கிருஷ்ணனின் பெருமைகளை முழுமையாகவும், விரிவாகவும் சொன்ன நாரதர்.
நாரத³ உவாச
ஸாதி³தா மௌரவா꞉ பாஷா² நிஸுந்த³நரகௌ ஹதௌ |
க்ருத꞉ க்ஷேம்ய꞉ புந꞉ பந்தா²꞉ புரம் ப்ராக்³ஜ்யோதிஷம் ப்ரதி ||2-101-1
ஷௌ²ரிணா ப்ருதி²வீபாலாஸ்த்ராஸிதா꞉ ஸ்பர்த்³தி⁴நோ ரணே |
த⁴நுஷஷ்²ச நிநாதே³ந பாஞ்சஜந்யஸ்வநேந ச ||2-102-2
மேக⁴ப்ரக்²யை ரதா²நீகைர்தா³க்ஷிணாத்யை꞉ ஸுரக்ஷிதம் |
ருக்மிணம் யுதி⁴ நிர்ஜித்ய மஹாப³லபராக்ரமம் |
ருக்மிணீமாஜஹாராஷு² கேஷ²வோ வ்ருஷ்ணிபுங்க³வ꞉ ||2-102-3
தத꞉ பர்ஜந்யகோ⁴ஷேண ரதே²நாதி³த்யவர்சஸா |
அவாப்ய மஹிஷீம் போ⁴ஜ்யாம் ஷ²ங்க²சக்ரக³தா³ஸிப்⁴ருத் ||2-102-4
நாரதர் {உக்ரசேனனிடமும், யாதவர்களிடமும்}, “முரனின் {முருவின்} பாசக்கயிறுகள் அறுக்கப்பட்டன, நிசும்பனும், நரகனும் கொல்லப்பட்டனர், பிராக்ஜோதிஷத்திற்குச் செல்லும் சாலை ஆபத்துகள் அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டது.(1) செருக்குமிக்க உலக மன்னர்களும் கூட இந்தச் சூர குல வழித்தோன்றலுடைய (கிருஷ்ணனது) வில்லின் நாணொலியையும், பாஞ்சஜன்ய சங்கின் ஒலியையும் கேட்டுப் போரில் அச்சமடைந்தனர்.(2) விருஷ்ணிகளில் முதன்மையான இந்தக் கேசவன், தக்காண {தென்னகத்தைச் சேர்ந்த} தேர் வீர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ருக்மியை எளிதில் வீழ்த்தி ருக்மிணியை அபகரித்துச் சென்றான்.(3) சங்கு சக்கரக் கதாதாரியான இந்த ஹரி, சூரியனைப் போன்ற பிரகாசமிக்கதும், மேக முழத்தைப் போன்ற சடசடப்பொலியை உண்டாக்குவதுமான தேரில் போஜனின் மகளை {பீஷ்மகனின் மகளான ருக்மிணியைத்} தன் வீட்டிற்குக் கொண்டு சென்று, திருமணம் செய்து கொண்டான்.(4)
ஜாரூத்²யாமாஹ்வ்ருதி꞉ க்ராத²꞉ ஷி²ஷு²பாலஷ்²ச நிர்ஜித꞉ |
வக்ரஷ்²ச ஸஹ ஸைந்யேந ஷ²தத⁴ந்வாத² நிர்ஜித꞉ ||2-102-5
இந்த்³ரத்³யும்நோ ஹத꞉ கோபாத்³யவநஷ்²ச கஷே²ருமான் |
ஹத꞉ ஸௌப⁴பதி꞉ ஷ்²ரீமாஞ்சா²ல்வஷ்²ச த்³ருட⁴த⁴ந்வநா ||2-102-6
பர்வதாணாம் ஸஹஸ்ரம் ச சக்ரேண புருஷோத்தம꞉ |
விகீர்ய புண்ட³ரீகாக்ஷோ த்³யுமத்ஸேநம் வ்யபோத²யத் ||2-102-7
மஹேந்த்³ரஷி²க²ரே சைவ நிமேஷாந்தரசாரிணௌ |
ஜகா⁴ந புருஷவ்யாக்⁴ரோ ராவணஸ்யாபி⁴தஷ்²சரௌ ||2-102-8
இராவத்யாம் மஹாபோ⁴ஜாவக்³நிஸூர்யஸமௌ யுதி⁴ |
கோ³பதிஸ்தாலகேதுஷ்²ச நிஹதௌ ஷா²ர்ங்க³த⁴ந்வநா ||2-102-9
அக்ஷப்ரபாதநே சைவ டி³ம்போ³ ஹம்ஸஷ்²ச தா³நவௌ |
உபௌ⁴ தாவபி க்ரூஷ்ணேந ஸாநுகௌ³ விநிபாதிதௌ ||2-102-10
த³க்³தா⁴ வாராணஸீ சைவ கேஷ²வேந மஹாத்மநா |
ஸராஷ்ட்ர꞉ ஸாநுப³ந்த⁴ஷ்²ச காஷீ²நாமதி⁴போ ஹத꞉ ||2-102-11
இவன் ஜாருதி நகரில் ஆஹ்விருத்தி, கிராதன், சிசுபாலன் ஆகியோரை வீழ்த்தி, படைவீரர்களுடன் கூடிய தந்தவக்ரன், சததன்வன் ஆகியோரை வென்றான்.(5) இவன் கோபத்தால் தூண்டப்பட்டவனாக இந்திரத்யும்னன், யவனன் {காலயவனன்}, கசெருமான் ஆகியோரைக் கொன்றான். கனமான {சாரங்க} வில்லைக் கொண்ட இவன் (கிருஷ்ணன்) சௌபத்தின் தலைவனான மன்னன் சால்வனையும் கொன்றான்.(6) தாமரைக் கண்ணனான இந்தப் புருஷோத்தமன், ஆயிரக்கணக்கான மலைகளைச் சிதறடித்துவிட்டுத் தன் சக்கராயுதத்தால் தியுமத்சேனனைத் தாக்கினான் {கொன்றான்}.(7) புலியைப் போன்று துணிவுமிக்கவனும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மகேந்திர மலையின் சிகரத்திற்குச் செல்லவல்லவனுமான இவன், அங்கே திரிந்து கொண்டிருந்த ராவணனின் தொண்டர்களை {ராட்சசர்களைக்} கொன்றான்.(8) சாரங்கபாணியான இந்தக் கிருஷ்ணன், இராவதி நகரில் நடந்த போரில் அக்னி தேவனையும், சூரிய தேவனையும் போலப் போரிட்ட பெரும்போஜர்களான கோபதியையும், தாலகேதுவையும் கொன்றான்.(9) இந்தக் கிருஷ்ணன், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் டிம்பகன், ஹம்சன் ஆகியோரையும் அவர்களின் தொண்டர்களையும் கொன்றான்[அக்ஷப்ரபாதனம் எனும் இடத்தில் வைத்துக் கொன்றான்].(10) உயரான்மாவான இந்தக் கேசவன் (கிருஷ்ணன்), வாராணசியை {காசியை} எரித்தான். இவன் காசியின் மன்னனுடன் சேர்த்து அவனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் கொன்றான்.(11)
விஜித்ய ச யமம் ஸங்க்²யே ஷ²ரை꞉ ஸந்நதபர்வபி⁴꞉ |
அதை²ந்த்³ரஸேநிராநீத꞉ க்ருஷ்ணேநாத்³பு⁴தகர்மணா ||2-102-12
ஸஹித꞉ ஸர்வயாதோ³பி⁴꞉ ஸமரேஷு மஹாப³ல꞉ |
ப்ராப்ய லோஹிதகூடம் ச க்ருஷ்ணேந வருணோ ஜித꞉ ||2-102-13
மஹேந்த்³ரப⁴வநே யாதோ தே³வைர்கு³ப்தோ மஹாத்மபி⁴꞉ |
அசிந்தயித்வா தே³வேந்த்³ரம் பாரிஜாதத்³ருமோ ஹ்ருத꞉ ||2-102-14
பாண்ட்³யம் பௌண்ட்³ரம் கலிங்க³ம் ச மாத்ஸ்யம் சைவ ஜநார்த³ந꞉ |
ஜகா⁴ந ஸஹிதாந்ஸர்வாந்வங்க³ராஜம் ததை²வ ச ||2-102-15
ஏஷ சைகஷ²தம் ஹத்வா ரணே ராஜ்ஞாம் மஹாத்மநாம் |
கா³ந்தா⁴ரீமாவஹத்³வீரோ மஹிஷீம் ப்ரியத³ர்ஷ²நாம் ||2-102-16
ததா² கா³ண்டீ³வத⁴ந்வாநம் க்ரீட³ந்தம் மது⁴ஸூத³ந꞉ |
ஜிகா³ய ப⁴ரதஷ்²ரேஷ்ட²ம் குந்த்யா꞉ ப்ரமுக²தோ விபு⁴꞉ ||2-102-17
த்³ரோணம் த்³ரௌணிம் க்ருபம் கர்ணம் பீ⁴ஷ்மம் சைவ ஸுயோத⁴நம் |
சக்ராநுயாநை꞉ ப்ரஹ்ரவணே ஜிகா³ய புருஷோத்தம꞉ ||2-102-18
ப³ப்⁴ரோஷ்²ச ப்ரியமந்விச்ச²ஞ்ச²ங்க²சக்ரக³தா³ஸிப்⁴ருத் |
ஸௌவீரராஜஸ்ய ஸுதாம் ப்ரஸஹ்ய ஹ்ருதவாந்ப்ரபு⁴꞉ ||2-102-19
பர்யஸ்தாம் ப்ருதி²வீம் க்ருத்ஸ்நாம் ஸாஷ்²வாம் ஸரத²குஞ்ஜராம் |
வைணுதா³ரிக்ருதே யத்நாஜ்ஜிகா³ய புருஷோத்தம꞉ ||2-102-20
அற்புதச் செயல்களைச் செய்பவனான கிருஷ்ணன், கூர்முனை கொண்ட கணைகளால் யமனை வென்று இந்திரசேனனின் மகனை விடுவித்தான்.(12) இந்தக் கிருஷ்ணன், (நீருக்கடியில் உள்ள) லோஹிதக்கூடம் சென்று நீர்வாழ் விலங்குகள் அனைத்துடன் கூடியவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான வருணனைப் போரில் வென்றான்.(13) இந்திரனின் மாளிகைக்குச் சென்ற இவன், பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களால் பாதுகாக்கப்பட்ட பாரிஜாத மரத்தை அபகரித்துச் சென்று அவர்களின் மன்னனை {இந்திரனை} அலட்சியம் செய்தான் {அவமதித்தான்}.(14) நுண்ணறிவுமிக்க இந்த ஜனார்த்தனன், பாண்டிய, பௌண்டர, கலிங்க, மாத்ஸ்ய, வங்க மன்னர்களைக் கொன்றான்.(15) இவன் {கிருஷ்ணன்}, பெருஞ்சக்திவாய்ந்த நூற்றுக்கணக்கான மன்னர்களைக் கொன்று தன்னுடைய அழகிய ராணியான காந்தாரியை மணந்து கொண்டான்.(16) ஆனால் இந்தத் தலைவன் மதுசூதனன், காண்டீபதாரியும், பாரதர்களில் முதன்மையானவனும், குந்தியின் முன் விளையாடுபவனுமான அர்ஜுனனுக்கே வெற்றி மகுடம் சூட்டினான்[அப்படியே காண்டீப விற்கையன் விளையாடுகிற அர்ஜுனனைக் குந்தி தேவி முன்னிலையில் மதுஸூதனன் ஜயித்தான்”].(17) மனிதர்களில் முதன்மையான இவன், {அர்ஜுனனின் மூலம்} போரில் துரோணர், துரௌணி {அஸ்வத்தாமன்}, கர்ணன், பீஷ்மர், சுயோதனன் {துரியோதனன்} ஆகியோரையும், பிற வீரர்களையும் வீழ்த்தினான்.(18) சக்திவாய்ந்தவனும், சங்கு சக்கரக் கதாதாரியுமான இந்த ஹரி, பப்ருவை {அக்ரூரனை} மகிழ்ச்சி கொள்ளச் செய்வதற்காகச் சௌவீர மன்னனின் மகளை வலுக்கட்டாயமாக அபகரித்துச் சென்றான்.(19) இந்தப் புருஷோத்தமன், குதிரைகள், தேர்கள், யானைகளுடன் மொத்த பூமியையும் வைணுதாரி {வேணுதாரியின் மகன்} ஒடுக்கியபோது பெருங்கவனத்துடன் அவனை வீழ்த்தினான்.(20)
அவாப்ய தபஸோ வீர்யம் ப³லமோஜஷ்²ச மாத⁴வ꞉ |
பூர்வதே³ஹே ஜஹாராயம் ப³லேஸ்த்ரிபு⁴வநம் ஹரி꞉ ||2-102-21
வஜ்ராஷ²நிக³தா³க²ட்³கை³ஸ்த்ராஸயத்³பி⁴ஷ்²ச தா³நவை꞉ |
யஸ்ய நாதி⁴க³தோ ம்ருத்யு꞉ புரம் ப்ராக்³ஜ்யோதிஷம் ப்ரதி ||2-102-22
அபி⁴பூ⁴தஷ்²ச க்ருஷ்ணேந ஸக³ண꞉ ஸுமஹாப³ல꞉ |
ப³லே꞉ புத்ரோ மஹ்வீர்யோ பா³ணோ த்³ரவிணவத்தர꞉ ||2-102-23
பீட²ம் ததா² மஹாபா³ஹு꞉ கம்ஸாமாத்யம் ஜநார்த³ந꞉ |
பைடி²கம் சாஸிலோமாநம் நிஜகா⁴ந மஹாப³ல꞉ ||2-102-24
ஜ்ரும்ப⁴மைராவணம் சாபி விரூபம் ச மஹாயஷா²꞉ |
ஜகா⁴ந புருஷவ்யாக்⁴ரோ தை³த்யம் மாநுஷரூபிணம் ||2-102-25
ததா² நாக³பதிம் தோயே காலீயம் ச மஹௌஜஸம் |
நிர்ஜித்ய புண்ட³ரீகாக்ஷ꞉ ப்ரேஷயாமாஸ ஸாக³ரம் ||2-102-26
ஸஞ்ஜீவயாமாஸ ம்ருதம் புத்ரம் ஸாந்தீ³பநேஸ்ததா² |
நிர்ஜித்ய புருஷவ்யாக்⁴ரோ யமம் வைவஸ்வதம் ஹரி꞉ ||2-102-27
இந்த மாதவன் தன்னுடைய முற்பிறவியில் குள்ளனின் வடிவை ஏற்று {வாமனனாக} தவத்தின் மூலம் சக்தி, பலம், ஆற்றல் ஆகியவற்றை அடைந்து, பலியிடமிருந்து மூவுலகங்களையும் அபகரித்தான்.(21) பிராக்ஜோதிஷ நகரத்தில் வஜ்ரங்கள், கதாயுதங்கள், வாள்கள் ஆகியவற்றுடன் கூடிய தானவர்களால் இவன் தாக்கப்பட்டபோதும் காலனால் இவனை நெருங்க முடியவில்லை.(22) பலியின் மகனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், ஆற்றல்மிக்கவனும், செல்வந்தனுமான பாணனும் அவனுடைய தொண்டர்களும் {அசுரர்களும்} இந்தக் கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டனர்.(23) பெருஞ்சக்திவாய்ந்தவனான இந்த ஜனார்த்தனன், நீண்ட கரங்களைக் கொண்ட கம்சனின் அமைச்சர்களான பீடன், பைதிகன் அஸிதோமான் ஆகியோரையும் கொன்றான்.(24) பெருஞ்சிறப்புமிக்கவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான இந்த மாதவன், மனிதர்களின் வடிவில் இருந்த ஜிரும்பன், ஐராவணன், விரூபன் என்ற தைத்தியர்களைக் கொன்றான்.(25) இந்தத் தாமரைக் கண்ணன் (கிருஷ்ணன்), பெருஞ்சக்திவாய்ந்த நாகமன்னன் காளியனை நீர்நிலையில் வீழ்த்திக் கடலுக்கு அனுப்பினான்.(26) மனிதர்களில் முதன்மையான இந்த ஹரி, விவஸ்வானின் மகனான யமனை வென்று, சாந்தீபனியின் மகனை இறந்த நிலையில் இருந்து உயிரோடு மீட்டான்.(27)
ஏவமேஷ மஹாபா³ஹு꞉ ஷா²ஸ்தா தேஷாம் து³ராத்மநாம் |
தே³வாம்ஷ்²ச ப்³ராஹ்மநாம்ஷ்²சைவ யே த்³விஷந்தி ஸதா³ ந்ருப ||2-102-28
நிஹத்ய நரகம் பௌ⁴மமாஹ்ருத்ய மணிகுண்ட³லே |
தே³வமாதுர்த³தௌ³ சைவ ப்ரீத்யர்த²ம் வஜ்ரபாணிந꞉ ||2-102-29
ஏவம் ச தே³வதை³த்யாநாம் ஸுராணாம் ச மஹாயஷா²꞉ |
ப⁴யாப⁴யகர꞉ க்ருஷ்ண꞉ ஸர்வலோககரோ விபு⁴꞉ ||2-102-30
ஸம்ஸ்தா²ப்ய த⁴ர்மாந்மர்த்யேஷு யஜ்ஞைரிஷ்ட்வா(ஆ)ப்தத³க்ஷிணை꞉ |
க்ருத்வா தே³வார்த²மமிதம் ஸ்வஸ்தா²நம் ப்ரதிபத்ஸ்யதே ||2-102-31
க்ருஷ்ணோ போ⁴க³வதீம் ரம்யாம்ருஷிகாந்தாம் மஹாயஷா²꞉ |
த்³வாரகாமாத்மஸாத்க்ருத்வா ஸமுத்³ரம் க³மயிஷ்யதி ||2-102-32
ப³ஹுரத்நஸமாகீர்ணாம் சைத்யயூபஷ²தாங்கிதாம் |
த்³வாரகாம் வருணாவாஸம் ப்ரவேக்ஷ்யதி ஸகாநநாம் ||2-102-33
தாம் ஸூர்யஸத³நப்ரக்²யாம் மதஜ்ஞ꞉ ஷா²ர்ங்க³த⁴ந்வந꞉ |
விஸ்ருஷ்டாம் வாஸுதே³வேந ஸாக³ர꞉ ப்லாவயிஷ்யதி ||2-102-34
ஸுராஸுரமநுஷ்யேஷு நாஸீந்ந ப⁴விதா க்வசித் |
ய இமாமாவஸேத்கஷ்²சித³ந்யோ வை மது⁴ஸூத³நாத் ||2-102-35
ஓ! மன்னா {உக்ரசேனா}[இங்கே மன்னா என்ற சொல் நாரதர் சொல்வதாகும். எனவே இஃது உக்சேனனுக்குச் சொன்னதாகக் கொள்ளப்படுகிறது.], இவ்வகையிலேயே பேரான்மாவான இவன், பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும் தீங்கிழைக்கும் தீய ஆன்மாக்களைத் தண்டிக்கிறான்.(28) பூமியின் மகனான நரகனைக் கொன்று, {அவனிடமிருந்த} காது குண்டலங்களைக் கொண்டு வந்து, வஜ்ரதாரியை மகிழ்விப்பதற்காக அதைத் தேவர்களின் அன்னையிடம் {அதிதியிடம்} கொடுத்தான்.(29) பெருஞ்சிறப்புமிக்கவனும், உலகங்கள் அனைத்தையும் ஆள்பவனுமான தலைவன் விஷ்ணு, தைத்தியர்களுக்குப் பயங்கரனாகவும், தேவர்களுக்கு அச்சமற்ற நிலையை ஏற்படுத்துபவனுமாக இருக்கிறான்.(30) இவன், பல்வேறு வேள்விகளைச் செய்தும், தேவர்களின் பெரும்பணிகளை நிறைவேற்றியும் மனிதர்களுக்கு மத்தியில் அறத்தை நிறுவிவிட்டு தன் உலகிற்குத் திரும்பிச் செல்வான்.(31) பெருஞ்சிறப்புமிக்க இந்தக் கிருஷ்ணன், அதன் பிறகு ரிஷிகளால் விரும்பப்படும் போகவதி, துவாரகை ஆகிய நகரங்களைப் பெருங்கடல் விழுங்குமாறு செய்வான்.(32) பல்வேறு ரத்தினங்களாலும், வேள்விக்களங்களாலும் நிறைந்த துவாரகா நகரம், தன் தோட்டங்களுடன் {நந்தவனங்களுடன்} வருணனின் வசிப்பிடத்திற்குள் {கடலுக்குள்} புகும்.(33) சாரங்கபாணியான கிருஷ்ணனின் விருப்பத்தை அறிந்த பெருங்கடல், வாசுதேவனால் கட்டப்பட்டதும், சூரியனின் வசிப்பிடத்திற்கு ஒப்பானதுமான இந்தத் துவாரகா நகரத்தைப் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் மூழ்கச் செய்யும்.(34) மதுசூதனனைத் தவிர வேறு தேவர்களாலும், அசுரர்களாலும், மனிதர்களாலும், வேறு எவராலும் இங்கே வாழ முடியாது.(35)
ஏவமேஷ த³ஷா²ர்ஹாணாம் விதா⁴ய விதி⁴முத்தமம் |
விஷ்ணுர்நாராயண꞉ ஸோம꞉ ஸூர்யஷ்²ச ப⁴விதா ஸ்வயம் ||2-102-36
அப்ரமேயஸ்த்வசிந்த்யஷ்²ச யதா² காமசரோ வஷீ² |
மோத³த்யேஷ ஸதா³ பூ⁴தைர்பா³ல꞉ க்ரீட³நகைரிவ ||2-102-37
ந ப்ரமாதும் மஹாபா³ஹு꞉ ஷ²க்யோ(அ)யம் மது⁴ஸூத³ந꞉ |
பரம் ஹ்யபரமேதஸ்மாத்³விஷ்²வரூபாந்ந வித்³யதே ||2-102-38
ஷ்²ருதோ(அ)யமேவ ஷ²தஷ²ஸ்ததா² ஷ²தஸஹஸ்ரஷ²꞉ |
அந்தோ ஹி கர்மணாமஸ்ய த்³ருஷ்டபூர்வோ ந கேநசித் ||2-102-39
ஏவமேதாநி கர்மாணி ஷி²ஷு²மத்⁴யக³தஸ்ததா³ |
க்ருதவாந்புண்ட³ரீகாக்ஷ꞉ ஸங்கர்ஷணஸஹாயவான் ||2-102-40
இத்யுவாச புரா வ்யாஸஸ்தபோவீர்யேண சக்ஷுஷா |
மஹாயோகீ³ மஹாபு³த்³தி⁴꞉ ஸர்வப்ரத்யக்ஷத³ர்ஷி²வான் ||2-102-41
நாராயணனான இந்த விஷ்ணு, இவ்வாறு பல்வேறு சிறந்த வழிமுறைகளைத் தாசார்ஹர்களின் மத்தியில் நிறுவிவிட்டு, சோமன், சூரியனுடன் தன்னைக் கலப்பான்.(36) சிந்தனைக்கு அப்பாற்பட்டவனும், ஒப்பற்றவனுமான இவன் விரும்பியவாறு எங்கும் செல்லவல்லவனும், புலன்களை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டவனுமாக இருக்கிறான்.(37) நீண்ட கரங்களைக் கொண்ட இந்த மதுசூதனனை எவராலும் அளவிட முடியாது; இவனது அண்ட வடிவுக்கு ஒப்பாகவோ, மேம்பட்டதாகவோ வேறு ஏதும் கிடையாது.(38) இவ்வகையிலேயே இவன் நூறாயிரம் முறை புகழ்ந்து துதிக்கப்படுகிறான். ஆனால் எவராலும் அவனது பணிகளின் எல்லையைக் காண முடிந்ததில்லை.(39) பெரும் நுண்ணறிவுமிக்கவரும், பெரும் யோகியுமான வியாசர், அனைவரின் சாட்சியாக இருந்து, தாமரைக்கண்ணனான கேசவன் குழந்தைப் பருவத்திலும், இளமையிலும் சங்கர்ஷணனின் உதவியிடன் செய்த செயல்கள் அனைத்தையும், தவச் சக்தியின் மூலம் பெருஞ்சக்தி கொண்ட தமது கண்களின் மூலம் கண்டு ஏற்கனவே உரைத்திருக்கிறார்” என்றார் {நாரதர்}.(40,41)
வைஷ²ம்பாயந உவாச
இதி ஸம்ஸ்தூய கோ³விந்த³ம் மஹேந்த்³ரவசநாந்முநி꞉ |
யது³பி⁴꞉ பூஜித꞉ ஸர்வைர்நாரத³ஸ்த்ரிதி³வம் யயௌ ||2-102-42
ததஸ்தத்³வஸு கோ³விந்தோ³ தி³தே³ஷா²ந்த⁴கவ்ருஷ்ணிஷு |
யதா²ர்ஹம் புண்ட³ரீகாக்ஷோ விதி⁴வந்மது⁴ஸூத³ந꞉ ||2-102-43
யாத³வஷ்²ச த⁴நம் ப்ராப்ய விதி⁴வத்³பூ⁴ரித³க்ஷிணை꞉ |
யஜ்ஞைரிஷ்ட்வா மஹாத்மாநௌ த்³வாரகாமாவஸத்புரீம் ||2-102-44
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தெய்வீக முனிவரான நாரதர், தேவர்களின் மன்னனுடைய ஆணையின் பேரில் கோவிந்தனின் மகிமைகளை இவ்வாறு பாடிவிட்டு, யாதவர்களால் துதிக்கப்பட்டவராகத் தேவலோகத்திற்குச் சென்றார்.(42) அதன்பிறகு, மதுசூதனனான கோவிந்தன், விருஷ்ணிகளுக்கும், அந்தகர்களுக்கும் மத்தியில் செல்வங்களையும், ரத்தினங்களையும் முறையே பகிர்ந்தளித்தான்.(43) உயரான்மாக்களான யாதவர்களும் அவற்றைப் பெற்றுக் கொண்டு ஏராளமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்து கொண்டு துவாரகா நகரத்தில் வாழத்தொடங்கினர்” என்றார் {வைசம்பாயனர்}.(44)
இதி ஷ்²ரிமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
நாரத³வாக்யம் நாம த்³வ்யதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉
————–—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply