கிருஷ்ணனின் குடும்பம்; பலதேவன், வசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோரின் குடும்ப வம்சாவளி கூறப்படல்.
ஜநமேஜய உவச
ப³ஹூநாம் ஸ்த்ரீஸஹஸ்ராணாமஷ்டௌ பா⁴ர்யா꞉ ப்ரகீர்திதா꞉ |
தாஸாமபத்யாந்யஷ்டாநாம் ப⁴க³வாந்ப்ரப்³ரவீது மே ||2-103-1
வைஷ²ம்பாயந உவாச
அஷ்டௌ மஹிஷ்ய꞉ புத்ரிண்ய இதி ப்ராதா⁴ந்யத꞉ ஸ்ம்ருதா꞉ |
ஸர்வா வீரப்ரஜாஷ்²சைவ தாஸ்வபத்யாநி மே ஷ்²ருணு ||2-103-2
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மதிப்பிற்குரிய ஐயா, கிருஷ்ணனின் பல்லாயிரம் மனைவியரில் எட்டுப் பெயர்களை முறையாகக் குறிப்பிட்டீர். அவர்களின் பிள்ளைகளைக் குறித்து இப்போது சொல்வீராக” என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர், “கிருஷ்ணனின் எட்டு ராணிகள் {அவனது மனைவியரில்} முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் வீர மைந்தர்களை ஈன்றெடுத்தனர். அவர்களுடைய பிள்ளைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2)
ருக்மிணீ ஸத்யபா⁴மா ச தே³வீ நாக்³நஜிதீ ததா² |
ஸுத³த்தா ச ததா² ஷை²ப்³யா லக்ஷ்மணா சாருஹாஸிநீ ||2-103-3
மித்ரவிந்தா³ ச காலிந்தீ³ ஜாம்ப³வத்யத² பௌரவீ |
ஸுபீ⁴மா ச ததா² மாத்³ரீ ருக்மிணீதநயாஞ்ச்²ருணு ||2-103-4
ருக்மிணி, சத்யபாமா, {நக்னஜித்தின் மகளும், சத்யா என்று அழைக்கப்பட்டவளுமான} நாக்னஜிதி தேவி, சைப்யை என்றும் அழைக்கப்பட்ட (சிபி நாட்டு இளவரசி) ஸுதத்தை, அழகிய சிரிப்பைக் கொண்ட லக்ஷ்மணை,(3) காளிந்தி என்றும் அழைக்கப்பட்ட {காளிந்த நாட்டு இளவரசி} மித்ரவிந்தை, பௌரவி என்றும் அழைக்கப்பட்ட ஜாம்பவதி, மாத்ரி {மத்ர நாட்டு இளவரசி} என்றும் அழைக்கப்பட்ட ஸுபீமை ஆகியோரே அவர்கள் {கிருஷ்ணனின் எட்டு மனைவியர்}. இப்போது ருக்மிணியின் பிள்ளைகளைக் குறித்துக் கேட்பாயாக[“ருக்மிணி, ஸத்யபாமை, நாக்நஜிதி தேவி, சிபிதேசத்து ஸுதத்தை, அழகிய சிரிப்புடைய லக்ஷ்மணா, காளிந்த தேசத்து மித்ரவிந்தை, ஜாம்பவதி, புரு வம்சத்து மத்ரகுமாரி ஸுபீமை. ருக்மிணி பிள்ளைகளைப் பற்றிக் கேள்” என்றிருக்கிறது. இதிலும் சரியாக எட்டு மனைவியர் சொல்லப்பட்டிருக்கின்றனர்.].(4)
ப்ரத்³யும்ந꞉ ப்ரத²மம் ஜஜ்ஞே ஷ²ம்ப³ராந்தகர꞉ ஷு²ப⁴꞉ |
த்³விதீயஷ்²சாருதே³ஷ்ணஷ்²ச வ்ருஷ்ணிஸிம்ஹோ மஹாரத²꞉ ||2-103-5
சாருப⁴த்³ரஷ்²சாருக³ர்ப⁴꞉ ஸுதே³ஷ்ணோ த்³ரும ஏவ ச |
ஸுஷேணஷ்²சாருதே³ஷ்ணாஷ்²ச சாருவிந்த³ஷ்²ச வீர்யவான் ||2-103-6
சாருபா³ஹு꞉ கநீயாம்ஷ்²ச கந்யா சாருமதீ ததா² |
ஜஜ்ஞிரே ஸத்யபா⁴மாயாம் பா⁴நுர்பீ⁴மரத²ஸ்ததா² ||2-103-7
சம்பரனைக் கொன்றவனும், பிரத்யும்னன் என்ற பெயரைக் கொண்டவனுமான மகனையே முதலில் ருக்மிணி ஈன்றெடுத்தாள். அடுத்ததாக அவள் வலிமைமிக்கத் தேர்வீரனும், விருஷ்ணி குலக் கொழுந்துமான சாருதேஷ்ணனையும்,(5) அடுத்தடுத்து சாருபத்திரன், சாருகர்ப்பன், ஸுதேஷ்ணன், துருமன், ஸுஷேணன், சாருகுப்தன்,பெருஞ்சக்திவாய்ந்த சாருவிந்தன் ஆகியோரையும்(6) இளையவனான சாருபாஹுவையும் பெற்றாள். மேலும் அவள் சாருமதி என்ற பெயரைக் கொண்ட ஒரு மகளையும் பெற்றெடுத்தாள்.(7)
ரோஹிதோ தீ³ப்திமாம்ஷ்²சைவ தாம்ரஜாக்ஷோ ஜலாந்தக꞉ |
பா⁴நுர்பீ⁴மலிகா சைவ தாம்ரபர்ணீ ஜலந்த⁴மா ||2-103-8
கருடத்வஜன் (கிருஷ்ணன்) சத்யபாமாவிடம் பானு, பீமரதன், க்ஷுபன், ரோஹிதன், தீப்திமான், தாம்ரஜாக்ஷன், ஜலாந்தகன் என்ற ஏழு மகன்களையும், பானு, பீமலிகை, தாந்திரபக்ஷை {தாம்ரபர்ணி}[தாந்திரபக்ஷை/தாம்ரஜக்ஷை], ஜலந்தமை ஆகிய நான்கு மகள்களையும் பெற்றாள்.(8)
சதஸ்ரோ ஜஜ்ஞிரே தேஷாம் ஸ்வஸாரோ க³ருட³த்⁴வஜாத் |
ஜாம்ப³வத்யா꞉ ஸுதோ ஜஜ்ஞே ஸாம்ப³꞉ ஸமிதிஷோ²ப⁴ந꞉ ||2-103-9
ஜாம்பவதி, போர்க்களத்தின் ரத்தினமும், சாம்பன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனையும், மித்ரவான், மித்ரவிந்தன், மித்ரபாஹு, சுநீதன் என்ற மகன்களையும், மித்ராவதி என்ற ஒரு மகளையும் பெற்றாள்.(9)
மித்ரவாந்மித்ரவிந்த³ஷ்²ச மித்ரவத்யபி சாங்க³நா |
மித்ரபா³ஹு꞉ ஸுநீத²ஷ்²ச நாக்³நஜித்யா꞉ ப்ரஜா꞉ ஷ்²ருணு ||2-103-10
நாக்னஜிதியின் பிள்ளைகளை இப்போது கேட்பாயாக. அவள் பத்ரகாரன், பத்ரவிந்தன் என்ற இரு மகன்களையும், பத்ராவதி என்ற பெயரில் ஒரு மகளையும் பெற்றாள்.(10)
ப⁴த்³ரகாரோ ப⁴த்³ரவிந்த³꞉ கந்யா ப⁴த்³ரவதீ ததா² |
ஸுத³த்தாயாம் து ஷை²ஷ்யாயாம் ஸங்க்³ராமஜித³ஜாயத ||2-103-11
சைப்யை {ஸுதத்தை}, ஸங்கிராமஜித், ஸத்யஜித், சேனஜித், ஷூரன், ஸபத்நஜித் என்ற மகன்களைப் பெற்றாள்.(11)
ஸத்யஜித்ஸேநஜிச்சைவ ததா² ஷூ²ர꞉ ஸபத்நஜித் |
ஸுபீ⁴மாயா꞉ ஸுதோ மாத்³ர்யா வ்ருகாஷ்²வோ வ்ருகநிர்வ்ருதி꞉ ||1-103-12
விருகாஷ்வன், விருகநிர்விருதி, விருகதீப்தி, ஸுபீமன் என்ற இளவரசர்கள் மாத்ரியின் {ஸுபீமையின்} மகன்களாவர்.(12)
குமாரோ வ்ருகதீ³ப்திஷ்²ச லக்ஷ்மணாயா꞉ ப்ரஜா꞉ ஷ்²ருணு
கா³த்ரவாந்கா³த்ரகு³ப்தஷ்²ச கா³த்ரவிந்த³ஷ்²ச வீர்யவான் ||2-102-13
ஓ! மன்னா, லக்ஷ்மணையின் பிள்ளைகளை இப்போது கேட்பாயாக. காத்ரவான், காத்ரகுப்தன், பெருஞ்சக்திவாய்ந்த காத்ரவிந்தன் ஆகியோர், அவர்களின் தங்கையான காத்ரவதியுடன் {லக்ஷ்மணைக்குப்} பிறந்தனர்.(13)
ஜஜ்ஞிரே கா³த்ரவத்யா ச ப⁴கி³ந்யாநுஜயா ஸஹ |
அஷ்²ருதஷ்²ச ஸுதோ ஜஜ்ஞே காலிந்த்³யா꞉ ஷ்²ருதஸம்மித꞉ ||2-103-14
அஷ்²ருதம் ஷ்²ருதஸேநாயை ப்ரத³தௌ³ மது⁴ஸூத³ந꞉ |
தம் ப்ரதா³ய ஹ்ருஷீகேஷ²ஸ்தாம் பா⁴ர்யாம் முதி³தோ(அ)ப்³ரவீத் ||2-103-15
ஏஷ வாமுப⁴யோரஸ்து தா³யாத³꞉ ஷா²ஷ்²வதீ꞉ ஸமா꞉ |
ப்³ருஹத்யாம் து க³த³ஸ்யாஹு꞉ ஷை²ஷ்யாயாமங்க³த³ம் ஸுதம் ||2-103-16
உத்பந்நம் குமுத³ம் சைவ ஷ்²வேதம் ஷ்²வேதா ததா²ங்க³நா |
அகா³வஹ꞉ ஸுமித்ரஷ்²ச ஷு²சிஷ்²சித்ரரத²ஸ்ததா² ||2-103-17
காளிந்தி {மித்ரவிந்தை}, அஷ்ருதன், சுருதஸம்மிதன் என்ற மகன்களைப் பெற்றெடுத்தாள்,(14) மதுசூதனன் அஷ்ருதனை {முக்கிய மனைவியர் எட்டுப் பேரில் அடங்காத} சுருதசேனை என்பவளுக்குக் கொடுத்தான். அவ்வாறு தன் மகனைக் கொடுத்துவிட்ட ரிஷிகேசன் தன் மனைவியிடம் {காளிந்தியிடம்},(15) “இவன் எப்போதும் உங்கள் இருவருக்கும் மகனாக இருக்கட்டும்” என்றான்.
பிருகதி என்பவள் கதனைப்[கதன் என்ற பெயரில் கிருஷ்ணனின் தம்பி ஒருவனும் உண்டு. இங்கே குறிப்பிடப்படுவது அவனது மகன். ] பெற்றெடுத்தாள். {மற்றுமொரு} சைப்யையிடம் அங்கதன்,(16) குமுதன், ஸ்வேதன் என்ற மகன்களும், ஸ்வேதை என்ற மகளும் பிறந்தனர்.சுதேவை என்பவள் அபாவஹன், சுமித்ரன், சுசி, சித்ரரதன், சித்ரசேனன் என்ற பெயர்களைக் கொண்ட ஐந்து மகன்களையும், சித்திரை, சித்ராவதி என்ற பெயர்களைக் கொண்ட மகள்களையும் பெற்றாள்.(17)
சித்ரஸேந꞉ ஸுதே³வாயாஷ்²சித்ரா சித்ரவதீ ததா² |
வநஸ்தம்ப³ஷ்²ச ஜஜ்ஞாதே ஸுத꞉ ஸ்தம்ப³வநஷ்²ச ஹ ||2-103-18
நிவாஸநா வநஸ்தம்ப³꞉ கந்யா ஸ்தம்ப³வதீ ததா² |
உபஸந்நஷ்²ச ஷ²ங்குஷ்²ச வஜ்ராம்ஷு²꞉ க்ஷிப்ர ஏவ ச ||2-103-19
கௌஷி²க்யாம் ஷ்²ருதஸோமாயாம் யௌதி⁴ஷ்டி²ர்யாம் யுதி⁴ஷ்டி²ர꞉ |
காபாலீ க³ருட³ஷ்²சைவ ஜஜ்ஞாதே சித்ரயோதி⁴நௌ ||2-103-20
ஏவமாதீ³நி புத்ராணாம் ஸஹஸ்ராணி நிபோ³த⁴ மே |
த³ஷா²யுதம் ஸமாக்²யாதா வாஸுதே³வஸ்ய தே ஸுதா꞉ ||2-103-21
அயுதாநி ததா² சாஷ்டௌ ஷூ²ரா ரணவிஷா²ரதா³꞉ |
ஜநார்த³நஸ்ய ப்ரஸவ꞉ கீர்திதோ(அ)யம் ததா² மயா ||2-103-22
கௌசிகி என்பவளிடம் வனன், ஸ்தம்பவனன் என்றும் அழைக்கப்பட்ட ஸ்தம்பன், நிவாசனன், வனஸ்தம்பன் என்ற மகன்களும், ஸ்தம்பவதி என்ற மகளும் பிறந்தனர்.(18)
ஸுதஸோமையிடம் உபசன்னன், சங்கு, வஜ்ராம்சு, க்ஷிப்ரன் என்ற மகன்கள் பிறந்தனர்.(19)
யௌதிஷ்டிரி என்பவளிடம் போர்க்களங்களில் அற்புத வழிமுறைகளில் போரிடும் யுதிஷ்டிரன், கபாலி, கருடன் ஆகியோர் பிறந்தனர்.(20)
இவ்வாறே நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வாசுதேவனுக்கு மகன்கள் பிறந்தனர் என்பதை அறிந்து கொள்வாயாக.(21) போரில் திறன்மிக்கவர்களான ஜனார்த்தனனின் வீர மகன்களில் எண்பதாயிரம் பேர் என்னால் சொல்லப்பட்டனர்.(22)
ப்ரத்³யும்நஸ்ய ஸுதோ ஜஜ்ஞே வைத³ர்ப்⁴யாம் ராஜஸத்தம |
அநிருத்³தோ⁴ ரணே ருத்³தோ⁴ ஜஜ்ஞே ஸ ம்ருக³கேதந꞉ ||2-103-23
ரேவத்யாம் ப³லதே³வஸ்ய ஜஜ்ஞாதே நிஷ²டோ²ல்முகௌ |
ப்⁴ராதரௌ தே³வஸங்காஷா²வுபௌ⁴ புருஷஸத்தமௌ ||2-103-24
ஸுதநுஷ்²ச ஸுதாரா ச ஷௌ²ரேராஸ்தாம் பரிக்³ரஹ꞉ |
பௌண்ட்³ரக꞉ கபிலஷ்²சைவ வஸுதே³வஸ்ய தௌ ஸுதௌ ||2-103-25
தாராயாம் கபிலோ ஜஜ்ஞே பௌண்ட்³ரஷ்²ச ஸுதநோ꞉ ஸுத꞉ |
தயோர்ந்ரூபோ(அ)ப⁴வத்பௌண்ட்³ர꞉ கபிலஷ்²ச வநம் யயௌ ||2-103-26
துர்யாம் ஸமப⁴வத்³வீரோ வஸுதே³வாந்மஹாப³ல꞉ |
ஜரா நாம நிஷாதா³நாம் ப்ரபு⁴꞉ ஸர்வத⁴நுஷ்மதாம் ||2-103-27
ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, பிரத்யும்னன் விதர்ப்ப இளவரசியிடம் {ருக்மியின் மகளான ருக்மாவதியிடம்} அநிருத்தன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். அவன் தன் கொடியில் மானைச் சின்னமாகக் கொண்டவனாகவும், போரில் எவராலும் தடுக்கப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(23)
பலதேவன் {பலராமன்} ரேவதியிடம் நிசடன், உல்முகன் என்ற இரு மகன்களைப் பெற்றான். அந்தச் சகோதரர்கள் இருவரும் தேவர்களைப் போன்ற அழகர்களாக இருந்தனர்.(24)
சூரனின் மகனான வசுதேவன், தன் இரு மனைவிகளான சுதானு, நாராச்சி {சுதாரா} ஆகியோரிடம் பௌண்ட்ரகன், கபிலன் என்ற இரு மகன்களைப் பெற்றான்.(25) அவர்களில் நாராச்சி {சுதாரை} கபிலனையும், சுதானு பௌண்டரகனையும் பெற்றனர். அவ்விரு மகன்களில் பொண்டரகன் மன்னனானான், கபிலன் கான்புகுந்தான்.(26) வசுதேவன், பெருஞ்சக்திவாய்ந்தவனும், {நிஷாதர்களின் தலைவனும்} பெரும் வில்லாளியுமான ஜரனை ஒரு சூத்திரப்பெண்ணிடம்[பெரும்பலவனான வசுதேவன், தூர்யையின் மூலம் துணிவுமிக்க ஒரு மகனைப் பெற்றிருந்தான். ஜரன் என்ற பெயரைக் கொண்ட அவன், வில்லாளிகளில் சிறந்தவனாக நிஷாதர்களின் தலைவனானான்” என்றிருக்கிறது.இங்கே குறிப்பிடப்படும் ஜரனே ஏகலவ்யன் என்பாரும் உண்டு. பெரும் வில்லாளி, நிஷாதத்தலைவன் என்பன போன்ற சொற்கள் அதை உறுதி செய்கின்றன. ஆனால், ஹரிவம்ச பர்வம் 34:33ல் ஏகலவ்யன் சூரனின் மூன்றாம் மகனான {வசுதேவனின் தம்பியான} தேவசிரவனின் இரண்டாம் மகனென மறைமுகமாகச் சொல்லப்படாமல் நேரடியாகப் பெயர் குறிப்பிட்டே சொல்லப்படுகிறான். எவ்வாறெனினும் ஏகலவ்யன் கிருஷ்ணனுக்குத் தம்பி முறையில் வருகிறான். ] பெற்றான்.(27)
காஷ்²யாம் ஸுபார்ஷ்²வம் தநயம் லேபே⁴ ஸாம்பா³த்தரஸ்விநம் |
ஸாநுர்ஜஜ்ஞே(அ)நிருத்³த⁴ஸ்ய வஜ்ர꞉ ஸாநோரஜாயத ||2-103-28
சாம்பன், வேகமாகச் செல்பவனான சுபார்ஸ்வனைக் காசியை என்பவளிடம் மகனாகப் பெற்றான். அநிருத்தனுக்குச் சானு, வஜ்ரன்[இந்த வஜ்ரனையே அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தின் மன்னனாக்கினான். இது மஹாபாரதம் மௌசல பர்வம் 7ம் பகுதியிலும், மஹாப்ரஸ்தானிகபர்வம் 1ம் பகுதியிலும் சொல்லப்பட்டுள்ளது. ] என்ற இரு மகன்கள் பிறந்தனர், அவர்களில் பின்னவனே மூத்தவனாக இருந்தான்.(28)
வஜ்ராஜ்ஜஜ்ஞே ப்ரதிரத²꞉ ஸுசாருஸ்தஸ்ய சாத்மஜ꞉ |
அநமித்ராச்சி²நிர்ஜஜ்ஞே கநிஷ்டா²த்³வ்ருஷ்ணிநந்த³நாத் ||2-103-29
ஷி²நேஸ்து ஸத்யவாக்³ஜஜ்ஞே ஸத்யகஷ்²ச மஹாரத²꞉ |
ஸத்யகஸ்யாத்மஜ꞉ ஷூ²ரோ யுயுதா⁴நஸ்த்வஜாயத ||2-103-30
அஸங்கோ³ யுயுதா⁴நஸ்ய மணிஸ்தஸ்யாப⁴வத்ஸுத꞉ |
மணேர்யுக³ந்த⁴ர꞉ புத்ர இதி வம்ஷ²꞉ ஸமாப்யதே ||2-103-31
வஜ்ரனுக்குப் பிரதிரதன் என்பவனும், அவனுக்கு {பிரதிரதனுக்கு} சுசாரு என்பவனும் பிறந்தனர்.
விருஷ்ணியின் இளைய மகன் அனமித்ரன் {சுமைத்ரன்}, சினியைப் பெற்றான்,(29) அவனுக்கு {சினிக்கு} சத்யவந்தன், பெருந்தேர்வீரனான சத்யகன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். வீர யுயுதானன் {சாத்யகி}, இந்தச் சத்யகனின் மகனே ஆவான்.(30) யுயுதானின் மகன் அசங்கன், அவனது {அசங்கனின்} மகன் மணி. மணியின் மகன் யுகந்திரன். இவனுடன் இந்த வம்சம் {ஜனமேஜயனிடம் இதைச் சொல்லும் காலம் வரை} நிறைவடைகிறது” என்றார் {வைசம்பாயனர்}.(31)
இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வ்ருஷ்ணிவம்ஷா²நுகீர்தநே த்ர்யதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉
————–—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-