https://www.tamilvu.org/node/154572?linkid=118853
சிறப்புப்பாயிரம்
இனிச் சிறப்புப்பாயிரமாவது பதினொருவகைத்தாம். அவை வருமாறு.
60.எல்லைவழிநுதலியபொருள்யாப்பே
நூற்பெயர்நுவல்வோன்பெயர்காரணம்பயன்
காலங்கேட்போர்களனெனப்பதினொரு
பால்புணர்த்துரைப்பதுசிறப்புப்பாயிரம்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று.
(இ-ள்) எல்லையும், வழியும், நுதலியபொருளும், யாப்பும், நூற்பெயரும், நூனுவல்வோன்பெயரும்,
காரணமும், பயனும், காலமும், கேட்போரும், களனும் என்னும் பதினொருபகுதியாகச் சேர்த்துக் கூறுவது
சிறப்புப்பாயிரமா மென்றவாறு.
புணர்த்துரைப்பதென்ற விதப்பினால், நூல்செய்தோன் வழிபடு தெய்வத்தினையும்,
தெய்வமென்பதும் ஒன்றுளதென் றுண்மையுணர்த்திய அவனது ஞானாசாரியனையும்,
அவன்றாதையையும், குலத்தினையும் பதியினையும், அப்பாயிரத்துட் கூறுவதும் வரலாற்று
முறைமையினான் மரபெனக் கொள்க. எனவே பதினாறென்ப துட்கோள்.
இனிச் சிறப்புப்பாயிரத்தினதிலக்கணஞ் செப்புமாறு :-
61.சிறப்பினதியல்பேதெரியினூனுதலிய
திறப்படுபொருளைத்தன்னகத்தடக்கி
யகவலின்வெள்ளையினறைவதொன்றாகும்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தி னிலக்கண முணர்-ற்று.
(இ-ள்) சிறப்புப்பாயிரத் திலக்கணத்தை யாராயுமிடத்துப் புலவனா லுரைக்கப்படும் நூனுதலிய பொருளை
யெல்லாங் குறிப்புரையானன்றி வெளிப்படையாக அடக்குவாய்செய்து ஆசிரியத்தானாதல் வெண்பாவானாதல்
கூறத்தகுவதொன்றா மென்றவாறு. சிறப்பென்ற தீண்டொன்றற்குரிய தென்பதாம்.
62.கலைகள்யாவையுங்கற்றுரைதெளிந்து
துலைநாச்சமனிற்றுணிநிலைபுரியும்
வாய்மையும்பிறர்க்கவைமயர்வறவளிக்குந்
தூய்மையுஞ்சான்றதுணையிலனெனினு
மொல்காப்பதினெண்ணுறுப்புடைநாற்பொருட்
பல்காப்பியம்பழிப்பறநவம்புணர்க்கவு
முத்தமிழ்க்கல்வியுமுத்தமவாக்கின்
வித்தகக்கவிதையும்வேண்டினனாகிலுந்
தற்புகழ்தலும்பிறன்றன்னையிகழ்தலும்
பொற்பலவாகும்புலனுடையோர்க்கே.
(எ-ன்) நூல்செய்தான் பாயிரஞ்செய்வானல்ல னென்பதுணர்-ற்று.
(இ-ள்) இலக்கண இலக்கியங்களை முற்றப் பாடம்போற்றி யுரையைச் சந்தயமறத் தெளிந்து
துலைநாப்போன்றும் துலாக்கோற்சமன் போன்று மையமுற்றபொருளை யையமறக் கேட்டோர்க்குணர்த்து
மொப்பிலாதானா மெனினும் எழுத்தாகிய வைந்திலக்கணங்களையும் பதினெட்டுறுப்போடு நாற்பொருள்
பயப்பதாய பெருங்காப்பியங்களையுங் குற்றமறப் புதிதாய்ப் பாடல்சான்றவனா மெனினுந் தன்னைப் புகழ்தலும்
பிறனொருவனை யிகழ்தலு முணர்வுடையோர்க் கழகல்ல வென்றவாறு.
இன்னும், “தோன்றாதோற்றித்துறைபலமுடிப்பினுந்தான்றற்புகழ்ந்தறகுதியன்றே” என்பதனாலுங் கொள்க.
63.பன்னருஞ்சிறப்புப்பாயிரம்பகர்வோர்
தன்னுயிர்பேணுஞ்சதிராசிரிய
னொருபுடைகற்றவுயர்மாணாக்கன்
றன்னொடுகற்றதலைமாணாக்க
னுரைகாரணனெனுமுரனுடையோரே.
(எ-ன்) பாயிரஞ் செய்தற்குரியோரை யுணர்-ற்று.
(இ-ள்) கூறுதற்கரிய சிறப்புப்பாயிரங் கூறுதற்குரியோரிந் நால்வரு ளொருவராமென்பது.
அந்நால்வருள்ளு மிப்பாயிரஞ்செய்தா ரிந்நூற் குரைசெய்த திருமேனி யிரத்தினகவிராயனென்றுணர்க.
நூலாசிரியர்க்கு மாணாக்க னென் பதனாலுமாம்.
‘உலகம்யாவையும்………. புலமையோனே’.
(எ-ன்) அலங்காரத்தினது பெருந்தன்மையு மிந்நூற்குச் சிறப்புப் பாயிரமு முணர்ற்று.
உலகம் யாவையு மென்பது முதல் வடவேங்கட மென்னு மத்துணையு மொருதொடர்.
இதனுள், உலகமென்பது “மூன்றுதலையிட்ட முப்பதிற்றெழுத்தி, னிரண்டுதலையிட்ட முதலா………
மெய்யேயுயிரென் றாயீரியல” என்பதனால் உயிர்முதன் மெய்யீற்றுமொழியாயிற்று.
உலகம் யாவையு மென்பது “உயிரிறுசொன்முன்னுயிர்வருவழியு, முயிரிறுசொன்முன்மெய்வருவழியும்………
மென், றாயீரியல புணர்நிலைச் சுட்டே” என்பதனாலும்,
“அவற்றுள், நிறுத்த சொல்லினீறா கெழுத்தொடு, குறித்துவருகிளவி முதலெழுத்தியையப், பெயரொடு
பெயரைப் புணர்க்குங்காலு…………. மூன்றே திரிபிடனொன்றே யியல்பென, வாங்கந்நான்கேமொழிபுணரியல்பே”
என்பதனாலும் இவை உயிர்முதன் மெய்யீற்றுமொழி நிற்ப மெய்ம்முதன் மெய்யீற்றுமொழி வரு மொழியாய்ப் பெயரொடு
பெயரைப் புணர்ப்பதாய் “வேற்றுமைமப்போய் வலிமெலியுறழ்வு, மல்வழியுயிரிடைவரினியல்பும்முள” என்பதனால்
அல்வழிக்கண் ணிலைமொழியீற்று மகரம் வருமொழி முதல் யகரத்தோடு புணர்ந் தியல்பாயது.
யாவையுமுறு வென்பது “புள்ளியில்லாவெல்லாமெய்யும்,………. ஆயீரியலவுயிர்த்தலாறே” என்பதனால்
அல்வழிக் கண் ணேனையுயிரோ டுருவுதிரிந்துயிர்த்தது. இது எட்டிறந்த பல வகையுட்கூட்டம்.
உறுபய னென்பது “மூன்றாறுருபெண்வினைத்தொகைசுட்டீ, றாகுமுகரமுன்னரியல்பாம்” என்பதனால்
வினைத்தொகை வாய்பாட்டு முற்றுகரத்தின்மேல் வருபகர மியல்பாயது.
பயன்விளையென்பது “ணனவல்லினம்வரட்டறவும்பிறவரி, னியல்பு மாகும்வேற்றுமைக்” கென்பதனால்
வேற்றுமைப்புணர்ச்சிக்கண் ணிடை யினம்வர னகார மியல்பாயது.
விளைப்பானென்பது “பெயரெச்ச வினையெச்ச வாய்பாடுகளும் பொருண்முடியுமாறறிந்து பகுதி விகுதி யாக்கி
யிடைநிலையும் வேண்டுழித் தந்துமுடிக்க” வென்பதனால் விளைக்கவேண்டி யென்னும் பொருண்மை
தோன்ற விளையென்னும் பகுதியை முதல்வைத்து அதன்மேல் “என்பவும்பிறவும், வினையின்விகுதி” யென்பவற்றால்
பானென்னும் விகுதியை நிறுவிப் “பவ்வமூவிடத்தைம்பாலெதிர்பொழு, திசை வினையிடைநிலை” என்பதனாற்
பகரவிடைநிலையை மிகுத்து முடிக்க
விளைப்பானல கென்பது “புள்ளியீற்றுமுன்னுயிர்தனித்தியலாது, மெய்யொடுஞ்சிவணுமவ்வியல்கெடுத்தே” என்பதனால்
னகரவொற்றியல் பாய்நிற்க வதன்மேல் அகரமேறி முடிந்தது. இதுவுங் கூட்டம்.
அலகிலென்பது “குற்றியலுகரமுமற்றெனமொழிப” என்பதனால் நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம்
புள்ளியீறுபோல வருமொழிமுத லிகரவுயிரேற இடங்கொடுத்தது. இம்மாட்டேற் றொருபுடைச்சேற லென்றுணர்க.
அன்றிக் குற்றியலுகர மழிந்ததெனிற் பொருள் வேறுபடும். அஃதுரையன்றென்க.
இது குறைவுங் கூட்டமு முடனொன்றியது. கருவி-அகக்கருவி. என்னை?
நிலைமொழியீற்றுகரம் வருமொழிமுத லிகரமேற இடங்கொடுத்தலா லென்றுணர்க.
அலகில்சோதியென்பது “அல்வழியெல்லாமுறழெனமொழிப” என்றாராகலின் லகாரம் அல்வழிக்கண் வல்லினம்வர வியல்பாயது.
சோதியணி யென்பது “இ ஈ ஐ வழியவ்வு” மென்பதனால் யகர வுடம்படுமெய் பெற்றது. இது புறப்புறச் செய்கை.
அணிகிள ரென்பது “அல்வழி இ ஐ முன்னராயி, னியல்பு மிகலும் விகற்பமுமாகும்” என்பதனால்
இகரவீற்று வருமொழி முதல் வல்லினம் அல்வழிக்கண் ணியல்பாயது.
கிளர்திரு வென்பது “ஆவியரழவிறுதிமுன்னிலைவினை, யேவன் முன்வல்லினமியல்” பென்பதனால்
வினைத்தொகைவாய்பாடு மேவல் வினைபோறலின் அல்வழிக்கண் ரகாரமுன் வல்லின மியல்பாயது.
திருவுரு வென்பது “ஏனையுயிர்வழிவவ்வு” மென்பதனால் வகர வுடம்படுமெய் பெற்றது. செய்கை – இதுவும் புறப்புறச்செய்கை.
இனி உலகம் என்பது பலபொருள்குறித்த ஒருசொல்லாயினு மீண்டுச் சிறப்புடையுயிர்கண்மே னின்றது.
உலகம் யாவையு மென்பது “பெயரினாகியதொகையுமாருளவே” என்பதனாலும்,
“காலமுலகமுயிரேயுடம்பே,… பால்பிரிந்திசையா வுயர்திணைமேன” என்பதனாலும்
ஆபல என்பதுபோலப் பிறிதோர்பயனோக்காது உயிர்களோ டமைந்து ஆகிய வென்னும் பண்புத்தொகைவாய்
பாட்டோடும் எல்லாமென்னு மஃறிணைப் பன்மைமுற்றுப் பெயர்ப் பயனிலைக் கொண்டது.
யாவையு மென்னும் பயனிலை தானே யெழுவா யுருபாகி மிகுந்த வென்னும் வினைத்தொகை
முதனிலையாய்த் தன்னெச்சமான வூதியமென்னும் பெயரோடும் வினையெச்சவாய்பா டேற்றது.
அலகில் சோதியென எண்ணையுணர்த்தும்பெயரொடும்புணர்ந் தாகிய வென்னும் பண்புத்தொகை
வாய்பாட்டான் வினையெதிர்மறுத்த பெயரெச்ச வினைக்குறிப்பு, தன்னெச்சமாகிய சோதியென்னும்
பெயரொடு முடிந்தது. “கோளில்பொறியில்”, “கோட்டமில்கட்டுரை” என்பனவுமிது.
சோதியணிகிளர்திருவுரு வென்பது உவமைத்தொகை, உம்மைத்தொகை, வினைத்தொகை யொற்றுமை நயம்
பெற்று மூன்றாவதன்றொகைப் புறத் தும்மைத்தொகையுமுற் றன்மொழித்தொகைப் பெயர்ப்பயனிலை கொண்டது.
உறுபய னென்பது உரிச்சொல்லடையோடுங் கூடிய பண்புப்பெயரெனினுமாம் ;
‘நள்ளிருட்கிடந்தேன்’ என்பதுபோலும். உறுபயன் முத்தி. அணி-கௌத்துவமணி. இவை ஆகுபெயர் ;
என்னை? “அவை தாந், தத்தம்பொருள்வயிற் றம்மொடுசிவணலும்” என்பதனா லறிக.
இனி, “எல்லாத்தொகையுமொருசொன்னடைய” என்பதனால் இம்முத லீரடியுள் உலகம் யாவையு மென்பது
இருமொழித்தொடர்த்தொகைச் சொல்.
உலகம் யாவையு மென்பது முதல் திருவுருவென்ப தீறாயின பன்மொழித்தொடர்த் தொகைச்சொல்.
அவற்றுள்ளும் அலகில் சோதி யணிகிளர்திருவுரு வென்பன அறுவகைத்தொகையு மோ ரள வடிக்கண்ணே யொருங்குதொக்கன.
என்னை? அலகிலவாகிய சோதி களி னொளியைப்போலு மொளியையுடைய வணியையுந் தழையாநின்ற திருவோடுங்கூடிய
திருமேனியையு முடையானெனத் தொகைதொடர்ந்து நிகழ்ந்தமையா னெனக் கொள்க.
அன்றியும், விளைப்பானென்பதனை யெடுத்தலோசையால் வினைப்பெயராக்கி யிருபெயரொட்டுப்பண்புத் தொகை
வாய்பாட்டான் உறுபயன் விளைப்பானாகிய திருவுருவெனினுமாம். வினைப்பெயர் முற்றாய்ப் பெயர்ப்பெயரே
போல வுருபேற்றலினெனக் கொள்க. இவ்விரண்டிற்கும் விளைப்பான்றிருவுருக் குடிபுகு வடவேங்கட மெனவும்,
விளைப்பானாகிய திருவுருக் குடிபுகும் வடவேங்கடமெனவும் முறையே தொடர்ப்படுத்து முடிக்க.
இச்செய்யுட்குப் புலவீர்கா ளென்னுந் தோன்றாவெழுவாயை முதலேவிரித் துரைநடையொட்டுக.
இவை யிரண்டுமன்றி விளைப்பான் என்பதனைப் படுத்த லோசையால் வினைப்பதமாக்கி,
உயிர்களெல்லா முத்தியை விளைக்கப் படுவா னென்றவ னலகில்சோதி யணிகிளர்திருவுருவெனத்
தன்னெச்சமான பெயர்கொண்ட முற்றாக்குதல் இச் சிறப்புப்பாயிரஞ் செய்தார் கருத்து.
இம் முற்றிற்கு அதன்பின்னர் அவன் என்னுஞ் சுட்டுப் பெய ரெஞ்சியதாக விரித்து மேல்வரும்
உணர்வுயிரென்பவற்றோடும் புணர்த்து அவன்குடிபுகும் வடவேங்கடமென முடிக்க.
இம் முதலீரடிக்கு மித்துணையும் எழுத்துச் சந்தி முடிவுஞ் சொன் முடிவும் விரித்தனம்.
இங்ஙனம் வகுத்தவற்றுள் இம்முற்றிற்குப் பொருள்கோள் – ஆற்றுநீர். பொருள் – புறப்புறம். திணை – வாகை.
துறை – அருளொடு நீங்கல். என்னை?
“ஒலிகடல்வையகத்து, நலிவு கண்டுநயப்பவிந்தன்று” என்னும் வெண்பாமாலையுள் வாகைத்திணையுளிறுதிச் சூத்திரத்தா னுணர்க.
யாப்பு- குறள்வெண்செந்துறை. அலங்காரம்- ஒருபொருட் கொன்றுபலகுழீஇய பல்பொருளுவமை.
மெய்ப்பாடு – கல்விபற்றிய பெருமிதம். பயன் – ஆதலான் முத்திவேண்டுகில் இக்காயமிருக்கப் பெற்றபொழுதே
இந்திரியங்களையடக்கி, மண் பெண் பொன் என்னும் பற்றினைவிட்டு, மனோ வாக்குக் காயங்களா லவனைச்
சிந்தித்தும் வாழ்த்தியும் வணங்குமின் ; பேரின்பம் பெறலாம் என்பதாம்.
இப்பாயிரச் செய்யுண் முதலீரடியையு மிங்ஙனம் பிரித்துச் சொல்லணிக்கட்காட்டிய பிறிதுபடுபாட்டாக்கியது
பஞ்சாதிகாரவிலக்கண நடைதழீஇய ஒருவகை விரித்துரைகாட்டுதற் கெனக் கொள்க.
இனி ஏனையடிகட்கெல்லாம் இவ்வாறு விரித்துரைப்பி னுரைபெருகுமாதலான் அவற்றிற் கிவற்றிற் சுருங்கக்
கூறுவதையுங் கற்றபெற்றி நற்குணனுடையோர் தெற்றென முற்ற வுய்த்துணர்க.
உணர்வுயிர்………. கவின்பதிநின்று மென்பது அவன் ஆயுவும், ஞானமும்போலத் தன்னுடன்
அளவளா யுத்தமராகிய நித்தர் கூட்டம் விட்டுநீங்காத அழகிய சுவணமயமாம் அந்தாமத்தின்கண்ணு
மவ்வுருநிலை பெற்றிருப்பதோடும் என்றவாறு. உணர்வுயிர்-உம்மைத்தொகை.
கணமகலாத வென்பதற்குக் கணப்பொழுதும் விட்டுநீங்காத வெனினுமாம். என்னை?
“ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்” என்றாராகலின். நித்தர் – அநந்த கெருட சேனாதிபதிமுதலியோர்.
அகலாதபொற்கவின்பதி என்பது “உருபும்வினையுமெதிர்மறுத்துரைப்பினுந்,
திரியாதத்தமீற்றுருபினென்ப” என்பதனால் எச்சப்பெயர் திரிபின்றி முடிந்தது.
உரவுநீர்வளைத்தவொன்பானுள்………. வடவேங்கட மென்பது கடல்சூழ்ந்த பூமியினிடத்துக்
கண்டமொன்பதினுள்ளுந் தென்றிசைக்கட் பரதகண்டத்துள் அந்தாமமாகிய அப் பழம்பழி
பூலோகவைகுண்டமானதென் றுயர்ந்தோர் கூறும்படிக்குக் குடிகொண்டுறையும் விசும்பைத் தொடவுயர்ந்த
சோலையையுடைய வடக்கின்கண் வேங்கடமு மென்றவாறு. உரவுநீர் வளைத்த வொன்பானென்பது
அடிப்பட்டபெய ரெஞ்சாது முதனின்று தொடர்ந்த பெயரெச்ச வாய்பாடு தன்னெச்சமான பெயர்கொண்டு முற்றியது.
அடிப்பட்ட பெயரெஞ்சியதாவது உண்டசாத்தன் என்பதற்கு அமுதுண்ட சாத்தன் என்றும்,
உண்டவமுதென்பதற்குச் சாத்தனுண்ட வமுதென்றும் முதலே நின்ற பெயராகிய அமிர்துஞ் சாத்தனும் எஞ்சிநிற்பது.
அஃதீண்டு யாண்டு விரிந்ததெனின்? உரவுநீர் அடிப்பட்டபெயர் ; வளைத்த வென்பது பெயரெச்ச வாய்பாடு ;
ஒன்பான் என்றது தன்னெச்சமான பெயர். ஆதலால் உரவுநீர் வளைத்த என முதலே எஞ்சாது விரிந்தமை காண்க.
இவை வினையெச்சத்திற்குமுள. அவையும் இம்முறையே காண்க.
உரவுநீர் – போக்குவரவு நீர். ஒன்பானுள் என்பது “ஒன்றுமுதலாகப் பத்தூர்ந்துவரூஉ, மெல்லாவெண்ணுஞ்
சொல்லுங்காலை, யானிடைவரினு மானமில்லை, யஃதென்கிளவியாவயிற்கெடுமே, யுய்தல்வேண்டும்பஃகான் மெய்யே”
என்றாராகலின், அஃதென்னுஞ் சொற் கெட்டுப் பகரமெய்நிற்ப வுருபு புணர்ச்சிக்கண் ணிடை ஆன்சாரியை பெற்றது.
ஒன்பானுட் டென்புல என்பது எட்டிறந்த பலவகையுட் டிரிந்ததன்றிரிபு.
கண்டத்துள் என்பது “மஃகான்புள்ளிமுன்னத்தேசாரியை” என்பதனால் அத்துச்சாரியை பெற்று,
“அத்தேவற்றேயாயிருமொழிமே, லொற்று மெய்கெடுதறெற்றென்றற்றே” என்பதனான் மகரங்கெட்டு
“அத்தினகரமகரமுனையில்லை” என்பதனால் அத்துச்சாரியை அகரங் கெட்டது.
அப்பழம்பதி என்பது “வினையெஞ்சுகிளவியு………. சுட்டினிறுதியு, மாங்கவென்னுமுரையசைக்கிளவியு,
ஞாங்கர்க்கிளந்தவல் லெழுத்துமிகுமே” என்பதனாற் பகரமிக்கது. வடவேங்கடம் வேற்றுமைத் தொகை.
இதன் பொழிப்புரை
புலவீர்காள் உயிர்கண்முழுதும் பெறுதற்கரிய முத்தியை விளைக்கப்படுவான் எண்ணிறந்த பலகோடியவா
மிள ஞாயிறுபோன் றொளியையுடைய கௌத்துவமணியையுந் தழையா நின்ற திருவோடுங்கூடிய
திருமேனியையு முடையான் அவனாயுவும், ஞானமும்போலத் தன்னொடு மளவளாய வுத்தமராகிய நித்தர்
கூட்டந் தனது காந்தியையுங் கருணையையுங்கண்டுங் கருத்துட்கொண்டும் விட்டு நீங்கா தழகிய
சுவணமயமாகிய அந்தாமத்தின்கண்ணும், அகிலபூரணனாகி நிலைபெற்றிருப்பதோடும்
கடல் சூழ்ந்த பூமியின்கண்ணவாங் கண்ட மொன்ப தென்றவற்றுள்ளும் பரதனாற்பெயர்பெற்ற கண்டத்தினுட்
பழம்பதி பூலோக வைகுண்டமானதென வுயர்ந்தோர்கூறும்படிக்குக் குடிகொண்டுறையும் வடக்கின்கண் வேங்கடமும் என்பதாம்.
அவன் குடிகொண்டுறையும் வடக்கின்கண் வேங்கடமும் எனக் கூட்டுக.
அற்றேல் விளைப்பான்…. திருவுரு என்பது முதலாய வவற்றினிடையிடை பிறபல சொற்றொடர்ந்தவா றென்னையெனின்,
நன்று சொன்னாய் ! “தத்தமெச்சமொடுசிவணுங்குறிப்பி, னெச்சொல்லாயினுமிடைநிலைவரையார்”
என்பதனா லிடையிடையேற்பன அடைச்சொல்லாய்வந்தன.
அஃதாக இங்ஙனந்தொடர்ந்த வவற்றி னிடையிடை பெறுதற்கரியவென்பது முதலாய சொற்கள் கூட்டியுரைத்த
வுரைநடை யாதோவெனின், “சொல்லொடுங்குறிப்பொடுமுடிவுகொளியற்கை, புல்லிய கிளவியெச்சமாகும்” என்றாராகலின்,
கூட்டியுரைக்கப்பட்டது. ஆனாற் சொல்லெச்சங்களேயன்றிக் குறிப்பெச்சமு மிதனுள்ளு முளவோவெனின்,
உள. அஃ தியாண்டுக்குறித்ததெனின், பரமவைகுண்டத்திருப்பவன் அவ னனைத்துலகத்துயிர்கடோறும்
அந்தரியாமியாயிருப்பதோடுங் கைம்மாறின்றியு மிவ்வுலகத்துயிர்கள் பெறுதற்கரிய முத்தியை
யெளிதின் விளைப்பவனாகிப் பரதகண்டத்துட் பழம்பதியெனக்குடிபுகுந்துறையும் வடவேங்கடமெனவே
அவன் பரமகிருபையிருந்தபடியோவெனவும், பரமவைகுண்டத்தினுந் திருமாமணிமண்டபத்தினும்
நித்தர் முத்தரோடுங்கூடிய திருவோலக்கத்திற் குறைவின்றி யிருப்பதோடும்,
வடவேங்கடத்தினுந் தெய்வத்திருமேனியோடுந் தொண்டக்குழாங்கள்
கைதொழக் குடிபுகுந்துநின்ற தென்ன அகடிதகெடித சாமர்த்திய குணமோ வெனவு மீரிடத்துங் குறிப்பெஞ்சிநின்றதெனக் கொள்க.
மெய்ப்பாடு – மருட்கையைச் சார்ந்த பெருமிதம். இவ் வுரைநடையுட் பொழிப்புரை தலைதடுமாறியும்,
பொழிப் பகல நுட்ப மெச்ச மென்னும் நால்வகையுரை நடையும் நிகழ்ந்தமையுங் காண்க.
தெண்டிரை……. ஆயிடை என்பது தெளிந்த திரையார வாரிக்குந் தெற்கின்கட் குமரியும் எல்லையாக
வுடையதென்று கூறப்படுவனவாம்
அவற்றி னடுவிருந்து என்றவாறு ஆயிடை என்பது “நீடவருதல்செய்யுளுளுரித்தே” என்பதனாலும்,
“சுட்டு, நீளின்யகரமுந் தோன்றுதனெறியே” என்பதனாலும் யகரவுடம்படுமெய் தோன்றியது.
அமிழ்தினும்……… மதிக்கும் என்பது தேவர்பானமாகிய வமிர்தினும் பெருத்தசுவையுடைத்தாம்
எழுத்துச் சொற்பொருளென மூன்றுதன்மைத்தாகிய தமிழை யாராயாநிற்கும் அறிவின்றன்மையை
யுடைய பெரியார் நன்குமதிக்கும் என்றவாறு.
முதுமொழித்தெண்டி……… புணர்த்தியலணியையும் என்பது முந்துநூல்களையாராயுந் தெண்டியாசிரியர்
கூறப்பட்ட முதனூலணிகளோடுந் தினமு நவமான பாடலேபாடும் புலவராற்கூறப்பட்டனவா யுலகின்
கண்ணே வழங்குவனவா மணிகள் பலவற்றையும் என்றவாறு.
தனாது நுண்ணுணர்…….. விரித்தும் என்பது தனது நுண்ணிய வறிவுகாரணமாகக் கண்டளித்த
பலவணிகளையுங் கற்றோர் மனத்துட்கொள்ளத் தொகுத்தும், தொகுத்ததனை வகுத்தும், வகுத்தவற்றை விரித்தும் என்பதாம்.
தனாது, மனாது என்பன “ஆறனொருமைக்கதுவு மாதுவும்” என்பதனால் அதுவென்னு மாறனுருபு ஒருமையிடத்து ஆது ஆயிற்று.
பொதுவியல்……… எச்சவியலென வென்பது பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியலென்று
கூறும் படிக்கு என்றவாறு.
இவற்றுள், இயல் என்பதனை நான்கினுங்கூட்டி அணி என்பதனைப் பொருண்முத லிரண்டினுங் கூட்டியுரைக்க.
சதுர்பெற……. சார்பெனலாய் என்பது நால்வகைபெற்றுச் செய்யுளிடம் வழக்கிடமென்னு
மீரிடந்தழுவின சார்புநூலென்பதாக வென்றவாறு.
காரிதந்தருள்……… உரைத்தனன் என்பது அந்நூற்குக் காரியா ருலகின்மன்னுயிர்க ளீடேறப் பெற்றருள்செய்த
நூற்கடலினியற்பெயரால் மாறனலங்கார மென வத் திருநாமத்தின் யவ்வணிக்கணியாகவே யலங்கரித்து
ஞானாசாரியர் குழீஇயதாம் அவையின்கண் ணரங்கேற்றினன் என்றவாறு.
சிற்குணச் சீநிவாதன்……… உணர்வோன் என்பது அவன் யாரெனில்,
சாத்துவிககுணத்தையுடைய சீநிவாதனென்னும் ஞானாசாரிய னினியகருணையால் நன்பொருளாகிய
சித் தசித் தீச்சுரமென்னும் மூன்றினையும் உணர்த்தும் ஞானநூல்களை நாடோறும் பேரானந்த மிகும்படி யாராய்வோன் என்றவாறு.
“வேண்டியகல்வியாண்டுமூன்றிறவா” தென்பதனால் உணர்வோனென நிகழ்வு மெதிர்வும் பெறக் கூறினாரென்றறிக.
பெருநிலம்…….. வருமனகன் என்பது பெரியவுலகினிடத் துயர்ந்தோர் கீர்த்திக்குந் திருக்குருகைப்பெருமாள்
பெற்றருளும் அழுக்கற்றவன் ; புண்ணியன். என்றவாறு.
செழுந்தேன், மருக்கமழ்சீரகத்தார் வணிகன் என்பது வளமையை யுடைய தேனினது பரிமளம்
பரிமளிக்குஞ் சீரகத்தார்புனைந்த வணிகர் குலத்துள்ளான் என்றவாறு.
புகழ்த் திருக்குருகைப்பெருமாள் கவிராயன் என்பது கீர்த்தியையையுடைய திருக்குருகைப்பெருமாள்
கவிராயனென்னுஞ் சிறப்புப்பெயரை யுடையோன் என்றவாறு.
அருட்குணத்துடன்வளர்சடையன் என்பது கருணைக் குணத்துடன் வளராநின்ற சடையன் என்னு மியற்பெயருடையோன் என்பதாம்.
பொருட்டொடர் நவம்புணர் புலமையோன் என்பது பெருங்காப்பியம் புதிதாகப் பாடல்சான்ற
அறிவின்றன்மையையுடையோன் என்றவாறு. ஏகார மீற்றசை.
வடக்கின்கண் வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமென்னக் கூறப்படுவனவா மவற்றினடுவிருந்து
தமிழை யாராயு முணர்வுடையோர் நன்குமதிக்குந் தெண்டிமுதனூலணியொடும் புலவர் புணர்த்து
வழங்கு மணியையுந் தனது நுண்ணுணர்வாற் கண்டளித்த பலவணியையுங் கற்றோர்
மனத்துட்கொளத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் நால்வகை யியலா னீரிடம்பொருந்தின சார்பு நூலென்பதாகவும்,
அந்நூற்குக் காரி யார் பெற்றருள் கலைக்கடலியற்பெயரை யணியாகப் புனைந் தாரியர்குழீஇய வவையின் கண் ணரங்கேற்றினன் ;
அவன் யாரெனிற் சிற்குணச் சீனிவாதனின்னருளால் நற்பொருண் மூன்றையு மாராய்வோன்
திருக்குருகைப் பெருமாள்கவிராயன் சடையன் பொருட்டொடர்நவம்புணர் புலமையோ னென்க.
அஃதாக முன்னர்ச் சிறப்புப்பாயிரம் பதினொருவகைப்படுமெனக் கூறிய வப்பதினொன்றும்
இப்பாயிரத்துட்பெற்றவா றெங்ஙனேயோ வெனின்?
வடவேங்கடந் தென்குமரியெனவே எல்லையும், முதனூலணியொடு மெனவே வழியும் நுதலிய பொருளும்,
தனாது நுண்ணுணர்வாற்றருபல வணியையு மெனவே காரணமும், பயனும்,
பொதுவியல் பொருள்சொல் லணியெச்ச வியலென வெனவே யாப்பும்,
காரிபெற்றருள் கலைக்கடலியற்பெயர்புனைந் தெனவே நூற்பெயரும்,
ஆரியர் அணிற வவைக்களத்துரைத்தன னெனவே கேட்டோரும்,
களனும் திருக்குருகைப்பெருமாள்கவிராயன் சடையனெனவே நூல்செய்தோன்பெயரும்,
காலமும் ஆகப் பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே பெற்றவாறு காண்க.
அன்றியும்,
நூல்செய்தோன் வழிபடுதெய்வமும் தெய்வத்து ளிதுவே பரத்துவமென்ன வறிவித்த ஞானாசிரியனும்,
நூல்செய்தோன் பிதாவும், குலனும், பதியும் கூட்டிப் பதினாறென்னுமவையும் இப்பாயிரத்துட் பெற்றவாறு காண்க.
இஃ திருபத்தாறடியான் வந்த நேரிசையாசிரியப்பா. என்னை? “ஈற்றயலடியேயாசிரியமருங்கிற், றோற்றமுச்சீர்த்தாகுமென்ப” என்றாராக
லின். இவ்வாசிரியப்பா முதலீரடியையுங் குறள்வெண்செந்துறை யாக்குதலாற் சொல்லணியுட் சித்திரப்பாவினுட் பிறிதுபடுபாட்டாயது.
64.பாவிற்கணிபோற்பனுவற்றெளிவுணர்ந்தோர்
நாவிற்குவாய்மைபோனாரணனாந்-தேவிற்கு
வாய்ந்தவருள்போலவாய்ந்ததேநூலகத்தா
யேய்ந்தபொருட்பாயிரம்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தினது சிறப்பிற் குவமையுணர்ற்று.
இதனுள், வாய்மை – சத்தியவசனம். கற்றகல்வியைப் பிறர்க்குச் செலச்சொல்லுதலுமாம்.
நூலகத்தா யேய்ந்தபொருட்பாயிரம் என்பதனாற் சிறப்புப்பாயிரம்.
நூலகத்தா யேய்ந்தபொருள் புலவன்கூறிய வவ்வவ நூலுக்குச் சிறந்தபொருள்களா மெனவுணர்க.
பாயிரவுரை முற்றும்
————–
தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.
ஸ்ரீ :
மாறனலங்காரம்
முதலாவது
பொதுவியலுரை
65.திருப்பாவையென்னத்திருந்தியற்பாத்தந்த
திருப்பாவைவில்லிபுத்தூர்ச்செல்வி-யருட்பார்வை
வாய்ந்ததனாற்செய்யுள்வழக்கென்றிரண்டிடத்தா
லாய்ந்துரைப்பல்செய்யுளணி.—என்பது சூத்திரம்.
இவ் வதிகார மென்னுதலிய வெடுத்துக்கொள்ளப் பட்டதோவெனின்,
அதிகார நுதலியதூஉ முன்னர்க்கூறிப்போந்த சிறப்புப்பாயிரத்தானே யுணரப்படும். என்னை?
“தனாதுநுண்ணுணர் வாற்றருபலவணியையும்” என்பதனாலுணர்க.
ஆயின், இவ் வணியதிகாரத்து ளணியிலக்கண மெனைவகையோத்தினானுணர்த்தினாரோ வெனின்,
இனைவகையோத்தினா னுணர்த்தினா ரென்பதூஉம் அச்சிறப்புப் பாயிரத்தானே விளங்கும். என்னை?
“பொதுவியல்பொருள்சொல்லணி யெச்சவியலென” எனக் கூறியதனாலுணர்க.
அஃதாக, இவ் வதிகாரத்தின் முதற்கணோத்தினைப் பொதுவிய லென்ற தென்னையெனின்,
அணி பெறுஞ் செய்யுள்கட்கும், பொதுவான வொருசாரணிக்கும் பொதுவிலக்கண முணர்த்தினமையாற் பொதுவியலென்னும் பெயர்த்தாயிற்று.
இவ்வோத்தினு ளிச்சூத்திர மென்னுதயில்றோவெனின், ஒருசாராசிரியர் வேண்டுஞ் சிறப்புப்பாயிரமுணர்-ற்று. என்னை?
“தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளு, மெய்தவுரைப்பதுந்தற்சிறப்பாகும்.” என முன்னையோர் கூறிய முறையானும்,
“கடவுள்வணக்கமுங்கருதியபொருளுந், திடனுறப்புகல்வதுஞ்சிறப்பென்றாகும்.” என இந் நூலுடையாருங் கூறிய முறையானு முணர்க.
உம்மை இறந்தது தழீஇயிற்று. அன்னவாறாதலிச்சூத்திரத்திற்குப் பொருளுரைப்பவே விளங்கும்.
ஆனா லிச் சூத்திரச் சொற்பொருள் யாதோவெனின், அப் பொருளுரை நான்குவகைப்படும் ;
கருத்துரைத்தலும், கண்ணழித்துரைத்தலும், பொழிப்புத்திரட்டலும், அகலங்கூறலும் என. என்னை?
“உட்கோள்கண்ணழிப்புடன்பொழிப் பகலஞ், சுட்டிக்கூறல்சூத்திரச்சொற்குரை” எனவரும்.
அவற்றுள்ளும், கருத்துரைத்தலாவது சூத்திரத்தினுட்கோளுரைத்தல். என்னை?
“கருத்துரை சூத்திரத்துதிரட்கோள்கழறல்” எனவும், கண்ணழித்துரைத்தலாவது சூத்திரத்திற் சொற்றொறுஞ் சொற்பொருளுரைத்தல். என்னை? “தொகுத்தசொற்றொறுஞ்சொற்பொருளுணர்த்த, லடுத்த கண்ணழிப்பென்பர்கற்றவரே’ எனவும்,
பொழிப்புத்திரட்டலாவது சூத்திரத்திற் பொருளையெல்லாந் தொகுத்துரைத்தல். என்னை?
“ஒலிகெழுசொற் பொருள்களைத் தொகுத்தொருங்கே, பொலிவுறத் திரட்டியுரைப்பது பொழிப்பே” எனவும்,
அகலமாவது சூத்திரத்திற் பொருளைச் செம்மை செய்தற்குக் கடாவும் விடையு முள்ளுறுத்தி விரித்தல். என்னை?
“மனாது றும்யாப்பின்மரீஇயசொற்பொருளை, வினாவினும்விடையினும் விழுப்பொருளாக்கி,
யகற்றுபுவிரித்துரைப்பதுவேயகலம்” எனவும் இந் நூலுடையார் கூறிய சூத்திரங்களானு முணர்க.
இவ்வகையெல்லா மிச்சூத்திரத்தினுட் பெறுமுறை யெங்ஙனேயோ வெனின்,
“திருப்பாவை…….. யருட்பார்வைவாய்ந்தனா” லெனவே கடவுள்வணக்கஞ் சொன்னவாறு.
“செய்யுளணி” யெனவே அதிகாரத்துட் கருதியது சொன்னவாறு. அதிகாரம்-முறைமை. இதனாற் கருத்துரை முற்கூறப்பட்டது.
இனிக் கண்ணழித்துரைக்குமாறு :- திருப்பாவையென்ன வென்பது அழகையுடைய நோன்பென்று சொல்லுவதாக என்றவாறு.
திருந்தியற் பாத்தந்த வென்பது நிரம்பிய இலக்கணத்தையுடைய பாட்டை யுலக மீடேறப் பாடித்தந்த என்றவாறு.
திருப்பாவை வில்லிபுத்தூர்ச்செல்வி யென்பது திருப்பாவையென்னுந் திருநாமத்தையுடைய ஸ்ரீவில்லிபுத்தூர்த் திருவுடையாள் என்றவாறு.
அருட்பார்வை வாய்ந்ததனா லென்பது அவளது கருணையோடுங் கூடிய திருக்கண்ணோக்கம் எனக்கே பலித்ததனால் என்றவாறு.
செய்யுள் வழக்கென் றிரண்டிடத்தா லென்பது செய்யுளென்றும், வழக்கென்றுஞ் சொல்லப்பட்ட இரண்டிடங்களானு மென்றவாறு.
ஆய்ந்துரைப்பல் செய்யுளணி யென்பது (செய்யுளணி யாய்ந்துரைப்பலெனப் பாடமாற்றி) முன்னோர் கூறிய
செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கணங்களை யாராய்ந்து கூறுவ லென்றவாறு.
அணியென்ப தீண்டணியிலக்கணங்களை. செய்யுட் கழகு கொடுத்தலின் அணியென்றாயிற்று.
இனிப் பொழிப்புத் திரட்டுமாறு :-
அழகையுடைய நோன்பென்று சொல்லுவதாக நிரம்பிய இலக்கணத்தை யுடைய பாட்டை யுலக மீடேறப்
பாடித்தந்த திருப்பாவையென்னுந் திருநாமத்தையுடைய ஸ்ரீ வில்லிபுத்தூர்த் திருவுடையாளது
பரம கருணையோடுங் கூடிய திருக்கணோக்கஞ் சிறிது மறிவிலனா மெனக்கே பலித்ததனாற் செய்யுளென்றும்
வழக்கென்றுங் கூறிய விரண்டிடங்களாலு முன்னோர் கூறிய செய்யுளிடனாகத் தோன்று மணி
யிலக்கணங்களை யாராய்ந்து கூறுவ லென்றவாறு.
இனி, அகலமாவது விரித்துரையாதலால் இதற்கும் விரித்துரை யீண்டுக்கூறின் உரைபெருகுமாதலா லதனை
யுள்ளுறுத் துய்த்துணர்ந்துகொள்க. அஃதாக ; முன்னோர்கூறிய இலக்கண நூல்க ளெனை வகை
யோத்தினானுணர்த்தினாரெனினு முற்று மொருபாவினாற் கூறவும், இந்நூலுடையார் பொதுவியலொன்றையும் வெண்பாவாற்கூறி
யேனை யியல்கண் மூன்றினையும் ஆசிரியத்தாற்கூறிய தென்னையோவெனின்,
நன்றுசொன்னாய் ! இக் கடாவிற்கு, எதிரது போற்றலென்னு முத்தியாற் பாயிரத்துள்,
“விதியாச்செய்யுளின்மிகுத்திலக்கணமு, மதியாலுரைத்ததும் வழங்கன்ஞாபகமா” எனக்கூறிய சூத்திரத்தா னுணர்க.
66.வெண்பாவகவல்விரிகலிப்பாவஞ்சிப்பா
பண்பார்மருட்பாபரிபாட-லொண்பா
வினமென்றாலித்திரண்டாறீராறவாய்ச்சென்
றனமுந்து நூல்கற்றது.
(எ-ன்) முன்னர்ச் செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கண முரைப்பலென்றார்;
செய்யுளுணர்ந்தே அணி யுணரப்படுமாகலான், அணிபெறுஞ்செய்யுளின் பெயரும், முறையும், தொகையு முணர்ற்று.
(இ-ள்) செய்யுளெனத் தொகையா னொன்றாய்நின்ற அது, வெண்பா அகவல் என வகைவரையறை யிரண்டாய்
அவற்றின் மரபு மிக்க கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என நான்கினோடும் விரிவரையறை யாறாய்ச்
செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்ற வோசை யுடைத்தாய் விரியொடுநின்ற வாறனுள்
வெண்பா முதலாய நான்கென்னு மொள்ளிய பா இன மெனப் பன்னிரண்டாய் முந்துநூல் கூறப்பட்டு நிகழ்ந்தன வென்றவாறு.
என்றென்பது எண்ணிடைச்சொல். அதனைப் பா, பாவின மென்னு மெல்லாவற்றினும் பிரித் தேற்றுக. என்னை?
“என்று மெனவு மொடுவு மொரோவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்ப வாசலின்.
அது “வினைபகையென்றிரண்டினெச்ச” மென்பதுபோலக் கொள்க. இரண்டாறீராறென்பன நிரனிறை.
ஆயென்ப திறுதிவிளக்கா யீண் டாக்கத்தினைக் காட்டியது. ஒலித்தாயென்ப துடைமைவினைக் குறிப்பு.
“மருட்பாவேனையிருசாரல்லது, தானிதுவென்னுந் தனிநிலையின்றே” என்பதனால் அதற்குச் செப்பலும் அகவலுங் கொள்க.
“பரிபாடல்லேதொகைநிலைவிரியி, னிதுபாவென்னுமியனெறியின்றிப், பொதுவாய்நிற்றற்குமுரித்தெனமொழிப” என்பதனால்
அதற்கு முழுதுமிசையாய்க்கொள்க. இப்பெயர் பெயர் ; இம்முறை முறை ; இத்தொகை தொகை எனக் கொள்க.
இவற்றுள் வெண்பா முதல்வைத்தது தலைதடுமாற்றமெனினுமாம்.
ஆயின் முதலே யணியிலக்கணங் கூறுவலெனப்புகுந் தீண்டுச் செய்யுளிலக்கணங்கூறிய முறையான்
மற்றொன்று விரித்தலென்னுங் குற்றமாமெனின், ஆகாது. என்னை?
எழுத் தசை சீர் தளை யடி தொடை யென்னு மாறுறுப்பின திலக்கணங்களைக் கூறி யவற்றானாய பாவினைத்
தளையானும், அடியானும், தொடையானும், ஓசையானும், பொருளானும் வேறுபட்டமைகூறி
யினங்களையு மவ்வகையே கூறா திவ ரீண்டைக்கே வேண்டுஞ் செய்யுட்களது தொகை வகை மாத்திரமே கூறினமையா னெனக் கொள்க.
67.ஆற்றலணிக்கண்ணவைமுத்தகங்குளகந்
தோற்றுந்தொகையேதொடர்நிலையென்றேற்புடைய
வென்றுமவற்றுளெழுவாய்தனிநின்று
சென்றுபொருண்முற்றுந்திடன்.
(எ-ன்) இதுவும் அங்ஙனம் விரிந்தபாக்க ளணிபெறுதற்பொருட்டுச் சிறப்பிலக்கணத்தா லவற்றிற்கு
மீட்டு மொருவகைப் பெயரு முறையுந் தொகையு முணர்-ற்று.
(இ-ள்) வகையினும் விரியினுங்கூடி யிரண்டா றீராறென்னுஞ் செய்யுட்களாகிய வவை பெருமையுடைய
வணியிலக்கணங்களிடத்து முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலையெனச் செய்யு ணான்காகப்
பொருணோக்கத்தாற் றொகைபெற்று எக் காலத்திற்கும் பொருந்துத லுடையனவாம்.
அந்நான்கனுள் ஆதியாகிய முத்தகச்செய்யு ளொன்றாக நின்று திடனாகச்சென்று புலவன் குறிக்கப்பட்ட
பொருளைப் பயந்து முற்றுப்பெறு மென்றவாறு.
இவற்றுள் முத்தகம், குளகம் என்பன வடமொழிப் பெயர். ஏனையவிரண்டுந் தமிழ்மொழிப் பெயர்.
அவை யங்ஙனமாமாறு மே லறியப்பெறும். நிலையென்பதனை யிரண்டிடத்துங் கூட்டியுரைக்க.
ஆற்றல் – பெருமை. தோற்றுதல் – உண்டாதல். சென்றென்பதனாற் செய்யுளின்கண் ணிகழ்ந்த சொற்பொருளொடு
முற்றாது எஞ்சிநின்ற சொல்லேயாயினும் பொருளேயாயினும் கொணர்ந்து முற்றுவிக்க முற்றுமென்பதூஉங் கொள்க.
எழுவாயென்ப தீண் டிடத்தானாகிய ஆகுபெயர். இச்சூத்திரப் பொருள்கோள் மொழிமாற்றெனக் கொள்க.
இனி முத்தகச்செய்யுட் குதாரணம் வருமாறு :-
பொன்னகர்புகுந்தயாணர்ப்புத்தமிர்தம்
பின்னொருநிலத்துப்பிறிதொருபடிவத்
தொருபகலுறைவதன்றெனவுலகுரைசெய
வருள்புரிகடவுளாணையின்வேட்டமுற்
றிகல்புரிவிலங்கினினந்தொலைத்ததற்பி
னகநகர்புரப்பேனயர்வுயிர்த்தற்குப்
பொலந்தகட்டுருளிப்புரவியூர்தியின்
வலம்பயில்பாகன்வரவுறீஇப்புறநகர்த்
தண்ணிழனாடினன்சார்வுழிமனனே
பெண்ணியல்பெருக்கியப்பேரமிர்தெதிர்தலும்
யாவதிவ்வுருவெனவிடைவிடாதுயவலுங்
காவகத்திஃதொருகவினிலைக்களனென்
றுண்ணிகழுழுவலன்புடனின்றூட்டக்
கண்ணயந்தனவாய்க்காமுறக்காண்டொறும்
புகுமுகம்புரிதலிற்புணர்ச்சிமேற்கொளத்
தொகுபதினொன்றுந்தொடர்பிற்றோற்றி
யொளியுமூறுமுரிசையும்வாசமுங்
களியதாய்மிழற்றோசையுமைம்பொறி
யேககாலத்திலவிதழொன்றினுண்
டாகயாவருமணுகாதமைநலன்
வண்டுழாநெகிழ்ந்துமணமலிசெவ்வித்
தண்டுழாயரங்கன்றடந்துறைப்பொன்னித்
திரைவரன்றெறிநித்திலத்திரணிலவெழும்
விரைமலர்பரப்பிமெல்லணைவிரிபுன்னையி
னேந்தெழிற்சினைகவியெழினியுள்
வாய்ந்தருண்மறையார்மனக்கொள்பவரே. (1)
என்பது இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழித் தலைமக ளிவ னெக் குலத்தான்கொல்! எவ்விடத்தான்கொல்!
இன்னு மிப்புணர்ச்சிகூடுங் கொல்! இவ னென்னிடத் தன்புடையான்கொல்!
எனக் கூற்றா லையுற் றுரையாளாயினுங் குறிப்பாலையநிகழும்;
அவற்றைத் தலைமக னுளத்தா னுட்கொண்டு நால்வகையையமுந்தீரக் கூறியது.
(இ-ள்) பொன்னகர்……… உரைசெய-மனனே சுவர்க்கத்துட் குடிபுகுந்த அழகிய புதிய அமிர்தங் குடிபுகுந்த
பின்னர்ப் பொன் மயமல்லாத மற்றொருநிலத்தின்கட் சலமயமல்லாத மற்றொரு வடிவெடுத் தொருகணப்பொழுதுந்
தங்குவதன்றென் றுயர்ந்தோர் கூறாநிற்பவும்; அப்பேரமிர்து-அப் பெருமையையுடைய வமிர்தம்;
அகநகர் புரப்பேன்-அகநகரின்கண் ணிருந் துலகினைப் புரக்கு மரசுரிமையுடையேன்;
அருள்புரிகடவுளாணையின்…… தொலைத்ததற்பின்-என்னிடத் தினியகருணையைச் செய்யும்
பால்வரைதெய்வத்தினேவலான் வேட்டைமேன் மனம்வைத் துலகத்துயிர்கட்கு மாறுபாடிழைக்கும்
ஆளி முதலிய விலங்கின்கூட்டத்தைக் குறைத்தபின்னர் ;
அயர்வுயிர்த்தற்கு…. சார்வுழி-அவற்றைத் தொடர்ந் தோடி யாடின வருத்தம் போக்குதற்குப் பொற்றகடு
பொதிந்த நேமியையுடைய குதிரைபூண்ட தேரோடும் வென்றி விட்டுநீங்காத பாகன் சுவடுபார்த்து
வருவனென வுட்கொண்டு புறநகர்ப்பொதும்பர்க் குளிர்ந்தநிழலைநோக்கி யணுகின காலத்து ;
பெண்ணியல் பெருக்கி யெதிர்தலும் – பெண்ணின திலக்கணத்தைத் தனதாகப் பெருப்பித் தெனதெதிர்நிற்ப ;
யாவதிவ்வுருவென……. காண்டொறும்-மலர்மகள் முதலாயினோருருவினுள் யாதுதா னிவ்வுருவமென
நின்னொடுங்கூடி நீக்கமின்றி யுசாவாநிற்ப வுள்ளேநிகழு மெழுகையுந் தொடர்ந்தவன்பு பால்வரை
கடவுளினன்புடன்கூடி யிக்காவகத் திவ் வுருவ மலர்மகண்முதலாயோர் காந்திகளெல்லாந் திரண் டேகமாகக்
குடியிருப்பதேப ரிடவகைதானென் றுணர்வினு ளொன்றுவிப்ப வந்நிலையே கண்க ளிவ்வுருவினை
விருப்புற் றுட்கொண்ட விருப்பமிகையானே நோக்குந்தொறும் ;
புகுமுகம்புரிதலின்…… அமைநலன்-எனது நோக்கிடமாகப் புகுந்து தன்கண் விரும்பிநோக்குதலால்
யான் புணர்ச்சிமேன் மனம்வைப்பப் புகுமுகம் புரிந்தபின் பொருளிலக்கணந் திரட்டியுரைத்த பொறிநுதல்வெயர்த்தன்
முத லிருகையுமெடுத்த லீறாய பதினொருமெய்ப்பாடு மொன்றன்பின்னொன்று தொடர்புடைத்தாகத் தோற்றிக்
கண்டுற் றுண் டுயிர்த்தலாகிய நான்கோடு மென்மேல்வைத்த கருணையுடைத்தாய் மிழற்றுமோசையு மெனக் கேட்பதுமாக
வைம்புலன்களையு மென தைம்பொறிகளும் ஒரு காலத் திலவமலர்போன்ற வதரமொன்றின்கண் ணுகர்ந் தாக்கமெய்த
விருதலையினும் வழிபடும் யாவரு மணுகாதபடிக் கேகாந்தமாக முழுத்த வின்பத்தை ;
வண்டுழா…….. பொன்னி-சுரும்புக ளாறுதாளி னாலுந் துவைப்ப முகைவிண்டு பரிமளத்தை மிகுப்பதாங்
குளிர்ந்த துளபமாலிகையையுடைய அரங்கேசனது தடந்துறைவாய்ந்த திருக் காவிரியினடத்து ;
திரைவரன்றெறி……….. வாய்ந்தருண் மறை – பெரிய திருமுகத்துறைத்திரைகள்
கொழித்தெறியுந் தரளத் திரணில விருளைத்துரந்து நிமிராநிற்பப் பரிமளப்பூவாகிய மெல்லிய அணையை
விரிக்கும் புன்னையின்கீ ழுயர்ந்த வழகொடுந் தாழ்ந்தசினைக ளாகிய திரையினுட் டோன்றி யளித்த விராசியத்தை ;
யார் மனக் கொள்பவரே-யாமேயறிவதல்ல துலகத்துள் யாவ ரறிவரென்றவாறு.
இதனுள் ; நாடினனென்பது ‘வினையெஞ்சுகிளவியும்வேறுபல்குறிய’ என்பதனால் வினையெச்சத் தனித்தன்மைத் தெரிநிலைமுற்று.
சார்வுழி என்பது கொள்வுழி, செல்வுழி என்பனபோல ஒற்றீற்று வகர வுடம்படு மெய் வந்தது. உயவல் – உசாவல் ;
“யானொன்றுயவுகோவையசிறிது” என்பதனாலறிக. யாவர்மனக்கொள்பவரென்பது யாரென வகரங் கெட்டது.
யாதிவ்வுரு என்பது யாவ திவ்வுரு வென வகர மிகுந்தது. என்னை?
“பலரறிசொன்முன்யாவரென்னும், பெயரிடைவகரங்கெடுதலு மேனை, யொன்றறிசொன்முன்யாதென்வினாவிடை, யொன்றியவகரம் வருதலுமிரண்டு, மருவின்பாத்தியிற்றிரியுமன்பயின்றே” என்றாராகலின். அப்பேரமிர்து என்பது
“வினையெஞ்சுகிளவியு முவமக்கிளவியு, மெனவெ னெச்சமுஞ்சுட்டினிறுதியு, மாங்கவென்னுமுரையசைக்கிளவியும்,
ஞாங்கர்க்கிளந்தவல்லெழுத்துமிகுமே” என்பதனால் வல்லொற்று மிகுந்தது.
இச்செய்யுளின்கண் ணகநகர்புரப்பேனெனவே யா னரசனென்னுங் குலனும், புறநகர்சார்வுழியெனவே
“ஒன்றேவேறேயென்றிருபால்வயி” னென்பதனால் ஒரு நகருள் அகநகரும் புறநகரும் என்னு மிடமும்,
உண்ணிகழுழுவலன்புடனின்றூட்ட வெனவே உழுவலன்பாற் பண்டும் பயின்றுவருகின்ற நட்பு இப் பிறப்பினுங் கூடிற்று ;
இதுபோல இன்னு மிடையிடையே கூட்டநிகழு மென்பதூஉம், அப் பேரமிர்து பெண்ணியல் பெருக்கி யெனவே
நலம்பாராட்டலா லவன் தன்மே லன்புடையா னென்பதூஉந் தலைமக ளுட்கொண்டுணரு மென்பதாம்.
இதனுள், பொன்மயமல்லாத சலமயமல்லாத என்பன முதலாய யாமே யறிவதல்ல தென்பதீறாய சொல்லெச்சங்களும்,
தலைவியுள்ளக்குறிப்பைக் குறித்தானென்னுங் குறிப்பெச்சமும் எஞ்சிநின்று விரிந்து முடிந்த வாறுங் கண்டுகொள்க.
இச் செய்யுள் “அகன்றுபொருள்கிடப்பினு மணுகியநிலையினு… மாட்டெனமொழிப்பாட்டியல்வழக்கின்” என்பதனால்
மாட்டென்னு முறுப்பாற் பொருள்கோள் நிகழ்ந்தவாறுங் காண்க.
இது மருதநிலத்தலைமகன் பாலதாணையின் ஆயத்தைநீங்கிய மருதநிலப் புறநகர்த்தலைவியை யெதிர்ப்பட்டுக்கூடிய
களவொழுக்கக் கந்தருவம். என்னை?
“முதலொடும்புணர்ந்தயாழோர்மேன, தவலருஞ்சிறப்பினைந் நிலம்பெறுமே” என்றாராகலின்.
இனிவருஞ் செய்யுட்கு மிவ்வாறு விரித்துரையெழுதாததற்குஞ் சொற்றொறும் பொரு ளுய்த்துணர்ந்து கொள்க.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சி மகிழ்தல்.
முயற்சியொன்றின்றாய்நெருநன்முழுநல
னியற்றியதெய்வதமிறவாதிருப்பதொன்
றென்றுணர்ந்துழப்புறினின்றுமாங்கெதிர்தன்
மன்றவென்றுறுதலின்மடந்தையர்குழாமொரீஇ
மடந்தபமாணிழைவணரிணரைம்பா
லிடந்தலைப்பாட்டினெய்தின்பநன்பனுவலைத்
தேரின்பத்தையுஞ்சிறிது நில்லாதே
பேரின்பமதாய்ப்பெருகவுமன்னோ
சிற்றின்பமெனத்தீர்ந்தனராகிச்
சொற்றமிழ்மாறனைத்துதிக்குமெய்த்தொண்டர்
பற்றறுத்துணர்த்தியபாசுர
முற்றிடிலாசங்கையதாமொன்றே. (2)
என்பது இடந்தலைப்பாட்டின் கூட்டத்திறுதிக்கட்டடலைமகன் சொல்லியது.
(இ-ள்) மனனே ! நம்மிடத்து முயற்சி சிறிது மில்லையாகவும் நெருநற்று நமக்குப் பெருத்த வின்பத்தை யுண்டாக்கித்
தந்த தெய்வமான தென்று மிறவாதிருப்பதொன்றாமென்றறிந் தினி நாஞ் சிறிது முயற்சி யுறி னின்று
மத்திருவுரு முதுனாட்கண்டவிடத் தெதிர்தல் சந்தய மில்லையென் றியா முறுதலோடு மிகுளையர்குழாத்தைவிட்டுநீங்கி
நம்மிடத்து வைத்த வேட்கையாற் றன்னிடத்தொன்றிய மடமையுந் தன்னை விட்டுநீங்க மாட்சிமைப்பட்ட அணிகளோடுங்
கடைகுழன்று பூங்கொத்துச்செருகிய குழலினையுடையா ணம்வரவுபார்த்துநின்ற விடத்துத் தலைப்படுதலாலெய்திய வின்பமானது,
நன்பனுவல்களை யாராய்ந்து நமதுண்ணின்ற வின்பத்தைச் சிறிது நிலைபெறாதே பெயர்க்கப்பட்டதா
யவ்வின்பநின்றவிடங்கொண் டாராவின்பமாகப் பெருகா நிற்ப இதனைச் சிறியதாகிய வின்பமென விட்டுநீங்கினராகிச்
செஞ்சொற் றமிழாகிய திருவாய்மொழிபாடிய காரிமாறப்பிரானை வாழ்த்து முண்மைத்தொண்ட ரிவ்வுலகத்து
மகளிரிடத்தெய்து மின்பத்தின்மேல் வைத்த வாசையைவிட்டுப் பரமபதத்தின்பமே தெவிட்டாதவின்பமென
முன்னமுணர்த்திய முதுமொழி யிதுபொழுது விசாரிக்கிற் சந்தயமாவ தொன் றென்றவாறு.
மனனே என்பது தோன்றாவெழுவாய்.
நின்றவென்பது முதலாய சொல்லெச்சங்களையு மாங்காங்கு வருவித்துக்கொள்க.
மன்-ஆக்கம். ஓ- அசை. பகுதி – இடந்தலை. துறை – இதுவும் புணர்ச்சிமகிழ்தல்.
முதல்வனிற்பெறுநூன்முதற்றாயெனலாய்ப்
புதல்வனிற்பிறந்தவழிநூற்பொழிப்புரை
செலச்சொலுங்குரவனிற்றெளிந்தோர்தமக்கவ்
விலக்கணவிலக்கியமீந்தவின்பத்தினு
நயப்படவிரித்துரைநடைதாந்தமது
முயற்சியினுணர்வுழிமுன்னுமின்பத்தினு
முணராநுட்பமுமெச்சமுமொருபுடைப்
புணர்மாணாக்கரிற்புலப்படுமவர்பா
லெய்தியதெவிட்டாவின்பமொன்றெனலாம்
பொய்கையுட்கராமொடுபொருதுநைந்தழைத்த
கடமலைக்குதவியகண்ணன்
வடமலைமடவரல்வாய்ந்தருணலனே. (3)
என்பது பாங்கற்கூட்டத்திறுதிக்கட் டலைமகன் புணர்ச்சிமகிழ்தல்.
(இ-ள்) மனனே ! முதல்வனா லமைத்தருளப்பட்ட முந்து நூல் நற்றாயாக அதற் கொரு புதல்வனைப்போலப்
புலவராலமைக்கப்பட்டுண்டான வழிநூலின்பொழிப்புரை முதலே கேட்போ ருணர்வுட்கொள்ளப் புகலுங்
குரவனாற் றெளியப்பட்டோர்க் கவ் விலக்கண விலக்கியங்கள் புரந்தவின்பத்தினும் நன்குமதிப்பதாக
வந்நூல்கட் காசிரியர் விரித்துரைப்பதாய வுரையினது ஒழுக்கத்தை யவ்வுரைகோளாளர் தமதறிவுடன்
முயற்சியாலுணர்ந்தவிடத்துண்டான இன்பத்தினும் நூல்களிடத் துணரப்படாத வரும்பதநுட்பமும் எச்சமும்
தம்மொடு கற்ற வொருபுடைமாணாக்கராலாராய்ந் தறிவிற்புலப்பட்ட வவர்பா லெய்தி தெவிட்டாவின்பம்போலு மொன்றெனலாம்,
பொற்றாமரையோடையினிடத்துக் கராமொடுபொருது நொந்தழைத்த கடாத்தொடுகூடிய மலைபோன்றயானைக்
கதனுயிர்பிழைப்பான் சென்றுதவிய கண்ணனது வடக்கின்கண் வேங்கடவெற்பினிடத்து மடவரல் தோன்றிநின்றருளிய பேரின்ப மென்றவாறு.
மனனே என்பது தோன்றாவெழுவாய்.
இதனுள், பொழிப்புரை குரவனிற் றெளிந்தோர்க் கந்நூல்களீந்த வின்பத்தினும் என்பது
முயற்சியின்றி யியற்கையிற் றெய்வத்திற்கூடிய இன்பமதாம்.
விரித்துரை தாந் தம் முயற்சியாலுணர்வுழி முன்னுமின்பத்தினு மென்பது சிறிது முயற்சியா னிடந்தலைப்பாட்டினெய்திய
வின்பத்தினு மென்பதாம். நுட்பமு மெச்சமு மொருபுடைமாணாக்கரி னுணர்ந்தவிடத் தெய்திய
தெவிட்டாவின்பமொன்றெனலா மென்பது பாங்கனாற்கூடிய கூட்டத் தெய்திய வின்பமென்பதாம். இவை குறிப்புவமை.
குலனுந்தொன்மையுங்குணனுந்திருவு
நலனும்பருவமுமுருவமுநயந்தோ
ரறம்புரிகொள்கையோடளவளாய்வாழ்நாட்
டிறம்பாக்கற்புடைச்சேயிழைவயிற்றிற்
கருப்பம்வந்தடியிடக்கண்டகண்மலரால்
விருப்பமுற்றதனினுமேம்படுநிலத்துறப்
பிறந்தநன்புதல்வர்பீடுடைமுகமலர்
சிறந்தவர்காண்டொறுஞ்செறிபேருவகை
யாங்கவற்றினுமிகுமரும்புமென்மழலை
யோங்கியசெவிப்புலத்துறவருமுவகை
யுவகையிற்கழிந்தபேருவகையதாகு
மவமதிப்பின்றியேழாண்டமைவெய்தலும்
பொற்புடைக்குரவர்தம்பொன்னடிவணங்குபு
கற்பனயாவையுங்கசடறக்கற்றபின்
கல்வியுங்கவியுங்கவின்பெறச்செலச்சொலு
மெல்லையிற்றாதையின்புறலும்பொருவரும்
பூதலம்புகழப்பொலிந்துநின்றருளிய
சீதரன்குருகாபுரேசன்சிலம்பின் மதுமலர்ச்சோலையுண்மடவரல்
புதுவதுபுதுவதாய்ப்புரிந்தருணலனே. (4)
என்பது பாங்கியிற்கூட்டத் திறுதிக்கட் டலைமகன் கூறியது.
இதனுள், கருப்பம்வந்தடியிடக்கண்டகண்மலரால் விருப்பமுற்றது என்பது இயற்கையிற்கூடிய வின்பவிருப்பத்தை.
அதனினு மேம்படும் புதல்வர்பீடுடைமுகமலர் சிறந்தவர்காண்டொறுஞ் செறிபேரு வகை என்பது
இடந்தலைப்பாட்டிற்கூடிய வின்பமகிழ்ச்சியை. ஆங்கவற்றினுமிகு மழலை யோங்கியசெவிப்புலத் துறவருமுவகை யென்பது
பாங்கற்கூட்டத்திறுதிக்கட் கூடிய வின்பமகிழ்ச்சியை. உவகையிற் கழிந்தபேருவகையதாகுங் கல்வியுங் கவியுங்
கவின்பெறச் செலச்சொலு மெல்லையிற்றாதையின்புறலும்பொருவரும் என்பது பாங்கியிற்கூட்டத்துக்கூடிய புணர்ச்சியை.
பொருவருமென்பதனை நான்கினுங் கூட்டுக.
குணம்-அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு. திரு-செல்வம். அளவளாய் – கலந்து.
திறம்பா – அழியா. அவமதிப்பு – கற்கப்படுநூல்களைக் கற்கநினையாமை – இகழ்தல். இன்றி-இல்லாமை.
செலச்சொலல் – கூறும்பொருள்களறிதற்கரியவாயினுங் கேட்போர்க் கெளியவாய் மனத்துட்கொளக் கூறல்.
கவின்பெற – அழகு பெற. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
இது மாட்டுறுப்பு மெச்சமு மின்றிவந்த முத்தகச்செய்யுள். என்னை?
“மாட்டுமெச்சமுநாட்ட லின்றி, யுடனிலைமொழியினுந்தொடர்நிலைபெறுமே” என்றாராகலின்.
பகுதி – பகற்குறி. துறை – இதுவும் புணர்ச்சிமகிழ்தல்.
தண்டளவுங்கொன்றையும்பைந்தார்தழைப்பவாய்மயிலின்
கண்டழைப்பவண்டுகளிதழைப்ப–நுண்டுளிசோர்
கார்வரவிதென்றயரேல்கண்ணன்குறுங்குடியார்
தேர்வரவிதென்றணங்கேதேர். (5)
இதுவும் மாட்டுறுப்பு மெச்சமுமின்றிவந்து தனிநின்றுமுடிந்த முத்தகச்செய்யுள்.
தார் – பூ. ஆய்மயில் – ஆடாநின்ற மயில்.
வரவு என்பது தொழிற்பெயர்போலநின்று நிகழ்காலங்காட்டுவதோர்வாய்பாடு. நுண்டுளி – அசும்பு. கார் – மழை.
வரவு – வாராநின்றது. அயரேல் – வருந்துவதொழி என்றவாறு. பகுதி – வரைபொருட்பிரிதல். துறை – பருவங்காட்டிவற்புறுத்தல்.
நிறையழிகாமக்கடலைநீந்திச்சலாபத்
துறைமுகமுத்தங்கொளவேசூழ்வார்க்–கிறைவளையா
யாய்ந்தபுணையென்பவருண்மாறன்வண்குருகூர்
வாய்ந்தபனைமாமடல். (6)
(இ-ள்) அருண்மாறன் வண்குருகூரிறைவளையாய் ! ஆடவர் நிறையாகிய கரையை யழிக்கப்பட்ட காமமாகிய
புணரியைக் கடந்து மகளிரிடத்தின்பத்துறையைத் தரும் முகத்தில் அதரபானத்தையுட்கொள வழி யேதென்று
விசாரிப்பவர்க்கு வாய்ந்த பனைமாமடலே ஆராய்ந்தறிந்த புணையென்றுகூறுவர் பெரியோரென்றவாறு.
இதுவும், ஆடவர்களென்னும் பெயர்ச்சொல்லும், எனக்கு மதுவே குறிப்பென்னுங் குறிப்பும் எஞ்சிநின்று முற்றியதால்
இருவகையெச்சமும் மாட்டுறுப்புங்கூடித் தனிநின்று முற்றின முத்தகம். சலாபத்துறை முகமுத்தங்கொள என்பது சிலேடை.
இது, பாங்கியிற்கூட்டத்துச் சேட்படுக்கப்பட்டானான தலைமக னாண்டுறந்துரைத்தல்.
பகுதி – மடல். துறை – உலகின்மேல்வைத்துரைத்தல். முத்தகமென்பது காரணப் பெயர். முத்தகம் முற்றும்.
இனிக் குளகம் வருமாறு :-
68. குளகம்பலபாட்டொருவினைபேர்கொண்டு
வளர்முலையாய்மூன்றிடத்துமன்னு–மளவை
யுகளகஞ்சாந்தானிகங்காபாலிகத்தோடைந்தின்
மிகல்வகைத்தாநூல்சொல்விதி.
(எ-ன்) முறையே குளகச்செய்யுளின்கூறுபாடுணர்….. ற்று.
(இ-ள்) வளராநின்ற முலையினையுடையாய் ! குளகச் செய்யுளென்பது, பலபாட் டொருவினையேயாதல்
ஒருபெயரேயாதல்கொண்டு, எண்ணினதளவு உகளகம், சாந்தானிகம், காபாலிகம் என்னு மூன்று திறத்தினோடும்,
ஐந்தாயும் அவ்வைந்தினுமிகுங் கூறுபாடுடைத்தாயும் செய்யுளகத்து முதல் இடை கடை யென்னு மூன்றிடத்தும்
நூல் சொன்னவிதியாக நிலைபெறுமென்றவாறு.
வினையென்ற விதப்பால் வினையின்வேறல்லவாம் வினைக்குறிப்பும், பெயரென்ற விதப்பாற் பெயர்ப்பெயரேயன்றி
வினைப்பெயருங் கொள்ளுமென வுணர்க. வினைமுதலிய நான்கோடுந் தானமூன்றோடு முற்றவுதாரண மீண்டுரைப்பிற் பெருகும்.
அவற்றுட் சிலவுதாரணங் காட்டுதும் :-
நினைமருவொன்றில்லாஞானாதிகளைப்
புனைவகுளத்தாமப்புயனை–வினையினையே
வென்றானைக்காரிதரும்வித்தகனைப்பாவலன்பின்
சென்றானேநாதனெனத்தேர்ந்து, (7)
வேதமதனைவிளங்குதமிழ்ப்பாப்படுத்திப்
போதந்தழைந்துபுகழ்புண்ணியனை–நாதமுனி
போற்றும்புனிதனையந்தாமம்புகமனனே
தேற்றம்பயின்றேதினம். (8)
இவை யிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாதிகுளகம்.
உகளக குளகமென்பது இரண்டுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது.
குன்றமதனைக்குடைகொண்டநீலமணிக்
குன்றமதனைக்குணக்கடலைக்–குன்றமதே
மத்தாகக்கொண்டமிர்தம்வானோர்க்களித்ததரு
மத்தானைத்தேவாய்மதித்து, (9)
வாழ்த்துபரசமயவாதியர்தம்வாய்மதத்தைச்
சாய்த்ததமிழ்மறைப்பாத்தந்தானைக்–கீர்த்திபுனை
பாவேசர்போற்றும்பராங்குசனைமுத்திபெற
நாவேமனத்தானயந்து. (10)
இவையிரண்டும் வினைகொண்டுமுற்றின யுகளகமத்திய குளகம்.
வாழ்த்து என்பது ஏவல்வினை. இவை நான்கும் திணை – பாடாண் ; துறை – ஓம்படை.
காலிருக்கக்கையிருக்கக்கண்ணிருக்கச்சென்னியதன்
மேலிருக்கநாநடுவேவீற்றிருக்க–நாலிருக்கும்
பொய்யாதிருக்கப்புகழ்மாறனைவலஞ்செய்
துய்யாதுமஞ்சலியாதும். (11)
பூவிற்சிறந்தவவன்பொன்னடியைக்கண்டுமலர்
தூவிவணங்கித்துதியாத–பாவிகளோ
டொன்றாகியவுளமேபோனவைபோட்டூதியமா
மின்றாகிலுமுற்றிறைஞ்சு. (12)
இவையிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாந்தியகுளகம்.
இதனுள் மாறனையென்பது மால்தனை எனவும் பொருந்தும்.
இவை யாறிற்கும் ஒழிந்த அகல முரையிற் கொள்க. திணையுந் துறையு மிதுவு மது.
அடித்தகைத்தலம்பிடித்துவன்கனகனாருயிரைக்
குடித்தகோளரியாயகொற்றவனுமாண்குறளாய்
நடித்துமூவுலகன்றளந்தவனுமைந்நாகந்
துடித்துமூலமென்றழைத்ததற்குதவியசுகத்தோன். (13)
அம்பிகாபதியிரப்பொழித்தவனுமாதரவா
லும்பராரமுதருந்தவைத்தவனுமும்பருளார்
தம்பமாந்தசரதன்றிருமகனெனத்தழைத்தே
கம்பவாரிதியடைத்தருளயோத்திகாவலனும். (14)
இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டு முற்றிய யுகளமத்திய குளகம.
திணை – பாடாண் ; துறை – கடவுள்வாழ்த்து.
அரியுமயனுமரனுமெனமூன்றாய்த்
தெரியுமவருட்டெளிதற்–குரியபொரு
ளந்தாமத்தானென்றுணர்த்தியடியவர்தஞ்
சிந்தாகுலந்தவிர்த்ததே, (15)
முந்தமதுரகவிக்களித்தமூதுரைசா
லந்தமலரடியையாதிரைநாள்–வந்த
மறையவர்கோன்சென்னியினும்வைத்தெமையாள்செந்தே
னிறைவகுளப்பூங்கண்ணியன். (16)
இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம்.
கண்ணியைப் புனைந்தவனென்னும் வினையைக் குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானென் றுணர்க. என்னை?
“காலந்தாமேமூன் றெனமொழிப” “இறப்புநிகழ்வுமெதிர்வுமென்றா, வம்முக்காலமுங் குறிப்பொடுங்கொள்ளு,
மெய்ந்நிலையுடையதோன்றலாறே” என்றாராகலின். ஆதலால் வினைக்குறிப்பிற்குங் காலமுண்டெனக் கொள்க.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பரவல்.
முழுக்கலையற்றரைக்கலையுமிழந்தாய்தோகை
முருந்துறுபீலியின்முழுதுமுன்றில்சீக்கு
மொழுக்குறநின்றனையுடையுமஃதேயானா
யுன்விரதமெதுபெயரேதுரைத்தியென்னா
வழுக்கறவேயியங்குயிர்கொல்லாமையாசீ
வகனாகவிறைவன்யாரருகனில்யா
திழுக்கியல்பின்றாந்தனியூர்யாதுசெம்பொ
னெயிலெனவவ்வெயிலெவணென்றிசைத்துமீட்டும் (17)
எப்படிவந்தோன்றியதப்படிவத்தெல்லா
மின்னுயிருண்மையையுணராயியங்கற்பால
வப்படிவத்துயிருளதாயுணர்ந்தாயீசற்
கருத்துமுறையினிலருத்தியறத்திற்கேற்ற
துப்புரவுண்பதுகடனென்றுள்ளாயாகத்
தொழிலிகழ்ந்தாய்சுடர்சொருபாம்வேதமார்க்கந்
தப்பினையெம்மறைகொடுசாதிப்பதென்றே
சமண்மதத்தைப்பழித்தனராயழித்துச்சாய்த்தார் (18)
இவையிரண்டும் வினைப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம்.
திணை – பாடாண். துறை – “அமரர்கண்முடியுமறுவகையானு” மென்றதனால் முனிவர்வாழ்த்து ; பார்ப்பனவாழ்த்துமாம்.
முன்புலகமேழினையுந்தாயதுவுமூதுணர்வா
ரின்புறக்கங்காநதியையீன்றதுவு–நன்பரதன்
கண்டிருப்பவைகியதுங்கான்போயதுமமிர்த
முண்டிருப்பாருட்கொண்டதும், (19)
வெந்தகரியதனைமீட்டுமகவாக்கியது
மந்தச்சிலையினைப்பெண்ணாக்கியதுஞ்–செந்தமிழ்தேர்
நாவலன்பின்போந்ததுவுநன்னீர்த்திருவரங்கங்
காவலன்மாவலவன்கால். (20)
இவையிரண்டும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம். என்னை?
“பெயர்நிலைக்கிளவிகாலந்தோன்றா, தொழினிலை யொட்டு மொன்றலங்கடையே” என்றாராகலின்,
இடுகுறியாய்க் கால் எனக் காலமுந் தொழிலுந் தோன்றாதுநின்றவாறு காண்க.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வணக்கம்.
ஒழிந்த ஆதியினும் இடையினும் யுகளககுளகம் வந்தவழிக் கண்டுகொள்க. யுகளககுளகம் முற்றும்.
தொடுத்துமுத்தலைச்சூலவன்படையினைத்துண்டப்
படுத்துவெஞ்சினத்தாடகையுயிர்நமன்பகுவாய்
மடுத்துவேள்விகாத்தெதிர்ந்தபோர்நிருதர்க்குமரணங்
கொடுத்தடுந்தொழிற்கரன்முதலவர்க்குவிண்கொடுத்தே, (21)
கிளைத்துநாகவன்பிடர்மிசைக்கிளர்மராமரமேழ்
துளைத்துவாலிமார்பமுந்துளைத்தடற்கருஞ்சுடுதீ
விளைத்துவேலையுளுருகெழுகோதண்டமேனாள்
வளைத்துவாய்மையோர்வடிவெடுத்தனையதோர்வாளி, (22)
கும்பனைப்பொருநிகும்பனைக்கும்கன்னனைநீ
டம்புராசியிற்குரைத்தெழுபலப்படையதனைச்
செம்பொனாலயம்விருப்புறத்தெசக்கிரீவனைக்கொன்
றெம்பிரான்சனகியைமணந்தாடலெய்தியதும். (23)
இவைமூன்றும் வினைகொண்டுமுற்றிய சாந்தானிகாதிகுளகம். திணை – வாகை. துறை – வில்வென்றி.
அருமறையாய்நள்ளிரவிற்கொடுபோகிவசுதேவராயர்பாடித்
திருநகரத்திடைகரப்பவளர்ந்தவனும்வெண்ணெயினைத்திருடிமேனாட்
பொருவறுகைத்தாமரையாற்செங்கனிவாய்வைத்தவனும்போதனேற
னிருவருங்காண்பதற்கரிதாமந்தாமந்ததிபாண்டற்கெளிதினன்பால், (24)
கொடுத்தவனுமானிரைகாத்தருள்காலைக்
கன்மாரிகுடைகுன்றாகத்
தடுத்தவனுநான்முகத்தோன்கொடுபோய
பல்லுருவின்றன்மையாக
மெடுத்தவனுந்தேவகியீன்றருள்புதல்வன்
றுரோவதியாமின்பக்கொம்பன்
றுடுத்ததுகிலிருஞ்சபையுட்டொலையாமை
யளித்தவனுமுண்மைகூறின், (25)
காண்டகுபொன்முடியுதைத்துக்கஞ்சனைக்கொன்
றுறவோர்முன்கடுஞ்சொற்கூறப்
பூண்டதொழிற்சிசுபாலன்பொன்முடிசக்
கரத்தறுத்துப்புவனம்போற்றப்
பாண்டவற்குத்தூதாகிநூற்றுவர்மு
னுருணெடுந்தேர்ப்பாகனாகி
யாண்டகைமைத்தருமன்முதலவர்க்கவனி
யனைத்துமளித்தவனுமன்னோ. (26)
இவைமூன்றும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின சாந்தானிக மத்தியகுளகம். துறை – கடவுள்வாழ்த்து.
தெள்ளுநான்மறைப்பனுவலுமயனையாதியரும்
வெள்ளிவெண்மதிக்கடவுளுங்கதிருமீன்கணமுந்
தள்ளரும்பொறைமன்னுயிர்க்கணங்களுந்தழங்கு
கொள்ளைவெண்டிரைப்புணரிமொண்டெழநிலைகுலையா, (27)
வாக்கும்பாதமும்பாணியுங்கரணமுமற்று
நீக்கமுற்றமன்னுயிர்கடாமாயையுண்ணெடுங்கற்
றாக்குமாடகத்துகண்மெழுகடைந்தபோற்றயங்கக்
காக்கும்வாய்மையீங்கெனதெனத்திருவருள்கலந்தே, (28)
காலம்யாவையுங்கழிந்தபின்கழிந்தபேருருவின்
ஞாலமுற்றவுண்டுறுபுனனடுவணநயந்தோ
ராலநுண்டளிரெனுமனந்தனிலுலகனைத்தும்
பாலனாகியுள்ளடக்குபுதுயின்றனன்பரிப்பான். (29)
இவைமூன்றும் வினைப்பெயர்கொண்டு முற்றின சாந்தானிகாந்திய குளகம். திணை – பாடாண். துறை – கண்படைநிலை.
(குருகாமான்மியம். )
பரத்துவமுதலாப்பஞ்சவுற்பனனாம்
பரமனெமமிறைவனாமெனல்போல்
வரத்தொடும்புகழும்பஞ்சமாத்தொழிலும்
வழங்கலுமிவன்றிறத்தெனல்போற்
றிரத்தவாம்பஞ்சபூதமுஞ்செனித்த
செய்கையுமிவன்றிறத்தெனல்போற்
கரத்தினிற்பஞ்சாயுதங்களேதரித்த
கருணையங்கடவுளாமெனல்போல், (30)
ஞானமுமழகும்வீரமுந்திருவுநவையிலானந்தமுமெமவே
யானவேனையவாமுலகமென்பவற்றிற்கவையமைதியவலவெனல்போல்
வானுறநிவந்தவெழுநிலத்தமைந்தமாடசூளிகையின்யாப்புறுத்தைம்
பானிறந்தழீஇயதுகிற்கொடிநுடங்குபாங்கரின்வயங்குமெம்மறுகும், (31)
செம்மையின்யாணர்த்திவ்வியமணியாற்
செழும்பொனாற்றிசைதிசையெறிக்கும்
பொம்மலுநிவப்பும்வியலுநீளிடையும்
பொருந்தலினொருமறுகிடைப்புக்
கிம்மறுகெவனிங்கிவற்றுளிம்மாட
மெம்மணிமாடமென்றியாருந்
தம்வயிற்செறிந்தோரிமைப்பருநாட்டந்
தாங்கியுமறிவருந்தகைய. (32)
இவைமூன்றும் பண்பிடனாகத்தோன்றினவுடைமைவினைக்குறிப்புக் கொண்டுமுற்றின சாந்தானிகாந்தியகுளகம்.
சாந்தானிககுளகமென்பது மூன்றுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது.
திணை – இதுவுமது. துறை – பரமபதவருணனை.
இவையுள குருகாமான்மியம். ஒழிந்தனவும் வந்தவழிக்கண்டுகொள்க. சாந்தானிககுளகம் முற்றும்.
ஆதிப்பரப்பிரமநாராயணனென்றுஞ்
சோதிச்சுடர்மயமாந்தோற்றஞ்சா–னீதிச்
சொருபமுடனுருவந்தோய்ந்துளன்காணென்று
மொருபரந்தாமத்தானென்றும், (33)
பாங்குடையமன்னுயிரொன்றல்லபலவென்று
மாங்கவற்றுணீங்காதவனென்று–மோங்கவற்றை
நித்தியமாமென்றுமுடனித்தியமன்றென்றுமதை
யுய்த்ததுபூதாகியதென்றும், (34)
முத்திக்கவனேமுதற்காரணனென்றும்
பத்திவிடாதேபயிலென்றுஞ்–சத்தியமாய்ச்
செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த
சொல்வித்தகமேதுணிந்து, (35)
நாமானிடப்பிறவிநன்றென்றுந்தேர்ந்தனமாற்
காமாதிகளாங்களைகளைந்து–பாமாலை
சாத்தியேநெஞ்சேதருமெமக்குமுத்தியென
வேத்தியேயின்புற்றிரு. (36)
இவை நான்கும் வினைகொண்டுமுற்றின காபாலிகாந்தியகுளகம். திணை – பாடாண். துறை – குரவனைவாழ்த்தல்.
இச்சிப்போனிட்டவிணையடிப்போதன்றொருவ
னுச்சிப்போதானதுலகறிந்த–நிச்சயமே
யாய்ந்தாலொருவன்சிரத்தணிந்ததன்றொருவன்
பூந்தாள்கழுவும்புனல், (37)
இளிவந்ததுசெய்திரந்தானொருவன்
வெளிவந்தொருவனதைமீட்டான்–களிவந்த
சித்தமுறத்தன்பெயரேகேளாச்செவியனுக்கு
முத்தியளித்தானோர்முதல், (38)
சேதிப்பதாமொருவன்செய்தொழிலுமேனையவற்
காதிப்புவனமவைகாவல்–கோதற்ற
நற்குணத்தெம்பூமகள்கோனாரணனந்தாமத்தான்
முற்குணத்தானேயெம்முதல், (39)
என்றாய்ந்துணர்ந்துணர்த்தியிங்கெமையீடேற்றினான்
பொன்றாதசெஞ்சொற்புலவீர்கா–ளொன்றாய
தேவின்புறத்தமிழ்செய்தென்குருகூரன்மனம்போல்
வாவுஞ்சிறையோதிமன். (40)
இவை நான்கும் வினைக் குறிப்புக் கொண்டு முற்றின காபாலிகாந்திய குளகம்.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பரவல்.
மீனமதாயாமையாய்வெள்ளைவராகமதாய்த்
தானவனைக்கொன்றுமறைதந்தானும்–வானவர்க்காய்
வாங்குதிரைகடைநாண்மந்தரமேற்கொண்டானு
மோங்குமகிலங்கொணர்ந்தானும், (41)
ஆளரியாயாடகனைச்செற்றானும்வாமனமாய்த்
தாளிணையான்மூவுலகுந்தாயானுங்–கோளரிபோன்
மாறுதிரட்காவலரைமாய்த்தமழுவாளியா
யூறுதிரத்தேகுளித்தானும், (42)
அன்றுதனுராமனாகியிருபதுகைக்
குன்றினுயிரைக்குடித்தானும்–வென்றியுடன்
பார்திருத்துநாஞ்சிற்படையானும்பாண்டவர்க்கவ்
வூர்திருத்தமுற்றளித்தானும், (43)
புண்டரிகத்தானைப்புரந்தானுமைந்நீல
கண்டனிரப்பொழியக்கண்டானு–மண்டமினி
மேலிலையிங்கென்னவிழுங்கியவேகோதகத்தோ
ராலிலையின்மீதுதுயின்றான். (44)
இவைநான்கும் வினைப்பெயர்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம். திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.
மாயோனெடியோன்மதுசூதனன்புவனந்
தாயோன்முகுந்தன்சராசரங்க–ளாயோ
னராரியரியச்சுதனாகணையான்
முராரியழியாமுதல், (45)
மாதவன்கேசவன்வாமனன்கோவிந்தன்
சீதரன்பூமகள்கோன்றேவேசன்–பூதலத்தை
யுண்டோன்விரிசிறைப்புள்ளூர்ந்தோன்பகிரண்டங்
கண்டோனிருதாந்தகன், (46)
மந்தாகினிபிறந்தவார்கழலோனேமியோன்
றந்தாவளமுரைத்தசால்பினோ–னெந்தை
திருமால்வரனுந்திபூத்தோனமரர்
பெருமான்பிரமன்பிதா, (47)
கண்ணன்கருணாகரனமலன்காயாம்பூ
வண்ணன்கடல்வண்ணன்மைவண்ணன்–விண்ணவர்கோன்
றம்பிரானாரணனந்தாமத்தான்வேதாந்த
னெம்பிரான்முத்தனிறை. (48)
இவைநான்கும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம்.
துறை – கடவுள்வாழ்த்து. ஒழிந்தவும் வந்தவழிக் கண்டு கொள்க. காபாலிக்குளகம் முற்றும்.
செம்பினையுருக்கிவாக்கித்திண்ணிதினகழிதூர்த்திட்
டும்பரின்முதலேவெண்பொனுவானமதமைத்தபின்றைப்
பைம்பொனார்செகதிகண்டம்பட்டிகைவகுத்திட்டோர்சா
ரிம்பர்நின்றேறயாளிச்சுருட்படியியற்றிமன்னோ, (49)
பாங்கர்வேதிகைக்குத்தானம்பகுத்தரங்கினுக்குநாப்ப
ணோங்குபொற்சுவர்நிறீஇவித்துருமசாளரஞ்செய்தோவா
வீங்கிருடுணிக்குஞ்செய்யவிழுமணியதனான்மேல்வாய்த்
தாங்குமுத்திரம்வைத்துள்வச்சிரத்துலாந்தகவின்வைத்தே. (50)
பச்சைநன்மணியையீர்ந்தபலகைமேற்பரப்பிநீலத்
தச்சுறுகொடுங்கைமூட்டியதன்புழையகத்தவாக
வச்சிரவளைகளோடிமணிசெய்வேதிகைமாண்டூணத்
துச்சிமேற்பலகைசிற்றுத்திரத்தினோடொன்றச்சேர்த்தே, (51)
வெள்ளிவெண்பலகைநான்குவிரல்வியனீப்பின்றாக
வள்ளுறநிறைத்துவண்பொன்னாணிகளழுத்திக்கையா
லள்ளுபுதிரளுமொண்பொன்னரதனஞாங்கர்மேய்ந்து
தெள்ளிதினேழதாகத்திகழ்நிலம்புணர்த்துமாதோ, (52)
வாரிநீணிலையுமேல்கீழ்மரீஇயநோன்படியுந்தாளுங்
கூர்கபாடமுமொன்றாகக்கொளீயமாண்மணிகடம்மாற்
சீர்கெழுதசும்புசூட்டுஞ்சிமயமோடுயர்ந்துவானு
ளார்தமக்கமைந்ததச்சர்க்கணங்குசெய்வனபொன்மாடம். (53)
இவை ஐந்தும் பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம்.
மேலைந்து முதலிய வெவற்றிற்குங் குளகமென்பன பொதுப்பெயர். திணை – பாடாண். துறை – நகர்வாழ்த்து.
அற்புதமாமன்னுயிரேபிரமமென்று
மலகிலவன்றொன்றெனவுமலகில்யாக்கை
நிற்பனயாதெனிற்புனல்பெய்கடங்கடோறு
நிழற்கதிர்தோன்றியநெறித்தாமென்றுமங்ஙன்
பொற்பனவொன்றிறத்தலுமேனையவும்பொன்றாப்
பொலிவெவனென்றாலவைபோலெனவுமாறிக்
கற்பனைசெய்பவன்றனைநான்பிரமமென்றே
கழறுமிரண்டெவனெனவேகழறிமீட்டும், (54)
நான்பிரமமென்றனைநீபிரமமாகி
னான்முகனையுந்தியிற்பெற்றிடுதிபொன்றா
வான்பிரமமமைத்தபகிரண்டமெல்லாம்
வயிற்றிடைவைத்திடுதிசதுமுகத்தால்வையந்
தான்புரந்தவ்வுலகினைமூவடியிற்றாய
தனுவினனோரணுமயமாந்தனுவுங்கோடி
யூன்பயின்றகுரம்பையைநீத்துலகமெல்லா
மொருங்கெறிக்குஞ்சுடர்மயமாமுருவுங்கோடி, (55)
ஆயிரவாய்ப்பஃறலைப்பாம்பணைமேற்காவ
லறிதுயிலுங்கொண்டிடுதியனந்தனாகி
மாயிருஞாலங்களொருபத்துநாலு
மணிமுடிமேற்றரித்திடுதிவழிந்துநாளுந்
தாயதிரைப்பாற்கடலைத்தயிரேயாக்கிச்
சந்திரனைமந்தரமேற்றறியதாக்கித்
தூயசுவைத்தெள்ளமிர்தநரர்க்கும்விண்மேற்
சுரர்க்களித்ததெனவளிக்குந்தொழிலுங்கோடி, (56)
எண்ணிறந்தநால்வகைத்தோற்றத்துளாய
வெழுவகைத்தாஞ்செனனமுநீயிசைந்துபின்ன
ரெண்ணிறந்தவிடங்கடொறுநிற்பதோடு
மியங்குதியீங்கிவையன்றியேககாலத்
தெண்ணிறந்ததொழில்புரிதியண்டரண்டத்
திவ்வுலகிற்பாதாளத்தின்பதுன்ப
மெண்ணிறந்தவிவர்க்கிவற்றிற்கிசைந்ததென்றென்
றிசைந்ததிறம்வாய்மையதாயிசைப்பதோடும், (57)
இவ்வுடலத்திறத்தியிறந்திடுகாயத்தை
யீமத்தங்கிடுபொழுதிலெரிந்திடாதே
யவ்வுடலத்துடனெழுந்துவருதிகாயத்
தருவருப்பாக்கியமலமூத்திரங்களெய்தாச்
செவ்வியின்வாழ்ந்திடுதிநரைதிரைமூப்பில்லாச்
சிறப்பினொடும்வளிமுதலாச்செறிந்தமூன்றும்
வவ்வுதலற்றீறில்சுகானந்தமேய
வச்சிரகாயம்புணர்ந்தவாழ்வினோடும், (58)
மின்னுயிர்க்குங்கனகன்வினவினபொற்றூணம்
வெடிப்பவுதித்தடித்தகரம்பிடித்தபோல
வுன்னுயிர்கொண்டெனதுகரம்பிடித்ததூணத்
துறுதியிவைமுதலவுனக்குறுதிவதின்றான்
மன்னுயிர்தாமலகிலவாம்வகையுமீசன்
வாழ்வகையுமுணர்ந்திலையுன்மத்தனானா
யின்னுயிர்வேறின்னுயிர்கட்குயிராய்நின்ற
விறைவனும்வேறெனத்தெளிவித்திதஞ்செய்வாரே. (59)
இவையாறும் வினைப்பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம். திணை – பாடாண். துறை – முனிவர்வாழ்த்து.
*”ஆங்கதன்” முதல், “கொண்டமால்வரை” ஈறாக 9-ம் பரனிருப்பான் என வினைமுற்றுக் கொண்டுமுற்றின அந்தியகுளகம்.
இவற்றின்மிக்குவருவனவு முள ; அவையும் பெருங்காப்பியங்களினிடத்துக் கண்டுகொள்க. குளகம் முற்றும்.
* ‘ஆங்கதன்’ என்பது குருகாமான்மியம் பரமபத வருணனைச் சருக்கத்து 105-ம் செய்யுள்.
‘கொண்டமால்வரை’ என்பது மேற்படி சருக்கத்து 113-ம் செய்யுள்.
நாவலன்பின்போந்தநறுநீர்த்திருவரங்கங்
காவலன்பொற்றாளாங்கமலத்தே–பாவலர்தம்
பாமாலைசூட்டாதப்பாமாலையையெவனோ
தாமானிடர்க்களிக்குஞ்சால்பு. (60)
புரந்தரனாதியராயபுத்தேளிர்பொற்போதுகடூஉய்
நிரந்தரமேத்தும்படியேதுயின்றதுநெஞ்சத்தன்பு
கரந்தரன்சாபந்துடைத்தோனிருந்ததுதொண்டர்க்கெல்லாம்
வடிந்தரநின்றதரங்கநன்காஞ்சிவடமலையே. (61)
மலைமுழைவைகலும்வைகினராகியுங்
கனிகிழங்கடகுகண்டனமாந்தியு
மூவராயுமுதற்கடவுட்
காவலநீயேகாத்தல்வேண்டுவலே. (62)
வேண்டுவதிங்கின்றெமக்குமெய்க்காவிரியரங்கத்
தாண்டகைதன்வெற்பிலணங்கன்னார்–காண்டகுசீர்ப்
பொன்றாமலர்முகமும்பூண்முலையுங்கண்டனம்யா
மென்றாலினியிதன்மேல்யாது. (63)
என்றாலினியிதன்மேல்யாதுவேண்டுமெனக்குவெள்ளிக்
யன்றாடரவிற்றுயிலரங்கேசனருள்புரிந்து
பொன்றாதசெல்வத்திருமாதுடனுட்புகுந்தனனே. (64)
இவ்வைந்துபாட்டினும் எழுத்து அசை சீர் அடியென்னும் நாலந்தாதியும் அடைவே வந்தவாறு கண்டுகொள்க.
இவற்றுள் “வேண்டுவதிங்” கென்ற வெண்பாவொன்றும் கிளவிவேட்டல். ஒழிந்த நான்குங் கடவுள்வாழ்த்து.
இவை நம்பெருமாள்மும்மணிக்கோவை.
இனிப் பலவடியான்வரும் ஒரு செய்யுளகத்து நாலந்தாதியும் வருமாறு :-
நாவேயுரனுறுநலமிகுமுதற்பொருள்
பொருளுரையாய்தரிற்புகலுமற்றுளதே
யுளதேவண்டிமிருறுமலரோடை
யோடைமால்வரைமூலமென்றுரைசெய
வோடைமால்வரைமூலமென்றுரைசெய
வுரைவிசைத்தடங்காவொல்லையிற்குறுகுபு
புனிற்றாவெனவருள்புரிந்திடர்செகுத்த
வறைபுனலரங்கத்தமுதினையன்றியு
மதித்தொருமுதலையேமகிழ்ந்து
துதிப்பதுமுளதோசுரர்பெருநாவே. (65)
இந்நேரிசையாசிரியப்பாவினுள் நாலந்தாதியும் வந்தவாறு காண்க.
இன்னு மவ்விலேசானே இறுதிநின்ற சொற்பொருணோக்கத்தான் ஆகுபெயராற் சொற்றொடர் வருவனவுமுள. அதற்குச் செய்யுள் :-
“பரிவதிலீசனைப்பாடி
விரிவதின்மேவலுறுவீர்
பிரிவகையின்றிநன்னீர்தூஉய்ப்
புரிவதுவும்புகைபூவே.” (66)
“மதுவார்தண்ணந்துழாயான்
முதுவேதமுதல்வனுக்
கெதுவேதென்பணியென்னா
ததுவேயாட்செயுமீடே.” (67)
69.உலவாதகேள்வியொருவர்பலராற்
பலவாய்ப்பகர்பாவினமா–யிலகுபொரு
ளெண்பாட்டளவுதொழிலிடங்காலஞ்சினையின்
பண்பாந்தொகைநிலைச்சொற்பா.
(எ-ன்) வைத்த முறையானே தொகைநிலைச்செய்யுளாமாறுணர்-ற்று.
(இ-ள்) தொகைநிலைச்செய்யுளென்பது குறையாத கேள்வியினை யுடைய வொருவரானாதல் பலரானாத லுரைக்கப்பட்டுப்
பலபாட்டாய் வருவனவாய், அவை பொருளானும் எண்ணானும் பாட்டானும் அளவானும் தொழிலானும் இடத்தானும்
காலத்தானும் சினையானும் தொகுத்து பெயர்பெற்ற பண்பினையுடையவாமென்றவாறு.
இன் உருபுமயக்கம். உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. உலவாத கேள்வியென்பதனை யிருவரிடத்துங் கூட்டுக.
கேள்வி-கல்வி ஒருவராலுரைக்கப்பட்டன திருவள்ளுவப்பயன். பலராலுரைக்கப்பட்டன – நெடுந்தொகை.
இஃ தெல்லாத் தொகைக்கும் பொது. பொருளாற்றொகுத்த பெயர்பெற்றது புறநானூறு.
எண்ணாற்றொகுத்தபெயர் பெற்றது பதிற்றுப்பத்து. பாட்டாற்றொகுத்தபெயர்பெற்றது கலித்தொகை.
அளவாற்றொகுத்தபெயர் பெற்றது குறுந்தொகை. தொழிலாற்றொகுத்த பெயர்பெற்றது ஐந்திணை.
இடத்தாற்றொகுத்தபெயர்பெற்றது களவழிநாற்பது. காலத்தாற்றொகுத்தபெயர் பெற்றது கார்நாற்பது.
சினையாற்றொகுத்தபெயர்பெற்றது நயனப்பத்துபயோதரப்பத்து.
உம்மை யெச்சவும்மையாகலானிவ் வெட்டுவகையானுமன்றிப் பிறவகையானும் பெயர்பெற்றனவுளவேனும்
அவையும் அறிந்துகொள்க. தொகைநிலைச்செய்யுண் முற்றும்.
70.சொல்லாற்பொருளாற்றொடருந்தொடர்நிலைக
ளெல்லாமவற்றுளெழுத்தசைசீர்–மல்கு
மடிசொற்றொடர்நிலைகளந்தமுதலாம்
படிவைத்தனர்முன்பகுத்து.
(எ-ன்) தொடர்நிலைச்செய்யுளினது கூறுபாடுணர்ற்று.
(இ-ள்) தொடர்நிலைச்செய்யுளென்றுகூறப்படுவன வெல்லாஞ் சொல்லானும் பொருளானுந் தொடரப்படுவனவாம்.
அவ்விரண்டனுள், சொற்றொடர்நிலையைப் பகுத்துக்கூறுமிடத்து நின்றசெய்யுளி னீற்றெழுத்தாதல்,
அசையாதல், சீராதல், அடியாதல் வருஞ்செய்யுட்கு முதலாகத் தொடுக்கும்படியென வுட்கொண்டனர் முற்காலத்துப் புலவரென்றவாறு.
வைத்தனர் – உட்கொண்டனர். இச்சூத்திரப்பொருள்கோள் மட்டுறுப்பு.
எல்லாமென்றதனான் மூன்றாவது சொல்லினாலும் பொருளினாலுந் தொடர்வதுமுளவெனக்கொள்க.
மல்குமென்று சிறப்பித்தவதனால் நான்கும், பலவடியான்வரு மொருசெய்யுளகத்தும் வருவதுளவெனக் கொள்க.
இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-
இவை முதற்பத்தி லாறாந்திருவாய்மொழியின் முதற்பாட்டும் இரண்டாம்பாட்டும்.
இவற்றுள், பூவென்றசொல்லின் பொருணோக்கத்தாற் சினையைக்கூற முதலையறிவிக்கும் ஆகுபெயரால் அந்தாதித்தவராறுணர்க.
இவை நாலுவேதத்தையும் ஓதாதுணர்ந்த ஞானபூரண ஞானமுத்திரைக்கராம்புயன் றிருவாக்கு. சொற்றொடர்நிலைச்செய்யுண் முற்றும்.
71.பெருங்காப்பியங்காப்பியமெனும்பெற்றித்தாற்
சுருங்காப்பொருட்டொடருஞ்சொல்லிற்–பொருந்தவற்று
ளொன்றும்பலவும்பொருளிற்குறைவுறுமே
லென்றுமதுகாப்பியம்.
(எ-ன்) பொருட்டொடர்நிலைச்செய்யுளின்கூறுபாடுணர்-ற்று.
(இ-ள்) பொருட்டொடர்நிலைச்செய்யுளின்கூறுபாடு சொல்லுமிடத்துப் பெருங்காப்பியமென்றும் காப்பியமென்றுங்
கூறு மிரண்டியல் பினையுடைத்தாம் ; அங்ஙனம் பொருந்தியவற்றுள் அறமுதலிய பொருள்கள் நான்கினுள்
ஒன்றாயினு மிரண்டாயினுங் குறைவெய்தவரு மெனில் அதனை யெக்காலத்தினுங் காப்பியமென்பதேயா மென்றவாறு.
எனவே நாற்பொருளுங் குறைவின்றிவருவதே பெருங்காப்பிய மென்பதாம்.
சுருங்காப்பொருட்டொடரெனவே பொருட்டொடர் மிகவும் விரிவுடையதென்பதூஉமாயிற்று.
72.வைத்தபெருங்காப்பியநிலையும்வாழ்த்தியல்பார்
மெய்த்தவவையடக்கம்வீறுசான்–முத்திதருந்
தெய்வவணக்கமுடன்செய்பொருளுமுன்வரவாங்
கெய்தவுரைப்பதுதானேய்ந்து.
73.தப்பிலாநாற்பொருளுஞ்சாற்றுவதாய்த்தாரணிமே
லொப்பிலாதான்சரிதையுட்கொண்ட–செப்பமுற
நன்மணமில்வாழ்க்கைநலம்புதல்வர்ப்பேறுபசும்
பொன்மகுடம்வைத்தின்புறல்.
74.அலையாழிமேன்மையருட்புயலின்செய்கை
மலையாறுநாடூரின்வண்மை–தொலையா
விருசுடரின்றோற்றமிருதுவளம்பானம்
பொருபுனல்புக்காடல்பொழில்.
75.மந்திரந்தூதொற்றொடல்வாய்ந்தநிரைகோடல்
புந்தியுறச்சேறல்புறத்திறுத்தல்–வெந்திறல்கூர்
மிக்கவிகல்வென்றிநிலையாமையைமிகுத்தல்
கைக்கிளைகள்கூறுங்கடன்.
76.படலமிலம்பம்பரிச்சேதங்காண்டந்
தொடர்தொடர்பிற்பாடையுரைதோய்ந்துந்–திடமுறச்சொன்
மூன்றுட்கொளலாமுறையிற்சுவைவிறல்கூர்ந்
தான்றவர்மெய்ப்பான்புகல்வதாம்.
இவ்வைந்து பாட்டும் என்னுதலிற்றோவெனின், மேற்சொன்ன பொருட்டொடர்நிலை யிரண்டனுள்ளுங்
காப்பியத்தின் மரபுணர்த்திப் பெருங்காப்பியத்தின்மரபுணர்-ற்று.
(இ-ள்) சொல்லுவானுட்கொண்ட பெருங்காப்பியத்தினிலக்கண முலகமதிக்கப்பட்ட வாழ்த்தியலும் அவையடக்கியலும்
தெய்வவணக்கமும் செயப்படுபொருளும் என்னும் நான்கும் பாயிரத்தினு ளவ்வவ் விலக்கண முரைத்தபடியே பொருந்துவனவாய்,
வழுவுதலில்லாத நான்கு பொருளையுங் குறைவறக் கூறப்பெற்று, உலகத் தொத்தாரு மிக்காரு மில்லாத தலைவன்
சரிதையுட்கொண்ட வுண்மையுற்று, நன்மணம், இல்வாழ்க்கை, கலவி, புதல்வர்ப்பேறு, பொன்முடிபொறுத்தின்பமுறுதல்,
கடலை மேகத்தை மலையை யாற்றை நாட்டை நகரத்தை ஆதித்த வுதயத்தைச் சந்திரவுதயத்தைச் சிறுபொழுதைப்
பெரும்பொழுதை வருணனைபுரிதல், வீரபானம், காமபானம், புனல்புக்காடல், பொழில்புக் காடல், மந்திரம்பகர்தல்,
தூதுவிடுதல், ஒற்றாடல், நிரைகோடல், மேற்சேறல், எயிற்புறத்திறுத்தல், செருச்செய்கை, வென்றியெய்தல்,
வென்றவேந்தன் நிலைபெற்றிருப்ப இறந்தவேந்த னிலையாமையை மிகுத்துரைத்தல், ஆண்பாற்கூற்றுக்கைக்கிளை,
பெண்பாற்கூற்றுக் கைக்கிளை யென்னு மிவற்றினையும் பாடாண்பகுதி யென்பதனோடுங் கூறுமுறைமையுடன்
படலமென்றாதல் இலம்பகமென்றாதல் பரிச்சேதமென்றாதல் பகுதிப்படுமவற்றை யுட்கொண்ட காண்டங்களோடும்
பொருட்டொடர் புடைத்தா மொருதிறப்பாட்டு மிருதிறப்பாட்டுமாகிய பாப்பாவினத்தோடும்
பாடைவிராயு முரைவிராயு மேற்சொன்ன வுண்மையுடைய முத்தகமுதலிய மூன்று முட்கொள்வனவா முறைமையுடன்
எட்டு மெய்ப்பாடும் மெய்ப்பாட்டுக்குறிப்பு மிகுந்து கல்வி கவியான்மிக்கோர் மதிக்கும்படியுரைப்பதா மென்றவாறு.
இதனுள், வைத்த என்பது உட்கொண்ட எ-று. நிலை–இலக்கணம். இயலு மது. பார்-உயர்ந்தோர் ; இடைநிலைத்தீபகம்.
முன்வரவு-பாயிரம். என்னை? நூற்குமுன்னேவருதலான் முன்வரவென்றாயிற்று.
செய்பொருளு மென்னு மும்மையாற் றழுவப்படும் எஞ்சுபொருட்கிளவி பிற்படக்கிளத்தலாய்நின்றும்மையில்செஞ்சொல்லாய்
முற்படக்கிளந்த வாழ்த்தியல் முதலாய மூன்றினுங் கூட்டி விரித்துரைக்கப்பட்டது. என்னை?
“எஞ்சுபொருட்கிளவிசெஞ்சொலாயிற், பிற்படக்கிளவார் முற்படக்கிளத்தல்” என்றாராகலின். நலம் – புணர்ச்சி.
இருதுவும் பானமும் சாதியேகவசனம். புக்காடலென்பதனைப் புனல் பொழி லிரண்டினுங் கூட்டுக.
செப்பமுற – உண்மையுற ; என்பது, செய்து என்பது செய என ஒரு வினையெச்சம் மற்றொருவினையெச்சமாகிநின்றது.
வாய்ந்தநிரைகோடல் என்பது முதலாக் ‘கைக்கிளைகள் கூறுங்கடன்’ என்பதனால் வெட்சிமுதற் பாடாண்டிணையீறாகப்
புறம் புறப்புறம் அகப்புறம் என்னும் மூன்றுகூறாய வெழுதிணையு முறையே கூறியவாறுங் காண்க.
இவ்வாறன்றி, இவற்றி னிடையிடை கரந்தை நொச்சி என்பவற்றையும், இறுதியிற் பொதுவியல் கைக்கிளை பெருந்திணை
என்பவற்றையும் கூட்டிப் பன்னிரு படலமாக்கி யவற்றிற்கு இருபது, பதினாலு, இருபத்தொன்று, இருபத்திரண்டு, ஒன்பது,
இருபத்தொன்பது, இருபத்துநாலு, முப்பத்துமூன்று நாற்பத்தெட்டு, முப்பத்தேழு, பத்தொன்பது, முப்பத்தாறு
எனத் திணையுந் துறையுமாக விரித்து வெண்பாமாலையாகிய வழிநூலுள் ஐயனாரிதர் கூறிய
தூஉம் இவ்வெழுதிணையு ளடங்குமெனக் கொள்க.
தப்பிலா நாற்பொருளுஞ் சாற்றுவதாய் என்பதனாற் கூறிய வுறுப்புக்கள் சிலபல குறையினும்
நாற்பொருளுங் குறையாதனவெல்லாம் பெருங்காப்பியமெனக் கொள்க.
பாடை – திசைச்சொல் ; “சிதைந்தனவரினு மியைந்தனவரையார்” என்பதனால் *பாஷை பாடையாயிற்று.
உரை – செய்யுளின்றி உரைநடை யான் வருவது. அது இளங்கோவடிகள் கூறிய சிலப்பதிகாரத்துட் கண்டுகொள்க.
உம்மையால் உரையிடைவிரவாது வருவதே சிறப்புடைத்தெனக் கொள்க.
77.மன்னியபேர்யாப்பிற்குவைதருப்பம்வான்கவுடம்
பன்னியபாஞ்சாலமெனப்பகுத்து–மின்னிடையாய்
நன்னூன்முழுதுணர்ந்தோர்நாட்டகத்துநாட்டலுறீஇ
முன்னூலுட்கண்டநெறிமூன்று.
(எ-ன்) இதுவு மேற்சொன்ன செய்யுட் கூறுபடுபாகமுணர்-ற்று.
(இ-ள்) இங்ஙனம் நால்வகைத்தாக நிலைபெற்றபெயரையுடைய செய்யுளனைத்திற்கும் வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு
மூன்று நாட்டினகத்துள்ளாரால் வழங்கும் பாகத்தான் மூன்றாகப் பகுத்து அவ்வவநாட்டினதுபெயரால் நல்ல நூல்களை
முற்றவுணர்ந்தோர் தங்களாற் செய்யப்படுமுந்து நூலகத்து நாட்டுதலையுற்றுக் கண்டமார்க்க மூன்றுளவாமென்றவாறு.
உறீஇ – உற்று. வைதருப்பம் – விதர்ப்பநாட்டது. மின்னிடையாய் என்பது மகடூஉமுன்னிலை.
78.இழுமென்மொழியுமினியபொருளுந்
தழுவுமதுவைதருப்பம்–விழுமியவாஞ்
சொற்கடினத்தோடும்பொருட்கடினந்தோய்ந்தரிதாய்க்
கற்பனசாருங்கவுடங்காண்.
(எ-ன்) வைத்தமுறையானே வைதருப்பபாகமுங் கௌடபாகமும் பாகுபடுமாறுணர்-ற்று.
(இ-ள்) மெல்லென்ற விழுமிய இனியமொழியும், மெல்லென்ற விழுமிய இனிய அறமுதலிய நாற்பொருளும்
பொருந்துவன வைதருப்ப பாகமாமென்றும், விழுமிய சொற்கடினமும் பொருட்கடினமுந்தோய்ந் தரியநடைத்தாய்ப்
புலவனாற்கூறப்படுவது கௌடபாகமாமென்றும் மனத்தாற் கண்டுகொள்க வென்றவாறு.
* பாழ்சை – பிரதிபேதம்.
விழுமியது – முக்கியம். இதனுள் விழுமியவாம் என்பதனை இடைநிலைத்தீபகமாக்கியும்,
காண் என்பதனை யிரண்டிற்கு மிறுதிவிளக் காக்கியும், மனத்தாலென்பதனை யெச்சமாக விரித்தும்,
மென்மையினிமை யென்பவற்றை முன்னையதற்கு முதனிலைத்தீபகமாக்கியுங் கொள்க.
சொற்கடினம் – வல்லினம் வல்லொற்றடுத்து மிகுதல். பொருட் கடினம் – பயங்கரமாகிய பொருள்பயத்தல்.
79.இடையிட்டனவாகுமின்சொற்பொருளாற்
றடையற்றொழுகுவபாஞ்சால–மடைவடைவே
யக்கவிகள்பாடுமவர்க்கங்கவைபெயராய்
மிக்குலகங்கூறும்விதித்து.
(எ-ன்) ஒழிந்த பாஞ்சாலத்தின்பாகுபாடும் அக்கவிகள் பாடு வோர்க்கெய்துங் காரணப்பெயருமாமாறுணர்ற்று.
(இ-ள்) மென்மையுங் கடினமுமாகிய வைதருப்பகௌடங்களோடுங் கூடாதே யிடைநிலைப்பட்டவா மினிய
சொல்லானும் பொருளானுந் தடையின்றி நடைபெற்றொழுகுமது பாஞ்சாலபாகமாம்.
முறை முறையே அக்குணக்கவிகள் பாடுவோர்க்கு மங்கங் கதுவேபெயராக விதித்து
மிக்க பெரியோராற் கூறப்படு மென்றவாறு. அவை வைதருப்ப கவி கவுடகவி பாஞ்சாலகவி என்பனவாம்.
இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-
பதியுமாமுகில்கரிப்படாமுமாய்ப்புன
னதியுமாய்ப்படுகதிர்நான்றவேணியாய்
மதியமாமுளைமதிமதியமாய்த்தமிழ்ப்
பொதியமானதுசிவன்போலுமானதே. (68)
உந்தியங்கமலமேலுதிப்பதாலுரஞ்
சிந்துதெள்ளருவிவெண்ணூலின்செம்மைத்தாய்ப்
பந்திசேர்திசைமுகம்பயிலும்பான்மையாற்
சந்தமால்வரைமறைத்தலைவனொத்ததே. (69)
விண்டுவென்றுரைப்பதால்விண்ணினோங்கியே
பண்டுலகளந்தமெய்ப்படிவங்கூர்ந்தடிக்
கொண்டநீர்பகிரதிக்கோதையொத்ததால்
வண்டுழாய்மலைந்தசெம்மலையுமொத்ததே. (70)
இவைமூன்றும் வைதருப்பபாகம். திணை – பாடாண். துறை – மலைவருணனை.
முப்புரத்தினைச்செகுத்தமுக்கணக்கனிற்சிரித்து
முத்தலைக்கணிச்சியுக்கதாற்
றப்பறப்பொருப்பினைக்குலுக்கிடக்கையைச்செருத்
தலத்துறப்புடைத்துருத்தெழா
நெய்ப்புறத்தினிற்குளித்தவச்சிரத்தினைப்பிடித்து
நெட்டுயிர்ப்புயிர்த்தியக்கவே
குப்புறப்புழைக்கைவெற்பின்மத்தகத்தினைத்துளைத்த
கொப்புளித்தபச்சிரத்தமே. (71)
மத்தகத்தழுத்துவச்சிரத்தினைப்பறித்துயர்த்தி
மத்தவெற்புடற்றிநிற்பதா
னத்தகத்தடக்குமைக்கடற்கடைக்கனற்சினத்த
னச்சுளத்தினுற்றெதிர்ப்பவே
பித்தகத்தழைத்தடற்பொறிப்புலிப்புலத்தினுற்ற
பெற்றமொப்பவட்கியுட்குநீ
டுத்தமச்சுவர்க்கமுற்றகொற்றவற்கிமைப்படுத்த
வொத்தபத்துடைச்சதக்கணே. (72)
புற்புதக்கடக்கவுட்பொருப்புவச்சிரத்தினைப்
புழைக்கையிற்புடைத்தியக்கவே
யுற்றதுக்கிரச்சமர்க்குடக்குமிக்குரத்துரத்
துடைத்ததைப்பறித்துருத்திடா
வற்புதத்தெதிர்த்தியக்கநெட்டடிக்குளுற்றதொற்றை
யக்களிற்றைவிட்டுமுட்டவே
தெற்குவெற்பினைத்துளைத்ததப்புறப்புறக்கொடைத்
திசைக்களிற்றினைத்துளைத்ததே. (73)
முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
82 மாறனலங்காரம்
இவைமூன்றுங் கௌடபாகம். திணை – தும்பை. இவற்றுள், முப்புரத்தினையென்றது ஏமவெருமை. ஏனையிரண்டும் யானைமறமும் ஏமவெருமையுமாம்.
விரைக்கமலமுறுக்குடைந்ததகட்டகட்டினடுப்பொகுட்டு
வெண்டோட்டும்பர்
நிரைக்கமலத்தினிதிருந்துசூட்டெகினம்பார்ப்பருத்த
நினைத்துநீர்வா
யிரைக்கெழவேசெங்கால்வெள்ளுகிருறுமுன்னிதழுரிஞ்சி
யிழிந்ததீந்தே
னரைக்குடுமிமறைக்கிழவனெருப்பிடைநெய்யுகுப்பனபோ
னான்றமாதோ. (74)
மாதண்டர்புகழ்ந்திடவாழ்ந்தருள்வாமபாகத்து
மழைதோய்வெள்ளி
வேதண்டமிசைப்பவளவேதண்டம்பகிரண்டம்
விழைவுகூர்வான்
மூதண்டமுகடுதொடுமும்மதிளின்முரண்முருக்க
முன்கைக்கொண்ட
கோதண்டவடவரைபோற்பணைத்தகெந்தமாதனமாங்
குன்றொன்றுண்டே. (75)
நெய்த்திருண்டுசுருண்டுகடைகுழன்றறலின்கெழுதகைத்தாய்
நெறித்துநீண்டு
மொய்த்திருக்குங்குழற்காட்டின்முகையவிழ்பூந்துணர்விரையு
முற்றாமுன்ன
ரெய்த்திருக்குமிடைக்கிடர்மேலிடரிழைக்குந்தமர்போலு
மிறுமாந்தொண்பூண்
வைத்திருக்குமுலைமுகட்டிற்பொதிகளபத்தொளிவிரையும்
வளைந்தமன்னோ. (76)
இவை மூன்றும் பாஞ்சாலபாகம். முதற்பாட்டு நாடுவாழ்த்து. இரண்டாவது மலைவருணனை. மூன்றாவது குழல்வருணனை.
இவை யொன்பதுங் குருகாமான்மியம். இவை மூன்றுபாகமும் பலவடியான்வரு மொருசெய்யுளின்கண்ணே
பலவடிதோறும் விரவியும் பேதித்தும் வருவனவு முள. அவையும் மேற்காட்டுதும்.
80.இன்பந்தெளிவுசெறிவுசமனின்னிசையே
நன்சொலுதாரநவின்றவலி–மன்காந்தந்
தையலுய்த்தலில்பொருண்மைசாற்றுஞ்சமாதியுட
னையிரண்டும்வைதருப்பமாம்.
(எ-ன்) எடுத்தமுறையானே வைதருப்பத்திற் கெய்துவனவாங் குணவலங்காரங்கட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்ற்று.
(இ-ள்) இன்பமுந் தெளிவுஞ் செறிவுஞ் சமனிலையு மின்னிசையு முதாரமும் வலியுங் காந்தமு முய்த்தலில்
பொருண்மையுஞ் சமாதி யென்பதோடும் பத்தும் வைதருப்ப குணவலங்காரமாமென்றவாறு.
81.ஏனைக்கவுடமிவையீரைந்தொடுங்கூடா
மானைப்பழித்தமதர்விழியாய்–நூனயந்திங்
கெண்ணியபாஞ்சாலமிவைகட்கிடைப்பட்டு
நண்ணியதோர்சால்புடைத்தாநான்கு.
(எ-ன்) ஒழிந்தனவாங் கௌட பாஞ்சாலங்களும் அக்குணவலங்கார மேற்குங் கூறுபாடுணர்ற்று.
(இ-ள்) ஒழிந்த கௌடமு மிங்ஙன மெண்ணப்பட்ட பத்தி னோடுங்கூடாது நடக்கு மிலக்கணத்தவா மென்றவாறு.
பத்தினோடுங் கூடாதெனவே யும்மை யெச்சமாதலாற் சிலவற்றோடுங் கூடியும் வருமென்பதாம்.
பாஞ்சாலமு மப்பத்தினோடும் வைதருப்ப கௌடங்க ளோடுங் கூடா திடைப்பட்டுநடத்தலைப்பொருந்து
மொழுக்கத்தினை யுடைத்தென்றவாறு. இவைகட்கும் என்னும் உம்மை யிறந்தது தழீஇய எச்சவும்மையாம்.
82.சொல்லாற்பொருளாற்சுவையுறலின்பந்தெளிவு
மொல்காப்பொருள்புலப்பாடொண்செறிவு–நல்லா
யெழுத்தோரினஞ்செறிதலெல்லாவெழுத்தும்
வழுத்தீர்ந்துறல்சமனுமாம்.
83.இன்னிசையதின்னிசையாமேய்ந்தவுதாரங்குறிக்கொள்
சொன்னடையால்வேறுபொருடோன்றலா–நன்னுதாஅல்
வாய்ந்ததொகைமிக்குவருதல்வலிகாந்த
மாய்ந்தொன்றனையுயர்த்தலாம்.
84.செய்யுட்பொருளைத்தெளியவிரித்தற்குரிச்சொல்
லெய்துநடைத்துய்த்தலில்பொருண்மை–தையலா
யோங்குஞ்சமாதியுவமேயத்தின்வினையை
யாங்குவமைக்கேற்றுவதொன்றாம்.
(இவைமூன்றுசூத்திரமு முடனெழுதப்பட்டன. )
(எ-ன்) இவை யின்பமுதற் சமாதியீறாய பத்து மாமாறுணர்-ற்று.
(இ-ள்) சொல்லினாலும் பொருளினாலு மினிமையுறவருதல் இன்பமாம்.
தெளிவென்பது கவியாற் கருதப்படும்பொருள் கேட்போர்க்குக் குறிப்புமொழியின்றி வெளிப்படைமொழியாகத் தோன்றுவதாம்.
ஒள்ளியசெறிவும், மூவினமாகிய எழுத்து ளோரின மிகுந்து செறியப் பாடுவதாம். ஒள்ளியசெறிவென்றதனால்
எழுத்தானாகிய சொல்லானாய பொருள் செறிதலுங் கொள்க. சமனிலை மூவினமும் விரவப் பாடுவதாம்.
இரட்டை துணிவு. இன்னிசையும் அவ்வவ் செய்யுட்கேற்ற சொன்னடையாற் பாடுவதாம்.
உதாரமும் செய்யுட் சொன்னடையால்வரும் பொருளன்றி யதன் குறிப்பினால் வேறுபொருடோன்றுவதாம்.
வலியும் தொகைநிலைச்சொன் மிக்குவருவதாம். காந்தமும் ஒன்றனை யுயர்த்திப்புகழுங்கா லுலக
நடையிறவாமை யாராய்ந்துயர்த்துவதாம். உய்த்தலில்பொருண்மை கவி தன்னாற்கருதிய செய்யுட்பொருளை
விளங்க விரித்துக் கூறுவதற்குப் பிறிது மொழிபெய்துகூட்டா ததற்குரியசொற்கள் செய்யுளகத்துளவாம்படி பாடுவதாம்.
சமாதி உவமேயத்தின்வினையை யுவமைக்கேற்றுவதோரிலக்கணத்ததா மென்றவாறு.
இதனைச் சாற்றுஞ் சமாதியென்றதனாற் குணவலங்காரங்கள் பத்தினுள்ளு மிதுவே சிறந்த
குணவலங்கார மென்பதூஉ மிஃது மூன்றுநெறியார்க்கு மொக்குமென்பதூஉ மாயிற்று.
இவற்றிற்கெல்லாம் எண்ணும்மை யிடையிட்டுவந்தன. ஆம் என்பதனைச் சூத்திரந்தோறு மிறுதிவிளக்காகக் கூட்டுக.
நல்லாய், நன்னுதாஅல், தையலாய் என்பன மகடூஉமுன்னிலை. தையலென்பது அண்மைவிளி.
அவற்றுள், சொல்லின்பமாவது அடை சினை முதலென முறைமூன்று மயங்காமை வரும் வண்ணச்சினைச்
சொற்களும் முதலொடு குணமிரண்டடுக்கிவரும் அடைசொற்களுஞ் சினையொடு குணமிரண்டடுக்கி வரும்
அடைசொற்களும் வழக்கிடமுஞ் செய்யுளிடமுமாக விரண்டிறந்தனவா யடைபல வேண்டினவழியேபுணர்ந்த
சொற்களுடன், வழிமோனை முதலியன வரத்தொடுப்பனவாம்.
அவற்றாற் கேட்டோர் பெறு மின்பம் சொல்லின்பம். பொருளாவன :- அறம் பொருள் இன்பம் வீடென்பன.
அப்பொருளால்வரு மின்பமாவது மலரின் மதுக்காரணமாக மதுகரங்கட்கு வரு மின்பம்போலக் கவிப்
பொரு ளுட்கொண்டோர்க்குவரு மின்பமாம். னெவே யவ்விரண்டினுள், பொருளணியுள்ளு முக்கியமான
பொருளணி யுடைத்தாய்ப் பாடுவதே பொருளின்பமாம். இனிச் செய்யுள் வருமாறு :-
வெண்டிரைப்புனலறாவியலயல்வயல்விரி
வண்டிமிர்பாசடைக்குவளைமென்பனிமலர்
புறக்கொடைமதிதரப்பொதியவிழ்ந்ததுபோய்ச்
சிறக்கணித்தனவாஞ்சேயிதழ்க்குமுத
முட்டாட்டாமரைமுறுக்குடைநாண்மலர்க்
கட்காமருகடைவாய்வழிந்திழிதா
மேய்தருகயவாய்மேதிகன்றுள்ளுபு
பணைமுலைசுரந்துபனித்தபாற்றடினி
நெடுவெண்டிங்கணிறைமறுத்துடைத்தொளிர்
செந்தளிர்ப்பூஞ்சுனைத்தேமாத்துகுகனி
முடப்பரியரைப்பலாமுட்புறக்குடக்கனி
புறக்காழ்மரகதப்பூகமிடற்றி
னிறக்காழ்திரண்டுநீண்டுதிர்பழுக்காய்
நெட்டிலையரம்பையினீடுபொற்கூன்கனி
புதையிருடுரீஇக்கதிர்பொழிநவமணிக்குவை
சுழித்தெடுத்திரைத்தவாய்த்தூமலர்பலகொடு
பாற்கடல்பொன்னியுட்படிதிருவுருவங்
காண்பதின்முன்னியகாட்சியொன்றெனலாய்த்
துறைதொறுந்துறைதொறுந்துழனியின்வளைக்குந்
திருவரங்கேசனைத்திருமறுமார்பனை
மனத்துறநினைந்தும்வாழ்த்தியும்வணங்குந
ரெக்குலத்தெவரேயாயினு
மக்குணத்தவர்க்கடியேனடியேனே. (77)
இந்நேரிசையாசிரியப்பாவினுள் நால்வகை யடைசொற்களும் வந்தவாஞ் சொல்லின்பத்தோடும் பொருளின்பமும்
வந்தமையா லிது சொற்பொருளின்பம். இதனு ளீரடை முதலொடுஞ் சினையொடும் புணர்ந்தன வைதருப்பம்.
இரண்டிறந்த மூவடை புணர்ந்தன பரஞ்சாலம். இரண்டு மூன்று மிறந்த பலவடை புணர்ந்தன கௌடச்சொல்லின்பம்.
ஆதலாற் சொல்லின்ப மூன்றுபாகமும் அவற்றோடு மூன்றுநெறியார்க்கும் ஒரு தன்மைத்தாம்
பொருளின்பமும் பல வடியான்வந்த ஒரு செய்யுளகத்துக் காட்டியவாறு கண்டுகொள்க.
இதனுட் பொருளணியாவது தற்குறிப்பேற்றவுவமை. திணை – பாடாண். துறை – நாடுவாழ்த்து.
பொன்னசலந்திரண்டிரண்டாம்பொருவமர்தோட்கமலக்கட்
பொலிந்துநின்றா
ரன்னவயற்குருகூரரணிவரைவாழ்மதர்நெடுங்க
ணணியிழாய்கேண்
மின்னிடையார்புறந்தருநாண்மிகுகாமக்கடலாழ்ந்த
மிக்கோர்தங்கண்
மன்னுயிரைத்தரும்புணைதான்மலிதிரைநீர்க்கடலிடத்தார்
மடலென்பாரே. (78)
இது வைதருப்பச்சொல்லின்பம். பகுதி-மடல். துறை-உலகின் மேல்வைத்துரைத்தல்.
இவ்வாறு பொழிப்புமோனையாய்வருத லின்னா தெனவேண்டுவர் கௌடர்.
குயிலாருங்குளிர்பொழிற்றென்குருகேசன்குழகனுயர்
குன்றிற்குன்றாக்
கயிலாயன்களத்தணிந்தகடுவிடமுங்கரத்துழையுங்
கரந்தகண்ணாய்
மயிலாலுமழைதவழ்நும்மணிவரைக்கெம்மணிவரைநின்
மணிப்பூண்மன்னும்
பயிலாரப்பணைமுலைக்கோர்பணைமுலையெப்படியெனுமப்
படியாம்பண்பே. (79)
இது கௌடச்சொல்லின்பம். பகுதி – வன்புறை. துறை – இட மணித்துக்கூறி வற்புறுத்தல்.
கடுவேகயலெனக்கரந்தடுங்கண்ணிணை
காமனுங்காமுறுங்காட்சியகாண்முகங்
கிள்ளையின்கிளையுங்கிளைத்தகைக்கிளையுடைக்
கீரமுங்கீர்த்திக்கீரமுங்கீரே
குவடுடைக்குளிர்பொற்குன்றேகுவிமுலை
கூர்புதற்கூன்சிலைகூற்றுயிர்கூட்டுணுங்
கெடலருங்கெழுதகைகெழுமுபுகெழீஇய
கேகயங்கேளொடுங்கேடுறுங்கேழியல்
கைபுனைகைக்கிசைகைக்கிணைகைத்துணை
கொண்டலுட்கொண்டன்னகொண்டையுங்கொடியிடை
கோடாக்கோவலர்கோற்றொடிகோமான்
கௌரவகௌசிகன்கௌசிகங்கௌத்துவ
மணியெனக்கொண்டுமனவீடளித்தோன்
கண்ணன்குறுங்குடிக்கனவரை
மண்ணகத்துறையுளாய்வளர்நிலமகட்கே. (80)
இது ககர வருக்க முற்றுமோனை. இதுவுங் கௌடச்சொல்லின்பம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.
கயலெனவேமதர்த்தமர்த்தகருநெடுங்கண்ணிவடனக்கிக்
கன்னிமன்னோ
வயலெனவேயமர்துணையன்றளவளாயமர்துணையென்
றறிந்ததன்பான்
மயலறவேயியற்றமிழ்செய்மகிழ்மாறன்றுடரியின்கண்
மணந்தகாதல்
புயலெனவேபுரைநறுமென்புரிகுழற்குப்புகல்வனினிப்
புகலுமாறே. (81)
இது பாஞ்சாலச்சொல்லின்பம். பகுதி – மதியுடன்படுதல். துறை – குறையுறத்துணிதல்.
“குயிலாரு” மென்பதனையும் பாஞ்சாலச்சொல்லின்ப மெனினு மாம்.
வண்ணமுலைப்பொற்றாமரைமுகுளம்வீறழிந்து
கண்ணெகிழாவண்ணங்கருதியோ–தண்மதியை
மால்வைத்தமாநிதிவண்கோளூரில்வாணுதாஅன்
மேல்வைத்தான்மேனாள்விதி. (82)
இது பொருளின்பம். இதனுண் முலையாகிய பொற்றாமரைமுகை யவிழாதிருப்ப வதன்மேலாகப் பிரமன் மேனாண்
முகமென்று பெயரை யுடைய மதியைவைத்தா னென்னும் பொருளின்பம் வந்தவாறு காண்க.
பகுதி – இடந்தலை. துறை – மருங்கணைதல்.
மேலைமலைக்கதிர்மறையக்குவிமரையுட்டேனசையான்மீளாவைகிச்
சோலையில்வண்டினந்திறப்பவயற்கழுநீரிடந்தோய்ந்தசுரும்புமாதோ
மாலையிற்றன்மனைபுகுதுமணமகனைவிறலியொடுமதங்கன்பாடிக்
காலையினிற்றுயிலெழுப்பக்கடைதிறந்துபரத்தையிற்போகியகாட்சித்தே. (83)
இதுவுமது. துறை – நாடுவாழ்த்து.
திரகாயத்திரிகருணைக்கிலக்காகுமுணர்வுடையோர்சித்திகாட்டப்
பரகாயத்திடைபுகுந்துமறித்தொருகாயம்புகுமப்பான்மையேய்ப்ப
வுரகாயத்துரிவையுரீஇயொருபரந்தளொருபாந்தளுரிபுக்கூர்ந்து
வரகாயத்தகடுரிஞ்சும்பஃறலையமலைமுழைபோய்வைகுமன்னோ. (84)
இதுவுமது. மலைவருணனை. இவையிரண்டுங் குருகாமான்மியம். இன்பம் முற்றும்.
ஏவொன்றுடக்கியிருபதுகைக்கார்வயிரத்
தூவொன்றுடலந்துளைபடுத்த–காவொன்
றரங்கத்தானல்லாதனைத்துயிருங்காத்தற்
கிரங்கத்தானல்லாரெவர். (85)
இது வைதருப்பத்தெளிவு. இதற்குச் சொல்லின்முடிவாற் பொருடோன்றும். துறை – கடவுள்வாழ்த்து.
தேனேமுளைமதியஞ்செந்தழல்பாரிப்பவிருந்
தேனேயயலார்சிரிப்பவே–தேனே
யிறைவகுளத்தாமரையோவெய்தார்வேளெய்து
குறைவகுளத்தாமரையோகூறு. (86)
இது சொல்லாற் கவியருமையும் நோக்குடைப்பொருள்கோளுந் தோன்றத் தொடுத்தமையாற் கௌடத்தெளிவு.
(இ-ள்) தேன்போலும் இனிய மொழியையுடையாய் ! இளம்பிறை யானது தழலைவிரிப்பவும் அயலார்சிரிப்பவும்
இத்துணைப்போதும் உயிரைத் தாங்கியிருந்தேனே ! இங்ஙனமிருந்த வெனது துன்பமிகுதியும் நாண்டுறந்ததுங் கண்டு
தேனையொழுக்காநின்ற வகுளத்தாமத்தை யுடையோர் அந்தோ மேவுகிலர் ;
இனிக் காமனெய்து குறைந்துபோவன குளத்தின்கட் டாமரையொன்றேயோ, ஓடையிற் காவியும் ஆவியு மல்லவோ கூறுவாயாக ; என்றவாறு.
ஏகார நான்கினுண் முன்னது விளி. இரண்டாவது திரக்கத்தின்கட் குறிப்பு. பின்னைய விரண்டு மீற்றசை.
தாமரையோவென்னு மோகாரம் ஒழியிசை. திணை – பெண்பாற்கூற்றுப்பெருந்திணை. துறை – துன்பு மிகுதி தோழிக்குரைத்தல்.
உள்ளத்துணர்வெனுங்கண்ணுட்கொண்டுகாண்பதற்குங்
கள்ளக்கருங்கண்கலுழ்வனகண்–டெள்ளிப்
பிரியாரையுந்திருமால்பேர்நகரார்தூற்றத்
தரியாதென்னுள்ளந்தளர்ந்து. (87)
(இ-ள்) எனதகத்தே யறிவென்னுங் கண்ணானது நங்காதலருட னென்னையு முட்கொண்டு காணாநிற்பதற்குப் புறத்தே தாமுங்காணாத
உடன்போக்கு. துறை – பூத்தருபுணர்ச்சிக் கறத்தொடு நிற்றல். இவ்வாறு மெல்லினவண்ணத்தால்
மெல்லெழுத்துச் செறிந்துவருதல் விரும்பாது வல்லினவண்ணத்தால் வல்லெழுத்துச்செறிந்த
சொல்லோடும் வற்கெனத் தொடுப்பதே வேண்டுவர் கௌடர்.
புட்குழியுத்தமர்புட்கொடியத்தர்பொருப்பின்மடக்குயிலே
கட்டழல்கக்குகுழிச்சிறுகட்கரடத்ரிகடத்தொருமா
விட்புலமுற்றவிருப்பமிகுத்ததொர்வெற்றியனைக்குறுகா
வுட்குறவெற்றினனற்றதுதிக்கையொடுற்றமருப்பிணையே. (89)
என்பது, புட்குழியென்னுந்திருப்பதியின்கண் ணுத்தமர், கருடக்கொடி யுயர்த்த சுவாமியார்
பொருப்பிடத்து மடப்பத்தையுடைய குயிலே ! மிக்க அழலைக்கக்குங் குழிந்த சிறுகண்களையு முள்ளத்தறுகண்மையையுங்
கவுளின்கண் மதத்தினையு முடையதோர் யானை, விண்ணோரனை வரும் விருப்பத்தை மிகுப்பதோர்
வெற்றியையுடையானொருவனைப் பாயும்படிக்குக் குறுகினகாலத் ததனுள்ளமுட்க வவ னதனை வாளாலெறிதலு
மதன் றுதிக்கையுந் துதிக்கைபற்றிய விருகோடு முடனே யற்ற வென்றவாறு.
இங்ஙனம் வல்லிசைவண்ணத்தால் வந்தவாறு கண்டுகொள்க. அஃதே லிதன்முதனூல் செய்த தெண்டியாசிரியர்
“செறிவெனப்படுவது நெகிழிசையின்மை” யென வைதருப்பச் செறிவிற்குக்கூறியதனை விரும்பாது
ஒருதிறத்தெழுத்தானே நெகிழத்தொடுப்பதே கௌடச்செறி வெனவேண்டிய திந்நூலுடையாருட்கொண்டு
மிங்ஙனம் வற்கெனத் தொடுத்தன் முதனூலோடும் வழிநூன் மாறுகொளக்கூறலென்னுங் குற்றமாமாலோவெனின்,
நன்றுசொன்னாய் ! அவர்தாமே “விரவத் தொடுப்பது சமநிலையாகும்” என்பதற்குச்
“சோகமெவன்கொலிதழி பொன்றூக்கின” என்பதனுள் மூவினமும் விரவத்தொடுத்ததனை வைதருப்பச்சமநிலையெனவும்,
விரவுதலுள்ளும் வல்லெழுத்துச்செறிய இடர்த்திறத்தைத்துறபொற்றொடிநீயிடித்துத்தடித்துச்,
சுடர்க்கொடித் திக்கனைத்துந்தடுமாறத்துளிக்குமைக்கார்’ என வற்கெனத் தொடுப்பதே கௌடச்சமநிலையெனவும்
காட்டினமையானும் இவ்வண்ணங் கூறாக்கால் வைதருப்பச் செறிவிற்கும் வைதருப்பச் சமநிலைக்கும்
வேற்றுமையின்மையானு மிச்செறிவிற்கு மோசையே நோக்கமென்பதனாவிருப்பத்தா லென்னை வஞ்சித்த கள்ளத்தையுடைய
விக்கண்களழு வதனைக்கண்டு எம்மையிகழ்ந்து பிரியாதவரையுந் திருமால் திருப்பேர் நகரின்கணுள்ளார்
பிரிந்தாரென்று தூற்றுமதனைக்கேட்டுத் தளர்ந்தவென்னுள்ளம் ஒருவழிப்பட்டுநில்லாதென்றவாறு.
இது பாஞ்சாலத்தெளிவு. என்னை? வைதருப்பத்தெளிவுபோல வெளிப்படையுமன்றிக் கௌடத்தெளிவுபோல
நுண்ணிதாய்க் குறிப்பினாற் கொள்வதுமன்றி யிடைப்பட்டநீர்மைத்தாய்வந்தமையா னெனக் கொள்க.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – தலைவி தலைவனை யியற்படமொழிதல். தெளிவுமுற்றும்.
வண்ணமைந்நிறவண்ணன்விண்ணினு
மண்ணினும்முறைவார்
கண்ணன்விண்ணகர்மஞ்ஞைவிம்மிய
கண்ணகன்வரையோ
ரண்ணலிம்மலர்கொண்மினென்னவு
மன்னையங்ஙனம்யா
னெண்ணவொண்ணுதன்முன்னின்முன்னருள்
கென்னமுன்னினளே. (88)
என்பது, அன்னாய் ! அழகிய மேகம்போன்ற திருமேனியையுடையான், சுவர்க்கத்தினும் பூமியினு முறைவார்
கண்ணினுள்ளான் அவனது திரு விண்ணகரத்து மயில்கள் அகவும் இடமகன்ற மலைப்பக்கத் தொரு பெரியோன்
யாங்கள் விளையாடும் வண்டன்மாளிகை முன்றிற்கண் வந்து நுமது வண்டலம்பாவைக்கணிய விம்மாலையை
வாங்கிக்கொண்மினென்று கூற, அங்ஙனம் வந்து கூறியதற்குச் செய்யவேண்டுவதென்னென் றியா னெண்ணாநிற்ப,
நம தொளிபொருந்தின நுதலினையுடையாள் முன்னாள் அதனை யருள்கென வவன்முன்னேசென்று அதனை வாங்கினள் ;
இஃ தியானறிந்தபடி யென்றவாறு.
முன்னில்-இன்முன் ; அஃது முன்றிலென இலக்கணப்போலியாயும் வரும். முன்னிலெனவே வண்டன்மாளிகையும்
வண்டலம் பாவையுங் கூட்டியுரைக்கப்பட்டன. இது வைதருப்பச்செறிவு. என்னை?
மெல்லினமாகியவெழுத்துச்செறிய மெல்லினவண்ணமுற் றவ்வெழுத்தானாய சொற்கள் செறியச் செறித்தமையி னெனக்கொள்க.
பகுதி -பிறவினமுஞ் சிறிது விரவுவதே முறையென்றுணர்க. இவற்றுள் முன்னையது பகுதி – நடுங்கநாடல் ; துறையுமது.
இது பகுதி – உடன் போக்கு. துறை – பதிபரிசுரைத்தல். இவைமூன்றும் எழுத்துச்செறிவு.
மறைமுரசந்தாமமகிழ்வழுதிநாடர்
துறைபொருநைவெற்பூர்துடரி–யுறைகுருகை
யஞ்சம்பராங்குசம்வெள்ளானைகொடியாணைமா
பஞ்சகலியாணன்பரி. (91)
என்பது, வழுதிவளநாடர் துறை – பொருநை ; வெற்பும் ஊரும் – துடரியும் உறையுளாங் குருகாபுரியும் ;
பரி – பஞ்சகலியாணன் ; மா – வெள்ளானை ; ஆணை – சீபராங்குசம் ; கொடி – அன்னம் ; தாமம் – மகிழ் ; முரசு வேதம் என்றவாறு.
இதனுள் வழுதிவளநாடர் என்பது மத்திமதீபம். அதுவே நாடுந் திருநாமமுமாம். வெற்பூர் – நிரனிறை.
பரி மா ஆணை கொடி விதலை யாப்பும், தாமம் மகிழ், முரசு மறை என மொழிமாற்றுமாகத் தசாங்க மென்னுஞ்
சின்னங்களாகிய பல்பொருட் செறிவோடும் பல பொருள் கோளுஞ் செறிதலா னிது பொருட்செறிவு. துறை – தசாங்கவாழ்த்து.
மறந்தாங்கித்தெவ்வடுவைந்நுதிதாங்கியிருட்பிழம்புமடியச்செந்தீ
நிறந்தாங்கியிடங்கரின்வெண்ணிணந்தாங்கியனைத்துலகுநியதிகாக்குந்
திறந்தாங்கியொளிர்திகிரிப்படைதாங்கித்திருவடிபொற்சென்னிதாங்கி
யறந்தாங்கிவளம்புகழ்வாரறந்தாங்கியவரெனுமிவ்வங்கண்ஞாலம். (92)
தழற்பாணிகறைகெழுவச்சிரபாணிமிளிர்படிகத்தாமம்வேய்ந்த
நிழற்பாணிவிழைந்தகமண்டலபாணிமுதலெவர்க்குநிபனேயாய்வேய்ங்
குழற்பாணிகொடுதொறுவின்குழுவழைத்தமழைமுகில்பார்குளிர்ப்பானீன்ற
கழற்பாணிதனைப்புகழ்சக்கரபாணியனைத்துயிர்க்குங்களைகணாவான். (93)
இவையிரண்டும் ஒருவகைச் சொற்செறிவு. இங்ஙனம் வந்த சொற்செறிவும் பொருட்செறிவும் மூன்றுநெறியார்க்கு மொக்கும்.
துறை – செந்துறைப்பாடாண் பாட்டு. செறிவு முற்றும்.
விழியுங்களபமுலையும்புன்மூரலும்வேயுமுந்திச்
சுழியும்முரோமவொழுங்குங்கண்டேம்வண்டுசூழ்ந்துசெந்தேன்
வழியுந்திருமகிழ்மாலைப்பிரான்வெற்பில்வல்லிசெவ்வாய்
மொழியுந்துணைநெஞ்சமேசெவிக்கேயென்றுமூழ்குவதே. (94)
இது வைதருப்பச்சமனிலை. துறை – கிளவிவேட்டல்.
பனிப்பிறைப்பற்றுளைக்கட்செவித்துத்திப்பணாடவிமேற்
குனித்தபொற்சிற்றடிச்சித்திரக்கார்குருகேசன்வெற்பிற்
றுனித்தழற்கட்களிற்றைக்கொடுஞ்சீயந்துரத்திருள்வாய்த்
தனித்துறற்குய்த்துணர்த்துங்கதிர்வேலவன்றாழ்குழலே. (95)
இது கௌடச்சமனிலை. சூத்திரத்துள் நிலையென்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க.
தனித்துறற்கு – கங்குலின் கட்டனித்துக் குறிவழிவருதற்கு. உய்த்துணர்த்தும் – என்னுள்ளங் கொள்ளச் செலச்சொல்லி யுணர்த்தாநிற்கும்.
கதிர்வேலவன் – ஒளியையுடைய வேலவன். தாழ்குழலே – தாழ்ந்தகுழலினையுடையாய்.
யான் இதற்குச் செய்யவேண்டுவ தென்னென்றவாறு. பணாடவி – ஆகுபெயர். பகுதி – இரவிற்குறி. துறை – இரவுவரவுணர்த்தல்.
இடிக்குங்கடகளிற்றான்சடகோபனியலிசையாய்
வடிக்குந்தமிழ்மறைபாடியமாறன்மணிவரைமே
னடிக்குங்களிமயிலேவருந்தேனுமர்நல்வரைப்பூங்
கொடிக்குங்கொழுகொம்பராமெமர்மாடக்கொடிக்கழையே. (96)
இது பாஞ்சாலச் சமனிலை. பகுதி – இயற்கை. துறை – இட மணித்துக்கூறி வற்புறுத்தல்.
இவற்றுள் மூவினமும் விரவிவந்தவாறு காண்க. மூன்றனுண் முதற்பாட்டும் மூன்றாம் பாட்டும் கிளவிமணிமாலை. சமனிலை முற்றும்.
எழுகாதலினாலிருகாவியுணீ
ரொழுகாமதியாலுலைவாய்–மெழுகா
யுருகாதணையாருயிர்காவலர்பே
ரருளாளருமாமவர். (97)
இதனுள், இருகாவியுணீர் – இரண்டுகண்ணு ணீர். ஒழுகா என்றது ஒழுகவென்பத னெதிர்மறை.
உருகாதணையாரென்பது வினையெதிர் மறுத்தவினையெச்சம், அணையாரென்னும் வினைகொண்டது.
பேரருளாளருமாமென்னு மும்மையால் உயிர்காவலருமாம் என்னு மும்மை விரிக்க.
உயிர்காவலருமாய்ப் பேரருளாளருமாக, உருகு மென் காதல் கண்டு முருகியணைகின்றில ராதலா லிஃ தென்வினையன்றோ வென்றவாறு.
திணை- பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – நிலவுகண்டழுங்கல். இது தூங்கிசைச்செப்பலோசைத்தாய்
வந்தமையால் வைதருப்ப வின்னிசை. என்னை?
“இயற்சீர்வெண்டளையான்வரும்யாப்பைத், தூங்கிசைச்செப்ப லென்மனார்புலவர்.” என்றதனா லறிக.
இவ்வாறு விரும்பா தேந்திசைச்செப்பலோசைத்தாய்த்தொடுப்பதே வேண்டுவர் கௌடர்.
குஞ்சரமாமெய்ததுவன்கோதண்டங்கூடாமல்
வெஞ்சரம்பாய்வித்தனரால்வேட்டைதான்–வஞ்சகமே
யாங்கடவார்பூம்புனமீங்காரிவரென்றேயறியேம்
வேங்கடவாணன்சிலம்பின்மேல். (98)
என்பது, வேங்கடவாணன்வரையிடத் திவ ரெய்ததுங் குஞ்சரமாம் ; வில்லுமின்றியே தழையே வில்லாக வெம்மையைச்
செய்யும்வாளியைப் பாய்வித்தனராகையா லிவர் வேட்டைமேலிட்டுவந்தது தான் வஞ்சமே யாம் ;
அதுவுமன்றி, நமது பொலிவையுடைய புனத்தைவிட்டுநீங்கு கின்றிலரால், இவர் யாரென்றும் வந்தகாரணம் யாதென்றுந் தெளிகில மென்றவாறு.
பகுதி – இருவருமுளவழி யவன்வரவுணர்தல். துறை – ஐயுறுதல். இஃ தேந்திசைச்செப்பலோசைத்தாய்
வந்தமையாற் கௌடவின்னிசை. என்னை?
“வெண்சீர்வெண்டளையான்வரும்யாப்பை, யேந்திசைச்செப்ப லென்மனார்புலவர்” என்பதனாலறிக.
மானபரனீந்தமணியாழிகைக்கொடுத்துச்
சானகிதன்னாவிதளிர்ப்பித்தான்–மீன
நெளிதரங்கவேலைநெறிகடந்துதேவர்
களிபுரந்தசேயெமதுகண். (99)
என்பது, பெருமையுடைய பரமனாகிய இரகுநாதன் கொடுத்த மாணிக்கத் திருவாழியைக் கொடுத்துச் சனகராசன்
புதல்வி திவ்வியான்மாவைத் தழைப்பித்தான் ; அவன் யாரெனின்,
மீன்களையுடைத்தாய் நெளிக்கப் பட்ட திரையையுடைய சமுத்திரத்தி னெல்லையைக்கடந்து தேவர்க் கெல்லாங்
களிப்பைக்கொடுத்த அஞ்சனைபெற்ற புதல்வன், எனக்கென்னுறுப்பிற்சிறந்த கண் ணென்றவாறு.
இஃ தொழுகிசைச் செப்பலோசைத்தாயே வந்தமையாற் பாஞ்சால வின்னிசை. என்னை?
“வெண்சீரொன்றலுமியற்சீர்விகற்பமு, மொன்றியயாப்பேயொழுகிசைச்செப்பல்” என்பதனா லறிக.
இம்மூன்று விகற்பமு மூன்று நெறியார்க்கு மொக்கு மென்பாரு முளர். திணை – பொதுவியல். துறை – தூதுவென்றி.
நாட்டங்களிபற்றநாவுநசைபற்ற
வேட்டிற்பலர்கையிணைபற்றத்–தோட்டிலஞ்சிக்
கன்புற்றமுத்தர்பெருமானடிபரவி
யின்புற்றவர்க்கடிமையாம். (100)
இவ்வாறு வரும் பொய்ந்நிலப்பட்ட வின்னாவிசை மூன்றுநெறியாரும் வேண்டாரெனக்கொள்க.
தெண்டியாசிரியர் ஒழுகிசையென்பது மிது. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல். இன்னிசை முற்றும்.
மண்ணோர்தொழுஞ்சேறைமாயோன்மணிமார்பிற்
பெண்ணோர்மனுகுலமாம்பெற்றியாய்–விண்ணோர்
மருந்துதலைப்பெய்திருப்பமம்மர்கூர்நஞ்ச
மருந்துதலைச்செய்பவரிங்கார். (101)
என்பது, உலகின்கண்ணுள்ளார்வணங்குந் திருச்சேறையின்கண் மாதவன் றிருமார்பிலிருக்குந் திருமகள்
மனுகுலத்துட் டோன்றிய தொன்றா மியல்பினையுடையாய் !
விண்ணிற் றேவர்பானமாகிய அமிர்தமானது தம்மிடத்தே தமதாகவிருப்ப அதனையு மருந்தி மருந்து
பிறிதில்லாப் பெரும்பிணியைத்தரும் நஞ்சையு முண்ணாநிற்பவ ரிவ் வுலகின்கண் யாவர்தா மென்றவாறு.
பகுதி – பரத்தையிற்பிரிவு. துறை – நினைவறிகண்புதை. இது வைதருப்பவுதாரம். என்னை?
தம்மிடத்திலே பெறுதற்கரிய அமிர்த மெளிதாயெய்தியிருப்ப வதனை யுண்ணாநின்றவர் அயலேயிருக்கு
நஞ்சினையுஞ் சென்றுண்ண விரும்புவா ருலகின்கண்ணில்லையால், அதுபோல நின்னிடத் துவட்டா வின்பந்துய்க்கின்ற
யான் பிறரிடத் துவர்ப்புடைத்தா மின்பந் துய்யேனென்பது குறிப்பினாற் கொள்ளக் கிடந்தமை யினானெனக் கொள்க.
நாதன்மகிழ்மாறனன்பனுவல்கற்றுணர்ந்து
போதந்தழைந்தபுனிதர்தாம்–வேதம்
விதித்தவொருமூன்றின்மெய்ம்மையுணர்வான்
மதித்தொருநூலோதார்மறித்து. (102)
இதுவும் வைதருப்ப வுதாரம். என்னை? மகிழ்மாறன் பனுவல் கற்றுணர்ந்தார் தத்துவங்கண்மூன்றி னுண்மையுணர
வேண்டி மறித்தொரு நூலோதாரெனவே யத்தத்துவங்கண்மூன்றினையு மதுதானே மயக்கமறக் கூறுமென்பது
குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானெனக் கொள்க.
வேதம்விதித்தவொருமூன்றாவன :- சித் தசித் தீச்சுரம். மெய்ம்மை – உண்மை.
உணர்வான் – உணரவேண்டி. மதித்து – உட்கொண்டு. மறித்து – மீண்டும். திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து.
காழில்கனியுண்கடுவன்களங்கனியை
யூழிற்பருகியுருகுதிரு–மூழிக்
களத்தாதியைமதங்காகாமக்குழவி
வளத்தாரிடந்தேடுவாய். (103)
என்பது, காலைமங்கலம் பாடவந்த யாழ்ப்பாணனே ! பரலில்லாதே முழுது மென்மையு மினிமையுமுடைய அரம்பைக்
கனியை யச்சமின்றி யுண்ணாநின்ற கடுவன் அகத்துமுழுதும் பரலாய்ச் சிறிது புறமென்மையு மற்பச் சுவையுமுடைய
களங்கனியையு முறையேபோலப் பருகி யதன்சுவைக்கு முள்ளமுருகுந் திருமூழிக்களத்து முதல்வனைக்
காமமென்னுங் குழவிச்செல்வத்தையுடைய பரத்தையரிடத்தே தேடிக் காண்பாயாக ; அஃதன்றி யெம்மிடத்துக்காண்ட லரிதென்றவாறு.
காழ் – கொட்டை. ஊழில் – ஊழ்வினையாலேயெனினுமாம். இது கௌடவுதாரம். என்னை?
‘காழல் கனியுண் கடுவன் களங்கனியை யூழிற்பருகியுருகு திருமூழிக்கள’ மெனவே யக்கடுவன்போல,
உத்தமமாகிய விவளோடும் உள்ளும் புறம்பும் ஒருநீர்மைத்தா மென்மையோடும் உவர்ப்பில்லாத பேரின்பத்தைத் துய்த்த தலைவன்,
இழிந்த வியற்கையை யுடையராய்ப் புறம்பு பொருணசைக்காய்ச் சிறிதுநெகிழ்ந் துண்ணெகிழ்ச்சியற்ற பரத்தையரிடத்தே
யுவர்த்த சிற்றின்பத்தைத் துய்த் தவ்வின்ப மீட்டுந்துய்ப்பா னவர்சேரிவிட்டு நீங்கானாயினானென வுள்ளுறையுவமங்
குறிப்பிற் கொள்ளக்கிடந்தமையானும், காமக்குழவி வளத்தாரிட மெனவே யிஃது எமது காதற்புதல்வன்
என்னுஞ் செல்வத்தையுடைய மனையென்பதூஉம், யாம் புதல்வற்பயந்த மூப்புடையே மென்பதூஉம்,
இன்னும் அவ்விலேசானே யெம்மிடத் தவர்பெறு மின்பம் எமக் கவர்கொளுத்தக்கொண் டியாங்கொடுக்கு மியற்கை
யின்பமே யல்லாது பலரையுந்தோய்ந் தவரவர்கொளுத்தக் கொண்ட பல விகற்பமாகிய செயற்கையின்ப
மெம்மிடத்தில்லையே யென்னுங் கூற்று மாகக் குறிப்புங் கூற்றுங் குறிப்பினாற் கொள்ளக் கிடந்தமையானே
யிவ்வாறு வேண்டுவர் கௌடரெனக்கொள்க. பகுதி – இதுவுமது. துறை – பாணனொடு கூறல். கூற்று – தோழிகூற்று.
நாம்பிரமமென்றேநவில்வாருமன்னுயிர்க
டாம்பிரமத்தொன்றுமெனுஞ்சார்பாரு–மாம்பிரம
நாரணனோவென்பாருநாவீறுடையபிரா
னாரணப்பாக்கற்றுணராதார். (104)
என்பது, பேரானந்தச் சிற்குணாதிகச் சுடர்ச்சொரூப ரூபப் பரத்துவ மென்னும் பரமபதநாதன்,
அநிருத்தனாகி யுந்தியந்தாமரைப் பொகுட்டிற் பலகோடியண்டங்களைப் படைத்துப் பலகோடி யண்டந்தோறும்
பலகோடி பிரமாதிகளைப்படைத் தழிவிலதா யலகிறந்த வணுக்கடோறும் திவ்வியாத்ம சொரூப வியத்தியுடன்
சருவபூத பூரண காரணனாகி மீனாவ தாரமுதலாய வவதாரங்களாலும் அம்சாவதாரங்களாலுங் காவல்பூண்டு
வாழ்நாளுட் டன்னால், லீலைக்காக அமைத்த வவையனைத்து மழிந்துந் தானழியா தேகோதகத்தின்
மே லோராலிளந்தளிரு ளடங்கும் பச்சைக்குழவியாகியும் பல்லாயிரகோடி யண்டமாகியவற்றை யகத்திட்டு மறித்தும்
புறத்திட்டுக் காவல்பூண்டு விளையாடு மகடிதகெடா சாமர்த்திய குணங்களு ளொருகுணமுமின்றி யிருவினைத் தளைப்பட்டு
மல மூத்திராதிகளாலாய பாண்டத்தோடு மிறந்தும் பிறந்து முழலு முத்தியறியா மூடராகி நரம்பிரமமென்றே
நாக்குத் தடுமாறாது நவிலு மொரு சார்பாரும், கற்றறி நூல் பல கற்றனராகித் தத்துவமுணர்ந்தும்
பற்றறச் சாலோகமுதலிய மூன்று மெய்தி யிருவராயிருந் தீறில்பேரின்ப மொருவராமெனத் துய்க்குஞ் சுகரநந்தத்தைக்
கெடுத்துக் கூடாததனைக் கூடுவதாக்கிச் சூனியப்படுத்தி மன்னுயிர் பிரமத்தோடு மொன்றாமென்று நாயனடிமைத்திறம்
நழுவிய மூடரா மொருசார்பாரும், ஆதியு மந்தமு மருமறை யரியென வோதிய பொருளுரைக் குடையதை யறிந்தும்
அகிலாண்டகோடி பிரமாண்டநாயகனென முத்திதருவதாம் பிரமம் சீமந் நாராயணனோவென்றையுறு முழுமூடரும்
ஒருநான்மறைத்துணி வோதாதுணர்ந்த நாவீறுடையபிரான்கூறிய திருவாய்மொழியைக்கற் றுண்மைப்பொருளுணரா மூவகைமூட ரென்றவாறு.
ஆரணத்தின்வழிவந்த நூலாதலாற் றிருவாய்மொழிக் காரணப்பா வென்ப தாகுபெயர்.
அல்லதூஉந் தமிழ்வேதமென்றும் அதற்குப் பெயர். ஆரணப்பாக் கற்றுணராதா ரெனவே யதனைக் கற்றுணர்ந்தா ரவை
கூறாரென்னுங் கூற்று மெஞ்சிநிற்பதூஉங் காண்க. இங்ஙனங் கூறிய மூன்றும் வேதத்தின்வழிவந்த திருவாய்மொழியாகிய
பனுவற்றுணிவன் றென்பதூஉம் அதனைக் குரவரா லுணர்ந்தோர்மதமும் அம் மூன்றினையுந் தள்ளின மதமே
யென்னுமவையுங் குறிப்பெச்சம். இக் கூற்றுங் குறிப்பும் புலவனாலறியலாம்.
இங்ஙனமாகிய சொன்னடை கொண்டு வேறுபொருடோன்றலா லிதுவுங் கௌடவுதாரம். திணை – வாகை. துறை – சால்புமுல்லை.
சினமென்பதையறியாதவர்தினமும்புகழ்மாறன்
செஞ்சொற்றமிழ்மறைபாடியசெல்வன்குருகையுளார்
முனமன்பினதளவொன்றியமுறையான்மலரணைமேன்
முடுகும்பரிசமொடிங்கிதமொழியென்பதுபெறவே
தனமின்றெனினுலகத்தெவர்தனியின்பமது றுவார்
தாமென்றபினளகத்துறுதனிவண்டொடுநின்பான்
மனமொன்றியபெடையேவலியுளதென்றனரன்றே
மறையென்றதையுணராதவென்மனதேகொடியதுவே. (105)
என்பது, தோழீஇ! வெகுளியென்பதை மனத்தினாலுங் குறித்தறியாத சுத்தசாத்துவிககுணனுடையோர் வாழ்த்துங் காரிமாறப்பிரான்,
செஞ்சொலாகிய தமிழ்மறையைப்பாடிய செல்வத்தையுடையோன் குருகைமா நகரினிடத்து நம்மிறைவர்
பொருண்மேற்பிரியுமுன்னர் இருவர்க்கும் புணர்ச்சிமேற்சென்ற வுள்ளத்தின்பினதளவும் யாக்கையின்களிப்பு
மேகாந்தமு மிடையாமமும் ஒன்றாகப் பொருந்திய வியல்பான் மலராலலங்கரிக்கப்பட்ட அமளியிடத்து
முடுகிய பரிசத்தோடு நலம்பாராட்ட லென்னு முரைபோற் பிரிதனிமித்தமென்பதாக,
என்னோடுந் ‘திருவே ! மகளிரிடத்துத் தனமென்பன வில்லையாகி னுலகத்துள்ள வாடவருள் யாவர்தா மொப்பற்ற
வின்பத்தை யெய்துமவர்க’ ளென்றன ரதன்பின்ன ரளகத் தரும்பவிழ்ந்தகாலைத் தேனையுண்ண
வந் ததனிடத்துறைவதாந் தனிச்சுரும்போடும் நினதிடத் தொருமனப்பட்ட பெடையே மனவலியுடைய தென்றனரன்றே;
அவையிரண்டையும் மிக்க தொனியென் றுட்கொளாத வெனது மனதே கொடியதென்றவாறு.
இது பாஞ்சாலவுதாரம். என்னை? தனமென்ப திரட்டுறமொழிதலாய் நடுவணை யெய்தாதவர்க் கிருதலையுமெய்தா;
பொருள்வயிற்போக வேண்டு மென்பதனை யுணர்த்தியதாகவும், நின்பான் மனமொன்றிய பெடையே வலியுளதென்றதனால்
நீவைத்து நீங்கியபெடை நின்னையின்றி யாற்றாமையாற் றானிறக்கி னீயு மிறப்பையென்று நினதுயிரைப் போற்றித்
தனதுயிரைப் பிடித்திருந்த மனவலியுடைத் தென்பதா யது போலத் தாம்பிரிந்தகாலத் தியானு மாற்றாமையா லிறவாது
தம் முயிரையும் போற்றி இல்லறங்காத்திருத்தல்வேண்டுமென்பதூஉ முணர்த்தியதாகக் குறிப்பினாற்
பிறபொருள் கொள்ளக்கிடந்தமையா னென்றறிக.
இதனுள் அளவும் என்னு மும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க.
தோழீஇ என்னு முன்னிலைப்பெயரு மெஞ்சிநின்றதுங் காண்க. பகுதி – பொருள்வயிற்பிரிதல்.
துறை – தலைவி தலைவனை யியற்படமொழிதல். இவற்றை மூன்றுநெறியார்க்கு மொக்குமென்பாருமுளர்.
அவை பொருந்தாவென வுணர்க. உதாரம் முற்றும்.
மன்னிலங்கைமூதூர்வழியோதிறந்ததொன்னார்
பொன்னகர்செல்வாயிற்புதவன்றோ–தென்னரங்கன்
மைந்நீரசெம்பவளவால்வளையவண்டரள
முந்நீரணைகட்டுமுன். (106)
என்பது, அழகிய திருவரங்கத்தையுடைய மாயோன் கடலைக் கரை கட்டின முற்காலத்து இராவணனாகிய
நிருதர்கோன திலங்கையாகிய பழையநகர்க்குச் செல்லும் வழியோ திறந்தது?
தென்னரங்கேசனது பாணத்தா லிறந்த சத்துருக்களாகிய அரக்கர்செல்லும் வீரசொர்க்க வாயிலின்கட் கதவல்லவோ திறந்த தென்றவாறு.
எனவே வழியுங் கதவுந் திறந்த தென்பதாம். மைந்நீர செம்பவள வால்வளைய வண்டாள முந்நீரை யெனக் கூட்டுக
இது வைதருப்பவலி. என்னை? இருளி னீர்மையுடைத்தாய்ச் சிவந்த பவளத்தைப் பெற்ற வெளுத்த வளையைப்பெற்ற
அதனிடமாக வளவியதரளத்தைப் பெற்ற முந்நீரை யூடறுத்துக் கடலை யணைகட்டின முற்காலத்தெனவே
வேற்றுமைத்தொகை இருபெயரொட்டுப்பண்புத்தொகை வினைத்தொகைகளை முன்னிட்டுப் பெயருடைமைப்
பொருளாய் நின்று கருகும்நீர்மை யுடையநீரையெனப் பெயர்மே லேறியவிடத்து மிப்பொருளையுடையதாயிருந்த
திப்பொரு ளென்னுமிடத்து மிடைநின்ற வுடைமைவினைக் குறிப்புங் காலம்பெற்ற வினைக்குறிப்புமாகிய
சொற்க ளிடையிடை பல விடத்துந் தொக்கதோடும் பிறசொற்களுந் தொகைமிக்கு விரிதலானும் எனக்கொள்க.
திணை – உழிஞை. துறை – புறத்திறை.
வன்கேழற்பன்றியாய்வான்பிறைக்கோட்டாழ்புனலாழ்
கொன்கேழ்கிளர்தாழ்குழல்களிப்ப–முன்கொணர்ந்த
வெம்பிரான்சங்காழியேந்தினானெவ்வுளார்
தம்பிரான்றாளேசரண். (107)
என்பது, வலியகேழலாகிய பன்றியாய் வானின்கட் பிறைபோன்ற கோட்டாலே யாழ்ந்த புனலின்
கட் டாழ்ந்த நிறங்கிளருந் தாழ்ந்த குழலினையுடைய பூமிதேவியானவ ளுள்ளங்களிப்ப முன்னாட் புறத்தே
கொண்டுவந்த எம்முடைய பிரான் சங்கையு மாழியையுங் கைகளிலேந்தினான் எவ்வுளார்க்குந் தம்பிரான்;
அவனது திருவடிகளே சரணாமென்றவாறு.
கொன் – பயனில்சொல். இது கௌடவலி; என்னை? இதனுளிருதிறப் பண்புத்தொகை முதலாகத் தொகையாறு
முடைமைவினைக் குறிப்பும் பிறசொற்றொகைகளு மிகவருதலா னெனக்கொள்க. துறை- கடவுள் வணக்கம்.
பொற்றொடிவேற்கண்கள்புடைசிறந்தாட்கெஞ்ஞான்று
முற்றவுடலுயிரீங்கொன்றென்றே–சொற்றனவாற்
றோடலர்தார்மாறன் றுடரியினெஞ்சேயிவளைக்
கூடலெளிதென்றேகுறி. (108)
என்பது பாஞ்சாலவலி. என்னை? பொற்றொடியெனவே வேற்றுமைத் தொகைப்புறத்துவந்த அன்மொழித்தொகையும்,
வேற்கண்ணெனவே யுவமைத்தொகையும், புடைசிறந்தாட்கெனவே வேற்றுமைத்தொகையும்,
உடலுயிரெனவே யும்மைத்தொகையும், தோடலர்தாரெனவே வினைத்தொகையும் வந்து பண்புத்தொகையொன்றுமே வராது,
பெயர் வினைச்சொற்களு முளவாய், முன்னவைபோலச் சுருங்காது மிகாது மிடைநிலைப் பட்டமையா னென்றுணர்க.
பகுதி – பாங்கியிற்கூட்டம். துறை – பாங்கியையறிதல். வலி முற்றும்.
ஆவிக்குறுதுணைப்பெண்ணாரமுதைப்போலுரைத்த
நாவிற்கினிமைநயப்பதோ–மூவுலகுந்
தாய்க்கொண்டதாளரங்கர்தண்ணளிசார்விண்ணவர்தாம்
வாய்க்கொண்டுயிர்வாழ்மருந்து. (109)
என்பது, எனதாவி வாழ்வதற்கு மிக்கநற்றுணையாகிய விப்பெண்ணாகிய அமிர்தினைப்போற் றன்பெயரினைச்
சொன்னாற் சொன்ன நாவிற்கு மினிமையை யளிப்பதொன்றாமோ? பூமி முதலாய மூன்றுலகங்களையுந் தாண்டி
யளந்துகொண்ட தாளினையுடைய திருவரங்கேசர்கருணையைப் பொருந்தின வானிலுள்ளார்
வாயாலுண் டினிமையைக்கொண் டுயிர் வாழாநின்ற அமிர்தமென்றவாறு.
ஓகாரம் ஒழியிசை. இதனுள், பெண்ணாகிய அமிர்தினுயர்த்தி யுலகொழுக்கிறவாமை யுயர்த்தினமையால்
இது வைதருப்ப காந்தம். பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந்துரைத்தல்.
திங்கள்வெண்கதிரும்பானுவின்கதிருஞ்சிறிதும்வைகலுநுழைந்தறியாப்
பொங்கர்மல்கியபூஞ்சோலைநள்ளிடையிற்புதையிருளிரிதரமடவா
ரெங்குமேந்தியசெஞ்சுடர்களாலுரகனேந்தெழின்மவுலியாயிரத்துந்
தங்குபன்மணிகள்பரப்பிவைத்தொளிர்பாதாலமீதெனப்பொலிதருமால். (110)
இதுவுமது. (குருகாமான்மியம். ) திணை – பாடாண். துறை – விளக்கு நிலை.
தென்னனந்தைமால்வரைமேற்சேயிழைவன்கட்கூற்ற
முன்னிலுயிருண்ணுமெனமுன்னுற்றோ–மன்னுயிருண்
கூற்றுருவமக்களுருக்கொண்டோர்விழிக்கெதிரே
தோற்றுவருங்கொள்ளாத்துணிவு. (111)
இது கௌடகாந்தம். பகுதி – இயற்கை. துறை – தகையணங் குறுத்தல்.
பூட்டியுழுங்கருமேதியரிதாளிற்கருங்குவளைப்போதுமேயத்
தீட்டியநாவினைக்குறுக்கிச்சிறைவண்டின்பண்ணமுதைச்செவியாலுண்டு
மோட்டுமுது முலைக்கண்மடைதிறந்தொழுகும்பாலமுதமுழங்கியாம்பற்
காட்டுவரம்புடையப்பவயற்கழனியடைத்துழவருழுங்காட்சித்தொன்றே. (112)
இது பாஞ்சாலகாந்தம். துறை – நாடுவாழ்த்து.
(குருகாமான்மியம்). காந்தம் முற்றும்.
ஆழிப்படைக்கையருளாளன்மிக்கதிரு
மூழிக்களத்துறையுமூவர்கோ–னூழிதொறும்
வித்தகனேகாரிதருமெய்ஞ்ஞானமுத்திரைக்கை
யுத்தமனேகாக்கவுனை. (113)
திணை – பாடாண். துறை – புறநிலைவாழ்த்து.
இறையேதிருமால்வீடென்பது மந்தாம
மறையேபனுவலெனவைக்கு–நிறைகூர்
கரையற்றபோதக்கடன்மாறனுண்மை
யுரைகற்றுணர்ந்தாருளம். (114)
திணை – பொதுவியல். துறை – பனுவல்வாழ்த்து. இவையிரண்டும் உய்த்தலில்பொருண்மை.
இவை மூன்றுநெறியார்க்குமொக்கும். உய்த்தலில்பொருண்மை முற்றும்.
கூண்டுகுமுதமலர்சிரிக்கக்கோகனக
மீண்டிதழ்ச்செங்கைகுவிக்குமெல்லிதா–னீண்டுகமா
மென்றாலிறையரங்கத்தேந்தல்பொருட்கேக
லொன்றாலுமாகாதுனக்கு. (115)
சிரித்தல் – மலர்தல். ஏந்தல் அண்மைவிளி. இதனுள், சிரிக்க வெனவும் கைகுவிக்கவெனவு முக்கியப்பொருளாகிய
வாயினதுகிரியையும், கையினதுகிரியையும் ஒப்புடைப்பொருளாகிய குமுதத்தினுங் கமலத்தினும்
புணர்த்து ரைத்தமையாற் சமாதி யெனக்கொள்க. பகுதி- பொருள்வயிற்பிரிதல். துறை – செலவழுங்குவித்தல்.
ஆரப்பொழிற்கோங்கரும்புதினமாக
வாரைப்பொருதெழுந்தவண்மைசேர்–பேரைக்
குழைக்காதரென்றொருகாற்கூறாதோவென்றிக்
கழைக்கார்முகன்காகளம். (116)
இது சிலேடைவாய்பாட்டால் வந்த சமாதி.
சந்தனப்பொழிலகத்துநின்ற கோங்கரும்பு வைகலும் மேகத்தினிடத் துண்டாகிய தண்ணீரைத் துழாயெழும் எனவும்,
ஆகத்தினிடத்துக் கட்டின கச்சினைப் பொருதெழு மெனவும் முலையினது கிரியையைக் கோங்கினதரும்பிடத்துப் புணர்த்தவாறு காண்க.
மாகம், ஆகம் எனப் பிரிமொழிச்சிலேடையும், வாரையெனச் செம்மொழிச் சிலேடையுங் கொள்க.
இவை மூன்றுநெறியார்க்கு மொக்கும். சமாதி முற்றும்.
ஆக இன்பமுதற் சமாதியீறாகக் குணவலங்காரம் பத்தும் அடைவே வந்தவாறு காண்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – குயிலொடுவெறுத்துக்கூறல்.
85.செய்யுட்குணங்களொழிவறவேசெப்புவதும்
பொய்யில்புலமையுறாப்புன்கவியேற்–கெய்துமதோ
சொற்றவற்றாற்சொல்லாதவற்றினையுஞ்சொல்லியவா
முற்றுவித்தல்கற்றோர்முறை.
(எ-ன்) சொல்லிய குணவலங்காரங்கட் கொழி புணர்ற்று.
(இ-ள்) செய்யுட்களின் குணவலங்காரங்களை யொழிவற முற்ற வுணர்த்துவதும் பொய்யென்பதில்லாத
அறிவின்றன்மைபொருந்தாத புன்சொற்கவியேற்கு மெளிதா யெய்தப்பெறுந்தன்மைத்தொன்றோ?
ஆகையா லிங்ஙனஞ் சொல்லப்படுங் குணங்களோடுஞ் சொல்லாதொழிந்த வக்குணங்களையுஞ் சொல்லியனவாக
முற்றுவித்தல் கற்றுணர்ந்த சான்றோர்கட னென்றவாறு.
இங்ஙனம் கூறவேண்டும்நோக்கம் யாதோவெனின், செறிவென்று சொல்லப்படுவதும்
எழுத்துச் செறிவும் சொற்செறிவும் பொருட் செறிவுஞ் செறிந்து வேறுவேறு ஒலித்துநடக்கும் என்று கூறியவற்றுள்
எழுத்துச் செறிவும் வண்ணமு மூன்றுநெறியார்க்கும் வேறுவேறாக்கி, யொருவகைச் சொற்செறிவு மவையல்லாத
பொருட்செறிவு மூன்றுநெறி யார்க்கும் பொதுவாகக் கூறினாரெனினும்
மெய்க ளுடனிலைமயக்கமின்றி யேனைமயக்கமாக வண்ணமும் பொதுவாவனவு முள. அது வருமாறு :-
மயர்வறமதிநலனருளியநறைகமழ்மலர்மகள்புணர்பவன்மே
லுயர்வறவுயர்நலனெனமுதிர்தமிழ்மறையுரைமகிழ்முனிவரைவாழ்
புயல்புரைகுழன்மதிபுரைநுதல்வடவரைபுரைபுணரிளமுலைசேர்
கயல்புரைவிழியெனதுயிரெவணினதுயிர்கவல்வகையெவன்மயிலே. (117)
இது அராகந்தொடுத்த அடியோடும் பிறிதடியும்படத் தொடர்ந் தோடினமையான் முடுகுவண்ணம் ;
“முடுகுவண்ண, மடியிறந்தோடிய வதனோரற்றே” என்றாராகலின். இவ்வண்ணமு மூன்றுநெறியார்க்கும் ஒக்கும்.
ஒழிந்தனவற்றுள்ளு மிவ்வண்ணம் பாகுபடுமென்னு நோக்கத்தாற் கூறப்பட்டது.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். பகுதி – உடன்போக்கு. துறை – செவிலிதேடல்.
பொதுவியலுரை முற்றும்.
தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply