹரியினிடமிருந்து ப்ரக்ருதியினுடையவும்‌, பிரமனுடையவும்‌ உத்பத்தியானது காட்டப்பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதையில்‌ இதன்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது. (தஸ்மாத்‌…) இப்‌படிப்‌ பலவிதமான அவதாரங்களைச்‌ செய்‌த மஹா விஷ்ணுவிடமிருந்து முட்டை வடிவமான ஒரு அண்டம்‌ உண்டாயிற்று.

அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌-(விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதிபுருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌” “அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌. (விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ “அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதி புருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌”செயலற்று இருந்தன. பிறகு பிரமன்‌ மாதவனிடம்‌ முறையிட்டதாகவும்‌, அவன்‌ ஸர்வேந்த்ரியங்களிலும்‌ வியாபித்து அவைகளுக்குக்‌ கார்யம்‌ செய்ய சக்தி கொடுத்ததாகவும்‌ அறிகிறோம்‌-முற் கூறிய பல உபனிஷத்துக்களலும்‌ சொல்லப்பட்ட நாராயணனே இப்படி ஸர்வ விதத்திலும்‌ ஸ்ருஷ்டி செய்கிறான்‌ என்று ஏற்படுகிறது.(ஸ ஜாதோ…) அந்தப்‌ பிரமன்‌ பூமியை, நான்கு பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ வியாபித்ததாகச்‌ சொல்லப் படுகிறது.-*பச்சாத்‌” என்‌றதனால்‌ எல்லா த்வீபங்களிலும்‌, “அத; என்பதால்‌ பாதாளத்திலும்‌, புர: என்பதினால்‌ ஸ்வர்க்கம்‌ முதலியவைகளிலும்‌ வியாபித்தான்‌ என்று ஏற்படுகிறது.-பிரமனுடைய ஸ்வரூபம்‌ அணுவான படியால்‌ ஸ்வரூபத்தினால் இவைகளை வியாபிக்க. மூடியாது. ஆகையால்‌ ஞானம்‌, சக்தி முதலிய குணங்களால்‌ வியாபித்ததாகவே கொள்ள வேண்டும்‌. தன்னுடைய ஞானத்தினால்‌ பதினாலு உலகங்களிலும்‌ நடக்க வேண்டியவைகளை அறிந்து, சக்தியினால்‌ ஸ்ருஷ்டி செய்வதால்‌ இவ் வண்டத்திலுள்ள உலகங்களிலும்‌ ஞானத்தினாலும்‌ சக்தியினாலும் வியாபித்தான் என்றே கொள்ள வேண்டும்‌.-ஸ்ரீவிஷ்ணுசித்தர்‌ “தன்னுடைய பிரஜைகள்‌ மூலமாக வியாபித்தான்‌” என்றும்‌ பொருள் கொண்டார்‌. பெரிய சரீரத்தினால்‌ வியாபித்ததாகவும்‌ சொல்லலாம்‌.“ஸ ச பாத,நாராயண: ஐகத்‌ ஸ்ரஷ்டும்‌ ப்ரக்ருதிம்‌ அஜாயத்‌”[ நாராயணனின்‌ அவதாரமாகிய அந்த விஷ்ணு உலகை ஸ்ருஷ்டிப்‌பதற்காகப்‌ பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌.] என்று இத்த மந்திரத்தின்‌ பொருள்‌ முத்கலோபனிஷத்தில்‌ உரைக்கப்பட்டது. இங்கு “ப்ரக்ருதி”சப்தம்‌ ப்ரஜைகளுக்குக்‌ காரண பூதனான: பிரமனைக்‌ குறிக்கிறது.

——————

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-
[தேவர்கள்‌ (நித்ய ஸூரிகள்‌) சதுர்முகனாகிற ஹவிஸ்ஸினால்‌ ஸ்ருஷ்டியைக் குறித்துச்‌ செய்த (தியான ரூபமான ) யாகத்திற்கு வஸந்த ருது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்தாகவும்‌, சரத் ருது புரோடாசமென்னும்‌ ஹவிஸ்ஸாகவும்‌ ஆயிற்று.]
“யத்‌ புருஷேணேத்யநயா ஸ்ருஷ்டி யஜ்ஞ்ஸ்‌ ஸமீரித:”
[யத்‌ புருஷேண’ என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட யஜ்ஞம்‌ சொல்லப் பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதை சொல்லிற்று-இந்த மந்த்ரத்திலிருந்து ஸ்ருஷ்டியைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்யப்‌பட்ட விஷயம்‌ விவரிக்கப்படுகிறது. பிரமனுக்குப்‌ பிறந்த போதே ஸ்ருஷ்டி சக்தி யில்லை என்பது இதிலிருந்து ஏற்படுகிறது. நான்‌ முகனுக்குப்‌ படைக்கும்‌ சக்தி உண்டாவதற்காக எம்பெருமானணைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்தார்கள்‌ என்றும்‌ ஏற்படுகிறது. (யத்‌ புருஷேண…) இந்தப்‌ பிரமனாகிற புருஷனை அந்த யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவாகக்‌ (ஹவிஸ்ஸாக) கல்பித்தனர்‌ என்று ஏற்படு கிறது. யார்‌ கல்பித்தார்கள்‌? (தேவா?) தேவர்கள்‌. யார்‌ அந்த தேவதைகள்‌? என்னும்‌ விசாரணை உண்டாகிறது.-இந்த்ராதி தேவர்‌ களோவெனில்‌ ஸ்ருஷ்டி சக்தியை அடைந்த பின்பு பிரமனால்‌ படைக்‌கப்பட்ட கச்யப ப்ரஜாபதிக்கு அதிதியிடம்‌ பிறந்த புத்திரர்கள்‌. ஆகையால்‌ இங்கு சொல்லப்பட்ட தேவர்கள்‌ அவர்களாக இருக்க முடியாது.-ஆகையால்‌ பிரகாசிக்கும்படி யானதும்‌ பரமாகாசமென்று புகழ்‌ பெற்‌றதுமான ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும்‌ நித்ய ஸூரிகளே இங்கு சொல்‌லப்படும்‌ தேவர்கள்‌ என்று கொள்ள வேண்டும்‌. (யத்‌ யஜ்ஞம்‌ அதந்வத அஸ்ய) பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு எந்த தியான ரூபமான
யஜ்ஞத்தைச்‌ செய்தார்களோ அந்த யஜ்ஞத்திற்கு. (வஸந்த: ஆஜ்‌யம்‌ ஆஸீத்‌…) வஸந்த ருதுவானது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்‌தாகவும்‌, சரத் ருது புரோடாசம்‌ எனப்படும்‌ ஹவிஸ்ஸாகவும்‌. ஆயிற்று.
இந்த யஜ்ஞம்‌ பரம புருஷனைக்‌ குறித்து ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட தியான ரூபமான யஜ்ஞமாகும்‌. ஸ்ருஷ்டிக்குக்‌ காலம்‌ அவசியமாக வேண்டியபடியால்‌ அது இம் மாதிரி உபகரணங்களாகச்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது. ‘புருஷேணா ஹவிஷா” என்கிற இடத்தில்‌ பிரமன்‌ யாக பசுவாகிற ஹவிஸ்‌ ஆகிறான்‌ என்று சொல்லப்பட்டது. “சரத்‌ஹவி:’ என்ற இடத்தில்‌ சரத்காலம்‌ புரோடாசம்‌. எனப்படும்‌ ஹவிஸ்‌ ஆகிறது என்று சொல்லப்படுகிறது. அரிசியின்‌ மாவினால்‌ செய்யப்‌ பட்டு ஹோமம்‌ பண்ணப்படுகிற அடை புரோடாசம்‌ எனப்படும்‌.-நித்ய ஸரிகள்‌ பிரஹ்மாவை ஸ்ருஷ்டிக்கு. முக்யமான உபகரணமாகவும்‌ காலத்தை ஸஹ காரியாகவும் கொண்டு ப்ரஜா ஸ்ருஷ்டிக்காக பகவானை தியானித்தார்கள்‌ என்று இதன்‌ பொருள்‌. அப்படி அவர்‌கள்‌ செய்ததற்குக்‌ காரணம்‌ பகவந் நியமனமே என்று நாம்‌ ஊஹிக்க வேண்டியிருக்கிறது-இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஸ்ருஷ்டி “பஹுஸ்யாம்‌ ப்ரஜாயேய”[நான்‌ பலவாக ஆகக் கடவேன்‌.] என்ற ஸங்கல்பத்துடன்‌ நிமித்தோபாதான காரணமான நாராயணனால்‌ செய்யப்படும்‌ ஸமஷ்டி ஸ்ருஷ்டி யல்ல. இது வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌ ப்ரஜா ஸ்ருஷ்டியே. இம் மாதிரியான சக்தி நித்யர்களுக்கு உண்டென்பதற்குப்‌ பல ஆதாரங்களிருக்கின்‌றன. விஷ்வக்ஸேனருடைய மந்த்ரத்தில்‌ “விஸ்வ ஸ்ருஜே ” | உலகத்தை ஸ்ருஷ்டிப்பவருக்கு]’ என்‌று சொல்லப்பட்‌டிருக்கிறது. நாரதீயமென்று ப்ரஸித்தமான ஹரி பக்தி ஸுதோதயத்‌தில்‌ ஐந்தாவது அத்யாயத்தில்‌’தே ஹி குர்யுர்‌ யதீச்சந்தி ஐகத் ஸர்க்க லயெள ஸ்வயம்‌”” [நித்ய ஸூரிகள்‌ விரும்பினார்களாகில்‌ ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைத்‌ தாமே செய்வார்கள்‌.] என்று சொல்லப்பட்டிருக்‌ கிறது. ஆளவந்தார்‌ “த்வயா நிஸ்ருஷ்டாத்மப,ரேண”’| உன்னால்‌ வைக்கப்‌பட்ட உபய விபூதி நிர்வாஹ பாரத்தை யுடைய (விஷ்வக்ஸேனரால்‌)]
என்று பகவானை ஸ்தோத்ரம்‌ செய்திருக்கிறார்‌. ஸ்ரீராமாநுஜர்‌,
ஸ்வ ஸங்கல்ப மாத்ரா வக்லுப்த ஐகஜ் ஜென்ம ஸ்திதி த்‌வம்ஸா திகே
ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்‌ தாத்மைஸ்வர்யம்‌”[தன்னுடைய ஸங்கல்பத்தால்‌ கொடுக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை யுடைய ஸ்ரீவிஷ்வக்ஸேனரிடம்‌ – வைக்கப்பட்ட தன்‌னுடைய எல்லா ஐஸ்வர்யங்களையும்‌ உடையவனை] என்று ஸ்ரீவைகுண்ட கத்யத்தில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.-பிரமனாகிற ஜீவனுக்கு இச் சக்தி யிருக்கும் போது அவரைக் காட்டிலும்‌ பல்லாயிரம்‌ மடங்கு பெரியவர்களான நித்யர்களுக்கு இச் சக்தி யிருப்பது அதிசயமல்ல. இந்த யாகத்தினால்‌ பிரமனுக்கு ஸ்ருஷ்டி செய்யும்‌ சக்தி
கிடைக்கிறதென்றும்‌, அந்தப் பிரமனை நிமித்த மாத்ரமாகக் கொண்டு அவர்‌ மூலமாக நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி செய்விக்கிறார்களென்றும்‌ ஏற்படுகிறது. முத்கலோபனிஷத்தில்‌ இதன்‌ பொருள்‌ வேறுவகையாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ ஸம்ருத்‌த,காயஸ்‌ ஸந் ஸ்ருஷ்டி கர்ம ந ஜஜ்ஞிவாந்‌,ஸ: அநிருத்‌த,
நாராயண: தஸ்மை ஸ்ருஷ்டிம்‌ உபாதி;சத்‌:-*ப்‌ரஹ்மந்‌ தவ இந்த்‌ரியாணி
யாஜகாநி த்‌,யாத்வா கோச பூ,தம்‌ த்‌ருட க்‌ரந்திரம்‌ கலேவரம்‌ ஹவிர்‌ த்‌யாத்வாமாம்‌ ஹவிர் புஐம்‌ த்‌யாத்வா வஸந்த காலம்‌ ஆஜ்யம்‌ த்‌யாத்வா க்‌ரீஷ்மம்‌ இத்‌ஃமம்‌ த்‌,யாத்வா சரத்‌,ருதும்‌ ரஸம்‌ த்‌,யாத்வா ஏவம்‌ அக்‌;கெள ஹுத்வா அங்கஃ ஸ்பர்சாத்‌ கலேவர: வஜ்ரம்‌ ஹீஷ்யதே, தத: ஸ்வ கார்யாந் ஸர்வ ப்ராணி ஜீவாந்‌ ஸ்ருஷ்ட்வா பச்வாத்‌யா: ப்ரா துர்ப,விஷ்‌பந்தி, தத:
ஸ்தாவர ஜங்க மாத்மகம்‌ ஜகத்‌ ப,விஷ்‌பதி””
[பெரிய தேகத்தை உடையவரான அப் பிரமன்‌ ஸ்ருஷ்டியை அறியவில்லை. அந்த அநிருத்த நாராயணன்‌ அவருக்கு ஸ்ருஷ்டியை உபதேசித்தார்‌:– *பிரமனே! உன்னுடைய இந்திரியங்களை யாகம்‌ செய்பவர்களாகவும்‌, சரீரத்தை ஹவிஸ்ஸாகவும்‌, என்னை அந்த
ஹவிஸ்ஸை உண்பவனாகவும்‌, வஸந்த காலத்தை நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருதுவை ஸமித்தாகவும்‌, சரத் ருதுவை(ஹோமம்‌ செய்யப்படும்‌)ஷட்ரஸமாகவும்‌ தியானித்து, இம் மாதிரியாக அக்னியில்‌ ஹோமம்‌ செய்து, அதன்‌ ஸ்பர்சத்தினால்‌ (உன்னுடைய) சரீரம்‌ வஜ்ரம் போல்‌(ஸ்ருஷ்டி செய்ய ஸமர்த்தமானதாக) ஆகி விடும்‌. பிறகு தங்களிடமிருந்து உண்டாகும்‌ ஸா்வ ப்ராணிகளையும்‌ உண்டாக்கிக் கொண்டு பசு முதலியவை. உண்டாகப் போகின்றன. அதன்‌ பிறகு ஸ்தாவர ஜங்கமங்களடங்கிய ஜகத்‌ உண்டாகும்‌’”]=இதிலிருந்து பிரமன்‌ ஸ்ருஷ்டி செய்ய ஞானமும்‌, சக்தியுமில்லாமல்‌ திகைத்ததாகவும்‌
பகவான்‌ ஸ்ருஷ்டி செய்ய வழியை உபதேசித்ததாகவும்‌ அறிகிறோம்‌.
“*மஹாதே,வஸ்‌ ஸர்வமேதே, மஹாத்மா ஹுத்வாத்மாநம்‌ தேவதேவோ
பபூவ” [மஹாத்மாவான மஹா தேவர்‌ (சிவன்‌) ஸா்‌வமேத யாகத்தில்‌தன்னை ஹோமம்‌ செய்து தேவர்களுக்கெல்லாம்‌ தேவரானார்‌.]என்பது போல்‌ பிரமனும்‌ பகவானைக் குறித்து ஆத்ம ஸமர்ப்பணமாகிற யாகத்‌தைச்‌ செய்து ஸ்ருஷ்டி சக்தியை அடைந்தார்‌ என்று ஏற்படுகிறது.

————

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.
இந்த யஜ்ஞத்துக்கு ஏழு வஸ்துக்கள்‌ பரிதிகளாக ஆயின. இருபத்‌தொரு வஸ்துக்கள்‌ ஸமித்துக்களாகச்‌ செய்யப்பட்டன. யஜ்ஞத்தைச்‌ செய்யும்‌ தேவர்கள்‌ நான்முகனாகிற. புருஷ (ஹோமம்‌ செய்யப்‌ படும்‌) பசுவாகக்‌ கட்டினார்கள்‌. யாகம்‌ செய்யும்‌ போது அக்னிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளிலும்‌, உத்தர வேதிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளலும்‌ ஆறுதண்டங்‌கள்‌ (பலாசம்‌ முதலிய மரங்களின்‌ கொம்புகள்‌) வைக்கப்படுகின்றன. கிழக்கு திக்கில்‌ ஸூர்யனைச்‌ சேர்த்து ஏழு பரிதிகளாகக்‌ கணக்கிடப்‌படுகின்றன. இந்த ஸ்ருஷ்டி யஜ்ஞத்திலும்‌ ஏழு பரிதிகள்‌ ஏற்பட்டன என்று சொல்லப்படுகிறது. அவையாவன:.ப்ருதிவீ, ஜலம்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனப்படும்‌ ஐந்து பூதங்களும்‌, அஹங்காரமும்‌ மஹானும்‌. (த்ரிஸ்‌…க்ருதா🙂 இங்கு இருபத்தொரு ஸமித்துக்கள்‌
அக்னியில்‌ ஹோமம்‌. செய்வதற்காகக்‌ கல்பிக்கப்பட்டன. அவையாவன–ப்ருதிவீ முதலிய ஐந்து பூதங்கள்‌; இவைகளுக்கு முறையே காரணமான கந்த தன்மாத்ரை, ரஸ தன்மாத்ரை, ரூப தன்மாத்ரை, ஸ்பர்ஸ தன்மாத்ரை, சப்த தன்மாத்ரை எனப்படும்‌ ஐந்து தன்மாத்ரைகள்‌; கண்‌, காது, நாக்கு, மூக்கு, தோல்‌ எனப்படும்‌ ஐந்து ஞானேந்‌திரியங்கள்‌. வாய்‌, கால்‌, கை, ஆண்‌ பெண்‌ குறிகள்‌, ஆஸனவாய்‌ எனப்படும்‌ ஐந்து கர்மேந்திரியங்கள்‌; மனஸ்‌. ஆக இந்த இருபத்‌தொரு தத்வங்களும்‌ ஸமித்துக்களாகக்‌ கல்பிக்கப்பட்டன. ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதற்கு இவைகள்‌ உபகரணங்களாகையால்‌ ஸ்ருஷ்டி யஜ்ஞத்திற்கு ஸாம க்ரிகளாகச்‌. சொல்லப்படுகின்றன. (தேவா… பசும்‌) “இப்படி யஜ்ஞம்‌ செய்பவர்களான நித்ய ஸூரிகள்‌ யஜ்ஞத்‌தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவான பிரமனை ப்ரக்ருதியாகியயூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌. அடுத்த மந்தர த்தில்‌ “படர்ஹிஷி :பஜ்ஞம்‌ ப்ரெளக்ஷந்‌” [மூல ப்ரக்ருதியிலுள்ள பிர மனை ப்ரோக்ஷித்தார்கள்‌ ] என்று வருவதால்‌ இங்கு மூல ப்ரக்ருதியாகிய யூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌ என்றே கொள்ள வேண்டும்‌.

————

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-
[முதலில்‌ உண்டானவனும்‌ யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌. செய்யப் படுபவனும்‌,மூல ப்ரக்ருதியில்‌ உட்ப்பட்டவனுமான பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. ஸாத்யர்களென்று சொல்லப்படும்‌ நித்யஸூரிகளும்‌, ரிஷிகளும்‌ (முக்தர்களும்‌) அப்பசுவைக் கொண்டு யஜ்ஞம்‌ செய்‌தனர்‌.] (தம்‌ யஜ்ஞம்‌) யஜ்ஞநத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படுபவனான அப்‌
பிரமனை. (பர்ஹிஷி) ‘பர்ஹி:‘ என்னும்‌ பெயரை யுடைய மூல ப்ரக்ருதியில்‌ முன் சொன்னபடி கட்டி. (ப்ரெளக்ஷந்‌) ப்ரோக்ஷணம்‌ என்னும்‌ ஸம்ஸ்காரத்தைச்‌ செய்தார்கள்‌. (புருஷம்‌ ஜாதம்‌ அக்ரத:) முன்னால்‌ பிறந்தவனான அந்தப்‌ பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. “ப்‌, ரஹ்மா: தேஃவாநாம்‌ ப்ரதமஸ்‌ ஸம்பஃபூ,வ”” [பிரமன்‌ தேவர்களுள்‌ முதலில்‌ உண்டானான்‌] என்று முண்டக உபனிஷத்தில்‌ சொல் லியிருக்‌கிறபடியால்‌ இங்கு சொல்லப்படும்‌ ‘புருஷன்‌’ பிரமனே என்று நிச்ச யிக்கப்படுகிறது. (தேந அயஜந்த) அப் பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு யாகம்‌ செய்தார்கள்‌. ஒரு த்ரவ்யத்தை ஓரு தேவதையை உத்தேசித்‌துக்‌ கொடுப்பது யாகமெனப்படுகிறது. இங்கு நான்முகனாகிய
ஹவிஸ்ஸை அநிருத்த நாராயணனகிய அக்நியில்‌ ஹோமம் செய்வதாகிய யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌ என்று தாத்பர்யம்‌. எவர்‌ இம்‌ மாதிரி யாகம்‌ செய்தார்களெனில்‌: (ஸாத்யா தேவா;) ஸாத்யர்களென்று ப்ரஸித்தரான நித்யஸூரிகளே இப்படி யாகம்‌ செய்தவர்‌
என்று சொல்லப்படுகிறது. இப்புருஷஸூக்தத்தின்‌ பூர்வானுவாகத்தில்‌ கடைசி மந்திரத்தில்‌ “யத்ர. பூர்வே ஸாத்‌,யாஸ்‌ ஸந்திதேஃவா:”” [எந்தப்‌ பரமபதத்தில்‌ பழைமையானவர்களும்‌ ஸாத்யர்கள்‌என்று சொல்லப்படுபவர்களுமான தேவர்கள்‌ இருக்கிறார்களோ… ]என்று சொல்லப்பட்டதால்‌ இங்கு சொல்லப்படும்‌ தேவர்கள்‌ பிறப்‌பற்றவர்களான நித்ய ஸூரிகளே என்று நிஸ் ஸந்தேஹமாக நிர்ணயிக்கப்படுகிறது. (ருஷயச்சயே) முக்தர்களும்‌ இந்த யஜ்ஞத்தில்‌ கலந்து கொண்டார்கள்‌ என்று சொல்லப்படுகிறது. பிரமனுக்கு ஸ்ருஷ்டி சக்தி கிடைத்த பின்பு ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களான அத்ரி, பிருகு, வஸிஷ்டர்‌ முதலிய ரிஷிகள்‌ இங்கு சொல்லப்படும்‌ ரிஷிகளாக ஆக முடியாது. ஆகையால்‌ முக்தர்களே இங்கு சொல்லப்படுபவர்‌கள்‌. புஷோத்தமனை த்யானம்‌ பண்ணுவதையே தங்களுக்கு உண்‌ணும்‌ சோறும்‌, பருகும்‌ நீரும்‌, தின்னும்‌ வெற்றிலையுமாகக்‌ கொண்‌டிருக்கும்‌ முக்தர்களை ரிஷிகள்‌ என்று சொல்லத் தட்டில்லை.

———–

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-
[ எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து, தயிருடன்‌ கூடிய நெய்‌ (ஜகத் காரண பூதமான வீர்யம்‌) உண்டாயிற்று. அந்த நான்முகன்‌ வாயு மார்க்கத்தில்‌ ஸஞ்சரிக்கும்‌ பக்ஷி களையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ ம்ருகங்களையும்‌, கிராமத்திலிருக்கிற
மிருகங்களையும்‌ படைத்தனன்‌.] “தஸ்மாதி,தி ச மந்த்ரேண ஜகத் ஸ்ருஷ்டிஸ்‌ ஸமீரிதா”'[*தஸ்மாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஜகத் ஸ்ருஷ்டியானது சொல்‌லப்பட்டது.|] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப்பட்டது. “ச’காரத்தினால்‌ இது முதல்‌ ஏழு மந்த்ரங்களில்‌ ஜகத் ஸ்ருஷ்டி சொல்‌லப் படுகிறதென்று அறியப்படுகிறது. (ஸர்வஹுத: தஸ்மாத் யஜ்‌ஞாத்‌) தன்னை யுள்ளிட்ட எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்விக்கப்‌பட்ட அப் பிரமனிடமிருந்து. நித்ய ஸூரிகளால்‌ பகவானிடம்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ செய்விக்கப்பட்ட அந்த நான்முகனிடமிருந்து.(ப்ருஷதாஜ்யம்‌ ஸ்ம்ப்‌ருதம்‌) தயிருடன்‌ கூடிய நெய்‌ உண்டாயிற்று.-இங்கு ‘ப்ருஷதாஜ்யம்‌’ என்று ஜகத்‌ ஸ்ருஷ்டிக்குக்‌ காரணமான
வீர்யம்‌ சொல்லப்படுகிறது, (பரூம்ஸ்தாந்‌…) வாயு ஸஞ்சரிக்கும்‌படியான ஆகாசத்தில்‌ பறக்கும்‌ பக்ஷிகளையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ புலி, கரடி முதலிய ப்ராணிகளையும்‌, கிராமங்களில்‌ திரியும்‌ பூனை முதலிய ப்ராணிகளையும்‌ அந்த நான்முகன்‌ ஸ்ருஷ்டித்தார்‌.

————

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-
[எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து ருக் வேதங்களும்‌, ஸாம வேதங்களும்‌ உண்டாயின. அந்த நான்முகனிடமிருந்து சந்தஸ்ஸுக்கள்‌ உண்டாயின; யஜுர் வேதமும்‌ அவனிடமிருந்து உண்டாயிற்று.] ்‌
பிரமனுடமிருந்து ருக் யஜுஸ் ஸாம வேதங்களும்‌, க௱யத்ரி முதலிய சந்தஸ்ஸுக்களும்‌ உண்டாயின வென்று சொல்லப்படுகிறது.
யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ச்ச ப்‌ரஹிணோதி தஸ்மை”[எந்தப்‌ பரமாத்மாவானவர்‌ ஸ்ருஷ்டி காலத்தில்‌ பிரமனைப்‌ படைத்துஅவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறாரோ…] என்று சொல்லப்‌ பட்டிருக்கிறபடியால்‌ பரம புருஷனிடமிருந்து உபதேதசம் பெற்று வேதங்களை வேதன்‌ (பிரமன்‌) வெளிப்படுத்தினா்‌ என்றே கொள்ள வேண்டும்‌. “தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூ,தஸ்ய நிச்வஸிதம்‌ ஏதத்‌, ருக்‌, வேதோ யஜுர்வேதஸ்‌ ஸாமவேதே…”” (ருக்‌ யஜுஸ்‌ ஸாமம்‌ முதலிய வேதங்களெல்லாம்‌ பரமாத்மாவினுடைய மூச்சுக் காற்றுகள்‌.] என்று மஹா புருஷனுடைய மூச்சுக் காற்றாகச்‌ சொல்லப்பட்ட அபெளருஷேயமான வேதங்களைப்‌ பிரமன்‌ பிரகாசப் படுத்தினான்‌ என்று ஏற்படுகிறது.

———–

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:--11-
[அந்த நான்முகனிடமிருந்து குதிரைகளும்‌, ஒரு பக்கத்தில்‌ பற்களையுடைய எருமை முதலிய ப்ராணிகளும்‌. இரண்டு பக்கத்தில்‌ பற்களை யுடைய கழுதை முதலியவைகளும்‌ உண்டாயின.-அவரிடமிருந்து பசுக்களும்‌ உண்டாயீன.] (காவோ ஹ…) ஒரு பக்கத்தில்‌ பற்களை யுடைய ம்ருகங்களில்‌ பசுக்களும்‌ அடங்கின போதிலும்‌ அவைகளின்‌ மேன்மையை முன்‌னிட்டு அவை தனியாகச்‌ சொல்லப்படுகின்றன என்று விஷ்ணு
சித்தாசாரியர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌. புருஷோத்தமனுடைய ‘ ஆராதனமாகிய யஜ்ஞத்திற்கு உபயோகப்படும்‌ பால்‌, தயிர்‌, நெப்‌ முதலியவை பசுக்களிடமிருந் தல்லவோ கிடைக்கிறது.

—————

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே.[பிரமனாகிய புருஷனைப்‌ (பசுவாகச்‌) செய்த போது, எவ்வளவு விதமாகக்‌ கல்பித்தார்கள்‌? இந்த ப்ரஹ்மாவினுடைய முகம்‌ எதுவாக ஆயிற்று? கைகள்‌ எவர்களாக ஆயின?துடைகளும்‌ திருவடிகளும்‌
எவர்களாகச்‌ சொல்லப்படுகின்‌றன?] யஜ்ஞத்தைச்‌ செய்பவர்களான ப்ராஹ்மணர்‌ முதலியவர்களின்‌ ஸ்ருஷ்டியை இம் மந்த்ரமும்‌ அடுத்த மந்த்ரமும்‌ சொல்லுகின்‌றன. இந்த ருக்‌ கேள்வியாகவும்‌ அடுத்த ருக்‌- பதிலாகவும்‌ இருக்கின்றன. நித்ய ஸூரிகள்‌ பிரமளைப்‌ பசுவாகக்‌ கல்பித்த போது அவருடைய அவயவங்கள்‌ எத்தனை விதமாகக்‌ கல்பிக்கப்பட்டன வென்றும்‌ எத்‌ தெந்த அவயவங்களினின்றும்‌ எந்தெந்தப்‌ பதார்த்தங்கள்‌ படைக்கப்‌பட்டன வென்றும்‌ கேட்கப் படுகிறது. விசேஷமாக முகம்‌, கைகள்‌, துடைகள்‌, பாதங்கள்‌ இவைகளிலிருந்து எவர்‌ உண்டானார்கள்‌ என்றும்‌ கேட்கப் படுகிறது.

————

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-ப்ராஹ்மணான்‌ இவருடைய முகமானான்‌. கைகள்‌ க்ஷத்ரியனாகச்‌ செய்யப்பட்டன. அப்பொழுது துடைகள்‌ வைச்யனாக ஆயின. திருவடிகளிலிருந்து சூத்ரன்‌’ உண்டானான்‌. முகம்‌ ப்ராஹ்மணனாக ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. பாதங்களிலிருந்து சூத்ரன்‌ உண்டானான்‌” என்று கடைசியில்‌ சொல்லப்படுகிறபடியால்‌ இங்கும்‌ முகத்திலிருந்து ப்ராஹ்மணன்‌ உண்டானான்‌ என்றே தாத்பர்யம்‌. ப்ராஹ்மணன்‌ அதிகமான ஞானத்‌தை உடையவனாதலால்‌ ஞானேந்த்ரியங்க ளெல்லாவற்றையும்‌ உடையதான முகத்தினின்றும்‌ அவனைப்‌ படைத்‌ தார் . (பாஹூ…க்ருத:) கைகளிலிருந்து க்ஷத்ரியன்‌ உண்டானான்‌.-யுத்தம்‌ செய்வதைத்‌ தொழிலாக உடைய க்ஷத்ரியனுக்குத்‌ தோள்‌ வலிமையும்‌ கை வன்மையும்‌ அவச்யமாதலால்‌ -ப்ரஹ்ம தேவன்‌ அவனைத்‌ தன்‌ கைகளிலிருந்து ஸ்ருஷ்டித்தார்‌. -(ஊரூ…வைச்ய) உழுதலையும்‌ வியாபாரத்தையும்‌ தொழிலாக வுடைய வைச்யனுக்குத்‌ துடை பலம்‌ முக்யமாதலால்‌ நான்முகன்‌ அவளைத்‌ தன்‌ துடைகளிலிருந்து படைத்தார்‌.-(பத்ப்யாம்‌.. ) பாதங்களினின்றும்‌ நான்காவது வர்ணத்தைச்‌ சேர்ந்த சூத்ரன்‌ உண்டானான்‌. முதல்‌ மூன்று வர்‌ணத்தவர்களுடைய ஏவல்களைச்‌ செய்வதே ஸ்வ தர்மமாக வுடைய சூத்ரனுக்குக்‌ கால் வன்மை அவச்யமாதலால்‌ பிர்மன்‌ தன் கால்களிலிருந்து அவனைப்‌ படைத்தார்‌. இதிஹாஸ புராணங்களில்‌ பலவிடங்களில்‌ நாராயணனுடைய முகம்‌, கைகள்‌, துடை, திருவடி முதலியவைகளிலிருந்து நான்கு வர்ணத்தவர்களும்‌ உண்டானதாகச்‌ சொல்லப்பட்டிருக்க – இங்கு நான்முகனின்‌ அவயவங்களிலிருந்து அவர்கள்‌ உண்டானதாகச்‌ சொல்லுவது எப்படிப்‌ பொருந்தும்‌? என்ற ஸந்தேஹம்‌ ஏற்படுகிறது.-பிரமனை சரீரமாகக் கொண்ட புருஷோத்தமனே இப்படிப்‌ படைப்ப தாலும்‌, நான்முகனுடைய அவயவங்கள்‌ நாராயுணனுடைய அவ யவங்களே யாகையாலும்‌ இதில்‌ ஒரு’ விரோதமுமில்லை.-இந்தப்‌ புருஷ ஸூக்தம்‌ முழுவதும்‌, தைத்திரீய ஆரண்யகத்தில் மூன்றாவது ப்ரச்நத்தில்‌ படிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால்‌ நான்கு ஜாதிகளும்‌ ஸ்ருஷ்டி காலத்திலேயே தனித் தனியாகப்‌ படைக்கப்பட்‌டனவென்று வேதத்திலிருந்தே அறிகிறோம்‌. நவீன காலத்தில்‌ சிலர்‌ வேதங்களில்‌ ஜாதி சொல்லப் படவில்லை யென்றும்‌,. புராணாங்களிலேயே ஜாதிப் பிரிவினை சொல்லப் பட்டிருக்கிறதென்றும்‌ கட்டுரைகள்‌ எழுதுவது இதனால்‌ நிராகரிக்கப்பட்ட.து. கீதையிலும்‌ பகவான்‌, “சாதுர் வர்ண்யம்‌ மயா ஸ்ருஷ்டம்‌ குண கர்ம விபாக,ச:’ [குணம்‌, தொழில்‌ முதலியவைகளில்‌ பேதங்களுடன்‌ கூடிய நான்கு வர்ணங்களும்‌ என்னால்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்டன.] என்று அருளிச்‌ செய்திருக்கிறார்‌.-ஜன ஸமூஹத்தினுடைய முக ஸ்தானமாயிருக்கும்‌ ப்ராஹ்மண ஜாதி பிரமனுடைய முகத்தினின்றும்‌ உண்டாயிற்று. முகத்தில்‌ ஞானேந்த்ரியங்களான கண்‌, மூக்கு, நாக்கு, செவி, மெய்‌ (தோல்‌) என்னும்‌ ஐந்தும்‌ இருக்கின்றன. ‘ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயநம்‌ ப்ரதாநம்‌” என்று எல்லா இந்த்ரியங்களிலும்‌ முக்கியமானதாகச்‌ சொல்‌லப்படும்‌ கண்ணினாலேயே படைக்கப்பட்ட எல்லாப்‌ பொருள்களையும்‌ பார்க்கிறோம்‌.-கண்ணால்‌ பார்க்கப்பட்டதே ப்ரத்யக்ஷ ப்ரமாணமாகிறது, படைக்கப்பட்ட பொருள்‌களைப்‌ பார்ப்பதிலிருந்து அவைகளை நியமிக்கும்‌ ஜீவனையும்‌, படைப்பவனான ஈஸ்வரளையும்‌ அறி கிறோம்‌. அம் மாதிரியே ப்ராஹ்மணார்களும்‌ திர்க்க தர்சிகளாகவும்‌,ஜீவாத்ம பரமாத்ம தத்வ ஜ்ஞானிகளாகவும உலகத்திற்குக்‌ கண்‌
போன்றும்‌ விளங்குகிருர்கள்‌. கண்ணிற்கு அடுத்த படியான மேன்மை வாய்ந்தது காது. சப்த ராசியான வேதமும்‌ கர்ண பரம்பரையாகவே வந்தது. ‘பஹுநா ஸ்ருதேந ” என்கிறபடி பலரிடம்‌ கேட்டுப்‌ பரமாத்ம ஜ்ஞானத்தை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது இது.-ரஸனேந்திரியம்‌ ருசிப்பதாகிற ஞானத்தை அறிகிறது. ஞானத்திற்கு ஆதாரமான தேஹத்தைப்‌ போஷிப்பதற்கும்‌ ரஸனேந்திரியம்‌ அவச்‌ யம்‌.. “ஸ்வ தேஹம்‌ ஆத்ஃயம்‌ க,லு தர்ம ஸாதநம்‌”” [ தன்னுடைய தேஹ மல்லவோ தர்மத்திற்கு முதன்மையான ஸாதனம்‌. |என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அச்யுதனுக்கு அளிக்கப்பட்ட ப்ரஸாதங்களை ருசிப்‌பதற்கே ஏற்பட்டது நாக்கு. க்ராணேந்திரியம்‌ (மூக்கு) புருஷோத்தமனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட புஷ்பம்‌, சந்தனம்‌ முதலியவைகளை முகர்வதற்கு ஸாதனமானது. ஸ்வாஸம்‌ விடுவதற்கும்‌ மூக்கு உபயோகமாயிருக்கிறது. தொடுவதினால்‌ ஏற்படும்‌ உணர்ச்சியை அறிவிப்பது த்வக்‌ (தோல்‌) என்னும்‌ இந்த்ரியம்‌,-““உடுத்துக் களைந்த நின்‌ பீதக வாடை உடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக்‌ களைந்தன சூடும்‌ இத் தொண்டர்களோம்‌’என்பது போல்‌ தம்முடைய ஞானேந்த்ரியங்களையெல்லாம்‌ புரு ஷோத்தமன்‌ விஷயத்தில்‌ ஈடுபடுத்துபவர் களாகையால்‌ ப்ராஹ்‌மணர்கள்‌ முகத்தினின்றும்‌ உண்டானார்கள்‌. கர்மேந்த்ரியங்களில்‌ ப்ரதானமான வாயும்‌ முகத்திலிருக்கிறது. இது ப்ராம்ஹணர்களின்‌ வாக்கு வன்மையையும்‌ சாபானுக்ரஹ ஸாமர்த்யத்தையும்‌ காட்டுகிறது. வாயினால்‌ “கடல்‌ சூழ்ந்த மண்ணுலகம்‌ வாழ”’ என்றும்‌, “ஸர்வே ஜநா: ஸுகிநோ ப,வந்து’” என்றும்‌ அச்யுதனால்‌ படைக்கப்பட்ட அவனியிலுள்ளோர்‌ எல்லோரும்‌ ஸுகமாயிருக்க வேண்டுமென்று வாழ்த்துவது ப்ராஹ்மணானுடைய தொழில்‌ என்று உணர்த்தப்படுகிறது.-வேதாத்யயனத்திற்கும்‌ வேதத்தை ஓதுவிப்பதற்கும்‌ யஜ்ஞம்‌ முதலியவைகளைப்‌ பண்ணி வைப்பதற்கும்‌, வாய்‌ உபயோகப்படுவ தாகையால்‌ இவைகள்‌ அவனுடைய தொழில்கள்‌ என்றும்‌ தெரிவிக்‌ கப்படுகின்றன. முகம்‌ புத்தி (மூளை)யையும்‌ தேஜஸ்ஸையும்‌ உடைய தாதலால்‌ ப்ராஹ்மணான்‌ புத்திமானாகவும்‌, ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையவனாஃவும்‌ இருப்பான்‌ என்று தெரிவிக்கப்படுகிறது. ப்ரஹ்ம ஜ்ஞானியாகையால்‌ ப்ராஹ்மணான்‌ எனப்படுகிறான்‌. ராஜாக்‌களுக்கு மந்தரியாகவும்‌ ஆசார்யனாகவும்‌ இருந்து புத்திமதியும்‌ உபதேசமும்‌ செய்பவன்‌ ப்ராஹ்மணன்‌. இவ்வளவு கார்யங்களையும்‌ செய்வதற்கேற்பட்ட ப்ராஹ்மணன்‌ பிரமனின்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. ப்ராஹ்மணர்களுடைய தேஹ குடும்ப ஸம்ரக்ஷணங்‌கள்‌ ராஜாக்களால்‌ நன்கு கவனிக்கப்பட்டு வந்ததால்‌ முன் காலத்தில்‌ அவர்கள்‌ தங்கள்‌ தொழிலை சரியாகச் செய்துவந்தார்கள்‌. ஆசார்‌யர்கள்‌ காலத்தில்‌, ராஜாங்கம்‌ பரதேசிகள்‌ கையில்‌ அகப்பட்ட போதிலும்‌, ப்ராஹ்மணார்கள்‌ உஞ்ச வ்ருத்தி செய்தாவது தங்கள்‌ தொழிலைச்‌ செய்து வந்தார்கள்‌. கவியின்‌ கோலாஹலத்தினாலும்‌, பலவித அஸெளகர்யங்களாலும்‌, இப்போது ப்ராஹ்மணார்கள்‌ தங்கள்‌ தொழிலை விட்டுப்‌ பல தொழில்களிலும்‌ புகும்படி தேரிட்டிருக்கிறது.-சில பாக்யவான்கள்‌ இக் காலத்திலும்‌ வைதிக மார்க்கத்திலிருந்துகொண்டு பணப் பேயாட்படாமல்‌ முறை தவராமல்‌ இருந்து கொண்டு வருகிறார்கள்‌-கர்மேந்த்ரியங்களுள்‌ வலிமை வாய்ந்ததான கையிலிருந்து தோளாண்மை யுடைய க்ஷத்ரியன்‌ பிறந்தான்‌. தேஹம்‌ கையினுடைய பலத்தினாலேயே ரக்ஷிக்கப்படுவது போல்‌ ஜன ஸமூஹமும்‌ க்ஷத்ரியனுடைய தோள்வலியினால்‌ ரஷிக்கப் படுகிறது. ராஜாக்களில்லாவிடில்‌உலகம்‌ அராஜமாகி அழிந்துவிடும்‌. அதனாலேயே அரசனுக்குத்‌ திருமாலின்‌ அம்சம்‌ உள்ளதாகக்‌ கூறப்படுகிறது.எல்லாரும்‌ உண்டு ஜிவிப்பதற்கு அவச்யமான உணவுப்‌ பொருள்களை உண்டாக்குவதையும்‌ பலருக்கு வினியோகிப்பதையும்‌ தொழிலாக வுடைய வைச்யன்‌ துடையிலிருந்து உண்டாக்கப்பட்‌டான்‌. வைஸ்யனுடைய தாளாண்மையினாலேயே வேளாண்மை நடக்கிறதன்றோ. எல்லாருடைய தேஹத்தையும்‌ போஷிப்பது வைஸ்யனுடைய தொழில்‌. இம் மூவர்ணத்தார்க்கும்‌ வேண்டிய உபகரணங்களை ஸம்‌பாதித்துக்‌ கொடுப்பதற்காக ஆடி ஓடித்‌ திரிந்து நடந்து கார்யம்‌ செய்பவனாகையால்‌ சூத்ரன்‌ காலிலிருந்து படைக்கப்பட்டான்‌. கால்‌கள்‌ சரீரத்தைத்‌ தாங்குவது போல்‌ அவன்‌ இம் மூவர்ணத்தாரையும்‌ தாங்குகிறான்‌. காலிலிருத்து உண்டானதால்‌ ஒருவிதமான தாழ்வும்‌ கிடையாது. எம்பெருமானுடைய திருவடிகளே எல்லோருக்கும்‌ வணங்கும்‌ துறையாகும்‌. மற்ற வர்ணத்தார்க்குள்ள நியம நிஷ்டை கள்‌, ஆசார வ்யவஹாரங்கள்‌ முதலிய கஷ்டங்கள்‌ இவர்களுக்குக்‌ கிடையாது. சொன்னதைச்‌ செய்வதில்‌ பாபமும்‌ கிடையாது; பொறுப்‌பும்‌ கிடையாது. அவர்களுக்கு நற்கதியடைவது மிகவும்‌ ஸுலபமாகும்‌, பிறப்பினலேயே அவர்களுக்கு நைச்யமும்‌, அஹங்கார மமகாரமில்லாமையும்‌ ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யர்களும்‌ உயர்ந்த வர்ணத்தார்க்குப்‌ பிறப்பினாலேற்படும்‌ அஹங்கார மமகாரங்கள்‌ அழிய வேண்டுமென்று உபதேசித்திருக்கிறார்கள்‌. “தொழுமினீர்‌ கொடுமின்‌ கொண்மின்‌” என்று அவர்களிடமிருந்து ஞானத்தைப்‌ பெற்றுக் கொள்வதிலும்‌, அவர்களுக்கு ஞானத்தைக்‌ கொடுப்பதிலும்‌ தடையில்லை என்று தொண்டரடிப் பொடி யாழ்வாரும்‌ அருளி யிருக்கிறார்‌. போதனம்‌, ரக்ஷணம்‌, போஷணம்‌, ஸேவகம்‌ என்பவை முறையே நான்கு வர்ணத்தாருக்கும்‌ தொழிலாகும்‌. ஓவ்‌வொருவரும்‌ மற்ற வர்ணத்தார்க்காக உழைக்கிறார்கள்‌. நால்வரும்‌ பகவானுடைய அவயவங்களே. அவர்களுக்குள்‌ ஏற்றத் தாழ்வு கிடையாது. அவர்கள்‌ ஓருவர்க்கொருவர்‌ சண்டையிடுவது சரீரத்தின்‌ அவயவங்கள்‌ ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை யொக்கும்‌, வயிறுடன்‌ மத்த அவயவங்கள்‌ சண்டையிட்ட கதை எல்லோரும் அறிந்ததே -நமது ஸநாதன வைதிக தர்மமாகிற மண்டபத்தைத்‌ தாங்கும்‌ தூண்கள்‌ ஐந்து. நடுத்தூண்‌ ஸ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்கள்‌ மூதலியவையும்‌ அவைகளில்‌ சொல்லப்பட்டிருக்கும்‌ தெய்வங்களின்‌ கோவில்களுமேயாகும்‌. ஜாதி, ஸ்த்ரீகள்‌, சொத்து, சுதந்திரம்‌ ஆகிய நான்கும்‌ மற்ற தூண்களாகும்‌. இவைகளைக்‌ காப்பாற்றுவதே அரசர்களின்‌ கடமை யென்று பாரதத்தில்‌ ராஜ தர்மத்தில்‌ பரக்கப்‌ பேசப் பட்டிருக்கிறது. ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்‌ இவைகளைப் பற்றி ஏற்‌ பட்டிருக்கும்‌ சட்ட திட்டங்களை மாற்ற அரசனுக்காவது, அவனுடைய மந்த்ரிகளுக்காவது, ஜன ப்ரதிநிதி ஸபைக்காவது அதிகாரம்‌ கிடையாதென்பது ஸர்வ ஸித்தமாக ஏற்பட்டிருந்தது. இதை மாற்ற ப்ரயத்னம் செய்த வேன மஹாராஜன்‌ அடைந்த கதியை ஹரி வம்சம்‌ முதலியவைகளில்‌ நன்கு காணலாம்‌. இக்காலத்தில்‌ அந்த நியமத்திற்கு ஏட்டிக்குப்‌ போட்டியாக” மாற்ற முடியாதது ஓன்றும்‌ கிடையாது என்ற கொள்கையைக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.-முன்பு நியமிக்கப்பட்டதெல்லாம்‌ பிசகென்று கொண்டு அவைகளுக்கு தேர்‌ மாறாக ஆக்க வேண்டுமென்று சட்டம்‌ செய்கிறார்கள்‌. கோயில்களேற்பட்ட தத்வத்திற்கு விரோதமாகச்‌ சட்டங்களேற்படுத்தி தெய்வ ஸாந்தநித்யத்தைச்‌ சிதைத்தது தேசமெங்குமறிந்ததே. பிறப்பையும்‌ புத்தியிருப்பதையுமே குற்றமாகக் கொண்டு உத்யோகங்களுக்கு உள்ளே விடாமலும்‌, பாடசாலைகளில்‌ படிக்கவிடாமலும்‌ ப்ராஹ்‌மணர்களை த்வேஷிப்பது எல்லோரும்‌ அறிந்ததே. ப்ராஹ்மணர்‌கள்‌ க்ருஷ்ணணையே கதியாகக்‌ கொண்டவர்கள்‌. க்ருஷ்ணனும்‌ ப்‌ராஹ்மணோ மம தே;வதா””[ப்ராஹ்மணன்‌ என்னுடைய தேவதை]என்று அருளிச் செய்தார்‌. ஆகையால்‌ ப்ராஹ்மண த்வேஷமானது தெய்வ த்வேஷத்திலேயே முடியுமென்று எல்லோரும்‌ பயந்துகொண்டிருந்தோம்‌. அம்மாதிரியே ப்ராஹ்மண த்வேஷத்தில்‌ ஆரம்பித்த ஒரு சாரார்‌ தெய்வ த்வேஷத்திற்குக்‌ கொடி கட்டிக் கொண்டு கதறுகிறார்கள்‌. ஜாதியென்பது அவரவர்‌ கர்மானுகுணமாக பகவந்‌ நியமனப்படி ஏற்பட்டது. சொத்து அவரவர்‌ பண்ணிய புண்யபாபத்தின்‌ பலனேயாகும்‌. :மேலைத் தவத்தளவே யாகுமாம்‌ தான்பெற்ற செல்வம்‌ குலத்தளவே யாகும்‌ குணம்‌’” என்றல்லவோ சொல்லப்பட்‌டிருக்கிறது. ஆங்கிலேயர்களும்‌ பணத்தினாலும்‌ அந்தஸ்தினாலும்‌ பேதம்‌ ஏற்படுத்தி யிருக்கிறார்கள்‌. சமதர்மக் கொள்கை பேசும்‌ ருஷ்ய தேசத்திலும்‌ அதிகாரப் பதவியினால்‌ வித்தியாசங்களிருக்கின்றன. அம்மாதிரியான . வித்தியாசங்கள்‌ இங்கு கிடையா. பேதமென்பது இயற்கையின்‌ சட்டமாகும்‌. அதை ஓழிப்பதென்பது மனிதனால்‌ முடியாத முயற்சியே. ஒரு விதமாக ஓழிக்கப் பார்த்தால்‌. மற்றொரு விதமாக முளைக்கும்‌. பழைய -பேதத்திற்குப்‌ பழகி யிருக்கிறோம்‌.
‘அபேதம்‌” என்பதினாலேற்படும்‌ புது பேதங்கள்‌ படு விஷத்தைக்‌ கக்குமே யொழிய வேறொரு குணமும்‌ காணக் கிடைக்காது. ஸ்த்ரீகள்‌ மனுஷ்ய வர்க்கத்திற்கே தாயாயிருக்கும்‌ தனிப் பெருமையுடையவர்கள்‌; அவர்கள்‌ அதற்காகவே பிறப்பிக்கப்பட்டவர்கள்‌. அதற்கனுகுணமாகவே அவர்களுடைய கல்வியோ, குணமோ, செயலோ இருக்க வேண்டும்‌. அவைகளை அழிக்க முயன்றால்‌ மானிட ஸமூஹமே
முறை கெட்டு நிலை கலங்கி அழிந்து விடும்‌. குடும்பமென்பது இடும்பையாய் விடும்‌, கிருஹமென்பது குட்டிச் சுவராய் விடும்‌. கற்பு நிலையென்பது அழிந்து, கல்யாணமென்பது ஓழிந்து உயிர்வாழ்வகுற்கோர்‌ நோக்கமுமில்லாமல்‌ உலகம்‌ சுடுகாடாய் விடும்‌, ஆண்‌ வார்சு க்ரமம்‌ மாறிப்‌ பெண்மலையாளமாகிவிடும்‌.-சொத்து விஷயத்தைப் பற்றிச்‌ சில உண்மைகள்‌ உரைக்க வேண்டி யிருக்கிறது.உழைப்பின்‌ கூலியில்‌ செலவழித்தது போக மிகுந்ததைச்‌ சேர்த்து வைத்ததே சொத்தாகும்‌. அதை அழிக்க முயற்சித்தார்களாகில்‌
உழைப்பதற்குத்‌ தூண்டுகோலே இல்லாமல்‌ போய்விடும்‌. எல்லோரும்‌ சோம்பேறிகளாகத்‌ திரிவார்கள்‌. சொத்தை அபஹரிக்கச்‌ சட்டம்‌ செய்வது பகல் கொள்ளைக்கு ஸமானமாகும்‌. ஏழைகளுக்கு என்னகதி? என்று நினைக்கலாம்‌. அவர்களுக்கு உழைக்க வேலையும்‌, உண்ண உணவும்‌, உடுக்க. ஆடையும்‌ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியது முற்காலத்திலும்‌ ராஜ தர்மமாகச்‌ சொல்லப்பட்டிருக்‌கிறது. செய்வதற்கு. வழிகளும்‌ சொல்லப்பட்டிருக்கின்‌றன. சொத்து என்னும்‌ தத்வமழிந்தால்‌, கணவன்‌, மனைவி என்னும்‌ ஸம்பந்தமும்‌, தாய்‌, தகப்பன்‌, பின்ளை, பெண்‌ என்னும்‌ ஸம்பந்தமும்‌ அழிந்துவிடும்‌. குடும்பமென்பது உடும்பு பிடித்தவன்‌ கைபோலாகி விடும்‌.-இவைகளெல்லாம்‌. போனால்‌ சுதந்திரமும்‌ பெரும்பாலும்‌ தானாகவே போய்விடும்‌. பேச்சு சுதந்திரம்‌, கார்ய சுதந்திரம்‌, முன்னோர்‌ மொழிந்த முறைப்படி வாழும்‌ சுதந்திரம்‌, மத சுதந்திரம்‌ முதவியவைகளை இழப்போமாகில்‌ நாம்‌ நடை பிணமாகவே கருதப் படுவோம்‌.-உயிர்‌ வாழ்வதற்கு ஓர்‌ நோக்கமும பலனும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.-ஆகையினால்‌ சீர்திருத்தக்காரர்கள்‌ முன்‌ இருப்பதை மாற்றுவதற்கு முன்‌ பின்‌ வரும்‌ கெடுதல்களைப் பற்றி தீர்க்காலோசனை செய்ய வேண்டும்‌.

————-

சந்த்‌ரமா மநஸோ ஜாத:, சக்ஷாஸ்‌. ஸர்யோ அஜாயத
முகாதிந்த்‌ரச்‌ சாக்‌,நிச்ச, ப்ராணாத்‌, வாயுர ஜாயத–14-
[மனத்தில்‌ நின்றும்‌ சந்திரன்‌ ‘உண்டானான்‌. கண்ணிலிருந்து ஸூர்யன்‌ உண்டானான்‌. முகத்திலிருந்து இந்த்ரனும்‌, அக்னியும்‌ ஜனித்தார்கள்‌. ‘ ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌.]-இந்த மந்த்ரத்தில்‌ ஸர்வ லோகோபகாரகமான ஸ்ருஷ்டியைச்‌ சொல்லுகிறது. (சந்த்ரமா…ஜாத:) சந்திரன்‌ மனத்திலிருந்து உண்‌ டானான்‌. ஏன்‌ மனஸ்ஸிலிருந்து சந்திரன்‌ உண்டாக வேணும்‌? மற்ற அங்கங்களிலிருந்து ஏன்‌ உண்டாகக் கூடாது? பிரமனை சரீரமாகக்‌ கொண்ட பகவானுடைய மனஸ்ஸிற்கும்‌, சந்திரனுக்கும்‌ எவ்விதமான ஓற்றுமை இருக்கிறது? உலகிலிருப்பவர்களுடைய மனஸ்ஸிற்கு- ஸந்தோஷத்தைத்‌ தருபவனாதலால்‌ சந்திரன்‌ மனஸ்ஸிலிருந்து படைக்கப்பட்டான்‌. அவன்‌ உலகத்திலுள்ள உயிர்களுக்கும்‌, பயிர்‌களுக்கும்‌ குளிர்ச்சியையும்‌ ஸந்தோஷத்தையும்‌ உண்டாக்குபவன்‌-அவனுடைய கிரணங்களே பயிர்களுக்கு உயிர் கொடுப்பவை. சந்‌திரனில்லா விடில்‌ உலகம்‌ காய்ந்து தீய்ந்து விடும்‌. கேசவனும்‌ குளிர்ந்த சுபமான மனத்தை யுடையவன்‌.-அப்படிப்பட்ட மனத்தினால்‌ எல்லோரும்‌ வாழ்வதற்கு ஸங்கல்பித்து, அத்வேஷத்தை உண்‌டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்த்து ஞானப் பயிரை விருத்தி செய்கிறான்‌.-மேலும்‌ சந்திரன்‌ மனத்திற்கு அதி தேவதையாகவும்‌ இருக்கிறான்‌.-இக் காரணங்களால்‌ சந்திரன்‌ புருஷோத்தமனுடைய மனத்திலிருந்து உண்டானான்‌. (சக்ஷோஸ்‌…)உலகத்திற்குக்‌ கண்ணாயிருப்பவனும்‌, வெளி யிருளை விரட்டுபவனுமான ஸுர்யன்‌ அஞ்ஞானமாகிய இருளைப் போக்குகிற, மண்ணுக்கும்‌ விண்ணுக்கும்‌ கண்ணாகிய கண்ணனுடைய கண்ணிலிருந்து உண்டானான்‌. உலகத்தைப்‌ பார்க்‌கும்படி செய்வது கண்‌. ஸுூர்யனும்‌ பார்ப்பதற்கு ஸாதனமாயிருக்‌கிறான்‌., ஸூர்யன்‌ கண்ணுக்கு அதி தேவதை. கண்ணின்‌ ரோகங்‌கள்‌ ஸூர்ய நமஸ்காரம்‌ செய்வதினால்‌ போக்கப்படுவதாகச்‌ சொல்‌லப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரம்‌ வேதத்திலும்‌ உரைக்கப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரத்திலும்‌ ‘த்‌,யேயஸ் ஸதா ஸவித்ரு மண்‌டல மத்‌,யவர்த்தீ நாராயண:”” என்று சொல்லப்பட்ட, தாமரைக் கண்ணனான நாராயணனே நமஸ்கரிக்கப்படுபவன்‌. ஸூர்யன்‌ தன்‌ கிரணங்‌களால்‌ பாஹ்யாந்தகாரத்தைப்‌ போக்கடித்து, ப்ராணிகளுக்கு உஷ்ணத்தைக் கொடுத்து ஜீவிக்கும்படி செய்கிறான்‌. கேசவனுடைய கண்ணிலிருந்து உண்டாகும்‌ கடாஷத்தினால்‌, ஜிவர்கள்‌ அஜ்ஞானம்‌ நசிக்கப் பெற்று ஞான மடைந்து மோக்ஷம்‌ பெறுகிறார்கள்‌. ஆதித்‌யன்‌ தேஜோ மயமானவன்‌. அச்யுதனும்‌ தேஜோ மயமான தாமரை போன்ற கண்ணை யுடையவன்‌. ”தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட,ரீகமேவ மக்ஷிணீ” [அந்தப்‌ பரமபுருஷனுக்கு ஸூர்யனால்‌ மலரும்‌ தாமரை போன்ற இரு கண்களிருக்கின்றன.] என்றல்லவோ பர ப்ரஹ்ம லக்ஷணம்‌ சொல்லப் பட்டிருக்கிறது. இக் காரணங்களால்‌ பரந் தாமனுடைய கண்களிலிருந்து பாஸ்கரன்‌ உண்டானான்‌.-(முகாத்‌…)முகம்‌ ஆதிபத்யத்தையும்‌ தேஜஸ்ஸையும்‌ காட்டுகிறது. ஆகையால்‌ தேவர்களுக்கு அதிபதியானவனும்‌, தேஜோவானுமாயிருக்கும்‌ இந்‌திரன்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. .-தேஜோ மயமான அக்னியும்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. “அக்‌நி முகா வை தேஃவதா:”” [தேவதைகள்‌ அக்னியை முகமாக உடையவர்கள்‌.] என்கிறபடி தேவர்களுக்கு முகமாயிருக்கும்‌ அக்னி முகத்திலிருந்து உண்டாவது நியாயமே. (ப்ராணாத்‌ வாயுரஜாயத) ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌. ப்ராணன்‌ ஒரு வாயு விசேஷமே. அதிலிருந்து வாயு உண்டாயிற்று.-எல்லோருக்கும்‌ ப்ராணனாயிருக்கும்‌ வாயு ப்ராணனிலிருந்து உண்‌டாவது பொருத்த முடையது. வாயுவில்லாவிடில்‌ ஜீவிக்க முடியாது.-அனுமான்‌ வஜ்ராயுதத்தினால்‌ அடிபட்டபோது வாயு ஸ்தம்பித்ததும்‌ உலகமெல்லாம்‌ திண்டாடினது எல்லோரும்‌ அறிந்ததே. இம்மாதிரியாக உலகத்திற்கு உபகாரகமான வஸ்துக்கள்‌ உண்டாக்கப்பட்டன.

———-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-
15-
[நாபியிலிருந்து ௮ந்‌தரிக்ஷம்‌ உண்டாயிற்று. தலையிலிருந்து ஸ்வர்க்கம்‌ உண்டாயிற்று. பாதங்களினின்றும்‌ பூமி உண்டாயிற்று. திக்குகள்‌ காதிலிருந்து உண்டாயின. அப்படியே லோகங்களை யெல்லாம்‌ பிரமன்‌ படைத்தான்‌.] இதில்‌ உலகங்களுடைய ஸ்ரூஷ்டி சொல்லப்படுகிறது) தேஹத்தின்‌ நடுவிலிருக்கும்‌ நாபியிலிருந்து பூமிக்கும்‌ மேலுலகங்களுக்கும்‌ நடுவிலிருக்கும்‌ அந்தரிக்ஷம்‌ உண்டாயிற்று.(சீர்ஷ்ணோ…) மேலேயிருக்கும்‌ தலையிலிருந்து மேலேழுலோகங்‌களும்‌ உண்டாயின. இங்கு “த்‌யெள:” என்னும் பதம்‌ மேலேழு உலகங்களையும்‌ உணர்த்துகிறது. (பத்ப்யாம்‌ பூமி🙂 பாதங்களி லிருந்து பூமி உண்டாயிற்று. திருவடிகளிலிருந்து: பிறந்ததா லன்றோ ‘பொருவில்‌ சீர்ப்பூமி” என்று ஆழ்வாரும்‌ புகழ்‌ந்திருக்கிறார்‌. தேஹத்தைத்‌ தாங்குவது திருவடி. எல்லோரையும்‌ தாங்குவதால்‌ தரணியென்று பெயர் பெற்றது பூமி. கேசவ நம்பியைக்‌ கால் பிடிக்‌கும்‌ பேற்றுக்குப் பிறந்தவள்‌ பூமி தேவி.“இடந்திருந்து நின்றனந்து கேழலாய்க்‌ கீழ்ப்புக்கு இடந்திடும்‌ தன்னுள்‌ கரக்கும்‌ உமிழும்‌ தடம்‌ பெரும்‌ தோளாரத்தழுவும்‌ பாரென்னும்‌ மால்‌ செய்கின்ற மால்‌ ஆர்‌ காண்பாரே”[கேழல்‌-வராஹம்‌. இடந்திடும்‌-கு த்தி எடுக்கும்‌. தன்னுள்‌ கரக்கும்‌- ‘தன்‌ வயிற்றினுள்ளே மறைத்து வைக்கும்‌. பார்‌-பூமி. மால்‌-திருமால்‌-அன்பு.] என்று நம்மாழ்வாரும்‌,“அரவாகிச்‌ சுமத்தியால்‌ அயிலெயிற்றின்‌ ஏந்துதியால்‌ ஒரு வாயின்‌ விழுங்குதியால்‌ ஓரடியால்‌ ஒளித்தியால்‌ திருவான நிலமகளை”?என்று கம்ப நாட்டாழ்வாரும்‌ அருளிச் செய்தபடி பகவானுடைய ஸர்வாவயவங்களாலும்‌, விசேஷமாகத்‌ திருவடியினாலும்‌ தீண்டப் பெற்ற வளன்றோ தரணி. இக் காரணங்களாலும்‌, மண்ணுலகில்‌ மாந்தர்கள்‌ உய்வதற்கு உபாயம்‌ நாராயணனுடைய திருவடிகளே என்று காட்டுவதற்கும்‌ பூமி திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டது. இங்கு பூமி கீழிருக்கும்‌ ஏழுலோகங்களையும்‌ காட்டும்‌. கீழேழுலோகங்களும்‌ திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டன என்று கொள்ள வேண்டும்‌-(திசச்‌ ச்ரோத்ராத்‌) காதுகளினின்றும்‌ திக்குகள்‌ படைக்கப்பட்டன. சப்தத்திற்கு ஆதாரமான திக்குகள்‌ சப்தத்தைக்‌ கேட்கும்‌ இந்த்ரியமான காதிலிருந்து படைக்கப்பட்டன. (தத…) அப்படியே இவ்‌ வண்டத்திலுள்ள மற்ற உலகங்களையும்‌ பரந்தாமனை அந்தர்யாமியாகக் கொண்ட பிரமன்‌ படைத்தான்‌.” அகல்பயந்‌ என்று பன்மை யாகச்‌ சொல்லியிருப்பது சாந்தஸம்‌ என்று கொள்ள வேண்டும்‌; அல்லது பிரமணை உபகரணமாகக் கொண்ட நித்ய ஸூரிகள் படைத்தனர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.

———–

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–
16-
[எல்லா சரீரங்களையும்‌ உண்டு பண்ணி, பெயர்களைக்‌ கொடுத்து அவைகளை உச்சரிததுக்‌ கொண்டிருப்பவரும்‌, ‘விகாரமற்றவரும்‌, ஸூர்யன் போன்‌ற வர்ணத்தை யுடையவரும்‌,ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவரும்‌, (எல்லா விதத்திலும்‌) பெரியவருமான இந்தப்‌ புருஷ, (வேத புருஷனாகிய) நான்‌ அறிகிறேன்‌.
வேத ஹமிதி மந்த்ராப்‌,யாம்‌ வைப,வம்‌ கதிதம்‌ ஹரே:” [“வேதாஹம்‌…” என்னும்‌ இரண்டு மந்த்ரங்களாலும்‌ ஹரியினுடைய வைபவம்‌ வெளியிடப்பட்டது.] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த மந்த்ரமும்‌, அடுத்த ருக்கும்‌, ஹரியின்‌ வைபவத்தைச்‌ சொல்லு
கின்றனவென்று உரைக்கப்பட்டது. வேத புருஷன்‌ மஹா புருஷனின்‌
மஹிமையை மகிழ்ந்துரைக்கும்‌ பாசுரங்களிவை. இந்த மந்திரத்தின்‌ முதலடி ஸ்ரீராமாயணத்தில்‌ **அஹம்வேத்‌மி மஹாத்மாநம்‌ ராமம்‌ ஸத்ய பராக்ரமம்‌” [நான்‌ உண்மையான பராக்ரமத்தை யுடையவனும்‌, மஹாத்மாவுமான ராமனை அறிவேன்‌.] என்ற விச்வாமித்ர வாக்யத்‌தினால்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டது என்‌று பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்‌. பரமகாருணிகரான பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்யானத்தை அனுசரித்து நாம்‌ இங்கு விவரிக்‌கிறோம்‌. ராமாயணத்தில்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டதால்‌ இந்த ஸ்ருதி ராமனாய்‌ அவதாரம் செய்த நாராயணனையே குறிக்கிறது என்‌பது தெளிவாகிறது. இந்த மந்த்ரத்தின்‌ முற்பாதி ஸ்வேதாஸ்வதரத்தி லும்‌ சிறிது வித்தியாசத்துடன்‌ படிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி, ஸ்வேதாஸ்வதரத்தில்‌ சொல்லப்படுபவனும்‌, இங்கு சொல்லப்படுபவனும்‌ ஸ்ரீமந்நாராயணனே என்று ஸித்திக்கிறது. அங்கு வியாக்யானம்‌ செய்த ரங்கராமாநுஜ முனியும்‌,“ப்ரக்ருதே: பரஸ்தாத்‌ ஜ்யோதி: மஹா புருஷம்‌ தமேவ நாராயணம்‌ விதி,த்வா ம்ருத்யு சப்‌,தி,தம்‌ ஸம்ஸாரம்‌ அதிக்ராமதி”‘[ப்ரக்ருதிக்கு மேற்பட்டவனும்‌, ஜ்யோதிர் மயமானவனும்‌, மஹா புருஷனுமான நாராயணனையே அறிந்து “ம்ருத்யு என்று சொல்லப்படும்‌ ஸம்ஸாரத்தைத்‌ தாண்டுகிறான்‌.] என்று பொருளுரைத்திருக்கிறார்‌.(அஹம்‌ வேத) நான்‌ அறிகிறேன்‌. இங்கு நான்‌” என்று சொல்லுபவன்‌ வேதபுருஷன்‌. பரமாத்மாவை அறிவதினாலும்‌, பிறரை அறியச் செய்வதினாலும்‌ வேதமென்றே பெயரும்‌ புகழும்‌ பெற்ற நான்‌ அறிகிறேன்‌. நித்யனான நான்‌ அறிகிறேன்‌. அபெளருஷேயனான நான்‌ அறிகிறேன்‌. ப்ரமம்‌ (தவறாக நினைத்தல்‌), விப்ரலம்பம்‌ (வஞ்‌சனை) முதலிய குறைகளில்லாத நான்‌ அறிகிறேன்‌. *வேதநம்‌”- உபா ஸநம்‌” என்னும்‌ சப்தங்களால்‌ சொல்லப்படுவதும்‌,தைல தாரயைப் போல்‌ இடைவிடாததும்‌ பார்ப்பதற்கு ஸமானமானதுமான பக்தி ரூபமான ஞானமே இங்கு *வேத;” என்று சொல்லப்படுகிறது. வாக்‌யத்தினல்‌ ஏற்படும்‌ அர்த ஜ்ஞானம்‌ மட்டுமல்ல. (வேத) அறிகிறேன்‌. . **ந சஷுஷா க்ருஹ்யதே‘” [பரமாத்மா கண்ணால்‌ காணப்‌படாதவன்‌.] என்றும்‌, **மநஸா து விசுத்‌தேந ”” [சுத்தமான மனத்தாலேயே அறியத் தக்கவன்‌)] என்றும்‌, “என்றேனும்‌ கட் கண்ணால்‌ காணாத அவ் வுருவை நெஞ்சென்னும்‌ உட் கண்ணால்‌ காணும்‌ உணர்ந்து”” என்றும்‌ சொல்லுகிறபடி வேத புருஷன்‌ தன்னுடைய ஞானக் கண்‌ணால்‌ கண்டு சொல்லுகிறான்‌. “நேதி நேதி ”[பரமாத்மா இப்படிப்‌பட்டவன்‌ அல்லன்‌; இப்படிப்பட்டவன்‌ ஓருவனுமில்லை.] என்றும்‌,““க இத்தா வேத; யத்ர ஸ:”” [பரமாத்மா இப்படிப் பட்டவன்‌ என்று யார்‌ அறிவார்‌?] என்றும்‌ ப்ரமாண பூதமான வேதத்திலும்‌ பரம புருஷன்‌ அறிய முடியாதவன்‌ என்று கீர்த்திக்கப் பட்டிருக்கிறது.“ப்‌ரஹ்ம ருத்‌,ரேந்த்‌ர பூதா நாம்‌ மநஸா மப்ய கோசரம்‌”[ப்ரஹ்மா, ருத்ரன்‌, இந்திரன்‌, என்னும்‌ இவர்களுடைய மனத்திற்‌கும்‌ எட்டாதவன்‌ ] என்றும்‌, “நான்முகன்‌ செஞ்சடையான்‌ என்றிவர்கள்‌ எம்பெருமான்‌ தன்மையை யாரறிகிற்பார்‌?”” என்றும்‌ ப்ரமாதாக்களான (அறிவுடையவர்களான) ப்ரஹ்ம ருத்ராதிகளாலும்‌ அச்யுதனை அறிய முடியாதென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. “ஸோ அங்க; வேத; யதி,வா ந வேத”: [(தன்‌ பெருமையை) அவனே அறிவனோ?அறியானோ?]என்றும்‌, “தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை’” என்றும்‌ புருஷோத்தமன்‌ தானும்‌ தன்‌ பெருமையை அறிய மாட்டான்‌ என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அளவுபட்ட ஞானத்தை யுடைய ப்ரஹ்ம ருத்ராதிகள்‌ அறியாதது நியாயமே. *யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌’” “ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச ‘” என்னும்‌ ப்ரமாணங்களை நம்பி ஸார்ஜ்ஞ்யம்‌ கொண்டாடி ஒரு ஆசாரியன் பக்கல்‌ அடி பணிந்து அறியாமையால்‌ அவனும்‌ அறியான்‌. வேதம்‌ அறிந்தபடி எப்படி என்னில்‌: (மஹாந்தம்‌) அளவிட முடியாதவனென்றே அறிந்தது. “அறிந்தன வேதவரும்‌பொருள்‌ நூல்கள்‌ அறிந்தன கொள்க அரும் பொருளாதல்‌’” என்றும்‌, “யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவனுக்கு பரமபுருஷனை (அளவிட்டு) அறிய முடியவில்லையோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்றும்‌ சொல்லியபடி அளவிட முடியாதவன்‌ என்று அறிகையே உள்ளபடி அறிவது. “வேதாஹம்‌’”’ என்பதை ராமாயணத்தில்‌ *அஹம்‌ வேத்மி”என்பது விவரிக்கிறது.-இங்கு ‘வேத’ என்பது அங்கு *வேத்மி‘ என்றும்‌,இங்கு “அஹம்‌’ என்பது அங்கு “அஹம்‌” என்றும்‌ சொல்லப்படுகிறது,(ஏதம்‌ வேத;) இப்படி ப்ரஸித்தமானவனை -அறிகிறேன்‌. ஸர்வ காரண புருஷனாயிருந்தும்‌, மனிசர்க்காகப்‌ படாதன பட்டு என் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்த இவனை அறிகிறேன்‌- அவதார ஸெளலப்‌யத்தைக்‌ காட்டுவது இந்த ஏதச் சப்தம்‌. இங்கு “ஏதம்‌” என்பதை அங்கு :ராமம்‌” என்று அவதார நிர்தேசம்‌: செய்கிறது. (புருஷம்‌)அவன்‌ ஓருவனே புருஷன்‌ எனத் தகுந்தவன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்களே. ஸகல கல்யாண குணங்களாலும்‌ பூர்ணமானவன்‌ புருஷன்‌. இங்கு சொல்லப்படும்‌ செளர்ய வீர்யாதி குணங்கள்‌ ராமாயணத்தில்‌ “ஸத்ய பராக்ரமம்‌” என்று பேசப்படுகின்றன. புரி சேதே”என்ற வ்யுத்பத்தியின்படி வைகுண்டத்தில்‌ ஆதிசேஷன் மேல்‌ பள்ளி கொண்ட புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-(ஏதம்‌ புருஷம்‌)-அங்குஷ்ட்ட மாத்ர: புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம்‌ ஹ்ருதயே ஸந்நிவிஷ்ட:’” [கட்டை விரல்‌ பரிமாணாமுள்ளவனும்‌, அந்தர்யாமியுமான புருஷன்‌ ஜனங்களுடைய ஹ்ருதயத்தில்‌ எப்பொழுதும்‌ இருக்கிறான்‌. ]என்று சொல்லுகிறபடி எல்லா ஜனங்களுடைய ஹ்ருதய புரத்திலும்‌ வசிப்பவன்‌ புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. தேசாந்தரத்‌தில்‌ எட்டியிராமல்‌ அருகில்‌ அந்தர்யாமியாயிருப்பதால்‌ “இந்தப்‌ புருஷன்‌’ என்று சொல்லப்படுகிறான்‌. அவன்‌ பரவஸ்து வாயிற்றே யென்று நாம்‌ பயப்படவேண்டியதில்லை.-அருவருக்கும்படியான தோஷங்களுக்கு இவர்கள்‌ ஓரு கொள்கலமாயிற்றே என்று அவன்‌ அகல நிற்க மாட்டான்‌. அவனிடம்‌ நாம்‌ முறையிடும்போது முன் வருவதற்காக அருகிலேயே அமர்ந்திருப்பவன்‌.-(மஹாந்தம்‌) இதை அனுஸரித்து ஸ்ரீராமாயணத்தில்‌ ‘மஹாத்மானம்‌‘ எனப்படுகிறது.-மிகவும்‌ பெரியவனென்று அறிவேன்‌. *“ஸ உ ச்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந ”” [அந்தப்‌ புருஷோத்தமன்‌ பிறந்த பின்பே பெரியவனாகிறான்‌.] என்று தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காகப்‌ பல அவதாரங்‌கள்‌ செய்த பின்பு அவனைப்‌ பெரியவனென்று அறிகிறேன்‌. எல்லா விதத்திலும்‌ பெரியவன்‌ பரம புருஷன்‌.-(மஹாந்தம்‌) ஸ்வரூபத்தில்‌ பெரியவன்‌ இவன்‌ ஓருவனே. எங்கும்‌ பரந்துளன்‌. (மஹாந்தம்‌) குணங்களில்‌ பெரியவன்‌. கணக்கற்ற கல்யாண குணங்களை யுடையவன்‌. ஓவ்வொரு குணமும்‌ அளவிட முடியாதது. ஆனந்த குணம்‌ ஓன்றை மட்டும்‌ அளவிடப் பார்த்த வேதம்‌ யதோ வாசோ நிவர்த்‌தந்தே” என்று கை விட்டுத்‌ திரும்‌பி வந்ததல்லவோ? எல்லையில்‌ ஞானத்தன்‌’ என்று-ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தபடி அளவற்ற ஞானத்தை யுடையவன்‌; பலத்தில்‌ பெரியவன்‌; ஐஸ்வர்யத்தில்‌ பெரியவன்‌: வீர்யத்தில்‌ விஞ்சியன்‌; சக்தியில்‌ சிறந்தவன்‌; தேஜஸ்ஸில்‌ மிக்கவன்‌: பிறருடைய துக்கத்தைக் கண்டு ஐயோ வென்று இரங்கும்‌ தயையை யுடையவன்‌. அடியார்களின்‌ தோஷத்தை அறியாதவன்‌-தன்னடியார்களின்‌ தோஷங்களை குணங்களாகக்‌. கொள்ளும்படியான வாத்ஸல்யத்தையுடையவன்‌. “செய்தாரேல்‌ நன்று செய்தார்‌” என்றும் அல்லவோ அவன் வார்த்தை-அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோத,நாம்யே தத்‌ வ்ரதம்‌ மம” [(என்னை சரணமடைந்தவனுக்கு) எல்லா பூதங்களிடமிருந்தும்‌ அபயமளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய” விரதம்‌.]என்று சொல்லி ஆபத்தில்‌ அகப்பட்டவர்களை ௮ஞ்சலென்று அளிக்கும்‌ அரிய பெரிய ஸ்வபாவத்தை யுடையவன்‌. பெரிய விரோதிகளையும்‌ புழுப் பூச்சிகளை நசுக்குவது போல்‌ நசுக்க வல்ல பராக்ரமத்தை யுடையவர் ஜயிப்பரோ? தோற்பரோ?” என்னும்‌ ஸந்தேஹம்‌ இவருடைய பராக்ரம விஷயத்தில்‌ கிடையாது. “நாவிஜித்ய நிவர்த்ததே’ என்றும்‌ “சென்று கொன்று வென்றி கொண்ட”” என்றும்‌ சொல்லுகிற படி புறப்பட்டால்‌ ப்ரபல விரோதிகளையும்‌ பராஜயப் படுத்தித்‌ தலையறுத்தல்லது மீளார்‌. (மஹாந்தம்‌) பெருமை யுள்ள சரீரத்தை யுடையவன்‌. “மாசூணாச்‌ சடருடம்பாய்‌’* என்றும்‌, “ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி: மாம்ஸமே தோஸ்தி,ஸம்பவா”” அந்த மஹா புருஷனுக்கு மாம்‌ஸங்களாலும்‌, கொழுப்பினாலும்‌, எலும்புகளாலுமான ப்ராக்ருத சரீரம்‌ கிடையாது. என்றும்‌, “*நித்யம்‌ நித்யாக்ருதிதரம்‌”” [ நித்யமானவனும்‌,நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனும்‌] என்றும்‌ சொல்‌லப்பட்ட நித்ய நிரவத்ய நிரதிசய ஓளஜ்வல்யமுடைய (என்றும்‌”குற்றமற்றதும்‌ ஓப்பற்ற ஓளியை யுடையதுமான) சரீரத்தையுடையவன்‌. எல்லா அண்டங்களிலுமுள்ள ஸகல சேதனாசேதனங்களையும்‌ சரீரமாக உடையவனாதலால்‌ பெரிய சரீரத்தை யுடையவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (மஹாந்தம்‌) பரமாத்மாவாயிருப்பவன்‌. *யஸ்‌மாத்‌ பரம்‌ நாபரமஸ்தி கிஞ்சித்‌‘ [எவனைக் காட்டிலும்‌ பெரிய வஸ்து வேறொன்றும்‌ கிடையாதோ.] என்றும்‌, “ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்ருஸ்யதே” | அவனுக்கு ஸமானமானவனும்‌, மேலானவனும்‌ காணப்‌ படவில்லை.] என்றும்‌, தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வரம்‌, தம்‌ தேவதா நாம்‌ பரமம்‌ ச தைவதம்‌’” [ஈஸ்வரர்களுக்கும்‌ மேலான ஈஸ்வரனும்‌, தேவதைகளுக்கும்‌ மேலான தேவதையுமான அவனை] என்றும்‌, “ஒத்தார்‌ மிக்காரை இலையாப மாமாயா!’ என்றும்‌ சொல்லுகிறபடி தேவாதி தேவனாய்‌, ஆதி மூலமாய்‌, அந்தர்யாமி யாயிருப்பவன்‌.(ஆதித்யவர்ணம்‌) ஸூர்யனைப் போன்ற ஓளியை யுடையவன்‌.-கோடி ஸூர்ய ப்ரகாசத்தையுடைய பரஞ் சோதிக்கு அல்ப ப்ரகாசத்தை யுடைய ஆதித்யனை உபமானமாகச்‌ சொல்லலாமோ? எனில்‌: நாம்‌ கண்ணால்‌ காணும்‌ ஜ்யோதிஸ் ஸுகளுக்குள்‌ ஸூர்யனே மிகுந்த ஓளி யுடையவனாகக்‌ காணப்படுவதால்‌ அவனே உபமானமாகச்‌ சொல்லப் பட்டான்‌. ‘ய ஏஷ அந்தராதித்யே ஹிரண் மய: புருஷ:’” [ஸூர்யனுக்கு நடுவில்‌ ஸுவர்ணம்‌ போன்ற ஓளியை யுடையபுருஷன்‌ ] என்று பரம புருஷன்‌ வர்ணிக்கப்பட்டானன்றோ.-இந்த மஹா புருஷணையே “ஸவிதுர்‌ வரேண்யம்‌’” என்று காயத்ரியில்‌ அனு சந்திக்கிறோம்‌. :மலர் கதிரின்‌ சுடருடம்பாய்‌’” என்று ஆழ்வாரும்‌ அருளினார்‌. வேதங்களும்‌, வைதிக புருஷர்களும்‌ இவனைப் பேசப்‌ புக்கால்‌ ஸூர்யனுக்கு ஓப்பான ஒனியை யுடையவன்‌ என்றே பாசுரமிடுகிறார்கள்‌. (தமஸஸ்து பாரே) தமஸுக்கு அக்கரை யிலிருப்பவன்‌-தமஸ;: பரமோ தாதா சங்க,சக்ர கதா தர’”’ என்று மண்டோதரியால்‌ சொல்லப்பட்ட சக்ர பாணியே இவன்‌. *தம:” என்பது மூலப்ரக்ருதியைக்‌ குறிக்கிறது. ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவன்‌ என்று பொருள்‌. *தம:’ என்பது அஜ்ஞானத்தையும்‌ ஸம்ஸாரத்‌ தையும்‌ குறிக்கும்‌. “ஸோத்‌,வந: பாரமாப்நோதி தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” [அவன்‌ ஸம்ஸாரத்திற்கு அக் கரையை அடைகிறான்‌. அதுவே விஷ்ணுவினுடைய பரம பதம்‌] என்று கடோபனிஷத்தில்‌ சொல்லப்‌ பட்டிருப்பதிலிருந்து இங்கு சொல்லப்பட்டதும்‌ விஷ்ணுவினுடைய பரமபதமே என்று நிஸ் ஸந்தேஹமாக நிச்சயிக்கப்படுகிறது.(ஸர்வாணி…) சேதனர்கள்‌ “லூந பக்ஷ இவாண்ட ஐ:’* என்று சிறகொடிந்த பக்ஷி போல்‌ அசித் ஸமராய்‌, கரண களேபரமற்று போக மோக்ஷ சூந்யராய்‌ இருக்கும்படியான எளிவரவைக் கண்டு தயையுடைய மனஸ்ஸை யுடையவனாய்‌ அவர்கள்‌ தன்னை அடைவதற்காக சரீரங்களைக்‌ கொடுத்து நாம ரூபங்களை ஏற்படுத்தினான்‌. (ஸர்வாணி ரூபாணி விசித்ய) தேவர்‌, மனுஷ்யர்‌, திர்யக்‌ (ஊர்வன) ஸ்தாவரம்‌ எனப்படும்‌ நான்கு விதமான சரீரங்களையும்‌ ஏற்படுத்தி. (நாமாநி க்ருத்வா…) அவர்களுக்கு நாமங்களைக் கொடுத்து அவற்றை உச்சரித்துக் கொண்டு எந்தப் பரமாத்மா இருக்கிறாரோ அவரை அறிவேன்‌. “*அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி””[இவற்றைவியாபித்து நாம ரூபங்களைக்‌ கொடுக்கக் கடவேன்‌] என்று பரமபுருஷன்‌ ஸங்கல்பிப்பதாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறதன்றோ. (தீர)இம் மாதிரியாக இவற்றை வியாபித்து இவற்றுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்த போதிலும்‌ அவற்றின்‌ விகாரங்கள்‌ தன் மேல்‌ படாதபடி இருப்பதால்‌ புருஷோத்தமன்‌ தீர-என்று சொல்லப்படுகிறான்‌.-புத்தியை ரமிக்கச் செய்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.-யத்‌” என்கிற விடத்தில்‌ நபும்ஸகலிங்கம்‌ சாந்தஸம்‌.-இதிலிருந்து உண்மையான தத்வமான வேதம்‌ ஒன்றிருக்கிற தென்று அறிகிறோம்‌. “புருஷம்‌” என்பதிலிருந்து ‘ ப்ரமாத்மாவுக்கு குணங்களிருக்கின்‌றனவென்று. ஏற்படுகிறது. *மஹாந்தம்‌’ என்பதிலிருந்து அவனுக்குக்‌ கீழ்ப்பட்டவர்கள்‌ உளர்‌ என்று உணர்த்தப்‌படுகிறது. “ஆதித்ய வர்ணம்‌” என்பதிலிருந்து அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்‌ என்றும்‌ தெரிவிக்கப்படுகிறது. ‘*தமஸஸ்து பாரே”” என்று அப்ராக்ருதமான திவ்ய தேசத்தில்‌ திகழ்கின்றான்‌ தாமோதரன்‌ என்றும்‌ ஏற்படுகிறது.” அநேக சேதனர்கள்‌ உண்மையாக இருக்கின்றனரென்றும்‌-அவர்களுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்தான்‌ என்பதும்‌ அறியப்படுகிறது.-இவைகளை ஓப்புக் கொண்டால்‌ அத்வைதம்‌ அழிந்து விடும்‌ என்னும்‌ பயத்தினால்‌ வேதம்‌ வாஸ்தவமல்ல வென்றும்‌, புருஷோத்தமனுக்கு ரூபமில்லை, குணமில்லை, ஸ்தானமில்லை என்றும்‌ சேதனாசேதநங்கள்‌ உண்மையல்ல வென்றும்‌, மாயையினால்‌ ஏற்படும்‌ தோற்றமே யென்றும்‌ சொல்லும்‌ மாயா வாதிகளின்‌ மதம்‌ முழுவதும்‌ இங்கு மறுக்கப்பட்டது.

————-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-
[எவரை முன்‌ பிரம தேவர்‌ தியானித்தாரோ, பரமாத்ம ஜ்ஞானியான இந்திரன்‌ எவரை உபாஸித்தானோ, எட்டு திக் பாலகர்களும்‌ (ருஷிகளும்‌) எவரை தியானம்‌ செய்தனரோ அந்தப் பரம புருஷனை இம் மாதிரியாக அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே முக்தி யடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை.] வேத புருஷன்‌ தன்னைத் தவிர மற்றும்‌ சிலரும்‌ இந்த மஹா புருஷனை அறிந்துள்ளார்களென்று வெளியிட்டு அவனை இம் மாதிரி அறிவதே மோக்ஷோபாயம்‌ என்று நிர்ணயிக்கிறான்‌. (ததா…) முதலில்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிரமன்‌ மஹா புருஷனை தியானித்தார்‌ என்று சொல்லப்படுகிறது. ஸ்ருஷ்டிக்கு முன்‌ ஸ்ருஷ்டி செய்ய வழி தெரியாத நான்முகன்‌ பகவானை நோக்கி தியானம்‌ செய்தாரென்று இதிலிருந்து ஏற்படுகிறது.
“யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்‌ய பத்‌ம பூ , புநஸ்‌ த்ரைலோக்ய தாத்ருத்வம்‌ ப்ராப்தவாநிதி சுச்ரும:”[பிரமன்‌ ஆயிரங் கோடி யுகங்கள்‌ விஷ்ணுவை ஆராதித்து, அடுத்த கல்பத்திலும்‌ ப்ரஹ்ம பட்டத்தை அடைந்தான்‌ என்று கேள்விப் படுகிறோம்‌.] என்று சொல்லப்பட்டபடி தன்‌ பதவிக்காகச்‌ சென்ற கல்பத்தில்‌ பிரமன்‌ புருஷோத்தமனைத்‌ தியானித்தார்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (சக்ர:…) நூறு அச்வமேத யாகங்கள்‌ செய்து பகவானை ஆராதித்து இந்திரப் பதவியை அடைந்தான்‌ இந்திரன்‌-அடுத்த மன்வந்தரத்தில்‌ இந்திரப் பதவியை அடையப் போகும்‌ மஹா பலியும்‌ அம்மாதிரியே பகவானை உபாஸித்திருக்கிறார்‌. (ப்ரதிச:…) ‘சதஸ்ர:’ என்று கிழக்கு முதலிய நான்கு திக்குகளும்‌ ப்ர திச:என்று தென் கிழக்கு முதலிய விதிக்குகளும்‌ சொல்லப்படுகின்‌றன. இந்த எட்டுத்‌ திக்குகளுக்கும்‌ பாலகர்களும்‌, இந்த திக்குகளிலுள்‌ள ரிஷிகளும்‌ இப் பதங்களால்‌ உணர்த்தப்படுகின்றனர்‌.-அவர்களும்‌ புருஷோத்தமனை உபாஸிக்கிறார்களென்று ஏற்படுகிறது. ஈசான்ய திக்கிற்கு அதிபதியும்‌ அங்கு வாஸம்‌ செய்பவருமான சிவனும்‌ இந்தப்‌ பரம புருஷணையே உபாஸனை செய்கிறார்‌ என்றும்‌ ஏற்படுகிறது.

நம்மாழ்வாரும்‌ இதையே, “கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்து ஏத்துவரே”-[வெள்ளேறன்‌–வெளுத்த காளையை வாஹனமாகவுடைய சிவன்‌.-புள்ளூர்தி–கருட வாஹனன்‌.] என்று அருளிச் செய்தார்‌. அத்ரி, ப்ருகு, காச்யபர்‌, கர்தமர்‌, தக்ஷர்‌, வஸிஷ்டர்‌, நாரதர்‌, வால்மீகி, பராசரர்‌, வியாஸர்‌, சுகர்‌, செளநகர்‌, யாஜ்ஞவல்க்யர்‌ முதலிய ரிஷிகளும்‌ இந்த இருடீகேசனையே ஏத்துகிறார்கள்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. (தம்‌) இப்படிப்பட்ட ப்ரஸித்தமான பரமாத்மாவான நாராயணனை. (ஏவம்‌ வித்வாந்‌) இம் மாதிரியாக அறிபவன்‌. ஸர்வ காரண பூத னென்றும்‌, ஸர்வ ரக்ஷகனென்றும்‌, ஸமஸ்த கல்யாண குணாத்மகனென்றும்‌, ஸ்ரீவைகுண்ட வாஸனென்றும்‌, அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹ முடையவனென்றும்‌, சேதனர்களுக்கு நாம ரூபங்‌களையும்‌, கரண களேபரங்களையும்‌ கொடுப்பவனென்றும்‌, பிரமன்‌, ருத்ரன்‌, இந்திரன்‌, முதலியவர்களால்‌ பூஜிக்கப் படுபவனென்றும்‌ அறிபவன்‌. இங்கு ‘அறிவு’ என்பது தியான ரூபமான அறிவையே காட்டுகிறது. (அம்ருத…) * இந்த ஜன்மத்திலேயே பிறப்பிறப்பாகிற ஸம்ஸார ஸாகரத்தைத்‌ தாண்டுகிறான்‌. இந்த உலகத்திலேயே முக்தனுக்கு ஸமானமாக ஆகிறான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (ப்ராரப்த கர்மம்‌ எந்த ஜன்மத்தில்‌ முடிகிறதோ, அந்த ஜன்‌ மத்திலேயே மோக்ஷம்‌. என்பது சாஸ்திரார்த்தமாயிருக்க, “இந்த ஜன்மத்திலேயே’ என்ற்து. எப்படியெனில்‌: ‘ஏதம்‌ புருஷம்‌* என்று அவதாரத்தைக் காட்டுகையால்‌, அவதார ரஹஸ்ய ஜ்ஞாநத்தோடு கூடிய பக்தியாலே இந்த : ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌ என்பது “புநர் ஜந்ம நைதி’” [கீதை] முதலான ப்ரமாணங்களில்‌. உணர்த்தப் பட்டதாகையாலே விரோதமில்லை.)

நம்‌மாழ்வாரும்‌, “பிடித்தேன்‌ பிறவி கெடுத்தேன்‌ பிணி சாரேன்‌”” என்று
பரந்தாமனின்‌ பாதங்களைப்‌ பிடித்தவுடன்‌ பிறப்பு இறப்பு முதலிய ஸகல துக்கங்களும்‌ நீங்குகின்றன என்றல்லவோ அருளினார்‌. நாராயணனை அடி பணிந்து, பல்லாண்டு பாடி, ஆனந்த ஸாகரத்தில்‌ அமிழ்ந்து “அச் சுவை பெறினும்‌ வேண்டேன்‌” என்று சொல்லுபவர்‌களை முக்தர்கள்‌ என்று சொல்லத்‌ தட்டில்லை.-அவர்கள்‌ கலி தன்னைக்‌ கடக்கப்‌ பாய்ந்தவர்களே. (நாந்ய:..) மோக்ஷமடைவதற்கு வேறொரு மார்க்கமும்‌ கிடையாது. “அயநாய* என்றவிடத்தில்‌ பரம பதமடைவதற்கு’ என்று ஸ்வேதாஸ்வதரோபதிஷத் பாஷ்யத்தில்‌ சங்கரர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.-இவ் விடத்தில்‌,“நாயமாத்மா ப்ரவசநேஈ லப்‌ய: ந மேதயா ந ப,ஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தே லப்‌,ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌”[| இந்தப்‌ பரமாத்மா (பக்தி யில்லா) ஸ்ரவண மனன தியானங்களால்‌ அடையத் தக்கவனல்லன்‌: எவனை இப் பரம புருஷன்‌ வரிக்கிறானோ அவனுக்கே தன்‌ ஸ்வரூபத்தைக்‌ காட்டுகிறான்‌.]“ந கர்மணா ந ப்ரஜயா த,நேந த்யாகே,ந ஏகேந அம்ருதத்வ மாநசு:’?[கர்மத்தினாலும்‌, ப்ரஜையினாலும்‌, தனத்தினாலும்‌, மோக்ஷமடைய முடியாது. நீயாஸ வித்யை (சரணாகதி) யினாலேயே (பலர்‌) மோக்ஷ
மடை ந்தனர்‌] என்னும்‌ ஸ்ருதி வாக்யங்கள்‌ அனுஸந்திக்கத் தக்கன. கீதாசார்யனும்‌,
நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா
சக்ய ஏவம் விதே த்‌ரஷ்டும்‌ த்‌ருஷ்டவாநஸி மாம்‌ யதா
ப,க்த்யா த்வத் அந்யயா சக்ய: அஹமேவம்‌ விதோர்‌ஜுந”[அர்ஜுனா! (என்னிடத்தில்‌ பக்தி யற்ற) வேதாத்யயனத்தாலும்‌, தபஸ்ஸுகளாலும்‌, தானத்தினாலும்‌, யாகத்தினாலும்‌, நீ என்னைக்‌கண்டது போல்‌, நான்‌ (எவராலும்‌) காணத் தக்கவனல்லன்‌. அனன்ய ப்ரயோஜனமான பக்தியினாலேயே காணத் தக்கவன்‌.] என்று அருளிச் செய்தாரன்றோ. இந்த மந்த்ரத்தில்‌, பிரமன்‌, இந்திரன்‌ முதலிய பலர்‌ பரமாத்‌மாவை உபாஸிப்பதாகச்‌ சொல்லப் படுவதிலிருந்து ஜீவாத்மாக்கள்‌ பலருண்டென்பது ஸித்திக்கிறது. *தம்‌ ஏவம்‌ வித்‌வாந்‌ என்பதிலிருந்து அறியப் படுபவன்‌, அறிவு, அறிகிறவன்‌ என்னும்‌ மூன்றும்‌ உண்டென்று உணர்த்தப்படுகிறது. “ஏவம்‌” என்பதிலிருந்து மேலே சொன்னபடி ஸமஸ்த கல்யாண குண ஸம்பன்னனென்றும்‌, விக்ரஹ விபூதி விசிஷ்டனென்றும்‌ அறிய வேண்டும்‌ என்று அறிவிக்கப்படுகிறது. ‘விக்ரஹமில்லை; விபூதியில்லை: குணமில்லை’ என்பவருடைய பிடரியைப்‌ பிடித்துப்‌ புறக்கணிக்கிறது இவ்வாக்கியம்‌. “ஏவம்‌ வித்‌வாந் -என்பதை கீதாசார்யன்‌ *ஏவம் விதோ த்ரஷ்டும்‌* [இம் மாதிரி காண்பதற்கு] என்றும்‌, ‘பக்த்யா” என்றும்‌ விவரித்த படியால்‌ இங்கு சொல்லப்படும்‌ அறிவு காண்பதற்கு ஸமானமான பக்தியே என்று ஏற்படுகிறது. ஆகையால்‌ வாக்யார்த்த ஜ்ஞானத்தினால்‌ மோக்ஷமடைய முடியாதென்றும்‌ ஸித்திக்கிறது. “அம்ருதோ பவதி‘ என்பதிலிருந்து ஸம்ஸாரி, முக்தன்‌ என்னும்‌ பேதமுண்டென்றும்‌ தெரிவிக்கப்படுகிறது.

—————–

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18- [நித்ய ஸூரிகள்‌ பிரமனை உபகரணமாகக் கொண்டு ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌. அந்த யஜ்ஞம்‌ முதலிய்‌ தர்மங்‌கள்‌ முக்யங்களாக ஆயின.-இவ் விதமாக அறிபவர்கள்‌ மஹிமை யுடையவர்களாய்‌ பழைமை யானவர்களான நித்ய ஸூ9ரிகள்‌ வாஸம்‌ செய்யும்‌ பரம பதத்தை அடைகிறார்கள்‌.] இந்த மந்த்ரத்தின்‌ பூர்வார்த்தத்தில்‌ இந்த அனுவாகத்தில்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி ப்ரகாரமும்‌ பின்‌ பாதியில்‌ *வேதாஹம்‌”
என்னும்‌ இரண்டு மந்த்ரங்களினால்‌ சொல்லப்பட்ட பகவதுபாஸனமும்‌ அதின்‌ பலமும்‌ சொல்லப் படுகின்‌றன வென்று வித்யாரண்யர்‌.“நாராயணம்‌” என்று ப்ரஸித்தமான புருஷ ஸூக்தத்தின்‌ பூர்வானுவாகம்‌ இந்த ருக்குடன்‌ முடிவடைகிறது. (யஜ்ஜஞேந ..) யஜ்ஞத்‌திற்கு முக்ய ஸாதனமான பிரமனைக் கொண்டு நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தனர்‌. (தாநி…) அது முதல்‌ அந்த யஜ்ஞம்‌ தானம்‌ முதலிய தர்மங்கள்‌ முக்யமானவையாக ஆயின-தர்மார்த்த காம மோக்ஷம்‌ எனப்படும்‌ நான்கு புருஷார்த்‌தங்களுக்கும்‌ ஸாதனமாயிருக்கின்றன. கீதையில்‌,
ஸஹ யஜ்ஷஞை: ப்ரஜாஸ்‌ ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்‌வம்‌ ஏஷ வோஸ் த்விஷ்ட காம துக்‌”(யஜ்ஞங்களுடன்‌ கூட, ப்ரஜைகளை முன்‌ ஸ்ருஷ்டித்து, பகவான்‌ பின் வருமாறு சொன்னார்‌:–இந்த யஜ்ஞத்தைக் கொண்டு வ்ருத்தி யடையுங்கள்‌. இது நீங்கள்‌ விரும்பியதை யெல்லாம்‌ கொடுக்கக்‌ கடவது.] என்று சொல்லப்பட்டது இங்கு அனுஸந்திக்கத்தக்கது.(தேஹ…) இந்த ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தை அறிந்து அர்தத்‌துடன்‌ அனுஸந்திப்பவர்கள்‌, ஸனாதனிகரான ஸாத்யர்களென்னும்‌ பெயரை யுடைய நித்ய ஸூரிகள்‌ வாழும்‌ ஸ்ரீ வைகுண்டத்தை மஹிமை யுடையவர்களாய்‌ அடைகிறார்கள்‌. (நாகம்‌) *நாகஸ்ய ப்ருஷ்டே,” என்று நாராயண வல்லியில்‌ சொல்லப்பட்ட ஸ்ரீ வைகுண்டமே இங்கு சொல்லப்படுகிறது. (மஹிமான….) ஜ்ஞான ஸங்கோச மில்லாதவர்‌களாக அனந்த கருட விஷ்வக்ஸேனாதி களிருக்கும்‌ பரமபதத்தை அடைகிறார்கள்‌.
ஒளிக் கொண்ட சோதியமாய்‌ உடன்‌ கூடுவதென்று கொலோ..? அளிக்கின்ற மாயப் பிரான்‌ அடியார்கள்‌ குழாங்களையே” என்று ஆழ்வாரால்‌ பிரார்த்திக்கப்பட்ட பலத்தைப்‌ பெறுவார்கள்‌. இதிலிருந்து ஸாத்ய தேவர்களென்று சிலர்‌ இருக்கிறார்களென்றும்‌ அவர்கள் இருக்குமிடத்தை யடைவதே மோக்ஷ மென்றும்‌ ஏற்படுகிறது. ஸாத்யர்‌-ப்ராப்யா்‌.

————-

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.[உலகம்‌ ஐலத்தினின்றும்‌ உண்டாயிற்று. பூமியிலுள்ள அன்ன ரஸத்தினால்‌ விருத்தி யடைந்தது. பரம புருஷனிடத்திலிருந்து உண்‌டாயிற்று. புருஷோத்தமன்‌ அதை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. ஆகையால்‌ இவ் வுலகமெல்லாம்‌ மஹா புருஷனுக்கு சேஷமாயிருப்பது என்று முன்னமே அறிந்தேன்‌.]-(அத்ப்யஸ்‌ ஸம்பூத:) உலகம்‌ நீரிலிருந்து உண்டாயிற்று என்று சொல்லப்படுகிறது. மஹோபனிஷத்தில்‌,
அத; புநரேவ நாராயணஸ்‌ ஸோந்யம்‌ காமம்‌ மநஸா த்‌யாயீத
தஸ்ய த்‌யாநாந்தஸ் தஸ்ய லலாடாத்‌ ஸ்வேதோபதத்‌ தா இமாஆப: தத்‌ ஹிரண்மய மண்டம பவத்‌”[பிறகு, நாராயணன்‌ மற்றொரு ஸங்கல்பத்தை மனத்தினால்‌ செய்தார்‌:ஸங்கல்பம்‌ செய்தவுடன்‌ அவருடைய நெற்றியிலிருந்து வேர்வை விழுந்தது. அதுவே இங்கு காணப்படும்‌ தண்ணீர்‌. அதில்‌ ஹிரண்‌ மயமான அண்டம்‌ உண்டாயிற்று.] என்று சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப்படுகிறது. இதுவே அப ஏவ ஸஸர்ஜாதெள…ததண்ட,மபவத்‌ ஹைமம்‌’ [நாராயணன்‌ தண்ணீரை முதலில்‌ படைத்தான்‌. அதில்‌ பொன்மயமான அண்ட முண்டாயிற்று.] என்று மனு ஸ்ம்ருதியிலும்‌ உரைக்கப்பட்டது. ஆழ்வாரும்‌ ‘“தானோர்‌ பெருநீர்‌ தன்னுள்ளே தோற்றி’” என்று அருளிச் செய்தார்‌. (ப்ருதிவ்யை ரஸாச்ச ஸம்பூத:) பூமியிலிருந்து உண்டான அன்ன ரஸங்களினால்‌ வ்ருத்தி யடைந்தது.(விஸ்வ கர்மண:…) பரமாத்மாவினிடமிருந்து இவை உண்டாயின.ஜலத்திலிருந்தும்‌ பூமியிலிருந்தும்‌ தானாகவே உண்டாக வில்லை என்று உணர்த்துவதற்காக உலகத்தை உண்டாக்கிய உத்தமனால்‌ கர்மானுகுணமாக உயர்வு தாழ்வுகளுடன்‌ உண்டாக்கப்பட்டன வென்று உரைக்கப்படுகிறது. மஹோபனிஷத்தை அனுஸரித்து, இங்கு சொல்லப்படும்‌ ‘விஸ்வகர்மா’ முதலிய சப்தங்கள்‌ நாராயணனையே குறிக்கின்றன வென்று அறிகிறோம்‌. (தஸ்ய…) ஸர்வேஸ்வரன்‌ அந்த உலகத்தை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. தாதா நாராயண:’ என்றல்லவோ ஸுபாலோபனிஷத்தில்‌ இம் மஹாபுருஷன்‌ கீர்த்திக்கப் பட்டான்‌. (தத் புருஷஸ்ய விச்வம்‌) ஆகையினால்‌ இவ்வுலகம்‌ புருஷனுடையதே. உலகம்‌ உடமை. உடையவன்‌ புருஷோத்‌தமன்‌. ‘க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம்‌ விஸ்வம்‌ சராசரம்‌” [சராசரமான ஜீவராசிகளெல்லாம்‌ க்ருஷ்ணனுடையதன்றோ?] என்னும்‌ ஸ்ம்ருதி வசனம்‌ இந்த ஸ்ருதியை விவரிக்கிறது. (ஆஜாநம்‌ அக்ரே) “பகவானுக்கு சேஷ பூதமானது இவ் வுலகம்‌ என்பதை நான்‌ முன்‌னமே அறிந்தேன்‌’ என்று வேத புருஷன்‌ வெளியிடுகிறான்‌. பகவான்‌ உலகத்தை உண்டாக்கி, தரித்து, வியாபிப்பதாகச்‌ சொல்லுகிற படியாலும்‌ உலகத்தை உடையவன்‌ என்று உரைக்கிறபடியாலும்‌ விசிஷ்டாத்வைத வேதாந்தமே வேதத்தின்‌ உட்பொருள்‌ என்பது நன்கு விளங்குகிறது.

——–

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-
“அண்டக்குலத்துக்கதிபதியாகி, அண்டத்திற்கு அப் புறத்திலுள்ள சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்தில்‌ கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன்‌ எழுந்தருளி யிருக்கும்‌ இந்த மஹாபுருஷனை நான்‌ அறிகிறேன்‌? அவனே உபாயமும்‌, உபேயமும்‌ என்று அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு மார்க்கமில்லை’ என்னும்‌ இந்த ரஹஸ்யார்த்தத்தை வேதம்‌ ஆதராதி சயத்தினால்‌ மறுபடியும்‌ உத்கோஷிக்கிறது. இதன்‌ பொருள்‌ பூர்வானுவாகத்தில்‌ விசேஷமாக விவரிக்கப்பட்டது. பூர்வானுவாகத்தில்‌
16-வது மந்த்ரத்தின்‌ முற்பாதியும்‌, 17-வது மந்த்ரத்தின்‌ பிற்‌பாதியும்‌ காண்க.

———-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-(பரம புருஷன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாய்‌ ஸஞ்சரிக்கிறான்‌. உத்‌பத்தி யில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌.அவனுடைய அவதாரங்களை தீரர்களே அறிகிறார்கள்‌. (அவர்கள்‌) பரம புருஷன்‌ வாழும்‌ நித்ய ஸூரிகளின்‌ நாட்டை விரும்புகிறார்கள்‌.]**ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி,” என்று பூர்‌வானுவாகத்தில்‌ சொல்லப்பட்ட அவதார வைபவம்‌ இங்கு அனுபவிக்கப் படுகிறது.-“விஷயஸ்‌-பாதி பூமித்வாத்‌ ஜ்ஞாந தெ,ஃளஷ்கர்ய சங்கிநாம்‌ அவதாரேண ஸெளலப்யம்‌ த்ரிஷ்டு போக்தம்‌ த்ருதீயயா”[ பகவத் ஸ்வரூபமானது அறிவிற் கெட்டாத படியால்‌, அவளை அறிய முடியாது என்று ஸந்தேஹிப்பவர்களுக்கு, மூன்றாவது மந்திரத்தில்‌ அவ்தார ஸெளலப்யம்‌ சொல்லப்பட்டது.] என்று மணவாள மா முனிகளின்‌ ப்ரமாணத்திரட்டில்‌ எடுக்கப்பட்டிருக்கும்‌ “நாராயண முனி”
என்பவரின்‌ வியாக்யானத்தில்‌ இந்த மந்த்ரார்த்தம்‌ ஸங்க்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறது. முத்தின மந்த்ரத்தில்‌ ப்ரஹ்மத்தை அறிவதினலேயே மோக்ஷம்‌ என்று சொல்லப்பட்டது. இங்கு அவதாரங்கள்‌ பல செய்திருக்கும்‌ ௮ச்யுதனை அறிவது எளிது என்று காட்டப்படுகிறது.(ப்ரஜாபதி:…௮ந்த:) ப்ரஜைகளைக்‌ காப்பாற்றுபவனுன ஸர்வேஸ்வரன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாக ஸஞ்சரிக்கிறான்‌. இந்த வாக்யம்‌ நாராயணவல்லியிலும்‌ காணப் படுகிறது. அதனால்‌ நாராயணனே இங்கு ப்ரஜாபதி சப்தத்தினால்‌ சொல்லப் படுகிறான்‌ என்று நிர்ணயிக்கிறோம்‌. மேலும்‌, ஸர்வ ஜீவர்களையும்‌ காப்பது விஷ்ணுவுக்கே அஸாதாரணமானது. பதிம்‌ விச்வஸ்ய என்று சொல்லப்பட்ட அவனே உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமியாவான்‌.-ஆத்மாவிற்கு நிலைநின்ற புருஷார்த்தமாகிற மோக்ஷத்தை மற்றவர்களால்‌ கொடுக்க இயலாது. நசிக்கக் கூடிய சிற்றின்பப்‌ பலன்களாகிய, அர்த்த காமங்‌களையும்‌, பகவானிடமிருந்து வரம் பெற்றே கொடுக்கிறார்கள்‌-மஹாபாரதத்தில்‌,
ராஜாதி,ராஜஸ்‌ ஸர்வேஷாம்‌ விஷ்ணுர்‌ ப்‌,ரஹ்ம மயோ மஹாஙந்‌ ஈஸ்வரம்‌ தம்‌ விஜாநீம: ஸ பிதா ஸ ப்ரஜாபதி:”'[எல்லா அரசர்களுக்கும்‌ மேலான அரசராயிருப்பவரும்‌, பெரியவரும்‌, ப்ரஹ்ம ஸ்வரூபியுமானவர்‌ விஷ்ணு. அவரை ஈஸ்வரரென்று அறிகிறோம்‌. அவரே (எல்லோருக்கும்‌) தந்‌தை . அவரே ப்ரஜாபதி.]என்று சொல்லப் பட்டபடியால்‌ ப்ரஜாபதி சப்தத்தினால்‌ குறிக்கப்‌ படுபவன்‌ கேசவனே.-:அஸத்‌(இல்லாதவை)திலிருந்து வேறுபட்ட எல்லா வஸ்துக்களுக்கும்‌ ஸ்வாமியாகவும்‌, ரக்ஷகராகவும்‌ இருப்பவர்‌ ப்ரஜாபதி” என்று நாராயணயதி வியாக்யானம்‌ செய்தார்‌. (கர்ப்பே அந்த:சரதி) ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமி யாயிருக்கிறான்‌. இப்படி அந்தர்யாமி யாயிருப்பதற்குக்‌ காரண மென்ன?ப்ரயோஜனமென்ன? துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலனங்கள்‌ காரணமல்ல. இவனுக்குத்‌ தன்னிடம்‌ அத்வேஷத்தை உண்டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்ப்ப,தற்காக அந்தர்யாமி யாமிருக்கிறான்‌ அநந்தன்‌. யோக ஸாக்ஷாத்‌ காரம்‌ கை வந்தவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில்‌ ஸேவை ஸாதிக்கிறான்‌. தினந்தோறும்‌ உறங்கும் போது ஜீவர்களை ஆலிங்கனம் செய்து கொண்டு ஸகல ஸ்ரமங்களையும்‌ போக்குகிறான்‌. ஜன்மம்‌ கழியும்போது மரணாவஸ்தையின்‌ ஸ்ரமத்தைக்‌ குறைக்கிறான்‌. மோக்ஷமடைபவர்‌களான ஜீவாத்மாக்களுக்கு ஸுஷும்னா நாடியைத்‌ தெரியும்படி செய்து அதன் வழியே ப்ரஹ்ம ரந்த்ரத்தை பேதித்துக் கொண்டு போக அனுக்ரஹம்‌ செய்கிறான்‌.-அந்தர்யாமியை அறிவது மிகவும்‌ கடினம்‌. பூகத (பூமிக்குள்‌ இருக்கும்‌) ஜலத்திற்கு ஸமானமானது அந்தர்யாம்யவஸ்தை என்று ஆசாரியர்கள்‌ அருளி யிருக்கிறார்கள்‌. மண்ணைத்‌ தோண்டி யெடுத்து அவசியமானால்‌ பாறையையும்‌ உடைத்து பூமியிலிருக்கும்‌ ஐலத்தைத்‌ தேடிக்‌ கண்டுபிடிக்குமாப் போலே மாம்ஸ சரீரமாகிற மண்ணினால்‌ மறைக்கப்பட்டதும்‌, நெஞ்சாகிற பாறையினால்‌ மூடப்பட்டதுமான அந்தர்யாமியை அறிய முடியாதென்றே பூகத ஜலத்தை உவமை யிட்டார்கள்‌. அம்மாதிரியான அருமை யில்லாமல்‌, எல்லாருடைய
ஊனக் கண்ணுக்கும்‌ இலக்காகும்படியான அவதாரங்களை அடுத்த
படியாக அறிவிக்கிறது. அப்படி அவதாரம்‌ செய்வதற்குக்‌ கர்மம்‌ காரணமன்று. அனுக்ரஹமே காரணம்‌. கிணற்றில்‌ விழுந்த குழந்தையை எடுப்பதற்குத்‌ தாயும்‌ கூடக் குதிக்குமாப் போல்‌ ஸம்‌ஸார ஸாகரத்தில்‌ அமிழ்ந்து அவஸ்தைப்படும்‌ சேதனர்களை அக்‌ கடலினின்றும்‌ கறை யேற்றுவதற்காக நாட்டில்‌ பிறந்து மனிசர்க்‌காகப்‌ படாதனபடுகிறான்‌ நாராயணன்‌.-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்‌ செய்வதற்காகப்‌ பிறக்கிறான்‌ பர வாஸுதேவன்‌, இந்திரியங்களுக்கு எட்டாத தன்னை ஸம்ஸாரிகள்‌ கண்ணுக்குத்‌ தோன்றும்‌ படி செய்கிறான்‌. வேண்டினவற்றை யெல்லாம்‌ தன்னடியார்களுக்குத்‌ தருகிறான்‌. குளிரக் கடாக்ஷிப்பது, பேசுவது, கேட்பது, சிரிப்பது. ஆலிங்கனம் செய்வது, இப்படிப்‌ பலவிதமாக அவர்‌களை ஆட்‌ கொள்ளுகிறான்‌. “*ஹஸிதம்‌ பாஷிதம்‌ சைவ” [சிரிப்பதையும்‌, பேசுவதையும்‌] என்றார்‌ வால்மீகி. ராமனுடைய ஆலிங்கனத்தை அனுமானும்‌ ““பாவோ நாந்யத்ர கச்சதி”” [என்‌ நினைவு வேறெங்கும்‌ செல்லாது.] என்றார்‌. ‘“ஸம்ஸ்ப்ருச்யாக்ருஷ்ப ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ்வஜே’”[க்ருஷ்ணன்‌ அக்ரூரனைத் தொட்டு, இழுத்து, ப்ரீதியுடன்‌ நன்கு தழுவிக் கொண்டார்‌.] என்றதும்‌ இங்கு நினைக்கத் தக்கது. விபவாவதார காலங்களில்லாமல்‌ இழந்தவர்க்கும்‌ அவ் விழவு தீருவதற்காக எடுக்கப்படும்‌ அர்ச்சாவதாரமும்‌ இங்கு சொல்லப்‌ படுவதாகக்‌ கொள்ளலாம்‌. ஒரு காலத்திலோடும்‌ க௱ட்டாறு போன்றது விபவாவதாரம்‌. அதில்‌ தேங்கின மடுப் போன்றது அர்ச்சாவதாரம்‌. பாஞ்சராத்ர வைகானஸ ஆகமங்களில்‌ சொன்ன படி ஸுதை, சிலை முதலியவைகளால்‌ செய்யப்பட்ட ரூபங்களில்‌ ஆவாஹனம்‌ செய்யப்பட்டு சாஸ்த்ர வஸ்யனாயும்‌ அர்ச்சக பராதினனாயும்‌ இருக்கிறான்‌ இருடீகேசன்‌. எல்லா ஜனங்களுடைய ஊனக்‌ கண்ணுக்கும்‌ தன்னை விஷயமாக்கிக் கொண்டு ஸ்ர்வாபேக்ஷிதங்‌களையும்‌ கொடுக்கிறான்‌.

(அஜாயமாநோ பஹுதா விஜயாதே) *பிறப்பில்லாதவனாயிருந்‌தும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌” என்கிற து வேதம்‌. ** அஜோபி ஸந்‌-ஸம்பவாமி’” [பிறப்பற்றவனாயிருந்தும்‌ பிறக்கிறேன்‌.] என்று க்ருஷ்ண பகவான்‌ கீதையில்‌ அருளினான்‌. “பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமான்‌” என்றார்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த மாறன்‌. (அஜாயமாந:) “ஜநிஜராதி; ஸகலதுரித தூ;ர:” [பாப பலமான ஜன்மம்‌, கிழத்தனம்‌ முதலியவைகள ற்றவன்‌.] என்று வியாக்யானம்‌ செய்தார்‌ நாராயணயதி. இங்கு “பிறப்பு என்பது, கிழத்தனம்‌, இறப்பு முதலிய ஆறு விகாரங்களையும்‌ காட்டுகிறது. (பஹுதா விஜாயதே)எந்நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தான்‌. “ப;ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி””[எனக்குப்‌ பல பிறப்புகள்‌ கடந்து விட்டன.] என்று தன்‌ ஜன்மத்‌தைத்‌ தானே சொன்ன அவனும்‌ தெஞ்சு உளுக்கியிறே இருப்பது.-ஆழ்வாரும்‌ “சன்மம்‌ பலபல செய்து” என்றார்‌. (பஹுதா) தேவர்‌, திர்யக்‌, மனுஷ்யர்‌, ஸ்தாவரம்‌ என்று சொல்லப்படும்‌ எல்லா யோனிகளிலும்‌ பிறந்தான்‌. வ்யூஹம்‌, விபவம்‌, அர்ச்சை எனப்படும்‌ எல்லா அவஸ்தைகளிலும்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. பிறக்கைக்கு ஹேதுவான கர்மம்‌ இல்லாமலிருந்தும்‌ கர்ம வஸ்யரும்‌ பிறவாத ஜன்மங்களிலும்‌ பிறந்தான்‌. கர்ம வஸ்யன்‌ பிறவிக்கு எல்லை காண்கிறோம்‌. அகர்ம வஸ்யன்‌ (கர்மத்திற்கு வசப்‌ படாதவன்‌) பிறவிக்கு எல்லை காணவில்லை. கர்மத்திற்கு எல்லையுண்டு. அனுக்ரஹத்துக்கு எல்லை யில்லை. (விஜாயதே) “பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌’ என்றும்‌, ‘விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. “தேவர்‌ முதலிய ஓவ்வொரு ஜாதியிலும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌ என்று நாராயண முனி. (விசேஷேண ஜாயதே) விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. அப்ராக்ருத சரீரத்தை இதர ஸஜாதீயமாக்கிப்‌ பிறக்கிறான்‌. “சங்கொடு சக்கரம்‌ வில்‌ ஓண்மையுடைய உலக்கை ஓள் வாள்‌ தண்டு கொண்டு” பிறக்கிறான்‌. தன்‌ ஐஸ்வர்ய சக்திகளில்‌ ஓன்றும்‌ குறையாமல்‌ பிறக்கிறான்‌. அவதார ரஹஸ்யத்தை அறிந்து அனுஸந்தித்தவர்கள்‌ ஜன்மம்‌ அறும்படி பிறக்கிறான்‌. பிறந்த பின்பே மேன்மை யடைகிறான்‌. வேதத்திலும்‌-யுவா ஸுவாஸா: பரிவீத ஆகத்‌ ஸ உ ஸ்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந: தம்‌ தீராஸ: கவய உந்நயந்தி’” [யெளவனத்தை யுடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌, நித்ய ஸூரிகளால்‌ சூழப்பட்டவனாகவும்‌ புருஷோத்தமன்‌ பிறக்கிறான்‌. அவன்‌ பிறந்த பின்பே மேன்மை யுடையவனாகிறான்‌. அவளை தீரர்களான கவிகள்‌ தியானிக்‌கிறார்கள்‌] என்றல்லவோ சொல்லப்பட்டது.(விஜாயதே) கர்ம வஸ்யர்களைப் போன்ற சரீரத்துடன்‌ பிறக்கிறான்‌. அவர்கள்‌ பத்து மாதம்‌ வயிற்றிலிருந்து பிறந்தால்‌ இவன்‌ பன்னிரண்டு மாதம்‌ கர்ப்ப வாஸம்‌ செய்து பிறக்கிறான்‌. “ததச்ச த்‌வாதசே மாஸே” [பன்னிரண்டாவது மாதத்தில்‌] என்றும்‌, ‘பன்னிரு திங்கள்‌ வயிற்றிற்‌ கொண்ட” என்றுமல்லவோ சொல்லப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஆபத்தேற்படும்‌ காலத்தையே தனக்குப்‌ பிறக்கைக்குக்‌ காலமாகக்‌ கொண்டு பிறக்கிறான்‌. அவர்களுடைய ஸம் ரக்ஷணத்தையே. ப்ரயோஜனமாகக் கொண்டு பிறக்கிறான்‌. ஆவிர்பூ,தம்‌ மஹாத்மநா:”[மஹாத்மாவான நாராயணன்‌ ஆவிர்பவித்தான்‌.] என்ற வால்மீகி மஹரிஷி அவதரித்ததினால்‌ தோஷமில்லை என்பதைக்‌ காட்டுவதற்காக
*ஆவிர்ப்பவித்தான்‌” என்று உரைத்தார்‌. ஆஸ்ரிதர்க்காக கர்ப்ப வாஸம்‌ பண்ணின மஹா குணத்தை இழக்கலாகாது என்று வேதம்‌“பிறந்தான்‌” .என்கிறது. ஆழ்வாரும்‌ *தோன்றினவாறும்‌* என்று சொல்லாதே *பிறந்தவாறும்‌” என்ற்ல்லவோ பாடினர்‌. ஸம்ஸாரிகளுக்குப்‌ பிறக்கப்‌ பிறக்க ஞானம்‌ மழுங்கும்‌.. ரத்னத்தைத்‌ தேய்க்கத்‌ தேய்க்க ஒளி அதிகமாமாப் போலே அவதாரம்‌ செய்யச்‌செய்ய இவனுடைய மஹா குணங்கள்‌ பிரகாசிக்கும்‌. ராமாவதாரத்‌தைக்‌ காட்டிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌, பாண்டவ தூதனாயும்‌,பார்த்த ஸாரதியாயு மிருந்து தன்‌ பெருங் குணங்களை வெளியிட்டானன்றோ? தானே சொல்லும்போதும்‌ “ஜென்ம கர்ம ச மே திவ்யம்‌”[என்னுடைய ஜன்மங்களும்‌, சேஷ்டிதங்களும்‌ அப்ராக்ருதமானவை] என்று மதிப்புடனன்றோ சொன்னான்‌.

(தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌) அவனுடைய அவதார ரஹஸ்யத்தை தீரர்களே அறிகிறார்கள்‌. (தீரா:)புத்திமான்கள்‌. “தீரர்களான கவிகள்‌” என்று மற்றொரு ஸ்ருதியில்‌ சொல்லப்பட்ட வர்கள்‌. – பராங்குச பட்டநாத பரகாலாதிகளே இவன்‌ பிறப்பின்‌ பெருமையை அறிவார்கள்‌. (தீரா:) கலங்காதவர்கள்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. ஸ்ருதிகளை அறியாதவர்கள்‌ புருஷோத்தமனுடைய அவதார மஹிமையை அறியாமல்‌, “பர ப்ரஹ்மத்திற்கு ஜன்மமுண்டோ’ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டு இவன்‌ மனுஷ்‌யனோ?” என்று கலங்குவார்கள்‌.-அம் மாதிரியான கலக்கமில்லாதவர்கள்‌. “பிதா புத்ரேண பித்ருமாந்‌ யோநி யோநவ் நாவேத,விந் மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌’ [ஒவ்வொரு அவதாரத்திலும்‌ ஸர்வலோக பிதாவான நாராயணன்‌ தன்னால்‌ உண்டாக்கப்பட்ட ஒருவனைத்‌ தனக்குத்‌ தகப்பனாகக் கொண்டு பிறக்கிறான்‌. வேதத்தை அறியாதவன்‌ அவனே ‘பரமாத்மா வென்று அறிய மாட்டான்‌. ] என்றல்லவோ மறைகள்‌ முறையிட்டன. (தஸ்ய யோநிம்‌ பரிஜாநந்தி) அவனுடைய:அவதாரத்தை நன்கு அறிகிறார்கள்‌. (பரிஜாநந்தி). திரும்பத் திரும்ப அறிகிறார்கள்‌.-ஸகல சேஷ்டிதங்களையும்‌ அறிகிறார்கள்‌. அதை விட்டுப்‌ பரத்வத்‌திலும்‌ மனம்‌ செலுத்தமாட்டார்கள்‌. *பாவோ: நாந்யத்ர கச்சதி”-என்பார்கள்‌. *அச்சுவை பெறினும்‌ வேண்டேன்‌”” என்று இருப்பார்கள்‌. நம்மாழ்வார்‌; ஸர்வேச்வரன்‌ யசோதையால்‌ உரலில்‌ கட்டுண்டு ஏங்கிய எளிவை அனுஸந்தித்தவுடன்‌ எத்திறம்‌!’” என்று ஆறு மாதம்‌: மோஹித்துக்‌ கிடந்தாரன்றோ. மறுபடியும்‌ ‘”பிறந்தவாறும்‌’என்று பரம புருஷனுடைய பிறப்பை அனுஸந்தித்து ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்‌ என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌கள்‌. அவனுடைய பிறப்பின்‌ பெருமையை அநிந்தவர்களை தீரர்‌கள்‌” என்றது வேதம்‌; அறியாதவர்களை :மூடர்கள்‌” என்றான்‌ கண்ணன்‌. *யோநிம்‌” என்றது ஸ்ருதி; *மாநுஷீம்‌ தநும்‌ ஆஸ்ரிதம்‌” என்‌றான்‌ மாதவன்‌. . அறிந்தவர்களை “பரிஜாநந்தி’ என்றது மறை; அறியாதவர்களை *அவஜாநந்தி’ என்றான்‌ அச்யுதன்‌.

எதற்காக இந்த அவதார ரஹஸ்யத்தை அறிகிறார்கள்‌? எனில்‌:(மரீசீநாம்‌ பதமிச்சந்தி வேதஸ:) சோதி மயமான நித்ய ஸூரிகளுடைய பரம பதத்தை அடைவதற்காக என்று சொல்லப்படுகிறது.(மாரீசீநாம்பதம்‌… வேதஸ:)’ நித்ய ஸூரிகளின்‌ நாடு: என்று சொன்ன
பின்‌ அப்ரதானமாக. ,புரம புருஷனுடைய தேசம்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.-நம்மாழ்வாரும்‌ “வானவர்‌ நாடு” என்றல்லவோ அருளிச் செய்தார்‌. , அவர்களிட்ட வழக்காயிருப்பதால்‌” அவர்‌களுடைய பரம பதம்‌ என்று உரைக்கப்படுகிறது. * வானவர்‌ நாட்டையும்‌” என்னுமிடத்தில்‌ வியாக்யானத்தில்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ “குடியிருப்பாரோ பாதியாயிற்று பரம பதத்தில்‌ ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு(இருப்பு). ப்ராப்தி தேசம்‌ நித்ய ஸூரிகள்‌ இட்ட வழக்காயிருக்கும்‌.”‘என்று அருளிச் செய்தது இங்கு அனுஸந்திக்கத் தக்கது. அவதார
ரஹஸ்யத்தை அறிவதால் மோஷம் அடைவார்கள் என்பதை “ஜந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌ யோ வேத்தி. தத்த்வத; த்யக்த்வா தேஹம்‌ புநர்‌ ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூநா ”[அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான ஜன்மத்தையும்‌ ‘சேஷ்டிதங்களையும்‌ இம் மாதிரியாக எவன்‌ உண்மையாக அறிகிறானோ அவன்‌ தேஹத்தை விட்டு மறு ஜன்மத்தை யடைவதில்லை.-என்னையே-அடைகிறான்‌.] என்று கீதாசார்யனால்‌.சொல்லப் பட்டது;-இம்மாதிரியான அவதார வைபவம்‌ மற்ற தேவதைகளுக்குக்‌ கிடையாது-

———–

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே
–4-
[எந்தப் பரம புருஷன்‌ நித்ய ஸூரிகளுக்காகப்‌’ பிரகாசிக்கிராரோ. எவர்‌ நித்ய ஸூரிகளுக்கு அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுப்‌பவரோ, எவர்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ முதல்‌வரா யிருக்கிறாரோ. பிரகாசிப்பவரும்‌, பர ப்ரம்ஹ ஸ்வரூபியுமான அவருக்கு நமஸ்காரம்‌.]இந்த மந்திரத்தில்‌ புருஷோத்தமன்‌ நித்ய ஸூரி நிர்வாஹகன்‌ என்னும்‌ விஷயம்‌ சொல்லப்படுகிறது.-இதையே வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌,
வானவராதியென்கோ? வானவர்‌ தெய்வமென்கோ?
வானவர்‌ போகமென்கோ? வானவர்‌ முற்றுமென்கோ?
‘” என்று திருவாய்மொழியில்‌ ‘ திருவாய் மலர்‌ந்தருளினார்‌.
(யோ தேவேப்ய ஆதபதி) எந்தப்‌ பரம புருஷன்‌ நித்ய ஸூரி களுக்காக ஆதியஞ்சோதி யுருவுடனும்‌, ஸமஸ்த கல்யாண குணங்களுடனும்‌ பிரகாசிக்கிறாரோ என்று சொல்லப்படுகிறது. ஜிதந்தே ஸ்தோத்ரத்திலும்‌, ‘பக்தாநாம்‌ த்வம்‌ ப்ரகாசஸே”” [பக்தர்களுக்காகவே நீ பிரகாசிக்கிறாய்‌] என்றல்லவோ சொல்லப் பட்டது. நம்மாழ்வார்‌-இதை வானவர்‌ தெய்வமென்கோ?” என்றார்‌. (யோ தேவாநாம்‌ புரோஹித:). எந்தப்‌ பரமாத்மா நித்ய ஸூரிகளுக்காக அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுக்கிறாரோ-அவர்களுக்கு உண்ணும்‌ சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமான பகவத் கைங்கர்யத்தைக்‌ கொடுக்கிறார்‌ என்று தாத்பர்யம்‌- “தத்‌; விப்ராஸோ விபந்யவோ” என்று சொல்லுகிறபடி பகவானைச்‌ சூழ்‌ந்திருந்தேத்துவதாகிற ப்ரஹ்‌மானந்தத்தை அவர்கள்‌ அநாதி காலமாக அனுபவிக்கிறார்கள்‌ -கைங்‌கர்யமே உண்மையான ஹிதம்‌; “இவ்வுலகிலுள்ள ஐஸ்வர்யங்களும்‌ ஹிதமல்ல. கைவல்ய நிஷ்டர்களுடைய ஆத்மாநுபவமும்‌ உண்மையான ஹிதமல்ல.. ப்ரகாரத்தளவில்‌ நிற்கும்‌ ஆத்மானுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும்‌ செல்லும்‌ பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷமே ஹிதமெனத் தகுந்தது, சடகோபன்‌ இதை “வானவர்‌,போக மென்கோா? வானவர்‌ முற்றுமென்கோ?” என்று அருளினார்‌. (பூர்வோ…ஜாத:). எவர்‌ . நித்ய ஸூரிகளுக்கு முதல்வரா யிருக்‌கின்றாரோ. ‘வானவராதியென்கோ?” என்றார்‌ நம்மாழ்வார்‌. நித்ய ஸூரிகளுக்கு. நிர்வாஹகன்‌-அவர்களுடைய ஸத்தைக்கு (இருப்‌புக்கு) காரணமாயிருப்பவன்‌-அவர்கள்‌ நித்யராயிருக்கும் போது ஸத்தா ஹேதுவென்று எப்படிச்‌ சொல்லமுடியும்‌? அவர்‌களுடைய நித்யத்வம்‌ அவனுடைய நித்யேச்சையாலே இருக்கிற படியால்‌ அவர்களுக்கு ஸத்தா ஹேது வென்று சொல்லலாம்‌. இந்த இச்சை அழிந்தால்‌ நித்யத்வமும்‌ மாள வேண்டிவருமன்றோ?-(ருசாய) திவ்ய மங்கள விக்ரஹத்துடன்‌ ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படியான பரம புருஷ்னுக்கு. “ ஒளி மணி வண்ணன்‌ என்று சொல்லப்பட்ட அவனுடைய சோதி வடிவு இங்கு உணர்த்தப்படுகிறது.(ப்ராஹ்மயே நம🙂 பர ப்ரஹ்மமா யிருக்கும்‌ ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்‌.-நாராயணாய நம:‘ என்று த்‌வயத்தில்‌ சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப் படுகிறது. ப்ராஹ்மயே’ என்னுமிடத்தில்‌ நான்காம்‌ வேற்றுமையால்‌ கைங்கர்யம்‌ பிரார்த்திக்கப் படுகிறதென்றும்‌, “நம:
என்று “அந்தக்‌ கைங்கர்யத்தினால்‌ வரும்‌ ஆனந்தமும்‌ என்னுடையதல்ல; பகவானுடையதே’ என்று சொல்லப் படுகிறதென்றும்‌ கொள்ள வேண்டும்‌
. இந்த மந்திரத்திலுள்ள தேவ சப்தங்களை ப்ரஹ்மாதி தேவ பரமாகவும்‌ ஆசாரியர்கள்‌ பொருள் கொண்டுள்ளனர்‌-

———–

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

[பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரீதியை உண்டு பண்ணும்‌ நித்ய ஸூரிகள்‌ புருஷோத்தமனுக்கெதிரில்‌ நம.” என்னும்‌ அச் சொல்லை உரைத்தனர்‌-ப்ரஹ்ம ஜ்ஞானியான ஓருவன்‌ உம்மை இப்படி அறிந்தானாகில்‌, அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருப்பார்கள்‌.](ருசம்‌ ப்ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா…) புருஷோத்தமனுடைய
ப்ரீதியை உண்டு பண்ணும்‌ தேவர்களான நித்ய ஸூரிகள்‌, அவ னுக்கு எதிரில்‌ “நம:* என்னும்‌ சொல்லைக்‌ கூறுகின்றனர்‌. இதிலிருந்து பகவானுடைய முகோல்லாஸத்திற்காகக்‌ கைங்கர்யம்‌ செய்‌யப்படுகிறதே யொழிய, நம்முடைய ஆனந்தத்திற்காக வல்ல என்று உணர்த்தப் படுகிறது. அவனுகக்கிறான் என்பதற்காக நாமுகந்து செய்ய வேண்டுமே யொழிய நம்‌ உகப்புக்காகக்‌ கைங்கர்யம்‌ செய்யலாகாது, நம:’ என்னும்‌ பதம்‌ “அஹமபி நமம பகவத ஏவாஹமஸ்மி””-[நானும்‌ எனக்குரியேனல்லேன்‌. பகவானுக்கே நான்‌ உரியவன்‌.] என்னும்‌ பொருளை யுடையதன்றோ. :நம இத்யேவ ‘வாதி,ந:”* [நம:”என்றே சொல்லுபவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌.] என்றல்லவோ சொல்லப்‌ பட்டிருக்கிறது. “பூயிஷ்டராம்‌ தே நம உக்திம்‌”” என்கிறபடி “நம:என்னும்‌ சொல்லை மிகப் பெரிதாக வன்றோ நினைத்து உகக்கிறான்‌ மாதவன்‌.-(யஸ்த்வைவம்‌…) எவன்‌ இம் மாதிரி பகவத் கைங்கர்யமே பரம புருஷார்‌த்தமென்‌ றிருக்கிறானோ அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருக்கிறார்கள்‌. ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌,-“ஸ்வ பருஷமபி,வீக்ஷய பாச ஹஸ்தம்‌ வததி பம: கில’தஸ்ய கர்ண மூலே -பரிஹர மதுஸூதந ப்ரபந்நாரந் ப்ரபு,ரஹமந்‌ய ந்ருணாம்‌ ந வைஷ்ணவாநாம்‌””[யமன்‌ பாசத்தைக்‌ கையில் கொண்ட தன்‌ தூதனைப் பார்த்து, அவன்‌ காதினுள்‌ பின் வருமாறு சொல்லுகிறான் :-‘மதுஸூதனனை சரணமடைந்தவர்களை அணுகாதே. நான்‌ மற்றவர்களுக்கே பிரபு: வைஷ்ணவர்களுக்கல்ல.] என்றல்லவோ யமன்‌ கூறியதாகச்‌ சொல்லப்பட்டது.-திருமழிசையாழ்வாரும்‌,
திறம்‌ பேன்மின்‌ கண்டீர்‌ திருவடி தன்‌ நாமம்‌ மறந்தும்‌ புறந்தொழா மாந்தர்‌–இறைஞ்சியும்‌ சாதுவராய்ப்‌ போதுமின்களென்றான்‌ நமனும்‌ தன்‌ தூதுவரைக்‌ கூவிச்‌ செவிக்கு.-என்று இதையே அருளிச் செய்தார்‌.-தொண்டரடிப்பொடியாழ்வார்‌
“*நாவலிட்டுழி தருகின்றோம்‌ நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே” என்று அருளிச்‌ செய்தார்‌. ‘-திருமங்கை யாழ்வாரும்‌ “வள்ளலே! உன்‌ தமர்க்‌ கென்றும்‌ நமன்‌ தமர்‌ கள்ளர் போல்‌” என்று அருளினார்‌. “என்‌ தமர்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்படார் காண்‌”” என்றும்‌, **நமன்‌ தமர்‌ என்‌ தமரை வினவப்‌. பெறுவாரலர்‌” என்றும்‌ அபயமளித்தான்‌ அச்யுதன்‌. பகவானைப்‌ பற்றினவுடன்‌ எத் தேவர்‌ வாலாட்டும்‌ ஓழியும்‌. “பிஞ்ஞகன்‌ தன்னோடும்‌ எதிர்‌வன்‌ அவன்‌ எனக்கு நேரான்‌’” [பிஞ்ஞகன்‌-சிவன்‌]என்றல்லவோ திருமழிசைப் பிரான்‌ அருளிச் செய்தார்‌.

————–

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-[உனக்கு பூமி தேவியும்‌, ஸ்ரீ தேவியும்‌ பத்நிகள்‌. பகலுமிரவும்‌ பக்கத்திலிருக்கிறார்கள்‌. உன்‌ உருவம்‌ -நக்ஷத்திரங்கள் போல்‌(ஒளியுள்ள தாய்‌) இருக்கிறது. அச்விநீ தேவர்கள் போல்‌(உம்முடைய திரு முகம்‌) அழகாயிருக்கிறது. இஷ்டத்தைக் கொடுக்கும்‌. இந்தக்‌ கைங்கர்யத்தைக்‌ கொடுக்கும்‌. எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.]முன்‌ இரண்டு மந்த்ரங்களிதும்‌ சொல்லப்பட்ட கைங்கர்யம்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமான சேர்த்தியிலேயே செய்யப்பட வேண்டும்‌ என்று கோஷிக்கிறது இந்த ருக்‌. இது வரையில்‌, விக்ரஹத்தாலும்‌, குணங்களாலும்‌, பரிகரங்களாலும்‌ பரம புருஷன்‌ நிர்ணயிக்கப் பட்டான்‌. புருஷ ஸூக்தத்தின்‌ கடைசி மந்த்ரமான இதில்‌ அவனுக்கே அஸாதாரணமான பிராட்டிகளைக் கொண்டு நிச்சயிக்கப்‌ படுகிறான்‌. பட்டரும்‌,“வேதாந்தா: தத்வ சிந்தாம்‌ முரபிதுராஸி யத் பாத,சிந்ஹைஸ் தரந்தி””[வேதாந்தங்கள்‌, முராரியின்‌ மார்பில்‌ எந்தப்‌ பிராட்டியின்‌ திருவடி யடையாளத்தைக் கொண்டே, பர தத்வ விசாரத்தை முடிக்கின்றனவோ] என்று இவ் விஷயத்தை அழகாக அருளிச்‌ செய்தார்‌-மேலும்‌,“ஈஷ்டே கச்சித்‌ ஜகத இதிய: பெளருஷே ஸுூக்த உக்த:தம்‌ ச த்‌வத்கம்‌ பதிமதி ஜகாவுத் தரச்சாநுவாக:’”[புருஷ ஸூக்தத்தில்‌ உலகத்திற்கெல்லாம்‌ நாயகனாகச்‌ சொல்லப்‌ பட்டவனை, உன்னுடைய (லக்ஷ்மியினுடைய) பதி யென்று உத்தரானுவாகம்‌ உத்கோஷித்தது.] என்றும்‌ அருளிச் செய்தார்‌. திருவின்‌ நாயகன்‌, நிலமகள்‌ நண்பன்‌, ஆயர் மடமகள்‌அன்பன்‌, அச்யுதனே இங்கு அறிவிக்கப் படுகிறான்‌, நமக்கு உபாயோபேயங்கள்‌ ஸ்ரீய:பதியே ஓழிய. ப்ரஹ்மசாரி நாராயணனல்ல என்னும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தம்‌ இங்கு வெளியிடப்படுகிறது-(தே): உமக்கு.-

  1. தலைகளாயிரம்‌, கண்களாயிரம்‌, தாளன்களாயிரமுடைய உமக்கு.
  2. ஸகல சராசரங்களையும்‌ வியாபித்திருக்கும்‌ உமக்கு.
  3. “ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” எனப்படும்‌ உமக்கு.
  4. தேச கால வஸ்து பரிச்சேதமில்லாத உமக்கு.
  5. மோக்ஷத்திற்கு ப்ரபுவான உமக்கு.
  6. ஸ்ரீவைகுண்ட வாஸியான உமக்கு.
  7. அண்‌டத்தை உண்டாக்கின உமக்கு.
  8. நான்முகனைப்‌ படைத்த நாராயணனான உமக்கு.
  9. ப்ரக்ருதி மண்டலத்திற் கப்பால்‌ சோதி யுருவா யிருக்கும்‌ உமக்கு.
  10. நாம ரூபங்களைக்‌ கொடுத்தருளிய உமக்கு.
  11. ப்ரஹ்ம ருத்ரேந்த்ர்களால்‌ தியானிக்கப்படும்‌ உமக்கு.
  12. “உம்மை உபாஸிப்பதைத் தவிர வேறு மோக்ஷோபாயமில்லை” என்னும்‌ கீர்த்தி பெற்ற உமக்கு.
  13. பாற் கடலில்‌ பள்ளி கொண்ட பரமனாய்‌ அந்தர்யாமி யாயிருக்கு முமக்கு.
    14. பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமானா யிருக்கு முமக்கு.
  14. அவதார ரஹஸ்யத்தை அறிந்தவர்‌களால்‌ அடையப்படும்‌ உமக்கு. 16. ‘நித்ய ஸூரிகளுக்கு: நாதனாயும்‌,அவர்களால்‌ வணங்கப் படுபவனாயு மிருக்கும்‌ உமக்கு-இங்‌கு சொன்ன ஏற்றங்களுக்கெல்லாம்‌ மேலான ஏற்றத்தை அடுத்தபடியாகச்‌ சொல்லுகிறது. (ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச பத்ந்யெள) பூ தேவியும்‌,ஸ்ரீ தேவியும்‌ உமக்குப்‌ பத்னிகள்‌.-இரண்டாவது ‘சகார”த்தினால்‌ நீளா தேவியும்‌ உணர்த்தப் படுகிறாள்‌. ஆழ்வாரும்‌ ‘குழற் கோவலர்‌ மடப் பாவையும்‌ மண் மகளும்‌ திருவும்‌” என்று அருளினார்‌. ஆஸ்ரிதர்‌ குற்றத்தைப்‌ பொறுப்பிக்கும்‌ பிராட்டி; “குற்றம்‌ காண்பானென்‌? பொறுப்பானென்‌?” என்றிருக்கும்‌ ஸ்ரீ பூமிப் பிராட்டி; நப்பின்னைப்‌ பிராட்டி க்ஷ்மை தான்‌ ஒரு வடிவாயிருக்கும்‌-பெரிய பிராட்டியார்‌ இவனுக்கு ஸம்பத்தாயிருக்கும்‌; அது விளையும்‌ தரை (பூமி); அதனை அனுபவிக்கும்‌ போக்தாவாயிருக்கும்‌ நப்பின்னை;’? என்ற பெரிய வாச்சான் பிள்ளையின்‌ ஸ்ரீஸூக்தி இங்கு அனுஸந்திக்கத் தக்கது. :நகச்சிந்‌ நாபராத்‌,யதி’* [குற்றம்‌ செய்யாதவர்கள்‌ ‘ஒருவருமில்லையே. ]என்பாள்‌ ஸ்ரீதேவி. *குற்றமே இல்லையே’ என்று காணாக் கண்ணிட்‌டிருப்பாள்‌ பூமி தேவி. ‘“க்ஷமயா ப்ருதிவீ ஸம:’” [(ஸ்ரீராமன்‌) பொறுமையில்‌ பூமிக்கு ஸமானமானவன்‌.] என்றல்லவோ சொல்லப் பட்டது.-பூமிப் பிராட்டிக்கு நாம்‌ செய்யும்‌ குற்றங்களுக்கோர்‌ கணக்கில்லை.-அவள்‌ நமக்குச்‌ செய்யும்‌ நன்மைகளுக்கோ எல்லையில்லை. ‘ நாம்‌ உண்டாவதற்கு உதவுகிறாள்‌. நாம்‌ நடக்கும் போதும்‌ கிடக்கும்‌ போதும்‌ நம்மைத்‌ தாங்குகிறாள்‌. தாம்‌ உயிருடனிருப்பதற்கு வேண்டியவைகளைக்‌ கொடுத்துக்‌ காப்பாற்றுகிறாள்‌. நாம்‌ அதற்குப்‌ பதில்‌ அவளை வெட்டுகிறோம்‌; கூரிய ஆயுதங்களினால்‌ குத்திக்‌ கீறிக்‌ கிழிக்‌கிறோம்‌; மல ஜலாதிகளை விட்டு அசுத்தம்‌ செய்கிறோம்‌. பூமியின்‌ புத்ரர்களான நாம்‌ ஒருவர்க்கொருவர்‌ த்வேஷிப்பதன்‌ மூலமும்‌, தூஷிப்பதன்‌ மூலமும்‌ முக் கரணங்களாலும்‌ முடிவில்லாத துன்பங்கள்‌ செய்வதன்‌ மூலமும்‌ நம்‌ தாயாகிய பூமியைத்‌ துன்புறுத்துகிறோம்‌.-பொறுமையாகிய பாலை நமக்கு ஊட்டின தாயின்‌ வழி நாம்‌ நடக்க வேண்டாமா? பொறையின்‌ மக்கள்‌ குறை கூறலாமோ? பொறுமையில்‌ மிக்கவளாகையாலும்‌, பூமியில்‌ பிறந்து வளர்ந்த நமக்கு இஹ பர புருஷார்த்தங்களை அடையச்‌ செய்பவள்‌ இவளே யாகையாலும்‌ முதலில்‌ “ஹ்ரீ:’ என்று பூமி தேவி சொல்லப் பட்டாள்‌. தேச பக்தி யென்‌பது தாயிடம்‌ அன்பே. ஆனால்‌ அந்த மாதவியோ மாதவனுடையவள்‌-அவளிடம்‌ பத்தி யென்று பெயர் பூண்டு அவனியாள்‌ நாதனின்‌ ஆஜ்ஞைகளை மீறுகிறார்கள்‌ சிலர்‌. பூமி தேவி அவர்களைப்‌ பொறுக்‌காமல்‌ பாரமாகவே கருதுவாள்‌. புருஷோத்தமனிடமிருந்து பூமியைப்‌ பிரிப்பவர்கள்‌ தகப்பனை விட்டுத் தாயைப்‌ பிரிப்பவர்களாகக்‌ கருதப்‌ படுவார்கள்‌. பிராட்டியை பகவானை விட்டுப்‌ பிரித்த ராவணன்‌ தலை யறுப்புண்டான்‌; பிரிக்கப் பார்த்த : சூர்ப்பணகை மூக்கறுப்புண்‌டாள்‌” என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்திருப்பது இங்கு அனுஸந்திக்கத் தக்கது.

(லக்ஷ்மீ:) திவ்ய லக்ஷணங்கள்‌ பொருந்தியவளாதலால்‌ :லக்ஷ்மி” என்று கீர்த்தி பெற்றிருக்கிறார்‌ பெரிய பிராட்டியார்‌- தேவர்‌,” மனுஷ்‌யர்‌ முதலிய எல்லாராலும்‌ பிரார்த்திக்கப் படுபவளாதலால்‌ ‘லக்ஷ்மி’ என்றுரைக்கப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.-பகவானுக்கு ஜ்ஞானனந்தாதி குணங்களைப் போல்‌ ஸவரூப நிரூபக பூதையா யிருப்பவள்‌.-மற்ற எல்லா மஹிஷிகளுக்கும்‌ தலைவியா யிருப்பவள்‌. ஜீவர்களுககெல்லாம்‌ புருஷகாரமா யிருப்பவள்‌. உலகிலுள்ள ஐஸ்வர்யங்களை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீதேவி. ஐஸ்வர்யங்கள்‌ எட்டு வகைப்‌ படும்‌:- 1-தங்கம்‌, வெள்ளி முதலியவைகள்‌ (தன லக்ஷ்மி). 2. தான்‌யங்கள்‌ (தான்ய லக்ஷ்மி). 3-புத்ர பெளத்ராதிகள்‌(ஸந்தான லக்ஷ்மி),4, ரத கஜ துரக பதாதிகளை யுடைய ராஜ்ய லக்ஷ்மி-5-வீர்ய (பராக்ரம) லக்ஷ்மி, 6. விஜய லக்ஷ்மி. 7. துஷ்டி, புஷ்டி முதலியவற்றைத் தரும்‌ ஸெளபாக்ய லக்ஷ்மி. 8, மோக்ஷ லக்ஷ்மி. இவற்றை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீ தேவி.

(ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச) ஸம்பத்தாயிருப்பவள்‌ ஸ்ரீதேவி; ஸர்வ ஸம்பத்துகளுக்கும்‌ விளை நிலமாயிருப்பவள்‌ நிலமகள்‌. பெருமை யுடையவள்‌ பூமகள்‌; பொறுமை யுடையவள்‌ பூ தேவி. குணமுடையவள்‌ ஸ்ரீதேவி;மணமுடையவள்‌ மண்‌ மடந்தை. கோஷிப்பிப்பவள்‌ ஸ்ரீதேவி; போஷிப்பவள்‌ பூமி தேவி. அழகுடையாள்‌ இலக்குமி; புகழமுடையாள்‌ பூ தேவி. ஆதரமுடையவள்‌ அலர் மேல் மங்கை; ஆதாரமானவள்‌ அவனியாள்‌.

(பத்ந்யெள) இப்படிப்பட்ட கீர்த்தியை யுடைய இவர்கள்‌ .பரம புருஷனுக்குப்‌ பத்னிகள்‌ என்று உரைக்கப்படுகிறது. “பதிம் நயதி “என்னும்‌ வ்யுத்பத்தியின்படி ஸர்வேஸ்வரனைக்‌ கண் காட்டிய இடத்‌தில்‌ காரியம்‌ செய்யச் செய்பவள்‌ என்று பொருள் கொள்ளலாம்‌.
**யஸ்யாவீக்ஷ்ய முகம்‌ ததிங்கித பராதீநோ விதத்தேகி,லம்‌” [எந்தப்‌ பிராட்டியின்‌ முகத்தைப்‌ பார்த்து அவளுடைய முக பாவத்திற்கு வசப்‌பட்டு ஸர்வேஸ்வரன்‌ எல்லாவற்றையும்‌ செய்கிறானோ…]என்றல்‌லவோ ஆழ்வான்‌ அருளினார்‌. ‘ப்ரஜைகளை பகவானிடத்தில்‌ அழைத்‌துச்‌ செல்லுபவள்‌’ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌-இதனால்‌ இவ்‌விருவரும்‌ புருஷகாரமா யிருக்கிறார்களென்று அறிவிக்கப் படுகிறது.

“லஷ்மீ: புருஷகாரத்வே நிர்தி,ஷ்டா பரமர்ஷிபி,:’”? [லக்ஷ்மி புருஷகாரம்‌ (சிபார்சு) செய்பவள்‌ என்று பரம ரிஷிகளால்‌ நிர்ண யிக்கப்பட்டிருக்கிறாள்‌.] என்ற பாஞ்சராத்ர வசனம்‌ இங்கு அனு ஸந்திக்கத் தக்கது; பூதேவியும்‌ புருஷகாரத்வத்தை உடையவளென்‌பது * விஷ்ணுக்ராந்தே வஸுந்தரா…தயா ஹதேந பாபேந கச்சாமி பரமாம்‌ கதிம்‌” [விஷ்ணுவினால்‌ (திரிவிக்ரமாவதாரத்தில்‌) அளக்கப்‌ பட்ட பூமியே… அவளால்‌ பாபம்‌ நீங்கினவனாகி பரம பதத்தை அடைகிறேன்‌.] என்று வேதத்தில்‌ சொல்லப்பட்டது. “*பத்யுர்‌ நோ யஜ்ஞ ஸம்யோகே” என்கிற பாணினி ஸூத்ரத்தின்படி ஆஸ்ரிதர்களை
ரக்ஷிப்பதாகிற யஜ்ஞத்தில்‌ ஸஹ தர்ம சாரிணியா யிருப்பவள்‌ என்றும்‌ பத்னீ சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஹ்ரீ:” என்‌ று லஜ்ஜைக்கு அபிமானி தேவதை; :லக்ஷ்மீ:” என்று ஐஸ்வர்யத்துக்கு அபிமானி தேவதை’” என்றார்‌ வித்யாரண்யர்‌.

எவ்வுலகத்திலி ருப்பவரும்‌, எம்மதத்திலி ருப்பவரும்‌ விரும்பும்‌ இஹ புருஷார்த்தங்கள்‌ தனம்‌, தான்யம்‌, ஸெளக்யம்‌ என்பவையே யாம்‌. இவைகளைக்‌ கொடுப்பவர்கள்‌ ஸ்ரீபூமி நீளா தேவிகளே. இவர்கள்‌ மூவருக்கே :ஸ்ரீஸூக்தம்‌” *பூஸூக்தம்‌” ‘நீளா ஸூக்தம் ’ என்று மூன்று ஸூக்தங்கள்‌ வேதத்தில்‌ படிக்கப் பட்டிருக்கின்‌றன. இவைகள்‌ நாராயண ஸூக்தத்திற்குப்‌ பின்‌ விவரிக்கப்படும்‌, ஸ்ரீஸூக்தம்‌ லக்ஷ்மியைச்‌ சொல்லுவதென்பதை சைவர்களுட்பட எல்லோரும்‌ ஓப்புக் கொள்ளுகிறுர்கள்‌. ஸ்ரீதேவியினால்‌ கொடுக்கப்‌ படும்‌ ஐஸ்வர்யங்களும்‌, பூமியில்‌ விளையும்‌ நவதான்யங்களும்‌, காய்‌ கனிகளும்‌, அதிலிருக்கும்‌ மண்‌, நீர்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனும்‌ பஞ்ச பூதங்களுமில்லாமல்‌ மனிதர்களோ மற்ற பிராணிகளோ உயிருடனிருக்க முடியுமோ? இஹ லோக ஸுக ஸாதனங்களான நெய்‌, பால்‌, தயிர்‌, உண்ணும்‌ சோறு, பருகுநீர்‌, தின்னும்‌ வெற்றிலை முதலிய பதார்த்தங்களை விரும்பாதார்‌ யாவரே இவ் வுலகிலுள்ளார்‌?இந்த ஸ்ரீஸூக்த, பூஸூக்த, நீளா ஸூக்தங்களைப்‌ படிப்பதனால்‌ இஹ லோக புருஷார்த்தங்களெல்லாவற்றையும்‌ அடையலாம்‌. இவற்றைத்‌ தருவதுடன்‌ நில்லாமல்‌ பரம புருஷார்த்தமாகிய பகவத்‌ கைங்கர்யத்தையும்‌ பரந்தாமனுடைய பத்னிகள்‌ கொடுக்கிறார்கள்‌-புருஷோத்தமன்‌ தன்‌ பத்னிகள்‌ மூலமாக இவற்றைத்‌ தருகிறான்‌.

(அஹோராத்ரே பார்ஸ்வே) ‘பகலுமிரவும்‌ பரந்தாமன்‌ பக்கத்‌தில்‌ இப் பத்னிகளிருக்கிறார்கள்‌. அகலகில்லேன்‌ இறையும்‌ என்றிருக்‌கிறார்கள்‌. நம்மாழ்வாரும்‌, உடனமர்‌ காதல்‌ மகளிர்‌ திருமகள்‌ மண்‌மகள்‌ ஆயர்‌ மடமகள்‌ என்றிவர்‌ மூவர்‌‘” என்றும்‌, “நிழல்‌ போல்வனர்‌”‘ என்றும்‌ அருளிச்செய்தார்‌. எதற்காக இப்படி இருக்கிறார்களென்றுல்‌:
“சஞ்சலம்‌ ஹி மந:’* [மனது சஞ்சலமானது.] என்றும்‌, “நின்றவா நில்லா நெஞ்சு” என்றும்‌ சொல்லுகிறபடியே சேதனர்கள்‌ மிகவும்‌ நிலை யற்ற நெஞ்சை யுடையவர்களாதலால்‌, அவர்களுக்கு பகவத்‌ விஷயத்தில்‌ ருசி ஏற்பட்டவுடன்‌ அவர்களை பகவானிடம்‌ சேர்த்து
விட வேண்டும்‌ என்றே அச்யுதனின்‌ அருகிலிருக்கிறார்கள்‌. மேலும்‌, இருவருமான சேர்த்தியே உத்தேச்யம்‌. *தேவிமாராவர்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட் செய்வார்‌’” என்று நித்யஸூரிகளும்‌ இவர்களுடைய சேர்த்தியில்‌ ஏவினதை எடுத்துக்‌ கை நீட்டுபவர்களென்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அவர்கள்‌ ஏவலைக் கேட்பதே பரமானந்தமாகும்‌.-சேஷனான இளைய பெருமாள்‌ :க்ரியதாமிதி மாம்‌ வத;’”[செய்யப்படட்டும்‌ என்று என்னை ஆஜ்ஞாபிப்பாயாக.] என்று இதையே விரும்பினர்‌.““ரமமாணா வநே த்ரய:‘”[மூவரும்‌ வனத்தில்‌ ரமித்தார்கள்‌,] என்று சொல்லப்பட்டபடி ஜீவன்‌, எம்பெருமான்‌, பிராட்டி என்னும்‌ மூவர்‌களுடைய சேர்த்தியே பரஸ்பரம்‌ ஆனந்தத்தைத்‌ தருவதாகும்‌.-ஸீதா ராமர்களுக்குப்‌ பரஸ்பர ஸம்ஸ்லேஷத்தினா லேற்படும்‌ ஸந்‌ தோஷம்‌, இளைய பெருமாளுக்கு (லக்ஷ்மணனுக்கு) இருவருமான சேர்த்தியை ஸேவிப்பதனால்‌ ஏற்பட்டதன்றோ. இங்கு பிராட்டிகளும்‌ பகவானும்‌ வெவ்வேறு தத்வங்கள்‌ என்பதும்‌ காட்டப்படுகிறது.

“ராமஸ்ய தக்ஷிணே பார்ஸ்வே பத்‌மா ஸ்ரீஸ்ஸம வஸ்த்திதா- ஸவ்யே து ஹ்ரீர்‌ விசாலாக்ஷ”[ராமனுடைய வலது புறத்தில்‌ தாமரையாளாகிற ஸ்ரீதேவி இருந்‌
தாள்‌; இடது புறத்தில்‌ விசாலமான கண்களை யுடைய பூதேவி இருந்தாள்‌.] என்னும்‌ ஸ்ரீராமாயண வசனத்தாலும்‌“தரணீ தேவீ தஷிணேதரகா ததா [பூமிதேவி இடது புறத்திலிருப்பவள்‌.| என்‌னும்‌ பாத்ம புராண வசனத்தினாலும்‌ இந்த மந்திரம்‌ . விவரிக்கப்‌ பட்டது. இத்தால்‌ ‘திருவில்லாத்‌ தேவரைத்‌ தேறேன்மின்தேவு”” என்று திருமழிசை யாழ்வாரால்‌ சொல்லப்பட்டபடி, மற்ற தெய்வங்களிற்‌ காட்டிலும்‌, மாதவனின்‌ மேன்மை உரைக்கப்பட்டது. மற்றிருந்தீர்‌ கட்கறியலாகா மாதவனென்பதோர்‌ அன்பனாகிய அச்யுதனுக்கு “தே,வ்யா காருண்ய ரூபயா”” என்று ப்ரஸித்தமடைந்த வேரி(வாஸனை) மாறாத பூமேலிருப்பவளான ஸ்ரீதேவியும்‌, மாதவியாகிய பூதேவியும்‌ பத்னிகளாயிருந்து கொண்டு சேதனர்களை ஸ்ருஷ்டிக்கும்படியும்‌,மோக்ஷத்தை அடையும்படியும்‌ செய்கிறார்கள்‌. இம் மூவரும்‌ சேர்ந்து கொண்டு ஒருவர்க்கொருவர்‌ சேதனரிடம்‌ அன்பு காட்டுவதில்‌ போட்டி போடுகிறார்கள்‌, “தன்னடியார்‌ திறத்தகத்துத்‌ தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌ என்னடியார்‌ அதுசெய்‌யார்‌ செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ என்பர் போலும்‌
என்று அருளிச் செய்தார்‌ பெரியாழ்வாரும் -இம் மாதிரியாக பரனுக்கே ஸ்ரீ, பூமி, நீளா என்று மூன்று பத்னிகள்‌ பரத்வாவஸ்தையிலும்‌ இருப்பதாகச்‌ சொல்லப்பட்டது.-அவர்‌ புத்ரனான பிரமனுக்கும்‌ ஸரஸ்வதி, காயத்ரி, ஸாவித்ரி என்று மூன்று பத்னிகளிருப்பதாக அறிகிறோம்‌. அவருடைய பேரனாகிய ஸுப்ரஹ்மண்யனுக்கும்‌ வள்ளி, தேவ ஸேனை என்று இரு பத்னிகளிருப்பதாகப்‌ புராணங்களில்‌ பேசப்பட்டிருக்கிறது.-புருஷோத்தமனுடைய விபவாவதாரங்களிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌ அஷ்ட மஹிஷி களுடனிருந்தது எல்லோரும்‌ அறிந்ததே.-யாஜ்ஞ வல்க்யர்‌ இரண்டு பத்னிகளை யுடைவரென்பது வேத ப்ரஸித்தம்‌. வைஷ்ணவ ஆசார்ய ஸ்ரேஷ்‌டர்களான பட்டர்‌, நஞ்சியர்‌, நம்பிள்ளை என்னும்‌ இம் மூவரும்‌ இரண்டு பத்னிகளை உடையவர்களென்று படித்திருக்கிறோம்‌.இப்படி புண்ய பூமியாகிய பாரத தேசத்தில்‌ நாம்‌ வணங்கும்‌ தெய்வமும்‌; ரிஷிகளும்‌, ஆசார்யர்களும்‌ அனேக பத்னிகளை உடையவர்களாக இருந்திருக்‌கிறார்கள்‌. ஸ்ம்ருதிகளிலும்‌ பல தாரங்களை மணம்‌ செய்து கொள்ளப்‌ புருஷர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. பல கோடிக்‌ கணக்‌
கான வருஷங்களாக இருந்து வரும்‌ இவ் வழக்கத்தை கிறிஸ்தவ மதக்‌ கொள்கையைக்‌ காரணமாகக் கொண்ட ஐரோப்பியரின்‌ அனுஷ்‌டானத்தைக் கொண்டு மாற்ற சட்டம்‌ ஏற்படுத்தப்‌ பார்க்கிறார்கள்‌-அப்படிச்‌ செய்வது நமது நாட்டுக்கும்‌ அதன்‌ மக்களுக்கும்‌ அதில்‌ வழங்கி வரும்‌ மதங்களுக்கும்‌ பெருத்த தீங்காகும்‌.

(நக்ஷத்ராணி ரூபம்‌) உம்முடைய .. திரு வுருவம்‌ நக்ஷத்ரங்கள்‌ போல்‌ அழகா யிருக்கிறது. ஆதித்யனைப் போன்ற ஒளியை யுடையவன்‌ என்று முன்‌ சொன்னதில்‌ த்ருப்தி யில்லாமல்‌ கணக்கற்ற நக்ஷத்‌ரங்களைப் போல்‌ அழகியதா யிருக்கிறது உன்‌ சோதி யுருவம்‌ என்று சொல்லப்படுகிறது. சங்க சக்ரங்கள்‌, திவ்யாபரணங்கள்‌, ஹிரண்யவர்ணையான பிராட்டி பீதாம்‌பரம்‌ முதலியவைகளுடன்‌- கூடிய திவ்ய மங்கள விக்ரஹம்‌ நக்ஷத்ரங்களுடன்‌ கூடிய நீல மேகம் போல்‌ விளங்குகிறதன்றோ-“தாரா ரூபாணி த்‌ருஸ்யந்தே யாந்யேதாநி நபஸ் ஸ்தலே மம ரூபாணி தாந்யேவ”[ஆகாயத்தில்‌ காணப்படும்‌ நக்ஷத்ர ரூபங்களெல்லாம்‌ என்னுடைய உருவங்களே.] என்று மஹா பாரதத்தில்‌, ஆரண்ய பர்வத்தில்‌ பகவான்‌ மார்க்கண்டேயரைக்‌ குறித்துச்‌ சொன்ன வசனத்தை அனுஸரித்து நக்ஷத்ரங்கள்‌ பகவானுடைய சரீரங்களே என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. (அச்விநெள வ்யாத்தம்‌) அழகில்‌ மிக்க உம்முடைய திருமுக மண்டலம்‌ அச்வினீ தேவர்கள் போல்‌ விளங்குகிறது. “அழகனே! காப்பிட வாராய்‌”” என்றார்‌ பெரியாழ்வார்‌. கண்டவர்‌ தம்‌ மனம்‌ வழங்கும்‌ அழகுடையவனன்றோ இவன்‌. அச்வினீ தேவர்‌களைக் காட்டிலும்‌ அழகிய உருவமுடையவர்‌ லீலா விபூதியில்‌ இல்‌லாமையால்‌ இவர்கள்‌ உபமானமாகச்‌ சொல்லப் பட்டனர்‌. இவர்‌களும்‌ பகவானுடைய திருமுக மண்டலத்திற்கு ஓப்பாகார்கள்‌.

பட்டரும்‌-ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில்‌ ““விஹரது மயி ரங்கிரணச் சூலிகா ப்‌ரமரக திலகோர்த்‌வ புண்ட்‌ரோஜ்ஜ்வலம்‌ முகம ம்ருத தடாக சந்த்‌ராம்பு,ஜஸ்மர ஹரசுசி முக்‌த,மந்த;ஸ்மிதம்‌’”-[திருமுடி, திரு நெற்றியில்‌ அலையும்‌ திருக் குழல்‌, திலகம்‌, திருமண்‌காப்பு, இவற்றால்‌ பிரகாசிப்பதும்‌, அம்ருத தடாகம்‌, சந்திரன்‌,தாமரைப் பூ, இவற்றின்‌ கர்வத்தைப்‌ போக்கடிப்பதும்‌, வெண்மையான, அழகிய புன் முறுவலை உடையதுமான ஸ்ரீரங்கநாதனுடைய முகம்‌ என்னிடம்‌ விஹாரம்‌ செய்யக் கடவது என்று பகவானுடைய திரு முகத்தை ஓப்பற்றதாக வன்றோ பேசினார் -இதற்கு மேல்‌ வேத புருஷன்‌, இப் புருஷ ஸூக்தத்தை அனுஸந்‌தித்தவர்களுக்கு இஹ லோக புருஷார்த்தங்களையும்‌, பகவத் கைங்கா்‌யத்தையும்‌ கொடுக்கும்படி புருஷோத்தமனைப்‌ பிரார்த்திக்கிறான்‌.-இங்கு கைங்கர்ய ப்ரார்த்தனை செய்யப் படுகிறதென்பது கருணைக் கடலான பெரியவாச்சான் பிள்ளையால்‌ பரந்த ரஹஸ்யத்தில்‌ அருளிச் செய்‌யப்பட்டது. (இஷ்டம்‌ மநிஷாண) இவர்கள்‌ விரும்பின எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ கொடும்‌. இதனால்‌ ப்ரயோஜனாந்தர பரராக மாட்டார்களோ என்ற ஸந்தேஹம்‌ எழுகிறது. புருஷோத்தமனிடம்‌ மற்ற பலன்களை நமக்காக விரும்பினால்‌ ப்ரயோஜனாந்தர பரராவோம்‌. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இவ் வுலகிலுள்ள எல்லா ஸம்ருத்திகளும்‌ உண்டாக வேண்டும்‌ என்று பிரார்த்திப்பது தோஷ மன்று. ஆழ்வார்‌களும்‌ ‘நன் மக்களைப்‌ பெற்று மகிழ்வரே” என்றும்‌, “நல்ல பதத்தால்‌ மனை வாழ்வர்‌ கொண்ட பெண்டிர்‌ மக்களே’” என்றும்‌, “விடுமால்‌ வினை வேண்டிடில்‌ மேலுலகும்‌ எளிதாயிடும்‌ அன்றி இலங்கொளி சேர்‌ கொடு மா கடல்‌ வையகம்‌ ஆண்டு மதிக்குடை மன்னவராய்‌ அடி கூடுவரே'” என்றும்‌ அருளிச் செய்தனரன்றோ.(அமும்‌ மநிஷாண) முன்‌ மந்திரங்களில்‌ சொல்லப்பட்ட கைங்‌கர்யம்‌ ‘அமும்‌’ என்று காட்டப்படுகிறது. நித்யஸூரிகள்‌ செய்யும்‌ கைங்கர்யத்தையும்‌ கொடும்‌; பரம புருஷார்த்தமாகிற பகவதநுபவத்தைக்‌ கொடுப்பீராக. பிராட்டியும்‌ நீருமாயிருக்கிற சேர்த்தியில்‌ அடிமையை அருளுவீராக. (ஸர்வம்‌ மநிஷாண) எல்லாவற்றையும்‌ கொடும்‌. வேண்டிற்றெல்லாம்‌ தருபவனன்றோ தாமோதரன்‌-“சாய் கொண்ட இம்மையும்‌ சாதித்து வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்ளென்று வீடும்‌ தரும்‌ நின்று நின்றே”என்றார்‌ நம்மாழ்வார்‌.

இந்த ருக்கில்‌ அச்யுதனுடைய அன்பெனும்‌ அவியா விளக்கை ஸ்ரீ பூமிகள்‌ தூண்டுகிறார்களென்றும்‌, புருஷோத்தமன்‌ அன்பு மயமானவனென்றும்‌, சோதி வடிவானவனென்றும்‌; அழகமா் சூழொளிய னென்றும்‌ சொல்லப் பட்டது-“ஸர்வம்‌ ஐகந் மம பவேதிதி ஸஞ் சிந்தயந்‌ முநி: த்‌யாயேத்‌ புருஷ ஸூக்தேந ப்ரதி பாத்‌,ய ஜநார்த்தநம்‌ விஷ்ணு: புருஷ ஸூக்தார்த்த, இதீயம்‌ வைதிகீ ஸ்ருதி: புருஷஸ்ய ஹரேஸ்‌ ஸூக்தம்‌ ஸர்‌வ பாப ப்ரணாசநம்‌”[“இவ் வுலகெல்லாம்‌ எனக்காகட்டும்‌” என்று நினைத்துக் கொண்டு, முனியானவன்‌, புருஷ ஸூக்தத்தினால்‌ ஜனார்த்தனனைச்‌ சொல்லி, தியானிக்கக் கடவன்‌.-விஷ்ணுவே புருஷ ஸுூக்தத்தினால்‌ சொல்லப்‌ படுபவனென்று வேதத்தில்‌ உரைக்கப் பட்டது. ஹரியாகிற புருஷ, னுடைய ஸூக்தம்‌ எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கடிப்பது.] என்று கார்க்க செளநக மஹ ரிஷிகளால்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனைச்‌ சொல்லுவதென்று உரைக்கப் பட்டது. போதாயனரும்‌,““அதைநம்‌ ருக்‌,யஜுஸ் ஸாமபி,ஸ்‌ ஸ்துவந்தி த்‌ருவ ஸூக்தம்‌ ஜபித்வா புருஷ ஸூத்தம்‌ ச அந்யாம்ச்ச வைஷ்ணவாந் மந்த்ராந்‌”*(இத்த நாராயணனை, த்ருவ ஸூக்தத்தையும்‌, புருஷ ஸூக்தத்தையும்‌ மற்ற வைஷ்ணவ மந்திரங்களையும்‌ ஜபித்து, ருக் யஜுஸ் ஸாம வேதங்‌களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்கிறார்கள்‌.] என்று விஷ்ணுவினுடைய ஆராதனத்தில்‌ புருஷ ஸூக்த ஜபம்‌ செய்ய விதித்திருக்கிறார்‌.“ஏஷா வைஷ்ணவீ நாம ஸம்ஹிதா, ஏதாம்‌ ப்ரயுஞ்ஜந்‌ விஷ்ணும்‌ ப்ரீணாதி”[இது விஷ்ணுவினுடைய நாம ஸம்ஹிதை; இதை ப்ரயோகிப்பவன்‌
விஷ்ணுவை ப்ரீதி யடையச்‌ செய்கிறான்‌.] என்று ஸாம விதி ப்ராஹ்மணத்தில்‌ சொல்லப் பட்டது. ஆதர்வணத்திலும்‌, கோ பத ப்ராஹமணத்தில்‌, ‘“வைஷ்ணவ்யா புருஷ ஸூக்தம்‌’” என்று உரைக்கப்பட்டது.

புருஷஸ்ய ஹரேஸ் ஸூக்தம்‌ ஸ்வர்க்‌யம்‌ தந்யம்‌ யசஸ்கரம்‌…ஸ்ருதிஷு ப்ரப,லா மந்த்ராஸ்‌ தேஷ்வப்யத்‌,யாத்ம வாதி: தத்ராபி பெளருஷம்‌ ஸூக்தம்‌ ந தஸ்மாத்‌, வித்‌யதே பரம்‌”[புருஷனாகிய ஹரியின்‌ ஸூக்தம்‌ ஸ்வர்க்கத்தைத்‌ தருவது; மேலானது; கீர்த்தியைக்‌ கொடுப்பது. வேதங்களில்‌ மந்த்ரங்கள்‌ மேலானவை? அவைகளிலும்‌ பரமாத்மாவைச்‌ சொல்லுபவை சிறந்‌தவை. அவற்நிலும்‌ புருஷ ஸூக்தம்‌ பெருமை வாய்ந்தது. அதைக்‌ காட்டிலும்‌ மேலானதில்லை.] என்று செளநக ஸ்ம்ருதியில்‌ புருஷ ஸூக்தத்தின்‌ பெருமை பேசப்பட்டது. வியாஸ ஸ்ம்ருதியிலும்‌,“ந விஷ்ண்வாராத நாத்‌ புண்யம்‌ வித்‌யதே கர்ம வைதிகம்‌ . தஸ்மாத,நாதி, மத்‌,யாந்தம்‌ நித்யமாராத,யேத்‌ ஹரிம்‌ தத்‌; விஷ்ணோரிதி மந்த்ரேண ஸுக்தேந பெளருஷேண ச நைதஸ்ய ஸத்‌,ருசோ மந்த்ர: வேதே,ஷூக்தச்‌ சதுர்ஷ்வபி”[விஷ்ணுவை ஆராதிப்பதைக் காட்டிலும்‌ புண்யமான வைதிக கர்மம்‌
கிடையாது. ஆகையால்‌ :*தத்‌; விஷ்ணோ: பரமம்‌ பத;ம்‌’” என்னும்‌ மந்‌திரத்தாலும்‌, புருஷஸூக்தத்தாலும்‌, ஆதி மத்யாந்தமில்லாத ஹரியை தினந்தோறும்‌ ஆராதிக்கக் கடவன்‌. இதற்கு ஸமானமான மந்திரம்‌ நான்கு வேதங்களிலும்‌ சொல்லப் படவில்லை.] என்று உத்கோஷிக்‌ கப்பட்டது. விஷ்ணு ஸ்ம்ருதியிலும்‌, “வாஸுதேவம்‌ ஸமர்ச்சயேத்‌::…[வாஸு தேவனை அர்ச்சனை செய்ய வேண்டியது. ] என்று ஆரம்பித்து“ஏவமப்‌யர்ச்ய து ஜபேத்‌ ஸூக்தம்‌ வை பெள்ருஷம்‌ தத:””[இம்மாதிரி ஆராதித்து புருஷ் ஸூக்தத்தை ஜபிக்க வேண்டியது.] என்று சொல்‌லப்பட்டது. வாதூல ஸூூத்ரத்தில்‌. “யத்ர யத்ர கர்ம ப்ரேஷோ ஜாயதே தத்ர தத்ர புருஷம்‌ த்‌யாயந் புருஷ ஸூக்தம்‌ ஜபே தர்ச்சயேத்‌ பூர்ணத்வாத்‌ புருஷ:”” [கர்ம ப்ரம்சம்‌ உண்டாகும் போது, புருஷனை தியானித்து,புருஷ் ஸூக்தத்தை ஜபித்து ஆராதிக்க வேண்டியது; . பூர்ணானாகை’யால்‌ புருஷனெனப்படுகிறான்‌.] என்று.புருஷ ஸூக்தத்தின்‌ சிறப்பு சொல்லப் பட்டது. இம் மாதிரியாகப்‌ பல்லாயிரக்கணக்கான இடங்‌ களில்‌ புருஷ ஸூக்தத்தில்‌ ப்ரதிபாதிக்கப் படுமவன்‌ நாராயணனே என்று சொல்லப் பட்டிருக்கிறது.

இதிஹாஸ புராணங்களிலும்‌ பல பல விடங்களில்‌. இது பகவத் பரமென்று பேசப் பட்டிருக்கிறது.’ ஸாரமான சிலவற்றை எடுத்துக்‌ காட்டுவோம்‌. : மஹாபாரதத்தில்‌,மோக்ஷதா்மத்தில்‌,“ப;ஹவ: புருஷா ராஜந்‌ உதாஹோ ஏக ஏவது।கோஹ் யத்ர புருஷ: ச்ரேஷ்ட்ட,: கோ வா யோநிரிஹோச்யதே॥”[ப்ராஹ்மணரே! புருஷர்கள்‌ பலரா? அல்லது ஒருவனா?(பலரானால்‌)இவர்களுள்‌ எந்தப்‌ புருஷன்‌ மேலானவன்‌? எவன்‌ மற்றவர்களுக்கு காரணமாயிருப்பவன்‌?] என்று ஜனமேஜயர்‌ வைசம்பாயனரை வினவினார்‌.-வைசம்பாயனரும்‌ தாம்‌ சொல்லப் போகும்‌ விஷயம்‌ அதி ரஹஸ்யமானதாகையால்‌ தன்‌ குருவான வியாஸரை நமஸ்கரித்து,“ப,ஹவ: புருஷா ராஜ்‌ ஸாங்க்‌,ய யோக,விசாரிணாம்‌.। நைத திச்ச,ந்தி புருஷம்‌ ஏகம்‌ குரு குலோத்‌,வஹ।’ பாஹுநாம் புருஷாணாஞ்ச யதை,கோ யோ நிருச்யதே |ததா தம்‌ புருஷ வ்யாக்‌,ரம்‌ வ்யாக்‌,யாஸ்யாமி கு.ணாதி,கம்‌ ॥ இத,ம்‌ புருஷ ஸுக்தம்‌ ஹி ஸர்வ வேதே,ஷு பார்த்திவ | ருதம்‌ ஸத்யம்‌ ச விக்‌,யாதம்‌ ருஷி ஸிம்ஹேந சிந்திதம்‌ |”-(குருகுல ச்ரேஷ்ட்டனான அரசனே! ஞானிகளும்‌. யோகிகளும்‌ புருஷர்‌கள்‌ பலரென்ற நிர்ணயித்திருக்கிறார்கள்‌. ஒரு புருஷன்‌ என்பதை அவர்கள்‌ அங்கீகரிக்க மாட்டார்கள்‌. பல புருஷா்களுக்கும்‌ காரண மானவனும்‌, குணங்களில்‌ சிறந்தவனுமான புருஷ ச்ரேஷ்டனைச்‌ சொல்லுகிறேன்‌. ரிஷி ச்ரேஷ்ட்டரால்‌ ஸாஷாத் கரிக்கப்பட்ட இந்தப்‌ புருஷஸூக்தம்‌ எல்லா வேதங்களாலும்‌ உண்மையை உணர்த்துவது என்று கீர்த்தி பெற்றிருக்கிறது- என்று அத்வைத நிரஸனம்‌ செய்து புருஷ் ஸூக்தமே காரண புருஷனைக்‌ கூறுகிறது என்று உரைத்து,புருஷோத்தமன்‌ யாரென்பதை நிர்ணயம்‌ செய்ய ப்ரஹ்மாவுக்கும்‌ ருத்ரனுக்கும்‌ நடந்ததான பின் வரும்‌ ஸம்பாஷணையைச்‌ சொன்னார்‌:-

முன்‌ ஒரு காலத்தில்‌, பாற்கடலின்‌ நடுவிலுள்ள வைஜயந்த மென்னும்‌ பர்வதத்தில்‌ பிரமன்‌ தவம்‌ செய்து கொண்டிருக்கும்‌ போது, சிவபிரான்‌, ‘தன்‌ தகப்பனான பிரமனை அடி பணிந்து பல புருஷர்களை ஸ்ருஷ்டி செய்யும்‌ நீர்‌ எந்தப் புருஷனை தியானிக்கிறீர்‌? என்று கேட்டார்‌. அதற்கு பிரமன்‌’ஸ்ருணு புத்ர யதரா ஹ்யேஷ புருஷ: சாஸ்வதோவ்யய:…ந ஸ ஸக்யஸ்‌ த்வயா த்‌,ரஷ்டும்‌ மயாந்யைர் வாபி ஸத்தம…மமாந்தராத்மா தவ ச யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஜிதா:…விஸ்வ மூர்த்த, விஸ்வ பு,ஜ: விஸ்வ பாதாஷி நாஸிக:…மஹா புருஷ சப்‌தம்‌ ஸ பிபர்த்யேகஸ்‌ ஸநாதந:…ஸஹி நாராயணோ ஜ்ஜேய: ஸர்வாத்மா புருஷோ ஹி ஸ.””[குழத்தாய்‌! நித்யனானவனும்‌, அழிவற்றவனுமான புருஷனைப் பற்றிக்‌ , கேட்பாயாக.-அவனை உன்னாலும்‌, என்னாலும்‌, எவராலும்‌ காண முடியாது. அவன்‌ உனக்கும்‌ எனக்கும்‌, எல்லோருக்கும்‌ அந்தர்‌யாமி, அவன்‌ முடிகளாயிரம்‌, அடிகளாயிரம்‌, கைகளாயிரம்‌, கண்‌களாயிரமுடையவன்‌. பழைமையான அவனே மஹா புருஷ சப்தத்தை வஹிக்கிறான்‌. அவனை நாராயணனென்று அறிவாயாக;-ஸர்வாந்தர்‌யாமியான அவனன்றோ புருஷன்‌.] என்று புருஷ ஸூக்தத்தால்‌ சொல்லப் படுபவன்‌ பரமாத்மாவான நாராயணனே என்று தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. விஷ்ணு புராணத்தில்‌ துருவன்‌ இவ் விஷயத்தை விளக்கினான்‌. மேலும்‌, ஹரி வம்சத்தில்‌ கைலாஸ யாத்ரையின் போது ருத்ரன்‌, உமையுடன்‌ கூடி யிருந்து கை கூப்பி, பகவானைக் குறித்து,-ஸஹஸ்ர சீர்ஷா புருஷஸ்‌ ஸஹஸ்ராக்ஷஸ்‌ ஸஹஸ்ர பாத்‌ ஸஹஸ்ரோதர பாஹுச்ச ஸஹஸ்ராத்மா திவஸ்பதி:….”முதலிய ஸ்லோகங்களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்ததாலும்‌ புருஷ ஸூக்தம்‌ பேச நின்ற சிவனுக்கு நாயகனான நாராயணனையே சொல்லுகிறதென்று ஸித்திக்கிறது. மோக்ஷதர்மத்தில்‌ முப்பத்து மூன்றாவது’ அத்யாயத்தில்‌ பீஷ்மரை யுதிஷ்டிரன்‌ .-நாராயணம்‌ ஹ்ருஷீகேசம்‌ கோவிந்தம் அபராஜிதம்‌ தத்‌வேந பரத ஸ்ரேஷ்ட்ட, ஸ்ரோதுமிச்ச,ரமி கேஸவம்‌”[பரத குலத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரே! ஐயிக்கப்படாதவனும்‌, கோவிந்தன்‌, ஹ்ருஷீகேசன்‌, கேசவன்‌ என்னும்‌ பெயர்களை யுடையவனுமான நாராயணனை உண்மையாக அறிய விரும்புகிறேன்‌-என்று கேட்க,கேசவோ பரத ஸ்ரேஷ்ட்ட, பகவாநீஸ்வர: ப்ரபு: புருஷஸ்‌ ஸர்வமித்யேவ ஸ்ரூயதே பஹுதா விபு : ப்‌ராஹ்மணாநாம்‌ சதம்‌ ஜ்யேஷ்ட,ம்‌ முகாதஸ்யாஸ்‌ ருஜத் ப்ரபு,:”[பரத ஸ்ரேஷ்ட்டனே! ப்ரபுவும்‌, பகவானுமான கேசவனே ஸர்வேசஸ்வரன்‌, ஸர்வ வ்யாபியான அந்தப்‌ புருஷனே எல்லாமென்று பலவிதமாகச்‌ சொல்லப் படுகிறான்‌. ப்ரபுவான இவனே முகத்திலிருந்து உயர்ந்தவர்களான நூறு ப்ராஹ்மணார்களை ஸ்ருஷ்டித்தான்‌.] முதலிய ஸ்லோகங்களாலும்‌ இவ் விஷயம்‌ நன்கு விளக்கப்பட்டது.-ராமாயணத்திலும்‌, பாகவதத்திலும்‌, கீதையிலும்‌, மற்ற புராணங்‌களிலும்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனையே பரமாத்மா வென்று உத்‌கோஷிக்கிற தென்பது சொல்லப்பட்டது. இதைப்‌ பன்னியுரைக்குங்‌கால்‌ பாரதமாம்‌. ஆதலால்‌ இத்துடன்‌ நிறுத்திக் கொள்கிறோம்‌.

கூரத்தாழ்வான்‌ ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில்‌-*யம்‌ பூத பவ்ய பவதீ சமநீ சமாஹு: அந்தஸ் ஸமுத்‌ர நிலயம்‌ யமநந்தரூபம்‌ யஸ்ய த்ரிலோக ஜநநீ மஹிஷீ ச லக்ஷ்மீ: ஸாக்ஷாத்‌ ஸ ஏவ புருஷோஸி ஸஹஸ்ர மூர்த்தா ஸர்வ ஸ்ருதிஷ்வநுக;தம்‌ ஸ்திரம ப்ரகம்ப்பம்‌ நாராயணாஹ் வயத,ரம்‌ த்‌வமிவாந வத்‌யம்‌ ஸூக்தம்‌ து பெளருஷ மசேஷ ஜகத் பவித்ரம்‌ த்வாமுத்தமம்‌ புருஷமீச முதாஜஹார”[முக் காலங்களிலுள்ள வற்றிற்கு ஈசனென்றும்‌, தனக்கொரு ஈசன் இல்லாதவனென்றும்‌, பாற் கடலில்‌ பள்ளி கொண்டவனென்றும்‌,அபரிமிதமான அவதார ரூபங்களை யுடையவனென்றும்‌, மூவுலகிற்கும்‌ தாயாகிய லக்ஷ்மியைப்‌ பத்னியாக வுடையவனென்றும்‌ சொல்லப்‌ பட்ட நீயே ஆயிரம்‌ தலையை யுடைய புருஷனாகிறாய்‌. உன்னைப்‌ போல்‌, எல்லா ஸ்ருதிகளிலும்‌ உத்கோஷிக்கப் பட்டதும்‌, நிலையானதும்‌, அசைக்க முடியாததும்‌, ‘நாராயணம்‌’ என்ற பெயரை யுடையதும்‌, குற்றமற்றதும்‌, உலகை யெல்லாம்‌ புனிதமடையச் செய்வதுமான புருஷ ஸூக்தம்‌, உன்னையே மேலான புருஷனாகவும்‌, ஈஸ்வரனாகவும்‌ சொல்லிற்று.] எனறு புருஷ ஸூக்தத்தின்‌ பெருமையையயும்‌, பொருளையும்‌ ஸங்க்ரஹித்தார்‌.-பெரியவாச்சான்பிள்ளையும்‌ திருவாய்‌ மொழி வியாக்யானத்தின்‌ கடைசியில்‌ ”ஸ்ரீமானான நாராயணானே ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ என்று இவர்க்குப்‌ பஷமென்னுமிடம்‌ தோற்றிற்று. இவ்வர்த்தம்‌ உபநிஷத்‌ ப்ரஸித்தமும்‌;-அநந்ய பரமான நாராயண அநுவாகத்திலே, நாராயண சப்தத்தாலே ஸர்வாதிகனைச் சொல்லி, ‘ஹ்ரீச்ச தே லக்ஷமீச்ச பத்ந்யெள’*? என்று உத்தர நாராயணத்தே சொல்லிற்று” என்று அருளிச் செய்தார்‌.

இந்தப்‌ புருஷ ஸூக்தத்தில்‌, ஸ்ரீ பூமி நாதனான நாராயணனே பராத் பரனென்றும்‌, அவனே நான்முகளைப்‌ படைத்தானென்றும்‌,அவனே ஸர்வ காரண பூதனென்றும்‌, ஸர்வாந்தர்யாமி யென்றும்‌, லோக ஸம்ரக்ஷணார்த்தம்‌ பல அவதாரங்களைச்‌ செய்தானென்றும்‌, நித்ய விபூதி நாயகனென்றும்‌ நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. புருஷ ஸூக்தம்‌ என்னும்‌ பெயரிலிருந்தே ஸ்தோதாவாகிய ஜிவாத்மா உண்டென்றும்‌, ஸ்தவ ப்ரியனாகிய மஹா புருஷன்‌ உண்டென்றும்‌, ஸ்தோத்ரமும்‌ உண்‌மை யென்றும்‌ உணர்த்தப்படுகிறது. ஜ்ஞாதா,
ஜ்ஜேயம்‌, ஜ்ஞானம்‌ என்னும்‌ மூன்று இல்லை என்று சொல்லும்‌ அத்வைத வாதம்‌ இங்கு ஓப்புக் கொள்ளப் படவில்லை. உலகம்‌ பொய்‌ யென்கிற ப்ரம வாதத்திற்கு, இங்கு விவரமாகச்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி க்ரமத்தில்‌ இடமுண்டோ? பரம புருஷனுக்கு ஆயிரம்‌ கண்‌கள்‌, ஆயிரம்‌ தலைகள்‌ என்றும்‌, ஆதித்ய வர்ணமானவனென்றும்‌, நக்ஷத்ரங்கள் போல்‌ உருவமுடையவனென்றும்‌, அச்வினீ தேவர்கள்‌ போல்‌ அழகானவனென்றும்‌ சொல்லப்பட்டதால்‌ ரூபமில்லை என்னும்‌ வாதம்‌ வீண் வாதமென்று விளங்குகிறது. “சேதனர்கள்‌, நித்யர்‌,முக்தர்‌, பத்தர்‌ என்று மூன்று விதமானவர்களென்றும்‌, மோக்ஷத்தைக்‌ கொடுப்பவன்‌ முகுந்தவனே என்றும்‌ காட்டப்படுகிறது. காலமும்‌ வருங்காலம்‌, நிகழ்காலம்‌, கழிகாலம்‌ என்னும்‌ மூன்று பேதத்தை உடையதென்று தெரிகிறது. புருஷோத்தமனுடைய மஹிமை வாக்குக்‌கும்‌ மனத்திற்கும்‌ எட்டாததென்று அறிவிக்கப்படுகிறது. புருஷோத்தமன்‌ ஸமஸ்த கல்யாண குணங்கள்‌ நிறைந்தவனென்றும்‌, ஹேய குணம்‌ சிறிதும்‌ இல்லாதவனென்றும்‌, ஸுலபமாக ஆராதிக்கத்‌ தக்கவனென்றும்‌ உத்கோஷிக்கப்பட்ட திலிருந்து குண மில்லை என்‌னும்‌ கட்சிக்குக்‌ கொஞ்சமும்‌ இடமில்லை. ப்ரக்ருதிக்கு அப்பாற்‌ பட்டதும்‌, “விஷ்ணோர்‌ யத்‌ பரமம்‌ பதம்‌” என்றும் சொல்லப்பட்டதுமான ஸ்தான விசேஷம்‌ இருக்கிறதென்றும்‌, அதை அடைவதே மோக்ஷமென்றும்‌ விரித்துரைக்கப் பட்டிருக்கிறது. பகவத்‌ கைங்கர்‌யமே பரம புருஷார்த்தமென்றும்‌ அதுவும்‌ இருவருமான சேர்த்தியில்‌ செய்யப் படவேண்டும்‌ என்றும்‌ சொல்லும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்‌தம்‌ ஓப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. விசிஷ்டாத்வைதமே, வேதாந்‌தத்தின்‌ விழுப்பொருள்‌ என்னும்‌ ஸித்தாந்தம்‌ ஸ்தாபிக்கப்பட்டது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே, K. ஸ்ரீ நிவாஸய்யங்கார்‌ ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாராயண ஹ்ருதயமும் ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயமும்-ஸ்ரீ அதர்வ ரஹஸ்யத்தில் உத்தர காண்டம்-

March 5, 2025

ஸ்ரீ நாராயண ஹ்ருதயமும் ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயமும் அதர்வ ரஹஸ்யத்தில் உத்தர காண்டத்தில் பார்க்கவ ரிஷி உபதேசித்த இந்த இரண்டு ஸ்தோத்ரங்களும் மிகவும் சக்திவாய்ந்தவை-இரண்டு ஸ்தோத்ரங்களயும் சேர்த்துத்தான் பாராயணம் செய்யவேண்டும். முதலில் ஸ்ரீ நாராயண ஹ்ருதயம், பிறகு ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயம், பிறகு மறுபடியும் ஸ்ரீ நாராயண ஹ்ருதயம் பாராயணம் செய்யவேண்டும்.

ஸ்ரீ ஹரி:ஓம்

அஸ்ய ஸ்ரீ நாராயண ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
பார்க்கவ ரிஷி: அனுஷ்டுப் ச்சந்த:
லக்ஷ்மி நாராயணோ தேவதா
நாராயண ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:

கர ந்யாஸ:

நாராயண: பரம் ஜ்யோதிரிதி அங்குஷ்டாப்யாம் நம:
நாராயண: பரம் ப்ரஹ்மேதி தர்ஜநீப்யாம் நம:
நாராயண: பரம் தேவ இதி மத்யமாப்யாம் நம:
நாராயண: பரம் தாமேதி அநாமிகாப்யாம் நம:
நாராயண: பரம் தர்ம இதி கனிஷ்டிகாப்யாம் நம:
விஶ்வம் நாராயண இதி கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:

அங்க ந்யாஸ:
நாராயண: பரம் ஜ்யோதிரிதி ஹ்ருதயாய நம:
நாராயண: பரம் ப்ரஹ்மேதி ஶிரஸே ஸ்வாஹா
நாராயண: பரோ தேவ இதி ஶிகாய வௌஷட்
நாராயண: பரம் தாமேதி கவசாய ஹும்
நாராயண: பரோ தர்ம இதி நேத்ராப்யாம் வௌஷட்
விஶ்வம் நாராயண இதி அஸ்த்ராய பட்
பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த:

அத த்யாநம்
உத்யதாதித்ய ஸங்காஶம் பீதவாஸம் சதுர்ப்புஜம்
ஶங்கசக்ர கதாபாணிம் த்யாயேல் லக்ஷ்மீபதிம் ஹரிம்
த்ரைலோக்யாதார சக்ரம் ததுபரி கமடம் தத்ர சாநந்தபோகீ
தந்மத்யே பூமி பத்மாங்குஶ ஶிகர தளம் கர்ணிகாபூத மேரும்
தத்ரத்யம் ஶாந்தமூர்த்திம் மணிமய மகுடம் குண்டலோத் பாஸிதாங்கம்
லக்ஷ்மீ நாராயணாக்யம் ஸரஸிஜ நயநம் ஸந்ததம் சிந்தயாம:

அஸ்யஸ்ரீ நாராயண ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
ப்ரஹ்மா ரிஷி: அனுஷ்டுப் சந்த: நாராயணோ தேவதா
நாராயண ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:

ஓம்
நாராயண: பரம் ஜ்யோதிராத்மா நாராயண: பர:
நாராயண: பரம் ப்ரஹ்ம நாராயண நமோஸ்து தே -1-

நாராயண: பரோ தேவோ தாதா நாராயண: பர:
நாராயண: பரோ தாதா நாராயண
நமோஸ்து தே -2-
நாராயண: பரம் தாம த்யாநம் நாராயண: பர:
நாராயண: பரோ தர்மோ நாராயண நமோஸ்து தே -3-

நாராயண: பரோ தேவோ வித்யா நாராயண: பர:
விஶ்வம் நாராயண: ஸாக்ஷாந் நாராயண நமோஸ்து தே-4-

நாராயணாத் விதிர் ஜாதோ ஜாதா நாராயணாத் பவ:
ஜாதோ நாராயணாதிந்த்ரோ நாராயண நமோஸ்து தே -5-

ரவிர் நாராயணஸ்தேஜ: சந்த்ரோ நாராயணோ மஹ:
வஹ்நிர் நாராயண: ஸாக்ஷாந் நாராயண நமோஸ்து தே -6-

நாராயண உபாஸ்யஸ் ஸ்யாத் குருர் நாராயண: பர:
நாராயண பரோ போதோ நாராயண நமோஸ்து தே -7-

நாராயண: ஃபலம் முக்யம் ஸித்திர் நாராயணஸ் ஸுகம்
ஹரிர் நாராயண: ஶுத்திர் நாராயண நமோஸ்து தே -8-

நிகமாவேதிதாநந்த கல்யாண குண வாரிதே
நாராயண நமஸ்தேஸ்து நரகார்ணவ தாரக -9

ஜந்ம ம்ருத்யு ஜராவ்யாதி பாரதந்த்ர்யாதிபிஸ் ஸதா
தோஷை ரஸ்ப்ருஷ்ட ரூபாய நாராயண நமோஸ்து தே -10-

வேத ஶாஸ்த்ரார்த்த விக்ஞாந ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண நமஸ்தேஸ்து மாமுத்தர பவார்ணவாத் -11

நித்யாநந்த மஹோதார பராத்பர ஜகத்பதே
நாராயண நமஸ்தேஸ்து மோக்ஷஸாம்ராஜ்ய தாயிநே -12

ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்தம் அகிலாத்ம மஹாஶ்ரய
சர்வ பூதாத்மா பூதாத்மந் நாராயண நமோஸ்து தே -13

பாலிதாஶேஷ லோகாய புண்யஶ்ரவண கீர்த்தந
நாராயண நமஸ்தேஸ்து ப்ரளயோதக ஶாயிநே -14

நிரஸ்த ஸர்வதோஷாய பக்த்யாதி குணதாயிநே
நாராயண நமஸ்தேஸ்து த்வாம் விநா ந ஹி மே கதி: -15

தர்மார்த்த காம மோக்ஷாக்ய புருஷார்த்த ப்ரதாயிநே
நாராயண நமஸ்தேஸ்து புநஸ்தேஸ்து நமோ நம: -16-

அத ப்ரார்த்தநா
நாராயண த்வமேவாஸி தஹராக்யே ஹ்ருதி ஸ்தித:
ப்ரேரிதா ப்ரேர்யமாணாநாம் த்வயா ப்ரேரித மாநஸ: -17-

த்வதாஜ்ஞாம் ஶிரஸா க்ருத்வா பஜாமி ஜநபாவநம்
நாநோபாஸந மார்காணாம் பவக்ருத் பாவபோதக: -18

பாவார்த்தக்ருத் பவாதீதோ பவ ஸௌக்யப்ரதோ மம
த்வந்மாயாமோஹிதம் விஶ்வம் த்வயைவ பரிகல்பிதம் -19-

த்வதிஷ்டாந மாத்ரேண ஸா வை ஸர்வார்த்தகாரிணீ
த்வமேவ தாம் புரஸ்க்ருத்ய மம காமாந் ஸமர்த்தய -20-

ந மே த்வதந்யஸ் த்ராதாஸ்தி த்வதந்யந் ந ஹி தைவதம்
த்வதந்யம் ந ஹி ஜாநாமி பாலகம் புண்யவர்த்தநம் -21

யாவத் ஸாம்ஸாரிகோ பாவோ மநஸ்தோ பாவநாத்மக:
தாவத் ஸித்திர் பவேஸ் ஸாத்யா ஸர்வதா ஸர்வதா விபோ -22

பாபிநாமஹ மேகாக்ரோ தயாலூநாம் த்வமக்ரணீ:
தயநீயோ மதந்யோஸ்தி தவ கோத்ர ஜகத்த்ரயே -23

த்வயாஹம் நைவ ஸ்ருஷ்டஶ்சேத் ந ஸ்வாத் தவ தயாலுதா
ஆமயோ வா ந ஸ்ருஷ்டஶ்சேத் ஔஷதஸ்ய வ்ருதோதய: -24-

பாபஸங்க பரிஶ்ராந்த: பாபாத்மா பாபரூபத்ருக்
த்வதந்ய: கோத்ர பாபேப்யோ: த்ராதாஸ்தி ஜகதீதலே -25

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துஶ்ச ஸகா த்வமேவ
த்வமேவ ஸேவ்யஶ்ச குருர் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ -26

ப்ரார்த்தநா தஶகம் சைவ மூலாஷ்டக மத: பரம்
ய: படேத் ஶ்ருணுயாந்நித்யம் தஸ்ய லக்ஷ்மீ: ஸ்திரா பவேத் -27-

நாராயணஸ்ய ஹ்ருதயம் ஸர்வாபீஷ்ட பலப்ரதம்
லக்ஷ்மீ ஹ்ருதயகம் ஸ்தோத்ரம் யதி சைதத் விநாக்ருதம் -28

தத் ஸர்வம் நிஷ்பலம் ப்ரோக்தம் லக்ஷ்மீ: க்ருத்யதி ஸர்வதா
ஏதத் ஸங்கலிதம் ஸ்தோத்ரம் ஸர்வாபீஷ்ட பலப்ரதம் -29-

ஜபேத் ஸங்கலிதம் க்ருத்வா ஸர்வாபீஷ்ட மவாப்நுயாத்
நாராயணஸ்ய ஹ்ருதய மாதௌ ஜப்த்வா தத: பரம் -30-

லக்ஷ்மீ ஹ்ருதயகம் ஸ்தோத்ரம் ஜபேந் நாராயணம் புந:
புநர் நாராயணம் ஜப்த்வா புநர் லக்ஷ்மீநுதிம் ஜபேத் -31-

தத்வத் ஹோமாதிகம் குர்யாத் ஏதத் ஸங்கலிதம் ஶுபம்
ஏவம் மத்யே த்விவாரேண ஜபேத் ஸங்கலிதம் ஶுபம் -32-

லக்ஷ்மீ ஹ்ருதயகே ஸ்தோத்ரே ஸர்வமந்யத் ப்ரகாஶிதம்
ஸர்வாந் காமா நவாப்நோதி ஆதிவ்யாதிபயம் ஹரேத் -33-

கோப்யமேதத் ஸதா குர்யாத் ந ஸர்வத்ர ப்ரகாஶயேத்
இதி குஹ்யதமம் ஶாஸ்த்ரம் ப்ரோக்தம் ப்ரஹ்மாதிபி: புரா -34-

லக்ஷ்மீ ஹ்ருதய ந ப்ரோக்தேந விதிநா ஸாதயேத் ஸுதீ:
தஸ்மாத் ஸர்வப்ரயத்நேந ஸாதயேத் கோபயேத் ஸுதீ: -35

யத்ரைதத் புஸ்தகம் திஷ்டேத் லக்ஷ்மீ நாராயணாத்மகம்
பூதபைஶாச வேதாள பயம் நைவ து ஸர்வதா -36

ப்ருகுவாரே ததா ராத்ரௌ பூஜயேத் புஸ்தக த்வயம்
ஸர்வதா ஸர்வதா ஸ்துத்யம் கோபயேத் ஸாதயேத் ஸுதீ: -37

கோபநாத் ஸாநால் லோகே ந்யோ வதி தத்வத:

இதி அதர்வ ரஹஸ்யே உத்தரபாகே நாராயணஹ்ருயம்

ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயம்

ஸ்ரீ ஹரி:ஓம்
அஸ்ய ஸ்ரீ ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
பார்க்கவ ரிஷி: அனுஷ்டுபாதி நாநாச்சந்தாம்ஸி ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித நாராயணோ தேவதா
ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி: ஐம் கீலகம்
ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

ஓம்
“ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ தேவதாயை நம:” ஹ்ருதயே
“ஸ்ரீம் பீஜாயை நம:” குஹ்யே
“ஹ்ரீம் ஶக்த்யை நம:” பாதயோ:
“ஐம் பலாய நம:” மூர்த்தாதி பாதபர்யந்தம் விந்யஸேத்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கரதல கரபார்ஶ்வயோ:
ஸ்ரீம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:
ஐம் மத்யமாப்யாம் நம:
ஸ்ரீம் அநாமிகாப்யாம் நம:
ஹ்ரீம் கநிஷ்டிகாப்யாம் நம:
ஐம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:
ஸ்ரீம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் ஶிரஸே ஸ்வாஹா
ஐம் ஶிகாயை வௌஷட்
ஸ்ரீம் கவசாய ஹும்
ஹ்ரீம் நேத்ராப்யாம் வௌஷட்
ஐம் அஸ்த்ராய பட்
பூர்ப்புவஸ்ஸுவரோம் இதி திக்பந்த:

அத த்யாநம்
ஹஸ்தத்வயேந கமலே தாரயந்தீம் ஸ்வலீலயா
ஹார நூபுர ஸம்யுக்தாம் மஹாலக்ஷ்மீம் விசிந்தயேத் -1-

கௌஶேய பீதவஸநா மரவிந்த நேத்ராம்
பத்மத்வயாபவ வரோத்யத பத்மஹஸ்தாம்
உத்யச்சதார்க ஸத்ருஶாம் பரமாங்க ஸம்ஸ்தாம்
த்யாயேத் விதீஶ நத பாதயுகாம் ஜநித்ரீம்–2-

ஸ்ரீலக்ஷ்மீ கமலதாரிண்யை ஸிம்ஹ வாஹிந்யை ஸ்வாஹா
பீத வஸ்த்ராம் ஸுவர்ணாங்கீம் பத்ம ஹஸ்த த்வயாந்விதாம்
லக்ஷ்மீம் த்யாத்வேதி மந்த்ரேண ஸ பவேத் ப்ருதிவீபதீ: -3-

மாதுலுங்க கதா கேடே பாணௌ பாத்ரஞ்ச பிப்ரதீ
வாகலிங்கஞ்ச மாநஞ்ச பிப்ரதீ ந்ருபமூர்த்தநி -4-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
வந்தே லக்ஷ்மீம் பரஶிவமயீம் ஸுத்த ஜாம்பூநதாபாம்
தேஜோ ரூபாம் கநக வஸநாம் ஸர்வ பூஷோஜ்வலாங்கீம்
பீஜாபூரம் கநககலஶம் ஹேமபத்மம் ததாநாம்
ஆத்யாம் ஶக்திம் ஸகலஜநநீம் ஸர்வமாங்கல்ய யுக்தாம் -1-

ஸ்ரீமத் ஸௌபாக்யஜநநீம் ஸ்தௌமி லக்ஷ்மீம் ஸநாதநீம்
ஸர்வகாம பலாவாப்தி ஸாதநைக ஸுகாவஹாம் -2-

ஸ்மராமி நித்யம் தேவேஶி த்வயா ப்ரேரித மாநஸ:
த்வதாஜ்ஞாம் ஶிரஸா த்ருத்வா பஜாமி பரமேஶ்வரீம் -3-

ஸமஸ்த ஸம்பத்ஸுகதாம் மஹாஶ்ரியம்
ஸமஸ்த கல்யாணகரீம் மஹாஶ்ரியம்
ஸமஸ்த ஸௌபாக்யகரீம் மஹாஶ்ரியம்
பஜாம்யஹம் ஜ்ஞாநகரீம் மஹாஶ்ரியம் -4-

விஜ்ஞாந ஸம்பத் ஸுகதாம் மஹாஶ்ரியம்
விசித்ர வாக்பூதி கரீம் மநோரமாம்
அநந்த ஸௌபாக்ய ஸுக ப்ரதாயிநீம்
நமாம்யஹம் பூதிகரீம் ஹரி ப்ரியாம் -5-

ஸமஸ்தபூதாந்தர ஸம்ஸ்திதா த்வம்
ஸமஸ்த பக்தேஶ்வரி விஶ்வ ரூபே
தந்நாஸ்தி யத் பவேத் வ்யதிரிக்த வஸ்து
த்வத் பாத பத்மம் ப்ரணமாம் யஹம் ஸ்ரீ: -6-

தாரித்ர்ய துக்கௌக தமோநிஹந்த்ரி
த்வத்பாதபத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ
தீநார்தி விச்சேதந ஹேதுபூதை:
க்ருபா கடாக்ஷை ரபிஷிஞ்ச மாம் ஸ்ரீ: -7-

விஷ்ணு ஸ்துதி பராம் லக்ஷ்மீம் ஸ்வர்ண வர்ண ஸ்துதி ப்ரியாம்
வரதாபயதாம் தேவீம் வந்தே த்வாம் கமலேக்ஷணே -8-

அம்ப ப்ரஸீத கருணா பரிபூர்ணத்ருஷ்ட்யா
மாம் த்வத்க்ருபா த்ரவிணகேஹமிமம் குருஷ்வ
ஆலோக்ய ப்ரணதஹ்ருத்கத ஶோக ஹந்த்ரீ
த்வத் பாத பத்ம யுகளம் ப்ரணமாம் யஹம் ஸ்ரீ: -9-

ஶாந்த்யை நமோஸ்து ஶரணாகத ரக்ஷணாயை
காந்த்யை நமோஸ்து கமநீய குணாஶ்ரயாயை
க்ஷாந்த்யை நமோஸ்து துரிதக்ஷய காரணாய
தாத்ர்யை நமோஸ்து தநதாந்ய ஸம்ருத்திதாயை -10-

ஶக்த்யை நமோஸ்து ஶஶிஶேகர ஸம்ஸ்த்திதாயை
ரத்யை நமோஸ்து ரஜநீகர ஸோதராயை
பக்த்யை நமோஸ்து பவஸாகர தாரகாயை
மத்யை நமோஸ்து மதுஸூதந வல்லபாயை–11-

லக்ஷ்ம்யை நமோஸ்து ஶுபலக்ஷண லக்ஷிதாயை
ஸித்த்யை நமோஸ்து ஸுரஸித்த ஸுபூஜிதாய
த்ருத்யை நமோஸ்து மம துர்கதி பஞ்ஜநாயை
கத்யை நமோஸ்து வரஸத்கதி தாயகாயை–12-

தேவ்யை நமோஸ்து திவி தேவ கணார்ச்சிதாயை
பூத்யை நமோஸ்து புவநார்த்தி விநாஶநாயை
ஶாந்த்யை நமோஸ்து தரணீதர வல்லபாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வத்ஸலாயை -13

ஸுதீவ்ர தாரித்ர்ய தமோபஹந்த்ர்யை
நமோஸ்து தே ஸர்வ பயாபஹந்த்ர்யை
ஸ்ரீவிஷ்ணு வக்ஷஸ்தல ஸம்ஸ்த்திதாயை
நமோ நம: ஸர்வ விபூதிதாயை –14-

ஜயது ஜயது லக்ஷ்மீர் லக்ஷணாலங்க்ருதாங்கீ
ஜயது ஜயது பத்மா பத்ம ஸத்மாபிவந்த்யா
ஜயது ஜயது வித்யா விஷ்ணுவாமாங்க ஸம்ஸ்த்தா
ஜயது ஜயது ஸம்யக் ஸர்வ ஸம்பத்கர ஸ்ரீ: 15

ஜயது ஜயது தேவீ தேவஸங்காபிபூஜ்யா
ஜயது ஜயது பத்ரா பார்கவீ பாக்யரூபா
ஜயது ஜயது நித்யா நிர்மலஜ்ஞாந வேத்யா
ஜயது ஜயது ஸத்யா ஸர்வபூதாந்தரஸ்த்தா–16-

ஜயது ஜயது ரம்யா ரத்நகர்ப்பாந்தரஸ்தா
ஜயது ஜயது ஶுத்தா ஶுத்தஜாம்பூநதாபா
ஜயது ஜயது காந்தா காந்திமத் பாஸிதாங்கீ
ஜயது ஜயது ஶாந்தா ஶீக்ரமாகச்ச ஸௌம்யே –17-

யஸ்யா: கலாயா: கமலோத்பவாத்யா
ருத்ராஶ்ச ஶக்ரப்ரமுகாஶ்ச தேவா:
ஜீவந்தி ஸர்வேபி ஸஶக்தயஸ்தே
ப்ரபுத்வமாப்தா: பரமாயுஷஸ் தே –18-

முகபீஜம்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் அம் ஆம் யம் தும்(dhum) லம் வம்
லிலேக நிடிலே விதிர் மம லிபிம் விஸ்ருஜ்யாந்தரம்
த்வயா விலிகிதவ்ய மேததிதி தத்பலப்ராப்தயே
ததந்திக பலஸ்புடம் கமலாவாஸிநி ஸ்ரீரிமாம்
ஸமர்ப்பய ஸமுத்ரிகாம் ஸகலபாக்ய ஸம்ஸூசிகாம் -19-

பாதபீஜம்
ஓம் அம் ஆம் ஈம் ஏம் ஐம் கம்(kam) லம் ரம்
கலயா தே யதா தேவி ஜீவந்தி ஸசராசரா:
ததா ஸம்பத்கரீ லக்ஷ்மி ஸர்வதா ஸம்ப்ரஸீத மே -20-

யதா விஷ்ணுர் த்ருவம் நித்யம் ஸ்வகலாம் ஸந்யவேஶயத்
ததைவ ஸ்வகலாம் லக்ஷ்மி மயி ஸம்யக் ஸமர்ப்பய -21

ஸத்வ ஸௌக்யப்ரதே தேவி பக்தாநா மபயப்ரதே
அசலாம் குரு யத்நேந கலாம் மயி நிவேஶிதாம் –22

முதாஸ்தாம் மத்பாலே பரமபத லக்ஷ்மீ: ஸ்புடகலா
ஸதா வைகுண்ட ஸ்ரீர் நிவஸது கலா மே நயநயோ:
வஸேத் ஸத்யே லோகே மம வசஸி லக்ஷ்மீர் வரகலா
ஶ்ரிய: ஶ்வேதத்வீபே நிவஸது கலா மே ஸ்வகரயோ: -23

நேத்ரபீஜம்
ஓம் க்ராம்(ghraam) க்ரீம்(ghreem) க்ரேம் (ghrEm) க்ரைம்(ghraim) க்ரோம்(ghrom) க்ரௌம்(ghroum) க்ரம்(ghram) க்ர: (ghra:)
தாவந்நித்யம் மமாங்கேஷு க்ஷீராப்தௌ ஸ்ரீகலா வஸேத்
ஸூர்யா சந்த்ரமஸௌ யாவத் தாவல்லக்ஷ்மீபதி ஶ்ரியௌ –24

ஸர்வமங்கள ஸம்பூர்ணா ஸர்வைஶ்வர்ய ஸமந்விதா
ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மீ: த்வத்கலா மயி திஷ்ட்டது-25-

அஜ்ஞாந திமிரம் ஹந்தும் ஶுத்தஜ்ஞாந ப்ரகாஶிகா
ஸர்வைஶ்வர்யப்ரதா மேஸ்து த்வத்கலா மயி ஸம்ஸ்த்திதா –26-

அலக்ஷ்மீம் ஹரது க்ஷிப்ரம் தம: ஸூர்யப்ரபா யதா
விதநோது மம ஶ்ரேய: த்வத்கலா மயி ஸம்ஸ்த்திதா –27-

ஐஶ்வர்ய மங்களோத்பத்திஸ் த்வத்கலாயாம் நிதீயதே
மயி தஸ்மாத் க்ருதார்த்தோஸ்மி பாரமஸ்மி ஸ்திதேஸ் தவ -28-

பவதாவேஶ பாக்யார்ஹோ பாக்யவாநஸ்மி பார்கவி
த்வத் ப்ரஸாதாத் பவித்ரோஹம் லோக மாதர் நமோஸ்து தே –29-

புநாஸி மாம் த்வத்கலயைவ யஸ்மாத்
அதஸ் ஸமாகசச் மமாக்ரதஸ் த்வம்
பரம் பதம் ஸ்ரீர் பவ ஸுப்ரஸந்நா
மய்யச்யுதேந ப்ரவிசாதி லக்ஷ்மீ:–30-

ஸ்ரீவைகுண்டஸ்திதே லக்ஷ்மீ ஸமாகச்ச மமாக்ரத:
நாராயணேந ஸஹ மாம் க்ருபாத்ருஷ்ட்யா வலோகய: -31-

ஸ்ரீவைகுண்டஸ்திதே லக்ஷ்மி ஸமாகச்ச ஸந்நிதிம்
வாஸுதேவேந ஸஹிதா ப்ரஸீத வரதா பவ-32-

ஶ்வேதத்வீபஸ்திதே லக்ஷ்மி ஶீக்ரமாகச்ச ஸுவ்ரதே
விஷ்ணுநா ஸஹிதா தேவி ஜகந்மாத: ப்ரஸீத மே -33

க்ஷீராம்புதிஸ்திதே லக்ஷ்மி ஸமாகச்ச ஸமாதவே
த்வத் க்ருபா த்ருஷ்டி ஸுதயா ஸததம் மாம் விலோகய -34-

ரத்நகர்ப்பஸ்திதே லக்ஷ்மி பரிபூர்ண ஹிரண்மயி
ஸமாகச்ச ஸமாகச்ச ஸ்தித்வாஶு புரதோ மம -35-

ஸ்திரா பவ மஹாலக்ஷ்மி நிஶ்சலா பவ நிர்மலே
ப்ரஸந்ந கமலே தேவி ப்ரஸந்ந ஹ்ருதயா பவ -36-

ஸ்ரீதரே ஸ்ரீமஹாலக்ஷ்மி த்வதந்தஸ்தம் மஹாநிதிம்
ஶீக்ரமுத்த்ருத்ய புரத: ப்ரதர்ஶய ஸமர்ப்பய-37-

வஸுந்தரே ஸ்ரீவஸுதே வஸுதோக்த்ரி க்ருபாமயி
த்வத்குக்ஷிகத ஸர்வஸ்வம் ஶீக்ரம் மே ஸம்ப்ரதர்ஶய-38-

விஷ்ணு ப்ரியே ரத்ந கர்ப்பே ஸமஸ்த பலதே ஶிவே
த்வத் கர்ப்பகத ஹேமாதீந் ஸம்ப்ரதர்ஶய தர்ஶய -39-

ரஸாதலகதே லக்ஷ்மி ஶீக்ர மாகச்ச மே புர:
ந ஜாநே பரமம் ரூபம் மாதர் மே ஸம்ப்ரதர்ஶய -40-

ஆவிர்ப்பவ மநோவேகாத் ஶீக்ரமாகச்ச மே புர:
மா வத்ஸ பைரிஹேத்யுக்த்வா காமங்கௌரிவ ரக்ஷ மாம் –41-

தேவி ஶீக்ரம் மமாகச்ச தரணீ கர்ப்ப ஸம்ஸ்த்திதே
மாதஸ்த்வத் ப்ருத்ய ப்ருத்யோஹம் ம்ருகயே த்வாம் குதூஹலாத்-42

உத்திஷ்ட ஜாக்ருஹி மயி ஸமுத்திஷ்ட்ட ஸுஜாக்ருஹி
அக்ஷய்யாந் ஹேமகலஸாந் ஸுவர்ணேந ஸுபூரிதாந் -43-

நிக்ஷேபாந் மே ஸமாக்ருஷ்ய ஸமுத்த்ருத்ய மமாக்ரத:
ஸமுந்நதாநநா பூத்வா ஸம்யக் தேஹி தராதலாத் -44-

மத் ஸந்நிதிம் ஸமாகச்ச மதாஹித க்ருபா ரஸா
ப்ரஸீத ஶ்ரேயஸாம் தோக்த்ரீ லக்ஷ்மீர் மே நயநாக்ரத: -45-

அத்ரோபவிஶ்ய லக்ஷ்மி த்வம் ஸ்த்திரா பவ ஹிரண்மயீ
ஸுஸ்த்திரா பவ ஸம்ப்ரீத்யா ப்ரஸந்நா வரதா பவ -46-

ஆநீதாம்ஸ்து த்வயா தேவி நிதீந் வை ஸம்ப்ரதர்ஶய
அத்ய க்ஷணேந ஸஹஸா தத்வா ஸம்ரக்ஷ மாம் ஸதா -47-

மயி திஷ்ட்ட ததாநித்யம் யதேந்த்ராதிஷு திஷ்ட்டஸி
அபயம் குரு மே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்து தே-48-

ஸமாகச்ச மஹாலக்ஷ்மி ஶுத்த ஜாம்பூநத ஸ்த்திதே
ப்ரஸீத புரத: ஸ்த்தித்வா ப்ரணதம் மாம் விலோகய –49-

லக்ஷ்மீர் புவங்கதா பாஸி யத்ர யத்ர ஹிரண்மயீ
தத்ர தத்ர ஸ்த்திதா த்வம் மே தவ ரூபம் ப்ரதர்ஶய – 50-

க்ரீடந்தீ பஹுதா பூமௌ பரிபூர்ண க்ருபாமயி
மம மூர்த்தநி தே ஹஸ்தம் அவிலம்பித மர்ப்பய -51-

பலபாக்யோதயே லக்ஷ்மி ஸமஸ்த புர வாஸிநி
ப்ரஸீத மே மஹாலக்ஷ்மி பரிபூர்ண மநோரதே -52-

அயோத்யாதிஷு ஸர்வேஷு நகரேஷு ஸமாஸ்த்திதே
வைபவைர் விவிதைர் யுக்தை: ஸமாகச்ச முதாந்விதே -53-

ஸமாகச்ச ஸமாகச்ச மமாக்ரே பவ ஸுஸ்த்திரா
கருணாரஸ நிஷ்யந்த நேத்ர த்வய விலாஸிநி -54-

ஸந்நிதத்ஸ்வ மஹாலக்ஷ்மி த்வத்பாணிம் மம மஸ்தகே
கருணாஸுதயா மாம் த்வம் அபிஷிச்ய ஸ்த்திரம் குரு–55-

ஸர்வ ராஜக்ருஹே லக்ஷ்மி ஸமாகச்ச பலாந்விதே
ஸ்த்தித்வாஶு புரதோ மேத்ய ப்ரஸாதேநாபயம் குரு –56-

ஸாதரம் மஸ்தகே ஹஸ்தம் மம த்வம் க்ருபயார்ப்பய
ஸர்வராஜஸ்த்திதே லக்ஷ்மி த்வத்கலா மயி திஷ்டது -57-

ஆத்யாதி ஸ்ரீமஹாலக்ஷ்மி விஷ்ணு வாமாங்க ஸம்ஸ்த்திதே
ப்ரத்யக்ஷம் குரு மே ரூபம் ரக்ஷ மாம் ஶரணாகதம் -58-

ப்ரஸீத மே மஹாலக்ஷ்மி ஸுப்ரஸீத மஹாஶிவே
அசலா பவ ஸுப்ரீதா ஸுஸ்திரா பவ மத்க்ருஹே -59-

யாவத் திஷ்ட்டந்தி வேதாஶ்ச யாவச்சந்த்ர திவாகரௌ
யாவத் விஷ்ணுஶ்ச யாவத் த்வம் தாவத் குரு க்ருபாம் மயி -60-

சாந்த்ரீ கலா யதா ஶுக்லே வர்த்ததே ஸா திநே திநே
ததா தயா தே மய்யேவ வர்த்ததா மபிவர்த்ததாம் -61-

யதா வைகுண்ட நகரே யதா வை க்ஷீர ஸாகரே
ததா மத்பவநே திஷ்ட்ட ஸ்த்திரம் ஸ்ரீவிஷ்ணுநா ஸஹ -62-

யோகிநாம் ஹ்ருதயே நித்யம் யதா திஷ்டஸி விஷ்ணுநா
ததா மத்பவநே திஷ்ட்ட ஸ்த்திரம் ஸ்ரீவிஷ்ணுநா ஸஹ -63-

நாராயணஸ்ய ஹ்ருதயே பவதீ யதாஸ்தே
நாராயணோபி தவ ஹ்ருத்கமலே யதாஸ்தே
நாராயணஸ்த்வமபி நித்ய விபூ ததைவ
தௌ திஷ்ட்ட்தாம் ஹ்ருதி மமாபி தயாந்விதௌ ஸ்ரீ: -64-

விஜ்ஞாந வ்ருத்திம் ஹ்ருதயே குரு ஸ்ரீ:
ஸௌபாக்ய வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
தயா ஸுவ்ருஷ்டிம் குருதாம் மயி ஸ்ரீ:
ஸுவர்ண வ்ருஷ்டிம் குரு மே கரே ஸ்ரீ: –65

ந மாம் த்யஜேதா: ஶ்ரித கல்பவல்லி
ஸத் பக்தி சிந்தாமணி காமதேநோ
ந மாம் த்யஜேதா பவ ஸுப்ரஸந்நே
க்ருஹே களத்ரேஷு ச புத்ரவர்கே –66-

குக்ஷிபீஜம்
ஓம் அம் ஆம் ஈம் ஏம் ஐம்
ஆத்யாதி மாயே த்வமஜாண்ட பீஜம்
த்வமேவ ஸாகார நிராக்ருதீ த்வம்
த்வயா த்ருதாஶ்சாப்ஜ பவாண்ட ஸங்கா:
சித்ரம் சரித்ரம் தவ தேவி விஷ்ணோ: –67-

ப்ரஹ்மருத்ராதயோ தேவா வேதாஶ்சாபி ந ஶக்நுயு:
மஹிமாநம் தவ ஸ்தோதும் மந்தோஹம் ஶக்நுயாம் கதம் -68-

அம்ப த்வத்வத்ஸ வாக்யாநி ஸூக்தாஸூக்தாநி யாநிச
தாநி ஸ்வீகுரு ஸர்வஜ்ஞே தயாலுத்வேந ஸாதரம் -69-

பவந்தம் ஶரணம் கத்வா க்ருதார்த்தா: ஸ்யு: புராதநா:
இதி ஸஞ்சிந்த்ய மநஸா த்வாமஹம் ஶரணம் வ்ரஜே –70-

அநந்தா நித்ய ஸுகிந: த்வத பக்தாஸ் த்வத்பராயணா:
இதி வேதப்ரமாணாத்தி தேவி த்வாம் ஶரணம் வ்ரஜே -71-

தவ ப்ரதிஜ்ஞா மத்பக்தா ந நஶ்யந்தீத்யபி க்வசித்
இதி ஸஞ்சிந்த்ய ஸஞ்சிந்த்ய ப்ராணாந் ஸந்தாரயாம்யஹம் -72-

த்வததீநஸ்த்வஹம் மாத: த்வத்க்ருபயா மயி வித்யதே
யாவத் ஸம்பூர்ண காம: ஸ்யாம் தாவத் தேஹி தயாநிதே -73-

க்ஷணமாத்ரம் ந ஶக்நோமி ஜீவிதும் த்வத்க்ருபாம் விநா
நஹி ஜீவந்தி ஜலஜா ஜலம் த்யக்த்வா ஜலாஶ்ரயா: -74-

யதா ஹி புத்ரவாத்ஸல்யாத் ஜநநீ ப்ரஸ்நுத ஸ்தநீ
வத்ஸம் த்வரிதமாகத்ய ஸம்ப்ரீணயதி வத்ஸலா -75-

யதி ஸ்யாத் தவ புத்ரோஹம் மாதா த்வம் யதி மாமகீ
தயாபயோதர ஸ்தந்ய ஸுதாபி ரபிஷிஞ்ச மாம் -76-

ம்ருக்யோ ந குணலேஶோபி மயி தோஷைக மந்திரே
பாம்ஸூநாம் வ்ருஷ்டிபிந்தூநாம் தோஷாணாஞ்ச ந மே மதி:-77-

பாபிநா மஹமேகாக்ரோ தயாலூநாம் த்வமக்ரணீ:
தயநீயோ மதந்யோஸ்தி தவ கோத்ர ஜகத்த்ரயே -78-

விதிநாஹம் ந ஸ்ருஷ்டஶ்சேத் ந ஸ்யாத் தவ தயாலுதா
ஆமயோ வா ந ஸ்ருஷ்டஶ்சேத் ஔஷதஸ்ய வ்ருதோதய: -79-

க்ருபா மதக்ரஜா கிம் தே அஹம் கிம் வா ததக்ரஜ:
விசார்ய தேஹி மே வித்தம் தவ தேவி தயாநிதே -80-

மாதா பிதா த்வம் குரு ஸத்கதி: ஸ்ரீ: த்வமேவ ஸஞ்ஜீவந ஹேதுபூதா
அந்யம் ந மந்யே ஜகதேக நாதே த்வமேவ ஸர்வம் மம தேவி ஸத்யம்–81-

ஹ்ருதயபீஜம்
ஓம் க்ராம்(ghraam) க்ரீம்(ghreem) க்ரூம் (ghEm) க்ரைம்(ghraim) க்ரௌம்(ghroum) க்ர: (ghra:)
ஹும்பட் குரு குரு ஸ்வாஹா
ஆத்யாதி லக்ஷ்மீர் பவ ஸுப்ரஸந்நா
விஶுத்த விஜ்ஞாந ஸுகைக தோக்த்ரி
அஜ்ஞாந ஹந்த்ரீ த்ரிகுணாதிரிக்தா
ப்ரஜ்ஞாந நேத்ரீ பவ ஸுப்ரஸந்நா -82-

அஶேஷ வாக்ஜாட்ய மலாபஹந்த்ரீ
நவம் நவம் ஸுஷ்டுஸுவாக்ய தாயிநீ
மமைவ ஜிஹ்வாக்ர ஸுரங்க வர்த்திநீ
பவ ப்ரஸந்நா வதநே ச மே ஸ்ரீ: -83-

ஸமஸ்த ஸம்பத்ஸு விராஜமாநா
ஸமஸ்த தேஜஸ்ஸு விபாஸமாநா
விஷ்ணு ப்ரியே த்வம் பவ தீப்யமாநா
வாக்தேவதா மே வதநே ப்ரஸந்நா -84-

ஸர்வ ப்ரதர்ஶே ஸகலார்த்ததே த்வம்
ப்ரபாஸுலாவண்ய தயாப்ரதோக்த்ரி
ஸுவர்ணதே த்வம் ஸுமுகீ பவ ஸ்ரீ:
ஹிரண்மயீ மே நயநே ப்ரஸந்நா -85-

ஸர்வார்த்ததா ஸர்வ ஜகத் ப்ரஸூதி:
ஸர்வேஶ்வரீ ஸர்வ பயாபஹந்த்ரீ
ஸர்வோந்நதா த்வம் ஸுமுகீ ச ந: ஸ்ரீ:
ஹிரண்மயீ மே பவ ஸுப்ரஸந்நா -86-

ஸமஸ்த விக்நௌக விநாஶ காரிணீ
ஸமஸ்த பக்தோத்தரணே விசக்ஷணா
அநந்த ஸம்மோத ஸுக ப்ரதாயிநீ
ஹிரண்மயீ மே நயநே ப்ரஸந்நா -87-

தேவி ப்ரஸீத தயநீயதமாய மஹ்யம்
தேவாதிநாத பவ தேவகணாதி வந்த்யே
மாதஸ் ததைவ பவ ஸந்நிஹிதா த்ருஶோர் மே
பத்யா ஸமம் மம முகே பவ ஸுப்ரஸந்நா -88-

மா வத்ஸ பை ரபயதாந கரோர்ப்பிதஸ் தே
மௌளௌ மமேதி மயி தீநஜநாநுகம்பே
மாதஸ் ஸமர்ப்பய முதா கருணாகடாக்ஷம்
மாங்கள்ய பீஜமிஹ ந: ஸ்ருஜ ஜந்ம மாத: -89

கண்ட்ட (kantta) பீஜம்
ஓம் ஶ்ராம் ஸ்ரீம் ஶ்ரூம் ஶ்ரைம் ஶ்ரௌம் ஶ்ரம் ஶ்ரா:
கடாக்ஷ இஹ காமதுக் தவ மநஸ்து சிந்தாமணி:
கரஸ் ஸுரதரு: ஸதா நவநிதிஸ் த்வமேவேந்திரே
பவேத் தவ தயாரஸோ ரஸரஸாயநம் சாந்வஹம்
முகம் தவ கலாநிதிர் விவித வாஞ்சிதார்த்த ப்ரதம் -90-

யதா ரஸஸ்பர்ஶ நதோ(அ)யஸோபி
ஸுவர்ணதா ஸ்யாத் கமலே ததா தே
கடாக்ஷ ஸம்ஸ்பர்ஶ நதோ ஜநாநாம்
அமங்களாநாமபி மங்களத்வம் -91-

தேஹீதி நாஸ்தீதி வச: ப்ரவேஶாத்
பீதோ ரமே த்வாம் ஶரணம் ப்ரபத்யே
அதஸ் ஸதாஸ்மிந் நபயப்ரதா த்வம்
-92-ஸஹைவ பத்யா மம ஸந்நிதேஹி

கல்பத்ருமேண மணிநா ஸஹிதா ஸுரம்யா
ஸ்ரீஸ்தே கலாமயி ரஸேந ரஸாயநேந
ஆஸ்தா மதோ மம ச த்ருக் கரபாணிபாத
ஸ்ப்ருஷ்ட்யா ஸுவர்ணவபுஷ: ஸ்த்திரஜங்கமா: ஸ்யு: -93-

ஆத்யாதி விஷ்ணோ: ஸ்திர தர்ம பத்நி
த்வமம்ப பத்யா மம ஸந்நிதேஹி
ஆத்யாதி லக்ஷ்மி த்வதநுக்ரஹேண
பதே பதே மே நிதி தர்ஶநம் ஸ்யாத் -94-

ஆத்யாதி லக்ஷ்மீ ஹ்ருதயம் படேத் ய:
ஸ ராஜ்யலக்ஷ்மீ மசலாம் தநோதி
மஹாதரித்ரோபி பவேத்தநாட்ய:
ததந்வயே ஸ்ரீ: ஸ்திரதாம் ப்ரயாதி -95-

யஸ்ய ஸ்மரணமாத்ரேண துஷ்டா ஸ்யாத் விஷ்ணுவல்லபா
தஸ்யாபீஷ்டம் ததாத்யாஶு தம் பாலயதி புத்ரவத் –96-

இதம் ரஹஸ்யம் ஹ்ருப்யம் ஸர்வகாம பலப்ரதம்
ஜப: பஞ்ச ஸஹஸ்ரம் து புரஶ்சரணமுச்யதே –97-

த்ரிகால மேககாலம் வா நரோ பக்திஸமந்வித:
ய: படேச் ச்ருணுயாத்வாபி ஸ யாதி பரமாம் ஶ்ரியம் -98-

மஹா லக்ஷ்மீர் ஸமுத்திஶ்ய நிஶி பார்க்கவ வாஸரே
இதம் ஸ்ரீஹ்ருதயம் ஜப்த்வா பஞ்சவாரம் தநீ பவேத் –99-

அநேந ஹ்ருதயேநாந்நம் கர்ப்பிண்யா அபிமந்த்ரிதம்
ததாதி தத்குலே புத்ரோ ஜாயதே ஸ்ரீபதி: ஸ்வயம் -100-

நரேணாப்யதவா நார்யா லக்ஷ்மீஹ்ருதய மந்த்ரிதே
ஜலே பீதே ச தத்வம்ஶே மந்தபாக்யோ ந ஜாயதே -101-

ய ஆஶ்வயுங் மாஸி ச ஶுக்லபக்ஷே
ரமோத்ஸவே ஸந்நிஹிதே ச பக்த்யா
படேத் ததைகோத்தர வாரவ்ருத்த்யா
லபேத ஸௌவர்ணமயீம் ஸுவ்ருஷ்டிம் -102-

ய ஏகபக்த்யாந்வஹ மேகவர்ஷம்
விஶுத்ததீ: ஸப்ததிவாரஜாபீ
ஸ மந்தபாக்யோபி ரமாகடாக்ஷாத்
பவேத் ஸஹஸ்ராக்ஷ ஶதாதிகஸ்ரீ: -103-

ஸ்ரீஶாங்க்ரிபக்திம் ஹரிதாஸதாஸ்யம்
ப்ரஸந்ந மந்த்ரார்த்த த்ருடைகநிஷ்டாம்
குரோம் ஸ்ம்ருதிம் நிர்மலபோதபுத்திம்
ப்ரதேஹி மாத: பரமம் பதம் ஸ்ரீ: –104-

ப்ருத்வீபதித்வம் புருஷோத்தமத்வம்
விபூதிவாஸம் விவிதார்த்தஸித்திம்
ஸம்பூர்ணகீர்த்திம் பஹுவர்ஷபோகம்
ப்ரதேஹி மே லக்ஷ்மி புந: புநஸ்த்வம் -105-

வாதார்த்தஸித்திம் பஹுலோகவஶ்யம்
வய: ஸ்திரத்வம் லலநாஸு போகம்
பாத்ராதிலப்திம் ஸகலார்த்தஸித்திம்
ப்ரதேஹி மே பார்கவி ஜந்மஜந்மநி -106-

ஸுவர்ணவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
ஸுதாந்யவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
கல்யாணவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
விபூதிவ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:-107-

ஶிரோபீஜம்
ஓம் யம் ஹம் கம்(kam) லம் வம் ஸ்ரீம்
த்யாயேல் லக்ஷ்மீம் ப்ரஹஸிதமுகீம் கோடிபாலார்க்க பாஸாம்
வித்யுத்வர்ணாம்பரவரதராம் பூஷணாட்யாம் ஸுஶோபாம்
பீஜாபூரம் ஸரஸிஜயுகம் பிப்ரதீம் ஸ்வர்ணபாத்ரம்
பர்த்ரா யுக்தாம் முஹுரபயதா மஹ்யமப்யச்யுதஸ்ரீ: -108-

இத்யதர்வரஹஸ்யே, உத்தரபாகே,
ஆத்யாதி ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ரம் ஸமாப்தம்,

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஷட் பதீ ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதி சங்கரர் இயற்றியது ….

February 27, 2025

ஷட்பதீ ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதி சங்கரர் இயற்றியது ….

1.அவினய மபநய விஷ்ணோதமய மந:சமயம் ருகத்ருஷ்ணாம்!
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: !!

ஹே விஷ்ணோ!எனது பண்வின்மையைப் போக்கு!மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

2.திவ்யதுனீ மகரந்தே பரிமல பரிபோகஸச்சிதானந்தே !
ஸ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே !!

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வைசனையாகக் கொண்டதும், உலகில் துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகின்றேன்.

3.ஸத்யபிபேதாப்கமே நாத!தவாஹம் நமாமகீனஸ்த்வம்!
ஸாமுத்ரோ U தரங்க:க்வசன ஸமுத்ரோ ந தாரங்க: !!

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான எனக்கும் உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே:தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டிது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

4.உத்ருதநக நகபிதனுஜ தனுஜகுலாமித்ர மித்ரசசித்ருஷ்டே !
த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார: !!

கோவர்தன மலையை தூக்கியவரே!இந்திரனின் இளையவரே!அசுரக்கூட்டத்தை அழித்தவரே!சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே!தாங்கள் கண்ணுக்கெதிரே வந்து திறமையைக் காட்டும் பொழுது எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

5.மத்ஸ்யாதிபிரவதாரை ரவதாரவதாஷிவதாஸதா வஸுதாம் !
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாப பீதோஷிஹம் !!

மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ!ஹே பெருமாளே!

6.தாமேதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த!
பவஜலதிமதன மந்தர பரமம் தரமபநய த்வம் மே !!

தாமோதரனே!குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையத்த முகம் கொண்டவனே!கோவிந்த!ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

7.நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ
சரணௌ !
இதி ஷட்பதீ மதீயே வதன ஸரோஜே ஸதா வஸது !!

ஹே நாராயண!கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

ஷட்பதீ ஸ்தோத்திரம் முற்றுப் பெறுகிறது. 

பதங்கள் ஒவ்வொன்றும் அந்தாதி வடிவில் அமைந்த ஸ்லோகம்-நான்காவது ஸ்லோகம்

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே சங்கர பகவத் பாதாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ துளசிதாஸ் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஹனுமான் சாலிஸாவின் மூலம்-ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

February 3, 2025

ஶ்ரீ ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து பக்தி பாடலாகும். 16 ஆம் நூற்றாண்டு கவிஞரான துளசிதாஸ் அவதி மொழியில் ஹனுமான் சாலிஸா எழுதியுள்ளார் என்று நம்பப்படுகிறது – தேவநகரி (முக்கியமாக உத்திரப் பிரதேசத்தில் அவந்த் பிராந்தியத்திலும் நேபாளத்தின் டெரேய் பகுதியிலும் பேசப்படும் இந்திய-ஆரிய மொழி).

“சாலிசா” என்ற வார்த்தை ஹிந்தி சொல் “சாலிஸ்” என்பதிலிருந்து பெறப்பட்டது, இதன் பொருள் நாற்பது (40). இது பாடல்களில் இடம்பெறும் 40 பத்திகளை பிரதிபலிக்கிறது (பூர்வாங்க ஸ்லோகங்கள் 2 பத்திகளை தவிர).

ஸ்ரீ துளசிதாஸ் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஹனுமான் சாலிஸாவின் மூலம்:

தோஹா

ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமனு முகுரு ஸுதாரி
பரனஊ ரகுவர விமல ஜஸு ஜோ தாயகு பல சாரி
புத்தி ஹீன னனு ஜானிகே ஸுமிரௌ பவன குமார
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஸ பிகாரி

த்யானம்

அதுலித ப³லதா⁴மம் ஸ்வர்ண ஶைலாப⁴ தே³ஹம் ।
த³னுஜ வன க்ருஶானும் ஜ்ஞானினா மக்³ரக³ண்யம் ॥
ஸகல கு³ண நிதா⁴னம் வானராணா மதீ⁴ஶம் ।
ரகு⁴பதி ப்ரிய ப⁴க்தம் வாதஜாதம் நமாமி ॥

கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம்
ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம்
யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்த காம்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம்

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

மனோஜவம் மாருத துல்யவேக³ம் ।
ஜிதேந்த்³ரியம் பு³த்³தி⁴ மதாம் வரிஷ்டம் ॥
வாதாத்மஜம் வானரயூத² முக்²யம் ।
ஶ்ரீ ராம தூ³தம் ஶிரஸா நமாமி ॥

ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர
ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1
ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)

ராமதூத அதுலித பலதாமா
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)

மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தியாக வீரன் தயா வீரன் வித்யா வீரன் தான வீரன் ரண வீரன் -ஐந்தும் இருப்பதால் மஹா வீரன் இவரே –

கம்சன வரண விராஜ ஸுவேஶா
கானன கும்டல கும்சித கேஶா || 4
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)

ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை
காம்தே மூம்ஜ ஜனேஊ ஸாஜை || 5
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)

ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)

வித்யாவான குணீ அதி சாதுர |
ராம காஜ கரிவே கோ ஆதுர || 7
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)

ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா
ராமலகன ஸீதா மன பஸியா || 8
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திகாவா
விகட ரூபதரி லம்க ஜராவா || 9
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)

லாய ஸம்ஜீவன லகன ஜியாயே
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே || 11
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)

ரகுபதி கீன்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாஈ || 12
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)

ஸஹஸ வதன தும்ஹரோ ஜாஸ காவை
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா
னாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14

மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)

ஜம(யம) குபேர திகபால ஜஹாம் தே
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15

எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)

தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா
ராம மிலாய ராஜபத தீன்ஹா || 16

சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா
லம்கேஶ்வர பஏ ஸப ஜக ஜானா || 17

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18

கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ
ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19

முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)

துர்கம காஜ ஜகத கே ஜேதே
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20

உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)

ராம துஆரே தும ரகவாரே
ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21

ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)

ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா
தும ரக்ஷக காஹூ கோ டர னா || 22

சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)

ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை
தீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23

உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)

பூத பிஶாச னிகட னஹி ஆவை |
மஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||

உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

னாஸை ரோக ஹரை ஸப பீரா
ஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)

ஸம்கட தேம்(ஸேம்) ஹனுமான சுடாவை
மன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26

மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)

ஸப பர ராம தபஸ்வீ ராஜா
தினகே காஜ ஸகல தும ஸாஜா || 27

பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)

ஔர மனோரத ஜோ கோஇ லாவை
ஸோஈ அமித ஜீவன பல பாவை || 28

அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)

சாரோ யுக பரிதாப தும்ஹாரா
ஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29

நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)

ஸாது ஸன்த கே தும ரகவாரே
அஸுர னிகன்தன ராம துலாரே || 30

ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)

அஷ்டஸித்தி னௌ(னவ) னிதி கே தாதா
அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31

அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32

ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

தும்ஹரே பஜன ராமகோ பாவை |
ஜனம ஜனம கே துக பிஸராவை || 33

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)

அம்த கால ரகுவர புரஜாஈ
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாஈ || 34

ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)

ஔர தேவதா சித்த ன தரஈ
ஹனுமத ஸேஇ ஸர்வ ஸுக கரஈ || 35

என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)

ஸம்கட கடை மிடை ஸப பீரா
ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36

நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)

ஜை ஜை ஜை ஹனுமான கோஸாஈ
க்றுபா கரோ குருதேவ கீ னாஈ || 37

ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)

ஜோ ஶத வார பாட கர கோஈ
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோஈ || 38

“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)

ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39

சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)

துலஸீதாஸ ஸதா ஹரி சேரா
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40

அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ராம லக்ஷ்மண..ஜானகி..,
ஸ்ரீராம தூதனே மாருதி

தோஹா

பவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப்
ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப்
ஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாஈ ஸப ஸன்தனகீ ஜய

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர்,
பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே… எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்” என்றார்.

நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!” என்று துளசிதாசர் சொல்ல,
கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.
‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர்,
தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார்.
இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள்
அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.
படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.
துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.
அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.
துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.
இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்!

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன் ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)
உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)
மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)
“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மண பரத சத்ருக்ந ஆழ்வார்கள் சமேத ஸீதா பத்தி சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜர் கவசம்-ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்

January 27, 2025
  1. ஸ்ரீபெரும்புதூர் ஆளும் அரசே திருவடி அழகே தெள்ளிய துறவே
    மாபெரும் தருவாம் வைணவம் அதனை மண்ணில் வளர்த்த ராமானுஜனே
    2.உபய விபூதி செல்வமனைத்தும் உத்தமன் அரங்கன் அள்ளி வழங்க அபயம் அளிக்க அடியவர் மீது அருள் விழி காட்டும் ராமானுஜனே
    3.ஆம் இவன் முதல்வன் என்றொரு வார்த்தை ஆளவந்தாரின் திருவாய் மலர தாம் முதல்வன் என வைணவம் காத்து தரணியை ஆளும் ராமானுஜனே
    4.தன் குருவாகிய பெரிய நம்பியின் அன்பினை ஏற்ற சீடனும் நீயே தன் குருவும் தன் குருவாய் கண்ட தன்னிகரில்லா ராமானுஜனே
    5.திருக்கோட்டியூரின் நம்பியின் வாயால் திருமந்திரத்தின் பொருளை அறிந்து பெரு உலகத்தின் செவியில் உரைத்து பெருமை கண்ட ராமானுஜனே
    6.ஆண்டாண் அரையர் திருமலை நம்பி ஆசிரியர் குழு யாவும் உகந்து வேண்டிய ஞானம் யாவும் அளித்து வேண்டிய குருவே ராமானுஜனே
  1. அஞ்சலி செய்து அருகில் அழைத்து அன்புடன் எங்கள் துயர்கள் அழித்து அஞ்சேல் என்றே அபயம் அளிக்கும் அழகே யதியே வருக வருக!
  2. பரமபதத்தில் மாலவனுடனே பாக்கியம் கொண்டு நித்தமும் வாழ்வார் அமரர் அனைவரின் தலைவனும் ஆகிய அற்புத ராமானுஜனே வருக
    3.நரகம் அழுந்தா நற்கதி அருளும் நானிலமெங்கும் நன்மைகள் புரியும் உரமென அமையும் உயரிய அடிகள் உடையவன் நீயே வருக! வருக
    4.சடகோபனுக்கு முன்னே எழுந்த சத்திய உருவே ராமாநுஜனே கடலாம் பிறவியைக் கடந்து செல்ல கருணை காட்டிட வருக !வருக!
  3. தாமரை மலரால் தாங்கிய மார்பை தாங்கிய ஹரியை பாடிய முனியின் மாமலர் விந்தம் மாண்புடன் பணிந்த வடிவே ராமானுஜனே வருக
  4. காவிரி அழகன் நம்பெருமாளை கண்களில் வைத்து நெஞ்சில் நிறுத்தி பாவிரி கலியன் திருவடிபணியும் பரமா ராமானுஜனே வருக.

1.திசைகளில் ஒளிரும் கமலச்செங்கதிர் திரளும் அழகாய் திருவடி அழகும் இசைவுடன் அதிலே இணைந்து அமைந்த இனிமை கூட்டிடும் இடது கழலும்

  1. இடது துடை மேல் வளரும் விரியும் ஈடிணையில்லா வலமேற் கழலும் திடமெனஅழகை எல்லாம் சேர்த்த திவ்வியமான கணுக்கால் எழிலும்
  2. அதிசய ஒளி முகம் சுருளாய் இறங்கும் அழகைப் போலிரும் முழந்தாள்களும் புதிரென அமையும் திருத்தொடைகளும் பொன்னரை நாணைப் பூண்ட அழகும்
  3. அந்தி நிறத்தில் அமையும் ஆடையும் அஞ்சலி செய்யும் தடைக்கைகளும் உந்தி மலரும் உயரிய கரமும் உடன் இணைந்திடும் கணுக்கைகளும்
  4. தங்க வளையலை தாங்கிய அழகும் தானாய் மடிந்த முழங்கைகளும் அங்கம் விரிந்து நீண்டு அமைந்த அழகிய புஜங்கள் ஆடும் அழகும்
  5. பள பளவென்று பரவிய வகையில் பாரை மயக்கும் அழகிய மார்பும் வளமாய் பிரிந்த முந்நூல் அழகும் வளர்ந்து உயர்ந்த திண்தோள்களும்
  1. வலம்புரி சங்கின் சுழி போல் அமையும் வளப்பமான கழுத்தின் அழகும் உலகை மயக்கும் மந்திர முகமும் உரையை வழங்கும் திருப்பவளமும்
  2. மந்தஹாசமும் ஸ்படிக மயத்தில் மண்டலம் போன்றிரும் கபோலங்களும் செங்கணகத்தில் செழித்து வளர்ந்து செவிமெல் அமைந்த கர்ணபாசமும்
  3. கொடி மூக்கழகும் கோலத் தாமரை குடி கொண்டாலும் இரு நயனங்களும் வடிவில் வில்லாய் வண்ணம் காட்டும் வளைந்த வட்டத் திருப்புருவமும்
  4. சந்திர கிரணம் ஒன்று கலந்து சரியும் அழகாய் தாமரை நாமமும் இந்திரை மலராள் திருவடி போலே இலங்கி வரும் ஸ்ரீ சூர்ணமும்
  5. உயர்ந்து வளர்ந்த திருமுடி அழகும் உறைந்து தழைந்த திருக்கேசமும் நயந்து சுற்றிய நல்ல குழலினை நன்றாய் சுற்றிய சிகாபந்தமும்
  6. பின் எடுத்ததோர் பிடரியின் அழகும் பிரிந்து கூடிய முக்கோல் அழகும் கண்ணுடன் பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும்
  7. காணக் காண திகட்டிடாது கவினாய்த் தோன்றும் ராமாநுஜனே தேனாம் உன் அடி சரணம் அடைந்தோம் தினமும் எம்மை காத்தருள் என்றே
  1. பெரியோய் உந்தன் திருவடி நிலைகள் பெரிய மனதுடன் எங்களை காக்க ஹரியின் அணையாய் அமையும் வடிவே அடியார் கால்களை அன்புடன் காக்க
  2. பாஷ்யகாரரே உங்கள் பரிவு பாதநிலைகளை பதமாய் காக்க பரமபதத்தை அருளும் முனியே பணியும் இடையை பரிந்து காக்க
  3. வயிற்றுப் பகுதியை ராமானுஜனே வண்ணத் திருவருள் வலிந்து காக்க அயர்வே அறியா இளையாழ்வாரே அன்புடன் மார்பு பகுதியை காக்க
  4. எம்பெருமானார் என்றும் துறவே எங்கள் முதுகுப் பகுதியை காக்க உம்பர்கள் போற்றும் உபய வேதமே உன்னை காணும் கண்களை காக்க
  5. பூதப் புரியிலே வாழும் அரசே புகழை கேட்கும் செவிகளைக் காக்க யாதுமாகிய எதிராஜா நீ எங்கள் நாசியை என்றும் காக்க
  1. உன்னை காணும் வதனம் தன்னை உயர்வே யதீந்த்ர முனியே காக்க உன்னைப் பேசும் வாயை நாவை உணர்வே லக்ஷ்மண முனியே காக்க
  2. பொன்னடி வணங்கும் சென்னிப்பகுதியை பூமன்னு மார்பன்அடியே காக்க உன்னிரு கண்ணின் கடைவிழியாலே உள்ளப்பிணிகள் வராது காக்க
  3. அரவின் வடிவே விஷங்கள்எதுவும் அடியார் பக்கம் வராது காக்க வரமாய் அருளும் உனது கரங்கள் வாழ்வில் பிணிகள் வராது காக்க
  4. மஞ்சனம் ஆடும் மறைமாமுனியே மண்டிய தோஷம் அகற்றிக் காக்க தஞ்சமளிக்கும் ராமானுஜனே சாபம் விலக்கி சதிருடன் காக்க
  5. முப்புரி அணிந்த முக்கோல் முனியே முப்பொழுதும் எனை முனைந்து காக்க அப்பனுக்கு சங்காழி அளித்தாய் அல்லல் ஏதும் வராது காக்க
  6. காக்க கனிவுடன் காக்க காக்க காக்க காரேய் கருணை முனியே காக்க காக்க பூதூர் கோனே காக்க காக்க கமலப் பதத்தால் – கமல பதத்தால்
  7. வேண்டிய எம்மை ஆண்டருள் செய்வாய் வேதச் செறிவாய் யோகம் புரிவாய் நீண்ட கரத்தால் நாளும் அருள்வாய் நின் திருவடியால் ஞானம் தருவாய்
  8. ராமானுஜனே என்னாரமுதே ராமானுஜனே என் உறுதுணையே ராமானுஜனே என் மாநிதியே ராமானுஜனே என் பெருந்தகையே
  9. சரணம் சரணம் ராமானுஜனே சரணம் சரணம் உனது மலர்த்தாள்சரணம் சரணம் ஸ்ரீ எதிராஜா சரணம் ஸ்ரீபெரும்பூதூர் முனியே

———————

ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்

சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.

ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்

ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்

ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும்,

சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்

மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.

தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்

த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்

மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,

ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும்,

ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான

சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.

ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:

நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே

வாஸரேஸ்வர:

என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன்

காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே

ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.

க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:

ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே

ஸுரவந்தித:

என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட

ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.

ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:

பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:

என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும்.

மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு

உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும்.

அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.

ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே

ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:

யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ

அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்

ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:

ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி.

யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார்.

இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும்

சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி

மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:

சூர்ய மங்கள ஸ்லோகம் !

பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ

குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:

சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ

மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !

சூரிய பகவான் !

காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும்

வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

சூர்யன் த்யான ஸ்லோகம் !

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்

தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

சூரியன் காயத்ரி !

அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி

——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் கடிகை எம்பெருமானுடைய திரு மஞ்சனக் கட்டியம்–திரு அஷ்டோத்தர சத நாமாவளி-ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்-ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி-

December 5, 2024

நாயிந்தே நாயிந்தே
த்வம் மே அஹம் மே குதஸ் தஸ் ததபிகுத
இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சானாதி ஸித்தாத் அனுபவ விபவாத்
ஸோ அபி சாக்ரோஸ ஏவ
க்வாக்ரோஸ கஸ்ய கீதாதிஷு மம விதித
கோ அத்ர ஷாஷீ ஸூதீஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷ பாதீ ஸ இதி
ந்ரு கஹே ம்ருக்ய மத்யஸ்தவத்வம்

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானைக் கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

யஸ்மாதேதத் ஜகதுதயதே ரஷிதம் யேன பூயஸ்
யஸ்மின்நேதி ப்ரலய மகிலம் யன்மயம் யச்சரீரம்
யஸ் ஸர்வாத்மா மஹதி கடிகா பூதரே யோக பாஜாம்
ஸப்தர் ஷீணாம் நர ஹரி வபுஸ் ஸன்னி தாத்ஸோ அவ்தான்ந
ஸ்ரித கடிகாசல ஸ்ருங்கம் சீதல கருணா தரங்கிதா பாங்கம்
மனசி மமோல்லஸ தங்கம் வசதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்
பராக் பராக் ஸ்வாமீ பராக் பராக்
மா மலையாம் கடிகை மலை உச்சியின் மேல் மன்னு இந்து அமர்ந்த தேவா பராக் பராக்
ஸ்வாயம்புவ மன்வந்தர க்ருதயுக மூன்றாம் பாதத்தில் வைசாக சுக்ல பூர்ணிம பிருகுவாஸர ஸ்வாதி நக்ஷத்ர யுக்த ப்ராதஸ் சந்தியிலே இனிது அமர்ந்த தேவா பராக்
தேவாரி பஞ்சனான சிறிய திருவடிக்கு சங்கு சக்கரம் அளித்த தேவா பராக் பராக்

நீலாஞ்சனா த்ரி நிப முன்னதம் ஆயதாக்ஷம்
ஆஜானு ஜைத்ர புஜம் ஆயத கர்ண பாசம்
ஸ்ரீ வத்ஸ லக்ஷண முதார கபீர நாபிம்
பஸ்யேம தேவ சரதச் சத மீத்ருசம் த்வாம்

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று விகல்பிக்கலாம் படி இருக்கிற திரு அபிஷேகமும்
மாயன் குழல் என்னும்படியான திருக்குழலும்
வேரி மயிர் பொங்க என்னும்படியான அழகிய அடர்ந்த பிடரி மயிர்களும்
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழையாக யுடைய கொழுஞ்சோதி வட்டங்கள் என்னும்படியான அழகிய திரு முகமும்
மன்னு திரு நுதலில் சாத்தின முத்தின் திரு நாமமும்
நாச்சிமாருடைய ஹஸ்த ஆபரணங்களாலே முத்ரிதமாய் க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிதமான திருக்கழுத்தும்
கற்பகக் காவென நற் பணைத் தோள்களும்
வைத்தஞ்சல் என்ன அபய ப்ரத ஆஹ்வான ஹஸ்தங்களும்
பெரிய பிராட்டியாருக்குக் கோயில் கட்டணமாய் நித்ய அநுபவம் பண்ணச் செய்தேயும் இறையும் அகலகில்லேன் என்று அவனைப் பித்தேறிப்பித்துக்
குரு மா மணிப் பூண் குழலார் குலாவித் திரியும் திரு மார்பும்
மின்னு நூல் என்னும்படியான மின்னல் கொடி போல் இருக்கிற திரு யஜ்ஜோபவீதமும்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையும் உள்ளத்துள் நின்று உலாவுகின்றதே –என்கிறபடியே
நித்ய முக்தர் ஹ்ருதயங்களிலே அழகு செண்டேறுகிற திரு உதர பந்தமும்
ஸுந்தர்ய ராக ரஞ்சிதமான ஆகாசம் போல் திருவரை பூத்தால் போல் இருக்கிற அந்தி போல் நிறத்தாடையும்
அறச்சிவந்த ஆடையின் மேல் நெளிந்து கொண்டு நிகு நிகு என்னும் பொன்னரை நாணும்
ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத்தொடைகளும்
தாமரை நாளம் போலே கண்டகிதமான திருக் கணுக் கால்களும்
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாம் குச வஜ்ர லாஞ்சனமாய்
நாச்சிமார்களும் கூட கூசித்திட வேண்டும்படியாய்
தேனே மலரும் என்கிறபடியே நிரதிசய போக்யங்களான சேதனர் ஆஸ்ரயிக்கும்படியான
திருவடிகளை யுடையனான தேவரீர்

ஸூதா வல்லீ ஸமேதனாய்
திருமஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் இவ்வழகில்
ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக
பக்தோசிதனே

பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அளித்திட்ட வேர்வை யாறவோ
சினமேவும் அடலரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியானது அகல் மார்வம் கீண்ட வேர்வை யாறவோ
மாணுருவாய் மா வலியை மண் வேண்டி மூ வுலகும் மூ வடியால் அளந்திட்ட வேர்வை யாறவோ
கும்ப மிகு மதயானை மருப்பொசித்துக் குஞ்சி பிடித்தடித்த வேர்வை யாறவோ
வானோர்கள் தவப் பயனாய் வானோர் போற்று மா நகராம் கடிகை நகர் வந்துதித்த வேர்வை யாறவோ

வானவரும் மண்ணவரும் போற்றி செய்யும் அக்காரக் கனியே
தூதில் வாதுல குலம் துலங்கலந்த மஹா ஆச்சார்யராலே நித்ய உத்ஸவாதிகள் கண்டருளின பக்தோசிதனே
ஸர்வ ஜகத் ரூபியாய் எப்பொழுதும் தன் ஆராதனத்தை
ப்ருகு மரீச் யத்ரி கஸ்ய போக்தங்களாகிய வைகானஸ ஸூத்ரத்தினாலே செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
ஷோடஸ உபசாரம் கண்டு அருளின தேவரீர்
அண்டம் எங்கும் அகம் குளிரத் தொண்டர் மனம் வெவ்வளிடத் திருமஞ்சனம் கண்டருளவே
ஓம் ஜய விஜயீ பவ
ஸ்வாமீ எச்சரிக்கை

—————

திரு அஷ்டோத்தர சத நாமாவளி-

ஓம் ஹேம கோடி விமானஸ் தாய நம
ஓம் ஜானு ந்யஸ்த ப்ரகோஷ்டகாய நம
ஓம் சங்கு சக்ர தராய நம
ஓம் பீத வாஸோத் பாஸி கட தடாய நம
ஓம் யோகாஸநே ஸமா ஸீனாய நம

ஓம் கிரீடிநே நம
ஓம் அனா மயாய நம
ஓம் தூர்வா நீலோத் பல வன ஸ்யாமலாய நம
ஓம் கோமலா க்ருதயே நம
ஓம் ப்ரஸன்ன வதனாய நம

ஓம் லஷ்மீ பாஸி தோரஸ்காய நம
ஓம் உஜ்வலாய நம
ஓம் நதமர்த்ய ப்ரஸன்னார்த்தி ஹாரிணே நம
ஓம் வன மாலிநே நம
ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம

ஓம் சந்த்ர ஸூர்ய விலோசநாய நம
ஓம் ஸிம்ஹஸ் கந்தாய நம
ஓம் ஸிம்ஹ முகாய நம
ஓம் ப்ரஹ்லாத ப்ரிய காரிணே நம
ஓம் தான வேந்த்ர விபேத்ரே நம

ஓம் ஜகதாம் கர்த்ரே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் ப்ரேணத்ரே நம
ஓம் அநிந்திதாய நம

ஓம் தம்ஷ்ட்ரிணே நம
ஓம் கேஸரிணே நம
ஓம் நர கேஸரிணே நம
ஓம் விபவே நம
ஓம் ஸப்தரிஷி வந்திதாய நம

ஓம் பீமாய நம
ஓம் கதா தராய நம
ஓம் அதீஸ்வராய நம
ஓம் வ்யக்தனனாய நம
ஓம் மஹோரஸ்காய நம

ஓம் ஜீவாலாமாலா விபூஷணாய நம
ஓம் ஷட்கோண மத்ய நிலயாய நம
ஓம் உன்னதஸ்ருதயே நம
ஓம் உத்ததாய நம
ஓம் உதக்ர நாஸாய நம

ஓம் உச்சண்ட காலாய நம
ஓம் உத்தம மஸ்தகாய நம
ஓம் வாம தேவாதி ப்ரஹ்ம ரிஷி ஸேவிதாய நம
ஓம் சிவ ஸேவிதாய நம
ஓம் ஸர்வ காம ப்ரதாய நம

ஓம் வய க்யாத நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் புருஷோத்தமாய நம
ஓம் ஸிம்ஹ காமிநே நம
ஓம் ஈஸாநாய நம

ஓம் நிதயே நம
ஓம் அச்யுதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பிங்க லாஷாய நம
ஓம் ப்ருது க்ரீவாய நம

ஓம் விமலாய நம
ஓம் ஸ்தம்ப ஸம்பவாய நம
ஓம் முக்திதாய நம
ஓம் புகதிதாய நம
ஓம் சாந்தாய நம

ஓம் தாந்தாய நம
ஓம் ஆனந்த கந்த லாய நம
ஓம் மந்தார மாலாபரணாய நம
ஓம் அஷ்ட பாஹவே நம
ஓம் மஹா உதாராய நம

ஓம் ஸநகாதி நுதாய நம
ஓம் தேவராஜ பூஜிதாய நம
ஓம் ஈஸ்வராய நம
ஓம் ஸூர்ய கோடி ப்ரதீகாஸாய நம
ஓம் சந்த்ர கோடி சமத்யுதயே நம

ஓம் ஸ்ருங்க கோடி மஹா சைல வாஸிநே நம
ஓம் ஹ்ருதி வாஸிநே நம
ஓம் ஹநுமத் வந்திதாய நம
ஓம் லோக சங்கராய நம
ஓம் சங்கர ப்ரியாய நம

ஓம் பக்த அர்ச்சிதாய நம
ஓம் பக்தி தாயினே நம
ஓம் ஸூப தாயினே நம
ஓம் சடாலம் க்ருதாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் உக்ர சாஸநாய நம
ஓம் உத்ததாய நம
ஓம் விஸ்தீர்ண வதனாய நம
ஓம் தீன ரஷகாய நம
ஓம் ஸூர ரக்ஷகாய நம

ஓம் ஜபா குஸூம வர்ணா பாய நம
ஓம் ஹேம யஜ்ஜோப வீதினே நம
ஓம் த்ருத ஹேம கடீ ஸூத்ராய நம
ஓம் ஹேமாங்காய நம
ஓம் ஹேம குண்டலாய நம

ஓம் பரிஷ்க்ருத புஜாந்தராய நம
ஓம் ஹேம புஷ்ப மஹா மாலா நம
ஓம் மாலாபரணாய நம
ஓம் தைத்ய ராஜவஸா நம
ஓம் ந்ருணாம் சரணாய நம

ஓம் உத்தமாய நம
ஓம் அநுத்தமாய நம
ஓம் தேவாய நம
ஓம் ராஜா நம
ஓம் ஆஜாநு பாஹு காய நம

ஓம் ஜகதாம் போஷணாய நம
ஓம் பூத பாவனாய நம
ஓம் பத்ரி வாஹனாய நம
ஓம் வேதாந்த வேத்யாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் வைகானஸ ஸூ பூஜிதாய
ஓம் ஸம் ஸ்துதாய நம
ஓம் வாலகில்யாதி யோகீந்த்ர நம
ஓம் பரமார்த்தயா நம
ஓம் மஹாஷாய நம

ஓம் ஹிரண்யாக்ஷ சிஷகாய நம
ஓம் பக்த ரக்ஷகாய நம
ஓம் அபராஜிதாய நம
ஓம் அஷோப்யாய நம
ஓம் அநந்தாய நம

ஓம் பராய நம
ஓம் பரம் நம
ஓம் அநேக ரூபாய நம
ஓம் ஆதித்ய மண்டலஸ்த்தாய நம
ஓம் அக்ருத்ரிமாய நம

ஓம் ஹிரண்யாய நம
ஓம் ஹிரண்ய ஸ்மஸ்ருகாய நம
ஓம் ப்ரபவே நம

ஓம் கடிகாத்ரி யோக நரஸிம்ஹ ஸ்வாமினே நம

——————————-

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்

அதி பாடல வக்த்ராப்ஜம் த்ருத ஹேமாத்ரி விக்ரஹம்
ஆஞ்சநேயம் சங்க சக்ர பாணிம் சேதஸி தீமஹி –1-

பாரிஜாத ப்ரியோ யோகீ ஹநுமான் ந்ரு ஹரி ப்ரிய
ப்லவ கேந்த்ர பிங்கலாஷா சீக்ர காமீ த்ருட விரத –2-

சங்க சக்ர வரா பீதி பாணிர் ஆனந்த தாயக
ஸ்தாயீ விக்ரம ஸம்பந்நோ ராம தூதோ மஹா யஸா –3-

ஸுமித்ரிர் ஜீவனகர லங்கா விஷோபகாரக
உததிஹ் க்ரமணஸ் ஸீதா சோக நாசகரோ ஹரி –4-

பலீ ராஜஸ ஸம் ஹர்த்தா தச கண்ட மதாபஹா
புத்திமான் நைருதவதூ கண்ட ஸூத்ர விதாரக –5-

ஸூக்ரீவ ஸசிவோ பீம பீம சேன ஸஹோதர
ஸாவித்ரி வித்யா ஸம் ஸேவீ சரிதார்த்தோ மஹோதர –6-

வாஸவா பீஷ்டதோ பவ்ய ஹேம சைல நிவாஸவான்
கிம் சுகாபோ வ்யக்ர தநூ ருஜுரோமா மஹா மதி –7-

மஹா க்ரமோ வநஸர ஸ்திர புத்ர பீசுமான்
ஸிம்ஹிகா கர்ப நிர்பேத்தா பேத்தாலங்கா நிவாஸினாம் –8-

அஷக்ன ஸத்ரு நிக்னச்ச ரஷோ மாத்ய பயாவஹ
வீரஹா ம்ருது ஹஸ்தஸ்ச பத்ம பாணிர் ஜடாதர –9-

ஸர்வ ப்ரிய ஸர்வ காம பிரத ப்ராம்சு முகஸ் ஸூசி
விசுத்தாத்மா விஜ்வரஸ் ச ஸடாவான் பாடலாதர –10-

பரத ப்ரேம ஜனக சீர வாஸா மஹா க்ஷதக்
மஹாஸ்த்ர பந்தன ஸஹோ ப்ரஹ்மசாரீ வ்ரதேஸ்வர -11-

மஹா ஒவ்ஷத உப ஹர்த்தா ச வ்ருஷ பர்வா வ்ருஷோதர
ஸூர்யோ பலாளிதஸ் ஸ்வாமீ பாரிஜாதாவதம்ஸக –12-

ஸர்வ ப்ராண தரோ அநந்த ஸர்வ பூதாதி கோமனா
ரௌத்ரா க்ருதிர் பீம கர்மா பீமாஷோ பீம தர்சன –13-

ஸூதர்சன கரோ வ்யக்தஸ் வ்யாத்தாஸ்யோ துந்து பிஸ்வன
ஸூ வேல ஸாரீ மைநாக ஹர்ஷதோ ஹர்ஷண ப்ரிய –14-

ஸூலபஸ் ஸூவ்ரதோ யோகீ யோகி ஸேவ்யோ பயாபஹ
வாலாக்னிமதி தானே க லங்கா வாஸி க்ருஹோச்சயா –15-

வர்த்தனோ வர்த்த மானாச்ச ரோஸிஸ் நூ ரோமஸோ மஹான்
மஹா தம்ஷ்ட்ரோ மஹா ஸூரஸ் ஸத் கதிஸ் ஸத் பாராயண –16-

————–

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி

ஸ்ரீ பஞ்சமுகி  ஹனுமான் ஸ்துதி  என்பது ஐந்து வடிவங்களில் ஒவ்வொன்றையும் போற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரம் தொல்லைகளைப் போக்கவும் தீய சக்திகளை விலக்கவும் உதவுகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் கோஷமிடும் பக்தர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பூர்வ கபி முகே

ஸகல சத்ரு ஸம்ஹார்ணாய ஸ்வாஹா

எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பக்தர்களைக் காக்கும் அனுமனின் கிழக்கு முக வடிவம். அவர் மகிழ்ச்சியைத் தருகிறார், விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய தக்ஷிண முகே

கரால வதனாய நரசிம்ஹாய ஸகல பூத ப்ரேத பிரமதனாய ஸ்வாஹா

நரசிம்மரின் தெற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான பயங்களையும், பாவங்களையும், ஆவிகள் மற்றும் பேய்களின் சாதகமற்ற தாக்கங்களையும் நீக்கி, நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பஸ்சிம முகே

கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

கருடனின் மேற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான வியாதிகள், எதிர்மறைகள், சூனியம், விஷம் மற்றும் பயம் ஆகியவற்றை நீக்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உதர முகே

ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா

வராஹ பகவான் வடக்கு நோக்கிய வடிவம் அஷ்ட ஐஸ்வர்யத்தை (எட்டு விதமான செல்வங்களை) வழங்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய ஊர்த்வ முகே

ஹயக்ரீவாய ஸகல ஜந வஶீகரணாய ஸ்வாஹா ॥

ஹயக்ரீவரின் மேல்நோக்கிய வடிவம் பக்தர்களின் நல்லெண்ணத்தை ஈர்க்க உதவுகிறது. அவரது பக்தர்களின் வார்த்தைகள் உண்மையாக மாறுகின்றன. அவர் அவர்களுக்கு அறிவைத் தேடுவதில் முன்னேற்றம், நல்ல நண்பர்களின் சகவாசம், புத்திசாலித்தனம், நல்ல பிள்ளைகள் மற்றும் இரட்சிப்பை வழங்குகிறார்.

பஞ்சமுகி ஹனுமான் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தனது பக்தர்களை தீய சக்திகள், எதிரிகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. ஹனுமான் மிகவும் வலிமையான மற்றும் வலிமையான கடவுள்களில் ஒருவராக எளிதில் கருதப்படுகிறார், அதனால்தான் அவர் துன்பம் மற்றும் பிரச்சனையின் போது வணங்கப்படுகிறார். துன்பத்தில் இருக்கும் சீதாதேவியை அனுமன் காப்பாற்றுவது போல, வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் கடந்து செல்வதற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து தனது பக்தர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்