ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-
ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||
யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||
ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.
ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.
நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||
நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.
————-
ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.
தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.
————
ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.
பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||
பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.
—————
ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.
தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||
ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.
————-
ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.
—————–
ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -கூரத் ஆழ்வான்-
நாத யாமுன மத்யமாம் –
இந்த குரு பரம்பரையில் ஆதி மத்ய அவசானங்களை அருளிச் செய்கிறவர் ஆகையாலே
நாத யாமுனர்களை மத்யம பதஸ்தராக அருளிச் செய்கிறார் –
நாத முனிகளும் யாமுன முனிகளும் -அவர்கள் தான் பரம ஹம்சர் இறே
நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்றும் -என்று இறே ஆச்சார்யஹிருதயத்தில் அருளிச் செய்தது –
அவனும் அன்னமாய் இ றே அருமறைகளை அருளிச் செய்தது –
ஏவம்விதரான இவர் தான் மதுர கவிகளின் உடைய திவ்ய பிரபந்த அனுசந்தானத்தாலே
ஆழ்வார் உடைய –அருள் பெற்ற நாதமுனி யானார் –
அந்த நாதமுனி அருளாலே இறே யமுனைத் துறைவர் அவதரித்து-தர்சனத்தை ஆள வந்தார் ஆனது –
நாதோ பஜஞம் ப்ரவ்ருத்தம் பஹூபி ருபசிதம் யாமு நேய பிரபந்தை -என்னக் கடவது இ றே
அவ்வளவு அன்றிக்கே
விஷ்ணு பக்தி பிரதிஷ்டார்த்தம் சேநேசோ அவதரிஷ்யதி -என்று
ஸ்ரீ சேனாபதி ஆழ்வார் அவதாரமாக நம் ஆழ்வாரைச் சொல்லிற்று இறே
ஆளவந்தாருக்கு பிரபத்தி அர்த்த உபதேசம் பண்ணுகைக்கு அடியான உய்யக் கொண்டாரும்
மணக்கால் நம்பியும் இவர்கள் இடையிலே அடைவு படக் கடவராய் இருப்பார்கள்
நாத யாமுன மத்யமாம் -என்று ஆழ்வான் அனுசந்தான க்ரமமாயிற்று இது
இவரை ஒழிந்த மற்றையார் –அஸ்மத் குரு சமாரம்பாம் யதிசேகர மத்யமாம்
லஷ்மி வல்லப பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்றும் இ றே அனுசந்திக்கப் போருவது-
உடையவர் தான் குருபரம்பரைக்கு நடுநாயகம் இறே
அவர்தாம் ஆழ்வானுக்கு சதாச்சார்யர் ஆகையால் அஸ்மத்சார்ய பர்யந்தம் என்கிறது –
அஸ்மத் குரோர் பகவதோ அஸ்ய தயைக சிந்தோ ராமானுஜச்ய -என்னக் கடவது இறே
ராமானுஜாங்க்ரி சரணோ அஸ்மி -என்றும் அனுசந்தித்தார் –
இதிலே யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன் ஆகையாலே
ஆளவந்தாருக்கு சரணத்வயம் என்னலாம்படியான பெரிய நம்பியும் ஸூசிதர்
இளையாழ்வாரை விஷயீ கரித்த அனந்தரத்திலே-
இளையாழ்வீர் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் போது-மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் வானோர் வாழ எழுந்து அருளினாப் போலே
மேலை வானோர் வாழ இவரும் தமக்கு அடியேனான அடியேனை அப்படியும் யுமக்கு வைத்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று அவர் அருளிச் செய்தார்
அத்தைப் பற்ற யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமானுசன் என்று அமுதனார் அருளிச் செய்தார் -என்று
திரு நாராயண புரத்தில் திருவாய்மொழி யாச்சார்யர் அருளிச் செய்தார் –
உடையவரை குரு பங்க்தி ஹார நாயகமாக நடுவே அனுசந்திக்க வேண்டி இருக்க
யதா பாடம் எல்லாம் அனுசந்திக்கிறது –ஆழ்வான் திவ்ய ஸூ க்தி என்னுமது அறிக்கைக்காக —
இதில் ஆச்சார்யா அபிமான யுக்தராய் இவ்வருகிலும் யுண்டான அனைவரும் ஸ்வாச்சார்ய பர்யந்தமாக அனுசந்திக்கும் போது
நாத யாமுனர்களை நடுவாக சொன்னது யதிவரர்க்கும் உப லஷணம் ஆகிறது என்று கண்டு கொள்வது
மந்த்ராணாம் பரமோ மந்த்ர -என்று கொண்டாடப்படும் திருமந்திரம் மந்த்ர ராஜம்
இதன் விவரணம் த்வயம் மந்த்ர ரத்னம்
ராஜா ரத்னத்தை விரும்புவான் -திருமந்திரமும் ஸ்வ அர்த்த ப்ரகாஸனத்தில் மந்த்ர ரத்னத்தை அபேக்ஷிக்கும்
ஸ்ரீ ரெங்கராஜ யதிராஜ சம்வாதம் -த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ சதைவம் வக்தா –
மந்த்ர ரத்ன அநுஸந்தான சந்தத ஸ்புரிதா தரம் -திநசர்யை –
வளம் கொள் மந்திரமும் மெய்ம்மைப் பெரு வார்த்தையும் அருளிச் செய்த வாயாலே -த்வயவக்தா -த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ -என்று
இரண்டின் ஏற்றமும் வெளியிடப்பட்டது இறே என்று அருளிச் செயல் ரஹஸ்யத்தில் நாயனார் –
ஏகம் த்வயம் த்ர் யவ யவம் ஸூக லப்ய துர்யம் வ்யக்தார்த்த பஞ்சகம் உபாத்த ஷட் அங்க யோகம்
ஸப்த அர்ணவீ மஹிமவத் விவ்ருதாஷ்ட வர்ணம் ரெங்கே ஸதாம் இஹ ரஸம் நவமம் ப்ரஸூத -தேசிகன்
ஜகதி விததம் மோஹநம் இதம் தமோ யேநா பாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி -வேதார்த்த ஸங்க்ரஹம்
மாநத்வம் பகவன் மதஸ்ய மஹத பும்ஸ தாத்தா நிர்ணய திஸ்ர சித்தய
ஆத்ம ஸம்வித கிலாதீ சார தத்வாஸ்ரயா கீதார்த்தஸ்ய ச ஸங்க்ரஹம் ஸ்துதி யுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோ
இத்யமூன் அனுசந்ததே யாதிபதி தம் யாமுநே யம் நம-தேசிகன்
ஆளவந்தார் அருளிச் செய்தவை
ஆகம ப்ராமாண்யம்
புருஷ நிர்ணயம்
ஸித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம்
சதுஸ் ஸ்லோகீ
ஸ்தோத்ர ரத்னம் -எனப்படுபவைகள் –
—————
திருப் பாட்டனாரும் திருப் பேரனாரும் திரு அவதரித்தது திரு காட்டு மன்னார்குடி என்னும் திவ்ய ஷேத்ரத்திலே –
திருவடி உத்தராடம்-கடக உத்தராடம் – -சூன்யமான ஆடி மாதத்தை அசூன்யமாக ஆக்கி அருளினார் இவரும் நாச்சியாரும் -திருவாடிப்பூரத்தில் திரு அவதரித்து –
ஆ முதல்வன் இவன் என்று இவரது கடாக்ஷ வீசாணத்தாலேயே எம்பெருமானார் ஜெகதாச்சார்யராக ஆனார் –
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே –
இவரது ஸ்ரீ ஸித்தி த்ரயமே ஸ்ரீ பாஷ்யத்துக்கு மூலம்
இவரது ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹமே ஸ்ரீ கீதா பாஷ்யத்துக்கு மூலம்
பகவத் பரங்களான பூர்வாச்சார்ய ஸ்தோத்ரங்களுக்கு எல்லாம் மூலம் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –
மந்த்ர ரத்னம் போல் இதுவும் புராண ரத்னமும் ஸ்ரேஷ்டங்கள் –
இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரமேயம் -ஆழ்வாருடைய திருவாய் மொழி -த்ராவிட உபநிஷத் –
இதன் ரஹஸ்யம் -பகவத் கைங்கர்யமே மேலான புருஷார்த்தம் -என்னும் அர்த்தம்
இதனை ஆழ்வாருடைய நிர்ஹேதுக கிருபையால் அருளப் பெற்றார் ஸ்ரீ மன் நாதமுனிகள் –
உய்யக்கொண்டார் -மணக்கால் நம்பி -ஆச்சார்ய பரம்பரயா பெற்று ஆளவந்தார் இங்கு அருளிச் செய்கிறார்
அன்றிக்கே
சகல வேதாந்த ஸாரார்த்தங்களான ப்ராப்ய ப்ராபகங்களை அறுதியிட்டு இத்தாலே பிராபகத்தை -உபாயத்தை -அத்யவசித்து
ப்ராப்யத்தை -புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிறார் என்றுமாம் –
ஆழ்வார் திருவாய் மொழி ப்ராப்ய பரம் என்றும் ப்ராப்ய ப்ராபக பரம் என்றும் ஈட்டில் காட்டப்பட்டது போலே
இத்தையும் பலபடிகளாலே நிர்வஹிப்பர்கள் நம் பூர்வர்கள் – –
நம என்று தொடங்கி உபகாரகர்களை வணங்கி
யன் மூர்த்தி என்று தொடங்கும் ஸ்லோகத்திலே –
மே மூர்த்நி பாதி என்று அவனுடைய உபாயத்வத்தையும்
ஸ்ருதி சிரஸ்ஸூ பாதி -என்று அவனுடைய ப்ராப்யத்வத்தையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் இ-
இந்த ஸ்லோகம் இறே கிரந்த ப்ரதிபாத்ய ஸங்க்ரஹம்
யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||-ஶ்லோகம்–6-
புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.
————-
தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய || -ஶ்லோகம்7-என்று தொடங்கி
பகவத் விஷயத்தை ஸ்தோத்ரம் செய்ய தான் அயோக்யன் என்று நைச்யம் பாவித்து
எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.
காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் என்கிறபடியே அவரவர் அறிந்தவாறு ஏத்தலாம் என்று அறுதியிட்டு
ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –
———-
நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் || -ஶ்லோகம்7-10-என்று தொடங்கி
அவனுடைய பரத்வ ஸுலப்யங்களை பரக்க அருளிச் செய்து
எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.
———-
ந தர்ம நிஷ்டோஸ்மி -என்று உபாயாந்தர தியாக பூர்வமாகச் சரணாகதி செய்கிறார் –
ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||-ஶ்லோகம்-22-
சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.
————
விராஜமாந -என்று தொடங்கி
திவ்ய மங்கள விக்ரஹ
திவ்ய ஆபரண
திவ்ய ஆயுத
திவ்ய மஹிஷீ
நித்ய முக்த விஸிஷ்ட ப்ரஹ்ம அனுபவத்தையும்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யத்தையும்
அதுவும் பரார்த்தம் என்னும் அத்தையும் வெளியிட்டு
ப்ராப்யத்தை அருளிச் செய்கிறார் –
————–
ஆழ்வார் வள வேழுலகு தலை எடுத்து அகலப் பார்த்தது போலவே
இவரும் திக் அசுசிம் என்று அகல நினைத்தார்-
ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.
திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||
புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.
ருசியின் மிகுதியால் அகலமாட்டாது நிற்கிறார்
அத்தலையின் பெருமையின் எல்லையைப் பார்த்து அகலுவதும்
அத்தலையின் நீர்மையின் எல்லையைப் பார்த்து அணுகுவதும் உசிதம் இறே
இதுவே வள வேழுலகு-திருவாய் மொழியின் சாரம் –
——————–
கண்கள் சிவந்து -திருவாய் மொழியிலே ஜீவாத்ம ஸ்வரூபம் பகவத் சேஷ பூதம் என்று நிரூபித்து
கரு மாணிக்க மலையிலே -அது அநந்யார்ஹம் என்று நிரூபித்து
நெடுமாற்கு அடிமையிலே பகவத் சேஷத்தளவு அன்று -பாகவத சேஷத்தளவு செல்ல வேணும் என்று அருளிச் செய்தார்
இது இறே சத்ருன ஆழ்வான் படி –
அவ்வோபாதி ஆளவந்தாரும் -தவ தாஸ்ய ஸூக ஏக சங்கி நாம் -என்று ததீய சேஷத்வத்தைப் பிரார்திக்கிறார் –
ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.
தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.
ப்ரஹ்ம ஜென்மமும் இழுக்கு என்பாருக்கு பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசு இறே
பகவத் சேஷத்வமும் பாகவத சேஷத்வ பர்யந்தமாக வேணுமே –
பதிவிரதைக்கு பார்த்தாவினுடைய தேஹாம்சம் உத்தேச்யமான காலத்தில் பாதி வ்ரத்ய பங்கம் இல்லை
அவ்வோபாதி பகவானுக்கு சரீர பூதர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கிஞ்சித்கரித்ததால் இவனுக்கு ஸ்வரூப ஹானி இல்லை இறே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பகவானுக்கு ஜங்கம ஸ்ரீ விமானங்கள் இறே
நெஞ்சமே நீண் நகராக
எனது உடலே ஒரு மா நொடியும் பிரியான் –என்னா நின்றது இறே
ஆழ்வாரும் -ஊனில் வாழ் உயிரிலே -பகவத் அனுபவத்தைச் செய்து -ஹ்ருஷ்டராய்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பாகவத அனுபவத்தை ஆசைப்பட்டு
நெடுமாற்கு அடிமையிலே -பெற்று பரமானந்த பரிதரானார்
பாகவத அனுபவம் இல்லாத அன்று ஏற்பட்ட பகவத் அனுபவமும் அபூர்ணம் இறே –
ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தையே இதில் அருளிச் செய்கிறார் –
————
ஸ்வ பிதா மஹரான ஸ்ரீ மன் நாதமுனிகள் சம்பந்தத்தை நிர்தேசித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –
ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.
அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||
எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.
—————-
ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் அல்ல
பகவத் அனுபவ கைங்கர்யங்களே ஸ்வரூப அனுரூப பலம் என்றும்
கர்ம ஞான பக்திகள் ஸ்வரூப விருத்தங்கள் என்றும்
பகவானே உபாயபூதன் என்றும் ஆழ்வார் அறுதியிட்டார்
ஒரு நாயகம் திருவாய் மொழியில் ஐஸ்வர்ய கைவல்ய ப்ராவண்யம் த்யாஜ்யம் என்று உபதேசித்து
நண்ணாதார் -திருவாய் மொழியிலே
ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சற்று இன்பம்
ஒண்டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் -என்று ஸ்வ அனுஷ்டானத்தைக் காட்டி அருளினார்
புருஷார்த்த பல அந்நிய ருசி ஒழிகை இறே நாலாம் பத்தின் ப்ரமேயம்
நோற்ற நோன்பிலேன் இத்யாதியால் கர்ம ஞானாதிகளைக் கழித்து
உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று ஸர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றினார் ஆழ்வார்
ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தை இறே வெளியிட்டு அருளுகிறார் –
பகவத் கைங்கர்யமே ப்ராப்யமாயினும் தத் பிரதிசம்பந்தி தயா பகவான் ப்ராப்யனாகிறான்
தத் வர்த்தக தயா திரு நாடும் ப்ராப்யம் ஆகிறது
தத் விரோதியான ப்ரக்ருதி சம்பந்தினுடைய நிவ்ருத்தியும் ப்ராப்யம் ஆகிறது
இவை இத்தனையும் கைங்கர்யத்துக்காகவே இறே
இவை கைங்கர்ய உபயோகி இல்லாத போது த்யாஜ்யம் இறே
இது தன்னை
ந தேஹம் -என்கிற ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் –
ஏறாளும் இறையோனில் ஆழ்வார் நிரூபித்த அர்த்தமே இது இறே –
ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||
ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.
————
ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்க உயிர் தேருங்கால் என் தனக்கும் வேண்டா என்றபடி
ந ஹி மே ஜீவிதே ந அர்த்தா விநா ராமம் மஹா ரதம் -என்றாள் இறே பிராட்டியும்
ஜீவிதாதிகளால் குறைவின்றி -என்று நாயனார் சங்கலநம் செய்து அருளிச் செய்தார்
ஆகையால் சேஷத்வமே புருஷார்த்தம் என்றதாயிற்று –
லுப்த சதுர்த்தியிலும்
வியக்த சதுர்த்தியிலும் யுக்தங்களான சேஷ தர்ம சேஷ விருத்திகளான நிரூப்ய நிரூபாக பாவம் இறே ஸம்ப்ரதாய ஸித்தம்
குருஷ்வ மாம் அநு சரம் -என்றார் இளையபெருமாள்
நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் இறே
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை என்கிற இத்தால் ப்ரணவ யுக்த சேஷத்வம் ஜீவாத்ம ஸ்வரூப நிரூபகம் –
த்ருதீய அக்ஷர யுக்த ஞாத்ருத்வத்தில் காட்டில் ஸ்ரேஷ்டம் என்றதாயிற்று –
————-
ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரமபுருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதியிட்டார்
த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று
தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –
—————–
இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-
ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —
ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –
——————-
இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்
காட்டுமன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்
என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்
தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக்கட்டுகிறார்
தனமாயதானே கைகூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி
ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply