கண்டார் மனம் கவரும் ஒழுக்கச் செல்வமுடைய ஆச்சார்ய புருஷர்கள் உனது பெருமைக்கு ஏற்கும் தகுதி வாய்ந்த மிகச் சிறந்த பொற்கலசம் குடை ஸாமரம் கண்ணாடி முதலிய மங்களப் பொருள்களைக் கையிலே ஏந்தியவராய் -உனது திருவடித் தாமரை தொழும் தூய தொண்டு விருப்பம் கொண்டு உனது திரு முன்பே கூடியுள்ளனர் -நரஹரி ஆதலால் திருப்பள்ளி எழுந்து அருளாயே
ஆச்சார்ய புருஷ வராஹ் யபிராம வ்ருத்தா அர்ஹாபி பூஜ்ய தர மங்கள வஸ்து ஹஸ்தா த்வத் பாத பங்கஜ சிஷே விஷயே ப்ரபந்நா ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் —17- ப்ரஹ்ம தீர்த்த கரையில் தானே கருட வாஹனத்துடன் தோன்றி அருள் புரிந்த திருக்காஞ்சி புரம் பேர் அருளாளானைத் திருவடி தொழுது திருக்கடிகை தடம் குன்றில் ஏறி உன்னைத் திருவடி தொழ ஸ்ரீ மஹாச்சார்யரும் வந்து விட்டார் -நரஹரி திருப்பள்ளி எழுந்து அருளாயே ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ கிரிசேகர ஸூ ப்ரபாதம் யே மாநவா ப்ரதிதினம் படிதும் ப்ரவ்ருத்தா தேப்ய பிரசன்ன வதன கமலா சஹாய ஸர்வாணி வாஞ்சித பலாநி ததாதி காமம் –18- திருக் கடிகை நரஸிம்ஹப் பிரானின் திருப்பள்ளி எழுச்சியைத் தூய மனத்துடன் நாள் தோறும் ஓதுகின்ற அடியவருக்கு த் திருமகள் கேள்வனாகிய கடிகைப் பிரான் இன் முகம் செய்து அவர்களது அபீஷ்டங்களை எல்லாம் மேல் மேலும் அளித்து பேர் அருளும் செய்து அருளுவது திண்ணம் ————– ஸ்ரீ கடிகாசல ஸ்ருங்காக்ர விமானோதர வாஸிநே–நிகிலாமர சேவ்யாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -1- கடிகைத் தடம் குன்றின் மிசை கோயில் கொண்டு நித்ய வாசம் செய்து அருளுபவனே -அனைத்துத் தேவர்களும் தொழும் பெரியவனே -நாரஸிம்ஹப் பெருமானே உனக்கு மங்களம் உண்டாகுக உதீசீரங்க நிவஸத் ஸூமநஸ்தோம ஸூக்திபி -நித்யாபி வ்ருத்த யஸசே ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -2- வட திருவரங்கத்தில் வாழும் நல்லோர்கள் ஸ்துதித்துப் புகழ்வதால் நாள் தோறும் புகழ் ஏறும் செல்வமுடைய நரஸிம்ஹப் பெருமானே உனக்கு மங்களம் உண்டாகுக ஸூதா வல்லீ பரிஷ்வங்க ஸூரபீ க்ருத வஷஸே –கடிகாத்ரி நிவாஸாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -3- ஸ்ரீ ஸூதா வல்லித் தாயார் சேர்ந்து இலங்கும் மணம் கமழ் திரு மார்பனே -திருக் கடிகை திரு மலையை திருக் கோயிலாகக் கொண்டவனே உனக்கு மங்களம் சர்வாரிஷ்ட விநாசாய சர்வேஷ்ட பல தாயிநே– கடிகாத்ரி நிவாஸாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -4- தீமைகள் அனைத்தையும் அழிப்பவனே -வேண்டுவோர் வேண்டுவன அனைத்தையும் அளித்து அருள்பவனே -திருக் கடிகை திரு மலையை திருக் கோயிலாகக் கொண்ட நரஸிம்ஹப் பெருமானே உனக்கு மங்களம் மஹா குரு மன பத்ம மத்ய நித்ய நிவாஸிநே –பக்தோசிதாய பவதாத் மங்களம் ஸாஸ்வதீ சமா -5– மஹாச்சார்யார் திரு உள்ளத் தாமரை நடுவில் என்றும் நின்று விளங்குபவனே -பக்தோ சிதனாகிய உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு மங்களம் உண்டாகட்டும் ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே –நந்த நந்தன ஸூ ந்தர்யை கோதாயை நித்ய மங்களம் -6- ஸ்ரீ மன் மஹா பூத புரே ஸ்ரீ மன் கேசவ யஜ்வன –காந்தி மத்யாம் ப்ராஸூதாய யதிராஜாய மங்களம் -7- பாதுகே யதி ராஜஸ்ய கதயந்தி யதாக்யயா -தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் அஹம் -8- ஸ்ரீ மதே ரம்யா ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மனே –ஸ்ரீ ரெங்க வாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீ நித்ய மங்களம் -9- ஸும்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம் புஜ ஷட் பதம் –தேவ ராஜ குரும் வந்தே திவ்யஜ்ஞான ப்ரதம் சுபம் -10- வாதூல ஸ்ரீ நிவாசார்ய தநயம் விநயாதிகம் –ப்ரஜ்ஞா நிதிம் பிரபத்யேஹம் ஸ்ரீ நிவாஸ மஹா குரும் -11- சண்ட மாருத வேதாந்த விஜயாதி ஸ்வ ஸூக்திபி –வேதாந்த ரக்ஷகா யாஸ்து மஹாசார்யாய மங்களம் -12- ——————————– ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .Archive for the ‘Stotrams/Slokams’ Category
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ யோக லஷ்மி நரசிம்ம ஸூப்ரபாதம் -மங்களம் –
March 15, 2017ஸ்ரீ வேகா சேது ஸ்தோத்ரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-
February 5, 2017ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –
———————————————-
ஏகம் வேகவதி மத்யே ஹஸ்தி சைலேச த்ருச்யதே
உபாய பல பாவேந ஸ்வயம் வ்யக்தம் பரம் மஹ–1-
ஈஷ்டே கமயிதும் பாரம் ஏஷ சேது ரபங்கர
யத்ர ஸாரஸ்வதம் ஸ்ரோதோ விஸ்ராம்யதி விச்ருங்கலம் –2-
ஜயதி ஜெகதேக சேது வேகவதி மத்யே லஷிதோ தேவ
பிரச மயிதி ய பிரஜாநாம் பிரதிதான் சம்சார ஜலதி கல்லோலா
விபாது மே சேதஸி விஷ்ணு சேது வேகாபகாவேக விதாத ஹேது
அம்போஜயோ நேர் யதுபக் ஞமாஸீத் அபங்கரஷா ஹயமேத தீஷா –3-
சதுரானன சப்த தந்து கோப்தா சரிதம் வேகவதீம் அஸு நிருத்தன்
பரிபுஷ்யதி மங்களானி பும்ஸாம் பகவத் பக்தி மதாம் யதோத்த காரீ –4–
ஸ்ரீ மான் பிதாமஹ வதூ பரிசர்ய மாண
சேதே புஜங்க சயனே ச மஹா புஜங்க
ப்ரத்யாதி சந்தி பவ சஞ்சரணம் பிரஜாநாம்
பக்தாநு கந்து ரிஹ யஸ்ய கதாகதானி–5-
ப்ரஸமித ஹயமேத வ்யாபதம் பத்மயோநே
ச்ரித ஜன பர தந்திரம் சேஷ போகே சயானம்
சரணமுப கதாஸ்ம சாந்த நிஸ் சேஷ தோஷம்
சதமக மணி சேதும் சாஸ்வதம் வேகவத்யா –6-
சரணமுப கதாநாம் சோய மாதேச காரீ
சமயதி பரிதாபம் சம்முகஸ் சர்வ ஐந்தோ
சதகுண பரிணாம சந்நிதவ் யஸ்ய நித்யம்
வரவிதரணபூமா வாரணா த்ரீஸ்வரசய –7-
காஞ்சீ பாக்யம் கமல நிலயா சேதஸோ பீஷ்ட சித்தி
கல்யாணானாம் நிதிர விகல கோபி காருண்ய ராசி –8-
புண்யா நாம் ந பரிணதி ரஸு பூஷா யந்போகி சய்யாம்
வேகா சேதுர் ஜயதி விபுலோ விஸ்வரஷைக சேது -9-
வேகாஸே தோரிதம் ஸ்தோத்ரம் வேங்கடேசந நிமிர்தம்
யே படந்தி ஜநாஸ் தேஷாம் யதோக்தம் குருதே ஹரி –10-
————————-
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அபீத ஸ்தவம் –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-
January 27, 2017ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –
———————————————————————
ஸ்ரீ ராமானுஜருடைய காலத்திற்குப் பிறகு விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திற்கு உள்ளும் புறம்பும் தோன்றிய விரோதிகளைப் போக்கி
அதை நிலை நிறுத்த திருவேங்கடமுடையான் தன் திருமணியை இவ்வுலகில் அவதரிப்பித்தான்.
அதுவே தூப்புலில் ஸ்ரீ வேங்கட நாதனாக அவதரித்தது.
இந்த கவிதார்க்கிக சிம்மம் பல வாதக்கிரந்தங்களைச் செய்தது போலவே தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் பல ஸ்தோத்ரங்களையும் செய்தருளினார்.
ஸ்ரீ தேசிகன் இந்த ஸ்தோத்ரங்களில் மந்த்ரங்களையும் மந்த்ராக்ஷரங்களையும் இசைத்து வைத்திருக்கிறபடியால்,
மந்திரத்தை அறியாத நம்போலியரும் இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்வதினாலேயே மந்திரம் கைவந்தார் பெறும் பலனையடையலாம்.
அதனாலேயே ஒவ்வொரு ஸ்தோத்ரத்தின் முடிவிலும் “இதைப் படிப்போர் பெறும் பயன் இது” என்று பல ச்ருதியைக் கூறியிருக்கிறார்.
எல்லாம் பகவத் பிரீதியின் பொருட்டு என்று செய்வோருக்கு எல்லாப் பலமும் கிடைக்கும்.
இவற்றுள் “அபீதிஸ்தவம்” என்ற ஸ்தோத்ரம் தன் பெயருக்கேற்ப ஸகல பயத்தையும் போக்கி
பகவதனுக்ரஹத்தால் ஸகல ஹிதத்தையும் அளிப்பதோடு,
பயன் கிடைப்பதாகச் சொன்னது பொய்யன்று என்பதையும் ருஜுப்படுத்துகிறதாயும் இருக்கிறது.
ஸ்ரீதேசிகன் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில் மாலிக்காபூர் என்ற மஹம்மதியத் தலைவனின் ஸைன்யம் ஸ்ரீரங்கத்தின்மீது படையெடுத்து வந்தது.
அதைக்கண்டு பயந்த கோவிலதிகாரிகள் கதவைமூடி ஸந்நிதிக்கு முன் வேறொரு விக்ரஹத்தைப் பூஜிப்பதாகக் காட்டிவிட்டு,
ஸ்ரீரங்கநாதனையும் உபயநாச்சிமார்களையும் பல்லக்கில் எழுந்தருளுவித்துக்கொண்டு ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேறினார்கள்.
வயது முதிர்ந்தவரான ஸுதர்சனாசார்யர் என்னும் ஆசார்யர் தான் செய்த சுருதப்ரகாசிகையையும் தன் மக்கள் இருவரையும்
ஸ்ரீ தேசிகனிடம் ஒப்பித்து, “உம்மால் நம் தர்சநத்திற்கு நன்மை ஏற்படப் போகிறது, ஆதலால் நீர் தப்பிச் செல்லும் ” என்று கூறி அவரை அனுப்பினார்.
பிறகு தங்கள் உயிருள்ளவரையும் விரோதிகள் உட்புகாமைக்காகவும் பெருமாளை எடுத்துச் செல்வோரை
அவர்கள் பின்தொடராமைக்காகவும் மஹம்மதிய ஸைன்யத்தை எதிர்த்துப் போர் புரிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிர் நீத்தனர்.
ஸ்ரீதேசிகனும் ஸ்ரீரங்கத்தை விட்டது முதல் பல இடங்களில் தங்கி, கடைசியாக திருநாராயணபுரம் வந்து சேர்ந்தார்.
வந்ததுமுதல் ஆச்ரித ரக்ஷணத்தின் பொருட்டுவந்த ஸர்வேச்வரனான ஸ்ரீரங்கநாதனுக்கும் ஸூர்யனும் பார்த்தறியாத
நாச்சிமார்களுக்கும் தங்கள் வாஸஸ்தலத்தை விட்டு இடம் தேடித்திரிய வேண்டியிருந்த நிலைமையையும்
ராமனைப் பிரிந்த அயோத்யைபோல அரங்கம் தன் நாதனைப் பிரிந்து பொலிவற்று நிற்பதையும்,
தனக்கும் தன்னைப்போனற பரமைகாந்திகளுக்கும் ஸ்ரீரங்க வாஸமும் பகவத் ஸேவையும் இல்லாததால் உயிரேயற்றது போல்
இருக்கும் நிலைமையையும் எண்ணி எண்ணி மனம் நொந்து ஏங்கினார்.
முடிவில் தன்னைக் காத்துத் தன்னடியார்களுக்கு அளிக்கும் பொருட்டு அவனையே துதித்துச் சரணமடைய வேண்டுமே யொழிய
வேறு கதியில்லை என்று நிச்சயித்து “துருஷ்கயவநாதிகளால் அரங்கத்திற்கும் அரங்கனுக்கும் அரங்கனடியார்களுக்கும்
ஏற்பட்ட பயத்தைப் போக்கி, மறுபடியும் தன்னையும் தங்களையும் ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டிதமாக்கி அபயமளிக்க வேண்டும்” என்று
“அபீதிஸ்தவம்” எனற இந்த ஸ்தோத்ரத்தைச் செய்து, பெருமாள் திருவடிகளைச் சரணமடைந்தார்.
இந்த ஸ்தோத்ரத்தின் பயனாகவே கொப்பணார்யன் என்னும் செஞ்சிக் கோட்டையின் தலைவனான பரம பக்தன்
துருஷ்கர்களை ஸ்ரீரங்கத்திலிருந்து விரட்டி விட்டு ஸ்ரீரங்கத்தை நிர்ப்பயமாக்கி ஸ்ரீரங்கத்தை விட்டதுமுதல் சுற்றித் திரிந்து
கடைசியில் திருப்பதியில் எழுந்தருளியிருந்த ஸ்ரீரங்கநாதனையும் உபய நாச்சிமார்களையும் தன் ஊரான செஞ்சியில்
கொஞ்ச நாள் எழுந்தருளுவித்து ஆராதித்து மறுபடியும் ஸ்ரீரங்கத்தில் தானே பிரதிஷ்டை செய்வித்தான்.
மானிடத்தைக் கவி பாடாத தேசிகன் இந்தப் பெரிய கைங்கர்யம் செய்து வைத்த கொப்பணார்யனைக் கொண்டாடி எழுதின
சுலோகங்கள் இரண்டும் ஸ்ரீரங்கத்தில் விஷ்வக்ஸேனர் ஸந்நிதிக்கு முன்பு பெரியபெருமாள் ஸந்நிதியின்
கீழ்ப்புறத்துச் சுவரில் கல்லில் வெட்டப்பட்டு இன்னும் காணப்படுகின்றன.
முதல் வரி இந்த ச்லோகங்கள் வெட்டப்பட்ட வருஷமான சகாப்தம் 1293 (கி.பி. 1371)ஐக் காட்டுகிறது.
ஸ்வஸ்தி ஸ்ரீ:– (முகில் வண்ணன் இருப்ப) முகில்கள் தவழ கறுத்துத் தோன்றும் தன் சிகரங்களால் உலகத்தையே
மகிழ்வூட்டும் அஞ்ஜனாத்ரியிலிருந்து லக்ஷ்மி பூமி இருவருடன் கூடிய ஸ்ரீரங்கநாதனை செஞ்சிக்கு
எழுந்தருளுவித்துக் கொண்டுவந்து அங்கு சில காலம் ஆராதித்து, பிறகு வில்லாளிகளான துருஷ்கர்களை வென்று,
பெருமாளையும் பிராட்டிமார்களையும் அவர்களுடைய நகரமான ஸ்ரீரங்கத்திலேயே பிரதிஷ்டை செய்து,
கீர்த்திக்கோர் கண்ணாடியான கொப்பணார்யன் மறுபடியும் சிறப்பாகத் திருவாராதனத்தைச் செய்தான்.
விருஷபகிரியிலிருந்து ஸர்வேச்வரனான ஸ்ரீரங்கநாதனை தன் ராஜதானிக்குக் கொண்டு சென்று,
கர்விகளான துருஷ்க ஸேனா வீரர்களை தன் ஸைன்யத்தால் கொல்லுவித்து,
அதன்பின் ஸ்ரீரங்கத்தை கிருதயுகத்தோடு கூடியதாகச் செய்து, ஸ்ரீ பூமிகளோடுகூட பெருமாளையும் அதில்
மறுபடி பிரதிஷ்டை செய்வித்து அம்புயத்தோனான சதுர்முகன்போல நல்லோர் கொண்டாடும் முறையில்
கொப்பணார்யன் என்ற பிராமணன் நம்பெருமாளை ஆராதித்து வருகிறான்.
இந்த சுலோகங்களிலிருந்து திருநாராயணபுரத்திலிருந்து தாயைப் பிரிந்த கன்றைப் போலக் கதறி அநுஸந்தித்த
அபீதிஸ்தவத்தின் பயனாக மனோரதம் நிறைவேறிவிட்டது என்பதை அறிகிறோம்.
பயநிவிருத்தியைப் பிரார்த்திக்கப் பிறந்த இந்தச் சிறிய ஸ்தோத்ரத்திலும் தேசிகனுடைய மற்ற ஸ்தோத்ரங்களில் போல
தத்வஹித புருஷார்த்த விஷயமான ஸூக்ஷ்மமான வேதாந்தார்த்தங்கள் பொதிந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
கோலத்திருமாமகளோடு கூடிய நாராயணனோ ஸகல ஜகத்காரணமான பரதத்வம் என்பதும் (சுலோகம் 1)
ப்ரஹ்மாதி ஸகல தேவதைகளும் அவனுக்குப் பயந்து தங்கள் தொழில்களைச் செய்து வருகிறார்கள் என்பதும் (சுலோகங்கள் 4, 26),
ஸர்வேச்வரன் ஒருவனை ரக்ஷிக்க விரும்பினால் மற்ற எந்தப் புதுத் தெய்வமும் எதிராக ஒன்றும் செய்ய முடியாதென்பதும் (7),
பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு பரதத்வமான இவ்விருவரிடமுமே சரணாகதியை அநுஷ்டிக்க வேண்டுமென்பதும் (2),
ஒரே தடவை அனுஷ்டிக்கவேண்டியது முதலான சரணாகதியின் பெருமைகளும் (2,5,15,21),
நாமஸங்கீர்த்தனத்தின் பெருமைகளும் சுருக்கமாகவும் அழகாகவும் காட்டப்படுகின்றன.
இருபத்தோராவது சுலோகத்தில் பிரபத்தி அனுஷ்டிக்கப்படுகிறது.
20, 22, 24 முதலான சுலோகங்களில் இந்த ஸ்தோத்திரத்திற்குக் காரணமான சத்ரு பயத்தைப் போக்க வேண்டுமென்பது
மறுபடியும் மறுபடியும் “ஶமய” “ப்ரஶமய” என்று ப்ரார்த்திக்கப்படுகிறது.
பிரபத்தி ஸகலபல ஸாதநம் என்பது விபீஷணன் பிரஹ்லாதன் காகம் முதலான பலருடைய அனுஷ்டானத்தை எடுப்பதால் குறிப்பிடப் படுகிறது.
இத்துடன் பிரபத்தியை அனுஷ்டிப்பதற்கு பரம் வ்யூஹம் விபவம் என்று ஒரு இட நியமமில்லை.
அர்ச்சாவதாரத்திலேயே சரணாகதி செய்யலாம் என்பது ஸ்ரீரங்கநாதனிடத்தில் சரணம் புகுவதால் காட்ட்ப்படுகிறது.
அர்ச்சாவதாரத்தில் ஸௌலப்யம் அதிகம் என்ற ஏற்றமே உண்டு. மற்றப்படி ஸர்வஜ்ஞத்வ ஸர்வசக்தித்வாதி கல்யாண குணங்கள்
எங்கும் துல்யம் என்பதும் அறியத் தக்கது. ஆனால் அர்ச்சாவதாரத்தில் சக்திக்கு ஏற்றத் தாழ்வு இருப்பதாகத் தோன்றுவதற்கு
ஆச்ரிதர்களின் புண்ய பாபங்களே காரணம். ஆகையால் ஸ்ரீவைகுண்டத்தில் பூமகளும் மண்மகளும் இருபாலும் திகழ வீற்றிருக்கும்
பரந்தாமனிடத்தில் செய்யும் பக்தியை நமக்காக நம் நாட்டிலும் இல்லத்திலும் தோன்றி நாம் இட்டதை ஏற்று மகிழும்
அர்ச்சையிடம் செய்வதே விவேகமுடையார் செய்யத் தக்கது. அர்ச்சாவதார ஸேவையே நமக்குச் சிறந்த உபாயம்.
ஆலயங்களுக்கும் எம்பெருமான்களுக்கும் மற்றும் தேசத்திற்கும் தனக்கும் ஏற்பட்டபோது இந்த அபீதிஸ்தவத்தை அநுஸந்தித்தால்,
ஆபத்து நீங்கி இது அபயத்தை நிச்சயமாய் அளிக்கும் என்பது ஸ்ரீ தேசிகன் சரித்ரத்தால் ப்ரத்யக்ஷஸித்தம்.
கோலத்திரு மா மகள் உடன் கூடிய ஸ்ரீ நாராயணனே சகல ஜகாத் காரண பரத்வம் –
ப்ரஹ்மாதி தேவர்களும் இவன் ஆஜ்ஜைக்கு அஞ்சி கார்யம் செய்வதை முதல் ஸ்லோகத்தாலும் –
சர்வேஸ்வரன் ஒருவரை ரஷிக்க விரும்பினால்
எந்த தெய்வமும் எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று ஸ்லோகங்கள் -4-முதல் -26-
பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு மிதுனமான இந்த பரத்வ தத்வம் இடம்
சரணாகதி அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று -7-ஸ்லோகத்தாலும்
ஒரே தடவை செய்ய வேண்டிய சரணாகதியின் பெருமைகளை -2-ஸ்லோகத்தாலும்
திரு நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளை -2-5–15–21-ஸ்லோகங்களிலும்
பிரபத்தி -21-ஸ்லோகத்தில் சரணாகதி அனுஷ்ட்டித்தும்
சத்ரு பயங்களை போக்கி அருள -20–22–24-ஸ்லோகங்களில் சமய பிரசமய என்றும் மீண்டும் பிரார்த்திக்கிறார்
-பிரபத்தி சகல பல சாதனம் அன்றோ –
———————————————–
அபீதி ரிஹ யஜ்ஜூஷாம் யதவதீ ரிதா நாம் பயம்
பயாபய விதாயிநோ ஜகதி யந்நி தேச ஸ்திதா
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம்
ரமசா கமதீ மஹே கிமபி ரங்க துர்யம் மஹ–1-
யஜ்ஜுஷாம் — எவருடைய ப்ரீத்யநுக்ரஹருடையவர்க்கு,
இஹ — இங்கேயே,
அபீதி — பயமில்லாமையும்,
யதவதீரிதாநாம் — எவரால் உபேக்ஷிக்கப் பட்டவர்களுக்கு,
பயம் — பயமும் (உண்டோ),
ஜகதி — உலகத்தில்,
பயாபய விதாயிந: — பயத்தையும் அபயத்தையும் கொடுப்பவர்கள்,
யந்நிதேஶே — எவருடைய ஆக்ஞையில்,
ஸ்திதா — இருக்கின்றார்களோ,
அதிலங்கித த்ருஹிண ஶம்பு ஶக்ராதிகம் — ப்ரஹ்மா, ஈச்வரன், இந்திரன் முதலியவர்களைத் தாண்டியதும்,
ரமாஸகம் — பெரியபிராட்டியாருடைய தோழமை கொண்டதும்,
தத் — அந்த,
ஏதத் — இந்த,
கிமபி — சொல்லுக்கு அடங்காததையும்,
ரங்கதுர்யம் — ரங்கதுரத்தை நிர்வஹிக்கும்,
மஹ: — தேஜஸ்ஸை,
அதீமஹே — அத்யயநம் செய்கிறோம் (அநுஸந்திக்கிறோம்)
அபீதி ரிஹ யஜ்ஜூஷாம்ய-எவருடைய ப்ரீத்தி அனுக்ரஹம் உடையோருக்கு இங்கேயே பயம் இல்லாமையும்
தவதீ ரிதா நாம் பயம் -எவரால் உபேக்ஷிக்கப் பட்டவர்களுக்கு பயம் உண்டோ
பயாபய விதாயிநோ-பயத்தையும் அபயத்தையும் கொடுப்பவர்கள்
ஜகதி யந்நி தேச ஸ்திதா-உலகத்தில் எவருடைய ஆஞ்ஜையில் இருக்கின்றார்களோ
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம் -ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் முதலியவர்களைத் தாண்டியதும்
ரமசா கமதீ -பெரிய பிராட்டிக்கு தோழமை கொண்டதும்
தத் ஏதத் -அந்த இந்த
மஹே கிமபி ரங்க துர்யம் மஹ-ரங்க துரத்தை நிர்வஹிக்கும் தேஜஸை அத்யயனம் -செய்கிறோம் -அனுசந்திக்கிறோம் –
பெரியதோர் பயத்திலிருந்து விமோசநமாகும்படி அபய ப்ரார்த்தனை செய்வதால் பெருமாளுடைய ரக்ஷணத்தை
“ஸ்வாஶ்ரிதாபயப்ரதம்” என்று துவக்குகிறார். அந்வயவ்ய திரேகங்களாக முதலடியில் லக்ஷணங்கள் ஸாதிக்கிறார்.
எங்களுக்கு அபயமே தான் நியாய்யம். பயத்திற்கு ப்ரஶக்தியே இல்லை.
பெருமாள் க்ருபைக்குப் பாத்திரமான எங்களுக்கு அபீதி நியதமாயிருக்க வேண்டுமே.
பெருமாளுடைய உபேக்ஷைக்கு (அவதீரணத்திற்கு, திரஸ்காரத்திற்கு) விஷயமானோருக்கல்லவா பயம் வரலாம்.
நாம் அவரால் அவதீரிதரல்லவே. பயம் வந்த காரணம் அறிகிலோம். வந்திருக்கும் பயத்தை உடனே போக்கவேணும்.
(யதநுக்ரஹத: ஸந்தி ந ஸந்தி யதுபேக்ஷயா) என்று நித்மான பொருள்கள்கூட எவர் அனுக்ரஹத்தால் இருக்கின்றனவோ,
எவர் உபேக்ஷித்தால் இல்லாமற்போமோ என்று சுகர் ஸாதித்ததை அநுஸரித்தது இந்த முதலடி லக்ஷணம்.
இந்த லக்ஷணத்தை மனதிற் கொண்டே இவரை நாம் ப்ரீதியோடு ஸேவித்தால், நம்மிடம் இவருக்கு அநுக்ரஹம் உண்டாகி
நம் பயம் தீரும் என்று தீர்மானித்து, இவரை ஸேவித்து மல்லுக்கட்டி அபயம் பெறுவோம் என்று முதலிலேயே தேற்றிக் கொள்ளுகிறார்.
அபயஸித்தி என்னும் ப்ரயோஜனத்திற்காக அவனை ஸேவித்து, அவனை ஜுஷ்டனாக (ப்ரீதனாக)ச் செய்வோம்.
பெருமாளுடைய ப்ரீதியுமிருக்கட்டும், அவர்பேக்ஷையும் இல்லாமலிருக்கட்டும். உலகத்தில் பயமுண்டாக்கக்கூடிய
அதிகாரிகளான வாயு, ஸூர்யன் முதலியவர் பயமுண்டாக்கினால், என் செய்வோம் என்று கேட்பீரோ?
அவர்களிடமிருந்து பயத்திற்கு பிரஸக்தி இல்லை.
உலகத்தில் பயாபய காரணர்களான அவர்கள் இவருடைய ஆக்ஞையில் (ப்ரஶாஸநத்தில்) நிற்பவர்.
இதுவும் ஒரு லக்ஷணமாகப் பணிக்கப்படுகிறது. இரண்டாமடியைத் திருப்பி மாற்றி அந்வயிப்பதில் மிக ரஸமுண்டு.
எவருடைய கட்டளைப்படி நடக்கும் பக்தர்கள் உலகத்திற்கு பயத்தையும் அபயத்தையும் கொடுக்கவல்லரோ,
பகவதாஶ்ரிதராய், அவர் கட்டளையில் நிற்பவர் இட்டது சட்டம் உலகத்தில் பயாபயங்கள்.
ப்ரஹ்மநிஷ்டருக்கு தேவர்களும் கெடுதல் செய்யமுடியாது.
தேவர்கள் அவர்களுக்கு பலி ஸமர்ப்பித்துப் பூஜை செய்கிறார்கள் என்று உபநிஷத்துக் கூறுகிறது.
இதனால் வாயு, ஸூர்யன் முதலிய தேவர்களிடமிருந்து பயம் வராதென்று கைமுத்யத்தால் ஸித்தம்..
“எவனுடைய, எவனுடைய, எவனுடைய” என்று மும்முறை படித்துவிட்டு “அந்த இச்சுடர்” என்கிறார்.
“அதை இதைப்போல் பார்த்தார் ரிஷிவாமதேவர்” என்று உபநிஷத்து மூன்று லக்ஷணங்களால் குறித்து, “அது ப்ரஹ்மம்” என்றது போல,
இங்கு “அது இந்த ரங்க ஜ்யோதிஸ்” என்கிறார். ப்ரஹ்மா, ருத்ரன், இந்திரன் முதலானவர்களால் பயம் வந்தாலென்ன செய்கிறது என்றும் பயப்பட வேண்டாம், அது இதையெல்லாம் மீறிய மஹஸ். இது அப்ரமேயமான தேஜஸ். “கிமபி” என்பதற்கு “மாநாதீதம்”, “அப்ரமேயம்” என்று கருத்து.
அந்த தேஜஸ் (ராமன்) அப்ரமேயமே, ஏனென்றால் ஜானகி அதனுடையவளல்லவோ” என்ற மாரீசன் வார்த்தையை நினைத்து,
ரமாஸகமான ஏதோ ஒரு அப்ரமேயமான தேஜஸ் என்கிறார். சரணாகதியான இந்த ஸ்தவத்தில் ப்ரணவாந்தஸ் ஸ்திதமான
ப்ரஹ்ம தேஜஸ்ஸிடம் பரத்தை ஸமர்ப்பிக்கையில், லக்ஷ்மீ ஸஹாயமான தேஜஸ் என்கிறார்.
சரணாகதியைப் பண்ணினதாகச் சொல்லும் இருபத்தோராவது சுலோகத்திலும் ஸ்ரீகாந்தனிடம் பரத்தை ஸமர்ப்பித்தோம் என்கிறார்.
(மகாரஸ்து தயோர்தாஸ:) என்ற ப்ரணவ சுருதியை நினைக்கிறார். எந்த மஹஸ் என்றால், ரங்க துரத்தை (ரங்க பாரத்தை) வஹிக்கும் தேஜஸ்,
ரங்கமென்பது ப்ரணவம். ப்ரணவதுரத்தை நிர்வஹிக்கும் தேஜஸ். ப்ரணவத்திலுள்ள தேஜஸ்ஸைப் பணிக்கையில், “அதீமஹே” என்கிறார்.
ப்ரணவ தேஜஸ்்ஸான ரங்க தேஜஸ் அத்யயனம் செய்ய யோக்யமானது. வேதம் முழுவதும் ப்ரணவத்திற்குள் உள்ளது.
ரங்கதுரத்தை நிர்வஹிக்கும் தேஜஸ் என்பதில் வேறு ரஸமுண்டு.
ரங்கத்தை ரக்ஷித்து அதற்கு அபாயமில்லாமல் நிர்வஹிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஸ்தவத்திற்குப் பயன்.
ரங்கத்தின் பாரத்தை அவரை வஹிக்க ப்ரார்த்திக்கிறோம் என்றும் ஸூசகம். மற்றொன்றும் வேண்டாம்.
ரங்க துரந்தரன் என்னும் திருநாமம் அந்வர்த்தமாக இருக்க வேணும். “துர்ய” என்பது அச்வத்தையும் சொல்லும்.
“ஹயமஹஸ்” என்று தமக்குப் பிரியமான ஹயக்ரீவ தேஜஸ்ஸையும் சேர்த்து அபிந்நமாக நினைக்கிறார்.
யத் அனுக்ரஹ சந்தி ந சந்தி யத் உபேஷ்யா–ஸ்ரீ சுகர் / ப்ரஹ்ம நிஷ்டர்க்கு தேவர்களாலும் கெடுதல் செய்ய முடியாதே
கிமபி -அப்ரமேய தேஜஸ் என்றபடி / மகாரஸ்து -தயோர் தாஸ-பிரணவ ஸ்ருதி /
ரங்கம் பிரணவம் -துரத்தை வஹிக்கும் –துர்ய-ஹயமவுஸ் -ஹயக்ரீவ தேஜஸ் சேர்த்து என்றுமாம்-
தஞ்சம் என வருவார்க்குத் தந்திடுவான் அஞ்சாமை
தனைச் சேரா தகல்வோர்க்குத் தந்திடுவான் அச்சத்தை
அஞ்சுதலைத் தந்து நம்மை அலைக்கழிப்போர் எல்லாரும்
அஞ்சாமை நமக்கு அளிக்கும் அன்பர்களும் அவன் அடிமை
செஞ்சடையோன் நான்முகத்தோன் தேவர் கோன் முதல்வோரும்
நினைப்பரிய மேலிடத்தோன் திரு மகளார் உடை சேர
விஞ்சுகிற ஒளியாக விரி புகல் சேர் அரங்கத்தில்
விளங்குகிற அத்தேவை விரித்துரைத்து வாழ்த்துவமே –
——————————————————-
தயா சிசிரிதாசயா மனசி மே சதா ஜாக்ருயு
ஸ்ரியா அத்யுதிஷ வக்ஷஸே ஸ்ரித மருத் வ்ருதா சைகதா
ஜகத்துரித கஸ்மரா ஜலதி டிம்ப டம்பஸ் ப்ருச
ஸக்ருத் ப்ரணத ரக்ஷண ப்ரதித சம்வித சம்வித –2-
தயா – க்ருபையால்,
ஶிஶிரித – குளிர்ந்த,
ஆஶயா – திருவுள்ளத்தையுடையவர் மயமாயும்,
ஶ்ரியா – பிராட்டியால் அத்யுஷித – வாஸம் செய்யப்படும்,
வக்ஷஸ: – திருமார்பு மயமாயும்,
ஶ்ரித ம்ருத்வ்ருதாஸைகதா – காவேரி மணலில் சயனித்திருப்பவர்மயமாயும்,
ஜகத் – உலகத்தின்,
துரித – பாபத்தையெல்லாம்,
கஸ்மரா: – விழுங்கிவிடுபவர் மயமாயும்,
ஜலதிடிம்ப டம்ப ஸ்ப்ருஶ: – குட்டி ஸமுத்ரம் போன்றவர் மயமாயும்,
ஸக்ருத் – ஒரு தடவை,
ப்ரணத – சரணமடைந்தவரையும்,
ரக்ஷண ப்ரதிதஸம்வித: – ரக்ஷிப்பதாகப் பிரஸித்தமாக ப்ரதிக்ஞை செய்தவர் விஷயமாயும்,
ஸம்வித: – புத்திவ்ருத்திகள்,
மே மநஸி – என்னுடைய மனதில்,
ஸதா – எப்பொழுதும்,
ஜாக்ருயு: – ஜாகரூகமாகக் குடி கொண்டிருக்க வேண்டும்.
தயா சிசிரிதாசயா மனசி-கிருபையால் குளிர்ந்த திரு உள்ளத்தை யுடையவராயும்
ஸ்ரியா அத்யுதிஷ வக்ஷஸே -அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி நித்ய வாசம் செய்யும் திரு மார்பு யுடையவனாய்
ஸ்ரித மருத் வ்ருதா சைகதா-காவேரி மணல் மேட்டுத் திட்டில் சயனித்து இருந்து –
விபீஷணர் சரணாகதி கடல் கரை மணலில் நடந்தது நினைப்பூட்டி இருப்பவராயும்
ஜகத்துரித கஸ்மரா– ஜகத்தில் பாபங்களை எல்லாம் விழுங்கி விடுபராயும் –
ஜலதி டிம்ப டம்பஸ் ப்ருச— குட்டி சமுத்திரம் போன்றவராயும் -பச்சை மா கடல் போல் மேனி
ஸக்ருத் ப்ரணத ரக்ஷண ப்ரதித சம்வித சம்வித-ஒரே தடவை சரணம் அடைந்தவர்களையும் ரக்ஷிப்பதாக ப்ரதிஜ்ஜை செய்து
அருளுபவர் விஷயமாக புத்தி விருத்திகள்
மே சதா ஜாக்ருயு-என்னுடைய மனசில் ஜாக ரூகமாகக் குடி கொண்டு அருள வேணும் –
இந்த சரணாகதியை மிகவும் கெட்டியாய்ச் செய்யவேணும். இந்த சரணாகதிக்குப் பலம் உடனே தப்பாமல் கிடைக்கவேணும்.
ஸமுத்ரக்கரையில் புளிநத்தில் (மணலில்) நடந்த விபீஷண சரணாகதி அவஸரத்தை நினைத்து,
அத்தொடொக்கப் பெருமாளுடைய ரங்கசயநத்திலுள்ள அம்சங்களை மனதில் பாவனை செய்கிறார்.
அங்கே கடற்கரை மணல், இங்கே ஸமுத்ர பத்நியாகிய காவேரியின் மணலில் சயநம்.
பதியாகிய ஸமுத்ரத்தைக் காட்டிலும் பத்நிகளான யமுனை போன்ற புண்யநதிகளுக்கு சுத்தி அதிகம்.
“தூயபெருநீர் யமுனைத் துறைவனை” “மருத் வ்ருதா” என்று காவேரிக்கு சுருதியில் திருநாமம்.
வேதப் பிரஸித்தமான புண்யநதி என்று வ்யஞ்ஜநம். ப்ரணவப் பெருமாள் வேதப் பிரஸித்த நதியில் சயனித்தார்.
கடற்கரையில் நீர்க்கடலுக்கு எதிரில் ஓர் நீல தேஜோ வெள்ளமாய் பெருமாள் ப்ரதிஶயனம் செய்ததை நினைக்கிறார்.
இங்கே அரங்கன் ஓர் குட்டிக் கடலாகப் பிரகாசிக்கிறார். “பச்சைமா கடல்போல் மேனி” என்று இங்கே ஒருவாறு அனுபவம்.
(அர்ணவதர்ணகம்) என்றார் ஸ்ரீ பட்டர். ஆச்ரிதர்களின் பாபக்கடலை அப்படியே உறிஞ்சி விடுவதாக ஸங்கல்பம்.
உலகத்தின் பாபக்கடலுக்கு எதிரியாக இக்குட்டிக் கடலின் சயனம்.
(ஸக்ருதேவ ப்ரபந்நாய ………… அபயம் ஸர்வபூதப்யோததாமி ஏதத் வ்ரதம் மம) என்று ப்ரதிக்ஞை செய்த அவஸரத்தையும் காட்டுகிறார்.
கடற்கரையில் எல்லோரும் பார்க்கும்படி பிராட்டியின் ஸந்நிதாநம் இல்லை. பிராட்டி அக்கரையிலும் பெருமாள் இக்கரையிலுமாக இருந்த அவஸரம்.
ஆனால பிரிந்திருந்த பிராட்டியைச் சேர்த்து வைப்பதற்காகவே தம்மை அங்கீகரிக்கும்படி விபீஷணன் பிரார்த்தித்தான் என்றும் சொல்லலாம்.
இருவரையும் சேர்த்துவைத்து இருவருயிரையும் காப்பாற்றி, தாமும் பிழைக்க அங்கே ஆஶ்ரயணம்.
“ப்ரதீயதாம் தாஶரதாய மைதிலீ” என்று தம்பதிகளைக் கூட்டவே அவர் மநோரதம். இங்கு இருவர் திருமேனியையும் காப்பாற்ற சரணாகதி.
அங்கும் அது உண்டு. ஸ்ரீ உறையும் திருமார்பை உடையவர். “பூமன்னும் மாது உறை மார்பன்”.
பிராட்டி திருமார்பை ஆஶ்ரயித்திருப்பதால் தான் ஹ்ருதயம் தயையினால் குளிர்ந்திருக்கிறது.
பெருமாள் திருவுள்ளம் சீதளமானதுதான். நாம்தான் அதன் பிரயோஜனத்தை அடையாமல், அந்த்த் தயையைத் தகைகிறோம்.
“ஸம்வித்” என்னும் புத்திகள் என் மனதில் தூங்காமல் விழித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை.
பெருமாள் தூங்குவது போலிருந்தாலும் அவர் விஷயமான என்னுடைய பாவனைகள் தூங்காமல் ஸதா விழித்திருக்க வேண்டும்.
பெருமாளுக்கு விசேஷணங்களாகக் கூறப்பட்டதெல்லாம், நம்முடைய பாவனையில் ஆகாரங்களாகக் கூடி, ஸமாநாதிகரணமாகின்றன.
விஶிஷ்டமான ஸம்வித்துகளே. நிர்விஶேஷ நிராகார புத்தி யல்ல. இந்த விசேஷணங்களையுடைய பெருமாளால் உபரக்தமான புத்திகள்.
திருக்காவேரியில் பள்ளிகொண்ட பெருமாள் விஷயமான பாவனை எனக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று ப்ரார்த்திப்பதால்,
பாவனைக்கு விஷயமான பெருமாள் திருமேனியும் விசேஷணங்களும் நித்யமாய் நிரபாயமாயிருக்க வேண்டும் என்று முக்கியக் கருத்து ஸூசிதமாகிறது.
இந்த மநோரதத்தைப் பூர்த்தி செய்ய பெருமாள் க்ருபை செய்யவேண்டும் என்று ஆசையை விளக்குகிறார்.
காயத்ரியில் சுபமான புத்தி வ்ருத்திகளின் ப்ரசோதநத்தின் ப்ரார்த்தனை போல் இங்கும் முன் ச்லோகத்தில் “அதீமஹே” என்று பேசி,
அடுத்தாற்போல் அங்கு போல இங்கே **தீகளாகிய ஸம்வித்துக்களின் ஜாகரணத்தையும் பிரார்த்திக்கிறார்.
காயத்ரீ ஜபம் எப்படி நித்யமோ, அப்படியே ஸ்ரீரங்கஸ்ரீயின் வ்ருத்தியின் பிரார்த்தனையும் நித்யம்.
அதற்கு லோபம் வருவதை ஸஹிக்க மாட்டோமல்லவா?
கருணை தனின் பெருக்கு எடுப்பால் குளிர்ந்து இருக்கும் உள்ளத்துடன்
திரு மகளே அகலாது திகழ்ந்து உறையும் மார்புடனும்
பிரிந்தோடும் காவேரியின் மணல் திட்டில் கிடந்தது அருளி
பார் வாழும் மக்கள் தனின் பாபங்களை ஒழிப்பவனாய்
ஒரு முறையே அடி பணிய உற்றவரைக் காப்பது என
உலகு அறிய வாக்கதனை உறுதி செய்யும் அரங்கன் தன்
திரு மேனித் தோற்றங்கள் திரளாக எழுந்து எழுந்து
நிறைந்து என் தன் நெஞ்சும் உள்ளே நிலைத்திடட்டும் நித்யமே
——————————————————–
சரணாகதி பூர்ணமாயின் பலிக்குமென்பது திண்ணம்.
பெருமாள் திருமேனியின் க்ஷேமத்திற்காகச் செய்யும் சரணாகதி ரூபமான அர்ச்சனை ஸ்துதி
குறைவில்லாமல் பூர்ணமாயிருக்க வேண்டுமே என்று அபாரமான கவலை.
எங்கே குறைவு வந்து சரணாகதி அபூர்ணமாகி, கோரிய பலம் தவறிவிடுமோ என்று பயம்.
பெருமாளுடைய தயாதி கல்யாண குணங்களைப் பூர்ணமாய் நெஞ்சில் தரிக்க வேணும்.
என் அல்ப விஷயமான மதி எங்கே? பெருமாளின் எண்ணிறந்த கல்யாண குணங்களெங்கே?
பெருமாளுடைய தயை என்னும் குணம் என் புத்தியில் நிரம்பியிருக்க வேண்டும் என்கிறார்.
அவர் தயை எல்லையற்றது. என் புத்தி பரிமிதமானது. அதுதான் சூந்யமாக இருக்கிறதோ?
அவ்விதமிருந்தால் அதில் பெருமாள் தயை கொஞ்சமேனும் புகுரலாம். புத்தி மிதம்;
அதில் மோஹத்திற்குக் கணக்கில்லை என்கிறார்.
மிக்க மோஹத்தால் நிரம்பின சிறு புத்தியில் பெருமாள் அளவற்ற பெரும் குணம் புகுந்து நிற்க இடமில்லையே.
நிரந்தரமாகப் பெருமாளைப் பஜிக்கப் பெறவில்லை. மோஹ பஜநத்திற்குக் குறைவில்லை.
அதிகம் மோஹத்தால் மூடப்பட்டிருப்பதற்குக் காரணம் என்ன? குணம். என்ன குணம்?
நல்ல குணமாயின் பெருமாள் குணம் குடியேற விரோதமில்லை. அவர் குணத்திற்கும் என் குணத்திற்கும் நாமம் மட்டும்தான் ஒன்று.
என் தோஷத்திற்கே என் குணம் என்று பெயர். முக்குணப் பிரகிருதி என் குணம்.
“தோஷக்ருஹீதகுணாம்” என்று ச்ருதி கீதை தொடக்கத்தில் சுகர் “அஜை” என்னும் பிரகிருதிக்குத் த்ரிகுணம் என்று பெயர் மட்டுமே;
தோஷத்திற்கே குணம் என்று பெயர் க்ரஹிக்கப்படுகிறது என்று வேடிக்கையாய்க் காட்டினார்.
குணத்தால் என் உடலம், வாக்கு, மனஸ் எல்லாம் விசித்திரமாய்க் கட்டப்பட்டு, ஒன்றோடொன்று விசித்திரமாய்க் காடு பாய்கிறது.
ய தத்ய மித புத்தி நா பஹுள மோஹ பாஜா மயா
குண க்ரதித காய வாங்மனச வ்ருத்தி வை சித்ர்யத
அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷ மார்ப்யதே
தத்ப் யுசிதமர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர –3-
ரங்கேஶ்வர — ஸ்ரீரங்கராஜரே! ,
அத்ய — இன்று,
குண — முக்குணங்களால்,
க்ரதித –வரிந்து கட்டப் பட்டிருக்கும்,
காய வாங் மனஸ — தேஹம், வாக்கு, மனசு,
வ்ருத்தி — இவற்றின் போக்குகளின்,
வைசித்ர்யத: — வைசித்ர்யத்தால்,
பஹுள ரோஹ பாஜா — எத்தனையோ மோஹத்தை அடைந்த,
மிதபுத்திநா — சிறிய புத்தியையுடைய,
மயா — என்னால்,
அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷம் — எது நல்ல வழி எது தவறானது என்று ஊஹித்துத் தெரிந்து கொள்ளாமல்,
யத் — எது (எந்த இந்தத் துதி),
ஆரப்யதே — ஆரம்பிக்கப் படுகிறதோ,
தத் அபி — அதையும்,
உசிதம் — தகுதியான,
அர்ச்சனம் –பூஜையாக,
பரிக்ருஹாண .. ஏற்றுக் கொள்ள வேணும்.
மித புத்தி நா பஹுள மோஹ பாஜா மயா -சிறிய புத்தியை யுடைய என்னால் எத்தனையோ மோஹத்தை அடைந்த
குண க்ரதித காய வாங்மனச வ்ருத்தி வை சித்ர்யத-முக்குணங்களால் வரிந்து கட்டப் பட்டு இருக்கும்-தோஷ க்ருஹீத குணம் –
தேஹம் வாக்கு மனஸ் இவற்றின் போக்குகளின் வைசித்ர்யத்தால்
அதர்க்கித ஹிதாஹித க்ரம விசேஷ மார்ப்யதே-எது நல்ல வழி எது தவறானது என்று ஊஹித்து
தெரிந்து கொள்ளாமல் ஆரம்பிக்கப் படுகிறதோ
ய தத்ய– தத்ப் யுசிதமர்ச்சனம் பரிக்ருஹாண ரங்கேஸ்வர–எந்த இந்த ஸ்துதி ஆரம்பிக்கப் படுகிறதோ
அதை தகுதியான பூஜையாக ஏற்றுக் கொண்டு அருள வேணும் -அர்ச்சக பராதீனராக கோயில் கொண்டு அருளும் ஸ்ரீ ரெங்கேஸ்வரா –
எவன் அவன் என்று ஸ்ரீ ரெங்கேஸ்வரனின் பெருமையாலும் –எது அது
என்று பரிஹாஸமாகத் தன் தாழ்மையைக் காட்டி அருளுகிறார் –
முன் ச்லோகத்தில் ப்ரார்த்தித்தபடி பெருமாள் சுப விக்ரஹ குணாதிகள் புத்தியில் எப்படிப் புகுந்து நிரம்பும்?
இத்தனை விக்நங்கள் உளவே. செய்யும் சரணாகதியை ஓர் பாமாலையால் ஸமர்ப்பிக்க உத்தேசம்.
பூமாலை போன்றதான பாமாலையாயிருப்பது உசிதம். குணமென்னும் நாரில் விசித்திரமாய்த் தொடுக்கப்பட்ட
புஷ்ப மாலை போன்ற சப்த குணங்களாலும் அர்த்த குணங்களாலும் வைசித்ர்யம் என்னும் அலங்காரங்களாலும்
பல சித்ரங்களாலும் க்ரதிதமான பாமாலையைக் கொண்டு தேவரீரை அர்ச்சிப்பது உசிதம்.
“குணக்ரதித” என்பதாலும், “வாங் மநோவ்ருத்தி வைசித்ர்யத:” என்றதாலும் அர்ச்சநம் இப்படி இருப்பதல்லவோ உசிதம்
என்று வ்யஞ்ஜநம் செய்கிறார். அதற்கு விரோதமாக என் சரீரம், வாக்கு, மனம் எல்லாம் முக்குணங்களாலும்
விந்தையாகக் கட்டப்பட்டு எனக்கு ஸ்வாதீனமேயில்லாமல் இருக்கிறதே என்கிறார்.
தேஹமும் அசுசி, வாக்கும் மனமும் சுத்தமல்ல, இப்படி இருந்தும் “எது ஹிதம் உசிதம், எது அஹிதம், அநுசிதம்” என்று
ஆலோசிக்காமலே பயஸம்ப்ரமத்தினாலே க்ரம விசேஷமெல்லாம் தடுமாறி ஏதோ ப்ரார்த்தநா ஸ்துதி பிதற்ற ஆரம்பிக்கப் படுகிறது.
அதை உசிதமான அர்ச்சனமாகக் கொள்ள வேணும்.
“ஆரம்பிக்கப் படுகிறது” என்பதால் பயபாரவஶ்யத்தால் பலாத்கரிக்கப்பட்டு அதிஸம்ப்ரமத்துடன் ஆரம்பிக்கப் படுவதை வ்யஞ்ஜநம் செய்கிறார்.
“ரங்கேஶ்வர” என்பதாலும், “உசிதம் அர்ச்சநம்” என்பதாலும் “அர்ச்சக — பராதீநராக”க் கோயிலில் எழுந்தருளியிருக்கும்
கருணையை அத்துதி விஷயத்திலும் ஆவிஷ்கரிக்க வேண்டும் என்று வ்யஞ்ஜனம்.
இங்கே காவ்யக்ரதநத்திற்கும் ஒட்டும்படி, “குண, க்ரதித, காய, வாக், வ்ருத்தி, வைசித்ர்யம், உசித” சப்தங்களின்
பிரயோகத்தின் அழகை காவ்யரஸிகர் ரஸிக்கவேணும். “ரீதிராத்மா காவ்யஸ்ய” — காயம் என்பது ரீதி.
வ்ருத்தி என்பது “வ்ருத்திபிர் பஹுவிதாபிராஶ்ரிதா” என்பதுபோல காவ்ய வ்ருத்தி.
“எவன், எவன், அவன், அவன்” என்று பெரிய பெருமாளின் ஏற்றத்திற்கேற்ற லக்ஷணங்களைக் காட்டி,
தன் ஸ்தோத்ரத்திற்கும், “எது, அது” என்று பரிஹாஸமாய்த் தாழ்மையைக் காட்ட, லக்ஷணம் அமைக்கிறார்.
அப்பெருமானுக்கு இத்துதி. “ரங்கேஶ்வர” — எத்தனையோ அரும்பெரும் காவ்யங்கள் உம் முன்னிலையில்
அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. இது ஒரு த்ருஷ்டி பரிஹாரம்
அறிவுதனில் குறையுடையேன் அளவில்லா மோகத்தில்
ஆழ்ந்தவனாய் முக்குண வன் கயிற்றினால் கட்டுண்ட
பருவுடலும் வாய்ச சொல்லும் மனம் தனையும் உடையவனாய்
புரிகின்ற செயல் எல்லாம் பல பல வாய் பயனிலவாய்
இருக்கின்ற இந்நிலையில் இது நன்று இது தீது
என்று அறியா அடியேன் இத்துதியைத் தொடங்குகிறேன்
கருணையுடன் இதனையுமே தகுந்ததொரு வழி பாடாய்க்
கொள்வாயே அரங்கத்தில் குடி கொண்ட பெரும் தேவே –
——————————————————
பயம், பயம் என்றும், மஹத்தான பயம் என்றும், வஜ்ரம் என்றும், இடி மேல் விழுவதாக பயமுறுத்துவது போலவும்,
மிக்க பயத்தை ஆங்காங்கு பேசிக்கொண்டு வருகிறார்.
“என் விக்ரஹத்திற்கு வரும் அபாயத்தை விலக்கிக் கொள்ள வேறு யாரையாவது ப்ரார்த்திக்கலாகாதா?”
“ஸாத்யமில்லை. நானும் மற்றொருவரை யாசிக்க மாட்டேன். உம்மைத்தவிர வேறு பயநிவர்த்தகருமில்லை.
உலகமே உம்மிடமிருந்து பயந்து நடக்கிறது.
பயத்தைக் கொடுக்கக் கூடிய வாயு முதலிய தேவர்களும் ம்ருத்யு வென்னும் தேவனும் உமக்கு நடுங்கி நடக்கிறார்கள்.
தைத்திரீய சுருதியில் ஆநந்தமயப் பொருளின் ஆநந்தத்தைப் பற்றி ஆநந்தமீமாம்ஸை செய்யப் போகும் அவஸரத்தில், அ
தற்கு அடுத்த முன்வாக்யம் “இவரிடமிருந்து பயத்தால் வாயு வீசுகிறான். (உலகத்தைப் பரிசுத்தமாக்குகிறான்.)
இவரிடமிருந்து பயத்தால் சூரியன் உதிக்கிறான். இவரிடமிருந்து பயத்தால் அக்நியும் இந்திரனும் ம்ருத்யுவும்
(நால்வரோடு) ஐந்தாவதாக ஓடுகிறார்கள் ” என்றது.
பெருமாள் ரங்கத்தில் “ரதிம்கத:” “ஆநந்தபூர்ணர்” என்பதால் ரங்கத்திற்கு “ரங்கம்” என்று பெயர்.
(ப்ரஹ்மண கோஶோஸி) என்று ப்ரணவம் ப்ரஹ்மத்திற்குக் கோசம் (பெட்டி) என்றது சுருதி.
ப்ரணவ – விமாந – கோசத்தில் காணப்படும் ப்ரஹ்மம் இப்பெருமாள்.
பயவிஷயமான தைத்திரீய சுருதியை இப்பெருமாள் விஷயமாகக் கொள்கிறார்.
கடசுருதியில் “எந்த ஜகத்ப்ராணனிடமிருந்து இவ்வுலகமெல்லாம் ஓங்கப்பட்ட பயங்கரமான வஜ்ரத்தினிடமிருந்து
பயப்படுவது போல் நடுங்கி நடக்கிறதோ, அந்த இப்பிராணனை அறிந்தவர் அமிருதராவர்.
இவர் பயத்தால் அக்நி தன் வ்யாபாரமான தபநத்தைச் செய்கிறான். பயத்தால் சூரியன் ஜ்வலிக்கிறான்.
பயத்தால் இந்திரனும், வாயுவும், நால்வரோடு ஐந்தாமவனாக ம்ருத்யுவும் ஓடித் திரிகிறார்கள்.” என்று உள்ளது.
இந்த சுலோகத்தில் முன் பாதியில் தைத்திரீய சுருதியையும்,
பின்பாதியில் கடசுருதியின் பின்வாக்யத்தையும்,
முன்பாதியில் கடசுருதியின் முன்வாக்யத்தையும் ஸ்வல்ப வேறுபாட்டோடு அமைக்கிறார்.
சுருதியில் பயம் பயம் என்று திருப்பித் திருப்பிப் பேசுவது போல, இத்துதியிலும் இம்மஹத்தான பயாவஸரத்தில் பேசுகிறார்.
“கம்பநாத்” என்னும் சூத்திரத்தில்
“அங்குஷ்டமாத்ரமாக ஹ்ருதய குஹையில் இருக்கும் பெருமாளுக்கு உலக மெல்லாம் நடுங்கி நடக்கிறது” என்று அழகாக ஸூசிப்பித்தார்.
அப்படி உலகம் நடுங்கி நடப்பது ப்ரஹ்மத்திற்கு நிச்சயமான அடையாளம் (லிங்கம்) என்றார்.
“எனக்கல்லவோ அது அடையாளம்” என்று ப்ரஹ்லாதாழ்வானை ஹிரண்யன் வெருட்டினான்.
“எவன் கோபிக்கும்போது மூன்று லோகங்களும் அவற்றின் ஈச்வரர்களும் நடுங்குகிறார்களோ (கம்பந்தே)
அந்த என்னுடைய ஆஜ்ஞையை எந்த பலத்தைக்கொண்டு நீ மீறினாய்?” என்று கோபத்தோடு கேட்டான்.
அம்மதயானைக்கு நீர் ஸிம்ஹமானீர்.” சுருதியின் பேச்சுத்தான் ஸத்யம். அஸுரன் பேச்சு ஸத்யமாகுமோ?
சுருதி ஸூத்ரங்களின் பேச்சை ந்ருஸிம்ஹப் பெருமாள் ஸத்யமாக்கினார். எமக்கு வந்திடும் பயத்தை நீர்தானே நிவர்த்திக்க வேணும்!
மருத்தரணி பாவக த்ரிதச நாத காலாதய
ஸ்வ க்ருத்ய மதி குர்வதே த்வத பரா ததோ பிப்யத
மஹத் கிமபி வஜ்ர முத்ய தமி வேத யச்ச்ரூயதே
தரத்யநக தத் பயம் ய இஹ தாவக ஸ்தாவக –4-
அநக — மாசற்ற பிரபுவே!, மருத், தரணி, பாவக, த்ரிதஶநாத, காலாதய: — வாயு, சூர்யன், அக்னி, இந்திரன், யமன் முதலியவர்கள், த்வரபராதத: — உமக்கு அபராதிகள் ஆகிவிடுவோமோ என்று, பிப்யத — பயந்து, ஸ்வக்ருத்யம் — தங்கள் வ்யாபாரத்தை, அதிகுர்வதே — நடத்துகிறார்கள், உத்யதம் — ஓங்கின, மஹத் — பெரிய, கிமபி வஜ்ரமிவ — வர்ணிக்க முடியாத அத்தனை கொடிய வஜ்ராயுதம் போன்ற, பயம் இதி — பயம் என்று, யத்ஶ்ரூயதே — எது சுருதியில் கேட்கப் படுகிறதோ, தத் பயம் — அந்த பயத்தை, ய: – எவன், இஹ — இங்கே, தாவக: — உன்னைத் துதிப்பவனோ, தாதி — (அவன்) தாண்டுகிறான்.
மருத்தரணி பாவக த்ரிதச நாத காலாதய –-வாயு சூர்யன் அக்னி இந்திரன் யமன் முதலியவர்கள் –
ஸ்வ க்ருத்ய மதி குர்வதே த்வத பரா ததோ பிப்யத-உமக்கு அபராதிகள் ஆகி விடுமோ என்று பயந்து
தங்கள் வியாபாரத்தை நடத்துகிறார்கள் –
மஹத் கிமபி வஜ்ர முத்ய தமி வேத யச்ச்ரூயதே-பெரிய வர்ணிக்க முடியாத அத்தனை கொடிய
வஜ்ராயுதம் போன்ற பயம் என்று எது சுருதியில் கேட்கப் படுகிறதோ
தரத்யநக தத் பயம் ய இஹ தாவக ஸ்தாவக -அந்த பயத்தை எவன் இங்கு துதிப்பவனோ அவன் தாண்டுகிறான்
உம்மைத் தவிர வேறு பய நிவர்த்தகர் இல்லையே -உம்மை துதிப்பவனே பயத்தை தாண்டுகிறான் –
காலனுக்கு காலனாகிய கால காலன் நீர்
தரதி சோகம் ஆத்மவித் -அதஸோ அபயம் காதோ பவதி –
அநக-ஸ்துதிக்கும் நான் குற்றம் உள்ளவனாகவும் என் ஸ்துதியும் குற்றமாய் இருந்தாலும் போக்க வல்லவன் நீ அன்றோ –
காற்றைப்பற்றி சுருதி எடுத்த “வாத:”, “வாயு” என்ற சப்தங்களை எடுக்காமல் “மருத்” என்று முதலில் வைத்ததில் ரஸமுண்டு.
“மருத்” என்பது தேவர்களைப் பொதுவில் சொல்லும். “தேவர்” என்று பொதுப் பொருளையும் கொள்ள வேணும்.
தேவர்களான இவர்களும், நீர் யுத்தத்தில் ஜாதரோஷரான போது நடுங்குவாரே; விரோதிகளான அஸுரர்கள் நடுங்க வேண்டாவோ ?
(ராமாயண ஸங்க்ஷேபச் சுலோகத்தை நினைக்க வேண்டும்)
ஸூர்யனை “தரணி” என்பார். ஸம்ஸார பயத்தைத் தாண்ட அவருக்கு வேறு தரணி ( = ஓடம்) வேண்டும்.
தன் பயத்திற்குத் தான் தரணியாகார். நீர்தான் எல்லோருக்கும் பயதரணத்திற்கு (பயத்தைத் தாண்ட) தரணி.
உம்மைத் துதிப்பவன் பயத்தைத் தரணம் செய்வான் என்று இங்கே கடைசி அடியில் பேசுகிறார்.
“பாவகன்” என்றால் பரிசுத்தி செய்பவன். “பாவநம்:” பரிசுத்தி செய்வது.
இவனையும் பெருமாள் பாவநம் செய்து அபஹதபாப்மாவாக்க வேணும். இந்த ரஸங்களை வ்யஞ்ஜிப்பிக்கச் சுருதி பதங்களை மாற்றினது.
“இந்திரன்” என்று சுருதி பதம். எல்லோருக்கும் மேற்பட்ட ஈச்வரனைச் சொல்லும் சப்த சக்தியைக் குறைத்து ஒடித்து அவனுக்கு அப்பெயர்.
பெருமாளுக்குத்தான் அப்பெயர் தகும். அதுபோலவே, இங்கே அவன் விஷயத்தில் “த்ரிதஶநாதன்” என்று பேசுகிறார்.
இதுவும் சப்த சக்தியைக் குறைத்துப் பேச்சு. “காலன்” என்பதால் “காலனுக்கும் காலனாகிய காலகாலன் நீர்” என்பது வ்யஞ்ஜநம்.
தாங்கள் செய்யவேண்டிய தங்கள் அதிகாரக்ருத்யத்தைச் செய்கிறார்கள்.
எங்கே உம் ஆஜ்ஞையை மீறும் அபராதம் வருமோ என்று நடுங்கிச் செய்கிறார்கள்.
இதில் மிக்க ரஸமுண்டு. அத்வைதாசிரியராகிய ஸுரேச்வரர் இந்த ரஸத்தை தைத்திரீயோபநிஷத்தில் ஸூசிப்பித்தார்.
ஸூரேச்வரருடைய நைஷ்கர்ம்யஸித்தியை ஸ்வாமி தத்வடீகையில் உதாஹரித்தார்.
ஆநந்த மயனுடைய எல்லையற்ற ஆநந்தத்தைப் பேசுவதற்குமுன் க்ஷணத்தில் வாயு முதலிய தேவர்கள் பயந்து நடுங்கி
ஸ்வ க்ருத்யத்தைச் செய்கிறார்கள் என்று சொல்லி
ஆநந்த மயனுடைய ஆநந்தத்திற்கு எல்லையில்லை என்று சொல்லி முடிக்கையில், இந்த ப்ரஹ்மத்தின் எல்லையற்ற
ஆநந்தத் தன்மையை அறிந்தவர் ஒன்றுக்கும் பயப்படார்கள் என்று முடித்தது.
இப்படி ஆநந்தமயமானது ப்ரஹ்மம் என்று அறிந்தவர் பயப்படாமல் ஸந்தோஷமாய், ஆநந்தமாய், ஸ்வயம்ப்ரயோஜநமாய்,
தம் கைங்கர்யங்களைச் செய்யலாமே என்று சுருதியின் உட்கருத்து. இதை ஸுரேச்வரர் ஸூசிப்பித்தார்.
ஸ்வாமிக்கும் இந்த ரஸம் திருவுள்ளம். “ஸ்வக்ருத்யத்தை அதிகரிப்பதை பயப்பட்டுக்கொண்டே செய்கிறார்கள்.
ஆநந்தப்பட்டுக்கொண்டே செய்யலாமே! பயநிவர்த்தமும் ஆநந்தமயமுமான ப்ரஹ்மத்தினிடமிருந்து ஏன் பயப்பட வேண்டும்?”
என்று பா(भा)வம். அடுத்த சுலோகத்திலும் உம்முடைய ஆநந்தத் தன்மை என்னும் ஓர் வர்ணிக்கமுடியாத குணத்தை
அறிந்தவனுக்கு ஒரு பயமும் இல்லை என்று இதைக் காட்டுகிறார். “கிமபி” என்பதை மட்டும் இங்கே மூன்றாமடியால் சேர்த்தார்.
இப்போது நேர்ந்திருக்கும் பயம் வாக்குக்கும் நினைப்புக்கும் சக்யமல்லாதது என்கிறார். எம் தலையில் இடி விழுந்தாலென்ன?
அதனால் எமக்குத்தானே அபாயம் வரும்; எம்முயிரான உமக்கல்லவோ அபாயம் இப்போது ப்ரஸக்தம்.
எம்மை நீர் ரக்ஷிப்பீர். எமக்கு எம் ரக்ஷணவிஷயமான பயமில்லை. உம் திருமேனியை ரக்ஷிப்பாரார்?
உம்மைத் தவிர வேறு ரக்ஷகர் இக்காசினியில் இல்லையே? “சுருதி நம் காதில் ஓதும் பயம்” என்கிறார்.
சுருதி ஓதக் கேட்டிருக்கிறோம். இப்போது மஹத்தான பயத்தை நேரில் அனுபவிக்கிறோம்.
உம்மைத் துதிப்பவன் பயங்களைத் தாண்டுவான். கோர ஸம்ஸார பயத்தைத் தாண்டுவான் என்று வேதம் ஓதுகிறது.
“தரதி ஶோகம் ஆத்மவித்” “அத ஸோऽபயம் கதோ பவதி” —
| – நானும் உம்மைத் துதித்து இப்பெரும் பயத்தைத் தாண்ட விரும்புகிறேன்.
அநக — மாசறு சோதியே! துதிக்கும் நான் தேஹவானாயிருந்தால் என்ன?
என் துதி குற்றமுடையதானாலென்ன? உன் அநகத்வம் போதாதோ? என்று திருவுள்ளம்
ஓங்கியதோர் வச்சிரம் போல் உயர்ந்த உன் தன் தண்டனைக்கு
உறும் என்னும் அச்சத்தால் வளியோனும் கதிரவனும்
வீங்கெரியும் இந்திரனும் வான் காலன் முதலாய
தேவர் எலாம் தம் பணியைத் தவறாமல் ஆற்றுவதாய்
பாங்குடனே மறை முடிகள் பகர்கின்ற அச்சமதை
பாரினிலே எவரேனும் பக்தியுடன் பணிந்தவராய்
தீங்கில்லாத அரங்கன் உனைத் துதி செய்து வழி பட்டால்
தாண்டியராய் நல் கதியைத் தாம் அடைவர் உறுதி அன்றோ–
————————————————————-
பயந்த மிஹ ய ஸ்வ தீ நியத சேதன அசேதனம்
பநாயதி நமஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது
கதாசன குத்ஸசன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம் –5-
குணேஶ — குணங்களுக்கு ஈசனே (உடையவனே),
ஸ்வதீ நியத சேதநாசேதநம் –தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தாலே நியமிக்கப்படும் சேதநா சேதநாத்மகமான உலகத்தை உடைய,
பவந்தம் — தேவரீரை,
ய: — எவன்,
பநாயதி — துதிக்கிறானோ,
நமஸ்யதி — நமஸ்கரிக்கிறானோ,
ஸ்மரதி — ஸ்மரிக்கிறானோ,
வக்தி — பேர் சொல்லுகிறானோ,
பர்யேதிவா — ப்ரதக்ஷிணம் செய்கிறானோ,
கோபாயிது: — ரக்ஷகரான,
தவ — தேவரீருடைய,
கமபி — ஒரு, குணம் — குணத்தையாவது,
வேத்தி — அறிகிறானோ (உபாஸிக்கிறானோ),
தஸ்ய — அவனுக்கு,
கதாசந — எக்காலத்திலும்,
குதஶ்சந — எங்கேயிருந்தும் (எக்காரணத்தையிட்டும்),
க்வசந — எவ்விடத்திலும்,
பயம் — பயமென்பது,
ந ஸ்யாத் — உண்டாக மாட்டாது.
பயந்த மிஹ ய -ஸ்வ தீ நியத சேதன அசேதனம் -தன்னுடைய சங்கல்ப மாத்திரத்தாலே நியமிக்கப்படும்
சேதன அசேதநாத்மகமான உலகம் உடைய தேவரீரை –எவன் –
இஹ -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல -அங்கு ஏதும் சோராமல் ஆள்கின்ற எம்பிரான் இங்கேயே இருக்க
பநாயதி நமஸ்யதி ஸ்மரதி வக்தி பர்யேதி வா -ஸ்துதிக்கிறானோ -நமஸ்கரிக்கிறானோ -ஸ்மரிக்கிறானோ
-திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறானோ -பிரதக்ஷிணம் செய்கிறானோ –
குணம் கமபி வேத்தி வா தவ குணேச கோபாயிது -ரக்ஷகரான தேவரீருடைய ஒரு குணத்தையாவது அறிந்து உபாசிக்கிறானோ
-ஸ்ரீ ரங்கம் என்று உச்சரித்தாலும் போதுமே
கதாசன குத்ஸசன க்வசன தஸ்ய ந ஸ்யாத் பயம் -அவனுக்கு எக்காலத்திலும் -எங்கே இருந்தும் -எக்காரணத்தை இட்டும்
எவ்விடத்திலும் பயம் என்பதே உண்டாகாதே -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதஸ்ஸனா–ந பிபேதி கதாசன –
உம்மைத் துதி செய்பவனுக்கு எல்லா பயமும் போய்விடும்.
நீர் நிரபாயராக எழுந்தருளியிருக்க உம்மைத் துதி செய்யக்கூட வேண்டிய தில்லை. நமஸ்காரம் செய்தால் போதும்.
ஸ்மரித்தாலும் திருநாமத்தை உச்சரித்தாலும் ஒரு ப்ரதக்ஷிணத்தைச் செய்தாலும் கூடப் போதும்.
உம்முடைய திருமேனி குஶலமாய் எழுந்தருளியிருக்க வேண்டும் என்ற ஆசையையும்
“பவந்”நாக இருக்கும்படியான உம்மை என்று பொருள் கொள்ளுவதையும் உத்தேசிக்கிறார்.
நீர் “பவந்”நாக (இருப்பவராக) இருக்க வேண்டும்.
ராமகிருஷ்ணாதி விபவங்கள் போலே பூததசையாகாமல் நித்ய — பவந்நாய் எழுந்தருளியிருக்கும் பாக்கியத்தை உலகம் பெறவேணும்.
இஹபவந்தம் — இங்கேயே இருக்கிற உம்மை. வைகுண்டத்திலிருக்கிறோமே போதாதோ என்னவொண்ணாது.,
இப்பூலோக வைகுண்டத்தில் இருக்க வேண்டும்.
“வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல” என்றபடி இங்கே இருந்துகொண்டே சேதனாசேதனாத்மகமான
உலகங்களை எல்லாம் உம்முடைய ஸங்கல்ப மாத்ரத்தால் நியமிப்பவரல்லவோ?
இந்த சுபாஶ்ரயத் திருமேனியோடு கூடிய உம்மை, “விபந்யவ:” என்று பரமபதப் பெருமாளைத் துதிப்பது போல எவன் பநாயதி துதிக்கிறானோ?
பாடத் தெரியாதாயினும், துதிபாடுமத்தனை சிரமப்பட ஸௌகர்யமில்லையாயினும்,
(நமஸ்யதி) நமஸ்காரம் செய்தாலும் போதுமே.
ஸ்மரதி — தூரத்திலிருந்து ஸ்மரித்தாலும் போதும்,
வக்தி — ஸ்மரிக்கும் புத்தி சிரமம் கூட வேண்டாம்.
“ரங்கம்” என்று வாக்கினால் உச்சரித்தாலும் போதும்.
பர்யேதி வா — கோவிலையோ, திருவீதிகளையோ சுற்றி வந்தால் போதுமே.
அப்படிச் சுற்றி வருவது (ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீடந் ரமமாண:) என்பது போல் ஆநந்தாநுபவ மாயிருக்குமே.
குணங்களோடு கூடிய உம்மை இவ்வளவு செய்யவேண்டு மென்பதும் இல்லை.
உம்முடைய ஒரு குணத்தை அறிந்தாலும் (உபாஸித்தாலும்) போதும்.
“கம் அபி” என்பதால் “வாய் மனதிற்கு எட்டாத” என்று கொண்டு, “ஆநந்த: குணத்தை வாங்குவது உசிதம்.
அந்த குணத்தை உபாஸிப்பவரைப் பற்றி ஸாக்ஷாத்தாக
(“ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஶ்சந”, “ந பிபேதி கதாசந”) என்று சுருதி பேசிற்று.
“கதாசந” “குதஶ்சந” என்பதோடு “க்வசந” என்று சேர்த்து இங்கே பலத்தைப் படிக்கிறார்.
அரும் குணங்கள் நிறைந்த திரு வரங்கம் வாழ் பெருமானே
அறிவுடைய உயிர் எல்லாம் அறிவற்ற பொருள் யாவும்
பெரு மதியால் ஆள்கின்ற பெருமை தனை நீ யுடையாய்
பரு யுலகில் எவனேலும் புகழ்ந்து உன்னைத் துதித்தாலும்
சிறு வணக்கம் செய்தாலும் சிந்தனையில் கொண்டாலும்
நினை வலமே வந்தாலும் நலமுறுமுன் குணங்களிலே
ஒரு குணத்தை அறிந்தாலும் ஒருக்காலும் அவன் தானே
ஒருவிடத்தும் எங்கிருந்தும் உற்றிடானே பயம் தானே –
———————————————————-
எல்லா பயங்களும் தொலைய “ஸ்மரதி வா” என்று உம்மை நினைத்தால் போதும் என்று முன்பு ஸாதித்தார்.
கோயிலில் வஸிக்கும் உம்முடைய திருமேனியை ஒருக்கால் நன்று நினைத்திருந்தால் போதும்
அந்திம ஸ்ம்ருதியை உண்டாக்கி அவனை மோக்ஷம் சேர்க்க.
“கலு” என்று இந்த விஷயத்தில் ப்ரமாண ப்ரஸித்தியைக் காட்டுகிறார்.
அதற்காக பெருமாள் திருவாக்கிலிருந்து வந்த ப்ரமாண வசநங்களின் பதங்களாலேயே சுலோகத்தை அமைத்து,
பெருமாளுக்கு அவர் உக்தியையே நினைப்பூட்டுகிறார்.
“உம்மை” என்பதற்கு இங்கே, கோயிலில் எழுந்தருளியிருக்கும் அரங்கனை என்று கருத்து.
“துப்புடையாரை” என்னும் பாசுரத்தில் “எய்ப்பென்னை வந்து நலியும்போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே” என்று பெரியாழ்வார் அருளிச் செய்ததை இங்கே நினைக்கிறார்.
உம்மை ஸேவித்தாலல்லவோ உம் ஸ்மரணம் அந்திம காலத்தில் நேரும்?
தேவரீர் எழுந்தருளியிருந்தாலல்லவோ எல்லாரையும் தேஹ வியோக காலத்தில் ஸ்மரணத்தை அநுக்ரஹித்துக் காப்பாற்ற முடியும்?
தேவரீர் இங்கே எழுந்தருளியிருந்தே எம்மை அங்கே அனுப்பிச் சேர்ப்பிக்க வேணும்.
ஸ்திதே மனசி விக்ரஹே குணிநி தாது சாம்யே சதி
ஸ்மரேதகில தேஹிநம் ய இஹ ஜாதுசித் த்வா மஜம்
தயைவ கலு சந்தயா தமத தீர்க்க நித்ரா வசம்
ஸ்வயம் விஹித சம்ஸ்ம்ருதிர் நயசி தாம நை ஸ்ரேயசம்–6-
இஹ — இங்கே (கோயிலில், பூலோகத்தில், இவ்வாயுளில்),
ய: — எவன்,
மனஸி — மனதானது,
ஸ்திதே — ஒரு விஷயத்தில் நிலைநிற்க சக்தமாயிருக்கும்போது,
விக்ரஹே — சரீரம்,
குணிணி — ஸ்வஸ்தமாய் நல்வழியில் இருக்கும்போது,
தாது ஸாம்யே ஸதி — தாதுக்கள் ஸமமாய் அரோகமாயிருக்கும்போது,
தம் — அவனை,
தயைவ சந்தயா — அந்த ஒரு நினைப்பைக் கொண்டே,
ஸ்வயம் — நீராகவே,
விஹிதஸம் ஸ்ம்ருதி — அவனை உம்மை நன்றாய் நினைக்கச் செய்து,
அகில தேஹிநம் — ஸர்வ சரீரியாயும்,
அஜம் — பிறப்பற்றவருமான
த்வாம் — உம்மை,
ஜாதுசித் — எப்பொழுதாவது ஒரு தடவை,
ஸ்மரேத் — ஸ்மரிப்பானோ (ஸ்மரித்திருப்பானாகில்),
அத — பிறகு,
தீர்க்க நித்ராவசம் — நீண்ட துக்கமான மரணத்திற்கு வசமாயிருக்கும்போது,
நைஶ்ரேயஸம் தாம — தனக்கு மேற்பட்ட ஶ்ரேயஸ்ஸில்லாத மோக்ஷம் என்னும் ஸ்தாநத்தை,
நயஸி — சேர்ப்பிக்கிறீர்.
மனசி ஸ்திதே–மனசானது -ஒரு விஷயத்தில் நிலை நிற்க சக்தமாய் இருக்கும் போதே –
விக்ரஹே குணிநி-சரீரம் ஸ்வஸ்தமாய் நல் வழியிலே இருக்கும் போதே
தாது சாம்யே சதி -தாதுக்கள் சமமாய் அரோகமாய் இருக்கும் போதே
தயைவ கலு சந்தயா -அந்த ஒரு நினைவைக் கொண்டே
ஸ்வயம் விஹித சம்ஸ்ம்ருதிர்-நீராகவே உம்மை அவனை நினைக்கச் செய்து
கலு -பிராமண சித்தியை பற்றி அருளிச் செய்கிறார்
ஸ்மரேதகில தேஹிநம் ய இஹ ஜாதுசித் த்வா மஜம்- சர்வ சரீரியாகவும் -பிறப்பு அற்றவருமாக உம்மை எப்பொழுதாவது
ஒரு தடவை ஸ்மரித்து இருப்பான் ஆகில்
தமத தீர்க்க நித்ரா வசம் –பிறகு –நீண்ட துக்கமான மரணத்தின் வசமாய் இருக்கும் போது
எம்பெருமானால் அருள பெற்றவனுக்கு மரணம் என்று சொல்லாமல் தீர்க்கமான நித்திரை என்றே அருளிச் செய்கிறார்
நயசி தாம நை ஸ்ரேயசம்-தனக்கு மேல் பட்ட ஸ்ரேயஸ் இல்லாத மோக்ஷம் என்னும் ஸ்தானத்தை சேர்ப்பித்து அருளுகிறீர்
துப்புடையாரை –எய்ப்பு என்னை வந்து நலியும் போது அப்போதைக்கு இப்பொத்தே சொல்லி வைத்தேன் –
அரங்கத்து அரவணைப் பள்ளியானே –
“ஸ்திதே குணிநி விக்ரஹே” என்று “உம்முடைய திருமேனி நிரபாயமாய் எழுந்தருளியிருக்கையில்”
என்றும் காட்டுவதில் திருவுள்ளமாய் முதலில் “ஸ்திதே” என்கிறார்.
முன் சுலோகத்தில் “பவந்தம்” என்று தொடங்கியதுபோல்,
இந்தக் கவலையே நெஞ்சில் ஓடிக்கொண்டிருப்பது ஓரொரு சுலோகத்திலும் தெரிகிறது.
“அமில தேஹிநம் த்வாம்” — கிலத்திற்குப் பிரஸக்தியில்லாமல், பூர்ணமான திருமேனியுடைய உம்மை.
அகில தேஹியான உம்முடைய திருமேனிக்குக் கிலம் ப்ரஸக்தமானால் எந்த தேஹியின் தேஹம் நிற்கும்?
அஷம் த்வாம் — பிறந்தவனுக்கல்லவா அபாயம் த்ருவம் ! பிறவாத தேவரீர் திருமேனிக்கு அபாயம் வர ஸஹிப்போமோ?
உம்மை ஆச்ரயித்தவனுக்கு ஒருக்கால் தேஹ வியோகம் வருவதை “மரணம்” என்று பேசோம்.
“தீர்க்கமான நித்ரை” என்போம். ஒரு தரம் எக்காலத்திலோ உம்மை ஸ்மரித்ததை நினைத்துக்கொண்டே இருந்து
அவன் தேஹத்திற்கு அபாயம் வருங்கால் அவனுக்கு ஸ்மரணத்தைக் கொடுத்து ரக்ஷிக்கும் தயாளுவாயிற்றே.
நாங்கள் இப்பொழுது கதறுவதைத் திருவுள்ளத்தில் கொள்ளாமல் திரஸ்கரிக்கலாமோ??
“உம் திருவுள்ளம் மட்டும்தான் வேண்டும் எம் மனோரதத்தைப் பூர்த்தி செய்ய” என்று ”
ஸ்வதீநியதசேதநாசேதநம்” என்பதால் வ்யஞ்ஜனம் செய்கிறார்.
ஒரு விரோதி தன் கை கால்களை அசைக்க முடியுமோ?
“நான் அர்ச்சை, நான் பராதீநன்” என்று நீர் பேசவொண்ணாது.
“உம்முடைய அப்பெரிய வீட்டிற்கு எங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கத் தானே நீர் இங்கே கோயில் கொண்டிருப்பது” என்பதைக் காட்ட
“நயஸி தாம” “வீட்டுக்குக் கொண்டு போகிறாய்” என்கிறார்.
உம்மையல்லால் எம்மை வீடு சேர்ப்பார் ஆர்?
மண்ணுலகில் எவனும் தன் மனம் நல்ல நிலை கொண்டு
மெய்தானும் திடமாக மேன்மையுடன் இருக்கையிலே
நன்னிலையில் உடம்பில் உள்ள நரம்பாதி தாதுக்கள்
நன் முறையில் இயங்கி வரும் நாட்களில் என்றேனும்
எண்ணற்ற பொருள் அனைத்தில் உட் புகுந்த ஆன்மாவாய்
ஏற்றமுடைப் பிறப்பிலியாம் உன் தன்னை ஒரு முறையே
எண்ணுவனேல் அந்நினைவை இறுதியிலே உண்டாக்கி
எட்டரிய முக்தி தனை எய்தி விடச் செய்கின்றாய் –
——————————————-
முன் ஸ்லோகத்தில் “துப்புடையாரை” நினைத்தார். அத்திருமொழியில் மேல்பாசுரங்களில்
“என்னை அநேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்”,
“நமன் தரம் பற்றும்போது”,
“நமன்தமர் பற்றலுற்ற அன்றைக்கு” என்று யமவச்யதா பயமில்லாமல் காப்பவராக அரங்கத் தரவணைப் பள்ளியானைத் துதிக்கிறார்.
பல விஷயங்கள் சேர்ந்து ஸ்வாமி நெஞ்சில் ஓட இங்கே இந்த சுலோகம் அமைக்கப் பட்டுள்ளது.
நம்பெருமாள் திவ்யமங்கள விக்ரஹம் கோவிலை விட்டு வெளியே எழுந்தருளியிருந்த ஸமயம், ஸ்ரீரங்கநாய்ச்சியாரை விட்டுப் பிரிவு நேர்ந்திருந்தது.
ஸ்ரீரங்க பூமியை விட்டுப் பிரிவு, ஸ்ரீரங்க பூமியிலுள்ள மனுஜ திர்யகாதி விஷய வாஸிகளை விட்டுப் பிரிவு,
ஸ்வாமியைப்போல் ததேகநியதாசயராய் ஸ்ரீரங்கநாதனையே த்யானம் செய்து ரமிப்பவரோடும் பிரிவு.
“உம்மோடு கூட இருப்பதே ஸ்வர்க்கம். உம்மை விட்டுப் பிரிவே நரகம்” என்று ஸ்வர்க்க நரக லக்ஷணம் சீதை லக்ஷ்மணன் போன்ற சேஷ ஜனங்களுக்கு.
நம் பெருமாளைவிட்டுப் பிரிவு நரகபாத துல்யம்.
“விஷ்ணு பக்தருக்கு, வைஷ்ணவருக்கு, நமன் தமர் பயமில்லை. நமனுக்கு வசமாவதில்லை.
அவர்கள் இவர்களைக் கண்டு பயந்து ஓடுவார்கள்” என்று விஷ்ணு புராணத்தில்
பீஷ்மர் நகுலனிடம் யமனுக்கும் அவன் படர்களுக்கும் நடந்த ஸம்வாதத்தை வர்ணித்தார்.
அவர்கள் ஸம்வாதத்தை நரகத்தில் அப்போது அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த காளிங்கர் நேரில் கேட்டார்.
அவர் ஜாதிஸ்மரர். அதாவது ஒரு சக்தி விசேஷத்தால் பூர்வ ஜன்மங்களில் தாம் அனுபவித்ததை யெல்லாம் ஸ்மரிப்பவர்.
பூர்வ ஜன்மத்தில் தாம் நரகத்தில் கூட இருந்து கேட்ட பேச்சை அப்படியே அவர் தம்முடைய பிராமண ஜன்மத்தில் பீஷ்மருக்கு வர்ணித்தார்.
பீஷ்மர் நகுலனுக்கு வர்ணித்ததைப் பராசரர் வர்ணித்தார்.
இந்த ஸம்வாதத்தில் ஸ்ரீசங்கரர் முதலிய அத்வைதப் பெரியார்களுக்கு விசேஷ ஈடுபாடு.
யமன் பாடினான் என்று “ஹரிகுருவஶகோऽஸ்மி ந ஸ்வதந்த்ர: ப்ரபவதி ஸம்யமதே மமாபி விஷ்ணு:” என்ற சுலோகத்தை
பரமதீ க்ரந்தம் உதாஹரித்தது. “மது ஸூதன ப்ரபந்நரைப் பரிஹரிப்பாயாக. வைஷ்ணவர்கள் பேரில் எனக்கு அதிகாரமில்லை.
வைஷ்ணவர்களல்லா தாருக்கே நான் ப்ரபு” என்ற சுலோகத்தை மதுஸூதனர் தம் அழகான கீதா வ்யாக்யானத்தில் உதாஹரித்தார்.
ஹரி, விஷ்ணு, ஜநார்த்தனன், மதுஸூதனன், வாஸுதேவன் முதலிய திருநாமங்களை தர்மராஜர் அங்கே அடிக்கடி கீர்த்தனம் செய்கிறார்.
இந்தத் திருநாமங்களை உச்சரிப்பவர்களைக் கண்டு யமபடர்கள் நடுங்க வேண்டும்.
“நமன்தமர் தலைகள் மீதே ………….. நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே” என்று
அரங்கனையே அத்யந்தம் ஐகாந்த்யத்தோடு பற்றிய (ததேக நியதாஶயரான) தொண்டரடிப்பொடிகளும்
யமனுடைய கானத்தை அநுகானம் பண்ணினார்.
காதோடு ரஹஸ்யமாகச் சொல்லுகிறேன் என்று தொடங்கிய யமன் போகப்போக ஸந்தோஷ பாரவச்யத்தால் மெய் மறந்து
உரக்கப் பாடினான் என்னும் ரஸத்தை பாமதி அநுபவித்தது. பீஷ்மரும் பராசரரும் அநுபவித்தார்கள்.
(சிந்தி, பிந்தி) (கிழி, பிள) என்று கொடுமையே பேசுபவர் பாடினார் என்றும் ரஸம்.
(கீதம் வைவஸ்வதேந யத்) என்று கடைசியில் யமன் இப்படிப் பாடினான் என்று பீஷ்ம பராசரர்கள் ரஸித்தார்கள்.
யமன் பாட்டுக்களில் கடைசிப் பாட்டு
கமலநயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதர அச்யுத சங்கசக்ரபாணே |
பவ ஶரணம் இதீரயந்தி யே வை த்வஜ பட தூரதரேண தாந் அபாபாந் ||என்பது.
“இந்தத் திருநாமங்களைச் சொல்லி நீயே அடைக்கலம் என்று பேசுபவரிடமிருந்து, அதி தூரம் விலகிச் செல்லுங்கள்”
முன் “விலகு” “தூர விலகு” என்று பாடிற்று.
இங்கு திருநாமத்தைச் சொல்லி “அடைக்கலம்” என்று பேசுபவர் விஷயத்தில் “தூரதரம் விலகு” என்று பாடப்பட்டது.
முன் பாதியில் திருநாமங்கள் அடுக்காகப் படிக்கப்பட்டது.
இந்த சுலோகத்திலும் அதே ரீதியாக முன்பாதியில் திருநாமங்களை மட்டும் அடுக்கி அமைத்து :
“இதி ஈரயந்தி” என்றதுபோல் “இதீவ படதி நாமதேயாநி தே” என்று இங்கும் பின்பாதியின் அமைப்பு.
“இதீவ” “இதுபோன்ற நாமதேயங்களை”. யமனுடைய சுலோகத்திலும் அதே நாமங்களையோ மற்ற நாமங்களையோ என்று
தாத்பர்யம் என்பதை ஸ்வாமி “இவ” என்று காட்டியருளுகிறார்.
யமன் பாடினபடியும் தொண்டரடிப்பொடிகள் பாடினபடியும் உம் திருநாமங்களைச் சொல்லி
நீரே சரணம் என்று வாயாலேயாவது சொல்லும் எம்போல்வார்க்கு யமவஶ்யதை என்பதே ஸம்பவிக்க மாட்டாது.
“த்வயா விநா” உம்மைவிட்டுப் பிரிவினால் நாங்கள் நரகத்தையே அனுபவிக்கிறோம்.
யமவஶ்யதை இல்லாதார்க்கு நரகாநுபவம் வர ந்யாயமில்லை.
உம் பிரிவால் ரௌரவாதி ஸப்த நரகங்களை நாங்கள் இப்போது அனுபவிப்பது உண்மை.
எங்களுக்கோ யமவஶ்யதை கிடையாது என்பது திண்ணம். யமவஶ்யதை நரகாநுபவத்திற்குக் காரணம்.
காரணமில்லாமல் காரியம் உண்டாகிறதே, இது என்ன அந்யாயம் என்று கடைசிப் பாதத்தில் கைமுத்யத்தால் விளக்கும் அழகு ரஸிக்கத் தக்கது.
ரமா தயித ரங்கபூ ரமண க்ருஷ்ண விஷ்ணோ ஹரே
த்ரிவிக்ரம ஜனார்த்தன த்ரியுகே நாத நாராயண
இதீவ ஸூபதாநி ய படதி நாமதே யாநி தே
ந தஸ்ய எம வஸ்யதா நரக பாத பீதி குத–7-
ய: எவன்,
ரமாதயித — லக்ஷ்மீகாந்த! ,
ரங்கபூரமண –ஸ்ரீரங்கத்தில் ரமிப்பவனே!,
க்ருஷ்ண — கண்ணா ! (பூர்ணாநந்த பூமியே!,),
விஷ்ணோ — எங்கும் நிறைந்தவனே!,
ஹரே — ஹரியே (ஆபத்தை ஹரிப்பவனே, சிங்கமே ),
த்ரிவிக்ரம — மூவுலகளந்த சேவடியோனே!,
ஜநார்த்தன — ஜனார்த்தனனே!,
த்ரியுக — ஆறுகுணத்தோனே!,
நாத — நாதனே!,
நாராயண — நாராயணனே!!,
இதீவ — இதுவும், இதுபோலுள்ளவுமான,
ஶுபதாநி — க்ஷேமத்தை அளிக்கும்,
தே — உம்முடைய,
நாமதேயாநி — திருநாமங்களை ,
படதி — உச்சரிக்கிறானோ,
தஸ்ய — அவனுக்கு,
யமவஶ்யதா — காலனுக்கு வசமாவதென்பது,
ந: — கிடையாது,
நரக – பாத – பீதி — நரகத்தில் வீழ்வதென்னும் பயம்,
குத: — எங்கிருந்து வரும்.
ரமா தயித ரங்கபூ ரமண க்ருஷ்ண –ஸ்ரீ லஷ்மீ காந்தா -ஸ்ரீ ரங்கத்தில் ரமிப்பவனே –
உம்மை விட்டு பிரிந்து பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் இருக்கவோ
ரங்க -நடுவில் வைத்து இரண்டு பக்கம் உபய நாச்சியாரை வைத்து அருளிய அழகு நோக்கவும்
–கண்ணனே -பூர்ண ஆனந்த பூமியே –
விஷ்ணோ -சர்வ வியாபியே –ஹரே-ஆபத்துக்களை ஹரித்து அருளும் ஸ்ரீ ஸிம்ஹமே–
பிராணாதார்த்தி ஹரன் அல்லவோ
த்ரிவிக்ரம-மூ உலகு அளந்த சேவடியோனே
ஜனார்த்தன-ஜென்மங்களை முடித்து அருளும் ஜனார்த்தனன்
த்ரியுகே -ஷட் குண பரி பூர்ணனே
நாத நாராயண -ஸ்ரீ நாதனே -ஸ்ரீ மன் நாராயணனே
இதீவ ஸூபதாநி ய படதி நாமதே யாநி தே -இதுவும் இது போல் உள்ள க்ஷேமத்தை அளிக்கும் உம்முடைய திரு நாமங்களை உச்சரிக்கிறானோ
ந தஸ்ய எம வஸ்யதா நரக பாத பீதி குத–அவனுக்கு காலன் வசம் கிடையாதே -நரகத்தில் வீழ்வது என்னும் பயம் எங்கிருந்து வரும் –
அரங்கனை விட்டு பிரிந்தால் நரகம் -கூட இருந்து கைங்கர்யம் செய்து கொண்டே இருப்பதே சுவர்க்கம் என்று நினைக்கும் பிராட்டி போல்வார் அன்றோ இவரும்
தேவரீர் செஞ்சிக் கோட்டையிலும் பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரெங்கத்திலும் இருப்பதோ
அகலகில்லேன் இறையும் என்று இருப்பவளுக்கு சேருமோ –
ஸ்ரீ பூமிப் பிராட்டியும் உம்மை விட்டு பிரிந்து அல்லல் பாடவோ –
நாதன் ஒரு இடமும் ஸ்ரீ ரெங்க நாச்சியார் அரங்கம் பூமா தேவி அரங்க நகர் வாசிகள் இங்கும் இருக்கவோ –
ஸ்வாமி திருவுள்ளப்படி ஒவ்வொரு பதத்தின் ரஸத்தைக் கொஞ்சம் காட்டுவோம்.
ரமாதயித — தேவரீர் செஞ்சிக்கோட்டையிலும், ஸ்ரீரங்கநாச்சியார் கோயிலிலுமாக இருப்பது ந்யாயமோ?
“நிரயோ யஸ்-த்வயாவிநா” “விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ” “அகலகில்லேன் இறையும்” என்னும்
உம் பிரிய காந்தைக்காகவாவது நீர் கோயிலுக்குத் திரும்பி எழுந்தருள வேண்டாமோ?
(நிவர்த்ய ராஜா தயிதாம் தயாளு) என்று ரகுவம்சம். தயிதை விஷயத்திலும் தயாளுவல்லவோ ?
ரங்கபூரமண — பிராட்டி விபுவாக நம்மோடு எங்கும் எப்போதும் (காடோபகூட)மாய் அணைந்தே இருப்பவள்.
அவளை விட்டுப் பிரிவு என்பதே இல்லை என்பீரோ, ரங்கபூ என்னும் அரங்கநகர் (அயோத்யை) நோவு படுகிறதே.
அதற்கு நீர்தானே ரமணன். அதற்குப் பொறுக்காத அரதி.
அதில் வஸிக்கும் மநுஜ – திர்யக் – ஸ்தாவரமெல்லாம் ராம விரஹத்தில் அயோத்தியில் சராசரம்போலக் கதறுகின்றனவே.
ரமணனில்லாமல் ரங்கபூமி நாயகனற்ற ஸ்திரீபோல் துக்கப்படுகிறதே.
“ரங்கம்” என்னும் நகர், “பூ” என்னும் பூமிதேவி, இருவருக்கும் “ரமண” என்றும் கொள்ளலாம்.
ரங்கம் பூமியிலே ஏகதேசமானாலும், ரங்கத்தை மட்டும் தனித்து எடுத்துப் பேசுவது ரஸம்.
அரங்கமும் கதறுகிறது. பூமிப் பிராட்டியும் கதறுகிறாள்.
(அஶ்ருமுகீ₂ கி₂ந்நா- க்ரந்த₃ந்தி கருணம்) உபயநாச்சிமாரும் அவர்களிருக்கும் நகரமான ரங்கமும் கதறுகிறார்கள் என்பதைக் காட்ட,
“ரங்க” என்பதை இரண்டு நாச்சிமாருக்கும் நடுவில் வைத்தார்.
தாய்களும் ப்ரஜைகளும் நோவுபடுகின்றன என்றபடி. அடைக்கலம் கொள்ளுவதற்கு இந்தத் திருநாமங்கள் ஸப்ரயோஜனம்.
க்ருஷ்ண – “ஹா க்ருஷ்ணா” என்று த்ரௌபதி கூப்பிட்ட திருநாமம்.
பத்தொன்பதாவது சுலோகத்தில் அவள் வ்ருத்தாந்தத்தைப் பேசப் போகிறார்.
“க்ருஷ்ண” என்பதற்கு “ஆனந்தத் தின் எல்லை பூமி” என்று பொருள். “க்ருஷி” என்று பூமிக்குப் பெயர்.
“ரங்கபூ” என்று பேசியதும் “பெருமாளே நிர்வ்ருதிபூமி” “ஆனந்தத்திற்கு எல்லைபூமி” என்று ரஸமாய்ச் சேர்க்கிறார்.
ரங்கபூமியில் நிர்வ்ருதிபூமியான நீர் சேர்ந்திருந்தால் பரஸ்பர ரஸம்.
“ரங்கம்” என்பதற்கு “ரதிம் கத:” “ரதியை அடைந்தார்” என்று பொருள். அதிலிருப்பதால் ரதி அடையப் படுகிறது
(ரதிம் கதோ யதஸ் தஸ்மாத் ரங்கம் இதி அபிதீயதே)
விஷ்ணோ! ஹரே ! — யமன் பாடிய திருநாமங்கள். யமபடருக்கு பயமுண்டாக்குபவை.
(ரகாராதீநி நாமாநி, அகாராதீநி நாமாநி) உலகத்தின் ஆபத்தை யெல்லாம் ஹரிப்பவராயிற்றே. ப்ரணதார்த்தி ஹரனல்லவோ?
த்ரிவிக்ரம –(லோக விக்ராந்த சரணௌ ஶரணம் தே அவ்ரஜம் ப்ரபு ) —
உலகளந்த உம் சேவடிகளைச் சரணம் புகுந்தேன் என்று சரண் புகும் வகை. ( விஷ்ணும் க்ராந்தம் வாஸுதேவம் விஜாநந்) என்றபடி.
ஜநார்த்தன — இதுவும் யமன் பாடல்களிலுள்ளது.
த்ரியுக — மூவிரண்டான ஆறு குணங்களை உடையவரே ! முதல் மூன்று யுகங்களில் மட்டும் மத்தியில் அவதாரம் செய்பவர்.
கலியில் அதன் முடிவில் தான். விபவாவதாரம் கலி மத்தியில் கூடாதென்று இருக்கிறீரோ?
நாத — “ரங்கநாத” என்று கூப்பிடக் கூடாமலிருக்கிறதே, இதனிலும் எங்களுக்குக் கஷ்டமுண்டோ?
நாராயண — இடராயினவெல்லாம் நிலம்தரம் செய்யும் நாமம் பெருமாள் சக்ரபாணியாய் ஆகாசத்தில் எழுந்தருளி
தன்னைக் காட்டக் கண்ட போது, “நாராயண! அகிலகுரோ! பகவந் ! நமஸ்தே ” என்று கஜேந்த்ராழ்வார் முதலில் கூப்பிட்ட நாமம்.
திருவஷ்டாக்ஷரத்திலும் த்வயத்திலும் விளங்கும் திருநாமம்.
இதீவ — இப்படி, இதுபோன்ற. இவ என்பதால் முழுவதும் சரியாகச் சொல்லாவிடினும், சொல்லுவது போலிருந்தாலும் போதும்.
படதி இவ — வேறு ஏதோ ப்ரஸ்தாவத்தில் இந்த ஸப்தத்தை மட்டும் உச்சரித்தாலும்.
“நாராயண” என்னும் திருநாமத்தால் அஜாமிளன் கதையை நினைத்து,
“படதீவ” — பாடம் படிக்கிறது போலிருந்தாலும் என்று கருத்து.
(ஆக்ருஶ்ய புத்ரம் அகவாந் யதஜாமிளோபி நாராயண இதி ம்ரியமாண அவாப முக்திம்) இந்த நாமத்தின் ப்ரபாவத்தை
ரஸித்த ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமி பஞ்சதசியில் இந்த சுலோகத்தை உதாஹரித்தார்.
நாமதேயாநி — திருநாம சப்தத்தை மட்டும். அர்த்தம்கூட வேண்டியதில்லை.
வாச்யனான உம்முடைய நினைப்பில்லாமல், உம் பேராயிருப்பது மாத்ரமே போதும்.
“பவ ஶரணம்” என்று பேசுவார் என்றான் யமன்.
“இதி ஈரயந்த” (ஶரணாகதி ஶப்தபாஜ) என்று ஆழ்வான் “ஸ்வார்த்தே தேயட் ப்ரத்யயம்” என்பர்.
தே — உம் திருநாமமாதலால் சப்தத்தின் படந மாத்ரத்திற்கு இத்தனை ப்ரபாவம்.
ந தஸ்ய யமவஶ்யதா — அவர்கள் விஷயத்தில் தனக்கும் தன் படர்களுக்கும் அதிகாரமில்லை என்று
அதிகாரி புருஷனான தர்மராஜனே சொல்லி இருப்பதால், அதில் ஸந்தேஹமில்லை.
இதைக் காட்டவே அந்த சுலோகத்தின் ரீதி இங்கே அனுஸரிக்கப் பட்டது.
யமவஶ்யதை வராமல் நரகபாதம் ஸம்பவிக்க ந்யாயமில்லையே. ஸப்த நரகங்களிலும் யமனுடைய அதிகாரம் (வ்யாபாரம்) தான்
என்று ஸூத்ரகாரர் தீர்மானித்தார். ஸூத்ரப் பிரஸித்தியைக் கொண்டு இங்கே கைமுதிக ந்யாயத்தை வைக்கிறார்.
நரகாநுபவத்திற்குக் காரணமான யமவஶ்யதை இல்லாமலே நாங்கள் நரகதுல்யமான யாதனைகளை உம் பிரிவினால் அனுபவிக்கிறோம்.
இதையெல்லாம் உடனே நிவர்த்திக்க வேணும்.
ஸ்ரீரங்க நாச்சியார், அரங்கம், பூதேவி, அரங்கவாஸிகள் எல்லோரும் நாதனுடன் கூடியிருக்க வேணும்.
நாதனோரிடம், அரங்கமோரிடமாக இருக்கலாகாது என்கிறார்.
பூ மகளின் நல் துணைவா பொழில் அரங்கக் காதலனே
முகில் வண்ண கண்ணாவே மறைந்து எங்கும் நிற்பவனே
தீமைகளை ஒழிப்பவனே திருவடியால் உலகு அளந்த
திரி விக்ரமா ஸ்ரீ ஜனார்த்தன திரு வாறு குணமுடையோய்
நாம் வணங்கும் பெரும் தலைவா நாராயணா என்று என்று
நலம் எல்லாம் தருமூன்றன் நாமங்களைப் பயில்வோனை
நமன் தனக்கு வயமாக்கும் நிலை என்றும் ஏற்படாதே
நரகத்தில் வீழ்கின்ற நடுக்கம் தான் உண்டோ தான் –
———————————————–
யமவச்யதை யில்லாமலே நரகாநுபவம் வருகிறதே என்று காட்டி, நீர் இப்படி சாஸ்த்ர மரியாதையைக் குலைக்கலாமோ
என்று த்வனிக்கும்படி முன் சுலோகத்தில் பேசினார்.
உம்மிடம் பாரமைகாந்த்யமுடைய ஒரு பக்தர் ஏதோ ஒரு காலத்தில் ஒரு தேசத்திலிருந்தால்
அந்த தேசம் பகவானுக்கு ஸ்திரமான ராஜதானியாகும். தவம் செய்வதற்கு இடையூறில்லாத தபோவனமாகும்.
நல்லொழுக்கத்திற்கு அழிவற்ற கோட்டையாகும் என்பரே.
தொண்டரடிப் பொடிகளிலும் உம்மிடம் பாரமைகாந்த்ய முடையவருண்டோ?
(அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகம் ஆஸ்ஸ்வ) என்றல்லவோ இத்தகைய வடியார்களுக்கு உம்முடைய ஆக்ஞை!
“அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே” என்று பரமபதத்து வைகுண்டநாதனையும் ஒதுக்கி உம்மிடம் நியதாஶயராய் இருந்தனர்.
“இங்கே ஸ்ரீரங்கத்தில் ஸுகமாயிரு” என்று எங்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, நீர் இவ்விடமிருந்து வெளியேறுவது தகுதியோ?
பெரிய பெருமாள் ஓரிடமும் நீர் ஓரிடமுமானால், எங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் ஸுகமான இருப்பு எப்படி ஏற்படும்?
கதாசிதாபி ரங்க பூ ரசிக யத்ர தேசே வசீ
த்வ தேக நியதா சயஸ்த்ரிதச வந்திதோ வர்த்ததே
தத ஷத தபோவனம் தவ ச ராஜதா நீ ஸ்திரா
ஸூ கஸ்ய ஸூகமாஸ் பதம் ஸூசரிதஸ்ய துர்க்கம் மஹத் –8-
ரங்கபூரஸிக –ஸ்ரீரங்கத்தில் வஸிப்பவரே!,
வஶீ – இந்திரியங்களை வசப்படுத்திய வரும்,
த்வதேக -நியத – ஆஶய — (தொண்டரடிப்பொடிகள்போல) உம்மிடத்திலேயே நிலைநிறுத்திய பக்தியை யுடையவரும்,
த்ரிதஶ வந்தித — தேவர்களால் நமஸ்கரிக்கப் படுபவருமான (பெரியவர்),
யத்ர தேஶே — எந்த தேசத்தில்,
கதாசிதபி — ஒரு பொழுதாவது,
வர்த்ததே — இருக்கிறாரோ,
தத் — அது,
அக்ஷத — இடையூறில்லாத,
தபோவநம் — தபோவநம்,
தவ ச — உமக்கும்,
ஸ்திரா — ஸ்திரமான,
ராஜதாநீ — நகரம்,
ஸுகஸ்ய (ச) — ஸுகத்திற்கும்,
ஸுகம் — ஸுகமான,
ஆஸ்பதம் — இடம்,
ஸுசரிதஸ்ய — நல்லொழுக்கத்திற்கும்,
மஹத் — பெரிய,
துர்கம் — அரண் (கோட்டை)
ரங்க பூ ரசிக –-ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாசம் பண்ணி அருளுபவரே-
பரஸ்பரம் ஸ்ரீ ரெங்க வாசிகளுக்கு உமக்கும் ரசிக்காத தன்மை உண்டே
வசீ ஆயஸ-இந்திரியங்களை வசப்படுத்தியவரும்-இந்திரியங்களை அடைக்கு அருளுவர் நித்ய வாசம் செய்யும் இடமே
குருஷேத்ரம் நைமிசாரண்யம் புஷ்கரம் என்று ஸ்தான விசேஷ அதிகாரத்தில் அருளிச் செய்துள்ளார்
த்வ தேக நியதா-தொண்டர் அடி பொடி ஆழ்வாரை போலே உம்மிடையே நிலை நிறுத்திய பக்தியை யுடையவரும்
த்ரிதச வந்திதோ-தேவர்களால் நமஸ்கரிக்கப் படும் பெரிய பெருமாளை –
நித்ய சூரிகள் ஏதேனுமாக இருக்க ஆசைப்பட்டு இருக்கும் திவ்ய தேசம் அன்றோ
யத்ர தேசே கதாசிதாபி- வர்த்ததே -எந்த தேசத்தில் ஒரு பொழுதாவது இருக்கிறாரோ
தத ஷத தபோவனம்-அது இடையூறு இல்லாத தபோ வனம்
தவ ச ராஜதா நீ ஸ்திரா -உமக்கும் ஸ்திரமான ராஜ தாநீ
ஸூ கஸ்ய ஸூகமாஸ் பதம் -ஸூ கத்துக்கும் ஸூ கமான இருப்பிடம்
ஸூசரிதஸ்ய துர்க்கம் மஹத்-நல்ல நடத்தைக்கும் ஒரு பெரிய அரண் — கோட்டை
பரமை காந்திகள் உள்ள தேசமே நீர் உகந்த திவ்ய தேசம் என்றவாறு -தர்மத்துக்கு இவர்கள் வாசம் செய்யும் இடமே அரண் அன்றோ
அத்ரைவ ஸூ கமாஸ்க்வா என்று எம் உடையவருக்கு அருளிய பின்பு நீர் இத்தை விட்டு செஞ்சி கோட்டையில் இருக்கவோ –
ரங்கபூ ரஸிக — பாற்கடல், ஸூர்ய மண்டலம், வைகுண்டம் எல்லாவற்றைக் காட்டிலும் உமக்கு
ஸ்ரீரங்கத்திலே (ரதி) இன்பம் இருக்கிறது.
“ரதிம் கதோ யதஸ்தஸ்மாத்” என்று ரிஷிகள் பொருள் கூறினார்கள்.
அரங்கத்தில் அரங்கனாகிய நீர் ஸபாநாயகராக வீற்றிருந்து காவ்யங்களை ரஸித்து அரங்கேற்றுவது,
(ரங்காஸ்தாநே ரஸிகமஹிதே ரஞ்ஜிதாஶேஷசித்தே).
ரங்கபூரஸிக — ரங்கபூமிக்கும் ரங்கநகரவாஸிகளுக்கும் உம்மிடம் ரஸமிருப்பது போல, உமக்கும் அவர்களிடம் ரஸம்.
இப்படிப் பரஸ்பர ரஸமிருப்பதால் ரஸபூர்த்தி.
ப்ரஹ்மா வினால் ஸத்ய லோகத்தில் சிலகாலம் ஆராதிக்கப்பட்டு, அதை விட்டு அயோத்தி வந்தீர்.
அங்கு நீண்ட காலமிருந்து அதை விட்டு ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினீர்.
இனி ஓரிடமும் போகமாட்டீராதலால் இங்கே உமக்கு நிரதிசய ப்ரீதி என்று பாதுகா ஸஹஸ்ரத்தில் உம் பாதுகை என்னையிட்டுப் பாடுவித்தது.
த்யால்லோகாத் பரமமஹிதாத் ஸ்தாநதோ வா ரகூணாம் — என்று கூறினது பொய்யாகலாமோ?
யத்ர தேஶே — எந்த தேசத்தில், “யத்ர” என்று மட்டும் ப்ரயோகித்தார். “யத்ரைகாந்த்ய” என்ற ஸ்தாந விசேஷாதிகார சுலோகத்தில்.
வஶீ — “இந்த்ரியங்களை எல்லாம் அடக்கினவர் எங்கே எங்கே வஸிக்கிறாரோ, அங்கங்கே குருக்ஷேத்ரமும் நைமிசமும் புஷ்கரமுமுள”
என்ற சுலோகம் ஸ்தாந விசேஷாதி காரத்தில் எடுத்துக் காட்டப்பட்டது.
த்வததேகநியதாஶய — வ்யவஸித திய — என்று அதிகார ச்லோகம்.
கதாசிதபி — ஸ்ய கஸ்யாபி லாப — என்று அங்கு இரண்டிடத்திலும் இரண்டையும் அபி என்பதைக் கொண்டு சேர்த்துக் கொள்ள வேணும்.
த்ரிதஶவந்திதோ வர்த்ததே — தேவர்கள் இவருக்குப் பலி ஸமர்ப்பித்துப் பூஜிக்கிறார்கள்.
தஸ்மை தேவா பலிமா வஹந்தி . “நித்யஸூரிகளும் கோயிலில் வாஸத்தைத் தேடி மனுஷ்யர்களோடும் திர்யக்குகளோடும்
சேர்ந்து தொழுகிறார்கள்” என்று பட்டர் ஸாதித்தார்.
பரமைகாந்திகளும், அவர்களைப் பூஜிக்கவும் உம்மை ஸேவிக்கவும் வரும் நித்யஸூரிகளும் ஏமாறும்படி செய்யலாமோ?
“த்ரிதசவந்திதராக இருக்கிறார் ” என்பதால் அவர்களோடு தேவர்களும் வஸிக்கிறார்கள் என்று காட்டப்படுகிறது.
“தஸ்மை தேவா பலிமாவஹந்தி” பெருமாளை அவர்கள் ஸேவிக்க வருவது ராகப்ராப்தம்.
இவர்களை வந்தனம் செய்து பலி ஸமர்ப்பிப்பது வைதம், சுருதி விதித்த ஆக்ஞா கைங்கர்யம்.
ஸா ச ராஜதாநீ ஸ்திரா — விதேயம் முக்கியமானதால் அதை அநுஸரித்து “ஸா” என்று ஸ்திரீலிங்கம் உபயோகிக்கப் படுகிறது.
ராஜதானிக்கே ஆபத்துக்கள் அதிகம். சத்ருக்கள் பலர் இருப்பார்கள். யுத்தமும் முற்றுகையும் வந்து கொண்டேயிருக்கும்.
பரமைகாந்தி வஸித்த அல்லது வஸிக்கும் ரங்கராஜதாநீ ஸ்திரமாயிருக்க வேண்டும்.
ராஜா வஸிக்கும் இடம் ராஜதாநியாகையால், நம்பெருமாள் வேறொரிடத்தில் இருந்தால் அதுவும் ராஜதாநியாகிலும், அது ரங்கராஜதானி யாகாதல்லவா?
ஸுகஸ்ய ஸுகமாஸ்பதம் — ஸுகமென்பதற்கே இது ஸுகமான இருப்பிடம்.
மற்ற இடங்களில் ஸுகமும் இத்தனை ஸுகமாக இருக்காது.
ஸுசரிதஸ்ய துர்கம் மஹத் — தர்மம் உலகத்தைக் காக்கும் என்பர்.
தர்மத்திற்குப் பரமைகாந்தி வஸிக்கும் க்ஷேத்ரம்தான் பெரிய அரண். இத்தனைக்கும் ஹாநி வரலாமோ?
அரங்கத்தில் அன்புடனே அணைந்து உறையும் பெருமாளே
அலை பாயும் புலன்களை அடக்கி யாளும் திறமுடைத்து உன்
ஒருவனையே மனம் வைத்து ஒழுகுவதால் தேவர்களும்
ஓன்று கூடி போற்றுகிற உத்தமமாம் உயர்வுடையோன்
ஒரு பொழுதே வாழ்ந்திட்ட ஓர் இடமே தடை இன்றி
உயர் தவத்தைப் புரிவதற்கு உறும் இடமாம் உன்னுடைய
உறுதியான தலை நகராம் ஒப்பற்ற சுகத் தலமாம்
உற்ற பெரும் நல் வினைக்கோர் உரிய பெரும் அரணாமே–
———————————————
பரமைகாந்தி ஒருவர் ஒருக்கால் வஸித்தால் ஏற்படும் ரக்ஷையைக் கூறினார்.
அந்த ரக்ஷையும் ரங்கத்தில் நித்ய வாஸம் செய்ய விரும்பும் எமக்கே ரக்ஷை.
எம்மைக்காத்து எம் இஷ்டத்தைப் பூர்த்தி செய்ய உம்முடைய திவ்ய குணங்களே போதும் என்கிறார்.
த்ரி வர்க்க பத வர்த்தி நாம் த்ரி குண லங்க நோத்யோசி நாம்
த்விஷத் ப்ரமத நார்த்தி நாமபி ச ரங்க த்ருஸ் யோதயா
ஸ்கலத் சமய காதரீ ஹரண ஜாக ரூகா ப்ரபோ
கர கிரஹண தீக்ஷிதா க இவ தே ந திவ்யா குணா –9-
ப்ரபோ — என் ப்ரபுவே!,
த்ரிவர்க்கபதவர்த்திநாம் — தர்ம அர்த்த காமங்களைக் கோருகிறவருக்கும்,
த்ரிகுண லங்கநோத்யோகிநாம் — ப்ரகிருதி மண்டலத்தைத் தாண்ட வேண்டுமென்ற எண்ணத்துடன் ப்ரயத்தனப்பட்டு
கைவல்யத்தையும் மோக்ஷத்தையும் கோருகிறவருக்கும்,
த்விஷத் ப்ரமதநார்த்திநாம் அபி — (பெருமாளுடையவோ அல்லது தன்னுடையவோ) சத்ருக்களின் நிரஸகத்தைக் கோருகிறவருக்கும்,
ரங்கத்ருஶ்யோதயா — அரங்கத்தில் ப்ரத்யக்ஷமாக அனுபவத்திற்கு வருமவையும்,
ஸ்கலத்ஸமய காதரீ ஹரண ஜாகரூக — தடங்கல் வரும் காலத்தில் சேரும் பயத்தை விலக்குவதில் தூங்காமல் விழித்து
ஜாக்கிரதையாய்க் காத்துக்கொண்டிருப்பதுமான,
தே திவ்யா: குணா — உம்முடைய திவ்ய குணங்கள்,
இஹ — இங்கே,
க — எவை,
கர க்ரஹண தீக்ஷிதா — கை கொடுத்து ரக்ஷிப்பதையே தீக்ஷையாக (வ்ரதமாகக்) கொண்டவையல்ல
த்ரி வர்க்க பத வர்த்தி நாம்-தர்ம அர்த்த காமங்களை கோருகிறவர்க்கும்
த்ரி குண லங்க நோத்யோசி நாம் -முக்குண சேர்க்கையான பிரகிருதி மண்டலத்தை தாண்ட நினைத்து பிரயத்தனம் பட்டு
கைவல்யம் -பகவத் புருஷார்த்தம் வேண்டுபவர்க்கும்
த்விஷத் ப்ரமத நார்த்தி நாமபி-பகவத் பாகவத விரோதிகளை நிரசிக்க கோருபவர்களுக்கும்
ச ரங்க த்ருஸ் யோதயா -ஸ்ரீ ரெங்கத்தில் பிரத்யக்ஷமாக சேவிக்க வருபவர்களுக்கும்
ஸ்கலத் சமய காதரீ ஹரண ஜாக ரூகா-தடங்கல் வரும் காலத்தில் சேரும் பயத்தை விளக்க தூங்காமல்
விழித்து ஜாக்ரதையாக ரஷித்துக் கொண்டு இருப்பதுமான
ப்ரபோ -என் ஸ்வாமியே
கர கிரஹண தீக்ஷிதா க இவ தே ந திவ்யா குணா-உம்முடைய திவ்ய குணங்கள் இங்கே எவை கை கொடுத்து ரஷிப்பதையே
தீக்ஷையாக விரதமாக கொண்டவை இல்லாமல் அல்லவே —
உம் கல்யாண குணங்களின் வலிமையால் எங்கள் மநோ ரதம் -விரோதிகள் நிரசிக்கப் பட்டு நீர் மீண்டும்
ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளி நித்ய சேவை மீண்டும் சாதித்து அருள வேண்டும் என்றபடி –
“ஆர்த்தன், கைவல்யத்தை விரும்புமவன், அர்த்தத்தை விரும்புமவன், மோக்ஷத்தில் ஆசையுள்ளவன்,
என்ற நால்வர் என்னைப் பஜிக்கிறார்கள்” என்றார் கீதையில்.
இவ்்விடத்திற் கேற்ப இங்கே ஒருவகையான விபாகம்.
(1) தர்மம் அர்த்தம் காமம் மூன்றையும் விரும்புகிறவர்கள்
(2) ப்ரக்ருதியை விலக்கி (ஜயித்து) கேவலாத்மாநுபவத்தை ஆசைப் படுகிறவர்கள்
(3) ப்ரக்ருதியைத் தாண்டி மோக்ஷம் செல்ல இச்சிப்பவர்கள்
(4) (பெருமாளுக்கு விரோதத்தைச் செய்வதால்) நமக்கு விரோதியானவர்களை நிரஸிக்கக் கோரும் நாம்.
பெருமாள் திருமேனிக்கு வரும் கெடுதியே நமக்கு ஆர்த்தி. அவர் திருமேனிக்குச் சத்ருக்களே நமக்குச் சத்ருக்கள்.
அவர் திருமேனி தீங்கின்றி விளங்குவது நம் காமம்.
பிரகிருதி வியுக்தமாகப் பிரகிருதி ஸம்பந்தமில்லாமல் கேவலாத்மாநுபவம் இருப்பதால்,
கைவல்யார்த்தி களையும் “ப்ரக்ருதிலங்கநார்த்திநாம்” என்பதால் சேர்த்து ஸங்க்ரஹிக்கலாம்.
நீர் தூங்குகிறதுபோல் பாவனை செய்தாலும், உம் குணங்கள் விழித்துக்கொண்டே இருந்து எங்களைக் கைதூக்கி ரக்ஷிக்கும்.
ரக்ஷணைக தீக்ஷிதரான பெருமாள்போல, அவர் திவ்ய குணங்கள் கரக்ரஹண தீக்ஷிதங்கள்.
தர்மார்த்த காமங்களும் கைவல்ய யோகமும் மோக்ஷதசையில் அங்குரமான அனுபவமும் இந்த அரங்கத்தில் உம்மை பஜிப்பதால்
உம் குணங்கள் கொடுக்கக் கிடைக்கின்றன.
அப்படியே இதற்கு விரோதிகளை நிரஸிக்க வேண்டும் என்ற எங்கள் மனோரதமும் உம் குணங்களின் வலிமையினால் நிறைவேறி,
நீர் கோயிலில் நித்யமாக எழுந்தருளியிருந்து ஸேவை ஸாதிக்க வேண்டும்
அறம் முதலாம் மூன்று தனில் அகம் படிந்து துணிவோர்க்கும்
அல்லல் மிகு வாழ்வு என்னும் ஆழ் கடலைக் கடந்து செலும்
பெரு முயற்சி செய்வோர்க்கும் பணிந்து உன்னை வாழ்வார் தம்
பகைவர்கள் ஒழிந்திடவே மனம் கொண்ட அடியார்க்கும்
நெறி தவறும் சமயத்தில் நேருகின்ற அச்சத்தை
நீக்குவதில் கருத்துடனே நீள் கரத்தால் காத்திடவே
பெரு நகராம் அரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமான் உன்
பல் குணத்துள் எவையே தாம் விரதத்துடன் நிற்க வில்லை –
————————————————-
அரங்கத்தில் பஜித்தால் பலன்களைக் கொடுத்துக் கை தூக்கி விட பகவத் குணங்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன என்றார்.
இதில் நாம் பஜிப்பதற்குப் பிரதியாக நமக்குத் தெரியாமலே நாம் ஸுக்ருதமென்று புத்தி பூர்வமாக
இதற்கென்று செய்யாம லிருக்கையிலேயே பகவத் தயை தானாக அதிஸ்நேஹத்தால் நம்மை ஜாயமான தஶையில் கடாக்ஷித்து,
ஸாத்விகனாக்கி, மோக்ஷப்பொருளைச் சிந்திப்பவனாகச் செய்கிறது என்கிறார்.
பிபேதி பவப்ருத ப்ரபோ த்வது பதேச தீவ்ர ஒளஷதாத்
கதத்வ ரஸ துர்வேஷ பளிச பக்ஷவத் ப்ரீயதே
அபத்ய பரிஹார தீ திமுக மித்த மா கஸ்மி கீ
தமப்ய வசரே க்ரமாதவதி வத்சலா த்வத்தயா –10-
ப்ரபோ — ப்ரபுவே,
பவப்ருத் — ஸம்ஸாரத்தையுடைய சேதனன்,
த்வத் உபதேச தீவ்ர ஔஷதாத் — உம்மால் உபதேசிக்கப் படும தர்மம் என்னும் உக்ரமான மருந்திலிருந்து,
பிபேதி — பயப்படுகிறான்.
கதத்வ ரஸ துர்விஷே — கெட்ட மார்க்கத்தில் ரஸம் என்னும் கொடிய விஷத்தில்,
படிஶ பக்ஷவத் — தூண்டிமுள்ளை பக்ஷிப்பதில் (மீன் ரஸிப்பது போல),
ப்ரீயதே — ப்ரீதி பண்ணுகிறான்.,
இத்தம் — இப்படி,
அபத்ய பரிஹார தீ விமுகம் — தனக்குக கெடுதலைப் பரிஹரிப்பது என்னும் எண்ணத்தையே நோக்காதபடி,
தமபி — அப்படிக் கெட்டவனையும்,
அவஸரே — ஒரு கால விசேஷத்தில்,
ஆகஸ்மீகி — காரணமின்னது என்று அறியக்கூடாத (எங்களுக்குத் தெரிந்தவரையில் நிர்ஹேதுகம் என்று நினைக்கப்படும்),
வத்ஸலா — ஸ்நேஹமயமான,
த்வத் தயா — உம்முடைய தயை,
க்ரமாத் — படிப்படியாக (சன்ம சன்மாந்தரம் காத்து),
அவதி — ரக்ஷிக்கிறது.
பவப்ருத ப்ரபோ த்வது பதேச தீவ்ர ஒளஷதாத் –பிரபுவே -சம்சாரத்தை யுடைய சேதனன்-உம்மால் உபதேசிக்கப் படும் தர்மம் என்னும்
உக்ரமான மருந்தில் இருந்து -உபாயாந்தரங்களின் கடுமையை அனுசந்தித்து –
பவம் -சம்சாரம் -மங்களம் -என்று பிரமிக்க வைக்கும்
பிபேதி -பயப்படுகிறான் –
கதத்வ ரஸ துர்வேஷ பளிச பக்ஷவத் -கெட்ட மார்க்கத்தில் -ரசம் என்னும் கொடிய விஷத்தில் –
தூண்டில் உள்ளவற்றை மீன் ரசித்து மாட்டிக் கொள்வது போலே –
ப்ரீயதே-ப்ரீத்தி பண்ணுகிறான்
அபத்ய பரிஹார தீ திமுக மித்தம் -இப்படி தனக்கு கெடுதலை பரிஹரிப்பது என்னும் எண்ணத்தையே நோக்காத படி
ஆபி முக்யம் இருந்தாலுமே போதுமே -அது கூட இல்லாமல் அன்றோ உள்ளோம்
ஆகஸ்மி கீ -காரணம் இன்னது என்று அறியக் கூடாத -நிர்ஹேதுகமாக –
தமப்ய வசரே -இப்படிக்கு கெட்டவனையும் ஒரு கால விசேஷத்தில்
க்ரமாதவதி வத்சலா த்வத்தயா-உம்முடைய தயை வாத்சல்யம் – என்னும் கல்யாண குணமே படிப் படியாக ஜன்ம சன்மாந்தரம் ரஷித்து அருளி
ஜாயமான கடாக்ஷத்தால் சாத்விகனாக்கி தன்னைப் பற்றி சிந்திக்க அருளுகிறார் -யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் போன்று
மடி மாங்காய் இட்டு நடாத்தி கொண்டு அருளுகிறார் –தயா பிரசாத க்ரமங்களை அருளிச் செய்கிறார் –
சரணாகதி மேலே–20/21- ஸ்லோகங்களில் அருளிச் செய்வார் –
உம்முடைய ஆக்ஞையாகிய சுருதியால் உபதேசிக்கப்படும் தர்மத்தை அநுஷ்டிக்க நடுங்கி,
நிஷேதிக்கப்படும் கெட்ட மார்க்கத்தில் ப்ரீதி பண்ணுகிறோம்.
செய்த பாபத்திற்குப் பிராயச்சித்தத்தைத் தேடும் எண்ணத்தையே தூர விலக்குகிறோம்.
இப்படி க்ருத்யாகரண அக்ருத்யாகரண தோஷங்களைப் பரிஹரிக்கக்கூடிய அநுதாபம் பிராயச்சித்தம் முதலிய
வழிகளைக் கண்ணெடுத்தும் பாராமலிருக்கிறோம்.
இப்படியிருந்தும், அஜ்ஞாத ப்ராஸங்கித யாத்ருச்சிக ஸுக்ருதம் என்று சிலவற்றை ஸுக்ருதக் கணக்கில் வைத்துக் கொண்டு,
எங்கள் தோஷங்களைப் பாராட்டாமல் உம் தயை எங்களை ரக்ஷிக்கிறது.
இப்படித் தானாக ரக்ஷிக்கும் உம்முடைய தயை உம் திருமேனியை ரக்ஷித்து அரங்கத்தில் நித்யமாக நீர் எழுந்தருளியிருக்க வேண்டும்
என்ற எங்கள் மனோ ரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டாமோ?
கேட்காமலே ரக்ஷிக்கும் தயை கதறிக் கேட்டும் ரக்ஷிக்க வேண்டாமோ?
பவப்ருத் — ஸம்ஸாரத்தை மங்களமென்று நினைத்து கிடையாதது கிடைத்ததென்று இருக்கிறான்.
“பவம்” என்பது ஸம்ஸாரத்தையும் மங்களத்தையும் சொல்லும்.
சத்ய ஞானம் உபதேஶ: என்றார் ஜைமிநி. உபதேச பதம் தர்மத்தைச் சொல்லுகிறது.
ச்ருத்யுபதேசம் — சுருதி என்பது உம்முடைய ஆஜ்ஞை. அதை மீறினவன் உமக்குத் துரோஹி.
“செய்யாதனவற்றை” விரும்பிச் செய்கிறோம்.
அபத்ய பரிஹார தீ விமுகம் — அபத்யத்தை விலக்க வேண்டும் என்று எண்ணுவதில் ஆபிமுக்யம் இருந்தாலும் போதும்,
எண்ணுவதில் கூட விமுகராயிருக்கிறோம்.
இருபதாவது இருபத்தொன்றாவது சுலோகங்களில் சரணாகதி செய்யப் போகிறபடியால்
முன்புள்ள தயா ப்ரஸா க்ரமங்களை ஸூசிப்பிக்கிறார்.
பவக் கடலில் சுழன்று உழலும் மானுடவன் நீ வழங்கும்
பரிந்துரையாம் கசப்பான மருந்துக்கு அஞ்சுகிறான்
சுவை என்னும் கொடு விஷத்தை சுரக்கின்ற கீழ்மையிலே
தூண்டில் புழு நாடும் மீன் தனைப் போலே நச்சுகிறான்
இவை போன்ற தீய்மைகளை ஒழித்திடவும் எண்ணிடாதே
இருக்கின்ற மனிதனையும் இரக்கமுடன் திருவரங்கா
தவறாமல் உன் தயை தான் காரணமே ஹேதும் இன்றி
தருணத்தில் பாய்வதனால் நாளடைவில் காத்திடுமே —
—————————————
அபார்த்த இதி நிஸ்ஸிதா ப்ரஹரணாதி யோகஸ்தவ
ஸ்வயம் வஹஸி நிர்பயஸ்ததபி ரங்க ப்ருத்வீ தர
ஸ்வ ரக்ஷண மிபாபவத் ப்ரணத ரக்ஷணம் தாவகம்
யாதத்த பரமார்த்த விந்நியத மந்தராத் மேதி தே -11-ரங்க₃ப்ருத்₂வீபதே -என்று பாடபேதம்
ரங்கப்ருத்வீபதே — ரங்கராஜனே!
ப்ரஹரணாதியோக — ஆயுதம் முதலியவை இருப்பது,
அபார்த்த: — அநாவச்யம் (வீண்),
இதி — என்று,
நிஶ்சித — நிச்சயிக்கப் பட்டிருக்கிறது,
நிர்ப்பய — பயமில்லாத நீர்,
ததபி — ஆயினும் (அவற்றை),
ஸ்வயம் வஹஸி — நீரே தரிக்கிறீர் (சுமக்கிறீர்),
ப்ரணதரக்ஷணம் — ஆச்ரிதரக்ஷணம்,
ஸ்வரக்ஷணம் இவ — உம் ரக்ஷணம் போல,
தாவகம் — உம் சொந்தப் பணியாக,
அபவத் — ஏற்பட்டது,
யத் — ஏனெனில்,
பரமாத்ம வித் — பகவானே! தனக்கும் மற்ற எல்லா உயிர்களுக்கும் உயிர் என்று அறிந்த ஞானி,
தே அந்தராத்மா இதி — உம்முடைய அந்தராத்மா ,
உமக்கும் ஆந்தரமான (உள்ளான) உயிர் என்று,
ஆத்த — நீர் (கீதையில்) சொன்னீரல்லவா?
ரங்க ப்ருத்வீ தர -ஸ்ரீ ரெங்க ராஜனே -பூமிக்கு எல்லாம் அதிபதியாய் இருந்தும் பூமியில் ஏக தேசமான ஸ்ரீ ரெங்கம் விட்டு இருக்கலாமோ –
அபார்த்த இதி நிஸ்ஸிதா ப்ரஹரணாதி யோகஸ்தவ -தீய ஆயுதங்கள் உடன் நீ கூடியே இருப்பது வீண் -இது நிச்சயம்
-சதா பஞ்சாயுதம் பிப்ரத் -நீர் ரசிக்காமல் இன்று இருப்பதால் இவை வீண் அன்றோ –
ஸ்வயம் வஹஸி நிர்பயஸ்ததபி–இருந்தாலும் -பயமே இல்லாத நீர் -நீரே இவற்றைத் தரித்து இருக்கின்றீர் –
ஸ்வ ரக்ஷண மிபாபவத் ப்ரணத ரக்ஷணம் தாவகம்-ஆஸ்ரித ரக்ஷணம் -உம் ரக்ஷணம் போலே -உமது சொந்தப பணியாக அன்றோ ஏற்பட்டது –
யாதத்த பரமார்த்த விந்நியத மந்தராத் மேதி தே -ஏன் என்னில்-பகவானே -தனக்கும் மற்ற எல்லா உயிர்களுக்கும் உயிர் என்று அறிந்த ஞானி
உம்முடைய அந்தராத்மா -உமக்கும் உள்ளான உயிர் என்று அன்றோ நீர் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தீர் அன்றோ –
(ஆகையால் உம் ரக்ஷணத்தைப் போல உம்முடைய உயிரான ஞானியின் ரக்ஷணமும் உம் சொந்த ரக்ஷணமாய் விட்டது.
உம் ஆத்ம ரக்ஷணம் உம்முயிரின் ரக்ஷணம் இரண்டும் உம் சொந்த ரக்ஷணம்தானே!)
ரங்கப்ருத்வீபதே — ரங்கராஜ என்னாமல் ரங்க ப்ருத்வீபதே என்பதால் ப்ருத்வீக்கெல்லாம் (பூமிக்கெல்லாம்) பதியாயிருந்தும்,
பூமியில் ஏகதேசமான ஸ்ரீரங்கநகரத்திற்கு மட்டும் பதியாயில்லாமல் இருக்க வேண்டுமோ? என்னும் அர்த்தம் த்வனிக்கிறது.
நிர்பய: உமக்கு உம் நிமித்தம் பயமில்லை. உம்மைக் காக்க உமக்கு ஆயுதமும் வேண்டாம்.
நரஸிம்ஹ தசையில் உமக்கு ஆயுதங்களே இல்லையே!
ததபி ஸ்வயம் வைஸி — ஆயினும் ஆயுதங்களை நீரே எப்போதும் சுமக்கிறீர்.
(ஸதா பஞ்சாயுதம் பிப்ரத்) இப்படிச் சும்ப்பது எங்களை ரக்ஷிக்கவல்லவோ? இல்லாவிடில் நிஷ்ப்ரயோஜனமாம்.
பரமாத்மவித் — ஞானி த்வாத்மைவ மே மதம் — ஞானியை பரமாத்மாவான உமக்கு அந்தராத்மா என்று நீர் சொல்லுவது
உம்முடைய அபிமான மாத்ர ஸாரமான நினைப்பு (க்ருஷ்ண மதம்) என்று சந்த்ரிகை.
ஆகையால் ஞானியை ரக்ஷிப்பதும் உம் ரக்ஷணம் போன்றது. ஆச்ரிதர் பயப்படாமலிருக்கவே நீர் ஆயுதம் தரிக்கிறீர்
படைக் கலன்கள் தாங்குவதால் பயன் இல்லை உன் தனக்கே
பயமற்று விளங்கும் நீ படைக்கலம் ஏன் தரிக்கின்றாய்
வடிவரங்கத்தலத் தரசே மேம் பொருளை உணர்ந்தவராய்
விளங்கும் நல் ஞானி யுன்தன் யுயிர் என்று விளம்பி யுள்ளாய்
அடியார்கள் அவர் போல் அனைவரையும் காத்திடவே
ஆயுதங்கள் தமைத் தாங்கி ஆயத்தமாய் நிற்கின்றாய்
அடியாரைக் காக்கின்ற அரும் செயல்கள் எல்லாமே
உன்னையே நீ காப்பனவாய் உண்மையிலே ஆயிற்றே –
————————————–
“நான் ஞானிக்கு அத்யந்தம் ப்ரியன். அவனும் எனக்கு அத்யந்தம் ப்ரியன்.
ஞானி எனக்கு அந்தராத்மா என்று நான் அவனை அபிமானிக்கிறேன்” என்ற கீதா ச்லோகத்தைக் காட்டி நின்றார் கீழ்.
அப்படியே நீரே எங்களுக்கு அத்யந்தம் ப்ரியமான வஸ்து. மற்றவை எதுவும் பிரியமானதல்ல,
ஸுகத்தைக் கொடுப்பதுமல்ல, அவை மேன்மேலும் பயத்தையே தருவன என்கிறார்.
அல்லது,
“முன்பே நீர் செய்த சரணாகதிக்குப் பலமாக இத்தேஹத்தின் முடிவில் உமக்கு மோக்ஷம் நிச்சயம்.
ஆகையால் இங்கே உள்ளவரையில் கொண்டபெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரோடு ஸுகமாயிருமே என்றால்,
இவையெல்லாம் துக்கமும் பயமுமே” என்று விவரிக்கிறார் என்னவுமாம்.
லசிஷ்ட ஸூ க சங்கதை ஸ்க்ருத கர்ம நிர்வர்த்திதை
களத்ர ஸூத சோதரா அநுசர பந்து சம்பந்திபி
தன ப்ரப்ருதி கைரபி பிரசுர பீதி பேதோத்தரை
ந பிப்ரதீ த்ருதிம் ப்ரபோ த்வத் அநு பூதி போகார்த்தின –12-
ப்ரபோ –ஸர்வாந்தர்யாமியான ப்ரபுவே!
த்வத் அநுபூதி போக அர்த்திந: உம்மை அநுபவிப்பது என்னும் இன்பத்தையே ஆசைப்படுகிறவர்கள்,
லகிஷ்ட ஸுக ஸங்கதை — மிகவும் அற்பமான ஸுகத்தின் ஸ்பர்சத்தைக் (ஸங்கத்தைக்) கொடுப்பதும்,
ப்ரசுர பீதி பேதோத்தரை — பெரிதான பலவித பயங்களை மேல்மேல் விளைவிப்பதும்,
ஸ்வ க்ருத கர்ம நிர்வர்த்திதை –தான் சிரமப்பட்டுச் செய்த (புண்ய) கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்டதுமான,
களத்ர ஸுத ஸோதர அநுசர பந்து சம்பந்திபி — கொண்ட பெண்டிர், மக்கள், உடன்பிறந்தார், வேலைக்காரர்,
பந்துக்கள் என்று நன்றாய் நம்மை பந்தப் படுத்தும் இவர்களாலும்,
தந ப்ரப்ருதிகை: அபி — செல்வம், ஆயுள், ஆரோக்யம் முதலியவற்றாலும்,
த்ருதிம் — சந்தோஷத்தை,
ந பிப்ரதி — பெறுகிறதில்லை.
ப்ரபோ த்வத் அநு பூதி போகார்த்தின –-சர்வ அந்தர்யாமியான பிரபுவே -உம்மை அனுபவிக்கும் இன்பத்தையே ஆசைப்படுகிறவர்கள் –
நீர் ஞானிகளை ஆத்மாவாக கருதினாலும் -நாங்கள் நீரே சர்வ அந்தர்யாமி பிரபு என்று அறிவோம் –
லசிஷ்ட ஸூ க சங்கதை -மிகவும் அற்பமான ஸூ கத்தின் ஸ்பர்சத்தை-சங்கத்தை கொடுப்பதும் -சம்சார பந்தம் உண்டாக்கும் இவை
பிரசுர பீதி பேதோத்தரை-பெரிதான பலவித பயங்களை மேல் மேல் விளைவிப்பதும்
ஸ்க்ருத கர்ம நிர்வர்த்திதை-தான் சிரமப் பட்டுச் செய்த புண்ய கர்மங்களால் சம்பாதிக்கப் பட்டது மான
களத்ர ஸூத சோதரா அநுசர பந்து சம்பந்திபி -கொண்ட பெண்டிர் -மக்கள் உடன் பிறந்தார் வேலைக்காரர் பந்துக்கள் என்று
நன்றாய் நம்மைப் பந்தப் படுத்தும் இவர்களாலும்
தாரம் -சுழல் / மக்கள் முதலைகள் /சம்சாரம் பயங்கர கடல் -முகுந்த மாலை –
தன ப்ரப்ருதி கைரபி-செல்வம் ஆயுள் ஆரோக்யம் முதலியவற்றாலும்
ந பிப்ரதீ த்ருதிம் -சந்தோஷத்தை பெறுகிறது இல்லை –
ப்ரபோ — நீர் ஞானியை அந்தராத்மாவாகக் கருதினாலும், நாங்கள் நீரே ஸர்வாந்தர்யாமி, எங்கள் ப்ரபு என்று அறிவோம்.
லகிஷ்ட ஸுக ஸங்கதை — உம்மை அனுபவிப்பதே பேரின்பம் மற்றவை சிற்றின்பம் என்பர்.
ஆனால் இவற்றை — லகிஷ்டம் — மிகவும் அல்பமான (அதைக் காட்டிலும் சிறியதில்லாத) இன்பம் என்ன வேண்டும்.
அதிலும் ஸுகத்தையும் கொடுப்பதில்லை. அத்ருப்தியை, மேல் மேல் அனுபவிக்க ஆசை என்னும் ஸங்கத்தையே கொடுக்கிறது.
(ஸுகஸங்கேன பத்நாதி) என்ற கீதா சுலோகத்தை ஸூசிப்பிக்கிறார்.
“ஸுகத்தில் ஆசையைக் கொடுத்து (பாசங்களால்) கட்டுகிறது.
இங்கு மேன்மேலும் பந்தம் உண்டாகிறது என்பதைக் காட்ட “பந்து” “சம்பந்தி” என்கிற பதங்களைச் சேர்க்கிறார்.
ஸ்வக்ருத கர்ம நிர்வர்த்திதை — இப்படி அத்யல்பமான போலி இன்பத்தை அடைய எவ்வளவு பாடுபட்டு புண்ய கர்மம் செய்திருக்க வேண்டும்?
ஓர் அஞ்ஜலிக்குக் கிங்கரரகும் நீர் இருக்கையில், ஓர் சரண நினைப்புக்கு சாச்வதமான பேரின்பத்தை
தாயக் கிரமமாக அளிக்க நீர் காத்துக் கொண்டிருக்கையில், அல்பால்ப ஸுகத்தைத் தேடுகிறோம்.
களத்ர — இது நிதம்பத்திற்கும் இல்லாளுக்கும் பெயர். பெரிய நிதம்பத்தையிட்டு ஸ்திரீயைக் கூறும்.
ஊன்றிப் பார்த்தால் இந்தப் பெயரே வெறுப்பைக் கொடுக்க வேண்டுமே?
(“சந்த்ரமூர்த்தியைப் போல அழகிய விலாஸத்தால் கவரும் குருகளத்ரத்தை யுடையவன்” என்று காதம்பரியில் வர்ணனம்.
இங்கு குருகளத்ரம் என்பதற்கு பெரும் நிதம்பம் என்றும் குருபத்னியான தாரை என்றும் பொருள்.)
ஸுத — கர்ப்பத்திலிருந்து வெளியே நழுவவிடப்பட்ட சிசு, எத்தனை ஸோம ஸுதங்களான கர்மங்கள் செய்யவேண்டும் ஒரு ஸுதனைப் பெற.
“தாரமென்னும் சுழல், மக்கள் ஸயுஜர் என்னும் முதலைகள், இவற்றோடு கூடிய ஸம்ஸாரம் என்னும் பயங்கரமான கடல்” என்று முகுந்தமாலை.
ஸோதர — பங்காளிகள். “ஞாதியிருந்தால் நெருப்பு வேறு வேண்டுமோ?”
அநுசர — உமக்கு நாங்கள் அடிமை செய்ய வேண்டியிருக்க, அடிமையான எங்களுக்கு அடிமைகளா?
(குருஷ்வ மாமநுசரம்) என்பதன்றோ எங்கள் நிலை?
பந்து — பாசங்களால் கட்டுகிறவர்கள். ஸம்பந்திகள் என்பதால் இவர்கள் எல்லாருமே நன்றாய்க் கட்டுகிறவர்கள்.
தந ப்ரப்ருதிகைரபி — தனம் முதலியவற்றாலும், புத்ரனைக் காட்டிலும் ப்ரியம், வித்தத்தைக் காட்டிலும் ப்ரியம் என்றது உபநிஷத்.
புத்ரனைக் காட்டிலும் பணத்தில் ப்ரீதி வைப்பர். அது ஆபத்தே.
(மஹதபி தநம் பூரி நிதநம்) என்று ப்ரபோத சந்த்ரோதயம்
(ஐஶ்வர்யம் ஶத்ரு ஶாலிதா) என்று பாரதம்.
ப்ரசுர — கொஞ்சம் ஸுகம் இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் பயமே அதிகம்.
பீதிபேதோத்தரை — பலவகையான பயங்களில் மிகவும் அதிகமான பயங்கள். மேலும் பயத்தை விளைவிப்பன.
த்வத் அநுபூதி போக அர்த்திந –(அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே) என்று உம்மிதமே அபயத்திற்கு நிஷ்டையை விரும்புமவர்கள்.
த்ருதிம் — ஸந்தோஷத்தை, அபயத்தை, தரிப்பை
நின்னையே அகலாது நுகர்கின்ற போகத்தை
நண்ணுகின்ற மனமுடைய நல்லோர்கள் யாவருமே
மின்னனைய அற்ப சார மகிழ்வினையே தருகின்ற
முன்னாளில் தாம் செய்த கருமத்தினால் விளைந்தனவாய்
எண்ணரிய பல்வகையாம் அச்சத்தையே தருவனவாம்
இல்லாளும் மக்களாலும் உடன் பிறந்தார் பணியாளர்
இன்னம் உள்ள உற்றத்தார் இவராலும் தனத்தாலும்
ஏற்படுமாம் இன்பத்தில் உளம் கொள்ள மாட்டாரே –
——————————————-
ந வக்துமபி சக்யதே நரக கர்ப வாஸாதிகம்
வபுஸ்ச பஹு தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம்
த்ரி விஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத
கிமத்ர ந பயாஸ் பதம் பவதி ரங்க ப்ருத்வீ பதே -13-
ரங்கப்ருத்வீபதே — ரங்கபூமிக்கு அரசனே!
நரக கர்ப்ப வாஸாதிகம் — நரகம் கர்ப்பவாஸம் முதலியது,
வக்துமபி — (இவ்வளவு கஷ்டமென்று) சொல்வதற்குக்கூட,
ந ஶக்யதே — சக்யமல்லை: (ஸாத்யமில்லை),
வபு:ச — தேஹமும்,
நிபுண சிந்தநே — உன்னி ஆலோசித்தால்,
தாத்ருஶம் — அப்படியே துஸ்ஸஹமானது,
த்ரிவிஷ்டபமுகம் — ஸ்வர்க்கம் முதலியதும்,
தேதீபத — ஜ்யோதிர்மயமாய் ப்ரகாசிக்கும்,
தவ பதஸ்ய — உம் ஸ்தாநத்தை (உம் சுடரடியை) (யிட்டுப் பார்த்தால்),
ததா — அப்படியே (நரக துல்யமாகும்),
அத்ர — இங்கே (இப்புவியில்),
கிம் — எதுதான்,
பயாஸ்பதம் ந — பயத்திற்கிடமாவதில்லை?
ரங்க ப்ருத்வீ பதே —ஸ்ரீ ரங்க பூமிக்கு அரசனே
ந வக்துமபி சக்யதே நரக கர்ப வாஸாதிகம் -நரக கர்ப்ப வாசம் முதலியது-இவ்வளவு கஷ்டம் என்று சொல்வதற்கு கூட சாத்தியம் இல்லை
வபுஸ்ச பஹு தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம் -தேகமும் அப்படியே உன்னி சிந்தித்தால் துஸ் சஹமாய் இருக்கும்
த்ரி விஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத -ஸ்வர்க்கம் முதலானதும் ஜ்யோதிர் மயமாய் பிரகாசிக்கும்
-உம் ஸ்தானத்தை -உன் சுடர் அடியை -இட்டுப் பார்த்தால் அப்படியே நரக துல்யமாய் இருக்கும்
கிமத்ர ந பயாஸ் பதம் பவதி -இங்கு இப்புவியில் எது தான் பயத்துக்கு இடமாவது இல்லை
உம்மை விட்டு பிரிந்து இருப்பதே நரகம் என்றவாறு -ஸ்ரீ ரெங்கத்தில் நீர் மீண்டும் எழுந்து அருளி
எங்கள் பயத்தை போக்கி நிரதிசய நித்ய -ஸூ கம் தந்து அருள வேண்டும்-
தேஹ ஸம்பந்திகளான சுற்றத்தார் வேண்டாம், தேஹத்தோடாவது ஸுகமாயிருக்க லாமோவென்னில், அதுவும் ஸாத்யமில்லை.
(விபத் கேஹம் தேஹம்) , விபத்துக்களுக் கெல்லாம் இல்லம் சரீரம் என்று ப்ரபோத சந்த்ரோதயம். நரகம் பெருந் துக்கமயமானது.
அதில் அடைபடுவதிலும் கர்ப்பப் பைக்குள் அடைபடுவது அதிகக் கஷ்டம் என்பதை அதற்குப் பிறகு கர்ப்பவாஸத்தைக் கூறுவதால் ஸூசிப்பிக்கிறார்.
ஆதிகம் — முதலியது. உள்ளேயிருக்கும் துன்பம் ஒரு புறமிருக்க, வெளியே வருவதற்கு எவ்வளவு கஷ்டம்.
(யோநே: ஶரீரம்) என்று ஸூத்ரகாரர் வைராக்ய பாதத்தை முடித்தார்.
அதற்கு முன் ஸூத்ரத்தில் ரேதஸ் ஸிக் யோகத்தைப் பேசினார்.
கர்ப்பப்ப் பையின் யோகம் கிடைக்க ரேதோயோகம் கிடைக்க வேண்டும் என்று ஜுகுப்ஸையைக் காட்டினார்.
வபுஶ்ச — நரகத்திலும் கொடியது தேஹம் என்றார் ப்ரஹ்லாதாழ்வான்–
தேஹே சேத் ப்ரீதிமாந் மூட: நரகே பவிதா ச ஸ) தேஹமென்னும் நரகக் குழியில் ப்ரீதி வைப்பானாகில்,
அந்த மூடனுக்கு நரகத்திலும் ப்ரீதியே ஏற்படும். தேஹத்திலும் நரகம் கொடியதோ ? அவனுக்கு நரகவாஸம் தண்டனை ஆகாது என்பது கருத்து.
பஹுதாதுகம் –ப்த தாதுமயம் த்ரிமலம் என்பர்
நிபுண சிந்தநே — ப்ரஹ்லாதன் நிரூபித்தது போல் ஆழ்ந்து யோசித்தால்,
தாத்ருஶம் — நரகாதிகள் போன்றதே.
தவ பதஸ்ய தேதீ பத: அத்யர்க்காநலதீப்தமாய் சுடர்ச் சோதியான பரமபதமென்னும் உம் ஸ்தானம் ப்ரகாசிக்கையில்,
அதை உத்தேசித்து உம் சுடரடியின் இன்பத்தை ஆலோசிக்குங்கால் என்று அரங்கன் விஷயமுமாகலாம்.
அரங்கமென்பது மற்ற திவ்யதேசங்களுக்கு உபலக்ஷணம்.
த்ரிவிஷ்டபமுகம் ததா ஸ்வர்க்கமும் மற்ற ஸத்யலோகமும் அப்படியேயாகும்.
(நிரயோ யஸ் த்வயா விநா) உம்மை விட்டுப் பிரிவு நரகமே.
அத்ர கிம் ந பயாஸ்பதம் — இந்தப் பூமண்டலத்தில் எதுதான் பயத்திற்கு இடமில்லை?
ரங்கப்ருத்வீபதே — தப்பிச் சொன்னேன். இந்தப் பூமண்டலத்தில் ரங்கமென்னும் ப்ருத்வீ பாகம் ஸுகத்தைத் தருவதே, பயமற்றதே.
இந்தப் பூமியில் இருந்தாலும், அரங்கமும் அரங்கம் போன்ற திவ்ய தேசங்களும் அபயத்தையும் ஸுகத்தையும் தருபவையே.
ஆகையால ப்ருத்வீபதியான நீர் அவற்றை ரக்ஷித்துத் தரவேண்டும்.
தேதீபத: என்ற பாடம் சுத்தம்.
————————————————————————–
பவந்தி முக பேததோ பய நிதான மேவ ப்ரபோ
ஸூப அ ஸூப விகல்பிதா ஜகதி தேச காலாதய
இதி பிரசுர ஸாத்வஸே மயி தயிஷ்யஸே த்வம் ந சேத்
க இத்தம நு கம்பிதா த்வதநு கம்ப நீ யஸ்ஸ க –14-
ப்ரபுவே — என் ப்ரபுவே!,
ஶுபாஶுப விகல்பிதா — சுபம் அசுபம் என்று பிரித்துப் பேசப்படும்,
தேஶகாலாதய — தேசம் காலம் முதலியவை,
முகபேதத — ஓரொரு பர்யாயமாக,
பயநிதாநமேவ — பயத்திற்கே காரணமாக,
பவந்தி — ஆகின்றன,
இதி — என்று (இப்படி),
ப்ரதிதஸாத்வஸே — மிகவும் பரந்த பயத்தையுடைய,
மயி — என்னிடம்,
த்வம் — நீர்,
ந தயிஷ்யஸே சேத் — தயவு செய்யாது போனால்,
இத்தம் — இப்படி,
க: அனுகம்பிதா — வேறு யார் தயை செய்வாருளர்?,
த்வதுகம்பநீய: ச — உம் தயைக்குத் தக்க பாத்ரம்,
க: — (என்னிலும்) யாருளர்?
ப்ரபோ -என் பிரபுவே
ஸூப அ ஸூப விகல்பிதா ஜகதி தேச காலாதய -ஸூபம் அஸூபம் என்று பிரித்துப் பேசப்படும் -தேசம் காலம் முதலியவை
பவந்தி முக பேததோ பய நிதான மேவ -ஒரு ஒரு பர்யாயமாக -பயத்திற்கே காரணமாக ஆகின்றன
இதி பிரசுர ஸாத்வஸே மயி தயிஷ்யஸே த்வம் ந சேத் -இப்படி மிகவும் பரந்த பயத்தை யுடைய என்னிடம் நீர் தயவு செய்யாது போனால்
20-வது சுலோகத்தில் தன் சரணாகதிக்குப் பலத்தைக் குறிப்பிட்டு ப்ரார்த்திக்கிறார்.
அதற்கு முன் பெருமாளுக்கு தயை உண்டாகி வளரும்படி தம் பயத்தையும் கோயில் முதலிய திவ்ய தேசங்களில்
திவ்யமங்கள விக்ரஹங்களை ஸதா ஸேவித்துக் கொண்டிருப்பதே தனக்கு ஸுகத்தைத் தரும் என்பதையும்,
அதை அளிக்க பெருமாளைத்தவிர வேறு கதி இல்லை என்பதையும் சொல்லி வருகையில்
இதில் ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தின் பதங்களையே அமைத்துப் பிரார்த்திக்கிறார்.
பெரியோர்கள் பாசுரத்தை அநுஸரித்துப் பிரார்த்தித்தால், பெருமாள் திருவுள்ளம் சீக்கிரம் உகக்கலாம் என்று ஆசை.
ஆளவந்தார், (யதி மே ந தயிஷ்யஸே ததோ தயநீய: தவ நாத துர்லப:) என் விஷயத்தில் நீர் தயை செய்யாவிடில்,
உமக்கு தயை செய்யத் தக்கவனே கிடைக்க மாட்டான்.
உம்மலால் நான் நாத சூன்யன்.
என்னலால் நீர் தயாபாத்ர சூன்யர்,
தைவத்தால் எற்பட்டிருக்கும் இந்த ஸம்பந்தத்தை நீர் காப்பாற்ற வேணும்.
(மா ஸ்ம ஜீஹப:) நழுவ விடக்கூடாது என்றார்.
இவரும் பதினெட்டாவது சுலோகத்தில் மாஸ்ம தஜ்ஜீஹபத் என்று அதையே கூறுகிறார்.
உலகத்தில் தேசம் காலம் முதலியவற்றில் சிலவற்றை சுபமென்றும், சிலவற்றை அசுபமென்றும் பிரிப்பது வீணே.
எல்லாம் பயத்தையும் துக்கத்தையும் தருவதால், உண்மையில் எல்லாம் அசுபமே.
ஸ்வர்க்கம் சென்றால் தேவர்கள் இவனை “பசு” என்று எண்ணுகிறார்கள்.
அங்கு ஏறவிட்ட கர்மம் விசையற்றவளவிலே கீழே விழுந்து விடுவோம் என்ற பயமுமுண்டு.
நல்லவையே தரும் என்றும் தீயவையே தரும் என்றும்
தேசத்தையும் காலத்தையும் திறம்படவே பிரித்தாலும்
எல்லாமே வெவ்வேறு வழிகளிலே தீமையையே
அளிக்கும் படி அமைந்தனவாய் அச்சத்தையே தரும் என்றே
எல்லையில்லா பயம் கொண்ட என் மீதே அரங்கா நீ
இரக்கம் தான் கொள்ளாயேல் இவ்வாறு அருள் புரியும்
நல்லானும் வேறு உளனோ நிலவுலகில் நின்னுடைய
நல்லருளைப் பெறும் தகுதி நிறைந்தவனும் வேறு உளனோ –
—————————————————————
ஸக்ருத் பிரபதன ஸ்ப்ருசாமபய தான நித்ய வ்ரதீ
ந ச த்விர பிபாஷஸே த்வமிதி விஸ்ருத ஸ்வோக்தித
யதோக்த கரணம் விதுஸ்தவ து யாதுதா நாதய
கதம் விதத மஸ்து தத் க்ருபண ஸார்வ பவ்ம மயி –15-
ஸக்ருத் ப்ரபதா ஸ்ப்ருஶாம் — ஒரு தரம் ப்ரபத்தி என்னும் உபாயத்தைத் தொட்டவர்க்கும்,
த்வம் — நீர்,
அபயதாந நித்ய வ்ரதீ — அபயமளிப்பதை நித்ய வ்ரதமாக உடையவர் (என்று நீர் உத்கோஷித்திருக்கிறீர்),
த்வி — இரண்டாம் தடவை,
க ச அபிபாஷஸே — பேசமாட்டீர்,
இதி — என்று,
ஸ்வோக்தித — உம்முடைய உறுதியான பேச்சாலேயே,
விச்ருத — (நீர்) ப்ரஸித்தர்,
யாது தாநாதய — ராக்ஷஸர் முதலியவரும்,
தவ — உம்முடைய,
யதோக்த கரணம் — சொன்னவண்ணம் செய்வதை,
விது — அனுபவித்துளர்,
தத் — அந்த குணம்,
க்ருபண ஸார்வபௌமே — கார்ப்பண்ய பூர்த்தியுள்ள அகிஞ்சநரில் முதன்மையான,
மயி — என் விஷயத்தில்,
கதம் — எப்படி,
விததம் அஸ்து — பொய்யாக ஆகலாம். ?
ஸக்ருத் பிரபதன ஸ்ப்ருசாம் -ஒரு தரம் பிரபத்தி என்னும் உபாயத்தை தொட்டவர்க்கும் –
ஸக்ருத் ஏவ பிரபன்னாயா -என்பதையே இங்கு அருளிச் செய்கிறார்
விபீஷணன் கூட வந்ததற்கும் பலன் உண்டே -சம்பந்தம் காட்டவே ஸ்ப்ருசாம்-என்று அருளிச் செய்கிறார்
த்வம் அபயதான நித்ய வ்ரதீ -நீர் அபயம் அளிப்பதையே விரதமாக -தீக்ஷையாக -சர்வ பூதேப்ய அபயம் ததாமி–ஏதத் மம விரதம் –
ததாமி நிகழ் காலம் –சர்வ காலிகம் என்றபடி
ந ச த்விர பிபாஷஸே த்வமிதி விஸ்ருத ஸ்வோக்தித –இரண்டாவது வார்த்தை மாற்றி பேச மாட்டீர்
-உம்முடைய உறுதியான பேச்சாலே -நீர் பிரசித்தர் –ராம த்வி ந அபி பாஷதே
யதோக்த கரணம் விதுஸ்தவ து யாதுதா நாதய-ராக்ஷசர் முதலானவர்களை உம்முடைய சொன்ன வண்ணம் செய்வதையே அனுபவித்து உள்ளனர்
யதோத்த காரீ அன்றோ நீர்
கதம் விதத மஸ்து தத் க்ருபண ஸார்வ பவ்ம மயி -அந்த குணம் -கார்ப்பண்ய பூர்த்தி உள்ள -அகிஞ்சனான என் விஷயத்தில் எப்படி பொய்யாகலாம் –
அடியேன் மநோ ரதம் பூர்த்தி யான பின்பு தானே நீர் விஜூரராக இருக்கலாம்
தாசேஷூ சத்யன் -அடியாரவர்க்கு மெய்யன் அன்றோ -உம் பெயர் நிலைத்து இருக்க அருளால் ஒழியக் கூடாதே –
பெருமாளைத் தவிர தனக்கு வேறு கதியில்லை என்று கூறிவிட்டு, இதில் தன்னிலும் க்ருபணனில்லை என்கிறார்.
தனக்கு வேறு கதியில்லாதது போலவே பெருமாளுடைய தயைக்கும் தன்னைத் தவிர வேறு கதியில்லை.
அதாவது தயையைக் காட்ட தானே உத்தமமான பாத்ரம்.
முலைக் கடுப்பாலே கன்றுக்குப் பாலைக் கொடுத்தல்லது பசு நிற்கவொண்ணாதாற் போலே
ரக்ஷ்யனை ரக்ஷித்தல்லது தரிக்கமுடியாது பெருமாளுடைய தயையினால்.உம் அபயப்பிரதான வ்ரதம் நித்யம்.
ஒரு தடவை உபாய ஸ்பர்சம் ஒருவனுக்கு ஏற்பட்டால் அவனைக் காப்பாற்றும் வரையில் நீர் கடனாளியாய் ஸஜ்வரராய் இருக்கிறீர்.
மனோரதத்தைப் பூர்த்தி செய்த பிறகே விஜ்வரராய் ப்ரமோதத்தை (ஆனந்தத்தை) அடைகிறீர்.
ஸேதுக் கரையில் வந்து (ஸக்ருதேவ ப்ரபந்நாய) “ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்” என்று தன் விரதத்தை உத்கோஷித்தார்.
அதையே இங்கு ஸக்ருத் — ப்ரபதந — ஸ்ப்ருஶாம் என்று அநுவதிக்கிறார்.
(ஸர்வபூதேப்ய, அபயம் ததாமி, ஏதத் மம வ்ரதம்) என்றதையும் இங்கு அநுஸரிக்கிறார்.
ததாமி என்பதில் “லட்” (நிகழ்காலத்தைக் குறிப்பது) ஸார்வகாலிகம். ஆகையால் மூன்று காலங்களையும் சொல்லுகிறது.
இந்த விரதத்தை ஸ்வபாவிகமாக உடையவர். (ராம: த்வி:ந அபிபாஷதே) என்று உமது வார்த்தை.
உம்முடையது வெறும் பேச்சல்ல, ராக்ஷஸர்களுக்கும் அவர்களுக்குத் தலைவனான விபீஷணனுக்கும் மெய்யரானீர்.
“அவர் ஸார்வ பௌமன்” என்றால் நானும் அப்படியே. அடியேன் க்ருபண ஸார்வபௌமன்.
நீர் “யதோக்தகாரீ” என்று ப்ரஸித்தரல்லவா? “யதோக்தகாரணம்” என்று நம்பெருமாள் திருநாமத்தையும் நினைப்பூட்டுகிறார்.
என்னை ரக்ஷியாவிட்டால் திருநாமமே பொய்யாய்விடும்.
“தாஸேஷு ஸத்யன்” “அடியவர்க்கு மெய்யன்” என்னும் திருநாமத்தைத் தரிக்கச் செய்யும் என்று தேவநாயகன் துதி.
ஸ்ப்ருஶாம் — ப்ரபத்தியில் ஸம்பந்தப்படும் க்ஷணத்திலேயே அபயதானம் ஸங்கல்பிக்கப் படுகிறது.
உபாய ஸ்வரூபம் க்ஷணஸ்பர்சமாயுள்ளது. செய்யும் ப்ரபதநத்தில் தொட்டுக்கொள்ளும் அநுபந்திகளும் ரக்ஷிக்கப் படுகிறார்கள்.
விபீஷணாழ்வானோடு கூட வந்த நாலு ராக்ஷஸர்களும் ரக்ஷிக்கப் பட்டார்கள்.
அதற்கு இவர் செய்த ப்ரபத்தியில் அவர்களுக்கும் ஸ்பர்சம் ஏற்பட்டதே காரணம்.
ஒரு முறையே சரணம் என உன்னிடமே உற்றவர்க்கு
அபயம் தனை அளிக்கின்ற அரும் செயலை விரதம் என
நிரந்தரமாய் கொண்டுளதாய் நீ தானே வெளியிட்டாய்
நீயே தான் இரு முறைகள் நான் உரையேன் என்று உரைத்துப்
பெறும் புகழைப் பெற்றுள்ளாய் பகர்வதையே செய்பவனாய்
புவியில் உனை அரக்கர்களும் முதலானோர் அறிந்துள்ளார்
ஒரு புகலும் அற்றவரின் ஒப்பற்ற தலைவன் என
உறும் எனக்கு உன் விரதம் வீணாக ஆகிடுமோ –
———————————————–
அநு க்ஷண சமுத்திதே துரித வாரிதவ் துஸ்தரே
யதி க்வசன நிஷ்க்ருதிர் பவதி ஸாஅபி தோஷா விலா
ததித்த மகதவ் மயி ப்ரதி விதா நமா தீயதாம்
ஸ்வ புத்தி பரி கல்பிதம் கிமபி ரங்க துர்ய த்வயா –16-
ரங்கதுர்ய — ரங்கநாத!,
அநுக்ஷண ஸமுத்திதே — ப்ரதிக்ஷணமும் பெருகுகிறதும்,
துஸ்தரே — தாண்டுவதற்கு அரிதானதுமான,
துரிதவாரிதௌ — பாபமாகிற கடல் விஷயத்தில்,
க்வசந — (பிராயச்சித்த காண்டங்களில்) எங்காவது,
நிஷ்க்ருதி — பிராயச் சித்த விதி,
யதி — இருந்ததானால்,
ஸா அபி — அந்தப் பிராயச் சித்தமும்,
தோஷாவிலா — (ப்ரதிக்ஷணமும் பயங்கள் உற்பத்தியாகின்றன என்று முன் சொன்ன காரணத்தாலேயே) அசுத்தமாகவே,
பவதி — ஆகிறது,
தத் — ஆகையால் ,
இத்தம் — இப்படி,
அகதௌ — வேறு கதியேயில்லாத,
மயி — என் விஷயத்தில்,
த்வயா — உம்மால்,
ஸ்வபுத்தி பரிகல்பிதம் — உம் புத்தியாலேயே ஆலோசிக்கப்பட்ட,
ப்ரதிவிதாநம் — ப்ராயச் சித்தம்,
ஆதீயதாம் — செய்யப்பட வேண்டும்.
அநு க்ஷண சமுத்திதே–ப்ரதி க்ஷணமும் பெருகுகிறதும்
துரித வாரிதவ் துஸ்தரே -தாண்டுவதற்கு அரிதானதுமான -பாபம் ஆகிற கடல் விஷயத்தில்
யதி க்வசன நிஷ்க்ருதிர் பவதி ஸாஅபி தோஷா விலா –ப்ராயச்சித்த காண்டங்களில் விதித்த விதி இருந்ததனால்
அந்த பிராயச்சித்தமும் -ப்ரதி க்ஷணமும் பயன்கள் உத்பத்தி ஆகின்றன -என்று முன் சொன்ன காரணத்தாலேயே -அசுத்தமாகவே ஆகிறது –
ததித்த மகதவ் மயி-ஆகையால் இப்படி வேறு கதியே இல்லாத என் விஷயத்தில்
ப்ரதி விதா நமா தீயதாம் –ப்ரதி விதாநம் ஆதீயதாம் -பிராயச்சித்தம் செய்யப் பட வேண்டும்
ஸ்வ புத்தி பரி கல்பிதம் கிமபி ரங்க துர்ய த்வயா –ஸ்ரீ ரெங்க நாதா -உம் புத்தியால் ஆலோசிக்கப் பட்ட பிராய்ச சித்தம் செய்யப் பட வேணும்
நீ இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அகதி அன்றோ அடியேன் என்றபடி -நீயே கர்த்தாவாய் அடியேனை செய்விக்க வேணும் –
ஸ்ரீ ரெங்க பிரபு -இந்த ஸ்ரீ ரெங்க ரக்ஷண பரத்தை நீர் தானே வஹித்துக் கொண்டு எங்கள்
பயத்தை தீர்த்து அருள வேண்டும் என்பதே இப்பொழுது பிரபதனம் –
ப்ரபத்தியை ‘ஒருக்கால் அநுஷ்டித்தவனுக்கு நான் அபயப்ரதானம் செய்கிறேன்’ என்றும்,
‘நீ ஒரு கைமுதலற்றவன்’ என்றும் சொல்லுகிறாய்.
ஆனால் நீ ஸகல பாபங்களுக்கும் பிராயச்சித்தமான பிரபதனமென்னும் ந்யாஸவித்யையை அனுஷ்டித்தா லல்லவோ
நான் உன்னை ரக்ஷிக்கலாம் என்றால்,
இந்த சுலோகத்தால் தான் அவனன்றி ஒன்றும் செய்ய முடியாத அகதி என்கிறார்.
பிரபத்தி என்னும் பிராயச்சித்தத்தை அனுஷ்டிப்பதில் எவ்வளவோ தோஷங்கள் வரக்கூடும்.
உலகத்தில் ஒரு பாபத்துக்காக ஒரு பிராயச்சித்தத்தை ஆரம்பித்தால், இடையில் நேரும் தோஷங்களுக்காக வேறு பிராயச்சித்தங்கள்!
இப்படி பிராயச்சித்தங்களின் தொடர்ச்சி எல்லையில்லாமல் போய்க்கொண்டேயிருக்கும்.
ஸமுத்ரம் ஓய்ந்தவன்றுதான் எங்கள் பாபங்களும் ஓய்வது.
ஆகையால் நான் செய்யப்போகும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும் உம்முடைய சுபமான ஸங்கல்பத்தால் நிர்தோஷமாயும்,
பூரணமாகவும் செய்து, நீர் காரயிதாவாய் (செய்விப்பவராய்) என்முகமாய் நடத்தி வைக்க வேணும்.
நாங்கள் செய்வது கிலமாயும் அபூர்ணமாயுமிருக்கும்.
கிலமில்லாமல் பூரணமாகச் செய்வதில் நீர்தான் நிபுணர்.
(நிதானம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண:) ப்ரபத்தி முதலிய உபாயங்களில் எங்களுக்கு அந்வயம் உம்மால்தான் ஏற்படவேண்டும்.
ஆகையால் அவ்வுபாயத்தைக் குறைவற நீரே செய்து வைக்கவேண்டும்.
ரங்கதுர்ய — ரங்கத்தின் ரக்ஷண பாரத்தை வஹிப்பவர் நீரல்லவா? அந்த ரக்ஷணப் பொறுப்பை நீர் ஏற்றுக்கொண்டு
எங்கள் பயத்தைத் தீர்க்க வேண்டும் என்று தானே இப்போது செய்யும் பிரபதனம்.
கணம் தோறும் பெருகி வரும் கடத்தரிய வினைக் கடலைக்
கடப்பதற்கே நெறி வகுத்த கழுவாயைச் செய்தாலும்
அணை போன்ற குற்றங்கள் அது தனையும் குலைத்திடுமே
ஆதலினால் கதியேதும் அற்றவனாய் நிற்கின்றேன்
கணக்கில்லா என் தீ வினைகள் கழிவதற்கே அரங்கா நின்
கருத்தாலே தக்கதொரு கழி வாயைத் தோற்றுவித்து
எனை அதிலே மூட்டுவித்து எவ்விதமாம் தடையும் அற
எனையதனைச் செய்வித்து ஏற்றம் உறச் செய்வாயே –
————————————————————
விஷாத பஹுளாதகம் விஷய வர்க்கதோ துர் ஜயாத்
பிபேமி வ்ருஜி நோத்தரஸ் த்வதநு பூதி விச்சேததி
மயா நியத நாதவா நயமிதி த்வமர்த்தா பயன்
தயாதன ஜகத் பதே தயித ரங்க சம் ரக்ஷமாம் –17-
வ்ருஜினோத்தர — அதிக பாபமுடைய (நான்),
விஷாத பஹுளாந் — துக்கமே அதிகமாயுள்ளதும்,
துர்ஜயாத் — ஜயிக்க முடியாததுமான,
விஷயவர்கத — (சிற்றின்ப) விஷயங்களின் கூட்டத்தின் வலிமையினால்,
த்வதனுபூதி விச்சேத — உம்மை அநுபவிப்பதற்குத் தடை ஏற்பட்டு விடுமோ என்று,
பிபேமி — பயப்படுகிறேன்,
தயாதந — தயைச் செல்வம் நிறைந்தவரே,
ஜகத்பதே — லோகத்திற்கு ஸ்வாமியே,
தயிதரங்க — ரங்கத்தில் ப்ரீதியை உடையவரே,
மயா — என்னால்,
அயம் — இவன்,
நியத நாதவாந் — கைவிடாத நாதனை உடையவன்,
இதி — என்று,
த்வம் — நீர்,
அர்த்தாபயந் — சொல்லிக்கொண்டு,
மாம் — என்னை,
ஸம்ரக்ஷ: — நன்றாக ரக்ஷித்தருள வேணும்.
விஷாத பஹுளாதகம் –துக்கமே அதிகமாய் உள்ளதும்
விஷய வர்க்கதோ துர் ஜயாத்-ஜெயிக்க முடியாததுமான விஷயாந்தரங்களின் கூட்டத்தின் வலிமையினால்
உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே -என்னுடைய சரீரே வர்த்தமானமாய் –
அத ஏவ அவர்ஜ நீயமுமாய் ம்ருத்யு சத்ருசமுமாய் பயங்கரமுமாய் இருந்த
பஞ்ச இந்த்ரியங்களாலும் விஷயங்களில் என்னை ஆகர்ஷிப்பித்து -என்றபடி –
பிபேமி வ்ருஜி நோத்தரஸ் த்வதநு பூதி விச்சேததி-அதிக பாபம் உடைய நான் –
உம்மை அனுபவிக்கத் தடை ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறேன் –
மயா நியத நாதவா நயமிதி த்வமர்த்தா பயன் -என்னால் இவன் கை விடாத நாதனை யுடையவன் என்று திரு உள்ளம் பற்றி
அருளிச் செய்து -அடியேனை ரஷித்து அருள வேண்டும் –
தயாதன ஜகத் பதே தயித ரங்க சம் ரக்ஷமாம் -தயை செல்வம் நிறைந்தவர் –
சர்வ லோக ஸ்வாமியே -ஸ்ரீ ரெங்கத்தில் பிரியம் யுடையவர் –
நீர் ஜகத் பதியாய் இருக்க உம் சொத்தை கள்ளர் கொண்டு போகலாமா –
இந்த சரீரத்தின் முடிவில் மோக்ஷம் கிடைப்பது நிச்சயமாயிருந்தாலும், இங்கிருந்த நாள் உன் திருவடிகளில் பக்தி விச்சேதமின்றி இருக்க வேணும்.
பக்தியாவது இடைவிடாமல் ப்ரீதியுடன் உன் திவ்யமங்கள விக்ரஹத்தை தியானிப்பது.
‘அப்படி அனுபவிக்கும் பேரின்பம் கிடைக்குமானால் வைகுண்டவாஸத்திலும் ஆசையில்லை’ என்றல்லவோ எங்கள் துணிபு.
ஆனால் அந்த பக்திக்கு விஷயங்கள் என்னும் ரூப ரஸாதிகள் விரோதிகள்.
எங்கள் தியானத்திற்கு விஷயமான (ஆலம்பநமான) உம் திவ்யமங்கள விக்ரஹத்துக்கு ஆபத்து வந்தால் அதுவும் தியானத்திற்கு விரோதி.
ஆகையால் விஷயங்களை அடியோடு விலக்க வேண்டும். இந்த விஷயமான உம் விக்ரஹத்தோடு நித்ய யோகம் வேணும்.
உம்மை தியானிப்பதில் விச்சேதம் வந்தால் அதுவே எங்களுக்கு பயம்.
“உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாதபங்கயம் நண்ணிலாவகையே”.
அநாதி காலமெல்லாம் விஷய ப்ரவணமாய் பகவதனுபவ விரோதியாகையாலும்,
“என்னுடைய சரீரே வர்த்தமானமாய் அத ஏவ அவர்ஜநீயமுமாய் ம்ருத்யு ஸத்ருஶயமுமாய் பயங்கரமுமாயிருந்த
பஞ்சேந்திரியங்களாலும் விஷயங்களிலே என்னை ஆகர்ஷிப்பித்து” என்று பிள்ளான் பணித்தார்.
விஷாத பஹுளாத் — துக்கமயமான; பகவான் ஆனந்தமயமாயிருப்பதற்கு எதிராக இவை துக்கப்ர சுரம்.
துர்ஜயாத் — பெருமாளையும் வசப்படுத்தலாம் போலிருக்கிறது. விஷயங்களை ஜயித்து இந்திரியங்களை வசப்படுத்துவது அரிதாயிருக்கிறது.
வ்ருஜினோத்தர — நான் உத்தரன் (உயர்ந்தவன்) ஆவது வ்ருஜினத்தாலேயே;
‘க்ருபண ஸார்வபௌமன்’, ‘அபராத சக்ரவர்த்தி’ என்றல்லவோ நான் பெருமையடைவது!
ஜகத்பதே! — நீர் ஸ்வாமியாய், எல்லாம் உம்முடையதன்றோ? உம் ஸொத்தைக் கள்ளர் கொண்டுபோக விடலாமோ?
செய்வினையோ மிகப் பெரிதாம் தடையின்றி தொடர்கின்றேன்
சகமிதிலே உறும் சுகங்கள் துயர் தனையே தருவனவாய்
செயிப்பதற்கும் அரியவையாய் திறம் உளதை நான் அறிவேன்
திரு வரங்கத்தை காதல் உற்று தனி இடமாய்க் கொண்டவனே
தயை என்னும் நிதியுடையாய் தரணி தனின் தனித் தலைவா
நின்னுடைய அனுபவத்தில் தடையுறவே அஞ்சுகிறேன்
நயந்து உன்னை அடியேனே நாதன் என வரித்ததனை
நற் பொருளாய்க் கொண்டு என்னை நீ தானே காத்து அருளே –
———————————————————-
நிசர்க்க நிர நிஷ்டதா தவ நிரம்ஹச ஸ்ரூயதே
ததஸ் த்ரியுக ஸ்ருஷ்ட்டிவத் பவதி ஸம்ஹ்ருதி க்ரீடிதம்
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீதோ பவான்
மதிஷ்டமிஹ யத் பவேத் கிமபி மா ஸ்ம தஜ்ஜீ ஹபத் –-18-
த்ரியுக — (கலியுகம் தவிர மற்ற) மூன்று யுகங்களில் விபவாவதாரம் செய்பவரே!
ஷாட்குண்யபூர்ணரே!;
நிரம்ஹஸ — பாபமற்றவரான;
தவ — உமக்கு;
நிஸர்க நிரநிஷ்டதா — எப்பொருளும் அநிஷ்டமாகக் கூடாத ஸ்வபாவமானது;
ஶ்ரூயதே — சுருதியில் கூறப்பட்டிருக்கிறது.
தத: — ஆகையால்;
ஸ்ருஷ்டிவத் — ஸ்ருஷ்டியைப் போல;
ஸம்ஹ்ருதி — ஸம்ஹாரமும்;
தவ — உமக்கு;
க்ரீடிதம் — விளையாட்டாக;
பவதி — இருக்கிறது;
ததாபி — அப்படியிருந்தும்;
பவாந் — நீர்;
ஶரணாகத ப்ரணய பங்க பீத — சரணாகதனுடைய உம் விஷயமான பரிவைத் திரஸ்கரிக்க பயப்படுகிறவர்
இஹ — (ஆகையால்) இவ்வுலகில்;
யத் கிமபி — எது ஒன்று;
மதிஷ்டம் — எனக்கு இஷ்டமாகுமோ;
தத் — அதை;
மாஸ்ம ஜீஹபத் — நழுவ விடக்கூடாது..
நிசர்க்க நிர நிஷ்டதா-எப்பொருளும் அநிஷ்டமாகக் கூடாத ஸ்வ பாவமானது உண்டு என்று
தவ நிரம்ஹச ஸ்ரூயதே -பாபம் அற்ற உமக்கு -என்று சுருதியில் கூறப்பட்டு இருக்கிறது –
ததஸ் த்ரியுக ஸ்ருஷ்ட்டிவத் பவதி ஸம்ஹ்ருதி க்ரீடிதம் -கலி யுகம் தவிர மற்ற மூன்று யுகங்களிலும் விபவாதாரம் செய்து அருளுபவரே
ஸ்ருஷ்டியைப் போலவே சம்ஹாரமும் உமக்கு லீலையாகவே இருக்கிறது –
ததா அபி சரணா கத ப்ரணய பங்க பீதோ பவான் -அப்படி இருந்தும் நீர் சரணாகதனுடைய உம் விஷயமான பரிவை திரஸ்கரிக்கப் பயப்படுகிறவர்
மதிஷ்டமிஹ யத் பவேத் கிமபி மா ஸ்ம தஜ்ஜீ ஹபத் -ஆகையால் இவ்வுலகத்தில் எது ஓன்று எனக்கு இஷ்டம் ஆகுமோ அதை நழுவ விடக் கூடாது
உம்முடைய திரு மேனி ரக்ஷை தானே அடியேன் இஷ்டம் -இஷ்ட பங்கம் வராதபடி உம்மை சதா சேவித்துக் கொண்டே இருக்கும் படி
உம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை நீரே ரஷித்து அருள வேணும் -என்றபடி –
இந்த ஸ்லோகத்திலும் ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே அருளிச் செய்கிறார் –
‘என் விக்ரஹத்தை ரக்ஷித்துக்கொள்ள வேண்டும் என்று நீர் ப்ரார்த்திக்கிறீர் என்று தெரிகிறது.
ஆனால் என்னுடையதை நான் ரக்ஷித்துக் கொள்ளாமல் விடுவேனா?
வராஹ நாரஸிம்ம ராமாத்யவதாரங்களில் சத்ருக்கள் என் விக்ரஹத்தை ஹிம்ஸிக்கும்படி விட்டேனா?
ஆதலால் நீர் ப்ரார்த்திப்பானேன்?’ என்று பெருமாள் சங்கை ஸூசிதமாக,
அந்த ஆக்ஷேபத்தை அழகாகப் பரிஹரிக்கிறார்.
‘உமக்கு ஸ்ருஷ்டியைப்போல, ஸம்ஹாரமும் விளையாட்டே.
தன்னுடையதைத் தான் அழிப்பானோ என்று உம் விஷயத்தில் கேட்க முடியாது.
நீர் ஸம்ஹாரம் செய்வதும் உம்முடையதைத்தானே! உமக்கு அநிஷ்டத்தை நீர் தடுப்பீர்.
விரோதிகள் உம் விக்ரஹத்தை உதைத்தாலும் அது உமக்கு அநிஷ்டமாகாது.
உம்மைப் பற்றி (நிரநிஷ்டோ நிரவத்ய:) என்று ஏகாயந சுருதி கூறுகிறது.
(நிரநிஷ்டோ நிரம்ஹஸ:) என்றும் சுருதி. ஒரு பொருள் அநிஷ்டமாவதற்கு பாபமே காரணம்;
காரணமான பாபமில்லாத முக்தனுக்கு ஒரு வஸ்துவும் அநிஷ்டமில்லை, எல்லாம் ஸுகரூபமே.
இது முக்தனுக்கு நீர் கொடுக்க வந்தது. உமக்கு இது ஸ்வபாவம்.
உலகத்தில் பயமேயில்லாத உமக்கு ஆச்ரிதனுடைய இஷ்டத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்று ஒரு பயமுண்டு.
உம்முடைய திருமேனி ரக்ஷை என் இஷ்டம் (மதிஷ்டம்). உம் திருமேனியின் லயம் எனக்கு அநிஷ்டம்.
உமக்கு ஸ்வயம் இஷ்டாநிஷ்டங்கள் இல்லாது போனாலும், ஆச்ரிதனான எனக்கு இஷ்டபங்கம் வராதபடி
உம்மை ஸதா ஸேவித்துக் கொண்டிருக்கும்படி உம் திருமேனியை ரக்ஷித்தருள வேண்டும்.
அதனால் ஆச்ரிதர்களுடைய ப்ரணயபங்கம் வந்துவிடுமோ என்கிற பயம் உமக்கும் ஏற்படாது.
இங்கும் ஆளவந்தார் ஸ்தோத்ரத்தின் வார்த்தையையே அநுஸரிக்கிறார்.
இழிவேதும் அற்றவன் நீ என்பதனால் துக்கமிலா
இயல்புடையன் என யுன்னை இயம்பிடுமே அரு மறைகள்
செழிப்பான அறு குணங்கள் நிறைந்தனவாம் உன் தனக்கு
ஸ்ருஷ்டியைப் போலே அழித்தலுமோர் திரு விளையாட்டு எனவாகும்
வழி பட்டு உன் அடி அடைந்தோர் விருப்பத்தை மறுப்பதற்கு
மனம் அஞ்சி நீ என் தன் விருப்பத்தில் நல்லவற்றை
ஒழியாமல் மேல் கொண்டு உரியதனைச் செய்வதனால்
உனை யுற்ற எனைக் காத்தே ஊக்கமுடன் அருளிடுவாய் –
———————————————-
கயாது ஸூத வாயச த்வி ரத புங்கவ திரௌபதீ
விபீஷண புஜங்கம வ்ராஜ கணாம் பரீஷாதய
பவத் பத ஸமாச்ரிதா பய விமுக்தி மா புர்யதா
லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா -19-
ரங்கநாத — ரங்கநாதனே;
யதா — எப்படி;
கயாதுஸுத — கயாதுதேவியின் புத்ரனான ப்ரஹ்லாதன்;
வாயஸ — (ஜயந்தன் என்னும்) காகம்;
த்விரதபுங்கவ — கஜேந்த்ரன், த்ரௌபதி, விபீஷணன்;
புஜங்கம — ஸுமுகன் என்னும் நாகம்;
வ்ரஜகண –கோப ஜனங்கள்;
அம்பரீஷாதய — அம்பரீஷன் முதலியவர்கள்;
பவத்பதஸ்மாஶ்ரிதா — உம் திருவடிகளை நன்றாக ஆச்ரயித்து;
பயவிமுக்திம் — பயத்திலிருந்து விமோசனத்தை;
ஆபு — அடைந்தார்களோ;
ததா — அப்படியே;
வயம் — நாங்களும்;
ஸபதி — உடனே;
த்வயா — உம்மாலே;
லபேமஹி — (பய விமோசனத்தை) அடைவோமாக.
கயாது ஸூத வாயச த்வி ரத புங்கவ திரௌபதீ -கயாது புத்திரனான ப்ரஹ்லாதன் -ஜெயந்தன் என்னும் காகம் -கஜேந்திரன் -திரௌபதி
விபீஷண புஜங்கம வ்ராஜ கணாம் பரீஷாதய-விபீஷணன் -ஸூ முகன் என்னும் நாகம் -கோப ஜனங்கள் -அம்பரீஷன் முதலானவர்கள்
பவத் பத ஸமாச்ரிதா பய விமுக்தி மா புர்யதா-உம் திருவடிகளை நன்றாக ஆஸ்ரயித்து -பயத்தில் இருந்து விமோசனத்தை -அடைந்தார்களோ
லபே மஹி ததா வயம் சபதி ரங்க நாத த்வயா -அப்படியே நாங்களும் உடனே உம்மாலே பாபா விமோசனத்தை அடைவோமாக
பரம ஹம்சர்கள் பலர் இங்கே கதற உதவாமல் இருப்பது என் -பயக்ருத் பய நாசனரான நீரே எங்கள் பயத்தை போக்கி அருள வேணும் –
ஸ்ரீ ரங்கம் ஓர் இடமும் ஸ்ரீ ரெங்க நாதன் ஓர் இடமும் இருக்கலாமோ –
பெருமாள் தன் அபய ப்ரதான வ்ரதத்தை உத்கோஷித்ததைப் பேசினார்.
உத்கோஷணம் இருக்கட்டும். கோடிக்கணக்கான உம் அனுஷ்டானங்களை நீர் அனுஸரிக்க வேண்டாவோ என்கிறார்.
கயாதுஸுத — முதலில் அஸுரசிசுவான ப்ரஹ்லாதாழ்வான்.
கயாது என்ற தாயின் பெயரையிட்டு அவரையே காயாதவர் என்பர்.
அவர் ஸாதுக்களில் தலைவர் வைஷ்ணவர்களுக்கு முதலானவர்.
பகவானுடைய அகடிதகடனாஶக்தியை வெளிப்படுத்துகிறது என்பதற்காக ந்ருஸிம்ஹாவதாரத்தை எடுக்கிறார்.
மஹாஸுரன் வீட்டுத்தூண்தான் வேண்டுமோ?
இங்கோர் மண்டபத்தில் ஆயிரம் தூண்களில் ஒன்றும் நீர் அவதரிக்க உதவாததோ?
அஸுரனின் சிறுவனுக்காகத்தான் அவதரிக்க வேண்டுமோ?
தலை நரைத்த கிழவனானால் அடியேனுக்காக ஆகாதோ என்று திருவுள்ளம்.
வாயஸ — ஜகன்மாதாவான பிராட்டியிடம் அபசாரப்பட்ட இந்த்ர புத்ரனான ஜயந்தன்.
இந்த்ரன் ‘ஹவிர்புக்’; அவன் பிள்ளை ‘பலிபுக்’ (பலியைச் சாப்பிடும் காக) ரூபத்துடன் வந்தான்.
நீர் கிருபை செய்வதற்கு ஒரு வாயஸமாயே இருக்க வேண்டுமோ? (பரம) ஹம்ஸர்கள் இத்தனை பேர் கதறுகிறார்களே?
த்விரத புங்கவ — கஜேந்த்ரன் ஒரு நீர்ப்புழுகல்ல,
(பரமாபதம் ஆபந்ந:) என்று ஆர்த்தியின் காஷ்டையில் இருந்தவன்.
‘நீர் உண்டு; வேக ஸம்ரம்பத்திற்கு கருடனுண்டு; கூர் நேமியுண்டு; ரக்ஷிக்க நானுண்டு.
அத்திகிரியரசே! நீர் எல்லா ஜந்துக்களுக்கும் பொதுவாயிருக்க, யானையென்றும் மனிதன் என்றும் பேதம் கூடுமோ?’ என்று பேரருளாளனைக் கேட்டார்.
(ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி …. பண்டிதா: ஸமதர்ஶிந:) என்று பாடவில்லையோ?
‘விபஶ்சித்’தான நீர் பண்டிதராய், ப்ராஹ்மணனான உம் வேதாந்தாசிரியனையும் ஒரு பசுவையும் ஒரு யானையையும் ஸமமாகப் பார்க்கவேண்டாமோ?
புங்கவ என்று ச்ரேஷ்டத்தைச் சொல்லும் பதம் மாடு ஜாதியையும் சொல்லுமாதலால் அதையும் எடுப்பது போல் அமைந்திருக்கிறது.
த்ரௌபல — ‘நிர்தீஜ்ஜர் ஸபை நடுவே லஜ்ஜையைத் துறந்து சரணாகதி சாஸ்த்ரத்தை மூதலிப்பித்துப் பெற்ற மஹாபாக்யவதி’
என்று ஸ்ரீலோக தேசிகன் புகழ்ந்தார். ரங்கமத்யத்தில் எங்கள் உயிரான உம் திருமேனியின் நித்யஸேவையைத் தந்தருள வேணும்.
விபீஷண — பாரதத்திற்கு த்ரௌபதியைப் போல ராமாயணத்திற்கு விபீஷணன்.
புஜங்கம — காளியன் என்னும் ஸர்ப்பம், உம் திருவடி அவன் தலை மேலேயிருந்த ஸம்பந்தத்தினால் அவனுக்கும்
உம் பத ஸமாஶ்ரயணம் உண்டு. அவன் பத்னிகள் சரணம் புகுந்தார்கள்.
‘ஸுமுகன்’ என்னும் நாகம் என்றும் சொல்வார்கள். ‘ஒருக்கால் பகவான் பெரிய திருவடிமேல் ஏறியருளி ஸஞ்சரிக்கும்போது
பெரிய திருவடி பசியால் பூமியில் ஸஞ்சரித்த ‘ஸுமுகன்’ என்கிற ஸர்ப்பத்தைப் பக்ஷிக்கவர,
ஸுமுகன் பயாக்ரந்தனாய் பெருமாளை சரணம் புக, அவர் வைந்தேயன் ஸர்ப்பத்தை புஜிக்கவொட்டாமல் மேலே இழுக்க,
அதற்குள் ஸுமுகன் புற்றில் நுழைந்து விட்டான்’ என்று பெரியார் வ்யாக்யானத்திலுள்ளது.
‘புஜங்கம விஹங்கம’ என்று மேலே 25வது சுலோகத்தில் பேசுகிறது வேறு.
இந்த ஸுமுக வ்ருத்தாந்தத்தில் ஒருவாறு இரண்டும் இங்கு சேரும்.
வ்ரஜ கண — கோகுல வாஸிகளான ஆண் பெண் அடங்கலும் (வ்ரஜ ஜநார்த்திஹந்) என்று கோபிகா கீதைக்கு “வ்ரஜ ஜன” என்ற பாடம் பொருந்தும்.
அங்கு கோபர்கள் ஐந்து லக்ஷம்; இங்கு கோடிக்கணக்காக எல்லா ஜாதிகளான ஆண் பெண்கள் ப்ரார்த்திக்கின்றனர்.
அம்பரீஷ — ‘அம்பரீஷ சக்கரவர்த்தியினிடம் துர்வாஸ மஹரிஷி த்வாதசியன்று பிக்ஷைக்கு வருகிறோம் என்று சொல்லி
ஸ்நானத்திற்குச் சென்று விளம்பித்து வர, பாரணாகாலம் கழிவதைக் கண்டு, ஜலபாரணம் பண்ணி
அம்பரீஷன் துர்வாஸருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். துர்வாஸர் வந்து ஜலபாரணம் பண்ணின ராஜாவைப் பார்த்துக் கோபித்து
அவரை ஸம்ஹரிக்கத் தொடங்க, ஸுதர்னாழ்வானும் பகவதாக்ஞையால் துர்வாஸஸ்ஸைத் துரத்தி
ராஜாவின் காலிலே விழும்படி செய்து அவ்வரசனைக் கொண்டே ரக்ஷித்தார்.
பக்தனுக்கு வந்த பயம் எதிரியான மஹரிஷி பேரிலேயே திரும்பி, அவரை புவனத்ரயமும் ஓட வைத்தது.
ரிஷி பகவானைச் சரணம்புக, ‘நாபாக புத்ரனான அம்பரீஷனையே சரணமடையும்; நான் பக்த பாரதீனன்.
அஸ்வதந்த்ரன்போல இருக்கிறேன்’ என்று நீர் அவரைத் திருப்பி விட்டீர்.
‘பக்த பராதீனன்’ என்பதை எங்கள் ஆசை விஷயத்திலும் உண்மையாக்க வேண்டும்.
பய விமுக்திம் ஆபு — ஸம்ஸார பயத்திலிருந்து விமோசனம் என்னும் மோக்ஷத்தை இப்போது ப்ரார்த்திக்கவில்லை.
எங்கள் உயிரான உம்மைப் பற்றிய பயத்தின் நிச்சேஷ நிவ்ருத்தியையே கோருகிறோம்.
பயநாஶன: என்கிறபடி பயத்தைச் செய்வித்த நீரே எங்கள் பயத்தைப் போக்க வேண்டும்.
ஸபதி — உடனே பயம் நீங்கவேண்டும்.
(த்ருடி யுகாயதே த்வாம் அபஶ்யதம்) என்று கோபீஜனங்களின் விரஹதாகம்(க்ஷணம் யுக ஶதம் இவ யாஸாம் யேந விநா அபவத்) என்றார் சுகர்.
அப்படியே உம் விரஹம் எங்களுக்கு துஸ்ஸஹமாயிருக்கிறது.
ரங்கநாத ரங்கம் ஓரிடம் நாதன் ஓரிடமாயிருப்பது நீங்கி, ரங்கத்தின் நாதன் ரங்கத்திலேயே இருக்க வேண்டும் என்று
அடுத்த சுலோகத்தில் ப்ரார்த்திப்பது இங்கே அழகாக வ்யஞ்ஜிக்கப் படுகிறது.
அரக்கர் மகன் பிரகலாதன் அக்காக்கள் முதலையிடம்
அகப்பட்ட மதக் களிறு ஐ மன்னர் அரும் துணைவி
அரக்கர் கோன் விபீடணன் ஆய்ச்சியர்கள் காளிங்கன்
அம்பரீஷன் முதலானோர் உன் தனது இணை அடியைச்
சரண் அடைந்து பயம் தன்னைத் தவிர்த்தவராய் ஆயினரே
திருவரங்க நாயகனே நாங்களுமே அவ்வாறே
விரைவாக உன் தன்னால் அச்சத்தின் பிடி இருந்து
விடுதலையை அடைந்திடவே வழி காட்டி அருள்வாயே –
——————————————————————–
பயம் சமய ரங்கதாம்ந்ய அநிதர அபிலாஷ ஸ்ப்ருசாம்
ஸ்ரியம் பஹுளய ப்ரபோ ஸ்ரித விபக்ஷ முன்மூலய
ஸ்வயம் சமுதிதம் வபுஸ்தவ நிசா மயந்த சதா
வயம் த்ரி தச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி –-20-
ப்ரபோ — ப்ரபுவே;
ரங்கதாம்நி — அரங்கமாநகரில்;
அநிதரபிலாஷ ஸ்புருஶாம் — மற்றொன்றில் ஆசையைத் தொடாத பரமைகாந்திகளுடைய;
பயம் — பயத்தை;
ஶமய – தீரும்படி செய்யவேணும்;
ஶ்ரிதவிபக்ஷம் — ஆச்ரிதருக்கு விரோதிகளை;
உந்மூலய – வேரறுக்க வேண்டும்;
(புவி) முகுந்த – இப்புவியிலுள்ளபோதே; முக்திச்சுவையை அளிப்பவரே;
வயம் — நாங்கள்;
தவ – உம்முடைய;
ஸ்வயம் ஸமுதிதம் — ஸ்வயம் வ்யக்தமான;
வபு — திருமேனியை;
(ரங்கதாம்நி — அரங்கமாநகரிலேயே)
ஸதா — எப்பொழுதும்;
நிஶாமயந்த – ஸாக்ஷாத்தாக அனுபவித்துக் கொண்டு;
புவி — பூலோகத்தில்;
த்ரிதஶநிர்வ்ருதிம் — நித்யஸூரிகளின் அனந்தத்தை ;
விந்தேமஹி — அடைவோமாக.
பயம் சமய ரங்கதாம்ந்ய அநிதர அபிலாஷ ஸ்ப்ருசாம் –-மற்று ஒன்றில் ஆசையைத் தொடாத பரமை காந்திகள் யுடைய பயத்தை தீரும் படி செய்ய வேணும் –
ஸ்ரியம் பஹுளய ப்ரபோ ஸ்ரித விபக்ஷ முன்மூலய-ஆஸ்ரிதர்களுடைய விரோதிகளை வேர் அறுக்க வேண்டும் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ பெறுக வேண்டும் என்று தானே -எங்கு வசிப்பவர்களும் ஆசாசிப்பது –
ஸ்வயம் சமுதிதம் வபுஸ்தவ நிசா மயந்த சதா -நாங்கள் உம்முடைய ஸ்வயம் வ்யக்தமான திரு மேனியை ஸ்ரீ -ரங்க நகரிலேயே எப்பொழுதும்
நிசா மயந்த -என்றோ அரங்கத்தில் அரங்கன் இருந்தார் என்று கேட்டு மட்டும் போக செய்யாமல் நித்யம் சேவை சாதித்து அருள வேணும்
வயம் த்ரி தச நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி –சாஷாத்தாக அனுபவித்து பூ லோகத்திலேயே
நித்ய ஸூரிகள் யுடைய அனுபவத்தை அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் –
இதுதான் கோரிய பலம். மீமாம்ஸையின் இருபதாவது அத்தியாயத்தில் எல்லையற்ற மோக்ஷானந்தமான
நித்ய ஸூரிகளின் ஆனந்தத்தைக் காட்டியுள்ளது.
இவரும் இருபதாவது சுலோகத்தில் மோக்ஷச் சுவை போன்ற இச்சுவைக்கு அபாயமில்லாமல் நித்யாநுபவத்தை ப்ரார்த்திக்கிறார்.
இந்த பர ஸமர்ப்பணமே இந்த அபீதி ஸ்தவத்தின் விஷயம்.
இதை ‘இதி பரஸமர்ப்பித:’ என்று அடுத்த சுலோகத்தில் அநுவதிப்பதாலும் இது தெரிகிறது.
பயம் ஶமய –
கீழ் ஒவ்வொரு சுலோகத்திலும் ‘பயம்’ ‘பீதி’ என்று பயத்தையே ப்ரஸ்தாவித்தார்.
இதில் அந்த பயத்தின் சாந்தியைச் செய்யும் என்கிறார்.
அநிதர அபிலாஷ ஸ்ப்ருஶாம் —
மற்றொரு பொருளின் ஆசையைக்கூடத் தொடமாட்டார்கள்; வஸ்துவைத் தொடுவது எங்கே?
ஶ்ரியம் பஹுளய —
‘ஸ்ரீரங்கஸ்ரீ பெருகவேண்டும்’ என்றல்லவோ எங்கு வஸிப்பவர்களும் ஆசாஸிப்பது!
ஸ்ரீசங்கரரும் ததநுஸாரிகளும் (இதம் ஸ்ரீரங்கம்) என்று தினமும் த்யானம் செய்கிறார்கள்.
ப்ரபோ —
இந்த ப்ரார்த்தனையை நிறைவேற்ற நீர் ஸமர்த்தரல்லவோ!
ஶ்ரித விபக்ஷம் உந்மூலய –
(ந மே த்வேஷ்யோ அஸ்தி) என்றபடி உமக்கு விபக்ஷமில்லாவிடினும், எங்கள் விபக்ஷத்தை இனிக் கிளம்பாதபடி வேருடன் பிடுங்கி எறியவேணும்.
ஸ்வயம் ஸமுதிதம் வபு —
(யத் யத் தியா த உருகாய விபாவயந்தி தத் தத் வபு : ப்ரணயஸே மதநுக்ரஹாய ) என்ற பாகவத வசனத்தையும்,
‘தமர் உகந்த தெவ்வுருவம் தானாய்’ என்பதையும், நினைக்கிறார்.
இதனால் பராசர சுகாதிகள் ஸம்ப்ரமாயமும் இதுவே என்று காட்டப்படுகிறது.
நிஶாமயந்த: ஸதா —
(ஸதா பஶ்யந்தி ஸூரய) என்பதுபோல அடியோங்களும் உம்மை அரங்கத்தில் ஸதா ஸேவித்து
‘ஜிதம்தே’, ‘பல்லாண்டு’ என்று பாடிக் கொண்டிருக்க வேண்டும்.
‘நிஸமயந்த’ என்றால் கேட்பதைச் சொல்லும்.
“அரங்கத்தில் அரங்கன் எழுந்தருளியிருக்கிறார்” என்று கதை கேட்பது போறாது.
“நிஶாமயந்த” என்றால் பார்ப்பது. நாங்கள் நேரில் பார்த்து ஸேவிக்கும்படி நீர் அநுக்ரஹிக்க வேண்டும்.
த்ரிதஶ நிர்வ்ருதிம் — (இந்த்ர லோகத்தியதான அச் சுவையை) பரமபத சுவையை
புவிமுகுந்த – இங்கேயே எல்லையற்ற வைகுண்ட ஸுகத்தைக் கொடுக்குமவர்.
விந்தே மஹி — அடைவோமாக.
இதை ஆத்மநே பதமாகப் பிரயோகித்திருப்பதால், பெருமாளுக்கு இதனால் வரும் ப்ரயோஜனத்தில் விருப்பமில்லாவிட்டாலும்
அவர் அடியார்களின் ப்ரயோஜனத்தைக் கருதி அவர் செய்யவேண்டும் என்பது ஸூசிப்பிக்கப் படுகிறது.
நினை யன்றி வேறு எதையும் நாடாத அடியார்கள்
தம் நெஞ்சில் தோன்றி யுள்ள தடையாகும் பேர் அச்சம்
தனை ஒழித்து நீ அருள்வாய் திருவரங்க நகரத்தில்
திரு வைணவ செல்வத்தை செழிப்பு அடையச் செய்து அருள்வாய்
உனை வணங்கும் அடியார்க்கு ஏற்பட்ட பகை தன்னை
வேரோடு களைந்து அருள்வாய் தானேயாய் உதித்ததுவாம்
உனதுருவை எப்பொழுதும் உடன் இருந்து வணங்கியராய்
உயர் தேவர் இன்பத்தை உற்றிடுவோம் இங்கேயே –
——————————————————–
ஸ்ரிய ப்ரிப்ருடே த்வயி ஸ்ரித ஜநஸ்ய சம்ரக்ஷகே
சதத்புத குணோ ததா விதி சமர்ப்பிதோ அயம் பர
ப்ரதி க்ஷண மத பரம் ப்ரதய ரங்க தாமா திஷூ
ப்ரபுத்வம நு பாதிகம் ப்ரதித ஹேதி பிர்ஹேதிபி–21-
ஶ்ரித ஜநஸ்ய — ஆச்ரித ஜனங்களுடைய;
ஸம் ரக்ஷகே — நன்றாய் ரக்ஷிப்பவனாயும்;
ஸத் — ஸத்யமும் (நல்லதும்);
அத்புத – ஆச்சர்யமுமான;
குணோததௌ — குணக் கடலான;
ஶ்ரிய பரிப்ருடே — ஶ்ரிய:பதியான
த்வயி — உம்மிடம்;
அயம் பர – இந்த (உம் திருமேனியின் ரக்ஷண) பரம்;
இதி — இப்படி;
ஸமர்ப்பித – ஸமர்ப்பிக்கப் பட்டது;
அத:பரம் — இது முதல்;
ப்ரதி க்ஷணம் — ஒவ்வொரு க்ஷணமும்;
ப்ரதித – மேல் மேல் கிளம்புகிற;
ஹேதிபி — ஜ்வாலைகளை உடைய;
ஹேதிபி — திருவாயுதங்களால்;
அநுபாதிகம் — ஸ்வயம் ஸித்தமான;
ப்ரபுத்வம் — வல்லமையை ;
ரங்கதாமாதிமத – ஸ்ரீரங்கம் முதலான திவ்ய தேசங்களில் ;
ப்ரதய – ப்ரகாசப்படுத்தும்.
ஸ்ரிய ப்ரிப்ருடே த்வயி –ஸ்ரீ யபதியான தேவரீர் இடம்
ஸ்ரித ஜநஸ்ய சம்ரக்ஷகே-ஆஸ்ரித ஜனங்களை நன்றாக ரஷித்து அருளுபவனாயும் -உபாய திசையிலும் போக திசையிலும் மிதுனம் உத்தேச்யம்
ஞானம் கனிந்த நலம் கொண்டு லஷ்மயா ஸஹ
சதத்புத குணோ ததா விதி சமர்ப்பிதோ அயம் பர-ஆச்சர்யமான குணக் கடலான தேவரீர் இடமே-
இந்த உம் திவ்விய மேனி ரக்ஷணம் பரம் சமர்ப்பிக்கப் பட்டது -இது முதல்
ப்ரதி க்ஷண மத பரம் ப்ரதய ரங்க தாமா திஷூ-ஒவ் ஒரு க்ஷணமும் மேல் மேல் கிளம்புகிற
ப்ரபுத்வம நு பாதிகம் ப்ரதித ஹேதி பிர்ஹேதிபி-ஜ்வாலைகளை உடைய திவ்ய ஆயுதங்களால் -ஸ்வயம் ஸித்தமான வல்லமையை
ஸ்ரீ ரெங்கம் முதலான திவ்ய தேசங்களில் ப்ரகாசப்படுத்தி அருள வேண்டும் –
இதில் ஆழ்வார், எம்பெருமானார், வடக்குத் திருவீதிப்பிள்ளை லோக தேசிகன் எல்லாரும்
ஏககண்டமாக “உபாய தசையில் ஒரு மிதுனமே உத்தேச்யம்” என்று அறுதியிட்டதை அநுஸரித்து,
‘திருமேனி ரக்ஷணம்’ என்னும் மஹோரதத்தை ஸாதித்துக் கொடுக்கும் பரம் ஶ்ரிய:பதியான உம்மிடமே வைக்கப்படுகிறது’ என்கிறார்.
முதல் சுலோகத்தில் रमासखमधीमहे என்றார்.
இரண்டாவதில் श्रियाध्युषित वक्षस என்று ஆழ்வார் சரணாகதி பண்ணின
‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா’ என்னும் பாசுரத்தை ஸூசிப்பித்தார்.
“மிதுநாயநர்” என்றல்லவோ இவர்களுக்கு ப்ரஸித்தி!
ஶ்ரிய: பரப்ருடே — ‘பரிப்ருடம்’ என்பது பதியையும் பெருமையையும் சொல்லும்.
(ப்ரஹ்ம பரிப்ருடம் ஸர்வத:) என்பர். எல்லையற்ற பெருமையுள்ளது என்பதுதான் ப்ரஹ்ம லக்ஷணம்.
‘இந்த ப்ரஹ்மத்வமும் ஸ்ரீயின் அதிகமான கடாக்ஷங்கள் விழுவதால் கிடைப்பது’ என்றார் பட்டர்.
(அபாங்கா பூயாம்ஸோயதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்) ‘ஶ்ரிய’ என்று ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு
ஸ்ரீயிடமிருந்து ‘பரிப்ருடத்வம்’ என்றும் ‘ப்ரஹ்மத்வம்’ கிடைத்தது.
ஸம்ரக்ஷகே — லக்ஷ்மீயுடன் சேர்ந்தே ஸஹ ரக்ஷகனான உம்மிடம், ஸர்வ ஸித்தாந்தங்களும் இதை ஏக ரூபமாக உத்கோஷிக்கின்றன.
“ஞானங்கனிந்த நலங்கொண்டு நாடோறும் நைபவர்க்கு வானங்கொடுப்பது மாதவன்” என்ற அந்தாதிப் பாசுரத்தின் உரையில்
ஸ்ரீ பிள்ளை லோகஞ்ஜீயரும்
‘லக்ஷ்ம்யா ஸஹ’ என்ற சுலோகத்தை உதாஹரித்து, ஸர்வேச்வரன் சேதனரைக் கைக் கொள்ளும் போது
பெரிய பிராட்டியாரோடே கூடியிருந்தே கைக்கொள்வது என்று ஸகல வேதாந்த ஸித்தமாகையாலே
அவளுக்கு வல்லபனான ஸர்வேச்வரன்’ என்று ஸாதித்தார்.
அத:பரம் — இது முதல்; இந்த க்ஷணம் முதல் என்றபடி.
ரங்க தாமாதிஷு — எல்லா திவ்ய தேசங்களும் இப்படியே ரக்ஷிக்கப்பட வேணும்.
திருமகளின் மணாளன் நீ சரண் அடைந்த அடியார்க்கு
நல் காப்பை அளிக்கின்றாய் நீச குணம் அற்றவனாய்
அரும் நல்ல திருக் குணங்கள் அனைத்துக்கும் கடலாவாய்
அதனாலே உன்னிடத்தே அர்ப்பணித்தோம் எம் பொறுப்பை
ஒரு செயலே உனக்கு உளது -ஓளி மயமாய் விளங்கும் உன்
ஒப்பற்ற ஆயுதங்கள் உதவியுடன் உனக்கு என்றே
உரித்தான ஆட்சிமையை கணம்தோறும் அரங்கம் போல்
உனக்குற்றத் தலங்களிலே ஊன்றி அருள் பெருமானே –
———————————————————————-
கலி ப்ரணித லக்ஷணை கலித சாக்ய லோகாயதை
துருஷ்கா யவநாதிபிர் ஜகதி ஜ்ரும்ப மாணம் பயம்
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி பிரசபமாயுதை பஞ்சபி
ஷிதி த்ரி தச ரஷகை ஷபய ரங்க நாத ஷணாத்–22–
ரங்கநாத – ரங்கநாதனே!
கலி ப்ரணிதி லக்ஷணை — கலிக்குப் பிரதிநிதி போன்றவர்களால்;
கலித ஶாக்ய லோகாயதை — சாக்கியர், நாஸ்திகர் இவர்கள் கலந்த;
துருஷ்க யவநாதிபி — துருஷ்கர், யவனர் என்ற ஜாதி விசேஷங்களால்,;
ஜகதி — உலகத்தில்;
ஜ்ரும்பமாணம் — பெருகும்;
பயம் — பயத்தை;
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி — உயர்ந்த தங்கள் சக்தியை உடையவையும்;
க்ஷிதி த்ரிதஶ ரக்ஷகை — பூஸுரரை ரக்ஷிப்பவையுமான;
பஞ்சபி ஆயுதை — ஐந்து ஆயுதங்களால்;
க்ஷணாத் — ஓர் க்ஷணத்தில்;
ப்ரஸபம் — பலாத்காரமாக;
க்ஷபய – நீக்க வேணும்..
கலி ப்ரணித லக்ஷணை கலித சாக்ய லோகாயதை--கலிக்கு பிரதிநிதி போன்றவர்களால் -சாக்கியர் நாஸ்திகர் இவர்கள் கலந்த
துருஷ்கா யவநாதிபிர் ஜகதி ஜ்ரும்ப மாணம் பயம் -துருஷ்கர் யவனர் என்ற ஜாதி விசேஷங்களால் உலகில் பெருகும் பயத்தை
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி பிரசபமாயுதை பஞ்சபி -உயர்ந்த தங்கள் சக்தியை யுடையவையாயும் – பஞ்ச ஆயுதங்களால்
ஷிதி த்ரி தச ரஷகை ஷபய ரங்க நாத ஷணாத்-பூ ஸூரர் ரக்ஷிப்பவையுமான ஒரு க்ஷணத்தில் பலாத்காரமாக நீக்கி அருள வேணும் –
எங்கள் பிரபத்தி ஆர்த்த பிரபத்தி -ஒரு க்ஷணம் விளம்பத்தையும் சஹியோம் என்றவாறு
கலிப்ரணிதி லக்ஷணை —
ரங்கராஜனுக்குப் பயமுண்டாக்குகிறவர் யார்?
வேத விப்ரரையும், ஆலயங்களில் திவ்யமங்கள விக்ரஹங்களையும் ஸஹியாத கலி மஹாராஜனுக்குப் பிரதிநிதிகளான சிலர்.
ஜ்ரும்பமாணம் பயம் —
(ஸ்ரீரங்க ஸ்ரீஶ்ச வர்த்ததாம்) என்ற எங்கள் கோரிக்கைக்கு நேர் விரோதமாக
அங்கேயே பயம் வ்ருத்தியடைந்து கொண்டேயிருப்பது உசிதமோ?
க்ஷிதி த்ரிதா —
(பகவத் பக்தி மிகுந்த) ப்ராஹ்மணர்கள். பஞ்சபி: ஆயுதை — சங்கம், சக்கரம், கதை, வில், கத்தி என்ற ஐந்து திவ்யாயுதங்கள்.
பாஞ்சஜன்யம், ஸுதர்ஶநம், கௌமோதகி, ஶார்ங்கம், நந்தகம் என்று முறையே அவைகளின் பெயர்கள்.
க்ஷணாத் —
எங்கள் ப்ரபத்தி, ஆர்த்தப்பிரபத்தி, பலம் உடனே கிடைக்கவேணும். ஒரு க்ஷண விளம்பத்தையும் ஸஹியோம்.
கொடும் கலியின் ஏவலர் போல் கிளர்ந்து எழுந்த சாக்கியர்கள்
கடவுள் தனை மறுக்கின்ற சார்வாகர் இவர்களுக்கு
உடன் பிறப்பாம் துருக்க யவனர் ஆகியரால் விளைகின்ற
ஊறுகளால் மறையவர்கள் உற்ற பெறும் அச்சத்தை
திடம் கொண்ட ஐவகையாம் திரு வாயுத கணம் கொண்டு
திருவரங்கத்தில் எழுந்து அருளி திகழ்ந்திடும் எம்பெருமானே
சடக்கென்று ஒழித்திட்டு சத்துக்கள் தமைக் காப்பாய்
தீங்கு ஒன்றும் விளையாமல் துதித்து உன்னை வணங்கிடவே –
———————————————————
திதி ப்ரபவதே ஹபித் தஹந சோமா ஸூ ர்யாத்மகம்
தம ப்ரமதநம் ப்ரபோ சமிதி தாஸ்த்ர ப்ருந்தம் ஸ்வத
ஸ்வ வ்ருத்தி வச வர்த்தித த்ரிதச வ்ருத்தி சக்ரம் புந
ப்ரவர்த்தயது தாம்நி தே மஹதி தர்ம சக்ர ஸ்திதம்–23-
ப்ரபோ — ப்ரபுவே!
திதி ப்ரபவதே ஹபித் — திதியின் ஸந்ததிகளான அசுரர்கள் தேஹங்களைப் பிளப்பதும்;
தஹந ஸோம ஸூர்யாத்மகம் — அக்னி, சந்த்ரன், சூர்யன் முதலியவற்றைத் தன்னுள்ளடக்கிக் கொண்டு;
ஸ்வத — தானாகவே;
ஸமுதித அஸ்த்ர ப்ருந்தம் — எல்லா அஸ்திரங்களின் ஸமூஹமும் தன்னிடமிருந்து வெளிப்படும் மஹிமையை உடையதும்;
தம: ப்ரமதநம் — தமோ குணத்தை (உள்ளிருட்டை)ப் போக்குவதும்;
ஸ்வ வ்ருத்தி வஶ வ்ருத்தித த்ரிதஶ வ்ருத்தி — தேவர்கள் வ்யாபாரமெல்லாம் தன் வசமாயுள்ளதுமான;
தே சக்ரம் — உம்முடைய சக்ரம்;
தே — உம்முடைய;
மஹதி தாமநி — உயர்ந்த இடமாகிய கோயிலில்;
புந: — மறுபடியும்;
தர்ம சக்ர ஸ்திதிம் — தர்மம் என்னும் உம்முடைய ஆக்ஞா சக்ரத்தின் பரிவ்ருத்தியை;
ப்ரவர்த்தயது — நடத்தி வைக்க வேணும்.
திதி ப்ரபவதே ஹபித்-திதியின் சந்ததிகளான அசுரர்கள் தேஹங்களைப் பிறப்பதும்
தஹந சோமா ஸூ ர்யாத்மகம்-அக்னி சந்திரன் ஸூர்யன் முதலியவற்றை தன்னுள்ளே அடக்கிக் கொண்டு
சமிதித அஸ்த்ர ப்ருந்தம் ஸ்வத -தானாகவே எல்லா அஸ்திரங்கள் சமூகமும் தன்னிடம் இருந்து வெளிப்படும் மஹிமையை யுடையதும்
தம ப்ரமதநம் ப்ரபோ -தமஸ் குணத்தை -உள் இருட்டைப் போக்குவதும் -பிரபுவே –
ஸ்வ வ்ருத்தி வச வர்த்தித த்ரிதச வ்ருத்தி -தேவர்கள் வியாபாரம் எல்லாமே தன் வசமாய் யுள்ளதுமான
சக்ரம் புந -உம்முடைய திருச் சக்கரத் ஆழ்வான் மறுபடியும்
ப்ரவர்த்தயது தாம்நி தே மஹதி தர்ம சக்ர ஸ்திதம்-தர்மம் என்னும் உம்முடைய ஆஞ்ஞா சக்ரத்தின் பரி வ்ருத்தியை நடத்தி வைத்து அருள வேணும்
தேவரீர் உடைய ரக்ஷண சங்கல்பம் தத்துவமே -ஸ்ரீ ஸூ தர்சனம் -சங்கல்ப ஸூர்யோதத்தில் ஸ்ரீ விஷ்ணுவின்
சன்னாஹமும் சங்கல்பமும் முறையே பெரிய திருவடி ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் என்று பாஞ்சராத்ர ஆகமங்களில் பிரசித்தம் என்று அருளிச் செய்து உள்ளார்
இந்த ஸ்ரீ ஸூதர்சனமே ஷோடச திவ்ய ஆயுதங்கள் -சங்கல்ப ஏவ பவதோ நிபுண ஸஹாய -ஸ்ரீ வரதராஜ பஞ்சசம் –
ஸூதர்சன மஹா ஜ்வாலா கோடி ஸூ ர்ய ஸமப்ரப /-சோமவத் ப்ரிய தர்சன /
மீண்டும் உம்முடைய ஆஞ்ஜை யான தர்ம சக்கரம் நடை பெற வேணும் என்றதாயிற்று –
ஸ்ரீகாந்தனிடம் ப்ரபத்தியைச் செய்து
இப்போது பஞ்சாயுதங்களின் உயர்ந்த சக்தியைக் கொண்டு எதிரிகளை அடக்கி ரக்ஷிக்க வேண்டும் என்கிறீர்;
ஆயுதங்களின் ஸஹாயமில்லாமல் ஶ்ரிய:பதியால் ரக்ஷிக்க முடியாதோ என்று சங்கை வர அதைப் பரிஹரிக்கிறார்.
நாங்கள் செய்யும் ப்ரபத்திக்கு தேவரீர் தத் க்ஷணமே எங்கள் பயத்தை நீக்கி எங்களுக்கு அபயம் அளிக்க ஸங்கல்பிக்க வேணும்.
தேவரீர் ரக்ஷண ஸங்கல்பம் என்னும் தத்வமே ஸ்ரீஸுதர்ஶநம் என்னும் சக்ரம்.
‘விஷ்ணுவின் ஸந்நாஹமும் ஸங்கல்பமும் முறையே பக்ஷீஸ்வரனும் ஸுதர்ஶனமும் என்று பாஞ்சராத்ர ஆகமங்களில் ப்ரஸித்தம்’ என்று
ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ஸாதித்தார்.
ஆகையால் ஸுதர்ஶனம் என்பது ஈச்வர ஸங்கல்பம்;
தர்மமென்பதும் ஈஸ்வரனுடைய ஆக்ஞாசக்ரமான ஶ்ருதி ஸ்ம்ருதிகள்.
ஸுதர்ஶனமாகிய உமது சக்ரம் ஆக்ஞையான தர்ம சக்ரத்தை சரியாக சுழன்று சுழன்று வரும்படி செய்ய வேணும்.
இந்த ஸுதர்ஶனமே பதினாறு (ஷோடஶ) ஆயுத ரூபமாகவும் இருக்கிறார் என்பது ஷோடஶாயுத ஸ்தோத்ரத்தில் ஸ்வாமியால் காட்டப் பட்டது.
தம் ஸங்கல்பத்தின் அம்ஶங்களான பதினாறு ஆயுதங்களோடு கூடின ஆயுதேஶ்வரரான
பரம புமான் உங்களை ரக்ஷிக்கட்டும்’ என்று முதல் ஸ்லோகம்.
‘எல்லா அஸ்த்ரங்களும் எந்த ஸுதர்ஶனத்திடமிருந்து கிளம்புகிறதோ அந்த ஷோடஶாயுதமயரான
ஸுதர்ஶனம் நம்மை ரக்ஷிக்கட்டும் என்று பதினேழாவது சுலோகம்.
இப்படி எல்லா ஆயுதங்களும் ஸுதர்ஶனத்தின் ரூபங்களாகையாலும்,
ஸுதர்ஶனமும் உம்முடைய ஸங்கல்பமானதாலும்,
‘ஆயுதங்கள் உமக்கு ஸஹாயம்’ என்றதுவும் ‘உம்முடைய ரக்ஷண ஸங்கல்பமே உமக்கு ஸஹாயம்,
உம்மைவிட வேறான ஒன்றை நாங்கள் உபாயமாக வேண்டவில்லை’ என்று சொன்னதாகும்.
(ஸங்கல்ப ஏவ பவதோ நிபுண: ஸஹாய) என்று வரதராஜ பஞ்சாசத்தில் சொன்னதும் இதை விளக்குகிறது.
திதி ப்ரபவ தேஹபித் — உம் திவ்யமான திருமேனியை பேதிக்க எண்ணும் அசுரர்களின் தேஹத்தைப் பிளப்பது உம் ஸுதர்ஶனம். (உம் ஸங்கல்பம்)
அக்னி ஸோம ஸூர்யாத்மகம் — அக்னி, சந்த்ரன், ஸூர்யன் என்னும் தேஜஸ்ஸுகளெல்லாம் ஸ்ரீஸுதர்ஶன தேஜஸ்ஸில் அடங்கியவை.
(ஸுதர்ஶன மஹாஜ்வால கோடி ஸூர்ய ஸமப்ரப) ஆஸுரத்தைப் கொளுத்துகையிலும்,
அனுகூலர்க்கு சந்த்ரனைப் போல ஸௌம்யராயிருப்பவர்.
(ஸோமவத் ப்ரியதர்ஶன) உள்ளிருட்டை நீக்குவது மற்ற தேஜஸ்ஸுக்களால் இயலாது. ஸுதர்ஶனம் அதையும் நீக்கும்.
‘மறுபடியும் கோயிலில் உம்முடைய ஆக்ஞையான தர்மசக்ரம் நடைபெற வேணும்’ என்பதால்
அப்பொழுது தர்மாநுஷ்டானத்திற்கு விக்னமிருந்தது காட்டப்படுகிறது.
அடியவரைத் துன்புறுத்தும் அரக்கர் தம் உடல் பிளக்கும்
ஆற்றலுடன் கதிர் மதியம் அக்னியாம் மூவருமே
உடன் கூடியது போலே ஓளி மயத்தைக் கொண்டதுமாய்
அகவிருளும் புறவிருளும் அகலும்படி திறலுடைத்தாய்
கொடு வல்ல ஆயுதங்கள் கூட்டத்தின் இருப்பிடமாய்
தேவர்கள் வாழ்வுக்கோர் அரணாகி உன் தனது
திடக் கரத்தை அணி செய்யும் சக்கரமே மறுபடியும்
திருவரங்கத்தில் நல்லறமே தழைத்து ஒங்கச் செய்யட்டும் –
————————————————
மனு ப்ரப்ருதி மா நிதி மஹதி ரங்க தாமாதிகே
தனு ப்ரபவ தாருணைர்த்தர முதீர்ய மாணம் பரை
ப்ரக்ருஷ்ட குணக ஸ்ரியா வஸூதயா ச சந்துஷித
ப்ரயுக்த கருணோததி பிரசமய ஸ்வ சக்த்யா ஸ்வயம் –24-
ப்ரயுக்த கருணா உததே — கருணை நிறைந்தவனே!
ப்ரக்ருஷ்ட குணக — சிறந்த குணங்களை உடையவனே!
மநு பரப்ருதி — மனு முதலியவர்களால்;
மாநிதே — கொண்டாடப்பட்ட;
மஹதி — சிறந்த;
ரங்க தாம ஆதிகே — ஸ்ரீரங்கம் முதலியவற்றில்;
தநு ப்ரபவ –தநுவென்னும் அஸுர குலத்தோரான அஸுரர்களைப் போல்;
தாருணை — குரூரர்களான, கொடியவர்களான,
பரை: — சத்ருக்களால்;
உதீர்யமாணம் — வளர்க்கப்பட்டு வரும், உண்டாகி வளரும்;
தரம் — பயத்தை;
ச்ரியா — பெரிய பிராட்டியாராலும்,
வஸுதயா ச — க்ஷமா தத்வமாகிய பூமிப் பிராட்டியாலும்,
ஸந்துக்ஷித — தூண்டப்பட்டு உத்ஸாகப் படுத்தப் பட்டவனாய்;
ஸ்வ சக்த்யா — தன் சக்தியினால்;
ஸ்வயம் — தானே;
ப்ரசமய — ஒழிப்பாயாக.
மனு ப்ரப்ருதி மா நிதி மஹதி ரங்க தாமாதிகே--மனு முதலியவர்களால் கொண்டாப்பட்ட சிறந்த ஸ்ரீ ரெங்கம் முதலியவற்றில் –
இத்தால் ஆச்சார்ய பரம்பரையை ஸூ சிப்பித்து -ஆழ்வார் நாத முனிகள் -ஆளவந்தார் -பெரிய நம்பிகள் -எம்பெருமான்
ஆழ்வான் -பட்டர் -குரு பரம்பரையே ஸூ சிப்பிக்கிறார் –
தனு ப்ரபவ தாருணைர்த்தர முதீர்ய மாணம் பரை-தனு என்னும் அஸூர குலத்தோரான அஸூரர்களைப் போலே
கொடியவர்களான -குரூர்களான -சத்ருக்களால் -வளர்க்கப்பட்டு வரும் -உண்டாகி வளரும் –
ப்ரக்ருஷ்ட குணக ஸ்ரியா வஸூதயா ச சந்துஷித-ப்ரயுக்த கருணோததி பிரசமய ஸ்வ சக்த்யா ஸ்வயம் –
-கருணா தத்துவமான பெரிய பிராட்டியாராலும் ஷாமா தத்துவமான ஸ்ரீ பூமிப் பிராட்டியாராலும் தூண்டப் பட்டு
உத்ஸாகப் படுத்தப் பட்டவனாய் -தன் சக்தியினால் தானே ஒழிப்பாயாக-
கருணை முதலிய சிறந்த குணங்களுடையோனே!
மனு முதலியவர் கொண்டாடிவரும் ஸ்ரீரங்கம் முதலிய க்ஷேத்ரத்தில் அசுரர் போல் பயங்கரர்களான
சத்ருக்கள் வளர்த்து வரும் பயத்தை ஸ்ரீ, பூமி தேவிகளின் ப்ரேரணத்தைக் கொண்டு, தன் சக்தியினாலே ஒழித்தருள வேணும்.
ப்ரக்ருஷ்ட – குணம் — உம்முடைய உயர்ந்த குணங்களோடு கூடியிருந்து நீர் ரக்ஷகராகிறீர்.
அதனால் உமக்கு எப்படி அத்விதீயத்வத்திற்குக் குறைவில்லையோ, அப்படியே தேவிமாரோடு கூடி ரக்ஷகரானாலும்
பாஹ்ய ஸஹாயாபேக்ஷை அற்றவர் என்று சொல்லக் குறைவில்லை.
ஸ்ரீதேவியே கருணாதத்வம். பூதேவி க்ஷமா தத்வம். இதெல்லாம் தயா சதகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
உம் தேவிமார் தான் உம்முடைய தயை முதலிய கல்யாண குணங்களை ஸந்துக்ஷணம் செய்பவர்.
(த்வத் கருணா நிரீக்ஷணா ஸுதா ஸந்துக்ஷணாத்) என்பதைக் காட்ட ‘ஸந்துக்ஷித’ என்கிறார்.
‘பிராட்டி உம்முடைய ப்ரபை, உம் ஶக்திபோல் உமக்கு அநந்யை’ என்பதை ஸ்வ ஶக்த்யா என்று காட்டுகிறார்.
இந்த சேர்த்தியைத் தானே மனு முதலானோர் பூஜித்தனர்.
முதலில் மனுவும் பின்பு மைதிலீ ரமணனாக அக் குலத்தில் மனுஷ்யனாகவே அவதரித்து நீரும் உம்மையே பூஜித்தீர்.
ஆகையால் மனுஷ்யராகிய எங்களுக்கு நீர் ஸ்வந்தமான பெருமாள்.
‘மனுவிடமிருந்து பிறந்தவர் மனுஷ்யர், மாநவர்’ என்றார் பாணிணி.
பெருமாள் ஸூர்யனுக்கும், ஸூர்யன் மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் உபதேசித்தார்கள் என்று உபதேச பரம்பரை.
இங்கு மனு ப்ரப்ருதி என்பதால் அந்த ஆசார்ய பரம்பரையை ஸூசிப்பித்து,
ஆழ்வார். நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள், எம்பெருமானார், ஆழ்வான், பட்டர் முதலிய பெரியோரையும் ஸூசிப்பிக்கிறார்.
உயர்ந்தோங்கும் குணங்களுக்கு உறைவிடமே மனுவாதி
உத்தமர்கள் புகழ்ந்திட்ட உயர்வுடைய அரங்கம் போல்
பெயர் பெற்ற தலங்களிலே பொல்லாத அசுரரையும்
மிஞ்சி நிற்கும் கொடுமை யுள பகைவர்களால் தோன்றி யுள்ள
பயம் தன்னைத் திரு மகளும் மண் மகளும் ஊக்குவிக்க
பெரும் கருணை என விளங்கும் உன் குணமாம் பெரும் கடலை
பயன்படுத்தி நீ தானே பேர் வலிதாம் உன் திறத்தால்
போக்கி யுன் தன் அடியாரைப் பாலித்து அருளிடுவாய் –
————————————-
புஜங்க விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா ப்ரபோ
ததைவ குமுதா தயோ நகர கோபுர த்வாரபா
அசிந்த்ய பல விக்ரமா ஸ்தவ மிவ ரங்க சம்ரக்ஷகா
ஜிதம் ந இதி வாதி நோ ஜகத் அநுக்ரஹே ஜாக்ரது -25-
ப்ரபோ — ப்ரபுவே!;
அசிந்த்ய பல விக்ரம — எண்ணுதற்கரிய பல பராக்ரமங்களை உடையவர்களும்;
த்வமிவ — உம்மைப் போல;
ரங்க ஸம் ரக்ஷகா — அரங்கத்தைக் காக்க வேண்டியவர்களும்;
புஜங்கம விஹங்கம ப்ரவர ஸைந்யநாதா — ஸர்ப ச்ரேஷ்டன் ({சேஷன்), பக்ஷிராஜன், ஸேனை நாதன் ஆகியவர்களும்;
ததைவ — அப்படியே;
நகர கோபுர த்வார பா: — நகரம், கோபுரம், த்வாரம் இவற்றைக் காப்பவர்களும்,
ஜிதம்தே — உனக்கு ஜயம் வருக;
இதி வாதிந — என்று சொல்லிக் கொண்டு;
ஜகதநுக்ரஹே — எங்களை அனுக்ரஹிப்பதில்;
ஜாக்ரது — விழித்திருக்க வேணும்.
புஜங்க விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா -சர்ப்ப ஸ்ரேஷ்டன் -ஆதி சேஷன் -பெரிய திருவடி -சேனை முதலியார் முதல்வர்களும்
ப்ரபோ -பிரபுவே –
ததைவ குமுதா தயோ நகர கோபுர த்வாரபா -அப்படியே நகரம் கோபுரம் துவாரம் இவற்றைக் காப்பவர்களும் –
அசிந்த்ய பல விக்ரமா -எண்ணுதற்கு அரிய பல பராக்கிரமங்களை யுடையவர்களும்
ஸ்தவ மிவ ரங்க சம்ரக்ஷகா -உம்மைப் போலே ஸ்ரீ ரெங்கத்தைக் காக்க வேண்டியவர்களும்
ஜிதம் ந இதி வாதி நோ ஜகத் அநுக்ரஹே ஜாக்ரது -உனக்கு ஜெயம் வருக என்று சொல்லிக் கொண்டே
எங்களை அனுக்ரஹிப்பதில் விழித்து இருக்க வேணும் –
இதம் ஹி ரங்கம் பாணவ் ரதாங்கம் சயனே புஜங்கம் –அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் –
ஜிதந்தே -என்று வாக்கால் சொன்னாலே போது ரஷிக்க –
சனத் குமாரர்களைத் தடுக்க ஜெய விஜயர்கள் இருந்தார்களே –
பள்ளி கொண்டிருக்கும் எம்மை தாஸரான நீங்கள் எழுப்பலாமோ?
‘பயத்தினால் இப்படிச் செய்கிறோம்’ என்றால் உங்களைக் காக்க நம் காவல்காரர்களில்லையோ என்று சங்கை வர,
அவர்கள் விழித்து இருந்து தங்கள் சேஷத்வத்திற்கு ஏற்றபடி
“ஜிதம்தே” என்று மங்களம் பாடினால் போதும். அவர்களும் தூங்குகிறார்களோ என்று தான் கவலை.
புஜங்கம — ஸ்ரீசங்கராசாரியாரும் இவ்வரங்கத்தை (இதம் ஹி ரங்கம்) என்கிற சுலோகத்தையிட்டு தினமும் மங்களாசாஸனம் செய்தார்.
(பாணௌ ரதாங்கம் ஶயநே புஜங்கம்) என்று கையார் சக்கரத்தையும் நாக ஶயனத்தையும் கீர்த்தனம் செய்வர்.
भुजङ्गमाङ्गशायिने विहङ्गमाङ्गगामिने तुरङ्गमाङ्गभेदिने नमो रथाङ्गधअरिणे ॥ என்று ஸர்வஜ்ஞமுனியின் ஸம்க்ஷேப ஶாரீரகத்தின் முடிவு மங்களம்.
அவர் கிரந்தத்தை ஸ்ரீசங்கரர் பார்த்துப் புகழ்ந்தாரென்பர்.
புஜங்கமப்ரவர — “ஆங்கு ஆரவாரமது கேட்டு” என்றபடி சீற்றம் வேண்டாம்.
வாதிந என்பதால் “ஜிதம்தே” என்று நாக்கினால் உச்சரித்தால் போதும்.
ஸைந்யநாத — இவர் விஷ்வக்ஸேநர். இவர் இல்லாத இடமில்லை. ஸேனைத் தலைவரும் ஸேனை வீரரும் தூங்குவரோ?
நகர கோபுர த்வார பா — நகரவாசல், கோபுர வாசல், ஸந்நிதி வாசல் எங்கும் காவல்.
இந்தக் காவலரெல்லாம் தூங்க வேணுமோ?
ஸநத் குமாரர்களைத் தடுத்த காவல்காரர்கள் சத்ருக்களைத் தடுக்க வேண்டாவோ?
புள்ளரையன் சேனை நாதன் தம்மோடு
அணைத் தலைவர் குமுதர் போல் ஆவாரம் நகரத்தின்
திரு வாயில் கோபுரத்தின் திருக் கதவம் காப்போரும்
திருமால் உன் தனைப் போல் திரு வரங்கத்தைக் காப்போரும்
பெரும் வாகை உனக்கு என்று போற்றுகிற வாயினராய்
பேரரவம் இட்டவராய் பரவி எங்கும் செல்பவராய்
திருவரங்கம் மட்டும் இன்றி திரை கடல் சூழ் உலகினையும்
சிந்தையுடன் நற் காத்துச் செயல் படவே வேண்டுகிறோம் –
————————————————
விதி ஸ்த்ரி புரமர்த்தந ஸ்த்ரிதச புங்கவ பாவக
யம ப்ரப்ருதயோ அபி யத் விமத ரக்ஷணே ந ஷமா
நி ரஷிதி ஷதி யத்ர ச பிரதிபயம் ந கிஞ்சித் க்வசித்
ச ந பிரதிபடான் ப்ரபோ சமய ரங்க தாமா திஷூ -26-
விதி — ப்ரஹ்மாவும்;
த்ரிபுர மர்த்தந — மூன்று புரங்களை எரித்தவரும்;
த்ரிதஶபுங்கவ — தேவர்கள் தலைவனான இந்திரனும்;
பாவக — அக்னியும்;
யம பரப்ருதய அபி — யமன் முதலானோரும்;
யத்விமத ரக்ஷண –எந்த உம் விரோதியை ரக்ஷிப்பதில்;
ந க்ஷமா — ஸமர்த்தரல்லவோ ;
யத்ர — எந்த நீர்;
ரிரக்ஷிஷதி — ரக்ஷிக்க இஷ்டப்பட்ட போது;
க்வசித் — ஓரிடத்திலும்;
கிஞ்சித் — ஒன்றும் (எதுவும்);
ப்ரதிபயம் ந — பயங்கரமாக கொஞ்சமேனும் ஆகாதோ;
ஸ: — அந்த நீர்;
ரங்கதாமாதிஷு — அரங்கம் முதலிய திவ்ய தேசங்களில்;
ந: — எங்களுடைய; ப்ரதிபடாந் — எதிர்படரை; ஶமய — அடக்கவேணும்.
விதி ஸ்த்ரி புரமர்த்தந ஸ்த்ரிதச புங்கவ பாவக –ப்ரஹ்மாவும் -மூன்று புரங்களை எரித்தவரும் –
தேவர்கள் தலைவரான இந்திரனும் -அக்னியும்
யம ப்ரப்ருதயோ அபி யத் விமத ரக்ஷணே ந ஷமா -யமன் முதலானோரும் –
எந்த உம் விரோதியை -ரஷிப்பதில்-சமர்த்தர் அல்லவோ
நி ரஷிதி ஷதி யத்ர ச பிரதிபயம் ந கிஞ்சித் க்வசித் -எந்த நீர் ரஷிக்க இஷ்டப் பட்ட போது
ஓர் இடத்திலும் ஒன்றும் எதுவும் பயங்கரமாக கொஞ்சமேனும் ஆகாதோ –
ச ந பிரதிபடான் ப்ரபோ சமய ரங்க தாமா தி ஷூ -அந்த நீர் ஸ்ரீ ரங்கம் முதலிய திவ்ய தேசங்களில்
எங்களுடைய எதிர்படரை அடக்கி அருள வேணும் –
யமனும் யம படர்களும் எங்களைக் கண்டு நடுங்க வேண்டி இருக்க இந்த மனுஷ்ய படர்களைக் கண்டு நாங்கள் நடுங்கும் படி நேரலாமோ –
உம் திருமேனியைக் காட்டிலும் எங்களுக்குப் பிரியமான வஸ்து இல்லை;
அதற்குக் கெடுதலைச் செய்பவர்கள் எங்கள் சத்ருக்கள். எங்களுடைய சத்ருக்கள் உம் சத்ருக்களாக வேணும்.
“என் பஞ்ச ப்ராணரான பாண்டவர்களை நீ த்வேஷிக்கிறாய். ஆகையால் நீ எனக்கு த்வேஷி” என்றார் ஸ்ரீ கிருஷ்ணன்.
இப்படி உமக்கு விரோதியாயிருப்பவனை நீர் கொல்ல நினைத்தால் ப்ரஹ்மா, ருத்ரன், இந்த்ரன், யமன் முதலான
ஒருவரும் அவனை ரக்ஷிக்க முடியாது. ஆகையால் எங்கள் ப்ரதிபடரை அடக்க வேண்டும்.
விதி: — ஊருக்கெல்லாம் விதிப்பவர் ப்ரஹ்மா; அவருக்கும் விதிப்பவர் நீர்;
ஸம்ஹரிப்பவனுக்கும் ஸம்ஹாரகர். ஸுரநாயகனையும் நியமிப்பவர். அக்னியைக் கொளுத்துபவர்.
ஜலரூபியாயிருந்து ஸம்ஹரிப்பவர். யமனுக்கும் யமன் என்று யமனே சொன்னான்.
ராவணனிடம் ब्रह्मा स्वयंभुः என்று திருவடி பாடிய சுலோகமும் இங்கே கொள்ளப்பட்டது.
சிறிய திருவடியும் கோயிலில் காவலிருக்கிறார்.
முன் சுலோகத்தில் பெரிய திருவடியினுடையது போல இங்கு சிறிய திருவடியின் ஜிதந்தே.
ப்ரதிபயம் ந கிஞ்சித் –(கதாசந, குதஶ்சந) பயமில்லையென்றது சுருதி.
க்வசந என்று முன்பு சேர்த்தார். இங்கு கிஞ்சித் என்கிறார்.
ஒன்றும் பயத்தை உண்டாக்க மாட்டாது என்று ஒரு பொருள்.கிஞ்சித்தும் (துளிக்கூட) பயமில்லை என்னவுமாம்.
ந: ப்ரதிபடாந் — யமனும் யமபடர்களும் எங்களைக் கண்டு நடுங்க வேண்டியிருக்க,
இம் மனுஷ்ய படர்களைக் கண்டு நாங்கள் நடுங்கும்படி நேரலாமோ?
உன்னிடத்தே அபசாரம் உறுபவனைக் காத்திடவே
உந்தி மலர் நான்முகனும் உருத்திரனும் இந்திரனும்
வன்னியனும் யமதேவு முதலான தேவர்களும்
வலிமையிலோர் என்றைக்குமே ஒருவனை நீ காத்திடவே
எண்ணினாயேல் அவன் தனக்கு எங்கிருந்தும் எவராலும்
எள்ளளவும் அச்சமேதும் ஏற்படாதே நிச்சயமாய்
அன்னவன் நீ அரங்கத்தும் அதுவனைய தலங்களிலும்
அல்லல் தரும் பகைவர் தமை அழித்து ஒழிப்பாய் பெருமானே –
——————————————-
ச கைடப தமோரவிர் மது பராக ஜஜ்ஜா மருத்
ஹிரண்ய கிரி தாரண ஸ்த்ருடித கால நேமி த்ரும
கிமத்ர பஹுநா பஜத் பவ பயோதி முஷ்டிந்தய
த்ரி விக்ரம பவத் க்ரம ஷிபது மங்ஷூ ரங்கத் விஷ — 27-
த்ரிவிக்ரம — த்ரிவிக்ரமனே!;
கைடப தமோ ரவி — கைடபன் என்னும் இருட்டுக்கு ஸூர்யன் போன்றதும்;
மது பராக ஜஞ்ஜா மருத் — மது என்னும் அஸுரனான தூசிக்குப் பெருங்காற்றுப் போன்றதும்;
ஹிரண்ய கிரி தாரண — ஹிரண்யன் என்னும் மலையைப் பிளப்பதும்;
த்ருடித காலநேமி என்னும் வ்ருக்ஷத்தையுடையதும்;
அத்ர — இவ்விஷயத்தில்;
கிம் பஹுநா — அதிகம் சொல்லுவானேன் (சுருக்கமாக);
பஜத் பவ பயோதி முஷ்டிம்தய — ஆச்ரிதருடைய ஸம்சார ஸமுத்ரத்தை ஒரு சிறங்கை ஜலத்தைப் போல் உறிஞ்சி விடுவதுமான;
ஸ: — அந்த (அவ்விதமான);
பவத் க்ரம — உம் பராக்ரமம்;
மங்க்ஷு — சீக்கிரத்தில்;
ரங்கத்விஷ — ரங்க க்ஷேத்ரத்தின் விரோதிகளை;
க்ஷிபது — நிரஸநம் செய்யட்டும்.
ச கைடப தமோ ரவிர்-கைடபன் என்னும் இருட்டுக்கு ஸூர்யன் போன்றதும்
மது பராக ஜஜ்ஜா மருத் -மது என்னும் அஸூரனான தூசுக்கு பெரும் காற்று போன்றதும்
ஹிரண்ய கிரி தாரண -ஹிரண்யன் என்னும் மலையைப் பிளப்பதும் -மலையை கிழிக்க உம் திரு உகிர் போதுமே
ஸ்த்ருடித கால நேமி த்ரும -திருடித்த கால நேமி என்னும் வ்ருக்ஷத்தை யுடையதும்
கிமத்ர பஹுநா -இவ்விஷயத்தில் அதிகம் சொல்லுவான் என்
பஜத் பவ பயோதி முஷ்டிந்தய–ஆஸ்ரிதருடைய சம்சார சமுத்திரத்தை ஒரு சிறங்கை ஜலத்தை போலே உறிஞ்சி விடுவதுமான
த்ரி விக்ரம பவத் க்ரம ஷிபது மங்ஷூ ரங்கத் விஷ — த்ரி விக்ரமனே-அவ்விதமான உம் பராக்ரமம் சீக்கிரத்தில்
ரங்க ஷேத்ரத்தின் விரோதிகளை நிரசனம் செய்யட்டும் –
லோக விக்ராந்தமான உம் -உலகளந்த பொன்னடியை சரணம் பற்றினோம் –
காற்றுக்கும் சண்ட மாருதமான நீர் தான் பெரும் காற்று -ஜகத்தின் பாபங்களை உண்ணுபவன் என்றார் -5-ஸ்லோகத்தில்
இங்கு பாபக் கடலை உறிஞ்சுபவன் என்கிறார் -திவ்ய ஆயுதங்கள் வேண்டாம் –திண்ணிய திருவடியே ரக்ஷகம்-
ஸங்கல்ப ஸூர்யோதயம் இரண்டாம் அங்கத்திலும் இந்தச் சுலோகம் உளது.
உம் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தவர் அத் திருவடியாலேயே அபயம் பெறுவது உசிதமாகையால்,
உம் உலகளந்த திருவடி பலத்தால் எங்கள் சத்ருக்கள் அடங்கி நாங்கள் அபயம் பெற வேணும்.
“லோகவிக்ராந்தமான உம் சரணங்களை ஶரணம் பற்றினோம்”
முன்பு மருத் தரணி பாவக என்றார். இங்கு ஸூர்ய ஸூர்யனான நீர்தான் ஸூர்யன்.
காற்றுக்கும் சண்ட மாருதமான நீர் தான் பெருங்காற்று என்கிறார்.
முன் இரண்டாம் சுலோகத்தில் ஜகத்தின் பாபங்களையெல்லாம் உண்ணும் பெருவாயன் என்றார்.
இங்கு பாபக் கடலை உறுஞ்சுபவன் என்கிறார். தொடங்கியது போல முடிக்கிறார்.
எங்கள் பாபக் கடலை உம் திருவடி யல்லால் மற்றொன்று கடக்க வல்லதல்ல.
ஆயுதங்களும் வேண்டாம். யுத்தமும் வேண்டாம். உம் திருவடி பலமே போதும்.
ஹிரண்ய கிரி தாரண — மலையைக் கிழிக்க நகங்களே ஆயுதம்.
இருளன்ன கைடபனை இரவியைப் போல் அழித்திட்டாய்
சுழல் காற்றில் புழுதியைப் போல் சிதைந்து அழிந்தான் மதுவரக்கன்
இரணியனை மலையைப் போல் பிளந்து அழித்தாய் திரு வரங்கா
மரத்தைப் போல் முறித்திட்டாய் கால நேமி அரக்கன் தனை
உரைக்க மேலும் வேண்டாவே உன் தனது வீரம் தனை
உன் தனையே புகலாக உற்றவரின் துயர்க்கடலை
உறிஞ்சி விடும் உன் வலிமை அரங்கத்தை நலிந்திடவே
உற்ற பகை அனைவரையும் ஒழித்திடட்டும் விரைவினிலே-
————————————-
யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண நீதம் வய
பிரபுல்ல பலிதம் சிர பரமிஹ சமம் பிரார்த்தயே
நிரஸ்த ரிபு சம்பவே க்வசன ரங்க முக்யே விபோ
பரஸ்பர ஹிதை ஷிணாம் பரி சரேஷூ மாம் வர்த்தயே–28-
விபோ — ப்ரபுவே! ;
யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண — யதிராஜனுடைய ஸார தம ஸரஸ்வதீ ரஸாநுபவ கனமாகவே;
வய: — யௌவன வயதானது;
நீதம் — சென்றது;
சிர — தலை;
ப்ரபுல்ல பலிதம் — மலர்ந்த புஷ்பம் போல் வெளுத்து விட்டது.;
பரம் — இனி;
இஹ — இவ்வுலகில்;
க்ஷமம் — (எனக்குத்) தக்கதை;
ப்ரார்த்தயே — வேண்டுகிறேன்;
நிரஸ்த ரிபு ஸம்பவே — சத்ருக்கள் இருக்கலாம் என்று ஸந்தேஹிக்கக் கூட அவச்யமில்லாமல் நிர்ப் பயமான;
ரங்க முக்யே — அரங்கம் முதலிய க்ஷேத்ரங்களில்;
பரஸ்பர ஹிதைஷிணாம் — ஒருவருக்கொருவர் ஹிதத்தையே விரும்பி ஸ்நேஹித்திருப்பவரின்;
பரிஸரேஷு — அருகில்;
மாம் — அடியேனை;
வர்த்தய — இருக்கச் செய்ய வேணும்.
யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண -யதி ராஜனுடைய சார தம ஸரஸ்வதீ ரஸ அனுபவ கனமாகவே –
ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் எமக்கு நித்யம் –
அரங்கத்துக்கு ஆபத்து வந்தால் இது எப்படி நடக்கும்
யதி ராஜரின் கத்யங்களை அனுபவித்து ரசத்தில் மூழ்கி இருக்க வேண்டாமா
நீதம் வய –யவ்வன வயசானது சென்றது
பிரபுல்ல பலிதம் சிர-தலை மலர்ந்த புஷ்ப்பம் போலே வெளுத்து விட்டது
பரமிஹ சமம் பிரார்த்தயே -இனி இவ் உலகில் எனக்கு தாக்கத்தை வேண்டுகிறேன்
நிரஸ்த ரிபு சம்பவே க்வசன ரங்க முக்யே விபோ–சத்ருக்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கக் கூட அவசியம் இல்லாமல்
நிர்ப்பயமான -அரங்கம் முதலிய க்ஷேத்ரங்களில் பரஸ்பர ஹிதை ஷிணாம் பரி சரேஷூ மாம் வர்த்தயே–ஒருவருக்கு ஒருவர்
ஹிதத்தையே விரும்பி ஸ்நேஹித்து இருப்பவரின் அருகில் அடியேனை இருக்கச் செய்து அருள வேணும்
ஸ்ரீ ரெங்கத்தில் ஸூ கமாக வாழ தேவரீர் ஆஞ்ஜை ஸ்ரீ பாஷ்யகாரருக்கு அருளினீரே
அவர் திரு நாமத்தை சொல்லி அவர் ஆஞ்ஜையையும் அபி விருத்தியையும்
செய்ய யதி ராஜர் அரங்கம் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்தால் பெருமாளால் மறுக்க முடியாமல் அருளி தலைக் கட்டுவார்
ஆழ்வானும் ஸ்ரீ ஸூ ந்தர பாஹு ஸ்தவத்தில் யதி ராஜர் உடன் சேர்ந்து வாழ பிரார்த்தித்தால் போலே இவரும் இங்கே அருளிச் செய்கிறார் –
அரங்கம் மட்டுமல்ல, நம் திவ்ய தேசங்கெல்லாம் சத்ரு ஹிம்ஸை இல்லாமல் இருக்க வேணும்.
கச்சியை விட்டு அரங்கம் வந்த எனக்கு ஸ்ரீபாஷ்யாதி ப்ரவசநம் செய்வதிலேயே நீண்ட காலம் இன்பமாய் வயதெல்லாம் சென்றது.
பரஸ்பர ஹிதைஷிகளும் பரம பாகவதர்களுமான பெரியோர்களுடைய ஸத் ஸங்க ரஸமும் அனுபவிக்கப் பட்டது.
இந்த ரஸங்களுக்கு விச்சேதமில்லாமல் ஆயுளின் மிகுதியும் அரங்கத்திலேயே கழிய வேணும்.
யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண — ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் எமக்கு நித்யம்.
(ப்ரபத்யே ப்ரணவாமாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம்)
(த்ருஷ்டம் ஸ்ரீரங்கதாமநி) என்று சொல்லாமல் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் கூடுமோ?
அரங்கத்திற்கு ஆபத்து வந்தால் பாஷ்ய காலக்ஷேபம் இன்பமாக எப்படி நடக்கும்?
நிர்ப்பரராயினும் பாஷ்யத்தின் ரஸபரம் அளவேயில்லை.
யதிராஜனுடைய கத்யங்களை தினமும் அனுஸந்தித்து ரஸத்தில் முழுகுகிறோம்.
இங்கேயே ஸ்ரீரங்கத்தில் ஸுகமாக வஸிப்பாய் என்று தேவரீர் நியமனத்தைச் சொல்லிக் கொண்டே யிருக்கிறோம்.
யதிராஜன் திருநாமத்தைச் சொல்லி, அவர் ஆக்ஞையை விருத்தியும் அபிவிருத்தியும் செய்ய வேண்டுமென்றும்,
யதிராஜனுடைய அரங்கம் வாழவேண்டுமென்றும் பிரார்த்தித்தால் பெருமாள் மறுக்க மாட்டார் என்று முடிவில் அதைப் பிரார்த்திக்கிறார்.
ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் முடிவில் ஆழ்வானும் யதிராஜனோடு அரங்கத்தில் வஸிப்பதைப் பிரார்த்தித்தார்.
எதிராசர் சொற் சுவையை அனுபவித்தே இளமை செல
என் தலையும் நரைத்ததுவே முற்றிலும் அப்படியே
எது வொன்று என் தனக்கே இனியும் இங்கே ஏற்றதுவோ
அதனை நீயே அளித்திடுவாய் அரங்க நகர் பெருமானே
எதிரிகளாய் எவருமே இருந்திடாதே நிலை கொண்ட
எழில் அரங்கம் போல் ஏதும் இடம் ஒன்றில் ஓர் ஒருவர்
இதம் தனையே விரும்புவரின் இடையினிலே அடியேனை
இருக்க வைத்து வரும் நாளை இனிதாக்கி அருள்வாயே –
———————————————————————
பிரபுத்த குரு வீக்ஷண பிரதித வேங்கடே சோத்பவாம்
இமாம பய ஸித்தயே படது ரங்க பர்த்து ஸ்துதிம்
பயம் த்யஜத பத்ரமித்ய பிததத் ச ச கேசவ
ஸ்வயம் கன க்ருணா நிதிர்க்குணகணேந கோபாயதி–29-
ப்ரபுத்த — சிறந்த ஞானமுள்ள;
குரு — ஆசார்யனுடைய;
வீக்ஷண — கடாக்ஷத்தால்;
ப்ரதித — யஶஸ்ஸைப் பெற்ற;
வேங்கடேச — வேங்கடேசரிடமிருந்து;
உத்பவாம் — தோன்றிய;
இமாம் — இந்த;
ஸ்துதிம் — ஸ்தோத்ரத்தை;
ரங்கபர்த்து — ரங்கப்பிரபுவின்;
அபயஸித்தயே — அபயம் ஸித்திப்பதற்காக; (கோயில் நிர்பயமாயிருப்பதற்காக);
படத — படியுங்கோள்;
பயம் — பயத்தை;
த்யஜத — விட்டுவிடுங்கள்;
(அஞ்சல் ! அஞ்சல்!);
வ — உங்களுக்கு;
பத்ரம் — சுபம் (உண்டாகட்டும்);
இதி — என்று;
அபிததத் — சொல்லிக் கொண்டு;
கன க்ருணா நிதி — கருணாநிதியான ;
ஸ — அந்த;
கேஶவ — (ப்ரஹ்ம, ஈசாதிகளுக்குக் காரணமான) கேசவன்;
குணகணேன — தம் கல்யாண குணங்களால்;
கோபாயதி — ரக்ஷிப்பான்.
பிரபுத்த குரு வீக்ஷண -சிறந்த ஞானம் உள்ள ஆச்சார்யர் கடாக்ஷத்தினால்
பிரதித வேங்கடே சோத்பவாம் -யசஸைப் பெற்ற வேங்கடேசர் இடம் இருந்து தோன்றிய
இமாம பய ஸித்தயே படது ரங்க பர்த்து ஸ்துதிம்-இந்த ஸ்தோத்ரத்தை -ஸ்ரீ ரெங்க பிரபுவின் அபய சித்திக்காக -ஸ்ரீ ரெங்கம்
திருக் கோயில் நிர்ப்பயமாய் இருப்பதற்காக -படியுங்கோள்
பயம் த்யஜத -பயத்தை விட்டு விடுங்கோள் -அஞ்சேல் அஞ்சேல்
பத்ரமித்ய பிததத் ச ச -சுபம் உண்டாகாட்டும் என்று சொல்லிக் கொண்டு
கேசவ -ஸ்வயம் கன க்ருணா நிதிர்க்குணகணேந கோபாயதி-கருணா நிதியான அந்த கேசவன் –ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் ஈசன்
சர்வ காரணத்வன்-ரஷித்து அருள்வான் -கல்யாண குண அனுபவமே -பிரயோஜனம் -சோஸ்னுதே சர்வான் காமான் –
குணகணேன கோபாயதி — அவருடைய கல்யாண குணங்களின் கூட்டங்களின் அனுபவமே உங்களுக்கு ப்ரயோஜனம் .
அந்த குணங்களை அனுபவிக்கத் தருவதே எங்களுக்கும் ரக்ஷணம்.
(ஸோ ஶ்நுதே ஸர்வாந் காமாந்) ஸ்வயம் அபிததத் — யதிராஜனுடைய திருநாமத்தையும் ஸரஸ்வதீரஸத்தையும் பேசவே,
பெருமாளும் வாய்திறந்து பேசுவார்.
‘பேரருளாளர்’ போல் சோதி வாய் திறந்து பேசுவார் என்பதைக் காட்ட கனக்ருணாநிதி — அருள்நிரம்பிய நிதி என்கிறார்.
இந்த ஸ்துதி ஸ்ரீரங்கபர்த்தாவான ரங்கநாதன் விஷயமென்றும்,
இதன் ப்ரயோஜனம் அரங்கத்திற்கும் ரங்க பர்த்தாவுக்கும் அபய ஸித்தியே என்றும்
விஷயம் ப்ரயோஜனம் இரண்டிலும் வரவேண்டும் என்பதற்காக “ரங்கபர்த்து” என்னும் பதம்
‘அபயஸித்தயே’, ‘ஸ்துதிம்’ என்ற இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது.
அவன் விஷயமான நமது அச்சம் தீருவதும் அவனைத் துதித்தை தான் ஸித்திக்க வேணும்.
அரங்கத்துக்கு ரெங்க பர்த்துக்கும் அபய சித்தியே என்னும் விஷயம் இந்த பிரபந்த தாத்பர்யம் என்று
ரங்க பர்த்து என்ற பதம் -அபய ஸித்தயே -ஸ்துதிம் இரண்டுக்கும் நடுவில் வைத்து அருளிச் செய்கிறார்
பாலகாண்டத்தில் அஶ்வமேதத்தில் ப்ரஹ்மா முதலிய தேவர்கள் துதிக்கையில்,
(பயம் த்யஜத, பத்ரம் வ:) என்று அபயமளித்த வார்த்தையையே இங்கே அமைக்கிறார்.
முதலில் துர்யம் மஹ என்று ஆரம்பித்தது போல்
முடிவில் கைடபதமோரவி மதுபராகஜஞ்ஜாமருத் என்று
மத்ஸ ஹம்ஸ ஹயக்ரீவாவதாரங்களைப் பேசுகிறார்.
(மத்ஸ்ய அஶ்வ கச்சப) என்று சுகரும் மத்ஸ்யாவதாரத்தோடு ‘அஶ்வ”அவதாரத்தையும் அனுஸந்தித்தார்.
“ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நாராயண கீதாசார்யாத் யவதாரங்களாலே தானே வெளி நின்று
தத்வ ஹிதங்களைப் பிரகாஶிப்பித்தும்” என்று ஸ்ரீரஹஸ்யத்ரயஸாரம் குருபரம்பராதிகாரம்.
கேஶவ — அதிலங்கித த்ருஹிண ஶம்பு ஶக்ராதிகம் என்று முதல் சுலோகத்தில் விஸ்தரித்துக் கூறியதை
இந்த ஒரு பதத்தால் சுருங்கக் காட்டுகிறார்.
(ந தைவம் கேஶவாத் பரம்) என்று மஹரிஷிகளின் ஸபையில்
வேதாசார்யன் தம் கையைத் தூக்கி சபதம் செய்தது ஸூசிப்பிக்கப் படுகிறது.
அப்படியே “க:” என்ற ப்ரஹ்மாவின் பெயர், நான் ஸர்வதேஹீக்களுக்கும் ஈசன்,
நாங்கள் இருவரும் உம் திருமேனியிலிருந்து பிறந்தவர்கள். ஆகையால் உமக்குக் “கேஶவன்” என்று திருநாமம் என்று
எதிரிகையாலே வீடு தீட்டானபடி அவர்கள் சொன்ன பாசுரங்களையே ஸூசிப்பித்து ஸ்திரப் படுத்துகிறார்.
அபீதி: என்று தொடங்கி ஓபாயதி என்று முடிப்பதால்,
அபயத்தை விரும்புவோருக்கு இந்த ஸ்தோத்திரத்தால் த்ருப்தனான ஸர்வேஶ்வரன்
அபய ப்ரதானம் செய்து ரக்ஷிக்கிறான் என்ற ப்ரஸித்தி சொல்லப் படுகிறது.
உயர் ஞான குருக்கள் தம் உளம் குளிரும் நோக்கு தன்னால்
உறும் புகழோன் வேங்கடேசன் உளத்துதித்த அரங்கனது
வியப்பான இத்துதியை விருப்போடு பயிலுங்கள்
விட்டகலும் பயம் எல்லாம் விரைவாக உமை எல்லாமே
பயம் தன்னை ஒழித்திடுவீர் பெரும் நலனே உறுவீர் என
பரிந்து உரைத்த மிகும் கருணை பெரும் நிதியாம் கேசவனே
உயர்ந்த நல்ல பண்புகளின் ஒருங்கு இணைந்த கூட்டத்தால்
உம்மை எலாம் எவ்விதத்தும் காத்து அருள்வான் தானாவே –
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபால விம்சதி-
January 20, 2017ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் -மம நாத -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கண்ணனாம் அமுதக்கடல் திருவாய் மொழி
பும்ஸாம் சித்த அபஹாரிணாம்-ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்-கண்டவர் சிந்தை வழங்கும் கண்ண பிரான் –
சாஷாத் மன்மத மன்மத -கிருஷ்ண –
ஞானாதி ஷட் குணங்கள் -ஸ்வேத தீப வாசி நரசிம்மன் நர நாராயணன் –
நிகம கற்பக தரு -வேதாந்த பழம் -ஸூக முகமத்– கீழே வந்த பழம் -அம்ருத த்ரவய தாரை -பக்தி ரசம் –
ஸ்ரீ மன் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ
வேதாந்த சார்யோ வர்யோ மே சந்தி தத்தம் சதா ஹ்ருதி
—————————-
வந்தே பிருந்தாவன சரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ சம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம் —-1–அனுஷ்டுப் விருத்தம்
ஜயந்தீ சம்பவம் –ஸ்ரீ ஜயந்தீ அன்று தோன்றியதும்
பிருந்தாவன சரம்-பிருந்தாவனத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பவனும்
வல்லவீ ஜன வல்லபம்–ஆயர் குலப் பெண்களுக்குப் பிரியமான பர்த்தாவும்
வைஜயந்தீ விபூஷணம்–வைஜயந்தி மாலையை ஆபரணமாக யுடையதுமான
தாம –தேஜஸ்ஸை
வந்தே –வணங்குகிறேன்
ஸ்ரீ ஜெயந்தி அன்று திரு அவதரித்தவனும் -ஸிம்ஹ ஸ்ராவண –ஆவணி மாதம் -கிருஷ்ண பக்ஷம் அஷ்டமி -ரோஹிணி நக்ஷத்ரம்
பிருந்தாவனத்தில் சஞ்சரித்தவனும் -இடைப்பெண்களுக்கு ப்ரியதமமானவனும்
ஸ்ரீ வைஜயந்தி என்னும் வனமாலையை அலங்காரமாக தரித்தவனுமான கண்ணன் என்னும் ஜோதியை வணங்குகிறேன்
மங்கள ஸ்லோகம் -யாதவாத்யஹ்ருதயம் -இதே ஸ்லோகம் —வந்தே -மங்கள வந்தனம் -கோபாலன்
வேத வாக்குகள் -சொற்கள் -பசுக்கள் -ரக்ஷகன் –
சர்வ உபநிஷத் காவா –கீதாம்ருதம் -பார்த்தோ வத்ஸா-நாம் பருக -அன்றோ –
கர கமல-தோழியும் நாமும் தொழுதோம் -அங்கே வேண்டிப் பெறுவான் —
நாதன் -ஸ்வாமி –
வந்தே
எப்பொழுதும் -பிரபத்யே போலே வர்த்தமானம் –அஹம் வந்தே -சொன்னால் அஹங்காரம் வருமே -தன்னாலே அர்த்தாத் சித்தி –
தாஸோஹம் –தாஸ்யம் முன் வைத்து திருவடி –
பிருந்தாவன சரம்-
ஆரண்யகம் வேதமே -காடு -ப்ருஹதராண்யகம் பெரும் காடு -சாரம் -சஞ்சரிப்பவன் -கூட்டம் கூட்டமாக –
ரஷிப்பவன்–புண்யம் பவித்ரம் -திருவடி பட்டு —
வல்லவீ ஜன வல்லபம்-
ஸ்ரீ வல்லபன் -கோபீ வல்லபன் ஆனான் –ஸ்ரீ மறைத்து வாமனன் ஆனாது போலே —
காடுகளூடு –பின்னை மணாளன் –ஆயர் சிங்கம் -காயாம்பூ வண்ணன் –மழை களோ வருகிறதோ —
மங்கையர் சாலக –யூண் மறந்து –ஒழிந்தனரே-
கோவலனாய் குழலூதி கன்றுகள் மேய்த்து –கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு -இவனை ஒப்பாரை கண்டு
ஜயந்தீ சம்பவம் –
ஒருத்தி மகனாய் –இவரும் மறைத்து அருளிச் செய்கிறார் —வைகுண்ட பர லோகே –பக்தைர் பாகவத ஸஹ –
ஜெயந்தி -மட்டும் சொல்லும் -பெயரை சொல்லாமல் -ஜெயம் புண்யம் வெற்றி கொடுக்கும் நக்ஷத்ரம் –
ஜெ சப்தம் நிறைய அருளிச் செய்வார் இதில்
அஷ்டமி -ரோஹிணி -தாழ்ந்து பழகும் தன்மை -எட்டை பெருக்கி -கூட்டி பார்த்தால் -8 -7-இப்படி குறைந்தே வரும் –
ஒன்பதை பெருக்கி ஒன்பதே வரும் -ராமர் பரத்வம் நவமி –
பாஞ்ச ஜன்யமே கிண்டி –
அத்புதம் பாலகம் –அம்புஷேணம்-சங்கு சக்ர கதாதரம் ஸ்ரீ வத்சம் -கௌஸ்துபம் -பீதாம்பரம் –
பாலகம் பாலாக க யஸ்ய -பாலனாக நான்முகனும் இருந்தானாம் -அம்புஷேணம்- -ஸ்ரீ லஷ்மியைக் காட்டினானாம் -யசோதைக்கு –
தாம
தேஜஸ் -வன சஞ்சாரி தேஜஸ் -ஆயர் குலத்தில் தோன்றும் மணி விளக்கு அன்றோ —
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து -சுடர் அடி-
வைஜயந்தீ விபூஷணம்
மற்றவற்றுக்கும் உப லக்ஷணம் -வன மாலை குலுங்க நின்றவனை ப்ருந்தாவனத்தே கண்டோமே
வைஜயந்திக்கு இவன் ஆபரணம் –
சரக் வஸ்திர ஆபரணம் -ஸ்வ அனுரூபம் -சின்மயம் ஸ்வயம் பிரகாரசம் -நித்ய ஸூரிகள்-
வைஜயந்தி மட்டும் மறைக்க வில்லை -வனம் சஞ்சரிக்க –ஸுலப்யம் -தொடங்கி பரத்வம் சொல்லி -முதல் ஸ்லோகம் —
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
குழலூதிக் கொண்டே சென்று இனிது மறுத்தி நீரூட்டி
ஜயந்தீ சம்பவம் தாம–நிலை வரம்பில் -பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
தாம -எழில் கொள் சோதியாகத் திகழ்கிறான்
அனுஷ்டுப் விருத்தம்
யுக்ம விபுலா விருத்தம் என்றுமாம்
பிருந்தாவன சரம் வல்லவீ ஜன வல்லபம்–ஸுலப்யம்
ஜயந்தீ சம்பவம் -தேஹளீ தீப நியாயத்தால் ஸுலப்யத்துக்கும் பரத்வத்துக்கும் அந்வயம்
தாம வைஜயந்தீ விபூஷணம்-பரத்வம் -ஸுலப்யத்துக்கு ஆபரணம்
——————————————-
இரண்டாம் ஸ்லோகத்தாலே
திருவவதரித்த கண்ணனுக்கு
பாலூட்டித்
தொட்டிலில் இட்டுத் தாலாட்டி
யசோதாப்பிராட்டியார் தொல்லை இன்பத்து இறுதி கண்டதை அருளிச் செய்கிறார்
வாசம் நிஜங்கா ரசிகாம் ப்ரஸா மீஷாமாநோ
வக்த்த்ரார விந்த விநிவேசித பாஞ்ச ஜன்ய
வர்ண த்ரி கோண ருசிரே வர புண்டரீகே
பத்தாசநோ ஜயதி வல்லப சக்கரவர்த்தீ –2-கோபால மந்த்ரம் -வஸந்த திலகம் விருத்தம்
நிஜங்கா ரசிகாம் –தன் பெயரை அடையாளமாகக் கொண்டு இருப்பதால் ரஸம் நிரம்பிய
வாசம் –வார்த்தையை
ப்ரஸா மீஷாமாண –மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருப்பவனும்
வக்த்த்ர அர விந்த –தாமரை போன்ற திரு வாயில்
விநிவேசித –வைக்கப்பட்ட
பாஞ்ச ஜன்ய–பாஞ்ச சைன்யம் என்னும் திருச்சங்கு ஆழ்வானை யுடையவனும்
வர்ண த்ரி கோண –பல நிறங்கள் கொண்ட முக்கோண வடிவத்தால்
ருசிரே –அழகான
வர புண்டரீகே–சிறந்த தாமரையில்
பத்தாசநோ –வீற்று இருப்பவனும்
வல்லப சக்கரவர்த்தீ–கோபர்கள் சூழ இருப்பவனுமான கிருஷ்ணன்
ஜயதி -வெற்றியுடன் விளங்குகிறான்
எழுத்துக்கள் கொண்ட -முக்கோண வடிவு இயந்திரத்தால் -எட்டுத் தளமுடைய அழகிய சிறந்த தாமரை வடிவமான
திவ்ய ஆசனத்தில் அமர்ந்து தன் மடியில் மகிழ்ந்த சரஸ்வதி தேவியை நன்கு கடாக்ஷிப்பவனும் –
தாமரை போன்ற தன் திரு வாயில் பாஞ்ச ஜன்யம் வைத்து இருப்பவனும்
இடைக் குலத்தின் சக்கரவர்த்தியாக கண்ணன் விளங்குகிறான் –
மந்த்ர ஸாஸ்த்ர அடிப்படையில் அமைந்த ஸ்லோகம் –
வாசம் நிஜங்கா ரசிகாம் ப்ரஸா மீஷாமாநோ –
வாக்கு என்னும் இடைப் பெண் மடியில் இருக்க -யசோதை -நப்பின்னை -என்றுமாம்-சரஸ்வதி வர -நாட்டுப் பெண் -படைக்கப் பட்டவள் பெண் -நெருங்க
தேவர்கள் -சிறிய உரு கொண்டு -மடியில் உட்க்கார சிறிய உரு கொண்டு
உற்று பார்த்து -ஈஷமான -பிராசாமீஷா காண -நன்றாக-அங்கம் -மடியில் -நாமம் என்றுமாம் -கோ பாலன் -பார்த்தும் மகிழ்கிறான்
தாலேலோ பாட -மாணிக் குறளனோ தாலேலோ -கேட்டு ரசிக்கிறான் என்றுமாம் –
வாசம் -சரஸ்வதி -வாக் தேவி உபாசனம் -பரம ஏக காந்தி -பிரகாரி பாவத்தில் –
கோ -வாக்குக்கும் ரக்ஷகன் –ஹயக்ரீவர் இடம் வேதம் உபதேசம் பெற்றால் போலே சரஸ்வதி கண்ணன் இடம் உபதேசம்
பத்மாங்க ஸத் மானம் அவேஷ்ய லஷ்மீம் ஏகஸ்ய விஷ்ணோ ஸ்ரயணாத் ஸ பத் நீம்
ஆஸ் யேந்தும் அஸ்யாய ஐதே ஜிதாப்ஜம் ஸரஸ்வதீ தத் விஜி கீஷயா கிம் -7-10-ஸ்ரீ ஹர்ஷன் தனது நைஷக காவ்யத்தில்
ஸ்ரீ லஷ்மீ தேவியைத் தனக்கு ச பத்தினியாக ஸ்ரீ ஸரஸ்வதி தேவி நினைத்து இருப்பதாக ஒரு ஸ்லோகம்
யசோதை பால் போட்டும் பொழுது பாட -தாலாட்டு அனுபவிக்கிறான் –மாணிக்கம் கட்டி –
பிரமன் விடு தந்தான் வையம் அளந்தானே தாலேலோ -என்றுமாம்
தன் சரிதை கேட்டு மகிழ்ந்த பெருமாள் போலே
வக்த்த்ராரவிந்த விநிவேசித பாஞ்ச ஜன்ய –
திரு முக மண்டலம் -சங்குபாலாடை வைத்து புகட்ட-செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
பரிபாகம் -தாமரை மலரில் வந்து தேனை பருகுவது போலே
பிராணவாகாரம் -சப்தம் வைத்து உபதேசம் என்கிறது-பாஞ்ச ஜன்யம் கொண்டு நமக்கு ஞானப்பால் புகட்டுகின்றான்
வாயில் அழுத்தி வைத்த சங்கு -பால் போட்ட தாய் –கற்பூரம், நாறுமோ -சொல்லாழி வெண் சங்கே –
தானே ஸ்பர்ச ஸூகத்தால் -அழுந்தி –
மது சூதன் வாய் அமுதம் ஸ்திரமாக பருகி –
வர்ண த்ரி கோண ருசிரே வர புண்டரீகே –
தாமரை மலர் -வர -சிறந்த -அஷ்டாக்ஷர தளம் உள்ள -சங்கு ஞானம் பிரதம்-
துருவன் விருத்தாந்தம் –சங்க ஸ்பர்சம் மூலம் –
பத்தாசநோ ஜயதி வல்லப சக்கரவர்த்தீ –ஆசனமாக கொண்டு -பல வர்ணங்கள் -முக்கோணம் –
விசேஷ அர்த்தங்கள்
நிஜங்கா–தன்னுடைய க்ளீம் என்னும் பீஷ அஷரத்தாலே
ரசிகாம்-ரசமுள்ளதான
வாசம் –மந்த்ரத்தை
ப்ரஸா மீஷாமாநோ-நடுவில் இருந்து கொண்டு -நாற்புறமும் நன்றாகப் பார்த்துக் கொண்டு
வக்த்த்ரார விந்த –8 அல்லது 24 தளங்களோடு கூடிய தாமரை முகத்திலே நடுவிலே நின்றவாறு
விநிவேசித -வைக்கப்பட்ட -எழுதப்பட்ட
பாஞ்ச ஜன்ய-சங்கம் போன்ற பிரணவத்தை யுடையதும்
த்ரி கோண ருசிரே –ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் என்று மாயா லஷ்மீ மன்மத பீஜங்கள் மூன்றும் சேர்ந்து கீழ் நோக்கியதொரு த்ரி கோணத்தால்
வர புண்டரீகே–8 அல்லது 24 தளங்களையுடைய வெண் தாமரையிலே
பத்தாசநோ –ஆசனத்தில் வீற்று இருக்கும்
ஜயதி வல்லப சக்கரவர்த்தீ -வல்லப சக்கரத்தின் மதியத்தில் இருக்கும் கண்ணன் விளங்குகிறான்
வல்லப கோபால மந்த்ரம்
க்லீம் கோப வல்லபாய் ஸ்வாஹா –8-
க்லீம் கிருஷ்ணாய ஸ்வாஹா–6-
க்லீம் கோவிந்தாயா ஸ்வாஹா–7–
க்லீம் கோபீ ஜன வல்லபாய் ஸ்வாஹா–11-
நமோ பகவதே கிருஷ்ணாய கோவிந்தாயா கோபீ ஜன வல்லபாய் ஸ்வாஹா
கோபால மந்த்ரம் -ரக்ஷணம் -சர்வ ரக்ஷகனுக்கும் -த்ருஷ்டிக்கு —
பார்வை குழந்தை மேலே படாமல் இருக்க ஆசனத்தில் எழுத்து –
புண்டரீகம் -தஹராசாகம்-புரிதத் நாடி –
வல்லப சக்கரவர்த்தீ –சக்கரம் எந்திரம் -ஆகிய சக்கரத்தில் வர்த்திக்கிறவன் –
கோபால மந்த்ரம் -உபாசனம் -ஞான உபதேசம் பெறுவோம் –
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பு அரியன-தொட்டிலிலே மூன்றும் நிலைகள் -எம்பெருமானார் –
ஜயதி -இந்திரியங்களை வென்று –நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டு அனுபவிக்கிறார் இந்த நிலைகளை –
——————————————————–
குழந்தையாய் இருக்கும் போதே தாய் போல் வந்த பேய்ச்சியை முடித்த வ்ருத்தாந்தத்தை வர்ணிக்கிறார்
ஆம்நாய கந்தி ருதித ஸ்புரிதாத ரோஷ்டம்
ஆஸ்ரா விலேஷண மநுஷண மந்த ஹாஸம்
கோபால டிம்ப வபுஷம் குஹநா ஜனன்யா
ப்ராண ஸ்தநந்த்யா மவைமி பரம் புமாம்சம் –3-(ஆம்நாய கந்தி ருசி ரஸ் புரித–பாட பேதம் )-வஸந்த திலகம் விருத்தம்
ஆம்நாய –வேதத்தின்
கந்திருதித –வாசனையை யுடையவைகளும்
ஸ்புரித–துடிக்கின்றவைகளுமான
அத ரோஷ்டம்–உதடுகளை யுடையவனும்
ஆஸ்ர –கண்ணீரால்
ஆவில–கலங்கிய
ஈஷணம் –கண்களை யுடையவனும்
அநுஷண –அடுத்த ஷணத்திலே
மந்த ஹாஸம்–புன் முறுவலோடு கூடியவனும்
கோபால டிம்ப –இடைப்பிள்ளையின்
வபுஷம் –வடிவத்தை யுடையவனும்
குஹநா ஜனன்யா–வஞ்சனையால் தாயாக வந்த பூதனையின்
ப்ராண ஸ்தநந்த்யம் –பிராணனோடு கூட பாலையும் யுண்டவனான கண்ணனை
அவைமி பரம் புமாம்சம் -பரம புருஷனாக அறிகிறேன்
ஆம்நாய கந்தி ருசி ரஸ் புரித–பாட பேதம் –வேத வாஸனையால் அழகுள்ள என்றவாறு
வேதத்தின் மணம் வீசிக் கொண்டும் – -அழுகையால் துடிக்கும் திரு உதடுகளையும் கொண்டும் –
அழுகையில் வேத மணம் வீசுகிறதாம் -அவன் மூச்சுக்கு காற்றே வேதம் என்று வேதம் சொல்லுமே –
கண்ணீரால் கலங்கிய திருக் கண்களை உடையவனும்
அடிக்கடி ஸ்மிதம் கொண்டவனும் -தாய் போலே வஞ்சித்து வந்த பூதனையின் பாலையும் உயிரையும் ஓக்க பருகியவனுமான
இடைக் குழந்தை கண்ணனை பரம புருஷனாக அறிகிறேன்
ஆம்நாய கந்தி ருதித ஸ்புரிதாத ரோஷ்டம்
ஆம்நாய கந்தி-
வேத மணம் கமழும் –இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் –அர்ச்சையில் கலியன் -இங்கு இவர் விபவத்தில்
பிராணவாராம் ஓதினார் -சரஸ்வதி கீழே பார்த்தோம் –
பசியினால் அழுதாலும் வேதம்
ஆஸ்ரா விலேஷண மநுஷண மந்த ஹாஸம்
கண்கள் கலங்கி -கண்கள் மலர்ந்து –மந்த ஹாஸம் -பூதனை கிட்ட வரவே –
கோபால டிம்ப வபுஷம் குஹநா ஜனன்யா
இடையர் -முடை நாற்றம் -மாயா -பூதனை -இவனும் மாய குழந்தை –
சத்ரு -இராவணன் இலக்குமனை தூக்க முடிய வில்லை -இங்கோ பூதனை குழந்தையை எடுத்து -அநந்ய-காரியாகி வந்ததால்
ப்ராண ஸ்தநந்த்யா மவைமி பரம் புமாம்சம் –
யசோதை போலே வந்த மாயை –ஜகத் குரு விஷத்தை ரசமாக -உயிர் சக்கரை பாலுக்கு சேர்த்து கொண்டான் –
அவதாரத்தில் முதலில் தாடகை -பூதனை –
பால் பருகி பழகாதவன் -கிடைக்காத லாபம் அன்றோ இவனுக்கு –
இந்த அத்புதம் நினைப்பார் பால் குடிக்க வேண்டாமே -அத்புதம் பாலகம் -விசுவாமித்திரர் வந்ததே அத்புதம் என்பர் சக்ரவர்த்தி
ஸ்தம்பே –அத்யத்புதம் -அவதார கார்யம் நடப்பதே அத்புதம்
பேய் முலை –பித்தன் என்றே பிறர் ஏச நின்றான் –
கள்ளத்தினால் வந்த பேச்சி முலை ஈர்த்து உண்ண சுவைத்தான் –
பரம் புமாம்சம் —
பரம புருஷன் என்று அறிந்தேன் –எந்தாய் என்று நினைந்து நைந்தேன்
இருவராய் வந்தார் –என் முன் நின்றார் –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
பரத்வம் பார்த்து அகலுகை இல்லாமல் -இடைச்சிகளை போலே அணுகுவதே -ஆஸ்ரித லக்ஷணம்
பூதனையின் பாலையுண்ட கண்ணனின் சேஷ்டிதத்தை அனுசந்திக்கவே நாம் பாலை யுண்ணும்படி பிறக்கவே வேண்டாம் என்னுமத்தை
யாதவாப்யுதத்தில்
ஸ்தந்யேந கிருஷ்ண ஸஹ பூதனயா ப்ராணான் பபவ் லுப்த புனர் பாவாயா
யதத்புதம் பாவ யதாம் ஜநா நாம் ஸதனந்த்யத்வம் ந புநர் பபூவ-என்று அருளிச் செய்கிறார்
———————————————————-
வஞ்சனைப் பெண்ணைச் சாவப் பாலுண்ட விருத்தாந்தத்தை அனுசந்திக்கவே இவனே பரம புருஷன் என்று நிச்சயித்தார்
இனி இவனிடம் பரத்வம் என்னும் குணம் உண்டு என்கிற எண்ணமே வராமல் செய்யும் வெண்ணெய்க்கு ஆடும்
பிள்ளையின் ஸுலப்யத்தை அனுசந்திக்கிறார்
மானுஷீம் தநும் ஆஸ்ரிதம் பரம் பாவம்
அஜா நந்த மூடா மாம் அவஜாநந்தி
கோபால டிம்ப வபுஷம் –பரமம் புமாம்ஸம் அவைமி –அஹம் வேத்மி மஹாத்மானம் போல் கீழ் அருளிச் செய்து
அவன் கிருபை செய்து அருளால் தனது லீலைகைக் காட்டி அருள பிராதிக்கிறார்
ஆவிர்பவத்வ நிப்ருத்தாபரணம் புரஸ்தாத்
ஆ குஞ்சி தைக சரணம் நிப்ரு தான்ய பாதம்
தத் நா நிமந்த முகரேண நிபத்த தாளம்
நாதஸ்ய நந்த பவனே நவநீத நாட்யம்–4-வஸந்த திலகம் விருத்தம்
அநிப்ருத்த–அசைகின்ற
ஆபரணம்–ஆபரணங்களை யுடையதும்
ஆ குஞ்சித –தூக்கி மடக்கப் பட்ட
ஏக சரணம்–ஒரு திருவடியை யுடையதும்
நிப்ருத–அசையாமல் ஊன்றப்பட்ட
அன்ய பாதம்–மற்ற ஒரு திருவடியை யுடையதும்
நிமந்த –கடைவதால் வரும்
முகரேண -ஓசையை யுடைய
தத்நா –தயிரினால்
நிபத்த –போடப்பட்ட
தாளம்–தாளத்தை யுடையதுமான
நாதஸ்ய –ரக்ஷகனான கண்ணனுடைய
நந்த பவனே –நந்தகோபன் திருமாளிகையிலே
நவநீத நாட்யம்-வெண்ணெய்க்காக ஆடிய நர்த்தனம்
ஆவிர்பவத் புரஸ்தாத்–என் கண் முன்னே தோன்ற வேண்டும்
ஒரு திருவடியை மடக்கி -மற்று ஒரு திருவடியை நிலையாக வைத்து -திவ்ய ஆபரணங்களை அசைத்து –
தயிரை நன்கு கடைவதால் ஏற்படும் ஒலியால் அமைந்த தாளத்துக்கு ஏற்ப குலுங்க
நந்தகோபரது இல்லத்தில் வெண்ணெய்க்காக தலைவன் கண்ணன் செய்த நடனம்
என் கண் முன்னால் காட்சி தந்து கொண்டே இருக்க வேண்டும் –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை நாட்டியம் பிரசித்தம் அன்றோ
ஆவிர்பவத்வ நிப்ருத்தாபரணம் புரஸ்தாத்
மாயை போனவாறே -நிரதிசய அனுபவம் தானே –லீலானுபவம் நேராக பார்க்க ஆசைப்படுகிறார்
காணுமாறு உண்டாகில் அருளே என்றாள் தேவகி அன்றோ –
ஆவிர்பாவம் உண்டாக வேணும் என்கிறார் -நவநீத நாட்யம் அனுபவிக்க வேணும் –
இச்சாம் மோஹம் –ராமம் -சத்ரஜித் -வெண் கொற்றக் கொடையில் மறைந்து தெரியும் திரு முக மண்டலம் சேவிக்க ஆசை
ஆ குஞ்சி தைக சரணம் நிப்ரு தான்ய பாதம் –
திரு ஆபரணங்கள் குலுங்க குலுங்க ஆட -கொலுசு சலங்கை ஒலிக்க-
தலையில் செருகிய மயில் தொகை அசைந்து ஆடி பிரகாசிக்க
திருக் கழுத்தில் உள்ள கோல மா மணி ஹாரமும் முத்துத் காமமும் முடிவில்லதோர் எழிலுடன் பிரகாசிக்க
திருக் காதுகளில் தாழ்ந்து இலகு மகர குண்டலங்கள் வில் வீச
திரு வரையில் பொன்னரை ஞாண் உடன் மாணிக்க கிண்கிணிகள் கல கல என்று ஸப்திக்க
திருவடியில் அணியப்பெற்ற சிலம்புகள் மதுரமாக ஒலிக்க
வாஸ நாறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ -அவனுக்கு கேட்டு ஓடி வரும் படி பஞ்ச லக்ஷம் கோபிகளும் கடைவார்களே
குஞ்சிதக பாதம் -தூக்கி மடக்கின திருவடி -ஒன்றை ஊன்றிக் கொண்டு
தத் நா நிமந்த முகரேண நிபத்த தாளம் -நாதஸ்ய நந்த பவனே நவநீத நாட்யம்—-
நந்த பவனம் -ஆனந்த பவனத்தில் நவநீத நாட்யம் –
தயிர் கடைவதே தாளம் -நாட்டிய ரெங்கம்
நாதஸ்ய–ஸர்வ ஜெகந்நாதானான கண்ணனையே குறிக்கும் படி நாதன் பத பிரயோகம்
வெண்ணெய் போன்ற ஹ்ருதயம் திருடுவானே –மகா பாலி சக்கரவர்த்தி இடம் யாசகம் பண்ணினவன் இடைச்சிகள்
இடம் யாசகம் பண்ணியோ வெண்ணெய் -உணர்வது -அழகாக திருடி உண்ண வேண்டுமே –
பொத்தை உரலை கவிழ்த்து -அதன் மேல் ஏறி –
அடியேன் -மணி அடிக்க வேண்டியது கர்தவ்யம் –அமுது செய்யும் பொழுது –
மணியை அடிக்காமல் பிடித்து அன்றோ உண்ணுவான் –
கவளம் வெண்ணெய்க்கு –
ஆபீர நாட்டியம் –
தும்புரு நாரதர் ஆடாத நவமான நாட்டியம் -இத்தை சேவிக்க ஆசைப்படுகிறார்
—————————————————————————-
யசோதை முதலிய கோபிகள் கண் முன்னே வெண்ணெய்க்கு ஆடிய நர்த்தனத்தால் நந்த பவனம் ஆனந்த பவனமானது என்றார் கீழ்
அடுத்த ஸ்லோகத்தால்
தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்துத் தாழியில் வைத்து யசோதா பிராட்டி அப்பால் போந்தனையும்
ஓராதவன் போல் பொய்யுறக்கம் உறங்கி
பிறகு அறிவுற்று
தாயார் தடம் தோள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்க ஆரம்பித்த ஸர்வ சக்தனான கண்ணன்
முற்றும் விழங்கப்பெற்ற கையும் களவுமாகப் பிடிபட்டு
அன்னை கோல் கொள்ள
தாமரைக்கண் நீர் மல்க பையவே நின்ற நிலையை வர்ணிக்கிறார்–
ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹை யங்க வீனம்
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம்
பாயா தீஷத் ப்ரச லித பதோ நாப கச்சன் நதிஷ்டன்
மித்யாகோப சபதி நயனே மீலயன் விஸ்வ கோப்தா –5-மந்தாக்ராந்தா விருத்தம்
ஸ்வாது –இனிமையான
ஹை யங்க வீனம்–வெண்ணெயை–முதல் நாள் தோய்த்த தயிரைக் கடைந்து எடுத்த வெண்ணெய்க்கு இந்தப் பெயர்-
ஹர்த்தும் –திருடுவதற்காக
கும்பே விநிஹித –குடத்தில் வைக்கப்பட்ட
கர -கையை யுடையவனும்
ஜாத ரோஷாம்–கோபம் அடைந்தவளும்
தாம க்ரஹண –கட்டுவதற்காகக் கயிற்றை எடுப்பதில்
சடுலாம் மாதரம் –பரபரப்பை யுடையவளான தாயான யசோதையை
த்ருஷ்ட்வா –பார்த்து
ஈஷத் –கொஞ்சம்
ப்ரச லித–நகர்கின்ற
பத –திருவடிகளை யுடையவனும் –ஆனால் அந்த இடத்தை விட்டு
நாப கச்சன் -அப்பால் போகாதவனும்
நதிஷ்டன்-ஒரே நிலையில் நிற்காதவனும்
சபதி–உடனே
நயனே -இரண்டு கண்களையும்
மீலயன் –மூடிக் கொண்டவனும்
விஸ்வ கோப்தா–ஸர்வ ஜகத்தையும் காப்பாற்று கிறவனுமான
மித்யாகோப –பொய் இடையனான கண்ணன்
பாயாத் –எல்லாரையும் ரக்ஷிக்கட்டும்
இனிய வெண்ணெயை திருடுவதற்கு குடத்தில் தோள் அளவு கை இட்டவனும் -கோபம் அடைந்து கயிற்றை எடுப்பதற்கு
ஆயத்தமான தாயைக் கண்டு அஞ்சி சிறு அடி பெயர்ந்து ஓடி விட நினைத்து ஒரு திருவடியை சிறிது தூக்கி-
செல்லாமலும் நிற்காமலும் -தடுமாறி -உடனே கண்களை மூடிக் கொண்டு –
பெரிய ஆபத்து வர அத்தை பார்க்க அஞ்சி குழந்தை கண்ணை மூடிக் கொள்ளுமே -அதே போலவே இவனும் மூடிக் கொள்ள –
பொய்யான இடைக்கோலம் பூண்ட ஸமஸ்த லோக சர்வ ரக்ஷகன் கண்ணன் நம்மை ரக்ஷிக்கட்டும்
ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹை யங்க வீனம்-
நாட்டியம் ஆடியும் வெண்ணெய் கிடைக்க வில்லையே -திருடி தானே பெற வேண்டும் —
மாலாகாரர்-உபஜீவனம் -அவன் அன்றோ இவனுக்கு மாலை சாத்தி -சுகர்-இத்தில் ஆழ்ந்து –
திருவடிகளுக்கு கொடுத்த கார்யம் பலன் இல்லை -கைகளுக்கு வேளை திருட -ஸுசீல்யம் அனுபவிக்கிறார் ஸ்வாமி இங்கு –
கும்பத்தில் அன்றோ ஒளித்து வைத்து -தேடி -வேறு ஒரு கலத்திட்டு-விசஜாதீயம்–நிஹித -வி நிஹித –
தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி -அன்றோ –
மோரார் குடம் உருட்டி -அசாரம் தகாத -சாது சங்கமத்தில் கூடாதே –
ஸ்வாது ஹை யங்க வீனம்–
நேற்று கறந்த பாலை காய்ச்சி -கடைந்த புதிய வெண்ணெய் –
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம்-
தான் கை விட்டு பார்க்க வெண்ணெய் காண வில்லை -பிள்ளைக்கு என்ன ஆகும் –
கயிறு தேடி -யசோதை -சலித்து-தானே சங்கோசித்து–தியானம் -எப்படியோ அப்படியே -கட்டுண்டான் என்றதை
ராஜா எதிரிகளை காட்டுவதும் மஹிஷியால் கட்டுண்ணப் பண்ணிக் கொள்வதும் பும்ஸத்வம் தானே –
நினைக்க கட்டு விடுபட -நியாய சாஸ்திரம் வெட்க்கி -மதுர கவி ஆழ்வார் இத்தை அருளிச் செய்ய
நம்மாழ்வார் ஆறு மாசம் மோஹித்தார் அன்றோ –
எழில் கொம்பு தாம்பு கொண்டு –அழுகையும் அஞ்சு நோக்கும் -அந்நோக்கும் –தொழுகையும்
இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
பாயா தீஷத் ப்ரச லித பதோ –
தாவிக் குதிக்கிறான்
நாப கச்சன் நதிஷ்டன் –
ஓடவும் இல்லை போகவும் இல்லை -தயங்கி –அஞ்சன வண்ண அசல் அகத்தார்
பரிபவம் பேச தரிக்கிலேன் -பாவியேனுக்கு இங்கே போதராயே –
மித்யாகோப சபதி நயனே மீலயன் விஸ்வ கோப்தா –
கோபம் மித்யா -இரு கையால் முகத்தை மூடிக் கொண்டு
தான் காணா விடில் அம்மாவும் பார்க்க முடியாது என்று இருப்பவன் -யார் –
விஸ்வ கோப்தா -சர்வ லோக ரக்ஷகன் அன்றோ -அவதாரத்தில் புரை அற்று இருக்கை
இவன் நம்மைக் காப்பாற்றட்டும் என்று பிரார்திக்கிறார்
தத் க்ரது நியாயம் -மாறிப்போய் விட்டதே
எப்படி உபாஸிக்கிறோமோ அப்படியே பலன் என்றது பொய்த்ததே
கட்டுண்ட வ்ருத்தாந்தம் அனுசந்திக்க நமது பிறவிக்கட்டுகள் அவிழ்கின்றனவே-
ஆகவே இந்த நியாயம் லஜ்ஜை அடைந்து ஆரண்ய கதைகளோடையே நின்று விட்டதே என்று
யாதவாப்யுதத்தில்
பத்தம் ததா பாவயதாய முகுந்தம் அயத்ன விச்சேதிநி கர்மா பந்தே
தபஸ்வினி தத் க்ரது நீதி ராத்யா ஸவ்ரீடம் ஆரண்ய கதாஸி தஸ்தவ் –என்று அருளிச் செய்கிறார் –
——————————————————–
கட்டுண்ட கண்ணனை ரக்ஷிக்க பிரார்த்தித்தார் கீழ்
இனி அவன் விஷயத்தில் ஸ்துதிப்பதே கர்த்தவ்யம் என்று நிச்சயித்து ஸ்துதியில் இழிகிறார்
வ்ரஜ யோஷி தபாங்க வேத நீயம் மதுரா பாக்ய மநன்ய போக்ய மீடே
வாஸூ தேவ வதூ ஸ்தநந்த்யம் தத் –கிமபி ப்ரஹ்ம கிசோர பாவ த்ருஸ்யம்–6-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
வ்ரஜ –பிருந்தாவனத்தில் உள்ள
யோஷித-பெண்களுடைய
அபாங்க –கடைக் கண் களால்
வேத நீயம் –இலக்காகக் கொண்டு அடிக்கப் பட்டதும்
மதுரா –வடமதுரைக்கு
பாக்யம் –ஸுபாக்யமாக இருப்பதும்
அநன்ய -மற்று ஓன்று அறியாத பக்தர்களுக்கு-உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் என்று இருக்கும் ஆழ்வார்களுக்கு-
போக்யம் –பரம போக்யமாக இருப்பதும்
வாஸூ தேவ வதூ –வாஸூ தேவருடைய பத்னியான தேவகியினுடைய
ஸ்தநந்த்யம் –இளம் பிள்ளையாய் இருப்பதும்-பாலுண்ணும் குழந்தை -கானுமாகில் அருள் என்ன அனைத்தையும் காட்டி அருளினான் அன்றோ
கிசோர பாவ–பிள்ளைத் தன்மையால்
த்ருஸ்யம்–கண்ணுக்கு இனியதாய் இருப்பதும்
கிமபி-ஒப்பற்றுதுமான
தத் — ப்ரஹ்ம ஈடே –அந்தப் ப்ரஹ்மத்தை ஸ்துதிக்கிறேன்
கோகுலத்தில் இடைப்பெண்களின் கடைக் கண்களால் பார்க்கப் பட்டவனும் -இப்பார்வை அம்பு போலே
பாய்ந்து இவனை அவர்களுக்கு அடங்கச் செய்கிறதே –
பெரும் தவமே வடிவு எடுத்தால் போலே உள்ள -வடமதுரை நகரின் – புண்ய வடிவானவனும்
வேறு தெய்வத்தை நாடாதவர்க்கு இனிமையானவரும் வஸூ தேவர் மனைவி தேவகியின் பாலைப் பருகியவனும்
குழவிப் பருவத்தால் காண அழகானவனும் அற்புதமான அந்த பரம் பொருளான கண்ணனை ஸ்துதிக்கிறேன் –
வ்ரஜ யோஷி தபாங்க வேத நீயம் –
வ்ரஜை ஸ்திரீகளுக்கு -அனுபாவ்யமான அவன் –கண்ணுக்கு விஷயம் ஆனான் –
ஸ்ரீ முகம் பயத்துடன் நோக்கினானாம் -கடைக்கு கண்ணால் பார்வையால் அடி பட்டானே-
ஊரார்கள் எல்லாரும் காண -அன்றோ கட்டுண்டு அடி பட்டான் -உரலோடு தீராத வெகுளியாய் -ஆய்ச்சியர் –
அபாங்க வேத நீயம் –பாடபேதம் -அவர்கள் கடைக் கண்ணால் அறிவிக்கப்படுகிறது-இவர்கள் கண்களால் அறியும்படி நிற்கிறது பரம்பொருள்
பிரணவமே வில் -ஆத்மாவே அம்பு -ப்ரஹ்மமே இலக்கு –அம்பு போல் ப்ரஹ்மத்திடம் அமிழ்ந்து விடும் என்று -உபநிஷத் கோஷிக்கும்
இங்கு கோபிகளின் கண்களுக்குத் தன்னையே இலக்காக்கிக் கொண்டு நிற்கிறதே
மதுரா பாக்ய மநன்ய போக்ய மீடே–ஈடே
ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் -ஏத்தினேன் நான் உய்ய -ஆழ்வார் போலே –
மதுரா பாக்யம் -அநந்ய போக்யம் ஈடே -வடமதுரை அன்றோ பெற்றது -இந்த பாக்யம் –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா யஸ்யாம் ஜாதோ ஜகன் நாத ஸாஷாத் விஷ்ணு ஸநாதந--என்று மஹரிஷிகள் கொண்டாடும்படியான நகரம்
மதுரா அபாக்யம் என்றுமாம் -திருவாயர்கள் அன்றோ பெற்றார்கள்
ஒருத்தி மகனாய் இத்யாதி –தாண்ட காரண்ய -ரிஷிகள் ஆயர் பெண்கள் –நிரதிசய போக்யம் அனுபவிக்க -பரமை ஏகாந்திகள் –
தன்னைத் தானே அனுபவிக்கும் கண்ணன் -ஜென்ம கர்ம மே திவ்யம் -என்றானே –
சக பதன்யா விசாலாட்சி நாராயணன் -பெருமாள் -ஆராதனம் -மூன்று இடத்தில் வால்மீகி விசாலாட்சி சப்த பிரயோகம்
சுக்ரீவன் இத்யாதி பார்க்கும் பொழுதும் -விசாலாட்சி –
புஷ்பக விமானம் -இலங்கை கடாக்ஷிக்க பெருமாள் கேட்டதும் -பக்தனை கடாக்ஷிக்க –
அநந்ய போக்யம் -தனக்கும் போக்யம்
வாஸூ தேவ வதூ ஸ்தநந்த்யம் தத் –
வஸூ தேவரையும் தேவகியும் சேர்த்து அருளுகிறார் –இப்படி கோபிகள் கண்ணடி பாடவோ கண்ணனை கொண்டு விட்டார்கள் -என்கிறார் –
தேவகி பால் கொடுத்ததாக சொல்லி -நந்த கோபர் அஷ்ட வசுக்களில் ஒருவன் -யசோதா பாலைப் பருகினான் என்றுமாம் –
கிமபி ப்ரஹ்ம கிசோர பாவ த்ருஸ்யம்–
பர ப்ரஹ்மம் அன்றோ -கண்ணால் சுடும்படியும் -கட்டவும் அடிக்கவும் படி -கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்-
தத் -ஸத் -ப்ரஹ்ம -ஆத்மா -என்ற பொதுச் சொற்களால் உபநிஷத்துக்கள் கோஷிக்கும் பரப்ரஹ்மம் -பரமாச்சார்யன் அன்றோ இப்படி -தன்னை ஆக்கிக் கொண்டான் -விலக்ஷணம் அன்றோ –
—————————————————–
கீழ் ஸ்துதிக்கிறேன் என்று வாய் படைத்த ப்ரயோஜனத்தை அருளிச் செய்தார்
இனி அவனுடைய நவநீத ஸுசீல்யாதிகளை அனுசந்தித்து என்னுடைய மனம் அவனையே நினைத்துக் கொண்டு இருக்கிறது என்கிறார்
பரிவர்த்தித கந்தரம் பயேந ஸ்மித புல்லாதர பல்லவம் ஸ்மராமி
விட பித்வ நிரா சகம் கயோஸ் சித் விபுலோ லூகல கர்ஷகம் குமாரம்-7-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
பயேந–பயத்தால்
பரிவர்த்தித கந்தரம் –திருப்பப்பட்டு கழுத்தை யுடையவனும்
ஸ்மித –புன் முறுவலினால்
புல்லாதர பல்லவம் –மலர்ந்த தளிர் போன்ற ஆதாரங்களை யுடையவனும்
விபுல உலூகல கர்ஷகம்–பெரிய உரலை இழுத்துச் செல்பவனும்
கயோஸ் சித்-ஓர் இவருடைய
விட பித்வ நிரா சகம் –மரமாக நிற்கும் தன்மையைப் போக்கி அருளியவனும்
குமாரம் -சிறுவனுமான கண்ணனை
ஸ்மராமி -நினைக்கிறேன்
பெரிய உரலை இழுத்தவனும் -பின்னே யசோதை தாய் வருகிறாளா என்று அச்சத்தால் கழுத்தை திருப்பியவனும் –
அவள் தொடரவில்லை -ஏமாற்றி மீண்டோம் என்ற திரு உள்ளத்தால் -ஸ்மிதம் பண்ணி – மலர்ந்த தளிர் போன்ற அதரம் உடையவனும்
அச்சமும் உண்மை இல்லையே -அபிநயம் தானே -இத்தை நினைத்து ஸ்மிதம் என்றுமாம் –
உரலை இழுத்து வரும் பொழுது -மருத மரங்களை முறித்து – யக்ஷர்கள்
குபோரன் புதல்வர்கள் நள கூபரன் -மணிக்ரீவன் ஆடை இல்லாமல் பொய்கையில் நீராட நாரதர் சாபத்தால் மரமானார்கள் –
அந்த சாபம் நீங்கப் பெற்று – இருவருக்கும் — மரப் பிறவியை ஒழித்தவனும்-ஆயர் சிறுவனான கண்ணனை த்யானிக்கிறேன்
பரிவர்த்தித கந்தரம் பயேந –
திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே போனான் -மீண்டும் அடிக்க வருவார்களோ என்று பார்த்து –
திருவடி ப்ரஹ்மாஸ்திரம் கட்டுப் பட்டதாக நடிக்கும் போது அசுரர்கள் தீண்டியது போலே –
ஸ்மித புல்லாதர பல்லவம் ஸ்மராமி –
புன்னகை ஸ்மிதம் உடன் -அர்ஜுன மரங்களை கண்டான் -இளம் தளிர் -பல்லவம் போலே -திரு வதரம்
ஸுசீல்யம் காட்ட வந்த அவதாரம் அன்றோ இது –
விட பித்வ நிரா சகம் கயோஸ் சித் –
மரங்களாக நின்ற நிலைகளை மாற்றி -யவர்கள் அநாதர யுக்தி கயோஸ் சித் -பாகவத அபசாரம் பெற்றவர்கள் அன்றோ
விபுலோ லூகல கர்ஷகம் குமாரம்-
உரலில் கட்டி வைக்க -பெரிய கனமான உரால் -ஆஸ்ரிதர் கட்டினத்தை அவிழ்க்க மாட்டானே -கர்ம பந்தம் முடிப்பவன் –
பக்த பராதீனன் அன்றோ -குமாரன் -பால்ய அவஸ்தையில் -ஸுசீல்யம் நன்றாக காட்டி அருளி -பராகாஷ்டை
ஸ்மராமி –அந்த ஸ்மரணம் மதுரமாக இருந்தது
அதிலேயே சற்று ஊன்றி நிற்கவே அது ப்ரத்யக்ஷமான நிலையை அடைந்து புறக்கண்ணாலும் கண்ணனைக் காண்கிறார்
அவனது பால லீலைகளை எப்போதும் பார்த்துக் கொண்டு தொல்லை இன்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார்
————————————————–
மேல் யமுனை நதிக் கரையில் செய்து அருளிய க்ரீடைகளை அனுபவிக்கிறார்
நிகடேஷூ நிசாமயாமி நித்யம் நிகமாந்தை ரது நா அபி ம்ருக்யமாணம்
யமளார் ஜுந த்ருஷ்ட பால கேளிம் யமுநா சாஷிக யுவனம் யுவா நம் –8-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
நிகமாந்தைர் –உபநிஷத்துக்களால்
அதுநாபி ம்ருக்யமாணம்-இன்னமும் தேடப்படுகிறவனும்
யாமள-இரட்டையாக முளைத்து இருந்த
அர்ஜுந–மருத மரங்களால்
த்ருஷ்ட –பார்க்கப்பட்ட
பால கேளிம் –பால லீலைகளை யுடையவனும்
யமுநா –யமுனையை
சாஷிக –ஸாக்ஷியாகக் கொண்ட
யுவனம் -யவ்வனத்தை யுடையவனுமான
யுவா நம்–யுவாவை
நிகடேஷூ –பக்கத்திலேயே–பன்மை பிரயோகம் -நாலா பக்கமும் கண்ணனைப் பார்ப்பதால் –
நிசாமயாமி நித்யம் –எப்போதும் பார்க்கிறேன்
வேதாந்தங்களால் இப்பொழுதும் தேடப் படுபவரும்-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று தொடக்கத்திலே
தடுமாறி பேசவும் முடியாமல் மீண்டதே -இரட்டை மருத மரங்களால் -சாபம் நீங்கிய பின்பு இருந்து சாஷாத்காரித்தார்களே
இவ்வாறு காணப்பட்ட பால லீலைகளை உடையவரும் யமுனா நதி -ப்ரவாகத்திலும் மடுக்களிலும் கரைகளிலும்
மணல் திட்டுக்களிலும் நேராகப் பார்த்த யவ்வனத் திருவிளையாடல்களையும் -இளமை லீலைகளை உடையவருமான
கண்ணன் எனும் வாலிபன் அருகில் எங்கும் எப்பொழுதும் காண்கின்றேன் –மானஸ சாஷாத்காரம் -என்றவாறு –
நிகடேஷூ நிசாமயாமி நித்யம் –
கிட்டே பார்க்கிறேன் -இங்கும் எங்கும் எங்கும் பார்க்கிறேன் -சேவை நித்தியமாக சாதிக்கிறான் –
நிகமாந்தை ரது நா அபி ம்ருக்யமாணம்-
யதோ வாசோ நிவர்த்தந்தே-வேதம் சொல்ல முடியாமல் -வேதாஸ் சாஸ்திரம் –
ஆரண்யகம் -காட்டிலே திரிகிறான் -பிருந்தாவனம் சரம் –சேவிக்கிறார் -வேதம் பேச முடியாதவனை–
யாமளார் ஜுந த்ருஷ்ட பால கேளிம் –
பால சேஷ்டிதங்களை காட்டி அருளுகிறார் -சாப விமோசனம் -மரமாக இருந்து பால சேஷ்டிதங்களையும் கண்டார்கள் –
நகுல சகாதேவ அர்ஜுனன் நினைவு படுத்த -யாமளா ர்ஜுன-என்கிறார்
யமுநா சாஷிக யுவனம் யுவா நம் –
ராச க்ரீடை சேவை சாதிக்க -யமுனை கரையில் யமுனா தேவி கண்டு அனுபவித்தாள்
கோபிகள் இடம் செய்த க்ரீடை முழுவதும் யமுனா தேவி தானே கண்டாள்
கோபிகள் கண்ணனையே பார்க்க -அடுத்த கோபி யுடன் விளையாடுவதை கண்டார்கள் இல்லையே –
ராச க்ரீடை நிலத்திலும் ஜலத்திலும் பண்ணினான்-யோகேஸ்வரன் -எத்தனை ரூபங்களை கொள்வான் –
சாஷாத் மன்மத மன்மத -மனசை மதனம் பண்ணும் அவன் மனசை மதனம் பண்ணி -நாட்டார் காமன் இடம் படுவதை
காமன் இடம் இடம் படும்படி பண்ணிய திவ்ய மங்கள விக்ரஹன்
நாயகி பாவம் அடைய கோபிகளே காரணம் -மயில் தோகை மகர குண்டலம் அசைய -முக்த அனுபவமே ராச க்ரீடை –
ஜார சோர சிகாமணி இவன் –வேணு கானம் கேட்டு சன்யாசிகளாக வந்தார்கள் -அவ்யபிசார பக்தி யோகம் கொண்ட கோபிமார்கள்-
ராச க்ரீடை தகுமா கேட்க வேண்டாமே-கோபியை முக்தர் துல்யம் ஆக்கும் ஸ்ரீ வேணு கானம் -வேத அபிமான தேவதைகள் -ரிஷிகள் –
காமத்தை ஜெயிப்பதே ராஸ க்ரீடை -ஸ்த்ரீ பிராயர் -பக்தி பெற ராச க்ரீடை ஸ்ரவணம் –
கீழ்ஸ்லோகத்தில் –ஸ்மராமி என்று
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் சங்கினோடும் நேமியோடும் தாமரைக்கு கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –என்கிற ஆழ்வாருடைய நினைவு போல் இருந்தது
இதில்
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும் மன்னு
பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றுடுமே –என்றும்
கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே —என்றும் ஆழ்வார் காண்பது போல் இங்கும்
வேதாங்கமே காண முடியாமல் மீண்டதே –
இவரோ –இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை
இனி அறிந்தேன் காரணம் நீ கற்றவை நீ கற்பவை நீ
நற் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் -என்கிறார்
அவனே தன்னைக் காட்டக் கண்டு -அறிந்தேன் அறிந்தேன் என்று நான்கு முறை –
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -என்கிறவர்களுடைய பேச்சு அன்றோ
யமுனா தேவி கண்ட கண்ணனுடைய யவ்வனம்
பூர்ண சந்திரன் நிலவைப் பொழிய திரு ஆதாரத்தில் குழலூதி
பஞ்ச லக்ஷம் கோபிமார்கள் அனைவரும் செய்து கொண்ட கார்யங்களை அப்படியே விட்டுவிட்டு கூடி மகிழ
இவனும் இரண்டு பங்கு பஞ்ச லக்ஷம் வடிவு கொண்டு அவர்கள் கார்யங்களைத் தொடர்ந்து செய்து கொண்டே
இவர்களுடன் ராஸ லீலை செய்து மகிழ்ந்ததை யமுனா தேவி கண்டாள் அன்றோ
நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறுமாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 – –
மற்றவர் கண்ணனுக்கு பாலகனாகத் தோன்றினாலும்
கோபிமார்களுக்கு யவ்வனம் காட்டி அருளியதையும்
யமுனா தேவியும் கண்டு மகிழ்கிறாள் அன்றோ
காருண்ய கர்பூர கடாக்ஷ நிரீஷணேந
தாருண்ய ஸம் வலித சைஸவ வைபவேந
ஆ புஷ்ணதா புவனம் அத்புத விப்ரமேண
ஸ்ரீ கிருஷ்ண சந்த்ர சிசிரி குரு லோசனம் மே –ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்
ஹே கிருஷ்ண சந்த்ர -லீலைகள் செய்யும் போது எல்லாம் உனது திருக்கண்களின் கடாக்ஷங்கள் எல்லாம் கருணையே நிரம்பி இருந்தன –
யவ்வனமும் குழந்தைப் பருவமும் சேர்ந்தே பிரகாசித்திக் கொண்டு இருந்தன –
இப்படிப்பட்ட ஆச்சர்யமான லீலைகளால் எனது கண்களைக் குளிரும்படி செய்து அருள் கண்ணா -என்கிறார் இதில் –
யமுனை யவ்வனத்துக்கு ஸாக்ஷி -மருத மரங்கள் பால்யத்துக்கு ஸாக்ஷி -இரண்டையும் கண்ட கோபிகள் போல் தேசிகரும் கண்டு அனுபவிக்கிறார்
யுவா குமாரா –யுவதிச்ச குமாரிணீ அன்றோ மிதுனமும் நித்தியமாக இங்கும் அங்கும் –
————————————————
மேல் திருமேனி சவுந்தர்யத்தையும்
அதிலும் வேணுகோபாலனாக ஸேவை சாதித்து அருளுவதையும் மேல் சில ஸ்லோகங்களால் அனுபவிக்கிறார்
குழலூதும் கோபாலனாக அவன் ஸேவை சாதித்து குறுக்கு வழியில் மோக்ஷம் அளித்து அருளுவதை இந்த ஸ்லோகத்தால் அனுபவிக்கிறார் –
பதவீ மதவீ யஸீம் விமுக்தே அடவீ சம்பதமம் புவா ஹயந்தீம்
அருணா தர சாபிலாஷ வம்ஸாம் கருணாம் காரண மாநுஷீம் பஜாமி -9-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
விமுக்தே–மோக்ஷத்திற்கு
அதவீ யஸீம்–சுற்றில்லாத அதாவது நேராக இருக்கும்
பதவீம் -வழியாக இருப்பதும்
அடவீ –பிருந்தாவனத்தின்
சம்பதம் –செழிப்பான தன்மையாகிற செல்வத்தை
அம்புவாஹயந்தீம்–நீருண்ட மேகத்தோடு கூடியது போல் செய்வதும்
அருணாதர –சிவந்த உதடுகளிலே
சாபிலாஷ –ஆசையோடு கூடிய
வம்ஸாம் –புல்லாங்குழலை யுடையதும்
காரண–ஒரு காரணத்தால்
மாநுஷீம்–மனுஷ்ய ரூபம் எடுத்து வந்து இருப்பதுமான
கருணாம் பஜாமி–கருணையை ஆஸ்ரயிக்கிறேன் –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று மோக்ஷத்துக்கு மிக அருகில் உள்ள எளிய வழியும் தானே ஆனவனும் –
பிருந்தாவன செல்வத்துக்கு மேகம் போன்றவனும் –
இவனது கருணா கடாக்ஷத்தால் க்ஷேமகரம் அனைத்துக்கும் அன்றோ –
செந்நிறத்த திரு அதரத்தில் ஆசை கொண்ட திருப் புல்லாங்குழலை உடையவனும்
ஸமஸ்த ஜகத்துக்கும் சகல காரணமானவனும் சகல மனுஷ நயன விஷயமாவதற்காக
சாது ரக்ஷணத்துக்கும் பூ பாரம் நீக்கவும் ஆயர் பிள்ளையாக திரு அவதரித்து அருளிய
கண்ணனின் கருணையைத் தொழுகிறேன் –
பதவீ மதவீ யஸீம் விமுக்தே
முக்தர்கள் -உபாயமே கருணையே -சித்த உபாயம் –
அடவீ சம்பதமம் புவா ஹயந்தீம்
ஆழி மழை –சர மழை போல் –எம்பெருமானே மேகம் இங்கே -நீருண்ட மேகம் போலே -உள்ளேயே புகுந்து -கிருஷ்ண மேகம்
கருணா வார்ஷூக –காலே காலே -சோபையன் தண்ட காரண்யம் -வனம் ஸ்ரீ மத் ஆனதே -சித்ர கூடம் பெற்ற ஸுபாக்யம்
திருவடிகளில் உள்ள சங்கு சக்ராதி ரேகைகளால் அலங்க்ருதமான தண்ட காரண்யம்
குணமும் அதற்கு ஆதாரமான விரக்தியும் என்று வேறே வேறே இல்லாமல்
கருணையே மநோ ஹராமான ரூபம் எடுத்து கண்ணன் ஆனதே
கருணை யம் கடலாகவே இவன் உள்ளான் –
அருணா தர சாபிலாஷ வம்ஸாம்
மூங்கில் -அதர அம்ருதம் பானம் பண்ண ஆசை கொண்டு -அசேதனங்களும் ஆசைப்படும் சிவந்த அதரம்-கீழே ராச க்ரீடை பேச
அத்தை அனுசந்தித்து சிவந்த -தாம்பூலம் பரிமாறி சிவந்த அதரம் -இத்தை ஆசைப்பட்ட தாம் புல்லாங்குழல் -பரஸ்பர பாகவத பிரபாவம்
சேஷிகளை சேஷிகள் உகக்க வேண்டுமே -தேசிகனும் ஆசை கொண்டார் இதில் –
கருணாம் காரண மாநுஷீம் பஜாமி –
பிரத்யக்ஷமாக சேவை சாதித்து -தரிசன சாமானாகாரம் -ஆன பின்பு கைங்கர்யம் பண்ண வேண்டுமே –
கருணையும் கண்ணனும் ஒன்றே -பரம காருணிகன்-ஜகத் காரணமே மனுஷனாக வந்து -தன் கருணையால் மோக்ஷம்
ஆஸ்ரித ரக்ஷணமே அவதார பிரயோஜனமும் -சர்வ ரக்ஷகத்வம் -அகாரார்த்தம் -கருணையே மூர்த்தியாக அவதரித்து
ஸ்த்ரீ லிங்க பிரயோகம் -கருணை க்ஷமை -யுவா யுவதி -துல்யம் –
ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் மட்டுமே அல்லால் ஸகல மனுஷ நயன விஷய தாங்கரனாக திருவவதரித்து
நீர்மையை அனுபவிக்க நித்ய ஸூரீகள் மரம் கொடி புல் பூண்டாய் இங்கு வர அவர்களை அனுபவிக்கும் படி செய்து அருள
பதினாறாமாம் ஆயிரவர் தேவிமார் பார்த்து இருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன் தன் வாய் அமுதத்தைப் பருக ஆசைப்பட்ட
புல்லாங்குழலில் மநோ ரதத்தை நிறைவேற்றி அருளி
உலகோரை எல்லாம் குணங்களாலும் அழகாலும் வசப்படுத்தி அவர்கள் துன்பத்தைப் போக்கி இன்பத்தை அளித்து அருளவே
கருணையே உருவானவன் -அன்றோ –
பஜாமி –
ராஸ க்ரீடை ஆடி களைத்த கண்ணனுக்கு கைங்கர்யம் செய்ய ஆசை கொள்கிறார் –தேசிகர் –
ஆளும் ஆளார்–ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -பின் செல்வார் மற்று இல்லை —
நாளும் நாளும் -கைங்கர்ய பிரார்த்தனை பராங்குச நாயகிக்கு
இங்கே தேசிகர் பெற்று மகிழ்கிறார் பஜாமி என்று
—————————————————–
கீழ் ஸ்லோகத்தில் சி கிருஷ்ணனை ஆஸ்ரயிக்கிறேன் என்றார்
ஆஸ்ரயணத்துக்குப் பிரயோஜனம் கண்ணனுடைய திருமேனி அழகை அனுபவிப்பது
அதை அவனே கொடுக்க வேண்டும் என்று அடுத்த மூன்று ஸ்லோகங்களாலே பிரார்த்திக்கிறார்
அதில் அடுத்த ஸ்லோகத்தால் அவனுடைய எழில் கொள் உருவம் எனது மனதில் திகழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்
அநிமேஷ நிஷே வணீய மஷணோ அஜஹத் யவ்வன மாவி ரஸ்து சித்தே
கல ஹாயிதே குந்தளம் கலாபை கரணோன் மாதக விப்ரமம் மஹோ மே -10-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
அஷணோ -இரண்டு கண்களுக்கும்
அநிமேஷ -இமை கொட்டாமல்
நிஷே வணீயம் –அனுபவிக்கத் தக்கதும்
அஜஹத் –நீங்காத
யவ்வன –யவ்வனத்தை யுடையதும்
கலாபை–மயில் தோகைகளோடு
கல ஹாயிதே –சண்டை இடுகின்ற
குந்தளம் –கேசங்களை யுடையதும்
கரண-இந்திரியங்களை
உன் மாதக-பிச்சேற்ற வல்ல
விப்ரமம்–விளையாட்டுக்களை யுடையதுமான
மஹஸ் -தேஜஸ்
மே ஸித்தே ஆவி ரஸ்து –என்னுடைய மனதில் தோன்ற வேண்டும் –
கண்களால் இமை கொட்டாமல் அனுபவிக்க ஏற்றவனும் -நித்ய யுவா குமாரன் ஆனவனும் –
இமைக்கும் பொழுது உண்டாகும் இழவு பொறுக்க ஒண்ணாதே
மயில் தோகைகளோடு போட்டியிடும் திருக் குழல் கற்றையை உடையவனும் இந்திரியங்களை
பித்துக் கொள்ளச் செய்யும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடையவனுமான கண்ணனின் தேஜஸ்ஸூ –
பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மணம் வழங்கும் கண்ணன் அன்றோ
இப்படி அழகு வெள்ளமிடும் ஜோதிஸ்ஸூ – திரு வடிவம் என் உள்ளத்தில் என்றுமே அகலாமல் தோன்ற வேண்டும்
அநிமேஷ நிஷே வணீய மஷனோ-
கண்ணுக்கு சேவிக்க ஆசை மிக்கு -கண்ணாலே பருக -த்வரை மிக்கு -கண் கொட்டாமல் சேவிக்க -ஆசை கொண்டார் –
சாலோக்யம் சாரூப்பியம் சாயுஜ்யம் -நாம் ஆசைப் பட்டது போலே அவனும் நம்மைப் போலே –
அனுபவிக்க ஆசைப் பட்டு வந்தவன் அன்றோ கிருஷ்ணன் –
யாமளார் ஜூனர் யமுனை நதி அனுபவித்தார்கள் -நாம் இழப்பதோ-நித்ய ஸூரிகள் போல் ஸதா பஸ்யந்தியாய இருக்க வேண்டிய தேஜோ ரூபம்
அஜஹத் யவ்வன மாவி ரஸ்து சித்தே –
யுவா குமாரா அன்றோ -நித்ய யுவா -அனுபவிக்க இவரும் யுவதி யாக மாறி -மயங்கி –
கல ஹாயிதே குந்தளம் கலாபை
முன் உச்சி மயில் தோகை -நெற்றி மயிர் காந்தி -கலந்து -விஞ்சி -சேவை சாதிக்க -அழகில் ஈடுபட்டு
கரணோன் மாதக விப்ரமம் மஹோ மே
மயக்கும் தேஜஸ் -நீ சேவை சாதிக்க வேண்டும் -என் கரணங்கள் உன்மாதகம் அடைந்தன –
காற்றையும் கழியையும் கட்டி அழுத்த பராங்குச நாயகி போலே
விரஹத்தால் தவிக்க -உன் திரு மேனி சேவை ஒன்றாலே போக்க முடியும் –
ஆவிரஸ்து -கோபிகளுக்கு காட்டி அருளினால் போலே -என்கிறார் –
நீ என்னை அன்றி இல்லையே -சேஷ பூதன் கைங்கர்யம் கொள்ள வேண்டுமே –
சேஷிக்கு அதிசயம் விளைக்கவே சேஷ பூதன் கைங்கர்யம் –
—————————————————-
இதில் கருணை பொழியும் திருக்கண்களால் அவன் கடாக்ஷித்து ரக்ஷித்து அருளப் பிரார்த்திக்கிறார்
அநுயாயி மநோஜ்ஞ வம்ச நாளை -அவது ஸ்பர்சித வல்லவீ விமோஹை
அநக ஸ்மித சீத ளைரசவ் மாம் அநு கம்பா சரிதம் புஜைரபாங்கை -11-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
அநுயாயி –பின் தொடர்ந்து வருகிற
மநோஜ்ஞ –மனத்தைக் கவர்கிற
வம்ச நாளை -புல்லாங்குழலை யுடையவையும்
ஸ்பர்சித –கொடுக்கப்பட்ட
வல்லவீ –கோபிகளுக்கு
விமோஹை–மோஹத்தை யுடையவையும்
அநக ஸ்மித –தோஷமற்ற புன் சிரிப்பினால்
அபாங்கை–கடாக்ஷங்களால்
சீத ளை–குளிர்ச்சியாக இருப்பதையும்
அநு கம்பா சரித் -கருணையாகிய நதிக்கு
அம் புஜைர் -தாமரைகளாக இருப்பவையுமான
அசவ் -இவன்-சுட்டால் கண் முன்னே தோன்றி அருளியது தோன்றும்
மாம் அவது –என்னை ரக்ஷிக்கட்டும்–மாம் என்று எளிமையையும் விருப்பத்தையும் சொன்னபடி
இனிய திருக் குழலின் ஓசையைப் பின் தொடர்பவனும் இடைப்பெண்களுக்கு மயக்கம் தருபவனும்
கபடம் அற்ற புன்னகையால் குளிர்ந்து இருப்பவனும் கருணா நதியில் மலர்ந்த அரவிந்தம் போலே உள்ள
கடைக்கண் கடாக்ஷ வர்ஷத்தால் இந்தக் கண்ணன் அடியேனை ரக்ஷிக்கட்டும்
அநுயாயி மநோஜ்ஞ வம்ச நாளை
அழகான குழல் -மனஸ் -அறியும் -அவன் நினைவை அறிந்து -கடைக் கண் அனுசரித்து –
அந்த கோபி இடம் வேணு கானம் ஒலியும் செல்லுமாம்
ஊதும் அத் தீம் குழற்க்கே உய்யேன் -நம்மாழ்வார் —அது மொழிந்து –தூது செய் கண்கள்கொண்டு ஓன்று பேசி
பிரணய ரோஷம் போக்க –நீச பாஷாணங்கள் குழல் வழியே -பேசி —
அவது ஸ்பர்சித வல்லவீ விமோஹை
கண் பார்வை மயக்கும் -குளிர்ந்து -கவர்ந்து -கோ பறவைகள் மரங்கள் மான்களையும் மயக்கும் –
அவது-
கடாக்ஷம் என்னை காக்கட்டும் –
அநக ஸ்மித சீத ளைரசவ் மாம்
குற்றம் அற்ற ஸ்மிதம் -மந்தஹாசம் -வல்லப ஜன வல்லபன் -அசவ் மாம் -எதிரே நிற்கிறான் –
அநு கம்பா சரிதம் புஜைரபாங்கை —
தாமரை கண்கள் -கருணை யாகிய நதியில் தோன்ற அம்புஜம் அன்றோ -கம்பீர -இத்யாதி –
அபாங்கை –
கண் பார்வையை பின் செல்லுமாம் வேணு கானம்
வேணு கானம் -கேட்ப்பார்க்கு மோகம் உண்டாக்கும் –
மருண்டு மான் கண்கள் மேய்க்கை மறந்து –எழுது சித்ரங்கள் போல் நின்றனவே
வேணு கானம் இசைத்தோ கடாஷித்தோ அருளட்டும் நேராக சேவை சாதிக்கா விடில் -என்கிறார்
செவி உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து எங்கும் விடாரே –
இவன் என்ற நமது துன்பங்களை போக்கி அருள கருணையும்
தாபத்தைப் போக்க தண்ணளியும்
பாபங்களை அழிக்க தூய்மையும்
இதர விஷயத்தில் திரியும் நம்மை தன் பக்கம் இழுத்து வசப்படுத்த அழகும்
இவ்வாறு அனைத்திலும் தகுதி உள்ள அவன் ரஷ்ய வஸ்து வான அடியேனை ரஷித்து அருளட்டும் –
துர்வார தீவ்ர துரித ப்ரதி வாவதூகை ஒவ்தார்யவத்பி அநேக ஸ்மித தர்ச நீயை
தேஹஸ்ய தீஸ்வர தயா பரிதை அபாங்கை வாஸம் வி நாபி வதஸீவ மயி ப்ரஸாதம் –ஸ்ரீ தேவ நாயக பஞ்சகம்
ரக்ஷணத்தில் உத்ஸாஹம் உள்ளவையும் -அழகிய தாமரை போன்றவையும் -ஆனந்தத்தையும் வாசனையையும் பெருக்குமாவையும்
அன்பு ததும்பும் வார்த்தைகளை உட்க்கொண்டவையும் அமுத வர்ஷம் போன்றவையுமான உனது கடாக்ஷங்கள் என்னை நனைத்து விடுகின்றன –
விஸ்வ அபி ரக்ஷண விஹார க்ருதஷணைஸ்தே வைமா நிகாதிப விடம்பித முக்த பத்மை
ஆமோ தவாஹிபி அநாமய வாக்ய கர்பை ஆர்த்ரீ பவாமி அம்ருத வர்ஷ நிபை அபாங்கை –ஸ்ரீ ஸ்துதுயிலும்
பெரிய பிராட்டியாரின் கடாக்ஷங்களும் இவ்விதமே பெருமை உள்ளவையாய் இருக்கும்
அவற்றில் தயை வாத்சல்யம் ஸ்நேஹம் இனிமை தூய்மை ஆகிய குணங்கள் எல்லாம் நிரம்பி இருக்கின்றன
ஸாநுப்ராஸ பிரகடித தயை சந்த்ர வாத்சல்ய திக்தை அம்ப ஸ்நிக்தை அம்ருத லஹரீ லப்த ஸ ப்ரஹ்மசர்யை
கர்மே தாபத்ரய விரசிதே காட தப்தம் ஷணம் மாம் ஆகிஞ்சன்ய க்லபிதம் அனகை ஆர்த்ரியேதா கடாகஷை
கருணை ததும்பும் கண்களால் குளிர நோக்கி அடியேனைக் காத்து அருள வேண்டும் என்று பிரார்திக்கிறார்
——————————————————–
கண்ணனுடைய அழகு கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதுக்கு இனிமையும் தருவதனால்
அவனைப் பற்றிய எண்ணங்களே நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் –
முக்யமாகக் கடைசிக் காலத்தில் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் –
அத ராஹித சாரு வம்ச நாளா மகுடா லம்பி மயூர பிஞ்ச மாலா
ஹரி நீல சிலா விபங்க நீலா பிரதிபா சந்து ம மாந்திம ப்ரயாணே-12-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
அத ராஹித –அதரத்தில் -உதட்டினில் -வைக்கப்பட்ட
சாரு வம்ச நாளா –அழகிய வேய்ங்குழலைப் பற்றியவைகளும்
மகுட –திரு முடியில்
ஆலம்பி –தொங்கிக் கொண்டு இருக்கிற
மயூர பிஞ்ச மாலா–மயில் இறகுகளின் வரிசையைப் பற்றியவைகளும்
ஹரி நீல சிலா –இந்த்ர நீலக்கல்லின்
விபங்க –புதிய துண்டினுடையது போன்ற
நீலா –நீல நிறத்தைப் பற்றியவைகளுமான
பிரதிபா –எண்ணங்கள்
மம –என்னுடைய
அந்திம ப்ரயாணே–கடைசியாகப் புறப்படுகிற ஸமயத்தில்
சந்து-இருக்க வேண்டும் –
அழகிய திருப் புல்லாங்குழலை திரு அதரத்தில் வைத்து உள்ளவனாகவும் திரு முடியில் சரிந்து இருக்கும்
மயில் பீலியை உடையவனாகவும் இந்திர நீல மணி துண்டம் போலே -வேணு கோபாலனது
நீல நிர திவ்ய மங்கள விக்ரஹ ஸ்ம்ருதி எனது அந்திம காலத்திலும் இருக்க அருள் செய்வாய்
அத ராஹித சாரு வம்ச நாளா
நாரதர் பாடும் ஸ்லோகம் இது என்பர் -புத்திரர் லவகுசர் ஸ்ரீ ராமாயணம் அருளியது போல –
பேரன் நாரதர் பாடும் – இது
உதட்டில் பட்டு அதர அமிருதம் பெற்ற மூங்கில் போலே தனக்கும் பெற வேண்டும் –
ஸ்ரீ சங்கு ஆழ்வானும் அனுபவித்தது போலே -தம் புத்திக்கும் இது வேண்டும் என்கிறார் –
மகுடா லம்பி மயூர பிஞ்ச மாலா
கிரீடத்தில் மயில் தோகை சாத்தி கொண்டு -அழகுடன் சேவை சாதிக்க -அனுபவிக்கிறார்
ஹரி நீல சிலா விபங்க லீலா
இந்திரா நீல கல் வண்ணம் -இந்த சேவை நித்தியமாக இருக்க வேண்டும் -திரு முடி சேவித்து திரு மேனி அனுபவம் இதில் –
பிரதிபா சந்து ம மாந்திம ப்ரயாணே
பகவத் த்யானம் மாறாமல் இருக்க வேண்டும் -பிரபன்னருக்கு அந்திம ஸ்ம்ருதி உபாயமாக வேண்டாம் -பல ரூபம் தானே
அனவதிக அதிசய பிரியா -நித்ய கிங்கரோ பவது —
தாக சாந்திக்கு அதர ஸ்பர்சம் வேண்டும் -வேணு கானம் கரண மந்த்ரம் -கண்ட அம்சம் தானே நான் –
புல்லாங்குழல் உடன் சஜாதீயன் என்கிறார் –
எண்ணங்கள் பிரதிபா உன்னை பற்றியே இருக்க வேண்டும் –
நினைத்து அனுபவித்துக் கொண்டே இருக்க பிரார்த்திக்கார்
கண்ணனின் வாய் அமுதினை உண்ணும் புல்லாங்குழலும் சைதன்ய வஸ்துவே
ஆச்சார்யரது ஞானம் அதன் மேல் காதல் கொண்டு அதைத் தனக்கு விஷயமாகப் பெற விரும்புகிறது
அதற்கும் மேல் அவன் அணிந்து கொண்டு இருக்கும் கருங்கண் தோகை மயில் பீலி தனது ஞானத்தில் தோன்ற வேண்டும் என்கிறார்
தாமரை நாண் மலர் போன்ற திருக்கண்கள்
கற்பகக்கொடி போன்ற திருமூக்குக் கோலம்
திறள் பவளக் கொழும் துண்டம் போன்ற தொண்டை -வாய்
மதனன் கரும்புச் சிலை போன்ற திருப்புருவம்
சுடர் வெண் மீன் போன்ற தூய முறுவல்
மகரம் தழைக்கும் தளிர் போன்ற திருக்குண்டலக் காதுகள்
குளிர் வான் பிறை போன்ற திரு நெற்றி
கொழும் சோதி வட்டம் போன்ற கோளிழை வாண் முகம்
இந்த அழகுக்கு சிகரம் வைத்தது போல் மயில் தோகை செருகப்பட்ட திரு முகமே எனது ஞானத்துக்கு விஷயமாக வேண்டும் என்கிறார்
சங்கல்ப ஸூர்யோதத்தில் இந்த கோபால விம்சதியில் உள்ள ஐந்து ஸ்லோகங்களும் உண்டு
அவற்றுள் இதுவும் ஓன்று
நாரதர் வீணையை மீட்டிக்கொண்டு இந்த ஸ்லோகத்தை மதுரமாகப் பாடிக்கொண்டு பிரவேசிக்கிறார் அதில்
————————————————————–
சரீரத்தை விடும் போது கண்ணனுடைய எழில் உருவம் தோன்ற பிரார்த்தவர்
ஒரு காலத்தைக் குறிப்பிட்டுச் சொன்னது தப்பைச் சொன்னோம்
நான் ஆசைப்படுவதற்கு முன்பே கண்ணன் ஸூந்தரமான ரூபத்துடன் எப்போதுமே என் கண் முன்னே நின்று
தன்னைக் காணும்படி அருளுகிறார்
என்னே அவன் கருணை என்னே என் பாக்யம் என்று ஆச்சர்யப் படுகிறார் –
அகிலா நவலோக யாமி காலான் மஹிள தீன புஜாந்த ரஸ்ய யூன
அபிலாஷ பதம் வ்ரஜங்கா நாநாம் அபிலா பக்ரம தூரமாபி ரூப்யம் -13-ஓவ்ப சந்தஸ்ஸு விருத்தம்
மஹிளா –உத்தம ஸ்திரீயான ஸ்ரீ லஷ்மீ தேவிக்கு
அதீன-அதீனமாய் இருக்கும்
புஜாந்த ரஸ்ய–திரு மார்பை யுடைய
யூன–யுவாவான கண்ணனுடைய
வ்ரஜங்கநாநாம் -பிருந்தா வனத்தில் உள்ள சிறுமியருடைய
அபிலாஷ –ஆசைக்கு
பதம் –இலக்காக இருப்பதும்
அபிலா பக்ரம–வர்ணிக்கப்படும் நிலைக்கு
தூரம் -அப்பால் பட்டதுமான
ஆபி ரூப்யம்–ஸுந்தர்யத்தை
அகிலான் காலான் –எல்லாக் காலங்களிலும்
அவ லோகயாமி –பார்க்கிறேன் –
ஸ்ரீ மஹா லஷ்மிக்கு கோயில் கட்டணமான-அவள் ஏக போகமாக அனுபவிக்கும் – திரு மார்பு –
யுவா குமாரா -கோபிமார்கள் பிராவண்யத்தை வர்த்திப்பவன் -திவ்ய சேர்த்தி ஸுந்தர்யம் வாசா மகோசரம் அன்றோ –
அழகனை சதா சாஷாத்காரித்து ஈடுபட்டு சேவித்துக் கொண்டு இருக்க அருள வேண்டும்
அகிலா நவலோக யாமி காலான்
எல்லா காலமும் -சதா தத் பாவம் –
அகிலான் காலம் அவலோகயாமி –
ஒவ் ஒரு நொடியும் உன்னையே நான் பார்க்க வேண்டும்
அகிலான் காலான் –
பன்மையில் –தைலதாரா -யோ நித்யம் அச்சுத பாதாம் புஜ யுக்ம ருக்ம -போலே –அவலோகயாமி நிகழ் காலம்
மாரீசனுக்கு ரா ஸ்ம்ருதி போலே இருக்க வேண்டும் –
அன்பினால் தரிசன சமானாகாரம் -அவனுக்கு பயத்தினால்
மஹிள அதீன புஜாந்த ரஸ்ய யூன
பிராட்டிக்கு அதீனமான திரு மார்பன் -ஸ்ரீ யபதித்தவம் சொல்லி -யுவா –யூன-ஸ்ரீ யா ஆலிங்கனம் செய்த திரு மார்பு
தத்வ சந்தனம் -ப்ரஹ்மணீ ஸ்ரீ நிவாஸே–ஸ்ரீ ரத்னம் -ஸ்ரீ கௌஸ்துபம் உள்ள திரு மார்பு அன்றோ –
பராதீனம் -பிரணத பரதந்த்ரன் அன்றோ நீயும் –
அரவிந்த பாவையும் தானும் உள்ளே புகுந்து -ஸ்தாவர பிரதிஷ்டையாக வந்து இருப்பானே –
அபிலாஷ பதம் வ்ரஜங்கா நாநாம்
கோபிகள் அனுபவிக்கும் அழகன் -கோபாலன் -பாவனையே நித்தியமாக இருக்கும் படி அருள வேணும்
அன்புக்கு பாத்திரமாக இருப்பானே -ஏகாந்த வல்லபன் -கோபிகள் அனுபவிக்கும் மிதுனம் -ஸுசீல்ய பரா காஷ்டை
பிராட்டி திரு ஆணை தன் திரு ஆணை -கொண்டு பிரார்த்திப்பார்கள் –
அபிலா பக்ரம தூரமாபி ரூப்யம் –
அப்படிப்பட்ட அழகை நித்யமும் சேவிக்க ஆசைப்படுகிறார் -ஆபிரூப்யம் -லாவண்யம் –அச்சோ ஒருவர் அழகிய வா
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணினுள்ளே தோன்றினார் -கரும்பு அன்னவனை
கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே –
நீல மேனி ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததவே
தேசிகர் உடன் சேர்ந்த பின்பு அழகு விஞ்சி -கோபிகள் ஆசைப்பட்டு விரும்பும் படி –
ஆசையினால் ஆவியை ஆகுலம் செய்யும் என்பார்கள் –
பூர்ண சம்ஸ்லேஷம் -அழகில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
———————————————————————-
கீழ் புறக் கண்ணுக்கு நித்ய விஷயமாகக் காட்டி அருளினான் என்றார்
இதில் அவன் இவருடைய அகக் கண்ணுக்கும் விஷயமாகத் தானே தோன்றி அருளுகிறார் என்கிறார் –
ஹ்ருதி முக்த்த சிகண்ட மண்டை நோ -லிகித கேந மமைஷ சில்பி நா
மத நாதுர வல்ல வாங்கநா வத நாம் போஜ திவாகரோ யுவா –14-யோகினி விருத்தம்
முக்த்த –அழகிய
சிகண்ட-மயில் தோகையை
மண்டை நோ-ஆபரணமாக உடையவனும்
மத ந–மன்மதனால்
ஆதுர–துன்புற்ற
வல்ல வாங்கநா-கோப ஸ்த்ரீகளுடைய
வதந–முகமாகிற
அம் போஜ-தாமரைக்கு
திவாகர-ஸூர்யன் போன்றவனுமான
ஏஷா –இந்த
யுவா –வாலிபனான கண்ணன்
கேந சில்பிநா –எந்த சில்பியினால்
மம ஹ்ருதி –என்னுடைய ஹ்ருதயத்தில்
லிகித -எழுதப்பட்டு இருக்கிறான்
அழகிய மயில் தோகையை சூடியவனும் -ப்ரணயத்தால் பீடிக்கப்பட்ட கோபிகளின் முகத் தாமரைக்கு ஸூர்யன் போன்றவனும்
இந்த யுவா குமாரன் அடியேன் திரு உள்ளத்தில் எந்த சிற்பியால் பிரதிஷ்ட்டிக்கப் பட்டானோ –
தானே அடியேனை இசைவித்து உள்ளம் புகுந்து அத்தாலே பெறாப் பேறு பெற்றால் போலே
ஹ்ருஷ்டனாக சேவை சாதிக்கின்றான்
ஹ்ருதி முக்த்த சிகண்ட மண்டை நோ –
அழகிய -மயில் தோகை -அலங்காரம் கொண்டு–மயில் தோகை தான் படைத்த பயனைப் பெற்றது இவன் உடன் சம்பந்தித்ததும் – –
லிகித கேந மமைஷ சில்பி நா
சித்திரம் எழுதப் பட்டதே என் ஹிருதயத்தில் –என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –
சஞ்சலம் ஹி மனஸ் –
அறிந்தேன் அவனை நானே –காசி தவள வாஹிந கங்கை- கா சிதள வாஹினி கங்கா -சாடு
ககா கிம் எம்பெருமானை குறிக்கும் -கேன -கண்ணனே தன்னைத் தானே எழுதினான் -பாவனா -எண்ணம் ஆகிய சுவர்
அகண்ட ப்ரஹ்மாண்ட -பிரதம தர சில்பி -மயனோ த்வஷ்டாவோ இல்லை –பத்மா சஹாயா –தத் இங்கித பராதீனன் –
மம ஏஷ சில்பினா -மனசான கண்ணால் சித்திரம் பார்த்தார் –
யோகிகளுக்கு பிரத்யக்ஷம் ஆவான் -தாம் ஆசைப்பட்ட படியே -நித்யம் சேவிக்க –
லிகித கேந மமைஷ சில்பி நா-ஓவியத்து எழுத ஒண்ணாத ரூபத்தை அன்றோ அடியேனுடைய ஹ்ருதயத்தில் சித்தரித்து இருக்கிறான்
எழுத முடியாத ஒன்றை சஞ்சலமான அடியேன் ஹ்ருதயத்தில் எழுத ஸர்வ ஸக்தனாக வேண்டுமே
கேந -பகவானால் தான் முடியும் என்றுமாம்
மத நாதுர வல்ல வாங்கநா
ஆசை கொண்ட கோபிகள் -முகம் தாமரை -மலர –
வத நாம் போஜ திவாகரோ யுவா
நித்ய யுவா -திவாகரன் -அன்றோ இவன் –
இந்த சித்திரம் தான் -வல்லபி ஜன வல்லபன் கோபீ நாதன் -கண்டார் –
மானசீக பாவம் -கோபிகள் ஆசையும் தெரியும் படி அன்றோ கண்டார்
முக விகாசகங்கள் -உதய இளம் சூரியன் -கடாக்ஷங்கள் பட்டு மலரும் முகத் தாமரைகள் –
சமுதாயம் முழுவதையும் கண்டார் –
மயஸ் த்வஷ்டா அந்யோவா விபுல மஹிமா விஸ்வஸ்ருகபி
ஸ்வ சக்த்யேதம் சித்ரம் கிமபி நவி தாதும் க்ருதமுக
அகண்ட ப்ரஹ்மாண்ட ப்ரதம தர சில்பி ஸ பகவான்
ஸ்வயம் பத்மாஜாதி வயலிகதிஹ சில்பம் ஸ்வ விஷயம் -சங்கல்ப ஸூர்யோதயம்
மயனோ விஸ்வ கர்மாவோ அல்லது ப்ரம்மாவோ தனது சக்தியால் மிகவும் விசித்திரமான
இந்தச் சித்திரத்தை எழுத சக்தி அற்றவர்கள்
ஆகவே சகல ப்ரஹ்மாண்டங்களையும் ஸ்ருஷ்ட்டித்த முதல் சில்பியும் ஸ்ரீ யப்பதியுமான
ஸாஷாத் பகவானே தன் விஷயமான இந்தச் சித்தரத்தை எழுதினான் –
அப்படி நின்ற அமலன் படி எல்லாம்
இப்படி எம் உள்ளத்து எழுதினார் எப்படியும்
ஓரார் ஸ்ருதி ஒளியால் இருள் நீக்கும்
தாராபதி அனையார் தாம் –அம்ருத ரஞ்சனி–ரஹஸ்ய மாத்ருகை – -12-ஆச்சார்யர்கள் எழுதி அருளினார்கள் பொதுவாக சொல்லி மேல்
நாத ஸ ஏஷ யமினாம் நகரஸ்மி ஜாலை அந்தர் நிலீதம பநீய தமோ மதீயம்
விஞ்ஞான சித்ரம் அநகம் லிகதீவ சித்தே வ்யாக்யான கேலி ரஸிகேந கராம்புஜே –யதிராஜ சப்ததியில் யதிராஜரே செய்து அருளினமையை அருளிச் செய்கிறார்
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்பதே சித்தத்தில் எழுதப்படும் ஞானம் –
21 ஸ்லோகங்கள் கொண்ட இந்த விம்சதியில் ஐந்து ஸ்லோகங்களில் யவ்வன ரூப அனுபவம்
கோபிகள் போலவே பரமபக்தி நிஷ்டையில் அருளிச் செய்கிறார்
———————————————————
அழகே வடிவு கொண்ட கண்ணனுடைய ஸூந்தர ரூபம் கண் முன்னும் உள்ளத்துள்ளும் தோன்றவே
அதன் அழகுக்கும் நீர்மைக்கும் தோற்று அதற்குத் தலை வணங்கி அஞ்சலி செய்கிறார்
மஹஸே மஹிதாய மௌலி நா விநதே நாஞ்சலி மஞ்சன த்விஷே
கலயாமி விமுக்த்த வல்லவீ வலயா பாஷித மஞ்ஜு வேணவே -15-யோகினி
விமுக்த்த வல்லவீ வலயா–அழகிய கோபியர்களின் வளைகளால்
ஆபாஷித–பேசும்படி செய்யப்பட
மஞ்ஜு வேணவே–இனிமையான புல்லாங்குழலை யுடையதும்
அஞ்சன த்விஷே–மையின் காந்தியை யுடையதும்
மஹஸே மஹிதாய–பூஜிக்கப் படுகிறதுமான தேஜஸ்ஸுக்கு -கண்ணனுக்கு
விநதேந மௌலிநா அஞ்சலி –வணங்கிய தலையுடன் கை கூப்புதலைச்
கலயாமி -செய்கிறேன்
மிகவும் போற்றப்படுபவனும் -மை போன்ற ஒளி உடையவனும் –
மிக அழகிய கோபிமார்களின் கை வளையல்கள் த்வனியுடன் கூடினவனும்
அழகிய திருப் புல்லாங்குழலை உடையவனும் –
இந்த த்வனிக்குத் தக்க தாளம் கோபிகள் கை வளையல்களை ஆட்டி என்றவாறு –
தேஜோ மய ரூபமான கண்ணனை ப்ரணாமத்துடன் அஞ்சலி செய்கிறேன்
மஹஸே மஹிதாய மௌலி நா
ஒளி கொஞ்சம் -ஜோதிஸ்-இவர் ஹிருதயத்தில் -திவ்ய மங்கள விக்ரஹ சேவை –
ராச க்ரீடை நடக்கும் அரங்கமே ஸ்வாமி திரு உள்ளம்
கீழ் 10 வது ஸ்லோகத்தில் மஹஸ் ஆவி ரஸ்து சித்தே -என்று தேஜஸ்ஸு ஆவிர்பவிக்கப் பிரார்த்தித்தார்
சொன்ன வண்ணம் செய்யும் எம்பெருமானும் அவ்வாறே செய்து அருள
இவனது நீர்மையைக் கண்ட உலகமே அவனைப் பூஜித்துக் கொண்டாடுகிறது
அதையே மஹிதாய -பதத்தால் அருளிச் செய்கிறார்
விநதே நாஞ்சலி மஞ்சன த்விஷே
மைப்படி மேனி -தேஜஸ் மிக்கு
கலயாமி விமுக்த்த வல்லவீ
ராச க்ரீடை -கோபிகள் தாளம் -கை வளைகள் குலுங்க -கானத்துக்கு ஏற்ற -கால் ஆட கொலுசு சதங்கை ஒலிக்க-
இதற்கு தக்க வேணு கானம் பண்ணுகிறான் –
குசலப் பிரஸ்னம் -மூங்கில் பெற்ற பாக்யம் என்ன -தாமோதரன் அதர மிருத பானம் பண்ண –
பொறாமை உடன் பேச -தாயாதி போலே -பங்காளிகள் –
வலயா பாஷித மஞ்ஜு வேணவே
வேணு கானம் பண்ணும் சேவை சாதிக்க —
ராச க்ரீடை பங்கு கொள்ள அழைப்பு விடுவதே வேணு கானம் வழியாக தானே
வலயா பாஷிதம் –
மத்தியஸ்தர் வேலை– வளைகள் ஒலி–கோப ஸ்திரீகளுக்கு கொஞ்சம் விட்டு கொடுத்து அமிருத பானம் பெற –
நம் அஞ்சலி-அம் ஜலதீதீ – அவனை உருக்கி நம்மையே வணங்கச் செய்து விடுமே
நாம் வணங்கத் தாம் வணங்கா நிற்பவர் வந்தார் –திருச்சின்ன மாலை
கை வளைகள் ஒலிப்ப -கோபியர் புடை சூழ நின்று குழலூதும் மைப்படி
மேனியனான கண்ணனுடைய அழகுக்குத் தோற்றுத் தலை வணங்கி அஞ்சலி செய்கிறார்
————————————————————-
கோபிகளின் வளைகளின் ஒலிக்கும்
கண்ணனுடைய குழலுக்கும்
பல்லாண்டு பாடுகிறார்
ஜயதி லலித வ்ருத்திம் சிஷிதோ வல்லவீநாம் –
சிதில வலய சிஞ்ஞா சீதளைர் ஹஸ்த தாளை
அகில புவன ரஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ
அதர மணி ஸூதாயா மம்சவான் வம்ச நால-16-மாலினி விருத்தம்
வல்லவீநாம் -ஆயர் சிறுமியர்களுடைய
சிதில வலய சிஞ்ஞா –நழுவுகிற வளைகளின் ஒலியால்
லலித வ்ருத்திம் –அழகிய கதியை
சிஷிதோ –கற்பிக்கப் பட்டு இருப்பதும்
அகில புவன ரஷா –எல்லா உலகங்களையும் ரக்ஷிக்கும் பொருட்டு
சீதளைர் ஹஸ்த தாளை-குளிர்ந்த கைத் தாளங்களினால்
கோப வேஷஸ்ய விஷ்ணோ –இடைச் சிறுவன் வேஷத்தில் வந்த விஷ்ணுவினுடைய
அதர மணி ஸூதாயாம் –அழகிய அதரத்தின் அம்ருதத்தில்
அம்சவான் வம்ச நால– பங்கு உள்ளதுமான புல்லாங்குழல்
ஜயதி-ஐயத்துடன் விளங்குகிறது –
கோபிமார்களின் கை வளையல்கள் த்வனியோடு-குளிர்ந்த கையால் போடும் தாளங்களால்-லளிதம்-என்ற நடனம் கற்பிக்கப் பட்டதும்
ஒரு கோபி ஒரு கண்ணன் -ஒரு கோபி என்று குரவைக் கூத்து ராஸக்ரீடை ஆடி –
ஸமஸ்த லோக ரக்ஷணார்த்தமாக ஆயர் குலத்தினில்-கோவலனாய் கோவலரரோடு – வந்து பிறந்த
ஸ்ரீ மஹா விஷ்ணுவுடைய திருப் பவள அதர ரசத்தில் ஆழ்ந்து அனுபவிக்கும் திருப் புல்லாங்குழல்
மிக பெருமை பெற்று விளங்க -அதற்கு மங்களா சாசனம் -இந்த சேர்த்தி பல்லாண்டு வாழியே -என்றபடி –
ஜயதி லலித வ்ருத்திம் சிஷிதோ வல்லவீநாம்
சிஷை பண்ணும் -வளை ஓசை –வேணுக்கு-லளித்த வ்ருத்தி -அபிநயம் -நாட்டியம் –
புருவ நெறிப்பு-ஸூ குமாரமாக -பரம மோஹனம்
சிதில வலய சிஞ்ஞா சீதளைர் ஹஸ்த தாளை
சிதிலமான வளை ஓசை -குளிர்ந்த -கண்ணாடி வளைகள் -தாளம் –
அகில புவன ரஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ –
கோப வேஷமே ரஷார்த்தத்துக்கு தானே -கோ பூமி -அரசன் -ஆளும் பொறுப்பும் உண்டே —
விஷ்ணு அன்றோ -அகில புவன ஜென்ம –மங்கள ஸ்லோகம் அடியாக –
அதர மணி ஸூ தாயா மம்சவான் வம்ச நால
ஹஸ்த ஸ்பர்சம் பட்டு மூங்கில் பிரகாசிக்க -ஸ்ரீ தேவிக்கு கிடைக்கும் அதர அமிருதம் -பெற்றதே –
பவளம் -சிவந்த அழகிய திரு அதர அமிர்தம் -குழலுக்கு ஜெயந்தி -பாடுகிறார் –
ஜிதந்தே -என்கிறார் -வேணுக்கு –ராச க்ரீடைக்கு இதுவே முக்கியம் –
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேருந்து வாச நரும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்க்கும்
கண்ணன் வருவதற்கு ஓசைப்படுத்த -அவனும் வந்து வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையாவானே
இங்கே எதிரே உள்ள கண்ணனுக்கு தாளத்தால் லலித வ்ருத்தியைக் கற்ப்பிக்கிறார்கள்
அவன் அத்தைத் தனது குழலில் இட்டு ஊதுகிறான்
திரு அதரமாகிற மணிச் செப்பில் இருக்கும் மதத்தில் பங்கு பெற்று புல்லாங்குழல் திகழ்கிறது
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டாற்போல் மாதவன் தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே -போல் இங்கும்
அழகிய அதரத்தில் வைத்து இசையைப் பரப்பி உலகங்களை ரஷித்துக் கொண்டு ஐயத்துடன் விளங்குகிறது-
கண்ணனும் இடைப் பெண்களும் ராசக் க்ரீடையில் ஈடுபடுகின்றனர் .
அத்தனை கோபிகளுக்கும் ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு திருமேனிகளை படைத்துக் கொள்கிறான் கண்ணன்.
ஒரு கோபியும் ஒரு கண்ணனுமாக நின்று ராசக்கிரீடை புரிகின்றனர் .
இடைப் பெண்கள் தங்கள் கைகளில் வளை குலுங்க தாளம் போடுகின்றனர்
அப்போது வளைகள் ஒலிக்கின்றன. இந்த ஒலி அவர்கள் போடும் தாள ஓலி யோடு கலந்து மிக இனியதாகின்றது.
இவர்கள் போடும் கைத் தாளங்கள் புல்லாங்குழலுக்கு அபிநய சாஸ்திரத்தில் உள்ள லளிதம் என்னும் முறையைக் கற்பிக்கின்றது. …)
தத3க்3ர ஹஸ்த க்3ரஹணாத்திந6நாம் ஸ ஸவ்யேதா த3க்ஷிணதஸ்ச திஷ்டந் ப3பா4ர
வித்4யுத் வ்யவதா4ந பா4ஜாம் வாத்யாஜுஷாம் வாரிமுசாம் அபி4க்2யாம் -ஸ்ரீ யாதவாப்யுதயம்–8- சர்க்கம்-83-
திருக் கரத்தின் முனை பற்றிச் சீர் நடனம் புrந்திடவே விருப்பமுடை ஆய்ச்சியரை வலம் வந்தான்
அவர்களது இரு மருங்கும் உருவம் பல எடுத்தனனே
கண்ணன் தான் கரு முகில்கள் மின்னல்களுக் கிடைப்படுதல் ஒத்ததுவே !
தன்னுைடய திருக் கை முனையைப் பிடித்து ஆட ஆசைப்பட்ட அந்த ஸ்த்ரீகளுக்கு இரு பக்கத்திலும் தான்
பல ரூபமாய் நின்று மண்டலாகாரமாக அவர் களோடு சுற்றுகின்றானாய், இடையிடை
மின்னல்கள் பொருந்தி சுழல் காற்றில் அகப்பட்ட மேகங்கள் போல் விளங்கினான்.
தாவ தேவ க்ருத மண்டநே கலித கஞ்சு லீக குச மண்டலே
கண்ட லோல மணி குண்டலே யுவதி மண்டலே அதி பரி மண்டலே
அந்தரா ஸகல ஸூ ந்தரீ யுகல மிந்திரா ரமண சஞ்சரன்
மஞ் ஜுலாம் தத நு ராஸ கேலி மயி கஞ்ஜ நாப சமு பாததா –-(நாராயணீயம் 69.2)
அப்போதே மார்புக் கச்சையை இறுக்கிக் கட்டிக் கொண்டு தங்களை அணிகலன்களால்
அலங்கரித்துக் கொண்டு கோபியர் உங்களைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள்
தாங்களும் அப் பெண்களின் இடையே -இரு கோபியர்களுக்கு நடுவில் ஒரு கிருஷ்ணன் –
இரு கிருஷ்ணருக்கு நடுவில் ஒரு கோபிகை -என்னும் படி நின்று கொண்டு
நர்த்தனம் செய்து கொண்டு ராஸ க்ரீடை செய்ய ஆரம்பித்தீர்கள் –
——————————————————
ஆயர் சிறுவன் வேஷம் தனது கண் முன்னே நின்று அனுபவிப்பிக்க அதன் அழகை வர்ணிக்கிறார் –
சித்ரா கல்ப ஸ்ரவஸி கலயன் லாங்கலீ கர்ண பூரம் –
பர்ஹோத் தம்ச ஸ்புரித சிகுரோ பந்து ஜீவம் ததாந
குஞ்ஞா பத்தா முரசி லலிதாம் தாரயன் ஹார யஷ்டிம்-
கோப ஸ்த்ரீணாம் ஜயதி கிதவ கோ அபி கௌமார ஹாரீ -17-மந்தாக்ராந்தா விருத்தம்
ஸ்ரவஸி–காதில்
லாங்கலீ -லங்காலி என்னும் வெண்மையான புஷ்பத்தை
கர்ண பூரம் -காதணியாக
கலயன் –பூண்டு கொண்டு இருப்பவனும்
பந்து ஜீவம்=பந்து ஜீவன் என்னும் புஷ்பத்தை -கையிலே
ததாந–தரித்துக் கொண்டு இருப்பவனும்
உரசி –மார்பில்
குஞ்ஞா பத்தாம் –குன்றி மணிகளைக் கொண்டு புணையப்பட்ட
லலிதாம்-அழகு மிக்க
ஹார யஷ்டிம்—சீரிய ஹாரத்தை
தாரயன்-அணிந்து கொண்டு இருப்பவனும்
பர்ஹ–மயில் தோகையாகிற
உத் தம்ச –தலை அணியுடன்
ஸ்புரித -பிரகாசிக்கிற
சிகுரோ -கேசங்களை யுடையவனும்-சிகுரே –ஏழாம் வேற்றுமையுடன் பாடபேதம்
இவ்வாறு
சித்ர ஆ கல்ப -விசித்திரமான ஆபரணங்களை யுடையவனும்
கோப ஸ்த்ரீணாம் –கோபிகைளுடைய
கௌமார ஹாரீ–இளமையைக் கொள்ளை கொள்பவனும்
கோ அபி-ஒப்பற்றவனுமான
ஜயதி கிதவ -ஒரு கள்வன் எழில் மிகுந்து விளங்குகிறான்
திருக் காதில்-லங்காலீ-என்னும் தென்னம் பாளைப் பூவை ஆபரணமாக சாத்திக் கொண்டு –
திருக் குழல் கற்றையில் மயில் பீலியையும் சூடி– பந்து ஜீவம் என்னும் செம்பருத்திப் பூவையும் அணிந்து
திரு மார்பிலே குந்துமணி கோக்கப் பெற்ற அழகிய ஹார மாலை அணிந்து
இவ்வாறு பல பல ஆபரணங்களை அழகு கொடுத்து கோபிமார்களை கவர்பவன் -விசித்ரன் –
விஷமக் காரக் குறும்பனான கண்ணன் -வாழ்க
சித்ரா கல்ப ஸ்ரவளி கலயன் லாங்கலீ கர்ண பூரம் –
காது அலங்காரம் –தென்னம் பாளை பூ –
பர்ஹோத் தம்ச ஸ்புரித சிகுரோ பந்து ஜீவம் ததாந
மயில் பீலி தலைக்கு அலங்காரம் –
சிவந்த பூவை செம்பரத்தம் பூவை கையில் கட்டி -பூ செண்டு தங்கி
குஞ்ஞா பத்தா முரசி லளிதாம் தாரயன் ஹார யஷ்டிம்-
குந்துமணி -சிவந்து -மாலை மார்பில் சாத்திக் கொண்டு -வனமாலை விட ப்ரீதியுடன் அணிந்து
குறும்புக்கார கண்ணன் வேஷம்
கோப ஸ்த்ரீணாம் ஜயதி சிதவ கோ அபி கௌமார ஹாரீ
யவ்வனம் -கவரும் படி வேஷம் –பும்ஸாம் சித்த த்ருஷ்ட்டி அபஹாரினாம்–யாவர் ஆற்ற வல்லார் ஒருங்கே கண்டால்-
அழகன் -எப்படி இருந்தாலும் அழகு தானே -தீமை செய்யும் சிரீதரன்–
குறும்பு வேஷம் காட்டி என்னையும் வசீகரித்து தனக்கு ஆக்கிக் கொள்ளட்டுமே
கோப ஸ்த்ரீணாம் — கௌமார ஹாரீ–என்று கொண்டு தனது அழகால் கோப ஸ்த்ரீகள் இளமையையும் மனத்தையும் அபகரிக்கிறான் என்றுமாம்-சிதவ–உள்ளம் கவர் கள்வன் அன்றோ
யேந ஸ்யாமம் வபுரதி தராம் காந்திம் ஆபத் ஸ்யதே தே
பர்ஹேணேவ ஸ்புரித ருசிநா கோப வேஷஸ்ய விஷ்ணோ –மேக சந்தேசம் காளிதாசன் இதே போன்ற பத பிரயோகம்
ஆண்டாள் சூடிக்களைந்த மாலையைத் தலை மேல் தரித்துக் கொண்டு வைஜயந்தி வனமாலை கீழே இருப்பதை
கோதே பவத்ய தரிதா கலு வைஜயந்தி -என்று ஸ்ரீ கோதா ஸ்துதியில் அருளிச் செய்கிறார்
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன்னலர்ந்த நறும் செருந்திப் பொழிலி னூடே
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே –கலியன்
பர்ஹா பீடம் நட வர வபு கர்ணயோ கர்ணிகாரம்
பிப்ரத் வாஸா கநக கபிசம் வைஜயந்தீம் ஸ மாலாம்
ரந்த்ரான் வேணோ அதர ஸூதயா பூரயன் கோப ப்ருந்தை
ப்ருந்தாரண்யம் ஸ்வ பத ரமணம் ப்ராவிசத் கீதகீர்த்தி –ஸ்ரீ ஸூ காரின் ஸ்ரீ வேணு கீதம்
ஸ்ரீ கிருஷ்ணன் சிறந்த நடிகன் போல் திகழ்கிறான்
தலையில் மயில் தோகை –காதுகளில் கர்ணிகார புஷ்பம் -திருவரையில் பீதாம்பரம் -திரு மார்பில் வைஜயந்தி என்னும் வனமாலை –
கோபர்கள் அவனுடைய குணங்களை கானம் செய்ய தனது அதர அம்ருதத்தினாலே புல்லாங்குழலின் துவாரங்களை நிரப்பிக் கொண்டு
தனது திருவடிகளின் ஸ்பர்சத்தால் மகிழ்ச்சி அடைகிற பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் பிரவேசித்தான் –
சீலைக் குதம்பை ஒரு காது ஒரு காது செந்நிற மேல் தோன்றிப்பூ
கோலப் பணைக் கச்சம் கூறை யுடையும் குளிர் முத்தின் கோடாலமும்
காலி பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர் –பெரியாழ்வார் பாசுரத்தை அடி ஒற்றியே இந்த ஸ்லோகம்
——————————————————————
இதில் தேவி என்கிற கௌரவ சொல்லால் குறிப்பிடப்படும் ஒரு காபியுடன் இணைந்து நின்று ஸேவை சாதிக்க அதை போற்றுகிறார்–
லீலா யஷ்டிம் கர சிசலயே தஷிணே ந்யஸ்ய தன்யாம்
அம்சே தேவ்யா புளக ருசிரே சந்நிதிஷ்ட அந்நிய பாஹு
மேக ஸ்யாமோ ஜயதி லலிதோ மேகலா தத்த வேணு –
குஞ்ஞா பீட ஸ்புரித கிகுரோ கோப கன்யா புஜங்க -18-மந்தாக்ராந்தா விருத்தம்
தன்யாம்–பாக்யம் செய்த
லீலா யஷ்டிம் –அழகிய கழியை
தஷிணே –வலது
கரகிஸலயே –தளிர் போன்ற கையில்
ந்யஸ்ய –வைத்துக் கொண்டு
தேவ்யா–ஒரு கோப ஸ்திரீ யின்
புளக ருசிரே–மெய் சிலிர்ப்பினால் அழகான
அம்சே –தோளில்
சந்நிதிஷ்ட –வைக்கப்பட்ட
அந்நிய பாஹு–மற்ற ஒரு கையை யுடையவனும்
மேகலா–ஒட்டியாணத்தில்
தத்த–செருகப்பட்ட
வேணு -புல்லாங்குழலை யுடையவனும்
குஞ்ஞா பீட–குன்றி மணி மாலையால்
ஸ்புரித –ப்ரகாசிக்கிற
கிகுரோ–கேசங்களை யுடையவனும்
மேக ஸ்யாம –நீருண்ட மேகம் போல் ஸ்யாமள வர்ணம் உள்ளவனான
கோப கன்யா புஜங்க –கோப கன்னியருடைய காதலனான கண்ணன்
லலிதம் ஜயதி -மிக அழகாக வெற்றியுடன் விளங்குகிறான்
வலது திருக் கரத்தில் பாக்யம் செய்த லீலா ஊன்று கோலைப் பிடித்தவனும்
நப்பின்னைப் பிராட்டியின் மயிர்க் கூச்சு எறிந்த திருத்த தோள்களில் இடது திருக் கையை வைத்தவனும்
அழகனும் திரு யரை நாணில் திருக் குழலைப் பொருத்தமாக செருகியவனும்
குன்றிமணி மாலையோடு விளங்கும் திருக் குழல் கற்றையை உடையவனும்
கோபிமார்களிடம் அதி வ்யாமோஹம் கொண்டவனும்
நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனுமான கண்ணனுக்கு பல்லாண்டு
லீலா யஷ்டிம் கர சிசலயே தஷிணே ந்யஸ்ய தன்யாம்
வலது கையில் விளையாட்டு குச்சி -நீருண்ட மேகம் நின்ற திருக் கோலம் -இளம் தளிர் போன்ற
திருக் கைகளில் கரடு முரடான குச்சி
பெரும் பாக்யம் அன்றோ இந்த குச்சிக்கு -இயம் சீதா -சீதா கையைப் பிடித்த கை யன்றோ பிடித்தது –
கோபிகளால் வேண்டப்படும் கை -அக்ரூரர் மாருதி பரதர் போன்றவரை அணைத்த கை -என்ன பாக்யம் –
அணி மிகு தாமரைக் கையை அந்தோ அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் -என்று
கோபிகள் எல்லாம் திருக்கையின் ஸ்பர்சத்துக்கு பிரார்த்தித்து இருக்க இது செய்த பாக்யம் தான் என்னே –
லீலா யஷ்டிம்–இது கொண்டு பசுக்களை அடித்து அறியாதவன் -அவை இவன் திரு உள்ளபடியே நடப்பவை அன்றோ
கர சிசலயே–திருக்கையின் மார்த்தவத்துக்கு இந்த கோலே மலை போல் இருக்குமே
அம்சே தேவ்யா புளக ருசிரே சந்நிதிஷ்ட அந்நிய பாஹு
நப்பின்னை பிராட்டி திருத் தோள்களில் -தழுவி இறுக –சந்நிவிஷ்ட –சீதா பிராட்டிக்கு அஸி தேக்ஷிணா போலே
நப்பின்னை பிராட்டிக்கு திருத் தோள்கள் அன்றோ -துஷ்கரம் ராமா -என்றாரே திருவடி –
வைதிக வேஷம் சீதா பிராட்டிக்கு வன்னிய வேஷம் நப்பின்னைக்கு –இவளுக்காக அன்றோ கோபால வேஷம் –
தேவ்யா–நப்பின்னை -சாஷாத் ராதா தேவியே இவள்
மேக ஸ்யாமோ ஜயதி லலிதோ மேகலா தத்த வேணு
நீல மேக ஸ்யாமளன் –இலங்கு ஒலி நீர்ப் பெரும் பவ்வம் மண்டி யுண்ட கரு முகிலே ஒப்பர் வண்ணம் என்கிறபடியே –மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
ஒட்டியாணம் -மேகலை -வேணு சொருகி
குஞ்ஞா பீட ஸ்புரித கிகுரோ கோப கன்யா புஜங்க
திரு முடியில் குந்து மணி மாலை அலங்க்ருதம் -கறுப்பும் சிவப்பும் பரிபாகம் –
கோபி கன்யிகளுக்கு ஆசை விஞ்சி -இருக்கும் படியான கோப வேஷம் –
லலிதா ஜெயந்தி –
ஸூந்தரன் அழகன் -புஜங்க சயனம் பள்ளி கொள்பவன் புஜங்கத்துடன் இருப்பானே
ஜயதி–அந்யோன்ய ஸ்பர்சத்தால் புகர் பெற்று நிற்கும் அந்த திவ்ய மிதுனத்துக்குப் பல்லாண்டு பாடுகிறார்
———————————————————
இதில் கண்ணனுடைய ஜலக்ரீடையை தத்ரூபமாக அனுபவித்து அந்த லீலைக்குப் பல்லாண்டு பாடுகிறார்
பிரத்யா லீட ஸ்திதி மதிகதாம் ப்ராப்த காடாங்க பாளிம்-
பஸ்ஸா தீஷன் மிலித நயனாம் ப்ரேயஸீம் ப்ரேஷமாணா
பஸ்திரா யந்த்ர ப்ரணிஹித கரோ பக்த ஜீவாது ரவ்யாத்-
வாரி கிரீடா நிபிட வசநோ வல்லவீ வல்லபோ ந-19-மந்தாக்ராந்தா விருத்தம்
பிரத்யா லீட ஸ்திதிம் –இடது காலை மண்டியிட்டு வலது காலை மடித்து ஊன்றி நிற்கும் நிலையான- பிரத்யா லீட-நிலையில்
அதிகதாம் –அமர்ந்து இருப்பவளும்
பஸ்ஸாத் –பின் பக்கத்தில் இருந்து
ப்ராப்த –அடையப் பட்ட
காட–இறுக்கிய நாயகனுடைய
அங்க பாளிம்-அணைப்பை யுடையவளும்
ஈஷத் –கொஞ்சம்
மிலித –மூடப்பட்ட
நயனாம் –கண்களை யுடையவளுமான
ப்ரேயஸீம் ப்ரேஷமாணா–காதலியைப் பார்த்துக் கொண்டு இருப்பவனும்
பஸ்திரா யந்த்ர –பீச்சாங்குழலில்
ப்ரணிஹித –வைக்கப்பட்ட
கரோ -கையை யுடையவனும்
வாரி கிரீடா –ஜலக்ரீடையால் நனைந்து
நிபிட –சரீரத்தோடு ஒட்டிக் கொண்டு இருக்கிற
வசநோ –வஸ்திரத்தை யுடையவனும்
வல்லவீ வல்லபோ –கோபிகளின் ப்ராண நாதனும்
பக்த ஜீவாது –அடியார்களுக்கு உயிர் போன்றவனுமான -பத்தராவியுமான -கண்ணன்-பக்தர்களையே தனக்கு உயிராகக் கொண்டவன்
ந அவ்யாத் —-நம்மை ரக்ஷித்து அருளட்டும்
பின்பக்கம் கண்ணனது இறுகிய ஆலிங்கனத்தைப் பெற்றவளும் -இந்த ஆனந்த சாகரத்தில் மூழ்கி
முழு நோக்காக அன்றி கடைக் கண்ணால்
கண்ணனது கடாக்ஷம் பெற்றவளுமான கோபியையே பார்த்துக் கொண்டே
நீர் பீச்சும் குழலை திருக் கையிலே வைத்து ஜல க்ரீடை செய்ய இறுக்கிய திரு ஆடை அணிந்தவனும்
திருக் கால்களை வசதியான நிலையில்-ஒரு திருக் காலை முன்னும் மற்றொரு திருக் காலை பின்னும் வைத்து –
பிரத்யா லீடமாக -வைத்து அருளும் -பிரணயியான கண்ணன் –
ஆஸ்ரிதர்களை உஜ்ஜீவனம் செய்யும் பேஷஜம் -நம்மை ரக்ஷிக்கட்டும்
பிரத்யா லீட ஸ்திதி மதிகதாம் ப்ராப்த காடாங்க பாலிம்-
பீச்சாம் குழலில் நீரை வைத்து -அடிக்க -தயாராக இருக்க -பின் சென்று இறுக தழுவ
பஸ்ஸா தீஷன் மிலித நயனாம் ப்ரேயஸீம் ப்ரேஷமாணா
திரும்பி பார்க்க -இரு கண்களும் இணைய –ஈஷமானா ப்ரேஷமானா கூரிய பார்வை –
பஸ்திரா யந்த்ர ப்ரணிஹித கரோ பக்த ஜீவாது ரவ்யாத்-
அழுத்தி பிடித்து -துருத்தி வைத்து நீரை பாய்ச்ச –
கோபியை அணைத்து -தண்ணீரும் அடிக்க –மித்யா கோபன் -அகில புவன ராஷா கோப வேஷம் –
சாஷாத் பர ப்ரஹ்மம் -சதுர் புஜம்
பக்த ஜீவாது-கலந்து பழகி தரிக்க -ஆத்மாவை மே மதம் ஞானி அவன் மதம் -என்றுமாம் –
தன்னை அந்தராத்மா என்று நினைப்பார்க்கு தானும் அந்தராத்மா –
ஆத்மாத்மீயங்கள் சமர்ப்பித்தார்க்கு தானும் சமர்ப்பிப்பவன் அன்றோ இவன் –
தேவர்கள் இவன் சொல்லிற்றைச் செய்வார்கள் இவனும் அவர்கள் சொல்லிற்றைச் செய்வான் –
கிம் கார்யம் மம சீதையா என்பவன் அன்றோ –
வாரி கிரீடா நிபிட வசநோ வல்லவீ வல்லபோ ந
ஹிருதயத்தில் இப்படி சேவை சாதிக்க -இரண்டும் தலையும் வாழும் படி கோபிகள் உடன் கலந்து போலே கலக்க வேணும்
எங்களை காக்கட்டும் -சம்பந்திகளாக நம்மையும் சேர்த்து கொள்கிறார்
—————————————————–
வஸ்த்ர அபஹரண லீலையை அனுபவிக்கிறார்–
வாசோ ஹ்ருத்வா தி நிகர ஸூ தா சந்நிதவ் வல்ல வீ நாம் –
லீலாஸ் மேரோ ஜயதி லலிதா மாஸ்தித குந்த சாகாம்
சவ்ரீடா பிஸ்ததநு வசநே தாபிரப் யர்த்தமாநே –
காமீ கஸ்சித் கர கமலயோர் அஞ்சலிம் யாசமான -20-மந்தாக்ராந்தா விருத்தம்
தி நிகர ஸூ தா –ஸூரியனின் புத்ரியான யமுனையின்
சந்நிதவ்–கண் முன்பு
வல்ல வீ நாம் —ஆயர் சிறுமியர்களின்
வாசோ –ஆடையை
ஹ்ருத்வா –அபஹரித்து
லீலாஸ் மேரோ –வேடிக்கையாக மென் முறுவல் பூத்தவனாய்
லலிதா மாஸ்தித குந்த சாகாம்-அழகிய குருந்த மரத்தின் கிளையில் ஏறி வீற்று இருக்கும் கண்ணன்
ஜயதி –ஐயத்துடன் விளங்குகிறான்
ததநு–அதற்குப் பிறகு
ச வ்ரீடா பிஸ் –வெட்கமுற்று இருக்கும்
வசநே தாபிர் –அந்தப்பெண்களால் ஆடை
அப் யர்த்தமாநே -வேண்டப்பட்ட போது
கர கமலயோர்–தாமரை போன்ற இரண்டு கைகளையும் சேர்த்து
அஞ்சலிம் யாசமான–அஞ்சலி செய்யும்படி வேண்டிக் கொள்கிறான் –
ஸூர்ய புத்ரியான யமுனையின் கரையில் கோபிமார்களின் துகில்களை கவர்ந்து
அழகிய குருக்கத்தி மரக் கிளையில் அமர்ந்து -வெட்க்கிய கோபிமார் ஆடையைத் தரும்படி வேண்டிய போது
ஆடை இல்லாமல் நீராடிய பாபத்துக்கு பிராயச்சித்தமாக –
தாமரை போன்ற இரு கைகளாலும் அஞ்சலி செய்ய வேண்டியவனும்
விளையாட்டாய் ஸ்மிதம் பண்ணி அருளும் ஆஸ்ரித வ்யாமோஹன் பல்லாண்டு வாழ்க
வஸ்திரங்கள் அபகரித்ததை காண ஆசைப்படுகிறார் –
வாசோ
பன்மை -ஜலக்ரீடை -சரீரம் அபஹரித்து முக்தி –
பிராகிருதம் நீக்கி –
விரஜை-அங்கு தூய யமுனை இங்கு -ஞான யஜ்ஜம் -கோபால விம்சதி அறிதல் -அனுசந்தானம் –
அஞ்சலிம்-கெஞ்சி கேட்க்கிறான் இவன் -வஸ்திரம் அவர்கள் கேட்க -இரண்டுமே தன் மானம் காக்க –
நந்த கோபிகளை–பக்தி யோகம் வளர்க்க அவதரித்து -ரிஷிகள் கோபிகள் –
பரமாத்வா இடம் பக்தியும் இதர விஷயத்தில் விரக்தியும் வேண்டுமே
பர ப்ரஹ்மம் இவனே அறிவார்கள் -நந்த கோபன் பிள்ளை -பரத்வம் மறந்தாலும் பரத்வம் பீறிட்டு காட்டும்
சர்வ சாக்ஷி -சர்வ அந்தர்யாமி -கோபால வீக்ஷணம் சம்ச்லேஷம் ஆசைப் பட்டு இருப்பீர்கள் –
சர்வ சரீரி -ஸூ சரீர பரிஷுவங்காத்-
தோஷம் இல்லையே -ப்ரஹ்மசர்யம் போகாது –பரிஷத் -அபாண்டவ அஸ்திரம் -ப்ரதிஜ்ஜை –
நாம் -லீலாஸ் மேரோ ஜயதி லலிதா மாஸ்தித குந்த சாகாம்
லீலைகளை எல்லாம் காட்டி அருளினான் தேசிகருக்கு-நாயகி பாவம் —
அஞ்ஞானமாகிற ஆவரணத்தைக் கழற்றி இரு கைகளையும் சேர்த்து அஞ்சலி செய்து ஆகிஞ்சன்யத்தைக் காட்ட அவன் அருள் பெறுவோம் அன்றோ –
இவன் அவர்களை அஞ்சலியை யாஸிக்கிறான்
அவர்கள் இவனிடம் வஸ்திரங்களை பிரார்த்திக்கிறார்கள்
——————————————————————–
பல ஸ்ருதி-
இத்ய நன்ய மனசா விநிர்மிதாம் வேங்கடேச கவிநா ஸ்துதிம் படன்
திவ்ய வேணு ரசிகம் சமீஷதே தைவதம் கிமபி யவ்வத ப்ரியம்–21-உபேந்திர வஜ்ரா விருத்தம்
இத்ய நன்ய மனசா –இவ்வாறாக வேறே ஒன்றில் மனம் செல்லாத
வேங்கடேச கவிநா விநிர்மிதாம் ஸ்துதிம்–வெங்கடேசன் என்னும் கவியால் இயற்றப்பெற்ற ஸ்தோத்ரத்தை
படன்–படிக்கிறவர்கள்
திவ்ய வேணு ரசிகம் –தெய்வீகமான புல்லாங்குழல் ரஸ அனுபவம் செய்வதும்
யவ்வத ப்ரியம்-இளம் வயதுள்ள பெண்களுக்கு இனியதுமான
சமீஷதே தைவதம் கிமபி -ஒப்பற்ற தெய்வத்தைக் காண்கிறான்
வேறு ஒன்றையும் நாடாத மனத்துடன்-க்யாதி லாப பூஜை ஒன்றுக்கும் இல்லாமல் –
வேங்கடேச கவியால் அருளிச் செய்யப்பட இந்த ஸ்தோத்ர கிரந்தத்தை அப்யசிப்பார்கள்
திருப் புல்லாங்குழல் ரசம் அறிந்தவனுக்கு கோபிமார்களுக்கு பிரிய தமமுமான
அற்புத கண்ணன் நிரந்தர சாஷாத் காரம் காட்டி அருளுவான்
இத்ய நன்ய மனசா விநிர்மிதாம் வேங்கடேச கவிநா ஸ்துதிம் படன்-
திவ்ய வேணு ரசிகம் சமீஷதே தைவதம் கிமபி யவ்வத ப்ரியம்
அதிகரண சாராவாலி நிகமாந்த்ர முனீந்திரர் -கவி முனி -ஆழ்வாரை போலவே -அநந்ய-
வேங்கடேச- பிருந்தாவன சரர்-திவ்ய வேணு -அப்ராக்ருதம் -அதிலே ராசிக்கியம் -பிரத்யக்ஷமாக பார்ப்பார்கள்-
சமீஷதே –
நிகழ் காலம் -யுவதிகள் கோப ஸ்திரீகளுக்கு பிரியன் -ஆவான் -வ்யாமோஹம் அனைவர் இடம் காட்டியவன் –
அனுபவ பரிவாஹம் -தானே இந்த பிரபந்தம் -அனைத்தையும் அவனே காட்டக் கண்டவர் அன்றோ –
வல்லவீ ஜன வல்லபம் -உபக்ரமித்து
வல்லவ சக்ரவர்த்தி -2-
வ்ரஜ யோஷித –6-
வல்லவீ –11
வ்ரஜ அங்கநா –13
வல்லவ அங்கநா –14-
வல்லவீ –15-
கோப ஸ்த்ரீ –17
கோப கன்யா –18-
வல்லவீ வல்லபு -19-
வல்லவீ –20-
இவ்வாறு பல இடங்களிலும் கோபியர்களுடன் சேர்ந்த
யுவாநாம் –8-
அஜஹத் யவ்வனம் –10-
யூந -13
யுவா -14–போன்ற பாலா இடங்களிலும் இவனது யவ்வன பருவ அனுபவம்
———————————–
முதல் ஸ்லோகம் -அனுஷ்டுப் விருத்தம்
2- கோபால மந்த்ரம் -வஸந்த திலகம்
3-சைஸவம் –பூதனா நிரஸனம் -வஸந்த திலகம்
4- நவநீத நாட்யம் –வஸந்த திலகம்
5- நவநீத ஸுர்யம் –மந்தாக்ராந்தா
6- ப்ரஹ்ம கிசோரம் –ஓவ்ப சந்தஸ்ஸு
7-உல்லூக பந்தனம் -ஓவ்ப சந்தஸ்ஸு
8-யாமளார்ஜுன பஞ்சனம் -ஓவ்ப சந்தஸ்ஸு
9- வம்சீ -ஓவ்ப சந்தஸ்ஸு
10-யுவா –ஓவ்ப சந்தஸ்ஸு
11-அபாங்கம் –ஓவ்ப சந்தஸ்ஸு
12-வேணு கோபாலன் -ஓவ்ப சந்தஸ்ஸு
13-அழகு –ஓவ்ப சந்தஸ்ஸு
14-கோபால சித்திரம் -யோகினி
15-அஞ்சனச்சுடர் -யோகினி
16-வம்ஸ நாளம் –மாலினி
17-ஜாரன் –மந்தாக்ராந்தா
18-விடன் -மந்தாக்ராந்தா
19-ஜல க்ரீடை –மந்தாக்ராந்தா
20-வஸ்த்ர அபஹரணம் –மந்தாக்ராந்தா
21–பல ஸ்ருதி –உபேந்திர வஜ்ரா
——–
2- பாலாடைப்பருவம்
3- தொட்டில் பருவம்
4- நாட்டியம்
5- ஸுர்யம்
6- ஸ்தநந்தயம்
7- அஞ்சும் பருவம்
8-பால கேளி யுவா
9- அடவீ ஸம்பத் மேய்க்கப் போனமை
10-அத்யந்த யவ்வனம் -அஜஹத் யவ்வனம் -அழகு
11- அபாங்க வல்லவீ விமோஹம்
12- அங்கநாநாம் அபிலாஷ பதம் யூன
——–
கௌமாரம் -ஐந்து வயது வரை
பவ்கண்டம் –ஐந்து முதல் பத்து வரை
கைசோரம் -பத்து முதல் பதினைந்து வரை
யவ்வனம் -அதற்கு மேல்
பாலம் -16 வயது வரை
தருண அதற்கும் மேல்
வ்ருத்தம் –70 மேல்
வர்ஷாயன் –90 மேல்
———
கிரியா பத வரிசைகள்
1- வந்தே
2- ஜயதி
3-அவைமி
4- ஆவிர்பவது
5- பாயாத்
6- ஈடே
7- ஸ்மராமி
8- நிசா மயாமி
9-பஜாமி
10- ஆவிரஸ்து
11-அவது
12- ப்ரதி பாஸ் சந்து
13-அவலோகயாமி
14-கேன லிகித
15-கவயாமி
16-ஜயதி
18- ஜயதி
19-அவ்யாத்
20-ஜயதி
————
கோப ஸம்பந்தம்
1-வல்லவீ ஜன வல்லபம்
2-வல்லப சக்கரவர்த்தீ
3-கோபால டிம்ப வபுஷம்
4-நந்த பவனே நவநீத நாட்யம்
5-மித்யாகோபஹ
6-வ்ரஜ யோஷி தபாங்க வேத நீயம்
7-குமாரம்
8-பால கேளிம் — யுவா நம்
9-வம்ஸாம் –காரண மாநுஷீம்
10-அஜஹத் யவ்வனம்
11-ஸ்பர்சித வல்லவீ விமோஹை
12-வம்சம்
14-வல்ல வாங்கநா வத நாம் போஜ திவாகரோ யுவா
15-வல்லவீ வலயா பாஷித
16-வல்லவீநாம் -சிதில வலய சிஞ்ஞா–கோப வேஷஸ்ய விஷ்ணோ
17-கோப ஸ்த்ரீணாம் ஜயதி கிதவ கோ அபி கௌமார ஹாரீ
18-கோப கன்யா புஜங்க
19-வல்லவீ வல்லபோ
20-வாசோ ஹ்ருத்வா தி நிகர ஸூ தா சந்நிதவ் வல்ல வீ நாம்
—————
இதி கோபால விம்சதி சம்பூர்ணம்
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுண சாலிநே –
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண ஸூ க்தம் —
January 20, 2017ஸ்ரீ புருஷ ஸூ க்தத்தில் ஸ்ருஷ்ட்டி க்ரமம் சொல்லி -நாராயண ஸூ க்தத்தில் ரக்ஷண க்ரமமும்-உபாஸனா க்ரமமும் –
அவனுடைய மேன்மையும்-அவன் சர்வ -அந்தர்யாமி யாய் இருக்கும் தண்மையையும் சொல்லி
சர்வ பர வித்யைகளிலும் நாராயணனே உபாசிக்கப்படுகிறவன் என்று அருளிச் செய்யப்படுகிறது –
சகஸ்ர சீர்ஷம் தேவம் விஸ்வாஷம் விஸ்வ சம்புவம்
விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் ப்ரபும் –1-
சகஸ்ர சீர்ஷம்
ஆயிரம் தலை -கால் கை கண் மற்ற எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் -ஆனந்தமான ஞான சக்திகளை யுடையவன் -என்றவாறு
புருஷ ஸூ க்தத்தில் சொல்லப் பட்டவன் நாராயணன் என்றவாறு
விச்வாஷம் –
சஹஸ்ராக்ஷயா -அனைத்தையும் அறிபவன் என்றவாறு -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி-
விசுவதஸ் சஷூருத விச்வதோ-சர்வ சக்தன் -சர்வ இந்த்ரியங்களாயும் இருப்பவன் –
சஷூர் தேவா நாமுத மர்த்யா நாம் -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
விஸ்வ சம்புவம்
அனைவருக்கும் எல்லா வித நன்மைகளையும் கொடுப்பவன் -மம மாயா துரத்யயா — அதஸோ பயங்கதோ பவதி –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம —
விஸ்வம்
உலகம் எல்லாம் சரீரமாகக் கொண்டவன் -விஸ்வம் விஷ்ணு என்றதையே விஸ்வம் நாராயண என்கிறது –
நாராயணம்
சரணம் கதி நாராயணம் -நார சப்தேன ஜீவா நாம் ஸமூஹ ப்ரோச்யதே புதை –கதிர் ஆலம்பனம் தஸ்ய தேன நாராயணஸ் ஸ்ம்ருத
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூநவே–தா யதஸ் யாயநம் பூர்வம் தேன நாராயணஸ் ஸ்ம்ருத
தரிப்பவன் –சர்வ வியாபி -சர்வ காரணன் -சர்வ செத்தனர்க்கும் உபாய உபேயன்
தேவம்
புகரை யுடையவன் -அழகன் -அமலன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-அன்பன் -அச்சுதன் –
அக்ஷரம்
அழிவற்றவன் –நித்ய ஸ்வரூபம் குணங்கள்
பரமம்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயன் -மிகுநர் இல்லாதவன்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமம் ச தைவதம் –
ப்ரபும்
அனைவரையும் நியமிப்பவன் -ஈஸ்வர சர்வேஸ்வரன் -கர்மாதீனம் இல்லாதவன்
பரமம் ப்ரபும் நாராயணம் -சமாதிக தரித்ரன் -சகாதேவன் வியாதிரேகத்தில் சொல்ல பூ மாரி பொழிந்ததே –
நஹி பாலன சாமர்த்தியம் ருதே ஸர்வேச்வரம் ஹரீம்
——————————–
விச்வத பரமம் நித்யம் விஸ்வம் நாராயணம் ஹரிம்
விஸ்வமே வேதம் புருஷஸ் தத் விஸ்வ முபஜீவதி–2
பதிம் விஸ்வஸ் யாதமேஸ்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம்
நாராயணாம் மஹாஜ்ஜேயம் விச்வாத்மநாம் பாராயணம் -3
விச்வத பரமம்
அசேதன சேதனங்களில் வேறுபட்ட -மேலானவன் -இல்லத்துக்கு உள்ளதும் அல்லது அவன் உரு –
அந்யச்ச ராஜன் ச பர தத் அந்நிய பஞ்ச விம்சக
உலகு உயிரும் தேவும் மற்றும் படைத்த பரம மூர்த்தி அன்றோ
நித்யம்
அசேதனங்களுக்கு ஸ்வரூபத்திலும் குணங்களிலும் மாறுபாடு உண்டே -சேதனர்கள் கர்ம அனுகுணமாக ஞானாதி குணங்களில் ஏற்றது தாழ்வு உண்டே
விச்வத பரமம் விஸ்வம்
அத்யந்த விலக்ஷணன்-மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
நாராயணம்
சர்வ வியாபகம் -தாரகன் -சர்வம் ஸமாப் நோஷி ததோசி சர்வ -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் என்று மீண்டும் மீண்டும் நாராயணம் சப்த பிரயோகம்
கிம் தத்ர பஹுபிர் மந்தரை கிம் தத்ர பஹுபிர் வ்ரதை-
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த சாதக
திருமந்திர பாராயண மகிமைக்காக மீண்டும் மீண்டும் சொல்லிற்று என்றுமாம்
ஹரிம் நாராயணம்
சர்வ காரணன் -சர்வ ரக்ஷகன் -சர்வ சம்ஹாரகன் –
ப்ராஹ்மணம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச
நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி ஹோச்யதே
ஹரிர் ஹரதி பாபாநி ஜன்மாந்தர க்ருதானி ச -குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –
இவன் உகந்த திரு நாமம் என்பதாலே ஹரி ஓம் முதலிலும் முடிவிலும் வேதம் சொல்லும்
விஸ்வமே வேதம் புருஷஸ்
சர்வ வியாபி -எல்லாம் இவனே -எங்கும் நிறைந்தவன் -பூர்ணத்வாத் புருஷ –
தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய் தானே யான் என்பானாகி
இதம் விஸ்வம் புருஷம் ஏவ -அநேந ஜீவேன ஆத்மனா அநு பிரவிசய
தத் விஸ்வ முபஜீவதி
இவன் அந்தர்யாமியாய் இருப்பதாலே உலகு இவனை அடைந்து ஜீவிக்கும் -விஸ்வம் வா ஸூ தேவன் ஸ்வரூப ஐக்கியம் இல்லை என்றதாயிற்று –
பதிம் விஸ்வஸ்
தேன வினா த்ருணம் அபி நசலதி–அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இல்லை –
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து -தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே —
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடத்தும் நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்ட வாற்றால் தனதே உலகு யென நின்றானே –
யாதமேஸ்வரம்
ஸ்வாமி மாத்ரம் இல்லாமல் -நியமித்தும் அருள்பவன் -ஆத்ம சப்தம் அசேதனத்துக்கும் உப லக்ஷணம் –
தனக்குத் தானே ஈஸ்வரனாய் இருப்பவன் என்றுமாம்
சாஸ்வதம்
ஆதியும் அந்தமும் இல்லாதவன் -ப்ரஹ்மாதிகள் போலே அழிவு இல்லையே
சிவம்
மங்கள கரமாய் இருப்பவன்
சாஸ்வதம் சிவம்
எப்பொழுதும் பரிசுத்தன்-ருத்ரன் போலே இல்லையே
பாவனஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன
அச்யுதம்
நழுவ விடாதவன் -வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதிமால் –
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-
அறியத் தக்கவர்களுள் பெரியவன் –
அச்சுதன்-நாராயணாம் மஹாஜ்ஜேயம்-
காரணம் து த்யேய-இவனே அறியத் தக்கவன் -என்றவாறு
யதா சோம்யா ஏகேன மருத் பிண்டேண சர்வம் ம்ருண் மயம்
விஞ்ஞாதம் ஸ்யாத் –ஏவம் சோம்ய ச ஆதே சோ பவதி
விச்வாத்மநாம் பாராயணம் –சாந்தோக்யம் ஸ்வேதா கேதுவுடன்
அறிய முடியாதவன் வேதம் சொல்ல இங்கே –
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-என்றது -அறிய முடியாதவன் என்று அறிவதே அறிவாகும்
மேலை வானவரும் அறியார் -ப்ரஹ்மாபி நாவேத நாராயணம் ப்ரபும்
ஞாதா –ஞானம் -ஜ்ஜேயம் -மூன்றும் உண்டு என்றதாயிற்று
ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் -/ பதிம் விசுவஸ்ய ஆதமேஸ்வரம் -விச்வத பரமம் -பேத சுருதிகள் /
விஸ்வம் -விஸ்வ மே வேதம் புருஷ –அபேத சுருதிகள் / விச்வாத்மநாம் கடக்க சுருதி
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதநா நாம் / ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாரம் -/த்வா ஸூ பர்ணா சயுஜா
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம /ய ப்ருத்வீம் அந்தரே சஞ்சரந் யஸ்ய ப்ருத்வீ சரீரம் ப்ருத்வீ நவேத
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மநோ அந்தர யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம்
பாராயணம்
பரமமான உபாயமும் உபேயமும் -கிம் வாப்யேகம் பாராயணம்– யுதிஷ்ட்ரன் கேட்க -பரமம் யா பாராயணம் ஜகந்நாதன் என்று ஸ்ரீ கிருஷ்ணனை காட்டினார் பீஷ்மர்
புருஷான் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா பராகதி
நகர்மணா நப்ரஜயா தநேந த்யாகேன ஏகேன அம்ருதத்வமா நசு-
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸினம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி —
பரமாபதமா பன்ன மனசா சிந்தயத் ஹரிம் -ச து நாக வரச் ஸ்ரீ மான் நாராயண பாராயண
ரஷ்ய அபேக்ஷாம் பிரதீஷதே –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே –
——————————————————————–
நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5
இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-
நாராயண பரம் ப்ரஹ்ம
ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீத் -முதலில் பர ப்ரஹ்மமாகவே இருந்தது இவனே -த்வம் ப்ரஹ்ம ஹி ப்ருஹதி ப்ரும்ஹயதீதி தஸ்மாத் —
ஆஸ்ரிதர்களை பெரியதாகச் செய்பவனும் நீயே -பரமம் சாம்யம் உபைதி —மம சாதாரம்ய மாகதா-தன்னாகவே கொண்டு -தம்மையே ஓக்க அருள் செய்வார் –
தத்துவம் நாராயண பர
நாராயணனே பர தத்வம் -நித்ய முத்தர்களும் இவனுக்கு பரதந்த்ரர்கள் –
நாராயண பரோ ஜ்யோதிர்
ஏஷ ஸம்ப்ரஸாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்-நேம வித்யுதோ பாந்தி குதோயமக்னி
தமேவ பாந்தமநுபாதி சர்வம் -தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி —
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் -பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –
மிகும் சோதி மேல் அறிவார் யவரே -ஸ்வ பாவிக அனவதிக அதிசய ஈஸீத்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக
ஆத்மா நாராயண பர
ஆதமைவேதம் அக்ர ஆஸீத் புருஷவித-
பரமாத்மா ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர -விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே
அவிகாராய ஸூ த்தாய நித்யாய பரமாத்மனே –அவிகாராய -அசேதன வியாவ்ருத்தி -அக்ஷரம் / தேவம் சேதனம் வியாவ்ருத்தி/
-சுத்தாய -/ நித்யம் முக்தர் வியாவ்ருத்தி -பரமாத்மா நித்யர் வியாவ்ருத்தி –
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா -அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-
உள்ளும் புறமும் வியாபித்து இருக்கிறான் -ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்
–முற்றக் கரந்து ஒளித்தாய்-விச்வாத்மநாம் -என்று முன்பு சொன்னதை விவரிக்கிறது
நாராயண -அஷ்டாவ்ருத்தி -ஒப்புயர்வற்ற அநந்ய பரமுமான திரு நாமம் அன்றோ இது –
—————————————-
அநந்தம் அவ்யயம் கவிம் சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்–6
எண்ணிறந்த அவதார ரூபங்கள் -குறைவற்ற -அழகாகப் பேசி -பாற் கடலிலே பள்ளி கொண்டு -உலகுக்கு நன்மை செய்பவன்
அமரர் ஏறாய் இருந்து -பகல் விளக்காய் இருந்து -ஆயர் கொழுந்தானவன் அன்றோ –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
அநந்தம்
கணக்கற்ற அவதாரங்களை யுடையவன் -அநந்த ரூபம் என்கிற முதல் அணுவாகம் -விவரணம்
அந்தஸ் சமுத்திர நிலையம் யம நந்த ரூபம் -ஸ்ரீ கூரத் தாழ்வான்-அஜாய மா நோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் – சன்மம் பல பல செய்து -பஹு நி மே வியதீ தானி ஜன்மானி –
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தவன்
அர்ச்சை -ஹ்ருதா மநீஷா மனஸாபிக் லுப்தா –
யத் ஸ்வரூபோ யத் ரூபோ யத் குணோ யத் விபூதிகோ யத் பிராமணகோ யத் த்ரவ்யோயம் சர்வேஸ்வர கலப்யதே ச ததா பவேதி தி பாவ
யே யதா மாம் -பிரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே
அநந்தம்
தேச கால வஸ்து பரிச்சேதய ரஹிதன் என்றுமாம் -நித்யம் -கால பரிச்சேதய ரஹிதன் / விஸ்வம் -வஸ்து பரிச்சேதய ரஹிதன் /
யச்ச கிஞ்சித் ஸ்தித -தேச பரிச்சேதய ரஹிதன் –சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றவாறு
அவ்யயம்
குறைவற்றவன் -பிறக்கப் பிறக்க பெருமை விஞ்சி -விஜாயதே -விசேஷமாக பிறந்து -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான-
நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நிலம் -ஜென்ம கர்ம ச மே திவ்யம் –
கவிம்
நன்றாக பேசி -அவதரித்து செய்து அருளும் சேஷ்டிதங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம் ஹசித்தம் பாஷிதம் சைவ
நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
அனவதிக தயாசவ் ஹார்த்த அநுராக கர்ப்ப அவலோகநாலாம்பாருதை விஸ்வமாப்யா யயன் -ஸ்ரீ பாஷ்யகாரர்
கவிம்
வேத உபதேசம் -யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை –
பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்ட தெய்வம் ஏத்தினால்-செம்மின் சுடர் முடி என் திரு மாலுக்குச் சேருமே
சமுத்ரேந்தம்
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம்
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –பய் அரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி –
சமுத்ரேந்தம்
குறைவில் தடம் கடல் -யசோதை பிராட்டி போலே மடியில் இட்டுக் கொண்டு உகந்து இருக்குமே
சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்
சாபம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான் தன்னை -கூப்பீடு கேட்க்கும் இடம் அன்றோ
குறைவில் தடம் கடல் கோள் அரவு ஏறித் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல் ஒரு யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்
ஆத்மாநாம் வா ஸூ தேவாக்யம் சிந்தையன் -தன்னைத் தானே த்யானிப்பவன் -அவதார சிந்தனை என்றுமாம் –
————————————————————————–
பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம் சாப்யதோ முகம்
அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி-7
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம் தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்-8
தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹார மஜர கவி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம் -9
அந்தர்யாமி அவஸ்தையை அருமறை அனுபவிக்கிறது –பரத்வம் வ்யூஹம் வைபவம் அர்ச்சை அனுபவித்த பின்பு –
மறை முடி தேடிக் காணா மாதவன் மனத்தே அன்றோ மன்னி உறைகின்றான் –ஹ்ருதி திஷ்ட்ட்தி யோகி நாம் —
பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம்
தாமரை மொக்கைப் போல் இருக்கும் ஹிருதயம் -போதில் கமல வன்னெஞ்சம் –
சாப்யதோ முகம்
தலை கீழாய் இருக்கும் ஹிருதயம்
அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி
கழுத்தின் மூலத்துக்கு கீழும் நாபிக்கு மேலும் கட்டை விரல் அளவுள்ள இந்த ஹ்ருதயம் இருக்கிறது –
அங்குஷ்ட மாத்ர புருஷ –
கட்டை விரல் பரிமாணம் உள்ள புருஷன்
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்
அந்த ஹ்ருதயத்தை உலகுக்கு எல்லாம் ஓர் உயிரான நாராயணனுடைய பெரிய கோயிலாக அறிய வேணும் –
ஆயதனம் மஹத்
நெஞ்சமே நீள் நகராக இருந்த
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன கோல்-ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே
அன்ஸனான் அந்யோ அபிசாக சீதி-வாத்சல்ய குணம் பிரகாசிக்கும் அந்தர்யாமியிலே
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
சிறிது அலர்ந்த தாமரையை ஒக்கும் அந்த ஹிருதயம் எப்பொழுதும் நரம்புகளோடு தொங்குகிறது
கமல ஆசனி கேள்வன் ஆகையால் ஹிருதய கமலத்தை விரும்புகிறான் போலும்
தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம்
அந்த ஹ்ருதயத்தில் நடுவில் நுட்பமான ஒரு துவாரம் இருக்கிறது
தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்
அதில் சர்வாத்மாவான நாராயணன் நிலை நிற்கிறான் -சர்வ அந்தர்யாமி அன்றோ
தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர்-விச்வதோமுக
அந்த ஹிருதயத்தின் நடுவில் எங்கும் பரவி இருப்பதும் -எங்கும் ஜ்வாலை உள்ளதுமான -ஜாடராக்கினி -என்னும் பெரிய அக்னி உள்ளது
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹாரம்
அது ஆகாரத்தை மூன்று விதமாகப் பிரித்துக் கொண்டு முதலில் சாப்பிட -ஜீரணித்து தேகத்துக்கு தருகிறது என்று தாத்பர்யம்
அஜர
எப்பொழுதும் விழித்துக் கொண்டே இருக்கும் இந்த அக்னி
கவி
எப்பொழுதும் சப்தம் இட்டுக் கொண்டே இருக்கும் இந்த அக்னி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம்
உள்ளங்கால் முதல் தலை வரை தேகத்தை சூடுபடுத்தவும் -ஆழ்வார்கள் திருமலையில் மரம் செடி கொடி அருவி அனுபவிப்பது போலே
ஆதார அதிசயத்தாலே அச்சுதன் இருப்பிடமான ஹிருதயத்தில் அக்னியையும் அருமறை அனுபவிக்கிறது –
——————————————————————–
தஸ்ய மத்யே வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தன்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா -10
தஸ்ய மத்யே
தஹா புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்தி நீ -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்
வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித
ஹிருதய ஆகாசத்தில் நடுவில் மெல்லியதாகவும் மேல் நோக்கினதாகவும் வஹ்னி சிகை இருக்கிறது
யுக்தம் தத்துவ ஜாதம் ஆத்மதயா ஸ்திதவா வஹதி தாரய தீதி வன்ஹி –பரமாத்மா தஸ்ய சிகா வன்ஹி சிகா
தத்வ ஸமூஹத்தை ஆத்மாவாக நின்று வகிக்கிறவன் ஆகையால் வஹ்னி என்று பரமாத்மாவை சொல்லி -அவனது சிகை வஹ்னி சிகை -என்றவாறு
ஒப்பற்ற பிரகாசம் யுடையதாய் அக்னி சிகை போலே இருப்பதால் –
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா
நீல மேகத்தை நடுவில் கொண்ட மின்னல் கொடி போன்ற ஒளியுடன்
ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதாப பரமாத்மா ஸ்வரூபா –ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபா தீத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யகாரர்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் –நீல மேகத்தை விழுங்கின மின்னல் போன்ற திருமேனி என்றும் நீல மேகம் விழுங்கின மின்னல் போன்ற திருமேனி
மின்னிலங்கு திரு உரு என்றும் கரு முகில் ஒப்பர் என்றும் சொல்வாரே
சேதனனை பெறாத போது உடம்பு வெளுத்தும் -பெற்ற போது இயற்கையான நீல மேக ஸ்யாமள வர்ணன் -என்றவாறு –
நீவார ஸூகவத் தன்வீ
நெல் நுனி போலே சிறியதாய் இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்
பீதாபா
மஞ்சள் நிறமான ஒளியுடன் கூடியது -உருக்கிய தங்கம் போலே -நிறத்தை காட்டிலும் ஒளியே விஞ்சி இருக்கும்
தேஜஸாம் ராஸிம்–ஹிரண்ய வர்ணாம்
பீதாபா
என்று ஸ்வ தேஜஸ் ஸை விக்ரஹம் தான் பானம் பண்ணிக் கொண்டு இருக்கும் என்றபடி -ஸ்வயம் பிரகாசம் என்றுமாம்
ஸ்யாத் தநூபமா
உவமானம் ஆகலாம் -வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத பிரகாசம் அன்றோ -உவமானம் அற்றது என்றுமாம்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா -சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது –
———————————————-
தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித
ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்–11
தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித
ஆத்மா நாராயண பர -என்னும் பரமாத்மா -விசேஷண அவஸ்தித -விசேஷமாக எழுந்து அருளி இருக்கிறார்
வாத்சல்யாதி குணங்களால் –
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாய சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே
தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அன்ஸனன் அந்யோ அபிசாக சீதி
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்ட்ட்தி
பிராமயன் சர்வ பூதாநி யந்த்ர ரூடானி மாயயா–ஸ்ரீ கீதை
ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்
அனைவருக்கும் அந்தர்யாமி -அவனே அவனும் அவனும் அவனும் -அவனே மாற்று எல்லாமும் அறிந்தனமே
ப்ரஹ்மா சிவாஸ் சதமக பரமஸ் ஸ்வராட் இத் யேதே அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ் தே -ஆளவந்தார்
-இவனது ஐஸ்வர்யா கடலில் துளி யாவார்கள்
இவர்கள் ஸ்திதியும் அவனாலே -இருந்து படைக்கும் ஆசனம் போன்றே நான்முகன் -சிவனாய் அயனாய்
சோஷர
-இவர்களும் சிறந்த முக்தாத்மாக்களுக்கும் அவனே அந்தர்யாமி
பரமஸ் ஸ்வராட்
கர்ம வஸ்யன் இல்லாத பரமாத்மா -ச ஸ்வராட் பவதி -ஸ்வ தந்த்ரன் ஆகிறான் அவன் ஒருவனே –
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான
———————————————————————-
ருதம் சத்யம் பரம் ப்ரஹ்மம் புருஷம் க்ருஷ்ண பிங்களம்
ஊர்த்வ ரேதம் விருபாக்ஷம் விஸ்வ ரூபாய வை நம–12
பரம புருஷார்த்தம் கைங்கர்யம் பிரார்த்திக்கப் படுகிறது –
ருதம்
சர்வகதன்-சர்வ வியாபகத்வத்தை ஆதார அதிசயத்தால் மீண்டும் அனுவதிக்கிறது -சர்வ வியாபி யாகையாலே நாம் இருந்த இடத்திலே கைங்கர்யம் செய்யலாமே
சத்யம்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம / ஏக ரூபி / ஆஸ்ரித ரக்ஷணம் தீக்ஷிதன் /
பரம் ப்ரஹ்மம்
பரமமானவன் -தன்னை ஆசிரியத்தாரையும் பெரியவனாக ஆக்குபவன்
புருஷம்
நாம் எல்லாரும் ஸ்த்ரீ பிராயர் -கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அனுரூபம்
க்ருஷ்ண பிங்களம்
கறுப்பும் மஞ்சளும் கலந்த திருமேனி -கைங்கர்யத்துக்கு விஷயமான திரு மேனி -காள மேக ஸ்யாமளன் -திரு ஆழி தேஜஸ் வியாபித்து இருப்பதால் –
அதஸீ புஷப ஸங்காசா பீத வாசா ஜனார்த்தன -வ்யப் ராஜத சபா மத்யே ஹேம நீவோ பஹிதோ மணி –
இத்தால் பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே கைங்கர்யம் என்றதாயிற்று -ஹரீச்ச் தே லஷ்மீச்ச பத்நயவ்
ஊர்த்வ ரேதம்
ப்ராக்ருதமான ஸ்த்ரீ சங்காதிகள் அற்றவன் -விகாரம் அற்றவன் -உயர்ந்த வீர்யத்தை யுடையவன்
விருபாக்ஷம்
மாறு பட்ட ரூபங்களை யுடைய திருக் கண்களை யுடையவன் -சஷூஷீ சந்த்ர சூர்யவ்
விசேஷமான ரூபமுடைய திருக் கண்கள் என்றுமாம் -யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
வன் காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த மென் கால் கமலத் தடம் போல் பொழிந்தன –எம்பிரான் தடம் கண்களே
விஸ்வ ரூபாய வை நம
உலகத்தை எல்லாம் சரீரமாகக் கொண்டவனுக்கு நமஸ்காரம் -ஆய -கைங்கர்ய பிரார்த்தனை -அவன் முக மலர்த்திக்காகவே –
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸுதர்ஸன அஷ்டகம் —
December 12, 2016ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
திருக் கை கழலா நேமியான் -பிரணய ரக்ஷணத்தில் கால விளம்பம் அஸஹ்யன் –
ஹேதி ராஜன் -ஹன்யதி -திவ்யாயுதங்களுக்கு ராஜா /ரதாங்கம் –
1268—/69—1368/69–28 ஸ்தோத்திரங்கள் -பரமத பங்கம் ஸ்தோத்ரம் -நிறைவேற –
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வாரை பிரார்த்தித்து
ஷோடச திவ்யாயுதங்களுக்கு 16 ஸ்லோகங்கள்
திருவாய் மொழி பெரிய திருமொழி -நிலை நிற்க -எங்கள் கதியே ராமானுஜ முனியே தங்கும் மனம் நீ எனக்கு தா –
வளர்த்த இதத்தாய் ராமானுசனை பிரார்த்திப்பது போலே -திருவயிந்திர புரத்திலே சாதித்தார் என்பர் –
திருப்புட் குழி -விஷ ஜுரம் போக்கி–ஆராயம் ஆயுஸ் ஸூ ஐஸ்வர்யம் -பெற்று–
கைங்கர்ய நிஷ்டர் ஆக்குவதற்காக -அருளிச் செய்தார்
நாம் மங்களாசாசன பரராவதற்காக சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் –
விருத்தங்கள் பல —-க்ரஸ்த்வம்– குறில் குறில் குறில் /நெடில் நெடில் குறில் /நெடில் குறில் குறில் —
எல்லா பாதங்களும் -இப்படியே இருக்கும்
ஸூ தர்சனம் -சோபனம் தர்சனம் அஸியேத்தி-மங்களமான தர்சனம் இருப்பதால் /
கையார் சக்கரத்து –என்று என்று -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி -சேர்த்திக்கும் பல்லாண்டு பாடுவார்கள் –
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழி
திரு மால் உரு ஒக்கும் -மேரு –நீல மலை இரண்டு பிறை –கோல வராஹம் –செஞ்சுடரோன் உதித்தால் போலே –
திரு மால் திருச் சக்கரம் ஒக்கும் –
ஸூ கேன த்ருச்யதே -ஸூ கமாக கடாக்ஷம் -ஸூ மார்க்கம் காட்டிக் கொடுப்பவர் -மோக்ஷமார்க்கம் -காட்டிக் கொடுப்பவர் –
சக்ர -க்ரியதே அநேக -அநேகம் கார்யங்கள் கிரியா –
ஹேதி ஹன்யாதே விரோதி நிரசனம்
ரதாங்கம் -வட்ட வடிவு –ஆழி -சமுத்திரம் போலே சுழன்று
ஜ்வாலை மேலே /-கூர்மை யான நுனி நேமி/ அரம்/நாபி -அக்ஷம் -குழி -ஐந்து அங்கங்கள் —
ஹேதி ராஜ ஸ்தவம் ஹேதி புங்கவ ஸ்தவம் ஸ்தோத்ரம் நடாதூர் அம்மாள் அருளிச் செய்தது
திருவரங்க பெருமாள் அரையர் நோய் சாத்திக் கொண்டு இருக்க அத்தை தீர்க்க -101 ஸ்லோகங்கள் கொண்ட
ஸூ ர்சன சதகம் -கூர நாராயண ஜீயர் -ராமானுஜர் திரு மடம் -ஆண்டாள் முயன்று ஏற்படுத்தி –
எண் தல அம்புயத்துள் இலங்கும் அறு கோண மிசை
வண் பணிலம் திகிரி வளைவில் வளைவாய் முசலம்
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்
எண் படை ஏந்தி நின்றான் எழில் ஆழி இறையவனே–பரமத பங்கம் பாசுரம் –
அறு கோண மிசை–ஷட் கணம் / பணிலம் -சங்கம்/திகிரி -சக்கரம் /வில்-சார்ங்கம் / முசலம் -உலக்கை /
அங்குசம் /-பாசக்கயிறு /கதை /செங்கமலம்
எண் படை ஏந்தி நின்றான் எழில் ஆழி இறையவனே
சங்கம் / சக்கரம் / உலக்கை / சார்ங்கம் / செந்தாமரை மலர் /கதை /அங்குசம் /பாசக்கயிறு -ஆக அஷ்ட ஸ்லோகங்கள்
அஷ்ட திவ்யாயுதங்கள் ஏந்தியும் ஸூ தர்சன ஆழ்வார் -ஷோடச -ஆயுதங்கள் சேர்த் தும் ஸூதர்சன ஆழ்வார் –
சங்கம் / கோதண்டம் / பாச கயிறு /ஹாலா -கலப்பை /முசல -உலக்கை /கதை / வஜ்ரம் -இடது திருக்கை
சக்கரம் /குந்தம் /கிருபானம்/ பத்து பரசு /கோடரி / சதமுக அக்னி /அங்குசம் -/சக்தி வேல் -வலது திருக்கை –
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அஷ்ட புஜத்தான்-ஜய ஜய ஸூ தர்சன -தோலாத வென்றியான்
ஆனி சித்திரை -இவர் திரு நக்ஷத்ரம் -ஆனி-ஸ்வாதி ஸ்ரீ நரசிம்மர் – –
உக்ரம் -இத்யாதி -சகஸ்ரா ஹூம் பட் இத்யாதி -மந்த்ரம் தொடர்பு
நான்கு கைகளிலும் சக்கரம் -பாஞ்ச ராத்ரம் -ஸ்ரீ நரசிம்மர் -சக்கரத் ஆழ்வார் பின் பக்கம் –
திருப் ப்ரீதி -கால சக்கரம் சுழற்றி சேவை -பிரயோக சக்கரம் திரும்பி சில இடங்களில் சேவை –
ஜ்வாலா கேசம் த்ரி நேத்ரம் -ஹாரா கேயூர பூஷம் -சகல ரிபுண–பஞ்ச சம்ஸ்காரம் -பாஞ்ச ராத்ர ஆகமத்தில் உண்டு –
துவாதச ஆரம்-12-ஆரங்கள் -6 கோணங்கள் -சக்கர பொறி -தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி –
என்னையும் என் உடைமையையும் உன் சக்கர பொறி ஒற்றிக் கொண்டு -பர சம்பந்த வேதனம் -வளையாதி விபூஷணம் –
——————————-
பிரதிபட ஸ்ரேணி பீஷண-வர குண ஸ்தோம பூஷண
ஜனி பய ஸ்தான தாரண ஜகதவ ஸ்தான காரண
நிகில துஷ் கர்ம கர்சன நிகம சத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன –1-
பிரதிபந்தகங்களின் ஸமூஹத்துக்கு அச்சத்தை அளிப்பவனே
ஸமஸ்த கல்யாண குண ஸமூஹங்களை ஆபரணமாக உடையவனே
பயத்துக்கு இருப்பிடமான பிறப்பை ஒழிப்பவனே
உலகத்தை நிலை நிறுத்த காரணம் ஆனவனே
எல்லா பாபங்களையும் அழிப்பவனே
நல்ல தர்ம மார்க்கங்களைக் காட்டுபவனே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
திருச் சங்குக்கு ஜய கோஷம் முதல் ஸ்லோகம்
பிரதிபட ஸ்ரேணி பீஷண-யஸ்ய நாதம் -த்ருஷ்ட்ரர்கள் நெஞ்சு உளுக்கும் படி
வர குண ஸ்தோம பூஷண -கல்யாண குணாத்ம கோஸவ் –
ஜனி பய ஸ்தான தாரண-சம்சாரம் தாண்டுவிக்கும்
ஜகதவ ஸ்தான காரண -ஸ்திதிக்கு காரணம்
நிகில துஷ் கர்ம கர்சன
நிகம சத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன-ஸ்ரீ விஷய லஷ்மி சமேத
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன
அடியேன் நாவில் இருந்து ஜெயித்து அருள வேணும் –
————————————————————————-
ஸூ ப ஜகத்ரூப மண்டன ஸூர கண த்ராச கண்டன
சதமக ப்ரஹ்ம வந்தித -சத பத ப்ரஹ்ம நந்தித
பிரதித வித்வத் சபஷித-பஜத ஹிர்ப்புந்த்ய லஷித
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–2-
மங்களமான ஜெகதாகாரமான ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு அலங்காரமாய் இருப்பவரே
தேவ சமூகங்களுக்கு பயத்தை ஒழிப்பவரே
நூறு யாகங்கள் செய்த இந்த்ரனாலும் ப்ரஹ்மாவாலும் ஆராதிக்கப்படுபவரே
சத பதம் என்னும் ப்ராஹ்மணத்தால் போற்றப்படுபவர்
பிரபலமான வித்வான்களுக்கு அனுகூலமாய் இருப்பவரே
உம்மை ஆஸ்ரயிக்கும் சிவனுக்கு உம்மைக் காட்டி அருளுபவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
ஸூப ஜகத்ரூப மண்டன -ஸூபாஸ்ரயம் விராட் ரூபம் -ஆழி எழ அணி அத்திகிரி -பூஷணம் –
ஸூர கண த்ராச கண்டன -தேவ ஜனங்கள் பயம் போக்கும் –
சதமக ப்ரஹ்ம வந்தித–ப்ரஹ்மாதிகள் வணங்கும் -அம்பரீஷ உபாக்யானம் –
அத்திகிரி பத்தர் வினை தீர்க்கும் -தொற்று அற அறுக்கும் –
சத பத ப்ரஹ்ம நந்தித -வேதங்களால் கொண்டாடப்பட்ட
பிரதித வித்வத் ச பஷித- வித்வான்களால் போற்றப்பட்ட
பஜத ஹிர்ப்புந்த்ய லஷித-பாஞ்ச ராத்ரம் -மஹிமை
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன.
பர மதங்களை நிரசித்து விஜய வல்லி சமேத ஸூ தர்சன ஆழ்வார் ரஷிப்பார்
——————————————————–
ஸ்புட தடிஜ்ஜால பிஞ்ஜர-ப்ருததர ஜ்வலா பஞ்ஜர
பரிகத ப்ரத்ன விக்ரஹ -படுதர ப்ரஞ்ஜ துர்க்ரஹ
ப்ரஹரண க்ராம மண்டித -பரி ஜன த்ராண பண்டித
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூதர்சன–3-
பிரகாசிக்கும் மின்னல் கூட்டம் போலே சிவந்த பொன் வண்ணம் உள்ளவரே
மிகப் பெரிய அக்னி கொழுந்துகளாலான ஸமூஹத்தை உடையவரே
யந்த்ரத்திலும் சுற்றிலும் சிறந்த திரு மேனியை உடையவனே
மிகக் கூர்மையான அறிவு உடையாராலும் அரிய முடியாதவரே
திவ்ய ஆயுத ஸமூஹங்களால் அழகு படுத்தப் படுபவரே
ஆஸ்ரித ரக்ஷணத்திலே பண்டிதரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
ஸ்புட தடிஜ்ஜால பிஞ்ஜர-
உலக்கை -நிலை நின்ற மின்னல் கூட்டம் போலே -அபூத உவமை
ப்ருததர ஜ்வலா பஞ்ஜர
அக்னி ஜ்வாலை கூட்டம் போலே -குமார சம்பவம் அக்னி மத்யம் தபஸ் –
பரிகத ப்ரத்ன விக்ரஹ –
யந்த்ரம் -ஸ்ரேஷ்டமான ரூபம் -வ்யூஹவதாரங்கள்
படுதர ப்ரஞ்ஜ துர்க்ரஹ
வித்வான்களாலும் அறிய முடியாத படி
ப்ரஹரண க்ராம மண்டித –
பல திவ்யாயுத சேர்க்கை போலே
பரி ஜன த்ராண பண்டித
ஆஸ்ரிதர் பரிபாலன சாமர்த்தியம்
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன
———————————————————–
நிஜ பத ப்ரீத சத் கண நிரு பதி ஸ்பீத ஷட்குண
நிகம நிர் வ்யூட வைபவ நிஜ பர வ்யூஹ வைபவ
ஹரி ஹய த்வேஷி தாரண ஹர புர ப்லோஷ காரண
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–4-
தனது திருவடிகளில் பக்தி உடைய நல்லவர்களின் ஸமூஹங்களை உடையவரே
ஸ்வாபாவிக பரி பூர்ண ஞானாதி ஷட் குணங்களை உடையவரே
வேதங்களால் ஸ்தாபிக்கப் பட்ட பெருமையை உடையவரே
தனது பரம் வ்யூஹம் ஆகிய திரு மேனியின் பெருமையை உடையவரே
இந்திரனது விரோதிகளை ஒழித்தவரே
சிவனது பட்டணம் வெந்து எரிவதற்கு காரணம் ஆனவர்
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
நிஜ பத ப்ரீத சத் கண-ஸ்தானங்கள் -அடைந்து ஸந்துஷ்டர் கூட்டங்கள்
சார்ங்கம் -வளை வில் -சிலை வளவாய் முஸலம்-இதில் –
சரணாரவிந்தம் ப்ரீதி உடன் சேரும் சாதுக்கள்
நிரு பதி ஸ்பீத ஷட்குண இயல்பாகவே ஷட் குண பூர்ணர் –
ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -ஷட் ஏவ பிரதம குணங்கள் —
பர வா ஸூ தேவன் -போலே தேஜோ மயமான திரு ஆழி ஆழ்வானுக்கும் –சாரங்கத்துக்கும்
நிகம நிர் வ்யூட வைபவ-வேதங்கள் போற்றும் வைபவம் –
நிஜ பர வ்யூஹ வைபவ -எல்லா அவஸ்தைகளும் உண்டே -இயல்பாகவே –
ஹரி ஹய த்வேஷி தாரண-இந்திராதி –சத்ரு கண்டன -குதிரை முகன்
ஹர புர ப்லோஷ காரண -சிவன் புரம் காசி அழிவுக்கு காரணம் -பவ்ண்டரகன்-
கிருத்யா -துணை உடன் வர -அழித்து-
புரம் ஒரு மூன்று –அழித்து –ஓர் மாத்திரை போதில் பொங்கு அக்னிக்கு இரை யாக்கி –
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன
————————————————————
தநுஜ விஸ்தார கர்த்தன ஜநி தமிஸ்ரா விகர்த்தன
தநுஜ வித்யா நிகர்த்தன பஜத வித்யா நிவர்த்தன
அமர த்ருஷ்ட ஸ்வ விக்ரம சமர ஜுஷ்ட ப்ரமி க்ரம
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–5-
அசுரர்களின் வளர்ச்சியை அறுப்பவரே
சம்சாரமாகிய இருண்ட இரவுக்கு ஸூர்யன் போன்றவரே
அசுரர்களின் மாயையை ஒழிப்பவரே
பக்தர்களின் அறியாமையைப் போக்குபவரே
தேவர்களால் காணப்பட்ட தமது வீர்யத்தை உடையவரே
போரில் கையாளும் சுழற்சி முறைகளை உடையவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
தநுஜ விஸ்தார கர்த்தன–செங்கமலம் -அருணாரவிந்த திவ்ய ஆயுதம் -எல்லாமே திவ்ய ஆயுத அம்சம் –
மெல்லிய இதழ் மொட்டு கூட ஆயுதம் –
ஜநி தமிஸ்ரா விகர்த்தன–இருள் தரும் சம்சாரம் போக்கி / வேரோடு ருசி வாசனைகள் இல்லாமல் /
தநுஜ வித்யா நிகர்த்தன-தானவர் அசுரர் ராக்ஷசர் ஜாதிகள் குலங்களோடே போக்கி அருளும் பராக்ரமம் –
பாஸ்கர கோடி துல்யம்
பஜத வித்யா நிவர்த்தன
அமர த்ருஷ்ட ஸ்வ விக்ரம-தேவாதிகள் கண்டு அனுபவிக்கும் படி –விக்ரமங்கள் மிக்கவன் –
சமர ஜுஷ்ட ப்ரமி க்ரம –தேஜஸ் பிரபாவம் மிக்கு
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன
————————————————————-
ப்ரதி முகா லீட பந்துர ப்ருது மஹா ஹேதி தந்துர
விகட மாயா பஹிஸ்க்ருத விவித மாலா பரிஷ்க்ருத
ஸ்திர மஹா யந்த்ர தந்த்ரித த்ருட தயா தந்த்ர யந்த்ரித
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–6-
திருவடிகளை முன்னும் பின்னும் வைத்து அழகாக இருப்பவரே
மிகப் பெரிய திவ்ய ஆயுதங்களால் சூழப் பட்டு இருப்பவரே
கொடிய மாயைகளுக்கு அப்பால் பட்டவரே
பல மாலைகளால் அலங்கரிக்கப் படுபவரே
நிலையான பெரிய யந்திரத்தில் இருப்பவரே
உறுதியான கருணை என்னும் கட்டுத் தறியில் கட்டுப் பட்டவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
ப்ரதி முகா லீட பந்துர–கதா திவ்ய ஆயுத ஸ்தோத்ரம் -சீர் திகழும் கதை –நிற்கும் நிலை -மநோ ஞானம் உடையவர்
இடது திருப் பாதம் முன் புறம் குனிந்து வலது திருப் பாதம் பின் புறம் -கோபால விம்சதி -ஜல க்ரீடை பண்ணும் போது நின்ற நிலை
இதே நிலையில் நின்று அருளி -பக்தர்கள் சேவிக்கும் படி
ப்ருது மஹா ஹேதி தந்துர -திவ்ய ஆயுதங்கள் சூழ்ந்து/ நெருக்கத்தில் எழுந்து அருளி
விகட மாயா பஹிஸ்க்ருத
விவித மாலா பரிஷ்க்ருத–கண்டா மாலைகளால் அலங்க்ருதம் /-24-தத்வங்கள் மாலையாக /
ரக்ஷித்தத்தில் தீஷித்து -விசாலமான / விகசிதமான சுத்த ஞான ஸ்வரூபன்
ஸ்திர மஹா யந்த்ர தந்த்ரித–சாஸ்வதம் -பெரிய யந்த்ர -சரணாகதி மட்டுமே ஸ்திரம் —
ஞான சக்தி பலம் வீர்யம் தேஜஸ் ஐஸ்வர்யம் –ஷட் குணங்கள் உடன் கூடிய யந்த்ரம்
த்ருட தயா தந்த்ர யந்த்ரித–கட்டப்பட்டவர்/ கதா பாணி பெருமாள் ஸ்ரீ ராமாயணம் –
கதா ஸ்வரூபம் என்று அறிந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயம் -சம் ரக்ஷணத்துக்காக நிலை கொண்டு அருளி -என்றவாறு –
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன
————————————————————
மஹித சம்பத் சத ஷர விஹித சம்பத் ஷட ஷர
ஷடர சக்ர ப்ரதிஷ்டித சகல தத்வ ப்ரதிஷ்டித
விவித சங்கல்ப கல்பக விபுத சங்கல்ப கல்பக
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–7-
மிக உயர்ந்த செல்வமான ஞானத்தை உடைய சாதுக்களுக்கு அழியாத மோக்ஷம் அளிப்பவரே
அளிக்கப்பட்ட செல்வங்களை உடைய ஆறு எழுத்து மந்த்ரத்தை உடையவரே
ஆறு கோணங்களை உடைய சக்கரத்தில் நிலையாக இருப்பவரே
எல்லா தத்துவங்களின் உள்ளே நிற்பவர் ஸமஸ்த அபேக்ஷைகளையும் அளிப்பவரே
கற்பக வ்ருஷம் போன்றவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
மஹித சம்பத் சத ஷர –அங்குசம் திவ்ய ஆயுத மஹிமை -பிரசித்த ஞானம் உடைய –
ஞானவான்களுக்கு -மோக்ஷ பூதர்-
விஹித சம்பத் ஷட ஷர -உபாசகர்களுக்கு -ஷட் அக்ஷரம் -இதுவே சம்பத் இவர்களுக்கு –
மந்த்ர சாஸ்த்ர சித்தாந்தம் /சத அஷர மந்த்ர ரூபி
ஷடர சக்ர ப்ரதிஷ்டித–சக்கரத்தில் ஆறு அரங்கங்கள் நிலைத்து நிற்பவர் –
சகல தத்வ ப்ரதிஷ்டித –தத்துவங்களில் சன்னிஹிதம் உடையவர்
யா பிருதிவ்யாம் திஷ்டன் இத்யாதி -அந்தராமி ப்ராஹ்மணம் –
விவித சங்கல்ப கல்பக–எல்லா விதங்களிலும் நினைத்தவற்றை -செய்து முடிப்பவர் -சங்கல்ப மாத்திரத்திலே –
விபுத சங்கல்ப கல்பக -கற்பக வருஷம் போலே அனைத்தையும் அளிப்பவர்
உபாசகர்கள் ப்ரஹ்ம ஞானிகளுக்கு -சர்வ பல பிரதத்வம் –
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–
எம்பெருமான் அந்தர்யாமியாக உபாசானம் செய்து மோக்ஷ பலன் -பெறுவோம் –
————————————————————-
புவன நேத்ர த்ரயீ மய சவன தேஜஸ் த்ரயீ மய
நிரவதி ஸ்வாது சின்மய நிகில சக்தே ஜகன் மய
அமித விஸ்வ க்ரியா மய சமித விஷ்வக் பயாமயா
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–8-
உலகங்களுக்கு கண் போன்றவரே –
மூன்று வேதங்களின் வடிவம் ஆனவரே-
யாகங்களில் மூன்று அக்னிகளின் வடிவம் ஆனவரே
அபரிமித ஞான ஆனந்த திவ்ய வடிவம் ஆனவரே
சர்வ சக்தியும் ஆனவரே
உலக வடிவம் ஆனவரே
அளவற்ற சர்வ கர்மங்களாலும் ஆராதிக்கப் படுபவரே
எங்கும் பரந்த நோயையும் அச்சத்தையும் ஒழித்தவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-
புவன நேத்ர த்ரயீ மய–பாசரூபம்-நேத்ரம் போலே வேத ஸ்வரூபன் -கண்ணாவான் –காக்கும் இயல்பினன் –
வேதம் ஸ்ரீ ராமாயணம் -அவன் பெருமாள் -பிரியாமல் –
சவன தேஜஸ் த்ரயீ மய -மூன்று யாக அக்னி -சாஸ்திரம் -சாஷாத் ஸூ தர்சன ஆள்வான் எல்லை இல்லா பவித்ரன்
நிரவதி ஸ்வாது சின்மய -ஞான ஆத்மாக ஸ்வரூபம் -அளவில்லா ஞானம்
நிகில சக்தே ஜகன் மய -சர்வமும் இவர் அங்கம் -ஜெகதாகாரம் சர்வ சக்தன்
அமித விஸ்வ க்ரியா மய – அனைத்து பிரவ்ருத்திகளும் உம் அதீனம் -நித்ய நைமித்திக கிரியைகள் ஆஜ்ஜை படி
சமித விஷ்வக் பயாமயா -போக்கடிக்கப்பட்ட வியாதி இத்யாதி –பயங்களை போக்கி –
பஹு வரீஹீ சமாசம் -அடங்கி போகுமே இவர் முன்னே
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–
————————————————————–
த்வி சதுஷ்கமிதம் ப்ரபூத சாரம் படதாம் வேங்கட நாயக ப்ரணீதம்
விஷமே அபி மநோ ரத ப்ரதாவன் ந விஹன் யேத ரதாங்க துர்ய குப்த -9-
த்வி சதுஷ்கமிதம் ப்ரபூத சாரம் படதாம் -சிறந்த ரசம் -உடைய இந்த இரு நான்கை உடைய அஷ்ட ஸ்லோகங்கள் –
ப்ரதிதினம் அனுசந்தித்தால் /
அப்படியே பருகலாம் இனிமையானவை அன்றோ -வேதம் உபநிஷத் சாஸ்திரங்கள் அவதார வைபவங்களில் சாரம் இவை என்றபடி –
வேங்கட நாயக ப்ரணீதம்—ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்த /நன்கு பரீஷை பண்ணி -அருளிச் செய்தவை –
விஷமே அபி மநோ ரத ப்ரதாவன்-எண்ணாத பலன்களையும் அளிக்க வல்லவை /
ந விஹன் யேத ரதாங்க துர்ய குப்த —ஸ்ரீ சக்கரத் தாழ்வார் அருளால் -பெற்று இன்புறுவர் –
வசந்த மாலிகை வ்ருத்தம்-இந்த பல சுருதி ஸ்லோகம் /
பஞ்சாயுதம் -சர்வ பிரகாரணாயுத –சாஷாத் சக்கரத் தாழ்வான் அம்சம் -செந்தாமரை மொட்டும் கூட
மனசையும் இந்திரியங்களை வசப்படுத்தி பகவான் இடம் நம்மை செலுத்த வல்ல
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வார் அருளுக்கு ஆளாகுவோம்
——————————————
இதி ஸூ தர்சன அஷ்டகம் சம்பூர்ணம் –
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுண சாலிநே –
ஸ்ரீ மாதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கோதா ஸ்துதி —
December 12, 2016ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேஸரீ
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி —
———-
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம்
சாஷாத் ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே –1-
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீம்
நந்த வனத்தில் கல்ப கொடி -பெரியாழ்வார் தோட்டம் -மிக்க நல் தொண்டர் அன்றோ –
ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம்
ஸ்ரீ ரெங்க நாதன் ஆகிய சந்தன மரத்துடன் சேர்ந்த ஆண்டாளை பார்த்து –
சாஷாத் ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
பொறுமை -பெரிய பிராட்டி போலே -கைங்கர்யம் -அண்ட சராசரங்களையும் -சேர்த்து வைக்க -கருணை உடனும் –
பொறுமையால் பூமா தேவி வடிவும் -கருணையால் ஸ்ரீ தேவி வடிவும் கொண்டவளாய் –
கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே
அநந்ய கதித்வம் -சரணம் அடைகிறார் –
காம் ததாதி கோதா -வாக்கு –மாலை -என்றுமாம் -சூடிக் கொடுத்த நாச்சியார் –
நாம சங்கீர்த்தனம் -அர்ச்சனை -ஆத்ம சமர்ப்பணம் –மூன்றையும் -நமக்கு காட்டி அருள ஸ்ரீ பூமா தேவி
பேர் பாடி -முதல் பத்தால்-சர்வ தேவ நமஸ்காரம் கேசவன் கச்சதி —
அர்ச்சனை அடுத்த பத்தால் -திருப் பாதங்களில்
ஆத்ம நிவேதனம் அடுத்த பத்தால் -அருளிச் செய்து –
ஸ்ரீ ஆண்டாளுடைய திரு அவதாரமும் திருக்கல்யாணமும் அருளிச் செய்யப்படுகிறது –
நந்த இதி நந்தனம்
ஆனந்தோ நந்தனோ நந்தி -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்
கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே மால் தேடி ஓடும் மனம்
சந்தன யோக -ஸம்ஸ்லேஷம்-ஸ்ரீ ஆண்டாளுக்கு ஸ்ரீ அரங்கனுக்கு –
அவனது விரஹ தாபம் இவள் சேர்த்தியாலே கழிந்து தண்மை அடைந்தது –
த்ருஸ்யம்- மிதுனத்தை நமக்கும் காட்டி அருளுகிறாள் –
சர்வம் சஹா-ஷமையே உரு எடுத்தவள்
லகு உபாயம் வத ப்ரபோ -என்று நமக்காகவே பிரார்த்தி அவனை ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் அருளச் செய்தவள்
உனக்கே நாம் ஆள் செய்வோம் என்று சென்று நாம் சேவித்தால் ஆ ஆ என்று ஆராய்ப்பித்து அருள்வான்
சாஷாத் ஸ்ரீ -கமலா -இவ -அந்யாம் -திருமகள் போல் வளர்த்தேன் -தூய திருமகளாய் வந்து -பிரபந்த சாரம் –
அநந்ய சரண -அசரண்ய சரணம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே
ஸ்ரீ யம் அசரண த்வம் சரண்யம் ப்ரபத்யே ஸ்ரீ ஸ்துதி –
விஸ்வம்பராம் அசரண சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ பூ ஸ்துதி
கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ கோதா ஸ்துதி
ஸ்ரேயோ மூர்த்தி -சர்வ மங்கள விக்ரஹ மூர்த்தி -ஸ்ரீ தேவி -/ விஸ்வம் பரா- ஸ்ரீ பூமா தேவி /
வாக் அருளுபவள் ஸ்ரீ கோதா தேவி
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளில் சரண் புகுந்து அவளது கல்யாண குணங்களே தன்னை ஸ்தோத்ரம் செய்யத்
தூண்டியதை அருளிச் செய்கிறார் மேல்
—————————————————-
வாத்சல்யாதி குணங்களே என்னை பாட வைக்கும் –
வைதேசிக ஸ்ருதி சிராமபி பூயஸீ நாம்
வர்ணேஷூ மாதி மஹிமா ந ஹி மாத்ருஸாம் தே
இத்தம் விதந்தமபி மாம் சஹசைவ கோதே
மவ்ந த்ருஹோ முகர யந்தி குணாஸ் த்வதீயா –2–
வைதேசிக ஸ்ருதி சிராமபி பூயஸீ நாம்
அநேக வேத வாக்குக்களும் அறிய முடியாமல் -ஆனந்த வல்லி -ஒன்றையே பிடிக்க முடியாமல் –
யாதோ வாசோ நிவர்த்தந்தே -அவன் விஷயத்திலே –
விதேச பாவ வைதேசிக -ஸூவ தேசம் இல்லாமல் விதேச தேசமாக வேதங்கள் கூட -அபி சப்தம் –குணங்களைப் பேச முடியாமல் திரும்பினவே –
வர்ணேஷூ மாதி மஹிமா ந ஹி மாத்ருஸாம் தே
ஸ்தோத்ரம் பண்ணி அடைக்க முடியாத மஹிமை -எழுத்துக்களில் அடங்காமல் -கர்த்தும் ததீய மஹிமா -ஆளவந்தார் –
இத்தம் விதந்தமபி மாம் சஹசைவ கோதே
காம் ததாதி கோதா -கோதையை சரணம் அடைந்தார் -பரோஷமாக த்வயம் மந்த்ரம் போலே –
இதில் சாஷாதாகாவே கேட்க்கிறார்-விரைவாக நீயே அருளி
மவ்ந த்ருஹோ முகர யந்தி குணாஸ் த்வதீயா
மௌனமாக இருக்க ஒட்டாமல் குணங்கள் வாயை திறக்க வைக்கும் -சஹஜ காருண்யாதி குணங்களே பாட வைக்கும்
ரெங்கன் கொடுத்த கவி தார்க்கிக ஸிம்ஹம் -அன்றோ தேசிகர் -வேதாந்தமே நிரூபகமாக இருக்க –
குணங்கள் குழந்தை என்னை பாட வைத்த சாஹசம் அன்றோ -கோதை ஊமைத் தனத்தை அழித்து
முகம் -வாக்கு வாய் பேச்சு -முகம் கொடுப்பது மௌனத்தை தகர்த்து -வாக்கை பிடுங்கி அன்றோ பாட வைத்து அருளுகிறாய் –
—————————————————–
த்வத் ப்ரேயஸ ஸ்ரவணயோர் அம்ருதாயமா நாம்
துல்யாம் த்வதீய மணி நூபுர சிஞ்ஜிதாநாம்
கோதே த்வமேவ ஜநநி த்வத் அபிஷ்ட வார்ஹாம்
வாசம் பிரசன்ன மதுராம் மம சம்விதேஹி –3–
த்வத் ப்ரேயஸ ஸ்ரவணயோர் அம்ருதாயமா நாம்
ஸ்ரீ ரெங்கனுக்கு அமிர்தம் ஆக்கும் வாக்குகளை நீயே தந்து அருள –
ப்ரேயஸ ஸ்ரவணயோர்
பக்தஸ்தே அதீவ மே ப்ரியா -அவனும்
அஹம் சிஷ்ய ச ச பிரேஷ்யா ச த்வயி மாதவ -என்று பிரார்த்தித்து ஸ்ரீ வராஹ ஸ்லோகம்
துல்யாம் த்வதீய மணி நூபுர சிஞ்ஜிதாநாம்
சிலம்பு -ஓசை நாயகனுக்கு இருப்பது போலே -சிறந்த கவியை அருள வேணும் –
கர்ணயோர் -என்று இல்லாமல் -ஸ்ரவணயோர்-என்றது ஸ்ரவணம் இத்யாதி நவவித பக்தி
ஆண்டாள் ஸ்தோத்ரம் கேட்டு மகிழ்வான் அரங்கன் -புண்யம் அஸ்ய உபஸ்ருனோமி வாசாம்-ஸ்ருதி
ஸ்ரீ கோதாவின் கொலுசு சப்தம் பொன்ற ஒலி தமது ஸ்தோத்ரத்துக்கும் தரும் படி அருள பிரார்திக்கிறார் –
கோதே த்வமேவ ஜநநி த்வத் அபிஷ்ட வார்ஹாம்
தாயே –ப்ரீதி மிக்கு -நீயே கொடுத்து அருள வேணும் –
ஜனனி தவமேவ வாசம் சம்விதேஹி -நீ தான் உனது குழந்தைக்கு வேண்டியதை பார்த்து அருளுவாய்
அபீஷ்டவ்மி நிரஞ்சனம் -தயா சதகம் –
அபீத ஸ்தவம் -பல வழிகளில் அர்த்தங்கள் உள்ள ஸ்தோத்ரம்
வாசம் பிரசன்ன மதுராம் மம சம்விதேஹி —
வெளிப்படை -மதுரம் -நீயே கொடுத்து அருள வேணும் -மஹிமை -பாட அசக்தன் –
சரணம் புகுந்து குணங்கள் தூண்ட —
வார்த்தைகளை -கோதா கொடுப்பாய் -ஸ்வயமாக தாய் குழந்தைக்கு சொல்வது போலே –
வாக் பிக்ஷை கேட்க வெட்கம் இல்லை –
கோதா கர்ணாம்ருதம் கேட்க ஸ்ரீ ரெங்கன் –உனக்கு அபீஷ்டன் கேட்டால் போதும் -நீ கேட்க வேண்டாம் –
மதுரமான பா அஞ்சாலி -வைதர்பி -ஸ்தோத்ரம் பண்ண -பிரார்த்திக்கிறார்
—————————————————————————
க்ருஷ்ண அந்வயேந தததீம் யமுன அநு பாவம்
தீர்த்தைர் யதாவதவ காஹ்ய சரஸ்வதீம் தே
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாஷாத்
வாச ஸ்புரந்தி மகரந்த முச கவீ நாம் –4–
க்ருஷ்ண அந்வயேந தததீம் யமுன அநு பாவம்
யமுனை போன்ற பரிசுத்தி –எம்பெருமான் சேர்க்கையால் –
தீர்த்தைர் யதாவதவ காஹ்ய சரஸ்வதீம் தே
சரஸ்வதி தீர்த்தம் போலே -மூழ்கி -நீராடி -வாக்கு -திருப்பாவை நாச்சியார் திருமொழி -ஆச்சார்யர் மூலம் அறிந்து
யதாவதவ காஹ்ய-குள்ளக் குடைந்து நீராட -சரஸ்வதி யமுனை சங்கமம் போலே
ஸ்ரீ கோதாதேவி அருளிய பிரபந்த ஆழ்பொருள்களை ஆச்சார்யர்கள் மூலமே அறிந்து அனுபவிக்கிறோம்
ஸ்ரீ கிருஷ்ணன் -யமுனைத்துறைவன் -ஸ்ரீ கிருஷ்ண சம்பந்தத்தால் பெருமை பெற்ற யமுனையும் ஸ்ரீ ஆண்டாள் உடைய
இரண்டு திவ்ய பிரபந்தங்களும்
ஸ்ரீ கோதா வாக்குக்கள் -சரஸ்வதி நதிக்கு படிக்கட்டுக்கள் இல்லையே அந்தர்வாஹினியாய் இருப்பதால் –
ஆச்சார்யர்களாகிற படித்துறைகள் -யமுனைத் துறைகள் போலே -கொண்டே நமக்கு அனுபவம் –
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாஷாத்
கோதாவரி -கோதா –இங்கே நீராடி மேலே சரஸ்வதி யமுனா -தென் தேச கவி
உன் கடாக்ஷம் பெற -நீ பாடி அருளிய மாலைகளில் மணம் ஆச்சார்யர் மூலம் அறுந்து யாதாவாக அவஹாகித்து -புத்தி விகசித்து
வாச ஸ்புரந்தி மகரந்த முச கவீ நாம்
பரிபூர்ண கருணையால் வாக் பிரவஹிக்க –மலர்களில் தேன் பிரவஹிக்குமா போலே –
கடாக்ஷம் மூலம் அனுக்ரஹத்தாலே பெற்ற விசேஷ ஞானம் -ஸ்புரந்தி-ஸ்ம்ருதி போலே இல்லாமல் -மின்னல் போலே ஸ்புரிக்கும் படி அருளி –
அந்தர்வாஹினியான சரஸ்வதி வாக் பஹிர்வாஹினியாக-யமுனையாக -ஸ்ரீ கோதா தேவி பிரபந்தங்கள் போலே –
ஆகவே தானே யமுனைத்துறைக்கு என்னை உய்த்திடுமின் என்று விரஹ தாபம் தணிக்க பிரார்த்தனை –
ஹயக்ரீவரே நல்ல வாக்கு சாமர்த்தியம் கொடுத்த பின்பு -என்னிடம் பிரார்த்திப்பது என்–
லோகத்தாருக்கு இனிமையாக -அங்கு பிரார்த்தனை
சிலம்பு ஓசை போலே -முக ஸ்துதியாக -கேட்க வேணுமோ –அரங்கனுக்கு அமிருதமாக இங்கு பிரார்த்தனை -என்கிறார்
சாஷாத் ஹயக்ரீவனுக்கும் இனிமையாக வேணுமே -இதற்கு உன்னுடைய -ஒரே கடாக்ஷம் போதும் –
உன் பா மாலைகள் கண்ணனை அனுபவித்து பிரவாகமாக வந்த அமிருதம் அன்றோ –
கிருஷ்ணா யமுனா சரஸ்வதி கோதாவரி -பெயர்களும் நீர்த்திரைகள் நீராடி -தீர்த்தம் -சொற்களும் இருப்பது அழகு
——————————————————–
அஸ்மாத் ருசாம பக்ருதவ் சிர தீக்ஷிதா நாம்
அஹ்நாய தேவி தயதே யதசவ் முகுந்த
தன் நிஸ்திதம் நியமிதஸ்தவ மௌலி தாம்நா
தந்த்ரீ நிநாத மதுரைஸ்ஸ கிராம் நிகும்பை–5-
அஸ்மாத் ருசாம பக்ருதவ் சிர தீக்ஷிதா நாம்
நீசன் நிறை ஒன்றும் இல்லா அடியேன் இடம் –நான் தீக்ஷிதன் -அபகருதிகளை அநாதி காலம் செய்து –
என்னைப் போல்வாருக்கும்
அஹ்நாய தேவி தயதே யதசவ் முகுந்த
முகுந்தன் தயை பள்ள மடையாக விழுந்ததே –கோதா தேவி -மோக்ஷம் பிராப்தி பிராபாம்-உன்னுடைய ஸ்தோத்ரம்
கேட்க அன்றோ கடாஷிக்கிறான் -முகுந்தன் அன்றோ -தாமதிக்காமல் -உடனே அளிக்கிறான்
தன் நிஸ்திதம் நியமிதஸ்தவ மௌலி தாம்நா
சூடிக் கொடுத்த -பாடிக் கொடுத்த –வேதங்கள் அனைத்துக்கும் வித்து –
தந்த்ரீ நிநாத மதுரைஸ்ஸ கிராம் நிகும்பை
வீணை நரம்பு ஒலி இனிமை போலே -ஸ்ரீ ஸூக்திகள் -சூடிக் கொடுத்த மாலை இனிமையால் தான் அவன் இப்படி
எங்கள் குற்றங்களை புறக்கணித்து கருணை மழை பொழிந்து
மேல் விழுந்து என்னை உங்கள் இடம் சேர்த்துக் கொள்கிறான் –
ஸாஸ்த்ர உல்லங்கனம் செய்வதிலும் -க்ருத்ய அகரணங்களும் அக்ருத்ய கரணங்களும் -செய்வதில் -சிர தீக்ஷிதர்களாக இருந்தாலும்
சூடிக் கொடுத்த மாலையாலும் பாடிக்கொடுத்த மாலையாலும் அவனை வசீகரித்து அவனுடைய நிக்ரஹங்களை மாற்றி
அனுக்ரஹங்களை பொழிய வைக்கிறாய் –
சர்வ லோக நியந்தாவையே பலாத்கரித்து -கிராம் நிகும்பை-நியாம்யன் ஆக்குகிறாய்-
—————————————————————
சோணாஸ் தரே அபி குசயோரபி துங்க பத்ரா
வாஸாம் ப்ரவாஹ நிவேஹ அபி சரஸ்வதீ த்வம்
அப்ராக்ருதைர் அபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்
கோதாபி தேவி கமி துர் தநு நர்மதா அஸி–6-
சோணாஸ் தரே அபி குசயோரபி துங்க பத்ரா
நதிகளை சொல்லி -பெயர் பொருத்தம் சொல்லி -உதடு செந்நிறம் -சோணாஸ் -சிவந்த நதி என்பர்
ஸ்தனங்கள் துங்க பத்ரா -இரண்டும் –அங்க அசைவுகள் மேல் எழுந்து துங்க பத்ரா நதி போலே –
வாஸாம் ப்ரவாஹ நிவேஹ அபி சரஸ்வதீ த்வம்
வாக்குகள் -செல்வம் -ப்ரத்யக்முகமாக –காருண்யம் இருந்தால் தான் கவி பாட முடியும்
அப்ராக்ருதைர் அபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்
பிரகிருதி சம்பந்தம் இல்லா சுத்த சத்வம் -அன்றோ உம்முடைய ஸ்ரீ ஸூக்திகள் தேவி —
எம்பெருமானுக்கு உகந்தவை அன்றோ
கோதாபி தேவி கமி துர் தநு நர்மதா அஸி
இருந்தாலும் -விளையாட்டாக -உன்னுடைய கடைக் கண் பார்வையால் —
கடாக்ஷம் உன் அருளால் நம் போல்வாரை ராஷிக்கிறான் அன்றோ
அந்த நதியோ இதுவோ -முதல் -/ ஒரே நதி மற்ற நதியாக ஆகும் / எல்லாம் உன்னிடம் -கோதாவரி /
கோதா காருண்ய ரசம் –
அதரே -வாக்கில் உச்சரிக்கும் -ஸூக்திகள் தாண்டி போக மாட்டான் –
புண்ய நதிகள் பாவானத்வம் உன்னாலே அன்றோ -வாக் பிரவாகம் போலே இவை –
உன் ஸ்தோத்ரங்களாலும் பரிஹாஸ சொற்களாலும் உன் நாயகனுக்கு இனிய சுவையைப் பெருக்குகிறாய்-
சோனா துங்க பத்ரா சரஸ்வதி விரஜை கோதாவரி நர்மதா -ஆறு நதிகளின் பெயர்களையும் சமத்காரமாக கோதாவுக்கு சாம்யம்
சோனா நதி -சிவந்த தண்ணீர் -கோண்டவனம் தொடங்கி பாடலிபுத்ராவில் கங்கையுடன் கலக்கும்
சிகப்பு -நாச்சியார் திருமொழி -காதல் அபி நிவேசம் காட்டும் –
துங்க பத்ரா -துங்க -உயர்ந்து சிறந்த /பத்ரம் -கர்ணேபி ஸ்ருணாயாம -செழிப்பு ஆனந்தம் மங்களம்
பத்ரம் பத்ரம் பகவான் பூயஸே மங்களாயா
இதுவே ஞான பாலாறு -நமக்கு
சரஸ்வதி -அந்தர்வாஹினி -வேகவதி -வெக்கா –
சரஸ்வதி என்று ஆயுர்வேத ஜோதிஷ்மதி செடிக்கும் பெயர்
விரஜா-ராஜஸாதிகள் தூசிகள் இல்லாமை -சுத்த சத்வ மயம் -ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே-அகர்ம வஸ்யர்-வாசனா ருசிகளையும் போக்கி அருளும்
கோதாவரி -வரிவாஸ் வரிமான்-ஐஸ்வர்யம் ஆனந்தம் மூலம் நம்மை ஐஸ்வர்யவான்களாகவும் ஆனந்திப்பவர்களாகவும் ஆக்கி அருளும்
நர்மதா நதி -நர்மதா வாக் பரிகாச சொல்
திரு உதடுகள் -திரு மார்பகம் -வாக் -முதல் மூன்றும் -பிராகிருத ரசம் அடுத்த மூன்றும் அப்ராக்ருதம்
————————————————–
வல்மீ கத ஸ்ரவணதோ வஸூ தாத்மநஸ்தே
ஜாதோ பபூவ ஸ முனி கவி ஸார்வ பவ்ம
கோதே கிமத்புதம் இதம் யதமீ ஸ்வ தந்தே
வக்த்தாரவிந்த மகரந்த நிபா ப்ரபந்தா –7-
வல்மீ கத ஸ்ரவணதோ வஸூ தாத்மநஸ்தே–ஜாதோ பபூவ ஸ முனி கவி ஸார்வ பவ்ம –
வால்மீகி உத்தம கவி -வாக்குக்காக பிரார்த்திப்பார்கள் -தேவ நாயாக ஸ்துதி -பாதுகா சகஸ்ரம் -நீரும் -பிரார்த்தித்தீரே
கவி பிரதம -கவிநாம் ஆதாரண காளி தாசரும் புகழ்ந்து —
என்னிடம் வாக் பிக்ஷை கேட்டு –அப்பொழுதும் எல்லாம் கூப்பிட வில்லையே –
கோதே கிமத்புதம் இதம் யதமீ ஸ்வ தந்தே
வல் மீகம் உன் செவி தானே -பூமா தேவி உன் ஒரு அம்சம் தானே -ஸ்ரோத்ரம் பிறந்தவர் என்றே முன்பு கொண்டாடினேன்
அதனாலே பெருமாள் இன்புற்று கேட்டு அருளினார் -ராமாயணம் காவ்யம் மூலம் -அம்சத்துக்குள் அம்சி அடங்குமா
பெரிய பிராட்டி -நிரதிசய ப்ரீதியால் உன் இடம் பிறந்து -இச்சா வசத்தால் அம்சம் அம்சி பாவம் மாறினதே –
ஆண் பிள்ளை தாய் ஸ்வபாவம் என்பதாலே வால்மீகி -சிரேஷ்டர் -இதனாலே ஆனார் -இதில் என்ன அத்புதம் இருக்க முடியும்
வக்த்தாரவிந்த மகரந்த நிபா ப்ரபந்தா
தாமரையில் பிறந்த தேன் போன்ற இனிமை உள்ள இந்த கோதா ஸ்துதி -இதில் என்ன அத்புதம் இருக்க முடியும் -என்றவாறு –
—————————————————
போக்தும் தவ ப்ரிய தர்மம் பவதீய கோதே
பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்தா
உச்சாவ சைர் விரஹ சங்க மஜை ருதந்தை
சிருங்கார யந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா –8–
போக்தும் தவ ப்ரிய தர்மம் பவதீய கோதே –பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்தா
சம்வாதம் தொடருகிறது -காதல் மிகுந்த நாயகனை
எங்கள் பிரணய ரசம் -ரகுவரன் பக்தி -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்தா அபஹாரிணாம் –
பெண் உடை உடுத்து அவாவும் -அத்யர்த்தம் பிரியதமம் –
உச்சாவ சைர் விரஹ சங்க மஜை ருதந்தை-சிருங்கார யந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா
அபிநவச தசாவதாரம் ஆழ்வார்கள் இடம் பெற்ற பாவனை -பகு பிரகாரங்களால் -சம்ச்லேஷம் விஸ்லேஷம்
ப்ரத்யக்ஷமாக வர்ணித்தார்
தூது விடுதல் மடல் ஊர்தல் -தாய் தோழீ தலைமகள் போன்ற பல அவஸ்தைகளில் அனுபவித்தார்கள்
பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை –
அவரே எப்படி பிரணய ரசம் பாடி அருளுகிறார் –
வந்து மண்ணும் மணமும் மணமும் கொண்மின் எங்களையும் கூப்பிட்டார் -ஸ பத்தினிகளாக வரச் சொல்லி –
அதே வழியிலே நானும்
—————————————————-
மாத சமுத்தித வதீ மதி விஷ்ணு சித்தம்
விஸ்வோ பஜீவ்ய மம்ருதம் வசசா துஹா நாம்
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்தி மன்யாம்
சந்த பயோதி துஹிது சஹஜாம் விதுஸ்த்வாம் –9–
மாத சமுத்தித வதீ மதி விஷ்ணு சித்தம் -விஸ்வோ பஜீவ்ய மம்ருதம் வசசா துஹா நாம்
தாயே சம்போதிக்கிறார் –விஷ்ணு சித்தர் -மூலம் -சகல ஜகத்தும் உய்ய -தாப த்ரயம் போக்க -அன்றோ -பட்டர்பிரான் கோதை –
அபிமானத்தால் எங்கள் குலப் பெண் -நீயோ தாய் -அனைவருக்கும் -உன் அபிமானத்தால் பிதா –
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்தி மன்யாம்-சந்த பயோதி துஹிது சஹஜாம் விதுஸ்த்வாம்
சந்திரன் -போலவே -பெரிய பிராட்டியார் உடன் பிறந்தவள் -மதி முக மடந்தை –
தேன் போன்ற பாசுரங்கள் –அத்யந்த சகோதரி
நிழல் போல அன்றோ -ஸ்ரேஷ்டங்கள் எல்லாம் சேர்ந்து அன்றோ தேவரீர் திருவவதாரம் –
சந்த்ரமா மனசோ ஜாதா -மனசில் இருந்து வந்தது போலே
அவன் திரு உள்ளம் படி ஆவிர்பவித்து -அவன் உகந்த உருவம் அன்றோ நீர் –
விஷ்ணு சித்தம் -அவன் திரு உள்ளம் படி அன்றோ நீர் அவதரித்தீர்
விஷ்ணு சித்தர் மூலம் நீர் – சந்திரன் கூடப் பிறந்த பெரிய பிராட்டியார் உடன் கூடப் பிறந்தவள் அன்றோ நீயும் –
உப்புச் சாரான அமுதம் -தேவ உப ஜீவியம் -வசசா துஹா நாம்-உமது பிரபந்த மதமோ லோக உப ஜீவியம் –
அமிருத சஹஜை-மஹா லஷ்மீ சஹஜை –
——————————————————-
தாதஸ்து தே மது பித ஸ்துதி லேச வஸ்யாத்
கர்ணாம்ருதை ஸ்துதி சதைர நவாப்த பூர்வம்
த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் பிரசாதம் –10-
தாதஸ்து தே மது பித ஸ்துதி லேச வஸ்யாத் -கர்ணாம்ருதை ஸ்துதி சதைர நவாப்த பூர்வம்
உன்னுடைய தகப்பனாரோ என்னில் -செவிக்கு இனிய பாசுரங்கள் பாடும் படி –
அபிமான தாதைகள் எல்லா ஆழ்வார்களும்
இவர் மட்டுமே பெரியாழ்வார் -அபிநவ தசாவதாரங்கள் -தமிழ் வேத த்ருஷ்டாக்கள் –
மஹா பதம் அனைவருக்கும் இருந்தாலும் -இவருக்கு மஹத்தர பதம் –
த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹருத்ய மாலாம் -லேபே மஹத்தர பதாநுகுணம் பிரசாதம்
அதி மேன்மைக்கு ஒத்த அனுக்ரஹம் பெற்றார் -கேஸ நறு மனம் –சூடிக் கொடுத்த மாலை சமர்ப்பித்து அன்றோ அடைந்தார்
வேதம் தமிழ் செய்த மஹாதிகள் மற்றவர்கள் -இவர் அன்றோ உத்தர மஹத் –
ஐஞ்சு குடிக்கு சந்ததி நீ -பொங்கும் பரிவினில் பல்லாண்டு பாடும் படி அன்றோ நீர் அனுக்ரஹித்தீர்
சூடிக் கொடுத்த மாலையின் மகிமையால் அன்றோ -கந்தத்வாராம் -பெரிய பிராட்டி அம்சம் அன்றோ இவளும் –
—————————————————–
திக் தக்ஷிணா அபி பதி பக்த்ரிம புண்ய லப்யாத்
சர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத்
யத்ரைவ ரங்க பதிநா பஹு மாந பூர்வம்
நித்ராளுநா அபி நியதம் நிஹிதா கடாஷா–11-
திக் தக்ஷிணா அபி பதி பக்த்ரிம புண்ய லப்யாத்-சர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத்
தெற்கு திக்கே -உன் அவதாரத்தால் -உத்தர திக்கு போலே மென்மையாக ஆனதே -மேலும்
கீழே பெரியாழ்வார் -சூடிக் கொடுத்த மாலை சமர்ப்பித்ததால் நம்மாழ்வாரை விட சிரேஷ்டர் என்றார்
இங்கு திக்கும் சர்வோத்தரம் ஆனது என்கிறார் -உன் சம்பந்தத்தால் –
யத்ரைவ ரங்க பதிநா பஹு மாந பூர்வம் -நித்ராளுநா அபி நியதம் நிஹிதா கடாஷா
யோக நித்திரை செய்து அருளும் ஸ்ரீ ரெங்க நாதனும் -பிரேம ரூபியான உன்னையே கடாக்ஷித்து
தெற்கு நோக்கி அன்றோ உள்ளான் —
உத்தர என்ற சொல் வட திசையையும் மேம் பட்டதையும் குறிக்கும் –
தென் திசை வட திசை யாயிற்று என்ற முரண் பாட்டையும் தென் திசை மேம்பட்டது என்று
முரண்பாடு ஒழி தலையையும் அறியலாம்
—————————————————–
ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்
கோதா வரீ ஜகதிதம் பயசா பு நீதே
யஸ்யாம் சமேத்ய ஸமயேஷூ சிரம் நிவாஸாத்
பாகீரதீ ப்ரப்ருத யோ அபி பவந்தி புண்யா –12–
ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்–கோதா வரீ ஜகதிதம் பயசா பு நீதே
தேவி உம்முடைய திரு நாம வைபவத்தாலே -கோதா -பெயரைக் கொண்டதாலேயே -பாவனத்வம்-இந்த உலகில்
தென் திக்கால் பெருமை முன்பு சொல்லி
இதில் திரு நாமம் -வைபவம் -முன்பு சீதா பிராட்டிக்கு உதவாமல் பெற்ற பாவம் தீர்ந்ததே
யஸ்யாம் சமேத்ய ஸமயேஷூ சிரம் நிவாஸாத் -பாகீரதீ ப்ரப்ருத யோ அபி பவந்தி புண்யா
புண்ய காலங்களில் கலந்து புண்யம் ஆகும் மற்ற நதிகள் -கங்கை போல்வன கூட–
ஒருவர் பெயரை மற்று ஒருவர் சூட்டிக் கொள்வது சேஷ பூதன் ஆனதற்கு சிஹ்னம் அன்றோ
உன் திரு நாமம் சூட்டிக் கொண்டதால் பெற்ற பெருமை அன்றோ கோதாவரிக்கு என்றவாறு
——————————————————
நாகே சய ஸூதநு பஷிரத கதம் தே
ஜாத ஸ்வயம் வர பதி புருஷ புராண
ஏவம் விதா சமுசிதம் ப்ரணயம் பவத்யா
சந்தரசயந்தி பரிஹாஸ கிர சகீ நாம் –13–
நாகே சய ஸூதநு பஷிரத கதம் தே
ஸூ தது –லாவண்யம் -திரு அநந்த ஆழ்வான் படுக்கை -பெரிய திருவடி வாஹனம் –
விஷ பாம்பு –பறக்கும் பறவை -மெத்தென்ற பஞ்ச சயனம் நீ எதிர் பார்க்க –
ஜாத ஸ்வயம் வர பதி புருஷ புராண
தானே விரும்பி கைப் பிடித்த கணவன் -புராண புருஷன் -யுவதி நீ -இவனுக்கு வயசே தெரியாதே
ஸ்ரவணமா ஹஸ்தமா புனர்வஸுவா ரேவதியா ரோஹிணியா-ஜாதகமே இல்லையே -முந்தைக்கும் முந்தை
ஏவம் விதா சமுசிதம் ப்ரணயம் பவத்யா-சந்தரசயந்தி பரிஹாஸ கிர சகீ நாம்
இப்படி கேலி பேச -விருப்பம் காட்டி -நிந்தா ஸ்துதி அணி —ஆர்க்கும் என் நோய் அறியலாகாது
கார்க் கடல் வண்ணன் கை பிடித்தால் போகும் -கண்ணன் என்னும் கரும் தெய்வம் —
வீசுமினே –வ்யாஜ ஸ்துதி -என்றுமாம் –
பரிஹாஸப் பேச்சா பெருமைப் பேச்சா -தோழிகளின் பேச்சுக்கள் நாயக நாயகிகளின் பிரணய ரசத்தை வெளிக் காட்டும்
பிறர் அஞ்சும் கொடிய பாம்பில் அன்றோ படுபவர் –
பறவை மேல் உன்னையும் தூக்கிக் கொண்டு ஆகாசத்தில் பறப்பவர் அன்றோ –
மிக பழைமையான மூத்தவர் அன்றோ -என்று பரிகாசம்
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும் செய்பவனாய்
நறு மணம் அழகு குளிர்ச்சி விகாசம் உயர்வு மென்மை போன்ற சிறப்புக்களை கொண்ட
ஆதி சேஷன் மேல் அன்றோ பள்ளி கொண்டவர்
வேத ஸ்வரூபனாய் சகல சக்திமானான பெரிய திருவடி அன்றோ வாஹனம்
ப்ரஹ்மாதி தேவர்களாலும் அரிய முடியாத பர ப்ரஹ்மம் அன்றோ உன் மணாளன் -இப்படியுமாம்
———————————————————-
த்வத் புக்த மால்ய ஸூரபீக்ருத சாரு மௌளே
ஹித்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம்
பத் யுஸ்த வேஸ்வரி மித பிரதி காத லோலா
பர்ஹாத பத்ர ருசிமாரஸ யந்தி ப்ருங்கா–14-
த்வத் புக்த மால்ய ஸூரபீக்ருத சாரு மௌளே–ஹித்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம்
கரு வண்டுகள் குடையாம்-சென்றால் குடையாம் -பிரதம சேஷி -அவன் இல்லை –
திரு மார்பில் -திருத் துழாய் -வண்டுகள் -சூடிக் கொடுத்த மாலை -சூடினான் பின்பு
பத் யுஸ்த வேஸ்வரி மித பிரதி காத லோலா –பர்ஹாத பத்ர ருசிமாரஸ யந்தி ப்ருங்கா
விட்டு வண்டுகள் கிளம்ப -சிரசில் கூடி வட்டம் இட்டு -ஈஸ்வரி -இதில் -விஷ்ணு பத்னி அன்றோ –
மயில் தோகை காந்தி தேஜஸ் போலே அன்றோ வண்டுகள் உள்ளன -ஆசைப் பட்டுக் குடையாக இருந்தனவே
கூடவே இவையும் போனதாம் என்றுமாம் -மகரந்தம் சேர்க்கை அதிகம் அன்றோ இவள் சூடின பின்பு –
ஆரவாரம் உடன் கலந்து -தேனை பருகி மயங்கி -சிரசில் கூட்டமாக குடை போலே —
மணமகன் – குடை -மாலை -விரதம் அனுஷ்ட்டிக்கும் முறை -இவற்றை அறிவிக்கும் ஸ்லோகம்
———————————————————
ஆமோத வத்யபி சதா ஹ்ருதயம் கமா அபி
ராகான்விதா அபி லலிதா அபி குணோத்தரா அபி
மௌலி ஸ்ரஜா தவ முகுந்த கிரீட பாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ –15–
ஆமோத வத்யபி சதா ஹ்ருதயம் கமா அபி
பெண் ஆனவள் -சந்தோஷமாக இருந்தாலும் -ஹிருதயம் விட்டு பிரியாமல் இருந்தாலும் கூட
ராகான்விதா அபி லலிதா அபி குணோத்தரா அபி
ஆசை -வனமாலை பெண்ணுக்கும் இருந்தாலும் -இனிமையாக -மெம்னப்பட்ட குணங்கள் இருந்தாலும்
மௌலி ஸ்ரஜா தவ முகுந்த கிரீட பாஜா
நீ சூடிக் கொடுத்த மாலையால்
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ —
சூடிக் களைந்த மாலை பெருமை -மீண்டும் -அருளி –
வனமாலை நித்யம் -சூடி –தள்ளி -முன்னே வந்ததே –
திரு மார்பில் -மிருத -மார்த்வம் இருந்தாலும் கூட -நல்ல கயிற்றால் புனைந்த திருத் துழாய் மாலை -இருந்தாலும் கூட
திரு முடியை நீ அடைந்த பின்பு -சூடிக் கொடுத்த மாலையை சென்னியில் தாங்கி-
துளசி மாலை கோதா நீயே -என்றுமாம் -ப்ரீதிக்கு இருவரும் பாத்திரம்
திருமணத்துக்கு பூர்வ அங்கமான மாலை மாற்றுதல் பற்றிய ஸ்லோகம்
ஐந்து அபி சப்தங்கள் வைஜயந்தி மாலையின் ஸ்ரேஷ்டம் பற்றி –
வைஜயந்தி வனமாலை -நறு மணம் -செம்மை -மென்மை -ஆகர்ஷகம் -இவை இருந்தாலும் திரு மார்பிலே தானே உள்ளது –
தேவரீர் சூடிக் கொடுத்த மாலையைப் போலே திரு முடியில் சிரஸா வஹிக்கப் பட வில்லையே
இத்தால் பிரணயி-மெல்லியளாய் -நல் குணங்களை யுடைய -மனதுக்கு உகந்த நாயகியால்
செல்வம் இத்யாதியால் செருக்கு கொண்ட மற்றொரு பெண் தாழ்த்தப் படுவதை அருளிச் செய்தவாறு –
——————————————————
த்வன் மௌலி தாமநி விபோ சிரஸா க்ருஹீதே
ஸ்வச் சந்த கல்பித சபீதி ரஸா ப்ரமோதா
மஜ்ஜூ ஸ்வநா மது லிஹோ விதது ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் –16-
த்வன் மௌலி தாமநி விபோ சிரஸா க்ருஹீதே -ஸ்வச் சந்த கல்பித சபீதி ரஸா ப்ரமோதா
திரு முடியில் உள்ள சூடி கொடுத்த மாலையை சூடி -சேர்த்தி -தேனை பருகும் வண்டுகள் ரீங்காரம் -கருடன் போலே வீசியும்
திரு அனந்தாழ்வான் போலே குடையாகவும் முன் பார்த்தோம் –
அவற்றால் திருப்தி அடையாத வண்டுகள் இதில் மங்கள வாத்யம் –
மஜ்ஜூ ஸ்வநா மது லிஹோ விதது ஸ்வயம் தே -ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம்
மங்கள ஒலி –இனிய குரல் -பேரிகை கோஷம் -இதுவே -ஒன்றுடன் ஓன்று களித்து பேசிக் கொண்டு –
நாம் பெற்ற பாக்யம் என்று
தேனை பருகினால் கைங்கர்யத்தில் குறியாக -இருந்தனவே –
விதது –
மற்றவர்களுக்காக செய்த கைங்கர்யம் என்றபடி –
திருமணத்தில் விருந்தும் வாத்ய கோஷமும் சொன்னவாறு –
யமேவை ஏஷ விவ்ருணுதே -வேதம் பிரியதம ஏவ ஹி வரணியோ பபதி
யஸ்யாம் நிரதிசய பிரிய -ஸ்ரீ எம்பெருமானார்
பிரமரங்கள் பிரமம் இல்லாமல் ஸம்ப்ரம்மத்தோடு செய்த சேவை அன்றோ இது
மஞ்சுஸ்வனா -மதுலிஹோ -என்று மங்கள துரிய கோஷங்கள் அருளிச் செய்த ஸ்ரீ நம்மாழ்வாரையும் மற்றைய ஆழ்வார்களும் சொன்னபடி –
———————————————-
விஸ்வாயமான ரஜசா கமலேந நாபவ்
வஷஸ் தலே ஸ கமலா ஸ்தன சந்தநேந
ஆமோதி தோ அபி நிகமைர்வி புரங்க்ரி யுக்மே
தத்தே நதேந சிரஸா தவ மௌலி மாலாம் –17–
விஸ்வாயமான ரஜசா கமலேந நாபவ்
நாபிக் கமலம் –பரிமளம் மிக்கு
வஷஸ் தலே ஸ கமலா ஸ்தன சந்தநேந
பெரிய பிராட்டியார் -சந்தன நறு மணம் -நித்ய வாசம் -அதனால் வந்த பரிமளம் –
மஹிமை தன்னாலும் சொல்ல முடியாத –
ஆமோதி தோ அபி நிகமைர்வி புரங்க்ரி யுக்மே
வேதங்களில் -திருவடியில் சேர்ந்த கந்தம் –
தத்தே நதேந சிரஸா தவ மௌலி மாலாம்
சூடிக் கொடுத்த மாலை கந்தம் பெருமை — உகந்து – திரு முடியில் தரித்து –
அந்தர்பகிஸ்த-சர்வ வியாபி -இப்படி படுவதே –ஏகாந்த பக்தி ஸ்ரத்தைக்கு ஈடு இல்லையே —
சிரஸாக அன்றோ தங்குவான் –
உந்திக் கமலத்தின் ஒவ் ஒரு துகளும் உலகமாய் மாறும் தன்மை –
திரு மார்பில் பெரிய பிராட்டியார் திரு முலைத் தடங்களில் உள்ள சந்தன நறுமணம் வீச
வேதங்கள் அருளிச் செயல்கள் திருவடிகளின் பெருமை பேசி அவற்றின் பரிமளம் நிறைந்து இருக்க
இவற்றாலும் கூட திருப்தி அடையாத அரங்கன் உமது சூடிக் கொடுத்த மாலையை சிரஸா வஹித்து மகிழ்கிறான் –
—————————————————–
சூடா பதேன பரிக்ருஹ்ய தவோ த்தரீயம்
மாலா மபி த்வ தள கைரதி வாஸ்ய தத்தாம்
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸுபாக்ய சம்பதபிஷேக மஹாதிகாரம் –18–
சூடா பதேன பரிக்ருஹ்ய தவோ த்தரீயம் -மாலா மபி த்வ தள கைரதி வாஸ்ய தத்தாம்
உத்தரீயம் -கச்சு -குழலில் சூடி மணம் வூட்டி
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே -ஸுபாக்ய சம்பதபிஷேக மஹாதிகாரம் —
ஸ்ரீ ரெங்க நாதன் சூடிக் கொடுத்த மாலைக்கு ஏங்கி –
மங்களம் -ஐஸ்வர்யம் -முடி சூடும் படி -இதனாலேயே –
அரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே –
பரிவட்டம் -ஆண்டாள் கச்சம் மாலை சாத்தி -ஸர்வேச்வரத்வம் -இதனாலே -தான்
திரு அபிஷேகம் கழற்றி இவற்றை சாத்திக் கொள்கிறான் –
——————————————————
துங்கைர க்ருத்ரிம சிர ஸ்வய முத்த மாங்கை
யம் சர்வ கந்த இதி சாதர முத்வ ஹந்தி
ஆமோத மன்ய மதி கச்சதி மாலி காபி
ஸோ அபி த்வ தீய குடி லாளக வாஸி தாபி –19-
துங்கைர க்ருத்ரிம க்ருஹ ஸ்வய முத்த மாங்கை
யாராலும் உருவாக்காத வேதம் -உபநிஷத் -ஸ்வயம் -சிரஸ்-வைத்து
யம் சர்வ கந்த இதி சாதர முத்வ ஹந்தி
சர்வ கந்த சர்வ ரஸ –அன்போடு கொண்டாடும் -வேத பெண்மணி -மீண்டும் மீண்டும் சொல்லி –
ஆமோத மன்ய மதி கச்சதி மாலி காபி
வாசனை அடைந்து -இத்தை எதிர்பார்த்து -வேறே வாசனைக்கு எதிர் பார்த்து –எதனால்
ஸோ அபி த்வ தீய குடி லாளக வாஸி தாபி
அலை அலையாக சுருண்ட கேசங்கள் -மணமூட்டப் பட்ட -மாலைகள் -ஆசைப்பட்டு -அவாப்த ஸமஸ்த காமன்
ஸ்வரூபம் அழிய மாறியும் -எதிர் பார்த்து உள்ளான் —
உன் சூடிக் கொடுத்த மாலையை பெற்றதும் சர்வ கந்தன் ஆனதாக உள்ளான் –
——————————————————
தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்த மாங்கே
த்வன் மௌலி மால்ய பர சம்பரணேந பூய
இந்தீவர ஸ்ரஜமிவா தததி த்வதீயாநி
ஆகே கராணி பஹூமான விலோசிதாநி –20-
மாலை சூடிய மாலையைப் பார்ப்பதும் மற்றொரு மாலை
உன்னுடைய திரு முடியில் உள்ள மாலைகளை சிரஸா வகிப்பதால் பாக்யம் பெற்ற சர்வ லோக பிதா –
உன்னுடைய அரைக்கண் கடாக்ஷத்தால் மீண்டும் கரு நெய்தல் மாலையைச் சூடிக் கொள்கிறான்
——————————————————-
ரெங்கேஸ்வ ரஸ்ய தவ ஸ ப்ரணாயநு பந்தாத்
அந்யோன்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டு வந்த
வாசால யந்தி வஸூதே ரஸி காஸ்த்ரி லோகீம்
ந்யூநாதி கத்வ சமதா விஷயைர்விவாதை –21-
ரெங்கேஸ்வ ரஸ்ய தவ ஸ ப்ரணாயநு பந்தாத்
ஸ்னேக தொடர்பு
அந்யோன்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டு வந்த
மாலை மாற்றும் உத்சவம் இன்றும் மகிழ்கிறோம் -பெருமை –
வாசால யந்தி வஸூதே ரஸி காஸ்த்ரி லோகீம்
பூமா தேவி -சாஸ்திரஞ்ஞார் -மூன்று லோகங்களிலும்
ந்யூநாதி கத்வ சமதா விஷயைர்விவாதை —
சாம்யம் பற்றி விவாதிக்கும் —
14 -தொடங்கி -7 – மாலை பற்றி பேசி –அரங்கனையும் ஆண்டாளையும் –பக்ஷ பாதிகள் –
நங்கையை காணும் தோறும் நம்பிக்கு ஆயிரம் கண்கள் வேணுமே
திரு வுக்கும் திருவாகிய செல்வா -ஆண்டவனை ஆட்க்கொண்டதால் ஆண்டாள் என்பர்
மத்தியஸ்தர் -அந்யோன்ய பிரணயித்தவம் பேசி -சூடிக் கொடுத்த மாலை காட்டுமே –
ஒண் டொடியாள் மலர் மகளும் -நீயும் நிலா நிற்க
கடகர்-தேசிகர் -அன்யோன்யம் பேசி -ஸ்ரீ விசிஷ்டம் நம் சித்தாந்தம் –
பாஸ்கரன் பிரபாயதா-அன்றோ -பரஸ்பரம் ஈடுபாடு அன்யோன்யம் –
மாலை மாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் -திருமாலை மாற்றி பாப பூயிஷ்டமான நம்மையும் அங்கீகரிக்கச் செய்கிறாள் –
பிரணயித்வ அதிசயம் -உன்பால் கௌரவத்தைக் கண்டு அவனிலும் மேம்பட்டவளாகவும்
பத்னீ ஸ்தானத்தால் அவனுக்கு வசப்பட்டு இருப்பவளாயும் -மத்யஸ்தர் சாம்யம் என்றும் ஆர்வம் மிக்கு வாதம் செய்கிறார்கள்
——————————————————–
தூர்வா தள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா
கோரோசநா ருசிரயா ஸ ருசேந்திராயா
ஆஸீத நுஜ் ஜித சிகாவள கண்ட சோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரி காத்ரம் –22–
தூர்வா தள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா–கோரோசநா ருசிரயா ஸ ருசேந்திராயா
திரு மேனி -வர்ண விசேஷம் –பெரிய பிராட்டியார் -பொன்னிறம் -பச்சை மா மலை மேனி
கோதா சேர்ந்து இருப்பதால் மயில் கழுத்து போலே
ஆஸீத நுஜ் ஜித சிகாவள கண்ட சோபம்–மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரி காத்ரம் —
மங்களம் வழங்கி -விரோதி நிரசனம் -நீங்காத சோபை -சிகா வளம் -மயில் -கரிய திருமேனியில் இந்த வர்ணங்கள் பரவி –
சேர்த்தி அழகில் மயங்கி அருளிச் செய்கிறார் –
மஹேஸ்வரம் பர்வத ராஜ புத்ரி -அனுஜித -விட்டு பிரியாத சேர்த்தி
நீல கண்டருக்கு கழுத்து மட்டும் நீலம் -மயிலுக்கு இப்படி கழுத்தில் மட்டும்
இங்கு ஸர்வதா நீலம் -சரீரம் முழுவதும் -சிவ -சப்தம் மங்களம் -நித்யம் அஞ்ஞானம் நிக்ரஹம் பிராட்டி
—————————————————–
அர்ச்சயம் சமர்ச்சய நியமைர் நிகம ப்ரஸூநை
நாதம் த்வயா கமலயா ஸ மேயி வாம்சம்
மாதஸ் சிரம் நிரவிசன் நிஜமாதி ராஜ்யம்
மான்யா மநு ப்ரப்ருதயோ அபி மஹீஷி தஸ்தே –23-
ஸூர்ய குலத்தில் மனு மாந்தாதா – மன்னர்கள் கூட தேவரீரும் பெரிய பிராட்டியாரும் சேர்ந்து இருந்த உன் நாயகனை
ஆகமங்கள் படி புஷ்பாதி உபகரணங்களால் ஆராதித்து தங்கள் ஆட்சியை நன்கு நடத்த உங்கள் பிரசாதம் பெற்றார்கள்
அஹிம்சை -சத்யம் -ப்ரஹ்மசர்யம் -சவ்சம் -தவம் -போன்ற புஷ்பங்கள் என்றுமாம் –
அர்ச்சயம் சமர்ச்சய நியமை-
அர்ச்சயம் -அர்ச்சிதோ தேவ பிரியதாம் மே ஜனார்தனா -அர்ச்சா பெருமாளுக்கு பக்தி பூர்வகமாக அர்ச்சனை
செய்ய வேண்டும் நிகம ப்ரஸூமை – அஹிம்சா பிரதம புஷபம் இத்யாதி
நாதம் த்வயா கமலயா ஸ மேயி வாம்சம்-ப்ரிய பதி முதலில் ஸ்ரீ யபதி பின்பு –
ஹ்ரீச்ச தே லஷ்மீச் சா பத்ந்யோ –ஸ்ருதி போலே –
ஆதி ராஜ்யம்-உனது அனுக்ரஹத்தாலே அரசர்களும் சக்ரவர்திகளும் -ஸர்வேஸ்வரத்வமும்
அநிதர சரணானாம் ஆதி ராஜ்ய அபி ஷிஞ்சேத் சமித விமத பக்ஷ சார்ங்க தனு வானுகம்ப –தயா சதக ஸ்லோகம்
—————————————————-
ஆர்த்ரா பரா திறி ஜநே அப்ய பிரஷணார்த்தம்
ரங்கேஸ்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே
பார்ஸ்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத்
ப்ராயேண தேவி வதனம் பரி வர்த்திதம் ஸ்யாத் –24–
தவறுகள் பல செய்து வருந்தினாலும் -ந கச்சின் ந அபராத்யதி என்று அருளிச் செய்யும் பெரிய பிராட்டியாரும்
தேவரீருக்கு இரண்டு பக்கமும் பரிந்து அருளிச் செய்யா விட்டால் எங்களுக்கு உஜ்ஜீவிக்க வழி இல்லையே
—————————————————-
கோதே குணைரப நயன் ப்ரணதா பராதாந்
ப்ரூஷேப ஏவ தவ போக ரஸாநு கூல
கர்மாநுபந்தி பல தான ரதஸ்ய பர்த்து
ஸ்வாதந்தர்ய துர்வ்யசன மர்ம பிதா நிதானம் –25–
உனது குணங்களால் ஆஸ்ரிதர் குற்றங்களைக் காணாக் கண் இட்டு இருக்க உசித உக்திகளாலும்
போக ரசத்துக்கு சேஷ்டிதங்கள்-புருவ நெறிப்பு இத்யாதி மூலம் அரங்கனை
உன் வசத்துக்கு வைத்து ரக்ஷித்து அருளுகிறாய்
————————————————–
ரங்கே தடித்குண வதோ ரமயைவ கோதே
க்ருஷ்ணாம் புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸூ வ்ருஷ்ட்யா
தவ்ர்கத்தய துர்விஷ வி நாச ஸூ தா நதீம் த்வாம்
சந்த பிரபத்ய சமயந்த்ய சிரேண தாபன்–26–
பெரிய பிராட்டியாரான மின்னல் கொடி உள்ள அரங்கனாகிற காள மேகத்தை
கருணா வர்ஷம் மூலம் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஸமஸ்த உலகோரும் சம்சாரம் ஆகிய விஷத்தை நிரசிக்க
அமிருத நதியான தேவரீரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கிறார்கள்
அமுத ஆற்றின் வெள்ளம் ஆகிய உன் பாசுரங்களில் ஆழ்ந்து அனுபவித்து
தாப த்ரயங்களைப் போக்கிக் கொள்கிறார்கள்
—————————————————–
ஜாதா பராதமபி மா மநுகம்ப்ய கோதே
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா
வாத்சல்ய நிர்ப்பரதயா ஜநநீ குமாரம்
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்ட பயோதரா அபி –27–
அகில ஜெகன் மாதா -அஸ்மாத் மாதா -ஸ்தந்தயா பிரஜை பால் குடிக்கும் பொழுது முலையைக் கடித்தாலும்
கடிந்து கொள்ளாமல் போஷிக்கும் தாய் போலே அடியோங்களின் குற்றங்களை க்ஷமித்து அருள்கிறாய் –
——————————————————
சதமக மணி நீலா சாரு கல்ஹார ஹஸ்தா
ஸ்தன பர நமிதாங்கீ சாந்த்ர வாத்சல்ய சிந்து
அளக விநிஹிதாபி ஸ்ரக் பிராக்ருஷ்ட நாதா
விலசது ஹ்ருதி கோதா விஷ்ணு சித்தாத் மஜா ந–28-
இந்திர நீல மணி போன்ற திவ்ய மங்கள விக்ரஹம் -செங்கழுநீர் பூவைத் திருக் கையில் ஏந்தி
திருக் கொங்கைகள் நிறைந்த திரு மேனி -அன்புக்கடலான -பெரியாழ்வார் திருமகளான
சூடிக் கொடுத்த நாச்சியார் நம் உள்ளத்தில் அரங்கனுடன் நித்தியமாக சேவை சாதித்து அருளட்டும்
கரு முகில் வண்ணம் -அவனது ஸம்ஸ்லேஷம் அடியாகவே –
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்யா புங்க்தே கோதா தஸ்யை நாம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய –
கட்டுண்ணப் பண்ணியவள் அன்றோ
சேர்த்தியுடன் நம் ஹ்ருதயத்தில் எழுந்து அருள பிரார்த்தனை –
ஸ்ரீ கோதா தேவியின் த்யான ஸ்லோகம்
ஸ்ரீ தேசிகன் தனது ஸ்தோத்திரங்கள் எல்லாம் நமக்கு உஜ்ஜீவன அர்த்தமாக அனுசந்திக்க த்யான ஸ்லோகம் அமைத்து அருளுவார்
ஸ்ரீ ஸ்துதி -கல்யாணாம் அவிகல நிதி
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் -வியாகிய முத்ராம்
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஸ்யாத் -வ்யாதந்வனா
ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் -இச்சா மீனா விஹார கச்சப-போல்வன உண்டே
——————————————————–
இதி விகசித பக்தே ருத்திதாம் வேங்கடேசாத்
பஹு குண ரமணீயாம் வக்தி கோதா ஸ்துதிம் ய
ஸ பவதி பஹு மான்ய ஸ்ரீ மதோ ரங்க பர்த்து
சரண கமல சேவாம் ஸாஸ்வதீ மப்யு பைஷ்யன் –29-
விகசிகத பக்தியை உடைய ஸ்ரீ வேங்கடேச கவி அருளிச் செய்த இந்த ஸ்ரீ கோதா ஸ்துதியை அப்யசிப்பார்
பெரிய பிராட்டியார் உடன் கூடிய பெரிய பெருமாள் திருவடித் தாமரைகளில்
நித்ய கைங்கர்யம் செய்யப் பெற்று பெரிய பெருமாளால் உகக்கப் படுவர்
ஸ்ரீ கோதா திருக்கரத்தில் உள்ள செங்கழு நீர் புஷ்பம் போலே விகசித பக்தி உடைய ஸ்வாமி
வக்தி கோதா ஸ்துதிம்-இங்கு இப்பரிசு உரைப்பார் அங்கு அப்பறை பெற்றவாறு பெறுவாரே-
கிம் சாஸ்திரம் கிம் காவ்யா ரத்னம் அதவ பக்தி பிரதான ஸ்துதி
கிம் வா நாடகம் அந்ய தேவா ரசனம் பவ்ராணிகி கிம் கதா ஆச்சர்ய மாலா சேமுஷி விலஸிதம்
கிம் வா ரஹஸ்ய த்ரயம் கோதா கீதம் இதம் படந்தி புவி யே தே தன்யதன்யா ஜனா
இது கொண்டே செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –
——————————————–
ஸ்ரீ கோதாஸ்துதியின் சொற்சுவையும் பொருட்சுவையும் அறிந்து அநுபவித்தவர் களுக்கே பூரணமாகத் தெரியும்.
ஸ்ரீ ஆண்டாளுடைய வ்ருத்தாந்தம் எவ்வாறு மனத்தைக் கவர வல்லதோ அவ்வாறு ரம்யமாய்
வஸந்த திலக வ்ருத்தத்தில் படனஞ்செய்வதற்கும் பாடுவதற்கும் இன்பமாய் கோதையினுடைய மணிச்சிலம்பின் மிழற்றல் போல்
பரந்தாமனுக்கும் நமக்கும் வெகு மனோஜ்ஞமாய் அமைந்துள்ளது இத் தோத்திரப் பாமாலை.
பகவத் பக்தியில் ஆழ்வார்களில் ஒருவராயும் அவனுடைய தேவிமார்களில் ஒருவராயும் இருக்கும் இருப்பு ஆண்டாளுக்கு அஸாதாரணம்.
ஆழ்வாராய்க் கொண்டு பாமாலை சூட்டியும் தேவியாய் நின்று பூமாலை சூட்டியும் அநுபவம் ஆண்டாளுக்கே உரியது.
பாமாலை சூட்டிய தேவியும் இல்லை. பூமாலையைத் தாம் சூடிப் பெருமாளுக்குச் சூட்டிய ஆழ்வாரும் இல்லை.
ஸ்வாமி தேசிகனுடைய பக்தி விகசித்து (மலர்ந்து) அருளிச் செய்யப் பெற்ற பிரபந்தமே கோதாஸ்துதி.
அது அவருடைய மனத்தையே கவர்ந்தது என்பது “பஹுகுணரமணீயாம்” என்பதாலே அறியலாம்.
இத்துதி இருபத் தொன்பது சுலோகங்கள் கொண்டது.
அசேதனத் தத்துவங்கள் 24, இருபத்தைந்தாவது தத்துவம் ஜீவாத்மா, 26ஆவது தத்துவமாகிய பெருமாள் 1,
அவருடைய தேவிமார் 3, ஆக தத்துவக்கணக்கில் மொத்தம் 29-ஐ அநுசரித்த தாயிருக்கலாம் இந்த எண்ணிக்கை.
திருப்பாவைப் பாசுரங்கள் முப்பதில் இறுதிப் பாசுரத்தைச் சேர்க்காமல் ’சிற்றஞ்சிறு காலை’யோடு பூர்த்தி செய்து 29 கணக்காக
ஸ்வாமியின் திருவுள்ளம் இருக்கலாம்.
29-ஆம் சுலோகத்தில் ’சரணகமலஸேவாம் சாச்வதீமப்யுபைஷ்யந்’ என்றுள்ளது.
’உன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்’ ,
’நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன் தன்னோடுற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று 29ஆம் பாசுரத்திலுள்ளதை அநுஸரித்ததே.
’இதி பஹுகுண ரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம்ய:’ என்று இருபத்தொன்பதாம் சுலோகத்தில் உள்ளது
“கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை முப்பதுந் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார்’ (திருப்பாவை 30)என்பதை முற்றிலும் அநுஸரித்தே.
’ இதி வக்தி ’ என்பதற்கு மலர்ந்த பக்தியோடு தேசிகன் (வேங்கடேசன்) மனத்திலிருந்து உருகி (வாக்காக) வெளிவரும்
ப்ரகாரமாக இப்படியே யார் தப்பாமே உச்சரிக் கிறாரோ’ என்பது பொருள்.
’இப்பரிசுரைப்பார்’ என்பதற்கும் ’கோதை எப்படி பக்தி வெள்ளமாக மனமகிழ்ந்து உரைத்தாளோ அப்படியே ஓதுபவர்’ என்பது பொருள்.
ஸ்ரீரங்கராஜனிடம் கோதையின் பக்தியை யொக்கும் கோதையிடம் ஸ்ரீ தேசிகன் பக்தி.
’சங்கத்தமிழ் மாலை’ என்பதற்குச் சிறந்த தமிழாகிய சங்கத் தமிழால் இயற்றிய பாமாலை என்றும் சொல்லலாம்.
’ பஹுகுண ரமணீயாம்’ என்பது சங்கத் தமிழ் போல உயர்ந்த ஸம்ஸ்கிருதமான வைதர்ப்பீ பாஞ்சாலிரீதிகளில் அமைந்தது
கோதையின் னருளால் இத்துதி என்று பேசுவதாகச் சொல்லலாம்.
———
இதி ஸ்ரீ கோதா ஸ்துதி சம்பூர்ணம் –
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ காமாஸிக அஷ்டகம் —
December 12, 2016ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேஸரீ
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி ––
திரு வேளுக்கை –திரு வேள் இருக்கை –காமாஸிக -யோகாசனம் –ஸிம்ஹம் தான் பயங்கரம் அல்லன்–அழகியான தானே அரியுருவம் தானே –தம் அத்புதம் பாலகம் அம்பு ஜேக்ஷணம் – கண்ணன் -அத்ருஸ்யத அதி அத்புதம் நரஸிம்ஹம் -ஸ்ரீ மத் பாகவதம் -அழகிய ஸிம்ஹர் என்றே நிரூபணம் -அங்கு ஓர் ஆளரியாய் -ஒப்பற்ற -சீற்றத்தோடு அருள் பெற்ற -சேராச் சேர்த்தி –
வேட்க்கை பிறப்பிக்கும் திரு உருவம் -அசுரர்களுக்கு பயங்கரம் -அத்திகிரி நாதனே இங்கு
அஷ்ட புஜ அஷ்டகம் -ஹரினா–மூலம் அருகில் -உள்ள -திரு வேளுக்கை நினைவால் -அங்கேயே -அருளி –
யஞ்ஞம் சம்ரக்ஷணர்த்தம் திருவவதாரம் -ஸ்தோத்ர பாடம் பிரசித்தம் –
ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்தோத்ரங்களில் விபவ அவதாரமும் ஸ்பஷ்டமாக அர்ச்சாவதார திவ்யதேச பரமாயும் இருந்துள்ள ஒரே ஸ்தோத்ரம் இதுவே-அவனே ஆசைப்பட்டு நித்யவாஸம் பண்ணும் திவ்யதேசம் -என்பதே – காமாஸிக-வேளுக்கை என்பதின் அர்த்தம் -பாலும் சக்கரையும் சேர்ந்து இனிமை போல் அவதாரமும் அர்ச்சயையும் – சேர்ந்து அனுபவித்து அருளிய ஸ்தோத்ரம்
———————————
ஸ்ருதீநா முத்தரம் பாகம் வேகவத்யாஸ் ஸ தக்ஷிணம்
காமாத் அதி வசன் ஜீயாத் கஸ்ஸித் அத்புத கேஸரீ –1-
வேதங்களின் மேல் -வடக்கு -பக்கத்திலும் -வேகவதி ஆற்றின் தென் பக்கத்திலும்
தனது –காமாத் அதி வசன்-அபி நிவேசத்தால் உகந்து எழுந்து அருளி இருக்கும் அத்விதீயமான அத்புத ஸிம்ஹ ரூபனே ஜீயாத் உனக்குப் பல்லாண்டு-
வேதங்களின் மேல் (வடக்கு ) பக்கத்திலும் வேகவதி -ஆற்றின் தென் பக்கத்திலும் தனது ஆசையால் எழுந்தருளி இருக்கும் ஒப்பற்ற அத்புதமான சிங்க வடிவு கொண்ட எம்பெருமான் வாழ்க !
ஸ்ருதீ நா முத்தரம் பாகம் வேகவத் யாஸ்ஸ தக்ஷிணம் –காமாததி வசன் ஜீயாத் கஸ்ஸி தத்புத கேஸரீ —வேத சிரஸ் உபநிஷத் -வேகவதி தெற்கு ஸ்தானம் -உகந்து அருளின –
ஸிம்ஹம் -ந பீமா அனுகூலருக்கு –அத்புத கேஸரீ —கச்சித்–விலக்ஷணம் –தெரிந்த அம்சம் அத்புத -அளவற்றது எவ்வளவு என்றும் கூற முடியாது என்பதால் தெரிந்த அம்சம் அத்புத -அளவற்றது எவ்வளவு என்றும் கூற முடியாது என்பதால் –கச்சித்––
லஷ்மி யா ஆலிங்கனம் –அத்புதம் –அழகியான் தானே அரி யுருவம் தானே -காமாஸிகா அரி -நர ஹரி -கேஸரீ-காமம் -இச்சை சங்கல்பம் -ஆஸிகா -தானே ஆசைப்பட்ட ஆசனம் –
ஸ்ருதி ஸ்ரசால் பிரகாசிக்கும் பர ப்ரஹ்மமே வேகவதி நதிக்கரையில் -வரத ராஜ பெருமாளே நரஸிம்ஹம் இங்கே –
வைகுண்டம் ஆஸக்தி -வி முக்த வைகுண்ட -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா-
ஸ்ருதீநாம் பஹு வசனம் -பல பெண்கள் –வேகவதி பெண்–முதலில் பன்மை அடுத்து -ஒருமை -வ்யாமோஹம் இரண்டையும் காட்டி –
உப கங்கம் கரைக்கு பிரதானம் -ராஜ சேவகம் சேவகன் முக்கியம் பீதாம்பரம் -தத் புருஷ சமாகம் இது -தரித்து இருக்கும் பிரானுக்குத் முக்கியம் நரசிம்மன் -இரண்டையும் பிரகாரமாக உடைய அவனுக்கு பிரதான்யம்
தனக்கு உரியனாய் அமைந்த தானவர் கோன் கெட்டான்
உனக்கு உரியன் ஆய மைந்தன் உய்ந்தான் நினைக்கும் கால்
வேளுக்கை ஆள் அரியே வேறு உதவி உண்டோ உன்
தாளுக்கு ஆள் ஆகா தவர்க்கு –77–
——————————————–
தபந இந்த் வக்நி நயன தாபாந் அபஸிநோதுந
தாப நீய ரகஸ்யா நாம் சார காமாஸிகா ஹரி –2-
சூர்யன் -சந்திரன் -அக்னி -ஆகிய மூன்று கண்களை உடைய ஸ்ரீ நரஸிம்ஹ –
தாப நீய உபநிஷத்துக்கள் சாரமாக உள்ள திரு வேள் இருக்கை நரஸிம்ஹன்
நம் தாப த்ரயங்களையும் ஒழித்து அருள வேண்டும் –
ஸூர்யன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று கண்களை உடைய ந்ருசிம்ஹ தாபநீய உபநிஷத்துகளின் ஸாரமாக உள்ள திரு வேள் இருக்கை நரசிம்ஹன் நம்முடைய மூன்று , தாபங்களை ஒழிக்க வேண்டும் !
தப நேந்த்வக்நி நயன தாபா நபஸி நோது ந-தாப நீய ரகஸ்யா நாம் சார காமாஸிகா ஹரி-
தாபங்களை போக்கட்டடிக்கட்டும் -இந்து அக்னி -மூன்று திருக் கண்கள் கடாக்ஷத்தால் பயம்-
விரோதி தாரதம்யம் ஏற்ப சூரியன் அக்னி தேஜஸ் –
ஆஸ்ரிதர்களுக்கு ப்ரீதி அள்ளி வழங்கி -சந்திரன்
அத்யந்த ஆஸ்ரிதர் -மூன்றுமே அளவில்லா ஆனந்தம் –
தாபன் அபசிநோதுனா-அடியோடு நீங்க வேண்டுமே –
தாபநீய உபநிஷத் –நரஸிம்ஹனைப் பற்றியே சொல்லும் -அதர்வண வேத பாகம் –மந்த்ர ராஜ ஸ்தோத்ரம் -சிவ பெருமான் அருளி –
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் —ரகஸ்யா நாம்--11 பாதங்கள் 32- அக்ஷரங்கள்
யாவது காலம் எழுந்து அருளி இருக்க ப்ரஹ்மா பிரார்த்தித்த உடன் -அருள் வரதர் –
வேகவதி தக்ஷிண கரையில் -காமாஸிகா ஹரி
சங்கல்ப மாத்ரத்தால் அவதரித்து -ஷேத்ர வாசி ஹரி –
அம்ருத்யுஸ் சர்வத்ருக் சிம்ஹஸ் சந்தாதா சந்திமான் ஸ்திர
அஜோ துர்மர்ஷண்ஸ் சாஸ்தா விஸ்ருதாத்மா ஸூராரிஹா –22-
200-அம்ருத்யு -ம்ருத்யு தெய்வத்துக்கே பகைவர் -மரணத்தை ஒத்த ஹிரண்யனுக்கு விரோதி –
201–சர்வத்ருத் -நண்பர்கள் பகைவர்கள் நாடு நிலையாளர் ஆகிய அனைவரையும் சமமாகப் பார்ப்பவர் –
202-சிம்ஹ -பெரிய நரசிம்ஹ வடிவம் உடையவர் –
203- சந்தாதா -ஹிரண்யனை அழிக்கும் காலத்திலேயே பக்த பிரகலாதனை சேர்த்துக் கொண்டவர் –
204-சந்திமான் -தன் அடியவர்களோடு தன் சேர்க்கை நீங்காமல் இருப்பவர் –
205-ஸ்திர-பக்தர்கள் இடம் வைத்த அன்பில் அவர்கள் குற்றத்தையும் பொறுத்து விலகாமல் இருப்பவர் –
206-அஜ -தூணில் பிறந்த படியால் இயற்கையான பிறப்பு இல்லாதவர் –
207-துர்மர்ஷண-பகைவர்களால் தன் பார்வையைத் தாங்க முடியாமல் இருப்பவர் –
208-சாஸ்தா -தீயவர்களைத் தண்டிப்பவர் –
209-விஸ்ருதாத்மா -வியந்து கேட்கத்தக்க நரசிம்ஹ அவதார திரு விளையாட்டுகளை உடையவர் –
219-சூராரிஹா -தேவர்களின் பகைவரான ஹிரண்யனை அழித்தவர் –
* ந ஜாயதே ஜநித்யாம் யத₃ஜஸ் தஸ்மாத₃அநேக ஜித் இதி ॥
தாயின் வயிற்றில் இருந்து பிறக்கவில்லை யாதலால் அஜன்
அவன் அனைவரையும் வெற்றி கொள்பவன்-பிதாமஹீ ஆனதே ஹிரண்யன் தூண் –
———————————-
ஆகண்டம் ஆதி புருஷம் கண்டீ ரவ முபரி குண்டிதாராதிம்
வேகோ பகண்ட சங்காத் விமுக்த வைகுண்ட பஹூ மதி முபாஸே–3–
கழுத்து வரையில் புராண புருஷ, வடிவும் .(கழுத்துக்கு) மேலே சிங்க வடிவும் கொண்டவனும் பகைவனைக் கொன்றவனும் வேகவதீ – நதியின் அருகில் உள்ள இடத்தின் மீது உள்ள
ஆசையினால் ஸ்ரீ வைகுண்டத்தின் பெருமையைக் கை விட்டவனுமான , நரஸிம்ஹனை வணங்குகிறேன் !
திருக் கழுத்து வரையில் புராண புருஷ வடிவும் -மேலே ஸிம்ஹ வடிவும் கொண்டவனும்
ஆஸ்ரித விரோதியை நிரசித்தவனும் -வேகவதி நதியின் அருகில் உள்ள திவ்ய தேசத்தில் அபிநிவேசத்தால் பெருமை மிக்க ஸ்ரீ வைகுண்டத்தில் விரக்தி குண்டவனுமான ஸ்ரீ நரஸிம்ஹனை ஆஸ்ரயிப்போம்-காமாஸிகா ஹரி-அத்யாஹாரம் செய்து கொள்ள வேண்டும்
ஆகண்ட மாதி புருஷம் கண்டீ ரவ முபரி குண்டித ஆராதிம்-
வேகோ பகண்ட சங்காத் விமுக்த வைகுண்ட பஹூ மதி முபாஸே-உபாசிக்கிறேன் -யாரை —ஆகண்டம் ஆதி புருஷன் –உவரி கழுத்து மேலே ஸிம்ஹம்-ஆ–உப சர்க்கம் -அது பர்யந்தம் என்றும் அதில் இருந்து என்றும் -புரங்களில் சயனித்து இருக்கும் புருஷன் -ஹ்ருதய கலத்தில்-மானஸ சரோவரத்தில் சயனித்து இருக்கும் -ஹம்சம் -புருஷன் – ஆத்மாக்குள்ளும் இருப்பதால் ஆதி புருஷன் -புருஷோத்தமன் –
வேகவதி நதியில் -விமுக்த வைகுண்டம் விட்டு அன்றோ வந்து அருளினார்
நரம் கலந்த சிம்ம உருவாய் -ஜகத் சர்வம் நரசிம்ஹ மாகவே —ஸ்தான பேதம் வைத்து —
கண்டீரவம் கர்ஜனை பிரசித்தம்-தோற்றத்தால் சத்ருக்கள் மாயும் படி -வேகவதி -கர்ஜனை பண்ணி ஓடி -சரஸ்வதி நதி -பிரிந்து -அடக்கி ஆள
இவர் கர்ஜனையால் அந்தர்வாஹினி ஆனாள்-இங்குள்ள ஆசையால் ஸ்ரீ வைகுண்டம் மறந்து –
குண்டித -வெல்லப்பட்ட திரு முகம் –
ஸ்ரீ வைகுண்ட விரக்தாய-அங்கு பகல் விளக்கு-சர்வஞ்ஞருக்கு அங்கு -காதாலே கேட்டே போக வேண்டும் அத்தை -அருள் மட்டும் அங்கு -சீற்றத்தோடு அருள் இங்கேயே தானே – -பின்னானார் வணங்கும் ஜோதி -கண்டார் உளர் இங்கு –
——————————————-
பந்தும் அகிலஸ்ய ஐந்தோ பந்துர பர்யங்க பந்த ரமணீயம்
விஷம விலோசன மீடே வேகவதீ புளின கேளி நரஸிம்ஹம்–4-
எல்லா பிராணிகளுக்கும் உறவினன் , ஆனவனும் திடமான பர்யங்க பந்தம் எனும் ஆஸனத்தால் அழகு அடைந்தவனும் ஒற்றைப் படையான (3) கண்களை உடையவனும் வேகவதீ – நதியின் மணல் – திட்டில் விளையாடுபனுமான நரஸிம்ஹனை ஸ்துதிக்கிறேன் !காமங்களை அருளட்டும் !
ஸமஸ்த பிராணிகளுக்கும் ஸர்வவித நிருபாதிக பந்து ஆனவனும் -திடமான பரியங்க பந்தம் என்னும் ஆசனத்தால் அழகு அடைந்தவனும் -மூன்று திருக் கண்களை உடையவனும் வேகவதீ நதியின் மணல் திட்டில் விளையாடுபவனுமான ஸ்ரீ நரஸிம்ஹனை ஆஸ்ரயிப்போம் –
பந்து மகி லஸ்ய ஐந்தோ பந்துர பர்யங்க பந்த ரமணீயம் –விஷம விலோசன மீடே வேகவதீ புளின கேளி நரஸிம்ஹம்-ஸமஸ்த லோக ஜந்துக்கள் -அனைவருக்கும் சர்வ வித பந்து -அகிலஸ்ய பந்து —சமோஹம் சர்வம் அன்றோ-ஹிரண்யகசிபுவுக்கும் பந்து -அவன் இசையாமல் இழந்தான் -விலக்காமை ஒன்றே வேண்டும் –
தேவானாம் தானவானாம் –அகில –பிதா மாதா மாதவ -த்வமேவ தேவ சர்வம் –யதிவா ராவணஸ்யம் –
பரியங்க பந்தம் –ஆசன விசேஷம் கிடைத்தாலே போதும் -அவன் அழகு வேண்டாம் -பரியங்க அழகே காலை கட்டிப் போடும்-மேற்கு நோக்கி திருமுக மண்டலம் இங்கு –
விஷம விலோசனம் –முக்கண் –ஆஸ்ரிதர் -தண்ணளி -விரோதி பக்கல் குரூரம் விஷமம்- சீற்றமும் அருளையும் ஏக காலத்திலேயே காட்டி அருளும் விஷமும் உண்டு -இதுவே –சீற்றத்தோடு அருள் –பிரியதமர்களை தானே வரித்து வெறிதே அருள் புரிபவன்
வேகவதி நதி மணல் குன்றில் விளையாடும் நரசிம்மனை ஸ்துதிப்போம்
ப்ரஹதாரண்ய உபநிஷத் பாடப்படும் -கிரி குகைக்குள் -மணல் குன்றில் நம் கண் காண விளையாடுகிறதே –
———————————————–
ஸ்வ ஸ்தாநேஷூ மருத் கணான் நியமயன் ஸ்வாதீன ஸர்வேந்த்ரிய
பர்யங்க ஸ்திர தாரணா ப்ரகடித ப்ரத்யங் முகா வஸ்தித
ப்ராயேண ப்ரணி பேதுஷாம் ப்ரபுரசவ் யோகம் நிஜம் சிக்ஷயன்
காமாந் ஆதநுதாத் அசேஷ ஜகதாம் காமாஸிகா கேஸரீ –5-
வாயு (தேவர்) கூட்டங்களை தம் தம் ,இடங் களில் நிறுத்தி வைத்தவனும் எல்லா இந்திரியங்களையும் தனக்கு , வசப்படுத்தியவனும் பர்யங்க – பந்தம் எனும் ஆஸனத்தில் உறுதியாகப் பற்றியவனும் வெளிப்படுத்தப்பட்ட மேற்கு (உள்) நோக்கிய நிலையில் முகத்தை உடையவனும் பக்தர்களுக்கு தனது த்யானத்தைக் கற்பிப்பவன் போல் உள்ளவனும் பிரபுவுமான இந்த காமாஸிகா நரஸிம் ஹன் எல்லா மக்களுக்கும் விரும்பிய பயன்களை அளிக்க வேண்டும் !
வாயு இத்யாதி தேவர் கூட்டங்களை தம் தம் இடங்களிலே நிறுத்தி வைத்தவனும்
நம் சகல இந்திரியங்களை தன் வசப்படுத்தி இருப்பவனும் -பரியங்க பங்கம் என்னும் ஆசனத்தில் உறுதியாக பற்றினவனும் – வெளிப்படுத்தப் பட்ட மேற்கு உள் நோக்கிய நிலையில் திரு முகத்தை உடையவனும் – பக்தர்களுக்கு தனது தியானத்தை கற்ப்பிப்பவன் போல் உள்ளவனும் பிரபுவுமான இந்த காமாஸிகா நரஸிம்ஹன் ஸமஸ்த ஜன ஸமஸ்த அபேக்ஷிதங்களையும் அளித்து அருள வேண்டும் –
ஸ்வ ஸ்தாநேஷூ மருத் கணான் நியமயன் ஸ்வாதீன ஸர்வேந்த்ரிய -பர்யங்க ஸ்திர தாரணா ப்ரகடித ப்ரத் யங்முகா வஸ்தித-மருத் கணங்களை ஸ்வ ஸ்வ ஸ்தானங்களில் நியமித்து -ஹிரண்யாசுரன் நலிவால் முன்பு -இல்லையே –
யோக அனுஷ்டானம்-ஹிரண்ய வதம் அனந்தரம் -இரண்டையும் குறிக்கும் -இத்தால்
பிராண அபான பஞ்ச பிராண -அடக்கி -ஒரே ஸ்தானத்தில் ஆத்மஞானம் யோகிகள் பெறுவார்கள் –
இந்திரியங்களை அடக்கி -யோக சித்த விரோதி -மனம் வியாபாரம் அடக்கி –
ப்ராயேண ப்ரணி பேதுஷாம் ப்ரபுரசவ் யோகம் நிஜம் சிக்ஷயன் -காமா நாத நுதாத் அசேஷ ஜகதாம் காமாஸிகா கேஸரீ-மேற்கு முகமாக எழுந்து அருளி -சகல ஜகத்துக்கும் காமங்களை அள்ளிக் கொடுக்க -ஷேமங்களை அருளி
சர்வ பல ப்ரதன்-நாராயணனே நமக்கே பறை தருவான் -உதாரா சர்வம் -என்பவன் அன்றோ
யோகேஸ்வரன் -யத்ர யோகேஸ்வர கிருஷ்ண -சர்வ வித ஷேமமும் கிட்டும் –
——————————————–
விகஸ்வர நக ஸ்வருஷத ஹிரண்ய வஷஸ்தலீ
நிரர்க்கள விநிர்க்கள த்ருதிர சிந்து ஸந்த்யாயிதா
அவந்து மத நாசிகா மனுஜ பஞ்ச வக்த்ரஸ்ய மாம்
அஹம் பிரதமிகாமித ப்ரகடிதாஹவா கவா--6-
விரிந்த திரு நகங்கள் ஆகிற வஜ்ராயுதத்தால் பிளக்கப்பட்ட ஹிரண்யனது மார்பில் இருந்து தடை இல்லாமல் பெறுகிற இரத்த வெள்ளத்தால் அந்திப் பொழுது போலே சிகப்பாக ஆனவைகளும் -நான் முன்னே என்று போட்டி போடுவதில் ஒன்றை ஓன்று மிஞ்சிப் போரிடுவதை வெளிக் காட்டுபையுமான காமாஸிகாவில் இருக்கும் ஸ்ரீ நரஸிம்ஹனுடைய திருக் கைகள் அடியேனை ரக்ஷிக்கட்டும்
விகஸ்வர நக ஸ்வரு ஷத ஹிரண்ய வஷ ஸ்தலீ -நிரர்க்கள விநிர் க்களத்ருதிர சிந்து ஸந்த்யாயிதா-திரு உகிர் ஸ்துதி -இது -வஜ்ராயுதத்துக்கும் மேல் மஹிமை –
பிரகாசிக்கும் -திரு உகிர்கள் -தங்கு தடை இல்லாமல் ரத்தம் பெறுக -சந்த்யா காலம் சூர்யன் சிகப்பு ஒளி போல்
அவந்து மத நாசிகா மனுஜ பஞ்ச வக்த்ரஸ்ய மாம் -அஹம் பிரதமிகா மித ப்ரகடி தாஹவா பகாவா-நான்கு திருக்கரங்கள் -இருபது திரு விரல்களும் அஹம் அஹம் என்று முந்தி -பக்த ரக்ஷண த்வரை-திருக்கரங்கள் –மாம் அவந்து -நம்மை ரக்ஷிக்கட்டும்
கீழே யோகிகளுக்கு –அஹம் ஸ்மராமி மத் பக்திம் என்றவர் தானே –
பக்தஸ்ய பரிபாலனாய –திருவவதாரம் –பஞ்சாயுதங்களுக்கு வேலை இல்லாமல் –
திரு உகிர்களே –ரக்ஷணத்தில் முற்பாடராகி –
——————————————-
சடா படல பீஷணே சரபஸ அட்டஹாஸோத் படே
ஸ்புரத் க்ருதி பரிஸ் புடத் ப்ருகுடிகே அபி வக்த்ரே க்ருதே
க்ருபா கபட கேஸரின் தநுஜ டிம்ப தத்தஸ்தநா
சரோஜா சத்ருஸா த்ருஸா வ்யதிபிஷஜ்யதே வ்யஜ்யதே–7-
கபட கேஸரின்-கபடமான ஸிம்ஹ உரு கொண்டவனே -திரு முகத்தில் பிடரி மயிர்க் கற்றைகளால் பயங்கரமாய் வேகத்துடன் பெரும் சிரிப்பால்-மிடுக்கு உடையவனாய் -துடிக்கும் புருவங்களுடன் கோபம் மூண்டவனாக உன்னால் செய்யப் பட்டாலும்
உன் கருணை போன்ற உன் திருக் கண்களால் அஸுரக் குழந்தை ப்ரஹ்லாதனுக்கு
முலைப்பால் மூட்டி மாறுபட்ட சிகிச்சை செய்தது வெளிப்படுகிறது
சடா படல பீஷணே சரபஸா ட்டஹா ஸோத் படே -ஸ் புரத் க்ருதி பரிஸ் புடத் ப்ருகுடி கேஅபி வக்த்ரே க்ருதே-திரு முகத்தில் பிடரி மயிர் கூட்டங்கள்-அட்டகாசமான ரூபம்
கர்ஜனை மிக்கு -க்ரோதம் மிக்கு -தெளிந்த கோபம் -புருவம் துடித்து -இருந்தாலும் கூட
ரத்த மயம் எங்கும் -இருக்க -மாற்று மருந்து -அருகில்
சீரிய ஸிம்ஹம் -பூவைப் பூ வண்ணன் அன்றோ -சகஜம் இரண்டும்
க்ருபா கபட கேஸரின் தநுஜ டிம்ப தத்த ஸ்தநா -சரோஜா சத்ருஸா த்ருஸா வ்யதிபிஷஜ்ய தே வ்யஜ்யதே–கபடத்தால் கேஸரீ -அசுரன் சிசு பிரகலாதன் -தாய் பாசம் -முலை தருமா போலே சாந்த ஸ்வரூபம் கடாக்ஷம் –
தயை எங்கு இருந்து வந்தது
தாமரை மலர் போலே -பிரகாசம் படுத்தும் கடாக்ஷம் –
சர்வ லோகமும் வாழும் படி –சிகிச்சை -operation success
பிரகலாதனுக்கு -விரோதி நிவ்ருத்தி -என்றபடி
சீற்றத்தோடு அருள் கொடுத்த என் சிங்க பிரான் மஹிமையை யாரால் அறிய முடியும் –
—————————————-
த்வயி ரஷதி ரஷகை கிமன்யை-த்வயி ச அரஷதி ரஷகை கிமன்யை
இதி நிஸ்ஸித தீ ஸ்ரயாமி நித்யம் ந்ருஹரே வேகவதீ தடாஸ்ரயம் த்வாம் –8-சதி ஸப்தமி பிரயோகம் கீழ் ஸ்லோகமும் இந்த ஸ்லோகமும்
ஸ்ரீ நரசிம்ஹர் நீ அடியேனை ரஷித்த பின்பு மற்ற ரக்ஷகர்களால் என்ன பயன் –
நீ என்னை ரக்ஷிக்கா விட்டால் கூட மற்ற ரக்ஷகர்களால் என்ன பயன் என்ற உறுதியான எண்ணத்துடன் வேகவதீ நதிக் கரையிலே நித்ய வாசம் செய்து அருளும் உன்னை அடியேன் எப்பொழுதும் சரண் அடைகிறேன்
த்வயி ரஷதி ரஷகை கிமன்யை-த்வயி சாரஷதி ரஷகை கிமன்யை —அவன் ஒருவனே ரக்ஷகன் -நீ ரக்ஷிக்க முடிவு பண்ணினால் –வேறே யார் வேண்டும் – நீ ரக்ஷிக்கா விடிலும் வேறு யாருக்கும் வேலை இல்லை
கோரமான -உருவம் -பிரகலாதன் முன் பாசம் மிக்க தாய் -பார்த்தோம் –
வேறே எங்கேயும் போக வேண்டாம் —மத்யே விரிஞ்சி –-பிரஜை ரக்ஷணத்துக்காக -சர்வ பூதானாம் ரக்ஷணார்த்தம்-
ப்ரஹ்மா ஸ்வயம்பு –பெருமாள் பற்றி வால்மீகி -இதே போலே -அத்தை ஒற்றியே ஸ்வாமி இங்கே அருளிச் செய்கிறார்
இதி நிஸ்ஸித தீ ஸ்ரயாமி நித்யம் ந்ருஹரே வேகவதீ தடாஸ்ரயம் த்வாம்
நரசிம்மனே –திரு வேளுக்கை எழுந்து அருளி -உன்னை அண்டி சேர்ந்து அடைக்கலம் அடைந்து நிம்மதியாக இருப்போம் –
நிச்சயித்த தீ -புத்தி அத்யாவசியம் உடன் -இருப்போம் –
——————————————————————-
இத்தம் ஸ்துத ஸக்ருதி ஹாஷ்ட பிரேஷ பத்யை
ஸ்ரீ வேங்கடேச ரசிதை ஸ்திரித சேந்த்ர வந்த்ய
துர்த்தாந்த கோர துரித த்விர தேந்த்ர பேதீ
காமாஸிகா நர ஹரிர் வித நோது காமான் –-9-
அடக்க முடியாத கொடிய பாபங்கள் ஆகிய பெரிய யானைகளைப் பிளப்பவனும்
உயர்ந்த தேவர்களாலும் ஆஸ்ரயிக்கப் படுபவனான இந்த காமாஸிகா நரஸிம்ஹன்
ஸ்ரீ வேங்கடேச கவியால் இயற்றப்பட்ட இந்த எட்டு ஸ்லோகங்களும் இவ்வாறு இவ்வுலகில்
ஒருமுறை ஸ்துதிக்கப் பட்டு சர்வ அபேக்ஷிதங்களையும் அளித்து அருளுவானாக –
இத்தம் ஸ்துத ஸக்ருதி ஹாஷ்ட பிரேஷ பத்யை -ஸ்ரீ வேங்கடேச ரசிதை ஸ்திரித சேந்த்ர வந்த்ய-ஸ்வாமி தேசிகன் -8-ஸ்லோகங்கள் -ஒரு தடவை அனுசந்தித்து -கர்த்தா -ஞான அனுஷ்டான சம்பன்னர் அன்றோ –
இத்தம் இஹ ஸக்ருத் -இந்த இடத்தில் ஒரு தடவை —அஷ்டபி -திரு அஷ்டாக்ஷரம் போலே இந்த ஸ்லோகம் –
துர்த்தாந்த கோர துரித த்விர தேந்த்ர பேதீ-காமாஸிகா நர ஹரிர் வித நோது காமான் —
அவனே அனைவராலும் ஆச்ரயிக்கப் பட வேண்டும் -அனுசந்திப்பார்களுக்கு சகல பலன்கள்
யானை போன்ற பாபங்கள் செய்து இருந்தாலும் -ஹரியாலும் சகிக்க முடியாதபடி இருந்தாலும் –அவற்றைப் போக்கி அபேக்ஷிதங்கள்
அனைத்தையும் அருளுவான் -காமான் வித நோது –சர்வ சக்தன் –
மற்ற அவதாரங்கள் விட ஸ்ரேஷ்டம் -பக்த ரக்ஷணம் -அவதரித்த அன்றே –வ்யாபரித்தான் அன்றோ ––
——————————
இதி காமாஸி காஷ்டகம் சம்பூர்ணம்
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலி நே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
——————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமி அருளிச் செய்த தசாவதார ஸ்லோகம் –
September 2, 2016கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம
——————————————————————————-
ஸ்ரீ ரெங்கம் தசாவதார சந்நிதி —
திருமங்கை -பாடியவாளன் படித்துறை -வாள் வீசும் பரகாலன் அன்றோ –
28 ஸ்தோத்ர நூல்களில் தசாவதார ஸ்தோத்ரம் ஓன்று
வர்ஷா பிந்து சத்தை பெற பெய்து கடலில் சேருவது போலே அன்றோ ஸ்தோத்ரங்களுக்கு பெருமை –
கொடி சுற்றி மரத்துக்கு சத்தை இல்லை -வாக்கு சுத்திக்கும் நம் சத்தையும் தானே ஸ்துதி
ஸ்ரீ ரெங்கநாதன் தானே இந்த தசாவதாரம் செய்து அருளினான் முதல் ஸ்லோகம்
10 ஸ்லோகம் 10 அவதாரங்களும்
ஒரே ஸ்லோகம் பத்துக்கும் சேர்த்து 12 வது ஸ்லோகம்
13 -பல சுருதி சொல்லி தலைக் காட்டுகிறார்
——————————————————————————————————-
தேவோ ந ஸூபமாத நோது தச தா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைர் அத்யஷிதோ பாவுகை
யத்பா வேஷூ ப்ருதக் வி தேஷ்வ நுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ
யத்தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா -1-
யாருடைய அவதாரங்களில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் வெவ்வேறான பொருத்தமான அவதாரங்களை தானே எடுத்துக் கொண்டு
பல வடிவங்களை அவனது தர்மங்களோடு ஒத்த தர்மங்களுடன் இவ்வுலகில் விளையாடுகிறாளோ
அந்த அரங்கன் பத்து வித அவதாரங்களின் வேஷத்தை எடுத்துக் கொண்டு முழுமையான மகிழ்ச்சி அடைந்த பக்தர்களால்
திருவரங்கம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் காணப்படுபவனான திருவரங்கன் நம் எல்லாருக்கும் மங்களத்தை அருள வேண்டும் –
தேவோ-விளையாட்டுடை -திவு காந்தி தேஜஸ் –
ந ஸூபமாத நோது -ஸூபம் ஆத நோது -விஸ்தாரமாக ஸூபம் கொடுக்கட்டும் –
தச தா நிர்வர்த்தயன் பூமிகாம் -பத்து விதமாக வேஷம் எடுத்து கொண்டு -பூமிகா -அவதாரம் -மூர்த்தி பேதம் —
ரங்கே தாமனி -நாடக மேடை ஸ்ரீரங்கம்
லப்த நிர்பர-கிடைக்கப் பெற்ற பூரணமான
ரஸைர் அத்யஷிதோ பாவுகை-ரசிகர்கள் -ஸ்ரீ ரெங்க வாசிகளால் – -சேவிக்கப் பெற்றவர் யாரோ
யத்பா வேஷூ ப்ருதக் வி தேஷ்வ-வேவேறே விதங்களில் அவனுக்கு தக்க
அநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ -அனுகுண மாக தானும் எடுத்துக் கொண்டு
யத்தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா-பஹு வித ரூபங்களை கொண்டு ஆனந்த ரசம் அனுபவிக்கும்
சகல மனுஷ நயன விஷயம் ஆவதற்கு -அவதாரணம் -இறங்கி -இடமும் -நிலையம் – -அவதார கந்தம் பாற் கடல் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராபதி நிகேதன–இத்யாதி –
பெருமைகளில் ஒன்றும் குறையாமல் -அவதரிக்கிறார் -அஜோபிசன்-இத்யாதி – -ஆமையான கேசனே –
முதல் அவதாரம் பிரதமஜ விஷ்ணு -இணைவனாம் இருவர் அவர் முதல்வர் தாம் –
புராணம் வராஹர் முதல் அவதாரம் -ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது
கிணற்றில் விழுந்தாரை தூக்கி எடுக்க அன்றோ அவதாரம் -கிருபையா கேவலம் -கோரம் அனந்தர சம்சார சாகரம் –
நாடக மேடை -அரங்கம் -ஸுசீல்ய குணம் வெளியிட்டு அருள
ஸ்ரீ ரங்கம் பிராட்டி க்காக அவன் இருக்கும் திவ்ய தேசம் -காவேரி தாயார் -சீர் கொடுக்க பாரித்து வந்து –
மணல் மேட்டில் பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து –
அவதாரமே வேஷம் தானே -மறைத்துக் கொண்டு அவதரிக்கிறார் –
வில்லால் அன்றோ ஆணை கட்டினான் -குரங்குகளை கொண்டு -வேஷம் இருந்தாலும் பரத்வம் பீறிடுமே
அவன் திரு மேனியே ஸூ பாஸ்ரயம் -ஞானம் தானே ஸூ பம் -ஆனந்தம் ஸூ பம் –
அவன் ஒளியால் அவனே சேவை சாதிக்கிறான் அவள் உடன் சேர்ந்து -நாம் ரசிக்க -மேகம் மின்னல் –
பரிபூரணமான ரசம் -அனுபவிக்க தெரிந்த -அவனே பிரதானம் இவர்களுக்கு –
180 நாள் புறப்பாடு உள்ள திவ்ய தேசம் அன்றோ -சதா பஸ்யந்தி பண்ணுபவர்கள் -மால் கொள்ளும் சிந்தையர்கள் –
கண்ண நீர் சேறு -அவனுக்கே பித்தராவார்கள் –
பதின்மர் பாடும் பெருமாள்
ராக்வத் சீதை – கிருஷ்ணன் நப்பின்னை –வராகன் பூமி பிராட்டி –தேவ்தவே தேவி -யத் பாவேஷூ-மனசுக்கும் அணு குணமாக
-அதே தர்மம் உதவ -கிருபை ஆன்ரு சம்சயம் -புருவ நெருப்பே பிரமாணம் –
ஸூபம் சொல்லி அருளும் ஸ்லோகங்கள் என்பதால் அரக்கர் அசுரர் வார்த்தைகளே இல்லையே –
———————————————————————————–
நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா தத்த ஷணைர் வீக்ஷணை
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் யவ்தன்வா தீ நா மபாம்
நிஷ் ப்ரத்யூக தரங்க ரிங்கண மித ப்ரத்யூட பாதஸ் சடா
டோலாரோஹ சதோ களம் பகவதோ மாத்ஸ்யம் வபு பாதுந–2-
கடலுக்குள் மூழ்கிய வேதத் தொகுதிகளைத் தேடும் வேளையிலே கறுத்துப் பொதிந்த -திருக் கண்களின் கடாக்ஷங்களால் –
கடலின் நீருக்கு உள்ள தாமரைக் கூட்டங்களைப் படைப்பது போலே தடை இல்லாத அலை வீசுதலால்
ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்ட நீர்த் தொகுதி என்னும் ஊஞ்சலிலே ஏறுவதில்லை உத்ஸாகம் கொண்ட
எம்பெருமான் மீன் வடிவம் நம்மைக் காக்கட்டும் –
நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா -ஆழ்ந்த -அமிழ்ந்த வேதக் கூட்டங்கள் -தேடும் அவதாரம்
ஹயக்ரீவன் அசுரன் கடலிலே மறைக்க -மத்ஸ்ய மூர்த்தி அவதாரம் அன்றோ
தசா -நான்கு திசைகளிலும் -மீனுக்கு கண்கள் சுழலும்
தசா தத்த ஷணைர் வீக்ஷணை -தேடும் கண்கள் -கவனத்துடன் -பார்வைகளால் -தேட
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் -உள்ளே -அரவிந்த கஹானான் தாமரைக்கு காடு ஆனதே -உருவாக்கும் படி –
கப்யாசம் புண்டரீகாக்ஷணம்
யவ்தன்வா தீ நா மபாம்-சமுத்திரம் -ஆப தண்ணீர் உடைய
நிஷ் ப்ரத்யூக தரங்க-தடங்கல் இல்லாத அலைகள் -கரையே இல்லையே பிரளயத்தில்
ரிங்கண மித ப்ரத்யூட -ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்டு -மேலே எழும்பி
பாதஸ் சடா -பய சமூகம் தண்ணீர் கூட்டம்
டோலாரோஹ சதோ களம் பகவதோ -டோலோஸ்த்வம் -பிரளயம் அன்றோ –தானே ஏற்பாடு -செய்து கொண்டு அருளி –
ஊஞ்சல்-ஆரோஹனம்-சதோ கதம் -பாட பேதம் -ஆசை உடைய -ஸ்ரீ ரெங்கநாதனுடைய
வால் பகுதி கொண்ட அசைந்து செதில்கள் அசைந்து -பெரிய திரு மேனி
மாத்ஸ்யம் வபு-திருமேனி -மத்ஸ்ய அவதாரம்
பாதுந-நம்மை ரக்ஷிக்கட்டும் –
சாளக்கிராமம் திரு மேனி -மத்ஸ்யம் -கண்களால் ரக்ஷணம் -நைமித்திக பிரளயம் மூன்று உலகம் -ப்ரஹ்மா தூக்கம் –
வேதம் கண்கள் போலே ப்ரஹ்மாவுக்கு -மூச்சுக்காற்று -அந்தணர் மாடு -ஹயக்ரீவன் அசுரன் திருடி போக
உச்சாரண அநு உச்சாரண -சப்த ரூபம் -பிரளயத்தில் மறைக்க -மீனாக தானே அவதரிக்க வேண்டும் –
நேராக பெரிய திரு மேனி கொள்ளாமல் -சத்யவ்ரதன் ராஜ ரிஷி உதவ -க்ருதமாலா நதி –
காவேரி பயஸ்வினி கொசித்-கொசித் -திராவிடேஷூ -பிரமாதாக்கள் அவதாரம் இங்கே
க்ருதமாலா நதி கரையில் நித்யப்படி ஜல தர்ப்பணம் பண்ண -சிறு குட்டி மீன் கையிலே வர –
விடும் பொழுது பேசி -தீன வத்சலா -என்று கூப்பிட்டு –
வியப்பாயா வியப்பு தத்ர ஏக ராத்திரியில் வர்த்தமான கமண்டலம் -அளவு வளர்ந்து -ஒரே முஹூர்த்தம் ஹஸ்த த்ரயம் அளவு வளர்ந்து –
சரோவரில் விட -அது போகாத படி வளர்ந்து -பெரிய ஏரி கடல் -சமுத்திரம் அளவு வளர -யோஜனம் சத்தம் 800 மைல் -அளவு
-ஹரி நாராயணன் புரிந்து கொண்டார் –
7 நாள் உனக்கு கர்தவ்யம் உண்டு -பிரளயக் கடலில் மூழ்கும் ரக்ஷிக்க வேண்டும் -என்னால் தூண்டப்படும் படகு-ஒற்றைக் கொண்புடன் வர
வாசுகி பெரும் பாம்பை கொண்டு என்னை கட்டி -ஒன்றைக் கொம்பால் -மத்ஸ்ய புராணம் –கட்டுவிக்க
இந்த முடிச்சு சம்சார முடிச்சு அவிழ்க்க -மாயா மத்ஸ்யம் உபதேசிக்க -சத்யாவிரதர் –
திரு நறையூர் பதிகம் –கொழும் கயலாய் –விளையாடும் ஈசன் -எழுந்து இனிது விளையாடும் –
வானோர் அளவும் -முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவில் -மீனாய் வந்து உய்யக் கொண்ட -தண் தாமரைக் கண்ணன்
-இத்தையே தேசிகன் -பார்த்த இடம் எல்லாம் தாமரை ஆனதே
அலை கடல் -நீர் குழம்ப –அக்கடாத ஓடி -வரு மீனை -மறவாது நினை இறைஞ்சு என் நெஞ்சே –
வேத அபஹார -குரு பாதக –தைத்ய பீடா -ஆபத் விமோசன -பிரஜா பாதி உமா பத்தி இந்திரா பத்தி -ரமாபதி அனுக்ரஹித்து
வேதம் பரம சஷூஸ் -கண்ணைத் தொலைத்தார் -மீனாக
கடல் நிசப்தம் என்பதால் மறைத்து வைத்தான் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதால்
கண்ணை சிமிட்டாமல் -மீன் -கவனம் -இமையவர் இப்படியே -ஸ்வா பாவிக-
ஆமை நினைவால் ரக்ஷிக்கும் / சம்ஸ்பர்சம் -பறவை ரக்ஷிக்கும் /சங்கல்ப சூரியோதயம்
———————————————————————————————–
அவ்யா ஸூ ர் புவந த்ரயீ ம நிப்ருதம் கண்டூயா நைரத்ரிணா
நித்ரா ணஸ்யா பரஸ்ய கூர்ம வபுஷோ நிஸ் வாஸ வாதோர் மய
யத் விஷே பண சம்ஸ் க்ருதோ ததிபய ப் ரேங்கோள பர்யங்கிகா
நித்ய ஆரோஹண நிர் வ்ருதோ விஹரதே தேவ சஹவை ஸ்ரியா -3-
மலையோடு அழுந்த சொரிந்து கொண்டதால் உறங்குகின்ற ஆமை வடிவமான பரம புருஷனுடைய
எந்த மூச்சுக் காற்றின் அவைகளின் எழுச்சியால் அசைக்கப் பெற்ற கடல் நீர் ஆகிய அசையும் கட்டிலில்
எப்பொழுதும் ஏறி இருப்பதால் இன்பம் உற்று பிராட்டியுடனேயே விளையாடுகிறானோ
அந்த எம்பெருமான் மூன்று லோகங்களையும் ரக்ஷித்து அருள வேண்டும் –
அவ்யா ஸூ ர் புவந த்ரயீ ம-மூன்று உலகத்தையும் ரக்ஷிக்கட்டும் -வேதமே மூச்சு காற்று –
பிராண வாயுவாக பெருமாள் ரக்ஷிக்கட்டும்
நிப்ருதம் -எப்போதும் மலையாலே
கண்டூயா நைரத்ரிணா -சொரிதல் –
நித்ரா ணஸ்யா -நன்கு தூங்க
பரஸ்ய கூர்ம வபுஷோ -பெரிய பெருமாள் -ஆமையான கேசனே -லக்ஷம் யோஜனை
நிஸ் வாஸ வாதோர் மய-நிஸ் வாசம் உஸ் வாசம் –
யத் விஷே பண-காற்று வெளி வர -அலைகள் கிளம்பி
சம்ஸ் க்ருதோ ததிபய ப் ரேங்கோள-அசைகின்ற
பர்யங்கிகா -படுக்கையில் -கடல் அரசன் கைங்கர்யம் -வேதப்படுக்கை என்றுமாம்
நித்ய ஆரோஹண நிர் வ்ருதோ விஹரதே -ஸ்திரமான
ஆரோஹண –அங்கு உஊஞ்சல் -நித்யம் சொல்ல வில்லை -இங்கு ஆமை என்பதால் -நித்யம் –
ஸூ கப்பட்டு -பிராட்டி ஈன்று எடுத்த தாயார் தானே திருப் பாற் கடல்
தேவ சஹவை ஸ்ரியா-நித்ய கச்சபை – ஆமையான ஸ்ரீ யபதி –
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக்க அங்கு ஓர் வரை நட்டு இலங்கு சோதி ஆரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து திரிந்த வித்தகன் கலங்கல் முந்நீர் கண்ணபுரம் -ஆமையாய் –முந்நீர் –
வேதம் ரக்ஷிக்க மத்ஸ்யம்
அதுவே தனமாக கொண்ட தேவர்களுக்கு ஆமை
பர்வதம் பாக்யம் பெற்றதே ஸ்பர்சத்தாலே –
நன்கு தூங்கி மூச்சு விட –
மீனுக்கு உடம்பு எங்கும் தண்ணீர் போலே எங்கு தொட்டாலும் மஹா லஷ்மி –
உத்ஸாஹமாக விளையாடி -இதுவே வாழ்க்கை கை கொள்ள வேண்டும் –
ஸ்ரீ கூர்மம் -கை கால் மறைத்து -இந்திரியங்கள் பாடு போக்க -விஷய ஸூ கம் தேடித் போகாமல் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –
ஊஞ்சல் உத்சவம் -பர்யன்காசனம் அடுத்து -புறம் சூழ்ந்து காப்ப-ஆதி சேஷன் மட்டுமா கைங்கர்யம் செய்ய வேண்டுமோ –
திருப் பாற் கடல் -காட்டில் -அம்ருத மதனம் காலம் -இதிலும் வாசுகி கைங்கர்யம் உண்டே -கயிறாக –
பல தலை பாம்புகளில் ஆதி சேஷன் சர்ப்பங்களில் வாசுகியாக இருக்கிறேன் என்பான் கீதையில் –
மந்தர பர்வம் -தங்கி கொள்ள -ஆறு மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி–அப்பன் சாறு கொண்ட நான்றே
தாளும் தோளும் சமனிலாத பல பரப்பி -தோள்கள் ஆயிரத்தாய் —
கொசித் –நிறைய நடக்க -வைகுண்ட கபடம் குதிரை யானை அமிருதம் சந்திரன் -கவலை படாமல் தூங்க
-பிராட்டி வந்ததும் முழித்து அமுதினில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்த பெம்மான் -சங்கல்ப சூரியோதயம்
பச்யதாம்-பெண்களுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கம் இல்லையே -பட்டர் புருஷோத்தமன் அவன் மட்டும் தானே
கட்டில்-இருந்தால் மிதுனமாக இருக்க வேண்டுமே –
————————————————————————————————————
கோபா யேதநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரஹ்மாண்ட பிரளய யோர்மி கோஷ குருபீர் கோணா ரவைர்க்குர்குரை
யுத்தம் ஷ் ட் ராங்குர கோடி காட கடநா நிஷ் கம்ப நித்ய ஸ் திதி
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸுதஸு பகவதீ முஸ் தேவ விஸ்வம்பரா -4-
யாருடைய கோரைப்பல் ஆகிய முளையின் நுனிப்பகுதியை இறுகப் பற்றியதால் எப்பொழுதும் அசையாது
நிலையாய் நிற்கும் பெருமை உள்ள இந்த பூமி தேவி கோரைக் கிழங்கு போல் நின்று
பிரமன் முதல் பீபிலி வரை எல்லாவற்றையும் படைத்தாளோ
யார் பிரளய காலத்தில் கடல் அலைகளின் ஒலியைப் போலே பெரிய குர் குர் என்ற மூக்கின் ஒலியால்
ப்ரஹ்மாண்டங்களைப் பரிசுத்தம் ஆக்கினானோ போலியான மஹா வராஹ வடிவம் கொண்டவனுமான
அந்த எம்பெருமான் உலகங்களை எப்போதும் ரக்ஷித்து அருள வேணும் –
கோபா யேதநிசம் ஜகந்தி-அனைத்து உலகத்தையும் ரக்ஷிக்க வேண்டும்
குஹநா போத்ரீ -வேஷம்
பவித்ரீ க்ருத -ப்ரஹ்மாண்ட- பவித்ரம் அடைந்தது
பிரளய யோர்மி கோஷ குருபீர்-பிரளய கடல் அலையில் பேர் இரைச்சலை ஒன்றும் இல்லாத படி
கோணா ரவைர்க்குர்குரை-குரு குரு சப்தம் -மூச்சு காற்று -இதுவே நம்மை ரக்ஷிக்கட்டும் –
யுத்தம் ஷ்ட்ராங்குர -கோரை பல்லின்
கோடி காட கடநா நிஷ் கம்ப நித்ய ஸ்திதி -நுனியில் -நன்கு சேர்ந்து -ஸ்திரமாக -அசையாமல் -நடுக்கம் இல்லாமல்
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸுதஸு -கோரிக் கிழங்கு இன்றும் ஸ்ரீ முஷ்ணம் -முஸ்தா-முளை தான் ப்ரஹ்மா –
ஜகத் காரணம் ஸ்ரீ வராஹம் என்றவாறு
பகவதீ முஸ் தேவ விஸ்வம்பரா -கல்யாண குணங்கள் படைத்தவள் -பூமி பிராட்டி
ஸ்ரீ வராஹ அவதார அனுபவம் -சனகன் சனத்குமாரர் நால்வரும் -ஜய விஜயர்கள் -சாபம் –
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் -சேர்த்தி அனுபவம் –
கோலா வராகம் -ஏனமாய்-க்ரோட – வராஹ –
கேழலாய் உலகம் கீண்ட பூ கெழு வண்ணனாரை -போதரக் கனவில் கண்டு —
வாக்கினால் மனத்தினால் கருமம் தன்னாலே
வேட்க்கை மீதூர வாங்கி-ஆண்டாள் போலே கலியன் திருக் குறும் தாண்டகம் –
ரகஸ்ய சிகாமணி -ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் விளக்க தேசிகன் அருளிச் செய்து –
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –
-வானத்தவர்க்கும் -எல்லா எவர்க்கும் ஞானப் பிரான் அல்லல் இல்லை நான் கண்ட நல்லதுவே
பட்டர் -தசாவதாரம் பற்றி அருளிச் செய்த வார்த்தை -ஸ்மரிப்பது
ஸ்ரீ கூர்மம் -ஸ்ரீ தேவி அடைய -ஸ்ரீ வராஹம் -ஸ்ரீ பூமி பிராட்டியை பெற -எங்கும் தம் கார்யம் –
பெரும் கேழலார் -புண்டரீகம் நம் மேல் ஒருங்கே -சிலம்பினை சிறு பரல் போலே -மேரு கண கணப்ப —
கோமான் -மஹா வராஹ ஸ்புட பத்ம லோசனன்
யஜ்ஜை வராகன் -ஸூ கரம் சொன்ன ஸூ கர உபாயம் -இடந்தமை குலுங்கவோ -குடந்தையுள்-கிடந்தவாறு –
ஆயாசம் தீர -பேசு வாழி கேசனே
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே –
பாசி தூர்த்து கிடந்த -மாசு உடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாய் -பேசி இருப்பதுவும்
ரஷ்யத்தில் உள்ள பாரிப்பு -அடியார்க்கு என் செய்வான் என்று இருத்தி
கோலா வராகம் ஒன்றாய் -திருவாய் மொழி இறுதியிலும் ஆழ்வார் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –
பொழில் எழும் ஏனம் ஒன்றாய் கோட்டின் நுனியில் வைத்தாய் –நுன பாதம் சேர்ந்தேன் –
ஏரார் உருவில் எடுத்த ஆற்றல் அம்மானே –ஸ்வேத வராஹம் கல்பம் -திரு வெள்ளறை ஸ்வேத கிரி சிபி சக்கரவர்த்தி
ஆதி முன் ஏனமாகி –நம்மை ஆளும் அரசே
ஜகத் சர்வம் சரீரம் -பூமி கோரைப் பல்லின் நுனியில் ஒட்டிக் கொண்டு -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
உச்சாரணம் -குரு குரு சப்தம் ஆச்சார்ய க்ருத்யம் -சப்தம் மூ உலகும் வியாபித்து -நித்ய ஸூ ரிகள்-வந்து சேவிக்கும் படி
ப்ரஹ்மாண்டம் பவித்ரம் ஆக்கியது நிர் ஹே துகமாக தம்முடைய பேறாக -நிர் வியாஜ கிருபை
தாய் -குழந்தை -எவ்வுயிர்க்கும் தாய் அன்றோ –
விஸ்வம் பரா -ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் -விஸ்வம் பரா பரா -அவன் -ஆழ்வார் விஸ்வம் பரா பரா பரஸ்ய —
—————————————————————————————————————–
ப்ரத்யா திஷ்ட புரா தன ப்ரஹரண க்ராம க்ஷணம் பாணி ஜை
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய குண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவா
யத் ப்ராதுர் பவநாத வந்த்ய ஜடரா யாதிருச்சிகாத் வேத சாம்
யா காசித் ஸஹஸா மஹா ஸூர க்ருஹ ஸ்தூணா பிதா மஹ்யா பூத் –5-
எதிர்பாராது உண்டான எவனுடைய அவதாரத்தால் ஏதோ ஒரு பெரிய அசுரனுடைய வீட்டின் தூண்
மலட்டுத் தன்மை நீங்கி உடனே பிரமனைப் பெற்ற பாட்டியாக ஆயிற்றோ
க்ஷண நேரத்தில் -யார் தனது திருக் கை திரு நகங்களால் மறுக்கப் பட்ட பழைமையான திவ்ய ஆயுதத்தின்
கூட்டத்தை உடையவனாயும் வீணாகாதே சக்தி உடையவனாகவும் ஸ்ரீ நரஸிம்ஹ திவ்ய வடிவு கொண்டவனாயும் உள்ளானோ
அந்த எம்பெருமான் மூன்று லோகங்களையும் ரக்ஷித்து அருள வேண்டும் –
ப்ரத்யா திஷ்ட புரா தன ப்ரஹரண க்ராம-தள்ளப் பட்ட பழம் காலத்து திவ்ய ஆயுதங்கள் ஒதுங்கப் பட்டன –
க்ஷணம் பாணி ஜை-கையில் இருந்து பிறந்த நகங்கள் இருப்பதால் மற்ற திவ்ய ஆயுதங்களை
ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்க சொன்னானாம் –
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய -மூ வகை லோகங்களையும் க்ருத அக்ருத க்ருதாக்ருத -ரக்ஷிக்கட்டும்
அகுண்ட மஹிமா -தடை யற்ற மஹிமை
வைகுண்ட கண்டீரவா -ஸ்ரீ வைகுண்ட ஸிம்ஹன்-பாலும் சக்கரையும் கலந்தால் போலே –
யத் ப்ராதுர் பவநாத-வெளித்தோற்றம்
அவந்த்ய ஜடரா-மலடி இல்லாத வயிறு
யாதிருச்சிகாத் வேத சாம் -யதேச்சை பெருமாள் -ப்ரஹ்மாக்களுக்கு பாட்டியாக -இச்சை -அதிதி திதி பார்க்காமல் வருவார்
யா காசித் ஸஹஸா -த்வரையால்-அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான்
மஹா ஸூர க்ருஹ ஸ்தூணா பிதா மஹ்யா பூத்-தூண் பாட்டி ஆனதே உலகத் -தாத்தாவுக்கு பாட்டி இது தானே -அபூத்-ஆனதே
பிதாமகன் ப்ரஹ்மா -பெற்றவர் நாராயணன் -அவனை பெற்றதால் –
பேரன் பிறந்த பின்பு பாட்டி பிறக்கும் அக்கடிதகடனா சாமர்த்தியம் -ஸ்தம்பம் சொல்லாமல் –ஸ்தூணா ஸ்த்ரீ லிங்க சப்தம்
நார சிம்ஹ வபு ஸ்ரீ மான் -ஸ்ரீ லஷ்மி நரசிம்மன் -அழகியான தானே அரி உருவம் தானே –
வரத்தினில் சிரத்தை வைத்து —
கயாது-கர்ப்பத்தில் பிரகலாதன் -நாரதர் மூலம் -கர்ப்ப ஸ்ரீ மான் ஆனான் -கருவிலே திருவிலாதீர் காலத்தை கழிக்கின்றீரே-
கருவரங்கத்தில் இருந்து கை தொழுதேன் -சரவணம் கீர்த்தனம் –நவ வித பக்தன் –
நானும் சொன்னேன் நமரும் சொல்மீன் -நாராயணா என்னும் நாமம் –
எங்கும் உளன் கண்ணன் –அளந்திட்ட தூணை அவன் தட்ட -அங்கே வாள் உகிர் சிம்ஹ உருவாய் உளம் தொட்டு –
ஹிரண்ய வைத்த -புறப்பட்டது செங்கண் சீயம் -அங்கோள் ஆளரியாய் –சிங்க வேழ் குன்றமே –
ஆழ் துயர் செய்து -பிளந்து வளைந்த உகிர் -பரியனாகி -பள்ளியில் ஓதி –தெள்ளிய சிங்கம் -உளம் தொட்டு
தீய புஞ்சிக் கஞ்சன் -நினைத்த கருத்தை பிழைப்பித்த -சிந்தையினால் இகழ்ந்த இரணியன் -வரம் கெடுக்காத வரம் கேட்டான்
குலத்து உதித்தோரை கொல்லேன் -விரோசனன் பிள்ளை மஹா பாலி பிரகலாதன் பேரின்
நாதனை நரசிங்கனை –ஏத்தும் பாத தூளி படுத்தலால் பாக்கியம் செய்தது –
—————————————————————————————————————
வ்ரீடா வித்த வதான்ய தாநவ யசோ நா சீர தாடீ பட
த்ரை யக்ஷம் மகுடம் புநன் நவது நஸ் த்ரை விக்ரமோ விக்ரம
யத் பிரஸ்தாவ சமுச்சரித த்வஜ படீ வ்ருத்தாந்த சித்தாந்திபி
ஸ்ரோதோபி ஸூர சிந்துரஷ்ட ஸூ திஸா ஸுதேஷூ தோ தூயதே –6-
எதன் ஆரம்பத்திலேயே உயர ஏற்றப்பட்ட கொடி வஸ்த்ரத்தின் செய்தி பரப்பும் செயலை வெள்ளங்களாலே தேவ கங்கை
(திருவடி உயர ஏற்றிய கொடி ஸ்தானம் -தேவ வெண் கங்கை வஸ்திரம் ஸ்தானம் -)
ஆறு எட்டு திசைகள் ஆகிய மேல் மாடங்களிலே விரைவாக ஆடுகிறதோ
வெட்கத்தால் மனம் வருந்திய பெரிய கொடையாளியான மஹா பலி என்னும் அசுரனுடைய புகழ் ஆகிய சேனையின்
முன் செல்லும் சேவகன் போலே மூன்று கண்களுடைய சிவனின் முடியைத் தூய்மை ஆக்கிய
த்ரிவிக்ரமனுடைய திருவடிகள் நம்மை ரக்ஷித்து அளிக்கட்டும்
வ்ரீடா வித்த வதான்ய தாநவ-மஹா பலி புகழை பரப்ப
லஜ்ஜை வேட்க்கை -யால் பீடிக்கப் பட்ட பெரும் கொடை வள்ளல் -மஹா பலி -கொஞ்சமாக கொடுத்தோம் என்று
அன்றோ வெட்க்கினான் -இத்தாலேயே மூவடி கேட்ப்பாய் என்று நினைத்தான் -காமரு சீர் அவுணன்
யசோ நா சீர தாடீ பட -ஓடுகிற வேகம் -கட்டியம் சொல்லி பின்னே வரும் புகழை சொல்லிக் கொண்டே போனதே திருவடி –
அக்ர பாகம் -நுனிக்கு முன்னே போகும் -எச்சரிக்கை சொல்லிக் கொண்டே -புகழை சொல்லவே திருவவதாரம்
-அளக்கவே தானே புகழ் பரவிற்று -பறை சாற்றி போனதே
வதா அந்நிய வேறு கேளு என்றுமாம் –
தீர்த்தங்கள் இரண்டுக்கும் போட்டி என்றுமாம்-
த்ரை யக்ஷம் -முக்கணான்
மகுடம் புநன் நவது நஸ் -முடியை புனிதம் ஆகிற்றோ -ச சிவ சிவ பூத் -ஆளவந்தார்
த்ரை விக்ரமோ விக்ரம -மூன்று அடிகள் -ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியம் -அப்பன் –உலகம் கொண்ட வாறே –
ஆழி எழ –ஸ்வஸ்தி -வாழி சொல்ல
முன்பு சொன்னவை மூன்று அடிக்கு விசேஷணங்கள்-
விக்ரம-வைத்த அடி -திருவடி பதித்த
யத் பிரஸ்தாவ சமுச்சரித -பிரஸ்தாவம் தொடங்கி-உயர்ந்து எடுத்துக் கட்டப்படட
த்வஜ படீ-கொடிகள் எட்டு திக்குகளிலும் கங்கை நீர் இந்த புகழுக்கு -ஆகாசத்தில் ஓடும் கங்கை நீரை கொடி போலே
ஒல்லை வா என்று கூப்பிடுவது போலே மிதிலை கொடிகள் இருந்தனவே –
கோவலன் -இங்கே வராதே என்று சிலப்பதிகாரம் -தார் குறிப்பு ஏற்று அணி -அலங்கார சாஸ்திரம் –
வ்ருத்தாந்த சித்தாந்திபி -சரித்திரம் -போன்ற -உயர்ந்த கோடி போன்ற ஒப்பானவை –
ஸ்ரோதோபி-ப்ரவாஹங்களினால்
ஸூர சிந்துரஷ்ட ஸூ திஸா ஸுதேஷூ தோ தூயதே
தேவ கங்கை -அஷ்ட ஸூ எட்டு திசைகள் அசையும் -திஸா ஸுதேஷூ மொட்டை மாடிகள்
அவது- இப்படி பண்ணிய திருவடிகள் எங்களை ரக்ஷிக்கட்டும் –
மூன்று லோகம் காக்க நரசிம்மர் இடம் அபேக்ஷித்தத்தை திரிவிக்ரமன் நிறைவேற்றினான் -என்றுமாம்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் அபேக்ஷிதத்தை திருப் பாண் ஆழ்வார் இடம் கொடுத்தால் போலே –
கவி தார்க்கிக ஸிம்ஹம் அன்றோ -மஹா பாலி உதார குணம் புகழ் பரவ -திருவடி தாவி விரைந்து அளக்க –
உபேந்த்ரன் — வாமனன் — அதீந்த்ரன் -தேவ யோனி எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –
சுருக்குவார் இன்றியே சுருங்கி -பெருக்குவாறும் இன்றியே பெருக்கம் எய்து பெற்றியோய் – ஓங்கிஉலகு அளந்த உத்தமன்
நித்ய ஸ்ரீ இருக்கவே ப்ரஹ்மச்சாரியாய் போவதே
அலம் புரிந்த நெடும் கை கொண்டு இரப்பதே-வாங்கிப் போவார்களா உதாரர் என்றவன் தானே இரப்பதே –
புலன்களை வாமனன் போலே சுருக்கினால் பக்தி ஞானம் ஓங்கி வளரும் –
வாமானி சுகானி நியதி -ஸூ கங்களை கொடுப்பவன் தன் திருவடிகளை சேவிப்பார்களை
கோட்டங்கை வாமனன் செய்த கூத்துக்கள் -கை நீட்டி பழகி கொண்டே போனானாம் –திரட்டுப்பால் -போலே அன்றி –
சுக்ல பக்ஷ த்வதாசி விஜயா முகூர்த்தம் -காயத்ரி மந்த்ரம் சூரியன் உபதேசிக்க -பிரஜாபதி -தானே வந்து பிரஹஸ்பதி பூணல் கொடுக்க
-பூமி மான் தோல் கொடுக்க -தண்டம் சந்திரன் -அதிதி குடை -கமண்டலம் ப்ரஹ்ம -தர்ப்பங்கள் சப்த ரிஷிகள் குபேரன் பிக்ஷை பாத்திரம்
உமா பிக்ஷை ஐடா -பிறந்தார் அன்றே உபநயனம் -அன்றே 7 வயசு -ஆல மரத்தின் வித்தை–
அரும் குறள் ஆனான் -நீல நிறத்து நெடும் தொகை அன்றோ –
நர்மதா நதிக் கரையில் யஜ்ஜை வாடம்-இருந்ததாம்
கொள்வன் நான் –மாவலி -மூவடி –
சுக்கிரன் அன்னை துரும்பால் கிளறின சக்கரக் கையன் -ஒண் மிதியில் –அப்பால் மிக்கு -தாவி -உலகம் -கொண்டான்
-சலம் பொதி உடம்பு சந்திரன் வெங்கதிர் அஞ்ச –மால் புருடோத்தமன் வாழ்வு –
நாரணம் பாத துழாய் கொன்றை மலர் கலந்து இழி புனல்
சது முகன் கையில் –சதுர் புஜன் தாளில் சங்கரன் சடையில் தங்கி ஜடா தரன் கங்கா தரன்
அந்தரம் –பாதம் நம்மை ஆளும் அரசே -மதியினால் குறள் மாணாய-நிமிர்ந்த நீல் முடியின்
ஓ மண் அளந்த தாளாளா-நின் முகம் கண் உளவாகில் நீ இங்கே நோக்கிப் போ
சிறுவன் வார்த்தையை தன்னை மாவலி இடம் சென்று கேள் –
திருவோணத்தான் உலகு ஆளும் -வருக நம்பி வாமன நம்பி -வாமணாஸ்ரமம் -பக்ஸர் சித்தாஸ்ரமம் –
ஆகாச கங்கை நாலாக பிரிந்து ஓன்று துருவன் மேலே தங்க
மூன்று ஆகாசம் பூமி அந்தரிக்ஷம்
ஆகாச கங்கை சிவன் பெற்று சிவன் ஆக –
பின்பு ஏழாக பிரிந்து -இவ்வளவுக்கும் பேர் உண்டே
ஒன்றை பகீதரன் பிரார்த்தித்து -சாப விமோசனம் பெற பாகீரதி அலக்நந்தா ஜங்கவி
கங்கை -வாசகத்தால் கடுவினை கடுவிக்கும்
————————————————————————————————————–
க்ரோதாக்நிம் ஜமதக்னி பீடந பவம் சந்தர்ப்ப யிஷ்யன் க்ரமாத்
அக்ஷத்ராமிஹ சந்தஷய இமாம் த்ரி சப்த க்ருதவ ஷிதிம்
தத்வா க்ரமணி தக்ஷிணாம் க்வசன தாம் ஆஸ்கந்தய சிந்தும் வசந்
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவான் ஆ ப்ரஹ்ம கீடம் முனி –7-
எந்த முனிவர் தனது தந்தையான ஜமதக்னி முனிவரைக் கொன்றதால் உண்டான கோபக்கனலை திருப்தி செய்வதற்காக
இந்த பூமியை இவ்வுலகில் மன்னர் குலமே இல்லாதபடி 21-தலை முறைகள் வரிசையாக வெட்டி எறிந்தாரோ
ஒரு வேள்வியில் அந்த பூமியை கஸ்யப முனிவருக்கு தக்ஷிணையாகக் கொடுத்து
-தஷிணை கொடுத்த இடத்தில் வாசம் பண்ணைக் கூடாது என்று மேற்கு திக்கில் கடலில் கோடரியால் வீசி எறிந்து-
அந்த அளவு கடல் இவருக்கு இடம் அளிக்க – அவ்விடத்தை தன் வசமாகக் கொண்டு வசித்தாரோ-இதுவே கேரளா இப்பொழுது –
பெருமை உள்ள அந்த பரசுராம முனிவர் பிரமன் முதல் புழு வரையில் எல்லாருடைய தீங்கையும் ஒழித்து அருள வேண்டும் –
க்ரோதாக்நிம் ஜமதக்னி பீடந பவம் -ஜாமதக்னீ -பரசு ராமன் -ஜமதக்கினி குமாரர் -க்ரோதம் அக்னியால் -பீடிக்கப் பட்டு –
சந்தர்ப்ப யிஷ்யன் க்ரமாத் -அக்னியை -திருப்தி செய்யப் பெற்று -அலம் புத்தி இல்லாத அக்னி கோபம் –
அக்ஷத்ராமிஹ சந்தஷய இமாம் -ஷத்ரியர்கள் இல்லாத படி
த்ரி சப்த க்ருதவ ஷிதிம்-21 தலை முறை இல்லாமல் பண்ணி
தத்வா க்ரமணி தக்ஷிணாம் க்வசன தாம் -கஸ்யபர் இடம் தக்ஷிணையாக கொடுத்து ஏதோ ஒரு யாகத்தில்
ஆஸ்கந்தய சிந்தும் வசந்-சமுத்திரம் வசமாக கொண்டு இருந்து
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவான் ஆ ப்ரஹ்ம கீடம் முனி -மங்களம் போக்க வேண்டும் –
முனிவரான பரசுராமன் ப்ரஹ்மா தொடங்கி புல் வரை
அப்ரதான அவதாரங்கள் -பரசு ராம-பல ரா அவதாரங்கள் -ஸ்வரூப ஆவேச அவதாரங்கள் –
உபாசனம் அர்ஹம்
முழு சக்தி -ஸ்வரூப ஆவேசம் -சொல்ப -சக்தி ஆவேசம் ஒரு காரியத்துக்காக மட்டும் –
கார்த்த வீர்யார்ஜுனன் -பரசுராமன் -ராமர் -முக்கிய அவதாரம்
கண்ணன் பலராமன் -சந்திக்கலாம் -முக்கிய அவதாரங்கள் சந்தித்து கொள்ளாதே
-ரிசிகர் பாயாசம் -மாற்றி கொண்டு -ப்ராஹ்மணர் க்ஷத்ரியர் தேஜஸ் –
சத்யவதி க்கு அதீத கோபம் கொண்ட பிள்ளை சாபம் -இந்த பிள்ளை சாந்தம் அவன் பிள்ளை கோபிஷ்டர் –
ரேணுகா தேவி ஜமதக்கினி –தாய் தந்தை பரசுராமனுக்கு பிறப்பால் ப்ராஹ்மணர் வளர்ந்தது
விசுவாமித்திரர் –பிறப்பால் க்ஷத்ரியர் -ப்ரஹ்ம ரிஷி ஆனார்
இரு நில மன்னர் இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் -உடனே –
கோகுல மன்னரை மூ ஏழு கால் -மழு ஏந்தி –
விசித்ரன் கந்தர்வன் -ரேணுகா தேவி -தலை வெட்டி –
கர்வ பங்கம் ராமர் சந்தித்ததால் -தவத்தின் வலிமையில் பானம் விட்டு -கேரளா பரசுராம ஷேத்ரங்கள் –
கங்கை தீர்த்தமாடி 21 தலை முறை புண்ணியம் ஆகுமே –
—————————————————————————————————————-
பராவாரா பயோ விசோஷண கலா பாரீண காலா நல
ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக வியாபார கோர க்ரம
சர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணை ஏக வ்ரதீ
தர்மோ விக்ரஹ வான தர்ம விரதிம் தன்வீ ச தன்வீ த ந–8-
கடலின் நீரை வற்றைச் செய்யும் கலையில் வல்லமை யுடையவனும்
பிரளய காலத்தின் அக்னியின் ஜ்வாலைக் கூட்டத்தின் விளையாட்டை வெல்பவனும்
அம்புகள் செயல்களின் கொடிய முறைகளை உடையவனும்
எல்லா நிலையிலும் உள்ள ஒரு முறை சரணம் அடைந்த மக்களை ரஷிப்பதையே முக்கிய வ்ரதமாகக் கொண்டவனும்
தர்மமே உரு எடுத் து வந்தது போலே -தர்ம ஸ்வரூபமாய் -உள்ளவனும் ஒப்பற்ற வில்லாள ரான அந்த
ஸ்ரீ ராம பிரான் நமக்கு அதர்மங்களை ஒழித்தலைச் செய்து அருள வேணும் –
பராவாரா-சமுத்திரம்
பயோ விசோஷண -தண்ணீரை வற்ற அடிக்க
கலா பாரீண-வித்யையில் கை தேர்ந்த
காலா நல-நெருப்பு -ஜாடராகினி வயிற்றில் போலே இது ஊழி தீ
ஜ்வாலா ஜால -தீ பிழம்பு கூட்டம் -சுடர்கள் ஸமூஹம்
விஹார ஹாரி-பெரும் விளையாட்டையும் அபஹரிக்கும்
விசிக வியாபார-பாணங்கள் உடைய செயல்கள்
கோர க்ரம-உக்ரமான விளையாட்டுகள் –
ஸ்ரீ ராம பணம் இப்படி சொல்லி -சாந்த ஸ்வரூபன் அன்றோ
சர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணை ஏக வ்ரதீ
எந்த திசையிலும் -ஒரு தடவை சரணம் புகும் ஜானகி கூட்டங்கள் -ரக்ஷணத்தில் ஒரே விரதம் கொண்டவன்
தர்மோ விக்ரஹ வான-தர்மம் உரு எடுத்த பிரசித்தர்
அதர்ம விரதிம்-அதர்ம விரதி-வெறுப்பு கொள்பவராக ஆக்கட்டும் -தீய செயல்களில் இருந்து ஒய்வு ஏற்படுத்தட்டும் –
தன்வீ ச தன்வீ த ந–சாரங்க பாணி -கோதண்ட பாணி –
வில்லாண்டான் தன்னை -நாண் தழும்பு -சீதா பிராட்டி விரும்பும் -வீர பத்னி -அடியார்களை ரசிப்பவன் –
ஆலிங்கனம் செய்து -ரிஷிகளை ரஷித்ததும் –
நெருப்பில் இருந்து தானே தண்ணீர் -ஸ்ருஷ்டியில் —
பாடபாகனி குதிரை வடிவத்தில் கடலுக்கு உள்ளே -ஏரி மலை -போன்றவை நேருமே
தண்ணீர் நெருப்பில் சேரும் லயத்தின் பொழுது -இது ஊழி தீ
அனல -அலம் புத்தி இல்லாத நெருப்பு
சமுத்திர ராஜன் -விருத்தாந்தம் ராம பானம் மஹிமை அறிவோம் -குணக்கடல் ஜலக் கடலில் கிடந்ததே மூன்று நாள்கள்
ஜிதக்ரோதன் கோபம் வச்யமானானே -ஜாபா மானய –சாகரம் சோக்ஷயிஷ்யாமி -சாராம்ச -ஆசீர் விஷம் –
ஒரு வில்லால் -ஓங்கு முந்நீர் அடைத்து –
ரகாரம் கேட்டே பயந்து மாரீசன் பேசினான் –
அக்னியை வெல்லும் பானம் -விபீஷணன் ராவணன் இடம் -வாயு தாண்டி போகும் -அக்னியை பெற்ற வாயுவையும் வெல்லும் என்றானே
ராமோ விராம -ஒய்வு -அம்பும் கையுமாக வந்தால் வரமும் வரம் கொடுத்தவர் வரம் வாங்கினவர் மூவரும் -ஒய்வு கொள்ளும் படியாகும்
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி -அவன் தவத்தை முற்றும் செற்றாய் –
வடிவாய் மழு ஏந்தி உலகம் ஆண்டு -திருக் கோவலூர் ஆயன் –
சார்ங்கம் உதைத்த சர மழை-சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்றானே –
பொன்னார் சார்ங்கம்கி உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
கிள்ளிக் களைந்தான் –
கல்விச்சிலையால் -தாடகை -அழித்து–ராமன் சஸ்திர வ்ருத்தர் கண்ணன் கீதையில்
சாரங்க பாணி தளர் நடை நடவாய் -அலங்காரம் -ஆபரணம் ஆயுதம் -சவுரி ராஜர் -உத்சவர் நெற்றியில் வடு –
அரையர் தாளம் எறிந்த வ்ருத்தாந்தம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றும் யாரும் இல்லை –
ஏழு வேலையும் -உலகங்கள் எழும் ஏழு குன்றமும் புரவியும் சப்த கன்னிகைகள் ரிஷிகள் நடுங்க
ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கு -வில் கை வீரன் பெருமாள் -நாம்
வெறும் கை வீரன் -கோயம் குண -இன்று போய் நாளை வா –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் —தர்மஞ்ஞன் -தர்மம் அறியா குறும்பன் -அவன்
மனத்துக்கு இனியான் பெண்ணின் வருத்தம் அறியா பெருமான் -கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
சத்ருக்களும் கொண்டாடும் மஹிமை -ராமோ விக்ரகவான் தர்மம் -சர்வ பூத தயை -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –
—————————————————————————————————————-
பக்கத் கௌரவ பட்டண ப்ரப்ருத்ய ப்ராஸ்த ப்ரலம்பாதய
தாலங்கஸ்ய தாதாவிதா விஹ்ருதயஸ் தன்வந்து பத்ராணி ந
ஷீரம் சர்க்கர ஏவ யாபிர ப்ருதக் பூதா ப்ரபூதைர்க் குணை
ஆ கௌமார கமஸ் வதந்த ஜெகதே க்ருஷ்ணஸ்ய தா கேலய–9-
எந்த பலராமனுடைய லீலைகளால் சர்க்கரை கலந்த பால் போலே இளம் பருவம் முதல் பிரியாமல் கலந்த
கண்ணனுடைய அந்த லீலைகள் மிக அதிகமான குணங்களால் உலகுக்கு சுவையாக இருந்ததோ
அந்த கௌரவர்களின் நகரம் முதலியவற்றை கவிழ்தல்-ப்ரலம்பன் முதலியவர்களை ஒழித்தல் –
இன்னும் இது போன்ற பல ராமனுடைய லீலைகள் நமக்கு நன்மைகளை செய்ய வேண்டும் –
கலப்பை ஆயுதம் -பனை மரம் கொடி
பக்கத் கௌரவ பட்டண ப்ரப்ருத்ய -இந்திர பிரஸ்தம் தொடக்கமான பட்டணங்கள் -ஆச்சார்யம் படும் படி -பக்கத்
யமுனை ஆற்றை இழுத்து போக்கை மாற்றி -கலப்பையால் பட்டணம் யமுனையில் தள்ளி
ப்ராஸ்த ப்ரலம்பாதய-ப்ரலம்பன் போன்ற அசுரர்கள் கொல்லப் பட்டவர் –
தாலங்கஸ்ய -பனை மரம் தேர் கொடி
தாதாவிதா விஹ்ருதயஸ் -விளையாட்டுகள்
தன்வந்து பத்ராணி ந -மங்களங்கள் செய்யட்டும்
ஷீரம் சர்க்கர ஏவ -பாலும் சக்கரையும் போலே சேஷ்டிதங்கள் கொண்டவர்கள் அன்றோ
யாபிர ப்ருதக் பூதா-விட்டுப் பிரியாமல் -ஒன்றாகவே செய்யப் பட்டவை
ப்ரபூதைர்க் குணை-கல்யாண குணங்கள்
ஆ கௌமார -சைஸவம் பால்யம் -6 வயசில் வரை 9 வயசு வரை கௌமாரம் –
ஆ தொடக்கமான -ஆ பாத சூடம் போலே ஆ மௌலி பாதாந்தம் போலே
கமஸ் வதந்த ஜெகதே க்ருஷ்ணஸ்ய தா கேலய-லீலைகள் -உலகம் ரசிக்கும் –
அஸ்வதந்த நன்கு ரஸ்யமாக இருக்கின்றன –
ஷேம கிருஷி பலன் -பக்தி உழவன் –அஹம் அன்னம் –அஹம் அந்நாத-நெஞ்சம் பெரும் செய்யுள் –
பேரமர் காதல் விளைவித்த –
ஈர நெல் வித்து விளைத்து -கண்ணன் கடியனே –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -கலப்பை கொண்டே -கிருஷிகன் –
ஹிரண்ய கசிபு தம்பி – கால நேமி பிள்ளைகள் -ஆறு பேர் -உக்ரசேனர் பிள்ளை கம்சன் –
கால நேமியே கம்சனாக பிறந்தான் -சாபம்-மக்கள் அருவரை கல்லிடை மோத-
சூட்டு நன் மாலைகள் -அவதார பிரயஜன ஸூ ஷ்மம் ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
கர்ஷணம் இழுத்தல் – சங்கர்ஷணன் -சம்ஹாரம் –
யோக மாயா -தங்கை -நவமி இவள் கண்ணன் அஷ்டமியில் –
செற்ற கொற்றத் தொழிலான்- கங்கையிலும் யமுனையில் நகரங்களை இழுத்து தள்ளிய வ்ருத்தாந்தம் உண்டே
ஒற்றை குழையும் நாஞ்சிலும் -ஒரு பால் தோன்ற தான் தோன்றி
ராஜாக்கள் -ஒரு காதில் தனித்த தோடு குண்டலம் -இடுப்பில் சாதிக் கொத்து இருக்குமே -மேல் காத்து குத்தி –
சேஷ சேஷிகள் உடைய சக்கரை பால் போலே பிரியாத -இருவர்
லக்ஷ்மணன் –ஆதி சேஷனே -பல ராமன் -ஆதி சேஷன் அம்சத்துடன் அவதரித்தவர்
சேஷி ராமானுஜன் -கண்ணன் -சேஷ ராமானுஜர் உடையவர் -சங்கராதி-எதிராஜ விம்சதியில் தேசிகன் காட்டி
சங்கரர் கௌரவம் அடக்கி -யாதவ பிரகாசர் மதம் -யது குலம் பிரகாசம் கண்ணன் –
பர கத அதிசய –ஆதேநாய இச்சையா -சேஷத்வம் –
பால் பிரதானம் -கண்ணன் -சேஷி ராமானுஜன் -அப்ருதக் சித்த விசேஷணம் நாம் அனைவரும் சார்ந்தே
விட்டுப் பிரியாமல் -அவனை தாரகன் –
பிரகாரம் -வேற சரீரம் வேற -உடல் மீசை உயிர் என கறந்து எங்கும் பரந்துளன்
உடல் தேகம் -பெருக்கும்–சரீரம் -இளைக்கும் தாது அர்த்தம் -சீரியதே இது சரீரம் தாது
யஸ்ய சேதனஸ்ய -யது த்ரவ்யம் எப்போதும் தாங்கப் பட்டு தன் பொருட்டு நியமிக்கப் பட்டு
ஸர்வதா நியாந்தா தாராயிதும் அதன் பொருட்டேயாக இருப்பதே
இதே போலே ஆத்மாக்கள் ஈஸ்வரனுக்கு சரீரம் என்றவாறு -பிரகாரம் இன்றியமையாமல் சார்ந்து இருப்பது –
மணம் புஷபம் /மாணிக்கம் ஒளி போலே
பலராமன் – கூட போகாத நாள் தான் காளியன் உச்சியில் நட்டம் ஆடி
அகாசுர வதம் அன்றும் -கூட போக வில்லை -மலைப்பாம்பு -வடிவம் -பிள்ளைகள் அண்ணாந்து வாய்க்குள் போக –
திருமேனி வளர்ந்து வெளியில் வர –
தன்னேராயிரம் பிள்ளைகளும் சுற்றி உட்க்கார்ந்து -மஸ்ரன கவளம் -தத்யோன்னம் -ப்ரஹ்மாவுக்கு பாடம் புகட்டிய வ்ருத்தாந்தம் –
வெள்ளி மழை போலே முன்னே போக -பைய ஊர்வது போலே கரு மலை குட்டன் பெயர்ந்து நடப்பான் -கண்ணன்
நம்பி மூத்த பிரான் -சம்ப்ரதாயம் -செம் பொன் கழல் அடி செல்வன் பல தேவன் –
——————————————————————————————————————
நாதா யைவ நம பதம் பவது நஸ் சித்ரைஸ் சரித்திர க்ரமை
பூயோ பிர்புவ நான்ய மூநி குஹனா கோபாய கோபாயதே
காளிந்தீ ரசிகாய காளிய பணி ஸ்பார ஸ்படா வாடிகா
ரங்கோத் சங்க வி சங்க ஸங்க்ரம துரா பர்யாய சர்யா யதே–10-
ஆச்சர்யமான சேஷ்டிதங்களால் இந்த உலகங்களை ரக்ஷிப்பவனும் -யமுனை நதியில் சுவை உள்ளவனும் –
காளியன் என்றும் சர்ப்பத்தின் அகன்ற படம் ஆகிய நாட்டிய மண்டபத்தின் நடுவில் அச்சம் இன்றி
நடனம் புரிதல் ஆகிய பெரும் செயல் போன்ற செயல்களை செய்பவனும்
போலியான இடைய வேஷம் கொண்ட நாதனான கண்ணனுக்கே நமது நம என்னும் சொல் ஆகக் கடவது –
நாதா யைவ நம பதம் பவது நஸ்-
-நாதன் ரக்ஷகன் -அவன் ஒருவனுக்கே நமஸ்காரம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி
சித்ரைஸ் சரித்திர க்ரமை -விளையாட்டு வரிசை -பூதனை நிரசனம் தொடக்கமாக கேசி ஹந்த ஈறாக பல சேஷ்டிதங்கள் அன்றோ
பூயோ பிர்புவ நான்ய -மூநி குஹனா கோபாய கோபாயதே-கோக்களை ரக்ஷிக்கும் -மூ உலகையும் ரக்ஷிக்கும் -கோப வேஷம் கொண்டு
-ஷத்ரியனாக பிறந்து இடைப்பிள்ளையாகி -ஏறிட்டுக் கொண்டு -இரண்டு தாய் தந்தைகள் குலம் -மஹிஷிகள் -வார்த்தை உட்பட இரண்டு
மாலாய் பிறந்த -ஏலாப் பொய்கள் சொல்லுமவன் -பச்சைப் பசும் பொய் -கூட்டு வெளிப்படும் -நேர் எதிர் பெருமாள் –
காளிந்தீ ரசிகாய -யமுனை ஆற்றங்கரையில் விளையாடிய
காளிய பணி ஸ்பார ஸ்படா வாடிகா -காளியன் தலை -விரிய -வீதிகளில்
ரங்கோத் சங்க வி சங்க ஸங்க்ரம துரா-துரந்தரன் தலைவன் -நாட்டியம் கற்பார் களுக்கு முன்னோடி -அச்சம் அற்றவராக விசங்க நர்த்தனம்
பர்யாய சர்யா யதே-ஒப்பான நடத்தைகள் -பெரும் கூத்தாடி ஜல க்ரீடை ராசிக் க்ரீடை குரவை கூத்து –
மாயக் கூத்தன் -குடமாடு கூத்து -ஆரார் என்று ஆடுமது கண்டு –
கருடன் வரமுடியாத சாபம் ஸுபரி கொடுக்க காளியன் பொய்கையில் இருக்க -அத்தை ஒழிக்க வில்லை கடலை நோக்கி துரத்தி விட்டு
சூர்யா தனயன் -யமுனை காளிந்தி யமுனை சூரியன் தங்கை -கிருஷ்ணன் ஆனந்தம் கொடுப்பவன் பூமிக்கு –
பூத் தடம் கடம்பு ஏறி காளியன் தலையில் நர்த்தனம் ஆடி –
அம்ருத கலசம் பட்டு பூத்தது திருவடி ஸ் பர்சத்தால் பூத்தது
கோகுலம் போர்க்களம் ஆகும் படி ஆனதே –
காளிங்கன் பண்ணும் பாக்யம் என்னே -திருவடி ஸ்பர்சம் -எண்ணிக்கை நாட்டியம் –
கிருஷ்ணாஸ்ராயா க்ருஷ்ண பலாயா க்ருஷ்ண நாதாஸ்ய -சர்வம் கிருஷ்ண மயம் ஜகத் -அவனே நாதன்
-நம அவனுக்கே -ஏவ -நாராயணனே நமக்கே பறை தருவான் போலே -மாம் ஏகம் சரணம் வ்ரஜ –
நாகணை மீசை நம்பிரான் சரணே சரண் -உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -உனக்கே நாம் ஆட் செய்வோம் –
அம்பரமே தன்னாரே சோறே -கண்ணனைக் கொடுத்தால் ஏவ காரம் உம்மை யாகுமே -உண்ணும் சோறு -வா ஸூ தேவம் சர்வம் அன்றோ
அவதார ரகஸ்யம் -ஜென்ம கர்ம மே திவ்யம் -பிறந்தவாறும் வளர்ந்த வாறும்–
—————————————————————————————-
பாவிந்யா தசயா பவன் நிஹ பவ த்வம்சாய ந கல்பதாம்
கல்கீ விஷ்ணோ யசஸ் ஸூ தா கலி கதா காலுஷ்ய கூலங்கஷ
நிசேஷ ஷத கண்டகே ஷிதி தலே தாரா ஐலவ் கைர்த்ருத்வம்
தர்மம் கார்த்தயுகம் பிரரோஹயதி யன் நிஸ்த்ரிம்ச தராதர –11-
எவனுடைய கத்தி ஆகும் மேகம் -துஷ்டர்களாகிய முட்களை மீதி இல்லாமல் ஒழிக்க பூமியில்
தன் முனை ஆகிய நீர் வெள்ளத்தால் க்ருத யுகத்தின் தர்மத்தை நிச்சயமாக முளைக்கச் செய்கின்றவோ –
சம்பளம் என்னும் ஊரில் அந்த விஷ்ணு யஸஸ் என்னும் அந்தணனுக்கு பிள்ளையாய் அவதரிக்கப் போகின்றவனும்
கலி யுகத்தினால் வரும் குழப்பத்தை வெண் குதிரையினில் மேல் ஏறி முழுவதும் அழிக்கப் போகிறவனுமான
கல்கி பகவான் வர போகின்ற நிலைமையோடு இவ்வுலகில் அர்ச்சையாய் நிற்பவனும்
நம்முடைய சம்சார பந்தங்களை அழிப்பதற்கு முற்படட்டும்
பாவிந்யா-அனந்தர பாவி
தசயா-அவதார தசை
பவன் நிஹ -இந்த ஸ்ரீ ரங்கத்தில் அர்ச்சா மூர்த்தியாக உள்ளவனே –
போன யுகம் கல்கி கொண்டே விக்கிரகம்
மிதிலை செல்வி -தன் சரிதை கேட்டான் -தாய் தந்தை கூப்பிட்டு வர சொல்லி –
11000 வருஷம் அப்புறம் தன்னுடைச் சோதி போவதையும் சொல்லி –
அது போலே ஸ்லோகமும் விக்கிரகமும் முன்னே இங்கே
பவ த்வம்சாய ந கல்பதாம்
கல்கீ விஷ்ணோ யசஸ் ஸூ தா -விஷ்ணோ யசஸ்-பிள்ளை
கலி கதா காலுஷ்ய கூலங்கஷ-கலக்கமாக உள்ள நிகழ்வுகள் அக்கிரமத்தை -கரை புரண்டு ஓடும் -கல்கம் குதிரை –
நிசேஷ ஷத கண்டகே ஷிதி தலே-ஒன்றும் மிச்சம் இல்லாமல் முள்ளை நாசம் ஆக்கி
தாரா ஐலவ் கைர்த்ருத்வம் -ஜல பிரவாஹத்தால் –
தர்மம் கார்த்தயுகம் பிரரோஹயதி -கிருத யுக வர்ணாஸ்ரம தர்மத்தை உறுதியாக வ்ருத்தி பண்ணும் வாள் ரக்ஷிக்கட்டும்
யன் நிஸ்த்ரிம்ச தராதர-இரண்டும் கத்தியையே சொல்லும்
கத்தி வைத்து தீயவரை போக்கி -கிருதயுகம் உண்டாக்கி -இரண்டுக்கும் ஒரே திவ்ய ஆயுதம்
மலையை தன்னுள் தாங்கிய மேகம் போலே தாராதக –
சம்பள கிராமம் -விஷ்ணு யசஸ் ப்ராஹ்மணர் திருக் குமாரராக அவதாரம் -கல்கி -வெள்ளை குதிரை
கல்கம்-பெயரில் -வாஹனம் நீண்ட வாள் கையில் கொண்டு -கடும் பரி மேல் கல்கியை நான் கண்டு கொண்டேன்
தீயவர்களை கழித்து கலி யுகம் கிருத யுகம் பற்றி
1000 சதுர் யுகம் முடிந்தால்–ப்ரஹ்மாவின் பகல் காலம் தான் பிரளயம் வரும் -மூன்று லோகங்கள் அழியும்
ப்ரஹ்மா ஆயுள் காலம் முடிந்தால் தான் 14 லோகங்கள்
த்வீத பரார்த்தே -நாம் இருக்கும் -இரண்டாவது ஐம்பதில் -உள்ளோம் -ஸ்வேதா வராஹ கல்பம் –
விவஸ்வான் மனு 77 மனுக்கள் ஒரு கல்பத்தில் –
71 சதுர் யுகம் ஒரு மனுவின் காலம் -28 சதுர் யுகத்தில் உள்ளோம் -அப்புறம் வேறு மனு வருவார்
ஒவ் ஒரு சதுர் யுகத்திலும் தசாவதாரங்கள் உண்டே -5117 வருஷம் தான் ஆகி உள்ளது
இந்த கலி யுகத்தில் -கல்கியும் ஆனான் தன்னை –
———————————————————————————————
இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா –12-
தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப்பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்
இச்சா மீன விஹார கச்சப-ஆசைப்பட்டு கொண்ட மத்ஸ்ய மூர்த்தி -விளையாட்டாக கொண்ட விஹாரம் கூர்மம் –
மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே -பூமா தேவி கிடந்த பெரும் கேழலார் –
நரத்வம் ஹரி -ஆளரி-தலை பிரதானம் என்பதால் ஹரே என்கிறார் -யாதிருச்சாயாக தோன்றினார் –
அங்கே அவன் வீயத் தோன்றிய சிங்க பிரான்
விளிச் சொற்கள் இவை எல்லாம் -ஹே ஹே -என்று கூப்பிட்டு புண்ய கடைகள் நிறைந்தது என்றவாறு
திரு நாம சங்கீர்த்தனம் -முளைக் கதிரை போலே
ரஷா வாமன -ரக்ஷிப்பதற்காக ஸ்ரீ வாமனன்
ரோஷ ராம -ரோஷம் உருவாக்க கொண்ட
கருணா காகுத்ஸ்த-கருணையே -ராம சொல்லி -வாசி புரியாமல் இருக்க காகுத்ஸதா –
ஹேலா ஹலின் -ஹலம் கலப்பை
க்ரீடா வல்லவ -கோபி ஜன வல்லபன் -விளையாட்டுக்காக நாதன்
கல்க வாஹன தசா -கல்கிந்நிதி ப்ரத்யஹம் -கல்கம் வாகனமாக கொண்ட கல்கி தினப்படி
ஜல்பந்த புருஷா-ஜல்பம் உளறிக் கொண்டே சந்நிபதரைப் போலே சொல்ல சொல்ல
புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா-
புண்யங்கள் கிடைக்கும் -மேலே மேலே கிட்டும் -புவனங்களை புனிதம் ஆக்கி
அலையாக வரும் புண்ணியங்கள் வியாபார பொருள் -விற்கும் கடையாக திரு நாமம் சொல்பவர்கள் –
இச்சா மீனா -வேதம் திரும்பி மீட்டி -வேதம் கற்பதும் அதன் படி நடப்பதும் விலை போலே ஒவ் ஒன்றுக்கும்
பாகவத அபசாரம் செய்யாமல் -திருவடி தீண்ட ஆசைப் பட்டு
விலக்காமை ஒன்றே வேண்டும் அத்வேஷம் -கருணை மழை பொழிய சேர்த்து கொள்ள வேணும்
விளையாட்டு நினைத்து கால ஷேபம் செய்வதே வேண்டும்
வெள்ளை உருண்டை கங்கையில் மீனுக்கு சமர்ப்பித்து
ஸ்ரீ கூர்மம் –
முசுதேவ கோரிக் கிழங்கு
நரசிம்மம் பானகம்
வாமனன் -கேளா செவி அல்ல –
அன்னமும் மீன் உருவும் ஆளரியும் -பெரியாழ்வார்
மூ உருவில் ராமனாய் பெரியாழ்வார் 4 பத்து
மீனாய் –கல்கியும் -இன்னம் கார் வண்ணனே நம்மாழ்வார்
அன்னமும் -2-7 திருமங்கை
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும்
குப்ஜா குள்ள மா மரமாகவும்
கேழலும் அரியும் 5-4-
நாகை -9-2-அன்னமும் –கேழலும் மீனுமாகிய ஆதி
————————————————————————————————-
வித்யோதன்வதி வேங்கடேஸ்வர கவவ் ஜாதம் ஜகன் மங்களம்
தேவே ஸஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம் விவஷேத ய
வக்த்ரே தஸ்ய சரஸ்வதீ பஹு முகீ பக்தி பரா மனசே
ஸூ த்தி காபி தநவ் திஸாஸூ தச ஸூ க்யாதி ஸூ பா ஜ்ரும்பதே -13-
கலைகள் உறையும் கடலான வேங்கடேசன் என்னும் கவியிடத்தில் தோன்றிய உலகுக்கு நன்மை பயக்கும்
தேவாதி தேவனான திரு அரங்கனுடைய பத்து அவதாரங்களைப் பற்றின இந்த ஸ்தோத்ரத்தை
எவன் சொல்ல விரும்புகிறானோ அவனுடைய வாயில் சரஸ்வதி தேவி பலவகையாக ஓங்கி நிற்பாள் –
மனசில் உயர்ந்த பக்தி மலரும் -சரீரத்தில் அத்புதமான தூய்மை வளரும்
இப்படி முக்கரணங்களுக்கும் சிறப்பு வருவது மட்டும் இல்லாமல்
பத்து திக்குகளிலும் சிறந்த புகழ் வளரும்
வித்யோதன்வதி வேங்கடேஸ்வர கவவ்-வித்யை -கல்வி கடலாக -ஸ்ரீ வேங்கட நாதன் –
ஜாதம் ஜகன் மங்களம் -உண்டான -பண்ண வில்லை -கர்த்ருத்வ புத்தி இல்லை -ஷேமங்கரமாக
தேவே ஸஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம்-ஸ்ரீ ரெங்க நாதன் அருளிச் செய்த தசாவதாரங்கள் பற்றிய ஸ்தோத்ரம்
விவஷேத ய -சொல்ல விரும்பினால் போதும் -பாடவும் மனனனம் பண்ணவும்
வக்த்ரே தஸ்ய சரஸ்வதீ பஹு முகீ -அவர்கள் உடைய வாயில் வாள் வைபவம் –கங்கா -பிரவாஹம் போலே
பக்தி பரா மனசே -மனசில் பக்தி குடி கொண்டு இருக்கும்
ஸூ த்தி காபி தநவ் -காய ஸூ த்தி வரும் -முக்கரணங்களும் சொல்லி –
திஸாஸூ தச -ஸூ க்யாதி ஸூ பா ஜ்ரும்பதே-பத்து திக்குகளிலும் -கொண்டாடப்படும் யசஸ் பெறுகிறான்
திருவவதாரம் பண்ணவே பக்தி வளர்க்கவும் வாயினால் பாடி தூ மலர் தூவி தொழவும்
முக்கிய பிரயோஜனம் என்றவாறு
—————————————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார்அருளிச் செய்த-ஸ்ரீ பராங்குச நக்ஷத்ர மாலை –
August 12, 2016ஸ்ரீ மா முனிகள் -திருக்குமாரர் -ஸ்ரீ ராமானுஜர் -அவர் திருக்குமாரர் –ஸ்ரீ ஜீயர் நாயனார் -அருளிச் செய்த பராங்குச நக்ஷத்ர மாலை
27 ஸ்லோகங்கள்
முதல் ஸ்லோகம் அஸ்வினி -8 -பாதத்தில் –இப்படியே அடுத்த நக்ஷத்ரம் 9
அஸ்வினி -குதிரை-வடிவம் என்பதால் குதிரைகளை -புலன்கள் -த்ருஷ்டாந்தம் காட்டி -அடக்கி –
விஷயாந்தர வீதி மாற்றி -எம்பெருமான் அனுபவ வீதியிலே ஓடப் பண்ணி –
ஞான முத்திரையால்-சம்சாரிகளுக்கு – நின் கண் வேட்க்கை எழுவிப்பதே நம்மாழ்வார் க்ருதவ்யம்
————————
இரண்டாம் ஸ்லோகம் –
முராரிநரகாசுரன் பிரதான முராரிபு -பத சத்தை -மலர்ந்த மகிழம் பூ தரித்த ஆழ்வார் –பரணி –
சேமம் குருகையோ செய்ய திருப் பாற் கடலோ -நாமம் பராங்குசமோ நாரணமோ –திருத்த துழாய் மாலையோ –
வகுளாபரண மாலையோ -தோள்கள் இரண்டோ நான்கோ –
திருவடிகளில் பிராவண்யம் -பகவத் பக்தியே உருவாக கொண்டு -ச ஜெயந்தி -மஹிமா நாதா -முராரிபு பத சத்தை மஹிமை -ஆழ்வார் வெல்லட்டும் –
துயர் அடி தொழுது எழு -என் மனனே –செம்மா பாத பற்பு தலை சேர்த்து ஒல்லை -பத்து தோறும் திருவடி பிரஸ்தாபம் உண்டே –
தன் சரண் தந்திலன் தான் அது தந்து -ராமானுஜர்-பரணம் -தாங்குதல்-அர்த்தம் -இங்கே -ஸ்ரீ பாதுகையே நம்மாழ்வார் -பெரியவர் அன்றோ –
—————————————————————————–
நந்த அனந்த அங்கிரி -நளின யுக்மே வகுள-லோக ஆர்த்தீ கபளீ- கபள னானாம் கர்த்தா -திராவிட நிகமானாம் த்ருஷ்டா
திரு வாய் மொழி கால ஷேபம் கேட்டே ஆர்த்தியைத் தொலைப்போமே
லோக ஆர்த்தி கபள னானாம்-கார்த்திகை -நக்ஷத்ரம் இதில் –
ஆர்த்தி ஹரத்வம் -அவா அறச் சூழ்ந்தாயே -ஈர நெல் -விளைவித்து -கிருஷிகன் அன்றோ –
——————————————————————————————–
யதா உச்சைஸ் ஸரணிக்கி– ஏறுகின்ற மார்க்கம் -அர்ச்சிராதி மார்க்கம் பெற
ஸ் யாதேவ ஸ் யாமே பணித-ஆ ரோஹிணி அவ ரோஹிணி–இரண்டு தடவை -ஆழ்வார் திரு உள்ளம் மகிழ -வீப்ஸை
ஜனானாம் ஆரோஹிணீ -ஜனங்கள் என்ற வழி காட்டும் -நம்புவார் பத்தி வைகுந்தம் -அன்றோ திருவாய்மொழி
அவரோஹணம்-திரும்பி வருவதையும் வேதம் காட்டுமே -த்ரை குண்யா விஷயா வேதா -அபி ந வேதோ -த்வயம் -வேதம் இரண்டுமே சொல்லும்
ஆரணத்தின் சிரம் மீது உறை அந்தமிழால் பாரணம் செய்த சடகோபன் அன்றோ –
மேகம் பெருகின சமுத்ராம்பு -ஆழ்வார் வாயான வாறே -பொற் குடம் போலே திருவாய் மொழி – -மட்குடம் போலே வேதம்
———————————————————————————————————–
திலகதமாக –ச்ருதவ் அஸீர்ஷ சமுத்தித காசித் அபி -ரிக் -கர்மா காண்டங்கள் ப்ரஹ்மம் பேசாதே -திருவாய் மொழி ஆதி ப்ரஹ்மாவை தெளிவாக சொல்லிற்றே-
முழுவதும் -திருமால் அவன் கவி அன்றோ -மது சூத பிரான் அடி மேல் -இசை மாலைகள் –
மிருக சீர்ஷம் -த்ரி ஜெகதாம் ரிக் -அஸீர்ஷ சமுத்திதா
——————————————————————————————————
பித்ராபிக்கி சகல வித அபி பந்து வர்க்க -சரஸிஜ வாசியான -சஹாயான வாஸிம்-
திருமாலே எல்லா உறவுமான -சேலே ய் கண்ணியரும் இத்யாதி ஆவிஸிக்கு-வகுள –கடாக்ஷம் –
கொண்ட பெண்டிர் –மக்கள் மற்றும் -9-1-திருமங்கை தாயே தந்தை -1-9- உறவு வேண்டாம் அழுதது
பண்டை உறவான பரனை -புளிங்குடிக்கே கண்டு நமக்கு எல்லா உறவின் காரியமும் -செய்ய ஆசைப் பட்ட ஆழ்வார்
கருணா ரசம் -வாசக ஆர்த்தரா -விழுந்து கொண்டே இருந்தால் நமக்கும் வாய்க்கும் –
ஆர்த்தரா மே-நனைந்த -ஸ்ரீ ராமானுஜர் காரேய் கருணை ராமானுஜர் –
——————————————————————————————————————-
யா அ சவ் வசுமதி வலையே பூமியில் பிறந்து
ஞானப் பார்வை -தரிசன சமானாகாரம் -பிரஞ்ஞா த்ருஷா உந்மிஷிதா -அநீதம் பரஞ்சோதி -எழுவதோர் சோதி வெள்ளம்
இதம் இத்தந்த ரஹிதம் –
சகாரா வகுளாபிராமம் -ஆஸ்ரயாமி-
எங்கனேயோ அன்னைமீர்காள் பாசுரம் அடியில் அருளிச் செய்த ஸ்லோகம்
கருணா சாலி -கருணைக்கு இருப்பிடம் இல்லை -கருணையே ஆழ்வார் என்கிறார் இங்கே
காட்டக் கண்டார் கண்டதை -அருளிச் செய்தார் நமக்கும் -கண்டேன் கமல மலர்ப் பாதம் -காண்டலுமே விண்டே ஒழிந்தன –
நமக்கு காட்டினார் -பாபங்கள் தொலைய பெற்றோம்
தாம் ஆஸ்ரயாமி யாசவ் புனர் வஸு வசுமதி-ஏழாவது திரு நக்ஷத்ரம் –
————————————————————————————————————-
ரசித்தவதி ரமாயா–வகுள தரர் முனீந்திரர் -புஷ்யம் -புஷ்யது
பிரணய ரசம் -ரமா நாயகஸ்ய அங்க்ரி-புஷ்கல –புனர்வசு புஷ்யம்-ஆஸ்லேஷம் – -ராம பாரத லஷ்மணன் சத்ருக்ந –
புஷ்யது அங்க்ரி-பிராணய -ரஸ அமுதம் -சுதா -கடலில் மூழ்கி -அவகாஹித்து -ஸ்வயம் சஞ்சாரம் –
ஸ்ரோதஸ்-கலி சந்தானம் போக்க வல்ல கார் முகில் -நம்மாழ்வார் -தாபம் போக்கி அருளி -கலி வெக்காயம் போகும் படி அம்புவாகே-
விஞ்ச நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் -அடியார்க்கு இன்ப மாரி-
—————————————————————————————————-
சடாரி ஹஸ்த முத்ரிகா -ஒன்பதாவது ஸ்லோகம் -16 எழுத்து ஒரு பாதத்தில் இதில் –
உபதேச ஞான முத்திரை தூளிகை -வரைவது போலே-சாதகப் பறவை போலே –
தூளிகா -நமது ஜனஸ்ய சித்த புத்தி சித்தம் ஆகிற துணியில் அடியார் உள்ளம் -பக்தி சித்திரம் வரைய கை வைத்து –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –
பவாகி -நரேந்திரன் -மந்த்ர யந்த்ரநா -விஷம் போக்கும் கருட முத்திரை போலே
சம்சார பாம்பு -வீர்ய பஞ்சனே-பொலிக பொலிக -பூ மக்கள் கோன் -தொண்டர் மலிவு தன்னை –திருத்திய மாறன் சொல் மருந்தாக —
பிரபன்ன லோகம் -சரணாகதி ஆம்பல் மலர் விகசிக்க கைரவம்-பிரசன்ன சந்திரன் -சாரு சந்த்ரிகா -உரு பெரும் செல்வமும் இத்யாதி —
இப்படிப் பட்ட முத்திரை -வேதார்த்தம் சாரம் தேர்ந்து எடுத்து அருளி -பவாகி வீர்ய பஞ்சனே–சர்ப்ப நக்ஷத்ரம் அஹி-
————————————————————————————————————————
மனா மனஸ் ஸ்படிக தர்ப்பண
திரு உள்ளம் பலகை பிரதி பலிக்கும் -பிரதி பலது பர ப்ரஹ்மம் -காட்டா நிற்கும் பிரதித்த போத முத்ரா
அவமாக் கர -மகம் நக்ஷத்ரம் சொல்லப் படுகிறது
சதாம் ஆத்மாநம் மகா -அகம் குற்றம் பாபம் போக்கும்
கைக்கு அடையாளம் ஞான முத்திரை -காஞ்சி புரத்தில் தமது திரு உள்ளத்துக்கு -உபதேசம் -தொழுது எழு என் மனனே –
தம் திரு உள்ளத்தில் சேவிக்கக் காட்டி அருளுகிறார் நமக்கு -பாவ பய சம்சாரம் பயம் அபி தப்த கொதிக்கும்
சடாரிபு அவமாக கர -அவம் பாபங்கள் போக்கட்டும்
என் நெஞ்சத்துக்குள் இருந்தமை கண்ணீர் -என் நெஞ்சினால் நோக்கிக் கண்ணீர் –
————————————————————————————————————
பூரம் -பூர்வ பல்குனி நக்ஷத்ரம்
ரமயத்த-
பாதாராவிந்தம்
பல்கு நாகாசாரா -வெகு காலம் செய்யப் பட்ட பாபங்கள்
அதிஉன்னத ஆச்சார்ய ஜனங்கள் -அவனத பத
அணுகாம்பா கருணை அமிர்தம்
சட சத்ரு பஹு வித க்ருத பூர்வ பல்கு நாகாசார இழி தொழில் கள்
சிந்தாகுலம் மம ஹிருதயம்
நம்மாழ்வார் திருவடி சம்பந்தம் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
———————————————————————————————————–
உத்தர பல்குனி நக்ஷத்ரம் உத்தரம் –
மக்நம் மானச –
ஏதேன் உத்தர பல்குனி
சம்சாரம் உத்தரம் பண்ண தாண்ட -ஆழ்வார் படகோட்டி கருணை படகு -சம்சார கடல் தாண்ட
தயா ந்வகா-சித்தா -சந்தாராக கிராமிண்ய் தாண்டுவிக்கும் தலைவர் –
பல்கு -நீரஸா-ஆல்பங்கள் பரிகிரிஷ்ட நீரஸா சுவை அற்ற பலவகைப் பட்ட -விஷயாந்தரங்கள் அலை –
துக்கம் ஆவர்த்த துரந்த பாவம் கரை தெரியாமல் -சம்சார கடல் -சுழல்-மனசே சோகப்படாதே-பிறவிக் கடலுள் நின்று துவங்கும் -மனஸ்
—————————————————————————————————————–
13 ஸ்லோகம் -20 எழுத்துக்கள் பாதம் -ஹஸ்தம் நக்ஷத்ரம் –
ரத்ன தீபிகா யமான ஹஸ்த முத்திரை
அஹம் நாதவான் பராங்குசனை பெற்று
உபநிஷத் குஹைக்கு உள்ளே தூங்கும் சிங்ஹம் காட்டும்
த்ரியீ க்ரீந்த்ர அந்தராள காட ரூடா -ப்ரஹ்மம் ஸூசநேந –
திராவிட ஆகம உப கீதை மூல சீதள சீதை தீர்த்தங்கள் ஆயிரம் அமுத தண்ணீர் வார்த்ததால்
உறங்கா புளிய மரம் திவ்ய -குளிர்ந்த தீர்த்தம் விட்டதால்
வீத நித்ர பத்ர -தீந்த்ரிணீ சமீப -ஸ்ரீ நாதன் நம்மை கை விட மாட்டார் –
——————————————————————————————————————
14 ஸ்லோகம் -நடு நக்ஷத்ரம் சித்திரை -21 எழுத்துக்கள் ஒவ் ஒரு பாதத்தில்
க்ஷணம் நேர பார்வையால் ரக்ஷிப்பார்-
அஷ்ட பிராஸம் -பின்ன பின்னமாக எட்டு பகுதி –
இரட்டிப்பாக ஒரு சொல்
நத்யா நத்யா /காமே காமே /சந்தஸ் சந்தஸ் /ச்ரேயஸே /கைசராணாம் /
பாதாதி பாதாதி -சம்சாரம் கடலில் பதனம் விழுதல் -பா ரஷனே/வீக்ஷனேனா ஷனென கதாசம் /
சித்து அசித்து த்ரயாக -காக்க வல்ல அமேய பழுது ஆகாமல்-சங்கல்பம் உடைய
சந்த வேதம் சந்தஸ் தாத்பர்யம் சொல்ல வந்த திரண்ட பொருள் -கமலா அசமான சமானம் இல்லாமல் ஒப்பில்லா அப்பன்
மாசி தேஜோ ரூபம் க்ஷணம் அபி -பிரணதி நத்தியாகா வணக்கம் விட்டு விடாமல் -இருக்கும் ஆழ்வார்
ஸ்ரேயாஸ் வீ புகழ் படைத்த மதுர கவி ஆழ்வார் போல்வார் சங்கம் -சரியாக வணங்கப் படுபவராய் –
சக கைசார்ங்கள் மகிழம்பூ சரணம் கூட்டம் சரம் சரமாக கட்டி -மணமூட்டப் பட்ட பரிசய சுரபி -ஷடரிபு
க்ஷணம் பொழுது கடாக்ஷத்தால் சம்சாரம் கடலில் விழுவதால் இருந்து காக்கட்டும் -சித்த சித்ராயாக -சித்திரை
——————————————————————————————————————-
15 ஸ்லோகம் -20 எழுத்துக்கள் -பாதத்துக்கு -ஆழ்வார் உடைய -திவ்ய அவயவ வர்ணனை இது முதல் தொடங்கி-ஆழ்வார் உடைய –
த்யாஜ்ய தேகத்தில் அவனும் வ்யாமோஹம் கொண்டானே –
நமது விதி வகையே -வாட்டாற்றான் பனி வகையே -ஆழ்வார் விருப்பத்தையே அவன் தனது ஆஞ்ஜை யாகக் கொண்டானே
இதில் ஆழ்வார் திருவடி -அனுபவம்
ந ப்ரவர்த்தி -சடாரி பாத யோகோ -தாமரை தோற்கும் படி -திருவடி பிரபாவம் இல்லையே
அதீர்க்கம்-திருக் கண்கள் தாமரை -கூர த் ஆழ்வான் –
அப்ரேமதுக்கம் -க்ஷணம் -காலையில் மலர்ந்து மாலையில் மூடும்
ந சோர அந்தக்கரணம் -நேர்மை இல்லாத தாமரை -கடாக்ஷம் ஒன்றாலே மோக்ஷம் கொடுக்கும் -இப்படி ஐந்து குறைகள் –
அதே போலே இரண்டு விஷயம்
சன்னத-ஆர்த்தி -பஞ்ச நே ந -போக்கி -ஸூ அதிகாமி யோகி பிருந்தா சித்த –
மதுரகவி ஹ்ருத் பத்மத்தில் இருக்குமே -உள்ளத்தில் உள்ள சிகப்பு ராகம் காதல் -ஏற்றப்பட்டு
சடாரி பாத யோகோ யுகேன -எதற்கு தாமரை போட்டி –
ந ப்ரவர்த்தி -பிரபத்தி வாசனை ஆழ்வார் திருவடிகள் -தாமரைக்கு அந்த வாசனையே இல்லையே -ந அனுசாரி –
மகிழ் மாறன் தாள் இணையே -வன் சரண்
சரோஜம் -ஜலாசயம் விடாதே -நீரை விடாதே
தடம் தளம் -ஜடாசாயம் -ஜடம் தாமசம் -ஞான ஸூ ந்யம்-தொடர்பு இல்லையே ஆழ்வாருக்கு ஒப்புமை இல்லையே -கதம் சமம் –
ஸூ அதிகாமி ஸ்வாதி –
———————————————————————————————————————————
விசாகம் -நாதன் அவதரித்த நாள் -தீர்த்த வாரி திரு மேனி அனுபவம் பிரத்யக்ஷமாக அனுபவிக்கலாம்
சடஜித் சித்தாவனம் -கணுக் கால் அனுபவம் கல்பக மரம் போலே –
மணம் மூட்டும் -குஸுமம்-மலர் கணைகள் மன்மதன் கரும்பு -வில் -தேன் வண்டுகள் நாண்-
ஜீவா பரமாத்மா காதல் -ருசி மகத்தான் சேமுஷியா புத்தியால் தருணீ ஜங்கா -கணுக் கால்
-இளம் பெண்கள் கணுக் கால் பார்த்து ஓடார்கள் ஆழ்வாரை அனுபவித்த பின்பு
விஸ்தீர்ண சவி சாகாயா-ஓளி பரப்பி -சிந்தையில் நறு மணம் வீசி சிந்தா வனம் –
செக்கில் இட்டு வலிக்கும் ஐவர் -விஸ்தீரண ச விசாகயா -விசாகம் –
—————————————————————————————————————-
ஸ்லோகம் 17-
அனுஷம் அனுராதா -ஆஸ்லேஷம் அஹி சர்ப்பம் இருந்தால் போலே இதிலும் மித்ரா சப்தம் -அனுராதா நக்ஷத்ரத்துக்கு தேவதை
முழம் தாள் -நீர் குமிழி போலே -வட்ட வடிவால் அழகு
கன அவயவ லோலா தளதளத்து /சோபா அவதாத கீழ் நோக்கி -ஸ்ரோதாச நீர் வீழ்ச்சி –
ஜானு மித்ரா பாவம் ககுஸ்து -முழம் தாள் இருந்த வா காணீரே -போலே இங்கும் -அப்பன் கோயிலில் அவதரித்து -முழம் தாள்களாலே
தவழ்ந்து வந்தே -திருப் புளியமரத்தின் கீழ் -சந்த்ர கலை போலே -16 வருஷங்கள் –
———————————————————————————————————————-
திரு தொடைகள் -தூண் வாளைத் தண்டு – யானை துதிக்கை போலே -அடி பெருத்து நுனி சிறுத்து –
ரிபு ஊறு லஷ்ம்யாய-சமத்ருதம் மதி
ஹஸ்தி நாம் -காதலிகா-பரம காஷ்டாய் ஸீமணி-ஜ்யேஷ்டா -கண்ணை பறிப்பது
கேட்டை -ஜ்யேஷ்டா மான பொருள்
———————————————————————————-
வஸ்திரம் பீதக வாடை
விதர்க்க மூலமேவ -மூலம் -நக்ஷத்ரம்
மஞ்சரி மநோ ஹரமான -தேஜஸ் அருவி -விழுந்து -மார்பில் பட்டு தெறித்து -வர்ண முத்து மாலைகள் –
ஓடையாக ஓடுவதே வஸ்திரம் -தர்க்கம் பண்ண மூலமாக
கடி தடி படி -இடுப்பு என்னும் இடம் உள்ள வஸ்திரம் –
நுரையின் திரளோ-சென்றதாம் என் சிந்தனையே -ரத்ன மேகலா -மண்டலி விதர்க்க மூலம்
———————————————————————————————————
கொப்பூழ் -அழகு -சுழல் -நாபீ-நயன -குளம் மீன்கள் செவிக்கும் பக்தர்கள் கண்கள்
நயன சுபாக உத்திசந்தி-பிரவாதம் பரி பாஷா சார்த்த கத்வம் உண்மை நிலை
குளமாக இல்லை என்றால் கண் மீன்கள் விளையாட முடியாதே
குதூகலத்துடன் விளையாடுகின்றனவே
பரிபாஷாட-ஆஷாடம் -பூராடம் பூர்வ ஆஷாட நக்ஷத்ரம் -20 ஸ்லோகம் –
—————————————————————————————————————
வட பத்ர சோபா திரு உதரம் -ரேகா உத்தர -இடை ஆலிலை போலே தளிர்த்து -மூன்று மடிப்பு -த்ரி வளி-கழுத்திலும் இடையிலும் -உண்டே –
அதிக அபிலாஷா -ஆலிலைக்கு ஒப்புமா ஒப்பாதோ-யது உபமம்
ரோமம் -இடுப்புக்கு கீழே கேசம் மேலே -ரோமா வளியால் அழகான
இடை -மத்திய தேசம் -இடை விடாது சேவித்து கொண்டு இருப்போம் -திரு வயிற்று உத்தர பந்தம் -உத்தரத்துக்கும் இடுப்புக்கும் கீழே கட்டி
-தாமதத்தால் இல்லை பிரேமத்தால் காட்டினாள் –ஈடு பட்டு -பற்றினால்-சம்சார கட்டு விடுபடும்
அபிலாஷா டவ் கேதவா– ஆஷாட -உத்தராட நக்ஷத்ரம் –முன் ஸ்லோகம் பூர்வ ஆஷாடம் – இது உத்தர ஆஷாடம்
—————————————————————————————————————————-
சப்தேன ஸ்ரவணா -பச்சை மாணிக்கம் ஆபரணம் -வண்டுகள் வகையோ -சங்கை -ப்ருங்கா
ஸூ கந்திம் -வகுளா-ஸ்ரஜம் -தேனைக் குடிக்க வந்த வண்டுகள் ஒளி தேஜஸ் -இரண்டுக்கும் சாத்ருசம்-
உரசீ ஹாரஸ்தாத் ஹரின் -வேற்றுமை பெறாமல் ந விதூரி பவந்தி- உரலுக்கும் கண்ணனுக்கும் -அழுகை ஒன்றே வாசி -பனி மல்கும் தன்மையான் –
வண்டுகள் ரீங்காரம் சாம கானம் போலே –வண்டினம் -முரலும் சோலை –
22 சிரவணம் சப்தேனே ஸ்ரவணா ஸுகே ந -திருவோணம் நக்ஷத்ரம் –
—————————————————————————————————————————–
23 ஸ்லோகம் அவிட்டம் -திருக் கை முத்திரை -உபதேச ஞான சின் முத்திரை
சடஜின் முனே பாணி தலம்–அஞ்ஞார் -ஞானிகள் ஞான விசேஷ உக்தர் சர்வஞ்ஞன் நால்வரையும் திருத்துவார் –
பிரதித்த முத்ராம் -அநித்ரா-தூங்காத சரோருக -விகாஸமான தாமரை ஒத்த திருக் கை
காமாதி தோஷம் ஹரத்வ – -விவேகம் அற்றவர்களை புத்தி நிஷ்டராக ஸூ கடயிந்தி -இரண்டு கார்யங்கள் செய்யுமே –
புத நிஷ்டையாக –தநிஷ்டை -அவிட்டம் நக்ஷத்ரம் –
————————————————————————————————————————-
மகிழம் பூ மாலை – வகுளசர்ஜாம் -பூ தாதுக்கள் விழ -சம்சார வியாதி போக்க -வைத்தியோ நாராயணன் –
சதயம் -சதா பிஷக் சிக்ஷ்யயா-நூறு வைத்யர்களாலும் சரிப்படுத்த முடியாத வியாதி தாதுக்கள் போக்கிற்றே -கந்தரா
லம்பமான வகுளா சர்ஜாம் -ராஜாகா -அந்தரேன –
தவள பொடி கொண்டு நீர் இட்டுமினே -தீர்ப்பாரை –
————————————————————————————————————–
25 ஸ்லோகம் -ஜென்ம துவம்சம் -மந்தஸ்-ஸூ பக கபாலம்
தீப்ரா ஒஷ்டம் பிரதேசம் மனோங்ஙயம்-மதுர கடாக்ஷம்
சூப்ரூ ரேகம்-திருப்பி புருவங்கள் -ஐந்தையும்
கொண்ட திரு முக மண்டலம் -சம்சாரம் தொலைக்கும்
ஒளி விளங்கும் திரு உதடுகள் -உபதேச மஹாத்ம்யம் -ஒஷ்டம்
திருந்துனவற்றை பார்த்து மந்த ஸ்மிதம் மங்களகரமான புன்னகை -பொலிக பொலிக
மதுர கடாக்ஷம் -மோக்ஷம் போக -மூன்றாவதாக
ஸூ ப்ரூரேகம் -அடக்கும் -வளைந்த வில் -காம தேவனை அழிக்க-விரோதி நிராசன பூர்வகமாக தானே மோக்ஷம்
கபோலம் -பருத்து-ப்ரஹ்மானந்தத்தால் -பூரட்டாதி -தீப்ரா ஓஷ்ட பத -ப்ரோஷ்டபதா நக்ஷத்ரம் –
——————————————————————————————————————————
மகுடம் -திரு முடி -கிளி கொண்டை காரி மாறன் கொண்டை-நம்மை மேலேற்ற திரு அபிஷேகம் தலை மேலே ஏறி -அஞ்ஞானம் போக்க ஒளி விட்டு –
பரிகிருத- பஜதாம் உத்தர பத -உத்தராட்டாதி
கரண ஆரூடம் –செய்வதற்காக ஏறி -பத்ர உத்தர பதம் -வை குந்தம் –
பாஸா ஒளியால் துரித த்வாந்தம் சடாரிபீமகுடம் லஸதி
———————————————————————————————————————————-
ஆழ்வார் அவயவி -மற்ற ஆழ்வார்கள் அவயவம்-மேலே முற்பட்டவர்கள்-கீழே பிற்பட்டவர்கள் –
பூதத் தாழ்வார் சிரஸ் -பொய்கை பேய் ஆழ்வார் திருக் கண்கள் –
அன்பு பக்தி -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்புதான் பக்தி சிரஸ் –
வாய் பெரியாழ்வார் பல்லாண்டு பாடுவதே வாய்க்கு பரிமளம்
கழுத்து -பார்க்கவ -திரு மழிசை-சொன்ன வண்ணம் -செய்த பெருமாள் ஆராவமுத ஆழ்வார் –
பாஹு-குலசேகர திருப் பாண் ஆழ்வார் -வீணை மீட்டும் -குடப் பாம்பில் கை இட்டவர் -ராமானுஜர் அருளிய தனியன் உண்டே -திரு மார்பு -தொண்டர் அடிப் பொடி –
நாபீ-திரு மங்கை -திவ்ய தேசங்கள் சுழன்று மங்களா சாசனம்
47 திவ்ய தேசங்கள் இவர் மட்டுமே -காரார் திரு வேங்கடம் காணும் அளவும் போய்
திருவடி இணைகள் மதுர கவி ஆழ்வார் ஸ்ரீ ராமானுஜர் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர்- மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே
——————————————————————————–
ரேவதி -பெரிய பெருமாள் திரு நக்ஷத்ரம்
அந்தரேன -இஹ ஸம்ஸார-வேறு யார் தண்டு வைப்பார்
சம்சாராரேவதி -அவதி இஹ ந -நக்ஷத்ரம்
தத் வைப்பு ஸ்ரீ யம் அழகை நெஞ்சுக்குள் உறைய வைப்போம்
இல்லை எனக்கு எதிர்
—————————————————————————————————
மாலை சாத்தி உள்ளேன்
திருவடி தாமரைப் பூ
தாருகா தாருகா மாலிகாத்மாகா மே வாசுகி வாசிக்க கைங்கர்யம்
பரிஷ்காரம் அடையட்டும் –
பராங்குச பாதாப் ஜேத-
———————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஜீயர் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்