ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம் – முதல் பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதித்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

முதல் பாதமும் முதல் அதிகரணமும் ஸ்ம்ருதி என்றே பெயர் -முதல் ஸூத்திரமும் ஸ்ம்ருதி என்றே தொடங்கும் –

——-

2.1.1 ஸ்ம்ருத்யதி₄கரணம்-இரண்டாம் அத்யாயத்தின் அறிமுகம்

இரண்டாம் அத்யாயத்தின் அறிமுகம்
ப்ரஹ்ம ஸூத்ரங்களில் முதல் அத்யாயமான ஸமந்வய அத்யாயத்தில், உபநிஷத்துக்களில் ஜகத்காரணத்ணதப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் அனைத்துமே சேதனம் மற்றும் அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டாவராய், தோஷங்கள் அற்றவராய், எண்ணிறந்த கல்யாண குணங்கணை உடையவரான பரமாத்மாவிடம் தான் பொருந்துகின்றன என்று நிரூபித்தார் வேத வ்யாஸர். இனி, அந்த முடிவில் ஏற்படக் கூடிய அனைத்து விதமான ஆஷேபங்களுக்கும் ஸமாதானம் கூறி, இம் முடிவு அசைக்கப்பட முடியாதது என்று நிரூபிக்கிறார் இரண்டாம் அத்யாயத்தில்.
முதல் அத்யாயத்தில் வேத வாக்கியங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த இரண்டாம் அதிகரணத்தில் அநேகமாக யுக்திகளில் அடிப்படையிவேயே ஆராய்ச்சி செய்யப்படுகிறது.
இந்த இரண்டாம் அத்யாயத்தில் நான்கு பாதங்கள் உள்ளன –

1-ஸ்ம்ருதி பாதம் – இம் முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரண் பட்டதான படியால் தவறா என்று ஆராய்தல்
2–தர்க பாதம் – பல மதத்தவர்கள் செய்யும் தர்கங்களுக்கு பதில் அளித்தல்
3-வியத் பாதம் – ஆகாசம் முதோனவை கூடப் பரமாத்மாவால் படைக்கப் படுகின்றன என்று நிரூபித்தல்
4-ப்ராண பாதம் – ப்ராணன் எனப்படும் இந்த்ரியங்களும் பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன என நிரூபித்தல்
.

ஸ்ம்ருதி பாதத்தின் அறிமுகம்
முதல் அத்யாயத்தில் வேத வாக்கியங்கணை ஆராய்ந்து ’பரமாத்மா ஜகத்காரணம்’ என்று முடிவு செய்யப்பட்டது.-இம்முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரண்பட்டதாக உள்ளபடியால் இதி தவறானது என்று பூர்வ பக்ஷிகள்(சாங்க்ய தந்த்ரம் ) இந்தப் பாதத்தில் ஆஷேபம் சேய்கிறார்கள். அதற்கு பதில் சொல்கிறார் வேத வ்யாஸர்.
இங்கு ஒரு ஸந்தேஹம் எழும் – வேதம் என்பது தான் தானே ப்ரமாணம் ஆகும். ஸ்ம்ருதிகள் என்பவை வேதத்தைத் தழுவி இயற்றப் பட்டவை யானபடியால், அவை நேரடியான ப்ரமாணங்கள் அல்ல . ஒரு ஸ்ம்ருதி வாக்யத்தைப் பார்த்தும், இதற்கு மூலமாக ஒரு வேத வாக்யம் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்து, அதற்குப் பின் தான் அந்தச் செயலைச் செய்யமுடியும். எனவே , வேதம் என்பதை விட ஒருபடி குறைந்தது தான் ஸ்ம்ருதி.
எனவே வேதத்துக்கும் ஸ்ம்ருதிக்கும் முரண்பாடு இருந்தால், வேதம் சொன்னபடியே செய்ய வேண்டும்- ஸ்ம்ருதி வாக்யத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று மஹர்ஷி ஜைமிநி தன்னுடைய கர்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் நிரூபித்துள்ளார். (ஓவதும்பரி -யூப ஸ்தம்பத்தை மரத்தைத் தொட்டுக் கொண்டு பாட ஸ்ருதி சொல்ல –மரத்தை முழுவதும் துணியால் மூட -ஸ்ம்ருதி சொல்ல -இவ்வாறு முரண்பட்டு இருந்தால் இந்த ஸ்ம்ருதியை ப்ரமாணமாகக் கொள்ள வேண்டாம் என்கிறார் ஜைமினி -)அப்படி இருக்கும் போது, வேதத்தை ஆராய்ந்து எடுக்கபட்ட இம்முடிவை எப்படி ஸ்ம்ருதியோடு முரண்படுகிறது என்ற அடிப்படையில் தவறென்று கூற முடியும்?இதற்கு பதில் கூறுகிறார் பூர்வ பக்ஷீ – வேத வாக்யத்தின் பொருள் தெளிவாக இருந்தால், அதற்கு முரண்பட்ட ஸ்ம்ருதி வாக்கியங்களைப் புறக்கணிக்கலாம் . ஆனால் வேதாந்தத்தில் ஜகத் காரணம் யார் என்று ஸ்பஷ்டமாக சொல்லப்படவில்லை -குழப்பமே ஏற்படுகிறது. அப்படி குழப்பம் இருக்கும் போது, கற்றுணர்ந்த ஜ்ஞாநிகளான ருஷிகள் இயற்றின ஸ்ம்ருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளையே முடிவு செய்ய முடியும். எனவே ,இங்கு ஸ்ம்ருதியில் என்ன சொல்லப்படுகிறதோ அதற்கு முரண் படாமல் தான் வேதத்தில் பொருள் கொள்ள வேண்டும். எனவே ஸ்ம்ருதிகளைக் கொண்டு கேள்வி எழுப்புவது பொருத்தமானதே .

இதுவரை சர்வ வேதாந்தங்களும் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண கதான ஸ்வரூப ஸ்ரீ யபதியான பரம புருஷன் ஸ்ரீ மன் நாராயணன் என்று அவனுடைய பரத்வத்தை வெளிப்படுத்தி காரணத்வம் நிரூபிக்கப் பட்டது-அது எந்தப் பிரமாணத்தாலும் பாதிக்கத் தக்கது அன்று என்று அபாத்யத்வம் என்ற அம்சம் இரண்டாம் அத்யாயத்தால் நிரூபிக்கப் படுகிறது –

இதில் முதல் இரண்டு பாதங்களில் காரண பூதமான பர ப்ரஹ்மம் பற்றி பூர்வ பக்ஷங்களால் கூறப்படும் பாதகங்கள் பரிஹரிக்கப் படுகின்றன-பின்னுள்ள இரண்டு பாதங்களில் (வியத்பாதம் -பிராண பாதம் )கார்யத்வத்தை ஹேது வாகக் கொண்டு வரும் விரோதத்தை வேதாந்த வாக்யங்களுக்கு பரஸ்பரம் முரண்பாட்டை நீக்குவதன் மூலம் பரிஹரிக்கிறார் என்று சங்கதி-முதல் அத்தியாயத்தின் முடிவில் இரண்டு வகையான சாங்க்யர் நிரசனம் ஆனதால் இங்கு முதலில் இங்கு சாங்க்யன் வேதாந்த விரோதத்தைச் சொல்கிறான் -அடுத்தபடி யோக வாதீ என்று இங்கு அதிகரண சங்கதி

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவலியில் இந்த அத்யாயத்தைப் பற்றிச் சொல்கிறார் –
பாத₃ த்₃வந்த்₃வம் த்₃விதீயே பரிஹரதி பரே காரணே பா₃ஹ்ய பீடா₃ம்
கார்ய த்₃வாரேண பாதா₃ந்தர யுக₃லம் உதே₃தி ஆந்தர ஷோப₄ சாந்த்யை

“பரமாத்மாவே உலகனைத்துக்கும் காரணம்” என்பது முதல் அத்யாயத்தின் பொருள். அதில் முதல் பகுதியைத் தாக்கி, ”பரமாத்மா ஜகத் காரணம் அல்ல ” என்பவர்களை முதல் இரண்டு பாதங்களாலே இங்கு நிரஸிக்கிறார். அதில் இரண்டாவது பகுதியைத் தாக்கி,
“உலகில் அனைத்துக்கும் அவர் காரணம் அல்ல ” என்பவர்களின் வாதங்களை கடைசி இரண்டு பாதங்களாலே கண்டிக்கிறார்.

2.1.1 ஸ்ம்ருத்யதி₄கரணம்-எந்த ஸ்ம்ருதியைத் தேர்ந்தெடுப்பபது?

ஸாங்க்ய ஸ்ம்ருதியில் பெருமைகள்
2-1-1-ஸ்ம்ருத்யதிகரணம் – ஸங்கதி – முதல் அத்யாயத்தில் வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து’பரமாத்மாவே ஜகத் காரணம்’ என்று முடிவு செய்யப்பபட்டது. அந்த முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரணாக இருக்கிற படியால் தவறானது, ஸாங்க்ய ஸ்ம்ருதி முதலானவற்றில் சொன்னபடி தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும் என்று பூர்வ பக்ஷீ ஆஷேபம் செய்கிறார்.
பூர்வ பக்ஷம் – பூர்வபக்ஷீ தன் வாதத்தை இவ்வாறு முன் வைக்கிறார் –
1-வேதத்தில் ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லப்பபட்டிருந்தால், அதற்கு முரணாக இருக்கும் ஸ்ம்ருதி தான் தவறு என்று சொல்லி விடலாம்- ஸ்ம்ருதியை விட ஸ்ருதி என்ற வேதம் உயர்ந்ததான படியால். ஆனால் ஜகத் காரணம் யார் என்பது வேதாந்தத்திலேயே தெளிவாக இல்லை . அதனால், சிறந்த ஜ்ஞாநிகளால் இயற்றப்பபட்ட ஸ்ம்ருதிகளைக் கொண்டு, அதில் சொல்லப்பபட்ட படிக்கு தான் வேதாந்தத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

2-கபிலர் என்கிற ரிஷி மிகச் சிறந்த ஜ்ஞாநி, வேதத்திலேயே (्ருஷிம் ப்ரஸூதம்
கபிலம்)
என்று ரிஷியாகக் (தீர்க்க தரிசனம் உடையவராக) கொண்டாடப்பபட்டுள்ளார்.
3-அவர் எழுதிய ஸாங்க்ய ஸ்ம்ருதி வேதத்தில் சொல்லப்பபட்ட பல விதமான கர்மங்களை ஏற்கிறபடியால் இது பௌத்தர்கள் முதலாவனாரின் நூல் போல் முற்றிலும் வேதத்திற்குப் புறம்பானது அல்ல, நெருக்கமானது தான்.
4-இந்த ஸ்ம்ருதி வேறு எதையோ பற்றிப் பேச வந்தது அல்ல, ஜீவாத்மாவின் பெருமை ஸம்ஸாரத்தின் கொடுமை ஸம்ஸாரத்தின் காரணம், முக்திக்கான வழி என்கிற ஆன்மிக தத்துவங்களைச் தொல்வதே இதன் குறிக்கோள்.

ஸ்ம்ருதிகளுக்குள் முரண்பாடு
5-அந்த ஸாங்க்ய ஸ்ம்ருதியில் ப்ரதானம் (மூல ப்ரக்ருதி) என்கிற அசேதனப் பொருள் தான் ஜகத் காரணம் என்று சொல்லப் பபட்டுள்ளது. எனவே நீங்கள் சொன்னது போல் ’பரமாத்மா தான் ஜகத் காரணம்’ என்று வேதம் சொல்லி யிருந்தால், ஸாங்க்ய ஸ்ம்ருதி முழுவதுமே தவறானது மற்றும் வீணானது என்று ஆகி விடும். இதற்கு அநவகாச தோஷம் என்று பெயர். ஒரு ரிஷியின் நூலுக்கு அந்த தோஷத்தை ஏற்க முடியாது. எனவே ஸாங்க்ய ஸ்ம்ருதியில் சொன்னபடிக்கு ப்ரதானம் ஜகத் காரணம் என்று தான் வேதமும் சொல்கிறது என்று ஏற்க வேண்டும். (அவகாசம் -இடம் / ஸ அவகாசம்-ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் –அநவகாசம் -இடமில்லாமை வீண் -)
6-கேள்வி மநு, பராஸரர், பகவான் கண்ணன், வ்யாஸர், ஆபஸ்தம்பர் முதலானவர்கள் எழுதிய மற்ற ஸ்ம்ருதிகளில் எல்லாம் பரமாத்மா ஜகத் காரணம் என்று சொல்லப் பபட்டுள்ளதே ? ஸாங்க்ய ஸ்ம்ருதியைப் பின்பற்றி ப்ரதானம் ஜகத் காரணம் என்று கொண்டால், மேற் சொன்ன இந்த ஸ்ம்ருதிகள் எல்லாம் தவறாக ஆகி விடாதா?
பதில் – உண்மை தான், ஆனால் அப்போதும் அந்த ஸ்ம்ருதிகளுக்கு அநவகாஸ தோஷம் ஏற்படாது,-அதாவது முழுவதுமாகத் தவறாகவவோ வீணாகவோ ஆகாது. ஏன் என்னில், அந்த ஸ்ம்ருதிகளில் சொல்லப்பபட்ட தர்ம கார்யங்கள், ஆசாரம், அநுஷ்டானம் முதலானவை அப்போதும் சரியாகத் தான் இருக்கும், ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் பகுதி மட்டும் தான் தவறாக ஆகும். அது பெரிய குற்றம் அல்ல, ஏற்றுக் கொள்ளலாம்.
ஆகவே , ஸாங்க்ய ஸ்ம்ருதிக்கு அநவகாஸ தோஷம் (முழுவதும் வீணாகப் போதல்) தவிர்க்கப்பபட வேண்டும் என்பதற்காக, அதில் சொல்லப்பபட்ட ஜகத் காரணத்தைத் தான் வேதமும் சொல்கிறது என்று ஏற்க வேண்டும். எனவே நீங்கள் முதல் அத்யாயத்தில் அடைந்த முடிவு தவறானது.

வ்யாஸரின் ஸித்தாந்தம்
இந்த பூர்வபஷத்திற்கு இரண்டு ஸூத்ரங்களால் வ்யாஸர் பதில் அளிக்கிறார்.
முதல் ஸூத்ரத்தால் இதுவரை பூர்வபக்ஷி தொன்ன வாதத்தைக் கூறி, அது தவறு என்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்-
1-ஸ்ம்ருதி அநவகாச தோ₃ஷ ப்ரஸங்கா₃த் இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோ₃ஷ ப்ரஸங்கா₃த்
ஸ்ம்ருதி –
கபிலாசார்யர் இயற்றிய ஸாங்க்ய ஸ்ம்ருதிக்கு
அநவகாஸ தோ₃ஷ – அநவகாஸ தோஷம் (முற்றிலுமாக தவறாகவும் வீணாகவும் போதல்)
ப்ரஸங்கா₃த் – ஏற்பட்டு விடம் என்கிறபடியால் (பரமாத்மா ஜகத் காரணம் என்று தொன்னது தவறு)
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறு
அந்ய ஸ்ம்ருதி – மநு, பராஸரர், பகவான் கண்ணன் முதலானவர்கள் இயற்றிய மற்ற ஸ்ம்ருதிகளுக்கு
அநவகாச தோ₃ஷ – அநவகாஸ தோஷம் (முற்றிலும் தவறாகவும் வீணாகவும் போதல்)
ப்ரஸங்கா₃த் – ஏற்பட்டு விடும் என்கிறபடியால்.
மற்ற பல ஸ்ம்ருதிகள் பரமாத்மா ஒருவரே ஜகத் காரணம் என்று ஸ்பஷ்டமாகச் சொல்கின்றன –

மநு ஸ்ம்ருதி – (ஆஸீதி₃த₃ம் தமோ பூ₄தம் ஸோ அபி₄த்₄யாய ஸரீராத் ஸ்வாத் ஸிஸ்ருஷு : விவிதா₄: ப்ரஜா:) – இந்த உலகனைத்தும் இல்லாத போது (ப்ரளயத்தில்) பரமாத்மா ஸங்கல்பம் செய்து கொண்டு தன் உடலிலிருந்து உந்த உலகத்தைப் படைத்தார்)
பகவத் கீதை – (அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக₃த: ப்ரப₄வ: ப்ரலய: ததா₂) – நான் தான் இந்த உலகத்திற்குக் காரணமாகவும், இவ் வுலகம் லயம் (அழிவு) அடையும் இடமாகவும் உள்வைன்
விஷ்ணு புராணம் – (விஷ்ணோ : ஸகாஸாத் உத்₃பூ₄தம் ஜகத் தத்ரைவ ச ஸ்தி₂தம்| ஸ்தி₂தி ஸம்யம கர்தா அஸௌ ஜக₃த: அஸ்ய ஜக₃த் ச ஸ:) – இந்த உலகம் விஷ்ணுவிடமிருந்து உண்டாயிற்று, அவரிடமே தான் நிலை பெற்று நிற்கிறது, அவரே இதை ஸம்ஹாரமும் செய்பவர்,அவரே தான் இவ் வுலகில் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து இயக்குகிறார்.

கபிலரும் மற்ற ஸ்ம்ருதி ஆசிரியர்களும்
பூர்வ பக்ஷி கூறின யுக்திகளுக்கு எல்லாம் வேத வ்யாஸர் இவ்வாறு பதில் கூறுகிறார் –
1-கபிலர் வேதத்திலேயே ரிஷி கொண்டாடப் பட்டிருந்தாலும், அவர் தவறே செய்யாதவர் என்று வேதம் கூறவில்லை .-ஆனால் மநு, வ்யாஸர், பராஸரர் முதலான ஸ்ம்ருதி ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் அது நமக்கு மருந்து, அவர்கள் பேசியதெல்லாம் உண்மை என்று வேதம் சொல்கிறது – “யத்₃வை கிஞ்ச மநு: அவத₃த் தத் பே₄ஷஜம்”
2-பரமாத்மாவே ஜகத் காரணம் என்று சொல்லும் ஸ்ம்ருதிகள் பல இருக்கின்றன, ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லும் ஸாங்க்ய ஸ்ம்ருதி ஒன்று தான். எனவே பல ஸ்ம்ருதிகள் சேர்ந்து ஒன்றை பாதிப்பதே பொருத்தமானது.
3-வேதத்தை யுக்திகள் (Logic) கொண்டு ஆராய்ந்தால் எந்தப் பொருள் தெரிகிறதோ (பரமாத்மாவே ஜகத் காரணம் என்று), அதைப் பின் தொடர்ந்து உள்ளன மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள். ஆனால் ஸாங்க்ய ஸ்ம்ருதி அந்த யுக்திகளுக் கெல்லாம் முரணாக உள்ளது. யுக்திகளுக்கு முரணாக இல்லாத நூல் தான் உயர்ந்ததாகும்.
4- கேள்வி – ’பரமாத்மா ஜகத் காரணம்’ என்று கொண்டால் ஸாங்க்ய ஸ்ம்ருதி முழுவதும் வீணாகி விடும் (அநவகாஸ தோஷம்). ஆனால் ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்று கொண்டால் மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள் முழுவதும் வீணாகாது, ஏன் எனில் அவற்றில் சொல்லப்பபட்ட ஆசாரம், அநுஷ்டானம் முதலானவை அப்போதும் சரியாகத் தான்
இருக்கும். எனவே , எந்த நூலும் முழுவதும் வீணாகாமல் இருக்க ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்றே ஏற்க வேண்டும்.
பதில் – ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்று கொண்டால் மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள் முழுவதும் வீணாகப் போய்விடும். ஏன் எனில் அவர்கள் அனைவருமே பரமாத்மா ஜகத் காரணம் என்று சொல்லி, அவரை வழி பட்டு, ஆராதனம் செய்து, மகிழ்விப்பபதற்கான வழிகள் தான் இந்த தர்ம கார்யங்கள், ஆசாரம், அநுஷ்டானம் எல்லாம் என்று
கூறியுள்ளனர். பரமாத்மா என்றே ஒருவர் கிடையாது என்றால், அந்தக் கார்யங்களும் வீணாகத்தானே போகும்? அவை அத்தனை ஸ்ம்ருதிகளுக்கும் அநவகாஸ தோஷம் வந்து விடும். அதை ஒரு நாளும் ஏற்க முடியாது. எனவே , பல ஸ்ம்ருதிகளைக் காப்பதற்காக, ஒரே ஒரு ஸாங்க்ய ஸ்ம்ருதி மட்டும் தவறு என்று ஏற்பதே சரியான முடிவு ஆகும்.
5-ஸாங்க்ய ஸ்ம்ருதியும் முழுவதுமாகத் தவறு என்று நாங்கள் சொல்லவில்லை . அதில் சொல்லப்பபட்ட ஸ்ருஷ்டி முறை , அசேதனப் பொருள்களின் பண்புகள், ஜீவாத்மாவின் பெருமைகள் அணனத்தும் சரியே . ஜகத் காரணம் யார் என்பது மட்டும் தான் அந்த ஸ்ம்ருதியில் தவறாகச் சொல்லப்பபட்டுள்ளது.

ப்ரஹ்மமும் கர்மமும்
பல ஸ்ம்ருதிகள் நாம் தெய்யும் கர்மங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கு ஆராதனம் (வழிபாடு) என்கின்றன –
பகவத் கீதை -யத: ப்ரவ்ருத்தி: பூ₄தாநாம் யேந ஸர்வமித₃ம் ததம் | ஸ்வ கர்மணா தம் அப்₄யர்ச்ய ஸித்₃தி₄ம் விந்த₃தி மாநவ: ||-“யாரால் இந்த உலகம் அனைத்தும் இயங்குகிறதோ யார் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் வ்யாபித்து உள்ளாரோ , அந்த பரமாத்மாவைத் தன்னுடைய கர்மங்களால் வழிபட்டு மனிதன் நற்கதி அடைகிறான்”
விஷ்ணு புராணம் –யை : ஸ்வ கர்மபரை : நாத₂ நரை : ஆராதி₄தோ ப₄வாந் | தே தரந்தி அகி₂லாம் ஏதாம் மாயாம் ஆத்ம விமுக்ததய ||“தங்கள் கர்மங்களை விடாமல் செய்வதன் மூலம் யாரெல்லாம் உன்னை ஆராதிக்கிறார்களோ அவர்கள் இந்த விசித்ரமான ஸம்ஸாரம் முழுவதையும் கடந்து மோக்ஷம் அடைகிறார்கள்”-எனவே பரமாத்மா இல்லை என்று கூறினால், இந்தக் கர்மங்களும் வீணாகப் போய்விடும். எனவே பரமாத்மா
ஜகத்காரணம் என்று நாம் முதல் அத்யாயத்தில் எடுத்த முடிவு சரியானது தான். அதற்கு முரணாக இருக்கும் ஸாங்க்ய ஸ்ம்ருதி மட்டும் அந்த விஷயத்தில் தவறு
என்று தான் கொள்ள வேண்டும்.
2-இதரேஷாம் ச அநுபலப்₃தே ₄: – “மற்றவர்களுக்கு அப்படித் தோற்றாத படியாலும்”
கேள்வி – கபிலர் த்யானம் தெய்து தன்னுடைய யோக சக்தியால் இந்தக் கருத்தைக் கண்டிருப்பபார். எனவே இது உண்மையாகத் தானே இருக்க வேண்டும்?
பதில் – அப்பபடி இது உண்மையாக இருப்பின், மநு ஆபஸ்தம்பர், பராஸரர் முதலான மற்ற யோகிகளும் இதே தத்துவத்தைக் கண்டு உபதேஸம் செய்திருக்க வேண்டும். அப்பபடி அவர்கள் செய்யவில்லை -நேர் முரணான தத்துவத்தைக் காட்டுகிறார்கள். எனவே , வேதத்துக்கும் ஜ்ஞாநிகளின் உபதேஸங்களுக்கும் முரணாக உள்ள தத்துவங்களை கபிலர் மயக்கத்தால் தவறாகக் கூறி விட்டார் என்றே கொள்ள வேண்டும்.
ஆகவே , முதல் அத்யாயத்தில் நாம் அடைந்த முடிவுக்கு எந்த முரண்பாடும் இல்லை . பரமாத்மாவே ஜகத் காரணம் என்ற முடிவு வலிமையாகவே நிற்கிறது.

——–

2-1-2-யோக₃ப்ரத்யுக்த்யதி₄கரணம்-ஹிரண்ய கர்பர் தவறு செய்ய முடியுமா?

ஏன் தனி அதிகரணம்?
(
கீழ் அதிகரணத்தில் சொன்னவற்றில் அதிக சங்கை -தோன்ற -கீழ் பரமாத்மாவையே ஒப்புக் கொள்ளாமல் -இங்கு யோக மதத்தில் ஒத்துக் கொண்டு த்யான இத்யாதிகள் இருப்பதால் அதிக்கப்படி ஸந்தேஹம் வரும் -கீழ் கபிலர் ரிஷி -இங்கு நான்முகன் -சர்வ வேதாந்தம் பிரதிவர்த்தகத்துக்கு அதிகாரியான ஹிரண்ய கர்ப்பர் -)

2-1-2-யோக₃ப்ரத்யுக்த் திகரணம்
– ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஸாங்க்ய ஸ்ம்ருதி வேதாந்தத்தோடும் மற்ற ஸ்ம்ருதிகளோடும் மிகவும் முரண்படுகிறபடியால் அதைப் பின்பற்றி வேதாந்தத்தின் பொருளை முடிவு செய்ய இயலாது என்று நிரூபித்தார் வ்யாஸர்.
அதற்கு மேல் கேள்வி எழுகிறது – சரி, ஸாங்க்ய ஸ்ம்ருதி மிகுந்த முரண்பாடுகளை உடையது. ஆனால் ஹிரண்ய கர்பர் எனப்படும் நான்முகக்கடவுளால் பரப்பப்பட்ட யோக ஸ்ம்ருதி வேதாந்தத்தோடு நெருக்கமான கருத்துகளையே போதிக்கிறது. அதைக் கொண்டு வேதாந்தத்தின் பொருளை புரிந்து கொள்ளலாமே ?
பூர்வ பக்ஷம் – – வேதாந்தத்தில் சொல்வது போல் யோக ஸ்ம்ருதியும் பரமாத்மா இருக்கிறார் என்று ஏற்கிறது.-த்யானம் (யோகம்) தான் முக்திக்கான வழி என்று ஏற்கிறது. மேலும் நான்முகன் தான் உலகில் மிகச் சிறந்த ஜ்ஞாநியாய், அந்த ஜ்ஞாநத்தைப் பரப்பும் பொருப்பிலும் இருக்கிறார். எனவே அவர் சொன்ன யோக ஸ்ம்ருதி சரியாகத் தான் இருக்கும். அதைப் பின்பற்றி தான் வேதாந்தத்துக்குப் பொருள் கூற வேண்டும்.
ஸித்தாந்தம் – இதற்கு ஒரே ஸூத்ரத்தால் பதில் அளிக்கிறார் வ்யாஸர் இந்த அதிகரணத்தில்.
1-ஏதேந யோக₃: ப்ரத்யுக்த: – “இத்தால் யோக ஸ்ம்ருதியும் மறுக்கப்பட்டது”
பல கருத்துகளில் யோக ஸ்ம்ருதி வேதாந்தத்தோடு ஒத்துப் போனாலும் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன – பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொள்ளாத ப்ரதானம் தான் ஜகத்துக்கு உபாதான காரணம் என்கிறார்கள் பரமாத்மா உலகத்துக்கு நிமித்த காரணம் மட்டும் தான் (குடத்துக்குக் குயவன் போல்), உபாதான காரணம் (குடத்துக்கு மண் போல்) அல்ல என்கிறார்கள். த்யானத்தை ஏற்றாலும் த்யானிக்கப்பட வேண்டிய ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் தவறாக வருணிக்கிறார்கள் – ஜீவாத்மாவுக்கும் அந்தர்யாமி பரமாத்மா என்று ஏற்க வில்லை , பரமாத்மா உலகின் உபாதான காரணம் என்று ஏற்க வில்லை . எனவே இந்த த்யானமும் வேதாந்தத்தில் சொல்லப்பட்ட த்யானம் அல்ல-

நான்முகனும் ஸம்ஸாரி தான்
நான்முகன் உலகத்தில் மிகச் சிறந்த ஜ்ஞாநியாக இருந்தாலும் கூட, அவரும் நம்மைப்போல் பாப புண்யங்களுக்குக் கட்டுப்பட்டு, ஸத்த்வம்-ரஜஸ்-தமஸ் என்ற முக் குணங்களால் பாதிக்கப்படும் ஒரு ஸம்ஸாரி தான். எனவே அவரும் ரஜோ குணமோ தமோ குணமோ அதிகமாக இருக்கும்போது அறிவின்மையால் வேதாந்த்ததுக்கு முரண்பட்ட தவறான கருத்துகளை யோக ஸ்ம்ருதியில் கூறினார்.
நான்முகக் கடவுள் தான் புராணங்களை யெல்லாம் உபதேசித்தார் என்று நாம் அறிவோம்-அதைப் பற்றி மத்ஸ்ய புராணத்தில் கூறும் போது இவ்வாறு சொல்லப் படுகிறது –
அக்₃நே : சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு தி₃வாகரே | ராஜஸேஷு ச மாஹாத்ம்யம் அதி₄கம் ப்₃ரஹ்மண : ஸ்ம்ருதம்| ஸாத்த்விகேஷு அதி₄கம் தத் விஷ்ணோ : மாஹாத்ம்யம் உத்தமம் ||
“தமோ குணம் அதிகமாக இருக்கும் போது நான்முகன் கூறிய புராணங்களில் அக்நி முதலான தேவதைகளின் பெருமை சொல்லப் பட்டிருக்கும், ரஜோ குணம் அதிகமான போது சொன்ன புராணங்களில் தன்னுடைய பெருமையைப் பாடுவார், ஸத்த்வ குணம் அதிகமான போது உயர்ந்ததான விஷ்ணுவின் மஹிமயைப் பாடுவார்”
எனவே நான்முகனுக்கும் ரஜோ மற்றும் தமோ குணங்களால் கலக்கமும் அறிவின்மையும் வரக் கூடும். எனவே அவர் சொன்ன ஸ்ம்ருதியாகவே இருந்தாலும் அது வேதத்தோடு
முரண்பட்டால் அந்த விஷயங்களில் தவறானது தான்.

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவளி என்ற நூலில் இந்த அதிகரணத்தின் பொருளைச் சுருக்கமாகக் கூறுகிறார் –
வேதாந் பூர்வம் விதாதா அலபத பகவத: ஸர்வ வித்த்யா நியுக்த:
வாகீஶஶ் ஸேஷ தஸ்மாத் தடுதித விஹதே : கம்பநம் வேத மூர்த்ந: |
மைவம் தஸ்யாபி வேதாபஹ்ருதி முக விபத்த் தர்ஶநாத் ஷேத்ரி பாவாத்
ப்ராந்த்யாதிஃ ஸம்பவேதிதி அகதிக விஷயே பூர்வவந் நிர்வஹாம: ॥

நான்முகக் கடவுள் ஆதியில் பகவானிடமிருந்து வேதங்களையும் எல்லா வித்யைகளையும் பெற்றார். அவரே தான் அந்த வித்யைகளைப் பரப்பும் பொருப்பையும் உடையவர். ஸரஸ்வதீ தேவிக்குக் கணவனானபடியால் வாகீசன் என்று அழைக்கப் படுகிறார். இப்படி எத்தனையோ பெருமைகள் இருந்தாலும், அவரும் அஸுரர்களிடத்தில் வேதங்களைப் பரிகொடுத்துத் தவித்தார் என்பது போன்ற பல கதைகளை நாம் புராணங்களில் காண்கிறபடியால் அவரும் ஒரு ஷேத்ரஜ்ஞன் (ஜீவாத்மா) என்பதால், பிழை , மயக்கம், குழப்பம் ஆகியவை அவரிடம் நிகழக் கூடும் என்பதே தெளிவாகிறது.-ஆகவே , வேறு வழி இல்லாத சூழலில் இந்த யோக ஸ்ம்ருதியும் ஸாங்க்ய ஸ்ம்ருதி போல் சில இடங்களில் தவறானது என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

————

2-1-3-விலக்ஷணத்வாதிகரணம் – எந்த ஸ்ம்ருதி தர்க்கத்தின் படி உள்ளது?

(இதுவும் மேல் வரும்-ஆரம்பணாதி கரணம் —2-1-6- நம் சித்தாந்தத்தின் முக்கிய கருத்துக்கள் கொண்டவை ஆகும்-ஒன்பது ஸூத்ரங்கள் கொண்ட அதிகரணம்-முதல் மூன்றும் பூர்வபக்ஷ ஸூத்ரங்கள் )

காரண -காரியங்களின் ஒற்றுமை –விலக்ஷணத்வாதிகரணம் – ஸங்கதி – வேதத்தின் பொருளை முடிவு செய்யும் போது மநு ஸ்ம்ருதி முதலானவற்றைத் தான் பின்பற்ற வேண்டும், ஸாங்க்ய ஸ்ம்ருதியை அல்ல என்று கூறப்பட்டது. அதற்கு மேல்
ஆஷேபம் எழுகிறது – மனு முதலானவர்களின் ஸ்ம்ருதி தர்க்கத்துக்குப் புறம்பாக உள்ள படியால், அவற்றைப் பின்பற்றக் கூடாது, தர்க்கத்தை அநுஸரித்து இருக்கும் ஸாங்க்ய ஸ்ம்ருதியைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும். எனவே ப்ரதானம் தான் ஜகத் காரணம், பரமாத்மா அல்ல.
பூர்வ பக்ஷம் – முதல் இரண்டு ஸூத்ரங்களால் பூர்வ பக்ஷம் சொல்லப்படுகிறது. அவர்கள் கூறுவதாவது –
1–ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததா₂த்வம் ச சப்₃தா₃த்
– (முதல் அத்யாயத்தில் ’இவ்வுலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாகிறது’ என்று கூறியது) ஒவ்வாது – தவறானது
அஸ்ய – புலன்களால் அியயப்படும் (சேதனர்கள் மற்றும் அசேதனங்கள் அடங்கிய) இந்த உலகத்தின்
விலக்ஷணத்வாத் – வேறுபாட்டால்
ததா₂த்வம் – அந்த வேறுபாடு
சப்₃தா₃த் ச – சப்தம் எனப்படும் வேதத்தாலும் அறியப் படுகிறது
பரமாத்மா – ப்ரஹ்மம் என்ற ஓரு பொருளை ஏற்பவர்கள் அவர் ஜ்ஞாநமுடையவர் (சேதனன்), குற்றங்களற்றவர், அனைவரையும் இயக்கக் கூடியவர், ஆநந்தம் மட்டுமே உடையவர். ஆனால் புலன்களால் நாம் அறியக்கூடிய இந்த உலகம் அறிவற்றது (அசேதனம்), தூய்மை யற்றது, மற்ற ஓருவரால் இயக்கப்படுவது மற்றும் துக்கத்தை உடையது.-எனவே அவற்றின் வேறுபாடு ஸ்பஷ்டமாக உள்ளது. வேதத்திலும் உலகுக்கு இந்தத் தன்மைகள் சொல்லப் பட்டுள்ளபடியால் வேதத்திலிருந்தும் இந்த வேறுபாட்டை அறியலாம்.
எந்தப் பொருள் எந்தப் பொருளிலிருந்து உண்டாகிறதோ , அது அதைப் போல் தான் இருக்கும், வேறுபட்டு இருக்காது, என்று உலகத்தில் மோதிரம், குடம் முதலான பொருள்களில் நாம் பார்க்கிறோம். இந்த உலகமோ ப்ரஹத்தை விட முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. எனவே இது ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகவில்லை .
அசேதனமாய், முக்குணம் உடையதான ப்ரக்ருதியிலிருந்து தோன்றியது என்று சொல்லும் ஸாங்க்ய ஸ்ம்ருதியே சரி –

(மனிதனுக்கு பல் முளைக்கிறது முடி வளருகிறது -உண்டாகும் பொருள் போல் அல்லவே இவை -வேறுபாடுகள் காண்கிறோம் என்றால் -இவை உடம்பில் இருந்து தானே ஆத்மாவில் இருந்து அல்லவே -உடலும் அறிவற்றது -இவையும் அறிவற்றவை -இதே போல் என்பர் –
ஆத்மா ஆழ்ந்து உறக்கத்தில் ஞானம் இல்லையே -அதே போல் கல்லுக்கும் கொள்ளலாம் என்றால் எப்போதுமே இதுக்கு வெளிப்படாதே -)

கல்லுக்கும் மண்ணுக்கும் சைதன்யம் உண்டா?
இதற்கு மேல் ஒரு ஆஷேபம் அவர்களைக் குறித்து எழுப்பப்படுகிறது. அதற்கான விடை பூர்வ பக்ஷிகளால் இரண்டாவது ஸூத்ரத்தில் கூறப்படுகிறது.
ஆஷேபம் – பரமாத்மா சேதனன் (ஜ்ஞாநம் உடையவர்), உலகமோ அசேதனம், அதனால் வேறுபாடு உள்ளது ,-எனவே உலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாக வில்லை என்று கூறுகிறீர்களே . உலகப் பொருள்கள் அனைத்துக்கும் கூட ஜ்ஞாநம் உள்ளது என்று ஒப்புக் கொண்டால் என்ன? அப்போது பரமாத்மா வுக்கும் உலகுக்கும் ஒற்றுமை வந்து விடுகிற படியால் அவரிடமிருந்து உலகம் உண்டாயிற்று என்று சொல்லலாமே-

வேதத்திலேயே “ப்ருதி₂வீ அவத₃த்” (பூமி கூறியது), “ஆப: வா அகாமயத” (ஜலம் ஆசைப்பட்டது) என்றெல்லாம் கூறப்படுகிற படியால் பூமி, ஜலம் முதலானவற்றுக்கும் ஜ்ஞாநம் உள்ளதாகத் தெரிகிறது. புராணங்களிலும்கூட மலைகள், நதிகள், கடல் முதலானணவ அறிவுடைய பொருள்களாக வருணிக்கப்படுகின்றன. எனவே உலகத்தில் அனைத்துப் பொருள்களுக்குமே ஜ்ஞாநம் உள்ளது என்று ஏற்றுக் கொள்ளலாமே ?

ஸமாதானம் –2-அபி₄மாநி வ்யபேத₃சஸ் து விஸேஷ-அநுக₃திப்₄யாம்
அபி₄மாநி வ்யபதேத₃சஸ் து
– பூமி முதலானவற்றுக்கு உரிய அபி₄மாநி தெய்வங்களன்றோ சொல்லப் படுகிறார்கள்
விஸேஷ-அநுக₃திப்₄யாம் – விஸேஷத்தாலும் அநுக₃தியாலும்
விஸேஷம் – அடை மொழி இடுவது. இவ் விடங்களிலெல்லாம் பூமி, ஜலம், புலன்கள் முதலானவற்றைக் குறிப்பிடும் போது ’தே₃வ:’ என்ற அடை மொழி பயன்படுத்தப் படுவதால், இச் சொற்கள் பூமி ஜலம் முதலான அசேதனங்களைக் குறிக்கவில்லை , அவற்றுக்குள் இருக்கும் அபி₄மானியான ஜீவாத்மாவைக் குறிக்கின்றன.
அநு க₃தி – அநு ப்ரவேஸம் (உள்ளே புகுவது). வேதமே அக்₃நி, வருணன் முதலான ஒவ்வொரு தெய்வமும் கண், வாக்கு முதலான புலன்களுக்குள் நுழைவதைப் பற்றிச் சொல்கிற படியாலும் இங்கு சொல்லப்படுபவர்கள் சேதனர்கள்தான் என்று நாம் அறியலாம்.-எனவே உலகம் பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டு தான் உள்ளது. எனவே இவ் வுலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாகி யிருக்க முடியாது என்பதே பூர்வபக்ஷத்தின் சுருக்கம்

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
ஸித்தாந்த ஸூத்ரம் – (3) த்₃ருஸ்யதே து –
“காணப்படுகிறது அன்றோ ”
உலகத்தில் ஒரு காரணப் பொருளிலிருந்து அதைக்காட்டிலும் வேறுபட்ட பொருள்கள் உண்டாவதையும் காண்கிறோம். கோமயத்திலிருந்து சில கிருமிகளும், தேனடையிலிருந்து சில புழுக்களும் உண்டானாலும், அவை கோமயம் மற்றும் தேனடையை விட வேறுபட்டு தான் காணப்படுகின்றன. எனவே பூர்வபக்ஷீ சொன்ன தர்க்கம் தவறானது. எனவே வேறுபட்டிருந்தாலும் உலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாக முடியும்.

இங்கு ஒரு ஆஷேபம் எழுகிறது – காரணமும் காரியமும் வேறுபட்டும் இருக்கலாம் என்று வ்யாஸர் சொன்னதை , காரணமும் காரியமும் வெவ்வேறு பொருள்கள் என்று சொன்னதாகத் தவறாகப் புரிந்து கொண்டு ஒருவர் கேட்கிறார் – காரணமும் காரியமும் வேறுபட்டு இருக்கலாம் என்றால், காரணப் பொருள் வேறு காரியப் பொருள் வேறு என்று ஆகிறது. எனவே முன்பு இல்லாத குடம் என்ற பொருள் புதிதாக உண்டாகிறது என்று சொல்ல வேண்டும். அப்போது அஸத் கார்ய வாதத்தை ஏற்றுக் கொண்டதாகிவிடுமே – என்று. இதற்கு விடை –

4-அஸதி₃தி சேத் ந ப்ரதிஷேத₄ மாத்ரத்வாத்
அஸத்
– அஸத்திலிருந்து (இன்மையிலிருந்து) உலகம் உண்டாகிறது என்று ஆகிவிடுமே
தி சேத் ந – என்று நீங்கள் கூறினால். அது தவறு.
ப்ரதிஷேத₄ மாத்ரத்வாத் – முன் ஸூத்ரத்தில் ’காரணமும் காரியமும் வேறுபட்டு இருக்க முடியாது’ என்று பூர்வபக்ஷீ சொன்னணத மட்டும் எதிர்த்துச் சொன்னோமே தவிற , காரணம் வேறு பொருள் காரியம் வேறு பொருள் என்று கூற வில்லை. ஸத் கார்ய வாதம் அதாவது, இருக்கும் பொருளிலிருந்து தான் மற்றொரு பொருள் தோன்றுகிறது, அதாவது காரணப் பொருளே தான் காரியப் பொருளாக மாறுகிறது என்று தான் கூறுகிறோம். எனவே
இந்த தோஷம் எங்கள் மதத்தில் கிடையாது.
-இவ்வாறு பூர்வ பக்ஷத்திற்கு பதில் உரைத்து, மேலும் பல யுக்திகளை வ்யாஸர் காட்டுகிறார்-

(நையாயிகர் அஸத் கார்ய வாதிகள் -அவஸ்தா வேறுபாடு தானே -மண் குடம் மடங்கு தூள்கள் போல் -முழுவதுமாக இருக்க வேண்டாமே -வேறுபாடு மாத்திரமே வேற்றுப் பொருள் அல்லவே -ப்ரதிஷேதம் மட்டுமே சொன்னேன் -என்றவாறு -)

தர்க்கம் மட்டும் போதாது-ப்ரஹ்மத்துக்கு தோஷங்கள் வந்துவிடாதா?
விலக்ஷணத்வாதி கரணத்தின் முதல் இரண்டு ஸூத்திரங்களாலே பூர்வ பக்ஷம் சொல்லப்பட்டது. அதற்கு தன்னுடைய பதிலை வேதவியாஸர் அடுத்த இரண்டு ஸூத்திரங்களாலே காட்டினார். தற்போது ஐந்தாவது ஸூத்திரத்தில் பூர்வ பக்ஷிகள்
ஒரு ஆஷேபத்தை எழுப்புகிறார்கள்.

5- அபீதவ் தத்₃வத் ப்ரஸங்கா₃த் அஸமஞ்ஜஸம்
அபீதவ்
– சிருஷ்டி, பிரளயம், முதலானவற்றில் (பிரஹ்மமே தான் உலகமாக மாறுகிறது என்றால்)
தத்₃வத் ப்ரஸங்கா₃த் – அந்த பிரஹ்மத்துக்கு குற்றங்கள் வந்து விடும் என்கிறபடியால்
அஸமஞ்ஜஸம் – வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாது–ஒரு தங்கக் கட்டியைக் கொண்டு மோதிரம் செய்யும் பொழுது, அதில் செப்பு கலந்து விடுகிற படியால், அந்த ஸ்வரணத்துக்கு குறை ஏற்படுகிறது. அதே போல், பிரஹ்மமே உலகமாக மாறுகிறது என்றால், உலகத்தில் எந்த எந்த குற்றங்கள் இருக்கின்றனவோ , அவை யெல்லாம் ப்ரஹ்மத்துக்கே ஏற்பட்டு விடும். அதனால், ப்ரஹ்மம் ஞானமுடையது,தூய்மையானது, என்று சொன்ன தெல்லாம் மாறிப் போய், ப்ரஹ்மமும் அசேதனமாக, ப்ரஹ்மமே குற்றமுடையவராக,ப்ரஹ்மமே துக்கப் படுபவராக ஆகி விடுவார். அப்படிக் கொண்டால், வேதாந்த வாக்கியங்கள் எல்லாம் முரண்பட்ட அர்த்தங்களைச் சொல்லுகிறபடியாலே , பொருந்தாவையாக ஆகி விடுகின்றன.
அதனால் பிரதானம் என்கிற மூலப் ப்ரக்ருதியைத் தான் ஜகத் காரணமாகக் கொள்ள வேண்டும் என்பது பூர்வ பக்ஷியின் அபிப்பிராயம்.

(தத்₃வத் ப்ரஸங்கா₃த் -அதைப் போல் என்றும் அதை யுடைய என்றும் இரண்டும் பொருந்தும்-ஸ்வர்ணம் போல் ப்ரஹ்மத்துக்கும் குற்றம் வரும்-ஜகத்து போல் ப்ரஹ்மத்துக்கும் குற்றம் வரும்-குற்றமுடையதாகும் என்றபடி-நான் பாலகனாக ஆனேன் -நான் ஆத்மா அணு -மாறாமல் இருக்கும் -உடலுடன் சேர்ந்ததால் -வரும் மாறுபாடுகள் -குழந்தையின் வடிவாக இருந்த நான் இப்பொழுது -உருவ வேறுபாடு சரீரத்துக்குத்தானே -ஆனால் நான் ஆனேன் சொல்கிறோம் – )

இந்த இடத்தில் நாம் ஒரு சமாதானம் சொல்ல முடியும். ப்ரஹ்மம் உலகமாக மாறுகிறது என்று சொல்லும் பொழுது, நேரடியாக பரமாத்மா என்பவர் மாறுகிறார் என்று நாங்கள் சொல்லவில்லை , ப்ரஹ்மம் என்பது உலகத்திலிருக்கும் சேதனர்கள் அசேதனங்கள் அனைத்தையுமே தனக்கு சரீரமாக, அதாவது உடலாகக் கொண்டது. அப்படி சேதனங்கள்,அசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம், உலகாக மாறுகிறது என்று சொன்னால், மாற்றம் என்பது அந்த சேதனர்களுக்கும் அசேதனங்களுக்கும் ஏற்படுமே தவிர, உள்ளே இருக்கும் அந்தர்யாமியான பரமாத்மாவுக்கு ஏற்படாதே என்று நாம் சொல்ல முடியும். ஆனால், இதற்கும் பூர்வ பக்ஷிகள் விடை கொடுக்கிறார்கள் – ப்ரஹ்மத்துக்கு -உடல், சரீரம், என்றே ஒன்று இருக்க முடியாது என்று –

சரீர ஆத்ம பாவம்
சரீரம் என்றால் என்ன என்று பூர்வ பக்ஷிகள் இந்த இடத்தில் தெரிவிக்கிறார்கள், கர்மத்தின் பயனான சுக துக்கங்களை அனுபவிப்பதற்காக ஏற்பட்டதாய், இந்திரியங்களை உடையதாய், ஐந்து விதமான பிராண வாயுக்களாலே தாங்கப் படுவதாய்,ஐம் பூதங்களின் சேர்க்கையால் உண்டாக்கப்பட்டதாய் இருக்கும் பொருள் சரீரம் என்று கூறுகிறார்கள்.
இதன் படி பார்த்தோ மென்றால், பரமாத்மாவுக்கு கர்மங்களின் விளைவான சுக துக்கங்களும் கிடையாது. அவருக்கு இந்திரியங்களும் கிடையாது. அவருடைய சரீரம் பிராணனாலும் தரிக்கப்படுவதில்லை . அவருடைய திருமேனி ஐம் பூதங்களால் ஆக்கப்பட்டதல்ல.அப்ராக்ருதமானது என்றும் ஸித்தாந்திகள் சொல்லுகிறபடியால், பரமாத்மாவுக்கு சரீரமே இருக்க முடியாது என்று தேறுகிறது.-அதனால், நேரடியாக ப்ரஹ்மமே உலகமாக மாறுகிறார் என்று தான் சொல்ல வேண்டி வரும். அப்படிச் சொன்னால், உலகத்துப் பொருட்களுக்கு இருக்கும் குற்றங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கும் வந்து விடும் – என்று பூர்வ பக்ஷிகள் ஆஷேபம் செய்கிறார்கள்.

(சரீரம் கர்மம் அனுபவிக்க காரணம் -இந்திரியங்கள் உடையது-ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டு -ப்ராணனால் தாங்கப்பட்டு இருக்கும்-அவருக்கு இந்த்ரியங்களே கிடையாது -அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் மயம் -அபிராணன் ஸ்ருதி சொல்லும் அன்றோ -இந்த நான்குமே பரமாத்மாவுக்குப் பொருந்தாது -உலகம் அனைத்துமே சரீரம் என்று சொல்வது தவறு -என்பர் பூர்வ பஷி)

இதற்கு வேத வியாஸர் அடுத்த ஸூத்திரத்திலே விடை அளிக்கிறார்.
6- ந து த்₃ருஷ்டாந் பா₄வாத்
– பொருந்தாமை என்று சொன்னது தவறு, எடுத்துக் காட்டு இருக்கிறபடியால்-ஒரே பொருள் இரண்டு நிலைகளை அடைந்தாலும், அதில் ஒரு பகுதியின் குணங்களோ தோஷங்களோ மற்றொரு பகுதியை அடையாது என்பதற்கு உலகத்திலே எடுத்துக் காட்டு இருக்கிறது. ஒரு ஜீவாத்மா ஒரு காலத்தில் குழந்தையின் உடலோடு இருக்கிறார். அவரே வயதாகும் போது இளைஞனின் உடலை உடையவராக ஆகிறார். இவ்விடத்தில் மாற்றம் என்பது உடலுக்குத் தான் இருக்கிறது, ஆத்மாவுக்கு உருவத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை . உடலின் தன்மைகள் ஆத்மாவுக்கு வராது, ஆத்மாவின்
தன்மைகள் உடலுக்கு வராது.
ஆனால் நாம் “நான் இளைஞனாக ஆனேன்” என்று தானே கூறுகிறோம்.

அதே போல், “சேதனங்கள் அசேதனங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்ட பரமாத்மா உலகமாக மாறுகிறார்” என்று சொல்லும் போதும், மாற்றம் என்பது உடலாக இருக்கும் சேதன அசேதனங்களுக்கு மட்டும் தான். பரமாத்மாவுக்கு அல்ல. தோஷங்கள்
எல்லாம் அந்த சேதன அசேதனங்களில் தான் இருக்கும். பரமாத்மாவிடம் ஏற்படாது. பரமாத்மாவுக்கு இருக்கும் ஏற்றங்கள், அவரிடம் தான் இருக்கும். உடலான சேதன அசேதனங்களிடம் வந்து விடாது
.-ப்ரஹ்மத்துக்கு சேதன அசேதனங்கள் அனைத்தும் உடலாக உள்ளன என்பது வேதத்தில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. எனவே
அதற்கும் பொருந்தும் ஒரு இலக்கணத்தைத் தான் நாம் சரீரத்திற்குக் கொடுக்க வேண்டும். அதாவது – “யஸ்ய சேதநஸ்ய யத் த்₃ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்வத₂ நியந்தும் தா₄ரயிதும் சக்யம் தச் சே₂ஷதைக ஸ்வரூபம் தத் தஸ்ய சரீரம்”, அதாவது, “எந்த ஒரு சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம் எல்லா காலத்திலும் தனக்காக இயக்கப் படுவதற்கும் தாங்கப் படுவதற்கும் தகுதி உடையதாய் இருக்கிறதோ , அவன் நன்மைக்காகவே இருக்கிறதோ , அந்த த்ரவ்யம் அந்த சேதனனுக்கு உடல் ஆகும்

(சக்யம் -தகுதி உடையது என்கிற விசேஷணம் சேர்த்து லக்ஷணம் -சில சமயம் கைகளைத் தூக்க முடியாமல் போகலாமே -பூர்வ பஷி சொல்லிய லக்ஷணத்தில் பல தவறுகள் -முக்தனுக்கு சரீரம் கர்மம் அடியாக இல்லை -இந்த்ரியங்கள் பிராணன் செடி கோடிகளுக்கு இல்லை-பூத சங்காதமும் அல்லவே -ஆகவே நம் ஸித்தாந்த சரீர லக்ஷணமே மிகவும் பொருந்தும் –)

யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா -ஸ்வார்த்தே -நியந்தும் –தாரயிதும்–சக்யம் –  சேஷைதக ஸ்வரூபஞ்ச-தத் தஸ்ய சரீரம் –சரீர லஷணம்-யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் -சஷ்டி யந்தம் —முதல் சட்டம் -எவனுக்கு ஆறாவது வேற்றுமை – ந கடத்வாதி போலே இல்லாமல்-பிரத்யோகம் எதிர் பார்க்கும் மனைவி -கணவன் இரண்டும் பிரதியோகம் எதிர் பார்க்கும்-சைதன்யம் உள்ளவனுக்கு தானே சரீரமாக இருக்கலாம்-இரண்டாவது சட்டம் –த்ரவ்யமாக இருக்க வேணும் -கிரியைகள் ஜாதி போலே இல்லை  கோத்சவம் -பச்சை -நடக்கிறான் -ஜாதி  குணம் கிரியை   போலே இல்லை-மூன்றாவது சர்வாத்மனா-எப்பொழுதும் ஸ்வார்த்தே— தன் பொருட்டே-நாலாவது –சர்வாத்மனா நியந்தும் –நியமிக்கத் தகுதி உள்ளதாக-ஐந்தாவது –சர்வாத்மனா தாரயிதும்-சக்யமோ -யோக்யதை கொண்டதாய்-ஆறாவது தச் சேஷைதக ஸ்வரூ பஞ்ச-தத் தஸ்ய சரீரம் –ஒருத்தனுக்காக இருப்பதே சரீரம் –

ஸாங்க்ய மதத்தில் உள்ள தோஷம்
7- ஸ்வ பக்ஷ தோ₃ஷாத் ச –
“ தன்னுடைய பக்ஷத்தில் உள்ள தோஷங்களாலும்”
இது வரை ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்கின்ற நம்முடைய பக்ஷத்தில் தோஷம் இல்லை என்று காட்டப்பட்டது. இனி, பூர்வ பக்ஷத்தில் தோஷங்கள் உள்ளபடியாலும், பிரதானம் ஜகத்காரணம் என்று ஏற்க முடியாது என்று வேத வியாஸர் காட்டுகிறார்.
ஸாங்க்ய மதத்தில் ப்ரக்ருதி, ஜீவாத்மா என்று இரண்டு பொருட்கள் உண்டு. அந்த ஜீவாத்மா ஞானமுடையவர்,-ஆனால் எந்த கர்மங்களிலும் ஈடுபட மாட்டார். ப்ரக்ருதி தான் உலகத்தை படைக்கிறது, ஆனால் தானாக படைப்பதில்லை . ஜீவாத்மாவின் தொடர்பாலே ப்ரக்ருதி படைக்கிறது, என்று சொல்லுகிறார்கள்.
இவ்விடத்தில் வேத வியாஸர் ஒரு கேள்வியைக் கேட்கிறார் – ப்ரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பாலே ஸ்ருஷ்டி ஏற்படுகிறது, என்று சொல்லுகிறீர்களே , அந்தத் தொடர்பு எத்தகையது ?என்று. அந்த இரண்டு பொருட்களும் இருப்பதனாலேயே அவற்றுக்குத் தொடர்பு இருக்கிறது, என்று சொன்னால், அந்தத் தொடர்பு என்றைக்குமே அழியப் போவதில்லை . அதனால், ஜீவாத்மாவுக்கு என்றுமே மோக்ஷம் என்பது கிடைக்காமலேயே போய் விடும்.
அந்தத் தொடர்பு என்பது உண்டாக்கப்பட்ட ஒரு பொருள் என்று சொன்னோமே என்றால், அதுவும் ப்ரக்ருதி யிலிருந்து படைக்கப்பட்ட ஒன்று என்று சொல்ல வேண்டும். அப்போது, அந்யோன்ய ஆஸ்ரயம் என்கிற ஒரு குற்றம் ஏற்படும். ஜீவாத்மாவின் தொடர்பு ஏற்பட்டால், ப்ரக்ருதி படைக்கும். படைப்பு நடந்தால் தான் அவர்களுக்குள் தொடர்பே ஏற்படும் என்று ஒன்றுக்கு ஒன்று எதிர்பார்த்துஇருக்கிறபடி யாலே , இந்த பக்ஷமும் பொருந்தாது.
அதனால், பிரதானம் ஜகத்காரணம் என்று சொல்லும் பக்ஷத்தில் தோஷம் இருக்கிறபடியால், ப்ரஹ்மம் ஜகத்காரணம் என்று தான் ஏற்க வேண்டும் என்று இந்த ஸூத்திரத்தின் பொருள்.

தர்க்கமா வேதமா?
8-தர்க்க அப்ரதிஷ்டா₂நாத் அபி
– “ தர்க்கம் நிலை பெறாத படியாலும்”
மேலும், ஒரு தோஷம். ஸாங்க்யர்களின் பக்ஷத்தில் சொல்லப் படுகிறது – அவர்களுடைய பக்ஷம் தர்க்கம், அதாவது-யுக்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. தர்க்கம் என்பது என்றைக்குமே நிலை பெறாது – ஒரு முடிவுக்கு வரவே முடியாது. பௌத்தர்கள், ஜைனர்கள், நியாய மதத்தைச் சேர்ந்தவர்கள், யோக மதத்தைச் சேர்ந்தவர்கள்,ஸாங்க்யர்கள் என்று இவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் பல தோஷங்களைச் சொல்லிக் கொள்ளுகிற படியால், அவை அனைத்துமே யுக்திகளின் அடிப்படையில் இருக்கிறபடியால், எது சரியான பக்ஷம் என்று முடிவு செய்யவே முடியாது.

ஆனால், ஸித்தாந்தத்தில் ஸ்ருதி என்கிற வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொல்லுகிறபடியால், நிலை பெறாமை என்கிற தோஷம் ஸித்தாந்தத்தில் ஏற்படாது.
9- அந்யதா ₂ அநுமேயம் இதி சேத் ஏவமபி அநிர்மோக்ஷப்ரஸங்க₃:
அந்யதா ₂ அநுமேயம்
– எதிரிகளின் யுக்திகளை உடைத்து, பிரதானமே ஜகத்காரணம் என்று ஊகிக்கலாமே
இதி சேத் – என்று சொன்னால்
ஏவமபி அநிர்மோக்ஷ ப்ரஸங்க₃: – அப்போதும் நிலை பெறாமை என்கிற தோஷத்திலிருந்து விடுபட முடியாது
பிற்காலத்தில் நம்மை விட புத்தி சாலியாக ஒருவர் வந்து நாம் சொன்ன யுக்திகளையும் முறியடிக்கக் கூடும் என்கிறபடியால், அப்போதும் தர்க்கம் என்பது நிலை பெற்று விட்டது என்று கூறவே முடியாது. அதனால், புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் வேதம் என்கிற ஸாஸ்திரத்தைத் தான் பிரமாணமாகக் கொள்ள வேண்டும். அதை புரிந்து கொள்வதற்கு, தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, தர்க்கம் பயன்படலாமே தவிர, தர்க்கத்தை
மட்டும் கொண்டு ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதென்பது முடிவுக்கே வராத ஒரு முயற்சி ஆகும்(வேத ஸாஸ்த்ர அவிரோத தர்க்கங்கள் மட்டுமே உபாதேயம் -மநு ஸ்ம்ருதி ).
ஆகையால், ஸாங்க்ய ஸ்மிருதி, வேதத்துக்கு முரண்பட்டதாக இருக்கிறபடியால், அதில் சொன்னபடி வேதத்தின் பொருளை முடிவு செய்வது தவறாகும். மனு முதலானவர்களின் ஸ்மிருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும். அவையும் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று தான் சொல்லுகின்றனர். அதனால்,
முதலத்தியாயத்தில் நாம் எடுத்த முடிவில் எந்த முரண்பாடும் இல்லை என்பது இந்த அதிகரணத்தின் பொருள்.

———–

2-1-4-சிஷ்டாபரிக்₃ரஹாதி₄கரணம்-ஒற்றுமையிலும் வேற்றுமை

மீதமுள்ள மதங்களுக்கும் விடை
விலக்ஷணத்வாதிகரணத்தில் ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லக்கூடிய ஸாங்க்யர்களின் பக்ஷம் மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த அதிகரணத்தில் அதே நியாயத்தாலே , அதே யுக்திகளாலே வேதத்துக்கு புறம்பான மற்ற ஸ்மிருதிகள் மற்றும் மதங்களையும் மறுக்கிறார் வேத வ்யாஸர்.
இந்த அதிகரணத்தில் ஒரே ஒரு ஸூத்ரம் தான் உள்ளது
1-ஏதேந சிஷ்டாபரிக்₃ரஹா: அபி வ்யாக்₂யாதா :
ஏதேந –
இத்தாலே என்று பொருள். அதாவது, வேதத்தால் ஏற்கப்படாத கருத்துகளைச் சொல்லக் கூடிய ஸாங்க்ய ஸ்மிருதியை மறுத்ததனாலேயே
சிஷ்ட அபரிக்ரஹா: – சிஷ்டம் என்றால் மீதமிருப்பவை என்று பொருள். அபரிக்ரஹா: என்றால் வேதத்தாலே பரிக்ரஹம் செய்யப்படாதவை , வேதத்தாலே ஏற்கப்படாதவை என்று பொருள். ஆகையால், சிஷ்டாபரிக்ரஹா: என்றால் வேதத்தால் ஏற்கப்படாத மீதமுள்ள ஸ்மிருதிகள், அதாவது அவற்றில் சொல்லப்பட்ட பக்ஷங்கள் என்று பொருள்.
அபி – அந்த பக்ஷங்களும் கூட
வ்யாக்யாதா : – அவையும் விவரிக்கப்பட்டன, அவையும் பதிலளிக்கப்பட்டன, அதாவது, அவையும் மறுக்கப்பட்டன. தர்க்கத்தை ஆலோசித்துப் பார்த்தாலும், ஸாங்க்யர்கள் சொல்லும் தர்க்கம் வேதத்துக்குப் புறம்பாக உள்ளது. மனு முதலானவர்கள் சொல்லும் தர்க்கம் தான் வேதத்தை அனுசரித்து இருக்கிறது. அதனால், வேதத்தை அனுசரித்த தர்க்கத்ணத அனுசரித்து இருக்கும் மனு முதலானவர்களின் ஸ்மிருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கடந்த அதிகரணத்தில் எந்த யுக்திகளை யெல்லாம் கொண்டு சொன்னோமோ , அதே யுக்திகளாலே வேதத்துக்குப் புறம்பான மற்ற ஸ்மிருதிகளையும் மறுக்கப்பட்டன என்று இந்த ஸூத்ரத்தின் பொருள்.

ஏன் தனி அதிகரணம்?
இங்கு ஒரு கேள்வி –
அதே யுக்திகளைக் கொண்டு தான் மற்ற ஸ்ம்ருதிகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு ஏன் தனி அதிகரணம் அமைக்க வேண்டும்?
பதில் – கடந்த அதிகரணத்தில் இல்லாத ஒரு அதிகமான கேள்விக்கான பதில் இந்த அதிகரணத்திலே சொல்லப்படுகிறது. ஸாங்க்யர்கள் தர்க்கத்தின் அடிப்படையில் தங்கள் பக்ஷத்தை முன் வைக்கிறார்கள். தர்க்கம் என்பது நிலை பெறாதது. அதில் பலவிதமான வாதங்கள், பல யுக்திகள் முன்னும் பின்னும் சொல்லப்படலாமே தவிர, முடிவை அடைய முடியாது. அதனால், தர்க்கத்தை மட்டும் கொண்டு ஒரு பக்ஷத்தை முடிவு செய்ய இயலாது என்று தெரிவித்தார் வ்யாஸர்.
மேல் கேள்வி – பரமாணுக்கள் தான் ஜகத்துக்குக் காரணம் என்று கணாதருடைய வைசேஷிக மதம், கௌதமருடைய நியாய மதம், ஜைனர்களுடைய மதம், பௌத்தர்களுடைய மதம் என்று பல மதங்களிலே ஏற்கிறார்கள், ஆகையால்,
தர்கம் நிலை பெறாதது என்று சொல்ல முடியாது. அதனால் பரமாத்மா ஜகத்காரணம் அல்ல – என்று.
விடை
(1) தர்க்கம் எப்போது வேண்டுமானாலும் பிற்காலத்தில் மற்று ஓருவராலே தகர்க்கப் படலாம். அதனால், தர்க்கம் நிலை பெற்றுவிட்டது என்று எப்போதுமே சொல்ல முடியாது. இது ஒரு பதில்.
2-பரமாணு தான் ஜகத் காரணம் என்று இவர்கள் அனைவரும் ஏற்றாலும், அந்த பரமாணு எத்தகையது என்பதிலேயே இவர்களுக்கு ஒத்த கருத்து கிடையாது.வைசேஷிக மதத்தில் நியாய மதத்தில் பரமாணுக்கள் உண்மையான பொருட்கள் என்று சொல்லுவார்கள்.
பௌத்தர்களோ பரமாணுக்களே பொய் என்று சொல்லுவார்கள். பௌத்தர்களுக்குள்ளேயே சிலர் ஞானமே வடிவானது பரமாணு என்று தெரிவிக்கிறார்கள். சிலர் ஞான வடிவானது அல்ல என்று பௌத்தர்கள் பரமாணுக்கள் ஒரு வினாடி தான் இருக்கும் என்கிறார்கள், மற்ற மதத்தவர்களோ பரமாணுக்கள் அழியாதவை என்கிறார்கள். இப்படி பரமாணுவின் இயற்கையைப் பற்றியே பலவிதமான முரண்பாடுகள் இந்த மதங்களுக்குள்ளே இருக்கின்றன–ஆகையால் முதலத்தியாயத்தில் என்ன முடிவுக்கு வந்தோமோ – பரமாத்மாவே ஜகத் காரணம் என்று -அதற்கு அவிரோதம் அதாவது எந்த முரண்பாடும் இல்லை , ஸாங்க்ய ஸ்மிருதியைக் கொண்டு எப்படி முரண்பாடு இல்ளையோ , அதைப் போலவே மற்ற ஸ்மிருதிகளைக் கொண்டும் முரண்பாடு இல்லை என்று இந்த அதிகரணத்தாலே வேத வ்யாஸர் நிரூபித்தார்.

——————-

2-1-5-போ₄க்த்ராபத்த்யதி₄கரணம்-உடல் இருந்தாலே துன்பமா?

அதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ”ந து திருஷ்டாந்த பாவாத்” என்கிற ஸூத்திரத்தில், உடலில் குழந்தைப் பருவம் இளமைப் பருவம் முதலான மாற்றங்கள் இருந்தாலும், அந்த தன்மைகள் எதுவும் உள்ளுக்குள் இருக்கும் ஜீவாத்மாவைப் பாதிக்காதது போல், சேதனாசேதனங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்ட ப்ரஹ்மமே உலகத்தை படைக்கிறபடியால், மாற்றங்கள் குற்றங்கள் இவை யெல்லாம் உடலாக இருக்கும் சேதனங்களுக்கும் அசேதனர்களுக்கும்
உண்டே தவிர, அந்தர்யாமியான பரமாத்மாவுக்கு வராது; அதனால், ஸ்வபாவ விபாகம் உண்டு, அதாவது அவரவர்களுடைய தன்மைகள் வகுக்கப்பட்டுத் தான் இருக்கும். பரமாத்மாவுக்கு அசேதனத்தின் தன்மைகள் வராது. ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவின் தன்மைகள் வராது. எந்த இடத்திலும் தன்மைகள் கலந்து விடாது என்று வேத வ்யாஸர்
நிரூபித்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு ஆஷேபம் எழுகிறது – சேதனங்கள் அசேதனர்கள் அனைத்துமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றுசொன்னால், சரீரம் இருப்பதாலேயே அந்த பரமாத்மாவுக்கு இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டி வருமே ? ஜீவாத்மாவுக்கு உடல் இருந்தால், இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அதனால், பரமாத்மாவுக்கும் சரீரம் இருப்பதாலேயே இன்பம் துன்பம் இவை யெல்லாம் வந்துவிடுமே . அப்படி வந்தால், பரமாத்மாவின் தன்மை இன்பம்
மட்டுமே . துன்பம் என்பது ஜீவாத்மாவுக்கு மட்டும் தான் என்று வரை யறுத்துச் சொல்ல இயலாது. ஸ்வபாவங்கள் எல்லாம் வகுத்து இருக்காது, கலந்துவிடும். அதனால், உலகை உடலாகக் கொண்ட பரமாத்மா ஜகத் காரணமாகவே இருக்க முடியாது – என்று. அதற்கு இந்த அதிகரணத்தில் வேத வ்யாஸர் பதில் கூறுகிறார்.

“ஸம்போ₄க ப்ராப்தி: இதி சேத் ந வைசேஷ்யாத்” (1.2.8) என்ற ஸூத்ரத்தில், பரமாத்மா உபாஸகர்களுடைய ஹ்ருதயத்துக்குள் இருப்பதாலேயே இன்ப துன்பங்கணள அநுபவிக்கத் தேவையில்லை , கர்மத்தால் வராமல் க்ருபையால் வந்திருக்கிற படியால் என்று சொல்லப்பட்டது. அடுத்து “ந து த்₃ருஷ்டாந்த பா₄வாத்” (2.1.9) என்ற ஸூத்ரத்தில், உடலுக்கு ஏற்படும் இளமை , முதுமை முதலான தோஷங்கள் ஆத்மாவுக்கு ஏற்படாதது போல், உலகமே பரமாத்மாவுக்கு உடலாக இருந்தாலும் சேதனாசேதனங்களுக்கு உள்ள குற்றங்கள் பரமாத்மாவுக்கு எற்படாது என்று சொல்லப்பட்டது. இந்த அதிகரணத்தில் உடல் இருப்பதாலேயே பரமாத்மாவுக்கு துன்பம் ஏற்பட்டு விடாது என்று நிரூபிக்கப் படுகிறது-

பூர்வ பக்ஷியின் வாதம்
இந்த அதிகரணத்தில் ஒரே ஒரு ஸூத்திரம் தான் உள்ளது.
1-போ ₄க்த்ரா பத்தே : அவிபா₄க₃: சேத் ஸ்யாத் லோகவத்
போ₄க்த்ரா பத்தே : அவி பா₄க₃:
– இது பூர்வ பக்ஷியினுடைய வாதம்.
சேத் – இவ்வாறு நீ சொன்னாய் என்றால் .
ஸ்யாத் லோகவத் -இது வேத வியாஸருடைய பதில். இப்படி மூன்று பகுதிகளாக இந்த ஸூத்திரத்தை பிரித்துக் கொள்வோம்.
பூர்வ பக்ஷம் -சேதனங்கள் அசேதனங்கள் அனைத்துமே பரமாத்மாவின் சரீரம் தான் என்று சொன்னால், பரமாத்மாவுக்கும் இன்ப துன்பங்களை அனுபவித்தல் என்கிற தன்மை வந்து விடும்.-உலகத்தில் ஒரு ஜீவனுக்கு உடல் இருந்தால், உடலில் உள்ள குழந்தைத் தன்மை , இளமைத் தன்மை முதலானவை அந்த ஜீவாத்மாவுக்கு ஏற்படா விட்டாலும், அந்த சரீரத்தில் இருக்கக் கூடிய வாதம், பித்தம், கபம் முதலான தாதுக்களின் ஏற்றத் தாழ்வுகளாவே அந்த ஜீவாத்மாவுக்கு இன்பங்களும், துன்பங்களும் ஏற்படுகின்றன. அவற்றைத் தவிர்க்க முடியாது என்று பார்க்கிறோம். அதே போல், பரமாத்மாவுக்கும் உடல் இருக்கிறது என்றால், அவருக்கும் துன்பம் வந்து விடும்.

வேதத்திலும் –ந ஹ வை ஸ சரீரஸ்ய ஸத: ப்ரியாப்ரியயோ : அபஹதிரஸ்தி-
அதாவது “சரீரத்தோடு கூடியிருக்கும் ஒரு ஜீவனை இன்ப துன்பங்கள் ஒரு நாளும் விட்டுப் போகாது. சரீரத்தையே ஒழித்து அசரீரியாக ஒருவன் இருந்தால் தான் இன்ப துன்பங்களைத் தாண்டி இருக்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே , உலகத்திலும் சரி, வேதத்திலும் சரி, உடல் இருந்தாலே துன்பம் உண்டு என்று நாம் காண்கிற படியால், இந்த உலகமே பரமாத்மாவுக்கு உடல் என்று நீங்கள் சொல்லுகிறபடியால், பரமாத்மாவுக்கும் துன்பம் வந்து விடும்.
போகம் என்றால், இன்ப துன்பங்களின் அனுபவம். போக்தா என்றால், அந்த இன்ப துன்பங்களை அனுபவிப்பவர் என்று பொருள்.
போ₄க்த்ரா பத்தி: – பரமாத்மாவுக்கும் சரீரம் உண்டு என்றால், அவரும் இன்ப துன்பங்கணள அனுபவிக்க வேண்டி வரும் என்று பொருள்.
அவி பா₄க₃: – ஆகவே , பரமாத்மாவுக்கும் இன்ப துன்பங்கள் உண்டு என்றால், அவருக்கு ஜீவனின் தன்மை வந்து விட்டது. ஜீவனின் தன்மை இது, பரமாத்மாவின் தன்மை இது என்று பிரித்து வைக்க இயலாது.
அதனால், பரமாத்மாவுக்கு உடல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. உடல் இல்லாமலேயே பரமாத்மா உலகமாக மாறுகிறார் என்று சொன்னால், பரமாத்மாவுக்கே பல குற்றங்கள், அபுருஷார்த்தங்கள் ஏற்பட்டு விடும். அதனால், இரண்டு பக்கங்களிலும் சிரமம் இருக்கிறபடியால், பரமாத்மா ஜகத் காரணம் அல்ல , பிரதானம் தான்.

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
சேத் –
“இவ்வாறு கூறினால்” என்று பூர்வ பக்ஷியின் வாதத்தை வ்யாஸர் நினைவூட்டிக் கொள்கிறார்
ஸ்யாத் – “இருக்கட்டும்” – “ஸ்வபா₄வ விபா₄க₃ம் -அதாவது தன்மைகளின் பாகுபாடு இருக்கட்டும்”
பரமாத்மாவுக்கு உலகமனைத்தும் உடலாக உள்ளது என்று கொண்டாலும் சித், அசித், ஈஸ்வரன் ஆகியோரின் தன்மைகளில் கலப்பு (அவிபா₄க₃ம் – வரை யறை இல்லாமை ) ஏற்படாது, பாகுபாடு இருக்கும் என்று கூறுகிறார்.-சரீரம் இருந்தாலே துன்பங்களைத் தவிர்க்க முடியாது என்று பூர்வ பக்ஷி கூறி யிருந்தார். அதில், வேத வியாஸர்
வேறுபடுகிறார். பொதுவாக, உடல் இருந்தாலே துன்பம் உண்டு என்று கூற முடியாது; பாவம் புண்ணியம் என்கிற கர்மத்தின் காரணமாக ஏற்பட்ட உடல் இருந்தால், துன்பங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும் என்பது வியாஸருடைய கருத்து.
ஏனென்றால், ஒரு ஜீவாத்மாவுக்கு முக்தி அடைந்த பிறகும் கூட, வைகுந்தத்தில் உடல் இருக்கிறது என்று உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன. “ஸ ஏகதா பவதி, த்ருதா பவதி” என்று பல உடல்களை ஜீவாத்மா முக்தி நிலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. முக்தி அடைந்த ஜீவாத்மாவுக்கு துன்பங்கள் கண்டிப்பாக வர முடியாது. -அதனால், கர்மத்தால் ஏற்பட்ட உடல் இருந்தால், துன்பம் ஏற்படும் என்று தான் கொள்ள வேண்டும்.
ஆகையால், இந்த உலகமனைத்தும் பரமாத்மாவுக்கு சரீரமாக இருந்தாலும், அவர் அபஹத பாப்மா என்று சொல்லப் படுகிறபடியால், கர்மங்களை அற்றவர். அதனால் அவருக்கு சரீரம் இருந்தாலும் துன்பம் ஏற்படாது என்பது வேத வியாஸருடைய சமாதானம்.

லோகவத் – “உலகத்தில் இருப்பது போல்”. அரசனும் பொது மக்களும் கொசுக்கள் அதிகமாக உள்ள இடத்தில் இருந்தாலும், அரசன் தன் தொண்டர்களால் சாமரத்தால் விசிரப் படுவதால்,கொசுக்களால் கடிக்கப் படாமல் இருக்கிறார், ஆனால் பொதுமக்கள் கடிக்கப் படுகிறார்கள். உடல் இருப்பதாலேயே இருவரும் கடிக்கப்பட வேண்டும் என்பதல்ல -அதே போல். பரமாத்மாவுக்கும் சரீரம் இருந்தாலும் அவருக்கு ’அபஹத பாப்மத்வம்’ (கர்மங்களற்றிருத்தல்) என்கிற சிறந்த சக்தி உள்ளபடியால் அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படாது.
ஆக சேதனாசேதனங்கள் அனைத்தையும் தனக்கும் உடலாகக் கொண்டிருந்தாலும், அவருக்கு எந்த தோஷங்களும் வராது என்கிறபடியால் சேதனாசேதநங்களை சரீரமாகக் கோண்ட ப்ரஹ்மமே ஜகத்காரணம் ஆவார்.

(இதே போல் பரமாத்மாவுக்கு -ஸர்வ லோகேஸ்வரன் -அபஹதபாப்மாத்வம் -ஸர்வசக்தி இவையே விசிறி -எத்தனை சரீரங்களும் இருந்தாலும் துன்பம் படமாட்டார்)

(கீழேயும் இதே போல் பார்த்தோம் -அது அந்தர்யாமி விஷயம் –(1-2-8) ஸம்போ₄க₃ ப்ராப்தி: இதி சேத் ந வைசேஷ்யாத்” – இதில் பூர்வ பக்ஷியின் கேள்வியும் வ்யாஸரின் பதிலும் உள்ளன.
ஸம்போ₄க₃ப்ராப்தி: – இது பூர்வ பக்ஷியின் கேள்வி. ஸம்போகம் என்றால் உலகத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவம். ப்ராப்தி என்றால் அடைவது. பூர்வ பக்ஷீ கேட்கிறார் – ஒரு ஜீவாத்மா உடலுக்குள் இருக்கிறபடியால் உலகத்தில் ஸுகம் மற்றும் துக்கங்களை அநுபவிக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். அதே போல் பரமாத்மாவும் இந்த உடலுக்குள் இருக்கிறார் என்றால், அவரும் ஸம்ஸாரத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவத்தாய் அடைய நேரிடுமே ?
இதி ந சேத் – “இவ்வோறு கூறினால் அது தவறு” – வ்யாஸர் இதற்கு பதில் கூறுகிறார்.
வைசேஷ்யாத் – “(காரணத்தில் இருக்கும்) சிறப்பால்” – அதாவது – “ஒரு ஜீவாத்மா உடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் பரமாத்மா இவ்வுடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் சிறப்பு (வேறுபாடு) இருக்கிறபடியால்”.
உடலுக்குள் இருப்பது மட்டுமே ஸுகம் மற்றும் துக்கத்துக்குக் காரணம் ஆகாது. எந்த காரணத்தால் ஒருவர் அந்த உடலுக்குள் இருக்கிறார் என்று ஆராய வேண்டும்.
ஜீவாத்மோ ஓர் உடலை அடாய்வதற்குக் காரணம், தான் முன் ஜன்மங்களில் செய்த பாபம் மற்றும் புண்ணியம் என்னும் கர்மம் தான். அதனால் அந்த உடல் அவருக்கு ஸுகம் மற்றும் துக்கத்தைத் தருகிறது.
பரமாத்மாவோ தன்னுணடய கருணையால் இந்த உடலுக்குள் இருக்கிறாரே தவிற, கர்மத்தால் அல்ல. எனவே அவருக்கு எந்த ஒரு ஸுகமோ துக்கமோ இதனால் ஏற்படாது.
இதை உபநிஷத்தே அழகான ஒரு உவமையைக் கொண்டு சொல்கிறது –
த்₃வோ ஸுபர்ணோ ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிசஸ்வ ஜாத |
தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய: அபி₄சாகசீதி||

இந்த உடல் என்ற ஒரு மரத்தில் ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் இரண்டு பறைவகள் உள்ளன. அந்த மரத்தில் பழங்கள் உள்ளன. அவைதான் கர்மத்தின் காரணமாக ஏற்படும் ஸுக துக்கங்கள். ஜீவாத்மா அந்த பழத்தை உண்கிறது. பரமாத்மா என்ற மற்ற ஓரு பறவை அதை உண்ணாமல் ஒளியோடு திகழ்கிறது.

————-

2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம்-மண்ணும் குடமும் வெவ்வேறு பொருள்களா?

காரணமும் காரியமும் வெவ்வேறு என்ற பூர்வ பக்ஷம்-2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம் – ஸங்கதி முன்பு -2-1-4- விலக்ஷணத்வாதிகரணத்தில் “அஸத் இதி சேத் ந பிரதிஷேத்
மாத்ரத்வாத்”
என்ற நான்காவது ஸூத்திரத்தில் “காரணமும் காரியமும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டிருக்கலாம்;-ஆனால் காரணமும் காரியமும் வெவ்வேறு பொருட்கள் அல்ல. அதனால் இல்லாத ஒரு பொருள் புதிதாக உண்டாகிறது என்று சொல்லும் அஸத் கார்ய வாதத்தை நாங்கள் ஏற்கவில்லை . ஸத் கார்ய வாதம் தான் வேதாந்தம் ஒப்புக் கொள்வது” என்று வேத வியாஸர் கூறி யிருந்தார். இந்தப் பின் புலத்தில்,

பூர்வ பக்ஷம் – இங்கு பூர்வ பக்ஷிகள் ந்யாய மதத்தைச் சேர்ந்தவர்கள், காரணப் பொருளைக் காட்டிலும் உண்டாக்கப்படும் காரியப் பொருள் வேறுபட்டது தான், ஒரே பொருள் காரணமாகவும் காரியமாகவும் இருக்க முடியாது என்று வாதிடுகிறார்கள். அதற்கு அவர்கள் காட்டும் யுக்திகள் –
1–விலக்ஷண புத்தி போதகத்வாத் -அறிவு வேறுபாடு – குடமும், மண்ணும் வெவ்வேறு ஜ்ஞானங்களை நமக்கு ஏற்படுத்துகின்றன.
2- சப்த பேதக -சொல் வேறுபாடு – குடம், துணி என்பது போல் மண் குடம் என்ற இரு சொற்களால் குறிக்கப்படுபவையும் வேறு தான்.
3-காரிய பேதக -பயன் வேறுபாடு – குடத்தைக் கொண்டு தண்ணீரை சுமந்து வர முடியும், மண்ணைக் கொண்டு செய்ய முடியாது.
4-கால வேறுபாடு – குடம் இல்லாத காலத்திலும் மண் இருப்பதைப் பார்க்கிறோம். அதனால் அவை வெவ்வேறு தான்.
5-வடிவ வேறுபாடு – மண் என்பது பொடியாகவோ , கட்டியாகவோ இருக்கும். குடத்துக்கு வாயும் வயிறுமான வடிவம்.
6-பரிமாண வேறுபாடு -அளவில் வேறுபாடு. தனித்தனி நூல்களின் அளவை விட துணியினுடைய அளவு அதிகமானது.
7-பாவ அபாவ முரண்பாடு – மண் இருக்கும் போதே குடம் அழிந்து விட்டது என்று சொல்லுகிறோம். அதனால் ஒரே பொருள் இருக்கிறது என்றும் அழிந்து விட்டது என்றும் சொல்லப்பட முடியாத படியால் அவை வெவ்வேறு தான்.
8-எண்ணிக்கையில் வேறுபாடு – நூல்கள் பல, ஆனால் காரியமான துணி ஒன்று தான்.
9-காரக வியாபாரங்கள் பயனில்லாமல் போகும் – குடம் புதிதாக உண்டாக்கப்பட வில்லை என்றால் குடத்தை உண்டாக்குவதற்கான செயல்கள் வீணாகத்தான் போய் விடும்.
10-நித்ய அநித்ய பாகுபாடு இல்லாமை – இது நித்தியமான பொருள், இது அநித்தியமான உண்டாகி அழியக் கூடிய பொருள் என்கிற வேறுபாடே சொல்ல முடியாது, எல்லாப் பொருள்களுமே எப்போதும் இருப்பதால்.

ஸாங்க்ய மதத்தில் உள்ள தவறுகள்
ஸாங்க்யர்களின் பதில் – இந்த வாதத்துக்கு ஸாங்க்ய மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு விதமாக ஸத் கார்ய வாதத்தை பின் பற்றி பதில் அளிக்கிறார்கள். அவர்கள் சொல்வது அபி₄வ்யக்தி வாதம் என்று அழைக்கப்படுகிறது,
(உண்டாகுவது -வேறு -வெளிப்படுவது வேறு தானே -சூர்யன் கிழக்கு உதிக்கிறார் பிறக்கிறார் என்றும் சொல்ல மாட்டோம் -தோற்றம் -எள்ளுக்குள் எண்ணெய் போல்-) குடம் என்கிற காரியம் புதிதாக உண்டாக்கப் படுவதில்லை , ஆனால் அதற்கு அபிவியக்தி (தோற்றம்) என்று ஒன்று உண்டு. அந்த தோற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அதற்கு அந்தக் குயவன் சில செயல்களைச் செய்ய வேண்டும். -அதனால் நாம் செயல்கள் செய்வது வீணாகிவிடுமே என்று முன் சொன்ன கேள்வி வராது. எந்தப் பொருட்கள்
எப்போதும் தோற்றுகின்றனவோ , அவை நித்யமான பொருட்கள், அவ்வப்போது வெளிப்படுபவை அநித்யமான பொருட்கள் என்று பாகுபாடையும் சொல்லி விடலாம்.

இதற்கு நியாய மதத்தைச் சேர்ந்த பூர்வ பக்ஷிகளின் கண்டனம் – ஒரு குடம் அபி வியக்தி (தோற்றம்) அடைகிறது என்று சொல்லுகிறீர்களே , அந்தத் தோற்றத்துக்கு தோற்றம் உண்டா? தோற்றம் கிடையாதா? அல்லது புதிதாக உண்டாகிறதா?
1-தோற்றத்திற்குத் தோற்றம் உண்டு என்று சொன்னால், அந்தத் தோற்றத்திற்கு இன்னுமொரு தோற்றம், அதற்கு மற்ற ஓரு தோற்றம் என்று இது முடிவே இல்லாமல் ஏற்க வேண்டி வரும். இது ’அநவஸ்தா₂’ என்ற தோஷமாகும்.
2-குடத்தினுடைய தோற்றமானது தோற்றமே இல்லாதது என்று சொன்னால், அப்போது குடம் என்பது எப்போதுமே தோற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.
3-குடத்தினுடைய தோற்றம் என்பது புதிதாக உண்டாக்கப் படுகிறது என்று சொன்னால், அஸத் கார்ய வாதத்தை ஏற்றுக் கொண்டதாக ஆகி விடும், அதற்கு பதிலாக குடமே புதிதாக உண்டாகிறது என்றே ஏற்றுக் கொண்டு விடலாம்.
மேலும், அபிவியக்தி என்கிற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்கள் ஏன் குறிப்பிட்ட ஒரு பொருளைத் தான் தோற்றமடைய வைக்கின்றன என்று உங்களால் சொல்ல முடியாது. ஒரு விளக்கு ஏற்றப்பட்டால், தனக்கு அருகில் இருக்கும் குடம், துணி, மரம் முதலான எல்லாப் பொருள்களையுமே தோற்றமளிக்க வைக்கும். அதே போல், மண்ணில் குடம், தட்டு, சுவர் என்று பல பொருட்கள் உள்ளபடியால், குயவன் செய்யும் செயல்களாலே ஏன் குடம் தான்
உண்டாகிறது? சுவரோ , தட்டோ உண்டாகவில்லை ? இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை .
அதனால் காரணமும் காரியமும் வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். நீங்கள் விலக்ஷணத்வாதிகரணத்தில் காரணமும் காரியமும் ஒன்று தான், ஆனால் வெவ்வேறு தன்மைகளோடு இருக்கின்றன என்று சொன்னது பொருந்தாது

உபநிஷத் தெளிவாகக் கூறும் ஸத் கார்ய வாதம்-ஸித்தாந்தம் – பூர்வ பக்ஷிகளின் இந்த வாதத்ணத 6 ஸூத்ரங்களால் இந்த அதிகரணத்தில் முறியடிக்கிறார்.
1- தத₃நந்யத்வம் ஆரம்ப₄ண சப்₃தா₃தி₃ப்₄ய:
தத₃நந்யத்வம் –
(இந்த ஜகத்) அந்த ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல
ஆரம்ப₄ண சப்₃தா₃தி₃ப்₄ய: – ’ஆரம்ப₄ணம்’ என்ற சொல்லைத் தொடக்கமாகக் கொண்ட வாக்கியங்களால்.(பஞ்சமி பஹு வசனம் )-

சாந்தோக்ய உபநிஷத்தில் 6ஆம் அத்யாயத்தில் ’ஸத்₃வித்₃யா
’ உபதேஸத்தில் ’ ஆரம்ப₄ணம்’ என்ற சொல் தொடங்கி பல வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன.
அவற்றை ஆராய்ந்தால் காரணமும் காரியமும் ஒன்றென்று தெரிகிறது.
உத்தாலகர் என்ற தந்தை , தன் மகனான ஸ்வேத கேதுவைப் பார்த்துக் கேட்கிறார் – “
உததம் ஆதே₃ சம் அப்ராக்ஷ்ய: யேந அச்ருதம் ச்ருதம் ப₄வதி” அதாவது – “எந்த ஒரு பொருளை அறிந்தால், உலகத்தில் அனைத்துப் பொருள்களையும் அறிந்ததாக ஆகுமோ , அந்த ப்ரஹ்மத்தைப் பற்றி உன் ஆசாரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாயா? என்று.
எப்படி ஓரு பொருளை அறிந்தால், அனைத்தையும் அறிந்ததாகும் என்று புரியாமல், மகன் கேட்க, அதற்கு தந்தை ஒரு எடுத்துக் காட்டைக் கூறுகிறார் – “
யதா₂ ஸோம்ய ஏகேந மிருத் பிண்டே ₃ந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்” என்று. “எப்படி ஒரு மண் கட்டியை அறிந்து கொண்டால், அதிலிருந்து உண்டாகக் கூடிய குடம், தட்டு, சுவர், முதலான எல்லாப் பொருட்களையும் ஒரு விதத்தில் அறிந்ததாக ஆகுமோ , அதே போல் இந்த ப்ரஹ்மத்தை அறிந்தால், உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று தந்தை கூறினார்.

நிலைகள் வேறு, பொருள்கள் வேறல்ல
அப்போது மண்ணும் குடமும் வெவ்வேறு பொருட்கள் கிடையாதா? மண்ணை அறிந்தால் எப்படி குடம் முதலானவற்றை அறிந்ததாக ஆகும்? என்கிற சந்தேகம் மகனுக்கு எழ , அதற்கு பதில் கூறுகிறார்,
“வாசா ஆரம்ப₄ணம் விகார: நாமதே₄யம் ம்ருத்திகா இத்யேவ ஸத்யம்” என்று. “மண்
என்ற ஒரே பொருள் தான், வெவ்வேறு விதமான பயன்பாடுகளுக்காக வெவ்வேறு பெயர்களையும் வெவ்வேறு வடிவங்களையும் அடைகிறது. குடம், தட்டு, முதலான காரியப் பொருள்களும் கூட மண் என்று தான் பிற்பாடும் அறியப் படுகின்றன. அதனால் அவை அனைத்துமே மண் தான். தனி பொருள் அல்ல” என்று இதற்குப் பொருள்.

அடுத்து, மற்றுமொரு வாக்யம் – “ஸதே₃வ ஸோம்ய இதம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்”.
இத₃ம்-
நீ கண் முன்னால் பார்க்கக் கூடிய ஜகத்து அனைத்துமே
அக்₃ரே – ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரளய காலத்தில்
ஸதே₃வ ஆஸீத் ஸத்தாகவே இருந்தது அதாவது ப்ரஹ்மமாகவே இருந்தது.
இதனாலும் உலகமும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று தெரிகிறது.
அதற்குப் பின் ப்ரஹ்மம் இந்த உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது எடுக்கக் கூடிய ஸங்கல்பம் காட்டப் படுகிறது – “
ப₃ஹு ஸ்யாம், ப்ரஜாயேய” என்று. அதாவது, -“நான் பலவாக ஆகக் கடவேன்” என்று ப்ரஹ்மம் எண்ணுகிறது. இதனாலும் ஒன்றான ப்ரஹ்மமும் பலவான உலகப் பொருட்களும் ஒன்று தான் என்று தெரிந்து கொள்கிறோம்.
இந்த வாக்கியங்கள் எல்லாம் தெளிவாக ஸத் கார்ய வாதத்தை போதித்து, பெயர் வடிவம் பயன் அளவு முதலான வேறுபாடுகள் அப்பொருளின் நிலை மாறுகிற படியால் தான் என்று கூறுகின்றன

2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம்-ஒரே பொருளுக்குத்தான் வெவ்வேறு நிலைகள்-அவஸ்தா பேதங்கள்

பூர்வபக்ஷியின் கேள்வி-பூர்வபக்ஷி, மண் முதலான காரணப் பொருள்களும் குடம் முதலான
கார்யப் பொருள்களும் ஒன்றாக இருக்க முடியாது என்று பத்து காரணங்களைச் சொல்லி வாதிட்டார். -அதற்கு வேத வியாஸர், முதல் ஸூத்ரத்தாலே உபநிஷத்துக்களே எப்படி ஸத் கார்ய வாதத்தைக் காட்டுகின்றன என்று சொல்லி, அதன் மூலம் ப்ரஹ்மமும் இந்த ஜகத்தும் வேறல்ல , ஒரே பொருள் தான் என்று நிரூபித்தார். தற்போது அதற்கு மேல் சில சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார்.
இங்கு பூர்வபக்ஷீ ஒரு கேள்வியை எழுப்புகிறார் – சொல் மாறுபடுதல், வடிவம் மாறுபடுதல், அளவு மாறுபடுதல், ஜ்ஞானம் மாறுபடுதல் முதலானவை சில இடங்களில் ஒரே பொருளுக்கு பல நிலைகள் ஏற்படும் போதும் காணப்படுகின்றன, வெவ்வேறு பொருள்களுக்கு இடையிலும் காணப்படுகின்றன. -அதாவது, ஒரே உடல், சிறிதாக இருக்கும் போது இது குழந்தை -பாலகன் என்று அழைக்கப்படுகிறது-வயதான பிறகு இளைஞன் – வயோதிகன் என்று அழைக்கப்படுகிறது. உடல் ஒன்று தான், நிலைகள் தான் மாறுகின்றன. அதனாலேயே சொல், வடிவம், ஜ்ஞானம், அளவு முதலானவை மாறி விடுகின்றன.-அதே போல், துணி, குடம் என்று இரண்டு வெவ்வேறு பொருள்களை எடுத்துக் கொண்டாலும், சொல், ஜ்ஞானம், வடிவம், அளவு, இவை முதலானவை மாறி விடுகின்றன. -ஒரு காரணத்திலிருந்து கார்யப் பொருள் உண்டாகும் பொழுது, இந்த இரண்டு விதத்தில் எதை நாம் ஏற்க வேண்டும் என்று கேள்வி. அதற்கு வேத வியாஸர், இரண்டாவது ஸூத்ரத்தில் பதில் கூறுகிறார்.

வ்யாஸரின் பதில்
2-பா₄வே ச உபலப்₃தே ₄:
– “இருக்கும் போதே கூட அறியப்படுகிறபடியால்”
எது இருக்கும் போது எது அறியப்படுகிறது? குடம், மோதிரம், துணி, முதலான கார்யப் பொருள்கள் இருக்கும் போதே , அந்தப் பொருள்களைப் பார்த்து, இது மண், இது தங்கம், இது பஞ்சு, என்று அதனதன் காரணப் பொருளும் அறியப் படுகிறது. இதற்கு பிரத்யபிஜ்ஞா என்று பெயர் சொல்வார்கள்.-முதலில், மண்ணைப் பார்த்து விட்டு, பிறகு குடத்தைப் பார்க்கும் போது, இந்தக் குடம் அந்த மண் தான் என்கிற ஜ்ஞானம் ஏற்படுகிறது. இதற்கு பிரத்யபிஜ்ஞா என்று பெயர். அப்படிப்பட்ட பிரத்யபிஜ்ஞா என்பது, குடத்தையும் துணியையும் பார்க்கும்போது ஏற்படுவது கிடையாது. அதனால் அங்கு பொருளே வேறுபடுகிறது என்று ஏற்றுக் கொள்வோம் -மண் & குடம், தங்கம் & மோதிரம், பஞ்சு & துணி – இவற்றுக்கு இடையில் இந்தப் பிரத்யபிஜ்ஞா என்பது இருக்கிற படியால், மண்ணைக் காட்டிலும் குடம் வேறல்ல – பஞ்சைக் காட்டிலும் துணி வேறல்ல-தங்கத்தைக் காட்டிலும் மோதிரம் வேறல்ல என்று தான் ஏற்க வேண்டும் – என்பது இந்த ஸூத்ரத்தின் பொருள்.

(ப்ரத்யபிஞ்ஞா-recognition)

மூன்றாவது ஸூத்ரத்தால், மற்றும் ஒரு காரணத்தைக் காட்டுகிறார் –
3–ஸத்வாச்ச அபரஸ்ய
–”(காரணமாக) மற்ற ஓன்றினுடைய (கார்யத்தினுடைய) இருப்பாலும்”
உலகத்தில் கார்யப் பொருள்களைப் பற்றிப் பேசும் போது, அவற்றை காரணப் பொருள்களாகவே பேசுகிறோம்.-காலையில் குயவன் வீட்டில் மண் குவியலைப் பார்த்து விட்டுச் சென்றவன், திரும்பவும் மதியம் வந்து பார்க்கும் போது, பல குடங்களைக் காண்கிறான். உடனடியாக, “இந்தக் குடங்கள் அனைத்தும் காலையில் மண்
கட்டியாகவே இருந்தன” என்று கூறுகிறான். ஆகவே , குடங்கள் தான் முன் காலத்தில் மண் கட்டியாக இருந்தன என்று தெரிகிறது. அதனால் கார்யம், காரணமாக முன்னால் இருந்தது என்று தான் உலகத்தில் நாம் சொல்கிறோம்.
வேதமும் இதே போலே , “ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத்” – இந்த உலகமனைத்தும் முன்னால் ப்ரஹ்மமாகவே இருந்தது என்று சொல்கிறது. ஆகையால், குடம் மண்ணைக் காட்டிலும் வேறு பொருள் அல்லாதது போல், இந்த உலகமும் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல என்று நாம் அறியலாம்.

ஸத் அஸத் என்பதன் பொருள்
4-அஸத்₃வ்யபதே₃சாத் நேதி சேத் ந த₄ர்மாந்தரேண, வாக்ய சேஷாத் யுக்தே : சப்₃தா₃ந்தராச்ச
அஸத்₃வ்யபதே₃சாத் ந
– இது பூர்வ பக்ஷியின் வாதம். வேதம் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் போது ’அஸத்₃வா இத₃ம் அக்₃ரே ஆஸீத்’ அதாவது ’இந்த உலகனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் அஸத்தாகவே இருந்தது’ என்று கூறுகிற படியால், முன்னால் இல்லாத உலகம் தான் உண்டாக்கப் படுகிறது என்று அஸத் கார்ய வாதமே சரியானது.
இதி சேத் ந – இவ்வாறு நீ கூறினால், அது தவறு
தா₄ர்மாந்தரேண– வேறு ஓரு தர்மத்தை (பண்பை ) வைத்து (உலகத்தை அஸத் என்று சொல்கிறபடியால்)“உலகம் அஸத்தாக இருந்தது” என்ற விடத்தில் அஸத் என்ற சொல் முயல் கொம்பு, ஆகாசத் தாமரை போல் இல்லாத வஸ்துவைக் குறிக்கவில்லை . உலகம் இப்போது எந்தப் பண்புகளோடு உள்ளதோ அதற்கு முரண்பட்ட பண்புகளோடு ப்ரளய காலத்தில் இருந்தபடியால், அஸத் அதாவது இது மாதிரி இல்லாதது எனப்படுகிறது. -எப்படி இப்படிப்பட்ட பொருளை அறிந்து கொள்ளலாம் எனில் –
1- வாக்யசேஷாத் – “மிச்சமிருக்கும் வாக்கியத்தால்”. உபநிஷத்தில் அவ்விடத்திலேயே
(தத₃ஸதே₃வ ஸந் மந: அகுருத ஸ்யாமிதி) அதாவது-’அந்த அஸத் என்ற பொருள் எண்ணியது’ என்று உள்ளதால்,-இங்கு சொல்லப்பட்டது ஒரு இருக்கும் பொருள் தான், இல்லாத பொருள் எப்படி ஸங்கல்பம் செய்ய முடியும்?
2-யுக்தே :
– “யுக்தியால்”. யுக்திகளால் ஆராய்ந்தாலும் ஸத்த்வம் (இருத்தல்) என்பதும் அஸத்த்வம் (இல்லாமை ) என்பதும் –இருக்கும் ஒரு பொருளின் பண்புகள் என்று தான் தோற்றுகிறது. மண்ணானது குடத்தின் வடிவத்தோடு இருந்தால்“குடம் இருக்கிறது” என்கிறோம். வேறு வடிவத்தோடு இருந்தால் “குடம் இல்லை ” என்கிறோம்.
3-சப்₃தா₃ந்தராச்ச – (தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ) என்று ’அஸத்’ என்ற சொல்லை ’அவ்யக்ருதம்’ அதாவது ’பெயராலும் உருவத்தாலும் வேறுபடாதது’ என்று வேறொரு சொல்லால் வேதமே விவரிக்கிறது.
எனவே , இப்போது இருப்பது போல் வெவ்வேறு பெயர்களோடும் உருவங்களோடும் ஜகத் ப்ரளய காலத்தில் இருப்பதில்லை என்பதால் அஸத் என்று அழைக்கப்படுகிறது

(பஹுஸ்யாம் ப்ரஜாயேய – ஸூஷ்ம அசித் சித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸங்கல்பித்தது -பலவாகி நாம ரூபங்களைக் கொண்ட அனைத்துமாகி ஸ்தூல அசித் சித் விஸிஷ்ட ப்ரஹ்மமானது –
பாவாந்தர அபாவ பாவம் -இல்லாமையே இல்லை -துணி அழிந்து கந்தலாகும் -இல்லை என்றாலே வேறான வடிவில் உள்ளது -வாயும் வயிறுமான வடிவமான குடம் உடைந்து குடம் இல்லையாகி மண் துகளாகியது —அஸத் -பொருள் அல்லாத அடியேனை பொருளாக்கி அடிமை கொண்டாயே -)

(இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னில் வைத்தான் -பொருளல்லாத என்னை பொருளாக்கி அடிமையும் கொண்டான் -சேஷத்வ பரதந்த்ர ஸ்வரூப ஞானம் -மதிநலம் அருளி கைங்கர்யமும் கொண்டு அருளினான் -என்றபடி)

உலக எடுத்துக் காட்டுகள்
காரணப் பொருள் கார்யப் பொருளைக் காட்டிலும் வேறல்ல என்பதற்கு இரண்டு
எடுத்துக் காட்டுகளை வ்யாஸர் கூறுகிறார், அடுத்த இரண்டு ஸூத்ரங்களாலே –
5-பட வத் ச – “துணியைப் போலவும்”
உலகில் எப்படி நூல்களே ஒரு விதமான சேர்க்கையை அடையும் போது ’துணி’ என்ற வேறொரு பெயரையும் , உடுத்தப் படுதல் என்ற புதிதான பயன்பாட்டை யும் அடைகின்றனவோ , அதைப் போல் தான் ப்ரஹ்மமே இந்த உலகமாக மாறுகிறது.
6- யதா ₂ ச ப்ராணாதி₃: – “எப்படி ப்ராணன் முதலானவையோ ”
எப்படி உலகில் ஒரே ஒரு வாயுவானது சரீரத்துக்குள் நுழைந்து செயல்படும் போது, ப்ராண அபான வ்யான உதா₃ன ஸமான என்ற வெவ்வேறு பெயர்களையும், அதற்குரிய வெவ்வேறு செயல்பாடுகளையும் அடைகிறதோ , அதைப் போல் ப்ரஹ்மமும் இந்த உலகமாக மாறி வெவ்வேறு பெயர்கள் உருவங்களையும் செயல்பாடுகளையும் அடைகிறார்.
ஆகையால், ஸத் கார்ய வாதம் தான் வேதத்தில் ஏற்கப்பட்டுள்ளது. எனவே காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்று தான். அவற்றுக்குத் தன்மைகளில் தான் வேறுபாடுகள் இருக்க முடியும்.-அப்படித் தான் ப்ரஹ்மம் இந்த உலகுக்குக் காரணமாக இருக்கிறார்

—————

2.1.7 இதர வ்யபதேசாதி₄கரணம்-ப்ரஹ்மம் தனக்கே துக்கம் தேடிக்கொள்வாரா?

அதிகரணத்தின் பின்புலம்
2-1-7-இதர வ்யபதே₃சாதி₄கரணம் – ஸங்கதி –
முன் அதிகரணங்களில் ஜகத்து ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு அல்ல; அந்த ப்ரஹ்மமே தான் இந்த உலகமாக மாறி இருக்கிறது; அதனால் உலகத்துக்கு ப்ரஹ்மமே காரணம் என்று நிரூபிக்கப்பட்டது. உலகம் என்று சொன்னால், அதில் அசேதனப் பொருள்களும், சேதனர்களான ஜீவாத்மாக்களும் அடங்குவர்கள். அந்த இரண்டுக்குள், ஜீவாத்மாவை எடுத்துக் கொண்டு, ஜீவாத்மா என்பவர் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு அல்ல என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டால், அந்த ப்ரஹ்மத்துக்கே பல தோஷங்கள் வந்து விடுகின்றன.அதனால், அந்த ப்ரஹ்மம் உலகத்தை படைத்த ஜகத் காரணமாக இருக்க முடியாது என்று ஆஷேபம் எழுகிறது. அதற்கான விடையை வேதவியாசர் இந்த அதிகரணத்தில் வழங்குகிறார்.

பூர்வ பக்ஷம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்திரம் பூர்வபக்ஷிகளின் வாதத்தைக் காட்டுகிறது.
1-இதர வ்யபதே₃சாத் ஹிதா கரணாதி₃ தோ₃ஷ ப்ரஸக்தி:
இதரன்
என்றால் மற்ற ஓருவன். அதாவது இந்த இடத்தில் ஜீவாத்மா.
வ்யபதேசம்-என்றால் சொல்லுவது-குறிப்பிடுவது.
“இதர வியபதேசாத்” என்றால் “ஜீவாத்மா ப்ரஹ்மமாகவே குறிப்பிடப் படுகிற படியால்” என்று பொருள். “தத் த்வம் அஸி ”, “அயம் ஆத்மா ப்ரஹ்ம”, “அஹம் ப்ரஹ்மாஸ்மி” முதலான பல வாக்கியங்களில், உபநிஷத்துக்களில் ஜீவாத்மா ப்ரஹ்மமாகவே குறிக்கப்படுகிறார்.
ஹிதம் என்றால் நன்மை , கரணம் என்றால் செய்வது, அகரணம் என்றால் செய்யாதது. ஹித அகரணம் என்றால் தனக்கான நன்மையைச் செய்யாமல் இருத்தல். இது ஒரு
தோஷம்.
அதே போல் தனக்குத்தானே தீமையைத் தேடிக் கொள்ளுதல் என்பது மற்ற ஓரு தோஷம்.-இவை யெல்லாம் ப்ரஹ்மத்துக்கு ஏற்பட்டு விடும் என்கிறார் பூர்வபஷி

(ஹித கரணமும் செய்யாமல் அஹித கரணங்களையே செய்து கொண்டு -நன்மைகளைச் செய்யாமல் தீமைகளையே செய்து கொள்ளும் தோஷங்கள் வரும் என்றவாறு)

பூர்வ பக்ஷியின் கேள்வி
ஜீவனும் ப்ரஹ்மமும் வேறல்ல என்று கொண்டால், எப்போதும் பாபங்கள் அற்றவராய், துக்கமே இல்லாதவராய், முழுமையான ஜ்ஞானம் சக்தி முதலானவற்றை உடையவரான ப்ரஹ்மம் தானே உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது, பாபங்களை உடையவராய், குறைந்த ஜ்ஞானத்தையும் சக்தியையும் கொண்டவராய், பல துக்கங்களை அனுபவிக்கும் ஜீவாத்மாவாக ஆகிறார் என்று சொல்ல வேண்டும். ஆகையால் தனக்கு தீமையைக் கொடுக்கும் செயலைத் தானே செய்கிறார் என்று ஆகி விடும்.
தனக்கு எது நன்மையோ , அப்படிப்பட்ட உலகத்தைப் படைத்துக் கொள்ளாமல், தனக்கே தீமை கொடுக்கும்படிக்கு படைத்துக் கொள்ளுகிறார் என்பதாலே ப்ரஹ்மத்துக்கு தோஷங்கள் வரும்.
அந்த ப்ரஹ்மம் அறியாமல் இப்படிச் செய்துவிட்டார் என்று சொல்ல முடியாது. அவர் அனைத்தையும் அறியக்கூடிய ஸர்வஜ்ஞன் ஆனபடியால். அவருக்கு சக்தி இல்லாத படியால், இன்ப மயமான உலகத்தைப் படைக்க முடியாமல் இப்படி உலகத்தை படைத்து விட்டார் என்று சொல்ல முடியாது, தன்னுடைய சங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரான படியால்,
யாருடைய வற்புறுத்தலாலோ , இப்படிச் செய்து விட்டார் என்று சொல்ல முடியாது, யாருக்கும் அடி பணியத் தெவை யில்லாத ஸ்வதந்த்ரமானவர் ஆனபடியால்.
அதனால் ப்ரஹ்மம் தானாக ஆசைப்பட்டு, யோசித்து, தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி, ஒரு உலகத்தைப் படைக்கும் போது, தனக்கே தீமையைக் கொடுக்கும்படி அந்த உலகத்தைப் படைப்பது என்பது பொருந்தாது. அதனால், ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க முடியாது என்பது ஆஷேபம்.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு தான்
ஸித்தாந்தம் – 2—₄அதிகம் து பே₄த₃நிர்தே₃சாத்
– “வேறு அன்றோ , வேறாகச் சொல்கிறபடியால்”-உலகத்தில் இன்ப துன்பங்களை அநுபவிக்கும் ஜீவாத்மாவைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறாகவே கூறப்படுகிறது –

யஸ்ய ஆத்மா சரீரம் ய: ஆத்மாநம் அந்தர: யமயதி – “இந்த ஜீவாத்மாவே
ப்ரஹ்மத்துக்கு உடல், இந்த ஜீவாத்மாவை ப்ரஹ்மம் தான் உள்ளிருந்து இயக்குகிறார்.
ப்ருத₂கா₃த்மாநம் ப்ரேரிதாரம் ச மத்த்வா ஜுஷ்ட: தத: தேந அம்ருதத்வம்
ஏதி –
ஆத்மாவையும் அவரை இயக்கும் பரமாத்மாவையும் வேறாகத் தெரிந்து கொள்பவன் அந்த பரமாத்மாவின் அருளுக்கு இலக்காகி முக்தியை அடைகிறான்
ஸ காரணம் கரணாதி₄பாதி₄ப: (கரண அதிபதிக்கு அதிபதி )- ப்ரஹ்மமே காரணம், புலன்களை இயக்கும் ஜீவாத்மாவை இயக்குபவர் அவரே
த்₃வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே |
தயோ : அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய: அபி₄சாகசீதி ||

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இந்த உடல் என்னும் ஒரே மரத்தில் இருக்கும் இரண்டு பறவைகள். அதில் ஜீவாத்மா கர்மங்களின் பயனான இன்ப துன்பங்கள் என்னும் பழத்தை உண்டு, துவண்டு போகிறான், பரமாத்மா அப்பழத்தை உண்ணாமல் ஒளி விஞ்சி இருக்கிறார்.
ஜ்ஞாஜ்ஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீஸை – “ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஜ்ஞாநமுடையவர்கள், நித்யமானவர்கள், அவர்களில் ஒருவர் இயக்குபவராக உள்ளார், மற்ற ஓருத்தர் இயக்கப்படுகிறார்”
ப்ரதா₄ந ஷேத்ரஜ்ஞபதி: கு₃ணேச: – ப்ரதாநம் என்ற அசேதனப் பொருளுக்கும், ஜ்ஷேத்ரஜ்ஞர்கள் எனப்படும் ஜீவாத்மாக்களுக்கும்
நித்யோ நித்யானாம் சேதந: சேதநாநாம் ஏகோ ப₃ஹூனாம் யோ வித₃தா₄தி காமாந் – நித்யமாய் ஜ்ஞாநமுடையவரான ஒரே பரமாத்மா நித்யர்களாய் ஜ்ஞாநமுடையவர்களான
கணக்கில்லாத ஜீவாத்மாக்களுக்கு அவர்கள் ஆசைப்படும் பயன்களை யெல்லாம் வழங்குகிறார்.

உலகம் என்றாலே ப்ரஹ்மம் தான்
அடுத்த ஸூத்ரத்தால் ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு
3-அச்மாதி₃வச்ச தத₃நுபபத்தி: –
“கல் முதலானவற்றைப் போலவும் அது (ஐக்யம்) பொருந்தாது”
எப்படி ஜ்ஞாநமற்றதாய், எப்போ தும் உருவத்தால் மாறிக்கொண்டே இருக்கும் அசேதநப் பொருளுக்கு ஜ்ஞாநம் உடையவராய், என்றும் மாறாத பரமாத்மாவோடு ஐக்யம் (ஒரே பொருளாய் இருத்தல்) பொருந்தாதோ , அதே போல் கர்மத்துக்கு வசப்பட்டு, பல விதமான துக்கங்களை அநுபவிக்கும் ஜீவாத்மாவுக்கும் கர்மத்துக்கு அப்பாற் பட்டவராய், துக்கமே இல்லாதவரான பரமாத்மாவவாடு ஐக்யம் (ஒரே பொருளாய் இருத்தல்) என்பது பொருந்தாது,
கேள்வி – பிறகு “தத் த்வம் அஸி” (அந்த பரமாத்மா தான் நீயாக இருக்கிறாய்), “அஹம் ப்₃ரஹ்மாஸ்மி” (நானே ப்ரஹ்மமாய் இருக்கிறேன்) என்று வேதாந்தம் எப்படிக் கூறுகிறது?
பதில் – அது அனைத்துமே சரீர-ஆத்ம-பா₄வத்தால் (உடல் ஆத்மா என்ற தொடர்பால்) பொருந்தும்.-உலகில் நாய், மனிதன் என்று உடலைக் குறிக்கும் சொற்கள் அதற்குள் இருக்கும் ஆத்மா வரை குறிப்பதைக் காண்கிறோம். அதே போல் ப்ரஹ்மத்துக்கு சேதனாசேதனங்கள் அனைத்துமே உடலாக இருக்கிற படியால் “தத் த்வம் அஸி” என்பதற்கு “ஜகத்தை ஸ்ருஷ்டித்த அந்த பரமாத்மா தான் உனக்குள் அந்தர்யாமியாக இருப்பவர்” என்று தான் பொருள், ஜீவனும் பரனும் ஒன்று என்றல்ல.
ஆக இவ்வாறு ஸூக்ஷ்மமான (பெயர் உருவ வேறுபாடுகள் அற்ற) சேதனாசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் ஸ்தூ₂லமான (பெயர் உருவ வேறுபாடுகளைக் கொண்ட) சேதனாசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மத்தை (அதாவது ஜகத்தை ) படைக்கிறது.

——————-

2-1-8-உபஸம்ஹார த₃ர்சநாதி₄கரணம்–கருவிகளே இல்லாமல் ப்ரஹ்மம் படைக்க முடியுமா?

அதிகரணத்தின் பின்புலம்
2-1-8-உபஸம்ஹாரத₃ர்சநாதி₄கரணம் –ஸங்கதி –
முன் அதிகரணங்களில், சேதனாசேதனங்கள் அனைத்தையும் தனக்கு சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் இந்த உலகத்துக்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது. என்று நிரூபிக்கப்பட்டது. அதற்கு மேல், சஹகாரி காரணம் என்று வேறு ஒன்றை எதிர்பார்க்காமலேயே ப்ரஹ்மம் இந்த ஜகத்தைப் படைக்கிறது என்று இந்த அதிகரணத்தில் வேதவியாசர் நிரூபிக்கிறார்.

பூர்வ பக்ஷம் – உபநிஷத்துக்களில் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் வாக்கியங்களைப் பார்ப்போம்.
(ததை ₃க்ஷத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேய) அதாவது “அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பம்
செய்தது, நான் பலவாக ஆகக் கடவேன் என்று”.
(ஸோ காமயத) அதாவது “அந்த ப்ரஹ்மம் ஆசைப்பட்டது”.
(ஸ தபோ தப்யத ஸ தபஸ்தப்த்வா இத₃ம் ஸர்வம் அஸ்ருஜத)-அதாவது “அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பித்துக் கொண்டு இவ்வுலகத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் ஸ்ருஷ்டித்தார்.
இப்படி ஸங்கல்பத்தின் மூலம் மட்டுமே ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கிறார் என்று
சொல்லப்பட்டுள்ளது. இது பொருந்தாது. ஏன் என்றால், உலகத்தில் எந்த ஒரு படைப்பாளியும் ஒரு பொருளை உண்டாக்குவதற்குச் சில கருவிகளைச் சேகரித்து, அவற்றைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்று காண்கிறோம். ஸங்கல்பத்தால் மட்டும் உலகத்தில் யாரும் எந்தக் கார்யத்தையும் ஏற்படுத்துவதில்லை -அதனால், ப்ரஹ்மத்துக்கும் இது பொருந்தாது என்கிறார் பூர்வ பக்ஷீ

பூர்வ பக்ஷியின் வாதம்
ஸந்தேகம்
– உலகத்தில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாம் அளவுபட்ட சக்தியை உடையவர்கள். அதனால், ஒரு குடத்தையோ , துணியையோ , ஆபரணத்தையோ உண்டாக்குவதற்கு சக்கரம், தரி, கருவிகள் முதலானவை தேவைப்படுகின்றன. ஆனால், ப்ரஹ்மமோ சர்வ சக்தி, அதாவது, எல்லை யில்லாத உயர்ந்த சக்தியை உடையது என்று
உபநிஷத்துக்கள் சொல்லுகிறபடியால், அவர் கருவிகளை எதிர்பார்க்காமலேயே படைக்கிறார் என்று ஒப்புக்கொண்டால் என்ன? சக்தி இல்லாதவர்கள் கருவிகளை எதிர்பார்க்கிறார்கள். சக்தி இருக்கும் ப்ரஹ்மம் கருவியை எதிர்பார்ப்பதில்லை
என்று கொள்வோமே ?
பூர்வ பக்ஷியின் பதில் – கருவிகளின் தேவை என்பதும், கருவிகள் தேவைப்படாமை என்பதும் சக்தி இல்லாததையும், சக்தி இருப்பதையும் பொறுத்து வருபவை அல்ல. யாருக்கு ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி இல்லையோ , அவர்களிடத்தில் அதற்கான கருவிகளைக் கொடுத்தாலும், அவர்களால் அப் பொருளை உண்டாக்க இயலாது. யாருக்கு
ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி உள்ளதோ , அவரும் கருவிகள் இல்லாமல் அந்தப் பொருளை உண்டாக்க விட முடியாது. கருவிகளைக் கொடுத்தால், அவற்றைப் பயன்படுத்தித் தான் அப் பொருளை உண்டாக்க வேண்டும். அதனால், சக்தி இருந்தாலும் இல்லா விட்டாலும், உபகரணங்களைச் சேகரித்தல், பயன்படுத்துதல் என்பது இன்றியமையாதது.-சரி, ப்ரஹ்மத்துக்கு எந்தக் கருவிகளும் இல்லை என்று எப்படித் தெரிந்து கொள்ளுகிறோம் என்றால், அதையும் வேதாந்தமே சொல்லுகிறது
(्ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்) அதாவது “ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகமனைத்தும் ப்ரஹ்மமாகவே இருந்தது. அந்த ஒரே ஒரு
பொருள் தான் இருந்தது. வேறு எதுவும் இல்ணல.
(ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்₃ரம்ஹா ந ஈசான: நேமே த்₃யாவா ப்ரிதிவீ ந நக்ஷத்ராணி) அதாவது “ப்ரளய காலத்தில் நாராயணன் ஒருவர் தான் இருந்தார். மற்ற தெய்வங்களும் கிடையாது. உலகங்களும் கிடையாது. எந்தப் பொருள்களும் கிடையாது” என்றும் உபநிஷத் கூறுகிறது. அதனால், ஸ்ருஷ்டிக்கு முன்னால் கருவிகள் எதுவுமே உலகத்தில் இல்லாத படியால், அந்தக் கருவிகளைப் பயன்படுத்தி ப்ரஹ்மம் இந்த உலகத்தைப் படைத்திருக்க முடியாது. அதனால், ப்ரஹ்மம் கருவிகள் இல்லாதபடியால், ஜகத்காரணமாக ஆக முடியாது என்பது பூர்வ பக்ஷியினுடைய வாதம்.

கருவிகள் இல்லாமலேயே உண்டக்கலாம்
ஸித்தாந்தம் –
இதற்கு இரண்டு ஸூத்ரங்களால் வேதவியாசர் பதில் அளிக்கிறார்.
1-உப ஸம்ஹார த₃ர்சநாத் ந இதி சேத் ந க்ஷீரவத்ஹி
முதல் பகுதியாலே பூர்வ பக்ஷத்தைச் சொல்லி, மேல் பகுதியால் அதற்கு வேத வியாசர் விடை அளிக்கிறார்.
உப ஸம்ஹார த₃ர்சநாத் – இது பூர்வ பக்ஷியின் வாதம். உப ஸம்ஹாரம் என்றால் சேகரித்தல். தர்சனம் என்றால் காண்பது. உப ஸம்ஹார தர்சனம் என்றால் “உலகத்தில் ஒரு படைப்பாளி ஒரு பொருளை உண்டாக்குவதற்குக் கருவிகளைச் சேகரிப்பதை நாம் பார்க்கிற படியால்” என்று பொருள்.
ந – ஆகையால், நீங்கள் ப்ரஹ்மம் ஜகத்காரணம் என்று சொன்னது பொருந்தாது என்று பூர்வ பக்ஷீ வாதிடுகிறார்.
இதி சேத் ந – இது வேத வியாசரின் பதிலின் துவக்கம். “இவ்வாறு நீங்கள் கூறினால், அது தவறு” என்கிறார்.
க்ஷீரவத் ஹி– “பாலைப் போல் அன்றோ ”. ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி இருந்தாலும், வேறு சில கருவிகளைப் பயன் படுத்தினால் தான் ஒரு காரியத்தை ஒருவரால் உண்டாக்க முடியும் என்கிற நியமம் தவறானது என்கிறார் வ்யாஸர்.
பாலானது தானாகவே எந்த கருவியையும் பயன்படுத்தாமல் தயிரை உண்டாக்குகிறது. தண்ணீரானது எந்தக் கருவியையும் பயன்படுத்தாமல் கெட்டிப்பட்டு பனிக் கட்டியாக ஆகிறது. அதனால், பாலுக்கும் ஜலத்துக்கும் தயிரையோ , பனிக்கட்டியையோ உண்டாக்க எப்படி எந்தக் கருவிகளும் தேவையில்லையோ , அதே போல் ப்ரஹ்மமும் எந்தக் கருவிகளையும் பயன்படுத்தாமல் உலகத்தைப் படைப்பது பொருந்தும் என்கிறார் வேதவியாசர்.
“ஹி” என்கிற சொல் “இந்த அர்த்தம் மிகவும் ப்ரஸித்தமானது” என்று காட்டுகிறது. அதனால், பூர்வ பக்ஷியின் கேள்வி மிகவும் வலுவற்றது என்று வேத வியாசர் காட்டுகிறார்.
ஸந்தேகம் – பாலைத் தயிராக மாற்றுவதற்கு நாம் அதில் சிறிதளவு தயிரைச் சேர்க்கிறோமே ? பிறகு கருவிகள் தேவையில்லை என்று எப்படி கூற முடியும் என்று.
பதில் – தயிரைச் சேர்க்கா விட்டாலும், காலப் போக்கில் பால் திரிந்து போய் மாறத் தான் போகிறது. அந்த மாற்றத்தை வேகமாக்க மற்றும் ஒரு குறிப்பிட்ட சுவையை உண்டாக்குவதற்காகத் தான் பாலில் சிறிதளவு தயிரைச் சேர்க்கிறோம்.
தண்ணீரும் இயற்கையாகவே பனிக் கட்டியாக மாறிவிடும், சூரிய கிரணங்கள் அல்லது வெப்பம் இருந்தால், அது தடுக்கப்படுகிறது, அவ்வளவு தான்.

வேதத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு
ப்ரஹ்மம் என்ற பொருள் நாம் உலகத்தில் காணக்கூடியது அல்ல. வேதத்தைக் கொண்டு மட்டுமே அறியக் கூடியது. அதனால் அந்த ப்ரஹ்மத்தைப் புரிய வைக்க உலக எடுத்துக் காட்டை விட, வேதத்திலிருந்து எடுத்துக்காட்டு இருந்தால் மேலும் எளிமையாக இருக்கும் என்பதால் அடித்த ஸூத்ரத்தில் வேதவ்யாஸர் அதைக் காட்டுகிறார்.
2–தே₃வாதி₃வத₃பி லோகே – “(தங்கள்) உலகத்தில் தே₃வர்கள்
முதலானவர்களைப் போலவும்”
தேவர்கள் தங்கள் தங்கள் உலகங்களில் தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தாங்களே ஸங்கல்பத்தால் படைத்துக் கொள்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. அதை எப்படி ஏற்கிறோமோ , அதே போல் ப்ரஹ்மமும் எந்தக் கருவிகளும் இல்லாமல், தன்னுடைய ஜ்ஞாநம் சக்தி முதலானவற்றை மட்டுமே கொண்டு உலகைப் படைக்கிறார் என்றும் வேதம் சொல்கிறபடியால், அதையும் அதே போல் ஏற்க வேண்டும்.
இவ்வாறு, ப்ரஹ்மம் எந்த ஸஹகாரி (உதவி) காரணத்தையும் எதிர்ப்பார்ப்பதில்லை என்று
நிரூபித்து, இந்த உலகத்துக்கு ப்ரஹ்மமே தான் உபாதாந காரணம் (மூலப் பொருள்), நிமித்த காரணம் (படைப்பாளி) மற்றும் ஸஹகாரி காரணம் (உதவிக் காரணம்) என்று வேதவ்யாஸர் நிரூபித்துள்ளார்.

எனவே , முதல் அத்யாயத்தில் அடையப்பட்ட “ப்ரஹ்மமே உலகமனைத்துக்கும் காரணம்” என்ற முடிவு சரியானதே , அதில் எந்த முரண்பாடுகளும் இல்லை என்று காட்டப்பட்டுள்ளது-

————

(ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்-நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.-உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லைஎன்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.)

2-1-9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த்யதி₄கரணம்-வேதத்தால் மட்டுமே அறியப் படும் பொருளுக்கு யுக்திகள் பொருந்தாது

அதிகரணத்தின் பின்புலம-2-1-9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த்யதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில், கருவிகளை எதிர்பார்க்காமல் உலகத்தை ப்ரஹ்மம் படைக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக பால் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு ஆஷேபம் எழுகிறது – ப்ரஹ்மம் பாலைப் போன்றவர் என்றால்,பாலுக்கு அவயவங்கள் (பகுதிகள்) இருப்பது போல் ப்ரஹ்மத்துக்கும் பகுதிகள் உண்டா என்று. அதற்கு இவ்வதிகரணத்தில் பதில் கூறப்படுகிறது.
பூர்வ பக்ஷம்
– முதல் ஸூத்திரத்தாலே பூர்வ பக்ஷிகளின் வாதம் காட்டப்படுகிறது.
1-க்ருத்ஸ்ந ப்ரஸக்தி: நிரவயவத்வ சப்த₃கோபோ வோ
வேதத்தில் “ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்”முதலான வாக்கியங்களில் ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரஹ்மம் என்ற ஒரே ஒரு பொருள் தான் இருந்தது; அதுதான் உலகத்துக்கு காரணம். -அப்போது எந்த பாகுபாடுகளும் பகுதிகளும் இருக்கவில்லை என்று சொல்கிறது.
பிறகு அந்த ப்ரஹ்மமே “நான் பலவாக ஆகக் கடவேன்” என்று ஸங்கல்பம் எடுத்துக் கொண்டு உலகமாக மாறுகிறது, அதாவது சேதனர்கள், அசேதனங்கள் என்கிற அனைத்தையும் படைக்கிறது என்றும் கூறுகிறது.
ப்ரஹ்மத்துக்கு பகுதிகள் இல்லை , அந்த ப்ரஹ்மம் உலகமாக மாறுகிறது என்று சொன்னால், அப்போது ப்ரஹ்மம் முழுவதுமாகவே உலகமாக மாறி விட்டது என்று ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி என்றால், -இப்போது உலகம் இருக்கும் போது ப்ரஹ்மமே இல்லை என்று ஆகி விடும்.
க்ருத்ஸ்ந -முழுவதுமாக
ப்ரஸக்தி: மாறிவிடும் நிலை ஏற்படும்
அப்படி அல்ல; ஸ்ருஷ்டிக்கு முன்னாலும் காரணப் பொருளில் பகுதிகள் இருந்தன என்று சொன்னோம் என்றால், அப்போது வேதத்தில் எந்தெந்த வாக்கியங்கள் எல்லாம் “காரணப் பொருளான ப்ரஹ்மம் அவயவங்கள் அற்றது” என்று சொல்லுகின்றனவோ , அந்த வாக்கியங்கள் எல்லாம் கோபித்துக் கொள்ளும். -அதாவது அவை யெல்லாம் தவறாக ஆகி விடும்.-நிரவயவத்வ ப்ரஹ்மத்துக்குப் பகுதிகள் இல்லை என்று சொல்லும்
சப்த₃ வேதத்துக்கு
கோப: கோபமேற்படும்

பூர்வ பக்ஷியின் வாதங்கள்
அதனால் ப்ரஹ்மத்துக்கு அவயவங்கள் உண்டு என்றும் சொல்ல முடியாது; அவயவங்கள் இல்லாமலேயே உலகத்தைப் படைக்கிறது என்றால், முழுவதுமாக உலகமாக மாறி விட்டது என்று ஆகி விடும். அதனால் இப்படி இரண்டு வழிகளிலும் தோஷம் இருக்கிறபடியால், ப்ரஹ்மம் உலகத்துக்கு காரணமாகவே இருக்க முடியாது என்பது பூர்வ பஷம்.
இங்கு நாம் சொல்லலாம் – ப்ரஹ்மம் என்கிற பால் தனியான பரமாத்மாவை மட்டும் குறிக்க வில்லை ;-ஸூக்ஷ்மமாக, அதாவது, பெயர் வேறுபாடுகள் உருவ வேறுபாடுகள் இல்லாத, சேதனாசேதனங்களை சரீரமாகக் கொண்ட பரமாத்மா தான் இந்த இடத்தில் காரணப் பொருளாக சொல்லப்படுகிறது. அதனால் அந்தர் யாமியான பரமாத்மாவுக்கு அவயவங்கள் கிடையாது; ஆனால் உடலாக இருக்கும் சேதனாசேதனங்களுக்கு அவயவங்கள் உண்டு. அவை தான் உலகமாக மாறுகின்றன; பிறகு இந்தக் கேள்வி எப்படி பொருந்தும்? என்று
அதற்கும் பூர்வ பக்ஷி பதில் கூறுகிறார் –
அப்படிச் சொன்னாலும், இந்த தோஷம் வரும். ஒரு உடலுக்குள் இருக்கும் ஆத்மா, அந்த உடல் வேறு ஒரு நிலையை அடையும் போது, அந்த ஆத்மாவும் ஒரு நிலையை அடைகிறார். ஒரு குழந்தை இளைஞனாக மாறுகிறார் என்றால், அந்த ஆத்மா முழுவதுமாகவுமே இளைஞன் என்று தான் சொல்லப்பட வேண்டும். அதே போல், ப்ரஹ்மத்துக்கு பகுதிகள் கிடையாது; அவருடைய உடலான சேதனாசேதனங்கள் தான் உலகமாக மாறுகின்றன, அதனால் ப்ரஹ்மமே உலகமாக ஆகிறார் என்று சொன்னால், அப்போது ப்ரஹ்மம் ஒன்று மாடாக மாறி இருக்க வேண்டும். அல்லது சிங்கமாக மாறி இருக்க வேண்டும். அல்லது மனிதனாக மாறி இருக்க வேண்டும். இவை அனைத்துமாகவும் ஒரே காலத்தில் ப்ரஹ்மம் மாற முடியாது. ஒரு சரீரத்தை உடையவராக ப்ரஹ்மம் கொள்ளப்பட்டால், மற்ற சரீரங்களுக்குள் ப்ரஹ்மம் இல்லை என்று ஆகி விடும். அதனால் எப்படிப் பார்த்தாலும், ப்ரஹ்மம் உலகத்தை படைத்திருக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம்.

வேதத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்
ஸித்தாந்தம் – (2) ச்ருதே : து சப்த₃ மூலத்வாத்
து
– அப்படியல்ல, அவயவங்கள் அற்ற ப்ரஹ்மம் உலகைப் படைப்பதில் எந்த முரண்பாடும் இல்லை
ச்ருதே : – அவயவங்கள் இல்லை , உலகத்துக்குக் காரணம் என்று இரண்டையும் வேதம் சொல்கிற படியால்
கேள்வி – உலகத்தில் நாம் பார்க்கும் நியதிகளை மீறி, வேதம் ஒரு விஷயத்தை உபதேசிக்க முடியுமா?-உலகத்தில் ஒருவர் “நெருப்பால் துணியை நனைக்க வேண்டும்” என்று சொன்னால், உடனடியாக “இது தவறான வாக்கியம்” என்று கூறி விடுகிறோம். ஏனென்றால், நெருப்பைக் கொண்டு எதையும் நனைக்க முடியாது-கொளுத்தத்தான் முடியும் என்று நாம் பார்த்திருக்கிறோம். அதே போல், அவயவங்கள் இல்லாத பொருள், பலவாக மாற முடியாது என்று உலகத்தில் நாம் காண்கிற படியால், அதற்கு முரண்பட்டு, அவயவங்கள் இல்லாமலேயே ப்ரஹ்மம் பலவாக மாறுகிறார் என்று வேதம் எப்படி உபதேசிக்க முடியும்?
அதற்கான பதில் – சப்த₃ மூலத்வாத் – இந்த ப்ரஹ்மம் என்கிற ஜகத் காரணப் பொருள், வேதத்தால் மட்டுமே அறியப்படும் பொருளாகும். உலகத்தில் நாம் பார்த்த பொருளைப் பற்றி ஒருவர் சொல்லும் போது, உலக நியதிகளுக்கு முரண்பட்டு கூற முடியாது. ஆனால், ப்ரஹ்மம் என்பவரோ , உலகத்தில் எந்த ப்ரமாணத்தாலும் அறியப் படாதவர். வேதத்தால் மட்டுமே அறியப் படுபவர்.-அதனால், உலகத்தின் நியதிகளை அவரிடம் பொருத்திப் பார்க்க முடியாது. வேதம் எப்படி எல்லாம் அவருடைய தன்மை களை கூறுகிறதோ , அப்படி எல்லாம் ஏற்கத் தான் வேண்டும் என்பது வேத வ்யாஸருடைய ஸித்தாந்தம்.
3-ஆத்மநி ச ஏவம் விசித்ரா : ச ஹி– “ஆத்மாவிலும் இப்படி; பல விதம் அன்றோ ”
ஒரு பொருளில் காணப்படும் தன்மை தான் மற்றவற்றிலும் இருக்க வேண்டும் என்று கூறினால், உலகத்தில் அசேதனப் பொருட்கள் அறிவற்றதாகவும், அழியக் கூடியதாகவும் இருக்கிறபடியால், ஜீவாத்மாவும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆகி விடும். அதனால், உலகத்தில் அந்தந்தப் பொருள் ப்ரமாணங்களால் எப்படி அறியப் படுகிறதோ , அந்தந்த தனித் தன்மைகளோடு உள்ளது என்று ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

(சாங்க்யர்களும் ஆத்மாவுக்கு ஞானம் உண்டு என்கிறார்கள் அன்றோ -காண்கிற அசேதனப் பொருள்களின் தன்மையைப் பார்த்து காணமுடியாத சேதனத்துக்குக் கொள்ள முடியாது அன்றோ -மேலும் விசித்திரமான அசேதனப் பொருள்களையும் காண்கிறோம் –பாவ ஸ்வபாவ வைஷம்யம் காண்கிறோம் அன்றோ -அதே போல் ப்ரஹ்மத்துக்கும் கொள்ள வேண்டும் -வேதம் சொல்லுமடியே ஏற்றுக் கொள்ள வேண்டும் -)

பூர்வ பஷத்தில் உள்ள குறைபாடுகள்
4–ஸ்வ பக்ஷ தோ₃ஷாத் ச –
“தன் பக்ஷத்தில் இருக்கும் தோ₃ஷத்தாலும்”
இதுவரை ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று சொல்லும் நம்முடைய பஷத்தில் எந்த தோஷமும் இல்லை என்று காட்டினார் வியாஸர். இப்போது ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லும் பூர்வ பக்ஷிகளின் மதத்தில் தான் தோஷம் உள்ளது என்று காட்டுகிறார்.
பூர்வ பக்ஷி சொல்வது – ப்ரதானமே ஜகத் காரணம் என்று. ப்ரதானம் என்பது வேதத்தால் மட்டுமே அறியப்படும் பொருள் அல்ல. அனுமானத்தால் அறியப்படும் பொருள். அதனால், உலகத்தில் நாம் காணும் நியதிகளுக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்ல முடியாது. அந்த நியதிகளுக்கு உட்பட்டுத் தான் ஆக வேண்டும்.
ஜகத்தை உண்டாக்கக் கூடிய மூல ப்ரகிருதிக்கு அவயவங்கள் உண்டா கிடையாதா ? என்று கேள்வி.
அவயவங்கள் கிடையாது என்று சொன்னால், அந்த மூல ப்ரகிருதி யிலிருந்து எப்படி பலவிதமான பொருட்கள் உண்டாக முடியும்? என்கிற கேள்வி வந்து விடும்.
பகுதிகள் உண்டு, ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று பொருட்களும் சேர்ந்து தான் மூல ப்ரகிருதியை உண்டாக்குகின்றன என்று சொன்னால், பல தோஷங்கள் வரும்-
(1) ப்ரதானம் ஜகத்காரணம் என்று நீங்கள் சொல்வதே தவறு. அந்த ப்ரதானமே மூன்று பொருட்களில் இருந்து உண்டானதான படியால்.
(2) மொத்தம் 24 அசேதனப் பொருட்கள் உலகத்தில் உள்ளன என்று நீங்கள் சொல்லுவது தவறு; ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்று அதிகமான பொருட்கணை ஏற்க வேண்டிய படியால்,
(3) அந்த ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றுக்கும் அவயவங்கள் உண்டா கிடையாதா என்று இதே போல் கேள்வி எழுந்து விடும். ஸத்த்வம், ரஜஸ், தமஸ் சேர்ந்து ப்ரகிருதியை உண்டாக்க வில்லை .—அவற்றின் சேர்க்கையே ப்ரகிருதி என்றால் -அவயவங்கள் இல்லாத பொருட்கள் எப்படி சேர முடியும்? இரண்டு பொருட்கள் சேரும் போது, சேர்ந்த பகுதி சேராத பகுதி என்று இருக்கும். பகுதிகளே இல்லாத இம் மூன்றும் சேர்ந்து ப்ரகிருதியாக ஆக முடியாது.
அதனால், எந்த விதத்திலும் ப்ரதானம் ஜகத் காரணம் என்று சொல்லுவது பொருந்தாது.

(நம் சித்தாந்தத்தில் ஸத்வம் ரஜஸ் தமஸ் இவை பண்புகள் குணங்கள் -சாங்க்யரில் ஒருவர் இவற்றை த்ரவ்யம் என்பர் -)

கற்பனை செய்யமுடியாத சக்தி உடையவர்
மூன்றாவது ஸூத்ரத்தில், வேதம் சொல்கிறபடியால் அவயவங்கள் அற்றவராக இருந்தாலும் ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கிறது என்று ஏற்க வேண்டும் என்று கூறினார் வ்யாஸர். இப்போது அதற்கான பொருத்தத்தைக் காட்டுகிறார் –
5– ஸர்வோபேதா ச தத்₃த₃ர்சநாத் – “எல்லா சக்திகளோடும் கூடியவர்; அவ்வாறு காணப்படுவதால்”
பரமாத்மாவைப் பற்றிச் சொல்லும் வேதங்கள் (பரா அஸ்ய சக்தி: விவிதை ₄வ ச்ரூயதே -ஸ்வ பாவிக ஞான பல க்ரியதா ச )-அதாவது -“இந்த பரம் பொருளான பரமாத்மாவின் சக்தி மிக வுயர்ந்தது, பலவிதமானது” என்று கூறுகிறது.
“ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப:” அதாவது தன் எண்ணத்தால் மட்டுமே அனைத்துக் காரியங்களையும் நடத்தும் வல்லமை படைத்தவர் பரமாத்மா என்றும் வேதம் கூறுகிறது.-அதனால், அவயவங்கள் அற்றவராய் இருந்தாலும் பலவிதமான பொருள்களை அவரால் உண்டாக்க முடியும்.
(சேராச் சேர்க்கை -அகடிகடநா ஸாமர்த்யம் -நரஸிம்ஹ மூர்த்தி ) 6-விகரணத்வாத் ् ந இதி சேத் தது₃க்தம்
ந – ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொல்வது தவறு, பொருந்தாது
விகரணத்வாத் – உடல், கை கால் முதலான கருவிகள் ப்ரஹ்மத்துக்கு இல்லாதபடியால்
இதி சேத் – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
தது₃க்தம் – அதற்கு பதில் முன்னமே சொல்லப்பட்டது (வேதத்தில் சொல்வதால் ஏற்க வேண்டும் என்று)
உப ஸம்ஹார தர்சனாதிகரணத்தில் சக்கரம், தரி முதலான கருவிகளைக் கொண்டே குயவன் நெசவாளி முதலானவர்கள் பொருள்களை உண்டாக்குகிற படியால், ப்ரஹ்மத்துக்கும் அதைப்போல் வெளிக் கருவிகள் வேண்டுமே என்ற கேள்விக்கு பதிலளித்தார்- இப்போது, உடல் கை கால்கள் முதலான கருவிகளாவது வேண்டாமா என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார்.
வேதத்தில் (அபாணி பாத₃: ஜவந: க்₃ரஹீதா| பச்யதி அசஷுஸ் : ஸ ச்ர்ணோதி அகர்ண–ஸ்வேதாஸ்வர 🙂 அதாவது
“பரமாத்மாவுக்குக் கால் இல்லா விட்டாலும் வேகமாகச் செல்வார், கை இல்லாமலும்
எடுப்பார், கண் இல்லாமலும் பார்ப்பார், காது இல்லாமலும் கேட்பார்” என்று சொல்கிறபடியால், பரமாத்மா உடல் கை கால் முதலான கருவிகள் இல்லாமலேயே உலகத்தைப் படைக்க இயலும் என்று தெரிகிறது.
அதனால், ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொன்னதில் எந்த முரண்பாடும் இல்லை —

————

2-1-10-ப்ரயோஜநவத்த்வாதி₄கரணம்-ஸ்ருஷ்டியின் குறிக்கோள்

பயனில்லாத செயலைச் செய்யலாமா?
2-1-10-ப்ரயோஜநவத்த்வோதி₄கரணம் – ஸங்கதி –
இந்த பாதத்தில் இதுவரை ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க முடியாது -என்று பலவிதமான ஆஷேபங்களுக்கு ஸமாதானத்தை வேத வியாஸர் அளித்தார். தற்போது மற்றும் ஒரு முனையில் பூர்வ பக்ஷி ஆஷேபிக்கிறார் – ப்ரஹ்மம் ஜகத்காரணம் அல்ல, ஏனென்றால் இப்படிப்பட்ட உலகத்தை படைப்பதால் ப்ரஹ்மத்துக்கு எந்த பிரயோஜனமும் அதாவது பயனும் கிடையாது என்று.
பூர்வ பக்ஷம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்திரம் பூர்வபஷத்தை காட்டுகிறது.
1- ந ப்ர யோஜநவத்த்வாத்
– “கிடையாது, ப்ரயோஜனமுடையதானபடியால்”
– கிடையாது. அதாவது ப்ரஹ்மம் ஜகத்துக்கு காரணம் என்று சொன்னது தவறு – பொருந்தாது
ப்ரயோஜனவத்த்வாத் – இப்படி விசித்திரமான பல வகைப் பட்ட பொருள்களை உடைய ஜகத்தைப் படைக்கும் செயல் கண்டிப்பாக பயனுடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஈஸ்வரனுக்கு இப்படிப்பட்ட ஸ்ருஷ்டியால் எந்த ப்ரயோஜனமும் இல்லை . அதனால் அந்த பரமாத்மா ஜகத் காரணமாக இருக்க முடியாது. -சிந்தித்து செயல்படக் கூடிய ஒருவர் ஒரு செயலில் ஈடுபடுகிறார் என்றால் அதற்கு இரண்டு விதமான பயன்கள் தான் இருக்க முடியும் – (1) தன்னலம் (ஸ்வார்த்த₂தை ) அல்லது (2) பிறர் நலம் ( பரார்த்த₂தை ).
1-(ஜகத்தைப் படைத்தல் தன்னலத்துக்காக என்று சொல்ல முடியாது, ஏனென்றால் ப்ரஹ்மம் உபநிஷத்துக்களில் “அவாப்த ஸமஸ்த காமன்” அதாவது “எல்லா ஆசைகளும் நிரம்பியவர், எல்லாப் பொருள்களையுமே உடையவர், அவர் இனி அடைய வேண்டிய ஒரு பயனே கிடையாது” என்று சொல்லுகின்றன.
2-ப்ரளய காலத்தில் ஜீவாத்மாக்கள் உடல் இல்லாமல் செயல்பாடு இல்லாமல் கிடக்கிறார்களோ என்று பார்த்து அவர்களிடத்தில் கருணையால் பிறர் நலத்துக்காக ப்ரஹ்மம் உலகத்தை படைக்கிறது என்றும் சொல்ல முடியாது. இந்த உலகில் கர்ப்பவாஸம் பிறப்பு மூப்பு மரணம் நரகம் முதலான பல நிலைகளில் பலவிதமான முடிவில்லாத துன்பங்களை ஒவ்வொரு ஜீவாத்மாவும் அனுபவிக்கிறார். கருணையால் படைக்கும் ப்ரஹ்மம், இப்படிப்பட்ட ஜகத்தைப் படைத்திருக்கக் கூடாது. -्கருணையால் படைக்கும் கடவுள் இன்பத்தை மட்டுமே கொடுக்கும் வகையில் தான் உலகத்தைப் படைத்திருக்க வேண்டும். ஆகையால் தன் நலனோ பிறர் நலனோ இல்லாதபடியால், ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க இயலாது.

பகவானின் ஒப்பற்ற லீலை
ஸித்தோந்தம் – 2-(லோகவத் ्து லீலா கைவல்யம்
– “உலகில் போல்; விளையாட்டு மட்டுமே
பரமாத்மா அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தாலும், அவர் செய்யும் ஸ்ருஷ்டி யானது லீலையான படியால், பிரயோஜனம் உடையது தான் என்று கூறுகிறார் வேதவியாஸர்.
லீலா என்றால் விளையாட்டு. அதாவது, ஒரு செயலைச் செய்யும் போது, அந்த க்ஷணத்தில் உண்டாகும் ஒரு அனுபவம்-ஆனந்தம் எதுவோ , அதற்காக மட்டும் செய்யப்படும் செயல் விளையாட்டு – லீலா ஆகும்.
லீலா கைவல்யம் என்றால் லீலை மட்டுமே என்று பொருள். மட்டுமே என்று சொல்வதற்கு ஒரு கருத்து உள்ளது – உலகத்தில் வேட்டை யாடுதல், பணம் வைத்து சூதாடுதல், பந்து முதலான பொருள்களை வைத்து விளையாடுதல்,-இவை அனைத்துமே விளையாட்டுகள். ஆனால், வேட்டையிலோ , சூதாட்டத்திலோ , அந்தக் காலத்திலும் ஒரு இன்பம்
ஏற்படுகிறது, பிற்காலத்திலும் சில பயன்கள் கிடைக்கின்றன- பந்துகளை வைத்து விளையாடுவது என்பது அக் காலத்தில் ஏற்படும் இன்பத்துக்காக மட்டுமே செய்யப்படும் விளையாட்டு. பகவான் செய்யும் ஸ்ருஷ்டியானது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இதைக் குறிப்பிடத் தான் கைவல்யம் என்கிற சொல்லை வேத வியாஸர் இடுகிறார்.
லோகவத் – உலகத்தில் அனைத்தும் பெற்ற ஒரு பேரரசரும் கூட பந்து முதலானவற்றை வைத்து விளையாடுவது போல்.
பராசர மஹரிஷி – “கிரீட₃தோ பா₃லகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய” – விளையாடும் குழந்தையில் செயல் போன்ற பகவானின் பணடப்புச் செயலைப் பார்” என்று பராசரர் கூறுகிறார்.
வ்யாஸர் – “மோத₃தே ப₄க₃வான் பூ₄தை : பா₃ல: கிரீட₃னகைரிவ” – ஒரு குழந்தை விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு இன்பம் அடைவது போல், பிரஹ்மம் இந்த உலகப் பொருள்களைக் கொண்டு விளையாடி மகிழ்கிறார்
ஆண்டாள் – “வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்”.
நம்மாழ்வார் – “மன்பல் உயிர்களும் ஆகும் பல மாய மயக்குக்களால் இன்புறும் இவ் விளையாட் டுடையான்”
கம்பர் – “உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்… அலகிலா விளையாட் டுடையார் அவர் தலைவர்”
கேள்வி 1-
எளிமையாகச் செய்யப்படும் செயல் தானே விளையாட்டாக ஆகும்? மிகவும் கஷ்டப்பட்டு இப்பேர்ப்பட்ட உலகத்தை பகவான் படைக்கிறார் என்றால், அது எப்படி லீலை யாகும் என்று?
பதில் 1: பகவான் ஸங்கல்பத்தால் மட்டுமே படைக்கிறார், ஸ்ரமப்பட்டு அல்ல. அதனால் இது லீலையாக ஆகலாம்

ஸ்ருஷ்டியின் உண்மை யான ப்ரயோஜனம்
கேள்வி 2 –
அவருடைய விளையாட்டு இன்பத்துக்காக நம்மைப் போன்ற கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் பல விதமான துன்பங்களை அனுபவிப்பது சரியா?
பதில் 2: பகவான் செய்யும் ஸ்ருஷ்டியின் உண்மையான பயனை வேதங்களும் ஆழ்வார்களும் வெளியிட்டுள்ளார்கள்.
நம்மாழ்வார் பாடுகிறார் – “சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் என்று எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்”, அதாவது, “இப்போது இல்லா விட்டாலும், பிற்காலத்தில் ஏதோ ஒரு சமயத்திலாவது இந்த ஸம்ஸாரத்தின் கொடிய தன்மையைப் புரிந்து கொண்டு ஜன்ம-மரணச் சுழலில் இருந்து விடுபட்டு ஒரு ஜீவாத்மா தன்னை வந்து வைகுந்தத்தில் அடைவான் என்கிற ஆசையால் தான் பகவான் இவ் வுலகத்தை மறுபடியும் மறுபடியும் உற்சாகம் குறையாமல் படைக்கிறார்” என்று. அதனால் பகவான் படைப்பதன் பிரயோஜனம் ஜீவாத்மாக்கள் முக்தி அடைவது தான்.
கேள்வி 3 – பிறகு இவ் விடத்தில் லீலா கைவல்யம் லீலை மட்டுமே பிரயோஜனம் என்று வேதவியாஸர் ஏன் கூறினார்?
பதில் 3 – உலகத்தில் வாழும் ஜீவாத்மாக்களால் பகவானுக்கு இரண்டு விதமான இன்பங்கள் (ரஸங்கள்) ஏற்படுகின்றன. -ஒரு பொருள் எப்படி பயன்பட வேண்டுமோ , அப்படி பயன்பட்டு நமக்கு இன்பத்தை அளித்தால், அதற்கு போக ரஸம் என்று பெயர். ஒரு பொருள், அதன் உண்மைத் தன்மை புரிந்து கொள்ளப் படாமல், தவறாக பயன்படுத்தப் பட்டு, அப்போதும் நமக்கு ஒரு இன்பத்தை அளித்தால், அதற்கு லீலா ரஸம் என்று பெயர்.
ஒரு குழந்தை ஒரு கைபேசியை எடுத்து, சரியாக ஒருவரை அழைத்துப் பேசினால், வியந்து போகிறோம்- போக ரஸத்தை அனுபவிக்கிறோம். அதே குழந்தை கைபேசியை என்னதென்று புரிந்து கொள்ளாமல், வாயில் வைத்து கடித்ததென்றால், அப்போதும் லீலா ரஸத்தைப் பெற்று இன்பப்படுகிறோம். இதே போல் தான் பகவானுக்கும்.
ப்ரஹ்லாதன், த்ருவன், ஆழ்வார்கள் முதலான உயர்ந்த ஜீவாத்மாக்கள், ஜீவாத்மாவின் உண்மைத் தன்மையை சரியாக புரிந்து கொண்டு, பகவானுக்குத் தொண்டு செய்கிறார்கள். அதனால் பகவான் போக ரஸத்தை அனுபவிக்கிறார். -நம்மைப் போன்ற அறிவிலிகளான பலரும் ஆத்மாவின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல், உலக இன்பங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதைப் பார்த்தும் பகவான் லீலா ரஸத்தை அடைந்து, மகிழ்கிறார்.-இப்படி இரண்டு ரஸங்களும் அவருக்கு கிடைத்தாலும், அநேகமாக 99% அவருக்கு கிடைப்பது லீலா ரஸம் தானே . -அதனால் தான் ’பிராசுர்யம்’ அதாவது ’மிகுதியைக் ’ கருதி, வியாஸர் “ஸ்ருஷ்டி லீலா ரஸத்துக்காகவே ” என்று கூறுகிறார்.

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை -தத்வ த்ரயம்–ஸூர்ணிகை -162-

சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஓன்று ஒன்றி யுலகம் படைத்தான் -என்றும் உய்ய வுலகு படைத்து -என்றும் விசித்ரா தேக சம்பத்தி ரீச்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா -விஷ்ணு தத்வம் -என்றும்
மாயன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை —ராமானுஜ நூற்றந்தாதி -என்றும்
அசித் அவிசேஷிதாந பிரளய ஸீ ம நி சமசரத கரண களேபரைர் கடயிதும் தயமான மநா -என்றும் சேதனர் உடைய உஜ்ஜீவனம் பிரயோஜனமாக ஜகத் சிருஷ்டி பண்ணினான்
என்று சொல்லுகிற இவ் வசனங்களுக்கு வையர்த்யம் வாராதோ -என்னில் வாராது –
எங்கனே என்னில் –-உபய பிரயோஜனமும் உண்டாய் இருக்கச் செய்தேயும் லீலையே பிரயோஜனம் என்ற இது ப்ராசுர்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை யாகையாலே
ரூப பிரகார பரிணாம கருதவ்ய வசத்தம விச்வம் விபர்யசிம் அன்யதசசச கர்த்தும்
ஷாமயன் ஸ்வ பாவ நியமம் கிமுதீ ஷசே த்வம் ஸ்வதந த்ரயம் ஐஸ்வர்யம் அபர்யநுயோஜய மாஹூ–
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –என்கிறபடியே நினைத்த படி செய்ய வல்ல சக்திமான் ஆகையாலே சகல ஆத்மாக்களையும் யுகபதேவ -சக காலத்திலேயே – முக்தராக்க வல்லனாய் இருக்கச் செய்தேயும் ஸ்வா தீன ஸ்வரூப ஸ்தித்யாதிகரான ஆத்மாக்களை
கர்மத்தை வ்யாஜி கரித்து கை கழிய விட்டு சாஸ்திர மரியாதையிலே வரவர அங்கீ கரிப்பன் என்று இருக்கிறது -லீலா ரச இச்சையாலே
இறே-லீலா விபூதி என்று இ றே இது தனக்கு நிரூபகம்-ஆகையால் இவ்விபூதியில் லீலையே ப்ரசுர பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
ஸூத்திர காராதிகள் எல்லாரும் சிருஷ்டி பிரயோஜனம் லீலையாகச் சொல்லுகையாலே
இவரும் -கேவல லீலை -என்று அருளிச் செய்தார் ஆயிற்று
––ஸூர்ணிகை -162)-

குற்றமற்ற படைப்பாளி பகவான்
3- வைஷம்ய -நைர்க்₄ருண்யே ந ஸா பேக்ஷத்வாத் ததா ₂ஹி த₃ர்சயதி
வைஷம்ய நைர்க்₄ருண்ய ந –
பகவானுக்கு வைஷம்யம் நைர்க்₄ருண்யம் என்ற தோஷங்கள் கிடையாது
வைஷம்யம் – பஷ பாதம் – ஒரு தலைப் பஷமாக இருத்தல். பகவான் உலகத்தில் தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் என்று பல விதமான பொருள்களை ஏற்றத் தாழ்வுகளோடு படைப்பதால் அவர் தன்னிச்சையாக சிலரை உயர்ந்தவராகவும் சிலரைத் தாழ்ந்தவராகவும் படாய்க்கிறார் என்கிற தோஷம்.
நைர்க்₄ருண்யம் – பல விதமான துக்கங்களை இவ் வுலகத்தில் படைப்பதால் கருணை யற்றவர் என்ற தோஷம்.-இவை இரண்டும் பரமாத்மாவுக்குக் கிடையாது என்கிரார் வ்யாஸர்.
ஸா பேக்ஷத்வாத் – படைக்கப்படும் ஜீவாத்மாக்களின் பாப-புண்யங்களை எதிர்பார்த்தே படைக்கிற படியால். படைப்புக்குப் பொதுவாக பகவான் காரணமாக இருந்தாலும், அந்தந்த ஜீவாத்மாவின் முன் வினைகளுக்கு ஏற்பத்தான் அந்தந்த ஜீவாத்மாவுக்குப் பிறவிகளைக் கொடுக்கிற படியால் அவருக்கு எந்த தோஷமும் வராது.
ததா ₂ஹி த₃ர்சயதி – அவ்வாறன்றோ வேதம் காட்டுகிறது
வேதம் – “ (ஸாது₄காரீ ஸாது₄: ப₄வதி, பாபகாரீ பாப: ப₄வதி) அதாவது’நல்லது செய்தவன் நல்ல பிறவியைப் பெறுகிறான், பாபம் செய்தவன் தீய பிறவியைப் பெறுகிறான்’.
பராசர மஹரிஷி – (நிமித்த மாத்ரம் ஏவாஸௌ ஸ்ருஜ்யாநாம் ஸர்க₃கர்மணி | ப்ரதா₄ந காரணீ பூ₄தா: யதோ வை ஸ்ருஜ்ய சக்தய: ||) அதாவது-“உலகத்தில் ஜீவராசிகளைப் படைப்பதில் பகவான் இரண்டாம் பஷக் காரணமாக (பொதுக் காரணமாக) இருக்கிறார்; ஏனென்றால் அந்தந்த ஜீவாத்மாவின் கர்மங்கள் (பாப புண்யங்கள்) தன் முதன்மையாக காரணமாக (சிறப்புக் காரணமாக) உள்ளன.”
ஒரு நிலத்தில் பல விதமான பயிர்களையோ மரங்களையோ வளர்க்கும் போது, பூமி நீர் முதலானவை பொதுக் காரணங்கள். அந்தந்த விதை தான் அந்தந்த மரத்திற்குச் சிறப்புக் காரணம் ஆகும். ஏன் மாமரம் வந்தது, பனை மரம் வரவில்லை என்று பூமியையோ நீரையோ கேட்டுப் ப்ரயோஜனமில்லை , விதை தான் அதற்குக் காரணம். -அது போல் ஸ்ரிஷ்டிக்குப் பொதுவாக பகவான் காரணமானாலும், ஏற்றத் தாழ்வுகளுக்கு அவர் காரணமல்ல, நம் கர்மங்களே காரணம். அதனால் அவருக்கு வைஷம்யமோ நைர்க்₄ருண்யமோ கிடையாது.

கர்மங்கள் எப்போதுமே இருக்கின்றனவா?
கீழ்ச் சொன்ன அர்த்தத்தில் பூர்வ பஷி ஓர் ஆஷேபத்தை எழுப்புகிறார். அதற்கான பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
4-ந கர்ம அவி பா₄கா₃த் இதி சேத் ந அநாதி₃த்வாத் உபபத்₃ யதே ச அபி உபலப்₄ யதே ச
ந கர்ம
– “கர்மம் அல்ல”அதாவது ஸ்ருஷ்டியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஜீவாத்மாக்களின் கர்மங்கள் காரணமல்ல
அவி பா₄கா₃த் – “தனித்து இல்லாத படியால்”, அதாவது ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரளயத்தின் போது “ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத்” அதாவது“ப்ரஹ்மம் மட்டுமே அப்போது இருந்தது, வேறெதுவும் இல்லை ” என்று வேதம் சொல்வதால் ஜீவாத்மாக்களே இருக்க வில்லை . அப்படி யென்றால், அவர்களின் கர்மங்கள் மட்டும் எப்படி இருக்கும்?
இதி சேத் ந – “இவ்வாறு கூறினால் அது தவறு” என்று வ்யாஸர் மறுக்கிறார்.
அநாதி₃த்வாத் – “ஜீவாத்மாக்கள் அநாதியான படியால்” – ஜீவாத்மாக்கள் எப்போதுமே இருக்கிற படியால்
அபி ச உபபத்₃ தே – “அநாதியான போதும் தனித்து இல்லாமை பொருந்துகிறது” – ஜீவாத்மாக்கள் அநாதி யானவர்கள் என்று கொண்டாலும் “ப்ரஹ்மம் மட்டுமே ப்ரளய காலத்தில் இருந்தது” என்று வேதம் சொல்வது பொருந்தும், -ஏனெனில் ப்ரலயத்தின் போது ஜீவாத்மாக்கள் அனைவருமே ப்ரஹ்மத்திடமிருந்து பிரித்து அறிய முடியாதபடி ஒன்றாக
ஒட்டிக் கொண்டிருப்பார்கள். ஸ்ருஷ்டியின் போது தான் தனித் தனி உடல்களாய்ப் பெற்று தனித்து அறியப் படுகிறார்கள்.
உபலப்₄ யதே ச – “காணப்படுகிறதும் கூட” – வேதமே ஜீவாத்மாக்கள் எப்போதும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.
“ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்”– “ஜ்ஞாந முடையவரான ஆத்மா உண்டாவதும் கிடையாது, அழிவதும் கிடையாது”
கேள்வி – ஜீவாத்மாக்கள் எப்போதுமே இருந்திருந்தாலும், அவர்களுக்கு எப்போதுமே கர்மங்கள் இருந்தனவா?
பதில் – “ஸூர்ய சந்த்₃ர மஸௌ தா₄தா யதா₂பூர்வம் அகல்பயத்” அதாவது “ஒவ்வொரு முறையும் முன்னிருந்தது போலவே உலகத்தை பகவான் படைக்கிைறார்” என்று வேதம் சொல்வதால், ஸ்ருஷ்டி என்பது எப்போதுமே நடந்து கொண்டே இருக்கிறது என்று தெரிகிறது. அப்படி யென்றால், ஜீவாத்மாக்கள் எப்போதுமே பிறந்து கொண்டு தான் இருக்க வேண்டும், அப்படி யென்றால் அவர்களுக்குக் கண்டிப்பாகக் கர்மங்களும் எப்போதுமே இருக்கத் தான் வேண்டும்.
ஆகவே , ஜீவாத்மாவுக்கோ அவரது கர்மங்களுக்கோ தொடக்கம் என்பதே கிடையாது. நாம் மோக்ஷம் அடையும் போது கர்மங்களுக்கு முடிவு மட்டும் உண்டு . கர்மங்களை அடி யொற்றியே பகவான் ஏற்றத் தாழ்வுகளை உலகில் படைக்கிறார்.

பாதத்தின் சுருக்கம்
5-ஸர்வத₄ர்மோப்பத்தே : ச
– “எல்லா பண்புகளும் பொருந்துகிறபடி யாலும்”
உபநிஷத்துக்களில் ஜகத் காரணப் பொருளுக்குச் சில பண்புகள் சொல்லப் பட்டுள்ளன. ப்ரதானம் அல்லது பரமாணு தான் ஜகத்காரணம் என்று கொண்டால், அந்தப் பண்புகள் எதுவுமே அவற்றுக்கு போருந்துவதில்லை . ஆனால் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று கொண்டால், அப் பண்புகள் அனைத்துமே அவரிடம் பொருந்துகின்றன.
எனவே , சேதனாசேதனங்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் ஜகத்காரணம் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவலியில் இந்தப் பாதத்தைச் சுருக்கமாகக் காட்டுகிறார் –
(1) ஸாங்க்₂ய ஸ்ம்ருத்யா விரோதா₄த்
(2) விதி₄மதவிஹதே :
(3) கார்ய வைரூப்யத: அஸ்மிந்
(4) ஏகார்த₂ அநேக தந்த்ரோதி₃த விஹததயா
(5) தே₃ஹபோ₄க₃ வியுக்த்யா |
(6) கார்யோ பாதா₃ந பே₄தா₃த்
(7) ஸ்வஹிதவிஹதித:
(8) காரகஸ் தோமஹாநே :
(9) க்ருத்ஸ்நாம்சாத்₃யூஹபா₃தா₄த்
(10) க்ருதிவிப₂லதயாபி உத்தி₂தம் ப்ரத்ய வித்₄யத் ||

1-ஸ்ம்ருத் யதி₄கரணம் – ஸாங்க்₂ய ஸ்ம்ருதியோடு முரண் பட்டாலும் ஸ்ம்ருதி தான் தவறானது, வேதம் அல்ல.
2-யோக₃ப்ரத்யுக்த் தி₄கரணம் – நான்முகனே கூறி யிருந்தாலும் வேதத்தோடு முரண்பட்டால் தவறானதே .
3-விலக்ஷணத்வாதி₄கரணம் – காரணமும் காரியமும் ஒரே தன்மை களோடு இருக்க வேண்டும் என்கிற தேவை யில்லை .
4-சிஷ்டா பரிக்₃ரஹாதி₄கரணம் – பல மதங்கள் பரமாணுவே ஜகத் காரண மென்று கூறினாலும் வேதம் சொல்வதே சரி

5-போ₄க்த்ரா பத்த் யதி₄கரணம் – சேதனா சேதனங்களை உடலாகக் கொண்டாலும் ப்ரஹ்மத்துக்கு இன்ப துன்பமில்லை

6-ஆரம்ப₄ணாதி₄கரணம் – காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்றென்பதால் ப்ரஹ்மமே இந்த உலகமாகும்

7-இதர வ்யபதே ₃சாதி₄கரணம் – ப்ரஹ்மத்தை விட ஜீவாத்மா வேறானபடியால் ப்ரஹ்மம் தனக்குத் தீமை தேடவில்லை .

8-உபஸம்ஹார த₃ர்சநாதி₄கரணம் – கருவிகள் எதையும் எதிர்பார்க்காமலேயே ப்ரஹ்மம் உலகைப் படைக்க முடியும்.

9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த் யதி₄கரணம் – அவயங்களே இல்லா விட்டாலும் ப்ரஹ்மம் தான் ஜகத் காரணம், வேதம் சொல்வதால்.

10-ப்ரயோஜநவத்த்வாதி₄கரணம் – ப்ரஹ்மம் உலகைப் படைப்பது விளையாட்டாக,லீலா ரஸத்துக்காகவே

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    Leave a Reply


    Discover more from Thiruvonum's Weblog

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading