Archive for the ‘Peyaazlvaar’ Category

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 22, 2020

திரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த
அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

ஒருக்கால் திருவடிகளை யிட்டு ஜகத்தை மறைத்தான் –ஒருக்கால் மலையை இட்டுத் தன்னை மறைத்தான் –
பிறந்தவன்றே செய்த காரியமும் ஏழு பிராயத்தே செய்த காரியமும் லோகத்தையும் ஒரு ஊரையும் நோக்கின படி –

————-

ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு நோக்கினான் என்கிற பிரசங்கத்தாலே
ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார் –

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–

விரோதியைப் போக்குகையாலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு நின்றவன் –அப்போதை அழகு –
அருள் அன்று நமக்கு உத்தேஸ்யம்-ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சினம் உத்தேஸ்யம் –
அச்சினத்தை அனுசந்தி –

———-

ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் ஒருவனையும் நோக்கின அளவேயோ
ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர் என்கிறார் –
அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது என்கிறார் –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

தன்னுடைமை யானது ரஷிக்கப்பட்டது என்ற ஹர்ஷத்தாலே ஒருபடி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிறபடி –
அத்விதீயமாய் அபரிச்சேத்யமான சங்கல்பத்து உள்ளது ஜகத்து –
சங்கல்ப்பத்தாலே ரஷிக்க வல்லனாய் இருக்கச் செய்தே கை தொட்டு செய்கிறது ஆஸ்ரித வாத்சல்யம் –

————

நெஞ்சே உபய விபூதி யுக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் –

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

நூறாயிரம் ஆதித்யர்கள் உடைய ஒளியை யுடைத்தாய் அநேகம் கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள
ஸ்ப்ருஹநீயமான திரு வபிஷேகத்தை யுடையவனுடைய –பைம் பொன் முடி-திவி சூர்ய-என்றதுவும்
போந்து இருந்தது இல்லை –ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –

———-

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று
ப்ரஸ்துதமான வாறே அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –
அவன் நமக்கு ஸூ லபனோ என்னில் – அக்குறைகள் தீர நமக்காக வன்றோ
திருமலையிலே வந்து சந்நிஹிதனாய் ஸூலபன் ஆயத்து -என்கிறார் –

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

முன்னொரு நாள் பூமி அடங்கலும் தன் திரு எயிற்றிலே அடக்கினவன் வர்த்திக்கிற திருமலை
ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவன் உடைய மலை
திரு மலையில் ஆனைகளுக்குச் சேரும் இறே ஸ்ரீ வராஹமான வடிவு
இந்த மத்த கஜத்தின் உடைய ஸ்வரூபமானது ஸ்ரீ வராஹ ரூபியானவனுடைய செருக்கை ஸ்மரிப்பித்த தாய்த்து

———

திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும்
செய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் –

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் – ——46–

கார்யமான இவை அழிந்து தானே யான அன்று இவற்றுக்கு அடங்க ஹிதம் பார்க்கும் உபகாரகன்
ஜகத் காரண பூதனான பரிவன் -பெற்ற பாவிக்கு ஜீவனம் தேடி விட வேண்டாவோ
சங்கல்ப்பத்தாலே ரஷிக்கலாய் இருக்க உடம்பு நோவக் கடல் கடைவதே என்ன சௌலப்யம் தான் –

————

தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர் நம்முடைய விரோதிகளைப் போக்கி
நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் –

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

சேஷித்வம் தோன்றும்படி நின்றவனே –ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து
உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே-எங்கள் உடைய சம்சாரத்தின் வாயைக் கிழித்துப் பொகட்டவன் அன்றோ –
விலஷணர்க்கு சம்சாரம் இறே நரகம் –நிரயோ யஸ்த்வயா விநா -ஆரண்யம் -30-18-
உன்னைப் பிரிந்து இருப்பது அன்றோ நரகம் -சீதைப் பிராட்டி –
ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –

———

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன 0பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

ஜ்ஞான ஹீனமான அசேதனங்களைப் போக்கின அதுவேயோ-சேதனரான விரோதி களையும் போக்கிற்று இலையோ
தேவாசூர சம்ப்ரமத்திலே அசூர வர்க்கத்தை முடித்துப் பொருதாய் நீ அன்றோ
திரிபுர தஹனம் பண்ணின ருத்ரனை இவருக்கு தோற்றுகிறது இல்லை

———–

இன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் –

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

பின்னைக்காய் –ரசிகத்வத்தாலே தன்னை அழிய மாறின படி –

———————-

அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை என்றதே -கீழே –
அது எங்கே கண்டோம் -என்னில் ஓர் ஆனைக்காக பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை
ஒரு நீர்ப் புழுவின் மேலே பண்ணிற்றிலனோ -என்று ஆஸ்ரித பஷபாதத்தை யருளிச் செய்கிறார் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

அணி நீல வண்ணத்தவன்-இத்தை முடித்துப் பின்னை தன்னிறம் பெறுகிறான் ஆய்த்து –
ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்றது என்று ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
அணி நீல வண்ணத்தவன் –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விடாய் தீர்த்த படி –
மா முதலை கொன்றான் –தன் விடாய் தீர்ந்தான் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -31-40–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 21, 2020

இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய் ஸூசீலனுமாய்
இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார்-கீழ்ச் சொன்ன திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி –
இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார்-

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான் —–31–

நற வென்று பொல்லாத மதுவாய்-தண்ணிதான மதுவைக் கையிலே ஏற்றுள்ள ருத்ரனுக்குத் தன் திரு மேனியிலே
இடம் கொடுக்கும் ஸ்வ பாவனாய் உள்ள சீலவான் –

————

இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் –

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

விரோதி நிரசன சீலனான கிருஷ்ணன் ஆவான் இப்படி இருக்கிற இவன் கிடீர் எனக்கு எளியன் ஆனான் –
இவனுடைய உண்மை எல்லாம் பரார்த்தம்-

———

இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –
இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–

ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கக் கடவரான தேவர்களுக்கு அன்று கொடுத்தாய்
சம்சாரத்தைப் பூண் கட்டி நடுவில் பரணிலே இருக்கிறவர்கள் –

–——-

காஞ்சி புரத்திலே பல திருப்பதிகளிலே நிற்பது இருப்பது கிடப்பதான இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து
இதுக்கடி பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ என்று கொண்டு அஞ்சுகிறார் –
அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்—-34-

உனக்கு இது ஒழிய வேறு அந்ய பரதை என்-நமக்காகத் தன்னை அழிய மாறினவனை அனுசந்தியாது இருக்க வேணுமோ
பூமியை அடங்கலும் அளந்த வருத்தத் தாலேயோ-திரு வேளுக்கையில் இருக்கிறதுவும்
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளுகிறதுவும் என்று வயிறு எரிச்சலாலே நெஞ்சே அனுசந்திக்கப் பார்-

———–

நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே – அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர் தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன-
மனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் –
இந்த்ரியங்கள் தான் முற்பட்டு இவர் மூட்டும் அளவாய்த்து –

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள் ஷாம காலத்தில் பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –
வண்டுகள் மீட்கில் இறே என் இந்த்ரியங்களை மீட்கலாவது –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு இனி நாமும் அவனுடைய ஸ்லாக்யமான திருவடிகளை
வாயாரப் பாடி கையாலே தொழுவோம் –

—————-

யாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ் சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

செய்ய படை என்கிறது-ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு விதேயமாய் இருக்கை-
ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது –
அப்போது அவனுக்கு என் புகுகிருறதோ என்று அஞ்ச வேண்டா
அவை தனக்கு -திசை வாழி எழ -என்று மங்களா சாசனம் பண்ண அமையும்

———-

இப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன்-இங்கனே இருந்துள்ள நான்
அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக
புத்தி பண்ணா நின்றான் என்கிறார் –

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

அஹ்ருதயமாக அடிமை புக்கேன்-அடிமையிலே அந்வயித்த மாத்ரத்திலே உள்ளும் புறமும் ஒக்கக்
கை விட மாட்டாதே சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு பூஜியா நின்றான் -விட சக்தன் ஆகிறிலன்-
அகத்தான் புறத்தான் ஆகைக்கு அடி அவள் முறுவல் பெறுகைக்கு-
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்று ஈடுபடுகிறார் –

————

இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் –

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

உபமான ராஹித்யத்துவக்கு அடி-சகல பதார்த்தங்களும் தனக்குப் பிரகாரமாய்த் தான் ப்ரகாரியாய்
தனக்கு ஒரு ப்ரகார்யந்தரம் இன்றிக்கே இருக்கை -சகல ஜந்துக்களும் தனக்கு சரீரம் என்றபடி-
எல்லாம் தான் இட்ட வழக்கு-இவை எல்லாமாய் நின்ற சர்வேஸ்வரன் தனக்கு ஒப்பாகச் சொல்லலாவானும் தானே-

————-

இப்படி ஜகதாகாரனான சர்வேஸ்வரன் திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு
என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் –

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-

திருமலையில் நின்று என்னுடைய ஹிருதயத்தில் புகுர அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு வந்து புகுந்தான் –
அங்குத்தை இருப்பானது என் பக்கலிலே வருகைக்குக் காலம் பார்த்து இருந்தான் என்று தோற்றி இரா நின்றது –
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே நித்ய சந்நிஹிதனாய் இரா நின்றான் –

———–

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

பண்டு உளன் அன்றிக்கே-இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி – அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –
நாம் வேண்டாத காலமும் நம்மை வேண்டி இருக்குமவன் –சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –
புகுரப் புக்கால் விலக்காதார் ஹிருதயத்திலே உளன் –
மன்-உடையவன் –இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்-மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது –
தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்-அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 21, 2020

அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –
கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும்
கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

பரிச்சேதித்துப் பேச ஒண்ணாமைக்கு தனித் தனியே ஹேதுக்களை அருளிச் செய்து –வடிவு பிரகாரம்
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே –உள்ளபடி கண்டு பேச ஒண்ணாது-

—————

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே –
அநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே
ஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் –

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு ——22-

நாம் ஒரு நாளைக்கு ஒரு நாள் உண்ணுமோ பாதி எப்பொழுதும் தொழுமவர்கள் –சதா பஸ்யந்தி -இறே –
செம்மையால்–அவன் சேஷி நாம் சேஷ பூதர் என்னும் புத்தி பண்ணி ஹ்ருதயம் சிதிலமாய் –
செவ்வனே –நீ ஓன்று கொண்டு அவனைக் காண இருக்கை அன்றிக்கே-ஒரு யத்னம் செய்யாது இருக்கத்
தானே தன்னைக் கொடு வந்து காட்டுவதாகக் கொண்டு –
மெய்ம்மையே –மனஸ்ஸே ஒரு குண ஆவிஷ் கார மாத்திரத்திலே தெகுட்டி விடாதே
அவனைப் பத்தும் பத்தாக சாஷாத் கரிக்கையிலே யாதரி-
பிரயோஜன நிரபேஷமாக ஆசைப்படு–பிரயோஜனமும் அவனே-பிரயோஜனமும் அவனே -என்றபடி
முதல் தன்னிலே இவர் சாஷாத் கரித்தன்றோ அனுபவிக்கிறது -என்னில்-ஒருக்கால் கண்டோம் இறே என்றால்
அவ்வளவால் பர்யவசிக்கும் விஷயம் அல்லாமையாலும்
இவர் இருந்து கண்டது சம்சாரத்தே ஆகையாலும் ஆறி இருக்க விரகு இல்லையே –

——————

மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே – அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது –
தான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி-இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

மனஸ்ஸானது முன்னாடி தோன்றாமல் நின்ற நிலம் துழாவிப் கொண்டு பிச்சேறி வாரா நிற்கும் –
ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு பிச்சேறா நிற்கும்-
வ்யாமோஹத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –வண்டுகள் பட்டது படா நின்றது –

————–

அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே
அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –
ஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் –

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

அவ்வோ பதார்த்தங்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலே லீலா விபூதி விசிஷ்டனாய் –
தேஜோ ரூபமான திரு வாழியை யுடையனாகையாலே நித்ய விபூதி யுக்தனாய் யுள்ளான்-
தொழு வித்துக் கொள்ளப் பரிகரம் உண்டு-
சூழ் கழலே – ஆஸ்ரிதரை அகப்படுத்துக் கொள்ளுகிற திருவடிகளையே
புறம்பு போகாமல் சூழ்த்துக் கொள்ளும் திருவடிகளையே -என்னுதல்
இத்தால் அவன் எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால் அத்தை அறிந்த இன்றாகிலும் நீ தொடராயோ
கீழ் விச்சேதித்துப் பட்டது போரும் இனி மேல் உள்ள காலம் முறையாலே இடைவிடாதே தொடர்ந்து ஆஸ்ரயி-

———-

இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத் தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து
இருந்தாப் போலே இருந்தது -அத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால்
உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் –

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

ஜகத்துக்கு அவன் வயிறு தாரகமானால் போலேயும் நெய் அவனுக்கு தாரகமானால் போலேயும்
அடிமை உனக்கு தாரகம் அன்றோ –நான் சொல்லுகிற வேப்பங்குடி நீர் இது வன்றோ என்கிறார் –
வெண்ணெய் உண்ணா விடில் அவனுக்கு பிரளயம் வந்தது போலே –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளத் த்ரவ்யத்தாலே அங்கு வயிறு நிறையாமையாலே வந்த குறை தீர்ந்தானாய் இருக்கிறவன் –
தனக்கு அசாதாரண பரிகரத்துக்குத் தானே விரோதியைப் போக்கும்-
ப்ரஹ்மாதிகளுக்கும் கூட அவ்வருகாய் இருப்பான் ஒருவன் ஆன பின்பு
இனி அவன் காலிலே விழுந்து பிழைக்கில் பிழைக்கும் அத்தனை-
நெஞ்சே -சம்பந்தத்தை நினைத்து அங்குத்தைக்குத் தகுதியாய்க் கொண்டு ஆஸ்ரயித்ததால்
உனக்கு வருவதொரு தப்பு உண்டோ –

———-

இப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை அவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை
அருளிச் செய்கிறார் –கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே –
அங்கன் இன்றிக்கே-யசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது என் என்னில்
உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூலபனானான் என்கிறார் -என்னவுமாம்
தொழுதால் பழுதுண்டே என்றாரே-இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே –

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

அவனுடைய ஆதரத்துக்கு இவை இரண்டும் ஒரு கோவையாய் இருக்கிறது –
உகந்த படுக்கையான திரு வநந்த வாழ்வானோபாதி என்னுடைய நெஞ்சும் –
திரு வநந்த ஆழ்வானையும்-என்னுடைய நெஞ்சையும் தன்னதாக அபிமானித்து இருப்பது –
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும்-இத்தையும் தாங்கடவார்-சாதரமாக யுறைந்து -அதிக்ரமியார்-
திருக் கச்சி முதலான திருப்பதிகளிலும் ஸூரிகளில் பிரதானனான திரு வனந்த ஆழ்வானில் காட்டிலும்
தம் திரு உள்ளத்தை மிகவும் விரும்புகையாலே முந்துற திரு உள்ளத்தை அருளிச் செய்தார் –

————–

பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் ஆரானும் ஒருவர் பாபபலம் புஜித்தார் உண்டு என்று இதுக்கு
முன்பு எங்கேனும் கேட்டு அறிவதுண்டோ என்கிறது –

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-

அக்னி நா சிஞ்சேத்-நெருப்பினால் நனைத்தல் போல இருப்பது ஓன்று இறே
பகவத் பஜனம் பண்ணியும் பாப பலானுபவம் பண்ணுகை யாகிறதும் –
கடலுக்கு தொடுத்த அம்பு அவன் மேல் விடாமையே அன்றிக்கே அவன் சத்ருக்கள் மேலே விட்டது இல்லையோ
அனுக்ரஹ பலம் காணுதலே இறே உள்ளது –ஆஸ்ரித கார்யம் செய்கைக்காகக் கிட்டக் கிடக்கிற படி –
எக்காலத்தில் எத்தேசத்தில் யார் அவனைப் பற்று துஷ்கர்ம பலத்தை அனுபவித்தார் –

————-

இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது
பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –
கீழ் வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –

அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான் ——28-

உகந்தாருக்கு தன உடம்பைக் கொடுக்கும் –-ஆஸ்ரிதர்க்காகத் தன் உடம்பை அழிய மாறியும் நோக்கும்
இவன் அஞ்சாததும் பீஷ்மாதிகளுக்கே –அஞ்சுவதும் யசோதைப் பிராட்டிக்கே-
அம்மனே –இது ஒரு எத்திறம் இருக்கிறபடி –கெட்டேன் இவனால்

————

யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ஸ்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி
அவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் –
கீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே அச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே
ஸ்நேஹத்துக்கும் யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது –
கீழே மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே
இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது –
அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை -ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் –
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

ஸ்த்ரீத்வ பிரயுக்தமான பயத்தைப் பொகட்டு கடுக வந்து எடுத்து ப்ரத்யௌஷதம் பண்ணுகையிலே ஒருப்பட்டாள் ஆய்த்து
கேட்ட விடத்தே மோஹித்து விழுகை அன்றிக்கே கால் நடை தந்து–வந்து— எடுத்து-பிரதிகிரியை பண்ண தொடங்கினாள் ஆய்த்து
மோஹித்து விழுமதுவும் பிரேம கார்யமே யாகிலும் -அவனைப் பெறும் படியும் கார்யம் பார்க்க வேணும் இறே
மயர்வற மதி நலம் பெற்றும் -யாம் மடலூர்ந்தும் -என்னப் பண்ணும் விஷயம் இறே –

——————

அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் –இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் –
ஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி கோயில்கள் எங்கும்
வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

நேர்ந்த வென் சிந்தை – என்கையாலே இத் திருப்பதிகளிலே வந்து நின்றது எல்லாம் என் ஹிருதயத்திலே
புகுந்து இருக்கைக்கு – என்கிறது –
வேதத்தில் நின்றதோடு கண்ணால் காணப் படுகிற திருப்பதிகளோடு வாசி அற இவருக்கு பிரகாசமாய் இருக்கிறபடி
இறைபாடி யாய இவை–ஸ்ரீ யபதி அத்யபி நிவிஷ்டனாய் சேர்ந்து வர்த்திக்கிற ராஜ தானி

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -1-10–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 19, 2020

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-

மாட மா மயிலையில் அவதரித்து-மஹ்தாஹ்வயர்-என்னும்படி –
செம்மை +வடி -சேவடி போலே –பெருமை +ஆழ்வார் -பேயாழ்வார்
நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் – அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –
கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம்-

புற மழைக்கு ஒதுங்கினவர்க்கு உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ்வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை – அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்

———

கண்டு அடைவு கெட்டுப் பேசிற்று ஆகையாலே – ஆகையாலே அன்றோ பேயர் ஆய்த்து-
பர பக்திக்கு அநந்தரம் சாஷாத் காரமாய் இறே இருப்பது
தன்னைக் காட்டிக் கொடுக்கக் கண்டேன் -என்கிறார் இதில் –

ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
-திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )

முதலாமவர் -உபய விபூதி யுக்தன் -என்று அனுசந்தித்தார்
மற்றவர் அவனுக்கு வாசக சப்தம் -நாராயண சப்தம் -என்றார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேணும் -என்கிறார்-

சேஷியுடைய ஸ்வரூபம் சொன்னார் முதல் ஆழ்வார்
சேஷ பூதன் ஸ்வரூபம் சொன்னார் நடுவில் ஆழ்வார்
இரண்டுக்கும் அடியான ஸ்வரூபம் சொல்லுகிறார் இவர்

எம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே
கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –

அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித் தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்-

————–

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

இவள் கடாஷம் பெறாத போது-அவனோடு அல்லாதாரோடு வாசி இன்றிக்கே இருக்கும்
இந்த்ரன் தம்பியாய் அவன் பின்னே திரியச் செய்தே அவள் பாராத போது இந்த்ரன் ஐஸ்வர்யம் நஷ்டமாயிற்று
உபாசன வேளையில் இவள் புருஷகாரமாக வேண்டினாப் போலே சாஷாத் கார வேளையிலும் முற்பாடு உடையவள் இவள் –
பேணிக் கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -இரண்டாம் திரு -56-என்று
சாஷாத் காரத்துக்கும் அடி இவள் –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்று ஞானத்துக்கும் அடி இவள் –
திருக் கண்டேன்–-தர்மம் தன்னைக் கண்டேன் –
பொன் மேனி கண்டேன்–-அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்-
அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் –
பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்-
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும் ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும்-
என் ஆழி வண்ணன் –இவருடைய கடல் இருக்கிறபடி
கடலின் உள்ளே இறே பிராட்டியும் சங்கும்ரத்னமும் எல்லாம் பிறப்பது –
இன்று –அவன் காட்டக் கண்ட இன்று-இவள் புருஷ்காரமாகக் கண்டேன் இன்று

———–

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் –கைங்கர்யமே யாத்ரையாம் படி யானேன் –
(கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —–2-

திருவடிகளைக் காண்கைக்கும் ஜன்மத்துக்கும் சஹாவஸ்தானம் இல்லாமை –
அவள் விரும்புகிற விஷயம் என்றும் ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த பெருமையை நினைத்தும் பிற்காலியாதே மருவிக் கண்டு
கொண்டது என்னுடைய மனஸ்ஸூ –அந்தப்புர பரிகரமான நான் இன்று உன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
பிராட்டியோபாதி பரிவு உண்டாய்க் கண்டேனோ – விலக்காமையே உள்ளது –
ஒரு பிரயோஜனத்தை கொண்டு போகை அன்றிக்கே உன் பக்கலிலே மருவிற்று
பிராட்டியோட்டை சம்பந்தம் உறவு அறியாதார்க்கு வெருவுகைக்கு உடலாம்
உறவு அறிந்தார்க்கு அயோக்யன் என்று அகலாமைக்கு உடலாம் –

———-

கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று
அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3-

மனத்துள்ளான் –உத்தேச்யம் அவ்விடமே-மனசைப் படுக்கையாகப் புகுந்தான் –
சம்சார சம்பந்தத்தை அறுப்பானாய்க் கொண்டு மனசிலே புகுந்தான் –
என் நெஞ்சினில் வந்து பேர்க்க முடியாதபடி வாழ்கிறான் –
மலராள் தனத்துள்ளான் –அவனுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –
தண் துழாய் மார்வன்-அவளுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –

——–

சர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் –
கீழ் – தமக்குச் செய்த படி சொன்னார் –இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –
அது ஸ்வஜன ரஷணம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—

மருந்தும் பொருளும் அமுதமும் தானே-விரோதியைப் போக்குவானும் அபிமதத்தைத் தருவானும் அபிமதம் தானும் அவனே –
சம்சார வியாதியைப் போக்கும் பேஷஜமும்-
இஷ்டமான மோக்ஷ ஸூகத்தைத் தரும் பொருளும் -ஸ்வத இஷ்டமாய் இருக்கிற போக்யமான அம்ருதமும்-
திரு வுலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளே-சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து–அர்த்தியாய் வருகையாலே பொருளானான்
திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்
உண்டு -மருந்தான படி–உமிழ்ந்து -பொருளான படி -செங்கண் மால் -அமுதமான படி

————-

திரு வுலகு அளந்து அருளின படி பிரச்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –
அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை-
அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது – அலமாப்பாலே இறே-
அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது-பேச ஒண்ணாது –

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

கையிலே திரு வாழி பிடித்தால் வேறு ஒரு ஆபரணம் சாத்த வேண்டாது
இருக்கிறவனுடைய அழகு அடி வண்ணம் தாமரை-அவன் அழகிலே ஆழங்கால் பாட்டு அனுபவிக்கிறார் –

————–

கீழ்ச் சொன்ன அழகையும்-அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் –

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-

திருவாழி யோபாதி நிறமும் சிறந்து இருக்கும் -இந் நிறம் உடையவனுக்கு வேறொரு ஆபரணம் வேணுமோ –
திருவடிகள் பாவனமானது மாத்ரம் அல்ல போக்யமும் என்றபடி-
ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் -என்கிறபடியே வல்லார் ஆடினால் போலே
அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ-

———–

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க் கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திச் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-

எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை–அவர் காட்டக் காண இருக்கிற நாம்
திருவடிகளைத் தொழுவோம் போரு –

—————-

எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–

பிச்சர் வாழைத் தோட்டம் புக்கால் போலே தோற்றின திரு நாமங்களை அடங்கச் சொல்லி –
அவை எல்லாவற்றுக்கும் அடியான பிரதான நாமத்தைச் சொல்லி-
பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-வெளி நாடு காண உமிழ்ந்து –
நிரதிசய போக்ய பூதனான ஸூலபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண்

——-

காண்க நம் கண் என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் –

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

ஜிதந்தே புண்டரீகாஷா எண்ணப் பண்ணும் கண் –முதலுறவு பண்ணும் திருக் கண்கள் –
ஸ்பர்சத்துக்குத் தோற்று விழும் நிலமாய் – காடும் மோடுமான பூமியை அளந்து கொண்ட திருவடிகளும்
அந்தக் கமலம் போலே இரா நின்றன-
திருமா மணி வண்ணன் – காந்தி மிகுத்ததான பெரு விலையனான ரத்னத்தை உடைய நிறத்தை உடையவன்
ஸ்ரீ மத்தாய் ஸ்லாக்கியமான -ஸ்ரீ மன் நாராயண அர்க்கமான மணி-சர்வதா சாம்யம் காணாமல் கதிர் பொறுக்குகிறார் இறே
புறம்பு உபமேயம் பொய்யாய் இருக்கும் -இங்கு உபமானம் பொய்யாய் இருக்கும் –

———–

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை-அனுபவிக்கும் போது –யோக்யராய்ப் பேச வேணுமே –
ஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன
நீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம் என்கிறார்
அங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ-நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன
நாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க-எல்லா சம்பத்துக்களும்-தங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத்
தாமே வந்தடையும் என்கிறார் –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

இஸ் சம்பத்துக்கள் எல்லாம் நமக்கு-இவ் வாஸ்ரயத்தை சென்று கிட்டி ஸ்வரூபம் பெற வேணும் என்று கொண்டு
ஸ்நேஹித்துச் சென்று மேல் விழும் தன் பேறாகச் சென்று அடையும்-
இவன் திரு நாமம் சொல்லி அல்லது நிற்க மாட்டாதாப் போலே அவையும் இவனை அடைந்து அல்லது நிற்க மாட்டா –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அருளிச் செயல்களில் என்னை ஆளுடை அப்பன் எம்பிரான் இத்யாதி -போன்ற பாசுரங்கள் —

March 21, 2019

என்னை ஆளுடை அப்பன் -மன்னாதன் —

என்னை ஆளுடை எம்பிரான் -9-10-6- -திருக்குறுங்குடி எம்பெருமான் -திருமங்கை ஆழ்வார்

———————————–

எந்தை தந்தை தந்தை தம் முத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆள் செய்கின்றோம் –திருப்பல்லாண்டு -6-

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எனக்குத்தான் என்பார் –பெரியாழ்வார் திருமொழி -1-1-2–

எந்தம் பிரானார் எழில் திரு மார்வற்கு -1-3-3–

ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை-1-6-11–

எம்பெருமான் வாராவச்சோ வச்சோ -1-8-1-/4-

எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1-9-2-/8-

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய –1-9-10-

எண்ணற்க்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு விடுவன் -2-3-2–

சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-3-4-

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் -2-3-5-

சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திருவாயர் பாடிப்பிரானே -2-3-7–

துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே 2-3-8–

நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2-4-1-

இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2-4-2 —

சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2-4-5–

தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா –2-6-3 -/5-

கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2-6-6-

தேனில் இனிய பிரானே செண்பகப் பூச் சூட்ட வாராய் -2-7-1-

ஆமாறு அறியும் பிரானே அணி யரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் -2-7-8-

எம்பிரான் காப்பிட வாராய் -2-8-3–

வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்கும் கண்ணபிரான் கற்ற கல்வி –2-9-1-

வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –3-1-1-

பொருட்டாயமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் -3-1-7-

ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகலந்தான் என் மகளை பண்ணறையாய் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8-10–

எம்பிரான் வன்மையைப் பாடிப்பற-3-9-1-

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7–

ஆயிரம் பைந்தலையை அனந்த சயனன் ஆளும் மலை -4-3-10-

நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே–4-4-9-

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் நாரணன் தம்மண்ணை நரகம் புகாள்-4-6-4-

என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4-9-2-

இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆள் கொள்வான் அமருமூர் அணி அரங்கமே -4-9-3-

புது நாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் -4-9-4-

செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச் செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கையாளன்
இரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழு உலகப் பெரும் புரவாளன் திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4-9-10-

என்னுடைய இன்னமுதே ஏழு உலகும் உடையாய் என்னப்பா –4-10-7-

அடிமை என்னும் அக்கோயின்மையாலே அங்கு அங்கே யவை போதரும் கண்டாய்-5-1-4-

இருக்கு எச்சுச் சாம வேத நாண் மலர் கொண்டுன பாதம் நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -5-1-6-

எம்பிரான் என்னை ஆளுடைத்தேனே ஏழையேன் இடரைக் களையாயே-5-1-9-

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் -5-2-1-

எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பண்ணினோம் காப்பே -5-2-3–

சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் -5-2-4-

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் -5-2-6-

பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து என் சென்னித் தொடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-

உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய் 5-3-3-

அன்று வயிற்றில் கிடந்து இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் இன்று வந்து இங்கு
உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே -5-3-9-

திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல் அடிமைத்திறம் நேர்பட விண்ணப்பம் செய் –5-3-10-

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வெற்றி பெரும் பதம் ஆகின்றதால் -5-4-2-

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவார் -5-4-3-

என்னப்பா என்னிருடீ கேசா என்னுயிர்க் காவலனே –5-4-5-

என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே -5-4-5-

உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினையே -5-4-7-

தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-

வடதடமும் வைகுந்தமும் மதில் துவராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5-4-10-

———————————————

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாதிப் பறை கொண்டு ஈம பெரும் சம்மணம் –திருப்பாவை -27-

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –திருப்பாவை -28-

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்
ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -29-

சென்று இறைஞ்சி அங்கு அப் பறை கொண்ட வாற்றை -30-

————————-

அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே
சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே –நாச்சியார் திருமொழி -1-3-

ஆழி சங்குத்தமற்கு என்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-

பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையைத் தலையுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் கண்டாய் -1-8-

தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணி செய்து வாழப் பெறா விடில் நான் அழுது அழுது அலமந்தம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் -1-9-

புள் வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று -1-10-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய -5-10-

இம்மைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி -6-8-

என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே -8-6-

வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8-7-

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -9-7-

பண மாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்மினே -10-6-

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை யுடைமாடு கொண்டான் -10-7-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -11-3-

கொங்கைத் தலமிவை நோக்கிக் கண்ணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4-

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தர்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் -13-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெரும் தாளுடைப் பிரான் அடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே -14-10-

———————————————–

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணைக் கீழ் அலர்கள் இட்டு
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –பெருமாள் திருமொழி -1-3-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -2-4-

அரங்கன் எம்மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றது என் நெஞ்சமே -2-8-

அரங்க நகர் எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே -3-6-

பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே 3-7-

பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -3-8 –

எம்பெருமான் ஈசன் எழில் வேங்கடமலை மேல் தம்பக்கமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே -4-5-

செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே -4-10-

வித்துவக் கோட்டம்மா நீ கொண்டு ஆளாயாகிலும் உன் குரை கழலே கூறுவேனே -5-2-

வித்துவக் கோட்டம்மா நீ ஆளாவுனதருளே பார்ப்பன் அடியேனே-5-4-

எந்தையே என் தன் குலப் பெரும் சுடரே எழு முகில் கனத்து எழில் கவர் ஏறே -7-3-

எண்டிசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ -8-2-

எங்கள் குலத்தின் இன்னமுதே இராகவனே தாலேலோ-8-3-

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவனே-8-10-

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே -10-1-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்ற அரசு தானே -10-7-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே -10-8-

————————————-

என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த -4-

ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே -35-

சரந்துரந்த உம்பராளி எம்பிரான்-73-

ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே -78-

வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-81-

ஆழியான் தன் திறத்தோர் அன்பிலா அறிவிலா நாயினேன் என் திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்தே -84-

நின் கழற்கு அலால் நேச பாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம்மீசனே -107-

அத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

————————————————–

அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆள் செய்யாதே புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே –திருமாலை -6-

தண் பரவை மீதே தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண் என் அம்மான் -18-

மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு ஆள் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே -27-

எம்பிராற்கு ஆள் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -28-

எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே -30-

எம்பிரானார் அளியன் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே-37-

—————————————————-

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை
அளியன் என்று அருளி யுன் அடியார்க்கு ஆள் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –திருப் பள்ளி எழுச்சி -11-

————————————–

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் –அமலனாதி -1-

திரு ஆர மார்வதன்றோ அடியேனை ஆள் கொண்டதே -5-

—————————-

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள்—பெரிய திருமொழி -1-1-6-

எந்தை எம்மடிகள் எம்பெருமான் –வதரி யாச்சிரமத்துள்ளானே -1-4-7–

சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை -1-2-10-

இடவெந்தை மேவிய எம்பிரான் தீர்த்த நீர்த் தடஞ்சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-4-

திரு வேங்கடவா நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டு அருளே -1-9-1-
திருவேங்கட மா மலை என் ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-2-
குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-3-
திருவேங்கடவா அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-4-
திரு வேங்கட மா மலை என் அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-5-
திரு வேங்கடவா அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-6-
பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-7-
குளிர் சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-8-
கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆள் கொண்டு அருளே -1-9-9-

திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உள்ளானே-1-10-6-

வேங்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-1-
வேங்கடத்து அறவன் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-2-
வேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமீசை அண்டம் ஆண்டு இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-3-
வேங்கட மலை யாண்டு வானவர் ஆவியாய் இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-4-
வேங்கடம் மேவி நின்று அருள் அங்கண் ஆயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-5-
வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-6-
வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே 2-1-7-
வேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-8-
தாமரையோனும் ஈசனும் அமரர் காணும் நின்றேதும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-9-

எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே-2-2-1-
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-4-
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது ஏத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-6-
எங்கள் அப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -2-2-7-

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை அமுதை என்னை ஆளுடை யப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்
மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே –2-3-2-

பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய் எம் மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு
இன்னருள் புரியும் இட வெந்தை பிரானை -2-7-10-

மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் –அணி யாலி யம்மானே -3-5-4-

நிலையாளா நின் வணங்க வேண்டாயேயாயினும் என் முலையாள வொருநாள் உன்னகலத்து ஆளாயே
சிலையாளா மரம் எய்த திரு மெய்யா மலையாளா நீ யாள வலையாள மாட்டோமே-3-6-9-

முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கு அனையவர்க்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே -4-6-4-

தேவா திரு வெள்ளக்குளத்துள் உறைவானே ஆவா வடியான் இவன் என்று அருளாயே 4-7-9-

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும்மடியோம் -4-9-1-
தேசம் அரிய உமக்கே யாளாய்த் திரிகின்றோமுக்கு -4-9-4-
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் எழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரேல் -4-9-9-

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான் -4-10-9-

அறிவது அரியான் அனைத்துலகும் உடையான் என்னை யாளுடையான் குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமரும் இடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் –புள்ளம் பூதங்குடி தானே -5-1-2-

கூற்று ஏருருவின் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –கூடலூரே-5-2-4-
கலை வாழ் பிணையோடு அணையும் திரு நீர் மலை வாழ் எந்தை மருவுமூர் –கூடலூரே -5-2-8-

நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே–திரு வெள்ளறை நின்றானே -5-3-1-
திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே -5-3-4-
பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே -5-3-9-

வானவர் தம் உயிர் ஆளன் ஒலி திரை நீர்ப் பவ்வம் கொண்ட திருவாளன் -5-5-1-
மெய்ய மலை யாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் எழு எய்த வென்றிச் சிலையாளன் -5-5-2-
பூ மேல் மாது ஆளன் குடமாடி மது சூதன் மன்னார்க்காய் முன்னம் சென்ற தூது ஆளன் -5-5-6-
பேர் ஆளன் பேர் அல்லால் பேசாள் இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான் தார் ஆளன்
தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன்-5-5-7-
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன்-5-5-8-

தன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கு பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-8-

அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும் ஆயன் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-9-

நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-1/2/3/4/5/6/7/8–
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-9-

தன் தாள் அடைவரேல் அடிமை யாக்கும் செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே -5-9-1-
செறி பொழில் தென் திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-2-
அரவணை மேல் கருவரை வண்ணன் தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே -5-9-3-
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர் வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே -5-9-4-
நக்க அரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே -5-9-5-
நலம் கொள் நான் மறை வல்லார்கள் ஒத்து ஒலி ஏத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப் பேர் மருவி நான் வாழ்ந்தவாறே -5-9-6-
தென் திருப் பேருள் வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே -5-9-7-
தென் திருப் பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-8-
திருப் பேர்ச் செங்கண் மாலொடும் வாழ்வார் சீல மா தவத்தார் சிந்தை யாளி என் சிந்தையானே -5-9-9-

தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-1-
விண்ணவர் அமுதுண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-2-
நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிற வம்பது வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-3-
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-4-
ஓர் எழுத்துரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-5-
சீர் கெழு நான்மறை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-6-
இருக்கினில் இன்னிசை யானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-7-
உனது அடி அணுகுவன் நான் போது அலர் நெடு முடிப் புண்ணியனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-8-
உன் கழல் அடைந்தேன் ஓதல் செய் நான் மறையாகி உம்பராதல் செய் மூவுரு வானவனே ஆண்டாய் –விண்ணகர் மேயவனே -6-1-9-

சிறந்தேன் நின்னடிக்கே அடிமை திருமாலே அறந்தானாய்த் திரிவாய் உன்னை என் மனத்தகத்தே
திரும்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே -6-3-2-
சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடீ மது சூதனே உலகில் சொல்லா நல்லிசையாய் திரு விண்ணகரானே -6-3-9-

நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே -6-4-ஒன்பது பாசுரங்களிலும்-கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர்
வானவர்க்கு இன்னரசர் ஆவரே-6-4-10-

ஆலிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்–திரு நறையூர் மணி மாடம் -6-6-1-
ஈசன் எந்தை இணை அடிக்கீழ் இனிது இருப்பீர் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-
பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திரு முடியா நின்றான் பால்
செல்லகிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-3-
துகில் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-4-
தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்த் தான் ஆயனாயினான் சரண் என்று உய்வீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-6-
இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக்கீழ் எய்த கிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-7-
வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் திணித்தான் திருவடி நும்
சென்னி வைப்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-8-
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன்–திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-1-

திருமாலை எம்மானை நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே 6-8-2-

திரு நறையூர்– திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-1-/ அடி இணையே அடை நெஞ்சே 6-9-2-/3-/
குரை கழலே அடை நெஞ்சே 6-9-4-
இவ்வுலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே 6-9-5-
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலை திரு மார்வில் மன்னத்தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே 6-9-6-
திரு நறையூர் –தார் தழைத்த துழாய் முடியின் தளிர் அடியே அடை நெஞ்சே 6-9-7-
திரு நறையூர் மலை யார்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி நிலையாரே நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே 6-9-8-
திரு நறையூர் பிறையாரும் சடையானும் பிரமனும் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-9-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன்
நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-
நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை –கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-

நறையூர் நின்ற நம்பி பிறவாமை எனைப் பணி எந்தை பிரானே -7-1-1-
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே -7-1-2-
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே -7-1-5-
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1–6-
கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர்
தமக்கு கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-7-
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய்க் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உத்தமம் இல்லை துயரே -7-1-10-

உள்ளே நின்றுருகி நெஞ்சம் உன்னை யுள்ளியக்கால் நள்ளேன் உன்னை யல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-1-
நாடேன்உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-2-
நன்மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே -7-2-3-
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப்
போகல் ஓட்டேன் நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-
என்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஓட்டேன்
அந்தோ என்னாருயிரே அரசே அருள் எனக்கு நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-6-
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப்ப பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-9-

எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே -7-3-3-
அரங்கம் ஆளி என்னாளி விண்ணாளி-7-3-4-
காதல் செய்து என்னுள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே -7-3-8-

தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-
தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாரே -7-4-9-

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை கடியார் காளையர் ஐவர் புகுந்து
காவல் செய்த வக்காவலைப் பிழைத்து குடி போந்து உன்னடிக்கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-8-

உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறு புலியூர்ச் சல சயனத்து ஐவார்
அரவணை மேல் உறையமலா வருளாயே -7-9-8 —
கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா பெருமால் வரை யுருவா பிற உருவா நினதுருவா
திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சலசயனத்து அருமா கடலமுதே உனதடியே சரணாமே -7-9-9-

கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-

வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-1-
கரி வெருவ மருப்பு ஓசித்தார்க்கு இழந்தேன் என் கன வளையே-2-
செங்கண் மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே -3-
புனர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே -4-
தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே -5-
யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -6-
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -7-
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே -8-
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -9-
கண்ண புரத்து எம்மடிகளை திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் -8-6-10-

எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே-8-9-1-
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -3-
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே -4-
அஞ்சேல் என்று அடியேனை ஆள் கொள்ள வல்லானை –வயலாலி மைந்தனையே -6-

உன்னை உகந்து உகந்து உன் தனக்கே தொண்டனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால்வேதம் கண்ட கண்ண புரத்துறை அம்மானே -8-10-1-
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை மற்று எல்லாம்
பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே -3-
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல் வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை அம்மானே -9-
கண்ட சீர்க் கண்ண புரத்துறை அம்மானை கொண்ட சீர்த்த தொண்டன் கலியன் ஒலி மாலை -10-

அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-9–

என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் –அழகாய புல்லாணியே -9-3-1-
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் –புல்லாணியே -2-
ஏது செய்தால் மறக்கேன் –புல்லாணியே -3-
மங்கை நல்லாய் தொழுதும் எழு –புல்லாணியே -4-
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு –புல்லாணியே -5-
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு மா மலர் பாத நாளும் பணிவோம் என் தொழுதும் எழு –புல்லாணியே -6-
பரவி நெஞ்சே தொழுதும் எழு –புல்லாணியே -7-
நாம் தொழுதும் எழு –புல்லாணியே -8-
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி நமக்கே நலமாதலில்–புல்லாணியே -9-

பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன் -9-4-

முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-10-1-
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முந்நீர் அமுது தந்த வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-

இண்டையும் புனலும் கொண்டு இடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
சுடர் குடிக் கடவுள் தம் கோயில் –மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-2-
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் –மாலிருஞ்சோலை -9-8-9-

வட மா மதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி
தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ -9-9-6-
திருமாலிருஞ்சோலை நின்ற வள்ளலை வாழ் நுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ -7-
திருமாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே -8-
திருமாலிருஞ்சோலை நின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொலோ என் நன்னுதலே -9-

எங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாத
அருள் புரிவான் –திருக் கோட்டியூரானே-9-10-1–
என்னை ஆளுடை எம்பிரான் -நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே -6-
அடியேனை ஆள் உகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்–திருக் கோட்டியூரானே -8-

பொன்னை மா மணியை அணியார்ந்ததோர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை
எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே -10-1-2-
பத்தராவியைப் பால் மதியை அணித் தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய் முத்தினை மணியை
மணி மாணிக்க வித்தினை சென்று விண்ணகர்கே காண்டுமே -8-
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனை -10-

நம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ -11-2-9-

தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது காணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-
இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே -6-
முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப் பெற்றோமே -9-

ஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யது நம்மை ஆளும் அரசே-11-4-3-
அந்தரம் ஏழு னூடு செல யுய்த்த பாதமது நம்மை ஆளும் அரசே –5-
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயாராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -6-
அன்னமதாய் இருந்து அங்கு அற நூலுரைத்தவது நம்மை யாளும் அரசே -8-

திரு வயிற்றில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கனிக்களவத் திரு வுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே-11-6-4-
உலகு அளந்த உம்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களை பேசீர்களே –5-
உலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கொண்டல்
கைம் மணி வண்ணன் தன் குடந்தை நகர் பாடி ஆடீர்களே -11-6-9-

தேனோடு வண்டாலும் திருமாலிருஞ்சோலை தான் இடமாகக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழு
அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -11-7-9-

அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே
மது சூதா பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-

———————-

இரும்பு அகன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு என் தன் அரும் பெறல் அன்பு புக்கிட்டு
அடிமை பூண்டு உய்ந்து போனேன் –திருக் குறும் தாண்டகம் -4-
பத்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய் முத்து ஒளி மரகதம் முழங்கு ஒளி முகில் வண்ணா
என் அத்த நின்னடிமை யல்லால் யாதும் ஒன்றும் இலேனே -10-
தொண்டு எல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் -11-
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் -12-
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை -20-

————————————–

எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –திரு நெடும் தாண்டகம் -1-
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேன் -5-
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே -6-/-7 –
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு நங்காய் நம் குடிக்கு
இதுவோ நன்மை எண்ண நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே -17-
பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன் பேரோதும்
பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -20-
என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்
கண்டேன் கன மகரக் குலை இரண்டும் நான்கு தோளும்-22-
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே -24-
என் நலனும் என் நிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு —
புனல் அரங்கமூர் என்று போயினாரே -25-
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -29-

———————————————–

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –திருவாய் மொழி -1-1-1-

உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கி -1-2-8-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறிலா வண் புகழ் நாரணன் திண் கழல் சென்றே -10-

நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது அவனுடை நம்முடை நாளே -1-3-7-
மனனகமல மறக் கழுவி நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே -8-

முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே -1-4-2-
நாடாத மலர் நாடி நாடொறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று –9-

பரிவதில் யீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே -1-6-1-
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவேது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யுமீடே -2-
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே -7-
கழிமின் தொண்டீர்கள் கழித்து தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே -8-

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே -1-8-10-

நெற்றியில் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்-1-9-10-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்பராவு
நுண்ணேர் இடை மார்வனை எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே-1-10-3-
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும் சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் –7–

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி -2-1-7-

என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -2-3-2-
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் -3-
பரமன் பவித்ரன் சீர் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே-9-

தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீர் -2-5-8-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கு ஏத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட
நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே -2-6-3-
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் கழித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –4-
உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -5-
உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான்-6-

வேத மயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை -2-7-2-
தேவும் தன்னையும் பாடி யாடத்திருத்தி என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் காய்த்து
எமர் எழு எழு பிறப்பும் மேவும் தன்மையமாக்கினான் வல்லன் எம்பிரான் வீட்டுவே -4-
ஊழி ஊழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்ரமனையே -6-
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே -7-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே -8-

மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே-2-9-6-
யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே -2-9-9-

மாலிருஞ்சோலை பதியது வேத்தி எழுவது பயனே -2-10-2-
மாலிருஞ்சோலை வல முறை எய்தி மருவுதல் வலமே-7-
மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -8-

சொல்லாய் யான் உன்னைத் சார்வதோர் சூழ்ச்சியே -3-2-3-

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -3-3-1-
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -8-

ஆதுமில் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே -3-4-4-

எம்மானைச் சொல்லிப்பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் தண் கடல் வட்டத்துள்ளீரே -3-5-1 –
வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற -8-
தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -10-

அன்று தேர் தடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொள் கண்களே -3-6-10–

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை தோளுமோர் நன்குடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை -3-7-2-
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பனை -7-

ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவியம் புள்ளுடையாய் சுடர் நேமியாய் -3-8-7-

திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே -3-9-1-
ஓர் ஆயிரம் பேருமுடைய பிரானை அல்லால் மற்று யான்கிலேன்-7 –

எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே-3-10-8-

தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே -4-3-2-
நின் பூம் தண் மாலை நெடும் முடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே -6-
கோல மாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே -6-
உன் உரை கொள் சோதித் திரு உருவம் என்னதாவி மேலதே–7-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை -4-5-1-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினான் என்ன குறை நமக்கே -4-5-7-
தண் தாமரை சுமக்கும் பாத்தப்பெருமாள்ச சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே -8-
குடமாடியை வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-9-
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -10-
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-11-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆள் செய்து நோய் தீர்ந்த வழுவாத தோள் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-4-6-11-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் -4-7-11-

ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறு ஆளும் தனியுடம்பன் -4-8-1–
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட மணி மாயன்- 4-8-2-

கடல் வண்ணா அடியேனை பாண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே -4-9-3-
வெறித் துளப முடியானே வினையேனை யுனக்கு அடிமை அறக் கொண்டாய் இனி என் ஆரமுதே கூய் அருளாயே -4-9-6-

கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூர் அதனுள் ஆடு புட் கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே -4-10-7-
உறுவது ஆவது –திருக் குருகூர் அதனுள் கூறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே -10-
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் -11-

என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி யருளாய் கண்ணனே -5-1-4-
தேவார் கோலத்தோடும் திருகி சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனோடும் ஆனான் -9-
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் -10-

பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே -5-3-4-
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன் நின்று இரா ஊழிக் கண் புரைய மூடிற்றால் -5-4-6-
கழிய மிக்கதோர் காதல் இவள் என்று அன்னை காண கொடாள் வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -5-5-10–

எம் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -5-7-3-
என்றும் என்னை ஆளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே –6-

எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே -5-8-2-
நால் தோள் எந்தாய் யுனது அருளே பிரியா வடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே -5-8-7-
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –9-

திரு வல்ல வாழ் கன்னலங்கட்டி தன்னைக் கனியின் இன்னமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -5-9-5–

அது விது வுது என்னாலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும் -5-10-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய்க்
குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற வந்தாதி -5-10-11-

திரு வண் வண்டூர் உறையும் கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் -6-1-1-
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பனியீர் அடியேன் திறமே -6-1-2-
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எலக் சேற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே–10-

இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்-6-2-10–

பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை செல்வம் மல்குடித் திரு விண்ணகர்க் கண்டேனே -6-3-1-
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர் தெண் திரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே -2-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே -8-
திரு விண்ணகர்ச் சேர்ந்த வைப்பான் தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே -9-
திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே -10-

மாயக் கோலப்பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு இவ்வுலகம் நிகரே -6-4-2-

வடகரை வண் தொலை வில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-
தொலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பித் தொழும் அவ்வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே –6-6-9-
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-10-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர்கள் மல்கி -6-7-1-
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனனை தினைத்தனையும் விடாள் அவள் சேர் திருக் கோளூருக்கே-6-7-10-

முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்தே 6-8-1-

கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -9-
அளவில் இன்பம் சேர்ந்தாலும் மறுகால் இன்றி மாயோன் உனக்கே யாளாகும் சிறு காலத்தை யுறுமோ அந்தோ தெரியிலே -10-

திலதம் உலக்குக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே குல தொல்லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே -6-10-1-
திரு வேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே -4-
திருவேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -10-

எண்ணிலாப் பெரு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே யமுதே யப்பனே என்னை ஆள்வானே -7-1-1-

கட்கிலீ யுன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் திட் கொடி மதிள் சூழ்
திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே -7-2-3-
முடிவிலள் தனக்கு ஓன்று அறிகிலேன் என்னும் மூ வுலகு ஆளியே என்னும் -10-

கொண்ட என் காதலுக்கு உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்-7-3-8-

வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -7-5-10-

என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -7-6-5-

என்னை ஆளும் கண்ணா இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை -7-8-8-

என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை உறப் பல வின் கவி சொன்ன உதவிக்கே -7-9-9-

இன்பம் பயக்க எழில் மாதர் மாதரும் தானும் இவ்வேழு உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –7-10-1-
திரு வாறன் விளை மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொலோ -2-
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் நின்ற வணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -6-
அன்றி மற்று ஓன்று இலன் சரண் என்று அகலிரும் பொய்கையின் வாய் நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் -8-
திருவாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் என்னும் என் சிந்தனையே -9-
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே -10-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆள் செய்வார் -8-1-1-
எங்கு வந்துறுகோ என்னை ஆள்வானே ஏழு உலகங்களும் நீயே -8-1-6-
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே –8-
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனி அப்பன் தன்னை -11-

கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே -8-3-2-
ஆளும் ஆளார் அலையும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -3-
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே -9-

முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம்பெருமான் தென்திசைக்கு அணி கொள்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை மீ பால் நின்ற எம்பெருமான் -8-4-3-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என் அண்ட வாணா என்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் -8-5-6-
உன் வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -7-

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

இருந்தான் கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் திருந்தாதவோர் ஐவரைத் தேய்ந்தற மன்னி பெரும் தாள் களிற்றுக்கு
அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே -8-7-2-
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து -8-

எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே -9-1-1-

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி
வழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -9-2-1-
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி -2-
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி -3-
புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி -4-
எம்மிடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே -7-
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -10-

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை யாதலில் பழுதில் தொல் புகழ்ப்
பாம்பணைப் புள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே -9-3-9-

அடியான் இவன் என்று எனக்கு ஆரருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியானை
குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே -9-4-10-

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவெல்லாம் காவி கமழ் திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே -9-6-1-
தென் காட்கரை என்னப்பா நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே -2-
ஆள் கொள்வான் ஒத்து என்னாருயிர் உண்ட மாயனால் கோள் குறைபட்டது என்னாருயிர் கோள் உண்டே -7-
தென் காட்கரை என் அப்பருக்கு ஆள் அன்றே பட்டது என்னாருயிர் பட்டதே -8-

நாளேல் அறியேன் எனக்குள்ளன நானும் மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4-
நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ ஆவா வடியான் இவன் என்று அருளாயே -7–
அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை
என் நெஞ்சகத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -8-
மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி தேவன் விரும்பி யுறையும் திரு நாவாய் -9-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினைகெட காலை மாலை கமல மலரிட்டு நீர் வேலை மோதும்
மதிள் சூழ் திருக் கண்ண புரத்து ஆலின் மேல் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1-
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி –9-
குருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடியாடி பணிமின் அவன் தாள்களே -11-

படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர் இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்மினே -10-1-4-
திருமோகூர் சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே -7-
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே -11-

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அப்பணி செய்வார் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும் குமாரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே -10-2-6–
வயல் அணி யனந்த புரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே -7-
எழில் அணி அனந்த புரம் படமுடை இரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம் -8-
செறி பொழில் அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அரும் வினைகள் தாமே -9-
அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள்
நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -10-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யுன் கோலப் பாதம் -10-3-6–

என்றும் திரு மெய்யம் யுறைகின்ற செங்கண்மால் நாளும் இருவினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே -10-4-2-
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் மீள்கின்றது இல்லை பிறவித்துயர் கடிந்தோம் -3-
பணி நெஞ்சே நாளும் பரமபரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி
மது சூதன் என் அம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே -7-

ஆள்வான் ஆழி நீர் கோள்வாய் அரவணையான் தாள் வாய் மலர் இட்டு நாள் வாய் நாடீரே -10-5-4–
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -5-
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே -7-

தேன் ஏறு மலர்த்துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே -10-6-5–
பிரியாது ஆள் செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியாருக்கு ஆள் பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினானே -10-

செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்ம்மின் திரு மாலிருஞ்சோலை வஞ்சக கள்வன் மா மாயன் மாயாக் கவியாய் வந்து
என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை யுண்டு தானே யாகி நிறைந்தானே -10-7-1-
திருமாலிருஞ்சோலை யானேயாகித் செழு மூ உலகும் தன் ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து
ஊழி யூழி தலை யளிக்கும் திருமால் என்னை ஆளுமால் -6-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையில் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிதாயினவாறே -10-8-3-
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே -7-
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-
குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே -11-

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று -10-9-6-

எனக்கு ஆராவமுதாய எனதாவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-10-10-6-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழாயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதியோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -11-

—————————————————

அரி வுருவும் ஆளுருவுமாகி –முதல் திருவந்தாதி -31-

திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானை –இரண்டாம் திருவந்தாதி -90-

முத்தீ மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இரையாவான் எங்கள் பிரான்–96-

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ -97-

எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் –மூன்றாம் திருவந்தாதி -17-

திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே -20-

திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -59-

திருமலை மேல் எந்தைக்கு -63-

வேறு ஒருவர் இல்லாமை நின்றானை எம்மானை –நான்முகன் -4-

நாராயணன் என்னை ஆளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் -14-

அவன் என்னை ஆளி -30-

எம்பிரான் மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -58-

பொன் பாவை கேள்வா கிளர் ஒளி என் கேசவன் கேடு இன்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு -92-

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ கன்கறிந்தேன் நான் -96-

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம் கரிய பிரான் எம் பிரான் –திருவிருத்தம் -39-

எப்பால் யவர்க்கும் எண்ணும் இடத்ததுவோ எம்பிரான் எழில் நிறமே -43-

எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே-54-

இரண்டே அடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே -61-

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே -86-

அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே -89-

ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே –திருவாசிரியம் -7-

கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று–பெரிய திருவந்தாதி -3-

உண்ணாட்டுத் தேசு அன்றே உள் வினையை அஞ்சுமே விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே
மண்ணாட்டில் ஆராகி எவ்விழிவு உற்றானாலும் ஆளி யம் கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு -79-

தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா வதனை இடர் கடித்தான் எம்பெருமான் –சிறிய திருமடல்

அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக் காலத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை –இந்நிலைமை எல்லாம் அறிவித்தால்
எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் -பெரிய திருமடல்-

அடியார்க்கு அமுதம் இராமானுசன் என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–இராமானுச நூற்றந்தாதி -51-

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை ஆள வந்த கற்பகம் -53-

ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் யாவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே -86-

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந் நீணிலத்தே என்னை ஆள வந்த இராமானுசனை -90-

உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -107-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளிச் செயல்களில் -கரணத்ரய அனுபவம்-

July 26, 2018

திருப்பல்லாண்டு –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -வந்து –கூடும் மனம் உடையீர்கள்–வந்து பல்லாண்டு கூறுமினோ -4-

————————————

பெரியாழ்வார் திருமொழி –

காறை பூணும் –ஆயிரம் பேர்த்தேவன் திறம் பிதற்றும் —
மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே –3-7-8-

குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து –
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் -4-4-7-

ஆசை வாய்ச சென்ற சிந்தையராகி –அன்னை யத்தன் ஏன் புத்திரர் –என்று மயங்கி வாய் திறவாதே —
கேசவா புருடோத்தமா வென்றும் –பேசுவார் எய்தும் பெருமை -4-5-1-

மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –உய்யலும் ஆமே -4-5-3-

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே -4-5-10-

————————————————————————————–

திருப்பாவை –

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து
அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் –6-

நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் -25-

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைத் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் —
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-

——————————————

நாச்சியார் திருமொழி
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் –
-பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெற -1-9-

——————————————————————————————–

பெருமாள் திருமொழி –

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற -1-3-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -1-9-

திருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -2-1-

நிரை மேய்த்ததும் இவையே நினைந்து ஆடிப்பாடி அரங்கவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் -2-2-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே -2-4-

மாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்று இடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே -2-8-

மொய்த்துக் கண் பணி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி
என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே -2-9-

——————————————————————————————-

திருச் சந்த விருத்தம் –

சோர்வில்லாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே –78-

———————————————————————————–

திருமாலை
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் -தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே –26-

—————————————————————————-

பெரிய திருமொழி –
சிக்கெனைத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் -1-1-5-

ஓதிலும் உன் பேர் அன்றி மற்றோதாள் -உருகும் நின் திருவுரு நினைந்து காதன்மை பெரிது கையறவுடையள்
-கயல் நெடும் கண் துயில் மறந்தாள்–என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-5-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை -2-10-4-

நீடு பன்மலர் மாலையிட்டு -நின் இணை அடி தொழுது ஏத்தும் -என் மனம் –3-5-5-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் -3-5-6-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில் –9-3-9-

—————————————————————————————

திருவாய் மொழி –

உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே-1-2-8-

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே –1-3-6-

ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது -1-3-7-

எந்தாய் என்பன் நினைந்து நைந்தே -1-5-1-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -1-5-2-

கள்வா வெம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவன் என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவரே -2-2-10-

குழாங்கள் ஆயிரத்துள் இவை பத்துமுடன் பாடி குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினே -2-3-11-

ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாணுதலே -2-4-1-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கெத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட -2-6-3-

நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே -2-6-4-

உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி
என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான் -2-6-6-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினான் காமனைப் பயந்தாய் என்று என்று
உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப் பகல்வாய் வெரீஇ
ஆழமானது கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீஇயதீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே -2-7-9-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராய் -2-9-6-

கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -3-5-1-

வார் புனல் அம் தண் அருவி வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே
பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலகர் சிரிக்க நின்றாடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -3-5-8-

தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -3-5-10-

கறை யணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த வம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டிலனே -3-10-2-

திருக்குருகூர் அதனை பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே-4-10-2-

மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே -5-2-2-

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே -5-2-4-

நேமிப்பிரான் தமர் போந்தார் நன்று இசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தியே–5-2-6-

திரு வண் வண்டூர் புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-

புகர்கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர
வைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே -6-4-3-

தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -6-5-1-

தொலைவில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசனை என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-

பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே
கண்கள் நீர்கள் மல்கி மண்ணினுளவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் எண்ணிலமான் புகுமோர் திருக்கோளூரே– 6-7-1-

என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்க -7-1-10-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே -7-10-11-

பணங்கள் ஆயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானு நீ தானே -8-1-8-

வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-

நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்து உகும் வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்
சுனை பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைக்கிலென் நாண் உனக்கு ஆட் செய்யும் நீர்மையே –9-6-2-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே -10-4-10-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -10-7-8-

——————————————

முதல் திருவந்தாதி –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20 –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப்பிணித்த நான்று
குரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே ஓங்கோத வண்ணா உரை -24-

நகரமருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புத்தியால் சிந்தியாது ஓதி யுரு வெ ண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –33-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி
திசை திசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் -37-

மனமாசு தீரும் அருவினையும் சாரா தனமாய் தானே கை கூடும்
புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர் –43-

அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான்
நயநின்ற நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொல்மாலை கற்றேன் தொழுது -57-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் ஏழு வாழி நெஞ்சே
பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை யடை -58-

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த
படமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும் கொய்ந்நாகப் பூம்போது கொண்டு -78-

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு -88-

நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே இன்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -95-

——————————————————

இரண்டாம் திருவந்தாதி –

நகர் இழைத்து நித்திலத்து நாண் மலர் கொண்டு அங்கே திகழு மணி வயிரம் சேர்த்து
நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4-

அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம் செறிந்த மனத்தராய்ச் செவ்வே
அறிந்தவன் தன் பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே காரோத வண்ணன் கழல் -6-

பழிபாவம் கையகற்றிப் பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ
வழுவின்றி நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் காரணங்கள் தாமுடையார் தாம் -20-

தா முளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது -21-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலாரால் முன்னே
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேனுக்கு என் பாக்கியத்தால் இனி -34-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே தமக்கு என்றும் சார்வம் அறிந்து
நமக்கு என்றும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38-

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்
அறம் தாங்கும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -44-

திருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்பிடிமின் கண்டீர்
உரிமையால் ஏத்தினோம் பாதம் இருந்த தடக்கை எந்தை பேர் நால் திசையும் கேட்டீரே நாம் -57-

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்
துணிந்தேன் புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு வந்திவாய் வாய்ந்த மலர் தூவி வைகலும்
ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட்படத் துணிந்த யான் -73-

அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்
அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று -85-

——————————————-

மூன்றாம் திருவந்தாதி –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா
மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம் கண் -8-

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி
மறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி -12-

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
இலாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க் கை தொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடியார் மலர் தூவிக் காணும்
படியானை செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு -22-

காண் காண் என விரும்பும் கண்கள் -கதிர் இலகு பூண்தார் அகலத்தான் பொன்மேனி
பாண் கண் தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம் பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை -35-

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
கேழ்த்த அடித்தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடித்தாமரையாமலர் -96-

———————————————————–

நான்முகன் திருவந்தாதி –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு -9-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து -11-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த
வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீற் கண்டன் கண்ட நிலை -15-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது -63-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று
என்றும் பூக்கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

—————————————————————-

திருவாசிரியம்

உலகு படைத்து உண்ட வெந்தை அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவாவாருயிருகி யுக்க
நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்க்கு அசைவோர் அசைக-2-

————————

பெரிய திருவந்தாதி –

வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத
பாழ்த்த விதி எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தானாமேலும் தங்கி -84-

——————————————————

இராமானுச நூற்றந்தாதி –

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

நையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம் ஐயன் ராமானுசன் என்று அழைக்கும்
அருவினையேன் கையும் தொழும் கண் கருத்திடும் காணக்
கடல் புடை சூழ் வையம் இதினில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே -102-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-91-100—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

சாமான்யேன ஜகத்தை யுண்டும்- பிரதிகூலருடைய பிராணனையும் -அனுகூலர் ஸ்பர்சித்த
த்ரவ்யத்தையும் யுண்டும் -பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் –

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –

மண்ணுண்டும் பேய்ச்சி  முலை யுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

பதவுரை

வயிற்றினோடு ஆற்ற மகன்–வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன்
மண் உண்டும்–(பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்)
பேய்ச்சி–பூதனையினது
முலை–(நஞ்சு தீற்றின) முலையை
உண்டும்–அமுது செய்தும்
ஆற்றதாய்–த்ருப்தி பெறாதவனாய்
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்க–(களவு செய்து) விழுங்கின வளவிலே
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வெகுண்டு–கோபங்கொண்டு
கண்ணி கயிற்றினால்–பல முடிச்சுகளை யுடைய தாம்பினால்
கட்ட–உரைக்கக் கட்டிப் போட,
தான்–ஸர்வசந்தனான தான்
கட்டுண்டு இருந்தான்–(அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ள மாட்டாமல்) கட்டுண்டிருந்தான்

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய்–
ஜகத்தை வயிற்றிலே வைத்தும் -பூதனை யுடைய பிராணனை யுண்டும்
இரண்டாலும் அபரியாப்தனாய்

வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி –
இவனுக்கு வெண்ணெய் களவு காண்கையிலே ஸ்நேஹம் போரும் இறே அவளுக்கு ரஷிக்கையிலும் –
வெண்ணெய் களவு போயிற்று என்ற மாத்திரத்திலே இவன் முகத்திலே பையாப்பையைக் கண்டு தாயார் சீறி –

கண்ணிக்-கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடுஆற்றா மகன் —–
பல பிணை யுடைத்தான கயிற்றாலே அவள் கட்டுவதற்கு பரிஹாரம் இன்றிக்கே கட்டுண்டு இருந்தான்

தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து–(8-3-5)-

நெய்யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள்ள நீ யுன் தாமரைக்கு கண்கள்
நீர் மல்கப் பையவே நிலையும்–5-10–3

முழுதும் வெண்ணெய் அளந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக் கையும் -7-8

வயிற்றினோடு ஆற்றா மகன் –
இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ என்று பணித்தார் –

என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–பெரியாழ்வார் -2-3-8-

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-5-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

—————————————————————————-

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –

அனுகூல பிரதிகூல விபாகமற பூமியில் உள்ளவர்களை திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும் –
பிரதிகூலையான பூதனையுடைய முலையை அவள் பிணமாய் விழும்படி அமுது செய்தும் –
இவற்றால் பர்யாப்தி பிறவாமல் அனுகூலர் கடைந்து சேர்த்து வைத்த
வெண்ணெயைக் களவிலே அமுது செய்ய –

பரிவுடையாளான யசோதை பிராட்டி ஸ்நேஹம் தோற்றச் சீறி
பல முடிச்சுகளை யுடைத்தான தாம்பாலே உரைக்கப் பட்ட ஸ்வ சங்கல்பத்தாலே சர்வரையும் கட்டுவது விடுவதாய் போரும்
சர்வ சக்தியான தான் கட்டுண்டு அதுக்கு ஒரு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருந்தான்

வயிற்றைக் கொண்டு எங்கு புகுவோம் என்று பாடாற்ற மாட்டாத பிள்ளை –

————————————————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

பதவுரை

என் நெஞ்சே–எம் மனமே!
ஒருவற்கு மகன் அல்லாத–(கருமமடியாக) ஒருவனுக்கு மகனாகப் பிறக்கத் தகாத (ஸர்வ லோக பிதாவான)
மா மேனி–சிறந்த திருமேனியை யுடைய
மாயன்–ஆச்சர்ய பூதனாய்
மகன் ஆமவன்–(வஸுதேவர்க்குப்) பிள்ளையாகப் பிறந்தவனாய்
மகன் தன்–தனது மகனான பிரத்யும்நனுடைய
காதல் மகனை–இஷ்ட குமாரனான அநிருத்தாழ்வானை
சிறை செய்த–சிறையிலே வைத்த
வாணன்–பாணாஸுரனுடைய
தோள்–தோள்களாயிரத்தையும
செற்றான்–அறுத்தொழித்தவனான பெருமானுடைய
கழலே–திருவடிகளையே
நிறை செய்து–பூர்த்தியாக
நினை–சிந்தை செய்வாயாக

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்–
பிதா புத்ரேண பித்ருமான் -என்னும்படி இல்லாமையாலே சர்வேஸ்வரனுக்கு
அலாப்ய லாபம் இறே-புத்ர லாபம் —
தனக்கு இல்லாத ஒன்றிலே இறே ஸ்நேஹம் ஜனிப்பது

மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்–சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே–நிறை செய்தேன் நெஞ்சே நினை—
புத்ரனைக் காட்டில் பவுத்ரன் பக்கல் ஸ்நேஹம் யுண்டு இறே —
ஸ்நிக்தனுமாய் பவ்த்ரனுமான அநிருத்த ஆழ்வானைச் சிறை செய்த சீற்றத்தால்
பாணனுடைய தோளைக் கழித்தவனுடைய திருவடிகளை –
நெஞ்சே அவன் பிரதிபந்தகங்களைப் போக்க -ஸ்நேஹித்து அனுபவி –

நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் செறிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் செறிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண தோள் கொண்ட வன்றே –7-4-8-

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

——————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —

கர்மம் அடியாக ஒருவனுக்குப் பிள்ளையாய் பிறக்குமவன் அன்றிக்கே –
(அகில காரணன் நிஷ் காரணன் அத்புத காரணன் இவன் ஒருவனே )சர்வ லோகத்துக்கும் பிதாவான பெருமையை யுடையனாய்
அப்ராக்ருதம் ஆகையால் பரம பூஜ்யமான திருமேனியை யுடையனாய் –
அத்யாச்சர்யமான ஞானாதி குணங்களை அமைத்துக் கொண்டு
ஸ்ரீ வாஸூதேவர்க்குப் பிள்ளையாய்ப் பிறந்த கிருஷ்ணன தன்னுடைய புத்ரனுக்குப் புத்ரனாய் -அத்தாலே மிகவும் ஸ்நிக்தனாய்
இருக்கிற அநிருத்த ஆழ்வானைச் சிறையிலே வைத்த பாணாசூரனுடைய செருக்கும்-
அதுக்கும் அடியான தோள்கள் ஆயிரத்தையும் அறுத்துப் பொகட்டவனுடைய திருவடிகளை –
எனக்கு விதேயமான நெஞ்சே பூர்ணமாக அனுசந்திக்கப் பார்–

———————————————————————————————————————–

(யுகங்கள் தோறும் ஆழ்வார்கள் அவதாரம் உண்டே
அவன் இவர்கள் நாவில் புகுந்து தன்னைப் பாடுவித்துக் கொள்கிறான்
அருளிச் செயல்களைக் கண்ட ரிஷிகள் முனிகள்
விளக்கு ஏற்றி -ப்ரகாசப்படுத்திக் காட்டி அருளுகிறார்)

(தாரக போஷக போக்யமாக –உபாய உபேயமாக அவனை பூர்ணமாக நினைக்க வேண்டுமே -)

இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–93-

பதவுரை

நெஞ்சே–ஓமனமே!
நீண்ட–(முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து
திருமால்–ஸ்ரீய பதியானவனும்
நீண்ட திருமால் –அப்ரமேயமான பெருமை பொருந்திய திருமால் என்னவுமாம்.
கனைத்து உலவு வௌளத்து–கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே
ஒர் பிள்ளை ஆய் –ஒப்பற்ற சிறு குழந்தையாய்
அனைத்து உலகும்–உலகங்களை யெல்லாம்
உள் ஒடுக்கி–திருவயிற்றினுள்ளே அடக்கி
ஆல் மேல்–ஆலந்தளிரின் மேலே
மெள்ள துயின்றானை–மெள்ள சயனித்துக் கொண்டவனுமான பெருமானை
உய்த்து–சரணாக அநுஸந்தித்து
உள்ளத்தே வை,–தியானிக்கக் கடவாய்-உள்ளத்தே வைத்தால் உஜ்ஜீவனம் அடையலாம் என்றுமாம் –
உலகில்–இவ்வுலகில்
நினைத்து–(அப் பெருமானை) அநுஸந்தித்து
ஆர் தெளிவார்–தெளிவு பெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)

(த்வன் நிர்மிதா -உனது சொத்து -இரந்தா கொள்ள வேண்டும் -அதிமானுஷ ஸ்தவம்
ஆழ்வார்கள் இவற்றைப் பாட -அதனால் பக்தி வளர -நீ செய்த செயல்கள் அன்றோ)

நினைத்து உலகிலார் தெளிவார் -அவனை அனுபவித்துத் தம் தாமுக்கு உரியராக வல்லார் யுண்டோ –

நீண்ட திருமால்-அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல்
லோகத்தை எல்லாம் அளக்கைக்கு வளர்ந்து –
அளந்த லோகத்தை ஒரு வயிற்றிலே வைத்து ஒரு பவனாய் இருபத்தொரு ஆலிலையிலே

கனைத்துலவு-வெள்ளத்தோர் பிள்ளையாய்–
சப்தித்துப் பரந்து வளரா நின்றுள்ள வெள்ளத்திலே உளனான பிள்ளையாய்

மெள்ளத் துயின்றானை-உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–
வயிற்றிலே புக்க லோகம் தளராத படிக்கு ஈடாக மெள்ளக் கண் வளர்ந்தவனை —

உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து-
கொடு வருகை யாவது -அவன் புகுரப் புக்கால் விலக்காது ஒழிகை –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-உண்டு அளந்தது ஆழ்வார்கள் பலரும் ஒரே பாசுரத்தில்

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பாலனா யேழுல குண்டு பரிவின்றி,
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,
தாளினை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

———————————————————————–

இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

சர்வ பிரகாரத்தாலும் அபரிச்சேதயனான ஸ்ரீ யபதியாய் -(நீண்ட -அபரிச்சேத்யன் என்றும் உலக அலங்க ஓங்கியதுமாம் )
இப்படி இருந்து வைத்து -சகல லோகங்களையும் திரு வுதரத்திலே ஏக தேசத்திலே அடக்கி வைத்து
ஒரு பவனாய் இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே கோஷித்துக் கொண்டு
கண்ட இடம் எங்கும் தடையற சஞ்சரிக்கிற பிரளயத்தில்
அத்விதீயமான முக்த சிஸூ விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு
வயிற்றிலே புக்க பதார்த்தத்துக்கு ஓர் அலசு வராதபடி மெள்ள கண் வளர்ந்து அருளினவனை –

நமக்கு இவன் அல்லது தஞ்சம் இல்லை என்று
அனுசந்தித்து லோகத்தில் கலங்காமல் அறிய வல்லார் ஒருவரும் இல்லை –
ஆனாலும் நெஞ்சே இப்படி இருக்கிறவனைக் கொடு வந்து உன் ஹிருதயத்திலே வை –
அவன் புகுரப் புக்கால் விலக்காதே கிட்டி அநுஸந்தி -என்றபடி

அன்றிக்கே
நீண்ட திருமால் அனைத்து உலகும் உள்ளொடுக்கி என்றாய் –
லோகத்தை எல்லாம் அளக்கைக்காக வளர்ந்த ஸ்ரீ யபதியாய்
அளந்த லோகத்தைத் திரு வயிற்றிலே வைத்து ஆலின் மேலே மெள்ளத் துயின்றானை என்றுமாம் –

——————————————————————————————————–

இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

பதவுரை

உய்த்து உணர்வு என்னும்—சித்த உபாய -நிஷ்டை ஞானம்- உணர்வு-விவேக வுணர்ச்சி யாகிற
ஒளி கொள் விளக்கு–உஜ்வலமான தீபத்தை
ஏற்றி–ஏற்றி-விஸ்வாசம் முதலில் வேண்டுமே -இந்த விளக்கை ஏற்றிய பின்பு பேறு
அவனை நாடி வைத்து–அவ் வெம்பெருமானைத் தேடிப் பிடித்து
வலைப் படுத்தேன்–ஸ்வாதீனப் படுத்திக் கொண்டேன்
மாயன்–அப் பெருமான்
பொன்றாமை–குறைவின்றி
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
புகுந்து–வந்து சேர்ந்து
மெத்தென–மெதுவாக
நின்றான்–(முதலில்) நின்றான்
இருந்தான்–(பிறகு) வீற்றிருந்தான்,
கிடந்தான்–(அதன் பிறகு) பள்ளி கொண்டருளினான்.

உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி–
உணர்வு ஆகிற –தைலவர்த்திகளால் (எண்ணெய் தீ இத்யாதிகளால் )யுண்டான அழுக்கு இன்றிக்கே-
திணுங்கின தேஜஸ்ஸை -ஒளி விளக்கு ஏற்றி –

உய்த்து – வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் –
கொடு வந்து வைத்து அநு சந்தித்து ஆனுகூல்யம் ஆகிற வலையிலே அகப்பட்டு

(கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு -அவன் வலை
அனுகூல்ய லேசம் -நம் வலை)

மெத்தனவே-நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்-பொன்றாமல் மாயன் புகுந்து —–
விச்சேதம் இன்றிக்கே என்னுடைய நெஞ்சிலே நிற்பது இருப்பது கிடப்பது ஆனான் –

பொன்றாமை -என்றது நான் நசியாமல் -என்னவுமாம்

ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் இன்றிக்கே என்றுமாம் –

——————

இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –

ஞானம் ஆகிற தைலவர்த்திகளால் யுண்டான அழுக்கு இன்றிக்கே செறிந்த ஒளியை யுடைத்தான விளக்கை ஏற்றி
அவனைக் கொண்டு வந்து வைத்து -தத் ஸ்வபாவங்களை ஆராய்ந்து அனுசந்தித்து –
ஆனு கூல்யம் ஆகிற வலையிலே தப்ப ஒண்ணாத படி சேர்த்துக் கொண்டேன் –

அநந்தரம் ஆச்சர்ய பூதனானவன் நான் நசித்துப் போகாத படியாக
என் ஹ்ருதயத்தில் வந்து புகுந்து மெள்ளக் கொண்டு கால் பாவி தரித்து நின்றான் –
புறம்பு போக்கு இல்லை என்று தோற்ற வாசனை பற்றுண்டாய் இருந்தான் –

பின்னை படுத்த படுக்கை கொட்டுப் படாமல் பள்ளி கொண்டு அருளினான்

பொன்றாமை என்று
ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் வாராத படி என்றுமாம் –

(மாயனாக இருப்பதால் புகுந்து கிடந்தான் -புகுந்து கிடந்ததால் மாயனானான் என்றுமாம்)

————————————————————————————————-

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு –
நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——95-

பதவுரை

அந்தி புகுந்து–ஸாயங்காலமானது வந்து சேர்ந்து
இலங்கும் பொழுதத்து–விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய்–நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவவதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம்–நிந்தித்துக் கொண்டிருந்த ஹிரண்யாஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து–பல கூறாக வகிர்ந்து
எங்கும் சிந்த–(ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக
பிளந்த–பிளந்தொழித்த
திருமால்–எம்பெருமானுடைய
திருஅடியே–திருவடிகளையே
என் நெஞ்சமே–எனது மனமே!
வந்தித்து வாழ்த்து–தலையார வணங்கி வாயார வாழ்த்து

(திருமால் திருவடியே-சேஷி ப்ராப்யம் -அறிந்து வணங்கி வாழ்த்த வேண்டுமே)

(சிந்தையினால் இகழ்ந்த -ஹிரண்யன் அன்றோ)

சந்த்யா புகுந்தது என்றும்
அரியுருவாய் சந்த்யா காலத்தில் புகுந்தான் என்றுமாம்

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —
ஹிரண்யன் வரம் கொள்ளாத ஸந்த்யையிலே

புகுந்து இலங்கும் என்றது –
ஸந்தையினுடைய பிரவேசத்தைச் சொல்லுகிறது –

அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —சுகிர்ந்தெங்கும்-சிந்தப் பிளந்த-
ஆஸ்ரித விரோதி யாகையாலே கொன்றது என்ற மாத்திரம் அன்றிக்கே சீற்றத்தின் உரம் இருந்த படி –

திருமால் திருவடியே–
ஆஸ்ரிதர் பக்கல் ஓரத்துக்கு அடி பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –

திருமால் திருவடியே வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——
வந்திகைக்கும் விஷயம் அவளோடு கூடினவன் போலே –

——————————————————————

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு –
நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –

வந்து பிரவேசியா நிற்பதாய் செக்கர் வண்ணத்தால் வந்த ஒளியை யுடைத்தாய் –
அசூரர்க்குப் பலம் வர்த்தித்துச் செல்லக் கடவதான சந்த்யா சமயத்திலே –
அவன் வரத்துக்குள் அடங்காத நர சிம்ம ரூபியாய்க் கொண்டு
நிர் நிபனந்தனமாகத் தன்னையும் ப்ரஹ்லாதனையும் பஹு முகமாக நிந்தித்த
அஸஹ்ய அபசாரத்தை யுடையனான ஹிரண்யாசூரனுடைய வர பலாதிகளால் வளர்ந்த சரீரத்தை –
சீற்றத்தின் மிகுதியால் –
சின்னம் பின்னம் -என்கிறபடியே
பல கூறாக வகிர்ந்து
சர்வ பிரதேசத்திலும் சிதறி விழும்படியாகப் பிளந்து பொகட்ட ஸ்ரீயபதியானவனுடைய திருவடிகளை

என் கருத்திலே நடக்கும் நெஞ்சே -தலையால் வணங்கி வாயார மங்களா சாசனம் பண்ணு –

அந்தித்துப் பொழுதத்து இலங்கும் அரியாய்ப் புகுந்து என்றாய் –
சந்த்யா காலத்திலே ஒளியை யுடைத்தான நரசிம்ஹமமாய் புகுந்து என்றுமாம் –

திருமால் என்று
ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு அடி அவ்ளோட்டைச் சேர்த்தி என்கை –

(அந்தியம் பொழுது அரியுருவாகி அரியை அழித்தவன் அன்றோ)

(உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-)

———————————————————————————————————-

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித் தாமரை மலர் மேல் மங்கை  மணாளன்
அடித் தாமரை யாமலர் ———-96-

பதவுரை

கேழ்த்த அடி–பெருத்த தாளை யுடைய-அழகிய சிவந்த என்றுமாம்
தாமரை மலர் மேல்–தாமரைப் பூவிற் பிறந்த
மங்கை–பெரிய பிராட்டிக்கு
மணாளன்–வல்லபனான எம்பெருமானுடைய
அடி ஆம் தாமரை அலர்–திருவடிகளாகிற தாமரைப் பூக்களை
வானோர்–தேவர்
வாழ்த்திய வாயர் ஆய்–வாயால் வாழ்த்து கின்றவராய்க் கொண்டு
மணி மகுடம்–மணிகளழுத்தின மகுடத்தை
தாழ்த்தி–தாழ விட்டு
வணங்க–வணங்குவதனால்
தழும்பு ஆமே–(அத் திருவடிகள்) தழும்பேறிக் கிடக்கின்றனவே.

கேழ்ந்த-அடி–பெருத்த தாளை யுடைய

தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்-அடித் தாமரை யாமலர் —
திருவடிகள் ஆகிற தாமரைப் பூக்கள்

அழகிய சிவந்த திருக்கைகளால் =கூசிப் பரிமாற வேண்டும் படியான ஸ்ரீ யபதியின் திருவடிகள்

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்-தாழ்த்தி வணங்கத் தழும்பாமே —
வாயாலே வாழ்த்தி மணிகள் அழுத்தின கிரீடத்தை தாழ விட்டு வனக்குப்பதால் தழும்பு ஏறிக் கிடக்கின்றனவே –

வயிறு பிடிக்கிறார்

————————

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்

பெருத்த தாளை யுடைய
தாமரைப் பூவின் மேல் வர்த்திக்கிற நித்ய யவ்வன பிராட்டியாருக்கு போக்தவாய்
அவளும் கூசிப் பரிமாற வேண்டும்படி மிருதுவான திருவடிகள்
ஏத்து கையே தொழிலாகக் கொண்ட நித்ய ஸூரிகள்
வணங்க
ரத்ன பிரசுருமான திரு அபிஷேகம் பொருந்திய திருமுடியின் ஸ்பர்சம் பொறாமல் சிவக்க

வானோர் ப்ரஹ்மாதிகள் என்றுமாம்

கேழ் பெருமைக்கும் நிறத்துக்கும் கொள்ளலாம்

—————————————————————————————————————–

இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான்   ஆமோ இமை ——-97-

பதவுரை

அலர் எடுத்த உத்தியான்–தாமரைப் பூ ஓங்கி யிருக்கப் பெற்ற திருநாபியை யுடையவனும்
எழிலாய மலர் எடுத்த–அழகிய காயம் பூப் போன்ற
மா மேனி–பெரிய திருமேனியை உடையனுமான
மாயன்– எம்பெருமான்
அவர் எடுத்த வண்ணத் தான்–காஞ்சி மலர் போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன
மா மலரான்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனென்ன
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன
என்ற இவர்கட்கு-ஆகிய இத் தேவர்கட்கு
இமை–சற்றேனும்
எண்ணத்தான் ஆமோ–நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய-மலரெடுத்த மா மேனி மாயன் —
அலரைக் காட்டா நின்ற திரு நாபியை யுடையனாய்
எழிலை யுடைத்தாய் இருந்துள்ள மலர் காட்டா நின்ற திரு மேனியை யுடைய ஆச்சர்ய பூதன்

அலரெடுத்த-வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு-எண்ணத்தான்   ஆமோ இமை –
இந்த்ராதிகளுக்கும் அவனை மநோ ரதிக்கத் தான் போமோ –

இமை -விசாரி –
சற்றுப் போது என்றுமாம்

——————————————————————-

இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –

சகல ஜகத் யுதபத்தி காரணமான தாமரைப் பூவை தோற்றுவியா நிற்கிற திரு நாபியை யுடையனாய் –
அழகை யுடைத்தான பூவை பிரகாசிப்பிக்கிற அதி ஸூ குமாரமான கறுத்த திருமேனியை யுடைய
ஆச்சர்ய பூதனான அவன் இடையாட்டத்தில் பூவைத் தெரிவிப்பிக்கிற நல்ல நிறத்தை யுடைய இந்திரன்
ஸ்லாக்யமான திரு நாபீ கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா -தாழ்ந்த ஜடையை யுடையனான ருத்ரன் என்று
பிரசித்தரான இவர்களுக்கு நெஞ்சால் தான் நினைக்கத் தான் போமோ

இது ஒக்குமோ ஒவ்வாதோ என்று விசாரித்துப் பார் –
சற்றுப் போது என்றுமாம்

அலர் எடுத்த உந்தியான் எழிலாய மலர் எடுத்த மா மேனி ஆயன் அங்கு –
அவன் இடையாட்டத்திலே -என்றுமாம் –

——————————————————————————————————–

தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –

(பூதனை தொடக்கமாக கேசி பர்யந்தம் -விரோதி நிரஸனம்
இவன் வடிவம் கண்டு -ஜகத் அஸ்தமிக்கப் போகிறதோ என்று -நாரதர் பயந்தாரே
பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்-மூன்று ஹிமாலயம் -ஆகாசம் -காற்று -மூன்று த்ருஷ்டாந்தங்கள்
இவற்றைக் கீழே தள்ளி -குதிரை -அதிசய யுக்தி -பொங்கும் பரிவால் இப்படிச் சொன்னவாறு
பகவானின் ஸ்வ பாவ யுக்தி –ஸர்வ வியாபகன் நம்மை ரக்ஷிக்கவே கண்ணனாய் திருவவதரித்தவன் என்றவாறும்-தொட்டாலே நிரஸனம் -)

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமஞ் சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

பதவுரை

இமம் சூழ் மலையும்–பனியாலே சூழப்பட்டிருகிற இமய மலையையும்
இரு விசும்பும்–பெரிய ஆகாயத்தையும்
காற்றும்–வாயுவையும்
அமம் சூழ்ந்து–(பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து-இவை கண்ணனைச் சொல்லி -அப்படி விபுவானவன் என்றுமாம்
அற விளங்கி தோன்றும்–மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின
துரகத்தை–குதிரை வடிவு கொண்டு வந்த கேசி யென்னுமசுரனை
தொட்டு–திருக் கையால் பற்றி
வாய் பிளந்தான்–(அவனது) வாயைக் கிழிந்துப் போட்ட பெருமான்
நம்மை–நம்மை
நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான்–யமனைத் தலைவனாகக் கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன்

(நரகம் ஸம்ஸாரம் என்றுமாம் -நம் அம் சூழ் -நம்மால் அழகாக சூழ்ந்த நரகம் என்றுமாம்)

அமம் சூழ்ந்து -பருமன் உயர்த்தி வேகத்தாலும்-கீழ்ப் படுத்தி வியாபித்து –
துரகத்தை-குதிரை வடிவு கொண்டு வந்த கேசி என்னும் அசுரனை –

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்-அமஞ் சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு–
ஹிமவானிலும் வாயுவின் பக்கலிலும் அமைத்துப் பரந்து அற பிரகாசித்துத் தோன்றுகிற
துரகத்தைத் தொட்டு வாய் பிளந்தான்

நமஞ்சூழ்-நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்–துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —-
கேசியை ஆஸ்ரித விரோதி என்று கை தொட்டுப் பிளந்தவன்
நமனாலே சூழ்க்கப் பட்டு உள்ள நரகத்திலே நம்மைக் கிட்டாமல் காக்குமவன் –

————————————————————————–

தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –

பனியால் சூழப் பட்டு இருக்கிற பர்வதமும் –
சர்வத்துக்கும் அவகாச பிரதமான பெரிய ஆகாசமும் -வாயுவும் –
சகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமவனாய் இருந்து வைத்துக்
கண் காண வந்து அவதரித்து –
ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
மிகவும் உஜ்ஜவலமான குணங்களை யுடையனாய்க் கொண்டு பிரகாசிக்குமவனாய் –
பத்தும் பத்தாக நம்மாலே சூழ்த்துக் கொள்ளப் பட்ட சம்சாரம் ஆகிற நரகத்திலே நம்மைக் கிட்டாதபடி ரக்ஷிக்குமவன் –
கேசியாகிற குதிரையைப் பிடித்து வாயைக் கிழித்துப் பொகட்ட கிருஷ்ணன் –

அன்றிக்கே எம வஸ்யத்தை தவிராத படியான சம்சாரத்தில் நம்மைக் கிட்டாத படி காப்பான் என்னவுமாம் –

அற விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் என்று குதிரைக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது மிகவும் பிரகாசித்தது தோற்றுகிற குதிரை வாயைக் கிழித்துப் பொகட்டான் என்று பொருளாகக் கடவது –

எளிவரும் இயல்வினன்*  நிலை வரம்பு இல பல பிறப்பாய்* 
ஒளிவரும் முழு நலம்*  முதல் இல கேடு இல வீடு ஆம்*
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்*  முழுவதும்; இறையோன்* 
அளிவரும் அருளினோடு*  அகத்தனன் புறத்தனன் அமைந்தே.–பல பிறப்பாய் ஒளி விஞ்சி 
—————————————————————————————————–

ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –

(சக்கரத்தான்–ஆபத்து போக்கி அருள
தாள் முதலே -ஸம்பத்து அருள-தாள் முதலே-வேறே ஒன்றை எதிர்பார்க்காமல் -சஹாயாந்தர அஸஹத்வம் –
நங்கட்குச் -அவனே உபாயம் உபேயம் என்று ஸ்வரூபம் உணர்ந்த நமக்கு
சார்வு–ஸூபஸாஸ்ரயம் -பாராயணம்
திண்ணிய கழல் -அவனும் அவளும் விட்டாலும் விடாமல் கைக் கொள்ளும் கழல்கள் –ஆழ்வார்கள் -ஆச்சார்யர்கள்)

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான்  அந் நான்று-குட்டத்துக்
கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

பதவுரை

தொட்ட–ஏந்தின
படை எட்டும்–எட்டு திவ்யாயுதங்களாலும்
தோலாத–தோல்வி யடையாத–அபராஜிதா -தேசத்துக்கே பெயர் உண்டே
வென்றியான்–ஜய சீலனும்
அட்டபுய காத்தான்–கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும்
அந்நான்று–முன்பொரு காலத்தில்
குட்டத்து–நீர்ப் பொய்கையிலே
கோள் முதலை துஞ்ச–மிடுக்குடைய முதலை முடியும்படியாக
குறித்து எறிந்த சக்கரத்தான்–இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியை யுடைய பெருமானது
தாள் முதலே–பாத மூலமே-ஏவ காரம் -வேறே ஒன்றையும் எதிர்பார்க்காத உபாயம் உபேயம் -திண் கழல் சேரே
நங்கட்கு–ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே என்று ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்த -எங்களுக்கு
சார்வு–பரம ப்ராப்யம்-அபாஸ்ரயம் ப்ராப்யமும் பிராப்பகமும்

(சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-)

(ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||–ஸ்தோத்ர ரத்னம் -22- -ஆளவந்தார்)

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்-அட்ட புயகரத்தான்  அந்நான்று–
ஏதேனும் ஒரு ஆயுதத்தைத் தொட்டால்
அவ்வாயுதத்தால் எதிரிகளுக்கு தோலாதே-வெற்றியை யுடையனாய்
திரு அட்ட புயகரத்திலே நின்றவன் –

குட்டத்துக்-கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்-தாள் முதலே நங்கட்குச் சார்வு –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்னும் படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவினவனுடைய திருவடிகளே நமக்கு அபாஸ்ரயம் –

(ஸூ ப்ரவ்ருத்தி ஸூ ப்ரயோஜன நிவ்ருத்தி இல்லாமல்)

(நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளே சரணம்
முதலே -நிரபேஷ உபாயம் -உபேயமுமாம்)

(செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மறுப்பொன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-3-)

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே–44-

——————————————————————–

ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –

எடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும் போரிலே தோலாதே எதிரிகளை மூலமற மாய்த்து –
வெற்றியை யுடையனாய் இருக்கும் ஆண் பிள்ளையாய் –
இந்த வடிவோடும் மிடுக்கோடும் எட்டா நிலத்திலே இருக்கை யன்றிக்கே –
திரு அட்ட புயகரத்திலே சந்நிஹிதனாய் –

ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் ஆபன்னனான அத் தசையிலே மடுவில் முடிக்கும் ஸ்வ பாவமான
முதலையானது உருவழிந்து சிதிலமாம் படி –
அவ் வாபத்திலும் (ஸூ ரக்ஷண ஸ்வாந்வயம் ஆபத்து போனதே )கலங்காத ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே
இலக்குத் தப்பாத படி எறிந்த திரு வாழியை யுடையவனுடைய பாத மூலமே
ப்ராப்ய ருசி பரவசரான எங்களுக்கு பரம ப்ராப்யம் –

அன்றிக்கே ஸ்வ ரக்ஷணத்திலே அசக்தரான எங்களுக்கு
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்கிறபடியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவின சிவந்த திருவடிகளே
சஹாயாந்தர நிரபேஷமான உபாயம் என்னவுமாம் -(ஸஹாய அஸஹத்வம் உண்டே அவனுக்கு )

(மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-9-)

————————————————————————————————————

எம்பெருமான் அபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே
என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

(திருவில் உபக்ரமித்து திருவிலே உப ஸம்ஹாரம்
மிதுனமே உத்தேச்யம்
அவளுக்கு அவன் என்றும் சார்வு
நமக்கு இவளே என்றும் சார்வு)

(எம்பெருமானைப் பற்றுவது சார்வு-ஆழியான் -ரக்ஷிக்கவும் சிஷிக்கவும் எம்பெருமான்
பிராட்டியைப் பற்றுவது என்றுமே சார்வு
அபராதங்களைப் பார்க்காமல் -நித்ய அஞ்ஞான நிக்ரஹ –
ராவணனுக்கும் உபதேசம் -சரணம் என்று வாயாலே கூடச் சொல்லாத ராக்ஷஸிகளையும் ரஷித்த பிராட்டி
ரமஸ்ய கோஷ்ட்டியை லகுவாக்கிய பெருமை உண்டே)

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

பதவுரை

சக்கரத்தான்–திருவாழியைக் கையிலே உடையவனும்
தண் துழாய் தார் வாழ்–குளிர்ந்த திருத் துழாய் மாலை விளங்கப்பெற்ற
வரை மார்பன் தான்–மலை போன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால்
முயங்கும்–ஸம்ச்லேஷிக்கப் படுகின்றவளாய்
கார் ஆர்ந்த வான்–மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே-மின்னல் நிலைத்து இருக்காதே -நித்ய அநபாயினி ஆகவே ஆர்ந்த விசேஷணம்
அமரும்–நிலைத்து நிற்கக் கூடியதான
மின்–மின்னல் போல
இமைக்கும்–விளங்குகின்றவளாய்
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப் போன்ற
நெடு–நீண்ட
கண்–திருக் கண்களை யுடையளாய்-அஸி தேக்ஷிணை
தேன் அமரும் பூமேல்–தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான
திரு–பெரிய பிராட்டியார்
நமக்கு என்றும் சார்வு–நமக்கு எப்போதும் சரணம்.

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்–தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் —
ஆபத்துக்கு சர்வேஸ்வரன் –
ஆபத்து உள்ள போதும் எற்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –

ரக்ஷணத்துக்கு உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய் –
போக உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய்
போக உபகரணமான திருத் துழாயை யுடையவன் தானே -ஸம்ஸ்லேஷியா நின்றுள்ளவளான —
இதுக்கு உவமானம் மேலே –

காரார்ந்த-வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு —
மேகங்கள் செறிந்து இருந்துள்ள ஆகாசத்தில் அமர்ந்த மின்னைக் காட்டா நின்று உள்ளாளுமாய்-
ஆஸ்ரித ரக்ஷணத்திலே குளிர நோக்கா நின்ற திருக் கண்களை யுடையாளாய் –
தேன் செறிந்த பூவின் மேலே இருக்கும் திரு சார்வு நமக்கு என்றும் –
பெரிய பிராட்டியார் நமக்கு எல்லா காலத்துக்கும் அபாஸ்ரயம் –

(அவனை அழகாலே திருத்தும் நம்மையோ அருளாலே திருத்தும் அஸி தேக்ஷிணை)

——————————————————————-

எம்பெருமான் அபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே
என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

திரு வாழியைத் திருக் கையிலே யுடையனாய்
போக உபகரணமாய்
சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த திருத் துழாய் மலையானது செவ்வி பெற்றுத் தழைத்துச்
செல்லா நிற்கிற மலை போலே உறைத்து பரந்த திரு மார்வை யுடையனான
தான் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு அநவரதம் சம்ஸ்லேஷிக்கும் படி இருக்குமவளாய் –
மேகங்கள் நிறைந்து இருந்துள்ள ஆகாசத்தில் பொருந்தின மின் போலே
கறுத்த திரு நிறத்துக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பாளாய் –
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்குகிற உதாரமான தாமரைப் பூ போலே இருக்கிற
அழகான நீண்ட திருக் கண்களை யுடையாளாய்
தேன் நிறைந்து இருந்துள்ள பூவின் மேலே எழுந்து அருளி இருக்கிற பெரிய பிராட்டியார் தன்னை ஒழிய
வேறு புகல் இன்றியே இருக்கிற நமக்கு
ஆபத்து உள்ள போதோடு
இல்லாத போதோடு வாசியற
சர்வ காலத்திலும் அபாஸ்ரயம் –

(ஆழியான்-விரோதி நிரஸனம் –திருத் துழாய் போக்யம் ஸ்ரீ யபதித்தவம் –ஸர்வேஸ்வரத்வ மூன்று அடையாளங்களையும் பாசுரம் காட்டுமே)

(பத்ம பிரிய பத்மாலய பத்ம வாஸிநி பத்ம லோசநே)

——————-

பாலேய் தமிழர்” (1.5.11)
இன்கவி பாடும் பரமகவிகள்” (7.9.6)
“செந்தமிழ் பாடுவார்”
“பலரடியார் முன்பருளிய” (7.10.5)
“செஞ்சொற் கவிகாள்” (10.7.1) –

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நல் தமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த –
பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும்
பெயரிவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து.

முதலாழ்வார்கள் பிரணவம் போல – எப்பொழுதும் தொடக்கமாகிற படியால்.
முதலாழ்வார்களே திராவிட வேதமாம் திவ்ய பிரபந்தத்திற்கு உயர்ந்த திராவிட மொழியில் (தமிழ்) அஸ்திவாரம்/ அடித்தளம் இட்டனர்.

————

திரு மயிலை கேஶவப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள கிணற்றில் பேயாழ்வார் அவதரித்தார்.
இவரின் மறு பெயர்கள் மஹதாஹ்வயர் மற்றும் மயிலாபுராதிபர் ஆகியவை ஆகும்.

த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம்
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆஸ்ரயே–இவரது தனியன்:

திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே
மருக் கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல் தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவே யிடை கழியில் நின்ற செல்வன் வாழியே
நேமி சங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திரு மழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை யிப் பெரு நிலத்தில் வாழியே–இவரது வாழி திருநாமம்:

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-81-90—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

(கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்,
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான்,-சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை,
என் நினைந்து போக்குவர் இப் போது.– இப்போது சம்சாரிகளைப் பார்த்து ஆழ்வார்கள்
நினைக்க விரகு கேட்டால் -ஆழ்வார்கள் மறக்க விரகு இல்லையே என்பார்களே-

மறக்கவே முடியாதே –மறக்க விரகு குருகை காவல் அப்பன் அருளிய வார்த்தை –

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –-இது அன்றோ எத்திறம் என்னப் பண்ணும் )

கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே
நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று கொண்டாடினார் –
விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு –—–81-

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!,-எனக்கு வசப்பட்ட நெஞ்சமே
நெஞ்சால் நினைப்பு அரியன் எலும்–(எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை
வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து)
நிலைப் பெற்று–காலூன்றி நின்று
பேசாய்–அவனைப் பேசப் பார்
நினைக்குங் கால்–நாம் ஒருகால் நினைத்தாலும்
நெஞ்சத்து–நெஞ்சு தன்னிலே
பேராது நிற்கும்-விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கின்ற
பெருமானை–எம்பெருமானை
உணர்வு–நமது நெஞ்சானது
ஓராது நிற்பது என்கொலோ–அநுஸந்தியாமல் வாளா விருப்பது ஏனோ?

நெஞ்சால் நினைப்பரியனேலும் —
நெஞ்சமே உன்னால் நினைக்கப் போகாதது ஆகிலும் –

நிலைப் பெற்றேன்- நெஞ்சமே பேசாய்–
நிலை பெற்று என் நெஞ்சமே பேசாய் –
ஐஸ்வர்யம் கன்று பிற்காலியாதே அனுபவியாய் –

நினைக்கும் கால் -நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை –
ஒரு கால் நினைக்கில் நாக்குண்டா நா எழா என்ற நெஞ்சு விட்டுப் போக அறியாத சர்வேஸ்வரனை –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் -என்கிறபடியே

(நாக்குண்டா நா எழா-நெஞ்சுக்கு நாக்கு உண்டோ இருந்தால் பேசாமல் இருப்பதோ)

என் கொலோ- ஓராது நிற்பது உணர்வு —–
அவனை நினையாதே மணலை முக்கப் பார்க்கிறதோ
அவனை நினையாதே தான் உண்டாம் படி எங்கனே –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு —

(கண்ணுள்ளே நிற்கும்*  காதன்மையால் தொழில்,* 
எண்ணிலும் வரும்*  என் இனி வேண்டுவம்?*
மண்ணும் நீரும்*  எரியும் நல் வாயுவும்* 
விண்ணும் ஆய் விரியும்*  எம் பிரானையே.-1-10-)
(எண்ணிலும்-நினைக்க -என்பது அல்ல ஓன்று இரண்டு என்று எண்ணி 26 சொல்லவே வருவான் அன்றோ
பேர் உந்தி எண் 26 வந்ததா சொன்னாலும் வந்து நிற்கும் பித்தன் அன்றோ)
சந்த மேதம் பவதி -அஸன்ன- அவன் உண்டு என்று அறிந்தால் உளன் ஆவான் -இல்லை என்றால் இவனும் இல்லை யாவான்
பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு —(முதல் திருவந்தாதி-67- ஞானம் த்வாரமே மனஸ் நெஞ்சு தானே -)

—————————————————————————-

(சம்சாரிகள் நெஞ்சு போலே அந்ய பரராய் இருக்கச் செய்தே
என் நெஞ்சு ப்ரவணராய் என்று கீழ் கொண்டாடினவாறே
விஷய வை லக்ஷண்யம் பார்த்த வாறே இதில் முதல் அடி இட்டதாகவே இல்லை
அவன் துர் ஜேயம் -என்றாவது அநு சந்திக்கப் பார்(அறிவுக்கு அப்பால் பட்டவன் என்றாவது புலம்பி அனுசந்திக்கலாமே )

(மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2– -கட்டுப்படாதவன்-அளவிட முடியாதவன்
திரு உள்ளத்தில் -இப்படி இருக்க நினையாமல் இருப்பது என் என்று தனக்கே அனுசந்தானம்)

பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான மனஸ்ஸாலே பரிச்சேதித்து நினைக்க ஒண்ணாத
பெருமையை யுடையனாய் இருந்தானேயாகிலும்
அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே
ஆஸ்ரித ஸூலபன் என்று அனுசந்தித்து காலூன்றி தரித்து நின்று
எனக்கு பவ்யமான நெஞ்சே –
அவனைப் பேசப் பாராய் –

இப்படிச் சொன்ன இடத்திலும் திரு உள்ளம் மெத்தென்று (ஈடுபடாமல் )இருந்தவாறே-
தனக்குப் பாங்கான சமயத்திலே இவன் ஒரு கால் நினைத்துக் கை வாங்கினால்
பின்னை எப்போதும் நெஞ்சு விட்டுப் போக மாட்டாமே நித்ய வாசம் பண்ணும் சர்வேஸ்வரனை
அறிவுக்கு வாய்த்தலையான மனஸ்ஸானது அநுஸந்தியாதே இருக்கிறது என்னோ

வேறே சில துராராத தேவதைகளை பற்ற இருக்கிறதோ –
சப்தாதி விஷயங்களை பற்ற இருக்கிறதோ

இந்த மனஸ் ஸூ எத்தை நினைத்து அவனை நினையாது இருக்கிறது -என்று
ஸ்வ கதமாக அனுசந்தித்தார் யாய்த்து –

(துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 
எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)

ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –

தான் ஏற நாள் பார்த்து இருக்கும் )

————————————————————————————————————–

(மனசை நொந்து கொள்வது எதனால்
நித்ய ஸூரிகளும் அன்றோ முழுவதுமாக உணர முடியாமல் உள்ளார்கள்
நினைக்காமல் விடவும் முடியாது
அவனே உள்ளே வந்து புகுந்தாலும் வஸ்து ஸ்வ பாவம் அறிவுக்கு அப்பால் பட்டே இருக்குமே
நினைந்து முழுவதும் அறிய முடியாது என்கிறார்)

(இனியவன்-அடுத்த பாசுரத்தில் மூன்று தடவை இப்பத பிரயோகம் உண்டே
மிக்க இனியவனாய் இருக்க இனி அவனைக் கிட்ட விரகு உண்டோ
மிக்க இனியவனாய் இருக்க இனி அவனை விடவும் விரகு உண்டோ)

(நம சகண்ட-அகண்ட – -பிரித்து எனக்கு நான் அல்லன் -நமஸ்காரம் போல் இங்கும்-இனியவன்-இனி யவன்)

இம் மனசை இன்னாதாகிறது என் –
ஒருவருக்கும் ஒரு வகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய்
நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு
இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத்
தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

பதவுரை

உணரில்–(அப்பெருமானை நாமாக) அறியப் பார்த்தாலும்
உணர்வு அரியன்–(அவன்) அறியக் கூடாதவன்
உள்ளம் புகுந்து புணரிலும்–(அவன் தானே)நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும்
உண்மை காண்பு அரியன்–உள்ளபடி அறியக் கூடாதவன்-வஸ்து ஸ்வ பாவம் தன்மையே அறிவுக்கு அரியனாய் இருக்கை அன்றோ
இனி–இப்படியான பின்பு
இணர் அணைய–பூங்கொத்துகள் தாழும்படியாக
கொங்கு–தேனிலே
வண்டு–வண்டுகள்
அணைந்து–வந்து கிட்டி (மதுவைப் பருகி)
அறையும்–ரீங்காரம் செய்யப் பெற்ற
தண்–குளிர்ந்த
துழாய்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை–அப் பெருமானை-இது அன்றோ அசாதாரண சிஹ்னம் ஸர்வேஸ்வரனுக்கு
எங்கு–எவ்விடத்தில்
அணைந்து–கிட்டி
காண்டும்–காணக் கடவோம்.

உணரில் உணர்வரியன் —
தன்னாலும் அறியப் போகாது –
இவனால் அறியப் போகாது –
தனக்கும் தன் தன்மை அறிவரியானை-(8-4-6)
ஸ்வ யத்னத்தால் காண்பார்க்குக் காணப் போகாது

உள்ளம் புகுந்து-புணரிலும் காண்பரியன் உண்மை –
தானே வந்து ஹிருதயத்திலே புணர்ந்தானே யாகிலும் அவனுடைய உண்மை அறியப் போகாது

இணரணையக்-கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை-எங்கணைந்து காண்டும் இனி —
காண அரியன் என்று கை வாங்கப் போகாது என்கிறது –
பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக -மதுவைப் பானம் பண்ணின
வண்டுகள் சப்தியா நின்ற திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை
எங்கே கிட்டிக் காண்போம் இனி –

எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத் தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே–5-2-1-

(இவ்வளவு பெருமை உள்ளவர் வந்தார் என்று மயங்கவே முடியும்
பிரசாத பரமவ் நாத மம கேஹம் உபாகதவ்- என்று மயங்கலாம்-எத்திறம் -என்னப் பண்ணுமே
விதுரர் மயங்கி வாழைப்பழம் தோல் கொடுத்தது போல் )

————————————————————————–

இம் மனசை இன்னாதாகிறது என் –
ஒருவருக்கும் ஒரு வகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய்
நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு
இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத்
தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –

யாரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தால் அறியப் பார்க்கும் அளவில் அறிவரியனாய் இருப்பான் ஒருவன்
இவ் வருமை தீர அவன் தானே வந்து ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்தானே யாகிலும் இவ்வளவு என்று
பரிச்சேதித்துக் காண்கைக்கு அரியனாய் இருப்பான் ஒருவன் –

இது பரமார்த்தம் -இப் படியான பின்பு
பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக தேனில் வண்டுகள் வந்து கிட்டி
அத்தை கழுத்தே கட்டளையாகப் பருகிச் செருக்கி
அதுக்கு போக்கு விட்டு சப்தியா நின்றுள்ள குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனை
எங்கே கிட்டுக் காணக் கடவோம்

காண்பரியன் உண்மை -என்றான போது
ஒருவருக்கும் இவ்வளவு என்று அளவிட்டுக் காண அரிதான
வைலக்ஷண்யத்தை யுடையவன் என்று பொருளாகக் கடவது –

இணர் -பூங்கொத்து-

(திருத்துழாய் அணிந்ததால் கோமான் -சர்வேஸ்வரத்வ ஸூ சகம் -அவனுக்கே அசாதாரணம் என்றவாறு)

——————————————————————————————————–

(மூன்று இனியவன் -இனி அவன் இதில்
கிடைத்தவனை அனுபவிக்கலாம்
முழுவதும் அறிய வேண்டியது இல்லையே
விட்டுடவும் முடியாது
உன்னால் கிட்டு ஆரம்பிக்கவும் முடியாது
அவனே வந்த மஹா பாக்யம் கிட்டிய பின் அனுபவிப்பதில் என்ன குறை)

(மகா பலி போல் ஈஸ்வரோஹம் என்று இருந்தாலும் நாம் அறியாத படி உளன்
அவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்தவன் அன்று
இனி உள்ளத்தில் இருக்க அனுபவிக்கலாம்
ஸம்பந்தம் -பந்தம் கிட்டும் -பிரகிருதி போல் -தேஹ சம்பந்தம்
அவன் ஸம்பந்தம் உணர்ந்து இனிமையில் மூழ்கலாமே)

இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் –
அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம்
என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

பதவுரை

இனி–இப்போது
அவன்–‘அந்த ஸர்வேச்வரன்
மாயன்–மாயக்காரன்‘-ஆச்சர்ய பூதன்
என–என்று
உரைப்பர் ஏலும்–சொல்லுவார்களே யாகிலும்,
இனி–இப்போது
அவன்–அப்பெருமான்
காண்பு அரியன் ஏலும்–கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்
கள்ளத்தால்–க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)
மண் கொண்டு–பூமி தானம் வாங்கி
விண் கடந்த பை கழலான் அவன்–ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்-பை -பரந்த
இனி–இப்போது
உள்ளத்தின் உள்ளே உள்ள–எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான்
(இந்த பரம லாபமே போது மென்கை)

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்–
வர்த்தமான தசையில் -பிரக்ருதியில் சம்பந்தித்து
மம மாயா துரத்யயா–(7-14)என்னும் படி காண அரியன் ஆகிலும்(பகவத் ஸ்வரூப திரோதானம் தானே பிரகிருதி )

இனியவன் காண்பரியனேலும் -இனியவன்-கள்ளத்தால் மண் கொண்டு
விண் கடந்த பைங்கழலான்-உள்ளத்தின் உள்ளே உளன் —
நெஞ்சுக்கு இனியனுமாய்த்
தன்னுடைமையை மஹா பலி பக்கலிலே வஞ்சித்தானாய்க் கொண்டு
அளந்தவன் ஹிருதயத்திலே நின்று மறக்க ஒட்டான்–

தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

——————————————————————

இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் –
அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம்
என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

பகவத் ஸுலப்யத்தின் ஏற்றம் அறியாத வாய் கரையர் ஆனவர்கள்
இப்போது அந்த சர்வேஸ்வரன் ஒருவராலும் அறிய அரிய ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்கள் யாகிலும் –
இப்போது அவன் ஒருவராலும் கண்டு அனுபவிக்கைக்கு அரியனாய் இருந்தானே யாகிலும் –
ஈஸ்வரன் என்று தெரியாதபடி க்ருத்ரித்மத்தாலே
மஹா பலி பக்கலிலே பூமியை நீர்ஏற்று வாங்குவாரைப் போலே அபஹரித்துக் கொண்டு
ஆகாசாதிகளான லோகங்களை அநாயாசேன அளந்து கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அவன் –

இப்போது பட்டது பட -என் ஹிருதயத்தினுள்ளே ஸ்தாலாந்தரம் அறியாத படி சந்நிஹிதனாய் இரா நின்றான் –
இவ்வம்சத்தை (இந்த அம்சத்தை )ஒருவராலும் இல்லை செய்ய ஒண்ணாது இறே -என்கை –

(பொருந்தாதவற்றைப் பொருந்த விடும் -அழகியான தானே அரி யுருவம் தானே )

(வாய் கரையர் ஆனவர்கள்-கடலை கடல் கரையில் நின்று பார்ப்பது போல் -பரத்வம் மட்டும் காணும் ரிஷிகள்
ஸுலப்யம் காணும் ஆழ்வார்கள் தானே ஆழ்ந்து கண்டு அனுபவித்து
அது வழிந்து அருளிச் செயல்கள் அருளினார்கள்
அந்த ஸுலப்யம் பயன் படுத்த நாம் அறிய வேண்டுமே)

இனி -என்று -இப்போது -என்றபடி –
அன்றிக்கே
இனியவன் என்று ஒரே சொல்லாய்
அனுசந்திப்பார்க்கு நிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –

மாயன் -என்றது
மம மாயா துரத்யயா -என்கிறபடியே
தன்னுடையதான ப்ரக்ருதியாலே பந்தித்து இவர்களுக்கு காண அரியனாய் இருக்குமவன் -என்றுமாம் –

பைங்கழலான் -என்று அழகிய திருவடிகளை யுடையவன் என்றுமாம் –

(விரிந்து பரந்த திருவடிகள் கீழே பார்த்தோம்)

(அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-)

———————————————————————————————————–

வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

பதவுரை

நால் மறையின்–நான்கு வேதங்களினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளாக
உளனாயவனை–இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து–(ஜ்ஞாந யோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக–நெஞ்சிலே பொருந்தி யிருப்பவனாக
உணர்வர் ஏலும்–(சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும்,
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப் போன்ற
நெடு கண்–நீண்ட தீருக் கண்களை யுடைய
மாயவன்–ஆச்சர்ய பூதனாக
உளனாமவனை–இருக்கின்ற அப்பெருமானை
கண்டார் யாவரே–கண்டு அநுபவிக்கப் பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை)
கவி உகப்பர்–தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக் கொண்டு போது போக்குவர்களத்தனை.-நா படைத்த பயன் பெற்று சத்தை பெறுவார்கள்

உளனாய நான் மறையினுள் பொருளை —
நிர் தோஷ பிராமண சித்தன் ஆகையால் தான் உளனாய் –
வேதத்தாலே பிரதிபாதிக்கப் பட்டவனை(உளன் -வஸ்து ஸத் பாவம் )

உள்ளத்து-உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்–
கர்ம யோகத்தாலே ஞான யோகம் கை வந்து -ஞான யோகத்தாலே காண ஆசைப் பட்டாரே யாகிலும்

உளனாய-வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே கண்டார் கவி ———–
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்று
ஸ்ருதி ப்ரஸித்தமான கண் அழகை யுடைய சர்வேஸ்வரனை ஆர் காண வல்லார் –

(ஏக தேசம் கண்ணின் அழகையே அறியாமல் இருக்க ஸ்வரூப ரூப குண விபூதியை முழுவதுமாக அறிந்து இருப்பார் யாரும் இல்லை)

உகப்பார் கவி –
பின்னைக் காணும் படி எங்கனே என்னில்
அவனுடைய ஸ்தோத்ரத்தை உகக்கும் அத்தனை –

—————————————————————————

வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –

ருக்காதி பேதத்தாலே நாலு வகைப்பட்ட வேதத்தில் பூர்வ பாக ஸித்தமான கர்மாதிகள் போல் அன்றிக்கே
உபநிஷத் பாக ஸித்தமான ரஹஸ்யார்த்த பூதனாய்க் கொண்டு
உளனாய் இருக்கிறவனை –

கர்ம யோக ஸித்தமான ஞான யோகத்தாலே யதாவாக ஆராய்ந்து
ஹ்ருதயத்தில் சந்நிஹிதனாகப் பரிச்சேதித்து அறிந்தார்களே யாகிலும்

(காண ஆசைப்படுவபவர்கள் பெரியவாச்சான்பிள்ளை -இங்கு அறிந்தவர்களே ஆகிலும்)

யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்கிறபடியே
அழகிய தாமரைப் பூ போலே நீண்ட திருக் கண்களை யுடைய
ஆச்சர்ய பூதனாய்க் கொண்டு உளனானவனை யார் தான் கண்டு அனுபவிக்கப் பெற்றார்

கண்டாராகச் சொல்லுகிறவர்களும் இவ்விஷயத்தில் கிஞ்சித் கரித்தோமாக வேணும் என்னும் ஆசையினால்
கவியை உகந்தார்கள் அத்தனை அல்லது உள்ளபடி காணப் பெற்றார்களோ என்று கருத்து –

(பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்று சொல்லும் படி அன்றோ)

—————————————————————————————————————–

ஒருத்தரால் அறியப் போகாதாகில் –
வாழ்த்துவர் பலராக என்னும் படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினாலும்
அறியவும்
ஏத்தவும் போமோ -என்னில்
ஒண்ணாது என்கிறார் –

நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே
பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும்
அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

(யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-)

(குண ஏக தேசம் கூட ப்ரஹ்மாதிகளுமே ஒரு முகமாக பேசினாலும் சொல்லவே முடியாதே -ஸ்ரீ வராஹ புராணம்)

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

பதவுரை

கவியினார்–தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க் கொண்டு
கை புனைந்து–அஜ்ஞலி பண்ணி
கண்–தமது கண்கள்
ஆர் கழல் போய்–(அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சேரப் பெற்று
செவியின் ஆர் கேள்வியர் ஆய்–காது நிறைந்த கேள்விகளை யுடையராய்க் கொண்டு
சேர்ந்தார்–வந்து பணிந்தவர்களான
புவியினார்–பூமியிலுள்ளா ரெல்லாரும்
போற்றி உரைக்க–(ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும்,
பின்னைக்காய் ஏறு உயிரை அட்டான் எழில் பொலியுமே–நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த
பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ?

கவியினார் கை புனைந்து-
ஸ்தோத்ரத்தால் அபிமான ஸூன்யராய்த் தொழுது –

கண்ணார் கழல் போய்ச்-
கண் விலக்ஷணமான திருவடிகளை அடைந்து –

செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் -புவியினார்–
செவி நிறைந்த கேள்வியை யுடையராய்ச் சேர்ந்தாரான பூமியில் உள்ளார் எல்லாம் –

போற்றி யுரைக்கப் பொலியுமே —–
எல்லாரும் கூடிப் போற்றி உரையா நின்றால் அங்குத்தைக்கு ஏதேனும் அதிசயத்தைப் பண்ணப் போமோ –

பின்னைக்காக-ஏற்று யிரை யட்டான் எழில்–
நப் பின்னை பிராட்டி கலவிக்கு பிரதிபந்தகமான வ்ருஷபங்களை அடர்த்த
ஒரு செயலையும்
நடுவு அழகையும்
முடிவாகச் சொல்லப் போமோ –

——————————————————————-

நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே
பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும்
அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

நப்பின்னைப் பிராட்டிக்கு பர தந்திரனாய்க் கொண்டு
தத் சம்ஸ்லேஷ பிரதிபந்தகமான ரிஷபங்களுடைய ப்ராணன்களை முடித்து
பொகட்டவனுடைய மணக் கோலமும் –
ஏறு தழுவின ஒரு செயலும்
வாயாலே சொன்ன கவியோடே கூடிக் கொண்டு –
கையாலே அஞ்சலியைப் பண்ணி –
கண்களானவை அழகு நிறைந்துள்ள திருவடிகளிலே சென்று கிட்டி -(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் விடாத்திய திண்மை )
செவியில் நிறையும்படியான அவன் கல்யாண குணங்களில் கேள்வியை யுடைய ராய்க் கொண்டு
கிட்டினாரான பூமியில் உள்ளார் எல்லாம் மங்கள வாசகமான சப்தங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி
அவர்கள் புகழப் புகழ மேன் மேல் என சம்ருத்தமாம் அத்தனை போக்கிச்
சிறிது வரையிட்டுக் காட்டுமோ-
இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ என்றுமாம் –

—————————————————————————————————————–

ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது –
உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –

அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும்
அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு
மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்

(மேகத்தை சிக்ஷித்து-எழில் கொண்ட ஒவ்வொன்றிலும் அன்வயம் -நீல தோயதா மத்யஸ்தா -இத்யாதி போல்)

கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 
திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் 

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார் வானம் காட்டும் கலந்து ——-86-

பதவுரை

எழில் கொண்ட–அழகை யுடைத்தாய்
நீர்–நீர் நிறைந்ததான
மேகம் தான்–மேகமானது
எழில் கொண்ட மின் கொடி எடுத்து–அழகிய மின்னற்கொடி படரப் பெற்று
வேகம் தொழில் கொண்டு–வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப் பெற்ற
முழங்கி தோன்றும்–கர்ஜித்துக் கொண்டு விளங்குதற்கிடமான
கார் வானம்–கார் காலத்து ஆகாசமானது
அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும்–அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திரு நிறத்தை அநுகரித்திரா நின்றது.

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து —
எழிலை யுடைத்தான மின்னைக் கொடியாக எடுத்து

(மின்னலைத் தன்னுள் கொண்டு என்றும் கொடியாகக் கொண்டு என்றும்)

வேகத்-தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் –
வேகத்தை யுடைத்தான தொழிலைக் கொண்டு தானே முழங்கித் தோன்றா நின்ற கார் வானம்

எழில் கொண்ட-நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக் கார்வானம் காட்டும் கலந்து —–
ஆகளமாக நீரைப் பானம் பண்ணின காள மேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரன்
உடைய நிறம் போலே –கார் காலத்திலே மேகமானது கலந்து காட்டும் –

——————————————————————————

அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும்
அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு
மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்

(கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரை கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாம் காள் !
காட்டேன் மின் நும்  உரு என்  உயிர்க்கு  அது காலனே –9-5-7-ஸ்மாரக பதார்த்தம்)

அழகை யுடைத்தாய் கொண்டு மின்னை த்வஜமாகத் தரித்து
வேகமாகிற வியாபாரத்தை உடைத்தாய்க் கொண்டு தான்
மிகவும் கோஷித்துக் கொண்டு தோற்றுகிற கார் காலத்திலே மேகமானது
கண் மாற வைக்க ஒண்ணாத அழகை யுடைத்தாய்
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின காளமேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரனுடைய
நிறம் போலே சேர்ந்து பிரகாசியா நிற்கும்

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து -என்று பாடமான போது
அழகை யுடைத்தாய் இருக்கிற கார் வானம் என்று மேகத்துக்கு விசேஷணமாகக் கடவது –

(உடுத்து -தரித்து என்றும் பாட பேதம்)

——————————————————————————————————

பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனி மலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின் வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

பதவுரை

மணி கலந்து–ஸ்ரீகௌஸ்துப மணியோடு கூடி
இமைக்கும்–விளங்கா நின்ற
கண்ணா–கண்ண பிரானே!
மரதகம்–மரதக ரத்னமானது
மலர்ந்து–ஒளிப் பரப்பை யுடைத்தாய்க் கொண்டு
நின் மேனி காட்டும்–உனது திருமேனியை ஒத்திரா நின்றது,
நலம் திகழும்–அழகாக விளங்குகின்ற
கொந்தின் வாய்–கொத்துகளிலே
வண்டு அறையும்–வண்டுகள் ரீங்காரம் செய்யப் பெற்ற
தண் துழாய்–திருத் துழாய் மாலை யணிந்த
கோமானை–ஸர்வேஸ்வரனாகிய உன்னை
அந்தி வான் அது காட்டும்–ஸந்தியா காலத்து ஆகாசமானது ஒத்திரா நின்றது.

கலந்து மணியிமைக்கும் கண்ணா–நின்-மேனி மலர்ந்து மரகதமே காட்டும் —
ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற
உன்னுடைய திரு மேனியை –பிரகாசியா நின்ற ஸ்ரமஹரமான மரகதமே காட்டா நின்றது –

நலந்திகழும்-கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை-அந்தி வான் காட்டுமது —
அழகு நிகழா நின்ற கொத்திலே வண்டு அறையா நின்ற திருத் துழாயை யுடைய
சர்வேஸ்வரனை சந்த்யா ராகத்தாலே சிவந்த மேகம் காட்டா நின்றது –

————————————————————————-

அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

ஆஸ்ரித ஸூலபனானவனே-ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற
உன்னுடைய திருமேனியை -ஸ்ரமஹரமான மரகத ரத்னமானது விஸ்திருதமான பிரபையை யுடைத்தாய் கொண்டு
ஸ்பஷ்டமாக பிரகாசிப்பியா நின்றது

அழகு விளங்கா நின்றுள்ள கொத்துக்களிலே படிந்து மது பானம் பண்ணின வண்டுகள் சப்தியா நின்றுள்ள
குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனான
உன்னை சந்த்யா ராகத்தை யுடைத்தான அந்த ஆகாசமானது பிரகாசிப்பியா நின்றது

திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்தி வான் காட்டும் என்றபடி –

அது போல் காட்டும் என்னவுமாம் –

—————————————————————————————————————

உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் –

இதர விஷயங்களில் உள் மனம் புற மானங்களை ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ ஸமாஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

பதவுரை

அது நன்று இது தீது என்று ஐயம் படாதே–‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்
மது நின்ற தன் துழாய் மார்வன்–தேன் நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய
பொது நின்ற–ஸர்வ ஜந ஸாதாரணமான
பொன் அம் கழலே–விரும்பத் தக்க அழகிய திருவடிகளையே
தொழுமின்–தொழுங்கோள், (அப்படி தொழுதால்)
முன்னம்–முந்துறவே
முழு வினைகள்–ஸமஸ்த பாபங்களும்
முடிந்து–உரு மாய்ந்து
கழலும்–விட்டு நீங்கும்.

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே–
பகவத் ப்ராவண்யம் நன்று விஷய ப்ராவண்யம் பொல்லாது என்று சம்சயப் படாதே

மது நின்ற தண்  துழாய் மார்வன்–பொது நின்ற-பொன்னங்கழலே தொழுமின் –
சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாயை யுடையவனுடைய
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்

முழு வினைகள்-முன்னம் கழலும் முடிந்து ——
நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும் –

——————————————————————————-

இதர விஷயங்களில் உள் மனம் புற மானங்களை ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ ஸமாஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

சாஸ்திர ஸித்தமான பகவத் விஷயம் நல்லது –
ப்ரத்யக்ஷ ஸித்தமான இதர விஷயங்கள் சாலப் பொல்லாதது -என்னும்
இவ் வர்த்தத்தில் சம்சயப்படாதே —

ஐஸ்வர்ய பிரகாசமாய் தேன் நிறைந்து இருக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமான
திரு மார்வை யுடையவனுடைய
சர்வ ஆஸ்ரித சாதாரணமாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் இருந்துள்ள திருவடியை ஆஸ்ரயியுங்கோள்

ஆஸ்ரயண விரோதிகளான ஸமஸ்த பாபங்களும் வியாக்த்யந்தரங்களில் கார்யகரம் ஆகமாட்டாத படி நசித்து
தொழுவதாக ஒருப்பட்ட அளவிலே விட்டு நீங்கும் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே என்று
அனுபூதமான விஷயம் நல்லது இப்போது அனுபவிக்கிற விஷயம் பொல்லாது என்று
இதர விஷயங்களில் உள்மானம் புறமானங்களைப் பார்த்து சம்சயியாதே என்னவுமாம் –

(தேவா நாம்-தானவானாம் -ஜிதந்தா ஸ்தோத்ரம்)

(பகவத் விஷயம் தான் நன்று உலக விஷயம் தீது என்று இருப்பதில் ஐயம் இல்லாமல் உறுதியாக விச்வாஸம் கொள்ள வேண்டும் என்கிறார் -)

(சர்வ லோக சரண்யாயா ராகவாயா மஹாத்மனே -எளிமை மேன்மை சேர்ந்த-ராவணனும் பற்றும்படி
பொது நின்ற பொன் அம் கழல்
சாமான்யம் அதி தெய்வதம்
உறுதியாக பற்ற வேண்டுமே)

—————————————————————————————————

திருமலையிலே குறவரோடு -திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கிறபடி –

இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –

(ப்ரத்யக்ஷ தெய்வம் திருமலை அப்பன் இருக்க விஸ்வஸிக்க குறை இல்லையே)

(ஆச்சார்யர்கள் திருக் கோயில் பிரதக்ஷணம் மெள்ள மெள்ள அனைத்தையும் அனுபவித்து செல்வார்களே)

முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

பதவுரை

முடிந்த பொழுதில் குற வாணர்–மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள்
ஏனம் படிந்து உழு சால்–காட்டுப் பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர் பறிந்து விழும்படி) படிந்து உழுத சால்களிலே
பை தினைகள் வித்த–புதிய தினை விதைகளை விதைக்க
தடிந்து–அறுத்துப் போட்ட பின்பும்
எழுந்த–(நில வளத்தினால்) ஓங்கி வளர்ந்த
வேய்ங்கழை–மூங்கில் தடிகளானவை
போய்–மேலே சென்று
விண் திறக்கும்–ஆகாசத்தை யளாவப் பெற்ற
வேங்கடம்–திருவேங்கடம்
மேல் ஒரு நாள்–முன்பொரு நாள்
தீம் குழல்–மதுரமான புல்லாங்குழலை
வாய் வைத்தான்–திருப் பவளத்தில் வைத்து ஊதின கண்ண பிரானுடைய
சிலம்பு–திருமலையாம்.

முடிந்த பொழுதில் குறவாணர் —
சரம அவஸ்தையில் வர்த்திக்கிற குறவர்க்கு நிர்வாஹகர் -(சாயம் காலம் என்றுமாம்)

ஏனம்-படிந்துழு சால் பைந்தினைகள் வித்த –
தங்களுக்கு பலம் இன்றிக்கே பன்றி உழுத சாலிலே அழகிய திணைகளை வித்த

தடிந்து எழுந்த-வேய்ங்கழை போய் விண் திறக்கும்–வேங்கடமே –
தினை விரைக்காக வெட்டி எழுந்த வேய்ங்கழை போய் விண்ணைத் திறக்கும் திருமலை

மேலோருநாள்-தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———
பண்டு ஒரு நாள் இனிய குழலை வாயிலே வைத்து திரு வாய்ப்பாடியில்
உள்ளாரை வசீகரித்தால் போலே
ஒரு மலையிலே நின்று சம்சாரிகளை வசீகரிக்க நிற்குமவன் சிலம்பு –

(ஒரு சிலரை ஒரு காலே ஊதி வசீகரித்தவன் இன்று சர்வர்களையும் ஸதா காலமும் நின்ற நிலையிலே வசீகரிக்கிறான் அன்றோ)

———————————————————————

இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –

அப்போது முடித்தார்கள் இப்போது முடித்தார்கள் என்னும் படி
சரம தசை ஆபன்னரான குற வ்ருத்தர்கள்
தங்கள் ஏர் பிடித்து உழ மாட்டாமையாலும்
ஜாதி உசித வ்ருத்தி தவிர ஒண்ணாமையாலும்
வராஹங்களானவை தாங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர் பறிந்து விழும்படி படிந்து உழுத சால்களிலே –

உழுத செவ்வி போவதற்கு முன்பே அழகிய தினைகளை விதைக்க
பிற்றை நாள் பன்றிகள் சாய்த்துப் பொகட்ட மூங்கில்களை தினைக்கு களையாக ஒண்ணாது என்று அவர்கள்
வெட்டிக் களைந்த வேய் மூங்கில்கள் ஆனவை போய் ஆகாசத்தை ஊடுருவ வளர்ந்து நிற்கும்படியான திருவேங்கடமே
பண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே
வைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை — சிலம்பு -மலை –

அன்றிக்கே
அந்தி விட்டவாறே
குறவர்கள் ஏனம் படிந்து –
குறவர்களும் மூங்கில்களும் திருவேங்கடசமுடையானும் உத்தேச்யம் என்றவாறு

ஸ்வாபதேசம்
குற வாணர்கள் -சரம பர்வ நிஷ்டையில் உள்ளவர்களைச் சொன்னவாறு -பயம் நீங்கி -நாமாக உழுது பயிர் செய்யாமல்
இருக்கும் நாள் கைங்கர்யம்
வராஹ பெருமாள் காட்டிய வழியிலே சொல்லுபவர்கள்
ஈனச் சொல்லா -ஞானப்பிரானை அல்லது இல்லை நான் கண்ட நல்லதுவே
ஸூவ ப்ரயோஜன ஸூவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி
மூங்கில் வெட்டி -அஹங்காரங்கள் மமகாரங்கள் போக்கி
பின் வளர்ந்தது –
ப்ராப்யமாக வளர்ந்து யாவதாத்மா பாவியாய்
பரார்த்த கைங்கர்யம் அங்கும் உண்டே
அதுவே விண் முட்ட வளர்ந்தது என்கிறார் –

—————————————————————————————————————-

திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில்
அதில் நின்றவன் உத்தேச்யமாக சொல்ல வேண்டா இறே என்கிறார் –

திருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த  மண் ————90-

பதவுரை

சிலம்பும்–(திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும்
செறி கழலும்–செறிவாக அணிந்த வீரத் தண்டைகளும்
சென்று இசைப்ப–எங்கும் ஒலிக்க
விண் ஆறு–ஆகாச கங்கையிலே
அலம்பிய–விளக்கப்பட்ட
சேவடி–திருவடிகளானவை
அண்டம் போய்–அண்ட பித்தி யளவும் நீண்டு போன போது,
புலம்பிய–(அனைவராலும்) துதிக்கத் தக்க
தோள்–திருத் தோள்கள்
எண் திசையும் சூழ–எட்டுத் திசைகளையும் வியாபிக்க
இடம் போதாது–இடம் போர வில்லை,
வண் துழாய் மால்–அழகிய திருத் துழாய் மாலை யணிந்த எம்பெருமான்
அளந்த–அளந்து கொண்ட
மண்–பூமியானது
என் கொல்–(சிறியதே போலும்)

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார் அலம்பிய சேவடி போய் அண்டம் –
சிலம்பையும் செறி கழலையும் யுடைத்தாய் -கங்கையிலே விளக்கின திருவடி போய் அண்டம் சென்று இசைப்ப

புலம்பிய தோள்-எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ-வண்டுழாய் மாலளந்த  மண் ——
சங்கைஸ் ஸூ ராணாம் என்ற தேவர்களால் திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட தோள்
எட்டுத் திக்கும் சூழ இடம் போராது
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –

——————————————————————

திருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்

திருச் சிலம்பும் செறியச் சாத்தின திரு வீரக் கழலும் சர்வோதிக்கமாக ஒக்கச் சென்று த்வனிக்க –
ஆகாச கங்கையில் விளக்கப்பட்ட
சிவந்த திருவடிகளானவை அண்ட பித்தியிலே தாக்க –
சகல லோகங்களும் வாய் புலத்தும் படியான அழகை யுடைத்த திருத் தோள்களானவை எட்டுத் திக்குகளையும் வியாபிக்க –
அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரன் அளந்த பூமியானது
அவன் தனக்கு நின்று அளக்க இடம் போதாது -இது என்ன ஆச்சர்யம் தான் –

———————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-71-80—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –

(தேஹ யாத்திரையே ஸமாஸ்ரயணமாகக் கொல்லுமவன் என்றார் கீழ்
அதற்கு வரும் பிரதிபந்தங்களையும் போக்கி அருளுபவனும் இந்த திருமலை என்கிறார்

சமன் கொள் வீடு தரும் சமன் குன்றம்-இங்கு யானைக்கு பிரமிப்பு –
கீழ் கடுவனுக்கு பார்த்தோம் -)

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

பதவுரை

களிறு–யானையானது
கை எடுத்து ஓடி–தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி
முகில்–(மத யானை போலெழுந்து) மேகங்களை-மத யானை போல் எழுந்த மா முகில்கள்
குத்த–(எதிரி யானை யென்று நினைத்துக்) குத்த
யாளி–(இதைக் கண்ட) யாளியானது
ஒளிறு மருப்பு–(அந்த யானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை
ஓசி–முறிக்கிற
கை–கையை யுடைத்தாய்க் கொண்டு
பிளிறி விழ கொன்று–(அந்த யானை) வாய் விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று
நின்று அதிரும்–அங்கேயே நின்று கொண்டு பெரு முழக்கம் செய்யப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடமே
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
குழ கன்று கொண்டு–இளங்கன்றை (எறி குணிலாகக்) கொண்டு
எறிந்தான்–(விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய
குன்று–திருமலையாம்.

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி–
கையை எடுத்துக் கொண்டு ஓடிக் களிறானது முகிலைக் குத்த –

ஒளிறு மருப்பொசிகை யாளி –வெண் மருப்பை முறியா நின்ற யாளி —
கை எடுத்தோடி என்று யாளிக்காகாச் சொல்லவுமாம் –

பிளிறி-விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே–
யானையானது பிளிறிக் கொண்டு விழும் படிக்கு ஈடாகக் கொன்று
சினத்தாலே நின்று அதிரா நின்ற திருமலை –

மேனாள்-குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–
சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றது என்று உகந்து நிற்கும் அவனுடைய திருமலை இறே –

திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகம் ஆகுமோ என்னில்
அக்நீஷோமீய ஹிம்சையோ பாதி இறே அவற்றுக்கும் –

(திவ்ய தேசங்களில் அனைத்துமே உத்தேச்யம்
போது அரிந்து வானவர்கள் -திவ்ய தேச முதலைகள் விரோதம் அல்லவே
இங்கு ஆகுமோ என்னில்
பலி கொடுக்கும் ஆட்டுக்கும் ஸ்வர்க்கம் கிட்டுமே
அறுவை சிகிச்சை -இப்பொழுது துன்பம் நீண்ட நாளுக்கு இன்பம் போல் ப்ரஸவ வலி ஹிம்ஸை அல்லவே
கட்டடம் கட்ட ஒத்தாசை பண்ணியவர்களுக்கு காவேரியில் தள்ளி மோக்ஷம் அருளிய கலியன்)

—————————————————————-

விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –

ஆனையானது தன் துதிக்கையை எடுத்துக் கொண்டு பெரிய வேகத்தோடு சென்று மத யானை போலே எழுந்த
மா முகிலை (8-9)(1-2)பிரதி கஜம் என்று புத்தி பண்ணி குத்த –

இத்தைக் கண்ட யாளியானது -அந்த யானையினுடைய வெளுத்த நிறத்தை யுடைத்தான கொம்பை
அநாயாசேன முறியா நின்ற கையை யுடைத்தாய்க் கொண்டு
அது வாய் விட்டு அலறிக் கொண்டு முறிந்து விழும்படி கொன்று பொகட்டு
பின்னையும் சீற்றம் மாறாத படியால்
இவ்விடம் தன்னிலே நின்று ஷூத்ர மிருகங்கள் மண் உண்ணும் படி கர்ஜியா நிற்கும் வேங்கடமே
முன்பு ஒரு நாளிலே குழக் கன்றைக் கொண்டு விளங்கனி எறிந்தவனுடைய திருமலை –

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-1-

(வண்டினம் முரலும் சோலை*  மயிலினம் ஆலும் சோலை,* 

கொண்டல் மீதுஅணவும் சோலை*  குயிலினம் கூவும் சோலை,*
அண்டர்கோன் அமரும் சோலை*  அணி திருவரங்கம் என்னா,* 
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி* நாய்க்கு இடுமின்நீரே.  )

—————————————————————————————————-

(மேலை இளங்குமரர் -உயரத்தில் – மேல் தன்மையில் மேலானவர் -யத்ர பூர்வ ஸாத்யா சந்தி தேவர்)

(நான்கு வியாக்கியானங்கள் இப்பாட்டுக்கு-வேங்கடத்தைப் பதியாக வாழ்வதால் வந்த ஏற்றங்கள்

திருமலையின் உயரம் -கையில் சக்தி -அடர்ந்த மூங்கில் -வளையலின் ஒளி சிறப்பு -நான்கையும் சொன்னவாறு

விளையாடுகிற கழலானது-அம்மானை ஆட -அது மேல் சென்று ராகுவை விடுவித்தது என்றும்
மூங்கில் சென்றும் என்றும் )

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் தீங்கழை  போய் -வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர்   கோமான் இடம் —–72-(தீங்கழை-தீம் கழல் பாட பேதம் )

பதவுரை

குன்று ஒன்றினாய–அத் திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற
குற மகளிர்–குறத்திகள்
கோல் வளை கை–அழகிய வளைகளணிந்த கைகளினாலே
சென்று–மலை மேலேறி
விளையாடும்–விளையாடா நிற்கப் பெற
தீம் கழை–அழகிய மூங்கில்கள்
போய்–சந்திர மண்டலத்தளவும் போய்
வென்று–ராஹுவைத் தகர்த்து,
விளங்கு மதி கோள் விடுக்கும்–விளங்கா நின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேலே–மேலுலகத்திலுள்ள
இளங் குமரர் கோமான்–நித்ய யுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய
இடம்–திவ்ய தேசமாம்.

குன்று ஒன்றினாய குற மகளிர் —
திருமலைக்கு கீழ் இழியில் குடிப் பழியாம் குறவருடைய பெண்கள் –

கோல் வளைக் கை-சென்று விளையாடும் திங்கழை  போய் –
குறவருடைய பெண்கள் கோல் வளையை யுடைத்தான கையாலே-சென்று விளையாடுகிற கழலானது போய் –

வென்று விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை

இளங்குமரர்   கோமான் இடம் —-
உஜ்ஜவலமான சந்திரனை ராஹு வானது க்ரஹிக்க ஒண்ணாது என்று
வென்று சந்திரனுக்கு அந்த வியசனத்தைப் போக்கும் திருமலை பரம பதத்தில் தன்னோடு ஓக்க
(த்வி) த்வாதஸ வார்ஷிகரான நித்ய ஸூ ரிகளுக்கு சேஷியானவன் இடம் -(பஞ்ச விம்சதி வார்ஷிகர் உபநிஷத் )

தீங்கிழை -என்று
இவர்கள் ஊஞ்சல் ஆடுகைக்குப் பிடித்து விளையாடும் மூங்கில் ஆகவுமாம் –

(சிகரம் உயர ஏற்றம்-பெண்களின் கையின் திண்மை -இரண்டையும் சொன்னவாறு )

————————————————————

திருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடையராய்க் கொண்டு
வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் -ஸ்வ இச்சையால் சென்று விளையாடும் குறப் பெண்களுடைய
தர்ச நீயமான வளையை உடைத்தான கையானது –
பசுமையாலும் சுற்று உடைமையாலும் ஒழுகு நீட்சியாலும் அழகிய மூங்கில்களை வென்று

(வேய் போலும் எழில் தோளி -அழகு சொல்லக் கடவது
இங்கு குறப் பெண்களுடைய கை வென்றதை இங்கு சொல்லி மேல் ராகுவை வென்றதைச் சொல்லி)

அதுக்கு மேலே
உஜ்ஜவலனான சந்திரனை க்ரஸிக்க ஒருப்படுகிற ராஹுவாலே வந்த அவன் வியசனத்தைப் போக்கும் திருமலையே —
சர்வ உத்தமராய் -நிரந்தர அனுபவத்தால் நித்ய யவ்வன ஸ்வ பாவரான நித்ய ஸூ ரிகளுக்கு ஸ்வாமி யானவன்
விரும்பி வர்த்திக்கும் ஸ்தானம் –

விளையாடும் குற மகளிர் கோல் வளைக் கையானது சென்று நல்ல மூங்கில் செறிவை நீக்கிக் கிரணங்களை யுடைய
சந்திரன் இங்குப் புகுரப் பெறாமையால் உண்டான இடரை நீக்கும் என்றுமாம்

அன்றிக்கே –
அவர்கள் வளையின் ஒளி சந்திரன் ஒளி புகுரப் பெறாத மூங்கில் இருளை அறுத்து வெளி யாக்கிச்
சந்திரன் மறுவையும் போக்கும் -என்றுமாம் –

அங்கனும் இன்றிக்கே –
குற மகளிர் கோல் வளைக் கையாலே ஊஞ்சல் ஆடுகைக்காக வளைத்து விட்ட மூங்கிலானது
போய் விளங்கு மதி கோள் விடுக்கும் என்றுமாம் –

——————————————————————————————————————–

திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வட முக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள  நலம் ——73-

பதவுரை

ஏழ் பூண்ட–ஏழு குதிரைகளைப் பூண்ட-ஏழு சந்தஸ்ஸுக்கள்
இரவி தேர்–ஸூர்யனுடைய தேரை
இடம் வலம்–(மேருவுக்கு) இடப்பக்கமாகவும் வலப்  பக்கமாகவும்
ஒட்டி–(அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும்
வட முகம் வேங்கடத்து மன்னும்–வட திசையின் கண்ணுள்ள திருவேங்கடத்தில் நித்ய வாஸம் பண்ணுமவனும்
குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான்–ஆசையோடு குடக் கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய
குரை கழல் கூறுவதே–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே
நா தன்னால் உள்ள நலம்–நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம்.

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி-
இடத்திலும் வலத்திலுமாக ஏழு குதிரை பூண்ட ஆதித்யனுடைய தேரை ஒட்டி
ஏழு பூண்ட ஆதித்ய ரதத்தை மஹா மேருவுக்கு வலமே இடமாக -மார்க்கமாக ஒட்டி என்றுமாம்
இரவியினுடைய தேரை பாரத சமரத்திலே நடத்தி -என்றுமாம் –

(துவாதச ஆதித்யர்கள் -காயத்ரி சந்தஸ்ஸுக்கள் -(6-12-அஷரம் பாதம் -காயத்ரி முக்காலி மூன்று -ஒவ்வொன்றும் 8 அக்ஷரம் )

(காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி என்ற ஏழு சந்தஸ்ஸுக்கள் ஏழு குதிரைகளாகும்.)

வடமுக வேங்கடத்து மன்னும் –
வடக்கில் திக்கில் உண்டான திருமலையிலே நித்ய வாசம் பண்ணுகிற –
குட நயந்த-கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே

நாத் தன்னால் உள்ள  நலம் ——
குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை
நாவால் படைக்கும் சம்பத்து –

குடக் கூத்து ஆடின இளைப்பு ஆறத் திருமலையிலே வந்து நின்றான் போலே –

———————————————————————-

திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

மேருவுக்கு இடமாயும் வலமாயும் சஞ்சரிக்கக் கடவதாய் –
ஏழு நாமத்தை யுடைத்தாய் இருப்பதாய் –
ஏழு குதிரை பூண்ட ஆதித்ய ரதத்தை தத் அந்தர்யாமியாய்க் கொண்டு ஒட்டி
வடக்குத் திக்கில் பிரதானமாய் இருந்துள்ள திருமலையிலே நித்ய வாசம் பண்ணா நின்றானுமாய்
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடம் எடுத்து ஆடுகிற மநோ ஹாரி சேஷ்டிதத்தை உடையவனாய்
நின்றவனுடைய ஆபரணத் த்வனியை உடைத்தான திருவடிகளை ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் –

(பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –
சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே –
ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –)

(மன்றம் அமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் )

(ஜிஹ்வே கீர்தய கேசவம் -முகுந்த மாலை)

——————————————————————————————————-

அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ  -சலமே தான்
வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

பதவுரை

சலமே–கபடமாகவே
நஞ்சு–விஷத்தை
ஊட்டு–உண்பிக்க வந்த
வன் பேய்–கொடிய பூதனை யானவள்
நிலமே–பூமியிலே
புரண்டு போய் வீழ–(பிணமாய்) மறிந்து போய் விழும்படியாகக்
தான் சலமே–தானும் கபடமாகவே
வெம் கொங்கை–(அவளது) வெவ்விய முலையை
உண்டானை–அமுது செய்த கண்ண பிரானை-தாய் முலை இருக்க பேய் முலை வாய் வைத்த பித்தன்
ஆய்ச்சி–யசோதை யானவள்
மீட்டு–(அப் பூதனை பக்கலில் நின்றும்) மீட்டு
ஊட்டுவன்–(தனது முலைப் பாலை) உண்பிப்பதற்காக
சார்ந்து–அணுகிச் சென்று
தன் கொங்கை–தனது முலையை
வாய் வைத்தான்–அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள்,
நலமே வலிதுகொல்–இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது!

நலமே வலிது கொல் —
ஸ்த்ரீத்வ பிரயுக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே–

சலமே தான்- நஞ்சூட்டுவன் பேய்–
தாய் வேஷத்தைக் கொண்டு நஞ்சூட்டுவதாக வந்த வலிய பேயானது –

(தாய் வடிவில் வந்த பேய் -கைகேயியை பரதன் குகன் இடம்-குகன் பெருமாள் திரு உள்ளம் புண் படும் -)

(பொய்யர்க்கே பொய்யனாகும் -இவள் சல புத்தி யுடன் போக அவன் சலமே தான் வெங்கொங்கை   யுண்டான் )

நிலமே புரண்டு போய் வீழ  –
நிலத்திலே புரண்டு விழும் படிக்கு ஈடாக(பாலுடன் பிராணனும் வரும்படி இழுத்து உண்டான் )

வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான் தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——
விஷ முலை யுண்டத்துக்குப் நலமே வலிது கொல்-
அச்சமும் ஸ்நேஹமும் கூடினால் -ஸ்நேஹமே வலிதாகாதே —

முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1-

———————————————————

அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –

பேய் வடிவை மறைத்துத் தாய் வடிவு கொண்டு வருகை யாகிற க்ருத்ரிமத்தாலே
விஷத்தைப் புஜிப்பதாக ஒருப்பட்ட கடின சித்தையான பூதனையானவள் பூமியிலே பிணமாய் மறிந்து போய்
விழும்படியாக வெவ்விய முலையை அமுது செய்தவனை முலையை அமுது செய்தவனை
அவள் பக்கலில் நின்றும் மீட்டு யசோதை பிராட்டி யானவள்

விஷத்துக்கு ப்ரத்ய ஒளஷதமான அம்ருதத்தை புஜிப்பதாக கேட்ட இடத்திலே மோஹித்து விழாதே அவ்வளவும்
கால் நடை தந்து சென்று கிட்டித் தன்னுடைய முலையை அவன் திருப் பவளத்திலே கொடுத்தாள் –

ஆன பின்பு நம்மை இழக்க வரில் செய்வது என் என்று பயப்பட்டு மீளுகைக்கு உடலான அறிவில் காட்டிலும்
தன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –
ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –

என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே —முதல் திருவந்தாதி —-34–

—————————————————————————————————–

இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற
திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

(மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை போல் ஒக்கம்-திருமலையில் எல்லாமே உத்தேச்யம் தானே -)

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

பதவுரை

தடாவிய–பரப்பை யுடைத்தான
கோடு-சிகரங்களினுடைய
உச்சி வாய்–உச்சயிலே
அகடு தேய்ப்ப–கீழ் வயிறு உராயும்படியாக
சார்ந்து–கிட்டி
ஊர்ந்து இயங்கும்–மெல்ல ஸஞ்சரிக்கின்ற
வண் மதியின்–அழகிய சந்திரனிடத்துள்ள
ஒண் முயலை–அழகிய முயலை,
சினம் வேங்கை–கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது-வேங்கை மரத்துக்கும் ஒருவகைப் புலிக்கும் பெயர்
சேர்ந்து–கிட்டி
பார்க்கும்–(அதைப் பிடித்துக் கொள்ளவும் விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற
ஆயன்–கண்ணபிரானுடையதாய்
புனம் வேங்கை நாறும்–தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கை மரங்கள் கமழப் பெற்றதான
பொருப்பு–மலை

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்–
பரந்த கொடு முடியில் கிட்டிக் கீழ் வயிறு தெப்ப-

ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை –
போக்யதையாலே மெள்ள சஞ்சரியா நின்ற சிகரத்தில் தேய்க்கையாலே
ஒளியை யுடைத்தான சந்திரன் பக்கல் முயலை –

(பாலகன் என்று பரிபவம் செய்யேல் -நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ -பெரியாழ்வார்)

(தேய்க்கையாலே செயற்கை அழுக்கு போக -இயற்கை கரும்திட்டு -முயல் – போகாமல் விளங்குமே)

சேர்ந்து-சின வேங்கை பார்க்கும் திருமலையே —
கிட்டிச் சினத்தாலே புலி படப் பார்க்கும் திருமலை -(முயல் பட்டுப்போகும் படி தீ விழி )

ஆயன்-புன வேங்கை நாறும் பொருப்பு —–
இடையர்க்கு காட்டில் மரங்களுடைய நாற்றம் சால பிரியம் இறே –

(காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றான் -காட்டுப் பூவும் இவன் இருக்கவே கமழும் அன்றோ)

——————————————————————

இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற
திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

பரப்பை யுடைத்தான சிகரங்களினுடைய உச்சி இடத்திலே கீழ் வயிறு தேயும் படியாகக் கிட்டி
அங்குத்தை போக்யத்தையிலே கால் தாழ்ந்து மெள்ள சஞ்சரிக்கக் கடவனாய் –
கொடு முடியில் தேய்க்கையாலே சாணையிலே இட்டால் போலே ஒளியை யுடையனாய்
இருக்கிற சந்திரன் பக்கல் யுண்டான அழகிய முயலை –

கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது கிட்டித் தனக்கு ஆமிஷமான முயலாகக் கருதி –
பிடித்துக் கொள்ளுதல் -விட்டுப் போதல் செய்ய மாட்டாதே
எப்போதும் பார்த்த படியே நிற்கும் திருமலையே

ஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய்
ஜாதி உசிதமான தன்னிலத்திலே வேங்கைகள் நிரந்தரமாகப் பரிமளிக்கும் பர்வதம் –

————————————————————————————————-

(ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-)

(ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –
சரணம் சொல்லி நிரந்தரம் கைங்கர்யம் செய்தாலே போகுமே
கோர மா தவம் செய்தான் அவன் அன்றோ நம்மைப்பெற
இங்கும் நீர் தவம் செய்ய வேண்டா)

(அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–)

(வெறிதே யருள் செய்வர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு)

(சும்மெனாதே கை விட்டு ஓடிப்போகுமே
நாம் ஆராய்ந்து கை தொழுதால் என்றும்
தீ வினைகள் ஆய்ந்து விலகிப்போகுமே)

சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

பதவுரை

(ஒ உலகத்தவர்களே)
நீர்–நீங்கள்
பொருப்பு இடையே–மலைகளின் நடுவே
நின்றும்–நின்று கொண்டும்
புனல்–நீர் நிலைகளிலே
குளித்தும்–முழுகிக் கொண்டும்
ஐந்து நெருப்பு இடையே–பஞ்ச அக்நி மத்யத்திலே
நிற்கவும்–நின்று கொண்டும் தவஞ்செய்ய
வேண்டா–வேண்டியதில்லை,
விருப்பு உடைய–(எல்லாராலும்) விரும்பத் தக்கதா யிருக்கின்ற
வெஃகா–திரு வெஃகாவில்
சேர்ந்தானை–வந்து கண் வளர்த்தருளும் பெருமானை
மெய்–மெய்யாக (அநந்நய ப்ரயோஜநமாக)
மலர் தூய் கை தொழுதால்–புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால்
தீ வினைகள்–துஷ் கருமங்களெல்லாம்
ஆய்ந்து–(நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து
அஃகாவே–சுருங்கிப் போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை)

(தொழுதால்-ஆல் –அநந்யார்ஹமாக கை தொழுவது துர்லபம் -என்பதைக் காட்டியவாறு)

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–
பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில்  )பொய்கைளிலே புக்குக் குளித்து

ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–
கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –

(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே
நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில்
நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)

(தஸ்மாத் நியாஸமே உத்க்ருஷ்ட தபஸ் ஸூ)

(மூன்று தத்வங்கள் மூன்று காலங்கள் அப்பிள்ளை
இங்கு இரண்டு
பொருப்பிடை ஐந்து நெருப்பிடை கோடைக்காலம் ஆச்சார்ய ஹ்ருதயம்)

விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–
விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –

(அனைவருக்கும் விருப்பு -உகந்து அவனுக்கும் -ஆழ்வாராதிகளுக்கும் -ஆச்சார்யர்களுக்கும் -நமக்கும்)

(புருஷகாரத்துக்கு திவ்ய தேசம் இருக்கும் என்றவாறு)

மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-
அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் –
அசேதனமான கொடிய பாபங்கள் தானே தன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ –
தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –

வ்ருஷ்டி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே
சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –

(மழைக்கு பயிர்கள் காத்து இருக்க ஞானம் உண்டோ-அதே போல் தீ வினைகளுக்கு ஞானம் இல்லை
சேதன சமாதியில் சொல்கிறார்)

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

——————————————————————–

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்* காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்* 
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்னும்* வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்*
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்னும்* மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்* 
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!    )

பனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் –
குளிர் காலத்திலே பொய்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்
உஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் –
இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –

(மாற்றி செய்தால் உகந்தே செய்வோமே)

அவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்
தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை
பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி
கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்
துஷ் கர்மங்கள் அடங்கலும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ

சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே
சேதன சமாதியாலே சொல்லுகிறது —

அன்றியே
மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து -கை தொழுதால்
தீ வினைகள் அக்காவே என்னவுமாம்

மென்மலர் என்ற பாடமாகில்
மிருதுவான மலரை -என்றதாகிறது –

(புண்யம் பாபம் -அவனுக்கு பிரியமும் சீற்றமுமே தானே
அஞ்சலி பரமாம் முத்திரை -அம் ஜலதி -அஞ்சலி)

(கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-)

(தூயோமாய் வந்து -அநந்ய ப்ரயோஜனராய் -மடி தடவாத சோறுக்கு விதுரரையும்,
சுறு நாறாத பூவுக்கு ஸ்ரீ மாலாகாரரையும்,
சுண்ணாம்பு படாத சாந்திற்குக் கூனியையும் பிள்ளைலோகாச்சார்யார் உதாரணமாகக் கூறுகிறார்.)

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

———————————————————————————————————

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)

(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)

(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)

(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)

(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)

(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–

(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )

ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –

இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –

வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்

வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய

ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )

——————————————————————-

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

(மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  -வாள் அரக்கன் -சந்த்ரஹாசம் வாள் சிவன் கொடுக்க -பிரமன் கொடுக்கும் நாள் )

—————————————————————————————————

(நரகாந்தகன் -நரகத்தையே முடித்தவன் -உன்னை மறக்காமல் இருக்க அருள் -முகுந்த மாலை
வாழ் ஆட்ட பட்டு நின்று வல்லீரேல்-வாஸூ தேவம் சர்வம் பயின்று இருப்பார் -ஸூ துர்லபம் )

(திக்குற்ற கீர்த்தி இராமானுசனை,* என் செய்வினையாம்-
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை* மேவும்நல்லோர்-
எக்குற்ற வாளர் எதுபிறப்பேது இயல்வாக நின்றோர்*
அக்குற்றம் அப்பிறப்பு* அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே )

(அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -எதிராசா
நீ இரங்க வேண்டுவது நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம் —14-)

அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய
கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது –

அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆன பின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்

(நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு-80 பாசுரம் நெஞ்சமே -அத்தை இங்கே கூட்டிக் கொண்டு நெஞ்சுக்கு உபதேசம் இதிலும்)

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-(மாயவனை -ஆச்சார்ய பூதன் -மாதவன் ஸ்ரீ யபதி -பாட பேதங்கள் )

பதவுரை

ஆழி–திருவாழி யாழ்வானை
வலவன்–வலத் திருக் கையிலுடையவனும்
முரன்–முராஸுரனுடைய
நாள்–ஆயுளையும்
வலம்–வலிமையையும்
சுழித்த–போக்கின
மொய்ம்பன்–மிடுக்கை யுடையவனுமான பெருமான்
சரண் ஆம் ஏல்–ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே–(நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று
(இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல்
நமக்கு என்றும் அரண் ஆம்–நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓ நெஞ்சமே)
ஓர்த்து–இதை நன்றாக அறிந்து கொண்டு
மாயனையே–ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே
கதி–உபாயமாக
ஓது–அநுஸந்தித்துக் கொண்டிரு.

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்–
சர்வ சக்தி நமக்கு ரக்ஷையாம் –
வலவருகே திரு வாழி பிடிக்குமவன் போலே காணும் ரக்ஷகனாவான் –
தன்னைப் புரஸ்கரித்து (சுட்டிக்காட்டி )இறே -மாஸூச -என்றது –இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்
அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –

முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் –
விரோதியைப் போக்கி ரக்ஷிக்க வல்லன் என்னும் இடத்தை உபபாதிக்கிறது
முரனுடைய ஆயுஸூ ஆகிற மிடுக்கை முடிக்க வல்ல மிடுக்கன் –

(நரகாந்தகன்-நரனை அளித்தவன் -நரகம் அளித்தவன் – முராரி -முரனை அளித்தவன்)

சரணாமேல்-ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே ஆழி வலவன்-அரணாம்–
ஆஸ்ரயணீயன் ஆகும் –
சமோஹம் சர்வ பூதேஷூ நமே த்வேஷயோ அஸ்தி ந ப்ரிய-(9-20-) யோ அபி ஸ் யு பாபயோ நய–
எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் –

ஒது கதி மாயனையே ஓர்த்து–சரண்யனாய் ஆச்சர்ய பூதனானவனை அனுசந்தித்து
அவன் திரு நாமங்களை சொல்லு –

(ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்
எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை
எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ
என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என் னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்
தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –)

(குலம் தாங்கு சாதிகள்*  நாலிலும் கீழ் இழிந்து,*  எத்தனை 
நலம் தான் இலாத*  சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,* 
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்*  மணிவண்ணற்கு ஆள் என்று உள் 
கலந்தார்,*  அடியார் தம் அடியார் எம் அடிகளே.)

————————————————————————

அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆன பின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்

ரக்ஷண பரிகரமான திரு வாழியை வலவருகே யுடையனாய் முராஸூரனுடைய ஆயுசாலே வந்த பலத்தைப் போக்கின
மிடுக்கை யுடையனானவன் ரஷகனாகும் இடத்தில் -(துர்லபம் ஆல் )
ஏது ஞானம் -ஏது வ்ருத்தி ஏது ஜென்மம் என்று வித்யா வ்ருத்த ஜென்மங்கள் யுடைய நிகர்ஷம் பார்த்து உபேக்ஷியாதே –
ஆபன்னராய்-ரக்ஷக அபேக்ஷை யுடையரான நமக்கு சர்வ காலத்திலும் ரக்ஷகனாம் –

(வித்யா விருத்த ஜென்மம் -பிறப்பு யோக்யதை அல்ல -ஆசை அபேக்ஷையே வேண்டியது
ஆசை யுடையார்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார்)

ஆன பின்பு நம்முடைய குற்றத்தைப் பார்த்து பிற்காலியாதே சரணத்வ ஏகாந்தமான
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனானவனையே உபாயமாக அத்யவசித்து –
அவன் திரு நாமங்களை இடைவிடாமல் நெஞ்சே சொல்லு –

நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு -என்று மேலே(80) சொல்லுகிற நெஞ்சு இங்கும் முன்னிலைக்கு விஷயம் –

அன்றிக்கே
நிலை வரம்பில பல பிறப்பாய் -என்கிறபடியே
முரன் நாள் வலம் சூழ்ந்த மொய்ம்பன் சரணாம் இடத்தில் தனக்கு என்ன ஒரு நியதி இன்றிக்கே
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு உறுப்பான ஏதேனும் ஒரு ஜென்ம வித்யா வ்ருத்தங்களைத் தான் உடையனாய்க் கொண்டு
நமக்கு என்றும் காரணாம் என்றுமாம்

(எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

(தனக்கும் ஒரு வரம்பு இன்றி-என்நின்ற யோனியாம் பிறப்பில் -மாசு உடம்பில் -மானமிலா பன்றியாய் )

ஒது கதி மாதவனையே ஓர்த்து -என்ற பாடமாகில் –
ஸ்ரீ யபதியை உபாயமாகப் புத்தி பண்ணி
அவன் திரு நாமங்களை ஏத்து -என்று பொருளாகக் கடவது –

(மாயவனை -ஆச்சார்ய பூதன் -மாதவன் ஸ்ரீ யபதி -பாட பேதங்கள்)

—————————————————————————————————-

(ரிஷிகள் ஸ்வரூப த்யானம் -மனம் அடக்கினால் தான் ஸாத்யம்
ஆழ்வார்கள் ரூபத்தில் இழிந்து மேல் மேல் பலவும் உண்டாகும்
புலன்களை அடக்கி -சம்சாரம் தண்மை உணர்த்தி -தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனமே தந்து அருளுவான்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன்-ஆதாரம் பெறுக வைத்த அழகன் -அன்றோ

மால்பால் மனம்சுழிப்ப*  மங்கையர்தோள் கைவிட்டு,* 
நூல்பால் மனம்வைக்க நொய்விதுஆம்,*  நால்பால
வேதத்தான் வேங்கடத்தான்*  விண்ணோர் முடிதோயும்,*
பாதத்தான் பாதம் பணிந்து. 
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-
சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-

மால் பால் மனம் வைக்க -ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்–மேலே மேலே
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று-புலன் அடங்கிய பின்பே சம்சாரம் தண்மை அறிய முடியும் –
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின் பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.-யத்ர நான்யத்ர கச்சதி பூமா இதுவே -வேறு ஒன்றில் போக முடியாதே )

(ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?)

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது –

(ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -பாலே மருந்தும் விருந்துமாம் போல்
அநந்த கால பிரதிபந்தங்கள் சடக்கென போகுமே )

(விரையார் நறுந்துழாய்-மணம் செவ்வி இரண்டையும் என்றும்
திருமேனி சர்வ ரசம் சர்வ கந்தம் -அவனுக்கும் திருத்துழாய் மாலைக்கும் மணம் என்றுமாம்)

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

பதவுரை

கார்த்த–பசுமையான நிறமுள்ளதாய்
விரை ஆர்–பரிமளம் நிரம்பியதான
நறு துழாய்–செவ்வித் திருத்துழாய் மாலையை யுடையவனும்
வீங்கு ஓதம் மேனி-பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும்-அடியார்களைக் கண்டு பொங்கும் கடல் வண்ணன்
நிரை ஆரம் மார்வனையே–ஒழுங்கான ஹாரங்களணிந்த திரு மார்பை யுடையவனுமான பெருமானையே
நின்று–நெஞ்சு நிலைத்து நின்று
ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின் பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.

விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி-நிரையார மார்வனையே —–
அழகிய திருத் துழாய் மாலையை யுடையவனுமாய்
தேங்கின கடல் போலே இருக்கும் திரு மேனியை யுடையவனாய்
சப் தாதிகளை நாக்கு வளைக்கலாம் படி ஆபரண அழகை யுடையவனை –

நின்று ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம்-
நின்று அனுசந்தித்த மனசை யுடையராய் இந்திரியங்களை விஷயங்களில் போகாத படி அடக்கி
அவை பொல்லாது என்று ஆராய்ந்து -சம்சாரத்தைப் போக்கப் புக்கால் போக்கலாம்

ஏழு பிறப்பு என்றது உப லக்ஷணம் –
ஜென்மம் அடங்கப் போக்கலாம் என்ற படி –

—————————

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் –

பசுத்த நிறத்தை யுடைத்தாய் பரிமள பிரசுரமான செவ்வித் திருத் துழாயாலே அலங்க்ருதனாய் –
தேங்கின கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் –
ஒழுங்கு பட்டு இருக்கிற திரு ஆரத்தாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையவனையே ஒருபடப் பட
நின்று -நிரந்தரமாக அனுசந்திக்கிற மனஸை யுடையராய்

ஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்த்ரியங்களையும் விஷயங்களில் போகாத படி நியமித்து –
சம்சார தோஷத்தை அனுசந்தித்து –அதில் நின்றும் ஹிருதயத்தை மீள விட்டால் ஒன்றின் பின் ஒன்றாக
வரக் கடவ ஜென்ம பரம்பரைகளை அநாயாசேன பேர்க்கலாம்-

அவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்
சப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம் என்று கருத்து –

————————————————————————————————————

(முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-

நெஞ்ச மே! நல்லை நல்லை உன் னைப்பெற்றால்
என் செய் யோம் இனி என்ன குறைவினம்
மைந்த னைமல ராள்மண வாளனைத்
துஞ்சும் போதும்வி டாது தொடர்கண்டாய்.-1-10-4-
 -கொண்டாடும் படி அன்றோ ஆழ்வார்கள் திரு உள்ளம்)

(நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் செறிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் செறிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட வன்றே –7-4-8-)

நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது –
அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் –

பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -வென்றிலங்கும்
ஆர் படு வான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

பதவுரை

நின்று–(கூசாமல்) முன்னே வந்து நின்று
எதிர் ஆய–எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும்
நிரை மணி தேர்–ஒழுங்காக அழுத்தின மணிகளை யுடைய தேரின் மேலேறி யுள்ளவனுமான
வாணன்–பாணாஸுரனுடைய
ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள்–அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும்
உடன் – ஏக காலத்தில்–
துணிய–அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து
வென்று–வெற்றி பெற்று
இலங்கும்–விளங்குகின்ற
ஆர்படு–கூர்மையை யுடைய
வான்–திவ்யமான-வலிய –
நேமி–திருவாழியாழ்வானை யுடையவனாய்
அரவு அணையான்–சேஷசாயியான எம்பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளிலே-நேர் படுவான்-சேஷ பூதனுக்கு அநு ரூபமான தாஸ்யத்துக்கு
நெஞ்சு தான்–(எனது) நெஞ்சு தானே
முயலும்–உத்ஸாஹப் படுகின்றது.

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள் ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய –
தாமஸ தேவதையை ஆஸ்ரயிக்கையாலே சர்வேஸ்வரன் என்று அறியாதே
எதிரிட்டு தேரை யுடையனான பாணன் யுடைய தோளோடு தோள் ஒன்றிய அல்லாத
ஆயிரம் தோளும் துணியும் படிக்கு ஈடாக வென்று –

வென்றிலங்கும்-ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே-
ஒளியையும் கூர்மையையும் யுடைய திரு வாழியை யுடைய
அநந்த சாயியுடைய திருவடிகளிலே

நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —
அணைய நெஞ்சானது தானே ப்ரவர்த்தியா நின்றது –

தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

சுழற்றிய –
திரு வாழியை விட வேண்டி இற்றில்லை -சுழற்றின இத்தனை –
அவன் ஒருக்கால் திரு ஆழியைச் சுழற்ற வாணனுடைய தோள்கள் ஆயிரமும் ஒருக்காலே
மலைக் கொடு முடிகள் போலே முறிந்து விழுந்தன –

வாணனுடைய தலையை அறாது ஒழிந்தது குற்றம் போறாமை யன்று
உஷை பித்ர் ஹீநை யாகாமைக்காகவும் –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாருக்கு பலம் இது என்னும் இடத்துக்கு மச்சமாகவும் –
அதாவது –
பரிவின்றி வாணனைக் காத்தும் 3-10என்று பிரதிக்ஜை பண்ணி
யுத்தத்திலே இவனைக் காட்டிக் கொடுத்து -ஸ பரிகரனாய் கொண்டு முதுகு
காட்டிப் போனான் ரஷகன் -ரஷ்ய பூதன் தோள் துணி உண்டான் -உன்னை ரஷிக்கப்
புக்கு நான் பட்டதோ -என்றும் -உன்னை ஆஸ்ரயித்து நான் பட்டதோ -என்றும்
இருவரும் கூடக் கட்டிக் கொண்டு கதறுகை இறே பலமாய் விட்டது –

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

————————————————————————-

பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ் விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

ருத்ரனை அண்டை கொண்ட பலத்தால் சர்வேஸ்வரன் என்று அறியாதே கூசாமல்
முன்னே வந்து நின்று எதிராய் நின்றவனாய்
ஒழுங்கு பட அழுத்தின மணிகளோடே கூடின தேரிலே எறி வந்த பாணாஸூ ரனுடைய
அடி ஒன்றாய் பணைத்து இருந்துள்ள ஆயிரம் தோளும் ஏக உத் யோகேந அறுப்புண்டு விழும்படியாக ஜெயித்து –
அத்தாலே ஒளி விடா நிற்பதாய் –

கூர்மையை யுடைத்தாய் அதி பிரபலமான திரு வாழியை யுடையனான அநந்த சாயினுடைய
சிவந்த திருவடிகளிலே நெஞ்சானது எனக்கு முன்னே கிட்டுவதாகத் தானே உத்சஹியா நின்றது-

ஆர் படுகை–கூர்மையை யுடைத்தாகை–
அரங்களை யுடைத்தாகை -என்றுமாம் – -(ஸஹஸ்ர ஆரங்கள் கொண்ட ஆழி )

வான் -வலி-

(கற்பக வருஷம் வாஹனம் சேவிக்கும் பொழுது நினைக்க வேண்டியது
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )

(இப்படி அவன் படியாய் இருக்க நெஞ்சு முற்பட கேட்க வேணுமோ)

(கச்ச ராம மயா ஸஹ -சீதாபிராட்டி முன்னே சென்று கல்லும் முள்ளும் அகற்றி
சேதனர்களைத் திருத்திப் பணி கொண்டு பெருமாள் இடம் சேர்த்தாளே அன்றோ)

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்–61-70— -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

(திரு விண்ணகர் -திவ்யதேசம் பெரியவாச்சான் பிள்ளை –ஸ்ரீ வைகுண்டம் -அப்புள்ளார் -இருவரும் மாற்றி
திரு உள்ளம் வந்த பின்பு -எங்கு இருந்து வந்தார் ஆலோசிக்க
அர்ச்சையில் இருந்து வந்து -அதற்கு
பாற்கடலில் இருந்து வந்து -அதற்கு
வைகுந்தத்தில் இருந்து
என்று க்ரமமாக
அடுத்த இரண்டுமே திவ்ய தேச பாசுரங்கள்

பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம்:
ஆவரண் ஜலம் போலே பரத்வம்:
பாற்கடல் போலே வியூகம்;
பெருக்காறு போலே விபவம்
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்:

இனியார் ஞானங்களால் எடுக்கல்  எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என்கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில்ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! 1நுனபாதம் சேர்ந்தேனே.-2-3-5-
 )

பிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் –
சம்சாரத்திலே உகந்து அருளின திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது
ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் –

பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

பதவுரை

வைகுந்தம்–பரமபதத்தை
கொண்டு–இருப்பிடமாகக் கொண்டு
அங்கு–அவ்விடத்திலே
உறைவாற்கு–வாஸம் பண்ணு மெம்பெருமானுக்கு
பால் கடல்–திருப்பாற்கடலும்
வேங்கடம்–திருமலையும்
வண்டு வளம் கிளரும் நீள் சோலை–வண்டுகளின் திரள் மிக்கிருக்கிற பரந்த சோலைகளை யுடைத்தாய்
வண்–அழகியதாய்
பூ–போக்யமான
கடிகை–திருக் கடிகைக் குன்றும்
இள குமரன் தன் விண்ணகர்—யுவா குமாரா -நித்ய யுவாவான அவனுடைய தன்னதான திருவிண்ணகரும்
(ஆகிய இத்திருப்பதிகளெல்லாம்)
பண்டு எல்லாம்–என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பெல்லாம்
கோயில் போல்–கோயில்களாக இருந்தன போலும்.
(இப்போதோவென்னில், என்னெஞ்ச மொன்றே அவனுக்குக் கோயிலாயிருக்கிறது என்பது உள்ளுறை).

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்-கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல்–
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே -என்று பரம பதத்தோ பாதியாகத் திருமலையைச் சொல்கிறது

வைகுந்தம் கோயிலாகக் கொண்டு அங்கு உறைவார்க்கு -வேங்கடம் பாற் கடல் –
வண்டு-வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —-
விண்ணகரான இவை இளங்குமரனான தனக்கு இப்போது கோயில் போலே

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

—————————————————————————

பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

ஸ்ரீ வைகுண்டத்தைத் தனக்கு அபிமத வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு –
அங்கே ஆதரித்து நித்ய வாசம் பண்ணுகிற வைபவத்தை உடையவர்க்கு –
திருப் பாற் கடலும் -திருமலையும் -வண்டுகளினுடைய திரள் மிக்கு வாரா நின்றுள்ள
பரப்பை யுடைத்தாய் அழகியதாய் போக்யமான திருக் கடிகையும்-
நித்ய யுவ ஸ்வ பாவனானவன் தன்னது என்று
ஆதரித்து வர்த்திக்கிற -இவ்வவ திவ்ய தேசங்கள் என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பு
எல்லாம் உகப்புடன் எழுந்து அருளி இருக்கிற கோயில்கள் போலே இருந்தன –

என்னை அங்கீ கரித்த பின்பு அவ்வவ தேசங்களைக் காட்டிலும்
என்னுடைய ஹிருதயமே அவனுக்கு வாசஸ் ஸ்தானமாய் விட்டது என்று கருத்து-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -5- 4-9 –

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–64-

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–65-

இடமாவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட் செய்யேன் வலம்–66-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

———————————————————————————————————————–

(இதில் வாமனன் சீலம் தாழ்வு-ஸுசீல்யம் ஸுலப்யம் -இங்கு எல்லாம் கண்டேன் -ஏழு திவ்ய தேசங்களில் காட்டி அருளக் கண்டேன்
கீழ் வைகுந்தம் பாற் கடல் பரத்வம்
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – ––வாமனன் சீலன்-சீரை -பாட பேதம்
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63–சங்கர நாராயணன் -திருமேனியில் இடம் கொடுத்த ஸுசீல்யம் -திரு வேங்கடத்தில் காணலாம் என்கிறார்
இங்கு எல்லாம் வாமனன் சீல குணம் போல் அங்கும் -உருவத்தை அல்ல)

கேவலம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ –
பரமபதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட
இருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் –

ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்  கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  ——62-

பதவுரை

விண்ணகரம்–திருவிண்ணகரமும்
வெஃகா–திருவெஃகாவும்
விரி திரை நீர் வேங்கடம்–விரிந்து அலை யெறிகிற நீர் பொருந்திய திருமலையும்
மண் நகரம்–பூமிலுண்டான வைகுந்தமாநகர் போன்ற
மா மாடம் வேளுக்கை–பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும்
மண் அகத்த தென் குடந்தை–பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும்
தேன் ஆர் திரு அரங்கம்–தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்க மாநகரும்
தென் கோட்டி–தென் திருக்கோட்டியூரும்
(ஆகிய இத் திருப்பதிகள்)
தன் குடங்கை–தனது உள்ளங்கையாலே
நீர் எற்றான்–(மாவலி பக்கல்) உதக தானம் பெற்ற பெருமான்
தாழ்வு–தங்குமிடங்களாம்.

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்–திரு விண்ணகரம் -வெக்கா –
விரிதிரை நீர் வேங்கடம்–திருமலையை ஒரு விசேஷண ரஹிதமாகச் சொல்ல மாட்டார் இறே

மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்  கோட்டி-போக்யதை குறைவற்ற கோயில்

தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  —-
மஹா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தித்தவம் தோற்றும்படி
அர்த்தியாய் நின்றால் போலே –
உகந்து அருளின தேசங்களில் தாழ்வு தோற்றும் படி நின்றான் —

(இங்கு எல்லாம் உடமைகளான நம்மைப் பெறவே வாமனுடைய சீல குணம் காட்டி தாழ்ந்து நின்று சேவை சாதிக்கிறான்)

—————————————————————————–

ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –

திரு விண்ணகரமும் திரு வெக்காவும் விஸ்தீர்ணமாய் அலை எறிகிற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலையும்
பூமியிலே யுண்டாய் வைகுண்ட மா நகர் போலே அவனுக்கு போக ஸ்தானமான திவ்ய நகராய்
பெரிய மாடங்களை யுடைத்தான திரு வேளுக்கையும் -பூமியிலே யுண்டான அழகிய திருக் குடந்தையும்
தேன் வெள்ளம் இடுகிற திருச் சோலையை யுடைத்தான திருவரங்கப் பெரு நகரும்
தெற்குத் திக்கில் யுண்டான திருக் கோட்டியூரும் ஆகிற இவ்விவ திருப்பதிகள் –

தன்னுடைய சிறாங்கித்த திருக் கையிலே(கோட்டங்கை வாமனனாய் )
நீர் ஏற்றுத் தன் உடமை பெறுகைக்கு அர்த்தியானவன்-இந்த ஆத்மாக்களை பெறுகைக்கு அர்த்தியாய்க் கொண்டு
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே எப்போதும் உதவும்படி கால் தாழ்ந்து வர்த்திக்கிற தேசங்களாய் இருக்கும் –

(ஆவரண ஜலம் போல் விண்ணாடு –பூ கத ஜலம் போல் அந்தர்யாமி –
திரு பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்–வியூகம் –பெருக்காறு போலே விபவங்கள்–
ஆற்றில் தேங்கிய மடுக்கள் போல் அர்ச்சை-பின்னானார் வணங்கும் ஜோதி )

————————————————————————————————————

(வில்வ மலரால் அர்ச்சனை -நாகாபரணம் சாத்தி -சங்கு சக்கரம் தொண்டைமானுக்கு அருளி
சைவர் இவன் திருமால் அல்லன்-வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான் –
பிரமாணம் காட்டி -அவனே தன்னைக் காட்டி பரத்வ ஸ்தாபனம் முன்பு –
வேதம் புராணங்கள் இவனே திருமால் -பிரமாணம் விஸ்வசிக்காதவர்களுக்கு –
யோக சக்தியால் ப்ரத்யக்ஷமாகக் காட்டி அருளினார் பாஷ்யகாரர்
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே-இன்றும் ஞான முத்திரையுடன் சேவை திருமலையில்

கீழ் குடங்கை நீர் ஏற்றான் -சீலவத்தை -ஸுசீல்யம் இங்கும் காட்டி அருளுகிறார்-

ஸம்ஸாரி மக்நராக போகாமல் இருக்கவே ஸாஸ்த்ர பாணியாக தானே அவதரித்துத் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் )

(உருவத்தை அல்ல என்றே கொள்ள வேண்டும்
சக்கரமும் -என்பதால் வலது பக்கம் -இருப்பது பிரபலம்
அர்த்த நாரீஸ்வரர் தான் வலப்புறம் பார்வதி இடப்புறம்
வலப் புறம் இருப்பதால் பிரபலம் அங்கும்
அதே போல் இங்கும் சிவபிரான் இடப்பக்கம்
நரஸிம்ஹம் -நரமா ஸிம்ஹமா பெரியது போட்டி அல்லவே
அதே போல் இங்கும் கொள்ள வேண்டும்
த்வந்த ஸமாஸம் -உத்தர பூர்வ ஸப்தம் -இரண்டுக்கும் சமானம்
பீதாம்பர தாரி -தரிக்கும் அவனுக்கு தானே பிரதானம்
அதே போல் சங்கர நாராயணன் -இறைவருக்கும் கொள்ளாமல் இந்த உருவம் கொண்ட அவனுக்கே பிரதானம்
ஏறுஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறுஆளும் தனிஉடம்பன், குலம்குலமா அசுரர்களை
நீறுஆகும் படியாக நிருமித்து, படைதொட்ட
மாறாளன் கவராத மணிமாமை 1குறைஇலமே.
–கண்ட காபாலி கந்தர் பெற்றுப் போகிற உடம்பு அன்றோ எனக்கு அரிது ஆகிறது?’ என்கிறாள்

கூறாளும்  – -ஒரு கூறு -ஏக தேசம் கொடுத்து -பொதுவான உருவம் -ஜகத்தே அவனுக்கு சரீரம்
இங்கு சங்கர நாராயணன் உருவம்-இப்படிச் சீலமுடையவனாய் இருக்கின்றவனை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்.

மந்திபாய் –வானவர் சந்தி செய்ய -ஸுசீல்யம் திருவேங்கடத்தில்

மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த
நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -160-

வரத்தை மீறாமல் இருக்க நரஸிம்ஹ இரட்டை
ஸாதன வேஷ ஸித்த வேஷங்கள் இங்கு இரட்டை-ஒவ்வொன்றுக்கும் மூன்று அடையாளங்கள் இதில் -1-3-5 சிவனுக்கும் 2-4-6 நாராயணனுக்கு
நர நாராயணன் -தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாக இரட்டை

ஷத்ரிய ராஜர் ஆகாச ராஜன் மாமனார் கொடுத்த ஆபரணம்
சூடாமணி கொடுத்த சீதை -ஜனகர் தான் தசரதன் நினைவுக்கு வரக்கொடுத்தாள்
நமாமி வில்வ நிலையாம் -மஹா லஷ்மி திருமாலுக்கும் உகந்த
தொண்டைமான் சக்ரவர்த்தி -ஆழ்வார் தீர்த்தம் பின் வழியாக தனியாக செல்லும் வழி உண்டே
அம்பரீஷன் -துர்வாசர் -சக்கரம் கொடுத்தது போல்
குமரா தீர்த்தம் இங்கு உண்டு -புராணம் இங்கு இருந்து தபஸ்ஸு பண்ணினான்
வேங்கடாசல இதிஹாச மாலை -பூம் கொத்து போல் 10 -பாகங்கள் கொண்டது -)

ஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே –
இது ஒரு சீலவத்தையே -என்கிறார் –

இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன் றாய் இசைந்து —-63-

பதவுரை

தாழ் சடையும்–தாழக் கட்டின ஜடையும்
நீள் முடியும்–நீண்ட திருவபிஷேகமும்
ஒண் மழுவும்–அழகிய மழுவென்னுமாயுதமும்
சக்கரமும்–திருவாழியாழ்வானும்
சூழ் அரவும்–சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்
பொன் நாணும்–பொன் னரை நாணுமாய்க் கொண்டு
இரண்டு உருவும்–ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும்
சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு–நாற்புறமும் திரள் திரளாக அருவிகள்
பெருகப் பெற்ற திருமலை மேலுள்ள அப்பனுக்கு
ஒன்று ஆய் இசைந்து தோன்றும்–ஒரு வடிவமாய் அமைந்து விளங்கா நின்றது
ஆல்–ஆச்சரியம்!

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்-சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் -சூழும்-திரண்டருவி பாயும்
திருமலை மேல் எந்தைக்கு–
சூழத் திரண்டு அருவி பாயா நின்ற திருமலை மேலே-நிற்கிற என்னுடைய ஸ்வாமிக்கு –

இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —
ஓன்று சாதகமாய் ஓன்று சித்தமானால் சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்னில்
இரண்டு உருவும் இசைந்து ஒன்றாய் இருக்கும் பொருந்தி இருக்கும் –

ஆல் -இது என்ன பொருத்தம் என்றவாறு(ஹந்த -என்ன ஆச்சர்யம் )

(அருவி சோர் வேம்கடம் நீர் மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருகின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ ? 8-2-3-
ஒழிவுஇல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து
எழில்கொள் சோதி-எந்தைதந்தை தந்தைக்கே.
-நீங்கள் இங்கே வந்து ஆஸ்ரயியுங்கோள் என்று கூப்பிடுமே
அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை ——-97-
நெஞ்சால் நினைக்கவும் முடியாதே -ஸாம்யம் சொல்ல முடியாதே
அரியும் சிவனும் ஓன்று என்பது -ஸ்வரூபத்தால் அல்ல -சரீர பூதர் தானே -பிரகாரி பிரகார பாவம் சொன்னவாறு
பரன் திறம் அன்றி மற்ற தெய்வம் அல்லவே
நாராயணனே பரம் ஜோதி -நாராயணன் நான்முகனைப் படைத்தான்

வேதம் பிரமாணம் கர்மம் சரணாகதி -ஆச்சார்யர் சிஷ்யர் உபதேசம் -ஸம்ஸாரம் கழிந்து முக்தி –
ஸநாதன தர்ம சித்தம் சைவருக்கும் உண்டே )

(ஒரு பால் உலகளந்த மாயவனாம் மற்ற ஒரு பால் உமை யவளாம் -காரைக்கால் அம்மையார்
உலகு அளந்த ப்ராபல்யம் சொல்லி
அர்த்தம் ஹரஸ்ய -இரண்டும் இருவரால் -தானவர் வைரி -ஹிமாச்சல புத்ரி -அர்த்த நாரீஸ்வர கோலம்
அபர்ணா இலை கூட உண்ணாமல் தவம் இருக்க உ மா பண்ணாதே தாயார் சொல்ல உமா
பர்வத ராஜன் குமாரி பார்வதி)

——————————————————————–

இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –

சாதகத்வ ஸூசகமாம் படி -தாழக் கட்டின ஜடையும் –
ஆதி ராஜ்ய ஸூ சகமான ஒக்கத்தை யுடைத்தான திரு அபிஷேகமும்

கொலைக்குப் பரிகரமான அழகிய மழுவும் –
ரக்ஷணத்துக்கு பரிகரமான அருளார் திருச் சக்கரமும்

பயாவஹமாம் படி இடையிலே சூழப் பட்ட சர்ப்பமும்-
ஐஸ்வர்ய ஸூசகமாம் படி திருவரையிலே சாத்தின பொன்னரை நூலுமாகக் கொண்டு

ஒன்றுக்கு ஓன்று சேராச் சேர்த்தியாய் இருக்கும் இரண்டு வடிவும்

நாலு பாடும் சூழ்ந்து கொண்டு திரண்டு அருவிகள் வந்து குதியா நிற்கிற திருமலை மேலே
நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள என் ஸ்வாமி யானவனுக்குத்
தன் திரு மேனிக்கு இதுக்கும் ஒரு வாசி தோற்றாத படி பொருந்தி ஒரு கோவையாய்க் கொண்டு தோற்றா நின்றது –

கெட்டேன் -(ஆல் -இது என்ன பொருத்தம் என்றவாறு )
இது ஒரு சீலாதிசயம் இருக்கிற படியே -என்று ஆச்சர்யப் படுகிறார் –

———————————————————————————————————

(கச்சி வெக்காவில் கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – –
கச்சி வெஃகாவில் கிடந்து
கச்சி திருப்பாடகத்தில் இருந்து
கச்சி திரு ஊரகத்தில் நின்று

நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* 
அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* 
நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.)

பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

பதவுரை

இசைந்த–கடை கயிறாகக் கொள்வதற்குத் தகுதியான
அரவமும்–வாஸுகி நாகமும்
(இசைந்த)
மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான
வெற்பும்–மந்தர பர்வதமும்
(இசைந்த)
தாழியாக்குவதற்குத் தகுதியான
கடலும்–கடலும்
(ஆகிய இம்மூன்றையும்)
பசைந்து–ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி
அங்கு–அந்தக் கடலிலே
அமுது–அம்ருதமானது
படுப்ப–உண்டாம்படி
அசைந்து–அலைச்சல் பட்டு
கடைந்த வருத்தமோ–கடைந்ததனாலுண்டான ஆயாஸத்தினாலோ
கச்சி–காஞ்சீபுரத்திலுள்ள
வெஃகாவில்–திருவெஃகாவில்
கிடந்து–சயனித்துக் கொண்டும்
அங்கு–அக் காஞ்சீபுரத்தில் (திருப் பாடகத்தில்)
இருந்து–வீற்றிருந்தும் (திரு வூரகத்தில்)
நின்றதுவும்–நின்று கொண்டும் இருப்பது?

(இசைந்த அரவும்
இசைந்த வெற்பு
இசைந்த கடல் -பொருத்தமாக மூன்றும்)

இசைந்த வரவும் வெற்பும் கடலும்–கடலிலே ஒரு மலையை நட்டு -ஒரு பாம்பைக் சுற்றிக் கடையா நின்றால்
சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்றால் -இசைந்த -தன்னில் பொருந்தி இருந்தபடி –

(கீழ் சாதனா சாதக சேர்த்தியும் சேராச் சேர்த்தி
நரஸிம்ஹர் போல்
யானை குதிரை விஷம் மஹா லஷ்மி பாரிஜாதம் இத்யாதி வந்ததும் சேராச் சேர்த்தி
இவன் ஸங்கல்ப மகிமையால் பொருந்தியவை)

பசைந்தங்கு அமுது படுப்ப —-அதிலே அமிருதம் வரும்படிக்கு ஈடாகப் பசை கொடுத்து –
அசைந்து-கடைந்த வருத்தமோ-உலாவிக் கடைந்த வருத்தமோ

கச்சி வெக்காவில்-கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–திருக் கச்சியிலும் திரு வெஃகாவிலும்
கிடப்பது இருப்பது நிற்பது ஆகிறது தனியே கடலைக் கடைந்ததாலே திரு மேனியில் பிறந்த ஆயாசமோ –

(தனியே -இவனே செய்த செயல்
ப்ரயோஜனாந்தர பரர் சம்பந்தம் கூடாதே
தேவர்கள் அசுரர்கள் மந்தரம் வாசுகி அனைத்துக்கும் அந்தர்யாமி
ஒல்லை நானும் கடைவன் அங்கு மட்டும் அவள் ஸ்பர்சம் உத்தேஸ்யம்
புலவர் நெருக்கு உகக்கும் பெருமான்)

————————————————————————–

பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்

கடை கயிறாகக் கொள்ளுகைக்கு தகுதியான வாஸூகியும் –
மத்தாக நாட்டுகைக்குத் தகுதியான மந்த்ர பர்வதமும்
தாழி யாக்குகைக்குத் தகுதியான கடலுமான இம் மூன்றையும் கொண்டு -நீர் கோதாம் படி கலக்கி

அந்தக் கடலிலே அமிர்தம் உண்டாக்குகைக்காக அலைச்சல் பட்டுக் கடைந்த ஆயாசமோ –
திருக் கச்சியிலே திரு வெஃகாவிலே கண் வளர்ந்து -அந்த திருக் கச்சி தன்னிலே திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருந்து
திரு ஊரகத்திலே எழுந்து அருளி நின்றதுவும் –கடல் கடைந்த இளைப்பாலே நிற்பது இருப்பது கிடப்பதாகக் கொண்டு

இங்கனே நோவு படுகிறான் ஆகாதே -என்று வயிறு எறிகிறார் –

(சொன்ன வண்ணம் செய்த பிரான் யாதோத்தகாரி -வேகா சேது
பிரமன் சொன்ன வண்ணமும் திருமழிசைப்பிரானும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள்)

உத்சவம்-ஆயாஸம் தீர – விடாய் ஆற்ற -அதுக்கும் கூட்டம் உண்டே -அதே போல் இங்கும் அவனுக்கு ஆயாசம் -வயிறு பிடிக்கிறார்

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்,
வாளா கிடந்தருளும் வாய் திறவான், – நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை.
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே.–49

கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வசவோ அன்றே விப்
படிதான் நீண்டு தாவிய வசவோ பணியாயே –8-3-5-

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்ன யாள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே !!

அஜிதன் -பாற் கடல் கடைந்த பெருமாள்
ஹரி -கஜேந்திர மோக்ஷம் அளித்தவன்

—————————————————————————————————–

அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –

(அங்கற்கு-பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு-அங்கஜ -கடைக்குறை அங்க -அங்கு மகற்கு -அங்கனுக்கு -அங்கருக்கு என்றுமாம்
ப்ரஹ்மதுக்கு அங்கம் -ஆழ்வார் பிள்ளையாக ஸ்வீ காரம்-பள்ளியில் ஒதி வந்த தன் சிறுவன்
தன் மகனைக் காய்ந்து -போல் இங்கும் ஆழ்வாருக்கு அங்கன்-அங்கு மகற்கு -கடைக்குறை என்றுமாம் )

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரி யுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65–(கார் உருவம் பாட பேதம் )

பதவுரை

அங்கற்கு–பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு-அங்கஜன் -கடைக்குறை அங்க
இடர் இன்றி–ஒரு துன்பமும் வராதபடி
அந்தி பொழுதத்து–ஸாயங்காலத்தில்
இரணியனது–ஹரண்யனுடைய
ஆகத்தை–மார்வை-சிந்தையினால் இகழ்ந்தான் அன்றோ
மங்க–அழிந்து போம்படியாக
அரி உருவம் ஆய் பொங்கி–நரஸிம்ஹ ருபியாய்க் கிளர்ந்து
பிறந்த–கிழித்தொழிந்த
அம்மான் அவனே-அப் பெருமானே
காய்ந்து–சீறி
கரி உருவம்–கறுத்த வுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய
கொம்பு–தந்தத்தை
ஒசித்தான்–முறித்துப் போட்டான்-கோட்டுக்கால் கட்டில் நப்பின்னைக்கு

அங்கற்கு இடரின்றி — -பிள்ளை யுடைய விடாய் தீர —
அங்குக்கு இடர் இன்றி -என்ற பாடமாகில் -அவ் விடத்தில் விடாய் தீர –
அந்திப் பொழுதத்து-அஸூரர்க்கு பலம் வர்த்திக்கும் காலத்திலே
மங்க விரணியன தாகத்தை–ஹிரண்யனுடைய ஹிருதயமானது மங்கும் படிக்கு ஈடாக
பொங்கி-அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் -பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை -என்னும் படி –
அவனே கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து —அவனே குவலயா பீடத்தினுடைய கொம்பை ஓசித்தான் –
காய்ந்து –சீற்றம் இல்லாதவன் சீறி —

(பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-)

ஈஸ்வரன் செய்து அருளும் ஆனைத் தொழிலகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் -நஞ்சீயர்

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

—————————————————————————-

அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –

சிறு பிள்ளையான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு துக்கம் வாராத படி -அஸூரர்க்கு பலம் வர்த்திக்கும் படியான
சந்த்யா காலத்திலே ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய வர பலாதிகளாலே பூண் கட்டின மார்வை
உருத் தெரியாத படி அழிந்து போம்படி யாக பெரும் கிளர்த்தியை யுடையனாய்க் கொண்டு
நரசிம்ஹ ரூபியாய் இடந்து பொகட்ட சர்வேஸ்வரனான அவனே –
சீறிக் கொண்டு குவலயா பீடத்தின் யுடைய கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்டவன்

அங்கர் என்றது அங்கன் என்ற படியாய் பிள்ளை என்றபடி –
அன்றிக்கே —
சர்வகத்வாத் அநந்தஸ்ய ச ஏவாஹ(சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.)

அங்கு -அவ்விடத்து -என்று பிரித்து –
மகற்கு என்கிறதை தலைக் குறைத்தலாய்க் கிடக்கிறது என்னவுமாம்

ஹிரண்யனுடைய மகனுக்கு இடர் இல்லாத படி -என்று பொருளாகக் கடவது –

அங்கற்க் கிடர் -என்ற பாடமான போது
அவ்விடத்து இடர் இல்லாத படி என்று பொருளாகக் கடவது –

————————————————————————————————————-

உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே
இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் -(பையத் துயின்ற பரமன் அன்றோ )

தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

(மது ஸூ தனன் கைடபாரி திரு நாமங்கள் அவனுக்கு -கொழுப்பு இவர்கள் உருவம் -தொடையில் வைத்து முடித்தான்)

(திரு மெய்யம் -அகன்ற கர்ப்ப க்ருஹம் -ஆதி சேஷன் மூச்சு-ஜ்வாலை யுடன் ஓடுவதையும் சேவிக்கலாம்
மது ஸூதனன் கைடபாரி இவருக்கு திருநாமம்
ஆதிசேஷன் இவர் அங்கம் தானே -மூக்கு அரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் போல் இங்கும்
மாணிக்கம் ஒளி மூச்சு ஒலி-ஸ்பர்சம் -ஒளி பட்டு விஞ்சி இருக்கும்-தேஜஸே மேல் கட்டி விதானம் )

(அனுகூல புத்தியால் கிட்டினால் வாழலாம் -பிரதிகூல புத்தியால் கிட்டினால் வீழ்ந்தே போவார்கள்)

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு   ——-66-

பதவுரை

காய்ந்து–சீறி
இருளை மாற்றி–இருளைப் போக்கி
கதிர் இலகு–ஒளிவிடா நின்றுள்ள
மா மணிகள்–சிறந்த ரத்னங்கள்
ஏய்ந்த–பொருத்தி யிருக்கிற
பணம்–(தன்னுடைய) படங்களினுடைய
கதிர் மேல்–ஒளிக்கு மேலே (திருவனந்தாழ்வான்)
வெவ் வுயிர்ப்ப–பெரு மூச்சு விட,
வாய்ந்த–கிட்டின
மது கைடபரும்–மதுகைடபர்கள்
வயிறு உருகி மாண்டார்–குடலழுகி முடிந்து போனார்கள்
அவர்க்கு–அந்த மதுகைடபர்களைப் போலே பிரதிகூலராய் வருமவர்களுக்கு
ஆங்கு–அவ் வண்ணாமாகவே
அது இறுதி கேடு–அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்)

காய்ந்திருளை மாற்றிக் சீறி இருளைப் போக்கி –கதிரிலகு மா மணிகள்-ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-
ஒளி விடா நின்றுள்ள மணிகள் சேர்ந்த பணத்தில் யுண்டான தேஜஸ்ஸின் மேலே நெடு மூச்சு விட
வாய்ந்த-மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்–
கிட்டின மது கைடபர்கள் வயிறு உருகி முடிந் தார்கள்

அது கேடவர்கு இறுதி யாங்கு   —-என்றும்
என் பிள்ளைக்குத் தீமை செய்வார்கள் அங்கனம் ஆவர்களே-3-3-7

(அங்கு அது கேடு இங்கு -அங்கனம் ஆவார்கள் -அங்கு -எனக்கு நிம்மதி பெரு மூச்சு வந்தது என்கிறார்)

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -பெரியாழ்வார் -3- 3-7 –

——————————————————————–

தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

சஹாவஸ்தானம் இல்லாத மாத்திரம் இன்றிக்கே சீறிக் கொண்டு இருளைப் போக்கிக் கிரணங்கள் ஒளி விடா நின்றுள்ள
பெரு விலையனான ரத்தினங்கள் சேர்ந்து இருக்கிற தன்னுடைய பணங்களின் ஒளிக்கு மேலே திருவனந்த ஆழ்வான்
அனுபவ ஜெனித ஹர்ஷ பிரகர்ஷத்துக்குப் போக்கு விட்டு வெவ்விதாக உச்சவாச நிசுவாசங்களைப் பண்ண-
இவ்வளவிலே விரோதித்து வந்து கிட்டின மது கைடபர்களும் குடல் அழுகி முடிந்து விட்டார்கள் –

அனுகூலர்க்கு வாழவும் ஜீவிக்குமான அந்தக் கண் வளர்ந்து அருளுகிற ஸ்தலத்திலே பிரதிகூலித்து வந்து
கிட்டினவர்களுக்கு அந்தக் கிட்டினதுவே வாழ்வுக்கு பிரதி கோடியான கேடும்-

சத்தையோடு ஜீவிக்கைக்கு ப்ரதி கோடியுமான விநாசமுமாய் விட்டது –

(சத்தை-சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப லாபம்-வாழ்வு -சத்தை -இதுக்கு பிரதி கோடி- இறுதி கேடு )

(கிடந்ததோர் கிடக்கை -அரவின் அணை மிசை மேய மாயனார் -ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்)

(சுந்தர பாஹு ஸ்தவம் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -இரண்டிலும் மது கைடப நிரசன  விருத்தாந்தம் உண்டே)

—————————————————————————————————————

ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் -(கீழ் இரண்டு பாசுரங்களுக்கும் இதுக்கும் சங்கதி )

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

(கவி -நிகழ்வுகளை ஏற்றிச் சொல்வது போல் இங்கும்-தற் குறிப்பு ஏற்று அணி —
பெருமாள் -மிதிலா தேசம் நுழையும் போது ஒல்லை வா என அழைத்தனவே
கோவலன் நுழைய வராதே கொடிகள் அங்கு -இளங்கோ அடிகள் )

(உந்தித்  தாமாரை பரத்வம் ஜகத் காரணத்வம் பொதுவாக சொல்வர்
இங்கு அழகு சவுந்தர்யம்)

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  ——67-

பதவுரை

மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(ஆங்கை-கை ஆம்)
இடத் திருக் கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.-குவியும் ஆல் -ஆச்சர்யம் என்றுமாம்

(சம்பு காவியம் -வெங்கடாத்ரி கவி
ரமா ஹஸ்த–இத்யாதி
திரிசானு -தப்பு கண்ணில் படும்
விஷ்வாயுசு நல்லதே கண்ணில் படும்
நாபியில் கமலம் -பிராட்டியார் திருக்கையில் லீலா பத்மம்
தேன் சொட்டும் பிள்ளைக்கு-த்யுக முக சிசு -இரண்டு இரட்டை நான் முகன்)

மாலுந்தி வாய்-ஓங்கு கமலத்தின் ஓண் போது —திரு நாபீ கமலத்தில் ஓங்கி இருந்துள்ள அழகியதான தாமரைப் பூ
ஆங்கைத்-திகிரி சுடர் என்றும் –கையில் திரு வாழியை ஆதித்யன் என்றும்

வெண் சங்கம் வானில்-பகருமதி என்றும் பார்த்து–
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் விளங்கா நின்றுள்ள சந்திரன் என்றும் பார்த்து-அனுசந்தித்து –

ஆங்கு மலரும் குவியும்-ஆல்–
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது –

(வெள்ளை சரி சங்கோடு –சங்கோடு சக்கரம் பங்கயக் கண் -கண் தாமரை மலர்வதும் குவிவதும் சொல்வர்)

——————————————————————

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

திரு நாபீ கமலத்தில் உண்டாய் -உயர வளர்ந்த தாமரையினுடைய செவ்வி குன்றாத அழகிய பூவானது அவனுடைய
வலத் திருக் கையிலே உண்டான திரு வாழியை ஆதித்யன் என்றும் –
மற்றைத் திருக் கையிலே ஏந்தின வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
ஆகாசத்தில் வர்த்திக்கிற ஒளியையுடைய சந்திரன் என்றும்
உத் ப்ரேஷித்துக் கொண்டு -அக்காலத்திலே அலர்வது மொட்டிப்பதாக நிற்கும் –
இது ஓர் ஆச்சர்யம் இருக்கிற படியே என்று அனுபவிக்கிறார்

மாலுந்தி வாய் -என்ற போது
சர்வேஸ்வரனுடைய திரு நாபியில் என்றாகக் கடவது –

அங்கு -அந்தப் பொழுதில் -ஏக காலத்திலே என்றபடி –
வானிலே வர்த்திக்கிற ப்ரசித்தனான சந்திரன் -என்னவுமாம் –

(பகரும் மதி -ஒளி விடுபவன் என்றும் ப்ரஸித்தமாகப் பேசப்படும் என்றும்)

(பன்னக ஸார்வ பவ்மன் ந அஹம் -எனக்கும் தெரியாது-ரிஷிகளுக்கும் தெரியாது -குழந்தை ஜன்னி போல் உழன்று
ஸ்ரீ பத்ம நாபன் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறான் -தேசிகன்
இங்கு நாபி கமலம் மட்டுமே -இன்னும் பிரமன் உத்பத்தி இல்லை-திரு வாட்டாறு போல்)

———————————————————————————————————

இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –
திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்

(இங்குள்ள திர்யக்க்கின் தேஹ யாத்திரையும் உத்தேச்யம்-கீழ் மதியை கண்ணாடியாக கேட்டதையும் பார்த்தோம் )

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
களங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

பதவுரை

சுனை நீர்–திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த–கவிந்து பார்த்த
கடுவன்–குரங்கானது
நிழல் கண்டு–நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என–(தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து
பேர்ந்து–அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே)
கார்த்த களங்கனிக்கு கை நீட்டும்–கரிய களாப் பழத்தைப் பறித்துத் தா வென்று கை நீட்டப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடம் தான்
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
விள கனிக்கு–(அஸுராவேசங்கொண்ட) விளாம் பழங்கள் உதிர்வதற்காக
கன்று எறிந்தான்–வத்ஸாஸுரனை (எறி குணிலாகக் கொண்டு) வீசி யெறிந்த பெருமானுடைய
வெற்பு–திருமலை.

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு–சுனை நீரிலே கடுவானானது தன்னுடைய நிழலைக் கண்டு

பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -வேறே தனக்கு எதிரியான கடுவன் எனப் பேர்ந்து

கார்த்த–களங்கனிக்கிக் கை நீட்டும் -பின்னையும் தன்னுடைய சாபலத்தாலே அருகில்-களாப் பழத்தை அறுத்துத் தா என்றும் கை நீட்டா நிற்கும் -வேங்கடமே -திருமலை -(இது பண்டு கன்றைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்த கண்ணன் சேஷ்டிதத்துக்கு ஸ்மாரகம் )

மேனாள்-விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-பண்டு கன்றைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்தவனுடைய திருமலை –

(ஸூ ந்த்தர பாஹு ஸ்தவம்
பிரதி பார்த்து நரஸிம்ஹம் கொண்ட சீற்றம்
பக்த ப்ரகலாதனைக் கண்ட மயக்கம்)

(திருமலையில் கர்ப்ப க்ருஹம் -சீதா ராமர்
நர்த்தன கண்ணன் -சேவை உண்டே)

——————————————————————

இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –
திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்(உருவகம் அழகு அங்கும் இங்கும் )

கரையிலே களாவிலே நின்று சுனையின் நீரைப் பார்த்த கடுவானானது –
நீருக்கு உள்ளே தன்னுடைய நிழலைக் கண்டு
இது நம்முடைய நிழல் என்று புத்தி பண்ண மாட்டாதே –
தனக்கு எதிரியான வேறு ஒரு கடுவன் என்று பிரதி பத்தி பண்ணி
தன் கையின் சிவப்புக்குப் பகைத் தொடையான கறுத்த நிறத்தை யுடைத்தான காளாவின் பழத்துக்கு
தான் நிற்கிற களாவின் நிழல் என்று அறியாதே
வேறு ஒன்றாகக் கருதி அதின் பழமும் பெற வேணும் என்னும்
சாபலத்தாலே அத்தை அறுத்துத் தா என்று கை நீட்டா நிற்கும் –

வேங்கடமே -பண்டு ஒரு நாளில் விளாம்பழத்துக்கு கன்று எறிந்தவன் வர்த்திக்கிற திருமலை –
இதினுடைய முஃத்யம் (அறிவின்மை பிள்ளைத்தனம் )போலே யாய்த்து அவனுடைய முஃத்யம் இருக்கும் படி –

(கடுவன் ஆண் குரங்கு மந்தி பெண் குரங்கு)

(பகைத் தொடை-மாற்று நிறம் -இணைத் தொடை ஒரே நிறம்)

———————————————————————————————————-

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )

(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)

(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-

(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)

கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–

(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )

கற்பு என்று பாதி வ்ரத்யம் –

(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)

மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்

இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-

(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)

அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-

ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்

பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-

———————————————————————-

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(கடல் ஞானம் செய்தேனும் யானே என்னும் போல் அனுவதித்திக் கொண்டு பேசுகிறா)

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்காள் ஆகில்
திருமலையையே ப்ரீதி பிரேரிதையாய்ப் பேசா நிற்கும்

ஏதேனும் ஒரு பூவைச் சூட நினைத்தாள் ஆகில்
விஸ்மயமான திருத் துழாய் குல மரியாதைக்கு சேருவது ஓன்று என்று
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் -என்கிறபடியே
இருண்ட குழலின் மேலே சாதரமாகச் சூடா நிற்கும் –

மல்ல வர்க்கம் பொடி படும் படி வளர்ந்த திருத் தோள்களை யுடைய சர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளின
பரந்த திருப் பாற் கடலிலே நீராடுகைக்காக விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும்

வேறு ஒரு மலையில் பேர் சொல்லுதல் –
நாறு பூச் சூடுதல் –
வேறு ஒரு நீர் நிலைகளில் குளித்தல் செய்யாள்

பாடுகை சூடுகை முதலான லோக யாத்திரை அடங்கலும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கிற படி

(உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே –
வாஸூ தேவ ஸர்வம் -என்று இருக்கும் மஹாத்மா)

மால் கிடந்த -வியாமுக்தனானவன் பள்ளி கொண்டு அருளின என்னவுமாம் -(சர்வேஸ்வரனை என்றும் வ்யாமுக்தன் என்றும் மால்)

இங்கண் இன்றிக்கே கீழும் மேலும்
அந்யாபதேசம் அற்று இருக்க இது ஒன்றும் இப்படி கொள்கிறது என் என்று
பர உபதேசமாக நிர்வஹிப்பார்கள்

அப்போது அம்மலை இம்மலை என்று ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் பார்த்தீர்கள் ஆகில்
திரு மலையைப் பாடுங்கோள்
ஏதேனும் ஒரு பூச் சூட நினைத்தீர்கள் ஆகில் திருத் துழாயைச் சூடுங்கோள்
ஏதேனும் ஒரு நீர் நிலைகளில் புக்கு பிராதஸ் ஸ்நானம் பண்ணப் பார்த்தீர்கள் ஆகில்
அவன் சாய்ந்து அருளின கடலிலே நாள் தோறும் அவகாஹிக்கப் பாருங்கோள் என்று பொருளாகக் கடவது –

கற்பு என்று பாதி வ்ரத தர்மம் என்றுமாம் -(குல வரம்பு என்றும் )

——————————————————————————————————-

(இதிலும் திருமலையில் உள்ள களிறு செய்யும் கைங்கர்யம்
அர்க்யம் பாத்யம் ஆசமன்யம் செய்து புஷ்பம் சமர்ப்பித்து-

ஸ்ரீ கஜேந்திரன் போல் தொழும் காதல் களிறு இங்கு உள்ளவை எல்லாமே
இங்கு முதலை நீர் புழுக்களே இருக்காதே )

அனுகூலருடைய தேஹ யாத்திரையே எல்லாம் தனது ஸமாஸ்ரயணத்துக்கு உடலாகக் கொள்ளும்
அவன் எழுந்து அருளி இருக்கும் திருமலை
ஞான பக்திகள் எல்லாம் வேண்டாம் – இவையே யாகம் தவம் என்று கொள்ளும் அத்யந்த ஸுலப்யம்
ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே, ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்.-
உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளுகிறான்

ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன
அது வேண்டா
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

பதவுரை

களிறு–(திருமலையிலுள்ள) யானையானது
புகு மதத்தால் வாய் பூசி–மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற
மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆகமனம் பண்ணி
கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால்–மேலிருந்து கீழ் வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே
கால் கழுவி–கால்களை சுத்தி செய்து கொண்டு
கையால்–துதிக்கையால்
மிகு மதம் தேன்–மிகுந்த மதத்தை யுண்டு பண்ணக் கூடிய தேனை யுடையதும்
விண்ட–மலர்ந்ததுமான
மலர் கொண்டு–புஷ்பத்தைக் கொண்டு
விறல் வேங்கடவனையே–பெரு மிடுக்கனான திருமலை யப்பனையே
கண்டு வணங்கும்–ஸேவித்து வணங்குகின்றது.

புகு மதத்தால் வாய் பூசிக் —
வாயிலே புகுந்த மத ஜலத்தால் வாய் கழுவி

கீழ்த் தாழ்ந்து அருவி-உகு மதத்தால் கால் கழுவிக் —
கீழே தாழ்ந்த அருவி போலே உகா நின்ற மத ஜலத்தாலே கால் கழுவி

கையால் -மிகு மதத்தேன்-விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கையாலே மிக்க மதத்தை யுடைத்தாய் -அலரா நின்ற பூவைக் கொண்டு களிறு ஆனது

விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு —
விறல் வேங்கடவனையே-என்று திருமலையிலே திர்யக்குகளும் தன்னை வணங்கும்படி
ஞானத்தை கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது -(ததாமி புத்தி யோகம் )

ஞான கார்யமான ஸமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ணி வைக்கும் –

(தேசோயம் ஸர்வ காம துக் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-அவனே இது மூலம் அருளுகிறான் )

(ஊரிலேன் காணி இலேன் -பாரிலேன் பற்றிலேன் -திவ்ய தேச வாஸம் இல்லா விடில் பற்று சமாஸ்ரயணம் பண்ண மாட்டோமே)

(அளித்த யானை கஜேந்திரன் -அழித்த யானை குவலயா பீடம்
நாகம் –பிரணார்த்தம் -ந அஹம் -இந்த உடலை ரக்ஷிக்க நான் உன்னை அழைக்க வில்லை
கரஸ்த கமலான் -ஸமர்ப்பிக்கவே கூப்பிட்டேன் -தொழும் காதல் களிறு அளிப்பான் தோன்றினையே)

(அசேஷ ஜககதித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி
அத்யர்த்தப்பிரிய -தத் பிராப்தி பல-ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்

(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னுட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)

——————————————————————

ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன
அது வேண்டா
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –

மஸ்தக ஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றின் நின்றும் பாய்ந்து வாயிலே புகுகிற மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து
ஆசமனம் பண்ணி கீழே தாழ்ந்து அருவிகள் போலே வந்து விழுகிற மத ஜலத்தாலே காலைக் கழுவி துதிக்கையாலே

மிக்க மதத்தைப் பண்ணிக் கடவ தேனை யுடைத்தாய்
அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களை பொய்க்கைகளிலே புக்குப் பறித்துக் கொண்டு

சாஸ்திர வஸ்யம் அல்லாத திர்யக்குகளும் ஸ்வ விஷயத்தில் ஞான ப்ரேமங்களை விளைக்க வல்ல
பெரு மிடுக்கனான திருவேங்கடம் மேய எந்தையைக் கண்டு தலையார வணங்கி ஆஸ்ரியியா நிற்கும்
அங்குண்டான ஆனையானது –

மதம் என்று கந்தமாய் மிக்க கந்தத்தையும் தேனையும் யுடைய செவ்விப் பூக்களைக் கொண்டு என்னவுமாம் –

——————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –