Archive for the ‘Namm Aazlvaar’ Category

ஸ்ரீ மாறனலங்கார வரலாறு–ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

ஸ்ரீ மாறனலங்கார வரலாறு

அலங்காரமென்பது செய்யுளுக்கு அழகுசெய்யும் லக்ஷணங்களைக் கூறும் சாஸ்திரம்.
இவ்வலங்கார சாஸ்திரத்தை வடமொழியாளர் மிகவும் விரும்பிக் கற்பர்.
இந்தச் சாஸ்திரத்தின்பெருமை அக்நிபுராணத்திற் பேசப்பட்டுள்ளது.
வாமநசூத்திரம், காவ்யாதர்சம், ஸரஸ்வதீகண்டா பரணம், காவ்யப்ரகாசம், அலங்காரஸர்வஸ்வம், ரஸமஞ்சரி,
ஸாஹித்ய தர்ப்பணம், ப்ரதாபருத்ரீயம், அலங்கார கௌஸ்துபம், சந்திராலோகம், குவலயானந்தம்,
சடவைரிவைபவதிவாகரம் (இது நம்மாழ்வார் விஷயமான வடமொழி மாறனலங்காரம்)
முதலிய நூற்றுக்கணக்கான வடமொழி நூல்கள் அலங்காரத்தைப் பற்றிச் சொல்பவைகள்.

தமிழில் முதன்முதல் அணியைப் பற்றித் தெரிவிக்கும் நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியர் கூறுவது உவமை ஒன்றுதான்.
அவர் அகத்திணையியலில் ஏனையுவமம் உள்ளுறையுவம மிவைகளை விளக்கி உவமவியலில் உவமத்தைத்
தொழில், பயன், வடிவு, வண்ணம் எனப் பிரித்து விரித்தெழுதியிருக்கிறார்.
தொல்காப்பியர் காலத்து உவமையொன்றே அணியாகக் கருதப்பட்டது.
பிற்காலத்தார் அதிலிருந்து பல அணிகள் கற்பித்துக் கொண்டனர்.

நச்சினார்க்கினியரும் உவமமொன்றனையே அணியாகக் கருதினர்.
இவர் தம் காலத்திற் பல அணிவிகற்ப வேறுபாடுகளுடன் வெளிவந்த ஒரு அணி நூலைத்
தமது தொல்காப்பிய வுரையிற் குறைகூறுகின்றனர்.
இவர் உவமவிகற்பங்களுக்கு எடுத்துக்காட்டிய உதாரணச் செய்யுள்கள் சில,
தண்டியலங்காரவுரையில் வேற்றுமையணி, தற்குறிப்பேற்றவணி முதலியவைகளுக்குதாரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
நிரனிறை, சமம் முதலியவற்றை உவமத்தின் விகற்பமாயே கொண்டார் நச்சினார்க்கினியர்.
இப்படி உவமமே பலவணிகளினுற்பத்திக்குங் காரணமாயிருந்தது என்பதை வடமொழியாளரும் சம்மதிக்கின்றனர்.

அப்பையதீக்ஷிதர் தாமெழுதிய சித்திரமீமாம்ஸை யென்னுங் கிரந்தத்தில் இவ்விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அச்சுலோகம் வருமாறு :-
இதன் மொழிபெயர்ப்பு,

“உவமையென்னுந்தவலருங்கூத்தி
பல்வகைக்கோலம்பாங்குறப்புனைந்து
காப்பியவரங்கிற்கவினுறத்தோன்றி
யாப்பறிபுலவரிதய நீப்பறுமகிழ்ச்சிபூப்பநடிக்குமே” என்பதாம்.

இவ்வணியிலக்கணமானது தொல்காப்பியத்திற் பொருளதிகாரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.
அக்காலத்தில், தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என மூன்றுபாகமாகத்தான் பிரிக்கப்பட்டிருந்தது.
“எழுத்துஞ்சொல்லும் பொருளுநாடிச், செந்தமிழியற்கை சிவணியநிலத்தொடு, முந்துநூல்கண்டுமுறைப்படவெண்ணி”
என்னும் தொல்காப்பியப் பனம்பாரர் பாயிரத்தால்,
தொல்காப்பியத்திற்கு முதனூலும் இப்பாகுபாடே கொண்டிருந்ததெனத் தெரிகிறது.
இறையனாரகப் பொருளுரையை யுற்றுநோக்கும்போது, ‘யாப்பு’ , தனியுறுப்பாகக் கருதப்பட்டு,
தமிழிலக்கணம் நான்கு பிரிவாகக் கருதப்பட்டதென்று தோன்றுகிறது.
அதன்பின்புதான் ‘அணி’ தனியுறுப்பாகக்கொள்ளப்பட்டு, தமிழிலக்கணம்,
எழுத்து சொல் பொருள் யாப்பு அணியென ஐந்து பிரிவுடையதாக வகுக்கப்பட்டது.
இவ்வைந்திலக்கணமும் ஒருங்கே கூறும் நூல்கள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல்விளக்கம், முத்துவீரியம் என்பனவாம்.
இவை ஒவ்வொன்றிலும் அந்தந்தக் கிரமத்தில் அணியிலக்கணம் கூறப்பட்டுள்ளது.
வீரசோழிய அணிகளுக்கு முதனூல் ஆசார்யதண்டியியற்றிய வடமொழிக் காவ்யாதர்சம்.
இலக்கணவிளக்க முதலிய மற்ற இலக்கணங்களின் அணியிலக்கணங்களுக்கு முதனூல்,
தமிழ்த் தண்டியலங்காரமும் அதன் உரைகளுமாம்.

தனியாய் அணியிலக்கணமாத்திரங்கூறும் நூல்கள்
அணியியல் அல்லது அணிநூல், தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன.
இவற்றுள் அணிநூலைப் பற்றி விசாரிப்போம்.
யாப்பருங்கலவிருத்தியில் “உருவகமாதிவிரவியலீறாவரும். . . . அலங்காரமென்பது அணியியலாதலின்” என்று
கூறியிருப்பது தண்டியலங்கார அணிமுறைவைப் புக்குப் பொருத்தமில்லாததால் வேறு அணிநூலைக் குறித்ததாக வேண்டும்.

நேமிநாதவிருத்தியில்,
“புனையுறுசெய்யுட்பொருளையொருவழி, வினைநின்று விளக்கினது விளக்கெனப்படுமே”
“முதலிடைகடையென மூவகையான” என்பன அணியியல் ஆகலின் என்றுள்ளது.
இதில் இரண்டு சூத்திரத்தாற் குறித்த விளக்கணி தமிழ்த் தண்டியலங்காரத்தில்,
தீபக மென்றபெயரால் ஒரே சூத்திரத்திற் கூறப்பட்டிருக்கிறது.
ஆதலால் இவ்விருத்திகாரர் குறித்த அணியியல் என்னும் நூல் தண்டியலங்காரத்தினும் வேறாகவேண்டும்.

நச்சினார்க்கினியர் தொல்காப்பியவுரையில்
“இனி இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளியலுள்ளுஞ்
சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென
இக்காலத்தாசிரியர் நூல்செய்தாருமுளர்” எனக்கூறி அவ்வணி நூலுக்குத் தமது சம்மதமின்மையையும் தெரிவிக்கிறார்.
இவ்வாக்கியத்திலுள்ள விஷயம் வடமொழியிலிருந்து பெயர்த்த தண்டியலங்காரத்தைக் குறிக்காது
வேறு அணிநூலையே குறித்ததாக வேண்டும்.

பரிமேலழகர் பக்ஷாந்தரமாய்க்கூறும் நுவலாநுவற்சி, ஒட்டு என்னும் பரியாயப் பெயர்கள் முறையே
வீரசோழியத்திலும் தண்டியலங்காரத்திலும் காணப்பட்டபோதிலும் அவர் தன்மதமாகக்கூறிய
பிறிதுமொழிதல் என்பது அணிநூலுட் கண்டதாகவிருந்தாலு மிருக்கலாம்.

இப்படியே வீரசோழியம், தண்டியலங்காரங்களுட் காணப்படாத சில அணிகளின் பரியாயப் பெயர் இவருரையிற் காணப்படுகின்றன.
இன்னோரன்ன காரணங்களால், தண்டியலங்காரத்தினும் வேறாய அணிநூல் அல்லது
அணியிய லென்ற நூலொன்று இருந்து விழுந்திருக்க வேண்டுமென் றேற்படுகிறது.

ஆனால், தண்டியலங்காரத்திற்கே அணியியலென்னும் பெயர் இருந்திருக்கிறது.
அணியியலென்றபெயருடன் அடியார்க்குநல்லாரும், மாறனலங்காரவுரையாசிரியரும் (மா-அ-சூத் 25-ன் கீழ்)
எடுத்துக்காட்டி யிருக்கிறமுறையே சூத்திரம் இரண்டு மொன்றும் தண்டியலங்காரத்துட் காணப்படுகின்றன.
இத் தண்டியலங்காரச் சூத்திரங்கள் அணியியலென்னும் நூலிலிருந்து முன்னோர் மொழியாக
எடுத்துத் தண்டியலங்காரத்துட் சேர்க்கப்பட்டிருக்கலாமென்று கருதுவதற்கு இடங்கொடுக்கின்றன.

இனி, ‘மாறனலங்காரம்’ என்பதைப் பற்றி விசாரிப்போம்.
மாறன் என்பது பாண்டியரைக் குறிக்கிற பழம் பொதுப்பெயர்களுள் ஒன்று ;
இங்கு ஆழ்வார்களுட்சிறந்த நம்மாழ்வாரைக் குறிக்கிறது.
இவர் பாண்டியரது அரசாட்சிக்குட்பட்ட பொருநையாற்றின் அடைகரையாகிய திருவழுதி வளநாட்டுக்குரிய சிற்றரசர்.
மாறன், காரிமாறன், சடகோபன், திருவழுதி வளநாடன், பொருநற் (தாம்ரபர்ணி) சேர்ப்பன்,
பொருநற்சங்கணித்துறைவன், மகிழ்மாலைமார்பினன் முதலான பெயர்கள்
இயல்பாயும், காரணம்பற்றியும் இவருக்கு வழங்கி வந்தனவென்று திருவாய்மொழியால் தெரிகிறது.

இவர் பிறந்தபொழுதே தொடங்கித் திருமாலினிடத்து விசேஷபக்தியுடையராய்
உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் தண்ணனேயென் றத்யவசித்துத்
ததேக த்யானபரராயிருந்து நான்கு வேதங்களையும்
திருவிருத்தம் திருவாசிரியம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி என்னும் நான்கு தமிழ்ப்பிரபந்தங்களாக
லோகோஜ்ஜீவநார்த்தமாக வெளியிட்டருளினர்.
இவரை அக்காலத்திலிருந்த மதுரகவி முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும்
பிற்காலத்து வந்த நாதமுனி, யாமுநாசார்யர், ராமாநுஜர் முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும்
ஆசார்யராக மதித்து நேரிலும் விக்ரகரூபமா யெழுந்தருளப் பண்ணியும்
ஆழ்வார்களுட் டலைமையானவராய்க்கொண்டு ஆராதித்து வந்தனர்.

வடநாட்டிலும் துளசீதாசர் முதலானோரால், பாராட்டிப் பூசிக்கப்பட்டார் இவ்வாழ்வாரெனின்,
இவரைப் பற்றி நாம் அதிகமாயெழுத வேண்டியதில்லை.
இந்நூலாசிரியர் இவ்வாழ்வாரிடத்து ஏழாட்காலும் பழிப்பிலாத் தொண்டு பூண்டு
மறந்தும் புறந்தொழாதவமிசத்துட்பிறந்த வைணவமதாபிமானமுள்ளவரான படியினாலே,
தண்டியலங்கார முதலிய நூல்கள் அரசர் முதலியவர்களைப் பற்றிக்கூறி
லௌகிக திருஷ்டாந்தங்களுடையனவாயிருப்பது கொண்டு, தா மிந்த அலங்கார நூலையியற்றி
இதை ஆழ்வார்க்குச் சமர்ப்பித்து உதாரணங்களை
ஆழ்வார் விஷயமாகவும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும் வைஷ்ணவபரமாய்ச் செய்து சேர்த்தருளிக்
‘காரிதந்தருள் கலைக்கடலியற் பெயர்புனைந்து’ (மா-அலங். பா)
‘திருமகிழ்ப்பரமதேசிகன் பெயரால்’ (மா-அகப்) இந்நூலை வெளியிட்டருளினர்.
ஆகவே மகிழ்மாறன் அல்லது நம்மாழ்வாரை நாயகனாகக் கொண்ட அலங்கார சாஸ்திரமாகுமிது.

வடமொழியிலும் நம்மாழ்வார் விஷயமான ஒரு அலங்கார சாஸ்திரம் ‘சடவைரிவைபவதிவாகரம்’ என்ற பெயருடன்
குவலயாநந்தத்தை யநுசரித்ததாய் விளங்குகிறது.
கூடிய சீக்கிரம் அச்சில்வரும் இத் தமிழணி நூல், பாயிர இலக்கணத்தை முதலிற் பெற்று,
அது தவிரப் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என நான்கு பகுப்புடையதாயிருக்கிறது.

இந்நூற் பொதுப்பாயிரத்துள் “வெள்ளையினகவலின் விளம்பலு மரபே” என்றபடி
இந்நூலாசிரியர் பொதுவியலைமாத்திரம் வெண்பாவா லமைத்திருக்கிறார்.
அகவலின் வெள்ளையினறைக வென்ற முந்து நூல் விதித்தமையுளவாகவும்,
விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை ஆசிரிய விருத்தமென்னும் பாவினத்தாற் பின் பிலக்கண நூல்செய்தோர்
இலக்கணங்களைக் கூறியதுபோலவும், சிலப்பதிகாரத்திற் சிலகாதைகள் பாவினங்களாற் பாடியது போலவும்
இவரும் முதலியலை வெண்பாவாலும் மற்றவற்றை நூற்பாவாலும் கூறினர்.

தண்டியலங்காரத்தில் மேற்கூறிய நான்கியலுக்கும் சேர்ந்த சூத்திரங்கள் 125 தான்.
தண்டியலங்கார உதாரணச் செய்யுள்களிலும் மாறனலங்கார உதாரணச் செய்யுள்கள் மிகவு மதிகம்.
ஆகவே தண்டியலங்காரத்தினும் மாறனலங்காரம் மிக்க விரிவுடையது.
தண்டியலங்காரம் காவ்யாதர்சத்தைப் பின்பற்றின மொழிபெயர்ப்பு.
மாறனலங்காரம், தொல்காப்பிய முதலியவற்றின் கருத்துக்களையும்,
“முதுமொழித்தண்டி முதனூலணியையும், புதுமொழிப் புலவர்புணர்த்தியலணியையும்,
தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையும், மனாதுறத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும்,
சதுர்பெற விரண்டிடந்தழீஇய சார்பென”விளங்குகிறது.
ஆயினும், இது தண்டியலங்காரத்தின் வழி நூலாகும்.

இதனுரையில் வடமொழித் தண்டியாசிரியரை யபூர்வமா யோரோரிடத்தும்,
தமிழ்த் தண்டியாசிரியரை அடிக்கடி பல இடங்களிலும் சுட்டியிருக்கிறார்.
இந் நூலாசிரியர் சிலஇடங்களிற் சிலநியாயம்பற்றிச் சிறிது வேறுபடுவதுமுண்டு.
எடுத்துரைப்பிற் பெருகுமாதலால் 84ம் சூத்திரவுரை முதலிய இடங்களிற் கண்டுகொள்க.

தண்டியலங்காரத்துட்கூறிய பொருளணிகளின்றொகை 35.
இந் நூலுட்கூறிய அணிகளின்றொகை 64.
இந்நூலார், தண்டியாசிரியர்கூறிய நுட்பமென்னுமலங்காரம் பரிகரத்துளடங்குதலா லதைக் குறைத்தார்.
சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும் புறத்திணையியலிலுங் கூறியுள்ளவும்
மற்ற அணிநூல்களுட் கூறப்படாதனவுமாகிய பூட்டுவில், இறைச்சிப் பொருள்கோள், பொருண்மொழியென்னும் மூன்றையும்
செய்யுட்கணி செய்தலால் அணியுட் சேர்த்துமிகுத்தார்.
வகைமுதலடுக்கு, இணையெதுகை, உபாயம், உறுசுவை, புகழ்வதினிகழ்த லென்னுமைந்தும் அழகெய்துவதா யிருத்தலின்,
இலக்கியங்கண்டதற் கிலக்கணமியம்புதலாயிவற்றையு மிகுத்தார்.
தண்டியாசிரியர் உவமவிரியுட்சேர்த்தும், ஏனையாசிரியர் வேறுவேறாகப் புணர்த்துமிருக்கிற ஐயம்,
தெரிதருதேற்றம், பொதுநீங்குவமை என்பவற்றுள் ஐயத்தையும், தெரிதருதேற்றத்தையும்,
ஏனையாசிரியர்மதமுடன்பட்டுப் பிறிதோரணியாக்கியும், பொதுநீங்குவமையைத் தண்டியாசிரியர் மதம்பற்றி யுவமையுட்புணர்த்தும்,
தன்கோட் கூறலென்னுமுத்தியானும், தன்குறியிடுதலென்னுமுத்தியானும், பின்னோன்வேண்டும் விகற்பங்கூறி முடிக்கும் வழி
நூலிலக்கணம்பற்றியும் இவ்வாறெல்லாம் முடித்தார்.
இவ்வாறு சூக்குமமாய்க் காணப்படும் வேறுபாடுகளுக்கெல்லாம் மேற்கண்டபடியே கொள்ளவேண்டும்.

தண்டியாசிரியர் ஒரே சூத்திரத்திற் பன்னிரண்டு சித்திரகவிகளுக்குப் பெயர்மாத்திரங் கூறிச்செல்ல,
இந்நூலார் முப்பத்திரண்டு சித்திரகவிகள் கூறி அவற்றுக்கு இலக்கணமுங் கூறிச்செல்கிறார்.
‘தேவா’ ‘மாதவனே’ ‘தண்மதி’ ‘சேடுறு’ என்றுதொடங்குகிற சக்கரபெந்தச் செய்யுள்களில்
‘திருமலை’, ‘தென்குருகூர்’, ‘வடமலையப்பன்’, ‘சீராமராமசெயம்’, ‘தருமமேகைதரும்’ என்பவைகளும்
இரதபெந்தத்தில் ‘நாராயணாயநம’, என்பதும் காதைகரப்பிற்
‘கொல்லான்புலாலைமறுத்தானை’ என்னுங் குறளும் அழகாயமைக்கப் பட்டுள்ளன.

தண்டியலங்காரவாசிரியர் தாமே மூலமும் உதாரணமுங் காட்டினாற் போல,
இந்நூலாசிரியர் தாமே உதாரணச் செய்யுள்களும் செய்தமைத்தாரென்று தோன்றுகிறது.
“இந்நூலாசிரியர் இவ்வுதாரணம் யாண்டுப் பெற்றாரோவெனின்” என்று உரையில்வருவது கொண்டும்
பிற ஆதாரங்கொண்டு மிவ்வாறு ஊகிக்கவேண்டியதாயிருக்கிறது.
இந்நூலிற் பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு, குறள், நாலடி, சிந்தாமணி,
சிலப்பதிகாரம், வெண்பாமாலை, யாப்பருங்கலம், திருவாய்மொழி முதலிய பழைய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இந்நூலாசிரியர் செய்தருளிய திருக்குருகாமான்மியம், நம்பெருமாள் மும்மணிக்கோவை, மாறன்கிளவிமணி மாலை,
இந்நூலுரையாசிரியர் செய்தருளியதாக நினைக்கப்படுகிற மாறன் பாப்பாவினம் முதலிய வைணவ நூல்களிலிருந்தும்
அடிக்கடி மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன.
திருப்பதிக்கலம்பகம் என்னும் நூலிலிருந்தும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
அந்நூலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
மற்றைய உதாரணச் செய்யுள்களெல்லாம் நம்மாழ்வார் விஷயமாகவும், திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும்
வெண்பா முதலிய பாப்பாவினங்களிற் பெரும்பாலும் அகப்பொருட்டுறைகளமையப் பெற்றனவாய்
நூலாசிரியராற் செய்யப்பெற்றுச் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வுதாரணங்களெல்லாம் கற்பனைக் களஞ்சியமாய்ச் சொற்சுவை பொருட்சுவை நிரம்பி அழகாயிருக்கின்றன.
பெரும்பாலும் உதாரணச் செய்யுள்களுக்குத் திணையும் துறையும் கூறப்பட்டிருக்கின்றன.
சில உதாரணங்களுக்குப் பொழிப்புரையும், சிலவுதாரணங்களுக்குக் குறிப்புரையும் கூறப்பட்டுள்ளன.
நன்னூலின் ஆரம்பத்துட் கூறியிருப்பதுபோல இந்நூலிலும் ஆரம்பத்திற் பொதுப்பாயிரத்திலக்கணம்
மிக விரிவாயும் தெளிவாயுங் கூறப்பட்டிருக்கிறது.

இத் தமிழணி நூலின் பொருளடக்கத்தையும் பெருமையையும் பின்வரும் நூற்பாவானும், வெண்பாவானும் ஒருவா றறிந்துகொள்க.

ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன் முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே”
வாய்ந்ததிருப்பதிநூற்றெட்டினையும்வாழ்த்தியே
யாய்ந்ததமிழ்மாறனணியெனப்பேர்–தோய்ந்துளதாற்
காண்டகுசீர்மற்றோரணியுங்கவின்புணர்க்க
வேண்டுமோவீங்கிதற்குமேல்”

சுமார் நூறுவருஷங்களுக்குமுன் ‘கர்னல் மெக்கன்ஸி’ துரையவர்களால் மிக்க திரவியச் செலவு செய்து சேர்க்கப்
பெற்று இப்போது துரைத்தனத்தா ரிடமிருக்கும் சென்னை இராஜாங்கப் புத்தக சாலையில்
இந்நூலின் காகிதக் கையெழுத்துப் பிரதியொன்றிருப்பது, சில பெரியோர்களுக்குத் தெரிந்த விஷயம்.
கிரந்தமந்தணகூடம் (Tamil Museum) என்ற பெயர் வைத்துக்கொண்டு அநேக சாஸ்திரங்களை வெளியிடப்போவதாய்
முன்னுக்கு வந்த S. சாமுவேல்பிள்ளை என்பவர், சுமார் 55-வருடத்துக்குமுன்,
தா மச்சிட்ட ‘தொல்காப்பிய நன்னூல் ஐககண்ட்ய’ புஸ்தகத்தில் இந்நூலைப் பற்றிப் பிரஸ்தாபித்துள்ளார்.
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ சூரியநாராயண சாஸ்திரியாரவர்களும்,
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ செல்வக்கேசவராய முதலியாரவர்களும் தாங்களியற்றிய தமிழ்ப் பாஷை விஷயமான நூல்களில்
இந்நூலைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சென்னையில் வசித்த வைணவ வித்வான்களாகிய மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ இராஜகோபால பிள்ளையவர்கள் முதலியோர்
இந்நூலை அச்சிட எண்ணிப் பொருண்முட்டுப்பாட்டால் நின்றுவிட்டனர்.
முதன் முதல் வெளியான செந்தமிழ்ப் பகுதியினின்று, காலஞ்சென்ற ஸ்ரீமாந்.பாண்டித்துரைத் தேவரவர்களும்,
முன்பு செந்தமிழ்ப் பத்திராசிரியராயிருந்த ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்காரவர்களும்
இந்நூலை அச்சிடுவதைச் சங்கத்தின் முதனோக்கங்களுளொன்றாகக் கொண்டிருந்தன ரென்பது தெரிகிறது.
எக் காரணங்களாலோ அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை.
இத்தகைய அரிய நூல்களை யச்சிட்டுத் தமிழகத்திற் குபகரித்து வரும் தமிழ்ச்சங்கத்தார்க்குத்
தமிழபிமானிகள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நூலாசிரியர்

பெயர்:- இவ் வரிய பெரிய நூலை இயற்றியவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்.
திருக்குருகைப்பெருமாள் என்றால், திருக்குருகை யென்னும் ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் என்று பொருள்.
“திருக்குருகைப்பெருமாள் தன் திருவடிகள் வாழியே” என்பது அஷ்டகஜம் அப்பிள்ளை அருளிச்செய்த நம்மாழ்வார் விஷயமான
வாழித்திருநாமம். இந்நூலாசிரியர் நம்மாழ்வாருடைய ஆஸ்தான கவிரா யராதலால் அவருக்குத்
திருக்குருகைப்பெருமாள் கவிராயரென்று பெயராயிற்று.
இவருக்குச் ‘சடையன்’ என்னும் இயற்பெயருமுண்டு. ‘சடகோபன்’ என்பது சடையன் எனத் திரிந்ததுபோலும்.

தகப்பனார் :- இவருடைய தகப்பனார் பெயரும் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’ என்பதேயாம்.

ஜாதி :- வேளாளர். ‘சீரகத்தார்வணிகன்’ என்று பாயிரத்திலிருப்பதை நோக்க வேளாளரும்
ஒருவகை வைசியவகுப்பிற் சேர்ந்தவரென்பது வெளியாகின்றது.
ஆழ்வார்திருநகரிக்கோயிற் சத்தாவரண உத்ஸவங்களிற் படிக்க வேண்டிய ‘திருப்பணிமாலை’ படிப்பவருக்கு
ஏற்பட்ட சுதந்தரங்களைத் தெரிவிக்கும் கோயிற்கணக்கில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்றிருக்கிறது.
அந்தச் சுதந்தரங்களை இப்போது வத்தராயிருப்பு ஆழ்வாரப்பபிள்ளை என்பவர் பெற்றுவருகிறது கொண்டு
இந் நூலாசிரியர் இவரின் முன்னோராயிருக்கலாமென்று சிலர் நினைக்கின்றனர்.
ஆழ்வாரப்ப பிள்ளையின்பந்துவாகிய அமிர்தகவிராயரின் வம்சத்தில் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’கள் சிலரிருந்திருக்கின்றனர்.
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள திருவரங்கத்தந்தாதியின் பழையவுரை யெழுதி வைத்தவர்
திருக்குருகைப்பெருமாள் கவிராயர். இவர் இந்நூலாசிரியரல்லர்.
இவர் மாறன்கோவை இயற்றிய வேங்கடத்துறைவான் கவிராயர் வம்சத்தவராயிருக்க வேண்டும்.
இப் பெயரினர் ‘O.K.S.’ என்ற நவீனக்குறியால் வழங்கப்படுகிற திருநெல்வேலி ஜில்லா
வைணவ வேளாள வகுப்பைச் சேர்ந்தவரென்று தெரிகிறது.

ஊர் :- திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி. இவற்றிற்குப் பிரமாணம் :-

“பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமாளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த்திருக்குருகைப்பெருமாள்கவிராயன்
அருட்குணத்துடன்வளர்சடையன்பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே”–(மாறனலங்காரப்பாயிரம்)

“குருகையம்பதித்திருக்குருகைப்பெருமாள்
பொருவில்பேரன்புடன்புரந்தருள்புதல்வன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகேசன்
திருக்குருகைப்பெருமாள்கவிராசன்
அருட்குணத்தவர்புகழ்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே”(மாறனகப்பொருட்பாயிரம்)

“இருக்குமுதற்பனுவலினாலியற்றமிழ்தேர்நாவீறனென்னுமேன்மை
யருட்புயலைப்புகழ்புலமைத்திருக்குருகைப்பெருமாள்பேரன்புகூருந்
தருக்குலவும்பொழிற்குருகாபுரிவணிகன்சடையனிதைத்தமிழாற்சாற்றித்
திருக்குருகைப்பெருமாள்வண்கவிராசனெனப்புனைபேர்சிறந்ததொன்றே”(திருக்குருகாமான்மியப்பதிகம்)
முதலியன.

மதம் :- வைணவம்.
இவர் ‘மணவாளமாமுனி’ முதலிய தென்கலை ஆசார்யசிரேஷ்டர்களை அலங்கார நூலின் மத்தியில் வணங்கியிருப்பதாலும்,
ஸ்ரீநிவாசஜீயர் என்னும் தென்கலை ஆசார்யபுருஷரது சிஷ்யராதலாலும், தென்கலை வகுப்பைச் சேர்ந்தவர்.

ஞாநாசிரியர் :- இந் நூலாசிரியருக்குப் பஞ்சஸம்ஸ்காரமென்னும் தீக்ஷை முதலிய செய்து வைத்த ஞாநாசிரியர்
‘ஸ்ரீநிவாஸஜீயர்’ என்பது ‘சிற்குணச் சீநி வாதனின் னருளா, னற்பொருண் மூன்றையும் நலனுற வுணர்வோன்’ என்னும்
மாறனலங்காரப் பாயிரத்தாலும்,
‘சிற்குணத் திருமலைச்சீநிவாதன், பொற்புடைத் திருவடி போற்றிய புனிதன்’ என்னும் மாறனகப் பொருட்பாயிரத்தாலும் தெரிகிறது.
அன்றியும், மாறனலங்காரத்துள்ளே இவ் வாசிரியரைச் சில இடங்களில் வாழ்த்தியிருக்கிறார். அச்செய்யுள்கள் வருமாறு :-

“முத்திக்கவனேமுதற்காரணனென்றும்
பத்திவிடாதேபயிலென்றுஞ்–சத்தியமாய்ச்
செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த
சொல்வித்தகமேதுணிந்து”(காபாலிகாந்தியகுளகம், குரவன் வாழ்த்து)

“முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான்
பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச்
சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே
னாவிக்கருள்புரிந்தாள்வான்”(திணை : வாகை, துறை : தாபதவாகை)

இவ்வாசிரியர், ஸ்ரீமணவாளமாமுநிகளின் ஆசிரியர் திருவாய்மொழிப் பிள்ளையால் ஸ்தாபிக்கப்பெற்ற
திருநகரி உடையவர் (ராமாநுஜர்) ஸந்நிதி எம்பெருமானார் ஜீயர்மடாதீந பரம்பரையில் 8 (?)வது ஸ்வாமியாக எழுந்தருளியிருந்தவர் ;
திருப்பதி மடத்திலிருந் தெழுந்தருளியவர். (மேற்குறித்த பிரமாணங்களை நோக்குக)
இவர் திருப்பதியிலிருந் தெழுந்தருளும்போது கொண்டுவந்த, ஸ்ரீநிவாஸன் படத்திற்கு
நாளிது வரை நித்தியபூஜையும் உத்ஸவமும் நடத்திவருகிறார்கள்.
இந்த ஜீயர், தாம் வீற்றிருந்த மடத்தைச் சார்ந்த உடையவர் ஸந்நிதியை ஜீர்ணோத்தாரணஞ் செய்தாரென்பது,
பின்வரும் ஆழ்வார் திருநகரித் திருப்பணிமாலைச் செய்யுளால் விளங்கும்.

“இவர்ந்தபூதூ ரெதிராசன்கோயிலை
யுவந்தனைத்தழகுங்கண்டுலகினோங்கினான்
சிவந்தபங்கயமுகன்சீநிவாசமா
தவன்றிரிகோற்கோன்மாதவர்கிரீடமே”
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலைப் புத்தக அட்டவணையில் இவர் ஸ்ரீநிவாஸாசார்யர் என்றெழுதியிருக்கிறது.
இந்த ஜீயர் சுவாமி, உபயவேதாந்த ப்ரவர்த்தகராய்த் திக்குவிஜயம் செய்து வாக்மியாயிருந்தாரென்று சொல்லப்படுகிறது.

இந்நூலாசிரியர் செய்த வேறு நூல்கள் :-
1. மாறனகப்பொருளும் அதன் உதாரணம் நூற்றெட்டுத் திருப்பதிக்கோவையும்.
2. திருக்குருகாமான்மியம்.
3. நம்பெருமாள் மும்மணிக்கோவை.
4. மாறன் கிளவிமணிமாலை முதலியன.
இவற்றில் முன்னையதைத் தவிர மற்றைய நூல்களெல்லாம் மாறனலங்காரத்தில் உதாரணமாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.*

காலம் :- இந்நூலால் இவர்காலம் இன்னதென்று தெரியாமற்போன போதிலும்,
இவர் செய்த மற்றொரு நூலாகிய திருக்குருகாமான்மியம் அரங்கேற்றிய காலம் அதிற் குறிக்கப்பட்டிருப்பதால்
அதிலிருந்து இவர்கால மின்னதென் றேற்படுகிறது. அச்செய்யுள் வருமாறு :-

அறந்திகழாண்டவையெழுநூற்றிருபான்மூன்றி
லணிகிளர்கார்த்திகைமாதமெட்டில்வாழ்வு
சிறந்திடுதிங்களினாளுத்தரத்திலேகா
தெசியின்மகரமுகூர்த்தந்திருந்தமுற்றத்
துறந்தவரெண்மகிழ்மாறர்திருமுன்னாதிச்
சுருதியுடன்மிருதியுஞ்சொற்றமிழின்வாய்மை
பிறந்தபெருங்காப்பியமுந்தெரிந்தோர்கேட்கும்
பெற்றியுடனரங்கேற்றப்பெற்றதன்றே”
இதிற் குறிப்பிட்டுள்ள வருஷம் கொல்லம் ஆண்டு. கொல்லமாண்டு 723-வது
எனவே, இப்போது 1090 நடப்பதால், 365 வருஷங்களுக்கு முன் இவர் இருந்தாரென்றேற்படுகிறது.
குருகாமான்மியத்திலிருந்து இந்நூலுக்கு உதாரணமெடுத்திருப்பதால் இந்நூல் பின்னாற்செய்யப் பெற்றதென்று வைத்துக் கொள்வோம்.
ஆகவே ஏறக்குறைய 360-வருஷங்களுக்குமுன் இந்நூலியற்றப் பெற்றதென்பது ஏற்புடையதாகும்.
ஜீயர்காலம் நிர்ணயிக்கப் புகுமிடத்தும் இக்காலவரையறை சரியாயேற்படுகிறது.
உரையாசிரியர் காலமும் இதுவேயாகும்.
இதுபற்றியேதான் ‘செந்தமிழில்’ இரண்டுமூன்றிடங்களில், உரையாசிரியராகிய இரத்திந கவிராயர் பிரஸ்தாபம்
வருமிடத்து ஸ்ரீ.உ.வே.இராகவையங்காரவர்கள் ‘350-வருஷங்களுக்குமுன்னிருந்த’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவர்பெருமை :- இவர் பாலியத்திலேயே நிகண்டு, இலக்கணம், இராமாயணம், சங்கநூல்கள், பழையவுரைகள்
இவற்றை ஐயந்திரிபறக் கற்றுச் சிறந்த வித்வானாகிய தமது தகப்பனாரிடம் கற்று வல்லுநராய்,
மாணாக்கர்க்குப் பாடமோதியும், பழைய நூல்களைத் தேடித் தொகுத்து வைத்துக் ‘கல்விக்களஞ்சிய’மொன் றேற்படுத்தியும்,
பொருட்டொடர் நவம்புணர்புலமையோன் (மா-அக & அல) என்றபடி புதுவகையான பெருங்காப்பியம் சிறுகாப்பிய முதலான
நூல்களியற்றியும், தங்காலத்து வித்வான்களுடன் வாதஞ்செய்தும், அரசராற் சன்மானிக்கப்பெற்றும் தமிழை விருத்திசெய்து
சிறந்த வீரவைணவப் புலவராய் வீற்றிருந்தார். இவர் விஷயமாய் அபியுக்தரருளிய பின்வருஞ் செய்யுளையும் நோக்குக.

“நேற்றுப்பிறந்துவரும்பாவியானநிலாநெருப்புக்
காற்றும்படிதொங்கறந்திலனேயருங்கூடற்சங்கந்
தோற்றும்படிசொன்னசொன்னாற்பத்தொன்பதையைம்பதென்று
சாற்றுந்திருக்குருகைப்பெருமாணஞ்சடைக்குட்டியே”

———

இந்நூலுரையாசிரியர்

இந்நூலுக்குச் சிறந்த விருத்தியுரையருளிச் செய்தவர் தென்றிருப்பேரைப் பதியிற்பிறந்த காரிரத்நகவிராயர் என்பவரே.
தென்றிருப் பேரையென்னும் பாடல் பெற்ற திவ்யதேசம் ஆழ்வார்திருநகரிக்குக் கிழக்கே மூன்றுமைல் தூரத்துள்ளது.
இவர், திருக்குருகைப் பெருமாள்கவிராயர் அநேகமாணாக்கர்க்குப் பாடமோதிக்கொண்டு சிறந்த வித்வானாயிருப்பதைக்
கேள்வியுற்று அவரிடம் படிக்க ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அவரிடம் கல்விகற்றுச் சிறந்தவித்வானானார்.
செந்தமிழ்ப் பத்திரிகையில் இவரைக் குறிக்கநேரும்போதெல்லாம் இவர் பெயரை இரத்திநகவிராயரென்றே குறித்திருக்கிறது.
ஆனால் உற்று நோக்கும்போது இவரது இயற்பெயர் ‘காரிரத்நகவிராய’ ரென்பதென்று தெரிகிறது.
‘காரிரத்நம்’ என்பது ஆழ்வார்திருநாமம். காரிராசன் பெற்ற இரத்திநம் போன்ற புதல்வன் என்பது இதன்பொருள்.
‘காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்து’ (மா. அல) ‘காரிமாறன் சடகோபன்’ (திருவாய்)
‘காரி.. . . . . . . .ரத்நம்’ (மாறன்கோவை) முதலியவற்றையும் நோக்குக.
இவருரை மிகவுஞ்சிறந்ததோருரை. இவ்வுரையின்றேல் இந்நூலின்பெருமை வெளிப்படாது.
சங்க நூல்கள் பிற சான்றோர் நூல்கள் முதலியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார்.
சில உதாரணச் செய்யுள்களிலுள்ள உள்ளுறையுவமம், ஏனையுவமம், இறைச்சிப் பொருள் முதலியவற்றை அழகாய் விளக்குகிறார்.
சில உதாரணச் செய்யுளுக்குக் குறிப்புரையும் சிலவற்றிற்குப் பொழிப்புரையும் கூறுகிறார்.
இவர் வேண்டுமிடங்களில் தண்டிமதம், தொல்காப்பியர் போன்ற பிற நூலாரின் கருத்து முதலியவற்றையெடுத்துக் கூறித்
தக்கசமாதானங் கூறுகிறார். உதாரணச்செய்யுள்களைச் சூத்திரப் பொருளோடு அழகாய்ப் பொருத்திக் காட்டியிருக்கிறார்.
இவர் காலம் முன்னே கூறப்பட்டது.

இவர்செய்த வேறு நூல்கள் :-
தொல்காப்பிய நுண்பொருண்மாலை,
பரிமேலழகருரை நுண்பொருண்மாலை (இது செந்தமிழில் வெளிவந்துளது),
ஆசிரியர் செய்த நம்பெருமாள் மும்மணிக்கோவைக்கு விருத்தியுரை,
மாறன்பாப்பாவினம் முதலியன.

இவருக்குக் கோயிலில் ‘வாகனமாலை’ படிப்பதற்காக அக்காலத் தரசன் சிறந்த மானியங்கள் விட்டிருந்தான்.
அவற்றை இன்னமும் இவர்சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள்.
இவரைப்போலவே இவர் வமிசத்தோரும் சிறந்த வித்வான்களாயும் வைணவர்களாயுமிருந்து தமிழையபி விருத்தி செய்தார்கள்.
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரம்ம ஸ்ரீ மஹாமஹோபாத்யாய சாமிநாதையரவர்கள்,
ஸ்ரீ-உ வே.ரா.இராகவையங்காரவர்கள் முதலியோருக்கு அரும்பெறற்றமிழ் நூல்களருளிய குடும்பம் இதுவே.
இக்குடும்பத்தினர் ஏடுகளே திருக்கோவையாருரையாசிரியர் பேராசிரியரென்றும்,
அச்சிட்ட தொல்காப்பியச்செய்யுளியலுரை முதலியவை பேராசிரியரது ; நச்சினார்க்கினியரதன் றென்றும்,
பரிபாடலுரையாசிரியர் பரிமேலழகர் என்றும் அறியுமாறு அருமையான பல விஷயங்களைத் தெரிவித்தன.
இக்குடும்பத்தார் காப்பாற்றி வைத்த ஏடுகளின் பெருமை பிரம்ம ஸ்ரீ வே. சாமிநாதையரவர்கள்
ஸ்ரீ.உ.வே.ராகவையங்காரவர்கள் முதலியோருக்கே தெரியும்.
இவ்வமிசத்தவர் வைணவபரமாய் எத்துணையோ தமிழ்நூல்கள் செய்திருக்கிறார்கள். தமிழுரை செய்திருக்கிறார்கள்.
வடமலையப்ப அரசரின் ஸமஸ்தானவித்வான் சிறியகாரிரத்நகவிராயர் இவ்வம்சத்தவர்.
சாபா நுக்ரகசக்தியுடன் கவிபாடத் தகுந்த புலவர் இவ்வம்சத்தி லநேகரிருந்திருக்கின்றனர்.
குமரகுருபர சுவாமிகள் வம்சபரம்பரையோரில் ஆழ்வார் திருநகரிக்கிளையினர் அநேகர் இவ்வம்சத்தாரிடம்
பாடங்கேட்டிருக்கிறார்களென்று தெரிகிறது.
இம்மாறனலங்கார உரையாசிரியர் விஷயமான சிறப்புப் பாயிரச் செய்யுளையெடுத்துக் காட்டி இதனுடன் நிறுத்துகிறேன்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்நகவிராயன் பேரைவரோதயனே.

A.M. சடகோபராமாநுஜாசார்யன்
(நேஷநல்ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்,
திருச்சிராப்பள்ளி.)
25-5-1913.

—————

மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்.

——-

1. நான்காரச்சக்கரபெந்தம்

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா.

இது, நடுவுநின்று கீழாரின்வழி யிறங்கி யிடஞ்சென்று
அடுத்த ஆரின்வழி நடுவடைந்து முதலடிமுற்றி,
மறித்தும் நடுவுநின்று அவ்வாரின்வழி திரும்பி யிடஞ்சென்று
அடுத்தஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடிமுற்றி,
அவ்வாறே மூன்றாமடி நான்காமடிகளுஞ்சென்று முற்றியவாறு காண்க.

———-

2. இதுவும் நான்காரச்சக்கரபெந்தம்

தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க–வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது.

இது, மேலாரின்முனைதொடங்கியிறங்கிக் கீழாரின்முனையிறுதி சென்று முதலடி முற்றி,
இடப்பக்கத்து ஆரின்முனைதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிசென்று தனிச்சொல்லகப்பட விரண்டாமடி முற்றி,
மறித்தும் அம்முனைநின்ற துகரந்தொடங்கி வட்டைவழியே யிடஞ்சுற்றி மூன்றாமடியும் நான்காமடியுஞ்சென்று,
தொடங்கிய துகரத்தை மறித்துங் கொண்டுமுற்றிக் குறட்டினிடமே திருமலை யென நின்றவாறு காண்க.
ஓகார அளபெடை யறிகுறியொழியநின்றது.

——————-

3. ஆறாரச்சக்கரபெந்தம்

மாதவனேதென்னரங்கேசமான்மருளாகமிகு
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே.

இது, இடப்பக்கத்தாரின் முனைநின்றுதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிமேலேறி ஓரடிமுற்றி,
அடுத்த கீழாரின்முனைநின்று மேலாரின்முனையிறுதிமேலேறி இரண்டாமடிமுற்றி,
அடுத்த வலப்பக்கத்தாரின் முனைநின்று இடப்பக்கத்தாரின்முனையிறுதிமேலேறி மூன்றாமடிமுற்றி,
முற்றிய வேகாரத்தினின்று மறித்துந் தொடங்கி வட்டை வழி யிடஞ்சுற்றிச் சென்று மறித்தும்
அவ்வேகாரத்தைக்கொண்டு நான்காமடி முற்றியவாறு காண்க.

——–

4. எட்டாரச்சக்கரபெந்தம்

தண்மதிநிகர்வதயங்கியவதனம்
பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்
மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா
மாறன்றுடரிமலைதன்மின்போன்றொளிர்
தண்ணென்பொற்சுனைமன்னியமாமல
ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே.

இது, இடக்குறுக்காரின்முனைதொடங்கி வலக்குறுக்காரின்முனை யிறுதிசென்று முதலடிமுற்றி,
அதனையடுத்த இடக்கீழாரின்முனை தொடங்கி அதனெதிர் மேலாரின்முனையிறுதி இரண்டாமடிமுற்றி,
அதனையடுத்த கீழாரின்முனைதொடங்கி யதனெதிர்நின்ற மேலாரின் முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி,
அதனையடுத்த வலக்கீழாரின் முனைதொடங்கி யெதிர்நின்ற மேலாரின்முனையிறுதிசென்று நான்காமடி முற்றி,
முதலடிதொடங்கிய தகரத்தினின்று வட்டைவழியே யிடஞ் சுற்றி ஐந்தாமடியாறாமடிகள் முற்றியவாறு காண்க.

இதனுள், முதலடிதொடங்கிவந்த குறட்டெழுத்துக்களை யிடஞ் சுற்றிப்படிக்க
வடமலையப்பன் என்னுந் திருநாமம்வருமாறு காண்க.

————

5. இதுவும் எட்டாரச்சக்கரபெந்தம்

சேடுறுதட்பச்சீரிமகிரிக்கைவிலின்
போர்பொருவீரபுராரிசெற்றத்தடர்த்
தின்பமது றவமரியலருணிருதனேர்
முன்புமேத்தமராரிம்பர்நம்பாலுறு
சேர்மழைபோனிறத்திருவுறைமுதல்வன்
தாரிணைத்தாளெதிர்தாளுற்றுன்னெஞ்சே

இது, இடக்குறுக்காரின் முனைநின்றுதொடங்கி அதனெதிராரின் முனையிறுதிசென்று முதலடிமுற்றி,
அடுத்தஇடக்கீழாரின்முனைநின்று அதனெதிராரின் முனையிறுதிசென் றிரண்டாமடிமுற்றி,
அடுத்தகீழாரின் முனைநின்று எதிர்த்தமேலாரின்முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி,
அடுத்த வலக்கீழாரின்முனைநின்று அதன் எதிராரின்முனையிறுதிசென்று நான்காமடி முற்றி,
முதலடிதொடங்கிய சேகாரம்தொட்டு வட்டைவழியிடஞ்சென்று எதிராரினிறுதியில் ஐந்தாமடிமுற்றி,
அதனடுத்தஅறை தொடங்கி அம்முறைசென்று முன்னடிதொடங்கிய சேகாரத்தைக் கொண்டு ஆறாமடிமுற்றியவாறு காண்க.

முதலடி தொடங்கிக் குறட்டில்விழுமெழுத்துக்களை யிடஞ்சுற்றிப் படிக்கச் சீராமராமசெயம் என்னும் ராமதோத்திரம் வருதலும்,
குறட்டினின்றும் ஐந்தாமறைகளில் இடஞ்சுற்றிப்படிக்கத்தருமமேகைதரும் என வருதலுங் காண்க.

—————-

6. பதுமபெந்தம்

மாறாமாலாலேமாறாமா
மாறாமாவேளேமாறாமா
மாறாமாகோவாமாறாமா
மாறாமாவாதேமாறாமா

இது, நடுப்பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்சென்று வலமே
அடுத்த புறவித ழகவிதழ்வழியே பொகுட்டினிழிந்து அடுத்த அகவிதழ்வழி புறவிதழ்சென்று முதலடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்றும் கீழ் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ் வழி அடுத்த
கீழ்க்கோணத்துள்ள புறவித ழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழிடக்கோணத்துள்ள
அகவிதழ்வழி யதன்புறவிதழ்சென்று இரண்டாமடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்று கீழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ள
புறவித ழகவிதழ் சென்று பொகுட்டினிழிந்து மே லிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன் புறவிதழ்சென்று மூன்றாமடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்று மே லிடக்கோணத் தகவிதழ் புறவிதழ்வழி மேற்கோணத்துள்ள புறவித ழகவிதழ்
சென்று பொகுட்டினிழிந்து முதலடிதொடங்கிச் சென்றகோ ணத்திகழ்களிற்சென்று நான்காமடிமுற்றியவாறு காண்க.

—————-

7. முரசபெந்தம்

போதவானதுவாதரா
மாதவாதணவாதநா
நாதவாணதவாரவா
வேதவானதுவாரகா

இது, செவ்வேவரைந்தநான்கடியுள்ளும் முதலடியு மீற்றடியும் நான்கடிகளிலும் மாறாடிக்
கோமூத்திரிபோல மடங்கிச்சென்று முற்றியும்,
இரண்டாமடி முற்சதுரத்தின்வலஞ்சென்று நான்கடியிலும் மாறாடி மூன்றாமடிமுதலெழுத்தான்முடிந்தும்,
மூன்றாமடி, பிற்சதுரத்தின் இரண்டாமடி யினிறுதியெழுத்தினின்றுதொடங்கி இடஞ்சென்று நான்கடியினுமாறாடி
மூன்றாமடியினிறுதியெழுத்தான் முடியுமாறு காண்க.
அன்றியும், இரண்டுமூன்றாமடிகள் முறையே முற்பாதி பிற்பாதிகளில் வலமிடமாகத் தம்முண் மாறாடிமுழுவதுங் காண்க.

——————

8. உபயநாகபெந்தம்

மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை
யாறனளிமேயவன்னமே–யேறுத்
தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன்
னெமர்யாயெமையாளிறை

அறமுமறமமைந்தவன்பென்பதுவும்
பெறனன்னலமதுண்மைபேரா–துறுபாற்கோர்
மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே
யேனமெமையாளியை

இவ் விரண்டுபாட்டும், இரண்டுநாகங்களின் தலைநின்றுதொடங்கி
வான்முனைகளிறுதியாக இடையிடையே தத்தம்முடலினும், பிறிது பிறிதுடலினும் மாறாடி முடியுமாறு காண்க.

————

9. இரதபெந்தம்

நாராராராயநயனயணாவிண்ண்
ணாராமணாயனிலமாயவா–சீராய
நன்காநமநமநன்காநமநம
மன்காமன்றாதாய்நம.
மாயவனேவேதமதியேவயநாக
பாயவனேதேநளினபாதாபராபரா
தூயவனேகாரணாபூரணாதோணிலமா
னாயகனேசீராகநாராயணாயநம

இவற்றுள், முதற்பாட்டு, மேற்பாதியின்சிகரத்தினின்றும் இரு மருங்கிலு மிடையிலும்நாராயணாயநமவென்னும்
மந்திரம்நிற்க வலமிடமாக மடங்கியிறங்கிமுடியுமாறும், பிற்பாட்டு, கீழ்ப்பாதியின் மேற்றளத்தின்முதலறை தொடங்கி
வலமிடமாகமடங்கியிறங்கி அடியறையினின்று நடுப்பத்தியில்நாராயணாநமவென் றேழ்தளத்தும் மாறாடியேறி முடியுமாறுங் காண்க.
இதனுள் விண்ண் என்னு மொற்றளபெடை யோரெழுத்தாதலால் அறிகுறியொழிய வோரறையுள்நின்றது.

————–

10. சருப்பதோபத்திரம்

தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா

இது, நாற்புறமும் தலைப்பாகவைத்து வரிசையாய்ப்படித்தாலும், மடக்கிப்படித்தாலும்,
நான்கடியையும் மேனின்று கீழிறக்கியும் கீழ்நின்று மேலேற்றியும் படித்தாலும்
சொரூபங்கெடாமல் மாலைமாற்றாய் முடியுமாறு காண்க.

————

11. கூடசதுர்த்தம்

நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா

இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும் கீழேகாட்டியவாறு
மேனின்றுகீழுங் கீழ்நின்று மேலுமாக லெழுதத்தோன்றிய பத்தெழுத்துவரி
மூன்றினுள் இடைவரியாய் மறைந்துகிடப்பது காண்க.

——————

12. கோமூத்திரி

மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா

இது, முன்னிரண்டடி மேல்வரியாகவும், பின்னிரண்டடி கீழ்வரியாகவு மெழுதி,
அவ்வரியிரண்டையும் கோமூத்திர ரேகைவழிபடிக்க ஒன்றுவிட்டொன்று மாறாடிமுடியுமாறு காண்க.

———–

13. சுழிகுளம்

சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான

இது, செவ்வேயெழுதிய நாலடிநான்குவரியுள், முதலடி முதலெழுத்தினின்றும்
சுழிரேகைவழியே இடஞ்சுற்றிப்படிக்க நாலடியு முடியுமாறு காண்க.

————–

Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் – TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்தேடல்
தேடல்…
த.இ.க. பற்றி தொடர்புக்கு
English
முகப்பு
Tamil Nadu Logo
கல்வித் திட்டங்கள்
நூலகம்
கணித்தமிழ்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
தகவலாற்றுப்படை
முகப்பு >TVU
TVU
முகப்பு தொடக்கம்

14. எழுகூற்றிருக்கை

494-499ஆம்பக்கங்களிலுள்ளது.

——–

ஒருதனித்திகிரியினிருவிசும்பொழுக்கத்
தொருஞான்றொருபகலொடியாவுழப்பிற்
பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்

மும்மதநால்வாய்க்கரியுரிமுக்கட்
செம்மலினிருகணுமிமையாத்தேவர்க
ளொருபோழ்தகலாதொருவழிப்படநின்
றிருகையுங்கூப்பிமுப்போதினுமிறைஞ்ச
நான்முகமுதல்வனினசைஇயநல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்
முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக

மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த
முக்கோற்பகவர்முறைமுறைபிறழா
விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்

முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்

முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்

நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா

பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணககோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்

வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே.

இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது.
இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும்,
பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க.
பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது.
ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க.

——————–

15. சதுரங்கபெந்தம்

மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யானதவபோதனுமாயாய்ந்தகோ–மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனொன்
றாதயமாவன்புலமாய.

*இச்செய்யுளை இச்சதுரங்க அரங்கின் நாலுபக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும்
நடுவி னாலறையிலும் மாதவன் என்னுந் திருநாம நிற்குமாறு ஆராய்ந்து அமைத்துக்கொள்க.

————

16. கடகபெந்தம்.

கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே–நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி.

இது, முகப்பின்பூட்டுவாய்தொடங்கி வலமே இரண்டாமறை சென்று கீழறையினிறங்கி,
மறித்து மவ்வறையின்வழியே மேலறையிலேறி நடுவறையிலிறங்கி யாறாமறைவரைசென்று,
அதன்கீழறையிறங்கி மறித்தும் முன்போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமே
கூற்றியிறுதியறைசென்று முடியுமாறு காண்க.

———-

17. கடகபெந்தம் (வேறு)

நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராசியிணையில்லா–தார்கணிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான்.

இது, பூட்டுவாய்நின்று வலப்பக்க மிரண்டாமறைசென்று கீழறையினிறங்கி யவ்வழியே மேலறையிலேறியிறங்கி
வலஞ்சென்று இடை யிடையேயுள்ளகுண்டுகளாகிய நான்கறைகளிலுஞ்சென்றுமீண்டு மிறுதியறை சென்று முடியுமாறு காண்க.
இப்பாட்டிற்கு உரையெழுதப் படாமையாலும்
சுத்தபாடந்தோன்றாமையாலும் பெந்தத்திற்குப் பொருந்துமாறு இங்குச் சிறிது வேறுபடுத்தி யெழுதப்பட்டிருக்கிறது.

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–மூன்றாவது–சொல்லணியியலுரை—பகுதி-2 -சித்திரகவி.–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

சித்திரகவி.

270.வல்லினமெல்லினமிடையினப்பாட்டே
நிரோட்டியமோட்டியமோட்டியநிரோட்டிய
மக்கரச்சுதகமதன்வருத்தனையே
வக்கிரவுத்திவினாவுத்தரமே
சக்கரபெந்தம்பதுமபெந்த
முரசபெந்தநாகபெந்த
மிரதபெந்தமாலைமாற்றே
கரந்துறைசெய்யுட்காதைகரப்பே
பிரிந்தெதிர்செய்யுட்பிறிதுபடுபாட்டே
சருப்பதோபத்திரங்கூடசதுர்த்தங்
கோமூத்திரிசுழிகுளந்திரிபங்கி
யெழுகூற்றிருக்கையொடிருபானுறும்
பழிதீர்மடக்குடைச்சித்திரப்பாவே.
(எ-ன்) இன்னுமம்மடக்கலங்காரங்களுட்படுவனவாஞ் சில மிறைக்கவி களுணர்த்துதனுதலிற்று.
மிறைக்கவியெனினுஞ் சித்திரப்பா வெனினு மொக்கும்.

(இ-ள்) வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாகச் சொன்ன விருபத்தாறும் முன்சொல்லிப்போந்த
சொல்லொடு மெழுத்தோடுங்கூடிய குற்றமற்ற சொல்லணியினுண் மடக்கின்பாற்படுஞ் சித்திரகவியா மென்றவாறு.

இதனுட் பாட்டென்பதனை மூன்றிடத்துங்கூட்டுக. எண்ணும்மை தொக்கு எண்ணேகார மிடையிட்டு வந்தன ; என்னை?
“எண்ணேகார மிடையிட்டுக்கொளினு, மெண்ணுக்குறித்தியலுமென்மனார்புலவர்” என்பதாகலின்.
இருபானாறும் என்னு மும்மை எச்சவும்மையாதலால் மாத்திரைச்சுருக்கமும், மாத்திரைவருத்தனையும்,
ஒற்றுப்பெயர்த்தலும், திரிபதாதியும், சதுரங்கபெந்தமும், கடகபெந்தமும் என்னு மித்தன்மை யனவெல்லா முரைத்துக்கொள்க

வல்லினப்பாட்டு

271.அவற்றுள்,
வல்லினமுழு துறல்வல்லினப்பாட்டே.
(எ-ன்) வைத்தமுறையானே வல்லினப்பாட்டாமா றுணர்-ற்று.

(இ-ள்) வல்லினவெழுத்தாறும்வந்து ஒழிந்தவினமிரண்டும் வாராதேபாடுவது வல்லினப்பாட்டா மென்றவாறு.

பொற்றொடிகற்சட்டகத்தைப்போக்கிப்புறத்திறுத்த
கற்புறத்தற்காட்சிக்கதிகொடுத்த–சிற்றடிப்போ
துச்சிப்பதிக்கத்தாகூற்றச்சுறுத்தாது
கச்சிப்பதிக்கத்தாகை. (767)

இதனுள் வல்லினவெழுத்தாறும்வந்து பிறவினவெழுத்துக்கள் வாராதது கண்டுகொள்க.

(இ-ள்) திருக்கச்சிப்பதிக்குக் கத்தனே ! என்னை யமன்வந் தச்ச முறுத்தாது, நீ பொன்னினாற்செய்த
தொடியினையுடையாள்கற்படிவத்தைப் போக்கி யவளைவிட்டுப் புறமாறினகற்பு மீட்டு மவளிடத்தெய்தவும்
பண்டைச்சரீரத்தினதழகெய்தவுங்கூட்டுஞ் சாபவிமோசனத்தைக் கொடுத்த சிறிய திருவடிகளாகிய
தாமரைப்போதை யென்சென்னியிலே சூடத் தருவாயாக, அதனோடும், அஞ்சாதேயென்னும் அபயத்தமுந் தருவாயாக வென்றவாறு.

அச்சமுறுத்தாது என்பது அச்சுறுத்தாதெனத் தொகுக்கும் வழித்தொகுத்தலென்னும்விகாரத்தானின்றது ;
“குணமாலையையச்சுறுத்த” வென்பதுபோலக் கொள்க. துறை – கடவுள்வணக்கம்.

மெல்லினப்பாட்டு

272.மெல்லினமுழுதுறன்மெல்லினப்பாட்டே.
(எ-ன்) மெல்லினப்பாட்டாமாறுணர்–ற்று.

(இ-ள்) மெல்லினவெழுத்தாறும்வரப்பாடுவது மெல்லினப்பாட்டா மென்றவாறு.

மனமேநினைஞானமன்னாமைமீன
மனமேனமெங்ஙனெனினங்ஙன்–முனமானா
னேமிமான்மாமானினிநீண்மனமான
நேமிமானன்னாமநீ. (768)
இது மெல்லினமாறினாலும்வந்த மெல்லினப்பாட்டு.

(இ-ள்) மனனே ! மீனமும் அன்னமும் ஆமையும் ஏனமும் எப்படியேயிருக்குமென்னி லப்படியே முன்னந் திருவவதாரமானவன்,
பூமிதேவியாகிய மான்போலும்விழியையுடையாளுக்குந் திருமகளாகிய பெண்ணுக்கும் அவர்கள்மனமெப்படி யப்படியான
ஞானமன்னன், சக்கரத்தையுடையான், அவனது நல்ல திருநாமங்களை யிடைவிடாது நீ நினைப்பாயாக வென்றவாறு.
எனவே அந்நினைவே யான்மலாபத்தைத் தருமென்பது கருத்து. துறை – இதுவுமது.

இடையினப்பாட்டு

273.இடையினமுழுதுறலிடையினப்பாட்டே.
(எ-ன்) இடையினப்பாட்டாமாறுணர்–ற்று.

(இ-ள்) இடையினமாறும்வரத்தொடுப்ப திடையினப்பாட்டா மென்றவாறு.

வேயாலலையால்வில்வேளாலயலவரால்
யாயாலுயிர்வாழ்வார்யாவரே–யோய்விலராய்
வாழ்வாருயிர்வழியேவாழ்வாரருளாள
ராழ்வாரருளிலரேயால். (769)
இஃது இடையினமாறும்வந்தபாட்டு.

(இ-ள்) ஒழிவில்லாதவாழ்வினையுடையார், உயிரின்கண்ணே நீங்காதுவாழும் வாழ்வினையுடையார்,
கிருபையை யாட்சியாகவுடையார், அவர்யாரெனில்? ஆழ்வாரென்னுந் திருநாமத்தையுடையார்
(எமக்குத்தாரு மார்புந் தரவேணுமென்னுங்) கிருபையிலர் ; ஆனபடியாலே தோழீ ! வேய்ங்குழல்முதலாகிய
பகைகளாற் புமான்களையெய்தாது தனியிருந்தவரு ளுயிர்வாழ்வா ரொருவருமில்லை யென்றவாறு.

முன்னிலை யெஞ்சிற்று. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல்.

நிரோட்டியம்

274.இதழ்குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்.
(எ-ன்) வைத்தமுறையானே நிரோட்டியமாமா றுணர்-ற்று.

(இ-ள்) அதரமு மதரமுங் குவியாதுங் கூடாதும் நடப்பது நிரோட்டியமா மென்றவாறு. உம்மை யிரண்டிடத்துந் தொக்கன.

நாதனரங்கநகர்நாராயணனறைசேர்
சீதநளினத்தினிற்சிறந்த–காதற்
கனிநானிலக்கிழத்திகட்கினியகாந்தித்
தனிநாயகன்றாள்சரண். (770)
இது நிரோட்டியம்.

இதனுள் நறைசேர்சீதநளினத்தினிற்சிறந்தகாதற்கனி – திருமகள். நானிலக்கிழத்தி – பூமிதேவி.
கட்கினியகாந்தி – கண்ணிற்கு விருப்பத்தைத்தரு மழகு. துறை – கடவுள்வணக்கம்.

ஓட்டியம்

275.இதழ்குவிந்தியைந்தியல்வதுவேயோட்டியம்.
(எ-ன்) வைத்தமுறையானே யோட்டியமாமா றுணர்–ற்று.

(இ-ள்) அதரமுமதரமுங் குவிந்துங் கூடியு நடப்பதுவே யோட்டியமா மென்றவாறு.

குருகுகுருகுகுருகொடுகூடு
குருகுகுருகூருளுறுகோ. (771)
இஃது இதழ்குவிந்தவோட்டியம்.

(இ-ள்) மனனே ! சங்க சங்கொடுங் குருகென்றபறவைகள் குருகுகளோடுந் திரண்டியங்குங் குருகாபுரியுட்கோவை நினை யென்றவாறு.

மூன்றாமுருபின்மே லும்மை தொக்கு விரிந்தன. ஓடு இடைநிலைத்தீபகம். கோவை என்னு மிரண்டாவது இறுதியிற் றொக்கது.
உறு என்றது நினையென்றாயிற்று. மனனேயென்னு மெழுவாயுருபு முன்னிலையெச்சமாயிற்று.
பா – குறள்வெண்பா. துறை – கடவுள்வணக்கம்.

பம்மும்பம்மும்பம்முமம்மம்மமைமாமை
பம்முமம்மமும்மேமம்பாம். (772)
இஃது இதழியைந்தவோட்டியம்.

(இ-ள்) மை பம்மும் – (வலவனே யுனதுதேரைப்பின்னிட்டு விரைந்த) மேகம்,
(இதன்முன்சென்று தேர்வரும்வழிமேல்விழி வைத்த இல்லறக்கிழத்தியிருந்த நகரின்கட்) படியும்.
பம்மும்பம்மும் – அதனால், வான்மீன்கணங்களும் மறையும் ; இருள்செய்யும் என்றபடி.
(அங்ஙன மிருள்செய்யுமிடத்து) அம்மம்ம – ஐயோ ! ஐயோ ! மாமைபம்முமம்மமும்மேமம்பாம் – அழகியமுலை பசலைதழைவதாம் என்றவாறு.

எனவே என் சத்தியவசனமென்னாமென்பது பயனிலை. அடுக்கு அவலப்பொருணிலைக்கண்வந்தன.
பகுதி – பொருள்வயிற் பிரிதல். துறை – வலவனொடுகூறல். பா – இதுவுமது.

குருகுமடுவூடுகுழுமுகுருகூரு
ளொருபெருமானோவாமையூறு–முருகொழுகு
பூமாதுவாழும்புவிமாதுமேவுமொரு
கோமானுவா*வோதுகோ. (773)
இஃ திருவகையோட்டியமும்வந்த வோட்டியம்.

இதன்பொரு ளுரையிற்கொள்க. அவன்றிருவடிகளேகதியென்பது பயனிலை.
* உவா – நிறைவு.
துறை – கடவுள்வணக்கம்.

ஓட்டியநிரோட்டியம்

276.இருமையுமொன்றினுளிருவகைத்தாயுறும்
பெருமிதமோட்டியநிரோட்டியமெனப்பெறும்.
(எ-ன்) இதுவு மவ்வோட்டியநிரோட்டியங்கட் கோர் சிறப்பு விதிகூறுகின்றது.

(இ-ள்) ஓட்டியம், நிரோட்டியமென்னு மிரண்டுதன்மையு மொரு செய்யுளகத்தா யிரண்டுகூறுபாட்டானடை பெறுதலுறும்
பெருமையுடையது ஓட்டியநீரோட்டியமெனப் பெயர்பெறு மென்றவாறு. இரண்டுகூறு பாட்டானென்னுமவை மேற்காட்டுதும்.

மதிமடவார்வேலைவேய்மாரவேள்சோலை
பதிகுயிலோடேவன்பகைகூர்–விதியுங்
குறிதோநாகூராகுறிதுளவக்கோதை
முறிகூயருளேமுற. (714)
இஃது ஓட்டியமும் நிரோட்டியமும் முறைதடுமாறாது முறையே வந்தஓட்டியநிரோட்டியம்.

இதனுள், குறிதோ – ஓரொன்று குறியதுன்பத்தைச்செய்வதோ வென்க. ஓகாரம் எதிர்மறை. முறி – தளிர்.
ஒழிந்தபொரு ளுரையிற்கொள்க. திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – துயரறிவுறுத்தல்.

வதுவையொருபோதுவழுவாதுவாழும்
புதுவைவருமாதுருவம்பூணு–முதுமைபெறு
நாதனரங்கனையேநன்றறிந்தார்க்கேயடியேன்
றாதனெனநெஞ்சேதரி. (775)
இது முன்னடியிரண்டு மோட்டியமும் பின்னடியிரண்டு நிரோட்டியமு மாகவந்தவோட்டியநிரோட்டியம்.
இவ்விரண்டுதாரணமு மிங்ஙன மிரண்டு கூறுபாட்டான்வந்த வோட்டியநிரோட்டியம். இதன் பொருளுரையிற்கொள்க.
திணை – பாடாண். துறை – சமயவணக்கம். உறுமென்ற விதப்பினானே நிரோட்டியவோட்டியமுமுள. அவை வருமாறு :-

கற்றைச்சடையார்கயிலைக்கிரிகளைந்தான்
செற்றைக்கரங்கள்சிரங்கணிறைந்–தற்றழிய
வேவேவுமெவ்வுளுறுமேமமுறுபூமாது
கோவேமுழுதுமுறுகோ. (776)
இது முதலீரடியுந் தனிச்சொல்லும் நிரோட்டியமும் பின்னிரண்டடியு மோட்டியமுமாகவந்தநிரோட்டியவோட்டியம்.
இவற்றின் வேறுபாடு களெல்லாம் வந்தவழிக் கண்டுகொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

அக்கரச்சுதகம்

277.ஒருபொருள்பயந்தவொருதொடர்மொழியாய்
வருவதையோரெழுத்தாய்க்குறைவகுப்பிற்
சுருங்குபுபலபொருடோன்றுவதாய
வருங்கவியக்கரச்சுதகமாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே யக்கரச்சுதகமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைத் தருவதொருதொடர்மொழியாய்த் தொன்று தொட்டுவருவதைப் புவலனா லொரோ
வெழுத்தாகக்குறைத்துக்கூறுங் கூறுபாட்டாற் றொடர்ச்சொ லீரெழுத்துப்பதமு மோரெழுத்துப்பதமு மாகச் சுருக்கமெய்திப்
பலபொருடோன்றுவதாய அரியகவி அக்கரச் சுதகமாமென்றவாறு. சுதகம் – அழிவு.

ஒளிகொண்டபுத்தூருறைகோதைதீந்தேன்
றுளிகொண்டபூந்துளபத்தோன்றலாற்கீந்த
தளிகொண்டதையணிந்ததன்றதனைப்பற்றல்
களிவண்டிமிர்தேங்கமழ்வாசிகைசிகைகை. (777)
இஃது அக்கரச்சுதகம்.

(இ-ள்) கீர்த்தியைக் கைக்கொண்ட வில்லிபுத்தூருறையுங் கோதை சூடிக்கொடுத்தா ளினிய தேன்றுளிக்குஞ் செய்கையைக்
கைக்கொண்ட பூவோடுகூடிய துளவமாலிகையையுடைய பெரியோனுக் களித்ததுவு மதனைச் சூடியதும்
அதனைப் பற்றியதும் புலவீர்காள் ! கூறுங்காலத்துத் தேனையுண்டு களித்தலையுடைய
வண்டுக ளாரவாரிக்கும் வாசிகை சிகை கையா மென்றவாறு.

வாசிகை – மாலை. சிகை – திருக்குழற்கற்றை. கை – திருக்கை. இதனு ளவ்வாறுநின்ற கூறுபாடு கண்டுகொள்க.
திணை – பாடாண். துறை – வள்ளிவாழ்த்து.

அக்கரவருத்தனை

278.ஒருதொடர்மொழியீற்றோரெழுத்தினைப்பிரித்
தொருபொருடாவைத்தோரொன்றாக
மிக்கபல்பொருடாமேல்வைப்பனவே
யக்கரவருத்தனையாகுமென்ப.
(எ-ன்) வைத்தமுறையானே யக்கரவருத்தனையாமா றுணர்ற்று.

(இ-ள்) ஒருபொருடருவதொருதொடர்மொழியீற்றின் ஓரெழுத்தினைப் பிரித்துப் பிறிதொருபொருடரவைத் ததன்மேல்
ஒரோவெழுத்தாகப் பலபொருடோன்றவைப்பது அக்கரவருத்தனை யென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

எந்தைதிருத்தாளெழுகங்கையீறுமா
விந்தமலராட்கிசைந்தவீறினுக்கு–முந்தெழுத்துஞ்
சித்தசனன்வாண்முதலுஞ்சேயிழையாய்சேர்த்தக்கா
லத்தமெழிலோலைப்பூவாம். (778)

இஃது அக்கரவருத்தனை. அப்படி யிதனுட்சேர்க்கும்படி யெப்படி யென்னில், எம்முடைய சுவாமியாகிய
ஸ்ரீமந்நாராயணன் றிருவடிகளிலெழுந்த கங்கையென்றதொடர் மொழியீற்றினின்ற ககரவைகாரத்தைப் பிரித்துக்
கையெனக்கொண்டு, அரவிந்தமலராட்கிசைந்த வீறென்பதனைத் தகையென்றாக்கி, அதற்குமுதலெழுத்தாகிய
தகரத்தைப்பிரித்துச்சேர்த்துத் தகையென்றாக்கி, சித்தசனன்-காமன் ;
அவனுடைய வாளாகிய கேதகையென்றதிற் ககரவேகாரத்தைப் பிரித்துச்சேர்த்துக் கேதகையென்றாக்கி
அத்தம், எழில், ஓலைப்பூ என முடிக்க. வீறு – அழகு. அதனைத் தகையெனக் கூட்டினமையுங் காண்க

வக்கிரவுத்தி

279.வெளிப்படைவிளியினும்வினாவினுமெய்ம்மை
யொளித்துமற்றொன்றினையுரைப்புழிமறித்து
நிரைத்தபன்மொழிதொறுமிசைதிரிநிலைத்தா
யுரைப்பதுதானேவக்கிரவுத்தி.
(எ-ன்) வைத்தமுறையானே வக்கிரவுத்தியாமா றுணர்-ற்று.

(இ-ள்) வெளிப்படையாகவிளிக்குமிடத்தும் வினாவுமிடத்தும் முன்னின்ற பொருண்மையை மறைத்துப் பிறிதொன்றாக
வெதிர்மொழி கொடுத்தவிடத்து மீட்டுந் தெளிவிப்பனவாய்நிரைத்த தொடர்மொழி தோறும்
அம்முன்னின்றவ ரிரட்டுற விசைதிரிநிலைத்தாயுரைப்பதே வக்கிரவுத்தியா மென்றவாறு.

வெளிப்படை யீரிடத்துங் கூட்டுக. இரட்டுற – சிலேடையாக. முன்னிலையோ ரெச்சமாக விரித்துரைக்கப்பட்டது.

ஏற்றமுறுமோதிமத்தாவென்றேன்விண்ணோர்க்
கின்னமுதன்றளித்தவன்பேரென்றான்வெற்பிற்
றோற்றமுறுமெகினவாகனத்தாவென்றேன்
றொன்மறையோன்பெயரென்றான்சுரந்துவிண்ணோர்
போற்றவருமன்னவாகனத்தாவென்றேன்
புரந்தரனார்பெயரென்றான்பொன்னேயென்னே
மாற்றமுறப்பகர்ந்தமகிழ்மாறற்கென்றன்
மையலுரைத்தெவ்வாறுமருவுவேனே.
இது வக்கிரவுத்தி.

(இ-ள்) பொன்னையொப்பாய் ! நமதுவீதியி லுலாப்போந்த மகிழ்மாறரைத் தொழுத யான், ஒருதலைபற்றிய
காதலாலே யேறுதற்குண்டான வோதிமத்தையுடையவனேயென்றேன் ;
அப்பொழுது மலையை மத்தாகவுடையவ னெனும்பெய ரென்பெயரன்று, திருப்பாற் கடலைக் கடைந்து இனிய வமிர்தத்தைத்
தேவர்களுண்ணும்படிக்குக் கொடுத்த திருமால்பெய ரென்றான். மீட்டும் வெள்ளிமலைபோன்று பிரகாசிக்கு மெகினவாகனத்தாவென்றேன் ;
அப்பொழுது அதற்கு மிமவானிடத்துப்பிறந்த அன்னம்போலுநடையையுடைய வுமையை வாமபாகத்திலுடைய சிவனது
அத்த னென்னும்பெயர் பழைய மறையையுடைய பிதாமகன்பெய ரென்றான்.
மீட்டும், சுரந்துவிண்ணோர் போற்றவருமன்னவாகனத்தாவென்றேன்; அதற்குந் திரண்டு தேவர்கள்போற்று மன்னவனே !
மேகத்தையுடையவனே யென்னு மிருபெயரும் புரந்தரனதுபெய ரென்றான் ; ஆகையா லென்னே?
யான் கொண்ட மையலை யவனொடுகூறி யவன்றிருமார்பைத் தழுவுவ தெவ்வா றென்றவாறு.

பொன்னேயென்றது தோழியை. திணை – பெண்பாற்கூற்றுப் பெருந்திணை. துறை – மெலிவொடுகூறல்.

அஞ்சக்கரனோவென்றேன்சங்
கரனாமென்றான்றனியாழி
மிஞ்சத்தரித்ததிருத்தேர்வெய்
யவனோவென்றேன்வெயிலென்றான்
செஞ்சொற்பரிதிவலம்பயில்விண்
டோவென்றேன்பொற்சிலம்பென்றான்
வஞ்சர்க்கிரங்காவரங்கனுக்கென்
மாலெப்படியேமொழிவேனே. (780)
இதுவுமது.

(இ-ள்) அழகிய சக்கரத்தையுடையானோவென்றேன் ; அப்பொழுது அஞ்சக்கரங்களையுடையவ னுருத்திரனா மென்றான்.
ஒப்பற்ற திருவாழியை வலது கையிற் றரித்தவனுமாய்த் திருமகளைச் சிந்திக்கிறவனுமாய்த்
திருமகளாற் சிந்திக்கப்பட்ட விருப்பத்தையுடையானோ வென்றேன் ; அப்பொழுது மது வெயிலோனென்றான்.
மீளவுஞ் செம்மையொடுகூடிய கீர்த்தியையுடைய பரிதியை வலதுகையிற்றரித்த விண்டுவோவென்றேன்;
அதற்கும் அது பொற்சிலம்பென்றான்; ஆகையால் வஞ்சத்தையுடையோரிடத்துக் கருணைசெய்யாத்
திருவரங்கேசனுக் கியான்கொண்ட காதலை யெப்படியேகூறுவே னென்றவாறு.

துறை – இதுவுமது. முன்னது வெளிப்படைவிளியினும் பின்னது வெளிப்படைவினாவினும் அடைவே வந்தவாறு காண்க.

வினாவுத்தரம்

280.துதித்திடுமொருபொருட்டொடர்ச்சொலைப்பிரித்து
மதிப்படவினாயவகைக்கெதிர்மொழியாய்
விதிப்படவுரைப்பதுவினாவுத்தரமே.
(எ-ன்) வைத்தமுறையானே வினாவுத்தரமாமா றுணர்-ற்று.

(இ-ள்) உலகம் புகழ்வதா மொருபொருளைக் காட்டு மொரு தொடர்மொழியினைப் பிரித்துப் பிரித்த பதந்தொறு
மனத்துட்கொள ஒருவர் வெளிப்படையாகவினாய பலவேறுவகைத்தாங்கூறுபாட்டிற்கு முன்னின்றவன்
மாற்றமில்லாதமுறையொடு மெதிர்மொழியாவுரைப்பது வினாவுத்தரமா மென்றவாறு.

வண்டுளபத்தான்றுயிலும்வாழ்வேதுதெள்ளமுதம்
பண்டுகடைநாட்டறியாய்ப்பற்றியதென்–முண்டமுனி
போசனமாய்க்கொண்டதெவன்போதிலானுக்குவந்த
வாசனமதென்னரவிந்தம். (781)
இது வினாவுத்தரம்.

இதனுள், போதிலான் – பிரமன். அவனாசனமென் னரவிந்தம் என உலகந்து திப்பனவாய ஒருபொருடருமொழியை
அரவு+இந்து+அம் எனப் பிரித்து, துளபத்தான்றுயிலும்வாழ்வு அரவு, அமுதம் பண்டுகடைநாட் டறியாய்ப்பற்றியது இந்து,
முண்டமுனிபோசனமாய்க்கொண்டது அம் என முறையே நிறுத்தி, போதிலானுக் குவந்த வாசனமதென் னரவிந்தமென்னச்
செவ்வனம்விரியாது அருமை தோன்ற விரித்துக்காட்டியது காண்க.
இது வாகைத்திணையுட் புலமைவென்றி.

சக்கரபெந்தம்

281.சக்கரத்துட்டடுமாறுதறானே
சக்கரபெந்தமெனச்சாற்றினரே.
(எ-ன்) வைத்தமுறையானே சக்கரபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) சக்கரத்தினுள் அக்கரந் தடுமாறப் பெந்திப்பது தானே சக்கரபெந்தமெனச் சாற்றினர் பெரியோ ரென்றவாறு.
பெந்தம் – சம்பந்தம்.

282.அதுவே,
நாலிருமூன்றிருநாலெனநாட்டுஞ்
சார்பினிலார்புனைதன்மையவாகும்.
(எ-ன்) இதுவும் சக்கரத்தினது கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அக் கூறப்பட்ட சக்கரம், நரலார் ஆறார் எட்டாரெனப் புனையப்பட்ட தன்மைகளை யுடையவா மென்றவாறு.

சக்கரமென்பது தேரினதுருள். ஆர் என்பது அதனதகத்துச் செறிக்கப்பட்ட கதிர். புனைதல் – செய்தமைத்தல்.

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா (782)
இது நாலாரச்சக்கரம்.

இதனுள், நடுவு வா வென்னு மெழுத்து நின்று எட்டாகியும், நாலார்மேலும் நாலு னகாரம்நின்று எட்டாகியும்,
சூட்டின்மேனின்ற எழுத்துப் பன்னிரண்டினுள் நாலுதிக்கினுநின்ற மகரஆகார மிரண்டும் வகர ஆகார மிரண்டும்
ஆக நாலும் எட்டாகியுந் தடுமாறி ஆக எ-ம் 32 எழுத்தாகி, சிந்தடிநான்கான்வந்த வஞ்சிவிருத்த மமைந்தவாறு காண்க.

(இ-ள்) வானாதியாய பஞ்சபூதமானவனே! தேவர்கள்விரும்பும் மனுகுலமானவனே!
பெருமையையுடைய வாமனரூபமானவனே! விசும்பினிடத்து மேகம்போலுநிற மாக்கஞ்செய்தவா ! என்றவாறு.
எனவே யென்னைக் காப்பாயாக வென்பது கருத்து. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க–வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது. (783)
இதுவும் நாலாரச்சக்கரம்.

இதனுள், நடுவு தகரநின்று அதனைச்சூழ்ந்த குறட்டின்மேல் திருமலையென்னும்பெயர் நின்று ஆர் நாலினும்
நாலுநாலாகப் பதினாறெழுத்து நின்று சூட்டினமே லிருபத்தெட்டெழுத்து நின்று
ஆக எழுத்து நாற்பத்தொன்பதும் ஐம்பத்தஞ்சாக மாறாடின.
அவை மாறாடினவகை :- நடுவு தகரம் இரண்டாகவும்,
சூட்டின்மையங்களில் முதன்மையத்தில் து மூன்றாகவும்,
ஒழிந்தமையத்தில் தே பூக மூன்றும் ஆறாகவும் மாறாடினவாறு காண்க.

(இ-ள்) தேவா – சகலதேவன்மாருக்குந் தேவனே ! மோகூரா திருமோகூரானே !
திதமகிபா – உண்மைப்பொருளானமகிபனே !
மாமோக – பெரியபிராட்டியைமோகிக்கப்பட்டவனே ! பிராட்டியால் மோகிக்கப்பட்டவனே! எனினுமாம். என்னை?
“தடுமாறு தொழிற் பெயர்க் கிரண்டு மூன்றுங், கடிவரை யிலவே பொருள்வயி னான” என்பதனா னறிக.
பூவாளி ஓஒ பொருதலைக்க – காமன் மிகவும் பாணங்களாற் பொருது அறிவினதுநிலையைக் குலைக்க அதனோடும்.
ஓவாது – ஒழிவின்றியே. துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு – காமனது வெற்றிமுரசான கடலே துன்பமதெனும்
பூமடந்தைபோல்வாளுக்கு அவற்றினோடும்,
வெங்கனலாவானேன்விது – குளிர்ந்தசந்திரனும் வெம்மையைச்செய்யுந் தழலாவானே னென்றவாறு.

பூவாளி – பூவைப்பாணமாகவுடைய காமன். இதனைப் பெந்திக்குமாறு :- இடதுபக்கத்துச்சூட்டின்மையத்துத்
தேவாவென்றெடுத்து மோகவென முடித்து, வலமாக அதற்கடுத்தசூட்டின்மையத்துப் பூவாளியென் றெடுத்து
ஓவாது என்று முடித்து இறுதிநின்ற துவ்வென்பது முதலாகச் சூட்டின்வலமேறி விதுவென முடிக்க.

இதனுள், ஓஒ வென்னு மோகார வளபெடை சிறப்பின்வந்தது. என்னை?
“தெளிவினேயுஞ்சிறப்பினோவு, மளபினெடுத்தவிசையவென்ப” என்பதனா னறிக.
“இசைகெடின்…. குறியே” என்பதனால் இரண்டு மாத்திரையான ஓகாரம் செய்யுட்கண் ணோசைசிதைந்தவிடத்து
மூன்று மாத்திரையாய் நீண்ட குறிக்குத் தனக்கினமாகிய குற்றெழுத்தினொடு நின்றதல்லது இரண்டெழுத்தல்லவென்ப தறிக.
திணை – பெண்பாற் கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

மாதவனேதென்னரங்கேசமான்மருளாகமிகு
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே. (784)
இஃது ஆறாரச்சக்கரம்.

இதனுள், நடுவு கே யென்னுமெழுத்து நின்று அதனைச்சூழ்ந்த குறட்டில் ஆறக்கரம்நின்று சூட்டிற் பதினெட்டெழுத்து நின்று
குறட்டுக்குஞ் சூட்டுக்கு நடு ஆராறில் ஆர்தோறும் ஏழெழுத்துநின்று ஏழெழுத்தில் நடுவெழுத்தாறும்
தென்குருகூர் என்னும் பேராகநின்று ஆக அறை அறுபத்தேழில் எழுத் தறுபத்தேழும் ஒற்றுள்பட ஒன்பதெழுத்து
மாறாடினமுறையாலேறி எழுபத்தாறாக நேரசைக்கலித்துறை நின்றவாறு காண்க.

நடுவிற் கே மூன்றாகவும், முதற்சூட்டின்மையத்து வே மூன்றாகவும், ஒழிந்தசூட்டின்மையத்துநின்ற
மா கு பொ மே வா ஐந்தும் ஒரோவொன்று இவ்விரண்டாகவும் நின்றன. இதனைப் பெந்திக்குமாறு :-
இடதுபாகத் திரண்டாஞ்சூட்டின்மையத்து மாதவனே யென்றெடுத்து நேரே மிகு என முடித்து,
அதற்கடுத்த மூன்றாஞ்சூட்டின் மையத்துப் போதன் என எடுத்து மே யென நேரே முடித்து,
நாலாஞ் சூட்டின்மையத்து வாதிதமாகுதற்கென எடுத்து, பொதுவே என முடித்து,
முடித்த வே நாலாமடிக்கு முதலெழுத்தாகப் பின்னும் மேதகவேயென அதனின்முடிக்க.

(இ-ள்) திருமகள்காந்தனே ! அழகிய அரங்கேசனே ! மேகம் போன்ற திருமேனியனே !
பெரிய பிரமனு மவன்முதலாங் கடவுளரு மன்பினோடுந்தொழுங் கேசவனே ! சகலான்மாக்களுக்கும் பொதுநின்றவனே !
என் றுன்னைநினைந்து மிகவுங்குழைவார்க் கிதயதாமரை யகத்தோனே ; வேதமுதல்வனே ;
நின்னைக்குறித்து நமாநம என்னா நின்றேன் ; அதற்குத்தகுவதாகவென்னாருயி ரின்னும் பொல்லாங்கை விளைக்கப்பட்ட
செனனத்தை யிவ்வுலகத்தெய்தாது இன்பமெய்துதற்கு என்னைக் காப்பாயாக வென்றவாறு.

போதனும் என்னு மும்மை எச்சவும்மை. இதனுள், இரண்டாமடியீறு தொடங்கி யொழிந்தன மாட்டுறுப்பாக நிகழ்ந்தன.
துறை -கடவுள்வணக்கம்.

தண்மதிநிகர்வதயங்கியவதனம்
பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்
மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா
மாறன்றுடரிமலைதன்மின்போன்றொளிர்
தண்ணென்பொற்சுனைமன்னியமாமல
ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே. (785)
இஃது எட்டாரச்சக்கரம்.

இதனுள், நடுவு தகரம் நின்று சூழ்ந்தகுறட்டில் வடமலையப்பன் என்னும் பெயர் நின்று
ஆர்மேல் நாற்பத்தெட்டெழுத்தாய்ச் சூட்டின் மேன் முப்பத்திரண்டாய்நின்றவாறு காண்க.
நடுநின்ற தகரம் நாலெழுத்தாய் முதற்சூட்டின்மையந்தொடங்கிநின்ற த பொ ம மா ம் ர் டா ர் எட்டும் பதினாறாய்,
குறட்டில் வடமலையப்பன் என்னும் எட்டும் பதினாறாய், பத்தொன்பதெழுத்து மாறாடி அறை எண்பத்தொன்பதினின்ற
எண்பத்தொன்பதுக்கு நூற்றெட்டெழுத்தால் ஆறடி நிலைமண்டிலவாசிரி யப்பாவாய் முற்றியது.

இதனுள், நிடதப்புரைவரைநிகர் – நிடதமாகியவுயர்ந்தமலையை யொத்த. மலைதன் – மலைதன்னில்.
மின்போன்றொளிர் – மின்னைப் போன் றொளிராநின்ற. தண்ணென்பொற்சுனை – குளிர்ந்த பொன்னோடு கூடிய சுனை.
மன்னியமாமலர் – நிலைபெற்ற நீலோற்பலம்போல்வ.
அம் மடவார்மையுண்டாட்டமர்கண் – அழகியமடவார் மையெழுதப்பட்டுக் களிப்போடுகூடிய கண்கள். உண்டாட்டு – களிப்பு.
நண்பனே ! பத்தரல்லாத தாமதத்தினைவிரும்புவோர்க் கெட்டா மாறன் றுடரிவெற்பிடந் தன்னி லெனக் கூட்டுக.
நண்பனே யென்னு முன்னிலை எச்சம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

சேடுறுதட்பச்சீரிமகிரிக்கைவிலின்
போர்பொருவீரபுராரிசெற்றத்தடர்த்
தின்பமதுறவமரியலருணிருதனேர்
முன்புமேத்தமராரிம்பர்நம்பாலுறு
சேர்மழைபோனிறத்திருவுறைமுதல்வன்
தாரிணைத்தாளெதிர்தாளுற்றுன்னெஞ்சே. (786)
இதுவும் எட்டாரச்சக்கரம்.

இதனுள், நடுவு ரி என்னு மெழுத்துநிற்க, குறட்டிற் சீராமராமசெயம்என்னும் ராமதோத்திரநின்று,
ஆர்மேற் குறட்டுடன் அஞ்சா மறையில்நின்றும் வலமாக,தருமமேகைதரும் என்னும் பழமொழி நின்று,
ஆர்மேல் நாற்பத்தெட்டெழுத்தாய்ச் சூட்டின்மேன் முப்பத்திரண்டெழுத்தாய் முதலடியின் முதலெழுத்தாகிய சே அஞ்சாமடிக்கு
முதலெழுத்தாய் ஆறாமடிக்கு நெஞ்சேயென்ன முடிந்தமொழிக்கீறாய் மூன்றெழுத்தாயவாறுங் காண்க.
இதனைப் பேந்திக்குமாறு :- தன் முன்னர்ச் சூட்டுமையத்துநின்றுஞ் சேடுறு என நோரோட்டிக் கைவிலின்
என அஞ்சாமாரின் முடித்து, வலமாக இரண்டாமார்தொடங்கி நாலாமார்வரைக்கும் லுறு என முடித்து,
மீட்டும் முதலடியிற் சே என்றவெழுத்தை யெடுத்துச் சேர்மழைதொடங்கி நெஞ்சேயெனச் சூட்டின் வலமாகச்சுற்றி முடிக்க.

(இ-ள்) நெஞ்சே – நெஞ்சமே ! சேடுறு…. விலின் – பெருமை யெய்துங் குளிர்ந்த சீர்பொருந்திய
விமவானென்னுங் கிரியைக் கைவில்லாக்கி அதனால், போர்…. அடர்த்து – திரிபுராதிகளுடன் போரைப் பொரும்
வீரத்தையுடைய புராரியென்னுஞ் சிவன் கைலையை யெடுத்தலைத்ததனாற் கோபித்து விரலையூன்றி மதுகையையழிப்ப வீடுபட்டு.
இன்பமது…. முன்பும் அவன் பாடிய பாட்டினுக்குருகி மீள வின்பமுறும்படி சமர்க்கு வேண்டு மாயுதமுதலிய வியல்பினை
யெல்லா மடர்த்த சிவன் றான்கொடுப்பவெய்திய மழைபோனிறநிருதன் சமர்க்கு நேர்பட்ட முதனாளுங்
கும்பகருணன்முதலியோர் பட்டபின்னும். எதிர்தாளுற்று – அவனெதிர்தரத் தானும் போர்க் கெதிரு முயற்சியையுற்று.
இம்பரேத்தமர் – இவ்வுலகின்கண்ணே யாவரு மேத்துந் தனதுபோரால். ஆர் – அவனதுயிரையுண்ணும்.
திருவுறை…… தாள் – திருமகள் விட்டுநீங்காத முதல்வனது தாமரைப்பூப் போன்ற இரண்டு திருவடிகளையும்.
உறுநம்பால் – மிக்க விருப்பத்தால். உன் – சேர். நினை – தியானத்தாற் கூடுவாயாக என்றவாறு.

இங்ஙனந் தியானிக்க வீடேறலா மென்பது பயன். அவனுயிரை என்பது சொல்லெச்சம்.
முன்பும் என்னும் உம்மை யெச்சமாதலாற் பின்னுமென்ப தாயிற்று. அமரால் மூன்றாவது தொக்குநின்று விரிந்தது.
ஆர் உண்ணும் என வினைத்தொகைவாய்பாடு செய்யுமென்னும் பெயரெச்சவாய்பாடாக விரிந்து
தன்னெச்சமான திருவுறைமுதல்வனென்னும் பெயர்கொண்டு முற்றியது. திணை – பாடாண். துறை – கடவுள் வணக்கம்.

பதுமபெந்தம்

283.எண்ணிரண்டிதழாய்க்கோணிருநான்கின்
கண்ணுறநடுவணப்பொகுட்டதுகாட்டிப்
பண்ணமைப்பதுவும்பதுமபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே பதுமபெந்தமாமாறுணர்-ற்று.

(இ-ள்) ஒரு தாமரையை எட்டுக்கோணினு மிவ்விரண்டாகப் பதினாறிதழெழுதி நடுவே
யொரு பொகுட்டினையுங் காண்பதாக்கிச் செய்தமைப்பதும் பதுமபெந்தமா மென்றவாறு.
உம்மையான் மகாபதும பெந்தமு மொன்றுள.

மாறாமாலாலேமாறாமா
மாறாமாவேளேமாறாமா
மாறாமாகோவாமாறாமா
மாறாமாவாதேமாறாமா. (787)
இது பதுமபெந்தம்.

(இ-ள்) முதலடியீற்று மா – திருவன்னாள். மாறாமாலால் – நீங்காத மாலால். ஏமாறா – வருந்தும்படிக்கு.
(இரண்டாமடி) மாறாமாவேளேமாறாமாம் – மாயோன் றரப்பட்ட கரிய வேளம்பு மாற்றமாமாம்.
மூன்றாமடியில் மகரவொற்றைப்பிரித்து, ஆறாமா – ஆறுபோலவாம் ஐயோ என்றாக்கி,
(மூன்றாமடியி லிறுதியில் மா என்னும் எழுத்தைப்போட்டு) கோவாமாறா என்பதனைக் கூட்டி, கண்ணீர்தீராது
ஐயோவெனச் சேர்த்து, மூன்றாமடியினின்ற மாவை நாலாமடியின் முதன்மாவொடுங்கூட்டி,
மாமாறா என்றாக்கி, பெரிய மாறனே ; என்க.
மாவாதேமாறாமா – வண்டுகள் தேனையுண்ணவரும் தேன்றுளும்புந் தரமத்தனே யென்றவாறு.

பெரியமாறனே ! திருவன்னாள்வருந்தும்படிக்குக் கரிய வேளம்பு மாற்றமாகாநின்றன ; கண்ணீர் தீறாது ;
ஐயோ ! இனி எங்ஙனமுய்யு மென்னும் பயனிலைகூட்டி முடிக்க. மகாபதுமபெந்தம் வந்தவழிக் கண்டு கொள்க.
திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

இனிப் பதுமபெந்தத்தினுள் நடுவிற்பொகுட்டினின்ற மா என்ற எழுத்தொன்றும் எட்டெழுத்தாகவும்,
அதனைச்சூழ்ந்த நாற்கோணங்களினின்ற எட்டெழுத்தும் பதினாறாகவும்,
இடையிற்கோணாலினுநின்ற எழுத்தெட்டுந் திரிந்து மாறாடாதுநிற்கவும் பாடினவாறு காண்க.

முரசபெந்தம்

284.எழுதியவரிநாலினுண்முதலீறன
பழுதறமந்திரிச்செலவாய்ப்படர்ந்தய
லொழுகியுங்கீழ்மேற்றனதீற்றுற்றபின்
னறைதொறுமேனையவடைவேபாதியின்
முறைதடுமாறுதன்முரசபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே முரசபெந்தமாமாறுணர்-ற்று.

(இ-ள்) நாலடியான்வரு மொருசெய்யுளை நாலுவரியாக வெழுதி
அவற்றுண் முதலடியுமீற்றடியுமாகியவிரண்டின்முதலடி கீழ்முன்றுவரியினும் மந்திரிச்செலவாகச் சென்று
நாலாமடியி லஞ்சாமறையி லேறி யந்தவார் மேனோக்கி மீள வப்படியே முதலடியீற்றின்முற்றியும்,
இறுதிவரியும் மந்திரிச்செலவாய் மேனோக்கி நாலாமடியுற் றஞ்சாமறையிலேறி யந்தவார் கீழ்நோக்கி
யவ்வண்ணமே யிறுதியடியீற்றின் முற்றியும்,
ஏனையிரண்டனுள் இரண்டாமடி முற்பாதியினின்றுங் கீழ் வலமாக மூன்றாமடியின்முதலே முற்றியும்,
மூன்றாமடி யிரண்டாமடிப்பிற்பாதியினின்றுழிநின்றுங் கீழிடமாக மூன்றாமடி யிறுதியின்முற்றியும்,
இரண்டடியும் முத லீறென்னும் முறைதடுமாறப் பாடுவது முரச பெந்தமா மென்றவாறு.

இங்ஙனம் மேல்வருஞ் செய்யுளை எழுதிக் கண்டுகொள்வது.

போதவானதுவாதரா
மாதவாதணவாதநா
நாதவாணதவாரவா
வேதவானதுவாரகா. (788)
இது முரசபெந்தம்.

(இ-ள்) போத – ஞானவானே ! வானதுவாதரா – வானவராதரிக்கப் பட்டவனே ! மாதவா – திருமகள்காந்தனே !
(மூன்றாமடி முதலீறாக) நா தணவாத நாத – நாவைவிட்டுநீங்காத வென் னாதனே !
வாண- உலகினைக் காக்கப்பட்டவனே! தவாரவா – அழிவில்லாத அராவையுடையவனே !
வான வேத துவாரகா – (எனப் பாடமாற்றுக) பரமபதமிடமாக நின்றும் பூமியில் வருதற்குப் பெருமையை
யுடைய வேதத்தை வாயிலாகவுடையவனே ! என்னைக் காப்பாயாக வென்றவாறு. துறை – கடவுள் வாழ்த்து.

நாகபெந்தம்

285.வரியரவிரண்டாய்வால்வயிறிரண்டாய்த்
தெரிமூலைநான்காய்ச்சிறந்துமும்மூன்றுட
னிலைபெறுமொருபானிருபானிறீஇத்
தலையிரண்டெழுத்தாய்ச்சார்தரச்சந்தியிற்
கவினுறுத்தெழுத்துக்கலந்துறுப்பாக
நவிலிருபாவேநாகபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே நாகபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) வரியையுடையபாம்புக ளிரண்டாக, அவற்றிற்கு வாலிரண்டாக வயிறிரண்டாகத் தோன்றப்பட்ட
மூலைக ணான்காகச் சிறப்பெய்தி, வாலிரண்டி னிலைபெறுமெழுத் தொன்பதுடன்,
வயிறிரண்டி லெழுத்துப் பத்தாய், மூலைநான்கி லெழுத் திருபதாய்த் தலையிரண்டி லெழுத் திரண்டாய்ப் பொருந்த நிறுத்தி,
சந்திகளில் அழகுதருவனவா மெழுத்துக்க ளிரண்டிற்குங் கூடிநிற்பனவா முறுப்பாகப் புலவனாலுரைக்கப்படு
மிரண்டுபாவென்பது தானே நாகபெந்தமா மென்றவாறு.

நிறுத்தியென்பது மத்திமதீபம். மும்மூன் றொருபானிருபானென்பன நிரனிறை.
புலவனா லென்பது எச்சம். தெரிமூலை – தோன்றப்பட்ட மூலை.

மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை
யாறனளிமேயவன்னமே–யேறுத்
தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன்
னெமர்யாயெமையாளிறை. (789)

அறமுமறமமைந்தவன்பென்பதுவும்
பெறனன்னலமதுண்மைபேரா–துறுபாற்கோர்
மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே
யேனமெமையாளியை. (790)
(இ-ள்) மாறனென்றுஞ் சடகோபனென்றுந் திருநாமத்தையுடையான்,
வளவிய குருகூரின்கண்வாழும் பொருநையாற்றையுடையவன்,
கிருபையோடு கூடிய அன்னத்தையேறு முத்தமன்,
நாவினால் திருமகளையுடைய பெரிய சரதனாம் மாயோன் றிருவடிகளைப்பாடும் பாவினையுடைய மன்னன்,
எம்மனோர்க்கு மாதா, எம்மையாளு மிறைவ னென்றவாறு. எனவே, யமனு மெம்மிடத்து வாரான் ;
எமக்குச் செனனமு மில்லை, சித்திப்பதும் முத்தியேயா மென்பது பயன்.

அறத்தினது பகுதியு மறத்தினாலமைவெய்திய அன்பென்று கூறப்படுவதும் நமக்குண்டாதலும்
நல்ல பேரின்பத்தையெய்துவ துண்மை யாக வது நம்மைவிட்டு நீங்கா தவற்றையுறும்பகுதிக்கு ஒப்பற்ற பெரிய மனனே !
காளமேகத்தினது அழகிய நிறமேவிய திருமாலை, ஏனமாக வடிவெடுத்தவனை,
எம்மையாளப்பட்டவனை நினைப்பாயாக வென்றவாறு.

ஆக வெண்பா விரண்டினால்
எழுத்து நூற்றொருபத்தெட்டும் அறை தொண்ணூற்றாறனுண் மாறாடி யடங்கினவாறு கண்டுகொள்க.
திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம்.

இரதபெந்தம்

286.தேரெனமந்திரிச்செலவெனச்செய்யுளை
யேர்தரவடக்குவதிரதபெந்தம்
(எ-ன்) வைத்தமுறையானே இரதபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) சதுரங்கவறையுட் டேர்செல்வது எனவும், மந்திரி செல்வதெனவு மொருசெய்யுட்குண்டான
வெழுத்துக்களைத் தேரின தறைக்குநடுவே ஒரு திருநாமமாதல் ஒரு பழமொழியாத லழகுபெற்று நிற்க
விரதத்திலே பெந்திப்பது இரதபெந்தமா மென்றவாறு.

சதுரங்கவறையினுளென்பது சொல்லெச்சம். செய்யுளையென்பதாகு பெயர்.
அறைக்கு நடுவே திருநாமமாதல் பழமொழியாத னிற்க வென்பது ஏர்தர என்பதே ஞாபகமாக விரிந்தது.

நாராராராயநயனயணாவிண்ண்
ணாராமணாயனிலமாயவா–சீராய
நன்காநமநமநன்காநமநம
மன்காமன்றாதாய்நம. (791)
இஃது இரதபெந்தம்.

(இ-ள்) நாரார் – அன்பினையுடையார். ஆராய் அ நயன் – ஆராயப் பட்ட அந்தப் பேரின்பத்தினிடத்து.
அயணா – வியாபரிக்கப்பட்டவனே! விண் – ஆகாயமும். ஆராம் – மிகுந்த செலமும். மண் – நிலமும். ஆய் – ஆகி.
அனிலம் – காற்றும். ஆயவா – ஆனவனே ! சீராய – பொலிவினையுடைய நந்தகோபாலனே!
நன்காநமநம – நன்மையையுடையவனே ! உன்னை நமக்கரிக்கிறேன். நன்காநமநம – முன்னைப்போல வுரைக்க.
மன்காமன் – மகளி ராடவர்க் கரசனாகிய மன்மதன். தாதாய் – தந்தையே !
நம – உன்னை மீளவு மென தான்மாவைக் காத்தற்பொருட்டு நமக்கரிக்கிறே னென்றவாறு.

நார் – அன்பு. அ சுட்டு. நயன் – சுகம். அயணம் – வியாபாரம். ஆம் – செலம்.
மண்ணாய் என்பது மணாய் என இடைகுறைந்துவந்தது. ஆயவா – ஆனவனே. நன்கு – நன்மை. மன் – அரசன்.
தாதை என்னும் ஐகாரவீறு விளிக்கண் ஆயாயிற்று. நமநம நமநம என்பது இசைநிறையசைநிலை.
விண்ண் என்னு மொற்றளபெடை, வெண்பாவினது செப்பலோசைசிதைந்தவழி யோசையை நிறைத்தற்பொருட்டு வந்தது.
என்னை? “குன்றுமே லொற்றளபுங் கொள்” என்பதனா லறிக.
இதனுள் நடுவும் இருபக்கமும்நாராயணாயநமவென நின்றவாறு காண்க. துறை – கடவுள்வணக்கம்.

மாயவனேவேதமதியேவயநாக
பாயவனேதேநளினபாதாபராபரா
தூயவனேகாரணாபூரணாதோணிலமா
னாயகனேசீராகநாராயணாயநம. (792)
இதுவும் இரதபெந்தம்.

சீர் – திருமகள். தோள்நிலமான் – தோளிலிருக்கும் பூமிதேவி.
இதனுள், நடுவே நாராயணாயநமவென்னுந் திருநாமம் நின்றவாறு காண்க.

மாலைமாற்று

287.ஒருசெயுண்முதலீ றுரைக்கினுமஃதாய்
வருவதைமாலைமாற்றெனமொழிப.
(எ-ன்) வைத்தமுறையானே மாலைமாற்றாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபாட்டையீறுமுதலாக வாசிக்கினு மப்பாட்டேயாகி வருவதனை மாலைமாற்றென்னுஞ்
சித்திரக்கவியென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

லாமனாமானமா
பூமனாவானவா
வானவானாமபூ
மானமானாமவா (793)
இது மாலைமாற்று.

(இ-ள்) வாமனா – வாமனனேயென்று.
வானவாவானவானாம – தேவர்களால் விரும்பிச்சொல்லுவதாய பெரியதிருநாமத்தை யுடையவனே !
மான மா பூ – பெருமையையுடைய திருமகளுக்கும் பூமிதேவிக்கும். பூமானமனா – பூமானாகியமன்னனே !
மானாம – மாலாகிய திருநாமத்தை யுடையவனே! வா – என்முன்னேவந்துதோன்றுவா யென்றவாறு.

இஃ திரண்டுவிகற்பத்தான்வந்த வஞ்சித்துறை. துறை – இதுவுமது.

கரந்துறைசெய்யுள்

288.முதலொருசெய்யுண்முடித்ததனீற்றிற்
பதமதனிறுதியிற்பயிலெழுத்துத்தொடுத்
திடையிடையிட்டெதிரேறாய்முதலய
லடைதரப்பிறிதொருசெய்யுள்கரந்தங்
குறைவதுகரந்துறைசெய்யுளென்றுரைபெறும்.
(எ-ன்) வைத்தமுறையானே கரந்துறைசெய்யுளாமாறுணர்-ற்று.

(இ-ள்) முதலே யொருசெய்யுளை எழுதிமுடித்து, முடித்த விறுதிமொழியினீற்றெழுத்துத்தொடங்கி,
எதிரேறாக இடையிடையோரெழுத்தாக இடையிட்டு முதன்மொழிமுதலெழுத் தயலடைய முடிக்கப் பிறிதோர்
செய்யுளாக வதனகத்துக் கரந்துறைவது கரந்துறை செய்யுளென் றுரைக்கப்பெறு மென்றவாறு.

போர்வைவாயூராரலரளிபொருகாம
நீர்மையாழ்வாரயலணைதருமிக
வேர்தவாவாழ்தலாமயில்கைமுருகுகு
தார்தராமூதாமணிதகவுருவமும். (794)
இது கரந்துறைசெய்யுள்.

(இ-ள்) ஆரலரளி என்பதை அளியாரலரென மாற்றி, வண்டுக ளாரவாரிக்கப்பட்ட பூவாளியால் என்க.
பொருகாம – பொரவந்த காமனே ! நீர்மையாழ்வார் – நற்குணத்தையுடைய ஆழ்வார்.
மயில்கை – எமது மயில்போலுஞ்சாயலையுடையாள்கையில்.
மூதாவுருவமுமணிதக வாழ்தலாம் – பெருமையையுடையவா முருவங்களு மழகினது பெருமை யெய்த உயிர்வாழ்தலாம்படிக்கு.
ஏர்தவா முருகுகு தார்தரா – அழகு கெடாத தேனொழுகும் வகுளமாலிகையைத் தந்து.
வாயூர் – (ஊர்வாய் என மாறுக) எமதுபதியிடத்து. அயலணைதருமிக – அய லெம்மோடு மிக நட்புச்செய்யாநின்றாராதலால்.
போர்வை – உனதுபோரை யொழிவாயாக வென்றவாறு. இது மாட்டுறுப்பு. அப்படி யிதனுட் கரந்த செய்யுள் :-

முருகணிதாரார்
குருகையிலாழ்வார்
கருணையவாயார்
மருளிலராவார். என்பதாம். (37)
காதைகரப்பு

289.காதைகரப்பதுகாதைகரப்பே.
(எ-ன்) வைத்தமுறையானே காதைகரப்பாமாறுணர்-ற்று.

(இ-ள்) புலவராற்குறிக்கப்பட்ட செய்யுளுட் பிறிதொருசெய்யுட் குக்கூடுவதானவெழுத்துக்கள்புகுதாதே
தாங்குறித்த பழையசெய்யுட் கரந் தெழுத்துப் பிறக்கிக்கொள்ளலாம்படி பாடுவது
காதைகரப்பா மென்றவாறு.

கொல்யானைமூலமெனக்கூப்பிடமுன்காத்தானை
யெல்லாவுயிர்க்குமுயிரெனலாம்–புல்லாணித்
தோடார்நறுந்துளபத்தோண்மாலைக்கைதொழுதா
னாடானொருநாணமன். (795)
இது காதைகரப்பு.

இதனுட்போந்தசெய்யுள், “கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி, யெல்லா வுயிருந்தொழும்” என்பது.
இதனைப் பழம்பாட்டெனவே மேலன நவமாமென்றுணர்க. இவற்றை மாறாடுவாரு முளர்.

பிரிந்தெதிர்செய்யுள்

290.பிரிந்தெதிர்வனவேபிரிந்தெதிர்செய்யுள்.
(எ-ன்) வைத்தமுறையானே பிரிந்தெதிர்செய்யுளாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருசெய்யுள் முதலேமுடிந்தா லச்செய்யுளீற்றெழுத்துத் தொடங்கி யெதிரேறாகநடந்து
வேறோர்செய்யுளாக நிகழ்தல் பிரிந்தெதிர் செய்யுளா மென்றவாறு.

நீரநாகமா
தாரமாகமே
வாரமாகமா
ணாரணாககா. (786)
இது பிரிந்தெதிர்செய்யுள். இதனுள், பிரிந்தெதிர்செய்யுளாவது :-

காகணாரணா
மாகமாரவா
மேகமாரதா
மாகநாரநீ.
என்பதாம்.
இவற்றுள், முதலேநடந்தசெய்யுளின்பொருள் :- நீரநாக – நற்குணத்தனே ! அனந்தசயனத்தனே !
மா தாரமாக – திருமகளைப் பாரியாக. மேவாரமாக – பொருந்து மாரங்கிடக்கு மார்பனே !
மாணாரணாக – பெருமையையுடைய வேதசொரூபனே ! கா – என்னைக் காப்பாயாக வென்றவாறு.

எதிரேற்றின்பொருள்:-
மாகமாரவாம் – துறக்கத்துள்ளார்பெருக விரும்பும். நார – நற்குணத்தையுடையவனே !
மேகமாக – மேகத்தைப் போலுந் திருமேனியையுடையவனே ! மாரதா – சத்துருக்களை வெல்லு முழுத்தவீரனே !
நாரணா – நாராயணனென்னுந் திருநாமத்தனே ! நீ கண் – நினது சொருபரூபகுணவிபூதிகளை மயக்கமறவறிதற்கு
நீயே யெமக்கு ஞானக்கண்ணானதால். கா – எம்மைக் காப்பாயாக வென்றவாறு.

இவையிரண்டும் வஞ்சித்துறை. துறை – கடவுள்வாழ்த்து. அநுலோமப்பிரதிலோமமென்பது மிது.

பிறிதுபடுபாட்டு

291.பிறிதொன்றாதல்பிறிதுபடுபாட்டே.
(எ-ன்) முறையே பிறிதுபடுபாட்டாமா றுணர்-ற்-று.

(இ-ள்) பிறிதுபடுபாட்டென்பது ஒருசெய்யுளைத் தொடையு மடியும் வேறுபடவுரைத்தாலுஞ் சொல்லும் பொருளும்
வேறுபடாமற் பிறிதொருசெய்யுளாய் முடிவது என்றவாறு.

பார்மகளைத்தோயும்புயத்தாய்பதுமநறுந்
தார்மகளைநீங்காத்தகைசான்றவாகத்தா
யாரியனேயாரணத்தந்தியனேவாரி
வாரியுணாகணைமன்னா. (797)
இது பிறிதுபடுபாட்டு.

இது முதலே யொருவிகற்பத்தின்னிசைவெண்பா பின்னர்க் கலி விருத்தமாகநிகழ்ந்தவாறு காண்க.
தார் – பூ. ஆரியன் – பரமாசாரியன். வாரி – கடல். வாரி – மிகுதி.

சருப்பதோபத்திரம்

292.இருதிறத்தெழுதலுமெண்ணான்கெழுத்துடை
யொருசெய்யுளெண்ணெண்ணரங்கினுளொருங்கமைந்
தீரிருமுகத்தினுமாலைமாற்றாய்ச்
சார்தருமாறியுஞ்சருப்பதோபத்திரம்.
(எ-ன்) வைத்தமுறையானே சருப்பதோபத்திரமாமா றுணர்-ற்று.

(இ-ள்) எவ்வெட்டெழுத்தோரடியாய் நான்கடியாய்வரு மெண்ணான்கெழுத்து டையதொருசெய்யுளை
யறுபத்துநாலறையினி லிரண்டு கூறுபாட்டானெழுதவவற்றுண் முழுதுமடங்கி
நாலுமுகத்தினு முதல் முதலாகியு மீறு முதலாகியு மாலைமாற்றாகிவருமது சருப்பதோபத்திரமா மென்றவாறு.

இரண்டுகூறுபாடாவது நான்கடியும் மேனின்று கீழிழியவுங் கீழ் நின்று மேலேறவும் எழுதுவதாம்.
இது மாட்டுறுப்புப்பொருள்கோள்.

தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா. (798)
இது சருப்பதோபத்திரம். இதனகத் தவ்வாறுநிகழ்ந்தமை கண்டு கொள்க.

(இ-ள்) தே மா பூ – தேனும் வண்டும் பொருந்திய பூவினிடத்து. மாமா – பெரிய திருமகளும்.
பூமாதேமாது – பூமிதேவியுமாகிய அழகு பொருந்தின மாதர்கள்.
ஆகாவாவாகா – (வா ஆகா வாகா எனப் பாட மாற்ற) வந்து தங்கு மார்பினையும் புயத்தினையு முடையவனே !
தாமா – துளவமாலிகையையுடையவனே !
பூகாவாலாலா – பூமியையெடுக்கப் பட்ட பிரளயத்தின்மே லாலிலையிற் றுயிலப்பட்டவனே!
பூமாவாலா – பொலிவினொடுங்கூடிய மிகுந்த பாலத்தன்மையோனே !
நீலா வாமா – நீலநிறத்தினனே ! வாமனரூபமானவனே !

மூன்றாமடியிலிறுதி வாகா நாலாமடியின் முந்தவந்த நீ என்னுமவற்றொடுங்கூட்டி,
நீ வா கா வெனச் சேர்த்து, நீ வந் தென்னைக் காப்பாயாக வென்றவாறு.

இதனுள், ஏமம் ஏம் என நின்றது. உம்மை வேற்றுமை பண்பு என்பன முதலிய தொகைகளும் ஒருமை பன்மை
மயக்க வழுவமைதியும் வந்து மாட்டுறுப்பாகப் பொருளுரைத்தவாறு காண்க.
ஆல் – பிரளயம். வா – வந்து. மாது – மாதர்கள். பூ – தாமரை. பூ – பொலிவு.

கூடசதுர்த்தம்

293.பாடலினாலாம்பதம்பொறிவரியிடைக்
கூடமுற்றதுவேகூடசதுர்த்தம்.
(எ-ன்) கூடசதுர்த்தமாமாறுணர் – ற்று.

(இ-ள்) நாலடியாய வொருசெய்யுளி னாலாம்பதம் ஏனைய மூன்று பதத்தையு மேனின்று கீழுங் கீழ்நின்று
மேலுமாக எழுதிமுடித்த வரிமூன்றி னிடைவரியின் மறைந்துநிற்பது கூடசதுர்த்தமா மென்றவாறு.

நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா. (799)
இது கூடசதுர்த்தம். இதனை யவ்வா றெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) நாதா மானதா – சுவாமியே ! என்மனத்திலுள்ளானே !
தூயதாருளா ணீதா னாவா – பவித்திரம்பொருந்தின தாமரையிலுள்ளாளாக, நீயாக என்னுடைய நாவிலேவந் துறைவீராக.
அதுவுமின்றி, சீராமனாமனா – சக்கரவர்த்திதிருமகனாகிய மன்னனே ! சீமான் – அழகுடையவனே!
ஆதரவிராமா – சகலரும்விரும்பு மிராமனே ! வாமனா சீதரா போதா – போதத்திலுள்ளானே !
வாமனனே ! சீதரனே ! தாதா தாணீ – உனது திருவடிகளைத் தருவாயாக வென்றவாறு.

துறை – இரண்டுங் கடவுள்வாழ்த்து.

கோமூத்திரி

294.கோமூத்திரநடைபெறல்கோமூத்திரி.
(எ-ன்) வைத்தமுறையானே கோமூத்திரியாமா றுணர்-ற்று.

(இ-ள்) நடைபெறுஞ் சேவினதுமூத்திரவொழுக்கம்போன்று நடப்பி னது கோமூத்திரியா மென்றவாறு.

அஃதாவது
ஒருசெய்யுளை இரண்டுவரியாக வெழுதி
மேலுங் கீழு மொன்றிடைவிட்டு வாசிக்கவு மச்செய்யுளாய் நடத்தல்.

மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா. (800)
இது கோமூத்திரி. இதனை யவ்வாறெழுதிக் கண்டு கொள்க.

(இ-ள்) மாயாமாயா – அழியாத மாயையையுடையவனே ! நாதா – சுவாமியே ! மாவா – திருமகளையுடையவனே !
வேயாநாதா – வேய்ங்குழலிலுண்டாக்குங் கானத்தையுடையவனே ! கோதாவேதா – பசுவைக் காத்தளித்த வேதசொரூபனே !
காயாகாயா – காயாம்பூப் போலுந் திருமேனியையுடையவனே ! போதா – ஞானத்தையுடையவனே !
பேதாபேதா – பேதமும் அபேதமுமானவனே! பாயாமீதா – பரந்த பிரளயத்தின் மேலானவனே !
காவா – என்னைக் காக்க வருவாயாக வென்றவாறு. பா – கலிவிருத்தம். துறை – கடவுள்வாழ்த்து.

சுழிகுளம்

295.தெழித்தெழுநீர்குளத்தினுட்செறிந்ததைக்கொடு
சுழித்தடங்குவபோன்றடங்குதல்சுழிகுளம்.
(எ-ன்) சுழிகுளமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஆரவாரித்தெழாநின்ற புனல் குளத்தினுட் டனதிடத் தடைந்ததியாதொன் றதனைக் கைக்கொண்டு
சுற்றி யுள்ளேயடங்குவது போலச் சுற்றிப் பாவினகத்துப் பொருளைக்கொண்டடங்குதல் சுழிகுளமா மென்றவாறு.

சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான. (801)
இது சுழிகுளம். இஃ தவ்வாறாத லெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) தாளவொத்துக்குப்பொருந்தக் கூத்தாடாநின்றவனே ! உண்மையான காவற்றொழிலை யுனதாகக் கைக்கொண்டவனே !
தயிரைத் தாகித்துண்ட கண்டத்தையுடையவனே ! கிளர்ந்தகானத்தையுடையவனே !
நீயே கதி, காப்பாயாக வென்றவாறு. பா – வஞ்சித்துறை. துறை – இதுவுமது.

திரிபங்கி

296.நனியொருபாவாய்நடந்ததுதானே
தனிதனிமூன்றாஞ்சால்புறுபொருண்மையிற்
பகுப்பநிற்பதுதிரிபங்கியதாகும்.
(எ-ன்) திரிபங்கியாமா றுணர்-ற்று.

(இ-ள்) முதலே மிக்கதொருபாவாய்நடந்தவதுதானே பின்னர்க் குறைவுடைத்தாய்
மூன்றுபாலா மொழுக்கமுறும்படி பொருளினது தன்மையிற் பகுத்துக்காட்டநிற்பது திரிபங்கியென்பதா மென்றவாறு.

வாரிதிபார்மன்மதன்பூசல்பார்வெய்யமாமதிபா
ரூரலர்பாரன்னையிங்கேசல்பாருய்யுமாறிலைபார்
சோர்குழல்பார்பொன்னிறஞ்சேர்தல்பார்துய்யமான்மயல்பார்
நாரணனேதென்னரங்கேசனேதெய்வநாயகனே. (802)
இது திரிபங்கி. இதனை மூன்றாகப் பகுத்த பா வருமாறு :-

வாரிதிபார் மன்மதன்பூசல்பார் வெய்யமாமதிபார்
ஊரலர்பார் அன்னையிங்கேசல்பார் உய்யுமாறிலைபார்
சோர்குழல்பார் பொன்னிறஞ்சேர்தல்பார துய்யமான்மயல்பார்
நாரணனே. (1) தென்னரங்கேசனே. (2) தெய்வநாயகனே. (3)

எழுகூற்றிருக்கை

297.ஒன்றுமுதலாவோரேழீறாச்
சென்றவெண்ணீரேழ்நிலந்தொறுந்திரிதர
வெண்ணுவதொன்றாமெழுகூற்றிருக்கை.
(எ-ன்) இறுதிநின்ற வெழுகூற்றிருக்கையாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்தெண்ணப்பட்ட ஒன்றென்னுமெண்ணொன்றுமுதலாக வோரேழீறாக நிகழ்ந்த
வெண்களைப் பதினாலுநிலந்தொறு மீளவெண்ணுவதொன்றாகு மெழுகூற்றிருக்கை யென்றவாறு.
செய்யுளகத்தென்பது சொல்லெச்சம்.

298.அவைதாம்,
இரதபெந்தத்தினிலிடையறையிரண்டாய்ச்
சரதமதுறநடைசார்தருபான்மையி
னொன்றுபன்னான்காயொருபன்னிரண்டாய்
நின்றயலேனவுநிலந்தொறுமுபயங்
குன்றுவதாய்த்தொகைகூடியொன்றிலிறும்.
(எ-ன்) இதுவு மதற் கோர் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்) அங்ஙன மெண்ணப்படு மெண்கடா மிரதத்திற் பெந்திக்கு மிடத்துமையத்திற்பத்தி யிரண்டுபத்தியாய்க் கீறி
வலமே யிடமே நடத்தலைத்தரும்பகுதியில் மையத்திலொன்று பன்னான்காகவு மதனயலிரு பத்தியி லிரண்டும்
பன்னிரண்டாகவும் ஒழிந்த மூன்றுமுதலிய வெண்ணும் பத்திதோறு மிரண்டுகுறைந் தேழென்னுந்தொகைபொருந்தி
முதலேநின்ற வொன்றில்வந்துமுடியு மென்றவாறு.

அயலென்பதனை முன்னும் பின்னுங் கூட்டுக. இரதபெந்தம் – தேரிலே எழுதிக் கூட்டுதல்.

299.இரட்டுறமொழிதலோடீறுதிரிந்தெண்
டிரட்டவும்பெறூஉந்தெரியுங்காலை.
(எ-ன்) இதுவு மவ்வெண்ணிற் கோர் ஒழிபுகூறுகின்றது. இரட்டுறல் – சிலேடை. ஈறுதிரிதல் – ஈற்றெழுத்து வேறொன்றாதல்.

ஒருதனித்திகிரியினிருவிசும்பொழுக்கத்
தொருஞான்றொருபகலொடியாவுழப்பிற்
பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மதநால்வாய்க்கரியுரிமுக்கட்
செம்மலினிருகணுமிமையாத்தேவர்க
ளொருபோழ்தகலாதொருவழிப்படநின்
றிருகையுங்கூப்பிமுப்போதினுமிறைஞ்ச
நான்முகமுதல்வனினசைஇயநல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்
முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த
முக்கோற்பகவர்முறைமுறைபிறழா

விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வௌவுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்
முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்
பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணசுகோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்
வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே. (803)
இஃது, எழுகூற்றிருக்கை.

(இ-ள்)
(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தையெல்லையாக வுடையநிலத்தின்கண் ணுயர்
திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு
(இருவிசும்பொழுக்கத்து) பெருமையையுடைய ஆகாசவீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொருகணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்
(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாதபாகனையுடைய தேரின்மீதே
(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினையுடைய பெரிய கையினையும்,
பெருகாது சிறுகாது தம்மி லொத்த புழையொடுகூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப்போலச் சிவந்து,

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொருநெறிப்பட
விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய, நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல
விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற
மூன்றுபாலுந் தம்மாலாய பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப,
விரண்டுபக்கமு மின்போன்றதொரு மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு
மொருகூறுபாடெய்த விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்
மாறுபாட்டைக்கெடுத்து மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந்
தங்கப்பட்ட சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு நல்வினை தீவினை யென்னு
மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை யித்தன்மைத்தென
நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர் சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண
மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற
வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு, உலகின்கண்ணுள்ள
இனியவுயிர்களஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த நமன்றிக்கி லெழுந்த
கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டதுவிளங்கும்படிக் குத்தர
கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத் தேனையொழுக்கு
நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து,
பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு,
பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய
மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும், அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற
திருப்பவளத்தினைத் திறந்து, வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்
பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக, ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா
நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச்
சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரியசெயலொடு
முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரியபிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே !
ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே ! அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத் திருவுளமகிழ்ந்
தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக் கருணை
புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.
ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி. பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது. பிணர் – சற்சரைவடிவு.
செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு. நசைஇய – விரும்பப்பட்டன. முழுநலம் – பேரானந்தம்.
தெற்றென – தெளிய. பிறழாது – மாறாடாது. ஒருங்கு – ஒக்க. ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை. முற்குணம் – சாத்துவிககுணம். நாலாங்கடவுள் – இந்திரன். அமைத்த – விதித்த.
இறும்பூது – ஆச்சரியம். உளர்தல் – குடைதல். அவிழ்த்தல் – ஒழுக்குதல். நலம் – ஆனந்தம்.
நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.
உறுபொருளைந்துடன் என்பது “மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் –
தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை. எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடையூர்தியின்
முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழு
கடற்புவனத் தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல்
மூவுலகமுமளந்தவனிருசெவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும்
பிணிதவிர்த்தருள் ஞானபூரண! நாவீற! குருகாபுரிவரோதய! எதிராசனையாண்ட விருசரணாம்புயத்
தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற் கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான்பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

திலகநுதலாய்திலங்குறியென்னேவ
லலகெண்பொருட்பதத்திற்காதி–நிலவெழுத்தின்
புள்ளிபிரித்தாற்பொருணிலைமைத்தாமென்பார்
தெள்ளியநூல்கற்றோர்தெளிந்து. (805)
இது மாத்திரைப்பெருக்கம்.

இவற்றுள் (முன்னையது) * மாத்திரைச்சுருக்கமென்பது,
ஒரு பொருள் பயந்து நிற்கு மொருசொல்லாயினும் பலபொருள்பயந்து நிற்குந் தொடர்ச்
சொல்லாயினு முதலெழுத் தொருமாத்திரைகுறையப் பிறிதொரு பொருள்பயப்பதாயும் பலபொருள்
பயப்பதாயும் பாடுவது. அவ்வாறு அதனுள் வந்ததாவது : ஆயுதங்களுக்குச் சாதிப்பேர் ஏதிகள்,
அவற்றை எதிகளெனப் புள்ளியிட்டு, மாத்திரைகுறைய இருடிகள் பெயராய் எதிகளென நின்றவாறு காண்க.

மாத்திரைப்பெருக்கமாவது
முன்புபோலவருஞ்சொற்களுள் முதலெழுத் தொருமாத்திரையேறப் பிறிது பொருள் பயப்பது.
அவ்வாறு இதனுள் வந்ததாவது :- எண்ணென்பது எள்ளும், இதனைக் கருதென்னும் ஏவற்பொருளும்,
கெணிதமும் என்னும் மூன்றுபொருள்பயக்கும் பதத்தின் முதலெழுத்தாய எகரத்தை
யொருமாத்திரை பெருக்க ஏண் என்ன நிலையுடைமைப்பொருளைக் காட்டினவாறு காண்க.

*உம்மையான் விதந்தோதிய மாத்திரைச்சுருக்க முதலிய ஆறுக்கும்
இந்நூன் மூலப்பிரதியொன்றின்மட்டும் மூலசூத்திரங்கள் காணப்படுகின்றன.
அவையாவன :-

“மாத்திரைசுருங்கமறுபொருளுணர்த்துரை
மாத்திரைச்சுருக்கமெனவகுத்தனரே” (49)

“மாத்திரைபெருகமறுபொருளுணர்த்துரை
மாத்திரைப்பெருக்கமெனவகுத்தனரே” (50)

“ஒற்றினைப்பிரிக்கமற்றொருபொருளுணர்த்து
லொற்றுப்பெயர்த்தலென்றுரையுணர்த்தும்” (51)

“மூன்றெழுத்தொருமொழிமுதலீறிடையீ
றான்றபொருள்பிறவாந்திரிபதாதி” (52)

“சதுரங்கவறையிற்சதிர்பெறவமைப்பது
சதுரங்கபெந்தமென்றறைதருந்தன்மைய” (53)

“பெருவகன்றறையிற்பெந்திப்பதுவுங்
கருதுகிற்கடகபெந்தமாகும்” (54)
என்பனவாம

முந்துதனித்தன்மைமொழியையொடுபுணர்ந்திட்
டந்தமுதல்புள்ளியழிந்தக்காற்–செந்தேன்
வழிந்தமகிழ்த்தார்மாறன்வண்புலவீர்சொல்லி
யொழிந்தவற்றின்பேராயுறும். (806)
இதுவும் மாத்திரைப்பெருக்கம்.

இதனுள், தனித்தன்மையென்பது யான், அதனை என் எனத் திரித்து, அதனை யிரண்டாவதனைப் புணர்த்து,
எனையென்றாக்கிப் புள்ளியை யழிக்க ஏனையெனச் சொல்லியொழிந்தனவாயபொருளைக் காட்டினவாறு காண்க.
திணை….. துறை…..

ஓராழிவையத்து தயம்புரிந்து தினம்
பேராவிருடுணிக்கும்பெற்றியா–ரீராறு
தேசுற்றநாமஞ்சிறந்தோர்பரிதியொடு
மாசற்றெழுமாதவர். (807)
இஃது ஒற்றுப்பெயர்த்தல்.

இதனுள், மாதவர் என்றுநின்றது மகரவொற்றைப் பெயர்க்க ஆதவர் என நின்றவாறு காண்க.
முதலே நின்றமொழியின் முதலெழுத்தி லொற்றைப் பெயர்த்தலால் ஒற்றுப்பெயர்த்தலாயிற்று.
இதனுள் ஓராழி வையம் – ஒப்பற்ற சமுத்திரஞ் சூழ்ந்த பூமி எனவும், ஒற்றைவண்டி பூண்ட தேர் எனவும்,
பேராவிருடுணித்தல் – தன்னைநினைந்த அடியாரிடத்து எடுத்தசெனனந் தோறும்விட்டுநீங்காத அகவிருளையறுத்தல் எனவும்,
உலகத்தைவிட்டுநீங்காத அந்தகாரத்தையோட்டுதல் எனவும், ஈராறுநாமம் – கேசவாதி துவாதசநாமம் எனவும்,
தாதுருமுதலிய துவாதசாதித்தியநாமமெனவும், பரிதியொடும்-சக்கரத்தோடும் எனவும் விளக்கத்தோடும் எனவும்,
மாசற்று ஆசற்று எனவும் சிலேடைவாய் பாட்டான் வந்தன. திணை…… துறை…….

முந்தமாயன்பதியாய்முற்றியபேர்மூன்றெழுத்தில்
வந்தமுதலீறிசையாய்மற்றிடையீ–றந்தச்
சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய்
வதரிவரிதரியாமாம். (808)
இது திரிபதாதி. இதனுள் வதரியென்பது திருப்பதி.
அதனை முதலு மீறும் வரியாக்கி இடையு மீறுந் தரியாக்கி அவ்வாறாதல் கண்டு கொள்க.

எந்தையிராமற்கிமையோர்சரண்புகுத
முந்தநகரிமுதலெழுத்தில்லாநகரி
யுந்துதிரட்கிள்ளையிடையொற்றிலாக்கிள்ளைகடேர்
சிந்தமுழுதுமிழந்தான்றெசமுகனே. (809)
இஃது அக்கரச்சுதகத்தி லோர்பேதம்.

மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யான்தவபோதனுமாயாய்ந்தகோ–மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனொன்
றாதயமாவன்புலமாய. (810)
இது சதுரங்கபெந்தம். இதனுள் நாலுபக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும்
நடுவி னாலறையிலும்மாதவன் என்னுந் திருநாமம் நின்றவாறு கண்டுகொள்க.

(இ-ள்) ஒன்றாத யமா – சருவான்மாக்களோடும் பொருந்தாத நமனே ! மானவனா – மனுகுலங்காவலனாக.
மேவலாமாறன் – நங்கை யார்க்குங் காரியார்க்கும் புத்திரமோகந்தீரப் புத்திரனாம் மாறனென்னும் பிள்ளைத்திருநாமத்தையுடையவன்.
நித்தமாமாலை – அழிவில்லாத பெரிய பிராட்டியாருடன்கூடிய பெரியோனை. ஆன – தன்னிடத் தாக்கம்பெற்ற.
தவபோதனுமா – மெய்த்தவத்தினொடுங்கூடி ஞானவானுமாகி. ஆய்ந்த கோ – அவனேபரத்துவமென்றுதெளிந்த தெரிசனராசன்.
மானவடி – பெருமையையுடைய திருவடிகளை நாதனின்மேல் – எனது நாவினிடத்தும் அதற்குமேலான சிரத்தினிடத்தும்.
நன்கலன்பூண் – நல்ல ஆபரணமாகப் பூண்ட. என்முனநீவந்தெவன் – என்முன்னேவந்து நீ சாதிப்ப தெதுதான்? ஒன்றுமில்லை.
வன்புலமாய – என்னிடம் நீவருதற் கெளிய இடமன்று, வலியஇடமாகப்பட்டன ;
ஆதலா லுனக்கு வரப்போகா தென்றறிந்துகொள் என்றவாறு. மேல்-இடம்பற்றிய ஆகுபெயர்.
திணை – வாகை. துறை – அறிவன்வாகை.

கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே–நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி. (811)
இது கடகபெந்தம். நெடுவீடு – பரமபதம். திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம்.

நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராகியிணையில்லா–தாகநிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான். (812)
இதுவும் கடகபெந்தம்.
ஆக மாத்திரைச்சுருக்கமுதற் கடகபெந்த மீறாகச் சித்திரகவி யாறு மடைவே காண்க.
திணை -…… துறை – சமயவணக்கம்.

சித்திரகவி முற்றும்.

சொல்லணியியலுரை முற்றும்

——-

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–மூன்றாவது–சொல்லணியியலுரை—பகுதி-1-மடக்கு –ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

ஸ்ரீ:–மூன்றாவது–சொல்லணியியலுரை

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

————

மடக்கு

252.குறித்துரையெழுத்தின்கூட்டமுதன்மொழி
மறித்துமோர்பொருடரமடக்குதன்மடக்கே.
என்பது சூத்திரம்.

இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின், சொல்லானாமணிகளினியல்புணர்த்திற்றாதலாற் சொல்லணியியலென்னும் பெயர்த்து.
அஃதாக, இச்சூத்திர மென்னுதலிற்றோவெனின், பொதுவகையான் மடக்கென்னுமலங்கார முணர்-ற்று.

(இ-ள்) புலவனா லொருபொருள்குறிக்கப்பட்டுச் செய்யுளினிடத்துத் தொடரெழுத்தாற்சொல்லப்பட்ட முதன்மொழி
வருமொழியுமாய்ப் பெயர்த்துமொருபொருடருவதாகமடக்குவதூஉம் மடக்கென்னும் அலங்காரமா மென்றவாறு.

உம்மையாற் றொடரெழுத்துமொழியன்றி ஓரெழுத்தே பெயர்த்து மடக்குவதும் மடக்கேயா மென்றவாறு.
புலவன், பொருள், செய்யுள், வருமொழியென்பன சொல்லெச்சம். எழுத்தின்கூட்டமெனவே இரண்டு முதலாகிய வெல்லாவெழுத்துமெனக் கொள்க

253.அதுவே,
தொடர்பிடைவிடாதுந்தொடர்பிடைவிட்டு
மடைவினிலிருமையுமமைவனவாகியு
நடைபெறுமுப்பாற்றெனநவின்றனரே.
(எ-ன்) அம் மடக்கினதுபாகுபாடுணர்-ற்று.

(இ-ள்) அச்சொல்லப்பட்டமடக்கு, தம்மிற்றாந்தொடருத லிடைவிடாது மிடைவிட்டு முறையே யிரண்டு தன்மையும்
பொருந்துவனவாகியு மொருசெய்யுளகத்து நடக்கு மூன்றுபகுதியையுடைத்தென்று முதனூலாசிரியர் கூறின ரென்றவாறு.

எனவே இது வழி நூலென்பதுந் தமக்கு மதுவேகருத்தென்பதுங் கூறினாரெனக் கொள்க.

254.ஒன்றாதியவாவொருநான்களவுஞ்
சென்றுநடைபெறுஞ்சீர்த்ததற்கடியே.
(எ-ன்) இதுவும் அதனையே வகுத்துணர்-ற்று.

(இ-ள்) அதற்கு (அம்மடக்கிற்கு) அடிவரையறை நான்கடிச் செய்யுளுள்ளே நடக்குங்கால் ஓரடிமுதலாக
வீரடிக்கண்ணு மூன்றடிக் கண்ணு நான்கடிக்கண்ணு முன்னர்க்கூறியபடியே சென்று நடக்கு மழகினையுடைத் தென்றவாறு.

ஒருநான்களவுமென்றதனால் நான்கடிச்செய்யுளென்ப தாற்றலாற் போந்தபொருள். ஒருநான்களவுமென்னு மும்மை
முற்றும்மையெனக் கொள்க. அவற்றிற்கெல்லாஞ் செய்யுண் மேற்காட்டுதும்.

255. முதலிடைகடையேமுதலொடிடைகடை
யிடையொடுகடைமுழுதெனவெழுவகைத்தே.
(எ-ன்) இதுவு மதனையே வகுத்துணர்–ற்று.

(இ-ள்) அம்மடக்கு முதன்மடக்கும், இடைமடக்கும், கடைமடக்கும், முதலொடிடைமடக்கும், முதலொடுகடைமடக்கும்,
இடையொடுகடைமடக்கும், முற்றுமடக்கும் என முறையே எழுவகைப்படு மென்றவாறு. அம்மடக்கென்பது அதிகாரம்பற்றி விரிந்தது.

256.அவற்றுள்,
அடிமுதன்மடக்கோரைம்மூன்றாகும். (5)

257.இடைகடையவுமதனெண்ணிலைபெறுமே. (6)

258.உணர்வுறின்மடக்கிவையோரிடத்தனவே.
(எ-ன்) இவைமூன்றுசூத்திரமு மடிதொறு மோரிடத்தா மடக்கினது தானமு மெண்ணும் வரையறுத்துணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வெழுவகைத்தானத்தினுள்ளும், அடிமுதன்மடக்குப் பதினைந்தாம்
இடைமடக்குங் கடைமடக்கு மென்னப்பட்ட விரண்டு மொரோவொன்று முன்னர்க்கூறிய அடிமுதன் மடக்குப்போலப்
பதினைந்து பதினைந்தென்னு மெண்ணினதுவரையறை நிலைபெறுமென்றவாறு
ஆராயுமிடத் திவைநாற்பத்தைந்து மோரிடத்து மடக்கென்பனவா மென்றவாறு.

அவையாவன முதலடிமுதன்மடக்கு, இரண்டாமடி முதன்மடக்கு, மூன்றாமடி முதன்மடக்கு,
நாலாமடி முதன்மடக்கு இவைநாலு மோரடியோரிடத்து முதன்மடக்கு
இனி, முதலிரண்டடியுமுதன்மடக்கு, முதலடியுமூன்றாமடியு முதன்மடக்கு, முதலடியுநாலாமடியுமுதன்மடக்கு,
கடையிரண்டடியு முதன்மடக்கு, இடையிரண்டடியு முதன்மடக்கு, இரண்டாமடியுமீற்றடியுமுதன்மடக்கு இவையாறுமீரடிமுதன்மடக்கு,
ஈற்றடியொழித் தேனைமூன்றடியுமுதன்மடக்கு, முதலயலடியொழித் தேனைமூன்றடியுமுதன்மடக்கு,
ஈற்றயலடியொழித் தேனைமூன்றடியு முதன்மடக்கு முதலடி யொழித்தேனைமூன்றடியுட் முதன்மடக்கு
இவைநாலு மூன்றடிமுதன்மடக்குநாலடிமுதன்முற்று மடக்குஆக விவைபதினைந்தும் அடிமுதன்மடக்கு.
இனி, அடியிடை மடக்கும், அடியிறுதிமடக்குமிவ்வண்ணமே பதினைந்து பதினைந்தாம்.
இவை நாற்பத்தைந்திற்கு முதாரண முன்னர்க்காட்டுதும்.

259.அடிதொறுமீரிடத்தனவாய்முதலொ
டிடைகடையிடைகடைகளினியன்றனவுந்
திதமுறநான்கறுபானெனச்சிவணி
யதனொடுமடக்கொருநூற்றைந்தாகும்.
(எ-ன்) அடிதொறு மீரிடத்தனவாமடக்கிற்கும், மூவிடத்தனவா மடக்கிற்குந் தானமும் வரையறையு முணர்–ற்று.

(இ-ள்) செய்யுளினடிதொறும் ஆதியொடிடை, ஆதியொடுகடை, இடையொடுகடை யென்றுசொல்லப்பட்ட
தானங்களி னீரிடத்தனவாய் நடந்தனவும், முத லிடை கடையென மூன்றிடத்து மடக்குவனவுமான
நாலுதானத்திலு முண்மையாக வறுபதென்று கூறும்படிக்குப் பொருந்தி முன்னர்க்கூறப்பட்ட வோரிடத்துமடக்கு
நாற்பத்தைந்தொடு மடக்கு நூற்றைந்தா மென்றவாறு.

இச்சூத்திரத்துண் முதலேவந்த முதலொடென்பதனை முதனிலைத் தீபகமாக்கி யிடைகடையென்னு மிரண்டினு மேற்றுக.

260.அவற்றுள்,
முதற்றொடைவிகற்பமேழொடுநான்கொடுந்
திதப்படவோரடியொழிந்தனசிவணும்.

(எ-ன்) இதுவு மத்தானங்களைத் தொடைவிகற்பங்களாற் கூறுபடுத்தி விரித்துணர்–ற்று.

(இ-ள்) அவற்றுள், (அங்ஙனங்கூறப்பட்ட வோரிடத்தனவு மீரிடத்தனவு மூவிடத்தனவுமாக மடக்குமவற்றுள்)
அடியொடு பொருந்தின முதற்றொடை விகற்பமென்னு மிணைமுதலாகிய வேழொடுங் கடையிணை, யிடையிணை,
முதற்கூழை, இரண்டாஞ்சீர் நான்காஞ்சீரொடு புணர்ந்த பின் னென்னு நான்கொடுங்கூடிப் பதினொரு
தொடைவிகற்பங்களொடுந் தெளிவுபெற வோரடியொழிந்தமடக்குகள் வருதலைப்பொருந்து மென்றவாறு.

261.இடைவிடாமடக்கிவையெனமொழிப.
(எ-ன்) இது தொடர்பிடைவிடாதுமென்றசூத்திரத்தினுள் மூன்று பாகுபடு மடக் கென்றவற்றுள், முதலேகூறியபாகுபா டுணர்-ற்று.

(இ-ள்) இங்ஙனங்கூறப்பட்ட நூற்றைந்துமே யிடைவிடாமடக் கென்றுகூறுவர் புலவரென்றவாறு.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு

மதியார்மதியார்வனைவேணியினான்
விதியாலிரந்ததனைமீட்ட–முதியானை
மாதவனையல்லான்மதிப்பரோபேரின்பத்
தாதரவுபூண்டவுளத்தால். (624)
இது முதலடி முதன்மடக்கு.

(இ-ள்) அறிவுடையோர், பிறையையும் ஆத்தித்தாரையுஞ்சூடின சடையையுடையான் பிரமசிரத்தையறுத்தகாரணத்தாற்
பிரமசிரத்தி லிரந்ததனைப்போக்கின முதன்மையுடையோனைப் பெரியபிராட்டிகொழுநனை யுள்ளத்தாற்றியானிப்பதன்றிப்
பரமபதத் தின்பத்தின்மே லாசை பற்றினவுள்ளத்தால் வேறொருகடவுளைத் தியானிப்பதில்லை யென்றவாறு.

வேறொருகடவுளரையென்பது சொல்லெச்சம். ஓகாரம் – எதிர்மறை. இதற்குப் புலவிர்காளென்னு
முன்னிலையெழுவாய் தோன்றாது நின்றதாக விரித்துரைக்க. மதிப்பரே யெனினுமாம். அதற்கு ஏகார மெதிர்மறை.
திணை – பாடாண். துறை – செவியறிவுறூஉகடவுள்வாழ்த்துமாம்.

அமுதமடப்பாவையாடகப்போதல்கக்
குமுதங்குமுதங்கொளுந்தீத்–தமியராய்த்
தாழ்ந்தார்தமையன்றித்தண்ணளிமால் *கள்வனிற்பொய்
சூழ்ந்தார்தமைவருத்தாதோ. (625)
இஃ திரண்டாமடி முதன்மடக்கு.

(இ-ள்) அமுதமடப்பாவை – திருமகள். ஆடகப்போது – பொற்றாமரை. அல்கல் – குவிதல்வறுமையெய்தலெனினுமாம்.
குமுதம் – ஆம்பல். குமுதங்கொளுந்தீ – மகிழ்ச்சியெய்துந்தீ. தீ – சந்திரன், தன்னைச் சுடுதலாற் றீயென்றாள்.
தமியராய்த்தாழ்ந்தார் – புமான்களை நீங்கி மெலிந்தார். பொய்சூழ்ந்தார் – பொய்சொல்லவு நினைந்தார்.
தமை வருத்தாதோ – அவர்தமை வருத்தாதோ வருத்திற்றாகில் நமது தலைவரும் வருவர். வாராமையால் வருத்தாதொழிந்த தென்றவாறு.

பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நிலவுகண்டழுங்கல். இதற்குந் தோழீயென்பதனைத் தோன்றாதுநின்றதாக விரிக்க. ஓகாரம் வினா.

சிட்டர்பரவுந்திருமால்செழும்பொழில்சூ
1ழட்டபுயகரத்துளாயிழையார்க்–கிட்டிடைதான்
சித்திரமோசித்திரமோதெவ்வர்முரண்முருக்கு
மத்திரமோகண்ணென்பவை. (626)
இது மூன்றாமடிமுதன்மடக்கு.- இது அட்டபுயங்கமெனப்படும்.

(இ-ள்) சிட்டர் – தொண்டர். அட்டபுயகரம் – திருப்பதி. இட்டிடை – சிறியவிடை.
சித்திரமோ என்னுமிரண்டனுள், ஒன்று வெளிஒன்று பொய். பகுதி – இயற்கை. துறை – தகையணங்குறுத்தல்.

நன்காரிமாறனெனுநாவீறன்வண்குருகூர்
மன்கார்வரைமயிற்குமன்னவா–மென்கோங்
கரும்பாங்கரும்பாங்களபமுலையின்சொற்
சுரும்பாநயனத்துணை. (627)
* கள்வன் – திருக்கள்வனூர்.
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை- பாங்கன் செவ்வி செப்பல்.

தெண்டிரைப்பார்போற்றுந்திருவெள்ளியங்குடியார்
தண்டுளபமார்பந்தழுவாநாள்–வண்டுளர்பூந்
தேனிலாய்நீண்டகுழற்சேயிழைதன்னாருயிரும்
வானிலாவானிலாவாம். (628)
இது நாலாமடிமுதன்மடக்கு.

(இ-ள்) வண்டுளர் – வண்டுகுடையும். பூந்தேனிலாய்நீண்டகுழல் – பூவிற்றே னிலைபெற்று நீண்ட குழல்.
சேயிழைதன்னாருயிரும் – சிவந்த பூணினையுடையாள்கேடில்லாவுயிரும்.
வானிலாவானிலாவாம் – விசும்பின் கண்ணுதிக்குமதியா லுடம்பின்கண் நில்லாததன்மையையுடைத்தா மென்றவாறு.

உயிரும் வானிலாவா னிலாவாம் என்பது நீருந் தன்பாலிருந்தன என்பதுபோல ஒருமையிற்பன்மை மயக்கம்.
திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல். இவை நான்கும் ஓரடி முதன்மடக்கு.

நிலமனிலமன்னெடுவெளிதீநீரா
யலமனலமன்னமலன்–புலனைந்தும்
வென்றார்தொழுமால்விளங்குதிருவிண்ணகர
மென்றார்க்குமுண்டோவிடர். (629)
இது முதலிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) நிலமனிலமன்னெடுவெளிதீநீராய்-நிலமும் வாயுவும் நிலைபெற்ற பெரிய ஆகாயமுந் தீயு நீருமாகி.
அலமனலமன்னமலன் – நிறைவு பொருந்தின ஆனந்தமாக்கம்பெற்ற அழுக்கற்றவ னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்துநகரவாழ்த்துமாம்.

மாதவனின்மாதவனின்வன்றாட்டுகளணவு
போதவண்மெய்ச்சாபமதைப்போக்கினளப்–பாதமலர்ப்
பொற்போதிப்பொற்போதிப்பூதலத்திட்டஞ்சலிப்பா
ரிற்போதமிக்கவர்யார்யார். (630)
இது முதலடியும் மூன்றாமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) மாதவனில் – கௌதமபாரியையாகிய அகலிகை. மாதவனின் – திருமகள்காந்தனேநினது. வன்றாள்…
போக்கினள் – வலியதாளிற்பூழியைப் பரிசித்தகாலத்தக் கௌதமனாற் றனதுமேனிக் கெய்திய கற்படிவத்தைப்போக்கின ளாகையால்.
அப்பாதமலர்…………… பூதலத்திட்டு – அந்தத் திருவடித்தாமரைசெய்தபொலிவையேத்திப் பொன்போலுநிறத்தை
யுடையபூக்களை யிப்பூமியிலிருந் தத்திருவடிகளிற் சாத்தி.
அஞ்சலிப்பாரிற் போதமிக்கவர்யார்யார் – தியானித்து வணங்குவாரினும் ஞானமிகுந்தவரில்லை யென்றவாறு.

இன் – நீக்கம். அடுக்கு, துணிவின்கண்வந்தது.
மாதவனில் “மென்மைவரினேளலணனவா” மென்பதனால் லகாரந்திரிந்து னகார மாயிற்று.
மாதவன் – படர்க்கைமுன்னிலையாகிய இடமயக்கத்துவந்த அண்மைவிளி. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

மறுகுமறுகுமலைவார்சடையான்விற்போன்
றிறுகுமுலைமேற்பசலையேறு–முறுதேந்
தெகிழ்மலர்ப்பாணத்தான்செருக்கடந்தமாறன்
மகிழ்மகிழ்த்தார்வேட்டாண்மனம். (631)
இது முதலடியும் நாலாமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) உறுதேம் – பரிமளமிகுந்ததேன். தெகிழ்மலர்…………. மாறன் – வழியாநின்ற பூவாளிகளையுடையானாகிய
காமனதுபோரை வென்ற காரிமாறப்பிரான்.
மகிழ்……….. மனம் – சூடுதற்குவிரும்பின வகுளமாலிகையை விரும்பின விவளுடையமனமானது.
மறுகு……….. யேறும் – ஊசலாடாநிற்கும்அதுவுமன்றி, அறுகினைப்புனைந்த நீண்ட சடையான்வில்லாகிய விமவானைப்
போலத் திண்ணிதாயமுலைமேற் பசலையும் பரவாநிற்கும்ஆதலா லெங்ஙன முயிர்வாழும், யாதோசெய லென்றவாறு.
திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல்.

ஆயிரம்பெற்றானொருமூன்றைந்துற்றானாதியர்க்கு
மேயமுதல்வனெனுமெய்வேதம்–பாய்திரைப்பா
லாழியானாழியானஞ்சிறைப்புட்பாகனெனுங்
கோழியான்கோழியான்கோ. (632)
இது கடையிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) உண்மைவேதமானது, பரந்த திரையோடுங்கூடிய பாற்கடலையுஞ் சக்கிராயுதத்தையுமுடையனாகி யழகிய
சிறையையுடைய புட்பாகனெனுந் திருவுறையூர்மாதவனைக் கோழிக்கொடியானையும், கண்ணாயிரம் பெற்றானையும்,
ஒருமூன்றுபெற்றானையும், மூன்றுமைந்தும் பெற்றானையுமாதியாகவுடையார்க்கெல்லா மந்தர்யாமியாக வுள்ளே
பொருந்திய முதல்வனென்றுகூறாநிற்கு மென்றவாறு.

மெய்வேதங்கூறுமெனக் கூட்டுக. கோ – கண். கண்ணென்பதனை யாயிரமென்பது முதலாயவற்றிற்கு முதனிலைத் தீபகமாக்கியும்,
மூன்றென்பதனை மூன்று, மூன்றுமைந்து மென்னு மிரண்டிற்கு முதனிலைத் தீபகமாக்கியும்,
மூன்று மைந்துமென வும்மை தொக்கதாக விரித்தும் உரைக்க. கோழி – உறையூர். திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.

சலராசிமண்மேற்றவறிழையாஞான
மிலராயிலராயினுமா–மலரா
னனத்தானனத்தானருட்குருகூர்மாற
னெனத்தானணுகாதிடர். (633)
இஃ திடையிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) தவறிழையாஞானம் – தீங்கினைப்பயவா வுண்மைஞானம்.
இலராயிலராயினுமா மென்பது – ஞானமில்லாதவரா யில்லின்கண்வாழ் வாரேயாயினுமாக வென்றவாறு.
உம்மை – இழிவுசிறப்பும்மை.
மலரானனத்தானனத்தா னென்பது – தாமரைமலர்போன்ற திருமுகமண்ட லத்தையுடையான் அன்னவாகனத்தையுடையா னென்றவாறு.
அருட் குருகூர்மாறனெனத்தானணுகாதிடர் என்பது அருளொடுகூடிய திருக்குருகூர்க் காரிமாறப்பிரானென் றொருக்காற்கூறின
வரிடத்துத் துன்பமென்பது சிறிதுமணுகா தென்றவாறு. எனவே யணுகுவது பேரின்ப மென்பது பயன். துறை – இதுவுமது.

மாசரதந்தன்னைவழுத்தலெனுமன்பெனக்குத்
தாசரதிதாசரதிதன்னாமந்–தேசுபெறப்
பாடார்நினைந்திடார்பல்காலிவர்க்கெளிதோ
வீடாதவீடாதன்மேல். (634)
இஃ திரண்டாமடியும் நான்காமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) மாசரதந்தன்னை………. தாசரதி – பரதெய்வங்களைத் துதியாது தன்னைத்துதிப்பதே ஆன்மலாபமாகிய
பெரிய சதிர்ப்பாடென்றறிந்து தன்னிடத் தன்புறுதலைப் பேதையேனாகிய எனக்குந் தரப்பட்ட சதிர்ப்பாட்டையுடையவன்.
சாசரதிதன்னாமம் – தசரதன் பிள்ளையினது திருநாமமாகிய ராம வென்பதனை தேசுபெற……….
பல்கால் – நாவும் மனதும் விளக்கமெய்தப் பலகாலுஞ்சொல்லார், சிந்திப்பதுஞ்செய்யார்.
இவர்க்கெளிதோ வீடாதவீடாதன்மேல் – இவ்வறியாமையுடைய வித்தன்மையோர்க்குச் சரீரம்விட்டகாலத் தழிவில்லாத
பரமபதத்தின்கட் சென்று பேரின்பமெய்துத லெளியதொன்றாகா தென்றவாறு.

உம்மை இழிவுசிறப்பு. ஓகார மெதிர்மறை. துறை – இதுவுமது. இவையாறு மீரடிமுதன்மடக்கு. இனி மூவடி முதன்மடக்கு வருமாறு

வேலைவேலைக்கடுவைவென்றவிழிநீர்ததும்பு
மாலைமாலைப்பணிவார்வண்குருகூர்ச்–சோலைக்
கயலேகயலேகவர்குருகேநீக்க
முயலேமென்றார்க்கேமொழி. (635)
இஃ தீற்றடியொழிந் தேனைமூன்றடியும் முதன்மடக்கு.

(இ-ள்) வேலினை, கடலுட்பிறந்த நஞ்சினை வென்றதாமென்று அவர் பாராட்டின விழிகளானவை துன்பநீர்துளிக்கும் மயக்கத்தினை,
திருமாலடிகளைவணங்குவார் வளவிய குருகாபுரியின்கட் சோலைப்பக்கத்து நீரின்கட் கயலைப்பருகாநின்றகுருகேநின்னைவிட்டுநீங்குதல்
உள்ளத்தாலும் முயலுதல்செய்யேமென்று வஞ்சமொழிகூறிப் பிரிந்தவருடன் கூறுவாயாக வென்றவாறு.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – பறவையோடு பரிவுற்றுரைத்தல்.

போதகமுன்போதகமுன்புட்பாகன்பூங்கமல
மாதகலாதெய்துமணிமார்பன்–சீத
மலர்மலர்நீர்ப்பொன்னிமதிளரங்கன்பேர்கற்
கலர்கலருள்வன்பாதகர். (636)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதன்மடக்கு.

(இ-ள்) போதகமுன்பு – கசேந்திரன்முற்காலத்து. ஓதகமுன் – மூலமேயென்றுகூறப்பட்டவாவியினிடத்தெதிர்ப்பட்ட.
புட்பாகன் – கலுழவாகனன். பூங்கமல……………….. மணிமார்பன் – பொலிவினையுடைய குளம்பினொடுங்கூடிய
ஆவினது கூட்டத்தைவளர்ப்பான், திருமூழிக்கள மென்னுந் திருப்பதியையுமுடையான் றீயமக்களுக் கொளிக்குங்
கள்ளத்தையுடையனா மென்றவாறு. எனவே, நன்மக்களை வெளிவந்து காப்பானென்பது பயன். துறை – கடவுள்வாழ்த்து.

பணியும்பணியும்பனிமாமதியா
மணியுமணியுமரற்கும்–பிணிசெய்
தலைதலைதீர்த்தான்சரணமல்லாதேதம்ப
மிலையிலைத்தாரீந்துபுலவீர் (639)
இது நாலடியும் முதன்முற்றுமடக்கு.

(இ-ள்) புலவிர்காள் ! பாம்பையுங் குளிர்ந்த பெரியமதியாய் மேலாக்கஞ்செய்யு மாலையையுஞ் சடைமேற்புனைந்த
சிவனாகிய பெரியோனுக்குந் துன்பத்தைச்செய் தறிவைநடுங்குவித்த பிரமசிரமானதைக் கையைவிட்டு நீங்குவித்தானாகிய
ஸ்ரீமந் நாராயணன்றிருவடிகளல்லாதே, அந்தியகாலத் தறிவுநிலைகலங்கிச்சாய்ந்து பிறவியாகியகுழியிலே
நீர் விழும்பொழுது வீழாதே நும்மைத் தாங்குந்தூண் வேறில்லையாதலா லவன்றிருவடிகளிற்
றுளபமாலிகையைச்சூட்டி வணங்குவீராக வென்றவாறு.

அரற்கு மென்னு மும்மை சிறப்பும்மை. இலைத்தார் – இலைமாலை யாதலால், துளவமாலிகையென்றாயிற்று.
புலவீர் பணியு மெனக்கூட்டுக. திணை – பாடாண். துறை – ஓம்படை ; கடவுள்வாழ்த்துமாம்.
இவை பதினைந்தும் அடிமுதன்மடக்கு.

இனி இடைமடக்கு வருமாறு :-

கயிலாயம்பொன்னுலகம்புரந்தரனும்புரந்தரனுங்
களிக்கமேனா
ளெயிலார்தென்னிலங்கையர்கோன்பஃறலைக்கோர்கணைவழங்கு
மிந்தளூரான்
மயிலாய்மைவரையணங்கேநினதுயிராமேவல்புரி
மயிலைக்காவல்
பயிலாயத்தெழுந்தருளித்துணைவிழியாலுணர்த்தியருள்
பாரிப்பாயே. (640)
இது முதலடியிடைமடக்கு.

(இ-ள்) கயிலாயம் பொன்னுலகம் புரந்தரனும் புரந்தரனுங் களிக்க என்பது வெள்ளிமலையையுந் துறக்கத்தையுந் தமதாகப்புரந்து அரனும்
புரந்தரனுங் களிப்பெய்த என்பதாம். எயிலார்………. கோன் – கோட்டையாற் பெருத்த தெற்கின் கண்ணுண்டாய
விலங்கையிலுள்ளார்க்கு அரசனாகிய விராவணன்.
பஃறலைக்கோர்……. ளூரான். பல தலைகளும் அறும்படிக் கொருவாளிதொட்ட திருவிந்தளூரான்.
மயிலாய்………. பாரிப்பாயே – மயில்களாடப்பட்ட மேகந்தவழும் மலையிலுறையுந் தெய்வமனையாய் !
நினதுயிர்போன்றவளாய் நினதேவல்விரும்புமவளாம் மயில்போலுஞ்சாயலை யுடையாளை நின்னைக்காப்பவரா யிடைவிடாத
ஆயவெள்ளத்தார் கூட்டத்தடைந்து திருக்கண்பார்வையாற் குறிப்பினுணர்த்திக் கருணையை விரிப்பாயாக வென்றவாறு.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – தோழியைக் காட்டென்றல்.

புண்டரிகப்பொகுட்டணங்கேமும்மதமாவிருமருப்பிற்
புழைக்கைநீட்டி
யொண்டிறலானொருவனைநம்மகிழ்மாறன்மகிழ்மாற
னுறந்தையோங்கற்
கொண்டலுணின்றிருபிறைநள்ளிடைவருபாம்பெனவளைத்துக்
கொண்டகாலை
மண்டமர்க்கூற்றுவன்கணிச்சியெனத்தடிந்தததனையவன்
வாகைவேலே. (641)
இஃ திரண்டாமடியிடைமடக்கு.

இதனுள், மகிழ்மாறன்மகிழ்மாறனுறந்தையோங்கல் என்பது வகுளமாலிகையையுடைய காரிமாறப்பிரான் மகிழ்ந்து
போற்றும் மாயோன்றனது திருவுறையூர்வரையிடத்தென்பதாம். ஒழிந்தனவுரையிற் கொள்க. பகுதி – நடுங்கநாட்டம். துறையு மது.

பாரெழுதும்படிக்கெழுதாமறைமொழியைத்தமிழ்மொழியாய்ப்
பகர்ந்தமாற
னீரெழுதெண்டிரைப்பொருநைத்திருநாடன்வரையணங்கி
னீர்மைகுன்றாச்
சீரெழுதியெனையெழுதிக்களபமுலைக்களபமுலைத்
தேமென்கோதை
யூரெழுதிப்பேரெழுதிக்கிழிகொடுசீறூர்மறுகே
யுலாவுவேனே. (642)
இது மூன்றாமடியிடைமடக்கு.
இதனுள், களபமுலைக்களபமுலைத்தேமென்கோதை என்பது மான் மதக்குழம்பையுடைய முலையாகிய யானையையும்,
முல்லைமாலிகையினது தேனொடுங்கூடிய குழலையுமுடையா ளென்றவாறு. பார் என்பது உலகின் கண்ணுயர்ந்தோ ரென்றவாறு.
நீர்மைகுன்றாச் சீரெழுதியென்பது பெண்ணினதிலக்கணங்குன்றாத அவயவ அவயவிகளின்பொலிவினை யெழுதி யென்றவாறு.
பகுதி – சேட்படை. துறை – மடலேறும்வகை யுரைத்தல்.

மறைபடுசொற்பொருளினைத்தெற்றெனத்தமிழ்செய்நாவீறன்
மழைதோய்செவ்வி
யுறைபடுதெள்ளறலருவித்துடரிவரையரமகளிர்க்
குவமையாவீர்
நறைபடுசந்தனப்பொழில்சூழ்புனத்திடைவந்தடைந்ததெனி
னவில்வீரொன்னார்
கறைபடுவன்பகழியொடுமன்னாகமன்னாகங்
கதிகற்றாங்கே. (643)
இது நான்காமடியிடைமடக்கு.

(இ-ள்) மறையிடத்துண்டானசொல்லின்கண் மறைந்தபொருளினைத் தெளியும்படிக்குத் தமிழ்மொழியாகச்செய்த நாவீறரது
மேகம் படிந்த பருவத்துப்பெய்யுந் துளிகளாலுண்டான தெளிந்தநீராய்வரு மருவியையுடைய துடரிவரையில்
அரமகளிர்க் குவமையாகப்பட்ட மங்கைமீர் ! முகையவிழ்ந்தபூவிற்றேன் றுளித் தாரவாரிக்குஞ் சந்தனப் பொழில்சூழ்ந்த
நுமதுபுனத்தின்கண் சத்துருக்களைக் கொலைசெய் துண்டான குருதியின்முழுகிய பகழிதைத்ததொடும்
ஒரு அரசுவா ஆக்கம்பெற்ற மலை நடைகற்றதுபோல வந்தடைந்த துண்டெனிற் கூறுவீராக வென்றவாறு.

உவமையாவீரென்றதனாலவர்கள் காந்தியை யுயர்த்திக்கூறினானாம். ஆங்கு என்ற துவமவுருபு. கதி – நடை.
பகுதி – மதியுடன்படுத்தல். துறை – வேழம்வினாதல். இவைநாலு மோரடியிடைமடக்கு.

இனி யீரடியிடைமடக்கு வருமாறு :-

அந்தரத்தாரருவியுவாவடமலைமன்வடமலைமன்
னந்தண்சாரற்
சந்தனப்பூந்துணர்மலிந்தவண்டழையவண்டழைய
தனைக்கொண்டுற்றேன்
சிந்துரவாணுதற்களபப்புளகமுலைத்துவரிதழ்வாய்ச்
செவ்வேலுண்கட்
கொந்தவிழ்பூங்குழலீர்கைக்கொள்வீர்மாரனையடிமை
கொள்வீர்மாதோ. (644)
இது முதலிரண்டடியும் இடைமடக்கு.

இதனுள், அந்தரத்தாரருவியுவாவடமலைமன்வடமலைமன் னந்தண் சாரலென்பது-விசும்பின் உச்சியினின்றுமிழிந் தாரவாரிக்கு நீரருவியும்,
யானைத்திரளும் ஆலமரத்தினையலைக்கும் நிலைபெற்ற வடவேங்கட மென்னும் மலைக்கு மன்னன்,
அவனதாம் அழகிய குளிர்ந்த மலைப்பக்கத் தின்கண் ணென்றவாறு.
பூந்துணர்மலிந்த வண்டழைய வண்டழை யதனைக்கொண்டுற்றே னென்பது – பூங்கொத்துக்கள் பரிமளத்தினாற் கூட்டமான
வண்டுகளைத் தன்னிடத்தழைக்கப்பட்ட அழகியவளப் பத்தையுடைய சந்தனத்தழையதனைக் கையுறையாகக் கைக்கொண்டு
நும்மிடத்துவந்தே னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க. பகுதி – இதுவுமது. துறை – கருத்தறிவித்தல்.

கதியேபற்றுனர்ஞானக்கண்ணகலாக்கண்ணகலா
காயங்காண்பா
னதியேமுற்றியவரங்கத்திடைதுயிலும்புயல்வரைமே
னயந்துவாழ்நும்
பதியேதிங்குரைத்திடுமென்றனனறையீர்நறையீர்மென்
பதுமைபோல்வீர்
மதியேதிங்கினியெனவுந்தெளிகிலனேகுதற்குமொரு
வழிசொல்வீரே. (645)
இது முதலடியும் மூன்றாமடியும் இடைமடக்கு.

(இ-ள்) பேரின்பத்தையுட்கொண்டா ருள்ளக்கண்ணைவிட்டு நீங்காத இடமகன்ற பரமாகாயத்தைச் சென்றுகாணவேண்டித்
திருக்காவிரியாகிய விரண்டாறுசூழ்ந்த அரங்கத்தினடுவே கண்வளருங் காளமேகம்போன்ற திருமேனியையுடைய
அரங்கநாதன்வரையினிடத்து விருப்பத்துடன் வாழுந்தேனோடுங்கூடிய குளிர்ந்ததாமரையாளையொப்பீர் !
இவ்விடத்து நும்முடையபதி யேதென்று கூறுகவென்றனன் கூறுகின்றிலீர்,
இனிமேன் மதி யாதென்றுந் துணிகிலன் ; மீண்டுபோவதற்கொருவழியுங் காண்கின்றில னென்றவாறு
னறையீர்நறையீரென்பதனைப் பாடமாற்றி ஒற்றைப் பெயர்த்து அறையீரெனக்கூட்டுக.
இதனுள், கதியேபற்றினர்ஞானக்கண்ணகலாக் கண்ணகலாகாயமென்பனமுதலாக அரங்கத்திடைதுயிலும்
புயல்வரைமே னயந்து வாழ்நும் பதியேதிங்குரைத்திடுமென்றனனறையீ ரென்பன வீறாக நோக்கென்னும் யாப்புக்காலெனக்கொள்க ;
என்னை “மாத்திரை முதலாவடிநிலைகாறு, நோக்குதற்காரணநோக்கெனப்படுமே” என்றாராகலின்.
அஃதே லிதனுள் நோக்கிக்கொள்ளக்கிடந்தமை யாதோவெனின், பேரின்பத்தைவிரும்பினார் ஞானக்கண்ணை விட்டு
நீங்காத பரமாகாயத்தை யவர்சென்று காணவேண்டிப் பரமகிருபையால் வெளிவந் தரங்கத்திடைக் கண்வளரும்
அவன்வரையிடத்து விருப்பத்துடன்வாழுந் தாமரை யாளைப்போல்வீரென்றதனால், அவன்வரையிலிருந்தும் யான்விரும்பிய
நுமது சீறூரை யெனக் குரைக்கின்றிலீ ரென்னதறுகண்மையோ என்பது நோக்கிக்கொள்ளக்கிடந்தமையா னெனக்கொள்க.
ஏகாரமிரண்டனுள், முன்னையது பிரிநிலை. ஏனைய தீற்றசை. ஒழிந்தனவு முரையிற் கொள்க. பகுதி – இதுவுமது. துறை – பதிவினாதல்.

வயற்கழுநீர்க்கழிகவின்மாண்கொழுநனையேகொழுநனையே
மகிழ்நன்மாதர்
கயற்கருங்கண்ணெனமலராமுனங்களைகட்டெறிதிருக்காட்
கரைமால்வெற்பிற்
செயற்கரியதிருவுருவாலுயிர்கொல்லிப்பாவையராய்ச்
சிறந்தீருங்க
ளியற்பெயர்யாதெனவினவியதைமொழியுமொழியுமிகழ்
வதனைமன்னோ. (646)
இது முதலடியும் ஈற்றடியும் இடைமடக்கு.

இதனுள், கழுநீர்க்கழிகவின்மாண்கொழுநனையே கொழுநனையே மகிழ் நன்மாதர் என்பது செங்கழுநீரினது
மிக்க அழகினையுடைய மாட்சிமைப்பட்ட கொழுவியபூமுகையைத் தங்கள்புமான்களை விரும்பு நல்ல கடைசிய ரென்றவாறு.
கொழுநனையேயென்பது தேற்றேகாரம் ; பிரிநிலையுமாம்.
கொழுநனையேவிரும்பும்மாதர் கொழுவியநனை மலராமுன்னங் களைகட்டெறியென்றது இறைச்சி. என்னை?
முகையாய்நிற்பதன் மலர்ந்தா லிவை யெமது கண்ணுக் குவமையா யெமது கொழுநற்கு விருப்பத்தைக்
கொடுக்குமென்னு மாற்சரியத்தாற் களைகட்டெறிந்தா ரென்னுங் குறிப்புப் பொருட்புறத்ததாய்நிற்றலானெனக்கொள்க.
அதன்றெனில். கண்ணெனமலராமுன்னங் களைகட்டெறிந்தாரென்பது பயனில்கூற்றாம்.
சிறப்புப்பெயர் கொல்லிப்பாவையென்பது செய்தற்கரிய வுமது அழகிய வடிவினாலறிந்தேம். அறியாத இயற்பெயரை மொழியும் ;
எம்மையிகழ் வதனை யொழிவீராக வென்றவாறு. செயற்கரியதிருவுரு – எழுதுதற் கரியதிருவுரு.
பகுதி – இதுவுமது. துறை – பெயர்வினாதல்.

பூந்துளபம்புனைதிருமால்பொன்னியினுட்பொறியரவிற்
புயல்போல்வண்ணந்
தோய்ந்து துயில்பயிலரங்கேசனைத்தொழுமாறன்றுடரித்
தோகைபோல்வீர்
வாய்ந்தவனப்பல்குலுக்குத்தனக்குவடுதனக்குவடு
வகிராமுங்க
ளேந்தெழிற்கட்புலங்கொளநின்றிடையேதங்கிடையேதங்
கியம்புவீரே. (647)
இது கடையிரண்டடியும் இடைமடக்கு.

(இ-ள்) வாய்ந்தவனப்பல்குலுக்குத் தனக்குவடுதனக்குவடு வகிராமுங்கள் என்பது வனப்புவாய்ந்தவெனப் பாடமாற்றி
அழகுவாய்ந்த அல்குலுக்குந் தனமாகிய மலைதனக்கும் வடுவகிர் நிகராகியவுங்கள் என்றவாறு.
ஏந்தெழிற்கட்புலங்கொள என்பது உயர்ந்த அழகினையுடைய கட்புலனாக என்றவாறு.
இடையேதங்கிடையேதங்கியம்புவீரே என்பது இரண்டிற்குநடுவே குடியிருக்கும் மருங்கான தெது தானவ்விடத்தென்று
வினவுவேற் கிதுவென்று சொல்லுவீராக வென்றவாறு.
எனவே, எனது கண்ணிற்குப் புலப்படுவதின்றென்பது போந்தபொருள். பகுதி – இதுவுமது. துறை – இடைவினாதல்.

உரையார்ந்ததொகைப்பனுவன்முழுதுணர்ந்துமுலகியலொன்
றுணராதார்போல்
வரையாதுமறைபுரிகோமானினைவுமானினைவு
மனத்துணாடி
விரையார்நன்பசுந்துளபத்திருமாலைத்திருமாலை
வில்லிபுத்தூர்த்
திரையாடைப்புவிமகடன்கோமானைவணங்கலரிற்
றிகைக்கின்றேனே. (648)
இஃ திடையிரண்டடியு மிடைமடக்கு.

இதனுள், கோமானினைவுமானினைவுமனத்துணாடி என்பது தலைவனே ! உனதுள்ளத்துநினைவும், எனது மான் போலும்
விழியினை யுடையாண்மனத்துணினைவும் எனதுமனத்துட்குறித்து என்றவாறு.
துளபத்திருமாலைத்திருமாலை வணங்கலரிற் றிகை்கின்றேனே என்பது துளபமாகிய அழகியமாலையையுடைய
திருமகளோடுங்கூடிய மாயோனை வணங்காத் தீயமக்களைப்போல யான் மனமறுகாநின்றே னென்றவாறு.
உலகியலொன்றுணராமை-உலகநடை சிறிதுமறியாமை. மறைபுரிதல் – வரைந்துகொள்ளாது களவொழுக்கத்தை நீட்டிக்கவிரும்புதல்.
பகுதி – பகற்குறி. துறை – வருத்தங்கூறி வரைவுகடாதல்.

மீனமாதியவாயவவதாரம்புரிந்தருண்மால்விண்ணோர்போற்றும்
வானமாமலைவளர்சீவரமங்கைவரமங்கைமார்நீரென்றான்
மோனமாயிருந்ததனாற்பயனேதுவிருந்தினர்க்குமுகமன்கூறி
யீனமாகியவுறுநோய்களைகண்ணாங்களைகண்ணாங்கியற்றிலீரே. (649)
இஃ திரண்டாமடியு மீற்றடியு மிடைமடக்கு.

இதனுள், சீவரமங்கை வரமங்கைமார் நீரென்றா லென்பது சீவர மங்கையென்னுந்திருப்பதியிற் சேட்டமாகிய மங்கைப்
பருவத்து மடந்தையரையொப்பீரென் றுலகினுள்ளா ரும்மைக் கூறுவராயின் என்பதாம்.
பருவம் பெதும்பையராயினும் வியப்பினான் மங்கைப்பருவத் துள்ளாரையொப்பீ ரென்றான். மோனம் – மௌனம்.
நோய்களைகண் ணாங்களைகண்ணாங்கியற்றிலீ ரென்பது காமமாகியபிணியைக்களையுங் கருணையாங் காவலை நீர் செய்கிலீ ரென்றவாறு.
ஒழிந்தனவு முரையிற் கொள்க. பகுதி – மதியுடன்படுதல். துறை – மொழிபெறாதுவருந்தல். இவையாறு மீரடியிடைமடக்கு.

இனி மூன்றடியிடைமடக்குவருமாறு :-

இருங்கணையின்றிவணுறிவர்தனுவேட்டைதனுவேட்டை
யிசையாதெவ்வுள்
வருந்திருமால்பனிவரைமேற்காவியங்கண்காவியங்கண்
மதியுட்கொண்டோ
ரொருங்குபுகழ்வதற்கரிதாமாதினைமாதினைக்காவ
லுவந்தாளென்கை
பொருந்துவதன்றிருவருந்தம்முட்காதன்மதர்நோக்கிற்
புகல்கின்றாரே. (650)
இஃ தீற்றடியொழிந்த வேனைமூன்றடியு மிடைமடக்கு.

(இ-ள்) இவ்விடத் திப்புனத்துற்றவிவர்கையிற் பெருமையுடைய கணையு மில்லை, இவர்யாக்கையுந் தளர்ச்சியுடையது,
ஆகையா லிவர் வில்வேட்டையும் பொருந்துவதன்று ; இஃதன்றி, இந்த மாதராளைப் பெரியு தினைக்காவல்
வரும்பினாளென்கையு முண்மையன்று, இவள் நீலோற்பலம்போன்றகண்களைப் பலகாப்பியங்களையு முணர்வினாலுட்
கொண்டோரெல்லாங்கூடியும் புகழ்தற்கரிதாம் ; இருவருமொருவ ரொருவர்மேலுள்ளவுள்ளக்காதலைக் கண்களாலுரைக்கின்றனரென்றவாறு.
பகுதி – குறையுறவுணர்தல். துறை – இருவர்நினைவுமொருவழியுணர்தல்.

சுனையுணீனிறநாண்மலர்நாண்மலர்தொறுந்துணர்தெகிழ்ந்துக்க
நனையுண்மூழ்கியபலவினின்சுளையினைநாங்கைமால்வரைக்கிள்ளை
யனையபேடைவாயருத்தியினருத்தியின்புறுநிலையதுகண்டோர்
நினைகலானழுங்காற்றலையாற்றலைநினதுகண்ணுறின்மானே. (651)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.

(இ-ள்) சுனையுணீனிற……….. தொறும் என்பது சுனையின்கண் ணுண்டாவதாய நீலமணியினொளியு முவமைக்கு
நாணும் நீலோற்பலம் பக்குவம்வந்து மலருந்தொறும் என்றவாறு.
துணர்தெகிழ்ந்து………. கிள்ளை என்பது அகவிதழ்நிறைந்தொழுகிய தேனின்கண், கரைசார்ந்த சோலைப்புறத்து
வீசுகொம்பர்நின்று மளிந்துவீழ்ந்து நனைந்த பலவி னினியசுளையைத் திருநாங்கைமாயோன்வரையிற் சேவற்கிளியானது என்றவாறு.
அனையபேடைவாய்….. கண்டு என்பது தனதுயிரனைய பெடைவாயி லன்பினாலருத்தி யின்பமெய்து நீதியைக் கண்டு என்றவாறு.

ஓர்நினைகலான்……………… மானே என்பது ஒருவராலுநினைத்தற்கரிய பெருமையானொருவ னிரங்கு மிரக்கத்தின்
மிகுதியை நினது கண் காணி னாற்றுவாயல்லை, மான்போலுங்கண்ணினையுடையா யென்றவாறு.
ஒருவராலு மென்பதும், உயிரென்பதும், பேடையென்பதனாற் சேவலென்பதும் வருவிக்கப்பட்டன.
பகுதி – குறைநயப்பித்தல். துறை – விரவிக்கூறல்.

மாமடந்தைகுடிபுகுந்தவன்பிலுறுமன்பிலுறுமாயோன்வெற்பிற்
காமருவண்டினமேநீர்தாந்தாந்தாந்தாமெனவாழ்கமலவைப்பிற்
பூமடந்தைமுகமலர்போன்றொருகமலத்திருகுவளைபூத்தவாகத்
தாமருவிக்குமுதமும்வெண்முல்லையுமுல்லையுமுளவோசாற்றுவீரே. (652)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.

(இ-ள்) மாமடந்தைகுடிபுகுந்த வன்பிலுறுமன்பிலுறு மாயோன் வெற்பில் என்பது பெரியபிராட்டிகுடிகொண்ட
அன்பிலென்னுந்திருப்பதியின் மிக்க அன்பிலெய்திய மாயவனதுவெற்பில்வந்த என்றவாறு.
காமருவண்டினமே………. கமலவைப்பின் என்பது அழகிய வண்டுகாள் ! நீங்கடாம் தாந்தாந்தாமென்ற பாட்டோடும்
வைகும் மருதநிலத்தின் கண்ணேயுள்ள தாமரையோடையின்கண் என்றவாறு. பூமடந்தை…………… சாற்றுவீரே என்பது
இந்தப் பூமகள் முகத்தாமரையையொப்பதா யொருதாமரையினிடத் திரண்டுகுவளை பூத்தனவாக நிலைபெற்று
மவற்றுட னொருசேதாம்பலும் முல்லையரும்பும் முல்லையாகியபண்ணுங் கண்ணிற்
கண்டனவுஞ் செவியாற்கேட்டனவு முளவாகிற் சொல்லுவீராக வென்றவாறு. பகுதி – இயற்கை. துறை – வண்டொடுநன்னய முரைத்தல்.

உருவளர்மாத்தினமகலத்துறுதிறத்திற்பயோதரங்க
ளொருங்குதோய்ந்து
பொருவருநன்பரிமளங்கூர்வனமாலைவனமாலை
பொருந்திச்செய்ய
பருதியுடன்பனிமதியுமிருபாலுமிருபாலும்
பயின்றுதோன்றுந்
திருநெடுமால்பொருவருமிவ்வடமலையும்வடமலையு
முலைச்செந்தேனே. (653)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.

(இ-ள்) முத்துவடங்கிடந்தசையுமுலையொடுங்கூடிய தேன்போலு மொழியினையுடையாய் !
ஒளிதழையாநின்ற பெரியபிராட்டி நாளுந் திருமார்பிற் குடிகொண்ட கூறுபாட்டால் அவளது திருமுலைச்சுவடுகளைத் தழீஇயதுடன்,
ஒப்பில்லாமணத்தைப்பெருப்பித்துக்காடாகிய வியல்பையுடைய துளபமாலையையும் பொருந்தி, செம்மையுடையநேமியாகிய
ஆதித்தனுடன் பாஞ்சசன்னியமாகிய குளிர்ந்த மதியையும் வல மிட மென்னு மிரண்டுபக்கமுந் தரித்திருக்குமுறையும்
இடைவிடாத தோற்றப்பொலிவுண்டாந் திருவொடுங்கூடிய மாயோனையொக்கும் ;
சினையோடும்வளராநின்ற மாமரத்தின்கூட்டந் தன்னிடத்துற்ற கூறுபாட்டோடுங் காளமேகங்க ளொக்கத் தவழ்தல்பொருந்தியும்
ஒப்பில்லாத நல்ல மணத்தைப்பெருக்குங் காடாகிய வியல்பையுடைய துளபமாலைபொருந்தியும்,
ஆதித்தனுடன் சந்திரனும் இரண்டுபக்கமுமிருக்குமுறையும் பொருந்தியுந் தோன்றுமிவ் வடவேங்கடமாகிய மலையு மென்றவாறு.
இதனுள் வனமாலைவனமாலை யென்பது அத்தச்சிலேடை. பருதியும் பனிமதியுமென்பது மாட்டேறில்லா வுருவகம்.
ஒழிந்தன சத்தச்சிலேடை. பகுதி – குறைநயப்பித்தல். துறை – அறியாள்போறல்.

முளைநிலாவினைநேர்நுதனேர்நுதன்முகிணகையணைமென்றோ
ளிளையளாமிவட்கேமமேமமதுறவேதிலரணிவானற்
கிளையினீண்டினர்கேளினிக்கேளினிக்கெழுதகையுறல்வேண்டிற்
களைகணானிறைகடிநகர்க்கடிநகர்காணமன்விரைவாயே. (654)
இது நான்கடியும் இடைமுற்றுமடக்கு.

(இ-ள்) இளம்பிறையை யுவமை குறிக்கப்பட்ட சிறியநுதலினையும், முல்லைமுகைபோன்ற பல்லினையும்,
அணை போன்ற மெல்லிய தோளினையும், இளமைத்தன்மையையு முடையளா மிவளுக்குப் பொன்னை யின்பமுற
வணிவான் அயலவர் மகட்பேசித் தமரொடு மெமதுமனையிடத்துக் குழுமின ராகையா லினிக் கேட்பாயாக மன்னனே !
உனது சுற்றத்தோடும் எம்மோடுண்டாகிய இந்த நட்பு மிகுதல்வேண்டினையே லுலகத் துயிர்கட்குக் காவலாகிய
இறைவனாம் மாயோன் திருக்கடிநகரிடத்துத் திருமணம் நகரிலுள்ளார்காண அயலவர்க்குமுன்னே
யிவளை வரைந்து கொள்வான் விரைவாயாக வென்றவாறு.
நேர்நுதல் – சிறுநுதல். “சிறுநுதற்பேரமர்க்கட்செய்யவா” யென்றார் பிறரும்.
பகுதி – உடன்போக்கு. துறை – மகட்பேச்சுரைத்தல். இவை 15-ம் இடைமடக்கு.

இனி அடியிறுதிமடக்கு வருமாறு :-

கூன்பிறையவெண்கோட்டிற்கொன்னாகங்கொன்னாகந்
தான்பதைத்துமூலமெனத்தாழாதுதவியமால்
வான்புகழுந்தென்னாகைமானனையீர்வண்டழையிங்
கேன்புரிந்துகொள்ளாதிருப்பதிசைப்பீரே. (655)
இது முதலடியிறுதிமடக்கு.

இதனுள், கூன்பிறைய வெண்கோட்டிற் கொன்னாகங் கொன்னாகந்தான்பதைத்தென்பது வளைந்த பிறைபோன்ற
வெண்கோட்டினாற் கொல்லும் யானை பெரியவுடம்பு நடுக்கமுற்று என்பதாம். தான் – அசை.
மூல,,,,,,,,,மால் என்பது மூலமென்றுகூறத் தாமதியாதுதவிய மாயோ னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க.
பகுதி – சேட்படை. துறை – தழைகொண்டுசேறல்.

தோலாதநேமிமுதலைம்படையுஞ்சூழ்ந்திறைஞ்சப்
பாலாழியுட்டுயில்கூர்பன்னகத்தான்பன்னகத்தான்
மேலாமவுணனுரங்கிழித்தவிண்ணகரான
காலானதென்றலைமேல்வைத்துக்களித்தேனே. (656)
இஃ திரண்டாமடியிறுதிமடக்கு.

இதனுள், பன்னகத்தான் – பாம்பணையான். பன்னகத்தான் மேலாமவுணனுரங்கிழித்தான் என்பது பலநகங்களால்
வெற்றியான் மேம்பட்ட விரணியனுரத்தமார்பைப் பிளந்தா னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

சூழித்தறுகட்கடாயானைதோலாத
பாழிப்பகுவாயிடங்கரின்கைப்பட்டநா
ளாழிப்படையுடன்சென்றாளரியையாளரியைக்
காழித்திருமாலைக்கண்டுட்களித்தேனே. (657)
இது மூன்றாமடியிறுதிமடக்கு.

இதனுள், ஆளரியையாளரியை…………… களித்தேனே என்பது ஆண்ட அரியென்னுந் திருநாமத்தையுடையானை,
நரனுஞ் சிங்கமு மானானை, சீகாழியில்வாழுந் திருமாலைக் கண்களாற்கண் டுள்ளங்களித்தே னென்றவாறு.
துறை – கடவுள்வாழ்த்து.

அண்ணாந்தெழுந்ததுணைமுலையார்க்காருயிர்தங்
கண்ணாங்கொழுநரெனுங்கட்டுரைகேட்டுற்றுணர்ந்துந்
தண்ணார்வகுளத்தமிழ்மாறர்க்கன்பிலர்போன்
றெண்ணாதகன்றனராலென்சுகமேயென்சுகமே. (658)
இது நாலாமடியிறுதிமடக்கு.

இதனுள், என்சுகமேயென்சுகமே என்பது எனக்கு என்னுடைய கிளியே ! என்னமகிழ்ச்சியுள்ள தென்றவாறு.
பகுதி – பொருள்வயிற் பிரிதல். துறை – பறவையொடுபரிவுற்றுரைத்தல்.
இவை நாலும் ஓரடி யிறுதிமடக்கு. இனி ஈரடியிறுதிமடக்கு வருமாறு :-

மூன்றாயமைந்ததொழின்முன்னானைமுன்னானை
தான்றாழ்தடத்தழைத்தசங்கரியைச்சங்கரியைத்
தோன்றாதிடத்தமைத்தசூழ்ச்சியனைத்தொல்லைநா
ளீன்றானையீன்றானையென்னுளத்தேவைத்தேனே. (659)
இது முதலிரண்டடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) சிருட்டி திதி சங்காரமென்று தன்னாலமைக்கப்பட்ட மூன்றிற்கு மங்கங்கு முன்னாயிருக்கப்பட்டவனை,
முதலைமுன்னானயானை தா னாழ்ந்ததடத்துநின்று மூலமென்றழைத்த சங்கினையுடைய அரியென்னுந் திருநாமத்தையுடையானை,
உமையை வேறுபட்டுத்தோன்றாது தனதிடப்பாகத்தடக்கின விசாரத்தையுடைய அரனை
முற்காலத்தீன்ற பிரமனையீன்றவனை முத்தியளிக்கவல்ல பிரமமென வுட்கொண்டே னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

கோதறவில்வாங்கியுடக்குஞ்சரத்தாற்குஞ்சரத்தாற்
கேதமிழைத்தவிராவணியையன்றுதவ
சாதனத்தாற்கொன்றபிரான்றம்முன்னைத்தம்முன்னைப்
பாதகந்தீரப்புகழ்வார்பாதம்பணிந்தேனே. (660)
இது முதலடியும் மூன்றாமடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) குற்றந்தீரத் தனுவைக் கைக்கொண்டு தொடுக்கும் அம்பினால் ஐராவதப்பாகனான இந்திரனுக்கு மானபங்கத்தை
யுண்டாக்கின இந்திரசெயித்தை, முற்காலத்துத் தவசரிதையாற்கொன்ற இலக்குமண னென்னு மெனது
சுவாமிக்குத் தமையனை, யாவரேயாயினுந் தங்கள் கழிபிறப்பிற் பாவந்தீரப் புகழாநின்றார்
அவர்பாதத்தை யெனதுபிறவித் துன்பம்நீங்க வணங்கினே னென்றவாறு. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.

பொன்பொற்றிலங்குமலர்ப்பூவையேபூவையே
மன்பொற்றிருமேனிமாயோன்வடமலைமேன்
மின்பொற்றொடித்தடக்கைகூப்பாதவீறென்னோ
நின்பொற்றிருநுதற்குநேர்மதிக்குநேர்மதிக்கும். (661)
இது முதலடியும் ஈற்றடியும் இறுதிமடக்கு.

இதனுள், மலர்ப்பூவையேபூவையே மன்பொற்றிருமேனி என்பது தாமரையிலிருக்குந் திருமகளையொப்பாய் !
காயாம்பூவையொத்த மிக்க பொலிவினையுடைய திருமேனி என்றவாறு. நின்பொற்றிருநுதற்கு நேர்மதிக்கும் நேர்மதிக்கும் என்பது
உனது அழகியநெற்றிக் குவமை குறிக்கும் நேரிய பிறைக்கு மென்றவாறு ஒழிந்தனவு முரையிற்கொள்க.
பகுதி – நாணநாட்டம். துறை – பிறைதொழுகென்றல்.

அந்தமுதலாயமைந்தானையெம்மனோர்
பந்தமறுத்தாள்பரனைச்சுமித்திரைதன்
மைந்தனொடுங்கான்போந்தமாதவனைமாதவனை
யெந்தையையல்லாதிறையுண்டென்னாவேயென்னாவே. (662)
இது கடையிரண்டடியும் இறுதிமடக்கு.

இதனுள், மாதவனைமாதவனை என்பது திருமகள்காந்தனை, பெரிய தவசரிதையுடையானை யென்றவாறு.
எந்தையை – எம்முடைய சுவாமியை. அல்லாதிறையுண்டென்னாவேயென்னாவே என்பது அவனை யன்றி
வேறு பரப்பிரம முண்டென்றுகூறா தென்னுடையநா வென்றவாறு. ஏகார மிறுதிய தீற்றசை. துறை – கடவுள்வாழ்த்து.

தாவாதபேரின்பஞ்சார்வதற்குச்சிற்றின்பத்
தேவாமலென்னைமதனெய்யாமையெய்யாமை
மாவாதனைமறந்துவாமனனேவாமனனே
தேவாதிதேவனெனச்சந்ததமுஞ்சிந்தித்தே. (663)
இஃ திடையிரண்டடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) என்னைமதனெய்யாமையெய்யாமை என்பது என்னைக் காமன் சிற்றின்பத்திலேவேண்டிமூட்ட
என்மேற் பஞ்சபாணங்களை யிடைவிடாமைத் தொடுத்திடாமல் என்றவாறு.
வாமனனே………………….. வாமனனே என்பது வாமனாவதாரமாகிய நாராயணனே தேவர்க்கெல்லாம் முதலான
தேவனென அனவரதமுஞ் சிந்தித்துக் கழிந்தபிறப்பிலு மிப்பிறப்பிலு முண்டான பொல்லாத வாதனைகள்யாவும் மறந்து
என்னோ டொத்துவா என்னுடையமனனே ! என்றவாறு.
திணை – காஞ்சியைச் சார்ந்த பொதுவியல். துறை – பொருண்மொழிக்காஞ்சி. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்தெனினு மாம்.

காண்டகுபொற்பூமடந்தைநற்பாரிகண்ணன்பே
ராண்டபழம்பதியுமந்தாமமந்தாமங்
கூண்டளிபண்பாடுதுழாய்கூராழிகைவலத்தே
பூண்டதவன்சீருளத்தேபூரியார்பூரியார். (664)
இது நாலாமடியும் இரண்டாமடியும் இறுதிமடக்கு.

இதனுள், ஆண்டபழம்பதியும்………. துழாய் என்பது அவன்புரந்த தொன்மைப்பதமாவது பரமபதம்,
அழகிய மாலையாவதும் வண்டுகள் தேனையுண்டு பண்களைப்பாடும் வனமாலையாம் என்றவாறு.
அவன்சீ ருளத்தேபூரியார் பூரியார் என்பது அவனதாந் திருமேனியிற்காந்தியைத் தீயமக்கள் உள்ளத்தாற் றியானித்து
அகத்தே நிறையா ரென்றவாறு. எனவே யெப்படியீடேறுவ ரென்பது குறிப்பு. திணை – பாடாண்.
துறை – புகழார்ப்பழித்தல் ; கடவுள்வாழ்த்தெனினு மாம். இவையாறும் ஈரடி யிறுதிமடக்கு.

இனி மூன்றடியிறுதிமடக்கு வருமாறு :-

முன்னிலங்கொள்ளாதபிலமுன்பரையுமுன்பரையுந்
தன்னரனாலீந்தவரந்தாவுறவேதாவுறவே
மன்னிலங்கேசன்முதலாமைந்தரையுமைந்தரையு
மின்னுயிருண்டான்குணங்கற்றின்பம்பயின்றேனே. (665)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) மன்னிலங்கேசன்முதலா மைந்தரையு மைந்தரையும் என்பது இராவணன்முதலாய மிடுக்குள்ளாரையும்,
அவர்கள்புதல்வரையும் என்றவாறு ; முன் னிலங்கொள்ளாத பிலமுன்பரையு முன் பரையுந் தன்னரனாலீந்தவரந் தாவுற
வேதா வுறவே என்பது முன்னாளிற் பூமி யிடங்கொள்ளாத பாதாலத்தின் மூலபெலப்படையாய்வந்த வலியுடை யாரையும்
முன்னா ளுமை தனதுபுமானான சிவனாற்கொடுப்பித்த வரமும், பிறர்கொடுத்தவரமும் அழிவுறப் பிரமாவும்
பேராண்மையிருந்தபடியோ வென்று மனத்திலே விசாரிக்க என்றவாறு ;
இன்னுயிருண்டான்……………. பயின்றேனே என்பது அவர்க ளினியவுயிரையுண்ட தெசரதராமன் கலியாண
குணங்களைக் கூறிப் பேரின்பமெய்தினேன் என்றவாறு. திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

கண்படையுண்கண்சிறிதுங்கண்ணகன்றகண்ணகன்றவ்
வொண்பொருள்செய்வார்பிரிவினுண்ணிறையுமுண்ணிறையும்
பண்புறநில்லாதினியீங்கென்செய்வேன்பாமாறன்
றண்பொருநைத்தண்டுறைவாழ்தாராவேதாராவே. (666)
இது கடையயலடி யொழிந்த வேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) பாமாறன்றண்பொருநை……………… தாராவே ! என்பது திருவாய்மொழியாகிய பனுவலைச்செய்த காரிமாறப்
பிரான்பொருநைத் தண்டுறையினிடத்துத் தாராவாகியபறவையே ! என்றவாறு.
கண்ணகன்ற……….. பிரிவின் என்பது இடம்விரிந்தநாட்டின்கணீங்கிச் சுத்ததிரவியத்தை யீட்டவேண்டிப் பிரிந்தார்பிரிவினால் என்றவாறு ;
உண்ணிறையுமுண்ணிறையும் பண்புறநில்லாது என்பது என துள்ளத்து ணிறைந்ததொன்றாய மகளிர்க்குச்சிறந்ததென
வுலகம் விசாரிக்கப்பட்ட எனது நிறையானதும் எனது குணத்தின்வழி நில்லாது ; அதுவேயுமன்றி என்றவாறு ;
கண்படை யுண்கண் சிறிதுந் தாரா என்பது எனது மையுண்கண்களானவை கணப்பொழுது முறங்குவதுஞ் செய்கின்றில என்றவாறு.
இனி யீங்கென்செய்வேன் என்பதுமே லிவ்விடத் தியான்செய்வது யாதுதா னென்றவாறு.
இது கொண்டு கூட்டுப்பொருள்கோள். பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – பறவை யொடுபரிவுற்றிரங்கல்.

பாழிமருப்பேனமதாய்ப்பாரிடந்தான்பாரிடந்தான்
சூழியல்புற்றாடுபுலித்தோலுடையான்றோற்றஞ்சால்
காழ்வயிரக்குன்றெடுத்தகண்டகனைக்கண்டகனை
யூழறக்கொன்றானகர்பூந்தேனிலுறையூருறையூர். (667)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) ஏனமதாய்ப் பாரிடந்தான்-வராகமாகிப் பூமியை யுழுதெடுத்தான்;
பாரிடந்தான்…….. தோற்றஞ்சால் – பூதகணங்கள் சூழுமியல்புபொருந்தச் சுடுகாடரங்காக நடஞ்செய்யும்
புலித்தோலுடை யுடையானது
தோற்றஞ்சான்ற காழ்வயிரக்குன்றெடுத்தகண்டகனைக் கண்டகனை யூழறக்கொன்றானகர் – மிகவுந்திண்ணியகயிலையை
யெடுத்த விராவணனாகியபாதகனைச் செருக்களத்துக்கண்டு திருவுள்ளத் திரக்கத்தின் முறையின்றிக் கொன்றவனது
நகரமானது பூந்தேனிலுறையூருறையூர் கோட்டிலுங் கொடியிலு நீரிலுமுண்டாகிய பூவிற்றேன்றுளி திசைதிசை
பரக்குந் திருவுறையூரா மென்றவாறு. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து கடவுள்வாழ்த்துமாம்.

ஏற்றமாம்வெள்ளோதிமத்தான்மழவிடையூர்
தோற்றமார்வெய்யபுலித்தோலுடையான்றோலுடையான்
போற்றவாழ்வுற்றவிருப்புள்ளேறுபுள்ளேறு
மாற்றலானன்பிலார்க்கன்பிலானன்பிலான். (668)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

இதனுள், புலித்தோலுடையான் றோலுடையா னென்பது புலியினதுதோலை யுடையாகவுடையானும், ஐராவதத்தையுடையானும் என்பதாம்.
விருப்புள்ளேறுபுள்ளேறு என்பது தன்னிடத்தன் புள்ளத்து மிகும் கருடனிலேறும் என்பதாம் ;
அன்பிலார்க்கன்பிலானன்பிலான் என்பது தன்னிடத் தன்பிலாரிடத் தன்பிலாதா னவன்யாவனெனி லன்பிலென்னுந்திருப்பதியின் மாயோ னென்பதாம்.

எனவே அயனும் அரனும் இந்திரனும் பரவும்படிக்கு வாழ்வுபெற்ற கருடவாகனத்திலேறும் பெருமையையுடையான்
அவன் யாவனெனில் அன்பிலாதாரிடத் தன்பிலாதான், அன்பிலென்னுந், திருப்பதியின் மாயோன்;
அவனுக்கன்புசெய்வீராயிற் புலவீர்காள் ! நுமக்கு முத்தி பெறலாமென்பது குறிப்பு. திணை – வாகை. துறை – பொருளொடு புணர்தல்.

வாமவெங்கதிர்மண்டிலமண்டில
நாமநேமியினான்மறைநான்மறைப்
பூமன்றந்தையொண்பொற்கழற்பொற்கழற்
காமன்பாரடிப்போதென்றலைத்தலை. (669)
இது நான்கடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) ஆதித்தன்மண்டிலத்தை வட்டத்திருவாழியான் மறைக்கப் பட்டவன், நாலுவேதத்தையு மோதியுணர்ந்தவனாந்
தாமரைப்போதிற் பிறந்த பிரமனுக்குப் பிதா, அவனதாம் பொன்னின்வீரக் கழல்புனைந்த பொலிவினையுடைய
திருவடிகளிடத்துண்டாம் அன்புடையார் திருவடித் தாமரைப்பூவை எனதுசிரத்தின்கட்புனைந்தே னென்றவாறு.

கழற்கு என்பது ஏழாவது நான்காவதாயிற்று. மண்டிலம் ஆதித்தன்மண்டலத்திற்கும், வட்டத்திற்கும்பேர்.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பணிதல்.

இவை பதினைந்தும் அடியிறுதிமடக்கு. ஆகமடக்கு-45.
இவை நாற்பத்தைந்து மோரடியு மீரடியு மூவடியு நாலடியுமாகி யடிதோறு மோரிடத்தைமடக்கியது.

இனியடிதோறு மீரிடத்தனவா மூவகைமடக்கினுள் முதலொடிடைமடக்கு வருமாறு :-

கட்காவிகட்காவிநைவதும்வண்டிமிர்காமன்காமன்வாளிக்
குட்காநைவுறுநிறையுமுற்றுணர்ந்துமுறுதியெனக்குறுகிலீராற்
புட்காமன்வடமதுரைப்புரிகுழலீர்காமவலையுள்புக்காழ்ந்து
மட்காநின்றதற்குறுதிப்புணைமடலென்றேயுளத்தேமதிக்கின்றேனே. ()
இது முதலடி முதலொடிடைமடக்கு.

இதனுள், கட்காவிகட்காவிநைவதும் என்பது கண்ணாகியசெங்கழு நீர்களுக் கெனதாவி வருந்துவதும் என்பதாம்.
காமன் காமன்வாளிக்கு என்பது காவினிடத்து நிலைபெற்ற காமன்பஞ்சபாணங்களுக்கு என்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
பகுதி – மடல். துறை – தன்றுணி வுரைத்தல்.

அலையோடுயர்பாற்கடல்கடைந்தானன்பிலனையீர்திருவயிறா
லிலையோவிலையோவிடைநினைவிங்கென்னோவென்னோவறியீர்போன்
மலையோமுலைவாணுதல்சிலையோமையுண்கருங்கட்குவளையுள்வன்
கொலையோகுடிகொண்டதுசிறிதுங்குடிகொண்டிலவோகருணையுமே. ()
இஃதிரண்டாமடி முதலொடிடைமடக்கு.

இதனுள், வயிறாலிலையோ விலையோவிடையென்பது நுமது அழகிய வயி றாலினிலையோ இடையென்னுமுறுப் புமக்கில்லையோ என்பதாம்.
நினைவிங்கென்னோ வென்னோவறியீ ரென்பது இவ்விடத்து நுமது விசாரம் யாதோ? எனது காமப்பிணியையுந் தெளிகிலீர் என்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. பகுதி -……. துறை-இடைவினாதல்.

இரவிற்குப்படருழந்திவ்விரவொழிப்பாயெனவிரங்கியிடதுபாகம்
புரவிற்குங்களிவரவன்றிரப்பொழித்ததுறிலரங்கபொருணீயன்றே
கரவெற்புக்கரவெற்புக்கவினணியான்கங்கையன்கங்கையனாமந்த
வரவெற்பன்மலரயனுமகிழ்ந்திடச்சென்றுதவியதூஉமதிக்குங்காலே. ()
இது மூன்றாமடி முதலொடிடைமடக்கு.

(இ-ள்) பிரமசிரத்திலிரந்ததற்குத் துன்பமிகுந் தவ்விரப்பினைத் தவிர்ப்பாயாக வென்று சிவன்வேண்டற்குக் கருணைகூர்ந்து,
அவனதிடப் பாகத்தை யச்சிவன்கொடுப்பத் தனதாகவாண்ட அவன் பாரியா முமைக்கும் மனத்துட்களிப்புண்டாக
முற்காலத் தவ்விரப்பைத் தவிர்த்தகருணையை விசாரிப்பாருண்டாகி லப்பரப்பிரமம் அரங்க நாதனே ! நீயேயாம் ;
அதுவுமன்றி, கைபடைத்தமலையென்பதாங் கெசேந்திரன் மூலமேயென்ன அதற்கும்,
அரவும் எலும்பும் அழகுசெய்யு மாபரணமாகப் புனைந்தான், பிரமசிரத்தைக் கையிலேந்தினான்,
கங்கை யாற்றை வேணியிற்கட்டினான், அந்தச் சேட்டமானவெள்ளிமலையானும் மலருளானாம்
பிரமனு மகிழும்படிக்குச்சென்று தவியதூஉம் விசாரிக்கிலென்றவாறு.

ஒழித்ததும் என்னு மும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. வெற்பன் மலரயனும் என்பது
“எஞ்சுபொருட்கிளவிசெஞ் சொலாயிற், பிற்படக்கிளவார்முற்படக்கிளத்தல்” என்பதனால் வெற்பனும் என்னுஞ் சொல்
வெற்பனென வும்மையில்சொல்லாயிற்று. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

அருண்மாலைபயின்றகெழுதகையிகுளைவேண்டலிற்சென்
றறையாண்மாரன்
பொருமாலைக்கிடுகருப்புச்சிலைவளைத்தித்துயர்க்கடற்கோர்
புணையுங்காணேன்
மருண்மாலைவரும்வருமென்றிடைவேற்காயெவன்செயன்மேன்
மனனேமல்லைத்
திருமாலைத்திருமாலைக்கண்டளியாயளியாய்நின்
றிருத்தாரென்றே. (673)
இது நாலாமடி முதலொடிடைமடக்கு.

(இ-ள்) மனனே ! இருண்ட மாலை வரும்வருமென் றுண்டியு முறக்கமுந்தவிர்ந் துடம்புமுயிரு மெலியா
நின்றவெனக் குடலு முயிரு மாக்கமெய்த என்னிடத்து வைத்தகருணை யியல்பாக இடைவிடாத உரிமையையுடைய
எனதுயிர்த்தோழியானவள், திருக்கடன்மல்லை மாயோனைச் சென்றுகண்டு, நினதுதாமத்தை
விருப்புற்றமையா லென்னுயிரான பொலிவினையுடையாள் பொலிவிழப்ப அவளிடத் துண்டான மயக்கத்தை நினது
திருவுளத்தாற்கண்டு நினதுதிருமார்பிற் புனைவதாய வண்டுகள் நல்லதென்றாராயும் அழகியதிருமாலிகையைத்
திருவருள் புரிந்து தாராயென்று வேண்டிக்கோடலோடுங் கூறாள்;
அஃதறிந்து காமனானவன் ஆலையினிடத் திடும்படிக்குண்டானகரும்பைச் சிலையாக வளைத்துப்
பூப்பாணங்களையுடக்கிப் போர்செய்யாநின்றான் ; ஆதலால் இத்துன்பமாகியகடலைக் கடக்க அவன்றாமமாகிய
புணையேயன்றி வேறு புணையுங் காணேன், இனிமேல் யாதுசெய்வ தென்றவாறு.

இதனுள், திருமாலைத் திருமாலையென்பது திருவினோடுங்கூடிய மாலை, பொலிவினையுடையாண்மயக்கத்தை யென்பதாம்.
கண்டென்பதனைத் தோழி சென்றுகண்டு, திருவுளத்தாற்கண்டு என இரண்டிடத்துங் கூட்டுக.
அளியாயளியாயென்பவற்றுள் முன்னையது ஒருதொழிலினை மேற் செய்யாயென்னு மெதிர்மறையாகிய முன்னிலைவினைச்சொல்,
அத் தொழிலைச்செய்யென்ன எடுத்தலோசையாற்கூறி வேண்டிக்கோடற்கண் ணுடம்பாட்டு முன்னிலைவினைச்சொல்லாயிற்று ;
என்னை “செய்யாயென்னு முன்னிலைவினைச்சொல், செய்யென்கிளவியாகிடனுடைத்தே” என்றாராகலி னறிக.
பின்னையது வண்டுகள் நல்லதென்றாராயும் என்பதாம். திருமாலையென்பது பிறள்போற்கூறியதாம். தலைவிகூற்று.
முன்னிலை -தோழி. மனனே என்பது முன்னிலைப்புறமொழி. பொருள்கோள் -கொண்டுகூட்டு; மாட்டுறுப்பெனினுமாம்.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல். இவைநாலு மோரடியிடத்து முதலுமிடையு மடக்கியது.

இனி யீரடியிடத்து முதலு மிடையு மடக்குதல் வருமாறு :-

பொருந்தார்பொருந்தார்வரைமார்பிற்புதையப்புதையப்புதைவரிவில்
வருந்தாவருந்தாபதனமனதுகளிக்கக்களிக்கமிதிலைபுகுந்
திருந்தாரணியோர்புகழவளைத்திறுத்தானிமையோரிடுக்கணுறா
தருந்தாரமுதன்றருள்குடந்தையாராவமுதென்னகத்தமுதே. (674)
இது முதலிரண்டடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) சத்துருக்களாயுள்ளார் சமர்முகத்துப் புறங்கொடாது போர்செய்யும் வெற்றிமாலைபுனைந்த வரைபோன்ற
மருமத்திற் புதையும் படிக்குக் கட்டிலம்பைத்தொடுக்கப்பட்ட நாரிவரிந்த தனுவை இந்திரியங்களில் வியாபரிக்குஞ்
சத்தாதிகளுக்குச் சற்று மீடுபடாத அரியதவத்தையுடையோனாகிய விச்சுவாமித்திரன்மனத்துட்பிரியமோங்கப்
பிராட்டி திருவுள்ளமுஞ் சனகராசன்மனதுங் களிக்க மிதிலையுட்புகுந்து பெரிய தாரணியோர் கொண்டாட வளைத்து முறித்தான்,
அவன் யாரெனில் விண்ணோர்துன்பமெய்தாமை யாராவமுதைக் கடைந்துகொடுத்த திருக்குடந்தையாராவமுதம்,
அவன் என்னுள்ளத்துக்குத் தித்திக்கு மமுதமா மென்றவாறு. துறை – கடவுள்வாழ்த்து.

உமையாளுமுமையாளும்பசுபதியுமும்பரினும்
பரின்வாழ்வெய்துஞ்
சுமையாகநிலைபெறுமீங்கிதுகிளையேலெனநந்தி
சொன்னபோது
மமையாதுன்னமையாதுன்னக்கயிலைகிளைகிளைக்கை
யரக்கனாதி
கமையாலெய்தியவரங்கள்காட்கரையாய்களைந்திலையேற்
களைகண்யாரே. (675)
இது முதலடியும் மூன்றாமடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) உமையாளும்…… வாழ்வெய்தும் என்பது உம்மை யாட்கொள்ளும் உமையானவளுஞ் சிவனும் உச்சிமலையின்கண்
தேவர்க ளோடுங்கூடிச் செல்வமெய்தும் என்பதாம் ; சுமையாக….. போதும் என்பது அவர்களைத் தனது
சென்னியிற்கொண்டுநிற்கும் இவ்விடத் திந்த மலையை யெடாதேகொள்வாயென நந்திசொன்னகாலத்தும் என்பதாம் ;
அமையாதுன்….. அரக்கன் என்பது அவனுரைக்குமடங்காதே உன்னமரமும் மூங்கிலும் ஆச்சாவும் நெருங்கின
அந்தக் கயிலையைக் கிண்டியெடுத்த விருபதாகியகையையுடைய விராவணன் என்பதாம் ;
ஆதி….. யாரே என்பது ஆதிகாலத்து இந்திரியங்களையடக்கின பொறையாலெய்தியவரங்களைத் திருக்காட்கரையாய் !
அழித்து அவனைக் கொன்றிலையெனி லுலகுயிர்கட் கியாவர் காவ லென்றவாறு. துறை-இதுவுமது.

இமையவரையிமையவரைமகிழ்விப்பான்பொருவில்பொரு
வில்லாயேந்திச்
சமையவுடக்குபுசரந்தொட்டெயிலொருமூன்றெரிகதுவத்
தலைநாள்வென்ற
வுமையவருமதிப்பவெயிலேழுடையான்பஃறலைக்கு
முறையூராயா
டமையமைவில்லினைவளைத்தன்றேவினையேவினைநினைப்போன்
றளியார்யாரே. (676)
இது முதலடியும் நாலாமடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) இமையவரை யிமையவரைமகிழ்விப்பா னென்பது இமவா னென்னுமலையைத் தேவர்களைக் களிப்பிக்கவேண்டி யென்பதாம் ;
பொருவில் பொருவில்லாயேந்தி என்பது ஒப்பற்ற போர்பொருதற்குரிய வில்லாகவெடுத் தென்பதாம் ;
சமையவுடக்குபு…… மதிப்ப எனப்து குறைவறவுடக்கி யம்பைத்துரந்து மூன்றுகோட்டையினும் அனல்பற்ற முன்னை
நாண் முப்புராதிகளைவென்ற வுமைபாகரும் மதிப்பதாக என்பதாம் ;
எயிலேழுடையான்…. உறையூராய் என்பது ஏழுகோட்டையோனாகிய விராவணன்பத்துத்தலைக்குந் திருவுறையூராய் ! என்பதாம் ;
ஆடமை யமைவில்லினை….. யேவினை என்பது வெற்றிபொருந்தின மூங்கில்வில்லைவளைத்து முன்னாள் அம்பினைவிட்டனை என்பதாம் ;
நினைப்போன்றளியார்யாரே என்பது ஆதலால் நின்னைப்போ லுலகுயிர்களைக் காக்குங்கருணையுடையகடவுளர் இல்லை யென்றவாறு.
துறை-இதுவுமது.

சுந்தரத்தோளிணையழகர்துணையடிசேர்மகிழ்மாறன்
றுடரிநீடுஞ்
சந்தனச்சோலையுளுறைவார்க்கிறைவாசங்கர
னுதற்கட்டழலான்மேனாள்
வெந்திறல்வெந்திறல்வேளுமிரதியிரதியுமாண்மை
விழைமென்கொங்கை
மந்தரமந்தரமிடைவிற்கரும்புருவங்கரும்புருவ
மதிக்குங்காலே. (677)
இது கடையிரண்டடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) இறைவனே ! அழகியதிருத்தோளிணையையுடைய அழக ருபயதிருவடிகளை மனோ வாக்குக்காயங்களாற்பொருந்தின
வகுளாபரண மாறன்றுடரிமலையினிடத் தோங்கின சந்தனச்சோலையுளுறைவார் கொங்கைக் குவமை
குறிக்குங்கான் மந்தரபருவதமேயாம், இடைஆகாயமாம், கரியபுருவம் காமனுக்குவில்லாகிய கரும்பினதுருவமா மென்றவாறு.

சிவனுடைய நெற்றிக்கண்ணினுண்டாகியதழலினான் முன்னைக் காலத்து வெவ்வியவீரம் வெந்ததனோடும்
உருவமுமிழந்த காமனும் விரும்புவதா மிரதியும் ஆணாந்தன்மையையுவப்பதாங் காந்தியையுடைய கொங்கைக்கெனக் கூட்டுக.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – செவ்வி செப்பல்.

பொய்யாதபேரின்பம்வேண்டினர்கள்பேரண்டம்பூத்தவுந்திச்
செய்யாசெய்யாள்விரும்பியுறையுறையூராவெனவேதிளைப்பக்கண்டு
மெய்யாமையெய்யாமையேத்திலரஞ்சிலர்சிலரவ்வியமதண்ட
மெய்யாகமதிக்கிலரந்தோவந்தோநரகத்தேவீழ்கின்றாரே. (678)
இஃ திடையிரண்டடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) அழிவில்லாதபேரின்பத்தைவிரும்பின அறிவுடையோர்கள், எண்ணில்பல்கோடியண்டங்களைப்பெற்ற
திருவுந்தியாகிய செறுவையுடையவனே ! திருமகள்விருப்புற்றுக்குடியிருக்குந் திருவுறை யூரையுடையவனே
யென்றொழிவில்லாதுகூறிப் பேரானந்தமெய்துவதனைக் கண்டுங் கேட்டும், விட்டுநீங்காத அறியாமையாற் சிலர்
அவன்றிருவடிகளை யேத்துகின்றிலர், அவ்வியமதண்டத்தைநினைந் தஞ்சுவதுஞ் செய்கின்றிலர்,
அதனை மெய்யென்பதுந் தெளிகின்றிலர், ஐயோ ஐயோ நரகின்கண்ணேவீழாநின்றன ரென்றவாறு.
எனவே எங்ஙன மீடேறுவ ரென்பது குறிப்பு. எய்யாமை எய்யாமையால் என மூன்றாவதுதொக்குநின்றுவிரிந்தது.
அந்தோ அந்தோ என்பது இரக்கத்தின்கட்குறிப்பு. திணை – பாடாண். துறை – வாயுறை வாழ்த்து.

கைம்மலைக்கன்றுதவியமால்காட்கரைமான்கற்புநிலை
காட்டவேண்டி
யம்மனையம்மனைவிரும்பிக்கிளைகிளைபோலயர்ந்திடவைத்
தகன்றகாலை
நம்மனையைக்காண்டொறுமெய்ந்நடுங்குதன்மேலுணர்வழிக்கு
நயந்தக்கிள்ளை
யெம்மனையெம்மனைபுக்காளினியினியபாலளிப்பா
ரெமக்காரென்றே. (679)
இது முதலயலடியொடு நாலாமடி முதலொடிடைமடக்கு.

(இ-ள்) கையையுடைய மலையென்பதாம் யானைக்கு, அது முதலை கைப்பட்டநாண் மூலமேயென்றழைப்பச்
சென்றுதவிய மாயோன் றிருக்காட்கரையின் மான்போலும் விழியினையுடையாள், நாணினுங் கற்புச் சிறந்ததென்று
நூல்சொல்லக் குடிப்பிறந்தார்கண் ணிலைபெற்றதனை யெமக்கறிவிக்கவேண்டி, அழகியமன்னனை எம்முடைய
ஆய்விரும்பிக் கிள்ளையான தெமதுகிளைபோலவருந்தும்படிக்குத் தோழிகைப்படவைத்துடன் போனகாலத் தியா னெமதுமனையினது
பொலிவழிவைக் காணுந் தோறும் மெய்ந்நடுக்குறுதன்மேலும், முன்னங்கூறிய அக்கிள்ளை, தன்னைவளர்த்த
அன்னையைக் காணவிரும்பி அவ்வையே ! எம்முடைய அன்னை யிம்மனையைவிட் டெந்த மாளிகையிலேபுகுந்தா ளென்று
மெமக்கினியபாலினை மேற்றருவார்யாவ ரென்று மென்னுணர்வை யழியாநிற்குமென்றவாறு.
பகுதி – உடன்போக்கு. துறை – நற்றாயிரங்கல். இவை யாறு மீரடி யாதியொடிடைமடக்கு.
இனி மூன்றடி முதலொடிடை மடக்கு வருமாறு :-

நூறுநூறுபோன்றாரமுமாரமு
நொய்தினின்வெதும்பாநீ
ரூறுமூறுமாமதன்படைபடைத்திட
வுபயகண்மலரந்தோ
வேறுமேறுமாபதிபதிகிளைத்திடு
மிருபதுகரத்தானைக்
கூறுசெய்கணையரங்கன்மெய்தோய்ந்திடாக்
கொம்மைவெம்முலையாட்கே. (680)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு,

இதனுள், நூறுநூறுபோன்றாரமுமாரமு மென்பது துகள்படும், சுண்ணாம்புபோல முத்துவடமுஞ் சந்தனச்சேறு என்பதாம்.
நீரூறு மூறுமாமதன்படைபடைத்திட வுபயகண்மல ரென்பது துன்பக்கண்ணீ ரூறாநிற்கும் ;
விரணங்களைக் கரியமதனன்பூப்பாணங்களுண்டாக்கு கையா லிரண்டுகண்மலர்களினிடத்து மென்பதாம்.
ஏறு மே றுமா பதிபதி கிளைத்திடு மிருபதுகரத்தானை யென்பது இடபத்தையும் பூதத்தையும் வாகனமாகவேறும்
உமைக்குப்புமானானவன்பதியாகிய கயிலையை யெடுத்த இருபதுகையுடைய இராவணனை யென்பதாம்.
கூறு செய்கணை யரங்கன்மெய் தோய்ந்திடாக் கொம்மைவெம்முலையாட்கே யென்பது துண்டஞ்செய்த பாணத்தையுடைய
அரங்கநாதனைத் தழுவாத கொம்மைவெம்முலையாட் கென்பதாம்.
கொம்மைமுலையாட்கு, நூறும் ஆரமும் ஆரமும் ; கண்கள் நீருறும் என்று முடிக்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

மின்னுமின்னுநுண்ணிடையிடைந்தனளினிமேதகுமின்னோடு
மன்னுமன்னுமெம்மனைவயின்வயினுறத்தினையொடுதேனார்ந்தே
துன்னுகங்குலிற்றுயின்றெழுந்திறையுறைதுவரைமாநகர்க்காலை
முன்னுமுன்னுமுண்டுண்டிவணிவணிகர்முறையொடும்பதிந்தாரே. (681)
இஃதீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு.

இதனுள், மின்னு மின்னு நுண்ணிடை யிடைந்தன ளென்பது ஒளிரும் மின்னுப்போன்ற சிறிய இடையினையுடையாள் வருந்தின ளென்பதாம்.
மேதகுமின்னோடு மன்னு மன்னு மெம்மனைவயின் வயினுறத் தினையொடு தேனார்ந் தென்பது பெருமைபொருந்தின
மின்னை யொப்பாளுடன்பொருந்திய மன்னனே! நீயும் நுமக்குரிய எம்மில்லினிடத்துக் காலம்பெறத் தினையுந் தேனு மருந்தி யென்பதாம்.
துவரை மாநகர்க் காலை முன்னு முன்னுமுண்டுண்டிவ ணிவணிகர்முறையொடும் பதிந்தா ரென்பது துவராபுரியினிடத்துக் காலையிற்செல்வாயாக ;
நுமக்குமுன்னே தினையொடுந் தேனைக்கூட்டியுண்டு இவ்விடத் திவளை யொத்த கற்புங் காந்தியும்பெற்றமுறையொடும்
புமான்களை நீங்காது தங்கினார் பலருமுண் டென்பதாம். மின்னு – உகரவிகுதி அல்வழிக்கண் மிக்கது, இயல்புகணம்வரலாலென்றறிக.
மன் அண்மைவிளி. நீ யென்னும் முன்னிலைப்பெய ரெஞ்சிநின்று விரிந்தது. ஒழிந்தனவும் உரையிற்கொள்க.
பகுதி – உடன்போக்கு. துறை – நெறிவிலக்கல். விருந்து விலக்கென்பது மிது.

தோலாததோலாதபனைநோக்குநோக்குபயசுடரைக்கூட்டி
மேலாகமூன்றுடையசிவனயன்கேட்பவுமழைப்பவிரைந்துமேனாட்
பாலாழிப்பாலாழிப்படையுடனேவந்துவந்துபடிறுதீர்நீ
யாலாலநுண்டுளைப்பற்பணியணையாயணையாயென்னனந்தையானே. (682)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு.

இதனுள், தோலாத தோல் – சிங்கவேற்றிற்குந் தோற்றிடாத கெசேந்திரன். நோக்குநோக்கு – அழகியகண்கள் ; பார்க்குங்கண் களென்றுமாம்.
ஆதபன் – சூரியன். உபயசுடர் – ஒழிந்த இந்துவும் அக்கினியும். மேலாக மூன்றுடைய வென்பதனை ஆகமேன் மூன்றுடைய என மாறி,
சொரூபத்தின்மேல் நோக்குமூன்றாகவுடைய வெனவியைக்க.
சிவனயன் கேட்பவும் என்பது சிவனும் அயனும் கேட்கும் படிக்கும் (உம்மையால்) யாவருங் கேட்பவும் என்பதாம்.
அழைப்ப – மூலமேயென் றொருகாற் கூப்பிட. மேனாள் – பண்டு. பாலாழிப்பால் – திருப்பாற்கடலுட் கடவுள் ;
“பாலதாணையி” னென்பதா லறிக. வந்து வந்தென்பதை உவந்துவந்து என மாறுக.
படிறுதீர்நீ – இடுக்கண் டவிர்த்த நீ. ஆலால நுண்டுளைப்பற் பணியணையாய் – துளும்புநஞ்சினைக் கக்குஞ் சிறியதுளைப்பற்
பாம்பணையையுடையாய். அணையாயென் னனந்தையானே யென்பது – என்னை அனந்தபுரத்தானே ! அணைவாயாக வென்பதாம்.

(இ-ள்) பாலாழியுட்கடவுளாகிய அனந்தபுரத்து மாதவனே ! கெசேந்திரன், சிவனும் அயனுங் கேட்க மூலமே
யென்றழைப்பச் சக்கராயுதத்துடன் வந்துதவிய கருணையையுடைய நீ, யான் பலகாலும் நினது
திருமார்பைநினைந் திரங்கவு மென்னை யணையாதது என்ன தறுகண்மையோ வென்றவாறு.
பொருள்கோள் – கொண்டுகூட்டு ; மாட்டுறுப்பெனினு மாம். திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல்.

வயவாற்றவழ்சூல்வளையுயிர்த்தமணிவெண்டரளநிலவெறிக்குங்
கயவாய்க்கயவாய்க்கருமேதிகமலக்கமலக்கழிநறவுண்
டுயவாற்றுயவாற்றிடையுழக்கத்தூநீர்க்கயலேகயலேய்திவ்
வியவாவியவாமரங்கேசனெய்தானெய்தான்மதனம்பே. (683)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு. இதனுள், வயாவென்பது வயவாயிற்று.

(இ-ள்) சூலுளைந்தவருத்தத்தோடுந் தவழுஞ் சூல்வளையீன்ற அழகிய வெண்முத்தம் நிலவுபோலச் சுடர்விடுங் கயத்தினிடத்துப்
பெரிய வாயையுடைய கரிய எருமைச்சாதி, தண்ணீரிடத்துத் தாமரையுக்க மிக்கதேனையுண் டதனாலறிவுதிரிந்து
துய்யவாற்றி னடுவேபுகுந்து கலக்கத் தூயநீரின்கரையருகே கயலுகண்டுசேரும் நல்லவாவியை யுடையவா மிரண்டாற்றினடுவே
வாழ்வுபெற்ற அரங்கநாத னென்னைத் தழுவுகின்றிலன், அதனையறிந்து காமன் றனது மலர்ப்பாணங்களைத் தொடுத்தன னென்றவாறு.
எனவே, இதற் கினிச் செயல் யாதென்பது குறிப்பு. திணையுந் துறையு மிதுவுமது.

நாதனாதனூர்விளங்கிறையெண்ணிலாவெண்ணிலாநகுபோத
வேதன்வேதனைபுரிந்திடமறைதருமறைதரும்விறன்மாயன்
பாதபாதபந்தனையுணர்ஞானமாம்பலன்பலன்றருமாபோ
லோதியோதியினுறுநர்பாற்றருவதுதருவதுமுளதாமே. (684)
இது நான்கடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) நாத னாதனூர்விளங்கிறை யென்பது சகலதேவன் மார்க்குஞ் சுவாமியாவான், திருவாதனூரின்கண் டோற்றமெய்தின சோதி யென்பதாம்.
எண்ணிலா வெண்ணிலா நகு போத வேதன் வேதனைபுரிந்திட மறைதருமறை தரும் விறன்மாய னென்பது
அலகிறந்த வெண்ணிலாவைப்போலமிளிரும் ஞானத்தையுடைய பிரமன் றுன்புற மது கைடவரான்மறைந்த
வேதத்தை மீளவும் அன்னமாகி ஓதி அவனுக்குபதேசிக்கும் ஞானவென்றியையுடைய மாதவனாமலையிடத்தென்பதாம்.
பாதபாதபந் தனையுணர் ஞானமாம்பலன் பலன்றருமாபோ லென்பது திருவடிகளாகிய கற்பகதரு, தன்னைப்
பிரமமென்றுணரும் ஞானமாகியகனியை யுலகத்துயிர்கட்குதவு மிலாபம்போ லென்பதாம்.
ஓதி யோதியினுறுநர்பாற் றருவது தருவது முள்தாமே யென்பது எல்லாநூல்களையுங் கற்று மலைகளினிடத்திருக்கும் பெரியோரிடத்து அம்மலைகளென்பவற்றினுளுண்டாகியமரங்கள் தரு மான்மலாபங்கள் இல்லை யென்றவாறு.
மாதவனாமலை யென்பது மாட்டேறில்லா வுருவகம். திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து. ஆகமுதலொடிடைமடக்கு-15.

இனி முதலொடுகடைமடக்கு வருமாறு :-

அருங்காயமருங்காயமருந்தனங்கள்வடமேரு
வன்னவன்ன
விருங்காவித்துணைநெடுங்கட்கிணையெனலாந்துணைமென்றோட்
கிணையென்சொல்வேன்
சுருங்காவண்புகழ்த்திருமால்வடமலைமானெழில்புணர்ந்து
துறந்தாராவி
யுருங்காமெய்ந்நிறைதளர்வித்திடுமுணராதிகழ்ந்தனனென்
னுயிரைமன்னோ. (685)
இது முதலடி முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அளவிடற்கரிய ஆகாயம் இடையாகவமராநிற்கும் ; அதன் மேன் முலையிரண்டு மிரண்டுமேருவையொத்தன ;
நிறத்தையுடைய பெருமைபொருந்தின நீலோற்பலமிரண்டும் நெடியகண்ணிணையென்று சொல்லப்படுவதாம் ;
இவையன்றி இணையாகிய மெல்லியதோள்கட் குவமை யாதென்று கூறுவேன்?
ஆகையால் இம்மானின தவயவி யவயவங்களின்காந்தி, இவளைப்புணர்ந்து நீங்கினாரான்மாவை யுருக்கி,
நிறையைத் தளர்வித்திடுமென்பதனையறியாதே மிகவு மென்னுயிரனை யானை யிகழ்ந்தன னென்றவாறு.

எனவே, இகழ்ந்தது தகாதென்பது பயன். இதனுள், உருக்கா வென்னும் வினையெச்ச எதிர்மறைவாய்பாடு,
உருங்காவென மெலிக்கும் வழிமெலிந்துநின்று, தளர்வித்திடுமென்னுந் தன்வினைகொண்டது.
மன் ஆக்கம். ஓகாரம் ஈற்றசை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை-பாங்கன் றலைவனையிகழ்ந்ததற் கிரங்கல்.

வயல்வாய்மென்முறுக்கவிழ்ந்ததாமரைவாய
வதனராசிக்
கயல்வாவிக்கயல்வாவித்துணையுடனேயமைவரக்கண்
டப்பாலப்பால்
வியல்வாய்தண்செறுவுழுநர்மகளிர்துணைவிழிமுகமும்
வெய்யபோதுந்
துயவாலங்கறிவரிதாங்* குறுங்கேசனெனும்பிறவித்
துயர்போமன்றே. (686)
இஃ திரண்டாமடி முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) வயலினிடத்து மெல்லியமுகையாய்ப் பிணியவிழ்ந்த தாமரைக்கண், அந்த வயல்வாய்க் களைகடியு மகளிர்முகசமூகத்துக்கயல்,
வாவியினிடத்துக் கயல்கள் பாய்ந்து இரண்டாகத்தங்க, அந்த வயற்கடுத்த அவ்விடத்து, தண்ணீர்துளும்பும்பரப்புடைய
குளிர்ந்த வயலின் கண் ணுழு மள்ளர், வயலிற் களைகடியும் முற்கூறிய மகளிர்துணைவிழியோடுகூடிய முகத்தினையும்,
கண்டார்விரும்புங் கயல்தங்கு தாமரைப் போதினையும் மயக்கத்தாற் பகுத்தறிவரியதன்மையராய் வாழுஞ் செய்கையையுடைய
குறுங்காபுரிக்கீசனேயென் றுலகத்துள்ளீர்சொல்லுமின் ; நுமது பிறப்பாயதுயர் நும்மைவிட்டு நீங்கு மென்றவாறு.
திணை – பாடாண். துறை – ஓம்படை. செவியறிவுறூஉ, வாயுறைவாழ்த்தினுஞ்சாரும்.
* குறுங்கை – திருக்குறுங்குடி.

மாந்தரிலொன்றெனலாயமனுராமனேவலிற்போய்
வாரிதாவி
யேந்தெழிற்பொன்னாழியினைச்சானகிகைக்கொடுத்தருள்பெற்
றிலங்கைமூதூர்
வேந்தனையும்வேந்தனையும்விண்ணிடைவைத்தேமீட்டும்
வேலைவேலை
பாய்ந்தெளிதிற்கண்டனன்றேவியையென்றாற்கிணையெவரே
பகருங்காலே. (687)
இது மூன்றாமடி முதலொடுகடைமடக்கு.

இதனுள், அருள்பெற் றிலங்கைமூதூர் வேந்தனையும் வேந்தனையும் விண்ணிடைவைத் தென்பது பிராட்டியருள்பெற்ற
பின்ன ரிலங்கையாகிய பெரியவூரை யெரிகொளுத்தி யது வெந்துகூடுமளவும் அந்நகர்க் கரசனாகிய இராவணனையும்
அவன்சேனாபதித்தலைவரையும் ஏழுநாள் விசும்பிலிருத்தி யென்பதாம்.
வேலைவேலைபாய்ந் தென்பது பரந்தகடலைக் கடந்தென்பதாம். கண்டனன் றேவியை யென்றாற் கிணை யெவரே
பகருங்கா லென்பது சீதையைத் தரிசித்தன னென்ற திருவடிக்கு விசாரித்துச்சொல்லுங்கா லுலகத் தொப்பா ரொருவருமில்லை யென்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை-வாகையைச் சார்ந்த பொதுவியல். துறை – தூதுவென்றி.

ஓவாதகருங்கடன்மொண்டெழுபருவப்புயல்பெயலோடுபயகண்ணீர்
தூவாநின்றுறுபுணரிக்கிடைவலவாகொடிநெடுந்தேர்தூண்டுமாற்றாற்
றேவாதிதேவனெனுந்திருநெடுமால்புவிமகள்கோன்சிறந்தசெல்வ
நாவாயினாவாயினடைவதல்லாலடைவதிடனாமேநாமே. (688)
இது நாலாமடி முதலொடுகடைமடக்கு.

இதனுள், நாவாயி னாவாயினடைவதல்லா லென்பது திருநாவா யென்னுந் திருப்பதியினிடத்துக் கப்பலிற்சென்றடைவதல்லாதே யென்பதாம்.
அடைவதிடனாமேநாமேயென்பது நாமடைவ துண்மை யாமோ வென்பதாம். விரைவிற்சென்றடைவ துண்மையாகா தென்றவாறு.
ஏகார மிரண்டனுள், முதலது எதிர்மறை. ஏனைய தீற்றசை பகுதி பொருள்வயிற்பிரிதல். துறை – பாகனைவெறுத்தல்.
இவை நாலு மோரடி முதலொடுகடைமடக்கு. இனி யீரடி முதலொடுகடைமடக்கு வருமாறு :-

விண்டுவிண்டுவீழ்தரும்படிமுருகவேள்விடவேல்வேல்
வண்டுவண்டுவீழ்காவிமாவடுவுமைபூமான்மான்
அண்டராரமிர்தமர்விழிமலைமுலையவளாடக்
கண்டகாவரங்கேசர்தங்கனவரைக்கடிகாவே. (689)
இது முதலடியிரண்டும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) விண்டுவிண்டு…. விடவேல்வே லென்பது மலைபிளந்து வீழும்படி குமரனெறிதற்குப்பொருந்தின வேலு மென்பதாம்.
வண்டு வண்டுவீழ்….. பூமான்மா னென்பது அம்பும், வண்டுகள் தேனையுண்ணவிரும்பு நீலோற்பலமும், மாவடுவின்பிளவும்,
உமாபதிகரத்தின்யாகிய பெரியவூரை யெரிகொளுத்தி யது வெந்துகூடுமளவும் அந்நகர்க் கரசனாகிய
இராவணனையும் அவன்சேனாபதித்தலைவரையும் ஏழுநாள் விசும்பிலிருத்தி யென்பதாம்.
வேலைவேலைபாய்ந் தென்பது பரந்தகடலைக் கடந்தென்பதாம். கண்டனன் றேவியை யென்றாற் கிணை யெவரே
பகருங்கா லென்பது சீதையைத் தரிசித்தன னென்ற திருவடிக்கு விசாரித்துச்சொல்லுங்கா லுலகத்
தொப்பா ரொருவருமில்லை யென்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
திணை-வாகையைச் சார்ந்த பொதுவியல். துறை – தூதுவென்றி.மானு மென்பதாம்.
அண்டராரமிர் தமர்விழி…….. கடிகாவே யென்பது அமிர்தும் போன்ற அமர்செய்யும்விழியையும்,
மலைபோன்ற முலையையுமுடையா ளவள் விளையாடக்கண்டகா, நண்பனே !
அரங்கேசரது மேகந்தவழும்வரையினிடத்துக் காவலையுடையசோலையென்ற றிவாயாக வென்பதாம்.
எண்ணும்மைகள் தொக்குவிரிந்தன. ஏல்வேல் – வினைத்தொகை. நண்பனே யென்னும் முன்னிலை தோன்றாதுநின்றது.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

அண்டமண்டமுண்டகிலமுநிலையழிந்ததனாலால்
பண்டுகண்டுயிலணையுளானவன்மகன்படைபௌவ
முண்டமுண்டமாமுனிநிகர்காதிகான்முறைமுன்முன்
கண்டவில்லினைக்கண்டவில்லாக்கினனெமர்கண்ணே. (690)
இது முதலடியும் மூன்றாமடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அண்டமண்டமுண்டகிலமுநிலையழிந்ததனா லென்பது அண்டத்தை மேலேயோங்கி யோடாநின்ற பிரளயம்,
எல்லாவுலகத்தையு முண்டதனாலே யென்பதாம். ஆல் பண்டு கண்டுயி லணையுளா னவன் மகன் படை பௌவ மென்பது
ஆலாகிய அமளியுள்ளான்மகனாகிய பிரமன்படைத்த உப்புக்கடலை யென்பதாம்.
உண்ட முண்டமாமுனி நிகர் காதிகான்முளைமுன் மு னென்பது உண்ட குறுமுனியையொத்த காதிசேயாம்
விச்சுவாமித்திரன் முன்னே முன்னா ளென்பதாம்.
கண்ட வில்லினைக் கண்டவில்லாக்கின னெமர்கண்ணே யென்பது அவன்கண்ட வில்லினைக் கையினாற் றுண்டப்பட்ட
வில்லாக்கின னெவ னவ னெம் போல்வார்கண்போல்வா னென்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
திணை- பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

கற்றவர்கற்றவர்வியப்பான்வளைத்தவன்மூவெயின்முருக்கக்
கணையானானா
னற்றவர்தம்மகந்துறப்பதற்றவன்வெள்ளியங்கிரியை
யடியோடேந்தப்
பெற்றவளங்கெழுமதுகையிருபதுகையுடைவயிரப்
பிறங்கல்போன்ற
கொற்றவன்கொற்றவன்சிரத்தைக்குறைத்தவனூர்தமிழ்மறைசங்
கோவில்கோவில். (691)
இது முதலடியும் நான்காமடியும் முதலொடு கடைமடக்கு.

இதனுள், கற்றவர் கற்றவர்வியப்பான் வளைத்தவன் மூவெயின் முருக்கக் கணையானான் நானற்றவர்தம்மகந் துறப்பதற்றவன்
என்பது கல்லை வில்லாகத்தனுசாத்திரங்கற்றவ ராச்சரியமுற வளைத்தவன் பொன்னும் வெள்ளியும் இரும்புமான
மூன்றுகோட்டையையுமழிக்க அவனுக்குக் கணையானவன், நானென்னு மாங்காரமில்லாதாரிதயத்தை விட்டுநீங்காதவன் என்பதாம்.
கொற்றவன்கொற்ற வன்சிரத்தைக் குறைத்தவனூர் தமிழ்மறை சங் கோவில் கோவி லென்பது இலங்கைக்கரசன் வெற்றி
பொருந்தின வலியசிரத்தைக் கணையாற்குறைத்தவ னுறையும்பதி, திருவாய்மொழியாகிய தமிழினொலியுஞ் சுருதியாகிய
வடமொழியொலியுந் திருச்சங்கொலியும் ஒழிவில்லாத திருவரங்கம் பெரியகோவி லென்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.

குன்றலைக்குமிருபதுகைக்குன்றினைக்கொன்றுலகளித்த
குறுங்கைக்கோமான்
கன்றலைக்குங்குணிலெனச்செங்கனியுதிர்த்தோனணைகிலன்மேற்
களைகண்யாதோ
தென்றலைத்தென்றலைத்தேராய்வருமதன்விற்கரும்பாய்நாண்
டேனாய்தேனாய்
மன்றலைமன்றலைக்காவின்மலரம்பாய்வருமதிகொல்
வானில்வானில். (692)
இது கடையீரடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) கயிலையாகியகுன்றினை யெடுத் தசைக்கு மிருபதுகையை யுடையனாங் குன்றுபோன்ற இராவணனைப்
பாணத்தாற்கொன் றுலகத் துயிர்களைக் காத்த குறுங்கைக்கரசனாகிய கன்றைக் குறுந்தடியாகக் கொண்டு
கனியுதிர்த்த மாயோன், தன்னை விரும்பப்பட்ட என்னைத் தழுவுகின்றிலன்,
ஆதலால், தென்றிக்கிற் றென்றலானதைத் தேராகவும், கரும்பை வில்லாகவும், பூவிற்றேனையாராயப்பட்ட வண்டை நாணாகவும்,
மணத்தைப் பொருந்தின தலைப்பட்ட காவின்மலர்களை அம்பாகவுங் கொண்டு மதனன் வாராநின்றனன் ;
வானில் மதி யமனைப்போல் மேல் வரும் ; இனி இதற்கு மேற் களைகண் யாதோ அறிகிலே னென்றவாறு.
கொல்வான் – நமன். திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுவைகல்.

கோட்டுநித்திலக்குவையொடுங்குங்குமத்தொளிமீதே
பூட்டுபூட்டுவெம்முலைமலையிடைபொறாதேவீவீ
நாட்டுநாட்டுதலின்றுறீஇநாங்கைமால்வரையார்யார்
மீட்டுநீள்குழற்காட்டின்மேற்பன்மலர்வேய்ந்தாரே. (693)
இஃ திடையீரடியும் முதலொடுகடைமடக்கு.

இதனுள், கோட்டுநித்திலக்குவை யென்பது சங்கீன்ற முத்தின் றிர ளென்பதாம்.
பூட்டுபூட்டு வெம்முலைமலை யென்பது பூட்டப்பட்ட பூணையுடைத்து, விருப்பத்தைத்தரும் முலையாகியமலை யென்பதாம்.
இடைபொறாதே வீவீ யென்பது முலையாகியமலைகள், தம்மைத்தாங்கு மிடையானதற்குத் தம்மைப்பொறாதே இறுதியைக்கொடுக்கு மென்பதாம்.
நாட்டுநாட்டுதலின்றுறீஇ நாங்கைமால்வரையார்யா ரென்பது நாளையுடைத்தென்று கண்டார்குறித்தலை இக்காலத்தறிந்தும்,
திருநாங்கைமாயோன்வரையார் யார்தா மென்பதாம்.
மீட்டு நீள்குழற் காட்டின்மேற் பன்மலர்வேய்ந்தா ரென்பது அதன்மேலே மீளவும் நீண்ட குழலாகியகாட்டின்மேற்
பலமலரையும் அணிந்தவ ரென்பதாம். பூட்டு பூணையுடைத்து. வீவீ-இறுதலைக்கொடுக்கும்.
நாட்டு – நாளையுடைத்து. நாட்டுதல் – குறித்தல். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – மருங்கணைதல்.

படுகொலைவாளாக்கனைக்கொன்றுலகளித்தான்வடமலைபோற்
பணைத்தகொங்கை
யிடுகிடையொன்றிடுகிடையொன்றேனுமதுபொறுக்கலா
தென்றாலென்றால்
விடுகதிர்வெவ்வழல்கதுவியடிநிலந்தோயாதெழின்மெல்
லியலையானே
கொடுகொடுவன்சுரங்குறுகினன்னுதாஅலென்னிருதோட்
குன்றுங்குன்றும். (694)
இது முதலயலடியும் நாலாமடியும் முதலொடுகடைமடக்கு.

இதனுள், நன்னுதால் – நல்லநுதலையுடையவளே !
வடமலைபோற் பணைத்தகொங்கை யென்பது முலைகளிரண்டும் வடமலைவாணன்மலை போலப் பணைத்தன வென்பதாம்.
இடுகிடையொன் றிடுகிடையொன்றேனு மதுபொறுக்கலாதென்றா லென்றா லென்பது சிறுகிய இடையுமொன்றே ; சேம இடையில்லை ;
இதன்மே லினி இடப்பட்ட கிடைச்சர மெனினு மதுவும் பொறாதென்றறிந்தா லதன்மேலும் ஆதித்தனாலென்பதாம்.
விடுகதிர்வெவ்வழல்கதுவி யடி நிலந்தோயா தென்பது நீட்டப்பட்ட கிரணங்களாலுண்டான வெம்மையையுடைய
அழல் பற்றுதலால் நடப்போர்பாதங்க ணிலத்திற் றோயா தென்பதாம்.
எழின் மெல்லியலை யானேகொடு கொடுவன்சுரங் குறுகி னென்னிருதோட் குன்றுங்குன்று மென்பது
அழகிய மெல்லிய சாயலையுடையாளை யான் கொண்டுபோய்க் கொடிய வன்சுரத்தை யணுகில்
அவளது மலர் போன்ற தாள்களை என்சொல்லவேணும், எனது இருதோள்களாகிய மலைகளும் மெலிவெய்து மென்பதாம்.
ஆதலா லுடன்கொண்டுபோகக் கூடாதென்பது பயன். பகுதி – உடன்போக்கு. துறை – அருமை கூறல்.
இவை யாறு மீரடி முதலொடுகடைமடக்கு.

இனி மூன்றடி முதலொடுகடைமடக்கு வருமாறு :-

பொய்யாமைபொய்யாமையானுடனைம்புலனவித்த
பொற்பார்பொற்பார்
மொய்யாமொய்யாடரக்கர்முரணழிப்பாயெனவிரங்கி
முன்பின்முன்பின்
கையாற்கையாற்றினொடும்பொருசரந்தொட்டழித்ததனாற்
காமர்காமர்
மெய்யானதெரித்தவற்கும்பரனயோத்தியிலுதித்த
வேந்தர்வேந்தன். (695)
இது முதலடிமுதலிய மூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) பொய்யாமைபொய்யாமையுரனுட னைம்புலனவித்த பொற்பார் பொற்பா ரென்பது சத்திய
வசன மிடைவிடாத ஞானத்துடன் புலனைந்தையும் வென்ற பொலிவினையுடையோரா முனிவரும்,
பொன்னுலகின்கண்ணுள்ள விண்ணோரு மென்பதாம். பொற்பார் – இடத்தானான ஆகுபெயர்.
மொய்யா மொய்யாடரக்கர் முரணழிப்பாயென விரங்கி யென்பது திருப்பாற்கடலிற் றிரண்டுசென்று அமர்விளைக்கும்
அரக்கராகியபகையை யழிப்பாயாகவென்று முறையிட்டதற் கிரங்கி யென்பதாம்.
முன்பின் முன்பி னென்பது முன்னாளில் மிடுக்கினையுடைய வென்பதாம்.
கையாற் கையாற்றினொடு மென்பது கைகளாற் காவலா மொழுக்கத்தோடுமென்பதாம்.
பொருசரந்தொட்டழித்ததனா லென்பது போரையுடைய பாணத்தை யேவி யந்தப் பகையை யொழித் தவர்
துன்பத்தைக் களைந்ததனா லென்பதாம்.
காமர்காமர் மெய்யானதெரித்த வற்கும் பா னயோத்தியிலுதித்த வேந்தர்வேந்த னென்பது காமனார் அழகிய வுடலை
யெரித்த சிவனுக்கும் அயன்முதலோர்க்கும் பரனாவான்.
திருவயோத்தியில் திருவவதாரஞ்செய்த அரசர்க்கெல்லாமரசனா மிராம னென்றவாறு. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

அன்றினரன்றினராகிக்கடைதுறந்தார்களிலிலங்கை
யாளியாளி
மென்றினைமென்றினைதலைத்தீர்கிளிமொழியைப்பிரித்தவன்றன்
மெய்யின்மெய்யி
னின்றறியாமனமதனிற்குடக்கன்னன்மருமத்தி
னிரலம்பேவிக்
கொன்றையன்கொன்றையன்முதலோரிடர்களைந்தானகர்தமிழோர்
கூடல்கூடல். (696)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அன்றின ரன்றினராகிக் கடைதுறந்தார்களி லென்பது முற்காலத்து அடிமைத்தமராயினார் சாபத்தாற் சத்துருக்களாகி
வாயில்காக்குந்தொழிலைவிட்டுநீங்கினா ரிருவரு ளென்பதாம்.
இலங்கை யாளி யாளி யென்பது இலங்காபுரியையாண்டவனாஞ் சிங்கவேறு போன்றவனாகிய வென்பதாம்.
மென்றினைமென் றினைதலைத்தீர் கிளி மொழியைப் பிரித்தவன்றன்மெய்யின் மெய்யினின்றறியா மனமதனி லென்பது
மெல்லிய தினையைத்தின்று பசியால்வரும் வருத்தத்தைப் போக்கும் புனக்கிளியினது மொழிபோலு மொழியையுடைய
பிராட்டியைத் தன்னைவிட்டுநீக்கினவன் மேனியிலும், உண்மையி னிலை பெற்றறியா மனத்திலு மென்பதாம்.
குடக்கன்னன்மருமத்திலென்பது கும்பகருணன்மருமத்திலு மென்பதாம்.
நிரலம்பேவி யென்பது ஒரு தொடையிற் பல அம்பைத் தொடுத்தேவி யென்பதாம்.
கொன் றயன் கொன்றையன்முதலோ ரிடர்களைந்தானகர் தமிழோர் கூடல்கூட லென்பது அவ்விருவரையுங்கொன் றயனுஞ் சிவனும்
முதலியோபோரையுடைய பாணத்தை யேவி யந்தப் பகையை யொழித் தவர் துன்பத்தைக் களைந்ததனா லென்பதாம்.
காமர்காமர் மெய்யானதெரித்த வற்கும் பா னயோத்தியிலுதித்த வேந்தர்வேந்த னென்பது காமனார் அழகியவுடலையெரித்த
சிவனுக்கும் அயன்முதலோர்க்கும் பரனாவான். திருவயோத்தியில் திருவவதாரஞ்செய்த அரசர்க்கெல்லாமரசனா மிராம னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

அன்றினரன்றினராகிக்கடைதுறந்தார்களிலிலங்கை
யாளியாளி
மென்றினைமென்றினைதலைத்தீர்கிளிமொழியைப்பிரித்தவன்றன்
மெய்யின்மெய்யி
னின்றறியாமனமதனிற்குடக்கன்னன்மருமத்தி
னிரலம்பேவிக்
கொன்றையன்கொன்றையன்முதலோரிடர்களைந்தானகர்தமிழோர்
கூடல்கூடல். (696)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அன்றின ரன்றினராகிக் கடைதுறந்தார்களி லென்பது முற்காலத்து அடிமைத்தமராயினார் சாபத்தாற் சத்துருக்களாகி
வாயில்காக்குந்தொழிலைவிட்டுநீங்கினா ரிருவரு ளென்பதாம். இலங்கை யாளி யாளி யென்பது இலங்காபுரியை
யாண்டவனாஞ் சிங்கவேறு போன்றவனாகிய வென்பதாம். மென்றினைமென் றினைதலைத்தீர் கிளி மொழியைப்
பிரித்தவன்றன்மெய்யின் மெய்யினின்றறியா மனமதனி லென்பது மெல்லிய தினையைத்தின்று பசியால்வரும்
வருத்தத்தைப் போக்கும் புனக்கிளியினது மொழிபோலு மொழியையுடைய பிராட்டியைத் தன்னைவிட்டுநீக்கினவன் மேனியிலும்,
உண்மையி னிலை பெற்றறியா மனத்திலு மென்பதாம். குடக்கன்னன்மருமத்திலென்பது கும்பகருணன்மருமத்திலு மென்பதாம்.
நிரலம்பேவி யென்பது ஒரு தொடையிற் பல அம்பைத் தொடுத்தேவி யென்பதாம்.
கொன் றயன் கொன்றையன்முதலோ ரிடர்களைந்தானகர் தமிழோர் கூடல்கூட லென்பது அவ்விருவரையுங்கொன் றயனுஞ் சிவனும்
முதலியோரிடும்பையைப்போக்கினா னிருக்கு நகர் தமிழ்ச்சங்கத்தார் கூடியிருத்தலை யுடைய மதுராபுரியா மென்றவாறு.
திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.

வானைநீவியவரைகளுயர்மரங்களனைத்தையும்வா
னரங்களாய
தானைதானையவாக்கொண்டமர்விளைநாள்வீடணனார்
தம்முன்றம்முன்
னானையானையினுதிவன்கோடுழுமார்பனையுயிருண்
டம்பாலம்பா
லேனையேனையர்வியப்பான்மீட்டவனல்லாற்பொருள்வே
றென்னாவென்னா (697)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) வானைநீவியவரைக ளுயர்மரங்களனைத்தையு மென்பது மேகபடலத்தைத் தைவரு மலைகளு மரங்களுமாகிய
அனைத்தையு மென்பதாம். வானரங்களாயதானை தானையவாக்கொண் டமர்விளைநாள் வீடணனார்தம்முன் றம்முன்னானை
யானையினநுதிவன்கோடுழுமார்பனை யென்பது மர்க்கடங்களாகிய படைக ளாயுதமாகக் கைக்கொண்டு
செருச் செய்யாநின்றகாலத்து வீடணனார்தம்முன்பாக அவர்தமையனானானை, அட்டகசங்களின் கூரிய வலிய
கோடுகளழுத்து மார்பானை யென்பதாம். உயிருண்டு அம்பால், அம்பாலேன் ஐ ஏனையர் வியப்பான் மீட்டவனல்லாற்
பொருள் வேறென்னா வென்னா வென்பது அம்பினா லுயிரை யுண்டபின் அழகிய நல்வினையுடையேன்சுவாமினியாகிய
சீதையைத் தன்னையொழிந்த கடவுள் ராச்சரியப்படுவான் சிறையை மீட்டுக்கொண்டு வந்தவனையல்லாதே
வேறேசிலபொருளுண்டென்று என்னுடையநா வோதா தென்றவாறு. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

மூன்றினுமூன்றினுந்தொழிலோடொன்றாமீளாநரகத்
தூடுமூடு
மான்றதுயரிழைநன்றிகொல்வினைபோன்றிடரிழைவல்
லரக்கர்தங்கோ
மான்றலைமான்றலையடைந்தவேனையர்வன்றலையுருட்டு
மாலைமாலைத்
தேன்றழைதேன்றழைதுளபத்தொடையானைத்தொழுஞ்சனனந்
தீரத்தீர. (698)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) மூன்றினு மூன்றினுந்தொழிலோடொன்றா மென்பதனை ஊன்றினுந்தொழிலோ டொன்றாம் மூன்றினு மெனப் பாடமாற்றி,
ஒன்றனைக்கொன் றதனூனைத்தின்னுந் தீயதொழிலோ டொத்தகொடுமையை யுடைய பார்ப்பார் பெண்டிர்
பசுவென்னு மிவரைச்செய்யுஞ் சொல்லொண்ணாத தொழின்மூன்றையும்பார்க்க வென்றுரைக்க.
மீளா நரகத்தூடு மூடு மான்றதுயரிழை நன்றிகொல்வினைபோன் றிடரிழை வல்லரக்கர்தங்கோமான்றலை யென்பது
ஒருகாலங்களினும் மீட்சியறநரகங் களினடுவேயிட்டு மூடுதலைச்செய்யு மிக்கதுயரையுண்டாக்குஞ் செய்ந்நன்றி கொன்ற
தீவினைபோல மூவுலகிற்குந் துன்பத்தைமிகுத்த இராக்கதர்க்கரசனா மிராவணன்றலையையு மென்பதாம்.
மான்றலையடைந்த வேனையர்வன்றலை யுருட்டும் மாலைமாலை யென்பது மயக்கத்தையடைந்த ஒழிந்த அரக்கர்
வலியதலையையுஞ் சரந்தொடுத்துருட்டும் வெற்றி யினதியல்பையுடைய திருமாலை யென்பதாம்.
தேன் றழை தேன்றழை துளபததொடையானைத் தொழுஞ் சனனந் தீரத்தீர வென்பது தேனுமிலையும் வண்டுமிகுதலு முடைய வனமாலையானை,
உலகத்துள்ளீர் நுமதுசெனனஞ் சந்தயமறத்தவிரும்படிக்கு வணங்குவீ ரென்றவாறு.
இதனுள்ளும், பலவிடங்களினும் எச்சங்களைக் கூட்டியுரைக்க. திணை – பாடாண். துறை – ஓம்படை.

இருந்தாதிருந்தாதரித்துண்ணவரிவண்
டினமேவமலர்முண்டகந்தாயதாய
மருந்தாமருந்தாமமெய்த்தாயுமெய்து
மங்கைக்குமணிமார்பளித்தாயளித்தாய்
சுரும்பாய்சுரும்பாய்மதங்கக்குகரடத்
துடனன்றுமுதலைத்தொடுப்பானையானை
வருந்தாவருந்தாவில்சக்ராயுதத்தாய்
வரமங்கையாயென்மனத்தாய்மனத்தாய். (699)
இது முதற்கண்ணுங் கடைக்கண்ணும் அடிதோறும் முற்றுமடக்கு.

(இ-ள்) பெருமையையுடைய தாதுக்களைப் பூவின்கண்ணிருந்து அன்புடனுண்ணவேண்டிப் பாட்டினையுடைய
வண்டின்கிளை பொருந்த மலர்ந்த தாமரையுந் தாயென்பதாய் இருக்கச்செய்தே, அழகிய அமிர்தமாம் பெறுதற்கரிய
வொளியையுடைய மேனித்தாயையுந் தாயாகவுடைய பெரியபிராட்டியென்னு மங்கைக்குக் கவுத்துவமணியணிந்த
திருமார்பைக் கிருபையுடைத்தாயளிக்கும் பூமானே ! சுரும்புகளாராயப்பட்ட மலையையொப்பதாய் மதத்தினைச்சொரியுங்
கரடத்துடன்கூடி முதலையினது பிடிப்பினால் மேனிநையப்பட்ட கெசேந்திரன் வருந்த அந்நா ளதனிடர் தீர்க்கச்செல்லும்
அழிவில்லாத சக்கரத்தையுடையாய் ! சீவர மங்கையென்னுந் திருப்பதியினுள்ளாய் !
என்மனத்தினுள்ளே குடிபுகுந்து நிலைபெறுவாய், பாஞ்சசன்னியத்தையுடையா யென்றவாறு.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

ஆக முதலொடுகடைமடக்கு-15.
ஆக வகை யைந்தான்வந்த மடக்கு-75.

இனி இடையொடுகடைமடக்கு வருமாறு :-

தளிநறவப்பொலமலர்கூராவிரையாவிரைவரைதேத்
தாயர்தாயர்
அளியமடத்தகையசோதையிற்புவனத்தறஞ்செய்தார்
யாரேயென்ன
வொளியமைந்தமரகதக்குன்றவண்வளர்நாள்வெண்ணெயிற்கட்
டுண்டுநின்ற
வெளிமையைக்கண்கலுழ்வதைக்கேட்டிரங்குமனங்காண்பவர்க்கன்
றென்னாமன்னோ. (700)
இது முதலடி யிடையொடுகடைமடக்கு.

(இ-ள்) துளிக்குந்தேனையுடைய பொன்போன்றபூவினைத் தன்னிடத்து மிகுத்த ஆவிரையை ஆவானது அருந்தாது
நீக்கும் முல்லை நிலத்தையுடைய ஆயர்க்குத்தாயராயினார், கிருபையுடையமடத்தகையாம் அசோதையைப் போலப்
புண்ணியஞ்செய்தா ருலகத் தியாவருளரென்று சொல்லும்படிக்குப் பச்சைநிற மிகுந்த மரகதக்குன்றம்போன்ற
கண்ணபிரான் றிருவாய்ப்பாடியி லவண்மனையில்வளர்கின்றகாலத்து வெண்ணெய்கட்டுக் கட்டுண்டுநின்ற
வெளிமையையுந் திருக்கண்மலர் கண்ணீர் பனிப்பதனையுங் கேட்டவர்க் குள்ள மின்றிரங்காநின்றதென்றா லன்று
காண்பவர்க் குள்ளமென்னாம் மிகவு மென்றவாறு.

ஓ – அசை. இதனுள், தேம் – இடம் ; அது முல்லைநிலமென்பது ஆவிரைவரைதேத் தென்னுங் குறிப்பினாற்கொள்ளநின்றது.
துறை-கடவுள்வாழ்த்து.

வெங்களபமூர்தரவீதியிற்பனித்தமதத்திடைமென்
பிடியிற்செல்வார்
செங்களபந்திமிர்ந்தளறாய்ச்சேந்தனவாஞ்சேந்தனவாஞ்
சிறுவர்தேர்தே
ரங்குறமண்மகளகலத்தளங்குறுகாதுருளுருளா
வரங்கத்தாய்நீ
யெங்குளனென்றவன்முனமற்றங்குளனானதைப்புகழ்வா
ரெமையாள்வாரே. (701)
இஃ திரண்டாமடி யிடையொடுகடைமடக்கு.

(இ-ள்) கோபத்தையுடைய களியானைகளைப் பாகர் வீதியிற்கடாவ அவை கவுளினாற்சொரிந்த கரிய மதப்பெருக்கிற்
களிற்றொடுதொடுத்த பிடியிற்செல்லுமவர் மடந்தைமார் தமது முலைச்சுவட்டிற் குங்குமத்தைத் திமிர்ந்திட்டதா லக் கரிய
மதநீர் சேறுபட்டுச் சிவந்தனவாக, அச் சிவந்த சேற்றிற் செவ்வேளும்விரும்புஞ் சிறார் தமக்கேற்றமாமென விசாரித்தூருஞ்
சிறுதேரழுந்தி அவற்றின்வண்டிகள் பூமிதேவிமார்பாகிய இடத்தணுகா தச்சேற்றிற்புதைந் தோடாது நிற்குந் திருவரங்கத்தானே !
நீ நின்னை எங்குளானென்றுவினவிய இரணியனோடு மெங்குமுளானென்று புதல்வன்கூற அவ னிங்குளனோவென்றடித்ததூணத்
தங்குளனாகித் தோன்றியதைப் புகழ்வா ரெம்மையாட்கொண்ட தம்பிரான்மா ரென்றவாறு.
திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.

புத்தமிர்தந்தனிற்பிறந்தபொன்கொடியையகலாத
புனிதனாகி
யத்திகிரிதனிலுதித்தகைத்திகிரிப்பரன்பரனென்
பதனைநாடி
யுத்தமநான்மறைகண்மதித்தொன்றுரைதொன்றுரையணங்கே
யோதியோதி
மொய்த்துயர்வன்பரற்கடஞ்சென்றழுந்தவுணர்வதற்கிறைவர்
முயல்கின்றாரே. (702)
இது மூன்றாமடி யிடையொடுகடைமடக்கு

(இ-ள்) அணங்கே ! நமதிறைவர், புதிய அமிர்திற்பிறந்த பொன்னங்கொடிபோன்ற பெரியபிராட்டியைக் கணப்பொழுதும்
விட்டு நீங்காத பவித்திரவானாகி யத்திகிரியினிடத்துதித்த திருக்கைத் திருவாழியுடையபரனே பரப்பிரம மென்பதனைச்
சுருதிகணாலு முத்தம ஞானத்தாலறிந் துயர்த்தி யொன்றுபோலவுரைத்த பழையவுரையைப் பொற்றைகணெருங்கின
வலியபரலையுடைய சுரத்தைக்கடந்து நாட்டின் கட்சென் றாரியருடன் நாவழுந்தவோதி உண்மைதெளிவதற் கேகமுயலா நின்றா ரென்றவாறு.
இது கொண்டுகூட்டுப்பொருள்கோள். தொன்று- பழமை. ஓதி – பொற்றை. பகுதி – ஓதற்பிரிதல். துறை – நினைவுரைத்தல்.

என்புருகவுயிருருகவவற்றினொடுமீறிலா
வின்பம்பெற்ற
வன்புருகப்புணர்ந்தொருநாளகலேமென்றகல்வதுமக்
கறமேயென்னாய்
புன்பொருளைப்புறம்போக்கிநன்பொருளென்னரங்கனெனப்
புகன்றமாற
னன்பொருநைத்துறையுளிருந்திரையுளிருந்திரையுளவார்
நாராய்நாராய். (703)
இது நாலாமடி யிடையொடுகடைமடக்கு.

(இ-ள்) உடலும் உயிரும் உருக அவற்றினோடும் ஒழிவில்லாத பேரின்பத்தைப்பெற்ற வுணர்வுருகக் கலந்து,
இனி யொரு கணத்தும் நின்னிற்பிரியே னென் றுரைத்த நீர் இவளை வைத் தகல்வ துமக் கறமன் றென்று கூறிற்றிலை ;
இதரபுருடார்த்தங்களைவிடுத்து எம்பெருமானே பரமபுருடார்த்தமென்றறுதியிட்ட மாறனது நல்ல பொருநைத் துறையிற்
பெரிய திரைநடுவிருந்து இரையாயுள்ள ஆரன் முதலாயுள்ளவற்றை யுண்ணப்பட்ட நாரையே ! என்னிடத் தன்புடையையா யென்றவாறு.

என்னிடத்தென்பது சொல்லெச்சம். என்பும் அன்பும் ஆகுபெயர். இருந்திரை – பெரியதிரை.
இருந்திரை – தங்கி, இரையை. நார் – அன்பு. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – பறவையொடு பரிவுற்றுரைத்தல்.
இவை நாலும் ஓரடி யீரிடத்துமடக்கு. இனி யீரடி யீரிடத்துமடக்கு வருமாறு :-

புக்கிலதாயமைந்ததயனகரமயனகரமெழிற்
பொன்னேபொன்னே
தக்கிலராமலைக்குறவர்குறவர்மனையெனத்தெளிந்த
தாமந்தாமந்
தொக்கமரர்தொழப்புரந்தவரங்கேசர்திருமுகம்போற்
சோதிமேய
வக்கமலந்திறந்தெவனோவரையிருளிற்றமியிவணின்
றடைந்தவாழ்வே. (704)
இது முதலீரடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) அழகிய பொன்னையொத்த திருமகளே ! உனக் கெஞ்ஞான்று மிருப்பதோ ருசிதமான இல்லாயமைந்தது
பிரமன் அகரமாயுறைந்த தாமரையே ; அயலா யொதுக்கிருந்த நகரம், பொருந்துந் தகுதி யிலராம் மலைகளுக் குறவுடையராய
குறவர்மனையென வென்னுள்ளந் தெளிந்ததாம் ; ஆகையாற் பரமபதத்தினிடத்து நித்தர் கூண்டுதொழ அதனையாண்ட
அரங்கேசர்திருமுகம்போற் சோதிமேய பிரமன் அகரமாகிய அக்கமலத்தைத் திறந் தியாதோ நடுச்சாமத்திருளிற் றமி யொருவர்
துணையின்றி யவ்விடத் தடைந்த வாழ் வென்றவாறு.

அகரம் – அந்தணரிருக்கை. அயல் நகரம் – அயலாய மனை. புக்கில் – பின் புறப்படாது புக்கிருக்கும் இல்.
உனக்கென்பது முதலாகியசொற்களைக் கூட்டி விரித்துரைக்க. பகுதி – இரவிற்குறி.
துறை நலம் பாராட்டல் ; தளர்வகன் றுரைத்த லென்பது மிது.

இட்டமணிப்பரற்சிலம்புசிலம்புதளிரேய்ந்தவிரு
தாளந்தாளம்
வட்டமுலைத்துவரிதழ்க்கோமளக்கொடியுமணமகனும்
வாணுதாஅல்போய்ச்
சிட்டர்தொழுமரங்கேசர்காவிரிகாவிரியிதன்முன்
செல்வர்செல்வர்
நட்டதிறந்திருமாதுந்திருமாலுமெனும்படித்தா
நவிலுங்காலே. (705)
இது முதலடியும் மூன்றாமடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) உள்ளிடுமணியாகிய பரலையுடைய சிலம்பு ஆரவாரிப்பனவாய், மாந்தளிர்போன்ற தாள்களையும்,
அழகியவாந் தாளம்போன்ற வட்டமுலையையும், பவளம்போன்ற இதழினையுமுடைய இளைய பொன்னங்கொடியும்,
மணக்கோலத்தையுடையகாளையும் ஒளிபொருந்தின நுதலினையுடையாய் !
தொண்டராயுள்ளார்தொழும் அரங்கநாதரது, சோலைகள் மலரை மலர்த்தப்பட்ட காவிரித்துறையின்கண் ணிதற்கு முன் செல்வர் ;
அச்செல்வத்தையுடையார் தம்முட்கொண்ட நட்பின் கூறுபாடும்,
பிராட்டியும் மாதவனு மென்று கூறப்படு முவமையுடைத்து, சொல்லுமிடத் தென்றவாறு.
எனவே, நீ போவதாற் பயனில்லை யென்ப தாயிற்று. பகுதி – உடன்போக்கு. துறை – மீளவுரைத்தல்.

குலத்தருவாழ்வாசவனம்பதிவாசவனம்பதிமென்
கோதைக்கோதைக்
கிலக்கணமாம்பதியெனிற்பொன்னலக்காவுமுலகுமா
விந்தமென்னிற்
சொலத்தகுகைத்தலநான்கினிதியமுமாதுளங்கனியுந்
துணைமென்போது
நலத்தகைக்கண்களிதரக்காண்கிலமீதோவிலமீதோ
நாட்டினாட்டின். (706)
இது முதலடியும் நாலாமடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) மனனே ! மெல்லிய மாலைசூட்டப்பட்டகுழலையுடைத்தா யிங்ஙனநின்ற இவட்கு நல்லபதி,
ஐந்தருவு மாக்கம்பெற்ற பரிமளக்காக் குடிகொண்ட இந்திரனது நல்லபதியென்று விசாரிப்பேமாகில்
அக்காவும் இவ்வுலகமும் பொன்மயமல்ல ; அஃதன்றிப் பதி தாமரையென்று விசாரிப்பேமாகில்,
இவட்கு, நூல்கள் கூறத்தகுவதாங் கரங்கள் நான்காய், அவற்றின்கண் ஐச்சுரியமும், மாதுளங்கனியும், தாமரைப்பூக்களும்
இன்பத்தைப்பெற்ற நமது அழகிய கண்கள் களிதரக் காண்கின்றிலம் ;
இவட்குச் சொன்னவையன்றி இல்ல மிவ்வுலகமோ? விசும்போ? (பரமபதமோ?) இவ்விரண்டிடத்திற் குறிக்கில் யாதோ அறிவரி தென்றவாறு.
யாதோ அறிவரிதென்பதனைப் பயனிலையெச்சமாக்கி விரித்துரைக்க.
மனனே யென்பது தோன்றா எழுவாய். இல்லமென்பதனை மத்திம தீபமாக்கிக் கூட்டுக.
ஒழிந்த அரும்பதங்களுங் குறித் துட்கொள்க. பகுதி – இயற்கை. துறை – ஐயுறல்.

மின்னியனுண்ணிடைகளபப்புளகபடாமுலைகளிணைமேருவாகுந்
தன்னிகர்மற்றில்லாதவிழிக்குவமையரங்கர்துணைத்தாமமான
பொன்னியிடத்தின்பானலின்பானல்வாயிலவம்பூவேபூவே
கன்னிதுவரிதழ்க்குவமையுவமைகுழலுரைக்கவடங்காதேகாதே. (707)
இது கடையீரடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) பூமியைப்போலப் பொறையுடையாய் ! அழியாத கற்புடையாட்கு, மின்போன்ற இயல்பையுடையது சிறிய இடை ;
மான்மதக் குழம்போடும் புளகிக்கப்பட்ட முலைகள் உபயமேருவொப்பன ; தனக்கு வேறுநிகரில்லாத கண்களொப்பன
அரங்கனுக் கிணைமாலையான காவிரியிற்றோன்றிய நீலோற்பலமே ; நல்ல மொழியானது இனிய பாலே ;
சிவந்த இதழ் இலவம்பூவே ; குழலானது உவக்குந்தன்மையையுடைய மேகமே ; காதானது உவமைகூறுதற் கடங்குவதல்ல என்றவாறு.
உவமை – கண்டார்விரும்பப்பட்ட மேகம். ஒழிந்த அரும்பதமுங் குறித்துட்கொள்க. இறுதியேகார மீற்றசை.
பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.

கிளர்பைப்பணிமேற்றுயிலரங்கர்கெழுதண்கடற்கானலிற்பான
லுளர்பொற்சுரும்பேபொருநர்முனையுள்ளாருள்ளாரென்கேள்கேள்
வளர்பைச்சடம்பேசடம்பேயின்வடிவாயதுவேவாயதுவே
தளர்வுற்றதுமன்னுயிரெவனோதான்மேலுறுமென்றறியேனே. (708)
இஃதிடையீரடியும் இடையொடுகடைமடக்கு

இதனை, கிளர்பைப்பணிமேற்றுயிலரங்கர் கெழுதண்கடற்கானலிற் பானலுளர் பொற்சுரும்பே ! வளர் பைச்சடம்பே ! கேள்,
என்கேளாகிய பொருநர் முனையுள்ளார் உள்ளார், என்சடம் பேயின்வடிவாயது, வாயதுவே தளர்வுற்றது,
மன்னுயிர் எவனோதான் மேலுறுமென்றறியேனென இங்ஙனம் பாடமாற்றி மாட்டுறுப்பென்னும் பொருள்கோள் கொள்க.

இதனுள், முனையுள்ளா ருள்ளாரென்பது பாசறையுள்ளா ரென்னை நினையா ரென்பதாம்.
பைச்சடம்பே – பசுத்த அடம்புகாள். கேள் – கொழுநரான. கேள் – கேளும். கேளுமென்பது கேளென உம்மைதொக்கது.
உள்ளா ரென்கேளென்பது “என்னீரறியாதீர்போலவிவைகூற, னின்னீர் வல்லநெடுந்தகாய்” என்பதுபோல
ஒருவரைக்கூறும் உபசாரப்பன்மைப் பாலோடு ஒருமைப்பான் மயங்கியது.
சடம் பேயின்வடிவாயது – மெய் பேயின்வடிவாயிற்று. வாயதுவே தளர்வுற்றது – வசனம் குழறியது.
ஒழிந்தனவும் உரையிற்கொள்க பகுதி – வினைவயிற்பிரிதல். துறை-….

மருள்பயில்வல்லவுணரைக்கொன்றரக்கரைக்கொன்றளித்ததல்லால்
வாழ்நாளெண்ணித்
திருவரங்கத்திடைதுயின்றவமுதமேயமுதமே.
தேத்ததேத்த
வுருவளர்வான்புனற்குதரத்துயிர்களைவைத்தளித்தநின்னை
யுவந்திடாதே
யிருணரகத்திடைவீழ்வார்வீழ்வார்மற்றொருதெய்வ
மென்னேயென்னே. (709)
இஃதிரண்டாமடியும் நாலாமடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) சிறப்புடையுயிர்கள் பெற்றயாக்கையோ டிருக்குநாள்கழிந்து, இன்னும் ஓ ரீனயாக்கையுட்புகுதுநா ளெய்தாதே
சோதிச்சொரூபமான யாக்கையுட்புக்குப் பரமபதப்பேரின்பத்தை அனுபவித்து வாழுநாள் பெறவேண்டுமென்று திருவுளத்துற்று,
அர்ச்சாவதாரமாகி, அரங்கத்தினடுவே கண்வளர்ந்த அமுதே !
முன்னாள் நீ அறியாமை யிடைவிடாத அவுணரைக் கொன்று காத்ததோடும், அரக்கரையுங்கொன் றுலகுயிர்களைக் காத்ததல்லாமலும்,
ஏகோதகப் பிரளயமிகுந்ததேயத்துட் கரசரணாதிகளிழந்த வுயிர்களை அக் கழிபெரும்புனலுள் அழியாது திருவுதரத்துள்வைத்துக்
காத்த நினது செய்ந்நன்றியறிந்து, நின்னை விரும்பாதே, இருண்டநரகத்துள்மேல் விழுவார், பிறிதொருதெய்வத்தை விரும்பாநின்றனர் ;
இஃதென்ன செய்ந்நன்றியறிதல் ! அந்தோ? என்றவாறு.

பின்னர்வந்த அமுதம் ஏகோதகம். தேத்த – மிகுந்த. தேத்து – இடத்து. அவ் – சுட்டு. வீழ்வார் – விழுவார். வீழ்வார் – விரும்புவார்.
என்னே – என்ன. என்னே – அந்தோ. திணை – பாடாண். துறை – பரவார்ப்பழித்தல். இவை யாறும் ஈரடி ஈரிடத்துமடக்கு.

மன்னுயிரைக்குறித்துளநைந்துளவத்தாதுளவத்தா
மாயாமாயா
பொன்னிநடுத்துயில்பரமாபரமாகாயத்தும்விருப்
புள்ளாய்புள்ளாய்
பன்னருமூன்றுடனமையஞ்சக்கரத்தாய்சக்கரத்தாய்
பாராய்பாராய்
நன்னிலைபெற்றெழுபூதமீற்றனவாயைவரெனை
நலியாவாறே (710)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) நிலைபெற்றவுயிர்களைக் காப்பதுகருதித் திருவுள்ளங் குழைவதுள்ள அத்தனே ! துளவமாலையுடையவனே !
ஒருகாலமும் அழியாத மாயவனே ! பொன்னிநடுவே துயில் பரமனே ! பரமபதத்தினும் லீலாவிபூதியினும் அன்புள்ளவனே !
கருடவாகனத்தையுடையவனே ! சொல்லிப்புகழ்தற்கரிய ஐந்தும் மூன்றுமாகிய திருவட்டாக் கரத்தையுடையவனே !
சக்கரத்தையுடையவனே ! பூமியென்பதாய் நல்ல நிலைபெற்றுத்தோன்றும் பூதமீறாகவுடையனவாம்
ஐந்து பூதவாயில்களில் ஐந்து புலன்களும் என்னை வருத்தாவண்ணம் உனது திருக்கடைக்கண்ணாற் பார்ப்பாயாக என்றவாறு.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

உரங்காயுமன்னரவைமன்னரவையுவப்பவுதைத்
தாடலாட
லரங்காய்முன்னடியரங்காவடியரங்காதரித்திடவோ
ரம்பாலம்பா
லிரங்காழிவளைத்தவெயிலிலங்கையர்கோனையும்வதைசெய்
யெந்தாய்நின்னைப்
பரங்காணென்றிருந்தவிருந்தவர்தமைச்சுற்றாதியம
பாசம்பாசம். (711)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) சத்துருக்கள் மிடுக்கைக்கொடுக்கும் நிலைபேறுடைய பாம்பைத் தெய்வ அரசர் விருப்பமுறத் தாளினா லுதைத்து
வெற்றியுடனாடும் அரங்காக முற்காலத் தாடும் அரங்கனே ! அடியராகிய தேவர் தேவருலகத்தினிலிருந் தன்புற்றிட
ஓரம்பினாலே, புனலலைதலுடனே ஆரவாரிக்குஞ் சமுத்திரம் வளைக்கப்பட்ட மதிலையுடைய
இலங்கையிலுள்ளார்க்கரசனாகிய இராவணனையும் வதைத்த எம்முடைய தாயே ! நின்னை, நெஞ்சமே !
இவன்காண் பரத்துவ மென்று காண்பாயாகவென்று யோகித்திருந்த பெரியதவத்தையுடையோரை இயமபாசமும்,
மண் பண் பொன் னென்ற பாசத்தளையும் வளையா தென்றவாறு. நெஞ்சேயென்பது முதலியன சொல்லெச்சம். துறை – இதுவுமது.

கெடலருமெய்த்தரணிதரணிகளழுங்கமறைந்ததுபோய்க்
கேளீர்கேளீ
ரடலருமாளியினிரைத்தாறலைப்பவருண்டிரவிவண்வை
கலுந்தேனார்ந்தே
மடலவிழ்தண்டுளபத்தானாங்கையினாங்கையினளிப்ப
வதுவையாயாய்
தொடலைநறுங்குழற்குழற்றேமொழியொடும்வைகுறுமறுகிற்
றோன்றறோன்றல். (712)
இது முதலயலடியொழித்தேனைமூன்றடியும்இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) கேடில்லாத மெய்ம்மையையுடைய ஆதித்தன் குடகடற் புகக் கிரணம், பூமியிலுள்ளா ரிரங்க மறைந்தது ;
எமக்குக் கேளாகுவீர் ! யாங்கூறுவதனைக் கேட்பீராக ; ஒருவராலும் அடுத்தற்கரிய சிங்கம்போன் றாரவாரித்து, வழிபறிப்பவரு முண்டு ;
ஆகையால் இரவின்கண் ணெம் மிடத்து வைகுதலோடும், தேனும் விருந்தாக அருந்தி, நாங்கள் கைப்பிடித்துத்தரக் கலியாணமு மெய்தி,
ஆராயப்பட்ட மாலையைச்சூட்டும் நறுவிதாங் குழலையும், குழலிசைபோலும் தேன்போலும் மொழியையு முடையாளோடும்
வைகறையிற் றுயிலொழிந்தெழுந்து துளபத்தானது திருநாங்கைமறுகிடத்திற் பெரியோனே ! தோன்றுவாயாக வென்றவாறு.

கேளீரென்பது இருவரையும். தோன்றலென்பது அண்மைவிளி. பொருள்கோள் – கொண்டுகூட்டு.
பகுதி – உடன்போக்கு. துறை – நெறி விலக்கிக்கூறல்.

அலம்வருசெங்கதிராழிகணிச்சியினுங்கொடிதுணராதணுகாதேநீ
நிலனிடைமன்னுயிர்பிரிக்குநடுக்கற்றாய்நடுக்கற்றாய்நின்னினின்னி
னலனுடைவானவர்துதிக்கைத்துதிக்கைமலையழைத்தவனென்னாதனாமா*
மலர்மகள்சேர்மணிமார்பன்வைகலும்வைகலுமறுகில்வண்டூர்வண்டூர். (713)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.

*இக் கடைமடக்கு. அயலடிமுதலெழுத்துள்ளும் மெய்யெழுத்து, பொருளொழியப் பிரிந்து சேர்ந்து ஆம் ஆம் என வந்ததுபோலும்.
இதனுள், நடுக்கற்றாய் நடுக்கற்றாயென்பது நடுவுநிலைமைகற்றவனே ! நடுக்கமற்றவனே ! என்பதாம்.
நடுவுநிலைகற்றவன் – சமன். நில் நில் – நிற்பாயாக, நிற்பாயாக நின்னில் – நின்னிலும்.
வானவர்து திக்கைத் துதிக்கைமலை – தேவர்களேத்துந் துதிக்கையையுடைய யானை. நாதனாம் – சுவாமியாம்.
மா மலர்மகள்சேர் மணிமார்பன் – பெரிய தாமரையாளைத் தழுவும் மார்பினையுடையான்.
வைகலும்வைகலும் – எல்லாநாளுந் தங்குதலும்.
மறுகில் வண்டூர் வண்டூ ரென்பது வீதிதோறுஞ் சங்குதவழும் திருவண்வண்டூ ரென்றவாறு.
துதிக்கைமலையழைத்தவன் என் நாதனாம் ; அவன்கையிற் சுற்றுதலையுடைய கதிராழி உன்கணிச்சியினுங் கொடிது ;
இதனை யறியாதே என்னிடத்தணுகாதே ; நமனே ! நிற்பாயாகவெனக் கூட்டுக.
எனவே, உனக் கென்னிடத்துவருதல் கூடாதென்பது கருத்து. திணை- வஞ்சி. துறை – நெடுமொழிவஞ்சி.

மாறர்குருகூர்குருகூர்வடிவேலவேல
நாறுமளகத்தளகத்துணைவீகையீகை
யாறினகலாதகலாததாமாகமாக
நீறனிலவானிலவாநினைத்தேகலேகல். (714)
இது நான்கடியும் இடையொடுகடை முற்றுமடக்கு.

(இ-ள்) காரிதரும் மாறருடைய சங்குகள் தவழப்பட்ட குருகூரினிடத்துக் கடைந்தவேலையுடையவனே !
ஏலம் பரிமளிக்கும் அளகத்தையுடையா ளுள்ளத்துட் டுன்பம், நீ பொன்னைக்கொண்டுவந்து தரும்வழியால் நீங்காது ; தக்கதல்லவாம் ;
இவள்மேனியும், ஆகாச நீறும்படிக் கிரவிலெழும் நிலவினாலே அழகழியும் ;
ஆகையால் இவற்றை நினைத் தேகலையுடைய கடங்கடந்து பொருள்செய்யப்போவதை ஒழிவாயாக வென்றவாறு.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – ஆற்றாமைகூறிச் செலவழுங்குவித்தல்.

இவை பதினைந்தும் இடையொடுகடைமடக்கு. இவை நாற்பத்தைந்தும் ஓரடியும் ஈரடியும் மூவடியும் நாலடியுமாக
அடிதொறும் ஈரிடத்தைமடக்கியது. ஆக மடக்கு-90.

இனி அடிதோறுமிடைவிடாது மூன்றிடத்துமடக்கு வருமாறு :-

முன்னினைமுன்னினைமிடல்வல்லிடங்கரிடங்கரிநொந்த
மூலமூல
மென்னுரைசென்றடங்காமுன்னவ்வுழியவ்விடங்கருயி
ரினையேயுண்பா
னின்னிலையிவ்வுழியுளதோவெனக்கனகனுருத்தடித்த
நெடியதூணின்
மன்னிலைபெற்றவனுயிருண்டனையரங்காநினக்கிணையார்
மதிக்குங்காலே. (715)
இது முதலடி மூன்றிடத்துமடக்கு.

இதனை மிடல்வல்லிடங்கரிடம் நொந்தமூலம், முன் நினை கரி மூல மென்னுரை சென்றடங்காமுன்ன ரவ்வுழி
அவ்விடங்கருயிரினை யுண்பான் முன்னினையெனச் சேர்க்க.

(இ-ள்) மிடுக்கையுடைய வலிய முதலையின்கையி லகப்பட்டு நொந்ததேதுவாக, முன்னொளி லுன்னைநினைத்த
யானை சொல்லிய மூலமே யென்னு முரையினொலி நினதுதிருச்செவியுட்புக் கடங்காதமுன்னம்
அக்கயத்தினிடத் தந்த முதலையினுயிரை யுண்ணவேண்டிச் சென்றனை ;
அஃதன்றியும், அரங்கனே ! நீ அந்தரியாமியாகநின்ற திங்குமுளதோ வென் றிரணியன் கோபித்தடித்த நெடிய
தூணினிடத்து மிகவுநின்று அவ்விரணியனு யிரையு முண்டனை ; ஆகையால் விசாரிக்குமிடத்து
நின்னோ டிணையான கடவுள ரில்லை யென்றவாறு. இதன்கண் அகப்பட்டென்பது சொல்லெச்சம். உரை ஆகுபெயர்.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

வெளியதாயமைந்ததிடைமேருவதாமுலையுயிரோவியத்தைப்பெற்ற
வளியதாயளியதாய்மலர்மாதேமாதேவராருமாரு
மொளியதாமமுதமொழிகருங்குவளைவிழியெனலாமுறையுணண்பா
வெளியதாயிருபது கைக்குன்றினைவென்றானிடபகிரியாமன்றே. (716)
இஃ திரண்டாமடி மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) நண்பனே ! உயிரோடுங்கூடிய ஓவியம்போல்வாளைப்பெற்ற கிருபையையுடைய தாய்,
வண்டு மதுவுண்ண வாராயப்பட்ட தாமரை மலரே; மாது அம்மலரிற் செய்யவளே! சந்தயமில்லை.
முலை மேரு; இடை ஆகாயம்; வானோர்யாவருமுண்ணும் அமிர்தம் மொழி ;
விழி கருங்குவளை யென்பனவாம். உறையுமிடம், இராவணனாகிய இருபது கைக்குன்றை யெளிதாகப்
போர்க்களத்துவென்ற சுந்தரத்தோளழகர் சோலைமலையா மென்றவாறு.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல் பிடங்கூறல்.

ஏதுகொண்டுமானிடர்தமைப்பாடுதலிழிபென்றெப்
போதுமாறனைப்போற்றுதற்கென்னொடின்புறுநெஞ்சே
யாதுமாதுமென்முல்லைமுல்லையினிறையாவான்வா
னீதியாய்ந்தனமாகையான்முத்திநிச்சயமன்றே. (717)
இது மூன்றாமடி மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) ஏது…….. நெஞ்சே-யாதாயினு மொரு மிகுந்த பொருளை முந்த வாங்கிக்கொண்டாயினும்,
அதன்முன்னராயினும் மனிதரைப்பாடி வாய்மையிழத்தல் இழிந்ததொழிலென்றறிந்து,
அவர்களைப் பாடா தெப்போதும் காரிமாறப்பிரானைப்போற்றுதற்கு என்னோ டொன்றாய்ப் பேரின்பமெய்தாநின்ற நெஞ்சமே !
ஆது மாது மென் முல்லை முல்லையினிறையாவான்: நாம் மேலு மாகக்கடவோம் ;
பசுக்கள் பொசிப்பாகமெல்லும் முல்லைக்கொடியையுடைய முல்லைநிலத்திற் கிறைவனாகிய கண்ணபிரானது.
வான்நீதி யாய்ந்தனமாகையால் – பரமபதத்தினதொழுக்கத்தை மாறனூல்கூற ஆராய்ந்தனமாகையால்.
முத்தி நிச்சயமன்றே – இருவழியாலும் நாம் முத்தியைப்பெறுதற்குச் சந்தயமில்லை யென்றவாறு.

ஆது மென்பது மே லாகக்கடவோமென்னும் உளப்பாட்டுத் தன்மையின்வந்த எதிர்காலமுற்றுவினைச்சொல் ;
என்னை? “ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை, ஆஅது மென்னு மவர்” என்பதனாலறிக.
திணை – வாகை. துறை – அறிவன்வாகை.

வீடாளிவீட்டினுக்குவீடாயதனைநிலையாய்விழுமிதாக்குங்
கேடாளர்கேண்மையினைப்பிரித்தெனையுந்தனதடியார்கேண்மையாக்கும்
வாடாதமகிழ்மாலைப்பெருமானைத்துணைநெஞ்சேமதித்துவிண்மே
னாடாளநாடாளரியையுநினைநினையினித்தென்னாட்டானாட்டான். (718)
இது நாலாமடி மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) பரமபதத்தினையாளுமவன் குடிகொண்டிருக்கும் ஆன்மாவாம் வீட்டினுக்கு வீடாகிய யாக்கையையும்
நிலையிற்றாகும் முக்கியமென வுட்கொள்ளும் ஞானதெரித்திரருறவினை யென்னைவிட்டுநீக்கி,
அறிவிலியாகிய வென்னையுந் தன்னடியார்க்குச் சுற்றமாக்கும் வாடாத வகுளமாலிகையையுடைய சுவாமியை,
எனக்குத் துணையாகிய நன்னெஞ்சமே! இவனே பரமாசாரியனென வுட்கொண்டு, விண்ணுக்குமேலாய பரமபதத்தினை ஆளநினை ;
அவனோடு நரனுஞ் சிங்கமுமானவனையும் நினை ; நினைத்தால் நின்பேரைத் தெற்கின்கண்ணுண்டாகிய
நாட்டினையுடைய நமன் றன்கணக்கின்கண் ணெழுதா னென்றவாறு.

நம் பேரை மனத்துட்குறியா னென்று மாம். எனவே இயமதண்டமு மில்லை, செனனமு மில்லை,
முத்தியையு மெய்தலா மென்பது பயனாம். திணை – காஞ்சி.
துறை – பொதுவியற்பாலுட் காஞ்சியைச் சார்ந்த பொருண் மொழிக்காஞ்சி.
இவைநாலு மோரடி மூவிடத்துமடக்கு.

இனியீரடி மூவிடத்துமடக்கு வருமாறு :-

தாம்பரியதாம்பரியதிரைதிரைத்தபொனங்கொடியிற்
சங்கஞ்சங்கந்
தேம்பணைத்தேம்பணைத்தெறியும்விண்ணகராய்விண்ணகராய்
செல்வாசெல்வா
யாம்புகழ்செண்பகமா றன்கொழித்ததமிழ்மறையினைக்கற்
றிறைவனீநீ
யாம்பரிசுற்றவரிதயத்தினிற்குடிகொண்டிருப்பதற்கென்
னாகத்துள்ளே. (719)
இது முதலடியும் இரண்டாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) பாயும் பரியையொப்பனவாம் பெரியதிரைகள், சுருட்டி யெடுத்த பொலிவினையுடைய அழகிய
கொடியினோடுஞ் சங்கமென்னு மிலக்கத்தையுடைய சங்குகளையும் பூவிற்றேன் பாயும் வயலினிடத் துகளித்தெறியுந்
திருவிண்ணகரின்கண் ணுறைபவனே ! பரதத்துவ மென்று தேவர்களாராய்ந்த வுபயவிபூதியையுமுடைய செல்வனே !
எம்மனோர் புகழ்பவனாஞ் செண்பகமாறன் வேதசாரத்தைக் கோதறத்தெள்ளி யுரைத்த திருவாய்மொழியினைக் கற்று,
நீயே பரப்பிரமமென்பதாஞ் சுபாவமுணர்ந்தவ ரிதயதாமரையிற் குடிகொண்டிருக்கச் சென்ற நீ
என்னிதயத்துள்ளுங் குடிகொண்டிருப்பதற்கு வருவாயாக வென்றவாறு.
இதனுள், பின்னர்வந்த செல்லென்பதனை வினைத்தொகையாக்கிப் பின்னர்நின்ற நீ யென்பதனோடுஞ் சென்ற நீ யெனக் கூட்டுக.
பொருள்கோள் – கொண்டுகூட்டு. திணை-பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

முன்னைமுன்னைநாட்டுறந்தவனவனியைமுதலானான்
றன்னைவந்தடைக்கலம்புகக்கொடுத்தமெய்த்தண்காவா
னென்னையென்னையெண்ணுவதினியினியவரென்கேள்கேள்
உன்னையந்தகாமதிக்கிலன்பிறருளருனக்கன்றே. (720)
இது முதலடியும் மூன்றாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) முன்னைமுன்னைநாட்டுறந்தவன் – தமையனை முற்காலத்து விட்டுநீங்கின வீடணன். தன்னைவந் தடைக்கலம்புக
முதலானா னவனியைக் கொடுத்த மெய்த்தண்காவான் – தன்னிடத்துவந்து சரணாகதியென்ன
அந்த மூத்தவனான இராவணனிலங்கையை அந்த வீடணற்குச் சொன்னபடியே கொடுத்த சத்தியவசனத்தையுடைய
திருத்தண்கா வென்னுந் திருப்பதியுள்ளான். என்னை – என்னுடையசுவாமி.
இனியவரென்கேள் – அவனுக்கினிய அடியவரு மென்சுற்றம். ஆகையால், கேள் அந்தகா – அந்தகனே ! கேட்பாயாக என்னை ?
எண்ணுவதினி – என்னைக்குறித்து நீ மே லெண்ணத்தகுங் கொடுவினைகள் யாது மில்லை. உன்னை மதிக்கிலன்,
பிற ருள ருனக்கு – உன்னை நான் மனத் தச்சப்பட்டு மதிப்பது மில்லை ;
உன்கொடுவினைக்குத் திருத்தண்காவானடிய ரல்லாத பிறருண் டென்றவாறு.

அன்று – அசை. முன்னை – தமையனை. என்னை – என்சுவாமி. என்னை – யாதுமில்லை. இனி – மேல்.
முதலானான் – மூத்த இராவணன். வீடணனாகிய அவனுக்கெனக் கூட்டுக. துறந்தவன் – வினைப்பெயர்.
திணை – வஞ்சி. துறை – நெடுமொழிவஞ்சி.

முண்டகமுண்டகநெகுகோடுறுமேதிமேதிகளே
முற்றுமுற்றும்
வண்டிமிர்காவியுமேயுமரங்கத்தானருட்கிலக்கா
மகிழ்நர்வாய்மைத்
தொண்டமைபாணரைக்கன்னுவாயிலின்கட்கரிக்கலம்போற்
றோன்றநம்மிற்
கண்டனங்கண்டனம்புரைமென்மொழிநடையெங்கையாயர்தற்
காதகாத. (721)
இது முதலடியும் நாலாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) தாமரையைமேய்ந் துள்ளமகிழப்பட்ட கொம்பினை மிக்க வாயுதமாகவுடைய எருமைகள்,
அதன்மேலு மின்புற்று, எல்லாநாளும் வண்டுக ளாரவாரிக்கு நீலோற்பலத்தினையும் மேயுந்
திருவரங்கத்தா னருட்கிலக்காம் நம்முடைய தலைவர்க் குண்மையாகத் தொண்டுபா டமைந்த பாணரை,
இன்று கன்னவாசலிற் கரிப்பானைபோல நம் மில்லத்துவாயிலின்கட் டோன்றவுங் கண்டனம் ;
இங்ஙனங் கண்டது நமக்குத்தக்கதாயினும், தோழீ ! பாகினையும், அன்னத்தினையும்போன்ற மெல்லிய மொழியினையும்
நடையினையு முடைய எங்கையர்காணில் அந்தோ ! வருந்துதற் கேதுவரதலா லிது தகாததா மென்றவாறு.
இன்று என்பதனோடு பிறவுஞ் சொல்லெச்சங்கள் வருவித்துரைக்க. பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – பாணனைப்பழித்தல்.

பத்தர்தீவினைப்பற்றறுத்தருள்பரம்பரன்மாயோ
னித்தனின்றவூர்வரைமயிற்களிநிரைத்தெழுகாந்த
ளத்தமத்தம்வமபடர்முலைமுலைமொழிநகைவேய்வேய்
முத்தமுத்தமவிலவிதழிதழ்குழன்முருகார்கார். (722)
இது கடையிரண்டடியும் மூன்றிடத்து மடக்கு.

(இ-ள்) பத்தரிடத்துப் பழையதீவினையாலடைந்த ஆசைகளைத் தீர்த்துக் கருணைசெய்யும் மேலாகிய பரமனாகிய
மாயோன் அழிவில்லா தான் அவனது நின்றவூரென்னுந்திருப்பதியைச் சார்ந்த வரையிடத்து மயில்போலுஞ் சாயலையுடையாட்கு,
தோழீஇ! வண்டுகள் கூண்டெழு தலையுடைய காந்தள்போலும் கை ; பொன்மலைபோலும் கச்சையறுக்கப் படாநின்ற முலை.
முல்லையென்னும் பண்போலும் மொழி ; வடத்தி னிரைத் தணியப்பட்ட வேய்முத்தம்போலும் நகை;
நல்ல இலவம்பூப் போலும் அதரம்; பரிமளிக்கப்பட்ட முகில்போலும் குழ லென்றவாறு.

இதனுள் அத்தமென்றது பொன்மலை ; “அத்தம்மனையகளிற்றந் நகர்” என்றார் முனிவரும். முலையென்பது இடைக்குறை ;
“முலையணிந்த முறுவலாள்” என்பதுபோலக் கொள்க. முருகார்கார் அற்புத வுவமை.
தோழீயென்னும் முன்னிலை எச்சம். பகுதி- சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.

கண்டனனொண்பொருளேமெய்ப்பொருளெனலுமுயிருளதாக்
கழிந்தயாக்கை
மண்டலமண்டலம்புரந்தமாவலிமாவலிமுழுது
மாற்றமாற்றங்
கொண்டறல்கொண்டறலிமையோருறவுறவேசிறைவைத்த
கொண்டல்கொண்டல்
வெண்டிரைமுத்தெறிமயிலைமடமயிற்கெப்படிபிரிவை
விளம்புவேனே. (723)
இஃ திடையிரண்டடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) பொன்னாகியநல்லபொருளே பொய்யில்லாப் பரப்பிரமமாகிய பொருளென்று வியந்துகூறலும்,
உடனே உயிருண்டாயிருக்கவும் உயிர்நீங்கப் பொலிவுநீங்கியிருக்கும் யாக்கையாக அவள்யாக்கையைக் கண்டனனென்றால்,
வட்டத்தையுடைத்தாய் அணுச்செறிந்த பூமியை யாண்ட மாவலியுடைய பெரியவலிமுழுதும் மாற்றும்படிக் கவனோடு மாற்றங்கொண்டு,
அவன்பெய்யு முதகத்தையேற்றுத் தேவர் கலியாண மெய்த மிகவும் அவனைப் பாதாளத்திற் சிறைவைத்த
காளமேகம்போலு நிறத்தையுடையானது, கீழ்காற்றானது கடலிற் றிரையெடுத்த சங்கு மிப்பியு மீன்ற முத்துக்களைத்
திரையோடுங்கூடிக் கானலிலெறியுந் திரு மயிலாபுரியில் மடப்பத்தோடுங் கூடிய மயில்போலுஞ்
சாயலையுடையாட் கென்பிரிவை, தோழீஇ! யா னெவ்வாறுரைப்ப லென்றவாறு.

இதனுள், மாவலி – அவுணன். மாவலி – பெரிய பெலம். மாற்ற- நீக்க. மாற்றங்கொண்டு – மாறுபாடுகொண்டு.
அறல்கொண்டு – உதகத்தைக் கையிலேற்று. அற லிமையோருற – தேவர்கள் கலியாண மெய்த. உற – மிகவும்.
கொண்டல் – மேகம். கொண்டல் – கீழ்காற்று. தோழீ யென்னு முன்னிலை எச்சம். பகுதி – பொருள்வயிற்பிரிதல்.
துறை – வாட்டங்கூறல்.

கவளக்கரிக்கன்றுதவியமால்கடிகைச்சிலம்பிற்கடிபொழில்வாய்த்
தவளத்தவளத்தளவமுகையாம்பலாம்பல்சமன்வாய்வாய்
துவளத்தனிநுண்ணிடையமிர்தந்துடியேய்மடந்தாய்நின்கருங்கட்
குவளைக்குவளைக்குலஞ்செறிகைக்கைக்காந்தளிற்கூட்டமதென்னென். (724)
இஃ திரண்டாமடியும் நாலாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) கெசேந்திரனுக் குதவிய மாயோன் றிருக்கடிகைச்சிலம்பில் விளங்கிய சோலைவாய் வெண்மை
நிறத்தோடுங்கூடிய அழகாகிய வளத்தை யுடைய முல்லைமுகைபோலப் பல்லையும், சேதாம்பல்போல வாயையும்,
அமிர்தத்தையுந் துடியையும்போல மொழியையு மிடையையு முடைய மடந்தையே !
நினது கண்ணாகிய குவளைக்கு, வளையினது கூட்டஞ் செறியுஞ் செய்கையையுடைய கையாகிய காந்தளோடுங்
கூட்ட முண்டானகிரியைக் கேது யாதென்று கூறுவாயாக வென்றவாறு.

யாதென்பது ஐயவினாவாகலால், காமனது அறுதிப்பாணமாகிய கண்ணென்னும் நீலம் என்னுயிரைக் கொல்லாமைக்
கெண்ணியோ பிறிதொன்று கருதியோ வென்றவாறு. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – நாணிக் கண்புதைக்க வருந்தல்.
இவையாறு மீரடி மூன்றிடத்துமடக்கு. இனிமூன்றடிமூவிடத்துமடக்கு வருமாறு :-

குன்றாவின்குன்றாவின்றுயர்க்குயர்நன்குடைக்குடைக்கொள்
கோமான்கோமா
னன்றாமன்னன்றாமன்னுலகமுழுதுழுதுயர்தீர்
நாதன்வார்வார்
நின்றானைநின்றானையுடன்வருகவருகவெனா
நேமிநேமி
யொன்றால்வல்லிடங்கரைக்கொன்றருள்புரிகாரரங்கனென
துள்ளத்தானே. (725)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) குறைதலில்லாத இனிமைகளைத்தரும் மலையைப் பசுக்களின்றுன்பத்திற் குயர்த்திய நன்மையுடைய
குடையாகக் கைக்கொள்ளுந் தலைமையையுடையோன், பூமிதேவியிடத்து நட்புடைத்தாங் கொழுநன்,
பிரமகற்பங்கூடும் அந்தியகாலத்து ஏகோதகப்பிரளயம், நிலைபெற்ற உலகமனைத்தையும் கிளைத்தெழ அதனு ளழுந்துந்
துயரத்தைத் தீர்த்துத் திருவுதரத்துள் வைத்த சுவாமி, நீண்டொழுகிய நீரின்கண்ணின்று ஆனைநின்கைச்சக்கரத்தோடும்
வருக என்னையுடையவனே யென்றழைப்பச் சென்று, வட்டத்திகிரியொன்றினான் மிடுக்கையுடைய முதலையைக் கொன்று
யானையினுயிரைக் காத் தருள்செய்த காளமேகம் போலத் திருமேனியையுடைய அரங்கன் என்னிதயத் திருப்ப னென்றவாறு.

எனவே, எனக் கியாதுகுறை? ஒருதுன்பமு மில்லை யென்பது பயனாம்.
இனிமை – காட்சிக்கினிமையும், பலமூலாதிகளைத் தருதலும்.
கோமான் – தலைமையையுடையோன். கோமான் – பூமிதேவி. நன்றாம் -நட்பாம். வார்வார் – ஒழுகும்நீர்.
நின்றானை – நினது சக்கரப்படை. அருக – உடையவனே. நேமி – வட்டம். திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.

வாக்கினால்வாக்கினாலாரணனாரணன்மலராண்மன்னன்மன்ன
னாக்கம்யாவையும்புகழ்செந்தமிழ்மாறன்றுடரியிலென்னன்பாநண்பா
தாக்கர்தாக்கரந்தையுறத்தாக்கணங்குமணங்குநுதித்தாரைதாரை
நோக்கினாணோக்கினாணெனையகன்றதகன்றதுளனோயுநோயும். (726)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) என்னிடத் தன்பாம் நண்பனே ! தனது திருப்பவளத்தினி லுண்டான நாலுகவிகளாலும்,
வேதாந்தத்துட்பொருளாம் நாராயணனாகிய தாமரையாள்தழுவும் நல்லமன்னன்செல்வமுழுவதும் வாழ்த்துஞ் செம்மையையுடைய
திருவாய்மொழியாகிய தமிழையுடைய காரி மாறப்பிரான் றுடரிமலையினிடத்துப் பொருவார்போர் துன்பமுறும்படி பொரும்
வீரமாகாளியுங் கண்டால் வருத்தத்தையெய்தும் வாளின் வாய்க்கூறுபோலக் கொலைபுரியுங்கண்ணோடுங்கூடிய
அழகினையுடையா ணோக்கத்தா லெனதுநிறையினது தலைமை யென்னைவிட்டுநீங்கியது ;
எனதுள்ளம் தளராநின்றது ; காமநோயும் மிகுந்த தென்றவாறு.

வாக்கு – திருப்பவளம். நாலுவாக்கு – ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரமாகிய நாற்கவி. மன் நன் – தழுவும் நல்ல.
மன்னன் – தலைவன். ஆக்கம். சொரூப ரூப குண விபூதிகள். தாக்கு – படை. அரந்தை – துன்பம். தாரை – கண்.
நோக்கு – அழகு. ஆண் – தலைமை. நுதி – ஆகுபெயர். தாக்கரந்தையுற எனப் பொருந்தாரெய்துந் துன்பம் போரின்மே லேற்றப் பட்டது.
என்னை? “வேண்டும்பனுவற்றுணிவு” என்பதுபோலக் கருத்தாமயக்கம் பகுதி – பாங்கற்கூட்டம். துறை – உற்றதுரைத்தல்.

மருணயனமருணயனம்பாலளித்தவளித்ததல்லான்மழலைவாய்வாய்
தருநகையீதருநகையீதருஞ்சோலைமலைமலைநத்தான்றனான்றன்
முருகவிழ்பூமகளுலகிற்கருணோக்குநகையுமெனுமுறைபோலென்றா
லொருதலையன்றொருதலையன்றிங்காமிக்காமிக்கையுள்ளேயுள்ளே. (727)
இஃதீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) நெஞ்சமே ! இம்மழலைமொழியையுடையாளது மருட் பார்வையோடுங்கூடிய கண்கள் அருட்பார்வையோடும்
ஆனந்தத்தை நம்மிடத்திலே தந்த கருணையையுடைத்து ;
அதுவுமன்றியே இவள் வாயிலுண்டாகிய இக் குறுநகையும் பெறுதற்கரிய மகிழ்ச்சியைத் தரா நிற்கும் ;
இவையிரண்டும், திருமாலிருஞ்சோலைமலையில்வாழ்பவனாம் போரையுடைய பாஞ்சசன்னியத்தையேந்துவான்றன்
பாரியாகிய மிகுந்த மதுவைச் சொரியுந் தாமரையாள் உலகத்துயிர்கட் குதவும் அருணோக்கும்,
திருநகையும் கொடுக்கும் பேரின்ப மெப்படியோ அப்படி யென்னும் முறையேபோ லென்றா லும்மைதொடுத் திவ்வுலகின்
கண் ணாமிவளைவிரும்பும் இவ்விருப்பம், ஒருதலையிலுள்ளதல்ல, இருதலையிலு முள்ளதென்பது நிச்சயமென்று விசாரிப்பாயாக என்றவாறு.

உள்ளே – நெஞ்சமே. உள் – விசாரிப்பாயாக. அருணயன் – அருட் பார்வையோடுங்கூடிய ஆனந்தம்.
அளித்த அளித்து – தந்த கருணையை யுடைத்து. ஈது – இதுவும். தருநகை – உண்டாய புன்முறுவல்.
அருநகை – பெறுதற்கரியமகிழ்ச்சி. அன்று – கழிபிறப்பில். இருதலையுமுள்ளதென்பது எதிர்மறைச்சொல்லெச்சம். ஏகார மீற்றசை.
பகுதி – இயற்கை. துறை – குறிப்பறிதல்.

மானனையாளிணைமென்றோளணியிழாயரங்கேசன்
மலரோன்றன்பாற்
பானலம்பானலம்புரிவோருயிருயிர்ப்பானிகல்விளையாப்
பாலன்பாலன்
பானிரையானிரைக்கடுக்கல்கவிகவிகைப்புயலரவி
னாடியாடி
தேனிறைதேனிறைத்தெழுபொன்னியுட்போதுபோதுமுகஞ்
சிவணாவேய்வேய். (728)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) அழகியபூணினையுடையாய் ! என்னால் விரும்பப்பட்ட மான்போலுநோக்கினையுடையா ளுபய மெல்லிய தோள்களானவை,
துளை பொருந்தா மூங்கில்போலும் ; முகம், திருவரங்கத்தீசன், பிரமனாகிய மூத்தபிள்ளையிடத்தும்,
பூலோகத்தின்பத்தைவிரும்பினோரிடத்துத் தாமரை முதலிய பூப்பாண நான்கினையுந் தொடுத்தபின்னர் நீலோற்பலமாகிய
அறுதிப்பாணத்திற் கைவைப்பதல்லால் அப்பாணத்தை விரும்பியவின்பம்பெறாது வருந்துவாருயி ருடலைவிட்டு
நீங்கும்படிக்குத் தொடுத்துப் போர்செய்தறியா மன்மதனாகிய இளையபிள்ளையிடத்தும் அன்புசெய்வான்,
கன்மாரியாற்கதறப்பட்ட பசுக்களினிடரைத்தீர்த்தற்கு மலையைக் குடையாகக்கவிக்கப்பட்ட காளமேகம்,
பாம்பினை யரங்காக நாடி யாடப்பட்டவனது (பொன்னியுட்போது தேனிறை தேனிறைத்தெழுபோது)
காவிரியுளுண்டான வண்டுகள் தங்கு மதுவை யொழுக்கியோங்குந் தாமரைப்பூப்போலு மென்றவாறு.

இது, வேய்சிவணாவேய் எனவும், பொன்னியுட்போது, தேனிறை தேனிறைத்தெழுபோது எனவும் பாடமாற்றினவாற்றாற்
கொண்டு கூட்டுப்பொருள்கோளாயிற்று. ஒழிந்த அரும்பதங்களு முரையிற் கொள்க.
என்னால்விரும்பப்பட்டவென்பது சொல்லெச்சம். பகுதி – சேட்படை. துறை – அவயவங்கூறல்.

மதுமதுகையினுணவளிமகிழ்மகிழ்முனிவரைமயில்குழல்வான்வான்
விதுவிதுவெனவொளிதருமுகமயிலயில்விழிமொழிகுயில்வாய்வா
யதுவதுவையமரைமுகைமுலைமுலைநகையறனுரைதெளிவாயாய்
முதுமுதுவருமிலவிதழிதழெனலொடுமொழிவதுவயிறாலால். (729)
இது நாலடியும் மூன்றிடத்தும் முற்றுமடக்கு.

(இ-ள்) தேனை யுரனுடனுண்ண வண்டுகள்விரும்பும் வகுள மாலிகைமுனிவன் றுடரிமலையினிடத்து
மயில்போலுஞ்சாயலையுடைய யாட்கு நண்பனே ! குழலானது விசும்பின்கண்ணுறையுங் காளமேக மென்பதாம் ;
முகமானது உதயமதியை இதுவென்று கண்டார் கூறும்படிக் கொளியைத் தருவதாம் ; விழியானது கூரிய வேலையொக்கும் ;
மொழியானது குயிலின்வாயில் மொழியதனை யொக்கும் ; முலையானது மணத்தையுடைய தாமரைமுகுளத்தையொக்கும் ;
நகையானது முல்லையரும்பையொக்கும் ; அதரமானது, அறத்தைக்கூறு நூல்களினுரையைச் சந்தயமற ஆராயுந் தலைமையை
யுடைய அறிவினான்மூத்தோர் இலவம்பூப்போலு மென்பதனோடும், வயிற்றிற் குவமைசொல்வது கொம்பரினின்றசையு மாலிலையேயா மென்றவாறு.

மதுகை – உக்ரம். வான் – மேகம். இது – சுட்டு. அயில் – கூர்மை. வாய் – வசனம். அது – சுட்டு. வதுவை – மணம். மரை – தாமரை.
முலை – முல்லை. ஆய் – ஆராய். முதுவரும், உம்மைசிறப்பு. இதழ் – பூவின்றோடு.
ஆல் – அசையப்பட்ட. முல்லை, ஆல் முதலிய ஆகுபெயர். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.
முன்னிலை தோன்றா எழுவாய்.

ஆக வகை யேழினால் இடைவிடாமடக்கு நூற்றைந்தும் அடைவே வந்தவாறு கண்டுகொள்க.
வகையேழாவன :- அடிமுதன்மடக்கு-15. அடியிடைமடக்கு-15. அடியிறுதிமடக்கு-15.
ஆக அடிதொறும் ஓரிடத்துமடக்கு-45. முதலொடிடைமடக்கு-15. முதலொடுகடைமடக்கு-15. இடையொடுகடைமடக்கு-15.
ஆக அடிதொறு மீரிடத்துமடக்கு-45. அடிதொறு முதலிடைகடை மூன்றிடத்துமடக்கு-15.
ஆக வகையேழினால் மடக்கு நூற்றைந்தும் இடைவிடாமடக்கு.

262.ஏனையதாமுமிதனதென்பெறுமே.
(எ-ன்) ஒழிந்த இருவகைமடக்கிற்கும் தொகையுணர்-ற்று.

(இ-ள்) ஒழிந்தனவாம் இடைவிட்டுவருமடக்கும், இடைவிட்டும் விடாதும்வரு மடக்கும் ஆகிய இரண்டுங்கூறிய
இவ் விடைவிடாமடக்கே போல எழுவகையாய் ஒரோவொன்று நூற்றைந்து நூற்றைந்தாந் தொகைபெறு மென்றவாறு.

ஆக மூவகைத்தா யெழுதொடையான் மூன்றிடத்தான் மடக்கு முந்நூற்றொருபத்தைந்தா மென்பது பெற்றன.
அவையு மிம்முறையே கூறுகிற் பெருகும். அவற்றுள்ளுள்சில வருமாறு :-

வாமனன்மழவிடையினான்பாற்கடல்வழங்கு
வாமனன்புகழ்கள்வன்வைகுந்தைமாதவனாம்
வாமனன்றனையிடைவிடாதுணர்வினுள்வைப்பான்
வாமனன்னமக்கெளியதாமும்பர்வைகுந்தம். (730)
இஃ திடைவிட்டுவந்த அடிமுதன் முற்றுமடக்கு.

(இ-ள்) பறந்துபாயும் அன்னத்தையுடைய பிரமனும், இளைய இடபத்தையுடைய சிவனும்,
திருப்பாற்கடல்பெற்றுத்தரப்பட்ட அயிராவதத்தை யுடைய இந்திரனும் என்னும் மூவரும் வழுத்துங் கள்வனென்னுந்
திருநாமத்தோடும் வைகுந்தைமாதவனாகிக் குறளுருவான வன்றன்னை விட்டுநீங்காது ஞானத்தினா னினைக்கும்
படிக்குப் புலாதி களிற்போகாது என்னோடுங்கூடி வருவாயாக மனனே !
அங்ஙனம் நினைத்தாற் பெறுதற்கரியவா மெல்லாப்பதத்திற்கும் மேலாய பரமபதம் நா மெய்துதற் கெளியதா மென்றவாறு.
திணை- பாடாண். துறை – கடவுள் வணக்கம். ஓம்படையுமாம்.

வாசநாண்மலர்வண்டுகள்வாய்விடாவகையுண்டு
மூசியேழிசைவண்டுகள்களிமுகிற்குழலாளைப்
பூசன்மாமதன்வண்டுகள்பொரத்துழாய்புல்லாணி
யீசனல்கிலன்வண்டுகளிறைதுறந்தெழுமன்னோ. (731)
இஃ திடைவிட்டுவந்த இடைமுற்றுமடக்கு.

இதனுள், நாண்மலர்வண்டுகள் என்றது, பருவத்தின்மலர்ந்த பூவின் வளவிய தாதுக்கள் என்பதாம்.
பூசன்மாமதன்வண்டுகள் எ-து பஞ்சபாணங்கள் என்பதாம்.
வண்டுகளிறைதுறந்தெழும் எ-து சங்குகள் முன்கையைவிட்டு நீங்கும் என்பதாம். ஒழிந்தனவு முரையிற் கொள்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டு கைசோர்தல்.

மறைபயின்றவண்டமிழ்முனிகுருகையின்மன்காவெ
யிறைவர்பின்னர்நெஞ்சகன்றதுகன்றிடத்திரங்காவே
யறையிலிங்கிணையாமெனவுயிருணவங்காவே
யுறைபுரந்தகண்மலர்களுமொல்லையுமுறங்காவே. (732)
இஃ திடைவிட்டுவந்த கடைமுற்றுமடக்கு.

(இ-ள்) சுருதிகூறியவுரையொடும்பொருந்திய திருவாய்மொழியைப் பாடித்தந்த சீபராங்குசமுனிவன்
குருகாபுரியினிடத்து நிலைபெற்ற சோலைகளே ! நின்னிற்பிரியேனெனப் பிரிந்த தலைவர்பின்னே யென்னெஞ்சமானது,
ஈன்றணிமைப்போதில்விட்டுநீங்கின கன்றின்பின் செல்லு மீற்றாவே சொல்லுமிடத் தொப்பென்பதாக அகன்றது ;
அதனாற் றனியிருந்தவுயிரையுண்பான் றனது துளையாகிய வாயை அங்காக்கப்பட்ட ஆயர்வேய்ங்குழல் தருவதாந்
துளிகளையுடைய கண்ணாகிய குவளைகளு மெனதுவசமாகச் சிறுவரையுந் துயில்கில வென்றவாறு.
ஆதலான் மேல் யாதுசெய்வே னென்பது பயன். பகுதி – இரவிற்குறி. துறை – காமமிக்க கழிபடர்கிளவி.

தாமாலமாலமருமென்றமாலமால
நாமாலமாலநளிநீர்கடமாலமால
தேமாலமாலகரிசேர்மலர்மாலமால
மாமாலமாலமலதாளுளமாலமால. (733)
இஃ திடைவிட்டும் இடைவிடாதும்வந் திடையு மிறுதியும் நாலடியும் முற்றும் மடக்கியது.

(இ-ள்) தாமாலம் – அண்டத்தையெல்லாந் தட்டழித்துண்டு கடக்கும் மிக்க பிரளயத்தில்.
ஆல் அமரும் – ஆலமரத்தினிடத் துற்பவித்துத் தங்கும். மென்றமாலமால – மெல்லிய இலையிற் றுயிலுதலுடைய.
நாமாலமால – அச்சத்தைத் தரப்பட்ட நஞ்சம்போலுங் கருமையையுடைய.
நளிநீர்கடமால மால – செறிந்த நீராங் கடலைக் கடக்கப்பட்ட பெருமையொடுங் கூடிய மற்கடமாருதத்தையுடைய.
தேமால – தேன்றுளும்ப. மா – வண்டுகள். லகரிசேர் – அதனையுண்டு களிப்பைப்பொருந்தும்.
மலர்மால – தாமரைப்பூவிருப்பமாக. மால – பெரிய இல்லமாகவுடைய. மாமால் – திருமகள் மயங்கும்.
அமால் – அழகையுடைய மாயோன். அமலதாள் – அழுக்கற்ற திருவடிகளை. உளமால் – உள்ளத்திலேயுடையேமாகையால்.
அமால – அந்தப் புதனுக்கு, நெஞ்சமே ! யாஞ் சரி யென்றவாறு.

ஆலம் – மீமிசை. நளிநீர்கடமாலமால் – திருவடி. லகரி – ஆரியம். மால் – துயில் ; இஃதாகுபெயர்.
ஒடுக்கத்தில் அகரம் அசை. புதனுக்குச் சரியெனவே, ஞானமுடையேம் என்பதாயிற்று. திணை….. துறை…..

பொருநற்புனற்சங்கணித்துறையான்
புல்லர்களச்சங்கணித்துறையான்
வருநற்றுடரியுரிஞ்சென்றூழ்
வைகுந்தலைக்காவினுஞ்சென்றூழ்
நெருனற்றருமவ்வணங்குளவே
னெஞ்சேநினைத்துவணங்குளவே
தருநட்புளதுவருந்தேனே
தானேமறித்துவருந்தேனே. (734)
இஃ தோரடியை யிரண்டாகப்பகுத் தடிதொறும் நான்கடியும் ஈரிடத் திறுதி முற்றுமடக்கு.

(இ-ள்) பொருநையிடத்துப் புனல்வளமறாத சங்கணித் துறையை யுடையவன், அறிவில்லாதார் பொல்லாச்
சடத்து ளணித்தாகக் குடிகொண்டறியாதவன், அவனதங்கமாகிய துடரிமலைக்கொடுமுடி சென்று பரிசிக்கப்பட்ட
ஆதித்தன் றங்கியேகு முச்சியையுடைய சோலையினிடத் தின்ன முஞ் சிறிது முயற்சியொடுஞ்செல்ல
நேற் றூழொடுங்கூடி யவளைத் தந்த தெய்வ மின்று மிறவாதிருப்ப துண்டென்றா லதனை நெஞ்சமே !
நினைத் ததனுள்ளத்துறும்படி வணங்குவாயாக ; நேற்றைப்போலே என்னிடத்துக் கூட்டித்தரு நட்புடையதாம் ;
அத்தேன்போலு மொழியை யுடையாளு மாயத்தைவிட்டுநீங்கிக் கூடுவள் ; மீள வருந்துவேனல்ல வென்றவாறு.

இதனுள், சென்று என்பது செல என ஒருவினையெச்சம் மற்றொரு வினையெச்சமாயிற்று.
இதன்வேறுபாடும் அறிந்துகொள்க. பகுதி – இடந்தலை. துறை – பொழிலிடைச்சேறல்.

எட்டுமாதிரமாதிரமாதிரம்
வட்டமாறினுமாறினுமாறினும்
விட்டுவாமனன்வாமனன்வாமன
னிட்டர்மால்கடிமால்கடிமால்கடி. (735)
இது முதற்சீரொழித் தேனைமூன்றுசீரும் நான்கடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) அட்டகுலபருவதத்தையும், அட்டகயத்தையும், அட்டதிக்கையும், அவற்றையுடைய பூமியையும்,
இதன்கீழாயவுலகங்களையும், மேலாயவுலகங்களையும் ஏகோதகம் விழுங்குமாற்றா லின்னு மழியினும்
(அழியாதகாலத்திற்கும்) விண்டுவாகிய வாமனன், வாவும் அன்னத்தை யுடையவன், அழகிய மனத்தினுள்ளான்,
தன்னைவிரும்புவார் சித்தப் பிராந்தியைநீக்கும் மேகம்போன்ற திருமேனியன் ; விளக்கத்தையுடைய மாயோன்,
அவனே யுலகிற்குக் காவலாவா னென்றவாறு.

ஆல் – வெள்ளம். தின்னுமாறு – விழுங்குமாறு. இன்னும் – இன்னமும். மாறினும் – அழியினும்.
வாமனன் – வாவும் அன்னத்தையுடையவன். வாமனன் – அழகியமனன் (விகாரம்). இட்டர் – தன்னை விரும்புவார்.
மால் – பிராந்தி. கடி – நீக்கும். மால் – மேகம். கடி – விளக்கம். மால் – மாயோன். கடி – காவல்.
அழியினும் என்னுமும்மையால் அழியாக் காலத்திற்கும் அவனே காவலென்பது தானே போதரும்.
எட்டென்பதனை முதல் விளக்காக்கி மூன்றிடத்து மேற்றுக.
எண்ணும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்குநின்று விரிந்தன. இதன் வேறுபாடும் அறிந்துகொள்க.
திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.

263.பாதமனைத்துமடக்குதல்பழிதீர்த்
தோதியவனைத்தினுமுறுமழகுடைத்தே.
(எ-ன்) இன்னும் மடக்கலங்காரத்தையே யொருவழி வேறுபடுத்துக் கூறுகின்றது.

(இ-ள்) அடிக்கண்ணுள்ள சீர்முழுதும் மடக்கிவருதன் முன்னர்க் குற்றமறுத்துக்கூறிய
மடக்கனைத்தினும் மிக்கஅழகுடைத்தென்றவாறு.

அவை இரண்டடிமடக்கு, மூன்றடிமடக்கு, நான்கடிமடக்குமெனப்படும். அவற்றுட் சில வருமாறு :-

மறைகடந்தசொன்மாமகிழ்மாலைமான்
மறைகடந்தசொன்மாமகிழ்மாலைமா
னிறைசிலம்பினிலொண்ணுதனேத்திரத்
தறையுமங்கைக்கறைவலென்காதலே. (736)
இது முதலடியும் இரண்டாமடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) வேதத்தினந்தத்தைக்கடந்த (சொல்) கீர்த்தியையுடைய (மாமகிழ்மாலைமால்) பெரியபிராட்டி
விரும்பும் சொரூப ரூப குணங்களினியல்பையுடைய மாயோன்,
அவனது ரகசியங்களைச் சொல்லித்தந்த (சொல்) திருவாய்மொழியையும்,
(மாமகிழ்மாலைமால்) வண்டுசெறியும் வகுளமாலிகையையுமுடைய பெருமையையுடையான்
(நிறைசிலம்பினில்) சகலவளங்களு மல்கின துடரிமலையின்கண் ஒள்ளிய நுதலினையுடையாள்
தன்கண்களாற்சொல்லித்தந்த மங்கைக்குக் கூறுவ லெனதுவிருப்பத்தை யென்றவாறு.
பகுதி – மதியுடன்படுத்தல். துறை – குறையுறத் துணிதல்.

அஞ்சுவாளிவளைத்தழுவான்மதன்
மஞ்சுதோய்குழலீரெய்யமல்லைமால்
அஞ்சுவாளிவளைத்தழுவான்மத
னஞ்சமோமதியென்றுடனையவே. (737)
இது முதலடியும் மூன்றாமடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) மேகத்தினது கருமையைப்பொருந்தின குழலையுடையீர் !
வலியநஞ்சமோ சந்திரகிரணங்களென் றுடனையாநிற்ப வுள்ளம் அச்ச முறுவாளாகிய இவளை
அதன்மேலுந் துன்பக்கண்ணீரொழுகும்படிக்குக் காமன் பஞ்சபாணங்களையும் வில்லைவளைத் தெய்யவுந்
திருக்கடன் மல்லையின்மாயோன் றழுவுகில னென்றவாறு.

ஆகையா லிவனைக் கருணாகரனென் றுலகங்கூறுவ தியாது தரனென்பது பயன். பொருள்கோள் – கொண்டுகூட்டு.
மதி – ஆகுபெயர். மதன் நஞ்சம் – கொல்லும்வலியையுடைய நஞ்சம். ஓகாரம் வினா. இறுதிப்பயனிலை சொல்லெச்சம்.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

ஐயம்புகுமதனாலங்கஞ்சலித்துயர்வா
னுய்யும்படிக்கருள்கூருத்தமனாமாதவன்சீர்
வையம்புகழச்சிலர்வழுத்தாவாறென்னோ
ஐயம்புகுமதனாலங்கஞ்சலித்துயர்வான். (738)
இது முதலடியும் நாலாமடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) (நாலாமடி) பஞ்சபாணங்களைச்சொரியுங் காமனால் மேனிமெலிந் துள்ளத்தில் வருத்தமுற்ற சிவன் ;
இது வினைப்பெயர்.

(முதலடி) பிச்சைக்கு மனைதொறுஞ்செல்லு மஃதேதுவாகக் காசிக் கங்கைவடகரை யாகிய அவ்விடத்துத் தன்னை
யஞ்சலித்தபெருமையா லவனதுசாபந்தீரக் கருணையை மிகுத்த வுத்தமகுணத்தையுடைய மாதவனது கீர்த்தியை
யுயர்ந்தோர்புகழச் சிலமானிடர் வழுத்தாத தியாதுதா னென்றவாறு.

இதனுள், உள்ளமென்பன முதலாயின சொல்லெச்சம். அஞ்சலித்த வுயர்வா னென்னுமிடத்துச் செய்தவென்னும்
பெயரெச்சவாய்பாட்டீற்றின் அகரம் செய்யுள்விகாரத்தாற் றொக்கது ; என்னை?
“புகழ்புரிந்தில்லி லோர்க்கு” என்பதுபோலக் கொள்க. பின்னர்வந்த வுயர்வு – வருத்தம் ;
“உயர்வறவுயர்நலம்” என்பதனா லறிக. திணை – பாடாண். துறை – பரவார்ப்பழித்தல்.

தளைவிட்டார்மகிழ்மாறன்றன்வெற்பில்வான்
முனைவிற்போனுதலீருங்கண்முன்றில்வாய்
வளைவிற்கோமன்மதனம்படுக்கவோ
வளைவிற்கோமன்மதனம்படுக்கவோ. (739)
இது கடையீரடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) தளை…… விற்கோ-பாசமாகியவிலங்கைவிட்டு நீங்கினார்விரும்பும் மாறனென்னுந் திருநாமத்தையுடையவன்
வெற்பினிடத்து வானிற்றோன்று மிந்திரதனுப்போன்ற நுதலையுடையீர் !
உங்கள் முன்றிலின்கண், சங்குவளைவிற்கவோ? மன்மதனம்படுக்க – என்னிடத்து நிலைபெற்ற
விருப்ப மெனதறிவை யகப்படுத்தாநிற்ப. வளைவிற்கோ-வளைக்குங் கருப்புவில்லையுடைய பகையாகிய.
மன்மதனம் படுக்கவோ – காமன்றொடுக்கும் பூப்பாணங்களை நுமதுகுழற்கணியும் மாலையாகத் தொடுக்கவோ வென்றவாறு.

ஓகாரம் முதலு மீறும் வினா. இரண்டாவது அசை. கோ – பகை. பகுதி – குறையுறவுணர்தல்.
துறை – குறையுற்றுநிற்றல் ; பணிவிடை கிளத்தலு மாம்.

கார்வானமால்வரையாய்கட்டுரைகூறானொருவன்
சூர்வாரணத்தான்பொற்சூழியினாற்றோற்றஞ்சார்
சூர்வாரணத்தான்பொற்சூழியினாற்றோற்றஞ்சார்
போர்வாங்குசேயகலான்பூம்புனமென்செய்வதே. (740)
இஃ திடையீரடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) கார்வான……. னொருவன் – திருக்கார்வானத்துத் திருமால்வரையினுள்ளாய் ! ஒருவன் கட்டுரையுங்கூறுகின்றலன்.
சூர்வாரணத்தான் – பகைவர்க்குநோயைச்செய்யுங் கோழிக்கொடியனுமாய்.
பொற்சூழியினாற்றோற்றஞ்சார் – பொன்னினாற்செய்த முகபடாத்தோடும் பெருமைபெற்ற.
சூர்வாரணத்தான் – அஞ்சாத யானையையுடையனுமாய்.
பொற்சூழியினாற்றோற்று – பொலிவுபெற்ற சரவணப்பொய்கையினிடத்துப் பிறக்கப்பட்டவனுமாய்.
அஞ்சார்போர்வாங்குசேய் – சத்துருக்கள்போரை நீக்கும் முருகனையான்.
பூம்புனமகலான் – பூவையுடைய புனத்தைவிட் டகல்வதுஞ்செய்கின்றிலன்.
என்செய்வதே – இதற்கியான் யான் செயத்தகுவ தியா தென்றவாறு.

கட்டுரை – அழகியவுரை. வாங்கும் – நீக்கும், ஆல் அசை. பகுதி – குறைநயப்பு. துறை – குறிப்பறிதல்.

ஒருத்தல்வெற்புடையானும்பர்துற்றுணா
வருத்தமன்கடன்மாவனமேபுக
லருத்திநாண்மலர்கொயதறலாடியோ
வருத்தமன்கடன்மாவனமேபுகல். (741)
இஃ திரண்டாமடியும் ஈற்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) ஒருத்தல்வெற்புடையான் – அத்திகிரியினையுடையான்.
உம்பர்துற்றுணாவருத்த – தேவர்கள்பொசிக்கு மமிர்தத்தை யுண்டாக்கும் படிக்கு.
மன்கடல் – நிலைபெற்றகடலிற் கடைந்துபிறந்த. மா – திருமகளே ! வனமேபுகல் – புனலே புகலிடமாகிய.
அருத்திநாண்மலர் – கொய்தறலாடியோ – கண்டார்விரும்பும் பருவமலர்களைக்கொய்தோ? புனலாடியோ? அன்றி யாதானோ?
வருத்தமன்கடன் – உனது திருமேனிக்குத் தளர்ச்சியெய்தியமுறை.
மாவனமேபுகல் – பெருமைபெற்ற அன்னம் போலு நடையினையுடையாய் ! கூறுவாயாக வென்றவாறு.

துற்றுணா வினைத்தொகை. வருத்த – உண்டாக்க. மா அண்மை விளி. வனம் – தண்ணீர் ; நந்தவனமுமாம்.
புகல் – புகலிடம். அருத்தி – விருப்பம். நாண்மலர் – பருவமலர். ஓகார மிரண்டிடத்துங் கூட்டுக.
கடைந்தென்பதும், திருமேனியென்பதும் முதலாயின சொல்லெச்சம். பகுதி – முன்னுறவுணர்தல்.
துறை – வாட்டம்வினாதல். இவையாறும் ஈரடி முழுதுமடக்கு.

இனி மூன்றடி முழுதுமடக்கு வருமாறு :-

காவியங்கணல்லார்படிகாவிரி
காவியங்கணல்லார்படிகாவிரி
காவியங்கணல்லார்படிகாவிரி
வாவியும்புடைசூழரங்கேசனென்மனத்தான். (742)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) வாவியும் – வாவிகளும். விரிகாவியங்கணல்லார்படி காவிரி -மலர்ந்த நீலோற்பலம்போலும் அழகிய கண்ணையுடைய
மகளிர் புனல் குடையுங் காவிரியும். விரிகாவியங்க ணல்லார் படி கா – அறமுதலிய நாற்பொருளுங் குறைபாடின்றிப்
பரந்த காப்பியங்களை நல்லோ ரிருந்து கற்பனசெய்யுங் காவும். படிகா – ஊரைக்காக்கப்பட்ட.
காவியம் – வாரினாற்கட்டித் தோளிற் காவிய வாச்சியங்கள். அல் ஆர் கண் – இரவின் கண் ணாரவாரிக்குமிடங்களும்.
புடை…… மனத்தான் – பக்கமெல்லாஞ் சூழப்படாநின்ற திருவரங்கேச னென்மனத்துளா னென்றவாறு.

இதனுள், சூழ், படி, படி, விரி, விரி என்பன இறந்தகாலமு நிகழ்காலமுங் கரந்துநின்ற பெயரெச்சவினைத்
தொகைவாய்பாடு. “எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற், பிற்படக் கிளவா முற்படக் கிளத்தல்” என்பதனாற்
காவிரியும் காவும் அல்லார்கண்ணும் என்பனவற்றிற் கும்மைகொடாராயினார்.
திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம். பா – கலித்தாழிசை ; என்னை?
“அந்தடி நீண்டிசைப்பிற், கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்” என்பவாகலான்.

(செய்யுள்)
“வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங்,
கேள்வரும் போதி னெழால்வாழி வெண்டிங்காள்,
கேள்வரும் போதி னெழாலாய்க் குறாலியரோ,
நீள்வரிநாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்” என்பதிற் காண்க.
இது விதலை யாப்புப்பொருள்கோள்.
“அணியுமமிழ்தும்” என்னும் பாட்டில்
மின்னும், பணியும் புரை மருங்குற் பெருந்தோளி படைக்கண்கள், பிணியுமதற்கு மருந்தும் பிறழப்பிறழ என்பதனாலறிக.

ஆமோதமுந்துவரிவண்டுகணீர்
தாமோதரன்றஞ்சையர்க்கோதில்வண்டேன்
ஆமோதமுந்துவரிவண்டுகணீர்
ஆமோதமுந்துவரிவண்டுகணீர். (743)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) ஆம் ஓதம்உந்து உவரிவண்டு உகள் நீர் – (இது முதலடி முற்றும்) ஆக்கஞ்செய்வதாந் திரை கரையிலெறியும்
சமுத்திரத்திற் சங்குதவழும் புனலையுடைய வாவியில். வண்தேன் ஆமோதமும் து – வளவியதேனையும், பரிமளத்தையு முண்ணும்.
வரிவண்டுகணீர் – பாட்டையுடைய வண்டுகளே ! நீர்.
மோதமுந்து உவர் இவ்வண்டுகள் – என்னைப் பொர என்முன்னெதிர்ந்த (உவராகிய) காமனாரும்,
இப் பஞ்ச பாணங்களும் என்னை வருத்து மிதனை. தாமோதரன் றஞ்சையர்க் கோதில் – தாமோதரனது திருத்தஞ்சை
யிலுள்ளாராய தலைவர்க்குரைப்பீராகில். நீராம் – (நாலாமடியீறும் முதலும்) உமக்கு நல்லதா மென்றவாறு.

ஆம் – ஆக்கஞ்செய்யும். ஓதம் – திரை. உந்து – எறியும். உவரி – சமுத்திரம். வண்டு உகள் – சங்குதவழ்.
நீர் ஆகுபெயர். ஆமோதம் – பரிமளம். து – உண். “எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற்,
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்” என்பதனால் வண்டேனென்பது

உம்மையில்சொல்லாய் முன்னின்றது. வரி – பாட்டு. வண்டுகள் ! அண்மைவிளி. உவர் முன்னிலைச்சுட்டுப்பெயர்.
வருத்துமிதனை யென்பது சொல்லெச்சம். பொருள்கோள் – மாட்டுறுப்பு. பகுதி – இரவுக்குறி. துறை – காமமிக்ககழிபடர்கிளவி.

நாகவரையானளியமலருள்ளா
னாகவரையானளியமலருள்ளான்
பாகவதர்தம்பிரான்பாமாறன்றம்பிரா
னாகவரையானளியமலருள்ளான். (744)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) புலவீர்காள் ! பாம்பையணியும் அரையையுடையசிவன், வண்டுறுதலையுடைய தாமரையையிடமாகவுடைய
பிரமன், பொன்னுலகின தெல்லையையுடைய இந்திரன், கருணையையுடைய அழுக்கற்றோ ரென்னு மிவர்களுள்ளத்திற்
குடிகொண்டிருப்பான் ; (நளியமலருள்ளான். நாலாமடியீறு) செறிந்த அழுக்குடையோரைத் திருவுளத்தானினையான் ;
அவன் யாரெனில்? பாகவதர்தம்பிரானாகிய பாமாறனுக்குத் தம்பிரானாகிய அத்தகிரிநாத னென்றவாறு.

புலவீர்கா ளென்னு மெழுவாய்முன்னிலை யெச்சம். அவனை மனமொழிமெய்களி னினைந்து
வாழ்த்தி வணங்க அறமுதலிய நாற்பொருளும் பயக்கு மென்பது கருத்து.

சிலைநுதாலொழிதேடுதல்பார்சுலா
மலையுமாரமணியாவரிவளை
மலையுமாரமணியாவரிவளை
மலையுமாரமணியாவரிவளை. (745)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) (நாலாமடியீறும் முதலடிமுதலும்) வரிவளைசிலைநுதால் – நாரினால்வரிவனவாய் வளையப்பட்ட
விற்போலு நுதலினையுடையாய் !
(முதலடியீறு மிரண்டாமடிமுதலும்) பார்சுலாம் அலையும் – பூமியை வளைக்குங் கடலும்.
(இரண்டாமடியீறும் மூன்றாமடிமுதலும்) அரி வளைமலையும் – குரங்குகள் சூழப்பட்ட பருப்பதமும்.
(இரண்டாமடி மூன்றாஞ்சீரிறுதி) ஆ – தம்மிடத்துண்டாக்கப்பட்ட.
இரண்டாமடியில் ஆரமணி, மூன்றாமடியீற்று வரிவளை, நாலாமடியில் ஆரம் – முத்தையும் மாணிக்கத்தையும்
சங்குகளையும் சந்தனத்தையும். அணியா அணியா – அழகுபெற அணிவனவல்ல.
ஆகையால், நீபெற்ற இவளு முனக் கந்நீர்மையளென்பதறியாதே தேடிப் பின்றொடர்ந்து வருதல்,
(மலையுமார என்பவற்றை ஆரமலையுமெனப் பாடமாற்ற) உலகியற்கு மிக மாறுபடுமென்றால்.
(முதலடி) தேடுதலொழி – தேடுதலை யொழிவாயாக வென்றவாறு.

இதுவும் மாட்டுறுப்பு. இதனுள்ளுஞ் சொல்லெச்சங்கள்வந்தனவுங் காண்க. பகுதி – உடன்போக்கு. துறை – உலகியலுரைத்தல்.

ஆனகமலனயனத்தானத்தா
வானகமலனயனத்தானத்தா
வானகமலனயனத்தானத்தா
வானகமலனயனத்தானத்தா (746)
இது நான்கடியும் ஏகபாதமாக முற்றுமடக்கு.

(இ-ள்) ஆல் நகம் மலல் நயனத்தானத்தா – ஆலந்தளிராகிய பாம்பினை வளப்பத்தையுடைய திருக்கண்டுயிலிடமாகவுடையவனே !
ஆல் நகு அமல நத்து ஆன அத்தா – வெள்ளத்தினிடத்துமிளிரும் அழுக்கற்ற சங் கிருப்பான திருக்கையையுடையவனே !
ஆனகமலன் அயன் ந தானத்தா – உனதுந்தியிற்றோன்றின தாமரையானாகிய ஆதிப்பிரம னில்லையாக
மீளவும் பெற்றளித்த கொடையினையுடையவனே !
*வான கமல னயன் – ஆகாயத்தாகிய கங்கையைத்தரித்தவனாஞ் சிவன் மூதாதையே !
நத்தானத்தா – சிறப்புடைய முக்கியத்தானமாகிய பரம பதத்தையுடையவனே !
இடைச்சொல் ந-சிறப்புப்பொருட்டு. (இரண்டாமடியில்) நய – என்னை ஆட்கொள்ள விரும்புவாயாக வென்றவாறு.

ஆல் ஆகுபெயர். நகம் – பாம்பு (விகாரம்). மலல் இடைக்குறை. நயனத்தானம் – துயிலணை.
ஆல் – வெள்ளம். நகு – மிளிர். அமலம் – அழுக்கற்ற. ஆன – இருப்பான.
(மூன்றாமடியில்) ந-இல்லை. ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

* இவ்வடிக்கு, ஆனகமலனயன் நத்து ஆன் அத்தா – பிரமன்விரும்பிக் கவர்ந்த ஆன்வடிவெடுத்த அத்தனே ! எனினு மமையும்

264.ஒருசொலின்மடக்கலுமுளவெனமொழிப.
(எ-ன்) இதுவும் அம்மடக்கினதுபேதமுணர்-ற்று.

(இ-ள்) ஒருபாவினது நான்கடியு மொருசொல்லானே முற்றும் மடக்குவது முண்டென்று
கூறுவர் பெரியோ ரென்றவாறு. யமயமக மென்பது மிது.

அரியாரரியார்
அரியாரரியார்
அரியாரரியார்
அரியாரரியார். (747)
இஃ தொருசொல்லினான்மடக்கல்.

(இ-ள்) அரியார் – யாவராலும் அளவிடற்கரியார். அரி ஆர் – சத்துருக்களுயிரைப் பருகும்.
அரியார் – சக்கராயுதத்தையுடையார். அரியார் – பாம்பை மிக்க. அரியார் – சயனமாகவுடையார்.
அரியார் – ஏனமாக அவதரித்தவர். அரியார் – அனுமானையுடையவர்.
அரியார் – அவர்யாரெனில்? அரியென்னுந்திருநாமத்தையுடையா ரென்றவாறு.

எனவே அவரே பரப்பிரமமாவா ரென்பதுஉ மவரே முத்திக்கு வித்தாவா ரென்பதூஉ மாயிற்று.
துறை – கடவுள்வாழ்த்து. பா-குறளடி வஞ்சித்துறை.

265.பதத்தொடுபதமடக்குதல்பதமடக்கே.
(எ-ன்) இன்னும் அம்மடக்கினையே வேறுபடுத்திக்கூறுகின்றது.

(இ-ள்) ஒருசெய்யுணான்கடியாய்வருவதனுள் இரண்டடி யொரு நோக்கமாக மடக்குதல் பாதமடக்கெனப் பெயர்பெறு மென்றவாறு.

சக்கரநாகணைத்தகைத்தலத்தின
சக்கரநாகணைத்தகைத்தலத்தின
விக்கரைத்தென்குருகூர்மன்னேமவா
விக்கரைத்தென்குருகூர்மன்னேமவா. (748)
இது முதலிரண்டடியும் கடையிரண்டடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) கடலிற்றுயிலும் பாம்பணையாகிய அழகிய இடத்தை யுடையவனே !
சக்கரத்தையுஞ் சங்கையுந் தரித்த கையையுடையவனே !
கரும்பினடியிலே அழகிய சங்குதவழு மாக்கத்தோடு மின்பந்தரும் வாவிக்கரையையுடைய பொருநைத்
தென்கரைக் குருகூர்க்கு மன்னவனே ! என்னைக் காக்கவருவாயாக வென்றவாறு. துறை – இதுவுமது.

தரணிகுடையாவெழுமைவராக
முரணரரிவாமனனத்தன்முன்பான்
றரணிகுடையாவெழுமைவராக
முரணரரிவாமனனத்தன்முன்பான். (749)
இது முதலடியும் மூன்றாமடியும் இரண்டாமடியும் நாலாமடியும் முற்றுமடக்கு.

(இ-ள்) பூமியானது பிரளயத்து ளாழ (அதனையெடுத்தற்குத்) தோன்றும் அழகிய ஏனம் ; பெருமையையுடைய நரசிங்கம் ;
வாமன ரூபமானவன் ; பாஞ்சசன்னியத்தையுடையான் ; கோவர்த்தன கிரியைக் குடையாகவெடுத்து நிமிரும் மிடுக்கினையுடையான் ;
(இதன் கண் முன்பான் என்னு மிரண்டடியி னிறுதியைச் சேர்க்க). பஞ்ச பாண்டவர்களுள்ளத்துக்கு மாறுபாடான நூற்றுவர்க்குக் கூற்றுவன் ;
தாவும் அன்னத்தையுடைய பிரமனுக்குப் பிதா ; எல்லாக்கடவுளர்க்கு முன்னானவ னென்றவாறு.

முரண் – பெருமை. நரரி – நரசிங்கம். முன்பு – மிடுக்கு. அரி – யமன். ஒழிந்த அரும்பதமு முரையிற்கொள்க.
துறை – இதுவுமது.

இலங்கொண்மூவெயில்குன்றவில்லேற்றுவா
னலங்கல்வாரியமைந்திறப்பெய்தவே
ரலங்கல்வாரியமைந்திறப்பெய்தவே
ரிலங்கொண்மூவெயில்குன்றவில்லேற்றுவான். (750)
இது முதலடியும் நாலாமடியும் தம்மிலும், இடையி லிரண்டடியும் தம்மிலும் முற்றுமடக்கு.

(இ-ள்) முதலே நின்ற இலங்கொண்மூவெயில் என்பவற்றுள் இல்லை யீறாக்கி அங்கொண்மூவெயிலில் எனச் சேர்த்து,
செலத்தைத் தரித்த மேகம் வெயிலினு மிகுந்து என்க.
நாலாமடியில் இல் நிற்ப அம் கொள் மூவெயில்குன்ற – அழகுகுடிகொண்ட மூன்றுமதிளும் அழியும்படிக்கு.
(முதலடியிறுதியிருசீரும் நாலாமடிமுதல் இல்லும்) குன்றவில்லேற்றுவானில் – இமவானாகிய குன்றவில்லிற்
பாம்பாகிய நாணையேற்றுஞ் சிவனைப்போல. (நாலாமடியீறு) வில்லேற்று வான் – மின்னுதலைப் பொருந்தி வானினின்றும்.
(இரண்டாம் அடியில்) அலம் கல் அமைந்து – நிறைவையுடைய மலையினுச்சியிற்பதிந்து.
(இரண்டாமடியி லிரண்டாஞ்சீர்) வாரி – மழைத்தாரையை.
(அதன் கண்ணீற்றுவேர் மூன்றாமடிமுதல் அல் அதன்கணீற்று வேர் இவற்றை அடைவே கூட்ட. )
வேரல்வேர் – மூங்கில்வேரையும்.
(மூன்றாமடியில்) அம் கல் வாரிய மைந்து – அழகிய மாணிக்கத்தையுங் கிளைத்து முகந்தெடுத்த மிடுக்கினோடும்.
(இரண்டாமடி) இறப்பு எய்த – வெள்ளமாயோடுதலைப் பொருந்தும்படி.
(மூன்றாமடியில்) இறப் பெய்த – தண்ணீர் தன்னிடத் தில்லையாம்படி முழுதும் பெய்த வென்றவாறு.

பொருள்கோள், முதலும் நாலும் தம்மிலும், இடையிலிரண்டுந் தம்மிலும் மாட்டுறுப்பாகக் கொண்டது ;
(குருகாமான்மியம்). திணை – பாடாண். துறை – மலைவருணனை.

266.அந்தாதிப்பதந்தாதிமடக்கே.
(எ-ன்) இன்னும் அம்மடக்கினை வேறுபடுத்துக்கூறுகின்றது.

(இ-ள்) அடிதொறு மிறுதிச்சொல்லை யதன்மேல்வருமடிக் காதி யாகத்தொடுப்ப தந்தாதிமடக்கென்பதா மென்றவாறு.

நாகமுற்றவுங்களிதரநிருதர்கோனாக
நாகமையிரண்டொருங்கறப்பொருதமைந்நாக
நாகமூலமென்றழைத்தகார்துயிலிடநாக
நாகமொய்த்தபூம்பொழிற்றிருநாகையென்னாகம். (751)
இஃ தந்தாதிமடக்கு. இதனைச்சந்தொட்டியமகமென்றுஞ் சொல்லுப.
அல்ல திடைவிட்டு முதலுமிறுதியுமடக்கிய முற்று மடக்கெனவுங் கொள்க.

இதனுள், நாகம் – துறக்கத்துள்ளார். முற்ற – அனைவரும். ஐயிரண்டுநா கம் – பத்துநாக்கும் பத்துத்தலையும்.
ஒருங்கற – ஒருதொடை யொருவாளியி லொக்கவற. மைந்நாகம் – நீலமலை.
நாகம் – யானை. நாகம் – திருவனந்தாழ்வான். நாகம் – சுரபுன்னை. என்னாகம் – என்னுள்ளம்.
நா கம் என்பது “ஆ பயன்” என்பதுபோல ஒற்றுத்தோன்றுஞ் சந்தி ஒற்றின்றி இயல்புசந்தியாய்நின்றது.
துறை – கடவுள்வணக்கம்.

தேனேகமழ்நறுந்திருமகிழ்மாறன்
மாறன்சேவடிவணங்கிறைவரைவாய்
வரைவாயன்றெனில்வல்லைநீயிறைவா
விறைவால்வளையைநீப்பினும்வருந்தேனே. (752)
இது முதலு மீறு மொருசொல்லா யிடையிடை பலசொல்லாய் நிகழ்ந்த அந்தாதிமடக்கு.

இதனுள், மால்தன்சேவடி – மாயன்றனது சிவந்ததிருவடித் தாமரை. வரைவாயன்றெனில் – வரைந்துகொள்வாயாக,
அஃதல்ல வெனில். வல்லைநீயிறைவா – விரைந்து தலைவனே.
இறைவால் வளையைநீப்பினும் வருந்தேன் – முன்கையிலணியுஞ் சங்கினையுடையாளொடுநீங்கினும் வருந்தேன்.
வளையினையுடையாளொடு நீங்கல் உடன் கொண்டுசேறல். ஏகார மீற்றசை.
நீப்பினுமென்றவும்மையாற் சிறிதுநாளிவளையணைதற்கு வாராதுநீங்கினும் வருந்தே னென்பதாம்.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – அகன்றணைவுகூறல்.

267.அம்மனைகைக்கொண்டாடுநர்தம்மையு
மம்மனையாய்மதித்தாங்கொர்கர்த்தாவினை
நிந்தாத்துதிதுதிபெறநிகழ்த்துதலு
மந்தாதித்திடையடிமடக்காகவு
மீற்றடியிரட்டுறவிசைத்ததைத்தாபித்
தாற்றலினமைக்குமம்மனைமடக்கொன்றுள.
(எ-ன்) இஃ திலக்கியங்கண்டதற் கிலக்கணங்கூறலென்பதனால் அம்மனைமடக்குணர்-ற்று.

(இ-ள்) அம்மனைகைப்பற்றியாடு மிருமகளிர் தம்மைத்தாமே யம்மனையாகப் பெயர்குறித்ததாக வதற்குப்புணர்த்த
கலித்தாழிசையிடத் தோர்கருத்தாவினை நிந்தாத்துதியானாதல் துதியானாதல் முதலே
யொருவரொருபொருள்பெறக்கூறலு மதற்கு முன்னிருந்த மகளிர் செய்யுளினிடைப்பட்ட அடியை யடிமடக்கா யந்தாதித்து
வினாயதற்கு முன்னர்க் கூறியமகளிர்தாமே பின்னுந் தாங்கூறியது தப்பாதுதாபித்த தாம் பெருமையொடுங்கூறு
மீற்றடி சிலேடைவாய்பாட்டாற்புணர்க்கும் அம்மனைமடக்கு மொன்றுள தென்றவாறு.

ஆற்றலினமைக்குமென்றதனால் முதலடி யிரட்டுறவருதலு மாமென்றறிக.
இது பொருளணியுஞ் சொல்லணியுங்கூடியதென வுணர்க.

தெண்டிரைப்பார்போற்றுந்திருவெள்ளறைமாயன்
கண்டளவினீடுகஞ்சக்கண்ணாளனம்மானை
கண்டளவினீடுகஞ்சக்கண்ணாளனேலமுதுட்
கொண்டபரிகலமுன்கொட்டினனோவம்மானை
கொட்டினதுமுண்டுகுழிதாலமம்மானை. (753)
இது நிந்தாத்துதி. கஞ்சக்கண்ணாளன் என்பது தாமரைபோலுங் கண்களையுடையா னென்றும்,
வெண்கலங்கொட்டுங் கன்னுவனென்றும் சிலேடைநிந்தாத்துதியாயிற்று. கண்டஅளவி லென்பது கண்டளவிலென விகாரத்தாற்றொக்கது.
கொட்டினது என்பது உண்டதுமிழ்தலும் தட்டுதலும்.
குழிதாலம் – உண்டுகுழிக்கப்பட்டபூமியும், குழிதாலமான உண்கலனுமாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

வண்டமிழோர்கொண்டாடுமன்குருகூர்வாசமகிழ்க்
கொண்டலெழின்மேவுதமிழ்க்குன்றங்காணம்மானை
கொண்டலெழின்மேவுதமிழ்க்குன்றமதானாலதன்கண்
ணெண்டிசையுஞ்சந்தனக்காவில்லையோவம்மானை
யில்லாமற்சாந்தமணமெய்துமோவம்மானை. (754)
இது துதி. சாந்தமணம் – சந்தனப்பரிமளமும் சாந்தரசம் பொருந்துதலுமாம்.
தமிழ்க்குன்றம் – பொதியமும், தமிழுக்கு மலைபோலும் பெருமையுடையோன் என்பது மாம்.
திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல்.

268.தொடர்ச்சொற்பலபொருட்சிலேடைமுந்துறவே
யிடர்ப்பாடின்றியீற்றுறுமிணைமடக்குள

(எ-ன்) இதுவும் இலக்கியங்கண்டதற்கிலக்கணங்கூறலாக இன்னும்
அம்மடக்கினுட் சிலேடைமுன்னிட்டனவாய் வருவதோர்மடக்குணர்-ற்று.

(இ-ள்) ஒருசெய்யுளின்முதற்கட் டொடர்ச்சொல்வாய்பாட்டாற் பலபொருளைக்காட்டுஞ் சிலேடைவந்து
அதன்பின்ன ரிடைவிடாதனவா யீரிடத்துவரு மொருசார்மடக்குகளு முளவென்றவாறு.

இடர்ப்பாடு- இடைவிடுதல். இன்றி – அஃதில்லாமை. பலபொருளாவன ; ஒருதொடர்ச்சொ லிருபொருண்முதலாக
அஞ்சீறாயபொருளைக் காட்டுதல் எனக்கொள்க. எனவே இதுவும் பொருளணியுஞ் சொல்லணியுங் கூடியதெனவுணர்க.

மூவுலகெண்முத்தரைப்போன்முந்நீர்முகிற்பெயல்போற்
காவலர்கள்வீழ்வேங்கடவெற்பே–தேவர்
பெருமான்பெருமான்கட்பெய்வளைக்கையார்மூ
வருமால்வருமாலின்வைப்பு. (755)
இஃ திருபொருட்சிலேடை யிணைமடக்கு.

(இ-ள்) தேவர்பெருமான் – கடவுளர்க்கெல்லாஞ் சுவாமி.
பெருமான் கட்பெய்வளைக்கையார் – பெரியவாய மானினதுகண்ணோக்கம்போலு நோக்கமைந்த கண்ணினையும்,
இடப்பட்ட வளையோடுங்கூடிய கையினையுமுடைய.
மூவரு மால்வருமாலின்வைப்பு – திருமகள். மண்மகள், நீளை யென்னு மூவருள்ளத்தும் வேட்கையுண்டாம் மாயோன்வாழுமிடம்.
மூவுலகெண்….. காவலர்கள்வீழ் வேங்கடவெற்பு – பூமி யந்தர சுவர்க்க மென்னு மூவுலகின்கண்ணுள்ளாரு மதிக்கப்பெறும்
பரமபதத்து முத்தரைப்போல நெருங்கிப் பூலோகமன்னர் சேவிக்கவிரும்புந்தன்மையவாய்,
அதனொடுங் கடலிற்படிந்த மேகத்தினிழியுமழைபோலக் காவினிடத்து மலர்களிற் றேன் றுளித்துவீழும் வேங்கடவெற்பா மென்றவாறு.

கள் – தேன். வீழ் – வினைத்தொகை. இதனைச் செய்யுமென்னும் பெயரெச்சமாகவிரித்துக் காலமூன்றினு மேற்றுக.
திணை – பாடாண். துறை – மலைவருணனை.

மாயன்சேய்வில்லுமலர்ப்பொழிலுங்கஞ்சனையுங்
காயம்புதைதிறங்கூர்கச்சியே–நேய
மகத்தாரகத்தாரருவினையாட்செய்யு
மகத்தார்மகத்தார்தம்வாழ்வு. (756)
இது மூன்றுபொருட்சிலேடையிணைமடக்கு.

(இ-ள்) நேயம் அகத்தாரகத்தார் – கருணையைத் திவ்யாத்மாவுக்குத் தாரகமாகவுடையார்.
அருவினையாட்செய்யுமகத்தார் – நீக்குதற்கரிய வினைக ளடிமைத்தொழில்செய்யு மகத்துவத்தையுடையார்.
மகத்தார் தம்வாழ்வு யாகத்தின்கட்டோன்றின பேரருளாளர் வாழுமிடம்.
மாயன்…….. கஞ்சனையும் – திருமால்புதல்வனாகிய காமனது கருப்புவில்லும், பூவோடுகூடிய சோலைகளும், கண்ணாடிகளும்,
காயம்புதைதிறங்கூர் கச்சி என்பதற்கு, கூடிப்பிரிந்தபுமான்கள் மகளிரறிவை நிலைதிரிக்கும் பூவாளியைச்
செலவிடுந் தொழில்புரியும், ஆகாயத்தைமூடுங் கூறுபாடுமிகும்,
கண்டோர்மெய்யை யுட்கொள்ளுந்திறமிகும் – கச்சிஎன அடைவேகொள்க. வாழ்வு – ஆகுபெயர்.
திணை – இதுவுமது. துறை – நகர வாழ்த்து.

கொம்பரஞ்சொன்மின்னார்குயம்பொன்னியன்பருள
மம்பரந்தோயுந்தென்னரங்கமே–தும்பி
யுரைத்தானுரைத்தானுயர்திரைநீர்தட்டீ
னரைத்தானரைத்தானகம். (757)
இது நாலுபொருட்சிலேடை யிணைமடக்கு.

(இ-ள்) கொம்பர் – பூங்கொம்புகள். அம்பரந்தோயும் – ஆகாயத்தைத் தோயும். குயம் – முலை.
அம்பரந்தோயும் – கூறைவிட்டு நீங்காதிருக்கும். பொன்னி – காவிரி. அம்பரந்தோயும் – கடலைப் பொருந்தியிருக்கும்.
அன்பருளம், அம்பரந்தோயும் – அழகியபரப்பிரமத்தை அநுபூதிசெய்து கொண்டிருக்கும்;
தென்னரங்கம், நுரைத்தானுயர்திரைநீர்- நுரையையுயர்த்துந் திரையையுடைய கடலை.
(உயர்திரை வினைத்தொகை. நுரைதான், நுரைத்தான் என ஒற்றுத் தோன்றாதுந் தோன்றியுநிற்கும். )
தட்டு – அடைத்து. ஈனரைத்தானரைத்தானகம் – அறிவில்லாதவீனராகிய இராவணாதிகளை ஆயுதத்தாற்
கண்டஞ்செய்து பூமியின்கட்போட் டரைத்தான்பதி யெனக் கூட்டுக. துறை – இதுவுமது.

சூழிமறுகாடவர்தோள்விரல்பொழிற்றே
னாழிபயிலுமரங்கமே–யூழி
திரிநாட்டிரிநாட்டினவுயிருய்க்கொண்ட
வரிநாட்டரிநாட்டகம். (758)
இஃ தைந்துபொருட்சிலேடை யிணைமடக்கு.

(இ-ள்) சூழி – வாவி, ஆழிபயிலும் – வட்டம்பொருந்தும் ; மறுகு – வீதி, தேர்வண்டி முதலாயின பொருந்தும் ;
ஆடவர்வலது தோள் திருச்சக்கரப்பொறிபொருந்தும் ; மகளிர் புமான்கள் கைவிரல்கள் நவமணியாழிபொருந்தும் ;
பொழிலிற் பூந்தேனும் வைத்ததேனும் முகைவிண்டொழுகியும் உடைந்தும் நதிவாய்ச் சமுத்திரத்தைப் பொருந்துமென்க.
ஊழிதிரிநாட்டிரிநாட்டினவுயிருய்க்கொண்ட – கற்ப வந்தியத்தில் உகங்கள் மீளவருநாள் மூன்றுலகின்கண்ணுமுள்ள
வுயிர்க்கணத்தைத் திருவுதரத்துள்வைத்துப்பிழைக்கக்கொண்ட.
அரிநாட்டரி நாட்டகம் – பாற்கடலென்னுமிடத்தையுடைய அரியென்னுந் திருநாமத்தையுடையா னிலைபெறுத்தின பதி என்றவாறு.

ஒழிந்த அகல முரையிற்கொள்க. துறை – இதுவுமது.
இவற்றிற் கெல்லாம் “எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி – யிசையிற் றிரித னிலைஇய பண்பே” என்பதனால்
ஒலியெழுத்துக்கள் எடுத்தல் படுத்த லென்னுமோசைவேற்றுமையாற் புணர்ச்சியிடத்துப் பொருள்வேறு படுதல்
நிலைபெற்றபண்பாக அறிந்துகொள்க ; செம்பொன்பதின்றொடி, குன்றேறாமா என்பனபோல. பிறவுமன்ன.

269.மதித்தோரெழுத்தினைமடக்கலுமடக்கே.
(எ-ன்) இன்னும் மடக்கிற்கோர்வேறுபாடுணர்-ற்று.

(இ-ள்) ஓரெழுத்தினைச் செய்யுளின்கண் ணடிதொறு முதலேவந்த பொருளினையுட்கொண்டு
வேறுமொருபொருடருவதாகமடக்கலு மடக்கின்பாற்படு மென்றவாறு.

எனவே மேலே முதற்சூத்திரத்தின் மடக்கலுமென்றவும்மையாற் றொடரெழுத்துமொழியேயன்றி
யோரெழுத்தானாமொழிகளைப்பெயர்த்து மோர்பொருடா மடக்குவது மப்பெயராமென்றாராதலாற் றொடரெழுத்து
மொழிகளானா மடக்குகளுணர்த்தி யதன்பின்னர் ஓரெழுத்தா னாமடக்குணர்த்து வான்றொடங்கினாரெனக் கொள்க.

மாமாமாதின்புறுதிருமார்பான்மகிழ்வெய்திக்
காகாகாமர்மல்லையின்மோதுங்கடலேமுன்
னானானாமெய்தாமுயிரென்றார்நகர்மீள
வாவாவாய்மைதந்ததுமுளதோபகர்வாயே. (759)
இஃ தோரெழுத் தடிமுதன்முற்றுமடக்கு.

(இ-ள்) மாமாமாதின்புறுதிருமார்பான்மகிழ்வெய்தி என்பது பெரிய திருமகளாகியமாது விரும்புந் திருமார்பையுடையான்
மகிழ்ச்சி பொருந்தி என்றவாறு. காகாகாமர்மல்லையின்மோதுங்கடலே என்பது காவல்பூண்ட காவினோடுங்கூடிய
அழகிய திருக்கடன்மல்லையென் னுந்திருப்பதியிற் கரைதொறுமெற்றுங் கடலே யென்றவாறு.
முன்னானானாமெய்….. மீள் – பிரியுமுன்னர் நான் நீங்காதமெய்யாக வுந் தா மதன்கண்வைகு முயிராகவு மெனக்
குட்கொளக்கூறினா ரிந்நகர்க்குமீளும்.
அவாவாவாய்மை….. வாயே – என்பது அன்புண்டாம்வசனம் நின்னுடன்கூறியதுளவாகி லென்னுடன் கூறுவாயாக வென்றவாறு.

இதனுள், இடைநின்ற மா – திருமகள். கா-சோலை. ஆனா – நீங்காத. மீள் (மீளும்) என்பது வினைத்தொகை.
அவாவா – அன்புண்டாம். வாய்மை – வசனம். இது நெடிலெதுகை. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – கடலொடுவரவுகேட்டல்.

“ஓரெழுத்தினைமடக்கலு” மென்ற வும்மையா லீரெழுத்துமுதலாக நாலெழுத்தீறாக வுயிரும் உயிர்மெய்யுமாகியவை
யொரோசெய்யுண் முழுதுங்கோடலு மொரோஅடிமுழுதுங் கோடலு முரியவெனக் கொள்க. அவற்றுள் ஓருயிர்மடக்குவருமாறு :-

அரவமகரசலசயனபடவரவ
கரசரணநயனவதனகமலதர
வரதசரதமகவரதசரதமக
பரமபரமமலவனகபரமபத. (760)
இஃது அகரக்குற்றுயிர்மடக்கு.

(இ-ள்) ஆரவாரத்தையுடைய மகராலயமாஞ்சமுத்திரத்திற் றுயிலுஞ்சயனமாகிய படத்தோடுங்கூடிய பாம்பையுடையவனே !
கரமுங் காலுங் கண்ணும் முகமுங் கமலமொத்தவனே ! வரதனே ! சரதனே ! மகத்துவமான வரத்தைப்பெற்ற தசரதன்மகனே !
பரமனே ! அமலனே ! அனகனே ! பரமபதத்தையுடையவனே ! உனக்கேபரம் என்றவாறு. துறை – கடவுள்வணக்கம்.

ஆயாபாலாகாராபாராராலாலா
மாயாமாயாமாமாதாகாவானாளா
காயாகாயாவாளாவாளாநாகாளா
தாயாநாதாநாதாகாகாதாளாளா. (761)
இஃது ஆகார நெட்டுயிர்முற்றுமடக்கு.

(இ-ள்) ஆயா – கோபாலனே! பாலாகாரா – பாலைப்பருகப்பட்டவனே ! பாராராலாலா – பூமியையுண்ட பிரளயத்தின்
மேலான ஆலிலையிற் றுயின்றவனே! மாயாமாயா – அழிவிலாத மாயோனே ! மாமாதாகா – திருமகள்தங்குமார்பனே !
வானாளா – பரமபதத்தையாள்வானே ! காயாகாயா – காயாமலர்போலுந் திருமேனியையுடையவனே!
வாளா – வாளினையுடையவனே! வாளாநாகாளா – வெளுப்பான சங்கினையுடையவனே !
தாயாநாதா – எமக்குத் தாயா நாதனே ! காதாளாளா – சர்வலோகத்தை யுங்காக்கு முயற்சியுடையவனே !
நாதா – நின்னைப் புகழும்படிக்கு நாவைத் தருவாயாக ; கா- பிறரைப் புகழாவண்ணம் என்னைக் காப்பாயாக வென்றவாறு.

முன்னின்ற நா தா கா என்பவற்றைப் பாடமாற்றித் தாளாளா வென்ற தன்முன்னர்ச்சேர்க்க. துறை – இதுவுமது.

கூக்குக்கிக்காக்காகா
கூக்கக்குகைக்கொக்கோ
கூக்கொக்காகைக்காகா
கூக்காக்கைக்கேகாகா. (762)
இது ககரமெய்வருக்கம்.

(இ-ள்) கூ – பூமியை குக்கிக்கு – திருவுதரத்துக்கு. ஆக்காகா – இரையாக்குந் திருமேனியையுடையவனே !
கூக்கக்குகைக்கொக்கோ – பூமியை மீளப் புறத்தேயுமிழ்தற்கொத்த கோவே !
கூக்கொக்காகைக்காகா – கூவினிடத்து மேற் குதிரையாகைக்கிருக்குந் திருமேனியையுடையவனே !
கூக்காக்கைக்கேகாகா – பூமியைக்காப்பதற்குப் பரமபதத்தினின்றும் லீலாவிபூதியில் வரப்பட்டவனே !* என்றவாறு.
எனவே என்னைக் காப்பாயாக வென்பது பயன். இது குருகாமான்மியம். பா – வஞ்சித்துறை. துறை – இதுவுமது.
* கூக்காக்கைக்கேகாகா என்பதற்கு, ஜகத்ரக்ஷணத்துக்கு அத்விதீயனானவனே என்னை நீ காப்பாயாக எனினு மமையும்.

தத்தோதத்தத்திதாதத்தைதுதிதிதா
தத்தோதத்தத்தத்திதாதிதித்தே–துத்தூத்
ததிதித்தித்தேதுத்துத்துத்துத்தத்தாதி
துதிதாதைதாதைதுதித்து. (763)
இது தகரமெய்வருக்கம்.

(இ-ள்) தத்தோதத்தத்தி – கரைமீதுபாயுந்திரையையுடைய திருப்பாற்கடல்.
தாதத்தை – பெற்றுத்தரப்பட்ட கிளியைப்போலு மொழியையுடைய திருமகள்.
துதி திதா- துதிக்கப்பட்ட வுண்மைப் பொருளே ! தத்தோது – தனக்கு முதலையாலுண்டானதத்தினிடத்து மூலமேயென்றுகூறும்.
அத்தத்தத்தி – துதிக்கையையுடையயானையை. தாதிதித்தே – (காத் ததனுடையவுயிரைத்) தரப்பட்ட காவற்கடவுளே !
துத்தூ – உண்ணும் தூய. ததிதித்தித்தே – 1தயிரை வாயாலினிமை யாகக்கொண்டு. துத்துத்துத்து – உணவாகவுண்டு.
தத்தாதி – கூத்தாடுங் கண்ணனாகியகாரணனே ! துதிதாதை – சருவலோகமுந்து திக்கும் பிதாமகனுக்கு.
தாதை – பிதாவே ! துதித்து – உன்னைத் துதிக்கிறே னென்றவாறு.
1 தித்தித்து என்பது சுவைத்து என்பதன் பரியாய வினையெச்சம்.

இதில் இறந்தகாலம் நிகழ்காலமாயிற்று. என்னைக்காப்பாயாக வென்பது பயன். துறை – இதுவுமது.

மாலைமலைமுலைமேலம்மாலைமாலை
மாலைமலைமாலைமாலுமோ–மூலமா
மெல்லைமாலாலாலிலைமேலாமாலில்ல
மல்லைமாலாமாமைமால். (764)
இஃ திரண்டெழுத்தான்வந்தது.

(இ-ள்) முத்தமாலையணியு மலைபோன்ற முலைகளின்மீதே யுனது துளபமாலைவேட்டதனாலே பசலையாகிய
பொன்னுப்பூணுமியல்பினையுடைய பூமாலைபோல்வாள் போரைச்செய்யும் மாலைக்காலத்தான் மயங்குவாளோ?
சகலதேவன்மார்க்கு முதலாகிய காலவளவையுடைய பெரியவனே !
பிரளயத்தின்மேலாய ஆலிலைமேற் கண்வளர்வதான விருப்பத்தையுடை யவனே !
இல்லந் திருக்கடன்மல்லையாங் காளமேகம்போலு நிறத்தையுடைய திருமாலே ! என்றவாறு.
மால் – அண்மைவிளி. திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

சூலமலைமைம்மாமைமாலிசுமாலிசலச்
சீலமலைசூலிசெலச்செல்லச்–சாலமலை
சோலைமலைமாலைச்சொல்லச்சொல்சொல்லானம்
மாலைமலைசீலமாம். (765)
இது மூன்றெழுத்தான்வந்தது.

(இ-ள்) சலச்சீலமலைசூலி – தீயவினைகளைச்செய்யுஞ் சீலத்தை யுடையளாய்ப் போர்புரிசூலத்தையுடைய தாடகையும்.
சூலமலை மைம்மாமைமாலிசுமாலி – சூலினோடுங்கூடி யாரவாரிக்குங் காளமேகம்போலு நிறத்தையுடைய மாலியுஞ் சுமாலியும்.
செல – போர்க் கெதிர்செல்ல. செல்ல – அவர்களுயிர் கூட்டைவிட்டுநீங்க. சால – மிகவும். மலை – பொருத.
சோலைமலைமாலை – சோலைமலையிலுள்ள திருமாலானவனை. சொல்லச் சொல் – நெஞ்சமே !
சொல்லினாற் றோத்திரஞ்செய்யென்று நாவிற்குச் சொல்லுவாயாக.
சொல்லால் நம்மாலைமலை சீலமாம். அத்தோத்திரமேதுவாக நம்மிடத் தறிவின்மையைப் பொருதுபோக்கப்பட்ட நல்ல ஞான நமக்குண்டா மென்றவாறு.

சூல் – கற்பம். அமலை – ஆரவாரம். மை – மேகம். மாமை – நிறம். சலம் – தீயவினை. சீலம் – புத்தி.
சூலி – சூலத்தையுடைய தாடகை ; காளியனையாள் எனினுமாம். செல – எதிர்செல்ல. செல்ல – நீங்க.
சொல்லச்சொல் – தோத்திரஞ்செய்யச்சொல்லுவாயாக. மலைதல் – மாறுபடுதல். சீலம் – நல்லுணர்வு. ஆம் – உண்டாம்.
நெஞ்சேயென்பது தோன்றாஎழுவாய். இது தன்னுணர்வைப் பிறிதொன்றாக்கிக் கூறாதவற்றைக் கூறென
அகத்திற் கூறுவனபோலக் கூறும் மயக்கம். என்னை?

“ஆம்புடைதெரிந்துவேந்தற் கறிவெனுமமைச்சன்சொன்னான்”
“ஓதிய பொறியற்றாயோரரும்பொறிபுனைவியென்றான்” என்பதனா லறிக. திணை – பாடாண். துறை -…..

கோகிலமாலைக்கேகொலைமல்கக்கோலமுலைக்
காகுலமாமோகமிகலாகுமோ–சோகமிகு
மேமாசலமாமிகலமைமாச்சொல்லுமிசை
மாமாமலிகச்சிமால். (766)
இது நாலெழுத்தான்வந்தது.

(இ-ள்) முதலையாற்றுன்பமிகாநின்ற பொன்மலைபோலப் பெருத்ததாய்ப் போருக்கமைந்த யானை மூலமே
யென்னும்பொருளுரையையுந் திருமகளையும் மாமரமிகுந்த திருக்கச்சியையு முடைய மாயோனே !
குயில்களானவை மாலைக்காலத்திலே (காமா கூகூவென்று காமனை யழைத்துக்) கொலைத்தொழிலை மிகுப்ப,
அழகியமுலையினையுடையாட்கு வருத்தத்தைச்செய்யும் மிக்க காதன் மேன்மேலு மிகுதலுன்கருணைக்கு முறையாகுமோ வென்றவாறு.

எனவே யிவளைத் தழுவுவதே நீ பேரருளாளனான திருநாமத்திற்கு முறையென்பதாயிற்று. சோகம் – துன்பம். இசை – பொருளுரை ;
அஃதாவது மூலமந்திரம். மா – பெரியபிராட்டி. மா – மாமரம். மலிதல் – மிகுதல். மால் – அண்மைவிளி.
கோகிலம் – சாதியொருமை. ஆகுலம் – வருத்தம். மாமோகம் – மிக்ககாதல். மிகல் – பெருத்தல். ஓகாரம் ஒழியிசை.
திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகை சோர்தல்.

மடக்கு முற்றும்.

———————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை– பகுதி-4-ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

——–

18-வது பின்வருநிலையலங்காரம்.
19-வது தீபகவலங்காரம்
20-வது நிரனிறையலங்காரம்.
21-வது பூட்டுவில்லலங்காரம்.
22-வது இறைச்சிப்பொருளலங்காரம்.
23-வது பொருண்மொழியலங்காரம்
24-வது அதிகவலங்காரம்
25-வது வகைமுதலடுக்கலங்காரம்
26-வது இணையெதுகையலங்காரம்
27-வது விரோதவலங்காரம்
28-வது உபாயவலங்காரம்
29-வது விசேடவலங்காரம்
30-வது சமாயிதவலங்காரம்
31-வது ஏதுவலங்காரம்
32-வது சுவையலங்காரம்.

——

157.நெறிப்படுசெய்யுண்முன்னிலைபெறுசொற்பொருண்
மறித்துறுபலபுடைவரிற்பின்வருநிலை.
(எ-ன்) வைத்தமுறையானே பின்வருநிலையென்னுமலங்காரமாமாறுணர்-ற்று.

(இ-ள்) முன்னர்க் கூறியநெறியே யுண்டான செய்யுட்களின் முதலேவருஞ் சொல்லாயினும் பொருளாயினும்
அச்செய்யுளின்கண் மீட்டும் பலவிடத்தும் வருமெனின் அது பின்வருநிலையென்னும் அலங்காரமா மென்றவாறு.

158.அதுவே,
சொற்பின்வருநிலைபொருட்பின்வருநிலை
சொற்பொருட்பின்வருநிலையெனமூன்றாம்.
(எ-ன்) இதுவும் அவ் வலங்காரத்தினது விரியுணர்-ற்று.

இதன்பொருள், சூத்திரத்தானே விளங்கும்.

மானைப்பொருகயற்கண்மானைக்கமலமலர்
மானைப்புவனமடமானை-மானைப்
பரித்தபிறையுஞ்சுடுமோபாடகத்தான்றோண்மேற்
றரித்ததுளபத்தார்தரில். (363)
இது சொற்பின்வருநிலை. பாடகம்-திருப்பதி. ஒழிந்த அகலமுரையிற் கொள்க.
திணை-பெண்பாற்பெருந்திணை. துறை – நிலவு கண்டழுங்கல்.

மாய்த்தேன்செனனம்வதைத்தேனென்வல்வினையைத்
தேய்த்தேனறிவின்சிறுமையினைச்-சாய்த்தே
னனிவினையாங்கூற்றைநறையூர்வருமால்
பனிமலர்த்தாள்போற்றிப்பணிந்து. (364)
இதன்பொருளு முரையிற்கொள்க. இது பொருட்பின்வருநிலை. மாய்த்தேனென்பதனோடும் ஒழிந்தவினை
பரியாயமாகப் பொருள்கோடலா னென்றறிக. திணை-வாகை. துறை-அறிவன்வாகை.

வலம்புரிதுவைத்தனவரம்பிலாம்பனின்
றுலம்பினகரடிகையுலப்பில்பேரிகை
சிலம்பினமுழவுடன்றெழித்ததெங்கணு
நலம்புரிகின்னரர்நவின்றநாதமே. (365)
இதுவுமது. இதன்வேறுபாடுங் காண்க.

மாதர்மாதர்கூர்வாளமருண்கண்மாநிலத்து
மாதர்மாதர்கூர்வண்டிமிரளியதாமரைப்பூ
மாதர்மாதர்கூர்மாலும்வேலையுமெனவளர்வான்
மாதர்மாதர்கூர்கெழுதகைபடைத்தமாண்பினவே. (366)
இது சொற்பொருட்பின்வருநிலை.

(இ-ள்) இம்மாதராள்விருப்பத்தைமிகுத்த வாள்போன் றமர் விளைக்குங்கண்களானவை,
பூலோகத்துமகளிர்காணவிருப்பமிகும் வண்டு களாராவாரிக்குந் தாமரையிற் கருணையோடுங்கூடிய
பெரியபிராட்டி விருப்பமிகு மாயோனும் பாற்கடலுமொப்பெனக் கரியகுணங்களாலொளிவளரா நின்ற
பொன்னுலகி னரமகளிர்விருப்பமிகுநட்பினையளிக்கும் பெருமையுடைய வாமென்றவாறு.
பகுதி-சேட்படை. துறை- கண்ணயப்புரைத்தல்.

159.உவமானப்பொருட்பின்வருநிலையுந்
தவலருஞ்சிறப்பிற்றான்வாலுளதே.
(இ-ள்) அப் பின்வருநிலை உவமானப்பொருட்பின்வருநிலை யெனவும் வருமென்றவாறு.

பொன்னசலம்வண்கோபுரமாடகசயில
மன்னுசிகரம்வடபொருப்பா-நன்ன
ருரங்கொண்மதிண்மேருவகுமாயோ
னரங்கமணிமாளிகை. (367)
இஃ துவமானப்பொருட்பின்வருநிலை. இதனுள் அசலம், சயிலம், பொருப்பு, மேரு எனப் பரியாயச்
சொல்லா லுவமானப்பொருட்பின்வருநிலை வந்தவாறு காண்க. துறை-நகர்வாழ்த்து.

18-வது பின்வருநிலை முற்றும்.

————-

19-வது தீபகவலங்காரம்

160. தொழில்குணஞ்சாதிபொருளெனுமிவற்றொரு
மொழிபுணர்செய்யுளின் முதலிடைகடைநின்
றாங்கதன்பலபுடையடைபொருள்விளக்கும்
பாங்குறுதீபகம்பன்னிருபாற்றே.
(எ-ன்) வைத்தமுறையானே தீபகம் என்னும் அலங்கார முணர்-ற்று.

(இ-ள்) தொழில், குணம், சாதி, பொருளென்னு மிவற்றினொன்றைக் காட்டும் மொழி புலவனாற் புணர்க்கப்பட்ட
செய்யுளின் முதல் இடை கடை யென்னு மோரிடத்துநின்று பலவிடத்து நின்ற சொற்களோடுமடைந்து
பொருளைவிளக்குவதாய்ச்செய்யுந் தன்மையையுடைய தீபகம் பன்னிரண்டுபகுதி யுடைத்தென்றவாறு.

ஒழுகுங்கயற்கண்ணீரொண்டளிர்க்கைச்சங்க
மழுகும்பிறைநுதல்வேர்மன்னா-முழுதுமுணர்ந்
தார்பந்தழுவாரணத்தமிழ்செய்ந்நாவீறர்
மார்பந்தழுவாமயிற்கு. (368)
இது முதனிலைத்தொழிற்றீபகம். இதனுள் ஒழுகுமென முதலே நின்ற நிகழ்காலவினைச்சொல்லைக்,
கண்ணீர், சங்கம், வேரென்னு மூன்றிடத்தும் ஒட்டுக. திணை-பெண்பாற்பெருந்திணை. துறை- கண்டுகை சோர்தல்.

வளைத்ததுராமன்கைவல்விற்பகழி
துளைத்தவரக்கரைப்பேய்ச்சுற்றந்-திளைத்தசெருக்
கண்டகளம்புண்ணீர்கடலிலங்கைமாநகரைச்
சண்டதான்வீசியபாசம். (369)
இதுவுமது. இதனுள் இராமன்கை வில்லைவளைத்தது. அரக்கரைப் பேய்ச்சுற்றம் வளைத்தது.
செருக்களத்தைப்புண்ணீர்வளைத்தது. சண்டதான் வீசியபாசம் இலங்கைமாநகரைவளைத்தது.
என முதலே நின்ற இறந்தகாலவினையை யெங்கு மொட்டுக. திணை-வாகை. துறை-பேராண்முல்லை.

பூரித்ததுகோசலநாடன்விற்புணர்தோள்
பாரிற்பொடித்தாள்பருவமுலை-தேரிற்
றடுகளத்துவீழ்ந்தவரக்கரைத்தின்றாழு
மடுநிகர்த்தபல்பேய்வயிறு. (370)
இது முதனிலைக்குணத்தீபகம். இதனுள், பூரித்ததென முதனின்ற பண்பைத் தோள், பருவமுலை, பேய்வயிறு என எங்குமொட்டுக,
பூரித்ததெனக் காலந்தோன்றிற்றேனும் பொருளின்புடைபெயர்ச்சியல்லாமை யாற் குணமாயிற்று. திணையுந் துறையுமிதுவுமது.

பாம்பாடல்வாகனமாம்பாயலாம்பாதுகையாந்
தீம்பாற்பாவைத்திரைகடைநாட்-டாம்பாகுந்
தாசரதிகொற்றக்குடையாந்தனிவிளக்கா
மாசனமாம்பின்னவனுமாம் (371)
இது முதனிலைச்சாதித்தீபகம். பாம்பென்பது சாதி. ஆடல்-வென்றி. பாதுகை – திருவடிநிலை. பின்னவன் – தம்பி.
துறை-அரவவென்றி. திருவநந்தாழ்வானும் நித்தருண் முதலாதலால் அறுமுறை வாழ்த்துள்ளுமாம்.

மாறன்சடகோபன்வண்குருகூரான்பொருநை
யாறன்றுடரியருளாளன்-வீற
னொருநான்மறைத்தமிழாலொண்பொருளைக்காட்டுந்
திருஞானமுத்திரைக்கைத்தே. (372)
இது முதனிலைப்பொருட்டீபகம். துறை – கடவுள்வாழ்த்து.

தேர்வண்டமிழ்மாறன்றென்குருகூர்வீதிதொறுஞ்
சார்வண்டாளமுகுஞ்சங்கினங்க-ளூரும்
பெருமாளிகைமுகட்டிற்பெய்முகில்கள்கங்குல்
வருமாலையில்வெண்மதி. (373)
இஃது இடைநிலைத்தொழிற்றீபகம். இதனுள் ஊரும் என்பதனை ஊரும் தேரும்; ஊரும் சங்கும்; ஊரும் முகில்களும்;
ஊரும் மதியும் என முன்னும் பின்னு மொட்டுக. துறை – நகரவாழ்த்து.

பூண்டுறந்தவாசவன்றன்பொற்புயமுமுன்னோன்பின்
னூண்டுறந்துசென்றோனுடக்கம்பு-நாண்டுறந்த
கொற்றவிராவணிதன்கொள்கைக்குலக்கோதைக்
குற்றதிரள்கண்டமும். (374)
இது பெயரோடுங்கூடி யிடைநின்ற தொழிற்றீபகம். முன்னோன்-இராமன். அவன்பின் னூண்டுறந்துசென்றோன் – இளையபெருமாள்.
உடக்கம்பு-நாணிற்செறிந்தபாணம். நாண்டுறந்த-எய்தகாலத்து நாணைவிட்டு நீங்கின. ஈண்டு நாண்-விரற்சரடும், வின்னாணுமாம்.
பூண்டுறந்த வாசவன்றன்பொற்புயமும் நாண்டுறந்த என்பது இராவணி சமர்முகத்துக் கட்டினவன்றே வாகுவலயமென்னும்
ஆபரணத்தை மானபங்கத்தாலணியாது விட்ட இந்திரன்புயத்தில் அவன்கட்டினநாணும் அன்று விட்டுநீங்கின எனவும்,
கொற்றவிராவணிதன் கொள்கைக்குலக்கோதைக்குற்ற திரள்கண்டமும் நாண்டுறந்த என்பது,
இராவணிகுலத்திற்குரிய பாரி திரண்ட கண்டமும் மங்கிலிய மன்று விட்டுநீங்கின எனவும் முன்னும் பின்னுங் கூட்டுக.
திணை-வாகைசார்ந்த பொதுவியல். துறை-வில்வென்றி.

வட்டமுலைக்கண்குளிர்ப்பவண்பனிநீரிற்குழைத்துக்
கொட்டியகத்தூரிக்கொழுங்குழம்புஞ்-சுட்டதந்தோ
செய்வளைக்குந்தென்குருகூர்ச்செண்பகமாறன்றழுவாப்
பெய்வளைக்கும்விண்மேற்பிறை. (375)
இஃ திடைநிலைக்குணத்தீபகம். இதனுள், சுட்டது கத்தூரிக் குழம்பும், விண்மேற்பிறையும் என முன்னும் பின்னுங் கூட்டுக.
திணை-பெண்பாற்கைக் கிளை. துறை – கண்டுகைசோர்தல். கொட்டியது – அப்பியது.
கொழுங் குழம்பு-நெகிழ்ந்தொழுகுங்குழம்பு. அந்தோவென்ப திரக்கத்தின்கட்குறிப்பு.

வஞ்சநிருதர்மறப்படைக்கோர்கூற்றமா
நஞ்சனையமாயைக்கோர்நன்மருந்தா-மஞ்சனைதன்
கன்றுமனுராமனகவசமாம்வாகனமா
மன்றுகுறித்தேவியதூதாம் (376)
இஃ திடைநிலைச்சாதித்தீபகம். அஞ்சனைகன்று – திருவடி. கன்றென்ற துவப்பின்கண் மயக்கம்.
“பாலறிமரபிற்பொருநர்கண்ணும்,
அனைநிலைவகையோடாங்கவையுளப்பட” என்பதனால் வாகைப்புறத் திணையுள், துறை – வானரவென்றி.

தன்னிகரொன்றில்லாத்தனிமுதலாய்நின்றானு
மன்னுயிர்க்குமன்னுயிராவாழ்வானுந்-தென்னரங்க
னாரரவமுதன்றமரர்க்களித்தானு
மோராயிரம்பெயரானும். (377)
இஃ திடைநிலைப்பொருட்டீபகம். ஓராயிரம்பெயர் – ஒப்பற்றளவிருந்த திருநாமம்.
சூழிந்த அகல முரையிற்கொள்க. துறை-கடவுள் வாழ்த்து.

பெருவிறல்கூர்நாகப்பிடர்மேன்மாமு
முருகெழுதோள்வாலியுரமு-மிருபதுகைக்
குன்றின்வாமுங்குணராமன்வாளியினா
லன்றுதுளைபட்டது. (378)
இது கடைநிலைத்தொழிற்றீபகம். இருபதுகைக்குன்றென்றது இராவணனை.
திணை-வாகைசார்ந்தபுறத்திணை. துறை-வில்வென்றி.

மைம்மாண்புயல்கிழிக்கும்வண்சுடர்மீதாமிமையோர்
தம்மாநகரணவுஞ்சால்பிற்றே-பெம்மான்
முருகவிழ்பூந்தார்வகுளமுன்னோன்குருகூ
ருருவளர்பொன்மாடவுயர்பு. (379)
இது கடைநிலைக்குணத்தீபகம். துறை – நகரவாழ்த்து.

தன்னெவ்வநோக்காதுதாயர்வெறுத்துளதா
மென்னெவ்வநோக்குமிகல்விளைப்பான்-மன்னருண்மால்
மோகூரனைத்தொழுதேன்மோகமிகக்காமாகூ
கூகூவெனுங்கோகிலம். (380)
இது கடைநிலைச்சாதித்தீபகம். திணை-பெண்பாற்கூற்றுப் பெருந் திணை. துறை -குயிலொடுவெறுத்துக்கூறாநிற்றல்.

தாடகைகைச்சூலமுரண்சாய்த்தானும்வில்லிறுத்துச்
சூடகக்கைச்சானகிதோடோய்ந்தானுங்-கேடகத்தான்
செம்பொன்மணிமாடத்தென்னிலங்கைசெற்றானு
மம்பொன்மணிக்கூடத்தான். (381)
இது கடைநிலைப்பொருட்டீபகம். கேடகத்தான் – கேட்டோடுங் கூடிய வுள்ளத்தையுடையான்;
அவன் இராவணன். துறை – கடவுள் வாழ்த்து.

161.அதுவே,
ஒருபொருளுவமையுடனுறல்சிலேடை
விருத்தமாலையென்றிவற்றொடும்விரவும்.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தினொழிபுணர்-ற்று.

(இ-ள்) அத்தீபகம் ஒருபொருட்டீபகமுதலாக மாலாதீபகமீறாகக் கூறப்பட்ட வைந்தினோடும் விரவிவரு மென்றவாறு.

வெங்கதிரோன்மெய்வருடும்வெண்மதியின்மெய்தடவு
மங்கணுயர்வானகடணவு-மெங்க
ளனகனபிராமனாழியான்மூழிக்
கனகமணிமாளிகை. (382)
இஃ தொருபொருட் கடைநிலையிடத்தீபகம். ஒருபொருளாவன:- வருடும், அணவும், தடவும் என்பன. துறை – நகரவாழ்த்து.

பொன்னங்கொடியனையள்பொற்பமைந்துமென்னடைகற்
றன்னந்தனையனையளாயிழாய் – நன்னுதலாள்
வாய்ந்தவியல்பெற்றுமயிலனையண்மின்னனைய
ளாய்ந்தநுடங்கிடைபெற்றாங்கு. (383)
இஃ துவமானப்பொருட்டீபகம். வாய்ந்தவியல்-தோற்றமுள்ள சாயல். பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.

ஏகாவடநிலைபெற்றின்புட்டகமணந்து
மாகாமருவாமொய்வாழ்வுறலாற்-றோகை
முலைக்குமகிழ்மாலைமுன்னோன்றுடரி
மலைக்குமகிழ்வெய்துமனம். (384)

இது சிலேடாதீபகம். துடரிமேற்சொல்லுங்கால், ஏகாவடம் (-இயங்காத ஆலமரம்) நிலைபெற்று நல்லபுள்ளுக்கள்
பெருமையோடு பொருந்துவனவாய்க் கரிய அழகிய யானைத்திரள்கள் செறியும்படி வாழ்வுற்றெனவும்,
முலைமேற்சொல்லுங்கால், ஏகாவடமென்னும் ஆபரணம் நீங்காது கண்ணுக்கினிமைதரும் படாந் தன்மேற் றகவோடு
தழுவுவனவாய்ப் பெரிய விருப்பத்தையளிக்கு மிளமைத்தன்மையுடனிறுகி வாழ்வு பெறுதலால் எனவுங்கொள்க.
பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

தணந்தாருயிர்குறைக்குந்தந்துணைவர்பொற்றோண்
மணந்தாருயிர்நிறைக்குமானே – யுணர்ந்தார்நல்
யாகத்து திமாலிபகிரிமேன்மைதவழ்நீண்
மாகத்துதிமாமதி. (385)
இது விருத்ததீபகம். இபகிரி-அத்திகிரி. விருத்தம், குறைக்கும் நிறைக்குமென்பன.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நிலவு கண்டழுங்கல்.

வாவிக்கழகுமலர்கமலமன்கமலப்
பூவிற்கதனுட்பொலிதேவி-தேவிக்கு
நாளும்புதியதமிழ்நாவீறனையடிமை
யாளுந்திருநாரணன். (386)
இது மாலாதீபகம். இதனுள் அழகென்னுமதனை முதனிலைக் குணத்தீபகமாக்கிக் கமல முதலாக
எவ்விடத்தும் மாலைப்படுத்திக் கூட்டுக. துறை – கடவுள்வாழ்த்து.

19-வது தீபகம் முற்றும்.

——–

20-வது நிரனிறையலங்காரம்.

162. குறித்திடும்பெயர்வினைகூறியசெய்யுளி
னெறிப்படநிரலுறனிரனிறையாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே நிரனிறையலங்கார முணர்-ற்று.

(இ-ள்) இடுகுறியெனவுங் காரணமெனவுங் குறிப்பனவாம் பெயரேயாதல் வினையேயாதல்
புலவனாற் கூறப்பட்ட செய்யுளினிடத்து முறையே யிரட்டிப்பது நிரனிறையென்னு மலங்காரமாமென்றவாறு. நிரலுதல் – இரட்டித்தல்.

163.அவற்றுள்,
பெயரொடுபெயர்நிரலுதல்பெயர்நிரனிறை.
(எ-ன்) அவ்விரண்டினுட் பெயர்நிரனிறையாமா றுணர்-ற்று.

இதன்பொருள் உரையிற்கொள்.

தாதிவர்பூந்தாமந்திருநாமந்தந்தைதாய்
மேதினியேழும்புகழ்நாவீறற்கு-மாதராய்
வேரியார்வண்டிரைக்கும்வெய்யமகிழ்மாறன்
காரியார்நங்கையார்காண். (387)
இது பெயரொடுபெயர்ரெதிர்நிரனிறை. இதனுள் தாமம், திருநாமம், தந்தை, தாய்:-
மகிழ், மாறன், காரியார், நங்கையார் என அடைவே நிரைந்தமை காண்க. துறை – செந்துறைப்பாடாண்பாட்டு.

164. பெயரெதிர்நிரலுதல்பெயரெதிர்நிரனிறை.
(எ-ன்) பெயரெதிர்நிரனிறையமாறுணர்-ற்று.

இதன்பொருளும் உரையிற்கொள்க.

ஏடவிழ்தாரேதியெழில்வாகனந்தளிம
மாடாவமஞ்சிறைப்புள்ளாழிதுழாய்-நீடுபர
மேட்டியூர்வெண்டிரைவாயென்றுந்துயின்றதிருக்
கோட்டியூர்வாழ்நெடுமாற்கு. (388)
இது பெயரொடுபெயர்எதிர்நிரனிறை. அரவம் தளிமம் அஞ்சிறைப்புள்வாகனம்,
ஆழி ஏதி, துழாய் தார், எனப் பெயரொடுபெய ரெதிர் நிரனிறையாயவாறு காண்க. துறை – கடவுள்வாழ்த்து.

165.உயர்வுறுபெயரொடுவிறையுநிரல்வது
மயர்வறுபெயர்வினைநிரனிறையெனவரும்.

(எ-ன்) பெயரொடு வினை நிரனிறையாமாறுணர்-ற்று. இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

மற்றுளபம்போர்வேழம்வாராழிமுல்லைநிலங்
கொற்றமகிழ்மாறனையாட்கொண்டருளும்-விற்றுவமா
லாடினதுஞ்சூடினதுமட்டதுவுந்தட்டதுவும்
பாடினதுநேடினதும்பண்டு. (389)
இது பெயரொடுவினைமுறைநிரனிறை. மல்லென்பது கூத்து. முல்லை-பண். நிலம் – பூமிதேவி. அட்டது – கொன்றது.
தட்டது – அடைத்தது. நேடினது – தேடினது. இதுவுங் கடவுள்வாழ்த்து.

பணிமொழியுண்கண்மலராள்பங்கயத்தாள்செய்ய
மணிமலர்க்கைபறியவாட்டாற்றா-னணிமலர்த்தாள்
பேரமுதுண்சேடமெழில்பேரின்பமுற்றுமுகஞ்
சீரடியர்க்கேவல்செயல். (390)
இது பெயரொடுவினைமுறைநிரனிறை.

(இ-ள்) நெஞ்சமே! தாமரையாள் சிவந்த மணியு மலரும்போன்ற திருக்கையைப்பற்றின திருவாட்டாற்றா னழகிய திருவடிகளைப் பணி;
நாமத்தை மொழி; அமுதுசெய்த சேடத்தை உண்; திருமேனியின் காந்தியைத் தியானஞ்செய்;
அதன்பின்னருற்ற பேரின்பத்தான் முகமலர்; அவன் றிருத்தொண்டர்க்கேற்ற ஏவல் செய்வதனை ஆட்சிசெய்வாயாக வென்றவாறு.

நெஞ்சமேயென்னுமெழுவாய்முன்னிலை யெஞ்சிநின்றதாக விரிக்க. இதனுள், பணிமொழியுண்கண்மலராளாகிய
தாமரையாளெனத் தொடர் புடைத்தாய்நின்றனவுமாய்த் தொடர்பிற்பிரித்தது தன்றொழிலேவலாயின வாறுங் காண்க.
திணை – பாடாண். துறை – ஓம்படை.

166.ஓதியபெயரினோடுயர்வினையெதிரி
னீதிகொள்பெயர்வினையெதிர்நிரனிறையாம்.
(எ-ன்) பெயரொடுவினை யெதிர்நிரனிறையாமாறுணர்-ற்று.

இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

வேதியனையீன்றளித்தமேன்மைத்திருவுருவே
வாதியர்தம்வாய்மதமேவண்டமிழே-யோதிமமே
யேறியதுங்கூறியதுஞ்சீறியதுமீசனெனத்
தேறியதுங்காரிதருஞ்சேய். (391)
இது பெயரொடுவினையெதிர்நிரனிறை. இதனுள் வேதியனை யீன்றளித்த மேன்மைத்திருவுருவென்றது சீமந்நாரயணனை.
வாதியர் வாய் மதமென்றது அகம்பிரமிமுதலாயவர் புன்சாத்திரமதம். வண்டமிழ்-திருவாய்மொழி. ஏறியது ஓதிமம்;
கூறியது வண்டமிழ்; சீறியது பரவாதியர்மதத்தை; பரதத்துவமெனத்தேறியது சீமந் நாராயணனை;
அவன்யாரெனிற் புலவீர்காள்! காரிமாறப்பிரானாமென்றவாறு. திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல். மொழிமாற்றுநிரனிறையுமிது.

167. வினையொடுவினைநிரல்வதுவினைநிரனிறை.
(எ-ன்) வினையொடுவினை நிரனிறையாமாறுணர்-ற்று.

இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

வானுலகெண்வில்வளைத்துமாநீர்செறுத்தவுணர்
கோனுதகம்பெய்ததுகைக்கொண்டுதான்-சானகிதோண்
மேயினான்றென்னிலங்கைவென்றானெழுபுவியுந்
தாயினானீர்மலையத்தான். (392)
இது வினையொடுவினைநிரனிறை. அவுணர்கோனென்றது மாவலியை. தாயினான்-அளந்தான். துறை-கடவுள்வாழ்த்து.

168. வினையெதிர்நிரல்வதுவினையெதிர்நிரனிறை.
(எ-ன்) இது வினையொடுவினையெதிர்நிரனிறையாமாறுணர்-ற்று.

இதனுள் வினையொடு என்பதனை முதலே விரித்துரைக்க.

வன்சயிலமேந்திவளைமுழக்கிவெண்டயிர்கட்
டன்புறக்கட்டுண்டமர்வென்றாவளித்தா-னன்புட்
கடவெந்தைவானோர்கடிகாவிடந்த
விடவெந்தையில்வாழிறை. (393)

இது வினையொடுவினை யெதிர்நிரனிறை. ஆவளித்தான்-ஆவினைக் காத்தான்.
நன்புட்கடவெந்தை – நல்லகருடனையேறப்பட்ட வெமது சுவாமி; என்னப்பனென்றுமாம். துறை – இதுவுமது.

169. வினைபெயர்நிரல்வது வினைபெயர்நிரனிறை.
(எ-ன்) வினையொடுபெயர்நிரனிறையாமா றுணர்-ற்று.

இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

ஏந்தினான்வேய்ந்தானிறுத்தானினிதாக
மாந்தினானாழிதுழாய்வன்சிலைபார்-காந்தன்
றொலைவில்லிமங்கலத்தான்றோலாதார்வென்றி
தொலைவில்லிவானோர்துணை. (394)
இது வினையொடுபெயர்நிரனிறை. காந்தன் – அழகன்.
தொலைவில்லிமங்கலத்தான் – தொலை வில்லிமங்கலமென்னுந் திருப்பதியையுடையவன்.
தோலாதார்வென்றிதொலை வில்லி-போர்க்குப் புறமிடாதசத்துருக்களது வென்றியைத்தொலைக்கப்பட்ட வில்லையுடையான்.
வானோர் துணை – வானோருயிர்க்குநற்றுணை யென்றவாறு. வானோர் – நித்திய சூரியர்.

170.வினையொடுபெயரெதிர்கொளவருநிரனிறை
வினையொடுபெயரெதிர்விதிநிரனிறையே.
(எ-ன்) வினையொடுபெயரெதிர்நிரனிறையுணர்-ற்று.

விதிநிரனிறை-இலக்கணத்தால்விதிக்கப்பட்ட நிரனிறை. ஒழிந்த அகலம் உரையிற்கொள்க.

நடித்தானொடித்தானடந்தானிடந்தான்
பொடித்தானொருதூணிற்புள்வாய்-வடித்ததமிழ்ப்
பாவலன்பின்கோதண்டம்பையரவிற்பல்லுயிர்க்குங்
காவலவன்றென்னரங்கன்காண். (395)
இது வினையொடுபெயரெதிர்நிரனிறை தூணிற் பொடித்தான்; புள்வாய் இடந்தான்; பாவலன்பின் நடந்தான்;
கோதண்டம் ஒடித்தான்; பையரவில் நடித்தான் என வினையொடுபெயரெதிர்நிரனிறை காண்க.
பொடித்தல்-தோன்றுதல். இடந்தது-பிளந்தது. ஒடித்தல்-முறித்தல்.

171.இருபெயர்க்கமைநாலெழுத்தைமுறைமாறிப்
பொழிப்புறப்பிரித்துப்புணர்த்துநிரைவகை
யெழுத்துநிரனிறையென்மனார்புலவர்.
(எ-ன்) இதுவும் அந் நிரனிறையலங்காரத்திற்கு எழுத்தாலாயதோர் சிறப்பிலக்கண முணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத் திரண்டுபெயர்க்கு நிரம்பின நாலெழுத்தை மாறாடி யொரோவொன் றிடையிட்டுப் பிரித்துக்கூட்டி
நிரையுங் கூறுபாடு புலவரெழுத்து நிரனிறையென்றுகூறுவரென்றவாறு.

மேவாருளிமுலைகண்ணண்பாமிளிர்விபதுண்
பூவார்வதனமொழிபொன்மகள்சேர்-தேவாதி
தேவேபிரமமெனத்தேர்மகிழ்மாறன்சிலம்பிற்
காவேயவட்கிடமாங்காண். (396)
இஃதெழுத்துநிரனிறை. இதனுள் மேவாருளி என்றமொழிக்கண் நின்ற நாலெழுத்தினை
ஒரோவொன்றிடையிட்டு மேரு வாளி எனப் பிரித்து, மேரு முலை; வாளி கண் எனக் கூட்டியும், விபதுண் என்ற மொழிக்கண்
நின்ற நாலெழுத்தை ஒரோவொன்றிடையிட்டு விது பண்: வதனம் மொழி எனக் கூட்டியு நிரனிறையானவாறு காண்க.
இவற்றுள் உவமைமுதலிய அலங்காரங்கள்விரவினு மீண்டு நிரனிறையே நோக்கமெனக் கொள்க.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.

172. முறைமுறைநிரைவதுமுறைநிரனிறையே.
(எ-ன்) இதுவும் நிரனிறைக்கோர் சிறப்பிலக்கணங்கூறுதனுதலிற்று.

(இ-ள்) பெயர் வினையென்னு மிரண்டினையு மொருசெய்யுளகத் தொருமுறை முதலேகூறியவற்றான்முற்றாது
அவற்றைப் பயனிலை முற்று விப்பான் மறித்தும் பெயரும் வினையுமாகநிரைத்து முறைபெற முடிப்பது முறைநிரனிறையா மென்றவாறு.

பொன்னனைவாளரக்கனை நூற்றுவரைக்காவைப்
பொருசிலையைக்கருங்கடலைப்பொன்னனீன்ற
நன்மகற்காய்ச்சுரர்க்காயைவருக்காய்க்காத
னப்பினைக்காய்ச்சானகிக்காய்நடவைக்காக
மன்னுகிரால்வடிக்கணையால்வளையாற்புள்ளால்
வளங்கெழுதோள்வலியால்வானரங்களாலு
முன்னுடல்கீறிச்சிரங்கொய்தமரில்வீழ்த்து
முதலொடுங்கீண்டிறுத்தடைத்தான்மோகூரானே. (397)
இது முறைநிரனிறை. இதனுள் அங்ஙனம் பெயரும், வினையுமொவ் வொருபொருட்டொடர்ச்சிக்கண்ணே
யொருமுறைவந்தவற்றோடு மறித்து முறைமுறையாக வந்தமைகாண்க. இதன்பொருள் உரையிற்கொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

173.இணைபெறவிடைநின்றிருவயிற்பெயரொடும்
புணர்தகைநிரனிறைபுகலிலொன்றுளதே.
(எ-ன்) இன்னு மவ் வலங்காரத்திற்கோ ரொழிபுகூறுதனுதலிற்று.

(இ-ள்) செய்யுளினிடைக்கண் இருமொழிபெறநின்று முன்னும் பின்னுமாகிய வீரிடத்தும் பொருள்களுட னெடுத்து
நிரைக்கும் இடையிணைநிரனிறையுங் கூறுமிடத் தொன்றுளதா மென்றவாறு.

அருண்மனையாளாயுவந்ததாழியான்கோடு
பொருதிரைப்பாற்றெள்ளமிர்திற்போந்த-திருவரங்கம்
பூம்பதுமக்கண்முகிழ்த்துப்புத்தேளிர்கைதொழமால்
பாம்பணைவேல்வைகும்பதி. (398)
இஃதிடையிணைநிரனிறை. இதனுள், இடைநின்ற திருவரங்கமென்னுந் தொடர்மொழியைத் திரு அரங்கம் எனப் பகுத்
திருமொழியாக்கி திரு ஆழியா னருளோடுங்கூடிய பாரியாயுவந்தது;
அரங்கம்மால் பாம்பணைமேலாய்ப் பள்ளிகொள்ளும்பதியென முன்னும் பின்னும் நிரனிறையாக்கி முடிக்க.
அல்லது ஆழியானாகியமால் பாரியாகவுவந்தது திரு; புத்தேளிர் கைகளாற்றொழப் பாம்பணைமேல்வைகும் பதி அரங்கம்
எனச் சேர்த்துக் கொண்டுகூட்டெனினுமாம். கோடு – கரை. போந்தது – தொன்றியது.
ஆதலாற் பரமபதத்தினுந் திருப்பாற்கடலினுஞ் சேய்த்தாயவன் உலகத்துயிர்களீடேற அர்ச்சாவதாரமாகிச் சேவித்தற்கெளிதாய்
அணித்தாய்க் கண்வளர்கின்றான்; அவனைச்சேவிப்பார்க் கிம்மைப்பயனாகிய அனைத்துச் செல்வமும்,
மறுமைப்பயனாகிய பேரின்பமும் பெறலாம்; சேவிப்பீராக வென்பது பயன். திணை-……….. துறை-…………
” நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப், பின்னீர பேதையார் நட்பு” என்னுங் குறட்பாவு மிது.

174.உரைபயின்முதலீற்றுறும்பெயரொடுபெயர்
நிரைநிறையெதிர்பெறநிகழ்ந்தீறொடுமுதல்
புரைதீர்தரவிற்பூட்டுறுவதுமுள.
(எ-ன்) நிரனிறையென்னும்பொருள்கோளலங்காரம் பூட்டு விற் பொருள்கோளோடு விரவுமாறுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்து விட்டுநீங்காத பெயரொடுபெய ரெதிர்நிரனிறையலங்காரமாகநடைபெற்றுச்
செய்யுளீற்றுப்பெயரொடு செய்யுண் முதனின்றபெயரெழுவாயுடனெதிர்வனவாய் விற்பூட்டுப்பொருள்கோளாவன வுமுள வென்றவாறு.

காவிகமலங்கமழ்தளவஞ்செங்காந்த
ளாவியனையாயரங்கத்தான்-பூவிற்
பிரமனைமுன்பெற்றபெருமான்வரைமான்
கரமுறுவலானனமுண்கண். (399)
இது பெயரொடுபெயரெதிர்நிரனிறை; எழுவாயு மீறு மெதிர்வன வாய்ப் பூட்டுவிற்பொருள்கோளாயிற்று.
பகுதி-பாங்கற்கூட்டம். துறை-இயல்பிடங்கூறல்.

20-வது நிரனிறை முற்றும்.

———-

21-வது பூட்டுவில்லலங்காரம்.

175.செய்யுளினிறுவாயெழுவாய்புணர்ந்து
மெய்யுறப்பொருணிலைவிளக்கல்விற்பூட்டே.
(எ-ன்) வைத்தமுறையானே விற்பூட்டலங்காரமுணர்-ற்று.

இதன்பொருள் உரையிற்கொள்க.

வருமதற்குமுன்னேமதிட்குருகூருள்புக்
கிருமகிழ்மாறற்கடிமையென்னுங் – கருமமிது
மற்றொப்பிலாதமதிப்புலவீர்பாசமுடன்
கொற்றப்பகடேறிக்கூற்று. (400)
இது விற்பூட்டு. இதனுள், கூற்றுவரு மதற்குமுன்னேயெனச் செய்யுளிறுவா யெழுவாயுடன்புணர்ந்து
பொருணோக்குடைமைகாண்க. திணை – பாடாண். துறை – வாயுறைவாழ்த்து.

மறவாதுகூறுமதிப்புலவீரென்றும்
பிறவாதபேறுபெறலாந்-துறவாளர்
தோய்ந்தமறையாதியந்தந்துதிப்பதற்கு
வாய்ந்தமுதற்றிருநாமம். (401)
இதுவுமது. துறவாளர் – மனத்தாற்றுறப்பனவற்றைத் துறப்பதாட்சி யுள்ளார். மறை யாதியந்தந்துதிப்பதற்குவாய்ந்த
முதற்றிரு நாமம் அரி யென்னுந்திருநாமம். நாமம் மறவாது கூறுமெனப் புணர்க்க. திணை- இதுவுமது. துறை – செவியறிவுறூஉ.

21-வது பூட்டுவின் முற்றும்.

——–

22-வது இறைச்சிப்பொருளலங்காரம்.

176.கருப்பொருள்களனாங்கட்டுரைபயின்ற
பொருட்புறத்தனவாமிறைச்சிப்பொருளணி.
(எ-ன்) வைத்தமுறையானே இறைச்சிப்பொருளலங்கார முணர்-ற்று.
(இ-ள்) ஐந்து நிலத்தினும் அவ்வவநிலங்களிற் கருப்பொருளே தனக்குநிலைக்களனா மழகியவுரையோடும்
பொருந்திப் பொருட்குப்புறத்த வாய்ப் பயன்றரும் இறைச்சிப்பொருளலங்கார மென்றவாறு.

ஏனலுமிறடியுமிடர்சிறிதின்றா
வான்வளஞ்சுரத்தலும்வயின்வயின்வனப்புற
விளைத்தவர்பலரொடுமிசைதிறத்தேவலின்
வளைத்தரிகுநரரிதற்கருமையவா
யொழிந்தபல்வளங்களுமோங்கினசெழுந்தேன்
வழிந்தொழுகியமகிழ்மார்பினன்வரைவாழ்
சேயரிக்கருங்கட்டிருநுதல்
வாய்மையின்வழா அமன்மரீஇயபைம்புனமே. (402)
இதனுள் வாய்மையின்வழாஅ மன் என்பதே கூறவேண்டும் பொருள். அதன்புறத்தே இங்ஙனம் வழாஅ மன் மரீஇயபைம்புனத்தும்
ஏனல் முதலிய பலவளங்களும் அழகுமிக வானுந் தன்வளனாகிய புனலைச் சுரந்துபொழிவதென்னென
இறைச்சிப்பொருளணி தோன்றியவாறு காண்க.

திருநுதல் – அண்மைவிளி. வாய்மையின்வழாதோன் என்றது இகழ்ச்சிக்குறிப்பு. ஏனல் – செந்தினை.
இறடி – கருந்தினை. வான்வளம் – மழை. சுரத்தல் – பெருகுதல். வயின்வயின் – இடந்தொறுமிடந்தொறும்.
விளைத்தவர் – விளைவித்தார். மிசைதிறத்து – துய்த்தற்பொருட்டு.
அரிகுநரிதற்கருமையவாய் – அறுப்பவர் அறுத்துத்தொலைத்தற்கரிய தன்மையவாகி.
ஏனையவளங்களும் – அவையிரண்டுமொழிந்த பலவளங் களும். ஓங்கின – அவற்றோடும் பெருத்தன.
வழா அமன் – வினையெதிர் மறுத்த வினைத்திரிசொல். பகுதி – வரைபொருட்பிரிதல். துறை – தலைவனைத் தோழியியற்பழித்தல்.

அகத்திற்குரியவா மிறைச்சிப்பொருள்கோளெல்லா மிகுதியாய் வருவன தலைவன்கொடுமைகூறுமிடத்தென வுணர்க.
ஏனையுவப்பினுஞ் சிறுபான்மை வரும். இப்பொருள்கோள் கருப்பொருளே தனக்கு நிலைக்களனாகவரு மென்பது
இதற்கு முதனூல்செய்த ஒல்காப்புலமைத் தொல்காப்பியனாரும்,
பொருளியலுள் “இறைச்சி தானே பொருட்புறத்ததுவே” என்பதனாலுங் கண்டுகொள்க.

கறையடிச்சிறுகட்களிநல்யானை
யறைபொருக்கெழவெயிலழலுமிழதரிடை
யுருப்பமதாற்றாதுயங்கியபிடியி
னடிக்கீழடிக்கடியளிதகவிலாழியைப்
பிணர்படுபுழைக்கையிற்பெய்துபெய்தாற்றி
யுடனமர்ந்தொரீஇயவொண்சுரமூடறுத்
திகந்தவர்நின்கவினிறந்துபாடெய்த
நெடுநாள்வைகுநரல்லரின்னே
செய்பொருண்முற்றுபுவருவர்
மையமருண்கணாய்வருந்தனீயே. (403)
இது, “அன்புறுதகுநவிறைச்சியுட்சுட்டலும், வன்புறையாகும் வருந்திய பொழுதே” என்பதனா லிறைச்சிப்பொருண்
முற்கூறியவற்றின் வேறுபடவரு மென்கின்றது என்னை? முன்னே நெஞ்சத்தன்புடையர்,
அதன்மேலுங் களிறு தன்பிடியின் கறையடிவெப்பத்தினை விலாழியைக் கையால்வாங்கி யடிக்கடி யிறைத் தாற்றி யுடன்
கொண்டு சுரத்தினைக் கடக்கு மன்பினையுடைத் தென்றனர்; அவர் அதனை யிப்பொழுதுங் காண்பர்கா ணென்று
அன்புறுதகுநகூறிப் பிரிவாற்றாதவட்குத் தோழி வற்புறுத்தினவாற்றா னறிக.

கறையடி – உரல்போன்ற அடி. அறைபொருக்கெழ – பாறை தகடுதக டாகவெடித்துச்சிந்த.
வெயிலழலுமிழதரிடை – ஆதித்தன் அழலைச்சொரியுங் கடத்தற்கரிதாய சுரத்துவழியில்.
உருப்பமதாற்றா துயங்கியபிடியின் – வெப்பமானதற் காற்றாதுவருந்திய பிடியின்.
அடிக்கீழடிக்கடி யளிதக விலாழியை- அப்பிடியினடிக்கீழ்ப் பலகாலு மன்புமிக விலாழியை.
பிணர்படு புழைக்கையிற் பெய்துபெய் தாற்றி – சருச்சரையுடைய துளைக்கையா லிறைத்து வெப்பத்தைநீக்கி.
உடனமர்ந்தொரீஇய – உள்ளு முடலு மொன்றெனக் கலந்து கடந்த.
ஒண்சுர மூடறுத்திகந்தவர் – ஒள்ளியசுரத் தினதுவழியைத்தொலைத்துக்கடந்தவர்.
நின்கவி னிறந்துபாடெய்த – நினது மேனியினழகு மேனியை விட்டுப் புறம்போக.
நெடுநாள்வைகுநரல்லர் – நெடுநா ளங்குத் தங்குவாரல்லர்.
இன்னே செய்பொருண்முற்றுபுவருவர் – இக்காலத்துத் தாம் ஈட்டுதற்கமைந்த நிதியீட்டுங்கருமமுற்றி வருவர்.
மையமருண்கணாய் வருந்தனீயே – ஆகையான் மையெழுதவிரும்பிய மையுண்கண்ணாய் வருந்தாதிருப்பாயாக வென்றவாறு.
பகுதி – இதுவுமது. துறை – வருத்தங் கண்டு தோழிவற்புறுத்தல்.

நீடியவியன்சினை நிலாய்நறைவிளைவுறு
பாடிமிழருவிப்பனிவரைநன்னாட
விட்டகல்வின்றாய்விழுமியோர்நுவலுங்
கட்டுரைமதியாக்காவலன்போலவும்
பாகரையடங்காப்பகட்டுளம்போலவு
மோகமுற்றனையாய்மூதுரைப்படுத்திய
வொருவழித்தணத்தலுடன்கொண்டேகலென்
றிருவழித்தாயதிலிசைந்ததொன்றுள்ளாய்
வயல்வளஞ்சிறந்தமருங்குடைப்பொன்னியுட்
புயல்படிந்ததுபோற்பொறியரவணைத்துயி
லரங்கனைவழிபட்டவனருட்கிலக்காய்
வரம்பெறுநரின்யாமனமகிழ்வெய்த
விரைவொடுமுயல்வையேல்விரைமென்
மரைமலர்மடந்தைநின்வயத்தினளாமே. (404)
இது, “இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே, திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே” என்பதனால் எய்தியதிகந்து படாமற்காத்தது;
என்னை? கருப்பொருள் பிறிதோர்பொருட் குபகாரப்படும் பொருட்டாதலேயன்றி யக்கருப்பொருடன்னுள்ளேதோன்றும் பொருளுமுள.
அஃதுள்ளுறையுவமமன் றிறைச்சியென் றாராய்ந்துகொள்ளும் நல்லறி வுடையோர்க்கென்றார்,
இதனுள்ளு மவ்வாறே அரசியற்கமைந்த நீதியை விட்டுநீங்குதலின்றி யமைச்சியன்முற்றவு முணர்ந்தோர்
காலமுமிடனுந் துணிந் துரைத்தவுறுதிக்கட்டுரையையுறுதியென்றுட்கொள்ளா மன்னரைப்போலவும்,
பாகர்க்கடங்கா மதயானையினுள்ளம்போலவும் மயக்கமெய்தினையாய், முதியவுரையாக வுனதுணர்வுட்கொளுத்திய
வொருவழித்தணத்த லுடன்கொண்டேகலென விருமுறையாய்வருவனவற்று ளுனது
புத்திக் கொன் றிசைவதாக வுட்கொண்டொழுகுங் குறிப்புமில்லையாயினை;
இனியாயினும் பொன்னியுள் அரங்கனைவழிபட் டவனருட்கிலக்காகித் தாஞ் சிந்தித்த வரம்பெற்றாரைப்போல
யாங்களு மனமகிழ்வெய்த விரைவினோடும் வரைந்துகொள்வது முயல்வையேற்றாமரை மலர்மகளை
யனையாணினக்குரிமையாவளென்றமையா னிறைச்சியாயிற்று; என்னை?

வண்டுகளென்றவுவமை யெச்சமாகநின்றவை தமக்குப் பின்னைக் குப் புசிப்பதாகவைத்த தேனின்விளைவையோர்ந் தந்நிலத்து
வாழ்வார் மால்பியற் றிக்கொண்டு போமாறுபோல நீயும் மேல் வரைந்துகொள்ளலாமென்றிருக்கு மிவளையும்
முதிர்ச்சி கண்டயலவர் பொன்னணிந்துகொடுபோவரென வுள்ளுறையுமவமெய்திற்றேனும் பின்னர்நின்ற
பொருளோ டியையாமையி னிவ்வுலம முள்ளுறையுற்றுப் பொருள்பயவாதுவமையாகக்குறிக்கப்பட்ட
அவ் வண்டுகளெஞ்சிநிற்பது நோக்கமாக நீ யினி வரைந்து கோடல்வேண்டு மென்றுகூறுதலே கருத்தாதலை யறிவித்ததால்
இறைச்சியாய் நாடவென்பதனுள் வேறொர்பொருடோன்றுவித்து நின்றதாதலின்.
“நீடிய வியன்சினை நிலாய்நறை விளைவுறு, பாடிமி ழருவிப் பனிவரை நன்னாட” வென்றது
பிறரிவளைப் பொன்னணிந்துகொடுபோவரென்னுந் துணையன்றி யுள்ளுறையுவமம் பொருளை முற்றவுணர்த்தாமை யுணர்க.
“ கன்றுதன் பயமுலை மாந்த முன்றிற், றினைபிடி யுண்ணும் பெருங்கன்னாட” வென்ற குறுந்தொகைப் பாட்டும்,
“ வேங்கைதொலைத்த” வென்னுங் குறிஞ்சிக்கலியு மது பகுதி வரைவுமுடுக்கம். துறை – வரைவுகடாதல்.

22-வது இறைச்சிப்பொருண் முற்றும்.

__________

23-வது பொருண்மொழியலங்காரம்

177. ஊதியமெய்ப்பொருளுணர்த்தல்பொருண்மொழியாம்.
(எ-ன்) வைத்தமுறையானே பொருண்மொழியென்னும் அலங்காரமுணர்-ற்று.

(இ-ள்) ஆன்மலாபமான வண்மைப்பொருள் புலவனாற் செய்யுளிடத் துணர்த்தப்படுவதும்
பொருண்மொழியென்னும் அலங்காரமென்று சொல்லப் படுவதாமென்றவாறு.
இது தா அனாட்டித்தனாதுநிறுத்தலென்பதாம். உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது.
அலங்காரமென்பது அதிகாரத்தால் வருவிக்கப் பட்டது.

இந்தவுடல்பெற்றிருக்கப்பெறுபொழுதே
நந்திபுரவிண்ணகர்மாலைச் – சிந்திப்பா
ரன்றறிவாமென்னாதறஞ்செய்வார்பேரின்பஞ்
சென்றறிவார்நெஞ்சேதிடன். (405)
(இ-ள்) நெஞ்சமே! நால்வகைத்தோற்றத்துட் பெறுதற்கரிய ஆராவமிர்தமாம் இந்த மானிடவுடலம்பெற்றதோடு
மின்னிலுநிலையில்லாத இந்தயாக்கை யிருக்கபெற்றபொழுதே நாம் இதுபொழுதிளையமாகலின் இறக்குஞான்று
சிந்திப்போமெனக்கருதாதே நந்திபுரத்திருமாலைக் காலம் பெறச்சிந்திப்பாரும், அறத்தினை நாடோறுஞ் செய்வாரும்
இவ்வுலகத்தின்பமெய்துவதோடும் அவ்வுலகத்துப் பேரின்பமுமெய்துவ துண்மையாமென்றவாறு.

ஆதலால் நாமு மவைசெய்வதே நமக்குறுதியென்பது பயன். சிந்திப்பார், அறஞ்செய்வார், பேரின்பம் என்னும்
மூன்றிடத்தும் உம்மை தொக்கனவாக விரிக்க. அறிவாரென்பது காண்பரென்பதாயிற்று.
பொருள் என்பது மெய்; “பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு, மருளானா மாணாப் பிறப்பு’ என்பதனாலறிக.
திணை – வாகை. துறை – பொருளொடுபுகறல்.

23-வது பொருண்மொழி முற்றும்

——–

24-வது அதிகவலங்காரம்

178.ஆதாரத்தினுமாதேயம்பெருத்
தகலம்பெறாதடங்கியதெனலதிகம்.
(எ-ன்) வைத்தமுறையானே அதிகமென்னும் அலங்கார முணர்-ற்று.

இதன்பொருள் சூத்திரத்தானே விளங்கும்.

வசையிலாவிரசதத்தினால்வயின்வயினமைத்த
வசைவிலாப்பனிவரைக்குலமளவிடற்கரிதாந்
திசைகளெங்கணுஞ்சென்றிடம்பெறாதவாமதன
திசைகணின்றவண்செறிந்தடங்கியதெனலாமே. (406)
இது அதிகம் வசையிலாவிரசதம் – மாற்றிற்குறையாவெள்ளி, அசைவிலா – நடுக்கற்ற. இசைகள் – கீர்த்திகள்.
செறிந்தடங்கியது – மிகவுஞ்செறிந்தது. ஆதாரம் பூமியும் ஆகாயமும். ஆதேயம் – கீர்த்தி. (குருகாமான்மியம். ) துறை – நகரவாழ்த்து.

24-வது அதிகம் முற்றும்.

__________

25-வது வகைமுதலடுக்கலங்காரம்

179. பொதுப்படவொருவகைமுதலடைபுணரா
தடுக்கலும்வகைமுதலடுக்கணியெனத்தகும்.
(எ-ன்) வைத்தமுறையானே வகைமுதலடுக்கணியுணர்-ற்று.

(இ-ள்) நால்வகைத்தோற்றத்துட் பொதுப்பெயர்க்கூட்டமான முதற்பொருள்களை அடை சினை புணராது
முதல்களை முதலாம்படி புலவன் செய்யுண்முழுது மடுக்குவதும் வகைமுதலடுக்கணியா மென்றவாறு.

வகைமுதலடுக்கென்பது பண்புத்தொகை.
வகையாவன:-மரம், விலங்கு, புள், மீன், ஊர்வன, மணி, பண், நாள், மக்கள், தேவர் எனக் கூறப்பட்ட ஒரு பலவகைமுதலாம்.

மரவமுங்கடம்பும்பனசமுமருதும்வடமுமாதவியுமாதுளமுங்
குரவமுமிலவுந்திலகமும்விளவுங்கொன்றையுஞ்செருந்திலுங்குமிழு
மரசுநாவலுந்தான்றியுமரீதகியுமாமலகமுநரந்தமுமாம்
பிரமுமேலமுஞ்சண்பகமும்வேழமுஞ்சம்பீரமுந்தழைந்துளவொருசார். (407)
இது மரமெனப் பொதுப்படக்கிடந்தவகைமுதல்களை யடைசினை புணரா தெண்ணும்மைப்பட அடுக்கினதாம். துறை – நகரவாழ்த்து.

இந்தளமுகாரிகுச்சரிபௌளிமலைமைசீராகம்வயிரவிதனாசா
கிரிவசந்தன்பழம்பஞ்சுரங்கொல்லிமருளிந்தளஞ்சாதாரிசா
மந்தமல்லாரிபந்துமுகாரியாரியவராடிகொல்லவராடிநை
வளமிராமக்கிரிகுறிஞ்சிகரம்போதிபூவாளிசௌராட்டநாட்டை
செந்துருதியருமவதிதக்கேசிகௌடிகௌசிகமேகராக்குறிஞ்சி
செவ்வழிப்பாலைவிளரிப்பாலைசெம்பாலைசீகாமரஞ்சிகண்டி
யந்தாளிமலகரிநளுத் தைகாந்தாரமுரலளிசெறியும்வகுளமார்ப
னமலன்வருகனகதண்டிகைவாழ்வினைக்காணவாயிரங்கண்வேண்டுமே. (408)
இது, பண் இராகமெனப் பொதுப்பட்ட வகைமுதற்பொருள்களையடை சினைகூடாதடுக்கின வகைமுதலடுக்கு.
பகுதி – பாடாண்சார்ந்த பொதுவியல். துறை – பவனிவாழ்த்து.

25-வது வகைமுதலடுக்கு முற்றும்

——–

26-வது இணையெதுகையலங்காரம்

180.வாய்ந்தயாப்பினுள்வருமிணையெதுகை
யாய்ந்தவெதுகையணியெனத்தகுமே.
(எ-ன்) வைத்தமுறையானே யிணையெதுகையலங்காரமுணர்-ற்று.

(இ-ள்) வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல், ஏனைப் பாவினமெனத் தோன்றப்பட்ட
செய்யுளகத்துப் பெருக வரும் இணையெதுகைநடையினையும் எதுகையலங்காரமென்று கூறவுந்தகு மென்றவாறு.

மேலைச்சூத்திரத்துள் அடுக்கலுமென்னும் உம்மையைச் சிங்கநோக்காக்கி யதற்குமேலே புதியனவாகக் கூறியவற்றிற்கும்,
இதுமுதலாக முன்னர்ப் புதியனவாகப்புணர்த்தவற்றிற்கும், தகுமென்பதனை யாண்டு மேற்றிக்கொள்க.
ஆய்ந்தவெனவே யிதுவுந் தன்குறியிடுதலென்னுந் தந்திரவுத்தியு ளடங்கும்.

கணையும்பிணையுங்கடுவும்வடுவு
மிணையொன்றியவிழியாரெய்தார்-துணைதனக்குத்
தானேயெனுமாயன்றங்காலுள்வேள்கணைக்கும்
யானேயிலக்காகுவேன் (409)

இஃ திணையெதுகையலங்காரம். இதனுள் வேள்கணைக்கும் என்றதனால் ஒழிந்தபடைக்கு மிலக்காயது பெற்றதாம்.
திணை – ஆண்பாற் கூற்றுக்கைக்கிளை. துறை-புணர்ச்சிபெறாதழுங்கல்.

ஆய்ந்த வெதுகை யென்றதனான் மூவசைச்சீர்முழுதொன் றிணையெது கையலங்காரமுமுள.

துடியிடையார்பிடிநடையார்துணைமலையாமிணைமுலையா
ரடிபிடியாமடிபடியாவணைந்தழிசாந்தகலத்தாய்
வடிபுரைமாண்கருநெடுங்கண்மடநல்லார்நாடுகிலிப்
படியிரத்தல்பழுதொன்றாற்பற்றேலெங்கைத்தலமே. (410)
இது மூவசைச்சீர்முழுதொன்றிணையெதுகையலங்காரம். துணை மலையாமிணைமுலையாரடிபிடியாவென்பது
உபயமலைபோலு முபயமுலையை யுடையராம் பரத்தையர் பாதத்தை நீ பிடித்தென்க.
மடிபடியாவென்பது இடக்கர். அணைந்தழிசாந்தகலத்தாய் என்பது அதன்பின்னர்
அவர்களைத் தழுவுதலாலழிந்த சந்தனத்தையுடையமார்ப வென்க.
இப்படி யிரத்தலென்பது இவ்வணநின்று நீ யெம்முடன் குறையிரத்தலென்பதாம்.
பற்றேல் என்பது அல்லீற்றுவியங்கோள்வினைச்சொல்; அல்ஏலென ஈறுதிரிந்ததாம்.
பகுதி-பரத்தையிற்பிரிதல். துறை-பள்ளியிடத்தூடல்.

குயில்போன்மொழியும் அயில்போல்விழியுங்
கொடிபோலிடையும்பிடிபோனடையும்
பயில்வோரரவிற்றுயில்வோர்மயிலைப்
பதியார்முகமாமதியார்முலைதான்
மயில்போலியலாள்* பயலாநதியும்
மதியும்பதியுஞ்சடையார்விடையா
ரெயில்போர்பொருநாள்வளைவார்சிலையே
யெழில்வாணுதலும்புதலுஞ்சிலையே. (411)
இதனுள் நாலசைச்சீர்முழுதொன்றியதூஉங் காண்க. துறை-இயல்பிடங் கூறல். (திருப்பதிக்கலம்பகம்)
* பயல் – பாதி

24-வது அதிகம் முற்றும்.

__________

27-வது விரோதவலங்காரம்

181. சொற்பொருண்முரணத்தொடுப்பதுவிரோதம்.
(எ-ன்) வைத்தமுறையானே விரோதமென்னும் அலங்கார முணர்-ற்று.

(இ-ள்) சொல்லினாலும் பொருளினாலும் மாறுபாடுதோன்றப் புணர்ப்பது விரோதமென்னும் அலங்காரமாமென்றவாறு.

182.அதுவே,
சொல்லும்பொருளுமொருமையிற்பன்மையிற்
றம்மின்முரணுஞ்சால்பொருநான்காய்ச்
சொல்லும்பொருளுஞ்சொல்லொடும்பொருளொடு
மொல்லுபுமுரணலினோரைந்தாகும்.
(எ-ன்) இதுவும் அவ்விரோதத்தினை விரித்துணர்-ற்று.

(இ-ள்) அச் சொல்லப்பட்ட விரோதமென்னுமது, சொல்லொடும் பொருளொடு மொருமையிலும் பன்மையிலுந்
தம்மிற்றா மாறுகொள்ளு மொழுக்க மொருநான்காயும் அவ்விரண்டுஞ் சொல்லொடுபொருளும் பொருளொடு
சொல்லும் விரவிப் பொருந்துபு மாறுகொள்வதோடு மைந்தாகு மென்றவாறு.

மெய்யுரைப்பாரென்பதுபொய்மெல்லியலாளின்றெமையும்
பொய்யுரைப்பாரென்றுபுகலுமே-பையரவி
லாடுந்திருமாலரங்கத்தேதேர்வலவா
வோடும்புயன்முந்துறின் (412)
இது சொல்லுஞ் சொல்லும் முரணியது. மெய் பொய்யென்பது பொருளின்றிச் சொல்லு முரணினமையானென்றறிக.
“செவ்வி வாய்த்த செம்பாட்டீரத்து, வெள்ளைவெண்மதி” யென்பது மிது. அடிமுரண்.
பகுதி – பொருட்பிரிதல். துறை – பாகனோடு கூறல்.

செம்மையோர்வெண்மையோராகித்திடனழிந்தோர்
தம்மையோர்நட்பாகச்சார்வரோ-வெம்மையோ
ராளாயுவந்தானரங்கத்துளாயிழையாய்
வாளாதென்கண்புதைத்தவாறு. (413)

இது பொருளும் பொருளும் முரணியது. என்னை? செம்மையோ ரெனவும், வெண்மையோரெனவு மிரண்டுயர்
திணைப்பொருளுளவாய்த் தம்மின் முரணியதா லெனக்கொள்க. செம்மையோர்-அறிவுடையோர்.
வெண்மையோர்-அறிவிலாதோர். ஆளாயுவந்தான்-அடிமையாக ஆளுதற்கு விரும்பினோன்.
வாளாது – பேசாது. என்கண்புதைத்தவாறு-புறம்புல்கி எனது கண்களைப் புதைத்தபடி யாதுதா னென்றவாறு.
பகுதி-பரத்தையிற் பிரிதல். துறை – நினைவறிகண்புதை.
இஃ தோரள வடிக்கண் ணிணை முரணாயிற்று. இவையிரண்டு மொருமை.

வெந்தழலைத்தண்ணீர்மைமேதகுவெண்சாந்தென்றே
சந்ததமும்பூசுவதென்றையன்மீர்-பைந்துளபக்
கொத்தணிந்ததாரழகர்கூடாநாட்கண்பனிநீர்
முத்தணிந்தபொற்பூண்முலைக்கு. (414)
இது சொல்லும் பொருளுஞ் சொற்களோடு முரணின, என்னை? வெம்மை – வெப்பம். தனியேபொருளின் றிச்சொல்.
தழல் பொருள், ஆதலால் அவை சொல்லும் பொருளுமாம் தண்ணீர்மை ; தண்மை – குளிர்மை. நீர்மை – நன்மை.
இரண்டுந் தனியே பொருளின்மையாற் சொல்லாயிற்று. மேதகுவெண்சாந்து – பெருமைபொருந்தியவெண்சாந்து.
கண்பனிநீர்முத்து – கண்கள்சொரியாநின்ற தண்ணீராகிய முத்து. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – மெலிவொடு கூறல்.

கண்காலருவிகொடுங்கைம்மேல்விழுந்தொழுகும்
பெண்காதனீக்கலார்பேதைமீர் – மண்காவல்
பூண்டவராமுன்னம்பொருகணையாற்றேவியைமீட்
டாண்டவராம்பேரருளாளர் (415)
இது பொருளுஞ் சொல்லும் பொருளோடு முரணின ; என்னை? கண் பொருள்; காலென்ப துறுப்பன்றி, உகுமருவியெனத்
தனிநிற்கும் பொருளின்றிப் புனலினது கிரியையாதலாற் சொல்.
கொடுங்கை பொருளாத லானென்றறிக. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – கண்டு கைசோர்தல்.

கருவிடமும்வெண்மருந்துங்கைக்கொண்டகண்ணம்
பிருபுருவவிற்கீழிலகுந்-திருமகட்குக்
கற்றார்புகழ்மாறன்கார்வரைமேற்கோங்கரும்பு
முற்றாதபொற்பூண்முலை. (416)
இதனுள், சொல்லும் பொருளுஞ் சொல்லொடும் பொருளொடும் முரணின. என்னை? கருவிடம்: கருமைசொல்;
விடம் பொருள். வெண் மருந்து; வெண்மை சொல்;மருந்து பொருள் ஆதலால் அறிக.
இதனுள், கைக்கொண்ட கண்ணம்பென்பனவும் அம்பு வில் என்பனவும் முரண். துறை – இயல்பிடங்கூறல்.

தம்மின்முரணுஞ் சால்பென்றதனால் இணைமுரண்முதலாகிய ஏழு விகற்பமும் ஒரு செய்யுளகத்து
வரும் விரோதவலங்காரமும் உள. அவை வருமாறு:-

அறிவிலருணர்வுளரெனுமவரளவினி
லருவமொடொளிர்திருவுருவம துடையனை
யெளியனையடியவர்க்கேனையோர்க்கரியனைக்
கனவினுநனவினுமறிதுயிற்கண்ணும்
வெண்சங்காழிசெம்மணிப்பொன்முடி
காலையுமாலையுங்கண்டுநன்பகலினு
மின்புறத்துன்பமற்றிம்பரொடும்பர்
நறவார்மலர்மகணாதனை
மறவாதவர்பதம்வழுத்துமென்னாவே (417)
இதனுள் இணைமுரண்முதலாகிய ஏழுவிகற்பமும் முறையே வந்தவாறு காண்க. முரணாவது விரோதம்.
உலகத்துட்பொருளெல்லாம் காட்சிப் பொருளும் கருத்துப்பொருளுமாமெனினும் ஈண்டுக் கருத்துப் பொருள் சொல்லாயிற்று.
இதனுள் அறிவிலர் உணர்வுளர்-பொருளும் பொருளும். அருவமொடுருவம்-சொல்லொடுபொருள்.
ஒழிந்தனவும் மொழியினும் பொருளினும் முரணினவாறு கண்டுகொள்க. திணை – பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.

27-வது விரோதம் முற்றும்.

__________

28-வது உபாயவலங்காரம்

183.ஒருபயன்கோடற்குறுபொருட்டெனலா
மொள்ளியசூழ்ச்சியுணர்த்துதலுபாயம்.
(எ-ன்) வைத்தமுறையானே உபாயமென்னும் அலங்காரம் உணர்–ற்று.

(இ-ள்) யாதாயினும் ஓரூதியங்கோடற்கு மிக்ககாரணமென்று கூறப்படு வதாம் முக்கியமானதொரு
சூழ்ச்சியையுணர்த்துதல் உபாயமென்னும் அலங்காரமாம் என்றவாறு. சூழ்ச்சி-உணர்வோடுசாவியுண்டான வுறுதியறி வாம்.

சூடிக்கழித்ததுளபச்சருகெனினு
நாடித்தருகதிருநாகையா – யூடிப்
புலவாததற்குநினதருட்கும்பொற்றோள்
கலவாதவெற்குநலங்காண். (418)
இஃ துபாயம்.

(இ-ள்) நாகையின்கண்வாழும் மாதவனே ! நினதுமார்பத்தைத் தோய்வதற்கு விரும்பியவேட்கையுடைய
எனக்குத் திருமகள் விட்டு நீங்காததிருமார்பத்து அணைவதற்குக்கூடாதாயினும், அத்திருமார்பிற்சூடிக் கழித்த
துளபமாலிகைச்சருகையாகிலும் நினது திருவுள்ளக்குறிப்பாற் றருக; அங்ஙனம் திருவுள்ளக்கருணையால் உட்கொண்டு தருதல்,
பெரியபிராட்டி நின்னுடனேயூடியதன்மேலும் புலவாது நலனெய்துதற்கும் உபாயமாம்;
நினது திருவருணலனெய்துதற்கும் உபாயமாம்; நினது திருப்புயத்தினை ஆலிங்கனஞ்செய்யாத
எனக்கு நலனெய்துதற்கும் உபாயமாம் என்றவாறு.

நலமென்பது ஆகுபெயர். அதனை எங்கும் ஏற்றுக. திணை-பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை-தாமம்பெறாதுதளர்வுற்றுரைத்தல்.

மன்கரம்பைமாயோன்வருகளிறேவேள்சிலையாங்
கொன்கரும்பைநின்பனைக்கைகொண்டுநின்று-தின்பையெனி
லிக்கரும்பின்மோகமும்போமீதேயுபாயமுனக்
கக்கரும்பாற்றாகமுமின்றாம். (419)
இதுவும் உபாயம்.

(இ-ள்) கரம்பனூருத்தமன்வாகனமாகவருகளிறே! நீ இவனைக் கொண்டுலாவரும்பவனிகண் டிவன்மார்பத்தை
விரும்பினஇவளை எய்வதற்குக் காமன்கைச்சிலையான கரும்பை உனது பனைபோன்ற கையினாற் பற்றி
முன்னின்று தின்பையெனில் இக்கரும்பு போன்ற மொழியினையுடையாள்மையலுந் தீரும், உனதுபசியுந் தீரும்,
ஆதலால் இருதலைக்கும் இதுபோற் றெள்ளியசூழ்ச்சி பிறிதில்லை யென்றவாறு.

ஏகாரம் பிரிநிலையாதலாற் பிறிது பாயமில்லையென்பதாயிற்று. திணை- பெண்பாற்பெருந்திணை.
துறை-பவனிகண்டழுங்கிய பைந்தொடி தோழி இவளுயிர்தருகென ஏற்றம்வேண்டல்.

28-வது உபாயம் முற்றும்.

__________

29-வது விசேடவலங்காரம்

184. சாதிகுணந்தொழில்பொருளிடமுறுப்பென்
றோதியவிருமூன்றினுமுறுகுறைபட
லேதுவினதற்கதற்கிசைமேம்பாட்டா
னீதிகொள்புலவர்நிகழ்த்துதல்விசேடம்.
(எ-ன்) வைத்தமுறையானே விசேடமென்னும் அலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) சாதியும் குணனும் தொழிலும் பொருளும் இடனும் உறுப்பும் என்னும் ஆறினும் மிக்க குறையுண்டாதல்
காரணமாக அதற்கதற்கிசைமேம் பாட்டானே இலக்கணநீதியுட்கொள்புலவர் கூறுவது விசேடமாம் என்றவாறு.

கொச்சைப்பொதுவர்குலச்சிறுவன்சிற்றடிமீ
திச்சைப்படுபார்த்தனிட்டமலர்-நிச்சயமாய்
முன்னாண்முடிக்கொண்டான்முக்கட்கடவுளா
மென்னாமுரைப்பேமிதற்கு. (420)

இது சாதிக்குறைவிசேடம். கொச்சை-ஆடு. நிச்சயம்-உண்மை. முடி-சடாமகுடம். இதற்கு-இப்பெருமைக்கு.
என்னாமுரைப்பேம்யாம் யாதுரைப்பேம்; என்பது ஆச்சரியம். துறை-கடவுள்வாழ்த்து.

வண்ணமகிழ்மாறன்வாய்மலர்ந்தநாண்மூரல்
வெண்ணிலவுசற்றேவிரியாமுன் – கண்ணகன்ற
தானமளவும்விரிந்தனவேதத்துவமெய்ஞ்
ஞானமெனும்வெண்ணிலா. (421)
இது குணக்குறைவிசேடம். மூரல்வெண்ணிலவு – திருமுத்தின் வெண்மை. கண்ணகன்றதானம் – பரமபதம்.
திணை – வாகை. துறை-சால்புமுல்லை.

தில்லைத்திருச்சித்திரகூடத்தான்றிருக்கை
வில்லைக்குனித்தருநாண்வீக்காமுன்-பல்பெரும்போர்
தாக்கினாரென்னுஞ்சலநிருதர்மெய்யுறநாண்
வீக்கினான்றென்றிசைவாழ்வேந்து. (422)
இது தொழிற்குறைவிசேடம். குனித்து-குனிக்க. அருநாண்-அறுதலில் லாதவிற்சரடு. வீக்காமுன்-கட்டாதமுன்.
சலநிருதர்-தீய நெறியையுடைய அரக்கர். தென்றிசைவாழ்வேந்து – இயமன்.
திணை-வாகை. துறை – வில்வென்றி. பேராண்முல்லையுமாம்.

உள்ளபடியேயுழக்கென்னுந்தண்டுலத்தால்
வெள்ளமெனவேவிருந்துறினு-நள்ளரணத்
தாவிதானன்புற்றமுதமைத்தாளைவருக்குந்
தேவியாஞ்செல்வத்திரு. (423)
இது பொருட்குறைவிசேடம். தண்டுலம் – அரிசி. வெள்ளம்-வெள்ளம் என்னும் இலக்கம். நள்ளரணம்-நடுக்காடு.
அமுதமைத்தல்-அசனம் நிறைத்தல். திணை-பொதுவியல். துறை-இல்லாண்முல்லை.

ஆலந்தளிருளடங்குமொருபுனிதப்
பாலன்பசித்தசிறுபண்டிக்கே-மேலைநாட்
பல்லாயிரமாகப்பாரித்தபேரண்ட
மெல்லாமடங்கிற்றெனும். (424)

இஃ திடக்குறைவிசேடம். புனிதப்பாலன். அநிருத்தன். பாரித்தது – பாத்தினது. பேரண்டம் – அளவிறந்த அண்டம்;
“பெரியயோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே” என்பதனால் அறிக. எனும் – என்று புராணங்கள்கூறும். துறை – கடவுள்வாழ்த்து.

கரமுஞ்சிரமுங்கணக்கின்றுரமும்
வரமும்வரம்பின்றரக்கர்-சரராமன்
றான்மானிடனிருகைசானகியைநீங்குதளர்
வானாகவும்வென்றனன். (425)
இஃ துறுப்புக்குறைவிசேடம். கணக்கின்று – எண்ணிறந்தன. அரக்கர் – மூலபலப்படை. தளர்வான் – தளர்ச்சியையுடையான்.
ஆகவும் வென்றனன் – இத்தனையெல்லாம் உறுப்புக்குறைவுண்டாயிருக்கவும் வென்றான்! என்ன ஆச்சிரியமோ என்பதாம்.
முன்னுள்ள இடக்குறை விசேடத்திற்கும் இஃதென்ன அகடிதகெடிதசாமர்த்தியகுணமோ எனக் கூட்டுக.
திணை – வாகை. துறை – பேராண்முல்லை.

29-வது விசேடம் முற்றும்.

__________

30-வது சமாயிதவலங்காரம்

185.ஒருவினைமுயன்றதனாலுறுபயனைமற்
றொருவினைதரவுறுவதுவேசமாயிதம்.
(எ-ன்) வைத்தமுறையானே சமாயிதமென்னும் அலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) முதலே ஒருவர் ஒருவினையை முயல அதனாலெய்துங் காரியத்தைப் பிறிதொன்றன்வினைதர
அதுகாரணமாக அக்காரியத்தை யெய்துவது சமாயிதம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.

ஊடினாளூடியபினுள்ளத்துவகையெழ
வாடினாள்வண்சுடர்தான்வாடையினால்-வீடியதாற்
காதலன்பொன்னாகங்கலந்தாளருள்கலப்ப
மாதவன்றன்மோகூர்மயில். (426)
இது சமாயிதம். இதன்பொருள் வெளிப்படை; கூற்றான்விளங்கும். பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – துறைகூறல்.

30-வது சமாயிதம் முற்றும்.

—–

31-வது ஏதுவலங்காரம்

186. ஏதுவென்பதிதனினிஃதாயதென்
றோதுவதாமெனவுரைத்தனர்புலவர்.
(எ-ன்) வைத்தமுறையானே ஏதுவென்னும் அலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) ஏதுவென்றுகூறப்படுவது இப்பொருட்டிறத்தினான் இதனிடத் திஃதுண்டாய தென்றுகூறப்படுவதாமென்று
கூறினர் அறிவுடையோ ரென்றவாறு.

187.அதுவே,
காரகஞாபகமெனவிருகாட்சிய.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தின்கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அச் சொல்லப்பட்ட ஏதுவெனத் தொகையானொன்றாய் நின்ற வது காரகவேது ஞாபகவேது என இருவகைப்படுமென்றவாறு.

188.அவற்றுள்,
முதலதுமுதல்வனுங்கருவியுங்கருமமுங்
காலமுமிடனுங்கண்ணியநெறித்தாய்ப்
போக்கறுபொருளொடும்புகலிருமூன்றினு
மாக்கமுமழிவுமென்றமர்தருவிரித்தே.

(எ-ன்) இஃ தவ் விருவகையினுட் காரகவேதுவின்விரித்தொகை யுணர் – ற்று.

(இ-ள்) அக் காரக ஞாபக மிரண்டனுள் முதலேவந்தகாரகவேது,முதல்வன்முதலாக இடமீறாகக்கூறப்பெறும்
ஐந்தினோடுங்கருதப்பட்ட மார்க் கத்தையுடைத் தாகியும் குற்றமற்ற பொருளோடுங்கூடி யாறுமார்க்கத்தினுமாக்கமும்
அழிவுமென்றுபொருந்தும் விரியையுடைத்தா மென்றவாறு.

189.ஏவன்முதல்வனியற்றுதன்முதல்வனென்
றாவயின்வருமுதல்வனுமிரண்டாகும்..
(எ-ன்) இஃ தவ்வாறனுள் முதலேவந்த முதல்வன்கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அக் காரகவேதுவின்கண்வரும் முதல்வனும் ஏவன் முதல்வன் இயற்றுதன் முதல்வனென விருவராவரென்றவாறு.

முதல்வன் என்பவன் கருத்தா. முதல்வனுமென்றவும்மையாற் கருவியும் முதற்கருவியும் துணைக்கருவியுமென
இரண்டாம். கருவியென்பது காரணம். இவற்றிற்கெல்லாஞ் செய்யுள்வருமாறு:-

சீதரனேநாதனெனத்தேர்ந்துலவாப்பொன்னுலகை
யாதரவாற்றன் னுலகென்றாக்கினான்-மாதரா
யெங்கண்மாறன்குருகூரெம்பிரானின்னருள்கூர்ந்
தங்கண்ஞாலத்துதித்தேயன்று. (427)
இது கருத்தாகாரகவேது. திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.

பல்வளைக்கைச்சானகிதோள்பைம்பொற்றடக்கையால்
வில்வளைத்துமேனாளின்மேவினான்- சொல்வளையா
மெய்ம்மாதவர்சேரரிமேயவிண்ணகர்வாழ்
பெம்மானிமையோர்பிரான். (428)
இது கருவிக்காரகவேது. சொல்வளையாமெய்ம்மாதவர்-உரைதவறா வுண்மையுடையமாதவர்.
கருவி-தடக்கை. இது முதற்கருவி. வில்லும் நாணும் முதலியன துணைக்கருவி.
திணை-வாகை. துறை – வில்வென்றி. இவையிரண்டும் செய்வதன்றொழிலாக்கம்.

ஆழியுடையான்பொன்னாழிகொடுத்தேவ
வாழிகடந்தன்றடலனும்-னாழி
யளித்தலிற்கைக்கொண்டணைத்தவாகம்போன்றாவி
தளிர்த்ததுவேசானகிக்குத்தான். (429)
இது கருமக்காரகவேது. திணை – பாடாண்சார்ந்தபொதுவியல் துறை – கலன்கண்டுகளித்தல்.
கருமம் – திருவடி திருவாழியைக் கொடுத்தலாற் பிராட்டி திருக்கைகொண்டணைத்தல். இதுவும் ஆக்கம்.

போற்றிப்படைத்தபொருண்மாறனன்பரையே
போற்றிப்புறத்தபொருளிரண்டும்-வேற்றுமையாய்க்
கொள்ளாதெமையுமுடன்கொள்கென்றெதிர்ந்தவென
விள்ளாவிழிநீர்மிகும். (430)
இதுவுமது. புறத்தபொருளிரண்டும் என்பன அறனும் இன்பமும். கொள்கென் றெதிர்ந்தவென விள்ளாவென்பது
எம்மையுங் கைக்கொள் வாயாக எனப் படைத்தபொருளையுடைய காரிமாறப்பிரானன்பரை முயற்சியின்றி
யெதிர்கொண்டன என யான் வாய்திறப்ப அக்காலத்து எ-று.
விழிநீர்மிகும் – துன்பக்கண்ணீர் மிகாநின்ற வென்றவாறு. இதனுள், கருமம் வாய்திறப்ப என்றது. இது அழிவு.
இவையிரண்டும் செய்விப்பதன்றொழில். பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை-வாட்டங் கூறல். தலைவன் கூற்று

தோலாதமாவலிபாற்றொல்லுலகமூன்றுமிரு
காலாலளந்துமுனங்கைக்கொண்டான்–மேலாய
வத்தியூர்நின்றானடியார்தமக்கழியா
முத்தியூர்காட்டுமுதல். (431)
இதுவும் கருவிக்காரகவேது. இதன்பொருள் உரையிற்கொள்க. துறை-கடவுள்வாழ்த்து.

பொறிவழியேதாக்கும்புலனைந்தவித்த
வறிவழியாயோகமதனா–லெறிதிரைநீ
ராறன்றுயிலாயமர்ந்தானடிசேர்தன்
மாறன்றனக்கேவரும். (432)
இதுவும் கருமக்காரகவேது. ஆறன்றுயிலாயமர்ந்தான் என்பது ஆலமரத்தைத் தான் றுயில்கொள்ளுந்
திருவனந்தாழ்வானாகவைத் ததனிற் றுயில்விரும்பினா னென்றவாறு. ஆல் – ஆகுபெயர். திணை – வாகை.
துறை – தாபதவாகை. இவையிரண்டும் செய்வதன்றொழில் ஆக்கம் ;
இவைநாலும் அடைவே ஏவற்கருத்தாவும் கருமக்கருத்தாவுமா மெனக்கொள்க.

இமிழ்திரைநீர்ஞாலமிருள்விழுங்கச்சோதி
யுமிழ்கதிரும்புள்ளுமொடுங்க–வமிழ்தொத்
தருண்மாலையெய்தாதவர்மனம்போன்மாலு
மருண்மாலைவந்தென்மனம். (433)
இது காலக்காரகவேது. ஒடுங்க – அடங்க. மாலும் – மயக்கத்தை யெய்தும். மருண்மாலை – மயக்கத்தைத்தரும் மாலை.
திணை – பெண்பாற் கூற்றுக்கைக்கிளை. துறை – மாலையம்பொழுது கண்டிரங்கல்.

சங்கனழியாத்தமனியநாடெய்தியதும்
பொங்குபுகழ்த்தாந்தன்புலவீர்கா–ளெங்கோனாஞ்
சோதிபதமெய்தியதுஞ்சொற்றமிழ்மாறன்னருள்கூ
ராதிநகர்த்தெய்வீகத்தால் (434)
இது திடக்காரகவேது. துறை – நகரவாழ்த்து.

நந்திபுரமாலேவநன்மாருதிகொளுத்தும்
வெந்தழலால்வெந்துவிளிந்ததே–முந்தைப்
பெருவானவர்வரமும்பேரறமும்பொன்றப்
பொருவானிலங்காபுரம். (435)
இது பொருட்காரகவேது. மாருதி – அனுமான். திணை – வஞ்சி. துறை – உழபுலவஞ்சி. இது செய்விப்பதன்றொழில்.
இதற்கு மேலைச் சூத்திரத்துள்ள முதல்வனை
“ஏவன் முதல்வ னியற்றுதன் முதல்வன்” என்று ஒருபான்மேல் உயர்திணைநோக்கிவைத்தாரேனும்,
“ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே” என்பதனால் ஐந்துபாவினும் கொள்க.
இவற்றுள் முன்னதும் பின்னதும் அழிவு. இடைநின்ற இடக்காரகவேது ஆக்கம்.

கற்பனைமேற்கொண்டொழுகுங்கடைப்பிடியார்வயிற்றிருநாண்
பொற்புறுமாற்றலிற்பொறித்தபொருவருசெவ்வணிநோக்கித்
தற்பொதிவாட்டுறந்தகெழுதகைத்தாயபுனலூர
னிற்புகலால்வெஞ்சினநஞ்செனக்கூர்த்தமருணோக்க
முற்பலந்தெள்ளமிர்துயிர்த்தற்றொளிதிகழ்சீர்பயின்றனவே
அதனொடும்,

அநகனிங்கெமையாண்டருண்மகிழ்மாறன்
புனல்வறங்கூராப்பொருநையுட்புரைதீர்
தினகரோதயத்திற்செவ்விபெற்றலர்ந்த
தண்மலர்புரைதகைக்தாகு
மொண்ணுதலரிவையுவகைவாண்முகமே. (436)
இது செய்வதன்றொழிற்கருத்தாகாரகவேது. பா – தரவு. தனிச்சொல், சுரிதகம் என்னும் மூன்றுறுப்பால்
வந்த தரவுகொச்சகக்கலிப்பா. இதனுள் அழிவும் ஆக்கமும் முறையேநிகழ்ந்தமை காண்க.
பகுதி – பரத்தையிற் பிரிதல். துறை – முகமலர்ச்சிகூறல்.

புத்தேளிர்நிரப்பிகப்பான்பொருதிரைப்பாற்கடல்கடைந்து
மெய்த்தேவர்பெருமானாம்வேங்கடத்தெங்கண்ணபிரான்
புரந்தருணன்மருந்திறுத்தபுலந்துவரத்துறந்திழைத்த
வரந்தருபெண்ணமிர்தாமிம்மடவரன்மென்றோடுறந்தே
யில்லறத்தின்றொடர்புடையோர்க்கின்பமுமாதுலர்க்களிக்கு
நல்லறத்தின்றொடர்ப்பாடுநனிதருஞ்செம்பொருளென்றே
(இது தரவு. )

ஒருதலைபெற்றனனாகியுருப்பவிர்வெங்கடத்திடைப்போய்
வருபொழுதிற்பெருவறங்கூர்மணிநாவின்மம்மர்நோ
யருண்மடந்தையிலவிதழ்த்தெள்ளமிர்தருந்தத்துறந்தனவே;
அதான்று,

வேனுதல்வன்பரற்கடத்தாரிடைவேனில்வெயிற்குமையாள்
கோனுதற்கட்டழற்குளித்தமதனெனமெய்கூர்த்தநோய்
பானலங்கட்கிளிமொழிமெய்ப்பரிசத்தாற்றுறந்தனவே;
அதான்று,

உருவிலாவுருவிற்றாமுருளிலாமசரதத்தைப்
பருகுவான்புனலெனச்செல்பாலையுட்சார்ந்துளங்கொதிநோய்
திருமகளாற்பெறுமின்பத்திரையாடத்துறந்தனவே;
அதான்று,

வரையிருமருங்கினுமரீஇயவெவ்விடம்
புரைசுரத்தாரதர்ப்புக்குயிர்க்குறுநோ
யம்மென்சாயலணிமயில்பைம்பூட்
கொம்மைவெம்முலைக்குன்றிடைமுயங்கலி
னனவுகனவாநயந்துழி
நினைகலாநீளிடைநீத்தனவே. (437)
இஃ திடையிடை தனிச்சொற்பெற்றுத் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்குறுப்பினோடு
நேரிசையொத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிதுவேறுபட்டுவந்த சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பா.
இதுவும் கருவிக்காரகவேது. இதனுள்ளும் ஆக்கமும் அழிவும் கூடி வந்தமைகாண்க.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை-உண்மகிழ்ந்துரைத்தல்.

190.ஏனையதொன்றுவெளிப்படமற்றது
தானுணர்விற்புலப்படுந்தன்மையதாய்க்
காரணகாரியந்தாமுறழ்ந்துணர்த்துஞ்
சால்பினுநடைபெறுஞ்சாற்றுங்காலே.
(எ-ன்) கருத்தாமுதலாகப் பொருள் ஈறாகக் கூறப்பட்ட அறு வகைப்படுங் காரகவேது வினையுணர்த்தியொழிந்த
ஞாபகவேதுவுணர்த்து வான்றொடங்கி அதன் பொதுவிலக்கணம் உணர் – ற்று.

(இ-ள்) காரகவேதுவொழிந்த ஞாபகவேதுவென்னுமது ஒன்று வெளிப்பட்டு வெளிப்படாததொன்றை
யறிவிப்பதுவாய்க் காரணகாரி யங்கண் மாறாடியுணர்த்துமொழுக்கத்தினுங்கூடிநடைபெறுங் கூறுமிடத் தென்றவாறு.
காரகம் ஞாபகம் என்பது முறையே செய்விப்பதும் அறிவிப்பதுமா மாதலால், காரண காரிய முறழ்தலாவது
புகையுண்மையால் அதன்கீழ் எரியுண்மையை எரியினது காரியமாம்புகை அறிவித்தலெனவுணர்க.

191.எய்தியவின்பந்துன்பமிவற்றிற்
கையமில்பான்மையாக்கமுமழிவும்.
(எ-ன்) இதுவும் அவற்றிற்கோர்புறனடையுணர் – ற்று.

(இ-ள்) இங்ஙனங்கூறப்பட்ட காரகம் ஞாபகம் இரண்டிற்கு மாக்கமும் அழிவுமென்றுகூறப்பட்டன.
அவ்வேதுக்களாலெய்தும் இன்பந் துன்பங்களா மென்றவாறு.

அணியார்மென்றோளுமயில்விழியுஞ்சற்றுந்
தணியாதிடந்துடிக்குஞ்சால்பான்–மணிமாடக்
கோயிலார்வெற்பிற்கொடியிடையாய் வைகறைநம்
வாயிலாங்காவலர்தேர்வந்து (438)
இது காரணங்கண்டு காரியம்புலப்பட்ட ஞாபகவேது. பகுதி – வரைபொருட்பிரிதல்.
துறை – ஏதுக்காட்டி வருத்தந்தணித்தல். தணியா தென்றல் – இடைவிடாதென்றல். ஒழிந்த அகலம் உரையிற்கொள்க.

காவிநெடுங்கண்சிவப்பக்காமருசெவ்வாய்விளர்ப்ப
வாவிதளிர்ப்பதுவுமன்றியே–யோவியமே
வண்ணந்தனில்வெயர்ப்புமாறனார்பூஞ்சிலம்பிற்
றண்ணஞ்சுனையேதரும். (439)
இது புணர்ச்சியாலுண்டான தோற்றப்பொலிவாங் காரியம் ஞாபக வேதுவாய்ப் புணர்ச்சியாகிய காரணத்தை யறிவித்தது.
பகுதி – நாண நாட்டம். துறை – புணர்ச்சியுரைத்தல்.

192.இருளறவறிவிப்பனவாமேதுவும்
பொருளிடம்வினைபண்பவற்றொடும்புணரும்.
(எ-ன்) இது ஞாபகவேதுவின்கூறுபா டுணர் – ற்று.

(இ-ள்) முற்கூறிய ஞாபகவேது என்பதும் பொருள், இடம், வினை, பண்பு என்னும்
நான்கினோடும் பொருந்துவனவாம் என்றவாறு.

தேக்குகதிர்வெய்யோன்றினமும்பகனாடிப்
போக்குவரவுபுரிதலாற்–காக்குந்
திருநாரணனுளனாஞ்செம்மையுணர்வித்தான்
குருநாதனாகியவெங்கோன். (440)
இது பொருண்ஞாபகவேது.

(இ-ள்) உலகமெங்கும் நிறைக்குங்கிரணங்களையுடைய ஆதித்தன் பகல் இரவு என்னும் பொழுதிரண்டினுள்
இரவின் கண் மறைந்து பகற்பொழுது ஒருகணமு மேறாது குறையாது விதித்தநாழிகையுள் ஒடுங்கி மீளவுங்
காலையிற்றோன்றினானாகலான் நாராயணனென்று ஒருபரனுள னென்பதையும், அவனியமித்தபடி
இக்கதிரோன் நடவாநின்றானென்பதையும் குருநாதன் ஏதுக்காட்டி யெமக்கு அறிவித்தா னென்றவாறு.

இதனுள், பொருளாகியஞாபகம் ஆதித்தியன். திணை – வாகை. துறை – அறிவன்வாகை ;
திணை-பாடாண்…… குரவனைவாழ்த்தலுமாம்.

ஓங்கொலிநீர்ஞாலத்தையுண்ணாதுயக்கோடல்
பூங்கமலவுந்தியுடைப்புண்ணியன்ற–னீங்காத
வாச்சினைகாணென்றேயறிவித்தானாரியனாங்
கோச்சரிதைநீங்காக்குணன். (441)
இஃ திடஞாபகவேது. இதன்பொருள் மேலையதுபோலக் குறித்துணர்ந்து கொள்க.
ஈண்டுரைப்பிற் பெருகும். துறை – இதுவுமது.

முன்னொருகைக்குஞ்சரமாய்மூரிப்பிணையாகி
மின்னிடையெங்கென்றுவினாயதாற்–றென்னனந்தை
மால்வரைமேலின்றிவர்தம்வாய்மையெலாம்வஞ்சமெனச்
சால்புடையநெஞ்சேதரி. (442)
இது வினைஞாபகவேது. அஃதேன் முன்னையவிரண்டு மிது போலப் போக்குவரவுபுரிதலும்
உண்ணாததூஉங் கிரியையாயன்றே ஞாபகவேதுவாய தாதலால் அவற்றையும் வினைஞாபகவேதுவென்னாத
தென்னையெனின்? அஃதே, நன்றுசொன்னாய் ! அவை கிரியையே யாயினும் பொருளோடும் இடத்தோடும்
சார்த்திக் கொள்ளநின்றனவாதலாற் பொருளும் இடனும் வசனமின்றி ஞாபகவேதுவாயிற்று.
இஃதன்னதன்று. வசனமாகியகிரியை ஞாபகவேதுவாயிற்று ; என்னை? மின்னிடையெங்கென்ன அயல்பட
வினாயதாலென்றறிக. அன்றியும், காரகவேது விற்கும் வினைகூடாதே யேதுக்கள்கூடாதெனவுணர்க.
இதன் பொருள் உரையிற்கொள்க. பகுதி-இருவருமுளவழியவன்வரவுணர்தல்.
துறை-அறிவுநாடல் ; அயல்படவினாதலுமாம்.

ஆய்ந்ததமிழ்மாறனணிவரைமேலின்றொருவர்
பூந்தழைகொண்*டொன்றுபுகலாமுன்–வாய்ந்த
புதுமலர்ச்சிகொண்டதிந்தப்பொன்வதனமென்றா
னொதுமலர்மேலானதிவணோக்கு. (443)
இது பண்புஞாபகவேது. வாய்ந்தபுதுமலர்ச்சியென்பது உள்ளக் குறிப்பைத்தோற்றுவித்த புதிதாயமலர்ச்சி யென்றவாறு.
நொதுமலர் – அயலாவார். நோக்கு – உள்ளக்குறிப்பு. பண்பு – முகமலர்ச்சி.
பகுதி – குறையுறவுணர்தல். துறை – அவள்குறிப்பறிதல்.

ஆக ஞாபகவேது பொருள் முதலாகப் பண்பு ஈறாக நான்கும் அடைவே கண்டுகொள்க.
அவற்றொடும்புணரும் என்ற வும்மையாற் பிறவிடங்களோடும் வருவனவும் உள. அவையும் வந்தவழிக்கண்டு கொள்க.
193. இன்மையுமதன்கணெய்துதலுரித்தே.

(எ-ன்) இதுவும் அவ்வேதுவினை விரித்துணர்-ற்று.

(இ-ள்) இல்லாததன்மையவும் ஆகிய அவையும் அவ்வேதுவின் பாற்பொருந்துதற்குரித்து என்றவாறு.

இன்மையென்பது ஒன்றின் இல்லாமை. தண்டியாசிரியர் அபாவ மென்பதும் இது.

194. அதுவே*
ஒன்றினொன்றின்மையுள்ளதனின்மை
* டென்று – பிரதிபேதம்.
யென்றுமின்மையினோடின்மையினின்மை
யழிவுபாட்டின்மையோடைந்தாகும்மே.
(எ-ன்) அவ் வின்மையை விரித்துணர்–ற்று.

(இ-ள்) அவ் வின்மையென்னுமது, ஒன்றின்கண் ஒன்றினதின்மையும், ஓரிடத்தும் ஒருகாலத்தும் உள்ள பொருள்
பிறிதோரிடத்தும் பிறிதோர்காலத்தும் இன்மையும், எக்காலத்தும் இன்மையும், இன்மையான் இன்மையும்,
முன்புள்ளது அழிவுபட்டின்மையும் என்பதனோடு ஐந்தாகும் என்றவாறு. இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-

புல்லறிவாளரைப்புல்லாரறிஞரப்புல்லறிவு
நல்லறிவாளர்தமைக்குறுகாமறைநாலினுட்பச்
சொல்லறிவாற்றமிழ்தேர்மாறனன்னகர்ச்சூழ்பொருட்குச்
செல்லறிவாளர்சொற்கோடாதழுங்கலொண்சேயிழையே. (444)
இஃ தொன்றினொன்றின்மைஎன்னை? ஒன்றின்கண் ஒன்றின்மையும் அதன்கண்ணும் அஃதின்மையுமாயினமையான் அறிக.
சூழ் பொருள் – அறனும் இன்பமும் தருமென விசாரித்தபொருள். பகுதி-பொருள்வயிற்பிரிதல்.
துறை – பருவநினைந் தாற்றாளாயதலைவியைத் தோழி வற்புறுத்தல்.

இன்றிருந்துநாளையிறப்போர்பெயரினையு
மன்றுதொறுமேந்திமறுகினவே–யன்றொருகாற்
சேமந்தரித்ததிகிரித்திருமலையா
னாமந்தரித்தறியாநா. (445)
இஃ துள்ளதனின்மை. என்னை? இவ்வுலகத்து இப்பொழுதி னுள்ளகிரியையானது முற்பிறப்பில் ஒருகாலத்தும்
இல்லாதகிரியையை யறிவிப்பதாலென்றறிக. திணை – பாடாண்சார்ந்தபொதுவியல். துறை – பரவார்ப்பழித்தல்.

கள்ளார்பசுந்தண்டுழாய்மாதவன்கடிகைச்சிலம்பி
னுள்ளார்பிறதெய்வமென்றுமுள்ளாரென்பதுள்ளிநடுத்
தள்ளாமறலிதன்றூதரைக்கூவித்ததியர்வரி
னெள்ளாதிறைஞ்சியயற்போமினென்னுமிரந்திரந்தே. (446)
இஃ தென்றுமின்மை ; என்னை? திருமால்கடிகைச்சிலம்பினுள்ளா ராகியதொண்டர், பிறதெய்வம் என்றும்
உள்ளாராயினாராகையால் அவர் இன்றும் உள்ளாரென்பது தொனியினாற்கொள்ளக்கிடந்தமையின், என்றுமின்மையாயிற்று.
இதற்கு என்றுமுள்ளித்தொழாரென்பது இன்று முள்ளித்தொழாரென்பதறிவித்தற்கு ஏதுவாயிற்று.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பரவல்.

கல்லாற்கடலடைத்தகண்ணன்பேர்கல்லாநா
ளில்லாதவர்க்கினிமேலில்லையே–நல்லார்கள்
சூழ்ந்தேதுதியமிர்திற்றோய்வதல்லாற்றீநரகில்
வீழ்ந்தேபதைக்கும்விதி. (447)
இஃ தின்மையினின்மைகண்ணன்பேர் இச்செனனத்துக் கல்லா நாள் இல்லாதவர்க்கு மேல் எரிவாய்நரகத்து
வீழ்ந்துபதைப்பதில்லாததினால் அறிக. நல்லார்கள்சூழ்ந்தேதுதியமிர்தம்-பரமபதம்.
திணை – இதுவுமது. துறை – ஓம்படை. ஆதலாற் றொண்டர்காள் இக்காயம் இருக்கப் பெற்றபொழுதே
அவன் திருநாமத்தை வீழ்நாள்படாமைச் சொல்லுவீராக என்பது பயன்.

மானிடரைவாழ்த்துமதியின்மைதீர்ந்ததற்பி
னீனநிலைதீர்ந்ததெனைவிட்டே–போனதற்பின்
மன்னெறியேநின்றுமகிழ்மாறனாரைத்துதிக்கு
நன்னெறியேபெற்றுளநன்னா. (448)
இஃ தழிவுபாட்டின்மை ; என்னை? மானிடரை உண்டிப்பொருட்டால் வாய்மையிழந்துவாழ்த்தும் அறியாமை
யென்னிடத்தில்லையான தேதுவாக வென்னிடத் தீனமென்றிகழப்படும் இரப்பென்பது என்னை விட்டுநீங்கியது ;
நீங்கியபின்னர் நிலைபெற்றமார்க்கத்திலேநின்று காரிமாறப்பிரானைவாழ்த்தும் நல்லமார்க்கமேபெற்று வாய்மை
படைத்தது எனது நன்னா என்றதனால் அறிக. திணை – வாகைசார்ந்தபுறத்திணை(யுள்) துறை – புலமைவென்றி.
இன்மைய தேதுவைந்தும் அடைவே காண்க. இவையும் ஞாபகவேதுவின்பாற்படும்.

195. காரியமுந்துறுகாரகங்காரண
காரியமொருங்குறுகாட்சியுத்தமு
மயுத்தமுமெனமேலறைந்ததோடொன்றும்.
(எ-ன்) இது மேலேகூறிய காரகவேதுவைப் பிறிதொருவகையான் வகுத்துணர் – ற்று.

(இ-ள்) காரியமுந்துறுகாரகம் முதலாயநான்கும் ஒருவகைக்காரக வேதுவின்பாற்படு மென்றவாறு.

பொன்மேதகுநற்பொருளென்றேதேர்ந்துரைக்கு
முன்னேநெடுமாயன்மோகூர்வாழ்–மின்வாடைத்
தண்டுளிவந்தாற்றணந்தார்தம்முயிரையுண்குமெனக்
கண்டுளியாநொந்தனளாகம். (449)
இது காரியமுந்துறுகாரகவேது. இதனுள், தேர்ந்துரைக்குமுன்னே யென்றது தேர்ந்துரைக்கும் உரை கூடுமுன்னேயென்றவாறு.
தணந்தார் – தலைவரைப்பிரிந்தார். கண்டுளியா – கண்ணீரைத்துளித்து. பகுதி – பொருட்பிரிதல்.
துறை – வாட்டங்கூறல். தலைவன்கூற்று. தோழி முன்னிலை.

தெண்முத்தமிழ்மாறன்றென்குருகூர்ச்சேயிழைக்குன்
உண்முற்றியபோக்குணர்த்துரையிற்–கண்முத்
துடனேவருமென்றாலொண்பொருட்குமேகல்
கடனேயிறைவாகழறு. (450)
இது காரணகாரியம் ஒருங்குநிகழேது. உண்முற்றியபோக்கு – உள்ளமொருமித்தசெலவு.
கண்முத்து – கண்ணீர்த்துளியாகியமுத்து. உடனேவரும் – ஒக்கவரும்.
ஒண்பொருட்குமேகல் – ஒள்ளியபொருளாயினும் அதற்குப் பிரிதல். கடனேயென்றது முறையன்றென்றவாறு.
ஏகாரம் – எதிர்மறை ; ஒழியிசையெனினுமாம். உம்மை – சிறப்பும்மை. பகுதி – இதுவுமது.
துறை – ஆற்றாமை கூறிச் செலவழுங்குவித்தல். தோழிகூற்று.

மாயிருஞாலந்தழைப்பவாசமகிழ்மாலை
ஞாயிறுமெய்வேதநலன்சிறந்த–வாயிரப்பாத் (439)
தூயகதிர்விரித்துத்தோன்றலாற்றொண்டரகத்
தாயவிருடீர்ந்தன. (451)
இது, யுத்தவேது. இதனகத்து உருவகவாய்பாடும் விரவிவந்தவாறு காண்க.
அவை மகிழ்மாலைஞாயிறு, ஆயிரப்பாத்தூயகதிர், தொண்டரகத்தாயவிருள் என்பனவாம்.
இவற்றுள் முதலும் ஈறும் ஏகதேசவுருவகம். மகிழ்மாலைஞாயிறு – மகிழ்மாலைமாறனாகிய ஞாயிறு.
அகத்தாயவிருள் – அறியாமையாகியவிருள். துறை – பழிச்சினர்ப்பரவல் ; கடவுள்வாழ்த்துமாம்.

நற்பால்விழைந்தபுகழ்நாவீறன்மெய்வேத
முற்பாடல்வாய்மைமுழுதடக்குஞ்–சொற்பா
வுரைமலர்ந்ததூய்மதியாற்கற்றோருளத்தா
மரைமலர்ந்தமன்னோமகிழ்ந்து. (452)
இஃ தயுத்தவேது.
இதனுள் நற்பால்விழைந்தபுகழ் நாவீறனென்பது நல்லறத்தின்வழியொழுகினோர்விரும்பப்பட்ட நாவீறுடையபிரான் எ-று.
நற்பால் -ஆகுபெயர். சொற்பாவுரை கீர்த்தியோடுகூடிய பாக்களாற்றோன்றின நூல் ; அது திருவாய்மொழி.
தூய்மதியாலென்பது திருவாய்மொழியினிடத்துப் பரந்த தூயஞானமாகியமதி உதித்தலால் எ-று.
கற்றோருளத்தாமரை மலர்ந்தமன்னோ மகிழ்ந்து என்பது கற்று வல்லோர் இதயதாமரை மிகவும் மகிழ்ச்சியோடு மலர்ந்தன எ-று.
துறை – பாடாண்சார்ந்தபுறத்திணையிற் பனுவல்வாழ்த்து.

196.உணர்வுறினையவேதுவுமுளவே.
இதுவுமது.

(இ-ள்) அவ்வேது ஐயவேதுவினும் வருவதுண்டு என்றவாறு.

வேயாலிசைதந்தமால்பரமேச்சுரவிண்ணகர்வாய்த்
தோயாதரவுற்றுனைப்பிரிந்தாலினித்தோயுந்தன்மை
யேயாதெனநினைந்தோநெடிதாமெல்லையெய்துகிலின்
மாயாப்பழியெய்துமென்றோநைகின்றதுவாணுதலே. (453)

இஃ தையுறவேது. இதனுள் இனிப் புணர்ச்சிகூடுந்தன்மை பொருந்தாதெனவிசாரித்தோ,
அல்லது (நெடிதாமெல்லையெய்துகில்-) நெடும்பொழுதெய்துமாகில் (இன்மாயாப்பழியெய்து மென்றோ-)
நுமது குடிக்கு நீங்காத அவகீர்த்தியுண்டாமென்றோ (நைகின்றது வாணுதலே-)
இவ்விரண்டினுள் வருந்துகின்றதற்கேது யாதுதான் என்றவாறு. பகுதி – இயற்கை. துறை – பருவரலறிதல்

31-வது ஏது முற்றும்.

——-

32-வது சுவையலங்காரம்.

197.பொறியுணர்வொடுமொருபொருளினையெதிர்ந்த
நெறியுடைமனத்துணிகழ்தரும்பான்மை
யயலவருறப்புறத்தாய்ப்பொருளெட்டி
னியல்வதுசுவையென்றியம்பினர்புலவர்.
(எ-ன்) வைத்தமுறையானே சுவையென்னுமலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) இந்திரியங்களினறிவினோடும் யாதானுமொருபொருளைக் காணப்பட்ட மனத்துள் அப்பொருள் ஏதுவாக
நிகழ்ந்ததன்மை நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப்புலப்படுவதோராற்றான் வெளிப்பட மெய்ப்பாடெட்டாற் றோன்றுவது
சுவையென்னும் அலங்காரமா மென்றவாறு.

பொருளென்பது மெய்ப்பாடு. இயல்வது – உண்டாவது. பொருளெட்டின் இயல்வது சுவையென்பது
பொன்னினியன்றகுடம் என்பது போலக்கொள்க.

198.அவைதாம்,
பெருமிதநடுக்கமழுகையிளிவர
லுருத்திரநகைவியப்புவகையென்றாகும்.
(எ-ன்) மேற் பொருளெட்டின் இயல்வது என்றார், அவ்வெட்டும் இவையென்பது உணர் – ற்று.

(இ-ள்) பொருளெட்டென்னும் அவைதாம், பெருமிதமுதல் உவகையீறாம் இவ்வெட்டுமாம் என்றவாறு.

திருமால்பரனெனவேதேற்றுதற்கன்பாக
வருமாரியன்றனையிம்மண்மேற்புலவீ
ரொருமானிடனென்றுணராதவனெம்
பெருமானாமென்றுணர்ந்தப்பெம்மானருள்கூர்
பத்தர்தம்மடியிணைபரவுமினதுவே
யுத்தமவிலக்கணமுரைசான்
முத்தியைவிளைக்குமுயற்சியுமஃதே. (454)
இது கல்விபற்றியபெருமிதம். பா – மருட்பா. திணை – பாடாண். துறை – செவியறிவுறூஉ ; ஓம்படையுமாம்.

நாராயணனேநமவென்றுரைப்பவர்பால்
வாராவொருநாளும்வல்வினைகள்
சாரானொருநாளுஞ்சண்டதரன்சாராவாம்
பேராதமாயப்பிறப்பு (455)
இதுவுமது. என்னை? “கல்வி தறுக ணிசைமை கொடை யெனச், சொல்லப் பட்ட பெருமித நான்கே” என்பதனால் அறிக.
பா – “வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும்” என்ற செய்யுளியற்சூத்திரத்துள் வெண்பாவிற்கு ஈறுணர்த்தப்புகுந்து
முச்சீர்த்தென்னாது ஆகும் என்று ஆக்கங்கொடுத்தமையான் அத்துணை ஆக்கமின்றி இடையினும் முச்சீராய்
அவ்வீற்றுச்சீர் அசைச்சீராகாதுவருமென் றுட்கொண் டுணர்த்தினார் தொல்லாசிரியர் ;
அங்ஙனம் தனிச்சொல்லுமின்றிவந்ததோர் வெண்பாவில் விகற்பமாம். இங்ஙனம்வருவதனை அதன்பின்னர்
வரும் ஒருசாராசிரியர் சவலைவெண்பாட்டென்றும் பெயரிட்டுவழங்குவதாம் ; என்னை?
“நனியிரு குறளாய் நான்கடி யுடைத்தாய்த், தனிவரலில்லது சவலைவெண் பாட்டே” என்பதனாலும் உணர்க.

கீலாலங்குளிறுதிரைகெழுகடன்முற்றகன்ஞாலத்
தாலாலமிசைபவளவருவரையுங்கருவரையுந்
தமிதமியென்னதுவெனலாந்தவலருமாண்டொழிற்றன்மை
யெமதெமதென்றெதிருநரின்னுயிர்செகுத்தீத்திருநோக்கிற்
கடைசிவந்துகருமையவாய்க்கவின்பெறுவார்குழைபோழ்ந்த
வடிபுரைமாண்மதர்மலர்க்கண்மதிபுரைவாணறுநுதாஅல்;

இடந்தழுவுங்குனிசிலைக்கையிகன்மறவர்கொடுங்கணையோ
டுடன்றெழிலென்சுடர்வடிவேற்குணவாதலொருதலையாற்
றொடர்ந்தெழுநின்றமரேற்செண்பகமாறன்றுணையடிசேர்
திடந்தழுவுததியரெனத்தெருளுறநன்கருளுவனே;

வாட்டானைத்துறுமறவர்வயிரவழற்பிழம்புகுகட்
கோட்டானையுடன்வரிலென்கூரிலைவேலவர்மார்பிற்
றீட்டாநைவினையளிப்பனுமரேற்றிவ்வியதுளபத்
தோட்டானைத்தொழுமாறன்றொண்டரினன்கருளுவனே;

குளிர்மதிவானகடுரிஞ்சுங்கொடித்தேரின்குழுவினொடு
மொளிதிகழ்வன்படைமறவருடங்கெழின்வைந்நுதிவேலாற்
களிபயில்வெந்தொழில்புரிவனுமரேல்வண்கருணேச
னளிதிகழ்தேமகிழ்மாறனடியரினன்கருளுவனே;
எனவாங்கு,

காணுதிகாணுதிகனலிதெற்கெழினுந்
தாணுவினிலைதவறினுந்தவறாவுரை
குன்றுசூழ்கூர்ம்பாற்கொடுநெறிக்
கொன்றுநீயழுங்கஞருறலேகுதியே. (456)
இது தறுகண்மைபற்றியபெருமிதம். பகுதி – உடன்போக்கு. துறை – அடலெடுத்துரைத்தல்.

கொன்றேன்கொடுவினையைக்கூற்றுவனாராட்டமெலாம்
வென்றேனினிநரகில்வீழ்கலேன்–சென்றுமறை
தேடிப்பிடித்ததிருமாலேதெய்வமென
நாடிப்பிடித்ததனானான். (457)
இதுவும் தறுகண்மைபற்றியபெருமிதம். திணை – வாகை. துறை – சால்புமுல்லை.

அரியாயவன்பரனாமென்பதாதியிலன்றழைத்த
கரியாலுமுண்மையுறாரிதென்னோகற்றுணர்ந்துசெம்பொன்
உரியார்கடைசென்றிரப்பவரோடொன்றெனவெனையுஞ்
சிரியாதருள்செய்தவாமகிழ்மாலிகைத்தேசிகனே. (458)

——————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை– பகுதி-3-ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை–
6-வது உல்லேகவலங்காரம்–
7-வது ஒப்புமைக்கூட்டம்–
8-வது வேற்றுமையலங்காரம்–
9-வது திட்டாந்த வலங்காரம்–
10-வது தற்குணவலங்காரம்–
11-வது பிரத்தியநீகவலங்காரம்–
12-வது சந்தயவலங்காரம்–
13-வது அற்புதவலங்காரம்–
14-வது நிதரிசனவலங்காரம்
15-வது தற்குறிப்பேற்றவலங்காரம்
16-வது அதிசயவலங்காரம்
17-வது சிலேடையலங்காரம்
ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

126.ஒருபொருட்குவமச்சொற்றொகக்கவர்த்த
பொருவமர்பொருள்பலபுணர்ப்பதுல்லேகம்.
(எ-ன்) வைத்தமுறையானே உல்லேகமென்னுமலங்கார முணர்-ற்று.

(இ-ள்) புலவனாற்குறிக்கப்பட்டதோ ருவமேயப்பொருட் குவமவுருபு தொகப் பலவேறுவகைத்தாய்க்
கவர்த்த வினைபயமெய்யுருவென்னு மேதுக்களா னொத்த வுவமானப்பொருள்களை
யதற்குக் கூறுவ துல்லேக மென்னும் அலங்காரமா மென்றவாறு.

127.அதுவே,
யொருவர்பலர்குறிப்புரைப்பதுமொன்றும்.
(எ-ன்) இதுவுமதற்கோர் புறனடையுணர்-ற்று.

(இ-ள்) அச்சொல்லப்பட்டவுல்லேகம் ஒருவர் தன்மையிற் கூறப்படுவதோடும், அவர் பிறராயுள்ளார் பலர்
குறிப்புரையையும் பெய்து ரைப்பதும் பொருந்துமென்றவாறு. உம்மை, யெச்சமாதலால் வினாவினும் வருமென்றுணர்க.

என்னாருயிரென்னிருகண்மணியென்னி தயத்துள்ளாய்
மன்னாரமிர்தமென்மெய்க்கணியாரம்வகுளப்பிரான்
முன்னாளெனையடிமைக்கொண்டபேரருண்மூர்த்திமண்மே
னன்னாவலர் தம்பிரானுயர் வானவர் நற்றுணையே. (292)
இது ஒருவர் பலகவர்ப்பாயுரைத்தது. இருகண்-அகக்கண்ணும் புறக்கண்ணும். இடம்-தன்மை. துறை-கடவுள்வாழ்த்து.

முத்திக்குவித்தென்பர்முத்திபெற்றார் முத்தியைவிளைக்கும்
பத்திக்குவித்தென்பர் பத்தியுற்றார்பனுவற்றோகைதேர்
புத்திக்குவித்தென்பர்முத்தமிழ்வாய்மைப்புலவர்மண்மே
லெத்திக்கும்போற்றுந்திருமகிழ்மாலையிறைவனையே. (293)

———–

இது பலர் பலகவர்ப்பாய்க் கூறுவரெனப் பெய்துரைத்தது. முத்தமிழ்-சித்தசித்தீச்சுரத்தைக் கூறுந்தமிழ்,
அது திருவாய்மொழி; எழுத்துஞ் சொல்லும் பொருளுந் தேரும் வாய்மையுமாம். வாய்மை – உண்மை. துறை-இதுவுமது.

அருளதென்கோநல்லறமதென்கோகற்றறிந்தவர்மெய்ப்
பொருளதென்கோசற்குணமதென்கோதொண்டர்புந்தியுள்ளாந்
தெருளதென்கோபிறதெய்வமென்றேதிரிகின்றசெய்கை
மருளதென்பாலணுகாதென்னையாண்மகிழ்மாறனையே (294)
இது தன்றொழிலுரைக்கும் வினாவின்கண்வந்தது. என்கோ என்பது யான் என்றுகூறுகோ என்னும்பொருட்டு.
அருள்-கருணை. நல்லறம்-துறவறம். மெய்ப்பொருள்-சீமந் நாராயணன். சிற்குணம்-சுத்தசாத்துவிக குணம்.
புந்தியுள்ளாந்தெருள்-பரமஞானம். மருள்-அறியாமை. அது என்பாலணுகாமை-அம்மரு ளென்னிடத்துச் சிறிது முறாமை.
என்னையாண் மகிழ்மாறன்-என்னையாட்கொண்ட மகிழ்மாறனென்றவாறு.
இதனுள் தன்றொழிலுரைக்கும் வினாவின்கண் ணீற்றினோகாரமுன்னர் வருமொழி முதற்கண்ணதாங் கசதபக்கண் மிகா தியல் பாயின. என்னை? “மாறுகொளெச்சமும்வினாவுமையமுங், கூறிய வல்லெழுத்தியற்கையாகும்” என்பதனாலறிக. திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.

6-வது உல்லேகம் முற்றும்.

———————–

7-வது ஒப்புமைக்கூட்டம்

—–

128.தக்கதோர்பொருளினைச்சாற்றுழியதுபோன்
மிக்கபல்பொருள்களையுடன்விளம்புதறா
னொப்புமைக்கூட்டமெனவுரைத்தனரே.
(எ-ன்) வைத்தமுறையானே யொப்புமைக்கூட்டமென்னு மலங்கார முணர்-ற்று.

(இ-ள்) முக்கியமானதோர்பொருளினைப் புலவன்கருதிச் செய்யுளகத்துக் கூறுங்கா லதுபோன்ற மிக்க
பலபொருளையு மதனுடன் பொருளொப்புமையுடைத்தாய்க் கூட்டமுறச்சொல்லுத லொப்புமைக்
கூட்டமென மேனாட் கற்றுவல்லோ ருரைத்தனரென்றவாறு.

129. உயர்புகழ்பழியவற்றொடுமுறுமதுவே.
(எ-ன்) இதுவும் அவ் வலங்காரத்தின்பாகுபாடுணர்-ற்று.

(இ-ள். ) அவ் வொப்புமைக்கூட்டமென்னுமது உயர்ந்தபுகழோடு முயர்ந்த பழியோடும் பொருந்திவரு மென்றவாறு.
உயர்வு முதனிலைத் தீவகம். ஏகார மீற்றசை.

வையம்பரவுமகிழ்மாறன்வண்டமிழுஞ்
செய்யசதுர்மறையுந்தேசிகராய்-மெய்யுணர்ந்தோர்
பேரறிவும்பேருலகுண்டானேபிரமமெனப்
பாரறிந்ததாரறிதற்பாற்று. (295)
இதனுள், மகிழ்மாறன்வண்டமிழென்றது – திருவாய்மொழி. தேசிகர் – ஆசாரியன்மார். பேருலகுண்டான்-சீமந்நாராயணன்.
பாரறிந்தது-பெரியோர்களறிந்தது. அவையல்லவெனிலென்பதனைச் சொல்லெச்ச மாக்கிக்கூட்டிப்
பிரமமென்ப தாரறிதற்பாற்று என்பது ஒருவரும் அறியும்பகுதி யுடைத்தன்றென்பதாம்.
திணை-வாகை. துறை-சால்புமுலை. அல்லது திணை-பொதுவியல். துறை-பனுவல் வாழ்த்துமாம். இது புகழொப்புமைக்கூட்டம்.

என்றும்பிறர்மனையாளின்பநயவாரு
நன்றிமறவாநலத்தாரு-மொன்றினைக்கொன்
றூன்பரிந்துண்ணாதவுரவோரும்பூமகள்கோன்
வான்புரந்துநீடுவாழ்வார். (296)
இதுவும் புகழொப்புமைக்கூட்டம். இதனுள், நீடுவாழ்வார் என்றது அழிவின்றிவாழ்வாரென்றவாறு.
ஒழிந்த அகல முரையிற்கொள்க. திணையுந் துறையு மிதுவுமது.

வேரிமலர்மகள்கோன்மேவுந்திருமேனி
பாரிலுலோகமெனும்பாவிகளு-மாரியனை
மாந்தரிலொன்றென்பாரும்வன்றொண்டர்சென்மநிலை
யாய்ந்துரைப்பாருந்நகரத்தார். (297)
இது பழியொப்புமைக்கூட்டம். திணை-பாடாண். துறை-வாயுறை வாழ்த்து.

பொல்லாவழுக்காறுபூண்குநருமாலடியார்க்
கில்லாப்பழியொன்றிடுகுநரு-நல்லாற்றிற்
செல்குநரைமீட்குநருஞ்சேயிழையாயெய்துவன
நல்குரவுதீவாய்நரகு. (298)
இதுவுமது. நல்குரவு – வறுமை. தீவாய்நரகு – அக்கினிநரகம், எனவே இம்மைக்கு வறுமையும், மறுமைக்கு நரகு மென்பதாம்.
ஈரிடத்து மும்மை தொக்கன. திணையுந் துறையு மிதுவுமது.

மைந்தர்மூரல்வாய்முத்தமுண்ணாதவாய்வாயோ
மைந்தர்சொற்கொளாச்செவியுமோர்செவிகொலோமழலை
மைந்தர்சீறடிச்சுவடுழாமார்புமோர்மார்போ
மைந்தர்காட்சிகண்டின்புறாக்கண்கள்கண்மலரோ. (299)
இதுவுமது. திணை – வாகை. துறை – பொருளொடுபுணர்தல். அன்றித் திணை-பொதுவியல். துறை-மகப்பெறாதழுங்கல்.

7-வது ஒப்புமைக்கூட்டம் முற்றும்.

—————

8-வது வேற்றுமையலங்காரம்.

130.ஒப்புடையிருபொருளுரையினுங்குறிப்பினு
மெய்ப்படவேற்றுமைப்படுத்துதல்வேற்றுமை.
(எ-ன்) வைத்தமுறையானே வேற்றுமையென்னு மலங்கார முணர்-ற்று.

(இ-ள்) உலகத்தொப்புடையனவாயிருக்கு மிரண்டுபொருளை வைத்தவற்றைக் கூற்றினாலாதல் குறிப்பினாலாதல்
பொருள்பெறத் தம்முள் வேற்றுமைபடக்கூறுவது வேற்றுமையென்னும் அலங்காரமாமென்றவாறு.

131.அதுவே,
ஒருபொருளிருபொருள்சமமுயர்ச்சியதெனும்
பொருள்பெறுமரபிற்புலப்படுமென்ப.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தினது பொருட்கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அவ்வேற்றுமையென்னுமலங்காரமாகியவது, ஒரு பொருளான் வேற்றுமைசெய்தலும்,
இருபொருளான் வேற்றுமைசெய்தலும் அங்ஙனம் வேற்றுமைசெய்யுங்கா லொன்றினுக்கொன்று சமமாந் தன்மையும்,
உயர்ந்துளதன்மையு முடைத்தெனப் பொருள்படு மிலக்கணத்தோடுந் தோன்று மென்றுகூறுவர் பெரியோரென்றவாறு.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு:-

உண்ணத்தெவிட்டாதுடலுமுயிருந்தளிர்ப்பத்
தண்ணென்றினிமைதருமமிர்தம்-பெண்ணமிர்தின்
செவ்வாயமிர்தனையதென்றாலுஞ்செவ்வியினி
லொவ்வாதது பழமைத்தொன்று. (300)
என்பது, உண்ணாநிற்ப வுண்டோ ருடலுமுயிருந் தழைக்கும்படி குளிர்ந்து தெவிட்டா தினிமையைக்கொடுக்குந்
தேவர்பானமாகிய அமிர்தமொத்த திப் பெண்ணாகியவமிர்தின் செவ்வாயிடத்துண்டாகிய பானமாகிய
அமிர்தமென்றே னானாலுங் காலத்தினாற்பார்க்குமிடத்துப் பழமையுடைத் தஃ திஃ தப்படியன்று;
புதிதுபுதிதாந்தன்மையையுடைத்தாகையாற் காலச்செவ்வியா லொவ்வாதென்றவாறு.

இதனுள், பெண்ணாகிய அமிர்தின் செவ்வாயிடத்துண்டாகிய பானமாகிய அமிர்தமென உருவகவாய்பாடுகள்
மாட்டேறுபெற்றும் மாட்டேறுபெறாதும் வந்ததுங் காண்க. இஃதொருபொருள்.
பகுதி – இயற்கை. துறை-நலம்புனைந்துரைத்தல்.

வண்ணவாய்மைச்சுடர்கண்மன்னானனத்துலவு
கண்ணதாயம்பரமாய்க்கண்டவற்று-ளொண்மை
வெளியொன்றுவேங்கடத்துண்மெய்ப்பொருளாய்நின்ற
வொளியொன்றெனும்பேருலகு. (301)

இதனுள் அழகினோடுங்கூடிய வுண்மைச்சுடர்கள்-சந்திரனும் ஆதித்தனுமாம்.
ஆகாயமுந் திருவேங்கடமுடையானும் ஒப்புடைப்பொருள்.
ஆகாயத்தின்மேற்சொல்லுங்காற் சுடர்கள் பொருந்திய மகிழ்ச்சியோடுஞ் சுற்றிவரு மிடமுடைத்தாய்ச்
சலத்தைத்தரிக்கப்பட்டதா யெனவும்,
திருவேங்கடமுடையான்மேற்சொல்லுங்காற் சுடர்கணிலைபெற்ற திருமுகமண்டலத்துட்பிறழுந் திருக்கண்களாகவுடைய
அழகிய பரத்துவமாமெனவும் கொள்க.
இஃ திருபொருள். ஒருபொருள், இருபொருள் இவையிரண்டும் சமம். கூற்று. துறை-கடவுள்வாழ்த்து.

மாறன்றமிழ்மறைக்குவாய்ந்தமறைமுப்பொருளுங்
கூறுந்திறத்தாற்குறிப்பொக்குந்-தேறத்
துயவரவேகூறுமிதுசோதியையுட்கொள்ள
மயர்வறவேகூறாமறை. (302)
என்ப துயர்ச்சி. துயவு-அறிவுதிரிதல். இதுவும் கூற்று, திணை-பாடாண்சார்ந்தபொதுவியல். துறை-பனுவல்வாழ்த்து.

வெய்யநயனத்தசெவ்வாயவெண்ணகைய
தையல்வதனமிறைதண்காவுட்-பொய்கைதான்
வண்கழுநீர்சேதாம்பல்வால்வளைகடாமுயிர்த்த
தண்டரளநீணிரையதாம். (303)
உயிர்த்த – பெற்ற. இது சமம். குறிப்பு. பகுதி – இடந்தலை. துறை – தடங்கண்டுமகிழ்தல்.

மாதராள்வெய்யமுலைமாணிக்கமுத்துவட
மீதுலாவுந்தகைத்தாம்வேரிமகிழ்ச் – சோதி
துடரிவரைதேனருவிதூநீரருவி
படரியலநல்காதின்பம். (304)
வெய்யமுலை – விருப்பத்தைத்தருமுலை. வேரிமகிழ்ச்சோதி – காரி மாறப்பிரான்.
இன்பநல்காதென்பதனால் இதுவுங் குறிப்பு. உயர்ச்சி.
பகுதி-இதுவுமது. துறை-நலம்பாராட்டல்.

132–அதுவே,
பொருளாதியவாநான்கொடும்புணரும்.
(எ-ன்) இதுவும் அவ்வேற்றுமையலங்காரத்தின் விதப்புணர்-ற்று.

(இ-ள்) அது – அவ்வேற்றுமையலங்கார மென்னு மது பொருள் குணஞ் சாதி தொழி லென்னும்
நான்கினோடும் பொருந்திவரு மென்றவாறு.

அலையுட்படியுமரும்புனலைவாங்கி
யுலைவிலுலகுய்யவோங்கு-மலைமேற்
களிக்கும்புயல்வேங்கடவனைப்போன்முத்தி
யளிக்குந்திறனறியாதாம் (305)
இதனுள், அலையுட்படிதல் – திருப்பாற்கடலுட் கண்வளர்தலும், புனலையுண்ணக் கடலுட்டாழ்தலுமாம்.
அரும்புனலைவாங்கி யுலைவிலு லகுய்யவோங்குதல் – பெறுதற்கரியபுனலை மாவலிபால்வாங்கி யுலகத்துள்ளார்
பிழைக்க விச்சுவரூபங்கோடலும், கடலிற் புனலைவாங்கி யுண்டுலகு பிழைக்க விசும்பின்மே னிமிர்தலும்.
இது பொருள்வேற்றுமை. துறை-கடவுள்வாழ்த்து.

செம்பவளமுந்திருமால்சேறைமான்செவ்வாயின்
விம்பவளமுங்குணத்தால்வேறன்றே-யம்பவளம்
வல்லென்றிருக்குமலர்மாதர்வாயெஞ்ஞான்று
மெல்லென்றினிமைமிகும். (306)
இது குணவேற்றுமை. செவ்வாயின் விம்பவளம்-வடிவின்செல்வம். ஒழிந்த அகல முரையிற்கொள்க.
துறை-நலம்புனைந்துரைத்தல்.

மந்திரத்தால்வாகடஞ்சொன்மாமருந்தாற்றீராது
புந்தியிடங்கொண்டுபுறம்போகாவாஞ்-சந்ததமு
மைவளைவேற்கண்மடவீர்மாறன்றழுவாத
பெய்வளைபாற்காமப்பிணி. (307)
இது சாதிவேற்றுமை. திணை-பெண்பாற்கைக்கிளை. துறை -கண்டுகைசோர்தல்.

மாறுங்கொலைநமற்குமாறன்மணிவரைமேற்
றேறுமயில்விழிக்குஞ்சேர்வினைதான்–வேறன்றே
நின்றொறுக்குங்கூற்றுயிரைநேரிழைகண்மன்னுயிரைக்
கொன்றளிக்குமீட்டுங்குழைந்து. (308)
இதனுள் தேறும் என்பது (மானிடமகளெனத்) தெளியும் எனவும், மயில்விழிக்கென்பது மயில்போற்
சாயலையுடையாள் விழிக்கெனவுங் கொள்க. இது தொழில்வேற்றுமை.
கொன்றளிக்கை-நோய்செய்யும் நோக்கும், அதற்கு மருந்தாகிய நோக்கும்.
நோய்செய்யும் நோக்கு-இன்பத்தினாய காமக்குறிப் பினைவெளிப் படுத்துகின்ற நோக்கு.
மருந்தாய நோக்கு-தன்கணிகழ்கின்ற அற்புநோக்கு. பகுதி-இயற்கை. துறை-குறிப்பறிதல்.

நான்கொடும் புணருமென்ற தெச்சவும்மை யாதலாற் பிறவலங் காரங்க ளோடுங் கூடியும் வருவனவுள. அவை வருமாறு;-

ஊர்தியனமம்போருகமாசனஞான
நீதிவழுவாநெறிபடைத்தும்-வேதநெறி
யோதிப்பொறியிழந்தானொண்குரவனெங்கோமா
னாதித்திருமகிழ்மாறன். (309)
இது, சிலேடைவேற்றுமை. பொறியிழத்தல்-பிரமன் றலையிழத்தல்.
எங்கோமானாகிய மாறன் பொறியென்னும்பெயரையுடைய பெரிய பிராட்டியருளையெய்தினவ னென்றமையாற்
சிலேடையால் வேற்றுமையாயிற்று. திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.

ஓவாதசெம்மையுதயத்துளதெனினுந்
தாவாமறுப்படைத்ததன்மையான்-மூவா
முதனமதுகண்ணனெனுமுத்திரைக்கைம்மாறன்
வதனமதுநேராமதி. (310)
இது விலக்குவேற்றுமை. திணையுந் துறையுமது. இன்னும்வேறுபடவரு வனவும் வந்தவழிக் கண்டுகொள்க.

8-வது வேற்றுமை முற்றும்.

———–

9-வது திட்டாந்த வலங்காரம்-

133.ஒருபொருட்டிறமுதற்குறித்தொப்புமைகொளத்
தெருள்புரிபிறபொருட்டிறமுஞ்செவ்விதி
னவ்வியலகத்தறைவது திட்டாந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே திட்டாந்தமென்னு மலங்கார முணர்-ற்று.

(இ-ள்) யாதாயினு மொருபொருட் கெய்திய நன்மைதீமைக்கூறு பாட்டைப் புலவனுட்கொண்டதனைத்
தன்னாற்கூறப்படுஞ் செய்யுளகத்து முதலேகூறி, யதன்பின்ன ரதனோ டொப்புமைகொள்ளும்.
படிக்குத்தெளிவைத்தரு மற்றொருபொருளின்கூறுபாடும் அச் செய்யுளகத் தழகுபெறக் கூறுவது
திட்டாந்தமென்னு மலங்காரமா மென்றவாறு. எனவே, உள்ளுறையுவமம்போல வுவமப்பொருள் செய்யுளகத்து
வெளிப்படையாகநிற்ப வேனை யுவமேயப்பொருள்களெஞ்சிநிற்பக் குறிப்பினாற் கொள்ளப்படுவதன் றென்பதாயிற்று.

பூரணன்மலர்மகள்புணர்மணிமார்ப
னாரணன்மதிநலனயந்தனன்புரப்ப
முத்திரைக்கராம்புயமுதல்வனாவீற
னுத்தமச்சுருதியையோதாதுணர்ந்துணர்ந்
துரனுடையவற்றுளுமுபநிடதத்தால்
வரனுடைத்தாகவடித்தவண்டமிழ்மறைப்
பாடம்போற்றிநாப்பவித்திரம்படைத்தோ
ராடகமருமணிக்கிரணமோடளவளாம்
வீடடைவதுமெய்மெய்யேயாயினு
நாடரிதாகிநடைபெறுந்தொடர்புடைப்
பொதிந்தசொற்பொருணிலைபுலப்படப்புந்தியுட்
பதிந்தறியாரிருபசையறுத்துண்மை
யுணர்ந்துடலுயிர்தளிர்ப்பதுறாருறுமவர்
கணம்பயனிலவாங்காலங்கழியாத்
தேசிகரைவரைத்தேர்ந்துநற்றுணைக்கொளும்
பூசுரன்றிருப்பெரும்பூதூர்முனிவன்
குருபரம்பரையுரைக்குறிப்பினத்தமிழ்மொழிப்
பொருண்மலிநோக்கினைப்புணர்த்துணர்ந்தொண்மை
யிருநிலத்தொருவடிவெடுத்தகாட்சியதாந்
திருமலையாழ்வார்திருவருட்கிலக்கெனு
மறையவர்பிரான்மணவாளமாமுனிவர
னிறைநிலையுயிர்நிலையிஃதிஃதெய்து
முறைநெறியிஃதெனமுழுவதுமுனிவறத்
துறைதொறுந்துறைதொறுஞ்சோர்வறத்தொடுத்தெடுத்
துணர்த்தியவிசித்திரக்காண்டி கையொழிவின்முற்
குணத்தொடும்பழகுபுகூர்ந்துள்ளுறுத்தித்
தோய்ந்துவட்டாததூயபேரின்பம்
வாய்ந்தவர்தாமேபுலவிர்காண்மன்ற
விமிழ்திரைப்பாற்கடலினிற்பலவளஞ்சா
ரமிழ்தினைப்பசும்பொற்றசும்பகத்தடக்கியும்
பரிசிப்பதனொடும்பரிமளிப்பதலா
லுருசித்தறியாதுசிதமாமதன்சுவை
வானவர்சுவைக்கொளும்வாய்மை
நானிலத்தெவர்தெளியாதவர்நயந்தே. (311)
என்பது திட்டாந்தம்.

(இ-ள்) சொரூபமும், ரூபமும், ஞானமும், குணமும், விபூதியும், கருணையு முதலாகியவற்றுள்
யாதுமோர் குறைவிலனாம் நிறைவுள்ளான் பூமகள் விட்டுநீங்காத கவுத்துவமணியோடுங் கூடிய
மார்பனாஞ் சீமந் நாராயணன் ஞானத்தையும் பேரானந்தத்தையு மன்புற் றளித்தலான்
ஞானமுத்திரைக் கைத்தாமரை நாவீறுடையபிரான் ஒரு நூல்களு மொப்பில்லாத நன்மையையுடைய
சுருதியை நாவினாலோதாது பாடந்தரித்துஞ் சத்தவிற்பத்தியால்வரு மத்தங்களை யுட்கொண்டும்
ஞானமிகுந்த அச் சுருதிகளுள்ளும் நுட்பமா முபநிடத வாக்கியங்களாற் சேட்டமாகக் கோதற வடித்துரைத்த
திருவாய்மொழியின் மூலமுழுதும் பழுதறவோதித் தமதுநாவிற்குச் சுத்தி யுண்டாக்கினோர்
இவ்வுலகிற் பேதந்தரு மிரணியத்தளவு அருமணிக்கிரணத்தளவோடு மொரு தன்மைத்தாகக்கலக்கு மந்தாமத்தை
அந்தியகாலத் தடைவதோடும் சிறிது தமதுளத் தீண்டிருந்தானந்த மெய்துவதும் பிறராற் பூசனையெய்துவதும்மெய்;
மெய்யேயானாலும், அதன்க ணாராய்தற்கரியதாகி யொழுகும் பொருட்டொடர்புடைய மறைந்தசொல்லின்
பொருள் சென்று முற்றுதல் வெளிப்படைபோலப் புலப்பட்டுத் தமதுபுந்தியுட்டங்கியறியாதார்
அயனரனென்னு மிருவராலெய்தும் பயனைவிட்டுச் சீமந் நாராயணனே பரதத்துவமென்னும் வாய்மையுணர்ந்து
தமதுவாழ்நாளுளுடலுமுயிருந் தளிர்ப்பப் பேரானந்தமெய்துவ தறியார்;
அறிபவர் யாரெனிற் கணப்பொழுது முயிர்க் கிலாபமின்மையா மவப்பொழுது கழியாத பெரியநம்பி முதலாம்
ஆரியரைவரையும் ஆராய்ந்து முத்திக்கு நற்றுணையென்ன வுறவுகொண்ட பூலோகதேவனாந்
திருப்பெரும்பூதூர் முனிவன் குருபரம்பரைநோக்கத்தோடு முதலேசொன்ன தமிழ்மொழிப் பொருளான்மிகுத்த
நுட்பநோக்கத்தினையு மொன்றெனப்புணர்த் துட்கொண்ட ஒள்ளியஞானம் பெரியநிலத்தொப்பற்ற
மனுகுலவடிவெடுத்த காட்சிப்பொருளென்றுகூறத்தகுவதாய திருமலையாழ்வார் திருவுள்ளக் கருணைக்கிலக்கென்னு
மறையவர்க்கதிபதியாம் அழகியமணவாள மாமுனிவ னென்னுஞ்சேட்டவா னிறைநிலைமையிஃ துயிர்நிலைமையிஃ
திறையை யுயிர்சென்றெய்து மடைவாகிய வழி யிஃதெனவுமவற்றோடு மேனையவிரண்டுமாகிய
யாவையும் யாவரும் விரும்ப முதற்பத்து முதலாய்ப் பத்தாம்பத் தீறாகுமிடந்தோறு மிடந்தோறுஞ்
சந்தயமறத்தொடுத்தெடுத் துபதேசித்த பேரழகுடைத்தா முரைநடையை யொழிவில்லாத சுத்தசாத்துவிக
குணத்தோடும்பயின்று வரம்பறுத் துட்கொண்டழுத்தி யனுபவித்துத் தெவிட்டாத வீறில்பேரின்பம்பலித்துள்ளார் தாமே சந்தயமில்லை;
அஃதெப்படியொன்றெனி லொலிக்குந்திரையையுடைய திருப்பாற் கடல்பெற்ற சங்கநிதிமுதலிய
செல்வத்தோடும் பொருந்தியதா மமிர்தினைப் பசும்பொன்னாலாய குடம், தனதுவாய்க் கொண்டுள்ளடக்கியு
மூறுகொள்வதனோடும் பரிமளிப்பதல்லா லதற்கு யோக்கியமான மதுரத்தை யுருசித்தறியாதென்பதூஉம்,
துறக்கத்தவரேயிரதிக்கும் பெருமையுடையோ ரென்பதூஉ முலகத்து ளன்புற்றுத்தெளியாதவரில்லையாதலா லப்படியொன்றெனக்கொள்க.

இதனுண் முதலே குறித்தபொருளாவது திருவாய்மொழியும் பத்தரும். அவை யப்படியே முதல்வந்து
அதன்பின்ன ரதனோ டொப்புமைக்கொள்ளும்படிக்குத் தெளிவைத்தரும்படிக்குக் குறித்த அமிர்தமாம்
பொருட்டிறமு மதன்பின்ன ரிச்செய்யுளகத்துக் கூறியதூஉங் காண்க.
எனவே, போந்தபொருள் திருவாய்மொழிப் பாடம்போற்றுவதோடும் அதனகத் தைந்துபொருளையுங்
குருபரம்பரையா யோரான் வழியாய்வரும் வியாக்கியானங் கேட்பதே பேரின்பமெய்துதற் குறுதியென்பதாயிற்று.
திணை-பாடாண். துறை-ஓம்படை.

ஆதித்திருமாலடியார்நிரப்பிடும்பை
வாதிக்கினும்வளர்ப்பார்வண்மையே-பாதிப்
பிறையாகியுமதியம்பேரிருள்சீத்தற்குக்
குறையாகுறையாகுணம். (312)
இதுவுமது. நிரப்பு-வறுமை. வண்மை-கொடை. திணை-இதுவுமது. துறை-கொடுப்போர்ப்பழிச்சல்.

ஈத்துவக்குமின்பமியைந்தார்களேற்பவர்க்குச்
சேய்த்திருந்துமீத்துவப்பர்திண்ணமே-வாய்த்தமுகில்
வானம்பதியாயுமானிலத்தார்க்கேயுதவுந்
தானந்தவறாதுதான். (313)
இதுவுமது. இதனுள், மானிலத்தார்-மாயோனாலமைக்கப்பட்ட பூமியின்கணுள்ளார். இதுவுந் திணையுந் துறையு மது.

9-வது திட்டாந்தம் முற்றும்.

——

10-வது தற்குணவலங்காரம்

134.ஒருபொருட்குணத்தைமற்றொருபொருள்சார்ந்துழிப்
பற்றுதறற்குணமெனப்பகர்ந்தனரே.
(எ-ன்) வைத்தமுறையானே தற்குணமென்னுமலங்கார முணர்-ற்று.

(இ-ள்) யாதாயினு மொரு முக்கியப்பொருளினதுகுணத்தைச் சார்ந்தவிடத் தக்குணத்தைப்
பிறிதொருபொருள் பற்றுதல் தற்குணமென்னும் அலங்காரமா மென்றவாறு.

காமர்திருப்பாற்கடலுங்கருங்கடலா
நாமந்தனைப்பயிலுநாடோறும்-பூமடந்தை
சீர்மேனியைத்தழுவுந்தேவேசனாகணையான்
கார்மேனிவண்ணங்கவர்ந்து. (314)
கவர்ந்து-உட்கொண்டு.

சாந்தமலர்ப்பொதும்பர்ச்சார்ந்தவெளிற்றுத்தருவுஞ்
சாந்தமணநல்குஞ்சால்பிற்றே-யேந்தெழில்கூர்
வாசவனார்நான்முகனார்வந்திறைஞ்சிவாழ்வுபெறுங்
கேசவனார்சேடகிரி. (315)
இதுவுந் தற்குணம். சேடகிரி-திருமலை. ஒழிந்த அகல முறையிற்கொள்க.
அஃதேல், குணவதிசயத்திற்குந் தற்குணத்திற்கும் வேற்றுமை யாதோவெனின்,
அதிசயஞ் சிறுமையை மிகுத்துக்கூறும்; இது மிகுந்ததை மிகுந்ததாய்க்கூறல்.
இவ்விரண்டினுண் முன்னையது கடவுள் வாழ்த்து. இது மலைவருணனை.

10-வது தற்குணம் முற்றும்.

——-

11-வது பிரத்தியநீகவலங்காரம்

135.ஒருபொருட்கொருதிறத்துடைபொருண்மற்றதற்
கத்திறத்தினிலொப்புடைப்பொருளதன்மே
லமர்விளைப்பதுவேபிரத்தியநீகம்.
(எ-ன்) வைத்தமுறையானே பிரத்தியநீகமென்னு மலங்கார முணர்-ற்று.

(இ-ள்) யாதாயினு மோருவமேயப்பொருட் கொருதிறத்தாற்றோற்ற வுவமைப்பொருளத்திறத்தா லதற்
கொத்ததோ ருவமப்பொருண்மே லமர்விளைப்பதாகக்கூறுதல் பிரத்தியநீகமென்னு மலங்காரமா மென்றவாறு.
அநீகம்-படை. இது தற்குறிப்பேற்றத்தைப் பின் சென்றதோர்பேதம்.

தேமலர்வாவிப்புதுவைச்செல்விமுகப்பொற்பினுக்குத்
தூமதியந்தோற்றதற்பின்றோலாத – காமருசீ
ரந்தாமரைமேலமர்விளைக்குங்கங்குலின்கண்
வந்தாடல்பெற்றமதி. (316)
இது பிரத்தியநீகம். தேமலர்வாவிப்புதுவைச்செல்வி-சூடி கொடுத்த செல்வி; ஆழ்வார்திருமகள்:
ஒழிந்த அகல முரையிற்கொள்க. துறை-பெண்பாற்கடவுள்வாழ்த்து.

11-வது பிரத்தியநீகம் முற்றும்.

——–

12-வது சந்தயவலங்காரம்

———-

136.உற்றதோர்பொருளினையையுற்றுணர்தல்
கற்றவர்சந்தயமெனக்கழறினரே.
(எ-ன்) வைத்தமுறையானே சந்தயமென்னும் அலங்கார முணர்-ற்று.

(இ-ள்) புலனுகர்பொறிகளானாதல் கருத்தினானாத லுற்றதோர் பொருளினை யையமுறுதலுந்
தெளிதலுஞ் சந்தயமென்னும் அலங்காரமா மென்று கற்றோர்கூறின ரென்றவாறு.

137.அதுவே,
சுத்தசந்தய நிச்சயகெர்ப்ப
நிச்சயாந்த மெனநிகழ்மூன்றாம்.
(எ-ன்) இதுவு மதன் கூறுபா டுணர்-ற்று.

(இ-ள்) அச் சந்தயமென்னு மலங்காரம் சுத்தசந்தயமென்றும், நிச்சயகெர்ப்பமென்றும்,
நிச்சயாந்தமென்றும் மூன்றுகூறாய் நடைபெறுமென்றவாறு.

திருமகளோபார்மகளோதென்னரங்கன்வெற்பில்
வருமகளோயாரோவிம்மாது. (317)

இது சுத்தசந்தயம். பகுதி – இயற்கை. துறை-ஐயுறல். பா-குறள்வெண்பா.

மெய்த்தமிழ்மாறன் றுடரிவெற்பிலெதிர்நின்றதுபூங்
கொத்தமைந்தபொன்னங்கொடியோகொ-லித்தரணி
மீதாயுடுத்தொடுத்துமேயதகைமின்னுருவோ
யாதாயதொன்றோவிது. (318)

இதுவுமது. இதனுள், பூங்கொத்தென்றது கோடு, கொடி, நீர் என்னும் பல்வகைப்பூக்களை. அமைந்தது – மிகுந்தது.
இத்தரணி….. மின்னுருவோ-மேகத்தைவிட்டுப் புவியிடத்தாய் மேக படலத்தின்மேலாய வுடுக்கணத்தினைத்
தனக்குறுப்பாந்தொடர்படுத்திப் பொழிலிடத்தடைந்ததொரு மின்னுருவமோ.
யாதாயதொன்றோவிது என்பது எவ்வுருவ மவ்வுருவாயதொன்றெனத் தெரிதற்கரிதென்றவாறு.
பகுதி – இயற்கை. துறை – ஐயுறுதல்.

குன்றுபோற்புடைத்தெழுந்ததனத்தாளைச்சிறைவைத்த
கொடுமையானைத்
துன்றுபோர்க்களத்தெதிர்ந்துதொடுகணையான்முரணழியத்
துயரம்பூட்டி
யின்றுபோய்நாளைவாவெனவிமையோர்கணம்பரவ
வெம்பிரானே
யன்றுபோர்க்களத்துரைத்ததறநிலையோமறநிலையோ
வறிகிலேனே. (319)
இதுவுமது. திணை – பொதுவியல். துறை – வில்வென்றி. திணை-வாகையெனினுமாம்.

முண்டகத்தானென்னின்முகமொன்றேநான்குமுகங்
கண்டனமற்றில்லையாற்கண்ணனெனிற்-றண்டுளபத்
தாமத்தானன்றுமகிழ்த்தாமத்தானைத்துதித்தெந்
நாமத்தானென்றுரைப்பேநாம். (320)
இது நிச்சயகெர்ப்பம். திணை-பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை-நயப்புரைத்தல்.

பாடற்சுரும்பெனிலோபண்மிழற்றுங்காவியெனி
லோடைக்குளன்றியுதியாதா-லேடவிழ்தார்
வள்ளல்ருண்மாறன்மால்வரைமான்கண்ணேயென்
னுள்ளந்திறைகொண்டது. (321)
இது நிச்சயாந்தம். பகுதி – இயற்கை. துறை – தெரிந்து தெளிதல்.

12-வது சந்தயம் முற்றும்.

——–

13-வது அற்புதவலங்காரம்

———-

138. அற்புதவாய்மையினறைவதற்புதமே.
(எ-ன்) வைத்தமுறையானே அற்புதமென்னுமலங்கார முணர்-ற்று.

(இ-ள்) ஆச்சரியந்தோன்று முண்மையினான்மொழிவ தற்புத மென்னுமலங்காரமா மென்றவாறு.

உண்ணீர்மையற்றவர்க்கண்டாலவர்மன்னுயிர்க்கிரங்கிக்
கண்ணீர்பனிற்றும்புயன்மனுராமன்கைக்கொள்வதொன்றோ
வெண்ணீர்மையுற்றநிருதரைச்சாலவெறுத்தவர்மேற்
புண்ணீர்பனிற்றச்சரமாரியன்றுபொழிந்ததுவே. (322)
இது, அற்புதம். திணை – பொதுவியல். துறை – வில்வென்றி.

சங்கத்தமிழ்ச்சொற்கவிப்புலவீர்சலராசிமண்மே
லுங்கட்குமற்புதமாவதொன்றேசிங்கவோங்கலின்வாய்த்
துங்கப்படைக்கையிரணியனாகஞ்சுகிர்ந்தநர
சிங்கத்தின்மார்பின்மலர்மகளாம்பிணைசேர்ந்ததுவே. (323)

இஃ துருவகவாய்பாட்டால்வந்த அற்புதம். சிங்கவோங்கல்-சிங்கவேள்குன்றமென்னுந் திருப்பதி.
மலர்மகளாம்பிணை-பெரியபிராட்டி. சிங்கம்- அழகியசிங்கர்.
சிங்கத்தின்மார்பிற் பிணைசேர்ந்ததென்பதனா லற்புதமாயிற்று. துறை – கடவுள்வாழ்த்து.

13-வது அற்புதம் முற்றும்.

———

14-வது நிதரிசனவலங்காரம்

139.இவ்வகைக்குலகத்திவைநிகழ்திறமெனு
மவ்வகைக்கவைபோன்றொருபொருட்டிறங்களைக்
கோட்டமில்குணந்தீங்கெனுமிருகுறிப்பிற்
காட்டுமென்றேகழறுதனிதரிசனம்.
(எ-ன்) வைத்தமுறையானே நிதரிசனமென்னுமலங்கார முணர்-ற்று.

(இ-ள்) உலகத்திவ்வகைப்பொருட் கிவை நிகழுங்கூறுபாடென்னுமக் கூறுபாட்டிற் சுவைபோன்ற
பிறபொருட்கூறுபாட்டை மாறுபாடின்றி நன்மையினுந் தீமையினுமிருதிறத்தாற் குறித்துக்காணக் காட்டு கின்றதெனக்
கூறுவது நிதரிசனமென்னு மலங்காரமா மென்றவாறு.

வாழ்ந்தார்வரவரவேவறிதாவர்வறுமையொடுந்
தாழ்ந்தார்தலைச்செய்வரென்பதுகாட்டுந்தரியலரைப்
போழ்ந்தார்திகிரிப்பிரான்புருடோத்தமப்பொன்னகரைச்
சூழ்ந்தாய்மதிகுறைவாய்நிறைவாம்வகைதூநகையே. (324)
இது நிதரிசனம். இது பரத்தையிற்பிரிந்துவந்ததலைமகன் வாயில் வேண்ட வூடியிருந்து வாயின்மறுத்த
தலைமகளோடும் வாயினேர்விக்குந் தோழிகூறியது. அன்றித் திணை – பாடாண். துறை -வள்ளிவாழ்த்தெனினுமாம்.

இதனுள் ‘வாழ்ந்தார்வரவரவேவறிதாவர் வறுமையொடுந், தாழ்ந்தார் தலைச்செய்வ ரென்பது காட்டு’ மென்பது
உலகத்து நல்வினையடிக்கொள வாழ்வெய்தினார் நல்வினைதேய்ந்து தீவினையடிக்கொள வறுமையெய்துவர்;
தீவினையடிக்கொளத் தாழ்வெய்தினார் தீவினைதேய்ந்து நல்வினையடிக்கொளச் செல்வமெய்தித்
தலைப்படுவ ரென்பதைக் காண்பிக்கு மென்பதாம் தரியலரைப்போழ்ந்தார் திகிரிப்பிரானென்பது
சத்துருக்களுடலைப்பிளந் துயிரைப்பருகுஞ் சக்கரத்தையுடையாரென்பதாம்.
ஆய்மதி-இயங்குமதி. குறைவாய் – இளம்பிறையாய். நிறைவாம்-பூரணையாம்.

அஃதேல், திட்டாந்தத்தோடிதனிடைவேற்றுமையாதோவெனின்,
திட்டாந்தம் புலவன் றன்னாற்குறித்த வொரு பொருட்கூறுபாட்டிற்குப் பிறிதொருபொருளின்கூறுபாட்டை
யதற் குவமைகுறிக்கொளும்படிக் குவமைவாய்பாடு தோன்றாதுதொகத் தன்வினையாக அப்புலவன் கூறுதல்;
இஃ தன்னதன்று. ஒருபொருளின் பண்பு தொழில் பயன் முதலிய கூறுபாட்டைப் பிறிதொருபொருள்
காட்டுவதாகப்படுத்திப் பிறவினையாற்கூறு தல் இவைதம்முள் வேற்றுமையாமென்றுணர்க.

14-வது நிதரிசனம் முற்றும்.

——–

15-வது தற்குறிப்பேற்றவலங்காரம்

140.உலகினுளொருபொருட்குற்றதன்மைத்திறம்
விலக்குபுபிறிதின்விளைந்ததென்றுட்கொண்
டேற்றுதலாகுந்தற்குறிப்பேற்றம்.
(எ-ன்) தற்குறிப்பேற்றமென்னும் அலங்காரமுணர்-ற்று.

(இ-ள்) உலகின்கணுண்டான வருதிணைப்பொருள்களுள் யாதாயினு மொருபொருட் கெய்திய
தன்மைக்கூறுபாட்டை விலக்கிப் பிறிதொருகாரணத்தால் விளைந்ததெனப் புலவன் விதித்துட்கொண்டதனை
யதன்கண்ணதாக வேற்றுவது தற்குறிப்பேற்றமென்னு மலங்காரமா மென்றவாறு.

141.அதுவே,
சராசரமெனுமிரண்டினுஞ்சார்தருமே.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தினது கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அத் தற்குறிப்பேற்றமென்னு மலங்காரம் இயங்குதிணையும்
நிலைத்திணையுமாகிய விரண்டினுஞ் சார்ந்துபிறக்கு மென்றவாறு.

செங்கேழ்கிளர்வேணியனாணுருவிற்
பைங்கேழுமையாளொருபாகமெனச்
சங்கேதமடைந்ததிவன்சமரிற்
கிங்கேறுவனென்றெதிரெண்ணியதே. (325)
இது, உயர்திணையிடத்துத் தற்குறிப்பேற்றம். செங்கேழ்-சிவப்பாகியநிறம்.
கிளர்வேணி- ஓங்கியசடை. பைங்கேழுமை – பச்சென்ற நிறத்தையுடைய வுமாதேவி.
எதிரெண்ணியது-வருங்காலங்குறிக்கொண்டது. திணை-வாகை. துறை-பொருநன்வென்றி.

பிலம்புகுந்தீரேழ்புவனமுந்தரித்தபெருந்தகையெம்பிரான்றனைவெண்
சலஞ்சலந்திகிரியெனப்புரப்பவர்கள் சந்த்ரசூரியரெனச்சயிலம்
வலம்பயின்றனரந்தரத்தவர்வருந்தாவகைதரித்திலமெனத்தரிப்பா
னிலம்புகுந்துயர்பூஞ்சினையெர்டுந்தருவாய்நிலைமரீஇயினதெனலாமே. (326)
இது நிலைத்திணைத் தற்குறிப்பேற்றம். இது பாடாண்புறத்திணையுட் சார்ந்த தாவரவாழ்த்து.

(இவை குருகாமான்மியம். )

தற்பயந்துமுற்றத்தனைவளர்த்ததண்டடநீ
ரெற்பயந்தவெப்புற்றிடையாதே-பொற்கமல
மின்பாசடைக்கவிகைமீநிழற்றுநீரகமே
யென்பாலுறைமாற்கிடம். (327)
இதுவும் நிலைத்திணைத்தற்குறிப்பேற்றம். நிழற்றும் – நிழலிடும். திணை-பாடாண். துறை-நகரவாழ்த்து.

142. உவமச்சொற்புணர்ந்தொழுகலுமுளதே.
(எ-ன்) இன்னு மதற்கோர் புறனடையுணர்-ற்று.

(இ-ள்) அத்தற்குறிப்பேற்றம் போல மான வென்னு முவமவுருபு புணர்ந்து நடப்பனவு முளதாமென்றவாறு.

மாயன்குருகூர்வளர்மறையோர்விண்புரப்பான்
றூயவழல்வளர்ப்பத்தோன்றுபுகை-நேய
வகைத்தோட்டுவார்குழலாய்வாசவனைவிண்போய்ப்
புகைத்தோட்டுகின்றதுபோன்ம்போன்ம். (328)
என்பது ஈரொற்றுடனிலையாய ஒப்பில்போலி. இது உவமவுருபுபுணர்ந்த தற்குறிப்பேற்றம். துறை-நகரவாழ்த்து.

15-வது தற்குறிப்பேற்றம் முற்றும்.

——–

143.விதந்தொருபொருளினைவிழுமிதினுரைப்புழி
யுயர்ந்தோர்மதிக்குறவுரைப்பததிசயம்.
(எ-ன்) வைத்தமுறையானே அதிசயமென்னு மலங்கார முணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளினை யுயர்த்தி நன்றாகவுரைக்குங்காற் கற்றுயர்ந்தோரறிவிற்குப்
பொருந்தவுரைப்ப ததிசயமென்னு மலங்காரமாமென்றவாறு.

144.அதுவே,
வையம்புகழ்பொருள்பண்புவினைதிரி
பையந்தெளிவெனுமாறினும்வருமே.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தை விரித்துணர்-ற்று.

(இ-ள்) அதிசயவலங்காரமென்னுமது பெரியோர் புகழும் பொருளும் பண்பும் வினையும் திரிபும் ஐயமும்
தெளிவு மென்னும் ஆறுகூறு பாட்டினும் வருமென்றவாறு.

வென்றித்தனுராமன்வேலைவாய்நீறெழவே
கன்றிப்பொழிந்தகனல்வாளி-யன்று
வடவைநடுநடுங்கமாநீர்சுவறச்
சுடவைகியதாஞ்சொலின். (329)
இது பொருளதிசயம். வடவைநடுநடுங்க – வடவையும் வெருவியோடுவான். மாநீர் – சமுத்திரம்.
சுடவைகியதன்று – அன்றுசுட்டு அதன்கண் வைகாநின்றது.
சொலின் – அத்தழலின்பெருமையைக் கதைகூறியபடிகேட்டதனைச் சொல்லுமிடத்தென்றவாறு.
ஒழிந்த அகலம் உரையிற்கொள்க. திணை – வஞ்சி. துறை – உழபுலவஞ்சி.

அம்பொன்மதிட்சோதியம்புவியைப்புத்தேளிர்
தம்பொன்னகராக்குந்தன்மைசால்-செம்பொன்செய்
கோயிற்றிருமால்குணங்கற்றொழுகாதார்
நாயிற்கடையாநார். (330)

இது குணவதிசயம். இதன்பொருளுரையிற்கொள்க. துறை -நகரவாழ்த்து.

குழித்தததலத்தொடுநிலத்தையடிவைத்துயர்
குடிற்படர்முகிற்றிரளையே
கிழித்ததுபுழைக்கையினடுக்கலையடுக்கொடு
கிளைத்ததுகவுட்கள்வழியே
சுழித்தெழமதத்தினையுயிர்த்தொளிர்கடைக்கன
றுணுக்குறநெருப்பொழுகவே
விழித்ததுதெழித்ததுருமுக்குலம்வெருக்கொள
வெயர்த்ததுமழைப்பெயலெனா. (331)
இது தொழிலதிசயம். திணை – வாகை. துறை – யானைமறம்,

பூந்தேறல்வழிந்திழிந்துபொதும்பரினொண்புளினமுறப்
புரிவெண்சங்கந்
தீந்தேறல்வழிதவழ்ந்துதுழனியுடன்கழனிபுகத்
திணிதோண்மள்ளர்
தாந்தேறலுகக்களைகட்டெறிதவளமரைமுகையைச்
சார்ந்துசார்ந்து
மேய்ந்தேறவரிவளையைக்கொழுநனையென்றளிபுலம்பி
வீழுமோர்பால். (332)
இது திரிபதிசயம். துழனி-ஆரவாரம். திணிதோள்-திண்ணியதோள். தவளமரைமுகை-வெண்டாமரைமுகை.
துறை-நாடுவாழ்த்தாம்.

(இவையிரண்டுங் குருகாமான்மியம். )

இருநிலமுதலாமேழ்பெரும்புவனமும்
பெருவிறன்மாவலிபெய்புனலேற்றபின்
னீரடியெனத்தாண்டிணையடியொடுநின்
கூர்திருவுருவமுஞ்சொரூபமுங்குணனு
மோரடிமுதற்கணுற்றுளத்தடங்கியதாற்
பார்புகழ்குருகைப்பரமநின்பதமோ
காரிதந்ததருள்குருகாபுரிப்பரமன்
படைத்தவண்டமிழ்மறைப்பதமோவுணர்வோ
தடத்தயாதெனவெவர்தமிதெளிபவரே. (333)

இஃ தையவதிசயம். இதனுள் உருவமுஞ் சொரூபமுங் குணனுமென்பது.
திருமேனியுந் திவ்வியான்மாவுஞ் சுத்தசாத்துவிககுணனும் ஓரடிமுதற்கண் என்பது
திருவாய்மொழி முதற்பத்தின் முதற்பாட்டில் “உயர்வறவுயர்நலனுடையவனெவனவன்” என்னு முதற்பதம்.
திணை பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல். பாடாண்சார்ந்தபனுவல் வாழ்த்துமாம்.

பொருள்கோடித்தெழுபடிவத்திரணியற்குமழவிடையோன்
பொருட்டிற்பொன்றா
வொருகோடியிருகோடியரைக்கோடிவாழ்நாள்பெற்
றுலந்துளாற்கு
மருள்கோடித்தெழுந்தசிசுபாலனுக்கும்வீடளிப்பான்
மாயாவுள்ளத்
தருள்கோடியென்றாலிங்குனைத்தொழுவார்பெறுங்கதிகட்
கையம்யாதே. (334)
இது தெளிவதிசயம். துறை-கடவுள்வாழ்த்து.

145. இடஞ்சினைகாலமென்றிவற்றொடுஞ்சிவணும்.
(எ-ன்) இதுவு மதனைப் பின்னுமோர்வகையான் விரித்துணர்-ற்று.

(இ-ள். ) அவ்வதிசயம் இடமுஞ் சினையுங் காலமுமென்னு மூன்றினோடும் பொருந்தியும்வரு மென்றவாறு.

வருமென்னும்வினைச்சொலெச்சமாகி விரிந்தது. அதிசயமென்ப ததிகாரத்தாற் கூட்டியுரைக்கப்பட்டது.

சிகரபந்திமேற்குடமதியகடுரிஞ்சியவாய்ப்
பகரும்வானமதுரகனுச்சியிற்பதிபடித்தா
யகலநாவலந்தீவொருங்குறினுமுய்த்தடக்கும்
புகலிடத்ததாலதனையாரளவிடும்பொற்பார். (439)
இது, இடவதிசயம். துறை-சினகரவாழ்த்து.

கறுத்தவனறுத்துவீழ்வன்கரிமருப்பகிலபாரம்
பொறுத்ததிக்கயமோரெட்டும்பொறுக்குமேலவற்றினாற்ற
லொறுத்ததென்றிமையோருட்கயமனுநின்றுட்குமெல்லை
நிறுத்ததுபுழைக்கைபற்றிநிறைமதியகடுபோழ்வான். (336)
இது சினையதிசயம். திணை – வாகை. துறை – யானைமறம்.

மாலையாயாமமாய்வைகறையாய்வைகுறுநன்
காலையாய்க்கங்குல்கழிந்துகமாம்-வேலை
யெழுபார்புகழ்மாறனேந்துபுகழ்மார்பந்
தழுவாத்தமியேன்றனக்கு. (337)
இது காலவதிசயம். திணை-பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – கங்குற்கிரங்கல்.

16-வது அதிசயம் முற்றும்.

——–

17-வது சிலேடையலங்காரம்

146.உயர்வுறுமொருமொழிதொடர்மொழிசெய்யுளி
னியல்பினுந்திரிபினுமியன்றுபல்பொருளைத்
தருபெயர்வினையிற்சார்வது சிலேடை.
(எ-ன்) வைத்தமுறையானே சிலேடையென்னுமலங்கார முணர்-ற்று.

(இ-ள்) ஒருமொழியாதல் தொடர்மொழியாதல் செய்யுளிடத்துச் செம்மொழியினும் பிரிமொழியினு
மொழுகலாறுடைத்தாய்ப் பல பொருளைத் தருவனவாய்ப் பெயரினும் வினையினுஞ் சார்வது
சிலேடை யலங்காரமாமென்றவாறு. உயர்வுறுமென்றதனால் அத்தச்சிலேடை யென்பதூஉ முன்னர்க்கூறப்படும்.

147.அவற்றுள்,
இயல்புசெம்மொழிதிரிபுபிரிமொழியே.
(எ-ன்) கூறியசூத்திரத்து ளியல்பினுந் திரிபினுமென்றா ரவை பொருணோக்கத்தா னிப்பெயரினவாமென்ப துணர்-ற்று.
(இ-ள்) இயல்பு திரிபு என்ற விரண்டினுள் இயல்பு செம்மொழியென்றும், திரிபு பிரிமொழியென்றுங் கூறப்படுமென்றவாறு.

பொன்னாழிமேவும்புவனமகத்தடக்கு
மன்னாகத்துச்சிவளைந்தாடு-நன்னீர்க்
களந்தழைமெய்காட்டுங்கலைமதியுட்டோயும்
வளந்தழையும்விண்ணகர்வாழ்மால். (338)
இது செம்மொழிச்சிலேடை. திருமாலுக்கும் மேகத்திற்குஞ் சிலேடை.
மேகத்தின்மேற்சொல்லுங்காற் பொலிவினையுடைய கடலுட் செறியும் புனலையுண்டு வயிற்றுளடக்கும்,
நிலைபெற்ற மலையினது கொடுமுடியைப் பொதிந்து பரக்கும்,
உவரறுத்த நல்லதண்ணீர்க்கிடமாகப் பெருத்தசொரூபத்தைப் புலப்படுத்தும், கிரணத்தையுடைய சந்திர மண்டலத்தைத்
தனது மண்டலத்திற்குமேலாகச் சேரும், உலகிற்கு வேண்டு மெல்லாவளங்களையுந் தழைக்கும்,
விசும்பினிடத்து மேகமெனவும், திருமான்மேற்சொல்லுங்கால், திருமகளையுந் திருச்சக்கரத்தினையும் பொருந்தும்,
விராட்புருடனாகி யண்டத்தையுள்ளடக்கும், பகையெனப் பெருகின பாம்பினுச்சியிலே பதிந்தாடும்,
நல்லவியல்பினையுடைய களங்கனிபோலுந் தழையாநின்ற மேனியைத் தோற்றும்,
சுருதிமுதலிய கலைகளினறிவிற்கு மேலாயிருக்கும், சகல செல்வமும் வளராநின்ற திரு விண்ணகரத்து
வாழ்வுபெறுந் திருமாலெனவுங் கொள்க. துறை-கடவுள் வாழ்த்து.

பாமாறன்வெற்பிற்படாமின்பயோதரங்க
டாமாகவட்டந்தனைமறைக்குங்-காமன்
வினைவளர்ப்பதன்றிமிகுபோகமென்ப
தனைவளர்த்தவம்பகற்றித்தான். (339)
இது, மேகத்திற்குந் தனத்திற்கும் பிரிமொழிச்சிலேடை
மேகத்தின் மேற்சொல்லுங்கால், வெற்பிற்றவழாநின்ற மின்னோடுங்கூடிய மேகங்கடாமாகாயப்பரப்புத்தன்னை மறைத்தன,
காவினிடத்துப்பொருந்துங் கிரியையுண்டாக்கின, அவையன்றியுந் தமதிடத்துண்டான தண்ணீரைப் பெய்
தெங்கும்பரப்பிச் சந்தனம் அகில் சாலி முதலிய போகங்களையும் வளர்த்தன வெனவும்,
முலைமேற்சொல்லுங்காற் பாமாறன்றுடரிவரையிடத் தியான் மானிடமெனக்குறித்த மின்போலும்
இடையினையுடையாண் முலைகளிரண்டுந் தம்மைப்பெற்ற மார்பினகலத்தளவைத் தோன்றாதுமறைத்தன,
காமனாலெழுப்பப்படு மோகமாகிய வினையை யென்னிடத்து வளர்ப்பதன்றி மிக்க போகசுகத்தையும்
வம்பையகற்றிநிறைத்தன வெனவுங் கொள்க.
இதனுள், பிரிமொழியாவன:- மாகவட்டம் ஆக வட்டம், காமன் காவினிடத்துமன், அம்பகற்றி வம்பகற்றி என்பனவாம்.
வம்பு-கச்சு. பயோதரம்-மேகமும் முலையும். பகுதி-இடந்தலை. துறை-நலம்புனைந்துரைத்தல்.

148. இவையினிவிரிப்பனவாமெவற்றினும்வரும்.
(இ-ள்) செம்மொழி பிரிமொழியாகிய விவ்விரண்டு மினி முன்னர் விரிப்பனவாஞ் சிலேடை
யனைத்தினும் பொதுவாய் விரவிவரு மென்றவாறு,

மேற் சிலேடைக்குரைத்த முதற்சூத்திரத்தினுளியல்பினுந் திரிபினும் பல்பொருளைத்தரு பெயர்வினையிற்சார்வது
சிலேடையென்னா தியன்று பல்பொருளைத்தருவ தென்றதனாற் சிலேடை நாலுவகைப்படும்;
அவையாவன:- அயல்பட விரண்டுபொருளை யொன்றுவமையாகவு மொன்றுவமேயமாகவுங் குறித்தவற்றைப் பாடுமிடத்துச்
செம்மொழியினும் பிரிமொழியினு மிரட்டுறமொழியுமிடத் துவமைப்பாற்படுத்திக் கூறுதலும்,
இரண்டுபொருளைக் கவிநாயகனுக்குவமையாய்க் குறித்தவற்றைப் பாடுமிடத் தொருமொழியினாலாதல்
தொடர்மொழியினாலாதல் புலவனாற் றொடுக்கப்படுஞ்சொற் கவிநாயகன் கிரியையோடு மூன்று பொருள்
பயப்பதாகப்புணர்த் தவனுமவைபோலிருந்தானெனக் கூறுதலும், இரண்டுபொருளை யொருமொழியினாலாதல்
தொடர்மொழியினாலாதலிரட்டுற மொழிந்து கவிநாயகன்மேற் சிலேடையின்றிக் கூறுதலும்,
ஒருசொல் லியல்புபெயரானு மாகுபெயரானு நாலுபொருள் பயப்பதாக உருவகவாய்பாட்டாற்கூறும்
உடனிலைச்சிலேடையுமென. அவற்றுள், முன்னையவிரண்டுஞ் சிலேடையுவமைப்பால் வந்தன.
ஒழிந்தவிரண்டும் வருமாறு:-

தேசுபெறுஞ்செவ்வித்திருமகிழ்மாறன்சரணங்
காசினிமேலெஞ்ஞான்றுங்காத்தருள்க-மாசிலா
வாய்ந்தபுகழ்ப்பூதூர்மகீபதியைநான்மறைநூ
லாய்ந்தவெதிராசனை. (340)
இது, அயல்பட விரண்டுபொருளைத் தொடர்மொழியா லிரட்டுற மொழிந்து கவிநாயகன்மேற் சிலேடையின்றிவந்தது.
என்னை? திரு மகிழ்மாறன்சரணமென்பது திருமகள் விரும்பப்பட்ட மாயோன்றிருவடியென்றும்,
அழகிய வகுளமாறன்றிருவடிகளெனவும் ஒரு தொடர்மொழிவந்து அவை யெதிராசனைக் காக்கவெனக்
கவிநாயகன்மேற் சிலேடையின்றிவந்ததனாலென்றறிக. திணை-பாடாண். துறை-புறநிலைவாழ்த்து.

தேங்கமலமாசிலாச்செங்காந்தள்பைங்குமிழ்பொற்
கோங்கரும்புகாவியுடன்கொண்டதோர்-பூங்கொடியை
வண்டுகளிக்கின்றமகிழ்மாறனார்மால்வரைமேற்
கண்டுகளிக்கின்றனவென்கண். (341)
இதனுள், கமலமுதலிய உவமப்பொருளைந்தனுள் கோங்கரும் பென்றதொன்று மியல்புபெயராகவு மொழிந்த
நான்கு மாகுபெயராகவும் வந்து அவையைந்தும் நாலுபொருள் பயப்பதாகவும் பாடினமையால் உருவகவாய்பாட்டால்
வந்த உடனிலைச்சிலேடையென்ப திதன்பெயர். என்னை?
தாமரையென்னு முதலைக்கூறச் சினையறிகிளவியாகிய வாகு பெயர் தாமரைப்பூவையும்,
முகமாகியதாமரையென மாட்டேறில்லாத வுருவகவாய்பாட்டான் முகத்தையும்,
அத்தாமரைப்பூவைக் கருப்பொருளாகவுடைய மருதநிலத்தையும்,
அந்நிலத்து நிகழும் ஒழுக்கமாகிய ஊடலையுங் காட்டிநிற்றலானென்றறிக.
ஒழிந்த காந்தண் முதலிய நாலுபூவானு மிம்முறையே நாலுபொருள் கொள்க.
எனவே, இப்பெண்ணாகிய பூங்கொடி ஊடிக் கூடியிருந்து பிரிந் திரங்குதற்குரித்தாமெனவுட்கொண்டு
களிக்கின்றன வென்கண் ணென்றானென்க. ஒழிந்த அகல முரையிற்கொள்க. பகுதி-இயற்கை. துறை-காட்சி

149.ஒன்று பல முரணொன்றியவினையே
நியம நியம விலக்கு விரோத
மவிரோதத்துடனதன்விரியேழுள.
(எ-ன்) அங்ஙனம் வகைப்பட்ட சிலேடையணியின்விரியுணர்-ற்று.

(இ-ள்) ஒருவினைச்சிலேடை, பலவினைச்சிலேடை, முரண்வினைச் சிலேடை, நியமச்சிலேடை
நியமவிலக்குச்சிலேடை, விரோதச்சிலேடை, அவிரோதச்சிலேடையென விரி யேழுளவாமென்றவாறு.

வினையென்பதனை முதலேவந்த மூன்றினுக்கு மிறுதிவிளக்காக்கி,
அதன் என்பதனை யதிகாரத்தாற் சிலேடையதன்விரியெனக் கொள்க.

150.அவற்றுள்,
ஒருவினைகொள்வதொருவினைச்சிலேடை.
(எ-ன்) வைத்தமுறையானே ஒருவினைச்சிலேடை யுணர்-ற்று.

(இ-ள்) இரண்டுபொருளை, ஒருமொழியினாலாதல் தொடர் மொழியினாலாதல் இரட்டுறமொழிந் திரண்டுபொருட்கு
மொருவினை கொள்ளமுடித்தல் ஒருவினைச்சிலேடையா மென்றவாறு.

நாதமுனிதம்பிரானாவீறன்வண்குருகூர்
மாதரணிமன்னிமழைதோயு-மோதி
யிருந்தும்பியுந்தேனுமெப்போதும்யாண்டும்
பொருந்திப்புரியும்பொறை. (342)
இது ஒருவினைச்சிலேடை, மலைக்கும், மாதராள்குழற்குஞ்சிலேடை.

(இ-ள்) நாவீறுடையபிரான் வளப்பத்தையுடைய குருகூரினிடத்துப் பெருமைபெற்ற ஆதித்திய மண்டலத்தை
யணவப்பட்டு மேகந்தவழு மலையானது, பெரிய யானைத்திரளையுந் தேனிறாட்டினையு மெக்காலத்து
மெவ்விடத்தும்பயிலப் பொறைபுரியுமெனவும், இம்மாதராளழகுசெறிந் திருண்ட நிறத்தைப்பயிலுங் குழலானது,
கரியவண்டினையுந் தேனினையுங் காந்தண்முதலிய வெல்லாப்பூக்களினையு மெவ்விடத்தும் பயின்று
பொறுத்தலைப்புரியுமெனவு மாம். இதனுள் எப்போதும் யாண்டும். பொருந்திப்புரியும்பொறை யென்பதற்குப்
பொறைபுரியுமென்ப திரண்டுதலைக்கு மொருவினை.
ஓதியென்பது மலையும், குழலும், திணை-ஆண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை-நலம்பாராட்டல்.

151. பலவினைகொள்வது பலவினைச்சிலேடை.
(எ-ன்) பலவினைச்சிலேடையாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருசெய்யுளகத்துப் பலவினை யிருபொருட் கிரட்டுறக் கொள்வது பலவினைச்சிலேடையா மென்றவாறு.

ஆம்பன்மலர்த்தியகவிருள்சீத்தொண்கலைக
டாம்புல்லியதண்மதிவரவுந்-தீம்பர்
செறிவகற்றுமாறன்றிருவாக்கும்பேதை
யறிவகற்றியேநின்றன. (343)
இது பலவினைச்சிலேடை. சந்திரோதயத்திற்குந் திருவாய்மொழிக்குஞ் சிலேடை.

(இ-ள்) ஆம்பல்-பண்ணும், குமுதமும். அகவிருள்-உள்ளமயக்கமும், உலகினிடத்தந்தகாரமும்.
ஒண்கலைகள் – சுருதி. மிருதி புராணமும், சந்திரகிரணமும். பேதையென்பது அறிவிலியும், மகடூஉவும்,
அறிவகற்றியே நின்றன என்பது அறிவினைப்பெருப்பியாநின்ற தென்றும், அறிவினை யழியா நின்றதென்றுமாம்.
“அறிவகற்று, மாகலூழுற்றக்கடை” என்பதனா லறிக. மலர்த்தி, சீத்து, புல்லிய என அடைவேவந்தவாறுகாண்க.
திணை- பாடாண் சார்ந்த பொதுவியல். துறை – பனுவல் வாழ்த்து.
அல்லது திணை- பெண்பாற் கூற்றுக்கைக்கிளை. துறை-தோழிநிலவுகண்டழுங்கலுமாம்.

152. மொழிவினைமுரணுதன்முரண்வினைச்சிலேடை.
(எ-ன்) முரண்வினைச்சிலேடையாமாறுணர்-ற்று.

(இ-ள்) மொழியப்பட்டவினைப்பொருண்முரணச் சிலேடைப் படுத்துவது முரண்வினைச்சிலேடையா மென்றவாறு.

இன்பநந்தியவானகமதனையெய்துவதுந்
துன்பமுந்துறுமறநிலையடைவதுந்துணிவா
மன்பெரும்புகழ்மாறனைவாழ்த்துபுவணங்கி
யன்புறார்பினர்தாமெனுநாளுமிவ்வகிலம் (344)
இது முரண்வினைச்சிலேடை. அன்பில்லார்க்கு மன்புள்ளார்க்குஞ் சிலேடை.

(இ-ள்) நிலைபெற்ற பெரியபுகழையுடைய காரிமாறப்பிரானை வாழ்த்தி வணங்குவதுமின்றி
மனத்தினா லன்புறாருமாகிய மாறுபட்ட கிரியையுடையோர் பேரானந்தமென்பதுகெட்ட பெரியபாவங்களைக்
கூடுவதுந் துன்பம்வந்தெதிர் கொளுங் கொலைமுதலிய மறத்தினிலையையடைவதுஞ் சந்தயமில்லை யெனவும்,
காரிமாறப்பிரானை வாழ்த்துவதுடன் வணங்கி மனத் தினானினைந் தன்புமிகுமன்புடையோர் பேரானந்தமல்கிய
பரம வைகுண்டத்தைப்பெறுவதுந் துன்பங்களைதன்மிகும் அறநிலையடைவதுஞ் சந்தயமில்லையெனவும்
உலகங்கூறு மென்றவாறு. உலகமென்ப துயர்ந்தோரை. மாறனை யென்ப தற்குமால்தன்னையெனினுமாம்.
திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப் பரவலும், பாடாண் பகுதிப்புறத் திணைப்பாற்படும் பரவார்ப் பழித்தலுமாம்.

153.இயல்புடைப்பொருள்கட்குளதிலதிரட்டுற
நியமித்துரைத்தனியமச்சிலேடை.
(எ-ன்) நியமச்சிலேடையாமா றுணர் – ற்று.

(இ-ள்) உயர்திணை அஃறிணை யென்னு மிரண்டினுள் விகாரப் படாதவியல்பினையுடையபொருள்கட் குள்ளது
மில்லதுமாகச் சிலேடித்த பொருளைத் தேற்றம்பெற நியமஞ்செய் தவற்று ளொன்றினைக்
குறிப்பினாற்கொள்வனவாய்ப் புகல்வது நியமச்சிலேடையாமென்றவாறு. நியமித்தல் – தெளிதல்.

வண்டுளர்முண்டகக்கொழும்பொற்றுணரொன்றேபங்கமுற
வளர்ந்ததெல்லாந்
தண்டழைவானகடுரிஞ்சுஞ்சண்பகமேயளிதுறந்த
சால்பிற்றென்றும்
வெண்டாளப்பொறையுயிர்க்கும்வலம்புரியேகோடியதும்
விழவின்மாதர்
மொண்டலைவார்குளிர்புனலேகம்பலையுட்கொண்டதுவு
மொழியின்மன்னோ. (345)
இது நியமச்சிலேடை.

(இ-ள்) பங்கமுறவளர்ந்ததெல்லாந் தாமரைப்பூவினது சாதியொன்றுமே;
அளிதுறந்த சால்பினையுடையது சண்பகமரமொன்றுமே; கோடியதும் வலம்புரிக்குலமே;
குளிர்புனலே கம்பலையுட்கொண்டதும் என்று உலகங் கூறப்படுமாதலால் ஒழிந்த உயர்ந்தோருள் மானவீனமுற வளர்ந்தோருமில்லை;
கொடையைக் கைவிட்டோருமில்லை; மனக்கோட்ட முடையோருமில்லை; நடுக்குற்றோருமில்லை யென்பதாம்.

பங்கம் – சேறும், மானவீனமும். அளி – வண்டும், கொடையும். கோடியது – வளைவும், மனக்கோட்டமும்.
கம்பலை – ஆரவாரமும், நடுக்கமும். இவற்றுள், பின்னைய நான்கும் உயர்திணையைக்குறித்துக் குறிப்பினாற்கொண்டவாறு காண்க.
உளர்தல்-குடைதல். பொறையுயிர்த்தல்-பெறுதல். திணை – பாடாண். துறை – நாடுவாழ்த்து.

154. விளம்பியநியமம்விலக்குதல்விலக்கே.
(எ-ன்) நியமவிலக்குச்சிலேடையாமா றுணர் – ற்று.

(இ-ள்) இங்ஙனங் கூறப்பட்ட நியமத்தின்கூறுபாட்டை விலக்கிப் பிறிதும் ஒன்றுகூறுவது நியமவிலக்குச்சிலேடையா மென்றவாறு.

கடம்புணர்ந்ததளிக்கணம்பொங்கரினிழைத்ததேக்கெறிதேங்
கமழ்செந்தேனே
திடம்புணர்ந்தகெழுதகையாடவர்கடவுஞ்சிந்துரத்தின்
றிரளொன்றுண்டான்
மடம்புணர்ந்தாரியற்கொழுநருளந்தவறாமடந்தையரே
மறித்துநாடி
னடம்புணர்ந்ததுகிற்கொடித்திண்டேர்மறுகுந்திருமறுகே
நவிலின்மன்னோ. (346)
இது நியமவிலக்குச்சிலேடை.

(இ-ள்) கொள்கலத்துட்பொருந்தியது, வண்டின்கூட்டம் கொம்பர் தோறும்வைத்ததா யெடுத்துண்டார்யாவருந்
தேக்கிடுவதாய் மிகவும் பரிமளிக்குஞ் சிவந்த தேனே; அதுவுமன்றி, உண்மையோடுங்கூடிய நட்பையுடைய
வாடவர்கடாவும் யானைத்திரள்களு மதத்தோடுங்கூடியதுண்டு. மடப்பத்தைப் பொருந்தினவர்
தமதில் லறத்திற்குரிய விலக்கணத்தையுடைய கொழுநருள்ளக்குறிப்பிற் பிழையாத கற்புடைய மகளிரே;
மீட்டு மாராயி லாடுதலைப்பொருந்தின துகிற்கொடியையுடைய திண்ணியதேர்கள் சூழ்வரும் பொலிவினையுடைய வீதிகளும்
அறச்சாலையை மருவும். அவையன்றி வறுமையுற்றுத் தனிசுகொண்டவருமில்லை; அறியாமையுடையோரு மில்லையென்றவாறு.

கடம்-பாத்திரம், மதம், கடன்கோடல். மடம் – மடப்பம், அறச்சாலை, அறியாமை.
இதனுள்ளு மிறுதிநின்ற விரண்டுங் குறிப்பினாலுயர்திணை மேற்கொண்டவாறு காண்க.
இழைத்தல் – திரட்டிவைத்தல். இதுவும் நாடுவாழ்த்து.

155.சாதிமுதலாச்சாற்றியநான்கொடுந்
தீதறுபெயரினும்வினையினுந்திரிந்து
மேதகவிரோதத்தறைவதுவிரோதம்.
(எ-ன்) விரோச்சிலேடையாமா றுணர்-ற்று.

(இ-ள்) சாதிமுதலாகப் பொருளீறாகக்கூறப்பட்ட நான்கினோடுங் கூடிக் குற்றமற்ற பெயரினும் வினையினுந்
திரிந்துந் திரியாதும் பெருமை தகுவதாய் விரோதமாகச் சிலேடையாற்கூறுதல் விரோதச்சிலேடையா மென்றவாறு.

திரிந்துமென்னுமும்மை யெச்சமாதலாற் றிரியாது மென்றாயிற்று. சிலேடையென்ப ததிகாரத்தாற் பெற்றது.
மேதகவென்றதனாற் சாதியோடு நான்கும், கிரியையோடு மூன்றும், குணத்தோடிரண்டும்,
பொருளோ டொன்றுமாக விரோதச்சிலேடை பத்துளவென்றறிக. அவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு:-

எத்திரமென்றேயறியேனென்னளவிற்காரிதரும்
புத்திரனார்பொன்னம்புயப்போது-முத்தநகை
மின்குமுதப்போதகலவேனிலானெய்வதற்கு
மன்குமுதப்போதாயவாறு. (347

(இ-ள்) முத்துப்போன்ற நகையினையும், மின்போன்ற இடையினையு முடையாய்!
காரிமாறப்பிரான் பொலிவினையுடைய புயத்திற் புனைவதாம் வகுளமாலிகை,
(வாங்கிச் சூடப்பெறாத) என்னளவில் யான் மகிழ்வெய்தும்போ தென்னைவிட்டு நீங்காநிற்பக் காமன்
பஞ்சபாணங்களையுந் தொடுப்பதற்கு நிலைபெற்ற கலகப்போதானபடி யென்னகாரணமென் றறியேனென்றவாறு.

இதனுள், பொன்னம்புயப்போது-பொன்போலும் நிறத்தையுடைய தாமரைப்போது.
மன்குமுதப்போதாயவாறு – ஆக்கஞ்செய்யு மாம்பற் போதானபடி யென்னகாரணமென்றறியேனென்றதனால்,
சாதிக்குச் சாதியினோடே விரோதச்சிலேடையாயிற்று.
மின் – அண்மைவிளி; உவமப் பெயர். குமுதமிரண்டினுண் முன்னையது மகிழ்ச்சி. பின்னையது கலகம்.
போது-பூவும், காலமும். திணை-பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை-தாமம்பெறாதுதளர்வுற்றுரைத்தல்.
இது சாதிக்குச்சாதியோடே விரோதச்சிலேடை.

நாடறியமேனாணடந்ததலவின்றுளதாய்ப்
பீடழியவந்ததற்கென்பேசுகேன்-றாடகையென்
றாளையுயிருண்டானழுந்தூரன்வெற்பிளமான்
காளையுயிருண்டகதை. (348)
(இ-ள்) தாடகையென்பாளுயிரை வாளியினாலுண்ட திருவழுந்தூர் மாயோன்வெற்பினி லிளையமான்
முதியகாளையினறிவை யுண்டதென நீ கூறியகதை மேனா ணாடறியநிகழ்ந்த
தொன்றல்லவாகியு மஃதின்றுன்னிடத்துள தாகியுனது பெருமையழியவந்த துன்பத்திற் கியான்பேசுவ தென்னென்றவாறு.

இதனுள், இளையமான் முதியகாளைஉயிரை யுண்டதென்றதனால், சாதிக்குக் கிரியையோடே விரோதம்.
உயிரென்ற தீண்டறிவு. இளமான் – தலைவி. காளை – தலைவன். முதியவென்ற தெதிர்மறைச்சொல்லெச்சம். துறை – பாங்கன்கழறல்.

மாகருடனடுங்கமம்மர்தருவதன
யோகமயிலினுரத்தோங்கி-யாக
நுடங்குமுடன்பிறப்பைநோக்காதொறுக்கத்
தொடங்குமெமையென்செயாதோ. (349)
இதுவுமது.

(இ-ள்) துறக்கத்துள்ளாருமுடனடுக்கமுறும்படிக்கு அவருள்ளத்திற்கு மருந்து பிறிதில்லாத தீ
ராப்பிணியைக்கொடுப்பனவாகிய முலையினது கூட்டம், மயிலினது சாயல்போலுஞ் சாயலையுடையாண்
மருமத்தின்கண்ணே புடைத்துயர்ந்து தம்மைத்தாங்கி யுடல்வளையு முடன் பிறப்பாகிய விடையை
யுடன் பிறப்பென் றுட்கொள்ளாது கொல்வதைத் தொடங்காநிற்கும்; ஆகையால் நெஞ்சமே! நம்மை யென்செய்யாதென்றவாறு.

எனவே, மாகருடனடுங்க – பெரிய கருடனும் உடல் நடுங்க. மம்மர் தருவது-வருத்தத்தைத்தருவது.
அனயோகம்…………… ஓங்கி-அன்னத்தின் கூட்டம் மயிலினுரத்தோடும் பெருத்தென்பதனால்
இதுவுஞ் சாதிக்குக் கிரியையோடே விரோதமாயிற்று. பகுதி – இயற்கை. துறை-தகையணங் குறுத்தல்.

கோபம்பயின்றவிடங்கூர்தாபரங்குறுகத்
தாபந்தவிர்ந்துயிருந்தண்ணென்ற-பூபதிகைத்
தூரிகையாலேயமைத்தசொற்றமிழ்மாறன் றுடரிக்
காரிகைசெவ்வாயெனவேகண்டு. (350)
(இ-ள்) இந்திரகோபங்கள்விட்டு நீங்காத இடமிகுந்தசோலையைக் குறுகினகாலத்து விரகாக்கினியினாலுண்டான
எனதுவாட்ட நீங்கியுயிர்தண்ணென்று குளிர்ந்தது. நெஞ்சமே! யங்ஙனம் நீங்குதற்கேது யாதெனில்,
தாமரையையிடவகையாயுள்ள பிதாமகன் கையினாற் றூரியக் கோலையெடுத்தெழுதியுண்டாக்கின
வழகினையுடையாள் செவ்வாய்க் கொப்பெனவேகண் டென்றவாறு.

சொற்றமிழ் மாறன்றுடரிக்காவெனக் கூட்டுக. நெஞ்சமே யென்னுமெழுவாய் முன்னிலையெச்சம்.
கோபம்பயின்றவென்பது சினம்விட்டு நீங்காதவென்பதாய், இடங்கூர்தாபரம் விடங்கூர்தாபரமெனத் திரிந்து,
தாபரமென்பது ஆகுபெயராய்ச் சினமிகுந்த நச்சுமாமரச்சோலையைமுடுக வாட்டந்தீர்ந் துயிர் தண்ணென்றது
எனவே இது சாதிக்குக் குணத்தோடே விரோதச்சிலேடையாயிற்று. பகுதி – இடந்தலை. துறை-பொழில்கண்டுமகிழ்தல்.

கார்க்கடற்பார்வாழ்வுபெறக்காரிதருங்கண்ணனுளத்
தேர்க்கருணைக்கேசரியாயெய்துருவைப்-போர்க்கழியா
மெய்யனன்குபேரனென்பமெய்யுணர்ந்தவாரணங்க
ளையமின்றியேதெளிந்துளார். (351)
என்பது, கரியகடல்சூழ்ந்தபூமியின்கணுள்ளார் முத்தியாகியசெல்வத்தை யெய்தக் காரியார்பயந்தளித்த
கண்ணபிரான்றிருவுள்ளத்தழகிய கருணைக் கிணையாய் வந்தவுருவத்தைப் போர்க்கழியாகிய
சத்தியவாய்மையுடை யோனுக்கு நன்குமதிக்கும் பேரனென்றுகூறுவர் சித் தசித் தீச் சுரங்களி னுண்மை
யுணர்ந்த சுருதியினுண்மையைச் சந்தயமறத் தெளிந்துளாரென்றவாறு.

இதனுள், கண்ணபிரானழகிய திருவுள்ளக்கருணையைப்பெற்றுப் பரசமய களியானைகட்கோர்
சிங்கவேறாகிய சொரூபத்தை, நல்ல குபேரனென்பவெனத் திரிந்தமையா லிது சாதிக்குப் பொருளோடே
விரோதச் சிலேடையாயிற்று. திணை – பாடாண். துறை – முனிவர் வாழ்த்து.

பரவதியையேபணித்தருள்பாமாற
னுரவாவருமருகர்க்குண்மை-கரவாது
கோட்டுமதமால்யானைகூறியமால்வீட்டின்பங்
காட்டுவன்மன்னேபுலவீர்காள். (352)
என்பது, நித்தர் முத்தர் முதலாயுள்ள பத்தரும் பெத்தரு மேத்தப் பட்ட பரமபதநாதனைப் புகழ்ந்திடுந்
திருவாய்மொழியாகியபாவையுடைய மாறன் ஞானதிண்ணியராய்த் தன்னிடத்துவந்தடைந்தவர்க்குப்
பொய்யின்றித் திருமால்பதத்திலுள்ள பேரின்பத்தை யுண்டாக்கித்தருவன் புலவீர்கா ளென்றவாறு.

எனவே, நீரும் அவனையே சரணாகதியெனப்பற்றும்; உமக்கும் முத்தியெய்தலாமென்பது பயன்.
இதனுள், பவாதியைப் பணித்தருள் பாமாறன் – அந்நியசமயத்தைத் தாழ்த்துப்போடப்பட்ட திருவாய் மொழியென்னும்
பாடலையுடைய காரிமாறப்பிரான். உரவாவருமருகர்க்கு-தன்னோடு வாதுக்குத் திண்ணியராகிவரும்
அருகனைத்தெய்வ மாகவுடையார்க்கு. யானை மூலமே யென்றழைப்ப வந்தருள்செய்த சீமந்நாராயணன்
வீட்டின்பத்தைத் தருவனெனவே கிரியைக்குக் கிரியைடோடே விரோதச்சிலேடையாயிற்று. திணை-வாகை. துறை-அறிவன் வாகை.

இங்குமுளனோவெனச்சொன்னதானவனைப்
பொங்கியடலாளரியாய்ப்போர்வென்றான்-சிங்கவரைக்
கன்புற்றிருப்பானெதிர்கொண்டசுரரிடத்
தின்புற்றிருந்தவளனென். (353)
என்பது, மதலையே! நீ யெங்குமுளனென்றமாயோ னித்தூணிலுமுளனோவென்று கூறிய இரணியாசுரன்முன்
அடலாளரியாய்த்தோன்றியவனோடு பொரு தவனைவென்று கொன்றோன், சிங்காத்திரியிடத் தன்புற்றிருப்போன்,
அவனை நாவே! தன்னையெதிர்கொண்ட தேவர்களிடத் தின்புற்றிருந்த வளத்தையுடையவனென்றுகூறுவாயாக வென்றவாறு.

இதனுள், எதிர்கொண்டசுரரிடத்தென்பதனைத் தன்னோடு மாற்றங் கொண்ட அசுரனைக்கொன்றவன் மாறுகொண்ட
அசுரரிடத் தின்பமுற்றிருந்தவளன் யாதுதானெனக் கிரியைக்குக் குணத்தோடே விரோதமாசிலேடையாயிற்று.
இப்பொருட்குச் செய்தவென்னும்பெய ரெச்சத்தீற்றினகரஞ் செய்யுள்விகாரத்தாற் றொக்கது; என்னை?
“புகழ்புரிந்தில்லிலோர்க்கில்லை” யென்பதுபோலக் கொள்க. துறை – கடவுள் வாழ்த்து.

கருத்தகலாக்கண்ணனெனக்காவலருள்வானை
யுருத்திரனாமென்பதனோடொண்மைப்-பொருட்பரத
கண்டத்தாகிச்சிறந்தகங்கைக்கோடுற்றவிடக்
கண்டத்தானென்னுமுலகம். (354)
என்பது, திருவுள்ளத்தைவிட்டுநீங்காத கண்ணோட்டமுடையானென்று சொல்லும்படிக் குலகுயிர்களைக்
காவல்செய்வானைத் திவ்வியாத்தும சொரூப மழிவிலானென்பதோடு நல்லபயனைத்தரும் பரதகண்டத்தாகி
யழகெய்திய கங்கைக்கரையையுற்றவிடமாகிய கண்டத்தானுமாமென்று உலகங் கூறாநிற்கு மென்றவாறு.

கங்கைக்கோடுற்றவிடக்கண்டமென்பது கங்கைக்கரைக்கண்ட மென்னுந் திருப்பதி.
ஆதலால் அங்ஙனங் கண்ணோட்டமுடன் காவல் செய்வானை நெஞ்சமே! என்னுடன்கூடிப் பற்றுவாயாக;
நமக்கு முத்தியெய்து மென்பது பயன். ஒண்மை – நன்மை.
பொருள் – இனிக் கண்ணனென்னுந் திருநாமமுடையானென் றுலகங்குயிர்களைக் காவல்செய்வானைச்
சங்காரமூர்த்தி யென்பதனோடும் பிரமசிரத்தை யிரத்தற்குக் கையிலோடாகவுடையனுமாகி நஞ்சையணிந்த
மிடற்றையுடையனுமாமென் றுலகங் கூறாநிற்கு மென்னும் பொருடோன்றுதலா லிது
கிரியைக்குப் பொருளோடே விரோதச்சிலேடையாயிற்று.
உருத்திரன்-சொரூபமழிவிலாதான்; சங்காரமூர்த்தி என்றும், கம்- சிரம். கைக்கோடுற்ற- கைக்கோடாகவெய்திய.
இடக்கண்டத்தான்-இடமாகிய கண்டமென்னுந் திருப்பதியான்;
விடக்கண்டத்தான் – நஞ்சையணிந்தமிடற்றான் எனவுங் கொள்க. திணை-பாடாண். துறை-ஓம்படை.

என்னென்றறியேனியற்றமிழ்தேர்காரிதரு
மன்னன்றனையுலகமாறனென-முன்னுரைத்தோர்
வன்புலனையொன்றாமதியாமுனிவரிடத்
தன்புடையானென்னுமது. (355)
இதனுள், காரியார்பெற்ற விளவரசை மாறனென்னும் பிள்ளைத்திரு நாமத்தையுடையானென் றுலகின் முதலேகூறுவார்,
அதனோடும் வலியபுலன்களை யொருபொருளாக மனக்கொளாத இருடிகளிடத் தன்புடையா னென்றும்புகலுவர் என்பது போந்தபொருள்.

இனி இதனுள் அது என நின்றதனோடும் அன்றியும் என்பதனைச் சொல்லெச்சமாகவிரித்து
அஃதன்றியு மெனக்கூட்டிக் காரியார்பெற்ற இளவரசை யுலகம் யாவரோடும் மாற்றங்கொள்ளுங்
குணத்தையுடையானென்று முதலேகூறுவதோடு மனத்தையதுசென்ற விடத்துச்செலவிடா தப்புலத்தி னன்மை
தீமைகளை யாராய்ந்து தீமைகளைநீக்கி நல்லதன்கட்செலுத்தும் வலியவறிவியைுடையோரையுமொரு பொருளாக
மதித்திடாது, கோபிக்கப்பட்ட வரிடத்து மன்புடையானாகியிருப்பனென்றுங் கூறுமஃ தியாதென்றறியே னெனக்கூறியதாய்ப்
பொருள்கொள்ளக்கிடந்தமையா னிது குணத்திற்குக் குணத்தோடே விரோதச்சிலேடையாயிற்று. திணை-வாகை. துறை-சால்புமுல்லை,

புனமலிதேமாவின்புணர்சினையின்றண்மை
தினமகலிற்சேர்ந்தாரைக்கோல்லி-யெனலாகு
நாடிப்பரனையுணர்நாவீறன்றண்சிலம்பிற்
கூடிப்பிரிந்தார்குணம். (356)
என்பது, நண்பனே! ஞானத்தாலாராய்ந்து சீமந் நாராயணனே பர தத்துவ மென வுட்கொண்ட
நாவீறுடையபிரான் குளிர்ந்தமலைப்பக்கத்திற் புனத்தின் கண்ணே மிகுந்த பெண்பாற்கடவுளாகிய
திருமகள துபய வுறுப்பாகிய முலை களிற்றண்ணென்றகுணந் தம்மைப் பரிசித்தகாலத்துத் தண்ணென்னும்;
சேய்த் தாயகாலத்துப் போதுதோறும் நினைவையுஞ்சுடும் நெருப்பாய்நின்றன வாத லான் வாடினே னென்றவாறு.

தேமா – கடவுளாகிய திருமகள். புணர்சினை-உபயமுலை. பகுதி-பாங் கற்கூட்டம். துறை – உற்றதுரைத்தல்.
இதனுள், புனமலிதேமாவின் புணர் சினையின்றண்மை….. யென்பது, புனத்தின்க ணெருங்கவைத்த தேனையுடைய
மாமரங்களி னெருங்கின கொம்பரிற் சிவந்ததளிர்களின் குளிர்ச்சி தம்மைப் பரிசித்தகாலத்துத் தண்ணென்னும்;
சேய்த்தாய் நீங்கினகாலத்து நினைவோடும் பார்த்தகண்ணிற்கு நெருப்பாயத்தோன்றிப் பயங்கரமாகி
யுள்ளத்தையுஞ் சுடா நின்ற தெனப்பிறிது மோர்பொருடோன்றலாற் குணத்திற்குப் பொருளோடே விரோதச்சி லேடையாயிற்று.
சேர்ந்தாரைக் கொல்லி – நெருப்பு. சினை, தினம் ஆகுபெயர். நண்பனேயென்னு மெழுவாய்முன்னிலையும்,
வைத்த தேனென்பதுமுதலாக வாடினே னென்பதீறாய சொற்களு மெஞ்சி விரிந்தன. இதன்பொருளுண் மாட்டுறுப்பா யெச்சமுங் கூடின.

நாடகத்தையீறாய்நயந்ததமிழ்நன்குணர்ந்தோ
னாடகத்தைப்பித்தளையென்றாக்கியதூஉ-மேடவிழ்பூந்
தாமக்குழலிவளேதண்டமிழ்மாறன்சிலம்பி
லேமப்பொழிலுமிது. (357)
என்பது, இயன்முதலாக நாடகமீறாக வுலகம்விரும்பப்பட்ட தமிழ் மூன்றி னையு நன்றாயறிந்தோன் வெற்றியை
யுடையபுத்தியை மையலளைவாயாக வென்று கற்பித்ததும், இதழ்விரிந்த பூமாலையைச்சூடினகுழலையுடைய விவளே;
தலைவன்கூறிய தண்டமிழ்மாறன்வரையி லின்பத்திற்கிடங்கொடுத்த சோலையு மிஃதே; பிறிதில்லை யென்றவாறு.

ஏகாரம் தேற்றம். தலைவன் கூறியவென்ப தெச்சம். இதனுள் ஆடகத்தைப் பித்தளையாக்கிற்றென்பதனாற்
பொருட்குப் பொருளோடேவிரோதச்சிலேடையாயிற்று. பகுதி – பாங்கற்கூட்டம்.
துறை-குறி வழிச் சென்றபாங்கன் றலைவியைக் காண்டல்.

ஆகப் பத்தும் முன்னர்ச் சிலேடித்தவற்றைப் பின்னரும் விரோதமாகச் சிலேடித்த சிலேடை யடைவே வந்தமை காண்க.

திருமகிழ்மாலையனாமென்பர்மெய்யைச்சிறைப்படுத்திப்
பொருதளைகட்டுண்டறியானளியுறும்போதனென்பா
ருருவளர்பாரிபடைத்தறியானொண்புனிதனென்பா
ரருள்புரிவாய்வைத்தருந்தான்மின்சொர்க்கத்தமிர்தினையே. (358)
இதனுள், திருமகிழ்மாலையனாமென்பர் என்பது திருமகள் விரும்புமியல்பையுடைய திருமாலுக்கும்,
அழகியவகுளமாலிகையினையுடைய மாறனுக்கும் பெயராமென்றுகூறுவர் பெரியோர்.
திருமால் திருமேனியை யொளித் துறியினையெதிர்ந்து தயிரைக் களவுகண்டறிவான்;
மாறன் ஞானத்தைத் தனக்காணாக்கிக்கொண்டு தன்னோடு பூசல்பெருக்கும் பாசத்தளையிற் கட்டுப்பட்டறியான்;
என்றும், அளியுறும்போதனென்பார் என்பது வண்டுகள்சென்று முடுகும் பூவிலுள்ள பிரமனுக்கும்,
தண்ணளிமிக்க ஞானத்தையுடையமாறனுக்கும் பேர். பிரமன் வடிவகன்ற பூமியைப் படைத்தறிவன்;
மாறன் காந்திதழையாநின்ற இல்லறக் கிழத்தியைக் கொண்டறி யான்; என்றும்,
ஒண்புனிதனென்பார் என்பது நல்ல இந்திரனுக்கும், ஒள்ளியஞானத்தோடுங்கூடிய பவித்திரவானாம் மாறனுக்கும் பேர்.
இந்திரன் திருமால்கருணைபுரிந்துகொடுப்ப வொளிருஞ் சுவர்க்கத்திருக்கு மமிர்தினை வாய்வைத்துண்டறிவான்;
மாறன் மின்போலு மிடையையுடைய நங்கை யிரங்கிக்கொடுக்குந் திருமுலைப் பாலினைத் திருப்பவளவாய்
வைத்துண்டறியா னென்றுங் கூறியவாறாக வுணர்க.

இங்ஙனஞ் சிலேடை நிகழ்த்தலா லிதுவும் பொருளோடே கிரியைக்கு விரோதமாகவந்த சிலேடைவேறுபாடெனக் காண்க.
இன்னும் வேறுபடவரு வனவெல்லாம் பொருணோக்கமறிந்து கொள்க.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். திணை – வாகை. துறை – தாபத வாகை.

156. அவிரோதத்தறைவதுமவிரோதம்.
(எ-ன்) அவிரோதச்சிலேடையாமாறுணர்-ற்று.

(இ-ள்) அவிரோதச்சிலேடையென்பது முன்னர்ச் சிலேடித்த பொருள் பின்னரும்
விரோதியாமற் சிலேடிப்பனவாய்க் கூறுவதாமென்றவாறு.

குருகையிடங்கொண்டான்மெய்க்கோலமுறுதுப்பான்
பெருமனத்தானிலஞ்சிபெற்றோ – னொருபுனித
னாகதருநிழலானன்னருறுமாதவன்பொன்
னாகமலம்வருநண்பான். (359)
(இ-ள்) திருமால், பாஞ்சசன்னியத்தை யிடதுகையிற்றரித்தான்; அழிவில்லாத வராகரூபியாய்ப் பூமிதேவி
தோன்றுதற்குப் பற்றுக்கோடாயினான். மாறன், குருகாபுரியை யிருப்பிடமாகப்பெற்றுளான்;
திருமேனியினது அழகு மிக்க பவளம்போல்வான். பிரமன், பெருமையெய்து மன்னவாகனத்தை யுடையான்;
மாயோன்றிருவுந்தி – பெறப்பட்டவன். மாறன், ஞானமிகுந்த மனத்தையுடையான்; மகிழமாலிகையையுடையவன்.
இந்திரன், புனிதனென்னும் ஒரு பெயரை யுடையவன்; சுவர்க்கத்திற்றருவினது நிழலையுடையவன்.
மாறன், ஒப்பற்ற பவித்திரவான்; சேடாவதாரமான திருப்புளிநீழலையுடையான்.
ஆதித்தன், நன்மைமிகும் வடமேருவை வலம்வருவான் மாறன், முத்தியைப்பெறும் பெரியதவத்தையுடையவன்.
ஆதலால் அவன் திருவடிகளைப்பற்றுவாரும் முத்திபெறுந்தன்மை யுடையவராவரென்பது பயன்.
இதனுள், கோலம்-பன்றியும், அழகும். துப்பு-பற்றுக்கோடும், பவளமும். இலஞ்சிகொப்பூழும், வகுளமாலிகையும்.
நாகதரு – சுவர்க்கத்துக் கற்பகதருவும், திருப்புளியாழ்வாரும் நன்னர்-மங்கலமும், முத்தியும். இஃ தாகுபெயர்.
ஆகம்-திருவுளம். அலம்வரல்-சுற்றுதலும், நிறைவெய்துதலும். இது. அவிரோதச்சிலேடை; இரண்டுங் கடவுள்வாழ்த்து.

அந்தணரறைந்தவுரையினைச்செவிக்கொண்
டகனமர்ந்தணிதிகழரையிற்
சுந்தரப்பீதாம்பரத்தினைநெகிழ்த்துச்
சுற்றுவிட்டதன்பினோர்வெண்பட்
டிந்துவினெறிப்பவரையுடீஇக்கடன்க
ளியற்றிவான்பொருநையுட்படியா
வுந்தியினுதித்தோனெனும்பெயர்பிரமற்
குண்மையாமெனும்படிக்கெழுந்தான். (360)
திணை-பாடாண். துறை-மண்ணுமங்கலம்.

வெம்புலால்கமழ்ந்துழுபடைவேடுவன்விறல்கண்
டும்பல்யாவையும்பறந்துவான்குரல்கிளைத்தொசிந்த
கொம்பின்மொய்த்தடர்போதகத்துறுமுழைகுறுகித்
தும்பியாமெனப்புலவராற்புணர்பெயர்துணிவார். (361)
திணை-வாகை. துறை-பேராண்முல்லை.

பாய்கதிர்க்கடவுளும்பனிவெண்டிங்களுஞ்
சேயிகந்திரிதருஞ்செம்பொன்மாளிகைத்
தூயநுண்டுகிற்கொடிதுவன்றித்தோன்றலாற்
காயமம்பரமெனும்வாய்மைகாட்டுமே. (362)
இது நகரவாழ்த்து. இங்ஙனம்வருஞ் சிலேடைவேறுபாடுகளுங் காண்க. இவைமூன்றுங் குருகாமான்மியம்.
இனி ஒரு தொடர்ச்சொலிரண்டு முதலாக ஐந்துபொருள்காட்டுவனவாஞ் சிலேடைகளு முள.
அவை சொல்லணியினு ளிடைவிடாமடக்கினுண் முந்துறக் காட்டுதும். அவை யாண்டுக்காண்க. ஈண்டுரைப்பிற் பெருகும்.

17-வது சிலேடை முற்றும்.

—————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை–பகுதி- 2–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

———–

3-வது உருவக வலங்காரம்
4-வது உள்ளுறையுவமம் –
5-வது ஒட்டலங்காரம்.–

——–

114.முக்கியப்பொருளையொப்புடைப்பொருளெனமதித்
திருபெயரொட்டாயிசைப்பதுமுருவகம்.
(எ-ன்) வைத்தமுறையானே யுருவகமென்னு மலங்காரமுணர்–ற்று.

(இ-ள்) உவமேயப்பொருளையு முவமப்பொருளாக வுட்கொண் டிரண்டுபொருளையு மிருபெயரொட்டாக
வொற்றுமைகொளுத்தி யுரைப்ப துருவகமென்னும் அலங்காரமா மென்றவாறு.

உம்மையா லிரண்டுபொருளையு மொற்றுமைகொளுத்தா துவமையாத லுவமேயமாத லிரண்டிலொன் றுருவகச்
சொல்லொடுதொக்கு மாட்டேறில்லா துவரு முருவகமு முளவென்றவாறு. மூன்றுதொக்கு வருவனவு முள.
இவற்றிற்கெல்லாஞ் செய்யு ளுருவகவிரியுண் முன்னர்க் காட்டுதும்.

அஃதாக ; உவமையும் பொருளுமென இதன் முதனூலுடையார் கூறவும், இந்நூலுடையார் முக்கியப்பொருளை
முதல்வைத்ததியாதோ வெனின், உவமைபோலாது முக்கியப்பொருளை முதல்வைத் தொப்புமைப் பொருளை
யதன்பின்னர்வைத் தொற்றுமைகொளுத்துவதே யுருவகத்திற்கு மிக்கதோர் அறிகுறி யென்பது தோன்ற வைத்தாரெனக் கொள்க.

115.பொருண்முதலினுமுவமையதாம்புணர்வுழி
யொற்றிடைதோன்றறிரிதலோடொன்றிய
மற்றதற்குறுசொல்விரியாவயினே.
(எ-ன்) உவமைக்கு முருவகத்திற்கு மெய்தியதோ ரைய மறுத்துணர்-ற்று.

(இ-ள்) முக்கியப்பொருண் முன்னு முவமப்பொருள் பின்னுமாக வருவ துருவகத்திற்கு மிக்க வறிகுறியென்றார்;
அவ்வாறன்றிப் பொருண்முதலேவரினு நிலைமொழியாகி யுயிரு மொற்று மீறாய்வரு முவமேயச் சொல்லும்
வருமொழியா யவைமுதலேவரு முவமச்சொல்லுந் தம்மிற் புணருமிடத் தவற்றினிடையி லொற்றுத்
தோன்ற றிரிதலின்றி யவற்றோடு மவ்வுருவகத்திற்குரியசொல்லும் விரியாவிடத் துவமையாம் பகுதியு முள வென்றவாறு.

உதாரணம் :- வாய்ப்பவளம், (வாயென்றபவளம், வாய்பவளமாக. ) குழற்கொன்றை, கொங்கைக்குரும்பை யெனவு மிவை யுருவகம்.
வாய்பவளம், குழல் கொன்றை, கொங்கை குரும்பை யெனவு மிவை யுவமை, “வாய்பவளந், துடிக்கின்றவா” எனவும்,
“குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை” எனவுங் கண்டுகொள்க.
ஒன்றிய வென்றதனால் வதனசந்திரன், கரகமலம், கரபுண்டரீகம் எனவும் நிலைமொழியுவமேயவுயிரீற் றின்
முன்னர் உவமையாய வருமொழி முதல் வல்லெழுத்து முன்ன ரொற்றுமிகா துருவகமா மிடமுமுள. இது உவமவிரியினுள், தலைதடு
மாற்றவுவமையின்கண் பொருண்முதலேவந்து முவமையாயினவாறு கண்டுகொள்க.

116. அதுவே,
தொகையினும்விரியினுந்தொடரிருவகைத்தே.
(எ-ன்) இதுவு மவ்வுருவக மின்னவகைப்படு மென்கின்றது.

(இ-ள்) அவ்வுருவகமென்னு மலங்காரந் தனக்குரியசொற் றொக்கும் விரிந்தும் வருமொழியொடு
தொடர்ந்துநிற்கு மிரண்டுகூறுபாடுடைத் தென்றவாறு.

உம்மை யிரண்டனுண் முதலது சிறப்பும்மையாதலால் அதற்குரியசொற் றொக்குவருதலே சிறப்புடைத்தெனக் கொள்க.
ஏனைய தழிவுசிறப்பும்மை.

117. அடையிடைபுணரினுங்கடிநிலையிலவே.
(எ-ன்) இதுவு மவ் வுருவகந் தொகையினும் விரியினும் புணர்வுழி யெய்துவதோர் வழுவமைப் புணர்ற்று.

(இ-ள்) இரண்டுபொருளையுந் தம்மி லொற்றுமைகொளுத்தும் வழி யிடைப்பட வுவமைக்கண் ணடைச்
சொற்புணர்த்துக்கூறினு முருவகமேயாம் ; நீக்கப்படாதென்றவாறு.

உம்மையான் முதலே யடைபுணரினு நீக்கப்படாதாம் ; எனவே தொகைநிலைவகையானும் அடைச்சொற்புணராமலும்
புணர்ப்பதே சிறப்புடைத் தென்பதாம். இவற்றிற்குச் செய்யுள் வருமாறு :-

முருகவிழளகக்காட்டைமுன்னிடாவல்குற்றேரும்
பருமணிவடத்திற்சேர்த்தபடாமுலைக்களிறுமுந்திப்
புருவவிற்குனித்துநாட்டப்பொருகணையுடக்கிமைந்தர்
செருவிழந்தோடமார்பிற்செஞ்சவேசெலுத்துவாரே. (228)
என்பது தொகையுருவகம். இதனுள் படாமுலை, பொருகணை யென்பன அடை. துறை – நாடுவாழ்த்து.
(குருகாமான்மியம். )

கண்கழுநீராய்க்கரங்கள்காந்தளாய்த்தீங்கிளவி
பண்களாய்ச்செவ்வாய்பதுமமாய்–நண்பனே
வாய்ந்தமடவரற்குமாறன்மணிவரைவா
யீர்ந்தண்பொழிலாமிடம். (229)
இது விரியுருவகம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

118. ஒருதொடர்பினுளிருமையுமுறலுளவே.
(எ-ன்) தொகைவிரியுருவக முணர்-ற்று.

(இ-ள்) தொக்கும் விரிந்தும் வரு மிரண்டுதன்மையு மொரு செய்யுளகத்துவருதலுமுள வென்றவாறு.

பெண்ணாரமுதளித்தபேரின்பத்தீஞ்சுவைபெற்
றுண்ணாநினைவேற்குறுதியெனக்–கண்ணா
லளித்தவருணோக்காமமிர்தினைக்கண்டுள்ளந்
தளிர்த்ததையிங்கார்க்குரைப்பேன்றான். (230)
இது தொகைவிரியுருவகம். துறை – பாங்கியையறிதல்.

கதிர்முலைக்குவடுந்திண்டோட்சயிலமுங்கலவிமுந்நீ
ரெதிர்கொளநிறீஇமத்தாகவிவறலாந்தாம்புபூட்டி
முதிர்பொறிப்புலவர்மாண்பின்முறைமுறைசுழற்றுமாற்றாற்
சதிர்பெறப்பிறந்தவின்பத்தனியமிர்தருந்துநீரார். (231)
திணை – பாடாண். துறை – நாடுவாழ்த்து. இதனுள்ளு முதலேயு மிடையினு முவமேயத்தினு முவமையினும்
அடைச்சொற் புணர்ந்ததுங் காண்க. (குருகாமான்மியம். )

119. உரைத்தவையினிவரும்விரிக்குறுபொதுவே.
(எ-ன்) இதுவு மத் தொகைவிரிகளா லெய்து மிலக்கண முணர்–ற்று.

(இ-ள்) இங்ஙனமுரைத்த தொகையும் விரியு மேற்கூறப்படு முருவகவிரிக்கு மிக்க பொதுவிலக்கணமாமென்றவாறு.

120. இயைபியைபின்மையேகதேச
மொருபொருள்பலபொருளுருவகஞ்சிறப்பே
விருத்த மவிருத்த நட்புவியனிலை
யேகவங்க மனேகவங்க
மவயவ மவயவி முற்றெனவாய்ந்த
நவையறுசிறப்பினானான்கதன்விரியே.
(எ-ன்) உருவக மென்னு மலங்காரத்தின் விரியிலக்கண முணர்–ற்று.

(இ-ள்) இயைபுருவகமும், இயைபிலுருவகமும், ஏகதேச வுருவகமும், ஒருபொருளுருவகமும், பலபொருளுருவகமும்,
உருவகவுருவகமும், சிறப்புருவகமும், விருத்தவுருவகமும், அவிருத்தவுருவகமும், நட்புருவகமும், வியனிலையுருவகமும்,
ஏகாங்கவுருவகமும், அநேகாங்க வுருவகமும், அவயவவுருவகமும், அவயவியுருவகமும், முற்றுருவகமும்
என ஆராய்ந்த குற்றமற்ற சிறப்பினையுடைய வுருவகவிரி பதினாறா மென்றவாறு.

இவற்றிற்கெல்லாம் உருவகமென்னும்பெயரை யதிகாரத்தாற் கூட்டி யுரைத்ததனோடும் எண்ணும்மைத்தொகையும் விரித்துரைக்கப்பட்டது.
நட்பென்பது சமாதானம். இவையெல்லாஞ் சொல்லின்முடியு மிலக்கணத்தன. அல்ல துரையினுங் கொள்க.

அவற்றுள், இயைபுருவக மென்பது ஒரு தொடர்பினுட் பல பொருளையு முருவகஞ்
செய்யுங்காற் றம்முட் காரணகாரிய மியைபுடைத்தாகவைத் துருவகஞ்செய்வது :-

நித்தர்முத்தரிற்புகழ்நிபுணன்பராங்குச
னுத்தமஞானமென்றொளிர்திருப்பாற்கடல்
புரந்தசெந்தமிழ்மறையாயபுத்தமிர்த
நிரந்தரமுலகின்மெய்ந்நெறிநிலைதழைவான்
பூமகளெனும்பெயர்புனைமலர்நிதியொடந்
தாமமாதவனெனுஞ்சங்கநீணிதியினை
யருளுடைமையின்வெளிப்படுத்தருளவுமவை
வருபவர்வருகெனவாழ்வுபெற்றிருப்பவும்
வாழ்நாளதன்கண்வழிபடுசரிதையின்
வீழ்நாள்படாமைவீட்டினையெய்தா
தொல்லையிற்பிறந்திறந்துழல்வோர்
வல்வினையதனில்வலியதொன்றிலையே. (232)
இஃ தியைபுருவகம்.

(இ-ள்) அநந்த கெருட சேனாபதிகளோடும் பரமபதத்து முத்தரும் புகழு மிகவும் வல்லோனாகிய
சீபராங்குசன் றிருஞான மென்றொளிரும் திருப்பாற்கடலளித்த திருவாய்மொழியெனும் புத்தமிர்தம்
எல்லாநாளு முலகின்கண் சீமந் நாராயணனே பரப்பிரமமென்னு முண்மை மார்க்கநிலை தழைக்கும்படி
மலர்மடந்தையெனப் பெயர்புனை பதுமநிதியுடன் கூடிய பரமபதத்தையுடைய மாதவனென்னுஞ் சங்கநீணிதியைத்
தனது திருவுள்ளக் கருணையுண்டானதன்மையால்வெளியிடவு மவை யீருட லேகமாகி முத்திவேண்டினவர்
வருவார் வருகவென்று தம்மினீங்காது வாழ்ந்திருக்கவுந் தமக்குள்ள வாழ்நாள் வீழ்நாள்படாமை
மனோவாக்குக் காயங்களால் அருச்சனைபுரியு மொழுக்கத்தினான் மோக்கத்தினைப் பொருந்தாது
சிறுவரையிற் பிறந்து மிறந்து முழல்வோ ரும்மையி லிழைத்த தீவினைபோல வலியுடையதொன் றில்லை யென்றவாறு.

மலர்நிதி-பதுமநிதி ; சங்கநீணிதி – பாஞ்சசன்னியத்தைத் தரித்த பெரியநிதி ; திருவு மாயோனும்.
இதனுள், திருப்பாற்கடன்முதலாக அடைவே காரணகாரியத்துடனியைந் துருவகமாயினவாறு காண்க.
பா-நேரிசையாசிரியம். திணை-பாடாண்பொதுவியல். துறை-பனுவல் வாழ்த்து.

ஆரவடநீரருவியாமாணிக்கத்
தார்கெழுசீர்த்தேனருவிதானாகப்–பேரழகு
பாரிக்குமாரன்பனிவரைமான்வார்புனைந்து
பூரிக்குங்கொங்கைப்பொருப்பு. (233)
இஃ தியைபிலுருவகம். ஆரவடம் – முத்துவடம். மாணிக்கத்தார் – மாணிக்கமாலை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – செவ்வி செப்பல்.

ஏகதேசவுருவக மென்பது ஒரு செய்யுளகத்து ஓரிடத் தொரு பொருளை யுருவகஞ்செய்யுங்கான் மாட்டேறுபெற வுருவகஞ்செய்
தப்பொருளோடு சம்பந்தமுறப் பிறிதோர்பொருளைச் செய்யுளகத்துப் பிறிதோரிடத்து
மாட்டேறுபெற வுருவகஞ்செய்யாது தொகைநிலைவாய்பாட்டாற் கூறுதல் :-

அறியாமையென்னுமகவிருளைச்சீக்கப்
பிறியாதறிவிருக்கப்பெற்றுங்–குறியாத
தீச்சொற்பயில்வரேசெண்பகமாறன்பவள
வாய்ச்சொற்றிறம்பயிலாமல். (234)
இஃ தேகதேசவுருவகம். இதனுள் அறியாமையென்னு மகவிருளை யென மாட்டேறுபெற வுருவகஞ்செய்ததனோடு
மெதிராகச் சம்பந்தமுற ஞானமாம்விளக்கென மாட்டேறுபெற வுருவகஞ்செய்யாது தொகை
நிலைவாய்பாட்டா னறிவெனக் கூறியவாறு காண்க.

செண்பகமாறன் பவளவாய்ச்சொல்-திருவாய்மொழி. திறம் – சித்த சித்தீச்சுரத்தை மயக்கமறவிளங்கக்கூறுங்கூறுபாடு.
பயிலாமல் – இடைவிடா துணர்வினாற் சிந்தியாமல்.
இது, உவமேயமு முருவகவுருபுமாகிய இரண்டுதொக்க தொகையுருவகம்.
ஞானவிளக்காவது திருவாய்மொழி ; பிறரறியாமையென்னு மிருட்டறக் கூறிய ஞானமாகிய விளக்கு.
பயில்வரே யென்பது பரசமயவாதியரை. ஏகாரம் – இரக்கத்தின்கட் குறிப்பு. துறை – இதுவுமது.

புன்பனுவனஞ்சம்பொசிக்கின்றபேதையர்பே
ரின்பமுறமெய்யுணர்வாரேனோருந்–தன்பால்
விருந்தருந்தத்தானருணாவீறனார்கூறு
மருந்தருந்தாரந்தோமதித்து. (235)
இதுவுமது. இதனுள் நாவீறனார்கூறு மருந்தென்பது திருவாய் மொழியாகிய மருந்து. மருந்தென்பது – அமிர்தம்.
எனவே திருவாய் மொழியாகிய மருந்தென வுருவகஞ்செய்ததனோடுஞ் சம்பந்தமுறும்படி பிறவியாகிய பிணியைத்
தீர்த்து முத்தியாகிய பேரின்பத்தைத் தரு மருந்தென வுருவகஞ்செய்யா துவமேயமுதலிய
மூன்றினையு மிருவகைத் தொகைநிலைவாய்பாட்டாற் கூறியவாறு காண்க.

மெய்யுணர்வார்-தத்துவத்திரயத்தி னுண்மையுணர்வார். தன்பால் விருந்தருந்த – அம் மூன்றினையும் மயக்கமறவுணர்த்தும்
ஞானமான அமிர்தத்தைத் தமது மெய்யுணர்வா லுவட்டாது புதுவதுபுதுவதாக வுரிசிக்கவும் என்க.
அருந்தாரந்தோ என்ப திரக்கம். மெய்ப்பொருண் மாறன் – உண்மைப்பொருளை யுணர்ந்த மாறன் ; உண்மைப்பொருளாகிய மாறனென்றுமாம்.

மிக்கவரிதாளின்மெய்யன்பினைவித்தித்
தக்கதவந்தினமுந்தான்பொழிந்துட்–புக்கதோர்
ஞானமுருவியபின்னன்முத்தியைவிளைக்கு
மானபரன்காரிதருமன். (236)
இது, உவமையு முருவகவுருபு மாட்டேறில்லாதுவந்து வுருவகம் என்னை? அரிதாளாகிய செய்யின்கண்
அன்பாகிய வித்தை விதைத்துத் தவமாகிய நீரைப்பொழிந்து ஞானமாகிய முளையுருவியபின் முத்தியாகிய
போகத்தை யென மாட்டேறுபெறாதுவந்தமையானுணர்க. ஒழிந்த அகலமுரையிற்கொள்க.
இவை யிரண்டுதொக்கது. இவற்றுள் முன்னையது பனுவல்வாழ்த்து.
இது திணை – வாகையைச்சார்ந்த புறத்திணை. துறை-அறக்களவழி.
இவை மூன்று மாட்டேறிலாதுவந்த வுருவகம்.
இவற்றிற்கு “அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற், பிறவாழி நீந்த லரிது” எனவும்,
“சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லியினமென்னு, மேமப் புணையைச் சுடும்” எனவும்,
“பவழவாய்ச் செறுவுதன்னு ணித்திலம் பயில வித்திக், குழவிநா றெழுந்து காளைக் கொழுங் கதி ரீன்” றெனவும்,
“அஞ்சுவரு தானை யமரென்னு நீள்வயலுள், வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்” எனவும்
முந்து நூல்களினும் அடைவே வந்தவாறு காண்க.

ஒருபொருளுருவக மென்பது உயர்திணை அஃறிணை யென்று சொல்லப்பட்ட காட்சிப்பொருளுங்
கருத்துப்பொருளு மொருசெய்யு ளகத்துவந்தா லவற்று ளொருபொருளை யுருவகஞ்செய்தல் :-

பிறப்பாரிறப்பார்பிறப்பாயவேலை
துறப்பானொருபோதுந்தூவார்–சிறப்பாகுஞ்
செய்படைத்ததென்னரங்கர்சேவடிமேன்மானிடராய்க்
கைபடைத்தும்வாழ்ந்தகதை (237)
இஃ தொருபொருளுருவகம். அரங்கன், மானிடர்கை, சேவடி யென்னும் உயர்திணை யஃறிணைகளை
யுருவகஞ்செய்யாது கருத்துப் பொருளாய பிறப்பென்னும் அஃறிணையை யுருவகஞ்செய்தலா னென்றறிக.
திணை – பாடாண். துறை – வாயுறைவாழ்த்து.

பலபொருளுருவக மென்பது அவ்விருபொருளையு மொருசெய்யுளகத் துருவகஞ்செய்தல் :-

தீதற்றமெய்ஞ்ஞானத்தெப்பமுடன்மேதகுநால்
வேதக்கடல்கடந்தவித்தகத்தாற்–கோதற்ற
வந்தாமத்தீவினுட்புக்காழியானாமணியைத்
தந்தானம்பூதூர்வந்தான் (238)
இது பலபொருளுருவகம். அந்தாமத்தீவு-விரசைக்கக்கரையாகிய பரமபதம். திணை-பாடாண்.
துறை-அறுமுறைவாழ்த்தினுண் முனிவனை வாழ்த்தல்.

உருவகவுருவக மென்பது ஒன்றனை முதலே யுருவகஞ்செய் ததனைப் பெயர்த்து முருவகஞ்செய்தல் :-

மத்தம்புரியவிச்சைவாராழியாமிருளென்
சித்தமினித்தேறுமேதேமகிழ்த்தார்–முத்தன்
முகத்தாமரையாமுழுமதியென்செவ்வி
யகத்தாமரையகத்தாக. (239)
இஃ துருவகவுருவகம். இதனுள், மத்தம்-மயக்கம். புரிதல்-தருதல். அவிச்சை-அறியாமை.
அவிச்சையாம் வாராழி யென வுருவகஞ்செய்ததனை மறித்து மிருளென வுருவகஞ்செய்ததும்
முகத்தாமரையா முழுமதி யெனவும் உருவகவுருவகம் வந்தவாறுங் காண்க. துறை – இதுவுமது.

சிறப்புருவக மென்பது ஒருபொருளையெடுத் ததற்குச் சிறந்த அடைகளை யுருபித் தவற்றானே யதனை யுருபித்துரைப்பது :-

நாரங்குழலாய்நளினமுகமாய்முகுளங்
கூர்வெம்முலையாய்க்கொடியிடையா–யூர்திரைகள்
வெண்டுகிலதாகிவிளங்குமகிழ்மாறன்
வண்குருகூர்த்தண்பொருநைமாது. (240)
இது சிறப்புருவகம். நாரம்-பாசி. வெம்முலை-விருப்பத்தைத்தரும் முலை. பொருநைமாது-பொருநையாகியபெண். துறை-நதிவாழ்த்து.

விருத்தவுருவக மென்பது ஒருபொருட்குக் கூடாதனபலவுங் கூட்டி யுருவகஞ்செய்வது :-

வேம்பாலிசைந்தசுவைவெவ்விடத்தினோடுதித்த
தாம்பாலதன்றறலின்பாலன்று–பாம்பா
லிமிழ்திரைவாயிற்பிறந்ததென்பதன்றுமாறன்
றமிழ்மறையாஞ்செஞ்சொலமிர்தம். (241)
இது விருத்தவுருவகம். வேம்பு-கைப்பு. கைப்பைத் தனக்குச் சுவையாகவுடைய நஞ்சினோடும் பிறந்ததாம்
பகுதியையுடையதன்று; அறலின்பாலன்று – சலத்தினது மயமாம்பகுதியையுடையதூஉமன்று
பாம்பா…….. தன்று-பாம்பாகிய தாம்பா லாரவாரிக்குந் திரையையுடைய கடலைக் கடையப் பிறந்ததென்று கூறுவதூஉமன்று ;
காரிமாறப் பிரான் றிருப்பவளத்திற் பிறந்த திருவாய்மொழியாகிய வினிய சொல்லின்மயமா மமிர்தமென்றவாறு.

அமிர்திற்கு விடத்தினோடுதிப்பதுமுதலாயதுஞ் சலமயமாவதுஞ் சுபாவம்.
இந்த அமிர்தத்திற் சுவையின்மையால் விருத்தவுருவகமாயிற்று. துறை-பனுவல்வாழ்த்து.

அவிருத்தவுருவக மென்பது ஒருபொருட்குக் கூடுவனவாந்தன்மை பலவுங் கூட்டி யுருவகஞ்செய்வது :-

ஓர்பொழுதுந்துஞ்சாதலமந்துறுதுளித்தாம்
போர்புனைவேலண்ணல்பொருட்கேகிற்–சீர்பெருகுந்
தண்ணார்பசுந்துளபத்தார்மார்பன்றஞ்சைமான்
கண்ணாகியகார்க்கடல். (242)
இது, அவிருத்தவுருவகம். அண்ணல்-அண்மைவிளி. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
பகுதி-பொருள்வயிற்பிரிதல். துறை-செலவழுங்குவித்தல்.

நட்புருவக மென்பது ஒருபொருளை நன்றாக வுருவகஞ்செய்து அதனைத் தீங்குதருவதாகக் கூறி
யத்தீங்கு அதனால்வந்ததன்றென்றதற்குப் பிறிதோர்காரணங் கூறுதல் :-

தீங்கிளவியென்றுயிர்க்குந்தெள்ளமிர்தம்வெவ்விடத்துப்
பாங்கிழமைகூர்தலணிமாற–னாங்கைப்
பதித்திருவேதீவினையின்பாங்காயதென்றே
மதித்திருக்குமின்றென்மனம். (243)
இது நட்புருவகம்.

(இ-ள்) இனிய கிளவியென வொலிக்கு மொள்ளிய வமிர்தமானது வெம்மையைச்செய்யும் விடத்தின்
கயப்பா முரிமையை விளைத்தல் நின்னிடத்துண்டாய பாங்கினாலுண்டாயதல்லவென்றுமெனது
தீவினையின் பாங்காயதென்றுஞ் சந்தயமற விசாரியாநின்ற திப்பொழு தென்மன மென்றவாறு.

உயிர்த்தல்-ஒலித்தல். கூர்தல்-விளைதல். பாங்கு-வாரம். பகுதி-பரத்தையிற்பிரிதல்.
துறை-பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில்வேண்டப் புறத்தொழுக்க முண்டென்று வாயின்மறுத்துக்
கடுஞ் சொற்கூறிய விற்பரத்தையுடன் புறத்தொழுக்க மின்றென்றுகூறித் தனதாற்றாமையே வாயிலாகக் கூடியது.

வையம்பரவுமகிழ்மாறன்செவ்வாயுந்
துய்யநயனத்துணைப்போதுஞ்–செய்ய
முகத்தாமரையுடன்கைம்முத்திரையுங்கண்ட
சுகத்தார்க்குமுண்டோதுயர். (244)
இது வியனிலையுருவகம். இதனுள் அவயவி முகத்தாமரை. இதன் கண் ணவயவியுடன் அவயவங்களை யுருவகஞ்செய்து
மற்றையொன்றை யுருவகஞ்செய்யாமையுங் காண்க. துறை-கடவுள்வாழ்த்து. பழிச்சினர்ப் பரவலுமாம்.

ஏகாங்கவுருவக மென்பது ஒன்றினங்கம் பலவற்றினு ளொன்றை யுருவகஞ்செய்வது :-

வியனிலையுருவக மென்பது ஒன்றினங்கம் பலவற்றையு மொரு செய்யுளகத்துக்கூறி யவற்றுட் சிலவுருவகஞ்செய்து
சிலவற்றை யுருவகஞ்செய்யாது அவயவியை யுருவகஞ்செய்வது :-

மாறன்பனிவரைமேல்வாண்முகச்செவ்வாயிவட்கு
வேறன்றிவளெனவேமெய்யுணர்விற்–கூறொன்றக்
காட்டுகின்றதொண்பொற்கனங்குழைமேற்பல்காலு
மோட்டுகின்றகட்காவியுற்று. (245)
இது, ஏகாங்கவுருவகம். ஒருபொருளாவ திதனுண் முகமாகிய அவயவி. இதன்பொரு ளுரையிற் கொள்க. துறை-பாங்கியை யறிதல்.

அநேகாங்கவுருவக மென்பது ஒன்றினங்கம் பலவற்றையு முருவகஞ் செய்வது :-

செங்கைத்தளிர்நயனச்செவ்வேன்மறைப்பவர
மங்கைத்திருமால்வரைமடவாய்–கொங்கைக்
களியானைக்கட்படாநீக்கியோகண்ணுற்
றெளியானைக்காக்குமியல்பு. (246)
இது, அநேகாங்கவுருவகம்.

(இ-ள்) திருமால் சீவரமங்கைவரையில் வாழும் மடப்பத்தை யுடையாய்! பெறுதற்கரிய நின்னோடும்
பேரின்பத்தை யனுபவித்துப் பின்ன ரதுபெறாது வருத்தமிக்கு நின்கண் ணெளியனாவேனைக் கருணை புரிந்து காக்குமியல்பு,
செங்கையாகிய தளிரா னயனமாகிய சிவந்த வேலை மறைத்துக் கொங்கையாகிய களியானையினது
முகபடாத்தினை நீக்கிக் கொல்லும்படியே யவற்றை வெளியில் வைத்ததோ? இஃ தருளுக்குத் தகாதென்றவாறு.

பகுதி – பாங்கற்கூட்டம். துறை – நாணிக்கண்புதைக்கவருந்தல். எளியானை யென்றது தன்னைப் பிறன்போலக்கூறல்.

கொங்கைக்குவடுங்குழற்காருமேலிருந்த
சங்கைக்கருண்மாயன்றஞ்சைவாய்–மங்கைக்குப்
பொய்யேயுளதென்கைபோற்றாதிலதென்கை
மெய்யேயிடையாம்வெளி. (247)
இதுவுமது. சங்கை – வளம். ஏகார மிரண்டும் எதிர்மறை. இடையாம்வெளி யுளதென்கை பொய்யே யிலதென்கை மெய்யேயெனத்
தேற்றேகாரமாக்கிக் கூட்டினுமாம். பகுதி – இடந்தலைப்பாடு. துறை – மருங்கணைதல்.

அவயவவுருவக மென்பது அவயவமே யுருவகஞ்செய் தவயவியை வாளாது கூறுவது :-

நிறத்தாரைவேலிமையாநீடுறையைநீக்கிப்
புறத்தாயிடரிழைக்கும்போர்மே–லறத்தான்
வருந்தாவிரங்குவதென்மாலரங்கத்தின்பம்
பொருந்தானனத்தாய்புகல். (248)
இது, அவயவவுருவகம்.

(இ-ள்) திருமா லரங்கத்தினிடத் தழகுகுடிகொண்ட முகத்தினை யுடையாய் ! நினது செவ்வரிபரந்த கண்ணாகியவே லிமையாகிய
வுறையை நீக்கி வெளிப்பட்டுத் துன்பத்தைச் செய்யும் பூசன்மேலும் யான் மிகவும் வருந்தும்படி
கலுழ்வதற்குக் காரணம் யாதெனக்கூறுவாயாகவென்றவாறு.

தாரை-கண். உறை-கவிசனை. அற-மிக. வருந்தா-வருந்த. இரங்குதல்-அழுதல். இன்பம்-ஆகுபெயர்.
பகுதி-பொருட்குப்பிரிதல். துறை-கருத்தறிந்தழுத கண்ணீர்துடைத்தல்; என்னை?
பொருள் வயிற்பிரிந்த தலைவன் உள்ளக்குறிப்பினைக் கரந்து பன்னாளும் புதுவதுவாக வுறுப்பினைப்
பாராட்டியதா லிஃதொன்றுடைத்தென அவனது பிரிவையுட்கொண்டழுத கண்ணீராதலின்.

அவயவியுருவக மென்பது அவயவியை யுருவகஞ்செய்து அவயவத்தை வாளாதே கூறுவது :-

முதிராமுலையுமுறுவற்குறிவந்
தெதிர்பாயுங்கண்களுங்கண்டெய்தி–வதனமதிப்
பொற்றொடியைமாறன்பொருப்பிடைவைத்திங்கெதிர்ந்த
வற்புதனேதிண்ணியனாவான். (249)
இஃ தவயவியுருவகம். துறை-பாங்கன்றலைவனைவியத்தல். இதனுள் வதனமதியென்றது அவயவியுருவகம்.

பெண்ணமுதேயங்கையாற்பேரைமால்தண்சிலம்பிற்
றண்ணறும்பூவேங்கைதலைநாட்செய்–கண்ணி
தனைக்கொய்தனமேற்றமரிற்செறிப்பான்
றினைக்கொய்திறம்விளையாதே. (250)
இது மகா அவயவியுருவகம். இதனுள், பெண்ணமுதே யென்றது மகா அவயவியுருவகம்.
தண்ணறும்பூ…….. கண்ணி-குளிர்ந்த நறுவிதாம் பூவாமுன்பே வேங்கை வைத்த அரும்பு.
பகுதி – பகற்குறி. துறை – வேங்கையொடு வெறுத்து வரைவுகடாதல்.

முற்றுருவக மென்பது அவயவ அவயவிகளை யேற்றவிடத்தோடும் பிறவிடத்தினோடு முற்ற வுருவகஞ்செய்வது :-

வட்டவதனமதியுநுதற்பிறையும்
பெட்டநகைநிலவும்பேர்த்தறியாக்–கட்டளகக்
கங்குலின்மேன்மாறன்கனவரைவண்டீரிருந்தா
லிங்கிவளுக்குண்டோவிடை. (251)
இது முற்றுருவகம். பெட்ட – விரும்பப்பட்ட. பேர்த்தறியா – நீக்கியறியாத.
கட்டளகக்கங்குல் – ஐம்பாலாகக் கோலஞ்செய்த குழலாகிய விருட்பிழம்பு. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
பகுதி – இடந்தலை. துறை – வண்டகற்றி மருங்கணைதல்.

மண்படர்தாட்டாமரையுமைபடர்கட்காவியையுங்
கொண்டுமுலைக்கோங்கரும்புங்கொண்டதோர்–பெண்கொடியைக்
கண்டனையேனண்பாகழறலைமாறன்சிலம்பில்
வண்டமர்தண்பூஞ்சோலைவாய். (252)
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – கழற்றெதிர் மறுத்தல். இதன்பொரு ளுரையிற்கொள்க.

ஆக இயைபுருவக முதலாக முற்றுருவக மீறாகப் பதினாறு மடைவே கண்டுகொள்க.

121.உரைபெறுசிலேடைவேற்றுமையுடனேது
வபநுதியுவமையென்றவற்றொடும்விரவும்.
(எ-ன்) அவ்வுருவகம் என்னும் அலங்காரம் பிறவாய அலங்காரங்களோடும் விரவிவருமென்ப துணர்-ற்று.

(இ-ள்) சிலேடை முதலாக வுவமையீறாகக் கூறப்பட்டவைந்தலங் காரங்களோடும் விரவியும் வருமென்றவாறு.

உரைபெறுசிலேடையென்றதனால் வினைமுதலிய நான்கு காரணத்தா னுவமை பிறப்பதேயன்றி
யிரட்டுறமொழியுஞ் சொற்பொருள் காரணமாகவு முவமை பிறக்கும் என்பதும்,
சிலேடை இக்கூறிய வுருவகத்திற்கும் காரணம், இனிமேல்வரும் பிற அலங்காரட்கட்கு முபகாரங்களாம்
என்பதுந் தோன்ற நின்றதுங் காண்க. இச்சூத்திரஞ் சிங்க நோக்காம்.

அவற்றுட் சிலேடையுருவக மென்பது ஒரு பொருளை யொரு செய்யுளகத் திருபொருள்பயப்பதாகப்
பலவிடத்தினும் புணர்த் திறுதி யினு மிருபொருள்பயப்பதாக வுருவகஞ்செய்வது :-

விற்புடைக்கீழ்மன்னிமிகுநாணிடைதழீஇச்
சுற்றுடைமாண்கோதைத்தொடைசெறியும்–பொற்புடைத்தாம்
பாணிழையாவண்டுலவும்பைந்துளவமாலுறையூர்
மாணிழையார்சேயரிக்கண்வண்டு. (253)
இது செம்மொழிச்சிலேடையுருவகம். கண்ணிற்கும் அம்பிற்குஞ் சிலேடை.

(இ-ள்) (கண்ணின்மேற் செல்லுங்கால்) வில் – புருவம். இஃ துவமப்பேர் புருவத்தின்பரப்பின்கீழ்த் தங்கிப்
பெருத்த நாணிடத்துக் கூடிச் சுற்றுதலுடைய மாட்சிமைக் குழலின்மேல் மாலையை மேனோக்கத்தாற் பொருந்துங்
கண்ணாகிய வண்டெனவும், (அம்பின்மேற் சொல்லுங்கால்) தனுவி னகன்றவிடத்துக்கூடி மிகுந்த நாணுக்குநடுவே
யெய்தி விரலிற் கட்டுதலுடைய விரற்சாடுறத் தனுவிற்குவல்லார் தொடுத்தெய்வதை யெய்தும் அம்பு எனவுங் கொள்க.
பகுதி – சேட்படை. துறை – கண்ணயப்புரைத்தல்.

பூங்குமிழ்மீதேறிப்புணர்க்குமதனன்கலைதோய்ந்
தோங்குவனத்தாமரையினுட்பயிலுந்–தேங்குபுனல்
வெள்ளக்குளத்துறைமால்வெற்பினில்வாழ்மெல்லியலார்
வள்ளைக்குழையார்கண்மான். (254)

இது பிரிமொழிச்சிலேடையோடுங்கூடியவுருவகம். கண்ணிற்கும் மானிற்குஞ் சிலேடை.

(இ-ள்) (கண்ணின்மேற் சொல்லுங்கால்) பொலிவையுடைய மூக்கின்மீதேறிக் காமன் புணர்க்கு நல்ல
கலையைக் கற்றுப் பெருத்தெழுந்த தண்ணீரகத்துத் தாமரைபோன்ற முகத்தினுட்டங்கு மிகுந்த புனலையுடைய
திருவெள்ளக்குளத்துறையுந் திருமால்வெற்பில்வாழு மெல்லியலாராகிய வள்ளைக்குழையினையுடையார்கண்ணாகிய
மான் எனவும் (மானின்மேற் சொல்லுங்கால்) பூவினோடுங் கூடிய குமிழாகிய மரத்தினைப் பாய்ந்து,
காமத்தைத் தன்னிடத்தே விளைக்கும் நல்லகலையைப் புணர்ந்து, ஓங்கிவளருங் காட்டின் கண்ணுளவாம்
மரை கண்டு பழகு மெல்லிய வியல்பு மிகுந்த வள்ளைக்கொடியினது குழையைப்பருகுங் குறிப்பினையுடைய மானெனவுங் கொள்க.
இதனுள், கண்மா னென்ப துருவகம். புணர் மதன் என்பதனை மதன் புணர் எனப் பாடமாற்றுக. துறை – இதுவுமது.

மன்பார்குளிர்விக்குமாறன்குடைமதியு
நன்பான்மதியுமதிநாடுங்கான்–முன்பாங்
குடைமதிக்குண்டாவதல்லகுன்றுதன்மைவானத்
தடைமதிக்குண்டாங்குன்றுதல். (255)
இது குணவேற்றுமையுருவகம். வடநூலார் வெதிரேகவுருவக மென்பது மிது. குன்றுதல் – தேய்தல். மை – களங்கம்.
குடைமதி யென்ப துருவகம். திணை – பாடாண். துறை – குடைமங்கலம்.

பேரழகார்காரிதரும்பிள்ளைமாணிக்கநெறி
சீரியமாணிக்கமுறுஞ்செய்கைத்தோ–வாரியர்கா
ளுற்றுளதேற்றத்துவங்களெல்லாமுணர்ந்துணர்த்தக்
கற்றுளதாய்க்காணேன்களித்து. (256)
இதுவுமது. இதனை விலக்குருவக மென்றுங் கூறுவர். துறை – அறுமுறைவாழ்த்தினு ளடங்கும்.

வேகத்தால்வாயுவாம்வெண்ணீர்மைமேதகுகே
ழாகத்தாற்றாரசயிலாதியா–மோகநிலை
காய்ந்தவுணர்வாற்சுகனாங்காசின்றயிந்திரநூ
லாய்ந்துணர்ந்தவானரசிங்கம். (257)

இது, ஏதுவுருவகம். வெண்ணீர்மைமேதகுகேழாகம் – வாலிதாந் தன்மை பெருமையோடு பொருந்துந் திருமேனி.
தாரசயிலாதி – வெள்ளி யாங் கயிலை. மோகநிலை – காமத்தினிலைமை. சுகன் – சுகப்பிரமவிருடி. ஆசின்று – குற்றமின்றி.
அயிந்திரநூல் – ஐந்திரவியாகரணம். வானரசிங்கம் – சிறியதிருவடி. திணை – வாகை. துறை – சால்புமுல்லை.

முத்திரைக்கையன்றுமுளரிமலரீதிதுபூந்
தொத்தணிமார்பன்றுசுவணகிரி–பத்தி
திகழானனமன்றிதுதிங்கள்வாச
மகிழ்மாறனன்றிவனாமால். (258)
இது, அபநுதியுருவகம். பத்தி-பரமபத்தி ; அஃதாவது அன்பு. சுவணகிரி – பொன்மலை.
இதனுள் மகிழ்மாறனன்றிவனாமால் என்பது உருவகம். திணையுந் துறையு மிதுவுமது.

விடமனையகட்காவிமெல்லியலாள்சோர்ந்தாள்
குடவரைபுக்கான்வெயிலோன்கொல்வா–ரடல்வேடர்
வேலவனேகங்குல்விருந்தருந்திவைகறைவாய்
மாலுறையூர்க்கெய்தன்மதி. (259)
இஃ துவமையுருவகம். பகுதி – உடன்போக்கு. துறை – நெறி விலக்கல்; விருந்துவிலக்கென்பதுமிது.
இதனுள், ‘விடமனையகட்காவி’ என்ப துவமையுருவகம். “மையேர்குவளைக்கண்வண்டினம்வாழும்” என்பது மிது.

பொற்பிற்குரியதிருமால்கரிசொன்னபோழ்தினிலச்
சொற்பிற்படச்சென்றுதவியமாயன்றுவரையின்வாய்
வெற்பிற்புடைக்குந்தனவேழமானவிலங்கறுத்தாற்
கற்பிற்குரியவிப்புல்லோதடுத்திடைகாப்பதுவே. (260)
இதுவு முவமவுருவகம். இதனுள் வெற்பிற்புடைக்குந் தனவேழமென இடையி லடையடுத்துவந்தவாறுங் காண்க.
பகுதி – மணஞ்சிறப்புரைத்தல். துறை – அக்கினிசாக்ஷியாகத் தலைவன் றலைவியைக் கைப்பற்றித் தீவலம் செய்து,
வசிட்டனையு மருந்ததியையு மிருவருங்கண்டு மணவறைக்கட் பள்ளியிடத்தாராயகாலைத் தலைவ னருமறைச்சடங்கிற்குப்
படுத்த தருப்பையைநோக்கித் தலைவி காதலையுந் தனதாற்றாமையையு முட்கொண்டுரைத்தல்.

122.ஒழிவறவுருவகமுடனேயுவமையு
மொழிவதற்கடங்காமுறைமையவாகலின்
மொழியப்புகும்யான்மூதுணர்விலனா
லிவற்றினுக்கிதனுளிசைத்தவையொரீஇவரு
மவற்றையுமிவற்றினகப்படவுரைகொளீஇ
முற்றவுணர்த்தியமுறைமையவாக்குதல்
கற்றோரறிவின்காட்சியதாகும்.
(எ-ன்) மேற்சொல்லிய வுருவகமு முவமையு மென்னு மிரண்டிற்கும் புறனடையுணர்–ற்று.

(இ-ள்) உருவகமு மதற்குக் காரணமாகிய வுவமையு மென்னு மிரண்டலங்காரமு முற்றக்கூறுவதற் கடங்கா முறைமையை
யுடைய வாகலானும் அவற்றைக் கூறுவதற்காக முந்து நூலுணர்ந்தோரவையின் கண் புகுதாநின்ற யான்
முதியவுணர்விலனாதலானும் இக் கூறிய விரண்டலங்காரத்திற்கு மிந்நூலுள் யானிசைத்த தொகைவிரிகளைக் கடந்து
வருவனவா முருவக வுவமங்களையுங் கூறியவிவற்று ளகப்படுவதாக வுரை கொளுத்தி முழுதுமுணர்த்திய
முறைமையவாக்குதல் அலங்கார முதலிய விலக்கணங்களோடு மிலக்கியங்களையு முற்றக்கற்றோரறிவினுக் கழகென்றவாறு.

உவமையின்வழி பிறந்த துருவகமாதலி னுவமைக் குரைக்கத் தகுவனவெல்லா முருவகத்திற்கு முரைத்துக்கொள்க.
ஈண்டுருவக முற்கூறியதனா லதிகார மிடையறாதெனக் கொள்க.

கூறியவற்றை யொரீஇயினபோல்வருமவற்றுட் சில வருமாறு :-

காமரதத்தோகைகளிவண்டினமுலவுந்
தாமரைசாராம்பற்றளிநறவுண்–டேமுறுபே
ரின்பத்தினும்பெரிதேயெவ்வுண்மாலைப்பணிந்து
துன்பற்றவர்சேர்சுகம். (261)

இது, பேதத்தை யபேதமாக்கின வாய்பாட்டால்வந்த வுருவகம். இது முதலே உவமேயமு முவமவுருபுந் தொக்க தொகையுருவகம்.
என்னை? கண்ணாகிய வண்டினம் முகமாகிய தாமரை வாயாகிய வாம்பல் பானமாகிய நறவு என்பன
முறையே தொக்கதா லென் றறிக. ஆனால் அவற்றினை யவ்வாறாக்கியதென்னை?
வண்டினம்போன்ற கண்களுலவுந் தாமரைபோன்ற முகத்தி லென்பனவோடு மேனையவுந் தொக்கதாக விரித்துத்
தொகையுவமமாக்கப்பெறாவோவெனின், ஆகாது ; என்னை?
முற்றுவமவாய்பாடாக வுவமமொன்றனையுங் கூறும்வாய்பாடு உவமை யுருவக மென்னு மிரண்டற்கும்.
பொதுவாய்பாடேனு மீண்டு மருட்கை யென்னு மெய்ப்பாட்டுவயத்தனாகிப் புணர்ச்சியை மகிழ்ந்து பேதத்தை யபேதமாக்கி
விதந்துரைத்தானாதலிற் றொகையுருவகமாக வுரைகோடலே யாம்.
காட்சிக்குத் “திருவளர்தாமரை” யென்னு முதற்பாட்டு மருட்கை வயத்தனாகிக் கூறிய இவ்வாய்பாடென்றுணர்க.
அற்றேல், இதனகத்துப் பேதத்தை அபேதமாக்கிய தியாதோவெனின், தாமரை வேறு முகம் வேறாயிருக்கவு
முகத்தைத் தாமரையென்றே பேதமறக் கூறியவாற்றானு மேனையுவமேயத்தினையு மவ்வாறே கூறியவாற்றானு முணர்க.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சிமகிழ்தல்.

மேலிருந்தவிண்ணோர்வியத்தக்கசெம்மையதாய்ப்
பாலிகையுட்டெள்ளமுதம்பாலிக்குஞ்–சால்புடைய
திங்களைக்கண்டான்மாறன்செம்பொற்றுடரியுள்யார்
தங்களுளங்கோடாதவர். (262)
இது, அபேதத்தைப் பேதமாக்கிய சிலேடை வாய்பாட்டான்வந்த அற்புதவுவமை.
இதனுள் அபேதத்தைப் பேதமாக்குதல் சந்திரனொருவ னன்றி்ப் பிறனொரு சந்திரனின்றாகவுஞ் செம்மையுடையதாய்ப்
பாலிகையுட் டெளிந்த அமிர்தத்தை விளம்புந் திங்களெனப் பேதித்துக் கூறினமையா னறிக.
பாலிகை வள்ளமும் அதரமும் ஆதலாற் சிலேடை. பகுதி – இதுவுமது. துறை – தலைவனைவியத்தல். இதுவுந் தொகைநிலையுளடங்கும்.

காவிற்பிறவாக்கனகக்கொடிகமல
வாவிக்கடங்காமடவன்னம்–பூவிற்
பிறவாநறுந்தேறல்பேர்நகர்மால்வெற்பி
லுறவாய்நிறையுண்ணுரு. (263)
இது, சம்பந்தமுள்ளதைச் சம்பந்தமில்லையாக்கி வந்த வுருவகம்.
அன்றியும், காவிலும் வாவியிலும் என்றமையால் விரோதவலங்காரமு மிதனுள் விளைப்பாருமுளர்.
“மலையிடைப் பிறவா மணியே யென்கோ, வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ” என்பனவற்றையும்
விரோத வலங்கார மாக்குமாறுபோல என்றறிக. பகுதி – இதுவுமது. துறை – இயல்பிடங்கூறல்.

கோதிலாப்பொன்னைக்குழைத்துமதன்றூரியக்கோல்
காதலாற்கைப்பற்றிக்காட்கரைமால்-போதங்
குழைந்தருள்பொற்கொம்பிற்குறித்த்தென்கோவின்பந்
தழைந்தருளிக்கொம்பினையேதான். (264)
இது சம்பந்தமில்லாததனைச் சம்பந்தமாக்கிக் கூறிய மோகவுவமை. விகாரவுவமை அதிசயவுவமை எனினுமாம்.
பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

மாயன்குருகாபுரியனையமாதரா
ளாயந்தொழவாழருமையுறிற்–றூய
கனவென்கோகூடிக்குழைந்ததனைக்காமர்
நனவென்கோயாதென்கோநான். (265)
இதனுள், குருகாபுரியனையாளென்பது குருகாபுரி செயற்கையா னன்றி யியற்கையானு முதலே யழகுடையது
போன் றிவளு மியற்கை யான் அழகுடையளென்பது தோன்ற நின்றமையா லிதுவு முவமையு ளோர் பேதம்.
பகுதி – இதுவுமது. துறை – ஆயவெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோவென்றல்.
“பாயும்விடையரன்றில்லையன்னாள்” என்பது மிது.
“வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க, சொல்லே ருழவர் பகை” எனவும்,
“நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே, கல்லார்கட் பட்ட திரு” எனவும்,
இவைபோல்வன பிறவு மிவற்றின்பாற் கூட்டியுணர்க.

திருந்திழையாய்மாறன்றிருவாய்மொழியே
மருந்துபிறவிப்பிணிக்குமாதர்–தரும்பிணிக்கு
வாய்ந்தமருந்தென்பார்மடல். (266)
இது, மாதர்தருங் காமமாகியபிணிக்கென்பது மாதர்தரும் பிணிக்கென மாட்டேறிலாதுவந்த வுருவகம்.
பகுதி – மடல். துறை – உலகின் மேல்வைத்துரைத்தல். பா-இரண்டுவிகற்பத்தால்வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.

வழிமதுத்தார்மாறன்மணிவரைமேன்மாதர்
விழியெழுதினாலுமிணைவெற்பெழுதினாலு
மொழியெழுதலாமோமொழி. (267)
இது, மாட்டேறில்லாதுவந்த ஏகாங்கவுருவகம் ; என்னை? முலை யென்பவற்றை யுவமைவாய்பாடுதோன்றக்
கூறினமையா லுபயமுலை யாகிய விணைவெற்பெனக் கோடல்வேண்டுமென் றுணர்க.
பகுதி – இதுவுமது. துறை – எழுதவரிதென்றல். பா-ஒருவிகற்பத்தால்வந்த இன்னிசைச்சிந்தியல்வெண்பா.

நாணுநிறையுநறுநுதாஅன்மாணிழையார்
தந்தவெங்காமத்தழல்கதுவவெந்து
தருமடன்மாவேற்றந்தரும். (268)
இஃ தேகதேசவுருவகம். இதனுள், நாணும் நிறையுமாகிய பஞ்சென வுருவகஞ்செய்யாது காமத்தழலென வொன்றையே
யுருவகஞ்செய் தமையா னென்றறிக. பகுதி – இதுவுமது. துறை – நாணழிவுரைத்தல்.
பா-அடிதொறூஉமெ ரூஉத்தொடைபெற்றுவந்த இன்னிசைச்சிந்தியல்வெண்பா.

தருமன்றண்ணளியாற்றனதீகையால்
வருணன்கூற்றுயிர்மாற்றலின்வாமனே
யருமையாலழகிற்கணையைந்துடைத்
திருமகன்றிருமாநிலமன்னனே. (269)
என்பதும் ஒருவகையுருவகம் ; என்னை?
தண்ணளியால் மன்னனாகிய தருமன், தனதீகையால் மன்னனாகிய வருணன், உயிர்மாற்றலால்
மன்னனாகிய கூற்று, அருமையால் மன்னனாகிய வாமன், அழகால் மன்னனாகிய காமன் என வுருவகஞ்செய்துணர்க.

மன்னர்மடங்கன்மறையவர்சொன்மாலை
யன்னநடையினார்க்காரமிர்தந்–துன்னும்
பரிசிலர்க்குவானம்பனிமலர்ப்பைந்தா
ரெரிசினவேற்றானையெங்கோ. (270)
என்பதும் கூறிய ஒருவகை யுருவகம்.

வருந்தியீன்றாண்மறந்தொழிந்தாள்வளர்த்தாள்சொற்கேட்டில்கடிந்தாண்
முருந்தின்காறுங்கூழையைமுனிவார்நின்னையென்முனிவார்
பொருந்திற்றன்றாலிதுவென்னாய்பொன்றுமளித்திவ்வுயிரென்னாய்
திருந்துசோலைக்கருங்குயிலேசிலம்பவிருந்துகூவுதியால். (271)
என்றற் றொடக்கத்தன வுருவக இலக்கணம்விளங்கநின்றிலவேனு மதனிடத்து மயக்கிநின்றன கொள்க.
என்னை கொள்ளுமாறெனின், ஈன்ற குயிலாகிய பெண் மறந்தொழிந்த, வளர்த்த காக்கையாகியபெண் இல் கடிந்த,
பெண்குயிலாகியபெண்ணே யெனக் கொள்வதை மயக்கிநின்றமை காண்க.

3-வது உருவகம் முற்றும்

————–

4-வது உள்ளுறையுவமம்

——

123.உணர்வதற்கரிதாமுவமப்போலி
புணர்திறம்வினையேபொருண்மெய்யுருவெனப்
பிறப்பொடுமைந்தாம்பெற்றித்தாகிச்
சிறப்புறுதிணைகளிற்றெய்வதமொழிந்த
கருப்பொருள்களனாக்கட்டுரைபயின்று
முவமையோடெதிருள்ளுறுத்தலுற்றயலா
யுவமச்சொற்றொகலொருதலையாகியு
மன்பினதளவாமகத்திணையிருவயி
னின்பதுன்பத்திசைதிரிந்திசையாத்
துணைவன்றுணைவிதோழிசெவிலி
யிணையெனும்பாங்கன்பாணனென்றிவராற்
கொள்கையின்வரூஉங்குறிப்புரைத்தாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே யுள்ளுறையுவமமென்னுமதற்குப் பொதுவிலக்கணமுணர்–ற்று. உவமப்போலியென்று மதற்குப்பெயர்.

(இ-ள்) உணர்வினா லுணர்தற்கரிதாகிய வுள்ளுறையுவமமென்பது முற்கூறிய வெளிப்படையுவமம்போல
வினைபயமெய்யுருவுகாரணமாகத் தோன்றுமவற்றினோடும் பிறப்புங்கூட்டி நிலைக்களனைந்தினோடு
மவ்வவ நிலங்களிற் றெய்வதமொழிந்த கருப்பொரு ணிலைக்களனாகவு மழகிய வுரையுட் பயின்றும்
வெளிப்படையாகவரு முவமப்பொருளோடும் அதற்கெதிராகிய வுமமேயப்பொருள்களை யுள்ளுறுத்துக்கொள்ளும்
படித்தாயு முவமேயம் பாடலுட்பயின்றுவாராது அயலாகியு முவமவுருபு தொகுத லொருதலையாகவுங்
களவு கற்பென்னுங் கைகோளினிருவகையினு மின்ப துன்பங் காட்டுவனவா யிசைதிரிந் திசைப்பனவாய்த்
தலைவன் றலைவி முதலியபெயர்களாற் குறிப்புரையாய்வரு மென்றவாறு.

உணர்வதற்கரிதா மென்பதனால் ஏனையுவமம் புலப்படக்கூறாத வுள்ளுறையுவமத்தைத் தருகின்ற
கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்துக் கூடி நிற்குமென்பதாம்.
கொள்கையின்வரூஉமென்பதனால் “கிழவி சொல்லி னவளறி கிளவி, தோழிக் காயி னிலம்பெயர்ந் துரையாது” எனவும்,
“கிழவோற் காயி னுரனொடு கிளக்கும், ஏனோர்க் கெல்லா மிடன்வரை வின்றே” எனவும்,
“கிழவோட் குவம மீரிடத் துரித்தே,” கிழவோற் காயி னிடன்வரை வின்றே” எனவும்,
“தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக், கூறுதற் குரியர் கொள்வழி யான” எனவும்
வருங் கூற்றுக்களோடும் தோழியு முழையரும் தலைவன்கொடுமைகூறும் வழியினும் பிறவழியினுந்
தலைவனூரின்கண்ணுள்ள கருப்பொருள்களானவைசொல்லத் தலைவற்கேயன்றியுந் தலைவிக்கேற்றனவா முவமத்
தன்மைத்தோற்றத்தனவா யுள்ளுறையுவமங்கோடலும்,
பிறவாறு வரு வனவா மவைகளுங் குறிப்புரைத்தாகு மென்பதனானு முய்த்துக் கொள்க.
பிறப்பாவது அவ்வவ நிலங்களி லிழிந்தபிறப்போடுஞ் சார்த்திக் கூறல். உள்ளுறுத்தல் – உள்ளேகுறித்தல்.
ஒருதலை – நிச்சயம். அகத்திணை யிருவயினென்பது இறந்ததுபோற்றலென்னுந் தந்திரவுத்தி,
இசைதிரிந்திசைத்த லென்பது செய்யுட்சொற்கடம்பொருளுணர்த்தாது வேறுபடக்கூறுதல்.
இசையாவது சொல். சொல்லாவது எழுத்தினா லாக்கப்பட்டுப் பொருளறிவுறுத்துமோசையாகலி னிசையென்றார். இஃ தாகுபெயர். என்னை? “இசைதிரிந்திசைப்பினுமிசையுமன்பொருளே, யசைதிரிந்தியலா” என்னும் பொருளியற்சூத்திரத்தா னுணர்க.

இவற்றிற்கெல்லாம் செய்யுள் வருமாறு :-

காமர்பன்மலர்கஞலியபொதும்பர்
மாமரப்பணையின்மதுகரமிழைத்த
முதுநறுந்தேறனொதுமலர்முன்னுபு
கொளத்தகுமரபிற்குன்றவாண
வரைதலின்வரையாதொழுகலினிருவிரு
மாறுபட்டொழுகியமதியினிராகலிற்
றிருமகிழ்மாறன்றிருவருட்கிலக்கா
யொழுகாதவருளத்தொன்றா
மழுகாமதியின்மறுகுவல்யானே. (272)
என்பது வினையுவமப்போலி ; என்னை? மாமரப்பொதும்பரகத்து மது கரங்கள் தமக்குப் பின்னைக்கு
நுகர்வதாக மறைத்துவைப்ப விளைந்த தேனை நொதுமலராராய்ந்து கைப்பற்றிக்கொடுபோங் குன்றவாணனே
யென்றதனாற் களவினோடுங்கூடிய கூட்டத்தை நீட்டித்துப் பின்னரிவளை வரைந்துகொள்ளக்கடவேனென நினைந்த
நினைவு தவறும்படி பருவ முதிர்ந்த விவளையும் பிறர்நயந்து பொன்னணிந்து கொடுபோவ ரதுபோல வென்பவாகலான் ;
உவமைக்குப் பிறிதுபொருள் எதிர்த்துவமஞ்செய்யா தாண்டுப்பிறந்த கருப்பொரு ளவற்றோடு
முள்ளுறுத்துவைத்தலி னிஃ துள்ளுறையுவமமாயிற்று.
அவற்றோடு மிஃது நொதுமலர் கொடுபோரென்னுந் தொழிலோடு மிவளையும் பிறர்கொடுபோவரென்னுந்
தொழி லுவமங்கொள்ளநின்றமையின் வினையுவமப்போலியாயிற்று. அன்றியுங் காமர்பன்மலர் கஞலிய
பொதும்ப ரென்பது நற்றாய் தோழி செவிலி முதலியோர்வைகு மனைக்குவமையாம்.
திணை – குறிஞ்சி. கைகோள் – களவு. கூற்று – தோழி. கேட்போன் – தலைவன். இடம் – முன்னிலை. காலம் – நிகழ்வு.
பயன் – இற்செறிவுரைத்து வரைதல்வேண்டுமென்றது. மெய்ப்பாடு – அச்சத்தைச்சார்ந்த பெருமிதம்.
பகுதி – பகற்குறி. துறை- வருத்தங்கூறி வரைவுகடாதல். காமர் – அழகு. ஒழிந்தனவுமுரையிற் கொள்க.

இறைவறங்கூராவீர்ந்தண்பொய்கைத்
துறைதொறுந்துவன்றதோடவிழ்பன்மலர்
மாந்துபுவயினிறைவெய்தியகவரி
யேந்தெழின்மாடத்தீன்றகன்றுள்ளிப்
படர்வுழிப்படர்வுழிப்பணைமுலைக்குறுங்கண்
மடைதிறந்துவளகமடுநிறைத்தொழுகு
பாற்றடினியினயற்பழிதீர்பேடையைப்
போற்றறுகளிப்பிற்புணர்ந்தவண்மூழ்கிப்
புனிதமுற்றிருசிறைபுலர்த்தியவோதிமந்
தணந்தயற்கழனிச்சாதிப்பெடைகளை
மணந்ததனனந்தலைமள்ளர்தாமுழுத
நாற்றடியதன்கணறுந்தழைபதனழிந்
தூற்றெழுகளங்கவுறுபுனலாடிப்
பண்டுதான்மரீஇயபானிறப்பேடையைக்
கண்டுதான்வளைக்குங்காமருகடல்கெழு
கண்ணகன்ஞாலங்கண்டுகண்ணயப்பான்
விண்ணவர்வியப்பான்மேதகுபடிவத்
தரவணைத்துயின்றருளரங்கத்தமுதி
னுரவுநீர்க்காவிரிக்குறுபுனலூர
புல்லேன்பொதுவுணின்மார்பெனச்
சொல்லேன்புன்மனத்தொடர்புடையேனே. (273)
இதுவும் வினையுவமப்போலி. இதனுள், இறைவறங்கூரா என்பது சிறிதும் வற்றாதவென்றவாறு.
ஈர்ந்தண்பொய்கை – மிகவுங்குளிர்ந்த பொய்கை.
“துறைதொறுந்துவன்ற……………. கவரி” இடந்தோறுநெருங்கின இதழ்விரிந்த தாமரை முதலிய
பலமலரையு முண்டு வயிற்றைநிறைத்தல் பொருந்தின காரான்.
“ஏந்தெழில் . ,………….. தொடர்புடையேனே” எ-து உயர்ந்த அழகையுடைய மாளிகையினிடத் தீன்றகன்ற
குழக்கன்றைநினைந்து செல்லுமிடத்து முறுகின முலைக் குறுங்கண் மடைதிறந்து பள்ளவாவிகளைப் பெருக்கி யோடாநின்ற
பாலாற்றின்பக்கமே குற்றமற்ற தனதுபேடையைப் பாதுகாப்பற்ற களிப்பினோடும்புணர்ந்தப் பாலாற்றினடுமூழ்கிப்
பவித்திரமுற் றிருசிறரும் புலர்த்திய சேவலோதிம மப்பேடையை நீங்கி யயல்வயற் கூட்டப் பெடைகளை
மணந் தக்கழனிநடுவண் மள்ள ருழுத நாற்றடிநனந்தலை நறியதழைக ளழுகி யூற்றிருந்த சேறு மிகுந்த
புனலிடை யாடி முன்னர்த் தான் மணந்த வெண்ணிறப்பேடையைப் புணர்ச்சிகுறித்து வளையும்,
அரவணைத்துயின்ற அரங்கத்தமிர்தி னுரவுநீர்க்காவிரிக்குறுபுன லூரனே !
புல்லேன் பரத்தையர் பொதுவுணின்மார்பெனச் சொல்லேன் புன்மனத்தொடர்புடையே னென்றவாறு.

பொதுவுணல் – பரத்தையர் பலரா யேககாலத் தின்பத்தைப் பொதுவாக அநுபவித்தல்.
இதனுள், பரத்தையரென்பது சொல்லெச்சம். ஒழிந்த அகல முரையிற்கொள்க.

அஃதாக ; இதனையும் வினையுவமப்போலி என்ற தென்னையெனின், தனக்குரிய பேட்டோடும் பாலாற்றினயற்
புணர்ந் ததன்பின்னர் அப் பாலாற்றின் முழுகியசேவ லன்னப்பெடையைநீங்கி யயற்கழனியிடத்து வேற்றுப்
பேடைகள் பலவற்றையும்புணர்ந் ததனள்ளிடை நாற்றடிக் களங்க வுறுபுனலின் முழுகி யக்களங்கப்புனல்
புலராமுன்னம் பண்டு தான் மரீஇய பேடையைவளையு மென்பதனால் நமதகச்சோலையினடுவட் பனிநீராற் பூரித்த
புழுகுசுனையினதய லென்னோடும் பாதுகாப்பற்ற களிப்புடன் உவர்ப்பில்லாவின்பத்தைத் துய்த்துப் பவித்திரமெய்த
வேண்டி முழுகி யீரவாடைகளைந்து நனைந்த குழற்கற்றை புலர்த்தி யெதிர் முகமாகவிருந்த நீ நீங்கி
யெனதுமாளிகைக் கயலே சேரிப்பரத்தையர் பலரையுந்தோய்ந்த வேர்வோடுங் குழம்பிய மான்மதச்சேறு
புலரா முன்னம் வாயில்வேண்டாதுவந் தெனது பள்ளியிடத்தானாகி மணிமேகலையைப்பற்றுதற் கிருகையால்
வளையாநின்றா யென்னும் உவமேய வினை கருப்பொருள்களனாகத் தோன்றிநின்றமையா னென்றுணர்க.

இது திணை – மருதம். கைகோள் – கற்பு. பகுதி – பரத்தையிற் பிரிதல். கூற்று – தலைவி. கேட்போன் – தலைவன்.
இடம் – முன்னிலையாய பள்ளியிடன். காலம் – நிகழ்காலம். பயன் – ஊடறீர்தல்.
மெய்ப்பாடு – வெகுளியைச்சார்ந்த வுவகை. இதற்குத் திணையுட்டிணை – பெண்பாற்கூற்றுப் பெருந்திணை.
துறை – இல்லவைநகுதல் ; அல்லது பரத்தையிற் பிரிந்துவந் தாற்றாமையே
வாயிலாகப் புகுந்த தலைவனா னூடறீர் கின்றாளாய பரத்தைகூற்றுமாம்.

குவளையுங்குமுதமுந்தவளவொண்பதுமமுந்
திசைதிசையோசனைதேங்கமழ்திவ்விய
வசைதீரந்தண்மயிலைவேலிப்
பொய்கையுட்செவ்வியிற்பொதியவிழ்புனிதச்
செய்யதாமரைத்தேறலையளவளா
யுவட்டாதருந்தியுமுருகியசுரும்பதன்
கரைசேர்வெள்ளிடைக்கலித்தநீர்முள்ளியிற்
பாடவிழ்ந்தயற்சுரும்புளர்ந்துணப்பதனழி
பூநறாவுண்டின்புறுபுனலூரன்
றெண்டிரைக்காவிரித்திருவரங்கேசன்
றொண்டர்தந்தொண்டர்தொடர்பினையொரீஇப்
போதம்புறந்தரப்புரைதீரின்னுயிர்க்
கேதங்கொள்ளுநரிதயம்விட்டகலா
தொல்லாப்புலன்வழியுய்க்கும்
புல்லறிவினுட்குடிபுகும்புன்மையனே. (274)
இது பயனுவமப்போலி ; என்னை? பொய்கையுட் பவித்திரச் செய்யதாமரை பருவத்தின் மலர்ந்துகு புதிய தீந்தேறலை
யளவளாயுண் ணத்தெவிட்டா துள்ளமுருகிய சுரும்பு அதன்கரையினில் மலிந்த முள்ளுடை நீர்முள்ளி
முறுக்கவிழ்ந்தபருவத்து வேற்றுச்சுரும்பு பலவுந் துவைத்துண்ணச் செவ்வியிழந்த பழம்பூவிற் சுருங்கிய
தேனையுண் டின்புறுமெனவே தின்புறுதற் கியாவருமுரிய ரென்னும்பய னுள்ளுறுத்துக் கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.

திவ்ய – நல்ல. புனிதம் – பவித்திரம். அளவளாய் – உடலுமுயிருங் கலந்து. வெள்ளிடை – வெளி. கலித்தல் – மிகுதல்.
புன்மையன் -அறிவினாற் சிறுமையன். வெளியினிற்கும் நீர்முள்ளி யெனவே வீதியினிற்கும் வேசை என்பதாயிற்று.
ஒழிந்த அகலம் நம்பெருமாள் மும்மணிக்கோவை விரித்துரையுட் காண்க. திணையும் பகுதியு மிதுவுமது. துறை – உழைய ரியற்பழித்தல்.

இனியதெள்ளமிர்தாயெறித்தெழுகிரணப்
பனிமதியகடுழப்பணைநெடும்பொங்கர்ப்
பூந்துணர்ததைஇயபொழிலெழினள்ளிடை
யீர்ந்தண்கோட்டகத்தினமலர்முற்றிய
பொதியவிழ்தாமரைப்பொகுட்டாசனத்து
மதிநலனுறப்புணர்மாண்புடைப்பெடையொடும்
வீற்றிருந்தின்புறுமேன்மையோதிமமொரு
பாற்படுகரைசேர்பன்மரக்காவிற்
குறுகுபுகொடுமுட்டாழைக்கூன்சினை
வெறுநிலத்தடர்தரவிரித்தபாசடைமேற்
றளிநறைமாந்துபுசார்பெடைக்குருகொடு
புணர்தலுநலனுறும்புனன்மலியூரன்
பூமகளிலைகுவாம்பூண்முலைமுகடுழத்
தேமவிழ்பசுந்துழாய்த்திருமணிமார்பன்
றென்னரங்கேசன்றிருவருட்கிலக்கா
முரனுடையோர்களுயிர்த்துணையெனவா
ழில்லறம்பழிபிறங்காதிருந்தில்லி
னகனமர்ந்தானாதுறையுந்
தகவேதுமிலாததவறுளோனே. (275)
இதுவும் பயனுவமப்போலி ; என்னை? இருமனமு மொருமனம் போலப் பேரானந்தமெய்தப் புணர்ந்த பேடையோடும்
பொதியவிழ்ந்த தாமரைப்பொகுட்டி லரசுவீற்றிருந் தின்புறுஞ் சேவலோதிம மப்பேடை யைப்பிரிந்து
வாவிக்கொருபக்கமான கரைசேர் பன்மரக்காவின்புறத்து வளைந்த முள்ளுடைத்தாழை முடச்சினை
வெறுநிலத்துத் தகடுபட விரித்த பாசடைமேலிருந் ததனிடத்துத் துளித்துவிழுந் தேனையுண்ட களிப்பினால்
வெளுத்த சிறையுடைப் பெடைக்குருகைப் புணர்தலு மானந்தமெய்தும் புனன்மலியூரனெனவே
இப் பொற்புடையில்லின்க ணிருந் திக்கற்புடையவளோடு மிருமனமு மொருமனமாகப் புணர்ந்து பேரானந்த மெய்திய
பின்னர் யாம்புடைசூழ அரசுவீற்றிருந்தோன் இவளைநீங்கி எமது மாளிகைக் கயலாய்ப் பொலிவிழந்த
சேரிப்பரத்தையைப் பெண்டன்மைமாத்திர மொத்தலிற் காமபானத்தையுண்ட புத்திப் பிரமையா லுவர்ப்பின்றிப்
புணர்ந்ததனா லின்பமெய்துமூரன் றகுதி யொன்றுமில னென்றுரைத்தபான்மை யுள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.

இதற்கும் விரித்துரை நம்பெருமாள் மும்மணிக்கோவையுரையுட் காண்க. பகுதி – இதுவுமது.
துறை – தோழி தலைவனை யியற்பழித்தல்.

நீர்நிலைமுற்றியநிழன்மலிசோலையுட்
கார்வழங்காதகாலையுங்கவின்பெற
வேர்முதற்பழுத்துவியன்சினைப்பலவு
வளங்கெழுநாடவெம்மணிபுரைமாண்கவின்
புறந்தருமாயினும்புனிதநின்னின்றா
லரவணைத்துயிலமர்ந்தருளரங்கேசன்
றூநீர்க்காவிரித்துறைபடிந்தல்லதை
யொல்லேன்மலரமளியினுறப்
புல்லேன்பரத்தையர்ப்புணர்ந்தநின்மார்பே. (276)
இது மெய்யுவமப்போலி ; என்னை? கார்வழங்காதகாலையும் நிழன்மலிசோலையுட் பலவு வேர்முதற்பழுத்து
வாட்டமின்றி வளனெய்தினாற்போல நீ யென்னிடத் தருளின்றிப் பரத்தையர்மாட்டுப் பிரிந்தகாலத்தும்
ஆயவெள்ளம் விட்டுநீங்காத எனதுமனையிடத் தில்லறங்கோடாதுநடத்துதற்பொருட் டித்துணைப்போது
முளனானே னென்றதாக வுள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையானென்றறிக.
இதற்கு மொழிந்த விரித்துரை மும்மணிக்கோவையுரையுட் காண்க. பகுதி – இதுவுமது. துறை – அணைந்தவழியூடல்.

உலைவினீரழுவத்துறுசிறையதன்க
ணலைகொழித்தலைதொறுமலைதொறுமொத்துண்
டழுங்கஞரெய்தியயாக்கையதாகியுந்
தன்னால்வளர்க்கத்தருசினையதன்மேன்
மன்னாதரவின்வளர்மீன்வைத்தகண்
வாங்காதுய்த்துவளர்புனலூரற்
கேவவிற்பிழையாவின்னிசைப்பாணர்
புதுவதுவாய்வழிபிழைத்திவண்போதரு
மதுநினைந்தருவிருந்தளித்திடற்கந்தோ
மதுமகிழ்மார்பினன்வழுதிநன்னாட்டவர்
குடிஞையைக்காய்திறன்குறிப்பதுமின்றாற்
காதோடுலவுகட்காரிகை
யாதோகறியீங்கினிதமைப்பதுவே. (277)
இதுவே மெய்யுவமப்போலி ; என்னை? அழிவில்லாத நீர்க்கயத்துண் மிக்க சிறையிடத்துத் திரையெடுத் தெற்றுந்
தோறு மெற்றுந்தோறு மதனா லெற் றுண்டு மிகவுந் துன்பமெய்திய யாக்கையோடுங்கூடிய மீன் றன்னால்
வளர்க்குஞ் சினையின்மேல் வைத்தகண்வாங்காது வளர்த்தாற்போல யானுந் தலைவர்பிரிந் தெனக்களித்ததுன்ப
மென்மேனியை வருத்தவு மம்மேனியோடு மில்லின்கணிருந்து மென்னாலோம்பப்படு மில்லற
மோம்புதற்குளனானே னென்ப துள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையா னென்றறிக. இதுவும் பகுதி யது.
துறை – பாணனைப் பழித்தல் ; தலைவிகூற்று. இதற்கும் விரித்துறை கூறவேண்டுவதில்லை.

பன்மலர்கஞலியபழுமரச்சோலையுட்
டன்னிழறுணையாத்தளிர்த்தமௌவலின்மலர்
விரிகதிர்தெறுதலின்வெம்மையுற்றுணங்க
முட்புறக்குடக்கனிமுடப்பலவதனயற்
செங்கிடைமலர்கவின்சிறப்பவுநிழற்று
மொண்புனலூரற்குறுபழிவிளைக்கும்
யாமேதிலமேதிலமெனவெங்கையர்
மாளிகைபயின்றுமதங்கருற்றிலராற்
புவிப்பாவலர்புகழ்புரவலன்மதுர
கவிப்பாவலன்புகழ்கருணையங்கடவுண்
மதுமகிழ்மார்பினன்வண்குருகூரன்
சதுமறைப்பொருளாற்றருதமிழ்மறையினுண்
முதுமொழியுணராமூடமதடைந்த
மனனகமலமிகமறுகுன
ரினமெனலொன்றாயிகழ்பொய்ம்மையனே. (278)
இது நிறமல்லாத பண்புவமைப்போலி. என்னை ? சோலையுட்டன்னிழலே துணையாகத்தளிர்த்த முல்லைக்கொடியின்
மலரானது விரிந்த கதிர்தெறுதலான் வெம்மையுற்றுணங்க முடப்பலவு தனக் கயலாகத்தோன்றின
செங்கிடைமலர்க் கழகுமிக அதற்கு நிழல்செய்யுமது போலத் தலைவனும் தன்னையேதுணையாக
ஆவிதளிராநின்ற விவளுங்காமத்தீயால் வெந்து மேனி வாடத் தனக்கயலாய பரத்தையர்க்குடலு முயிருந் தளிர்ப்ப
நலங்கொடா நின்றா னெனப் பெண் புள்ளுறுத்துக் கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.
பகுதி – இதுவுமது. துறை பாணனொடுவெகுளல். கூற்று – தோழி.

ஒன்றாய்ப்பரந்தவுறுவளிகறங்கலின்
மின்றாழ்பன்மின்மிளிர்விசும்புழுசினை
சுமைமலிந்தொசிதரத்துணர்த்தமென்பூமுகை
பொறிச்சுரும்புளர்தொறுமுளர்தொறும்பொதும்பருண்
முறுக்குடைந்திழிதரூஉமொய்ந்நறுந்தேறல்
பரந்துபன்முகத்தவாய்ப்பவளக்கொடியொடுங்
குரூஉக்கட்பரூஉத்தாட்குடம்புரைசெருத்தற்
கயவாய்மேதிகட்கழுநீருண்
டுயவால்வைந்நுதித்தொடர்நெறிமருப்பிற்
புறக்காழ்வயிரப்பூங்கழைதடிந்துகு
நிறக்காழ்நித்திலநிரந்தரம்வரன்றயல்
வெள்ளிடைநிவந்தமேதகுசுவலினை
யுள்ளுயிர்ப்பெடையையுறைளினிருத்திப்
பாலுணீர்தெரித்துப்பருகுமொண்சேவ
லாலுநீர்ச்சிறைபுக்காய்ந்திரைகொணர்வலென்
றிகந்தயலிடைப்படிந்தெழுமயர்வுயிர்ப்பான்
வாலுகவைப்பெனமறுகுபுகுறுகிவீழ்ந்
தன்மையிற்றவக்குற்றச்சப்பார்வையிற்
புராதனப்பொய்கையுட்புகுபுனலூர
பொருவருதாமரைப்புதல்வனைப்பயந்த
திருமறுமார்பன்றிருவரங்கத்துப்
பொதுநலப்பெண்டிர்பொதுவுணின்மார்ப
மல்லனீர்படிந்தல்லது
புல்லேந்தீண்டலெம்பொன்னடிச்சுவடே. (279)
இதுவும் பண்புவமப்போலி; என்னை? சேவலன்னம் நித்திலங்கள் வெள்ளிடைநிவந்த மேதகுசுவலினை
வாலுகவைப்பெனக்குறுகி யிருத்தற்கு மென்மையில்லாததனோடு மறிவுமயக்கமுற்றதனால் இலச்சையுற்றுத்
தன் பேடையையிருத்திப்போந்த பொய்கையுட் புகாநிற்கு மதுபோல நீயுங் கற்பு நாணு முதலிய
நற்குணங்க ளின்றித் தன முதலியனவெய்தும் பெண்டன்மை மாத்திரமேயுடைய பரத்தையரையு நற்குண
நற்பெண்டிரென்று தோயுமளவிற் பொருண்மேற்சென்று வற்கென்ற துர்க்குணத் தாராதல்கண்டதனோடு
நினது புத்தி மயக்கமுற்றது நினக் கிழிபென நாணி யெம்மனையிடத்துவந்து வாயில் வேண்டா
நின்றா யென்ப துள்ளுறுத்துக் கொள்ளக்கிடந்தமையா னென்றுணர்க.

வெள்ளிடை – வெளி. நிவந்தது – உயர்ந்தது. சுவல் – மேடு. வாலு கவைப்பு – மணற் குன்றாகிய விடம்.
தவக்கு – இலச்சை; நாண், கருத்துப் பொருளாய பண்புவமப்போலி.
பகுதி-இதுவுமது. துறை – அணைந்த வழியூடல். இது கூற்று – இற்பரத்தை.

ஓங்கியகுரம்புசாருவளகவயின்வயின்
வீங்கியதிணிதோண்மிடலுடைமள்ளர்
கதைபெய்தாற்றலிற்சுடுமண்பன்முறை
ததைவுறப்படுத்தசால்பிற்றெண்ணீர்
வார்ந்துகுகவர்முழைமதகுபடர்குடுமியிற்
சேர்ந்தசைவறவிருசிறகருமொடுக்கி
மறைபுகுநோக்கின்மனப்பட்டிமையாற்
றுறைபுகுகயலினைச்சோர்புகண்டெடுத்துக்
கூர்வாய்வெண்சிறைக்குரண்டமென்பெடைக்
கார்வாயெனவருத்தியினருத்துபுதுடித்
தயல்வீழ்வதனையற்றம்பார்த்து
மிச்சிலென்றறிந்தும்விழுநெறியொரீஇ
நச்சியுண்புலவுநாற்றத்தோடுஞ்
செங்கால்வெள்ளுகிர்ச்சேவலோதிம
மொருசிறையிருந்தவோவாச்செவ்வி
யிருசிறைப்பேடையேழின்மலர்குறுகு
நளிமலர்ப்பொய்கைநல்வயலூர
திருநெடுமாயன்றிருவரங்கத்துப்
பொருணசைப்பரத்தையர்பொறித்தநின்மார்பிற்
றனக்குறியாநிற்றழுவுபுசிதைவுறின்
மனக்கிடரிழைப்பதுமன்றி
நினக்கிடருறுமானெருங்கலெம்மிடனே. (280)
இது பிறப்புவமப்போலி. என்னை? இழிந்தகுரண்டந் தன் பேடைக் கருத்துங் கயலை யதுவாய்க்கொள்ளத்
துடித் தயலேவீழ்ந்ததனை மிச்சி லென்றறிந்து மறிவினாலுயர்ந்த அன்னம் அதனை யற்றம் பார்த் தெடுத் துண்ட
புலானாற்றத்தோடுந் தன துத்தமப்பேடையுறையுமழகிய சேக்கை யாகிய தாமரைமலரைக் குறுகுமதுபோல
நீயு முயர்ந்த குலத்துட் பிறந்து மிழிந்தகுலத்துளோர் தோய்ந்தகன்ற மிச்சிலாகிய பரத்தையரிடத் தின்பத்தைத் துய்த்து
வேற்றுநாற்றத்தோடு மெமது நன்மனைக்கண் ணெம்மைத் தீண்ட வந்தனை யாதலா லெம்மைத்
தீண்டல் பொருந்தாதெனக் கூறினாளென் றுள்ளுறுத்துக்கொள்ளக்கிடந்தமையானென்றுணர்க.

பகுதி-இதுவுமது. திணை-பெண்பாற்கூற்றுப்பெருந்திணை. துறை-பள்ளி யிடத்தூடல். கூற்று – இதுவும் இற்பரத்தை.

விசும்புதூர்த்தெழுவியன்சினைமாத்தின்
பசும்புறத்தீங்கனிபறீஇநுகர்கடுவன்
புரப்பவர்குறுகுபுபுலம்புறீஇப்பொங்க
ரிரிந்தலம்போதருமீர்ந்தண்சோலையுட்
புளிங்கறிவேட்டபுன்றொழிற்றன்மையர்க்குப்
பழிப்பின்றாகப்பாகுசெய்தட்ட
கோதறுமான்பாற்குழம்புபொற்கலத்தினுட்
பெய்திருந்தாறும்பெற்றியேய்ப்ப
முடவடிப்பலவின்முதிர்பொற்குடக்கனி
வேர்முதற்பழுத்துவிரிந்தபொற்றீஞ்சுளை
பதனழிபான்மைப்பாய்புனலூர
நூற்கடற்பழகியநுண்ணுணர்வுடையோ
ராற்றலிற்பரவுசீரங்கனுக்கமைந்த
பாற்கடன்முற்றப்பருகுதற்கெழுந்த
பேராப்பெரும்பசியாளர்தம்முன்ன
ராராவள்ளத்தமிர்தமைப்பவர்போற்
சிறுவரையின்பத்துறுதுயரிழைத்தற்
கிரத்தலீங்கியல்பன்றாற்
பரத்தையிற்பிரிதனின்பண்பாகும்மே. (281)
இது, “உள்ளுறையுவமமேனையுவமமெனத், தள்ளாதாகுந்திணையுணர் வகையே” என்னு மகத்திணை
யியற்சூத்திரத்தான் உள்ளுறையுவமந்தா னேனையுவமமென்றுகூறும்படி யுவமையு முவமிக்கப்படும் பொருளுமாய்
நின் றுள்ளுறையுவமத்தினைத்தருங் கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்துநின்றது ; என்னை?
ஆகாயத்தை மூடியெழாநின்ற அகன்ற கொம்பர்மாமரத்திற் செம்மை முற்றாப் பசுத்த வினிய கனியைப் பறித்து
நுகர் கடுவனான தச்சோலையைக் காப்பவர் முடுகத் தனிமையுற்று அத னயற்கொம்பரிற் சுற்றித்திரியுங்
காவினுட் புளிப்பாகினை யுண்ணவேட்ட புன்றொழிற்றன் னையுற்றவர்க் கூட்டுவதாகக் குற்றமில்லையாம் படி
பாகுபடுத்திக் காய்ச்சின எப்பிணியுந் தீர்க்கும் பசுவின்பாற்குழம்பு பொன்னின்கலத்துட் பெய்திருந் தாறுமுறைபோல
முடப்பலவின் வேரிற் குடக்கனி முற்றிப் பழுத்து விரிந்த பொன்போனிறத்தையுடைய வினியசுளை யருந்தும்
பருவத்தருந்தாது செவ்வியழியாநிற்கும் பரந்த புனலூரனே! என்றதற்கு ஊரனே !
நீ யுத்தமநாயகியில்லின்கண் மாலைக்காலத்தினுஞ் செல்லா திளைய செவ்வியுடைய சேரிப்பரத்தையைப் புணர்ந்து
விளையாடாநின்றகாலத் தவள் பொதுமகளாதலின் பிறரப்பரத்தை மாளிகையைக் குறுகத் தனியுற்றுத்
தணந் தப் பரத்தை மாளிகையைச் சுற்றித்திரியு மிவ்வூரிடத் தியானு நின்வரவுபார்த்தென்னை
யலங்கரித்து மிகுந்த காந்தியோடுமிருப்ப நின்வரவுதாழ்ப்பக் கவினழியாநின்ற வென் வருத்தத்தைத்
தீர்ப்பா னொருசேரியினிடத் தென்மாளிகைக்கண்வந்து வாயில்வேண்டாநின்ற யென்னிடத் தின்ப
நின்காதற் கார்த்தியுடையதொன்றல்ல வின்னு மச் சேரிப்பரத்தை மாளிகையிற்பிரித னினக்குக் கடனென்று
காமக்கிழத்தி யுள்ளுறை யுவமங்கூறி னளாதலி னெனவுணர்க.

அன்றியும், “உடனுறை யுவமஞ் சுட்டு நகை சிறப்பெனக், கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே” என்னும்
பொருளியற்சூத்திரத்தா னிது சிறப்பென்றவுள்ளுறை.
இச்சிறப்பென்றவுள்ளுறை “விரிகதிர்மண்டில”மென்னு மருதக்கலியுள்ளும் வந்தமை காண்க.
இது சேரிப்பரத்தையிற் புணர்ந்துவந்த தலைவன்வரவுகண்டு காமக்கிழத்தியூடியவாறுகண்டு சென்றுசார்ந்த
தலைவனுட னூடறீர்கின்றாள் கூறியது. ஒழிந்த அகலம் நம்பெருமாள்மும் மணிக்கோவை விரித்துரையுட் காண்க. கோது – ஆகுபெயர்.

மழைதவழ்பலவின்வான்சினைநீழற்
றழைதருமரம்பைதான்பொறையுயிர்ப்ப
விசும்புமிழ்திவலையின்விழுமிதின்முற்றிய
பசுங்காய்மதுரப்பலன்படுகாலை
நிறத்தபாசடைநீள்சினைவாட
விறப்பளித்துலகிற்பிறர்க்குறுபயனா
மடலவிழ்நறைமகிழ்மாலிகைமார்பன்
றுடரிமால்வரைதுறந்தனளாய்த்தொடர்ந்த
வினையேன்பெற்றமெல்லியலொருத்தியுங்
கனைகதிர்வேற்கைக்காளையுங்கடத்திடை
மன்னியதிருவுமாயோனும்போன
முன்னியதுளதெனின்முக்கோற்பகவீர்
மதிபெறவணங்கினன்மகிழ்ந்தே
சதிர்பெறவிளம்புமென்றளர்வகன்றிடவே (282)
(இ-ள்) மேகந்தவழாநின்ற பலவினது பெரியகொம்பர்நீழலில் வளர்ந்த வாழை யீனாநிற்ப முகில்பெய்யுந்
துளியி னன்றாய்விளைந்த பசுங்கா யினிய கனியானபருவத்துப் பசுத்த விலையாகிய நீண்டசினை வாடுதலோடு
மதற் கிறத்தலையுங்கொடுத் துலகின்கட் பிறர்க்கு மிக்க வூதியமாகு மாறனது துடரிமால்
வரையை நீங்கினளாதலிற் றொடர்ந்து போந்த வினையேன்பெற்ற மெல்லியசாயலையுடையாளொருத்தியும்
நெருங்கிய கிரணத்தையுடைய வேற்கைக்காளை யொருவனுமாக விருவரும் விட்டுநீங்காத திருமகளும் மாயோனும்போல,
முக்கோற்பகவீர் சுரத்தினிடத் தெதிர்வரக்கண்டதுளதேல் யான் கூறியவையெல்லாம் புத்தியுட்கொண்டு மகிழ்ந்து
எனது தளர்வுநீங்கச் சதிராக விளம்பும் ; நும்மை வணங்காநின்றே னென்றவாறு.

இதனுள் செய்து என்பது செயவென்னும் வினையெச்சவாய்பாடாக நின்றது.
இச்செய்யுள் நால்வகையுவமப்போலியும் விரவிவந்தவுவமப்போலி. என்னை ?
பலவின்கீழ் வளராநின்ற வாழையீன்ற தாறுபோல நற்றாயால்வளராநின்ற வென்னாற் பெறப்பட்டாள் என வினையுவமைப் போலியும்,
விசும்புமிழ்திவலையிற் றாறுமுற்றியதுபோல வென்னாலு மாயத்தாலும் இளையள் விளைவெய்தினளெனவே மெய்யுவமப்போலியும்,
பசுங்காய்மதுரப்பலன்படுகாலை நிறத்தபாசடை நீள்சினை வாட விறப்பளித் துலகிற் பிறர்க்குறுபயனா மெனவே
அங்ஙன மிளையளாய் விளைவெய்திய தலைவி யிந்திரியகலினம்வந் தின்பத்திற்குரியளாயின காலத்து
எனது மேனிக்கும் வாட்டந்தந் தெனதுயிரையுங் கொல்லாது கொன்றெனக் கொருபயனுமின்றி யயலானான கணவற்கே
யூதியமாயின ளென்றுகொள்ளப் பயவுவமப்போலியும்,
பண்புவமப்போலியும், வினையுவமப்போலியு மிதனோடேகூடி முன்னும் பின்னு மிவ்வண்ணமே
நால்வகை யுவமப்போலியு முள்ளுறுத்துக்கொள்ள நிகழ்ந்தமையா னென்றுணர்க.
பயவுவமப்போலியாவது வினைகாரணமாகப் புலப்படுங் காரியத்தை யுள்ளுறுத்துக் கொள்ளப்படுவதாம்.
அஃ தீண்டுக் கூட்டத்தாற் பிறக்கும் பேரானந்தம். என்னாற் பெறப்பட்டா ளென்மகள் என்பன
அன்பினதிகத்தானு நற்றாயென்றுந் தானென்றும் வேறல்லவாம் ஐக்கியத்தானுங் கூறினாள்.
பாலைக்கலியுள்ளும் “என்மகளொருத்தியு” மெனக் கூறியவாற்றானு முணர்க.
பகுதி-உடன்போக்கு. துறை-பின் சென்ற செவிலி முக்கோற்பகவரைவினாதல்.

இதனுள் தலைவி தோழி செவிலி இற்பரத்தை காமக்கிழத்தி உழையர் என்போர்கூற்று வந்தன. ஒழிந்தோர்கூற்றும் வந்தவழிக் காண்க.

4-வது உள்ளுறையுவமம் முற்றும்.

—–

5-வது ஒட்டலங்காரம்.

———–

124.குறித்ததைமறைத்துக்குறிக்கொளநிகர்த்ததை
நுவல்வகைதாமேயொட்டென நுவல்ப.
(எ-ன்) வைத்தமுறையானே ஒட்டென்னு மலங்கார முணர்-ற்று.

(இ-ள்) புலவனாற் குறித்தபொருளை மறைத் ததனைக் கற்று வல்லோ ருட்கொள்ளும்படிக் கதற்கொத்த பிறிதொன்றினை
வெளிப்படையாய்க் கூறுங் கூறுபாடுதாமே யொட்டென்னு மலங்காரமென்று கூறுவர் பெரியோரென்றவாறு.
வெளிப்படையாகவென்பது சொல்லெச்சம்.

(இ-ள்) அதுவே – அச்சொல்

125.அதுவே,
பொரு ளிடஞ் சாதி வினை குணம் பொழுதொடு
மருளறுநெறித்தாய்வருதிறனுடைத்தே.
(எ-ன்) இஃ தவ் வலங்காரத்தின் கூறுபாடுணர் – ற்று.

(இ-ள்) அதுவே – அச்சொல்லப்பட்ட ஒட்டுப் பொருள்முதற் காலமீறாகச் சொல்லப்பட்ட வாறு மிடனாக
மயக்கமற்ற நெறியுடைத்தாய்த் தோன்றுங் கூறுபாடுடைத்தா மென்றவாறு.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு;-

கற்றுணர்ந்தவாய்மைக்கவிப்புலவீர்கண்ணனருள்
பெற்றியன்றசெம்பொருளைப்பேணியே – சுற்றம்
வளைத்தருந்தவாழாதுவந்தயலார்கூண்டு
திளைத்தருந்தவாழ்வார்சிலர். (383)
(இ-ள்) கற்பனவாம் நூல்களைக் கற்றுணர்ந்த வுண்மையோடுங் கூடிய கவிப்புலவீர்காள்!
கண்ணனருளைப்பெற் றதனாலுண்டானவுண்மைநிதியை யழியாதோம்பி யதனை மாதா பிதா முதலிய வுரிமைச்
சுற்றங்க டம்மைவளைத்திருந்து நுகர்வெய்தத் தாமு முடனுண்டு வாழும் வாழ்வெய்தாதே சிலர்
தம்மோ டொருவழியு முறவில்லாத வயலார் களித்தருந்த வாழ்வா ரவரறியாமை தகாதென்றவாறு

இது புலவன் குறித்தபொருளை மறைத் ததனைக் குறிக்கொளற்கதற் கொத்த பிறிதொன்றனை வெளிப்படையாய்க் கூறியது.
குறித்த பொருளாவது கண்ணனருள் பெறுதலாலுண்டான வுண்மைப்பொருளாகிய கல்வியோடுங் கூடிய கவி.
பேணுதல்-வாய்மையிழவாது போற்றுதல். சுற்றம்வளைத்தருந்தவாழாதென்பது ஆன்மாவை யீடேற்று முறுதிச்
சுற்றமான பரமபதநாதனாகிய பிதாவும், பெரியபிராட்டியாகிய மாதாவும், ஆசிரியனும் அதனைக்கேட்டு மகிழ்வெய்த
அவர்களைப்புகழ்ந்தப்பாடலை யவர்களுக்கேகொடுத் திம்மைப்பயனோடு மறுமைப்பயனா முத்தியையும்
பெற்றுப் பேரின்பமெய்தி வாழா தென்றவாறு. சிலர் வந்தயலார் கூண்டுவளைத்தருந்த வாழ்வாரென்பது
முன்பிலவர்களைப்போலக் கவிகளாற்புகழ்தற் கியாதுமியைபில்லாத மானிடராகிய வயலாரை வாய்மையிழந்து
புகழ்வதனை யவர்கேட் டுட்கொண்டு களித்தளித்த கூறை சோறு முதலியன
வுடுத்து முண்டும் வாழ்வா ரிஃதென்ன உலகியற்கை யென்றவாறு.

இது, பொருணிலைக்களனாகத்தோன்றிய ஒட்டு; என்னை?
இருவகைப்பொருள் கல்விப்பொருளுஞ் செல்வப்பொருளு மென்பதனாலுணர்க.
ஒட்டென்பதற்கு நுவலாநுவற்சி, பிறிதுமொழிதல், சுட்டு என்பன பரியாயம். திணை – பாடாண். துறை – வாயுறைவாழ்த்து.

உழவுபயன்கொள்வாருயர்நிலத்தினுள்ளாய்
விழைவுபெறவித்தியவித்தல்லா–லழகமையா
வன்பாரில்வித்தியதூஉமால்பொருட்டாற்போர்நிலத்தா
மென்பார்புலவீரெவர். (284)
(இ-ள்) உழவினாற் பயன்கொள்வார் நல்ல கழனியகத்தவாய் மகிழ்வெய்த விதைத்த நல்லவித்துச் சீமன்னாராயணன்
பொருட்டால் விளைந்து களம்புகுமென உலகங்கூறுவதல்லா லுழவினுக்கியாதுஞ் சிறப்பில்லாத வலிய
பாறைநிலத்தில் விதைத்ததும் விளைந்து களம்புகுதுமென்று கூறுவார் புலவீர்காளுலகத் தொருவருமில்லையென்றவாறு.

இதுவுங் குறித்தபொருளை மறைத் ததற்கொத்த பிறிதொன்றனை வெளிப்படையாய்க் கூறியது.
குறித்தபொருளாவது:-தவமாகிய தொழிலாற் றமதுயிர்க்கு முத்தியாகிய வூதியத்தையெய்து மாரியர்கள்
பரவுபகாரத்தாற் பூலோகமாகிய செய்யகத்து நல்ல கழனியாகிய கோயில் முதலிய திருப்பதிகளுள்
விருப்பமுற்றிருத்திய சிறப்புடையுயிர்களே திருமால்பொருட்டாற் பரமபதமெய்துமென் றுலகங்கூறுவதல்லாற்
சிறப்பில்லாத பாறைநிலத்தில் விதைத்த வித்து விளைந்து களம்புகுதாததுபோல மனநலன்யாதுமில்லாத
தறுகண்மையோர்வைகும் பாறையாம் பாலைநிலங்களில் வைகியவுயிர்களறியாமை யேதுவாக
முத்தியைப் பெறுமென்றுகூறுவார்க ளொருவரு முலகின்க ணில்லை யென்றவாறு.

தவம் பெயர்ச்சொல்லெச்சம். உயர்நிலம்-கோயில்முதலிய திருப்பதிகள். விழைவுபெற-விருப்பம்பெற்று.
வித்தியது-நியமித்திருத்தல். வித்து-ஆன்மாக்கள். இது மாட்டேறில்லா வுருவகம்.
வன்பார்-திருப்பதிகளல்லாத பொல்லாதவூர்கள். மால்போர்நிலம் இரண்டுஞ்சிலேடை.
மால்-திருமாலும் அறியாமையும்; அல்லது மேகத்தின்பொருட்டாலென்பதுமொன்று.
போர்நிலம் – சூடுநிற்குங்களமும் பரமபதமும். எல்லா வண்டத்தையு மீன் றகத்திடும் பிரகிருதிக்கு மேற்பட்டகன்ற விரசையையும்
அகத்திருநிலமாதலங் முத்திக்குப் போர்நிலமென்று பெயராயிற்று. போர்த்தல் – மூடுதல்.
இஃது இடநிலைக்களனாகிய ஒட்டு. திணையுந் துறையுமிதுவுமது. ஓம்படை யெனினுமாம்.

வாய்ந்ததமிழ்மாறனருட்புலவீர்மத்திமநோய்க்
கேய்ந்தமருந்தாவின் பாலென்றக்கா–லாய்ந்ததையக்
கற்றாவின்பாலுணர்ந்து கைக்கொளார்மேதியின்பால்
பெற்றார்க்கும்போமோபிணி. (285)
இதனுள் மத்திமநோயென்பது பித்தம். அதற்கு மருந்தாவின் பாலென்றக்கால் என்பது வாகடநூ லதற்கு
ஆவின்பாலே மருந்தென்று கூறியக்காலென்றவாறு. மேதியின்பால் பெற்றார்க்கும் போமோபிணியென்பது
அப்பித்தமாகிய பிணி எருமைப்பாலைப்பெற்றார்க்குத் தீராதென்றவாறு. இது வெளிப்படையாகக்கூறியபொருள்.
குறித்தபொருளாவது, மத்திமநோய்க்கு (என்பது:-பிறர்கூறும் பதி பசு பாச மென்பவற்று ளிடைநின்ற
ஆன்மாவிற்குச் செய்த தீவினையடியாக வெய்தும் பிறவியாகிய பிணிக்கு) நால்வேதத்தின் சாரமாகிய
திருவாய்மொழியென்னு-மாவினிடத்துண்டாகிய வுண்மைஞானமாகிய பாலை யான்மஞானத்தினிடத்துத் தலைப்பெய்யாது,
வேதமார்க்கமல்லாத புன்பனுவலாகிய மேதியினிடத்துண்டான புன்மைஞானமாகியபாலாற் றீராதென்றவாறு.
வாய்ந்தது – உண்டானது. உம்மை-இழிவுசிறப்பு. ஓகாரம் – ஒழியிசை. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
இது சாதி நிலைக்களனாகத்தோன்றிய ஒட்டு. என்னை? ஆவின்பால் மேதியின்பால் என்பவற்றாலவை
நிலைக்களனாகப் புலப்படுதலானென்றறிக. திணை-இதுவுமது. துறை – செவியறிவுறூஉ;
அல்லது பாடாண்சார்ந்தபொதுவியற்பாற் சார்த்திற் பனுவல்வாழ்த்துமாம்.

வளைதவழ்நீர்மண்மேன்மதிப்புலவீரந்தோ
விளைகழனிச்சார்புள்விராய-களைகளைய
வாங்குங்களைக்கோலான்மாநிலத்தார்க்கேலாத
தீங்குபுரிவார்சிலர். (286)
என்பது, சங்கினந்தவழுங் கடல்சூழ்ந்தபூமியினுண்டாய புலவீர்காள் செந்நெல்விளையுங் கழனியிடத்துவிரவுங்களையைக்
களைவதற்குக் கத்தன் கொடுத்துக் கைக்கொண்ட களைகளையுங்கோலாற் களையைக்களையாது
பெரியநிலத்தின்கணுள்ளார்க்குப் பொருந்தாத தீங்காகச் சிலர் தமது கண்ணைக்களையுந் தீயதொழில்
விரும்பிச்செய்வா ரிஃதென்னபேதைமையோ வென்றவாறு.
இது வெளிப்படையாகக்கூறியபொருள் விளை கழனி-சீவியாநின்ற வுடம்பு. உள்-ஆன்மா. சார்பு-இடம்.
விராயகளை- உம்மையிழைத்ததீவினை. களைய – அதனைப்போக்குதற்கு.
வாங்குங்களைக்கோலால்-சீமந்நாராயணன்கொடுப்பக் கைக்கொண்ட மனோவாக்குக் காயங்களால்.
அவனைச் சிந்தித்தும் துதித்தும் கண்டுங் கீர்த்தியைக் கேட்டுந் தாமஞ்சாத்தியும் கோயில்வலம்வந்தும் போதுபோக்காது
முத்தியைவிரும்புவார்புத்திக்குப் பொருந்தாத தீத்தொழில்களை விரும்பிச் செய்து தமக்குள்ளவாழ்நாளை யந்தோ
வவமேபோக்காநின்றா ரினியெங்ஙனமீடேறுவ ரென்றவாறு. இதற்கும் அவரைப்போலெனக் கூட்டுக.
உள்-ஆகுபெயர். அந்தோவென்ப திரக்கத்தின்கட் குறிப்பு.
மாநிலம் – சிலேடை. இது குறித்தபொருள். இது வினைநிலைக்களனாகத் தோன்றியவொட்டு. என்னை?
தீங்குபுரியுந்தொழில் நிலைக்களனாகத் தோன்றுதலா னென்றுணர்க. திணை – இதுவுமது. துறை – வாயுறைவாழ்த்து.

வாழ்ந்தமதிப்புலவீர்மால்வழங்குந்தூயநீர்
வீழ்ந்தநிலத்தியல்பான்மெய்திரிந்தாற்-சூழ்ந்ததனைத்
தேற்றிற்றெளிப்பதல்லாற்சேற்றிற்செறிகளங்க
மாற்றப்படுநெறித்தோமற்று. (287)
என்பது, முற்றவுணர்ந்த மூதறிவாளரோடுங்கூடிவாழ்ந்த மதியையுடைய புலவீர்காள்! மேகம்பெய்யுந் தெளிந்தநீர்
தான் விழுந்தநிலத்தினியல்பா னிறம்வேறுபட்டா லதனைப்போக்குதற் குலகம் விசாரித்தறிந்த தேற்றினா லந்நீர்
தெளிவதன்றிச் சேற்றுநீரா லதற்கடைந்த களங்கத்தை யொருவராலு நீக்கப்படுமார்க்கமுடைத்தன் றென்றவாறு.
இது வெளிப்படையாகக் கூறியபொருள். அது தெளியாததுபோல மாயோனளித்த நற்குணஞ்சிற்றி னங்களை
விரும்பிக்கொண்ட வுறவினதுபெற்றியானுண்மைவேறுபட்டா லெல்ல நூல்களையு மனத்தாலுள்ளி யறிவறிந்தோர்
தெளிந்தஞானத்தாற் பண்டுபோற் றெளிவதன்றிக் கரியசேறுபோற் செறிந்த சிற்றினத்தார் மாசுண்டஞானத்தாற் றேற்றப்படாதென்றவாறு.
ஆதலான் மூதறிவுடையோர்நட்பு விடாது கொள்ளவேண்டு மென்றவாறு. இது குறித்தபொருள்.
இதனுள் மால், நீர் வீழ்ந்த, மெய், தேற்றில், களங்கம் என்பன சிலேடை.
ஆதலா னிது அடைபொதுவாய்ப்பொருள் வேறுபட்டுப் பண்பு நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு; என்னை?
வீழ்ந்த நிலத்தியல்பான் மெய்திரிந்தாலெனக் குணநிலைக்களனாகக் குறித்த பொருடோன்றுதலா னென்றுணர்க.
திணை-இதுவுமது. துறை-ஓம் படை.

நன்புலவீர்கங்குற்கிசைந்ததெலாநாரணனா
லின்புறவாராய்ந்தியற்றுமெஃகற்றே-புன்புலன்பெற்
றீட்டாதவரெவனோவெண்ணியதுதாமுடிக்க
மாட்டாதழுங்குமதி. (288)
என்பது, நல்லறத்தினது பகுதியறிந்த புலவீர்கா ளிரவிற்கு வேண்டுவனவெல்லா நன்பகலே நாரணனருளாற்
புத்திகளித்தியற்றுங் கூரறி விலராகித் தமது மந்தபுத்தியா லவற்றை யியற்றாதிருந்தவர்
அக்கங்குல் வந்தகாலத்துக் கங்குற்குவேண்டுவனவின்றித் தாம் எண்ணியது முடிக்கமாட்டா
தழுங்குகின்ற தென்னபேதைமையோவென்றவாறு. இது வெளிப்படையாய்க்கூறியபொருள்.
அவரைப்போல நிலையாமையோடுங் கூடிய யாக்கை நிலைமைத்தா முயிரோடுங் கூடியிருக்கப்பெற்ற
காலத்திம்மைக்கண்ணே மறுமைப்பயனா முத்தியைப் பெறுதற் கேதுவாம் ஞான நூல்களை யாராய்ந்து
சித்தசித்தீச் சுரங்களையறிந் தவற்றோடும் அன்றறிவாமென்னா தறங்களைப் பயிலாதார் மரணம்
வந்தடுத்தகாலத்தி லெண்ணியிருந்த முத்தியையெய்த வேண்டுவன செய்து முடித்திலமென்றிய
மதூ துவர்கூட்டத்தைக்கண் டழுங்குகின்றமை என்னபேதைமையோ வென்றவாறு.
எனவே முத்தியை யெய்துதற்கு வேண்டுவனயாக்கையிருக்கப் பெற்றபொழுதே பின்னையென்னாது செய்துமுடிக்க வேண்டுமென்பது பயன்.
இதனுள், நல்லறத்தின்பகுதியறிந்தவென்பது சொல்லெச்சம். நன்பகலே யென்பது எதிர்மறையெச்சம்.
இது கால நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு. என்னை?
இரவிற்குவேண்டுவனவெல்லா நன்பகலே யியற்றவேண்டுமென்னுங் காயநிலைக்களனாகக் குறித்தபொருடோன்றுதலா னென்றுணர்க.
திணையுந் துறையு மிதுவுமது. பொழுதொடுமென்னுமும்மையாற் சினைநிலைக்களனாகத் தோன்றும் ஒட்டு முள.
அதற்குச் செய்யுள் வருமாறு:-

எம்பெருமானின்னருள்சேரின்புலவீர்வான்பொருட்குச்
செம்பொனுளதீவிற்செலவுற்றாற்-பம்புதிரைச்
சங்கந்தவழ்கடலைத்தாம்பொடுபாய்கூம்பின்றி
வங்கங்கடந்து றுமோமற்று. (289)
என்பது, புலவீர்காள்! பெரும்பொருட்குப் பொன்விளைதீவிற் செல்ல நினைந்தாற் கப்பல் கயிற்றாற் கட்டப்பட்ட
பாயோடுங்கூடிய பாய்மரமின்றியத் தீவிற் றலைப்படாதென்றவாறு. இது வெளிப்படையாற் கூறியபொருள்.
அதுபோலப் பொன்மயமான பரமபதத்திற் செல்லக் குறித்தவர்கள் மனோ வாக்குக் காயங்களா னினைத்துந் துதித்துந்
தாமஞ்சாத்துவதுமுதலான சரியையின்றி யாண்டுத் தலைப்படாரென்பதாம்.
இது குறித்தபொருள். “கடல்-பிறப்பாயகடல். வங்கம்-ஆன்மா.
தாம்புங் கூம்பும் பாயும் – மனம் வாக்குக் காயம். திணை – இதுவுமது. துறை – வாயுறைவாழ்த்து.

தாந்தனுறையுளெனுந்தண்பொருநையின்வடபால்
வாய்ந்தகிரணமுழுமாணிக்க – மேந்திழாய்
ஞானமுணர்ந்துணர்த்துநன்முத்தியைவிளைக்குந்
தானவனாமீதெவனோதான். (290)
இதனுள், தாந்தனுறையுளெனுந்தண்பொருநையின்வடபால் – செம்பொன் மாடத்திருக்குருகூர்.
கிரணமுழுமாணிக்கம் – காரிமாறப் பிரான். இது அடைவிபரீதப்பட்டுப் பொருள்வேறுபட்டது; என்னை?
“ ஞானமுணர்ந்” தென்பது முதலாயினநான்கும் மாணிக்கத்திற் கில்லை யாதலி னடைவிபரீதமாயிற்று.
இது முதலதுபோலப் பொருணிலைக் களனாகத் தோன்றின ஒட்டு. திணை – இதுவுமது. துறை-செந்துறைப் பாடாண்பாட்டு.

தென்னம்பொதியந்தருபொருநைத்தென்கரையின்
மன்னும்புளிக்கீழ்வளர்தருவொன்-றின்னமிர்தொத்
தான்றசுவைத்தீங்கனியோராயிரமுந்தண்ணளிகூர்ந்
தீன்றளித்ததன்பாலெமக்கு. (291)
இதனுள், மன்னும்புளியென்பது திருப்புளியாழ்வார். திருப்புளிக் கீழ்வளர்தருவாவது காரிமாறப்பிரான்.
இன்னமிர்தொத்தான்றசுவைத் தீங்கனியோராயிரமென்பது திருவாய்மொழியாயிரப்பாடல்.
இதுவும் பொருணிலைக்களனாகத்தோன்றின ஒட்டு; அல்லது சாதிநிலைக்களனாகத் தோன்றிற்றெனினுமான்.
இவை யிரண்டிற்கும் ஒழிந்த அகல முரையிற் கொள்க. தருவுங் கடவுளாதலிற் றுறை-கடவுள்வாழ்த்துமாம்.
இதுவு முன்னதுபோற் செந்துறைப்பாடாண்பாட்டு. அஃதேலிதன் முன்னர்க் கூறிய வுள்ளுறையுவமத்தினோடும்
ஒட்டென்னு மிதனிடை வேற்றுமை யாதோவெனின், அஃதே! நன்று சொன்னாய்!
உள்ளுறையுவமமென்பது அகத்திணைக்கைகோளிரண்டிற்குமேயுரித்தாய் அகத்திணையைந்தினும்
அவ்வவ நிலங்களிற் றெய்வதமொழிந்த கருப்பொருள்களனாகப் பிறக்குமெனவும், அவ்வுள்ளுறையுவமங்கூறுவார்,
தலைவன் றலைவி செவிலி தோழி பாங்கன் பாணன் ஆக அறுவரெனவும், உள்ளுறையுவமங் கூறுதற் குரியரல்லாதார்,
நற்றாய், தந்தை, தன்னாயத்தார், ஐயன்மாராக நால்வரெனவும்,

அங்ஙனங் கூறுதற்குரியோர் கூறுமிடத்து மருதம் நெய்தலென்னு மீரிடத்தும் மிகுந்தும், குறிஞ்சிக்க ணவ்வளவின்றியும்,
ஒழிந்த நில மிரண்டினு மதனிற் குறைந்தும் வருமெனவும், அங்ஙனங் கூறுமிடத்தும் வெளிப்படக்கூறுமுவமையிடத் துவமேயங்
கேட்போர் மனத்தின்கண்ணும் புலவன்குறித்தவாறே நிகழ்த்துதலின் உள்ளுறையுவமமெனவும்,
மேற் கூறப்படுங் கருப்பொருள்களனாகப் பிறக்கு மிறைச்சிப்பொருளோடுங் கூடாதனவாயும் வருமெனவுணர்க.
இஃதன்னதன்றாய்க் கருப்பொருளிற்பிறக்க வேண்டுமென்னும் யாப்புறவின்றிப் புறத்தினும் புறப்புறத்தினுஞ்சென்று
செய்யுட்செய்யும் புலவன் முதலாயினோர் கூறுங் கூற்றாய்ச் சுட்டென்னும் உள்ளுறையவாய் நடத்தல் வேற்றுமையென்றுணர்க.

அங்ஙனமாதல் “பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ், சால மிகுத்துப் பெயின்”
“நுனிக்கொம்பரேறினாரஃ திறந்தூக்கி, னுயிர்க்கிறுதியாகிவிடும்” எனவும்,
“நெடும்புனலுள்வெல்லு முதலையடும்புனலி, னீங்கினதனைப்பிற”
“கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு, நாவாயு மோடா நிலத்து”
“காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா, வேலாண் முகத்த களிறு” எனவும்
திருவள்ளுவர் கூறிய வலியறிதல் இடனறிதல் என்னு மிரண்டினுள்ளும், பிற நூல்களினுங் கண்டு கொள்க.

தண்டியாசிரியர் ஒட்டென்னு மலங்காரத்தினுள் அடையும் பொருளு மயல்படமொழிவதாக
“வெறிகொளினச்சுரும்புமேய்ந்ததோர் காவி” யென்றதில் உள்ளுறையுவமமும்,
அடைவிபரீதப்படப் பொருள் வேறுபடக் “கடைகொலுலகியற்கை” யென்பதிற் கருப்பொருள்களனாகாது ஒட்டுங் கூறினாரெனினும்,
இந்நூலுடையார், “உடனுறையுவமஞ் சுட்டு நகைசிறப்பெனக், கெடலருமரபினுள்ளுறையைந்தே” என
உள்ளுறையை யைந்தாய்ப் பிரித்தமையான் உள்ளுறையுவமம் ஒட்டு இறைச்சியென மூன்றாக்கினார்.
இங்ஙன மாராய்ந்து பிரித்தவிவர் நோக்கமுந் தெள்ளிதினா ராய்ந்து கொள்க.

5-வது ஒட்டலங்காரம் முற்றும்.

————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை–பகுதி-1- –ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853
இரண்டாவது
பொருளணியிய லுரை.
1-தன்மையலங்காரம்
2-உவமையலங்காரம்

——

86.பொருளினுஞ்சொல்லினும்புனையுறுசெய்யுட்
கணிபெறப்புணர்த்தலினணியெனும்பெயர்த்தே.
என்பது சூத்திரம்.
இவ்வோத் தென்னுதலிற்றோவெனின், ஒத்த நுதலியதூஉ மோத்தினதுபெயருரைப்பவே விளங்கும்.
ஆயின் இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின்? பொருளணியிய லென்னும் பெயர்த்து ;
பொருளானா மணிக ளுணர்த்தினமையின். ஆயின், இதன்றலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்?
சொல்வான் றொடங்கிய அணி யென்பவற்றிற்குக் காரண மிவையென்பதூஉம் அவை
செய்யுட் கின்ன சிறப்புடைத்தாகப் புணர்த்தலி னிப்பெயர்த்தாயிற் றென்பதூஉ முணர்-ற்று.

(இ-ள்) புலவராற் றொடுக்கப்பட்ட கவிகட்குப் பொருளானுஞ் சொல்லானும் அழகெய்தப் புணர்ப்பதால்
அணியென்னும் பெயரை யுடைத்தாயிற் றிவ்வலங்காரமென்றவாறு.

புலவரா லென்பதூஉம் அலங்கார மென்பதூஉஞ் சொல்லெச்சம் அணி யிரண்டனுண் முன்னையது அழகாம்.
பின்னையது பூணாம். எனவே பொருளானுஞ் சொல்லானு மணி யிரண்டென்பதாயிற்று.

87.அவற்றுள்,
புவனம்போற்றியபொருளணிபுகலிற்
றவலரும்பான்மைத்தன்மையுவமை
யுருவகமுள்ளுறையொட்டுல்லேக
மொப்புமைக்கூட்டம்வேற்றுமைதிட்டாந்தந்
தற்குணம்பிரத்தியனீகஞ்சந்தய
மற்புதநிதரிசனந்தற்குறிப்பதிசயஞ்
சிலேடைபின்வருநிலைதீபகநிரனிறை
பூட்டுவிலிறைச்சிப்பொருள்கோள்பொருண்மொழி
யதிகம்வகைமுதலடுக்கிணையெதுகை
விரோதமுபாயம்விசேடஞ்சமாயித
மேதுச்சுவைபரியாயமிலேசந்
தற்பவமசங்கதிதடுமாறுத்தி
புணர்நிலைவேற்றுப்பொருள்வைப்புவிபாவனை
யார்வமொழிநெடுமொழிபரிவருத்தனை
காரணமாலைகாரியமாலை
யேகாவலிபிரதீபம்பிறவணி
முன்னவிலக்கபநுதிநிந்தாத்துதி
புகழ்வதினிகழ்தன்மாறுபடுபுகழ்நிலை
பரிசங்கைகாவியலிங்கம்பரிகர
முறுசுவைவிநோத்திசமுச்சயமுதாத்த
மாசிசங்கரஞ்சங்கீரணமே
பாவிகமெனவறுபானான்காகும்.
(எ-ன்) வைத்தமுறையானே பொருளானா மணிகளது பெயருமுறையுந் தொகையு முணர்ற்று.

(இ-ள்) அங்ஙன மிரண்டுகூற்றவாகிய அணிகளுள் உயர்ந்தோர் முதலெனப் போற்றப்பட்ட பொருளணி
யொன்றனையுங் கூறுமிடத்துத் தன்மை முதலாகப் பாவிகமீறாக அறுபத்துநான்கா மென்றவாறு.

இவற்றிற்கெல்லா மெண்ணும்மை தொக்குநின்றன. என என்பது எண்ணிடைச்சொல் ; என்னை?
“என்று மெனவு மொடுவு மொரோவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்பதனால்.
எனவென்ப தனைத் தன்மைமுதலாக வெண்ணிய வெங்கு மொட்டுக.

அஃதாக ; இச்சூத்திரத்துள் சிலேடை, பின்வருநிலை, தீபகம், நிரனிறை முதலிய சொல்லானாமணிகளு மிதனுட்கூறா
நிற்பப் பொருளணியிய லென்ப தென்னையெனின், மிகுதி பொருண்மேலவாதலின் மிக்கவற்றாற் பெயர்கொடுத்தார்;
அஃ தியாவதுபோலவெனின், அங்கராகமாகிய சந்தனத்துடன் குங்கும கற்பூர கத்தூரி கூடினும் பூசியது சந்தனமென்பதுபோலக் கொள்க.

அற்றேல் இவை முறையாயினவாறென்னையோவெனின், இயல்பு விகாரமென விரண்டாகிய வவற்றுள்,
தன்மை யியல்பாகலான் முற்பட்ட முறைமைத்தாக வைக்கப்பட்டது.
உவமையை மூன்றுறுப்படக்கிய பிண்டமாகுந் தொல்காப்பியத்து ளிறுதிநின்ற பொருளகத் தகப்பட்டதாக
அலங்காரத்தினையுங் கூறிய ஒல்காப்புலமைத் தொல்காப்பியனாரு முவமையென்ப தொன்றாகத் தொகைபெற்று
வினைமுதலிய நான்காய் வகுத்துப் பலவேறு விரிவாய்நின்று விகாரமாயதன்றிப்
பிறவலங் காரங்கட்கு முபகாரமுடைத்தாகலானு மஃதொன்றினையுமே முக்கியமாக்கி யதனுட னுருவகமும்
உள்ளுறையுவமமும் வகுத்துக்கூறிய முதன்மையானும், இதற்குத் தனியே முதனூல்செய்த தெண்டி யாசிரியரும்
அவர் நோக்கமே தாமு முடம்பட்டாராகத் தன்மையின்பின் னுவமையை வைத்தாராகலானும்,
இருவர்நோக்கமு முட்கொண் டிந் நூலுடையா ரவையிரண்டிற்கு மிந்நூல் வழிநூலாகலானுந் தன்மையை முதல்
வைத் ததன்பின்ன ருவமையையு முதல்வைத்தது முறையெனக் கொள்க.
உருவகமும், உவமையும் பொருளும் வேறுபட்டு நில்லா தொன்றென்னும் பான்மைத்தாய மாட்டேற்று முவமையாதலானும்
உள்ளுறை யுவமமும் இசைதிரிந் திசைக்கப்படுவதா யுவமையோ டுவமிக்கப்படும்பொருள் பிறிதோராறு தாராது
அவ்வந்நிலங்களிற் பிறந்த கருப்பொருளோடுஞ் சார்த்தி யுள்ளுறுத்திக்கொள்ளுமுவமை யாதலானும் அவை முறையே வைக்கப்பட்டன.
ஒழிந்த ஒட்டு உல்லேக முதலியனவு முவமையைப் பின்சென்றிருத்தலா னவை வைத்தமுறையு முய்த்துணர்ந்துகொள்க.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். உவமையைப் பின்சென்றனவல்லாத அலங்காரங்களையுந் தமக்குப்
பொருந்தின முறையே வைத்தமுறையு முய்த்துணர்ந்துகொள்க. அவையு மீண்டுரைப்பிற் பெருகும்.

அஃதாக ; ஆனா லிந்நூலுடையார் முதனூல்களிற் கூறியபடியே வழிநூலிற் சிறிது புடைநூலிலக்கணந் தவறாது கூறப்
புகுந்து மிகவுமிதன் முதனூலாகிய தண்டி கூறிய அணிகளுள் நுட்பமென்னும் அலங்காரத்தைக் குறைத்துப்
பிற முதனூலணிகள் கூறிய அணிகளையுந் திரட்டிக்கூறி, முந்து நூல்களுட் கூறாத பூட்டுவில் இறைச்சிப்பொருள் கோள்
பொருண்மொழி யென்னுமூன்றினோடும் வகைமுதலடுக்கு இணையெதுகை உபாயம் உறுசுவை புகழ்வதினிகழ்த லென்னும்
அலங்காரங்களையுங் கூட்டி அறுபத்துநாலாக மிகுத்ததூஉ மொருவழிக் குன்றக் கூறன் மிகைபடக்கூற லென்னுங்
குற்றமாம்பிறவெனின், ஆகாது ; என்னை? நுட்பமென்பது பரிகரத்து ளடங்குமெனக் குறைத்துச் செய்யுட் கணி
பெறப் புணர்ப்பதெல்லா மணியெனப்படுதலான் முன்னைய மூன்றுஞ் சொல்லிலக்கணத்தினும் பொருளியலினும்
புறத்திணையினுங் கூறியபடியே செய்யுட்கழகாதலி னணியிற்கூட்டி மிகுத்தார் ;
ஏனைய வைந்து மழகெய்துவதா யிலக்கியங்கண்டதற் கிலக்கண மியம்பியதாக்கி மிகுத்தாராகலானென்றுணர்க.
அன்றியும், வழிநூலும் புடைநூலுஞ் செய்தற்கேதுத் தொகுத்தன்முதலிய நான்கினுள்ளு முதலன
விரண்டு மிகவு மேதுவாகலானுங் கூறப்பட்டன. அற்றேல் ஐயமுந் தெரிதரு தேற்றமும் பொதுநீங்குவமையுந்
தெண்டியாசிரிய ருவமவிரியுட் புணர்க்க, அவற்றை யேனையாசிரியர் வேறுவேறணியாகப் புணர்க்க,
இந்நூலுடையார் முதலிரண்டும் பிறர்நோக்கத்தோடுங் கூட்டிப் பிறிதோ ரணியாக்கிப் பின்னையது தெண்டி
நோக்கத்தோடுங் கூட்டிப் புணர்த்ததூஉங் குற்றமாமெனின், குற்றமன்று. இருவர்க்கும் முதலான தொல்காப்பியனார்
“தடுமாறுவமங் கடிவரையின்றே” யென வழுவமைதிவாய் பாட்டாற்கூறினமையானும் அவற்றுள்
உவமவுருபு புணராமையானு முவமையைப் பின்சென்ற பிறிதோரணியாகப் பிறருடம்பட்டது தானுடம்படுதல் என்னுமுத்தியா னுடம்பட்டும்,
ஏனையது “தானே தனக்குவமைதா” னென உவமவாசகம் புணர்ந்தமையானும் “ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே” என்றாராதலானும்
பிறர்மதங்களைதலென்னு முத்தியானுங் கூறப்பட்டது. இங்ஙனம் பெயரு முறையுந் தொகையுமாகிய அணிகளை
முதனூலாசிரியர் வகைப்படுத்தியும் விரித்துங் கூறிய நோக்கத்தோடுஞ் சிலவற்றை யிந்நூலுடையார்
தன்கோட்கூறலென்னு முத்தியானுந் தன்குறியிடுதலென்னு முத்தியானும் வகுத்ததன்மேல் விரித்துவகுத்தும்
விரித்ததன்மேல் விரித்ததையும் அவ்வணிகட் குணர்த்தும் பீடிகைமுதலாய வுரைநடைநோக்கங்களா னாங்காங்குக் கண்டுகொள்க.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும்.

88.வழுவாமரபினெப்பொருளையும்விகாரந்
தழுவாநடைபெறப்புணர்ப்பதுதன்மை.
(எ-ன்) மேனிறுத்தமுறையானே தன்மையென்னு மலங்காரத்தினது பொதுவிலக்கண முணர்ற்று.
(இ-ள்) இருதிணையுட்குற்றமில்லாத இலக்கணத்தையுடைய எவ் வகைப்பட்ட பொருள்களையு முவமை முதலிய
விகாரவணிகள்கூடாதே சுபாவநடைபெறப் புலவன் பாடுவது தன்மையென்னு மலங்காரமா மென்றவாறு.

நடை – ஒழுக்கம். குற்றமில்லாத எவ்வகைப்பட்ட பொருளையு மெனவே குற்றமுள்ளவற்றின் சுபாவத்தைப் பாடுவதுந்
தன்மையா மெனினும் அலங்காரத்தின்பாற்கூடாதென்பதாம். வழுவாதமரபென்னும் வினையெதிர் மறுத்த
பெயரெச்சவாய்பாடு செய்யுள்விகாரத்தாற் றொக்கீற்றுயிர்மெய் கோவாமுத்தமென்பதுபோலக் குறைந்துநின்றது.
தழுவா வென்பது மது. விகாரம் ஆகுபெயர்.

89.அதுவே,
ஒண்பொருண்மக்களுயிருளவஃறிணை
சினைவினைபண்பிடமெனவுஞ்சிவணும்.
(எ-ன்) தன்மையின் சிறப்பிலக்கணப்பாகுபாடுணர்-ற்று.

(இ-ள்) அத் தன்மையென்னுமணி, உயர்திணையிடத்துப்பொருட் டன்மையும் மக்கட்டன்மையும்,
அஃறிணையிடத் துயிருள்ள அஃறிணைத் தன்மையும், உயிரில்லாத அஃறிணைத்தன்மையும்
அப்பொருளின் சினைத்தன்மையும், வினைத்தன்மையும், பண்புத்தன்மையும்,
இடத்தன்மையுமெனத் தனித்தனி புலப்படப் பொருந்துமென்றவாறு.

அதுவே, என்பது “சீர்கூனாதல் நேரடிக்குரித்தே” யென்பதனாற் சீர்கூனாயிற்று.
இவற்றிற்கெல்லா மெண்ணும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்குவிரிந்தன.
உயிரில்லாஃறிணை யென்பது முயர்திணையென்பது மெதிர்மறையெச்சமாகி விரிந்தன.
இன்னு மவ்விலேசானே யுயிருள வஃறிணையு ளியங்குதிணையும் உயிரில்லவற்றுட் கருத்துப்பொருளுங் கொள்க.

90.அவற்றுள்,
பொருளியல்பாண்பெண்ணெனவிருபுலப்படும்.
(எ-ன்) இதுவும் பொருட்டன்மைக்கோர் பகுதியுணர்ற்று.

(இ-ள்) அச் சொல்லப்பட்ட வுயர்திணை யஃறிணையுட் பொருட் டன்மை ஆடூஉப்பொருட்டன்மை
மகடூஉப்பொருட்டன்மை என விரு வகைத்தாய்த்தோற்றுமென்றவாறு.

91. அரும்பெறன்மக்கட்டன்மையுமற்றே.
(எ-ன்) இதுவும் உயர்திணைக்கண் மக்கட்டன்மைக்கோர் கூறுபா டுணர்-ற்று.

(இ-ள்) பெறுதற்கரிய மக்கட்டன்மையும் பொருட்டன்மைபோல விருவகைப்படு மென்றவாறு.

அற்று உவமவுருபு. அஃறிணைக் கொருமை பன்மை யென்பதல்லாது ஆண்பெண் ணென்பது சிறப்பின்மையாற் கூறாராயினார் ; என்னை? “ஆண்பெண்பலரெனமுப்பாற்றுயர்திணை”, “ஒன்றேபலவென்றிருபாற் றஃறிணை ” யென்பதனா லறிக.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-

செம்பொனாடைசெறிதிருமருங்கின
னம்புயத்தனிமலரலர்ந்தவுந்தியன்
கவுத்துவக்கடவுட்கவினிழன்முழுமணி
பவித்திரத்திருமகள்பதிந்தமார்பினன்
வலம்பயின்முப்புரிநூலொடும்வாடா
திலங்கியவனமாலிகைபுனையிணைப்புய
னிகல்புரிதிகிரிசங்கேந்தியகரத்தினன்
கதிர்மணிமௌலிகவித்தசேகரன்
மதிதவழ்சோலைமலையலங்காரன்
பூதலந்தாயபொன்னடி
காதலித்தவர்வல்வினைகடந்தவரே. (118)
இது ஆடூப்பொருட்டன்மை. திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து
உரையிற்கோடலென்பதனா லுரையெழுத வேண்டுவதில்லை. பா – நேரிசையாசிரியப்பா.

கனையிருள்கடிவயிரப்பரல்செறிதமனியப்
புனைகழலொடுவனைபரிபுரப்பூந்தாளினன்
குறங்கிணையொடுமருங்கினைவளைபொலந்துகிலின
னறந்தழைதருமயன்றனையருளலருந்தியன்
கவுத்துவமணிவனமாலிகைகலந்தொளிர்திருப்
பவித்திரமுடன்மலர்மாமகள்பயின்மார்பினன்
வான்றோய்கதிரினிற்றிகிரியைவலனேந்தியு
மீன்றோய்மதியினில்வரிவளையிடனேந்தியு
மகரக்குழைதழைகாதினன்மணிமௌலியன்
சிகரப்பலதலைசேர்திருமலைமேலுறை
செல்வனை,
மனமொழிமெய்களின்வழிபடுபவராய்ப்
புனநறுமலர்பொழிபவர்பாற்
கனவிலுமுறான்கொடுங்கணிச்சியோனே. (119)
கனையிருள் – செறிந்தவிருள். வயிரப்பரல் – வயிரமணி ; உள்ளீடாய தரி.
தமனியப்புனைகழல் – பொன்னாற்புனையப்படும் வீரக்கழல். பூந்தா ளென்றது பொலிவினையுடைய சீபாதம்.
வான்றோய்கதிர்… ஏந்தியும் – வானிடத் தலமரல்பொருந்திய கதிராற்கொண்ட சக்கரத்தை வலத்தே தரித்தும்,
மீன்றோய்….. இடனேந்தியும் – நாண்மீனோடு பொருந்திய மதியாற்கொண்ட வலம்புரியை யிடத்தே பொறுத்து மென்க.
என்னை? வான்றோய் கதிர்போன்ற திகிரியை, மீன்றோய் மதிபோன்ற வலம்புரியை யென வுவமைத்தொகைத்
தொடர்மொழியன்றோவெனின், அன்று ; “இமையாதமுக்கண், மூவரிற் பெற்றவ” ரென்பது போலக் கொள்க.
ஈரிடத்தும் இன் சரியை. ஆல் என்னு முருபு இல்லென மூன்றாவ தைந்தனுருபாய் மயங்கின.
கொண்ட வென்னும் வினையுந் தொக்கது. செல்வனை யென்பது தனிச்சொல். சீபாத முதலியவற்றை யுடையனாகித்
திருமலைமே னிலைபெற்ற திருவுடையானைத் திரிவித கரணங்களாலும் அருச்சனைசெய்பவராய்க்
கைகளா னறுமலர்தூயவரிடத்துக் காலன் நனவினுங் கனவினு மணுகானென்றவாறு.
இது பத்தடியாய்ச் செல்வனை யென்னுந் தனிச்சொற்பெற்று மூன்றடி நேரிசையாசிரியச்சுரிதகத்தாலிற்ற சிந்தடிவஞ்சிப்பா.
அலங்காரமுந் திணையுந் துறையு மிதுவு மது.

பூங்கமலக்கோயிலாள்புத்தமிர்தினுட்பிறந்தாள்
வீங்குதுணைமுலையாள்வெண்ணகையா-ளோங்குபுனற்
பொன்னிநடுவுட்பொருண்மார்பகத்தாளென்
சென்னிபிரியாத்திரு. (120)
இது மகடூஉப் பொருட்டன்மை. இதனுள், பொன்னிநடுவுட் பொருள் என்ற திரண்டாற்றிடைக் கண்வளர்ந்த நம்பெருமாள்.
திணை – இதுவுமது. துறை – பெண்பாற்கடவுள்வாழ்த்து.

முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான்
பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச்
சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே
னாவிக்கருள்புரிந்தாள்வான். (121)
இஃது ஆடூஉ மக்கட்டன்மை. ஆவியை என்பது ஆவிக்கென இரண்டாவது நாலாவதாயிற்று.
திணை – வாகை. துறை – தாபதவாகை ; என்னை?
“பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம, லொருவழிப் படுப்பது தொகைநிலைப் புறனே”,
“மனத்தினை யொருவழி நிறுப்பது பொறையே”,
“நிறுத்திய மனத்தினை நிலைதிரி யாமற், குறித்த பொருளொடு கொளுத்துத னினைவே” என்ற
முறையே தொகைநிலை பொறைநிலை நினைத லென்னு மூன்று மிப்பாட்டினுள்ளே கூறினமையான்
“அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும்” என்னுஞ்சூத்திரத்துள்
‘நாலிரு வழக்கிற் றாபதபக்கமு’ மென்னு மெட்டனுள் தவஞ்செய்து யோகம்பயில்வார்க்குரிய விம்மூன்றும் வந்தமையா லெனக்கொள்க.

கூரெயிற்றாருண்கண்ணார்கொம்மையிளமுலையார்
வார்புருவத்தார்திலகவாணுதலார் – காரகத்தெம்
மால்வரையாரெண்ணிறந்தமாதருணின்னாற்குறித்த
கோல்வளையாராரிறைவகூறு. (122)
இது மகடூஉமக்கட்டன்மை. கூரெயிறு – கூரியபல். உண்கண் – மையுண்கண். கொம்மை – திரட்சி. இளமை – மேனிவனப்பு.
வார் புருவம் – நீண்டபுருவம். கோல்வளை – திரண்டவளை. வாணுதல் – ஒளி பொருந்திய நுதல். பகுதி – சேட்படை.
துறை – அறியாள்போன் றவனினைவுகேட்டல்.

வள்ளுகிருந்தோலடியுஞ்செவ்வாயும்வார்சிறைகூர்
புள்ளியுமென்சூட்டுமுறுபொற்பினதா–மொள்ளியரை
மாறிவருவாதியரைவென்றமகிழ்மாறனா
ரேறிவருவெள்ளோதிமம். (123)
இஃது உயிருளதா யியங்கு மஃறிணைத்தன்மை. வள் – கூர்மை. தோலடி – என்பில்லாத அடி. புள்ளி – பொறி.
திணை – பாடாண் பொதுவியல். துறை – அன்னவாழ்த்து. என்னை?
பாலறிமரபிற் பொருநர் கண்ணும் வாகைத்திணையுட்கூறிய சூத்திரம்போல வென்றி கூறாது
அன்னத்தினது தன்மைகூறியதனாலும் வாழ்த்தெல்லாம் பாடாணாதலாலு முணர்க.

பரியரைத்தாய்த்திணிவயிரம்பயின்றுநிலங்கிளைமுதற்றாய்
விரிசினைத்தாய்ப்பசுந்தழைத்தாய்விரைமலர்த்தாய்விழைகனித்தாய்ப்
பெரியகதிரவன்மறைந்தபிழம்பிருட்குமுறங்காது
வரிவளையூர்புனற்குருகூர்மகிழ்மாறர்திருப்புளியே. (124)
இஃது உயிருளதாகி யியங்கா வஃறிணைத்தன்மை. இவையிரண்டுங் கடவுட்டன்மையுடைத்தாயினு
முலகின்கட்டோன்றும் வடிவ மஃறிணைத் தன்மையவாதலி னிங்ஙனம் கூறுவதாயிற்று.
திணை – இதுவுமது. துறை – தாவரவாழ்த்து. பா – தரவுகொச்சகக்கலிப்பா. இருள் – ஆகுபெயர்.

ஆதாரபீடத்தமர்ந்துயர்ந்தபாதசெடி
மீதாயழுந்தமிதித்துநிமிர்தாட்டுணைத்தாய்த்
தாழ்ந்ததுதிக்கையினைத்தாவியிருகைபற்ற
வாழ்ந்தபகுவாயகத்தோங்குநாவின்
வளையெயிற்றுக்கூர்ங்கோட்டுவான்பிடர்வீழ்கற்றை
யுளைவனப்பிற்பாங்கருயர்செவித்தாயொண்கருக்கி
னூழொன்றியசீர்த்தொடூற்றமுறுமாளியின்மே
லாழங்குடைத்தாயதன்மேற்கொளாளியதாய்
நான்றதலைப்போதிகைத்தாநாவீறர்வண்புளிக்கீழ்த்
தோன்றுதிருக்காவணக்கற்றூண். (125)

இஃது உயிரிலஃறிணைத்தன்மை. இது பத்தடியான்வந்த பஃறொடை வெண்பா. திணை – இதுவுமது. துறை – மதலைவாழ்த்து.

நீண்டசெவியுறவினீள்புருவத்திம்பரொளி
கூண்டுபயநோக்கமுங்கைக்கொண்டதாம்–பாண்டவர்தந்
தேர்ப்பாகனானசிறுபுலியூரானுலகங்
காப்பான்றன்மால்வரையாள்கண். (126)
இது சினைத்தன்மை. உபயநோக்கம் – அருணோக்கமு மருணோக்க மும். பகுதி – சேட்படை. துறை – கண்ணயப்புரைத்தல்.

கைச்சிரத்தானுந்து திப்பக்கன்றினராகந்திறந்து
பச்சிரத்தமுண்டுயிருண்பான்மைத்தே–வச்சிரத்தாற்
குன்றெறிந்தானும்பரவுங்கோயிலான்பாரதப்போர்க்
கன்றெறிந்தவன்சக்கரம். (127)
இது வினைத்தன்மை. ஆகம் – மார்பு. திறத்தல் – பிளத்தல். பச்சிரத்தம் – குளிர்ந்த ரத்தம்.
அன்று – முற்காலத்து. குவ் வுருபு மயக்கம். திணை – வாகை. துறை – திகிரிவென்றி.

பூரித்துடலம்புளகித்திடப்புலமை
சீரித்துயிர்தளிர்ப்பச்சேர்ந்துருகும்–பாரித்த
முத்தமிழ்மாறன்ஞானமுத்திரைக்கைகண்டுதொழு
முத்தமராய்வாழ்வாருளம். (128)
இது பண்புத்தன்மை. பூரித்தல் – தடித்தல். புளகித்தல் – உரோமஞ் சிலிர்த்தல். புலமை – அறிவின்றன்மை.
சீரித்தல் – இடைவிடாமற் பழகுதல். தளிர்த்தல் – தழைத்தல். சேர்ந்துருகுதல் – பரத்துவ சொரூபத்தை யோகித்துக் குழைதல்.
பாரித்தல் – விரித்துரைத்தல். முத்தமிழ் – சித் தசித் தீச்சுர மூன்றுங் கூறுந் தமிழ் ; அது திருவாய்மொழி.
உளம் – ஆன்மஞானம். முத்தமிழ்மாறன் ஞானமுத்திரைத் திருக்கையைக் கண்ணினாற் கண்டுங் கையினாற் றொழுது
முத்தமராய் வாழ்வாரது ஆன்மஞானமான துடலந் தடித் துரோமஞ் சிலிர்ப்பப் பரத்துவஞானத்தோடும் பயின்ற
பரத்துவசொரூபத்தை யோகித்துக் குழையு மெனக் கூட்டுக. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப் பரவல்.

உற்றபரமேட்டிமுதலோங்கியவைம்பூதநிலை
பெற்றுளதாய்ச்சோதிப்பிழம்பதாம்–பற்றிலர்பே
ரானந்தமெய்துவதாமாதியிடையென்பவுடன்
றானந்தமில்லான்றலம். (129)
இஃது இடத்தன்மை. பரமேட்டி முதலாய வைம்பூதமாவன :- பரமேட்டி, புமான், விச்சுவம், நிவிர்த்தி, சருவன்.
இது பரமபதமாகிய இடத்தன்மை. திணை – பாடாண்பொதுவியல். துறை – புலவரேத்தும் புத்தேணாடுவாழ்த்து. புலவர் – நித்தியசூரியர்.

ஏழாவரணமிசைந்தீர்ந்தண்புனற்பொன்னி
சூழாமணிமாடஞ்சூழ்ந்துளதா–வாழ்மறையோர்
வேதவொலியும்விழாவொலியுங்கூர்தகைத்தா
நாதனரங்கநகர். (130)
இதுவும் இடத்தன்மை. திணை – இதுவுமது. துறை – நகர் வாழ்த்து.

தேவும்புவனமுந்திரண்டமன்னுயிர்
யாவும்யாவருமிறந்தொடுங்கியஞான்
றொருபெருந்திருமாலுந்தியங்கமலத்
தருள்பகிரண்டகோடிகளெனுமவற்று
ளொன்றயனுலகாதியாயவீரேழி
னயனிலைமேருநடுக்கொள்பூலோக
நவகண்டமதாநாவலந்தீவொடு
முவரொன்றியநீருடைக்கருங்கடலொடு
மேழ்பெருந்தீவுமேழ்பெருங்கடலும்
வாழ்வுடைத்தாகியும்வானவர்வைகு
மேமபூதலமிடையிடுதிகிரிக்
காமர்மால்வரைகடந்தநள்ளிருளா
யண்டபித்தியினகத்தண்டகோளகைக்கீழ்
மண்டுமாழ்புனற்குமேல்வடக்கொடுகுணக்கெதி
ரைம்பதுகோடியோசனைத்தெனவளவை
யும்பரோடிம்பருமுணர்வுறவுணர்வான்
றீதறுபான்மையிற்றெருட்டும்
போதமுற்றோங்கியபுராணசித்தமதே. (131)

இதுவும் இடத்தன்மை. திணை – இதுவுமது. துறை – பேரண்ட வாழ்த்து.
இதனுள், தே என்றது அன்னியதெய்வங்கள். புவனம் – இருநூற்றொருபத்து நாலு புவனமும்.
யாவும் யாவரும் – அஃறிணைகளும் உயர்திணைகளும்.
மேருநடுக்கொள்பூலோகம் – மேருவைத் தனது மத்திமத்தே தாங்கிக்கொண்ட பூலோகம்.
வானவர் வைகு மேமபூதல மிடையிடுதிகிரிக் காமர்மால்வரை – கடவுளர் அரமகளிரோடு மின்ப மெய்திவைகும்
ஏமபூதலத்தை நல்லதண்ணீர்க்கடற்குந் தனக்கும் நடுவாக வைத்த சக்கரவாளகிரி யென்னு மழகிய பெரிய மலை.
மண்டுமாழ் புனல் – கெர்ப்போதகம். வடக்கொடு குணக்கெதிர் என்பது வடதிசைக்குங் கீழ்த்திசைக்கு மவற்றிற்
கெதிரான தென்றிசைக்கும் மேற்றிசைக்கு மென்பதாம். புராணசித்தம் – ஆகுபெயர். ஒழிந்த அகலமுரையிற்கொள்க.
பா – நேரிசையாசிரியம். எனவு மென்னு மும்மை யெச்சவும்மையாதலாற் காலத்தன்மையு முள.

நித்தமாய்மூன்றுநெறித்தாயிலவமுதல்
வைத்தபான்மைக்குரித்தாமாண்பிற்றே–யத்திகிரிச்
செங்கண்மாலுந்தியின்மேற்செங்கமலத்தோன்முதலா
மங்கண்ஞாலம்புகழ்காலம். (132)

இது காலத்தன்மை. இதனுள் மூன்றுநெறியென்றது இறப்பெதிர்வு நிகழ்வு.
இலவ முதலியனவும் முறையே பிரமகற்பமீறாக வுணர்ந்துகொள்க. திணை – பொதுவியல். துறை – பருவவாழ்த்து.

1-தன்மையலங்காரம் முற்றும்.

——-

2-வது உவமையலங்காரம்

—–

92.உவமையின்வகையேயுணருங்காலை
வினைபயனுறுப்புருவென்றநான்கினுந்
தமிதமிநிகழ்ந்துந்தம்மின்விரவியுங்
காதல்சிறப்பேநலன்வலியுடனிழி
போதியவைந்துமுறுநிலைக்களனா
யிருதிணையைம்பாலிவற்றொடுமயங்கியு
முதலொடுசினைகளின்முறைமையிற்பிறழ்ந்து
முதல்சினைவினைகுணமின்றியுமுயர்ந்தும்
பெருமையுஞ்சிறுமையும்பெற்றியிற்சிறந்து
மெண்மெய்ப்பாட்டினெழில்பெறமரீஇ
யகத்தினும்புறத்தினுமமர்தருநெறித்தா
யுரனுடையுரவோருளங்கொளமுதனூல்
வரன்முறைபுணர்க்குமாண்பிற்றாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே உவமையென்னு மலங்காரத்தினது பொதுவிலக்கண முணர்-ற்று.

(இ-ள்) உவமையென்னு மலங்காரத்தினது கூறுபாட்டை யாராயு மிடத்து வினையும் பயனு முறுப்பு முருவு மென்னு
நான்கும் காரணமாகத் தோன்றுவனவாகியும், அங்ஙனந் தோன்றுவன வொரு பொருளோடொருபொரு ளுவமஞ்செய்யும்
வழி யொன்றேயன்றி யிரண்டு மூன்று விரவுவனவாகியும், காதலுஞ் சிறப்பு நலனும் வலியு மவற்றோடுங் கிழக்கிடும்
பொருளுமாகிய வைந்துந் தமக்கு நிலைக்களனாகியும்,
உயர்திணைக் குயர்திணையு முயர்திணைக் கஃறிணையு மஃறிணைக் கஃறிணையு மஃறிணைக் குயர்திணையு மாண்பாற்
காண்பாலு மாண்பாற்குப் பெண் பாலும் பெண்பாற்குப் பெண்பாலும் பெண்பாற் காண்பாலும் ஒருமைப்பாற்
கொருமைப்பாலு மொருமைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற் கொருமைப்பாலு
மயங்காதும் மயங்கியும், முதற்கு முதலும் முதற்குச் சினையும் சினைக்குச் சினையுஞ் சினைக்கு முதலுமாகப் பிறழாதும் பிறழ்ந்தும்,
முதலுஞ் சினையும் வினையுங் குணனு மின்றியு முவமங் கூறுவனவாகியும், பொருளினுமுவம முயர்ந்து மிறப்பவுயர்வு
மிறப்பவிழிபு முவமிக்குங்கா லின்னாவாகச் செய்யாது கேட்போர் மனங்கொள்ளும்படி சிறப்பிற்றீராவாகிச் சேர்தலியல்பு
சிறந்தும், எட்டு மெய்ப்பாட்டினொடுங் கூடி யழகுபெறு நிலைமைத்தாகி, அகப்பொருளினும் புறப்பொருளினுஞ் சென்று
பொருந்து நெறியை யுடைத்தாய்க் கற்றுவல்ல அறிவுடையோ ரறிவிற்குப் பொருந்த முதனூல் வரலாற்று
முறைமையிற் றிரியாது சேர்க்கப்பெறும் பெருமையை யுடைத்தென்றவாறு.

இதனுள் நான்கினுமென்ற வும்மை யெச்சவும்மையாகலா னவை நான்குமே காரணமாகிய வற்றோடுஞ் சொற்பொருள் காரணமாகவும்
உவமை பிறக்குமென்றவாறு. அவை மேற் கூறப்படும். மயங்கியும் பிறழ்ந்து மென்பது எதிரதுபோற்றுந் தந்திரவுத்தி.
இவற்றிற்கெல்லாம் உதாரணம் உரைநடையானுஞ் செய்யுணடையானும் வருமாறு :-

புலியன்ன மறவனென்பது வினையுவமம். ‘மாரியன்ன வண்மை’ யென்பது பயனுவமம்.
‘துடியன்ன விடை’யென்பது உறுப்புவமம். ‘செவ்வானன்ன மேனி’யென்பது உருவுவமம்.
‘செவ்வானன்னமேனி’ யென்பது வண்ணமொன்றுமே பற்றி யுவமஞ்சென்றது.
“ஊர்ந்ததேறே சேர்ந்தோளுமையே, செவ்வானன்னமேனியவ்வா, னிலங்குபிறையன்ன விலங்குவால்வையெயிற்” றென்பது
வண்ணத்தோடு வடிவும் பற்றி யுவமஞ் சென்றது.

வள்ளைக்கொடிமிசைபாய்மைக்கயல்போல்வார்குழையி
னுள்புக்குலாவருமையுண்கண்ணாய்–புள்ளார்
வகுளாம்புயன்வரைமேல்வான்பிறைக்குன்செங்கை
முகுளாததென்னோமொழி. (133)
இதனுள் வினையு முருவு முறுப்புமாகிய மூன்றுவமையு மொரு பொருட்கண்ணே பிறிதொருபொருளுங்கூடி வந்தவாறு காண்க.
இவை விரவுவமை. பகுதி – நாணநாடல். துறை – பிறைதொழுகென்றல்.

“பாவையன்ன பலராய மாண்கவின்” எ-து மகள்கட்சென்ற காதலுவமைக்கு நிலைக்களனாயிற்று.
‘என்னானை’ யென்பது மது. “முரச முழங்குதானை மூவருங்கூடி, யரசவையிருந்த தோற்றம்போலப்,
பாடல் பற்றிய பயனுடையெழாஅற், கோடியர்தலைவகொண்டதறிந”
எ-து சிறப்பினாற்பெற்ற வுவமமாதலிற் சிறப்புநிலைக்களனாயிற்று. உலகத்து ளியல்புவகையானன்றி விகாரவகையாற் பெறுஞ் சிறப்பு
‘ஓவத்தன்ன விடனுடைவரைப்பின்’ என்புழி அந்நகரின் செயற்கைநலந் தோன்றக் கூறினமையின் நல னிலைக்களனாயிற்று.
நலனென்பது அழகு. ‘அரிமா வன்னவணங்குடைத்துப்பிற், திருமாவளவன்றெவ்வர்க்”கென ஒருவன் வலிநிலைக்களனாயிற்று.
“அரவுநுங்குமதியி னுதலொளிகரப்ப”என்றது ஒன்றினிழிபுதோன்ற வுவமித்தலி னிழிபுநிலைக்களனாயிற்று.

குமரனனையானுங்குறமகளன்னாளு
மமரர்குழாமெனக்கூண்டன்பர்–தமரணங்கே
நின்றிறைஞ்சுமாயோனைநின்றவூரங்கிதன்முன்
சென்றிறைஞ்சுவார்நீதிரும்பு. (134)
இதனு ளுயர்திணைக் குயர்திணையும் ஒருமைப்பாற் கொருமைப் பாலும் பன்மைப்பாற்குப் பன்மைப்பாலும்
ஆண்பாலுக் காண்பாலும் பெண்பாற்குப் பெண்பாலும் வந்து திணையும் பாலு மயங்கா துவமை யாயிற்று.
பகுதி – உடன்போக்கு. துறை – இயைபெடுத்துரைத்தல். நகரடைந்தமைகூறலுமாம்.

“மகிழ்வார்க்கு மல்லார்க்குந், தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரனீ,”
“கலங்கவிழ்ந்தநாய்கன்போற் களைதுணைபிறிதின்றிப், புலம்பு மென் னிலைகண்டும் போகலனே யென்றியால்”
என்பனவிவை யாண் பாற்குப் பெண்பாலும் பெண்பாற் காண்பாலு மயங்கிவந் துவமை யாயிற்று.

அரிக்குழாமன்னவடலரக்கர்வாவும்
பரிக்குழாந்தேர்க்குழாம்பாயுங்–கரிக்குழா
மோர்வாளிபட்டுருள்வானோங்குசிலைக்கால்வளைகைக்
கார்வானமாலிமையோர்கண். (135)
எனவும்,

பிறைபுரைவெண்கோட்டுப்பிணர்த்தடக்கைவேழத்
திறைபுரந்தபொன்னகருக்கிப்பா–ருறைதருவான்
பூணவாவற்றெனமால்பொற்புருடையாட்கிரங்கும்
வேணவாநெஞ்சேவிடு. (136)
எனவும், வரு மிவற்றுள் உயர்திணையாண்பாற்பன்மைக் கஃறிணையாண் பாற்பன்மையும்
அஃறிணைப் பன்மைச்சினைக் குயர்திணை யொருமை முதலும் மயங்கிவந் துவமையாயிற்று.
வேழத்தையுடையவிறை – ஈண்டிந்திரன். அற்றென – அதுபோலுமென. பூணவா – மனத்துட்பூண்ட ஆசை.
வேணவா – வேட்கைப்பெருக்கம். இவ் விரண்டினுண் முன்னது திணை – வாகைப்பொதுவியல்.
துறை – வில்வென்றி ; அல்லது திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்துமாம்.
பின்னது பகுதி – இரவுக்குறி, துறை – அருமைகேட்டழிதல்.

முத்தநகைவெம்முலைபோன்மலைகொடியே
யெய்த்தவிடைநுதலுக்கேந்திழா–யொத்ததுதா
னேற்றுருவங்கொண்டநிலாத்தளிரேகூற்றுருவம்
வேற்றுருவங்கொண்டனையாண்டுமெய் (137)
இதனுள், பன்மைச்சினைக்குப் பன்மைச்சினையும், பன்மைச்சினைக் கொருமைமுதலும்,
ஒருமைச்சினைக் கொருமைமுதலும், ஒருமைச் சினைக்கு ஒருமைச்சினையும், பெண்பாற் காண்பாலும்
மயங்காதும் மயங்கியும்வந் துவமையாயிற்று. இதனுள் முத்தமும் நகையும் முலையும் சாதியேகவசனம்.
பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயங்கூறல்.

‘கருஞாயிறன்னான்,’ ‘விசும்புதோலுரிப்பனபோல,’ ‘மலைநடந்தனைய,’ ‘அமிர்துபுளித்தாங்கு’
இவை முதலுஞ் சினையும் வினையுங் குணமு மில்லாதன வுவமையாயின.

“கடல்கண்டன்னகண்ணகன்பரப்பின்,” ‘மாரியன்னவண்மைத், தேர்வேளாயைக்காணிய,”
“தெள்ளமிர்தென்னத்திருந்தியதேமொழி,” “ஏறுபோற்பீடுநடை” என்பன உவமையினதுயர்ச்சியாற் பொருட்குயர்ச்சியாயின.

“அவாப்போ லகன்ற வல்குன்மேற் சான்றோ, ருசாப்போல வுண்டே மருங்கு” லென்பன

கழியபெரியவாயினுங் கழியசிறியவாயினுஞ் சிறப்பிற்றீரா வுவமையாயின. சிறப்பிற்றீர்வனவு முவமவொழிபிற் கூறுப.
எண்மெய்ப்பாட்டினும் அகத்தினும் புறத்தினும் வருவன முந்து நூல்களுட் கண்டுகொள்க.
அஃதாக ; இதன் முதனூல்செய்த தெண்டியாசிரியர் பண்புமுதலாகக் காரண மூன்றென்ப துணர்ந்து
மிந்நூலுடையா ருறுப்பினைக் கூட்டிக் காரண நாலென்பதூஉம் நிலைக்கள னைந்தென்பதூஉம்
மிகைபடக் கூறலென்னுங் குற்றமாமாலோவெனின்? ஆகாது ; என்னை?
தெண்டியாசிரியர் “வடிவி னளவின் வண்ணத்தின் வரூஉ” மென்னுஞ் சூத்திர நோக்கி வடிவும்
பண்பினுளடங்குமென் றுட்கொண்டாரேனுமிந் நூலுடையார், உற்றுணரும் பண்பும் கட்புலனாம்பண்பு மெனப்
பண்பினை வேறுபடக் கொண்டார், அங்ஙனங்கோடல் வடிவுபற்றியபண்பு இருளின் கண்ணும் உற்றுணரப்படும் ;
வண்ணமாகிய கட்புலனாம் பண்பு அவ்வாறுணரப்படாதாதலால் வடிவினைக்கூட்டி நாலென்றார்.
அன்றியும், “வினைபய மெய்யுரு வென்ற நான்கே, வகைபெற வந்த வுவமைத் தோற்றம்” எனவு
மிக்கருத்தேபற்றி முதனூல்செய்த ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாருங் கூறினார் ;
இதற் கதுவு முந்து நூலாகலின் அவர்கருத்தே யிந்நூலுடையாரும் உட்கொண்டாரென வுணர்க.

அன்றியும், “விரவியும் வரூஉ மரபின வென்ப,” “சிறப்பே நலனே காதல் வலியோ, டந்நாற் சொல்லு நிலைக்கள னென்ப,”
“கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும்,” “முதலுஞ்சினையுமென் றாயிருபொருட்கு, நுதலிய மரபி னுரியவை யுரிய,”
“உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை, “பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக், குறிப்பின் வரூஉ நெறிப்பாடுடைய,”
“பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன், வழிமருங் கறியத் தோன்று மென்ப” எனவுங் கூறிய சூத்திரங்களானு மேனையவு முணர்க.

93.அதுவே,
நிறைவினுங்குறைவினுநிகழ்த்துதனெறித்தாய்த்
துறைதொறும்பழமையும்புதுமையுந்தோய்ந்து
விரியினுந்தொகையினும்விழுமிதினடைபெறும்.
(எ-ன்) இதுவும் அவ் வுவமைக்காவதோர் பொது விலக்கணமுணர்ற்று.

(இ-ள்) அதுவே- அவ்வகைப்பட்ட வுவமை யென்னுமது, நிறைவுவமை குறைவுவமை யெனப் புலவராற் கூறுதலைத்
தனக் கிலக்கண நெறியாகவுடைத்தாய் வினைமுதலாய் நால்வகைப்பட்ட இடந்தோறு முந்து நூற்புலவராற்
கூறப்பட்ட தொன்மைத்தாகியும், அதன்பின்னர் அவ்வவகாலத்துப் புலவராற் புதுவதுபுதுவதாகக் கூறப்பட்டுவரு வனவுமாகப்
பொருத்தமுற்று விரியுவமை தொகையுவமை யென இரு திறத்தினும் விழுமிதாக நடைபெறு மென்றவாறு.

விழுமிதினென்று சிறப்பித்தவதனால் இவைநான்கும் இனிமேல் வரும் விரியுவமையனைத்திற்கும் பொதுவாமெனவும்,
இன்னு மவ்விலேசானே அவற்றுள் விரியுவமையுந் தொகையுவமையும் வினைமுதலிய
நான்கினோடு மெட்டாமெனவுங் கொள்க ; என்னை? “நாலிரண் டாகும் பாலுமாருண்டே” என்றாராகலின்.

94.அவற்றுள்,
முக்கியப்பொருட்டிறமுற்றுதனிறைவே.
(எ-ன்) நிறைவுவமையின திலக்கண முணர்-ற்று.

(இ-ள்) உவமேயத்தி னான்குகூறுபாடு முவமையினு முற்றக் காண்பன நிறைவுவமையா மென்றவாறு.

ஆராவமுதமளித்ததிருப்பாற்கடலு
ணாராயணனாகணைமீது–நேரிழா
யெப்படியேகண்வளராநின்றானெனுமரங்கத்
தப்படியேகண்வளர்வானாம். (138)
இது நிறைவுவமை. இதனுள், திருப்பாற்கடனாத னுவமை. ஆரிய ரிதனைப் பூரணவுவமை யென்ப.
அங்ஙனமாதல், அவன் கண்வளரா நின்றதுபோல விவனுங் கண்வளராநின்றானென வினையுவமையும்,
அவன் றிருமேனி யெப்படியேயிருக்குமென்னும் அப்படியே யிவன் றிருமேனியுமிருக்கு மெனவே வடிவினோடு காந்தியாகிய பண்பும்,
அவனைச் சேவிப்பார்க் கச்சேவை காரணமாக முத்தியாகியகாரியம் பயக்குமது போல விவனைச் சேவிப்பார்க்கு
முத்தியாகியகாரியம் பயக்குமெனப் பயவுவமையும் உவமையாகிய திருப்பாற்கடலிடத்தும் வினைமுதலிய நான்கும்
பூரணமாகி யுவமை யுயர்ந்தபடியுங் காண்க.
எப்படியே கண் வளராநின்றானெனு மென்பது பிரமன்முதலாயினார் புராணங்க ளெப்படியேகூறுமென்பதாம்.
பயவுவமையென்பது ஒன்றன்றொழி லேதுவாகப் பிறக்குங் காரியம். அஃதெச்சமாயிற்று.
நேரிழா யென்பது மகடூஉமுன்னிலை. இரண்டாற்றிடையரங்கத்துத் திருமதிட்குப் பாற் கடனள்ளிடை யாவரண முவமை.
திணை – பாடாண். துறை – கண்படை வாழ்த்து.

பனிமதிக்கிரணம்வியன்களநடுவட்
பரந்துடல்கதுவுபோர்ப்பாய்மா
முனியுறப்பொழியுமிருண்மதமுடுக்க
முரணிழந்திரியல்போம்வேடர்
குனிதிரைத்திருப்பாற்கடலினைக்கடைநாட்
கொதித்தெழுங்கருவிடந்தொடரத்
தனிதனியுலக்கற்றறிவிழந்திரிந்த
தலைமைவானவரையொத்தனரே. (139)
இதுவுமது. இதனுள், திருப்பாற்கடலீன்ற கருவிடந் தொடர்ந்தது வெண்ணிலவு வியன்களநடுவட் பரந்துடல் கதுவிய
போர்ப்பாய்மாப் பொழியு மிருண்மத முடுக்கினதற் குவமை.
முரணிழந் திரியல்போம்வேடரென்பது தனித்தனி யொருவர்க்கொருவ ருதவாது ஓடின
தலைமைவானவரை யொத்தன ரென்றவாறு.

இருண்மத முடுக்கவெனவே பண்பும் வடிவும் வினையுவமையும், அறிவிழந்தெனவே அதனாலாய காரியமாதலாற்
பயனுவமையுமாகிப் பூரணவுவமையாயவாறு காண்க.

95. ஒன்றாதியசிலவொப்பதுகுறைவே.
(எ-ன்) குறைவுவமையாமா றுணர்-ற்று.

(இ-ள்) உவமேயத்தின்வினைமுதலிய கூறுபாடு நான்கும் ஒவ்வாது அவற்றுள் ஒன்று
முதன் மூன்றொப்பது குறைவுவமையா மென்றவாறு.

இஃது “ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே” என்பதன்பாற்படும்.

வாவித்திருக்குருகூர்மாறாநின்வண்டமிழென்
னாவிற்கினிமைநயப்பதாற்–றேவர்
மருந்துநிகரென்றேமதித்துரைப்பன்முற்றப்
பொருந்துவமற்றின்மையினிப்போது. (140)
இஃது ஒன்றொத்த குறைவுவமை.

வெள்ளைப்பிறைக்கோட்டுவெங்கரியைவென்றவிற்
பிள்ளைப்பெருமான்றென்பேரைவாழ்–வள்ளைக்
குழையாரைத்தோய்ந்தகன்றகொற்றவனைக்காய்ந்த
பிழையார்பொறுப்பாற்பிறர். (141)
இஃது இரண்டுபெற்றவுவமை.

பாயுங்கருங்கயல்போற்பாங்கியிவளென்றுமருங்
கேயும்படிதாவினதியற்பாத்–தோயும்
புவிநாவலர்புகழ்மால்புட்குழியாள்செவ்விக்
கவினானனத்துலவுண்கண். (142)
இது தொழில் பண்பு வடிவு மூன்றும்பெற் றொன்று குறைந்த வுவமை.

“அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றேயுலகு”
“மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற், காதலை வாழி மதி” என்பனவும் எடுத்துக்காட்டுவமை எனவும்,
ஒன்றொத்த குறைவுவமை எனவும் படும்.

செய்யகமலமுகஞ்செங்கனிவாய்முத்தநகை
வெய்யகளபமுலைமின்மருங்குன்–மொய்யிழாய்
பையரவப்பாயலான்பாடகத்தான்மால்வரைவாழ்
தையலடிமாந்தளிர். (143)
இதுவுமது. பகுதி – சேட்படை. துறை – தலைவன்பாங்கிக் கவயவங்கூறல். வடநூலார் உலுத்தவுவமை யென்பது மிது.

முந்துநூற் புலவராற் கூறப்பட்டுத் தொன்றுதொட்டுவரு முவமை யாவன :-
‘புலிபோற்பாயுமறவன்,’ ‘மாரியன்னவண்மை,’ ‘துடிபோற் சுருங்கு மருங்குல்,’ ‘பவளம்போன்ற செவ்வாய்,’
‘குறைபடுமதியந்தே யக்குறுமுயறேய்வதேபோல்,’ ‘நஞ்சுமமிர்தமுமேபோல் குணத்த,’
‘கரு மணியம்பாலகத்துப்பதித்தன்ன,’ ‘பொருகயற்கண்’ என்பன முதலியன.

அதன்பின்ன ராகுங்காலங்கடோறும் புலவராற் புதுவதுபுதுவதாகப் புணர்த்தவற்றுட் சில வருமாறு :-

கோழரையகாஞ்சிரைதாம்பழுத்தருகேநிற்பவற்றிற்
குறுகாதாங்குக்
காழிலவாங்கொழுங்கதலிக்கனிகளைச்சேட்சென்றருந்துங்
கவிகண்மார்க்க
மூழிலவாய்ப்படைத்தபொருள்பிறர்க்குதவாவுதலுத்தரைநீத்
துசிதமான
வாழ்வுடையோர்பொன்மனைச்சென்றமிர்தருந்திப்பசிதணிவார்
மார்க்கமானும். (144)

வாசமொருசிறிதின்றாயிணரூழ்த்தசெம்மலர்தம்
மருங்காய்நிற்பப்
பூசல்வரிவண்டினங்கணீளிடைப்போய்வாலிதாம்
பூந்தேன்மாந்த
லாசறக்கற்றுணர்ந்தறியாரவைக்களநீத்தேசெலச்சொல்
பவராய்நுண்ணூல்
காசறக்கற்றவர்கழகத்தடைந்துநலனுணர்பவர்தங்
காட்சிமானும். (145)

உற்றவயக்களிற்றினொடும்பிடியினையாங்கொருபாந்த
ளொருவாய்க்கொள்ளக்
கற்றதுகண்டிருதலைப்புளவற்றிருகைகவர்ந்தெடுப்பக்
கௌவுகாலைப்
பற்குலமுக்கிடருழத்தறீவினைவந்தடியிடுநாட்
பசையதாகப்
பெற்றபொருளினைப்பேணிமுதலுமிழந்திடருறுவோர்
பெற்றிமானும். (146)

உச்சவான்மலைச்சிகரத்துறுகொடிகள்படர்பாங்க
ருடையவாகும்
பச்சைவேய்ங்கழைத்தலையிற்சுழல்வனவாய்த்தோகைநடம்
பயிலுநீர்மை
மொய்ச்சுலாங்குழற்கழைக்காரிகைபாசம்பூண்டகழை
முடிமேனின்றே
விச்சைமேதகப்பவுரிகாட்டுவதாமெனக்கவினும்
விளம்பின்மன்னோ. (147)

காவின்மேற்படுபலவின்கனிகடுவன்கொடுசினைதாழ்
காமர்வல்லி
மாவின்மேற்படர்ந்ததன்மேன்மந்திகடாம்வயிற்றிடையே
மகவைத்தாங்கித்
தாவினாற்றவறுடைத்தாமெனவருவதொடுபோகுந்
தன்மைகூத்த
ரோவில்வான்கழைக்கயிற்றின்முழவுதழீஇயெதிர்நடப்ப
தொப்பதாமே. (148)

வெதிரெதிர்சென்றேபொரவிண்டுகுதழலவ்வெதிரினையும்
வெண்ணீறாக்கி
யெதிர்பொருதற்றிறனறியாச்சந்தனத்தேம்பொதும்பரையு
மெரித்தமார்க்கம்
பிதிரெனவாழ்ந்திடுசிறியார்விளைத்தசினமவர்திருவின்
பெற்றிதேய்த்துச்
சதிருடன்வாழ்ந்திடுதலைமைத்தமர்திருவுந்தொலைத்திடுமத்
தன்மைமானும். (149)

வீங்குபராரைக்கழைகண்முளிந்தனவாயுயிர்த்ததழன்
மிறைசெய்காலை
யோங்குபசுங்கழைக்குலங்கண்மழைக்குலங்கீண்டுகுபுனலா
லொழித்தபான்மை
தீங்குவிளைத்திடுமுதுவருறுமிடரையக்குலத்துட்
சிறுவர்மன்னர்
பாங்குபடைத்துளகருணைமுகத்தவராற்றணித்தருளப்
பான்மைமானும். (150)

கருநிறப்பரூஉக்காழ்க்களங்கனிவகுளக்காமர்தீங்
கனிகண்மாங்கனிகள்
பெருமிதப்பலவின்கனிசுவைத்ததன்பின்
பீடுலாங்காழிலாக்கனியை
யொருமுகப்படவுண்சுகமுறுசுகமாங்
குபயநூல்களைமுறைமுறையே
குருமுகத்துணர்ந்தபின்னர்நான்மறைதேர்
குறிப்பினர்சுகம்பொருவருமே (151)
இவை எட்டும் குருகாமான்மியத்திற் கந்தமாதனச் சுருக்கத்திற் பாட்டு.
இவற்றுள் நால்வகைக்கும் புதுவதா முவமை புணர்த்தவாறு காண்க.

96.உவமையுமுருபுமேதுவும்பொருளுந்
தவலருஞ்சிறப்பிற்றாம்விரிவனவிரி.
(எ-ன்) வைத்தமுறையானே விரியுவமைக் கிலக்கண முணர்ற்று.

(இ-ள்) உவமையும், உவமவுருபும், வினை பய முறுப் புருவென்ற நான்கினு ளொன்றும், உவமேயமும் என்னு நான்கும்
ஒன்றற் குவமங் கூறுமிடத்துத் தொகாது விரிவன விரியுவமையா மென்றவாறு.

தவலருஞ் சிறப்பிற் றாம்விரிவன வென்றதனாற் பெயரு முறையுந் தொகையுஞ் சிதையாமல் வருதல் சிறந்ததென் றுணர்க.
அவையாவன :- பவளம்போலச் செவ்வா யென்புழி, பவளம் உவமையெனவும் உவமான மெனவும் படும்.
போலவென்பது உவமவுருபு. செம்மை யென்பது குணமாகியவேது. வாயென்றது உவமேயமெனப்படும்.
இப்பெயர்-பெயர், இம்முறை முறை, இத்தொகை தொகை யெனக்கொள்க.

கருங்குவளைபோற்கருங்கண்கன்னல்போலின்சொற்
சுருங்குதுடிபோற்சுருங்கு–மருங்குல்
பிடிபோலியங்குநடைப்பெய்வளையைக்கண்டாற்
குடிபோங்குடிபோங்குணம். (152)
இதனுள் உவமைமுதலிய நான்கும் முறையே வந்தவாறு காண்க. அன்றியும், வினை பய முறுப்புரு வென்ற
நான்குவமையு மிதனகத்து வந்தவாறுங் கண்டுகொள்க. அடுக்குத் துணிவின்மேற்று. குணம் – அறிவு.
குடிபோமென்றல் தன்னிலையி னீங்குமென்றல். பகுதி – பாங்கற் கூட்டம். துறை – தலைவன்வியத்தல்.

இலவிதழ்போற்செவ்வாயியற்றமிழ்போலின்சொல்
கலகநமன்போலவடுங்கண்க–டிலகப்
பிறைபோல்வளைநுதலிப்பெண்ணமிர்தைக்கண்டா
லறைபோமறைபோமறிவு. (153)
இதுவுமது. இதனுள்ளும் நான்குவமையும் வந்தவாறுகாண்க. துறை – இதுவுமது.
இதன்கண் ணடுக்குந் துணிவின்மேற்று. அறை போதல் – கீழறுத்தல்.

97.உரைத்தநான்கினுளொன்றிரண்டிடையன
யாப்பினுளிடைப்பட்டெஞ்சலுந்தொகையே.
(எ-ன்) ஏனைத் தொகையுவமையிலக்கணமுணர்ற்று.

(இ-ள்) விரியுவமைக் குவமைமுதலாகச் சொல்லப்பட்ட நான்கனு ளிடைப்பட்டன விரண்டனு ளொன்றேயாயினும்
இரண்டேயாயினும் யாப்பினிடத் திடைப்பட்டுத்தொகுவது தொகையுவமையா மென்றவாறு.

இதனுள், தொகையென்றதல்லது உவமையென்பதுபெற்ற தியாதோவெனின், விரியுவமைக்கு
முதலே யுரைத்த சூத்திரத்தாற் பெற்ற தெனக் கொள்க.

அம்பவளச்செவ்வாயுமாரநிரைவெண்ணகையும்
பைம்பொனசலப்பணைமுலையின்–விம்பமுடன்
கண்டுகளித்தேந்திருமால்காட்கரையார்கன்னலின்சொல்
லுண்டுகளிப்புற்றிலமன்னோ. (154)
இஃ துவமவுருபொன்று மிடையிற் றொக்க தொகையுவமை ; இதனுள் அம்பவளச் செவ்வாய் முதலியவற்றிடையிற்
போலவென்னு முவமவுருபு தொக்கதனாலறிக. நெஞ்சமே யென்னு முன்னிலையு மெழுவாயு மெச்சம்.
மன்னும் ஓவும் அசை. பகுதி – இயற்கை. துறை – கிளவி வேட்டல்.

நீலம்போற்கண்ணுநிறைமதியம்போன்முகமும்
வாலமதிபோனுதலும்வண்டிமிர்பூங்–கோலத்
தொடைத்துளபமாலைத்தொழுமாறன்வெற்பிற்
படைத்துளதேன்மன்னுயிர்நண்பா. (155)
இஃதுவமவேது வென்பதொன் றிடையிற்றொக்க தொகையுவமை.

(இ-ள்) கருங்குவளைபோலக் கரியகண்ணினையும், எல்லாக் கலைகளு நிரம்பின மதிபோன்ற செம்முகத்தினையும்,
பிறைபோல வளைந்த நுதலினையும் வண்டுகளாரவாரிக்கு மழகிய தொடையாகிய துளப மாலிகையையுடைய
மாயோனைத் தொழு மாறன்றுடரிவெற்பிற் றனக் குறுப்பாகப் பெற்றுநிற்ப நீகண்டதுளதே லஃதென் னிலைபெற்ற வுயிரா மென்றவாறு.

இதனுள் நிற்ப நீகண்டது என்னுஞ் சொற்களையும் அஃ தென்னென்னுஞ் சொற்களையு மெச்சமாக நின்றனவாக்கி விரித்துரைக்க.
பகுதி – பாங்கற் கூட்டம். துறை – அவ்விடத்தேகல்.

அஃதாக ; இதன் முதனூல்செய்த தெண்டியாசிரியர் வினை பய முதலிய வேதுக்கடொகுவதே தொகையுவமையென நோக்கவும்

இந்நூலுடையா ருவமவுருபு தொகுவதுந் தொகையுவமையென்ற தென்னையோவெனின், அஃதே ;
நன்றுசொன்னாய் ! இவையிரண்டிற்கும் முதனூலாகிய தொல்காப்பியத்துள் “உவமைத் தொகையே யுவமவியல” என்பதனாலும்,
அதன்பின்னர் நேமிநாதர் பவணந்தி முதலியோரும் “உவமவுருபிலதுவமத்தொகையே” என்பதனாலுங் கூறப்பட்டது.

பவளவாய்முத்தநகைப்பைந்தொடியீரூழி
யவளவாய்க்கங்குனெடிதாமோ–துவளருவிச்
சோலைமலையார்துணைத்தோளிற்பைந்துளப
மாலைமலையாமயிற்கு. (156)
என்ப திரண் டிடையிற் றொக்க தொகையுவமை ; என்னை? பவளம் போலச் சிவந்த வாயினையு முத்துப்போல
வெளுத்த நகையினையுமென்னு முவமவுருபும் பண்பு மிடையிற் றொக்கதா லென்றுணர்க.
திணை-பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல்.

கறைவேல்விழியிலவிதழிதழ்
நறைநாண்மலரஃதானனம்
புருவஞ்சிலையுருவம்புய
லுருவம்புரிகுழலெனுமது
பொன்னங்கிரிகொங்கைத்துணை
மின்னென்றுரையிடைகண்டிலன்
எனவாங்குக்
கற்றறிவுடையவென்னிறையினைக்கலந்து
ணற்றிருவுறைவிடநண்பா
சொற்றமிழ்மாறன்றுடரிவண்பொழிலே. (157)
இதுவு மிரண்டு தொக்க தொகையுவமை. இஃ தாறடித்தா யொன்றியும் ஒன்றாதும் வரும் வஞ்சித்தளையான்,
எனவாங்கு என்னுந் தனிச்சொற்பெற்று மூன்றடி நேரிசையாசிரியச்சுரிதகத்தாலிற்ற குறளடி வஞ்சிப்பா.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

‘இடைப்பட்டெஞ்சலு’மென்ற வும்மையா னிடைப்பட்டுத்தொகாது முதலானும் முதலைக்கூறச் சினையறிகிளவியாகிய வாகு பெயரானும்
உவமையு முவமவுருபும் விரிந் தீற்றி லிரண்டு தொகுவனவு முளவென்ப தூஉந் தோன்றிநின்றது.

கொடிபோல்வடவரைபோற்கொவ்வைபோற்காமர்
பிடிபோலிளமான்பிணைபோல்–வடிவமைந்த
தென்னாருயிரமார்க்கின்னமிர்தன்றீந்தபிரான்
றன்னாகையன்னாடனக்கு. (158)
(இ-ள்) கொடிபோ னுடங்குகின்ற விடையினையும், வடமலை போலப் பெருத்த முலையினையும், கொவ்வைக்கனி
போலச் சிவந்தவாயினையும், அழகிய பிடிபோன்ற மென்னடையினையும், இளைய மான்பிணை போல
வெருண்ட நோக்கினையு முடைத்தாகிய வடிவா லழகமைந்திருப்ப தொன்று ;
தோழீ யெனக் குயிர்போலச் சிறந்தவனுமாகி யமரர்க்கு முன்னைநா ளமிர்தமீந்தபிரான் றிருநாகையனையாட் கென்றவாறு.

இதனு ளீற்றில் விரித்தவிரண்டுஞ் செய்யுட்கட்டொக்கவாறு காண்க. தோழீ யென்னு முன்னிலை யெச்சமாயிற்று.
பகுதி – சேட்படை. துறை – தோழிக் கவயவங்கூறல்.

இரண்டுமென்ற வும்மை யெச்சமாதலா னீற்றின் மூன்று தொகு வனவுமுள.

அன்னநடைமானோக்கணியிழாய்வார்சுமந்த
பொன்னசலந்தன்னைப்பொறுப்பதாய்–முன்னுதித்த
வெய்யாநடுவறக்கொன்றிட்டதைவைத்தென்னோசெங்
கையான்மறைத்தமையுண்கண். (159)
என்பது, அன்னநடைபோன்ற மென்னடையினையு மானோக்குப் போன்ற வெருண்ட நோக்கினையு மழகிய பூணினையு முடையாய் !
வாரைச் சுமந்த வாய்ப் பொன்மலைபோலப் பணைத்த முலையானவை தம்மைச்சுமப்பதுமாய்த் தாம் பிறந்து பணைப்பதற்கு
முன்னே பிறந்த வுடன்பிறப்பாகிய தேயாநடுவினை முற்றக்கொன்றவற்றைக் கொல்கவென வெளியில்வைத்து
யானுய்யும்படிக் குனதுயிர்போன்ற தோழியைக் காட்டித்தந்த மையுண் கண்களைக் கைகளான் மறைத்த தென்ன பேதைமையோ வென்றவாறு.

உண்கண்களையென் றோர் சொல் லிறுதி யிரண்டாவது தொக்கு விரிந்தது. ஒழிந்த சொல்லெச்சங்களும்
குறிப்பினால் விரித்துரைத்த வாறுங் காண்க. பகுதி – இடந்தலை. துறை – நாணிக்கண்புதைக்க வருந்தல்.

98. இருமையுமொருதொடர்பினுளுறலியல்பே.
(எ-ன்) இன்னு மத் தொகை விரி யுவமைகட் காவதோர் விதியுணர்ற்று.

(இ-ள்) அத்தொகையுவமையும் விரியுவமையு மாகிய விரண்டு தன்மையு மொருசெய்யுளகத்து வருதலுமா மென்றவாறு.
உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது.

மொழியமுதமுற்றாமுலைமுகுளம்வைவேல்
விழிமகிழ்மாறன்றுடரிவெற்பி–லெழின்மயிற்கு
நன்போதவிழ்குழல்கார்நண்பனேசெம்மேனி
பொன்போன்ம்பல்வெண்முத்தம்போன்ம். (160)
என்பது, நண்பனே ! மகிழ்மாறன் றுடரிவெற்பி லழகிய மயில்போலுஞ் சாயலுடையாட்கு மொழி யமுதம்போலும் ;
இளமுலை தாமரைமுகுளம் போலும் ; விழி கூரிய வேல்போலும் ; செருகிய முல்லையரும்பவிழாநின்ற குழல் கார்போலும் ;
சிவந்தமேனி பொன்போலும் ; வெண்பல் முத்த நிரைபோலு மென்றவாறு.

இதனுள் முன்னையநான்கும் உவம வுருபு மேதுவு முவமேயத்தை முன்னிட்டுத் தொக்கன.
எழின்மயின் முற்றுவமை பின்னையவிரண்டும் விரியுவமை. போலு மென்னு முவமவுருபீற்றினுகரம்,
“செய்யுமெனச்சவீற் றுயிர்மெய் சேறலுஞ், செய்யுளு ளும்முந் தாகலு முற்றே, லுயிருமுயிர் மெய்யு மேகலு முளவே”
என்பதனால் முற்றாதலின் உயிர் கெட்டது. “மெல்லெழுத் தியையின் னகார மாகும்” என்பதனால் லகாரம் னகாரமாய்த் திரிந்தும்,
“னகார முன்னர் மகாரங் குறுகும்” என்பதனா லீற்றுமகாரங் குறுகியும்,
“செய்யு ளிறுதிப் போலி மொழிவயின், னகார மகார மீரொற்றாகும்” என்பதனா லீரொற்றுடனிலையாயும்,
மேலே பகரவொற்று வருதலின் செய்யுளிடைப்பட்டும் வந்த முற்றுப் போன்ம் என்றாயிற்று.
“ஐவிரைமாண்பகழியரந்தின்வாய்போன்ம் போன்ம்போன்ம், பின்னுமலர்க்கண்புனல்” எனப் பரிபாடலாகிய
சங்கச் செய்யுளகத்தும் பகர மேலே வருதலாற் செய்யுளிடைப்பட்டும் வந்தமை காண்க. இது தொகைவிரியுவமை.

இன்னும் வேறுபட வருவனவெல்லாந் தொகைவிரியுவமைக்க ணமைக்க.

99.அவைதாம்,
வெளிப்படைகுறிப்பினும்விழுமிதினடைபெறும்.
(எ-ன்) இதுவு மவ்விருவகை யுவமையின் கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனங் கூறப்பட்ட விரியுவமையுந் தொகையுவமையு மென்னு மிரண்டும்
வெளிப்படையுவமங் குறிப்புவம மென்னு மிரண்டாய் விழுமிதாக நடைபெறு மென்றவாறு.

பவளச்செவ்வா யென்புழி இரண்டற்கும் பொதுவாய செம்மைக் குணத்தை வெளிப்படையாகக் கூறினமையான்,
குறிப்பின்றியுவமை கொள்ளப்படுதலானும், பவளவா யெனநின்றவழிப் பவளத்தினையும் வாயினையுங்கூட்டிச்
செம்மைக்குணம்பற்றி யுவமஞ்செய்ததெனக் குறித்துக் கொள்ளப்படுவதல்லது வல்லென்ற பவளத்திற்கும்
மெல்லென்ற விதழிற்குமுள்ளதோரொப்புமைக்குணங்க ளாண்டில்லை யென்பதூஉம்,
பானல்போற் கருங்கண் ணென்புழியும் இரண்டற்கும் பொதுவாய கருமைக்குணத்தை வெளிப்படையாகக் கூறினமையாற்
குறிப்பின்றி யுவமையே கொள்ளப்படுதலானும், பானலுண்கண் ணெனநின்றவழிப் பானலையுங் கண்ணினையுங்கூட்டிக்
கருமைக்குணம்பற்றி யுவமஞ்செய்த தெனக் குறித்துக் கொள்ளப்படுவதல்லது பல விதழினோடும்
பலவல்லியுந் தாதுவுங் கூடிய பரிமளப்போதிற்கும் நீண்டு பிறழ்ந் துலாய்க் குழை மேற்றாய
கண்ணிற்கு முள்ளதோ ரொப்புமைக ளாண்டில்லை யென்பதூஉ முணர்க. பிறவுமன்ன ;
என்னை? “சுட்டிக் கூறா வுவம மாயிற், பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே” என்றாராகலிற் கொள்க.

விழுமிதி னடைபெறு மென்றதனால் விழுமிதாய குறிப்புவமையுமுள. அவையு மேற்காட்டுதும்.

பாற்கடல்வெய்யோனிலொளிபாரித்தசோதிவட
நூற்கடலைத்தென்னுரைநன்னூற்கடலாய்–மாற்கடிமை
வாய்ந்தாரீடேறவகுத்தளித்தான்றண்ணளிதாந்
தாந்தாமெனும்வகுளத்தான். (161)
இது விழுமிதாய குறிப்புவமை.

(இ-ள்) உலகின்கண்ணேயிருந்து நோக்குவார்க்குத் திருப்பாற் கடலின்கட்டோன்று முதயதிவாகரனைப்போல
ஒளியைப்பாத்தின சோதிச்சொரூபத்தையுடையான் அவன் யாரெனில் வடமொழியாகிய சுருதிக்கடலைத்
தென்னுரை நூற்கடலாக்கித் திருமாலுக் கடிமையாகத் தோன்றினார் பேரின்பமெய்தப் பாடித்தந்தான்
குளிர்ந்த வண்டுகள் தாந்தாமெனப்பாடித் தேனையுண்ணும் வகுளமாலிகையை யுடையான் ;
அவன் பரமகருணையிருந்தபடியோ ! வென்றவாறு.

இது விழுமிதாய குறிப்புவமையாயது, இதனுள், திருப்பாற் கடலிற்றோன்று முதயதிவாகரன் றனது
செய்யமேனியி லாயிரங்கிரணங் களைப்பரப்பி யுலகத்திருளைத்துரத்தி யுலகினுள்ளார்க்குக் கடபடாதிகளைக் காட்டி
யின்பத்தைப் புரந்தாற்போல விவனும் வெண்டிரைப் பொருநைத்துறை மாடத் திருக்குருகூரினிடத்துச் சிவந்தமேனியோடுந்
தோன்றித் திருவாய்மொழியாகிய வாயிரம் பாடல்களையும் விரித்ததனோடு மன்னவாகனத்தினுந்தோன்றித் தன்னை
மனோவாக்குக் காயங்களாற் றியானித்தும் வாழ்த்தியும் வணங்குவார்மனத்து ளறியாமையாகிய வந்தகாரத்தை நீக்கிப்
பரப்பிரமத்தைக் காட்டித்தருவனென வினையுவமம் பயவுவமம் வடிவுவமம் உறுப்புவம மென்னும் நான்குவமையுங்
குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானெனக் கண்டுகொள்க.

தண்ணளி…… தான் என்பதற்குக் குளிர்மையுடன் கூடியதாய வண்டுகள் பாடித் தேனையுண்ணும்
வகுளமாலிகையை யுடையானெனினுமாம். வெண்டிரைப் பொருநைமாடத் திருக்குருகூரொடும்
அன்ன வாகனமுந் திருப்பாற்கடற்குவமை.

இக்குறிப்புவமை இந்நூலுடையார் யாண்டுப்பெற்றாரெனின்? நலமிகு புலமை நக்கீரர்
“உலக முவப்ப வலனேர்பு திரிதரு, பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங், கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி”
எனக் கூறிய முருகாற்றுப்படுத்ததுட் பெற்றாராம்.

வாழ்த்தெல்லாம் பாடாணாதலால் திணை- பாடாண்சார்ந்த பொதுவியல். துறை – பனுவல்வாழ்த்து ;
அன்றியும், வாகையைச் சார்ந்த பொது வியலிற்கூறிய பாடல்வென்றியுமாம்.

மின்பதிந்தகார்மேனிவிண்ணகர்மாலைப்புலவன்
பின்பதிந்துசென்றபெருமானை–முன்பதிந்து
சேவித்தாராளுந்திருநாடுதேவரெனப்
பாவித்தார்க்கெட்டாப்பதம். (162)
இதுவுமது ; என்னை? மின்குடிகொண்ட கார்போலுந் திருமகள் குடிகொண்ட மார்பினோடுங் கூடிய
கரிய திருமேனியையுடையான் எனக் குறிப்புவமை கொள்ளக்கிடந்தமையா னெனக்கொள்க.
தேவரெனப் பாவித்தார்க் கெட்டாப்பதம் என்பது-கண்டாகன்னனாலறிக. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல்.

100.உவமேயத்தியலுயர்த்தியபின்ன
ருவமப்பொருளியலுயர்த்திமுடித்தலுங்
கவினப்பொருட்குறிற்கடிநிலையிலவே.
(எ-ன்) இஃ தவ்வுமத்திற் கெய்தாத தெய்துவித்தது.

(இ-ள்) முதலே யுவமேயத்தினது பட்டாங்கை யுயர்த்திக்கூறி, அதன்பின்னர் உவமப்பொருளின்பட்டாங்கை யுயர்த்தி
முடித்தலும் அவ் வுவமேயத்திற் குயர்ச்சி குறிப்பினாலுண்டாம்படி பயனிலை தோன்றுமெனி னீக்கப்படா தென்றவாறு. கவின் ஆகுபெயர்.

முத்திரைக்கைம்மாறன்மொழிந்ததிருவாய்மொழியே
சத்தியநூலென்பர்தகைசான்ற–மெய்த்தமிழோர்
மேதினிமேலாரணப்பாமெய்த்திருமாலேபரனென்
றோதியதூஉமாதியினிலுண்டு. (163)
(இ-ள்) திருஞானமுத்திரைக்கையினையுடைய காரிமாறப்பிரான் சீமந்நாராயணனே பரதத்துவமென்று அவனது
சொரூபரூப குண விபூதிகளைக்கூறிய திருவாய்மொழியே யுண்மைநூலென்று பெருமை பூர்த்தியான வாய்மைத்தமிழ்ப்புலவோர் கூறுவர்.
அத்திருவாய்மொழியே யன்றி யுண்மைப்பொருளான திருமாலே பரதத்துவமென் றாதிகாலத்துப் பூலோகத்துக்கு மேலாய
சத்தியலோகத்தினுமிருந்து வடமொழியாகிய சுருதி கூறியதூஉ முண்டென்றவாறு.

எனவே, ஆதியாய்ச் சத்தியலோகந் தொடங்கிப் பரந்த வட மொழியா யுணர்த்திற்றென்று சுருதியாகிய நூலை
மிகச்சிறப்பித்துக் கூறுவானாகித் திருவாய்மொழியாகிய நூலை யுயர்த்திக் கூறாததுபோல வியல்பினாலாய
வுவமங் கூறினாராயினும், மண்ணின்குடத்தோடு பொன்னின்குடத்திற்குண்டாய வேற்றுமைபோல
அந்தணரு மேனை மூவகைக் குலத்தோரு மோதுவதாகவும் பரந்துபோகாதே தமிழ்மொழியா லெவ்வுலகத்தாரும்
பரதத்துவத்தையுணரும் படிக்கு மறைவின்றி யிருட்டற வேதசாரத்தை யெடுத்துக்கூறித் தெருட்டிற்றெனத்
திருவாய்மொழிக் கேற்றமானதோர் பயனிலை குறிப்பினாற் றோன்றினவாறு காண்க.
என்னை? “உவமத் தன்மையு முரித்தென மொழிப, பயனிலை புரிந்த வழக்கத்தான” என
ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார் கூறிய விலக்கணத்தானும்,
“பாரி பாரி யென்றுபல வேத்தி-யொருவற் புகழ்வர் செந்நாப்புலவர்-பாரியொருவனு மல்லன்-மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே”
என்னுஞ் சங்கச்செய்யுளாகிய இலக்கியத்தானு முணர்க.
திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து ; அல்லது வாகைசார்ந்த இயல்வென்றியுமாம். இதுவுங் குறிப்புவமைப்பாற்படும்.

101.பலபொருளொருபொருளொருவயிற்பலவயிற்
போலியில்பொருண்மறுபொருள்விபரீத
மருட்கைதலைதடுமாற்றம்விகாரந்
தடுமாற்றம்மேசமுச்சயமின்சொ
னியமமநியமம்புகழ்நிந்தையுவம
மோகமவயவமவயவிமுற்றே
யேகமாலையந்தாதிபொதுநீங்கலென்
றாகவையைந்தாமதன்விரியே.
(எ-ன்) இதன்முன்னர் உவமையெனத் தொகையா னொன்றாய் நின்றது வினை பய முறுப் புருவென்ற நான்கினோடுங்
கூடி யேதுவைந்தா மெனனுமவை முதலிய வகையின் பாகுபாடுகளெல்லா முணர்த்தி யவற்றினின்றும்
விரிந்த வுவமையினது பெயர்வேறுபாடுந் தொகையு முணர்ற்று.

(இ-ள்) அதன் விரி – அங்ஙனங் கூடுபடுத்தின வுவமையின் விரி, பலபொருளுவமைமுதலாகப்
பொதுநீங்குவமையீறாக விருபத்தைந்தா மென்றவாறு.

இவற்றிற்கெல்லாம் எண்ணும்மை தொக்கன. போலியென்பதனை யிறுதிவிளக்காக்கி, இருவயினுங் கூட்டி,
உவமமென்பதனை மத்திம தீபமாக்கி, முன்னும் பின்னும் எல்லாவற்றோடுங் கூட்டி யுரைக்க.
என்றென்ப தெண்ணிடைச்சொல் ; “என்று மெனவு மொடுவு மொருவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்பதனா லறிக.
இவையெல்லாஞ் சொல்லின்முடியு மிலக்கணத்தனவாதலாற் பெரும்பான்மையும் தம் பெயருள்ளே இலக்கணமும் புலப்படும்.
அல்லதூஉம் உரையினுங் கொள்க.

அவற்றுள், பலபொருளுவமையென்பது ஒருபொருட்குப் பலபொருளுவமைகாட்டுவது.
பலபொருளுவமையெனப் பொதுப்படக் கூறினமையான், அது ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமையும்,
வேறு பலகுழீஇய பலபொருளுவமையுமென விருகூற்றவாம். அவற்றுள், ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமை வருமாறு :-

எண்ணிற்கடங்காவிளஞாயிறொன்றியபோற்
கண்ணிற்கடங்காக்கதிர்விரிக்கும்–விண்ணிற்
பரந்தாமமாதவன்பொற்பாதநினைந்தேத்தும்
வரந்தாம்படைத்தார்வசம். (164)
இஃது ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமை. இதனுள், பரந்தாமம் என்றது பரமபதம்.
வரந்தாம் படைத்தார் வசம் என்பது மாதவன் றிருவடிகளை யிப்பிறப்பிற் சிந்திக்கவும் வாழ்த்தவும்
முற்பிறப்பில் வரம்படைத்தவர்தா மெவர் அவர் கைப்படும்பொருளாமென்றவாறு.

கொடியுமொருபிடியுங்கோளரவுமின்னுந்
துடியும்புரைமருங்குற்றோகை–வடிநெடுங்கண்
ணென்னுயிர்க்குத்தம்பமதாயிந்தளூர்மால்வரைத்தன்
மன்னுயிரைக்காட்டுமதித்து. (165)
(இ-ள்) திருஞானமுத்திரைக்கையினையுடைய காரிமாறப்பிரான் சீமந்நாராயணனே பரதத்துவமென்று
அவனது சொரூபரூப குண விபூதிகளைக்கூறிய திருவாய்மொழியே யுண்மைநூலென்று பெருமை பூர்த்தியான
வாய்மைத்தமிழ்ப்புலவோர் கூறுவர்.
அத்திருவாய்மொழியே யன்றி யுண்மைப்பொருளான திருமாலே பரதத்துவமென் றாதிகாலத்துப்
பூலோகத்துக்கு மேலாய சத்தியலோகத்தினுமிருந்து வடமொழியாகிய சுருதி கூறியதூஉ முண்டென்றவாறு.

இது வேறுபலகுழீஇய பலபொருளுவமை. ஒரு பிடி-ஒருகையை விரன்மடக்கின அளவாம்.
“ஒருபிடிநுசுப்பினாட்கே” எனச் சிந்தாமணியினுங் கூறினமை காண்க. பகுதி – இயற்கை. துறை – பாங்கியையறிதல்.

ஆலம்போற்செவ்வேளயில்போலடுங்காலன்
சூலம்போற்காமன்றொடுத்தியக்கு–நீலம்போற்
கொல்வான்பிறழ்கட்கொடிக்கிடமாமூலமெனச்
செல்வான்கடிகைச்சிலம்பு. (166)
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

2. ஒருபொருளுவமை யென்பது பலபொருட் கொருபொருளுவமை காட்டுவது :-

இமிழ்திரைநீர்ஞாலத்திருளிரியவான்றோய்ந்
துமிழ்கதிர்வெண்டிங்களுடனேயெஞ்ஞான்றும்
வலஞ்செய்சுவணவடவரைபோன்மாடம்
பொலஞ்செய்மதிள்கோபுரஞ்சிகரபந்தி
யிலங்குமதிளரங்கத்தெம்பிரான்பல்புகழைப்
பாடினார்பாதந்தனைப்பாடிச்சென்னியின்மேற்
சூடினார்க்குண்டோதுயர். (167)
என்பது பலபொருட் கொருபொருளுவமை. பலபொருள் – செம்பொன் மாட முதலியன. உவமை வடமேருவெனும் ஒன்று.
பா-ஏழடியான் வந்த பலவிகற்பப் பஃறொடைவெண்பா. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.

வண்ணவனசமலர்போற்றிருமுகமுங்
கண்ணுமலரடியுங்கைக்கொண்ட–பெண்ணரசைச்
செந்தமிழ்மாறன்சிலம்பிற்சேர்ந்தகன்றென்பாலுரைக்க
வந்தவனேதிண்ணியனாவான். (168)
இதுவும் ஒருபொருளுவமை. பகுதி – இதுவுமது. துறை – தலைவனை வியத்தல்.

3. ஒருவயிற்போலி என்பது ஒரு தொடர்மொழிக்கட் பல வுவமைவந்தா லுவமைதோறும்
உவமைச்சொற் புணராது இறுதியி லோருவமைச்சொற் புணர்ப்பது :-

வாவித்திரையெறிந்தநித்திலத்தின்மள்ளரெறி
காவித்திரள்சேர்கமலமலர்–பாவைமார்
வெண்ணகையுண்கண்ணானனம்போன்மெனத்தோன்றுங்
கண்ணபுரத்தானிமையோர்கண். (169)
இஃ தொருவயிற்போலி. திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து ; நாடுவாழ்த்துமாம்.
திரையெறிந்த நித்திலத்தினோடு மள்ளர்களை கட்டெறிந்த காவிகளுஞ் சேர் கமலமென்க.
போன்மெனத் தோன்று மென்பது போலத்தோன்று மென்றவாறு. ஒழிந்த அகல முரையிற் கொள்க.

4. பலவயிற்போலி யென்பது ஒருதொடர்மொழிக்கட் பல வுவமைவந்தா லுவமைதோறு முவமைச்சொற் புணர்ப்பது.

பொன்மலைபோலுந்திருமால்புட்குழியாள்பூண்முலைநீர்
மன்னருவிபோலுமணிவடங்கள்–சொன்னதன்மேற்
செக்கர்வான்போலுமெழிற்செம்படாமும்புனைந்தா
ரெய்க்குநூலென்னாமினி. (170)
இது பலவயிற்போலி. எய்க்குநூல் – எய்யாநிற்குநூல். பொன் மலைபோன்ற முலையின்மேற் பொற்பூணையும் பூட்டி
முத்து வடத்தையும் பூட்டிச் செம்படாத்தையு முத்தரீகமாகப்போட்டமையா னினி யிடை யிறுமென்றவாறு.
என்னா மென்பது குறிப்புமொழி. எனவே, இடையைத் தாங்கி வடமுதலியவற்றைத் தாங்கிப் புடைபெயர்த்துத்
தனத்தைப் பரிசித்து மருங்கணைந்தானாம். பகுதி – இடந்தலை. துறை – மருங்கணைதல்.

5. இல்பொருளுவமையாவது முன்பில்லாததொன்றை யொன்றற் குவமையாக்கி யுரைப்பது :-

உதிக்குங்கருஞாயிறென்றேயுவமை
மதிக்கும்வடமலைமாயோனைத்–துதிக்குந்
திருநாவுடையபிரான்செந்தமிழையோதி
யிருநாவேவாராதிடர். (171)
என்பது இல்பொருளுவமை. என்னை? கருஞாயிறு இல்லாத பொருளாதலால் அதனைக் காளமேகம்போன்ற
திருமேனிக் குவமைகூறினமையா னென்றுணர்க. திணை – பாடாண். துறை – ஓம்படை.

சொன்னவாறொன்றுரைக்கக்காணேன்றுணைமேரு
வென்னவாழ்வுற்றவிணைமுலையாண்-மன்னவா
பந்துகழங்கம்மனைகைப்பற்றுகவென்றின்றெனையும்
வந்துதழீஇக்கொண்டாண்மகிழ்ந்து. (172)
இதுவுமது ; இதனுள் துணைமேருவென்றதனால் வடமேரு ஒன்றல்ல தில்லையால் இல்பொருளுவமையாயிற்று.
இவ்வணஞ் சிந்தாமணியினும் “கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே” என
வந்தமையா லிதனது வேறுபாடுங் காண்க. பகுதி – உடன்போக்கு. துறை – குறிப்புணர்தல்.

6. மறுபொருளுவமை யென்பது முன்னர்வைத்த பொருட்கு நிகராவதோர் பிறிதொருபொருள் பின்னரு மதன்கண் வைப்பது :-

மாண்குலாமாறாநின்வண்டமிழ்போன்மற்றொருநூல்
காண்கலேனாங்கதுபோற்காண்கலேன்–மீண்டும்
புதல்வற்கருள்புரிந்துபொற்றூணிற்றோன்று
முதல்வற்கிணையாமுதல். 173)
இது மறுபொருளுவமை. திணை – பாடாண். துறை – பனுவல் வாழ்த்தோடு கடவுள்வாழ்த்துமாம்.

7. விபரீதவுவமையென்பது முன்பி லுவமையாகவந்ததனைப் பொருளாக்கிப் பொருளை யுவமையாக்குதல் :-

மென்றோளெனத்திரண்டவேயினங்கள்வெம்முலைக
ளன்றோவெனக்கோங்கரும்புறா–நின்றனவால்
வண்டமிழ்மாறன்றுடரிவண்பொழிலுமின்றெனக்கவ்
வொண்டொடியாய்த்தோற்றமுறும். (174)
இது விபரீதவுவமை. என்னை? “பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினு, மருளறு சிறப்பினஃ துவம மாகும்” என்றாராகலின்.
அன்றோ வென்பது அல்லவோவென எதிர்மறையாகி ஆம் என்றாயிற்று. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – பொழில்கண்டுமகிழ்தல்.

8. மருட்கையுவமை யென்பது உவமைகூறுவான் மருட்கை வயத்தனாகி யொருபொருட்குக் கூடாதபண்பினைக்
கூடுவதாகக்கொண்டு அதனை யொன்றிற் குவமையாக்கி யுரைப்பது :-

தாகம்பெறநுகர்தீந்தண்மருந்துகைத்தழலின்
வேகம்பயின்றவிதிபோலு–மோகம்
படையாதமாறன்பனிவரைமேலென்னோய்
துடையாதுநீயுரைக்குஞ்சொல். (175)
இது மருட்கையுவமை. தெண்டியாசிரியர் கூடாவுவமை யென்பது மிது.
தீந்தண்மருந்து – இனிய குளிர்ந்த வமிர்து. கைத் தழலின் வேகம் பயிலுதல் – கயந்து தழல்போலச் சுடுங் கோப மிடைவிடாமை.
பகுதி – இதுவுமது. துறை – பாங்கனைநொந்துகூறல்.

9. தலைதடுமாற்றவுவமை யென்பது மேற்றொட்டு முதலே வந்த வுவமப்பொரு ளிடையினு மீற்றில் வந்த
வுவமேயப்பொருண் முதலினும் இடையினின்ற வுவமவுருபு இறுதியிற் றொக்கதும் விரிந்ததுமாகப் புணர்ப்பது :-

மையமருண்கண்காவிவாய்பவளந்தோளிணைவே
யையவிடைநுண்ணூலகலல்குல்–பையரவங்
கஞ்சத்திருமாதுகாதலிக்குமார்பகத்தான்
றஞ்சைத்திருமான்றனக்கு. (176)

இது தலைதடுமாற்றவுவமை. இவை யுவமவுருபு இறுதியிற் றொக்கது.
“குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை” யென்பது மிது.
மையமருண்கண்-கருமைபொருந்திய மையுண்கண். ஐயவிடை நுண்ணூல்-உண்டில்லையென்று சந்தேகமுற்ற
விடை நுண்ணிய நூல் போலு மென்றவாறு. ஐயவிடை யென்பதற்கு ஐயனே யென
அண்மை விளியா யுவப்பின்கண்ணே மயங்கியதாகக் கூறினானெனினுமாம். பகுதி – இதுவுமது. துறை – இயல்பிடங்கூறல்.

10. விகாரவுவமை யென்பது உவமையாகிய தன்மைப் பொருள் விகாரம் பண்ணியதாக உவமிப்பது :-

தெள்ளமிர்தத்துள்ளாயதீஞ்சுவையைமெய்வேதத்
துள்ளவுணர்வையுணர்வினா–லள்ளி
யெடுத்திசைத்ததொன்றெனலாமின்பொருளான்மாறன்
றொடுத்திசைத்தவுத்தமப்பாச்சொல். (177)
இது விகாரவுவமை. உணர்வை யுணர்வாலள்ளி யென்பது உபநிடதச் சொல்லுளிருந்த ஞானத்தைத்
தனதுண்மைஞானத்தாற் சொல்லைநீக்கித் திரட்டியெடுத் தென்றவாறு. இரும்பை யிரும்பினாலறுத் தென்பது போலக் கொள்க.
சொல்லெனவே சொல்லு மதனுட் பொருளுமாயிற்று. சொல்லு மதனுட்பொருளும் அமிர்தினுள்ள
சுவையையு முபநிடதச் சொல்லினுள்ள வுணர்வையுந் தனது பரம ஞானத்தா லள்ளி யெடுத்துச் சொல்லும்
பொருளுமாகத் தொடுத் திசைத்ததொன் றெனலா மென்க. இது பனுவல்வாழ்த்து.

11. தடுமாறுவம மென்பது ஒருபொருள் ஒருகால் உவமையுமாய் ஒருகாற் பொருளுமாகி யொருதொடர்ச்சிக்கண்ணே தடுமாறிவருவது :-

மெய்வேதம்போன்றதுநின்மெய்த்தமிழ்நின்மெய்த்தமிழ்போன்
மெய்வேதமுங்காட்சிமேயதால்–வையகமெண்
ணாவலவர்காரிதருநாவீறாநின்னிகராம்
பாவலரிங்காரோபகர். (178)

இது தடுமாறுவமை ; என்னை? “தடுமாறுவமங் கடிவரையின்றே” என்றாராகலின்.
தெண்டியாசிரியர் இதரவிதர மென்பது மிது. திணையுந் துறையு மிதுவுமது.

12. சமுச்சயவுவமை யென்பது இதனானேயன்றி யிதனையொப் பதினானு மொக்கும் என்பது :-

வண்ணத்தாலன்றிவடிவாலளவினா
லெண்ணிற்கமலமுகையேய்க்குமே–கண்ணன்
வழியார்துணைமாறன்மால்வரையாய்கன்னன்
மொழியார்துணைமாமுலை. (179)
இது சமுச்சயவுவமை. கண்ணன்வழியார்-கண்ணனே பரதத்துவ மெனநிற்கு மார்க்கத்தினையுடையார்.
துணையென்றது அவர்களான்மாவுக் குறுதித்துணை யென்றவாறு. மாறன் மால்வரையிலுள்ள தலைவனே !
கன்னலினதுபாகுபோலு மொழியையுடையாரென்று நீ சொல்லப் பட்டவ ருபயமுலை செம்மைநிறத்தா லொத்ததன்றி
வடிவினாலு மளவினாலு முள்ளத்தா லுவமைகுறிக்கின்ற செந்தாமரைமுகையை நீ சொன்னபடியே யொக்குமென்றவாறு.

குறிவழிச்சென்ற பாங்கன் தலைவி தனமுங் காண்பனோவெனிற் காண்ப துண்டென்பதற்குச் செய்யுள் :-
“அரனம்பலத்தி, னியலுள வேயிணைச்செப்புவெற்பாநினதீர்ங்கொடிமேல்” என்றதனா லறிக.
மால் வரையாயென்றதனா னில மொன்றென்பதாயிற்று. பகுதி – பாங்கற் கூட்டம். துறை – செவ்விசெப்பல்.

13. இன்சொலுவமை யென்பது பொருளினு முவமைக்கோர் மிகுதி தோன்றக்கூறி
யுவமேயத்தினு மிகுதியுளவேனு மொப்பதன்றிச் சிறந்ததன்றென்பது :-

ஒன்றாயநின்முகத்ததொண்டமிழ்வேதங்குரவ
னன்றாயுநான்முகத்ததவ்வேத–மென்றாலும்
வண்டமிழ்மாறாவண்டமிழ்மறைக்கொப்பன்றிமறைக்
குண்டெனலாமோவேறுயர்பு. (180)

இஃது இன்சொலுவமை. இதனுள் ஒப்பதன்றியென்பது ஒப்பன்றி யெனச் செய்யுள்விகாரத்தாற் றொக்கது.
திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து.

14. நியமவுவமை யென்பது இன்னதற் கின்னதே யுவமை யென்று தேற்றேகாரம்பெறத் துணிந்துசொல்வது :-

வாய்மைமறையேநினதுவாய்ந்ததமிழ்மறையின்
வாய்மைதனக்கிணையாம்வாழ்த்துங்காற்–றாய்முலைப்பா
லுண்ணாதமெய்ஞ்ஞானமோங்கியமாறாகமலக்
கண்ணானேநின்னிணையாங்காண். (181)
இது நியமவுவமை. வாய்மைமறை – மெய்வேதம். திணை – வாகை. துறை – தாபதவாகை.

பைம்பொற்குன்றேபணையிளவனமுலை
யம்புத்துணையேயரிமதருண்கள்
குனிசிலையிரண்டேகொடுநன்புருவம்
பனிமாமதியேபழிதீர்நன்முகங்
கொடியேதளரிடைகொண்மூவேகுழ
லாடரவின்படமாமேகடிதடங்
காந்தளின்றுணைமலர்க்கவினேகையும்
பூந்தளிரன்றேபுடைபெயர்மெல்லடி மாதே,
படர்புகழ்மாறன்பராங்குசன்
றுடரிமால்வரைவளர்தோகையதியலே. (182)
இதுவுமது. பா-பொதுச்சீர் பதினாறும்வந்து நேரிசையாசிரியச் சுரிதகத்தாலிற்ற குறளடிவஞ்சிப்பா.
பணையிளவனமுலை – பெருத்த இளைய அழகிய முலை.
அரிமதருண்கண் – செவ்வரிபரந்து கண்டார்க்கு விருப்பத்தைக்கொடுக்கு மையுண்கண். பகுதி – சேட்படை. துறை – அவயவங்கூறல்.

15. அநியமவுவமை யென்பது நியமித்த வுவமையை விலக்கிப் பிறிதுமோருவமை புணர்ப்பது :-

தேன்சுவைக்கொண்டோங்குமகிழ்ச்செல்வாநின்செந்தமிழின்
வான்சுவைக்குவான்சுவைகொள்வான்கனியே–நான்பகர்தற்
கொப்பாகக்கண்டதுமற்றுள்ளிற்சுவைதெவிட்டா
தப்பான்மைத்தானதுமொப்பாம். (183)
இஃது அநியமவுவமை.

(இ-ள்) வண்டுகள் தேனையுண்ணும் பரிமள வகுளமாலிகையையுடைய செல்வனே !
நினது திருவாய்மொழியிலுண்டான சொல்லும் பொருளும் கேட்ட செவிக்கும் ஓதின நாவிற்கும் உற்ற வுணர்விற்கும்
இனிமைதரும் பெரிய வினிமைக்குப் பரமபதத்துள்ளார் மனோ வாக்குக் காயங்களால் இனிமைகொள்ளும்
பரமபதநாதனாகிய அக்காரக்கனியே நான் சொல்லுதற் கொப்பாகக் கண்டது ;
அஃதன்றி வேறுவமை குறிப்பேனாகின் முப்பொறிகளுஞ் சுவை தெவிட்டாத திருவாய் மொழியேபோலப்
பண்ணும் பாடலுமாய் நடைபெறுஞ் சுருதியும் அதற்கொப்பா மென்றவாறு.

அப்பான்மைத்தானதும் என்றது சுருதியை. துறை – பனுவல் வாழ்த்து.

16. புகழுவமை யென்பது உவமையைப் புகழ்ந்துவமிப்பது :-

விண்ணோருயிர்தளிர்ப்பான்வேலைவாயன்றுதித்த
தண்ணாரமிர்தந்தனைநிகர்க்கும்–பண்ணாற்
றிருந்துமறையைத்தமிழ்செய்தேவேசன்வெற்பின்
முருந்துநகையார்மொழி. (184)
இது புகழுவமை. பண்ணாற்றிருந்து மறை – கீதநடைத்தாய்க் குற்றமற்ற மறை ; அது சாமவேதம்.
மறையைத் தமிழ்செய் தேவேச னெனவே வேதந்தமிழ்செய்தபெருமாள் என்னு நாவீறுடையபிரான் என்பதாயிற்று.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சியிறுதிக்கட்டலைமகன் காதற்சிறப்புரைத்தல்.

17. நிந்தையுவமை யென்பது உவமையை இகழ்ந்துவமிப்பது :-

உறைகழித்துக்கைம்மிசைக்கொண்டொண்மறவரோச்சின்
மிறைபுரிவேலொப்பெனினுமேலா–நறையூர்வாழ்
தேந்துளபமால்வரைமேற்றானேதெறுஞ்செயலா
லேந்திழையாள்வன்கண்ணிணை. (185)
இது நிந்தையுவமை. ஒண்மறவர் – கொலைமேற்கொண்டொழுகு மொள்ளிமையுடையமறவர் ஒச்சில் – செலவிடுக்கில்.
மிறைபுரிவேல் – கொலையைவிரும்பும் வேல் ; எடுத்தெறிதலைவிரும்புவார்தொழிலை வேலின்மே லேற்றியது காரண காரிய மயக்கம்.
மறவரோச்சுகிற் கொல்வ தல்லது வன்கண்போற் றானேதெறுஞ்செய லின்றென்பதனால் நிந்தை யுவமையாயிற்று.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – உற்றதுரைத்தல்.

18. மோகவுவமை யென்பது ஒருபொருளின்மே லெழுந்த வேட்கையாலதற்கு உவமையாகக் குறிக்கப்பட்ட
வதன்மேலும் வேட்கை நிகழ்ந்ததாகக் கூறுதல் :-

அம்பவளமொன்றிருப்பவன்புறுமாதொண்டையெனச்
செம்பதுமத்தேனேநின்செவ்வாயை–விம்பமுநே
ராதற்கதைவிரும்புமாழியான்கோழியூர்க்
காதற்சிறப்புடையேன்கண். (186)
இது மோகவுவமை.

(இ-ள்) ஆழியான் கோழியூர்ச் செய்யபதுமத்தினிடத்து விளைந்த தேன்போலுமொழியையுடையாய் !
நினது சிவந்த வாயை யதற்கொத்த அழகிய பவளமுளதாயிருப்பவும் ஆதொண்டையை யொப்பெனநோக்கி
யன்புறாநிற்கு மஃதன்றி யவ் வாதொண்டை செய்ய வாயினிறத்தோடும் வடிவிற்கு மொப்பதால்
அவ்வாயினையுங் காதலிக்கப்பட்ட சிறப்புடையே னோடுங் கூடிய கண்கள் அவ்வாதொண்டையையும் விரும்பாநின்ற வென்றவாறு.

ஆதற் கென்பது மூன்றாவது நான்காவதாயிற்று. அதையும் என்னு மும்மை விகாரத்தாற்றொக்கது.
விம்பம் – வடிவம். பகுதி – இடந்தலை. துறை – காதற்சிறப்புரைத்தல்.

19. அவயவவுவமை யென்பது அவயவத்தையுவமித் தவயவியை வாளாதே கூறுவது :-

மாதரிலவிதழ்போன்மாண்பிற்றேமாதவனால்
வானோரருந்துமருந்து. (187)
இதனுள், மாதரென்ற தவயவி. இலவித ழென்ற தவயவம். பகுதி – இதுவுமது.
துறை – நலம்புனைந் துரைத்தல். புணர்ச்சிமகிழ்தலுமாம்.

வல்லிக்கொடிமருங்குன்மாதினுக்குமேருமுலை
யல்லிக்கமலமனையதடி–கல்லதர்தீ
சொல்லும்பொழுதரங்கர்தொன்னகர்சேய்த்தாயிழாய்
செல்லும்படிக்கெளிதோசெப்பு. (188)
இதுவும் அவயவவுவமை.

(இ-ள்) வல்லிக்கொடிபோலு மருங்குல் ; வடமேருப்போலு முலை ; அல்லியோடுங் கூடிய தாமரைபோலுந் தாள்கள் ;
பரலோடுங் கூடிய வதரும் அழல்போலச் சுடும்.
சொல்லுங்காலத்தில் அரங்கர்நகரமென்றால் நெடுந்தூர மாகையா லாராய்ந்தணிந்த பூணினையுடையாய் !
நினது மாதினுக் கென்னோடும்வரும்படி யெளியதொன்றல்ல வென்றவாறு. பகுதி – உடன்போக்கு. துறை – அருமையுரைத்தல்.

20. அவயவியுவமை யென்பது அவயவியை யுவமித்து அவயவத்தை வாளாதே கூறுவது :-

பொன்னங்கொடியனையபொற்றொடிதன்றாட்சுவடு
மென்னன்புறத்தோன்றுமிங்கிவைக–ளன்னங்
கடிக்கமலஞ்சேரரங்கர்கானிகராங்காளை
யடிச்சுவடுமாங்கவையேயாம். (189)
இஃது அவயவியுவமை. அரங்கர்கானிகராங் காளை – அரங்கர்புதல்வ னாங் காமன்போல்வானாங் காளையென்பதாம்.
பகுதி – இதுவுமது. துறை – சுவடுகண்டறிதல்.

21. முற்றுவமை யென்பது அவயவ அவயவிகளை யொருசெய்யுளகத் தொக்க வுவமிப்பது :-

பொன்னெடுங்குன்றெனச்செறிந்துபுடைபரந்தபுளகமுலை
மின்னெனலாநுணுகிடையவேய்புரையுந்தடமென்றோட்
குளிர்மதிபோன்மிளிர்வதனக்கோமளப்பூங்கொம்பன்னா
டளிர்புரைமெல்லடிச்சுவடுந்தளர்ந்தனவெய்யோன்மன்னோ
குடதிசைவான்கதிர்சுருக்கிக்கொடித்தேரினொடுமறைந்தா
னடல்புனைவேடுவர்குறுகியற்றம்பார்த்தாறலைப்பார்
பொன்புனைபூண்மணிமார்பிற்புரவலவின்றிருவீரு
நன்குலத்தெம்மில்வைகிநறுந்தேன்செந்தினையருந்தி
மரையதளிற்றுயில்வைகிவைகறைவாய்த்துயிலெழுந்து
விரைகமழ்தார்மகிழ்மாறன்மெய்த்தமிழ்ச்சொற்குருகூரின்
முதிர்திரைப்பாலாழியின்வான்முகடுரிஞ்சுமுதயகிரி
கதிர்வருமுன்சேர்தல்கடன். (190)
இது முற்றுவமை.

(இ-ள்) பொன்மேருவாகிய மலைகளென்னும்படி சிக்கென்று மருங்ககன்ற புளகமுலையினையு மின்னெனத் தகுவதா
நுண்ணிய விடையினையு மூங்கில்போலும் பெரிய மெல்லிய தோளினையு மதிபோல விளங்கு முகத்தினையு முடைத்தாய
பூங்கொம்பன்னாள் தளிர்போன்ற மெல்லிய வடியிரண்டுந் தளர்ந்தன, ஆதித்தனுங் குடதிசைவாய் வானிற் கிரணங்களை
யொடுக்கிக் கொடியையுடைய தேரினோடு மறைந்தான், வெற்றியையுடைய வேடுவர்கள் அற்றம் பார்த்து வழிபறிப்பர்,
இனிப் பொன்னினாற்செய்த பூணினையணியு மார்பினையுடைய மன்னனே !
இற்றைப் போது நீங்களிருவீரு முத்தமகுலமாகிய எங்களில்லின்கண் வதிந்து, நல்லதேனினோடுங் கூடிய
தினைமாவினையுந் துய்த்து, மான்றோலிற் றுயிலமர்ந்து, வைகறையிற் றுயிலெழுந்து,
மணங்கமழாநின்ற வகுள மார்பன் மெய்த்தமிழ் பாராட்டப்பட்ட கீர்த்தியையுடைய குருகாபுரியிடத்துப் பெருத்த
திரையையுடைய திருப்பாற்கடலின்கண் வானின் துச்சியைத் தைவருங் கொடுமுடியையுடைய வுதயகிரியிற்
கதிரோ னுதிக்குமுன்ன மெய்துவதே முறைமை யென்றவாறு.

மன்னும் ஓவும் அசை. பகுதி – இதுவுமது. துறை – நெறிவிலக்கு. பா-வெண்கலிப்பா.

22. ஏகவுவமை யென்பது உவமையும் உவமேயமுந் திணை பான் முதல் சினை பெயர் வினை யென்பன மயங்கா தொன்றாயிருக்கை :-

முற்றவுணர்த்துமுதுகாப்பியம்புணர்ப்பா
னுற்றவர்தங்கண்போன்றுறங்காவா–மிற்பிரிந்தா
னல்லியலார்வந்தனைசெய்நாவீறன்மால்வரைமேன்
மெல்லியலாரின்பவிழி. (191)
என்பது ஏகவுவமை. இதுவும் பூரணவுவமைப்பாற்படும்.

(இ-ள்) நெஞ்சமே ! நன்புலவ ரஞ்சலிசெய்யு நாவீறுடைய பிரான் வண்குருகூரினிடத்து மெல்லிய
சாயலையுடையா ரின்பவிழியானது இனிநாமிவரை யில்லின்கண்வைத்துப் பிரிவோமாகில் அறமுதலிய
நாற்பொருளு மலை கடனாடு முதலிய பதினெட்டு வருணனையு மொழிந்தனவுங் குறைவின்றி யுணர்த்தப்
படுவனவாகும் பெருங்காப்பியம் பாடுதற் குட்கொண்ட புலவர்கண்போலத் துயிலொழிந்ததோடும் துன்பவிழியா மென்றவாறு.

இது, கற்பினு ளில்வாழ்க்கையென்னும் பகுதிக்கண் பிரிந்து சேய்நாட் சென்று வந்து கூடிய தலைமக னவளுறுப்புக்களை
வேட்கை மிகுதியாற் புதுவது புதுவதாகப் பாராட்டத் தலைமக ளிஃதொன்றுடைத்தென வஞ்சியவழிப்
புணர்ச்சியந்தியத்துந் துயிலாததைத் துயின்று துயிலொழிந்தோன் தன்கட் பிரிதற்குறிப்புளதாகக் குறித்த
வேறுபாடெனக் குறிப்பானறிந்த தலைமகன் முன்னிலைப் புறமொழியாகத் தன்னெஞ்சிற் கவள்குறிப்பறிவுறுத்துவான்போல
வினி நின்னிற் பிரியேனெனப் பிரியாத தன்குறிப்பினைத் தலைமகட்கறிவுறுத்தல் கலி யுள்ளும்,
“மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட், பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற்,
றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள், கடிமனை காத்தோம்ப வல்லுநள் கொல்லோ” எனத்
தலைமகன் புணர்ச்சியந்தியத்துக் கனவினரற்றியதனைத் தலைவி துயிலொழிந்திருந்தவன் குறிப்புணர்ந்தனளென்பது முணர்க.
அன்றியும், கற்பினுட் குறிப்பறிவுறுத்த லென்னு மதிகாரத்தின்கண் வள்ளுவரும்
“கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க, ணுரைக்க லுறுவதொன் றுண்டு” என்னுங்
குறட்பாவினுட் டலைவன் றன்பிரியாமைக்குறிப்பினைத் தலைவிக் கறிவுறுத்தவாறுங் காண்க.
இதனுள், தலைவி இஃதொன் றுடைத்தென நாடின் மடனழிந்ததன்றோ வெனின்?
தலைவன்கட் டலைவி விரும்புதலா லதுவுங் கடனாயிற்று. என்னை?
“தன்வயிற்கரத்தலுமவன்வயின் வேட்டலு, மன்னவிடங்களல்வழியெல்லா, மடனொடுநிற்றல்கடனென மொழிப” என்னும்
பொருளியற்சூத்திரத்தா னுணர்க. முதுகாப்பியம் புணர்ப்பா னுற்றவர்தங் கண்போன் றுறங்காவா மென்றதனால் தோழி கூற்றன்று ;
தலைவன்கூற்றென வுணர்க ; என்னை? “இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரியரென், றவ்விடத் தவரவர்க் குரைப்பதை முன்னம்”
என்னுஞ் செய்யுளியற்சூத்திரத்தான், பெருங்காப்பிய வொழுக்கம் அறிவது பெண்டன்மைக் குரிமையன்மையி னுணர்க.
இங்ஙனங்கூறிய விலக்கணங்க ளிறந்தவற்றிற்கு மினிமேல்வருவன வற்றிற்கு மிலக்கணமென வுணர்க.

23. மாலையுவமை யென்பது ஒருபொருட்குப் பலவுவமை வந்தா லவை யொன்றோடொன் றிடைவிடாது
தொடர்ச்சியுடையனவாகப் புணர்த்துக் கடைக்கட் பொருளை வெளிப்படையாகக் கூட்டி முடிப்பது :-

பாற்கடலுண்மால்போலவன்மார்பிற்பைந்தொடிபோற்
கோற்றொடியுட்கொண்டகுணமேபோ–னூற்கடலாய்ந்
தாமாறுணர்ந்தாரறம்பயின்றநாவகலா
பாமாறன்சொன்னதமிழ்ப்பா. (192)
இது மாலையுவமை. அறம்-வேதம். உட்கொண்டகுணம் – கருணை. துறை-பனுவல்வாழ்த்து.

தென்னரங்கனுந்திச்செழுமலர்போலம்மலருண்
மன்னுமயன்போலயன்மனத்து–ணன்மறைபோ
னீங்காதொருபொழிற்கண்ணோவியம்போனின்றதொன்று
பாங்காகக்கண்டனன்வெற்பா. (193)
இதுவுமது.

(இ-ள்) வெற்பனே ! திருவரங்கேச னுந்தித்தாமரைபோலவும் அத்தாமரையுள் வைகும் பிரமனைப்போலவும்
பிரமன்மனத்துட் குடி கொண்ட நல்ல சுருதிபோலவும் ஒருபொழுதும் நீக்கமின்றி நீகூறிய
பொழிற்கண் ணோவியம்போனின்றதொரு பெண்ணுருவத்தைக் காவின தொருபக்கமாகக் கண்டன னென்றவாறு.

ஓவியம்போனின்ற தென்றான் உயிர் நின்னிடத்தும் உடலங்கு மாக நின்றதென்பது தோன்ற.
ஒருபக்கத்தேநின்ற தென்றான் ஆயத்தை நீங்கிநிற்பதுதோன்ற. பகுதி- பாங்கற்கூட்டம். துறை-பாங்கன் கண்டமைகூறல்.

24. அந்தாதியுவமை யென்பது ஒரு செய்யுளகத்துப் பல பொருட்குப் பலவுவமை வந்தான் முதலே
யுவமஞ்செய்த வுவமேயப் பொருட்பெயரினை யாகுபெயராதல் அன்மொழித்தொகைப்புறத்துவந்த
பெயராத லாக்கித் துணித்துநிறீஇ யவ்வுவமேயப்பெயரினை யந்தாதித் துவமானப்பெயராக்கி
யுவமவுருபுகொடுத்துப் பின்ன ரதன்மேல்வரு முவமேயப்பொருளோடு புணர்த்து நிகழ்த்துவது :-

குருமணிகுயின்றபொற்குடமெனத்தகைசால்
பருமணிவடந்தோய்ந்தெழுதருபணைமுலை
முலையெனப்பொடித்ததாமரைமுகைமுகைநெகிழ்
பொழுகுதண்ணறவெனவுறுநர்நன்மார்பத்
திழுகுமான்மதமளாயெழுபுனற்சங்கணித்
துறைவளங்கெழீஇயதொன்மைசான்மரபி
னீங்கிதுபுவனம்யாவையுந்தழைத்தற்
கோங்கியவிராமாநுசமுனியிருக்கை
யாங்கதுதருமமோர்படிவமுற்றனைய
பாங்குறுசக்கரபாணிபேர்புனைபதி
மழைகிழித்தெழுந்தபொன்மாளிகைச்சூளிகைத்
தழைதுகிற்கொடித்திரடாமவெண்மதியகட்
டுறுமறுத்துடைத்துவானொரீஇநுடங்கூங்குது
முருகார்மொய்ம்மகிழ்மாறன்
குருகாபுரியெனக்கூறுநன்னகரே. (194)
இஃது அந்தாதியுவமை. இதனுள், பணைமுலை யென்பது பணைத்த முலையினை யுடையாயென
வினைத்தொகைப்புறத்துவந்த வன் மொழித்தொகைப் பெயராய் அண்மைவிளியேற்றுத் துணித்துநிறீஇய வாறும்
முலையென வருபெயரினை யுவமானப்பெயராக்கி, யுவமவுருபு கொடுத்துப் பின்ன ரதன்மேல்வருந் தாமரை
முகையென்னு முவமேயப் பொருளோடும் புணர்த்தலுங் காண்க.
முகை நெகிழ்பு – முகைநெகிழ்ந்து. ஒழுகு தண்ணறவென – ஒழுகு தண்ணறவுபோல.
வுறுநர் – தன்னிடத்திலே பரிசிப்பார். இழுகுமான்மதம் – பூசுங் கத்தூரி.
அளாயெழுபுனற் சங்கணித்துறை – கலந்தோடும் புனலையுடைய திருச்சங்கணித்துறை.
ஈங்கிது வென்றது தமக்கு முன்னானவிடத்தை. ஆங்கது வென்றது தமக்குச் சேய்த்தானவிடத்தை.
ஊங்குது வென்றது இரண்டிற்கும் நடுவான விடத்தை. தாமவெண்மதி – ஒளியையுடைய மதி. ஒழிந்த வகல முரையிற் கொள்க.

அஃதேல், “அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே” எனத் தொல்காப்பியனா ரிதனைக்கூறி மறுக்கவும்
இங்ஙனங் கூறுமது மாறுகொளக் கூற லென்னுங் குற்றமாம் பிறவெனின், ஆகாது ; என்னை?
அஃ தொருபொருளோ டொருபொருளை யுவமித் ததற் குவமவுருபுகொடுத்துப் பிறிதொருபொருளை யுவமித்தல்.
அதற்குச் செய்யுள், “மதியத் தன்ன வாண்முகம்போலும், பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை” என்பது ;
மதியத்தன்ன வாண்முகத்தை யொக்கும் தாமரை யென்றமையின் அவை யொன்றினோடொன்று பொருந்தாதென்பதுகருதி மறுத்தார்,
இஃதன்னதன்று. என்னை? பருமணிவடந்தோய்ந் தெழுதரு பணைமுலையினையுடையாயெனத் துணித்துக்கூறினமையா னென்றுணர்க.
“ஈர்ந்து நிலந்தோயு மிரும்பிடித் தடக்கையிற், சேர்ந்துடன் செறிந்த குறங்கினள் குறங்கென,
மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவென” என்பதுபோலக் கூறினாரென்க.
பகுதி-உடன்போக்கு. துறை-பதிபரிசுரைத்தல். பா-நேரிசையாசிரியப்பா.

25. பொதுநீங்குவமை யென்பது உவமையைக் குறிப்பினானாதல் வெளிப்படையானாதல் கூறி
மறுத்துப் பொருடன்னையே பொருட் குவமையாக்கி யுரைப்பது :-

முற்குணத்தான்மாதர்முலைப்பாலருந்தாத
நற்குணத்தால்வேதமொருநான்கினையுஞ்–சிற்குணத்தா
லோதாதுணர்ந்துணர்த்துமுத்தமமாறற்கிணைபார்
மீதார்மனனேவிளம்பு. (195)
இது குறிப்பால் வந்த பொதுநீங்குவமை. இதனுள், மனனே விளம்பென்பது மரபுவழுவமைதி ; என்னை?
நாவாகியபொறியினது கிரியையை அந்தக்கரணத்தின்மேலேற்றி யதனைக் கூறுக வென்றதனால்.
நாவாகிய பொறிக்குச் சொற்கிளத்தலுஞ் சுவையறிதலுமாகிய இருதிறத்தனவா மவையிரண்டு மந்தக்கரணங்கள்கூடாதே
யதற்குங் கூடாதாதலா னதனை யங்ஙனங் கூறப்பட்டது.
திணை – பாடாண். துறை – “அமரர்கண் முடியு மறுவகை யானு” மென்பதனான் முனிவர்வாழ்த்து.

வாரியைமொண்டுண்டோன்வசிட்டன்முதலாய
சீரியரின்ஞானஞ்செறிந்ததாற்–காரிதருஞ்
சேயேயுடையநங்கைசெம்முலைப்பாலுண்ணாதாய்
நீயேநினக்குநிகர். (196)
இது வெளிப்படையாய்வந்த பொதுநீங்குவமை. துறை – இதுவுமது.

ஆகப் பலபொருளுவமைமுதற் பொதுநீங்குவமையீறாக வுவமவிரி யிருபத்தைந்தும் அடைவே காண்க.

102. சிறப்பினும்வரூஉந்திறமுமொன்றுளதே.
(எ-ன்) இஃதுவமவிரியு ளோதாததாகவொழிந்த தொன்றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைப் பிறிதொருபொருளாகச் சிறப்பித்துச் சொல்லுமிடத் துளவாய்வரூஉங் கூறுபாடு மொன் றுளதென்றவாறு.

சிறப்பென்பது ஒருபொருளையெடுத் ததற்குச் சிறந்த பல அடைகளையு முவமித் தவற்றானே யுவமையாக்கி யுரைப்பது.

நுண்டுகிற்கொடிகணுடங்குபுவளங்கெழு
வெண்பொன்மாளிகைசுலாம்வீதிதெண்டிரையெழும்
பாற்கடற்பரப்பதாய்வரிபலபயின்மதிண்
மேற்படநிவந்துவிளங்குகோபுர
மைவாய்ச்சேடன்மண்டலித்தனனாகிப்
பைவாய்த்தலைநிமிர்பான்மையவாகக்
கருங்கடன்மொண்டெழுங்கருவிக்கார்மழை
யொருங்கதனனந்தலையுறப்படிந்ததொடு
மோங்குபொற்கம்பத்துச்சிமேலதனொளி
பாங்குறவுச்சியிற்பதிதருபானு
யோகநித்திரைகொளுமுரவோனுந்தியி
னேகதாட்டாமரைப்பொகுட்டிறைவனைநிகர்
சினகரக்குருகாபுரியினுட்செவ்வியி
னனவரதமுஞ்சராசரங்களாக
வுதிக்குமன்னுயிர்களையுவந்தே
துதிப்பர்நித்தியரெனத்துறவுளோரே. (197)
இது சிறப்புவமை. திணை – இதுவுமது. துறை – சினகர வாழ்த்து.

103. அடையொடுபொருட்கடைபுணர்க்குமஃதிரட்டை.
(எ-ன்) இதுவும் விரியுளோதாத வொழிபுணர்-ற்று.

(இ-ள்) அடையடுத்த முக்கியப்பொருட் கொப்புமை கூறும் ஒப்புடைப்பொருளிடத்து முக்கியப்பொருளி னடை
புலப்படப் புணர்ப்பது மிரட்டையுவமையா மென்றவாறு.

புணர்ப்பது மென்னு மும்மையால் ஒற்றைக்கிளவியும் இரட்டைக் கிளவிவழித்தாகிவருவன கொள்க;
என்னை? “இரட்டைக்கிளவி யிரட்டைவழித்தே” என்றாராகலின். உவமை யென்பது அதிகாரத்தாற் பெற்றது.

நறைமல்கியகொழுங்காவியைப்போனள்ளிரவினுநீ
டுறைமல்கியகண்டுயிலாமையன்பர்க்குரைக்கிலநான்
மறைமல்கியசெந்தமிழ்மாறன்வண்குருகூர்ப்பொருநைத்
துறைமல்குசேவற்சிறையிறைநீங்கிற்றுயரன்னமே. (198)
இஃ திரட்டையுவமை ; நறைமல்கியகாவிபோ லுறைமல்கியகண் ணென்பதா லறிக. மல்குதல் – பெருகுதல்.
உறை – துளி. இறை நீங்கில் – சிறிது நீங்கில். துயரன்னம் – துன்புறுமன்னம்.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – ஓதிமப்பெடையோடூடியுரைத்தல்.

ஊனூறியவிருகோட்டொருமாவையுறுபுனல்வன்
மீனூறுசெய்வதைத்தீர்த்தபிரான்வடவேங்கடத்திற்
றேனூறிலவிதழைக்கண்டபோழ்திலென்சிந்தையும்பர்
வானூர்மதிமுகத்தாளிதழாகமதித்திடுமே. (199)
இஃது ஒற்றைக்கிளவி யிரட்டைவழித்தாய்வந்த வுவமை ; இதனுள், தேனூறிலவிதழைக்கண்டபோழ்தெனக் கூறிய
வழிப் பானமூறுமித ழென்னாதே இதழென ஒற்றைக்கிளவியாய்க் கூறினமையா னென்றுணர்க.
பின்னர்வந்த விதழ் – அதரம். உம்பர் வானூர் மதிமுகத்தா ளென்பதன்கண்ணு மிவ்வுவமை வந்தவாறு காண்க.
அது, “கருங்கால் வேங்கை வீயுகு துறுக-லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை” என்னுங் பாட்டினுங் காண்க.
முன்னர்வந்ததற்கும் “பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்” என்பதனுட் காண்க.
பகுதி – இடந்தலை. துறை – புனங்கண்டுமகிழ்தல்.

104. உவமையுமுருபுந்தொடர்வழிப்பிறிதுமொன்
றுவமேயப்பொருட்கடைபுணர்ப்பதுமுள.
(எ-ன்) இதுவு மெய்தாத தெய்துவித்தது.

(இ-ள். ) ஒப்புடைப் பொருளொடு புணர்ந்த வுவமவுருபிற்குப் பின்னாகப் பிறிதுமோ ரொப்புடைப்பொருண்
முக்கியப்பொருட் கடையாக முன்னோராற் புணர்க்கப்பட்டுவருவது முளவென்றவாறு.
இஃ திலக்கியங்கண்டதற் கிலக்கணங் கூறியதெனவுணர்க.

அம்பனையவேற்கண்ணணங்காலறிவழிந்த
திம்பருனக்கெய்தியதாலெவ்வுளா–னும்பரெலாம்
போற்றவருண்மாலைப்போற்றார்போலாயினையான்
மாற்றமிதற்கென்னுரைக்கேன்மற்று. (200)
அம்பனையவேற்கண்ணென்றவழி யுவமப்பொருளின் துருபின் பின்னர் வேற்கண்ணென வந்தவாறு காண்க.
இதற்கு முன்னோர் கூறிய விலக்கியமாகக் கண்டன யாவையோ வெனின்,
“துப்புறழ் தொண்டைச் செவ்வாய்” எனத் திருத்தக்கமாமுனிகள் கூறிய சிந்தாமணியினும்,
“ஆம்பனாறுந் தேம்பொதி நறுவிரைத்-தாமரைச் செவ்வாய்” என்புழித்
“தேம்பொதிநறுவிரை யாம்பனாறுந் தாமரைச் செவ்வாய்” என இளங்கோவடிகள் பாடிய அந்தி மாலைச்
சிறப்புச்செய்காதையினுங் கண்டவை யென்றுணர்க.
இம்பருனக்கும் என்னு மும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை-பாங்கன்கழறல்.

105. மரபினும்வருவதோர்மரபுடைத்தென்ப.
(எ-ன்) இதுவு மெய்தாததெய்துவித்தது. இலக்கியங்கண்டதற் கிலக்கணங்கூறலு மாம்.

(இ-ள்) ஒருதொடர்பினு ளொருபொருட்காதல் பலபொருட்காதல் உவமைகூறுமிடத் துவமப்பொரு ளொருகுழுவினு ளொரு
மரபாகப் பலவுவமம்வருவது மரபுவமையா மிலக்கணத்தை யுடைத்தென்று கூறுவர் சான்றோ ரென்றவாறு.

செந்தாமரைவதனஞ்சேதாம்பல்வாய்நயன
நந்தாதசெங்குவளைநாடுங்காற்–கொந்தார்
வகுளம்புனைவார்வரைமயிற்குக்கஞ்ச
முகுளம்புணர்மாமுலை. (201)
இது மரபுவமை ; என்னை? கோடு கொடி நீர் நிலம் என்னும் நால்வகைப்பூக்களுள் நீர்ப்பூவாகிய குழுவுள்,
செம்மையென்னு மோரிலக்கணத்தனவாந் தாமரை யாம்பல் குவளை யென்னும் மூன்றினையும்
முகம் வாய் நயனம் முலை யென நான்கிற்கு மரபுபொருந்துவனவாக வுவமம்புணர்த்தலினெனக் கொள்க.
இதற் கிலக்கியங்கண்டதாவது :
“கடையாயார் நட்பிற் கமுகனைய ரேனை, யிடையாயார் தெங்கி னனையர்- தலையாயா, ரெண்ணரும்
பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே, தொன்மை யுடையார் தொடர்பு” என்பதனுள் ஓரினத்தனவாகிய
புறக்காழ்ப் புன்மரமேகூறி யொழிந்தமரங்க ளொப்பன வுளவாயினுங் கூறாராயினாராதலான் மரபுவமையாமென வுணர்க.
துறை – இயல்பிடங் கூறல்.

106.ஒத்ததுவென்றதென்றொருபொருட்குவமை
வைத்தனவாயொருதொடர்பினும்வருமே.
(எ-ன்) இதுவு மெய்தாத தெய்துவித்தது.

(இ-ள்) ஒருபொருட் குவமைகூறுமிடத்து ஒருபொருளை யொத்தது ஒருபொருளை வென்றது என்றிருபொருளைக்
குறித்தனவா யொரு செய்யுளகத்துவருவனவு முவமவிலக்கணத்திற்குக் கூடியும் நீங்கியும் வருமென்றவாறு :-

கூற்றுவன்வேல்போன்றுகுகன்வேலைவென்றுகொலை
யாற்றலுறும்வன்கண்ணமர்விளைப்பத்–தோற்றமுறுங்
கொல்லிப்பாவைக்கிணையாய்நின்றதெவன்கோகனக
வல்லிப்பாவைக்கிணையாவாய். (202)
இஃது ஒத்தது வென்றதென்றல். ஆற்றல் – பெருமை. தோற்றம் – பொலிவு.
கொல்லிப்பாவை – காமுகரைக்கொல்லும் பாவை. கோகனக வல்லிப்பாவை – திருமகள். பகுதி – இயற்கை. துறை – இரந்துபின்னிற்றல்.

தெண்ணறவைவென்றுதிரைத்தெள்ளமிர்தையொத்தமொழிப்
பெண்ணரசேமாதவன்றென்பேரைவாய்த்–தண்ணறும்பூக்
கொய்யாமலாயமுடன்கூடாமலூசலிற்றாள்
வையாமனின்றதென்னோமற்று. (203)
இது வென்ற தொத்த தென்றல். பகுதி – இதுவுமது. துறை – முன்னிலையாக்கல்.

107. ஏதுநுதலியமுதுமொழியினும்வரும்.
(எ-ன்) விரியுவமையினு ளின்னு மோ ரொழிபுணர்-ற்று.

(இ-ள்) அவ்வுவமை யேதுப்பொருளைக்குறித்துமுடித்தற்குப் பிறிதொருபழமொழியினும் வருமென்றவாறு.

பாம்புகடித்ததற்குத்தேளுக்குப்பார்ப்பதுபோ
லாம்புகழ்மால்கச்சியணிவரைவா–யாம்பகட்டா
லோடத்துணிந்தளித்தானுய்த்தநோய்க்கின்றுவெறி
யாடத்துணிந்தானறிவு. (204)

இஃது ஏதுநுதலியமுதுமொழியுவமை ; என்னை?
“நுண்மையுஞ் சுருக்கமு மொளியுடை மையு. மென்மையு மென்றிவை விளங்கத் தோன்றிக்,
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉ, மேது நுதலிய முது மொழி யென்ப” என்றாராகலின்.
இதனுட் குறித்தபொருண்முன்னரொரு முதுமொழியினை வைத்துப் பின்னர்த் தான்குறித்த பொருளை
வெளிப்படையாகவைத்தமையா னெனவுணர்க.
பகட்டாலோடத் துணிந்தளித்தானென்பது யானையைக்கண் டியாங்கள் பயந்தோடா நிற்ப அவ்வியானையையும்
பொருதற்குத்துணிந் திவளுயிரைத் தந்தானென்க. உய்த்தநோய்க்கு-தந்தநோய்க்கு.
வெறியாடத் துணிந்தான் என்பது இகழ்ச்சிக்குறிப்பு. அறிவென்ற தீண்டறியாமை.
“உழுத வுழுத்தஞ் செய் யூர்க்கன்று மேயக், கழுதை செவியறிந் தற்றால்-வழுதியைக், கண்டநங்
கண்ணீ ருகுப்பப் பெரும்பணைத்தோள், கொண்டன மன்னோ பசப்பு” என்பது மிது. துறை – வெறிவிலக்கு.

108. பிசியினும்புலப்படும்பெற்றியதாகும்.
(எ-ன்) இதன்முன்னர் விரியுவமையி னொழிபுகூறி யிதனுட் டொகையுவமையினதொழிபுணர்-ற்று.

பிசியென்பது நற்பொருள் ; என்னெனின்? “பிசியென்ப பொய்யுஞ் சோறும் பேசுநற் பொருளும்” என்பதனா லறிக.

(இ-ள்) பிசியென்ற இலக்கணத்தோடும் புலப்படு மியல்பினையு முடைத் தவ்வுவமை யென்றவாறு.

அஃதாவது உவமேயப் பொருட்குள்ள சினை வினை சார்பு முதலியன வுவமப்பொருட்கண் ணில்லையாயினும்
அவற்றை யதனோடு சார்த்தி யுவமப்பொருளொன்றனையுங்கூற வுவமேயப்பொருளு மேதுவு முவம வுருபும் விரிந்து புலப்படுதலாம்.

வருங்குன்றினைக்கடிந்தெம்மன்னுயிரைத்தந்தா
னிருங்கங்கணக்குன்றிருப்பப்–பெருந்தகைசால்
செந்தமிழ்மாறன்சிலம்பிற்சேய்நீநடித்தருந்த
வந்ததையானோதடுப்பேன்மற்று. (205)
இஃது ஒப்பொடுபுணர்ந்த வுவமத்தானுஞ் சார்பினானும் வந்த பிசியுவமை ; என்னை?
“ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானுந், தோன்றுவது கிளந்த துணிவி னானு, மென்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”
என்றாராகலின். இதனுள், வருங்குன்றினை யென்றது யானையை எனவும், இருங்கங்கணக்குன்றென்றது
சார்போடுந் தோளினை யெனவும் வினையானும் வடிவானும் சார்பானும் உவமவுருபுமுதலியனவு
முவமேயப்பொருளும் புலப்படுவதாயிற்று. ஒழிந்த அகல முரையிற் கொள்க. பகுதி – இதுவுமது.
துறை-களிற்றிடையுதவிக் கறத்தொடு நிற்றல்.

109. முக்கியப்பொருட்குமுக்கியப்பொருளுவமை
புணர்ப்பதுமுதன்மைப்புலனெறிவழக்கே.
(எ-ன்) இதுவு மொருவகையா மொழிபுணர்-ற்று.

(இ-ள்) உவமேயப்பொருட் குவமேயப்பொருள்களை யுவமமும் பொருளுமாக்கியச் செய்யுளகத் துரைப்பனவும்
புலவராற்றுவழக்கமா மென்றவாறு. இஃது இலக்கியங்கண்டதற் கிலக்கணங் கூறல்.

சீதரனேமுத்தனெனுந்தேற்றமுறச்சிந்தையினுட்
பேதமைபோலற்றபிறர்நசையும்–பாதகமாம்
பொன்றாவழுக்காறெனப்போயதுபுலமைக்
கொன்றாப்புறங்கூறலும். (206)
என்பது, நெஞ்சமே ! நாம் சீமந்நாராயணனே யகிலாண்டகோடி பிரமாண்டங்களையுஞ் சத்தாவரணங்களையும் பிரகிருதியையும்
கடந்து மேலாய விரசைக்கக்கரையா முத்தியைத் தருவதற்குரியனென்ப தாரியனா லுணர்ந்து அறிவுபிறந்தபின்னர்
நம்மிடத்து முன்பு நின்ற வறியாமை போல வகன்ற தொழிந்த அர னய னென்னு மிருவரைப்பற்றின பசையும் ;
அதுவுமன்றிப் பாதகத்திற் கேதுவா மழுக்காறகன்றதுபோ லகன்றது அறிவிற்குப்பொருந்தாப் புறங்கூறலும் ;
ஆதலாலினி நா மீடேறினே மென்றவாறாயிற்று.

திணை – பொதுவியல். துறை – முதுகாஞ்சி. எதிர்மறைகளை யுவமமும் பொருளுமாக்கிய திரண்டானும் பெறுதற்கு இலக்கியம்,
“இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங், கழிபே ரிரையான்க ணோய்” என்பதனாலறிக.

110.உருவகநிரனிறையதிசயஞ்சிலேடை
தற்குணந்தற்குறிப்பற்புதம்விரோத
மொப்புமைக்கூட்டமேதுவிலக்குடன்
மெய்ப்படவிரவுமேதகவுடைத்தே.
(எ-ன்) அவ் வுவமையலங்காரம் பிறவலங்காரங்களோடுங் கூடி வருமாறு கூறுகின்றது.

(இ-ள்) உருவகமுதலாக விலக்கீறாக மேற்கூறப்படும் பதினோரலங் காரங்களுடன் விரவிவரு மவ்வுவமையலங்கார மென்றவாறு.

மெய்ப்படவிரவும்-பொருள்பெறவிரவு மென்பதாம். மேதகவுடைத்து – பெருமையுடைத்து.

111.இவைதத்தமவிலக்கணங்களிற்றிறம்பா
துவமச்சொற்புணர்ந்திறினஃதுவமை.
(எ-ன்) இஃ தவ்வுவமையலங்காரம் பிறவலங்காரங்களோடுங்கூடி வருவதற் கோ ரறிகுறியுணர்-ற்று.

(இ-ள்) இவை-பதினோரலங்காரமும், தனக்குத் தனக்கு விதித்த விலக்கணங்களிற் குன்றா துவமவுருபுடனேகூடி
யுவமையந்தன்மை பெறமுடியுமாயி னவற்றை யவ்வவபெயரானே யுவமையென்று பெயர் கொடுத்து வழங்கப்பெறு மென்றவாறு.

பூந்தண்வகுளாபரணன்புயசயிலம்
வாய்ந்தவருவிவரைமானும்–பாய்ந்ததிரை
தங்கொலிநீர்வையந்தனைச்சூழிருடுரத்தும்
பொங்கொளிசேர்முத்தவடம்பூண்டு. (207)
இஃது உருவகவுவமை. இதனை முதனூல்செய்த தண்டியாசிரியர் உருவகத்தின்கண் ணுவமையுருவக மென்றார்.
அதற்குக் காட்டிய, “மதுமகிழ்ந்த மாதர் வதன மதிய, முதய மதியமே யொக்கும்” என்ற செய்யுளகத்
துருவகவாய்பாடாகவந் துவமவுருபோடிறுதலி னது பொருந்தாதாதலா னிவ ரதனை யுவமையி லுருவகவுவமையென்று
பெயர்கொடுத்ததே பொருத்தமென்றறிக.
பூந்தண் வகுளாபரணன்-பொலிவினையுங் குளிர்மையையுமுடைய மகிழமாலிகையை யாபரண மாகவுடைய மாறன்.
புயசயிலம் – திருப்புயங்களாகிய மலை வாய்ந்த – புலப்படுவதான.
அருவிவரைமானும் – நீரருவியோடுகூடிய வரையை யொக்கும். பாய்ந்ததிரை – பரந்ததிரை.
புயசயிலம் முத்துவடம்பூண்டதால் நீரருவியுடன்கூடிய மலையையொக்குமெனக் கூட்டுக. திணை – பாடாண். துறை – புயவருணனை.

மலைமதிதேன்மாறன்வரைவேல்விழியாண்
முலைவதனநண்பாமொழி. (208)
இது நிரனிறையுவமை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.

புருவநயனம்பொருசிலைவேல்போன்ற
திருமகணின்னோடுவரிற்செல்வா–கருவிளைமென்
பூநீனிறமாயன்புட்குழிசூழ்வாசமலர்க்
காநீர்த்தடமாங்கடம். (209)
இதுவுமது. இவையிரண்டும் பெயரொடுபெயர் நிரனிறையுவமை.
வாசமலர்க்காநீர்த்தடமாம் – பரிமள மலர்ச்சோலையும் வாவியும்போலக் குளிர்மையையுடையவாம் ;
கடம் – சுரம். நின்னொடுவருகி லவளுக்கெனக் கூட்டுக. ஒழிந்த வகல முரையிற் கொள்க.
பகுதி – உடன்போக்கு. துறை – ஆதரங்கூறல்.

காருலாவியகொழும்பொன்மணிமாடவெயிற்பிழம்புகதுவநாளு
மேருமால்வரையெனவேபொலிந்தபனிவரைக்குலங்கள்வேலைநீர்சூழ்
பாருமாடகநகரிற்சிறந்தவிறன்மதன்மகுடபந்திமானும்
வாருலாமுகிழ்முலைமங்கையருமலைமகள்குழுவின்வாழ்வார்மன்னோ. (210)
என்பது குணவதிசயவுவமை. திணை – பாடாண். துறை – நகர வாழ்த்து (குருகாமான்மியம்).

வார்செறிந்துகல்லாரமன்னியகலத்தவாய்த்
தார்செறிந்தவல்லியெழுதற்கிடமாஞ்–சீர்செறிந்த
நற்றிருமால்வைகியதென்னாகைத்தடமானு
முற்றிழையாண்முற்றாமுலை. (211)
இது செம்மொழிச்சிலேடையுவமை. தடத்திற்குந் தனத்திற்குஞ் சிலேடை.

(இ-ள்) தண்ணீர்பொருந்திச் செங்கழுநீரோடுங்கூடி யிடமகன்ற தாய்ப் பூநெருங்கின வல்லிக்கொடிகடோன்றுதற்
காகரமாந் தடத்தை யொக்கும், கச்சினதசத்தடங்கி மாணிக்கப்பூ ணிலைபெற்று மார்பிடத்த வா யொழுங்குசேர்ந்த
தொய்யிலெழுதுதற் கிடம்பெற்றன முற்றிழையா ளிளமுலையென்றவாறு.

பொலிவுகுடிகொண்ட நல்ல திருமால்வைகு மழகிய திருநாகைத் தடத்தை யெனக் கூட்டுக.
தடத்தின்மேற் சொல்லுங்கால், வார் – தண்ணீர். செறிதல் – பொருந்துதல். கல்லாரம் – செங்கழுநீர்.
மன்னி – கூடி. தார் – பூ. செறிதல் – நெருங்குதல். வல்லி – கொடி. எழுதல் – தோன்றுதல்.
இடமாம் – ஆகரமாம். தனத்தின்மேற் சொல்லுங்கால் வார்- கச்சு. செறிதல் – அடங்குதல். கல்லாரம் – மாணிக்கப்பூண்.
மன்னி – நிலைபெற்று. அகலம் – மார்பு. தார் – ஒழுங்கு. செறிதல் – சேர்தல். எழுதல் – எழுதுதல்.
இடமாம் – இடம்பெற்றதாம் என்க. பகுதி – பாங்கற் கூட்டம். துறை – செவ்விசெப்பல்.
பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தலுமாம்.

மான்மதங்கூர்வெங்களபமட்டிக்கமைந்துளவாய்க்
கானிலவாவாரநிழல்கைக்கொண்ட–ஞானமுனி
செஞ்சொற்றமிழ்மலயமேபோலுஞ்சீதரன்வாழ்
தஞ்சைத்திருமான்றனம். (212)
இது பிரிமொழிச்சிலேடையுவமை. இது மலயத்திற்குந் தனத்திற்குஞ் சிலேடை.

(இ-ள்) மயக்கத்தைத்தருங் கடமுண்டான வெம்மையைச்செய்யும் யானையும் பூவிற்றேனும் வைத்ததேனும்
நிறைந்துளவாய்க் காடாய இலவும் ஆச்சாவும் சேர்ந்த மலைப்பக்கங்கள் குளிர்மையைத் தன்னிடத்துக்கொண்ட
தமிழ்மலையை யொக்கும், கத்தூரிமிகுந்த விருப்பத்தைத் தருஞ் சந்தனச்சேற்றைப் பூசப் புளகித் திறுகிய
வலியையுடையவாய்ப் பரிமளநிலைபெற்று முத்தினொளியைத் தன்னிடத்துக்கொண்ட
புன மான்போலும் விழியையுடையாள்தனம் என்றவாறு.
ஞானமுனி செஞ்சொற் றமிழ்மலையை யெனவுஞ் சீதான்வாழ் தஞ்சைத் திருமான்றனமெனவு முன்னும் பின்னுங் கூட்டுக.
கூர் வெங்களபம் – வினைத்தொகை. ஏகாரம் – அசை. பொதியத்தின்மேற்சொல்லுங்கால் மால் – மயக்கம். மதம் – கடாம்.
கூர் – உண்டான. வெம்மை – வெப்பம். களபம் – யானை. மட்டு – பூவிற்றேன். இக்கு – வைத்ததேன் ;
“தேன், றுளியொடுமதுத்துளி”யென்றார் சிந்தாமணியினும். அமைதல் – நிறைதல். உளவாய் – உண்டாய்.
கான் – காடு. இலவு – இலவமரம். ஆ – ஆச்சாமரம். வாரம் – பக்கம். நிழல் – குளிர்மை.
முலைமேற்சொல்லுங்கால். மான்மதம் – கத்தூரி. கூர்தல் – மிகுதல். வெம்மை – விருப்பம். களபம் – சந்தனச்சேறு.
மட்டித்தல் – பூசுதல். மைந்து – வலி. கான் – பரிமளம். நிலவா – நிலைபெற்று. ஆரம் – முத்துவடம்.
நிழல் – ஒளி. கைக்கொண்ட வென்ப திருதலைக்கு மொருபொருள். இது பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

நடுக்கற்றறைவளத்தினன்பொருள்களெல்லா
மிடுக்கற்றுதவுமியல்சான்–றொடுக்கமற
வேய்ந்தமலையமெனவளர்கின்றான்பரன்சீ
ராய்ந்ததமிழ்மகிழ்மாறன். (213)
இஃது இருவகைச்சிலேடையும் விரவி யிரண்டுபொருளைக் கவிநாயகனுக் குவமையாக்கி யவற்றை யிரட்டுறமொழிந்து
மூன்றாவது கவி நாயகன்மேலுஞ் சிலேடை செல்வதாக வவனு மவைபோலிருந்தானென்னு மூன்று
பொருள்பயந்தசிலேடையுவமை. இது பொதியத்திற்குங் கடலுக்குங் காரிமாறப்பிரானுக்குஞ் சிலேடை.

(இ-ள்) அசைவற்றுப் பக்கப்பாறைகளின் வளத்தோடுங்கூடி நல்ல பொருள்களையெல்லாங் குறைவற்றளிக்கு
மியல்பமைந் தழிவின்றித் தகுதியடைந்த பொதியமலையொப்பெனவும் தழையாநின்றனன்.
மத்திமம் பாராகிய தறைவளத்தோடுங்கூடி நல்லபொருள்களையெல்லாங் குறைவறவளிக்கு மியல்பமைந்து
அழிவின்றித் தகவடைந் தழகிய வலையையுடைய கடலை யொப்பெனவுந் தழையாநின்றனன்,
அவன் யாரெனில் உண்மைநூல்களை யோதாதுணர்ந்து பிறர்க்குணர்த்தும் வளத்தினோடுங்கூடி
நல்லபொருள்களையெல்லாங் குறைவறவளிக்குந் தகுதியடைந்து பரத்துவ சொரூபரூபகுணவிபூதியாகிய
பொலிவினையாராய்ந்த திருவாய்மொழி யென்னுந் தமிழையுடைய திருமகிழ்மாறன் என்றவாறு.

மலயத்தின்மேற்சொல்லுங்கால், நடுக்கு – அசைவு. அற்று – இன்றி. அறை – பாறை. வளத்தின் – வளத்தோடுங்கூடி.
கடன்மேற்சொல்லுங்கால், நடு – மத்திமம். கற்றறை – பாராகிய தறை. வளத்தின் – வளத்தோடுங்கூடி.
மாறன்மேற் சொல்லுங்கால், நடுக்கற்று-உண்மைநூல்களை யோதாதுணர்ந்து. அறை – உணர்த்தும்.
வளத்தின் – வளத்தோடுங் கூடி என்க. எல்லாம் – முழுதும். இடுக்கு – குறைவு. அற்று – இன்றி.
உதவும் – அளிக்கும். இயல் – இயல்பு. சான்று – அமைந்து. ஒடுக்கம் – அழிவு. அற்று – இல்லையாக, என்க.

இப்பாட்டினுள் “வளத்தி னன்பொருள்களெல்லா மிடுக்கற்றுதவு மியல்சான் றொடுக்கமற வேய்ந்த” வென்னுந்
துணையு மூன்றுபொருட்கு மத்தச்சிலேடை யொன்றாய்நின்றன. அவற்றுள்ளும் பொருளென்பது
பலபொருளொருசொல்லாதலின் மலை முதலிய மூன்றுபொருட்கு முறை முறையே
சந்தனம் அகில் குங்குமம் தக்கோலம் ஏலம் இலவங்கம் சாதிக்காய் தேன் என்பனவும் பிறவும், சங்கு முத்து பவளம் என்பனவும் பிறவும்,
சித் தசித் தீச்சுர மென்பனவுமாம். இதனுள், ஏய்ந்தமலைய மெனநின்ற பெயரெச்சவாய்பாட்டைக் கடலைக்கூறுமிடத்து
ஏய்ந்து என வினையெச்சவாய்பாடாக நிறுத்தி அம் அலையென்பவற்றை இடையில் ஏற்பன வந்தனவாக
வளர்கின்றா னென்னுந் தன்னெச்சமான வினையோடுங் கூட்டுக.
பரன்சீராய்ந்த தமிழ் என்பது காரண காரிய மயக்கம். திணை – பாடாண். துறை – செந்துறைப்பாடாண்பாட்டு.

பெற்றாளிகழவளர்த்தாளிடர்செயப்பேர்த்துறவொன்
றற்றாகமெங்குங்கருகியும்வாய்விட்டாற்றுமந்தோ
பொற்றாமரைக்கண்ணன்விண்ணோர்பிரான்புட்குழியில்வஞ்சங்
கற்றார்பொருட்பிரிவுற்றிடைவேனிற்கருங்குயிலே. (214)
இஃது அத்தச்சிலேடையுவமை. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – குயின்மேல்வைத்துக்கூறல்.
சொற்பொருள்காரணமாகவும் உவமைபிறக்கும் ; அவை முன்னர்க்காட்டுவது மென்றாம் ; அவை யிவை யெனவுணர்க.

அறிவுடையார்தத்துவநுண்பொருளுரையாய்ந்தறிகழகத்
தறிவொன்றில்லா
வறிதுடையாரடைதரிற்சிற்குணத்தினராய்த்தலைப்படுமவ்
வாழ்வுபோல
வெறிவரிவண்டுளர்நறுமென்சந்தனப்பூம்பொதும்பரிடை
விராயவேனை
முறிபடுதண்சினைவெளிற்றுத்தாருவுமாங்கதிற்கமழு
முதன்மைத்தாமே. (215)
இது தற்குணவுவமை. துறை – பருப்பதவாழ்த்து.

சிலைவணக்குந்திருநுதலார்சிற்றிடையைவணக்கியவச்
சிறுமைநோக்கி
முலைவணக்கஞ்செய்ததுபோன்முதுக்குறைவந்தடைந்துபொறை
முதிரநோன்றா
ணிலைவணக்கங்கொண்டதுகண்டீன்றதாய்சுமந்திறுத
னெறித்தன்றென்றே
தலைவணக்கங்கொண்டுகதிர்நிலமகட்கேசரணமெனச்
சாய்ந்தமன்னோ. (216)
இது தற்குறிப்பேற்றவுவமை. நாடுவாழ்த்து. (இவையிரண்டுங் குருகாமான்மியம். )

கொடிமேல்வளருமிருகுன்றுமுளவென்னும்
படிமேதகப்பணைத்தபாவாய்–வடிவேற்கட்
பொற்றொடிக்கைப்பூமகள்கோன்புத்தூர்வரைமடமான்
சிற்றிடைமேற்கொங்கைத்திரள். (217)
இஃது அற்புதவுவமை ; என்னை? குன்றின்மேற் கொடிவளர்வதல்லது கொடிமேற் குன்று வளர்வதின்று,
ஆதலான் அற்புதவுவமை. அற்புதமென்பது ஆச்சரியம். பகுதி – சேட்படை.
துறை – பாங்கிக் கவயவங்கூறல். பாங்கன் செவ்விசெப்பலுமாம்.

மின்னுமரவும்விளங்கிழாய்நின்னிடையும்
பன்னுதமிழ்மாறன்பனிவரைவா–யுன்னில்
விருத்தமுளவாயிருப்பமெய்யுவமைக்கென்னோ
பொருத்தமுடைத்தென்னும்புவி. (218)
இது விரோதவுவமை. பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந் துரைத்தல்.

எப்பொருளுங்கோதற்றிசைக்குமறையம்மறைபோன்
மெய்ப்பொருளெல்லாஞ்சொலுநின்மெய்த்தமிழு–முப்பொருளு
மாசின்றுணர்த்துமயனயன்போன்மாறாநீ
யாசின்றுணர்த்துமவை. (219)
இஃது ஒப்புமைக்கூட்டவுவமை. எப் பொருளு மென்பன :-
“மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையும்” என்பனவாம்.
முப்பொருளும்…… உணர்த்தும் என்பது அங்ஙன முதலிற் கூறிய மறை, அரி அயன் அரனென்னுமவர்
மூன்று பொருளாய் முக்குணமாய் மூன்றுதொழிலா யிருக்குமெனக் கூறியவண்ணமே குற்றமின்றி யுணர்த்து மென்பதாம்.
இன்றியென்னும் வினையெச்சவாய்பாட்டிகரம் இன்று என உகரவீறாயிற்று ; என்னை?
“அன்றி யின்றியென் வினையெஞ் சிகரந், தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே” என்றாராகலின்.
அவற்றை யென்பது அவையென இரண்டாவ திறுதியிற்றொக்கது.
கோதற்றென்பதனைக் கோதறவென்றாக்குக. முன்னது – பனுவல்வாழ்த்து. பின்னது – இயன் மொழிவாழ்த்து.

மாடசூளிகைக்கொழும்பொற்றகட்டமைத்தமுழுமணிவால்
வயிரநீலம்
பாடல்சால்பசுமணிபொன்னிறப்புருடராகமிவை
பத்திவாய்ந்து
கோடலால்வளந்தருசெங்கேழ்கிளர்மாண்செக்கரொடுங்
குறைவொன்றில்லா
வாடகாசலக்குடுமிவளைத்தெழுமிந்திரதனுவொத்
தவிர்வதொன்றே. (220)
இஃ தேதுவுவமை. துறை – நாடுவாழ்த்து.
(குருகாமான்மியம். )

பூரணமாங்கண்மலர்க்கும்புத்திக்குந்தித்திக்குங்
காரணத்ததாமோகடலமிர்தந்–தாரணிமேற்
கன்னியிடத்தார்பரவக்காகோதரத்துவளர்
பொன்னியிடத்தாரமுதைப்போல். (221)
இது விலக்குவமை. துறை – கடவுள்வாழ்த்து.

அளிமருவும்பொற்காவகமணந்துஞ்சங்க
வொளிமருவுநீணிதியுட்கொண்டும்–விளிவில்லா
நன்னரங்கவீடருளநாடாதருளரங்கன்
றென்னரங்கநேர்வரும்புத்தேள். (222)
இதுவும் விலக்குவமை.

(இ-ள்) அளிமருவும் பொற்கா- கொடையைப்பயிலும் பொற்சொரூபமான கற்பகக்கா. மணந்து – குடிபுகுந்து.
சங்கவொளி மருவு நீணிதி – சங்கநிதி. திருவரங்கத்தின்மேற் சொல்லுங்கால். வண்டு பொருந்திய பொலிவையுடைய சோலைகள்.

(மணத்தல்-) பரிமளங்கூர்தல். சங்கவொளிமருவுநீணிதி – பாஞ்சசன்னியத்தைத்தரித்த அன்பர்க்கழியாவைப்பாகிய அரங்கநாதன்.
நன்னர் – நன்மை. வீடு – பரமபதம். நாடாது – ஒவ்வாது ; அப் பரமபதத்தைக்கொடுக்கப் புத்தேள் நினையாது.
திருவரங்கம் பரமபதங்கொடுக்கு நினைவுள்ளதா மாதலாற் புத்தேளைத் திருவரங்கத்துக் குவமைகூறுவது பொருந்தாதென விலக்குக.
நேர் வரும்புத்தேளென்பது இகழ்ச்சிக்குறிப்பு ; எதிர்மறையு ளடங்கும். இங்ஙன முவமையைக் கூறிவிலக்குதலால் விலக்குவமையாயிற்று.

இதனுள்ளுஞ் சிலேடை விரவிற்றேனும் வீடருளநாடாதென்பதனால் விலக்குவமையென்பதே நோக்கம்.
தண்டியாசிரியரும் “குழை பொருது நீண்டு குமிழ்மேன் மறியா, வுழைபொருதென் னுள்ளங்கவரா” வென்னும்
விலக்குவமையினுஞ் சிலேடைவிரவியதூங் காண்க. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.

ஆக உருவகவுவமை முதலாக விலக்குவமை யீறாகப் பதினொன்றும் அடைவே வந்தவாறு காண்க.

112.சிறப்பிற்றீர்ந்தசெய்கையவாகி
யிறப்பவுயர்த்தலிழித்தன்மிகுத்தல்
குறைத்தல்பான்மாறுதல்கொள்கடனிலவே.

(எ-ன்) உவமைக்குக் கூறிய பொதுவிதிச்சூத்திரத்துட் பெருமையுஞ் சிறுமையும் பெற்றியிற்சிறந்து மென்பதற்குச்
சிறப்பிற்றீர்ந்துவருவனவாய்க் கடியப்பட்டன முன்னர்க் கூறப்படுமென்றா மவையிவை யென்ப துணர்-ற்று.

(இ-ள்) ஒன்றினை யுவமிக்குங்காற் சிறப்பினைநீங்கியசெய்கையை யுடையவா யிறப்பவுயர்ந்த வுவமேயத்திற்
கிறப்பவிழிந்த வுவமானத்தினை யுவமித்தலு மிறப்பவிழிந்த வுவமேயத்திற் கிறப்பவுயர்ந்த வுவமானத்தினை
யுவமித்தலு முவமேயவடைக் குவமானவடை மிகப்புணர்த்தலு முவமேயஅடைக் குவமானவடை குறையப் புணர்த்தலும்
ஆண்பாற்குப் பெண்பா லுவமித்தலும் பெண்பாற் காண்பா லுவமித்தலும் ஒருமைப்பாற்குப் பன்மைப்பா லுவமித்தலும்
பன்மைப்பாற் கொருமைப்பா லுவமித்தலும் பெரியோ ராமெனக்கொள்ளுங் கடனிலவா மென்றவாறு.

ஆனையெருத்தமகழ்வான்வெரினேய்க்கும்
பூனையிடியேறுபோன்முழங்கு–மூனை
யயிலரியேறன்னாளிவளிவடன்னாசி
பயிலணிதாராகணமொப்பாம். (223)
இதனுள், இறப்பவிழிந்த அகழ்வான்வெரினை யிறப்பவுயர்ந்த யானையின்முதுகிற் குவமைகூறியதூஉம்,
இறப்பவிழிந்த பூனைமுழக்கிற்கு இறப்பவுயர்ந்த இடியேற்றின்முழக்கை யுவமைகூறியதூஉம், அரியேறாகி
யிறப்பவுயர்ந்த வஃறிணையாண்பாலை யுயர்திணைப் பெண்பாற் குவமைகூறியதூஉம்,
நாசியாபரணமான முத்தினொருமைக்குத் தாரா கணப் பன்மையை யுவமைகூறியதூஉம் வழுவாயிற்று.

பைங்குவளைமுல்லைபனிவண்டுலாங்குமுதந்
திங்களிடத்தாயினபோற்செவ்விதரு–மிங்கிதமே
கற்றமர்கூர்கண்ணகைவாய்காமுறவாழ்வெய்தியவிம்
முற்றிழையாள்சோதிமுகம். (224)
இதனுள், உவமானமான குமுதத்துட் புணர்த்த வண்டிற் குவமேயமின்றி யுவமான அடை மிகுந்து வழுவாயிற்று.

தேனருவிநீரருவியோடேசிறந்துளநற்
றானவடமேருவெனுஞ்சால்பிற்றே–மானனையார்
சித்திரப்பொற்கச்சணிந்துசெய்யமணிவடமு
முத்தவடமும்பூண்முலை. (225)
இதனுள், பொற்கச்சணிந்தென்னு முவமேயவடைக் குவமான வடை குறைந்து வழுவாயிற்று. பொற்கச்சு – பொன்னெழுத்துக்கச்சு.

நமன்மடந்தையன்னானிவனிவன்றன்னாரி
சமனனையளீங்கிவர்க்குத்தையா–லமர்புதல்வ
ரெண்ணிருவர்க்கொப்பாகுமன்றேயமன்சமரிற்
பண்ணமைத்தாங்கேறும்பகடு. (226)
இதனுள் உயர்திணையாண்பாற் குயர்திணைப்பெண்பாலு முயர்திணைப் பெண்பாற் குயர்திணையாண்பாலும்
உயர்திணையாண்பாற்பன்மைக் கஃறிணையாண்பாலொருமையுஞ் சிறப்பிற்றீர்ந்தனவாய் வழக்கின்றாய்க் கூறுதலால் வழுவாயிற்று.

வாலிலாச்சம்புவெனவாழ்மதங்காவந்ததற்குப்
பாலிலாவுண்டிபடையேமான்–மேலுமக்குக்
கூகைக்கறியிலையேகோதிலாத்தேனுடனே
பாகைச்சொரிந்தென்பயன். (227)
இதனுள் இங்ஙனம் வாலிலாச்சம்புவெனப் பழித் துவமைகூறுதல் வழுவன்று. சம்பு – நரி.
பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – பாணனைப் பழித்தல்.

113.பொதுவினுஞ்சிறப்பினும்புணர்ந்துளவாகி
யிதுவழக்கிதுசெயுளெனுமீரிடத்தும்
வெளிப்படைகுறிப்பெனவிழுமியநெறியாற்
கொளப்படுமுவமவுருபினைக்கூறி
னன்ன போல வனைய மான்
வென்ன நேர விறப்ப நிகர்ப்ப
நாட நளிய நடுங்க நந்த
வோட வொன்ற வொடுங்க வொட்டக்
கள்ளக் கருதக்காட்டக் கடுப்ப
வெள்ள விழைய வெதிர வேய்ப்ப
மருள மலைய மாற மதிப்ப
வென்ற வந்த வேர வேய
வாங்க வொப்ப வமர வியையப்
புல்ல வுறழப் புரையப் பொருவ
வனை துணை கெழு வீழ்தழை செத்தற்றணி
யென்றிவைநாற்பானெட்டும்பிறவு
மொன்றியதிறத்தாலொழுகுதலுளவே.
(எ-ன்) இஃ துவமேயத்தினையு முவமானத்தினையு மொப்புமைப் படுத்துங்கா லிடையினு மீற்றினும்
வரு முவமவுருபினை யினைத்தெனக் கூறுத னுதலிற்று.

(இ-ள்) கொள்ளப்படு முவமவுருபினைக்கூறின் என்பது இது வினைப்பாலுவமம் இது பயனிலையுவமம்
இது மெய்ப்பாலுவமம் இஃ துருவினுவமம் என நால்வகைத்தாக மனத்தான் மதித்துக்கொள்ளப் படுதலையுடையவாய்ப்
பொதுவானுஞ் சிறப்பானும் பொருந்துவதுளதாயிது வழக்கிட மிது செய்யுளிடமென விரண்டிடத்தினோடுங்கூடி வெளிப்படை
குறிப்பென வருஞ் சொற்களுக்கு வரையறைகூறின் அவை, அன்ன போல வென்பன முதலாக அற்று அணி யென்பன வீறாக
வெண்ணப்பட்ட நாற்பத்தெட்டும் பிறவுமாகிப் பொருந்துங் கூறுபாட்டா னொழுகலாறுடைத்தா மென்றவாறு.

பிறவுமென்பதனால் எடுத்தோதினவேயன்றி வெல்ல, வென்ற, வியப்ப, ஒத்த, ஒக்கும், தகைய, தகைப்ப, பொற்ப, காய்ந்த,
நோக்க, மருளும், புரையும், துலை என்றற் றொடக்கத்தனவும், ஐந்தாம்வேற்றுமை யுருபாய்வரும்
இன்னும், என, என்னென வரும் எச்சவாய்பாடுகளாய் வருவனவும், பிறவுங் கொள்க.
சொல்லினை யிரண்டு நாலு மயக்கம். இவற்றுட் பலவும் செயவனெச்சமாயவாய்பாட்டான்வந்தனவெனினும் போல
வென்னுஞ்சொல் புலிபோலவந்தானென வினையெச்சவாய்பாட்டான் வினைகொண்டும்,
புலிபோலும்மறவ னென்புழியும் புலிபோன்ற மறவ னென்புழியும் பெயரெச்சவாய்பாட்டாற் பெயர்கொண்டும்,
புலி போன்மறவ னென்புழி யிடைச்சொல்வாய்பாட்டாற் பொதுவாயும் நிற்கும்.

இவ் வோதியவாய்பாடெல்லா நாக்குவமத்திற்கும் பொதுவென்ப தீண்டுக் கூறினார்.
இனிச் சிறப்புவகையா னுரியவாம்வகை, ஒல்காப் புலமைத் தொல்காப்பியனாரும், உவமவியலுள்
“அன்ன வாங்க மான விறப்ப, வென்ன வுறழத் தகைய நோக்கொடு, கண்ணிய வெட்டும் வினைப்பா லுவமம்,”
“அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும்,”
“எள்ள விழையப் புல்லப் பொருவக், கள்ள மதிப்ப வெல்ல வீழ, வென்றாங் கெட்டே பயனிலை யுவமம்,”
“கடுப்ப வேய்ப்ப மருளப் புரைய, வொட்ட வொடுங்க வோட நிகர்ப்பவென், றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம்,”
“போல மறுப்ப வொப்பக் காய்த்த, நேர வியப்ப நளிய நந்த வென், றொத்துவரு கிளவி யுருவி னுவமம்,”
“தத்த மரபிற் றோன்று மன் பொருளே” என்ற சூத்திரங்களா னுணர்க.

இவற்றுள், அணியென்பது முதலாய சிலவுருபுக ளீறுவிகாரப் பட்டுநிற்பனவு முள.
அஃதேல் அணி, வந்த, துலை என்னு முருபுகள் முன்னோர்கூறிய வுவமவுருபுத்தொகைச்சூத்திரங்களு ளில்லையாலோ வெனின்,
அவை “முலையணிந்த முறுவலாள்” எனவும்,
‘கயல்வந்த கண்ணியர்’ எனவும்,
“தோல்வி, துலையல்லார் கண்ணுங் கொளல்” எனவும் இலக்கியங்களுட் கண்டமையாற் காட்டியதெனக் கொள்க.
ஒழிந்தனவாய் மறைந்த வுவமவுருபுகட்கு மீண் டிலக்கியங் காட்டி லிறப்பப் பெருகும். அவைகட்கும் வந்தவழிக் கண்டுகொள்க.

2-வது உவமையலங்காரம் முற்றும்.

——————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–சிறப்புப்பாயிரம்–பொதுவியலுரை –ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

சிறப்புப்பாயிரம்

இனிச் சிறப்புப்பாயிரமாவது பதினொருவகைத்தாம். அவை வருமாறு.

60.எல்லைவழிநுதலியபொருள்யாப்பே
நூற்பெயர்நுவல்வோன்பெயர்காரணம்பயன்
காலங்கேட்போர்களனெனப்பதினொரு
பால்புணர்த்துரைப்பதுசிறப்புப்பாயிரம்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) எல்லையும், வழியும், நுதலியபொருளும், யாப்பும், நூற்பெயரும், நூனுவல்வோன்பெயரும்,
காரணமும், பயனும், காலமும், கேட்போரும், களனும் என்னும் பதினொருபகுதியாகச் சேர்த்துக் கூறுவது
சிறப்புப்பாயிரமா மென்றவாறு.

புணர்த்துரைப்பதென்ற விதப்பினால், நூல்செய்தோன் வழிபடு தெய்வத்தினையும்,
தெய்வமென்பதும் ஒன்றுளதென் றுண்மையுணர்த்திய அவனது ஞானாசாரியனையும்,
அவன்றாதையையும், குலத்தினையும் பதியினையும், அப்பாயிரத்துட் கூறுவதும் வரலாற்று
முறைமையினான் மரபெனக் கொள்க. எனவே பதினாறென்ப துட்கோள்.

இனிச் சிறப்புப்பாயிரத்தினதிலக்கணஞ் செப்புமாறு :-

61.சிறப்பினதியல்பேதெரியினூனுதலிய
திறப்படுபொருளைத்தன்னகத்தடக்கி
யகவலின்வெள்ளையினறைவதொன்றாகும்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தி னிலக்கண முணர்-ற்று.

(இ-ள்) சிறப்புப்பாயிரத் திலக்கணத்தை யாராயுமிடத்துப் புலவனா லுரைக்கப்படும் நூனுதலிய பொருளை
யெல்லாங் குறிப்புரையானன்றி வெளிப்படையாக அடக்குவாய்செய்து ஆசிரியத்தானாதல் வெண்பாவானாதல்
கூறத்தகுவதொன்றா மென்றவாறு. சிறப்பென்ற தீண்டொன்றற்குரிய தென்பதாம்.

62.கலைகள்யாவையுங்கற்றுரைதெளிந்து
துலைநாச்சமனிற்றுணிநிலைபுரியும்
வாய்மையும்பிறர்க்கவைமயர்வறவளிக்குந்
தூய்மையுஞ்சான்றதுணையிலனெனினு
மொல்காப்பதினெண்ணுறுப்புடைநாற்பொருட்
பல்காப்பியம்பழிப்பறநவம்புணர்க்கவு
முத்தமிழ்க்கல்வியுமுத்தமவாக்கின்
வித்தகக்கவிதையும்வேண்டினனாகிலுந்
தற்புகழ்தலும்பிறன்றன்னையிகழ்தலும்
பொற்பலவாகும்புலனுடையோர்க்கே.
(எ-ன்) நூல்செய்தான் பாயிரஞ்செய்வானல்ல னென்பதுணர்-ற்று.

(இ-ள்) இலக்கண இலக்கியங்களை முற்றப் பாடம்போற்றி யுரையைச் சந்தயமறத் தெளிந்து
துலைநாப்போன்றும் துலாக்கோற்சமன் போன்று மையமுற்றபொருளை யையமறக் கேட்டோர்க்குணர்த்து

மொப்பிலாதானா மெனினும் எழுத்தாகிய வைந்திலக்கணங்களையும் பதினெட்டுறுப்போடு நாற்பொருள்
பயப்பதாய பெருங்காப்பியங்களையுங் குற்றமறப் புதிதாய்ப் பாடல்சான்றவனா மெனினுந் தன்னைப் புகழ்தலும்
பிறனொருவனை யிகழ்தலு முணர்வுடையோர்க் கழகல்ல வென்றவாறு.
இன்னும், “தோன்றாதோற்றித்துறைபலமுடிப்பினுந்தான்றற்புகழ்ந்தறகுதியன்றே” என்பதனாலுங் கொள்க.

63.பன்னருஞ்சிறப்புப்பாயிரம்பகர்வோர்
தன்னுயிர்பேணுஞ்சதிராசிரிய
னொருபுடைகற்றவுயர்மாணாக்கன்
றன்னொடுகற்றதலைமாணாக்க
னுரைகாரணனெனுமுரனுடையோரே.
(எ-ன்) பாயிரஞ் செய்தற்குரியோரை யுணர்-ற்று.

(இ-ள்) கூறுதற்கரிய சிறப்புப்பாயிரங் கூறுதற்குரியோரிந் நால்வரு ளொருவராமென்பது.
அந்நால்வருள்ளு மிப்பாயிரஞ்செய்தா ரிந்நூற் குரைசெய்த திருமேனி யிரத்தினகவிராயனென்றுணர்க.
நூலாசிரியர்க்கு மாணாக்க னென் பதனாலுமாம்.

‘உலகம்யாவையும்………. புலமையோனே’.
(எ-ன்) அலங்காரத்தினது பெருந்தன்மையு மிந்நூற்குச் சிறப்புப் பாயிரமு முணர்ற்று.

உலகம் யாவையு மென்பது முதல் வடவேங்கட மென்னு மத்துணையு மொருதொடர்.
இதனுள், உலகமென்பது “மூன்றுதலையிட்ட முப்பதிற்றெழுத்தி, னிரண்டுதலையிட்ட முதலா………
மெய்யேயுயிரென் றாயீரியல” என்பதனால் உயிர்முதன் மெய்யீற்றுமொழியாயிற்று.

உலகம் யாவையு மென்பது “உயிரிறுசொன்முன்னுயிர்வருவழியு, முயிரிறுசொன்முன்மெய்வருவழியும்………
மென், றாயீரியல புணர்நிலைச் சுட்டே” என்பதனாலும்,
“அவற்றுள், நிறுத்த சொல்லினீறா கெழுத்தொடு, குறித்துவருகிளவி முதலெழுத்தியையப், பெயரொடு
பெயரைப் புணர்க்குங்காலு…………. மூன்றே திரிபிடனொன்றே யியல்பென, வாங்கந்நான்கேமொழிபுணரியல்பே”
என்பதனாலும் இவை உயிர்முதன் மெய்யீற்றுமொழி நிற்ப மெய்ம்முதன் மெய்யீற்றுமொழி வரு மொழியாய்ப் பெயரொடு
பெயரைப் புணர்ப்பதாய் “வேற்றுமைமப்போய் வலிமெலியுறழ்வு, மல்வழியுயிரிடைவரினியல்பும்முள” என்பதனால்
அல்வழிக்கண் ணிலைமொழியீற்று மகரம் வருமொழி முதல் யகரத்தோடு புணர்ந் தியல்பாயது.

யாவையுமுறு வென்பது “புள்ளியில்லாவெல்லாமெய்யும்,………. ஆயீரியலவுயிர்த்தலாறே” என்பதனால்
அல்வழிக் கண் ணேனையுயிரோ டுருவுதிரிந்துயிர்த்தது. இது எட்டிறந்த பல வகையுட்கூட்டம்.

உறுபய னென்பது “மூன்றாறுருபெண்வினைத்தொகைசுட்டீ, றாகுமுகரமுன்னரியல்பாம்” என்பதனால்
வினைத்தொகை வாய்பாட்டு முற்றுகரத்தின்மேல் வருபகர மியல்பாயது.

பயன்விளையென்பது “ணனவல்லினம்வரட்டறவும்பிறவரி, னியல்பு மாகும்வேற்றுமைக்” கென்பதனால்
வேற்றுமைப்புணர்ச்சிக்கண் ணிடை யினம்வர னகார மியல்பாயது.

விளைப்பானென்பது “பெயரெச்ச வினையெச்ச வாய்பாடுகளும் பொருண்முடியுமாறறிந்து பகுதி விகுதி யாக்கி
யிடைநிலையும் வேண்டுழித் தந்துமுடிக்க” வென்பதனால் விளைக்கவேண்டி யென்னும் பொருண்மை
தோன்ற விளையென்னும் பகுதியை முதல்வைத்து அதன்மேல் “என்பவும்பிறவும், வினையின்விகுதி” யென்பவற்றால்
பானென்னும் விகுதியை நிறுவிப் “பவ்வமூவிடத்தைம்பாலெதிர்பொழு, திசை வினையிடைநிலை” என்பதனாற்
பகரவிடைநிலையை மிகுத்து முடிக்க

விளைப்பானல கென்பது “புள்ளியீற்றுமுன்னுயிர்தனித்தியலாது, மெய்யொடுஞ்சிவணுமவ்வியல்கெடுத்தே” என்பதனால்
னகரவொற்றியல் பாய்நிற்க வதன்மேல் அகரமேறி முடிந்தது. இதுவுங் கூட்டம்.

அலகிலென்பது “குற்றியலுகரமுமற்றெனமொழிப” என்பதனால் நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம்
புள்ளியீறுபோல வருமொழிமுத லிகரவுயிரேற இடங்கொடுத்தது. இம்மாட்டேற் றொருபுடைச்சேற லென்றுணர்க.
அன்றிக் குற்றியலுகர மழிந்ததெனிற் பொருள் வேறுபடும். அஃதுரையன்றென்க.
இது குறைவுங் கூட்டமு முடனொன்றியது. கருவி-அகக்கருவி. என்னை?
நிலைமொழியீற்றுகரம் வருமொழிமுத லிகரமேற இடங்கொடுத்தலா லென்றுணர்க.

அலகில்சோதியென்பது “அல்வழியெல்லாமுறழெனமொழிப” என்றாராகலின் லகாரம் அல்வழிக்கண் வல்லினம்வர வியல்பாயது.

சோதியணி யென்பது “இ ஈ ஐ வழியவ்வு” மென்பதனால் யகர வுடம்படுமெய் பெற்றது. இது புறப்புறச் செய்கை.

அணிகிள ரென்பது “அல்வழி இ ஐ முன்னராயி, னியல்பு மிகலும் விகற்பமுமாகும்” என்பதனால்
இகரவீற்று வருமொழி முதல் வல்லினம் அல்வழிக்கண் ணியல்பாயது.

கிளர்திரு வென்பது “ஆவியரழவிறுதிமுன்னிலைவினை, யேவன் முன்வல்லினமியல்” பென்பதனால்
வினைத்தொகைவாய்பாடு மேவல் வினைபோறலின் அல்வழிக்கண் ரகாரமுன் வல்லின மியல்பாயது.

திருவுரு வென்பது “ஏனையுயிர்வழிவவ்வு” மென்பதனால் வகர வுடம்படுமெய் பெற்றது. செய்கை – இதுவும் புறப்புறச்செய்கை.

இனி உலகம் என்பது பலபொருள்குறித்த ஒருசொல்லாயினு மீண்டுச் சிறப்புடையுயிர்கண்மே னின்றது.

உலகம் யாவையு மென்பது “பெயரினாகியதொகையுமாருளவே” என்பதனாலும்,
“காலமுலகமுயிரேயுடம்பே,… பால்பிரிந்திசையா வுயர்திணைமேன” என்பதனாலும்
ஆபல என்பதுபோலப் பிறிதோர்பயனோக்காது உயிர்களோ டமைந்து ஆகிய வென்னும் பண்புத்தொகைவாய்
பாட்டோடும் எல்லாமென்னு மஃறிணைப் பன்மைமுற்றுப் பெயர்ப் பயனிலைக் கொண்டது.
யாவையு மென்னும் பயனிலை தானே யெழுவா யுருபாகி மிகுந்த வென்னும் வினைத்தொகை
முதனிலையாய்த் தன்னெச்சமான வூதியமென்னும் பெயரோடும் வினையெச்சவாய்பா டேற்றது.

அலகில் சோதியென எண்ணையுணர்த்தும்பெயரொடும்புணர்ந் தாகிய வென்னும் பண்புத்தொகை
வாய்பாட்டான் வினையெதிர்மறுத்த பெயரெச்ச வினைக்குறிப்பு, தன்னெச்சமாகிய சோதியென்னும்
பெயரொடு முடிந்தது. “கோளில்பொறியில்”, “கோட்டமில்கட்டுரை” என்பனவுமிது.

சோதியணிகிளர்திருவுரு வென்பது உவமைத்தொகை, உம்மைத்தொகை, வினைத்தொகை யொற்றுமை நயம்
பெற்று மூன்றாவதன்றொகைப் புறத் தும்மைத்தொகையுமுற் றன்மொழித்தொகைப் பெயர்ப்பயனிலை கொண்டது.

உறுபய னென்பது உரிச்சொல்லடையோடுங் கூடிய பண்புப்பெயரெனினுமாம் ;
‘நள்ளிருட்கிடந்தேன்’ என்பதுபோலும். உறுபயன் முத்தி. அணி-கௌத்துவமணி. இவை ஆகுபெயர் ;
என்னை? “அவை தாந், தத்தம்பொருள்வயிற் றம்மொடுசிவணலும்” என்பதனா லறிக.
இனி, “எல்லாத்தொகையுமொருசொன்னடைய” என்பதனால் இம்முத லீரடியுள் உலகம் யாவையு மென்பது
இருமொழித்தொடர்த்தொகைச் சொல்.

உலகம் யாவையு மென்பது முதல் திருவுருவென்ப தீறாயின பன்மொழித்தொடர்த் தொகைச்சொல்.
அவற்றுள்ளும் அலகில் சோதி யணிகிளர்திருவுரு வென்பன அறுவகைத்தொகையு மோ ரள வடிக்கண்ணே யொருங்குதொக்கன.
என்னை? அலகிலவாகிய சோதி களி னொளியைப்போலு மொளியையுடைய வணியையுந் தழையாநின்ற திருவோடுங்கூடிய
திருமேனியையு முடையானெனத் தொகைதொடர்ந்து நிகழ்ந்தமையா னெனக் கொள்க.
அன்றியும், விளைப்பானென்பதனை யெடுத்தலோசையால் வினைப்பெயராக்கி யிருபெயரொட்டுப்பண்புத் தொகை
வாய்பாட்டான் உறுபயன் விளைப்பானாகிய திருவுருவெனினுமாம். வினைப்பெயர் முற்றாய்ப் பெயர்ப்பெயரே
போல வுருபேற்றலினெனக் கொள்க. இவ்விரண்டிற்கும் விளைப்பான்றிருவுருக் குடிபுகு வடவேங்கட மெனவும்,
விளைப்பானாகிய திருவுருக் குடிபுகும் வடவேங்கடமெனவும் முறையே தொடர்ப்படுத்து முடிக்க.
இச்செய்யுட்குப் புலவீர்கா ளென்னுந் தோன்றாவெழுவாயை முதலேவிரித் துரைநடையொட்டுக.
இவை யிரண்டுமன்றி விளைப்பான் என்பதனைப் படுத்த லோசையால் வினைப்பதமாக்கி,
உயிர்களெல்லா முத்தியை விளைக்கப் படுவா னென்றவ னலகில்சோதி யணிகிளர்திருவுருவெனத்
தன்னெச்சமான பெயர்கொண்ட முற்றாக்குதல் இச் சிறப்புப்பாயிரஞ் செய்தார் கருத்து.
இம் முற்றிற்கு அதன்பின்னர் அவன் என்னுஞ் சுட்டுப் பெய ரெஞ்சியதாக விரித்து மேல்வரும்
உணர்வுயிரென்பவற்றோடும் புணர்த்து அவன்குடிபுகும் வடவேங்கடமென முடிக்க.

இம் முதலீரடிக்கு மித்துணையும் எழுத்துச் சந்தி முடிவுஞ் சொன் முடிவும் விரித்தனம்.
இங்ஙனம் வகுத்தவற்றுள் இம்முற்றிற்குப் பொருள்கோள் – ஆற்றுநீர். பொருள் – புறப்புறம். திணை – வாகை.
துறை – அருளொடு நீங்கல். என்னை?
“ஒலிகடல்வையகத்து, நலிவு கண்டுநயப்பவிந்தன்று” என்னும் வெண்பாமாலையுள் வாகைத்திணையுளிறுதிச் சூத்திரத்தா னுணர்க.
யாப்பு- குறள்வெண்செந்துறை. அலங்காரம்- ஒருபொருட் கொன்றுபலகுழீஇய பல்பொருளுவமை.
மெய்ப்பாடு – கல்விபற்றிய பெருமிதம். பயன் – ஆதலான் முத்திவேண்டுகில் இக்காயமிருக்கப் பெற்றபொழுதே
இந்திரியங்களையடக்கி, மண் பெண் பொன் என்னும் பற்றினைவிட்டு, மனோ வாக்குக் காயங்களா லவனைச்
சிந்தித்தும் வாழ்த்தியும் வணங்குமின் ; பேரின்பம் பெறலாம் என்பதாம்.

இப்பாயிரச் செய்யுண் முதலீரடியையு மிங்ஙனம் பிரித்துச் சொல்லணிக்கட்காட்டிய பிறிதுபடுபாட்டாக்கியது
பஞ்சாதிகாரவிலக்கண நடைதழீஇய ஒருவகை விரித்துரைகாட்டுதற் கெனக் கொள்க.
இனி ஏனையடிகட்கெல்லாம் இவ்வாறு விரித்துரைப்பி னுரைபெருகுமாதலான் அவற்றிற் கிவற்றிற் சுருங்கக்
கூறுவதையுங் கற்றபெற்றி நற்குணனுடையோர் தெற்றென முற்ற வுய்த்துணர்க.

உணர்வுயிர்………. கவின்பதிநின்று மென்பது அவன் ஆயுவும், ஞானமும்போலத் தன்னுடன்
அளவளா யுத்தமராகிய நித்தர் கூட்டம் விட்டுநீங்காத அழகிய சுவணமயமாம் அந்தாமத்தின்கண்ணு
மவ்வுருநிலை பெற்றிருப்பதோடும் என்றவாறு. உணர்வுயிர்-உம்மைத்தொகை.
கணமகலாத வென்பதற்குக் கணப்பொழுதும் விட்டுநீங்காத வெனினுமாம். என்னை?
“ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்” என்றாராகலின். நித்தர் – அநந்த கெருட சேனாதிபதிமுதலியோர்.
அகலாதபொற்கவின்பதி என்பது “உருபும்வினையுமெதிர்மறுத்துரைப்பினுந்,
திரியாதத்தமீற்றுருபினென்ப” என்பதனால் எச்சப்பெயர் திரிபின்றி முடிந்தது.

உரவுநீர்வளைத்தவொன்பானுள்………. வடவேங்கட மென்பது கடல்சூழ்ந்த பூமியினிடத்துக்
கண்டமொன்பதினுள்ளுந் தென்றிசைக்கட் பரதகண்டத்துள் அந்தாமமாகிய அப் பழம்பழி
பூலோகவைகுண்டமானதென் றுயர்ந்தோர் கூறும்படிக்குக் குடிகொண்டுறையும் விசும்பைத் தொடவுயர்ந்த
சோலையையுடைய வடக்கின்கண் வேங்கடமு மென்றவாறு. உரவுநீர் வளைத்த வொன்பானென்பது
அடிப்பட்டபெய ரெஞ்சாது முதனின்று தொடர்ந்த பெயரெச்ச வாய்பாடு தன்னெச்சமான பெயர்கொண்டு முற்றியது.
அடிப்பட்ட பெயரெஞ்சியதாவது உண்டசாத்தன் என்பதற்கு அமுதுண்ட சாத்தன் என்றும்,
உண்டவமுதென்பதற்குச் சாத்தனுண்ட வமுதென்றும் முதலே நின்ற பெயராகிய அமிர்துஞ் சாத்தனும் எஞ்சிநிற்பது.
அஃதீண்டு யாண்டு விரிந்ததெனின்? உரவுநீர் அடிப்பட்டபெயர் ; வளைத்த வென்பது பெயரெச்ச வாய்பாடு ;
ஒன்பான் என்றது தன்னெச்சமான பெயர். ஆதலால் உரவுநீர் வளைத்த என முதலே எஞ்சாது விரிந்தமை காண்க.
இவை வினையெச்சத்திற்குமுள. அவையும் இம்முறையே காண்க.

உரவுநீர் – போக்குவரவு நீர். ஒன்பானுள் என்பது “ஒன்றுமுதலாகப் பத்தூர்ந்துவரூஉ, மெல்லாவெண்ணுஞ்
சொல்லுங்காலை, யானிடைவரினு மானமில்லை, யஃதென்கிளவியாவயிற்கெடுமே, யுய்தல்வேண்டும்பஃகான் மெய்யே”
என்றாராகலின், அஃதென்னுஞ் சொற் கெட்டுப் பகரமெய்நிற்ப வுருபு புணர்ச்சிக்கண் ணிடை ஆன்சாரியை பெற்றது.
ஒன்பானுட் டென்புல என்பது எட்டிறந்த பலவகையுட் டிரிந்ததன்றிரிபு.

கண்டத்துள் என்பது “மஃகான்புள்ளிமுன்னத்தேசாரியை” என்பதனால் அத்துச்சாரியை பெற்று,
“அத்தேவற்றேயாயிருமொழிமே, லொற்று மெய்கெடுதறெற்றென்றற்றே” என்பதனான் மகரங்கெட்டு
“அத்தினகரமகரமுனையில்லை” என்பதனால் அத்துச்சாரியை அகரங் கெட்டது.
அப்பழம்பதி என்பது “வினையெஞ்சுகிளவியு………. சுட்டினிறுதியு, மாங்கவென்னுமுரையசைக்கிளவியு,
ஞாங்கர்க்கிளந்தவல் லெழுத்துமிகுமே” என்பதனாற் பகரமிக்கது. வடவேங்கடம் வேற்றுமைத் தொகை.

இதன் பொழிப்புரை
புலவீர்காள் உயிர்கண்முழுதும் பெறுதற்கரிய முத்தியை விளைக்கப்படுவான் எண்ணிறந்த பலகோடியவா
மிள ஞாயிறுபோன் றொளியையுடைய கௌத்துவமணியையுந் தழையா நின்ற திருவோடுங்கூடிய
திருமேனியையு முடையான் அவனாயுவும், ஞானமும்போலத் தன்னொடு மளவளாய வுத்தமராகிய நித்தர்
கூட்டந் தனது காந்தியையுங் கருணையையுங்கண்டுங் கருத்துட்கொண்டும் விட்டு நீங்கா தழகிய
சுவணமயமாகிய அந்தாமத்தின்கண்ணும், அகிலபூரணனாகி நிலைபெற்றிருப்பதோடும்
கடல் சூழ்ந்த பூமியின்கண்ணவாங் கண்ட மொன்ப தென்றவற்றுள்ளும் பரதனாற்பெயர்பெற்ற கண்டத்தினுட்
பழம்பதி பூலோக வைகுண்டமானதென வுயர்ந்தோர்கூறும்படிக்குக் குடிகொண்டுறையும் வடக்கின்கண் வேங்கடமும் என்பதாம்.

அவன் குடிகொண்டுறையும் வடக்கின்கண் வேங்கடமும் எனக் கூட்டுக.
அற்றேல் விளைப்பான்…. திருவுரு என்பது முதலாய வவற்றினிடையிடை பிறபல சொற்றொடர்ந்தவா றென்னையெனின்,
நன்று சொன்னாய் ! “தத்தமெச்சமொடுசிவணுங்குறிப்பி, னெச்சொல்லாயினுமிடைநிலைவரையார்”
என்பதனா லிடையிடையேற்பன அடைச்சொல்லாய்வந்தன.
அஃதாக இங்ஙனந்தொடர்ந்த வவற்றி னிடையிடை பெறுதற்கரியவென்பது முதலாய சொற்கள் கூட்டியுரைத்த
வுரைநடை யாதோவெனின், “சொல்லொடுங்குறிப்பொடுமுடிவுகொளியற்கை, புல்லிய கிளவியெச்சமாகும்” என்றாராகலின்,
கூட்டியுரைக்கப்பட்டது. ஆனாற் சொல்லெச்சங்களேயன்றிக் குறிப்பெச்சமு மிதனுள்ளு முளவோவெனின்,
உள. அஃ தியாண்டுக்குறித்ததெனின், பரமவைகுண்டத்திருப்பவன் அவ னனைத்துலகத்துயிர்கடோறும்
அந்தரியாமியாயிருப்பதோடுங் கைம்மாறின்றியு மிவ்வுலகத்துயிர்கள் பெறுதற்கரிய முத்தியை
யெளிதின் விளைப்பவனாகிப் பரதகண்டத்துட் பழம்பதியெனக்குடிபுகுந்துறையும் வடவேங்கடமெனவே
அவன் பரமகிருபையிருந்தபடியோவெனவும், பரமவைகுண்டத்தினுந் திருமாமணிமண்டபத்தினும்
நித்தர் முத்தரோடுங்கூடிய திருவோலக்கத்திற் குறைவின்றி யிருப்பதோடும்,
வடவேங்கடத்தினுந் தெய்வத்திருமேனியோடுந் தொண்டக்குழாங்கள்
கைதொழக் குடிபுகுந்துநின்ற தென்ன அகடிதகெடித சாமர்த்திய குணமோ வெனவு மீரிடத்துங் குறிப்பெஞ்சிநின்றதெனக் கொள்க.
மெய்ப்பாடு – மருட்கையைச் சார்ந்த பெருமிதம். இவ் வுரைநடையுட் பொழிப்புரை தலைதடுமாறியும்,
பொழிப் பகல நுட்ப மெச்ச மென்னும் நால்வகையுரை நடையும் நிகழ்ந்தமையுங் காண்க.

தெண்டிரை……. ஆயிடை என்பது தெளிந்த திரையார வாரிக்குந் தெற்கின்கட் குமரியும் எல்லையாக
வுடையதென்று கூறப்படுவனவாம்
அவற்றி னடுவிருந்து என்றவாறு ஆயிடை என்பது “நீடவருதல்செய்யுளுளுரித்தே” என்பதனாலும்,
“சுட்டு, நீளின்யகரமுந் தோன்றுதனெறியே” என்பதனாலும் யகரவுடம்படுமெய் தோன்றியது.

அமிழ்தினும்……… மதிக்கும் என்பது தேவர்பானமாகிய வமிர்தினும் பெருத்தசுவையுடைத்தாம்
எழுத்துச் சொற்பொருளென மூன்றுதன்மைத்தாகிய தமிழை யாராயாநிற்கும் அறிவின்றன்மையை
யுடைய பெரியார் நன்குமதிக்கும் என்றவாறு.

முதுமொழித்தெண்டி……… புணர்த்தியலணியையும் என்பது முந்துநூல்களையாராயுந் தெண்டியாசிரியர்
கூறப்பட்ட முதனூலணிகளோடுந் தினமு நவமான பாடலேபாடும் புலவராற்கூறப்பட்டனவா யுலகின்
கண்ணே வழங்குவனவா மணிகள் பலவற்றையும் என்றவாறு.

தனாது நுண்ணுணர்…….. விரித்தும் என்பது தனது நுண்ணிய வறிவுகாரணமாகக் கண்டளித்த
பலவணிகளையுங் கற்றோர் மனத்துட்கொள்ளத் தொகுத்தும், தொகுத்ததனை வகுத்தும், வகுத்தவற்றை விரித்தும் என்பதாம்.
தனாது, மனாது என்பன “ஆறனொருமைக்கதுவு மாதுவும்” என்பதனால் அதுவென்னு மாறனுருபு ஒருமையிடத்து ஆது ஆயிற்று.

பொதுவியல்……… எச்சவியலென வென்பது பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியலென்று
கூறும் படிக்கு என்றவாறு.
இவற்றுள், இயல் என்பதனை நான்கினுங்கூட்டி அணி என்பதனைப் பொருண்முத லிரண்டினுங் கூட்டியுரைக்க.

சதுர்பெற……. சார்பெனலாய் என்பது நால்வகைபெற்றுச் செய்யுளிடம் வழக்கிடமென்னு
மீரிடந்தழுவின சார்புநூலென்பதாக வென்றவாறு.

காரிதந்தருள்……… உரைத்தனன் என்பது அந்நூற்குக் காரியா ருலகின்மன்னுயிர்க ளீடேறப் பெற்றருள்செய்த
நூற்கடலினியற்பெயரால் மாறனலங்கார மென வத் திருநாமத்தின் யவ்வணிக்கணியாகவே யலங்கரித்து
ஞானாசாரியர் குழீஇயதாம் அவையின்கண் ணரங்கேற்றினன் என்றவாறு.

சிற்குணச் சீநிவாதன்……… உணர்வோன் என்பது அவன் யாரெனில்,
சாத்துவிககுணத்தையுடைய சீநிவாதனென்னும் ஞானாசாரிய னினியகருணையால் நன்பொருளாகிய
சித் தசித் தீச்சுரமென்னும் மூன்றினையும் உணர்த்தும் ஞானநூல்களை நாடோறும் பேரானந்த மிகும்படி யாராய்வோன் என்றவாறு.
“வேண்டியகல்வியாண்டுமூன்றிறவா” தென்பதனால் உணர்வோனென நிகழ்வு மெதிர்வும் பெறக் கூறினாரென்றறிக.

பெருநிலம்…….. வருமனகன் என்பது பெரியவுலகினிடத் துயர்ந்தோர் கீர்த்திக்குந் திருக்குருகைப்பெருமாள்
பெற்றருளும் அழுக்கற்றவன் ; புண்ணியன். என்றவாறு.

செழுந்தேன், மருக்கமழ்சீரகத்தார் வணிகன் என்பது வளமையை யுடைய தேனினது பரிமளம்
பரிமளிக்குஞ் சீரகத்தார்புனைந்த வணிகர் குலத்துள்ளான் என்றவாறு.

புகழ்த் திருக்குருகைப்பெருமாள் கவிராயன் என்பது கீர்த்தியையையுடைய திருக்குருகைப்பெருமாள்
கவிராயனென்னுஞ் சிறப்புப்பெயரை யுடையோன் என்றவாறு.

அருட்குணத்துடன்வளர்சடையன் என்பது கருணைக் குணத்துடன் வளராநின்ற சடையன் என்னு மியற்பெயருடையோன் என்பதாம்.

பொருட்டொடர் நவம்புணர் புலமையோன் என்பது பெருங்காப்பியம் புதிதாகப் பாடல்சான்ற
அறிவின்றன்மையையுடையோன் என்றவாறு. ஏகார மீற்றசை.

வடக்கின்கண் வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமென்னக் கூறப்படுவனவா மவற்றினடுவிருந்து
தமிழை யாராயு முணர்வுடையோர் நன்குமதிக்குந் தெண்டிமுதனூலணியொடும் புலவர் புணர்த்து
வழங்கு மணியையுந் தனது நுண்ணுணர்வாற் கண்டளித்த பலவணியையுங் கற்றோர்
மனத்துட்கொளத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் நால்வகை யியலா னீரிடம்பொருந்தின சார்பு நூலென்பதாகவும்,
அந்நூற்குக் காரி யார் பெற்றருள் கலைக்கடலியற்பெயரை யணியாகப் புனைந் தாரியர்குழீஇய வவையின் கண் ணரங்கேற்றினன் ;
அவன் யாரெனிற் சிற்குணச் சீனிவாதனின்னருளால் நற்பொருண் மூன்றையு மாராய்வோன்
திருக்குருகைப் பெருமாள்கவிராயன் சடையன் பொருட்டொடர்நவம்புணர் புலமையோ னென்க.

அஃதாக முன்னர்ச் சிறப்புப்பாயிரம் பதினொருவகைப்படுமெனக் கூறிய வப்பதினொன்றும்
இப்பாயிரத்துட்பெற்றவா றெங்ஙனேயோ வெனின்?
வடவேங்கடந் தென்குமரியெனவே எல்லையும், முதனூலணியொடு மெனவே வழியும் நுதலிய பொருளும்,
தனாது நுண்ணுணர்வாற்றருபல வணியையு மெனவே காரணமும், பயனும்,
பொதுவியல் பொருள்சொல் லணியெச்ச வியலென வெனவே யாப்பும்,
காரிபெற்றருள் கலைக்கடலியற்பெயர்புனைந் தெனவே நூற்பெயரும்,
ஆரியர் அணிற வவைக்களத்துரைத்தன னெனவே கேட்டோரும்,
களனும் திருக்குருகைப்பெருமாள்கவிராயன் சடையனெனவே நூல்செய்தோன்பெயரும்,
காலமும் ஆகப் பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே பெற்றவாறு காண்க.

அன்றியும்,
நூல்செய்தோன் வழிபடுதெய்வமும் தெய்வத்து ளிதுவே பரத்துவமென்ன வறிவித்த ஞானாசிரியனும்,
நூல்செய்தோன் பிதாவும், குலனும், பதியும் கூட்டிப் பதினாறென்னுமவையும் இப்பாயிரத்துட் பெற்றவாறு காண்க.

இஃ திருபத்தாறடியான் வந்த நேரிசையாசிரியப்பா. என்னை? “ஈற்றயலடியேயாசிரியமருங்கிற், றோற்றமுச்சீர்த்தாகுமென்ப” என்றாராக
லின். இவ்வாசிரியப்பா முதலீரடியையுங் குறள்வெண்செந்துறை யாக்குதலாற் சொல்லணியுட் சித்திரப்பாவினுட் பிறிதுபடுபாட்டாயது.

64.பாவிற்கணிபோற்பனுவற்றெளிவுணர்ந்தோர்
நாவிற்குவாய்மைபோனாரணனாந்-தேவிற்கு
வாய்ந்தவருள்போலவாய்ந்ததேநூலகத்தா
யேய்ந்தபொருட்பாயிரம்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தினது சிறப்பிற் குவமையுணர்ற்று.

இதனுள், வாய்மை – சத்தியவசனம். கற்றகல்வியைப் பிறர்க்குச் செலச்சொல்லுதலுமாம்.
நூலகத்தா யேய்ந்தபொருட்பாயிரம் என்பதனாற் சிறப்புப்பாயிரம்.
நூலகத்தா யேய்ந்தபொருள் புலவன்கூறிய வவ்வவ நூலுக்குச் சிறந்தபொருள்களா மெனவுணர்க.

பாயிரவுரை முற்றும்

————–

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

ஸ்ரீ :
மாறனலங்காரம்
முதலாவது
பொதுவியலுரை

65.திருப்பாவையென்னத்திருந்தியற்பாத்தந்த
திருப்பாவைவில்லிபுத்தூர்ச்செல்வி-யருட்பார்வை
வாய்ந்ததனாற்செய்யுள்வழக்கென்றிரண்டிடத்தா
லாய்ந்துரைப்பல்செய்யுளணி.—என்பது சூத்திரம்.

இவ் வதிகார மென்னுதலிய வெடுத்துக்கொள்ளப் பட்டதோவெனின்,
அதிகார நுதலியதூஉ முன்னர்க்கூறிப்போந்த சிறப்புப்பாயிரத்தானே யுணரப்படும். என்னை?
“தனாதுநுண்ணுணர் வாற்றருபலவணியையும்” என்பதனாலுணர்க.
ஆயின், இவ் வணியதிகாரத்து ளணியிலக்கண மெனைவகையோத்தினானுணர்த்தினாரோ வெனின்,
இனைவகையோத்தினா னுணர்த்தினா ரென்பதூஉம் அச்சிறப்புப் பாயிரத்தானே விளங்கும். என்னை?
“பொதுவியல்பொருள்சொல்லணி யெச்சவியலென” எனக் கூறியதனாலுணர்க.
அஃதாக, இவ் வதிகாரத்தின் முதற்கணோத்தினைப் பொதுவிய லென்ற தென்னையெனின்,
அணி பெறுஞ் செய்யுள்கட்கும், பொதுவான வொருசாரணிக்கும் பொதுவிலக்கண முணர்த்தினமையாற் பொதுவியலென்னும் பெயர்த்தாயிற்று.
இவ்வோத்தினு ளிச்சூத்திர மென்னுதயில்றோவெனின், ஒருசாராசிரியர் வேண்டுஞ் சிறப்புப்பாயிரமுணர்-ற்று. என்னை?
“தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளு, மெய்தவுரைப்பதுந்தற்சிறப்பாகும்.” என முன்னையோர் கூறிய முறையானும்,
“கடவுள்வணக்கமுங்கருதியபொருளுந், திடனுறப்புகல்வதுஞ்சிறப்பென்றாகும்.” என இந் நூலுடையாருங் கூறிய முறையானு முணர்க.
உம்மை இறந்தது தழீஇயிற்று. அன்னவாறாதலிச்சூத்திரத்திற்குப் பொருளுரைப்பவே விளங்கும்.
ஆனா லிச் சூத்திரச் சொற்பொருள் யாதோவெனின், அப் பொருளுரை நான்குவகைப்படும் ;
கருத்துரைத்தலும், கண்ணழித்துரைத்தலும், பொழிப்புத்திரட்டலும், அகலங்கூறலும் என. என்னை?
“உட்கோள்கண்ணழிப்புடன்பொழிப் பகலஞ், சுட்டிக்கூறல்சூத்திரச்சொற்குரை” எனவரும்.
அவற்றுள்ளும், கருத்துரைத்தலாவது சூத்திரத்தினுட்கோளுரைத்தல். என்னை?
“கருத்துரை சூத்திரத்துதிரட்கோள்கழறல்” எனவும், கண்ணழித்துரைத்தலாவது சூத்திரத்திற் சொற்றொறுஞ் சொற்பொருளுரைத்தல். என்னை? “தொகுத்தசொற்றொறுஞ்சொற்பொருளுணர்த்த, லடுத்த கண்ணழிப்பென்பர்கற்றவரே’ எனவும்,
பொழிப்புத்திரட்டலாவது சூத்திரத்திற் பொருளையெல்லாந் தொகுத்துரைத்தல். என்னை?
“ஒலிகெழுசொற் பொருள்களைத் தொகுத்தொருங்கே, பொலிவுறத் திரட்டியுரைப்பது பொழிப்பே” எனவும்,
அகலமாவது சூத்திரத்திற் பொருளைச் செம்மை செய்தற்குக் கடாவும் விடையு முள்ளுறுத்தி விரித்தல். என்னை?
“மனாது றும்யாப்பின்மரீஇயசொற்பொருளை, வினாவினும்விடையினும் விழுப்பொருளாக்கி,
யகற்றுபுவிரித்துரைப்பதுவேயகலம்” எனவும் இந் நூலுடையார் கூறிய சூத்திரங்களானு முணர்க.

இவ்வகையெல்லா மிச்சூத்திரத்தினுட் பெறுமுறை யெங்ஙனேயோ வெனின்,
“திருப்பாவை…….. யருட்பார்வைவாய்ந்தனா” லெனவே கடவுள்வணக்கஞ் சொன்னவாறு.
“செய்யுளணி” யெனவே அதிகாரத்துட் கருதியது சொன்னவாறு. அதிகாரம்-முறைமை. இதனாற் கருத்துரை முற்கூறப்பட்டது.

இனிக் கண்ணழித்துரைக்குமாறு :- திருப்பாவையென்ன வென்பது அழகையுடைய நோன்பென்று சொல்லுவதாக என்றவாறு.
திருந்தியற் பாத்தந்த வென்பது நிரம்பிய இலக்கணத்தையுடைய பாட்டை யுலக மீடேறப் பாடித்தந்த என்றவாறு.
திருப்பாவை வில்லிபுத்தூர்ச்செல்வி யென்பது திருப்பாவையென்னுந் திருநாமத்தையுடைய ஸ்ரீவில்லிபுத்தூர்த் திருவுடையாள் என்றவாறு.
அருட்பார்வை வாய்ந்ததனா லென்பது அவளது கருணையோடுங் கூடிய திருக்கண்ணோக்கம் எனக்கே பலித்ததனால் என்றவாறு.
செய்யுள் வழக்கென் றிரண்டிடத்தா லென்பது செய்யுளென்றும், வழக்கென்றுஞ் சொல்லப்பட்ட இரண்டிடங்களானு மென்றவாறு.
ஆய்ந்துரைப்பல் செய்யுளணி யென்பது (செய்யுளணி யாய்ந்துரைப்பலெனப் பாடமாற்றி) முன்னோர் கூறிய
செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கணங்களை யாராய்ந்து கூறுவ லென்றவாறு.

அணியென்ப தீண்டணியிலக்கணங்களை. செய்யுட் கழகு கொடுத்தலின் அணியென்றாயிற்று.

இனிப் பொழிப்புத் திரட்டுமாறு :-
அழகையுடைய நோன்பென்று சொல்லுவதாக நிரம்பிய இலக்கணத்தை யுடைய பாட்டை யுலக மீடேறப்
பாடித்தந்த திருப்பாவையென்னுந் திருநாமத்தையுடைய ஸ்ரீ வில்லிபுத்தூர்த் திருவுடையாளது
பரம கருணையோடுங் கூடிய திருக்கணோக்கஞ் சிறிது மறிவிலனா மெனக்கே பலித்ததனாற் செய்யுளென்றும்
வழக்கென்றுங் கூறிய விரண்டிடங்களாலு முன்னோர் கூறிய செய்யுளிடனாகத் தோன்று மணி
யிலக்கணங்களை யாராய்ந்து கூறுவ லென்றவாறு.

இனி, அகலமாவது விரித்துரையாதலால் இதற்கும் விரித்துரை யீண்டுக்கூறின் உரைபெருகுமாதலா லதனை
யுள்ளுறுத் துய்த்துணர்ந்துகொள்க. அஃதாக ; முன்னோர்கூறிய இலக்கண நூல்க ளெனை வகை
யோத்தினானுணர்த்தினாரெனினு முற்று மொருபாவினாற் கூறவும், இந்நூலுடையார் பொதுவியலொன்றையும் வெண்பாவாற்கூறி
யேனை யியல்கண் மூன்றினையும் ஆசிரியத்தாற்கூறிய தென்னையோவெனின்,
நன்றுசொன்னாய் ! இக் கடாவிற்கு, எதிரது போற்றலென்னு முத்தியாற் பாயிரத்துள்,
“விதியாச்செய்யுளின்மிகுத்திலக்கணமு, மதியாலுரைத்ததும் வழங்கன்ஞாபகமா” எனக்கூறிய சூத்திரத்தா னுணர்க.

66.வெண்பாவகவல்விரிகலிப்பாவஞ்சிப்பா
பண்பார்மருட்பாபரிபாட-லொண்பா
வினமென்றாலித்திரண்டாறீராறவாய்ச்சென்
றனமுந்து நூல்கற்றது.
(எ-ன்) முன்னர்ச் செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கண முரைப்பலென்றார்;
செய்யுளுணர்ந்தே அணி யுணரப்படுமாகலான், அணிபெறுஞ்செய்யுளின் பெயரும், முறையும், தொகையு முணர்ற்று.

(இ-ள்) செய்யுளெனத் தொகையா னொன்றாய்நின்ற அது, வெண்பா அகவல் என வகைவரையறை யிரண்டாய்
அவற்றின் மரபு மிக்க கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என நான்கினோடும் விரிவரையறை யாறாய்ச்
செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்ற வோசை யுடைத்தாய் விரியொடுநின்ற வாறனுள்
வெண்பா முதலாய நான்கென்னு மொள்ளிய பா இன மெனப் பன்னிரண்டாய் முந்துநூல் கூறப்பட்டு நிகழ்ந்தன வென்றவாறு.

என்றென்பது எண்ணிடைச்சொல். அதனைப் பா, பாவின மென்னு மெல்லாவற்றினும் பிரித் தேற்றுக. என்னை?
“என்று மெனவு மொடுவு மொரோவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்ப வாசலின்.
அது “வினைபகையென்றிரண்டினெச்ச” மென்பதுபோலக் கொள்க. இரண்டாறீராறென்பன நிரனிறை.
ஆயென்ப திறுதிவிளக்கா யீண் டாக்கத்தினைக் காட்டியது. ஒலித்தாயென்ப துடைமைவினைக் குறிப்பு.
“மருட்பாவேனையிருசாரல்லது, தானிதுவென்னுந் தனிநிலையின்றே” என்பதனால் அதற்குச் செப்பலும் அகவலுங் கொள்க.
“பரிபாடல்லேதொகைநிலைவிரியி, னிதுபாவென்னுமியனெறியின்றிப், பொதுவாய்நிற்றற்குமுரித்தெனமொழிப” என்பதனால்
அதற்கு முழுதுமிசையாய்க்கொள்க. இப்பெயர் பெயர் ; இம்முறை முறை ; இத்தொகை தொகை எனக் கொள்க.
இவற்றுள் வெண்பா முதல்வைத்தது தலைதடுமாற்றமெனினுமாம்.
ஆயின் முதலே யணியிலக்கணங் கூறுவலெனப்புகுந் தீண்டுச் செய்யுளிலக்கணங்கூறிய முறையான்
மற்றொன்று விரித்தலென்னுங் குற்றமாமெனின், ஆகாது. என்னை?
எழுத் தசை சீர் தளை யடி தொடை யென்னு மாறுறுப்பின திலக்கணங்களைக் கூறி யவற்றானாய பாவினைத்
தளையானும், அடியானும், தொடையானும், ஓசையானும், பொருளானும் வேறுபட்டமைகூறி
யினங்களையு மவ்வகையே கூறா திவ ரீண்டைக்கே வேண்டுஞ் செய்யுட்களது தொகை வகை மாத்திரமே கூறினமையா னெனக் கொள்க.

67.ஆற்றலணிக்கண்ணவைமுத்தகங்குளகந்
தோற்றுந்தொகையேதொடர்நிலையென்றேற்புடைய
வென்றுமவற்றுளெழுவாய்தனிநின்று
சென்றுபொருண்முற்றுந்திடன்.
(எ-ன்) இதுவும் அங்ஙனம் விரிந்தபாக்க ளணிபெறுதற்பொருட்டுச் சிறப்பிலக்கணத்தா லவற்றிற்கு
மீட்டு மொருவகைப் பெயரு முறையுந் தொகையு முணர்-ற்று.

(இ-ள்) வகையினும் விரியினுங்கூடி யிரண்டா றீராறென்னுஞ் செய்யுட்களாகிய வவை பெருமையுடைய
வணியிலக்கணங்களிடத்து முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலையெனச் செய்யு ணான்காகப்
பொருணோக்கத்தாற் றொகைபெற்று எக் காலத்திற்கும் பொருந்துத லுடையனவாம்.
அந்நான்கனுள் ஆதியாகிய முத்தகச்செய்யு ளொன்றாக நின்று திடனாகச்சென்று புலவன் குறிக்கப்பட்ட
பொருளைப் பயந்து முற்றுப்பெறு மென்றவாறு.
இவற்றுள் முத்தகம், குளகம் என்பன வடமொழிப் பெயர். ஏனையவிரண்டுந் தமிழ்மொழிப் பெயர்.
அவை யங்ஙனமாமாறு மே லறியப்பெறும். நிலையென்பதனை யிரண்டிடத்துங் கூட்டியுரைக்க.
ஆற்றல் – பெருமை. தோற்றுதல் – உண்டாதல். சென்றென்பதனாற் செய்யுளின்கண் ணிகழ்ந்த சொற்பொருளொடு
முற்றாது எஞ்சிநின்ற சொல்லேயாயினும் பொருளேயாயினும் கொணர்ந்து முற்றுவிக்க முற்றுமென்பதூஉங் கொள்க.
எழுவாயென்ப தீண் டிடத்தானாகிய ஆகுபெயர். இச்சூத்திரப் பொருள்கோள் மொழிமாற்றெனக் கொள்க.

இனி முத்தகச்செய்யுட் குதாரணம் வருமாறு :-

பொன்னகர்புகுந்தயாணர்ப்புத்தமிர்தம்
பின்னொருநிலத்துப்பிறிதொருபடிவத்
தொருபகலுறைவதன்றெனவுலகுரைசெய
வருள்புரிகடவுளாணையின்வேட்டமுற்
றிகல்புரிவிலங்கினினந்தொலைத்ததற்பி
னகநகர்புரப்பேனயர்வுயிர்த்தற்குப்
பொலந்தகட்டுருளிப்புரவியூர்தியின்
வலம்பயில்பாகன்வரவுறீஇப்புறநகர்த்
தண்ணிழனாடினன்சார்வுழிமனனே
பெண்ணியல்பெருக்கியப்பேரமிர்தெதிர்தலும்
யாவதிவ்வுருவெனவிடைவிடாதுயவலுங்
காவகத்திஃதொருகவினிலைக்களனென்
றுண்ணிகழுழுவலன்புடனின்றூட்டக்
கண்ணயந்தனவாய்க்காமுறக்காண்டொறும்
புகுமுகம்புரிதலிற்புணர்ச்சிமேற்கொளத்
தொகுபதினொன்றுந்தொடர்பிற்றோற்றி
யொளியுமூறுமுரிசையும்வாசமுங்
களியதாய்மிழற்றோசையுமைம்பொறி
யேககாலத்திலவிதழொன்றினுண்
டாகயாவருமணுகாதமைநலன்
வண்டுழாநெகிழ்ந்துமணமலிசெவ்வித்
தண்டுழாயரங்கன்றடந்துறைப்பொன்னித்
திரைவரன்றெறிநித்திலத்திரணிலவெழும்
விரைமலர்பரப்பிமெல்லணைவிரிபுன்னையி
னேந்தெழிற்சினைகவியெழினியுள்
வாய்ந்தருண்மறையார்மனக்கொள்பவரே. (1)

என்பது இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழித் தலைமக ளிவ னெக் குலத்தான்கொல்! எவ்விடத்தான்கொல்!
இன்னு மிப்புணர்ச்சிகூடுங் கொல்! இவ னென்னிடத் தன்புடையான்கொல்!
எனக் கூற்றா லையுற் றுரையாளாயினுங் குறிப்பாலையநிகழும்;
அவற்றைத் தலைமக னுளத்தா னுட்கொண்டு நால்வகையையமுந்தீரக் கூறியது.

(இ-ள்) பொன்னகர்……… உரைசெய-மனனே சுவர்க்கத்துட் குடிபுகுந்த அழகிய புதிய அமிர்தங் குடிபுகுந்த
பின்னர்ப் பொன் மயமல்லாத மற்றொருநிலத்தின்கட் சலமயமல்லாத மற்றொரு வடிவெடுத் தொருகணப்பொழுதுந்
தங்குவதன்றென் றுயர்ந்தோர் கூறாநிற்பவும்; அப்பேரமிர்து-அப் பெருமையையுடைய வமிர்தம்;
அகநகர் புரப்பேன்-அகநகரின்கண் ணிருந் துலகினைப் புரக்கு மரசுரிமையுடையேன்;
அருள்புரிகடவுளாணையின்…… தொலைத்ததற்பின்-என்னிடத் தினியகருணையைச் செய்யும்
பால்வரைதெய்வத்தினேவலான் வேட்டைமேன் மனம்வைத் துலகத்துயிர்கட்கு மாறுபாடிழைக்கும்
ஆளி முதலிய விலங்கின்கூட்டத்தைக் குறைத்தபின்னர் ;
அயர்வுயிர்த்தற்கு…. சார்வுழி-அவற்றைத் தொடர்ந் தோடி யாடின வருத்தம் போக்குதற்குப் பொற்றகடு
பொதிந்த நேமியையுடைய குதிரைபூண்ட தேரோடும் வென்றி விட்டுநீங்காத பாகன் சுவடுபார்த்து
வருவனென வுட்கொண்டு புறநகர்ப்பொதும்பர்க் குளிர்ந்தநிழலைநோக்கி யணுகின காலத்து ;
பெண்ணியல் பெருக்கி யெதிர்தலும் – பெண்ணின திலக்கணத்தைத் தனதாகப் பெருப்பித் தெனதெதிர்நிற்ப ;
யாவதிவ்வுருவென……. காண்டொறும்-மலர்மகள் முதலாயினோருருவினுள் யாதுதா னிவ்வுருவமென
நின்னொடுங்கூடி நீக்கமின்றி யுசாவாநிற்ப வுள்ளேநிகழு மெழுகையுந் தொடர்ந்தவன்பு பால்வரை
கடவுளினன்புடன்கூடி யிக்காவகத் திவ் வுருவ மலர்மகண்முதலாயோர் காந்திகளெல்லாந் திரண் டேகமாகக்
குடியிருப்பதேப ரிடவகைதானென் றுணர்வினு ளொன்றுவிப்ப வந்நிலையே கண்க ளிவ்வுருவினை
விருப்புற் றுட்கொண்ட விருப்பமிகையானே நோக்குந்தொறும் ;
புகுமுகம்புரிதலின்…… அமைநலன்-எனது நோக்கிடமாகப் புகுந்து தன்கண் விரும்பிநோக்குதலால்
யான் புணர்ச்சிமேன் மனம்வைப்பப் புகுமுகம் புரிந்தபின் பொருளிலக்கணந் திரட்டியுரைத்த பொறிநுதல்வெயர்த்தன்
முத லிருகையுமெடுத்த லீறாய பதினொருமெய்ப்பாடு மொன்றன்பின்னொன்று தொடர்புடைத்தாகத் தோற்றிக்
கண்டுற் றுண் டுயிர்த்தலாகிய நான்கோடு மென்மேல்வைத்த கருணையுடைத்தாய் மிழற்றுமோசையு மெனக் கேட்பதுமாக
வைம்புலன்களையு மென தைம்பொறிகளும் ஒரு காலத் திலவமலர்போன்ற வதரமொன்றின்கண் ணுகர்ந் தாக்கமெய்த
விருதலையினும் வழிபடும் யாவரு மணுகாதபடிக் கேகாந்தமாக முழுத்த வின்பத்தை ;
வண்டுழா…….. பொன்னி-சுரும்புக ளாறுதாளி னாலுந் துவைப்ப முகைவிண்டு பரிமளத்தை மிகுப்பதாங்
குளிர்ந்த துளபமாலிகையையுடைய அரங்கேசனது தடந்துறைவாய்ந்த திருக் காவிரியினடத்து ;
திரைவரன்றெறி……….. வாய்ந்தருண் மறை – பெரிய திருமுகத்துறைத்திரைகள்
கொழித்தெறியுந் தரளத் திரணில விருளைத்துரந்து நிமிராநிற்பப் பரிமளப்பூவாகிய மெல்லிய அணையை
விரிக்கும் புன்னையின்கீ ழுயர்ந்த வழகொடுந் தாழ்ந்தசினைக ளாகிய திரையினுட் டோன்றி யளித்த விராசியத்தை ;
யார் மனக் கொள்பவரே-யாமேயறிவதல்ல துலகத்துள் யாவ ரறிவரென்றவாறு.

இதனுள் ; நாடினனென்பது ‘வினையெஞ்சுகிளவியும்வேறுபல்குறிய’ என்பதனால் வினையெச்சத் தனித்தன்மைத் தெரிநிலைமுற்று.
சார்வுழி என்பது கொள்வுழி, செல்வுழி என்பனபோல ஒற்றீற்று வகர வுடம்படு மெய் வந்தது. உயவல் – உசாவல் ;
“யானொன்றுயவுகோவையசிறிது” என்பதனாலறிக. யாவர்மனக்கொள்பவரென்பது யாரென வகரங் கெட்டது.
யாதிவ்வுரு என்பது யாவ திவ்வுரு வென வகர மிகுந்தது. என்னை?
“பலரறிசொன்முன்யாவரென்னும், பெயரிடைவகரங்கெடுதலு மேனை, யொன்றறிசொன்முன்யாதென்வினாவிடை, யொன்றியவகரம் வருதலுமிரண்டு, மருவின்பாத்தியிற்றிரியுமன்பயின்றே” என்றாராகலின். அப்பேரமிர்து என்பது
“வினையெஞ்சுகிளவியு முவமக்கிளவியு, மெனவெ னெச்சமுஞ்சுட்டினிறுதியு, மாங்கவென்னுமுரையசைக்கிளவியும்,
ஞாங்கர்க்கிளந்தவல்லெழுத்துமிகுமே” என்பதனால் வல்லொற்று மிகுந்தது.

இச்செய்யுளின்கண் ணகநகர்புரப்பேனெனவே யா னரசனென்னுங் குலனும், புறநகர்சார்வுழியெனவே
“ஒன்றேவேறேயென்றிருபால்வயி” னென்பதனால் ஒரு நகருள் அகநகரும் புறநகரும் என்னு மிடமும்,
உண்ணிகழுழுவலன்புடனின்றூட்ட வெனவே உழுவலன்பாற் பண்டும் பயின்றுவருகின்ற நட்பு இப் பிறப்பினுங் கூடிற்று ;
இதுபோல இன்னு மிடையிடையே கூட்டநிகழு மென்பதூஉம், அப் பேரமிர்து பெண்ணியல் பெருக்கி யெனவே
நலம்பாராட்டலா லவன் தன்மே லன்புடையா னென்பதூஉந் தலைமக ளுட்கொண்டுணரு மென்பதாம்.
இதனுள், பொன்மயமல்லாத சலமயமல்லாத என்பன முதலாய யாமே யறிவதல்ல தென்பதீறாய சொல்லெச்சங்களும்,
தலைவியுள்ளக்குறிப்பைக் குறித்தானென்னுங் குறிப்பெச்சமும் எஞ்சிநின்று விரிந்து முடிந்த வாறுங் கண்டுகொள்க.

இச் செய்யுள் “அகன்றுபொருள்கிடப்பினு மணுகியநிலையினு… மாட்டெனமொழிப்பாட்டியல்வழக்கின்” என்பதனால்
மாட்டென்னு முறுப்பாற் பொருள்கோள் நிகழ்ந்தவாறுங் காண்க.
இது மருதநிலத்தலைமகன் பாலதாணையின் ஆயத்தைநீங்கிய மருதநிலப் புறநகர்த்தலைவியை யெதிர்ப்பட்டுக்கூடிய
களவொழுக்கக் கந்தருவம். என்னை?
“முதலொடும்புணர்ந்தயாழோர்மேன, தவலருஞ்சிறப்பினைந் நிலம்பெறுமே” என்றாராகலின்.

இனிவருஞ் செய்யுட்கு மிவ்வாறு விரித்துரையெழுதாததற்குஞ் சொற்றொறும் பொரு ளுய்த்துணர்ந்து கொள்க.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சி மகிழ்தல்.

முயற்சியொன்றின்றாய்நெருநன்முழுநல
னியற்றியதெய்வதமிறவாதிருப்பதொன்
றென்றுணர்ந்துழப்புறினின்றுமாங்கெதிர்தன்
மன்றவென்றுறுதலின்மடந்தையர்குழாமொரீஇ
மடந்தபமாணிழைவணரிணரைம்பா
லிடந்தலைப்பாட்டினெய்தின்பநன்பனுவலைத்
தேரின்பத்தையுஞ்சிறிது நில்லாதே
பேரின்பமதாய்ப்பெருகவுமன்னோ
சிற்றின்பமெனத்தீர்ந்தனராகிச்
சொற்றமிழ்மாறனைத்துதிக்குமெய்த்தொண்டர்
பற்றறுத்துணர்த்தியபாசுர
முற்றிடிலாசங்கையதாமொன்றே. (2)
என்பது இடந்தலைப்பாட்டின் கூட்டத்திறுதிக்கட்டடலைமகன் சொல்லியது.

(இ-ள்) மனனே ! நம்மிடத்து முயற்சி சிறிது மில்லையாகவும் நெருநற்று நமக்குப் பெருத்த வின்பத்தை யுண்டாக்கித்
தந்த தெய்வமான தென்று மிறவாதிருப்பதொன்றாமென்றறிந் தினி நாஞ் சிறிது முயற்சி யுறி னின்று
மத்திருவுரு முதுனாட்கண்டவிடத் தெதிர்தல் சந்தய மில்லையென் றியா முறுதலோடு மிகுளையர்குழாத்தைவிட்டுநீங்கி
நம்மிடத்து வைத்த வேட்கையாற் றன்னிடத்தொன்றிய மடமையுந் தன்னை விட்டுநீங்க மாட்சிமைப்பட்ட அணிகளோடுங்
கடைகுழன்று பூங்கொத்துச்செருகிய குழலினையுடையா ணம்வரவுபார்த்துநின்ற விடத்துத் தலைப்படுதலாலெய்திய வின்பமானது,
நன்பனுவல்களை யாராய்ந்து நமதுண்ணின்ற வின்பத்தைச் சிறிது நிலைபெறாதே பெயர்க்கப்பட்டதா
யவ்வின்பநின்றவிடங்கொண் டாராவின்பமாகப் பெருகா நிற்ப இதனைச் சிறியதாகிய வின்பமென விட்டுநீங்கினராகிச்
செஞ்சொற் றமிழாகிய திருவாய்மொழிபாடிய காரிமாறப்பிரானை வாழ்த்து முண்மைத்தொண்ட ரிவ்வுலகத்து
மகளிரிடத்தெய்து மின்பத்தின்மேல் வைத்த வாசையைவிட்டுப் பரமபதத்தின்பமே தெவிட்டாதவின்பமென
முன்னமுணர்த்திய முதுமொழி யிதுபொழுது விசாரிக்கிற் சந்தயமாவ தொன் றென்றவாறு.

மனனே என்பது தோன்றாவெழுவாய்.
நின்றவென்பது முதலாய சொல்லெச்சங்களையு மாங்காங்கு வருவித்துக்கொள்க.
மன்-ஆக்கம். ஓ- அசை. பகுதி – இடந்தலை. துறை – இதுவும் புணர்ச்சிமகிழ்தல்.

முதல்வனிற்பெறுநூன்முதற்றாயெனலாய்ப்
புதல்வனிற்பிறந்தவழிநூற்பொழிப்புரை
செலச்சொலுங்குரவனிற்றெளிந்தோர்தமக்கவ்
விலக்கணவிலக்கியமீந்தவின்பத்தினு
நயப்படவிரித்துரைநடைதாந்தமது
முயற்சியினுணர்வுழிமுன்னுமின்பத்தினு
முணராநுட்பமுமெச்சமுமொருபுடைப்
புணர்மாணாக்கரிற்புலப்படுமவர்பா
லெய்தியதெவிட்டாவின்பமொன்றெனலாம்
பொய்கையுட்கராமொடுபொருதுநைந்தழைத்த
கடமலைக்குதவியகண்ணன்
வடமலைமடவரல்வாய்ந்தருணலனே. (3)
என்பது பாங்கற்கூட்டத்திறுதிக்கட் டலைமகன் புணர்ச்சிமகிழ்தல்.

(இ-ள்) மனனே ! முதல்வனா லமைத்தருளப்பட்ட முந்து நூல் நற்றாயாக அதற் கொரு புதல்வனைப்போலப்
புலவராலமைக்கப்பட்டுண்டான வழிநூலின்பொழிப்புரை முதலே கேட்போ ருணர்வுட்கொள்ளப் புகலுங்
குரவனாற் றெளியப்பட்டோர்க் கவ் விலக்கண விலக்கியங்கள் புரந்தவின்பத்தினும் நன்குமதிப்பதாக
வந்நூல்கட் காசிரியர் விரித்துரைப்பதாய வுரையினது ஒழுக்கத்தை யவ்வுரைகோளாளர் தமதறிவுடன்
முயற்சியாலுணர்ந்தவிடத்துண்டான இன்பத்தினும் நூல்களிடத் துணரப்படாத வரும்பதநுட்பமும் எச்சமும்
தம்மொடு கற்ற வொருபுடைமாணாக்கராலாராய்ந் தறிவிற்புலப்பட்ட வவர்பா லெய்தி தெவிட்டாவின்பம்போலு மொன்றெனலாம்,
பொற்றாமரையோடையினிடத்துக் கராமொடுபொருது நொந்தழைத்த கடாத்தொடுகூடிய மலைபோன்றயானைக்
கதனுயிர்பிழைப்பான் சென்றுதவிய கண்ணனது வடக்கின்கண் வேங்கடவெற்பினிடத்து மடவரல் தோன்றிநின்றருளிய பேரின்ப மென்றவாறு.

மனனே என்பது தோன்றாவெழுவாய்.
இதனுள், பொழிப்புரை குரவனிற் றெளிந்தோர்க் கந்நூல்களீந்த வின்பத்தினும் என்பது
முயற்சியின்றி யியற்கையிற் றெய்வத்திற்கூடிய இன்பமதாம்.
விரித்துரை தாந் தம் முயற்சியாலுணர்வுழி முன்னுமின்பத்தினு மென்பது சிறிது முயற்சியா னிடந்தலைப்பாட்டினெய்திய
வின்பத்தினு மென்பதாம். நுட்பமு மெச்சமு மொருபுடைமாணாக்கரி னுணர்ந்தவிடத் தெய்திய
தெவிட்டாவின்பமொன்றெனலா மென்பது பாங்கனாற்கூடிய கூட்டத் தெய்திய வின்பமென்பதாம். இவை குறிப்புவமை.

குலனுந்தொன்மையுங்குணனுந்திருவு
நலனும்பருவமுமுருவமுநயந்தோ
ரறம்புரிகொள்கையோடளவளாய்வாழ்நாட்
டிறம்பாக்கற்புடைச்சேயிழைவயிற்றிற்
கருப்பம்வந்தடியிடக்கண்டகண்மலரால்
விருப்பமுற்றதனினுமேம்படுநிலத்துறப்
பிறந்தநன்புதல்வர்பீடுடைமுகமலர்
சிறந்தவர்காண்டொறுஞ்செறிபேருவகை
யாங்கவற்றினுமிகுமரும்புமென்மழலை
யோங்கியசெவிப்புலத்துறவருமுவகை
யுவகையிற்கழிந்தபேருவகையதாகு
மவமதிப்பின்றியேழாண்டமைவெய்தலும்
பொற்புடைக்குரவர்தம்பொன்னடிவணங்குபு
கற்பனயாவையுங்கசடறக்கற்றபின்
கல்வியுங்கவியுங்கவின்பெறச்செலச்சொலு
மெல்லையிற்றாதையின்புறலும்பொருவரும்
பூதலம்புகழப்பொலிந்துநின்றருளிய
சீதரன்குருகாபுரேசன்சிலம்பின் மதுமலர்ச்சோலையுண்மடவரல்
புதுவதுபுதுவதாய்ப்புரிந்தருணலனே. (4)
என்பது பாங்கியிற்கூட்டத் திறுதிக்கட் டலைமகன் கூறியது.

இதனுள், கருப்பம்வந்தடியிடக்கண்டகண்மலரால் விருப்பமுற்றது என்பது இயற்கையிற்கூடிய வின்பவிருப்பத்தை.
அதனினு மேம்படும் புதல்வர்பீடுடைமுகமலர் சிறந்தவர்காண்டொறுஞ் செறிபேரு வகை என்பது
இடந்தலைப்பாட்டிற்கூடிய வின்பமகிழ்ச்சியை. ஆங்கவற்றினுமிகு மழலை யோங்கியசெவிப்புலத் துறவருமுவகை யென்பது
பாங்கற்கூட்டத்திறுதிக்கட் கூடிய வின்பமகிழ்ச்சியை. உவகையிற் கழிந்தபேருவகையதாகுங் கல்வியுங் கவியுங்
கவின்பெறச் செலச்சொலு மெல்லையிற்றாதையின்புறலும்பொருவரும் என்பது பாங்கியிற்கூட்டத்துக்கூடிய புணர்ச்சியை.
பொருவருமென்பதனை நான்கினுங் கூட்டுக.
குணம்-அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு. திரு-செல்வம். அளவளாய் – கலந்து.
திறம்பா – அழியா. அவமதிப்பு – கற்கப்படுநூல்களைக் கற்கநினையாமை – இகழ்தல். இன்றி-இல்லாமை.
செலச்சொலல் – கூறும்பொருள்களறிதற்கரியவாயினுங் கேட்போர்க் கெளியவாய் மனத்துட்கொளக் கூறல்.
கவின்பெற – அழகு பெற. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
இது மாட்டுறுப்பு மெச்சமு மின்றிவந்த முத்தகச்செய்யுள். என்னை?
“மாட்டுமெச்சமுநாட்ட லின்றி, யுடனிலைமொழியினுந்தொடர்நிலைபெறுமே” என்றாராகலின்.
பகுதி – பகற்குறி. துறை – இதுவும் புணர்ச்சிமகிழ்தல்.

தண்டளவுங்கொன்றையும்பைந்தார்தழைப்பவாய்மயிலின்
கண்டழைப்பவண்டுகளிதழைப்ப–நுண்டுளிசோர்
கார்வரவிதென்றயரேல்கண்ணன்குறுங்குடியார்
தேர்வரவிதென்றணங்கேதேர். (5)
இதுவும் மாட்டுறுப்பு மெச்சமுமின்றிவந்து தனிநின்றுமுடிந்த முத்தகச்செய்யுள்.
தார் – பூ. ஆய்மயில் – ஆடாநின்ற மயில்.
வரவு என்பது தொழிற்பெயர்போலநின்று நிகழ்காலங்காட்டுவதோர்வாய்பாடு. நுண்டுளி – அசும்பு. கார் – மழை.
வரவு – வாராநின்றது. அயரேல் – வருந்துவதொழி என்றவாறு. பகுதி – வரைபொருட்பிரிதல். துறை – பருவங்காட்டிவற்புறுத்தல்.

நிறையழிகாமக்கடலைநீந்திச்சலாபத்
துறைமுகமுத்தங்கொளவேசூழ்வார்க்–கிறைவளையா
யாய்ந்தபுணையென்பவருண்மாறன்வண்குருகூர்
வாய்ந்தபனைமாமடல். (6)
(இ-ள்) அருண்மாறன் வண்குருகூரிறைவளையாய் ! ஆடவர் நிறையாகிய கரையை யழிக்கப்பட்ட காமமாகிய
புணரியைக் கடந்து மகளிரிடத்தின்பத்துறையைத் தரும் முகத்தில் அதரபானத்தையுட்கொள வழி யேதென்று
விசாரிப்பவர்க்கு வாய்ந்த பனைமாமடலே ஆராய்ந்தறிந்த புணையென்றுகூறுவர் பெரியோரென்றவாறு.

இதுவும், ஆடவர்களென்னும் பெயர்ச்சொல்லும், எனக்கு மதுவே குறிப்பென்னுங் குறிப்பும் எஞ்சிநின்று முற்றியதால்
இருவகையெச்சமும் மாட்டுறுப்புங்கூடித் தனிநின்று முற்றின முத்தகம். சலாபத்துறை முகமுத்தங்கொள என்பது சிலேடை.
இது, பாங்கியிற்கூட்டத்துச் சேட்படுக்கப்பட்டானான தலைமக னாண்டுறந்துரைத்தல்.
பகுதி – மடல். துறை – உலகின்மேல்வைத்துரைத்தல். முத்தகமென்பது காரணப் பெயர். முத்தகம் முற்றும்.

இனிக் குளகம் வருமாறு :-

68. குளகம்பலபாட்டொருவினைபேர்கொண்டு
வளர்முலையாய்மூன்றிடத்துமன்னு–மளவை
யுகளகஞ்சாந்தானிகங்காபாலிகத்தோடைந்தின்
மிகல்வகைத்தாநூல்சொல்விதி.
(எ-ன்) முறையே குளகச்செய்யுளின்கூறுபாடுணர்….. ற்று.

(இ-ள்) வளராநின்ற முலையினையுடையாய் ! குளகச் செய்யுளென்பது, பலபாட் டொருவினையேயாதல்
ஒருபெயரேயாதல்கொண்டு, எண்ணினதளவு உகளகம், சாந்தானிகம், காபாலிகம் என்னு மூன்று திறத்தினோடும்,
ஐந்தாயும் அவ்வைந்தினுமிகுங் கூறுபாடுடைத்தாயும் செய்யுளகத்து முதல் இடை கடை யென்னு மூன்றிடத்தும்
நூல் சொன்னவிதியாக நிலைபெறுமென்றவாறு.

வினையென்ற விதப்பால் வினையின்வேறல்லவாம் வினைக்குறிப்பும், பெயரென்ற விதப்பாற் பெயர்ப்பெயரேயன்றி
வினைப்பெயருங் கொள்ளுமென வுணர்க. வினைமுதலிய நான்கோடுந் தானமூன்றோடு முற்றவுதாரண மீண்டுரைப்பிற் பெருகும்.
அவற்றுட் சிலவுதாரணங் காட்டுதும் :-

நினைமருவொன்றில்லாஞானாதிகளைப்
புனைவகுளத்தாமப்புயனை–வினையினையே
வென்றானைக்காரிதரும்வித்தகனைப்பாவலன்பின்
சென்றானேநாதனெனத்தேர்ந்து, (7)

வேதமதனைவிளங்குதமிழ்ப்பாப்படுத்திப்
போதந்தழைந்துபுகழ்புண்ணியனை–நாதமுனி
போற்றும்புனிதனையந்தாமம்புகமனனே
தேற்றம்பயின்றேதினம். (8)

இவை யிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாதிகுளகம்.
உகளக குளகமென்பது இரண்டுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது.

குன்றமதனைக்குடைகொண்டநீலமணிக்
குன்றமதனைக்குணக்கடலைக்–குன்றமதே
மத்தாகக்கொண்டமிர்தம்வானோர்க்களித்ததரு
மத்தானைத்தேவாய்மதித்து, (9)

வாழ்த்துபரசமயவாதியர்தம்வாய்மதத்தைச்
சாய்த்ததமிழ்மறைப்பாத்தந்தானைக்–கீர்த்திபுனை
பாவேசர்போற்றும்பராங்குசனைமுத்திபெற
நாவேமனத்தானயந்து. (10)

இவையிரண்டும் வினைகொண்டுமுற்றின யுகளகமத்திய குளகம்.
வாழ்த்து என்பது ஏவல்வினை. இவை நான்கும் திணை – பாடாண் ; துறை – ஓம்படை.

காலிருக்கக்கையிருக்கக்கண்ணிருக்கச்சென்னியதன்
மேலிருக்கநாநடுவேவீற்றிருக்க–நாலிருக்கும்
பொய்யாதிருக்கப்புகழ்மாறனைவலஞ்செய்
துய்யாதுமஞ்சலியாதும். (11)

பூவிற்சிறந்தவவன்பொன்னடியைக்கண்டுமலர்
தூவிவணங்கித்துதியாத–பாவிகளோ
டொன்றாகியவுளமேபோனவைபோட்டூதியமா
மின்றாகிலுமுற்றிறைஞ்சு. (12)

இவையிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாந்தியகுளகம்.
இதனுள் மாறனையென்பது மால்தனை எனவும் பொருந்தும்.
இவை யாறிற்கும் ஒழிந்த அகல முரையிற் கொள்க. திணையுந் துறையு மிதுவு மது.

அடித்தகைத்தலம்பிடித்துவன்கனகனாருயிரைக்
குடித்தகோளரியாயகொற்றவனுமாண்குறளாய்
நடித்துமூவுலகன்றளந்தவனுமைந்நாகந்
துடித்துமூலமென்றழைத்ததற்குதவியசுகத்தோன். (13)

அம்பிகாபதியிரப்பொழித்தவனுமாதரவா
லும்பராரமுதருந்தவைத்தவனுமும்பருளார்
தம்பமாந்தசரதன்றிருமகனெனத்தழைத்தே
கம்பவாரிதியடைத்தருளயோத்திகாவலனும். (14)

இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டு முற்றிய யுகளமத்திய குளகம.
திணை – பாடாண் ; துறை – கடவுள்வாழ்த்து.

அரியுமயனுமரனுமெனமூன்றாய்த்
தெரியுமவருட்டெளிதற்–குரியபொரு
ளந்தாமத்தானென்றுணர்த்தியடியவர்தஞ்
சிந்தாகுலந்தவிர்த்ததே, (15)

முந்தமதுரகவிக்களித்தமூதுரைசா
லந்தமலரடியையாதிரைநாள்–வந்த
மறையவர்கோன்சென்னியினும்வைத்தெமையாள்செந்தே
னிறைவகுளப்பூங்கண்ணியன். (16)

இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம்.
கண்ணியைப் புனைந்தவனென்னும் வினையைக் குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானென் றுணர்க. என்னை?
“காலந்தாமேமூன் றெனமொழிப” “இறப்புநிகழ்வுமெதிர்வுமென்றா, வம்முக்காலமுங் குறிப்பொடுங்கொள்ளு,
மெய்ந்நிலையுடையதோன்றலாறே” என்றாராகலின். ஆதலால் வினைக்குறிப்பிற்குங் காலமுண்டெனக் கொள்க.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பரவல்.

முழுக்கலையற்றரைக்கலையுமிழந்தாய்தோகை
முருந்துறுபீலியின்முழுதுமுன்றில்சீக்கு
மொழுக்குறநின்றனையுடையுமஃதேயானா
யுன்விரதமெதுபெயரேதுரைத்தியென்னா
வழுக்கறவேயியங்குயிர்கொல்லாமையாசீ
வகனாகவிறைவன்யாரருகனில்யா
திழுக்கியல்பின்றாந்தனியூர்யாதுசெம்பொ
னெயிலெனவவ்வெயிலெவணென்றிசைத்துமீட்டும் (17)

எப்படிவந்தோன்றியதப்படிவத்தெல்லா
மின்னுயிருண்மையையுணராயியங்கற்பால
வப்படிவத்துயிருளதாயுணர்ந்தாயீசற்
கருத்துமுறையினிலருத்தியறத்திற்கேற்ற
துப்புரவுண்பதுகடனென்றுள்ளாயாகத்
தொழிலிகழ்ந்தாய்சுடர்சொருபாம்வேதமார்க்கந்
தப்பினையெம்மறைகொடுசாதிப்பதென்றே
சமண்மதத்தைப்பழித்தனராயழித்துச்சாய்த்தார் (18)

இவையிரண்டும் வினைப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம்.
திணை – பாடாண். துறை – “அமரர்கண்முடியுமறுவகையானு” மென்றதனால் முனிவர்வாழ்த்து ; பார்ப்பனவாழ்த்துமாம்.

முன்புலகமேழினையுந்தாயதுவுமூதுணர்வா
ரின்புறக்கங்காநதியையீன்றதுவு–நன்பரதன்
கண்டிருப்பவைகியதுங்கான்போயதுமமிர்த
முண்டிருப்பாருட்கொண்டதும், (19)

வெந்தகரியதனைமீட்டுமகவாக்கியது
மந்தச்சிலையினைப்பெண்ணாக்கியதுஞ்–செந்தமிழ்தேர்
நாவலன்பின்போந்ததுவுநன்னீர்த்திருவரங்கங்
காவலன்மாவலவன்கால். (20)

இவையிரண்டும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம். என்னை?
“பெயர்நிலைக்கிளவிகாலந்தோன்றா, தொழினிலை யொட்டு மொன்றலங்கடையே” என்றாராகலின்,
இடுகுறியாய்க் கால் எனக் காலமுந் தொழிலுந் தோன்றாதுநின்றவாறு காண்க.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வணக்கம்.
ஒழிந்த ஆதியினும் இடையினும் யுகளககுளகம் வந்தவழிக் கண்டுகொள்க. யுகளககுளகம் முற்றும்.

தொடுத்துமுத்தலைச்சூலவன்படையினைத்துண்டப்
படுத்துவெஞ்சினத்தாடகையுயிர்நமன்பகுவாய்
மடுத்துவேள்விகாத்தெதிர்ந்தபோர்நிருதர்க்குமரணங்
கொடுத்தடுந்தொழிற்கரன்முதலவர்க்குவிண்கொடுத்தே, (21)

கிளைத்துநாகவன்பிடர்மிசைக்கிளர்மராமரமேழ்
துளைத்துவாலிமார்பமுந்துளைத்தடற்கருஞ்சுடுதீ
விளைத்துவேலையுளுருகெழுகோதண்டமேனாள்
வளைத்துவாய்மையோர்வடிவெடுத்தனையதோர்வாளி, (22)

கும்பனைப்பொருநிகும்பனைக்கும்கன்னனைநீ
டம்புராசியிற்குரைத்தெழுபலப்படையதனைச்
செம்பொனாலயம்விருப்புறத்தெசக்கிரீவனைக்கொன்
றெம்பிரான்சனகியைமணந்தாடலெய்தியதும். (23)

இவைமூன்றும் வினைகொண்டுமுற்றிய சாந்தானிகாதிகுளகம். திணை – வாகை. துறை – வில்வென்றி.

அருமறையாய்நள்ளிரவிற்கொடுபோகிவசுதேவராயர்பாடித்
திருநகரத்திடைகரப்பவளர்ந்தவனும்வெண்ணெயினைத்திருடிமேனாட்
பொருவறுகைத்தாமரையாற்செங்கனிவாய்வைத்தவனும்போதனேற
னிருவருங்காண்பதற்கரிதாமந்தாமந்ததிபாண்டற்கெளிதினன்பால், (24)

கொடுத்தவனுமானிரைகாத்தருள்காலைக்
கன்மாரிகுடைகுன்றாகத்
தடுத்தவனுநான்முகத்தோன்கொடுபோய
பல்லுருவின்றன்மையாக
மெடுத்தவனுந்தேவகியீன்றருள்புதல்வன்
றுரோவதியாமின்பக்கொம்பன்
றுடுத்ததுகிலிருஞ்சபையுட்டொலையாமை
யளித்தவனுமுண்மைகூறின், (25)

காண்டகுபொன்முடியுதைத்துக்கஞ்சனைக்கொன்
றுறவோர்முன்கடுஞ்சொற்கூறப்
பூண்டதொழிற்சிசுபாலன்பொன்முடிசக்
கரத்தறுத்துப்புவனம்போற்றப்
பாண்டவற்குத்தூதாகிநூற்றுவர்மு
னுருணெடுந்தேர்ப்பாகனாகி
யாண்டகைமைத்தருமன்முதலவர்க்கவனி
யனைத்துமளித்தவனுமன்னோ. (26)

இவைமூன்றும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின சாந்தானிக மத்தியகுளகம். துறை – கடவுள்வாழ்த்து.

தெள்ளுநான்மறைப்பனுவலுமயனையாதியரும்
வெள்ளிவெண்மதிக்கடவுளுங்கதிருமீன்கணமுந்
தள்ளரும்பொறைமன்னுயிர்க்கணங்களுந்தழங்கு
கொள்ளைவெண்டிரைப்புணரிமொண்டெழநிலைகுலையா, (27)

வாக்கும்பாதமும்பாணியுங்கரணமுமற்று
நீக்கமுற்றமன்னுயிர்கடாமாயையுண்ணெடுங்கற்
றாக்குமாடகத்துகண்மெழுகடைந்தபோற்றயங்கக்
காக்கும்வாய்மையீங்கெனதெனத்திருவருள்கலந்தே, (28)

காலம்யாவையுங்கழிந்தபின்கழிந்தபேருருவின்
ஞாலமுற்றவுண்டுறுபுனனடுவணநயந்தோ
ராலநுண்டளிரெனுமனந்தனிலுலகனைத்தும்
பாலனாகியுள்ளடக்குபுதுயின்றனன்பரிப்பான். (29)

இவைமூன்றும் வினைப்பெயர்கொண்டு முற்றின சாந்தானிகாந்திய குளகம். திணை – பாடாண். துறை – கண்படைநிலை.

(குருகாமான்மியம். )

பரத்துவமுதலாப்பஞ்சவுற்பனனாம்
பரமனெமமிறைவனாமெனல்போல்
வரத்தொடும்புகழும்பஞ்சமாத்தொழிலும்
வழங்கலுமிவன்றிறத்தெனல்போற்
றிரத்தவாம்பஞ்சபூதமுஞ்செனித்த
செய்கையுமிவன்றிறத்தெனல்போற்
கரத்தினிற்பஞ்சாயுதங்களேதரித்த
கருணையங்கடவுளாமெனல்போல், (30)

ஞானமுமழகும்வீரமுந்திருவுநவையிலானந்தமுமெமவே
யானவேனையவாமுலகமென்பவற்றிற்கவையமைதியவலவெனல்போல்
வானுறநிவந்தவெழுநிலத்தமைந்தமாடசூளிகையின்யாப்புறுத்தைம்
பானிறந்தழீஇயதுகிற்கொடிநுடங்குபாங்கரின்வயங்குமெம்மறுகும், (31)

செம்மையின்யாணர்த்திவ்வியமணியாற்
செழும்பொனாற்றிசைதிசையெறிக்கும்
பொம்மலுநிவப்பும்வியலுநீளிடையும்
பொருந்தலினொருமறுகிடைப்புக்
கிம்மறுகெவனிங்கிவற்றுளிம்மாட
மெம்மணிமாடமென்றியாருந்
தம்வயிற்செறிந்தோரிமைப்பருநாட்டந்
தாங்கியுமறிவருந்தகைய. (32)

இவைமூன்றும் பண்பிடனாகத்தோன்றினவுடைமைவினைக்குறிப்புக் கொண்டுமுற்றின சாந்தானிகாந்தியகுளகம்.
சாந்தானிககுளகமென்பது மூன்றுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது.
திணை – இதுவுமது. துறை – பரமபதவருணனை.
இவையுள குருகாமான்மியம். ஒழிந்தனவும் வந்தவழிக்கண்டுகொள்க. சாந்தானிககுளகம் முற்றும்.

ஆதிப்பரப்பிரமநாராயணனென்றுஞ்
சோதிச்சுடர்மயமாந்தோற்றஞ்சா–னீதிச்
சொருபமுடனுருவந்தோய்ந்துளன்காணென்று
மொருபரந்தாமத்தானென்றும், (33)

பாங்குடையமன்னுயிரொன்றல்லபலவென்று
மாங்கவற்றுணீங்காதவனென்று–மோங்கவற்றை
நித்தியமாமென்றுமுடனித்தியமன்றென்றுமதை
யுய்த்ததுபூதாகியதென்றும், (34)

முத்திக்கவனேமுதற்காரணனென்றும்
பத்திவிடாதேபயிலென்றுஞ்–சத்தியமாய்ச்
செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த
சொல்வித்தகமேதுணிந்து, (35)

நாமானிடப்பிறவிநன்றென்றுந்தேர்ந்தனமாற்
காமாதிகளாங்களைகளைந்து–பாமாலை
சாத்தியேநெஞ்சேதருமெமக்குமுத்தியென
வேத்தியேயின்புற்றிரு. (36)

இவை நான்கும் வினைகொண்டுமுற்றின காபாலிகாந்தியகுளகம். திணை – பாடாண். துறை – குரவனைவாழ்த்தல்.

இச்சிப்போனிட்டவிணையடிப்போதன்றொருவ
னுச்சிப்போதானதுலகறிந்த–நிச்சயமே
யாய்ந்தாலொருவன்சிரத்தணிந்ததன்றொருவன்
பூந்தாள்கழுவும்புனல், (37)

இளிவந்ததுசெய்திரந்தானொருவன்
வெளிவந்தொருவனதைமீட்டான்–களிவந்த
சித்தமுறத்தன்பெயரேகேளாச்செவியனுக்கு
முத்தியளித்தானோர்முதல், (38)

சேதிப்பதாமொருவன்செய்தொழிலுமேனையவற்
காதிப்புவனமவைகாவல்–கோதற்ற
நற்குணத்தெம்பூமகள்கோனாரணனந்தாமத்தான்
முற்குணத்தானேயெம்முதல், (39)

என்றாய்ந்துணர்ந்துணர்த்தியிங்கெமையீடேற்றினான்
பொன்றாதசெஞ்சொற்புலவீர்கா–ளொன்றாய
தேவின்புறத்தமிழ்செய்தென்குருகூரன்மனம்போல்
வாவுஞ்சிறையோதிமன். (40)

இவை நான்கும் வினைக் குறிப்புக் கொண்டு முற்றின காபாலிகாந்திய குளகம்.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பரவல்.

மீனமதாயாமையாய்வெள்ளைவராகமதாய்த்
தானவனைக்கொன்றுமறைதந்தானும்–வானவர்க்காய்
வாங்குதிரைகடைநாண்மந்தரமேற்கொண்டானு
மோங்குமகிலங்கொணர்ந்தானும், (41)

ஆளரியாயாடகனைச்செற்றானும்வாமனமாய்த்
தாளிணையான்மூவுலகுந்தாயானுங்–கோளரிபோன்
மாறுதிரட்காவலரைமாய்த்தமழுவாளியா
யூறுதிரத்தேகுளித்தானும், (42)

அன்றுதனுராமனாகியிருபதுகைக்
குன்றினுயிரைக்குடித்தானும்–வென்றியுடன்
பார்திருத்துநாஞ்சிற்படையானும்பாண்டவர்க்கவ்
வூர்திருத்தமுற்றளித்தானும், (43)

புண்டரிகத்தானைப்புரந்தானுமைந்நீல
கண்டனிரப்பொழியக்கண்டானு–மண்டமினி
மேலிலையிங்கென்னவிழுங்கியவேகோதகத்தோ
ராலிலையின்மீதுதுயின்றான். (44)

இவைநான்கும் வினைப்பெயர்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம். திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

மாயோனெடியோன்மதுசூதனன்புவனந்
தாயோன்முகுந்தன்சராசரங்க–ளாயோ
னராரியரியச்சுதனாகணையான்
முராரியழியாமுதல், (45)

மாதவன்கேசவன்வாமனன்கோவிந்தன்
சீதரன்பூமகள்கோன்றேவேசன்–பூதலத்தை
யுண்டோன்விரிசிறைப்புள்ளூர்ந்தோன்பகிரண்டங்
கண்டோனிருதாந்தகன், (46)

மந்தாகினிபிறந்தவார்கழலோனேமியோன்
றந்தாவளமுரைத்தசால்பினோ–னெந்தை
திருமால்வரனுந்திபூத்தோனமரர்
பெருமான்பிரமன்பிதா, (47)

கண்ணன்கருணாகரனமலன்காயாம்பூ
வண்ணன்கடல்வண்ணன்மைவண்ணன்–விண்ணவர்கோன்
றம்பிரானாரணனந்தாமத்தான்வேதாந்த
னெம்பிரான்முத்தனிறை. (48)

இவைநான்கும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம்.
துறை – கடவுள்வாழ்த்து. ஒழிந்தவும் வந்தவழிக் கண்டு கொள்க. காபாலிக்குளகம் முற்றும்.

செம்பினையுருக்கிவாக்கித்திண்ணிதினகழிதூர்த்திட்
டும்பரின்முதலேவெண்பொனுவானமதமைத்தபின்றைப்
பைம்பொனார்செகதிகண்டம்பட்டிகைவகுத்திட்டோர்சா
ரிம்பர்நின்றேறயாளிச்சுருட்படியியற்றிமன்னோ, (49)

பாங்கர்வேதிகைக்குத்தானம்பகுத்தரங்கினுக்குநாப்ப
ணோங்குபொற்சுவர்நிறீஇவித்துருமசாளரஞ்செய்தோவா
வீங்கிருடுணிக்குஞ்செய்யவிழுமணியதனான்மேல்வாய்த்
தாங்குமுத்திரம்வைத்துள்வச்சிரத்துலாந்தகவின்வைத்தே. (50)

பச்சைநன்மணியையீர்ந்தபலகைமேற்பரப்பிநீலத்
தச்சுறுகொடுங்கைமூட்டியதன்புழையகத்தவாக
வச்சிரவளைகளோடிமணிசெய்வேதிகைமாண்டூணத்
துச்சிமேற்பலகைசிற்றுத்திரத்தினோடொன்றச்சேர்த்தே, (51)

வெள்ளிவெண்பலகைநான்குவிரல்வியனீப்பின்றாக
வள்ளுறநிறைத்துவண்பொன்னாணிகளழுத்திக்கையா
லள்ளுபுதிரளுமொண்பொன்னரதனஞாங்கர்மேய்ந்து
தெள்ளிதினேழதாகத்திகழ்நிலம்புணர்த்துமாதோ, (52)

வாரிநீணிலையுமேல்கீழ்மரீஇயநோன்படியுந்தாளுங்
கூர்கபாடமுமொன்றாகக்கொளீயமாண்மணிகடம்மாற்
சீர்கெழுதசும்புசூட்டுஞ்சிமயமோடுயர்ந்துவானு
ளார்தமக்கமைந்ததச்சர்க்கணங்குசெய்வனபொன்மாடம். (53)

இவை ஐந்தும் பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம்.
மேலைந்து முதலிய வெவற்றிற்குங் குளகமென்பன பொதுப்பெயர். திணை – பாடாண். துறை – நகர்வாழ்த்து.

அற்புதமாமன்னுயிரேபிரமமென்று
மலகிலவன்றொன்றெனவுமலகில்யாக்கை
நிற்பனயாதெனிற்புனல்பெய்கடங்கடோறு
நிழற்கதிர்தோன்றியநெறித்தாமென்றுமங்ஙன்
பொற்பனவொன்றிறத்தலுமேனையவும்பொன்றாப்
பொலிவெவனென்றாலவைபோலெனவுமாறிக்
கற்பனைசெய்பவன்றனைநான்பிரமமென்றே
கழறுமிரண்டெவனெனவேகழறிமீட்டும், (54)

நான்பிரமமென்றனைநீபிரமமாகி
னான்முகனையுந்தியிற்பெற்றிடுதிபொன்றா
வான்பிரமமமைத்தபகிரண்டமெல்லாம்
வயிற்றிடைவைத்திடுதிசதுமுகத்தால்வையந்
தான்புரந்தவ்வுலகினைமூவடியிற்றாய
தனுவினனோரணுமயமாந்தனுவுங்கோடி
யூன்பயின்றகுரம்பையைநீத்துலகமெல்லா
மொருங்கெறிக்குஞ்சுடர்மயமாமுருவுங்கோடி, (55)

ஆயிரவாய்ப்பஃறலைப்பாம்பணைமேற்காவ
லறிதுயிலுங்கொண்டிடுதியனந்தனாகி
மாயிருஞாலங்களொருபத்துநாலு
மணிமுடிமேற்றரித்திடுதிவழிந்துநாளுந்
தாயதிரைப்பாற்கடலைத்தயிரேயாக்கிச்
சந்திரனைமந்தரமேற்றறியதாக்கித்
தூயசுவைத்தெள்ளமிர்தநரர்க்கும்விண்மேற்
சுரர்க்களித்ததெனவளிக்குந்தொழிலுங்கோடி, (56)

எண்ணிறந்தநால்வகைத்தோற்றத்துளாய
வெழுவகைத்தாஞ்செனனமுநீயிசைந்துபின்ன
ரெண்ணிறந்தவிடங்கடொறுநிற்பதோடு
மியங்குதியீங்கிவையன்றியேககாலத்
தெண்ணிறந்ததொழில்புரிதியண்டரண்டத்
திவ்வுலகிற்பாதாளத்தின்பதுன்ப
மெண்ணிறந்தவிவர்க்கிவற்றிற்கிசைந்ததென்றென்
றிசைந்ததிறம்வாய்மையதாயிசைப்பதோடும், (57)

இவ்வுடலத்திறத்தியிறந்திடுகாயத்தை
யீமத்தங்கிடுபொழுதிலெரிந்திடாதே
யவ்வுடலத்துடனெழுந்துவருதிகாயத்
தருவருப்பாக்கியமலமூத்திரங்களெய்தாச்
செவ்வியின்வாழ்ந்திடுதிநரைதிரைமூப்பில்லாச்
சிறப்பினொடும்வளிமுதலாச்செறிந்தமூன்றும்
வவ்வுதலற்றீறில்சுகானந்தமேய
வச்சிரகாயம்புணர்ந்தவாழ்வினோடும், (58)

மின்னுயிர்க்குங்கனகன்வினவினபொற்றூணம்
வெடிப்பவுதித்தடித்தகரம்பிடித்தபோல
வுன்னுயிர்கொண்டெனதுகரம்பிடித்ததூணத்
துறுதியிவைமுதலவுனக்குறுதிவதின்றான்
மன்னுயிர்தாமலகிலவாம்வகையுமீசன்
வாழ்வகையுமுணர்ந்திலையுன்மத்தனானா
யின்னுயிர்வேறின்னுயிர்கட்குயிராய்நின்ற
விறைவனும்வேறெனத்தெளிவித்திதஞ்செய்வாரே. (59)

இவையாறும் வினைப்பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம். திணை – பாடாண். துறை – முனிவர்வாழ்த்து.
*”ஆங்கதன்” முதல், “கொண்டமால்வரை” ஈறாக 9-ம் பரனிருப்பான் என வினைமுற்றுக் கொண்டுமுற்றின அந்தியகுளகம்.
இவற்றின்மிக்குவருவனவு முள ; அவையும் பெருங்காப்பியங்களினிடத்துக் கண்டுகொள்க. குளகம் முற்றும்.

* ‘ஆங்கதன்’ என்பது குருகாமான்மியம் பரமபத வருணனைச் சருக்கத்து 105-ம் செய்யுள்.
‘கொண்டமால்வரை’ என்பது மேற்படி சருக்கத்து 113-ம் செய்யுள்.

நாவலன்பின்போந்தநறுநீர்த்திருவரங்கங்
காவலன்பொற்றாளாங்கமலத்தே–பாவலர்தம்
பாமாலைசூட்டாதப்பாமாலையையெவனோ
தாமானிடர்க்களிக்குஞ்சால்பு. (60)

புரந்தரனாதியராயபுத்தேளிர்பொற்போதுகடூஉய்
நிரந்தரமேத்தும்படியேதுயின்றதுநெஞ்சத்தன்பு
கரந்தரன்சாபந்துடைத்தோனிருந்ததுதொண்டர்க்கெல்லாம்
வடிந்தரநின்றதரங்கநன்காஞ்சிவடமலையே. (61)

மலைமுழைவைகலும்வைகினராகியுங்
கனிகிழங்கடகுகண்டனமாந்தியு
மூவராயுமுதற்கடவுட்
காவலநீயேகாத்தல்வேண்டுவலே. (62)

வேண்டுவதிங்கின்றெமக்குமெய்க்காவிரியரங்கத்
தாண்டகைதன்வெற்பிலணங்கன்னார்–காண்டகுசீர்ப்
பொன்றாமலர்முகமும்பூண்முலையுங்கண்டனம்யா
மென்றாலினியிதன்மேல்யாது. (63)

என்றாலினியிதன்மேல்யாதுவேண்டுமெனக்குவெள்ளிக்
யன்றாடரவிற்றுயிலரங்கேசனருள்புரிந்து
பொன்றாதசெல்வத்திருமாதுடனுட்புகுந்தனனே. (64)

இவ்வைந்துபாட்டினும் எழுத்து அசை சீர் அடியென்னும் நாலந்தாதியும் அடைவே வந்தவாறு கண்டுகொள்க.
இவற்றுள் “வேண்டுவதிங்” கென்ற வெண்பாவொன்றும் கிளவிவேட்டல். ஒழிந்த நான்குங் கடவுள்வாழ்த்து.
இவை நம்பெருமாள்மும்மணிக்கோவை.

இனிப் பலவடியான்வரும் ஒரு செய்யுளகத்து நாலந்தாதியும் வருமாறு :-

நாவேயுரனுறுநலமிகுமுதற்பொருள்
பொருளுரையாய்தரிற்புகலுமற்றுளதே
யுளதேவண்டிமிருறுமலரோடை
யோடைமால்வரைமூலமென்றுரைசெய
வோடைமால்வரைமூலமென்றுரைசெய
வுரைவிசைத்தடங்காவொல்லையிற்குறுகுபு
புனிற்றாவெனவருள்புரிந்திடர்செகுத்த
வறைபுனலரங்கத்தமுதினையன்றியு
மதித்தொருமுதலையேமகிழ்ந்து
துதிப்பதுமுளதோசுரர்பெருநாவே. (65)
இந்நேரிசையாசிரியப்பாவினுள் நாலந்தாதியும் வந்தவாறு காண்க.

இன்னு மவ்விலேசானே இறுதிநின்ற சொற்பொருணோக்கத்தான் ஆகுபெயராற் சொற்றொடர் வருவனவுமுள. அதற்குச் செய்யுள் :-

“பரிவதிலீசனைப்பாடி
விரிவதின்மேவலுறுவீர்
பிரிவகையின்றிநன்னீர்தூஉய்ப்
புரிவதுவும்புகைபூவே.” (66)

“மதுவார்தண்ணந்துழாயான்
முதுவேதமுதல்வனுக்
கெதுவேதென்பணியென்னா
ததுவேயாட்செயுமீடே.” (67)

69.உலவாதகேள்வியொருவர்பலராற்
பலவாய்ப்பகர்பாவினமா–யிலகுபொரு
ளெண்பாட்டளவுதொழிலிடங்காலஞ்சினையின்
பண்பாந்தொகைநிலைச்சொற்பா.
(எ-ன்) வைத்த முறையானே தொகைநிலைச்செய்யுளாமாறுணர்-ற்று.

(இ-ள்) தொகைநிலைச்செய்யுளென்பது குறையாத கேள்வியினை யுடைய வொருவரானாதல் பலரானாத லுரைக்கப்பட்டுப்
பலபாட்டாய் வருவனவாய், அவை பொருளானும் எண்ணானும் பாட்டானும் அளவானும் தொழிலானும் இடத்தானும்
காலத்தானும் சினையானும் தொகுத்து பெயர்பெற்ற பண்பினையுடையவாமென்றவாறு.

இன் உருபுமயக்கம். உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. உலவாத கேள்வியென்பதனை யிருவரிடத்துங் கூட்டுக.
கேள்வி-கல்வி ஒருவராலுரைக்கப்பட்டன திருவள்ளுவப்பயன். பலராலுரைக்கப்பட்டன – நெடுந்தொகை.
இஃ தெல்லாத் தொகைக்கும் பொது. பொருளாற்றொகுத்த பெயர்பெற்றது புறநானூறு.
எண்ணாற்றொகுத்தபெயர் பெற்றது பதிற்றுப்பத்து. பாட்டாற்றொகுத்தபெயர்பெற்றது கலித்தொகை.
அளவாற்றொகுத்தபெயர் பெற்றது குறுந்தொகை. தொழிலாற்றொகுத்த பெயர்பெற்றது ஐந்திணை.
இடத்தாற்றொகுத்தபெயர்பெற்றது களவழிநாற்பது. காலத்தாற்றொகுத்தபெயர் பெற்றது கார்நாற்பது.
சினையாற்றொகுத்தபெயர்பெற்றது நயனப்பத்துபயோதரப்பத்து.
உம்மை யெச்சவும்மையாகலானிவ் வெட்டுவகையானுமன்றிப் பிறவகையானும் பெயர்பெற்றனவுளவேனும்
அவையும் அறிந்துகொள்க. தொகைநிலைச்செய்யுண் முற்றும்.

70.சொல்லாற்பொருளாற்றொடருந்தொடர்நிலைக
ளெல்லாமவற்றுளெழுத்தசைசீர்–மல்கு
மடிசொற்றொடர்நிலைகளந்தமுதலாம்
படிவைத்தனர்முன்பகுத்து.
(எ-ன்) தொடர்நிலைச்செய்யுளினது கூறுபாடுணர்ற்று.

(இ-ள்) தொடர்நிலைச்செய்யுளென்றுகூறப்படுவன வெல்லாஞ் சொல்லானும் பொருளானுந் தொடரப்படுவனவாம்.
அவ்விரண்டனுள், சொற்றொடர்நிலையைப் பகுத்துக்கூறுமிடத்து நின்றசெய்யுளி னீற்றெழுத்தாதல்,
அசையாதல், சீராதல், அடியாதல் வருஞ்செய்யுட்கு முதலாகத் தொடுக்கும்படியென வுட்கொண்டனர் முற்காலத்துப் புலவரென்றவாறு.

வைத்தனர் – உட்கொண்டனர். இச்சூத்திரப்பொருள்கோள் மட்டுறுப்பு.
எல்லாமென்றதனான் மூன்றாவது சொல்லினாலும் பொருளினாலுந் தொடர்வதுமுளவெனக்கொள்க.
மல்குமென்று சிறப்பித்தவதனால் நான்கும், பலவடியான்வரு மொருசெய்யுளகத்தும் வருவதுளவெனக் கொள்க.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-
இவை முதற்பத்தி லாறாந்திருவாய்மொழியின் முதற்பாட்டும் இரண்டாம்பாட்டும்.
இவற்றுள், பூவென்றசொல்லின் பொருணோக்கத்தாற் சினையைக்கூற முதலையறிவிக்கும் ஆகுபெயரால் அந்தாதித்தவராறுணர்க.
இவை நாலுவேதத்தையும் ஓதாதுணர்ந்த ஞானபூரண ஞானமுத்திரைக்கராம்புயன் றிருவாக்கு. சொற்றொடர்நிலைச்செய்யுண் முற்றும்.

71.பெருங்காப்பியங்காப்பியமெனும்பெற்றித்தாற்
சுருங்காப்பொருட்டொடருஞ்சொல்லிற்–பொருந்தவற்று
ளொன்றும்பலவும்பொருளிற்குறைவுறுமே
லென்றுமதுகாப்பியம்.
(எ-ன்) பொருட்டொடர்நிலைச்செய்யுளின்கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) பொருட்டொடர்நிலைச்செய்யுளின்கூறுபாடு சொல்லுமிடத்துப் பெருங்காப்பியமென்றும் காப்பியமென்றுங்
கூறு மிரண்டியல் பினையுடைத்தாம் ; அங்ஙனம் பொருந்தியவற்றுள் அறமுதலிய பொருள்கள் நான்கினுள்
ஒன்றாயினு மிரண்டாயினுங் குறைவெய்தவரு மெனில் அதனை யெக்காலத்தினுங் காப்பியமென்பதேயா மென்றவாறு.

எனவே நாற்பொருளுங் குறைவின்றிவருவதே பெருங்காப்பிய மென்பதாம்.
சுருங்காப்பொருட்டொடரெனவே பொருட்டொடர் மிகவும் விரிவுடையதென்பதூஉமாயிற்று.

72.வைத்தபெருங்காப்பியநிலையும்வாழ்த்தியல்பார்
மெய்த்தவவையடக்கம்வீறுசான்–முத்திதருந்
தெய்வவணக்கமுடன்செய்பொருளுமுன்வரவாங்
கெய்தவுரைப்பதுதானேய்ந்து.

73.தப்பிலாநாற்பொருளுஞ்சாற்றுவதாய்த்தாரணிமே
லொப்பிலாதான்சரிதையுட்கொண்ட–செப்பமுற
நன்மணமில்வாழ்க்கைநலம்புதல்வர்ப்பேறுபசும்
பொன்மகுடம்வைத்தின்புறல்.

74.அலையாழிமேன்மையருட்புயலின்செய்கை
மலையாறுநாடூரின்வண்மை–தொலையா
விருசுடரின்றோற்றமிருதுவளம்பானம்
பொருபுனல்புக்காடல்பொழில்.

75.மந்திரந்தூதொற்றொடல்வாய்ந்தநிரைகோடல்
புந்தியுறச்சேறல்புறத்திறுத்தல்–வெந்திறல்கூர்
மிக்கவிகல்வென்றிநிலையாமையைமிகுத்தல்
கைக்கிளைகள்கூறுங்கடன்.

76.படலமிலம்பம்பரிச்சேதங்காண்டந்
தொடர்தொடர்பிற்பாடையுரைதோய்ந்துந்–திடமுறச்சொன்
மூன்றுட்கொளலாமுறையிற்சுவைவிறல்கூர்ந்
தான்றவர்மெய்ப்பான்புகல்வதாம்.

இவ்வைந்து பாட்டும் என்னுதலிற்றோவெனின், மேற்சொன்ன பொருட்டொடர்நிலை யிரண்டனுள்ளுங்
காப்பியத்தின் மரபுணர்த்திப் பெருங்காப்பியத்தின்மரபுணர்-ற்று.

(இ-ள்) சொல்லுவானுட்கொண்ட பெருங்காப்பியத்தினிலக்கண முலகமதிக்கப்பட்ட வாழ்த்தியலும் அவையடக்கியலும்
தெய்வவணக்கமும் செயப்படுபொருளும் என்னும் நான்கும் பாயிரத்தினு ளவ்வவ் விலக்கண முரைத்தபடியே பொருந்துவனவாய்,
வழுவுதலில்லாத நான்கு பொருளையுங் குறைவறக் கூறப்பெற்று, உலகத் தொத்தாரு மிக்காரு மில்லாத தலைவன்
சரிதையுட்கொண்ட வுண்மையுற்று, நன்மணம், இல்வாழ்க்கை, கலவி, புதல்வர்ப்பேறு, பொன்முடிபொறுத்தின்பமுறுதல்,
கடலை மேகத்தை மலையை யாற்றை நாட்டை நகரத்தை ஆதித்த வுதயத்தைச் சந்திரவுதயத்தைச் சிறுபொழுதைப்
பெரும்பொழுதை வருணனைபுரிதல், வீரபானம், காமபானம், புனல்புக்காடல், பொழில்புக் காடல், மந்திரம்பகர்தல்,
தூதுவிடுதல், ஒற்றாடல், நிரைகோடல், மேற்சேறல், எயிற்புறத்திறுத்தல், செருச்செய்கை, வென்றியெய்தல்,
வென்றவேந்தன் நிலைபெற்றிருப்ப இறந்தவேந்த னிலையாமையை மிகுத்துரைத்தல், ஆண்பாற்கூற்றுக்கைக்கிளை,
பெண்பாற்கூற்றுக் கைக்கிளை யென்னு மிவற்றினையும் பாடாண்பகுதி யென்பதனோடுங் கூறுமுறைமையுடன்
படலமென்றாதல் இலம்பகமென்றாதல் பரிச்சேதமென்றாதல் பகுதிப்படுமவற்றை யுட்கொண்ட காண்டங்களோடும்
பொருட்டொடர் புடைத்தா மொருதிறப்பாட்டு மிருதிறப்பாட்டுமாகிய பாப்பாவினத்தோடும்
பாடைவிராயு முரைவிராயு மேற்சொன்ன வுண்மையுடைய முத்தகமுதலிய மூன்று முட்கொள்வனவா முறைமையுடன்
எட்டு மெய்ப்பாடும் மெய்ப்பாட்டுக்குறிப்பு மிகுந்து கல்வி கவியான்மிக்கோர் மதிக்கும்படியுரைப்பதா மென்றவாறு.

இதனுள், வைத்த என்பது உட்கொண்ட எ-று. நிலை–இலக்கணம். இயலு மது. பார்-உயர்ந்தோர் ; இடைநிலைத்தீபகம்.
முன்வரவு-பாயிரம். என்னை? நூற்குமுன்னேவருதலான் முன்வரவென்றாயிற்று.
செய்பொருளு மென்னு மும்மையாற் றழுவப்படும் எஞ்சுபொருட்கிளவி பிற்படக்கிளத்தலாய்நின்றும்மையில்செஞ்சொல்லாய்
முற்படக்கிளந்த வாழ்த்தியல் முதலாய மூன்றினுங் கூட்டி விரித்துரைக்கப்பட்டது. என்னை?
“எஞ்சுபொருட்கிளவிசெஞ்சொலாயிற், பிற்படக்கிளவார் முற்படக்கிளத்தல்” என்றாராகலின். நலம் – புணர்ச்சி.
இருதுவும் பானமும் சாதியேகவசனம். புக்காடலென்பதனைப் புனல் பொழி லிரண்டினுங் கூட்டுக.
செப்பமுற – உண்மையுற ; என்பது, செய்து என்பது செய என ஒரு வினையெச்சம் மற்றொருவினையெச்சமாகிநின்றது.
வாய்ந்தநிரைகோடல் என்பது முதலாக் ‘கைக்கிளைகள் கூறுங்கடன்’ என்பதனால் வெட்சிமுதற் பாடாண்டிணையீறாகப்
புறம் புறப்புறம் அகப்புறம் என்னும் மூன்றுகூறாய வெழுதிணையு முறையே கூறியவாறுங் காண்க.
இவ்வாறன்றி, இவற்றி னிடையிடை கரந்தை நொச்சி என்பவற்றையும், இறுதியிற் பொதுவியல் கைக்கிளை பெருந்திணை
என்பவற்றையும் கூட்டிப் பன்னிரு படலமாக்கி யவற்றிற்கு இருபது, பதினாலு, இருபத்தொன்று, இருபத்திரண்டு, ஒன்பது,
இருபத்தொன்பது, இருபத்துநாலு, முப்பத்துமூன்று நாற்பத்தெட்டு, முப்பத்தேழு, பத்தொன்பது, முப்பத்தாறு
எனத் திணையுந் துறையுமாக விரித்து வெண்பாமாலையாகிய வழிநூலுள் ஐயனாரிதர் கூறிய
தூஉம் இவ்வெழுதிணையு ளடங்குமெனக் கொள்க.
தப்பிலா நாற்பொருளுஞ் சாற்றுவதாய் என்பதனாற் கூறிய வுறுப்புக்கள் சிலபல குறையினும்
நாற்பொருளுங் குறையாதனவெல்லாம் பெருங்காப்பியமெனக் கொள்க.
பாடை – திசைச்சொல் ; “சிதைந்தனவரினு மியைந்தனவரையார்” என்பதனால் *பாஷை பாடையாயிற்று.
உரை – செய்யுளின்றி உரைநடை யான் வருவது. அது இளங்கோவடிகள் கூறிய சிலப்பதிகாரத்துட் கண்டுகொள்க.
உம்மையால் உரையிடைவிரவாது வருவதே சிறப்புடைத்தெனக் கொள்க.

77.மன்னியபேர்யாப்பிற்குவைதருப்பம்வான்கவுடம்
பன்னியபாஞ்சாலமெனப்பகுத்து–மின்னிடையாய்
நன்னூன்முழுதுணர்ந்தோர்நாட்டகத்துநாட்டலுறீஇ
முன்னூலுட்கண்டநெறிமூன்று.
(எ-ன்) இதுவு மேற்சொன்ன செய்யுட் கூறுபடுபாகமுணர்-ற்று.

(இ-ள்) இங்ஙனம் நால்வகைத்தாக நிலைபெற்றபெயரையுடைய செய்யுளனைத்திற்கும் வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு
மூன்று நாட்டினகத்துள்ளாரால் வழங்கும் பாகத்தான் மூன்றாகப் பகுத்து அவ்வவநாட்டினதுபெயரால் நல்ல நூல்களை
முற்றவுணர்ந்தோர் தங்களாற் செய்யப்படுமுந்து நூலகத்து நாட்டுதலையுற்றுக் கண்டமார்க்க மூன்றுளவாமென்றவாறு.

உறீஇ – உற்று. வைதருப்பம் – விதர்ப்பநாட்டது. மின்னிடையாய் என்பது மகடூஉமுன்னிலை.

78.இழுமென்மொழியுமினியபொருளுந்
தழுவுமதுவைதருப்பம்–விழுமியவாஞ்
சொற்கடினத்தோடும்பொருட்கடினந்தோய்ந்தரிதாய்க்
கற்பனசாருங்கவுடங்காண்.
(எ-ன்) வைத்தமுறையானே வைதருப்பபாகமுங் கௌடபாகமும் பாகுபடுமாறுணர்-ற்று.

(இ-ள்) மெல்லென்ற விழுமிய இனியமொழியும், மெல்லென்ற விழுமிய இனிய அறமுதலிய நாற்பொருளும்
பொருந்துவன வைதருப்ப பாகமாமென்றும், விழுமிய சொற்கடினமும் பொருட்கடினமுந்தோய்ந் தரியநடைத்தாய்ப்
புலவனாற்கூறப்படுவது கௌடபாகமாமென்றும் மனத்தாற் கண்டுகொள்க வென்றவாறு.
* பாழ்சை – பிரதிபேதம்.
விழுமியது – முக்கியம். இதனுள் விழுமியவாம் என்பதனை இடைநிலைத்தீபகமாக்கியும்,
காண் என்பதனை யிரண்டிற்கு மிறுதிவிளக் காக்கியும், மனத்தாலென்பதனை யெச்சமாக விரித்தும்,
மென்மையினிமை யென்பவற்றை முன்னையதற்கு முதனிலைத்தீபகமாக்கியுங் கொள்க.
சொற்கடினம் – வல்லினம் வல்லொற்றடுத்து மிகுதல். பொருட் கடினம் – பயங்கரமாகிய பொருள்பயத்தல்.

79.இடையிட்டனவாகுமின்சொற்பொருளாற்
றடையற்றொழுகுவபாஞ்சால–மடைவடைவே
யக்கவிகள்பாடுமவர்க்கங்கவைபெயராய்
மிக்குலகங்கூறும்விதித்து.
(எ-ன்) ஒழிந்த பாஞ்சாலத்தின்பாகுபாடும் அக்கவிகள் பாடு வோர்க்கெய்துங் காரணப்பெயருமாமாறுணர்ற்று.

(இ-ள்) மென்மையுங் கடினமுமாகிய வைதருப்பகௌடங்களோடுங் கூடாதே யிடைநிலைப்பட்டவா மினிய
சொல்லானும் பொருளானுந் தடையின்றி நடைபெற்றொழுகுமது பாஞ்சாலபாகமாம்.
முறை முறையே அக்குணக்கவிகள் பாடுவோர்க்கு மங்கங் கதுவேபெயராக விதித்து
மிக்க பெரியோராற் கூறப்படு மென்றவாறு. அவை வைதருப்ப கவி கவுடகவி பாஞ்சாலகவி என்பனவாம்.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-

பதியுமாமுகில்கரிப்படாமுமாய்ப்புன
னதியுமாய்ப்படுகதிர்நான்றவேணியாய்
மதியமாமுளைமதிமதியமாய்த்தமிழ்ப்
பொதியமானதுசிவன்போலுமானதே. (68)

உந்தியங்கமலமேலுதிப்பதாலுரஞ்
சிந்துதெள்ளருவிவெண்ணூலின்செம்மைத்தாய்ப்
பந்திசேர்திசைமுகம்பயிலும்பான்மையாற்
சந்தமால்வரைமறைத்தலைவனொத்ததே. (69)

விண்டுவென்றுரைப்பதால்விண்ணினோங்கியே
பண்டுலகளந்தமெய்ப்படிவங்கூர்ந்தடிக்
கொண்டநீர்பகிரதிக்கோதையொத்ததால்
வண்டுழாய்மலைந்தசெம்மலையுமொத்ததே. (70)
இவைமூன்றும் வைதருப்பபாகம். திணை – பாடாண். துறை – மலைவருணனை.

முப்புரத்தினைச்செகுத்தமுக்கணக்கனிற்சிரித்து
முத்தலைக்கணிச்சியுக்கதாற்
றப்பறப்பொருப்பினைக்குலுக்கிடக்கையைச்செருத்
தலத்துறப்புடைத்துருத்தெழா
நெய்ப்புறத்தினிற்குளித்தவச்சிரத்தினைப்பிடித்து
நெட்டுயிர்ப்புயிர்த்தியக்கவே
குப்புறப்புழைக்கைவெற்பின்மத்தகத்தினைத்துளைத்த
கொப்புளித்தபச்சிரத்தமே. (71)

மத்தகத்தழுத்துவச்சிரத்தினைப்பறித்துயர்த்தி
மத்தவெற்புடற்றிநிற்பதா
னத்தகத்தடக்குமைக்கடற்கடைக்கனற்சினத்த
னச்சுளத்தினுற்றெதிர்ப்பவே
பித்தகத்தழைத்தடற்பொறிப்புலிப்புலத்தினுற்ற
பெற்றமொப்பவட்கியுட்குநீ
டுத்தமச்சுவர்க்கமுற்றகொற்றவற்கிமைப்படுத்த
வொத்தபத்துடைச்சதக்கணே. (72)

புற்புதக்கடக்கவுட்பொருப்புவச்சிரத்தினைப்
புழைக்கையிற்புடைத்தியக்கவே
யுற்றதுக்கிரச்சமர்க்குடக்குமிக்குரத்துரத்
துடைத்ததைப்பறித்துருத்திடா
வற்புதத்தெதிர்த்தியக்கநெட்டடிக்குளுற்றதொற்றை
யக்களிற்றைவிட்டுமுட்டவே
தெற்குவெற்பினைத்துளைத்ததப்புறப்புறக்கொடைத்
திசைக்களிற்றினைத்துளைத்ததே. (73)

முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்

82 மாறனலங்காரம்
இவைமூன்றுங் கௌடபாகம். திணை – தும்பை. இவற்றுள், முப்புரத்தினையென்றது ஏமவெருமை. ஏனையிரண்டும் யானைமறமும் ஏமவெருமையுமாம்.

விரைக்கமலமுறுக்குடைந்ததகட்டகட்டினடுப்பொகுட்டு
வெண்டோட்டும்பர்
நிரைக்கமலத்தினிதிருந்துசூட்டெகினம்பார்ப்பருத்த
நினைத்துநீர்வா
யிரைக்கெழவேசெங்கால்வெள்ளுகிருறுமுன்னிதழுரிஞ்சி
யிழிந்ததீந்தே
னரைக்குடுமிமறைக்கிழவனெருப்பிடைநெய்யுகுப்பனபோ
னான்றமாதோ. (74)

மாதண்டர்புகழ்ந்திடவாழ்ந்தருள்வாமபாகத்து
மழைதோய்வெள்ளி
வேதண்டமிசைப்பவளவேதண்டம்பகிரண்டம்
விழைவுகூர்வான்
மூதண்டமுகடுதொடுமும்மதிளின்முரண்முருக்க
முன்கைக்கொண்ட
கோதண்டவடவரைபோற்பணைத்தகெந்தமாதனமாங்
குன்றொன்றுண்டே. (75)

நெய்த்திருண்டுசுருண்டுகடைகுழன்றறலின்கெழுதகைத்தாய்
நெறித்துநீண்டு
மொய்த்திருக்குங்குழற்காட்டின்முகையவிழ்பூந்துணர்விரையு
முற்றாமுன்ன
ரெய்த்திருக்குமிடைக்கிடர்மேலிடரிழைக்குந்தமர்போலு
மிறுமாந்தொண்பூண்
வைத்திருக்குமுலைமுகட்டிற்பொதிகளபத்தொளிவிரையும்
வளைந்தமன்னோ. (76)

இவை மூன்றும் பாஞ்சாலபாகம். முதற்பாட்டு நாடுவாழ்த்து. இரண்டாவது மலைவருணனை. மூன்றாவது குழல்வருணனை.
இவை யொன்பதுங் குருகாமான்மியம். இவை மூன்றுபாகமும் பலவடியான்வரு மொருசெய்யுளின்கண்ணே
பலவடிதோறும் விரவியும் பேதித்தும் வருவனவு முள. அவையும் மேற்காட்டுதும்.

80.இன்பந்தெளிவுசெறிவுசமனின்னிசையே
நன்சொலுதாரநவின்றவலி–மன்காந்தந்
தையலுய்த்தலில்பொருண்மைசாற்றுஞ்சமாதியுட
னையிரண்டும்வைதருப்பமாம்.
(எ-ன்) எடுத்தமுறையானே வைதருப்பத்திற் கெய்துவனவாங் குணவலங்காரங்கட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்ற்று.

(இ-ள்) இன்பமுந் தெளிவுஞ் செறிவுஞ் சமனிலையு மின்னிசையு முதாரமும் வலியுங் காந்தமு முய்த்தலில்
பொருண்மையுஞ் சமாதி யென்பதோடும் பத்தும் வைதருப்ப குணவலங்காரமாமென்றவாறு.

81.ஏனைக்கவுடமிவையீரைந்தொடுங்கூடா
மானைப்பழித்தமதர்விழியாய்–நூனயந்திங்
கெண்ணியபாஞ்சாலமிவைகட்கிடைப்பட்டு
நண்ணியதோர்சால்புடைத்தாநான்கு.
(எ-ன்) ஒழிந்தனவாங் கௌட பாஞ்சாலங்களும் அக்குணவலங்கார மேற்குங் கூறுபாடுணர்ற்று.

(இ-ள்) ஒழிந்த கௌடமு மிங்ஙன மெண்ணப்பட்ட பத்தி னோடுங்கூடாது நடக்கு மிலக்கணத்தவா மென்றவாறு.
பத்தினோடுங் கூடாதெனவே யும்மை யெச்சமாதலாற் சிலவற்றோடுங் கூடியும் வருமென்பதாம்.
பாஞ்சாலமு மப்பத்தினோடும் வைதருப்ப கௌடங்க ளோடுங் கூடா திடைப்பட்டுநடத்தலைப்பொருந்து
மொழுக்கத்தினை யுடைத்தென்றவாறு. இவைகட்கும் என்னும் உம்மை யிறந்தது தழீஇய எச்சவும்மையாம்.

82.சொல்லாற்பொருளாற்சுவையுறலின்பந்தெளிவு
மொல்காப்பொருள்புலப்பாடொண்செறிவு–நல்லா
யெழுத்தோரினஞ்செறிதலெல்லாவெழுத்தும்
வழுத்தீர்ந்துறல்சமனுமாம்.

83.இன்னிசையதின்னிசையாமேய்ந்தவுதாரங்குறிக்கொள்
சொன்னடையால்வேறுபொருடோன்றலா–நன்னுதாஅல்
வாய்ந்ததொகைமிக்குவருதல்வலிகாந்த
மாய்ந்தொன்றனையுயர்த்தலாம்.

84.செய்யுட்பொருளைத்தெளியவிரித்தற்குரிச்சொல்
லெய்துநடைத்துய்த்தலில்பொருண்மை–தையலா
யோங்குஞ்சமாதியுவமேயத்தின்வினையை
யாங்குவமைக்கேற்றுவதொன்றாம்.
(இவைமூன்றுசூத்திரமு முடனெழுதப்பட்டன. )

(எ-ன்) இவை யின்பமுதற் சமாதியீறாய பத்து மாமாறுணர்-ற்று.

(இ-ள்) சொல்லினாலும் பொருளினாலு மினிமையுறவருதல் இன்பமாம்.
தெளிவென்பது கவியாற் கருதப்படும்பொருள் கேட்போர்க்குக் குறிப்புமொழியின்றி வெளிப்படைமொழியாகத் தோன்றுவதாம்.
ஒள்ளியசெறிவும், மூவினமாகிய எழுத்து ளோரின மிகுந்து செறியப் பாடுவதாம். ஒள்ளியசெறிவென்றதனால்
எழுத்தானாகிய சொல்லானாய பொருள் செறிதலுங் கொள்க. சமனிலை மூவினமும் விரவப் பாடுவதாம்.
இரட்டை துணிவு. இன்னிசையும் அவ்வவ் செய்யுட்கேற்ற சொன்னடையாற் பாடுவதாம்.
உதாரமும் செய்யுட் சொன்னடையால்வரும் பொருளன்றி யதன் குறிப்பினால் வேறுபொருடோன்றுவதாம்.
வலியும் தொகைநிலைச்சொன் மிக்குவருவதாம். காந்தமும் ஒன்றனை யுயர்த்திப்புகழுங்கா லுலக
நடையிறவாமை யாராய்ந்துயர்த்துவதாம். உய்த்தலில்பொருண்மை கவி தன்னாற்கருதிய செய்யுட்பொருளை
விளங்க விரித்துக் கூறுவதற்குப் பிறிது மொழிபெய்துகூட்டா ததற்குரியசொற்கள் செய்யுளகத்துளவாம்படி பாடுவதாம்.
சமாதி உவமேயத்தின்வினையை யுவமைக்கேற்றுவதோரிலக்கணத்ததா மென்றவாறு.
இதனைச் சாற்றுஞ் சமாதியென்றதனாற் குணவலங்காரங்கள் பத்தினுள்ளு மிதுவே சிறந்த
குணவலங்கார மென்பதூஉ மிஃது மூன்றுநெறியார்க்கு மொக்குமென்பதூஉ மாயிற்று.
இவற்றிற்கெல்லாம் எண்ணும்மை யிடையிட்டுவந்தன. ஆம் என்பதனைச் சூத்திரந்தோறு மிறுதிவிளக்காகக் கூட்டுக.
நல்லாய், நன்னுதாஅல், தையலாய் என்பன மகடூஉமுன்னிலை. தையலென்பது அண்மைவிளி.

அவற்றுள், சொல்லின்பமாவது அடை சினை முதலென முறைமூன்று மயங்காமை வரும் வண்ணச்சினைச்
சொற்களும் முதலொடு குணமிரண்டடுக்கிவரும் அடைசொற்களுஞ் சினையொடு குணமிரண்டடுக்கி வரும்
அடைசொற்களும் வழக்கிடமுஞ் செய்யுளிடமுமாக விரண்டிறந்தனவா யடைபல வேண்டினவழியேபுணர்ந்த
சொற்களுடன், வழிமோனை முதலியன வரத்தொடுப்பனவாம்.
அவற்றாற் கேட்டோர் பெறு மின்பம் சொல்லின்பம். பொருளாவன :- அறம் பொருள் இன்பம் வீடென்பன.
அப்பொருளால்வரு மின்பமாவது மலரின் மதுக்காரணமாக மதுகரங்கட்கு வரு மின்பம்போலக் கவிப்
பொரு ளுட்கொண்டோர்க்குவரு மின்பமாம். னெவே யவ்விரண்டினுள், பொருளணியுள்ளு முக்கியமான
பொருளணி யுடைத்தாய்ப் பாடுவதே பொருளின்பமாம். இனிச் செய்யுள் வருமாறு :-

வெண்டிரைப்புனலறாவியலயல்வயல்விரி
வண்டிமிர்பாசடைக்குவளைமென்பனிமலர்
புறக்கொடைமதிதரப்பொதியவிழ்ந்ததுபோய்ச்
சிறக்கணித்தனவாஞ்சேயிதழ்க்குமுத
முட்டாட்டாமரைமுறுக்குடைநாண்மலர்க்
கட்காமருகடைவாய்வழிந்திழிதா
மேய்தருகயவாய்மேதிகன்றுள்ளுபு
பணைமுலைசுரந்துபனித்தபாற்றடினி
நெடுவெண்டிங்கணிறைமறுத்துடைத்தொளிர்
செந்தளிர்ப்பூஞ்சுனைத்தேமாத்துகுகனி
முடப்பரியரைப்பலாமுட்புறக்குடக்கனி
புறக்காழ்மரகதப்பூகமிடற்றி
னிறக்காழ்திரண்டுநீண்டுதிர்பழுக்காய்
நெட்டிலையரம்பையினீடுபொற்கூன்கனி
புதையிருடுரீஇக்கதிர்பொழிநவமணிக்குவை
சுழித்தெடுத்திரைத்தவாய்த்தூமலர்பலகொடு
பாற்கடல்பொன்னியுட்படிதிருவுருவங்
காண்பதின்முன்னியகாட்சியொன்றெனலாய்த்
துறைதொறுந்துறைதொறுந்துழனியின்வளைக்குந்
திருவரங்கேசனைத்திருமறுமார்பனை
மனத்துறநினைந்தும்வாழ்த்தியும்வணங்குந
ரெக்குலத்தெவரேயாயினு
மக்குணத்தவர்க்கடியேனடியேனே. (77)
இந்நேரிசையாசிரியப்பாவினுள் நால்வகை யடைசொற்களும் வந்தவாஞ் சொல்லின்பத்தோடும் பொருளின்பமும்
வந்தமையா லிது சொற்பொருளின்பம். இதனு ளீரடை முதலொடுஞ் சினையொடும் புணர்ந்தன வைதருப்பம்.
இரண்டிறந்த மூவடை புணர்ந்தன பரஞ்சாலம். இரண்டு மூன்று மிறந்த பலவடை புணர்ந்தன கௌடச்சொல்லின்பம்.
ஆதலாற் சொல்லின்ப மூன்றுபாகமும் அவற்றோடு மூன்றுநெறியார்க்கும் ஒரு தன்மைத்தாம்
பொருளின்பமும் பல வடியான்வந்த ஒரு செய்யுளகத்துக் காட்டியவாறு கண்டுகொள்க.
இதனுட் பொருளணியாவது தற்குறிப்பேற்றவுவமை. திணை – பாடாண். துறை – நாடுவாழ்த்து.

பொன்னசலந்திரண்டிரண்டாம்பொருவமர்தோட்கமலக்கட்
பொலிந்துநின்றா
ரன்னவயற்குருகூரரணிவரைவாழ்மதர்நெடுங்க
ணணியிழாய்கேண்
மின்னிடையார்புறந்தருநாண்மிகுகாமக்கடலாழ்ந்த
மிக்கோர்தங்கண்
மன்னுயிரைத்தரும்புணைதான்மலிதிரைநீர்க்கடலிடத்தார்
மடலென்பாரே. (78)
இது வைதருப்பச்சொல்லின்பம். பகுதி-மடல். துறை-உலகின் மேல்வைத்துரைத்தல்.
இவ்வாறு பொழிப்புமோனையாய்வருத லின்னா தெனவேண்டுவர் கௌடர்.

குயிலாருங்குளிர்பொழிற்றென்குருகேசன்குழகனுயர்
குன்றிற்குன்றாக்
கயிலாயன்களத்தணிந்தகடுவிடமுங்கரத்துழையுங்
கரந்தகண்ணாய்
மயிலாலுமழைதவழ்நும்மணிவரைக்கெம்மணிவரைநின்
மணிப்பூண்மன்னும்
பயிலாரப்பணைமுலைக்கோர்பணைமுலையெப்படியெனுமப்
படியாம்பண்பே. (79)
இது கௌடச்சொல்லின்பம். பகுதி – வன்புறை. துறை – இட மணித்துக்கூறி வற்புறுத்தல்.

கடுவேகயலெனக்கரந்தடுங்கண்ணிணை
காமனுங்காமுறுங்காட்சியகாண்முகங்
கிள்ளையின்கிளையுங்கிளைத்தகைக்கிளையுடைக்
கீரமுங்கீர்த்திக்கீரமுங்கீரே
குவடுடைக்குளிர்பொற்குன்றேகுவிமுலை
கூர்புதற்கூன்சிலைகூற்றுயிர்கூட்டுணுங்
கெடலருங்கெழுதகைகெழுமுபுகெழீஇய
கேகயங்கேளொடுங்கேடுறுங்கேழியல்
கைபுனைகைக்கிசைகைக்கிணைகைத்துணை
கொண்டலுட்கொண்டன்னகொண்டையுங்கொடியிடை
கோடாக்கோவலர்கோற்றொடிகோமான்
கௌரவகௌசிகன்கௌசிகங்கௌத்துவ
மணியெனக்கொண்டுமனவீடளித்தோன்
கண்ணன்குறுங்குடிக்கனவரை
மண்ணகத்துறையுளாய்வளர்நிலமகட்கே. (80)
இது ககர வருக்க முற்றுமோனை. இதுவுங் கௌடச்சொல்லின்பம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.

கயலெனவேமதர்த்தமர்த்தகருநெடுங்கண்ணிவடனக்கிக்
கன்னிமன்னோ
வயலெனவேயமர்துணையன்றளவளாயமர்துணையென்
றறிந்ததன்பான்
மயலறவேயியற்றமிழ்செய்மகிழ்மாறன்றுடரியின்கண்
மணந்தகாதல்
புயலெனவேபுரைநறுமென்புரிகுழற்குப்புகல்வனினிப்
புகலுமாறே. (81)
இது பாஞ்சாலச்சொல்லின்பம். பகுதி – மதியுடன்படுதல். துறை – குறையுறத்துணிதல்.
“குயிலாரு” மென்பதனையும் பாஞ்சாலச்சொல்லின்ப மெனினு மாம்.

வண்ணமுலைப்பொற்றாமரைமுகுளம்வீறழிந்து
கண்ணெகிழாவண்ணங்கருதியோ–தண்மதியை
மால்வைத்தமாநிதிவண்கோளூரில்வாணுதாஅன்
மேல்வைத்தான்மேனாள்விதி. (82)
இது பொருளின்பம். இதனுண் முலையாகிய பொற்றாமரைமுகை யவிழாதிருப்ப வதன்மேலாகப் பிரமன் மேனாண்
முகமென்று பெயரை யுடைய மதியைவைத்தா னென்னும் பொருளின்பம் வந்தவாறு காண்க.
பகுதி – இடந்தலை. துறை – மருங்கணைதல்.

மேலைமலைக்கதிர்மறையக்குவிமரையுட்டேனசையான்மீளாவைகிச்
சோலையில்வண்டினந்திறப்பவயற்கழுநீரிடந்தோய்ந்தசுரும்புமாதோ
மாலையிற்றன்மனைபுகுதுமணமகனைவிறலியொடுமதங்கன்பாடிக்
காலையினிற்றுயிலெழுப்பக்கடைதிறந்துபரத்தையிற்போகியகாட்சித்தே. (83)
இதுவுமது. துறை – நாடுவாழ்த்து.

திரகாயத்திரிகருணைக்கிலக்காகுமுணர்வுடையோர்சித்திகாட்டப்
பரகாயத்திடைபுகுந்துமறித்தொருகாயம்புகுமப்பான்மையேய்ப்ப
வுரகாயத்துரிவையுரீஇயொருபரந்தளொருபாந்தளுரிபுக்கூர்ந்து
வரகாயத்தகடுரிஞ்சும்பஃறலையமலைமுழைபோய்வைகுமன்னோ. (84)
இதுவுமது. மலைவருணனை. இவையிரண்டுங் குருகாமான்மியம். இன்பம் முற்றும்.

ஏவொன்றுடக்கியிருபதுகைக்கார்வயிரத்
தூவொன்றுடலந்துளைபடுத்த–காவொன்
றரங்கத்தானல்லாதனைத்துயிருங்காத்தற்
கிரங்கத்தானல்லாரெவர். (85)
இது வைதருப்பத்தெளிவு. இதற்குச் சொல்லின்முடிவாற் பொருடோன்றும். துறை – கடவுள்வாழ்த்து.

தேனேமுளைமதியஞ்செந்தழல்பாரிப்பவிருந்
தேனேயயலார்சிரிப்பவே–தேனே
யிறைவகுளத்தாமரையோவெய்தார்வேளெய்து
குறைவகுளத்தாமரையோகூறு. (86)
இது சொல்லாற் கவியருமையும் நோக்குடைப்பொருள்கோளுந் தோன்றத் தொடுத்தமையாற் கௌடத்தெளிவு.

(இ-ள்) தேன்போலும் இனிய மொழியையுடையாய் ! இளம்பிறை யானது தழலைவிரிப்பவும் அயலார்சிரிப்பவும்
இத்துணைப்போதும் உயிரைத் தாங்கியிருந்தேனே ! இங்ஙனமிருந்த வெனது துன்பமிகுதியும் நாண்டுறந்ததுங் கண்டு
தேனையொழுக்காநின்ற வகுளத்தாமத்தை யுடையோர் அந்தோ மேவுகிலர் ;
இனிக் காமனெய்து குறைந்துபோவன குளத்தின்கட் டாமரையொன்றேயோ, ஓடையிற் காவியும் ஆவியு மல்லவோ கூறுவாயாக ; என்றவாறு.

ஏகார நான்கினுண் முன்னது விளி. இரண்டாவது திரக்கத்தின்கட் குறிப்பு. பின்னைய விரண்டு மீற்றசை.
தாமரையோவென்னு மோகாரம் ஒழியிசை. திணை – பெண்பாற்கூற்றுப்பெருந்திணை. துறை – துன்பு மிகுதி தோழிக்குரைத்தல்.

உள்ளத்துணர்வெனுங்கண்ணுட்கொண்டுகாண்பதற்குங்
கள்ளக்கருங்கண்கலுழ்வனகண்–டெள்ளிப்
பிரியாரையுந்திருமால்பேர்நகரார்தூற்றத்
தரியாதென்னுள்ளந்தளர்ந்து. (87)
(இ-ள்) எனதகத்தே யறிவென்னுங் கண்ணானது நங்காதலருட னென்னையு முட்கொண்டு காணாநிற்பதற்குப் புறத்தே தாமுங்காணாத
உடன்போக்கு. துறை – பூத்தருபுணர்ச்சிக் கறத்தொடு நிற்றல். இவ்வாறு மெல்லினவண்ணத்தால்
மெல்லெழுத்துச் செறிந்துவருதல் விரும்பாது வல்லினவண்ணத்தால் வல்லெழுத்துச்செறிந்த
சொல்லோடும் வற்கெனத் தொடுப்பதே வேண்டுவர் கௌடர்.

புட்குழியுத்தமர்புட்கொடியத்தர்பொருப்பின்மடக்குயிலே
கட்டழல்கக்குகுழிச்சிறுகட்கரடத்ரிகடத்தொருமா
விட்புலமுற்றவிருப்பமிகுத்ததொர்வெற்றியனைக்குறுகா
வுட்குறவெற்றினனற்றதுதிக்கையொடுற்றமருப்பிணையே. (89)
என்பது, புட்குழியென்னுந்திருப்பதியின்கண் ணுத்தமர், கருடக்கொடி யுயர்த்த சுவாமியார்
பொருப்பிடத்து மடப்பத்தையுடைய குயிலே ! மிக்க அழலைக்கக்குங் குழிந்த சிறுகண்களையு முள்ளத்தறுகண்மையையுங்
கவுளின்கண் மதத்தினையு முடையதோர் யானை, விண்ணோரனை வரும் விருப்பத்தை மிகுப்பதோர்
வெற்றியையுடையானொருவனைப் பாயும்படிக்குக் குறுகினகாலத் ததனுள்ளமுட்க வவ னதனை வாளாலெறிதலு
மதன் றுதிக்கையுந் துதிக்கைபற்றிய விருகோடு முடனே யற்ற வென்றவாறு.

இங்ஙனம் வல்லிசைவண்ணத்தால் வந்தவாறு கண்டுகொள்க. அஃதே லிதன்முதனூல் செய்த தெண்டியாசிரியர்
“செறிவெனப்படுவது நெகிழிசையின்மை” யென வைதருப்பச் செறிவிற்குக்கூறியதனை விரும்பாது
ஒருதிறத்தெழுத்தானே நெகிழத்தொடுப்பதே கௌடச்செறி வெனவேண்டிய திந்நூலுடையாருட்கொண்டு
மிங்ஙனம் வற்கெனத் தொடுத்தன் முதனூலோடும் வழிநூன் மாறுகொளக்கூறலென்னுங் குற்றமாமாலோவெனின்,
நன்றுசொன்னாய் ! அவர்தாமே “விரவத் தொடுப்பது சமநிலையாகும்” என்பதற்குச்
“சோகமெவன்கொலிதழி பொன்றூக்கின” என்பதனுள் மூவினமும் விரவத்தொடுத்ததனை வைதருப்பச்சமநிலையெனவும்,
விரவுதலுள்ளும் வல்லெழுத்துச்செறிய இடர்த்திறத்தைத்துறபொற்றொடிநீயிடித்துத்தடித்துச்,
சுடர்க்கொடித் திக்கனைத்துந்தடுமாறத்துளிக்குமைக்கார்’ என வற்கெனத் தொடுப்பதே கௌடச்சமநிலையெனவும்
காட்டினமையானும் இவ்வண்ணங் கூறாக்கால் வைதருப்பச் செறிவிற்கும் வைதருப்பச் சமநிலைக்கும்
வேற்றுமையின்மையானு மிச்செறிவிற்கு மோசையே நோக்கமென்பதனாவிருப்பத்தா லென்னை வஞ்சித்த கள்ளத்தையுடைய
விக்கண்களழு வதனைக்கண்டு எம்மையிகழ்ந்து பிரியாதவரையுந் திருமால் திருப்பேர் நகரின்கணுள்ளார்
பிரிந்தாரென்று தூற்றுமதனைக்கேட்டுத் தளர்ந்தவென்னுள்ளம் ஒருவழிப்பட்டுநில்லாதென்றவாறு.

இது பாஞ்சாலத்தெளிவு. என்னை? வைதருப்பத்தெளிவுபோல வெளிப்படையுமன்றிக் கௌடத்தெளிவுபோல
நுண்ணிதாய்க் குறிப்பினாற் கொள்வதுமன்றி யிடைப்பட்டநீர்மைத்தாய்வந்தமையா னெனக் கொள்க.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – தலைவி தலைவனை யியற்படமொழிதல். தெளிவுமுற்றும்.

வண்ணமைந்நிறவண்ணன்விண்ணினு
மண்ணினும்முறைவார்
கண்ணன்விண்ணகர்மஞ்ஞைவிம்மிய
கண்ணகன்வரையோ
ரண்ணலிம்மலர்கொண்மினென்னவு
மன்னையங்ஙனம்யா
னெண்ணவொண்ணுதன்முன்னின்முன்னருள்
கென்னமுன்னினளே. (88)
என்பது, அன்னாய் ! அழகிய மேகம்போன்ற திருமேனியையுடையான், சுவர்க்கத்தினும் பூமியினு முறைவார்
கண்ணினுள்ளான் அவனது திரு விண்ணகரத்து மயில்கள் அகவும் இடமகன்ற மலைப்பக்கத் தொரு பெரியோன்
யாங்கள் விளையாடும் வண்டன்மாளிகை முன்றிற்கண் வந்து நுமது வண்டலம்பாவைக்கணிய விம்மாலையை
வாங்கிக்கொண்மினென்று கூற, அங்ஙனம் வந்து கூறியதற்குச் செய்யவேண்டுவதென்னென் றியா னெண்ணாநிற்ப,
நம தொளிபொருந்தின நுதலினையுடையாள் முன்னாள் அதனை யருள்கென வவன்முன்னேசென்று அதனை வாங்கினள் ;
இஃ தியானறிந்தபடி யென்றவாறு.

முன்னில்-இன்முன் ; அஃது முன்றிலென இலக்கணப்போலியாயும் வரும். முன்னிலெனவே வண்டன்மாளிகையும்
வண்டலம் பாவையுங் கூட்டியுரைக்கப்பட்டன. இது வைதருப்பச்செறிவு. என்னை?
மெல்லினமாகியவெழுத்துச்செறிய மெல்லினவண்ணமுற் றவ்வெழுத்தானாய சொற்கள் செறியச் செறித்தமையி னெனக்கொள்க.
பகுதி -பிறவினமுஞ் சிறிது விரவுவதே முறையென்றுணர்க. இவற்றுள் முன்னையது பகுதி – நடுங்கநாடல் ; துறையுமது.
இது பகுதி – உடன் போக்கு. துறை – பதிபரிசுரைத்தல். இவைமூன்றும் எழுத்துச்செறிவு.

மறைமுரசந்தாமமகிழ்வழுதிநாடர்
துறைபொருநைவெற்பூர்துடரி–யுறைகுருகை
யஞ்சம்பராங்குசம்வெள்ளானைகொடியாணைமா
பஞ்சகலியாணன்பரி. (91)
என்பது, வழுதிவளநாடர் துறை – பொருநை ; வெற்பும் ஊரும் – துடரியும் உறையுளாங் குருகாபுரியும் ;
பரி – பஞ்சகலியாணன் ; மா – வெள்ளானை ; ஆணை – சீபராங்குசம் ; கொடி – அன்னம் ; தாமம் – மகிழ் ; முரசு வேதம் என்றவாறு.

இதனுள் வழுதிவளநாடர் என்பது மத்திமதீபம். அதுவே நாடுந் திருநாமமுமாம். வெற்பூர் – நிரனிறை.
பரி மா ஆணை கொடி விதலை யாப்பும், தாமம் மகிழ், முரசு மறை என மொழிமாற்றுமாகத் தசாங்க மென்னுஞ்
சின்னங்களாகிய பல்பொருட் செறிவோடும் பல பொருள் கோளுஞ் செறிதலா னிது பொருட்செறிவு. துறை – தசாங்கவாழ்த்து.

மறந்தாங்கித்தெவ்வடுவைந்நுதிதாங்கியிருட்பிழம்புமடியச்செந்தீ
நிறந்தாங்கியிடங்கரின்வெண்ணிணந்தாங்கியனைத்துலகுநியதிகாக்குந்
திறந்தாங்கியொளிர்திகிரிப்படைதாங்கித்திருவடிபொற்சென்னிதாங்கி
யறந்தாங்கிவளம்புகழ்வாரறந்தாங்கியவரெனுமிவ்வங்கண்ஞாலம். (92)

தழற்பாணிகறைகெழுவச்சிரபாணிமிளிர்படிகத்தாமம்வேய்ந்த
நிழற்பாணிவிழைந்தகமண்டலபாணிமுதலெவர்க்குநிபனேயாய்வேய்ங்
குழற்பாணிகொடுதொறுவின்குழுவழைத்தமழைமுகில்பார்குளிர்ப்பானீன்ற
கழற்பாணிதனைப்புகழ்சக்கரபாணியனைத்துயிர்க்குங்களைகணாவான். (93)

இவையிரண்டும் ஒருவகைச் சொற்செறிவு. இங்ஙனம் வந்த சொற்செறிவும் பொருட்செறிவும் மூன்றுநெறியார்க்கு மொக்கும்.
துறை – செந்துறைப்பாடாண் பாட்டு. செறிவு முற்றும்.

விழியுங்களபமுலையும்புன்மூரலும்வேயுமுந்திச்
சுழியும்முரோமவொழுங்குங்கண்டேம்வண்டுசூழ்ந்துசெந்தேன்
வழியுந்திருமகிழ்மாலைப்பிரான்வெற்பில்வல்லிசெவ்வாய்
மொழியுந்துணைநெஞ்சமேசெவிக்கேயென்றுமூழ்குவதே. (94)
இது வைதருப்பச்சமனிலை. துறை – கிளவிவேட்டல்.

பனிப்பிறைப்பற்றுளைக்கட்செவித்துத்திப்பணாடவிமேற்
குனித்தபொற்சிற்றடிச்சித்திரக்கார்குருகேசன்வெற்பிற்
றுனித்தழற்கட்களிற்றைக்கொடுஞ்சீயந்துரத்திருள்வாய்த்
தனித்துறற்குய்த்துணர்த்துங்கதிர்வேலவன்றாழ்குழலே. (95)
இது கௌடச்சமனிலை. சூத்திரத்துள் நிலையென்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க.
தனித்துறற்கு – கங்குலின் கட்டனித்துக் குறிவழிவருதற்கு. உய்த்துணர்த்தும் – என்னுள்ளங் கொள்ளச் செலச்சொல்லி யுணர்த்தாநிற்கும்.
கதிர்வேலவன் – ஒளியையுடைய வேலவன். தாழ்குழலே – தாழ்ந்தகுழலினையுடையாய்.
யான் இதற்குச் செய்யவேண்டுவ தென்னென்றவாறு. பணாடவி – ஆகுபெயர். பகுதி – இரவிற்குறி. துறை – இரவுவரவுணர்த்தல்.

இடிக்குங்கடகளிற்றான்சடகோபனியலிசையாய்
வடிக்குந்தமிழ்மறைபாடியமாறன்மணிவரைமே
னடிக்குங்களிமயிலேவருந்தேனுமர்நல்வரைப்பூங்
கொடிக்குங்கொழுகொம்பராமெமர்மாடக்கொடிக்கழையே. (96)
இது பாஞ்சாலச் சமனிலை. பகுதி – இயற்கை. துறை – இட மணித்துக்கூறி வற்புறுத்தல்.
இவற்றுள் மூவினமும் விரவிவந்தவாறு காண்க. மூன்றனுண் முதற்பாட்டும் மூன்றாம் பாட்டும் கிளவிமணிமாலை. சமனிலை முற்றும்.

எழுகாதலினாலிருகாவியுணீ
ரொழுகாமதியாலுலைவாய்–மெழுகா
யுருகாதணையாருயிர்காவலர்பே
ரருளாளருமாமவர். (97)
இதனுள், இருகாவியுணீர் – இரண்டுகண்ணு ணீர். ஒழுகா என்றது ஒழுகவென்பத னெதிர்மறை.
உருகாதணையாரென்பது வினையெதிர் மறுத்தவினையெச்சம், அணையாரென்னும் வினைகொண்டது.
பேரருளாளருமாமென்னு மும்மையால் உயிர்காவலருமாம் என்னு மும்மை விரிக்க.
உயிர்காவலருமாய்ப் பேரருளாளருமாக, உருகு மென் காதல் கண்டு முருகியணைகின்றில ராதலா லிஃ தென்வினையன்றோ வென்றவாறு.

திணை- பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – நிலவுகண்டழுங்கல். இது தூங்கிசைச்செப்பலோசைத்தாய்
வந்தமையால் வைதருப்ப வின்னிசை. என்னை?
“இயற்சீர்வெண்டளையான்வரும்யாப்பைத், தூங்கிசைச்செப்ப லென்மனார்புலவர்.” என்றதனா லறிக.
இவ்வாறு விரும்பா தேந்திசைச்செப்பலோசைத்தாய்த்தொடுப்பதே வேண்டுவர் கௌடர்.

குஞ்சரமாமெய்ததுவன்கோதண்டங்கூடாமல்
வெஞ்சரம்பாய்வித்தனரால்வேட்டைதான்–வஞ்சகமே
யாங்கடவார்பூம்புனமீங்காரிவரென்றேயறியேம்
வேங்கடவாணன்சிலம்பின்மேல். (98)
என்பது, வேங்கடவாணன்வரையிடத் திவ ரெய்ததுங் குஞ்சரமாம் ; வில்லுமின்றியே தழையே வில்லாக வெம்மையைச்
செய்யும்வாளியைப் பாய்வித்தனராகையா லிவர் வேட்டைமேலிட்டுவந்தது தான் வஞ்சமே யாம் ;
அதுவுமன்றி, நமது பொலிவையுடைய புனத்தைவிட்டுநீங்கு கின்றிலரால், இவர் யாரென்றும் வந்தகாரணம் யாதென்றுந் தெளிகில மென்றவாறு.

பகுதி – இருவருமுளவழி யவன்வரவுணர்தல். துறை – ஐயுறுதல். இஃ தேந்திசைச்செப்பலோசைத்தாய்
வந்தமையாற் கௌடவின்னிசை. என்னை?
“வெண்சீர்வெண்டளையான்வரும்யாப்பை, யேந்திசைச்செப்ப லென்மனார்புலவர்” என்பதனாலறிக.

மானபரனீந்தமணியாழிகைக்கொடுத்துச்
சானகிதன்னாவிதளிர்ப்பித்தான்–மீன
நெளிதரங்கவேலைநெறிகடந்துதேவர்
களிபுரந்தசேயெமதுகண். (99)
என்பது, பெருமையுடைய பரமனாகிய இரகுநாதன் கொடுத்த மாணிக்கத் திருவாழியைக் கொடுத்துச் சனகராசன்
புதல்வி திவ்வியான்மாவைத் தழைப்பித்தான் ; அவன் யாரெனின்,
மீன்களையுடைத்தாய் நெளிக்கப் பட்ட திரையையுடைய சமுத்திரத்தி னெல்லையைக்கடந்து தேவர்க் கெல்லாங்
களிப்பைக்கொடுத்த அஞ்சனைபெற்ற புதல்வன், எனக்கென்னுறுப்பிற்சிறந்த கண் ணென்றவாறு.

இஃ தொழுகிசைச் செப்பலோசைத்தாயே வந்தமையாற் பாஞ்சால வின்னிசை. என்னை?
“வெண்சீரொன்றலுமியற்சீர்விகற்பமு, மொன்றியயாப்பேயொழுகிசைச்செப்பல்” என்பதனா லறிக.
இம்மூன்று விகற்பமு மூன்று நெறியார்க்கு மொக்கு மென்பாரு முளர். திணை – பொதுவியல். துறை – தூதுவென்றி.

நாட்டங்களிபற்றநாவுநசைபற்ற
வேட்டிற்பலர்கையிணைபற்றத்–தோட்டிலஞ்சிக்
கன்புற்றமுத்தர்பெருமானடிபரவி
யின்புற்றவர்க்கடிமையாம். (100)
இவ்வாறு வரும் பொய்ந்நிலப்பட்ட வின்னாவிசை மூன்றுநெறியாரும் வேண்டாரெனக்கொள்க.
தெண்டியாசிரியர் ஒழுகிசையென்பது மிது. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல். இன்னிசை முற்றும்.

மண்ணோர்தொழுஞ்சேறைமாயோன்மணிமார்பிற்
பெண்ணோர்மனுகுலமாம்பெற்றியாய்–விண்ணோர்
மருந்துதலைப்பெய்திருப்பமம்மர்கூர்நஞ்ச
மருந்துதலைச்செய்பவரிங்கார். (101)
என்பது, உலகின்கண்ணுள்ளார்வணங்குந் திருச்சேறையின்கண் மாதவன் றிருமார்பிலிருக்குந் திருமகள்
மனுகுலத்துட் டோன்றிய தொன்றா மியல்பினையுடையாய் !
விண்ணிற் றேவர்பானமாகிய அமிர்தமானது தம்மிடத்தே தமதாகவிருப்ப அதனையு மருந்தி மருந்து
பிறிதில்லாப் பெரும்பிணியைத்தரும் நஞ்சையு முண்ணாநிற்பவ ரிவ் வுலகின்கண் யாவர்தா மென்றவாறு.

பகுதி – பரத்தையிற்பிரிவு. துறை – நினைவறிகண்புதை. இது வைதருப்பவுதாரம். என்னை?
தம்மிடத்திலே பெறுதற்கரிய அமிர்த மெளிதாயெய்தியிருப்ப வதனை யுண்ணாநின்றவர் அயலேயிருக்கு
நஞ்சினையுஞ் சென்றுண்ண விரும்புவா ருலகின்கண்ணில்லையால், அதுபோல நின்னிடத் துவட்டா வின்பந்துய்க்கின்ற
யான் பிறரிடத் துவர்ப்புடைத்தா மின்பந் துய்யேனென்பது குறிப்பினாற் கொள்ளக் கிடந்தமை யினானெனக் கொள்க.

நாதன்மகிழ்மாறனன்பனுவல்கற்றுணர்ந்து
போதந்தழைந்தபுனிதர்தாம்–வேதம்
விதித்தவொருமூன்றின்மெய்ம்மையுணர்வான்
மதித்தொருநூலோதார்மறித்து. (102)
இதுவும் வைதருப்ப வுதாரம். என்னை? மகிழ்மாறன் பனுவல் கற்றுணர்ந்தார் தத்துவங்கண்மூன்றி னுண்மையுணர
வேண்டி மறித்தொரு நூலோதாரெனவே யத்தத்துவங்கண்மூன்றினையு மதுதானே மயக்கமறக் கூறுமென்பது
குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானெனக் கொள்க.
வேதம்விதித்தவொருமூன்றாவன :- சித் தசித் தீச்சுரம். மெய்ம்மை – உண்மை.
உணர்வான் – உணரவேண்டி. மதித்து – உட்கொண்டு. மறித்து – மீண்டும். திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து.

காழில்கனியுண்கடுவன்களங்கனியை
யூழிற்பருகியுருகுதிரு–மூழிக்
களத்தாதியைமதங்காகாமக்குழவி
வளத்தாரிடந்தேடுவாய். (103)
என்பது, காலைமங்கலம் பாடவந்த யாழ்ப்பாணனே ! பரலில்லாதே முழுது மென்மையு மினிமையுமுடைய அரம்பைக்
கனியை யச்சமின்றி யுண்ணாநின்ற கடுவன் அகத்துமுழுதும் பரலாய்ச் சிறிது புறமென்மையு மற்பச் சுவையுமுடைய
களங்கனியையு முறையேபோலப் பருகி யதன்சுவைக்கு முள்ளமுருகுந் திருமூழிக்களத்து முதல்வனைக்
காமமென்னுங் குழவிச்செல்வத்தையுடைய பரத்தையரிடத்தே தேடிக் காண்பாயாக ; அஃதன்றி யெம்மிடத்துக்காண்ட லரிதென்றவாறு.

காழ் – கொட்டை. ஊழில் – ஊழ்வினையாலேயெனினுமாம். இது கௌடவுதாரம். என்னை?
‘காழல் கனியுண் கடுவன் களங்கனியை யூழிற்பருகியுருகு திருமூழிக்கள’ மெனவே யக்கடுவன்போல,
உத்தமமாகிய விவளோடும் உள்ளும் புறம்பும் ஒருநீர்மைத்தா மென்மையோடும் உவர்ப்பில்லாத பேரின்பத்தைத் துய்த்த தலைவன்,
இழிந்த வியற்கையை யுடையராய்ப் புறம்பு பொருணசைக்காய்ச் சிறிதுநெகிழ்ந் துண்ணெகிழ்ச்சியற்ற பரத்தையரிடத்தே
யுவர்த்த சிற்றின்பத்தைத் துய்த் தவ்வின்ப மீட்டுந்துய்ப்பா னவர்சேரிவிட்டு நீங்கானாயினானென வுள்ளுறையுவமங்
குறிப்பிற் கொள்ளக்கிடந்தமையானும், காமக்குழவி வளத்தாரிட மெனவே யிஃது எமது காதற்புதல்வன்
என்னுஞ் செல்வத்தையுடைய மனையென்பதூஉம், யாம் புதல்வற்பயந்த மூப்புடையே மென்பதூஉம்,
இன்னும் அவ்விலேசானே யெம்மிடத் தவர்பெறு மின்பம் எமக் கவர்கொளுத்தக்கொண் டியாங்கொடுக்கு மியற்கை
யின்பமே யல்லாது பலரையுந்தோய்ந் தவரவர்கொளுத்தக் கொண்ட பல விகற்பமாகிய செயற்கையின்ப
மெம்மிடத்தில்லையே யென்னுங் கூற்று மாகக் குறிப்புங் கூற்றுங் குறிப்பினாற் கொள்ளக் கிடந்தமையானே
யிவ்வாறு வேண்டுவர் கௌடரெனக்கொள்க. பகுதி – இதுவுமது. துறை – பாணனொடு கூறல். கூற்று – தோழிகூற்று.

நாம்பிரமமென்றேநவில்வாருமன்னுயிர்க
டாம்பிரமத்தொன்றுமெனுஞ்சார்பாரு–மாம்பிரம
நாரணனோவென்பாருநாவீறுடையபிரா
னாரணப்பாக்கற்றுணராதார். (104)
என்பது, பேரானந்தச் சிற்குணாதிகச் சுடர்ச்சொரூப ரூபப் பரத்துவ மென்னும் பரமபதநாதன்,
அநிருத்தனாகி யுந்தியந்தாமரைப் பொகுட்டிற் பலகோடியண்டங்களைப் படைத்துப் பலகோடி யண்டந்தோறும்
பலகோடி பிரமாதிகளைப்படைத் தழிவிலதா யலகிறந்த வணுக்கடோறும் திவ்வியாத்ம சொரூப வியத்தியுடன்
சருவபூத பூரண காரணனாகி மீனாவ தாரமுதலாய வவதாரங்களாலும் அம்சாவதாரங்களாலுங் காவல்பூண்டு
வாழ்நாளுட் டன்னால், லீலைக்காக அமைத்த வவையனைத்து மழிந்துந் தானழியா தேகோதகத்தின்
மே லோராலிளந்தளிரு ளடங்கும் பச்சைக்குழவியாகியும் பல்லாயிரகோடி யண்டமாகியவற்றை யகத்திட்டு மறித்தும்
புறத்திட்டுக் காவல்பூண்டு விளையாடு மகடிதகெடா சாமர்த்திய குணங்களு ளொருகுணமுமின்றி யிருவினைத் தளைப்பட்டு
மல மூத்திராதிகளாலாய பாண்டத்தோடு மிறந்தும் பிறந்து முழலு முத்தியறியா மூடராகி நரம்பிரமமென்றே
நாக்குத் தடுமாறாது நவிலு மொரு சார்பாரும், கற்றறி நூல் பல கற்றனராகித் தத்துவமுணர்ந்தும்
பற்றறச் சாலோகமுதலிய மூன்று மெய்தி யிருவராயிருந் தீறில்பேரின்ப மொருவராமெனத் துய்க்குஞ் சுகரநந்தத்தைக்
கெடுத்துக் கூடாததனைக் கூடுவதாக்கிச் சூனியப்படுத்தி மன்னுயிர் பிரமத்தோடு மொன்றாமென்று நாயனடிமைத்திறம்
நழுவிய மூடரா மொருசார்பாரும், ஆதியு மந்தமு மருமறை யரியென வோதிய பொருளுரைக் குடையதை யறிந்தும்
அகிலாண்டகோடி பிரமாண்டநாயகனென முத்திதருவதாம் பிரமம் சீமந் நாராயணனோவென்றையுறு முழுமூடரும்
ஒருநான்மறைத்துணி வோதாதுணர்ந்த நாவீறுடையபிரான்கூறிய திருவாய்மொழியைக்கற் றுண்மைப்பொருளுணரா மூவகைமூட ரென்றவாறு.

ஆரணத்தின்வழிவந்த நூலாதலாற் றிருவாய்மொழிக் காரணப்பா வென்ப தாகுபெயர்.
அல்லதூஉந் தமிழ்வேதமென்றும் அதற்குப் பெயர். ஆரணப்பாக் கற்றுணராதா ரெனவே யதனைக் கற்றுணர்ந்தா ரவை
கூறாரென்னுங் கூற்று மெஞ்சிநிற்பதூஉங் காண்க. இங்ஙனங் கூறிய மூன்றும் வேதத்தின்வழிவந்த திருவாய்மொழியாகிய
பனுவற்றுணிவன் றென்பதூஉம் அதனைக் குரவரா லுணர்ந்தோர்மதமும் அம் மூன்றினையுந் தள்ளின மதமே
யென்னுமவையுங் குறிப்பெச்சம். இக் கூற்றுங் குறிப்பும் புலவனாலறியலாம்.
இங்ஙனமாகிய சொன்னடை கொண்டு வேறுபொருடோன்றலா லிதுவுங் கௌடவுதாரம். திணை – வாகை. துறை – சால்புமுல்லை.

சினமென்பதையறியாதவர்தினமும்புகழ்மாறன்
செஞ்சொற்றமிழ்மறைபாடியசெல்வன்குருகையுளார்
முனமன்பினதளவொன்றியமுறையான்மலரணைமேன்
முடுகும்பரிசமொடிங்கிதமொழியென்பதுபெறவே

தனமின்றெனினுலகத்தெவர்தனியின்பமது றுவார்
தாமென்றபினளகத்துறுதனிவண்டொடுநின்பான்
மனமொன்றியபெடையேவலியுளதென்றனரன்றே
மறையென்றதையுணராதவென்மனதேகொடியதுவே. (105)

என்பது, தோழீஇ! வெகுளியென்பதை மனத்தினாலுங் குறித்தறியாத சுத்தசாத்துவிககுணனுடையோர் வாழ்த்துங் காரிமாறப்பிரான்,
செஞ்சொலாகிய தமிழ்மறையைப்பாடிய செல்வத்தையுடையோன் குருகைமா நகரினிடத்து நம்மிறைவர்
பொருண்மேற்பிரியுமுன்னர் இருவர்க்கும் புணர்ச்சிமேற்சென்ற வுள்ளத்தின்பினதளவும் யாக்கையின்களிப்பு
மேகாந்தமு மிடையாமமும் ஒன்றாகப் பொருந்திய வியல்பான் மலராலலங்கரிக்கப்பட்ட அமளியிடத்து
முடுகிய பரிசத்தோடு நலம்பாராட்ட லென்னு முரைபோற் பிரிதனிமித்தமென்பதாக,
என்னோடுந் ‘திருவே ! மகளிரிடத்துத் தனமென்பன வில்லையாகி னுலகத்துள்ள வாடவருள் யாவர்தா மொப்பற்ற
வின்பத்தை யெய்துமவர்க’ ளென்றன ரதன்பின்ன ரளகத் தரும்பவிழ்ந்தகாலைத் தேனையுண்ண
வந் ததனிடத்துறைவதாந் தனிச்சுரும்போடும் நினதிடத் தொருமனப்பட்ட பெடையே மனவலியுடைய தென்றனரன்றே;
அவையிரண்டையும் மிக்க தொனியென் றுட்கொளாத வெனது மனதே கொடியதென்றவாறு.

இது பாஞ்சாலவுதாரம். என்னை? தனமென்ப திரட்டுறமொழிதலாய் நடுவணை யெய்தாதவர்க் கிருதலையுமெய்தா;
பொருள்வயிற்போக வேண்டு மென்பதனை யுணர்த்தியதாகவும், நின்பான் மனமொன்றிய பெடையே வலியுளதென்றதனால்
நீவைத்து நீங்கியபெடை நின்னையின்றி யாற்றாமையாற் றானிறக்கி னீயு மிறப்பையென்று நினதுயிரைப் போற்றித்
தனதுயிரைப் பிடித்திருந்த மனவலியுடைத் தென்பதா யது போலத் தாம்பிரிந்தகாலத் தியானு மாற்றாமையா லிறவாது
தம் முயிரையும் போற்றி இல்லறங்காத்திருத்தல்வேண்டுமென்பதூஉ முணர்த்தியதாகக் குறிப்பினாற்
பிறபொருள் கொள்ளக்கிடந்தமையா னென்றறிக.
இதனுள் அளவும் என்னு மும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க.
தோழீஇ என்னு முன்னிலைப்பெயரு மெஞ்சிநின்றதுங் காண்க. பகுதி – பொருள்வயிற்பிரிதல்.
துறை – தலைவி தலைவனை யியற்படமொழிதல். இவற்றை மூன்றுநெறியார்க்கு மொக்குமென்பாருமுளர்.
அவை பொருந்தாவென வுணர்க. உதாரம் முற்றும்.

மன்னிலங்கைமூதூர்வழியோதிறந்ததொன்னார்
பொன்னகர்செல்வாயிற்புதவன்றோ–தென்னரங்கன்
மைந்நீரசெம்பவளவால்வளையவண்டரள
முந்நீரணைகட்டுமுன். (106)

என்பது, அழகிய திருவரங்கத்தையுடைய மாயோன் கடலைக் கரை கட்டின முற்காலத்து இராவணனாகிய
நிருதர்கோன திலங்கையாகிய பழையநகர்க்குச் செல்லும் வழியோ திறந்தது?
தென்னரங்கேசனது பாணத்தா லிறந்த சத்துருக்களாகிய அரக்கர்செல்லும் வீரசொர்க்க வாயிலின்கட் கதவல்லவோ திறந்த தென்றவாறு.

எனவே வழியுங் கதவுந் திறந்த தென்பதாம். மைந்நீர செம்பவள வால்வளைய வண்டாள முந்நீரை யெனக் கூட்டுக
இது வைதருப்பவலி. என்னை? இருளி னீர்மையுடைத்தாய்ச் சிவந்த பவளத்தைப் பெற்ற வெளுத்த வளையைப்பெற்ற
அதனிடமாக வளவியதரளத்தைப் பெற்ற முந்நீரை யூடறுத்துக் கடலை யணைகட்டின முற்காலத்தெனவே
வேற்றுமைத்தொகை இருபெயரொட்டுப்பண்புத்தொகை வினைத்தொகைகளை முன்னிட்டுப் பெயருடைமைப்
பொருளாய் நின்று கருகும்நீர்மை யுடையநீரையெனப் பெயர்மே லேறியவிடத்து மிப்பொருளையுடையதாயிருந்த
திப்பொரு ளென்னுமிடத்து மிடைநின்ற வுடைமைவினைக் குறிப்புங் காலம்பெற்ற வினைக்குறிப்புமாகிய
சொற்க ளிடையிடை பல விடத்துந் தொக்கதோடும் பிறசொற்களுந் தொகைமிக்கு விரிதலானும் எனக்கொள்க.
திணை – உழிஞை. துறை – புறத்திறை.

வன்கேழற்பன்றியாய்வான்பிறைக்கோட்டாழ்புனலாழ்
கொன்கேழ்கிளர்தாழ்குழல்களிப்ப–முன்கொணர்ந்த
வெம்பிரான்சங்காழியேந்தினானெவ்வுளார்
தம்பிரான்றாளேசரண். (107)

என்பது, வலியகேழலாகிய பன்றியாய் வானின்கட் பிறைபோன்ற கோட்டாலே யாழ்ந்த புனலின்
கட் டாழ்ந்த நிறங்கிளருந் தாழ்ந்த குழலினையுடைய பூமிதேவியானவ ளுள்ளங்களிப்ப முன்னாட் புறத்தே
கொண்டுவந்த எம்முடைய பிரான் சங்கையு மாழியையுங் கைகளிலேந்தினான் எவ்வுளார்க்குந் தம்பிரான்;
அவனது திருவடிகளே சரணாமென்றவாறு.
கொன் – பயனில்சொல். இது கௌடவலி; என்னை? இதனுளிருதிறப் பண்புத்தொகை முதலாகத் தொகையாறு
முடைமைவினைக் குறிப்பும் பிறசொற்றொகைகளு மிகவருதலா னெனக்கொள்க. துறை- கடவுள் வணக்கம்.

பொற்றொடிவேற்கண்கள்புடைசிறந்தாட்கெஞ்ஞான்று
முற்றவுடலுயிரீங்கொன்றென்றே–சொற்றனவாற்
றோடலர்தார்மாறன் றுடரியினெஞ்சேயிவளைக்
கூடலெளிதென்றேகுறி. (108)

என்பது பாஞ்சாலவலி. என்னை? பொற்றொடியெனவே வேற்றுமைத் தொகைப்புறத்துவந்த அன்மொழித்தொகையும்,
வேற்கண்ணெனவே யுவமைத்தொகையும், புடைசிறந்தாட்கெனவே வேற்றுமைத்தொகையும்,
உடலுயிரெனவே யும்மைத்தொகையும், தோடலர்தாரெனவே வினைத்தொகையும் வந்து பண்புத்தொகையொன்றுமே வராது,
பெயர் வினைச்சொற்களு முளவாய், முன்னவைபோலச் சுருங்காது மிகாது மிடைநிலைப் பட்டமையா னென்றுணர்க.
பகுதி – பாங்கியிற்கூட்டம். துறை – பாங்கியையறிதல். வலி முற்றும்.

ஆவிக்குறுதுணைப்பெண்ணாரமுதைப்போலுரைத்த
நாவிற்கினிமைநயப்பதோ–மூவுலகுந்
தாய்க்கொண்டதாளரங்கர்தண்ணளிசார்விண்ணவர்தாம்
வாய்க்கொண்டுயிர்வாழ்மருந்து. (109)

என்பது, எனதாவி வாழ்வதற்கு மிக்கநற்றுணையாகிய விப்பெண்ணாகிய அமிர்தினைப்போற் றன்பெயரினைச்
சொன்னாற் சொன்ன நாவிற்கு மினிமையை யளிப்பதொன்றாமோ? பூமி முதலாய மூன்றுலகங்களையுந் தாண்டி
யளந்துகொண்ட தாளினையுடைய திருவரங்கேசர்கருணையைப் பொருந்தின வானிலுள்ளார்
வாயாலுண் டினிமையைக்கொண் டுயிர் வாழாநின்ற அமிர்தமென்றவாறு.

ஓகாரம் ஒழியிசை. இதனுள், பெண்ணாகிய அமிர்தினுயர்த்தி யுலகொழுக்கிறவாமை யுயர்த்தினமையால்
இது வைதருப்ப காந்தம். பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

திங்கள்வெண்கதிரும்பானுவின்கதிருஞ்சிறிதும்வைகலுநுழைந்தறியாப்
பொங்கர்மல்கியபூஞ்சோலைநள்ளிடையிற்புதையிருளிரிதரமடவா
ரெங்குமேந்தியசெஞ்சுடர்களாலுரகனேந்தெழின்மவுலியாயிரத்துந்
தங்குபன்மணிகள்பரப்பிவைத்தொளிர்பாதாலமீதெனப்பொலிதருமால். (110)
இதுவுமது. (குருகாமான்மியம். ) திணை – பாடாண். துறை – விளக்கு நிலை.

தென்னனந்தைமால்வரைமேற்சேயிழைவன்கட்கூற்ற
முன்னிலுயிருண்ணுமெனமுன்னுற்றோ–மன்னுயிருண்
கூற்றுருவமக்களுருக்கொண்டோர்விழிக்கெதிரே
தோற்றுவருங்கொள்ளாத்துணிவு. (111)
இது கௌடகாந்தம். பகுதி – இயற்கை. துறை – தகையணங் குறுத்தல்.

பூட்டியுழுங்கருமேதியரிதாளிற்கருங்குவளைப்போதுமேயத்
தீட்டியநாவினைக்குறுக்கிச்சிறைவண்டின்பண்ணமுதைச்செவியாலுண்டு
மோட்டுமுது முலைக்கண்மடைதிறந்தொழுகும்பாலமுதமுழங்கியாம்பற்
காட்டுவரம்புடையப்பவயற்கழனியடைத்துழவருழுங்காட்சித்தொன்றே. (112)
இது பாஞ்சாலகாந்தம். துறை – நாடுவாழ்த்து.

(குருகாமான்மியம்). காந்தம் முற்றும்.

ஆழிப்படைக்கையருளாளன்மிக்கதிரு
மூழிக்களத்துறையுமூவர்கோ–னூழிதொறும்
வித்தகனேகாரிதருமெய்ஞ்ஞானமுத்திரைக்கை
யுத்தமனேகாக்கவுனை. (113)
திணை – பாடாண். துறை – புறநிலைவாழ்த்து.

இறையேதிருமால்வீடென்பது மந்தாம
மறையேபனுவலெனவைக்கு–நிறைகூர்
கரையற்றபோதக்கடன்மாறனுண்மை
யுரைகற்றுணர்ந்தாருளம். (114)

திணை – பொதுவியல். துறை – பனுவல்வாழ்த்து. இவையிரண்டும் உய்த்தலில்பொருண்மை.
இவை மூன்றுநெறியார்க்குமொக்கும். உய்த்தலில்பொருண்மை முற்றும்.

கூண்டுகுமுதமலர்சிரிக்கக்கோகனக
மீண்டிதழ்ச்செங்கைகுவிக்குமெல்லிதா–னீண்டுகமா
மென்றாலிறையரங்கத்தேந்தல்பொருட்கேக
லொன்றாலுமாகாதுனக்கு. (115)
சிரித்தல் – மலர்தல். ஏந்தல் அண்மைவிளி. இதனுள், சிரிக்க வெனவும் கைகுவிக்கவெனவு முக்கியப்பொருளாகிய
வாயினதுகிரியையும், கையினதுகிரியையும் ஒப்புடைப்பொருளாகிய குமுதத்தினுங் கமலத்தினும்
புணர்த்து ரைத்தமையாற் சமாதி யெனக்கொள்க. பகுதி- பொருள்வயிற்பிரிதல். துறை – செலவழுங்குவித்தல்.

ஆரப்பொழிற்கோங்கரும்புதினமாக
வாரைப்பொருதெழுந்தவண்மைசேர்–பேரைக்
குழைக்காதரென்றொருகாற்கூறாதோவென்றிக்
கழைக்கார்முகன்காகளம். (116)
இது சிலேடைவாய்பாட்டால் வந்த சமாதி.

சந்தனப்பொழிலகத்துநின்ற கோங்கரும்பு வைகலும் மேகத்தினிடத் துண்டாகிய தண்ணீரைத் துழாயெழும் எனவும்,
ஆகத்தினிடத்துக் கட்டின கச்சினைப் பொருதெழு மெனவும் முலையினது கிரியையைக் கோங்கினதரும்பிடத்துப் புணர்த்தவாறு காண்க.
மாகம், ஆகம் எனப் பிரிமொழிச்சிலேடையும், வாரையெனச் செம்மொழிச் சிலேடையுங் கொள்க.
இவை மூன்றுநெறியார்க்கு மொக்கும். சமாதி முற்றும்.

ஆக இன்பமுதற் சமாதியீறாகக் குணவலங்காரம் பத்தும் அடைவே வந்தவாறு காண்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – குயிலொடுவெறுத்துக்கூறல்.

85.செய்யுட்குணங்களொழிவறவேசெப்புவதும்
பொய்யில்புலமையுறாப்புன்கவியேற்–கெய்துமதோ
சொற்றவற்றாற்சொல்லாதவற்றினையுஞ்சொல்லியவா
முற்றுவித்தல்கற்றோர்முறை.

(எ-ன்) சொல்லிய குணவலங்காரங்கட் கொழி புணர்ற்று.
(இ-ள்) செய்யுட்களின் குணவலங்காரங்களை யொழிவற முற்ற வுணர்த்துவதும் பொய்யென்பதில்லாத
அறிவின்றன்மைபொருந்தாத புன்சொற்கவியேற்கு மெளிதா யெய்தப்பெறுந்தன்மைத்தொன்றோ?
ஆகையா லிங்ஙனஞ் சொல்லப்படுங் குணங்களோடுஞ் சொல்லாதொழிந்த வக்குணங்களையுஞ் சொல்லியனவாக
முற்றுவித்தல் கற்றுணர்ந்த சான்றோர்கட னென்றவாறு.

இங்ஙனம் கூறவேண்டும்நோக்கம் யாதோவெனின், செறிவென்று சொல்லப்படுவதும்
எழுத்துச் செறிவும் சொற்செறிவும் பொருட் செறிவுஞ் செறிந்து வேறுவேறு ஒலித்துநடக்கும் என்று கூறியவற்றுள்
எழுத்துச் செறிவும் வண்ணமு மூன்றுநெறியார்க்கும் வேறுவேறாக்கி, யொருவகைச் சொற்செறிவு மவையல்லாத
பொருட்செறிவு மூன்றுநெறி யார்க்கும் பொதுவாகக் கூறினாரெனினும்
மெய்க ளுடனிலைமயக்கமின்றி யேனைமயக்கமாக வண்ணமும் பொதுவாவனவு முள. அது வருமாறு :-

மயர்வறமதிநலனருளியநறைகமழ்மலர்மகள்புணர்பவன்மே
லுயர்வறவுயர்நலனெனமுதிர்தமிழ்மறையுரைமகிழ்முனிவரைவாழ்
புயல்புரைகுழன்மதிபுரைநுதல்வடவரைபுரைபுணரிளமுலைசேர்
கயல்புரைவிழியெனதுயிரெவணினதுயிர்கவல்வகையெவன்மயிலே. (117)

இது அராகந்தொடுத்த அடியோடும் பிறிதடியும்படத் தொடர்ந் தோடினமையான் முடுகுவண்ணம் ;
“முடுகுவண்ண, மடியிறந்தோடிய வதனோரற்றே” என்றாராகலின். இவ்வண்ணமு மூன்றுநெறியார்க்கும் ஒக்கும்.
ஒழிந்தனவற்றுள்ளு மிவ்வண்ணம் பாகுபடுமென்னு நோக்கத்தாற் கூறப்பட்டது.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். பகுதி – உடன்போக்கு. துறை – செவிலிதேடல்.
பொதுவியலுரை முற்றும்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொதுப்பாயிரம்–ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

மாறன் அலங்காரம் தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று.
இது பாட்டில் அமையும் அணிகள் பற்றி விரிவாகப் பேசும் நூல்.
இது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால்
இது எழுதப்பட்ட மாறன் அகப்பொருள். மாறன் பாப்பாவினம், மாறன் அலங்காரம் என்னும் மூன்று நூல்களில் ஒன்று.
தமிழ் இலக்கணம் பற்றிப் பேசும் அதே வேளையில் இந்நூலில்
மாறனாகிய நம்மாழ்வார் பெருமையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
பேரை காரி ரத்தினக் கவிராயர் என்பவர் இந்நூலின் பழைய உரையாசிரியர்.
பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் புதிய உரை ஒன்றை தி.வே. கோபாலையர் வெளியிட்டுள்ளார்.

அணிகள்
அணிகள் (மாறன் அலங்காரம்-64 அணிகள்)
இதில் அணி மற்றும் அணி வகைகளாக மொத்தம் 321 அணிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

அசங்கதி 2
அதிகம் 1
அபநுதி 4
அற்புதம் 2
ஆசி 2
ஆர்வமொழி 1
இணையெதுகை 2
இலேசம் 1
இறைச்சிப்பொருன் 1
உதாத்தம் 9
உபாயம் 1
உருவகம் 26
உல்லேகம் 4
உவமை 46
உள்ளுறை 5
உறுசுவை 1
ஏகாவளி 1
ஏது 24
ஒட்டு 6
ஒப்புமை 2
காரணமாலை 1
காரியமாலை 1
காவியலிங்கம் 1
சங்கரம் 1
சங்கீரணம் 1
சந்தயம் 3
சமாயுதம் 1
சமுச்சயம் 2
சிலேடை 18
சுவை 18
தடுமாறுத்தி 1
தற்குணம் 1
தற்குறிப்பேற்றம் 2
தற்பவம் 1
தன்மை 12
திட்டாந்தம் 1
தீபகம் 18
நிந்தாத்துதி 1
நிரல்நிறை 13
நெடுமொழி 1
பரிகாரம் 4
பரிசங்கை 2
பரியாயம் 1
பரிவர்த்தனை 1
பாவிகம் 1
பிரத்தியனீகம் 1
பிரதீபம் 1
பிறவணி 1
புகழ்வதின் இகழ்தல் 1
புணர்நிலை 2
பொருள்மொழி 1
மாறுபடு புகழ்நிலை 1
மின்வருநிலை 3
முன்னவிலக்கு 21
வகைமுதலடுக்கு 1
விசேடம் 6
விதர்சனம் 2
விநோத்தி 1
விபாவனை 4
விரோதம் 7
விற்பூட்டு 1
வேற்றுப்பொருள் வைப்பு 8
வேற்றுமை 5

——–

மாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இது உரைதருநூல்களில் ஒன்று.
இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.
வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.
பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார்.
பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய
நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர்.
இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு மாறனலங்காரம் எனப் பெயரிடப்பட்டது–

அணியிலகணத்தைத் தனிநூலாகச் செய்த முதல் நூல் தண்டியலங்காரம்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி என்பவர் வடமொழியில் இயற்றிய அலங்கார நூலைப் பின்பற்றித் தமிழ்நூல்
தண்டியலங்காரம் 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது.
இதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும்.

————

சிறப்புப்பாயிரம்

உலகம்யாவையுமுறுபயன்விளைப்பா
னலகில்சோதியணிகிளர்திருவுரு
வுணர்வுயிரெனக்கலந்துத்தமர்நித்தர்
கணமகலாதபொற்கவின்பதிநின்று
முரவுநீர்வளைத்தவொன்பானுட்டென்புலப்
பரதகண்டத்துட்பழம்பதியெனப்புகும்
விண்டொடநிவந்தபொழில்வடவேங்கடந்
தெண்டிரைகறங்குதென்குமரியென்றாயிடை
யமிழ்தினும்வான்சுவைத்தாகியமும்மைத்
தமிழ்தெரிபுலமைச்சான்றோர்மதிக்கு
முதுமொழித்தண்டிமுதனூலணியொடும்
புதுமொழிப்புலவர்புணர்த்தியவணியையுந்
தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையு
மனாதுறத்தொகுத்தும்வகுத்தும்விரித்தும்
பொதுவியல்பொருள்சொல்லணியெச்சவியலெனச்
சதுர்பெறவிரண்டிடந்தழீஇயசார்பெனலாய்க்
காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்
தாரியர்துவன்றவவைக்களத்துரைத்தனன்
சிற்குணச்சீநிவாதனின்னருளா
னற்பொருண்மூன்றையுநலனுறவுணர்வோன்
பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமா
ளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த்
திருக்குருகைப்பெருமாள்கவிராய
னருட்குணத்துடன்வளர்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே.–என்பது பாயிரம் :-

எந்நூலுரைப்பினுமந் நூற்குப் பாயிரமுரைத்தே நூலுரைக்கவென்பதுமரபு.
என்னை? “ஆயிரமுகத்தாலகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே.” என முன்னோர்கூறிய முறைமையானும்,
இந்நூலுடையாரும் “பொற்புறவிழுமியபொருள்பல புணர்க்கினுந், தற்சிறப்புளதே தந்திரமென்ப.” என்பதனானுமுணர்க.
இப் பாயிரத்துக்குப் பொருண் மேற்காட்டுதும்.

1.புறவுரைமுகவுரைபுனைந்து ரைதந்துரை
பதிகநூன்முகமணிந்துரைபாயிரம்.
(இதன்பொருள்) இவையேழும் பாயிரத்திற்குக் காரணப்பெயரா மென்றவாறு.

2.புறவுரையேயதுகேட்டென்னைபயனெனின்
மாயிருஞாலத்தவர்மதித்தமைத்த
பாயிரமில்லாப்பனுவல்கேட்கிற்
காணாக்கடலிடைக்கலைஞரில்கலத்தரின்
மாணாக்கன்றன்மதிபெரிதிடர்ப்படும்.
(என்னுதலிற்றோவெனின்) பாயிரமில்லாப் பனுவல் கேட்போன் மதியிடர்ப்படுதற் குவமையுணர்த்து தனுதலிற்று.

(இதன்பொருள்) முந்து நூல் செய்தற்காசிரியர் மனத்தினாலுட் கொண்டு விதித்ததாம்
பாயிரமில்லாத நூல்கேட்பானாகிற் கேட்ட மாணாக்கன்மதி முன்பு கண்டறியாத கடலிடத்து
மீகானில்லா வங்கத்திற் செல்பவர் மதிபோல மிகவுமயக்கமெய்து மென்றவாறு;
என்பதாற் பாயிரங் கேட்டல் பயனுடைத்தாயிற்று.

3.பொதுச்சிறப்பெனவதுபுகலிருவகைத்தே.
(எ-ன்) பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று,

இ-ள்) பாயிரமென்ன வொன்றாய் நின்றவது
பொதுவுஞ் சிறப்புமென முந்துநூல் கூறியதா மிரண்டுகூறுபாடுடைத்தென்றவாறு.

4.அவற்றுள்,
போக்கறுபனுவலுட்புகல்பொருளல்லா
தாக்கமுற்றனைத்தினுமமைவதுபொதுவே.
(எ-ன்) முறையானே பொதுப்பாயிரத்தியல்புணர்ற்று.

(இ-ள்) அவ்விரண்டனுட் புலவராற் கூறப்பட்ட குற்றமற்ற நூல்களுட் கூறப்படும் பொருளல்லாத
புறப்பொருளாயெல்லாநூன் முகத்து மின்றியமையா தாக்கம்பெற்றமைவது பொதுப்பாயிரமா மென்றவாறு.
அமைதல் வெளிப்படாது மறைந்துமறைந்து நடத்தல்.
எல்லா நூன்முகத்தும் பொதுவாக மறைந்து நடத்தலிற் பொதுவெனக் காரணப்பெயராயிற்று.

5.அதுவே,
நுண்ணூனுவல்வோனுவல்வதனியற்கை
கொள்வோன்குறிப்பிற்கொள்கடன்றன்னொடுந்
தெள்ளிதினைந்தெனச்செப்பினர்புலவர்.
(எ-ன்) பொதுப்பாயிரத்தின் கூடுபாடுணர்ற்று.

(இ-ள்) அப்பொதுப்பாயிரம் நுண்ணியநூலின்மரபும், நுவல் வோன்மரபும், நூல்நுவல்வதன்மரபும்,
கொள்வோன்மரபும், அம்மாணாக்கனுள்ளக் குறிப்பினாற் கொள்வதன் மரபு தன்னொடு மைந்தென்று
தெள்ளியதாய்க் கூறினர் முந்து நூலாசிரியரென்றவாறு. ஏகாரமீற்றசை.
தெள்ளிதினைந்தெனச் செப்பினரென்று சிறப்பித்தவதனால் “ஈரிரண்டென்ப பொதுவின்றொகையே” என்போர்
சுருங்கக் கூறிய நோக்கமே நீக்கி யைந்தென்போர் நோக்கமே யுட்கொண்டாரென்பதாயிற்று.

6.அவற்றுள்,
உத்தமநூன்மரபுணர்த்துங்காலை
முத்திறத்தொன்றாய்ப்பாயிரமுதலுபு
நாற்பொருணலனுறநவில்வனவாகிச்
சூத்திரமோத்துப்படலமென்றுரைபெறு
முறுப்புடைப்பிண்டத்தொடுமமைந்தஃகாக்
காண்டிகைவிருத்தியிற்காட்சிதந்தீரைங்
குற்றமொன்றின்றிக்குழகொடுமெண்ணான்
குத்தியிற்சிறந்ததென்றுரைத்தனர்புலவர்.
(எ-ன்) வைத்தமுறையானே நூன்மரபுணர்ற்று.

(இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வைந்தனுள்ளு முத்தமநூலின திலக்கணத்தை யறிவிக்குமிடத்து
முத்திறத்தொன்றென்பது முதலாக வெண்ணான்குத்தியீறாகப் பன்னிரண்டுகூற்றதாய்ச் சிறந்ததென்று
மேனாட் கற்று வல்லோருரைத்தன ரென்றவாறு.
எனவே, இந்நூலுடையார்க்கு மங்ஙனமுரைப்பதே கருத்தென்பதாயிற்று.
பிண்டத்தொடு மமைந்தெனவே மகாபிண்டமு மொன்றுளதாகப் பன்மூன்றுண்டென வுணர்க.
இவை பன்மூன்றும் மேற்காட்டும் வகைச்சூத்திரங்களாலுணர்க.

7. முத்திறத்தொன்றென்பனமுதல்வழிசார்பே.
(எ-ன்) தொகைச்சூத்திரத்தினுண் முதலே நூல்கண்
மூன்று கூற்றினுளொன்றாமென்றா ரவையிவையென் றவற்றின் பெயரு முறையுந் தொகையுமுணர்ற்று.

(இ-ள்) நூல்கண் மூன்று கூற்றினுளொன்றென்பன முதனூல் வழிநூல் சார்பு நூலென மூன்றுகூற்றனவாமென்றவாறு.
நூலென்பதனை யதிகார முறையான் மூன்றினும் விரித்துரைக்க.

8. முதல்வனிற்சிறந்ததுமுதனூலாகும்.
(எ-ன்) முறையானே முதனூலாமாறுணர்ற்று.

(இ-ள்) முதல்வனான் மொழிவதா யழிவிலாதே சிறப்பெய்தியது முந்து நூலாமென்றவாறு.
அன்றியும் முதல்வன் றனதில்லாளுக்குரைத்ததாய்ச் சிறப்பெய்தி வருவதெனினுமாம்.
அதற்கு அரி அயன் அரன் எனுமிவர் பூமிதேவி காயத்திரி உமாதேவி என்பவர்க்குரைத்ததாய் எனக்கூறுக.
இன்னும் அவ்விலேசானே இல்லென்பதனை யுவமவுருபாக்கி முதல்வனைப்போலப்
பழமைத்தா யழிவில்லாதே சிறப்பெய்தி வருவதெனினுமாம். அது கருதியேயாம்.

9.விழுமியமுதனூல்விதித்தவற்றினொடும்
பழுதறச்சான்றோர்படைத்தவுந்தழீஇ
வழுவின்றாய்வரல்வழி நூலாகும்.
(எ-ன்) வழி நூலாமாறுணர்ற்று.

(இ-ள்) முக்கியமான முதனூல் கூறிய விலக்கணங்களோடுங் குற்றமறக் கற்று வல்லோரால் விதித்து
வழங்கிவருமி லக்கணங்களோடும் பொருந்தி முறைவழுவுதலின்றிப் புலவராலமைக்கப்பட்டு வருவது வழி நூலாமென்றவாறு.
வழி-பின்.

10.இவ்வகைப்பனுவலோடொத்திழுக்கின்றாய்ச்
செவ்விதிற்சிறிது திரிவதுசார்பே.
(எ-ன்) சார்புநூலாமாறுணர்-ற்று.

(இ-ள்) இங்ஙனமிரண்டு திறத்தவாகப் பகுத்துக் கூறப்பட்ட நூல்களிரண்டோடுமொரு தன்மைத்தாகவொத்து
அவற்றோடு மூன்றாவதோர் புலவ னிலக்கணமிழுக்கா தழகிதாகச் சிறிது வேறுபட விரிப்பது சார்பு நூலாமென்றவாறு.
இம் மூன்றனுளொன்றாய்வருவது நூலென்றறிக.

11.அதன்வழிநடைபெறுமதுநால்வகைத்தே.
(எ-ன்) வழிநூலினைத்தெனவுணர்-ற்று.

(இ-ள்) இறந்ததுபோற்ற லென்னுமுத்தியான், முதல்வனிற் சிறந்த முதனூலின்வழியொழுகலாறுடைய
வழி நூலானது நால்வகைப் படுமென்றவாறு. அதை முன்னர்க்காட்டுதும்.

12.தொகுத்தலும்விரித்தலுந்தொகைவகைவிரியிற்
பகுத்தலுமொழிபெயர்த்தலுமெனும்பான்மைய.
(எ-ன்) மேற்காட்டப்படுமென்ற நால்வகை யாப்பிற்கும் பெயரு முறையுந் தொகையு முணர்ற்று.

(இ-ள்) முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலுந் தொகுத்துச் செய்ததனை
விரித்துச் செய்தலு மிருவகையையுந் தொகைவகைவிரியாகப் பகுத்துச் செய்தலும் வடமொழியைத்
தமிழ் மொழியாகப் பெயர்த்துச் செய்தலுமெனப் பெரியோராற் கூறப்படும் பான்மையையுடைய அந்நால்வகையுமென்றவாறு.

13.பாயிரமுன்பின்பகர்நெறியினிலுறும்.
(எ-ன்) தொகைச்சூத்திரத்துட் பாயிரமுதலுபுவென்றா ரவை யிரண்டு முணருமாறுணர்ற்று.

(இ-ள்) பொதுவுஞ்சிறப்புமெனக் கூறிய பாயிரங்களினிலக்கணங்க ளிந்நூன்முகத்து முன்னரும் பின்னருங்
கூறு மிருவகைச் சூத்திரங்களா னறியப்பெறு மென்றவாறு. எனவே வேறெடுத்துக் கூறப்படுவதில்லை யென்பதாம்.

14.அறம்பொருளின்பம்வீடவைபகர்நாற்பொருள்.
(எ-ன்) நாற்பொருணலனுற நவில்வனவாகியென்றா ரவையிவை யென்பதுணர்-ற்று.

(இ-ள்) அந்நூல்கள் பகருநாற்பொருள் அறனும் பொருளுமின்பமும் வீடுபேறுமாமென்றவாறு.

15.நூலினொருபொருணுதலியதொன்றாய்ச்
சில்வகையெழுத்திற்செறிந்திடும்யாப்பாய்ப்
பலதிறப்பயன்றெரிவுடையதோர்பண்பாய்ப்
படிமக்கலத்துட்படுநிழல்பொருவ
வொண்மையுநுண்மையுமுறுவதுசூத்திரம்.
(எ-ன்) நூல்கட்கங்கமாகிய சூத்திரங்களினிலக்கணமுணர்-ற்று.

(இ-ள்) மேற்றொகுத்தன்முதலாய நால்வகையாப்பிற்றாம் நூலினுளொரு பொருளைக் குறித்ததொன்றாகிச்
சில்வகையெழுத்தினா லகல் வின்றியடங்கிய யாப்பா யுரைக்குங்காற் பலவகைத்தாய
பொருள்களெல்லாந் தன்னகத்தடக்கி யாராயப்படுவதோர் பண்புடைத்தாகி யாடி
சிறிதாயினும் அகன்ற பொருள்களின் வடிவை யகத்தடக்கியறிவித்தாற் போல
நுண்ணிய பொருண்மையோடு விளக்கமுடைத்தாய் மிகுவது சூத்திரமாமென்றவாறு.

16.அதுவே,
மாட்டுறுப்பரிமாநோக்கந்தவளைப்
பாய்த்தாற்றொழுக்குப்பருந்தின்வீழ்வொடு
நிரனிறைவிளக்கெனும்பொருள்கோணிலைத்தே.
(எ-ன்) சூத்திரங்களின் பொருள்கோணிலையுணர்ற்று.

(இ-ள்) அச்சூத்திரம் மாட்டுறுப்புமுதலாகத் தீபகமீறாகக் கூறப்பட்ட வேழு பொருள்கோணிலையை யுடைத்தென்றவாறு.
நிலைமை யுடைத்தென்றதனா லொழிந்தபொருள்கோளான் வருவனவுங்கொள்க.

17.ஓத்தெனப்படுவதோரினப்பொருளைக்
கோத்தொருநெறிபடக்கூறுவதாகும்.
(எ-ன்) இஃதோத்திலக்கணமுணர்ற்று.

(இ-ள்) மேலோத்தெனக்கூறப்பட்டது ஓரினமாகியபொருள் களையிதற்கிஃதியைபுடைத்தென்ன நேரினமணிகளை
வடத்திற்கோத்தாற் போல அடைவிலேசேர்த்தோரியலாகிய நடைபெறக் கூறுவதாமென்றவாறு.
அது வேற்றுமையோத்து, வேற்றுமைமயங்கியல், விளிமரபென முறையே வேற்றுமையாயினும்
வேறுவேறியலாக்கி யொரோரின மாகவுரைத்தவாற்றா னுணர்க.

18.படலமென்பது பன்னெறிப்பொருளாற்
புடைபடவிரவியபொது மொழித்தொடர்பே.
(எ-ன்) படலமென்பதனிலக்கணமுணர்ற்று.

(இ-ள்) படலமென்று கூறப்படுவது பலவேறு நடைபெற்று வருபொருளா லிடம்பெற்று
விரவிய பொதுமொழித்தாய்வருந் தொடர்புடைத்தாமென்றவாறு.

19.அவையொருமூன்றுமடக்குதல்பிண்டம்.
(எ-ன்) பிண்டமாமாறுணர்ற்று.

(இ-ள்) மேற்கூறிய சூத்திர மோத்துப் படல மென்னுமூன்றுறுப்பையு மகத்தடக்குவது பிண்டமாமென்றவாறு.
அம்மூன்றினையு முறுப்பெனவே பிண்டமென்ப துறுப்புடையவயவியென்பது பெற்றாம்.
அவையாவன : தொல்காப்பியமென்பது பிண்டம். அதனுள் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்பன படலம்.
ஒழிந்த விரண்டும் ஓத்தும் சூத்திரமுமாம்.

20.மிகத்தெளிவுடையவகத்தியமதுபோன்
முத்தமிழுட்கொளுமூன்றுபிண்டமுமுறுப்
பொத்தொருங்குட்கொளலுறின்மகாபிண்டம்.
(எ-ன்) மகாபிண்டமாமாறுணர்ற்று.

(இ-ள்) மிகவுமுந்து நூல்களையாராய்ந்து தெளிந்த கேள்வியையுடைய அகத்தியனாற் கூறப்பட்ட வகத்தியமென்னு
நூல்போல இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னு மூன்று பிண்டத்தினையுந் தனக்குறுப்பாகப் பொருந்தும்படி
முழுதுமுட்கொண் டொருநூலாக நிற்றல்பொருந்தின் மகாபிண்டமாமென்றவாறு.

21.உற்றதுபதப்பொருளுதாரணமூன்றுடன்
கற்றவர்வினாவிடைகாட்டுதல்காண்டிகை.
(எ-ன்) வைத்தமுறையானே காண்டிகையாமாறுணர்ற்று.

(இ-ள்) நூல்களைக் கற்றுணர்ந்த வாசிரியர் சூத்திரத்துட்கூறக் கருதியதுணர்த்தலுஞ் சூத்திரத்துட்
சொற்றொறும் பொருளுணர்த்தலு மதற்குதாரண முணர்த்தலு மென்னு மிம்மூன்றுடன்
கடாவுங் கடாயதற் கெதிர்மொழியுங் காட்டுதல் காண்டிகையாமென்றவாறு. வினாவல்-கடாவல், விடை – அதற்கெதிர்மொழி.

22.ஒன்றியசூத்திரத்துட்பொருளன்றியு
மின்றியமையாதனபுணர்த்திசைத்தவைந்
துறுப்புடனிருதிறத்துரையிடனாகமெய்ந்
நிறுத்தியதொன்றெனநிகழ்த்துதல்விருத்தி.
(எ-ன்) முறையானேவிருத்தியாமாறுணர்ற்று.

(இ-ள்) புலவனாற்கூறக்கருதிய பொருளினைக் கூறுதற்குப் பொருந்திய சூத்திரத்துட் சொல்லோடும் பொருளன்றி
யெஞ்சிநின்றவற்றையு மிவ்விடத்திற் கிஃதின்றியமையாதென்பனவற்றையு மவ்விடத்திற் கொணர்ந்து
பொருத்திச் சொல்லப்பட்ட காண்டிகையுறுப்பாகியவைந் தோடுங்கூட்டி யதற்குத் தன்னூலிடனாகவும்,
பிறநூலிடனாகவுமுண்மை நிலைநிறுத்தப்படுவதொன்றாய் நடத்துதல் விருத்தியாமென்றவாறு.
உறுப்பைந்தாவன. கருத்துமுதல் விடையீறாகக் கூறியவைந் தென்றறிக.
இருதிறத்துரையிடனாகவென்பது தன்னூல் பிறநூலென்னுமிரண்டிடனாகவென்றறிக.

23.பொருளிலகூறன்மருணிலைத்தாத
லின்னாச்சொற்பெறல்வெளிறுபட்டிழிதன்
மொழிந்ததைமொழி தன்முரண்கொளமொழிதல்
குறைபடக்கூறன்மிகைபடவிளம்பல்
சந்தவின்பந்தழுவுதலின்மை
யெதிர்மறுத்துணர்த்தலென்றிவையுளப்படக்
கூறினரீரைங்குற்றநூற்கே.
(எ-ன்) மேலதிகாரப்பட்ட முறையே யீரைங் குற்றமுமுணர்ற்று.

(இ-ள்) பொருளிலகூறலென்பது முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைக்கொப்பின்றிப் பயனில்லாதனகூறல்.
மருணிலைத்தாத லென்பது கேட்போர்க்குப் பொருள்விளங்காமன் மருளுதற்கிடனாதல்.
இன்னாச்சொற் பெறலென்பது கேட்போர்க்கின்னா யாப்பிற்றாயிருத்தல்.
வெளிறுபட்டிழித லென்பது குறிப்புமொழி சிறிதுமின்றி வெளிப்படக் கூறல்.
மொழிந்ததை மொழிதலென்பது ஒருகாற்கூறியதனைப் பின்னுங் கூறல்.
முரண்கொள மொழிதலென்பது முதலே கூறியபொருளோடு மாறுகொள்ளுமாறு பின்னர்க்கூறல்
குறைபடக்கூறலென்பது முதலே யதிகரித்த பொருள்களுட் சிலவற்றைக் கூறாதொழிதல்.
மிகைபடவிளம்பலென்பது அதிகரித்த பொருளன்றிப் பிறபொருளுங்கூறல்.
சந்தவின்பந் தழுவுதலின்மை யென்பது எடுத்த யாப்பிற்கிணங்குமோசையின்றிக் கூறுதல்.
எதிர்மறுத்துணர்த்தலென்பது எதிர்மறுத்துணர்த்தலுங் குற்றமாமென்றவாறு.
அஃதாவது
பாவஞ்செய்தானிரயம்புகுமெனக் கருதிக்கூறுவான் தவஞ்செய்தான் சுவர்க்கம்புகுமென்றல்.
இவ்வாறு கூறிற் சுவர்க்கம் புகுமென்னும் பொருடோன்றி நிரயம்புகுமென்னும் பொருடோன்றாமையிற் குற்றமாயிற்று.
என்னை? “எதிர்மறுத்துண ரினித்திறத்தவுமவையே” என்னுமரபியற் சூத்திரத்தானுணர்க.

24-அழகெனத்தகுவதரிறபநாடி
னகலாநடைத்தாயாழமது டைத்தாய்ப்
பொருள்புலப்பாட்டிற்பொருணலன்சொன்னல
னோசையினிமையோடூதியம்பயத்த
லுலகமலையாமையுதாரணம்புணர்த்த
னவிறொறும்புதுவதுவாய்நயனளிப்பதி
னீரைந்தாமெனவியம்பினர்புலவர்.
(எ-ன்) ஈரைந்தழகுமுணர்-ற்று.

(இ-ள்) நூலுக்கழகெனும்படிக்குத் தகுவது குற்றமற வாராயிற் சூத்திரஞ்சில்வகையெழுத்தாற்
செறிந் திறப்பவகலாதநடைத்தா யாழ்ந்த பொருளுடைத்தா யிலக்கணவான்களுக்குப் பொருள் புலப்படுவதாய்ப்
பொருணலனுஞ் சொன்னலனு மோசையினிமையுமுடைத்தாய்க் கற்றோர்க்குப் பயன்றருவதா யுலகத்தோடு
மாறுபடுதலின்றி யுதாரணம் புணர்ப்பதாய்க் கற்குந்தொறும் புதுவதா யின்பமளிப்பதோடு மீரைந்தென்று கூறினர் புலவரென்றவாறு.

25.உள்ளுறுத்தமைத்தவுத்திவகையுணர்த்தி
னுள்ளியதுணர்த்தலுரைமுறைவைப்பே
தொகைபெறநாட்டல்வகைபெறக்காட்டல்
விரிந்தவையிவையெனவிழுமிதிற்கூட்டல்
தொகுத்தமொழியின்வகுத்தனகோடன்
முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றே
பலபொருட்கேற்பினல்லவைகோடன்
மொழிந்தபொருளோடொன்றவைத்தன்
மொழிந்தனமென்றன்மொழிவாமென்ற
லிறந்ததுகாத்தலெதிரதுபோற்றன்
மொழியாததனைமுட்டின்றிமுடித்தல்
வந்ததுகொண்டுவாராததுமுடித்தல்
வாராததுகொண்டுவந்ததுமுடித்தல்
பிறன்கோட்கூறறன்கோட்கூறல்
பிறனுடம்பட்டது தானுடம்படுத
லறியாதுடன்படலாணைகூற
றன்குறியிடுதறந்துகொணர்ந்துரைத்தன்
மறுதலைசிதைத்துத்தன்றுணிபுரைத்தன்
மாட்டெறிந்தொழிதலிரட்டுறமொழித
லொன்றினமுடித்தறன்னினமுடித்தன்
மாட்டுறுப்பினவாமனக்கொளக்கூற
லுய்த்துக்கொண்டுணர்தலினுரனுடையனவாய்த்
தீபகவகையாற்சிறப்புறக்கூறல்
சொல்லினெச்சஞ்சொல்லியாங்குணர்த்தலென்
றமைத்ததினகப்படவமையாதனவுஞ்
சுருங்கக்கூறியதொடர்பினைநாடி
யொருங்கமைத்துணர்த்துதலுரவோர்கடனே.
(எ-ன்) மேலதிகாரம்பாரித்த பன்னிரண்டினு ளிறுதிநின்ற தந்திரவுத்தியாமாறுணர்-ற்று.

(இ-ள்) உள்ளியதுணர்த்தன் முதலாகச் சொல்லினெச்சஞ் சொல்லியாங் குணர்த்தலீறாகச் சொல்லப்பட்ட
முப்பத்திரண்டு மத்தன் மையபிறவுந் தந்திரவுத்திகளாம்.
அவற்றையு மிதனுட்கூறியதாகப் பிறர்க்குணர்த்துத லறிவுடையோர்க்கு முறைமையாமென்றவாறு.
தந்திரமெனினு நூலெனினுமொக்கு மென்றவாறு உத்தியென்பது வடமொழிச் சிதைவு.
அஃதாவது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடுகாட்டுவது.
உள்ளுறு…… யுணர்த்தினென்பது முந்துநூல் செய்த ஆசிரியர் நூற் கின்றியமையாச் சிறப்பென்பதாகக
கருதியமைக்கப்பட்ட தந்திரவுத்தியினது கூறுபாடுணர்த்தினென்றவாறு.

உள்ளியதுணர்த்தலென்பது சூத்திரத்திற் சொற்றசொற்குக் கூறிய வடைவே பொருளுணர்த்துவதன்றி
யிதன்கருத் திஃதெனவுணர்த்தல்.
அஃதாவது எழுத்தெனப்படுப என்னுஞ்சூத்திரத்தினுள் எழுத்தினைத் தென்றறிவித்தலை நுதலிற்றென்றல்.

உரைமுறைவைப் பென்பது நூலுண் முன்னம் பலபொருளை யதிகரித்தவழிப் பின்னுமவற்றை யம்முறையேவிரித்தல்.
அஃதாவது உயர்திணை யஃறிணையென வதிகரித்து ஆடூஉவறிசொன் மகடூஉவறி சொல்
என்னுஞ்சூத்திரங்களா னிறுத்தமுறைபிறழா துயர்திணையை முற்கூறல்.
இன்னுமிதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்திரத்துளோதாததன் காரியமாயின
வழியதனைச் சூத்திரந்தோறுங் கொணர்ந்துரைத்தலுமாம்.
அஃதாவது ஏழாவதுயிர் மயங்கியலில் “அகரவிறுதிப்பெயர்நிலைமுன்ன” ரென்னுஞ் சூத்திரத்திற் கசதபத் தோன்றினெனக்கூறி,
வினையெஞ்சுகிளவியுமென்னுஞ் சூத்திரத்திற் கூறிற்றிலரேனும் அதிகாரமுறைமையினால் வல்லெழுத்து வரும்வழி யெனவுரைத்தல்.

தொகைபெறநாட்டலென்பது வகைபெறக் கூறல் வேண்டுமாயினு மதனைத் தொகுத்துக் கூறல்.
அஃதாவது “அகரமுதனகரவிறுவாய் முப்பஃதென்ப” என்றாற்போல்வன.
இன்னும் பலசூத்திரத்தாற்கூறிய பொருளை யித்துணையுங்கூறப்பட்ட திஃதெனக் கூறலுமாம்.
அஃதாவது “தூக்கியல்வகையேயாங்கெனமொழிப” என்பதனாற்கொள்க.

வகைபெறக்காட்டலென்பது தொகைபெறக் கூறியவற்றை வகைபெறக் கூறல்.
அஃதாவது “அகரமுதனகரவிறுவாய்முப்பஃதென்ப” எனத் தொகுத்தவற்றை
அ இ உ எ ஒ என்றும் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்றும் வகுத்தல்.
அன்றியும் “ஒளகாரவிறுவாய்ப், பன்னீரெழுத்து முயிரெனமொழிப”
“னகாரவிறுவாய்ப், பதினெண்ணெழுத்து மெய்யெனமொழிப” என்பனவுமாம்.

விரிந்தவையிவையென விழுமிதிற் கூட்டலென்பது, தொகுத்தும் வகுத்துங் காட்டியவற்றை யிறப்ப
விரியாமல் விழுமியவாக விரித்து முடித்தல்.
அஃதாவது “உயிர்மெய்யாய்தமுயிரளபொற்றள, பஃகிய இ உ ஐ ஒள மஃகான், றனிநிலைபத்துஞ்சார்பெழுத்தாகும்” என்னு
மதனுட் சார்பெழுத்தெனத் தொகையாலொன்றும் வகையாற்பத்து மாகியவற்றை
“உயிர்மெய்யிரட்டு நூற்றெட்டு” என்னுஞ் சூத்திரத்தான் “ஒன்றொழிமுந்நூற்றெழுபானென்ப” என விரித்ததன்
மேலும் உயிர் மெய்க்குறில் உயிர்மெய்ந்நெடில் உயிர்மெய்யகரமெனவும் வல்லினம் மெல்லினம் இடையினம்
எனவும் இறப்பவிரியாமல் விழுமிதாய்க்கூட்டல்.

தொகுத்த……. கோடலென்பது “றெட்டெழுத்திம்பரும்…… வல்லாறூர்ந்தே” என்னுஞ் சூத்திரத்தாற்
பிறிதுமோர்பொருள் வகுத்துக் காட்டல்.
அஃதாவது “குற்றியலுகரமுறைப்பெயர்….. முதலும்” என்னுஞ் சூத்திரத்தான் மொழி
முதற் குற்றுகரமுங்கோடல். சொல்லின் முடிவினப் பொருண்முடித்த லென்பது மது.

முந்துமொழிந்ததன்றலை தடுமாற்றே யென்பது முற்படவதிகரித்த பொருளை யம்முறையிற்கூறாது முறைபிறழக்கூறுதல்.
அதனை யங்ஙனங் கூறுங்கால் ஒருபயனோக்கிக் கூறல்வேண்டும்.
அது புள்ளிமயங்கியலுள் “ஞகாரையொற்றிய” என்ற சூத்திரத்தினுள் ஞகார வீறுகூறி யதன் பின்னர்
ணகாரவீறுகூறாதே வருஞ்சூத்திரத்தினுள் “நகரவிறுதியுமதனோரற்றே” என முடிபொப்புமை நோக்கிக் கூறியதாற் கண்டுகொள்க.

பலபொருட்… கோடலென்பது ஒருவகைப்பொருள் பலபொருட் கேற்குமாயினு மவற்றுணல்லதனைக் கோடல்.
அஃதாவது மெய்ப்பாட்டியலுள் அகத்திற்குரியவாகப் புகுமுகம்புரிதன் முதலாகக் கையறவுரைத்த லீறாகக் கூறிய
அறுநான்கு மெய்ப்பாடும் அகத்தினுள் இரு வகைக் கைகோளுள்ளுங் களவினுள் முறையேவந்து கற்பினுளம்
முறையே வரப்பெறாமையி னவைகளவிற்கே யுரித்தென விதந்து கூறலானறிக.
அன்றியும் ஒரு சூத்திரம் பலபொருட்கேற்குமாயினு மதற்குணல்லதனைப் பொருளாகக்கோடலுமாம்.
அஃதாவது “வேண்டிய கல்வியாண்டு மூன்றிறவாது” என்பதற்குக் கல்வி வேண்டிய ஆண்டிறவாது
அக் கல்வியெல்லா மூன்றுபாதத்தைக் கடவாதென்றதனாலறிக. அன்றி ஓதற்பிரிதற் காண்டு மூன்றென்பது பொருந்தாது.
அன்றியும் “இலனென்னுமெவ்வமுரையாமையீதல், குலனுடையான்கண்ணேயுள” என்பதனுட் பலபொருடோன்றியவிடத்து
முதலேகண்ட விரண்டு கிரிகையுமன்றி யிரப்போனின்னு மொருவர்பால் யானொன்று மில னென்னு மான
பங்கங்கூறாம லிரக்கப்படுவோ னீகையெனப் பொருள் கோடலுமாம்.

மொழிந்த பொருளோடொன்றவைத்த லென்பது சூத்திரத்துப் பொருள் பலபடத் தோன்றுமாயினு
முற்பட்ட சூத்திர யாப்பிற்கேற்பப் பொருளுரைத்தல். அஃதாவது
“இலனென்னுமெவ்வமுரையாமை” என்னுங் குறளுக்கு முன்னருத்திக்கேற்பக் கூறிய பொருளன்றி
“நல்லா றெனினுங்கொளறீதுமேலுலக, மில்லெனினுமீதலேநன்று” என்னு மேலிற் குறளிற் பொருள்கட்கொன்ற
வும்மையைவிரித்து இலனென்னு மெவ்வமுரையாமையு மீகையுங் குலனுடையான் கண்ணேயுள எனவுரைத்தல் கொள்க.

மொழிந்தனமென்றலென்பது பலபொருள்களையும் அதிகரித்த வற்றுட் சிலபொருளை மேற்கூறப்பட்டனவென்றல்.
“அஃதாவது மாத்திரை யளவு மெழுத்தியல்வகையு, மேற்கிளந்தன்ன” வென்றதனாற் கொள்க.

மொழிவாமென்றலென்பது சில பொருளைக் கூறி யவற்றுள் ஒன்றனை யின்னவிடத்துக் கூறுவாமென்றல்.
அஃதாவது “குற்றியலிகரநிற்றல் வேண்டும்” என்ற சூத்திரத்தில் ஒருமொழிக் குற்றியலிகரங்கூறி
அதன் பின்னர் இருமொழிக்கண்ணுங் குற்றியலிகரம் வருமென்பதற்கு “புணரியனிலையிடைக்குறுகலுமுரித்தே” என்னுஞ் சூத்திரத்தின்
“உணரக் கூறின் முன்னர்த்தோன்று” மெனக்குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படுமென்றத னாலுணர்க.

இறந்தது காத்தலென்பது மேற்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருஞ்சூத்திரத்தானமைத்தலாம்.
அஃதாவது முதனூலுக்குச் சூத்திரங் கூறிய பின்னர் “வழியெனப்படுவததன் வழித்தாகும்” என்று
வழி நூற்குக்கூறிய சூத்திரத்தில் வழிநூலானாய பயன் கூறாது மேல்வருஞ் சூத்திரங்களாயவவற்றின்கண்
“வழியினெறியே நால்வகைத்தாகும்” என்ற பின்னர் அதனாலாயபய னதனிற்கூறாது
“தொகுத்தல் விரித்தல்” என்னுஞ்சூத்திரத்தா லதனாலாயபயன் கூறல் இறந்தது காத்தலாயிற்று.

எதிரது போற்றலென்பது முன்பு கூறிய சூத்திரத்தானே மேல் வருஞ் சூத்திரப் பொருளையும் பாதுகாத்தமைத்தல்.
அஃதாவது நூன் மரபினுள் “உட்பெறுபுள்ளியுருவாகும்மே” எனப்பகரத்தோடு மகரத்திடை வரிவடிவிற் கிலக்கணங் கூறப்
புகுந்து மேல்வருஞ் சூத்திரத்தின் “மெய்யினியற்கை புள்ளியொடுநிலையல்” என்றதனால்
மெய்களிற்கூடிப் புறத்திற் பெறும்புள்ளியோ டுள்ளாற்பெறும்புள்ளியும் மகரத்திற்கு வரிவடிவாமெனக் கோடல் எதிரது போற்றலாயவாறு காண்க.
“அற்புதஞ்சிலேடை” யென்னும் பொருளணியியற் சூத்திரமுமிது.

மொழியாததனைமுட்டின்றி முடித்தலென்பது சூத்திரத்தின் கண்ணேயெடுத்தோதாத பொருளை முட்டுப்படாம லுரையினான் முடித்தல்.
அஃதாவது “அரையளபுகுறுகன்மகரமுடைத்தே, யிசையிட னருகுந்தெரியுங்காலை” என்பதனாற்கொள்க.
என்னை? அரையளவாகிய வெல்லையிற்குறுகிக் கான்மாத்திரையவாதலை மகரமெய்யுடைத் தஃதி யாண்டோவெனின்
வேறோரெழுத்தின தோசையின் கண்ணதுதான் சிறுபான்மையவாகிவரு மாராயுங்காலத்தென்பதனாலாயிற்று.
என்னை? கான்மாத்திரையென்பது சூத்திரத்தின் கண்ணவாய்ச்சொல்லி முடியாததனை யுரையினான் முட்டின்றி முடித்தலானெனக்கொள்க.
இக் கருத்தினானே “சூத்திரத்திற் பொருளன்றியும் யாப்புற, வின்றியமையா தியைபவை யெல்லா,
மொன்ற வுரைப்ப துரையெனப்படுமே” யென்றோதுவாராயிற்று.

வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதும், வாராதது கொண்டு வந்தது முடித்தலென்பதுமான
ஒருங்கெண்ணப்பட்ட விரண்டிற்கும் ஒரோவொன்றாகப்பகுத்து இலக்கணங்கூறிய விரண்டனுள்
பின்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வந்ததனைக் கொண்டு முன்னர்க்கூறிய சூத்திரத்துள்
வருமிலக்கணத்திற்கு வாராததனைக் கூட்டிமுடித்தலும், முன்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வாராததனைக் கொண்டு பின்னர்க் கூறிய
சூத்திரத்துள் வருமிலக்கணத்திற்கு வந்ததனைக்கூட்டி முடித்தலுமாம்.

அவையாவன : “கூறியவுறுப்பிற் சிலகுறைந்தியலினும், வேறுபாடின்றென விளம்பினர்புலவர்” எனவும்,
“அறமுதனான்கினுங் குறைபாடுடையது, காப்பியமென்று கருதப்படுமே” எனவும் பொதுவியலுட் கூறிய சூத்திரங்களானுணர்க.
என்னை? அறமுதனான்கினுங் குறைபாடுடையது காப்பியமெனவே, பின்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வந்தது கொண்டு
அறமுதனான்கு மொழித் தல்லா தவுறுப்பிற் குறைவதே பெருங்காப்பியமென்று முடித்தலானுங்,
கூறியவுறுப்பிற் சில குறைந்தியலினு மெனவே முன்னர்க் கூறிய சூத்திரத்தினுள் வாராத அறமுதனான்கின்
ஒன்றும் பலவுங் குறைபாடுடையது முறுப்பிற் சில குறைதலுங் காப்பியமென்று வாராததனைக் கொண்டு வந்ததனோடு
முடித்தலானுமென அடைவே கண்டுகொள்க. இவை தம்மிற்றாமாறாடினுமிழுக்காது.

பிறன்கோட்கூறலென்பது பிறநூலாசிரியன் கொண்ட கோட்பாட்டைக் கூறுதல்.
அஃதாவது “வேற்றுமைதானேயேழெனமொழிப” என்றல். எனவே, தன் கோட்பாடன்றென்பதாயிற்று.

தன்கோட்கூறலென்பது பிற நூலாசிரியன் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுதல்.
அஃதாவது “விளிகொள்வதன்கண் விளியோடெட்டே” என்றல்.

பிறனுடம்பட்டது தானுடம்படுத லென்பது பிறநூலாசிரிய னுடம்பட்டதற்குத் தானுமுடம்படல்.
அஃதாவது இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருட்கண் வருமென்றார் பாணினியா ரஃதிவர்க்கு முடம்பாடு என்றல்.
அஃது இயற்றப்படுவதும் வேறுபடுக்கப்படுவதும் எய்தப்படுவதுமாம்.
அதற்குதாரணம் – எயிலையிழைத்தான், மறத்தைக் குறைத்தான், நூலைக் கற்கும் என அடைவேகாண்க.

அறியாதுடம்படல் என்பது தானறியாதவற்றைப் பிற பெரியோர் கூறியவாற்றானுடம்படல்.
அஃதாவது ஏழாநரக மித்தன்மைத்தெனச் சான்றோர் கூறியவழித் தனக்கது புலப்படாததாயினுந் தானதற்குடம் படல்.
இது வழி நூலாசிரியர்க்குமுரித்து.

ஆணைகூறலென்பது ஒருபொருளைக் கூறும்வழி யேதுவினாற் கூறலன்றித் தன்னாணையாற்கூறல்.
அது வேற்றுமை யேழெனப் பாணினியார் கூறியவழி அவர் விளியை முதல்வேற்றுமையிலடக்கினார்.
அதற்குத் திரிபு கூறாதே யதனை யெட்டாம் வேற்றுமை யென்றாலும் ஆண்டுக் கடாவப் படாமை.

தன்குறியிடுத லென்பது உலகின்கண் வழக்கின்றி யாசிரியன்றன் குறியிடல். அஃதாவது உயர்திணை அஃறிணையென்பன.

தந்துகொணர்ந்துரைத்த லென்பது முன்னராயினும் பின்னராயினு நின்ற சூத்திரச் சொல்லை யிடைநின்ற சூத்திரத்திற்
கொணர்ந்து புணர்த்துரைத்தல். அஃதாவது
“நெட்டெழுத்திம்பருந்தொடர்மொழி யீற்றுங், குற்றியலுகரம்வல்லா றூர்ந்தே” என்பதனில் முன்னின்ற சூத்திரத்தில்
நிற்றல்வேண்டுமென்ற சொல்லைக் கொணர்ந்து புணர்த்துரைத்தல்.

மறுதலை சிதைத்துத்தன்றுணிபுரைத்த லென்பது நெட்டெழுத் தேழளபெடையென்பன குற்றெழுத்தின் விகாரமென்பாரை மறுத்தது.
அது அஅஅ என நின்றதல்லவென அவர் மறுதலையைச் சிதைத்து வேறோரெழுத்தென்று கூறல்.

மாட்டெறிந்தொழித லென்பது முன் னொரு பொருட்கிலக்கணங் கூறிப் பின்னர்வருவது மதுபோலுமென்றல்.
அஃதாவது ஏழாவ துயிர்மயங்கியலில் “உகரவிறுதியகரவியற்றே” என்றல்.

இரட்டுறமொழித லென்பது ஒருவகையானின்ற தொடர்ச்சொல்லாதல் ஒரு சொல்லாதல் ஒரு செய்யுளகத்துப்
பலபொருளை மொழிவதா மென்றவாறு. அஃதாவது
“வந்தவரவென்னையெனவாட்கண்மடவாய் கேள், சிந்தை நலிகின்ற திருநீர்க்குமரியாட,
வந்திலதனாய பயனென்னை மொழி கென்றாண், முந்திநலிகின்ற முதுமூப்பொழியுமென்றான்” என்பதனாலறிக. என்னை?
திருநீர்க்குமரியாடவெனவே அழகிய நீர்மையையுடைய கன்னியாகிய நின்னைப் புணரவந்தேனென்பதனை மறைத்தனவாகவும்,
பொலிந்த தீர்த்தநீராகிய குமரியாற்றை யாடவந்தேனென வெளிப்படையாகவுஞ் செம்மொழியாக விரட்டுறமொழிதலாலும்,
அதனாலாய பயன்யாதென அக்காலத் திம்மூப்பு நீங்குமென அத்தச்சிலேடையாகவுங் கொள்ளக்கிடந்தமையாலு மெனக் கொள்க.

ஒன்றினமுடித்த லென்பது ஒன்றற்கிலக்கணங்கூறியவிடத்துக் கூறாது தொக்குநின்ற ஒழிபிற்கு மதுதானே விதியாகமுடித்தல்.
அஃதாவது “புள்ளியீற்றுமுன்னுயிர் தனித்தியலாது, மெய்யொடுஞ் சிவணுமவ்வியல் கெடுத்தே” என்னும் சூத்திரத்தானுணர்க.
என்னை? இயல்பல்லாத புள்ளிமுன் னுயிர்வந்தாலும் அவ்விதி கொள்கவென முடித்தல்
உதாரணம் :- ஆலடை, ஆலாடை எனவும், அதனை எனவும், நாடுரி எனவும் வரும்.

தன்னினமுடித்த லென்பது ஒருவகையுட்சிலவற்றிற் கிலக்கணங் கூறியவிடத்துச் சொல்லாதொழிந்தனவாய்த் தொக்கதற்கும்
ஆட்சியுங் காரணமும்பற்றி யச்சூத்திரத்தினிடத் ததற்கும் வேறோரிலக்கணங் கூறிமுடித்தல்.
அஃதாவது “அ இ உ அம்மூன்றுஞ்சுட்டு” என்னுஞ் சூத்திரத்தானுணர்க. என்னை?
குற்றெழுத்தென்றவற்றுண் மூன்றனைச் சுட்டென்னுங் குறியவென்று கூறியவிடத்து எகரமும் வினாப்பொருளு ணர்த்துமென முடித்தல்.

மாட்டுறுப்பினவாமனக்கொளக் கூறலென்பது ஒரு சூத்திரத்துப் பொருள்கொள்ளுங்கா லகன்று பொருள்கிடப்பனவும்,
அணுகிக்கிடப் பனவுமான விருவகையையும் பொருண்முடியுமாற்றாற் கொணர்ந்துரைப்பச் செய்தல். என்னை?
“அகன்று பொருள்கிடப்பினும்… மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்” என்றாராகலின்.
மனக்கொளவென்பது கேட்டோர் மனத்துட் கொளவென்பதாம். இதற்குச் சூத்திரம்
“வடவேங்கடந்தென்குமரி…………… படிமையோனே” என்பதெனக்கொள்க.
அதற் கிளம்பூரணருரையன்றி நச்சினார்க்கினிய ரெழுதின வுரையைக் கண்டுகொள்க. அவற்றை யீண்டுரைப்பிற் பெருகும்.

உய்த்துக்கொண்டுணர்த லென்பது ஒரு சூத்திரத்தானொன்றற் கிலக்கணங்கூறியவழி யதற்குப் பொருந்தாமையுளதாகத்
தோன்றின் அதனையு மதற்குப் பொருந்தினவழியாகக் கூட்டுதல். அஃதாவது
ஏழாவ துயிர்மயங்கியலிற் “பனியெனவரூஉங்காலவேற்றுமைக், கத்து மின்னுஞ் சாரியையாகும்” என்பதன்கண்ணுணர்க.
என்னை? பனியத்துக்கொண்டான், பனியின்கட்சென்றான், பனியிற்சென்றான் என வரும்.
அவற்றுள் இன்பெற்றுழி முன்னர்க்கூறிய நாழிக்காயம், உரியக் காயம் என்பதுபோல
வல்லெழுத்து மிகாது வீழ்க்க என்பதற்குப் பொருந்த வுய்த்துணர்தல்.

தீபகவகையாற் சிறப்புக்கூறலென்பது குணந் தொழில் சாதி பொருள் என்னு நான்கனுள் ஒன்றைக்குறித்தவொருசெல்
செய்யுளிடத்து முதலிடைகடையென்னு மூன்றிடத்தினுள் ஓரிடத்தாகி யாதியினின்ற தந்தத்தளவுமோடவும் இடைநின்றது முன்னும்பின்னுமோடவும்,
இறுதிநின்ற திடையு முதலுமோடவுங் கவின்பெறக் கூறுதல். என்னை?
“குணந்தொழில் சாதி பொருள்குறித்தொரு சொல், லொருவயினின்றும் பலவயிற்பொருடரிற், றீபகஞ்செய்யுண்மூவிடத்தியலும்”
என்பது அணியியலாகலினுணர்க. அவற்றிற்கெல்லா முதாரண மீண்டுரைப்பிற் பெருகும்.

சொல்லினெச்சஞ்சொல்லியாங்குணர்த்த லென்பது
“பெயர்வினையும்மை சொற்பிரிப்பென வொழியிசை, யெதிர்மறையிசையெனுஞ்சொல் லொழிபொன்பது” மென்னுஞ்
சொல்லெச்சங்களைக்கண்டு ஆங்காங்குச் சொல்லியவாற்றாற் பொருள்கோடலாம்.
அன்றியும் தொல்காப்பியர் நோக்கம் பற்றிப் பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்டவெனினுமாம்.
அவற்றிற்கெல்லா முதாரண மீண்டுரைப்பிற் பெருகும். அவையும் வந்துழிக் கண்டுகொள்க.

“என், றமைத்ததினகப்படவமையாதனவுஞ், சுருங்கக் கூறிய தொடர்பினைநாடி, யொருங்கமைத்துணர்த்துதலுரவோர்கடனே” என்பது,
(என்றென்பது-எண்ணிடைச்சொல். ) ஆதலா லங்ஙனங்கூறிய முப்பத்திரண்டாக அமைத்ததி னமையாதனவாமவற்றையுஞ்
சுருங்கக் கூறலென்னு மழகுநோக்கியும், முன்னோர் தந்திரவுத்தி முப்பத்திரண்டெனக் கொண்ட வரையறை
யிகவாமைக்கூறியதாகநோக்கி மிதனகத்தமைந்தனவாக வுணர்த்துதல் அறிவுடையோர்க்கு முறைமை யென்றவாறு.
அமையாதனவாவன பலவுள. அவற்றுள்ளுஞ் சில வருமாறு. வேண்டாது கூறிவேண்டியது முடித்தல், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி
வகுத்தல், பொருளிடையிடுதல் என்பன.
அவையாவன :- “ஏனையுயிரேயுயர் திணைமருங்கிற், றாம்விளிகொள்ளாவென்மனார்புலவர்” என்னுஞ் சூத்திரத்தானும்,
“அளபெடைமிகூஉமிகரவிறுபெய, ரியற்கையவாகுஞ் செயற்கையவென்ப” என்னுஞ் சூத்திரத்தானும்,
“ஒருமைசுட்டிய பெயர்நிலைக்கிளவி, பன்மைக்காகுமிடனுமாருண்டே” என்னுஞ் சூத்திரத்தானு முணர்க.

இவற்றுள் முன்னைய விரண்டும் விளிமரபு. மற்றையது எச்சவியல்.
அவற்றொடும் “ஆற்றொழுக்கரிமாநோக்கந்தவளைப், பாய்த்துப்பருந்தின் வீழ்ச்சிநிரனிறை” யென்பனவு
மொருசாராசிரிய ருத்தியுளமைத்தாரெனக் குறித்ததாம்.
அன்றியும், ஒன்றற்கிலக்கணங்கூறும்வழி யொருசூத்திரத்துட் பலவுத்திவருவனவு முளவென்னுநோக்கத்தாற் கூறியதூஉமாம்.
அதற்குதாரணம் :- “எல்லாமொழிக்குமுயிர் வருவழியே, யுடம்படுமெய்யினுருவு கொளல்வரையார்” என்பதனாலுமுணர்க.
என்னை? மூவகைப்பட்ட மொழிக்கு முயிர்முதன் மொழிவருமிடத்து இடை யுடம்படுமெய்யாகிய வடிவுகோடல் நீக்காரென்புழி
யுடம்படுமெய் யென்றாரல்ல தவை யிவையெனக் கூறா ரவற்றை யுரையிற்கோடலென்று மவை யகரமும், வகரமும் எனவும்,
அவற்றுள் இ ஈ ஐ வழியவ்வும் அல்லனவருவழி வகரமும் வரும் எனக்கோடலானும் ஒன்றினமுடித்த
லென்னுமுத்தியான் விகாரப்பட்ட மொழிக்கண்ணு முடம்படுமெய் கொள்ளப்படுமெனக் கூறியதற் குதாரணம்
மரவடி, ஆயிருதிணையெனவும் இரண்டுத்திவந்தவாற்றானறிக. தந்திரவுத்திமுற்றும்.

26.அடிவரையுளவாயடிவரையிலவாம்
பாட்டினும்பாவின்றெழுகிளவியினுங்
காட்டியவெழுநிலத்தனவாய்க்கழறிய
பொருளொடுகலந்துபுரைதீரொலிசெறிந்
தெண்ணத்தகைசாலீராறடிநிமிர்
பண்ணத்தியினும்பயில்வனவாகும்.
(எ-ன்) இதுவும் அந்நூலிற்கோ ரொழிபுகூறுதனுதலிற்று.

(இ-ள்) குறளடி முதலாய வைவகையடியானும் வரையறையுள வாம்பாட்டினாலும், அடிவரையறையிலவாம் பாட்டினாலும் பாவின்றி
யொழுகலாறுடைய பலசொற்றொடராலுங் கற்றோர்காட்டப்பட்ட வெழு நிலத்தெழுந்த செய்யுணடைத்தாயும்
அவற்றுட்பாட்டிற்குக் கூறிய பொருளோடுங்கூடிக் குற்றமற்ற ஓசைசெறியப்பட்டுப் புலவரானெண்ணும் படிக்குத் தலைமை
சான்ற பன்னிரண்டெனலாய நாற்சீரடியின் மிகுந்துங் குறைந்தும் வரும் பாவினத்தோடும் பயில்வனவாம் நூல்களென்றவாறு.
எழுநிலமாவன:- பாட்டும், நூலும், உரையும், பிசியும், முதுமொழியும், மந்திரமும், குறிப்புமொழியும்.
அவற்றுள் அடிவரையுளபாட்டாவன :- வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என்பன.
அடிவரையிலவாவன:- நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி யெனக்கொள்க.
என்னை? “எழுநிலத்தெழுந்த செய்யுட்டெரியி, னடிவரையில்லனவாறெனமொழிப” எனவும்,
“அவை தாம், நூலினான உரையினான, நொடியொடு புணர்ந்த பிசியினான, வேது நுதலிய முதுமொழியான,
மறைமொழி கிளந்த மந்திரத்தான, கூற்றிடை வைத்த குறிப்பினான” என்பவற்றானு முணர்க.
அன்றியும் இவற்றிற்கு முன்னர்ப் பாட்டுரைநூலேயென்னுஞ் சூத்திரத்தானுமுணர்க. எழு நிலத்தெழுந்த வென்பது வரையறைப் பண்புப்பெயர்.
பண்ணத்தி யென்பது பாவினம். பண்ணைத்தோற்றுவிக்கையாற் பண்ணத்தியென்று பெயராயிற்று.
இவை இளம்பூரணர் முதலாயினாரொருசா ராசிரியர் நோக்கம். நச்சினார்க்கினியர் நோக்கமுமுணர்ந்துகொள்க.

27.விதியாச்செய்யுளின்மிகுத்திலக்கணமு
மதியாலுரைத்ததும்வழங்கன்ஞாபகமா
விரிந்தநூல்களுள்வேறுவேறினமாய்த்
தெரிந்தவியல்களைச்செம்மையிற்றமிதமி
வெள்ளையினகவலின்விளம்பலுமரபே.
(எ-ன்) இதுவும் அந்நூற்குக் கூறிக் கூறாத வொழி பெதிரது போற்றலென்னுமுத்தியாற் கூறுதனுதலிற்று.

(இ-ள்) இங்ஙனங் கூறப்பட்ட விலக்கண நூல்களை அகவலின் வெள்ளையி னறைகவென்று முந்து நூல் விதித்தமையுளவாகவும்,
விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை, ஆசிரியவிருத்த மென்னும் பாவினத்தாற்
பின் பிலக்கண நூல்செய்தோ ரிலக்கணங்களைக் கூறியதுங் கற்றோராலெடுக்கப்பட் லெடுக்கப்பட் டுலகின்கண்ணே
வழங்குதன்ஞாபகமாக விரிந்த நூல்களுள்ளும் பலவேறினமாக வாராய்ந்து பிரிக்கப்படும் பலவியல்களுள்ளுமோரியலை
முதலே வெண்பாவிற்கூறி, யதன்பின்னர்வரு மேனையியல் களையகவலானு மழகிதாய்த் தமிதமிகூறுவது மரபாமென்றவாறு.
அவை யாப்பருங்கலக்காரிகை, கயாகர நிகண்டு, சூடாமணி நிகண்டென்க.
இலக்கணமு மென்றவும்மை யெச்சவும்மையாதலாற் கதைதொடர்ந்த விலக்கியங்களுள்ளும்
வேறுவேறு பாவாகத் தமிதமிகூறலு மரபென்றவாறு. அவை சிலப்பதிகாரத்துள் மங்கலவாழ்த்துக்காதை மயங்கிசைக் கொச்சகக்கலியினும்,
அந்திமாலைச் சிறப்புச்செய்காதை, இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடுகாதை இவை நிலைமண்டிலவாசிரியத்தும்,
கனாத்திறமுரைத்த காதை கலிவெண்பாவிலும் வந்தவாறுகாண்க. ஒழிந்தனவு மிவ்வாறுவந்தமை யாங்காங்குக் காண்க.

28. இருவகைநூன்மரபிவையெனமொழிப
(எ-ன்) இதுவும் அந்நூலினைத் தொகைவகைவிரிப்படுத்தி யொழிபுகூறுதனுதலிற்று.

(இ-ள்) நூலெனத் தொகையா னொன்றாய்நின்றவது இலக்கண விலக்கியமென வகையானிரண்டாம்.
நூலினது விரியின்மரபிவையெனக் கூறுவர் அகத்தியன் முதலிய தொல்லாசிரியரென்றவாறு. நூன்மரபு முற்றும்.

29. புரப்போன்மரபினைப்புகலுங்காலைக்
குலனுங்குணனுங்குரவரைப்பேணு
நலனுங்கடவுளைநயத்தலுங்கருணையும்
புலனவித்தொழுகலும்பொறையுந்தோற்றமு
முலகியலறிந்துயிர்க்குறுதிகோடலுங்
கற்றவர்காமுறவாழ்தலுங்காந்தியு
மதிநிகர்கல்வியுங்கதிர்நிகர்வனவாம்
வாய்மையுந்தூய்மையும்வழுவுதலின்றாய்
வாடாக்கற்பகமணமலிபொற்பூக்
கோடாச்செங்கேற்கொற்றவனிதியறை
வான்சுவைமருந்தாயிரவாய்ச்சேடனிற்
கற்றனயாவுங்கழகத்துதவும்
பெற்றியன்மறந்தும்பிறன்பழிகூறான்
சதிருடையேனெனத்தற்புகழ்ந்தறியான்
முதுமொழியிலக்கணவிலக்கியமுறையே
புதுமொழிபுணர்க்கும்புலமையோனே.
(எ-ன்) வைத்தமுறையானே நுவல்வோன்றன்மையுணர்-ற்று.

(இ-ள்) நுவல்வோன் – நூனுவல்வோன், எனவே ஆசிரியனாம். நூனுவல்வோனிலக்கணத்தைக் கூறுமிடத்துக்
குலமுதல் தூய்மை யீறாகவெண்ணப்பட்ட பதினாலினுள்ளு மொன்றும் வழுவுதலிலனுமாகிக்,
கற்பகமணமலிபொற்பூமுதலிய மூன்றனையுஞ் சேடனையுமொப்பவனுமாகிக், கற்றனகழகத்துதவும்பெற்றி,
பிறன்பழிகூறாமை, தற்புகழாமை மூன்று முடையனுமாகி, முந்து நூல்கூறியபடியே யிலக்கண விலக்கியமிரண்டும்
புதுமொழியாகப் புணர்க்கும் புலமையுமுடையோனாமென்றவாறு.
முதுமொழி – முந்து நூல். கற்பகமணமலி பொற்பூமுதலிய மூன்றுஞ், சேடனு மூவமையாதற்கேது முறையே மேற்காட்டுதும்.
இது பொழிப்புரை. ஒழிந்தவகல முரையிற் கொள்க.

30-ஆய்ந்தமைவுடையகல்வியுங்கவியும்
வாய்ந்ததற்குவமைமணமலிபொற்பூ.
(எ-ன்) முறையே மேற்காட்டுதுமென்ற நான்கனுள் மணமலி பொற்பூவை யொத்ததற்கேது வுணர்-ற்று.

(இ-ள்) வாடாதபொற்பூ முந்துநூல்களை யாராய்ந்தமைவுடைய கல்வியுங் கவியுமெய்தியதற் குவமையாமென்றவாறு.
வாடாக்கற்பக மென்பது சூத்திரத்தில்லையாலோவெனின், தந்துகொணர்ந்துரைத்த லென்னுமுத்தியாற் கூறப்பட்டது.
அமைவு – நிறைவு. பொற்பூ – கல்வி. மணம் – கவியெனக் கொள்க.

31–அறன்றருபலபொருளான்றமைவுடைமையும்
பிறர்நிதியறையிற்பெருகியசெல்வமு
மளப்பருந்தன்மையுமவரவர்தாந்தினங்
கொளக்குறைவில்லதுகொற்றீவனிதியறை.
(எ-ன்) கொற்றவனிதியறையொத்தற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) அறத்தினாலுண்டாக்கப்பட்ட பலபொருள்களுநிறைவெய்துதலும், பிறர்நிதியறையினும் பெருகிய
செல்வவளனு, மொருவராலளத்தற்கரிய பெற்றியும், வறியோர்தாமே தினமும்வேண்டுவன தினமுங் கொள்ளா
நிற்கக் குறைவில்லாமையுஞ் செங்கோற்கொற்றவனிதியறைக் குண்டாய குறியென்ற வாறு.
எனவே, இவனுளத்து அறமுதலிய நாற்பொருளாங்கல்வி நிறைவுடைமை பிற ராராய்வின் மேம்பட்ட கல்வி
நிறைவுடைமை யெனவும், இவன் கல்விநிறைவுடைமை யளத்தற்கரியதென்பதூஉம், பிறரிவனிடத்து வித்தையைக்
கொள்ளக் கொள்ளக் குறையா தென்பதூஉ முய்த்துவமைகொள்ள நின்றமையுணர்க. இவை குறிப்புவமை.

32.உண்ணத்தெவிட்டாவுரிசையுமஃகா
வண்மையுந்தண்மையும்பயப்பதுமருந்தே.
(எ-ன்) வான்சுவைமருந்தொத்தற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) அமிர்தமானது தன்னையுண்பவ ருண்ணவுண்ணத் தெவிட்டாவினிமையும், வற்றாவளமையும், குளிர்ச்சியும்
பயப்பதாமென்றவாறு. எனவே, அவன் கல்வியுங் கவியுங் கேட்போர் செவியாலுட் கொள்ள வுவட்டாதென்பது
மக்கல்விகவி கொள்வார்கொள்ளுந்தோறுங் குறைவின்றி நிறைவெய்துந்தன்மையாயிருக்குமென்பது
முவமையாலுய்த்துக் கொள்ள நின்றவா றுணர்க. அலங்க மிதுவு மது.

33.பாயிரந்தோய்ந்து பருப்பொருளின்றி
நுண்பொருள்பயக்குநூல்பலவாங்காங்
குலப்பின்மாணாக்கர்க்கோர்பகன்மயர்வறச்
செலச்சொலற்குவமையாயிரவாய்ச்சேடன்.
(எ-ன்) ஆயிரவாய்ச்சேட னுவமையென்பதற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) சிறப்புப்பாயிரத்தோடுங்கூடிப் பருப்பொருளின்றி நுண்ணிய பொருள்களைக் கூறுவனவாம்
பல நூற்பொருள்களைக் குறைவில்லாத மாணாக்கர்பலர்க்கு மொருகாலத் தொருங் கிருடீரச் செலச்
சொல்லுதற் காயிரவாய்ச்சேட னுவமையா மென்றவாறு. இவர் கற்கப்படுவோர்.

34.மடியழுக்காறுவஞ்சகம்வெகுளி
யுணராததையுணர்ந்ததின்மேற்கோட
றம்மைப்புகழ்வதிற்றான்பிறரிகழ்தல்
கற்றவர்புனைந்தகவியினுட்சார்ந்த
குற்றமொன்றுளதேற்குணனமைத்தறியான்
செவ்வியின்மலர்ந்துநாறாச்செம்மலர்
வெவ்விடவரவுதன்வாய்க்கொள்விழுமணி
பொதுமகள்பாற்கொளப்பொருந்தியபோகஞ்
சிறியவன்றன்பாற்செறிதருபொருளெனுங்
கல்வியனாரியனாங்கடனிலனே.
(எ-ன்) கற்கப்படாதோர்குண முணர்-ற்று.

(இ-ள்) மடிமுதலாகக் கூறப்பட்ட நான்குங் கல்லாமைமேற் கொண்டொழுகலுந் தம்மைப்புகழ்வதோடும்
பிறர் குற்றமற்ற கல்வியையுங் கவியையு மிகழ்தலுங் கற்றோராற்புணர்க்கப்பட்ட செய்யுட்கண்ணுஞ் சார்ந்த குற்றஞ்
சிறிதுளவாமெனி லதனைக் குணனாகவமையாதது முடையனாகி யவற்றோடு நாறாச்செம்மலர் முதலிய நான்கும்
போலும் கல்வியையுடையவ னாரியனாங்கடனில னென்றவாறு.
கடன் – முறை. நாறாச் செம்மலர் முதலிய நான்குமொப்பென்பதற்கேது மேற்காட்டுதும். தம்மையென்னும் பன்மை யிழிபின்கண் மயங்கிற்று.

35.பல்காற்சொல்லியுந்தெற்றெனப்பயன்கொள
நல்காவாக்கதுநாறாமலரே.
(எ-ன்) நாறாச்செம்மல ரொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) ஒருசெய்யுளுக்குப்பொருள் பலகாற்கூறியுங் கேட்போ ருள்ளத்துத் துணிவுறச் செலச்சொல்லாவாக்கிற்குப்
பருவத்து மலர்ந்தும் பரிமளமெய்தாத மல ருவமையாமென்றவாறு. பருவத்தின் மலர்ந்து பரிமளமெய்தாத மலர் – முருக்கமலர்.

36.உகுமெனிற்கோடலல்லது வந்துகொள்
பகுதியின்றாகும்பாம்பின்வாய்மணியே.
(எ-ன்) பாம்பின்வாய்மணி யொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) பாம்பின்வாய்மணி பாம்பு தானேயுகுக்குமெனிற்கொள்வதல்லது இப்பொழுது வேண்டுமென விரும்பினோர்
விரும்பினபடியே யக்காலத்திற் கொள்ளும்பகுதி யில்லையாமென்றவாறு.
எனவே, அதுபோலவ் வாசிரியரிடத்திற் கல்வியுமவர்தாமேதரிற் கொள்வதல்லது கற்க விரும்புமாணாக்கர்க்கு விரும்பிய
காலத்து விரும்பினபடியே கொள்ளும் பகுதியின்றென்ப துய்த்துணரநின்றவாறு காண்க.

37.பொருளளவையில்வரும்பொதுமகணலனே.
(எ-ன்) பொதுமகளிடத்துநல மொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) பொருட்பரத்தையரிடத் துண்டானநலன் புமான்கள் கொடுத்த பொருளின தளவெவ்வள வவ்வளவைக்கொப்ப
வெய்து மென்றவாறு. எனவே, அவ்வின்பம்போல வவ்வாசிரியனிடத்துண்டான கல்வியு மாணாக்கர்கொடுத்த
பொருளளவைக்கொப்பக் கொள்ளப்படுமென வுய்த்துணரநின்றவாறு காண்க.

38–அறத்தமர்பசித்துழந்தலமரவுலகிற்
பிறர்க்குணவெதிர்செலும்பேதைகைப்பொருளே.
(எ-ன்) சிறியவன்பாற் செறிதருபொரு ளொப்பென்பதற்கேதுவுணர்ற்று.

(இ-ள்) பேதையரிடத்துண்டான பெரும்பொருளின்ப துன்பத்திற்குரியரா யுதவுந் தமராயுள்ளார் மிகவும்
பசித்துத் துன்பமுற்று மறுக்கமெய்தவும் அவர்க்குதவாது துன்பமுறுகாலத்துச் சிறிது முதவுதலில்லாத
வேதிலாருண்ணும்படிக் கவர்பசிக் கவர்கேட்குமுன்னெதிர் கொள்ளுமென்றவாறு.
எனவே, அப்பொருள்போல வவ்வாசிரியரிடத்துக் கல்வியுந் தம்மை வழிபடு மாணாக்கர்க்கெய்தாது
வழி படாமாணாக்கர்க் கெய்துவதொன்றாமென வுய்த்துணரநின்றவாறு
காண்க. இவை மூன்று சூத்திரமுங் குறிப்புவமை. இவர் கற்கப்படாதோர்.

39.புரத்தலினியல்பேபுகலுங்காலை
யதற்கமையாண்டின்மாணாக்கனையெதிருபு
கடவுளைவாழ்த்திக்காலமுமிடனுந்
திடனுறக்குறித்துமங்கலத் திசைநோக்கி
யிருந்துனக்கிவையியல்பென்னவுள்ளுறுத்தித்
திருந்தியசிந்தையிற்செம்முகமலர்ந்து
நுவலத்தகுநூனுதலியதிறத்தினைத்
தவலருஞ்சிறப்பிற்றான்முதற்கொளுத்திப்
பொழிப்பாதியவாய்ப்புகன்றவாய்மையின்
விடத்தகுவெகுளியின்விரைவிலனாகி
நாளுநாளுநவிறொறுநவிறொறு
மஞ்சிறைப்பறவையினணைந்துறத்தழுவியும்
வெஞ்சிறைப்படுபுனன்மீன்போனோக்கியு
மகன்றனனாமெனினாமைபோன்றுன்னியும்
புனிற்றாவெனவவன்புலந்தனின்முன்னியுங்
கொளத்தகுமுணர்வின்குறியறிந்தனனாத்
தானெனலாக்கியதன்மைகண்டுலகம்
வேட்டைவாளியின்விழுமியனெனமனக்
கோட்டமொன்றின்றிக்கொடுக்குமதென்ப.
(எ-ன்) நூனுவல்வத னியல்புணர்-ற்று.

(இ-ள்) நூனுவல்வத னிலக்கணத்தைக் கூறுமிடத்துக் கல்வி தொடங்க நூலமைத்தவையாண் டேழாண்டென்னும்
பருவத்தினற் காலத்தோடு மதி திதி முதலிய நாற்காலமுங் கழகமுந் திடனாகக் குறித்துக் குணதிசை வடதிசையென்னு
மங்கலத்திசைகளைநோக்கி யிருந்து வழிபடுகடவுளை வாழ்த்தி வித்தைகொள்ளுமிடத்தியல்பு நினக்கிவையென
வவன்கருத்துறப்படுத்தித் தன்னோடொன்றிய சிந்தையொடு முகமலர்ந்து முதலே கூறத்தகு நூல்கருதிய
கூறுபாட்டைக் கெடுதலில்லாத சிறப்புவிதியாற் கருத்துறப்படுத்தி விடத்தகும் வெகுளிபோல விரைவுமிலனாகிக்
கொளத்தகுமுணர்வின் குறியையறிந்து பொழிப்பகல நுட்ப மென்னு முரைநடையா னாளுநாளும்
நவிலுந்தோறு நவிலுந்தோறும் பறவைபோலணைத்துத் தழுவியு மீன்போனோக்கியும் விட்டு நீங்கிய காலத்தும்
ஆமைபோன் றுளத்தானினைந்து மீன்றணிமைப் போதினிலா போலவனிருக்கும் புலத்துச் சென்றுந் தானென்றுஞ்
சொல்லப்படுவதாகிய பெற்றிமையைக் கண்டு பெரியோர் வேட்டைவாளியின் விழுமியனென்று கூறும்படிக்
கழுக்காறின்றிக் கொடுப்பதாமென்றவாறு.
இச்சூத்திரத்திற்கிங்ஙன மாட்டுறுப்பாகப் புணர்த்தலிந் நூலாசிரியர் கருத்தென்றுணர்க.

40.ஆரியன்றிருமகனையுறல்கடிந்த
கூரியமுதன்மைமாணாக்கன்குலமகன்
றன்மகன்மன்மகன்மந்திரத்தலைவ
னன்மகனிருநிதிநனிதமிபுரப்போ
னருத்தியின்வழிபடுபவனுரைநுழைந்துகொள்
கருத்தினனிவர்கள்கற்கப்படுவோர்.
(எ-ன்) இனிக்கொள்வோர் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோரு மென விருவகையர்.
அவருள்ளுங் கற்பிக்கப்படுவோரெண்மர். அவ ரிவரென்பதுணர்-ற்று.

(இ-ள்) எண்மருட் கூரியமுதன்மைமாணாக்கனாவான்- தன்னொடு மொருங்கு கற்ற வொருபுடை
மாணாக்கருட்சேட்டன். இருநிதிநனிதமிபுரப்போன் பிறமாணாக்கர்க்குப் பங்கென்னாது தனியே கொடுப்போன்.

41.பளிங்குடனோதிமம்பரவைகொண்மூவெனத்
தெளிந்தநுண்ணுணர்வுறுந்தெள்ளியோரே.
(எ-ன்) அவர்தன்மையுணர்ற்று.

(இ-ள்) இதற்குரை வேண்டுவதில்லை. இவைநாலு மவர்க் குவமை யாதற் கேது மேற்காட்டுதும்.

42.அழுக்கின்றாதலடுத்தவைதனதாக்
கோடலென்றிரண்டும்பளிங்கின்குணமே.
(எ-ன்) பளிங் கவர்குணத்திற் குவமையாதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) நின்மலமாய் விளங்குதலுடன் அடுத்த பொருள்களின் குணங்களைத் தனதுகுணமாகக் கொண்டிருத்த
லென்னுமிரண்டும் பளிங்கின் குணமா மென்றவாறு.
எனவே, அதுபோலக் களங்கமற்று விளங்கிய நுண்ணுணர்வா லாசிரியன்கொடுத்த பலவேறு வகைப்பட்ட
கல்விகளையெல்லா முணர்விலூட்டிக் கற்ற கல்வியைப் புறத்தே தோற்றுவிப்பனென் றுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க.

43.நீர்தெரித்தமிர்துணுநீர்மையினோதிம
மோரிருபான்மைக்குவமையதாகும்.
(எ-ன்) அன்னம் அவரறிவிற் குவமையாதற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) பாலையும் புனலையுங் கலந்துவைத்தாற் புனலைநீக்கிப் பாலைப் பருகுந்தன்மை
யிரண்டினா லோதிம மவரிடத்துண்டானவோ ரிரண்டு பகுதிக் குவமையாமென்றவாறு.
எனவே, அதுபோல வவரும் பலவேறு வகைப்பட்ட கல்வியுள் அசாரத்தை நீக்கிச் சாரமான கல்வியை
யுட்கொள்வரென் றுவமையுய்த்துணர நின்றவாறு காண்க.

44.பகிரதிமுதலியபன்னதியுட்புக
வுகுதலின்றாய்த்தன்னுட்கொளுமுவாவே.
(எ-ன்) பரவை யுவமையென்பதற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) கடல், கங்கைமுதலாகிய பல நதிகளும் தன்னுட்புகா நிற்பவு மவற்றைப் புறத்தே கக்குதலின்றித்
தன்னகத் தடக்கிக்கொள்ளு மென்றவாறு. எனவே, அக்கடல்போல வவருணர்வும் ஆசிரியன் அறிவிக்க
வுட்கொண்ட வெல்லாக்கல்வியையும் புறத்தே தப்பவிடா துட்கொள்ளுமென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.

45.படிந்துவாறுத்துணப்படுபுனல்யாண்டும்
படர்ந்து பஃறுளியிற்பயன்றருமுகிலே.
(எ-ன்) கொண்மூ வுவமையென்பதற் கேது வுணர்-ற்று.

(இ-ள்) மேகஞ் சமுத்திரத்திற்படிந்து உவரறுத்துண்டு விளைவெய்திய புனலை யுலகமெங்கு
மாங்காங்குச் சென்று பலதுளியாகப் பெய் துலகத்திற்குப் பயனாமென்றவாறு. உலகம் சொல்லெச்சம்,
எனவே, அதுபோல அவர் தம்மாசிரியனிடத்து அதிகரிக்கப்பட்ட வவற்றுள் அசாரநீக்கிச் சாரமுட்கொண்டு
பரிபாலிக்கப்பட்ட தம்மிடத்துக் கல்வியையு முலகின்கண் வரைதலின்றி யாவர்மாட்டுங்கொடுப்பரென
வுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க. இவை நான்கிற்குங் குறிப்புவமை முன்புபோலக் கொள்க.

இனிக் கற்பிக்கப்படாதோ ரொருபன்மூவர். அவர்தாம்,

46.காமுகன்களியன்கடுஞ்சொலன்சினத்தன்
மடியன்றடுமாறுளத்தன்மறவியன்
றுயில்வோன்பிணக்கன்சோரன்பொய்யன்
மானவன்பிணியின்மரீஇயவனிவர்க்குநற்
றானமதாயினுஞ்சாற்றார்நூலே.
(எ-ன்) கற்பிக்கப்படாதோர்க்கு வரையறை கூறுதனுதலிற்று.

(இ-ள்) காமுகன் முதலாகப் பிணியின்மரீ இயவ னீறாகப் பதின்மூன்று பெயர்க்குங் கல்வியீத னற்றானமென்று
நூல்கள் கூறிற்றாயினுஞ் சான்றோர் பெருநூ லுணர்த்தாரென்றவாறு.
பெருநூலென்ப தாட்சி பற்றிய சொல்லெச்சம். இவர் தன்மையாவன :-

47.ஆடுபந்துறுசுவரளந்தறிமுகவை
கோடின்றாங்குளனெனுங்குறியோரே.
(எ-ன்) கற்பிக்கப்படாதோர்க் குவமை யுணர்ற்று.

(இ-ள்) ஆடும் பந்து றுசுவரு மொருபதார்த்தத்தை யளந்தறி முகவையுங் கரையில்லாத
வேரியு முவமையா மிலக்கணத்தை யுடையரா மென்றவாறு. இவைநான்கு முவமையாதற் கேது மேற்காட்டுதும்.

48.ஓரிடத்துறுகுளகமைத்தறவுண்ணா
தவணவணிறைவற்றலமருமாடே.
(எ-ன்) ஆடுவமையாதற் கேது வுணர்ற்று.

(இ-ள்) ஆடு நுகரிடத்து மிகுதியாகவுண்டான குழையை நிறைய வுண்ணாது சிறிதருந்தியதனாற்
பசியடங்கா தாங்காங்குத் தெருமந்து திரியுமென்றவாறு.
எனவே, அதுபோல வவரு மொருசா ராசாரிய னிடத்துக் கற்கத்துடங்கிய முக்கியமான வொருநூலையாயினு
மவனிடத்துத் தெற்றென முற்றக்கல்லாது பல நூல்களையும் பலரிடத்துங் கற்கத்தொடங்கிச் சிறிதுசிறிது
கற்றுக் கல்விமுற்றா துழல்வரென்றுவமையுய்த்துணரநின்றவாறு காண்க.

49.எற்றியபந்தினையெதிர்செலவிடுத்தொரு
பற்றறநிற்பதுசுவரின்பண்பே.
(எ-ன்) பந்துறுசுவ ரொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) ஒருவர் கையாலெற்றியபந்தினைத் தன்மெய்யிற்பரிசித்ததனை யெற்றியவரெதிர் செலவிடுத்துத்
தானப்பந்தோடு பரிசித்திருக்கும் பற்றின்றி நிற்பது சுவரின் குணமாமென்றவாறு.
எனவே, அதுபோ லவரு மாசாரியன் றமது மனத்திலே பற்றவுரைக்கப்பட்ட கல்வியையு மனப்பற்றின்றி
வறியமனதாயிருப்பரென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.

50.அளந்தகத்தடக்கியபொருள்களையாங்கவண்
முற்றப்புறத்துகன்முகவையின்குணமே.
(எ-ன்) முகவை யொப்பென்பதற் கேது வுணர்-ற்று.

(இ-ள்) அளந்தறிவதாகிய பதார்த்தங்களை யொருவர்பெய்யத் தன்னகத் தடங்கியபொருள்களை
முழுதும் புறத்தே யுகுவது முகவையின்குணமா மென்றவாறு. முகவை நாழிமுதலியனவாம்.
முற்றவும், புறத்துகலும் என்பனவாய்த் தொக்கவும்மை யெச்சவும்மை யாதலாற்
சில பொருள்களா யகத்தடக்கப்பட்டவற்று ளுகுங்காற்சிறி துள்ளே பற்றுவனவு முளவென்றாயிற்று.
அவை எள் பயறு உழுந்து நெல் அரிசி முதலியனவன்றிப் பால் தயிர் நெய் முதலியவாம்.
எனவே, அவரிடத்துஞ் சிறி தாசாரியனுரைத்தவற்றுட் பற்றுவ துளதென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.

51.பயஞ்சிறிதடக்கலிற்பயனிரம்பாதாங்
கொழும்புனல்புகுந்தகோடின்றாங்குளனே.
(எ-ன்) கோடின்றாங்குள னுவமையாதற் கேது வுணர்ற்று.

(இ-ள்) கோடின்றாங்குள மாரியாற்பெய்யப்பட்டுப் புகுந்தபுனலைப் புறம்போகவிட்டுச் சிறிது
புனலடக்குவதா லுண்பார்க்கும் போகங் கொள்வார்க்கும் பயனிரம்பாவாமென்றவாறு.
எனவே, அதுபோ லவருந் தம்மிடத் தாசாரிய னளிக்கப்பட்ட கல்வியை முற்றப்பற்றா துணர்வு சிறிதாகலின்,
புறம்போகவிட்டுக் கல்வியிற்சிறியரெனப்பட்டாராய்த் தமக்கும் பிறர்க்கு மினிமைப்பயனிரம்பாத
புன்புலவராவரென் றுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க.
இவை நான்கு சூத்திரத்தானு முன்பு போலக் குறிப்புவமை கொள்க.
இவ்விருவர்க்கும் “அன்னங்கிளியே நன்னிறநெய்யரி, யானையானே றென்றிவைபோலக், கூறிக்கொள்பகுணனுடையோரே” எனவும்,
“அன்னமாவே மண்ணொடுகிளியே, யில்லிக்குடமாடெருமைநெய்யரி, யன்னர்தலையிடை கடைமாணாக்கர்” எனவும்
முன்னோர் கூறிய சூத்திரங்களானு முவமை யுய்த்துணர்ந்து கொள்க.

52.குரங்கெறிவிளங்காய்கொள்பவர்போல்வார்
பழம்பகைமறைத்துப்பணிபவராகிக்
கூடாவொழுக்கிற்கொள்பவர்கல்விச்
சால்பிலராகித்தலைமைவந்தடுத்தோர்
கரந்தங்கொருவரைக்கற்கவிட்டுணர்வான்
வருபவர்தமக்கும்வழங்கார்நூலே.
(எ-ன்) இதுவுங் கற்பிக்கப்படாதோருட் கூறாதொழிந்தோரை யுணர்ற்று.

(இ-ள்) கொள்வதற்கரிய விளங்கனியை யுண்ணவிரும்பி, அவ்விளவி லிருக்குங் குரங்கைக் கற்கொண்டெறிந்து
அக்குரங்கெறியும் விளங்கனியைக் கொள்பவரைப்போல வுபாயத்தாற் கல்விகோடற்கு வருவார்க்கும்,
பழம்பகையைத் தோன்றாதுமறைத்ததற்குக் கூடாவொழுக்கத்தினோடும் புறத்துற்ற நட்பினராகியும் நிலத்தில் வீழ்ந்து
பணிதன் முதலியன செய்து முபாயமாகக் கல்விகோடற்கு வருவார்க்கும், கல்வியாற் பூரணமிலராயும்
அறிவிலாதாராற் சிறப்பெய்தினோர் பிற சான்றோருழை யுடையார்முன் னில்லார்போலேக் கற்றும்
வெளிப்பட வந்துநின்று கல்லாது மாண்பிறந்தமானத்தாற் பிறரை யவரிடத்துக் கரந்துவிட்டவரேவலால்
வருவார்க்கும் சான்றோர் நூற்பொருள் வழங்காரென்றவாறு. வழங்குதல் வித்தைகொடுத்தல்.
நூல்-ஆகுபெயர். அவை இலக்கண விலக்கியம்

இனிக் களங்கடியப்படுவார் பலர். அவ ரிவரெனல்,

53.ஆசாரமில்லாரழுக்காறுள்ளார்நகுவார்
கூசாதுமற்றொன்றுகூறுவார்–தேசிகன்சொற்
கற்றொன்றுறாதார்கழகத்துறிலிருந்தா
ரெற்றென்றுரையாதிரார்.
என்பதனா லுணர்க. எற்றென்பது கையாற்புடைத்தலுங் காலாலுதைத்தலுமாம்.

இனிக் கோடன்மரபு வருமாறு :-

54.கொள்வோன்கொள்கடன்கூறுங்காலைக்
கடையாமத்திடையெழுந்துளகடன்கழித்
தாரியன்மாளிகைவாயில்சென்றெய்திக்
காலமுமிடனுங்கருதுபுநின்றாங்
கெவணெவணோக்கினனவணுளனாகி
வணக்கமுமொடுக்கமும்வாய்ந்தயனிற்ப
வருகவென்றழைத்தலுமருகுசென்றிறைஞ்சலு
மருத்தியினிருத்தியென்றறைதலுமிருந்தாங்
குரையெனவுரைத்துரைத்துரனுறத்தோய்தரப்
பொழிப்பேயகலநுட்பமெச்சமெனப்
பழிப்பின்றாமுரைபகர்தலுந்தெற்றென
வுணர்ந்தபின்பொழிகெனவொழிதலுமவன்றிறத்
தோவாதுதவுவதொல்லும்வகையா
னேவாதியற்றியவின்பமெய்தியபின்
பகலினுமிரவினும்பயின்றுபின்முன்ன
ரகலானாகியவன்பினனாதலுந்
துயில்வுழித்தைவருந்துணைத்தாளினைத்துறந்
தொல்லையிற்றுயின்றேழுந்தொழுகுதலன்றே.

இவற்றானுணர்க.
இதற்குரை வேண்டுவதில்லை.
“எத்திறனாசானுவக்கு மத்திற, மறத்திற்றிரியாப்படர்ச்சிவழிபாடே” என்பதுங்கூட்டி யுணர்க.

55.கேட்டவைகேட்டவைநிரந்தரம்பாடம்
போற்றலினேட்டிற்றானேபொறித்தலு
முரைநுழைந்துணர்ந்தவொண்பொருளையுள்ளுறுத்தலு
மயலற்றொருபுடைபயின்மாணாக்கரி
னையமெய்தியதையமகற்றலு
மெய்யுணர்வினிலுறப்பிறர்க்கவைவிளம்பலு
மெய்தியதிழவாததற்கிலக்கணமே.
(எ-ன்) கற்றகல்வி யிழவாததற் குபாயமுணர்ற்று.

இதன்பொருள் வெளிப்படை. இதனுள் உரைநுழைதலென்பது உரைமுகத்து நுண்ணிதா யாசிரியன்
காட்டக்கண்ட அரும்பதங்களை மனத்தான் மறவாது தரித்தல். இவ்வாறுகோடலால் மாணாக்கன் முற்ற வுணர்ந்தானாமாறு.
“ஆசானுரைத்ததமைவரக்கொளினுங் காற்கூறல்லது பற்றிலனாகும்,”
“அவ்வினையாளரொடுபயில்வகையொருகால்-செவ்விதினுரைப்பவவ்விருகாலு-மையறுபுலமை மாண்புநனி யுடைத்தே”
என்னுஞ் சூத்திரங்களானு முணர்க.

56.தோய்ந்தவையன்றியுந்தோயாதவற்றை
யாய்ந்தெழுகாலத்ததன்பயனெனலாய்
விழுமியதிறத்தினுள்விழுமியதொன்றாஞ்
சொல்லொடுசொல்லினைத்தொடுத்தலுந்தொலையாக்
கல்வியிற்பயிறலுங்கடனாகும்மே.

(எ-ன்) முன்னர் நூனுவல்வோனாகிய வாசிரியன் வாடாக்கற்பக மணமலிபொற்பூப்போல
வாய்ந்தமைவுடைய கல்வியுங் கவியுமுடைய னாதல்வேண்டுமென்றா ரவ்வாரியன்போல
மாணாக்கனுங் கல்வியுங் கவியுமுடையனாதற் குபாய முணர்-ற்று.

(இ-ள்) கற்றநூலன்றிக் கல்லாதவற்றையு மாராயுங்காலத்துக் கல்வியாலாய விழுமிய கூறுபாட்டையுடைய
கலை பலவற்றுள்ளும் விழுமிய பயனென் றுலகங்கூறப்படுவதாஞ் சத்தங்களைத்தொடுத்துச்
சாதிப்பதூஉம் தொலையாக் கல்வியுடன் சாதித்துவருவதூஉ முறையா மென்றவாறு.

57.பாவினையொலிபெறப்படனஞ்செய்திடு
நாவினனாகிநாற்கவிப்புலவோர்
புதுமொழிபுணர்ப்புழிப்பொறிப்பவனாகியு
மனப்படுமொருபொருண்மதித்தவரொருமொழி
யெடுத்ததற்கியைபுறவெதிரெதிர்பன்மொழி
தொடுப்பதும்பெயர்வினைகோப்புணப்பிறிதடி
தொடுப்பதுந்தொடைபலதொடர்ந்தொருபாவாய்
முடிப்பதுங்குறிக்கொளன்முதற்காரணமே.
(எ-ன்) சத்தஞ்சாதித்தற்கு முதற்காரண முணர்ற்று.

(இ-ள்) புலவர்பலரும் பாடிய பாப் பாவினங்களை யவ்வவபாவிற் கமைத்த வொலிமுறையே
படனஞ்செய்திடும் வாக்கினனாகியும், அந் நாற்கவிப்புலவர் புதுமொழிபுணர்ப்புழி யவர்க்குப் பட்டோலை
பொறிப்பவனாகியும், ஒருபொருளைக் குறித்தவர் முதலேயோர் சொல்லையடுத்தலு மதன்மேற் பன்மொழி
யவ்வடிக்குப் பொருந்தக் கொளுவுதலும், அதன் மேற் பலவடியையுந் தொடுத்தலும்,
அடிதொடர்ந்தா லொருதொடையினாதல் பலதொடையினாதல் ஒருபாவாக்கிப் பெயராதல் வினைபாதல்
கோப்புண முற்றமுடிப்பது முதலாயினவற்றை மனத்துட் குறிக்கொளலுஞ் சத்தந்தொடுத்தற்கு
முதற்காரணமா மென்றவாறு. ஒழிந்த வகலமுரையிற்கொள்க.

58.சொற்பொருளணிநலன்றோயாதாயினு
மடியாதெடுத்தடிமடக்குதலின்றா
யாப்பினதுறுப்பிழுக்காதிறுதியில்வினை
கோப்புணமுடித்தலதன்முதற்குறியே.
(எ-ன்) இதுவும் அச்சத்தஞ்சாதித்தற்கு முதற்குறி யுணர்ற்று.

குறியாவ திலக்கணம். உறுப்பு – எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை யென்னு மாறுறுப்பும்.
நலனென்பது கேட்டோர்க்கின்பங் கொடுத்தல். தோயாதது – கூடாதது. ஒழிந்த அகல முரையிற்கொள்க.

59.அருமணிநிரல்வைத்தன்னசொன்னல
னொளியதனுட்சிறந்தன்னபொருணல
னழகதற்காங்கமைந்தன்னவணிநல
னுரனுடைப்பழம்பாட்டுணர்வுழியுணர்ந்தோர்
வரனுடைப்பாட்டுணர்வாய்மையின்வருமே.
(எ-ன்) அங்ஙன முன்னர்க்கூறிய முதற்குறிப்பும் குறிக்கொள்பவன் கூறுஞ் சத்தங்களினிடத்துச்
சொன்னலனும் பொருணலனு மவ் விரண்டினாலுமான வணிநலனு மெய்துதற் குபாய முணர்-ற்று.

உரனுடைப்பழம்பாட்டென்பன சங்கச்செய்யுள். ஒழிந்த அகல முரையிற்கொள்க.

பொதுப்பாயிர முற்றும்

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -61-70–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 21, 2022

அவதாரிகை

இப்படி இவளுடைய பிராப்தி த்வரையைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
உபய விபூதிக்கும் நாயகனான மேன்மையை யுடைய ஸர்வேஸ்வரன்
ஆஸ்ரித ஸூலபனாகைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த பிரகாரம்
வாஸா மகோசரம் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான்) அன்றோ என்று
அவனுடைய ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை

வரைந்து தோளிலிலே விரைந்த தலைமகனைக் குறித்து
அவன் பெரியவனே யாகிலும் நமக்கு எளியனாய் வரும் காண் என்று
தோழி நாயகனுடைய சீலம் புகழ்ந்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

பாசுரம் -61-வாசகம் செய்வது நம் பரமே –
தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –
பிறந்தவாறும் -5-10-

பதவுரை

தொல்லை வானவர் தம் நாயகன்–பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈஸ்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும்
(தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும்–உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை–ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன்–(தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம்மிறையே–நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று–இடையர் குலத்தை யுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்து வளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது–எடுத்துப் புகழ்ந்து கூறுவது
நம் பரமே–நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)

வியாக்யானம்

வாசகம் செய்வது நம் பரமே
அவன் மேன்மைக்கு வேதங்களும் அகப்படப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமல் மீளா நிற்க
அவன் நீர்மைக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகை நம் தலையிலே கிடப்பது ஒன்றோ

தொல்லை வானவர் தம் நாயகன்
நீர்மைக்கு ஊற்றான மேன்மையைச் சொல்லுகிறது
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம் -என்று
பழையவரான நித்ய ஸூரிகளுக்கு அசாதாரண சேஷி யானவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லிற்று

மேல் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது

நாயகர் எல்லாம் தொழுமவன்
ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே
இந்த்ராதிகளான லோக பாலாதிகளோடே வாசியற
ஸ்வ அதிபத்ய ஸித்யர்த்தமாகத் தொழப்படுமவன்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
ரக்ஷணீயமான விபூதி எல்லாவற்றையும்
குழற் குத்தும் சோராத படி

இரண்டே யடியால் தாயவன்
அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இரண்டும்
இரண்டு திருவடிகளாலும் போம்படி அளந்து கொண்டவன்

இப்படி
1-ஸூரி போக்யனுமாய்
2-ப்ரஹ்ம ருத்ராதி ஸேவ்யனுமாய்
3-நிருபாதிக பந்துவுமானவன்
4-ஆஸ்ரிதற்கு பவ்யனாகைக்காக

ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று
இடைக் குலத்தை யுடையனாய்க் கொண்டு
ஆவிர் பவித்தது

நம்மிறையே
நமக்கு ஸ்வாமி யானவன்

நம் இறை வந்து தோன்றிற்று
வாசகம் செய்வது நம் பரமே
என்று அந்வயம்

இத்தால்
பிராப்தி த்வரையாலே கலங்கின இவரை
ஸூஹ்ருத்துக்கள்
ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி
ஆஸ்வஸிப்பித்த தாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பெருமாள் மலையோ திருவேங்கடம் -என்று
இவள் சொன்ன பாசுரமாகத் திருத்தாயார்
அநு பாஷித்த இத்தைக் கொண்டு
பிராட்டியான தசை போய் தாமான நிலையானாம் படி தரித்தார்
இவர் தம்மைத் தாம் உணர்ந்தால்
பின்னை இவர் இழியும் துறை ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் இறே
அங்கு புக்கு
எத்திறம் -என்கிறார்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
எத்திறம் -திருவாய் -1-3-1- என்று
மோஹித்திக் கிடக்குமத்தனை போக்கி
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது

என் தான்
பாசுரம் இட்டுச் சொல்லப் போகாமை என் என்ன

தொல்லை வானவர்
நித்ய ஸூரிகள் உண்டு
யத்ர ர்ஷய பிரதமஜா யே புராணா -(அச்சித்ரம் -92-)என்கிறவர்கள்

தம் நாயகன்
அவர்களுக்கு நிர்வாஹகனானவன்

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் சேருவது நம் பரமே -என்கிறார்

வேதங்களோடு
வைதிக புருஷர்களோடு
வாசியில்லை யாயிற்று பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமைக்கு
வேதங்களும் ஆனந்தாதி குணங்களைப் பேசப்புக்க மாத்திரத்திலே இறே
ய தோ வாஸோ நிவர்த்தந்தே -(தைத்ரியம் ஆனந்த வல்லி )என்றது

தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -(புருஷ ஸூக்தம் )

அகர்ம வஸ்யனானவன்
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க வந்து பிறந்த நீர்மையை
தீமதாம் அக்ரேசரராய் இருக்குமவர்கள்
அது தன்னிலும் இழியப் போகாமையாலே
அத்தைச் சுற்றும் வந்து ஆழங்கால் படுகிறார்கள்

ஸர்வஞ்ஞனான தான் சொல்லும் போதும்
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9-

அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்
உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-

அபுத்தய: மம அநுத்தமம்-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,
அவ்யயம் பரம் பாவம்-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,
அஜாநந்த:-அறிந்து கொள்ளாமல்,
அவ்யக்தம் மாம்-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,
வ்யக்திம் ஆபந்நம்-கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக),
மந்யந்தே-கருதுகின்றனர்.

என்றும் சொல்லும் அத்தனை

இவருக்குத் தான் எத்திறம் என்று மோஹித்துக் கிடக்கை ப்ரக்ருதி இறே

தொல்லை வானவர் தம் நாயகன்
நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு வானவன்

நாயகர் எல்லாம் தொழுமவன்
இவ்வருகு ஆக்கரான நாயக்கர் உண்டு -ப்ரஹ்மாதிகள்
சதுர்தச புவனங்களுக்கும் கடவோம் என்கிற அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள்
பிறவாதாய் இருக்கிறவர்கள் இறே
பிறக்கிறவனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்
மனுஷ்யர் கண்ணுக்கும் கூடத் தோற்றாதவர்கள்
ராவண வத அநந்தரத்திலே வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் இறே

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
பூமிப் பரப்பு அடங்க ஒரு கோல் குத்து நிலம் விடேன் என்று அபிமானித்தால் போலே யாயிற்று
இவனும் இந்திரனுக்காக மஹா பலிக்கு ஒரு கோல் குத்தும் விட்டேன் என்றபடி

இரண்டே யடியால் தாயவன்
மூன்று அடியை இரந்து
இரண்டு அடிக்காக்கி
ஓரடிக்காக அவனைச் சிறை யிடுகைக்காக
இரண்டு அடியாலே யாயிற்று அளந்து கொண்டது

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
இப்படிப் பூமிப் பரப்பு அடங்கலும் தன் காலின் கீழே இட்டுக் கொண்டவன்
காலின் கீழே துகையுண்ட பதார்த்தத்துக்குத் தான் புத்ரனாய் வந்தவன்
இது நம்மாலே பாசுரம் இட்டுச் சொல்லலாவது ஓன்று அன்று இறே

ஆய்க்குலமாய்
ஸம்ஸாரிகளிலே ஒருவன் அல்ப விவேகம் யுண்டானால்
பால்யேந திஷ்டா ஸேத் -(ப்ருஹதாரண்யம் -5-4-) என்று
அபிஜன வித்யா விருத்தங்களால் வந்த அபிமானத்தைப் பொகடா நின்றான் இறே
அல்பம் விவேகியாய் இருக்கிறவன் உட்பட பொகடா நிற்க
ஸர்வஞ்ஞனான தான் அபஹத பாப்மத்வாதிகளைக் காற் கடை கொண்டு
இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று அறியாதானாய் வந்து பிறந்தான்

ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-என்றபடியே
தன்னைப் பற்றினாரும்
பழையாரும்
பிறவாதாருமாம் படி இருக்கிறவன்
வந்து பிறக்குமதுக்குப் பாசுரம் இடப்போமோ

வந்து தோன்றிற்று நம்மிறையே
ஆவிறர் பூதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-2-2-என்னக் கடவது இறே

இரண்டே அடியால் தாயவனான நம்மிறை
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியாகத் தன் தாய்க்குச் சொன்ன தோழிமார்களை
ஒன்றும் அறியாச் சிறுமியனாய் நம்மிறை வெறும் பரனேயோ
வெறும் ஸூலபனேயோ
அதுகள் தான் அவனுக்கு எவ்வளவு என்று கேட்டவனான தனக்கு
நம்மிறையோடீ
அவர் வாக் கோசரத்துபய ஸ்வ பார்
அதுகள் எங்களால் தான் அளவிட்டுப் பேசத் தகுமோ – என்று
அவர்களாய்த் தாம் அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
வாய் அவனை விட்டுச் சொல்லுவது நம்மால் தகுமோ
அவன் பர ஸானத்தைக் கேளாய்

தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன்
யத்ர பூர்வே -என்னப்பட்ட விண்ணவர்க்கு எல்லாம்
நித்ய நிர்வாஹக சேஷி யானவன்
சில ஒவ்பாதிக சேஷியான விதி சிவ இந்த்ராதிகளால் தொழப்படுமவன்

இப்படிப்
பரனே
ஸூஸீலனுமானவனே -என்கிறார்கள்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன்
பூ லோக
உபரித லோகங்களில்
ஒரு கோல் குத்து நிலமும் விடாதபடி
க்ருத்ஸ்நத்தையும் இரண்டு அடியாள் அளந்து கொண்டவன்

இப்படியான நம்மிறையே

அவனே
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று –
இடைக்குலத்திலும் ஆவிர் பவித்தான்

இவனுடைய
1- பரத்வ
2-ஸுசீல்ய
3-ஸுலப்யங்கள்
வாசா -இவ்வளவு என்று நம்மால் சொல்லப் போமோ

———————

அவதாரிகை

இப்படி ஆஸ்ரித ஸூலபனாய் வந்து அவதரித்தது
தமக்குச் சடக்கென லபிக்கைக்கு உறுப்பாகக் காணாமையாலே
(கீழே நமக்கு இறை என்றாரே ஸ்வாமித்வம் தானே
ஆய்க் குலத்துக்குத் தான் எளியவன் )
ஆர்த்தரான இவருக்கு
ஸம்ஸார சாகர கோலாஹல தர்சனத்தால் பிறந்த ஸைதில்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து யுரைத்த பாசுரத்தை
கடவோதத்துக்கு ஆற்றாத தலைவி யுடைய தளர்த்தி கண்டா தோழி
புலம்பி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-

பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் –
தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –
தேவிமார் ஆவார் -8-1-

பதவுரை

இரக்கினும்–எவ்வளவு வேண்டிக் கொண்டாலும்
ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது–இவள் ஒரு பெண் மகளென்று கருதியும்
இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல்
கருங் கடல்–கரியகடலானது
அறையோ என நின்று அதிரும்–(இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும்
நிலை நின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது;
ஓ–இஃது ஒரு கொடுமையே
அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது
பள்ளி கொண்ட–சயனித்தருளா நின்ற
முகில் வண்ணனே–காளமேகம் போன்ற வடிவுடையவனே!
ஈங்கு–இவ்விடத்தில்
இவள்தன்–இவருளுடைய
நிறையோ–நிறைக் குணமோவென்னில்,
இனி–இனிமேல்
உன் திருஅருளால்–உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்)
அன்றி–பாதுகாத்து வைக்க முடியாது;காப்பு அரிது–
முறையோ–(இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ?

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
சக்ரவர்த்தி பரசுராமனை இரந்து
பிள்ளைகள் பால்யத்தை முன்னிட்டால் போலே
நான் ப்ரார்த்தனா ரூபமான பிரபதனத்தைப் பண்ணிலும்
அவள் ஒரு பெண் அன்றோ
இன்று பல ஹானியை முன்னிடிலும் இவ்விடத்தில் இறையும் இரக்கம் இன்றியே இருந்தது
ஓ ஒரு கொடுமையே

இரக்கம் இல்லாமை கண்டபடி என் என்னில்

அறையோ என நின்றதிரும்
இவள் எதிராக அறை கூவுகிறதோ -என்னலாம் படி
நிலை நின்று கோஷியா நிற்கும்

கருங்கடல்
இவள் அளவில் கடலுக்கு யுண்டான நெஞ்சில்
கருகுதல் வடிவிலும் தோன்றா நின்றது

ஈங்கிவள் தன் நிறையோ
இவ்விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய
ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது

வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
பிரபல விரோதி யுண்டாய்
ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு
ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி
ரஷிக்கை சக்யம் அன்று

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே முறையோ
நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க
இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ

முறையோ என்று
க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி

1-ஸ்ரம ஹரமாய்
2-தர்ச நீயமாய்
3-உதாரமான வடிவை யுடைய நீ
இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று
தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு
விளித்து யுரைத்தாள் யாயிற்று

இது செவிலி இரங்கல் யாகவுமாம் –
(தமிழர் அகத்துறைப்படி தோழி பாசுரம் கொள்ளத் தகும் என்பர் )

இத்தால்
அநந்த க்லேச பாஜனமாய்
கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய
கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால்
இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து
ஆழ்வாருடைய ஸ்வரூபம்
ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால்
ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத்
தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கீழ் ஸ்ரீ கிருஷ்ண அவதார ஸுலப்யத்தை அனுசந்தித்து
அவதார சமகாலத்திலே தாமாகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே
கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தரானார்
அந்த பிரிந்த ஆற்றாமைக்கு மேலே கடலோசையும் வந்து பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள்
என்று திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும்
சரணம் புகுகை தான் மிகை என்னும்படிக்கு ஈடாய் இருக்கிறவளுடைய
தசையைக் காட்டாச் செய்தேயும்
புறம்பு ஒரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் என்னச் செய்தேயும்
ஏக தேசமும் இரங்குகிறது இல்லை
பாதகர்க்கு இத்தலையிலே அருமை காற்றுமது அன்று இறே

அறையோ என நின்றதிரும்
இங்கனே வெளியில் புறப்படாயோ என்று
அறையோ என்று அலற கூவுகிறால் போலே இரா நின்றது –

கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை

வியாக்யானம்
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது அறையோ என
நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே
அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும்
ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்
இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது
இவ்வவஸ்தையில் இவள் நிறை
அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே
இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு
உன்னருளால் அன்றி இல்லையே
அத்தால் அவ்வவஸ்தை யானானாள்

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

——————-

அவதாரிகை

இப்படித் தாங்களும் ஆர்த்தராய்க் கூப்பிடும்படி இவருக்கு
ஆர்த்தியை ஈஸ்வரன் ஜநிப்பித்து
கடுக முகம் காட்டாமையாலே
ஈஸ்வரன் பக்கலிலே க்ரூர்ய சங்கையைப் பண்ணின
ஸூஹ்ருத்துக்களைக் குறித்து

அவனுடைய பூர்ண கடாக்ஷம் நடத்தாத தம்முடைய திரு உள்ளத்தில் ப்ரதிஷ்டிதமாம் படி
ப்ரகாசிப்பித்த பிரகாரத்தை அவர்களுக்கு அறிவித்து
சமாதானம் பண்ணின பாசுரத்தை

தலைவன் கொடுமையைச் சொல்லி இயல்பு அழித்த தோழிக்கு
இயற்பட மொழிந்த தலைவி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே — 63-

பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் –
தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –
இவையும் அவையும் -1-9-

பதவுரை

வண்ணம் சிவந்துள–திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் விழிய–பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையை யுடைவையும்
தண் மெல் கமலம் தடம் போல் பொலிந்தன–குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம் போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம்–இத்திருக்கண்களோ
கண்ணன்–கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால்–திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும்–திருமுக மண்டலத்திலே
காதல் செய்தேற்கு–வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம்–மனத்திலே
புகுந்து–பிரவேசித்து
இ காலம்–இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற–(விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
தம் பக்கல் இவருக்கு யுண்டான ராகம்
இக் கண்களினுடைய நிறத்தில் சிவப்பிலே காணலாம்

அது சீற்றத்தாலோ என்னில்

வானாடமரும் குளிர் விழிய
நித்ய விபூதியிலே இருந்து
நித்ய அனுபவம் பண்ணி
நிரதிசய ஆனந்தத்தாலே குளிர்ந்த பார்வையை யுடைத்தாய் இரா நின்றன

இவர் திரு உள்ளத்தில் பிரகாசிக்கிற தசையிலும்
குளிர்த்தி மாறாது இருக்கை –

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
இக் கண் அழகுக்கு சீதளமாய் மிருதுவான தாமரைத் தடாகத்தைப் போலி யாக்கினால்
மிகுத்துத் தோன்றா நின்றன –

தாமிவையோ
இவை ஸ்ம்ருதி மாத்ரமும் இன்றியே
உரு வெளிப்பாடாம் படி பிரகாஸியா நின்றன

(ஸ்ம்ருதி -நினைவு மட்டும்
அத்தையும் தாண்டி உருவ வெளிப்பாடு -முழுவதாக அறிவது
அத்தையும் தாண்டி பிரத்யக்ஷம் நேராக் காண்பது )

கண்ணன்
பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்
(சுவையன் திருவின் மணாளன் )

திருமால்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே
சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே
ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு

எண்ணம் புகுந்து
தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே
என் நெஞ்சிலே புகுந்து

அடியேனோடு
தனக்கே சேஷமான என்னோடே கூட
(ஏவகாரம்-அநந்யார்ஹ சேஷத்வம் )

இக்காலம் இருக்கின்றதே
க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன

ஆதலால் அவன் நம்மை அநாதரித்தான் என்று
இயல் பழிக்கப் படாது காண் என்று
தோழிக்கு
இயற் பட மொழிந்ததாயிற்று

இத்தால்
வண்ணம் சிவந்துள என்கையாலே
ஆழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்குப் பிறந்த
ராகம் ஸூசிதமாயிற்று

வானாடு இத்யாதியாலே
அந்த விபூதியில் அனுபவத்தாலே யுண்டான செவ்வியும்
இவர் பக்கல் செறிவாலே உண்டானமை தோற்றிற்று ஆயிற்று

(அந்தா மத்து அன்பு செய்து –என்னாவி சேர் அம்மான்
சேர்ந்த பின்பு தானே அவையும் சித்தி பெற்றது
என் உச்சி உள்ளே நிற்கும் -தேவதேவன் -நின்றபடியாலே தேவ தேவன் ஆனான் )

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

முறையோ என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
திருக்கண்களுக்குச் சிவப்புப் பிறப்பே பிடித்து
ஸ்வ பாவமாய் இருக்கும் இறே
இப்போது வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால்
பூர்வ அவஸ்தையில் வை வர்ண்யம் அத்தலையில் என்னும் இடம் தோற்றுகிறது

ந ஜீவேயம் க்ஷணம் அபி -ஸூந்தர –66010-என்னும்படி இறே
அத்தலையில் ஆற்றாமை
ஆகையால் கண் உறங்காமையாலே வந்த சிவப்பும்
வை வர்ண்யமும் தீர்ந்தது இப்போது என்னும்படி இருக்கை

வானாடமரும் குளிர் விழிய
ஒரு த்ரிபாத் விபூதியாக ஒரு கண்ணில் குமிழில் கீழே யாயிற்று ஜீவித்துக் கிடப்பது
வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாக்ஷத்தை யுடையவன்

அமருகையாவது
இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை
தாரகமும் போஷகமும் போக்யமும் எல்லாம் இவையே என்று இருக்கை

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
குளிர்ந்து
மிருதுவாய் இருபத்தொரு தாமரைப் பொய்கை பரப்பு மாற
அலர்ந்தால் போலே யாயிற்று
திருக்கண்கள் இருப்பது

தாமிவையோ
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -(சாந்தோக்யம் -1-6-7-)என்று
கேட்டார் வாய் கேட்டு இருந்தோம்
அவை தான் இருக்கும் படி இதுவோ

கண்ணன் திருமால்
திருமால் கண்ணன்
ஸ்ரீ யபதி யாகையாலே
ஆஸ்ரிதற்குக் கையாள் யானவன்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
அழகிய திரு முகத்தோடு வந்து
குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு

எண்ணம் புகுந்து
மநோ ரதித்த படியே கை புகுந்தது என்னுதல்
அன்றிக்கே
எண்ணம் புகுந்து என்றாய்
என்னுடைய மநோ ரதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு

அடியேனோடு
ஜிதம் -ஜிந்ததே ஸ்தோத்ரம் என்கிறார்
அஹம் அர்த்தத்தினுடைய ஸ்வரூபம் தான் அடியேன் என்று போலே காணும் இருப்பது
ஜீவா ஸ்வரூப பரமான வாக்கியத்தில் அப்படியே இறே சொல்லுகிறது
அது ஜீவா ஸ்வரூப பரமோ என்னில்
ஓம் இத்யாத் மாநம் யூஞ்ஜீத -தைத்ரியம் -என்றும் யுண்டு
ஓங்காரே பகவான் விஷ்ணு என்றும் சொல்லா நின்றது இறே

இக்காலம்
இப்பேற்றுக்கு வரவாறு முன்நாள் அறிந்திலேன் கிடீர்

இருக்கின்றதே
நச புநரா வர்த்ததே -சாந்தோக்யம் -8-15- என்னும்
பேற்றைப் பெற்றோம் ஆகாதே என்று தோற்றி இரா நின்றது
ஒரு நாளும் இனிப் பிரிகைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றி இரா நின்றது
ப்ரத்யக்ஷ ஸமாநா காரமாகிலும் இவர்க்கு
சமாநாசா காரம் என்று தோற்றாதே
ப்ரத்யக்ஷம் என்றே தோற்றுகிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இது உசிதமோ என்று நொந்து சொன்னால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்
அந்நோக்குக்கு இலக்கான தலைமகள்
ஹ்ருஷ்டையாய்
தன் தாய்க்கும் தோழிக்கும் சொல்லுகிறாளாய்
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
என்னில் அநு ராக உத்தரமான கண்ணில் சிவப்பு இப்போது யுண்டாயிற்று

அதுக்கும் மேலே

வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
இவை திருக்கண் மலர்கள்
வான் நாட்டில் உள்ளாரில் காட்டிலும் என்னிவ் வக்நமாய்
ஸூ சீதளமான பார்வையை யுடைத்தாய் குளிர்த்தியும் மார்த்தவமும் யுள்ள
கமலங்களேயான தடாகத்தைப் போன்றதாய்
அது தான் இவைக்கு சரியோ என்னலாய் இரா நின்றது


இது ஹாவு ஹாவு -தைத்ரியம் என்றபடி

கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே
என்பது இங்கே கூடும்
திருமால் வ்யாமோஹம் செய்யும் கண்ணனுடைய திரு முகத்தோடே
கோள் இழைத்த தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாண் முகமாய்க் கொள்கின்ற –திருவாய் –7-7-8-
ஸகல ஆனந்த ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்தில்
அதீப் தீயா நித்ய உபாயான சீலர்க்கு த்யான ரூடமாய் இருக்குமே அது

அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே
தனக்குப் பூவின் மீசை நங்கை போல் அடிமை செய்ய வேண்டின என்னோடே இப்போது
அநு பாவ்யமாய் இருக்கிறது
ப்ரத்யக்ஷமாய்த் தானே
இங்கும் ஓ என்பது அன்விதம்

—————

அவதாரிகை

இப்படி அனுபாவியனான ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் உம்முடைய திரு உள்ளத்திலே
அபரோக்ஷ சித்தமாம் படி அனுபவித்து
இதுக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுவதும் செய்யா நின்றீர்
இனி வேண்டுவது என் என்ன

விலக்ஷணமான புருஷர்கள் ச க்ரமமாக ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
பூர்ண அனுபவம் பண்ணப் பெறாமையாலே
தரித்து இருக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன்
இத்தனை யன்றோ என்கிறார் –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –

பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை –
தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –
பாமுரு மூவுலகும் -7-6-

பதவுரை

நிலத் தேவர் –பூமி தேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால்–வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை–முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர்–உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது)
திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும்–நாமும்
அவா ஒருக்கா–(எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து–(அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும்
(அப் பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக் கொண்டு
கனி இன்மையின் கருக்காய் கடிப்பவர்கள் போல–பழம் கிடைக்காமையாற் பிஞ்சைத் தின்பவர் போல
திருநாமம் சொல் கற்றனம்–(பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது)
திருநாமங்களாகிய சொற்களைச் சொல்லுதல் செய்கிறோம்.

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர்
வேதங்கள் எல்லாம் தனக்குள்ளே யாகும்படியான மூல மந்திரமான மொழியாலே
(ஓம் என்னும் படி உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் இருக்குமே )
ஆஸ்ரயண பிரகாரத்தில் ஒன்றும் வழுவாதபடி அந்த மந்த்ரார்த்த ப்ரகாசமாய்க் கொண்டு
ஸகல லோகங்களையும் தனக்குள்ளே யாக்கின திருவடிகளை
பூமிக்கு தேவர்களான ப்ராஹ்மண உத்தமர் ஆஸ்ரயித்து அனுபவியா நிற்பர்கள்

யாமுமவா
யாமும் அவா
அந்த அதிகாரம் இல்லாத நாமும் அப்படியோ
அல்ல என்றபடி

ஆனால் உம்முடைய அளவு என் என்னில்
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து
அனுபவ விரோதியான பாபத்தை ஒருங்க விடாமையையும்
பிரதிபந்தகம் யுண்டானால் ஆறி இருக்க ஒண்ணாதபடி சபலமான ஸ்வரூபத்தையும்
பார்த்து ஈடுபட்டு (துன்பப்பட்டு )-

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
பழம் கிடையாமையாலே பசுங்காயைத் தின்பாரைப் போலே

திருநாமம் சொல் கற்றனமே
பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக
அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி

இப்பாட்டு
கலந்து பிரிந்த நாயகி
கலவி கிட்டாமையாலே நாயகனான ஈஸ்வரனுடைய குண நாமங்களைத் தான்
தரித்து இருக்கைக்காக உரைத்தேன் என்று
பாங்கியிடம் உரைத்தலாகவுமாம்

சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே –திரு நெடும் -13-

திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் -14-

என்றதாய்க் கொண்டு
திரு நாமத்தால் நாயகி தரித்த இடங்களும் உண்டு இறே

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இவரைத் திருக்கண்களால் கடாக்ஷித்தான் என்று இறே கீழ் நின்றது
அல்லாதார் மேல் வையாதே நம் மேலே இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணுகைக்கு
நிபந்தம் என் என்று ஆராய்ந்தார்
அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொன்னேன்
அத்தாலே அன்றோ என்கிறார் –

வியாக்யானம்

இருக்கார் மொழியால்
இருக்கில் ஆர்ந்த மொழியாலே
பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே அரை வயிறாகவும் பதராகவும்
பார்க்கலாய் இருக்கும் இடங்கள் உண்டாய் இருக்குமாயிற்று வேதங்களிலே
அவன் விபூதியைப் பரக்கச் சொல்லா நின்றால் –
அதில் ஏகதேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தியைப் பண்ணியும்
ப்ரஸம்ஸா பரம் என்றும் சொல்லா நிற்பர்கள் இறே

அவன் ஸ்வரூப ரூபா குண விபூதிகளைப் பேசுகிற இடத்தில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பாரும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற
அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை யாயிற்று
இதில் ஆர்ந்த மொழியாகச் சொல்லுகிறது

ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி -(யஜுஸ் ஆர ப்ரச்னம் -3)இத்யாதியால்
எல்லா வாக்யங்களுக்கும் அவனே வாஸ்யனாகை இறே யுக்தம்
உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான ஸப்தங்கள்
இவ்வநுவாகத்திலே நின்று அவன் பக்கலிலே ப்ரயோகிக்கையாலே
எல்லாம் அவனையே சொல்லிற்று ஆக வேணும் இறே

நெறி இழுக்காமை
பகவத் ஸமாராதநம் ஆகிற வைதிக மர்யாதையைத் தப்பாமே

உலகளந்த திருத் தாளிணை
இவை அறியவுமாம்
அறியாது ஒழியவுமாம்
என்னுடைமையை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வ பாவனாய் யுள்ளவனை
இவை அறியாதே இருக்கச் செய்தேயும்
தானே எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் இறே

நிலத் தேவர் வணங்குவர்
ஸம்ஸாரத்திலே வர்த்தியா நிற்கச் செய்தேயும்
விண்ணுளாரிலும் சீரியர் –திரு விருத்தம் –79- என்னும்படியே
பூ ஸூரர் ஆனவர்கள் உலகு அளந்த திருத்தாளிணை நெறி இழுக்காமை வணங்குவர்

யாமும்
அவர்களுடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும்

அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே

———————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
கனிந்த பழம் இல்லாத போது
காய்ப்பழத்தைப் புஜிப்பாரைப்
உபாயத்தில் ஸூ விசத ஞானமும் அனுஷ்டான சக்தியும் உண்மைக்கு கனி நிதர்சனமும்
மந்த ஞான சக்திகளுக்குக் கருக்காயும்

திருநாமம் சொல் கற்றனமே
அவன் அறியப் பரி பூர்ண உபாய கர்ப்பமாய் அவன் திரு நாமத்தை உட் கொண்ட சொல்
நமோ நாராயணாய என்பது
அத்தை உச்சரித்தேன்
அத்தால் கடாக்ஷத்தைப் பெற்றேன் என்றதாயிற்று –

—————

அவதாரிகை

இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே
எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்
கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று
பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு

(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்
உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல் )

இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே )
அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை

தலைவி நோக்கின் வாசி கண்டு
தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே –65 –

பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று –
தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –
நோற்ற நோன்பு -5-7-

பதவுரை

கன்று பிணை–இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின்–பரந்த கண்களின்
குலம்–சாதியை
வென்று–ஜயித்து
ஒரே கருமம் உற்று–ஒரு காரியத்திலே பொருந்தி
பயின்று–அக்காரியத்திலே பழகி
செவியோடு உசாவி–(அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,
உற்றும் உறாதும் மிளிர்ந்த–(எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற
கண் ஆய்–கண்களாய் (இவை)
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ்–எல்லா வுலகங்களையும் மிச்சமில்லாதபடி
(பிரளய காலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)
எம்மை உணர்கின்ற–எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று

ஒரோ கரும முற்றுப் பயின்று
தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே
பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்

செவியொடு உசாவி
மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை
ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்
நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த
ஈஸ்வரனுடைய திருவடிகளிலே

உற்றமுறாதும்
உற்றும் உறாதும்
கிட்டினார் கண் போலேயும்
கிட்டாதார் கண் போலேயும்

அதாவது
உகப்பும்
செல்லாமையும்
தோற்றி இருக்கை

நாயகனைக் கண்ட உகப்பும்
இவனை ஒழியச் செல்லாமையும்
தோற்றும்படி
பார்வையிலே அறியலாய் இருக்கை

மிளிர்ந்த கண்ணாய்
உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி
கண் என்று பேராய்

எம்மை உண்கின்றவே
நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள்
கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று

இத்தால்

கற்றுப் பிணை -இத்யாதியாலே
இவ்வாழ்வாருடைய ஞானம்
ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய
ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே
ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும்
ஸ்வரூப விரோதிகளிலும்
புருஷார்த்த விரோதிகளிலும்
சாதனா விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி

செவியொடு உசாவி -என்கையாலே
இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு
நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே
சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )

உலகம் இத்யாதியாலே
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது

மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று

எம்மை யுண்கின்றனவே -என்கையாலே
இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை
வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன்
ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப்
பாங்கனுக்குச் சொல்லுகிறான்

வியாக்யானம் –

கற்றுப் பிணை
கன்றான மான்
முக்தமான மானினுடைய

மலர் கண்ணின்
மலர் போலே இருக்கிற கண் என்னுதல்
விகஸிதமான கண் என்னுதல்

குலம் வென்று
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று

ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி
ஒரோ கார்யத்திலே யுற்று
அதிலே நெருங்கி
அத்தைச் செவியோடே உசாவி
ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே
ஒன்றிலே துணிந்து
அதிலே நெருங்கி
அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே
இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே
கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து
அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது

உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்
மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது
அந்நோக்கிலே பரவசனாய்
இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்

எம்மை உண்கின்றவே
கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது

இத்தால்
ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால்
கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறது

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால்
ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது
பின்னை ஞான கார்யம் அன்றோ
கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில்
அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது
இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே
ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே

செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வண்ணம் சிவத்தில்
அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன்
அவன் நோக்கின் வாசியை
செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த
தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்

ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்
தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய்
ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்

செவியொடு உசாவி
அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும்
அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய

உற்றமுறாதும்
கிட்டின அவளாயும்
கிட்டாத அவளாயும்

மிளிர்ந்த கண்ணாய்
கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்

எம்மை
என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு

உண்கின்றவே
எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –

—————-

அவதாரிகை

இப்படி இவருடைய ஞான வைலக்ஷண்யத்தைக் கண்ட அன்பர்
நம்முடைய அளவிலேயே இவருடைய ஞானம் விஷயீ கரித்தது
விலக்ஷண ஞானரான பரம யோகிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய் யன்றோ இருப்பது என்று
தங்கள் ஸூஹ்ருத்துக்களுக்குச் சொன்ன பாசுரத்தை

தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன்
தன்னுறாவுதல் கண்டு வினாவின பாங்கனைக் குறித்து
உற்றது யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –

பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை –
தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –
ஆராவமுதே -5-8-

பதவுரை

எரி–அக்நியும்
நீர்–ஜலமும்
வளி–வாயுவும்
வான்–ஆகாசமும்
மண்–பூமியும்
ஆகிய–என்னும் பஞ்ச பூதங்களின் வடிவமான
எம்பெருமான் தனது எம்பெருமானுடைய
காவிகள்–செங்கழுநீர்ப் பூக்காளனவை
உண்ணாது–உண்ணாமலும்
உறங்காது–தூங்காமலும்
உணர்வு உறும்–(எப்பொழுதும் த்யாக ரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான்–ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய
கண் ஆய்–கண்களென்று பேராய்
அரு வினையேன் உயிர் ஆயின–தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர் நிலையான
எத்தனை யோகியர்க்கும்–மிக்க யோக நிலையை யுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்
எண் ஆய்–(அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத் தக்கவையாய்
மிளிரும்–பிறழ்ந்து தோன்றுகிற
இயல்வின் ஆம்–தன்மையை யுடையவையாம்.

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அத்யசனமும்
அதி நித்தரையும்
யோக விரோதியாம் என்று துறந்து
யுக்தாஹார விஹாரராய்
யுக்த ஸ்வப்ந அவ போதராய்க் கொண்டு
நிரந்தர த்யான தத் பரரான
ஸநகாதி பரம யோகிகளுக்கும் ஹ்ருதயமாய்க் -(எண்ணாய் )கொண்டு
நிரந்தர அனுபாவ்யமாய்
மிளிர்ந்து தோற்றும் ஸ்வ பாவத்தை யுடையனவாகா நிற்கும்
(ஆழ்வாரது கண்கள் )

எரி நீர் வளி வான் மண்ணாகிய வெம்பெருமான்
பிராணிகளுக்கு சீதோஷ்ண பரிஹார ரூபமாயும் (எரியும் நீரும் )
ஆஸ் வாஸ கரமாயும் (காற்று)
அவகாஸ ப்ரதமாயும்
தாரகமாயும் யுள்ள பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்மாவாய்
அக் கணக்கிலே நமக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய

தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்
அசாதாரணமாய்
அழிவற்ற தேசம் போலே
நித்ய அநுபாவ்யை யானவளுடைய கண் என்ற பேராய்

அருவினையேன் உயிராயின
நிரந்தர அனுபவம் பண்ணப் பெறாமல் பிரிகைக்கு
அடி முடி காண ஒண்ணாத (அநாதியான -அந்தமும் இல்லாத ) பாபத்தை யுடையேனான
எனக்கு முடிய ஒண்ணாத படி பிராணனாய்ப் புக்கு நில்லா நிற்பன வாயின

காவிகளே
ராக உத்தரதையாலே செங்கழுநீர்த் தடாகம் போலே இருக்கையாலே
காவி என்னாலானவை

கண்ணாய் அருவினையேனு யிராயின காவிகள் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
என்று அந்வயம்

இத்தால்
ஆஸ்ரிதரான அன்பருக்கு தாரகமாய்
ராகோத்தரமான ஆழ்வாருடைய ஞானமானது
அசநாத்ய தீதராய் அசங்குசித ஸ்வ பாவராய் நிரந்தர அனுபவ தத் பரரான
நித்ய யோகத்தை யுடைய ஸூரிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய்க் கொண்டு
விளங்கித் தோற்றும் ஸ்வ பாவத்தை யுடைத்தாகா நிற்கும் என்றதாயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது கீழ் போலே

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
பிராகிருத போகங்களால் தரியாதாராய்
ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற புத்தியே யன்றியே
உபாதேயமான ஆத்மவஸ்து உத்தேச்யம் என்னும் புத்தியை யுடையராய்
அவ்வாத்ம வஸ்து தான் ஸ்வ தந்திரம் என்று இருக்கை அன்றிக்கே
ஆத்ம யாதாத்ம்ய ஞான பூர்வகமாக ஈஸ்வர ஞானத்தை யுடையராய்
இது அவனுக்கு பிரகாரம் என்று இருக்கும் படி பரம யோகம் கை வந்து இருக்குமவர்களுக்கும்

எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானார்கள் ஆகில்
தங்களுக்கு ஸூபாஸ்ரயமான பரதத்வம் தன்னையும்
காற்கடைக் கொண்டு
இத்தையே அது அது என்னும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாக யுடையனவாய் யுள்ளன

எரி நீர் வளி வான் மண்ணாகிய
காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம் உப லக்ஷணம்
அக்னி நீர் காற்று ஆகாசம் பூமி இவை யடையத் தனக்கு விபூதியாக யுடையவன்

வெம்பெருமான்
அவனுடைய விபூதி யோகம் தனக்குப் பேறாய் இருக்கிற படி

தனது வைகுந்த மன்னாள்
மானாவிச்சோலை போலே ஆவது அழிவதாம் இவ்விபூதி போல் அன்றிக்கே
ஒரு நாளும் அழியாததாய்
அவனுக்கு அஸாதரணமாய்
அந்தரங்கமான நித்ய விபூதியோடே ஒத்து இருந்தவள்
அவனோடே அழியாத விபூதியோடே ஒத்து இருந்துள்ளவள்

கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே
அப்படிப்பட்டவன் பக்கலிலே வந்தவாறே
பிரதான அவயவமாய்
என் பக்கலிலே வந்தவாறே அச்சேத்யமாய் அதாஹ்யமாய் அழியாததாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய்
பாதகமாம் இடத்தில் ஸ்வ தந்திரமாய் நின்று பாதகமாகா நின்றன

ஆறு வினையேன்
ரக்ஷகமானவை தானே பாதகமாம் படி பாபத்தைப் பண்ணினேன் –

—————

அவதாரிகை

இப்படி அனுபாவ்யமான ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்தை
போக்தாக்கள் உகந்து யுரைத்த பாசுரத்தை
தலைமகள் கண்ணழகு கண்டு தலைமகன் வியந்து யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – 67-

பாசுரம் -67-காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல –
தலைவன் தன் வலி யழிவு உரைத்தல் –
உலகமுண்ட பெரு வாயா -6-10-

பதவுரை

அசுரை–அசுரர்களை
செற்ற–அழித்த
மா விய புள் வல்ல–பெரிய ஆச்சர்ய கரமான கருடப் பறவையை ஏறி நடத்துகிற
மாதவன்–திருமகள் கணவனும்
துணை மலர்–ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்
காவியும்–செங்கழுநீர்ப் பூவையும்
நீலமும்–கருநெய்தற் பூவையும்
வேலும்–வேற்படையையும்
பலபல–(மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும்
கோவிந்தன்–பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய
வேங்கடம்–திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற
தூவி அம்பேடை அன்னாள்–சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது
கண்கள் ஆய்–கண்களாகிய
வென்று–தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து
பாரிப்பு–என்னை வருத்துவதற்கு அடி கோலிய பரப்பு
ஆவியின் அல்ல–(எனது) உயிரின் தன்மைக்கு
அளவு அல்ல–ஏற்ற அளவல்ல.

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
நைல்யத்தாலே நெய்தலையும்
கூர்மையாலும் ஒளியாலும் வேலையும்
குளிர்த்தியாலும் மிளிர்த்தியாலும் கயலையும்

மற்றும்
கண்ணுக்கு ஒப்பான
வாள்
அம்பு
வடி
மான் விழி
முதலான பலவற்றையும் வென்று

அன்றியே
கீழ்ச் சொன்னவற்றைத் தனித்தனியே
பலவற்றையும் வென்று என்னவுமாம்

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
நம்முடைய பிராணனின் ஸ்வரூபத்துக்குத் தக்கதல்ல
இவற்றினுடைய கோலுதலின் பரப்பு

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன்
விரோதி நிரசன ஸமர்த்தனாய்
பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்

பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே
இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்

கோவிந்தன்
வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ
பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன்

வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில்
பொருந்தி வர்த்திக்கிற
அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய

(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா வேங்கடேசாயா ரமயா ராமமாணாயா ஸ்வாமி புஷ்காரணீ தடே
ஸ்லோகத்தில் -இவை அனைத்துமே உண்டே )

கண்களாய துணை மலரே
கண் என்று பேராய் இருக்கிற
தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை

இவற்றுக்கு -என்று
அத்யாஹரித்து
ஆவியின் தன்மை அளவுள்ள பாரிப்பு -என்று
அவயம்

இத்தால்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு -என்கையாலே
ஆழ்வாருடைய ஞானமானது
ராக ஹேதுவான ரஜஸ்ஸையும்
கார்ஷ்ண்ய ரூபமான தமஸ்ஸையும்
லகுவாய் ப்ரகாசகமான சத்வத்தையும் கடந்து
(மிஸ்ர ஸத்வம் தாண்டி ஸூத்த ஸத்வம் வேண்டுமே
முக்குணம் தாண்டி நித்ய ஸத்வம் வேண்டுமே )

இப்படி குண த்ரய உத்தீர்ணம் ஆகையால்
ஜட ப்ரக்ருதியான பதார்த்தங்களில் சேர்த்தி அற்ற படி
பஹு பிரகாரமான வ்யாவ்ருத்தியை யுடைத்தாய்க் கொண்டு
நம்முடைய ஸ்வரூபத்தின் அளவன்று இதினுடைய பாரிப்பு என்றபடி

தூவியம் பேடை யன்னாள் -என்கையாலே
இவருடைய ஸூத்த ஸ்வபாவத்தையும்
(வேல் வெளுப்பு மிஸ்ர ஸத்வம் )
ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய அந்வயமும்
பாரதந்தர்யமும் (பேடை)
ஸூசிதமாயிற்று

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை -என்று
அலர் மேல் மங்கையைச் சொல்லி
அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்
(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )

கண்களாய துணை மலரே -என்றவிடம்
இவருக்கும் துணையாய்
ஆஸ்ரிதற்கும் துணையான
விகாஸத்தை உடைத்து என்று தோற்றுகிறது

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டாலும் கண்ணழகு தன்னையே சொல்லுகிறான்
தலைமகன்

வியாக்யானம் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால்
விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே –ஸ்ரீ பாலா -1-18-என்கிறபடியே
ஒரோ ஆகாரங்களாலே ஒப்பாகப் பலவற்றையும் பிடித்தால்
எல்லாம் கூட ஒப்பாகவற்றோ
மாட்டாது என்னும்படி இறே இவை தான் இருப்பது

விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே
பரத்வமும் வீர்ய குணம் ஒன்றுக்கும் ஒப்பாம் அத்தனை

இப்படி சீலாதி குணங்கள் கண்டு அனுபவிக்கப் போகாதே இறே அங்கு

சிவப்பாலே செங்கழுநீரை வென்று
கருமையாலே நெய்தலை வென்று
ஓராளும் ஓர் நோக்குமாய் இருக்கும்படி இருக்கையாலே வேலை வென்று
மவ்க்யத்தாலே கயலை வென்று
மற்றும் ஒப்பாகச் சொல்லும் அவற்றை அடையப் புக்கவிடம் புக்கு வென்று

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
தன்னடையே அழியுமவற்றை வெல்லுகை வெற்றிக்கு உடலோ என்று
அழியாத ஆத்ம வஸ்துவையும் அழிப்பதாகக் கோலா நின்றன

ஆவியின் தன்மை அளவுள்ள
இவ்வாத்ம வாஸ்துவின் அளவன்றியே
இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்வன போலே இரா நின்றன
இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மயக்க வல்ல போலே காணும்

அசுரைச் செற்றமாவியம்புள் வல்ல மாதவன்
அசுரர் வர்க்கத்தை யடைய அழியச் செய்து
மஹானாய்
அவன் தன்னோ பாதியும் பெரியனாய்
விஸ்மய நியாமான வியாபாரங்களை யுடையனாய்
இருந்துள்ள பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்லவன்

மாதவன்
கருட வாஹனனான ஏற்றத்துக்கு மேலே
ஸ்ரீ லஷ்மீ பதியான ஏற்றத்தை யுடையவன்

கோவிந்தன்
அவளோட்டைக் கண் கலவியாலே ஆஸ்ரித ஸூலபனானவன்

வேங்கடம் சேர்
அந்த ஸுலப்யமும் மேன்மை என்னும்படி
திருமலையிலே வந்து ஸூலபனானவன்

தூவியம் பேடை யன்னாள்
கோவிந்தனதான வேங்கடத்தைச் சேருமதாய்
புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாததான
தூவியம் பேடை யுண்டு
அழகிய சிறகை யுடைய அன்னப்பேடை
அத்தோடு ஒத்து உள்ளவள்

அன்றிக்கே
தூவியம் பேடை -என்று
பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய்
அவளோடே ஒத்து உள்ளவள் என்றுமாம்

கருட வாஹனன்
ஸ்ரீ லஷ்மீ பதி
என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில்
ஸுலப்யத்தைச் சொல்ல நினைத்து
அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தைச் சொல்லி
பின்பு அந்த ஸுலப்யத்தின் எல்லையில் வந்து ஆறுகை

கண்களாய துணை மலரே
கண் என்கிற வியபதேசத்தாலே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன இரண்டு பூக்களாயிற்று

கண்களாய துணை மலரின் பாரிப்பு
காவியும் என்று தொடங்கி
ஆவியின் அளவுள்ள பாரிப்பு
என்று அந்வயம்

இத்தால்
திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற
ஆழ்வார் படி போக்த்தாக்கள் அளவல்ல என்று
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை
பார்ஸ்வஸ்த்தர் பாசுரத்தாலே அனுபவிக்கிறார் தாம்

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி பகவானுடைய உக்த வித கடாக்ஷத்தாலே
தாம் இங்குள்ள இருப்பில் உயரப் பெற்றமையை அருளிச் செய்து
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து –திருவாய் -9-2-1- என்று
அருளிச் செய்த படியே
இவ்வாழ்வார் அவ்விருவராலும் ஒரு நினைவால் நீயதராய்
இந்த திவ்ய பிரபந்த கரணத்தில்
அதிக்ருதரானது கொண்டு அவன் கடாக்ஷத்தைக் கடாஷித்தவராய்
இங்கான வெந்நிலத்தில் உள்ள பங்கயத்தாள் பாரிப்பு என்னாத்ம ஸ்வரூபம் மட்டுல்ல என்று
அவளுடைய இப்போதான் விசேஷ கடாக்ஷத்தில் தாமான தன்மையில் ஈடுபடுகிறார் இதில்

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
கறுப்பாலே நெய்தலையும்
தன் படியை ஸ்வ வசமாக்கிக் கொள்ளுமத்தால் வேலையும்
ஒளியோடு கூடின ஆகார ஸுந்தரியத்தாலே கயலையும்
மற்றும் கண்ணுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட அம்பு மான் விழி என்று
பல பல வானவைகளையும் வென்ற கண் படைத்தவள்

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
அதி விஸ் மய நீய விரோதி நிரசனமுள்ள ககேந்த்ரனை நடத்த வல்ல
ஸ்ரீ லஷ்மீ வல்லபன் கிடீர்
கோவிந்தனாய் வந்து அவதரித்தவனும்
திருவேங்கடம் சேர்ந்தவனும்
அவனுடையதாய் அமைந்த ஸர்வ ஸரீரியாய்
தத் கத தத் ப்ரயுக்த தோஷ அஸ்பர் ஸித்வம் உள்ளது கொண்டு
அவனுக்கு அழகியளான பேடை யானப்பட்டவளுடைய

கண்களாய துணை மலரே
ஒன்றுக்கு ஒன்றே ஸுந்தர்ய சாத்ருஸ்யம் கொண்டதான திருக்கண் மலர்களே

என் ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
என்னாத்மாவுக்கு யுள்ள ஸ்வ பாவ ஸித்த ஞான சக்த்யாதிகளின் மாட்டு இல்லாத
பலவிதரண உத்ஸாஹம் உள்ளது

ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -68- என்று அருளிச் செய்த
ஸுந்தர்யத்தின் மாட்டு அல்லவாய் இரா நின்றது என்னில்
கடாக்ஷத்தால் அறியப்பட்ட ஸுந்தர்யம் என்றபடி –

————–

அவதாரிகை

இப்படி நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தம்முடைய ஞானத்தால்
பகவத் பாகவத விஷயங்களை நிறைந்த அனுபவம் பண்ணப் ப்ராப்தமாய் இருக்க
யோக்ய காலங்களில் அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த ஸைதில்யத்தை
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றினை பாசுரத்தை
காலம் கண்டு இரங்கின தலைவியைக் காலம் இளையது என்று ஆற்றினை
தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-

பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் –
கால மயக்கு காலம் இளையது என்றல் –
கொண்ட பெண்டிர் -9-1-

பதவுரை

பொரு கடல் சூழ்–அலை மோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம்–பூலோகத்தை
தாவிய–அளந்தருளின
எம்பெருமான் தனது–எம்பெருமானுடைய
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய்–ஒத்து விளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர் கொண்டு–(உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள்–வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனவே–கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும்–மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும்–பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழை பந்தர்–மநோஹரமான தழைகளார் சிறு பந்தலிலே
தண்டு–கொம்புகளிலே
உற–நெருங்க
நாற்றி–தொங்க விட்டுக் கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில–முற்றும் மலர்ந்து விட்டனவில்லை

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாகவும்
மாலையாலே சமைந்த பொன்னின் வாசிகையாயும் இருக்கிற பூக்களை
கண் வைத்தால் வாங்க ஒண்ணாத படி செறிந்த தழைப் பந்தலிலே
கொம்புகள் சிக்கனைத் தூக்கி
மலர்ந்தே வியானவில்லை

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்
அலைகள் தன்னில் தான் பொருகிற கடலாலே
சூழப்பட்ட பூமியை அளந்து கொண்ட நம்முடைய
ஸ்வாமியானவனுடைய

பொருகடல்
செறிந்த கடல் என்னவுமாம்

தனது வைகுந்த மன்னாய்
அவனுக்கு அசாதாரணமான பரமபதம் போலே
அந்நிய அபிமான பிரசங்கம் யுண்டாய்க் கழிக்க வேண்டாதபடியான
ஸ்வ பாவத்தை யுடையவளே

(உலகு அளந்த பொன்னடி -சாத்ய பூமி அது
பற்றுவது இங்கே -திருவிக்ரமனது திருவடி பற்றி
அங்கு சென்று அந்த ஸ்ரீ வைகுண்டம் போல் இனியவளே
நித்யம் நிரதிசய போக்யம் -கீழ்
அந்நிய அபிமான பிரசங்கம் இல்லாத ஆழ்வார் –
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிரே என்று இகழல்பவர் அன்றோ )

கலந்தார் வர வெதிர் கொண்டு
தம்மோடு முன்பு ஸம்ஸ்லேஷித்த அன்புடையாருடைய வரவை முற்கோலி

வன் கொன்றைகள்
நாம் மலர்ந்தால் இவள் ஈடுபடும் என்னும் இரக்கம் இல்லாத
வன்மையை யுடைய கொன்றைகள்

கார்த்தனவே –
கருவடைந்து அரும்பின இத்தனை
மலர்ந்தன வில்லை என்றதாயிற்று

வன் கொன்றை என்று
அரும்பின சிக்கனவைச் சொல்லி
மலர விளையது என்றதாகவுமாம்
(வன் -செறிந்து அடர்ந்து என்றபடி இதில் )

இத்தால்
விஸ்லேஷித்த நண்பரான பாகவதருடைய ஆகமநத்தை
ஸாம்ஸாரிக போக தர்சனத்தாலே
(கொன்றைப்பூக்கள் பூக்க ஆரம்பிப்பது ) வந்த ஆர்த்தி சமிக்கைக்கு
உஸாத் துணையாக ஆசைப்பட்டவர்
விளம்ப அஷமதையாலே சிதிலராக
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரமாய் இருக்கிறது

இதில்
வன் கொன்றை -என்கையாலே
ஸ்த்தாவர பிராயராய்
அஞ்ஞரான சரீரிகளுடைய
தேவதாந்த்ர அபிமானத்தை சிக்கனவை ஸூசிப்பிக்கிறது
(கொன்றைப்பூ சிவனது )

புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே
இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி

மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் )
வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே )
யுண்டான போக்ய வஸ்துக்களை
ஸூசித்தப்படி

தண்டுற நாற்றி -என்கையாலே
(கிளையில் பொருந்தி )
இவ்விஷயங்களினுடைய அநு பந்தம் ஆஸ்ரய பர்யந்தமாய் இருக்கும் என்றபடி
(கிளையும் தள்ளுபடி -விஷயாந்தரம் போல் விஷயாந்தர பரரும் த்யாஜ்யம் )

மலர்ந்தே ஒழிந்தில -என்கையாலே
கிலேச கரமான வைஷயிக போக விகாஸம் உம்முடைய ஸந்நிதியில்
அதிசயித்தது இல்லை என்றபடி
அப்போது இறே உஸாத் துணை வேண்டுவது

பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு -என்று
உஸாத் துணையான நண்பருடைய ஆகமநம் மேல் அபேக்ஷிதம் என்றபடி

கார்த்தனவே -என்கையாலே
ஆகாமியான விகாஸத்துக்கு ஸூசகம் யுண்டு இத்தனை என்றதாயிற்று

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

ஸ்வாபதேசம்
இத்தால்
அவனுடைய குண ஞானத்தாலும்
இக்கலையை அவகாஹித்த படியாலும்
போக யோக்கியமான காலத்தில் வாராது ஒழியான் என்று
பார்ஸ்வஸ்த்தர் ஆஸ்வஸிப்பிக்கிற படியைச் சொல்லுகிறது

——

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகள்
கொன்றை பூக்கிற காலத்திலே வருகிறேன் என்று போனானாய்
அக்காலமும் வந்து
அவையும் பூக்கவும்
அவன் வரக் காணாமையாலே
தலை மகள் தளர
அத்தைக் கண்ட தோழி
அவை இப்போது பூக்க உத்யோகிக்கிற அத்தனை –
காலம் தாமும் இளையது என்று ஆற்றினை தோழி பாசுரத்தாலே
தம்மில் தாமே ஸமாஹிதராகிறார்
இதில்

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாயும்
மாலைகளால் கட்டப்பட்ட பொன் வாசிகையாயும் யுள்ள பூக்களை
வைத்த கண் வாங்காதபடி அழகுள்ள பசும் தழைப் பந்தலில் யுள்ள கொம்புகளிலே
தூக்கின அளவே காண்

மலர்ந்தே ஒழிந்தில
மலர உபக்ரமித்தனை
இன்னும் மலர்ந்தது இல்லை
அவன் வரும் அளவில் அல்லது மலராது காண்
மலரும் காலத்தில் அவன் வருவது நிச்சிதம்

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார்
வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே
அலைகள் தன்னில் தாம் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்டு
நம் ஸ்வாமியால் நம் விபூதகி எல்லாம் ஒரு தட்டு
இவள் ஒரு தட்டு என்று அபிமானிக்கப் பட்டவளே
உன்னோடு கலந்தவருடைய வரவுக்கு எதிர்கொண்டு அவரைக் கண்டு அல்லது அலரலாகாது
என்கிற புத்தி சக்தி பலமுள்ள கொன்றைகள்
கார்த்திக் கொண்டே நின்றன காண்

கலந்து பிரிந்தவர்கள் ஆராரோ
அவர்களை எல்லாம் எதிர்கொண்டு என்றுமாம்

—————–

அவதாரிகை

இப்படி ஆஸ்வாஸ கறாரான பாகவதருடைய ஆகமநமும் இன்றியே
அனுபவ யோக்ய காலத்தில் பகவத் அனுபவமும் ஸித்தியாமையாலே
சிதிலரான இவரை ஸூஹ்ருத்துக்கள் ஆனவர்கள்
இவ்வவஸ்தையில் பகவத் அங்கீ காரத்துக்குக் குறையில்லை என்று
ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத் தலை மகளை ஆற்றி யுரைத்த
தோழி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 –

பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு
மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –
கற்பார் இராம பிரானை -7-5-

பதவுரை

கார்–கருத்த
இருள்–இருளாகிய
ஏறு–எருதானது
செகில்–சிவந்த
சுடர்–ஸூர்யனாகிய
ஏற்றிற்கு–எருதுக்கு எதிரில்
உளைந்து–இளைத்து
வெல்வான்–(மீள) வெல்லும் பொருட்டு
போர் ஏற்று–போர் செய்வதை ஏற்றிக் கொண்டு
எதிர்த்தது–வந்து எதிரிட்டது.
நீர் ஏற்று–(மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று
புவனி எல்லாம்–எல்லா வுலகங்களையும்
அளந்த–அளந்து கொண்ட
நெடிய–நீண்ட வடிவமுடைய
பிரான்–தலைவன்
புன்தலை மாலை–அற்புதமான தன்மையையுடைய மாலைப் பொழுதிலே
அருளாவிடுமே–(உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.)
வார் ஏற்றும் இன முலையாம்–கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்த இளமை மாறாத தனங்களை யுடையவனே!
உன் வளை திறம்–உனது கைவளையின் நிமித்தமாக
வருந்தேன்–வருத்தப்படாதே.

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து
கறுத்த ஏறு போலே மேல் எழுச்சியை யுடைத்தான இருளானது
சிவந்த ஏற்றினை ஒத்த ஆதித்யன் சுடருக்கு முன்பு இடைந்து

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
வெல்லுகைக்காக யுத்தத்தை ஏன்று கொண்டு எதிர
புல்லிய தலைப்பாட்டை யுடைத்தான மாலையிலே

இதுக்கு வன்மையாவது
பிரிந்தாரை நலிகை

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் பிறர் மேலிடாதபடி இரந்து
தன் கைப்படுத்தி எல்லை நடந்து காற் கீழே யிட்டுக் கொண்ட
சர்வாதிகனான மஹா உபகாரகன்
பூமியோ பாதி அநந்யார்ஹை யான உனக்கு அருளாது ஒழியுமோ

வாரேற்றி இள முலையாய்
வாரை ஏற்றுவிக்கும் படி வளருகின்ற இளமையே வடிவான
முலையை யுடையவளே

ஏற்றுகை -முடிகை
(
வருந்தேல் உன்வளைத் திறமே
உன் முகப்படம் கிழிந்து இருக்க வளை கழலுகிறதே என்று
கிலேசிக்க வேண்டுவது இல்லை
அவன் அருளும் என்றதாயிற்று –

இத்தால்

காரேற் றிருள் -என்று
(மயர்வற மதிநலம் அருளுவதுக்கு முன்பு )
பூர்வகமான அஞ்ஞானத்தை ஸூசிப்பித்து

செகிலேற்றின சுடருக்கு உளைந்து -என்று
அது ராகோத்தரமான விவேகம் ஆகிற பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே
கழிந்தமை சொல்லி

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம் நீரேற்று
அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-என்று
யோக்ய காலத்தில் அனுபவ அலாபத்தாலே இருந்த விவேகமும் அழியும்படி
மோஹ அந்தகாரம் மேலிடும் அவஸ்தையை ஸூசிப்பித்ததாயிற்று

வாரேற்றி இள முலையாய் –என்கையாலே
இவளுடைய பக்தி அபி விருத்திக்குத் திரோதாயகர் இல்லை என்றபடி

வருந்தேல் உன் வளைத் திறமே -என்று
இப்படி பக்தி ப்ரபாவத்தை யுடைய உம்முடைய கையில்
பாரதந்தர்ய ஸூசகமான மினுக்கம் கழலுகிறது என்று கிலேஸிக்க வேண்டா

சம்பந்தம் உள்ளாரைத் தானே இரந்து வந்து
அநந்யார்ஹர் ஆக்கிக் கொள்ளும்
சர்வாதிக ஸ்வாமி யானவன் அருளாது ஒழியுமோ என்று
ஆஸ்வஸிப்பித்தார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அதுக்கு மேலே ஸந்த்யையும் வந்து நலிய
போக யோக்கியமான காலமாய் இருக்க அவன் வந்து தோற்றாமையாலே
தலைமகள் நோவு பட
இத்தைக் கண்ட தோழியானவள்
ஸந்த்யை அல்ல -இரண்டு வ்ருஷபங்கள் தன்னிலே பொருகிறன காண் என்று
இங்கனே சொல்லி ஆஸ்வஸிப்பிக்கிறாள்

வியாக்யானம்

காரேற் றிருள்
இருளான கார் ஏறானது
கறுத்த வ்ருஷபமானது

செகிலேற்றின சுடருக்கு உளைந்து
ஆதித்யன் ஆகிற சிவந்த வ்ருஷபத்துக்குத் தோற்றுப் போய் சுரமடைந்தது

வெல்வான் போரேற்று எதிர்ந்தது
நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடைக்கும் இத்தனையோ
நாமும் ஒரு கால் மேலிட வேணும் என்று பார்த்து
போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது

புன் தலைமாலை
புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது
ஜசுகைசான இருள் கொழுந்துகளை உடைத்தான ஸந்த்யையானது

நக நிர் லுஞ்ச நீயா தமோ வல்லய
(இந்த ஸ்லோகத்தின் அக்ஷரங்கள் சரியாகாது தெரியவில்லை என்று
பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் குறிப்பு உள்ளது )
ஸந்த்யையினுடைய உபக்ரமம் அத்தனை
ஸந்த்யை தான் அல்லது காண் இது

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
இருளாகிற கறுத்த ருஷபமானது முன்
செகிலேறு சிவந்த வ்ருஷபமான ஆதித்யனுடைய கிரணங்களால் பஃனமாய் ஓடிப்போனது
இப்போது அந்த சிவந்த வ்ருஷபத்தை ஜெயிக்கவே பொரும் விருஷபமாய் எதிர்த்தது

மேகத்தின் செக்கரைத் தான் ஏறிட்டுக் கொண்டு
பொன்னிறம் போன்ற மாலைகள் அசைய அசைய

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் தன் பொற் கையில் நீர் ஏற்றவனாய்
தன் திருவடிகளால் அளைந்து கொண்டு
ஸர்வத்திலும் நெடு மாளாய் உபகரித்தவன் தான் கடுக வாராமல் அருளிச் செய்த மாத்ரமாய் விடுமோ
கண் எச்சில் வாராதபடியும் வெளிறு மேல் இடாதபடியும்
கச்சை காட்டும் படி இள முலைகள் அழகியளானவளே
உன் வளைகள் கழலுமதாய் மநோ விசாரப்பட்டு ஆயாசப்படாதே கொள்ளாய்

உன்வளைத் திறமே
வளை விஷயத்தில் உன்னோடு வரும் காலம் குறித்தவன் அக்காலம் வரவே
வாராமல் தப்பான் காண் என்கிறாள் –

——————–

அவதாரிகை
இப்படி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வஸிப்பித்த இடத்திலும்
விளம்ப அஷ மத்வத்தாலே கால தைர்க்யம் பொறாமையாலே
வந்த ஆர்த்தியை
இரவின் நெடுமைக்கு இரங்கின
தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

பாசுரம் -70-வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் –
தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –
பிறவித் துயரற -1-7-

பதவுரை

வளை வாய் திரு சக்கரத்து–வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார்–எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல்–திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய்–கட்டு வாய்ந்த
நறு–பரிமளமுள்ள
கண்ணி–மாலை வடிவமான
தண் அம்–குளிர்ந்து அழகிய
துழாய்க்கு–திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான்–(எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து–அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க–நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து–எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல்–இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே-ஆயிரம் கற்பமாகா நின்றது.

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
வளைந்த வாயை யுடைத்தான திருவாழியை யுடையனாய்
எங்கள் பக்கலிலே பரமபதத்திலே பண்ணின அபிமானத்தை பண்ணும்
ஸர்வேஸ்வரனுடைய திரு முடியில் சாத்தின

தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
கட்டு வாய்ந்து பரிமளத்தை யுடைத்தான
மாலா ரூபமான குளிர்ந்த திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
ஸ்வ பாவிகமான நிறம் ஒழிந்து
வெளுப்பு நிறம் விஞ்சி வருகைக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு ராத்ரி மிக்கு நாளாயும்
மாஸமாயும்
ஆண்டாயும்
ஊழியாயும்
வந்து ஒழிய

எம்மைஉளைவான் புகுந்து
எம்மை ஈடுபடுத்துகைக்காகக் கிட்டி

இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இந்த ஒரு ராத்ரியானது
ஆயிரம் கல்பம் ஆகா நின்றன

ஆயிரம் என்றது
அநந்தம் என்றதாகவுமாம் –

இத்தால்
வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு

ஈஸ்வரத்வ சிஹ்னமான பரிகரத்தையும்
விபூதியையும்
பூஷணத்தையும்
ஒப்பனையையும் யுடைய
ஸர்வேஸ்வரனுடைய போக்யதையை

வண்ணம் பயலை
அனுபவிக்கப் பெறாமையாலே
ஸ்வரூப விபர்யாசம் பிறக்கும் படி நம்மை கிலேசிப்பதாகக்

விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

காலமானது
அவச்சேதகங்களால் பரிச்சின்னமாகை யன்றியே பிரகாச பிரஸங்கம் இல்லாதபடி
அபரிச்சின்னம் ஆகா நின்றது என்று தளர்ந்து அருளிச் செய்தார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு –

அவதாரிகை –

ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின திருத்துழாய் மாலையைப் பெற வேணும்
என்னும் அபேக்ஷையால் உண்டான
த்வரையாலே காலம் செலுத்த உள்ள அருமை சொல்லுகிறது

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து
வளைந்த வாயை யுடைய திருச்சக்கரம் என்னுதல்
அன்றிக்கே
வளையையும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
வாயையும் யுடைய -திருச்சக்கரத்தையும் என்னுதல்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர -யுத்த –114-15-என்னக் கடவது இறே

எங்கள் வானவனார் முடிமேல்
த்ரிபாத் விபூதியை யுடையராய்
திவ்ய ஆயுதங்களும்
சாத்தின மாலைகளுமான
அழகேயாய் இருக்கிறவர்
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய திரு அபிஷேகத்தில் யுண்டான

தளைவாய்
தொடை வாய்ப்புள்ள
அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே

நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
செவ்வியை யுடைய மாலைத் திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
அம்மாலையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிறமானது பயலை விளையும்படியாக
விவரணமாம் படியாக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
முந்துற வந்ததொரு ராத்ரி ஒரு நாளாய்ப் பெருகிற்று
அது போய் ஓர் ஆண்டாய்ப் பெருகிற்று
அது போய் ஒரு கல்பமாய்ப் பெருகிற்று

அது நிற்க
அத்தைக் கடக்க நிறுத்தி
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்
அவை போலே இன்றிக்கே இது வேறு ஒன்றாய் இரா நின்றது

எம்மைஉளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இவை யடைய நமக்கு அனுகூலம் என்னும்படி என்னை நலிகைக்காக வந்து புகுந்தது
அநேகம் ஊழிகளாய் இரா நின்றன

மிக வந்து
ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல்
அநேக ராத்ரிகள் எல்லாம் வந்தது இறே
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்

ஸ்வா பதேசம்
இத்தால்
பதி ஸம்மாநிதா ஸீதா –அயோத்யா -16-21-
அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே பெற வேணும்
என ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலம் செல்ல அரிதான படியைச் சொல்லுகிறது

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இதுக்கு மேல் வந்த நெடுகைக்கு இரங்கின
தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் ஸ்வயம் விளம்ப அஷமராய்
இப்பாசுரத்தில்

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித்
தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான்
வளையவும் பர பேத நத்துக்கான தீக்ஷணமாகிய வாயுள்ள திருவாழியை யுடையவராய்
எங்கள் பக்கல் வானில் பண்ணும் ப்ரீதியைப் பண்ணுமவருடைய
திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயாதான
மரு கானத்தில் எங்கும் வாய்ந்த நறு நாற்றமுள்ள திருமாலையான திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு
என்னில் பசுமையான வர்ணத்தை உண்டாக்கி விளைப்பதுக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு நாழிகையே வந்து
நாளாயும்
திங்களாயும்
ஆண்டையும்
ஊழியாயும்
மிகவும் வளர்ந்து நிற்குமே

எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
ஒரு ராத்ரியானது பதினாயிரம் ஊழி களாய்க் கொண்டு
நம்மை வளைத்துக் கொண்டு கொள்ளப் புக்கது
எங்கனே நான் தரிக்கும் படி –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .