(கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்,
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான்,-சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை,
என் நினைந்து போக்குவர் இப் போது.– இப்போது சம்சாரிகளைப் பார்த்து ஆழ்வார்கள்
நினைக்க விரகு கேட்டால் -ஆழ்வார்கள் மறக்க விரகு இல்லையே என்பார்களே-
மறக்கவே முடியாதே –மறக்க விரகு குருகை காவல் அப்பன் அருளிய வார்த்தை –
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –-இது அன்றோ எத்திறம் என்னப் பண்ணும் )
கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே
நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று கொண்டாடினார் –
விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது –
நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு –—–81-
பதவுரை
என் நெஞ்சமே–எனது மனமே!,-எனக்கு வசப்பட்ட நெஞ்சமே
நெஞ்சால் நினைப்பு அரியன் எலும்–(எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை
வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து)
நிலைப் பெற்று–காலூன்றி நின்று
பேசாய்–அவனைப் பேசப் பார்
நினைக்குங் கால்–நாம் ஒருகால் நினைத்தாலும்
நெஞ்சத்து–நெஞ்சு தன்னிலே
பேராது நிற்கும்-விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கின்ற
பெருமானை–எம்பெருமானை
உணர்வு–நமது நெஞ்சானது
ஓராது நிற்பது என்கொலோ–அநுஸந்தியாமல் வாளா விருப்பது ஏனோ?
நெஞ்சால் நினைப்பரியனேலும் —
நெஞ்சமே உன்னால் நினைக்கப் போகாதது ஆகிலும் –
நிலைப் பெற்றேன்- நெஞ்சமே பேசாய்–
நிலை பெற்று என் நெஞ்சமே பேசாய் –
ஐஸ்வர்யம் கன்று பிற்காலியாதே அனுபவியாய் –
நினைக்கும் கால் -நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை –
ஒரு கால் நினைக்கில் நாக்குண்டா நா எழா என்ற நெஞ்சு விட்டுப் போக அறியாத சர்வேஸ்வரனை –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் -என்கிறபடியே
(நாக்குண்டா நா எழா-நெஞ்சுக்கு நாக்கு உண்டோ இருந்தால் பேசாமல் இருப்பதோ)
என் கொலோ- ஓராது நிற்பது உணர்வு —–
அவனை நினையாதே மணலை முக்கப் பார்க்கிறதோ
அவனை நினையாதே தான் உண்டாம் படி எங்கனே –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு —
பேர் உந்தி எண் 26 வந்ததா சொன்னாலும் வந்து நிற்கும் பித்தன் அன்றோ)
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு —(முதல் திருவந்தாதி-67- ஞானம் த்வாரமே மனஸ் நெஞ்சு தானே -)
—————————————————————————-
(சம்சாரிகள் நெஞ்சு போலே அந்ய பரராய் இருக்கச் செய்தே
என் நெஞ்சு ப்ரவணராய் என்று கீழ் கொண்டாடினவாறே
விஷய வை லக்ஷண்யம் பார்த்த வாறே இதில் முதல் அடி இட்டதாகவே இல்லை
அவன் துர் ஜேயம் -என்றாவது அநு சந்திக்கப் பார்(அறிவுக்கு அப்பால் பட்டவன் என்றாவது புலம்பி அனுசந்திக்கலாமே )
(மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2– -கட்டுப்படாதவன்-அளவிட முடியாதவன்
திரு உள்ளத்தில் -இப்படி இருக்க நினையாமல் இருப்பது என் என்று தனக்கே அனுசந்தானம்)
பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான மனஸ்ஸாலே பரிச்சேதித்து நினைக்க ஒண்ணாத
பெருமையை யுடையனாய் இருந்தானேயாகிலும்
அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே
ஆஸ்ரித ஸூலபன் என்று அனுசந்தித்து காலூன்றி தரித்து நின்று
எனக்கு பவ்யமான நெஞ்சே –
அவனைப் பேசப் பாராய் –
இப்படிச் சொன்ன இடத்திலும் திரு உள்ளம் மெத்தென்று (ஈடுபடாமல் )இருந்தவாறே-
தனக்குப் பாங்கான சமயத்திலே இவன் ஒரு கால் நினைத்துக் கை வாங்கினால்
பின்னை எப்போதும் நெஞ்சு விட்டுப் போக மாட்டாமே நித்ய வாசம் பண்ணும் சர்வேஸ்வரனை
அறிவுக்கு வாய்த்தலையான மனஸ்ஸானது அநுஸந்தியாதே இருக்கிறது என்னோ
வேறே சில துராராத தேவதைகளை பற்ற இருக்கிறதோ –
சப்தாதி விஷயங்களை பற்ற இருக்கிறதோ
இந்த மனஸ் ஸூ எத்தை நினைத்து அவனை நினையாது இருக்கிறது -என்று
ஸ்வ கதமாக அனுசந்தித்தார் யாய்த்து –
ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –
தான் ஏற நாள் பார்த்து இருக்கும் )
————————————————————————————————————–
(மனசை நொந்து கொள்வது எதனால்
நித்ய ஸூரிகளும் அன்றோ முழுவதுமாக உணர முடியாமல் உள்ளார்கள்
நினைக்காமல் விடவும் முடியாது
அவனே உள்ளே வந்து புகுந்தாலும் வஸ்து ஸ்வ பாவம் அறிவுக்கு அப்பால் பட்டே இருக்குமே
நினைந்து முழுவதும் அறிய முடியாது என்கிறார்)
(இனியவன்-அடுத்த பாசுரத்தில் மூன்று தடவை இப்பத பிரயோகம் உண்டே
மிக்க இனியவனாய் இருக்க இனி அவனைக் கிட்ட விரகு உண்டோ
மிக்க இனியவனாய் இருக்க இனி அவனை விடவும் விரகு உண்டோ)
(நம சகண்ட-அகண்ட – -பிரித்து எனக்கு நான் அல்லன் -நமஸ்காரம் போல் இங்கும்-இனியவன்-இனி யவன்)
இம் மனசை இன்னாதாகிறது என் –
ஒருவருக்கும் ஒரு வகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய்
நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு
இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத்
தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –
உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-
பதவுரை
உணரில்–(அப்பெருமானை நாமாக) அறியப் பார்த்தாலும்
உணர்வு அரியன்–(அவன்) அறியக் கூடாதவன்
உள்ளம் புகுந்து புணரிலும்–(அவன் தானே)நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும்
உண்மை காண்பு அரியன்–உள்ளபடி அறியக் கூடாதவன்-வஸ்து ஸ்வ பாவம் தன்மையே அறிவுக்கு அரியனாய் இருக்கை அன்றோ
இனி–இப்படியான பின்பு
இணர் அணைய–பூங்கொத்துகள் தாழும்படியாக
கொங்கு–தேனிலே
வண்டு–வண்டுகள்
அணைந்து–வந்து கிட்டி (மதுவைப் பருகி)
அறையும்–ரீங்காரம் செய்யப் பெற்ற
தண்–குளிர்ந்த
துழாய்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை–அப் பெருமானை-இது அன்றோ அசாதாரண சிஹ்னம் ஸர்வேஸ்வரனுக்கு
எங்கு–எவ்விடத்தில்
அணைந்து–கிட்டி
காண்டும்–காணக் கடவோம்.
உணரில் உணர்வரியன் —
தன்னாலும் அறியப் போகாது –
இவனால் அறியப் போகாது –
தனக்கும் தன் தன்மை அறிவரியானை-(8-4-6)
ஸ்வ யத்னத்தால் காண்பார்க்குக் காணப் போகாது
உள்ளம் புகுந்து-புணரிலும் காண்பரியன் உண்மை –
தானே வந்து ஹிருதயத்திலே புணர்ந்தானே யாகிலும் அவனுடைய உண்மை அறியப் போகாது
இணரணையக்-கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை-எங்கணைந்து காண்டும் இனி —
காண அரியன் என்று கை வாங்கப் போகாது என்கிறது –
பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக -மதுவைப் பானம் பண்ணின
வண்டுகள் சப்தியா நின்ற திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை
எங்கே கிட்டிக் காண்போம் இனி –
எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத் தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-
தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே–5-2-1-
(இவ்வளவு பெருமை உள்ளவர் வந்தார் என்று மயங்கவே முடியும்
பிரசாத பரமவ் நாத மம கேஹம் உபாகதவ்- என்று மயங்கலாம்-எத்திறம் -என்னப் பண்ணுமே
விதுரர் மயங்கி வாழைப்பழம் தோல் கொடுத்தது போல் )
————————————————————————–
இம் மனசை இன்னாதாகிறது என் –
ஒருவருக்கும் ஒரு வகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய்
நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு
இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத்
தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –
யாரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தால் அறியப் பார்க்கும் அளவில் அறிவரியனாய் இருப்பான் ஒருவன்
இவ் வருமை தீர அவன் தானே வந்து ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்தானே யாகிலும் இவ்வளவு என்று
பரிச்சேதித்துக் காண்கைக்கு அரியனாய் இருப்பான் ஒருவன் –
இது பரமார்த்தம் -இப் படியான பின்பு
பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக தேனில் வண்டுகள் வந்து கிட்டி
அத்தை கழுத்தே கட்டளையாகப் பருகிச் செருக்கி
அதுக்கு போக்கு விட்டு சப்தியா நின்றுள்ள குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனை
எங்கே கிட்டுக் காணக் கடவோம்
காண்பரியன் உண்மை -என்றான போது
ஒருவருக்கும் இவ்வளவு என்று அளவிட்டுக் காண அரிதான
வைலக்ஷண்யத்தை யுடையவன் என்று பொருளாகக் கடவது –
இணர் -பூங்கொத்து-
(திருத்துழாய் அணிந்ததால் கோமான் -சர்வேஸ்வரத்வ ஸூ சகம் -அவனுக்கே அசாதாரணம் என்றவாறு)
——————————————————————————————————–
(மூன்று இனியவன் -இனி அவன் இதில்
கிடைத்தவனை அனுபவிக்கலாம்
முழுவதும் அறிய வேண்டியது இல்லையே
விட்டுடவும் முடியாது
உன்னால் கிட்டு ஆரம்பிக்கவும் முடியாது
அவனே வந்த மஹா பாக்யம் கிட்டிய பின் அனுபவிப்பதில் என்ன குறை)
(மகா பலி போல் ஈஸ்வரோஹம் என்று இருந்தாலும் நாம் அறியாத படி உளன்
அவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்தவன் அன்று
இனி உள்ளத்தில் இருக்க அனுபவிக்கலாம்
ஸம்பந்தம் -பந்தம் கிட்டும் -பிரகிருதி போல் -தேஹ சம்பந்தம்
அவன் ஸம்பந்தம் உணர்ந்து இனிமையில் மூழ்கலாமே)
இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் –
அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம்
என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –
இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-
பதவுரை
இனி–இப்போது
அவன்–‘அந்த ஸர்வேச்வரன்
மாயன்–மாயக்காரன்‘-ஆச்சர்ய பூதன்
என–என்று
உரைப்பர் ஏலும்–சொல்லுவார்களே யாகிலும்,
இனி–இப்போது
அவன்–அப்பெருமான்
காண்பு அரியன் ஏலும்–கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்
கள்ளத்தால்–க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)
மண் கொண்டு–பூமி தானம் வாங்கி
விண் கடந்த பை கழலான் அவன்–ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்-பை -பரந்த
இனி–இப்போது
உள்ளத்தின் உள்ளே உள்ள–எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான்
(இந்த பரம லாபமே போது மென்கை)
இனியவன் மாயன் என வுரைப்பரேலும்–
வர்த்தமான தசையில் -பிரக்ருதியில் சம்பந்தித்து
மம மாயா துரத்யயா–(7-14)என்னும் படி காண அரியன் ஆகிலும்(பகவத் ஸ்வரூப திரோதானம் தானே பிரகிருதி )
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்-கள்ளத்தால் மண் கொண்டு
விண் கடந்த பைங்கழலான்-உள்ளத்தின் உள்ளே உளன் —
நெஞ்சுக்கு இனியனுமாய்த்
தன்னுடைமையை மஹா பலி பக்கலிலே வஞ்சித்தானாய்க் கொண்டு
அளந்தவன் ஹிருதயத்திலே நின்று மறக்க ஒட்டான்–
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷
என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்
——————————————————————
இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் –
அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம்
என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –
பகவத் ஸுலப்யத்தின் ஏற்றம் அறியாத வாய் கரையர் ஆனவர்கள்
இப்போது அந்த சர்வேஸ்வரன் ஒருவராலும் அறிய அரிய ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்கள் யாகிலும் –
இப்போது அவன் ஒருவராலும் கண்டு அனுபவிக்கைக்கு அரியனாய் இருந்தானே யாகிலும் –
ஈஸ்வரன் என்று தெரியாதபடி க்ருத்ரித்மத்தாலே
மஹா பலி பக்கலிலே பூமியை நீர்ஏற்று வாங்குவாரைப் போலே அபஹரித்துக் கொண்டு
ஆகாசாதிகளான லோகங்களை அநாயாசேன அளந்து கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அவன் –
இப்போது பட்டது பட -என் ஹிருதயத்தினுள்ளே ஸ்தாலாந்தரம் அறியாத படி சந்நிஹிதனாய் இரா நின்றான் –
இவ்வம்சத்தை (இந்த அம்சத்தை )ஒருவராலும் இல்லை செய்ய ஒண்ணாது இறே -என்கை –
(பொருந்தாதவற்றைப் பொருந்த விடும் -அழகியான தானே அரி யுருவம் தானே )
(வாய் கரையர் ஆனவர்கள்-கடலை கடல் கரையில் நின்று பார்ப்பது போல் -பரத்வம் மட்டும் காணும் ரிஷிகள்
ஸுலப்யம் காணும் ஆழ்வார்கள் தானே ஆழ்ந்து கண்டு அனுபவித்து
அது வழிந்து அருளிச் செயல்கள் அருளினார்கள்
அந்த ஸுலப்யம் பயன் படுத்த நாம் அறிய வேண்டுமே)
இனி -என்று -இப்போது -என்றபடி –
அன்றிக்கே
இனியவன் என்று ஒரே சொல்லாய்
அனுசந்திப்பார்க்கு நிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –
மாயன் -என்றது
மம மாயா துரத்யயா -என்கிறபடியே
தன்னுடையதான ப்ரக்ருதியாலே பந்தித்து இவர்களுக்கு காண அரியனாய் இருக்குமவன் -என்றுமாம் –
பைங்கழலான் -என்று அழகிய திருவடிகளை யுடையவன் என்றுமாம் –
(விரிந்து பரந்த திருவடிகள் கீழே பார்த்தோம்)
(அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-)
———————————————————————————————————–
வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –
உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-
பதவுரை
நால் மறையின்–நான்கு வேதங்களினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளாக
உளனாயவனை–இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து–(ஜ்ஞாந யோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக–நெஞ்சிலே பொருந்தி யிருப்பவனாக
உணர்வர் ஏலும்–(சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும்,
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப் போன்ற
நெடு கண்–நீண்ட தீருக் கண்களை யுடைய
மாயவன்–ஆச்சர்ய பூதனாக
உளனாமவனை–இருக்கின்ற அப்பெருமானை
கண்டார் யாவரே–கண்டு அநுபவிக்கப் பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை)
கவி உகப்பர்–தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக் கொண்டு போது போக்குவர்களத்தனை.-நா படைத்த பயன் பெற்று சத்தை பெறுவார்கள்
உளனாய நான் மறையினுள் பொருளை —
நிர் தோஷ பிராமண சித்தன் ஆகையால் தான் உளனாய் –
வேதத்தாலே பிரதிபாதிக்கப் பட்டவனை(உளன் -வஸ்து ஸத் பாவம் )
உள்ளத்து-உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்–
கர்ம யோகத்தாலே ஞான யோகம் கை வந்து -ஞான யோகத்தாலே காண ஆசைப் பட்டாரே யாகிலும்
உளனாய-வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே கண்டார் கவி ———–
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்று
ஸ்ருதி ப்ரஸித்தமான கண் அழகை யுடைய சர்வேஸ்வரனை ஆர் காண வல்லார் –
(ஏக தேசம் கண்ணின் அழகையே அறியாமல் இருக்க ஸ்வரூப ரூப குண விபூதியை முழுவதுமாக அறிந்து இருப்பார் யாரும் இல்லை)
உகப்பார் கவி –
பின்னைக் காணும் படி எங்கனே என்னில்
அவனுடைய ஸ்தோத்ரத்தை உகக்கும் அத்தனை –
—————————————————————————
வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –
ருக்காதி பேதத்தாலே நாலு வகைப்பட்ட வேதத்தில் பூர்வ பாக ஸித்தமான கர்மாதிகள் போல் அன்றிக்கே
உபநிஷத் பாக ஸித்தமான ரஹஸ்யார்த்த பூதனாய்க் கொண்டு
உளனாய் இருக்கிறவனை –
கர்ம யோக ஸித்தமான ஞான யோகத்தாலே யதாவாக ஆராய்ந்து
ஹ்ருதயத்தில் சந்நிஹிதனாகப் பரிச்சேதித்து அறிந்தார்களே யாகிலும்
(காண ஆசைப்படுவபவர்கள் பெரியவாச்சான்பிள்ளை -இங்கு அறிந்தவர்களே ஆகிலும்)
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்கிறபடியே
அழகிய தாமரைப் பூ போலே நீண்ட திருக் கண்களை யுடைய
ஆச்சர்ய பூதனாய்க் கொண்டு உளனானவனை யார் தான் கண்டு அனுபவிக்கப் பெற்றார்
கண்டாராகச் சொல்லுகிறவர்களும் இவ்விஷயத்தில் கிஞ்சித் கரித்தோமாக வேணும் என்னும் ஆசையினால்
கவியை உகந்தார்கள் அத்தனை அல்லது உள்ளபடி காணப் பெற்றார்களோ என்று கருத்து –
(பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்று சொல்லும் படி அன்றோ)
—————————————————————————————————————–
ஒருத்தரால் அறியப் போகாதாகில் –
வாழ்த்துவர் பலராக என்னும் படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினாலும்
அறியவும்
ஏத்தவும் போமோ -என்னில்
ஒண்ணாது என்கிறார் –
நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே
பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும்
அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –
(யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-)
(குண ஏக தேசம் கூட ப்ரஹ்மாதிகளுமே ஒரு முகமாக பேசினாலும் சொல்லவே முடியாதே -ஸ்ரீ வராஹ புராணம்)
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-
பதவுரை
கவியினார்–தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க் கொண்டு
கை புனைந்து–அஜ்ஞலி பண்ணி
கண்–தமது கண்கள்
ஆர் கழல் போய்–(அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சேரப் பெற்று
செவியின் ஆர் கேள்வியர் ஆய்–காது நிறைந்த கேள்விகளை யுடையராய்க் கொண்டு
சேர்ந்தார்–வந்து பணிந்தவர்களான
புவியினார்–பூமியிலுள்ளா ரெல்லாரும்
போற்றி உரைக்க–(ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும்,
பின்னைக்காய் ஏறு உயிரை அட்டான் எழில் பொலியுமே–நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த
பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ?
கவியினார் கை புனைந்து-
ஸ்தோத்ரத்தால் அபிமான ஸூன்யராய்த் தொழுது –
கண்ணார் கழல் போய்ச்-
கண் விலக்ஷணமான திருவடிகளை அடைந்து –
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் -புவியினார்–
செவி நிறைந்த கேள்வியை யுடையராய்ச் சேர்ந்தாரான பூமியில் உள்ளார் எல்லாம் –
போற்றி யுரைக்கப் பொலியுமே —–
எல்லாரும் கூடிப் போற்றி உரையா நின்றால் அங்குத்தைக்கு ஏதேனும் அதிசயத்தைப் பண்ணப் போமோ –
பின்னைக்காக-ஏற்று யிரை யட்டான் எழில்–
நப் பின்னை பிராட்டி கலவிக்கு பிரதிபந்தகமான வ்ருஷபங்களை அடர்த்த
ஒரு செயலையும்
நடுவு அழகையும்
முடிவாகச் சொல்லப் போமோ –
——————————————————————-
நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே
பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும்
அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –
நப்பின்னைப் பிராட்டிக்கு பர தந்திரனாய்க் கொண்டு
தத் சம்ஸ்லேஷ பிரதிபந்தகமான ரிஷபங்களுடைய ப்ராணன்களை முடித்து
பொகட்டவனுடைய மணக் கோலமும் –
ஏறு தழுவின ஒரு செயலும்
வாயாலே சொன்ன கவியோடே கூடிக் கொண்டு –
கையாலே அஞ்சலியைப் பண்ணி –
கண்களானவை அழகு நிறைந்துள்ள திருவடிகளிலே சென்று கிட்டி -(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் விடாத்திய திண்மை )
செவியில் நிறையும்படியான அவன் கல்யாண குணங்களில் கேள்வியை யுடைய ராய்க் கொண்டு
கிட்டினாரான பூமியில் உள்ளார் எல்லாம் மங்கள வாசகமான சப்தங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி
அவர்கள் புகழப் புகழ மேன் மேல் என சம்ருத்தமாம் அத்தனை போக்கிச்
சிறிது வரையிட்டுக் காட்டுமோ-
இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ என்றுமாம் –
—————————————————————————————————————–
ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது –
உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –
அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும்
அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு
மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்
(மேகத்தை சிக்ஷித்து-எழில் கொண்ட ஒவ்வொன்றிலும் அன்வயம் -நீல தோயதா மத்யஸ்தா -இத்யாதி போல்)
எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார் வானம் காட்டும் கலந்து ——-86-
பதவுரை
எழில் கொண்ட–அழகை யுடைத்தாய்
நீர்–நீர் நிறைந்ததான
மேகம் தான்–மேகமானது
எழில் கொண்ட மின் கொடி எடுத்து–அழகிய மின்னற்கொடி படரப் பெற்று
வேகம் தொழில் கொண்டு–வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப் பெற்ற
முழங்கி தோன்றும்–கர்ஜித்துக் கொண்டு விளங்குதற்கிடமான
கார் வானம்–கார் காலத்து ஆகாசமானது
அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும்–அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திரு நிறத்தை அநுகரித்திரா நின்றது.
எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து —
எழிலை யுடைத்தான மின்னைக் கொடியாக எடுத்து
(மின்னலைத் தன்னுள் கொண்டு என்றும் கொடியாகக் கொண்டு என்றும்)
வேகத்-தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் –
வேகத்தை யுடைத்தான தொழிலைக் கொண்டு தானே முழங்கித் தோன்றா நின்ற கார் வானம்
எழில் கொண்ட-நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக் கார்வானம் காட்டும் கலந்து —–
ஆகளமாக நீரைப் பானம் பண்ணின காள மேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரன்
உடைய நிறம் போலே –கார் காலத்திலே மேகமானது கலந்து காட்டும் –
——————————————————————————
அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும்
அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு
மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்
(கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரை கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாம் காள் !
காட்டேன் மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே –9-5-7-ஸ்மாரக பதார்த்தம்)
அழகை யுடைத்தாய் கொண்டு மின்னை த்வஜமாகத் தரித்து
வேகமாகிற வியாபாரத்தை உடைத்தாய்க் கொண்டு தான்
மிகவும் கோஷித்துக் கொண்டு தோற்றுகிற கார் காலத்திலே மேகமானது
கண் மாற வைக்க ஒண்ணாத அழகை யுடைத்தாய்
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின காளமேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரனுடைய
நிறம் போலே சேர்ந்து பிரகாசியா நிற்கும்
எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து -என்று பாடமான போது
அழகை யுடைத்தாய் இருக்கிற கார் வானம் என்று மேகத்துக்கு விசேஷணமாகக் கடவது –
(உடுத்து -தரித்து என்றும் பாட பேதம்)
——————————————————————————————————
பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்
அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்
கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனி மலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின் வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-
பதவுரை
மணி கலந்து–ஸ்ரீகௌஸ்துப மணியோடு கூடி
இமைக்கும்–விளங்கா நின்ற
கண்ணா–கண்ண பிரானே!
மரதகம்–மரதக ரத்னமானது
மலர்ந்து–ஒளிப் பரப்பை யுடைத்தாய்க் கொண்டு
நின் மேனி காட்டும்–உனது திருமேனியை ஒத்திரா நின்றது,
நலம் திகழும்–அழகாக விளங்குகின்ற
கொந்தின் வாய்–கொத்துகளிலே
வண்டு அறையும்–வண்டுகள் ரீங்காரம் செய்யப் பெற்ற
தண் துழாய்–திருத் துழாய் மாலை யணிந்த
கோமானை–ஸர்வேஸ்வரனாகிய உன்னை
அந்தி வான் அது காட்டும்–ஸந்தியா காலத்து ஆகாசமானது ஒத்திரா நின்றது.
கலந்து மணியிமைக்கும் கண்ணா–நின்-மேனி மலர்ந்து மரகதமே காட்டும் —
ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற
உன்னுடைய திரு மேனியை –பிரகாசியா நின்ற ஸ்ரமஹரமான மரகதமே காட்டா நின்றது –
நலந்திகழும்-கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை-அந்தி வான் காட்டுமது —
அழகு நிகழா நின்ற கொத்திலே வண்டு அறையா நின்ற திருத் துழாயை யுடைய
சர்வேஸ்வரனை சந்த்யா ராகத்தாலே சிவந்த மேகம் காட்டா நின்றது –
————————————————————————-
அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்
ஆஸ்ரித ஸூலபனானவனே-ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற
உன்னுடைய திருமேனியை -ஸ்ரமஹரமான மரகத ரத்னமானது விஸ்திருதமான பிரபையை யுடைத்தாய் கொண்டு
ஸ்பஷ்டமாக பிரகாசிப்பியா நின்றது
அழகு விளங்கா நின்றுள்ள கொத்துக்களிலே படிந்து மது பானம் பண்ணின வண்டுகள் சப்தியா நின்றுள்ள
குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனான
உன்னை சந்த்யா ராகத்தை யுடைத்தான அந்த ஆகாசமானது பிரகாசிப்பியா நின்றது
திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்தி வான் காட்டும் என்றபடி –
அது போல் காட்டும் என்னவுமாம் –
—————————————————————————————————————
உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் –
இதர விஷயங்களில் உள் மனம் புற மானங்களை ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ ஸமாஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-
பதவுரை
அது நன்று இது தீது என்று ஐயம் படாதே–‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்
மது நின்ற தன் துழாய் மார்வன்–தேன் நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய
பொது நின்ற–ஸர்வ ஜந ஸாதாரணமான
பொன் அம் கழலே–விரும்பத் தக்க அழகிய திருவடிகளையே
தொழுமின்–தொழுங்கோள், (அப்படி தொழுதால்)
முன்னம்–முந்துறவே
முழு வினைகள்–ஸமஸ்த பாபங்களும்
முடிந்து–உரு மாய்ந்து
கழலும்–விட்டு நீங்கும்.
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே–
பகவத் ப்ராவண்யம் நன்று விஷய ப்ராவண்யம் பொல்லாது என்று சம்சயப் படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன்–பொது நின்ற-பொன்னங்கழலே தொழுமின் –
சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாயை யுடையவனுடைய
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்
முழு வினைகள்-முன்னம் கழலும் முடிந்து ——
நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும் –
——————————————————————————-
இதர விஷயங்களில் உள் மனம் புற மானங்களை ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ ஸமாஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –
சாஸ்திர ஸித்தமான பகவத் விஷயம் நல்லது –
ப்ரத்யக்ஷ ஸித்தமான இதர விஷயங்கள் சாலப் பொல்லாதது -என்னும்
இவ் வர்த்தத்தில் சம்சயப்படாதே —
ஐஸ்வர்ய பிரகாசமாய் தேன் நிறைந்து இருக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமான
திரு மார்வை யுடையவனுடைய
சர்வ ஆஸ்ரித சாதாரணமாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் இருந்துள்ள திருவடியை ஆஸ்ரயியுங்கோள்
ஆஸ்ரயண விரோதிகளான ஸமஸ்த பாபங்களும் வியாக்த்யந்தரங்களில் கார்யகரம் ஆகமாட்டாத படி நசித்து
தொழுவதாக ஒருப்பட்ட அளவிலே விட்டு நீங்கும் –
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே என்று
அனுபூதமான விஷயம் நல்லது இப்போது அனுபவிக்கிற விஷயம் பொல்லாது என்று
இதர விஷயங்களில் உள்மானம் புறமானங்களைப் பார்த்து சம்சயியாதே என்னவுமாம் –
(தேவா நாம்-தானவானாம் -ஜிதந்தா ஸ்தோத்ரம்)
(பகவத் விஷயம் தான் நன்று உலக விஷயம் தீது என்று இருப்பதில் ஐயம் இல்லாமல் உறுதியாக விச்வாஸம் கொள்ள வேண்டும் என்கிறார் -)
(சர்வ லோக சரண்யாயா ராகவாயா மஹாத்மனே -எளிமை மேன்மை சேர்ந்த-ராவணனும் பற்றும்படி
பொது நின்ற பொன் அம் கழல்
சாமான்யம் அதி தெய்வதம்
உறுதியாக பற்ற வேண்டுமே)
—————————————————————————————————
திருமலையிலே குறவரோடு -திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கிறபடி –
இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –
(ப்ரத்யக்ஷ தெய்வம் திருமலை அப்பன் இருக்க விஸ்வஸிக்க குறை இல்லையே)
(ஆச்சார்யர்கள் திருக் கோயில் பிரதக்ஷணம் மெள்ள மெள்ள அனைத்தையும் அனுபவித்து செல்வார்களே)
முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-
பதவுரை
முடிந்த பொழுதில் குற வாணர்–மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள்
ஏனம் படிந்து உழு சால்–காட்டுப் பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர் பறிந்து விழும்படி) படிந்து உழுத சால்களிலே
பை தினைகள் வித்த–புதிய தினை விதைகளை விதைக்க
தடிந்து–அறுத்துப் போட்ட பின்பும்
எழுந்த–(நில வளத்தினால்) ஓங்கி வளர்ந்த
வேய்ங்கழை–மூங்கில் தடிகளானவை
போய்–மேலே சென்று
விண் திறக்கும்–ஆகாசத்தை யளாவப் பெற்ற
வேங்கடம்–திருவேங்கடம்
மேல் ஒரு நாள்–முன்பொரு நாள்
தீம் குழல்–மதுரமான புல்லாங்குழலை
வாய் வைத்தான்–திருப் பவளத்தில் வைத்து ஊதின கண்ண பிரானுடைய
சிலம்பு–திருமலையாம்.
முடிந்த பொழுதில் குறவாணர் —
சரம அவஸ்தையில் வர்த்திக்கிற குறவர்க்கு நிர்வாஹகர் -(சாயம் காலம் என்றுமாம்)
ஏனம்-படிந்துழு சால் பைந்தினைகள் வித்த –
தங்களுக்கு பலம் இன்றிக்கே பன்றி உழுத சாலிலே அழகிய திணைகளை வித்த
தடிந்து எழுந்த-வேய்ங்கழை போய் விண் திறக்கும்–வேங்கடமே –
தினை விரைக்காக வெட்டி எழுந்த வேய்ங்கழை போய் விண்ணைத் திறக்கும் திருமலை
மேலோருநாள்-தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———
பண்டு ஒரு நாள் இனிய குழலை வாயிலே வைத்து திரு வாய்ப்பாடியில்
உள்ளாரை வசீகரித்தால் போலே
ஒரு மலையிலே நின்று சம்சாரிகளை வசீகரிக்க நிற்குமவன் சிலம்பு –
(ஒரு சிலரை ஒரு காலே ஊதி வசீகரித்தவன் இன்று சர்வர்களையும் ஸதா காலமும் நின்ற நிலையிலே வசீகரிக்கிறான் அன்றோ)
———————————————————————
இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –
அப்போது முடித்தார்கள் இப்போது முடித்தார்கள் என்னும் படி
சரம தசை ஆபன்னரான குற வ்ருத்தர்கள்
தங்கள் ஏர் பிடித்து உழ மாட்டாமையாலும்
ஜாதி உசித வ்ருத்தி தவிர ஒண்ணாமையாலும்
வராஹங்களானவை தாங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர் பறிந்து விழும்படி படிந்து உழுத சால்களிலே –
உழுத செவ்வி போவதற்கு முன்பே அழகிய தினைகளை விதைக்க
பிற்றை நாள் பன்றிகள் சாய்த்துப் பொகட்ட மூங்கில்களை தினைக்கு களையாக ஒண்ணாது என்று அவர்கள்
வெட்டிக் களைந்த வேய் மூங்கில்கள் ஆனவை போய் ஆகாசத்தை ஊடுருவ வளர்ந்து நிற்கும்படியான திருவேங்கடமே
பண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே
வைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை — சிலம்பு -மலை –
அன்றிக்கே
அந்தி விட்டவாறே
குறவர்கள் ஏனம் படிந்து –
குறவர்களும் மூங்கில்களும் திருவேங்கடசமுடையானும் உத்தேச்யம் என்றவாறு
ஸ்வாபதேசம்
குற வாணர்கள் -சரம பர்வ நிஷ்டையில் உள்ளவர்களைச் சொன்னவாறு -பயம் நீங்கி -நாமாக உழுது பயிர் செய்யாமல்
இருக்கும் நாள் கைங்கர்யம்
வராஹ பெருமாள் காட்டிய வழியிலே சொல்லுபவர்கள்
ஈனச் சொல்லா -ஞானப்பிரானை அல்லது இல்லை நான் கண்ட நல்லதுவே
ஸூவ ப்ரயோஜன ஸூவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி
மூங்கில் வெட்டி -அஹங்காரங்கள் மமகாரங்கள் போக்கி
பின் வளர்ந்தது –
ப்ராப்யமாக வளர்ந்து யாவதாத்மா பாவியாய்
பரார்த்த கைங்கர்யம் அங்கும் உண்டே
அதுவே விண் முட்ட வளர்ந்தது என்கிறார் –
—————————————————————————————————————-
திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில்
அதில் நின்றவன் உத்தேச்யமாக சொல்ல வேண்டா இறே என்கிறார் –
திருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்
சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-
பதவுரை
சிலம்பும்–(திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும்
செறி கழலும்–செறிவாக அணிந்த வீரத் தண்டைகளும்
சென்று இசைப்ப–எங்கும் ஒலிக்க
விண் ஆறு–ஆகாச கங்கையிலே
அலம்பிய–விளக்கப்பட்ட
சேவடி–திருவடிகளானவை
அண்டம் போய்–அண்ட பித்தி யளவும் நீண்டு போன போது,
புலம்பிய–(அனைவராலும்) துதிக்கத் தக்க
தோள்–திருத் தோள்கள்
எண் திசையும் சூழ–எட்டுத் திசைகளையும் வியாபிக்க
இடம் போதாது–இடம் போர வில்லை,
வண் துழாய் மால்–அழகிய திருத் துழாய் மாலை யணிந்த எம்பெருமான்
அளந்த–அளந்து கொண்ட
மண்–பூமியானது
என் கொல்–(சிறியதே போலும்)
சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார் அலம்பிய சேவடி போய் அண்டம் –
சிலம்பையும் செறி கழலையும் யுடைத்தாய் -கங்கையிலே விளக்கின திருவடி போய் அண்டம் சென்று இசைப்ப
புலம்பிய தோள்-எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ-வண்டுழாய் மாலளந்த மண் ——
சங்கைஸ் ஸூ ராணாம் என்ற தேவர்களால் திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட தோள்
எட்டுத் திக்கும் சூழ இடம் போராது
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –
——————————————————————
திருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்
திருச் சிலம்பும் செறியச் சாத்தின திரு வீரக் கழலும் சர்வோதிக்கமாக ஒக்கச் சென்று த்வனிக்க –
ஆகாச கங்கையில் விளக்கப்பட்ட
சிவந்த திருவடிகளானவை அண்ட பித்தியிலே தாக்க –
சகல லோகங்களும் வாய் புலத்தும் படியான அழகை யுடைத்த திருத் தோள்களானவை எட்டுத் திக்குகளையும் வியாபிக்க –
அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரன் அளந்த பூமியானது
அவன் தனக்கு நின்று அளக்க இடம் போதாது -இது என்ன ஆச்சர்யம் தான் –
———————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply