ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை– பகுதி-4-ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

——–

18-வது பின்வருநிலையலங்காரம்.
19-வது தீபகவலங்காரம்
20-வது நிரனிறையலங்காரம்.
21-வது பூட்டுவில்லலங்காரம்.
22-வது இறைச்சிப்பொருளலங்காரம்.
23-வது பொருண்மொழியலங்காரம்
24-வது அதிகவலங்காரம்
25-வது வகைமுதலடுக்கலங்காரம்
26-வது இணையெதுகையலங்காரம்
27-வது விரோதவலங்காரம்
28-வது உபாயவலங்காரம்
29-வது விசேடவலங்காரம்
30-வது சமாயிதவலங்காரம்
31-வது ஏதுவலங்காரம்
32-வது சுவையலங்காரம்.

——

157.நெறிப்படுசெய்யுண்முன்னிலைபெறுசொற்பொருண்
மறித்துறுபலபுடைவரிற்பின்வருநிலை.
(எ-ன்) வைத்தமுறையானே பின்வருநிலையென்னுமலங்காரமாமாறுணர்-ற்று.

(இ-ள்) முன்னர்க் கூறியநெறியே யுண்டான செய்யுட்களின் முதலேவருஞ் சொல்லாயினும் பொருளாயினும்
அச்செய்யுளின்கண் மீட்டும் பலவிடத்தும் வருமெனின் அது பின்வருநிலையென்னும் அலங்காரமா மென்றவாறு.

158.அதுவே,
சொற்பின்வருநிலைபொருட்பின்வருநிலை
சொற்பொருட்பின்வருநிலையெனமூன்றாம்.
(எ-ன்) இதுவும் அவ் வலங்காரத்தினது விரியுணர்-ற்று.

இதன்பொருள், சூத்திரத்தானே விளங்கும்.

மானைப்பொருகயற்கண்மானைக்கமலமலர்
மானைப்புவனமடமானை-மானைப்
பரித்தபிறையுஞ்சுடுமோபாடகத்தான்றோண்மேற்
றரித்ததுளபத்தார்தரில். (363)
இது சொற்பின்வருநிலை. பாடகம்-திருப்பதி. ஒழிந்த அகலமுரையிற் கொள்க.
திணை-பெண்பாற்பெருந்திணை. துறை – நிலவு கண்டழுங்கல்.

மாய்த்தேன்செனனம்வதைத்தேனென்வல்வினையைத்
தேய்த்தேனறிவின்சிறுமையினைச்-சாய்த்தே
னனிவினையாங்கூற்றைநறையூர்வருமால்
பனிமலர்த்தாள்போற்றிப்பணிந்து. (364)
இதன்பொருளு முரையிற்கொள்க. இது பொருட்பின்வருநிலை. மாய்த்தேனென்பதனோடும் ஒழிந்தவினை
பரியாயமாகப் பொருள்கோடலா னென்றறிக. திணை-வாகை. துறை-அறிவன்வாகை.

வலம்புரிதுவைத்தனவரம்பிலாம்பனின்
றுலம்பினகரடிகையுலப்பில்பேரிகை
சிலம்பினமுழவுடன்றெழித்ததெங்கணு
நலம்புரிகின்னரர்நவின்றநாதமே. (365)
இதுவுமது. இதன்வேறுபாடுங் காண்க.

மாதர்மாதர்கூர்வாளமருண்கண்மாநிலத்து
மாதர்மாதர்கூர்வண்டிமிரளியதாமரைப்பூ
மாதர்மாதர்கூர்மாலும்வேலையுமெனவளர்வான்
மாதர்மாதர்கூர்கெழுதகைபடைத்தமாண்பினவே. (366)
இது சொற்பொருட்பின்வருநிலை.

(இ-ள்) இம்மாதராள்விருப்பத்தைமிகுத்த வாள்போன் றமர் விளைக்குங்கண்களானவை,
பூலோகத்துமகளிர்காணவிருப்பமிகும் வண்டு களாராவாரிக்குந் தாமரையிற் கருணையோடுங்கூடிய
பெரியபிராட்டி விருப்பமிகு மாயோனும் பாற்கடலுமொப்பெனக் கரியகுணங்களாலொளிவளரா நின்ற
பொன்னுலகி னரமகளிர்விருப்பமிகுநட்பினையளிக்கும் பெருமையுடைய வாமென்றவாறு.
பகுதி-சேட்படை. துறை- கண்ணயப்புரைத்தல்.

159.உவமானப்பொருட்பின்வருநிலையுந்
தவலருஞ்சிறப்பிற்றான்வாலுளதே.
(இ-ள்) அப் பின்வருநிலை உவமானப்பொருட்பின்வருநிலை யெனவும் வருமென்றவாறு.

பொன்னசலம்வண்கோபுரமாடகசயில
மன்னுசிகரம்வடபொருப்பா-நன்ன
ருரங்கொண்மதிண்மேருவகுமாயோ
னரங்கமணிமாளிகை. (367)
இஃ துவமானப்பொருட்பின்வருநிலை. இதனுள் அசலம், சயிலம், பொருப்பு, மேரு எனப் பரியாயச்
சொல்லா லுவமானப்பொருட்பின்வருநிலை வந்தவாறு காண்க. துறை-நகர்வாழ்த்து.

18-வது பின்வருநிலை முற்றும்.

————-

19-வது தீபகவலங்காரம்

160. தொழில்குணஞ்சாதிபொருளெனுமிவற்றொரு
மொழிபுணர்செய்யுளின் முதலிடைகடைநின்
றாங்கதன்பலபுடையடைபொருள்விளக்கும்
பாங்குறுதீபகம்பன்னிருபாற்றே.
(எ-ன்) வைத்தமுறையானே தீபகம் என்னும் அலங்கார முணர்-ற்று.

(இ-ள்) தொழில், குணம், சாதி, பொருளென்னு மிவற்றினொன்றைக் காட்டும் மொழி புலவனாற் புணர்க்கப்பட்ட
செய்யுளின் முதல் இடை கடை யென்னு மோரிடத்துநின்று பலவிடத்து நின்ற சொற்களோடுமடைந்து
பொருளைவிளக்குவதாய்ச்செய்யுந் தன்மையையுடைய தீபகம் பன்னிரண்டுபகுதி யுடைத்தென்றவாறு.

ஒழுகுங்கயற்கண்ணீரொண்டளிர்க்கைச்சங்க
மழுகும்பிறைநுதல்வேர்மன்னா-முழுதுமுணர்ந்
தார்பந்தழுவாரணத்தமிழ்செய்ந்நாவீறர்
மார்பந்தழுவாமயிற்கு. (368)
இது முதனிலைத்தொழிற்றீபகம். இதனுள் ஒழுகுமென முதலே நின்ற நிகழ்காலவினைச்சொல்லைக்,
கண்ணீர், சங்கம், வேரென்னு மூன்றிடத்தும் ஒட்டுக. திணை-பெண்பாற்பெருந்திணை. துறை- கண்டுகை சோர்தல்.

வளைத்ததுராமன்கைவல்விற்பகழி
துளைத்தவரக்கரைப்பேய்ச்சுற்றந்-திளைத்தசெருக்
கண்டகளம்புண்ணீர்கடலிலங்கைமாநகரைச்
சண்டதான்வீசியபாசம். (369)
இதுவுமது. இதனுள் இராமன்கை வில்லைவளைத்தது. அரக்கரைப் பேய்ச்சுற்றம் வளைத்தது.
செருக்களத்தைப்புண்ணீர்வளைத்தது. சண்டதான் வீசியபாசம் இலங்கைமாநகரைவளைத்தது.
என முதலே நின்ற இறந்தகாலவினையை யெங்கு மொட்டுக. திணை-வாகை. துறை-பேராண்முல்லை.

பூரித்ததுகோசலநாடன்விற்புணர்தோள்
பாரிற்பொடித்தாள்பருவமுலை-தேரிற்
றடுகளத்துவீழ்ந்தவரக்கரைத்தின்றாழு
மடுநிகர்த்தபல்பேய்வயிறு. (370)
இது முதனிலைக்குணத்தீபகம். இதனுள், பூரித்ததென முதனின்ற பண்பைத் தோள், பருவமுலை, பேய்வயிறு என எங்குமொட்டுக,
பூரித்ததெனக் காலந்தோன்றிற்றேனும் பொருளின்புடைபெயர்ச்சியல்லாமை யாற் குணமாயிற்று. திணையுந் துறையுமிதுவுமது.

பாம்பாடல்வாகனமாம்பாயலாம்பாதுகையாந்
தீம்பாற்பாவைத்திரைகடைநாட்-டாம்பாகுந்
தாசரதிகொற்றக்குடையாந்தனிவிளக்கா
மாசனமாம்பின்னவனுமாம் (371)
இது முதனிலைச்சாதித்தீபகம். பாம்பென்பது சாதி. ஆடல்-வென்றி. பாதுகை – திருவடிநிலை. பின்னவன் – தம்பி.
துறை-அரவவென்றி. திருவநந்தாழ்வானும் நித்தருண் முதலாதலால் அறுமுறை வாழ்த்துள்ளுமாம்.

மாறன்சடகோபன்வண்குருகூரான்பொருநை
யாறன்றுடரியருளாளன்-வீற
னொருநான்மறைத்தமிழாலொண்பொருளைக்காட்டுந்
திருஞானமுத்திரைக்கைத்தே. (372)
இது முதனிலைப்பொருட்டீபகம். துறை – கடவுள்வாழ்த்து.

தேர்வண்டமிழ்மாறன்றென்குருகூர்வீதிதொறுஞ்
சார்வண்டாளமுகுஞ்சங்கினங்க-ளூரும்
பெருமாளிகைமுகட்டிற்பெய்முகில்கள்கங்குல்
வருமாலையில்வெண்மதி. (373)
இஃது இடைநிலைத்தொழிற்றீபகம். இதனுள் ஊரும் என்பதனை ஊரும் தேரும்; ஊரும் சங்கும்; ஊரும் முகில்களும்;
ஊரும் மதியும் என முன்னும் பின்னு மொட்டுக. துறை – நகரவாழ்த்து.

பூண்டுறந்தவாசவன்றன்பொற்புயமுமுன்னோன்பின்
னூண்டுறந்துசென்றோனுடக்கம்பு-நாண்டுறந்த
கொற்றவிராவணிதன்கொள்கைக்குலக்கோதைக்
குற்றதிரள்கண்டமும். (374)
இது பெயரோடுங்கூடி யிடைநின்ற தொழிற்றீபகம். முன்னோன்-இராமன். அவன்பின் னூண்டுறந்துசென்றோன் – இளையபெருமாள்.
உடக்கம்பு-நாணிற்செறிந்தபாணம். நாண்டுறந்த-எய்தகாலத்து நாணைவிட்டு நீங்கின. ஈண்டு நாண்-விரற்சரடும், வின்னாணுமாம்.
பூண்டுறந்த வாசவன்றன்பொற்புயமும் நாண்டுறந்த என்பது இராவணி சமர்முகத்துக் கட்டினவன்றே வாகுவலயமென்னும்
ஆபரணத்தை மானபங்கத்தாலணியாது விட்ட இந்திரன்புயத்தில் அவன்கட்டினநாணும் அன்று விட்டுநீங்கின எனவும்,
கொற்றவிராவணிதன் கொள்கைக்குலக்கோதைக்குற்ற திரள்கண்டமும் நாண்டுறந்த என்பது,
இராவணிகுலத்திற்குரிய பாரி திரண்ட கண்டமும் மங்கிலிய மன்று விட்டுநீங்கின எனவும் முன்னும் பின்னுங் கூட்டுக.
திணை-வாகைசார்ந்த பொதுவியல். துறை-வில்வென்றி.

வட்டமுலைக்கண்குளிர்ப்பவண்பனிநீரிற்குழைத்துக்
கொட்டியகத்தூரிக்கொழுங்குழம்புஞ்-சுட்டதந்தோ
செய்வளைக்குந்தென்குருகூர்ச்செண்பகமாறன்றழுவாப்
பெய்வளைக்கும்விண்மேற்பிறை. (375)
இஃ திடைநிலைக்குணத்தீபகம். இதனுள், சுட்டது கத்தூரிக் குழம்பும், விண்மேற்பிறையும் என முன்னும் பின்னுங் கூட்டுக.
திணை-பெண்பாற்கைக் கிளை. துறை – கண்டுகைசோர்தல். கொட்டியது – அப்பியது.
கொழுங் குழம்பு-நெகிழ்ந்தொழுகுங்குழம்பு. அந்தோவென்ப திரக்கத்தின்கட்குறிப்பு.

வஞ்சநிருதர்மறப்படைக்கோர்கூற்றமா
நஞ்சனையமாயைக்கோர்நன்மருந்தா-மஞ்சனைதன்
கன்றுமனுராமனகவசமாம்வாகனமா
மன்றுகுறித்தேவியதூதாம் (376)
இஃ திடைநிலைச்சாதித்தீபகம். அஞ்சனைகன்று – திருவடி. கன்றென்ற துவப்பின்கண் மயக்கம்.
“பாலறிமரபிற்பொருநர்கண்ணும்,
அனைநிலைவகையோடாங்கவையுளப்பட” என்பதனால் வாகைப்புறத் திணையுள், துறை – வானரவென்றி.

தன்னிகரொன்றில்லாத்தனிமுதலாய்நின்றானு
மன்னுயிர்க்குமன்னுயிராவாழ்வானுந்-தென்னரங்க
னாரரவமுதன்றமரர்க்களித்தானு
மோராயிரம்பெயரானும். (377)
இஃ திடைநிலைப்பொருட்டீபகம். ஓராயிரம்பெயர் – ஒப்பற்றளவிருந்த திருநாமம்.
சூழிந்த அகல முரையிற்கொள்க. துறை-கடவுள் வாழ்த்து.

பெருவிறல்கூர்நாகப்பிடர்மேன்மாமு
முருகெழுதோள்வாலியுரமு-மிருபதுகைக்
குன்றின்வாமுங்குணராமன்வாளியினா
லன்றுதுளைபட்டது. (378)
இது கடைநிலைத்தொழிற்றீபகம். இருபதுகைக்குன்றென்றது இராவணனை.
திணை-வாகைசார்ந்தபுறத்திணை. துறை-வில்வென்றி.

மைம்மாண்புயல்கிழிக்கும்வண்சுடர்மீதாமிமையோர்
தம்மாநகரணவுஞ்சால்பிற்றே-பெம்மான்
முருகவிழ்பூந்தார்வகுளமுன்னோன்குருகூ
ருருவளர்பொன்மாடவுயர்பு. (379)
இது கடைநிலைக்குணத்தீபகம். துறை – நகரவாழ்த்து.

தன்னெவ்வநோக்காதுதாயர்வெறுத்துளதா
மென்னெவ்வநோக்குமிகல்விளைப்பான்-மன்னருண்மால்
மோகூரனைத்தொழுதேன்மோகமிகக்காமாகூ
கூகூவெனுங்கோகிலம். (380)
இது கடைநிலைச்சாதித்தீபகம். திணை-பெண்பாற்கூற்றுப் பெருந் திணை. துறை -குயிலொடுவெறுத்துக்கூறாநிற்றல்.

தாடகைகைச்சூலமுரண்சாய்த்தானும்வில்லிறுத்துச்
சூடகக்கைச்சானகிதோடோய்ந்தானுங்-கேடகத்தான்
செம்பொன்மணிமாடத்தென்னிலங்கைசெற்றானு
மம்பொன்மணிக்கூடத்தான். (381)
இது கடைநிலைப்பொருட்டீபகம். கேடகத்தான் – கேட்டோடுங் கூடிய வுள்ளத்தையுடையான்;
அவன் இராவணன். துறை – கடவுள் வாழ்த்து.

161.அதுவே,
ஒருபொருளுவமையுடனுறல்சிலேடை
விருத்தமாலையென்றிவற்றொடும்விரவும்.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தினொழிபுணர்-ற்று.

(இ-ள்) அத்தீபகம் ஒருபொருட்டீபகமுதலாக மாலாதீபகமீறாகக் கூறப்பட்ட வைந்தினோடும் விரவிவரு மென்றவாறு.

வெங்கதிரோன்மெய்வருடும்வெண்மதியின்மெய்தடவு
மங்கணுயர்வானகடணவு-மெங்க
ளனகனபிராமனாழியான்மூழிக்
கனகமணிமாளிகை. (382)
இஃ தொருபொருட் கடைநிலையிடத்தீபகம். ஒருபொருளாவன:- வருடும், அணவும், தடவும் என்பன. துறை – நகரவாழ்த்து.

பொன்னங்கொடியனையள்பொற்பமைந்துமென்னடைகற்
றன்னந்தனையனையளாயிழாய் – நன்னுதலாள்
வாய்ந்தவியல்பெற்றுமயிலனையண்மின்னனைய
ளாய்ந்தநுடங்கிடைபெற்றாங்கு. (383)
இஃ துவமானப்பொருட்டீபகம். வாய்ந்தவியல்-தோற்றமுள்ள சாயல். பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.

ஏகாவடநிலைபெற்றின்புட்டகமணந்து
மாகாமருவாமொய்வாழ்வுறலாற்-றோகை
முலைக்குமகிழ்மாலைமுன்னோன்றுடரி
மலைக்குமகிழ்வெய்துமனம். (384)

இது சிலேடாதீபகம். துடரிமேற்சொல்லுங்கால், ஏகாவடம் (-இயங்காத ஆலமரம்) நிலைபெற்று நல்லபுள்ளுக்கள்
பெருமையோடு பொருந்துவனவாய்க் கரிய அழகிய யானைத்திரள்கள் செறியும்படி வாழ்வுற்றெனவும்,
முலைமேற்சொல்லுங்கால், ஏகாவடமென்னும் ஆபரணம் நீங்காது கண்ணுக்கினிமைதரும் படாந் தன்மேற் றகவோடு
தழுவுவனவாய்ப் பெரிய விருப்பத்தையளிக்கு மிளமைத்தன்மையுடனிறுகி வாழ்வு பெறுதலால் எனவுங்கொள்க.
பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

தணந்தாருயிர்குறைக்குந்தந்துணைவர்பொற்றோண்
மணந்தாருயிர்நிறைக்குமானே – யுணர்ந்தார்நல்
யாகத்து திமாலிபகிரிமேன்மைதவழ்நீண்
மாகத்துதிமாமதி. (385)
இது விருத்ததீபகம். இபகிரி-அத்திகிரி. விருத்தம், குறைக்கும் நிறைக்குமென்பன.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நிலவு கண்டழுங்கல்.

வாவிக்கழகுமலர்கமலமன்கமலப்
பூவிற்கதனுட்பொலிதேவி-தேவிக்கு
நாளும்புதியதமிழ்நாவீறனையடிமை
யாளுந்திருநாரணன். (386)
இது மாலாதீபகம். இதனுள் அழகென்னுமதனை முதனிலைக் குணத்தீபகமாக்கிக் கமல முதலாக
எவ்விடத்தும் மாலைப்படுத்திக் கூட்டுக. துறை – கடவுள்வாழ்த்து.

19-வது தீபகம் முற்றும்.

——–

20-வது நிரனிறையலங்காரம்.

162. குறித்திடும்பெயர்வினைகூறியசெய்யுளி
னெறிப்படநிரலுறனிரனிறையாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே நிரனிறையலங்கார முணர்-ற்று.

(இ-ள்) இடுகுறியெனவுங் காரணமெனவுங் குறிப்பனவாம் பெயரேயாதல் வினையேயாதல்
புலவனாற் கூறப்பட்ட செய்யுளினிடத்து முறையே யிரட்டிப்பது நிரனிறையென்னு மலங்காரமாமென்றவாறு. நிரலுதல் – இரட்டித்தல்.

163.அவற்றுள்,
பெயரொடுபெயர்நிரலுதல்பெயர்நிரனிறை.
(எ-ன்) அவ்விரண்டினுட் பெயர்நிரனிறையாமா றுணர்-ற்று.

இதன்பொருள் உரையிற்கொள்.

தாதிவர்பூந்தாமந்திருநாமந்தந்தைதாய்
மேதினியேழும்புகழ்நாவீறற்கு-மாதராய்
வேரியார்வண்டிரைக்கும்வெய்யமகிழ்மாறன்
காரியார்நங்கையார்காண். (387)
இது பெயரொடுபெயர்ரெதிர்நிரனிறை. இதனுள் தாமம், திருநாமம், தந்தை, தாய்:-
மகிழ், மாறன், காரியார், நங்கையார் என அடைவே நிரைந்தமை காண்க. துறை – செந்துறைப்பாடாண்பாட்டு.

164. பெயரெதிர்நிரலுதல்பெயரெதிர்நிரனிறை.
(எ-ன்) பெயரெதிர்நிரனிறையமாறுணர்-ற்று.

இதன்பொருளும் உரையிற்கொள்க.

ஏடவிழ்தாரேதியெழில்வாகனந்தளிம
மாடாவமஞ்சிறைப்புள்ளாழிதுழாய்-நீடுபர
மேட்டியூர்வெண்டிரைவாயென்றுந்துயின்றதிருக்
கோட்டியூர்வாழ்நெடுமாற்கு. (388)
இது பெயரொடுபெயர்எதிர்நிரனிறை. அரவம் தளிமம் அஞ்சிறைப்புள்வாகனம்,
ஆழி ஏதி, துழாய் தார், எனப் பெயரொடுபெய ரெதிர் நிரனிறையாயவாறு காண்க. துறை – கடவுள்வாழ்த்து.

165.உயர்வுறுபெயரொடுவிறையுநிரல்வது
மயர்வறுபெயர்வினைநிரனிறையெனவரும்.

(எ-ன்) பெயரொடு வினை நிரனிறையாமாறுணர்-ற்று. இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

மற்றுளபம்போர்வேழம்வாராழிமுல்லைநிலங்
கொற்றமகிழ்மாறனையாட்கொண்டருளும்-விற்றுவமா
லாடினதுஞ்சூடினதுமட்டதுவுந்தட்டதுவும்
பாடினதுநேடினதும்பண்டு. (389)
இது பெயரொடுவினைமுறைநிரனிறை. மல்லென்பது கூத்து. முல்லை-பண். நிலம் – பூமிதேவி. அட்டது – கொன்றது.
தட்டது – அடைத்தது. நேடினது – தேடினது. இதுவுங் கடவுள்வாழ்த்து.

பணிமொழியுண்கண்மலராள்பங்கயத்தாள்செய்ய
மணிமலர்க்கைபறியவாட்டாற்றா-னணிமலர்த்தாள்
பேரமுதுண்சேடமெழில்பேரின்பமுற்றுமுகஞ்
சீரடியர்க்கேவல்செயல். (390)
இது பெயரொடுவினைமுறைநிரனிறை.

(இ-ள்) நெஞ்சமே! தாமரையாள் சிவந்த மணியு மலரும்போன்ற திருக்கையைப்பற்றின திருவாட்டாற்றா னழகிய திருவடிகளைப் பணி;
நாமத்தை மொழி; அமுதுசெய்த சேடத்தை உண்; திருமேனியின் காந்தியைத் தியானஞ்செய்;
அதன்பின்னருற்ற பேரின்பத்தான் முகமலர்; அவன் றிருத்தொண்டர்க்கேற்ற ஏவல் செய்வதனை ஆட்சிசெய்வாயாக வென்றவாறு.

நெஞ்சமேயென்னுமெழுவாய்முன்னிலை யெஞ்சிநின்றதாக விரிக்க. இதனுள், பணிமொழியுண்கண்மலராளாகிய
தாமரையாளெனத் தொடர் புடைத்தாய்நின்றனவுமாய்த் தொடர்பிற்பிரித்தது தன்றொழிலேவலாயின வாறுங் காண்க.
திணை – பாடாண். துறை – ஓம்படை.

166.ஓதியபெயரினோடுயர்வினையெதிரி
னீதிகொள்பெயர்வினையெதிர்நிரனிறையாம்.
(எ-ன்) பெயரொடுவினை யெதிர்நிரனிறையாமாறுணர்-ற்று.

இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

வேதியனையீன்றளித்தமேன்மைத்திருவுருவே
வாதியர்தம்வாய்மதமேவண்டமிழே-யோதிமமே
யேறியதுங்கூறியதுஞ்சீறியதுமீசனெனத்
தேறியதுங்காரிதருஞ்சேய். (391)
இது பெயரொடுவினையெதிர்நிரனிறை. இதனுள் வேதியனை யீன்றளித்த மேன்மைத்திருவுருவென்றது சீமந்நாரயணனை.
வாதியர் வாய் மதமென்றது அகம்பிரமிமுதலாயவர் புன்சாத்திரமதம். வண்டமிழ்-திருவாய்மொழி. ஏறியது ஓதிமம்;
கூறியது வண்டமிழ்; சீறியது பரவாதியர்மதத்தை; பரதத்துவமெனத்தேறியது சீமந் நாராயணனை;
அவன்யாரெனிற் புலவீர்காள்! காரிமாறப்பிரானாமென்றவாறு. திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல். மொழிமாற்றுநிரனிறையுமிது.

167. வினையொடுவினைநிரல்வதுவினைநிரனிறை.
(எ-ன்) வினையொடுவினை நிரனிறையாமாறுணர்-ற்று.

இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

வானுலகெண்வில்வளைத்துமாநீர்செறுத்தவுணர்
கோனுதகம்பெய்ததுகைக்கொண்டுதான்-சானகிதோண்
மேயினான்றென்னிலங்கைவென்றானெழுபுவியுந்
தாயினானீர்மலையத்தான். (392)
இது வினையொடுவினைநிரனிறை. அவுணர்கோனென்றது மாவலியை. தாயினான்-அளந்தான். துறை-கடவுள்வாழ்த்து.

168. வினையெதிர்நிரல்வதுவினையெதிர்நிரனிறை.
(எ-ன்) இது வினையொடுவினையெதிர்நிரனிறையாமாறுணர்-ற்று.

இதனுள் வினையொடு என்பதனை முதலே விரித்துரைக்க.

வன்சயிலமேந்திவளைமுழக்கிவெண்டயிர்கட்
டன்புறக்கட்டுண்டமர்வென்றாவளித்தா-னன்புட்
கடவெந்தைவானோர்கடிகாவிடந்த
விடவெந்தையில்வாழிறை. (393)

இது வினையொடுவினை யெதிர்நிரனிறை. ஆவளித்தான்-ஆவினைக் காத்தான்.
நன்புட்கடவெந்தை – நல்லகருடனையேறப்பட்ட வெமது சுவாமி; என்னப்பனென்றுமாம். துறை – இதுவுமது.

169. வினைபெயர்நிரல்வது வினைபெயர்நிரனிறை.
(எ-ன்) வினையொடுபெயர்நிரனிறையாமா றுணர்-ற்று.

இதற்கும் சூத்திரத்தானே பொருள்விளங்கும்.

ஏந்தினான்வேய்ந்தானிறுத்தானினிதாக
மாந்தினானாழிதுழாய்வன்சிலைபார்-காந்தன்
றொலைவில்லிமங்கலத்தான்றோலாதார்வென்றி
தொலைவில்லிவானோர்துணை. (394)
இது வினையொடுபெயர்நிரனிறை. காந்தன் – அழகன்.
தொலைவில்லிமங்கலத்தான் – தொலை வில்லிமங்கலமென்னுந் திருப்பதியையுடையவன்.
தோலாதார்வென்றிதொலை வில்லி-போர்க்குப் புறமிடாதசத்துருக்களது வென்றியைத்தொலைக்கப்பட்ட வில்லையுடையான்.
வானோர் துணை – வானோருயிர்க்குநற்றுணை யென்றவாறு. வானோர் – நித்திய சூரியர்.

170.வினையொடுபெயரெதிர்கொளவருநிரனிறை
வினையொடுபெயரெதிர்விதிநிரனிறையே.
(எ-ன்) வினையொடுபெயரெதிர்நிரனிறையுணர்-ற்று.

விதிநிரனிறை-இலக்கணத்தால்விதிக்கப்பட்ட நிரனிறை. ஒழிந்த அகலம் உரையிற்கொள்க.

நடித்தானொடித்தானடந்தானிடந்தான்
பொடித்தானொருதூணிற்புள்வாய்-வடித்ததமிழ்ப்
பாவலன்பின்கோதண்டம்பையரவிற்பல்லுயிர்க்குங்
காவலவன்றென்னரங்கன்காண். (395)
இது வினையொடுபெயரெதிர்நிரனிறை தூணிற் பொடித்தான்; புள்வாய் இடந்தான்; பாவலன்பின் நடந்தான்;
கோதண்டம் ஒடித்தான்; பையரவில் நடித்தான் என வினையொடுபெயரெதிர்நிரனிறை காண்க.
பொடித்தல்-தோன்றுதல். இடந்தது-பிளந்தது. ஒடித்தல்-முறித்தல்.

171.இருபெயர்க்கமைநாலெழுத்தைமுறைமாறிப்
பொழிப்புறப்பிரித்துப்புணர்த்துநிரைவகை
யெழுத்துநிரனிறையென்மனார்புலவர்.
(எ-ன்) இதுவும் அந் நிரனிறையலங்காரத்திற்கு எழுத்தாலாயதோர் சிறப்பிலக்கண முணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத் திரண்டுபெயர்க்கு நிரம்பின நாலெழுத்தை மாறாடி யொரோவொன் றிடையிட்டுப் பிரித்துக்கூட்டி
நிரையுங் கூறுபாடு புலவரெழுத்து நிரனிறையென்றுகூறுவரென்றவாறு.

மேவாருளிமுலைகண்ணண்பாமிளிர்விபதுண்
பூவார்வதனமொழிபொன்மகள்சேர்-தேவாதி
தேவேபிரமமெனத்தேர்மகிழ்மாறன்சிலம்பிற்
காவேயவட்கிடமாங்காண். (396)
இஃதெழுத்துநிரனிறை. இதனுள் மேவாருளி என்றமொழிக்கண் நின்ற நாலெழுத்தினை
ஒரோவொன்றிடையிட்டு மேரு வாளி எனப் பிரித்து, மேரு முலை; வாளி கண் எனக் கூட்டியும், விபதுண் என்ற மொழிக்கண்
நின்ற நாலெழுத்தை ஒரோவொன்றிடையிட்டு விது பண்: வதனம் மொழி எனக் கூட்டியு நிரனிறையானவாறு காண்க.
இவற்றுள் உவமைமுதலிய அலங்காரங்கள்விரவினு மீண்டு நிரனிறையே நோக்கமெனக் கொள்க.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.

172. முறைமுறைநிரைவதுமுறைநிரனிறையே.
(எ-ன்) இதுவும் நிரனிறைக்கோர் சிறப்பிலக்கணங்கூறுதனுதலிற்று.

(இ-ள்) பெயர் வினையென்னு மிரண்டினையு மொருசெய்யுளகத் தொருமுறை முதலேகூறியவற்றான்முற்றாது
அவற்றைப் பயனிலை முற்று விப்பான் மறித்தும் பெயரும் வினையுமாகநிரைத்து முறைபெற முடிப்பது முறைநிரனிறையா மென்றவாறு.

பொன்னனைவாளரக்கனை நூற்றுவரைக்காவைப்
பொருசிலையைக்கருங்கடலைப்பொன்னனீன்ற
நன்மகற்காய்ச்சுரர்க்காயைவருக்காய்க்காத
னப்பினைக்காய்ச்சானகிக்காய்நடவைக்காக
மன்னுகிரால்வடிக்கணையால்வளையாற்புள்ளால்
வளங்கெழுதோள்வலியால்வானரங்களாலு
முன்னுடல்கீறிச்சிரங்கொய்தமரில்வீழ்த்து
முதலொடுங்கீண்டிறுத்தடைத்தான்மோகூரானே. (397)
இது முறைநிரனிறை. இதனுள் அங்ஙனம் பெயரும், வினையுமொவ் வொருபொருட்டொடர்ச்சிக்கண்ணே
யொருமுறைவந்தவற்றோடு மறித்து முறைமுறையாக வந்தமைகாண்க. இதன்பொருள் உரையிற்கொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

173.இணைபெறவிடைநின்றிருவயிற்பெயரொடும்
புணர்தகைநிரனிறைபுகலிலொன்றுளதே.
(எ-ன்) இன்னு மவ் வலங்காரத்திற்கோ ரொழிபுகூறுதனுதலிற்று.

(இ-ள்) செய்யுளினிடைக்கண் இருமொழிபெறநின்று முன்னும் பின்னுமாகிய வீரிடத்தும் பொருள்களுட னெடுத்து
நிரைக்கும் இடையிணைநிரனிறையுங் கூறுமிடத் தொன்றுளதா மென்றவாறு.

அருண்மனையாளாயுவந்ததாழியான்கோடு
பொருதிரைப்பாற்றெள்ளமிர்திற்போந்த-திருவரங்கம்
பூம்பதுமக்கண்முகிழ்த்துப்புத்தேளிர்கைதொழமால்
பாம்பணைவேல்வைகும்பதி. (398)
இஃதிடையிணைநிரனிறை. இதனுள், இடைநின்ற திருவரங்கமென்னுந் தொடர்மொழியைத் திரு அரங்கம் எனப் பகுத்
திருமொழியாக்கி திரு ஆழியா னருளோடுங்கூடிய பாரியாயுவந்தது;
அரங்கம்மால் பாம்பணைமேலாய்ப் பள்ளிகொள்ளும்பதியென முன்னும் பின்னும் நிரனிறையாக்கி முடிக்க.
அல்லது ஆழியானாகியமால் பாரியாகவுவந்தது திரு; புத்தேளிர் கைகளாற்றொழப் பாம்பணைமேல்வைகும் பதி அரங்கம்
எனச் சேர்த்துக் கொண்டுகூட்டெனினுமாம். கோடு – கரை. போந்தது – தொன்றியது.
ஆதலாற் பரமபதத்தினுந் திருப்பாற்கடலினுஞ் சேய்த்தாயவன் உலகத்துயிர்களீடேற அர்ச்சாவதாரமாகிச் சேவித்தற்கெளிதாய்
அணித்தாய்க் கண்வளர்கின்றான்; அவனைச்சேவிப்பார்க் கிம்மைப்பயனாகிய அனைத்துச் செல்வமும்,
மறுமைப்பயனாகிய பேரின்பமும் பெறலாம்; சேவிப்பீராக வென்பது பயன். திணை-……….. துறை-…………
” நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப், பின்னீர பேதையார் நட்பு” என்னுங் குறட்பாவு மிது.

174.உரைபயின்முதலீற்றுறும்பெயரொடுபெயர்
நிரைநிறையெதிர்பெறநிகழ்ந்தீறொடுமுதல்
புரைதீர்தரவிற்பூட்டுறுவதுமுள.
(எ-ன்) நிரனிறையென்னும்பொருள்கோளலங்காரம் பூட்டு விற் பொருள்கோளோடு விரவுமாறுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்து விட்டுநீங்காத பெயரொடுபெய ரெதிர்நிரனிறையலங்காரமாகநடைபெற்றுச்
செய்யுளீற்றுப்பெயரொடு செய்யுண் முதனின்றபெயரெழுவாயுடனெதிர்வனவாய் விற்பூட்டுப்பொருள்கோளாவன வுமுள வென்றவாறு.

காவிகமலங்கமழ்தளவஞ்செங்காந்த
ளாவியனையாயரங்கத்தான்-பூவிற்
பிரமனைமுன்பெற்றபெருமான்வரைமான்
கரமுறுவலானனமுண்கண். (399)
இது பெயரொடுபெயரெதிர்நிரனிறை; எழுவாயு மீறு மெதிர்வன வாய்ப் பூட்டுவிற்பொருள்கோளாயிற்று.
பகுதி-பாங்கற்கூட்டம். துறை-இயல்பிடங்கூறல்.

20-வது நிரனிறை முற்றும்.

———-

21-வது பூட்டுவில்லலங்காரம்.

175.செய்யுளினிறுவாயெழுவாய்புணர்ந்து
மெய்யுறப்பொருணிலைவிளக்கல்விற்பூட்டே.
(எ-ன்) வைத்தமுறையானே விற்பூட்டலங்காரமுணர்-ற்று.

இதன்பொருள் உரையிற்கொள்க.

வருமதற்குமுன்னேமதிட்குருகூருள்புக்
கிருமகிழ்மாறற்கடிமையென்னுங் – கருமமிது
மற்றொப்பிலாதமதிப்புலவீர்பாசமுடன்
கொற்றப்பகடேறிக்கூற்று. (400)
இது விற்பூட்டு. இதனுள், கூற்றுவரு மதற்குமுன்னேயெனச் செய்யுளிறுவா யெழுவாயுடன்புணர்ந்து
பொருணோக்குடைமைகாண்க. திணை – பாடாண். துறை – வாயுறைவாழ்த்து.

மறவாதுகூறுமதிப்புலவீரென்றும்
பிறவாதபேறுபெறலாந்-துறவாளர்
தோய்ந்தமறையாதியந்தந்துதிப்பதற்கு
வாய்ந்தமுதற்றிருநாமம். (401)
இதுவுமது. துறவாளர் – மனத்தாற்றுறப்பனவற்றைத் துறப்பதாட்சி யுள்ளார். மறை யாதியந்தந்துதிப்பதற்குவாய்ந்த
முதற்றிரு நாமம் அரி யென்னுந்திருநாமம். நாமம் மறவாது கூறுமெனப் புணர்க்க. திணை- இதுவுமது. துறை – செவியறிவுறூஉ.

21-வது பூட்டுவின் முற்றும்.

——–

22-வது இறைச்சிப்பொருளலங்காரம்.

176.கருப்பொருள்களனாங்கட்டுரைபயின்ற
பொருட்புறத்தனவாமிறைச்சிப்பொருளணி.
(எ-ன்) வைத்தமுறையானே இறைச்சிப்பொருளலங்கார முணர்-ற்று.
(இ-ள்) ஐந்து நிலத்தினும் அவ்வவநிலங்களிற் கருப்பொருளே தனக்குநிலைக்களனா மழகியவுரையோடும்
பொருந்திப் பொருட்குப்புறத்த வாய்ப் பயன்றரும் இறைச்சிப்பொருளலங்கார மென்றவாறு.

ஏனலுமிறடியுமிடர்சிறிதின்றா
வான்வளஞ்சுரத்தலும்வயின்வயின்வனப்புற
விளைத்தவர்பலரொடுமிசைதிறத்தேவலின்
வளைத்தரிகுநரரிதற்கருமையவா
யொழிந்தபல்வளங்களுமோங்கினசெழுந்தேன்
வழிந்தொழுகியமகிழ்மார்பினன்வரைவாழ்
சேயரிக்கருங்கட்டிருநுதல்
வாய்மையின்வழா அமன்மரீஇயபைம்புனமே. (402)
இதனுள் வாய்மையின்வழாஅ மன் என்பதே கூறவேண்டும் பொருள். அதன்புறத்தே இங்ஙனம் வழாஅ மன் மரீஇயபைம்புனத்தும்
ஏனல் முதலிய பலவளங்களும் அழகுமிக வானுந் தன்வளனாகிய புனலைச் சுரந்துபொழிவதென்னென
இறைச்சிப்பொருளணி தோன்றியவாறு காண்க.

திருநுதல் – அண்மைவிளி. வாய்மையின்வழாதோன் என்றது இகழ்ச்சிக்குறிப்பு. ஏனல் – செந்தினை.
இறடி – கருந்தினை. வான்வளம் – மழை. சுரத்தல் – பெருகுதல். வயின்வயின் – இடந்தொறுமிடந்தொறும்.
விளைத்தவர் – விளைவித்தார். மிசைதிறத்து – துய்த்தற்பொருட்டு.
அரிகுநரிதற்கருமையவாய் – அறுப்பவர் அறுத்துத்தொலைத்தற்கரிய தன்மையவாகி.
ஏனையவளங்களும் – அவையிரண்டுமொழிந்த பலவளங் களும். ஓங்கின – அவற்றோடும் பெருத்தன.
வழா அமன் – வினையெதிர் மறுத்த வினைத்திரிசொல். பகுதி – வரைபொருட்பிரிதல். துறை – தலைவனைத் தோழியியற்பழித்தல்.

அகத்திற்குரியவா மிறைச்சிப்பொருள்கோளெல்லா மிகுதியாய் வருவன தலைவன்கொடுமைகூறுமிடத்தென வுணர்க.
ஏனையுவப்பினுஞ் சிறுபான்மை வரும். இப்பொருள்கோள் கருப்பொருளே தனக்கு நிலைக்களனாகவரு மென்பது
இதற்கு முதனூல்செய்த ஒல்காப்புலமைத் தொல்காப்பியனாரும்,
பொருளியலுள் “இறைச்சி தானே பொருட்புறத்ததுவே” என்பதனாலுங் கண்டுகொள்க.

கறையடிச்சிறுகட்களிநல்யானை
யறைபொருக்கெழவெயிலழலுமிழதரிடை
யுருப்பமதாற்றாதுயங்கியபிடியி
னடிக்கீழடிக்கடியளிதகவிலாழியைப்
பிணர்படுபுழைக்கையிற்பெய்துபெய்தாற்றி
யுடனமர்ந்தொரீஇயவொண்சுரமூடறுத்
திகந்தவர்நின்கவினிறந்துபாடெய்த
நெடுநாள்வைகுநரல்லரின்னே
செய்பொருண்முற்றுபுவருவர்
மையமருண்கணாய்வருந்தனீயே. (403)
இது, “அன்புறுதகுநவிறைச்சியுட்சுட்டலும், வன்புறையாகும் வருந்திய பொழுதே” என்பதனா லிறைச்சிப்பொருண்
முற்கூறியவற்றின் வேறுபடவரு மென்கின்றது என்னை? முன்னே நெஞ்சத்தன்புடையர்,
அதன்மேலுங் களிறு தன்பிடியின் கறையடிவெப்பத்தினை விலாழியைக் கையால்வாங்கி யடிக்கடி யிறைத் தாற்றி யுடன்
கொண்டு சுரத்தினைக் கடக்கு மன்பினையுடைத் தென்றனர்; அவர் அதனை யிப்பொழுதுங் காண்பர்கா ணென்று
அன்புறுதகுநகூறிப் பிரிவாற்றாதவட்குத் தோழி வற்புறுத்தினவாற்றா னறிக.

கறையடி – உரல்போன்ற அடி. அறைபொருக்கெழ – பாறை தகடுதக டாகவெடித்துச்சிந்த.
வெயிலழலுமிழதரிடை – ஆதித்தன் அழலைச்சொரியுங் கடத்தற்கரிதாய சுரத்துவழியில்.
உருப்பமதாற்றா துயங்கியபிடியின் – வெப்பமானதற் காற்றாதுவருந்திய பிடியின்.
அடிக்கீழடிக்கடி யளிதக விலாழியை- அப்பிடியினடிக்கீழ்ப் பலகாலு மன்புமிக விலாழியை.
பிணர்படு புழைக்கையிற் பெய்துபெய் தாற்றி – சருச்சரையுடைய துளைக்கையா லிறைத்து வெப்பத்தைநீக்கி.
உடனமர்ந்தொரீஇய – உள்ளு முடலு மொன்றெனக் கலந்து கடந்த.
ஒண்சுர மூடறுத்திகந்தவர் – ஒள்ளியசுரத் தினதுவழியைத்தொலைத்துக்கடந்தவர்.
நின்கவி னிறந்துபாடெய்த – நினது மேனியினழகு மேனியை விட்டுப் புறம்போக.
நெடுநாள்வைகுநரல்லர் – நெடுநா ளங்குத் தங்குவாரல்லர்.
இன்னே செய்பொருண்முற்றுபுவருவர் – இக்காலத்துத் தாம் ஈட்டுதற்கமைந்த நிதியீட்டுங்கருமமுற்றி வருவர்.
மையமருண்கணாய் வருந்தனீயே – ஆகையான் மையெழுதவிரும்பிய மையுண்கண்ணாய் வருந்தாதிருப்பாயாக வென்றவாறு.
பகுதி – இதுவுமது. துறை – வருத்தங் கண்டு தோழிவற்புறுத்தல்.

நீடியவியன்சினை நிலாய்நறைவிளைவுறு
பாடிமிழருவிப்பனிவரைநன்னாட
விட்டகல்வின்றாய்விழுமியோர்நுவலுங்
கட்டுரைமதியாக்காவலன்போலவும்
பாகரையடங்காப்பகட்டுளம்போலவு
மோகமுற்றனையாய்மூதுரைப்படுத்திய
வொருவழித்தணத்தலுடன்கொண்டேகலென்
றிருவழித்தாயதிலிசைந்ததொன்றுள்ளாய்
வயல்வளஞ்சிறந்தமருங்குடைப்பொன்னியுட்
புயல்படிந்ததுபோற்பொறியரவணைத்துயி
லரங்கனைவழிபட்டவனருட்கிலக்காய்
வரம்பெறுநரின்யாமனமகிழ்வெய்த
விரைவொடுமுயல்வையேல்விரைமென்
மரைமலர்மடந்தைநின்வயத்தினளாமே. (404)
இது, “இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே, திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே” என்பதனால் எய்தியதிகந்து படாமற்காத்தது;
என்னை? கருப்பொருள் பிறிதோர்பொருட் குபகாரப்படும் பொருட்டாதலேயன்றி யக்கருப்பொருடன்னுள்ளேதோன்றும் பொருளுமுள.
அஃதுள்ளுறையுவமமன் றிறைச்சியென் றாராய்ந்துகொள்ளும் நல்லறி வுடையோர்க்கென்றார்,
இதனுள்ளு மவ்வாறே அரசியற்கமைந்த நீதியை விட்டுநீங்குதலின்றி யமைச்சியன்முற்றவு முணர்ந்தோர்
காலமுமிடனுந் துணிந் துரைத்தவுறுதிக்கட்டுரையையுறுதியென்றுட்கொள்ளா மன்னரைப்போலவும்,
பாகர்க்கடங்கா மதயானையினுள்ளம்போலவும் மயக்கமெய்தினையாய், முதியவுரையாக வுனதுணர்வுட்கொளுத்திய
வொருவழித்தணத்த லுடன்கொண்டேகலென விருமுறையாய்வருவனவற்று ளுனது
புத்திக் கொன் றிசைவதாக வுட்கொண்டொழுகுங் குறிப்புமில்லையாயினை;
இனியாயினும் பொன்னியுள் அரங்கனைவழிபட் டவனருட்கிலக்காகித் தாஞ் சிந்தித்த வரம்பெற்றாரைப்போல
யாங்களு மனமகிழ்வெய்த விரைவினோடும் வரைந்துகொள்வது முயல்வையேற்றாமரை மலர்மகளை
யனையாணினக்குரிமையாவளென்றமையா னிறைச்சியாயிற்று; என்னை?

வண்டுகளென்றவுவமை யெச்சமாகநின்றவை தமக்குப் பின்னைக் குப் புசிப்பதாகவைத்த தேனின்விளைவையோர்ந் தந்நிலத்து
வாழ்வார் மால்பியற் றிக்கொண்டு போமாறுபோல நீயும் மேல் வரைந்துகொள்ளலாமென்றிருக்கு மிவளையும்
முதிர்ச்சி கண்டயலவர் பொன்னணிந்துகொடுபோவரென வுள்ளுறையுமவமெய்திற்றேனும் பின்னர்நின்ற
பொருளோ டியையாமையி னிவ்வுலம முள்ளுறையுற்றுப் பொருள்பயவாதுவமையாகக்குறிக்கப்பட்ட
அவ் வண்டுகளெஞ்சிநிற்பது நோக்கமாக நீ யினி வரைந்து கோடல்வேண்டு மென்றுகூறுதலே கருத்தாதலை யறிவித்ததால்
இறைச்சியாய் நாடவென்பதனுள் வேறொர்பொருடோன்றுவித்து நின்றதாதலின்.
“நீடிய வியன்சினை நிலாய்நறை விளைவுறு, பாடிமி ழருவிப் பனிவரை நன்னாட” வென்றது
பிறரிவளைப் பொன்னணிந்துகொடுபோவரென்னுந் துணையன்றி யுள்ளுறையுவமம் பொருளை முற்றவுணர்த்தாமை யுணர்க.
“ கன்றுதன் பயமுலை மாந்த முன்றிற், றினைபிடி யுண்ணும் பெருங்கன்னாட” வென்ற குறுந்தொகைப் பாட்டும்,
“ வேங்கைதொலைத்த” வென்னுங் குறிஞ்சிக்கலியு மது பகுதி வரைவுமுடுக்கம். துறை – வரைவுகடாதல்.

22-வது இறைச்சிப்பொருண் முற்றும்.

__________

23-வது பொருண்மொழியலங்காரம்

177. ஊதியமெய்ப்பொருளுணர்த்தல்பொருண்மொழியாம்.
(எ-ன்) வைத்தமுறையானே பொருண்மொழியென்னும் அலங்காரமுணர்-ற்று.

(இ-ள்) ஆன்மலாபமான வண்மைப்பொருள் புலவனாற் செய்யுளிடத் துணர்த்தப்படுவதும்
பொருண்மொழியென்னும் அலங்காரமென்று சொல்லப் படுவதாமென்றவாறு.
இது தா அனாட்டித்தனாதுநிறுத்தலென்பதாம். உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது.
அலங்காரமென்பது அதிகாரத்தால் வருவிக்கப் பட்டது.

இந்தவுடல்பெற்றிருக்கப்பெறுபொழுதே
நந்திபுரவிண்ணகர்மாலைச் – சிந்திப்பா
ரன்றறிவாமென்னாதறஞ்செய்வார்பேரின்பஞ்
சென்றறிவார்நெஞ்சேதிடன். (405)
(இ-ள்) நெஞ்சமே! நால்வகைத்தோற்றத்துட் பெறுதற்கரிய ஆராவமிர்தமாம் இந்த மானிடவுடலம்பெற்றதோடு
மின்னிலுநிலையில்லாத இந்தயாக்கை யிருக்கபெற்றபொழுதே நாம் இதுபொழுதிளையமாகலின் இறக்குஞான்று
சிந்திப்போமெனக்கருதாதே நந்திபுரத்திருமாலைக் காலம் பெறச்சிந்திப்பாரும், அறத்தினை நாடோறுஞ் செய்வாரும்
இவ்வுலகத்தின்பமெய்துவதோடும் அவ்வுலகத்துப் பேரின்பமுமெய்துவ துண்மையாமென்றவாறு.

ஆதலால் நாமு மவைசெய்வதே நமக்குறுதியென்பது பயன். சிந்திப்பார், அறஞ்செய்வார், பேரின்பம் என்னும்
மூன்றிடத்தும் உம்மை தொக்கனவாக விரிக்க. அறிவாரென்பது காண்பரென்பதாயிற்று.
பொருள் என்பது மெய்; “பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு, மருளானா மாணாப் பிறப்பு’ என்பதனாலறிக.
திணை – வாகை. துறை – பொருளொடுபுகறல்.

23-வது பொருண்மொழி முற்றும்

——–

24-வது அதிகவலங்காரம்

178.ஆதாரத்தினுமாதேயம்பெருத்
தகலம்பெறாதடங்கியதெனலதிகம்.
(எ-ன்) வைத்தமுறையானே அதிகமென்னும் அலங்கார முணர்-ற்று.

இதன்பொருள் சூத்திரத்தானே விளங்கும்.

வசையிலாவிரசதத்தினால்வயின்வயினமைத்த
வசைவிலாப்பனிவரைக்குலமளவிடற்கரிதாந்
திசைகளெங்கணுஞ்சென்றிடம்பெறாதவாமதன
திசைகணின்றவண்செறிந்தடங்கியதெனலாமே. (406)
இது அதிகம் வசையிலாவிரசதம் – மாற்றிற்குறையாவெள்ளி, அசைவிலா – நடுக்கற்ற. இசைகள் – கீர்த்திகள்.
செறிந்தடங்கியது – மிகவுஞ்செறிந்தது. ஆதாரம் பூமியும் ஆகாயமும். ஆதேயம் – கீர்த்தி. (குருகாமான்மியம். ) துறை – நகரவாழ்த்து.

24-வது அதிகம் முற்றும்.

__________

25-வது வகைமுதலடுக்கலங்காரம்

179. பொதுப்படவொருவகைமுதலடைபுணரா
தடுக்கலும்வகைமுதலடுக்கணியெனத்தகும்.
(எ-ன்) வைத்தமுறையானே வகைமுதலடுக்கணியுணர்-ற்று.

(இ-ள்) நால்வகைத்தோற்றத்துட் பொதுப்பெயர்க்கூட்டமான முதற்பொருள்களை அடை சினை புணராது
முதல்களை முதலாம்படி புலவன் செய்யுண்முழுது மடுக்குவதும் வகைமுதலடுக்கணியா மென்றவாறு.

வகைமுதலடுக்கென்பது பண்புத்தொகை.
வகையாவன:-மரம், விலங்கு, புள், மீன், ஊர்வன, மணி, பண், நாள், மக்கள், தேவர் எனக் கூறப்பட்ட ஒரு பலவகைமுதலாம்.

மரவமுங்கடம்பும்பனசமுமருதும்வடமுமாதவியுமாதுளமுங்
குரவமுமிலவுந்திலகமும்விளவுங்கொன்றையுஞ்செருந்திலுங்குமிழு
மரசுநாவலுந்தான்றியுமரீதகியுமாமலகமுநரந்தமுமாம்
பிரமுமேலமுஞ்சண்பகமும்வேழமுஞ்சம்பீரமுந்தழைந்துளவொருசார். (407)
இது மரமெனப் பொதுப்படக்கிடந்தவகைமுதல்களை யடைசினை புணரா தெண்ணும்மைப்பட அடுக்கினதாம். துறை – நகரவாழ்த்து.

இந்தளமுகாரிகுச்சரிபௌளிமலைமைசீராகம்வயிரவிதனாசா
கிரிவசந்தன்பழம்பஞ்சுரங்கொல்லிமருளிந்தளஞ்சாதாரிசா
மந்தமல்லாரிபந்துமுகாரியாரியவராடிகொல்லவராடிநை
வளமிராமக்கிரிகுறிஞ்சிகரம்போதிபூவாளிசௌராட்டநாட்டை
செந்துருதியருமவதிதக்கேசிகௌடிகௌசிகமேகராக்குறிஞ்சி
செவ்வழிப்பாலைவிளரிப்பாலைசெம்பாலைசீகாமரஞ்சிகண்டி
யந்தாளிமலகரிநளுத் தைகாந்தாரமுரலளிசெறியும்வகுளமார்ப
னமலன்வருகனகதண்டிகைவாழ்வினைக்காணவாயிரங்கண்வேண்டுமே. (408)
இது, பண் இராகமெனப் பொதுப்பட்ட வகைமுதற்பொருள்களையடை சினைகூடாதடுக்கின வகைமுதலடுக்கு.
பகுதி – பாடாண்சார்ந்த பொதுவியல். துறை – பவனிவாழ்த்து.

25-வது வகைமுதலடுக்கு முற்றும்

——–

26-வது இணையெதுகையலங்காரம்

180.வாய்ந்தயாப்பினுள்வருமிணையெதுகை
யாய்ந்தவெதுகையணியெனத்தகுமே.
(எ-ன்) வைத்தமுறையானே யிணையெதுகையலங்காரமுணர்-ற்று.

(இ-ள்) வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல், ஏனைப் பாவினமெனத் தோன்றப்பட்ட
செய்யுளகத்துப் பெருக வரும் இணையெதுகைநடையினையும் எதுகையலங்காரமென்று கூறவுந்தகு மென்றவாறு.

மேலைச்சூத்திரத்துள் அடுக்கலுமென்னும் உம்மையைச் சிங்கநோக்காக்கி யதற்குமேலே புதியனவாகக் கூறியவற்றிற்கும்,
இதுமுதலாக முன்னர்ப் புதியனவாகப்புணர்த்தவற்றிற்கும், தகுமென்பதனை யாண்டு மேற்றிக்கொள்க.
ஆய்ந்தவெனவே யிதுவுந் தன்குறியிடுதலென்னுந் தந்திரவுத்தியு ளடங்கும்.

கணையும்பிணையுங்கடுவும்வடுவு
மிணையொன்றியவிழியாரெய்தார்-துணைதனக்குத்
தானேயெனுமாயன்றங்காலுள்வேள்கணைக்கும்
யானேயிலக்காகுவேன் (409)

இஃ திணையெதுகையலங்காரம். இதனுள் வேள்கணைக்கும் என்றதனால் ஒழிந்தபடைக்கு மிலக்காயது பெற்றதாம்.
திணை – ஆண்பாற் கூற்றுக்கைக்கிளை. துறை-புணர்ச்சிபெறாதழுங்கல்.

ஆய்ந்த வெதுகை யென்றதனான் மூவசைச்சீர்முழுதொன் றிணையெது கையலங்காரமுமுள.

துடியிடையார்பிடிநடையார்துணைமலையாமிணைமுலையா
ரடிபிடியாமடிபடியாவணைந்தழிசாந்தகலத்தாய்
வடிபுரைமாண்கருநெடுங்கண்மடநல்லார்நாடுகிலிப்
படியிரத்தல்பழுதொன்றாற்பற்றேலெங்கைத்தலமே. (410)
இது மூவசைச்சீர்முழுதொன்றிணையெதுகையலங்காரம். துணை மலையாமிணைமுலையாரடிபிடியாவென்பது
உபயமலைபோலு முபயமுலையை யுடையராம் பரத்தையர் பாதத்தை நீ பிடித்தென்க.
மடிபடியாவென்பது இடக்கர். அணைந்தழிசாந்தகலத்தாய் என்பது அதன்பின்னர்
அவர்களைத் தழுவுதலாலழிந்த சந்தனத்தையுடையமார்ப வென்க.
இப்படி யிரத்தலென்பது இவ்வணநின்று நீ யெம்முடன் குறையிரத்தலென்பதாம்.
பற்றேல் என்பது அல்லீற்றுவியங்கோள்வினைச்சொல்; அல்ஏலென ஈறுதிரிந்ததாம்.
பகுதி-பரத்தையிற்பிரிதல். துறை-பள்ளியிடத்தூடல்.

குயில்போன்மொழியும் அயில்போல்விழியுங்
கொடிபோலிடையும்பிடிபோனடையும்
பயில்வோரரவிற்றுயில்வோர்மயிலைப்
பதியார்முகமாமதியார்முலைதான்
மயில்போலியலாள்* பயலாநதியும்
மதியும்பதியுஞ்சடையார்விடையா
ரெயில்போர்பொருநாள்வளைவார்சிலையே
யெழில்வாணுதலும்புதலுஞ்சிலையே. (411)
இதனுள் நாலசைச்சீர்முழுதொன்றியதூஉங் காண்க. துறை-இயல்பிடங் கூறல். (திருப்பதிக்கலம்பகம்)
* பயல் – பாதி

24-வது அதிகம் முற்றும்.

__________

27-வது விரோதவலங்காரம்

181. சொற்பொருண்முரணத்தொடுப்பதுவிரோதம்.
(எ-ன்) வைத்தமுறையானே விரோதமென்னும் அலங்கார முணர்-ற்று.

(இ-ள்) சொல்லினாலும் பொருளினாலும் மாறுபாடுதோன்றப் புணர்ப்பது விரோதமென்னும் அலங்காரமாமென்றவாறு.

182.அதுவே,
சொல்லும்பொருளுமொருமையிற்பன்மையிற்
றம்மின்முரணுஞ்சால்பொருநான்காய்ச்
சொல்லும்பொருளுஞ்சொல்லொடும்பொருளொடு
மொல்லுபுமுரணலினோரைந்தாகும்.
(எ-ன்) இதுவும் அவ்விரோதத்தினை விரித்துணர்-ற்று.

(இ-ள்) அச் சொல்லப்பட்ட விரோதமென்னுமது, சொல்லொடும் பொருளொடு மொருமையிலும் பன்மையிலுந்
தம்மிற்றா மாறுகொள்ளு மொழுக்க மொருநான்காயும் அவ்விரண்டுஞ் சொல்லொடுபொருளும் பொருளொடு
சொல்லும் விரவிப் பொருந்துபு மாறுகொள்வதோடு மைந்தாகு மென்றவாறு.

மெய்யுரைப்பாரென்பதுபொய்மெல்லியலாளின்றெமையும்
பொய்யுரைப்பாரென்றுபுகலுமே-பையரவி
லாடுந்திருமாலரங்கத்தேதேர்வலவா
வோடும்புயன்முந்துறின் (412)
இது சொல்லுஞ் சொல்லும் முரணியது. மெய் பொய்யென்பது பொருளின்றிச் சொல்லு முரணினமையானென்றறிக.
“செவ்வி வாய்த்த செம்பாட்டீரத்து, வெள்ளைவெண்மதி” யென்பது மிது. அடிமுரண்.
பகுதி – பொருட்பிரிதல். துறை – பாகனோடு கூறல்.

செம்மையோர்வெண்மையோராகித்திடனழிந்தோர்
தம்மையோர்நட்பாகச்சார்வரோ-வெம்மையோ
ராளாயுவந்தானரங்கத்துளாயிழையாய்
வாளாதென்கண்புதைத்தவாறு. (413)

இது பொருளும் பொருளும் முரணியது. என்னை? செம்மையோ ரெனவும், வெண்மையோரெனவு மிரண்டுயர்
திணைப்பொருளுளவாய்த் தம்மின் முரணியதா லெனக்கொள்க. செம்மையோர்-அறிவுடையோர்.
வெண்மையோர்-அறிவிலாதோர். ஆளாயுவந்தான்-அடிமையாக ஆளுதற்கு விரும்பினோன்.
வாளாது – பேசாது. என்கண்புதைத்தவாறு-புறம்புல்கி எனது கண்களைப் புதைத்தபடி யாதுதா னென்றவாறு.
பகுதி-பரத்தையிற் பிரிதல். துறை – நினைவறிகண்புதை.
இஃ தோரள வடிக்கண் ணிணை முரணாயிற்று. இவையிரண்டு மொருமை.

வெந்தழலைத்தண்ணீர்மைமேதகுவெண்சாந்தென்றே
சந்ததமும்பூசுவதென்றையன்மீர்-பைந்துளபக்
கொத்தணிந்ததாரழகர்கூடாநாட்கண்பனிநீர்
முத்தணிந்தபொற்பூண்முலைக்கு. (414)
இது சொல்லும் பொருளுஞ் சொற்களோடு முரணின, என்னை? வெம்மை – வெப்பம். தனியேபொருளின் றிச்சொல்.
தழல் பொருள், ஆதலால் அவை சொல்லும் பொருளுமாம் தண்ணீர்மை ; தண்மை – குளிர்மை. நீர்மை – நன்மை.
இரண்டுந் தனியே பொருளின்மையாற் சொல்லாயிற்று. மேதகுவெண்சாந்து – பெருமைபொருந்தியவெண்சாந்து.
கண்பனிநீர்முத்து – கண்கள்சொரியாநின்ற தண்ணீராகிய முத்து. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – மெலிவொடு கூறல்.

கண்காலருவிகொடுங்கைம்மேல்விழுந்தொழுகும்
பெண்காதனீக்கலார்பேதைமீர் – மண்காவல்
பூண்டவராமுன்னம்பொருகணையாற்றேவியைமீட்
டாண்டவராம்பேரருளாளர் (415)
இது பொருளுஞ் சொல்லும் பொருளோடு முரணின ; என்னை? கண் பொருள்; காலென்ப துறுப்பன்றி, உகுமருவியெனத்
தனிநிற்கும் பொருளின்றிப் புனலினது கிரியையாதலாற் சொல்.
கொடுங்கை பொருளாத லானென்றறிக. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – கண்டு கைசோர்தல்.

கருவிடமும்வெண்மருந்துங்கைக்கொண்டகண்ணம்
பிருபுருவவிற்கீழிலகுந்-திருமகட்குக்
கற்றார்புகழ்மாறன்கார்வரைமேற்கோங்கரும்பு
முற்றாதபொற்பூண்முலை. (416)
இதனுள், சொல்லும் பொருளுஞ் சொல்லொடும் பொருளொடும் முரணின. என்னை? கருவிடம்: கருமைசொல்;
விடம் பொருள். வெண் மருந்து; வெண்மை சொல்;மருந்து பொருள் ஆதலால் அறிக.
இதனுள், கைக்கொண்ட கண்ணம்பென்பனவும் அம்பு வில் என்பனவும் முரண். துறை – இயல்பிடங்கூறல்.

தம்மின்முரணுஞ் சால்பென்றதனால் இணைமுரண்முதலாகிய ஏழு விகற்பமும் ஒரு செய்யுளகத்து
வரும் விரோதவலங்காரமும் உள. அவை வருமாறு:-

அறிவிலருணர்வுளரெனுமவரளவினி
லருவமொடொளிர்திருவுருவம துடையனை
யெளியனையடியவர்க்கேனையோர்க்கரியனைக்
கனவினுநனவினுமறிதுயிற்கண்ணும்
வெண்சங்காழிசெம்மணிப்பொன்முடி
காலையுமாலையுங்கண்டுநன்பகலினு
மின்புறத்துன்பமற்றிம்பரொடும்பர்
நறவார்மலர்மகணாதனை
மறவாதவர்பதம்வழுத்துமென்னாவே (417)
இதனுள் இணைமுரண்முதலாகிய ஏழுவிகற்பமும் முறையே வந்தவாறு காண்க. முரணாவது விரோதம்.
உலகத்துட்பொருளெல்லாம் காட்சிப் பொருளும் கருத்துப்பொருளுமாமெனினும் ஈண்டுக் கருத்துப் பொருள் சொல்லாயிற்று.
இதனுள் அறிவிலர் உணர்வுளர்-பொருளும் பொருளும். அருவமொடுருவம்-சொல்லொடுபொருள்.
ஒழிந்தனவும் மொழியினும் பொருளினும் முரணினவாறு கண்டுகொள்க. திணை – பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.

27-வது விரோதம் முற்றும்.

__________

28-வது உபாயவலங்காரம்

183.ஒருபயன்கோடற்குறுபொருட்டெனலா
மொள்ளியசூழ்ச்சியுணர்த்துதலுபாயம்.
(எ-ன்) வைத்தமுறையானே உபாயமென்னும் அலங்காரம் உணர்–ற்று.

(இ-ள்) யாதாயினும் ஓரூதியங்கோடற்கு மிக்ககாரணமென்று கூறப்படு வதாம் முக்கியமானதொரு
சூழ்ச்சியையுணர்த்துதல் உபாயமென்னும் அலங்காரமாம் என்றவாறு. சூழ்ச்சி-உணர்வோடுசாவியுண்டான வுறுதியறி வாம்.

சூடிக்கழித்ததுளபச்சருகெனினு
நாடித்தருகதிருநாகையா – யூடிப்
புலவாததற்குநினதருட்கும்பொற்றோள்
கலவாதவெற்குநலங்காண். (418)
இஃ துபாயம்.

(இ-ள்) நாகையின்கண்வாழும் மாதவனே ! நினதுமார்பத்தைத் தோய்வதற்கு விரும்பியவேட்கையுடைய
எனக்குத் திருமகள் விட்டு நீங்காததிருமார்பத்து அணைவதற்குக்கூடாதாயினும், அத்திருமார்பிற்சூடிக் கழித்த
துளபமாலிகைச்சருகையாகிலும் நினது திருவுள்ளக்குறிப்பாற் றருக; அங்ஙனம் திருவுள்ளக்கருணையால் உட்கொண்டு தருதல்,
பெரியபிராட்டி நின்னுடனேயூடியதன்மேலும் புலவாது நலனெய்துதற்கும் உபாயமாம்;
நினது திருவருணலனெய்துதற்கும் உபாயமாம்; நினது திருப்புயத்தினை ஆலிங்கனஞ்செய்யாத
எனக்கு நலனெய்துதற்கும் உபாயமாம் என்றவாறு.

நலமென்பது ஆகுபெயர். அதனை எங்கும் ஏற்றுக. திணை-பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை-தாமம்பெறாதுதளர்வுற்றுரைத்தல்.

மன்கரம்பைமாயோன்வருகளிறேவேள்சிலையாங்
கொன்கரும்பைநின்பனைக்கைகொண்டுநின்று-தின்பையெனி
லிக்கரும்பின்மோகமும்போமீதேயுபாயமுனக்
கக்கரும்பாற்றாகமுமின்றாம். (419)
இதுவும் உபாயம்.

(இ-ள்) கரம்பனூருத்தமன்வாகனமாகவருகளிறே! நீ இவனைக் கொண்டுலாவரும்பவனிகண் டிவன்மார்பத்தை
விரும்பினஇவளை எய்வதற்குக் காமன்கைச்சிலையான கரும்பை உனது பனைபோன்ற கையினாற் பற்றி
முன்னின்று தின்பையெனில் இக்கரும்பு போன்ற மொழியினையுடையாள்மையலுந் தீரும், உனதுபசியுந் தீரும்,
ஆதலால் இருதலைக்கும் இதுபோற் றெள்ளியசூழ்ச்சி பிறிதில்லை யென்றவாறு.

ஏகாரம் பிரிநிலையாதலாற் பிறிது பாயமில்லையென்பதாயிற்று. திணை- பெண்பாற்பெருந்திணை.
துறை-பவனிகண்டழுங்கிய பைந்தொடி தோழி இவளுயிர்தருகென ஏற்றம்வேண்டல்.

28-வது உபாயம் முற்றும்.

__________

29-வது விசேடவலங்காரம்

184. சாதிகுணந்தொழில்பொருளிடமுறுப்பென்
றோதியவிருமூன்றினுமுறுகுறைபட
லேதுவினதற்கதற்கிசைமேம்பாட்டா
னீதிகொள்புலவர்நிகழ்த்துதல்விசேடம்.
(எ-ன்) வைத்தமுறையானே விசேடமென்னும் அலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) சாதியும் குணனும் தொழிலும் பொருளும் இடனும் உறுப்பும் என்னும் ஆறினும் மிக்க குறையுண்டாதல்
காரணமாக அதற்கதற்கிசைமேம் பாட்டானே இலக்கணநீதியுட்கொள்புலவர் கூறுவது விசேடமாம் என்றவாறு.

கொச்சைப்பொதுவர்குலச்சிறுவன்சிற்றடிமீ
திச்சைப்படுபார்த்தனிட்டமலர்-நிச்சயமாய்
முன்னாண்முடிக்கொண்டான்முக்கட்கடவுளா
மென்னாமுரைப்பேமிதற்கு. (420)

இது சாதிக்குறைவிசேடம். கொச்சை-ஆடு. நிச்சயம்-உண்மை. முடி-சடாமகுடம். இதற்கு-இப்பெருமைக்கு.
என்னாமுரைப்பேம்யாம் யாதுரைப்பேம்; என்பது ஆச்சரியம். துறை-கடவுள்வாழ்த்து.

வண்ணமகிழ்மாறன்வாய்மலர்ந்தநாண்மூரல்
வெண்ணிலவுசற்றேவிரியாமுன் – கண்ணகன்ற
தானமளவும்விரிந்தனவேதத்துவமெய்ஞ்
ஞானமெனும்வெண்ணிலா. (421)
இது குணக்குறைவிசேடம். மூரல்வெண்ணிலவு – திருமுத்தின் வெண்மை. கண்ணகன்றதானம் – பரமபதம்.
திணை – வாகை. துறை-சால்புமுல்லை.

தில்லைத்திருச்சித்திரகூடத்தான்றிருக்கை
வில்லைக்குனித்தருநாண்வீக்காமுன்-பல்பெரும்போர்
தாக்கினாரென்னுஞ்சலநிருதர்மெய்யுறநாண்
வீக்கினான்றென்றிசைவாழ்வேந்து. (422)
இது தொழிற்குறைவிசேடம். குனித்து-குனிக்க. அருநாண்-அறுதலில் லாதவிற்சரடு. வீக்காமுன்-கட்டாதமுன்.
சலநிருதர்-தீய நெறியையுடைய அரக்கர். தென்றிசைவாழ்வேந்து – இயமன்.
திணை-வாகை. துறை – வில்வென்றி. பேராண்முல்லையுமாம்.

உள்ளபடியேயுழக்கென்னுந்தண்டுலத்தால்
வெள்ளமெனவேவிருந்துறினு-நள்ளரணத்
தாவிதானன்புற்றமுதமைத்தாளைவருக்குந்
தேவியாஞ்செல்வத்திரு. (423)
இது பொருட்குறைவிசேடம். தண்டுலம் – அரிசி. வெள்ளம்-வெள்ளம் என்னும் இலக்கம். நள்ளரணம்-நடுக்காடு.
அமுதமைத்தல்-அசனம் நிறைத்தல். திணை-பொதுவியல். துறை-இல்லாண்முல்லை.

ஆலந்தளிருளடங்குமொருபுனிதப்
பாலன்பசித்தசிறுபண்டிக்கே-மேலைநாட்
பல்லாயிரமாகப்பாரித்தபேரண்ட
மெல்லாமடங்கிற்றெனும். (424)

இஃ திடக்குறைவிசேடம். புனிதப்பாலன். அநிருத்தன். பாரித்தது – பாத்தினது. பேரண்டம் – அளவிறந்த அண்டம்;
“பெரியயோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே” என்பதனால் அறிக. எனும் – என்று புராணங்கள்கூறும். துறை – கடவுள்வாழ்த்து.

கரமுஞ்சிரமுங்கணக்கின்றுரமும்
வரமும்வரம்பின்றரக்கர்-சரராமன்
றான்மானிடனிருகைசானகியைநீங்குதளர்
வானாகவும்வென்றனன். (425)
இஃ துறுப்புக்குறைவிசேடம். கணக்கின்று – எண்ணிறந்தன. அரக்கர் – மூலபலப்படை. தளர்வான் – தளர்ச்சியையுடையான்.
ஆகவும் வென்றனன் – இத்தனையெல்லாம் உறுப்புக்குறைவுண்டாயிருக்கவும் வென்றான்! என்ன ஆச்சிரியமோ என்பதாம்.
முன்னுள்ள இடக்குறை விசேடத்திற்கும் இஃதென்ன அகடிதகெடிதசாமர்த்தியகுணமோ எனக் கூட்டுக.
திணை – வாகை. துறை – பேராண்முல்லை.

29-வது விசேடம் முற்றும்.

__________

30-வது சமாயிதவலங்காரம்

185.ஒருவினைமுயன்றதனாலுறுபயனைமற்
றொருவினைதரவுறுவதுவேசமாயிதம்.
(எ-ன்) வைத்தமுறையானே சமாயிதமென்னும் அலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) முதலே ஒருவர் ஒருவினையை முயல அதனாலெய்துங் காரியத்தைப் பிறிதொன்றன்வினைதர
அதுகாரணமாக அக்காரியத்தை யெய்துவது சமாயிதம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.

ஊடினாளூடியபினுள்ளத்துவகையெழ
வாடினாள்வண்சுடர்தான்வாடையினால்-வீடியதாற்
காதலன்பொன்னாகங்கலந்தாளருள்கலப்ப
மாதவன்றன்மோகூர்மயில். (426)
இது சமாயிதம். இதன்பொருள் வெளிப்படை; கூற்றான்விளங்கும். பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – துறைகூறல்.

30-வது சமாயிதம் முற்றும்.

—–

31-வது ஏதுவலங்காரம்

186. ஏதுவென்பதிதனினிஃதாயதென்
றோதுவதாமெனவுரைத்தனர்புலவர்.
(எ-ன்) வைத்தமுறையானே ஏதுவென்னும் அலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) ஏதுவென்றுகூறப்படுவது இப்பொருட்டிறத்தினான் இதனிடத் திஃதுண்டாய தென்றுகூறப்படுவதாமென்று
கூறினர் அறிவுடையோ ரென்றவாறு.

187.அதுவே,
காரகஞாபகமெனவிருகாட்சிய.
(எ-ன்) இதுவும் அவ்வலங்காரத்தின்கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அச் சொல்லப்பட்ட ஏதுவெனத் தொகையானொன்றாய் நின்ற வது காரகவேது ஞாபகவேது என இருவகைப்படுமென்றவாறு.

188.அவற்றுள்,
முதலதுமுதல்வனுங்கருவியுங்கருமமுங்
காலமுமிடனுங்கண்ணியநெறித்தாய்ப்
போக்கறுபொருளொடும்புகலிருமூன்றினு
மாக்கமுமழிவுமென்றமர்தருவிரித்தே.

(எ-ன்) இஃ தவ் விருவகையினுட் காரகவேதுவின்விரித்தொகை யுணர் – ற்று.

(இ-ள்) அக் காரக ஞாபக மிரண்டனுள் முதலேவந்தகாரகவேது,முதல்வன்முதலாக இடமீறாகக்கூறப்பெறும்
ஐந்தினோடுங்கருதப்பட்ட மார்க் கத்தையுடைத் தாகியும் குற்றமற்ற பொருளோடுங்கூடி யாறுமார்க்கத்தினுமாக்கமும்
அழிவுமென்றுபொருந்தும் விரியையுடைத்தா மென்றவாறு.

189.ஏவன்முதல்வனியற்றுதன்முதல்வனென்
றாவயின்வருமுதல்வனுமிரண்டாகும்..
(எ-ன்) இஃ தவ்வாறனுள் முதலேவந்த முதல்வன்கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அக் காரகவேதுவின்கண்வரும் முதல்வனும் ஏவன் முதல்வன் இயற்றுதன் முதல்வனென விருவராவரென்றவாறு.

முதல்வன் என்பவன் கருத்தா. முதல்வனுமென்றவும்மையாற் கருவியும் முதற்கருவியும் துணைக்கருவியுமென
இரண்டாம். கருவியென்பது காரணம். இவற்றிற்கெல்லாஞ் செய்யுள்வருமாறு:-

சீதரனேநாதனெனத்தேர்ந்துலவாப்பொன்னுலகை
யாதரவாற்றன் னுலகென்றாக்கினான்-மாதரா
யெங்கண்மாறன்குருகூரெம்பிரானின்னருள்கூர்ந்
தங்கண்ஞாலத்துதித்தேயன்று. (427)
இது கருத்தாகாரகவேது. திணை-பாடாண். துறை-பழிச்சினர்ப்பரவல்.

பல்வளைக்கைச்சானகிதோள்பைம்பொற்றடக்கையால்
வில்வளைத்துமேனாளின்மேவினான்- சொல்வளையா
மெய்ம்மாதவர்சேரரிமேயவிண்ணகர்வாழ்
பெம்மானிமையோர்பிரான். (428)
இது கருவிக்காரகவேது. சொல்வளையாமெய்ம்மாதவர்-உரைதவறா வுண்மையுடையமாதவர்.
கருவி-தடக்கை. இது முதற்கருவி. வில்லும் நாணும் முதலியன துணைக்கருவி.
திணை-வாகை. துறை – வில்வென்றி. இவையிரண்டும் செய்வதன்றொழிலாக்கம்.

ஆழியுடையான்பொன்னாழிகொடுத்தேவ
வாழிகடந்தன்றடலனும்-னாழி
யளித்தலிற்கைக்கொண்டணைத்தவாகம்போன்றாவி
தளிர்த்ததுவேசானகிக்குத்தான். (429)
இது கருமக்காரகவேது. திணை – பாடாண்சார்ந்தபொதுவியல் துறை – கலன்கண்டுகளித்தல்.
கருமம் – திருவடி திருவாழியைக் கொடுத்தலாற் பிராட்டி திருக்கைகொண்டணைத்தல். இதுவும் ஆக்கம்.

போற்றிப்படைத்தபொருண்மாறனன்பரையே
போற்றிப்புறத்தபொருளிரண்டும்-வேற்றுமையாய்க்
கொள்ளாதெமையுமுடன்கொள்கென்றெதிர்ந்தவென
விள்ளாவிழிநீர்மிகும். (430)
இதுவுமது. புறத்தபொருளிரண்டும் என்பன அறனும் இன்பமும். கொள்கென் றெதிர்ந்தவென விள்ளாவென்பது
எம்மையுங் கைக்கொள் வாயாக எனப் படைத்தபொருளையுடைய காரிமாறப்பிரானன்பரை முயற்சியின்றி
யெதிர்கொண்டன என யான் வாய்திறப்ப அக்காலத்து எ-று.
விழிநீர்மிகும் – துன்பக்கண்ணீர் மிகாநின்ற வென்றவாறு. இதனுள், கருமம் வாய்திறப்ப என்றது. இது அழிவு.
இவையிரண்டும் செய்விப்பதன்றொழில். பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை-வாட்டங் கூறல். தலைவன் கூற்று

தோலாதமாவலிபாற்றொல்லுலகமூன்றுமிரு
காலாலளந்துமுனங்கைக்கொண்டான்–மேலாய
வத்தியூர்நின்றானடியார்தமக்கழியா
முத்தியூர்காட்டுமுதல். (431)
இதுவும் கருவிக்காரகவேது. இதன்பொருள் உரையிற்கொள்க. துறை-கடவுள்வாழ்த்து.

பொறிவழியேதாக்கும்புலனைந்தவித்த
வறிவழியாயோகமதனா–லெறிதிரைநீ
ராறன்றுயிலாயமர்ந்தானடிசேர்தன்
மாறன்றனக்கேவரும். (432)
இதுவும் கருமக்காரகவேது. ஆறன்றுயிலாயமர்ந்தான் என்பது ஆலமரத்தைத் தான் றுயில்கொள்ளுந்
திருவனந்தாழ்வானாகவைத் ததனிற் றுயில்விரும்பினா னென்றவாறு. ஆல் – ஆகுபெயர். திணை – வாகை.
துறை – தாபதவாகை. இவையிரண்டும் செய்வதன்றொழில் ஆக்கம் ;
இவைநாலும் அடைவே ஏவற்கருத்தாவும் கருமக்கருத்தாவுமா மெனக்கொள்க.

இமிழ்திரைநீர்ஞாலமிருள்விழுங்கச்சோதி
யுமிழ்கதிரும்புள்ளுமொடுங்க–வமிழ்தொத்
தருண்மாலையெய்தாதவர்மனம்போன்மாலு
மருண்மாலைவந்தென்மனம். (433)
இது காலக்காரகவேது. ஒடுங்க – அடங்க. மாலும் – மயக்கத்தை யெய்தும். மருண்மாலை – மயக்கத்தைத்தரும் மாலை.
திணை – பெண்பாற் கூற்றுக்கைக்கிளை. துறை – மாலையம்பொழுது கண்டிரங்கல்.

சங்கனழியாத்தமனியநாடெய்தியதும்
பொங்குபுகழ்த்தாந்தன்புலவீர்கா–ளெங்கோனாஞ்
சோதிபதமெய்தியதுஞ்சொற்றமிழ்மாறன்னருள்கூ
ராதிநகர்த்தெய்வீகத்தால் (434)
இது திடக்காரகவேது. துறை – நகரவாழ்த்து.

நந்திபுரமாலேவநன்மாருதிகொளுத்தும்
வெந்தழலால்வெந்துவிளிந்ததே–முந்தைப்
பெருவானவர்வரமும்பேரறமும்பொன்றப்
பொருவானிலங்காபுரம். (435)
இது பொருட்காரகவேது. மாருதி – அனுமான். திணை – வஞ்சி. துறை – உழபுலவஞ்சி. இது செய்விப்பதன்றொழில்.
இதற்கு மேலைச் சூத்திரத்துள்ள முதல்வனை
“ஏவன் முதல்வ னியற்றுதன் முதல்வன்” என்று ஒருபான்மேல் உயர்திணைநோக்கிவைத்தாரேனும்,
“ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே” என்பதனால் ஐந்துபாவினும் கொள்க.
இவற்றுள் முன்னதும் பின்னதும் அழிவு. இடைநின்ற இடக்காரகவேது ஆக்கம்.

கற்பனைமேற்கொண்டொழுகுங்கடைப்பிடியார்வயிற்றிருநாண்
பொற்புறுமாற்றலிற்பொறித்தபொருவருசெவ்வணிநோக்கித்
தற்பொதிவாட்டுறந்தகெழுதகைத்தாயபுனலூர
னிற்புகலால்வெஞ்சினநஞ்செனக்கூர்த்தமருணோக்க
முற்பலந்தெள்ளமிர்துயிர்த்தற்றொளிதிகழ்சீர்பயின்றனவே
அதனொடும்,

அநகனிங்கெமையாண்டருண்மகிழ்மாறன்
புனல்வறங்கூராப்பொருநையுட்புரைதீர்
தினகரோதயத்திற்செவ்விபெற்றலர்ந்த
தண்மலர்புரைதகைக்தாகு
மொண்ணுதலரிவையுவகைவாண்முகமே. (436)
இது செய்வதன்றொழிற்கருத்தாகாரகவேது. பா – தரவு. தனிச்சொல், சுரிதகம் என்னும் மூன்றுறுப்பால்
வந்த தரவுகொச்சகக்கலிப்பா. இதனுள் அழிவும் ஆக்கமும் முறையேநிகழ்ந்தமை காண்க.
பகுதி – பரத்தையிற் பிரிதல். துறை – முகமலர்ச்சிகூறல்.

புத்தேளிர்நிரப்பிகப்பான்பொருதிரைப்பாற்கடல்கடைந்து
மெய்த்தேவர்பெருமானாம்வேங்கடத்தெங்கண்ணபிரான்
புரந்தருணன்மருந்திறுத்தபுலந்துவரத்துறந்திழைத்த
வரந்தருபெண்ணமிர்தாமிம்மடவரன்மென்றோடுறந்தே
யில்லறத்தின்றொடர்புடையோர்க்கின்பமுமாதுலர்க்களிக்கு
நல்லறத்தின்றொடர்ப்பாடுநனிதருஞ்செம்பொருளென்றே
(இது தரவு. )

ஒருதலைபெற்றனனாகியுருப்பவிர்வெங்கடத்திடைப்போய்
வருபொழுதிற்பெருவறங்கூர்மணிநாவின்மம்மர்நோ
யருண்மடந்தையிலவிதழ்த்தெள்ளமிர்தருந்தத்துறந்தனவே;
அதான்று,

வேனுதல்வன்பரற்கடத்தாரிடைவேனில்வெயிற்குமையாள்
கோனுதற்கட்டழற்குளித்தமதனெனமெய்கூர்த்தநோய்
பானலங்கட்கிளிமொழிமெய்ப்பரிசத்தாற்றுறந்தனவே;
அதான்று,

உருவிலாவுருவிற்றாமுருளிலாமசரதத்தைப்
பருகுவான்புனலெனச்செல்பாலையுட்சார்ந்துளங்கொதிநோய்
திருமகளாற்பெறுமின்பத்திரையாடத்துறந்தனவே;
அதான்று,

வரையிருமருங்கினுமரீஇயவெவ்விடம்
புரைசுரத்தாரதர்ப்புக்குயிர்க்குறுநோ
யம்மென்சாயலணிமயில்பைம்பூட்
கொம்மைவெம்முலைக்குன்றிடைமுயங்கலி
னனவுகனவாநயந்துழி
நினைகலாநீளிடைநீத்தனவே. (437)
இஃ திடையிடை தனிச்சொற்பெற்றுத் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்குறுப்பினோடு
நேரிசையொத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிதுவேறுபட்டுவந்த சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பா.
இதுவும் கருவிக்காரகவேது. இதனுள்ளும் ஆக்கமும் அழிவும் கூடி வந்தமைகாண்க.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை-உண்மகிழ்ந்துரைத்தல்.

190.ஏனையதொன்றுவெளிப்படமற்றது
தானுணர்விற்புலப்படுந்தன்மையதாய்க்
காரணகாரியந்தாமுறழ்ந்துணர்த்துஞ்
சால்பினுநடைபெறுஞ்சாற்றுங்காலே.
(எ-ன்) கருத்தாமுதலாகப் பொருள் ஈறாகக் கூறப்பட்ட அறு வகைப்படுங் காரகவேது வினையுணர்த்தியொழிந்த
ஞாபகவேதுவுணர்த்து வான்றொடங்கி அதன் பொதுவிலக்கணம் உணர் – ற்று.

(இ-ள்) காரகவேதுவொழிந்த ஞாபகவேதுவென்னுமது ஒன்று வெளிப்பட்டு வெளிப்படாததொன்றை
யறிவிப்பதுவாய்க் காரணகாரி யங்கண் மாறாடியுணர்த்துமொழுக்கத்தினுங்கூடிநடைபெறுங் கூறுமிடத் தென்றவாறு.
காரகம் ஞாபகம் என்பது முறையே செய்விப்பதும் அறிவிப்பதுமா மாதலால், காரண காரிய முறழ்தலாவது
புகையுண்மையால் அதன்கீழ் எரியுண்மையை எரியினது காரியமாம்புகை அறிவித்தலெனவுணர்க.

191.எய்தியவின்பந்துன்பமிவற்றிற்
கையமில்பான்மையாக்கமுமழிவும்.
(எ-ன்) இதுவும் அவற்றிற்கோர்புறனடையுணர் – ற்று.

(இ-ள்) இங்ஙனங்கூறப்பட்ட காரகம் ஞாபகம் இரண்டிற்கு மாக்கமும் அழிவுமென்றுகூறப்பட்டன.
அவ்வேதுக்களாலெய்தும் இன்பந் துன்பங்களா மென்றவாறு.

அணியார்மென்றோளுமயில்விழியுஞ்சற்றுந்
தணியாதிடந்துடிக்குஞ்சால்பான்–மணிமாடக்
கோயிலார்வெற்பிற்கொடியிடையாய் வைகறைநம்
வாயிலாங்காவலர்தேர்வந்து (438)
இது காரணங்கண்டு காரியம்புலப்பட்ட ஞாபகவேது. பகுதி – வரைபொருட்பிரிதல்.
துறை – ஏதுக்காட்டி வருத்தந்தணித்தல். தணியா தென்றல் – இடைவிடாதென்றல். ஒழிந்த அகலம் உரையிற்கொள்க.

காவிநெடுங்கண்சிவப்பக்காமருசெவ்வாய்விளர்ப்ப
வாவிதளிர்ப்பதுவுமன்றியே–யோவியமே
வண்ணந்தனில்வெயர்ப்புமாறனார்பூஞ்சிலம்பிற்
றண்ணஞ்சுனையேதரும். (439)
இது புணர்ச்சியாலுண்டான தோற்றப்பொலிவாங் காரியம் ஞாபக வேதுவாய்ப் புணர்ச்சியாகிய காரணத்தை யறிவித்தது.
பகுதி – நாண நாட்டம். துறை – புணர்ச்சியுரைத்தல்.

192.இருளறவறிவிப்பனவாமேதுவும்
பொருளிடம்வினைபண்பவற்றொடும்புணரும்.
(எ-ன்) இது ஞாபகவேதுவின்கூறுபா டுணர் – ற்று.

(இ-ள்) முற்கூறிய ஞாபகவேது என்பதும் பொருள், இடம், வினை, பண்பு என்னும்
நான்கினோடும் பொருந்துவனவாம் என்றவாறு.

தேக்குகதிர்வெய்யோன்றினமும்பகனாடிப்
போக்குவரவுபுரிதலாற்–காக்குந்
திருநாரணனுளனாஞ்செம்மையுணர்வித்தான்
குருநாதனாகியவெங்கோன். (440)
இது பொருண்ஞாபகவேது.

(இ-ள்) உலகமெங்கும் நிறைக்குங்கிரணங்களையுடைய ஆதித்தன் பகல் இரவு என்னும் பொழுதிரண்டினுள்
இரவின் கண் மறைந்து பகற்பொழுது ஒருகணமு மேறாது குறையாது விதித்தநாழிகையுள் ஒடுங்கி மீளவுங்
காலையிற்றோன்றினானாகலான் நாராயணனென்று ஒருபரனுள னென்பதையும், அவனியமித்தபடி
இக்கதிரோன் நடவாநின்றானென்பதையும் குருநாதன் ஏதுக்காட்டி யெமக்கு அறிவித்தா னென்றவாறு.

இதனுள், பொருளாகியஞாபகம் ஆதித்தியன். திணை – வாகை. துறை – அறிவன்வாகை ;
திணை-பாடாண்…… குரவனைவாழ்த்தலுமாம்.

ஓங்கொலிநீர்ஞாலத்தையுண்ணாதுயக்கோடல்
பூங்கமலவுந்தியுடைப்புண்ணியன்ற–னீங்காத
வாச்சினைகாணென்றேயறிவித்தானாரியனாங்
கோச்சரிதைநீங்காக்குணன். (441)
இஃ திடஞாபகவேது. இதன்பொருள் மேலையதுபோலக் குறித்துணர்ந்து கொள்க.
ஈண்டுரைப்பிற் பெருகும். துறை – இதுவுமது.

முன்னொருகைக்குஞ்சரமாய்மூரிப்பிணையாகி
மின்னிடையெங்கென்றுவினாயதாற்–றென்னனந்தை
மால்வரைமேலின்றிவர்தம்வாய்மையெலாம்வஞ்சமெனச்
சால்புடையநெஞ்சேதரி. (442)
இது வினைஞாபகவேது. அஃதேன் முன்னையவிரண்டு மிது போலப் போக்குவரவுபுரிதலும்
உண்ணாததூஉங் கிரியையாயன்றே ஞாபகவேதுவாய தாதலால் அவற்றையும் வினைஞாபகவேதுவென்னாத
தென்னையெனின்? அஃதே, நன்றுசொன்னாய் ! அவை கிரியையே யாயினும் பொருளோடும் இடத்தோடும்
சார்த்திக் கொள்ளநின்றனவாதலாற் பொருளும் இடனும் வசனமின்றி ஞாபகவேதுவாயிற்று.
இஃதன்னதன்று. வசனமாகியகிரியை ஞாபகவேதுவாயிற்று ; என்னை? மின்னிடையெங்கென்ன அயல்பட
வினாயதாலென்றறிக. அன்றியும், காரகவேது விற்கும் வினைகூடாதே யேதுக்கள்கூடாதெனவுணர்க.
இதன் பொருள் உரையிற்கொள்க. பகுதி-இருவருமுளவழியவன்வரவுணர்தல்.
துறை-அறிவுநாடல் ; அயல்படவினாதலுமாம்.

ஆய்ந்ததமிழ்மாறனணிவரைமேலின்றொருவர்
பூந்தழைகொண்*டொன்றுபுகலாமுன்–வாய்ந்த
புதுமலர்ச்சிகொண்டதிந்தப்பொன்வதனமென்றா
னொதுமலர்மேலானதிவணோக்கு. (443)
இது பண்புஞாபகவேது. வாய்ந்தபுதுமலர்ச்சியென்பது உள்ளக் குறிப்பைத்தோற்றுவித்த புதிதாயமலர்ச்சி யென்றவாறு.
நொதுமலர் – அயலாவார். நோக்கு – உள்ளக்குறிப்பு. பண்பு – முகமலர்ச்சி.
பகுதி – குறையுறவுணர்தல். துறை – அவள்குறிப்பறிதல்.

ஆக ஞாபகவேது பொருள் முதலாகப் பண்பு ஈறாக நான்கும் அடைவே கண்டுகொள்க.
அவற்றொடும்புணரும் என்ற வும்மையாற் பிறவிடங்களோடும் வருவனவும் உள. அவையும் வந்தவழிக்கண்டு கொள்க.
193. இன்மையுமதன்கணெய்துதலுரித்தே.

(எ-ன்) இதுவும் அவ்வேதுவினை விரித்துணர்-ற்று.

(இ-ள்) இல்லாததன்மையவும் ஆகிய அவையும் அவ்வேதுவின் பாற்பொருந்துதற்குரித்து என்றவாறு.

இன்மையென்பது ஒன்றின் இல்லாமை. தண்டியாசிரியர் அபாவ மென்பதும் இது.

194. அதுவே*
ஒன்றினொன்றின்மையுள்ளதனின்மை
* டென்று – பிரதிபேதம்.
யென்றுமின்மையினோடின்மையினின்மை
யழிவுபாட்டின்மையோடைந்தாகும்மே.
(எ-ன்) அவ் வின்மையை விரித்துணர்–ற்று.

(இ-ள்) அவ் வின்மையென்னுமது, ஒன்றின்கண் ஒன்றினதின்மையும், ஓரிடத்தும் ஒருகாலத்தும் உள்ள பொருள்
பிறிதோரிடத்தும் பிறிதோர்காலத்தும் இன்மையும், எக்காலத்தும் இன்மையும், இன்மையான் இன்மையும்,
முன்புள்ளது அழிவுபட்டின்மையும் என்பதனோடு ஐந்தாகும் என்றவாறு. இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-

புல்லறிவாளரைப்புல்லாரறிஞரப்புல்லறிவு
நல்லறிவாளர்தமைக்குறுகாமறைநாலினுட்பச்
சொல்லறிவாற்றமிழ்தேர்மாறனன்னகர்ச்சூழ்பொருட்குச்
செல்லறிவாளர்சொற்கோடாதழுங்கலொண்சேயிழையே. (444)
இஃ தொன்றினொன்றின்மைஎன்னை? ஒன்றின்கண் ஒன்றின்மையும் அதன்கண்ணும் அஃதின்மையுமாயினமையான் அறிக.
சூழ் பொருள் – அறனும் இன்பமும் தருமென விசாரித்தபொருள். பகுதி-பொருள்வயிற்பிரிதல்.
துறை – பருவநினைந் தாற்றாளாயதலைவியைத் தோழி வற்புறுத்தல்.

இன்றிருந்துநாளையிறப்போர்பெயரினையு
மன்றுதொறுமேந்திமறுகினவே–யன்றொருகாற்
சேமந்தரித்ததிகிரித்திருமலையா
னாமந்தரித்தறியாநா. (445)
இஃ துள்ளதனின்மை. என்னை? இவ்வுலகத்து இப்பொழுதி னுள்ளகிரியையானது முற்பிறப்பில் ஒருகாலத்தும்
இல்லாதகிரியையை யறிவிப்பதாலென்றறிக. திணை – பாடாண்சார்ந்தபொதுவியல். துறை – பரவார்ப்பழித்தல்.

கள்ளார்பசுந்தண்டுழாய்மாதவன்கடிகைச்சிலம்பி
னுள்ளார்பிறதெய்வமென்றுமுள்ளாரென்பதுள்ளிநடுத்
தள்ளாமறலிதன்றூதரைக்கூவித்ததியர்வரி
னெள்ளாதிறைஞ்சியயற்போமினென்னுமிரந்திரந்தே. (446)
இஃ தென்றுமின்மை ; என்னை? திருமால்கடிகைச்சிலம்பினுள்ளா ராகியதொண்டர், பிறதெய்வம் என்றும்
உள்ளாராயினாராகையால் அவர் இன்றும் உள்ளாரென்பது தொனியினாற்கொள்ளக்கிடந்தமையின், என்றுமின்மையாயிற்று.
இதற்கு என்றுமுள்ளித்தொழாரென்பது இன்று முள்ளித்தொழாரென்பதறிவித்தற்கு ஏதுவாயிற்று.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பரவல்.

கல்லாற்கடலடைத்தகண்ணன்பேர்கல்லாநா
ளில்லாதவர்க்கினிமேலில்லையே–நல்லார்கள்
சூழ்ந்தேதுதியமிர்திற்றோய்வதல்லாற்றீநரகில்
வீழ்ந்தேபதைக்கும்விதி. (447)
இஃ தின்மையினின்மைகண்ணன்பேர் இச்செனனத்துக் கல்லா நாள் இல்லாதவர்க்கு மேல் எரிவாய்நரகத்து
வீழ்ந்துபதைப்பதில்லாததினால் அறிக. நல்லார்கள்சூழ்ந்தேதுதியமிர்தம்-பரமபதம்.
திணை – இதுவுமது. துறை – ஓம்படை. ஆதலாற் றொண்டர்காள் இக்காயம் இருக்கப் பெற்றபொழுதே
அவன் திருநாமத்தை வீழ்நாள்படாமைச் சொல்லுவீராக என்பது பயன்.

மானிடரைவாழ்த்துமதியின்மைதீர்ந்ததற்பி
னீனநிலைதீர்ந்ததெனைவிட்டே–போனதற்பின்
மன்னெறியேநின்றுமகிழ்மாறனாரைத்துதிக்கு
நன்னெறியேபெற்றுளநன்னா. (448)
இஃ தழிவுபாட்டின்மை ; என்னை? மானிடரை உண்டிப்பொருட்டால் வாய்மையிழந்துவாழ்த்தும் அறியாமை
யென்னிடத்தில்லையான தேதுவாக வென்னிடத் தீனமென்றிகழப்படும் இரப்பென்பது என்னை விட்டுநீங்கியது ;
நீங்கியபின்னர் நிலைபெற்றமார்க்கத்திலேநின்று காரிமாறப்பிரானைவாழ்த்தும் நல்லமார்க்கமேபெற்று வாய்மை
படைத்தது எனது நன்னா என்றதனால் அறிக. திணை – வாகைசார்ந்தபுறத்திணை(யுள்) துறை – புலமைவென்றி.
இன்மைய தேதுவைந்தும் அடைவே காண்க. இவையும் ஞாபகவேதுவின்பாற்படும்.

195. காரியமுந்துறுகாரகங்காரண
காரியமொருங்குறுகாட்சியுத்தமு
மயுத்தமுமெனமேலறைந்ததோடொன்றும்.
(எ-ன்) இது மேலேகூறிய காரகவேதுவைப் பிறிதொருவகையான் வகுத்துணர் – ற்று.

(இ-ள்) காரியமுந்துறுகாரகம் முதலாயநான்கும் ஒருவகைக்காரக வேதுவின்பாற்படு மென்றவாறு.

பொன்மேதகுநற்பொருளென்றேதேர்ந்துரைக்கு
முன்னேநெடுமாயன்மோகூர்வாழ்–மின்வாடைத்
தண்டுளிவந்தாற்றணந்தார்தம்முயிரையுண்குமெனக்
கண்டுளியாநொந்தனளாகம். (449)
இது காரியமுந்துறுகாரகவேது. இதனுள், தேர்ந்துரைக்குமுன்னே யென்றது தேர்ந்துரைக்கும் உரை கூடுமுன்னேயென்றவாறு.
தணந்தார் – தலைவரைப்பிரிந்தார். கண்டுளியா – கண்ணீரைத்துளித்து. பகுதி – பொருட்பிரிதல்.
துறை – வாட்டங்கூறல். தலைவன்கூற்று. தோழி முன்னிலை.

தெண்முத்தமிழ்மாறன்றென்குருகூர்ச்சேயிழைக்குன்
உண்முற்றியபோக்குணர்த்துரையிற்–கண்முத்
துடனேவருமென்றாலொண்பொருட்குமேகல்
கடனேயிறைவாகழறு. (450)
இது காரணகாரியம் ஒருங்குநிகழேது. உண்முற்றியபோக்கு – உள்ளமொருமித்தசெலவு.
கண்முத்து – கண்ணீர்த்துளியாகியமுத்து. உடனேவரும் – ஒக்கவரும்.
ஒண்பொருட்குமேகல் – ஒள்ளியபொருளாயினும் அதற்குப் பிரிதல். கடனேயென்றது முறையன்றென்றவாறு.
ஏகாரம் – எதிர்மறை ; ஒழியிசையெனினுமாம். உம்மை – சிறப்பும்மை. பகுதி – இதுவுமது.
துறை – ஆற்றாமை கூறிச் செலவழுங்குவித்தல். தோழிகூற்று.

மாயிருஞாலந்தழைப்பவாசமகிழ்மாலை
ஞாயிறுமெய்வேதநலன்சிறந்த–வாயிரப்பாத் (439)
தூயகதிர்விரித்துத்தோன்றலாற்றொண்டரகத்
தாயவிருடீர்ந்தன. (451)
இது, யுத்தவேது. இதனகத்து உருவகவாய்பாடும் விரவிவந்தவாறு காண்க.
அவை மகிழ்மாலைஞாயிறு, ஆயிரப்பாத்தூயகதிர், தொண்டரகத்தாயவிருள் என்பனவாம்.
இவற்றுள் முதலும் ஈறும் ஏகதேசவுருவகம். மகிழ்மாலைஞாயிறு – மகிழ்மாலைமாறனாகிய ஞாயிறு.
அகத்தாயவிருள் – அறியாமையாகியவிருள். துறை – பழிச்சினர்ப்பரவல் ; கடவுள்வாழ்த்துமாம்.

நற்பால்விழைந்தபுகழ்நாவீறன்மெய்வேத
முற்பாடல்வாய்மைமுழுதடக்குஞ்–சொற்பா
வுரைமலர்ந்ததூய்மதியாற்கற்றோருளத்தா
மரைமலர்ந்தமன்னோமகிழ்ந்து. (452)
இஃ தயுத்தவேது.
இதனுள் நற்பால்விழைந்தபுகழ் நாவீறனென்பது நல்லறத்தின்வழியொழுகினோர்விரும்பப்பட்ட நாவீறுடையபிரான் எ-று.
நற்பால் -ஆகுபெயர். சொற்பாவுரை கீர்த்தியோடுகூடிய பாக்களாற்றோன்றின நூல் ; அது திருவாய்மொழி.
தூய்மதியாலென்பது திருவாய்மொழியினிடத்துப் பரந்த தூயஞானமாகியமதி உதித்தலால் எ-று.
கற்றோருளத்தாமரை மலர்ந்தமன்னோ மகிழ்ந்து என்பது கற்று வல்லோர் இதயதாமரை மிகவும் மகிழ்ச்சியோடு மலர்ந்தன எ-று.
துறை – பாடாண்சார்ந்தபுறத்திணையிற் பனுவல்வாழ்த்து.

196.உணர்வுறினையவேதுவுமுளவே.
இதுவுமது.

(இ-ள்) அவ்வேது ஐயவேதுவினும் வருவதுண்டு என்றவாறு.

வேயாலிசைதந்தமால்பரமேச்சுரவிண்ணகர்வாய்த்
தோயாதரவுற்றுனைப்பிரிந்தாலினித்தோயுந்தன்மை
யேயாதெனநினைந்தோநெடிதாமெல்லையெய்துகிலின்
மாயாப்பழியெய்துமென்றோநைகின்றதுவாணுதலே. (453)

இஃ தையுறவேது. இதனுள் இனிப் புணர்ச்சிகூடுந்தன்மை பொருந்தாதெனவிசாரித்தோ,
அல்லது (நெடிதாமெல்லையெய்துகில்-) நெடும்பொழுதெய்துமாகில் (இன்மாயாப்பழியெய்து மென்றோ-)
நுமது குடிக்கு நீங்காத அவகீர்த்தியுண்டாமென்றோ (நைகின்றது வாணுதலே-)
இவ்விரண்டினுள் வருந்துகின்றதற்கேது யாதுதான் என்றவாறு. பகுதி – இயற்கை. துறை – பருவரலறிதல்

31-வது ஏது முற்றும்.

——-

32-வது சுவையலங்காரம்.

197.பொறியுணர்வொடுமொருபொருளினையெதிர்ந்த
நெறியுடைமனத்துணிகழ்தரும்பான்மை
யயலவருறப்புறத்தாய்ப்பொருளெட்டி
னியல்வதுசுவையென்றியம்பினர்புலவர்.
(எ-ன்) வைத்தமுறையானே சுவையென்னுமலங்காரம் உணர்-ற்று.

(இ-ள்) இந்திரியங்களினறிவினோடும் யாதானுமொருபொருளைக் காணப்பட்ட மனத்துள் அப்பொருள் ஏதுவாக
நிகழ்ந்ததன்மை நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப்புலப்படுவதோராற்றான் வெளிப்பட மெய்ப்பாடெட்டாற் றோன்றுவது
சுவையென்னும் அலங்காரமா மென்றவாறு.

பொருளென்பது மெய்ப்பாடு. இயல்வது – உண்டாவது. பொருளெட்டின் இயல்வது சுவையென்பது
பொன்னினியன்றகுடம் என்பது போலக்கொள்க.

198.அவைதாம்,
பெருமிதநடுக்கமழுகையிளிவர
லுருத்திரநகைவியப்புவகையென்றாகும்.
(எ-ன்) மேற் பொருளெட்டின் இயல்வது என்றார், அவ்வெட்டும் இவையென்பது உணர் – ற்று.

(இ-ள்) பொருளெட்டென்னும் அவைதாம், பெருமிதமுதல் உவகையீறாம் இவ்வெட்டுமாம் என்றவாறு.

திருமால்பரனெனவேதேற்றுதற்கன்பாக
வருமாரியன்றனையிம்மண்மேற்புலவீ
ரொருமானிடனென்றுணராதவனெம்
பெருமானாமென்றுணர்ந்தப்பெம்மானருள்கூர்
பத்தர்தம்மடியிணைபரவுமினதுவே
யுத்தமவிலக்கணமுரைசான்
முத்தியைவிளைக்குமுயற்சியுமஃதே. (454)
இது கல்விபற்றியபெருமிதம். பா – மருட்பா. திணை – பாடாண். துறை – செவியறிவுறூஉ ; ஓம்படையுமாம்.

நாராயணனேநமவென்றுரைப்பவர்பால்
வாராவொருநாளும்வல்வினைகள்
சாரானொருநாளுஞ்சண்டதரன்சாராவாம்
பேராதமாயப்பிறப்பு (455)
இதுவுமது. என்னை? “கல்வி தறுக ணிசைமை கொடை யெனச், சொல்லப் பட்ட பெருமித நான்கே” என்பதனால் அறிக.
பா – “வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும்” என்ற செய்யுளியற்சூத்திரத்துள் வெண்பாவிற்கு ஈறுணர்த்தப்புகுந்து
முச்சீர்த்தென்னாது ஆகும் என்று ஆக்கங்கொடுத்தமையான் அத்துணை ஆக்கமின்றி இடையினும் முச்சீராய்
அவ்வீற்றுச்சீர் அசைச்சீராகாதுவருமென் றுட்கொண் டுணர்த்தினார் தொல்லாசிரியர் ;
அங்ஙனம் தனிச்சொல்லுமின்றிவந்ததோர் வெண்பாவில் விகற்பமாம். இங்ஙனம்வருவதனை அதன்பின்னர்
வரும் ஒருசாராசிரியர் சவலைவெண்பாட்டென்றும் பெயரிட்டுவழங்குவதாம் ; என்னை?
“நனியிரு குறளாய் நான்கடி யுடைத்தாய்த், தனிவரலில்லது சவலைவெண் பாட்டே” என்பதனாலும் உணர்க.

கீலாலங்குளிறுதிரைகெழுகடன்முற்றகன்ஞாலத்
தாலாலமிசைபவளவருவரையுங்கருவரையுந்
தமிதமியென்னதுவெனலாந்தவலருமாண்டொழிற்றன்மை
யெமதெமதென்றெதிருநரின்னுயிர்செகுத்தீத்திருநோக்கிற்
கடைசிவந்துகருமையவாய்க்கவின்பெறுவார்குழைபோழ்ந்த
வடிபுரைமாண்மதர்மலர்க்கண்மதிபுரைவாணறுநுதாஅல்;

இடந்தழுவுங்குனிசிலைக்கையிகன்மறவர்கொடுங்கணையோ
டுடன்றெழிலென்சுடர்வடிவேற்குணவாதலொருதலையாற்
றொடர்ந்தெழுநின்றமரேற்செண்பகமாறன்றுணையடிசேர்
திடந்தழுவுததியரெனத்தெருளுறநன்கருளுவனே;

வாட்டானைத்துறுமறவர்வயிரவழற்பிழம்புகுகட்
கோட்டானையுடன்வரிலென்கூரிலைவேலவர்மார்பிற்
றீட்டாநைவினையளிப்பனுமரேற்றிவ்வியதுளபத்
தோட்டானைத்தொழுமாறன்றொண்டரினன்கருளுவனே;

குளிர்மதிவானகடுரிஞ்சுங்கொடித்தேரின்குழுவினொடு
மொளிதிகழ்வன்படைமறவருடங்கெழின்வைந்நுதிவேலாற்
களிபயில்வெந்தொழில்புரிவனுமரேல்வண்கருணேச
னளிதிகழ்தேமகிழ்மாறனடியரினன்கருளுவனே;
எனவாங்கு,

காணுதிகாணுதிகனலிதெற்கெழினுந்
தாணுவினிலைதவறினுந்தவறாவுரை
குன்றுசூழ்கூர்ம்பாற்கொடுநெறிக்
கொன்றுநீயழுங்கஞருறலேகுதியே. (456)
இது தறுகண்மைபற்றியபெருமிதம். பகுதி – உடன்போக்கு. துறை – அடலெடுத்துரைத்தல்.

கொன்றேன்கொடுவினையைக்கூற்றுவனாராட்டமெலாம்
வென்றேனினிநரகில்வீழ்கலேன்–சென்றுமறை
தேடிப்பிடித்ததிருமாலேதெய்வமென
நாடிப்பிடித்ததனானான். (457)
இதுவும் தறுகண்மைபற்றியபெருமிதம். திணை – வாகை. துறை – சால்புமுல்லை.

அரியாயவன்பரனாமென்பதாதியிலன்றழைத்த
கரியாலுமுண்மையுறாரிதென்னோகற்றுணர்ந்துசெம்பொன்
உரியார்கடைசென்றிரப்பவரோடொன்றெனவெனையுஞ்
சிரியாதருள்செய்தவாமகிழ்மாலிகைத்தேசிகனே. (458)

——————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading