Archive for the ‘பெரிய திரு மொழி’ Category

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -ஆறாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

July 4, 2019

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-பிரவேசம்

இவருக்கு உகந்து அருளின நிலங்களில் உண்டான ருசியைப் பற்ற ஸ்ரீ ஈஸ்வரன் இங்கே வைத்தான் –
சப்தாதி விஷயங்களும் இந்நிலத்திலேயாய் இருந்தது –
நீர் மனிசரைக் கரையினிலே நிறுத்தினால் பழைய வாசனையாலே நீரிலே போய்ப் புகுமா போலே
உகந்து அருளின நிலங்கள் இங்கே உண்டானாலும் விஷயங்கள் பரிமாறுகிற இடத்தில் உண்டான இருப்பு
அவற்றில் கை கழிய போகைக்கும் உடலாய் இருக்கையாலே
ஸ்ரீ ஈஸ்வரனுக்கும் இவருக்கு இங்கனேயும் ஒரு நினைவு உண்டோ -என்று
கை கழிய விடுகைக்கு உடலாய் இருக்கையாலே-சாஷாத் கரித்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான ருசியையும்
விட்டு அல்லது நிற்க ஒண்ணாத படி சம்சாரத்தில் பிறந்த அருசியையும்
அவன் திரு உள்ளத்தில் படும்படி-விண்ணப்பம் செய்கிறார் –
ஆத்மவஸ்து பகவத் அர்ஹம் அல்லாமை அன்று இறே –

அநாதி காலம் சம்சரித்தது அசித் ப்ரத்யா சத்தியாலே இறே-ஆன பின்பு-இத்தை தவிர்த்துக் கொள்ள வேணும் இறே –

இத்தால் –
வேண்டேன் மனை வாழ்க்கையை -ஒரு கால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லிக் கூப்பிடுகிறார் –

————————

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1- பிரவேசம் –

சம்சாரத்தில் தமக்கு உண்டான அருசியை விண்ணப்பம் செய்தார் –
விண்ணப்பம் செய்யச் செய்தேயும் கடுக வந்து அத்தைத் தவிர்த்து தன்னைக் கொடு நிற்கக் கண்டிலர்
காணாமையாலே
முன்பு அநாதி காலம் அவற்றை விரும்பி தன்னை நெகிழ்ந்து போந்தோம்
இப்போதும் அவ்வாசனையைக் கொண்டு அவற்றை விரும்பி தன்னை நெகிழ்ந்து இருந்தோம் -என்று
நினைத்து இருந்தானாக வேணும்
பூர்வ வருத்தத்தை ஸ்மரிப்பித்து அதில் எனக்கு ருசி இல்லை என்னும் இடத்தை
ஸ்ரீ சர்வஞ்ஞன் திரு உள்ளத்திலே படுத்தி
கடுக கிட்டலாவது ஒரு சாதனத்தை பரிக்ரஹித்து கொடு நிற்க வேணும் -என்று பார்த்து
அதுக்கு உறுப்பாக அநாதிகாலம் தாம் சம்சாரித்து போந்த படியையும்
அது தன்னில் ஜன்ம பரம்பரைகளில் கை கழிந்த படியையும்
அர்த்த காமங்களை விரும்பிப் போந்த படியையும்
இந்த்ரிய வச்யனாய் போந்த படியையும்
இப்போது மேல் வரக் கடவ நரகாநுபவத்தை நினைத்து அஞ்சுகிறபடியையும்
விண்ணப்பம் செய்து
இவை என்னால் கழித்துக் கொள்ளல் ஆவது அன்றிக்கே இருந்து
என்னுடைய இக்குற்றங்கள் ஒன்றையும் பாராதே-தேவரோடு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையே பார்த்து
ஸ்ரீ பிராட்டி புருஷகாரமாக என்னை ஸ்வீகரித்து அருள வேணும்
என்று திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார் –

—————–

துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1- பிரவேசம் –

வண்டுண் நறு மலரிலே -வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே -என்று
தாம் பல காலும் விண்ணப்பம் செய்த வார்த்தை சஹ்ருத்யம் என்று ஸ்ரீ அப்பன் திரு உள்ளத்தில் படும்படியாக
பொறுத்தேனில் -அம்மனை வாழ்க்கையிலே அந்வயித்து அவற்றால் தாம் மாறுபடுருவ கிலேசப்பட்ட படிகளையும்
தத் தேதுக்களையும் விண்ணப்பம் செய்து – இவ் வநிஷ்டமான வாழ்க்கையை தவிர்த்து
எனக்கு இஷ்டமான உன் தாளிணைக் கீழ் வாழ்ச்சியை நான் பெறும்படி பண்ணித் தந்து அருள வேணும்
என்று திருவடிகளிலே சரணம் புகுகிறேன் -என்கிறார் –

ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஒரு ஸ்வ பாவம் உண்டு-அநாதி காலம் சம்சாரித்துப் போந்தான் ஒருவன்
சம்சாரத்தில் விரக்தி பிறந்து-இத்தை வேண்டேன் என்று இதில் தோஷங்களை சொல்லிக் காட்டுவது
இத்தைத் தவிர்த்து தர வேணும் என்று சரணம் புகுவதானாலும்
திரியவும்-பூர்வ வாசனையாலே அவற்றில் சில பாசம் கிடக்க அடுக்கும் என்று
அவற்றில் தன்னால் ஆராயும் அளவிலே ஆராய்ந்து
தனக்கேயாக-அவற்றில் கடையறப்பாசங்கள் விட்டார்க்கு அன்றி கார்யம் செய்யான் –
ஆகையாலே -பொறுத்தேன் -என்று கீழ் இவர் சொன்ன வார்த்தைகளைத் -தனித் தனியே ஆராய்ந்து
இவற்றில் அறவிடாதே-எத்தை இன்னும் அனுசந்திக்கப் பார்த்தீர் -என்றாப் போலே கேட்க
அவற்றில் தமக்கு அவிருத்தமாய் விடாதே ஒழிய நினைத்தவற்றையும்-விருத்தமாய் விட நினைத்தவற்றையும் –
விண்ணப்பம் செய்து-குலவானவர் தம் கோதா -என்று கீழ் சொன்ன தேச விசேஷ பிராப்தியில்
தமக்கு உள்ள த்வரையும் அறிவித்துத் தலைக் கட்டுகிறார்
பொறுத்தேன் பதிகத்தில் முதல் பாட்டில்-பொருள் இன்பம் -இவற்றில் பிரதானமான இன்பத்தில்
நீர் நின்ற நிலை என் என்ன -சொல்லுகிறார் –

———————–

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1- பிரவேசம் –

வினைகள் நலியாமை நம்பு நம்பீ-என்றார்-அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட்டு இருக்க –
அத்தனை க்ரமம் பார்த்து ஆறி இருக்க ஒண்ணாத படி ஆற்றாமை விஞ்சிற்று –
சேஷ பூதன் சேஷி செய்த படி செய்யக் கண்டு இருக்கும் அது ஒழியக்
கால் கட்டி நிர்பந்திக்கக் கடவன் அல்லேன் இறே-
அம்முறை பார்த்து நிற்க ஒண்ணாத படி ஆற்றாமை கரை புரளுகையாலே இனிச் செய்யும் அது எத்தனை -என்று பார்த்து
சரீர விச்லேஷத்து அளவும் இருந்து அர்ச்சிராதி மார்க்கத்திலே ஒரு தேச விசேஷத்திலே கொடு போய்
தன்னை அனுபவிப்பிக்கும் அளவும் செல்ல
அவன் வைத்த தண்ணீர் பந்தலிலே ஒதுங்குவோம் என்று பார்த்தார் –
அதாகிறது
அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூ கமாஸ்வே-என்கிறபடியே
அத்தோடு போலியாக சொல்லலாய் இருக்கிற உகந்து அருளின நிலங்களிலே அனுபவிக்கை இறே –
பிரஜையினுடைய ஆர்த்திக்கு உதவுகைக்காக மாதா பிதாக்கள் சேர இருக்குமா போலே
ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பிராட்டியும் கூடே வந்து சந்நிதி பண்ணுகிற ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு அனுபவிக்கப் பார்த்தார்
அத்தை ஒழிய வேறு சிலவற்றை அனுபவிக்கும் இடத்தில் அதுக்கு பரிகரம் சரீரமே
அது தான் பரிணாமி ஆகையாலே ஒரு நாள் இருந்த படி இராதே-ஷணம் தோறும் வேறுபடா நிற்கும் இறே
அந்த சரீரம் கொண்டு அனுபவிக்கும் இடத்தில் அதுக்கு விஷயம் ஸ்திரீகளே
அவர்கள் ஆகிறார் –
இவன் பக்கல் ஏதேனும் சில உபாதியைப் பற்ற சில நாள் ஸ்நேஹித்து அது போனவாறே அவனை அநாதரித்து
உபேஷாவாதத்தைப் பண்ணி-பரிபவிக்குமவர்களாய் இருந்தார்களே -ஆனபின்பு அவர்களை விட்டு
சர்வ அவஸ்தையிலும் சென்று பற்றலாம் படி ஸூலபனாய் தான் சந்நிஹிதனுமாய்க் கொண்டு
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திரு நறையூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
மோஷார்த்தமாக யத்தனித்த நீ-அதில் தோள் மாறும் அளவும் செல்ல அத்தோடு போலியாய் சொல்லலாயிருக்கிற
ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு ஆஸ்ரயிப்போம் வா -என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –

————————

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி இடங்கைச் சங்கம் உடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே –6-5-1-பிரவேசம் –

ஸ்திரீகள் உடைய பரிபவத்துக்கு பரிஹாரமாக ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு ஒதுங்குகை அன்றிக்கே
அங்கே போய்ப் புகவே அம்ருத மதனம் தொடக்கமான அபதானங்களைப் பண்ணி தேவ ஜாதிக்கு உபகாரகனாய் –
ஆஸ்ரிதருக்கு உதவும் ஸ்வ பாவனாய்-
உதவும் இடத்து ஸ்ரீ பிராட்டிமாரோடு ஆஸ்ரிதரோடு வாசி அற உதவும் ஸ்வ பாவன் வந்து நிற்கையாலே
அவ்வருகே உள்ளவை எல்லாம் அவன் தானே தலைக் கட்டித் தரும் –
அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே முக்த ப்ராப்யமான பூமியோடு போலியான தேசம் என்று
அத்தேசத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

————————-

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1- பிரவேசம் –

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனானவன் வந்து நிற்கிற தேசம் ஸ்ரீ திரு நறையூர் என்று அனுசந்தித்தார் –
நமக்கு அந்த ஸ்நேஹமும் இன்றிக்கே தாந்தரும் அன்றிக்கே இருக்கிற நாம் ஆஸ்ரயிக்கும் படி எங்கனே -என்கிற
திரு உள்ளத்தைக் குறித்து
தான் துர் மாநியுமாய்-ஸ்நேஹமும் இன்றிக்கே இருக்கிற ராஜா தான் ஸ்ரீ மார்கண்டேய பகவானைப் போலே
தேவதாந்திர பஜனம் பண்ணி-அங்கு தன்னுடைய அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளப் பெறாமையாலே
இங்கே வந்து பக்ன அபிமானனாய் திருவடிகளிலே விழுந்து ஆஸ்ரயித்து ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டையும் பெற்றுப் போனான் –
ஆனபின்பு-ஸ்ரீ திரு நறையூரை ஆஸ்ரயி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து
பர உபதேச பிரவ்ருத்தர் ஆகிறார் –
ஸ்ரீ நம்பி ஒரு வாள் கொடுத்து அருள அத்தைக் கொண்டு பூமியை அடைய தன் காலின் கீழே
இட்டுக் கொண்டான் -என்று ஒரு பிரசித்தி உண்டாய்த்து –

——————————–

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே–6-7-1- பிரவேசம் –

ராஜ்ய லாபத்துக்காக ஆஸ்ரயிக்கை அன்றிக்கே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைக் கொண்டான் என்னை –
ஆனபின்பு ஆபன்னர்க்கு எல்லாம் புகல் அவன் அல்லது இல்லை –
இப்படி இருந்த பின்பு எல்லாரும் அத்தேசத்தில் போய்ப் புக்கு அவனை அனுபவிக்கப் பாருங்கோள்- என்கிறார்-
புனஸ்ஸ
நான் சொன்ன ஹிதத்தில் நாட்டாருக்கு அபேஷை இல்லை யாகிலும்
எனக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்திலே ருசியைப் பிறப்பித்து
அதுக்கு விரோதியையும் போக்கின அவன் அல்லது ஆபன்னார்க்கு புகல் இல்லை
ஆனபின்பு அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசமே ஆஸ்ரயநீய ஸ்தலம் என்கிறார்-

———————-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1- பிரவேசம் –

இந்த்ராதி தேவதைகள் தன்னைக் கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே பிரயோஜனாந்தரங்களை அபேஷிக்க
அவர்களுக்காக தன்னைப் பேணாதே இரப்பாளன ஆக்கி –
கடல் கடைந்தும்-இப்படி அபேஷித சம்விதானம் பண்ணும் அவனை
நான் உத்தேச்யனாகப் பற்றி
அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற திரு நறையூரிலே நான் காணப் பெற்றேன் –
அத் தேசமே உத்தேச்யம் -என்கிறார் –

——————————

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர்கெடுத்த திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே —6-9-1- பிரவேசம் –

நான் சென்று நாடி நறையூரிலே கண்டேனே -என்று
ஆஸ்ரயநீய வஸ்துவை ஒரு தேச விசேஷத்தில் போய் காண்கை அன்றிக்கே
சம்சார பூமியிலே-ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெருகையால் வந்த அலாப்ய லாபத்தால் ஹ்ருஷ்டர் ஆனார் –
அவனைக் காணப் பெற்ற பின்பு-அவன் ஸ்வரூபத்துக்கும் நம் ஸ்வரூபத்துக்கும்
அனுரூப்மான வ்ருத்தி விசேஷத்தை பண்ணப் பார் கிடாய் நெஞ்சே
என்று திரு உள்ளத்தைப் பார்த்து அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ திரு நறையூரிலே திர்யக்குகளும் அகப்பட பேடை பிரதானமாய்த்து இருப்பது –
ஆகையால் அங்கு நிற்கிற ஸ்ரீ நம்பிக்கும் ஸ்ரீ பிராட்டி பிரதாந்யம் உண்டாகக் கடவதே
ஆகையால் ஆஸ்ரயநீயதை குறைவற்ற தேசம் ஆயத்து –

ஷணம் தோறும் ஸூகுமாரராய் இருக்குமவர்கள் முகத்திலே நீர் ஏறிட்டுக் கொள்ளுமா போலே
பிராப்தி அளவும் பிரபத்தி பண்ணா நிற்பார் ஆயத்து
சக்ரு தேவவுக்கு -சஹ சைவ -என்று ஸ்ரீ ஆழ்வான் நிர்வஹிப்பதோர் பொருள் உண்டு இறே-
ஒரு ஜென்மமாக பிரபத்தி பண்ணுமது சாலவும் அசக்ருத்தாய் இருந்ததோ
பெற்ற பேற்றைப் பார்த்தால் -என்று அருளிச் செய்தார் ஸ்ரீ எம்பார் –
பகவல் லாபம் ஒழிய புறம்பு தரிக்க வல்லர் அல்லர் –
இது ஒழிய வேறு ஒரு உபாயம் உண்டு என்று இருக்குமவர் அல்லர் –
வேறு ஒரு உபாயம் உண்டு என்று இருக்கும்படி அன்று இறே இதில் உண்டான நிலை –

————————–

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1–பிரவேசம் –

திரு உள்ளத்தைக் குறித்து -திருவடிகளிலே சரணம் புகு -என்றார் –
சரணம் புகுகைக்கே ஈடாக இங்கு எல்லாம் சரண்யதை குறை வற்றதோ என்ன –
அவனுடைய திரு நாமம் கேட்டு அறிவது இல்லையோ -என்கிறார் –
ஆஸ்ரித சுலபனாய் –அதி மானுஷ சேஷ்டிதங்களை உடையனாய் –விரோதி நிரசன சீலனாய் – உபய விபூதி உக்தனாய் –
இருக்கிற இருப்புக்கு வாசகமான திரு நாமத்தோடே – ஸ்ரீயபதித்வத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார் –

———————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – ஆறாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

July 4, 2019

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-

அர்த்தித்து நின்று பெற்ற அவ்விடம் தன்னிலே நின்றே அண்டங்கள் உடன் கூட பூமிப் பரப்பை அளந்து கொண்டவனே
நான் இதர விஷயங்களில் பிரவணனாய் உன் பக்கலிலே வைமுக்ய்யம் பண்ணிப் போரா நிற்கச் செய்தேயும்
இவ்வளவும் வர என் சத்தை அழியாமல் நோக்கிக் கொண்டு போந்தவனே –
அநாதி காலம் சத்தையை நோக்கி கொடு போந்ததின் பலம் நீயே பெற வேண்டி இருந்தாய் ஆகில்
என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் –
இன்னும் இவனுக்கு சம்சார வாசனை கழிந்தது இல்லை என்று இருக்க வேண்டா
எனக்கு லோக யாத்ரையில் ருசி இல்லாமையைத் திரு வுள்ளம் பற்ற வேண்டும் –என்கிறார் முதல் பாசுரத்தில்

தேவ ஜாதி அம்ருதத்தை புஜித்து உஜ்ஜீவிக்க அந்த அம்ருதம் தான் கோதாம் படியாக வந்து
தோற்றின ஸ்ரீ பெரிய பிராட்டியாரை லபித்தது அவ்வழி யாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு உபகரித்தவனே –
ஜனனி பக்கல் பண்ணும் உபகாரம் பிரஜைகளுக்காய் இருக்கும் இறே
அச் சேர்த்தியை நான் கண்டு அனுபவிக்கும் படி – என் பக்கலில் கிருபையைப் பண்ணி அருளி வுதியாகில்
அத்தேவ ஜாதி உன்னைக் கொண்டு பூண் கட்டிக் கொள்கிற சம்சார யாத்ரையை வேண்டேன் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அம்புக்கு கூர்மையாய் போய்ப் புக்கு பிரதி பஷத்தை அழியச் செய்து
அந்த விஷய அபதானத்தை அவன் செய்தான் -என்று விருது ஊதித் திரியும்படி பண்ணிணவனே –
ஓர் அபதானம் பண்ணினேன் என்று விருது ஊதித் திரியும்படி பண்ண வேண்டா
ஸ்வரூப விரோதியைக் கழித்து ஸ்வரூப அனுரூபமான பேற்றை பண்ணித் தர வேணும் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

என் பக்கல் அகடிதகடங்களை கடிப்பிக்க வேண்டா -உன்னைக் காண்பதொரு வகை அருள வமையும் –
என் தலையால் வரும் அம்சத்தில் கண் அழிவு இல்லை –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

வாச்யங்களுக்கு எல்லாம் தன் பக்கலிலே இருப்பாம்படி இவற்றுக்கு ஆதார பூதனாய் நிற்கும்படி சொல்லிற்று
வாசக ஜாதத்துக்கு எல்லாம் பிரதானமாய் இருக்கிற அகார சப்த வாச்யன் ஆனவனே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நீ ஜகதாரரானாய் சர்வாதிகனாய் இருப்புதி என்று பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
உன்னுடைய அசாதாராண ஆகாரத்தை நான் சாஷாத் கரிக்கும் படி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி
யருளிவுதி யாகில் –
நானும் மெய்யே இத்தை அருவருத்தேன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிரணவம் பர ஸ்வரூபத்தை ஒன்றையும் சொல்லுகிறதோ-ஆத்மவஸ்து ஸ்வரூபத்தையும் சொல்லுகிறதோ -என்றால்
இரண்டையும் சொல்லா நின்றது இறே
ஆத்மா நம் யுஞ்ஜீத -என்றும்-ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும்
பிராமணருக்கு தனமான வேதத்தில் இன்னிசை உண்டு ஸ்வர ரூபமான பிரவணம் –
அத்தால் பிரதிபாத்யனாய் உள்ளவனே –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

வைத்த வளையமும் நீயுமாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னுடைய இதர விஷயத்தில் பிராவண்யத்தை தவிர்த்த
சுத்தியை உடையவனே –உன்னை ஒழிந்த விஷயங்களில் ருசியை போக்கின நீயே
நான் கண்ணாலே காணலாம் படி என் பக்கலிலே கிருபையை பண்ணுவுதியாகில்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தேவர்களுக்கு எல்லாம் பிரதானராய் அதிகாரி புருஷர்களாய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை
சரீரதயா சேஷமாக உடையவனே –
எனக்கு இங்கனே இருப்பதொரு அதிகாரத்தைத் தந்து கால்கட்டாம் அது எனக்கு வேண்டா
அவர்கள் அதிகாரங்களில் எனக்கு ருசி இல்லை –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

நல்ல சந்தஸ்ஸூக்களை உடைத்தான இவற்றை அப்யசிக்க வல்லார்கள்
இவர் வேண்டேன் என்றதை தவிர்ந்து-அருளுதியேல் -என்ற பேற்றைப் பெறுவார் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————–

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1-

நமக்கு தஞ்சமாவார் யார் -என்று ஆராயக் கடவன்-அவ்வளவில் நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று
நான் விபரீதத்திலே கை வளருகிற நாளே தொடங்கி எண்ணித் ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே
திருவடிகளில் வந்து சரணம் புகுந்தேன் என்னும் அளவாய் ஆய்த்து இறே இங்கே வந்து நின்றது –
என்கிறார் முதல் பாசுரத்தில்

திரு மார்பா –உன்னுடைய ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து ஸ்வீகரிப்பிக்கும் ஸ்ரீ பிராட்டி அன்றோ அருகே இருக்கிறாள் –
அவள் ஏதேனும் தப்புச் சொல்லிலும் விடேன் என்னும் நீயும்-உன் ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து உன்னை இட்டு
ஸ்வீகரிப்பிக்கும் அவளும் இருவரும் இங்கே சந்நிதி பண்ணுகையாலே தேவர் திருவடிகளுக்கு தகுதியானேன் –
கலங்கா பெரு நகரம் இருப்பாய் இருக்க அவ்விடத்தை விட்டு ஸ்ரீ பிராட்டியோடு கூட
எய்த்தாரை எடுக்கைக்காக திரு விண்ணகரிலே சந்நிஹிதனாய் – நான் எய்த்துக் கொடு நின்றேன் –
எய்த்தாருக்கும் எய்த்தாரை எடுக்க வந்து நிற்கிறவர்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லையோ –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

விபூதி த்வயத்தையும் தனக்கு பிரகாரமாக உடையனாய் இருந்து வைத்து என்னைப் பெறுகை தனக்கு தேட்டமாக வந்தான் ஆய்த்து –
இன்னும் வரத்தும் போக்கும் உண்டு என்று தோற்றாதபடி ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான் ஆய்த்து –
அறு காத பயணத்துக்கு பொதி சோறு கொண்டு போம் விஷயம் இங்கே சந்நிஹிதம் ஆய்த்து –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –
இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்-இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே
என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே-அது இப்போது வாரா உதவிற்று
இவருக்கு இப்புத்தி விசேஷத்தை பண்ணுவித்து ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிதி பண்ணி யாய்த்த்து
அர்ஜுனன் உடைய தேர்த் தட்டு போலே யாய்த்து ஸ்ரீ திரு விண்ணகர்
அர்ஜுனனுக்கு அருளிச் செய்த வார்த்தை அவனோடு ஒத்த சம்பந்தம் உடையார்க்கு எல்லாமாம் இறே-
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஐஸ்வர்யம் பிரத்யஷம் நீர் ஆசைப்படுகிறது அதீந்த்ரம் என்ன ஒண்ணாத படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து நிற்கிறது –
கைங்கர்ய சாம்ராஜ்யத்தை தருகைக்கு அன்றோ இந்நிலை -என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மதிளையும் அரணாகப் போம் படி கடலையும் உடைய இலங்கையை அழியச் செய்த –
அந்த வில் கொண்டு வியாபாரிக்க அங்கே வந்து முகம் காட்டப் பெற்றது இல்லை என்ன
அந்த பிரதி பஷத்தை அழியச் செய்து அங்கனே போனாயோ-போக்குக் காட்டி இங்கே அன்றோ வந்து புகுந்தது –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

என்னுடைய பூர்வ வ்ருத்தத்தைப் பார்த்தால் தேவர் சீற வேண்டும்படியாய் இருக்கும்
நான் சர்வ தோஷ உக்தனாய் இருந்தேன்-நீ சர்வஞ்ஞனாய் இருந்தாய்
ஆனபின்பு -நம்மையும் தன்னையும் பாராதே
இவன் நிர்தோஷரைப் போலே நம் காலைப் பிடிப்பதே என்று சீறாதே -சீறாமை போராது
இத்தை திரு உள்ளத்தே கொண்டு அருள வேணும்-
விச்வச நீயனான நீ சந்நிஹிதனாய் இருக்க பயாவஹமான பதார்த்தங்களுக்கு அடிமை செய்து திரிய வேணுமோ –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

மூவா வானவர்–அகர்ம வச்யராக்கி அவர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்து
அவ்வழியாலே அவர்கள் சத்தையை நிர்வஹித்துக் கொண்டு போர நின்றாய்-
பிராதாக்களில் ஒருவன் முடி சூடி வாழா நிற்க-ஒருவன் சிறைப் பட்டு கிடந்தால் போலே தோற்றா நின்றது யாய்ற்று –
என்னுடைய ஷயத்தை போக்குகைகாக நீயே வந்து சந்நிஹிதனாய் இருக்க
நான் பிறருக்கு அடிமை செய்து திரியவோ -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரம் தோற்ற சொன்ன வார்த்தை ஆகையாலே
மறுக்க ஒண்ணாத படி உஜ்ஜ்வலனாய் கொண்டு என் ஹிருதயத்தில் பிரகாசித்தவனே –
இப்படி பிரகாசிக்கிறவன் தான் ஆர் என்னில் வேதைக சமதிகம்யன் –
ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே காணலாம் படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து
சந்நிதி பண்ணின உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்தும் வல்லார் –அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-

துறப்பேன் அல்லேன் இன்பம் –சுகத்தை சந்யசிப்பேன் அல்லேன்
துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன் –சுகத்தை துறவாமை யாவது உன்னுடைய வடிவை மறவாதே இருக்கை
என்றும் மறவாது யான் உலகில் பிறப்பேனாக எண்ணேன் –மறவாமையால் பெற்றது பிறவாமை
நின் திறத்தேன் ஆன தன்மையால் -பிறவாமை பெற்றது-ஸ்ரீ திரு விண்ணகரானே –
உன் திறத்தேனாக பெற்றது நீ சந்நிஹிதன் ஆகை –என்கிறார் முதல் பாசுரத்தில்

ராவண பவனத்தை விட்டு ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே
அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம் ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன்
பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் –
இவனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஔபாதிகமாய்-ஈஸ்வர பாரதந்த்ர்யம் ஸ்வா பாவிகமாய் இருக்கும் இறே –
நீயே வந்து புகுகிற இடத்தில்-நான் விலக்கிற்றிலேன்-என்ற படி-அநந்ய கதியை விடில் நிர்க்க்ருணன் ஆம்
பிராட்டிக்கு அநபிமதம் செய்யில் பிரணயி யன்றிக்கே ஒழியும்ஆக-ஸ்வரூபமும் பிரணயித்வமும்-இரண்டும் இழவாம்
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அத்தைத் தப்பி திருவடிகளிலே ஒதுங்கின இடம் தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே ப்ராப்த விஷயமாய் இருந்தது –
ஸ்ரீ பரம பதம் கலவிருக்கையாய் இருக்க இவரோடு கலந்து சேர்த்துக் கொள்ளுகைக்காக
ஸ்ரீ திருக் குருங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனவன்-
பிரஜையினுடைய ஆர்த்திக்கு உதவுகைக்காக மாதா பிதாக்கள் சேர இருக்குமா போலே
தமக்காக ஸ்ரீ திரு நறையூரிலே நிற்கிற நிலையை அனுசந்தத்த வாறே இனிதாக நின்றது
ஸ்ரீ பட்டர் -ஸ்ரீ திரு நறையூர் பெருக்குக்கு சினையாறு படுகிறது கிடாய் -என்று அருளிச் செய்வர் –
காட்சியிலே சகல தாபங்களும் ஆறும்படியான ஜல சம்ருத்தியை உடைய ஸ்ரீ திரு விண்ணகரிலே
நீ வந்து சந்நிஹிதன் ஆகையாலே அந் நோக்குக்குத் தப்பி திருவடிகளிலே வந்து கிட்டப் பெற்றேன் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

நினைவு இன்றிக்கே இருக்க ஸ்ரீ மதுரையிலே உறங்குகிறவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலே
திருவடிகளிலே வந்து கிட்டிக் கொடு நிற்கக் கண்டேன் –
உன்னை கிட்டுகைக்கு மூல ஸுஹ்ருதமும் நீயே -என்கிறார்
ஸ்ரீ சர்வாதிகனான உன்னைக் கிட்டி என்னுடைய பிராப்தி பிரதிபந்தகமான பாபங்களை அடியைப் போக்கினேன் –
ராவணனாலே நெருக்குண்டு புகலிடம் அற்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு புகலாகக் கடவதாக
கடல் கரை வெளியிலே எடுத்துவிட்டு நின்றால் போலே
சம்சாரத்திலே விஷயங்களாலே நெருக்குண்டு நோவு படுகிற எனக்கு புகலாகஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து
சந்நிஹிதன் ஆகையாலே-அத்தைத் தப்பித் திருவடிகளிலே வந்து புகுந்தேன் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பெரு மிடுக்கனான ராவணனை அழியச் செய்த வருத்தம் உண்டோ என்னுடைய பிரதிபந்தகங்களைப்
போக்கி சேர விட்டுக் கொள்ளுகைக்கு –எனக்காக வந்து நிற்கிற இடம் ஸ்ரீ திருவிண்ணகர் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இப்படி ஜகதா காரனாய் இருக்கிற உன்னை –-நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன் –
இவ்வாத்மாவுக்கு நீயே சேஷி-உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –
தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயநீயனாக நினைத்து இரேன் –
இப்படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய ஸ்ரீ பர தத்வமும் அறியேன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நான் ஒரு அநந்ய கதி -என்கிறார்-இதர தேவதைகளை வாயாலே பேசேன் –-அவ்வளவே அன்றிக்கே
நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன்
ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த் தோற்றிற்று ஆகிலும் அத்தை விச்வசியேன் –
சர்வாதிகனாய் இருக்கிற நீ ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய்
நீயே ஆஸ்ரயநீயன் என்று அறிவித்த பின்பு இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல் பரத்வ பிரதிபத்தி பண்ணேன் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே-தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து
அவதானத்தைப் பண்ணி-அநவரதம் மநோ ரதிக்கும் படியான தெளிவை உடைய எனக்கு
புநராவ்ருத்தி இல்லாத மோஷத்தை தரப் பார்த்தது என்று அத்தைத் தருகைகாக வந்து நிற்கிற நீ
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீயபதியான உன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கும் படியான வைலஷண்யத்தை உடைய என்னை-
எனக்கு அதி தூரத்திலே வர்த்திக்கிற கர்மங்கள் என்னை நெருக்காத படி நீ அங்கீ கரித்து அருள வேணும்-
நம்பீ-ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் மிகையாம் படி அன்றோ தேவரீர் உடைய பூர்த்தி –
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் -என்று
அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூர்ணன் அன்றோ –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும்-இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில்
கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள்-போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா
அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————–

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1-

இப்படி ஜகதா காரணனாய் வேத பிரதிபாத்யன் ஆனவன்-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-என்று இறே-சொல்லுகிறது –
அந்த வேதோக்தமான சர்வ கர்ம சமாத்ராத்யன் ஆனவன்
சம்சாரிகள் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக கிட்டி வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை ஆஸ்ரயிப்போம்
ஒருப்படு என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் முதல் பாசுரத்தில்

அவன் நமக்காக வந்து நிற்கிற தேசத்திலே நாமும் புக்கு ஆஸ்ரயிப்போம் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று போகலாம்படி அவன் வந்து நித்ய வாஸம்
பண்ணுகிற தேசத்தை நாம் போய் ஆஸ்ரயிப்போம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சர்வ அவஸ்தையிலும் பற்றலாம்படி விச்வச நீயனானவன் வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை நாம் ஆஸ்ரயிப்போம் –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே
அபிமத லாபத்தாலே களித்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து
ஆக-இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே உத்தேச்யத்தைப் பெற்று களித்து வர்த்திகலாம் படியான
நன்மையை உடைய தேசத்தை நாம் ஆஸ்ரயிப்போம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

சகல தாபமும் ஆறும்படியான ஜல சம்ருத்தியை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரை நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் –
பொருந்தாத ராவணனை அழியச் செய்து ஸ்ரீ விபீஷணனுக்கு புகலாய் நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே
நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான பெரு மிடுக்கனானவன் வந்து வர்த்திக்கிற
ஸ்ரீ திரு நறையூரிலே போய்ப் புகுவோம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வேதத்தில் வாசனை போய் ஆசாரத்திலே ஏதேனும் ஓர் வைகல்யம் உண்டாய் இருக்கை அன்றிக்கே
ஆசார பிரதானவர்கள் வர்த்திக்கிற தேசத்தை –நாமும் போய் ஆஸ்ரயிப்போம் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நித்ய உத்சவமும் வைதிக சமாராதானமும் என்றும் மாறாத ஊர் –
ஸ்ரீ பரம பத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணும் அளவும் செல்ல இப் பிரக்ருதியோடே
அத்தோடு போலியான ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு அனுபவிப்போம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய ஸ்ரீ திரு நறையூரை
அவள் பரிகர பூதரான நாம் போய் ஆஸ்ரயிப்போம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள்
என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் –
என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————————

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி இடங்கைச் சங்கம் உடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே –6-5-1-

அவர்கள் புஜிக்கப் பெற்றது தன் பேறு என்னும் இடம் வடிவில் புகரிலே தோற்ற இருக்கிறவன் –
அம்ருதத்தை புஜிக்கிற இவர்கள் உடைய விரோதியைப் போக்குகைக்காக கையிலே
திவ்ய ஆயதங்களை தரித்துக் கொண்டு இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் முதல் பாசுரத்தில்

அழகுக்கு சேர்ந்தால் போலே ஒளியை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற திரு உகிராலே இரண்டு கூறாம் படி கீண்டு பொகட்டு-
ஆஸ்ரிதனுக்கு பிரதிஞ சம காலத்திலேயே உதவினான் என்கிற சுத்தியை உடையவன் வர்த்திக்கிற தேசம் –
ஆளிட்டு அந்தி தொழுகை அன்றிக்கே தானே கை தொட்டுப் போக்கின சுத்தியை உடையவன் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்தஸ்ரீ தசரதாத்மஜன் வர்த்திக்கிற ஊர் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

பரிமளம் மிக்கு இருந்துள்ள திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக
ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

தான் மாதுலனாய் கண்ணநீரை விழ விட்டு துக்கம் கொண்டாடுவானாக
மலை முறிந்து விழுமா போலே-அது விழும்படி பொருத ஆண் பிள்ளை வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தான் மாதுலனாய் கண்ணநீரை விழ விட்டு துக்கம் கொண்டாடுவானாக
மலை முறிந்து விழுமா போலே-அது விழும்படி பொருத ஆண் பிள்ளை வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ சாந்தீபநீ அவனுடைய புத்ரனைக் கடல் கொள்ள அவனை மீட்டுக் கொடுத்தவன் வர்த்திக்கிற தேசம் –
இழந்தார்கள் இழவுகள் தீர்க்குமவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

சேநா சமூஹமானது முடிந்து போம்படியாகவும்-ஜயத்ரதன் தலை அறுப்புண்ணும் படியாகவும்
ஆஸ்ரிதன் உடைய பிரதிஞ சம காலத்திலேயே வந்து உதவின ஓரத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்கிற தன் மேன்மை கிடக்கச் செய்தே
ஆஸ்ரிதனுக்காக தாழ நின்று சாரத்தியம் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

செப்புமவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் –இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே
இவனுடைய ரஷணத்தை முடிய தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————————

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-

செம்பியன் கோச் செங்கணான் -அவன் தனக்கு பெயர்-அவனுடைய அகடிதகட நா சாமர்த்தியம் உடன்
இந்த வண்டுகள் மகிழம் பூவிலே படிந்த இத்துடன் வாசி அற உத்தேச்யமாய்த்து இருக்கிறது இவருக்கு
அவ் ஊரில் உள்ளதாகையாலே –என்கிறார் முதல் பாசுரத்தில்

அவனுடைய விலாச சேஷ்டிதங்கள் உடன் காவேரியினுடைய ஸ்வைர சஞ்சாரத்தோடே வாசி அற
இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அங்கு உள்ளது ஆகையாலே – இரண்டாம் பாசுரத்தில்

அவன் ஜகதா காரனாய் நிற்கிற நிலையோடு இவன் யுத்தத்தில் பராக்ரமித்ததோடு வாசி அற -இவருக்கு
உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –மூன்றாம் பாசுரத்தில்

அவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்கினதோடு இவன் யுத்தத்தில் வ்யாபரித்ததோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு – நாலாம் பாசுரத்தில்

அவன் பூமியை அடைய அளந்து கொண்டத்தோடு இவன் பூமியை அடையத் தானே நெருக்கி ஆண்டத்தோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு அவனை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –
ஐந்தாம் பாசுரத்தில்-

ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஜகதா காரதையோடு இவன் மூன்று ராஜ்யத்தையும் நிர்வஹித்ததோடு வாசி அற
உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்தது ஆகையாலே –ஆறாம் பாசுரத்தில்

பெரிய ஆண் பிள்ளை யானவன் அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக
ஆஸ்ரயிக்கிற தேசம் –ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ கிருஷ்ணன் இடைப் பெண்கள் உடைய துகில்களையும் வளைகளையும் வாரிக் கொடு வருகிற வரவோடு
வாசி அற –உத்தேச்யமாய் இருக்கிற படியை சொல்லிற்று -கீழ்ப் பாட்டில் –
இப்பாட்டில் -எட்டாம் பாசுரத்தில் -ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கும் இருப்போடு
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த செயலோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிற படி சொல்லுகிறது –

உபய விபூதியினுடைய ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன்
ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாக கோயிலை வாசஸ் ஸ்தானமாக கொண்டு இருக்கிறவன் –
தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய் அத்விதீயமான ஸ்த்ரீத்வத்தை உடைய
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் –
கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருக்கிற ஸ்ரீ சநகாதிகள் யேத்துகையால் வந்த பெருமையை உடையவன் –
அனுபவிப்பாருக்கு இழிந்த இடம் எங்கும் துறையாகும் படியாய் இருக்கிற ஆயிரம் திரு நாமங்களை உடையவன் –
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் பெருமையைக் கேட்க வேண்டி இருப்பீர் –
நறையூர் மணி மாடம் சேர்மின்களே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற சம்சார விபூதியிலே வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார்
யமபடருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே –மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் –
ஸ்ரீ பரம பதத்திலே போய் பதியினில் பாங்கினில் -என்கிறபடியே ஸ்ரீ நித்ய சூரிகள் எதிரே வந்து
தந்தாம் இருப்பிடங்களிலே கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள் தாழ விருந்து
ஸ்ரீ பாதம் விளக்கி கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————————–

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே–6-7-1-

நாள் திரு நாளும் திங்கள் திரு நாளும் மாறாதே இருக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற
ஸ்ரீ நம்பி -ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் –என்கிறார் முதல் பாசுரத்தில்

இருபத்தொரு படி கால் ஷத்ரிய வம்சத்தை அறுத்துத் தூவும்படி அத்விதீயமான வாயை உடைய மழுவை
ஆயுதமாக நிர்வஹித்து –ஜகத் ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன் -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவ்வம்பு கையிலே இருக்கச் செய்தே ஓர் இயற்றி இல்லாதாரைப் போலே மகா பலி பக்கலிலே சென்று மண்ணை இரந்தான்-
சாமத்துக்குச் செல்லாத இடத்தில் யாய்த்து பேதத்தில் இழிவது –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு அழுது நின்றான் என்றால் இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று திரு உள்ளம் துணுக் என்று
அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –ஐதிக்யம்- நாலாம் பாசுரத்தில்

புருஷ புத்தயா அதீனம் ஆகையாலே நிர்த் தோஷமாய் இருக்கிற ஸ்ருதிகளை பத நியமங்களோடே அதிகரித்து –
கேவல அத்யயனம் பண்ணுகை அன்றிக்கே அதனுடைய அனுஷ்டானம் அளவும் போருமவர்கள்
அது தான் காதாசித்கமாய் இருக்கை அன்றிக்கே அது தான் யாத்ரையாய் இருக்குமவர்கள் –
அது தன்னை ஒரு பலத்துக்காக அனுஷ்டிக்கை அன்றிக்கே அநந்ய பிரயோஜனராய் அனுஷ்டிக்கும்படியான
வை லஷண்யத்தை உடையவர்கள் –வாழும் நறையூர் நின்ற நம்பியே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பகுவாய் அலவன் கமலத்தின் இடைப் பள்ளி பட்டது –நள்ளியானது கர்ப்ப தாரனத்தாலே கேதித்து இருக்க
அதுக்கு இனியது தேட வேணும் -என்று மதுவுக்காக போந்த அலவன் ஆனது தாமரைப் பூவில் வந்து இழிய கொள்ள
போது அஸ்தமிக்கையாலே உடம்பைக் கொண்டு அங்கே இங்கே கொண்டு ராத்திரி அதிலே தங்கி –
அதிலே தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழல் இட்டு தோற்ற
போது விடிந்த வாறே வந்தது –இது போன போதே தொடங்கி-கதவைத் திறந்து வரவு பார்த்து கொடு நின்ற நள்ளி யானது
இத்தைக் கண்டு ராத்திரி தங்கின படியாலும் உடம்பிலே சுவடு இருந்த படியாலும்
இது வெருமன் அல்ல என்று முகம் மாறி கதவை அடைத்து உள்ளே போய்ப் புக்கது
இத்தை ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த அநந்தரம் ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்
ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னை அன்றோ தண்டிப்பது -என்ன
என் செய்வோம் கேள்வி இல்லாத படி பெண்ணரசு நாடாய்த்து -என்று அருளிச் செய்வர் -ஐதிக்யம் ஆறாம் பாசுரத்தில்-

இவையே யாத்ரை யாம்படி கை வந்து இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தேசம்
தங்களை நோக்குகைக்காக தங்கள் உடைய வித்யா வ்ருத்தங்களால்
அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

வீரக் கழலை உடைய ராஜாக்கள் முழுக்காயாக அவியும்படி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தான் ஆய்த்து
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

சர்வ கந்த -என்கிற -திரு மேனியிலே ஸ்வேத ஜலத்தைக் கொடுத்து
மதிப்பனாய்த் திரிகிற இவன் உடைய குறையை தீரப் பெற்றோம் -என்கிற இத்தால் தான் உகந்தான் ஆய்த்து –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

லோகத்திலே ஆராய்ந்து சொல்லிமவர்கள் உடைய அருகே-பாபங்கள் ஆனவை கிட்டாது –
பாபங்கள் வரப் போக்க வேணும் என்று அர்த்திக்கும் படி இருக்கை அன்றிக்கே
இவ்விடம் நமக்கு இருப்பிடம் அன்று என்று பிராக்தமான பாபங்கள் தானே விட்டுப் போம்
சம்சாரத்தில் நெடுநாள் இருந்து ஐஹிக போகங்களையும் புஜித்து பின்னை ஸ்ரீ பரம பதத்தே போய்
ஸ்ரீ நித்ய சூரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1-

தேன் மிக்க பர்யந்தத்தை உடைத்தான திரு மலையிலே வந்து நிற்கிறவனை –
தாளால் அளந்த போது தப்பினார்க்கும் இழக்க வேண்டாத படி ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் ஆய்த்து-
அவன் நாடித் திரிகிற போது வைமுக்க்யம் பண்ணி இறாய்த்து திரிந்த நான்
ஸ்ரீ நறையூரில் –அறுகாத பயணம் போய் ஸ்ரீ பரம பதத்தில் காண்கை அன்றிக்கே
விடாய்த்த இடத்தில் தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

தேவர்களுக்கு கடல் கடைந்தாப் போலேயும் ஜகத்துக்கு பிரளயத்தைப் பரிகரித்தால் போலேயும்
என்னுடைய சம்சார பிரளயத்தை பரிகரிக்கைகாக ஸ்ரீ பிராட்டி யோடும் கூட ஸ்ரீ திரு வாலியிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை
தேவர்களோடு லௌகிகரொடு என்னோடு வாசி அற அபேஷிதம் செய்யும்படி யான ஸ்ரீ சர்வேஸ்வரனை –பிராப்தி உடையவனை –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படி பண்ணினான் ஆய்த்து –
ராஜ புத்ரர்களைப் பிணைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலும் சோறும் இடக் கடவது காண் -என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ பட்டர்-
ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க என்னுடைய ரஷணத்துக்காக ஸ்ரீ திரு நாவாயிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-
அந்த ஸ்ரீ திரு நாவாய் தான் பரம பதத்தோபாதியாம் படி அடுத்து அணித்தாக ஸ்ரீ திரு நறையூரிலே-காணப் பெற்றேன் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை
நாள் தோறும் ஸ்ரீ நித்ய சூரிகள் உடைய ஆசையே யாத்ரையாக உடையனாய்க் கொண்டு இங்கே காணப் பெற்றேன் –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

வருகிற ஸ்ரீ விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று ஸ்ரீ மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க
அவனைக் கை கொள்ளுகை தவிரோம் – என்று ஸ்ரீ பெருமாளும் நிர்பந்திக்க
ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன
வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் என்று அவன் பக்கலிலே விசேஷித்து
சங்கத்தைப் பண்ணினவனை-நான் அவனைத் தேடி ஸ்ரீ நறையூரிலே காணப் பெற்றேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தன்னை அணுகினவருக்கு தன் கையிலே சமர்ப்பிக்கலாம் படி விச்வச நீயன் ஆனவன் –
சம்சாரத்தில் இருக்கச் செய்தே அவனை விச்வசித்து பற்றப் பெற்றேன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று
ஸ்ரீ பிள்ளை அமுதனார் பணிக்கும் படி –ஐதிக்யம்
என்னுடைய அபேஷிதம் செய்கைக்காக ஸ்ரீ திரு நறையூரிலே வந்து நின்றவனைக் காணப் பெற்றேன் –ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ அர்ஜுனன் உடைய தேரை நடத்தினவனை – ஆசை உடையேனாய்க் கிட்டி – அவ்வாசைக்கு அனுரூபமாக
ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அழகிய திருத் தோள்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் – ஸ்ரீ ஆழ்வார்களை ஒழியவே
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி யாய்த்து திருத் தோள்கள் அழகு இருக்கும் படி –
ஆபரணத்துக்கும் ஆபரணம் போலே –ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்குமா போலே
நமக்கு ஸ்வாமி ஆனவனை-நமக்காக வந்து நிற்கிற ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ மதுரையில் காட்டிலும் மிக்க நன்மை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரிலே நிற்கிற கல்யாண குண பூர்ணனை –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ்த் தொடை வல்லவர்கள்
ஸ்ரீ பரம பதத்தில் அங்கு உள்ள ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள்
வைகுந்தன் தமர் எமர் -என்று இறே அவர்கள் சொல்லுவது –அவர்களுக்கு ஆஸ்ரயநீயர் ஆவார்கள் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர்கெடுத்த திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே —6-9-1-

அருமந்தான் ஒரு மதிப்பன் இப்படி எளிவரவு படுவதே -என்று திரு உள்ளம் புண்பட்டு
அவனுடைய சாபத்தை போக்கினான் ஆயத்து –
அதுக்கடி என் என்னில்-திருவாளன் – தத்ர நாராயண ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீயபதி யாகையாலே
அவனுடைய -இணை யடியே யடை நெஞ்சே —அபிமானிகளும் ஆபன்னர் ஆன அன்று
பற்றும் திருவடிகளை நெஞ்சே நீ பற்றப் பார் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஜனனி என்று வாசி பார்க்க மாட்டாமையாலே மிக்க பழியைத் தரித்து இருப்பானாய்
முன்கை மிடுக்காலே தோன்றின படி நடந்து திரிகிற ராவணன் உடைய தலைகள் சிதறும்படியாக –
எதிரிகளை அம்பாய் நலிகை அன்றிக்கே நெருப்பாக சுடுகிற அம்புகளை நடத்தினவன் உடைய –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ நம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவன் –பூமிப் பரப்போடு கூட தயிரையும் வெண்ணெயும் அமுது
செய்தவனுடைய திருவடிகளை அடை நெஞ்சே–என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

மன்றில் பரப்படைய பாழ் தீரும்படி குடக் கூத்தாடி- இந்த்ரன் வர்ஷிப்பிக்க மலையை எடுத்து
வர்ஷத்தை பரிக்ரஹித்த -மலையாலே மலையை எடுத்தால் போலே திரண்ட தோளை உடையவன்
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

லோகங்கள் ஏழையும் வயிற்றிலே வைத்து பிரளயம் தேடி வந்தால் இங்கு உண்டோ என்று பண்டையிலும்
இளைத்துக் காட்டும் திரு வயிற்றை உடையவன் –தன்னைப் பற்றினாரை உள்ளே இட்டு
தன்னை பிரளயத்துக்கு இலக்காக்கி நோக்குமவன் திருவடிகளிலே அடையப் பார் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நாம் சென்று திருவடிகளைக் கிட்டினால் அவன் நம்முடைய தோஷங்களை கணக்கிடுவான் ஆகில்
ந கச்சின் ந அபராத்யதி -என்று அத்தைப் பொறுப்பிக்கும் ஸ்ரீ பிராட்டியை உகந்து
எப்போதும் திரு மார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறவன் உடைய ஸூ குமாரமான திருவடிகளை அடை-
மதுப்பில் அர்த்தத்தை சொல்லுகிறது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உபகார சீலனான கிருஷ்ணன்-அயர்வறும் அமரர்கள் அதிபதி –உபய விபூதி நாயகன் என்னும் இடம் தோற்ற
வைத்த வளையத்தை உடையவன் திருவடிகளை அடை நெஞ்சே-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

மலை போலே தர்ச நீயமான திரு மணி மாடக் கோயிலின் உள்ள அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே
நிலையார நின்றான் ஆய்த்து-
நிற்கிற போதை அழகைக் கண்டு-இவன் இருத்தல் சாய்ந்து அருளுதல் செய்து இவ் வழகை இழக்க வரில் செய்வது என்-என்று
துணுக் துணுக் என்ன வேண்டும்படியாய் இருக்கும் –
மலையை ஒக்க ஒக்கத்தை உடையதாய் அழகை உடைய மணி மாடங்கள் மிக உடைய ஸ்ரீ திருநறையூரில் மன்னி நிலையார நின்றான் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

லோகத்துக்கு ஆஸ்ரயணீயராய் இருப்பாருக்கும் ஆஸ்ரயணீயனாய் இருக்கையாலே
ஸ்ரீ சர்வாதிகன் –அவன் திருவடிகளையே ஆஸ்ரயிக்கப் பார் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பாடல் பத்தும் வல்லார் –போக பூமிகளில் பிரதானமான ஸ்ரீ பரம பதத்திலே போய்
ஸ்ரீ நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1-

சத்ருக்கள் இட்ட அரண் அழியும்படியாக குரூரமான ராஷசர் திரண்ட இலங்கையை அழியச் செய்து
அத்தால் வந்த வீர ஸ்ரீ யால் குறைவற்றவன் –
பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த அத்புத கர்மத்தால் குறைவற்றவன் –
கண் வளர்ந்து அருளுகிற போதை அழகாலே பூரணன் ஆனவன் –-
சம்சாரிகளாய் குறைவே நிரூபகமாம் படி இருக்கிற நம்முடைய குறைவு தீர்க்கைக்கு அடியான பௌஷ்கல்யத்தை உடையைவன் –
அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே -என்கிறார் முதல் பாசுரத்தில்

நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பிரளயங்கதை யான பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான்
லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

யசோதை பிராட்டி உண்ட தயிரையும் வெண்ணெயும் களவு கண்டு அமுது செய்யப் புக்கால்
அவள் கண்டு பிடித்து கட்டுவது அடிப்பதாக நிற்கும் இறே-
அப்போது வெண்ணெயைக் களவு கண்டோம் என்றால் வருவதோர் எளிவரவு உண்டோ -என்று இருக்கும் ஆய்த்து –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தமையன் பக்கல் த்வேஷம் மிக்கு இருக்குமா போலே யாய்த்து இவன் பக்கல் ராகம் மிக்கு இருக்கும் படி –
முதலிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் பரிவை இவன் ஒருவன் பக்கலிலும் பண்ணினவன் உடைய நாமம் சொல்லில் –
நமோ நாராயணமே –வாத்சல்யத்துக்கும் வாசகம் இறே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பண்டு மிருத்யு ராஷசரைக் கிட்ட அஞ்சி யாய்த்து இருப்பது –
இப்போது பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே பொருந்தி புஜியா நிற்கும் ஆய்த்து –
இதுவே ஸ்வ பாவமாம் படி பண்ணினவன்உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன் –
இனி இது கண்டால் எல்லார்க்கும் சொலத் தட்டில்லை இறே
என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள் –
நமோ நாராயணமே –நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள-
ஸ்ரீ ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை –
உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் – தேவோ நாம சஹஸ்ரவான் –-பல பசு உடையவன் -என்னுமா போலே
ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து-இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு-காரண வாக்யங்களோடு– இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே –
இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

காரண பூதனனவன் பேர் சொல்லுகை ப்ராப்தம் இறே
பிராப்தம் செய்யப் பார்த்ததிலி கோள் ஆகில் இனியது தான் வேணுமே –
பகவத் விஷயத்தில் கைங்கர்ய ருசி உடையார் எல்லாருக்கும் சொன்னேன்-இது செய்யாதார் கேளாதாராம் இத்தனை –
நமோ நாராயணமே —சஹஸ்ர அஷரீ மாலா-மந்த்ரமாய் இருக்கிறதும் அல்ல –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை சிரமத்தாலே நோவு படாத படியாக ரஷித்தான் –
தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையும் இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு
ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

குறைவற்றாரோடு-குறை வற்றாராக பிரமித்து இருப்பரோடு-குறைவாளரோடு வாசி அற
எல்லாருக்கும் ஒக்க நிர்வாஹகனாய் இருக்கை –
நீங்கள் அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணின பாபம் தீரும்படி சொல்லப் பாரும் கோள்-
ஸ்ரீ எண்ணாயிரத்து திரு வாய்க் குலத்து ஆழ்வான் -ஸ்ரீ நஞ்சீயரை
பிரபத்தி யாகிறது புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கும்-பரிஹாரம் ஆகவற்றோ –-பிராமாதிகத்துக்கேயோ -என்ன
அதன் உடைய ப்ரபாவ்வத்தைப் பார்த்தால் புத்தி பூர்வகத்துக்கும் பரிஹாரமாகவற்று
ஜ்ஞானம் நடையாடும் இடத்தில் அனுதாபம் இன்றிக்கே இராது இறே-ஆகையால் இவன் பக்கல் ப்ராமாதிகம் அல்லாது கூடாது
பூர்வாகத்தைப் போக்குகிற இது-புத்தி பூர்வத்துக்கு பரிஹாரம் ஆகாது என்ன ஒண்ணாதே
அதில் புத்தி பூர்வம் ஒழிய இல்லாமையாலே –வினையைப் பண்ணுவதானாலும் சொல்ல வடுப்பது இது –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது –
இவர்களை விட்டுப் போய் பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் –
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-ஆறாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

July 4, 2019

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-

அர்த்தித்து நின்று பெற்ற அவ்விடம் தன்னிலே நின்றே அண்டங்கள் உடன் கூட பூமிப் பரப்பை அளந்து கொண்டவனே
நான் இதர விஷயங்களில் பிரவணனாய் உன் பக்கலிலே வைமுக்ய்யம் பண்ணிப் போரா நிற்கச் செய்தேயும்
இவ்வளவும் வர என் சத்தை அழியாமல் நோக்கிக் கொண்டு போந்தவனே –
அநாதி காலம் சத்தையை நோக்கி கொடு போந்ததின் பலம் நீயே பெற வேண்டி இருந்தாய் ஆகில்
என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் –
இன்னும் இவனுக்கு சம்சார வாசனை கழிந்தது இல்லை என்று இருக்க வேண்டா
எனக்கு லோக யாத்ரையில் ருசி இல்லாமையைத் திரு வுள்ளம் பற்ற வேண்டும் –

————————

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-2-

ஒரு கால் சொன்னத்தை ஒன்பதின் கால் சொல்லுகிறார் -பகவத் விஷய ருசியையும்
தம்முடைய இந்த சம்சார அருசியை ஸ்திரம் என்னும் இடத்தை அவன் திரு உள்ளத்தே படுத்துகைக்காக –

————————

குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-

அம்புக்கு கூர்மையாய் போய்ப் புக்கு பிரதி பஷத்தை அழியச் செய்து
அந்த விஷய அபதானத்தை அவன் செய்தான் -என்று விருது ஊதித் திரியும்படி பண்ணிணவனே –
ஓர் அபதானம் பண்ணினேன் என்று விருது ஊதித் திரியும்படி பண்ண வேண்டா
ஸ்வரூப விரோதியைக் கழித்து ஸ்வரூப அனுரூபமான பேற்றை பண்ணித் தர வேணும் –

————————

நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-4-

என் பக்கல் அகடிதகடங்களை கடிப்பிக்க வேண்டா -உன்னைக் காண்பதொரு வகை அருள வமையும் –
என் தலையால் வரும் அம்சத்தில் கண் அழிவு இல்லை –

——————–

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-5-

வாச்யங்களுக்கு எல்லாம் தன் பக்கலிலே இருப்பாம்படி இவற்றுக்கு ஆதார பூதனாய் நிற்கும்படி சொல்லிற்று
வாசக ஜாதத்துக்கு எல்லாம் பிரதானமாய் இருக்கிற அகார சப்த வாச்யன் ஆனவனே –

—————-

கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர் கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-6-

நீ ஜகதாரரானாய் சர்வாதிகனாய் இருப்புதி என்று பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
உன்னுடைய அசாதாராண ஆகாரத்தை நான் சாஷாத் கரிக்கும் படி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி
யருளிவுதி யாகில் –
நானும் மெய்யே இத்தை அருவருத்தேன் –

————–

உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே—-6-1-7-

பிரணவம் பர ஸ்வரூபத்தை ஒன்றையும் சொல்லுகிறதோ-ஆத்மவஸ்து ஸ்வரூபத்தையும் சொல்லுகிறதோ -என்றால்
இரண்டையும் சொல்லா நின்றது இறே
ஆத்மா நம் யுஞ்ஜீத -என்றும்-ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும்
பிராமணருக்கு தனமான வேதத்தில் இன்னிசை உண்டு ஸ்வர ரூபமான பிரவணம் –
அத்தால் பிரதிபாத்யனாய் உள்ளவனே –

——————–

காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன் நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே—6-1-8-

வைத்த வளையமும் நீயுமாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னுடைய இதர விஷயத்தில் பிராவண்யத்தை தவிர்த்த
சுத்தியை உடையவனே –உன்னை ஒழிந்த விஷயங்களில் ருசியை போக்கின நீயே
நான் கண்ணாலே காணலாம் படி என் பக்கலிலே கிருபையை பண்ணுவுதியாகில்

———————–

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-

தேவர்களுக்கு எல்லாம் பிரதானராய் அதிகாரி புருஷர்களாய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை
சரீரதயா சேஷமாக உடையவனே –
எனக்கு இங்கனே இருப்பதொரு அதிகாரத்தைத் தந்து கால்கட்டாம் அது எனக்கு வேண்டா
அவர்கள் அதிகாரங்களில் எனக்கு ருசி இல்லை –

————————

பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே—-6-1-10-

நல்ல சந்தஸ்ஸூக்களை உடைத்தான இவற்றை அப்யசிக்க வல்லார்கள்
இவர் வேண்டேன் என்றதை தவிர்ந்து-அருளுதியேல் -என்ற பேற்றைப் பெறுவார்

————————-

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1-

நமக்கு தஞ்சமாவார் யார் -என்று ஆராயக் கடவன்-அவ்வளவில் நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று
நான் விபரீதத்திலே கை வளருகிற நாளே தொடங்கி எண்ணித் ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே
திருவடிகளில் வந்து சரணம் புகுந்தேன் என்னும் அளவாய் ஆய்த்து இறே இங்கே வந்து நின்றது –

———————

மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-2-

திரு மார்பா –உன்னுடைய ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து ஸ்வீகரிப்பிக்கும் ஸ்ரீ பிராட்டி அன்றோ அருகே இருக்கிறாள் –
அவள் ஏதேனும் தப்புச் சொல்லிலும் விடேன் என்னும் நீயும்-உன் ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து உன்னை இட்டு
ஸ்வீகரிப்பிக்கும் அவளும் இருவரும் இங்கே சந்நிதி பண்ணுகையாலே தேவர் திருவடிகளுக்கு தகுதியானேன் –
கலங்கா பெரு நகரம் இருப்பாய் இருக்க அவ்விடத்தை விட்டு ஸ்ரீ பிராட்டியோடு கூட
எய்த்தாரை எடுக்கைக்காக திரு விண்ணகரிலே சந்நிஹிதனாய் – நான் எய்த்துக் கொடு நின்றேன் –
எய்த்தாருக்கும் எய்த்தாரை எடுக்க வந்து நிற்கிறவர்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லையோ –

———————

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3-

விபூதி த்வயத்தையும் தனக்கு பிரகாரமாக உடையனாய் இருந்து வைத்து என்னைப் பெறுகை தனக்கு தேட்டமாக வந்தான் ஆய்த்து –
இன்னும் வரத்தும் போக்கும் உண்டு என்று தோற்றாதபடி ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான் ஆய்த்து –
அறு காத பயணத்துக்கு பொதி சோறு கொண்டு போம் விஷயம் இங்கே சந்நிஹிதம் ஆய்த்து –

———————-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4-

ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –
இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்-இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே
என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே-அது இப்போது வாரா உதவிற்று
இவருக்கு இப்புத்தி விசேஷத்தை பண்ணுவித்து ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிதி பண்ணி யாய்த்த்து
அர்ஜுனன் உடைய தேர்த் தட்டு போலே யாய்த்து ஸ்ரீ திரு விண்ணகர்
அர்ஜுனனுக்கு அருளிச் செய்த வார்த்தை அவனோடு ஒத்த சம்பந்தம் உடையார்க்கு எல்லாமாம் இறே-

—————–

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-5-

ஐஸ்வர்யம் பிரத்யஷம் நீர் ஆசைப்படுகிறது அதீந்த்ரம் என்ன ஒண்ணாத படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து நிற்கிறது –
கைங்கர்ய சாம்ராஜ்யத்தை தருகைக்கு அன்றோ இந்நிலை

———————

கல்லா ஐம் புலன்கள் வவை கண்டவாறே செய்யகில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-6-

மதிளையும் அரணாகப் போம் படி கடலையும் உடைய இலங்கையை அழியச் செய்த –
அந்த வில் கொண்டு வியாபாரிக்க அங்கே வந்து முகம் காட்டப் பெற்றது இல்லை என்ன
அந்த பிரதி பஷத்தை அழியச் செய்து அங்கனே போனாயோ-போக்குக் காட்டி இங்கே அன்றோ வந்து புகுந்தது –

——————-

வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வென் நரகத்து அடியேனை இடக்கருதிக்
கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத்
தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே–6-2-7-

என்னுடைய பூர்வ வ்ருத்தத்தைப் பார்த்தால் தேவர் சீற வேண்டும்படியாய் இருக்கும்
நான் சர்வ தோஷ உக்தனாய் இருந்தேன்-நீ சர்வஞ்ஞனாய் இருந்தாய்
ஆனபின்பு -நம்மையும் தன்னையும் பாராதே
இவன் நிர்தோஷரைப் போலே நம் காலைப் பிடிப்பதே என்று சீறாதே -சீறாமை போராது
இத்தை திரு உள்ளத்தே கொண்டு அருள வேணும்-
விச்வச நீயனான நீ சந்நிஹிதனாய் இருக்க பயாவஹமான பதார்த்தங்களுக்கு அடிமை செய்து திரிய வேணுமோ –

———————

தீவாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல்
மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-8-

மூவா வானவர்–அகர்ம வச்யராக்கி அவர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்து
அவ்வழியாலே அவர்கள் சத்தையை நிர்வஹித்துக் கொண்டு போர நின்றாய்-
பிராதாக்களில் ஒருவன் முடி சூடி வாழா நிற்க-ஒருவன் சிறைப் பட்டு கிடந்தால் போலே தோற்றா நின்றது யாய்ற்று –
என்னுடைய ஷயத்தை போக்குகைகாக நீயே வந்து சந்நிஹிதனாய் இருக்க
நான் பிறருக்கு அடிமை செய்து திரியவோ

——————

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர்தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே —6-2-9-

ஸ்ரீ பிராட்டிமாரும் ஸ்ரீ நித்ய சூரிகளும் புருஷகாரமாக சரணம் புகுகிறார் –

————————

தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10-

இப்பத்தும் வல்லார் –அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார் –

—————-

துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-

துறப்பேன் அல்லேன் இன்பம் –சுகத்தை சந்யசிப்பேன் அல்லேன்
துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன் –சுகத்தை துறவாமை யாவது உன்னுடைய வடிவை மறவாதே இருக்கை
என்றும் மறவாது யான் உலகில் பிறப்பேனாக எண்ணேன் –மறவாமையால் பெற்றது பிறவாமை
நின் திறத்தேன் ஆன தன்மையால் -பிறவாமை பெற்றது-ஸ்ரீ திரு விண்ணகரானே –
உன் திறத்தேனாக பெற்றது நீ சந்நிஹிதன் ஆகை –

————————

துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே -6-3-2-

ராவண பவனத்தை விட்டு ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே
அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம் ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன்
பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் –
இவனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஔபாதிகமாய்-ஈஸ்வர பாரதந்த்ர்யம் ஸ்வா பாவிகமாய் இருக்கும் இறே –
நீயே வந்து புகுகிற இடத்தில்-நான் விலக்கிற்றிலேன்-என்ற படி-அநந்ய கதியை விடில் நிர்க்க்ருணன் ஆம்
பிராட்டிக்கு அநபிமதம் செய்யில் பிரணயி யன்றிக்கே ஒழியும்ஆக-ஸ்வரூபமும் பிரணயித்வமும்-இரண்டும் இழவாம் –

————————

மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே —6-3-3-

தப்ப ஒண்ணாததைத் தப்பி திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன்
என் பக்கலில் தயைப் பண்ணி யருள வேணும் -என்கிறார் –

————————

சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே —6-3-4-

நினைவு இன்றிக்கே இருக்க ஸ்ரீ மதுரையிலே உறங்குகிறவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலே
திருவடிகளிலே வந்து கிட்டிக் கொடு நிற்கக் கண்டேன் –
உன்னை கிட்டுகைக்கு மூல ஸுஹ்ருதமும் நீயே -என்கிறார்
ஸ்ரீ சர்வாதிகனான உன்னைக் கிட்டி என்னுடைய பிராப்தி பிரதிபந்தகமான பாபங்களை அடியைப் போக்கினேன் –
ராவணனாலே நெருக்குண்டு புகலிடம் அற்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு புகலாகக் கடவதாக
கடல் கரை வெளியிலே எடுத்துவிட்டு நின்றால் போலே
சம்சாரத்திலே விஷயங்களாலே நெருக்குண்டு நோவு படுகிற எனக்கு புகலாகஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து
சந்நிஹிதன் ஆகையாலே-அத்தைத் தப்பித் திருவடிகளிலே வந்து புகுந்தேன் –

——————

மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே–6-3-5-

பெரு மிடுக்கனான ராவணனை அழியச் செய்த வருத்தம் உண்டோ என்னுடைய பிரதிபந்தகங்களைப்
போக்கி சேர விட்டுக் கொள்ளுகைக்கு –எனக்காக வந்து நிற்கிற இடம் ஸ்ரீ திருவிண்ணகர் -என்கிறார் –

———————–

மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே—6-3-6-

இப்படி ஜகதா காரனாய் இருக்கிற உன்னை –-நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன் –
இவ்வாத்மாவுக்கு நீயே சேஷி-உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –
தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயநீயனாக நினைத்து இரேன் –
இப்படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய ஸ்ரீ பர தத்வமும் அறியேன் –

————————-

வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு
மாறே நீ பணியா தடை நின் திரு மனத்து
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே —6-3-7-

நான் ஒரு அநந்ய கதி -என்கிறார்-இதர தேவதைகளை வாயாலே பேசேன் –-அவ்வளவே அன்றிக்கே
நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன்
ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த் தோற்றிற்று ஆகிலும் அத்தை விச்வசியேன் –
சர்வாதிகனாய் இருக்கிற நீ ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய்
நீயே ஆஸ்ரயநீயன் என்று அறிவித்த பின்பு இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல் பரத்வ பிரதிபத்தி பண்ணேன் –

————————-

முளிந்தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந்தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-

சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே-தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து
அவதானத்தைப் பண்ணி-அநவரதம் மநோ ரதிக்கும் படியான தெளிவை உடைய எனக்கு
புநராவ்ருத்தி இல்லாத மோஷத்தை தரப் பார்த்தது என்று அத்தைத் தருகைகாக வந்து நிற்கிற நீ

———————-

சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே-6-3-9-

ஸ்ரீயபதியான உன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கும் படியான வைலஷண்யத்தை உடைய என்னை-
எனக்கு அதி தூரத்திலே வர்த்திக்கிற கர்மங்கள் என்னை நெருக்காத படி நீ அங்கீ கரித்து அருள வேணும்-
நம்பீ-ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் மிகையாம் படி அன்றோ தேவரீர் உடைய பூர்த்தி –
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் -என்று
அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூர்ணன் அன்றோ –

———————–

தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10-

ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும்-இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில்
கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள்-போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா
அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம் –

——————-

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1-

இப்படி ஜகதா காரணனாய் வேத பிரதிபாத்யன் ஆனவன்-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-என்று இறே-சொல்லுகிறது –
அந்த வேதோக்தமான சர்வ கர்ம சமாத்ராத்யன் ஆனவன்
சம்சாரிகள் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக கிட்டி வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை ஆஸ்ரயிப்போம்
ஒருப்படு என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார்

——————

கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-2-

அவன் நமக்காக வந்து நிற்கிற தேசத்திலே நாமும் புக்கு ஆஸ்ரயிப்போம் –

—————–

கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம்கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-3-

எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று போகலாம்படி அவன் வந்து நித்ய வாஸம்
பண்ணுகிற தேசத்தை நாம் போய் ஆஸ்ரயிப்போம் –

———————–

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே —6-4-4-

சர்வ அவஸ்தையிலும் பற்றலாம்படி விச்வச நீயனானவன் வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை நாம் ஆஸ்ரயிப்போம் –

—————-

விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு
நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே—6-4-5-

அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே
அபிமத லாபத்தாலே களித்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து
ஆக-இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே உத்தேச்யத்தைப் பெற்று களித்து வர்த்திகலாம் படியான
நன்மையை உடைய தேசத்தை நாம் ஆஸ்ரயிப்போம் –

——————-

மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து
என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன்
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6-

சகல தாபமும் ஆறும்படியான ஜல சம்ருத்தியை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரை நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் –
பொருந்தாத ராவணனை அழியச் செய்து ஸ்ரீ விபீஷணனுக்கு புகலாய் நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே
நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான பெரு மிடுக்கனானவன் வந்து வர்த்திக்கிற
ஸ்ரீ திரு நறையூரிலே போய்ப் புகுவோம் –

———————–

வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம்
சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-7-

வேதத்தில் வாசனை போய் ஆசாரத்திலே ஏதேனும் ஓர் வைகல்யம் உண்டாய் இருக்கை அன்றிக்கே
ஆசார பிரதானவர்கள் வர்த்திக்கிற தேசத்தை –நாமும் போய் ஆஸ்ரயிப்போம் –

————————

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேளுங்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8-

நித்ய உத்சவமும் வைதிக சமாராதானமும் என்றும் மாறாத ஊர் –
ஸ்ரீ பரம பத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணும் அளவும் செல்ல இப் பிரக்ருதியோடே
அத்தோடு போலியான ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு அனுபவிப்போம் –

————————–

கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன்
பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9-

ஸ்ரீ பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய ஸ்ரீ திரு நறையூரை
அவள் பரிகர பூதரான நாம் போய் ஆஸ்ரயிப்போம்

——————–

பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே –6-4-10-

ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள்
என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் –
என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே –

——————–

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி இடங்கைச் சங்கம் உடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே –6-5-1-

அவர்கள் புஜிக்கப் பெற்றது தன் பேறு என்னும் இடம் வடிவில் புகரிலே தோற்ற இருக்கிறவன் –
அம்ருதத்தை புஜிக்கிற இவர்கள் உடைய விரோதியைப் போக்குகைக்காக கையிலே
திவ்ய ஆயதங்களை தரித்துக் கொண்டு இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –

———————–

முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –6-5-2-

அழகுக்கு சேர்ந்தால் போலே ஒளியை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற திரு உகிராலே இரண்டு கூறாம் படி கீண்டு பொகட்டு-
ஆஸ்ரிதனுக்கு பிரதிஞ சம காலத்திலேயே உதவினான் என்கிற சுத்தியை உடையவன் வர்த்திக்கிற தேசம் –
ஆளிட்டு அந்தி தொழுகை அன்றிக்கே தானே கை தொட்டுப் போக்கின சுத்தியை உடையவன் –

———————

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்தஸ்ரீ தசரதாத்மஜன் வர்த்திக்கிற ஊர் –

——————-

உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர்
பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட
நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

பரிமளம் மிக்கு இருந்துள்ள திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக
ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் –

——————

விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர்
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே–6-5-5-

மிருது ஸ்வ பாவமான தோள் அழகை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக மருதுகளை வேரோடு பறிந்து
விழும்படி சாய்த்த சர்வ ரஷகன் வர்த்திக்கிற தேசம் –

——————–

பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்
நெகுவாய் நெய்தல் பூ மது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே —-6-5-6-

தான் மாதுலனாய் கண்ணநீரை விழ விட்டு துக்கம் கொண்டாடுவானாக
மலை முறிந்து விழுமா போலே-அது விழும்படி பொருத ஆண் பிள்ளை வர்த்திக்கிற தேசம் –

———————–

முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த
அந்தணாளன் பிள்ளையை யன்நான்று அளித்தானூர்
பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி
நந்துவாரும் பைம்புனல் வாவி நறையூரே —6-5-7-

ஸ்ரீ சாந்தீபநீ அவனுடைய புத்ரனைக் கடல் கொள்ள அவனை மீட்டுக் கொடுத்தவன் வர்த்திக்கிற தேசம் –
இழந்தார்கள் இழவுகள் தீர்க்குமவன் வர்த்திக்கிற தேசம் –

———————-

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம்
விள்ளச் சிந்துக் கோன் விழ ஊர்ந்த விமலனூர்
கொள்ளைக் கொழு மீன் உண் குருகோடிப் பெடையொடும்
நள்ளக் கமலத் தேறல் உகக்கும் நறையூரே —6-5-8-

சேநா சமூஹமானது முடிந்து போம்படியாகவும்-ஜயத்ரதன் தலை அறுப்புண்ணும் படியாகவும்
ஆஸ்ரிதன் உடைய பிரதிஞ சம காலத்திலேயே வந்து உதவின ஓரத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –

———————–

பாரையூரும் பாரந்தீரப் பார்த்தன் தன
தேரையூரும் தேவதேவன் சேருமூர்
தாரையூரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரையூரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே –6-5-9-

தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்கிற தன் மேன்மை கிடக்கச் செய்தே
ஆஸ்ரிதனுக்காக தாழ நின்று சாரத்தியம் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –

———————

தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே–6-5-10-

செப்புமவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் –இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே
இவனுடைய ரஷணத்தை முடிய தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்-

————————–

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-

செம்பியன் கோச் செங்கணான் -அவன் தனக்கு பெயர்-அவனுடைய அகடிதகட நா சாமர்த்தியம் உடன்
இந்த வண்டுகள் மகிழம் பூவிலே படிந்த இத்துடன் வாசி அற உத்தேச்யமாய்த்து இருக்கிறது இவருக்கு
அவ் ஊரில் உள்ளதாகையாலே –

————————-

கொழுங்கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

அவனுடைய விலாச சேஷ்டிதங்கள் உடன் காவேரியினுடைய ஸ்வைர சஞ்சாரத்தோடே வாசி அற
இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அங்கு உள்ளது ஆகையாலே –

————————-

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும் தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல் மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-

அவன் ஜகதா காரனாய் நிற்கிற நிலையோடு இவன் யுத்தத்தில் பராக்ரமித்ததோடு வாசி அற -இவருக்கு
உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –

————————-

பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பருவரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்
வெங்கண் மா களிருந்தி விண்ணி யேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-4-

அவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்கினதோடு இவன் யுத்தத்தில் வ்யாபரித்ததோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு –

——————-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —6-6-5-

அவன் பூமியை அடைய அளந்து கொண்டத்தோடு இவன் பூமியை அடையத் தானே நெருக்கி ஆண்டத்தோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு அவனை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –

———————–

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தானாயன் ஆயினான் சரண் என்று உய்வீர்
மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்னாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —6-6-6-

ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஜகதா காரதையோடு இவன் மூன்று ராஜ்யத்தையும் நிர்வஹித்ததோடு வாசி அற
உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்தது ஆகையாலே –

———————

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-7-

பெரிய ஆண் பிள்ளை யானவன் அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக
ஆஸ்ரயிக்கிற தேசம் –

———————–

முருக்கிலங்கு கனித்துவர்வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச்
செருக்களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8-

ஸ்ரீ கிருஷ்ணன் இடைப் பெண்கள் உடைய துகில்களையும் வளைகளையும் வாரிக் கொடு வருகிற வரவோடு
வாசி அற –உத்தேச்யமாய் இருக்கிற படியை சொல்லிற்று -கீழ்ப் பாட்டில் –
இப்பாட்டில் –ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கும் இருப்போடு
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த செயலோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிற படி சொல்லுகிறது –

————————-

தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —-6-6-9-

உபய விபூதியினுடைய ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன்
ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாக கோயிலை வாசஸ் ஸ்தானமாக கொண்டு இருக்கிறவன் –
தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய் அத்விதீயமான ஸ்த்ரீத்வத்தை உடைய
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் –
கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருக்கிற ஸ்ரீ சநகாதிகள் யேத்துகையால் வந்த பெருமையை உடையவன் –
அனுபவிப்பாருக்கு இழிந்த இடம் எங்கும் துறையாகும் படியாய் இருக்கிற ஆயிரம் திரு நாமங்களை உடையவன் –
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் பெருமையைக் கேட்க வேண்டி இருப்பீர்
நறையூர் மணி மாடம் சேர்மின்களே –

————————-

செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப்
பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே —6-6-10-

புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற சம்சார விபூதியிலே வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார்
யமபடருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே –மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் –
ஸ்ரீ பரம பதத்திலே போய் பதியினில் பாங்கினில் -என்கிறபடியே ஸ்ரீ நித்ய சூரிகள் எதிரே வந்து
தந்தாம் இருப்பிடங்களிலே கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள் தாழ விருந்து
ஸ்ரீ பாதம் விளக்கி கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள் –

————————

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே–6-7-1-

நாள் திரு நாளும் திங்கள் திரு நாளும் மாறாதே இருக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற
ஸ்ரீ நம்பி -ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் –

———————–

முனியாய் வந்து மூ வெழு கால் முடி சேர் மன்னர் உடல் துணியத்
தனிவாய் மழுவின் படை யாண்ட தாரார் தோளான் வார் புறவில்
பனி சேர் முல்லை பல்லரும்ப பானல் ஒரு பால் கண் காட்ட
நனி சேர் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே–6-7-2-

இருபத்தொரு படி கால் ஷத்ரிய வம்சத்தை அறுத்துத் தூவும்படி அத்விதீயமான வாயை உடைய மழுவை
ஆயுதமாக நிர்வஹித்து –ஜகத் ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன்

—————————–

தெள்ளார் கடல் வாய் விட வாய்ச் சின வாளரவில் துயில் அமர்ந்து
துள்ளா வருமான் வீழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்
புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட
நள்ளார் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே–6-7-3-

அவ்வம்பு கையிலே இருக்கச் செய்தே ஓர் இயற்றி இல்லாதாரைப் போலே மகா பலி பக்கலிலே சென்று மண்ணை இரந்தான்-
சாமத்துக்குச் செல்லாத இடத்தில் யாய்த்து பேதத்தில் இழிவது –

——————

ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள் கயிற்றால்
விளியா வார்க்க வாப்புண்டு விம்மி யழுதான் மென்மலர் மேல்
கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே —6-7-4-

நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு அழுது நின்றான் என்றால் இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று திரு உள்ளம் துணுக் என்று
அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –

———————-

வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்ல்டர்த்துக்
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே–6-7-5-

புருஷ புத்தயா அதீனம் ஆகையாலே நிர்த் தோஷமாய் இருக்கிற ஸ்ருதிகளை பத நியமங்களோடே அதிகரித்து –
கேவல அத்யயனம் பண்ணுகை அன்றிக்கே அதனுடைய அனுஷ்டானம் அளவும் போருமவர்கள்
அது தான் காதாசித்கமாய் இருக்கை அன்றிக்கே அது தான் யாத்ரையாய் இருக்குமவர்கள் –
அது தன்னை ஒரு பலத்துக்காக அனுஷ்டிக்கை அன்றிக்கே அநந்ய பிரயோஜனராய் அனுஷ்டிக்கும்படியான
வை லஷண்யத்தை உடையவர்கள் –வாழும் நறையூர் நின்ற நம்பியே

————————

வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான்
வெள்கியோடே விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்
பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே—6-7-6-

பகுவாய் அலவன் கமலத்தின் இடைப் பள்ளி பட்டது –நள்ளியானது கர்ப்ப தாரனத்தாலே கேதித்து இருக்க
அதுக்கு இனியது தேட வேணும் -என்று மதுவுக்காக போந்த அலவன் ஆனது தாமரைப் பூவில் வந்து இழிய கொள்ள
போது அஸ்தமிக்கையாலே உடம்பைக் கொண்டு அங்கே இங்கே கொண்டு ராத்திரி அதிலே தங்கி –
அதிலே தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழல் இட்டு தோற்ற
போது விடிந்த வாறே வந்தது –இது போன போதே தொடங்கி-கதவைத் திறந்து வரவு பார்த்து கொடு நின்ற நள்ளி யானது
இத்தைக் கண்டு ராத்திரி தங்கின படியாலும் உடம்பிலே சுவடு இருந்த படியாலும்
இது வெருமன் அல்ல என்று முகம் மாறி கதவை அடைத்து உள்ளே போய்ப் புக்கது
இத்தை ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த அநந்தரம் ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்
ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னை அன்றோ தண்டிப்பது -என்ன
என் செய்வோம் கேள்வி இல்லாத படி பெண்ணரசு நாடாய்த்து -என்று அருளிச் செய்வர் –

————————-

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக்
குடையா வரை யொன்று எடுத்த ஆயர்கோவாய் நின்றான் கூர் ஆழிப்
படையான் வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே –6-7-7-

இவையே யாத்ரை யாம்படி கை வந்து இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தேசம்
தங்களை நோக்குகைக்காக தங்கள் உடைய வித்யா வ்ருத்தங்களால்
அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து –

———————–

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8-

வீரக் கழலை உடைய ராஜாக்கள் முழுக்காயாக அவியும்படி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தான் ஆய்த்து –

——————

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே–6-7-9-

சர்வ கந்த -என்கிற -திரு மேனியிலே ஸ்வேத ஜலத்தைக் கொடுத்து
மதிப்பனாய்த் திரிகிற இவன் உடைய குறையை தீரப் பெற்றோம் -என்கிற இத்தால் தான் உகந்தான் ஆய்த்து –

———————

நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பண்ணி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10-

லோகத்திலே ஆராய்ந்து சொல்லிமவர்கள் உடைய அருகே-பாபங்கள் ஆனவை கிட்டாது –
பாபங்கள் வரப் போக்க வேணும் என்று அர்த்திக்கும் படி இருக்கை அன்றிக்கே
இவ்விடம் நமக்கு இருப்பிடம் அன்று என்று பிராக்தமான பாபங்கள் தானே விட்டுப் போம்
சம்சாரத்தில் நெடுநாள் இருந்து ஐஹிக போகங்களையும் புஜித்து பின்னை ஸ்ரீ பரம பதத்தே போய்
ஸ்ரீ நித்ய சூரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

———————-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1-

தேன் மிக்க பர்யந்தத்தை உடைத்தான திரு மலையிலே வந்து நிற்கிறவனை –
தாளால் அளந்த போது தப்பினார்க்கும் இழக்க வேண்டாத படி ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் ஆய்த்து-
அவன் நாடித் திரிகிற போது வைமுக்க்யம் பண்ணி இறாய்த்து திரிந்த நான்
ஸ்ரீ நறையூரில் –அறுகாத பயணம் போய் ஸ்ரீ பரம பதத்தில் காண்கை அன்றிக்கே
விடாய்த்த இடத்தில் தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

——————

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே—6-8-2-

தேவர்களுக்கு கடல் கடைந்தாப் போலேயும் ஜகத்துக்கு பிரளயத்தைப் பரிகரித்தால் போலேயும்
என்னுடைய சம்சார பிரளயத்தை பரிகரிக்கைகாக ஸ்ரீ பிராட்டி யோடும் கூட ஸ்ரீ திரு வாலியிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை
தேவர்களோடு லௌகிகரொடு என்னோடு வாசி அற அபேஷிதம் செய்யும்படி யான ஸ்ரீ சர்வேஸ்வரனை –பிராப்தி உடையவனை –

——————-

தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை நறையூரில் கண்டேனே –6-8-3-

ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படி பண்ணினான் ஆய்த்து –
ராஜ புத்ரர்களைப் பிணைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலும் சோறும் இடக் கடவது காண் -என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ பட்டர்-
ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க என்னுடைய ரஷணத்துக்காக ஸ்ரீ திரு நாவாயிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-
அந்த ஸ்ரீ திரு நாவாய் தான் பரம பதத்தோபாதியாம் படி அடுத்து அணித்தாக ஸ்ரீ திரு நறையூரிலே-காணப் பெற்றேன் –

———————-

ஒடாவரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4-

ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை
நாள் தோறும் ஸ்ரீ நித்ய சூரிகள் உடைய ஆசையே யாத்ரையாக உடையனாய்க் கொண்டு இங்கே காணப் பெற்றேன் –

————————

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-

வருகிற ஸ்ரீ விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று ஸ்ரீ மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க
அவனைக் கை கொள்ளுகை தவிரோம் – என்று ஸ்ரீ பெருமாளும் நிர்பந்திக்க
ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன
வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் என்று அவன் பக்கலிலே விசேஷித்து
சங்கத்தைப் பண்ணினவனை-நான் அவனைத் தேடி ஸ்ரீ நறையூரிலே காணப் பெற்றேன் –

——————–

உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6-

தன்னை அணுகினவருக்கு தன் கையிலே சமர்ப்பிக்கலாம் படி விச்வச நீயன் ஆனவன் -–
சம்சாரத்தில் இருக்கச் செய்தே அவனை விச்வசித்து பற்றப் பெற்றேன் –

——————

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-

தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று
ஸ்ரீ பிள்ளை அமுதனார் பணிக்கும் படி –

———————-

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

ஸ்ரீ அர்ஜுனன் உடைய தேரை நடத்தினவனை – ஆசை உடையேனாய்க் கிட்டி – அவ்வாசைக்கு அனுரூபமாக
ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் –

——————–

பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கை பெருமானைக்
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே–6-8-9-

அழகிய திருத் தோள்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் – ஸ்ரீ ஆழ்வார்களை ஒழியவே
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி யாய்த்து திருத் தோள்கள் அழகு இருக்கும் படி –
ஆபரணத்துக்கும் ஆபரணம் போலே –ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்குமா போலே
நமக்கு ஸ்வாமி ஆனவனை-நமக்காக வந்து நிற்கிற ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் –

———————–

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ் தார்க்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே–6-8-10-

ஸ்ரீ மதுரையில் காட்டிலும் மிக்க நன்மை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரிலே நிற்கிற கல்யாண குண பூர்ணனை –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ்த் தொடை வல்லவர்கள்
ஸ்ரீ பரம பதத்தில் அங்கு உள்ள ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள்
வைகுந்தன் தமர் எமர் -என்று இறே அவர்கள் சொல்லுவது –அவர்களுக்கு ஆஸ்ரயநீயர் ஆவார்கள் –

——————–

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர்கெடுத்த திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே —6-9-1-

அருமந்தான் ஒரு மதிப்பன் இப்படி எளிவரவு படுவதே -என்று திரு உள்ளம் புண்பட்டு
அவனுடைய சாபத்தை போக்கினான் ஆயத்து –
அதுக்கடி என் என்னில்-திருவாளன் – தத்ர நாராயண ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீயபதி யாகையாலே
அவனுடைய -இணை யடியே யடை நெஞ்சே —அபிமானிகளும் ஆபன்னர் ஆன அன்று
பற்றும் திருவடிகளை நெஞ்சே நீ பற்றப் பார் –

———————

கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே–6-9-2-

ஜனனி என்று வாசி பார்க்க மாட்டாமையாலே மிக்க பழியைத் தரித்து இருப்பானாய்
முன்கை மிடுக்காலே தோன்றின படி நடந்து திரிகிற ராவணன் உடைய தலைகள் சிதறும்படியாக –
எதிரிகளை அம்பாய் நலிகை அன்றிக்கே நெருப்பாக சுடுகிற அம்புகளை நடத்தினவன் உடைய –

———————

சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3-

ஸ்ரீ நம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவன் –பூமிப் பரப்போடு கூட தயிரையும் வெண்ணெயும் அமுது
செய்தவனுடைய திருவடிகளை அடை நெஞ்சே–

———————-

துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே—6-9-4-

மன்றில் பரப்படைய பாழ் தீரும்படி குடக் கூத்தாடி- இந்த்ரன் வர்ஷிப்பிக்க மலையை எடுத்து
வர்ஷத்தை பரிக்ரஹித்த -மலையாலே மலையை எடுத்தால் போலே திரண்ட தோளை உடையவன் –

———————

அகில் குறடும் சந்தனமும் பொன்னு மணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
பகல் கரந்த சுடராழிப் படையான் இவ் உலகு எழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே—6-9-5-

லோகங்கள் ஏழையும் வயிற்றிலே வைத்து பிரளயம் தேடி வந்தால் இங்கு உண்டோ என்று பண்டையிலும்
இளைத்துக் காட்டும் திரு வயிற்றை உடையவன் –தன்னைப் பற்றினாரை உள்ளே இட்டு
தன்னை பிரளயத்துக்கு இலக்காக்கி நோக்குமவன் திருவடிகளிலே அடையப் பார் –

——————

பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில்
மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –6-9-6-

நாம் சென்று திருவடிகளைக் கிட்டினால் அவன் நம்முடைய தோஷங்களை கணக்கிடுவான் ஆகில்
ந கச்சின் ந அபராத்யதி -என்று அத்தைப் பொறுப்பிக்கும் ஸ்ரீ பிராட்டியை உகந்து
எப்போதும் திரு மார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறவன் உடைய ஸூ குமாரமான திருவடிகளை அடை-
மதுப்பில் அர்த்தத்தை சொல்லுகிறது –

———————

சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடை
பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும் திரு நறையூர்
கார் தழைத்த திருவுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோதியாதே
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே –6-9-7-

உபகார சீலனான கிருஷ்ணன்-அயர்வறும் அமரர்கள் அதிபதி –உபய விபூதி நாயகன் என்னும் இடம் தோற்ற
வைத்த வளையத்தை உடையவன் திருவடிகளை அடை நெஞ்சே-

———————

குலையார்ந்த பழுக் காயும் பசும் காயும் பாளை முத்தும்
தலையார்ந்த விளங்கனியின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி
நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8-

மலை போலே தர்ச நீயமான திரு மணி மாடக் கோயிலின் உள்ள அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே
நிலையார நின்றான் ஆய்த்து-
நிற்கிற போதை அழகைக் கண்டு-இவன் இருத்தல் சாய்ந்து அருளுதல் செய்து இவ் வழகை இழக்க வரில் செய்வது என்-என்று
துணுக் துணுக் என்ன வேண்டும்படியாய் இருக்கும் –
மலையை ஒக்க ஒக்கத்தை உடையதாய் அழகை உடைய மணி மாடங்கள் மிக உடைய ஸ்ரீ திருநறையூரில் மன்னி நிலையார நின்றான் –

———————-

மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறையார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே —6-9-9-

லோகத்துக்கு ஆஸ்ரயணீயராய் இருப்பாருக்கும் ஆஸ்ரயணீயனாய் இருக்கையாலே
ஸ்ரீ சர்வாதிகன் –அவன் திருவடிகளையே ஆஸ்ரயிக்கப் பார் –

——————

திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10-

இப்பாடல் பத்தும் வல்லார் –போக பூமிகளில் பிரதானமான ஸ்ரீ பரம பதத்திலே போய்
ஸ்ரீ நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

—————-

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1-

சத்ருக்கள் இட்ட அரண் அழியும்படியாக குரூரமான ராஷசர் திரண்ட இலங்கையை அழியச் செய்து
அத்தால் வந்த வீர ஸ்ரீ யால் குறைவற்றவன் –
பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த அத்புத கர்மத்தால் குறைவற்றவன் –
கண் வளர்ந்து அருளுகிற போதை அழகாலே பூரணன் ஆனவன் –-
சம்சாரிகளாய் குறைவே நிரூபகமாம் படி இருக்கிற நம்முடைய குறைவு தீர்க்கைக்கு அடியான பௌஷ்கல்யத்தை உடையைவன் –
அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே –

———————

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-

நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பிரளயங்கதை யான பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான்
லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம் –

———————

பூணாது அனலும் தறு கண் வேழம் மறுக வளை மறுப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே-6-10-3-

யசோதை பிராட்டி உண்ட தயிரையும் வெண்ணெயும் களவு கண்டு அமுது செய்யப் புக்கால்
அவள் கண்டு பிடித்து கட்டுவது அடிப்பதாக நிற்கும் இறே-
அப்போது வெண்ணெயைக் களவு கண்டோம் என்றால் வருவதோர் எளிவரவு உண்டோ -என்று இருக்கும் ஆய்த்து –

———————

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே —6-10-4-

தமையன் பக்கல் த்வேஷம் மிக்கு இருக்குமா போலே யாய்த்து இவன் பக்கல் ராகம் மிக்கு இருக்கும் படி –
முதலிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் பரிவை இவன் ஒருவன் பக்கலிலும் பண்ணினவன் உடைய நாமம் சொல்லில் –
நமோ நாராயணமே –வாத்சல்யத்துக்கும் வாசகம் இறே –

——————-

குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம்
நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே–6-10-5-

பண்டு மிருத்யு ராஷசரைக் கிட்ட அஞ்சி யாய்த்து இருப்பது –
இப்போது பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே பொருந்தி புஜியா நிற்கும் ஆய்த்து –
இதுவே ஸ்வ பாவமாம் படி பண்ணினவன்உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –

—————–

கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-

இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன் –
இனி இது கண்டால் எல்லார்க்கும் சொலத் தட்டில்லை இறே
என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள் –
நமோ நாராயணமே –நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள-
ஸ்ரீ ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை –
உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் – தேவோ நாம சஹஸ்ரவான் –-பல பசு உடையவன் -என்னுமா போலே
ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து-இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு-காரண வாக்யங்களோடு– இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே –
இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் –

———————–

நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

காரண பூதனனவன் பேர் சொல்லுகை ப்ராப்தம் இறே
பிராப்தம் செய்யப் பார்த்ததிலி கோள் ஆகில் இனியது தான் வேணுமே –
பகவத் விஷயத்தில் கைங்கர்ய ருசி உடையார் எல்லாருக்கும் சொன்னேன்-இது செய்யாதார் கேளாதாராம் இத்தனை –
நமோ நாராயணமே —சஹஸ்ர அஷரீ மாலா-மந்த்ரமாய் இருக்கிறதும் அல்ல –

——————-

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-

பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை சிரமத்தாலே நோவு படாத படியாக ரஷித்தான் –
தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையும் இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு
ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே

———————

பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே –6-10-9-

குறைவற்றாரோடு-குறை வற்றாராக பிரமித்து இருப்பரோடு-குறைவாளரோடு வாசி அற
எல்லாருக்கும் ஒக்க நிர்வாஹகனாய் இருக்கை –
நீங்கள் அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணின பாபம் தீரும்படி சொல்லப் பாரும் கோள்-
ஸ்ரீ எண்ணாயிரத்து திரு வாய்க் குலத்து ஆழ்வான் -ஸ்ரீ நஞ்சீயரை
பிரபத்தி யாகிறது புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கும்-பரிஹாரம் ஆகவற்றோ –-பிராமாதிகத்துக்கேயோ -என்ன
அதன் உடைய ப்ரபாவ்வத்தைப் பார்த்தால் புத்தி பூர்வகத்துக்கும் பரிஹாரமாகவற்று
ஜ்ஞானம் நடையாடும் இடத்தில் அனுதாபம் இன்றிக்கே இராது இறே-ஆகையால் இவன் பக்கல் ப்ராமாதிகம் அல்லாது கூடாது
பூர்வாகத்தைப் போக்குகிற இது-புத்தி பூர்வத்துக்கு பரிஹாரம் ஆகாது என்ன ஒண்ணாதே
அதில் புத்தி பூர்வம் ஒழிய இல்லாமையாலே –வினையைப் பண்ணுவதானாலும் சொல்ல வடுப்பது இது –

————————-

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-

இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது –
இவர்களை விட்டுப் போய் பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் –
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை –

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – ஐந்தாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

July 3, 2019

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-

ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்
அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க சர்வ லோகேஸ்வரனாக சர்வருக்கும் சம்பிரதி பன்னன்
விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்–அஸ்மத் ஸ்வாமின் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ ஆலவாய் உடையான் கேட்க ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது இறே
கயல் உகளா நின்றதாகில்-புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன
ஸ்ரீ பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ-பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது
நிலமிதியாலே அவை தான் தூணும் துலாமும் போலே வளர்ந்து இருக்கும்
அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம் பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இவன் அறியாத தோர் இடம் தேடி வைக்கும் யாய்த்து சாந்துப் பரணியிலே தயிரை வைக்கும் யாய்த்து –
ஸ்ரீ நேமி யம் கையனான ஸ்ரீ நாராயணனுக்கு ஒளிக்கப் போமோ
பூசும் சாந்து என் நெஞ்சமே -என்னும்படி நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தம் உடம்பிலே
சிநேகத்தையும் போக்யதா புத்தியையும் பண்ணினாலும் அவன் விடாதே
தனக்கு ஆக்கிக் கொள்வன் என்னுமது ஸ்புரிக்க -சாந்துப் பரணியிலே -–என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நப்பின்னை பிராட்டிக்காக கரு மாரி பாய்ந்தும் -குளத்தில் இரண்டு குச்சுகள் நடுவே குதிக்கை –
அணைய வேணும் யாய்த்து வடிவு அழகு –
மாறாத சினத்தை உடைத்தாய் காட்டு காட்டு என்று வருகிற இளைமையை உடைத்தான
ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்த பரம பிரணயி யானவன் வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிரதானனான இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்த மாம்படி – பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை ரஷித்து –
நாம் இவனைத் தலை அறுக்கல் ஆகாது -என்று இரங்கி தோள்களைக் கழித்து விட்டான் ஆய்த்து
ருத்ரன் விட்டுப் போனதாய்த்து இவனுக்கு இரக்கத்துக்கு அடி –
மாறாத இவ் வாதிக்யத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –பரந்த கழனியில் உண்டான
எழில் மிக்கு இருந்த –புள்ளம் பூதங்குடி தானே-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்–

ராஜாக்கள் அடைய முடியும்படி – அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணி-ஈஸ்வர அபிமானியான ருத்ரன் கையில்
ப்ரஹ்மா வினுடைய சாபத்தாலே ஒரு காலும் நிறையாது இருக்கிற தலை யோட்டையைத்
தன் திரு மேனியில் ஜல பிந்துவாலே நிறைத்த என் ஸ்ரீ ஸ்வாமி வர்த்திக்கிற தேசம் –

ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்கைக்கு அநாதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று
திர்யக் வேஷ பரிக்ரஹம் பண்ணினான் ஆய்த்து – ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே –
அசூரர்களோடே கலந்து உரு மாய்ந்து போனத்தை பிரிக்கைக்காக
நீரையும் பாலையும் பிரிக்கும் பதார்த்தத்தின் வடிவைக் கொண்டான் ஆய்த்து –
பிரத்யுபகார நிரபேஷமாகவும்-உபகரித்த சுத்தியும் ஒரு சுத்தியே –
சிலர் அபேஷிக்க அன்றிக்கே தன் பேறாக உபகரித்தான் ஆய்த்து – என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ராமோ ராமோ ராம -என்கிற படியே இரண்டு அஷரம் பிணைக்க வல்லார் எங்கும் உண்டு –
ஸ்ரீ ஆழ்வாரும் ஒருவரே -என்னா நிற்கும் அத்தனை யாய்த்து –
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து கொடை இருப்பது – இத் திரு மொழியை உபகரித்தவர் இறே –
சொல் தான் ஈரைந்து இவை பாட-இதுக்கு மேற்பட்டது இல்லை இறே ரச்யதைக்கு-
இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————–

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே –5-2-1-

ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே
என்று ஆழங்கால் படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –இவன் இப்படியே தன்னை தாழ விட்டாலும்
இவனைத் தாழ நினைத்து இருப்பாரைக் கிடையாதே-ராஜாதி ராஜன் என்கிற பெருமையாலும் மிக்குத் தோன்றுகிறது –
சர்வ கந்த என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசமாய் இருக்கச் செய்தேயும் அத்தை யமுக்கி
இவர்கள் உடைய குழலில் பரிமளமே விஞ்சி வாரா நிற்கும் யாய்த்து –என்கிறார் முதல் பாசுரத்தில் –

ஸ்ரீ நப்பின்னை பிராட்டி ஒருதிக்குமேயாய் வேறு ஒரு ஆஸ்ரயத்தில் கிடவாத படியான அழகை லபித்து
பெறாப் பேறு பெற்றானாய் அவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யத்தால் அல்லது செல்லாத நீர்மையைக் காட்டி அனந்யார்ஹன் ஆக்கி
விலக்காத ஓர் அவகாசம் பெற்றவாறே ஹிருதயத்திலே வந்து அவன் வர்த்திக்கிற தேசம்
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற பூமிப் பரப்படைய நீர் ஏற்று
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட என் குல நாதன் ஆனவன் வர்த்திக்கிற தேசம்
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

உடம்பிலே புகரைக் கண்ட மேகமானது தன் உடம்பின் மின்னாகக் கொண்டு
அதுக்கு அனந்தரமான முழக்கத்தை முழங்கா நிற்கும் ஆய்த்து-
நீர் விழுகிற போது இங்கே கண்டு-கார்ய காலத்தில் அங்கே கண்ட
ஸ்ரீ வாமனைப் போலே யாய்த்து இவையும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ருத்ரனை துக்கத்தைப் போக்கின ஆபத்சகன் ஆனவன் வர்த்திக்கிற ஊர் -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஆபத்துக்களைப் போக்கி ரஷிப்பதாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருநீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன்
அத்தேசமும் தனக்கு உண்டாய் இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படியாகப்
புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம்–என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

காவி போலேயும் பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய ஸ்ரீ கிருஷ்ணன்
திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கூடலூர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————–

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே —-5-3-1-

பூமிக்கு ராஜாக்களால் வரும் நலிவைப் போக்கி ரஷித்த அருமை வேணுமோ
என்னுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி என்னை அடிமை கொள்ளுகைக்கு -என்கிறார்
முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ-
பிரதிபந்தகத்தைப் போக்கின இது பிறருக்கு உபகரித்தது ஆகை அன்றிக்கே
உன் பேறு என்னும் இடம் வடிவில் புகரிலே தோற்றும்படி இருக்கிறவனே
திருவடிகளிலே நான் என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை பண்ணுவது ஒரு பிரகாரம் என் பக்கலிலே
கிருபை பண்ணி அருள வேணும் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால் இவன் இறாய்க்கும்-என்று இவன் தன்னை தாழ விட்டு
ஸ்ரீ ஹயக்ரீவனாய் நின்று யாய்த்து உபதேசித்தது –ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து –
வேதம் இதிஹாசாதிகள் இவற்றை உண்டாக்கினவனே என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு வாழியைக் கொண்டு கார்யம் செய்யப் பெறாத படி அவன் வரம் பெற்று இருக்கையாலே
ஸ்ரீ திரு உகிரே ஆயுதமாகக் கொண்டு வ்யாபரித்தவனே –
என்னுடைய விரோதியைப் போக்கி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான
பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ பூமிப் பிராட்டி தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –பிரளயத்தில் அகப்பட நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத
ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனே –
அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மந்தரத்தை தரிக்க வல்ல ஸ்ரீ ஆமையின் வேஷத்தை பரிக்ரஹித்து அவர்களை ரஷித்து
அவர்களுக்கு சத்தா ஹேது வானவனே –நின்னடிமையை யருள் எனக்கு-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ராவணன் உடைய தலை பத்தையும் சின்னம் பின்னமாய் போம்படி யாக வில்லை வளைத்தவனே –
என் பக்கலில் கிருபையை பண்ணி யருள வேணும் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நீரையும் பாலையும் பிரிக்க வல்ல அன்னத்தின் வடிவினைக் கொண்டு தன் படிகளை அடங்கலும்
பேச வற்றை இருக்கிற வேதத்தை உண்டாக்கினவனே-என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால் தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து –
இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி போராதோ என்னுடைய ஆஸ்ரயணம் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு –
அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி –
பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை –
இப்பத்தையும் ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை ஸ்ரீ நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு
இவர்களை ஆதரியா நிற்பர்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————————-

உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-

சர்வ ஸ்ரஷ்டாவாய் ஆபத் சகனுமாய் இருக்கும் இருப்பைக் காட்டி என் குலத்துக்கு நாதன் ஆனவன் –
அடியார்களை குழாங்களை– உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லும் ஸ்ரீ நித்ய சூரிகளும்
இவ்விடத்தை விரும்பி இங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து –என்கிறார் முதல் பாசுரத்தில்

கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடையனாய் இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிறவன் விடாதே வர்த்திக்கிற தேசம்–என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

யஞ்ஞவாடத்திலே சென்று ஸ்ரீ திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன்
வர்த்திக்கிற தேசம் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்-

வழி கெட அன்றிக்கே நேர் கொடு நேரே அம்பாலே அழியச் செய்த வீர ஸ்ரீ யால்
குறை வற்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன் இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக
அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே
திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே ஸ்ரீ திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு ஏறுகைக்காக
வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்
அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்
மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்
இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்
நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம்
என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –

முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் -என்னக் கடவது இறே –
அல்லாத இடங்கள் சக்தி ஏக தேசம் அவன் தானே வந்தான் என்னக் கடவது இறே ஸ்ரீ ராமாவதாரத்தை
அப்படியே பூமிப் பரப்பு அடங்கலும் நிர்வாஹகனான ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் வர்த்திக்கிற தேசம்
நன்றான தேனும் பாலும் கலந்தால் போலே யாய்த்து இங்கு உள்ளார் எல்லாரும் தங்களிலே
ஒரு மிடறாக இனியராய் இருக்கும் படி –
விஜாதீய த்ரவ்யம் கலந்தால் போல் அன்றியே சஜாதீயம் கலந்தால் போலே யாய்த்து –
நித்ய சூரிகள் சம்சாரிகள் என்கிற வாசி தெரியாதே ஒரு நீராய்ப் பரிமாறா நிற்பர்கள் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு அரணாகப் போரும்படியான ஸ்ப்ருஹநீயமாய் இருந்துள்ள
மதிள்களாலே சூழப்பட்ட தர்ஸநீயமான ஸ்ரீ கோயில் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

உந்தி – வையம் -இரண்டும் ஸ்ரீ உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம்
விளைத்த -வம்பு -ஸ்ரீ ராமன் விஷயம்
கலை -கஞ்சன் -ஸ்ரீ கிருஷ்ண விஷயம்
சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்–இப்படி நாலு இரண்டும்
பண்டு -ஸ்ரீ திருக் குறளன் விஷயம்
ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள்
ஸ்ரீ கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம் ஸ்ரீ பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————————-

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-

தாய் மடியும் பொருந்தாத படி ஆர்மடி இவளை இப்படி துஸ் சிஷை பண்ணி விட்டதோ அறிகிறிலேன்
என் மடி அல்லது அறியாதவள் என் மடியில் பொருந்து கிறிலள் –
இவள் தன சர்வஸ்வத்தையும் நேர்ந்து செய்தத்தை என்னாலே நினைக்கப் போமோ
அவன் அகப்படுத்த-இவள் குமிழி நீர் உண்ணும் இத்தனை ஒழிய
கரையிலே நிற்கிற என்னால் இன்னபடி -என்று நினைக்கப் போமோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து – தன் சௌலப்யத்தைக் காட்டி
விலையாளா யடியேனை வேண்டுதியோ -என்று இவளை இட்டு சொல்லுவித்துக் கொள்ளுகைகாக
திரு மெய்யத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் -பின்னானார் வணங்கும் சோதியில் போலே –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவ -என்கிறபடியே முற்பாடரான சூரிகளுக்கும் அவ்வருகாய் இருந்து வைத்து
இவ்வருகு உண்டான பிற்பாடருக்கும் உதவுகைக்காக இறே இங்கு வந்ததும் –
தானே ரஷகன் என்று இருக்கும் இவளை வாய் விட்டுக் கூப்பிடும்படி பண்ணினானே-
நமக்கு ஓன்று செய்யப் பிராப்தி உண்டோ -என்று இருக்கிறாள் இவள்
பெறுவது அவனை யானால் இருந்த இடத்தே இருக்கப் போமோ -என்று இருக்கிறாள் மகள் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று ஒரு நோன்பு நோற்று பெற்றால் போலே
கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது-இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும்
என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது
ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தாயையும் அல்லாதாரையும் ஒக்க அபேஷிக்கும் படி நிருபாதிக பந்துவான தன் பக்கலிலே பாவ பந்தத்தை
பிறப்பிக்கிறவன் வர்த்திக்கிற தேசம் எங்கே -என்னா நின்றாள்
ஸ்வாமித்வம் இவை போலே ஔபாதிகம் அல்ல இறே
எம்பெருமான் -என்னைத் தோற்பித்தவன் என்றே காணும் அவனை அறிவது
இது இறே நமஸ் சப்தார்த்தம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது
நாம் அறிய -இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ-இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ
நம்பி- பெண்களுக்கு கையாளாய்-அத்தாலே தன்னைப் பூர்ணனாக நினைத்து இருக்குமவன் அன்றோ
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண்-இது குடிப் பிறப்புக்கு போராது காண்
இது தர்மி லோபத்தைப் பலிப்பிக்கும் காண்
அவன் ஸ்த்ரரைணன் காண் -என்று ஒரு ஹித வசனம் பண்ணினால்
அதுக்கு உத்தரமாக என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்னா நின்றாள் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்வ விஷயத்திலும் இதர விஷயத்திலும் விரக்தியும் பகவத் விஷயத்தில் ப்ரீதியும் மாறாதே
செல்லும்படியாய் இருப்பாள் ஒரு பெண் பிள்ளையை என்னைப் போலே புறம்பு பெற்றார் உண்டோ –
அப்போது பீஷ்மாதிகள் அம்புக்கு தன்னை இலக்கு ஆக்கினால் போலே
இப்போது தனக்காக இவளை காம ரசத்துக்கு இலக்கு ஆக்குகிறான்
இப்போது இவளை அழிவுக்கு இட்ட படி என்னாலே பேசப் போமோ -என்கிறார் ஏழாம் பாசுரத்தில் –

கலக்கிற இடத்தில் தாழ நின்று பரிமாறின படியையும்-அதுக்கடியான சீலத்தையும்
கலந்த போதை பரிமாற்றத்தின் வகைகளையும் – இதில் ஸ்ரோத்ரியன் ஆகைக்கு வ்யுத்புத்தி பண்ணின இடத்தையும்
சொல்லா நிற்கும் –ஆஸ்ரித விஷயத்தில் வ்யாமோஹாதிசயத்தை உடையவன்-பெரியோன் என்றபடி –
பிறவியை அறுப்பதான திரு நாமத்தை உடையவன் துக்க நிவர்தகமான திரு நாமங்கள் கிடீர்
இவளுக்கு துக்கத்தை பண்ணுகிறது-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்-இதுக்கு மேல் எனனால் போக்கடி தேடப் போமோ
இவள் தன் திறத்து படாது இருக்க தானே வந்து இப்படி பண்ணி-தானே உபேஷிப்பதே
முன் தீமை செய்வானும் தானேயாய்-உபேஷிப்பானும் தானே யாவதே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே
இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து
ஸ்ரீ பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————————-

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1-

தான் அல்லது ரஷகர் அல்லாதாரை அரியன செய்தும் ரஷிக்குமவனை –
ஒரு கால் மலையை எடுத்து பசுக்களையும் இடையரையும் ரஷித்தான் –
ஸ்ரீ திருப் பாற் கடலிலே கிடந்தான் -என்று கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே
நான் ஸ்ரீ கோயிலிலே காணப் பெற்றேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்

இந்த லோகங்கள் ஏழையும் தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும் ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே
உபகாரம் கொண்டார்க்கு பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படி இருந்தவனை –கண்டது தென்னரங்கத்தே
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஒருவன் காலில் முள் பாய்ந்தால் சரீரி யானவன் நோவு படுமா போலே ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம் படி
இதுக்கு அபிமானியாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்து இருக்கும்
தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு சர்வ வித போக்யனாய் அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருக்குமவனை –
ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்து ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க நமக்கு இங்கே வந்து குறைய நிற்க வேண்டா நின்றது
என்னும் இன்னாப்போடு அன்றிக்கே இப்படி யாகிலும் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம் என்னும் ப்ரீதி பிரகர்ஷத்தோடே
பண்டு ஒரு கால் பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் இடையனாய் அதில் புரையற வர்த்தித்தவனை கண்டது தென்னரங்கத்தே –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஊர்ந்து வருகிற சகடம் சின்னம் பின்னமாய் போம்படி திருவடிகளாலே உதைத்தவனை-
ஸ்ரீ நரசிம்ஹமாய் ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனை –
பரைப்பை உடைய பூமி இரண்டு அடியாலே அடங்கும்படி திருவடிகளை நீட்டி அளந்து கொண்டவனை –
யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே–என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி-அவ்வருகே பட்டார்க்கு பிராப்யமான ஸ்ரீ பரம பதமுமாய் –
அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக-பிராமணர்கள் உடைய யாகங்களிலே
மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

த்வேஷத்தை தவிர்ந்து-தன்னை அடைந்தவர்கள் உடைய ஸ்வ பிராப்தி உபாயத்தை
தானே நிர்வஹித்துக் கொடுக்குமவனை –
த்வேஷமேயாய் இருப்பார் அளவில் இருக்கும் படி –
ஸ்ரீ தேவகியாரையும் ஸ்ரீ வசுதேவரையும் நலியப் புக்க வாறே அத்தைப் பொறாதே
இனி அரை ஷணம் இவனை வைக்க ஒண்ணாது என்று அவனைக் கொன்றான் ஆய்த்து-
த்வேஷமும் பண்ணாதே தன்னை அடைவதும் செய்யாதே இருப்பார் அளவில் இருக்கும் படி
ஆபத்தை அடையாளமாக ரஷிக்கும் இத்தனை யாய்த்து-தான் அறிந்த சம்பந்தத்தையே பார்க்கும் இத்தனை –
கற்பகத்தை –இப்படி உபகரித்தோம் என்று நினைத்து இராதவனை-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானேயாய் இருக்கிற வஸ்து தான் ஏது என்ன –
ஸ்ரீ திருமாலை – பிராபகத்தில் புருஷகாரமுமாய் பிராப்யத்துக்கு அவனோபாதி இறே இருப்பது –
ஸ்ரீ ஸ்ரீ திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவனாய் இருந்து வைத்து
இவ் வவஸ்தைகளை என் நெஞ்சிலே பிறப்பிக்கைக்கு தானே வந்து மனசிலே விடாதே
பொருந்தி இருக்கிறவனை-தானே அர்த்தியாய் கொண்டு இருக்க-நான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தன்னையே பற்றின என்னோடு-சம்பந்தம் உடையாருக்கும்-வைஷ்ணவர்களுக்கும் -என்றபடி
எனக்கும்-எனக்கு தாயும் தமப்பனும் என்று இருக்கிற இவர்களுக்கும்
நித்ய சூரிகளுக்கும் ஒக்க தரம் வையாதே சேஷியாய் இருக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே
என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –

பாஹ்யேந்திரங்கள்-விஷயங்களில் போகாதபடி பண்ணி – ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக
தன் பக்கலிலே பக்தியைப் பண்ணுமவர்களுக்கு-தன் ஸ்வரூபாதிகளை உள்ளபடியே காட்டிக் கொடுக்கும்
விஸ்மயநீயனை –யான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம்முதல் இல்லாத பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து
அது தான் பர தசை-என்னும்படி ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை –
மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க
துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-

இவற்றைச் சொன்ன பாசுரம் தன்னளவும் வரும்படியாய் இருக்கையாலே இவை அடைய -தான் -என்று சொல்லும்படி
சரீரதயா சேஷமாகத் தான் சேஷியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் – என்கிறார் முதல் பாசுரத்தில்

சகல பிராணிகள் உடைய சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்கும் கடவனாய் இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் –ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ அரங்க நகர் அமர்ந்தானே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

தன்னைப் பேணாதே கேட்கிறவனுக்கு ஆச்சார்ய அநுவர்த்தனம் பண்ண வேண்டுகிறதோ -என்று
கூச வேண்டாத வடிவைக் கொண்டு தன்னைப் பெறிலும் பெற ஒண்ணாத வேதங்களை வெளியிட்டவன் –
அன்று பிரமாணத்தை வெளி இட்டுத் தந்தவன்-இன்று பிரமேய பூதனான தன்னை
வெளி இட்டுக் கொண்டு வந்து கண் வளர்ந்து அருளினான் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

நான்கு தோள்கள் கொண்டு வ்யாபரித்த படி தான் ஆயிரம் தோள் கொண்டு
வ்யாபரித்தான் என்னலாம்படி யாய்த்து –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டவன் இன்னம் அப்படிக்கொத்த விரோதி வர்க்கம்
வந்து கிட்டினால் போக்குகைக்காக இங்கே வந்து சந்நிஹிதன் ஆனவன்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நித்ய அனுபவம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக புகரை உடைத்தான பல வாய்களையும் உடைய
ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவன் அப்படியே காணலாம்படி இங்கே வந்து சந்நிஹிதன் ஆனான் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஏதேனுமாக இட்ட தடையைக் கொண்டு ஆழக் கடவ கடல் வழி பட நீரிலே புக்கு அமிழக் கடவ மலைகள்
மிதந்து அணையாக -கணக்கு வழக்குப்பட ஒரு வியாபாரம் பண்ண மாட்டாத வானர ஜாதியைக் கொண்டு
அடிமை கொண்டு நீர்க் கிளப்பத்தை உடைத்தான கடலை அடைத்தான் –அரங்க மா நகர் அமர்ந்தானே –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

அவனுடைய பிரகாசத்துக்கு அடைத்த சாலம் தன்னிலே அநேக ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே
இருந்துள்ள புகரை உடைய ஸ்ரீ திரு ஆழியைக் கொண்டு அந்த ஆதித்யனை மறைத்தவன் –
இந்த ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம் படி அளவு பட்டு இருக்கையாலே
தமஸ்ஸூ போம்படியாய் இருக்கும் –-
அங்கன் அன்றிக்கே ஸ்ரீ திரு ஆழி ஆழ்வான் தேஜஸ்ஸூ நேர் கொடு நேர் கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி
மிக்கு இருக்கையாலே பளபளத்து கண்ணை இருளைப் பண்ணிற்று-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகளுக்கு தூரஸ்தனாய்–என் போல்வாருக்கு கையாளாய்- என் பக்கல் அபேஷா மாத்ரமும் இன்றிக்கே இருக்கத்
தானே வந்து என்னுடைய மானஸ வ்யசனத்தைப் போக்கும் –ஆயனாய்
ஸ்ரீ கோவர்த்தன கிரியைத் தரித்து பண்ணின உபகாரம் அறியாத பசுக்களையும் இடையரையும் நோக்கினவன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

லஷணங்களில் ஒன்றும் குறையாத படி விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார்
ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு போக்கப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

இத்தனை குறைவாளனை விஷயீ கரியாது ஒழிகிறது என் –என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது –
இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால் இவள் வழியே போவான் ஒருவன் இறே –
பிராட்டியை தோழி என்றும்-இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –
சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம் சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடக்குமா போலே
சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக –
ஸ்ரீ ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே
அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது
உடையவன் ஆகையாலே-உடைமை தேட்டமாய் அன்றோ-இங்கு வந்து சாய்ந்து அருளிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்

சேஷ பூதனுக்கு கைங்கர்யத்தை உண்டாக்குக்கையும் அவனுக்கு பிராப்தம் என்று நினைத்து இருக்கையும் அன்றிக்கே
தன் பேறாக நினைத்து இருக்கையும்-பிரத்யுபகாரம் தேடித் தடுமாற வேண்டாமையும்-என்பதால் உகந்து என்கிறார்
சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –
சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கையாலே
அதாவது-ருசி ஜனகமாய் இருக்கையாலும்-தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்-ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ்வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது –
ஆபி முக்கியம் பிறந்தால் கைங்கர்யத்தில் அன்வயிப்பைக்காக அன்றோ
இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இப்படி நோவு படா நிற்க இவன் நினையாது ஒழிந்தது-ஒரு நீர்ப் புழுவுக்காக சர்வேஸ்வரனை அழைக்கவோ
நாமே வெல்லுவோம் -என்று இருந்தான்
இவன் இப்படி நெடு நாள் நோவு படுகிறபடி அறியாது இருக்கிறான் அன்றே
இவனுடைய அஹங்கார ஸ்பர்சம் அற்றால் முகம் காட்டுகிறோம் -என்று இருந்தான் அத்தனை இறே-
தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –
ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான குணங்கள் இறே சௌலப்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்
மடுவின் கரை தேடி வர வேண்டாதே நான் அகப்பட்ட மடுவிலே அன்றோ வந்து சாய்ந்து அருளுகிறது
அங்கு முதலை ஓன்று-இங்கு ஐந்து-திவ்யம் வர்ஷ சஹச்ரகம் -என்கிறபடியே
காலம் அளவு பட்டு இருக்கும் அங்கு இங்கு காலம் அநாதி
அங்கு பொய்கை அளவுபட்டு இருக்கும்-இங்கு சம்சாரார்ணவம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அதிகார பூர்த்தியும் சரணாகதி பூர்த்தியும் அன்றே பல ப்ரதம் ஆவது-சரண்யன் உடைய நினைவே இறே
நம்மைச் சரணம் புகுந்த இவன் நம் கீழே கிடக்கிறான் என்று இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து-அவனை இட்டு இறே ரஷித்தது
தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்தாலும் அவன் துணுக் துணுக் என்கை போகாது இறே
தானே ரஷிக்க வல்லனாய் இருக்கை நம் கையிலே காட்டித் தருவதே என்று இவனைக் கைக் கொண்ட போதே அவன் பசியும் தீர்ந்தது
இனி இருவருக்கும் அந்யோந்யம்-ரஷ்ய ரஷக பாவம் இறே உள்ளது-பாத்ய பாதக சம்பந்தம் போய்த்தே
முன்பு சஹஜ சாத்ரவம் உண்டே யாகிலும் ஸ்ரீ பகவத் ஆஸ்ரயணம் பண்ணினால் ஒரு நீராய் விடும் இத்தனை இறே –
சேஷ பூதன் ஆகைக்கும் யமாதிகளுக்கு அஞ்சுகைக்கும் என்ன சேர்த்தி உண்டு
யமன் தான் அஞ்சி ஸ்ரீ மதுசூதன பரிகாரம் -என்னும்படி யான உன் திருவடிகளை ஆஸ்ரயித்தேன்-
அனுபவ விரோதிகளைப் போக்கி-ஆஸ்ரிதரை அனுபவிப்பைக்காக அன்றோ இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இவனை இரு என்கைக்கும் இவன் இருப்பை இசைகைக்கும் ஒரு கருத்து உண்டாக வேணும்
அதாவது என் என்னில்-ஈஸ்வரன் நினைத்தால்
விஷய ப்ரவணரையும் இவ்வாசனை அறுத்துக் கொடு போக சக்தன் என்னும் இடமும்
எத்தனையேனும் பகவத் ப்ரவணரையும் தேக சம்பந்தின் வழியே கொடு போய்
விநாசத்தைப் பலிப்பிக்கும் என்னும் இடமும் வெளியிட்டது –
சாதுக்கள் உடைய உபமான பூமியாய் இருக்கிற ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் இறே எதிரம்பு கோத்தான்
இதுக்கு நேரே உதாஹரணம் ஸ்ரீ மாலா காரர் அளவில் செய்தது இறே
அவன் கருத்து அறிந்து கார்யம் செய்தால் போலே என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் –
ஆஸ்ரிதர் அனுரூபமாக அபேஷிதங்கள் ஆராய்ந்து செய்கைக்காக அன்றோ இங்கே வந்து சாய்ந்து அருளிற்று
ஐஸ்வர்யம் வேணும் என்பார்க்கு அத்தை கொடுக்கவும்
தேகத்தை பூண் கட்டிக் கொடுப்பார்க்கு அத்தைச் செய்யவும்
தேக சம்பந்தத்தை அறுத்து தர வேணும் என்பார்க்கு அத்தைச் செய்யவும் அன்றோ-இங்கே வந்து சாய்ந்து அருளிற்று –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்-

சம்சார சம்பந்தத்தை அறுத்து திருவடிகளை ஒரு நாளும் பிரியாத படியான பேற்றைப் பண்ணிக் கொடுத்தாய் –
நாம் கொடுத்தால் இவன் விலக்கான்-என்னும் இதுவே பற்றாசாக உன்னைப் பிரியாத பேற்றைப் பண்ணி அவனுக்கு
கொடுத்தால் போலே உன் விருப்பத்தாலே நானும் அப்பேறு பெற வேணும் என்று சரணம் புகுந்தேன் –
பிரயோஜனாந்தரங்களுக்கு வந்து ஆஸ்ரயித்த வர்களுக்கும் விலக்காமை உண்டாகில்
ஸ்வரூப அனுரூபமான பிரயோஜனத்தை கொடுக்கைக்காக வன்றோ இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

கையில் வில்லை வாங்கி கடல்கரையிலே சென்ற போதே அஞ்சி வருணன் முகம் காட்ட
ஆச்சார்ய புத்திரன் இங்கே புக்கான் காட்டித் தா -என்ன-அவனும் போக்கற்ற வாறே
ஸ்ரீ பஞ்ச ஜனன பஜித்தான் -என்ன-முன நாள் உண்ட சோற்றை வாங்க ஒண்ணாது இறே
கடலிலே நீர் நீங்கிக் கொடுக்க ஸ்ரீ சங்க ரூபியான இவனை யக்ற்றின அளவிலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான் வந்து ஆவேசிக்க
திருப் பவளத்தே வைத்து முழக்கிக் கொடு எம புரத்தே எழுந்து அருள-அவனும் அர்க்யாதிகளைக் கொடுத்து
எழுந்து அருளிற்று என் என்ன
ஆச்சார்ய புத்திரன் இங்கே வந்தான் அவனைக் காட்டித் தா -என்ன
அவனும் நரக விசேஷத்தில் நின்றும் அவனைக் கொடு வந்து காட்ட
என் புத்திரன் என்று அவன் பிரத்யபிஞ்ஞை பண்ணும்படி-அவனைக் கொடு வந்து காட்டிக் கொடுத்தான் இறே –
கடல் கொண்ட வஸ்துவை மீட்டு உருவுருவே கொடுத்தால் போலே-சம்சார ஆர்ணவம் கொண்ட என்னை
மீட்டு-வ்ருத்தி பர்யந்தம் ஆக்கி தருகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து சாய்ந்து அருளிற்று –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில் –

இப்படிப் பட்ட உன் அதிசய சக்தியை அனுசந்தித்து சரணம் புகுந்தேன்
அங்கு உள்ளாரை இங்கே மீட்டுக் கொடு வந்து கொடுத்தமை உண்டு-உமக்கு அங்கன் இருப்பது ஓன்று உண்டோ -என்ன
அதிலும் அரியது ஓன்று அன்றோ-இங்கு உள்ளாரை அங்கு ஏறக் கொடு போகை
அது செய்யலாம் -தன் நினைவாலே செய்யுமது ஆகையாலே
இத்தலையை இசைவித்து அத்தலை ஏறக் கொடு போகை அன்றோ அரிது –
இங்கு உள்ளாரை அக்கரைப் படுத்துக்கைகாக அன்றோ இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
தேகாத்ம அபிமானியாய்-விஷய ப்ரவணனாய்-அநந்த கிலேச பாஜனம்-என்கிற சம்சாரத்திலே அழுந்துகிற என்னை
ஸ்வரூப ஜ்ஞானத்தைப் பிறப்பித்து-உன் பக்கலிலே ப்ராவண்யத்தை உண்டாக்கி
அந்தமில் பேரின்பத் தடியரோடே வைக்காக அன்றோ தேவரீர் இங்கே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஏழு அர்த்தத்தைப் பற்ற ஏழு காலம் என்கிறது இறே –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தியும்
ஸ்வாதந்த்ர்யா நிவ்ருத்தியும்
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும்
ஸ்வ யதன நிவ்ருத்தியும்
அபந்து ஷூ பந்துத்வ பிரதிபத்தி நிவ்ருத்தியும்
விஷய நிவ்ருத்தியும் –
ஸ்வரூப ஜ்ஞானத்தை பிறப்பிக்க வேணும் -என்று சரணம் புக்கு உஜ்ஜீவித்தேன்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு வேங்கடமுடையான் அளவிலே பிறந்த அர்த்தத்தைச் சொல்லி ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் புகுகிறார்
ஸ்ரீ திருமலையில் நிலையிலே ஒரு உத்யோகம் உண்டு என்று தோற்றும் இறே பின்பு போய்ந்து சாய்ந்த இடம் அது இறே
மாழை மான் மட நோக்கி -என்று தொடங்கி உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்று
தலைக் கட்டுகையாலே-ஒன்பது பாட்டிலும் ஏகார்த்தத்தைப் பற்றவே சரணாகதியாய் இருக்கிறது –

எந்தையை –பரிகரம் உண்டானாலும் பிறர் கார்யம் செய்ய வேண்டுவது இல்லை இறே
ப்ராப்தி இல்லை யாகில் -கார்யம் செய்கைக்கு ஈடான ப்ராப்தி சொல்லுகிறது
ப்ராப்தன் ஆனாலும் பிரயோஜனம் இல்லை இறே வ்யாமுக்தன் அன்றாகில்-அதுக்காக நெடுமாலை -என்கிறது
இத்தால் ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான ஸ்வ பாவங்கள் சொல்லுகிறது –
இவருடைய பாவ வருத்தி இல்லையாகிலும் இவருடைய பாசுரத்தைச் சொல்லவே ப்ராப்தி பிரதிகந்தகங்கள் போம் என்கிறது –
பால் குடிக்க நோய் தீருமா போலே இவருடைய பாசுரத்தைச் சொல்ல ப்ராப்தி பிரதிபந்தகங்கள் தன்னடையே விட்டுப் போம்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி போலே-நீடு தொல் புகழ் ஆழி வல்லானை -என்று
அஹம் சப்தத்தில் சக்தியைப் பற்றச் சொல்லுகிறது – பத்தாம் பாசுரத்தில்

————————–

ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய
அவ் ஊருக்கு கணையம் போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே
வேறு ஒரு ஹேதுவைச் சொல்லி அன்றியே இது சொல்லியே நம்மைக் கட்டுவதே
என்று இசைந்து இருந்தான் ஆய்த்து –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய
ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலே வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகளிலும் காட்டில் கை வந்து இருக்கிற பிராமணர் ஆனவர்கள் சிருஷ்டி காலம் தொடங்கி
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கக் குடி ஏறி ஜீவித்துப் போருகிறவர்கள் ஆய்த்து –
சீலகுண பிரசுரராய் மிக்க தபசை உடையராய் இருக்கிற பிராமணர் ஹிருதயத்தை
தனக்காக்கிக் கொண்டு இருக்கிறவன் என்னுடைய ஹிருதயஸ்தன் ஆனான் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————

தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-1-

அந்தராத்மதயா நின்று ரஷகனாம் படி சொல்லி- கண்ணுக்கு இலக்காம்படி வந்து அவதரித்து ரஷகனாம்படி சொல்லி
ஒதுங்குவார் அளவு பட்டு இத் தோள் நிழலே மிக்கு இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே
என்கிறார் முதல் பாசுரத்தில்

நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஏதேனும் தசையிலும் விச்வச நீயானாய் இருக்கிறவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சிறகை உடைத்தாய் இருக்கிற மயில்கள் குயில்கள் இவை நெருங்க
அத்தாலே பூக்கள் உதிர வண்டுகள் ஆளத்தி வைக்க –பொழிலிலே
மேகங்கள் வந்து சஞ்சரியா நின்றுள்ள தேசம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

யுத்தத்துக்கு பரிகரமான வாளும்-தர்ச நீயமான வில்லும் வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும்
கதையும் இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன்
அவதாரங்கள் போலே இப்போது சந்நிதி இல்லை என்ன வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

வெம்மையை உடைத்தாய் நிலம் தன்னையே விறகாகப் பற்றி எரிகிற காட்டிலே உலாவினவர்
அப்பிராட்டியோடே புணர்ந்து சமஸ்த கல்யாண குணாத்மகன் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஆசூர பிரக்ருதிகள் கண்ணுக்குத் தோற்றாதபடி இருளிலே வந்த பெரு மிடுக்கனான ஸ்ரீ நந்த கோபர் பிள்ளை –
பிறந்தது அங்கே ஆகில்-மீண்டும் போய் வளர்ந்தது அங்கே யாகில் –
கம்ச பயத்தாலே நாலு நாள் வளர்ந்த இத்தனையும் கொண்டு அறிவு குறைய நின்றார் சொல்லுகை அன்றிக்கே
அறிவில் தலை நின்ற நம் போல்வார் இங்கன் சொல்லுகிற இதுக்கு ஹேது என்-என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க –
நாமே அன்று காணும்-அவதார காலத்துக்கு முன்பே அறிவுடையராய் இருப்பாரும் இப்படி சொன்னார்கள் காணும் –
அயம் ச கத்யதே ப்ராஜ்ஞை-இத்யாதிகளாலே-அவர்களுக்கு முலை சுரவா நின்றது ஆகில்
இவன் தான் அஞ்சா நின்றான் ஆகில் உமக்கு இவ்வாராய்ச்சி என் தான் -என்று அருளிச் செய்தார் –
அந்ய பரன்-அநந்ய பரனாய் அடிமை செய்து வர்த்திக்கிற தேசம் – அதாவது
நந்தி என்பான் ஒருவன் அக்காலத்தில் அங்கே அனுகூலித்து வர்த்தித்தான் போலே –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பூமியிலே பாரத வர்ஷமே உத்தேச்யம்-பண்ணின புண்யமானது-சாலில் எடுத்த நீர் போலே ஷயித்தவாறே
முகம் கீழ்ப்படத் தள்ளுகிற ஸ்வர்க்கமும் ஒரு தேசம் ஆய்த்தோ –
கோலின பலங்களுக்கு எல்லாம் சாதன அநுஷ்டானம் பண்ணலாம் பாரத வர்ஷத்தை ஒழிய -என்றார்கள் இறே
அப்படியே பூமிப் பரப்பில் ஸ்லாக்கியமாய் இருந்துள்ள இந்த நகரத்தோடே ஒக்க கடவது இல்லை என்று தேவர்கள்
புஷ்பாதி உப கரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நங்கள் ஸ்ரீ பெருமான் உறையும் –ஸ்ரீ பர அவஸ்தை ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்கும்
ஸ்ரீ வ்யூஹம் ப்ரஹ்ம ருத்ராதிகள் பரிபவத்தைப் போக்கவாய் இருக்கும்
ஸ்ரீ அவதாரங்கள் ஸ்ரீ வசுதேவர் ஸ்ரீ சக்கரவர்த்திகள் தொடக்கமான பாக்யாதிகருக்காய் இருக்கும்
பிற்பாடரான நம் போல்வாருக்காய் இருக்கும் இறே உகந்து அருளின நிலங்கள்
ஸ்ரீ நித்ய சூரிகளும் இங்கே வரும் போது குறைவாளராய் வர வேணும்
அந்தருக்கு வைத்த சாலையில் கண்ணை மறைத்து வர வேணும் இறே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

நண்ணு மனமே என்று உத்தேச்யமாக சொன்ன தேசம் ஆகையாலே இவ்விடம் நமக்கு ஆஸ்ரயநீய ஸ்தலம்
என்னும் பிரதிபத்தியோடே கூட அப்யசிக்க வல்ல அடியவர்கள் உடைய
க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே இருக்கிற பாபங்கள் சவாசனமாகப் போம் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -ஐந்தாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

July 3, 2019

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-பிரவேசம் –

ஒரு கால் ஓர் இடத்தே நசை பண்ணிப் பெறா விட்டால் கிடைத்தது அல்லை என்று மீளலாம் படி அன்று இறே
இவர் நசை இருப்பது –
நசை பண்ணாமல் இருக்க ஒண்ணாத படி இருக்கும் இறே விஷய ஸ்வபாவத்தை பார்த்தாலும் –
இனித்தான்
உகந்து அருளின நிலங்களில் வந்து நிற்கிறது
தன் பக்கலில் ருசி உடையாரோடே நினைத்த படிகளில் எல்லாம் பரிமாற விறே
ராஜாக்கள் தோப்புக்கள் பல சமைத்தால்-இன்ன தோப்பிலே இன்னானுக்கு முகம் கொடுக்கக் கடவோம்
என்று அறுதி இட்டு இருக்குமா போலே
உகந்து அருளின நிலங்களில் பல இடங்களிலும் நிற்கிறது – ஓன்று அல்லா ஓர் இடத்திலே ஓர் ஒருத்தருக்கு
முகம் கொடுக்கைகாக –ஆன பின்பு நமக்கு இவ்விடத்திலே முகம் தர நினைத்திலன் ஆகில்
மற்று ஓர் இடத்திலே யாகிறது என்று உகந்து அருளின நிலங்கள் தோறும் புக்குத் திரிவர்
இன்ன இடத்திலே முகம் தரும் என்று அறியார் இறே –

ஆகையால்
ஸ்ரீ திரு புள்ளம் பூதங்குடியிலே சந்நிஹிதன் ஆனான்
அங்கு நிற்கிறவன் தான் ஆஸ்ரிதருக்கு தானே அர்த்தியாய்க் கொண்டு
கார்யம் செய்யும் ஸ்வபாவன் ஆவான் -மாண் உருவாகிய- பாசுரம் –
ஆஸ்ரிதரோடு ஸ்ரீ பிராட்டியோடு வாசி அற முகம் கொடுப்பான் ஒருத்தன் -வெற்பால் மாரி -பாசுரம் –
தன்னை அறிக்கைக்கு ஈடான ஸூஹ்ருதம் பிறக்கைக்கும் தான் பிரவர்தகன் ஆவான் -அன்னமாகி அருமறைகள்
அருளிச் செய்த அமலன் பாசுரம்
அதுக்கு மேலே
நிரதிசய போக்யனும் ஆவான் என்று -கூத்தன் -நேமி யங்கை மாயன் -பாசுரங்கள் –
அவன் படிகளைப் பேசி அனுபவிக்கிறார் –

————————

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே –5-2–1-பிரவேசம் –

வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் -என்றார் கீழில் திரு மொழியில்
பிறர் ஆஸ்ரயிக்க விரைந்து அருள் செய்வான் -என்று இது ஒரு பழம் கதை சொல்ல வேணுமோ
தானே வந்து என் ஹிருதயத்தில் புகுந்து விரைந்து அருள் செய்தவன் -அன்றோ -என்று
அவன் படிகளை அனுசந்தித்து
இப்படிப் பட்டவன் தான் ஸ்ரீ திருக் கூடலூரிலே வந்து சன்னிஹிதன் ஆனான் –
அவன் ஆகிறான்-சர்வாதிகனாய் இருந்து வைத்து-தன் மேன்மை பாராதே
ஆஸ்ரிதர்க்காக தாழ நின்று கார்யம் செய்யும் ஸ்வபாவன்
அவன் வர்த்திக்கிற தேசம் தான் நிரதிசய போக்கியம் என்று அத்தை பேசி அனுபவிக்கிறார் –

————————-

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே —-5-3-1–பிரவேசம் –

அடியேன் உள்ளம் உருகப் புகுந்த ஒருவரூர் போல் -என்று தம்முடைய ஹிருதயத்தில் புகுந்திருந்த
உபகாரத்தை அனுசந்தித்து ஹிருஷ்டரானார் -கீழில் திரு மொழியிலே –
அவ்விருப்புத் தான் பேறாய்த் தோற்றுகிறது -திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தைப் பண்ணி வார்த்திகப் பெறில் இறே-
அது பெறாமையாலே-கிலேசத்துக்கு உடலாய் தோற்றிற்று-
குறைவறச் செய்தது அல்ல-ஒரு வாசி செய்தருளப் பார்த்தால் அது முடியச் செய்து தலைக் கட்ட வேண்டாவோ –
ஆன பின்பு த்வத் ப்ராப்தி பிரதிபந்தகத்தைப் போக்கி தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்தை
நான் பெறுவேனாம்படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் – என்கிறார் –

————————–

உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-பிரவேசம் –

நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே என்றார் கீழில் திரு மொழியிலே
அருள் புரியே என்று நீர் இங்கன் இழவாளராய் பிரார்த்திக்கிறது என்
நாமும் உமக்கு என்றும் உபகரித்திலோமோ
உபகரிக்க வன்றோ நாம் ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதர் யாய்த்து -என்று
இங்கனே சந்நிஹிதன் ஆனபடியைக் காட்டிக் கொடுத்தான் –
அத்தை அனுசந்தித்து ஹிருஷ்டராய்
இனித் தான் அறிவுடையார் அடங்கலும் பிராப்ய புத்தி பண்ணி விடாதே வர்த்திக்கிற தேசம் என்று
அது தன்னைப் பேசி இனியர் ஆகிறார் –

———————

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1- பிரவேசம் –

தன்னைப் பேணாதே ரஷிக்குமவன் சந்நிஹிதனாய் இருக்க
அபேஷை உண்டாய் இருக்க
அபிமதமான கைங்கர்யம் பெறாமையாலே தமக்குப் பிறந்த அவஸாத அதிசயத்தை
பகவத் விரஹத்தால் வந்த ஆற்றாமை யோடே இருக்கிறாள் ஒரு பிராட்டி தசையை அனுசந்தித்து –
அவனை இவளோடு கூட்ட மாட்டு கிறிலேன்-
நோவு படாத படி பண்ண மாட்டு கிறிலேன் –
என்று நோவு படுகிறாள் ஒருத் திருத் தாயார் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

———————-

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1- பிரவேசம் –

மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாள் -என்று
திரு நாமங்களைப் பல காலும் தானே சொல்லியும்
திருத் தாயார் அவற்றை அனுபாஷித்து கேட்டும்
ஆக-இப்படி திரு நாமங்களிலே வாசனை பிறந்தது –
சத்தா தாரகமாய் இறே திரு நாமங்கள் தான் இருப்பது – அத்தாலே உணர்ந்து தரித்தார் –
தரித்த அநந்தரம்
நீர் இங்கனே கிடந்து படுகிறது என் –ஸ்ரீ பரம பதம் கலவிருக்கையாய் இருக்க
நாம் இங்கே வந்து ஸூலபர் ஆகிறது உமக்காக அன்றோ -என்று
அவதார சௌலப் யங்களையும் காட்டி-அங்கன் காதாசித்கமாக அன்றிக்கே
ஸ்ரீ கோயில்களில் வந்து சந்நிஹிதர் ஆகிறதும் உமக்காக
அந்தப் பொதுவும் அன்றிக்கே விசேஷித்து ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதர் ஆய்த்ததும் உமக்காக –
நம்முடைய சந்நிதியால் உள்ள பலம் தானே நீர் பெறுவதும் செய்தீர் –
நாமே உம்முடைய கார்யத்துக்குக் கடவோம் என்று நம் தலையிலே ந்யச்த பரராய் இருக்கப் பெற்றீர் இறே
இனி அலமாக்கிறது என் -என்ன –

ஸ்ரீ கௌசலையையார் பெருமாள் காடேறப் போகிற போது
ஏக புத்ரையாய் இருக்கிற நான் உம்மை விட்டு இருக்க மாட்டேன் -என்று புறப்பட
ஒரு கால் அவர் முகத்தைப் பார்த்து-ஆச்சீ நீர் சொல்லுகிறது தர்ம ஹானி கிடீர்
இனி பர்த்தா இருக்க புத்ரனை அநுவிதானம் பண்ணவும் கட்வதல்ல-ஆன பின்பு இனி மீளும் -என்ன
அவள் காப்பிட்டு மீண்டாள் இறே
அப்படியே இவர்-அவ்வார்த்தையாலே ஹ்ருஷ்டராய்-பெற்றதிலே லாப அம்சத்தைச் சொல்லி
க்ருதாரத்தராகிறார் –

————————–

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-பிரவேசம்

ஜகத் காரண பூதனாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் ஆஸ்ரயநீயனாய்-சகல சேதனர்க்கும் துக்க நிவர்த்தகனாய்
ஆஸ்ரிதர்க்கு அபேஷித சமயங்களிலே வந்து உதவும் ஸ்வபாவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
அவ்வவதாரங்களில் பண்ணி அருளுகிற காலங்களிலும் உதவாதாருக்கு இழக்க வேண்டாதபடி
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே ஸ்ரீ கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணி யருள
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்று இனியராய்ப் பேசுகிறார் –

———————–

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1- பிரவேசம் –

இவ்வாழ்வார் ஆகிறார்-சாஸ்திர வாசனை யாலே யாதல்-தபஸாலே யாதல் அன்றிக்கே
ஸ்ரீ பகவத் பிரசாதத்தாலே தத்வ த்ரயத்தையும் யதா தர்சனம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆய்த்து –
பர ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகையாவது ஏது என்றால் –
ஸ்ரீயபதியாய் –அகில ஹேய ப்ரத்ய நீகனாய் –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
அந்த குணங்களுக்கும் பிரகாசகமாய் –
சௌந்தர்ய சௌகுமார்யாத்யாகரமாய் இருந்துள்ள -திவ்ய விக்ரஹத்தை உடையனாய் –
உபய விபூதி நாதனாய் – நிரதிசய போக்யனாய் – இருக்கும் என்று அறிகை –

ஸ்வ ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகை யாவது –
அனந்யார்ஹமாய்- ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இன்றிக்கே பர தந்த்ரமாய் இருக்கும் என்று அறிகை –

அசித் ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகை யாவது
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை யதா தர்சனம் பண்ண ஒண்ணாத் படி
இடைச் சுவராய்க் கொண்டு விரோதித்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்று அறிகை –

இவ் விரோதியைக் கழித்து இச் சேதனன் விலஷண வஸ்துவை லபிக்கும் போது
அதுக்கு அநு ரூபமாய் இருப்பதொரு உபாய பரிக்ரஹம் பண்ணிக் கொள்ள வேணும் இறே

இம் மூன்றின் உடைய ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் அவனையே பற்ற வேணும்
விரோதி பிரபலம் ஆகையாலே அவனைக் கொண்டே கழித்துக் கொள்ள வேணும் –
ஸ்வ ஸ்வரூபத்தைப் பார்த்தால் ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத படி
பர தந்த்ரம் ஆகையாலே அவனையே பற்ற வேணும்
அவ் வஸ்து தான் அநந்ய சாத்யம் ஆகையாலும் அவ் வஸ்துவையே பற்ற வேணும் –

இப்படி அவனே உபாயமாகப் பரிக்ரஹிக்கும் இடத்தில்
பரத்வம் -தேச விப்ரக்ருஷ்டமாய் கழிந்தது
வியூஹம் -தத் ப்ராப்யமாய் சம்சாரிகள் உடைய சிறுமையாலும் பகவத் வைபவத்தாலும் கழிந்தது
ஆபத்து உண்டான போது ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயநீயம் ஆதல்
சனகாதிகளுக்கு காதாசித்கமாக ஆஸ்ரயநீயம் ஆதல் அத்தனை இறே
விபவமும் -கால விப்ரகர்ஷத்தாலே மண்டல வர்ஷம் போலேயாய்க் கழிந்தது
அக்குறைகள் தீர
ஸ்வ சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளும்-ஆஸ்ரித அதீனமாம்படி பண்ணிக் கொடு நிற்கிற நிலை இறே அர்ச்சாவதாரம்
அதாவது
ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய விசேஷத்தையே திரு மேனியாய்க் கொண்டு நிற்கையும்
தன் கிருஹத்தில் ஒரு பிரதேசத்தில் திருப் பள்ளி யறை யாக்கி-இங்கே எழுந்து அருளி இருக்க வேணும்
அமுது செய்து அருள வேணும் -என்றால் அப்போதே அமுது செய்து அருளுகையும்
அவற்றை இவன் அநாதாரிக்கும் போது தானும் அநாதாரிக்கையும்
அவதாரங்களில் போலே அஜஹத் ஸ்வ பாவனாய்
ஆஸ்ரிதர்க்கு அபிமத பல பிரதானம் பண்ணுகைக்கும்
ஆஸ்ரயநீயன் ஆகைக்கும் உண்டான ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் உடன் ஆஸ்ரித பராதீனன் ஆகையுமாய் இறே இருப்பது –

ஆகையாலே அர்ச்சாவதாரத்தை யாய்த்து இவர் ஆஸ்ரயநீய ஸ்தலமாக நினைத்து இருப்பது –
முதல் தன்னிலே
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும்
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி -என்றும் இறே இவர் இழிந்தது –
ஆகையாலே
தம்முடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு சரண்யரான ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

இவர் தாயே தந்தையே தொடங்கி பல இடங்களிலும் சரணம் புக்குப் போந்தார்

பகவல் லாபத்துக்கு சக்ருத் க்ருதம் அமைந்து இருக்கச் செய்தே பல காலும் சரணம் புகுகிறது த்வரா திசயத்தாலே இறே
இப் பிரபந்தத்துக்கு ஏற்றம்
நீர்மையை உடைய பெரிய பெருமாள் சரண்யர் ஆகையும் –
ஆழ்வார் அனுஷ்டாதாவாகையும்
சர்வாதிகாரமான திராவிட பாஷையாலே அருளிச் செய்கையும்

திருப்த பிரபன்னரான நமக்கு இவ்வார்த்தி இல்லை யாகிலும் இவர் பாசுரத்தைச் சொல்லவே
இவர் அளவிலே இவருக்கு இரங்கினால் போலே ஸ்ரீ பெரிய பெருமாள் இரங்குவர் -என்கிறதும் –
பிரயோஜனாந்தரத்துக்காகவும்-துக்க நிவ்ருத்திகாகவும்
சரணம் புகுகிறவர்கள் பாசுரத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் –
அதுக்கடி என் என்னில்
அவ்வோ பிரயோஜனங்களில் அவர்களுக்கு உள்ள ஆதரம் இவ் விஷயத்தே தமக்கு உண்டாகையாலும்
அவர்களுக்கு அகப்பட இரங்குமவர் தமக்கு இரங்காமை இல்லை என்று நினைத்து இருக்கையாலும் –

ஸ்ரீ திரு மாலையில் -பிராப்ய பிராபகங்கள் சொல்லிற்று
ஸ்ரீ அமலனாதி பிரானில் -பிராப்யம் சொல்லிற்று
இத் திரு மொழியில் பிராபகம் சொல்லுகிறது –

——————————–

கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1-பிரவேசம்

———————

தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-1- பிரவேசம்

தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி -என்று இறே இவர் பாரிப்பு –
சர்வான் காமான் -என்னக் கடவது இறே –
சர்வ அந்தராத்மாவாய்-சர்வ ஆபத்துக்களையும் போக்கி உதவுமவனாய்
ஆஸ்ரிதருக்கு அபுநாராவ்ருத்தி லஷணமான மோஷத்தைக் கொடுக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ திரு நந்தி புர விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
அங்கே போய் அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-ஐந்தாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

July 3, 2019

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-

ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்
அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க சர்வ லோகேஸ்வரனாக சர்வருக்கும் சம்பிரதி பன்னன்
விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்–அஸ்மத் ஸ்வாமின் –

———————-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரைத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே–5-1-2-

ஸ்ரீ ஆலவாய் உடையான் கேட்க ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது இறே
கயல் உகளா நின்றதாகில்-புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன
ஸ்ரீ பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ-பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது
நிலமிதியாலே அவை தான் தூணும் துலாமும் போலே வளர்ந்து இருக்கும்
அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும் –

———————–

மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து
மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்
காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்
பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-3-

பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம்
பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம் –

———————

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்
கற்பார் புரிசை செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-4-

வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம் –

———————

மையார் தடங்கண் கருங்கூந்தல் யாய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவில் மறை யாளர் புள்ளம் பூதங்குடி தானே –5-1-5-

இவன் அறியாத தோர் இடம் தேடி வைக்கும் யாய்த்து சாந்துப் பரணியிலே தயிரை வைக்கும் யாய்த்து –
ஸ்ரீ நேமி யம் கையனான ஸ்ரீ நாராயணனுக்கு ஒளிக்கப் போமோ
பூசும் சாந்து என் நெஞ்சமே -என்னும்படி நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தம் உடம்பிலே
சிநேகத்தையும் போக்யதா புத்தியையும் பண்ணினாலும் அவன் விடாதே
தனக்கு ஆக்கிக் கொள்வன் என்னுமது ஸ்புரிக்க -சாந்துப் பரணியிலே -என்கிறார் –

———————–

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-6-

நப்பின்னை பிராட்டிக்காக கரு மாரி பாய்ந்தும் -குளத்தில் இரண்டு குச்சுகள் நடுவே குதிக்கை –
அணைய வேணும் யாய்த்து வடிவு அழகு –
மாறாத சினத்தை உடைத்தாய் காட்டு காட்டு என்று வருகிற இளைமையை உடைத்தான
ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்த பரம பிரணயி யானவன் வர்த்திக்கிற தேசம் –

———————

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-

பிரதானனான இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்த மாம்படி – பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை ரஷித்து –
நாம் இவனைத் தலை அறுக்கல் ஆகாது -என்று இரங்கி தோள்களைக் கழித்து விட்டான் ஆய்த்து
ருத்ரன் விட்டுப் போனதாய்த்து இவனுக்கு இரக்கத்துக்கு அடி –
மாறாத இவ் வாதிக்யத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –பரந்த கழனியில் உண்டான
எழில் மிக்கு இருந்த –புள்ளம் பூதங்குடி தானே

————————-

கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம்
மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே—5-1-8-

ராஜாக்கள் அடைய முடியும்படி – அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணி-ஈஸ்வர அபிமானியான ருத்ரன் கையில்
ப்ரஹ்மா வினுடைய சாபத்தாலே ஒரு காலும் நிறையாது இருக்கிற தலை யோட்டையைத்
தன் திரு மேனியில் ஜல பிந்துவாலே நிறைத்த என் ஸ்ரீ ஸ்வாமி வர்த்திக்கிற தேசம் –

————————–

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே—5-1-9-

ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்கைக்கு அநாதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று
திர்யக் வேஷ பரிக்ரஹம் பண்ணினான் ஆய்த்து – ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே –
அசூரர்களோடே கலந்து உரு மாய்ந்து போனத்தை பிரிக்கைக்காக
நீரையும் பாலையும் பிரிக்கும் பதார்த்தத்தின் வடிவைக் கொண்டான் ஆய்த்து –
பிரத்யுபகார நிரபேஷமாகவும்-உபகரித்த சுத்தியும் ஒரு சுத்தியே –
சிலர் அபேஷிக்க அன்றிக்கே தன் பேறாக உபகரித்தான் ஆய்த்து –

———————

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-

ஸ்ரீ ராமோ ராமோ ராம -என்கிற படியே இரண்டு அஷரம் பிணைக்க வல்லார் எங்கும் உண்டு –
ஸ்ரீ ஆழ்வாரும் ஒருவரே -என்னா நிற்கும் அத்தனை யாய்த்து –
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து கொடை இருப்பது – இத் திரு மொழியை உபகரித்தவர் இறே –
சொல் தான் ஈரைந்து இவை பாட-இதுக்கு மேற்பட்டது இல்லை இறே ரச்யதைக்கு-
இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது –

—————————–

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே –5-2-1-

ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே
என்று ஆழங்கால் படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –இவன் இப்படியே தன்னை தாழ விட்டாலும்
இவனைத் தாழ நினைத்து இருப்பாரைக் கிடையாதே-ராஜாதி ராஜன் என்கிற பெருமையாலும் மிக்குத் தோன்றுகிறது –
சர்வ கந்த என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசமாய் இருக்கச் செய்தேயும் அத்தை யமுக்கி
இவர்கள் உடைய குழலில் பரிமளமே விஞ்சி வாரா நிற்கும் யாய்த்து –

————————

செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல்
நறும் தண் தீன் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—-5-2-2-

ஸ்ரீ நப்பின்னை பிராட்டி ஒருதிக்குமேயாய் வேறு ஒரு ஆஸ்ரயத்தில் கிடவாத படியான அழகை லபித்து
பெறாப் பேறு பெற்றானாய் அவன் வர்த்திக்கிற தேசம்

———————–

பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவரூர் போல்
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே —5-2-3-

ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யத்தால் அல்லது செல்லாத நீர்மையைக் காட்டி அனந்யார்ஹன் ஆக்கி
விலக்காத ஓர் அவகாசம் பெற்றவாறே ஹிருதயத்திலே வந்து அவன் வர்த்திக்கிற தேசம்

——————–

கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர்
ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
சேறு ஏர் உழவர் கோதைப் போதூண்
கோல் தேன் முரலும் கூடலூரே –5-2-4-

தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற பூமிப் பரப்படைய நீர் ஏற்று
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட என் குல நாதன் ஆனவன் வர்த்திக்கிற தேசம்

————————

தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகளூர் போல்
வண்டல் அலையுள் கெண்டை மிளிரக்
கொண்டல் அதிரும் கூடலூரே —5-2-5-

உடம்பிலே புகரைக் கண்ட மேகமானது தன் உடம்பின் மின்னாகக் கொண்டு
அதுக்கு அனந்தரமான முழக்கத்தை முழங்கா நிற்கும் ஆய்த்து-
நீர் விழுகிற போது இங்கே கண்டு-கார்ய காலத்தில் அங்கே கண்ட
ஸ்ரீ வாமனைப் போலே யாய்த்து இவையும் –

———————-

தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன்
துக்கந்துடைத்த துணைவரூர் போல்
எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே–5-2-6-

ருத்ரனை துக்கத்தைப் போக்கின ஆபத்சகன் ஆனவன் வர்த்திக்கிற ஊர்

——————

கரும் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமருமூர் போல்
பெரும் த ண் முல்லைப் பிள்ளையோடிக்
குருந்தம் தழுவும் கூடலூரே —5-2-7-

ஆபத்துக்களைப் போக்கி ரஷிப்பதாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்

———————

கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர்
மலை வாழ் எந்தை மருவுமூர் போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே—-5-2-8-

ஸ்ரீ திருநீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன்
அத்தேசமும் தனக்கு உண்டாய் இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம் –

——————–

பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே–5-2-9-

ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படியாகப்
புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம்

—————-

காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே –5-2-10-

காவி போலேயும் பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய ஸ்ரீ கிருஷ்ணன்
திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கூடலூர்

————————–

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே —-5-3-1-

பூமிக்கு ராஜாக்களால் வரும் நலிவைப் போக்கி ரஷித்த அருமை வேணுமோ
என்னுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி என்னை அடிமை கொள்ளுகைக்கு -என்கிறார்
முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ-

—————–

வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2-

ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால் இவன் இறாய்க்கும்-என்று இவன் தன்னை தாழ விட்டு
ஸ்ரீ ஹயக்ரீவனாய் நின்று யாய்த்து உபதேசித்தது –ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து –
வேதம் இதிஹாசாதிகள் இவற்றை உண்டாக்கினவனே என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –

————————-

வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலம் இரு பிளவாகக்
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே
மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-3-

ஸ்ரீ திரு வாழியைக் கொண்டு கார்யம் செய்யப் பெறாத படி அவன் வரம் பெற்று இருக்கையாலே
ஸ்ரீ திரு உகிரே ஆயுதமாகக் கொண்டு வ்யாபரித்தவனே –
என்னுடைய விரோதியைப் போக்கி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் –

————————-

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே—5-3-4-

தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான
பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும் –

————————–

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே —5-3-5-

ஸ்ரீ பூமிப் பிராட்டி தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –பிரளயத்தில் அகப்பட நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத
ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனே –
அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ –

——————

பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்
அங்குஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு
தங்கு பேடை யோடூடிய மதுகரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே—5-3-6-

மந்தரத்தை தரிக்க வல்ல ஸ்ரீ ஆமையின் வேஷத்தை பரிக்ரஹித்து அவர்களை ரஷித்து
அவர்களுக்கு சத்தா ஹேது வானவனே –நின்னடிமையை யருள் எனக்கு

————————–

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7-

ராவணன் உடைய தலை பத்தையும் சின்னம் பின்னமாய் போம்படி யாக வில்லை வளைத்தவனே –
என் பக்கலில் கிருபையை பண்ணி யருள வேணும் –

————————–

முன் இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8-

நீரையும் பாலையும் பிரிக்க வல்ல அன்னத்தின் வடிவினைக் கொண்டு தன் படிகளை அடங்கலும்
பேச வற்றை இருக்கிற வேதத்தை உண்டாக்கினவனே-என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் –

——————–

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே—5-3-9-

ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால் தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து –
இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி போராதோ என்னுடைய ஆஸ்ரயணம் –

———————–

மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10-

அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு –
அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி –
பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை –
இப்பத்தையும் ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை ஸ்ரீ நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு
இவர்களை ஆதரியா நிற்பர்கள் –

———————–

உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-

சர்வ ஸ்ரஷ்டாவாய் ஆபத் சகனுமாய் இருக்கும் இருப்பைக் காட்டி என் குலத்துக்கு நாதன் ஆனவன் –
அடியார்களை குழாங்களை– உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லும் ஸ்ரீ நித்ய சூரிகளும்
இவ்விடத்தை விரும்பி இங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து –

———————-

வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே —5-4-2-

கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடையனாய் இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிறவன் விடாதே வர்த்திக்கிற தேசம்

————————

பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-3-

யஞ்ஞவாடத்திலே சென்று ஸ்ரீ திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன்
வர்த்திக்கிற தேசம் –

———————

விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட
வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால்
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-4-

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்

——————–

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-5-

வழி கெட அன்றிக்கே நேர் கொடு நேரே அம்பாலே அழியச் செய்த வீர ஸ்ரீ யால்
குறை வற்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்

————————

கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால்
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே—5-4-6-

முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன் இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக
அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்-

————————–

கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7-

ஸ்ரீ திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே
திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே ஸ்ரீ திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் –

—————————-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

அநேக அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு வந்து ரஷகன் ஆனவன் அவ்வவதார காலங்களிலே
பிற் பாடர்க்கும் இழக்க வேண்டாத படி வந்து சந்நிஹிதனான தேசம் கோயில் -என்கிறார்-

———————-

சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே—5-4-9-

உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு அரணாகப் போரும்படியான ஸ்ப்ருஹநீயமாய் இருந்துள்ள
மதிள்களாலே சூழப்பட்ட தர்ஸநீயமான ஸ்ரீ கோயில் –

———————–

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-

உந்தி – வையம் -இரண்டும் ஸ்ரீ உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம்
விளைத்த -வம்பு -ஸ்ரீ ராமன் விஷயம்
கலை -கஞ்சன் -ஸ்ரீ கிருஷ்ண விஷயம்
சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்–இப்படி நாலு இரண்டும்
பண்டு -ஸ்ரீ திருக் குறளன் விஷயம்
ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள்
ஸ்ரீ கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம் ஸ்ரீ பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள் –

—————————-

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-

ஸ்ரீ பெருமாள் உடைய இங்குத்தை வரவாறே பிடித்து ஆற்றாமைக்கு உடலாம்படி காணும்
பிறந்த ப்ராவண்ய அதிசயம் –
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -அன்று நேர்ந்த நிசாசரரை -என்று ராவண வதம் தொடங்கி
ஸ்ரீ பெருமாளை அடி ஒத்தினார் –அது தெற்கு திரு வாசலாலே புகுந்து கிடந்தது –
மந்தி பாய் -என்று ஸ்ரீ பரம பதமே தொடங்கி அடி ஒத்தினார் –ஸ்ரீ திரு மலையிலே புகுந்து கிடந்தது
அங்கே பார்த்த வாறே நின்ற படியைக் கண்டார் –
இன்னமும் போக்கிலே ஒருப்பாடு தோற்றி இருந்தது என்று அவ்விடமே தொடங்கி
அடி ஒத்தினவாறே வடக்குத் திரு வாசலாலே புகுந்து படுக்கை இங்கேயாய் இருந்தது -என்று
ஸ்ரீ பட்டர் ஸ்ரீ அமலனாதி பிரான் அருளிச் செய்யா நிற்க நான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் –

—————————

கலையாளா வகலல்குல் கனவளையும் கை யாளா என் செய்கேன் நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-2-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து – தன் சௌலப்யத்தைக் காட்டி
விலையாளா யடியேனை வேண்டுதியோ -என்று இவளை இட்டு சொல்லுவித்துக் கொள்ளுகைகாக
திரு மெய்யத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் -பின்னானார் வணங்கும் சோதியில் போலே –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவ -என்கிறபடியே முற்பாடரான சூரிகளுக்கும் அவ்வருகாய் இருந்து வைத்து
இவ்வருகு உண்டான பிற்பாடருக்கும் உதவுகைக்காக இறே இங்கு வந்ததும் –
தானே ரஷகன் என்று இருக்கும் இவளை வாய் விட்டுக் கூப்பிடும்படி பண்ணினானே-
நமக்கு ஓன்று செய்யப் பிராப்தி உண்டோ -என்று இருக்கிறாள் இவள்
பெறுவது அவனை யானால் இருந்த இடத்தே இருக்கப் போமோ -என்று இருக்கிறாள் மகள் –

——————-

மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-

ஸ்ரீ சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று ஒரு நோன்பு நோற்று பெற்றால் போலே
கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது-இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும்
என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது
ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை –

————————

தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கை
யே யாரச் சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
பேய் மாய முலை உண்டு இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே —5-5-4-

தாயையும் அல்லாதாரையும் ஒக்க அபேஷிக்கும் படி நிருபாதிக பந்துவான தன் பக்கலிலே பாவ பந்தத்தை
பிறப்பிக்கிறவன் வர்த்திக்கிற தேசம் எங்கே -என்னா நின்றாள்
ஸ்வாமித்வம் இவை போலே ஔபாதிகம் அல்ல இறே
எம்பெருமான் -என்னைத் தோற்பித்தவன் என்றே காணும் அவனை அறிவது
இது இறே நமஸ் சப்தார்த்தம் –

—————————

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-5-

ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது
நாம் அறிய -இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ-இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ
நம்பி- பெண்களுக்கு கையாளாய்-அத்தாலே தன்னைப் பூர்ணனாக நினைத்து இருக்குமவன் அன்றோ

————————–

தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே–5-5-6-

இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண்-இது குடிப் பிறப்புக்கு போராது காண்
இது தர்மி லோபத்தைப் பலிப்பிக்கும் காண்
அவன் ஸ்த்ரரைணன் காண் -என்று ஒரு ஹித வசனம் பண்ணினால்
அதுக்கு உத்தரமாக என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்னா நின்றாள் –

———————–

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே—5-5-7-

ஸ்வ விஷயத்திலும் இதர விஷயத்திலும் விரக்தியும் பகவத் விஷயத்தில் ப்ரீதியும் மாறாதே
செல்லும்படியாய் இருப்பாள் ஒரு பெண் பிள்ளையை என்னைப் போலே புறம்பு பெற்றார் உண்டோ –
அப்போது பீஷ்மாதிகள் அம்புக்கு தன்னை இலக்கு ஆக்கினால் போலே
இப்போது தனக்காக இவளை காம ரசத்துக்கு இலக்கு ஆக்குகிறான்
இப்போது இவளை அழிவுக்கு இட்ட படி என்னாலே பேசப் போமோ -என்கிறாள் –

————————

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே—-5-5-8-

கலக்கிற இடத்தில் தாழ நின்று பரிமாறின படியையும்-அதுக்கடியான சீலத்தையும்
கலந்த போதை பரிமாற்றத்தின் வகைகளையும் – இதில் ஸ்ரோத்ரியன் ஆகைக்கு வ்யுத்புத்தி பண்ணின இடத்தையும்
சொல்லா நிற்கும் –ஆஸ்ரித விஷயத்தில் வ்யாமோஹாதிசயத்தை உடையவன்-பெரியோன் என்றபடி –
பிறவியை அறுப்பதான திரு நாமத்தை உடையவன் துக்க நிவர்தகமான திரு நாமங்கள் கிடீர்
இவளுக்கு துக்கத்தை பண்ணுகிறது

————————–

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9-

ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்-இதுக்கு மேல் எனனால் போக்கடி தேடப் போமோ
இவள் தன் திறத்து படாது இருக்க தானே வந்து இப்படி பண்ணி-தானே உபேஷிப்பதே
முன் தீமை செய்வானும் தானேயாய்-உபேஷிப்பானும் தானே யாவதே –

—————————-

சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே–5-5-10-

இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே
இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து
ஸ்ரீ பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-

————————

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1-

தான் அல்லது ரஷகர் அல்லாதாரை அரியன செய்தும் ரஷிக்குமவனை –
ஒரு கால் மலையை எடுத்து பசுக்களையும் இடையரையும் ரஷித்தான் –
ஸ்ரீ திருப் பாற் கடலிலே கிடந்தான் -என்று கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே
நான் ஸ்ரீ கோயிலிலே காணப் பெற்றேன் –

—————-

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே —5-6-2-
ஸ்ரீஸ்ரீ
இந்த லோகங்கள் ஏழையும் தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும் ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே
உபகாரம் கொண்டார்க்கு பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படி இருந்தவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே

———————-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

ஒருவன் காலில் முள் பாய்ந்தால் சரீரி யானவன் நோவு படுமா போலே ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம் படி
இதுக்கு அபிமானியாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்து இருக்கும்
தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு சர்வ வித போக்யனாய் அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருக்குமவனை –
ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்து ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க நமக்கு இங்கே வந்து குறைய நிற்க வேண்டா நின்றது
என்னும் இன்னாப்போடு அன்றிக்கே இப்படி யாகிலும் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம் என்னும் ப்ரீதி பிரகர்ஷத்தோடே
பண்டு ஒரு கால் பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் இடையனாய் அதில் புரையற வர்த்தித்தவனை கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே –

——————–

வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலியுருவில் திரிசகடம்
தளர்ந்து திற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

ஊர்ந்து வருகிற சகடம் சின்னம் பின்னமாய் போம்படி திருவடிகளாலே உதைத்தவனை-
ஸ்ரீ நரசிம்ஹமாய் ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனை –
பரைப்பை உடைய பூமி இரண்டு அடியாலே அடங்கும்படி திருவடிகளை நீட்டி அளந்து கொண்டவனை –
யான் கண்டது அணி நீர் ஸ்ரீ தென்னரங்கத்தே

————–

நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5-

இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி-அவ்வருகே பட்டார்க்கு பிராப்யமான ஸ்ரீ பரம பதமுமாய் –
அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக-பிராமணர்கள் உடைய யாகங்களிலே
மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே –

————————

தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசையுருவை யசைவித்த
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே–5-6-6-

த்வேஷத்தை தவிர்ந்து-தன்னை அடைந்தவர்கள் உடைய ஸ்வ பிராப்தி உபாயத்தை
தானே நிர்வஹித்துக் கொடுக்குமவனை –
த்வேஷமேயாய் இருப்பார் அளவில் இருக்கும் படி –
ஸ்ரீ தேவகியாரையும் ஸ்ரீ வசுதேவரையும் நலியப் புக்க வாறே அத்தைப் பொறாதே
இனி அரை ஷணம் இவனை வைக்க ஒண்ணாது என்று அவனைக் கொன்றான் ஆய்த்து-
த்வேஷமும் பண்ணாதே தன்னை அடைவதும் செய்யாதே இருப்பார் அளவில் இருக்கும் படி
ஆபத்தை அடையாளமாக ரஷிக்கும் இத்தனை யாய்த்து-தான் அறிந்த சம்பந்தத்தையே பார்க்கும் இத்தனை –
கற்பகத்தை –இப்படி உபகரித்தோம் என்று நினைத்து இராதவனை-

——————-

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7-

இப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானேயாய் இருக்கிற வஸ்து தான் ஏது என்ன –
ஸ்ரீ திருமாலை – பிராபகத்தில் புருஷகாரமுமாய் பிராப்யத்துக்கு அவனோபாதி இறே இருப்பது –
ஸ்ரீ ஸ்ரீ திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவனாய் இருந்து வைத்து
இவ் வவஸ்தைகளை என் நெஞ்சிலே பிறப்பிக்கைக்கு தானே வந்து மனசிலே விடாதே
பொருந்தி இருக்கிறவனை-தானே அர்த்தியாய் கொண்டு இருக்க-நான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே-

———————-

துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத் தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8-

தன்னையே பற்றின என்னோடு-சம்பந்தம் உடையாருக்கும்-வைஷ்ணவர்களுக்கும் -என்றபடி
எனக்கும்-எனக்கு தாயும் தமப்பனும் என்று இருக்கிற இவர்களுக்கும்
நித்ய சூரிகளுக்கும் ஒக்க தரம் வையாதே சேஷியாய் இருக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே

———————-

பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-9-

பாஹ்யேந்திரங்கள்-விஷயங்களில் போகாதபடி பண்ணி – ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக
தன் பக்கலிலே பக்தியைப் பண்ணுமவர்களுக்கு-தன் ஸ்வரூபாதிகளை உள்ளபடியே காட்டிக் கொடுக்கும்
விஸ்மயநீயனை –யான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே –

——————

ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே —5-6-10-

ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம்முதல் இல்லாத பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து
அது தான் பர தசை-என்னும்படி ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை –
மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க
துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம் –

——————–

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-

இவற்றைச் சொன்ன பாசுரம் தன்னளவும் வரும்படியாய் இருக்கையாலே இவை அடைய -தான் -என்று சொல்லும்படி
சரீரதயா சேஷமாகத் தான் சேஷியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் – என்கிறார்

——————–

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே —5-7-2-

சகல பிராணிகள் உடைய சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்கும் கடவனாய் இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் –ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ அரங்க நகர் அமர்ந்தானே –

————————–

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறந்கிருள் நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-3-

தன்னைப் பேணாதே கேட்கிறவனுக்கு ஆச்சார்ய அநுவர்த்தனம் பண்ண வேண்டுகிறதோ -என்று
கூச வேண்டாத வடிவைக் கொண்டு தன்னைப் பெறிலும் பெற ஒண்ணாத வேதங்களை வெளியிட்டவன் –
அன்று பிரமாணத்தை வெளி இட்டுத் தந்தவன்-இன்று பிரமேய பூதனான தன்னை
வெளி இட்டுக் கொண்டு வந்து கண் வளர்ந்து அருளினான் –

———————–

மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மாசுணம் அதனோடும் அளவி
பாயிரும் பௌவம் பகடு விண்டலறப் படுதிரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-4-

நான்கு தோள்கள் கொண்டு வ்யாபரித்த படி தான் ஆயிரம் தோள் கொண்டு
வ்யாபரித்தான் என்னலாம்படி யாய்த்து –

———————-

எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-5-

ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டவன் இன்னம் அப்படிக்கொத்த விரோதி வர்க்கம்
வந்து கிட்டினால் போக்குகைக்காக இங்கே வந்து சந்நிஹிதன் ஆனவன்-

———————–

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-6-

நித்ய அனுபவம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக புகரை உடைத்தான பல வாய்களையும் உடைய
ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவன் அப்படியே காணலாம்படி இங்கே வந்து சந்நிஹிதன் ஆனான் –

—————–

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-

ஏதேனுமாக இட்ட தடையைக் கொண்டு ஆழக் கடவ கடல் வழி பட நீரிலே புக்கு அமிழக் கடவ மலைகள்
மிதந்து அணையாக -கணக்கு வழக்குப்பட ஒரு வியாபாரம் பண்ண மாட்டாத வானர ஜாதியைக் கொண்டு
அடிமை கொண்டு நீர்க் கிளப்பத்தை உடைத்தான கடலை அடைத்தான் –அரங்க மா நகர் அமர்ந்தானே –

—————————

ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடுசரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-8-

அவனுடைய பிரகாசத்துக்கு அடைத்த சாலம் தன்னிலே அநேக ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே
இருந்துள்ள புகரை உடைய ஸ்ரீ திரு ஆழியைக் கொண்டு அந்த ஆதித்யனை மறைத்தவன் –
இந்த ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம் படி அளவு பட்டு இருக்கையாலே
தமஸ்ஸூ போம்படியாய் இருக்கும் –-
அங்கன் அன்றிக்கே ஸ்ரீ திரு ஆழி ஆழ்வான் தேஜஸ்ஸூ நேர் கொடு நேர் கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி
மிக்கு இருக்கையாலே பளபளத்து கண்ணை இருளைப் பண்ணிற்று

———————

பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால் பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச்
சேயனாய் அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-9-

ப்ரஹ்மாதிகளுக்கு தூரஸ்தனாய்–என் போல்வாருக்கு கையாளாய்- என் பக்கல் அபேஷா மாத்ரமும் இன்றிக்கே இருக்கத்
தானே வந்து என்னுடைய மானஸ வ்யசனத்தைப் போக்கும் –ஆயனாய்
ஸ்ரீ கோவர்த்தன கிரியைத் தரித்து பண்ணின உபகாரம் அறியாத பசுக்களையும் இடையரையும் நோக்கினவன் –

———————–

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே —-5-7-10-

லஷணங்களில் ஒன்றும் குறையாத படி விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார்
ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு போக்கப் பெறுவார் –

———————————-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

இத்தனை குறைவாளனை விஷயீ கரியாது ஒழிகிறது என் –என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது –
இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால் இவள் வழியே போவான் ஒருவன் இறே –
பிராட்டியை தோழி என்றும்-இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –
சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம் சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடக்குமா போலே
சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக –
ஸ்ரீ ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே
அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது
உடையவன் ஆகையாலே-உடைமை தேட்டமாய் அன்றோ-இங்கு வந்து சாய்ந்து அருளிற்று

————————–

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2-

ஜன்ம வ்ருத்தங்களால் குறைய நின்ற ஸ்ரீ குஹப் பெருமாள் பக்கல் பண்ணின
விஷயீ காரத்தை என் பக்கலிலே பண்ண வேணும் என்று சரணம் புக்கார் -கீழில் பாட்டில்
மனுஷ்ய சஜாதீயத்வம் கிடக்கச் செய்தே வந்த நிகர்ஷம் இறே -கீழ்ச் சொல்லிற்று
இங்கு விசஜாதியமான திர்யக்கை அகப்பட-தத்கத நிகர்ஷம் பாராதே விஷயீ கரித்த மாத்ரம் அன்றிக்கே
அந்தபுர கைங்கர்யத்திலே ஏவி அடிமை கொண்டால் போலே என் அளவிலும் கைங்கர்யத்தைக் கொள்ள வேணும் -என்கிறார் –
இவ்வதிகாரிக்கு விஷயீகார அநந்தரம் கைங்கர்யத்தில் அன்வயிக்கும் அத்தனை போக்கி
சாதனத்தில் அன்வயிக்க வேண்டியது இல்லை போலே காணும்
இங்கு ஒழி என்கிற இடத்தில் சொல்லிற்று இத்தனை இறே –

—————————–

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-

விஷயீகாரத்தையும்-விஷயீகார பலமான கைங்கர்யத்தையும்-சொல்லிற்று கீழ்
கைங்கர்யத்துக்கு இடைச் சுவரான விரோதியைப் போக்கி-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை கைங்கர்யத்திலே அன்வயித்தால் போலே
என்னுடைய விரோதியைப் போக்கி என்னைக் கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்க வேணும் -என்கிறார் –
விஷயீகாரத்துக்கும் கைங்கர்யத்துக்கும் நிகர்ஷம் முன்னிட வேண்டுகையாலே சொன்னார் கீழ்
விரோதி நிரசனத்துக்கு நிகர்ஷம் முன்னிட வேண்டியது இல்லை இறே
விஷயீகாரம் ஆகிறது -உபாயத் தளவும் செல்ல பலிக்குமது இறே
அவன் உபாயம் ஆனால் பின்னை கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்கும் இத்தனை
அதுக்கு விரோதி அறுகை இறே பின்னை உள்ளது-அந்த விரோதி தான் உபய ஆகாரமாய் இருக்கக் கடவது
அவை ஆகிறன-இந்த்ரிய வஸ்யதையும் யம வஸ்யதையும் இறே
மேலில் பாட்டில் யம வச்யததை-இங்கு இந்த்ரிய வச்யதை சொல்லுகிறது
எங்கனே என்னில்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையை நிரசித்தால் போலே
எனக்கு விரோதியான இந்த்ரியங்களை நிரசித்து அருள வேணும் -என்கிறார்
இவ்வதிகார்க்கு இந்த்ரிய வஸ்யதையாவது-விஷயாந்தர ப்ராவண்யம் முதலாய் கைங்கர்ய ஸ்பர்சியான
அஹங்காரம் மமகாரம் முடிவாய் இறே இருப்பது –

————————

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4-

விஷயீகாரம் சொல்லி-விஷயீகார கார்யமான கைங்கர்யம் சொல்லி
அதுக்கு இடைச் சுவரான தேக சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும்என்கிறதே -இரண்டு பாட்டாலே –
அதில் தேக சம்பந்தம் கிடக்கச் செய்தே அனுபவ விரோதியான பாபைகதேச பலமான இந்த்ரிய வஸ்யதையைப்
இதில் சரீர சம்பந்தம் அற்றால்-சர்வ பாப பலமாய் அனுபவ விரோதியாய்க் கொண்டு வரும் யம வஸ்யதையை
தவிர்க்க வேணும் -என்கிறார் –

ஸூமுகனுக்கு பெரிய திருவடியால் வந்த பயத்தை தவிர்த்துக் கொடுத்தால் போலே
எனக்கு எம வச்யதையால் வந்த பயத்தை அறுத்து
அவனை இட்டே பரிஹர -என்னும்படி பண்ணித் தர வேணும் -என்கிறார்
சரணம் புகுவார் தாம்தாம் உடைய நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு இறே சரணம் புகுவது –
அந்நிகர்ஷம் தான் ஆகிஞ்சந்ய ரூபமாயும்-அபராத ரூபமாயும் இறே இருப்பது
அதாகிறது-அது தன்னை அனுசந்தித்தார் இறே அடைவே
ந தர்ம நிஷ்டோச்மி-ந நிந்திதம் கர்ம-ஜ்ஞான கிரியாச பஜநா-இத்யாதிகளும்
ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டது கீழ்–இதில் அபராதத்தை முன்னிடுகிறது –

———————–

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே—5-8-5-

விஷயீ காரத்தைச் சொல்லி-கைங்கர்யத்தைச் சொல்லி
கைங்கர்யத்தின் உடைய உபய ஆகாரமான விரோதிகளைப் போக்கி தந்து அருள வேணும் -என்றார் கீழ்
இதில் ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி உடைய கருத்து அறிந்து செய்தால் போலே
என்னுடைய கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் –
கீழ் நின்ற நிலைக்கு இவர்க்கு கருத்தாவது
இந்த்ரிய வஸ்யதைக்கும் யம வஸ்யதைக்கும் அடியான-தேக சம்பந்தத்தை அறுத்து தர வேணும் என்கை
மரணமானால் -என்கிறபடியே தன்னடையே சரீர விச்லேஷம்
சித்திக்குமாகில் அபேஷிககிறது என் என்னில்-க்ரம ப்ராப்தி பற்றாத த்வேரா திரேகத்தாலே –

ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி-என்பான் ஒரு பிராமணன் இதிஹாச புராண ஸ்ரவணத்தாலே
ஸ்ரீ கிருஷ்ணன் உடைய பால்ய சேஷ்டிதங்களையும் ராச க்ரீடாதிகளையும் சாஷாத்கரித்து காமனாய்
முன்பு காண வாராய் -என்று எண்ணி இருப்பார்க்கு
பரித்ராணாயா சாது நாம் -என்கிறபடியே காட்டிக் கொடுத்து போருமவன் அன்றோ
நமக்கும் அவ்வாசை உண்டானால் சித்தியாமை இல்லை-ததர்த்தமாக அர்த்திப்போம் -என்று
சரீரத்தை ஒறுத்து தபஸை பண்ண-இவன் நினைவின் படியே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் படிகளை
அடைய சிருஷ்டித்துக் காட்டி அனுபவிப்பித்து-உனக்கு வேண்டுவது என் என்று கேட்டு அருள
கூடப் போந்து இப்படி தேவரை அனுபவிக்கும் அத்தனை -என்ன
நீ தபஸ் பண்ணுகிற போது விஷய விதுரனாய்-அன்ன பாநாதிகளையும் கழித்து
உடம்பையும் நாரும் நரம்புமாய் ஆக்கிக் கொடு போந்தாய்
இங்கே இருந்து நெகிழ்ந்த போகங்களையும் கழித்து வா என்று அவன் கருத்து அறிந்து அருளிச் செய்தால் போலே
என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் –

இவ்வர்த்தம் சாப்தம் அன்றிக்கே இருக்க இவருக்கு இது கருத்தாக சொல்லுகிறது
பிரகரண பலத்தாலும்-அர்த்த க்ரமத்தாலும்-நாசமான பாசம் -என்றும்
போந்தேன் -என்றும் சொல்லுகிற இவருக்கு இது கருத்தாக வேணும் இறே-

———————

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-

ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி கருத்து அறிந்து அவனுடைய கார்யம் செய்தாப் போலே
என் கருத்து அறிந்து என்னுடைய அபிமதம் செய்ய வேணும் என்றார் -கீழ் –
ஸ்ரீ மார்கண்டேயன் மிருத்யு பய பீதனாய் சரணம் புக அவனுக்கு மிருத்யுவை நிரசித்து
அந்த பய நிவ்ருதியை பண்ணிக் கொடுத்த அளவன்றிக்கே
ஒரு காலமும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றை அவனுக்குப் பண்ணிக் கொடுத்தால் போலே
என் சம்சார பயத்தை பரிக்ரஹித்து உன் திருவடிகளை நான் பிரியாத படியான பேற்றை பண்ணித் தந்து
அது நான் அர்த்திக்க இரப்புக்குக் கார்யம் செய்ததாய்
காலன் கொண்டு மோதிரம் இடுமா போலே பண்ணப் பெற ஒண்ணாது
என் ஸ்வரூப அநு ரூபமான பேறாகிறது-நீ தரப் பெறுமது -அது வேணும் என்கிறார் –

————————-

ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே —5-8-7-

விஷயீ காரத்தை சொல்லி கைங்கர்யத்தை சொல்லி
அதுக்கு விரோதியாய் வருமதில் இந்த்ரிய வஸ்யதையைத் தவிர்த்து தர வேண்டுமேன்று சொல்லி
அதுக்கடியான பாபமடியாக வந்த யம வஸ்யதையை பரிஹரிக்க வேணும் என்று சொல்லி
அதுக்கடியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று சொல்லி
கருத்து அறிந்து செய்யும் அளவு அன்றிக்கே உன் பரிவாலே செய்ய வேணும் என்று நின்றது -கீழ் –

இதுக்கு அவ்வருகு அபேஷிக்கலாவது இல்லாமையாலே-மேலில் பாட்டுக்களுக்கு உதயம் இல்லை
ஆனால் மேல் செய்கிறது என் என்னில்
ஆழ்வீர்-சேஷியும் சேஷ பூதனும் ஆனால் சேஷி செய்தபடி கண்டு தத்தச்ய சத்ருசம் பவேத் -என்று
சேஷ பூதன் இருக்கும் அத்தனை அல்லது இத்தனை த்வரிக்க கடவது அல்ல காணும் -என்ன
தன்னைப் பார்த்தால் தன் சரீர அவசானத்தில் தான் பேறு உண்டோ
உன் சர்வ சக்தித்வத்தாலே த்வரிக்கிறேன் இத்தனை அன்றோ
அவனுடைய போக்யதை போலே-சர்வ சக்தித்வமும் த்வரிப்பிக்கும் இறே
சாந்தீபிநீ புத்ரனை கடல் கொள்ள மீட்டுக் கொடுத்த அகடிதகட நா சாமர்த்த்யத்தையும் விஞ்சி இருப்பது ஓன்று இறே
சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்டு நோவுபடுகிற என்னையும் மீட்டு உன் திருவடிகளை தருகை யாவது
தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தாலே அத்தை செய்து அருள வேணும் -என்கிறார் –

———————

வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-8-

வைதிக புத்ர இதிகாசத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் –
இப்பாட்டிலும் சொல்லுகிறது -கீழ்ச் சொன்ன சர்வ சக்தி யோகத்தை
ஆனால் வாசி என் என்னில்
தேச கால விப்ரகர்ஷம் கிடக்கச் செய்தே-கார்யம் செய்த சக்தி மத்தையைச் சொல்லுகிறது –

——————————-

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-

கீழ் இரண்டு பாட்டாலே அவனுடைய-சக்தி யோகத்தைச் சொல்லி-உபாய பூர்த்தியைச் சொல்லிற்றாய் நின்றது –
இப்பாட்டுக்கு உதயம் என் என்னில்
சம்சாரத்தின் உடைய தண்மையையும்-நம்முடைய அதிசய சக்தி த்வத்தையும் அனுசந்தித்து த்வரிக்கை யாகிற்
இது ஔபாதிகம் காணும்-நாம் செய்தபடி கண்டிருக்குமது காணும் உமக்கு ஸ்வரூபம் -என்ன
உன்னை அல்லது அறியாத தொண்டைமான் சக்கரவர்த்திக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினால் போலே
எனக்கும் ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்க வேணும் என்று சரணம் புகுகிறார் –

கீழே
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்று திரு மந்த்ரத்தை சார்த்தமாக லபித்து
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்தித்தார் –
அதின் முன்பு ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தது இல்லையோ -என்னில்
தம்தாமுக்கு பிறக்கும் ஜ்ஞானம் விச்வச நீயம் அன்று என்று காணும் இருக்க அடுப்பது
ஸ்ரீ நாரத பகவானை இட்டு ஸ்ரீ புண்டரீகனுக்கு-கிந்தத்ர-என்றும்-நராஜ்ஜா தாநி-என்றும்
திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசித்து
பிராப்தி வேளையில் உனக்கு வேண்டுவது என் என்று ஈஸ்வரன் கேட்க
க்வாஹமத்யந்த துர்ப்புத்தி -என்றான் இறே
சர்வ அபிமத சாதனம் இறே சரணா கதி யாகிறது –

—————————-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே —-5-8-10

இவருடைய பாவ வருத்தி இல்லையாகிலும் இவருடைய பாசுரத்தைச் சொல்லவே
ப்ராப்தி பிரதிகந்தகங்கள் போம் என்கிறது –

—————————

கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1-

————————————————

வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை
திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே –5-9-2-

————————————————

ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3-

—————————————————–

ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை யீந்தான்
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4-

—————————————————-

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத் தானை
நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே —5-9-5

——————————————————-

விலங்கலால் கடலடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புய்ம் துணிந்தான்
நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே—5-9-6-

ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய
அவ் ஊருக்கு கணையம் போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து –

———————-

வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக்
கண்ணியார் குருங்கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே —5-9-7-

சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே
வேறு ஒரு ஹேதுவைச் சொல்லி அன்றியே இது சொல்லியே நம்மைக் கட்டுவதே
என்று இசைந்து இருந்தான் ஆய்த்து –

————–

அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே—5-9-8-

ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய
ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலே வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான் –

———————-

நால் வகைவேதம் ஐந்து வேள்வி யாறங்கம் வல்லார்
மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தையாளி யென் சிந்தையானே—5-9-9-

ப்ரஹ்மாதிகளிலும் காட்டில் கை வந்து இருக்கிற பிராமணர் ஆனவர்கள் சிருஷ்டி காலம் தொடங்கி
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கக் குடி ஏறி ஜீவித்துப் போருகிறவர்கள் ஆய்த்து –
சீலகுண பிரசுரராய் மிக்க தபசை உடையராய் இருக்கிற பிராமணர் ஹிருதயத்தை
தனக்காக்கிக் கொண்டு இருக்கிறவன் என்னுடைய ஹிருதயஸ்தன் ஆனான் –

———————-

வண்டறை பொழில் திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-

இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-

——————

தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-1-

அந்தராத்மதயா நின்று ரஷகனாம் படி சொல்லி- கண்ணுக்கு இலக்காம்படி வந்து அவதரித்து ரஷகனாம்படி சொல்லி
ஒதுங்குவார் அளவு பட்டு இத் தோள் நிழலே மிக்கு இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே

———————–

உய்யும் வகை யுண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே யமுது செய்ய வல ஐயன் வான் மேவு நகர் தான்
மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-2-

நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்

———————–

உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை எழும் ஒழியாமை முன நாள்
தம் பொன் வயிராரளவும் உண்டவை உமிழ்ந்த தடமார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வருதும்பி மணி கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-3-

ஏதேனும் தசையிலும் விச்வச நீயானாய் இருக்கிறவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

———————

பிறையின் ஒளி எயிறு இலக முறுகி யெதிர் பொருதுமென வந்த வசுரர்
இறைகளவை நெறு நெறு என வெறியவவர் வயிறு அழல நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்களுக வளி முரல அடி கொள் நெடுமா
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-4-

சிறகை உடைத்தாய் இருக்கிற மயில்கள் குயில்கள் இவை நெருங்க
அத்தாலே பூக்கள் உதிர வண்டுகள் ஆளத்தி வைக்க –பொழிலிலே
மேகங்கள் வந்து சஞ்சரியா நின்றுள்ள தேசம் –

————————

மூள வெரி சிந்தி முனி வெய்தியமர் செய்தும் என வந்த வசுரர்
தோளுமவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவெய்தான்
வாளும் வரி வில்லும் வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே—5-10-5-

யுத்தத்துக்கு பரிகரமான வாளும்-தர்ச நீயமான வில்லும் வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும்
கதையும் இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன்
அவதாரங்கள் போலே இப்போது சந்நிதி இல்லை என்ன வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

————————–

தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழிலார் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-6-

வெம்மையை உடைத்தாய் நிலம் தன்னையே விறகாகப் பற்றி எரிகிற காட்டிலே உலாவினவர்
அப்பிராட்டியோடே புணர்ந்து சமஸ்த கல்யாண குணாத்மகன் வர்த்திக்கிற தேசம் –

—————-

தந்தை மனமுந்து துயர் நந்தவிருள் வந்த விறல் நந்தன் மதலை
எந்தை யிவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான்
மந்த முழ வோசை மழையாக வெழுகார் மயில்களாடு பொழில் சூழ்
நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே—5-10-7-

ஆசூர பிரக்ருதிகள் கண்ணுக்குத் தோற்றாதபடி இருளிலே வந்த பெரு மிடுக்கனான ஸ்ரீ நந்த கோபர் பிள்ளை –
பிறந்தது அங்கே ஆகில்-மீண்டும் போய் வளர்ந்தது அங்கே யாகில் –
கம்ச பயத்தாலே நாலு நாள் வளர்ந்த இத்தனையும் கொண்டு அறிவு குறைய நின்றார் சொல்லுகை அன்றிக்கே
அறிவில் தலை நின்ற நம் போல்வார் இங்கன் சொல்லுகிற இதுக்கு ஹேது என்-என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க –
நாமே அன்று காணும்-அவதார காலத்துக்கு முன்பே அறிவுடையராய் இருப்பாரும் இப்படி சொன்னார்கள் காணும் –
அயம் ச கத்யதே ப்ராஜ்ஞை-இத்யாதிகளாலே-அவர்களுக்கு முலை சுரவா நின்றது ஆகில்
இவன் தான் அஞ்சா நின்றான் ஆகில் உமக்கு இவ்வாராய்ச்சி என் தான் -என்று அருளிச் செய்தார் –
அந்ய பரன்-அநந்ய பரனாய் அடிமை செய்து வர்த்திக்கிற தேசம் – அதாவது
நந்தி என்பான் ஒருவன் அக்காலத்தில் அங்கே அனுகூலித்து வர்த்தித்தான் போலே –

———————–

எண்ணில் நினைவெய்தி யினியில்லை இறையென்று முனியாளர் திருவார்
பண்ணில் மலி கீதமொடு பாடியவராடலொடு கூட வெழிலார்
மண்ணிலிது போலு நகரில்லைஎன வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-8-

பூமியிலே பாரத வர்ஷமே உத்தேச்யம்-பண்ணின புண்யமானது-சாலில் எடுத்த நீர் போலே ஷயித்தவாறே
முகம் கீழ்ப்படத் தள்ளுகிற ஸ்வர்க்கமும் ஒரு தேசம் ஆய்த்தோ –
கோலின பலங்களுக்கு எல்லாம் சாதன அநுஷ்டானம் பண்ணலாம் பாரத வர்ஷத்தை ஒழிய -என்றார்கள் இறே
அப்படியே பூமிப் பரப்பில் ஸ்லாக்கியமாய் இருந்துள்ள இந்த நகரத்தோடே ஒக்க கடவது இல்லை என்று தேவர்கள்
புஷ்பாதி உப கரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

————————–

வங்க மலி பௌவமதுமா முகட்டின் உச்சி புக மிக்க பெரு நீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்
நாங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-9-

நங்கள் ஸ்ரீ பெருமான் உறையும் –ஸ்ரீ பர அவஸ்தை ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்கும்
ஸ்ரீ வ்யூஹம் ப்ரஹ்ம ருத்ராதிகள் பரிபவத்தைப் போக்கவாய் இருக்கும்
ஸ்ரீ அவதாரங்கள் ஸ்ரீ வசுதேவர் ஸ்ரீ சக்கரவர்த்திகள் தொடக்கமான பாக்யாதிகருக்காய் இருக்கும்
பிற்பாடரான நம் போல்வாருக்காய் இருக்கும் இறே உகந்து அருளின நிலங்கள்
ஸ்ரீ நித்ய சூரிகளும் இங்கே வரும் போது குறைவாளராய் வர வேணும்
அந்தருக்கு வைத்த சாலையில் கண்ணை மறைத்து வர வேணும் இறே –

————————-

நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே—5-10-10-

நண்ணு மனமே என்று உத்தேச்யமாக சொன்ன தேசம் ஆகையாலே இவ்விடம் நமக்கு ஆஸ்ரயநீய ஸ்தலம்
என்னும் பிரதிபத்தியோடே கூட அப்யசிக்க வல்ல அடியவர்கள் உடைய
க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே இருக்கிற பாபங்கள் சவாசனமாகப் போம் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – நான்காம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

June 26, 2019

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

ஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே-என்கிறார் முதல் பாசுரத்தில்

சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று
அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே
மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் –
அவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும்
தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள்
எங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன
அவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம்
இப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம்
சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே
ஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும்
எட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
அதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற
சர்வா திகன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே
வியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே
உதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே
சிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை
அளைந்து இருந்த வ்யாமோஹம்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

மனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி
ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————

கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-

ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை
ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து
ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று
அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன்
வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் முதல் பாசுரத்தில்

அந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை
அடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவற்றின் உடைய ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை
போக்கி ரஷிக்கிறவன்-இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று
அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

உள்ளே போய் புக்கு கம்சன் தலை மயிரைப் பிடித்து முகம் கீழ் பட வலித்து திருவடிகளாலே யுதைத்து முடித்தவன்
இன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன்
இன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக வந்து வர்த்திக்கிற தேசம்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மூவடியை நீர் ஏற்று திருக்கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று
அவன் கையிலே திருவடிகள் இருக்க அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்
கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே
ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம்
எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த
மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம் என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின-தேவன் உடைய வலிய சாபம் நீங்க
மகா உதாரனானவன்– வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக
அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார்
பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே
நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-

லோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் – அது அடைய தோற்றும்படி
தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நாங்கூரில் நன்றான நடுவுள் ஸ்ரீ செம் பொன் செய் கோயிலின் உள்ளே-
கார் காலத்திலே வர்ஷ உந்முகமாகமாய்க் கொண்டு அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே
இருககிறவனைக் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து
சந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார் முதல் பாசுரத்தில்

கீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து-இரண்டாம் பாசுரத்தில்
திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்
ஏழு இசையின் சுவை தன்னைச்-சப்த ஸ்வரங்களிலும் உண்டான ரச வஸ்து தான் ஒரு வடிவு கொண்டாப் போலே
நிரதிசய போகய பூதனாய் இருந்துள்ளவனை
பேதியா இன்ப வெள்ளம் -என்ற இடம் ஸ்வரூபத்தின் போக்யதை சொல்லிற்று
இங்கு குண யோகத்தினால் வந்த போக்யதை சொல்லுகிறது

காணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான வடிவை உடையவனை கண்டு அனுபவித்து
நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

கீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் நான்காம் பாசுரத்தில்
விபவத்தையும்
அதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்-
பசுக்களையும் இடையரையும் நோக்குகைக்காக ஸ்ரீ கோவிந்த அபிஷேகம் பண்ணி நின்றாப் போலே
சம்சாரிகள் உடைய ரஷணத்துக்காக முடி சூடி நிற்கிறவனை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
என்கிறார் நான்காம் பாசுரத்தில்

விபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்
பொல்லாத நெஞ்சை உடைய ராஷசர் மிடுக்கைப் போக்கினவனே-என்று
அப்படியே எங்கள் பிரதிபந்தங்களைப் போக்கி ரஷிக்க வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை
நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான
ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி
போகப் பெற்றோம் -என்று ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை-கண்டார் கண் குளிரும்படியாக
ஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள
சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைகசமதி கம்யனாய்
ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துடன் ஸ்ரீ திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்-எட்டாம் பாசுரத்தில்-

பாலும் சக்கரையும் அனுபவித்து தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்
ஒரு கால் ஸ்ரீ சர்வேஸ்வரன் ரஷகன் -என்று இரா மற்று ஒரு போது-வேறு ஓன்று ரஷகம் -என்று இருக்கை அன்றிக்கே
என்றும் ஒக்க சர்வேஸ்வரனே நமக்கு ரஷகன் -என்று தெளிந்து இருக்கிற பிராமணர்
அழகியதாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையவனாய் நிற்கிறவனை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து
அநந்தரம்-நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்
பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்
தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில்
உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு
இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1-

பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ
அங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்-
முதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று
எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ
ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்-
என்கிறார் முதல் பாசுரத்தில்

ஒருத்தரும் விரும்பாத நஞ்சை யுண்டு அறிவு குடி புகுராமையாலே உகந்த பிள்ளை கண்டீர்
மடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே படலைத் திருக்கி வைத்துப் போனால்
படலை திறந்து நுழைந்து புக்கு-அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல் அமுது செய்கைக்காக-
இவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

கறுப்பு ஆர்ந்த திண்ணியதான ருஷபங்களை அடர்த்து விவாஹ மங்களத்தை நிர்வஹித்த
கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்-
வெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்-
அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று
ஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்
ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே
மகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே
வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஆழியானது மிக்கு இருந்துள்ள ஊழி வெள்ளத்தைப் பண்டு திருமேனியிலே ஏக தேசத்தில் அடக்கின ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும்
ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக விளங்குவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1

மலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் முதல் பாசுரத்தில்

இலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே
கண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து
அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி-
சேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய
செவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து
இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி
அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி
திரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான்
அவன் அவதரித்து செய்தது எல்லாம் தாங்களே செய்ய வல்லார் ஆய்த்து
அவ் ஊரில் உள்ளார் இருப்பது–என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்

பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்
ஏழாம் பாசுரத்தில்

த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன்
இங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள்
அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான்
என்கிறார்-ஒன்பதாம் பாசுரத்தில்-

இத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்
நடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்
சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்
அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்-பத்தாம் பாசுரத்தில்-

———————–

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-

முள் பாய்ந்தால் அம்மே -என்னுமா போலே-பூர்வ ஜன்ம வாசனையாலே
நாவுக்கு அலங்காரமான திரு நாமத்தைச் சொல்லி
நா வாயில் உண்டே-நமோ நாராயணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -என்னக் கடவது இறே
அதுவும் நாராயணாவோ என்று இறே கூப்பிட்டது-
ஒரோ கால விசேஷங்களிலேயாய்-தீர்த்தம் பிரசாதித்தது என்னாமே நித்ய வாஸம் பண்ணுகிற
உன்னை உகந்தாரை விட மாட்டாதே வர்த்திக்கிற நீயே ரஷகன் ஆக வேணும்
அவன் மாம் ஏகம்-என்ற வார்த்தை இவர் தாமே அருளிச் செய்கிறார்-என்கிறார் முதல் பாசுரத்தில் –

காவலாக இட்டு வைத்த கடல் தானே பாதகம் ஆனவாறே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு
பூமியை இடந்து எடுத்து
மகாபலி பக்கலிலே ஔதார்யம் என்று ஒரு குணம் கிடைக்கையாலே அவனை அழிக்க மாட்டாதே தன்னை அழித்தான் ஆய்த்து-
கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு தான் இரந்தான் ஆய்த்து மஹாபலியினுடைய மிடுக்கை அழிக்கைகாக
அவ் ஊரில் உள்ளாரில் ஒருவனாய் புகுந்து இருக்கிற நீயே எனக்கு ரஷகனாக வேணும்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ வாமனன் படி யாய்த்து அங்கு உள்ளவை எல்லாம் இருப்பது
அதாவது-தோற்றத்தில் கார்யப்பாடு உண்டாய் இருக்கை-
முளைத்த உடனே பல பர்யந்தமாய் ஸ்ரீ வாமனன் உடன் சாம்யம் இவற்றுக்கு-பழம் -போக்யம் குறைவற்று
போக்தாக்கள் தேட்டமாய்த்து இருப்பது
அசக்தன் சக்தனை அன்றோ அபாஸ்ரயமாகப் பற்றுவது
இப்படி சக்தனான நீயே சந்நிஹிதனான பின்பு நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே ரஷிக்கைக்கு ஈடாக வீரக் கழலை இட்டு அதுக்கு ஈடாக
சந்நிஹிதனுமாய் இருக்கிற உன்னை ஒழிய எனக்கு சுபாஸ்ரயம் உண்டோ-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஆஸ்ரித சம்ரஷணத்துக்கும் அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக ஸ்ரீ பிராட்டியோடே
நித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும்
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய் சர்வாதிகனான நீயே சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மல்லர் முடிந்தார் என்று கேட்ட அநந்தரம் பெரிய சீற்றத்தோடு வந்து தோற்றின
கம்சனை எதிரிட்டு சென்று கொன்று-இது பருவம் நிரம்புவதற்கு முன்பு செய்த கார்யம்
பருவம் நிரம்பிய பின் செய்தகார்யம் துர்யோதநாதிகள் உடன் ஷத்ரியர் என்று பேர் பெற்றவர் அடங்கலும்
முடிந்து போம்படியாக பாரத சமரத்தை நடத்தி பூ பாரத்தைப் போக்கினவனே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிதாவினுடைய ராஜ்ஜியம் புத்திரன் பண்ண வேணும் -மர்யாதா பங்கம் பண்ண ஒண்ணாது-என்று
அதுக்காக தூது எழுந்து அருளினான்
ரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தர்ச நீயமான பூக்களை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின திரு நாங்கூரிலே
ஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு பூமிக்கும் உண்டாக வேணும் என்று
அக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது
அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக
ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே வந்து சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும் போருகிறது ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே என்று
வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவனுமாய்
ஸ்ரீ திரு நாங்கூரிலே-சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று
தோற்றும்படி இருக்கும் ஆய்த்து
இப்படி நிரதிசய போக்யனான நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை
கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்
இப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று
அபிமத சாதனம் என்னவே கற்பர்கள்
பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று-பத்தாம் பாசுரத்தில்

——————————-

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-

பய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற நிருபாதிக பந்துவே புறம்பு புகல் உண்டு என்று
இருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது-அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் –
இவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ-என்கிறார் முதல் பாசுரத்தில்

ரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே-விச்சேதியாதே சாவதி அன்றிக்கே இருந்துள்ள
புகழை உடைய பிராமணர் உடைய ஸ்ரீ திரு நாங்கூர்-அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய்
துரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள்
சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை
அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய்
ஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே
இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

செல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும்
கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார் நாலாம் பாசுரத்தில்

திருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாசன் ஆனவனே
நீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்-இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம்
இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான வ்ருத்தியைச் செய்தாய் என்று
இடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே
திரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை போக்கி அருளாய்
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பிரஜை அறியாதே இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
சம்சாரிகள் அறியாதே இருக்க வத்சலன் ஆனவனே ஆருடைய வஸ்து இங்கன் அலமாக்கிறது-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

பூவிலே பிறந்தவள் பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்வு படைத்தவனே-
பரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே தீப்யமாநனாய் இருக்கிறவனே
சம்சாரத்தில் வர்த்திக்கிறான் ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1-

காலும் பாடகமும் பொருந்தின படியை அவன் பாடா இருக்குமவள் அவனூரைப் பாடா நின்றாள்-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பலரும் தன்னைப் பழிக்க-அவர்களை தனக்கு கூட்டு என்று-அவனூரைப் பாடுவாள் ஆனாள்
ஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்- என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு
ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்
ஆனந்தாவஹன் என்றும்–ஜகத் காரண பூதன் என்றும்
ஸ்ரீ நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பிராட்டி தசை வந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்
ஒருத்தி வாய் வெருவ-ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர -ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற
தேசத்திலே இருக்கப் பெறுவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –

——————-

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-

சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-
அத்தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது –
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி-
இவ்வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே
இன்று இப்படி ஆறி இருக்கிற நீ-முன் தீம்பு செய்து-சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என்
சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று
அந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை என்னைக் கொண்டு அருள வேணும் –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும்
க்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்-
என் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்-அக்ரத ப்ரயயௌ ராம -என்கிறபடியே
ஸ்ரீ பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு
இப்படி நடந்தால் போன உயிர் மீளும்-உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால்
அது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

தர்ச நீயமான ஸ்ரமஹரமான ஸ்ரீ திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி வ்யாமோஹத்தை தெரிவித்தவனே –
கள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே
ஸ்ரீ திருவாலி யானைக் கைப்பிடித்து-ஸ்ரீ திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் –
திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பிதவன்
சம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
கொள்கை யாகிற இம்மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

புறம்புள்ளார் அழகியதாக ஆசை பட்டான்-ஆசைப் பட்டவனுக்கு அழகிதாக முகம் கொடுத்தார்
இதுவோ தான் சிலர் ஆசைப் பட்டால் பலிக்கும் படி என்று உம்மைப் பழி சொல்லா நின்றார்
அயலாரும் ஏசு கின்றது இதுவே-நான் பேசுகின்றதுவும் இதுவே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

உமக்கு வருமதில் வேணுமாகில் ஆறி இருக்கிறீர்-எங்களுக்கு வருமதில் உமக்கு ஆறி இருக்கப் போமோ-
நித்ய சூரிகளுக்கு படி விடும் வடிவை
சம்சாரிகளுக்கும் ஒக்க படி விடுகைக்கு அன்றோ ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
வாசி யற முகம் கொடுக்க வந்து நிற்கிற இடத்தே வாசி வையா நின்றீர்
உம்முடைய உடம்பு உம்மை ஆசைப் பட்டாருக்காக கண்டது என்று இருந்தோம்
அங்கன் அன்றாகில்-அத்தை நீர் கட்டிக் கொண்டு வாழும் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –
பூ அலறும் போதை செவ்விபார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே
ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
பரத்வம் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரம் ஸ்ரீ தசரத ஸ்ரீ வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்
உகந்து அருளின நிலங்கள் -தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே
சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே
குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே
பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்-இவருடைய பிரகிருதி மார்த்தவம்
தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும்அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ
நீர் ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது-போந்த கார்யத்தை மறக்கிறது என் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பரார்த்தமான வஸ்துவை உமக்கு என்று இரா நின்றீர் உம்முடைய திருவடிகளை காட்டாமையே ஸ்வபாவமாம்படி யானீர் –
அவ் வபிசந்தியைக் குலைத்து அத்தை அப்படி செய்யப் பெறில்
நான் உபேஷித்தால் தான் இவற்றுக்கு அவ்வருகு போக்குண்டோ
ஆனபின்பு நான் நினைத்த போது கார்யம் செய்கிறோம் -என்று ஆறி இருக்கைக்கு
உம்முடைய பரம பதத்தில் நித்ய சூரிகளோ
மரு பூமியிலே தண்ணீர் போலே உம்மை ஒழிய உண்டு உடுத்துப் போது போக்குகிற இஸ் சம்சாரத்தில்
உம்மால் அல்லது செல்லாத படி இருக்கிற நாங்கள் உஜ்ஜீவீயாமோ-
நீர் அவாக்ய அநாதர என்று இங்கு இருந்தால்-நாங்கள் ஸ்வரூப ஞானத்தால் அதிலே துவக்குண்டு
கண்டு கொண்டு இருக்க மாட்டோமேவாய் திறந்து சொல்லி கார்யம் கொண்டால் தான் உஜ்ஜீவிப்போம் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இவனுடைய அசாதராண விக்ரஹம் காள மேகம் போலே இருக்கும் என்று சாஸ்த்ரங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
நீ இப்படி சாஸ்த்ரங்களில் கேட்டுப் போந்த வடிவு தான் இருக்கும்படி இது காண் என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து
அவ்வடிவைக் காட்ட வேண்டும்
நீர் கொள்ளும் வடிவுகளுக்கு எல்லாம் சாஸ்திரங்கள் இல்லையோ பிரமாணங்களால் கேட்டுப் போக ஒண்ணாது
நம்முடையாருக்கு இவ்வடிவு தான் இது காணும் கோள் என்று காட்ட வேணும் என்று அதுக்காக அன்றோ நீர்
ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை
அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்
இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-
அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே
ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-

ஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம் என்று தோற்றும்படி யாய்த்து அத்தேசத்தில் போக்யதை இருப்பது
எல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது –
அவன் கோயில் அதுவே என்கையாலே ஆஸ்ரயநீய ஸ்தலம் அதுவே -என்கிறார் முதல் பாசுரத்தில்

மது வனத்தில் புக்க முதலிகள் போலே பெரிய ஆரவாரத்தோடு மது பானத்தைப் பண்ணி
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாதே ஆலத்தி வையா நிற்கும்
ஸ்வேச்சையிலே பாடா நிற்கும் யாய்த்து –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம் எழுதிக் கொள்ளலாம் படி
பல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக அடுத்து அணியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின சர்வாதிகன் வந்து சாய்ந்து அருளின கோயில் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி
அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால்
ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ –
என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல்
அன்றிக்கே-சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு அத்தை சொல்லிற்று ஆகவுமாம்
வெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி
அன்றிக்கே –வெள்ளியார் வணங்க –வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க
ஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி -என்கிற இடத்துக்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யநான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்
பிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு ஆசை உடைய என்னை அன்றோ அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று
தம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக –
அவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி
இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக ஸ்ரீ திருப் பாற் கடல் கோயிலிலே
கண் வளர்ந்து அருளினவன்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள்
துடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து
ஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –
இவற்றை ஆதரித்துக் கொண்டு அப்யசிக்க ஈடான பாக்யாதிகர் கடல் சூழ்ந்த பூமியை தாங்கள் இட்ட வழக்காம்படி ஆளப் பெறுவர் –
பரிந்து பாகவத சேஷம் ஆக்கப் பெறுகையாலே ஐஸ்வர்யத்தை தாம் புருஷார்த்தமாக நினைத்தார்
அத்தாலே இது கற்றாருக்கும் அப்படி கூடல் இது தானே அமையும் என்று இருந்த படியாலே ராஜ்யஸ்ரீ யைப் பெறுவார் என்கிறார்
அன்றிக்கே இது தன்னை சர்வாதிகாரம் ஆக்குகைக்கு சொல்லிற்று ஆகவுமாம் –
ஐஸ்வர்ய காமர் இல்லை யாகில் இத்தை அதிகாரி யார்களே அவர்கள் இழக்க ஒண்ணாது என்னு முகப்பாலே சொல்லுகிறார்
பத்தாம் பாசுரத்தில்

–——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -நாலாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

June 26, 2019

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே-4-1-பிரவேசம் –

தனக்கு அசாதாரணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய பிரதிபந்தகத்தைப் போக்கி –
அரு வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து
அவர்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணுகைக்காக ஸ்ரீ அரிமேய விண்ணகரிலே சந்நிஹிதன் ஆனான் என்றார் –
அவ்வளவு அன்றிக்கே
பிரயோஜனாந்த பரர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் -இந்திரனும் இமையவரும் -ஸ்ரீ திருப் பாற் கடலில் போலே
அபிமதங்களைக் கொடுக்கைகாக ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருத் தேவனார் தொகை என்கிறார்-

——————

கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1- பிரவேசம்-

ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனுமாய் -(இந்துவார் சடை பாசுரம் -4-2-9–) அவர்கள் தங்கள் தங்களுக்கு அனர்த்தத்தை
சூழ்த்துக் கொள்ளும் அன்று அவற்றைப் போக்கி ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் -( வாளையார் பாசுரம் -4-2-8-)
அவர்கள் தாங்கள் அசுரர்கள் உடன் வரும் அன்றும் அவர்களை ஜெயித்து-(ஈசன் தன் பாசுரம்-4-2-9- )
ஜகத்தை ரஷிக்குமவன் – வந்து எழுந்து அருளி இருக்கிற தேசம்
ஸ்ரீ வண் புருஷோத்தம் என்று அத்தேசத்தின் உடைய வைலஷண்யத்தை அனுசந்தித்து அத்தைப் பேசி
அனுபவிக்கிறார்

———————-

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1–பிரவேசம்

ஞானானந்த ஸ்வரூபனாய் -பேதியா இன்ப வெள்ளத்தை
நிரதிசய போக்யனாய்-ஏழ் இசையின் சுவை தன்னை – உள்ளத்துள் ஊறிய தேனை
என்றும் ஒக்க உள்ளனாய் இருக்கிற -இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை-ஸ்ரீ சர்வேஸ்வரனை
தன்னை ஆஸ்ரயிக்கும் இடத்தில் புருஷகாரமாம் ஸ்ரீ பிராட்டிமாரோடு கூட வந்து -மலர்மகளோடு மண் மகளும் உடன் நிற்ப –
நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ செம்பொன் செய் கோயிலின் உள்ளே நான் காணப் பெற்றேன் என்று
தாம் பெற்ற பேற்றை அனுபவித்து இனியர் ஆகிறார்

————————

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1- பிரவேசம்

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்-சர்வ ரஷகனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ திருத் தெற்றி அம்பலத்திலே-நம்முடைய விரோதியைப் போக்கி நம்மை அடிமை கொள்ளுகைக்காக
வந்து நின்றான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –
என் செங்கண்மால் -என்று பாட்டு தோறும் அருளுகிறார்

———————

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1–பிரவேசம்

சர்வ நிர்வாஹகனாய்-ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்
விரோதியைப் போக்கும் இடத்தில் தானே வந்து அவதரித்து போக்குமவன் ஸ்ரீ திரு மணிக் கூடத்தில் நின்றான் என்று
க்ருதஞ்ஞர் ஆகையாலே -இவை எல்லாம் தமக்கு செய்கைக்கு வந்து இருக்கிறான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்-

————————–

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1- பிரவேசம் –

சுகுமாரராய் இருப்பார் வழி போகப் புக்கால் நீர் கண்ட இடம் எங்கும் மேலே ஏறிட்டுக் கொள்ளுமா போலே
இவரும்
தம்முடைய மார்த்தவத்தாலே அவனை ஒழியச் செல்லாமையாலே சம்சாரத்தில் பொருந்தாமை உடையராய்
இவ்விரோதியைப் போக்கி அவனைப் பெறுகைக்கு உடலாக பலகாலும் பிரபத்தி பண்ணா நிற்பராய்த்து
கடுக பலிப்பதொரு உபாயத்தை பற்ற வேணும் இறே
ஒரு வ்யபிசாரமாதல் -விளம்பமாதல் -இல்லாத சாதனத்தைப் பரிக்ரஹிக்க வேணும் இறே
அதாகிறது
த்வமேவ உபாய பூதோ மேபவ -என்கை இறே
அஹம் அஸ்ம்ய அபராதாநாம் ஆலய அகிஞ்சன -என்கையாலே -தான் உபாயம் அல்லாமை சொல்லிற்று
அகதி -என்கையாலே பிறர் உபாயமாக மாட்டார்கள் என்கிறது
தன்னை முற்படச் சொல்லுவான் என் என்னில்-தன் அனர்த்தத்துக்கு ஹேது தானே இறே
இவ்வளவும் வர சம்சரிகைக்கு கார்யம் பார்த்தான் தானே அன்றோ –
இனி பிறர் தானே அனுக்ரஹம் பண்ணுவாரைப் போலே இருந்து
அனர்த்தத்தை விளைக்கும் அத்தனை அல்லது ரஷகர் ஆக மாட்டார்களே

பித்தோபஹதன் உணர்த்தி உண்டான அளவிலே-நானே என் தலை மயிரைப் பறித்துக் கொள்ளுதல்
கண்ணைக் கலக்கிக் கொள்ளுதல் செய்து-என் விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுவன்
அவ்வளவில் நீ எனக்கு ரஷகன் ஆக வேணும் -என்று தெளிந்து இருப்பான் ஒருவன் கையிலே
தன்னைக் காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று இறே பிரபத்தி பண்ணுகை யாவது தான்
மத்யம பதத்தாலே தன்னைக் கழித்து இறே பிரபத்தி பண்ணுவது
ஆகையாலே நானும் எனக்கு இல்லை
பிறரும் எனக்கு இல்லை
நீயே ரஷகனாக வேணும் என்று
ஸ்ரீ திருக் காவளம் பாடி நாயனார் திருவடிகளிலே சரணம் புகுகிறராய் இருக்கிறது

கீழ்த் திரு மொழி யோடு இதுக்கு சேர்த்தி என் என்னில்
சரண்யன் ஆனவன் ஸ்ரீ பிராட்டிமாரோடே கூடத் ஸ்ரீ திரு மணிக் கூடத்திலே வர்த்தியா நின்றான் என்றார்
ஸ்ரீ லஷ்மீ பதி இறே ஆஸ்ரயநீயன் ஆனவன்-இங்கே சரணம் புகுகிறார்

———————–

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1–பிரவேசம்

காவளம்பாடி மேய கண்ணா களை கண் நீயே -என்று சரணம் புக்க இடத்திலும்
சம்சாரத்திலே சப்தாதி விஷயங்கள் நடையாடுகிற இடத்திலே தம்மை இருக்கக் கண்டார்
ப்ரியஞ்சனம் அபச்யந்தீம் பச்யந்தீம் ராஷசீ கணம்
ஸ்வ கணேன ம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதாமிவ -என்னும்படியே
இழக்கிறது நித்ய சூரிகள் உடன் இருக்கிற இருப்பையும்
பெறுகிறது -சப்தாதி விஷயங்களையும்
அவற்றுக்கு பணி செய்து திரிகையுமாய் இரா நின்றது
நீ அசக்தனாய் இருந்து என் அபிமதம் இழக்கிறேன் அன்று
நீ சக்தனாய் இருக்க நான் இழப்பதே -என்ன
உனக்கு அபிமதம் ஏது என்ன –
த்வத் பிராப்தி விரோதியான பிரகிருதி சம்பத்தத்தை அறுத்துத் தர வேணும் என்கிறார்

———————

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1- பிரவேசம் –

திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று
தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார்
அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே
தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு-

——————–

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-பிரவேசம் –

பெற வேணும் என்னும் அபேஷையிலே கண் அழிவு இல்லாமை சொல்லிற்று இறே -கீழில் திரு மொழியிலே
பார்த்தன் பள்ளி பாடுவாள் -என்று உகந்து அருளின நிலங்களைச் சொல்லி வாய் வெருகைக்கு மேற்பட
இல்லை இறே அபேஷைக்கு
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -என்றும்
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றன சங்கம் -என்றும்-சொல்லுகிற இவை அடைய
இவருக்கு உகந்து அருளின நிலங்களிலே யாய்த்து
ஆகையால்
பரமபதம் கலவிருக்கையாக இருக்க-அவ்விடத்தை விட்டு ஆஸ்ரிதர்க்கு சர்வ அபேஷித ப்ரதன் ஆகைகாக
ஸ்ரீ திருவிந்தளூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
நாம் அங்கே போகப் புகவே நினைத்தவைகள் எல்லாம் பெறலாம் -என்று பெரிய பாரிப்போடே போய்ப் புக்க விடத்து
ஒரு ஸ்ரீ புண்டரீகன் அக்ரூரன் என்றால் போலே சொல்லுகிற இவர்கள் பக்கலில் பண்ணின
விசேஷ கடாஷத்தை தம் பக்கலிலேயும் பண்ணி
திருக் கண்களாலே குளிர நோக்குதல்
அணைத்தல்
வினவுதல்
இவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பாரித்து கொடு புக்க படியே அடிமையில் ஏவுதல் –
பண்டை நாளால் திரு வாய் மொழி போலே
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்-சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -போன்ற பரிமாற்றங்கள் -செய்யக் கண்டிலர்
அத்தாலே-மிகவும் அவசந்னராய்
ஒரு மின்னிடை மடவார்
காதில் கடிப்பில்
பிராட்டிமார் தசை பிறந்தால் பிரணய கலஹத்தாலே கிலாய்த்துச் சொல்லும்
பாசுரம் அடைய ஆழ்வார் தாமான தன்மையிலே சொல்லலாம் படி யான பாவம் பிறந்து
சந்நிதியும் உண்டாய்
எனக்கு அபேஷையிலும் கண் அழிவு அற்று
பிராப்தனுமாய் இருக்க
என்னை அடிமை கொள்ளாது ஒழிவதே -என்னும் இன்னாப்புடனே சிவட்கு பிறந்து வார்த்தை சொல்லுகிறார்

———————–

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1- பிரவேசம் –

நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறப் பெற்றிலோம் என்று இன்னாதானார் கீழ்
நீர் இப்படி இன்னாதாகிறது என் என்ன
நம்மை ஆசைப் பட்டாருக்கு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறலாம் படி
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி யாவதாரங்களைப் பண்ணி முகம் கொடுத்த நாம் அன்றோ ஸ்ரீ திரு வெள்ளி யங்குடியிலே வந்து
சந்நிஹிதர் ஆனோம்-ஆன பின்பு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறத் தட்டு என்ன என்று சமாதானம் பண்ண
சமாஹிதராய் அவனைப் பேசி அனுபவிக்கிறார்
ததேவ கோபாய யத பிரசாதாய்ச ஜாயதே – இறே-ஒரு குண ஆவிஷ்காரத்தை தோற்றுவித்தார் -என்கை –

———————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-நான்காம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

June 26, 2019

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

ஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே-

—————-

யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்
மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத்
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே–4-1-2-

சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று
அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே
மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் –
அவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-

——————–

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள்
தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-3-

ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும்
தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –

————————–

இந்த்ரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-4-

தாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள்
எங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன
அவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம்
இப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து

——————–

அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே —–4-1-5-

பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம்
சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே
ஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்

————————-

ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத
பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
சாலிவளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல்
சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே—–4-1-6-

பூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும்
எட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
அதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற
சர்வா திகன் வர்த்திக்கிற தேசம்

———————-

ஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம்
ஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே–4-1-7-

நாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே
வியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே
உதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே
சிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை
அளைந்து இருந்த வ்யாமோஹம்

——————————–

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்

———————–

கும்ப மிகுமத யானை பாகனோடும் குலைந்து வீழக்
கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம்
வம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள்
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-9-

மனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்

——————

காரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–4-1-10-

இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி
ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர் –

———————

கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-

ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை
ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து
ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று
அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன்
வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-

————————

பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர்கோன் உறை கோயில்
நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம்
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே———–4-2-2-

பூத்த கடம்பின் மேலே ஏறி காளியன் உடைய
பணங்கள் ஆகிற ரெங்கத்தின் மேலே
அவன் தப்பாதபடியாக நினைவு இன்றிக்கே
இருக்கச் செய்தே வந்து கடுகப் பாய்ந்து

அந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை
அடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்-

——————–

அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-

அவற்றின் உடைய ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை
போக்கி ரஷிக்கிறவன்-இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று
அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-

——————

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடி புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-4-

உள்ளே போய் புக்கு கம்சன் தலை மயிரைப் பிடித்து முகம் கீழ் பட வலித்து திருவடிகளாலே யுதைத்து முடித்தவன்
இன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-

——————

சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து ஈசன் தன் படை யோடும் கிளையோடும்
ஓட வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
ஆடுவான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-5-

இதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன்
இன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக வந்து வர்த்திக்கிற தேசம்

——————–

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-6-

மூவடியை நீர் ஏற்று திருக்கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று
அவன் கையிலே திருவடிகள் இருக்க அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்
கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

——————-

உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை
வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே–4-2-7-

அவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே
ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம்
எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த
மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம்

———————-

வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க
மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-8-

எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின-தேவன் உடைய வலிய சாபம் நீங்க
மகா உதாரனானவன்– வர்த்திக்கிற தேசம்

—————-

இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும்
உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-9-

தன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக
அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்

—————

மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே–4-2-10-

அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார்
பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே
நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக பெறுவர்

——————

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-

லோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் – அது அடைய தோற்றும்படி
தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நாங்கூரில் நன்றான நடுவுள் ஸ்ரீ செம் பொன் செய் கோயிலின் உள்ளே-
கார் காலத்திலே வர்ஷ உந்முகமாகமாய்க் கொண்டு அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே
இருககிறவனைக் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து
சந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார்

——————–

பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை ஏழு இசையின் சுவை தன்னைச்
சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே—4-3-2-

கீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து
இதில் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்

———————-

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-

காணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான வடிவை உடையவனை கண்டு அனுபவித்து
நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார்

———————

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானைத்
திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-

கீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் இதில்
விபவத்தையும்
அதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்

———————–

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத்
தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே
தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே —4-3-5-

விபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்

—————–

மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானைச்
செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6-

இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை
நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான
ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன் –

————————

வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்
செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7-

பருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி
போகப் பெற்றோம் -என்று ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை-கண்டார் கண் குளிரும்படியாக
ஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே-

—————-

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-

இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள
சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைகசமதி கம்யனாய்
ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துடன் ஸ்ரீ திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்

—————

களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-9-

பாலும் சக்கரையும் அனுபவித்து
தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்

————

தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி
ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே–4-3-10-

பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து
அநந்தரம்-நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்
பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்
தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில்
உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு
இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்

———————-

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1-

பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ
அங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்-
முதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று
எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ
ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்-

——————

பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப்
பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப யாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்
நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறிய வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

ஒருத்தரும் விரும்பாத நஞ்சை யுண்டு அறிவு குடி புகுராமையாலே உகந்த பிள்ளை கண்டீர்
மடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்

———————–

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி
திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–4-4-3-

இடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே படலைத் திருக்கி வைத்துப் போனால்
படலை திறந்து நுழைந்து புக்கு-அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல் அமுது செய்கைக்காக-
இவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை

———————-

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–4-4-4-

கறுப்பு ஆர்ந்த திண்ணியதான ருஷபங்களை அடர்த்து விவாஹ மங்களத்தை நிர்வஹித்த
கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர்

———————-

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-

ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்-
வெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்-
அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி

———————

தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்
மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு
தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-6-

ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று
ஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்

———————

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே-4-4-7-

ஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே
மகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்

——————

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்
குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8-

பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே
வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

————–

ஏழு உலகும் தாள்வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே -4-4-9-

ஆழியானது மிக்கு இருந்துள்ள ஊழி வெள்ளத்தைப் பண்டு திருமேனியிலே ஏக தேசத்தில் அடக்கின ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்

———————-

சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10-

ஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும்
ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக விளங்குவர்

———————–

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1-

மலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி

————–

கவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர் முலை சுவைத்து இலங்கை
மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-2-

இலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே
கண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி-

————————

மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்
தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-3-

சேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய
செவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி-
அவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து
அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி-

———————-

தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-4-

அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து
இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்

——————–

கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத
திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5-

ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி
அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்-

——————-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி
திரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார்-

——————

குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-7-

பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்

———————

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-8-

த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன்
இங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார்

——————

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-9–

நிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள்
அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான்
என்கிறார்-

———————

திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10–

இத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்
நடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்
சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்
அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்

—————–

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-

முதலையாலே இடர்பட்ட யானை தன்னை நோக்கிக் கொள்ளுதல்
அம்முதலை இத்தை நோக்குதல் செய்ததோ
பாதகமானது ரஷகம் ஆக மாட்டாதே
அந்த ஆனையினுடைய ஸ்தானே யாய்த்து நான்
முதலையினுடைய ஸ்தானே யாய்த்து பிறர்

———————–

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2-

அவ் ஊரில் உள்ளாருக்கு இந்த்ராதிகள் படி இல்லை யாய்த்து
அவனை இரப்பாளன் ஆக்கி தாங்கள் வயிறு வளரார்கள் ஆய்த்து
மகா ராஜரைப் போலே தங்களை அழிய மாறி நோக்குவர்கள்-

———————

உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசளித்தாய்
பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்
கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-3-

உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே
ஊற்று மாறாத சம்பத்து உடையவன் சுக்ரீவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது

———————–

முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே யரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்பு தேனுகரு நாங்கைக்
கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4-

ராஜத் துரோகத்தைப் பார்த்தால் சம்பந்தம் உள்ள இடம் எங்கும் அழியச் செய்ய வேண்டி இருக்க
அவன் தம்பிக்கே கொடுத்தான் ஆய்த்து –

—————–

பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-5-

ஆஸ்ரித சம்ரஷணத்துக்கும் அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக ஸ்ரீ பிராட்டியோடே
நித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும்
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய் சர்வாதிகனான நீயே சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ–

——————-

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று
பல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய்
நல்லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய
கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே –4-6-6-

இவருடைய உபாயம் ஸூ ரஷிதமாக பெற்றது ஆய்த்து
ஸூ ரஷிதமான உபாயத்தை விட்டு வேறு ஒன்றைத் தேடித் போகவோ-

————————-

மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய்
பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக்
காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7-

ஏதத் விரதம் மம -என்கிறபடியே இத்தை அடைய ரஷிக்கைக்காக காவல் பூண்டு இருக்கிறவனே
ரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்

———————

ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-8-

தர்ச நீயமான பூக்களை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின ஸ்ரீ திரு நாங்கூரிலே
ஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு பூமிக்கும் உண்டாக வேணும் என்று
அக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது ஸ்ரீ திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது
அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக
ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே வந்து சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்

———————–

சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி
அந்தமா யாதியாகி யருமறை யவையும் ஆனாய்
மந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-9-

கார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும் போருகிறது ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே என்று
வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவனுமாய்
ஸ்ரீ திரு நாங்கூரிலே-சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று
தோற்றும்படி இருக்கும் ஆய்த்து
இப்படி நிரதிசய போக்யனான நீயே ரஷகனாக வேணும்-

———————–

மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக்
கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –4-6-10-

திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை
கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்
இப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று
அபிமத சாதனம் என்னவே கற்பர்கள்
பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று

———————–

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-

பய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற நிருபாதிக பந்துவே புறம்பு புகல் உண்டு என்று
இருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது-அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் –
இவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ-

——————-

கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே —4-7-2-

ரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே-விச்சேதியாதே சாவதி அன்றிக்கே இருந்துள்ள
புகழை உடைய பிராமணர் உடைய ஸ்ரீ திரு நாங்கூர்-அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ –

————————–

குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3-

மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய்
துரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள்
சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை
அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய்
ஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே
இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது

———————–

கானார் கரி கொம்பு ஒசித்த களிறே
நா நா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே—4-7-4-

செல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும்
கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார்

———————-

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
பாடா வருவேன் வினையாயின பாற்றே —4-7-5-

திருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாசன் ஆனவனே
நீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்-இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன் –

————————-

கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே
எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே —4-7-6-

அவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம்
இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே

—————————–

கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
சேலார் வயல் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
மாலே யென வல் வினை தீர்த்து அருளாயே —4-7-7-

ஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான வ்ருத்தியைச் செய்தாய் என்று
இடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே
திரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை போக்கி அருளாய்

———————-

வராக மதாகி யிம்மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

இடையர் உனது குணங்களில் மண்டி இருக்க-பிராமணர் வேதங்களில் மண்டி இருக்க
நான் சம்சாரத்தில் மக்நன் ஆகி நிற்க-அருளாய் -என்கிறார்

——————-

பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே
ஆவா வடியான் இவன் என்று அருளாயே –4-7-9-

பூவிலே பிறந்தவள் பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்வு படைத்தவனே-
பரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே தீப்யமாநனாய் இருக்கிறவனே
சம்சாரத்தில் வர்த்திக்கிறான் ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே

———————–

நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே —-4-7-10-

வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-

——————-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1-

———————

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று ஓதி
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-2-

————————————————-

அண்டர் கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-3

———————————————————–

கொல்லை யானாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் என்றும்
செல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பல்வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-4-

——————————————————–

அரக்கராவி மாள வன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கு மாட நீடு நாங்கை நின்மலன் என்று என்று ஓதி
பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-5

———————————————————–

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே —4-8-6-

———————————————————–

நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-7-

காலும் பாடகமும் பொருந்தின படியை அவன் பாடா இருக்குமவள் அவனூரைப் பாடா நின்றாள்-

——————-

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-8-

பலரும் தன்னைப் பழிக்க-அவர்களை தனக்கு கூட்டு என்று-அவனூரைப் பாடுவாள் ஆனாள்
ஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்

————————

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-9-

ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு
ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்
ஆனந்தாவஹன் என்றும்–ஜகத் காரண பூதன் என்றும்
ஸ்ரீ நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே

————————

பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை
வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே—-4-8-10-

பிராட்டி தசை வந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்
ஒருத்தி வாய் வெருவ-ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர -ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற
தேசத்திலே இருக்கப் பெறுவார்

—————————

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-

சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-
அத்தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது –
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி-
இவ்வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே
இன்று இப்படி ஆறி இருக்கிற நீ-முன் தீம்பு செய்து-சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என்
சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று
அந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை என்னைக் கொண்டு அருள வேணும் –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும்
க்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்-
என் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்-அக்ரத ப்ரயயௌ ராம -என்கிறபடியே
ஸ்ரீ பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு
இப்படி நடந்தால் போன உயிர் மீளும்-உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால்
அது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ –

————–

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே—4-9-2-

தர்ச நீயமான ஸ்ரமஹரமான ஸ்ரீ திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி வ்யாமோஹத்தை தெரிவித்தவனே –
கள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே
ஸ்ரீ திருவாலி யானைக் கைப்பிடித்து-ஸ்ரீ திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் –
திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பிதவன்
சம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
கொள்கை யாகிற இம்மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ –

———————–

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கன்னி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே—-4-9-3-

உகவாதார் சொல்லும் பழியை பரிஹரிகைக்கும்-உகப்பார் நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறுகைக்கு அன்றோ
திரு இந்தளூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறது –

———————-

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே —4-9-4-

நமக்கு அவத்யம் வரும் என்று இறே நீர் தாம் இப்படிப் படுகிறது-நாம் அத்தைப் பொறுக்கிறோம் என்ன
உமக்கு பொறுக்க ஒண்ணாததும் ஓன்று உண்டு-எங்களுக்கும் அவத்யம் என்கிறார்
நதே நுரூபே-என்னக் கடவது இறே

————————

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே —4-9-5-

அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –
பூ அலறும் போதை செவ்விபார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே
ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
பரத்வம் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரம் ஸ்ரீ தசரத ஸ்ரீ வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்
உகந்து அருளின நிலங்கள் -தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே
சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே
குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே
பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே

————————–

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே —4-9-6-

அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்-இவருடைய பிரகிருதி மார்த்தவம்
தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும்அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ
நீர் ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது-போந்த கார்யத்தை மறக்கிறது என் –

———————–

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7–

நமக்கு ஒரு குற்றம் இல்லையாக வன்றோ-யஸ் சர்வஞ்ஞஸ் சர்வ வித் -இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகிறது
நம்மை சர்வஞ்ஞன் சர்வ சக்தன் என்று பிரமாணங்கள் சொல்லா நிற்க
நீர் நமக்கு ஞான சக்திகளில் வைகல்யம் சொல்லுகிறது-என் கொண்டு என்னில்
அது ஒரு வ்யக்தியிலே பலிக்கக் கண்டேன் என்கிறார்
பருவம் அறிந்து வந்து முகம் காட்டாமையைக் கொண்டு-சர்வஞ்ஞனை அஞனாக உப பாதித்தார்
தம் தசைக்கு ஈடாக உதவாமையைக் கொண்டு சர்வ சக்தனை அசக்தனாக உபபாதிக்கிறார்-

———————

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —-4-9-8-

சேதனர் உகந்ததையே நிறமாகக் கொள்ளும் ஸ்வ பாவரான-நம் பக்கல் உம்முடைய அபேஷிதம் பெற்று
போகையிலே குறை உண்டோ –
உம்முடைய அபேஷிதம் தன்னைச் சொல்லீர் என்ன –நீ உகந்தார் உகந்த வடிவுகளைக் கொண்டு வந்து
அவர்களுக்கு காட்டிக் கொடுத்தாயே யாகிலும்-உன்னுடைய இச்சா க்ருஹீதமான அசாதாரண விக்ரஹத்தை
இது காண் இருக்கும் படி -என்று கொடு வந்து எனக்குக் காட்ட வேணும் -என்கிறார் –

————————

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —4-9-9-

நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை
அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது –

———————–

ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே —4-9-10-

இவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்
இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-
அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே
ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர் –

————————

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-

ஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம் என்று தோற்றும்படி யாய்த்து அத்தேசத்தில் போக்யதை இருப்பது
எல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது –

———————

ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே —4-10-2-

கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்
ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில் –

—————-

கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்தவன் தன்
படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்
படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும் திருவெள்ளியங்குடி யதுவே —4-10-3-

பரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம் எழுதிக் கொள்ளலாம் படி
பல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –

———————–

கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்
பறவை முன் உயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-4-

ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக அடுத்து அணியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின சர்வாதிகன் வந்து சாய்ந்து அருளின கோயில் –

———————–

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே —4-10-5-

ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி
அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால்
ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –

————————

காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6-

கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ –
என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்-

———————-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே–4-10-7-

சுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல்
அன்றிக்கே-சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு அத்தை சொல்லிற்று ஆகவுமாம்
வெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி
அன்றிக்கே –வெள்ளியார் வணங்க –வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க
ஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்

————————-

முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்
மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன்மணி களின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி யதுவே —4-10-8-

ஸ்ரீ பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி -என்கிற இடத்துக்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யநான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்
பிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு ஆசை உடைய என்னை அன்றோ அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று
தம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக –
அவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

——————

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற வாழியான் அமர்ந்து உறை கோயில்
கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய
வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே —4-10-9-

தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி
இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக ஸ்ரீ திருப் பாற் கடல் கோயிலிலே
கண் வளர்ந்து அருளினவன்-

———————

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடல் உலகே—4-10-10-

பூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள்
துடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து
ஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – மூன்றாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

June 17, 2019

இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்
அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-

ஷட்பத நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில் தேனைக் குறைவற உண்டு
ஆசையாலே ஸ்ரீ நித்யசூரி பரிஷத் கதனான வாசுதேவ தருவின் பாதமலரில் தேனை புஜிக்க கோலி
சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்-முதல் பாசுரத்தில்-

ஸ்ரீ சர்வேஸ்வர லஷணம் ஆகிறது – ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல்
வேதைக சமிதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு-
ஸ்ரீ பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று
அங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் –
பாடப் பகை தீரும் -எனபது இறே-பேதை நெஞ்சற பாடும் பாட்டால் பகை தீர்ந்ததே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

காதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே
தன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு-அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே
தனக்கு அசாதாரணமாய் இருப்பார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து அனுபவிக்கலாம் படி
வெளி இட்டுக் கொண்டு நிற்கிற-ஸ்ரீ தெய்வ நாயகனிடம்-
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே
இங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் –
அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே
விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று
குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-

பெற்ற தமப்பன் பகையா அவனில் அண்ணிய உறவாய் உதவினவன் தனக்கு தன்னில்-அண்ணிய உறவு இல்லை இறே –
புறம்பு –இப்படி இருக்கிற தானும் -ஆத்மைவ ரிபு ராதமான -என்கிறபடி தனக்குத் தானே பகையாய் தன்னை முடிக்கப் பார்த்த வன்று –
உன்னை உன் கையில் காட்டித் தாரேன் -என்று நோக்குகைக்காக வந்து நிற்கிற விடம் –
வ்யாபாரித்த போது ஹிரண்யன் உடைய ருதிர வெள்ளத்தாலே பார்த்த பார்த்த இடம் எங்கும் சேறு செய்தாற் போலே
கரும்புகள் ஒன்றோடு ஓன்று நெருங்கி பிரவஹித்த சாற்று வெள்ளத்தாலே பூமி எல்லாம் சேறாய்க் கிடக்கும் ஆயிற்று-
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே
தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம்
அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு –
இடையர் பூத்த கொடி போலே இருக்கிற ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக
உபன்னம் தேட்டமான பருவம் ஆயிற்று பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே
ஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் இருக்கை
இனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்ரீ ஸ்தானம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஒக்கத்தை உடைய பெரிய மலைகளையும் பெரிய மதிள்களையும் சுற்றிலே உடைத்தாய்
வண்டுகள் சஞ்சரியா நின்றுள்ள அழகிய பொழிலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருவயிந்திரபுரமே
முன்பு -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கு ஸ்ரீ சித்ர கூடத்தையும் ஸ்ரீ தண்ட காரண்யத்தையும் விஸ்மரித்து
வர்திக்கலாம் தேசம் ஆயிற்று-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-

ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது
இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற
பையலுடைய–தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின
மிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்குமாக மலையை எடுத்து மழையை பரிகரித்தான் ஆயிற்று –
இந்த்ரன் வர்ஷிப்பிக்க பிற பாடராய் நோவு பட விட்டால் போலே ஆக ஒண்ணாது என்று ஏற்கவே நோவு படாமே
நோக்குகைக்காக வந்து நித்யவாசம் பண்ணுகிற இடம் ஆயிற்று –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்-

அர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது –
உடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று –
தான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று –
ஸ்லாக்கியமான தேரிலே கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற என் குல நாதன் உடைய ஸ்ரீ ஸ்தானம் –
ஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று –
தான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய்
அந்தர்பவித்து நிற்குமா போலே தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று சொல்லலாம்படி யாயிற்று இருப்பது-
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சர்வ நியந்தாவாய் ஆயிற்று –ஆபத் சகனும் ஆயிற்று-தேவானாம் தனவாநாஞ்ச-என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும் ஒத்து இருக்கையாலே தம்தாமுடைய அபேஷித சித்திக்காக
தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிகலாம் படி திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி
அத்தாலே பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை எல்லாம் இல்லை இறே பரமபதத்தில்
இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த ஏற்றம் உண்டு இறே இங்கு-
பாடிட-பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில்
இத்தை அதிகரிக்கில் அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-

மாம்சமானது குறைய அசன வசநாதிகளைக் குறைத்து பிராணன்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே
கால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி
தாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா-தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–
என்கிறார் முதல் பாசுரத்தில் –

நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா
ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்
வாயாலே ஓதுகிற வேதம் குறைவறுகையாலே வந்த ஸ்வ பாவிக சம்பத்தை உடைய பிராமணர் என்றும்
ஒக்க முறையாலே அனுஷ்டித்த அக்னி வளர வளர புகழ் ஓங்கா நின்று உள்ள ஸ்ரீ தில்லை-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து கண் வளர்ந்து அருளின
ஸ்ரீயபதி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூட விடாதே சஞ்சரிக்கிற ஸ்ரீ தில்லை –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

பொழில் சூழ்ந்த பூமியை எடுத்தவனுடைய திருவடித் தாமரையை அணைய வேணும் என்னும் விருப்பத்தோடு வர்த்திப்பீர் –
ரத்னங்களைக் கொண்டு பரிகரத்தோடும் பல்லவர் கோன் பணிவதும் செய்து
செம் பொன்னாலும் மணியாலும் செய்த மாடங்கள் சூழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் நித்யவாசம் பண்ணி
புகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து புகழையும் காப்பையும் உடைய
பொழில் சூழ்ந்த ஸ்ரீ தில்லை-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பிராமணர் உடைய ஹிருதயத்துக்கு ஏற்ற – சிவந்த வாயை உடைத்தான கிளியானது
நல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும் பாடா நின்றுள்ள ஸ்ரீ தில்லை-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

முல்லை -உடன் கூடின திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யினுடைய
மிருதுவான திருத் தோளிலே கலந்து அங்குண்டான மச்த்யங்கள் சுழலும்படி
சுழன்று வருகிற கடல் பெற்ற ஸ்ரீ பெரிய பிராட்டி தங்கும் திரு மார்பை உடையவனை
ஹிருதயத்தில் வைத்துக் கொள்ளும் என்பீர்-ஸ்ரீ தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பெருத்துப் பழையதான ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்து ஆயர் தலைவனாய் பசு மேய்த்து லோகத்தை திரு வயிற்றில் வைத்த
ஆச்சர்ய பூதனுடைய ஆபரண ஒலியை உடைத்தாய் போக்யதை மிக்க திருவடிகளை கூட வேணும் என்னும் குறிப்பு உடையீர்
சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே ஆஸ்ரயிக்க அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் தேஜசை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரிய ஸ்ரீ பரம பதத்தில் இருக்க வேண்டி இருப்பீர்
மிக்க நீரை உடைய நிவா என்கிற ஆறு முத்தை கொடு வந்து வித்துகிற வயலிலே விக்ருதமான கயல்கள் பாய்ந்து
தாவித் திரிய தர்சநீயமான நீலம் நின்று திகழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பரம உதாரரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழி பத்தும் வல்லார்
ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வர் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————–

வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-

இடையர் உடைய பசு நிரைக்கு அன்று இடர் தீர்க்கைக்காக இந்த்ரன் பிரேரித்த புஷ்கலா வர்த்தகாதி மேகங்கள்
எல்லாம் கூடி வர்ஷித்த பெரு மழையைக் காத்த மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவன்
என்று எல்லாரும் சொல்ல வருகிறவன்-ஸ்ரீ தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–என்கிறார் முதல் பாசுரத்தில்

இவன் கேவலம் பிள்ளை அல்லன்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகன்
என்று நாட்டார் உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய இடைப் பெண்கள் பாடி
செவ்வைப் பூவைத் தூவ வருமவன்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இவன் வெண்ணெய் உண்டான் என்று இடைப் பெண்கள் கூடி ஏச எட்டுத் திக்கில் உள்ளாறும் திருவடிகளிலே
வணங்கும்படியாக நிர்விகாரமான மருதின் உள்ளிட்டுப் போய்
இடையர்களும் தேவர்களுமாய் ஆயிரம் திரு நாமங்களை சொல்லிக் கொண்டு
தன்னுடைய ஆண் பிள்ளைத் தனத்தை பண்டு பாட வருவான்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

வளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட
கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று
இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று
அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யிடையாட்டத்துக்காக திரண்டு பெருமையை உடைய ருஷபங்களைக் கொன்று
தன் பருவத்தில் பிள்ளைகளோடே தெருவிலே கூடி விளையாடி வருமவன் ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது-பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக
அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க
தேவா விஷ்டமான மலை போலே ஸ்ரீ பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

தர்சநீயங்களாய் காவிமலர் போலே கறுத்து நெடிய கண்ணை உடைய ஸ்திரீகள்
கை தொழும்படி வீதியிலே வருமவன் தேவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ தில்லைச் சித்திர கூடத்துள்ளானே-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பண்டு ஒருகால் ஹிரண்யனை வெருவும்படி சீறி அவ்விடத்திலேயே அவனுடைய உடம்பை அளைந்து
ஆயிரம் தோள் தோற்ற வ்யாபாரித்த உசிதமாக எரி கான்ற பசுமையை உடைய கண்ணும்
நீண்ட எயிறும் பெரிய வாயும் ஆன ஸ்ரீ சிம்ஹ ரூபத்தை உடையவனாய் வருமவன்
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

காளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய்
பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த
ஸ்ரீ பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த
அழகிய தமிழான இப்பத்தும் அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா-
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1-

ஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும் மேன்மையை உடையவன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் –
அபௌருஷேயத்வ நிபந்தனமான கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய திரள்கள் நாலும் பஞ்ச மகா யஞ்ஞங்களும்
ஆறு அங்கங்களும் ஏழு இசைகளும் தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும்
இவை எல்லாம் அடைய சிறக்கும்படியான ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் முதல் பாசுரத்தில்

ஜகத்துக்கு ஈச்வரர்களாக பிரசித்தர் இருவரும் இறே அவர்கள் இருவரும் உடைய அபிமானத்தை கழித்தான் ஆயிற்று-
ப்ரஹ்ம ருத்ராதிகள் -சேக்கள்-ஈச்வரோஹம் என்று கை ஒழிய ஓட ஸ்ரீ பக்தி உழவன்
நம் பூர்வர்கள் -சங்குகள் -ஸ்வ ஸ்வபாவரைப் பெறுவிக்க
கமலமலர் பாவை முகம் விகசித்து அனுராக அதிசயம் வெள்ளம் இட அதிலே துள்ளா நிற்பர் ஸ்ரீ நித்ய சூரிகள்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

களை பறிப்பதாக அடுத்து வயலிலே இழிந்து கண்ணுக்கும் வாய்க்கும் அவற்றோடு உண்டான
சர்வதா சாம்யத்தாலே களை பரியாதே போந்து ஏறுகிற ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே-
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஆளிட்டு செய்தல் -ஆயுதங்களாலே அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே
ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற வேலாலே அழியச் செய்து அத்தாலே வந்த சுத்தியை உடையவன்
திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர்-ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும்
ஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து இப்படி ஆஸ்ரித விரோதிகளை
கை தொட்டு போக்குமவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே-
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

விரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே-
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சத்ருக்களால் சலிப்பிக்க அரிதான தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கிட்டி
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி ஹேதுவாக என்றும் ஒக்க ஸ்வர்க்கத்தில் இருக்கக் கடவதான
வ்ருஷத்தை பூமியிலே கொடு வந்து நிறுத்தினவனுடைய
இத்தால் –அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன் -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு அநந்ய பரையான ஸ்ரீ பிராட்டியோடு வாசி அற
திருமேனியில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ சீலவானைப் பெற வேண்டி இருப்பீர்-
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

நாயந்தே தேவரைக் கவி பாட என்று துடங்கி தம்மைக் கவி பாடிக் கொண்டார் என்ன –
அதுவும் நம்மை அன்றோ சொல்லிற்று என்று திரு உள்ளம் ஆனார்
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே
அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1-

எனக்கு தாரகனுமாய்-நிரதிசய போக்யனுமான நீ ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாக உடையையாய் வைத்து
தனக்கு என ஓர் இடம் இல்லாதாரைப் போலே என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே –
அந்யதா அஞ்ஞானமான தேசத்தை இருப்பிடமாக உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
என் ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே- –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று இவர் நெஞ்சிலே புகுருகைக்கு விலக்காமைக்கு அவசரம் பெரும் அளவும் யாயிற்று –
விலக்காமை பெற்று – இவர் ஹிருதயத்தில் புகுந்த பின்பு க்ருத்யக்ருத்யனாய் இருந்தான் ஆயிற்று
விபரீத ஜ்ஞானம் ஜனகமான தேசத்தை இருப்பிடமாக உடையையாய் இருந்து வைத்து
என்னுடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்தாயே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

மநோ ரதத்தாலே நான் கால ஷேபம் பண்ணாத படியாக என் ஹிருதயத்திலே வந்து புகுந்தது
இஹ லோகத்திலே எனக்கு விலக்காமைக்கு என்று இருந்தேன்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக –
நான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் –
தர்ச நீயமான ஸ்ரீ திரு வாலியிலே நிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஆஸ்ரிதர்க்கு விஸ்வாசத்தைப் பண்ணிக் கொடுக்குமவன் அன்றோ –
எங்களுடைய நினைவு போலே தப்பிலும் தப்பி பலிக்கிலும் பலிக்கும் படி அன்று இறே உன் நினைவு இருக்கும் படி –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பரம போக்யமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து –
சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை
கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –
நான் உன்னை அபேஷியாதே இருக்க நீயே வந்து புகுந்த பின்பு இனிப் போகல ஒட்டேன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூஹ்ருதமானவனே
நீயே வந்து புகுந்த பின்பு உன்னை நான் இனி போகல் ஒட்டேன்
ஸ்ரீ வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு-அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு
வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய்
அங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய்
இவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

என்னை வன்னியமறுத்து ஆளுகிறவனே எனக்கு ஸ்வாமி ஆனவனே
மாஸூச -என்று நான் உஜ்ஜீவிக்கும்படி ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்-பத்தாம் பாசுரத்தில்

—————————-

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

பொறி வரிய-கடகராய் இருப்பார் உடைய தேக குணத்தோடு-ஆத்ம குணத்தோடு வாசி யற உத்தேச்யமாய் கொண்டது இறே
சிறு வண்டே – இவள் கார்யம் செய்க்கைக்கு முன்பே சிரமம் செய்து இருப்பாரைப் போலே வடிவு சிறித்து இருந்ததாயிற்று –
கார்ய காலத்தில் வந்தவாறே அணுவத்தை ஏறிட்டுக் கொள்ள வேண்டாதபடி இருக்கும் –நீங்கள் என் தசையை அங்கே அறிவிக்க
அவனைப் புறப்பட விடுவார்கள் –
ஸ்திரீ காதுகனாய் இருக்கிறவன் நடுவேயோ நாம் யஜிக்கிறது என்று புறப்பட விடுவார்கள்
அறிவிக்கும் அதுவே வேண்டுவது -என்கிறாள்
என் நிலைமை –பாசுரம் இல்லாததுக்கு என்னால் பாசுரம் இடப்போமோ –
என் வடிவு இருக்கிறபடி கண்டி கோளே-இனி நீங்களே பாசுரம் இட்டு சொல்லும் இத்தனை –
உரையாயே-கொடு வர வேண்டா-அறிவிக்கும் அத்தனை இறே இத்தலைக்கு வேண்டுவது –
கிருபை அவன் பணியே-வாராது ஒழியும் அன்று ரஷகனுக்கு குறையாமே –
நீங்கள் அறிவித்த அநந்தரம் உங்கள் பேச்சுக் கேட்டு தானே வாரா நிற்கும்-என்கிறார் முதல் பாசுரத்தில்-

அறுகால-இரண்டு காலை உடையாரைப் போலே அன்றிக்கே-ஆறு கால் உடையார்க்கு கடுகப் போய் கார்யம் தலைக் கட்டலாம் இறே –
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் – என்று சேர்ப்பார் காலே இறே இவர்கள் ஜீவனமாய் நினைத்து இருப்பது –
என் ஜீவனம் கூடு பூரித்து கிடந்தபடி என்றான் -என்கிறாள்
நீ சென்று –முறை கெட்டாகிலும் நீ முற்பட சென்று –அவன் தானே வர பெற இருக்குமதாயிற்று முறை –
பயலை நோயை உரை –வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான்
வாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு சொல்லவற்றுக் காணும் இவை தான் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஆசை இல்லாத ஜகத்தையும் தான் ஆசைப்படுமவன் -அவற்றை சொன்ன சொல் தன்னளவிலே வந்து
பர்யவசிக்கும்படி நிற்கிற பெரும் பிச்சன் –
அவனுடைய பிரணயித்வத்துக்கு விஷயம் ஆயிற்றிலோம் ஆகிலும் அவனுடைய கிருபைக்கு விஷயம் ஆகாது ஒழிவுதோமா-
அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால் நமக்கு தலை வேணும் -என்றான் ஆகில்
நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க வேண்டா -என்றான் ஆகில்-நாம் முடிந்து பிழைக்கும் படி —
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே-ஸ்ரீ திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை
நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

தூதர்க்கு வார்த்தை சொல்லப் புக்கு
அது தான் போய் பாவனா பிரகர்ஷத்தாலே அவன் முன்னே நின்றனவாய் கொண்டு அவன் தனக்கு
வார்த்தை சொல்லி செல்லுகிறது மேலில் பாட்டுக்களில் –
அவனுக்கு பொருளை இட்டு பிரிய வேண்டா-பிரிகிறது பொருளுக்காகவே –
இம்முத்தையும் பொன்னையும் கொள்-என்று பாரித்து காட்டினால் போலே யாயிற்று
கண்ண நீரும் உடம்பில் வைவர்ண்யமும் இருக்கிற படி –
ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி -திரு விருத்தம் -11-என்னக் கடவது இறே-
உம்மை நீர் அறியீரோ –நம்மைப் பிரிந்தார் தரித்து இருக்க மாட்டார்கள் என்று இருக்க வேண்டாவோ –
உன்னைக் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாயோ –
ஒரு தழும்பாகில் அன்றோ உன்னால் மறைக்கல் ஆவது
உன் உடம்பு அடங்கலும் ஆஸ்ரிதர்க்காக கார்யம் செய்ததால் வந்த தழும்பு அன்றோ -என்கிறாள் –
தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்த வா மங்கை –
அழகிய திருக் கையானது ஜ்யாகிண கர்க்கசமாய்க் கிடக்கும்
அழகிய திருக் கையானது ஸ்ரீ சார்ங்கத்தைப் பிடிக்கையால் வந்த தழும்பைச் சுமந்தது –
திருவடிகள் ஆனவை சகடாசுர நிரசனம் பண்ணி அத்தால் வந்த தழும்பைச் சுமந்தது –
அந் நொய்ய கோவர்த்தன கிரியைப் பொகட்டு என் ஆற்றாமையிலே பாதியை சுமக்க வல்லையே
துணையா ளானாகாயே !-என்றது -ஆக வேணும் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன் என் கையில் வளை பெறா விடில்
உண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –சமகாலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ
இவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும்-உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும்
இவள் கையில் வளை சேஷிக்கில்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை மீட்டு இந்தரனுக்கு கொடுத்த நீர் மையை உடையவனே-
அந் நீர்மைக்கு பிற்பாடானாரும் இழவாமைக்கு ஆக ஆயிற்று திருவாலியிலே வந்து நிற்கிறது
ஸ்ரீ திருப் பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வாமனனாய் அவதரித்து பூமியை அகப்படுத்திக் கொண்டால் போலே யாயிற்று
ஸ்ரீ திருவாலியிலே வந்து நிற்கிற தன் யௌவனத்தைக் காட்டி இவரை அகப்படுதின படி –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

மன்றிலே குடக் கூத்தாடி தன் அலகை சர்வ ஸ்தானம் பண்ணினவன் பிற்பாடர் இழவாமைக்காக
திருக் குடந்தையிலே சுலபன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்றாய் ஆயிற்று
அவன் பிரத்யாசன்னன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்று ஆயிற்று இவளுக்கு-
உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் –
இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

——————–

பிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே
தலைமகளான சமயத்திலும் சேஷத்வ அநுரூப வ்ருத்தியையே ஆசைப்படுகிறாள் இறே
உன்னை ஆஸ்ரயித்த மகா ராஜர் ஆர்த்தி போக்குகைக்காக மராமரங்களை எய்து மழு ஏந்தி கொடுததிலையோ –
அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இப்பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –
நிலையாளா -என்கையாலே நித்ய கைங்கர்யம் பெறுகையே பிராப்யம் என்னும் இடம் சொல்லுகிறது –
வேண்டாயே யாகிலும் -என்கையாலே உபாய பாவமும் அவன் பக்கலிலே என்னும் இடம் சொல்லுகிறது
என் முலையாள ஒரு நாள் -என்கையாலே ருசி உடையார் படி சொல்லுகிறது
சிலையாளா -என்கையாலே சரண்யதை சொல்லிற்று
மரம் எய்த -என்கையாலே ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும்
இத்தலையில் அபேஷை குறை வற்று இருக்கிறபடியையும்-இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது-

நெடுமாலை –தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும்
தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது –
இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை –
அவன் சேஷித்வ சூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று
இவர் சேஷத்வ சூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று –
சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு-அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா –
இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————–

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-

இருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்-அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் –
லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே-உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ
இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்

காணாம்ருதமான அம்மான்பொடியை இட்டு கொண்டு போன படி-
கண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு -அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து
ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து-திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து-ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே –
இத்தலைக்கு ஒரு ஹானியாய் தோற்றா நின்றது –இது ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது
இது எங்கனே சேரும்படி -என்று ஸ்ரீ ஆச்சானைக் கேட்க
துடிப்பு இருக்க கை வேக வேணுமோ-ஸ்ரீ எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன
அருளிச் செய்த படி என்ன -என்று கேட்க –
முன்பு ஒரு புணர்ந்து விட போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு அத்தை நினைத்து
இப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார் –அஞ்சுவன்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய்
ஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை –
மாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள்
அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அவனுடைய சர்வ அங்க சௌந்தர்யமும்-இவள் உடைய தோள் அழகு ஒன்றுக்கும் போரும் அத்தனை –
இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நிரதிசய போக்யனுமாய்-சுலபனுமாய்-ரஷகனுமானவன் உடன் கூட-ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது
ஸ்ரீ திரு அயோத்யை கோடித்தாற் போலே ஸ்ரீ திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே-
ஸ்ரீ பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளாள்–என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

செழும் கோதை-லிலோ உபகரணங்களை விட்டு-அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்-
தன்னைக் காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ–என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஈஸ்வரனைக் காட்டில் ஸ்ரீ பிராட்டி-அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே
ஸ்ரீ பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே
இவளுடைய கண்கள் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா –
ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –

——————–

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1-

சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-என்கிறாராக-என்று ஆழ்வான் பணிக்கும்-
தேவானாம் தானவானாம் ச சாமான்ய மதிதை வதம் -என்கிற சம்பந்த சாமான்யத்தைப் பார்த்து
அசுரர்களுக்கு அருள் செய்கை தவிர்ந்து-அனுகூலராய் அநந்ய சரணரான எங்களுக்கே
பிரசாதத்தைப் பண்ணி அருள வேணும் என்று தேவர்கள் வந்து ஸ்தோத்ராதிகளைப் பண்ணி
ஆஸ்ரயிக்கிற ஸ்தானம்–என்கிறார் முதல் பாசுரத்தில்

அதனுடைய வியசனத்தைப் போக்கின ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்தானம்
வினை தீர்க்கையாகிறது -அது நினைத்தபடியே திருவடிகளில் பூவைப் பணிமாறலாம் படி சென்று முகம் காட்டுகை
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையைப் போக்கி – அத்தாலே ப்ரீதியான ஸ்ரீ பிராட்டி கரத்தைப் போலே
அணைக்க அவளோட்டை வரும் சம்ச்லேஷத்தை பெற்ற ஸ்ரீ எம்பெருமான்
ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே –அப்போது சென்று அனுபவி
பெரிய பிராட்டியாரோட்டை சம்ச்லேஷ சுகத்தை –
தன்னுடைய பிரேமம் உண்டு -ஸ்நேஹம்அத்தோடு கூட அனுபவித்த சர்வேஸ்வரனுடைய ஸ்தானம் ––
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

மாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய பண்டு இலங்கையிலே வென்ற ஸ்ரீ சர்வேஸ்வரனே
ஸ்ரீ திரு மணி மாட கோயிலிலே வந்து நின்று அருளினான் -நெஞ்சே அங்கே சென்று அனுபவி –
நாலு வேதத்தை உத்தரிப்பாராய் பஞ்ச மகா யஞ்ஞாத்ய அனுஷ்டானங்களில் —
சப்த ரசங்களையும் உள்ளபடியே அறிந்து இருக்கும் பிராமணர்-இப்படிப் பட்ட விலஷணமானவர்கள்
ஆஸ்ரியா நின்றார்கள் என்கிற புகழை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன்
ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத்தேசத்தை ஆஸ்ரயி-
உயர்ந்த சோலையின் தலையிலே மேகங்கள் சஞ்சரிக்க அவற்றைக் கண்டு ஹர்ஷராகக் கொண்டு
சோலையில் வர்த்திக்கிற மயில்கள் ஆனவை ஆடத் துடங்கும் –
இப்படிப் பட்ட ஸ்ரீ திரு நாங்கூரில் ஸ்ரீ மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து
மண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே
இவ்விடத்தை ஸ்ரீ பிள்ளை விழுப்ப அரையரும் ஸ்ரீ ஆப்பானும் கூட அனுசந்தித்து இரண்டு இடத்திலே -வைகி -என்று உண்டாய் இருந்தது
இது செய்யும்படி என் என்று ஸ்ரீ பட்டரை கேட்க – சௌகுமார்யத்தாலே இரண்டு இடத்திலும் கிடந்தது என்று அருளிச் செய்தார்-
பூதனையை அப்போதே பிராணன் போம்படி முலை உண்ட ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ திருமணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

காளியனால் வந்த ஆபத்தை போக்கின ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்
இப்படி சர்வ ரஷணங்களையும் பண்ணும் ஸ்ரீ சர்வேஸ்வரன் வர்த்திக்கிற தேசம்-நெஞ்சே அங்கே சென்று அனுபவி
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேல் -என்னும்படி சிற்றில் சிதைத்தும்
அவர்களோடு உண்டான விளையாட்டோடு கூட – அவர்களுக்கு பிரேம ஆகாரத்தை விளைத்த ஸ்ரீ சர்வேஸ்வரன்
உடைய வாசஸ் ஸ்தானம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த செயலையும்-திவ்ய ஆயுதங்கள் உடைய சேர்த்தி அழகையும்
சொல்லி தேவர்கள் ஏத்த ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் –
ப்ரஹ்மாதி தேவர்கள் விடாதே ஸ்தோத்ரம் பண்ணுகிற இடம் –நெஞ்சே அங்கே சென்று அனுபவி
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இத் திருமொழிக்கு கற்றாருக்கு பலம் சொல்லுகிறது –அனுகூல பிரதி கூல சீலர் என்று வாசி அன்றிக்கே
லோகமாக தங்கள் காலிலே வந்து விழும்படி மத்தகத்தின் மேல் ஏறி கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் –
ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய் ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக
முத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்-நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
ஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க
ஸ்ரீ ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து அபிஷேகம் பண்ண அமையும் ஸ்ரீ பாகவத சேஷம் ஆகலாம் ஆகில் என்று காணும்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்-

————————-

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1-

நல் உயிரான அமிர்தத்தை வாங்கி நம்மை ஆஸ்ரயித்த தேவ ஜாதி கார்யம் தலைக் கட்டப் பெற்றோம் இறே -என்று
அது பெற்றால் அவர்களுக்கு உரும் இன்பத்தை தான் உடையேனாய் –
அவ்வமுருதத்தை புஜித்தாருக்கு இழியக் கண்ட ராகராதிகளை தான் உடையனாய் இருக்கிறவன்-
பெரிய ஹர்ஷத்தோடு நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரிதருக்கு இனிதான தேசம்-என்கிறார் முதல் பாசுரத்தில்

தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-
பூமியில் இதுக்கு இவனே கடவான் இதுக்கு இவனே கடவான் என்னும்படி சமைந்த பிராமணர் நெருங்கி வர்த்திக்கிற தேசம்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அண்டமும் இந்த லோகத்தை சூழப் போந்து அலை எறிகிற அண்ட தீபங்களையும் எல்லாம் அமுது செய்த
திரு வயிற்றை உடையவன் –இப்படி சர்வ நியந்தாவானவன் வர்த்திக்கிற கோயில்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று
அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே
புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய ஸ்ரீ பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை
ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே
அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

விரோதியைப் போக்கப் பெற்றோமே என்று அத்தாலே தீப்தனாய் ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வெண்ணெயையும் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யம் ஆகையாலே திரு உள்ளமானது குளிரும்படியாக அமுது செய்து
அநந்தரம் இந்த லோகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பண்ணுகையாலே
இளகிப் பதித்து இருக்கிற-நிரவதிக சம்பத்து மாறாதே செல்லுகிற தேசம் ஸ்ரீ நாங்கூர் வைகுந்த விண்ணகரம்
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கும் ருத்ரனுக்கும் என்னது என்று கூறிட்டு அனுபவிக்கும் படி திரு மேனியைக்
கொடுத்துக் கொண்டு இருக்கிற சீலத்தை உடையவன் –ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நாதன் ஆனவன்
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தேவர்களோடே-சனகாதிகளோடே-புஷ்பாத் உபகரணங்களைத் தூவி எங்களுக்கு நாதனான ஸ்ரீ சர்வேஸ்வரனே
எங்கள் பக்கலில் கிருபையை பண்ணி அருள வேணும்-என்னும் ஸ்ரீ சர்வேஸ்வரன் பிரீதி பூர்வகமாக
நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்-தமிழ் தொடை பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள்
இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————————–

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-

பொறுப்பிக்கும் அவளும்-பொறைக்கு உவாத்தானவளும்-எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே
ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள்
நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –
தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான
ஸ்ரீ நித்ய சூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –என்கிறார் முதல் பாசுரத்தில்

அவர்கள் நீ வேண்டா -எங்களுக்கு உப்புச் சாறு அமையும் –என் பெரு விலையனான தன் படி ஒன்றும் பாராதே
தன் தோள் நோவும்படி கடலை நெருக்கிக் கடைந்த அவர்களுக்கு அமிர்தத்தை உபகரித்தவன் –
என் ஆரமுதம் – அவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே தம்முடைய அமிர்தம் இருக்கிறபடி-
கொண்டாடிக் கொண்டு வர்த்திக்கிற தேசம்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பிரளயத்திலே நோவு பட புக வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
இடையர்கள் கண்டு பிரீதராம்படி குவலயா பீடத்தின் உடைய கொம்பை முறித்து
அநந்தரம் கம்சனுடைய மயிரைப் பிடித்து தலை கீழாகத் தள்ளி
முதுகிலே அறைந்து அவனை அழியச் செய்த உபகாரகன் உடைய கோயில்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஹிரண்யன் உடைய முரட்டு உடலிலே வைத்தால் வளையக் கடவது அன்றிக்கே கூர்மை மிக்கு இருந்த
திரு உகிராலே இரண்டு கூறாம்படி பிளந்து அவன் பக்கல் இழவு தீரும் படி அவன் மகன் என்று
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே அருளைப் பண்ணினவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

மகா பலியினுடைய யஞ்ஞ வாடத்திலே இவன் -தேவ கார்யம் செய்கிறான் -என்று தோற்றாத படியாக
நாட்டில் வாமனர்கள் திரு உலகு அளந்து அருளின இடம் –என்னும் படியான வாமன வேஷத்தை பரிகரித்து
எனக்கு மூன்றடி வேணும் -என்று அர்த்தித்து ஆகாசத்தையும் அலை எறியா நின்றுள்ள கடலையும் த்வீபங்களையும்
எல்லாம் அனாயாசேன அளந்து கொண்ட உபகாரகன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுக்காக இலங்கைக்கு நிர்வாஹனாய் இருக்கிறவனுடைய
பத்துத் தலையும் இருபது தோளும் உதிரும்படியாக –
தாளை உடைத்தாய் -நெடிதாய் -திண்ணியதாய் இருக்கிற வில்லை வளைத்த தசரதாத் மகன் -சேய் -பிள்ளை
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னுமா போலே காணும் இருப்பது –
அயர்வறும் அமரர்கள் அதிபதி வர்த்திக்கிற ஸ்தானம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

தேனுகன் பூதனை அவர்களை முடித்துப் பொகட்ட அழகில் வந்தால் காமனுக்கும் உத்பாதனாய்
அள்ளல் அல்லாதபடி ஸ்ரமஹரமான திருமேனியை உடையனாய் இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆயிற்று-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரமஹரமாய் இருக்கிற திருமேனியை உடையவன் பசுக்களை ரஷிக்கைக்காக ஸ்ரீ கோவர்த்தனத்தாலே மழை தடுத்து
மன்றிலே ஆயர் அனுபோவ்யமாம் படி குடக் கூத்தாடினவன் கொண்டாடி வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அவை நின்ற இடத்திலே சென்று சினத்தை உடைத்தாய் இருக்கிற ருஷபங்கள் ஏழையும் முடியும்படி அடர்த்து
ஸ்ரீ பின்னை பிராட்டி உடைய செவ்வியை உடைத்தாய் இருந்துள்ள தோள் உடன் அணைந்து ஸ்ரீயபதியாய் வர்த்திக்கிற கோயில்-
இத்தை அப்யசிதவர்கள்-இஹலோகத்திலே ஹர்ஷர்கள்
பயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே-என்னும்படி அவர்களுக்கு தலைவராய்
திருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .