Archive for the ‘Ramayannam’ Category

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் / ஸ்ரீ ராம மங்களம்

December 17, 2021

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்

ஆதித்ய ஹ்ருதய சர்க்கத்தின் முதல் 2 ஸ்லோகங்கள் அகத்தியர் இராமபிரானை அணுகுதல்.
மூன்றாவது ஸ்லோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஆதித்ய ஹ்ருதய மந்திரம் 4வது ஸ்லோகம் முதல் 26 வரை வெளிப்படுத்த பட்டுள்ளது.
ஸ்லோகங்கள் 4,5 ஆதித்யஹ்ருதயத்தின் பெருமைகள்.
ஸ்லோகங்கள் 6-15 சூரியனின் பெருமைகள், ஆத்ம போதம், உள்ளிருப்பதும் வெளியிலிருப்பதும் ஒன்றே என நிறுவுதல்
ஸ்லோகங்கள் 16-20 மந்திர ஜபம்
ஸ்லோகங்கள் 21-24 சூரிய போற்றிகள்
ஸ்லோகங்கள் 25, 26 பலன்கள், ஜபிக்கும் முறை
27-30 ஸ்லோகங்கள் ராமர் ஜபித்த முறையை கூறுகிறது.
முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன்
இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

———

ஓம் அஸ்யஸ்ரீ, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
அகஸ்த்யோ பகவான் ரிஷிஹி, அனுஷ்டுப் சந்தஹ:
ஸ்ரீ ஆதி ஆத்மா சூர்ய நாராயணோ தேவதா, நிரஸ்தா சேஷ விக்நதயா
பிரம்ம வித்யாதி ஸித்யர்த்தே, ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோகஹ

—————-

பூர்வாங்க ஸ்தோத்ரம் / தியானம்
ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித பாப க்லேஷ துக்கஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் |
ராவணம்ச-அக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1

போர்க்களத்தில் போரினால் களைப்படைந்து,
போர் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளுடன் இராமன் நின்றார்
இராவணன் தயாராகி களத்தில் முன்னிலையில் நின்று பலமுடையவனாக தோன்றினான்.

———–

தெய்வ-தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்ய-அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ர்ஷி(ஹி): || 2

தேவர்கள் அணைவரும் ஒன்று கூடி போரைப் பார்க்க இருந்தனர்
தேவர்களுடன் இருந்த அகஸ்த்ய பகவான்,
போருக்கு முயன்று நிற்கும் ராமரை அருகில் அணுகி சொன்னார்.

———

ராமராம மஹாபாஹோ ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |
யேன-சர்வான்-நரீன், வத்ஸ, ஸமரே விஜயி-ஷ்யஸி || 3

இராமா, இராமா! பெரும் தோள் வலிமை கொண்டவனே! கேள் இரகசியத்தை,
(அது) காலம் காலமாக என்றுமுள்ளது
எல்லா மக்களும் விரும்பி பயன்படுத்துவது.
குழந்தாய், அது போரில் வெற்றி தருவது

————

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் |
ஜயா-வஹம் ஜபே-ந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்|| 4

ஸர்வ மங்கல மாங்கல்யம், ஸர்வ-பாப-ப்ரணாசனம் |
சிந்தா-சோக-ப்ரசமனம் ஆயுsர்-வர்தனம் உத்தமம் || 5

ஆதித்யஹ்ருதயம் புண்யம்- ஆதிபரமனின் ஹிருதயம் – மந்திரம் நல்வினைகளைத் தருவது
ஸர்வசத்ரு விநாசனம் – உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் நசிக்க-அழிக்க வல்லது
ஜயாவஹம்-வெற்றி தருவது
ஜபே ந்நித்யம் – எப்போதும் ஜபிக்க கூடியது
அக்ஷய்யம்- பொங்கி பெருகி கொண்டே இருப்பது (அழிவற்றது)
பரமம் – மிகப் பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது. விடுதலையை தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் – அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது. நிலையான பேரின்பம் தருவது
ஸர்வ பாப ப்ரணாஸனம் – அனைத்து பாவங்களையும் போக்குவது
சிந்தா சோக ப்ரஸமனம் – மனக் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர்வர்த்தனம் – நீண்ட ஆயுளைத் தர வல்லது
உத்தமம் – சிறந்தது

———–

ஆதித்யரின் தன்மைகள் – பெருமைகள்

ரஷ்மி-மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜையஸ்வ-விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||

ரஷ்மி-மந்தம் (இதமான) பொன்னிறக் கதிர்களை பிரதிபலிப்பவர்.
ஸமுத்யந்தம் – பிரபஞசத்தின் எல்லையாக விளங்குபவர்
தேவாசுர நமஸ்க்ருதம்- தேவர்களாலும், அசுரர்களாலும், (நன்மை, தீமை செய்பவர்கள்) வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-வணங்கத் தகுந்தவர்.
விவஸ்வந்தம் – பரமசிவம்
பாஸ்கரம் – எல்லா ஞானத்தையும்- ஒளியையும் (மதி, அக்னி உள்பட) உருவாக்குவது.
புவனேஸ்வரம் – புவனத்தின் தலைமை.

இரகசியம்-3 ஒளி-சுயம்/ஆத்மன்/பிரமம், இருட்டு-மாயை/சுய அறிவின்மை.
கட உபநிசத் (II.ii.15) சூரியனோ சந்திரனோ, நட்சத்திரங்களோ ஒளிர்பவையல்ல.
பராமத்மனே அந்தர்யாமியாய் அணைத்திலும் ஒளிர்கிறான்.
எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவர்.
(அதனால்) தேவர்களாலும் அசுரர்களாலும், எல்லோராலும் வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-கடமைக்கு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பதால் வணங்கத் தகுந்தவர்.

————–

ஸர்வ தேவாத்மகோஹி ஏஷ ஹ: தேஜஸ்வீ ரஸ்மி பாவனஹ: |
ஏஷ தேவாசுர கணான் லோகான் பாதி-கபஸ்திபி ஹி:|| 7

எல்லா தேவர்களின் வடிவம்
ப்ரகாசங்க்களிலும் ப்ரகாசமானது. அதே நேரத்தில் இதமானப் பொன்னிறக் கதிர்களை வெளிப்படுத்துவது.
இவரே தேவர்களும் அசுரர்களும் எல்லா உலகங்களையும் கதிர் கரங்களால் காப்பாற்றுபவர்.

—————-

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணு ச சிவ-ஸ்கந்த: ப்ரஜாபதிஹி:|
மஹேந்த்ரோ-தனத: காலோ யம-ஸோமோஹ் அபாம்பதி ஹி:||8

ஸூர்ய பகவானே பிரும்மா(ஆக்குபவர்- ப்ரஹம என்றால் பெரிதிலும் பெரிதானவனும்),
விஷ்ணு(காப்பவர் விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது ),
சிவன் (அழிப்பவர் சிவ என்றால் மங்கலம்),
ஸ்கந்தன் (ஸ்கந்த என்றால் இணைப்பு & ஊற்று=, அன்பிற்கும் அறிவிற்கும் அணைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும்),
ப்ரஜாபதி-ஜீவ ராசிகளின் தலைவர்,
இந்திரன் (புலங்களின் அதிபதி),
தனத – குபேரன் (செல்வத்தின் அதிபதி),
காலோ – காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன்,
யமன்(இறப்பின் அதிபதி, தண்டிப்பவன், நல்வழிபடுத்துபவன்),
ஸோமோ -சந்திரன்(ஊட்டத்தின் அதிபதி),
அபாம் பதிஹி – தண்ணீருக்கு அதிபதி (வருணன்).

————-

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ அஷ்வினௌ மருதோ மனுஹு: |
வாயு அஹ்னி: ப்ரஜா ப்ராணஹ: ர்துகர்த்தா ப்ரபாகரஹ: || 9

பிதரோ -மூதாதை(முன்னோர்கள், வம்சம், குலம்),
வஸவ-எல்லா செல்வங்களும் ஆன அஷ்டவசுக்கள்,
சாத்யர்கள்-கருமவசப்படாத நித்யர்களும்,
அச்வினி தேவர்கள் (தேவலோக வைத்தியர்கள்),
மருத்துக்கள் (காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்- தென்றல், புயல்),
மனு (மனிதர்களின் தந்தை),
வாயு-காற்று, அக்னி-நெருப்பு,
ப்ரஜா ப்ராணன்-மக்களின் உயிர்க் காற்று,
ர்துகர்த்தா- பருவங்களை (மாற்றங்களை) உண்டாக்குபவர்.
ப்ரபாகர: – உதயத்தை ஏற்படுத்துகிரார்; புகழைத் தருபவர்

எட்டு வசுக்கள் – அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா
சாத்யா – அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்
ஆறு பருவங்கள், கோடை, மழை, முன்பனி, கடும்பனி, இலையுதிர், வசந்தம்

—————-

ஆதித்ய ஸவிதா ஸூர்யஹ: கக: பூஷா கபஸ்திமான் |
ஸ¤வர்ண ஸத்ர்சோ பானு: ஹிரண்யரெதா திவாகரஹ:|| 10

ஆதித்ய–, மூலப் பரம் பொருள்
ஸவிதா – உயிரை உருவாக்குபவர்
ஸூர்ய-செயல் வீரர் செயலாற்றத் தூண்டுபவனும்
கக-வானத்துப் பறவை வானவெளியில் நடமாடுபவனும்
பூஷா -வளர்ப்பவனும்-மழையால் வளர்ச்சி தருபவர் அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்
கபஸ்திமான் -ஒளிக் கதிரோன்
ஸ¤வர்ண ஸத்ருசோ- பொன்னிறத்தோன்
பானு- ஒளிக் காந்தியுள்ளவன்
ஹிரண்யரேதோ – அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்
திவாகர – பிரகாசமான பகலொளியை தோற்றுவிப்பவர்

————–

ஹரித்-அஸ்வ ஸஹஸ்ரார்சிஹி: ஸப்த ஸப்திர் மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்பு த்வஷ்டா மார்தாண்ட அம்ஷுமான்|| 11-

ஹரித் அஸ்வ – வெற்றியை வாகனமாக உடையவர்–பச்சைக் குதிரையுடையவர் (பச்சை வெற்றியின் சின்னம்).
பச்சைப்பயிர்களை வளர்ப்பவன்
ஸஹ்ஸ்ரார்ச்சி – ஆயிரம் கரங்களால் எல்லா செயல்களையும் செய்பவர்-
ஆயிரம் கிரணங்களை (தீ நாக்குகள்) கொண்டு இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்
ஸப்த ஸப்தி-ஏழு குதிரைகள் / உலகங்கள் / நிறங்கள் / நாட்கள் உடையவர்
மரீசிமான் -ஓளிக்கிரணங்கள் கொண்டவர்.உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.
திமிரோன் மதன – இருளை / அறியாமையையை போக்குவர்
ஷம்பு -மங்களம் அளிப்பவர்.அனைத்தையும் குறைப்பவன்.
ஸ்த்வஷ்ட துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர்–இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.
மார்தாண்ட – மிகுந்த வலிமை உடையவன். உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் இவனிடமிருந்தே வலிமையைப் பெறுகின்றன.
அம்சுமான் -மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும்
தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.

———–

ஹிரண்யகர்ப்ப ஷிஷிர தபனோ, பாஸ்கரோ ரவி(ஹி): |
அக்னிகர்ப்பா அதிதிபுத்ர-(ஹ): ஷன்க ஷிஷிர நாஷன (ஹ): || 12

ஹிரண்ய கர்ப்ப-சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர் ஞானத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்.
பொன்மயமான கருப்பையை உடையவன்.
உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.
ஷிஷிர- கடுங்குளிரை உருவாக்குபவர். கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை.
அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.
ஸ்தாபனோ-சூடாகவும், நெருப்பாய் எரிபவர்.
பாஸ்கரோ -ஒளியானவர்/ஞானமானவர். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.
ரவி- எல்லாவற்றையும் உருவாக்குபவன். எல்லோராலும் புகழ்ப்படுபவர்.
அக்னி கர்ப்போ தீயை தன்னுடலாகக் கொண்டவன்.
அதிதே: புத்ர அதிதியின் புதல்வர்
ஷன்க- ஆனந்த மயமானவன் மறையும் போது குளிர்ச்சியாக தோற்றமளிப்பவர்
ஷிஷிர நாஷன- குளிரை விலக்குபவர்

————–

வ்யோம நாத ஸ் தமோ பேதீ, ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |
கனவ்ரிஷ்டிர் அபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கமஹ: || 13-

ஸூர்ய பகவான் ஸூர்ய பகவான் அண்ட வெளியின் தலைவன்.
அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர்.
கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களால் பெரும் மழையை பொழிவிக்கிறார்.
அபாம் மித்ர – நீர் நிலைகளை நேசிக்கிறார்.
விந்த்ய வீதி ப்லவங்கம- விந்த்ய மலைகளை தெய்வீகமாக – விரைவாக கடக்கிறார்.
(ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன்.
வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள்.
அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள்.
அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர்.)

—————

ஆதபீ மண்டலீ ம்ருத்யு ஹு: பிங்கல: ஸர்வ தாபன ஹ: |
கவிர் விஷ்வா மஹாதேஜா ஹ: ரக்த: ஸர்வ-பவோத்பவ ஹ: || 14

அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார்.
எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.
ஆதபீ -வெப்பத்தை உருவாக்குபவர் கொளுத்துபவன்
மண்டலீ – வட்ட வடிவானவர்
ம்ருத்யு- மரணவடிவானவன்
பிங்கல-பொன் நிறத்தோன்
ஸர்வதாபன- எல்லாவற்றையும் எரிப்பவர்
கவி அனைத்தையும் அறிந்தவன்.
விஷ்வோ- அண்ட வடிவானவன்.
மஹா தேஜா- மிகப்பெரும் ஒளிவடிவானவன்.-சிவந்த வண்ணம் கொண்டவன்.
ரக்த-எல்லோரிடத்தும் அன்பானவர்
ஸர்வபவோத்பவ- எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

———

ஆதித்யருக்கு நமஸ்காரங்கள் / சூரிய துதி

நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் அதிபோ விஷ்வ பாவன ஹ: |
தேஜஸாம் அபிதேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே || 15

வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் பால்வெளிக்கும் தலைவர். அவரே அண்டத்தின் வடிவம்.
ஒளி வீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன் பன்னிரெண்டு உருவில் ஒளி மயமானவரே நமஸ்காரம்.

பன்னிரண்டு மூர்த்திகளின் பெயர்கள்
இந்திரன், தாதா , பகன், பூஷா, மித்ரன், வருணண் அர்யமான், அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, சவிதா – விஷ்ணு.

————–

நம: பூர்வாய கிரயே பச்சி-மா-த்ரயே நம ஹ: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம ஹ: || 16-

வணங்குகிறேன் உதிப்பவரே உதயத்தை தருபவரே மறைபவரே நிறைவை தருபவரே வணக்கம்.
ஓளிர் தன்மை படைத்தவர்களுக்கு அதிபதியே
ஒவ்வொரு நாளின் அதிபதியே வணக்கம்.
வணங்குகிறேன் கிழக்கு மலையில் உதிப்பவரே மேற்கு திசையில் மறைபவரே வணக்கம்.

———–

ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம ஹ: |
நமோ நம-ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம ஹ: || 17

வெற்றி வடிவானவருக்கு, வெற்றியின் மங்களங்களை தருபவருக்கு நமஸ்காரம்.
பச்சை குதிரையை -வெற்றியை – வளத்தை உடையவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
ஆயிரம் கதிர்களினால் அணைப்பவருக்கு எல்லையில்லா அம்சமுள்ளவர் நமஸ்காரம் நமஸ்காரம்.
ஆதி முதல்வனுக்கு நமஸ்காரம் நமஸ்காரம்

————-

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம ஹ: |
நம-பத்ம-ப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம ஹ: || 18-

கடுமையானவருக்கு (உக்ரம்) வீரருக்கு வணக்கம். சீரானவர்க்கும் தடைகளற்றவனுக்கு நமஸ்காரம்
பல வண்ண கதிர்கள் ஏவும் வில்லை உடையவருக்கு வணக்கம்.
தாமரைகளை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம்
மிக்க வலிமை பொருந்தியவருக்கு – அழிக்கவும் பின் அவற்றை உருவாக்கவும் வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.

————

ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய ஸூர்யாய ஆதித்ய வர்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய-வபுஷெ நம ஹ: || 19 ||

ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு மூவருக்கும் தலைவரே
செயல் வீரனே, ஆதி முதல்வனே எங்கும் வியாபித்து இருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
மிகுந்த ஒளி – காந்தி படைத்தவனுக்கு,
எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு – கால உருவானவருக்கு,
ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு நமஸ்காரம்.

—————

தமோக்னாய ஹிமக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம்-பதயே நம ஹ: || 20-

இருளை (அறியாமை) அழிப்பவருக்கு
குளிரை அழிப்பவருக்கு, எதிரிகளை அழிப்பவருக்கு, எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு
செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு
ஒளி வீசுபவரே
பிரபஞ்சத்தின் மூலம் – ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு நமஸ்காரம்

————-

தப்த சாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நம(ஸ்) தமோ-(அ)பினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||

உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
தீ வடிவானவருக்கு -அணைத்தையும் எரிப்பவர்,
உலகத்தை படைத்தவருக்கு- அதன் அணைத்து செயல்களுக்கும் காரகர்,
இருளை நீக்குபவருக்கு,
உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு, உலக சாட்சியானவருக்கு நமஸ்காரம்.

————-

நாச-யத்யேஷ வை-பூதம் ததேவ-ஸ்ருஜதி ப்ரபு ஹு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி ஹி: || 22

உயிர்களை எல்லாம் அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம்.
அவரது அவற்றை இவனே பிறப்பிக்கிறான் இறைவன் இவனே
இவனே காக்கிறான்
தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால் இவனே வெயிலாக காய்கிறான். மழையாகப் பொழிகிறான்

————-

ஏஷ-ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்தித ஹ: |
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23-

ஸூர்ய பகவான் உலகத்து எல்லா உயிர்களின் இருதயத்தில்-ஜீவனாக இருந்து விழிப்பாக நிலை நிற்கிறான்.
இவர் தான் வேள்வித் தீ. தீ வழிபாட்டின் வடிவம் – வேள்வியின் நிவேதனமும் பலனும் அவரே.

———-

வேதாஸ்-ச க்ரத-வஷ்சைவ க்ர்தூனாம் பலம்-ஏவ ச |
யானி-க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு ஹு: || 24

வேதங்களின் சாரத்தில் இருக்கிறார்.
தத்தம் கடமைகளாகவும் – சடங்குகளாகவும்
உண்மையுடன் செய்பவர்களுக்கு,சடங்குகளின் கடமையின் பலனாக இருக்கிறார்.
என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ இவ்வுலகத்தில்
அவை எல்லாமும் ஒளி படைத்தவன் அவரே இறைவன்-தலைவன்

——————-

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தின் பெருமைகள்: பலஸ்ருதி

ஏனம் ஆபத்ஸு க்ருச்ரேஷு கான்தாரேஷு பயேஷு ச |
கீர்த்தயன் புருஷ: கச்சிந்-நாவ-ஸீததி ராகவ || 25-

ராகவா ரவி, எல்லாவித ஆபத்து நேரங்களிலும்(உடல், மன, ஆன்மீக காரணிகளால்), அவமானத்திலோ,
பயமுறுத்தும் நேரங்களிலும், துன்பங்களிலும் வழிபடுவோரை எப்போதும் கைவிடமாட்டான்.
இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.

————–

பூஜ-யஸ்-வைனம் ஏகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயி ஷ்யஸி || 26-

ஒருமிக்க மனதுடன் வணங்குவாய்
தேவர்களுக்கும் தெய்வமானவனை உலகத்தின் நாதரை
இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை மும்முறை ஜபித்து
போரில் கண்டிப்பாக வெற்றி அடைவாய்.

——————–

இராமர் மந்திரம் ஓதி மனத்தெளிவு பெறுதல்

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி|
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம-ச-யதா-கதம் || 27

இந்த நொடியிலேயே, வலிமையான தோள்கள் உள்ளவனே,
இராவணனை நீ வதைப்பாய்
என்று கூறி அங்கிருந்த அக்ஸ்த்ய முனிவர்
எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

————–

ஏதச்சுர்த்வா மஹாதேஜா நஷ்டசோகோ-பவத்-ததா |
தாரயாமாஸ-ஸுப்ரிதொ ராகவ: ப்ரய-தாத்மவான்(உ) || 28-

அருள் மொழிகளைக் கேட்ட, மிகுந்த தேஜஸ்வி ராகவன்
அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
நோக்கத்தில் உறுதியுள்ளவனும், மிகவும் மகிழ்ந்தவனும் ஆனான் முயற்சிகளில் சிறந்தவன் ஆன இராகவன்

—————

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷ-மவாப்தவான் (உ) |
த்ரிர்-ஆசம்ய ஷுசிர்பூத்வா தனுராதயாய வீர்யவான் (உ) || 29-

ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (ஸ்தோத்ரத்தை) ஜபித்து
மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்
மும்முறை ஆசமனீயம் செய்து உடலை பரிசுத்தம் செய்துகொண்டு, வில்லை ஏந்தினான் வீரத்தில் சிறந்தவன்

————-

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபா-கமத் (உ) |
ஸர்வ யத்னேன-மஹதா வதே-தஸ்ய த்ர்தோ-பவது || 30

இராவணன் போர் செய்யும் நோக்கத்துடன் வருவதை பார்த்து
மேலான எல்லா முயற்சிகளுடனும்
அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

—————–

சூரியன் ஆசி வழங்குதல்

அத-ரவி: ரவதத் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமான ஹ: |
நிசி-சரபதி ஸம்க்ஷயம் அன்கி-விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ்த்-வ்ரேதி || 31

அப்போது ரவி ‘விரைவில் நடத்துவாய் இராமா’ என்று மிகவும் மகிழ்ந்த மனத்துடன்,
மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக, இருட்டில் உழல்பவர்களின் முதல்வனின்
அழிவு நேரம் நெருங்கியதை அறிந்து, தேவர்களின் மையத்திலிருந்து அருளினார்.

———-

முடிவு துதி

பானோ பாஸ்கர மார்தாண்ட ச்சண்ட ரஸ்மை திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி நமஸ்துதே

ராமாயணத்தில் சர்க்க முடிவு

இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே யுத்த காண்டே
ஆதித்ய ஹ்ருதயம் நாம சப்தோத்தரசததம: சர்க்க: ||

இவ்வாறு வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
ஆதித்ய ஹிருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் நிறைவடைந்தது.

———

மகிமைகள்
ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் – அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)
ஜயாவஹம் (வெற்றி தருவது)
ஜபேத் நித்யம் – நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் – அழிவற்றது பொங்கி பெருக கூடியது.
பரமம் – மிகப்பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது)
ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
உத்தமம் – சிறந்தது

———–

வத்ரு வைலக்ஷண்யம் ,ஸ்தல வைலக்ஷண்யத்துடன் கூடிய அவதாரிகையுடன் – முன்னுரையுடன்
ஆதித்ய மண்டலத்தில் மத்யமத்தில் எழுந்தருளியிருக்கும் சூரியநாராயணன் பீடு கொண்டு அத்புதமாய் உதயமானார் .
ஆதித்ய ஹ்ருதயத்தை அருளிய அகஸ்தியர் மஹரிஷி நாமம் மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் பிறந்த கதை – விவரணம் அருமை .
ஆரோக்கியத்திற்கு – பாஸ்கரரையும் ,
ஞானத்திற்கு – ஈஸ்வரனையும்
தனத்திற்கு – அக்னிபகவானையும் மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் வல்லமை படைத்த ஜனார்தனனான
நாராயணனையும் மோக்ஷபலத்திற்கு ஸ்துதிக்க வேண்டும் .தன்யோஸ்மின் .

சுந்தர காண்டத்தில் குறிப்பிட்டது போல் ஹனுமன் சீதாப்பிராட்டியுடன் உரையாட அருமையான
பொன்மொழியாகிற செந்தமிழை தேர்ந்தெடுத்து பேச தீர்மானித்ததின் மூலம் செம்மொழியாகிற
செந்தமிழ் – தீந்தமிழின் ஏற்றம் உலகுக்கு புலப்படும் .
ஸ்ரீ ராமாயணத்தில் ராவணனுடன் ராமன் போர் புரியும்போது சற்று சோர்வு அடைந்த தருணத்தில்
அகஸ்தியர் மகரிஷியால் ராமருக்கு புத்துணர்ச்சி ஊட்ட உத்திராயண புண்ய காலத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்கபட்டது
ஆதித்ய ஹ்ருதயத்தில் முதல் இரு ஸ்லோகத்தின் அர்த்தவிசேஷங்கள் அருமை .
உலகமெங்கும் சூரியனாருக்கென்று ப்ரத்யோகமாய் பல கோவில்கள் எழுப்பப்பட்டுள்ள – அரிய பெரிய தகவல்கள்
விவரம் மற்றும் சூரியபகவானை ஆராதனை தெய்வகமாக கருதி வணங்கும் சௌராஷ்டிர வகுப்பினர் செய்தி அத்புதம் .

ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட’ சூரிய ஸுக்தம் ‘ ,ஸ்ரீ இராமாயணத்தில் அகஸ்திய மகரிஷியால் வழஙகப்பட்ட ஆதித்ய ஹ்ருதயம் ,
மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் ,த்ரௌபதியும் கூறிய சூரிய அஷ்டோத்தர சத நாமாவளி மற்றும்
மஹநீயர் அப்பய்ய தீக்ஷிதராரால் இயற்றப்பட்ட சூரிய சதகம் – இவைகள் சூரியநாயனாரின் பெருமைகளை உணர்த்தவல்லது .

ஆதித்யஹ்ருதயத்திற்கு கோவிந்த ராஜ்ஜிய பூஷணம் என்ற பெயரில் தனி வ்யாக்யானம் மற்றும்
மஹேஸ்வர தீர்த்தர் அருளிய ‘தத்துவ தீபிகா ‘ போன்ற பெரிய வ்யாக்யாத்தாக்களால் போற்றப்பட்ட
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் என்பதின் மூலம் இந்த ஸ்லோகத்தின் ப்ராதான்யத்தை ஆஸ்த்ரிகர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது .

சூரியனை சஞ்சாரிக்கும் பாதை ஒரு எல்லைக்குள் உட்படாத நீண்ட பாதையாக இருப்பதாலும் ,
சூர்ய ரதத்திற்கு ஏக சக்ரம் அதை சாரத்யம் செய்யும் கருடனின் தமையனார் அங்க ஹீனம் கொண்ட அருணன் ,
அதில் பூட்டப்பட்ட 7 குதிரைகளுக்கு ஓரே ஒருசக்ரம் என பொருத்தமில்லாமல் சூரிய ரதத்தை செலுத்தும் பிரபாவம்
நமக்கு எந்த கடினமான சூழ்நிலையையும் எளிதில் வென்று விடலாம் என்ற உத்வேகத்தை கொடுக்க வல்லது
சூரியநாயனாரின் பிண்ணனி என்பது வெட்ட வெளிச்சம் .ஆதித்ய ஹ்ருதயத்திற்கு குரு அகஸ்திய மகரிஷி .
இது போன்ற பலபல அரிய பெருமைகளை அறிய வைக்கும் ஆதித்ய ஹ்ருதயம்

கும்பகோணத்தைச் சுற்றி சோழர்கள் கால நவக்ரஹ ஸ்தலங்களைப்போலவே சென்னையச் சுற்றி
பல்லவர் கால நவக்ரஹ ஸ்தலங்கள் ௨ள்ளன.கொளப்பாக்கத்தில் சூரிய ஸ்தலம். ௮கஸ்த்தீஸ்வரர் ஆலயம்.
நல்ல வேலை கிடைக்க இப்போதும் இளைஞர் கூட்டம் ௮லைமோதும்.

வந்தவாசியில் உள்ள இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோவில் திருமணிச்சேறையில் அகஸ்திய முனிவர் குகை உள்ளது.
அவர் தெற்கு நோக்கி வந்த போது அந்த மலையில் கால் பதித்து தெற்கை தாழச்செய்து சமப்படுத்தியதாக கூறப்படுகிறது

ஆதித்ய ஸ்தோத்ர ரத்னம் -அப்பயா தீக்ஷிதர்
வால்மீகி பெயராலே திருவான்மியூர்
திரு நீர் மலை எழுந்து அருளு உள்ளார்
பூஷணம் கோவிந்தராஜர் -ஸ்ரீ ராமாயண வியாக்யானம்

ப்ரணவத்துடன் சேர்த்து ஸ்மரிக்கும் இம்மந்திரம் காம க்ரோத மத மாத்ஸயலயாதிகள் உட்பட
எல்லா விரோதிகளையும் போக்க வல்லது .
இந்த ஸ்லோகத்தை ஜபிப்போருக்கு அழிவு இல்லாத பலத்தையும் பரம மங்களத்தையும் கொடுக்கும் .
இதை கேட்பவருக்கு கவலை ,துக்கம் ஒழிந்து, பக்தி ரூபாவண்ண ஞானம் பிறந்து ,
நல்ல ஆரோக்யத்துடன் கூடிய தீர்காயுசை பெற்றுத்தரும் .
இந்த ஸ்லோகத்தை சொன்னவர் – அகஸ்திய மகரிஷி கேட்டவர் – ராமர் ,
இதை தொகுத்தவர் தபஸ்வி வாலமீகி.ஜ்வாஜலயமாய் – அதீத பிரகாசத்துடன் ஸ்வர்ணத்தை ஒத்த எண்ணற்ற
சூர்ய கிரணங்கள் பஞ்ச இந்திரியங்கள் வழியாய் – சரீரத்திற்குள் ஊடூரூவி சைதன்யமான- ஞானத்தை பிறப்பிக்கிறது .
அக்னி ,இந்திரன் ,வருணாதிகள் போன்ற தேவர்களுக்கு மிஸ்ர ஸத்வத்தையும் அசுரர்களை ரஜஸ் தமஸ் போன்ற குணங்களையும் கொடுத்து
தேவர்கள் ,இந்திரர்களால் ஏக ஸ்துதியாய் போற்றப்படுபவனாகவும் ஆதித்யன் திகழ்கிறான் .
இங்கனம் அவனை துதிப்போருக்கு நல்ஞானத்தை கொடுக்க வல்ல சூரிய பகவானை நமஸ்கரிக்கிறேன் .

தேவாஸுர நமஸ்க்ருத்தாய நமஹ வைவஸ்தே நமஹ ,பாஸ்கராய நமஹ ,புவனேஸ்வராய நமஹ ,தேஜஸ்வியே நமஹ ,
ரஷ்மி பாவ்னாயே நமஹ ,ப்ரஹ்மணே நமஹ ,ப்ரஜாபதியே நமஹ மஹேந்திராய நமஹா –
இந்த ஆதித்யனாய் விளங்கும் சூரிய நாராயணனை குறிக்கும் நவ நாமாவளிகளின் அணிவரிசை –
அவைகளின் அர்த்த விசேஷங்கள் அத்புதம் .தன்யோஸ்மின் .

எவன் ஒருவன் – யஞயத்திற்கு ப்ரஜாபதியாய் இருப்பதாலும் (ப்ரஜாபதியே நமஹ ),இந்திரனின் ஐராவத மஸ்தகத்தில்
சூர்யகிரணங்கள் பட்டு தெறித்து அக்கற்றைகள் தாமரைத்தடாகம் வரை பரவி அதையும் பிரகாசிக்க வைப்பதால் –
மஹேந்திராய நமஹ என போற்றப்படுவதாய் , ஸ்வாமி திலகர் வ்யாக்யானத்தின் படி தனம் என்ற ஞானத்தை பெற்று தந்து ,
பின் தனதான்யத்தையும் குபேரன் போல் கொடுப்பதால் தநதாந்யய் நமஹ எனவும் ,

செவந்தகமணி ப்ரபாவத்தை எடுத்துரைத்து – அதற்கு உடையவனான சத்யஜித் அதனுடன் நடந்தது வரும் தோற்றம் –
சூரியன் ஆகாசத்திலிருந்து இறங்கி பூமியில் பவனி வரும் தோற்றத்தை ஒத்து இருந்தது என அதன் பெருமைகளையும் கூறி ,
காலனாயும் சூரியன் இருப்பதால் கால மண்டல ஸ்பந்தனாய நமஹ எனவும் போற்றப்பட்டு ,
பின் ம்ருத்யுக்கும் ம்ருத்யுவையை சூர்யநாராயணனாய் திகழ்வதால் எமனாய நமஹ எனவும் ,
சோமனாகிய சந்திரனும் சூரியனிடத்திலிருந்து ஒளிக் கற்றைகளை பெற்று தான் பிரகாசிப்பதாலும் ,
சிவனார் தன் உடலின் பாதி பாகத்தை உமையவளைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் என பெயர் பெற்று
தன் சக்தியை வெளிப்படுத்திய- சக்தியுடன் கூடிய ஆதித்யனாய் கருதுவதாலும் -சோமாய நமஹ என ஸ்துதிக்க படுகிறார் ஆதித்யன் .

இங்கனம் அக்னியாய ,திவாகராய பித்ருதேவதாய மருதமூர்த்தாய ,வசுமூர்த்திய சத்ய மூர்த்தியே ,வாயுவே ,ப்ராணாய ,
ருது கர்த்தயே ,பிரபாகராய , ஆதித்யாய சவித்ரே ,ஸ்வர்ணசத்ருயை பானுவே பூஷனோ ,கபஸ்திதே ,பானுவேஷாய ,
திவகராய சாயாதிபதே – போன்ற பற்பல ப்ரபாவத்தை உள்ளடக்கியதால் பல்வேறு பெருமைகள் வாய்ந்த
திரு நாமங்களால் சூர்ய நாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட ஆதித்யன் போற்றப்படுகிறார் என்பதை அழகாய் ஸ்வாமி வருணித்தார் .

As per Rig Veda (8:72:16) says :
Adhukshat pipyushimisham urjam saptapadimarih Suryasya sapta rashmibhih
It means, 7 different colors of rays emitting from Sun, will give 7 different energies.
Sun temples built in Konark etc places in india are seen with 7 colored horses chariot.

ஆரோக்கியத்திற்கு பாஸ்கரனையும் ,தனதான்ய வ்ருத்திக்கு அக்னி பகவானையும் ,ஞானத்திற்கு சிவபெருமானையும் பிரார்தித்தாலும்
இவர்கள் அனைத்துள்ளும் அந்தர்யாமியாக ஸ்ரீமன் நாராயணன் உறைந்து அவரவர் தம்தம் தொழில்களை புரிய வைக்கிறார் என்றும்
மோக்ஷத்தை பெற்றுத்தர ஜனார்தனனான ஸ்ரீமந் நாராயணன் அனுகிரஹிக்கிறார்

ஸ்வாமி மயூர கவி அருளிய சூரிய சதகம் சதஸ் – ஸ்வாமி வேதாந்த தேசிகரின் கருட பஞ்சாசத்த்தை
ஓத்து இருப்பதை கோடிட்டு .கூர்நாராயணஜீயர் சாதித்த சுதர்ஷன் சதகமும் ஆதித்யனின் பெருமைகளை குறிப்பிட்டிருக்கிறது என்றார் .
மேலும் அகஞானம் என்கின்ற இருளை போக்குவதால் திமிரோன் மதனாய நமஹ என ஆதித்யன் போற்றப்படுகிறார்.
மற்றும் ,ரக்ஷிமிப்பதயே நமஹ,ஹரிதஸ் வஹாய நமஹ ,த்வவுட்ரே நமஹ மார்த்தாண்டாய நமஹ ,ஹயன சந்தயே நமஹ
அம்சுபதயே நமஹ ,ஹிரண்ய கர்ப்பாய

ஹரண்யகர்ப்பாயை ,சிசிராய ,தபாநாய யஸ்கரோ ரவிகி or பாஸ்கரோ ரவிகி ,ரவயே ,அக்னிகர்ப்ப ,அதிதே புத்ராய ,
சங்காய ,சிசிரநாசன ,வ்யோமநாதாய ,
தபோபேதியை ,ரிக் யஜுர் சாம பாரகாயை ,கண்வருஷ்டயே ,அபா மித்ராயே ,விந்த்யவீதி ப் ல வங்க மாணாய ,
ஆத்மீனே ,மண்டலினே ,ம்ருத்யவே ,பிங்களாய ,ஸர்வதாபனாயே ,
கவயே , விஸ்வஸ்மை, மஹாதேஜஸே சர்வேஷ்வரேலூ ரக்தக ,ரக்தாய ,ஸர்வ ப்யோத்பலாயே ,சூரியனாவே ,விஸ்வபாலனாக –
போன்ற இந்த நாமக்களுடன் ‘நமஸ் ‘ சப்தத்தை கூட்டி நாமாவளியாக நாராயணனை அந்தர்யாமியாக கொண்ட
சூரியபாகவனை ஸ்துதி செய்யக்கடவோம் என்றார் .

இந்த விஸ்வத்தில் ப்ரத்யக்ஷமாய் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு ஸ்வரூப ரூபமாக ஒளிவிட்டு காப்பதால்
விஸ்வபாலனாயே நமஹா என போற்றப் படுகிறார் .
மஹா தேஜஸ்வியாய் ஒளியை கொடுக்கும் ஸ்ரீமன் நாராயணனை அந்தர்யாமியாய் கொண்ட தேஜஸ்வியான
சூரியபகவான் என்றபடியால் தேஜஸாமபி தேஜஸ்வி என அழைக்கப்படுகிறார் .
இதுபோல் துவாதச மாதங்களுக்கும் சுடர் விடும் பெரும் ஜ்யோதியாய் – நாயகனாய் திகழ்வதால் த்வதசாத்மனே என ஸ்துதிக்கப்படுகிறார் .

நம பூர்வாய நமஹ – தொண்டரடிபொடி ஆழவார் திருமாலை என்ற திவ்யப்ரபந்தத்தில் சாதித்தபடி
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி என்றாற்போல் திருவரங்கப்பெருமான் –
குணதிசையாக போற்றப்படும் கிழக்கு திசையில் தன் திருவடிதாமரைகளை நீட்டிக்கொண்டு அடியார்களுக்கு திருவடி சேவை சாதிப்பதாலும் ,
மேலும் எம்பெருமானின் கால்களை தொழ ஹேதுவாய் சூரியன் காலையில் கிழக்குத்திசையில் உதித்தும் ,
பின் மாலை வேளையில் மால் ஆன திருமாலின் கடாக்ஷம் பெற்று மேற்கு திசையில் அஸ்தமிக்கிறார் என்கிற வேங்கடகவியின் கூற்றை .

இந்த வகையான காரணங்களால் சூரியன் முறையே – பூர்வாயாகிரனே நமஹ என்றும் ,பஸ் சிமாத்ரயே நமஹ எனவும்
அழைக்கிக்கப்படுகிறார் .வாரத்தின் எழு நாட்களுக்கும் அதிபதியாய் விளங்குவதில் தினாதிபதியே என வணங்கப்படுகிறார்.
மேலும் ஜெயமூர்த்தயே ,ஜெயபத்ராய ,ஹர்யஸ்வாய ,ஸ்யமாஸ் வாய வாய, சஹஸ்ராக்ஷீ ,ஆதித்யாய,உக்ராய ,வீராய சாரங்காய ,பத்மபிரதாய
பிரசாண்டாய ,ப்ரஹ்மாவிஷ்ணு சிவாத் மிகாயை ,- ஏஷ நாராயனாக – ப்ரஹ்மாச்சுத்தாயே ,பாஸ்வதே ,சர்வபக்ஷயாயே ,ரௌத்ரவடிவே ,தமோக் நாய ,ஹிமக் நாய சத்ருக்கினாயே என அந்தந்த நாமாவளிக்கு ஏற்ப அர்த்தங்களை தாங்கிக்கொண்டு ஜ்வாஜால்யமாய் பிரகாசிக்கிறார்

ஆதித்யா கிருதய நாமாவளியை நிறைவாய் வரிசைப்படுத்தியத்திலிருந்து –
சத்ருக்னாயே ,அமிதாத்மினே ,க்ருதகனனாகி ,தேவாய ,ஜ்யோதிஷயாம் பதயே ,தப்தகாமிக்கரா பாய ,
ஹரவே விஸ்வகர்மனே ,தபோயீ நிர்ணாயே ,ருசயே ,லோகஸாக்ஷினே ,பூதநாஸாயே ,பூத சிரஷ்டரே ,ப்ரபவே பாத யே ,
தபதே ,வர்ஷதே சுக் தேவி ஜாக்ரதே ,அந்தர்யாமிஸ்திதாயே ,அக்னிஹோத்ராயா ,அக்னிஹோத்ரபலப்ரதா யே
பதுமஸ்ம்ருத்தாயே பகவதே ப்ரஹ்மணே ,ருதேஹு விஜயஸ் யசு நிசந்தேகமாயே – போன்ற இந்த நாமாக்களை
‘நமஸ் ‘ சப்தத்தைக்கூட்டி 125-நாமாவளியாக்கி ஸ்வாமி ராமவர்மா என்ற திலகர் ,ஸ்வாமி சுதாகர் போன்றோரின் வ்யாக்யானத்த –

மேலும் அகஸ்திய மகரிஷி அருளிய இந்த ஸ்லோகம் ஸ்ரீராமாயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது.
மஹாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் சூரியநாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட சூரியபகவானை ப்ரார்தித்து
அக்ஷய பாத்திரத்தை பெற்றதாலும் சூரியசதகத்தில் இதன் ப்ராதான்யத்தைக் குறிப்பிட்டதாலும் –
இதிகாசங்கள் புராணங்களில் இதன் முக்கிய பங்கு அனைவரும் அறியும் வண்ணம் புலப்படுகிறது .
இத்தகைய பெருமைகள் வாய்ந்த ஆதித்ய ஹ்ருதயத்தின் ச்லோகர்த்தங்களை எளிமைப்படுத்தி
ஆஸ்த்ரிகர்கள் அனைவரும் ஆச்ரயிக்கும் வண்ணம் அத்புதமாய் இதன் முக்கியத்துவத்தையும் பலாப லனையும் உணர வேண்டும்

——

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஶிக றுஷிஃ
ஶ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அனுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஶ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோகஃ

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்றுதஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்
வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஶனம்

த்யாத்வா னீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்
ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்

ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத்மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶகார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம்தகஃ
பாதௌவிபீஷண ஶ்ரீதஃபாது ராமோ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்-சத்ம சாரிணஃ
ன த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ

ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்
னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஶிகஃ

ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஶ்ரீமான்ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வஸத்வானாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக னிஷம்க ஸம்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜானகீவல்லபஃ ஶ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்
ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஶரததனயம் ஶ்யாமலம் ஶாம்தமூர்திம்
வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ

ஶ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஶ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா னமாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
னான்யம் ஜானே னைவ ன ஜானே

தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரணரம்கதீரம்
ராஜீவனேத்ரம் ரகுவம்ஶனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா னிஶாசரசமூ ராமாய தஸ்மை னமஃ
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஶ்ரீபுதகௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

*ஶ்ரீ ராமாயண ஜெய மந்திரம்*

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாபலஃ
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ |

தாஸோஹம் கோஸலேம்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் னிஹம்தா மாருதாத்மஜஃ ||

ன ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
ஶிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஶ்ச ஸஹஸ்ரஶஃ |
அர்தயித்வா புரீம் லம்காமபிவாத்ய ச மைதிலீம்
ஸம்றுத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||

———

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதாப் பிராட்டி லஷ்மண பரத சத்ருக்ந திருவடி சமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — மூன்றாம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

மூன்றாம் அத்யாயம்-சாதனா அத்யாயம்–55 அதிகரணங்கள்–181 ஸூத்ரங்கள்

இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் -8 அதிகரணங்கள்-40 ஸூத்ரங்கள்
குற்றம் குறை அற்றவன் -அளவற்ற திருக் கல்யாண குணங்களை கொண்டவன்
தாழ்வு அற்றவன் -என்கிறார் இதில்-

இந்தப் பாதமே ஆரம்பிப்பது வீண் என்று
சங்கித்து
விடை தருகிறார் ஸ்வாமி
கீழே இரண்டு அத்யாயங்களாலே ப்ரஹ்மம் தனக்கு உரிய ஸ்வ பாவங்களுடன் விளக்கப் பட்டு இருக்க
இந்த சாதன அத்தியாயத்தின் நடுவிலே அதே ப்ரஹ்மம் உபய லிங்க பாதத்தில் மறுபடி இழுத்து விசாரிக்கப் படுவான்
என் எனில்
அறிய வேண்டும் ப்ரஹ்மத்தின் குண பேதத்தால் வித்யா பேதம் சொல்லுகையாலும்
ப்ரஹ்மமே ஸித்த உபாயம் ஆகையாலும்
அதன் மேல் மிக்க ஆசை ஆர்த்தி வேண்டும் என்பதற்காக இவ்விடம் ப்ரஹ்மம் பற்றிப் பேசுவதில் விரோதம் இல்லை என்பதாம்

அடுத்தபடி இப் பாதத்தின் நடுவில் ஜீவனின் ஸ்வப்னாதி அவஸ்தைகளை பற்றிப் பேசுவது எவ்வாறு பொருந்தும்
எனில்
ஸ்வப்ன பதார்த்தங்கள் யாவும் பரமாத்ம அதீனம் ஆகையாலும்
ஜீவனுக்கு முக்தி தசையிலும்-மிக்க பர வசமானவன் தான் நான் என்னும் ஞானம் உதிக்கைக்காகவும்
வைராக்ய பாதத்தில் கூறாமல் இங்கு சொல்வதில் விரோதம் இல்லை

இதற்கு முன் கர்மத்துக்கு ஏற்றவாறு போக்குவரத்து பிறப்பு முதலியவை சேர்வதால்
விழித்து இருக்கும் ஜீவனுக்குத் துக்கம் உண்டு எனச் சொல்லப் பட்டது
இப்போது ஸ்வப்ன அவஸ்தை விசாரிக்கப் படுகிறது என்று சங்கதி –

——————————————————————————-

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்– 6 ஸூத்ரங்கள்-
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது-

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் — 1 ஸூத்ரம்–
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது –

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் – 1 ஸூத்ரம்-
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -15 ஸூத்ரங்கள்–
அந்த்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -7 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை
தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது –

எட்டாவது அதிகரணம்-பலாதிகரணம் – 4 ஸூத்ரங்கள்-
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

————————————————————————————————————————————-

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன –
என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது-

ஸ்வப்னம் பற்றி ஸ்ருதி கூறுகிறது
கனவில் ரதங்களோ -குதிரைகளோ -நல்ல வீதிகளோ இல்லை
அப்போது இவற்றை நிர்மிக்க தடாகம் முதலியவற்றையும் படைக்கிறானே -அவனே கர்த்தா என்று கூறிய இடத்தில்
கனவில் பொருள்களைப் படைத்தவன் ஜீவனா பரமாத்மாவான என்று சம்சயம்
ஜீவன் தான்
ஏன் எனில்
கனவு காணும் ஜீவன் -ப்ரகரணத்தில் -அவ்விடம் -இருப்பதால்
ஸ -என்று குறிப்பிடத் தக்கவனாய் இருப்பதாலும்
பிரஜாபதி வாக்கியத்தில் ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப என்று
ஸத்ய ஸங்கல்பத்வம் சொல்லப்படுவதால்
என்று பூர்வ பக்ஷம்
இந்த பூர்வ பக்ஷம் மேல் வரும் இரண்டு ஸூத்ரங்களால் விளக்கப் படுகிறது –

312-சந்த்யே சிருஷ்டி ஆஹஹி–3-2-1-

கனவு நிலையில் உள்ளதைப் பற்றி
ப்ருஹத் உபநிஷத் -4-3-10-ந தத்ர ரதா ந ரதயோகா ந பந்தா நோ பவந்தி அத ரதான்
ரதயோகான் பத –ஸ்ருஜதே ந தத்ர ஆனந்தா முத பிரமுதோ பவந்தி அத ஆனந்தான் முத
ப்ரமுத ஸ்ருஜதே ந தத்ர வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்யோ பவந்தி அத வேசாந்தா
புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ச ஹி கர்த்தா-

சந்த்யே -ஸ்வப்னத்தில்
சிருஷ்டி -ரதாதிகளின் ஸ்ருஷ்டி யானது
ஆஹஹி-ஸ்வப்னம் காணும் ஜீவனால் செய்யப்படுவதாக வேதம் கூறுகிறது அன்றோ
ஸஹி கர்த்தா என்று ஜீவனையே கர்த்தாவாக வேதம் பேசுகிறது என்பதாம் –

சந்த்யம் -கனவில் உள்ள இடம்
ச ஹி கர்த்தா -அவனே செய்கிறான் –
படைப்பவன் ஜீவனா பரமாத்மாவா
பூர்வ பஷி ஜீவன் என்பார்-

—————————————————————————————————————-

313-நிர்மாதாரம் ச ஏகே புத்ராய ச–3-2-2-

ஏகே-சில வேதாந்திகள்
நிர்மாதாரம் ச -ஜீவாத்மாவையே ஸ்வப்ன பொருள்களைப் படைப்பவன் என்கிறார்கள்
அது எப்படி என்றால்
புத்ராய ச-கட உபநிஷத் –5-8–ய ஏஷூ சுப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண-என்ற இடத்தில்
காம ஸப்தத்தாலே புத்ர பவ்த்ராதிகளும் சொல்லப் படுகின்றனர்
அவர்களை ஜீவன் படைப்பதனால் என்று கருத்து

கட உபநிஷத் –5-8–ய ஏஷூ சுப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண-என்கிறது
விரும்பியவற்றை தூங்கும்பொழுது தானே படைக்கின்றான் –
பூர்வ பஷி

விரும்பியவற்றை -புத்ராதிகளையும் –
கட உபநிஷத் -1-5-சர்வான் காமான் சந்தத ப்ரார்த்தயஸ்வ
கட உபநிஷத்-1-23- -சதாயுஷு புத்திர பௌத்ரான் வ்ருணீஷ்வ-என்கிறது

இந்த பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –
மேலே சித்தாந்த பதில்

——————————————————————————————————————

314-மாயா மாத்ரம் து கார்த்ஸ்யேன அநபி வ்யக்த ஸ்வரூபத்வாத்–3-2-3-

து -பூர்வ பஷ வாதங்களை மறுக்கிறது –
ஸ்வப்னத்தில் காணும் ரதம் முதலியவை ஜீவனால் படைக்கப் பட்டவை அல்ல
மாயா -ஆச்சர்யம் -மித்யை அல்ல-
மாயா மாத்ரம் -ஸ்வப்னங்கள் காண்பவனால் மட்டும் அனுபவிக்கத் தக்கவையாய் -மற்றோருக்குப் பயன் படாததவையாய்
அந்தக் காலத்திலேயே அழிவதாயும் ஆச்சர்ய ரூபமாகவும் உள்ளன
இவை ஜீவனால் படைக்கக் கூடாதவை
ஏன் எனில்
ஜீவனுக்கு ஸத்ய ஸங்கல்பத்வமும் ஸம்ஸார தசையில் முற்றும் வெளிப்படாத நிலையில் நிலையில் இருப்பதால்
ஸங்கல்ப மாத்ரத்தால் படைப்பது என்பது பொருந்தாது –

காமம் காமம் புருஷ நிர்மி மாண -ஸ்ருதி -அப் புருஷனையே ஸ்ருஷ்டி கர்த்தா என்கிறது
தொடக்கத்தில் இவர் அனைவரும் உறங்குகையில் விழித்து இருக்கிறான் என்றும்
முடிவில் இவை அனைத்தும் அவன் இடத்திலே ஆஸ்ரயித்து இருக்கின்றன
அவனை யாரும் மீற முடியாது -என்றும்
பரம புருஷனுக்கே உரிய தர்மங்கள் சொல்லப் பட்டு இருப்பதால்
ஸஹி கர்த்தா என்ற தத் சப்தமும் பிரகரணத்தே பொருந்த -புருஷோத்தமனையே புலப்படுத்துகிறது –
காமம் காமம் -என்று ஸங்கல்பித்து ஸங்கல்பித்து என்றபடி –

ஜனகஸ்ய குலே ஜாதே தேவ மாயேவ நிர்மிதா -பால -2-27-
ந பவந்தி -கனவில் காண்பவை அவன் ஒருவன் மட்டுமே காணுமாறு பரம் பொருள் படைக்கிறான் என்கிறது –
இந்த ஆச்சர்யமே மாயா-சத்ய சங்கல்பன் அன்றோ –

கட உபநிஷத் -5-8-7- ஏஷூ சுப்தேஷூ ஜாகர்தி –
இவை தூங்கும் பொழுது அவன் விழித்து உள்ளான்

மேலும் அதே வரியில் –
தத் ஏவ சுக்ரம் தத் ப்ரஹ்ம தத் ஏவ அம்ருதம் உஸ்யதே தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நான்யேதி கச்சன -என்று
அந்த ப்ரஹ்மமே ஒளி அமிர்தம் அனைத்தும் ஒடுங்கி உள்ளன –
அவனைக் கடந்து ஏதும் இல்லை என்கிறது

ப்ருஹத் உபநிஷத் -4-3-10-வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா என்று
பரம புருஷனைப் பற்றிக் கூறியது

ஜீவனின் ஸத்ய ஸங்கல்பத்வம் சம்சார தசையில் ஏன் புலப்படவில்லை
என்பதற்கு விடை அளிக்கிறார் மேலே

———————————————————————————————————————–

அபஹத பாப்மத்வம் ஜீவனுக்கு சம்சாரத்தில் இல்லாத காரணம்

315-பராபித்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயௌ –3-2-4-
பரம புருஷனின் சங்கல்பம் காரணமாகவே மறைக்கப் பட்டு சம்சார பந்தம் ஏற்படுகின்றது

பராபித்யா நாத் -பரமாத்மாவின் சங்கல்பத்தாலேயே
து -பூர்வ பஷம் நிரசனம்
அஸ்ய -இந்த ஜீவனின் ஸ்வா பாவிகமான ரூபம்
திரோஹிதம்-மறைந்து உள்ளது
ததோ ஹி -அந்த ஸங்கல்பத்தாலேயே
அஸ்ய பந்த விபர்யயௌ –இந்த ஜீவனுக்கு ஸம்ஸாரமும் மோக்ஷமும் உண்டாகின்றன

தைத்ரியம் -2-7-1-யதா ஹி ஏவ ஏஷ ஏ தஸ்மின் அத்ருஷ்ய அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே
அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச
அபயம் கத பவதி யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -என்றும்
ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்

2-8-1-பீஷாச்மாத் வாத பவதே -என்றும் கூறும்-

கோஹ்யே வாந் யாத்க ப்ராண்யாத்-யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்
ஏஷஹ் ஏவ ஆனந்தயாதி பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -முதலிய ஸ்ருதிகளால்
பரமாத்மாவின் மூலமே ஜீவனின் ஸூக துக்கங்களை பறை சாற்றுகின்றன

ஸத்ய சங்கல்பம் மறையும் காரணத்தைக் கூறுகிறார் –

—————————————————————————————————————————

316-தேக யோகாத்வா ச அபி –3-2-5-

ஜீவனின் ஸ்வரூப மறைவு உடல் சேர்க்கையின் பொழுது உண்டாகிறது –
ஸூஷ்மம் நிறைந்த பிரக்ருதியின் தொடர்பால் –
ஆக ஜீவன் படைக்க சக்தன் அல்லன்

வா -விகல்பம் என்னும் பொருளில் வந்தது
ச அபி –-சங்கல்பத்தின் மறைவும்
தேக யோகாத்-தேவ மனுஷ்யாதி -அசித் -சம்பந்தத்தாலும்
பிரளய காலத்தில் நாம ரூப விபாகங்கள் அற்ற ஸூஷ்ம தசையில் உள்ள அசித்துடன் சம்பந்தத்தாலும் உண்டாகிறது
ஆகவே மறைந்த ஸங்கல்பம் உள்ள ஜீவன் ஸ்வப்ன பதார்த்தங்களை படைப்பவன் அல்லன்

கட உபநிஷத் -5-8-தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நாத்யேதி கச்சன -என்பது
பரம் பொருளுக்கே பொருந்தும்-

—————————————————————————————————————————

317-ஸூ கச்ச ஹி ஸ்ருதே ஆச ஷதே ச தத்வித —3-2-6-

கனவுகள் நற்பலன் தீய பலன்களை உணர்த்தும் ஸ்ருதிகளும் அப்படியே சொல்லும்
சாந்தோக்யம் -5-2-8-யதா கர்ம ஸூ காம்யேஷூ ஸ்த்ரியம் ச்வப்நேஷூ பச்யதி ஸ்ம்ருத்திம் தத்ர ஜாநீயாத் தஸ்மின் ஸ்வப்ன நிதர்சனே —

ஸூ கச்ச ஹி ஸ்ருதே –எக்காரணத்தால் ஸ்வப்னங்கள் எதிர்கால ஸூக துக்க ஸூசகங்கள் -என்று ஸ்ருதியில் கூறப்படுகிறது
தத்வித —ஸ்வப்ன அத்யாயம் பற்றி அறிந்தவர்கள்
ஆச ஷதே ச –ஸூ சகம் என்று கூறினார்களோ -அதனாலே ஸ்வப்ன பதார்த்தங்கள் ஜீவனால் படைக்கப் படுபவை அல்ல
அவை ஜீவனுக்கு வசப்பட்டு இருந்தால் நல்லதையே படைப்பான் -தீயவற்றைப் படைக்க மாட்டான்
காம்யமான கர்மங்கள் நிறைவேற வேண்டுபவன் கனவில் அழகிய ஸ்த்ரீயைக் கண்டால் ஐயமும்
கருத்த பல்லும் கருத்த நிறமும் உள்ள மனிதனைக் கண்டால் தோல்வியும் அடைகிறான் என்று சுருதி பலவற்றைக் காட்டுகிறது –

எனவே கனவும் சர்வேஸ்வரன் நியமனம் என்றதாயிற்று-

—————————————————————————————————————————–

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

கீழ் ஸ்வப்ன நிரூபனம் -இதில் ஸூஷ்ப்தி தசை பற்றி விசாரம்

318-தத் பாவ நாடீஷூ தத் ஸ்ருதே ஆத்மநி ச –3-2-7-

ஆழ்ந்த உறக்க நிலை -கனவுகள் அற்ற -ஸூ ஷுப்தி நிலை -நாடிகளில் நுழைந்து –

சாந்தோக்யம் -8-6-3-யத்ர ஏதத் ஸூ ப்த சமஸ்த சம்ப்ரசந்தம ஸ்வப்னம் ந விஜா நாதி ஆ ஸூ ததா நாடீஷூ ஸூ ப்தோ பவதி -என்றும்

ப்ருஹத் உபநிஷத் -2-1-19-அத யதா ஸூ ஷூப்தோ பவதி யதா ந கஸ்ய ச ந வேத ஹிதா நாம நாட்யோ
த்வாசப்ததி சஹஸ்ராணி ஹ்ருதயாத் புரீததம் அபி பிரதிஷ்டந்தே தாபி பிரத்யவஸ்ருப்ய புரீதாதி சேத -என்று
ஹிதா நாடிகள் என்று கூறப்படும் 74000 நாடிகள் இதயத்தில் நின்றும் புறப்பட்டு
புரீதத் என்னும் இடத்தை அடைந்து ஜீவன் இவைகளால் சூழப் பட்டு உறங்குகின்றான்

சாந்தோக்யம் -6-8-1- யத்ர ஏதத் புருஷ ஸ்வபுதி நாம சதா நாம்ய ததா சம்பன்னோ பவதி -என்று
ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவன் பரமாத்மா உடன் சேர்ந்து உள்ளான் -என்கிறது –

ஆக ஜீவன் உறங்கும் இடங்கள் நாடிகள் புரீதத் ப்ரஹ்மம் மூன்றும் கூறப் பட்டன
மூன்றும் வெவ்வேற இடங்கள் இல்லை
மாடியில் கட்டில் மேல் -மெத்தை மேல் உறங்குகிறான் போலே –
நாடி மாடி /புரீதத் -கட்டில் /பரமாத்மா மெத்தை -போலே –

மூன்றும் விகல்பம் என்பது பூர்வ பக்ஷம்
இம்மூன்றும் ஒன்றோடு ஓன்று அபேக்ஷை இன்றியே ஸ்தானமாக சுருதியில் சொல்லப்பட்டு இருப்பதால்
இவை தனித்தனி ஸ்தானம் என்பர்
இத்தை நிரஸிக்கிறார் இதில்
ப்ரஹ்மமே ஸாஷாத்தாக படுக்கை ஸ்தானத்தில் இருப்பதால் மூன்றும் சேர்ந்து ஸ்தானம் ஆகும்
விகல்பம் பொருந்தாது என்பதாம் –

————————————————————————————————————————————–

319-அத பிரபோத அஸ்மாத் —3-2-8-

அஸ்மாத் —இந்த ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே
பிரபோத -விழித்து எழுவதாக ஸ்ருதி
அத -இக்காரணத்தாலேயே பொருந்துகிறது

ஸ்ருதி -ஸத் -ப்ரஹ்மத்தின் இடம் இருந்து வருபவன் அங்கு இருந்து வந்ததை உணர வில்லை என்கிறது –

ப்ரஹ்மத்திடம் உறங்குவதால் அங்கே இருந்தே விழித்து எழுதல் எனபது பொருந்தும்
சாந்தோக்யம் -6-10-2-சத ஆகம்ய ந விது சதா ஆகச்சாமஹே-என்றபடி
ப்ரஹ்மத்திடம் உறங்கி விட்டு வந்த போதிலும் தாங்கள் அவ்விதம் செய்வதை ஜீவன் அறிவதில்லை

————————————————————————————————————————————–

மூன்றாவது அதிகரணம் -கர்மாநுஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் –
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது

ஸூஷுப்தனான ஜீவனே விழித்ததும் எழுந்து கொள்கிறானா
அல்லது வேறு யாராவதா என்று சம்சயம்
ஸூஷுப்தனாயும் –எல்லா உபாதைகளில் இருந்து விடுபட்டவனாயும் -ப்ரஹ்ம சம்பத்தி உள்ளவனுமான
ஜீவன் முக்தன் போன்றவனாதலால்
பழைய கர்ம சம்பந்தம் இல்லாமல் உறங்கியவனை விட்டு வேறான ஜீவனே எழுந்து கொள்கிறான் என்று பூர்வ பக்ஷம் –

சித்தாந்தம்
உறங்கினவனுக்கு கர்மாவை அழிக்க வல்ல ப்ரஹ்ம ஞானம் இல்லாமையாலும்
தனது கர்ம பலன் தன்னாலே அனுபவிக்கப்பட வேண்டியதாலும்
தானே உறங்கி எழுந்தேன் என்ற நினைவாலும்
முன்பு இருந்த படியே புலியாகவோ சிங்கமோ எப்படி இருந்ததோ அதே போலவே ஆகின்றன என்ற ஸப்தத்தாலும்
முக்தி சாதனத்தை அனுஷ்ட்டிக்க விதிக்கும் ஸாஸ்த்ர நியமனம் வீணாகி விடுமே என்பதாலும் –
உறங்கினவனே எழுந்து கொள்கிறான் என்று சித்தாந்தம் –

320-ச ஏவது கர்மானு ஸம்ருதி சப்த விதிப்ய-3-2-9-

கர்மம்– ஞாபகம் –வேத வரி –விதிகள் –ஆகிய நான்கு காரணங்களாலும் அதே ஜீவனே விழித்து எழுகிறான்
உண்மையான ஞானம் வரும் வரை கர்மங்களின் பலன்களை அனுபவித்தே தீர வேண்டுமே

சாந்தோக்யம் -6-10-2- த இஹ வ்யாகரோ வா சிம்ஹோ வா வ்ருகோ வா வரஹா வா கீடோ வா பதங்கோ வா
தம்சோ வா மசகோ வா யத்யத் பவந்தி ததா பவந்தி -என்று
புலி சிங்கம் ஓநாய் பன்றி புழு பறவை ஈ கொசு -அதே உருவில் எழுந்து வருகிறான்

சாந்தோக்யம் -8-11-1-தத் யத்ர ஏதத் ஸூ ஷூப்த –நாஹகலு அயம் ஏவம் சம்ப்ரதி ஆத்மானம் ஜா நாதி அயம் அஹம் அஸ்மி இதி நோ ஏவ
இமானி பூதானி வி நாசமேவ அபீத பவதி நாஹம் அத்ர போக்யம் பச்யாமி -என்றும்

முக்தனைப் பற்றி –
சாந்தோக்யம் -8-12-3-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே ச தத்ர பர்யேதி ஐ ஷத் கிரீடன் ரமமாண- என்றும்

7-25-2-ஸ ஸ்வ ராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும்

7-26-2-சர்வம் ஹ பச்ய பஸ்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்றும் கூறும் –

—————————————————————————————————————————————

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் –
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

இதுவரை ஜாக்ரத் -ஸ்வப்ன -ஸூஷுப்தி -தசைகளை விசாரித்து –
ஸூஷுப்திக்கு சமமான மூர்ச்சா நிலை விசாரிக்கப்படுகிறது
முதல் இரண்டிலும் ஞானம் உள்ள தசைகள்
பின் இரண்டிலும் ஞான லோப தசை

321- முக்தே அர்த்த சம்பதி பரி சேஷாத்–3-2-10-

மூர்ச்சையும் மரணமும் ஒன்றா -வெவ்வேறா -சங்கை
இந்திரிய வியாபாரங்கள் இல்லை என்பதால்
இரண்டும் ஒன்றே பூர்வ பக்ஷம்
மயக்கம் மூர்ச்சை மற்ற மூன்று நிலைகளுக்குள் சேர்ந்ததே என்பர்
மரணத்தின் பாதி நிலையே -ஞானம் இல்லாததால் விழிப்போ கனவோ இல்லை

அத்தைக் கண்டிக்கிறார்

முக்தே -மூர்ச்சை அடைந்தவனுடைய நிலை
அர்த்த சம்பதி -அரை மரணம் அடைந்த நிலையே
பரி சேஷாத்–ப்ராணாதி சர்வ வியாபாரங்களும் இல்லாமையால் ஸ்வாபமும் இல்லை –
ஜாக்ர அவஸ்தையும் இல்லை -மீண்டும் எழுந்து வருவதால் மரண நிலையம் இல்லை
தோற்றத்தின் வேறுபாட்டால் பிராணன் ஸூஷ்மமாய் இருப்பது தெரிவித்தாலும் மூர்ச்சை அரை மரண நிலையே –

ஆழ்ந்த உறக்கம் இறந்த நிலையும் இல்லை -மரணத்தின் பாதி நிலையே பிராணன் இருப்பதால் என்றவாறு

இந்த நான்கு அதிகரணங்களும் ஒரு பேடிகை
இதில் ஜீவனுக்கு நான்கு நிலைகளிலும் உள்ள துக்கங்கள் காட்டப்படுகின்றன

இனி ப்ரஹ்மம் ஜாக்ராதிகள் ஆகிய எந்த நிலையிலும் தோஷம் அற்றது என்றும்
தானே நிர்த் தோஷமான கல்யாண குணம் மிக்கது என்றும்
நான்கு அதிகரணங்களாலும் விளக்குகிறார் –

—————————————————————————————————————————————–

ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் –
அந்த்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

322-ந ஸ்தாநத அபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ர ஹி–3-2-11-

அகில ஹேய ப்ரத்ய நீயகத்வ -சமஸ்த கல்யாண ஏக குணங்கள் கொண்டவன் –
ப்ரஹ்மத்தை அடையும் பொருட்டு சம்சார விரக்தி பிறந்த பின்பு அவனது உபய லிங்கத்வம் விளக்குகிறார் –
மிகுந்த வைராக்யம் சித்திக்கவே மரண அவஸ்தை நிரூபணம் கீழ்
இனி பரம புருஷார்த்த ஆர்வம் பெருக்க உபய லிங்கத்வம் இங்கே ஸ்தாபிக்கப்படுகிறது

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-2-8-சம்போக பிராப்தி இதி சேத் ந வைசேஷ்யாத்–என்று
அந்தராத்மாவாக இருப்பது உபாசகன் தன்னை அடைய -சுக துக்கங்களை அனுபவிக்க இல்லை –

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-6-ஸ்தித்யத நாப்யாம்-ச -இருப்பதாலும் உண்பதாலும் -ஒரு மரம் இரண்டு பறவைகள் -முண்டக உபநிஷத்

ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-5–தேஹ யோகாத்வாத் -தேக சம்பந்தம் இருப்பதாலும் –

ப்ருஹத் உபநிஷத் -3-7-3- ய ப்ருதிவ்யாம் திஷ்டன் -பூமியில் இருப்பதாலும்

ப்ருஹத் உபநிஷத் -3-7-22–ய ஆத்மநி திஷ்டன் -ஆத்மாவில் இருப்பதாலும்

ப்ருஹத் உபநிஷத்-3-7-18- -ய சஷூஷூ திஷ்டன்

ப்ருஹத் உபநிஷத்-3-7-23- -ய ரேதஸ் திஷ்டன் -ரேதசில் இருப்பதாலும் –
தோஷங்கள் தட்டும் என்பர் பூர்வ பஷி —

ஜீவனைப் போலே அவனுடைய அந்தர்யாமியான பர ப்ரஹ்மத்துக்கும் ஜாக்ரத் தசையில்
ஸ்தானம் முதலியவற்றால் தோஷங்கள் ஸம்பவிக்குமா ஸம்பவிக்காதா என்று சம்ஸயம்

சர்வ அவஸ்தைகளிலும் ஸ்திதி சொல்லப்படுவதால் சர்வ தோஷங்களும் சம்பவிக்கும்
என்று பூர்வ பக்ஷம்
அதை நிராகரிக்கிறார் –

ஸ்தாநத அபி –பிருத்வீ முதலியவற்றில் அந்தர்யாமியாய் இருந்தாலும்
பரஸ்ய-ப்ரஹ்மத்துக்கு
ந –முன் கூறிய தோஷங்கள் வருவது இல்லை
ஸ்தான ப்ரயுக்தமான தோஷம் ஜீவனுக்கு வருவது போலே ப்ரஹ்மத்துக்கு இல்லை
சர்வத்ரஹி உபய லிங்கம்–ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகள் எங்கும்
நிகில தோஷங்கள் அற்றவன் என்றும்
கல்யாண குணங்களுக்கு உறைவிடமானவன் என்றும்
உபய லிங்கமாக பர ப்ரஹ்மம் பேசப்படுகிறது
ஆதலின் தோஷம் சம்பவிக்காது –

அபஹத பாப்மா இத்யாதி -யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித் போன்ற சுருதிகள்
யோ மாம் அஜம் அநாதிஞ்ச பர பராணம் -போன்ற ஸ்ம்ருதிகளும்
மேலும் பலவும் உண்டே –

சாந்தோக்யம் -8-1-5-அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்ய காம சத்ய சங்கல்ப-என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84/85–
சமஸ்த கல்யாண குணாத் மகோ சௌ ஸ்வ சக்தி லேசோத்ருத பூத வர்க்க
தேஜோ பல ஐஸ்வர்ய மஹாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி
பர பராணாம் சகலா ந யத்ர க்லேசாதய சந்தி பராவரே சே-என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-51-சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ணு வாக்யம் பரமபதம் –
தோஷம் அற்றவன் என்றதாயிற்று

————————————————————————————————————————————-

323-பேதாத் இதி சேத் ந ப்ரத்யேகம் அதத் வசநாத் –3-1-12-

பேதாத் இதி சேத் –இயற்கையில் பாபம் அற்ற ஜீவனுக்கு சரீர சம்பந்தத்தால் ஏற்படும் அவஸ்தா பேதத்தால் தோஷங்கள் ஏற்படுவது போல்
பரமாத்மாவுக்கும் பிருத்வீ முதலிய சரீர சம்பந்த அவஸ்தா பேதத்தால் தோஷங்கள் சம்பவிக்கலாமே என்னில்
ந -வாராது
ப்ரத்யேகம் அதத் வசநாத் –ஒவ்வொரு பர்யாயத்திலும் ஏஷ ஆத்மா அந்தர்யம் அம்ருத –என்று
தோஷம் அற்றவன் என்று சொல்வதால்
சரீர சம்பந்தம் மட்டும் தோஷத்துக்கு காரணம் ஆகாது
ஜீவனுக்கோ -பராபித்யா னுத்து திரோ ஹிதம் என்றபடி பரமாத்மாவின் ஸங்கல்பத்தாலே கர்மாதீனமான
ஞான சங்கோசத்துக்குக் காரணமான சரீர சம்பந்தம் ஏற்படுவதால் தோஷங்கள் உண்டாகின்றன என்பதாகும் –

சரீர தொடர்பு கூறும் இடங்களிலும் பரமாத்மா தோஷம் அற்றவன் –
ப்ருஹத் உபநிஷத் –
3-7-3-ய ப்ருதிவ்யான் திஷ்டன் –
3-7-23- ய ஆத்மா நி திஷ்டன் -இடங்களிலும்
ச தே ஆத்மா அந்தர்யாமி அம்ருத -தோஷம் அற்று தானாகவே -கர்மம் அடியாக அன்று -உள்ளான்

ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-4-பராபித்யா நாத் து திரோஹிதம் -ஸூ த்ரத்தில் நிரூபிக்கக் கண்டோம்

அசேதனப் பொருள்களும் சில கால கட்டத்தில் அவனது சங்கல்பத்தின் படி இன்பம் பயக்கும் படியைக் காண்கிறோம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-48-
நரக ஸ்வர்க்க சம்ஜ்ஞே வை பாப புனே த்விஜோத்தம -வஸ்து ஏகம் ஏவ துக்காய ஸூ காய ஈர்ஷ்யா கமாய ச –
கோபாய ச யத தஸ்மாத் வஸ்து வஸ்தவாமகம் குத-தத் ஏவ ப்ரீதயே பூத்வா புன துக்காய ஜாயதே –
தத் ஏவ கோபாய யத் பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –என்றபடி

ப்ரஹ்மத்துக்கு உடல் தொடர்பு லீலைகளுக்கு மட்டுமே இருக்கும்-

————————————————————————————————————————————

324-அபி ச ஏவம் ஏகே –3-1-13-

முண்டக உபநிஷத் -3-1-1-
த்வா ஸ்பர்ணா சயுஜா சகாய சமா நம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே தயரன்யே பிப்பலம் ச்வாத்வத்தி
அனச்னன் அந்ய அபிசாகசீதி -என்றும்

சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி –என்றும் உண்டே

அபி ச –மேலும்
ஏகே -சில வேதாந்திகள்
ஏவம்-ஒரே சரீரத்தில் உள்ள ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் தோஷத்தையும் அது இல்லாமையையும் கூறி
நியமனம் ஐஸ்வர்யம் பிரகாஸம் -போன்றவற்றை ப்ரஹ்மத்துக்கு வெளிப்படையாக ஸ்தாபிக்கின்றனர்
கர்மத்தை அனுபவியாமை ப்ரஹ்மத்துக்கு மட்டும் எவ்வாறு கூடும் என்ற ஆஷேபம் எழ
அதற்கு விடை அருளுகிறார்

கர்ம வசப்படுவானோ பரம் பொருளும் என்றால்
ரூபம் அற்றவன் என்கிறது அடுத்த ஸூத்ரத்தில்-

———————————————————————————————————————————–

325-அரூபவதேவ ஹி தத் ப்ரதா நத்வாத் —3-2-14-

தத் அரூபவதேவ ஹி –ஜீவனைப் போலே கர்ம வச்யத்வம் இல்லாமையால்
ஸமஸ்த அந்தர்யாமியாக இருந்தாலும் அரூபத்வமே இவனுக்கு
ஏன் எனில்
ப்ரதா நத்வாத்–நிர்வாஹனானமையால் -இவனே ப்ரதானன்
இவன் ஸ்வ தந்த்ரன் அன்றோ -நாம ரூப காரியங்களின் துக்காதிகளின் ஸ்பர்சம் இல்லாதவன் என்றதாயிற்று –

கர்மம் அடியாக தேவாதி மனுஷ்ய தேகம் எடுப்பது போலே ப்ரஹ்மத்துக்கு இல்லையே –
உள்ளே புகுந்தாலும் நாம ரூபங்களால் பாதிக்கப் படுவதில்லை
சந்தோக்யம் -8-14-1-ஆகாசோ வை நாம ரூபாயோ நிர்வஹிதா தே யதந்த்ரா தத் ப்ரஹ்மம்-

அந்தர்யாமியாக இருந்தும் தோஷம் தட்டாமல் உள்ளான்-

ப்ரஹ்மத்துக்கு எவ்வாறு விதி வஸத்வம் நீங்குகிறது என்னில்
விதி இரண்டு விதம்
அறியாததை அறிவிப்பது
ஒன்றில் ஈடுபடாதவனை ஈடுபடுத்துவது
இவனோ ஸர்வஞ்ஞன் -ஸர்வ நியந்தா
எனவே அஞ்ஞானமோ பராதீனத் தன்மையும் இல்லாத ப்ரஹ்மத்திடம் விதிகள் சக்தியை இழந்து
அவனது விசேஷணமான ஜீவன் இடத்தில் பயன் உள்ளவை ஆகின்றன
ஆகவே ப்ரஹ்மம் உபய லிங்கமே என்றதாயிற்று –

இனி ஸத்யம் ஞானம் -ஸ்ருதியில் விசேஷம் அற்ற -ப்ரகாஸ மாத்ர -ப்ரஹ்மமே சொல்வதால்
உபய லிங்கம் எப்படிக் கூறலாம் என்ற சங்கைக்கு பதில் அருளுகிறார் –

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்ரியம் -1-1-ஒளி ரூபம் என்றும் –

ப்ருஹத் உபநிஷத் –நேதி நேதி-இல்லை இல்லை -என்பதால்

கல்யாண குணங்கள் உள்ளவை என்பது எவ்வாறு என்றால்

————————————————————————————————————————————-

326–பிரகாசவத் ச அவையர்த்தாத் —3-2-15-

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்ற சுருதி பொய்யாகக் கூடாது என்பதால்
ஒளி மயமானது ப்ரஹ்மம் எனபது போலே
யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித் இத்யாதி வாக்கியங்களும் ச பலமாக வேண்டுமே

சத்ய சங்கல்பன் ஜகத் காரணன் அந்தர்யாமி -அகில ஹேய ப்ரத்யநீகத்வம் அனந்த கல்யாண குண சாகரம்
என்ற ஸ்ருதி வாக்யங்களையும் ஏற்க வேண்டும்

—————————————————————————————————————————————

327-ஆஹ ச தந்மாத்ரம்–3-2-16–

சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்மம் என்று ஒளி மயம் என்றது மற்றையவற்றை மறுக்க வில்லை –
நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -4-2-4- எதனால் என்பதை மேலே பார்ப்போம்

————————————————————————————————————————-

328-தர்சயதி ச அத அபி ஸ்மர்யதே-3-2-17-

தர்சயதி ச அத அபி ஸ்மர்யதே-அதோ என்று முற்றிலும் –
முழு வேதாந்தமும் நிரஸ்த நிகில தோஷனாய்
கல்யாண குணகரனாய் உள்ள உபய லக்ஷணங்களையும் காட்டுகிறது –

உபய லிங்கத்வம் அநேக ஸ்ருதி ஸ்ம்ருதிகளும் சொல்லுமே –

ஸ்வேதாஸ்வதார உபநிஷத் –
6-7-தம் ஈஸ்வரானாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதாநாம் பரமம் ச தைவதம் -என்றும்

6-9-ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கச்சித் ஜனிதா ந சாதிப -என்றும்

6-8-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச் சாப்யதிகச்ச த்ருஸ்யதே
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -என்றும்

முண்டக உபநிஷத் -1-1-9-ய சர்வஜ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப -என்றும்

தைத்ரிய ஆனந்த வல்லி–2-8-1-பீஷாஸ்மாத்வாத பவதே பீஷோ தேதி சூர்ய -என்றும்

தைத்ரிய ஆனந்த வல்லி-
2-8-ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -என்றும்

2-9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந-என்றும்

ஸ்வேதாஸ்வதார உபநிஷத் -6-19-நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் என்றும்

ஸ்ரீ கீதையில் பல இடங்களில் – –
10-3-யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மகேஸ்வரம் -என்றும் –

10-42-விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ் நம் ஏகாம் சேந ஸ்திதோ ஜகத் -என்றும்

9-10-மயா அத்ய ஷேண பிரகிருதி ஸூயதே ச சராசரம் ஹேது நா அநேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்

15-17-உத்தம புருஷ த்வன்ய பரமாத் மேத்யுதா ஹ்ருத யோ லோகத்ரயமா விஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர-என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-46/47–
சர்வஜ்ஞ சர்வக்ருத் சர்வ சக்தி ஞான பலர்த்திமான் அன்யூனஸ் சாபி அவ்ருத்திச்ச ஸ்வாதிநோ அநாதிமான் வசீ
க்லமதந்த்ரீ பயக்ரோத காமாதி பிரசம்யூத நிரவத்ய பர ப்ராப்தே நிரதிஷ்டோ அஷர க்ரம-என்றும்

ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்தும்
உபய லிங்கங்கள் நிறைந்தவன் என்பதை பல இடங்களிலும் சொல்லிற்றே –

———————————————————————————————————————————–

329-அத ஏவ ச உபமா சூரியகாதிவத்–3-2-18-

ஆகவே நீரில் -கண்ணாடியில் -பிரதிபலிக்கும் சூர்யன் போன்றவை
பர ப்ரஹ்மத்துக்கு உபமானமாக சொல்லப் பட்டன

ப்ருத்வீ முதலிய ஸ்தானங்களில் ஏற்படும் தோஷம் உபய லிங்க விஸிஷ்ட ப்ரஹ்மத்திடம்
ஏற்படாத காரணத்தாலேயே இந்த த்ருஷ்டாந்தங்கள்

யாஜ்ஞாவல்க்ய ஸ்ம்ருதி 3-144-
ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் –ததாத்மைகோ ஹ்ய நேகஸ்தோ ஜலாதாரேஷ்வி வாம்சுமான்
ஏக ஏவ ஹி பூதாத்மா போதே பூதே வ்யவஸ்திதே ஏகதா பஹூதா ச ஏவ த்ருச்யதே ஜல சந்த்ரவத் –

ஒரே ஆகாசம் எவ்வாறு குடம் முதலியவற்றில் வெவ்வேறாகத் தோன்றுகிறதோ
ஒரே ஸூர்யன் நீர் நிலைகளில் வெவ்வேறாகத் தோன்றுகிறானோ
அப்படியே ஒருவனே என்று ஸ்தான ப்ரயுக்தமான விரிதலோ சுருக்கமா -இல்லாமல் –
தோஷம் தட்டாத ஒரே தன்மையுடன் பல பொருள்களில் ப்ரஹ்மம் இருப்பான் என்கிறது-

———————————————————————————————————————————–

330-அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம் —3-2-19-

நீரில் உள்ளது போலே பொய்யானவன் அல்லவே
ப்ரஹ்மம்-உண்மையாகவே உள்ளான் –

ப்ருஹத் உபநிஷத் –
3-7-3- ய பிருதிவ்யாம் திஷ்டன் -என்றும் –

3-7-4- ய அப்ஸூ திஷ்டன் -என்றும் –

3-7-22-ய ஆத்மநி திஷ்டன் -என்றும்

தோஷம் தட்டாது என்பதற்கு சொல்லிய திருஷ்டாந்தம் உண்மையாக இருப்பவன் ஆகையால்
பொருந்தாது என்பர் பூர்வ பஷி

து -ஸப்தம் பூர்வ பக்ஷத்தைக் காட்டுகிறது
அம்புவத் அக்ரஹணாத் –தண்ணீரில் உண்மையாக ஸூர்யன் க்ரஹிக்கப் படாதது போலே
ப்ருத்வீ முதலியவற்றில் ப்ரஹ்மம் க்ரஹிக்கப்பட வில்லை
ஆதலால்
ந ததாத்வம் —ஸூர்யனிடம் ஜலகத தோஷம் தட்டாதது போல்
ப்ரஹ்மத்தின் இடமும் இவற்றின் தோஷம் தட்டாது என்று சொல்ல முடியாது
ஏன் எனில்
அவற்றில் உண்மையாகவே ப்ரஹ்மம் இருப்பதால்
என்று பூர்வ பக்ஷம்

—————————————————————————————————————————————-

331–வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய சமஞ்ஜஸ்யாத் ஏவம் தர்சநாத் ச –3-2-20-

சிறிய நீர் நிலை பெரிய நீர் நிலை பிம்மம் தோன்றுவது போலே
சுருக்கமும் விரிவும் இல்லாதவன் என்பதற்கே திருஷ்டாந்தம்

ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் -வெற்றிடம் குடங்களில் தனித் தனியே உள்ளது போலே
ஜலதாரேஷூ இவ அம்சுமான் -நீர் நிலைகளில் சூரியன் போலே பலவற்றிலும் உள்ளான்-

அந்தர்பாவாத் -ப்ருத்வீ முதலான விஷம ஸ்தானங்களில் உள்ள பரமாத்வாவுக்கு -அவற்றினுள் இருப்பதாலேயே
வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் -நீர் நிலைகளில் ஸூர்யனை உபமானமாகக் காட்டியமையால் சுருக்கமும் விரிவும் விலக்கப் படுகின்றன
இது எவ்வாறு தோன்றுகிறது என்றால்
உபய சமஞ்ஜஸ்யாத் ஏவம் தர்சநாத் ச -இரண்டு உதாரணங்களும் அப்போதே பொருந்துவனவாகும்
குடாகாசம் நீர் நிலைகளில் உண்மை இல்லாத ஸூர்யனையும் காட்டியது
பரமாத்மாவுக்கு ப்ருத்வீ யாதிகளின் தோஷம் ஒட்டாது என்று காட்டவே
இரண்டு உதாரணங்கள் காட்டி ஒரு அம்சம்  ஒத்து இருப்பதைக் காட்டியவாறு
இம்மாணவன் சிங்கம் என்றால் க்ரூரத் தன்மைகளில் ஒன்றை மட்டும் காட்டவே
உவமையில் ஏதேனும் ஒரு அம்சத்தில் தான் ஒற்றுமை காட்ட வேண்டும்

ப்ருஹத் உபநிஷத் -2-3-1-
த்வே வாவா ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் ச அமூர்த்தம் ச -என்று
ஸ்தூல அஸ்தூல ரூபங்கள் இரண்டும் உண்டு என்று சொல்லத் தொடங்கி–

2-3-6-தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபம் யதா மஹாரஜநம் வாச -என்று
திவ்யமான ரூபம் உள்ளது என்று சொல்லி தொடர்ந்து –

அதாத ஆதேச நேதி நேதி இதி நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரம் அஸ்தி என்று
இதி -என்றது –மூர்த்தம் அமூர்த்தம் ஸூ ஷ்மம் ஸ்தூலம் போன்றவை சொல்லி
உடனே ந -என்று இவற்றை நிராகரித்து
ப்ரஹ்மம் மட்டுமே உண்மை மற்றவை அவன் மேல் ஏறிட்டுக் கூறப்பட்டன என்று சொல்லி
தோஷம் அற்றவன் என்று எவ்வாறு சொல்ல முடியம்
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்ம ரூபத்வம் தடுக்கப் படுகிறதே
உபய லிங்கத்வவம் அன்று என்று தோற்றும்
என்பர் பூர்வ பஷிகள்

அதற்கு பதிலாக அடுத்த ஸூத்ரம் –

——————————————————————————————————————————————-

332-பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி தாதா ப்ரவீதி ச பூய–3-2-21-

முன்பு கூறிய ரூபங்களை மட்டுமே நிராகரித்து
அனைத்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் என்று மேலே சொல்வதால்
விக்ரஹத்தை கண்டு ப்ரஹ்மம் இவ்வளவே என்று நினைக்கலாம் –

அத்தையே நிராகரித்தது –

பிராக்ருத ஏதாவத்த்வம் ஹி பிரதிஷேததி -முன் தொடக்கப்பட்ட ஸ்தூல ஸூஷ்ம ரூபமான பிரபஞ்சம் மட்டும்
ப்ரஹ்மத்தின் ரூபம் அன்று என்றே –
அதாத ஆதேசோ நேதி நேதி-என்ற சுருதியில் விளக்கப் படுகிறது
தாதா ப்ரவீதி ச பூய-முன் சொன்னதைக் காட்டிலும் பூயஸ்த்வத்தை -பெருமையை –
வாக்ய சேஷம் சொல்லுகிறது

நேதி நேதி என்று தொடர்ந்து ப்ருஹத் உபநிஷத் -2-3-6-
ந ஹி ஏ தஸ்மாத் இதி நேத்யன்யத் பரமஸ்தி அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை
சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது

பிராணன் உள்ளதால் ஜீவன் -ஆகாயம் போல் அல்லாமல் நித்யம் சத்யம் –
இப்படிப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் பர ப்ரஹ்மம்

ஞானம் சுருங்குவதும் விரிவதும் இல்லை -பாபங்களால் தீண்டப் படாதவன் -கர்ம வச்யன் இல்லை –
அதனால் இவர்களைக் காட்டிலும் மேலான சத்யம் என்கிறது –

ப்ரஹ்மம் எனபது விக்ரஹம் மாத்ரமே அத்தைக் கொண்டு அறியலாம் என்பதையே
நேதி நேதி என்கிறது
சாஸ்திரம் ஒன்றே அவனை அறிய பிரமாணம் என்பதால்

இதி ந -இது முன் சொன்ன ப்ரப்ரகாரம் அன்று ப்ரஹ்மம்
நேதி நேதி என்று குறிப்பிட்ட ப்ரஹ்மத்தை விட்டு
அந்யத் நஹ் யஸ்தி-வஸ்து ஸ்வ ரூபத்தாலும் குணத்தாலும் உயர்ந்தது வேறு இல்லை என்று பொருள்
ஸத்யம் என்பது ப்ரஹ்மத்தின் பெயர்
ஏன் அப்பெயர் வந்தது என்னில்
ப்ராணனுடன் கூடவே சஞ்சரிப்பதாலும்
ஆகாசம் போல் ஸ்வரூப விகாரம் பெறாததால் ஜீவன் ஸத்யம் எனப்படுகிறான்
ஸ்வரூப விகாரமும் ஞான சங்கோச ஸ்வபாவ விகாரமும் இல்லாததால்
ப்ரஹ்மம் தேப்ய -ஜீவர்களைக் காட்டிலும் அதிக ஸத்யன்
ஆகையால் வேறு ப்ரமாணங்களால் அறியாத ப்ரஹ்மதுக்கு மூர்த்த அமூர்த்த ரூபமான பிரபஞ்சத்தை
பிரகாரமாக உபதேசிகையாலே உபய லிங்கமே ப்ரஹ்மம்
ஆகவே திரும்ப திரும்ப பிரகார விசேஷமே உபதேசிக்கப் படுகையாலே
நேதி நேதி என்பதன் மூலம் முன் ப்ரக்ருதமான அளவு மட்டும் நிஷேதிக்கப் படுகிறது

மேல் ஒரு ஆசங்கை
உண்மையில் ப்ரத்யக்ஷத்தால் நிர்விசேஷ ப்ரஹ்மம் மட்டுமே க்ரஹிக்கப் படுகிறது
அதற்கு வேறுபட்டதும் பிராந்தியால் ஏற்படுவதுமான விசேஷ ரூபத்தை
நேதி நேதி என்று மறுக்கிறது என்று கொள்ளலாமே என்னில்
இதற்கு மறுப்புக் கூறுகிறார் மேல் –

———————————————————————————————————————————————–

333-தத் அவ்யக்தம் ஆவ ஹி –3-2-22-

தத் -அந்தப் ப்ரஹ்மம்
அவ்யக்தம் -சப்தம் தவிர்த்த எந்தப் ப்ரமாணத்தாலும் புலப்படுவது அன்று
ஆஹஹி -ஸ்ருதி அவ்வாறே சொல்கிறது

சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் என்பதை
கட உபநிஷத் -6-9-ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யதி கச்ச ந ஏ நம் -என்றும்

முண்டக உபநிஷத் -3-2-8-ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா -என்கிறதே –

மேலும் ஒரு ஸூத்ரத்தால் உணர்த்துகிறார் –

———————————————————————————————————————————————-

334-அபி சம்ராதனே ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–3-2-24-

பக்தி என்னும் உபாசனம் கொண்டே ப்ரஹ்மத்தை அறிய -ப்ரஹ்மத்துக்கு மகிழ்வு ஏற்ப்படுத்தி –
உணர இயலும் என்று ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் சொல்லும் –

முண்டக உபநிஷத் -3-2-3-
நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே
தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்றும்

3-1-8-ஜ்ஞான பிரசாதேன விசுத்த சத்த்வ ததஸ்து தம் பச்யதி நிஷ்கலம் த்யாய மாந-என்றும்

ஸ்ரீ கீதையில் -11-53- நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேன ந சேஜ்யயா-என்றும்

11-54-பக்த்யா த்வ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுனா ஜ்ஞாதும் த்ரஷ்டும்
ச தத்த்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–என்றும் சொல்லுமே

அபி ச -மேலும்
சம்ராதனே -மிகவும் ப்ரீதி கரமான உபாஸனம் இருந்தால் பகவானின் ஸாஷாத் காரம் ஸம்பவிக்கும்
வேறு பிரகாரங்களாலே ஸம்பவிக்காது
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்–ஸ்ருதி ஸ்ம்ருதிகள் இருக்கிற படியால் என்றபடி –

சம்ராதனே -ஆழ்ந்த பக்தி என்னும் உபாசனத்தையே ஸூத்ரத்தில் குறிக்கப் படுகிறது –
இதுவே அவனுக்கு மகிழ்வு ஏற்படுத்தும் என்றதாயிற்று-

———————————————————————————————————————————————-

335-பிரகாசாதி வத் அவைசேஷ்யம் பிரகாச ச கர்மணி அப்யாசாத் –3-2-25-

ஞான ஆனந்த மயம் போலேவே மூர்த்தமாகவும் அமூர்தமாகவும் உள்ள பொருள்களை உடலாகக் கொண்ட
ப்ரஹ்மம் என்றே யோகிகள் இடைவிடாத உபாசனத்தால் உணர்ந்து காண்கிறார்கள்

ப்ருஹத் உபநிஷத் -1-4-10-தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபேத அஹம் மநுரபவம் ஸூர்யச்ச-என்கிறது –

இதனாலும் மூர்த்த அமூர்த்த ரூபத்துடன் கூடியமை தடுக்கப் படவில்லை –
வாமதேவன் கூறினார் -நான் மனுவாய் இருந்தேன் -பின்பு ஸூர்யன் ஆனேன் –
அத்தகையவருக்கு பக்தியோகம் என்னும் கர்மாவினால்
பிரகாசாதி வத் ச -தர்சனம் முதலியவை உண்டானவோ
அவைசேஷ்யம் பிரகாச ச கர்மணி அப்யாசாத்–அவர்களின் ப்ரஹ்ம ஸ்வரூபம் குணம் இவை பற்றிய தர்சனத்தில்
ஞானம் ஆனந்தம் முதலிய ஸ்வரூபம் போலவே
மூர்த்தம் அமூர்த்தம் என்னும் ரூபமும் விசேஷம் இன்றி இடம் பெற்றதே
ஜகத் நஸ்வரத் தன்மைக்கு மட்டும் ப்ரஹ்ம குணத்வம் தடுக்கப் படுகிறது என்ற விசேஷம் ஏதும் இல்லை

ஆகவே
மூர்த்த அமூர்த்த ரூப விசிஷ்டம் ப்ரஹ்மம் என்பதற்குத் தடையில்லை என்பதாம் –

———————————————————————————————————————————————-

336- அதோ அனந்தேன ததாஹி லிங்கம்–3-2-26-

அனந்தேன -எல்லையில்லாத கல்யாண குண கணங்களுடன் சம்பந்தம்
அதோ –கூறிய காரணங்களால் நிலை யாயிற்று
ததாஹி -அப்படி இருந்தாலே
லிங்கம்-உபய லிங்கம் ப்ரஹ்மம் என்பது பொருந்தும்

மேலே கூறியவற்றால் உபய லிங்கமாகவே உள்ளது என்று காட்டி அதிகரணத்தை நியமிக்கிறார்

அளவற்ற திருக் கல்யாணங்களை கொண்டதாயும்
அகில ஹேய ப்ரத்ய நீகனாயும் ப்ரஹ்மம் உண்டு
என்று நிரூபித்தாயிற்று-

உபசர்க அபவாத நியாயம் -பொது விதியும் சிறப்பான விதியும் -விரோத அதிகரண நியாயம்
இவற்றைக் கொண்டு இவை விளக்கத் தக்கது
இதில் அபேச்சேத அதிகரணத்துக்கு இடம் இல்லை என்று கூற வேண்டும்

பிராணிகளை ஹிம்சிக்கலாவது பொது விதி
அக்னீ ஷோமீய யாகத்தில் பசுவை ஹிம்ஸிக்கலாம் சிறப்பு விதி
இந்த சிறப்பு விதியை விட்டு வேறு தன் இச்சையால் செய்யும் ஹிம்சைகளைத் தடை செய்வதாகக் கொள்ளுவதே
உத்சர்க அபவாத நியாயம் எனப்படுகிறது

அதே போலே நிர்க்குணம் நிரஞ்சனம் அத்ரேஸ்யம் -முதலியவை பொது விதிகள் –
ஸர்வஞ்ஞன்-ஸ்வா பாவிக ஞானம் பலம் ஸம்ருத்திகளை யுடையவன் என்பவை அபவாதங்கள் -சிறப்பானவை –
இவற்றால் ஸித்தமான விசேஷ குணங்களை விட்டு வேறான விரஜோ -விம்ருத்யு -விசோகா -விஜிகத்சோ-அபி பாஸ-என்று
சிறப்பாய் நிஷேதிக்கப்பட்ட ஹேய -தீய குணங்கள் இல்லை என்பதையே நிர்க்குணம் இத்யாதியால் பொதுவாகச் சொல்வதால்
நிர் குண -ச குண ஸ்ருதிகளுக்கு ஹேய ப்ரத்ய நீகத்வம் -கல்யாண குண கரத்வம் என்ற விஷயம் வேறுபடுவதால் விரோதம் இல்லை
விதி நிஷேதங்களுக்கும் இவாறே விரோதம் சாந்தமாகிறது

இங்கு அபேச்சேத அதிகரண நியாயத்துக்கு இடம் இல்லை
அதாவது
ஒரு யாக விசேஷத்தில் ஐந்து ரித்துவிக்குகள் ஒருவருக்கு ஒருவர் கச்சத்தைப் பிடித்துக் கொண்டு பின் செல்வர் –
அத்வர்யுவை -ப்ரஸ்தோதாவும் -அவரை ப்ரதி ஹர்த்தாவும் தொட்டுக் கொண்டே செல்ல வேண்டும் –
இவர்கள் அன்வாரம்பணத்துக்கு-தொட்டுக் கொண்டே செல்வத்துக்கு -தடை ஏற்பட்டால் பிராயச்சித்தம் செய்யுமாறு விதிக்கப்படுகிறது
1- உத்காதா விட்டால் தக்ஷிணை இன்றி யாகத்தை முடித்து மறுபடியும் அவனைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்
2-ப்ரதி ஹர்த்தாவால் அபச்சேதம் வந்தால் ஸர்வஸ்வத்தையும் தானம் செய்ய வேண்டும்
இந்த இடத்தில் உத்காதாவின் அபச்சேத நிமித்தமான பிராயச்சித்த புத்தி
ப்ரதி கர்த்தாவின் அபச்சேத நிமித்தமான பிராயச்சித்த புத்தியால் பாதிக்கப் படுகிறது என்பது அபச்சேத நியாயம்

இந்த நியாயத்தாலே அத்வைதிகள் நிர்க்குண ஸாஸ்த்ரம் குண ப்ராப்தியை எதிர்பார்ப்பதால் பிரபலமானது பரமானது
ஆதலின் இதனால் ச குண சாஸ்திரம் பாதிக்கப் படுவதால் ப்ரஹ்மம் நிர்க்குணம் என்றே தேறும் என்பர்

அது அனு உசிதமானது -ஏன் எனில்
உத்காதாவின் அபச்சேதம் ஏற்படுகையில் ப்ரதி கர்த்தாவின் அபச்சேதம் உண்டாக வேணும் என்ற நிர்பந்தம் இல்லை
இரண்டும் முறையே க்ரமமாக ஏற்பட வேண்டும் என்பதும் இல்லை
க்ரமமாக ஏற்பட்டாலும் உத்காதாவின் அபச்சேதம் முதலிலும் ப்ரதி கர்த்தாவின் அபச்சேதம்
அடுத்தபடி ஏற்படுவதையும் இருக்கட்டும்
அதுவே மாறியும் இருக்கட்டும்

பூர்வ அபூர்வ க்ரம நியதம் இல்லாமையாலே விரோதத்துக்கோ க்ரமத்துக்கோ எங்கு நியமம் உள்ளதோ
அங்கு அபச்சேத நியாயம் வாராது
அதிலும் அபச்சேத நியாயம் சொன்னால் எப்போதும் பூர்வ ஸாஸ்த்ரத்துக்கு அப்ராமாண்யம் வந்து சேரும் –
அதை ஆச்சார்யர்களும் அருளினார்கள்
உன்க்கு பூர்வ அபூர்வம் விரோதம் முந்தையதற்கு அப்ராமாண்யம் இவை நியதமாய் இல்லையோ
அங்கு அபச்சேத நியாயம் பொருந்தும் என்றனர்
பூர்வ அபர்யம் விரோதச்ச பூர்வா ப்ராமாண்யம் ஏவச நியமான் நாஸ்தி தத்ராஸவ் அபச்சேத நயோ பவேத் -என்று –

ஆகவே அபச்சேத நியாயத்தைக் கொண்டு -நியத பரமான நிர்க் குண சாஸ்திரம் கொண்டு ச குண ஸாஸ்த்ரத்தைப் பாதிக்க இயலாது
நிர்க்குண ஸாஸ்த்ரம் நியத பரமாகையாலே இதை அபேக்ஷித்து உபக்ரம அதி கரண நியாயப்படி ச குண ஸாஸ்திரமே பிரபலம்
அதாவது
பிரஜாபதி வருணாய அஸ்வம் அநயத்-என்ற இடத்தில் அஸ்வத்தைப் ப்ரதி க்ரஹிக்க இஷ்டி கூறப்படுகிறது
இது உபக்ரமம் தொடக்கம் -தான் தோன்றும் போது விரோதம் தோன்றாததாலே அஸஞ்சாத விரோதி எனப்படும் -இது பிரபலம்
இந்த இஷ்டி செய்வது தாதாவுக்கா ப்ரதி க்ரஹீதாவுக்கா என்ற சங்கை வந்தால் உபக்ரம வாக்கியத்தை அனுசரித்து
தாதாவுக்கே என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது
இந்த நியாயத்தைக் கொண்டு ச குண நிர்க்குண வாக்கியங்களை ஆராய்ந்தால்
ச குண விதி பூர்வ பாவி என்றும் நிர்க்குண விதி பரமானது என்றும்
அவர்கள் கூற்றுப்படி உபக்ரமமான ஸாஸ்த்ரத்தை விட பரமான -உப ஸம்ஹாரமான நிர்க்குண ஸாஸ்த்ரம் துர்ப்பலம் என்று தேறுகிறது
ஆதலின் பரத்தைக் கொண்டு பூர்வத்தைப் பாதிக்க இயலாது
அப்படிப் பாதிக்கும் என்றால் மாத்யமிகளின் ஸர்வ ஸூந்ய வாதம் பிரமம் ஆதலின் அவன் மதமே வெற்றி பெறும் –

———————————————————————————————————————————————–

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் –
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே
ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

கீழே ப்ரஹ்மத்துக்கு நிர்தோஷத்வம் சாதிக்கப் பட்டது
அதை நிலை நாட்ட அசித் வஸ்துக்களும் ப்ரஹ்மத்தின் ரூபமே என்று சாதிக்க வேண்டும்
அசித்து ப்ரஹ்மத்தின் ரூபம் என்பது அஹி குண்டல நியாயத்தால் ஸித்திக்குமா
பிரபையும்  விளக்கு அல்லது ஸூர்யன் போன்ற நியாயத்தால் ஒரே ஜாதி என்ற முறையில் ஸித்திப்பதா
அன்றி விசேஷண விசேஷ்ய பாவத்தால் ஸித்திக்குமா
என்ற சம்சயத்தால் இவ்வதிகரணம் தோன்றுகிறது –

337-உபய வ்யபதேசாத் து அஹி குண்டலவத் —3-2-26-

இது பூர்வ பஷ ஸூத்ரம் –
சுருண்டும் நீண்டும் உள்ள பாம்பு போலே ப்ரஹ்மம் –
த்வேவாவ ப்ரஹ்மணோ ரூப-மூர்த்தம் அமூர்தம் இரண்டும் ப்ரஹ்மத்தின் ரூபம்

தொடர்ந்து
அதாத ஆதேச நேதி நேதி -ப்ருஹத் உபநிஷத் -2-3-6- என்று
ப்ரஹ்மம் அசித் பொருள்கள் அளவு மட்டும் அல்ல என்றது

நஹி ஏ தஸ்மாத் ந அத்ய அன்யத பரமச்ய-என்று ப்ரஹ்மத்தை விட உயர்ந்த பொருள் இல்லை -என்றும்
இதையே திருடமாக
அத நாமதேயம் சத்யச்ய சத்யம் பிராண ஏவ சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் என்றும்

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -6-16-பிரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச – என்றும் –
6-13-நித்யோ நித்யச் சேதநச்சேதநா நாம் -என்றும்

மஹா நாராயண உபநிஷத் -13-1-பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் –என்றும் சொல்லிற்று-

அசேதனம் ப்ரஹ்ம ரூபம் என்பது
1-ப்ரஹ்ம ஸ்வரூபமமே அசித் ரூபமாக பரிணமிப்பதாலே ஏற்படுகிறதா
2- அல்லது ப்ரஹ்மமும் அசித்தும் ஒரே ஜாதி என்பதால் ஏற்படுகிறதா
3-ஜீவனைப் போல் சரீரம் என்பதால் ப்ரஹ்மத்தின் விசேஷணம் என்பதாலா

1-சுருண்டும் நீண்டுமுள்ள பாம்பு போலேயா
2-சூரியனும் ஒளிக் காற்றையும் போலேயா
3-அம்சம் அம்சி பாவமா –
மூன்று வித கேள்விகள் ப்ரஹ்மத்துக்கும் அசித்துக்கும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-பிரக்ருதிச்ச பிரதிஜ்ஞாத் ருஷ்டாந்தா னுபரோதாத் -என்று
ப்ரஹ்மமே  உபாதான காரணம் என்றும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -2-1-15-தத நன்யத்வம் ஆரம்பண சப்தாதிப்ய-பொருளும் காரணமும் வேறு அல்ல -என்றும்
அம்ச அம்சி பாவம் முன்பே கூறப்பட்டது

மூன்றில் பாம்பு போலே நீட்டியும் சுருண்டும் என்பதே அசித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் என்பதே சரியான விடையாகும்

ப்ரஹ்ம ஏவ இதம் சர்வம் -ப்ருஹத் உபநிஷத் -4-5-1- இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்றும்

சாந்தோக்யம் -7-25-2-ஆத்மா ஏவ இதம் சர்வம் -இவை அனைத்தும் ஆத்மாவே

சாந்தோக்யம் -6-3-2-ஹந்தா ஹமிமாஸ் திஸ்ரோ தேவதா அநேன ஜீவேன ஆத்ம அநு ப்ரவச்ய -என்று
தேஜஸ் நீர் பூமி மூன்றின் உள்ளே புகுந்து அநேக நாம ரூபங்களை எடுக்கிறேன்

உபய வ்யபதேயாத் து அஹி குண்டலவத் —
து -ஸப்தம் -ஏவ போல் அவதாரணம்
அஹி குண்டலவத் —=சர்ப்பத்துக்கு குண்டல பாவமும் நேரான தன்மையும் போலே
ப்ரஹ்மம் அசித் ரூபமாகிறது எனலாம்
ஏன் எனில்
உபய வ்யபதேசாத் –பேதமாயும் அபேதமாயும் வழங்கப் படுவதால்
இப்பிரபஞ்சம் எல்லாமே ப்ரஹ்மம் என்று அபேதமும்
இந்த ஜீவனைத் துணை கொண்டு யாவற்றிலும் உள்ளே நுழைந்து நாம ரூபங்களை அமைக்கிறேன் என்று
சங்கல்பிக்கும் போது பேதமும் பேசப்படுகின்றது
இவை சர்ப்பத்தின் வெவ்வேறு தன்மை போலே -ருஜு பாவமும் -வக்ர பாவமும் -பொருந்தலாம் என்பது பூர்வ பக்ஷம் –

எனவே அசித் என்பதும் ப்ரஹ்மத்தின் ஒரு வகையான விசேஷ நிலை என்றதாயிற்று-

——————————————————————————————————————————————–

338-பிரகாசஸ்ரயவத்வா தேஜஸ் த்வாத் —3-2-27-

ஒளியும் உத்பத்தி இடமும் போன்று -காரணம் இரண்டும் தேஜஸ் என்ற ஜாதியினால்
இது பூர்வ பஷ ஸூத்ரம்

வா என்றது பாம்பு போன்று நீண்டும் சுருங்கியும் –
அம்ச அம்சி பாவம் இரண்டையும் தள்ளுகிறது

அசித் ரூபம் என்றால் இரண்டும் வெவ்வேறே என்கிற பேத ஸ்ருதிகள் தள்ளப்படும் –
அவிகாராய சுருதி வாக்யமும் தள்ளுபடும்

ஒளியும் ஒளி உள்ள தீபாதிகளும் தேஜஸ்த்வம் -ஒரே ஜாதி சேர்க்கையால்
ஸ்வரூபத்தில் பேதம் இருந்தாலும் அபேதம் பேசப்படுவது போலே
அசித்தான பிரபஞ்சத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூடும் -அசித்துக்கு ப்ரஹ்ம ரூபத்வம் கூடும் –
முன் கூறிய பிரகாரத்தில் ப்ரஹ்மத்துக்கு நிர்தோஷத்வம் அபரிணாமித்வம் சொல்லும் ஸ்ருதிகளுடன் விரோதம் ஏற்படும் –
இப்பஷத்தில் அவ்விரோதம் வாராது என்றபடி –

இந்த பக்ஷத்தை ஏற்றாலும் ப்ரஹ்மமே சர்வமும் என்று அபேதமும்
ஸர்வ ஸப்த வாஸ்யத்வம் சொல்வதால் அசேதன ரூபம் இல்லாமல் போகட்டும்
ஒரு பசு கண்டம் முண்டம் பூர்ண ஸ்ருங்கம் என்று கூறப்பட முடியாது அல்லவா
எனும் அஸ்வாரஸ்யத்தால்
சித்தாந்தம் கூறுகிறார் –

——————————————————————————————————————————————–

339-பூர்வவத் வா–3-2-28-

முன்பு கூறப் பட்டது போன்று என்றவாறு –
வா -ஸப்தம் இரண்டு பூர்வ பக்ஷங்களையும் தள்ளுகிறது
கடந்த இரண்டு ஸூத்ரங்களில் உள்ள பூர்வ பஷத்தை தள்ளுகிறது

முதல் வாதம் படி அசித் ஸ்வரூபம் ப்ரஹ்மத்துக்கு வரும் தோஷங்களும் தட்டும்
ஒளி ஒளிக்கதிர் என்று கொண்டால் பசு குதிரை இரண்டு பிரிவுகளான ப்ரஹ்மம் ஸ்ருதி வாக்ய விரோதம் ஆகும்

பூர்வ வத்வா -அம்ச அதிகரணத்தில் பேத அபேத வியபதேசங்கள் பொருந்தவும் –
ப்ரஹ்மம் நிர் தோஷம் என்று ஸாதிக்கவும்
ஜீவனை -பிரகாச குண ஜாதிகளை போலே விட்டுப் பிரிக்க இயலாத -அப்ருதக் ஸித்த -விசேஷணம் -ஆதலின்
ப்ரஹ்மத்துக்கு அம்சமே என்று கீழே சாதித்தால் போலவே அசித்தும் விசேஷணமாதலின் அம்சமாகலாம்

இத்தால் அசித் என்ற சொல்லும் அத்துடன் கூடிய ப்ரஹ்மத்தையே சொல்லும்
ஆகவே இவை யாவுமே ப்ரஹ்மமே என்று சொல்வதும் பொருத்தம் ஆகுமே

விசிஷ்டத்தில் விசேஷணம் ஏக தேசம் என்பதால் அபேதம் முக்கிய வழக்கே
ஸ்வரூப ஸ்வபாவ பேதங்களாலே இரண்டுக்கும் பேத வழக்கே முக்யமாம்

இதனால் ப்ரஹ்மம் நிர்தோஷம் என்பது ஸித்தம் –

ஆக முன்பு கூறிய படி ஒரு அம்சமாகவே கொள்ள வேண்டும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-42-அம்சோ நாநா வ்யபதேசாத் -ஒரு அம்சமாகவே ஆகும்

ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-45-பிரகாசாதிவத் து நைவம்பர-பரமாத்மாவின் அம்சம்

பிரிக்க இயலாது
பேத அபேத ஸ்ருதிகளும் கொள்ள முடியும்
தோஷங்களால் தீண்டப் படாததது என்ற வாதமும் கொள்ளப் படும்

ஆக ஒளி ரத்னக் கல்லை விட்டு பிரிக்க முடியாதது போலேயும்
குணம் குணம் உள்ளவன் -ஆத்மா உடல் போலே
ஜீவனும் அசித்தும் ப்ரஹ்மத்தின் அம்சங்களே -என்றாகிறது-

————————————————————————————————————————————————

340-பிரதிஷேதாச்ச–3-2-29-

தள்ளப் படுவதாலும் -கடந்த ஸூத்ர சித்தாந்தம் தொடர்கிறது

ப்ருஹத் உபநிஷத் -4-4-25-ச வா ஏஷ மஹா நஜ ஆத்மா அஜரோ அமர –
பரமாத்மா பிறப்பு இறப்பு கிழத் தன்மை அற்றவன் -என்றும்

சாந்தோக்யம் -8-1-5-நாச்ய ஜரயா ஏதத் ஜீரயதி –
வயதாகி கிழத் தன்மை அடைவது இல்லை

தோஷங்கள் தட்டாமல்
காரணமாகவும்
அம்ச அம்சி பாவமே பொருந்தும் என்றதாயிற்று

ஸூஷ்மமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாக காரணமாயும்
ஸ்தூலமாக உள்ள பொழுது அவற்றை அம்சமாகக் கார்யமாகவும்
கார்ய கார்யங்களுக்கு இடையில் பேதம் இல்லை -அபேத ஸ்ருதியும்

காரணமான ப்ரஹ்மத்தை அறிந்தவன் கார்யப் பொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும் கொண்டு
ப்ரஹ்மத்தை தோஷங்கள் தீண்டுவது இல்லை என்றும்
சமஸ்த கல்யாண குணங்கள் கொண்டவன் என்றும்
உபய லிங்கத்வம் நிரூபிக்கப் பட்டது

————————————————————————————————————————————————

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் –
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும்
இவனை தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது-

ப்ரஹ்மம் உபய லிங்கம் என்று ஸ்தாபித்தார்
இனி முன் கூறிய ஜகத்துக்கு எல்லாம் நிமித்தமாயும் உபாதானமாயும் உள்ள ப்ரஹ்மத்தை விட
சிறந்ததோர் தத்வம் உள்ளது என்று சில போலி ஹேதுக்களால்
சங்கித்து
கண்டிக்கப்படுகிறது என்று சங்கதி –

341-பரமத சேது உன்மான சம்பந்த பேத வ்யபதேசேப்ய-3-2-31-

அணை அளவு தொடர்பு வேறுபாடு ஆகியவை கூறப்பட்டதால் இதை விட உயர்ந்தது உள்ளது

சேது சேர்ப்பது ஓன்று என்றால் சேர வேண்டியது சிறந்த வேறு ஓன்று இருக்குமே
இந்த பூர்வபக்ஷ ஸூத்ரம் இது –

சாந்தோக்யம் -8-4-1-அத ய ஆத்மா ச சேது வித்ருதி –
இந்த ஆத்மாவைத் தாங்கும் பாலமாக உள்ளான்

சாந்தோக்யம் -8-4-2-ஏதம் சேதும் தீர்த்தவா அந்தஸ் சந் அனந்தோ பவதி –
பாலத்தை கடந்து குருடனானவன் நிலை மாறப் பெறுகிறான்

இவற்றால் ப்ரஹ்மத்தை விட உயர்ந்தவை உண்டு என்றதாயிற்று

உந்மிதம்-என்று அளவு பட்டு ப்ரஹ்மம் கூறப் படுகிறது

சாந்தோக்யம் -3-18-2-சதுஷ்பாத் ப்ரஹ்ம-நான்கு பாதங்கள் கொண்டது என்றும்

ப்ரசன உபநிஷத் -ஷோடச கலம் -பதினாறு பிரிவுகள் கொண்டது -என்றும்

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -6-19-அம்ருதஸ்ய பரம் சேதும் தக்தேந்த மிவா நலம் –
தானாக வெளிப்படும் மோஷத்தை அடைய உதவும் பாலமாக ப்ரஹ்மம் உள்ளான் என்றும்

முண்டக உபநிஷத்-2-2-5- -அம்ருதஸ்யைஷ சேது -மோஷத்தை அடைவிக்கும் பாலம் ப்ரஹ்மம் என்றும்

முண்டக உபநிஷத் -3-2-8-பராத்பரம் புருஷம் உபைதி -பரமாத்மாவை விட உயர்ந்த புருஷன் அடைகிறான் என்றும்

தைத்ரிய நாராயண வல்லி -1-5- பராத்பரம் யத் மஹதோ மஹாந்தம் -பெரியதான பரமாத்மாவை விட பெரியதான என்றும்

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் –
3-9-தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –
அந்த புருஷனால் இவை நிரம்பி உள்ளன -என்றும்

3-10-ததோ யதுத்தரதரதரம் தத் அரூபம் அநாமயம் –
அந்த புருஷனைக் காட்டிலும் மேலானது-உருவம் அற்றது -துன்பம் அற்றது -என்றும்

இப்படி பல ஸ்ருதிகள் அந்த பிரமத்தைக் காட்டிலும் மேலான வஸ்து உள்ளதைச் சொல்லிற்று–

அத -இது வரை ஸர்வ காரணமாயும் -உபய லிங்கமாயும் கூறப்பட்டுள்ள ப்ரஹ்மத்தை விட
பரம் -உயர்ந்த தத்வம் உள்ளது
ஏன் எனில்
சேது உன்மான சம்பந்த பேத வ்யபதேசேப்ய-வியபதேசம் என்பது சேது உன்மானம் முதலிய ஒவ்வொன்றுடன் சேர்க்கிறது
1- சேது வ்யபதேசத்தால் அடையப்படும் பொருள் வேறே ஓன்று என்று புலனாகிறது
2-சதுஷ்பாத் ப்ரஹ்ம ஷோடசகலம் -என்று உன்மான வ்யபதேசத்தால் -உன்மானம் -அளவு –
நான்கு பாதங்கள் பதினாறு கலைகள் என்று அளவிட்டதை விட அளவில்லாத வேறு தத்வம் இருக்க வேண்டும் என்று கருத்து
3-ஸம்பந்த வியபதேசத்தாலே -அம்ருதஸ்ய பரம் சேதும் -என்று ப்ராப்ய ப்ராபக சம்பந்தம் சொல்வதால்
அம்ருதம் என்று அடைய வேண்டிய தத்வம் சேதுவை விட வேறானது
4-பேத வியபதேசத்தால் -பராத்பரம் புருஷம் உபைதி–ததோ யதுத்தரதரதரம் –என்று எல்லாம்
புருஷன் என்றும் பர ப்ரஹ்மத்தை விட மேலான தத்வம் உள்ளது என்று தோன்றுகிறது என்று பூர்வ பக்ஷம்

இனி இந்த பூர்வ பஷத்துக்கு பதில் மேலே –இதைக் கண்டிக்கிறார் –

——————————————————————————————————————————————–

342-சமான்யாத் து-3-2-31-

பொதுவான தன்மை காரணத்தால் ஆகும் –
து -பதம் பூர்வ பஷத்தை தள்ளுகிறது
சேது என்று ஒரு கரையில் இருந்து அடுத்த கரைக்கு செல்வதை சொல்ல வில்லை

உலகங்கள் தம் தம் ஸ்வபாவங்களில் சாங்கர்யம்–கலப்பு -ஏற்படாமல் இருக்க
பரம புருஷனே சேது போலே தரிக்கிறான் என்று சுருதி சொல்லும்
ஸிநோதி -காட்டுகிறது என்பதால் சேது என்று காரணப்பெயர்
ஆதலால் வேறே ப்ராப்யம் இங்கே தோன்றவில்லை
ஏதம் சேதும் தீர்த்வா –என்ற இடத்தில் அடைந்து என்ற பொருள்
வேதாந்தம் தரதி என்பது போலே ப்ராபக ப்ராப்யங்களுக்கு அபேதத்தைச் சொல்லுகிறது –

சாந்தோக்யம் -8-4-1-ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய-
இந்த உலகங்கள் ஒன்றுடன் ஓன்று கலக்காமல் இருக்க -என்கிறது
சேதனம் அசேதனங்களை தன்னுள் வைத்து ஒன்றுடன் ஓன்று கலவாமல் காப்பதால் சேது எனப்படுகிறான்

சாந்தோக்யம் -8-4-2- ஏதும் சேதும் தீர்த்தவா –
தீர்த்தவா அடைதல் பொருளில் கடந்து என்று அல்ல –
வேதாந்தத்தை கடக்கிறான் முற்றிலும் அறிந்தவன் ஆகிறான் என்றே பொருள்

—————————————————————————— —————————————————————

343-புத்த்யர்த்த பாதவத் —3-2-32-

இதனால் இரண்டாவது ஹேதுவுக்கு விடை கூறுகிறார்
ப்ரஹ்மத்தை அளவிட்டுக் கூறியது உன்மானம்
ஏன் என்றால்
புத்த்யர்த்த -அனுசந்தானம் செய்ய வசதிக்காக
பாதவத் —வாக் பாத -சஷு பாத என்று எல்லாம் ப்ரஹ்மத்துக்கு வாகாதிகளைப்
பாதங்களாகச் சொல்லுவது உபாசானத்துக்கானது
அது போலவே இதுவும்
ப்ரஹ்மம் பரிமாணம் உள்ளது என்பதைக் காட்டுவதற்கு அல்ல

பாதம் போன்று உபாசனத்துக்கு கூறப் பட்டது –
சதுஷ்பாத் ப்ரஹ்ம –ஷோடசகலம் –பாதோச்ய விசவா பூதானி என்று
உபாசனத்துக்கு புத்திக்கு அளவு படுத்தி சொன்னவை

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-தெளிவாக உள்ளதே –

இவனே காரணம் என்பதை
தைத்ரியம் -2-1-தஸ்மாத்வா ஏ தஸ்மாத் ஆத்ம ந ஆகாச சம்பூத –
இதில் இருந்து ஆத்மாவும் ஆகாசமும் வெளிப்பட்டன என்றும்

தைத்ரியம்-2-6- -சோகாமயாத பஹூச்யாம் பிரஜாயேய-
அது தன்னைப் பலவாகக் கடவது என்று எண்ணியது -என்றும்

சாந்தோக்யம் -3-18-2-வாக் பாத பிராண பாத சஷூ பாதோ மன பாத –
பாதங்களாக வாக் போன்றவை உள்ளன என்றது உபாசனைக்கு எளிதாக்கவே என்றவாறு

உபாஸனார்த்தமாயினும் பரிமாணம் ப்ரஹ்மத்துக்கு எவ்வாறு பொருந்தும்
என்பதற்கு விடை மேல் –

———————————————————————————————————————————————-

344-ஸ்தான விசேஷாத் பிரகாசாதிவத்–3-2-33–

அளவிட முடியாத வஸ்துவை உபாசனை பொருட்டு மாத்ரம் எப்படி அளவிட்டு சொல்ல முடியும் என்றால் –
எங்கும் பரவும் பிரகாசத்துக்கு -ஒளி முதலான ஸ்தானங்களின் சம்பந்தம் காரணம் ஆகும்
ஜன்னல் ஒளி –குட ஆகாசம் போலே

———————————————————————————————————————————————-

345-உபபத்தேச் ச–3-2-34-

மூன்றாவது ஹேதுவை இதில் நிரஸனம் செய்கிறார் –

தன்னை அடையும் உபாயமாக தானே உள்ள தன்மை பொருந்துவதால் –
முண்டகம் -அம்ருதஸ்யைஷ சேது -அடை யைப் படும் இலக்கே அவன் என்றே பொருள் கொள்ள வேண்டும்
முண்டகம் -3-2-3-நாயமாத்மா ப்ரவசநேன லப்யோ ந மேதயா

ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே தே ந லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்-என்று
பரமாத்மாவை கேட்டோ ஆழ்ந்த ஞானத்தாலோ அறிய அடைய முடியாது –
அவனே யாரைத் தெரிந்து எடுத்து அவன் மட்டுமே அடைகிறான் அவனுக்கு தனது ரூபத்தை வெளிப்படுத்துகிறான்-

—————————————————————————————————————————————–

346-ததா அந்ய பிரதிசேஷாத்-3-2-35-

நான்காவது ஹேதுவை இதில் நிரஸனம் செய்கிறார் –

பேத ஸ்ருதிகளாலே அதிகமான ஒரு தத்வம் உண்டு என்பது தவறு
ததா -அவ்விடத்திலேயே
அந்ய பிரதிசேஷாத்-அந்யனான பரன் தடுக்கப் படுவதால்

இப்படி அவனைக் காட்டிலும் வேறு இல்லை என்று மறுப்பதால் ஆகும்
ததோ எதுத் தர தரம் -என்றும்
பராத்பரம் புருஷம் -என்றும் –
அஷராத் பரத பர -என்றும்
உயர்ந்த வஸ்து வேறே உண்டு என்கிறீர்கள்

அதே ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -3-9-
யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் ந அணீய ந ஜ்யோயோஸ்தி கச்சித் என்றதே

ப்ருஹத் உபநிஷத்

2-3-6-நஹ்யே தஸ்மாத் இதி நேதி அந்யத் பரமஸ்தி-என்றும்

நாராயண வல்லி -1-2- ந தஸ்ய ஈசே கச்ச ந தஸ்ய நாம மஹத்யச-என்றும் –

சர்வே நிமேஷா ஜ்ஞ்ஞிரே வித்யூத புருஷா நதி -என்றும்

ச ஆப ப்ரதுகே உபே இமே -என்றும்

1-3-அத்ப்யஸ் சம்பூத ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டௌ-என்றும் அவனே ஜகத் காரணம் என்றதே

ஆனால் ஸ்வேதாஸ்வதர -3-10-
ததோ எதுத் தர தரம் என்று சொன்னது எதனால் என்றால் –

இந்த வரிக்கு முன்னால் -3-8- வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
தமேவ விதித்வா அதி ம்ருத்யுமேதி நான்ய பன்னா வித்யதே அயநாயா -என்று முழங்கி

3-9-யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் நாணீய நஜ்யா யோஸ்தி கச்சித் வருஷ இவஸ்தப்த
திவி திஷ்டதி ஏக தே நேதம் பூர்ணம் புருஷே ந சர்வம் -என்றும்

நிகமத்தில் -3-10-ததோ எதுத் தர தரம் தத் அரூபம் அநாமயம் ய எதத் விது அம்ருதாச்தே பவந்தி
அதே தர துக்க மேவ அபியந்தி -என்றது

மேலும் முண்டகம் 3-2-8–பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் –
என்பதை 2-1-2-அஷராத் பரத பர -என்றதே –

பர ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறே தத்வம் இல்லை -அவனே தோஷம் அற்றவன் -அம்ருதம் –
அவனை அறிந்தவன் சம்சாரத்தைக் கடக்கிறான்
வேறு முக்திக்கான உபாயம் இல்லை என்று
அதே ஸ்ருதிகள் உப சம்ஹரிக்கின்றனவே

ஸ்ருத்யந்தரங்களும் இத்தையே பறை சாற்றுகின்றன

————————————————————————————————————————————

347-அநேந சர்வ கதத்வம் ஆயாம சப்தாதிப்ய —3-2-36-

அநேந -இந்த ப்ரஹ்மத்தால்
சர்வ கதத்வம் -ஜகத் எங்கும் வியாபித்து இருத்தல்
ஆயாம சப்தாதிப்ய-எங்கும் வியாபித்து இருப்பதாகச் சொல்லும் ஸப்தங்களால் –
வியாப்ய நாராயண ஸ்தித -போன்றவைகளால் அறிவிக்கப் படுகிறது
இதனால் இந்தப் ப்ரஹ்மத்தை விடச் சிறந்தது ஏதும் இல்லை என்று நிரூபணம் ஆயிற்று

ஆயாம -அனைத்தும் ப்ரஹ்மத்தால் வ்யாபிக்கப் பட்டது என்கிறது-சர்வ வ்யாபகத்வம்
ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -தே நதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும் –

நாராயண வல்லி -11-6-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ச்ரூயதேபி வா அந்தர் பஹிச்ச
தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும்

‘முண்டகம் -1-1-6-நித்யம் விபும் சர்வ கதம் ஸூஷூஷ்மம் யத் பூதயோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்

ஸூத்ரத்தில் உள்ள ஆதி என்ற பதம் ப்ரஹ்மத்துக்கு அனைத்துமாய் இருக்கும் பெருமையை

ப்ருஹத் உபநிஷத் -4-5-1-ப்ரஹ்மை வேதம் சர்வம் -என்றும்

சாந்தோக்யம் -ஆதமை வேதம் சர்வம் -என்றும்

ப்ரஹ்மமே அனைத்தையும் விட உயர்ந்தது என்று முழங்கும் –

இதனால் யதோவா இமானி -இத்யாதிகளாலே கூறப்படும் ஜகத் நிமித்த உபாதான
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறான தத்வம் கிடையாது என்பது ஸித்தம் –

————————————————————————————————————————————-

எட்டாவது அதிகரணம் -பலாதிகரணம் –
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

பரத்வமும் பல பிரதத்வமும் உபாஸிப்பதற்குத் தேவையானவை
பின்னால் சொல்ல இருக்கும் உபாஸ்யத்தின் ஸித்திக்காக பரத்வம் சொல்லப்பட்டது
இவ்வதி கரணத்தில் பல பரதனும் இவனே என்ற முறையில் ஓவ்தார்யம் கூறப்படுகிறது –

348-பலம் அத உபபத்தே —3-2-37-

யாகாதிகளில் கர்மமே அபூர்வத்தின் மூலமாக பலன் தரும் என்று பூர்வ பக்ஷம்

பரம் பொருளின் இடம் இருந்தே பலம் கிட்டுகின்றன -இதுவே பொருந்தும் –
எங்கும் உள்ளவன் -அனைத்தும் அறிந்தவன் -சர்வ சக்தம் -உதாரன் –
யஜ்ஞம் தானம் ஹோமம் உபாசனம் இவற்றால் மகிழ்ந்து அளிக்கின்றான்
ஷணம் நேரம் அழியக் கூடிய கர்மங்கள் பலன்களை தர வல்லமை அற்றனவே என்றவாறு-

பலம் அத உபபத்தே-இவன் இடம் இருந்தே கர்ம பலன் பெறுகிறார்கள்
கர்மம் க்ஷணிகம்
ஸர்வஞ்ஞன்-ஸர்வசக்தன் -காருணிகன் -உதார குணம் -ஆதியும் அந்தமும் இல்லாதவன்
ஆகவே கர்மத்தால் ப்ரீதனாகி இவனே பலன் அருளுகிறார் என்பதே பொருந்தும்

————————————————————————————————————————————-

349-ஸ்ருதத்வா ச–3-2-38-

கீழே அசேதனமான கர்மங்களுக்குப் பல பிரதத்வம் கூடாமையாலே இவனே பல பிரதன் என்றார்
இதில் வெளிப்படையாகக் காட்டி அருளுகிறார் –

இப்படியே ஸ்ருதி வரிகள் -பல போகங்களையும் மோஷத்தையும் பரம் பொருளே அளிப்பதாக கூறுகின்றன –

ப்ருஹத் -4-4-24-ச வா ஏஷ மஹான் அஜ –ஆத்மா அந்நாத வஸூதான -என்றும்

தைத்ரிய ஆரண்யகம் -2-7- எஷஹி ஏவ ஆனந்த யாதி -என்றும் கூறும்

—————————————————————————————————————————————–

350-தர்மம் ஜைமினி அத ஏவ-3-2-39-

தர்மம் ஜைமினி
தர்மம் முதளியவைகளே பலன் அளிப்பதாக ஜைமினி கூறுகிறார்
கண்களில் புலப்படாத அபூர்வம் -எதிர்காலத்தில் அந்த பலன்களை அளிக்கின்றது

அத ஏவ -அதற்க்கு ஏற்ப ஸ்ருதியும் உண்டே என்றவாறு
சாஸ்திரம் யஜேன ஸ்வர்க்க காமா -யாகம் மூலம் ஸ்வர்க்கம் கிட்டும் என்றதே –

—————————————————————————————————————————————-

351-பூர்வம் து பாதராயண ஹேது வ்யபதேசாத் —3-2-40-

பூர்வம் து பாதராயண-பலனை அளிப்பதால் முந்தையதே -என்கிறார் பாதராயணர்-
து -பூர்வ பஷத்தை தள்ளுகிறது
முன் கூறியதே என்று பாதராயணர் -வியாசர் -திரு உள்ளம்

வாயு அக்னி குறித்து யாகம் பண்ணும் பொழுது
யஜ் -அந்த யாகங்களின் எஜமானனாக உள்ள தேவதைகளே பலன்களை அளிப்பதாக கூறும்

தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயவ்யாம் ஸ்வேதமால பேத பூதி காமோ வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா
வாயுமேவ ஸ்வேன பாக தேயேன உபதாவதி ச ஏவ எனம் பூதிம் கமயதி -என்று

இது போன்ற வாதங்களை அர்த்த வாதங்கள் என்று தள்ள இயலாது –
இதனை மருத்து கண்களுக்கு புலப்படாத அபூர்வம் என்பதை உருவாக்கி பலன் அளிப்பதாக சொல்வதை
பிரமாணிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

பூர்வ பஷிகள் யஜேத என்பதை யஜ் ஏத என்று பிரித்து
யஜ் தவத்தை என்றும்
ஏத அபூர்வம் என்றும் சொல்வதை ஏற்க இயலாது

ஏத எனபது கர்த்தாக்கள் மூலம் இயற்றப்படும் கர்மங்களைக் குறிக்கும்

இதனை உணர்த்தவே-தைத்ரிய சம்ஹிதை -2-1-1-வாயுர்வை ஷேபிஷ்டா த்கேவதா -என்றன –
ஆயினும் ஆராதிக்கத் தகுந்தவனாக உள்ளவன் பரம புருஷனே –

அவனே அந்தர்யாமியாக இருந்து கொண்டு பலனை அளிக்கின்றான் என்பதை
நாராயண வல்லி -1-2-
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம் ஜாயமா நம் விஸ்வம் பிபர்த்தி புவனச்ய நாபி –
ததே வாக்னி தத் வாயு தத் ஸூர்ய தாது சந்த்ரமா -என்று கூறியது

ப்ருஹத் உபநிஷத்- 3-7-7- யோ வாயௌ திஷ்டன் யஸ்ய வாயு சரீரம் என்றும் –

3-7-5-யோ அக்னௌ திஷ்டன் -என்றும்

3-7-9–யோ ஆதித்யே திஷ்டன் -என்றும் சொல்லிற்று

ஸ்ரீ கீதையிலும் -7-21-
யோ யோ மாம் யாம் தநும் பக்த ஸ்ரத்தயா அர்ச்சிதும் இச்சதி தஸ்ய தஸ்ய அசலாம் ஸ்ரத்தாம் தாம் ஏவ வித்தாம் யஹம் -என்றும்

7-22-ச தயா ஸ்ரத்தயா யுக்த தஸ்ய ஆராதன மீஹதே லபதே சே தத காமான் மயைவ விஹிதான் ஹிதான் -என்றும்

9-24-அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -என்றும்

7-23-தேவான் தேவ யஜோ யாந்தி மத் பக்தோ யாந்தி மாம்பி -என்றும்

9-25-யாந்தி மத்யாஜி நோபிமாம் -என்றும்
அரசன் தானே நேரடியாகவோ வேலையாட்கள் மூலமாகவோ மகிழ்ந்து பரிசு அளிப்பது போலே
பரமபுருஷன் இடம் இருந்தே ஸ்வர்க்கம் போன்ற போகங்களும் மோஷமும் கிட்டுகிறது என்று நிரூபணம் ஆயிற்று –

ஹேது வ்யபதேசாத் –யஜேத -யஜ தேவ பூஜாயாம் -பகவத் ஆராதனம் –
பரமாத்மாவே நேராகவும் -அக்னியாதி தேவர்கள் மூலமாகவும் பல பிரதன்
இவ்வாறு அதிகாரி இருக்க
அபூர்வம் என்று கல்பிக்க வேண்டியது இல்லை

அனைத்து அர்த்தவாதங்களும் பொருந்தி விடுகின்றன —

அடுத்த பாதத்தில் வித்யா பேதங்களில் வெவ்வேறு கல்யாண குணங்களைக் காட்டி அருளப் போகிறார் –

——————————————————

இப்பாத அர்த்தங்களை சுருக்கமாக ஸ்வாமி தேசிகன் காட்டி அருளுகிறார்

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்

அருளிச் செய்து
இந்தக் குணங்களைக் கூறியது ப்ரஹ்ம வித்யா ரூபத்தில் பக்தி ஸித்திப்பதற்காக
யதார்த்தமான குணங்களைக் கொண்டு எம்பெருமானை உபாஸிக்கையில்
ரூப பேதங்கள் சொல்ல வேண்டி இருப்பதால்
அவற்றைப் பிற மதத்தவர் போலே வ்யவஹாரிகங்கள் என்று சொல்வது பொருந்தாது
என்பது ஸூத்ரகாரரின் திரு உள்ளம் –

————————————————————————————————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்–கிஷ்கிந்தா ஸ்கந்தம்- -94-111-ஸ்லோகங்கள் -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

September 15, 2021

பம்பா தீர ருஹான் தரூன் ககன கான் காமா ம்ருக அவேக்ஷயா
த்ருஷ்ட்யா ஹந்த ஸமீக்ஷ்ய லக்ஷ்மண யுஜ: தே கச்சதோ அக்ரே நதம்
ஸுக்ரீவாத் ஸமுபாகதம் பவனஜம் த்ருஷ்ட்வா தத் உக்த ச்ருதே:
யத் மந்த ஸ்மிதம் ஆனனே லகு பபௌ ஸத்யம் தத் ஏதத் ப்ரபோ–94-

பம்பா தீர ருஹான் தரூன் ககன கான் காமா ம்ருக அவேக்ஷயா-திருவடி பார்த்து முதல் மந்தஸ்மிதம் இது –
கிஷ்கிந்தா முதல் ஸ்லோகம்
தூங்க பத்ரா நதியே பம்பா ஹம்பியே கிஷ்குந்தா
மரங்கள் வளர்ந்து ஆகாசம் வரை
சாகா -மிருகம் – குரங்கு சாகைகளிலே தாவி இருப்பதே நிரூபகம்
த்ருஷ்ட்யா ஹந்த ஸமீக்ஷ்ய லக்ஷ்மண யுஜ: தே கச்சதோ அக்ரே நதம்-ரிஷ்யமுக மலை –
ஒருவன் அடி பணிந்து நின்றவனை காண
ஸுக்ரீவாத் ஸமுபாகதம் பவனஜம் த்ருஷ்ட்வா தத் உக்த ச்ருதே:-மகாராஜரால் அனுப்பபற்ற திருவடி -வாயு மைந்தன்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே லகு பபௌ ஸத்யம் தத் ஏதத் ப்ரபோ-
யுக்த -இனிமையான பேச்சைக் கேட்டதும் பிறந்த மந்தஸ்மிதம் -பிராட்டியைப் பார்த்த ஹர்ஷம் போல் –
கண்டதுமே இவனே பிராட்டியைக் கண்டு வந்து சொல்வான்
மார்களு முழு சந்திரனைப் பார்த்ததும் கிருஷ்ணன் பார்த்தஹர்ஷம் ஆண்டாள் பெற்றது போல் இங்கும்
அதே மந்தஸ்மிதம் வடுவூரில் பிராட்டி திருவடி சேர்ந்து இளவல் உடன் சேவை சாதிக்கும் மந்தஸ்மிதம்

———————

வாயோ: ஆத்ம புவோ நதஸ்ய நிதராம் தஸ்ய அத தாம் அத்புதாம்
ச்ருத்வா நாம கிரம் ஸுவர்ண மஹிதாம் ஸுஷ்டூதிதாம் ஸுஸ்வராம்
ஸத்யம் திவ்ய ஸுதோபமாம் ஸுமஹிதாம் ஸ்ரீராம மந்த ஸ்மிதம்
யத் தே நாம முகாம்புஜே ஸமபவத் தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ-95-

வாயோ: ஆத்ம புவோ நதஸ்ய நிதராம் தஸ்ய அத தாம் அத்புதாம்-வாக்மீ ஸ்ரீ மான் –
சொல்லின் செல்வன் -பிராட்டி இதன் தூது போகச் சொன்னால் செல்வான் –
வாயு புத்ரன் -அடி பணிந்த திருவடி பேச்சு அத்புதமாக உள்ளதே -விரிஞ்சனோ விடை வல்லானோ
ச்ருத்வா நாம கிரம் ஸுவர்ண மஹிதாம் ஸுஷ்டூதிதாம் ஸுஸ்வராம்-நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தி –
மதுரமான -பொருத்தமான -அழகிய ஸ்வரத்துடன்
ஸத்யம் திவ்ய ஸுதோபமாம் ஸுமஹிதாம் ஸ்ரீராம மந்த ஸ்மிதம்-தேவ அம்ருதம் போல்
பெருமை மிக்க வார்த்தை அன்றோ -மூன்று வேதம் அறிந்தவன்
பணிவு ரிக்வேதம்- தொகுத்து பேசுகிறான் யஜூர் வேத வல்லவன்- ஸூரம் பொருந்தி -சாம வேத வல்லவன்
யத் தே நாம முகாம்புஜே ஸமபவத் தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ-அப்பொழுது தோன்றிய
மந்தஸ்மிதம் இன்றும் நாமும் செவிக்கும்படி அருளுகிறாயே

—————-

நீதஸ்ய அத நிஜாந்திகம் தவ விபோ வாதாத்மஜாதேன தம்
ஸுக்ரீவம் நயனாக்ரத: கலயதோ மித்ரம் ச மித்ராத்மஜம்
தத் ப்ரூதம் ச யதா ததம் ச்ருதவதோ யந்நாம மந்த ஸ்மிதம்
ஸஞ்ஜாதம் வதனாம்புஜே தத் இதம் இதி ஆனந்தவான் அஸ்மி அஹம்–96-

நீதஸ்ய அத நிஜாந்திகம் தவ விபோ வாதாத்மஜாதேன தம்-வாயு புத்ரன் -அருகில் அழைத்துச் செல்லப்பட்ட
ஸுக்ரீவம் நயனாக்ரத: கலயதோ மித்ரம் ச மித்ராத்மஜம்-ஸூ க்ரீவனை நண்பனாக கொண்டாயே –
நேராக பெருமாளைப் பார்த்து -பட்டாத்ரி நாராயணீயம் குருவாயூரப்பனைப் பார்த்து அருளிச் செய்தது போலவே
தத் ப்ரூதம் ச யதா ததம் ச்ருதவதோ யந்நாம மந்த ஸ்மிதம்-அவன் தனது வ்ருத்தாந்தம் சொல்ல –
மனைவி உமாவை இழந்து பெருமாளைப் போல் -இவ்வளவையும் கேட்டு மித்ரனாக பெற்றதால் மந்தஸ்மிதம்
மித்ரன் ஸூர்யன் மகன் -மித்ரனுடைய மகன் தம்பியாகவும் மித்ரனாகவும் பெற்ற தாலேயே மந்தஸ்மிதம்
ஸஞ்ஜாதம் வதனாம்புஜே தத் இதம் இதி ஆனந்தவான் அஸ்மி அஹம்-அடியோங்களையும் மித்ரர்கள்
ஆனதால் மந்தஸ்மிதம் கொண்டதைப் பார்த்து அடியோங்களும் மகிழ்வோம் –

———–

காயம் க்ஷிப்தவத: ஸுதூரம் அபி தே ஸ்வாங்குஷ்டதோ துந்துபே:
ப்ரத்யக்ரம் ஹி ஸமாம்ஸம் ஏதத் அபவத் க்ஷிப்தம் புரா வாலினா
இதி உக்த்யா ரவி ஸம்பவஸ்ய ஸுஹ்ருதோ மந்த ஸ்மிதம் யன்முகே
ஸஞ்ஜாதம் தவ தத் மம அத்ய புரதோ வித்யோததே ராகவ–97-

காயம் க்ஷிப்தவத: ஸுதூரம் அபி தே ஸ்வாங்குஷ்டதோ துந்துபே:-வில்லா திரு விண்ணகரம் மேயவனே –
தன்வீ -சாரங்க பாணி -கோதண்ட பாணி-அவனது வில்லாற்றமையில் சந்கின்கொண்ட ஸூக்ரீவன்
துந்துபி -எலும்புக்கூடு -மராமரம் ஏழும் -செய்து காட்டி அருளி -அந்த நேரத்தில் செய்து அருளியய மந்தஸ்மிதம் –
எலும்பு கூடு தொடக் கூடாதே -இடது திருவடி கட்டை விரலால் -ஓங்கி உலகு அந்தம் இடது திருவடி மேலே போக –
அதில் இருந்து விழுந்த கங்கை -கங்கைக்கு தீட்டு இல்லையே -வெகு தூரம் அண்டத்துக்கும் அப்புறம் போனதே
ப்ரத்யக்ரம் ஹி ஸமாம்ஸம் ஏதத் அபவத் க்ஷிப்தம் புரா வாலினா-மாம்ச உடலை வாலி எறிந்து -இன்னும் நம்பிக்கை வராமல்
இதி உக்த்யா ரவி ஸம்பவஸ்ய ஸுஹ்ருதோ மந்த ஸ்மிதம் யன்முகே-இப்படி ஸூர்ய மகன் நம்பிக்கை இல்லாமல்
சொல்வதால் -இறைவனை சோதிக்கும் ஸ்வ பாவம் மனுஷனுக்கு மாறாதே –
ஸஞ்ஜாதம் தவ தத் மம அத்ய புரதோ வித்யோததே ராகவ-இந்த அவநம்பிக்கை உள்ள அடியோங்களைப் பார்த்து மந்தஸ்மிதம்
நம்பிக்கை உண்டாக்கி ரக்ஷித்து அருளும் ஸ்வ பாவன் அன்றோ –

————

ஸாலான் ஸப்த ததா தரான் அபி சரேண ஏகேந பேத்து: புரா
பாதாப்ஜே தவ மஸ்தகம் க்ருதவத: தே சம்ஸதோ விக்ரமம்|
விஸ்ரப்தஸ்ய ப்ருசம் விலோக்ய ஸுஹ்ருதோ மோதோதிதம் சேஷ்டிதம்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ||–98-

ஸாலான் ஸப்த ததா தரான் அபி சரேண ஏகேந பேத்து: புரா வடுவூர் ஹயக்ரீவர் சந்நிதி முன்பே ஸ்வாமி அருளிச் செய்கிறார் –
ஆஸ்ரிதர் விசுவாசம் -ஊட்டி அருளி மந்தஸ்மிதம் -ஒரே அம்பால் ஏழு சால மரங்களையும் -நடுவில் ஊடு உருவி –
பூமியையும் ஊடு உருவி அம்புறா துணி அடைய
பாதாப்ஜே தவ மஸ்தகம் க்ருதவத: தே சம்ஸதோ விக்ரமம்|-திருவடிகளில் தலையை மடுத்து சேவித்து -விக்ரமம் புகழ்ந்து
விஸ்ரப்தஸ்ய ப்ருசம் விலோக்ய ஸுஹ்ருதோ மோதோதிதம் சேஷ்டிதம் நண்பனுக்கு நம்பிக்கை கொடுத்து அருளி –
செயலினால் ஆனந்தம் உதிக்கச் செய்ததே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ||-அதே புன்னகை நாமும் சேவிக்கும் படி சேவை சாதித்து அருளுகிறாய்
மந்தஸ்மிதம் சேவித்து மஹா விசுவாசம் பெறுகிறோம் -நம்பிக்கை நக்ஷத்ரமாக புன்னகை விளங்குகிறதே –

————

ஸுக்ரீவேண ஸமீரிதாம் சுபவதீம் ச்ருத்வா கதாம் அத்புதாம்
ஸ்ரீமத் ஸப்த ஜன ஆச்ரமஸ்ய பவத: ப்ரீத்யா நமஸ்குர்வத:|
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ
தத் தே ஸௌது ஸுகானி பூர்வ புருஷாநத்யா ஸமுத்தானி மே||–99

ஸுக்ரீவேண ஸமீரிதாம் சுபவதீம் ச்ருத்வா கதாம் அத்புதாம் ஸ்ரீமத் ஸப்த ஜன ஆச்ரமஸ்ய -ஆஸ்ரமம் காட்ட –
அத்புத இனிமையான கதையை சொல்ல ஸப்த ரிஷிகள் -தலைகீழாக இருந்து தவம் இருந்து
பவத: ப்ரீத்யா நமஸ்குர்வத:|-மிகவும் மகிழ்ந்து அவர்கள் இருந்த இடம் நமஸ்கரித்து
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ- தத் தே ஸௌது ஸுகானி பூர்வ புருஷாநத்யா
ஸமுத்தானி மே||- அப்பொழுது பூர்வ புருஷர்கள் மரியாதை செய்து மந்தஸ்மிதம் –
அதே புன்னகை இங்கும் காட்டி -மஹான்கள் -வேத வல்லார் -வேத பாடசாலை சூழ்ந்து இருக்க –
கண்டு பக்தியை மெச்சி புன்னகை -அது எங்களுக்கு மகிழ்ச்சி இன்பம் வளரும் படி அனுக்ரஹித்து அருளுவாய் –

————

ஏகேனைவ சரேண பாதிதவத: தே வாலினம் தத் கிரா
ஸந்நிந்தாகுலயா ததா அதிகதயா ந்யாயாத் அபேதாத்மனா
யத் மந்த ஸ்மிதம் ஆனனேதவ பபௌ தர்ம ஸ்வரூபாச்ரயே
தீனானாத சரண்ய தைவமணே ஸ்வாமி ஸுகாயாஸ்து ந:–100-

ஏகேனைவ சரேண பாதிதவத: தே வாலினம் தத் கிரா
ராம நாமம் கண்டான் வாலி பானத்தில் -கேள்விகளுக்கு முதலில் மந்தஸ்மிதம் -பின்பு பதில்கள் –
ஒற்றை பானம் -ஒரு வில் ஒரு சொல் ஒரு இல் –ஒன்றாலேயே -அடித்து விழும்படி செய்தான் –
கீழே விழுந்தவன் ஆறு கேள்விகள்
1-நான் யாரோ நீ யாரோ -அறிமுகம் இல்லையே
2-நாங்கள் குரங்குகள் -நீ மன்னன் மனிதன் -என்ன சம்பந்தம்
3-மறைந்து இருக்க வேண்டுமா
4-என்ன பிரயோஜனம்
5-என்ன தவறு செய்தேன்
6-தண்டிக்க நீ யார் -போன்ற ஆறு கேள்விகள் தொடுத்தான்
ஸந்நிந்தாகுலயா ததா அதிகதயா ந்யாயாத் அபேதாத்மனா-அதிகமாக நிந்தைகள் -நியாயம் இல்லாத கேள்விகள் –
1-சண்டை போடுவதற்கு முன் அறிமுகம் வேண்டாம் -வேட்டை ஆடுவதற்கு –
2-நாடு காடு அனைத்தையும் இஷுவாகு -நாட்டை பரதன் -காட்டை நான்
3-மிருகம் வேட்டை ஆட மறைந்து தானே ஆட வேண்டும்
4-புலி நகம் மான் தோல் போல் பயன் இல்லையே -என்னில் தவறை தண்டிக்கவே -உன்னால் கேடு உண்டானதே
5-தம்பியின் மனைவி ரூமா அபகரித்தாய் அது பெரிய தவறு
6-நான் சக்ரவர்த்தி திரு மகன் -ஆகவே தண்டிக்கலாமே
யத் மந்த ஸ்மிதம் ஆனனேதவ பபௌ தர்ம ஸ்வரூபாச்ரயே தர்மங்களுக்கு ஆஸ்ரயமான திரு முக மண்டலத்தில்
மந்தஸ்மிதம் -வாலியும் தாரையும் ஒத்துக் கொண்டார்கள் -அப்ரமேயன் ஸ்தோத்ரம் பண்ணினாள்
கிஷ்கிந்தா -கிஷ்கி -சரணாகதி -அர்த்தமும் உண்டே
சரண் புகுந்த தம்பியை அடைக்கலம் கொடுக்காமல் இருக்க -ஸஹ மனுஷன் இடம் கருணை காட்டாமல் -இருந்தாய் –
கொல்லப் பார்த்தாய் -இறைவனது கருணையை எதிர்பார்க்க வாய்ப்பு இல்லையே
முன்னால் வந்தால் சரணாகதி பண்ண வாய்ப்பு இருக்குமே
தீனானாத சரண்ய தைவமணே ஸ்வாமி ஸுகாயாஸ்து ந:-தீனர்கள் -அநாதிகள் -புகல் அற்றவர்களுக்கு சரண்யன் –
தேவர்கள் அதிபதி –அகில ஜகத் ஸ்வாமின் -அஸ்மின் ஸ்வாமி -வாலியை கைக்கொண்டு மந்தஸ்மிதம் –
இதுவே நமக்கு அருள்களைக் கொடுக்கட்டும் –

———–

ஹ்ருத்யை: வாத்ய கணோதிதை: கரக்ருதை: ஸ்த்ரீணாம் ச கீத்யாதிபி:
ஜாதை: ச்ரோத்ர ஸுகை: நிநாத நிவஹை: தீவ்யந்தம் அந்த: புரே
ஸுக்ரீவம் ஸுஹ்ருதம் விலோக்ய பகவன் மந்த ஸ்மிதம் யத் முகே
தத் மே ஸௌது ஸுகம் பரம் ரகுபதே தீன-அவன-ஏக-வ்ரத–101-

ஹ்ருத்யை: வாத்ய கணோதிதை: கரக்ருதை: ஸ்த்ரீணாம் ச கீத்யாதிபி:-இனிதாக -வாத்ய த்வனி -கர த்வனி -பெண்கள் பாடும் ஒலி
ஜாதை: ச்ரோத்ர ஸுகை: நிநாத நிவஹை: தீவ்யந்தம் அந்த: புரே-இவற்றைக் கேட்டுக் கொண்டு
அந்தப்புரத்தில் விளையாடும் சுக்ரீவன் –பெருமாள் வாடும் நிலையை நினைக்காமல்
ஸுக்ரீவம் ஸுஹ்ருதம் விலோக்ய பகவன் மந்த ஸ்மிதம் யத் முகே-ஸ்வாமியான பெருமாள் சுக்ரீவனான நண்பனைப் பார்த்து –
மனக்கண்ணால் -மந்தஸ்மிதம் -கோபத்தை வெளியிடும் மந்தஸ்மிதம் -மனத்துக்கு இனியான் –
வாலி அனுப்பிய பானம் தயார் -அவன் போன இடம் வாசலும் திறந்து உள்ளது
தத் மே ஸௌது ஸுகம் பரம் ரகுபதே தீன-அவன-ஏக-வ்ரத- ரகு குல திலகம் -அதே மந்தஸ்மிதம் நமக்கு புண்யம் –
பிராட்டி போல் நம்மையும் விரைந்து ரக்ஷிப்பானே –
நம்முடைய பாபங்கள் மேல் கோபித்து போக்கும் படி -தீனர்கள் -காக்கும் விரதம் பூண்டவன் அன்றோ –

————–

அந்தர் துக்கசயம் வஹன் அபி பவான் ப்ருக்தம் ஸுஹ்ருத் ஸௌக்யத:
மோதம் கஞ்சன ஸம்வஹன் யதகரோ: மந்த ஸ்மிதம் மஞ்ஜுளம்
தத் தே ராகவ கிஞ்சன அதி ஸுபகம் ஸௌஜன்யம் அன்யாத்ருசம்
மான்யம் தர்சயதி இதி தத்ர ரமதே ஸர்வோபி அபிஜ்ஞோ ஜன:–102-

அந்தர் துக்கசயம் வஹன் அபி பவான் ப்ருக்தம் ஸுஹ்ருத் ஸௌக்யத:-பவான் நேரே விழித்து –
உள்ளே சோகம் தங்கி இருந்தாலும் -நண்பனான ஸூ க்ரீவனோ மகிழ்ந்து தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தாலும்
மோதம் கஞ்சன ஸம்வஹன் யதகரோ: மந்த ஸ்மிதம் மஞ்ஜுளம்-மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிமையான புன்னகை காட்டி அருள
தத் தே ராகவ கிஞ்சன அதி ஸுபகம் ஸௌஜன்யம் அன்யாத்ருசம்-மிகவும் இனிமை அழகிய அன்பை
வெளிப்படுத்தும் வியக்கத்தக்க போடத்தக்க புன்னகை
மான்யம் தர்சயதி இதி தத்ர ரமதே ஸர்வோபி அபிஜ்ஞோ ஜன:-எல்லா ஞானிகளும் வியந்து மகிழ்ந்து போற்றும் படி
நட்பின் இலக்கணம் காட்டி -நண்பன் மகிழ்ச்சியே தனக்கு -என்றும்
இடுக்கண் வருங்கால் நகுக வாழ்க்கையின் தத்வம் -வருந்துவதால் என்ன பிரயோஜனம் –
பிரயத்தனம் எடுத்து போக்கவே வேண்டும்
வேதாந்த தத்வம் ஸூக துக்கம் கண்டு வாடாமல் இறை த்யானம் -உலக வாழ்க்கை -ecg மேலும் கீழும் போனால்
தான் -மேடு பள்ளங்கள் இருப்பதே வாழ்க்கை –
புன்னகை ஓன்று தத்வங்கள் மூன்றும் காட்டி அருளினான் -இப்பொழுதும் சேவை சாதித்து நமக்கும் உணர்த்தி அருளுகிறார் –

————-

தூஷ்ணீம் ஏஷ ஸுராநுபூதி நிரத: காமம் க்ருதக்ன: கபி:
நைவ த்வாம் உபகாரகம் ஸ்மரதி தத் வாலி அந்திகம் கச்சது
இத்தம் லக்ஷ்மண பாஷிதே ந ஹி ததா கோபோ விதேய: புர:
ஸாந்த்வம் ப்ரூஹி ஸகேதி தே ஸுவசஸா மந்த ஸ்மிதம் சோபதே–103-

தூஷ்ணீம் ஏஷ ஸுராநுபூதி நிரத: -மது போதையில் கிடக்கிறான்
காமம் க்ருதக்ன: கபி:-செய் நன்றி மறந்து காமத்தில் ஆழ்ந்து
நைவ த்வாம் உபகாரகம் ஸ்மரதி தத் வாலி அந்திகம் கச்சது-வாலியை அனுப்பிய வழிக்கே இவனை
இத்தம் லக்ஷ்மண பாஷிதே -லஷ்மணன் சொல்ல
ந ஹி ததா கோபோ விதேய: புர:-கோபிக்கக் கூடாதே -பணிவுடன் செல்ல வேண்டும் -ராஜா அன்றோ –
ஸாந்த்வம் ப்ரூஹி ஸகேதி தே ஸுவசஸா மந்த ஸ்மிதம் சோபதே–தேற்றி அனுப்பி -பொறுமை உடன் –
கருணா காகுஸ்தனாக மந்தஸ்மிதம் செய்து அருளினாய்
அதே மந்தஸ்மிதம் -காட்டி சேவை சாதித்து அருளுகிறாய் –

—————

ஆனீதம் கபிபி: க்ருதாஞ்ஜலி புடை: ஸங்க்யாதிகை: பீகரை:
சத்ரூணாம் தரணீ தலம் நிகலம் அபி ஆசாதயத்பி: ததா
ஸுக்ரீவம் ஸுஹ்ருதம் ஸமீக்ஷ்ய ஸுபகம் ஸுப்ரீத சித்தஸ்ய தே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே–104-

ஆனீதம் கபிபி: க்ருதாஞ்ஜலி புடை: ஸங்க்யாதிகை: பீகரை:-லஷ்மணனால் அழைத்து வரப்பட்ட
சுக்ரீவனை கண்டு -அஞ்சலி முத்திரையுடன் வந்த எண்ணிறந்த -வானர முதலிகளையும் –
சத்ரூணாம் தரணீ தலம் நிகலம் அபி ஆசாதயத்பி: ததா-சத்ருக்கள் பயப்படும்படி -உலகம் முழுவதும் நிறையும் படி
ஸுக்ரீவம் ஸுஹ்ருதம் ஸமீக்ஷ்ய ஸுபகம் ஸுப்ரீத சித்தஸ்ய தே-நண்பனான ஸூ க்ரீவனைக் கண்டு
நன்றாக மகிழ்ந்த திரு உள்ளத்துடன்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே-மந்தஸ்மிதம் காட்டி அருளினாய் –
அதே புன்னகை காட்டி -அவ்வளவு பக்தி கைங்கர்ய சிரத்தை இல்லாத அடியோங்களைக் கண்டும்
அதே மந்தஸ்மிதம் காட்டி அருளுகிறாயே

——–

“ஸ்வாமின்! ஸைன்யம் த்வதீயம் கபிகுல வலிதம் ஹ்ய்ருக்ஷ ப்ருந்தாவ்ருதம் ஸத்
ரக்ஷோ விக்ஷேப தக்ஷம் சரண ஸவிதம் வர்த்ததே வாக் ப்ரதீக்ஷம்”
இதி ஏவம் ஸூரஸூநௌ கதிதவதி முகே தாவகே தாடகாரே
ஜாதம் மந்த ஸ்மிதம் யத் தத் இதம் இதி பவான் தர்சயதி அந்தரங்கம்–105-

“ஸ்வாமின்! ஸைன்யம் த்வதீயம் கபிகுல வலிதம் ஹ்ய்ருக்ஷ ப்ருந்தாவ்ருதம் ஸத்–ஸ்வாமியே –
70 வெள்ளம் வானர முதலிகள் அனைத்தும் உம்முடையவையே -ஜாம்பவான் தலைமையில் உள்ள கரடிக்கூட்டமும் உண்டே
ரக்ஷோ விக்ஷேப தக்ஷம் சரண ஸவிதம் வர்த்ததே வாக் ப்ரதீக்ஷம்”-அரக்கர் கூட்டத்தை அழிக்க வல்லவை –
உமது திருவடியில் பணிந்து ஆணைப்படி செயல்பட காத்து உள்ளன
இதி ஏவம் ஸூர ஸூநௌ கதிதவதி முகே தாவகே தாடகாரே-ஸூ ர்ய புத்ரன் சொல்ல – தாடகையை வாதம் செய்த தேவரீர்
ஜாதம் மந்த ஸ்மிதம் யத் தத் இதம் இதி பவான் தர்சயதி அந்தரங்கம்-மெல்லிய மந்தஸ்மிதம் –
இந்த கூட்டம் கண்டாவது பயந்து ராவணன் திருந்துவானோ என்கிற நப்பாசையால் மந்தஸ்மிதம் –
இவனை நிரசிக்க பெருமாள் ஒருவனே -தாடகையை பால ராமனே அழித்ததை இதுக்காகவே காட்டி அருளுகிறார் இந்த ஸ்லோகத்தில்
அந்தரங்கமான மந்தஸ்மிதம் -பக்தி அஞ்சனம் கொண்டே இத்தை அறிய முடியும் -நாமும் அறியும்படி இன்றும் சேவை சாதித்து அருளுகிறாரே –

—————-

ப்ராசீம் கச்சேய யூயம் ததநு பவநபூ: அங்கதாத்யை: ஸமேத:
மத் ப்ராது: தர்ம த்ருஷ்டே: திசிம் இதி சுபயா ஸ்ரீதினாதீச ஸூனோ:
வாசா ஸத்யோ முகே தே நவகமல நிபோ யோ பபௌ மந்த ஹாஸ:
தத் த்வம் ஸீதாபதே மே நிரவதிக தயோ தர்சயஸி அத்ய ஸத்யம்–106-

ப்ராசீம் கச்சேய யூயம் ததநு பவநபூ: அங்கதாத்யை: ஸமேத:-நீங்கள் கிழக்கு திக்கு செல்லுங்கோள் –
அத்தைத் தொடர்ந்து வாயு புத்ரன் -அங்கதன் ஜாம்பவான் இவர்களைக் குறித்து
மத் ப்ராது: தர்ம த்ருஷ்டே: திசிம் இதி சுபயா ஸ்ரீதினாதீச ஸூனோ:-தன்னுடைய சகோதரன் –
யம தர்ம ராஜனும் ஸூ ர்ய புத்ரன் -அண்ணன் முறை -தெற்குத் திசை நோக்கி
வாசா ஸத்யோ முகே தே நவ கமல நிபோ யோ பபௌ மந்த ஹாஸ:-இப்படிச் சொல்வதைக் கேட்ட உடனே –
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்ற திரு முகத்தில் மந்தஹாசம்
தெற்கு திசை மங்களம் அல்ல -என்பர் -இவர்களே பிராட்டியைக் கண்டு த்ருஷ்டா சீதா சொல்லப் போகிறார்கள்
மங்களகரமான மூர்த்தி திருவடி இதனாலே இன்றும் சொல்கிறோம் -புத்திர் -பலம் யசஸ் ஸூ -இத்யாதி
தத் த்வம் ஸீதாபதே மே நிரவதிக தயோ தர்சயஸி அத்ய ஸத்யம்-எல்லையற்ற தயா மூர்த்தி –
அதே மந்தஸ்மிதம் அடியோங்களுக்கும் மங்களம் கொடுக்கும் -இது சத்யம்

—————-

தத்வா மாருத நந்தனஸ்ய கரயோ ரத்னாங்குளீயம் சுபம்
த்ருஷ்ட்வா தஸ்ய நதஸ்ய மஸ்தக தலம் ஸீதா த்ருசோ: ஆஸ்பதம்
யத் மந்த ஸ்மிதம் ஆததான ஸ பவான் தன்மங்கலம் மத்புரோ
பூயோ தர்சயதி ஸ்வயைவ தயயா தாத்ருக்ஷயா அமேயயா–107-

தத்வா மாருத நந்தனஸ்ய கரயோ ரத்னாங்குளீயம் சுபம்-தெற்கு திசைக்கு -திருவடி -ரத்னங்கள் பதித்து
ராம நாமம் பொறிக்கப் பெற்ற கணையாழி பெற்று உச்சிமேல் வைத்து உகந்து மந்தஸ்மிதம்
வாய் புத்திரனான திருவடிக்கும் பெருமாளுக்கும் –
த்ருஷ்ட்வா தஸ்ய நதஸ்ய மஸ்தக தலம் ஸீதா த்ருசோ: ஆஸ்பதம்-விழுந்து வணங்கிய திருவடியைக் கடாக்ஷித்து –
ஸீதாப்பிராட்டி யையும் வணங்கி அவள் கடாக்ஷத்துக்கும் ஆஸ்பதம் -இடமாகப் போகிறதே –
தோஷங்களையே பார்க்கத் தெரியாத பிராட்டி-நாச்சியார் விழி விழிக்கப் போகாதே அவனுக்கு –
யத் மந்த ஸ்மிதம் ஆததான ஸ பவான் தன்மங்கலம் மத்புரோ-இத்தை நினைந்தே மந்தஸ்மிதம் –
அந்த மங்களகரமான அத்தை இன்றும் இங்கே
பூயோ தர்சயதி ஸ்வயைவ தயயா தாத்ருக்ஷயா அமேயயா-மறுபடியும் உனக்கே உள்ள பரம எல்லை இல்லாத
கருணையால் அடியோங்களுக்கும் சேவை சாதித்து அருளுகிறாயே –

——————

ஆதாய அங்குலி பூஷணம் ஸ ஹநுமான் க்ருத்வா சிரோ பூஷணம்
பத்த்வா சேல முகே பவந்தம் அபி தம் நத்வா முஹு: ஸாதரம்
ஸாகம் ஸ்வை: அகமத் திசம் நிஜ பிது: ஸௌம்யஸ்ய லீலாபதம்
தத் த்ருஷ்ட்வா வதனே ததா யத் அபவத் மந்த ஸ்மிதம் தே அத்ய தத்–108-

ஆதாய அங்குலி பூஷணம் ஸ ஹநுமான் க்ருத்வா சிரோ பூஷணம்-கணையாழி அளித்து விஜயத்துடன்
திரும்பி வர ஆசீர்வாதம் செய்து மந்தஸ்மிதம்
108-1 power 1-times-2 power 2 times-3 power 3 ==108
திரு விரலுக்கு பூஷணமாக இருந்ததை தலைக்கு பூஷணாமாகக் கொண்டு உச்சி மேல் வைத்து உகந்தான்
பத்த்வா சேல முகே பவந்தம் அபி தம் நத்வா முஹு: ஸாதரம்-இடுப்பின் வஸ்த்ரத்தில் முடிந்து கொண்டு
பவாந்தம் -உன்னை மீண்டும் விழுந்து வணங்க
ஸாகம் ஸ்வை: அகமத் திசம் நிஜ பிது: ஸௌம்யஸ்ய லீலாபதம்-உடன் இருந்த முதலிகளைக் கூட்டிக் கொண்டு
தென்றல் வீசும் தெற்கு நோக்கி புறப்பட்டதைப்
கொண்டல் -கோடை வாடை தென்றல் -கிழக்கு -மேற்கு வடக்கு தெற்கு -திசைக் காற்றுக்கள்
தத் த்ருஷ்ட்வா வதனே ததா யத் அபவத் மந்த ஸ்மிதம் தே அத்ய தத்-பார்த்து மெல்லிய புன்னகை உடன் அனுக்ரஹித்து ஆசீர்வாதம்
அதே மந்தஸ்மிதம் இன்றும் நாம் சேவிக்கப் பெற்று அருள் பெறுகிறோமே –

————————

ஐஷ்யத் யேஷ மம ப்ரியாம் ஜனகஜாம் சாமீகராங்கீம் ஸதீம்
நீலாம்போஜ தலாதிரம்ய நயனாம் நாஸாபிராமானனாம்
த்ருஷ்ட்வா மஞ்ஜுள மந்தஹாஸ மதுராம் வாணீ ஸுதா வர்ஷிணீம்
இந்த யந்தஸ் தவ குர்வதோ ஹி யதபூத் மந்தஸ்மிதம் தன்முகே–109-

ஐஷ்யத் யேஷ மம ப்ரியாம் ஜனகஜாம் -மிக பிரியவளான பிராட்டியை காணப் போகிறான்
இலங்கையில் இருந்தாலும் இவனுக்கு எப்பொழுதுமே பிரியம்
ஜனக வம்ச புகழை காக்குக் கற்பு நிலை
சாமீகராங்கீம் தங்கம் போன்ற திரு மேனி -அரக்கிகள் சூழ்ந்து இருந்தாலும்
ஸதீம்–கற்புக்கு அரசியாக
நீலாம்போஜ தலாதிரம்ய நயனாம் -நீல தாமரை இதழ் போல் அதி ரம்யமான திருக்கண்கள்
நாஸாபிராமானனாம்-திரு மூக்கு திரு முகம் =கண்டு இவனே பிராட்டி என்று அறிவான்
த்ருஷ்ட்வா மஞ்ஜுள மந்தஹாஸ மதுராம் =அழகான இனிய மெல்லிய புன்னகை
ராமசரிதம் பாடுவான் கணையாழி கொடுப்பான் இதனால் பிறக்கும் மந்தஸ்மிதம்
வாணீ ஸுதா வர்ஷிணீம்-அமுதே பொழியும் வாகக்கு வன்மை -பெருமாளுக்கு செய்து பதில் சொல்லி அனுப்பப் போகிறாள் அன்றோ
புறப்பட்ட போதே திருவடிக்கு இப்படி விண்ணப்பம்
இந்த யந்தஸ் தவ குர்வதோ ஹி யதபூத் மந்தஸ்மிதம் தன்முகே-இந்த மந்தஸ்மிதம் இப்போதும் நமக்கு காட்டிக் கொடுத்து அருளுகிறாயே –

———–

மார்கே கச்சது விக்ன கந்த ரஹிதோ தூன்வன் பரான் விக்ரமை
ரக்ஷஸ் வங்க விமர்தனோ கிரிரிவ ப்ராப்தே ப்ரசாரோ மஹான்
த்ருஷ்ட்வா தாம் அஸி தேஷிணாம் மதுரயா வாண்யா தயா நந்தித
சோயம் மாம் அபி நந்தயத் விதி ஹ்ருதி த்யாதுர் முகே பூத் ஸ்மிதம் – 110-

மார்கே கச்சது -நன்றாக பயணம்
விக்ன கந்த ரஹிதோ -தடை வாசனை கூட இல்லாமல்
தூன்வன் பரான் விக்ரமை -தடை வந்தாலும் த்வந்தசம் பண்ணட்டும்
கிரிரிவ ரக்ஷஸ் வங்க விமர்தனோ –மலை போன்ற அரக்கர்களை வாதம் செயயவும் ஆசீர்வாதம் செய்தாயே
ப்ராப்தே ப்ரசாரோ மஹான் -மிகப்பெரும் புகழை அடையவும் ஆசீர்வாதம் செய்தாயே
த்ருஷ்ட்வா தாம் அஸி தேஷிணாம் -பிராட்டியைக் காணவும் ஆசீர்வாதம்
மதுரயா வாண்யா தயா நந்தித -அவள் இனிய வாக்குகளைக் கேட்டு மகிழட்டும்
சோயம் மாம் அபி நந்தயத் -நீயும் ஆனந்தம் அடைய அன்றோ இப்படி ஆசீர்வாதம்
விதி ஹ்ருதி த்யாதுர் முகே பூத் ஸ்மிதம் –நமக்கும் தடைகளை போக்கி -மலை போன்ற காமக்ரோதாதிகளைப் போக்கி
லஷ்மீ கடாக்ஷம் பெற்று நித்ய ஸூரிகள் போல் நிரதிசய ஆனந்தம் கீர்த்தி பெறுவதற்காகவே
இன்றும் அதே மந்தஸ்மிதம் காட்டி அருளுகிறாய் –

——-

ஸர்வே திக்ஷு கதா: பராஸு கபய: ப்ரத்‌‌‌யாகத: ஸாம்ப்ரதம்‌‌‌
நாமீ தக்ஷிண திக் கதா ஹநுமதா யுக்தா: தத: தே த்ருவம்‌‌‌
த்ரக்ஷ்யந்‌‌‌த்யேவ ஸுதாம் விதேஹ ந்ருபதே: இத்யுத்திதாம் மோதத:
ஸுக்ரீவாத்‌‌‌ வசனம் நிசம்ய பவதோ மந்தஸ்மிதம் வர்ததே–111-

ஸர்வே திக்ஷு கதா: பராஸு கபய: ப்ரத்‌‌‌யாகத: ஸாம்ப்ரதம்‌‌‌-தெற்குத் திக்கில் தவிர மற்ற
எல்லா திசைகளிலும் போனவர் -திரும்பி வந்தனர்
நாமீ தக்ஷிண திக் கதா ஹநுமதா யுக்தா-தெற்கு திக்கில் திருவடி தலைமையில் சென்றமுதலிகள் மட்டும் வர வில்லை
தத: தே த்ருவம்‌‌‌-இது கொண்டு நிச்சயம்
த்ரக்ஷ்யந்‌‌‌த்யேவ ஸுதாம் விதேஹ ந்ருபதே:இத்யுத்திதாம் மோதத: -ஜனக ராஜன் திரு மகளைக் கண்டு உள்ளார் என்று மகிழ்ச்சியுடன் சொல்ல
ஸுக்ரீவாத்‌‌‌ வசனம் நிசம்ய பவதோ மந்தஸ்மிதம் வர்ததே–இத்தைக் கேட்டு உனது மந்தஸ்மிதம் இன்று வரை வளர்ந்து உள்ளதே
நாமும் இன்றும் சேவித்து மகிழும் படி அன்றோ இங்கே சேவை சாதித்து அருளுகிறாய் –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)-

February 7, 2021

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ ।
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥

ஜயத்யாஶ்ரித ஸந்த்ராஸ த்வாந்த வித்வம் ஸனோதய: ।
ப்ரபாவான் ஸீதயா தேவ்யா பரம-வ்யோம பாஸ்கர: ॥

பாலகாண்டம்
ஜய ஜய மஹாவீர !
மஹாதீர தௌரேய !

தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய !

தஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ !

தினகர – குல – கமல – திவாகர !

திவிஷததிபதி – ரண – ஸஹசரண – சதுர – தசரத -சரமருண – விமோசன !

கோஸல – ஸுதா – குமார – பாவ – கஞ்சுகித – காரணாகார !

கௌமார -கேளி – கோபாயித – கௌசிகாத்வர !

ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித !

ப்ரணத ஜன விமத விமதன துர்லளித தோர்லளித !

தனுதர விஶிக விதாடன விகடித விஶராரு ஶராரு தாடகா தாடகேய !

ஜட-கிரண ஶகல-தர ஜடில நட பதி மகுடதட நடனபடு விபுத-
ஸரிததி பஹுள மது களந லலித பத நளின-ரஜ உப-ம்ருʼதித
நிஜவ்ருஜின ஜஹதுபல தனுருசிர பரம-முனிவர யுவதி நுத !

குஶிகஸுத கதித விதித நவ விவித கத !

மைதில நகர ஸுலோசனா லோசன சகோர சந்த்ர !

கண்ட-பரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டன ஶௌண்ட புஜ-தண்ட !

சண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வந ருசி லுண்டாக லோசந !

மோசித ஜனக ஹ்ருʼதய ஶங்காதங்க !

பரிஹ்ருʼத நிகில நரபதி வரண ஜனக துஹித்ரு குசதட விஹரண ஸமுசித கரதல !

ஶதகோடி ஶதகுண கடின பரஶு தர முனிவர கர த்ருʼத
துரவநமதம நிஜ தநுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய !

க்ரது-ஹர ஶிகரி கந்துக விஹ்ருத்யுந்முக ஜகத-ருந்துத ஜிதஹரி-
தந்தி தந்த தந்துர தஶவதந தமந குஶல தஶ-ஶத-புஜ முக
ந்ருபதி-குல ருதிர ஜர பரித ப்ருʼதுதர தடாக தர்பித பித்ருʼக
ப்ருகு பதி ஸுகதி விஹதிகர நத பருடிஷு பரிக !

————-

அயோத்யா காண்டம்
அந்ருத பய முஷித ஹ்ருʼதய பித்ருʼ வசன பாலன ப்ரதிஜ்ஞா-
வஜ்ஞாத யௌவராஜ்ய !

நிஷாத ராஜ ஸௌஹ்ருʼத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர !

பரத்வாஜ ஶாஸன பரிக்ருʼஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவஸத !

அநன்ய ஶாஸனீய !

ப்ரணத பரத மகுடதட ஸுகடித பாதுகாக்ர்யாபிஷேக
நிர்வர்த்தித ஸர்வ லோக யோக க்ஷேம !

பிஶித ருசி விஹித துரித வல-மதன தனய பலிபுகனு-கதி ஸரபஸ
ஶயன த்ருʼண ஶகல பரிபதன பய சரித ஸகல ஸுரமுனி-வர
பஹுமத மஹாஸ்த்ர ஸாமர்த்ய !

த்ருஹிண ஹர வல-மதன துராரகக்ஷ ஶர லக்ஷ !

தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத !

விராத ஹரிண ஶார்தூல !

விலுலித பஹுபல மக கலம ரஜநிசர ம்ருʼக ம்ருʼகயாரம்ப
ஸம்ப்ருʼத சீரப்ருʼதனுரோத !

த்ரிஶிர: ஶிரஸ்த்ரிதய திமிர நிராஸ வாஸர-கர !

தூஷண ஜலநிதி ஶோஷண தோஷித ருஷிகண கோஷித விஜய
கோஷண !

கரதர கர தரு கண்டன சண்ட பவன !

த்விஸப்த ரக்ஷ: ஸஹஸ்ர நளவன விலோலன மஹாகலப !

அஸஹாய ஶூர !
அநபாய ஸாஹஸ !

மஹித மஹா-ம்ருʼத தர்ஶன முதித மைதிலீ த்ருʼட-தர பரிரம்பண
விபவ விரோபித விகட வீரவ்ரண !

மாரீச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண !

விக்ரம யஶோ லாப விக்ரீத ஜீவித க்ருத்ர-ராஜ தேஹ திதக்ஷா
லக்ஷித-பக்தஜன தாக்ஷிண்ய !

கல்பித விபுத பாவ கபந்தாபிநந்தித !

அவந்த்ய மஹிம முனிஜன பஜன முஷித ஹ்ருʼதய கலுஷ ஶபரீ
மோக்ஷ ஸாக்ஷிபூத !

—————

கிஷ்கிந்தா காண்டம்
ப்ரபஞ்ஜன தனய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருʼதய !
தரணி-ஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருʼத ஸ்வாதந்த்ர்ய !

த்ருட கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்காள கூட தூர
விக்ஷேப தக்ஷ தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தர சலன
விஶ்வஸ்த ஸுஹ்ருʼதாஶய !

அதிப்ருʼதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருʼத
சித்ரபுங்க வைசித்ர்ய !

விபுல புஜ ஶைல மூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜநக
சதுருததி விஹரண சதுர கபிகுலபதி ஹ்ருʼதய விஶால
ஶிலாதல தாரண தாருண ஶிலீமுக !

————-

ஸுந்தர காண்டம்
அபார பாராவார பரிகா பரிவ்ருʼத பரபுர பரிஸ்ருʼத தவ தஹன
ஜவன-பவன-பவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வ தான !

—————

யுத்த காண்டம்
அஹித ஸஹோதர ரக்ஷ: பரிக்ரஹ விஸம்வாதி விவித ஸசிவ
விஸ்ரலம்பண ஸமய ஸம்ரம்ப ஸமுஜ்ஜ்ருʼம்பித ஸர்வேஶ்வர பாவ !

ஸக்ருʼத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித !

வீர !
ஸத்யவ்ரத !

ப்ரதிஶயன பூமிகா பூஷித பயோதி புளிந !

ப்ரளய ஶிகி பருஷ விஶிக ஶிகா ஶோஷிதாகூபார வாரி பூர !

ப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபிகுல கரதல துலித ஹ்ருʼத
கிரி நிகர ஸாதித ஸேது-பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர !

த்ருத-கதி தரு-ம்ருʼக வரூதினீ நிருத்த லங்காவரோத வேபது
லாஸ்ய லீலோபதேஶ தேஶிக தனுர்ஜ்யாகோஷ !

ககன-சர கனக-கிரி கரிம-தர நிகம-மய நிஜ-கருட கருதநில லவ
களித விஷ-வதன ஶர கதன !

அக்ருʼத சர வநசர ரண-கரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித
ரக்ஷோ பலாத்யக்ஷ வக்ஷ: கவாட பாடன படிம ஸாடோப கோபாவலேப !

கடுரட-தடனி டங்க்ருதி சடுல கடோர கார்முக விநிர்க்கத
விஶங்கட விஶிக விதாடன விகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தனய
விஶ்ரம ஸமய விஶ்ராணன விக்யாத விக்ரம !

கும்பகர்ண குல கிரி விதளன தம்போளி பூத நி:ஶங்க கங்கபத்ர !

அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபதத்
அபரிமித கபிபல ஜலதி லஹரி கலகல-ரவ குபித மகவஜி
தபிஹனன-க்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த !

அப்ரதித்வந்த்வ பௌருஷ !

த்ர யம்பக ஸமதிக கோராஸ்த்ராடம்பர !

ஸாரதி ஹ்ருʼத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப !

ஶித ஶர க்ருʼத லவந தஶமுக முக தஶக நிபதன புனருதய தர
களித ஜனித தர தரள ஹரி-ஹய நயன நளின-வன ருசி-கசித கதல
நிபதித ஸுர-தரு குஸும விததி ஸுரபித ரத பத !

அகில ஜகததிக புஜ பல வர பல தஶ-லபந லபந தஶக லவந
ஜனித கதன பரவஶ ரஜனி-சர யுவதி விலபன வசன ஸமவிஷய
நிகம ஶிகர நிகர முகர முக முனி-வர பரிபணித!

அபிகத ஶதமக ஹுதவஹ பித்ருʼபதி நிர்ருʼதி வருண பவன தனத
கிரிஶர முக ஸுரபதி நுதி முதித !

அமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருʼஷத லவ !

விகத பய விபுத விபோதித வீர ஶயன ஶாயித வானர ப்ருʼதனௌக !

ஸ்வ ஸமய விகடித ஸுகடித ஸஹ்ருʼதய ஸஹதர்ம சாரிணீக !

விபீஷண வஶம்வதீ-க்ருʼத லங்கைஶ்வர்ய !

நிஷ்பன்ன க்ருʼத்ய !

க புஷ்பித ரிபு பக்ஷ !

புஷ்பக ரபஸ கதி கோஷ்பதீ-க்ருʼத ககனார்ணவ !

ப்ரதிஜ்ஞார்ணவ தரண க்ருʼத க்ஷண பரத மனோரத ஸம்ஹித
ஸிம்ஹாஸனாதிரூட !

ஸ்வாமின்!
ராகவ ஸிம்ஹ!

—————–

உத்தர காண்டம்
ஹாடக கிரி கடக லடஹ பாத பீட நிகட தட பரிலுடித நிகில
ந்ருʼபதி கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ !

திவ்ய பௌமாயோத்யாதிதைவத !

பித்ருʼ வத குபித பரஶு-தர முனி விஹித ந்ருʼப ஹனன கதன
பூர்வ கால ப்ரபவ ஶத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ஶ !

ஶுச சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா ஶத !

ஶாஸித மது-ஸுத ஶத்ருக்ன ஸேவித !

குஶ லவ பரிக்ருʼஹீத குல காதா விஶேஷ !

விதி வஶ பரிணமதமர பணிதி கவிவர ரசித நிஜ சரித நிபந்தன
நிஶமன நிர்வ்ருʼத !

ஸர்வ ஜன ஸம்மானித !

புனருபஸ்தாபித விமான வர விஶ்ராணன ப்ரீணித வைஶ்ரவண
விஶ்ராவித யஶ: ப்ரபஞ்ச !

பஞ்சதாபன்ன முனிகுமார ஸஞ்ஜீவநாம்ருʼத !

த்ரேதாயுக ப்ரவர்தித கார்தயுக வ்ருʼத்தாந்த !

அவிகல பஹுஸுவர்ண ஹய-மக ஸஹஸ்ர நிர்வஹண
நிர்வர்த்தித நிஜ வர்ணாஶ்ரம தர்ம !

ஸர்வ கர்ம ஸமாராத்ய !
ஸனாதன தர்ம !

ஸாகேத ஜனபத ஜனி தனிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய கதி
தான தர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ !

பவத-பநாதா-பித பக்தஜன பத்ராராம !

ஶ்ரீ ராமபத்ர !
நமஸ்தே புனஸ்தே நம: !

சதுர்முகேஶ்வரமுகை: புத்ர பௌத்ராதி ஶாலினே ।
நம: ஸீதா ஸமேதாய ராமாய க்ருʼஹமேதினே ॥

கவிகதக ஸிம்ஹகதிதம் கடோத ஸுகுமார கும்ப கம்பீரம் ।
பவ பய பேஷஜமேதத் படத மஹாவீர வைபவம் ஸுதிய: ॥

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே ।
ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ॥

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–78–ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது)–

February 7, 2021

அத்தியாயம் 78 (615) ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது)

ராமா, அவன் பேச ஆரம்பித்த உடனேயே எனக்கு ஆச்சர்யம் உண்டாயிற்று. மதுரமாக பேசினான்.
கை கூப்பி நின்று பணிவாக பேசினான். அவன் சொன்னதை அப்படியே சொல்கிறேன் கேள் ப்ரும்மன்,

என் வாழ்வில் நடந்த சுக துக்கங்கள். தாங்கள் முனிவர், உங்கள் கட்டளையை மீற முடியாது என்பதால் சொல்கிறேன்.
வைதர்பகன் என்பவர் என் தந்தை. நல்ல புகழ் வாய்ந்தவர். சுதேவன் என்றும் அவரை அழைப்பர். வீர்யவான்.
இரண்டு மனைவியரிடம், இரு புத்திரர்கள் பிறந்தனர். என் பெயர் ஸ்வேதன். மற்றவன் சுரதன்.

தந்தை ஸ்வர்கம் சென்றபின், ஊர் ஜனங்கள் எனக்கு முடி சூட்டி அபிஷேகம் செய்து வைத்தனர்.
நானும் தர்மத்தை அனுசரித்து நல்ல முறையில் ராஜ்யத்தை ஆண்டு வந்தேன். பல வருஷங்கள் இனிமையாக கழிந்தன.

ராஜ்யத்தை ஆண்ட படி, பிரஜைகளின் நன் மதிப்புக்கு பாத்திரமானவனாக, நாட்கள் சென்றன.
என் காலம் முடியும் தறுவாய் வந்து விட்டதை உணர்ந்து கால தர்மத்தை அனுசரித்து வனம் சென்றேன்.

இந்த ஜன நடமாட்டமில்லாத விசாலமான வனம், இதில் இதே குளக்கரையில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினேன்.
என் சகோதரன் சுரதன் அரியணையில் அமர்ந்தான். நானே முடி சூட்டி வைத்துவிட்டுத் தான் வந்தேன்.

இந்த குளக்கரையில் பல காலம் தவம் செய்து உத்தமமான ஸ்வர்க பதவியை அடைந்தேன்.
ப்ரும்ம லோகம் போயும், பசி தாகங்கள் என்னை விடவில்லை. இதனால் பெரிதும் வருந்தினேன்.
நேராக ப்ரும்மாவிடம் சென்று வேண்டினேன்.

பகவன், இதுவோ, ப்ரும்ம லோகம். இங்கு பசி தாகங்கள், மற்ற இந்திரிய உபத்ரவங்கள் கிடையாது என்பது பிரஸித்தம்.
எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? நான் என்ன பாவம் செய்தேன்?
என்ன காரணத்தால் இவை என்னை இன்னமும் தொடர்ந்து வந்து பாதிக்கின்றன. என் ஆகாரம் என்ன என்று நான் கேட்கவும்

அவர் சொன்னார். சுதேவன் மகனே, உனக்கு ஆகாரம் வேண்டுமா? உன் சரீர மாமிசத்தையே சாப்பிடு.
தவம் செய்யும் பொழுது உன் உடல் கொழுத்துக் கிடந்தது. விதை விளைக்காமல் எதுவும் முளைக்காது ஸ்வேதா,

நீ தவம் செய்யம் பொழுது, ஒரு யதி, தபஸ்வி, அந்த நிர்ஜனமான வனத்திற்கு வந்தார்.
சூக்ஷ்மமான திருப்தி கூட உனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் பிக்ஷைக்கு வந்திருக்கிறார்.
நீ அவருக்கு உபசாரமும் செய்யவில்லை. அதிதி வந்திருக்கிறார், அதுவும் நல்ல தபஸ்வி,

நீ அவரை கண்டு கொள்ளாமல், வரவேற்று பேசாமல், தவத்தில் மூழ்கி இருப்பது போலக் காட்டிக் கொண்டாய்.
அதனால் தான் ஸ்வேதா, ஸ்வர்கம் வந்தும், உன்னை பசி தாகங்கள் வாட்டுகின்றன.
புஷ்டியான ஆகாரங்களைக் கொண்டு உன் உடலை வளர்த்தாயே, அதையே சாப்பிடு.
என்ன ருசி, என்ன திருப்தி என்று தெரிந்து கொள்.
அந்த வனத்திற்கு அகஸ்திய முனிவர் வருவார். அவர் மூலம் விமோசனம் பெறுவாய் என்றார்.

அந்த அகஸ்திய முனிவர் தான் என்னை கரையேற்ற வேண்டும். தேவ தேவனுடைய கட்டளை,
இந்த அருவருக்கத் தக்க உணவை புசித்து வருகிறேன். பல வருஷங்கள் ஓடி விட்டன.

ப்ரும்மன், இந்த என் சரீர மாமிசத்தையே உண்டு வருகிறேன். அருவருத்தாலும், வேறு வழியில்லை.
பசி என்ற உனர்வு இன்னமும் என்னை விட்ட பாடில்லை. என்னை காப்பாற்றுங்கள். கரையேற்றுங்கள்.
கும்பயோனீ எனப்படும் அகஸ்தியரை அன்றி வேறு யாராலும் என்னை காப்பாற்ற முடியாது.

இந்த ஆபரணம் என்னைக் காப்பாற்ற நான் தருவதாக இருக்கட்டும். பகவன், ஏற்றுக் கொள்ளுங்கள்.
என் மேல் தயை செய்யுங்கள். முனிவரே, என்னிடம் உள்ள அனைத்து தனம், வஸ்திரங்கள், பக்ஷ்யம் (உண்ணத் தக்கவை),
போஜ்யம் (அனுபவிக்கத்தக்கவை) தருகிறேன்.

என்னிடம் உள்ள, காம, போகங்கள் அனைத்தையும் தருகிறேன். என்னை காப்பாற்றுங்கள் என கதறினான்.
அவனை கரையேற்ற இந்த ஆபரணத்தை நான் வாங்கிக் கொண்டேன்.

நான் இதை கையில் வாங்கிக் கொண்ட உடனேயே அந்த ராஜரிஷியின் முன் ஜன்மத்து மனித உடல் மறைந்தது.
அவனும், சரீரம் மறைந்த உடனேயே திருப்தியடைந்தவனாக தேவலோகம் சென்றான்.
இந்திரனுக்கு சமமான தேஜஸைப் பெற்றான். கஷ்டம் விலகி சுகமாக இருந்தான்.
அவன் தந்த ஆபரணம் தான் இது என்று சொல்லி முடித்தார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.129–ஸ்ரீ ஹனுமத் ஸ்ரீ பரத சம்பாஷணம் (ஸ்ரீ ஹனுமானும் ஸ்ரீ பரதனும் சம்பாஷித்தல்) —

February 6, 2021

sa pR^iShTo raajaputreNa bR^isyaaM samupaveshitaH |
aachachakShe tataH sarvaM raamasya charitaM vane || 6-126-4

4. pR^iShTaH = when asked; raajaputreNa = by Bharata; samupaveshitaH = after making Hanuma to sit; bR^isyaam = on a cushion; saH = Hanuma; tataH = thereupon; aachachakShe = began to narrate; sarve = the entire; charitam = exploits; raamasya = fo Rama; vane = in the forest.

Seated comfortably on a cushion and interrogated by Bharata, Hanuma thereupon began to narrate the entire exploits of Rama in the forest.

taddhastimR^iditaM ghoraM siMhavaagramR^igaakulam |
praviveshaatha vijanaM sa mahaddaNDakaavanam || 6-126-11

11. saH = that Rama; atha = thereupon; pravivesha = entered; tatmahat = that large; ghoram = terrific; viJNanam = and solitary; daN^Dakaaranam= forest of Dandaka; taddhastimR^iditam = which had been trampled by elephants; simhavyaaghra mR^igaakulam = and extensive with lions; tigers and deers.

“Rama, thereupon, entered that large, terrific and solitary forest of Dandaka, which had been trampled by elephants and extensive with lions, tigers and deers.”

chaturdashasahasraaNi rakShasaaM bhImakarmaNaam |
hataani vasataa tatra raaghaveNa mahaatmanaa || 6-126-17

17. mahaatmanaa raaghaveNa = by the great-souled Rama; vasataa = who was living; tatra = there; chaturdasha sahasraaNi = fourteen thousand;janasthaana vaasinaam = demons inhabiting Janasthana; hataani = were killed.

“Fourteen thousand demons, inhabiting Janasthana-region, were killed by the great-souled Rama, while sojourning that region.”

saa raamamabraviiddR^iShTvaa vaidehii gR^ihyataamiti |
ayaM manoharah kaanta aashramo no bhaviShyati || 6-126-23

23. saa vaidehii = that Seetha; dR^iShTvaa = on seeing it; abraviit = told; raamam = Rama; iti = saying; ayam = let this deer; gR^ihyataam bhaviShyat = be caught; naH aashramaH = so that our hermitage; manoharaH kaantaH = would be charming and pleasing.

“That Seetha, on seeing it, told Rama, ‘Let this deer be caught. Our hermitage will turn out to be charming and pleasing to the eye’.”

tR^iNavadbhaaShitaM tasya taM cha nairR^itapuMgavam || 6-126-31
achintayantii vaidehii hyashokavanikaaM gataa |

31. achintayantii = without caring for; tam nairR^ita pungavam = that Ravana and caring for; tasya bhaaShitam = his talk; tR^iNavat = even as a blade of grass; vaidehii = Seetha; gataa = actually remained; ashoka vanikaam = in Ashoka-grove.

“Caring a straw for that Ravana and his talk, Seetha, later, actually remained in Ashoka-grove.”

raamaH svabaahuvIryeNa svaraajyaM pratyapaadayat |
vaalinaM samare hatvaa mahaakaayaM mahaabalam || 6-126-38

38. hatvaa = having killed; svabaahuviiryeNa = with the strength of his arms; samare = in combat; mahaabalam = the mighty; vaalinam = Vali;mahaakaayam = with a colossal body; raamaH = Rama; pratyapaadayat svaraajyam = caused his own kingdom restored (to Sugreeva).

“Having killed with the strength of his arms in combat, the mighty Vali with a colossal body, Rama caused the kingdom of Sugreeva restored.

bhraataa tu gR^idhraraajasya sampaatirnaama vIryavaan |
samaakhyaati sma vasatiM sItaayaa raavaNaalaye || 6-126-42

42. viiryavaan = the valiant; sampaatirnaama = Sampati by name; bhraataa = the brother; gR^idhra raajasya = of Jatayu (the ling of vultures);samaakhyaati sma = precisely communicated (to us); siitaam = (that) Seetha; vasatiim = was dwelling; raavaNamandire = in the habitation of Ravana.

“Meanwhile, the brother of Jatayu (the king of vultures), Sampati by name, precisely communicated to us that Seetha was dwelling in the habitation of Ravana.”

tayaa sametya vidhivatpR^iShTvaa sarvamaninditaam |
abhijJNaanaM mayaa dattaM raamanaamaaN^guliiyakam || 6-126-45

45. sametya = meeting; tayaa = her; pR^iShTvaa = and duly enquiring; aninditaam = that faultless Seetha; sarvam = of everything;raamanaamaNguliiyakam = a ring with the name; Rama engraved on it; dattam = was handover to her; mayaa = by me; abhiJNaanam = as token.

“After meeting her and duly enquiring that faultless Seetha, everything of her, a ring with the name, Rama engraved on it, was handed-over to her by me as a token.”

tataH samudramaasaadya nalaM setumakaarayat || 6-126-49
ataratkapivIraaNaaM vaahinI tena setunaa |

49. tataH = then; aasaadya = on reaching; samudram = the ocean; setum akaarayat = he got a bridge constructed; nalam = by Nala; tena setunaa = and through that bridge; vaahinii kapiviiraaNaam = the army of the valiant monkeys; aatarat = crossed (the ocean).

“Then, on reaching the ocean, he got a bridge constructed by Nala and through that bridge, the army of the valiant monkeys crossed the ocean.”

taM ga~NgaaM punaraasaadya vasantaM munisaMnidhau || 6-126-54
avighnaM puShyayogena shvo raamaM draShTumarhasi |

54. punaH = again; aasaadya = reaching; gaN^gaam = the coast-line of River Ganga; tam raamam = that Rama; vasantam = is staying;munisamnidhau = in the presence of the sage; Bharadwaja; shvaH = tomorrow; puShpayogena = when the moon will be in conjunction with asteroid;pushyaarhasi = you will be able; draShTum = to see (Rama); avighnam = without any obstacle.

“Reaching the coast-line of Ganga-river again, Rama is staying in the presence of the sage, Bharadwaja. Tomorrow, when the moon will be in conjunction with the asteroid, Pushya you will be able to see Rama, without any obstacle.”

tataH sa satyaM hanumadvacho mahan |
nishamya hR^iShTo bharataH kR^itaa~njaliH |
uvaacha vaaNIM manasaH praharShiNI |
chirasya pUrNaH khalu me manorathaH || 6-126-55

55. nishamya = on hearing (that narration); madhuraiH vaakyaiH = with the sweet words; hanuumataH = of Hanuma; bharataH = Bharata; tataH = then; hR^iShTaH = was gladdened; kR^itaaN^jaliH = and offering his salutation to him by joining his palms together; uvaacha = spoke; vaaNiim = the following words; manasaH praharShiNiim = which enraptured his mind; me manorathaH = “My desire; puurNaH khalu = has been indeed fulfilled;chirasya = after a long time.”

“Gladdened to hear Rama’s impending return to Ayodhya in the sweet words of Hanuma, Bharata offered his salutation by joining his palms together and spoke the following words, which enraptured his mind: ‘My desire has been fulfilled indeed after a long time’.”

———————————————————————————————

அத்தியாயம் 129 (536) ஸ்ரீ ஹனுமத் ஸ்ரீ பரத சம்பாஷணம் (ஸ்ரீ ஹனுமானும் ஸ்ரீ பரதனும் சம்பாஷித்தல்)

வனம் சென்று பல வருஷங்களுக்குப் பிறகு ராமன் விஷயமாக கேள்விப் படுகிறேன்.
உலக வழக்கு ஒன்று உண்டு. மங்கள கரமான பாடல். உலகில் நூறு வருஷமானாலும் ஜீவித்திருப்பவனைத்
தான் மங்களங்கள் வந்தடையும், என்பதாக. ராகவனுக்கும், வானரத்துக்கும் எப்படி தோழமை நட்பு ஏற்பட்டது.
எந்த தேசத்தில் சந்தித்தார்கள்? எப்படி? என்ன காரணம் கொண்டு இருவரும் நட்பு பூண்டார்கள்?
விவரமாகச் சொல்லு என்று கேட்க, ஹனுமான் புல்லில் அமர்ந்து கொண்டு உற்சாகமாக ஆரம்பித்தான்.

வனத்தில் நடந்த ராம சரிதம் அனைத்தையும் சொல்லத் தயாரானான். உன் தாய் வரதானத்தை
காரணமாகச் சொல்லி நாட்டை விட்டு காட்டுக்கு போகச் சொன்ன நாளிலிருந்து, ராஜா தசரதன் புத்ர சோகத்தால் மறைந்தது,
தூதர்கள் உங்களை வேகமாக அழைத்து வந்தது, அயோத்தி வந்து ராஜ்யம் உனக்கே என்ற பொழுது,
ஏற்றுக் கொள்ள விரும்பாமல் தாங்கள் சித்ரகூட மலை சென்று சகோதரனை திரும்பி வரச் சொல்லி அழைத்ததும்,
தர்ம வழியில் நின்ற ராமன் தந்தை சொல் மீற மாட்டேன் என்று உங்களை திருப்பியனுப்பியதும்,
ராம பாதுகையை எடுத்துக் கொண்டு நீங்கள் திரும்பி வந்ததும், நீங்கள் அறிந்ததே.

அதற்குப் பின் நடந்ததைச் சொல்கிறேன். தாங்கள் திரும்பிச் சென்றவுடன், மிருகங்களும், பறவைகளும்
அந்த வனத்தில் இயல்பாக இல்லாமல் தவிப்பது போல இருந்தது. யானைகள் நிறைந்தது, சிங்கமும், புலியும்,
சஞ்சரிப்பதுமான காட்டில், ஜன நடமாட்டம் இல்லாத தண்டகா வனம் என்ற பெரும் காட்டில் மூவரும் பிரவேசித்தனர்.
அடர்ந்த காட்டில், போய்க் கொண்டிருக்கும் பொழுது, திடுமென விராத4ன் என்ற ராக்ஷஸன் உரத்த குரலில்
அதட்டிக் கொண்டு எதிரில் வந்து நின்றான். கைகளைத் தூக்கியபடி, பிளிறும் யானைப் போல,
தலை குனிந்து வந்தவனை, சகோதரர்கள் இருவருமாக, பள்ளத்தில் தள்ளி விட்டனர்.

மிகவும் சிரமமான இந்த காரியத்தை செய்து விட்டு, இருவரும் மாலை நேரம் சரபங்காஸ்ரமம் சென்றனர்.
சரபங்கர் தேவ லோகம் சென்றதும், ராமர் முனிவர்களை வணங்கி விசாரித்துக் கொண்டு தண்டகாரண்யம் வந்தார்.
ஜனஸ்தானம் வந்து சேர்ந்தார். சில நாட்களுக்குப் பின், (துஷ்டையான) சூர்ப்பணகா அவர் அருகில் வந்து சேர்ந்தாள்.
ராமன் கட்டளையிடவும், லக்ஷ்மணன் வேகமாக வந்து வாளை எடுத்து அவள் காதுகளையும், மூக்கையும் அறுத்து விட்டான்.

உடனே பயங்கரமான பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்கள் எதிர்த்து வந்து நின்றனர்.
ராகவன் அங்கு வசித்த காலத்தில் அவர்கள் எல்லோரையும் வதம் செய்து விட்டார்.
ராமன் ஒருவனாக அந்த கூட்டத்தை அழித்து விட்டான். நாளின் நாலில் ஒரு பாகத்தில், ராக்ஷஸர்கள் ஒருவர்
மீதியில்லாமல் அழிந்தார்கள். இவர்கள் எல்லோருமே பலசாலிகள். யாகத்தை விக்னம் செய்வதே இவர்கள் பொழுது போக்கு.

தண்டகாரண்ய வாசிகள் என்று பிரஸித்தமான அந்த ராக்ஷஸர்கள் ஒரே நாளில் அழிந்தார்கள்.
ராக்ஷஸர்கள் வாட்டி எடுக்கப் பட்டனர். க2ரனும் யுத்தத்தில் மாண்டான். இதைக் கண்டு அந்த ஸ்த்ரீ சூர்ப்பணகா,
ராவணனிடம் சென்று முறையிட்டாள். ராவணனின் உறவினன் ஒருவன், மாரீசன் என்று பெயருடையவன்.
அவன் ரத்ன மயமான மான் உருவம் எடுத்துக் கொண்டு மைதிலிக்கு எதிரில் நடமாடினான். அதைக் கண்டு மோகித்து,
பிடித்து தரும்படி மைதிலி ராகவனிடம் கேட்டாள். அஹோ, காந்தா, மனோகரமாக இருக்கிறது.
இது நம் ஆசிரமத்தில் அழகாக இருக்கும் என்றாள். இதைக் கேட்டு ராமரும், வில்லை எடுத்துக் கொண்டு,
ஓடும் பெண் மானை துரத்திக் கொண்டு போனார். வெகு தூரம் சென்ற பின் தன் பாணத்தால் அதைக் கொன்றார்.

சௌம்ய, இதன் பின் ராவணன் தசக்ரீவன், மிருகமான மான் ராமனை வெகு தூரம் இழுத்துச் சென்ற பின்,
லக்ஷ்மணனும் கவலையுடன் ராமனைத் தேடிச் சென்ற பின், ஆசிரமத்துள் நுழைந்தான்.
தனியாக இருந்த வைதேஹியை அபகரித்தான். ஆகாயத்தில் ரோஹிணியை க்ரஹம் பிடித்தது போல இருந்தது.
அவளைக் காப்பாற்ற ஜடாயு ராவணனுடன் போரிட்டான். அவனை அடித்து வீழ்த்தி விட்டு ராவணன் சீதையை
தூக்கிக் கொண்டு வேகமாக சென்றான்.

மலை உச்சியில் நின்றிருந்த நாங்கள் வானரங்கள், சீதையை கவர்ந்து செல்லும் ராவணனையும்,
பர்வதம் போன்ற அவன் சரீரத்தையும் பார்த்து ஆச்சர்யம் அடைந்தவர்களாக பார்த்துக் கொண்டு நின்றோம்.
ராவணன் லங்கை சென்று சீதையை சிறை வைத்தான். லோக ராவணன். உலகை துன்புறுத்தியவன் அவன்.
சுபமான தன் வீட்டில் எங்கும் தங்க மயமாக செல்வ செழிப்பை பறை சாற்றிக் கொண்டிருக்கும்
தன் மாளிகையில் வைத்து சீதையை சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.

அவனை லட்சியம் செய்யாமல் சீதா அவனை ஒரு புல்லாக கூட மதிக்கவில்லை.
அசோக வனத்தில் சிறைப் படுத்தப் பட்ட போதிலும், அவன் பால் சற்றும் கவனம் இல்லாதவளாக,
ராமனையே நினைத்தபடி இருந்தாள். இங்கு பொய் மானை அடித்து விட்டு திரும்பிய ராமர்,
அடிபட்டு உயிருக்கு மன்றாடும் ஜடாயுவைக் கண்டார். தன் தந்தையின் சகாவான ஜடாயு சொன்னதைக் கேட்டு,
இறந்து போன அதற்கு ஸ்ம்ஸ்காரங்கள் செய்து விட்டு, ராம லக்ஷ்மணர்கள், வைதேஹியை தேடிக் கொண்டு வந்தனர்.

கோதாவரி கரையோரமாக வனங்களில் தேடிக் கொண்டே வந்தனர். பெரிய அரண்யத்தில் கபந்தன் என்ற ராக்ஷஸனைக் கண்டனர்.
சத்ய பராக்ரமனான ராமர், கபந்தன் சொன்ன விஷயத்தை நம்பி, ருஸ்ய மூக மலைக்குச் சென்று சுக்ரீவனோடு சக்யம் செய்து கொண்டார்.
இவர்களின் சந்திப்பு, நட்புடன், ஒருவருக்கொருவர் அன்புடன் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதாக இருந்தது.
சுக்ரீவனும் கோபம் கொண்ட வாலியினால் துரத்தப் பட்டவன். சம்பாஷனையில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு,
சமமான துக்கத்தை அனுபவிப்பவர்களாக, இருக்கவும், ஆழமான நட்பு இவர்களிடையில் தோன்றி வேரூன்றியது.

ராமனுடைய புஜ பலத்தால் சுக்ரீவன் தனக்கு ராஜ்யம் கிடைக்கப் பெற்றான். வாலி மகா பலசாலி. பெரிய உருவம் உடையவன்.
அவனை போரில் வதம் செய்து சுக்ரீவன் ராஜ்யத்தில் நியமிக்கப் பட்டான். உடன் இருந்த வானரங்களும் மகிழ்ந்தன.
ராஜ குமாரியான சீதையைத் தேட, ராமனுக்கு வாக்களித்தான். சுக்ரீவ ராஜா கட்டளையை ஏற்று,
பத்து கோடி வானரங்கள் நாலா திசைகளிலும் தேடச் சென்றன. வழி தவறி, திண்டாடிய ஒரு கூட்டம்
விந்த்ய மலையில் தடுமாறி நின்ற பொழுது கால கெடுவும் தாண்டி விட்டது.

திரும்பி வரவும் முடியாத நிலை. வருந்தி புலம்பிக் கொண்டு இவர்கள் நின்றதை கழுகரசன் சம்பாதி கேட்டான்.
அவன் ஜடாயுவின் சகோதரன். தன் கூர்மையான கண்களால் பார்த்து சீதை ராவணன் க்ருஹத்தில் இருப்பதைச் சொன்னான்.
நானும், என்னுடன் வந்தவர்களின் கஷ்டத்தை உணர்ந்து, என் வீர்யத்தால் நூறு யோஜனை தூரம் சமுத்திரத்தை தாண்டிச் சென்றேன்.
அங்கு அசோக வனத்தில் தனித்து இருந்த சீதையைக் கண்டேன். மாசடைந்த வெண் பட்டாடை அணிந்து,
கடுமையான நியமங்களுடன், சற்றும் மனதில் நிம்மதியின்றி இருந்தாள். அவளை நெருங்கி,
மெதுவாக என்னைப் பற்றி தெரிவித்துக் கொண்டு, ராமன் கொடுத்த அடையாளத்தைக் காட்டினேன்.

அந்த கனையாழியை தெரிந்து கொண்டு வாங்கிக் கொண்டவள், தன் தலையில் சூடும் சூடாமணியை ராமனுக்கு
அடையாளமாக தரச் சொல்லிக் கொடுத்தாள். வந்த காரியம் ஆயிற்று என்று நானும் திரும்பி வந்து
ராமனிடம் மைதிலி உயிருடன் இருக்கிறாள் என்பதையும், நடந்த விவரங்களையும் தெரிவித்தேன்.
மரணத் தறுவாயில் இருப்பவன் அம்ருதம் கிடைக்கப் பெற்றது போல ராமர் மகிழ்ந்தார்.
மேற்கொண்டு செய்ய வேண்டியதை யோசித்து, ராவண வதம் தான் வழி என்று தீர்மானித்து செயல்பட ஆரம்பித்தார்.

உலக முடிவில் எல்லா லோகத்தையும் விபாவசு என்ற அக்னி அழிக்க நினைப்பது போல, ராமரும் ராவணனுடன்
ராக்ஷஸ கூட்டத்தையே வதம் செய்ய தீர்மானித்தார். சமுத்திர கரையை அடைந்தோம். நளன் சேதுவைக் கட்டினான்.
அந்த சேதுவின் மூலமாக வானர சைன்யம் நடந்து அக்கரை சென்றது. பிரஹஸ்தனை நீலன் கொன்றான்.
கும்பகர்ணனை ராகவன், ராவண குமாரனை லக்ஷ்மணன் வதைத்தான்.

ராமர் தானே ராவணனை நேரடியாக போராடி ஜயித்தார். வதைத்தார். ராவண வதம் ஆன பின்,
இந்திரனும், யமனும், வருணனும், மகேஸ்வரனும், ப்ரும்மாவும் வந்து சேர்ந்தனர். வாழ்த்தி வரங்கள் தந்தனர். தசரதரும் வந்தார்.
இவர்கள் தந்த வரங்களுடன், ரிஷி கணங்களும் சேர்ந்து கொள்ள, சுரர்களும் ரிஷிகளும் கூட காகுத்ஸனுக்கு வரங்கள் தந்தனர்.
வானரங்களுடன் மகா பிரியத்துடன் புஷ்பக விமானத்தில் ஏறி கிஷ்கிந்தை வந்தார்கள்.
கங்கை கரையை அடைந்து முனிகளின் ஆசிரமத்தில் தங்கி இருக்கின்றனர். நாளை எந்த இடையூறுமின்றி ராமனை தரிசிப்பாய்.
ஹனுமானின் சத்ய வசனத்தைக் கேட்டு பரதன் ஆனந்த கடலில் மூழ்கினான். கை கூப்பியபடி,
வெகு நாளைக்குப் பின் என் மனோரதம் நிறைவேறியது என்றும் சொன்னான்.

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.128–ஸ்ரீ ப4ரத ப்ரியாக்2யானம் (ஸ்ரீ பரதனுக்கு பிரியமானதை தெரிவித்தல்) —

February 6, 2021

shrutvA tu mAM kushalinamarogaM vigatajvaram |
aviShyati guhaH prItaH sa mamAtmasamaH sakhA || 6-125-5

5. guhaH = Guha; bhaviShayti = will be; priitaH = pleased; shrutvaa = in hearing; maam = about me; aatmasamaH = as well as my own self.

“Guha will be pleased to hear about me, as being safe, healthy and free from trouble. He is my friend, as well as my own self.”

bharatastu tvayA vAchyaH kushalaM vachanAnmama |
siddhArthaM shaMsa mAM tasmai sabhAryaM sahalakShmaNam || 6-125-7

7. bharataH tu = Bharata too; vaachyaH = is to be asked by you; mama vachanaat = in my name; kushalam = the news about his welfare; shamsa= tell; tasmai = him; maam = that me; sabhaaryam sahalakShmaNam = along with my wife and Lakshmana; siddhaartham = have accomplished on object.

“Bharata too is to be asked by you, the news about his welfare, in my name. Tell him of me as having returned, accomplished of our object, with my consort and Lakshmana.”

upayaataM cha maaM saumya bharataaya nivedaya |
saha raakShasaraajena hariiNaamiishvareNa cha || 6-125-12

12. saumya = O gently Hanuma!; nivedaya = inform; bharataaya = to Bharata; maam = of me; upayaatam = as having come near;raakShasaraajena saha = along with Vibhishana; iishvareNa hariiNaam = and Sugreeva the lord of monkeys.

“O gentle Hanuma! Inform to Bharata, of me as having come near Ayodhya, along with Vibhishana and Sugreeva the lord of monkeys.”

saMgatyA bharataH shrImAnrAjyenArthI svayaM bhavet |
prashAstu vasudhAM sarvAmakhilAM raghunandanaH || 6-125-17

17. samgatyaa = having been associated (for long); raajyena = with the kingdom; bhavet shriimaan bharataH = if the illustrious Bharata; arthii = has a desire; svayam = for himself; raghunanadanaH = (let) Bharata; prashaastu = rule; sarvaam vasudhaam = the entire kingdom; akhilaam = in one piece.

“Having been associated with the kingdom for long, if the illustrious Bharata is longing for it himself, let Bharata rule the entire kingdom in one piece.”

iti pratisamAdiShTo hanUmAnmArutAtmajaH |
mAnuShaM dhArayanrUpamayodhyAM tvarito yayau || 6-125-19

19. iti = thus; pratisamaadiShTaH = commanded; hanuman = hanuma; maarutaatmajaH = the son of wind-god; dhaarayan = assuming;maanuSham ruupam = a human form; tvaritaH = swiftly; yayau = went; ayodhyaam = to Ayodhya.

Assuming a human form, when thus commanded by Rama, Hanuma the son of wind-god, swiftly left for Ayodhya.

sakhA tu tava kAkutstho rAmaH satyaparAkramaH |
sasItaH saha saumitriH sa tvAM kushalamabravIt || 6-125-23

23. saH raamaH = that Rama; tava sakhaa = your friend; kaakutthsaH = born in Kakutthsa dynasty; satya paraakramaH = who is true in his prowess; sa siitaH = along with Seetha; saha saumitriH = and Lakshmana; abraviit = enquired; tvaam kushalam = of your welfare.

“Along with Seetha and Lakshmana, Rama, your friend, that scion of Kakutthsa, of true prowess, has for his part enquired of your welfare.”

pa~nchamImadya rajanImuShitvA vachanAnmuneH |
bharadvAjAbhyanuGYAtaM drakShyasyadyaiva rAghavam || 6-125-24

24. drakShyasi = you can see; raaghavam = Rama; adyaiva = here itself today; bharadvaajaanuJNaatam = when he has been duly permitted by Bharadwaja the sage; uShitvaa = after spending; muneH = vachanaat = at the instance of the sage; raajaniim = for a night; paN^chamiim = of the fifth lunar day (of the bright half of the month of Ashvayuja).

“You can see Rama here itself today, when he has been duly permitted by Bharadwaja the sage, after spending, at the instance of the sage, for a night of the fifth lunar day (of the bright half of the month of Ashvayuja).”

vasantaM daNDakAraNye yaM tvaM chIrajaTAdharam || 6-125-36
anushochasi kAkutsthaM sa tvA kushalamabravIt |

36. vasantam = who was residing; daN^DakaaraN^ya = in the forest of Dandaka; chiira jaTAadharam = wearing the bark of trees and matted locks; kaakutthsam = Rama; yam anushochasi = for whom you were repenting; saH = that Rama; abraviit = has enquired; tvaam = you; kaushalam = about your welfare.

“Rama, for whom you are repenting residing as he was in the forest of Dandaka wearing the bark of trees and matted locks, has enquired about your welfare.”

evamukto hanumatA bharataH kaikayIsutaH || 6-125-40
papAta sahasA hR^iShTo harShAnmohamupaagamat |

40. evam = thus; uktaH = spoke; hanumataa = by Hanuma; bharataH = Bharata; kaikeyiisutaH = the son of Kaikeyi; hR^iShTaH = felt delighted;papaata = and sank; sahasaa = all at once; bhuumau = to the ground; upaagamat moham = and fainted; harShaat = through joy.

Hearing the words of Hanuma, Bharata the son of Kaikeyi, felt delighted and sank all at once to the ground as also fainted through joy.

ashokajaiH prItimayaiH kapimAli~Ngya sambhramAt || 6-125-42
siShecha bharataH shriimaan vipulairashrubindubhiH |

42. aaliN^gya = embracing; kapim = Hanuma; sambhramaat = with eagerness; shriimaan = the illustrious; bharataH = Bharata; siShecha = bathed (him) vipulaiH = with copious; ashrubindubhiH = tear-drops; priitimayaiH = born of delight; ashokajaiH = and as such; other than those born of anguish.

Embracing Hanuma with eagerness, the illustrious Bharata bathed him with copious tear-drops born of delight and as such, other than those born of anguish.

nishamya rAmAgamanaM nR^ipAtmajaH |
kapipravIrasya tadAdbhutopamam |
praharShito rAmadidR^ikShayAbhavat |
punashcha harShAdidamabravIdvachaH || 6-125-46

46. nishamya = hearing; kapipraviirasya = from Hanuma; raamaagamanam = the news of arrival of Rama; adbhutopamam = resembling a wonder;niR^ipaatmajaH = Bharata the prince; abhavat = became; praharShataH = over-joyed; raama didR^ikShayaa = by a desire to see Rama; punashcha = and spoke; idam vachanam = the following words; punashcha = again; harShaat = with delight.

Hearing the news of Rama’s arrival resembling a womnder, from Hanuma, Bharata the prince felt overjoyed by a desire to see Rama and spoke the following words again with delight:

——————————————————

அத்தியாயம் 128 (535) ஸ்ரீ ப4ரத ப்ரியாக்2யானம் (ஸ்ரீ பரதனுக்கு பிரியமானதை தெரிவித்தல்)

ஸ்ரீ அயோத்தி இருக்கும் இடம் நோக்கி யோசித்தபடி நின்று கொண்டிருந்த ஸ்ரீ ராமர், ஸ்ரீ ஹனுமானை அழைத்து ஒரு விஷயம் சொன்னார்.
ஸ்ரீ ஹனுமானே, நீ போய் அரசன் மாளிகையில் யாவரும் நலமா என்று அறிந்து வா.
முதலில் ச்ருங்கிபேர புரம் போ. குஹனைப் பார். அடர்ந்த காட்டின் நடுவில் இருப்பான். வேடர்கள் தலைவன்.
அவனை பார்த்து நான் குசலம் விசாரித்ததாகச் சொல்லு. அவனும் குசலமா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு,
உடல் நலம் எல்லாம் விசாரி. எனக்கு ஆத்ம சமமான சகா. என் விஷயமாக தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பான்.

அவன் அயோத்தி போகும் வழியையும், பரதனின் நிலையையும் அறிந்திருப்பான்.
விவரமாக கேட்டுத் தெரிந்து கொள். பரதனிடம், நான் சகோதரனுடனும், மனைவியுடனும் எடுத்த
காரியத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்திருப்பதையும் சொல்.
பலசாலியான ராவணன், வைதேஹியை கவர்ந்து சென்றதையும், சுக்ரீவனை சந்தித்ததையும்,
யுத்தத்தில் வாலி வதம் ஆனதையும், மைதிலியைத் தேடி அலைந்ததையும், நீ போய் கண்டு கொண்டதையும்,
பெரும் கடலைத் தாண்டியதையும், சமுத்திரத்தின் உதவியையும், சமுத்திரத்தின் மேல் ஸேதுவைக் கட்டியதையும்,
ராவணன் எப்படி வதம் செய்யப் பட்டான் என்பதையும் மகேந்திரன் கொடுத்த வர தானமும்,
ப்ரும்மா, வருணன் முதலானோர் வந்து வரம் கொடுத்துச் சென்றதையும்,
மகாதேவ பிரஸாதத்தையும், என் தந்தையை சந்தித்ததும், திரும்பி வந்து இங்கு இருப்பதையும் பரதனிடம் தெரிவி.

ராக்ஷஸ ராஜா விபீஷணனும், வானர ராஜா சுக்ரீவனும் வந்திருப்பதையும் இவர்கள் உதவியுடன்
ராவணனை ஜயித்து அளவில்லா கீர்த்தியடைந்துள்ளதையும் தெரிவி.
அவன் என்னிடம் எந்த விதமான எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறான் என்பதை, குறிப்பறிந்து செயல் படும் நீ தெரிந்து கொள்.
பரதனுடைய நடவடிக்கைகளும், இருக்கும் நிலையையும் உன்னித்துப் பார். பேச்சில், முகக் குறிப்பில்,
வர்ணத்தில், பார்வையில், சம்பாஷனையில், எல்லா செல்வமும் நிறைந்து, யானை, குதிரை, ரதங்கள்
ஏராளமாக இருக்க, தந்தை, பாட்டன் வழி வந்த ராஜ்யம் அவன் மனதை மாற்றியிருக்கிறதா என்று கவனித்துப் பார்.

இவ்வளவு நாள் அனுபவித்து ஆண்ட காரணத்தால் ராஜ்யத்தில் அவனுக்கு ஈடுபாடு இருக்குமானால்,
உலகம் பூராவையும், அவனும் ரகு நந்தனனே, ஆளட்டும். அவன் மனதையும் தெரிந்து கொண்டு,
செயலையும் தெரிந்து கொண்டு நாங்கள் நெருங்கி வெகு சமீபத்தில் வரும் முன் வந்து சொல்.
இவ்வாறு கட்டளையிடப் பட்ட ஹனுமான் மனித ரூபத்தை எடுத்துக் கொண்டு, அயோத்தி சென்றான்.

வேகமாக நாலெட்டாக கால் வைத்து, கருடன் போல, நல்ல பாம்பைக் கண்டதும் பாய்ந்து வந்து
எடுப்பதைப் போன்ற வேகத்துடன் நடந்தான். பித்ரு பதத்தை தாண்டி, புஜகேந்திராலயம் எனும்
பாம்புகள் வாழும் இடத்தையும் தாண்டிச் சென்றான்.
(விஹகேந்திராலயம் என்றும் பாடம். அந்த முறையில் விஹக-பறவை, பறவை ராஜனான
கருடனின் வீட்டையும் தாண்டி என்பது திலகர் உரை).

கங்கா, யமுனையின் சங்கமத்தை தாண்டி, ச்ருங்கிபேர புரம் சென்றான். குகனைக் கண்டு அவனுடன் பேசியதில்
மகிழ்ச்சியோடு ஹனுமான் சொன்னான். நீ காகுத்ஸனின் சகா. சத்ய பராக்ரமனான ராமனின் தோழன்.
சௌமித்ரியுடனும், சீதையுடனும் உன்னை குசலம் விசாரித்தான். இன்று பஞ்சமி.
இன்று இரவு முனிவர் வார்த்தைக்கு கட்டுப் பட்டு அங்கு வசித்து விட்டு பரத்வாஜ முனிவர் அனுமதி கொடுத்தால்,
இன்றே ராமனைக் காண்பாய். இதைக் கேட்டு உடல் புல்லரிக்க, குகன் சந்தோஷம் அடைந்தான்.

அவனிடம் விடை பெற்று, துள்ளி குதித்து, ராம தீர்த்தம் என்பதையும், வாலுகினீம் என்ற நதியையும்,
கோமதி நதியையும், பயங்கரமான சால வனம் என்ற வனத்தையும் கடந்து சென்றான்.
ஆயிரக் கணக்கான ஜனங்கள், இருண்டு கிடந்த பெரும் வீதிகள், இவற்றையும் கடந்து வேகமாக
வெகு தூரம் சென்று நந்திக்ராமம் அருகில் வந்து விட்டதற்கு அறிகுறியாக, மலர்ந்து கிடந்த மரங்கள்,
அடர்ந்த தோப்பு ஒன்றை அடைந்தான். ஸ்த்ரீகள் கைகளில் குழந்தைகளுடனும், வயதானவர்களும்,
பலரும் மகிழ்ச்சியுடன் வளைய வந்து கொண்டிருந்தனர்.
சைத்ர ரதம் எனும் தேவ லோக தோட்டத்தில் இருப்பது போல மரங்கள் தெரிந்தன.

அயோத்தியின் இரண்டு மைல் தூரத்தில், ஆசிரமத்தில் இளைத்து, மரவுரி அணிந்தவனாக,
மான் தோலை போர்த்திக் கொண்டு நின்ற பரதனைப் பார்த்தான். உடல் பூரா புழுதி மண்டிக் கிடக்க,
வயது முதிர்ந்தவன் போல நடுங்கும் உடல், சகோதரனுக்கு ஏற்பட்ட கஷ்டத்தால் தானும் வருந்தி,
பழங்களையும், காய் கிழங்குகளையுமே உணவாகக் கொண்டு, தர்ம வழியில் தவம் செய்பவனாக,
மேல் தூக்கி கட்டப் பட்ட ஜடையுடன், மரவுரி தரித்து, ப்ரும்ம ரிஷி போல தேஜஸுடன்,
தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்ந்த பரதனைக் கண்டான்.

பாதுகையின் பேரில், நாட்டை ஆண்டு வந்தவனைக் கண்டான். நான்கு வர்ணத்தாரும் பயமின்றி
வாழ வகை செய்து கொடுத்தவனாக, மந்திரிகள் புடை சூழ, புரோஹிதர்கள் சுத்தமாக வந்து நிற்பதையும்,
படை வீரர்களின் தலைவர்கள் வந்து விவரங்கள் சொல்வதையும், காஷாய வஸ்திரம் அணிந்த ஊர் ஜனங்களையும் கண்டான்.
அவர்கள் (வல்கலையும்) மரவுரியும், மான் தோலும் அணிந்திருக்கும் பொழுது, புர ஜனங்களும்
உயர்ந்த ஆடையணிகளை ஒதுக்கியவர்களாக, தர்ம வத்ஸலனான அரசனின் வழியே தாங்களும்
காஷாய வஸ்திரம் தரித்து நடமாடியதும், தர்மமே உருவெடுத்து வந்தவன் போலவும்,
தர்மஞானியே உருவெடுத்து வந்து விட்டவன் போலவும் இருந்த பரதனைக் கண்டு மாருதாத்மஜன்,
கை கூப்பி வணங்கி, தான் வந்த விஷயத்தை தெரிவித்தான்.

தண்டகாரண்யத்தில் மரவுரி, மான் தோல் தரித்து கஷ்ட ஜீவனம் செய்கிறான் என்று எந்த ராமனை நினைத்து
நீ வருந்துகிறாயோ, அந்த காகுத்ஸனான ராமன் உன்னை குசலம் விசாரித்தான்.
தேவனே, இந்த ஆழ்ந்த சோகத்தையும் வேதனையும் தீரும் காலம் வந்து விட்டது.
இந்த முஹுர்த்தத்திலேயே நீ சகோதரனான ராமனுடன் இணைவாய். கவலையை விடு.
ராவணனை வதம் செய்து, மைதிலியை திரும்பப் பெற்று, மகா பலசாலியான நண்பர்களைப் பெற்று,
அவர்களுடன் வந்து கொண்டே இருக்கிறான். லக்ஷ்மணனும் உடன் வருகிறான். புகழ் வாய்ந்த வைதேஹியும் உடன் வருகிறாள்.

மகேந்திரனுடன் சசி சேர்ந்ததைப் போல சீதை ராகவனை, ராமனை அடைந்தாள்.
சகோதரன் மேல் பாசம் மிகுந்த பரதன் இந்த செய்திகளைக் கேட்டு மகிழ்ந்தான்.
ஆனந்த மிகுதியில் மூர்ச்சையாகி விழுந்தான். முஹுர்த்த நேரத்தில் எழுந்து ஆஸ்வாஸம் செய்து கொண்டு
பிரியமாக பேசும் ஹனுமானைப் பார்த்து மேலும் விவரங்கள் கேட்டான்.
பரபரப்புடன் தன் ஆனந்த கண்ணீர் அவன் மார்பை நனைக்க இறுக அணைத்துக் கொண்டான்.

தேவனோ, மனிதனோ நீ யார் என்று தெரியவில்லை. ஏதோ என்னிடம் உள்ள கருணையால் இங்கு வந்து நல்ல செய்தி சொன்னாய்.
பிரியமானதைச் சொன்னவனே, உனக்கு நான் என்ன தருவேன்?
நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக பசுக்கள் தரவா? நூறு கிராமங்கள் தரவா?
நல்ல குண்டலங்கள் அணிந்த நல்ல நடத்தையுள்ள பதினாறு கன்னிகளை மனைவியாகத் தரட்டுமா?

இந்த பெண்கள் பொன் வர்ணமும், எடுப்பான நாசியும், இடையும், சந்திரன் போன்ற சௌம்யமான முகமும்
கொண்ட எல்லா விதமான ஆபரணங்களும் பூண்டவர்களாக, நல்ல குலத்தில் பிறந்தவர்கள்.
ராமன் வருகிறான் என்று ஹனுமான் சொல்லக் கேட்ட அரச குமாரனான பரதன்,
ராமர் வரும் திசையை ஆவலுடன் பார்த்தபடி, மேலும் விசாரித்தான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.120–ஸ்ரீ ப்ரும்ம க்ருத ஸ்ரீ ராம ஸ்தவ| (ஸ்ரீ ப்ரும்மா செய்த ஸ்ரீ ராம ஸ்துதி)

February 6, 2021

moghaM darshanaM raama tavaasmaakaM nararShabha |
priitiyuktaaH sma tena tvaM bruuhi yanmanasepsitam || 6-120-2

2. raama = O Rama; nararShabha = the foremost among men!; asmaakam you; darshanam = sight of us; tava = to you; amogham = should not go in vain; sma = we are; priitiyuktaaH = endowed with delight; tena = therefore; tvam = you; bruuhii = tell; yat = whatevr; iipsitam = is desized; manasaa= by your mind.

“O Rama, the foremost among men! Your sight of us, should not go in vain. Therefore, tell us whatever is desired by you.”

vikraantaashchaapi shuuraashcha na mR^ityuM gaNayanti cha |
kR^itayatnaa vipannaashcha jiivayainaan puraMdara || 6-120-7

7. vikraantaaH cha = (They all) displayed their energies; shuuraaH = were valiant; na gaNayanti cha = and did not take; into account; mR^ityum = their death; kR^itayatnaaaH = they; made their strenuous efforts; vipannaaH cha = and died; puramdara = O Indra!; jiivaya = restore their lives; etaan = to them.

“They were all valiant, proving their energies and did not take their death into account. They made their strenuous efforts and died. O Indra! Restore their lives to them.”

mahaanayaM varastaata yastvayokto raghuttama |
dvirmayaa noktapurvaM cha tasmaadevadbhaviShyati || 6-120-12

12. taata raghuuttama = O beloved Rama!; ayam varaH = this boon; yaH uktaH = which has been sought; tvayaa = by you; mahaan = is very great (is hard to gratn); na ukta puurvam = nothing was spoken before; mayaa = by me; dviH = twice; tasmaat = therefore; etat = this; evam bhaviShyati = will come to be.

“O beloved Rama! This boon, which has been sought by you is hard to grant. No offer has, however, been revised by me in the past. Therefore this will come to be.”

suhR^idbhirbaandhavaishchava jJNaatibhiH svajanena cha |
sarva eva sameShyanti saMyuktaaH parayaa mudaa || 6-120-15

15. sarve eva = all of them; parayaa mudaa = with great delight; sameShyanti = will get re-united with; suhR^idbhiH = their friends; samyuktaaH= together with; baandhavaishchaiva = their relatives; jJNaatibhiH = kinsmen; svajanena = and family-members.

“All of them, full of delight, will get re-united with their friends, relatives, kinsmen and family members.”

bhraataraM bharataM pashya tvachchhokaadvratachaariNam || 6-120-20
shatrughnaM cha mahaatmaanaM maatR^iiH sarvaaH paraMtapa |
abhiShechaya chaatmaanam pauraangatvaa praharShaya || 6-120-21

20-21. paramtapa = O destroyer of adversaires!; pashya = see; bharatam = Bharata; bhraataram = your brother; vratachaariNam = who is practising austerities; tvachchokaat = through frief caused by separation from you; mahaatmaanam = the great-souled; shatrughnam cha = the Shatrughna; sarvaaH maatR^iiH = and all your mothers; aatmaanam abhiShechaya = get yourself consecrated on the throne; gatvaa = by going there;praharShaya = bring rejoice; pauraan = to the citizens.

“O destroyer of adversaries! See Bharata, your brother, who is practising austerities through grief caused by separation from you, the great-souled Shatrughna and all your mohters. Get yourself consecrated on the throne. Bring rejoice to the citizens, by going there.”

tatastu saa lakShmaNaraanupaalitaa |
mahaachamuurhR^iShTajanaa yashasvinii |
shriyaa jvalantiiviraraaja sarvato |
nishaa praNiiteva hi shiitarashminaa || 6-120-24

24. tataH = thereupon; saa yashasvinii = that illustrious; mahaachamuuH = and mighty army; hR^iShTajanaa = of rejoiced troops; tu = (for its part); lakShmaNa raama paalitaa = which was protected by Lakshmana and Rama; jvalantii = and was blazing; shriyaa = wth slepndour; sarvataH = on all sides; viraraaja = shone brightly; nisheva = like the might; praNiitaa = illumined; shiitarashminaa = by the moon.

Thereupon, that illustrious and mighty army of rejoiced troops, for its part, whichw as protected by Lakshmana and Rama, and was blazing with splendour on all sides, shone brightly like the might, illumined by the moon.

——————————————————

அத்தியாயம் 120 (527) ஸ்ரீ ப்ரும்ம க்ருத ஸ்ரீ ராம ஸ்தவ| (ஸ்ரீ ப்ரும்மா செய்த ஸ்ரீ ராம ஸ்துதி)

கண் முன்னால் நடந்ததைக் கண்டும், சீதையின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டும் இருந்த ராமரின் மனம் வருந்தியது.
முஹுர்த்த நேரம் கண்களில் நீர் மல்க, பேசாது நின்றான். பிறகு வைஸ்ரவனனான ராஜா, யமன்,
எதிரிகளை அடக்க வல்ல சஹஸ்ராக்ஷன், மகேந்திரன், வருணன், மூன்று நயனங்களைக் கொண்ட
பரமேஸ்வரன், ஸ்ரீமான் மகா தேவன், வ்ருஷத்வஜன் என்று புகழ் பெற்ற சாக்ஷாத் பரமேஸ்வரன்,
சர்வ லோகத்தையும் ஸ்ருஷ்டி செய்யும் ப்ரும்ம ஞானத்தில் சிறந்த ப்ரும்மா,
இவர்கள் எல்லோருமாக சூரியனைப் போல பிரகாசிக்கும் தங்கள் விமானங்களில் ஏறி லங்கா நகரம் வந்து ராமரை சந்தித்தனர்.

ராகவனின் கூப்பிய கரத்தை பிடித்தபடி சொன்னார்கள். ஸ்ரேஷ்டமான ஞானிகளிலும் சிறந்த ஞானி,
உலகையே ஸ்ருஷ்டி செய்ய வல்லவன், ஏன் இப்படி அக்னியில் விழும் சீதையைத் தடுக்காமல் வாளா இருக்கிறாய்?
தேவ கணங்களுக்குள் ஸ்ரேஷ்டமான தன் ஆத்மாவை ஏன் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறாய்.
முன் வசுக்களுள் பிரஜாபதியாக இருந்தாய். மூன்று உலகுக்கும் ஆதி கர்த்தாவான ஸ்வயம் பிரபுவானவன்.
எட்டு விதமாக விளங்கும் ருத்ரன். சாத்யர்களுக்குள் பஞ்சமன் (ஐந்தாவது). அஸ்வினி குமாரர்கள் உன் காதுகள்.
சந்த்ர சூர்யர்கள் கண்கள், உலகில் ஆதியிலும் அந்தத்திலும் நீ தான் இருக்கிறாய்.

பரந்தபனே, சாதாரண மனிதன் போல, வைதேஹியை அலட்சியப் படுத்துகிறாயே.
இவ்வாறு லோக பாலர்கள் சொல்லவும், உலகுக்கு நாயகனான ராகவன், மூவுலக ஸ்ரேஷ்டர்களையும் பார்த்து ராமர் சொன்னார்.
ஆத்மானம் மானுஷம் மன்யே, ராமம் தசரதாத்மஜம். – நான் என்னை தசரதன் மகனாக, ராமனாக, மனிதனாகத்தான்
எண்ணிக் கொண்டிருக்கிறேன். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? பகவன் | சொல்லுங்கள் என்று
கேட்கும் காகுத்ஸனைப் பார்த்து ப்ரும்மா விவரிக்கலானார்.

சத்ய பராக்ரமனே| கேள். நான் சொல்கிறேன். தாங்கள் தான் நாராயணன் என்ற தேவ தேவன்.
ஸ்ரீமான். சக்ரத்தை ஆயுதமாக கொண்டு விபு: என்ற ப்ரபு. ஒரு கொம்புடன் வராகமாக வந்தீர்கள்.
நடந்ததையும் நடக்கப் போவதையும் அறிந்தவர்கள். பங்காளிகளை ஜயித்தவன்.
அக்ஷரமான-அழிவில்லாத ப்ரும்ம லோகம், சத்ய லோகம், அதன் ஆதியிலும், மத்தியிலும், முடிவிலும் நீங்களே.
அழிவில்லாத ப்ரும்ம ஸ்வரூபம்

நீங்களே. உலகுக்கெல்லாம் அப்பாற்பட்ட பரம் பொருள் நீங்களே தான். விஷ்வக்சேனராக, சதுர்முகமாக வந்ததும் நீங்களே.
சார்ங்கதன்வீ, ஹ்ருஷீகேசன் என்ற பெயர்களும் உடையவன். புருஷோத்தமனான புருஷன்.
எப்பொழுதும் வெற்றியே என்று வாளை ஏந்திய, தோல்வியே அறியாத விஷ்ணு, க்ருஷ்ணனும் நீங்களே.
ஏராளமான பலம் உடைய சேனானியும் நீங்களே. க்ராமணியும் நீங்களே. நீங்களே புத்தி, சத்வம், க்ஷமா, த3மம், ப்ரபாவம்,
அவ்யயம் எனும் குணங்களாக விளங்குபவன். உபேந்திரனும் நீங்களே. மதுசூதனனும் நீங்களே.

இந்திரனின் கர்மாவை செய்யும் மகேந்திரனும், நீங்களே. பத்மனாபனும் நீங்களே.
யுத்த முடிவை நிர்ணயிப்பவனும் நீங்களே. சரணமடைந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதில் உங்களுக்கு
இணை இல்லை என்று மகரிஷிகள் சொல்வர். ஆயிரம் கொம்புகளையுடைய வேதத்தின் ஆத்மா.
நூறு நாக்குகளையுடைய பெரிய ரிஷபம். நீங்கள் தான் மூவுலகுக்கும் ஆதி கர்த்தா. ஸ்வயம்ப்ரபு நீங்களே.

சித்தர்களுக்கும் தபஸ்விகளுக்கும் ஆசிரயம் அளிப்பவன் நீங்களே. முன் தோன்றியவன் நீங்களே.
நீங்கள் தான் யக்ஞம். நீங்கள் வஷட்காரனானவன். ஓங்காரன் நீங்களே. பரந்தபன் என்றும் சொல்லப்படுபவன் நீங்களே.
உங்களுடைய ப்ரபாவத்தையோ, நீங்கள் தோன்றுவதையும், மறைவதையும் யாராலும் நிர்ணயிக்க முடியாது.
நீங்கள் யார் என்பதையும் யாரும் அறிந்திலர். எல்லா ஜீவ ராசிகளிலும், ப்ராம்மணர்களில், பசுக்களில்,
எல்லா திக்குகளிலும், ஆகாயத்தில், பர்வதங்களில், பசுக்களில், வனங்களில் அந்தர்யாமியாக இருக்கும்
ஆயிரம் சரணங்களுடைய ஸ்ரீமான். ஆயிரம் தலையுடையவன். ஆயிரம் கண்களுடையவன் நீயே.

நீ தான் ஜீவராசிகளும், மலைகளும் உடைய பூமியைத் தாங்குகிறாய். பூமியின் அடியில் ஜலத்தில் பெரும் நாகமாக காணப்படுகிறாய்.
மூன்று உலகுகளையும் தாங்கிக் கொண்டு, தேவ, கந்தர்வ, தானவர்களையும் ஆள்பவன் நீயே.
நான் தான் (ப்ரும்மா) உன் ஹ்ருதயம். உன் நாக்கில் தேவி சரஸ்வதி இருக்கிறாள்.
உன் உடல் ரோமங்களில் தேவர்கள் வசிக்கிறார்கள். ப்ரபோ இவைகளை ப்ரும்மா நிர்மாணித்தார்.
நீ கண்களை மூடினால் அது இரவு. கண் திறந்தால் பகல். உன் ஸம்ஸ்காரத்தினால் வேதங்கள் தோன்றின.

நீயில்லாமல் எதுவுமே இல்லை. இந்த உலகம் முழுவதும் உன் சரீரம்.
உன் ஸ்திரமான தன்மை பூமி, வசுதாதலம், அக்னி தான் உன் கோபம். ப்ரஸன்னமாக இருக்கும் நிலை தான் சந்திரன்.
ஸ்ரீ வத்ஸம் என்ற அடையாளம் கொண்டவன் நீ. மூவுலகையும் கடந்து நின்ற வாமனன் நீயே.
முன்பொரு சமயம் மூவடிகளில் உன் விக்ரமத்தால் பூமியை அளந்தாய். பலி என்ற மகாசுரனை அடக்கி,
மகேந்திரனை ராஜாவாக செய்தாய். சீதை தான் லக்ஷ்மி. தாங்கள் விஷ்ணு என்ற தேவன்.
க்ருஷ்ணன், பிரஜாபதி. ராவண வதம் காரணமாக மனித சரீரத்தில் வந்தீர்கள்.
தர்மம் அறிந்தவர்களுக்குள் முதல்வனாக சொல்லப்படுபவனே, ராவண வதம் செய்து முடித்தாயிற்று.
மகிழ்ச்சியுடன் தேவலோகம் செல்லலாம், வாருங்கள். அளவில்லாத பலமும், வீர்யமும், பராக்ரமமும், அமோகமானவை.
உன்னைக் காண்பதும் அமோகமே. ராமா| இந்த துதியும் அமோகமானதே, விசேஷமானதே.
உன்னை பக்தி செய்யும் மனிதர்களும் அமோகமாக இருப்பார்கள். யார் உன்னை புராணமான புருஷோத்தமனாக,
அழிவில்லாத தேவனாக எண்ணி பக்தி செய்கிறார்களோ, அவர்கள் இக பர சுகங்களை நிச்சயம் அடைவார்கள்.

இது மகானான ப்ரும்மா செய்த ஸ்தோத்திரம். நித்யமான இதிகாசம். புராணமானது.
இதைப் பாடும் மனிதர்கள் அவமானம் என்பதையே அறிய மாட்டார்கள். தோல்வியே காண மாட்டார்கள். என்றும், எதிலும் ஜயமே காண்பார்கள்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.111–பௌலஸ்த்ய வத|| (புலஸ்திய குலத்தினனான ராவணனின் வதம்)–

February 5, 2021

nanu naama mahaabaaho tava vaishravaNaanuja |
kruddhasya pramukhe sthaatun trasyatyapi purandaraH || 6-111-3

3. mahaabaaho = O the great armed!; vaishraavaNaanuja = O the brother of Kubera!; purandaraH api = even Indra the destroyer of strong holds;trasyati nanu naama = indeed dares not; sthaatum = to stand; tava pramukhe = before you; kruddhasya = when you were enraged.

“O the great armed, the brother of Kubera! Even Indra the destroyer of strongholds, indeed dares not to stand before you, when you were enraged.”

yadaiva cha janasthaane raakShanairbahubhirvR^itaH |
kharastava hato bhraataa tadaivaanau na maanuShaH || 6-111-9

9. tadaiva tava bhraataa = the moment your brother; kharaH = Khara; hataH = was killed; asau = by Rama; janasthaane = in Janasthana; vR^itaH= though surrounded; bahubhiH raakShasai = by a multitude of demons; (it became evident that) na maanuShaH = Rama was really no mortal.

“The moment your brother Khara was killed by Rama in Janasthana, though surrounded by a multitude of demons, it became evident that Rama was really no mortal.”

athavaa raamaruupeNa kR^itaantaH svayamaagataH |
maayaaM tava vinaashaaya vidhaayaapratitarkitaam || 6-111-12

12. athavaa = otherwise; tava vinaashaaya = for your destruction; kR^itaantaH = Yama the lord of Death; aagataH = came; svayam = himself;raama ruupeNa = assuming the form of Rama; vidhaaya = having arranged; apratitarkitaam = an unimaginable; maayam = illusion.

“Otherwise, for your destruction, Yama, the lord of Death came himself assuming the form of Rama having arranged an unimaginable form of illusion.”

vyaktameSha mahaayogii paramaatmaa sanaatanaH |
anaadimadhyanidhano mahataH paramo mahaan || 6-111-14
tamasaH paramo dhaataa shaN^khachakragadaadharaH |
shriivatsavakShaa nityashriirajayyaH shaashvato dhruvaH || 6-111-15
maanuShaM ruupamaasthaaya viShNuH satyaparaakramaH |
sarvaiH parivR^ito devairvaanaratvamupaagataiH || 6-111-16
sarvalokeshvaraH shriimaan lokaanaaM hitakaamyayaa |
saraakShasa pariivaaram hatavaaMstvaaM mahaadyutiH || 6-111-17

14-17. eShaH = this Rama; vyaktam = is certainly; mahaayogii = a great ascetic; sanaatanaH = an eternal person; anaadimaadhya nidhanaH = having no beginning; middle or end; mahaan paramaH = greater person; mahataH = than distinguished persons like Brahma; tamasaH paramaH = the one beyond ignorance; dhaataa = the nourisher; shaN^kha chakragadaadharaH = wielding a couch; a disc and a mace; shriivatsa vakShaaH = wearing the ‘Srivatsa’ mark on his chest; nitya shriiH = of lasting beauty; ajayyaH = incapable of being conquered; shaashvataH = a perpetual person; dhruvaH = being constant; paramaatmaa = soul of the universe; satya paraakramaH = truly mighty; sarva lokeshvaraH = the lord of all the worlds; shriimaan = the prosperous one; mahaadyutiH = having a great splendour; viShNuH = and Vishnu the lord of maintenance of the world; hitakaamyayaa = with a wish for the benefit; lokaanaam = of the worlds; aasthaaya = assuming; maanuShaM ruupam = a human form; parivR^itaH = surrounded; sarvaiH daivaiH = by all the gods; upaagataiH = who assumed; vaanaratvam = the form of monkeys; (Rama) hatavaan = killed; tvaam = you; saraakShapariivaaram = surrounded with demons.

“This Rama is certainly a great ascetic, an eternal person, having no beginning middle or end, greater than distinguished universal spirit like Brahma, the one beyond ignorance, the nourisher, wielding a conch, a disc and a mace, wearing the ‘Srivatsa’ mark on his chest, of lasting beauty, incapable of being conquered, a perpetual one, being the constant soul of the universe, truly mighty, the lord of all the worlds, the prosperous one having a great splendour and Vishnu, the lord of maintenance of the world with a wish to benefit the worlds, assuming a human form surrounded by all the gods in the form of monkeys, Rama killed you, surrounded by demons.

akasmaachchaabhikaamoasi siitaan raakShasapu~Ngava |
aishvaryasya vinaashaaya dehasya svajanasya cha || 6-111-22

22. raakShasapungava = O the foremost of demons!; vinaashaaya = for the annihilation; aishvaryasya = of your power; dehasya = of your body;svajanasya = and of your own people; asi = you were; abhikaamaH = having a desire; akasmaat = suddenly; siitaam = for Seetha.

“O the foremost of demons! For the annihilation of your power, your body and your own people, you conceived a desire for Seetha suddenly.”

tadaiva yanna dagdhastvaM dharShayaMstanumadhyamaam || 6-111-26
devaa bibhyata te sarve sendraaH saagnipurogamaaH |

26. (It is because) devaaH = the gods; sendraaH = together with Indra the ruler of gods; saagnipurogamaaH = including those headed by the fire-god; abhibhyata = fear; te = you; na dagdhaH iti yat = that you were not consumed; tadaiva = even while; tvam = you; dharShayan = were laying violent hands; tanu madhya maam = on Seetha; the slender-waisted woman.

“It is because, the gods together with Indra the ruler of gods including those headed by the fire-god fear you, that you were not consumed even while you were laying hands on Seetha, the slender-waisted woman.”

santyanyaaH pramadaastubhyaM ruupeNaabhyadhikaastataH |
anaN^gavashamaapannastvaM tu mohaanna budhyase || 6-111-29

29. santi = there are; anyaaH pramadaaH = other women; abhyadhikaaH = more excellent; ruupeNa = in form; tataH = than Seetha; tubhyam = for you; aapannah = Having got into; anN^ga vasham = the power of passion; mohaat = and from ignorance; tvam tu = you; however; na budhyase = could not know it.

“There are other women, more excellent in form than Seetha for you in your gynaecium. Having fallen a prey to the power of passion, you did not know it through ignorance.”

pitaa daanavaraajo me bhartaa me raakShaseshvaraH || 6-111-41
putro me shakrani rjetaa ityahaM garvitaa bhR^isham |

41. aham = I; bhR^isham garvitaa = was very much proud; iti = that; me pitaa = my father; daanavaraajaH = was a king of demons; me bhartaa = my husband; raakShaseshvaraH = was a lord of demons; me putraH = and my son; shakra nirjetaa = was a conqueror of Indra the lord of celestials.

“I was very much proud that my father was king of demons, my husband a lord of demons and my son, a conqueror of Indra the lord of celestials.”

naikayajJNaviloptaaraM traataaraM svajanasya cha || 6-111-54
dharmavyavasthaabhettaaraM maayaasraShTaaramaahave |

54. naikayaJNa viloptaaram = my husband ruined several sacrificial performances; traataaram = he was the protector; svajanasya cha = of his own people; dharmavyavasthaabhettaaram = he violated the moral order; maayaasraShTaaram = he created conjuring tricks; aahave = on battle-field.

“My husband ruined several sacrificial performances. He was the protector of his own people. He violated the moral order. He violated the moral order. He created conjuring tricks on the battle-field.”

dR^iShTvaa na khalvabhikruddho maamihaanavaguNThitaam || 6-111-63
nirgataaM nagaradvaaraatpadbhyaamevaagataaM prabho |

63. prabho = O; Lord!; na abhikruddhaH khalu = are you not indeed enraged; dR^iShTvaa = in seeing; maam = me; iha = here; nirgagataam = having come out; nagara dvaaraat = through the City-gate; aagataam padbhyaameva = coming on foot; anavaguNThitaam = unveiled; eva = in this way?

“O Lord! Are you not indeed enraged, in seeing me on foot in this way out through the city-gate, unveiled and come on foot in the way?

kaataryaM na cha te yuddhe kadaachitsaMsmaraamyaham || 6-111-71
tattu bhaagyaviparyaasaannuunaM te pakvalakShaNam |

71. aham = I; na samsmaraami = do not recall; te kaataryaami = your faint-heartenedness; kadaachit = at any time; yuddhe = on the battle-field;tattu = that abduction of Seetha; however; bhaagya viparyaasaat = was due to your ill-luck; te pakva lakShaNam = as the result of your sins; muunam = certainly.

“I do not recall your faint-heartedness at any time on the battle-field. That case of abduction of Seetha, however, was due to your ill-luck and certainly as the result of your sins.”

sukR^itan duShkR^itaM cha tvaM gR^ihiitvaa svaaM gatiM gataH |
aatmaanamanushochaami tvadviyogena duHkhitaam || 6-111-77

77. gR^ihiitvaa = by taking away; sukR^itam = merit; duShkR^itam cha = and sin; tvam = you; gataH = obtained; svaam = your; gatim = course of fate; tvadvinaashena = by your death; anushochaami = I am mourning; aatmaanaam = about my own self; duHkhitaam = so afflicted as I am.

“By taking away your merit and sin, you obtained your course of fate. I, however, mourn for my own self, so afflicted as I am, by your death.”

maariichakumbhakarNaabhyaaM vaakyaM mama pitustathaa |
na shrutaM viiryamattena tasyedaM phalamiidR^isham || 6-111-80

80. maariichakumbhakarNaabhyaam = the advices offered by Mareecha and Kumbhakarna; tathaa = and; mama = my advice; pitruH vaakyam = the words of my father; na shrutam = have not been heeded; viiryamattena = by you; who were arrogant of your prowess; tasya iidR^isham = what is followed; idam phalam = is a bitter consequence (of your perversity).

“The advices offered by Mareecha, Kumbhakarna, myself and my father have not been heeded by you, who were arrogant of your prowess. What is followed is a bitter consequence of your perversity.”

kashmalaabhihataa sannaa babhau saa raavaNorasi || 6-111-89
saMdhyaanurakte jalade diiptaa vidyudivojjvalaa |

89. raavaNorasi = (Fallen on) the breast of Ravana; saa sannaa = the dispirited Mandodari; kashmalaabhihataa = stricken as she was with grief;babhau = shone; diiptaa ujjvalaa vidyut iva = like a vivid flash of lightning; jalade = across a rainy cloud; samdhyaanurakte = reddened by the glow of twilight.

Fallen on the breast of Ravana, that dispirited Mandodari, stricken as she was with grief, shone like a vivid flash of lightning across a rainy cloud, reddened by the flow of twilight.

tyaktadharmavratan krUraM nR^ishansamanR^itaM tathaa || 6-111-95
naahamarhoasmi sanskartuM paradaaraabhimarshakam |

95. aham = I; arhaH na asmi = am not obliged; samskartum = to perform the obsequies; tyaktadharmavratam = to him; who had abandoned the vow of virtue; kruram = who was cruel; nR^ishamsam = who killed human beings; tathaa = and; anR^itam = who was cheating; paradaaraa bhimarshinam = and who was longing for others’ wives.

“I am not obliged to perform the obsequies to him, who had abandoned the vow of virtue, who was cruel, who killed human beings, who was a cheater and who had longed for others’ wives.”

tavaapi me priyan kaaryaM tvatprabhavaachcha me jitam || 6-111-99
avashyan tu kShaman vaachyo mayaa tvaM raakShaseshvara |

99. raakShaseshvara = O king of demons!; priyam = a favourite act; kaaryam = is to be done; tava = to you; me api = by me too; jitam = (the battle) was won; mayaa = by me; tvatprabhaavaat = because of you; avashyam = certainly; kShamam = an appropriate advice; vaachyaH = is to be told;mayaa = by me.

“O king of demons! I too have to do a favour to you. I won the battle because of you. Certainly I have to give you an appropriate advice.”

maraNaantaani vairaaNi nirvR^ittaM naH prayojanam || 6-111-102
kriyataamasya sanskaaro mamaapyeSha yathaa tava |

102. vairaaNi = hostilities; maraNaantaani = end with death; naH = our; prayojanam = purpose; nirvR^ittam = has been accomplished; asya samskaaraH = let his funeral rites; kriyataam = be performed; eShaH = he; maam api = is as good mine also; yathaa tava = as yours.

“Hostilities end with death. Our purpose has been accomplished. Let his funeral rites be performed. He is even as good mine also, as yours.”

sa pravishya puriiM laN^kaaM raakShasendro vibhiiShaNaH || 6-111-105
raavanasyaagnihotraM tu niryaapayati satvaram |

105. pravishya = entering; laN^kaam puriim = the City of Lanka; saH vibhiiShaNaH = that Vibhishana; raakShasendraH = the lord of demons;satvaram = quickly; niryaapayati = concluded; agnihotram = the Agnihotra (act of poring oblations into the sacred fire); raavaNasya = carried on by Ravana.

Entering the City of Lanka, that Vibhishana, the lord of demons, quickly concluded the Agnihotra (the act of pouring oblations into the sacred fire) carried on by Ravana.

—————————————————————————

அத்தியாயம் 111 (518) பௌலஸ்த்ய வத|| (புலஸ்திய குலத்தினனான ராவணனின் வதம்)

மாதலி, ராகவனுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்தினான். வீரனே | தெரியாதவன் போல ஏன் இவனுக்கு
பதிலடி கொடுத்தபடி இருக்கிறாய்? இவனை வதம் செய்ய பிதாமகரின் அஸ்திரத்தை பிரயோகம் செய்.
விநாச காலம் என்று தேவர்கள் சொல்லும் காலம் சமீபித்து விட்டது. எனவும், பெரும் நாகம் ஒன்று
சீறிப் பாய்வது போல இருந்த ப்ரும்மாஸ்திரத்தை கையில் எடுத்தார். பகவான் அகஸ்திய ரிஷி கொடுத்தது.
ப்ரும்மாவினால் அவருக்கு கொடுக்கப் பட்டது. ஈ.டு இணையில்லாதது. அளவற்ற பராக்ரமம் உடைய மகாஸ்திரம்.

ப்ரும்மா தானே ஒரு சமயம் இந்திரனுக்காக தயாரித்தது. அதன் பராக்ரமம் அளவிட முடியாதது.
மூன்று உலகையும் ஜயிக்க சுரபதியான இந்திரன் கிளம்பிய பொழுது அவனுக்கு ப்ரும்மா வரமாக தந்தது.
இதன் உடலில் பவன எனும் வாயுவும், பாவகன் – நெருப்பும், சூரியனும், உடலே ஆகாச மயமாகவும்,
மேரு மந்தரம் உருவமாகவும், பிரகாசமாக பொன்னால் காப்பிடப் பெற்று, தன் தேஜஸால் உலகத்தில்
திடுமென சூரிய ஒளி பரவியது போல காட்டக் கூடிய ப்ரும்மாஸ்திரம். புகையுடன் கூடிய காலாக்னி போலவும்,
ஆலகால விஷம் போல ஒளி மிகுந்ததும், பெரும் நாகம் (யானை), குதிரை படைகளை பிளந்து விடக் கூடியதுமான,
வேகமான செயல் திறனுடையது. கோட்டைகளை, மலைகளை பிளந்து தள்ளக் கூடியதும்,
ரத்தத்தை உறிஞ்சக் கூடியதும், பயங்கரமாக காட்சியளித்ததும், வஜ்ரம் போன்றதும்,
பெரும் ஓசையுடையதுமான எல்லோரையும் பயந்து அலற வைக்கும், பயங்கரமாக சீறிப் பாயும் பாம்பு போன்றதுமான திவ்யாஸ்திரம்.

யமனே ரூபம் எடுத்து வந்தது போல ரண களத்தில் , கண்டவர்களை பயத்தில் உறையச் செய்யும் அஸ்திரம்.
கழுகு, கருடன், கொக்குகள் போன்ற மாமிச பக்ஷிணிகளான பறவைகளுக்கும், கோமாயு எனப்படும் மிருகங்களுக்கும்,
மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்களுக்கும், இடைவிடாது தீனி அளிக்க வல்லது எனும்படி யுத்தத்தில்
கொன்று குவிக்கும் தன்மை வாய்ந்த ப்ரும்மாஸ்திரம். இக்ஷ்வாகு குலத்திற்கு நன்மையும்,
எதிரி குலத்திற்கு பயத்தையும் தரும் உத்தமமான அஸ்திரம். ராமன், இதன் மந்திரத்தை ஜபித்து,
வேதங்களில் சொல்லப் பட்ட முறையில் தன் வில்லில் பொறுத்தி, த்யானம் செய்த காலத்தில், உலகமே நடுங்கியது. பூமி நடுங்கியது.

ராவணனின் மர்மஸ்தானத்தை குறி வைத்து ஏகாக்ர சித்தனாக ராமன் அஸ்திரத்தை ராவணன் பேரில் எய்தார்.
வஜ்ரம் போன்று எதிர்க்க இயலாததாக, அதை விட வலிமையான கரங்களால் விடப் பெற்றதான அஸ்திரம்,
ராவணனின் ஹ்ருதயத்தில் பட்டு அதை பிளந்தது. ரத்தம் தோய்ந்து, உயிரைக் குடித்தபின், பூமியில் நுழைந்தது.
அந்த அம்பு ராவணனின் உயிரை மாய்த்து விட்டு, தன் கடமை தீர்ந்ததாக ராமனின் தூணியில் திரும்ப வந்து சேர்ந்தது.

ராவணன் கையிலிருந்த வில்லும் அம்பும், மிக வேகமாக செயல் படும் ராவணன் உயிர்
அவனை விட்டுப் பிரிந்த சமயம் தாங்களும் கைகளிலிருந்து நழுவி பூமியில் விழுந்தன.
க்ஷண நேரத்தில் உயிர் பிரிந்து விட்டதால், தன் தேஜஸ் சற்றும் குறையாமல் ராவணன் தன் ரதத்திலிருந்து கீழே விழுந்தான்.
விருத்திரனை வஜ்ராயுதத்தால் இந்திரன் அடித்தபொழுது அவன் விழுந்தது போல இருந்தது.
ராவணனே உயிர் இழந்து பூமியில் விழவும், மற்ற ராக்ஷஸ வீரர்கள், நாதனை இழந்தவர்கள்,
பயத்துடன் நாலா திக்குகளிலும் ஓடி மறையலாயினர். மரங்களைக் கொண்டே யுத்தம் செய்த வானரங்கள்
அவர்களைத் தடுத்து மேலே விழுந்து நடனமாடின.

ராகவனுடைய விஜயத்தில் மகிழ்ந்தன. இந்த வானரங்கள் மகிழ்ச்சியுடன் மேலும் துன்புறுத்த,
லங்கா நகரில் போய் விழுந்த ராக்ஷஸர்கள், தாங்கள் அண்டியிருந்த ராக்ஷஸ ராஜனே விழுந்ததை
ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், அவன் யுத்த களத்தில் மடிந்ததைக் கண்ட பின்பும்,
நம்ப முடியாமல், கண்களில் நீர் மல்க புலம்பினர். செய்வதறியாது திகைத்தனர்.
வானரங்கள் வெற்றிக் களிப்பில் மிதந்தன. ராகவனுக்கு ஜய கோஷம் செய்த படி,
ராவண வதத்தை பறை சாற்றியபடி வலம் வந்தன. அந்தரிக்ஷத்தில் சுபமான துந்துபி நாதம் எழுந்தது.

முப்பது துந்துபிகள் ஏக காலத்தில் ஒலித்தன. காற்று சுகமாக வீசியது. ஆகாயத்திலிருந்து புஷ்ப மாரி பொழிந்தது.,
ராகவ ரதம் அருகில் நெருங்க முடியாதபடி கூட்டம் சேர்ந்தது. சாது, சாது என்று தேவதைகள் ஆகாயத்தில் நின்றபடி வாழ்த்தினர்.
தேவர்களுக்கும் சாரணர்களுக்கும் மகா சந்தோஷம். மனதில் நிம்மதி நிறைந்தது.
சர்வ லோக பயங்கரனாக உலவி வந்த ராக்ஷஸன், ராவணன் இறந்து போனதில்,
ரௌத்ரனான ராக்ஷஸ ராஜன் மாண்டு விழுந்ததில், தேவர்கள் மன நிறைவு பெற்றனர்.

சுக்ரீவனும், அங்கதனும் தாங்கள் எடுத்த காரியத்தை நிறைவேற்றிய திருப்தியோடு வளைய வந்தனர்.
ராக்ஷஸ ராஜனை ராமன் வதம் செய்ததில் இவர்களுக்கும் மகிழ்ச்சியே. மருத் கணங்கள் இழந்த ஒளியைப் பெற்றன.
திசைகள் தெளிவாக ஆயிற்று. ஆகாயம் நிர்மலமாக காட்சி அளித்தது. பூமியின் ஆட்டம் நின்றது.
காற்று சாதகமாக வீசியது. திவாகரனும் ஸ்திரமான ஒளியுடையவனாக உதித்தான்.

இதன் பின் சுக்ரீவ, விபீஷணன் முதலிய முக்கியமான நண்பர்கள், லக்ஷ்மணனோடு ராமனை வந்தடைந்து,
யுத்தத்தில் வெற்றி பெற்றதை பாராட்டி, வாழ்த்தினர். ஸ்திரமான பிரதிக்ஞையை உடையவனாக,
தன் சபதத்தை நிறைவேற்றி, எதிரியை அழித்து, தன் ஜனங்களுக்கு நன்மை செய்து அவர்கள் சூழ நின்று,
புகழ் பெற்றவனாக விளங்கினான். ரகு குல ராஜாக்களின் வம்சத்தில் கொண்டாடப் பெற்ற நந்தனனாக,
மகா தேஜஸுடன், மூவுலகும் பாராட்ட, இந்திரன் நின்றது போல நின்றான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம் /ஸ்ரீ ராம பஞ்சரத்நம் /ஸ்ரீ ராம மங்களம்–

January 21, 2021

ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம் –

ரசன:புத கௌஷிக ரிஷி
ஓம் அஸ்ய ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஷிக ரிஷிஃ
ஸ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அநுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஸ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஸ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே விநியோகஃ

த்யானம்
த்யாயேதா ஜானு பாஹும் த்றுத ஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோ வஸானம் நவ கமல தளஸ்பர்தி நேத்ரம் ப்ரஸன்நம்
வாமாம் காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
நாநாலம்கார தீப்தம் தததமுரு ஜடா மம்டலம் ராம சம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுநாதஸ்ய ஶத கோடி ப்ரவிஸ்தரம்
ஏகைக மக்ஷரம் பும்ஸாம் மஹா பாதக நஶனம்

த்யாத்வா நீலோத் பல ஶ்யாமம் ராமம் ராஜீவ லோசநம்
ஜாநகீ லக்ஷ்மணோபேதம் ஜடா முகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர் பாண பாணிம் னக்தம் சராம் தகம்
ஸ்வ லீலயா ஜகத்ராது மாவிர்பூத மஜம் விபும்

ராம ரக்ஷாம் படேத் ப்ராஜ்ஞஃ பாபக்நீம் ஸர்வ காமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத் மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரி வத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யா நிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶ கார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ந்ய ஜித்
மத்யம் பாது கரத் வம்ஸீ னாபிம் ஜாம்பவ தாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்–ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக் ஷகுல வினா ஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம் தகஃ
பாதௌ விபீஷண ஸ்ரீதஃபாது ராமோ ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோ பேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்–சத்ம சாரிணஃ
ந த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராம நாமபிஃ

ராமேதி ராம பத்ரேதி ராம சம்த்ரேதி வாஸ்மரன்
நரோ நலிப்யதே பாபைர் புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ் ஜைத்ரைக மம்த்ரேண ராமநாம்நாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத் தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராம கவசம் ஸ்மரேத்
அவ்யாஹ தாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்நே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புத கௌஶிகஃ

ஆராமஃ கல்ப வ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரி லோகாநாம் ராமஃ ஸ்ரீமான் ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூப ஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹா பலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜிநாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்ம சாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராம லக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வ ஸத்வாநாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல நிஹம்தாரௌ த்ராயேதாம் நோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக நிஷம்க ஸம்கிநௌ
ரக்ஷணாய மம ராம லக்ஷணா வக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸந்நத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோ ரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜாநகீ வல்லபஃ ஸ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேந்நித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமே தாதிகம் புண்யம் ஸம்ப்ராப்நோதி நஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதா வாஸஸம்
ஸ்துவம்தி நாபிர்–திவ்யைர்–நதே ஸம்ஸாரிணோ நராஹ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ர ப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்ய ஸம்தம் தஶரத தனயம் ஶ்யாமலம் ஶாம்த மூர்திம்
வம்தேலோகாபி ராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய நாதாய ஸீதாயாஃ பதயே நமஹ

ஸ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஸ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஸ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஸ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஸ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஸ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஸ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா நமாமி
ஸ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதா ராமோ மத்–பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்–ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
நான்யம் ஜானே நைவ ந ஜாநே

தக்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜநகாத்மஜா
புரதோமாருதிர்–யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரண ரம்க தீரம்
ராஜீவ நேத்ரம் ரகுவம்ஶ நாதம்
காருண்ய ரூபம் கருணாகரம் தம்
ஸ்ரீராம சம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோபூயோ நமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யம தூதாநாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜ மணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா நிஶா சரசமூ ராமாய தஸ்மை நமஹ
ராமான் நாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஸ்ரீபுதகௌஷிக முனி விரசிதம் ஸ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

————-

ராமனிடம் ஐந்து விதமான வீர குணங்கள் உள்ளன. இவைகளைப் பின்பற்ற ஒருவனுக்கு மஹா வீரம் தேவை.
ஏனெனில் கஷ்ட திசையில் மாட்டிக் கொண்ட நல்லவர்களும் கூட, எளிதில் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு.
ஆனால் ராம பிரானோ எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்த போதிலும் தர்மத்தின் வழியையே கடைப் பிடித்தான்.
அதனால் அவனிடம் ஐந்து நற்குணங்கள் இருப்பதாகப் புலவர் பெருமக்கள் போற்றுவர்–

தியாக வீரம்
கைகேயியின் வசப்பட்ட தசரதன் சொல்லிய சொல்லுக்காக, அந்த சத்ய பராக்ரமன் ராமன்,
தனக்குக் கிடைக்கவேண்டிய பெரும் அரச பதவியைத் தியாகம் செய்தான். இதைவிடப் பெரிய தியாகம் உளதோ!
அப்பா, அம்மாவை எதிர்த்து போர்கொடி தூக்குவோம் என்று சூளுரைத்த லெட்சுமணனை
அமைதிப்படுத்தி அவனையும் தன் வழிப்படுத்தினான்.
தயா வீரம்
வேடர் குலத் தலைவனான குகனையும், குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும், அரக்கர் குல விபீஷணனையும்
தனது சஹோதரர்களாக ஏற்றான். சாதி, குல வேற்றுமைகளை மிதித்து நசுக்கிய முதல் மாவீரன் அவன்.
எல்லோரிடமும் தயை என்னும் இரக்கம் காட்டினான். சபரிக்கு மோட்சம் கொடுத்தான்.
மாபெரும் தவறு இழைத்த அஹல்யைக்கு சாப விமோசனம் அளித்தான்.
வித்யா வீரம்
அவனுடைய விவேகம், வித்யா வீரம் எனப்படும். போர்க்களத்தில் ஆயுதங்களை இழந்த இராவணனைக் கொல்லாது
“இன்று போய் நாளை வா” — என்று இயம்பினான். சீதையை ஒப்படைத்தால் உயிர்ப்பிச்சை போடுவதாகக் கூறினான்.
ஒரு வண்ணான் சொன்ன சொல்லை மதித்து, தனது மனைவியின் தூய்மையை, கற்பினை நிலநாட்ட அவளை
பூக்குழி இறங்க உத்தரவிட்டான். ஜனநாயகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய முதல் தலைவன் அவன்.
இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.
பராக்ரமவீரம்
21 தலை முறை க்ஷத்ரிய மன்னர்களை அழித்த பரசுராமனையும் வெற்றி கொண்டு தனது பராக்ரமத்தை நிலநாட்டினான் ராமன்.
ஏழு மராமரங்களை ஒரே அம்பினால் துளைத்ததோடு, ஏழு கோடி அவுணர்களையும் அழித்தொழித்தான்.
ராவண சம்ஹாரம், அவனது வீர பராக்ரமத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
தர்ம வீரன்
“இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று புதுநெறி புதுக்கிய நாயகன் அவன்.
எல்லா அரசர்களும் பல மனைவியரை மணக்க, சீதையைத் தவிர வேறு ஒரு பெண்ணை சிந்தையாலும் தொடாதவன் அவன்.
சத்திய நெறி தவறாதவன்

அவன் ஸ்ருதபாஷி= உண்மை விளம்பி
அவன் மிதபாஷி = குறைவாகப் பேசுபவன்
அவன் ஹித பாஷி = இனிமையான சொற்களையே நவில்வான்
பூர்வபாஷி = சிறிதும் தலைக் கனம் இல்லாமல் தானே வலியச் சென்று நலம் விசாரிப்பவன்.

பஞ்சவீரா:சமாக்யாதா ராம ஏவ து பஞ்சதா
ரகுவீர இதி க்யாத: சர்வ வீரோப லக்ஷண:

ஓம் தா3ச’ரத2யே வித்3மஹே ஸீதாவல்லபா4ய தீ4மஹீ | தன்னோ ராம: ப்ரசோத3யாத் ||

ஓம் தசரதனின் அருமை மைந்தனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் சீதையின் கணவனை நாம் தியாநிப்போம்.
அந்த ராமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.

ஓம் பரமஹம்ஸாய வித்3மஹே மஹாதத்வாய தீ4மஹி | தன்னோ ஹம்ஸ: ப்ரசோத3யாத்||

உன்னதமான அன்னப் பறவையை நாம் அறிவோமாகுக!
அதற்காக மெய்ப்பொருளின் மீது நாம் தியானிப்போம்.
அன்னப் பறவையே நம்மை அதனிடம் கொண்டு செலுத்தட்டும்.
(அன்னப் பறவை என்பது இங்கு குருவைக் குறிக்கும்-ஸத்திலிருந்து அஸத்தைப் பிரிக்க வல்லவர் அவரே!
ஹம்ஸ என்பது பரமஹம்ஸரையும் குறிக்கும்.)

——————

ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய ஸ்ரீ ராம பஞ்சரத்நம்

கஞ்ஜாத பத்ராயத லோசநாய கர்ணாவதம் ஸோஜ்வல குண்டலாய
காருண்ய பாத்ராய ஸுவம்சஜாய நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய

வித்யுந் நிபாம் போத ஸுவிக்ரஹாய வித்யாதரைஸ் ஸம்ஸ்துத ஸத் குணாய
வீராவதாராய விரோதி ஹந்த்ரே நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய

ஸம்ஸக்த திவ்யாயுத கார்முகாய ஸமுத்ர கர்வா பஹராயுதாய
ஸுக்ரீவ மித்ராய ஸுராரி ஹந்த்ரே நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய3

பீதாம்பரா லங்க்ருத மத்யகாய பிதா மஹேந்த்ராமர வந்திதாய
பித்ரே ஸ்வ பக்தஸ்ய ஜநஸ்ய மாத்ரே நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய

நமோ நமஸ்தே அகில பூஜிதாய நமோ நமஶ் சந்த்ர நிபாநநாய
நமோ நமஸ்தே ரகுவம்ஶ ஜாய நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய 5

இமாநி பஞ்ச ரத்நாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ஸர்வ பாப விநிர் முக்தஸ் ஸ யாதி பரமாம் கதிம்

————–

ஸ்ரீ ராம மங்களம்
மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஶ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஶ்லோகாய மங்களம்

விஶ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஶ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம் 12

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-