Archive for the ‘பெரிய திரு மொழி’ Category

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-பத்தாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

July 13, 2019

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-

நமக்கு பிராப்ய பூமியைத் தருவானாய்
தானே பிராப்யன் ஆனவனை
திரு நீர் மலையிலே கண்டோம்
இனி திருக் கண்ண மங்கையிலே காணக் கடவோம் –
என்கிறார் –

———————-

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே —10-1-2-

சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனானவை ஸ்ரீ திருமலையிலே கண்டோம் –
இனி ஸ்ரீ திருத் தண் காவிலே சென்று காணக் கடவோம் – என்கிறார் –

———————

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே —10-1-3-

ஸ்ரீ வடதள சாயி யானவனை திருவாலியிலே கண்டோம் – இனி ஸ்ரீ திரு நாங்கூரிலே சென்று
காணக் கடவோம் என்கிறார் –

————–

துளக்கமில் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே —10-1-4-

ஸ்ரீ ப்ரஹ்லதா ஆழ்வானுக்கு விரோதியான ஹிரண்யனை போக்கினவனை ஸ்ரீ திருப் பேரிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு வெள்ளறையிலே காணக் கடவோம் என்கிறார் –

———————–

சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே —10-1-5-

ருத்ரனுடைய சாபத்தைப் போக்கினவனை ஸ்ரீ திரு நறையூரிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு மெய்யத்திலே காணக் கடவோம் என்கிறார் –

———————

வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே —10-1-6-

பிரயோஜனாந்த பரருக்கும் அபேஷிதம் செய்யும் பரம உதாரனை ஸ்ரீ திருச் சேறையிலே கண்டோம்
இனி ஸ்ரீ திருக் குடந்தையிலே காணக் கடவோம் என்கிறார் –

———————

கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெக்கா வுளே —10-1-7-

ஸ்ரீ கிருஷ்ணனாய் அனுகூல ஸ்பர்சம் உள்ள வெண்ணெயை விழுங்கினவனை ஸ்ரீ திருவழுந்தூரிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு வெக்காவில் காணக் கடவோம் –

———————-

பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8-

தன் திருவடிகளிலே நல்லாருக்கு ஆத்மாவனவனை ஸ்ரீ தெற்குத் திருமலையிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு விண்ணகரிலே காணக் கடவோம் என்கிறார் –

——————–

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக்
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே —10-1-9-

குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்தவனை ஸ்ரீ திருக் கோட்டியூரிலே கண்டு போய்
ஸ்ரீ திரு நாவாயிலே காணக் கடவோம் என்கிறார் –

———————

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே —10-1-10-

இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்சேதம் இல்லை –நச புனராவர்த்ததே
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள் –

——————

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-

ராஷசரில் இனி ஆடு போலேக் கூப்பிடக் கடவார் இல்லை -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று
ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர் – ஆடு -என்று வெற்றி
இந்த ராஷச ஜாதியிலே வெற்றி சொல்லக் கடவார் இல்லை -என்கிறது என்ன
இதுவே இறே பொருள் என்று அருளிச் செய்தார் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் –
தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு – அந்த சப்த அநுகாரம் –
பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது-

————————–

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2-

ஒப்பாய் இருக்கிற தோள் இரண்டையும் ஒரு திரு அபிஷேகத்தையும் உடையராய் இருக்கிற உம்மைக் கண்டு
அடியாரான நாங்கள் ஒருவர் இருவர் அன்றிக்கே எல்லாரும் ஒக்க வாழ்ந்தோம்
எமக்கு ஜனகன் ஆனவனே –எங்கள் நாதனே –-அஞ்சினோம் என்றாரைக் கொல்லுகை உனக்குப் போருமோ-

——————

தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி எங்கோமான்
கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குலவேந்தே
பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன்
அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —-10-2-3-

நிரபதாரரைக் கொல்லாத இஷ்வாகு வம்சத்திலே பிறந்ததுக்கு தலை யன்றோ நீர்-விஷய ப்ரவணராய் கெடக் கடவ
இஜ் ஜாதியை எத்தைச் சொல்லுவது-ஸ்வர்க்கத்துக்கு வன்னியம் அறுத்தவன் மகனே
உனக்கு இஷ்டரான தேவர்கள் உகந்ததுவே செய்து விட்டாய் – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –

——————–

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –ஸ்ரீ பிராட்டியை கொடு போங்கோள்-

—————-

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு
மனுஷ்யர்களை அநாதரித்தான்-அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி –
அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-

——————–

ஓதமாகடலைக் கடந்தேறி யுயர்கொள் மாக்கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடலிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-

அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –
வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம்
என்று அவன் கையிலே ஸ்ரீ பிராட்டியை விட்டுக் கொடாதே
இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ

———————–

தாழமின்றி முந்நீரை யஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை எங்களை யொழியக் கொலையவனைச்
சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-7-

அப்ராப்த விஷயத்தில் சாபலத்தை பண்ணுமவனை –
நான் இவ்வூர்க்கு அதிபதி -நிர்வாஹகன் என்று இது ஒன்றுமையே நினைத்து இருந்தான் –
குற்றம் நின்ற இடத்தே வதம் பண்ணப் பார்த்தருள வேணும் –
நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-

—————-

மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத்
தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று
புனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக வெய்த
அனங்கன் அன்ன திண தோள் எம்மிராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—10-2-8-

ஸ்ரீ பிராட்டியை சிறை வைத்த ராவணன் உடைய தப்ப நினைத்த நெஞ்சில் –உறைக்க எய்ய வல்லனாய்
அழகிய வடிவையும் திண்ணிய தோளையும் உடைய ஸ்ரீ பெருமாளுக்கு அஞ்சினோம் –

——————–

புரங்கள் மூன்றுமோர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில்
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம்
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-9-

ஸ்ரீ மகா ராஜர் புருஷகரமாகத் தொழுதோம் – எங்களுக்கு இரங்க வேணும் –
எங்கள் நாயகனே – லோகத்துக்கு அடைய பிரகாசனான ஆதித்யன் மகன் அன்றோ நீர் சர்வ நிர்வாககர் அன்றோ –
நாங்கள் சொல்லச் செய்தே எங்களைக் கொல்லில் உங்களுக்கு அவத்யமாம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-

——————–

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—10-2-10-

தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது-ஜிதந்தே -என்றால் -எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே-
இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் ஸ்ரீ பரம பதம் –அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை –
எல்லாரும் அறியச் சொன்னோம் –

———————–

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-

ஸ்ரீ சுக்ரீவா ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி ஏத்துவாருக்கு உம்மை ஆஸ்ரயிக்க வேணும் இறே –
அவர் இசைந்தாலும் -வத்த்யதாம் -என்று நீர் சொன்னால் உம்மை இசைப்பித்து -ஆனய -என்று உம்மை விட்டு
அழைப்பித்துக் கைக் கொள்ள வேண்டுகையாலே –
ஸ்ரீ ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று ஸ்ரீ முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் –
பண்டே சிஷித்து வைத்தவர்கள் போலே ஆடுகின்றோம்-எங்கள் செயல் அறுதியாலே –

———————–

எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே —10-3-2-

எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை –

————————-

ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கருமுகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3-

நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல-உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் –
எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –
கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ –

—————————

மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதாரத்தைப்
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால்
கணங்கள் யுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே—10-3-4-

தர்ச நீயமான வில்லிலே அம்பைத் தொடுத்த ஸ்ரீ பெருமாள் தம்பியார் உடைய குணங்கள் பாடி ஆடுகின்றோம் –

———————

வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே —10-3-5-

நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்-
நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே-
எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம் –

——————–

கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து
வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா
கொல்ல வேண்டா ஆடுகின்றோம் குழ மணி தூரமே —10-3-6-

பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் –
பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ –
எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும் –

—————————

மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே —10-3-7-

வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய ஸ்ரீ திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே
ப்ராவண்யம் –இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை –
ஸ்ரீ திருவடியைச் சொன்னோம் ஆனால் ம்ருத்யு சத்ருசராய் இருப்பாரும் விலங்குவர்கள் போலே காணும் –

—————————

கவள யானைப் பாய் புரவி தேரோடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாட நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணர் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-8-

ஸ்ரீ திரு அயோத்யைக்கு கடவ ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் –ஸ்யாமமான நிறத்தை உடையவர் காண ஆடி கோள்-
ராஜா கூத்துக் காணா நின்றான் என்று உங்களை விடும்படி –

————————–

ஏடு ஒத்து ஏந்தும் நீண் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப் போனார் நாங்கள் எய்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை துடரேன்மின்
கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-9-

நாங்கள் உஜ்ஜீவிக்கைக்காக-கச்ச அநுஜா நாமி -என்று விட்டடித்தவர் உடைய
ஆஞ்ஞையை சிரஸா வஹித்துக் கொண்டு போந்தோம் –

———————-

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்றமன்னார் ஆடியுய்ந்த குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே —10-3-10-

ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள்
வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள்
பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் –
இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை –
நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்-

—————–

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-

ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற நம்பி – ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி –
இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே – பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது
தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் –
பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் –
தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி –
ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள் –

——————-

வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே–10-4-2-

தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் –
எங்கே புக்கிருந்து உன் பக்கல் நிரபேஷரானார் உடன் – சாபேஷையாய் நான் பார்த்து இருக்க –
என்ன விளையாட்டு விளையாடுகிறது –

——————–

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய்—10-4-3-

அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா முலை சுரக்கப் பண்ணாமல் மடியிலே இருந்தாயிற்று உண்பது –
இது அடைய தரையிலே போகாமே உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய் –

———————–

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4-

என் ஒக்கலையிலே இழியாது இருந்து ஆதரித்து இனிதாக அம்மம் உண்ண வாராய் –

——————–

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே —10-4-5-

இனி இதுசெய்யான் -என்னும்படி படுக்கையிலே கிடந்தது-அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும்
விகிர்தமான செயலை உடையவனே –
நெடும் போது உண்டாயிற்று முலைக் கடுப்போடு இருக்கிறது –
இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது –
உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ-

————————-

பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை
கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் —10-4-6-

தீமைகள் செய்யா நிற்புதி-கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி –
அத்தீமை காண என் ஹிருதயம் உருகி முலை வழியே பாலாய் புறப்படா நின்றது –
கண்கள் சிவப்பது-மூரி நிமிர்வது-கொட்டாவி கொள்வது -அழுவது -ஆகாதே –

———————

தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே —10-4-7-

பூதனை கையிலே அகப்பட்ட உன்னை ஆராக நினைத்தாய் – நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் ஆனவனே –
அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும் இவள் மகன் ஆனதுவும் –

——————–

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் —10-4-8-

தாயாரைக் கண்டால் தீமையிலே ஓன்று பத்தாக பணைக்கும்–ஸ்ரீ நந்த கோபர்க்காயிற்று அஞ்சுவது
அத்தாலே அவனுக்கு அச்சம் உறுத்துக்கைக்காக ஸ்ரீ யசோதை பிராட்டி சொல்லும் பாசுரம் ஆயிற்று –

——————-

பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே—-10-4-9-

கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –
உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ –

—————————

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே —10-4-10-

அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு
வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே
அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான ஸ்ரீ நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம் –

———————-

பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-

வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

———————–

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்
டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம்
ஆயர் அழக வடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி-10-5-2-

தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே
இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய்
அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே –
தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய்
செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது –

———————-

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —10-5-3-

பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –இங்கனே தாவா மோரை உருட்டி
பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று-
உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே ஸ்ரீ தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –
எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

——————–

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-4-

அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே
லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –
ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே கன்றுகள் மேய்க்குமவனே –

———————

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5-

உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் –
கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால் சப்பாணி கொட்ட வேணும் –

———————–

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நானவலப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி —10-5-6-

கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் – ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு
ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க-வளர்ந்த செருக்கை உடையவனே –
ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

——————–

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி -10-5-7-

பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே –
அன்று பூதனை தன்னை முடித்து உன்னை நோக்கித் தந்த நீ இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ –

———————

யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-

பேய் என்று அவளை புத்தி பண்ணி முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு
அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே –
உகவாதாரை அழியச் செய்வுதி-உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ –

——————-

கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை
மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9-

பூதனை வரும் அளவும் ஆறி இருந்து கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு
அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே –
உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ –

—————

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

பேராளன் –ஸ்ரீ நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா-அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே
கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் –
இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது –
ஸ்ரீ பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று –
இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது –

————————

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1-

உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக அற நூல்-வேதம் விஸ்த்ருதமாம் படி பண்ணியவன்
சந்திர சூரியர்களும் பூமியும் திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும் மலைகளும் அக்னியும்
இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக ஸ்லாக்கியமான மிடற்றை – இவை புகும் அளவும் –
விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர்
இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு-அமுது செய்து-ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு
அடியுண்டு-ஒரு பிரதிகிரியை அற்றுப் போக மாட்டாதே -இருக்கிறான் –என்கிறார் முதல் பாசுரத்தில்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேன்
-திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே –

———————-

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –10-6-2-

அந்த பிரளய காலத்து அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம்
இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு அமுது செய்தான் –

————————

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-3-

ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர்
இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான் –

——————-

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-4-

பூமியை கொள்ளுகைக்காக தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு
க்ருத்ரிமித்து லோகத்தை அளந்து– மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் –
ஓர் அபலை இட்ட சிறை விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான் –

————————

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5-

லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே நடத்தினவன் கிடீர் இன்று தன் ஆஞ்ஞை அழிந்து
ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி யுண்கிறான் –

————————-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6-

சஹஸ்ர பாஹ் வர்ஜுனனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும் அழகுக்குப் பிடித்த மழுவாலே
துணித்துப் பொகட்டவன் கிடீர் –இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான் –

————————–

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே—10-6-7-

நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு
மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர் –
மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –

———————-

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-

அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய்
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி
இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக ராவணன் உடைய முடியோடு
தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் –
இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான் –

————————–

சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது
திரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-9-

ஸ்ரீ மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக மராமரங்கள் ஏழையும் எய்து – மலை போலே இருக்கிற வடிவை
உடையளாய் இருக்கச் செய்தேயும் ஸ்ரீ பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி
வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் –
ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே வைரூப்யத்தை விளைத்து விட்டது –
அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே –

————————-

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே —10-6-10-

ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து
ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார் –

————————–

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-

நான் சொல்லிற்று செய்தல்-தமப்பனார் சொல்லிற்றைச் செய்தல் செய்யாத பருவம் இறே உன் பருவம் –
நானும் சொல்லிற்றிலேன் தமப்பனாரும் அருளிச் செய்திலர் –
நீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே – நான் இனிச் செய்வது என் –
ஸூசக மாத்ரமே அன்றிக்கே -காரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம் –

————————-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-

ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய
இது செய்யக் கடவார் இல்லை –
வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –
கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே கடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –

————————

தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ —10-7-3-

இவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை – வெண்ணெயே அன்றிக்கே –இவ் வேழ் உலகும் கொள்ளும் –
இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது –
அவன் இப்பது அமுது செய்தான் ஆகில் நீ இப்பாடு படுகிறது என் -என்ன –
அவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என் என்று அன்றோ அஞ்சுகிறது நான் –

————————-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4-

கண்ணி வைப்பாரைப் போலே கடைகிற போதே துடங்கி இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று –
கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணர்கள்-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –
இக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே தவழா நிற்கும் – நிரபேஷனான இவன்-
இவனாக இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
இவர்கள் கீழே எங்கனே நான் இவ்வூரில் குடி இருக்கும் படி –

————————

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5-

பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம் பார்த்துக் கொடு திரியும் –
அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –
பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –

————————

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ—-10-7-6-

தாமரை போலே இருக்கிற அதரமானது வெளுத்து இருக்க –இவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன் –

———————

ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-

அத்தை அடங்கலும் கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் –
அத்தை அடங்கலும் அமுது செய்தானாய்-அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று –

————————-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே—10-7-8-

இவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு என்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன் –

———————–

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல்
ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே —10-7-9-

அத்யந்த சைசவத்தை உடையவன் – இவன் செய்யும் செயல்கள் அடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கும் –
ஸ்ரீ திருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச் சாடித் துகளாக்கின பின்பு இவனைப் பொடிய அஞ்சுவன் –

———————

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை
நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ —10-7-10-

எனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –என் கையில் பலமில்லை -என்னவுமாம் –
என் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் –
நான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி –

————————

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர் இடையர் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –10-7-11-

தாமரைப் பொய்கையிலே சென்று ஒளிந்து இருந்து – அவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு –
வேணுமாகில் இங்கனே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள்- என்று இருந்தாய் –

——————-

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-12-

ஸ்ரீ திருவடிகளால் உண்டான ஸ்பர்சத்தாலே தழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப்
பெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –ஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய்
தான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி வந்தாய் போலே இருந்தது –

——————-

தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-

உபரிதன லோகங்கள் அதிரும்படியான த்வனியை உடைத்தாய் அகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி
நெருப்புப் போலே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற –
வ்ருஷபங்களோடு கூட நித்ய வசந்தமான சோலைக்குள்ளே பிணங்கி வந்தாய் போலே இருந்தது -என்கிறாள் –

———————

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14-

இத்திரு மொழியை வல்லவர்களுக்கு ஸ்ரீ யசோதைப் பிராட்டியார் உடைய
அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார் –

———————–

காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ -10-8-1-

காலத்தைத் தப்பினான் ஆயிற்று -ஒப்பித்து வர வேண்டுகையாலே –
இவர்களுக்கு உடலாக ஒப்பிக்கிறத்தோடு-இவர்களோடு சம்ஸ்லேஷிக்கிறதோடு வாசி என் என்றாயிற்று -அவன் படி –
இருந்தபடியே உகக்கிற எங்களுக்கு ஒப்பிக்க வேணுமோ –
கிட்டி வரச் செய்தேயும் காலத்தைத் தப்பி வருகையாலே ஓர் அடியிலே பத்தடி இட்டான் ஆயிற்று –சாபராதன் ஆகையாலே
கிட்டி வர மாட்டுகிறிலன்-
ஆற்றாமையாலே புறம்பு போக மாட்டுகிறிலன்–ஒப்பித்துக் கொடு வர வேணுமோ –
காலத்தைத் தப்பி வர வேணுமோ – சாபராதனானால் மேல் விழ வன்றோ வடுப்பது –

———————-

துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ —10-8-2-

பிரத்யபிஜ்ஞார்ஹம் அல்லாத காலத்திலேயே வந்தார் இவர் –அந்ய பரதை பாவித்து வர வேணுமோ –
கதவுக்கு புறம்பே நிற்க வேணுமோ – தள்ளவும் போகாதே ஒழிய வேணுமோ –

——————–

கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்
மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என் இது என் இது வென்னோ—10-8-3-

நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியாக பண்ணை நுனுங்கிக் கொண்டு வந்து – ராத்ரியிலே பிரசித்தராய் இருப்பார்
அப்ரசித்தரைப் போலே வரக் கடவதோ பண்ணை ந னுக்கிக் கொடு வரக் கடவோதோ ராத்ரியிலே வரக் கடவதோ –

————————

நாமம் பலவுமுடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இது என் இது என் இது என்னோ –10-8-4-

அரண் அழித்து வருவார் ஆதரம் உடையார் அன்றோ –
பூர்ணராய் இருப்பார் அபூர்ணரைப் போலே வரக் கடவதேயோ –
கலக்க வருவார் அப்ரசித்தமாக வன்றோ வருவது -அரண் அழித்து வர வேணுமோ –

———————–

சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து
மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ —10-8-5-

மயிர் முடி பேணாதே வர வேணுமோ –ஆயுதத்தோடு வர வேணுமோ –
பின்னை வெற்றி கொண்டாடி நிற்க வேணுமோ –

———————-

ஆனாயரும் ஆநிரையும் அங்கு ஒழியக்
கூனாய தோர் கொற்ற வில் ஓன்று கை ஏந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6-

வ்யதிரேகத்தில் முடிவார்க்கு அன்றோ நீ உதவுவது –பிரணயிநி பக்கல் ஆயுதத்தோடு வர வேணுமோ –
இடம் அறிந்து அன்றோ வருவது –

———————–

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச்
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ–10-8-7-

உம்மை நீர் அறிந்தால் காலத்தைக் குறித்தே போவது எங்களை அறிந்தால் சொன்ன போதிலே வர வேண்டாவோ
உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் –இங்கே வாரீர் –
உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ –

——————–

புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்
எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8-

உமக்கு சத்ருசராய் இருப்பவர் பலரும் அல்லையோ-இது தன்னைக் கொண்டாடும் அவர்கள் அன்றோ அவர்கள் –
இது என்ன கஷ்டமோ–சாஹாசங்களைச் செய்யக் கடவ நீர் இங்கே வந்தது என் – குறைவற்ற நீர் இங்கே வந்தது என் –
மேன்மை உடையார் வரக் கடவதோ –

———————

ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ —10-8-9-

வ்யதிரேகத்தால் தரியாதவர்கள் இருக்க-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே இருப்பார்க்கு அன்றோ
நீ உதவுவது -என்று சொல்லப் புக்காள்-
இவ்வார்த்தை சொல்லித் தலைக் கட்டினால் பின்னை தனக்கு அவகாசம் அறும் -என்று பார்த்து
அதுக்கு முன்பே காலைப் பிடித்தான்
காலைப் பிடிக்கிறது என் –மார்வத்து எழுத்து என்கிறது என்-வாயிது விரல் இது என்கிறது என் –

——————–

அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே–10-8-10-

அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும்
ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே
இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை –

—————————–

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே -10-9-1-

கண் காண ஒண்ணாத ஆபத்தை பரிஹரித்த நமக்கு இது ஒன்றும் பழியாய்த் தலைக் கட்ட புகுகிறதோ –
என்று கொண்டு இருக்கிறாயோ –

———————

மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான்
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே —10-9-2-

ஒருவர் இருவர் அன்றிக்கே ஊராக அனுபவிக்கும் படி குருகுல வாஸம் பண்ணினார்க்கும்
ஆட ஒண்ணாத கூத்துக்களை அன்றோ நாம் உபகரித்தது
ஆனபின்பு நமக்கு இது ஒன்றும் பழி யாகப் புகுகிறதோ -என்று இருக்கிறாயோ –
ஊருக்காக உபகரித்த படி சொல்லிற்று -முன் –இனி ஒருத்திக்காக உபகரித்த படி சொல்லுகிறது-

——————

ஆர்மலி யாழி சங்கோடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடுந்திறல் தானோ
நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை-
ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3-

பெறுதற்கு அரியல் ஆனவளை –இவளை இப்படிப் பண்ண வல்ல வடிவு அழகை உடையவனே –
கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இறே
அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும் –

——————–

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த கரதலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங்கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4-

உன்னுடைய வடிவு அழகை ஒரு கால் காட்டிக் கொண்டு போகிறிலை
பாவன பிரகர்ஷத்தாலே -உருவு வெளிப்பாட்டாய் முன்னே நின்று போகிறிலை-
பரக்கச் சொல்வதால் என்ன கார்யம் உண்டு –
சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே-வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி
உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய் –

———————-

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும்
அரு வழி வான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான்
திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5-

மதுரா மதுராலாபா -என்னும்படியான பேச்சை உடையவளை – செவ்வி மாறாத மாலையையும் உடையவளை –
இவள் வாசி ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –இதுக்கு நான் எத்தைச் செய்வேன் –
பெரு வழிக் கரையிலே-நாவலில் விழுந்த பழமானது-குனிந்து எடுக்க்கவுமாய் தவிரவுமாய் இருக்கும் இறே
அவ்வோபாதியும் நினைத்து இறுக்கிறலை யாயிற்று இவளையும் –

———————–

அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனை
செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய்
எறிக்கிலைக்காக வெறி மழு வோச்சல் என் செய்வது எந்தை பிரானே —10-9-6-

ஒரு கால் வடிவு அழகைக் காட்டிப் போகிறிலை -என்னுதல்-உருவு வெளிப்பாட்டாலே முன்னே நின்று போகிறிலை -என்னுதல் –
எந்தை பிரானே-தன்னடையே பழுத்து நெகிழ்ந்து விழுகிறத்தை எறி மழுவைக் கொண்டு வியாபாரிக்க வேணுமோ –

———————

ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட
பாழி யம் தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ
மாழை மென்னோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா–10-9-7-

இவளுடைய –முன்னே உன்னுடைய வடிவை ஒரு கால் காட்டி போகிறிலை –
தன்னடையே உடைந்து போகிற இத்தை தடியை இட்டுத் தகர்க்க வேணுமோ –

—————-

பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ செய்ததின்று
பெரும் தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்
கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8-

இவள் உடைய வைலஷண்யம் ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –
வாயில் பொகட்டின நீர் இழிச்சவும் கொப்பளிக்கவுமாய் இருக்கும்
அவ்வோபாதியாக நினையா நின்றாய் -இவளையும் –

—————————

நீரழல் வானே நெடு நிலம் காலாய் நின்ற நின்நீர்மையை நினைந்தோ
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னதோர் தேற்றன்மை தானோ
பார் கெழு பவ்வத் தாரமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே —10-9-9-

இவளுடைய ஸ்லாக்யதையில் குறை யுண்டாய் இழக்கிறேன் அல்லேன்-இதுக்கடி நான் பண்ணின பாபம் இறே-
அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே –
வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய் –

——————-

வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே —10-9-10-

தான் ஓன்று கண்டு சொல்லுகை அன்றிக்கே-முன்பு உள்ளார் சொன்ன பாசுரத்தை யாயிற்று சொல்லிற்று –
யன் மங்களம் ஸூ பர்ணச்ய வினதாகல்ப யத்புரா அம்ருதம் ப்ரார்த்தயா நஸ- -பரம பக்தி இருந்த படியை சொன்ன படி –
அதுக்கு அநந்தரம் உண்டாம் கைங்கர்ய லஷ்மியைப் பெற்று விஸ்த்ருதமாம் –

——————

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே –10-10-1-

திருத்தாய் செம்போத்தே-போத்துத் திருத்துகை யாவது -அநு கூலிக்கை –
என்றும் ஒக்க இவற்றின் உடைய ரஷணமே பண்ணிப் போருகையாலே வந்த குணவத்தா ப்ரதையை உடையவன் –
ஸ்ரீ லஷ்மீ பதி என்கை அன்றிக்கே இது தானே தனக்குப் பேராய் இருக்கை –
ஒரு கால் சொன்னால் ஆதரம் மட்டம் என்று இருக்கிறதாய் கொண்டு இருகால் மாட்டுச் சொல்கிறாள் –

————-

கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில் போல் நிறத்தன்
உரையார் தொல் புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2-

சப்த பூர்த்தியை உடைத்தாய்-நித்யமான புகழை உடையவனாய் இருக்கிறவனை –ஸ்ரீ ராமாயணத்துக்கு
பிரதிபாத்யனாய் இருக்குமவனை –ரஷிக்கையால் வந்த புகழை உடையவனை –
ஸ்ரீ பிராட்டிக்காக தன் மார்விலே அம்பேற்ற தீரோதாத்த நாயகனை –வரக் கூவாய் –

——————

கூவாய் பூங்குயிலே
குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே —10-10-3-

விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும் விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு –
வரக் கூவாய் பூங்குயிலே –

——————-

கொட்டாய் பல்லிக் குட்டி
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

ஒரு ஊரில் மன்று பாழ் தீரும்படியாக குடக் கூத்தாடினான் –
ஒரு லோகத்தில் பாழ் தீரும்படியாகவும் ஒரு கூத்தாடினான் ஆயிற்று –
தேன் மாறாத பூ மலரை உடைத்தான திருக் குழலை உடையவனை –
பரம பிரணயிநி ஆனவனை – வரக் கொட்டாய் பல்லிக் குட்டி –

——————–

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே –10-10-5-

ஆயுதம் தானும் மிகையாம்படி யான திண்ணிய தோளை உடையவன் –
வட வேங்கடவனை வரச் –ரஷணத்துக்கு உறுப்பாக முதலடி இட்டுக் கொண்டு நிற்கிறவனை –
சொல்லாய் பைங்கிளியே –

—————-

கோழி கூவென்னுமால்
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக்
கோழி கூவென்னுமால் –10-10-6-

தோழி என்று சமான துக்கையாய்-உடன் கூடினவளை சம்போதித்து-
கோழி கூவென்னுமால் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் –
என் செய்கேன் -என்கிறாள் –

——————-

காமற்கு என் கடவேன்
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்யக்
காமற்கு என் கடவேன் —10-10-7-

இதர விஷயத்துக்கு இறே அவன் பிரேரகன்-இவ்விஷயத்துக்கு அவன் பிரேரிக்க வேண்டா –
அவன் வடிவு தானே இறே ப்ரேரகம்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்னக் கடவது இறே-

———————–

இங்கே போதுங்கொலோ
இனவேல் நெடுங்கண் களிப்பக்
கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால்
இங்கே போதுங்கொலோ —10-10-8-

ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்-வேல் போல் நெடிதாய் இருந்துள்ள கண்கள் களிப்ப –
தேனார்ந்த சோலையை உடைத்தான ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்து அருளின வ்யாமுக்த்தன் –
இங்கே போதுங்கொலோ –

———————

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9-

தேவத்வ ஸூசகமான ஸ்ரீ திரு ஆழியையும்-மனுஷ்யத்வைகாந்தமாய் ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய –
ஸ்ரீ ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –

———————

தொண்டீர் பாடுமினோ
சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ -10-10-10-

பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது-இது தானே பிரயோஜனம் -ஆகையாலே –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -ஒன்பதாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

July 10, 2019

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-1-பிரவேசம் –

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -என்று பாடின கவி தன்னை
நீரே மதிக்கும் படி கவி பாட வல்லீருமாய் இருந்தீர் –
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி -என்கிறபடியே
எங்கும் புக்கு அனுபவிக்க வேணும் எண்ணம் அபிநிவேசம் உண்டாய் இருந்தது –
இங்கு இருக்கும் நாள் தானே-வழு விலா யடிமை செய்ய வேண்டும் -என்று நீர் மநோ ரதித்த படியே
கவி பாடி அடிமை செய்கின்றீர்
பின்பு இத் தேக அவசானத்திலே அவ்வருகே கொடு போய்
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று நீர் பேசும் பேச்சு தன்னையும் அங்கே கேட்கிறோம்
ஆனபின்பு உமக்கு ஓர் இடத்திலும் ஒரு குறைகளும் இல்லை
நாம் உகந்த நிலங்கள் எங்கும் புக்கு கவி பாடும் -என்று
தான் ஸ்ரீ திருக் கண்ணங்குடியில் நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்க
கண்டு
வெள்ள நீர் வெள்ளத் தணைந்த வரவணை மேல் -என்கிறபடியே
நம்முடைய ரஷணத்திலே உத்யுக்தராய்க் கொண்டு
ஸ்ரீ திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினவன் தானே
இங்கே ஸ்ரீதிருக் கண்ணங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அங்கே கவி பாடி அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிறார் –

——————–

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-பிரவேசம் –

மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன் -என்று
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்தார்-கீழ்த் திரு மொழியில் –
இங்கே அவனோடு நினைத்த பரிமாற்றம் எல்லாம் பரிமாறலாம் என்று ஸ்ரீ திரு நாகையிலே போய்ப் புக்கார் –
அங்கு நிற்கிறவனுடைய
பருவத்தையும்
மேன்மையையும்
வடிவு அழகையும்
ஒப்பனையும் -கண்டார் –
அவன் பக்கலிலே கிட்டி எல்லா அடிமை செய்ய வேண்டும் என்னும் ஒரு வார்த்தை அருளச் செய்ய கண்டிலர் –
விஷயம் சந்நிஹிதமாய் இருக்க நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே அவசந்னராய்
அவ்வழகு தான் உருவு வெளிப்பாடாக நலிய
அத்தாலே நலிவு பட்டு
கலந்தவன் பேர நின்ற அநந்தரம்-அவன் அழகு மறக்க ஒண்ணாத படி உருவ வெளிப்பாட்டாலே நலிய
நோவு படா நின்றேன் காண்-என்று தோழிக்கு சொல்லுகிறாள்
ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தாலே தாம் மநோ ரதித்த கைங்கர்யம் பெறாதே இருந்து
நோவு படுகிற படியைச் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

———————————————————————–

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே —9-3-1-பிரவேசம் –

ஸ்ரீ நாயகனோடு இயற்கையிலே கலந்து பிரிந்து அந்த பிரிவோடு அவன் வர அபேஷிதமாய் இருக்க
அவன் வரக் காணாமையாலே ஆற்றாமை கரை புரண்டு நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி –
இனி அவன் தான் மேல் விழுந்து கலக்கக் கடவன் என்று முறை பார்த்து இருந்துண்டது அமையும் –
இனி ஸ்வ லாபத்துக்கு நாமே யாகிலும் பிரவர்த்திப்போம் என்று கொண்டு
தன்னுடைய ஸ்திரீ த்வபிரயுக்தமான நாண் மடம் அச்சம் தொடக்கமான வற்றை பொகட்டு
நம் ஸ்வ ரூபத்தையும் அழித்து
அவன் தனக்கும் ஸ்வ ரூப ஹானியை பண்ணி யாகிலும் முகத்தே விழிப்போம் என்று கொண்டு
அவன் இருந்த இடத்தே ஏறப் போக-ஒருப்பட்ட இத்தை கண்ட தோழி யானவள்
இது உன் தலைமைக்குப் போராது காண்-என்று ஹிதம் சொல்ல
அவளையும் அவளுக்கு முன்னே பிற்காலிக்கிற நெஞ்சையும் பார்த்து
பின்னையும் மீண்டு நின்று அங்கே போக ஒருப்பட்ட படியை நெஞ்சோடும் –
அந்த நெஞ்சு உதவாத போதும் உதவி கார்யம் செய்யும் தோழி யோடுமாக கூட்டுகிறாள் –

இவள் தான் புறப்பட்டு போகை யாகிறது அதி சாஹாசம் இறே
பிராண ரஷணம் ஒரு தலை யானால் மரியாதைகளை பார்த்து இருக்கலாம் படி இராது இறே
ஸ்வ ரூபம் நோக்குகைகாக இங்கேயே இருந்து நோவு படுமதில் காட்டிலும்-அங்கே போவது ஸ்வ ரூப ஹானியே யாகிலும்
பின்னையும் விழுக்காட்டிலே ஸ்வ ரூபத்தோடு சேர்ந்து தலைக் கட்டும்
ஆனபின்பு அங்கே போய் அனுபவிப்போம் என்று அத்யவசிக்கிறாள் –
அவன் இத்தலையில் பருவம் அறிந்திலன் ஆகிலும்-தன் வை லஷண்யம் அறிந்து இருக்குமே –

———————–

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே —9-4-1- பிரவேசம் –

ஸ்ரீ திருப் புல்லாணி ஏறப் போக வேணும் என்று கொண்டு உத்யோகித்து – கால் நடை தாராமல் தளர்ந்து
உண்ணப் புக்கவன் சோற்றிலே தோஷ தர்சனம் பண்ணினால்
எல்லாம் உண்டு சமைந்தோம் -என்னுமா போலே தொடங்கினது எல்லாம் அழகிதாக தலைக் கட்டினோம் என்று
கண்ணால் கண்ட பஷிகளைத் தூது விடுவது
முன்புள்ளார் நோவுபட உதவினபடி சொல்லுவது
பந்துக்கள் ஹித வசனம் கேளாத படியான தசையைச் சொல்லுவதாய் தலைக் கட்டுகிறார் –

————————-

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —9-5-1- பிரவேசம் –

அஹம் அஸ்ய அபராத ஆலய –
ஆத்மாவுக்கு ஞாந ஆனந்தாதிகள் நிரூபகமாய் இருக்கை தவிர்ந்து
அபராதங்களை இட்டு நிரூபிக்கும்படி யாயிற்று துருப்பற்றுக் கிடந்த படி –
ஜ்ஞாதாஹம் பகவத் சேஷதைக ரசோஹம்-என்று இறே
ஆகை இறே ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று ஸ்வரூபாபத்தி மோஷமாக சொல்லுகிறது –
இத்தால் இவனுக்கு பிரகிருதி சம்பந்தம் வந்தேறி என்னும் இடம் சொல்லுகிறது
ரத்நாதிகளை சாணையிலே ஏறிட்ட வாறே புகர் பெறா நின்றது-வந்தேறி யாகி இறே அழுக்கு கழிகிறது
அசித் சம்சர்க்கம் அநாதியாய் இருக்கச் செய்தே அந்தவத்தாகாவும் குறை வற்று இருந்தது
அகிஞ்சன –
இப்படி அபராதங்களுக்கு கொள்கலம் ஆகா நின்றேன் என்கிற அனுதாபம் இன்றிக்கே இருக்கை –
அநந்ய கதி –
இப்படி ஒரு கை முதலும் இல்லாத பின்பு
இவன் தய நீயன் என்று இரங்கி கைக் கொள்ளுகைக்கு தேவரை ஒழிய வேறு ஒருவர் இல்லை –
புகு வாசல் அற்ற படி –
த்வமேவ உபாய பூதோ மே பவ –
ஆராய்ந்து பார்த்த இடத்தே நானும் எனக்கு இன்றிக்கே இருந்து
பிறரும் எனக்கு இன்றிக்கே இருந்த பின்பு
நீ ஒருவனே உபாயமாக வேணும் –
இது பிரார்தனா மதி –
இது புருஷார்த்தமாக தலைக் கட்டுகைக்கு இந்த புத்தி விசேஷமே வேண்டுவது
ஆத்மா சத்தையோ பாதி இறே ஸ்வீகாரமும் –

மாம் –
என்னை -ஏகம் என்றால் போலே இருக்கிறது
சரணா கதிரித்யுக்தா –
இது சரணா கதி என்று சொல்லப் பட்டது
சா
அந்த சரணா கதி யானது
தேவேசமின் பிரயுஜ்யதாம்
சரண்யனான சர்வேஸ்வரன் பக்கலிலே இது செய்ய அடுப்பது
ஒரோ வ்யக்திகளிலும் இது தானே ஹனன ஹேதுவாகா நின்றது இறே
நீர்மையாலே ரஷிப்பாரும் உண்டோ-

கீழே சில பஷிகளை தூது விட்டு -நெஞ்சை தூது விட்டு –
அவை மீண்டு வருவதற்கு முன்பே பாதக பதார்த்தங்கள் கையிலே நலிவு பட்டு
தாய்மார் தோழிமார் அடைய ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க
உங்கள் உடைய ஹித வசனம் கேட்டு மீளாத படி நெஞ்சு அவன் பின்னே போயிற்று
அது வரும் அளவும் அவன் சொன்ன வார்த்தையை விஸ்வசித்து இருக்கும் அத்தனை என்று துணிந்த இடத்திலும்
அவன் வரக் கண்டிலள்
இவ்விடம் ஒருத்தி உடைய ஆற்றாமையை பரிஹரிக்கைக்காக வந்த இடம் ஆகையால் அங்கு ஆறி இருக்க்கவுமாம் –
இது அங்கன் அன்றிக்கே
நம்முடைய துக்க நிவ்ருதிக்காக வந்து இருக்கிற தேசம் இறே
ஆன பின்பு ஸ்ரீ திருக் குறுங்குடியிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள்-கால் நடை தருவார் -என்கிறாள் –

———————–

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —9-6-1-பிரவேசம் –

கால் நடை தாராதே இருக்கிற என்னை கால்நடை தருவார்-அவன் இருந்த தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் -என்றார் –
திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட ஸ்ரீபேரருளாளர் -என்று
ஸ்ரீ பிராட்டி சந்நிதியும் உண்டாகவும் அனுசந்தித்தார் –
தமக்கு புருஷகாரம் ஆவார் அங்கே உண்டு -என்று அனுசந்தித்தவாறே தமக்கு
கால்நடை தரும் அளவாய் வந்து விழுந்தது –
அத்தாலே –
அங்கு நிற்கிறவன் தான் சால சீலாவானாய்
நாம் தான் வருவது எப்போதோ -என்று -தாம் முற்பாடனாய்-
நம் அவசரம் பார்த்து நிற்பான் ஒருவன் –
அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் போருங்கோள் என்று கூட்டிக் கொண்டு தாமே போகப் பார்க்கிறார் –

—————-

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-பிரவேசம் –

வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் -என்று
பர உபதேசத்துக்கு உறுப்பாக இதர விஷயங்களின் தண்மையை அனுசந்தித்தார் –
அது தம் அளவிலேயாயிற்று –
பிறருக்கு உபதேசிக்கைக்கு நாம் தாம் இதில் நின்ற நிலை என்ன என்று தம்மைப் பார்த்தார் –
இன்னமும் சம்சார வாசனை கழிந்தது இல்லை –
இழக்கைக்கு ஹேதுவான சரீர சம்பந்தம் இன்னமும் அனுவர்த்தியா நின்றது –
போக்யமான விஷயங்கள் சந்நிஹிதமாய் இரா நின்றன –
ஆன பின்பு நாம் இன்னமும் இதில் நின்றும் அழகிதாக கால் வாங்கினமை போராது-
நாம் இதில் நின்றும் மீண்ட அளவு பார்த்து
நம் பேற்றுக்கு தாம் முற்பாடனாய் கொண்டு
மஹாபலியினுடைய யஞ்ஞா வாடத்திலே தம் உடைமை பெறுவதற்கு அர்தித்வம் எல்லாம் தோற்றி நின்றாப் போலே
ஸ்ரீ திரு வல்ல வாழிலே வந்து நின்றான் ஆயிற்று –
சம்சார வாசனை கழிந்தது இல்லை –
தேஹம் அஸ்திரமாய் இரா நின்றது –
விஷயங்கள் சந்நிஹிதமாய் இரா நின்றன –
ஐஸ்வர் யாதிகள் நிலை நில்லாதாய் இரா நின்றன –
இவை இத்தனையும் தப்பி –-அவ்வருகு பட்டால் – பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற விலக்கடிகள் தப்புகை
சாலப் பணி யுண்டாய் இரா நின்றது –
இவை இப்படி தண்ணிய வென்று புத்தி பண்ணி இருந்தாய் ஆகில்
அவன் நித்ய வாஸம் செய்து அருளும் ஸ்ரீ திரு வல்ல வாழை வாயாலே சொல்லுவதாக
நெஞ்சாலே மருவப் பார் -என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

———————–

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1- பிரவேசம் –

ஸ்ரீ திரு வல்ல வாழைச் சேரப் பாராய் -என்றார் தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
அது தம்முடைய த்வரைக்கு ஈடாக ப்ரவர்த்திதது இல்லை –
சர்வ ரஷகனாய் அர்த்தித்தார் உடைய சர்வ பலங்களையும் கொடுக்க கடவனாய்
சர்வாதிகனாய்
விரோதி நிரசன சீலனாய்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் சலிப்பிக்க ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையனாய் –
சர்வ சமாஸ்ரயணீயனாய் கொண்டு
ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் –
நாம் அங்கே போய் அனுபவிப்போம் –
அதிலே ஒருப்படு-என்று
பிதாவானவன் முந்துற நமஸ்கரித்துக் காட்டி
பின்னை
காட்சியிலே முற்பட்டு
தம் திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

—————————-

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-பிரவேசம் —

இவ்விருப்பைத் தவிர்த்து பரம பதத்தைத் தர வேணும் என்று அபேஷித்தார்-
அப்போதே அது பெறாமையாலே -இத்தைத் தவிர்த்து அத்தை தருகைக்காக வந்து நிற்கிற
இங்கே ஆஸ்ரயித்து நாம் அபேஷிதம் பெறாது ஒழிவோமோ என்று அவசந்னராய்
அந்த அவசாத அதிசயத்தாலே தாமான தன்மை அழிந்து
எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை பிராப்தராய்
அப்பிராட்டி தான் தம் தசையைத் தான் பேச மாட்டாதே கிடக்க
அவள் படியைப் பேசுகிற திருத் தாயார் தசையை ப்ராப்தராய் –
அவள் தன் மகள் தசையை அனுசந்தித்து
இவள் ஆற்றாமை இருந்த படியால் அவனோடு அணைந்து அல்லது தரிக்க மாட்டாள் போலே போலே இருந்தது –
அணைத்து விட வல்லளே
அன்றிக்கே இங்கனே நோவு படும் இத்தனையோ -என்று
பின்னையும் தானே அவனைக் கிட்டியே விடும் என்று
அறுதி இட்டு தரிக்கிறாளாய் இருக்கிறது –

——————–

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே —9-10-1-பிரவேசம் –

சர்வ அபேஷித பிரதானனாய்க் கொண்டு ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற நிலையை அனுசந்தித்தார் -கீழ் –
அத்தனை பொதுவான நிலை தவிர்ந்து ஆஸ்ரிதர்க்கே ஸ்வயமாகக் கொண்டு
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி நிற்கிற நிலையை அனுசந்திக்கிறார் –
அவன் பண்டு -பெற்ற தமப்பன் பகையாக ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானுக்கு உதவி
அவன் விரோதியைப் போக்கி
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உதிரம் அளந்த கையோடே நிற்கிற தேசம் என்றும் –
அவன் தானே அநேகம் அவதாரங்களைப் பண்ணி ஆஸ்ரிதர்க்கு உதவினவன் என்றும் நினைத்து
அத்தனை பொதுவான நிலை தவிர்ந்து-ஆஸ்ரிதர்க்கே ஸ்வயமாகக் கொண்டு
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கிறவனுடைய சௌலப்யத்தை அனுசந்தித்து ப்ரீதராய் அனுபவிக்கிறார் –
ஸ்ரீ ப்ரஹ்லாதிகளுக்கு -மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்னலாம்படி ஹிருதயத்தை விடாதே இருந்து
பிரசாதத்தைப் பண்ணுமவன் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

———————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் -ஒன்பதாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

July 10, 2019

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-1-

ஒரு கருமத்தை அனுஷ்டியா நின்றோம் அது நமக்கு ரஷகம் அன்று ஸ்ரீ சர்வேஸ்வரனே ரஷகன் -என்று
இருக்கும் இருப்பில் குலைத்தலை உடைய நெஞ்சை உடையார் அன்றிக்கே இருப்பாருமானவர்கள் வர்த்திக்கிற –
ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானே –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஆகாச அவகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு வந்து தோற்ற –
சாபத்தாலே திண்ணியதான நெஞ்சை உடைய முதலை-சின்னம் பின்னம் -என்கிறபடியே
துணி படும்படி பிரதி பஷததின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு ஆழியை ஏவினவன் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட-ஆகாசமும்-பூமியும் குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட –இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய ஸ்ரீ மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் –
பாண்டவர்களுக்கு சாரதி யானவன் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பூமிப் பரப்பை அடைய இரண்டடியாலே அளப்பதாக பரந்த திக்குகள் அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மழுவைக் கொண்டு பூமியில் ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து
அவர்கள் உடைய ருதிர வெள்ளத்திலே குளித்து உதக் கிரியையும் பண்ணி மிக்க கோபம் தவிர்ந்தவன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனை –ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே
வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை பனம் பழம் போலே உதிரும்படி வில்லை வளைத்தவன் –
மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி
ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

சர்ப்பத் த்வஜன்-என்னக் கடவது இ றே துரியோதனனை –அவன் தன ஓலகத்தினுள்ளே ஆசனத்தை
ஜகத்துக்கு வேர் பற்றானவனை அளிக்கப் புகா நின்றோம் என்று கூசாதே இட்டு
அதுவே ஹேதுவாக பெரிய வடிவானது அண்ட அவகாசத்தை ஊடுருவ
திக்குகள் தன பக்கலிலே அடங்கும்படியாக வளர்ந்தவன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

விஞ்சின பாரமானது ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி ஸ்ரீ மகா பாரதத்திலே
ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக ஸ்ரீ அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் –
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானை –
ஸ்ரீ ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்–லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு ஸ்ரீ பகவத் தாரித்ர்யம் இல்லை – என்கிறார் பத்தாம் பாசுரத்தில்-

——————

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-

மர்மங்களிலே கடாஷியா நின்றார் பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் –
நீ பின்னை செய்தது என் என்ன –இப்பார்வைக்கு நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று அஞ்சுகின்றேன் –
அவன் பார்வையும் அவள் பார்வையும் ஆனதாகிறது – அப்போதை அழகு இருந்த படி காண் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஒப்பித்துக் கொண்டு இரா நின்றார் –திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திருக் கையிலே உடையராய் இரா நின்றார் –
ஒப்பனை தான் வேண்டாத படி இரா நின்றது திருத் தோள்களை கண்டவாறே –
இவ் வழகு நம்மால் பேசப் போகாது-விஸ்மயப்பட்டு விடும் அத்தனை –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஓங்கி இருப்பதாய் பரந்து இருப்பதான மலை விளங்கினாப் போலே செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான –
ஆயிரம் தோளையும் உடையராய்-அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார்
கீழே நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது
ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை –
ஓர் ஒப்பனை வேணுமோ -அவ்வடிவு அழகு தானே அமையாதோ-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இவர் திரு வதரம் இருக்கிற படியை பார்த்தவாறே சிவந்த பவளம் என்னலாம் படி இருந்தது –
தேவர் இவர்-இதர விசஜாதியருமாய் இருந்தார்-மனிச்சரோடு கூட்டலாய் இருக்கிறிலர் –
இவர் வடிவு இருந்த படியைச் சொல்லில்-எங்கும் ஒக்க ஸ்ப்ருஹநீயமாய் இரா நின்றது –
உபமானம் இல்லாத விஷயத்தில்-உபமானம் சொல்லி இருப்போமோ -என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இவர் வடிவு இருக்கும் படியைச் சொல்லப் புக்கால் கடல் போலே இரா நின்றது –
பிரதி பஷத்தை கனல் எழக் காய்கிற ஸ்ரீ திரு ஆழியை ஒரு கையிலே ஏந்தி –தமக்கு அடங்காத ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
மற்றைக் கையிலே உடையராய் இருந்தார் –
இத்தைச்சொல்லி நம்மால் கரையிலே நிற்கும் அத்தனை அல்லது நம்மால் உள் இழிந்து பேசப் போகாது –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கண்டாரை தம் வசமாக்கி தன் காலிலே விழ விட்டுக் கொள்ள அஞ்சன கிரி போலேயுமாய் இரா நின்றார் –
வாக்குக்கு அவிஷயமான விஷயத்தில் நான் எத்தைச் சொல்லுவது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வடிவைப் பார்த்த வாறே மேக் சகலங்கள் அன்றிக்கே எல்லாம் ஒன்றாகத் திரண்டு வர்ஷிக்கையிலே ஒருப்பட்ட
மேகம் போலே இரா நின்றது –விசஜாதீயத்துக்கு சஜாதியங்களில் சில வற்றை சொன்ன இடம்
என் சொன்னோம் ஆனோம் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

என்னை விலக்கப் பார்க்கிற நீங்களும் வந்து-காணுங்கோள் -உங்களால் தான் விடலாமாகில் –
ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருந்தால் இருக்கும் அழகு தான் இப்படியேயோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

மேன்மையைப் பார்த்த வாறே ஸ்ரீ நித்ய சூரிகளும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இரா நின்றார்
மேன்மையை உடையார் கிட்டுகிற விஷயம் என்று நமக்கு கை வாங்கலாய் இருக்கிறது இல்லை
வடிவு அழகைப் பார்த்தவாறே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –ஸ்ரீ திரு நாகையிலே தன் அழகாலே
விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –
தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்-உயிர் தோழியும் தானுமாய் அனுபவித்த ஏழு பாடல்கள்
எல்லாரையும் குறித்த இரண்டு பாடல்கள்-பல ஸ்ருதி ஒன்றும்
இத்தை அப்யசிக்க வல்லார்கள் இங்கும் கோலின பலங்களும் பெற்று இது தன்னின் பலமான ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாய் இனியராகப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே —9-3-1-

ஒரு ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் போல்வாருக்கு அன்றோ அவன் தானே வரும் அளவும் ஆறி இருக்கிறோம் என்று தரிக்கல் ஆவது
பழையார் பாடாற்ற வல்லது புதியார் க்கும் ஆற்றப் போமோ
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -என்னக் கடவது இறே
அசாதாரணரான ஸ்ரீ நித்ய சூரிகளிலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் போல்வார் தான் பட்டார்களோ
நான் பட்டபடி -என்கிறார் என்று ஆயிற்று –
இதுக்கு ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்யும் படி –-இது தன்னை ஸ்ரீ ஆழ்வார் பாடா நிற்க
ஸ்ரீ எம்பெருமானார் -அங்கு ஆர் உயிர் பட்டது இங்கே எனது உயிர் பட்டது -என்று அருளிச் செய்தார் –முதல் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் உடைய அனுபவத்தை யாகில் ப்ராப்யமாக சொல்லுகிறதும்-ஆசைப் படுகிறதும்
அதுக்கு அவ்வருகே ஒரு ஏற்றம் சொல்லுவாரைப் போலே சொல்லுவான் என் என்று நான் ஸ்ரீ ஜீயரைக் கேட்க
நாவோடையான ஸ்திரீக்கு பர்த்தாவின் உடைய கர ஸ்பர்சம் உண்டானால்-வேர்ப்பது விடுவது ஆமாபோலே
அனுபவத்தில் புதுமையால் படுகிற அலமாப்பு காணும் என்று அருளிச் செய்தாராக ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர் –

அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே விபுத்வத்துக்கு அவ்வருகாம் படியாய் இருக்கை-
அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை கொள்ளுகிறது –
அப்படியே இருக்கும் இறே சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே –
பிரிகிற தமக்கும் அது உண்டாகில் பிரியான் இறே-இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது –இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு
கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் -போந்து காணாய் -என்கிறாள் –
இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது –-இவள் பேதை யாயிற்று –
இவன் தான் முக்த கண்ட மாய் பிரியேன் என்றாலும் அது தான் கலவியில் ஒரு பிரகாரமோ -என்று இருக்குமாயிற்று இவள்
பிரிவு -கலவி -என்கிற இவற்றுக்கு வாசி அறியாள் ஆயிற்று –பிரியேன் என்று சொன்ன போதே பிரிந்தான் இறே
பின்னை போனதும் மிகை-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே –
ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று –
பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

கீழே மறக்க ஒண்ணாது என்றது இறே-இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது –
மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது-அவை இரண்டும் அரிதாக நின்றது
உணரில் -உள்ளம் சுடுமால்–என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை-நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை
அவன் பண்ணுகிற விருப்பத்துக்கு நாம் விஷய பூதர் ஆகாத வன்று இரண்டு ஆஸ்ரயமும்
அழியும் என்னும் படி யாயிற்று பரிமாறின படி ––என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும் அரிது
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை –
வள்ளல் –சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வாதானம் பண்ணினவன் –
மாயன் – இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி அப்போது அப்படி பரிமாறினவன்
மணி வண்ணன் – இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன் –
எம்மான் –அவ் வடிவு அழகை காட்டி என்னை அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அவன் ருசி முன்னாக -இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது –
அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –
இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ இளைய பெருமாள் ஒரு கையாலே சத்ரத்தையும் மற்று ஒரு கையாலே சாமரங்களையும் பிடித்து பரிமாறும் போது
ஸ்ரீ சக்கரவர்த்தி ஆண்ட பரப்பில் அதுக்கு ஓர் ஆள் இல்லாமையால் அன்று இறே
அடிமையில் கலித்தனம் -பசியனாய் – இருக்கிறபடி –
பிரியமாகாத வன்று இவனுக்கு இது பிராப்யம் ஆகாது இறே
இவன் அவனுக்கு உகப்புச் செய்தால் இறே ஸ்வரூபம் சித்தி யாவது
ப்ரஹர்ஷயிஷ்யாமி-இலே இறே இவன் தனக்கு அந்வயம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

முறை உணர்ந்து திருவடிகளிலே விழுகைக்கு அவசரம் இல்லை
பிராப்யம் என்று இருக்கை தவிர்ந்து-ப்ராபகத்வ புத்தி பண்ணுவோம் –
சாதன விச்சேதத்தில் பல விச்சேதம் வரும் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம் –
இனி அத்தலைக்கு நன்மை பார்க்குமது எல்லாம் தவிர்ந்து நமக்கே நன்மை பார்க்கும் இத்தனை –
இதுக்கு முன்பு நம் இழவுகளும் பாராதே-அவனுக்கே நன்மை பார்த்து போவோம் இறே –
ஒன்றும் தாரேன் -என்று இவன் பிரதிஞ்ஞை பண்ணி இருந்தாலும்
பக்திலப்பயன் என்கிற வசனத்தை மாற்ற ஒண்ணாதே –
எல்லாம் செய்தாலும் அவன் ஆசனத்தை கிளப்பும் போது நம் ஆற்றாமை வேணும் காண் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம்
அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் –
இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் –
ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது –
அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே
இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர
அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே —9-4-1-

இவளுடைய பாரவச்யம் கண்டு-தன் இழந்து இவள் வியாபாரிக்க வேண்டும்படியாய் யாயிற்று அவள் இருக்கிறது
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் – திருவாய் மொழி –
நாம மாத்ரமே காணும் உள்ளது-நாயகன் பிரிந்ததுக்கு நோவு படும் இத்தனையே இவளுக்கு உள்ளது
இவள் ஆற்றாமைக்கும் -அவன் வாராமைக்கும் -இரண்டுக்கும் நோவு பட வேணுமே அவளுக்கு
இது ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாது காணும் –
பிரிந்த நிலத்திலே இருக்க ஒண்ணாது ஒழிவதே-பிராப்ய தேசத்திலே புக ஒண்ணாது ஒழிவது
உசாத் துணை இன்றிக்கே ஒழிவதான தசை இறே நமக்கு-இழவில் வந்தால் இருவருக்கும் ஒத்து இருக்கும் இறே –
மாறாடி வருமது இன்றிக்கே இது ஸ்வ பாவமாய் விட்டதே
நித்ய சூரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றார்கள்-இவ்வருகு உள்ளார் விஷயங்களில் அந்ய பரராகா நின்றார்கள்
மூன்றாம் விபூதியாக பண்ணி விட்டதாகாதே நோவு படுத்துகைக்கு நம்மை -என்கிறாள் முதல் பாசுரத்தில்

இந்த்ரனுக்காக செய்த செயல் என்று தோற்றிற்று இல்லை காணும் இவர்க்கு-உன்னைப் பிரமாணித்தார் பெற்றே பேறு-
ஆஸ்ரிதர் எல்லாருக்குமாக செய்த செயல் என்று இருக்கிறார் –
இவை தூது போக சமைந்தால் போலே யாய்த்து அவன் கிட்ட வந்து இருக்கிறபடியும் –
அன்னமாய் –தூது போகிற உங்களுக்கு அஞ்ச வேண்டா சஜாதீயராய் இருப்பார் –
இதனை –தன் தசை தன்னைப் பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது போலே காணும்
செப்புமினே –செப்பிக் கொடு வர வேண்டா – அறிவித்து விட அமையும் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஒருத்தி உடைய சிந்தா வ்யதையைப் போக்க என்றே வில் பிடித்தவர்க்கு என்னுடைய் சிந்தாவ்யதையும் அறிவியுங்கோள்-
என் சிந்தை நோய் – அவள் அத்தனை க்ரம பிராப்தி பொறுத்து இருக்குமவள் அன்று இறே-இவள் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஒரு பாலனுக்கு தமப்பன் பகையாக உதவிக் கார்யம் செய்தவன் அபலைக்குத் தன்னைப் பெறாமையாலே வந்த
வ்யசனத்துக்கு வாசி வைத்து உதவின படி காண் –என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான் –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நாட்டிலே பொய் மெய்கள் கொண்டு கார்யம் உண்டோ-அவன் பொய் ஆகையாலே அன்றோ எனக்கு ஆகர்கஷமுமாய் இருக்கிறது –
ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவன் உடைய பொய்யே – அவனுடைய பொய்யைக் கேட்டு அத்தாலே தரித்து இருந்தேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தன்னோட்டை சம்ச்லேஷத்தாலே-நிறமும் இரட்டித்து தன் பக்கல் உள்ள ஆபரணங்களும்
என் பக்கலிலே யாக வேணும் என்று ஆசைப் பட்டு-பரிசை ஆசைப் பட்டு முதலை இழப்பாரை போலே
முன்பு உள்ளவற்றையும் இழந்து விட்டேன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சௌபரி ஐம்பது வடிவு கொண்டு புஜித்தால் போலே ரத்னங்களால் பண்ணப் பட்ட மாடங்கள் தோறும்
தானும் அவனுமாய் அனுபவிக்கக் காணும் கோலிற்று – அது எல்லாம் செய்து சமைந்தேன் –
அப்ராப்யத்தை ஆசைப் படும்படியான பாபத்தை பண்ணின என் மேலே –
வேலையும் வெந்தழலே வீசுமே —இந்த த்வனிக்கு சேஷித்தது உண்டாகா கொண்டு பிரமியா நின்று
இவள் தன் விரஹ அக்னி தன் மேல் படாத படி கடக்க நின்று வீசா நின்றதாயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பிரபல விரோதிகளை ஆற்றி உகந்தாருக்கு தன்னைக் கொடுக்க கடவனாக ஆசைப் பட்ட
நமக்கு நம் விரோதிகளை மாற்றி நமக்கு தன்னை தந்தபடி காண் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஜகதா காரனாய் இருக்கிறவன் –அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன்
அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் –
சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே
நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழியை அப்யசிக்க வல்லார் –இங்கும் குறைவற அனுபவித்து
அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்

—————-

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —9-5-1-

இவள் ஒரு அபலை அன்றோ-இதுக்கு எல்லாம் இவள் ஆடல் கொடுக்க வல்லளோ -என்று
நம் பக்கலிலே கிருபை பண்ணுகிறிலன்-
அன்றிக்கே-தம்மை பிரிந்து பத்து மாசம் ஜீவித்து இருந்தவளோ பாதியாக நினைத்தி இரா நின்றார் –
வடிவைக் காட்டி கண்டது அடைய பகையாம்படி பண்ணி பொகட்டுப் போன இவ்விடம் போல அன்றிக்கே
இவை தான் அனுகூலமாம்படி அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்திலே கொடு பொய் பொகடுங்கள் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

நம்முடைய ப்ராவண்யத்தை குண ஹானியாக உப பாதிக்கை அன்றிக்கே –
ந கச்சின் ந அபராத்யதி -என்று பொறுப்பித்து அவன் திருவடிகளோடு சேர்க்குமவள்
இருந்த இடத்தே கொடுபோய் பொகடுங்கள் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நம் இனம் உள்ள ஊரிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தர்ச நீயமான மயில் நெருங்கி வர்த்திக்கிற பர்யந்தத்தை உடைத்தான
ஸ்ரீ திருக்குறுங்குடி யிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட –
அவனுடைய பெருமை பேசி-ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்-
பேச -என்றதாகில்-ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே
ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும் நின்று சொல்லும்படியாக -என்றாகிறது –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

கலந்த போதோடு பிரிந்த போதோடு வாசி அற ஆறி இருக்கலாம் விஷயம் அன்றிக்கே
பிரிந்து ஆற்ற ஒண்ணாத குணாதிக விஷயத்தோடே கலக்கும் படியான மகா பாபத்தைப் பண்ணினேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் –
கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினான் ஆயிற்று –
வ்யதிரேகத்தால் அறிந்து கொள்கிறாள் என்று –
இவர் பிரியேன் என்கிற பாசுரத்தாலே யாகிலும் சொன்னார்
அதுவும் வாய் கொண்டு சொல்ல மாட்டாமை -ஆது கொலோ -என்கிறாள் ஆயிற்று -இவள் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம்-என்கிற படியே தன்னோடு ஒத்த பருவத்து பிள்ளைகளை
மநோஹாரி சேஷ்டிதங்களாலே எழுதிக் கொண்டு இருக்குமவன் ஆயிற்று –
வன்னெஞ்சர் படுகிற பாடு இதுவானால் அபலைகளுக்கு சொல்ல வேண்டாம் இறே –
அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்
அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

கோவலர் கூத்தன் -என்றபடி இறே
இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன்
விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கோவலர் கூத்தன் -என்றபடி இறே
இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன்
விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பத்தாம் பாசுரத்தில் -அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் –
இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே –

———————–

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —9-6-1-

ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன்
அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ –
ரஷ்ய ரஷக பாவம் மாறாதே போரும் தேசமாயிற்று-சீலாவானாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –
அவ் ஊரில் மரங்களுக்கும் அவன் படி உண்டு என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகு எளியர்க்கு கிட்ட ஒண்ணாமை அன்றிக்கே
ப்ரஹ்மாதிகளுக்கும் அகப்பட இக்கரையிலே நின்று கூப்பிடும்படி ஸ்ரீ சர்வாதிகனாய் இருக்கிறவன்
எல்லாருக்கும் ஒக்க அனுபவிக்கலாம் படி வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருக் குறுங்குடி
திரு வநந்த வாழ்வான் மேலே ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கண் வளர்ந்து அருளுகிற –
இதுதான் ஸ்வயம் பிரயோஜநார்தம் அன்றிக்கே
ஆஸ்ரித அர்த்தம் ஆகையாலே வந்த சுத்தியை உடைத்தவன் வர்த்திக்கிற ஊர் போலே –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
கீழே நின்ற நம்பி அனுபவம்-இதில் கிடந்த நம்பி அனுபவம் –

மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து
முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தலைகள் பத்தும் சிதறும்படியாக சென்று அடை மதிள் படுத்தி ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும்
தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் –
முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

சாமாராதன உபகரணங்களைத் தரித்துக் கொண்டு அதிகாரிகளான நீங்கள்
அடைவு கெட ஏத்தி அஞ்சலியை பண்ணி உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற விஷயங்களைப் பற்றி இருக்கிற மநோ ரதத்தைத் தவிர்த்து
அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற ஊரைச் சென்று அடையுங்கோள்-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நம்மோடு ஒரு சம்பந்தம் உடைய நீங்கள் –பர பக்தி உக்தராய்க் கொண்டு -வகுத்த ஸ்வாமி யானவன்
இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை
அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————-

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-

சர்வமும் உப சம்ஹ்ருதம் ஆனவன்று இவற்றுக்கு லய ஸ்தானமாய்- சிருஷ்டி காலம் வந்தவாறே உத்பத்தி ஸ்தானமாய்
காரணாவஸ்திதமான சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய் கார்ய மத்யே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் –
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ திரு வல்ல வாழை வாயாலே சொல்லும்படியாக
நெஞ்சாலே நினைக்கப் பண்ணப் பாராய் -நெஞ்சே –என்கிறார் முதல் பாசுரத்தில்

பாண்டவர்களுக்காக பண்டு தன்னை தாழ விட்டு தூது போன மேன்மையை உடையவர் –
நம்மை யாரோ ஏவிக் கார்யம் கொள்வார் என்று வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை —என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

மகா பலியுடைய யாகத்திலே சென்று தன் அல்லாதத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க
இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையவர் –தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு ஸ்ரீ பரமபதத்திலே இருக்கிறவர்
அத்தோடு ஒரு போலியான ஒக்கத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையிலே வர்த்திக்கிறவர் –
தர்ச நீயமான கடல் போலே இருக்கிற வடிவை உடையவர் – வர்த்திக்கிற –ஸ்ரீ திரு வல்ல வாழை –
அங்கு உள்ளு நிற்கிறவர் வடிவு அழகு இருக்கிறபடி –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நஞ்சாலே நிறைந்து இருந்துள்ள முலையின் மேலே அழகிய கையையும் வாயையும் வைத்து
அவளுடைய ஆயுஸையும் முடித்த -மைந்தனார்
விரோதி நிரசனமே யாத்ரையாய் இருக்கிறவர் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ப்ராஹ்மண லஷணங்களால் குறைவற்று இருக்கிற-நாலு வகைப் பட்ட வேதம்-பஞ்சாக்னிகள் பஞ்ச மகா யஞ்ஞங்கள்
அங்கங்கள் ஆறு இவற்றை யாத்ரையாக உடையராய் இருப்பார் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடாக உஷ்ண கிரணனான ஆதித்யனாய்
அவனால் வந்த தாபத்தை ஆற்றுகைக்கு ஈடான தண்ணளியை உடைத்தான சந்த்ரனாய் –
மேக சஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசமாய் நிற்கிற ஆச்சர்ய பூதரானவர் –கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பொற்றாமரையை இருப்பிடமாக உடையாளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் அவளுக்குத் தகுதியான தாமும்
ரகவோஹர்த்தி வைதேஹீம் -என்னுமா போலே –அவன் வரக் கடவ வழி எல்லாம் வந்து நின்றான் –
வந்ததே -என்று ஒரு வார்த்தை சொல்லும் இத்தனை நீ செய்ய வேண்டுவது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கேவல தர்க்கம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அன்றிக்கே
பிரமாணம் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுமவர்கள்
தன்னை ஒழிய வேறு ஒன்றை போக்யமாக நினைத்து இருப்பார்க்கும் அத்தைக் கொடுக்கும் மகோதாரன் –
இவ்வமிர்தம் எனக்கு வேண்டா என்னாமை கிடாய் வேண்டுவது -என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இத்தைக் கற்று வல்லார் –பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய்
தேஹ சமனந்தரம்-நித்ய விபூதியிலே புக்கு-ஏஷஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே
நிரதிசய ஆநந்த யுக்தராவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1-

ஸ்த்ரீகளோட்டை சம்ஸ்லேஷத்தை நன்று என்று அது குவாலாக நினைத்து இருக்கும் அத்தை விட்டு –
ஸ்ரீ திருமலையை வணங்குவோம் வா என்னோடே ஒரு மிடறான நெஞ்சே –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகளும் அண்டாந்தர வர்த்திகளானவர்களும் ஆஸ்ரயிக்க ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு
ஆதி ராஜ்ய சூசகமான திரு அபிஷேகத்தை உடைய ப்ரதானர் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு –
அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன் பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம்
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-4-

ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே
ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று
அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் –
பின்னையும் பிற்பாடர் உடைய ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று விரும்பி -வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற பூசலிலே பொறுத்த
ஸ்ரீ ஸ்வாமிகள் வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி – அங்கு நின்றும் போந்து அவதரித்து
விளாம் பழத்துக்காக ஒரு சிறு கன்றை வீசி
கையிலே குடங்களைக் கொண்டு கூத்தாடி -பெண்கள் உடைய குரவைக் கூத்திலே தன்னைக் கொடு வந்து கோத்து
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடைய ஸ்ரீ சுவாமி வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஆஸ்ரித விரோதிகளை போக்குகையில் உண்டான ப்ரீதியாலே உகந்து எறிந்த ஸ்ரமஹரமான வடிவை உடையவன்
ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்கு பாங்கான தேசம் என்று திரு உள்ளத்தாலே ஆதரித்து வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருப் பாற் கடலிலே திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –அங்கு நின்றும் போந்து – அவதரித்து
பதத்தாலே -பதற்றத்தாலே -அடி மேல் அடியாக விட்டுக் கொடு வருகிற குதிரையினுடைய
மிக்க சீற்றத்தைப் போக்கின -ஸ்ரமஹரமான வடிவை உடையவன் வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

என் குல நாதனாய் அப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவர்
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கலாம் தேசம் என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்வ ஹிருதயத்திலே அனுசந்தித்துக் கொண்டு பாடுகைக்கு ஈடான பாக்கியம் உடையவர்கள்
இக்கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகர் ஆகப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————–

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

ஸ்ரீ உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து – ஸ்ரீ கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் –
பிற்பாடராய்-இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக
ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்அணைந்தே விட வல்லளோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை –ரஷணத்துக்கு இட்ட வீரக் கழல் த்வனியா நின்றுள்ள
திருவடிகளை –அவற்றைக் காண்கைக்கு கண் படைத்த இவள் கண்டே விட வல்லளேயோ –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு மலையிலே நின்று அருளின –அண்டாந்தர வர்த்திகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை –
அவனுக்கு ஈடாக ஒப்பித்து இருக்கிற இவள்அவ் ஒப்பனையோடு சென்று அணுக வல்லளேயோ –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் –
நமக்கு எளியவன் ஆனவனை –அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள் கிட்ட வல்லளேயோ –
என்கிறார் நாலாம் பாசுரத்தில் –

ஸ்ரீ வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி அளந்தவன் –
ஸ்ரீ திருமலையிலே வந்து நின்ற –அயர்வறும் அமரர்கள் அதிபதியை அவர்களோடு ஒத்த ருசியை உடைய
இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை –
பர பக்தியையும் அத்வேஷத்தையும் பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –
அக் குழலுக்கு தகுதியான அவயவ சோபையை உடையவள் கிட்ட வல்லளேயோ –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று –
தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து எறடா நின்றுள்ள ஸ்ரீ திருமலையிலே –
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை –
அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற
இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ நித்ய சூரிகள் அனுபவித்த வடிவு அழகை இங்கு உள்ளார் இழவாத படி தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி
தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட ஸ்ரீ திருமலையிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –
தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல இவள் அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ரஷிக்கைக்கு பாங்காக ரஷ்ய வர்க்கம் உள்ள இடம் தேடி வேதைக சமதிகம்யனாய் வைத்து
கண்ணுக்கு இலக்காகும் படி ஸ்ரீ திரு மலையிலே நின்றவனை –
அது தன்னை பரதத்வோடு ஒக்கச் சொல்லலாம் படி எத்தனையேனும் சாலத் தண்ணியர்க்கும்
முகம் கொடுத்துக் கொடு நிற்கிற இடம் இறே இவ்விடம் –-ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க
அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய
ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற கல்யாண குணங்களாலும் உஜ்ஜ்வலிதனாகா நின்றுள்ள
சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கிட்டுக்கைக்கு யோக்யமான அழகை உடைய இவள்
அவனைக் கிட்டிவிட வல்லளேயோ –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் –
காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு
பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————–

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே —9-10-1-

தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அடியவர்க்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் –
கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே ஒழுகுமா போலே-மேகம் பொன்களையே சிந்த –
அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய் செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

இனிய நகையையும் சிவந்த அதரத்தையும் உடைய ஸ்ரீ பூமி பிராட்டியார் உடைய
செவ்வியை அனுபவிக்க வல்லனாய் அத்தாலே ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு இனியன் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றம் பொறுப்பிப்பாள் ஒருத்தியும்
பொறைக்கு உவாத்தாயிருப்பாள் ஒருத்தியும்
ஆக கூடி இனியனாய் இருக்கிறவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

எனக்கு வைத்த கண் வாங்க ஒண்ணாத படி தன் அழகைக் காட்டி பிரளய ஆபத்தில் ஜகத்தை உண்டு
ஆபத் சகனாய் உமிழ்ந்தவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்கிறபடியே
அவளோடு ஒக்க இவனுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்தவன் ஸ்ரீ திருக் கோட்டியூரானே
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பூ மாலையோடு கூடின ஆதி ராஜ்ய சூசகமான ஸ்ரீ திரு அபிஷேகத்தை உடையவனாய் ஸ்ரீ சர்வாதிகனாய்
பூமி எல்லாம் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ராவணன் உடைய -எய்ய வல்லார் என்னோரோடு ஒப்பார் இல்லை என்னும் மிடுக்கை தவிர்த்து
அச் செயலாலே என்னை அடிமை கொண்டிருக்கும் உபகாரகன் ஆனவன் –
ஜம்பூத் வீபத்தில் ராஜாக்கள் வந்து ஆஸ்ரயிக்க- ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து சந்நிதி பண்ணுகிறது இங்கே -என்று
ப்ரஹ்மாதிகள் வந்து ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ திருக் கோட்டியூரானே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பசுக்களையும் இடையரையும் காத்தால் உகபபாள் ஸ்ரீ பூமி பிராட்டியார் இறே-
பூ பாரத்தை போக்குகையாலே ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கு இனியன் ஆனவன் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

என்னை அடிமை கொள்ள விரும்பி அயர்வறும் அமரர்கள் அதிபதி யான மேன்மையைப் பாராதே
சம்சாரத்திலே என்னுள்ளே புகுந்தான் –ஸ்ரீ திருக் கோட்டியூரானே –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயநீயரான அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வாமி யானவன் –
இங்கே வந்து வர்த்திக்கிறான் என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்களுக்கு ஸ்ரீபரமபதமே வாசஸ் ஸ்தானம் என்கிறார் –
பத்தாம் பாசுரத்தில்

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-ஒன்பதாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

July 10, 2019

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-1-

ஒரு கருமத்தை அனுஷ்டியா நின்றோம் அது நமக்கு ரஷகம் அன்று ஸ்ரீ சர்வேஸ்வரனே ரஷகன் -என்று
இருக்கும் இருப்பில் குலைத்தலை உடைய நெஞ்சை உடையார் அன்றிக்கே இருப்பாருமானவர்கள் வர்த்திக்கிற –
ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானே –

———————————————————————–

கவளமாக தத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-2-

ஆகாச அவகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு வந்து தோற்ற –
சாபத்தாலே திண்ணியதான நெஞ்சை உடைய முதலை-சின்னம் பின்னம் -என்கிறபடியே
துணி படும்படி பிரதி பஷததின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு ஆழியை ஏவினவன் –

——————-

வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரியகட்டு ஒளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —-9-1-3-

எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட-ஆகாசமும்-பூமியும் குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட –இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய ஸ்ரீ மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –

—————-

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல்காலத் துயர் கொடி யொளிவளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன்மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

ஸ்ரீ வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் –
பாண்டவர்களுக்கு சாரதி யானவன் –

——————-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்ன மென் கமலத் தணி மலர்ப்பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-5-

பூமிப் பரப்பை அடைய இரண்டடியாலே அளப்பதாக பரந்த திக்குகள் அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன் –

——————–

மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர
குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி
குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும்
செழுமையார் பொழில்கள் தழுவு நன் மாடத் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-6-

மழுவைக் கொண்டு பூமியில் ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து
அவர்கள் உடைய ருதிர வெள்ளத்திலே குளித்து உதக் கிரியையும் பண்ணி மிக்க கோபம் தவிர்ந்தவன் –

————————–

வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கை யார் கோனைப்
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே—9-1-7-

இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனை –ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே
வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை பனம் பழம் போலே உதிரும்படி வில்லை வளைத்தவன் –
மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி
ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று –

——————–

அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட வதற்குப்
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
திரை கொணர்ந்துந்தி வயல்தொரும் குவிக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-8-

சர்ப்பத் த்வஜன்-என்னக் கடவது இ றே துரியோதனனை –அவன் தன ஓலகத்தினுள்ளே ஆசனத்தை
ஜகத்துக்கு வேர் பற்றானவனை அளிக்கப் புகா நின்றோம் என்று கூசாதே இட்டு
அதுவே ஹேதுவாக பெரிய வடிவானது அண்ட அவகாசத்தை ஊடுருவ
திக்குகள் தன பக்கலிலே அடங்கும்படியாக வளர்ந்தவன் –

———————–

பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன்
துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-9-

விஞ்சின பாரமானது ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி ஸ்ரீ மகா பாரதத்திலே
ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக ஸ்ரீ அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் –
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன் –

—————-

கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடியுள் நின்றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10-

ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானை –
ஸ்ரீ ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்–லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு ஸ்ரீ பகவத் தாரித்ர்யம் இல்லை – என்கிறார் –

—————————-

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-

மர்மங்களிலே கடாஷியா நின்றார் பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் –
நீ பின்னை செய்தது என் என்ன –இப்பார்வைக்கு நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று அஞ்சுகின்றேன் –
அவன் பார்வையும் அவள் பார்வையும் ஆனதாகிறது – அப்போதை அழகு இருந்த படி காண் –

————————

தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் செஞ்சுடராழியுஞ் சங்குமேந்தி
பாடக மெல்லடியார் வணங்கப் பன் மணி முததொடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-2-

ஒப்பித்துக் கொண்டு இரா நின்றார் –திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திருக் கையிலே உடையராய் இரா நின்றார் –
ஒப்பனை தான் வேண்டாத படி இரா நின்றது திருத் தோள்களை கண்டவாறே –
இவ் வழகு நம்மால் பேசப் போகாது-விஸ்மயப்பட்டு விடும் அத்தனை –

——————-

வேயிரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம்
தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு
சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளோடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-3-

ஓங்கி இருப்பதாய் பரந்து இருப்பதான மலை விளங்கினாப் போலே செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான –
ஆயிரம் தோளையும் உடையராய்-அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார்
கீழே நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது
ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை –
ஓர் ஒப்பனை வேணுமோ -அவ்வடிவு அழகு தானே அமையாதோ-

————————-

வம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன வாழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம்மில்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிது மிளையர்
செம்பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில்
அம்பவளத் திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா—9-2-4-

இவர் திரு வதரம் இருக்கிற படியை பார்த்தவாறே சிவந்த பவளம் என்னலாம் படி இருந்தது –
தேவர் இவர்-இதர விசஜாதியருமாய் இருந்தார்-மனிச்சரோடு கூட்டலாய் இருக்கிறிலர் –
இவர் வடிவு இருந்த படியைச் சொல்லில்-எங்கும் ஒக்க ஸ்ப்ருஹநீயமாய் இரா நின்றது –
உபமானம் இல்லாத விஷயத்தில்-உபமானம் சொல்லி இருப்போமோ

———————-

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழி யம் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழி யொன்றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-5-

இவர் வடிவு இருக்கும் படியைச் சொல்லப் புக்கால் கடல் போலே இரா நின்றது –
பிரதி பஷத்தை கனல் எழக் காய்கிற ஸ்ரீ திரு ஆழியை ஒரு கையிலே ஏந்தி –தமக்கு அடங்காத ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
மற்றைக் கையிலே உடையராய் இருந்தார் –
இத்தைச்சொல்லி நம்மால் கரையிலே நிற்கும் அத்தனை அல்லது நம்மால் உள் இழிந்து பேசப் போகாது –

——————

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6-

கண்டாரை தம் வசமாக்கி தன் காலிலே விழ விட்டுக் கொள்ள அஞ்சன கிரி போலேயுமாய் இரா நின்றார் –
வாக்குக்கு அவிஷயமான விஷயத்தில் நான் எத்தைச் சொல்லுவது –

————————

பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன்
பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலே யும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-7-

வடிவைப் பார்த்த வாறே மேக் சகலங்கள் அன்றிக்கே எல்லாம் ஒன்றாகத் திரண்டு வர்ஷிக்கையிலே ஒருப்பட்ட
மேகம் போலே இரா நின்றது –விசஜாதீயத்துக்கு சஜாதியங்களில் சில வற்றை சொன்ன இடம்
என் சொன்னோம் ஆனோம் –

————————-

மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-8-

என்னை விலக்கப் பார்க்கிற நீங்களும் வந்து-காணுங்கோள் -உங்களால் தான் விடலாமாகில் –
ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருந்தால் இருக்கும் அழகு தான் இப்படியேயோ –

—————–

எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர் ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா —-9-2-9-

திரு முகத்திலே விழித்த வாறே-ஆபத் சகர் என்று தோற்றும்படி இரா நின்றார் –

——————–

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –ஸ்ரீ திரு நாகையிலே தன் அழகாலே
விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –
தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்-உயிர் தோழியும் தானுமாய் அனுபவித்த ஏழு பாடல்கள்
எல்லாரையும் குறித்த இரண்டு பாடல்கள்-பல ஸ்ருதி ஒன்றும்
இத்தை அப்யசிக்க வல்லார்கள் இங்கும் கோலின பலங்களும் பெற்று இது தன்னின் பலமான ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாய் இனியராகப் பெறுவார்கள் –

———————-

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே —9-3-1-

ஒரு ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் போல்வாருக்கு அன்றோ அவன் தானே வரும் அளவும் ஆறி இருக்கிறோம் என்று தரிக்கல் ஆவது
பழையார் பாடாற்ற வல்லது புதியார் க்கும் ஆற்றப் போமோ
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -என்னக் கடவது இறே
அசாதாரணரான ஸ்ரீ நித்ய சூரிகளிலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் போல்வார் தான் பட்டார்களோ
நான் பட்டபடி -என்கிறார் என்று ஆயிற்று –
இதுக்கு ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்யும் படி –-இது தன்னை ஸ்ரீ ஆழ்வார் பாடா நிற்க
ஸ்ரீ எம்பெருமானார் -அங்கு ஆர் உயிர் பட்டது இங்கே எனது உயிர் பட்டது -என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ ஆழ்வார் உடைய அனுபவத்தை யாகில் ப்ராப்யமாக சொல்லுகிறதும்-ஆசைப் படுகிறதும்
அதுக்கு அவ்வருகே ஒரு ஏற்றம் சொல்லுவாரைப் போலே சொல்லுவான் என் என்று நான் ஸ்ரீ ஜீயரைக் கேட்க
நாவோடையான ஸ்திரீக்கு பர்த்தாவின் உடைய கர ஸ்பர்சம் உண்டானால்-வேர்ப்பது விடுவது ஆமாபோலே
அனுபவத்தில் புதுமையால் படுகிற அலமாப்பு காணும் என்று அருளிச் செய்தாராக ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர் –

———————–

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —-9-3-2-

அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே விபுத்வத்துக்கு அவ்வருகாம் படியாய் இருக்கை-
அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை கொள்ளுகிறது –
அப்படியே இருக்கும் இறே சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே –
பிரிகிற தமக்கும் அது உண்டாகில் பிரியான் இறே-இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை –

—————————–

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

நினைக்க ஒண்ணாமை அன்றிக்கே மறக்க ஒண்ணாது -என்கிறது –

—————————

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —-9-3-4-

அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே –
ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று –
பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே –

————————

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து புல்லாணியே —9-3-5-

கீழே மறக்க ஒண்ணாது என்றது இறே-இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது –
மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது-அவை இரண்டும் அரிதாக நின்றது
உணரில் -உள்ளம் சுடுமால்–என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை
நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை –

———————–

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே —9-3-6-

அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும் அரிது
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை –
வள்ளல் –சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வாதானம் பண்ணினவன் –
மாயன் – இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி அப்போது அப்படி பரிமாறினவன்
மணி வண்ணன் – இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன் –
எம்மான் –அவ் வடிவு அழகை காட்டி என்னை அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன் –

—————-

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப் புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே —-9-3-7-

அவன் ருசி முன்னாக -இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது –
அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –
இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே

————————

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே —9-3-8-

நிர பேஷரான இவர் ஓர் அபலை இறே -என்று பாராதே
நமக்கு ஸ்நேஹிப்பாரைப் போலே சலத்தைப் பண்ணினார் ஆயிற்று –

———————

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே —-9-3-9-

செய்யக் கடவது அல்லாதன எல்லாம் செய்து பெறக் கடவோம்
புருஷார்த்தம் -ஸ்வ யத்ன சாத்தியம் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம் –

———————-

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10-

இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம்
அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் –
இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் –
ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது –
அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே
இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர
அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார் –

———————

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே —9-4-1-

பிரிந்த நிலத்தில் இருக்க ஒண்ணாது ஒழிவது
போகத் தொடங்கின தேசத்திலே போய்ப் புக ஒண்ணாது ஒழிவது
நம் தசை இருந்த படி -என் -என்கிறாள் –

—————–

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்
பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2-

நோவு படுகை நமக்கே ஸ்வ பாவமாய் விட்டது என்று ஒரு வார்த்தை சொல்லி பின்பு பேசாதே இருக்கும் பிரகிருதி அன்றே –
தான் இருக்கிற இடத்தே வர்த்திக்கிற சில பஷிகளை தூது விடுகிறாளாயிற்று
சுலபன் அல்லாதவனை ஆசைப் பட்டு உடம்பு வெளுத்து இருக்கிறேனோ
அது தான் பரத்வம் என்னும் படி இருக்கிற இடத்தே என் தசையை அறிவுயுங்கள் -என்கிறாள் –

———————

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள்
பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே–9-4-3-

கீழே என்னுடைய உடம்பில் நோவை அறிவியுங்கோள் என்றாள்
இங்கு என்னுடைய சிந்தா வ்யதையை அறிவியுங்கோள் -என்கிறாள் –

———————

பரிய விரணியதாக மணி யுகிரால்
அரியுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்குப்
பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப வந்துகிலும் நில்லாவே —9-4-4-

ஒரு பாலனுக்கு தமப்பன் பகையாக உதவிக் கார்யம் செய்தவன் அபலைக்குத் தன்னைப் பெறாமையாலே வந்த
வ்யசனத்துக்கு வாசி வைத்து உதவின படி காண் –என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான் –

———————–

வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்
புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே —-9-4-5-

இவளுடைய பந்துக்கள் அடைய திரண்டு நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதே அவன் வார்த்தை கேட்டாய் இறே-
நாங்கள் சொன்னதுவே மெய்யாய்-அவன் சொன்ன வார்த்தை பொய்யான படி கண்டாயே –
இனி நாங்கள் சொன்னத்தை கேட்க வல்லையே என்ன
அப்படியே செய்கிறோம் -அவன் பின் போன நெஞ்சை மீட்டால் -என்கிறாள் –

——————–

சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால்
செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன்
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே —9-4-6-

நமக்கு ஆஸ்வாசத்தை பண்ணக் கடவனானவன் போய்க் கொடு நின்றான்-நலிவார் பெருத்திரா நின்றது
அனுபவிக்கலான நிலத்திலே போய்ப் புகப் பெற்றிலோம்-இங்குள்ளவையும் நம்மை விட்டுப் போகா நின்றது -என்கிறாள் –

———————-

கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல்
தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே —9-4-7-

சௌபரி ஐம்பது வடிவு கொண்டு புஜித்தால் போலே ரத்னங்களால் பண்ணப் பட்ட மாடங்கள் தோறும்
தானும் அவனுமாய் அனுபவிக்கக் காணும் கோலிற்று – அது எல்லாம் செய்து சமைந்தேன் –
அப்ராப்யத்தை ஆசைப் படும்படியான பாபத்தை பண்ணின என் மேலே –
வேலையும் வெந்தழலே வீசுமே —இந்த த்வனிக்கு சேஷித்தது உண்டாகா கொண்டு பிரமியா நின்று
இவள் தன் விரஹ அக்னி தன் மேல் படாத படி கடக்க நின்று வீசா நின்றதாயிற்று –

——————–

தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பூஞ்செருந்திப் பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெந்தழலே —9-4-8-

பிரபல விரோதிகளை ஆற்றி உகந்தாருக்கு தன்னைக் கொடுக்க கடவனாக ஆசைப் பட்ட
நமக்கு நம் விரோதிகளை மாற்றி நமக்கு தன்னை தந்தபடி காண் –

———————

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே —-9-4-9-

ஜகதா காரனாய் இருக்கிறவன் –அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன்
அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் –
சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே
நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே-

————————

பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே —9-4-10-

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழியை அப்யசிக்க வல்லார் –இங்கும் குறைவற அனுபவித்து
அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்

————————-

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —9-5-1-

ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு பெறாதே இருக்கிற நமக்கு நாட்டுப் பகையாக விட்டதே-

—————–

தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே
ஊதை திரி தந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-2-

நம்முடைய ப்ராவண்யத்தை குண ஹானியாக உப பாதிக்கை அன்றிக்கே –
ந கச்சின் ந அபராத்யதி -என்று பொறுப்பித்து அவன் திருவடிகளோடு சேர்க்குமவள்
இருந்த இடத்தே கொடுபோய் பொகடுங்கள் –

—————–

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3-

நம் இனம் உள்ள ஊரிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தர்ச நீயமான மயில் நெருங்கி வர்த்திக்கிற பர்யந்தத்தை உடைத்தான
ஸ்ரீ திருக்குறுங்குடி யிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –

—————–

கரு மணி பூண்டு வெண்ணாகணைந்து காரி இமில் ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்—9-5-4-

அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட –
அவனுடைய பெருமை பேசி-ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்-
பேச -என்றதாகில்-ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே
ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும் நின்று சொல்லும்படியாக -என்றாகிறது –

———————

திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் —9-5-5-

முன்பு சொன்னவை போல் அன்றிக்கே தனித் தனியே இவை முடித்து விடுமா போலே இரா நின்றது –
தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி -என்னச் செய்தே பின்னையும் ஜீவித்து இருந்தோம் இறே –
இவை நம்மை வைப்பன வன்றிக்கே இரா நின்றன –

——————-

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6-

மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் –
கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே –

————————

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்–9-5-7-

பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினான் ஆயிற்று –
வ்யதிரேகத்தால் அறிந்து கொள்கிறாள் என்று –
இவர் பிரியேன் என்கிற பாசுரத்தாலே யாகிலும் சொன்னார்
அதுவும் வாய் கொண்டு சொல்ல மாட்டாமை -ஆது கொலோ -என்கிறாள் ஆயிற்று -இவள் –

——————–

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்—9-5-8-

பந்துக்களை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை இறே –
க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்கலாம் படி அன்று -இங்கு ஓடுகிற தசை
இனி அங்கே போய்ப் புக்காலும் அவன் தன்னாலே பேறாம் படி எனக்கு பிரயோஜனம் உள்ளது –
அதில் அவன் கருத்து அறிந்த படியையும் அறிந்து கார்யம் செய்யப் பாருங்கோள் –
உனக்கு க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க ஒண்ணாமைக்கு இப்போது வந்தது என -என்ன –

————————–

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-9-

கோவலர் கூத்தன் -என்றபடி இறே
இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன்
விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே –

—————————

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் —9-5-10-

அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் –
இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே –

————————-

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —9-6-1-

ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன்
அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ –
ரஷ்ய ரஷக பாவம் மாறாதே போரும் தேசமாயிற்று-சீலாவானாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –
அவ் ஊரில் மரங்களுக்கும் அவன் படி உண்டு என்கிறார் –

———————

துங்க வரவத் திரை வந்துலவத் தொடு கடலுள்
பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும்
செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே—-9-6-2-

ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகு எளியர்க்கு கிட்ட ஒண்ணாமை அன்றிக்கே
ப்ரஹ்மாதிகளுக்கும் அகப்பட இக்கரையிலே நின்று கூப்பிடும்படி ஸ்ரீ சர்வாதிகனாய் இருக்கிறவன்
எல்லாருக்கும் ஒக்க அனுபவிக்கலாம் படி வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருக் குறுங்குடி என்கிறார் –
கீழே நின்ற நம்பி அனுபவம்-இதில் கிடந்த நம்பி அனுபவம் –

———————-

வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்
ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக்
கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே -9-6-3-

மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து
முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

———————

சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரவும் கரமும் துனித்த வுரவோனூர் போலும்
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே -9-6-4-

தலைகள் பத்தும் சிதறும்படியாக சென்று அடை மதிள் படுத்தி ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும்
தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே –

——————–

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும்
மைவைத்திலங்கு கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே–9-6-5-

பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் –
முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு –

———————–

தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்
மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில்
கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே —9-6-6-

சாமாராதன உபகரணங்களைத் தரித்துக் கொண்டு அதிகாரிகளான நீங்கள்
அடைவு கெட ஏத்தி அஞ்சலியை பண்ணி உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –

———————

வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே —9-6-7-

ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற விஷயங்களைப் பற்றி இருக்கிற மநோ ரதத்தைத் தவிர்த்து
அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற ஊரைச் சென்று அடையுங்கோள்-

—————-

நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள்
ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள்
தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே –9-6-8-

நம்மோடு ஒரு சம்பந்தம் உடைய நீங்கள் –பர பக்தி உக்தராய்க் கொண்டு -வகுத்த ஸ்வாமி யானவன்
இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள் –

———————-

நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச்
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —9-6-9-

செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள் –

————————

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே —9-6-10-

உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை
அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்

———————

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-

சர்வமும் உப சம்ஹ்ருதம் ஆனவன்று இவற்றுக்கு லய ஸ்தானமாய்- சிருஷ்டி காலம் வந்தவாறே உத்பத்தி ஸ்தானமாய்
காரணாவஸ்திதமான சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய் கார்ய மத்யே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் –
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ திரு வல்ல வாழை வாயாலே சொல்லும்படியாக
நெஞ்சாலே நினைக்கப் பண்ணப் பாராய் -நெஞ்சே என்கிறார் –

——————-

மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற
மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-2-

பாண்டவர்களுக்காக பண்டு தன்னை தாழ விட்டு தூது போன மேன்மையை உடையவர் –
நம்மை யாரோ ஏவிக் கார்யம் கொள்வார் என்று வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை —

———————-

பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று
பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-3-

மகா பலியுடைய யாகத்திலே சென்று தன் அல்லாதத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க
இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையவர் –தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை –

——————-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு ஸ்ரீ பரமபதத்திலே இருக்கிறவர்
அத்தோடு ஒரு போலியான ஒக்கத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையிலே வர்த்திக்கிறவர் –
தர்ச நீயமான கடல் போலே இருக்கிற வடிவை உடையவர் – வர்த்திக்கிற –ஸ்ரீ திரு வல்ல வாழை –
அங்கு உள்ளு நிற்கிறவர் வடிவு அழகு இருக்கிறபடி –

——————-

மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கை மேலங்கை வாய் வைத்து அவள் நாளையுண்ட
மஞ்சனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-5-

நஞ்சாலே நிறைந்து இருந்துள்ள முலையின் மேலே அழகிய கையையும் வாயையும் வைத்து
அவளுடைய ஆயுஸையும் முடித்த -மைந்தனார்
விரோதி நிரசனமே யாத்ரையாய் இருக்கிறவர் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –

———————

உருவினார் பிறவி சேரூன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய்செய்து நின்ற ஐவர் தாம் வாழவதற்கு அஞ்சினாயேல்
திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும்
மருவினார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-6-

ப்ராஹ்மண லஷணங்களால் குறைவற்று இருக்கிற-நாலு வகைப் பட்ட வேதம்-பஞ்சாக்னிகள் பஞ்ச மகா யஞ்ஞங்கள்
அங்கங்கள் ஆறு இவற்றை யாத்ரையாக உடையராய் இருப்பார் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –

———————-

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற
மாயனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-7-

நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடாக உஷ்ண கிரணனான ஆதித்யனாய்
அவனால் வந்த தாபத்தை ஆற்றுகைக்கு ஈடான தண்ணளியை உடைத்தான சந்த்ரனாய் –
மேக சஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசமாய் நிற்கிற ஆச்சர்ய பூதரானவர் –கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –

————————-

மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
சந்துசேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே–9-7-8-

பொற்றாமரையை இருப்பிடமாக உடையாளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் அவளுக்குத் தகுதியான தாமும்
ரகவோஹர்த்தி வைதேஹீம் -என்னுமா போலே –அவன் வரக் கடவ வழி எல்லாம் வந்து நின்றான் –
வந்ததே -என்று ஒரு வார்த்தை சொல்லும் இத்தனை நீ செய்ய வேண்டுவது –

—————-

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த
வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9-

கேவல தர்க்கம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அன்றிக்கே
பிரமாணம் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுமவர்கள்
தன்னை ஒழிய வேறு ஒன்றை போக்யமாக நினைத்து இருப்பார்க்கும் அத்தைக் கொடுக்கும் மகோதாரன் –
இவ்வமிர்தம் எனக்கு வேண்டா என்னாமை கிடாய் வேண்டுவது

———————-

மறைவலார் குறைவிலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை
சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன்
கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவைகற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –9-7-10-

இத்தைக் கற்று வல்லார் –பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய்
தேஹ சமனந்தரம்-நித்ய விபூதியிலே புக்கு-ஏஷஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே
நிரதிசய ஆநந்த யுக்தராவார் –

————————–

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1-

பிராப்த விஷயத்தை வணங்கிலும் வணங்குகிறாய் தவிரிலும் தவிருகிராய் –
இதர விஷயங்களை முந்துற முன்னம் விட்டுக் கொடு நிற்கப் பாராய் -என்கிறார் –

————————

இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில்
விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-2-

ஸ்ரீ நித்ய சூரிகளும் அண்டாந்தர வர்த்திகளானவர்களும் ஆஸ்ரயிக்க ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு
ஆதி ராஜ்ய சூசகமான திரு அபிஷேகத்தை உடைய ப்ரதானர் வர்த்திக்கிற தேசம் –

————————–

பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்
கணி வளர் வேங்கை நெடு நிலமதனில் குறவர் தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-3-

அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு –
அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன் பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம் –

——————–

சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-4-

ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே
ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று
அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் –
பின்னையும் பிற்பாடர் உடைய ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று விரும்பி -வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –

—————-

வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-5-

சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற பூசலிலே பொறுத்த
ஸ்ரீ ஸ்வாமிகள் வர்த்திக்கிற தேசம் –

—————-

விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி
குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில்
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்ற திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-6-

ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி – அங்கு நின்றும் போந்து அவதரித்து
விளாம் பழத்துக்காக ஒரு சிறு கன்றை வீசி
கையிலே குடங்களைக் கொண்டு கூத்தாடி -பெண்கள் உடைய குரவைக் கூத்திலே தன்னைக் கொடு வந்து கோத்து
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடைய ஸ்ரீ சுவாமி வர்த்திக்கிற தேசம் –

—————–

தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர
தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து
மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-7-

ஆஸ்ரித விரோதிகளை போக்குகையில் உண்டான ப்ரீதியாலே உகந்து எறிந்த ஸ்ரமஹரமான வடிவை உடையவன்
ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்கு பாங்கான தேசம் என்று திரு உள்ளத்தாலே ஆதரித்து வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

————————-

புதமிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில்
கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக
மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-8-

ஸ்ரீ திருப் பாற் கடலிலே திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –அங்கு நின்றும் போந்து – அவதரித்து
பதத்தாலே -பதற்றத்தாலே -அடி மேல் அடியாக விட்டுக் கொடு வருகிற குதிரையினுடைய
மிக்க சீற்றத்தைப் போக்கின -ஸ்ரமஹரமான வடிவை உடையவன் வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –

—————————

புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு
எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்திறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-9-

என் குல நாதனாய் அப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவர்
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கலாம் தேசம் என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற தேசம் –

——————–

வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன்
கண்டல் நல வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வார் இக்குரை கடலுலகே –9-8-10-

ஸ்வ ஹிருதயத்திலே அனுசந்தித்துக் கொண்டு பாடுகைக்கு ஈடான பாக்கியம் உடையவர்கள்
இக்கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகர் ஆகப் பெறுவார் –

——————–

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

ஸ்ரீ உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து – ஸ்ரீ கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் –
பிற்பாடராய்-இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக
ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்அணைந்தே விட வல்லளோ –

———————

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே –9-9-2-

மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை –ரஷணத்துக்கு இட்ட வீரக் கழல் த்வனியா நின்றுள்ள
திருவடிகளை –அவற்றைக் காண்கைக்கு கண் படைத்த இவள் கண்டே விட வல்லளேயோ –

————————————————-

உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
அண்டர் தங்கோவினை இன்று அணுகும் கொலோ என்னாயிழையே —9-9-3-

ஸ்ரீ திரு மலையிலே நின்று அருளின –அண்டாந்தர வர்த்திகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை –
அவனுக்கு ஈடாக ஒப்பித்து இருக்கிற இவள்அவ் ஒப்பனையோடு சென்று அணுக வல்லளேயோ –

————————

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே —9-9-4-

சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் –
நமக்கு எளியவன் ஆனவனை –அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள் கிட்ட வல்லளேயோ –

—————————-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை யின்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5-

ஸ்ரீ வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி அளந்தவன் –
ஸ்ரீ திருமலையிலே வந்து நின்ற –அயர்வறும் அமரர்கள் அதிபதியை அவர்களோடு ஒத்த ருசியை உடைய
இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –

——————–

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ —9-9-6-

பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை –
பர பக்தியையும் அத்வேஷத்தையும் பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –
அக் குழலுக்கு தகுதியான அவயவ சோபையை உடையவள் கிட்ட வல்லளேயோ –

————————-

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ -9-9-7-

விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று –
தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து எறடா நின்றுள்ள ஸ்ரீ திருமலையிலே –
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை –
அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற
இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ-

————————

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே —9-9-8-

ஸ்ரீ நித்ய சூரிகள் அனுபவித்த வடிவு அழகை இங்கு உள்ளார் இழவாத படி தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி
தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட ஸ்ரீ திருமலையிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –
தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல இவள் அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ –

——————–

வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே —9-9-9-

ரஷிக்கைக்கு பாங்காக ரஷ்ய வர்க்கம் உள்ள இடம் தேடி வேதைக சமதிகம்யனாய் வைத்து
கண்ணுக்கு இலக்காகும் படி ஸ்ரீ திரு மலையிலே நின்றவனை –
அது தன்னை பரதத்வோடு ஒக்கச் சொல்லலாம் படி எத்தனையேனும் சாலத் தண்ணியர்க்கும்
முகம் கொடுத்துக் கொடு நிற்கிற இடம் இறே இவ்விடம் –-ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க
அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய
ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற கல்யாண குணங்களாலும் உஜ்ஜ்வலிதனாகா நின்றுள்ள
சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கிட்டுக்கைக்கு யோக்யமான அழகை உடைய இவள்
அவனைக் கிட்டிவிட வல்லளேயோ –

———————-

தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே–9-9-10-

பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் –
காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு
பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை –

———————

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே —9-10-1-

தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அடியவர்க்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் –
கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே ஒழுகுமா போலே-மேகம் பொன்களையே சிந்த –
அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய் செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன் –

———————–

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே —9-10-2-

நம்முடைய துக்கங்களை எல்லாம் போக்குகைக்காக பிராட்டிமாரோடே கூட ஸ்ரீ திருக் கோட்டியூரிலே
சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

———————

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை
தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே —9-10-3-

அவ்வோ யுகங்கள் தோறும் ஆஸ்ரயிப்பார் உகந்த திரு நிறத்தை தானும் உகந்து கொண்டு
பிரளய ஆபத்துக்களிலும் உதவும் ஸ்வ பாவனானவன் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் – என்கிறார்

—————–

ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும்
தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே —9-10-4-

ஸ்ரீ பிராட்டியோடு ஒக்க ருத்ரனுக்கும் திரு மேனி யிலே இடம் கொடுத்த சீலவான் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே
சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

————————

வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர்
தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர்
திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே –9-10-5-

பண்டு பூமியை அளந்து கொண்டவன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

——————

காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்
நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத்
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே —9-10-6-

ராவணன் மிடுக்கை அழித்த ஸ்ரீ தசராத்மாஜன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

—————

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும் திருக் கோட்டியூரானே —9-10-7-

கன்றாயும் விளாவாயும் வந்த அசூரர்களால் வரும் நலிவைப் போக்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பண்ணின
மகா அபதானத்தை உடையவன் -இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

—————————-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே—9-10-8-

குருந்து தொடக்கமான விரோதி வர்க்கத்தைப் போக்கின ஸ்ரீ கிருஷ்ணன் -இப்போது
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

—————–

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை
மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தேவ தேவபிரான் திருக் கோட்டியூரானே —9-10-9-

தான் தன்னை சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்கைக்கு ஈடான பக்தியை உடையராய் -ப்ரஹ்மாவோடு சமாநரான-
ப்ராஹ்மணருக்கு ஆஸ்ரயநீயனாய் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

—————–

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே —9-10-10-

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்களுக்கு ஸ்ரீபரமபதமே வாசஸ் ஸ்தானம் என்கிறார் –

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -எட்டாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

July 8, 2019

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1 பிரவேசம் –

கீழ்த் திரு மொழியில்-தன்னுடைய படிகளை எல்லாம் காட்டிக் கொடுக்க அனுபவித்து –
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து –அது கிடையாத படியாலே ஒரு பிராட்டி தசையைப் பஜிதது-
பிராட்டி உடைய -அவஸ்தையைப் பார்த்த திருத் தாயார் –
தன் பெண் பிள்ளை உடைய பாசுரம் இருக்கிற படியாலும் –
தன் பக்கல் விரக்தியாலும் –
ஆசைப் பட்ட விஷயத்தில் பிரேமத்தாலும் –
பிரிந்த விஷயத்தின் வைலஷண்ய குணங்கள் எவ்வளவாக உடைத்தாய் இருக்கும் –
அவற்றிலே கால் தாழ்ந்தமை தோற்ற அவனுடைய
சௌந்தர்யாதிகளையும் –சீலாதிகளையும் –ஆண் பிள்ளைத் தனத்தையும் – வாய் வெருவா நின்றாள் –

என் ஹித வசனமும் கேடகிறிலள்-தன் ஸ்த்ரீத்வமும் பார்கிறிலள் –அவன் ஸ்வரூபமும் பார்கிறிலள் —
அது தானும்-பரத்வத்தில் ஆதல்-விபவத்தில் ஆதல் அன்றிக்கே
அவ்விடங்கள் எல்லா வற்றிலும் சொல்லுகிற ஏற்றங்கள் எல்லாவற்றையும்
உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே புக்கு
அங்கே எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சௌரி ராஜ பெருமாளை சாஷாத் கரித்து
அந்நீர்மையிலே அகப்பட்டாள் போலே இரா நின்றது என்று வினவ வந்தவர்களைக் குறித்துச் சொல்லுகிற
பாசுரமாய் இருக்கிறது –

சில ஆசார்யர்கள் பக்கலிலே சென்று-சில அர்த்தங்களைக் கேட்டு
சரீர பேதத்தளவு அன்றிக்கே -ஜீவர்களுக்கும் பரஸ்பர பேதம் உண்டு என்று அறிந்த ஏக தேச ஜ்ஞான மாத்ரத்தாலே
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஜகத் வைசித்ரி இருந்தபடி என் -என்று கொண்டு ஆச்சர்யப் பட்டு
எல்லாம் அறிந்தான் போலே பூர்ணனாய்
ஸ்வேதகேது வானவன் பிதாவின் அருகே வந்து இருக்க -பிதா -உத்தாலகன்-பிதா மகன் -அருணன் –
பிதாவும் இவன் வடிவில் வேறுபாடு கண்டு
ஜ்ஞாதவ்யாம்சம் இன்னம் அநேகம் உண்டாய் இருக்க எல்லாம் அறிந்தாரைப் போலே இரா நின்றான் –
அவற்றையும் இவனுக்கு அறிவிக்க வேணும் என்று பார்த்து
ஸ்தப்தோசி-பரி பூர்ணனைப் போலே எல்லாம் அறிந்தாயாய் இரா நின்றாய்
தமாதேசமப்ராஷ்ய பரிபூர்ண இவ லஷ்யசே -இந்த ஆதேசத்தைக் கேட்டாயோ/ ஆதேச -பிரசாசனம்
பிரசாசிதாரம் சர்வேஷாம் -என்று ஒன்றை அறியவே எல்லா வற்றையும் அறிந்ததாய்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களையும் நியமிக்கக் கடவ ஸ்ரீ சர்வேச்வரனையும் அறிந்தாயோ நீ -என்ன
கோன்வாதேச -ஆதேசம் ஆவது என் என்ன-அவன் வேதத்தில் பூர்வ பாகத்தில் சிலவற்றை ஆதல்
ந்யாயாதிகளில் சிலவற்றை யாதல் -கேட்ட அளவாய்-வேதாந்த ஜ்ஞானம் இன்றிக்கே ஸ்ரீ சர்வேஸ்வரன் ஒருவனைக் கொண்டு
குலாலாதிகளுக்கு தண்ட சக்ராதிகள் மாதரம் நிமித்தமும் சஹாகாரியுமாம் அளவே ஸ்ரீ ஈஸ்வரன் –
உபாதாநமும் தானேயாய் -பஹூச்யாம் -என்கிற காரியமும் ப்ரஹ்மமேயாய் –
சித் அசித்துக்கள் இரண்டும் விசேஷணம் என்று கொண்டு வேதாந்திகள் போன வழியையும் அறிய வேணும் காண் -என்றான் –

அங்கு – அவன் அறியாத அம்சம் அறிவிக்கைகாக பிதா கேட்டான் –
இங்கு –தன் பிள்ளை உடைய படியாலும்-பேச்சாலும்
இவள் சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை மறுபாடுருவ அறிந்தாள்-என்று
அத்தை தான் அறிந்தமை தோற்றச் சொல்லுகிறாள் –

ஸ்ரீ ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன் புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய்
பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான் –
ஸ்ரீ கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே-சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –
பிதாவானவன் புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க
ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள் காண் -என்கின்றான் –

——————————–

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-பிரவேசம் –

உண்டிவர் பால் அன்பு எனக்கு -என்று தன் மகள் பாசுரத்தைக் கேட்ட திருத் தாயார்
இவள் அபஹ்ருத சித்தையானாள் போலேயாய் இருந்தது –
பும்ஸாம் திருஷடி சித்த அபஹாரிணாம் -என்கிற ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கண்டாள் அல்லள்-
கண்டவர் தம் மனம் வழங்கும் ஸ்ரீ கண்ண புரத்தம்மானைக் கண்டாளாம் இத்தனை
என்று நினைத்து -முன்னிலையாய்
ஸ்ரீ சௌரிப் பெருமாள் முகத்தைப் பார்த்து
இவள் நெஞ்சைப் பறிக்கை அன்றிக்கே கையில் வளையையும் பறிக்க வேணுமோ -என்கிறாள் –
கண்டவர் தங்கள் உடைய கண்ணையும் நெஞ்சையும் பறித்துக் கொண்டு போமவர் இறே ஸ்ரீ சக்கரவர்கி திரு மகன் –
கண்ட போதே தம்தாமுடைய நெஞ்சுகளைக் கொள்ளலாகாதோ என்று
எழுதிக் கொடுக்கும் படி இறே ஸ்ரீ கிருஷ்ணனன் வடிவு அழகு இருக்கும்படி –

—————————

கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரையெடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-பிரவேசம் –

ஏதைர் நிமித்தை ரபரைச்ஸ் ஸூ ப்ரரூ சம்போதிதா ப்ராகபி சாது சித்தை
வாதாத பக்லாந்த மிவ பிரணஷ்டம் வர்ஷேன பீஜம் பிரதி சஞ்ச ஹர்ஷா –
கை வளை கொள்வது தக்கதே -என்று தாயார் சொன்னவாறே
இத்தைக் கேட்டு உணர்ந்த பெண் பிள்ளை தன் கையைப் பார்த்து-இழந்தேன் வரி வளை -என்கிறாள் –
கீழ்த் திரு மொழியிலே -கை வளை கொள்வது தக்கதே -என்று திருத் தாயார் சொன்னாள்
அவள் பல காலும் சொல்லக் கேட்கையாலும்-இவள் அது தன்னை வாய் வெருவுகையாலும்
கீழ் பிறந்த மோஹமானது போய்-அல்பம் அறிவு பிறந்து-அது தான் ஆஸ்வாசத்துக்கு உடலாகை தவிர்ந்து
தான் படுகிற வ்யசனத்தை அனுபாஷிக்கைக்கு உடலாக-அத்தாலே இரவல் வாயாலே
தன் இழவைச் சொல்லுகை அன்றிக்கே
தானே தன் இழவுகளைச் சொல்லி கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –

————————-

விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-1- பிரவேசம் –

இப்பிராட்டி தன் இழவைச் சொல்லி பரவசையாய் விழுந்து கிடந்தாள்-
தளர்த்தியாலே உடம்பு கிருசமாய்-குழலும் பேணாதே பூவும் மறுத்துக் கிடக்கும் இறே-
இத்தை அறியாதே -பழைய வாசனையைக் கொண்டு
மது பானம் பண்ணுவதாக சில தும்பிகள் வந்து பறந்தன –
அத்தைப் பார்த்து -வாஹி வாத யத காந்தா தாம் ச்ப்ருஷ்டவா மாமபிஸ் ப்ருச -என்னுமா போலே
மதுவுக்கு கிருஷியைப் பண்ணி மது பானம் பண்ணப் பாராய் -என்கிறாள் —

——————

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1–பிரவேசம் –

அங்குத்தை சம்பந்தம் உள்ளது ஒன்றைக் கொண்டு வந்து என்னை ஆஸ்வசிப்பிக்க வேண்டும் என்று
சில தும்பிகளை போக விட்டாள் –
அவையும் போய் அவனைக் கொடு வந்தால் தானும் அவனுமாக அனுபவிப்பதாக இவள் இலையகல
பாரித்து கொண்டு இருந்தாள் –
அவன் வந்திலன்–அதுக்கு மேலே பாதக பதார்த் தங்கள் மிகைத்து அவற்றுக்கு ஆடல் கொடுத்து பதார்த்த தர்சனம் பண்ணிப்
போது போக்க ஒண்ணாத படி கண்ட விடம் எங்கும் இருள் மூடி ஹிதம் சொல்வாரும் அழைப்பாரும் தேட்டமாம் படியாய் விழுந்தது –
தானும் ராத்ரியும் பாதக பதார்த்தங்களுமேயாய் நோவு பட்டு ஸ்ரீ திருவாய்ப் பாடியிலே ஸ்ரீ கிருஷ்ணனைப் பிரிந்த பெண்கள் எல்லாரும்
ஒரு சந்தையில் பட்ட பாட்டை இவள் ஒருத்தியும் பட்டு கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –

———————–

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1-பிரவேசம் –

ஆதித்யனும் வந்து உதிக்கிறிலன்-
நாழிகையும் கல்பகத்தில் காட்டிலும் நெடிதாய்ச் செல்லா நின்றது –
அநுகூல பதார்த்தங்களும் பாதகமாய் நின்றன–ஒரு துணை காண்கிறிலேன் –
சத்தையும் கூட அழியும் அளவாகா நின்றது –
இது எவ்வளவாய்த் தலைக் கட்டுமோ -அறிகிறிலேன் -என்றார் கீழில் திரு மொழியில் –

சம்சார ஸ்வ பாவத்தாலே இவை தான் ஒருபடிப் பட்டு நில்லா விறே-
ஆகையால்-ஆதித்யனும் ஒரு கால் வந்து உதிக்கவும் கூடும் இறே –
இவை தான் அகஞ்சுரிப் பட்டவாறே சொன்ன வார்த்தையும் செவிப்படும் –
அவன் வந்திலன் என்று நீர் நம்மைச் சொன்னவிடம் தப்பைச் சொன்னீர் –
நாம் ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து நிற்கிறது ஏதுக்காக–ஆஸ்ரித அர்த்தமாக அன்றோ நாம் இங்கு வந்து நிற்கிறது –
நமக்காக என்று நீர் அறிந்தீர் ஆகில் நமக்கு ஒரு குறைகளும் இல்லை –
நினைத்த அன்றே எல்லாம் செய்கைக்கு ஒரு தட்டும் இல்லை என்று இருந்தீர் ஆகில்
இனி அவ்வருகு உள்ளவை எல்லாம் தன்னடையே வருகிறது என்று ஆறி இருக்க அமையாதோ என்று
அவன் சமாதானம் பண்ண -சமாஹிதராய் ஸ்ரீ ஆழ்வார்
தம் இடையாட்டத்தில் தாம் கை வாங்கி இருந்தார் –
அவனோ வந்து உதவுகிறிலன்-இது எவ்வளவாய் வந்து தலைக் காட்டுகிறதோ -என்று
ஒரு நீர்ச் சாவியாய் கிடக்கிற அநுகூல வர்க்கத்தைப் பார்த்து –நீங்கள் இங்கனே நோவுபட வேண்டா
நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஒரு விரகு உண்டு -என –
அதாகிறது
ஸ்ரீ சர்வேஸ்வரன் நம்முடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனான் –
நாமும் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்- போருங்கோள் என்கிறார் –

———————–

வியமுடை விடையின முடைதர மட மகள்
குயமிடை தடவரை யகலம துடையவர்
நயமுடை நடையன மிளையவர் நடை பயில
கயமிடை கண புர மடிகள் தமிடமே —8-7-1-பிரவேசம் –

வருந்தாது இரு -என்றார் – என்ன வாசி கண்டு வருந்தாது இருப்பது என்ன –
ஸ்ரீ பரமபதம் நமக்கு பிராப்யம் ஆகிறதும்
பிராப்யன் ஆனவன் நித்ய வாஸம் பண்ணுகையாலே அன்றோ –
ஆனபின்பு
ஸ்ரீ பிராட்டிமாரோடு-சேதனரோடு-ப்ரஹ்மாதிகளோடு
வாசி யற-எல்லாருக்கும் ஒக்க பிராப்யன் ஆனவன் தான்
தனக்கு பிராப்யம் என்று விரும்பி வர்த்திக்கிற தேசம்
ஸ்ரீ திருக் கண்ண புரம் –
ஆனபின்பு-நமக்கும் அவ்விடமே பிராப்யம் என்று அத்தேசத்தை அனுபவிக்கிறார் –

——————-

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1- பிரவேசம் –

ஸ்ரீ திருக் கண்ண புரம் பிராப்யம் என்றார் கீழ் –
நமக்கு பிராப்யம் என்னும் அளவேயோ-அவன் அநாதி காலம் எதிர் சூழல் புக்கு தட்டித் திரிய
நாம் அத்தை அறியாதே இருந்து திரிந்த நாளிலே இழவு எல்லாம் தீரும்படியான தேசம் அன்றோ – என்கிறார் –

——————–

கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை
எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே—8-9-1-பிரவேசம் –

தாம் நெடும் காலம் இழந்த இழவுகள் எல்லாம் தீர ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே தம்மை அனுபவிப்பதாக
எழுந்து அருளி இருந்தான் -என்றார் -கீழ்த் திரு மொழியிலே –
இதில்
இப்படி என் இழவு எல்லாம் தீர்க்க வந்து அருளி நிற்கிற ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே -ஜ்ஞான பிரதான தேசம் —
கருவரை போல் நின்றானுக்கு அடியேன் வேறு ஒருவர்க்கு உரியேன் அல்லேன் என்கிறார் –

——————-

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-பிரவேசம் –

கண்ணாலே கண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ -என்று சொல்லி நின்றாரே –
கண்ணாலே கண்டு கழிக்கை பேறு ஆனால்
அதுக்கு தன கை பார்த்து இருக்க வேண்டும்படி இருக்கிறவனை
கேட்போம் என்று பார்த்து நீ சொல் -என்கிறார் –
உம்முடைய அநந்ய கதித்வத்தை ஆவிஷ் கரித்து கைங்கர்யத்தை ஒழியச் செல்லாத உம்முடைய சாபல்யத்தை
ஆவிஷ் கரித்த நீர் கைங்கர்யம் பெற்றீரே –
வாசிகமான அடிமை செய்யா நின்றீர் ஆகில் இனி வேண்டுவது உண்டோ என்று
அத்தை இவர் திரு உள்ளத்திலே படுத்த – அத்தாலே இனியராத் தலைக் கட்டுகிறார் –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – எட்டாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

July 8, 2019

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

ஆயுதம் என்று இருக்கும் அளவன்றிக்கே பூஷணம் என்று இரா நின்றாள் –
அனுகூலருக்கு வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டே இருக்கும் படியையும்
பிரதிகூலர் பிடித்த பிடியிலே மண் உண்ணும் படியுமாயும் இருக்கும் –
இவள் சொல்லுகிறது தன்னையே தானும் சொல்லச் செய்தே இவள் சொல்லக் கேட்டால் போலே இருக்கிறது
இல்லை யாயிற்று திருத் தாயாருக்கு –
திவ்ய ஆயுதங்களை அனுசந்தித்த இது-அவ்வாயுதங்களின் வழியே -அவற்றைத் தரித்து இருக்கும்
திருத் தோள்கள் அளவும் கொண்டு போய் மூட்டிற்று
திவ்ய ஆத்மா குணங்களிலும் திவ்ய ஆத்மா ஸ்வரூபத்தில் காட்டிலும் அனுபாவ்யமாய் இருப்பது திவ்ய விக்ரஹம் இறே
பகவத் பிரசாதம் அடியாக ஜ்ஞானம் பிறந்த ஆழ்வார்கள் திவ்ய விக்ரஹம் அல்லது அறியார்கள் இறே
இவ்விஷயத்தில் பிராவண்யம் தான் திருத் தாயாருக்கு அபிமதமாய் இருக்கச் செய்தே
அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது என்று நிஷேதிக்கிறாள் இத்தனை இறே –
நெடுநாள் பெற்று வளர்த்த என்னோட்டை சம்பந்தம் அற்று அவ் ஊரில் சம்பந்தம் தோற்றி இரா நின்றது
இவள் வார்த்தை இருக்கிறபடி –
முதலிலே சர்வ பர ந்யாசம் பண்ணினவர்களுக்கு இங்கேயே எல்லாம் புஷ்க்கலாமாய் இருக்கும் இறே
இவள் பேச்சைக் கொண்டு இவள் ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே புக்கு
ஸ்ரீ சௌரிப் பெருமாளை சாஷாத் கரித்தாள் ஆகாதே என்று சொல்லலாய் இரா நின்றது –
அகவாயில் ஓட்டம் எல்லாம் வார்த்தையிலே தெரியும் இறே-என்கிறார் முதல் பாசுரத்தில்

கையும் திவ்ய ஆயுதங்களுமாய் பண்ணின உபகாரம் இன்னளவு என்று பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ –
நிருபாதிக பந்து என்று தோற்றி யன்றோ செயல் இருக்கிறது –
தன்னை உபகரிக்கைக்கு தான் முற்பாடனாய் அவசர ப்ரதீஷனாய் -வந்து நிற்கிறபடி –
அஞ்சன கிரி போலே யாயிற்று கண்ணுக்கு விஷயமான போது இருக்கிறபடி –
அவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கையே அன்றிக்கே-இவளும் ஆபி முக்கியம் பண்ணப் பெற்றது
வடிவு அழகிலும் ஔதார்யம் தோற்ற நின்ற நிலையிலும் போலே காணும் இவள் கண் விழித்தது –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

சேஷித்வ சூசகமாய் இருக்கும் இறே திரு அபிஷேகமும் திருத் துழாயும் –
அர்ஜுனனுக்கு பர பஷத்தின் உடைய கழுத்து தோற்றினால் போலே
வைத்த வளையமே யாயிற்று இவளுக்கு தோற்றுகிறது –
ஸ்ரீ பிராட்டி எழுந்து அருளி இருந்த திரு மார்பிலே விளங்கா நின்றது –-ஆபரணம் மிகையான மார்பு –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும்படி ஆபரணத்துக்கு ஆபரணமான திரு மார்பிலே
ஆபரணங்களும் ஸ்ரீ கௌஸ்துபமும் விளங்கா நின்றது –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ பெரிய திருவடி முதுகில் இருந்து இருப்பைக் காட்டி என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் –
ஹிதம் சொல்லி விலக்குகிற நீங்களும் பாருங்கோள்-
அழகிய பவளம் போலே இருந்துள்ள திரு வதரத்தைக் கண்டார்க்கு விட்டுப் போகலாய் இருந்ததோ –
உக்தி மாத்ரத்திலே மீளாதே அவ்விஷயத்தைக் கண்டு அனுபவித்தாள் என்று தோற்றி இரா நின்றது –
சேமித்து வைத்த வஸ்துவை இவள் ஒருத்தியுமே அறிந்து கொண்டாள் போலே இருந்தது –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது –
சேர்ப்பாரும் அருகே இருக்க -நான் எத்தைச் சொல்லி அகலுவது -என்னா நின்றாள் –
எனக்கு பற்றாசானார் இருக்க நான் என்ன கண் அழிவு சொல்லிக் கடக்க போவது
போக்யதை இல்லாமையோ –பிராப்தன் அல்லாமையோ –சேர்ப்பார் இல்லாமையோ –நான் எத்தைச் சொல்லி அகலுவது –
நிரதிசய போக்யனான இவனை இவள் அனுபவித்து சொல்லுகிறாள் போலே இருந்தது
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –

உபமானம் கதிர் பெருக்க வேண்டி இருக்கிறபடி –
கடலைக் கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலேயும்-அஞ்சன கிரி போலேயும்
இருக்கிற வடிவை உடையவன் என்னா நின்றாள் –
ஸ்ரமஹரதையும் அபரிச்சேத்யையும் இரண்டையும் சொல்லுகிறது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அவ் ஊரில் ஒருவரும் தஷிணை கொடுத்து ஹோமம் பண்ணுவிப்பார் இல்லை யாயிற்று –
தன கையால் வளர்க்கப் பட்ட அக்னியை உடையனாகை அன்றோ
அவன் பரியட்டமே பிடித்து அடைய இவளுக்கு சிவந்து தோற்றுகிறது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

அவ் ஊரில் விழுவேடு எடுத்துக் கொண்டு அறிதல் – புஸ்தகம் பார்த்து அறிதல் -செய்வார் இல்லை –
ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண க்ரமத்தாலே கற்ற சாஸ்திரங்களையும்
வேதங்களையும் உடையராய் யாயிற்று எல்லாரும் இருப்பது –
அவ் ஊரில் அவனையே கண்டாள் ஆக வேண்டாவோ –
வேதமயன் மேலே வருகிறபடியையும்-யமிந்திரமாஹூ -இத்யாதிப் படியையும் சொல்லும் போது –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே –எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஸ்ரீ ஜீயர் –
கண்டவர்கள் நெஞ்சை மேல் எழுத்துக் கொடா நிற்பர்கள் ஆயிற்று-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே
தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————–

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-

உம்முடைய சர்வஞ்ஞதைக்குப் போருமோ இவள் கையில் வளையை அபஹரிக்கை –
அது கிடக்கட்டும் –அக்லிஷ்ட ஜ்ஞானரான நித்ய சூரிகளுக்கு நிர்வாஹகராய் இருக்கக் கடவ நீர்
ஒரு அபலை கையில் வளையை அபஹரிக்கை உம்முடைய மேன்மைக்கு போருமோ –
உம்முடைய பிரணயிதவத்துக்கு நமஸ்காரம் –
ஒரு பெண் பெண்டாட்டியை மார்விலே வைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறே நீர்
ஒரு அபலை கையில் வளையை அபஹரிகைக்கு தகுதியோ
பிறர்க்கு உடைமையாம் உம்முடைய இவ்வடிவை அபேஷித்தாருக்கு கொடுக்க அன்றோ தகுவது –
இத்தனை போக்கி-பிறர் உடைமையை அபஹரிக்குமோ -(என்று திருத்தாயார் சொல்ல )
அந்நிதியை உடையவன் கொடுக்க கொள்ளுமது ஒழிய
மேல் விழுந்து கொள்ளுதல் ஆத்மா அபஹாரிகள் கிருத்தியம் அன்றோ
ஆனபின்பு இக் கைவளையை கொள்ளத் தகும் காண்-என்று ஸ்ரீ சௌரிப் பெருமாள் இதுக்கும் உறைக்க நின்றார்-

ஓர் அஞ்சலி பண்ணினாள் என்ன
இது குறையாக வேணுமோ –பக்தா நாம் -ந தே ரூபம் – என்று அன்றோ உன் ஸ்வரூபம்
உன் உடைமை யானது தோற்ற அஞ்சலி பண்ணினாளே
இவள் உடைமையை கட்டிக் கொண்டு கிடக்கிற நீ அன்றோ ஆத்மா அபஹாரி
பரம பிரணியியாய் இருக்கிற உனக்கு கொடு போக்கை தகுமோ
சங்கு தங்கு முன்கை நங்கை -என்கிற அவனைப் போலே இருக்கை அன்றோ தகுவது-என்கிறார் முதல் பாசுரத்தில்

தன் மகளுக்கு இந்த அதி பிராவண்யம் உண்டாகைக்கு அடி சம்சர்க்க தோஷம் இறே என்று நினைத்து
நிர்மானுஷ்யமான நீணிலா முற்றத்திலே வைத்தாள் –
இவளுக்கு அபிமதம் ஸ்ரீ சௌரிப் பெருமாள் பக்கலிலே ஆகையாலும் –
இவள் தான் லஷ்யத்தை உடையாள் ஆகையாலும்
திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயம் ஆயிற்று –
நிஷேதிக்கிற தாயையும் கூட திருக் கண்ண புரத்தைப் பாராய் -என்றால்
நல்லது கண்டால் தனியே அனுபவிக்கும் பிரகிருதி அன்றே –
பிராப்ய பிர்ராபகங்கள் இரண்டும் ஸ்ரீ ஈஸ்வரன் திருவடிகளே -என்று காட்டிக் கொடுக்கும் ஸ்ரீ ஆசார்யன் –
அவ்விரண்டு அர்த்தைத்தையும் என் நெஞ்சில் பிரதிஷ்டிப்பித்த
உன் திருவடிகள் அன்றோ என் புருஷார்த்தம் -என்று இறே சச் சிஷ்யன் இருப்பது –
ஸ்ரீ பாணனார் ஆகிறார் –-சேதனருக்கு ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் மறத்தைப் போக்கி
சேஷத்வ ஞானத்தை உணர்த்தி சேர விடும் ஸ்ரீ ஆச்சார்யன் இறே
இவள் காரியமும் கிடக்கிடும் -ஸ்ரீ சௌரி பெருமாள் காரியமும் கிடக்கிடும்
அடியிலே இவள் கையிலே மடலைக் கொடுத்து கொல்லை யாக்கி
புறப்பட விட்ட-ஸ்ரீ நறையூரார் கார்யமே நன்றாய் தலைக் காட்டிற்று -என்கிறாள் –இரண்டாம் பாசுரத்தில்

அபஹ்ருதய ஹ்ருதையை யாகையாலே அஹ்ருதய உக்திகளை பண்ணா நின்றாள் –
ஆற்றுப் பெருக்குப் போலே மேன்மேல் என வரை யிட்டுக் காட்டும்
ஐஸ்வர்யத்தை உடைத்தான -வரையிட்டு -அந்த அந்த மலைகளை இட்டு -திருமலை -நீர்மலை -திரு மெய்ய மலை –
அங்கு உள்ள கல்யாண குணங்கள் நிறைந்த –ஸ்ரீ திருக் கண்ண புரத்தை வாய் விட்டுப் பேசா நின்றாள் –
பேசுவதோர் அவஸ்தையும்-உருகுவதோர் அவஸ்தையும் இன்றிக்கே பேசின வாயோடு நீர்ப் பண்டம் ஆகா நின்றாள் —
இவ்வாற்றாமைகளுக்கு அடி பாபம் இறே –
மதுரா நாம நகரீ புண்யாபாபா ஹரீ சுபா -என்று அநவத்யம் நின்ற தேசத்தை பேசவே பாபங்களும் போம் –
போகங்களும் உண்டாம் -என்றது இறே சாஸ்த்ரம்-அது இவள் அளவும் காணாது ஒழிகிறது என் பாபம் இறே
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இப்பருவமாய் இருக்கிற இவளுக்கு தாரக போஷகங்கள் வேண்டாவோ-இவை இருந்தபடி என் என்ன –
ஸ்ரீ கண்ணபுரம் தொழும் –இது இவளுடைய தாரகம் –
அவன் ஊரைத் தொழுகையாலே ஊண் போயிற்று –அவன் வடிவை மநோ ரதிக்கையாலே உறக்கம் போயிற்று இவளுக்கு –
பருவம் இதுவாவதாம்-தாரக போஷங்கள் இவை யாவதாம் இது என்ன ஆச்சர்யம் இருந்த படி
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அவனைத் தொழும் அளவன்றியே அவனூரைத் தொழும் இவளுக்கு என்ன பெண்மை-
தொழும் –அவனுக்கு அவ் ஊர் நிரூபகம் ஆனாப் போலே யாயிற்று இவளுக்கு தொழுகையே நிரூபகமாய் இருக்கிறபடி
அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியனாகப் பெற்றோமே -என்ற வ்யபதானங்களைக் கேட்ட மாத்ரத்திலே
அவ் உடம்போடு அணைந்தால் பிறக்கும் ஆச்வாசங்கள் அடைய பிறந்து சந்துஷ்டை யானாள் –
அவாப்த சமஸ்த காமனானவன்-ஒருத்தி உடைமையை ஆசைப் படுவதாம்-சர்வ சக்தனானவன் களவிலே இழிவதாம்
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியன் ஆவதாம்-இனி நமக்கு ஒரு குறை உண்டோ -என்கிறாள் –ஐந்தாம் பாசுரத்தில்

அர்ச்சாவதாரத்தை பற்றுமவள் இறே-அர்ச்சாவதாரத்துக்கு கொண்டக்கோல் நாட்டின தேசம் இறே திருமலை –
பொன்னிறம் ஆவது எது-ஸ்வா பாவிகமான தன்னிறம் ஆவது எது-என்ன
ய ஆத்ம நிதிஷ்டந ஆத்ம நோந்தர – யஸ் ஆத்மா சரீரம் -என்று ஸ்ருதிகள் சொல்லுகிறபடியே
சரீர சேஷத்வமும் சேஷ சேஷி ஜ்ஞானமும் அந்த ஜ்ஞானத்தால் பிறக்கும் ஆனந்தமும்
ஆக -சேஷத்வ ஞானா நந்தங்கள் -தன்னிறம் ஆகிறது
பொன்னிறம் ஆகிறது-தேவோஹம் மனுஷ்யோஹம் என்று ப்ரவிஷ்ட சரீரங்க ளிலே ஆத்ம புத்தியைப் பண்ணி
துக்க அஞ்ஞான அமல அதர்ம என்கிற தர்மங்களை ஏறிட்டுக் கொள்ளுகை
ஆரூட யோகராய் இருப்பார்க்கு கிட்டாத ஸ்வ பாவங்கள் அடைய ஆரு ருஷூவாய் இருக்கிற இவளுக்குப் பிறப்பதே
இது ஓர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறாள் –ஆறாம் பாசுரத்தில்-

திரு வரங்கம் திரு வரங்கம் -எனபது இவளுக்கு ஆசை –ஆனால் அது சொல்லத் தட்டு என் -என்ன
இவள் சத்பிரக்ருதி யாகையாலே வாய் விடில் சிதிலை யாகக் கூடும் என்று வாய்க்காவல் இட்டு வைப்பார்கள் பந்துக்கள் –
திருக் கண்ண புரம் ஆகிறது சமுத்திர மத்யத்திலே புதியதாக குடி ஏறின த்வாராவதி போலே ஆயிற்று
வேலை மோதும் மதிள்-வெள்ளி ஏய்ந்த மதிள் -என்றது தனக்கு ஸ்மாரகமாய்
நலிந்த சந்த்ரனுக்கும் கடலுக்கும் தோள் தீண்டியாய் இறே இருப்பது
மயர்வற்ற யதா ஜ்ஞானம் பிறந்தால் ஆரூட யோகராய் இருப்பார்க்கும்
அபஏவச சர்ஜா தௌ -என்கிற அப்ஸ்ருஷ்டி வாசகமான மூல பிரக்ருதியும்
அதின் கார்யமான சப்தாதிகளும் போனால் அல்லது அனுபவம் பூர்ணம் ஆகாது இறே
இங்கே கடலின் உடைய ஸ்தானத்திலே பிரக்ருதி-அதில் பிறந்த சந்தரன் ஸ்த்தானே சப்தாதிகள் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இவர்களுக்கு பந்தத்திலும் ஆஸ்ரயணத்திலும் பேதம் இல்லை இறே –
பலத்திலே இறே பேதம் -ஆகையால் -எல்லாம் -என்கிறாள் –
இவளும் இவ் ஊரை ஆசைப் பட்டவள் ஆகையாலே இவ் ஊரைத் தொழுகிறாள்
ஸ்ரீ கிருஷ்ணனை ஆசைப் பட்ட பெண்கள் ஸ்ரீ கிருஷ்ணன் மகனான காமன் காலிலே விழுந்தார்கள் இறே
ஸ்ரீ உடையவர் பெருமாளுக்கு நெடுநாள் திரு மஞ்சனம் எடுத்து-அவரை ஆஸ்ரயமாகப் பற்றி
பின்பு இறே ஸ்ரீ கோயிலிலே வந்தது –
ராஜ நீதி இல்லாதார் செய்யவற்றை நீர் செய்யக் கடவரோ –-இழந்தவற்றை மீட்டுக் கொடுக்கை அன்றோ ராஜ க்ருத்யம்
ராஜாக்களே வழி பறிக்கை-ராஜ நீதியோ – அமர்ந்த நிலத்திலே கொடு போய் அனுபவிக்கை அன்றோ தகுதி–என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
இவள் அடியிலே தொழுத போதே அமர்ந்த நிலத்திலே கொடு போனால் -இத் திரு மொழி முடிய அருளிச் செய்விக்க வேண்டுமே-
இங்கு நாமும் நம்முடையாரும் வாயிலே மண்ணைப் பொகட்டு கொள்ளவோ என்று இறே அவன் இருக்கிறது –

பால்யாத்ப்ருப்ருதி ஸூஸ் நிக்த்த -என்று பிறந்த அன்றே கால்கடையிலே தொட்டிலிட்டு வளரும்படி
ஸூஸ் நிக்தராய் இறே ஸ்ரீ இளைய பெருமாள் இருப்பது –
இப்படி இருந்த அவரும் -ப்ராஞ்சலீம் ப்ரஹ்வமாசீ நம் -என்று அவனைத் தொழுதார் இத்தனை இறே
அவனூரைத் தொழுமவள் இறே இவள் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
ஸ்ரீ பெரிய திருவடி -பர்வத சிகரத்திலே ஒரு பெண் பெண்டாட்டி பகவத் குணங்களைப் பேசக் கேட்டு
ஒரு புண்ய ஷேத்ரத்திலே இருக்கப் பெற்றது இல்லையே -என்று வெறுக்க அநந்தரம் விடிந்த அளவிலேபர்வத இவன் போக நினைக்க
இவன் சிறகுகள் உதிர்ந்து எழுந்து இருக்க மாட்டாதே இருந்தான் -என்று ஸ்ரீ மகா பாரதத்திலே ஆரண்ய பர்வதத்திலே எழுதிற்று –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து- பகவத் விஷயத்தில் ஒரு கீற்றுப் புகுர நின்றான் யாவன் ஒருவன்
அவன் பூர்வ வ்ருத்தத்தை பார்த்துக் குறைய நினைக்கக் கடவன் அல்லன் –
அவன் இருந்தபடியே உத்தேச்யம் பண்ணிக் கொண்டாட அடுக்கும் -என்கிற அர்த்தத்தை வெளியிடுகிறது –

இயலாகவுமாம் –இசை யாகவுமாம் -ஏதேனும் ஒரு பிரகாரத்திலே வல்லவர்கள் –
கடல் சூழ்ந்த பூமியிலே சிரகாலம் வாழப் பெறுவார்கள் –
இது கற்றார்க்கு பலம் சம்சாரத்தில் இருக்கையோ -என்ன ஸ்ரீ பரம பதத்தில் தெள்ளியீர் இல்லையே
தெள்ளியீர் உள்ளது இங்கேயே அன்றோ
பாவோ நான்யத்ர கச்சதி -என்று ஸ்ரீ திருவடி ஸ்ரீ ராம குணங்களைக் கேட்டு-அத்தாலே பூர்ணனாய் –
அத்தேசத்தே இருந்தால் போலே தெள்ளியீரை இங்கே பாடக் கேட்டு பூர்ணராய் இருக்கப் பெறுவர்கள் –

————————

கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரையெடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-

மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய் பெரிய மிடுக்கையும் உடைத்தாய்
மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக
மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

குவலயா பீடமானது வெருவும்படியாக அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட
அச் செயலுக்கு வளை இழந்தேன் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

சந்த்ரனுக்கு வந்த ஷயத்தை போக்கி-அது தன்னை தன் பேறாக நினைத்து இருக்கிற
புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர்விவரமாய் இருக்கிற மருதுகள் முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு
என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஈடுபட்டு ஓடி அமுது செய்த-தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து
அத்தை இல்லை செய்கைக்காக –முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அன்று ஹிரண்யன் மிடுக்கு அழியும்படி யாக ஸ்ரீ பிராட்டிமாரும் கண்டு கொண்டு இருக்கும் படியாக
ஸ்ரீ உகிராலே-அவன் உடைய சரீரத்தை பேதித்து தன்னுடைய ஸ்ரீ ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு
என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ-என்று இருந்தாயிற்று வளை இழந்தது
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு
அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தர்ச நீயமான வடிவை உடையனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற –
சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை விஸ்வசித்து முடிந்தேன் –
என்கிறாள் எட்டாம் பாசுரத்தில்

தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு தன்னை கொடுக்குமவன் அன்றோ –
நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து வளை இழந்தேன் -என்கிறாள் ஒன்பதாம் பாசுரத்தில்

நாவிலே பொருந்தும் படி பாட சஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் –
உக்தி மாத்ரத்தைச் சொல்ல புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-1-

சீல குணம் சத் கார்ய வாதம் கொண்டு அறிய வேண்டும்படியாய் இருக்கும் –அங்கு பிரமாணங்கள் சொல்ல அறியும் இத்தனை –
இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்ணாலே காண்கையாலே
அது ஸ்பஷ்டம் ஆவது இங்கே யாயிற்று –
கோல்களிலும் பணை களிலும் வைத்த மதுவை பானம் பண்ணக் கடவ உன்னை
சர்வரச -என்கிற வஸ்துவைப் போய் அனுபவி என்று அன்றோ சொல்கிறது –
ஸ்வாபதேசம்-சப்தாதி விஷய நிச்சாரதையும் –-பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும் சிஷ்யருக்கு அறிவிக்கிறார்
என்கிறார் முதல் பாசுரத்தில்

திருவடிகளை அக்ரமமாக ஏத்தி அதிலே விழுந்து எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணி ஸ்நேஹத்தைப் பண்ணுகிற
நிதித்யாசிதவ்ய -என்று விதிக்கிற விஷயத்தில் அன்றோ நான் உன்னைப் பற்றச் சொல்லுகிறது
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

தங்களை ஆஸ்ரயணீயராக நினைத்து இறுமாந்து இருக்கிறவர்கள் எல்லாரும் அவ்விறுமாப்பைப் பொகட்டு
திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும் படி ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிறவன் –
சஜாதீயர் உடைய யாத்ரை அமையாதோ உனக்கு –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான வடிவை உடையனுமாய்க் கொண்டு
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நீ அங்கே சென்றால் முகம் தருவிப்பார் உண்டு அவன் தான் விரோதி நிரசன சீலன்-
என்றும் ஒக்க ஆபத்துக்களில் உதவிப் போந்தவன்
உதவாது ஒழியிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன்
ஆனபின்பு அவன் பக்கலிலே சென்று இங்கே வந்தூதப் பாராய் -என்கிறாள் –ஆறாம் பாசுரத்தில்

ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே வளைத்து கார்யம் கொள்ளலாம் படி இருக்குமவன் –
அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கும் கூட உத்பாதகன் –
மாலையாய் பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் – ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய
புகரை உடைத்தான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-தர்ச நீயமான திருத் துழாய் மாலையிலே வந்தூதாய் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

காயம் பூ போலே இருக்கிற திரு நிறத்தை உடையவன் –காயாவோடு ஒப்புச் சொல்ல லாவது நிறம் மாத்ரமே –
சர்வ கந்த -என்கிற ஏற்றமே உண்டு –கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு
அவன் பக்கலிலே அறிவித்து எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும் –

———————-

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1-

பிறரால் வந்த விலங்கு பரிஹரிக்குமவன் தன்னால் வந்த விலங்கு பரிஹரியாது ஒழிவதே –
ஸ்ரீ வசுதேவர் காலிலே விலங்கு கழலும்படி வந்து அவதரித்த முக்த்தன் உடைய ஸவபாவத்தை அனுசந்தித்து
ஆபத்துக்களிலே வந்து உதவும் ஸ்வ பாவனான பின்பு
அந்த பித்ராதிகள் அளவில்லாத ஆசையை உடைய நமக்கு வந்து உதவுவானோ என்று பிரிந்து தனி இருக்கிற
என் நெஞ்சானது அவன் பின்னே போயிற்று – என்கிறார் முதல் பாசுரத்தில்

புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று – நாயகனோ வந்து அணைகிறிலன்-
இனி எத்தைச் செய்வது –
ஆசார்ய ஹிருதயம் ஸ்வாபதேசம் -ஊரார் நாட்டார் உலகர் கேவல ஐஸ்வர்யகாம ஸ்வ தந்த்ரர்
பொன்னாச்சி நாச்சியார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் திரு நாட்டுக்கு எழுந்து அருள –
பிரிவாற்றாமை பாசுரங்கள் அனுசந்தித்து இந்த இரண்டாம் பாசுரம்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே -என்னவே
பொன்னாச்சியின் பிராணனும் தன்னடையே விட்டு நீங்கிப் போயிற்று – ஐதிஹ்யம்-

இவ்வளவிலே வாராதே இரான் என்கிற நெஞ்சையும் அழித்து கொடு வந்து தோற்றா நின்றதாயிற்று
இடையன் ஊதுகிற குழல் –பிராமணர் ஊதுகிற குழலுக்கு அகப்படாள் காணும் இவள் –
மாஸூச -என்பார் ஒருவரையும் காண்கிறதில்லை –-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ரஷகன் ஆனவன் இவ்வளவில் வந்து உதவிற்றிலன்
பாதக பதார்த்தம் தானே இனிக் கிருபை பண்ணி மீளில் நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம் –-
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நமக்கு அவன் பண்ணின அருளோடு கூட அதினுடைய பல ரூபமான பகலும் போய் நின்றதாயிற்று –
அருள் போகவே பகலும் போம் இறே –-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நெருப்பை தூவா நின்றுள்ள அம்பை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற வில்லை வளைத்த
மிடுக்கன் வருகிறிலன்-இனி ஒரு அபலை இருந்து நோக்கிக் கொள்ளவோ -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நான் முடியவே அவனைக் கிடையாது –
அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்
ஆனபின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு
பாபம் உண்டாக அறிகிறிலேன் –
இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கண்டத்துக்கு எல்லாம் பாத்த்ய கோடியிலே அந்வயிக்கும் படி மகா பாபத்தை பண்ணின என்னுடைய
தரமி லோபத்தை பண்ணுகையிலே ஒருப்படா நின்றது –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இத் திரு மொழியை அப்யசிக்க வல்லார் –பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து நித்ய விபூதியில் நித்ய சூரிகளோடே கூடி
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்கிறபடியே ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு பின்னை
ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1-

ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே
பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று –
அவனும் நாமும் இவர்களும் சேர வர்திக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த ஸ்ரீ திருக் கண்ண புரத்தை தொழுவோம் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

வயிரம் பற்றித் திண்ணியதான வில்லை கையிலே பிடித்தவனுடைய ஊரான ஸ்ரீ திருக் கண்ண புரத்தை நாம் தொழுவோம் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஆஸ்வாஸ்ய-இவன் இளைத்தால் தன் பரிகரத்தில் உள்ளாரை ஆஸ்வசிப்பிக்குமா போலே நீ போய் ஆஸ்வசித்து வா -என்றான் இறே –
ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று தன்னதான வில்லை வாங்குவதற்கு முன்பே
பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு
வாசஸ் ஸ்தானமான ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் உடைய தலைகளை அறுப்பது தோள்களை துணிப்பதாக கொண்டு
போது போக்காக கொன்ற படி –
நாட்டைத் தன் வடிவாலே பகட்டித் திரிகிற காமனுக்கும் உத்பாதகனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற தேசம் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ பிராட்டி தன் பிரதி பந்தத்தை போக்குகைக்காக தான் யத்தனித்தது உண்டோ –
பிரதிபந்தம் பிரபலமான தனையும் அவனுக்கு கார்யம் செய்தோமாம் படி என்றோ அவன் படி
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனுமாய் – முன் கறுத்து திண்ணியதான தாளை உடைய
குவலயா பீடத்தை அநாயாசேன முறித்தானூர் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ராவணன் பண்ணின பிராதி கூல்யம் தம்பி அளவாக வந்தேறுவதாக இருக்கச் செய்தேயும்
அத்தைப் பாராதே அவன் தம்பிக்கு ராஜ்யத்தை கொடுத்தான் ஆயிற்று –அதுக்கு முன்பு
தமையனுடைய வைரத்துக்கு ஹேதுவாய்க் கொண்டு வந்த மாயா மிருகத்தை ஓர் அம்பாலே முடித்தவன் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

கீழ்ப் பாட்டில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு திவ்யம் வர்ஷ சஹச்ரம்-என்று பதினாயிரம் சம்வத்சரம் கிலேசப் பட்டு
ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு வந்து உதவினான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு -த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச்ச-என்று பிராப்ய ஆபாசங்களையும் விட்டு
சரணம் புகுருகையாலே அரசு அளித்தான் –
எனக்கு அங்கனே இருப்பதொரு நிலையும் அன்றிக்கே சஞ்சலம் ஹி மன -என்கிறபடியே
நின்றவா நில்லாத ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கை உண்டாகையாலே
எங்கனே வந்து இருப்பது என்ன
ஸ்ரீ பாஞ்சாலிக்கு விரோதிகள் என்ற பேர் பெற்றவற்றை எல்லாம் போக்கி அருளினவன் -என்கிறார் –
நெஞ்சை தேற்றுகிறார் -ஏழு எட்டு -இரண்டு பாட்டாலும்
முன்பு பண்ணின பாபங்களை அனுசந்தித்து-என் படக் கடவோம் -என்று பிச்சேறின நெஞ்சே
அனுபவித்து தலைக் கட்ட ஒண்ணாத துக்கங்களிலே நீ கிலேசியாது இரு –என்கிறார் –

மலையை எடுத்து இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்தமாம் படி பண்ணி கொடி போலே அழகிய இடையை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக வலிய தாளை உடைய ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்த –
ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே -என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இத் திரு மொழியை வல்லார் –பௌமம் மநோ ரதம் ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே
அலங்காரங்கள் எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –இவ்வளவிலே போகாதே
ஸ்ரீ பரமபதத்திலே போய் புக்கு பதியினில் பாங்கினில் -என்கிறபடி
ஸ்ரீ நித்ய சூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

வியமுடை விடையின முடைதர மட மகள்
குயமிடை தடவரை யகலம துடையவர்
நயமுடை நடையன மிளையவர் நடை பயில
கயமிடை கண புர மடிகள் தமிடமே —8-7-1-

பொய்கைகளாலே நெருங்கி இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் நமக்கு ஸ்ரீ ஸ்வாமி யானவனுடைய
வாசஸ் ஸ்தானம் -என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய நெஞ்சு கலந்த திரள் மிக்கு இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவனும் ரஷிக்க-தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே அவனே ரஷகனாம்படி இருக்கை-
மலையை குடையாக எடுத்து பரிஹரித்து ரஷணத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாத படி இருக்கிறவர்
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

பூவை இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி வர்த்திக்கிற தேசம் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பூசல் செய்து –-த்விதாபஜ்யேயம் -என்று பொருந்தாமையிலே நின்றவர்கள் முடிய –
ப்ரஹ்மாதிகளும் கூட கணிசிக்க வரிதான ஊரை-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே இளைதாய் கொழுவியதாய் அழகியதான பூவிலே
முழுகின வண்டின் உடைய பண் கிளர்ந்த ஸ்ரீ திருக் கண்ண புரம் அடிகள் தம் இடமே -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்று இருக்கிற முறையிலே சொல்லுகிற அடியார்
தங்களுக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கண்ண புரம் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பூமிப் பரப்பை அளந்து கொண்ட திருவடிகள்-சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே
அவற்றை எல்லாரும் ஒக்க இருந்ததே குடியாக ஆஸ்ரயிக்க-
ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி அணையா நின்றுள்ள பெரிய வரை போன்று இருந்த மார்வை உடையவர்
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

மலரை தனக்கு இருப்பிடமாக வுடையாளாக இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் –
தன்னோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் ஸ்ரீ பூமிப் பிராட்டி என்று இப்படி சொல்லப் படுகிற நிருபாதிக
ஸ்த்ரீத்வத்தை உடையராய் இருக்கிற இவர்களோடும் –
வலத் திருக் கையிலே மன்னா நின்றுள்ள ஸ்ரீ திரு ஆழியை உடையனுமாய்
நீல மணி போலே போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை உடையவர் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அழகிய இசையோடு கூட – இத் திரு மொழியை –வண் குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் –
இத்தை அப்யசிக்குமவர்கள் –அவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபங்கள் கிட்டாது –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————–

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் –
சேஷ பூதனான நான் காணப் பெற்றேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்

தேஜஸ்சை உடைத்தான அம்ருதமானது தோற்றும் அளவும் நீருக்கு இறாயாதாய வடிவை உடைய ஆமையாய்-
மலை திரிந்து வரும்படியாக பரப்பை உடைத்தான கடலிலே அதுக்கு தாரக பூதனாய்க் கொண்டு
கிடந்த விஸ்மய நீயனை ஸ்ரீ கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அண்டபித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான
வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்-உளை மயிருமாய் மனுஷ்ய வேஷமும்
சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –சத்ருவான ஹிரண்யனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த
திரு வுகிரை உடையவனை –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு நிலை நின்ற வடிவு-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

வடித்த வாயை உடைய மழுவே ஆயுதமாக வந்து தோன்றி இருபத்தொரு படி கால் பூமி நெளியும்படியாக
வந்து தோன்றின –ஷத்ரிய குலத்தை அறுத்துப் பொகட்ட வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வெவ்விய சீற்றத்தை உடைய கடியிலங்கை குடி கொண்டோட யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின
நம்முடைய ஸ்ரீ ஸ்வாமியை –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

வெற்றியே தொழிலாக உடைய வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல
யுத்தத்திலே செற்ற வெற்றியை தொழிலாக உடையவனை –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அபர பஷத்திலே அஷ்டமியிலே நள் இருளிலே பிறந்தவனை –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த
தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை
எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே—8-9-1-

வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்டவனை – எனக்கு உபகாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை –
என் நெஞ்சிலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –அடைந்து உஜ்ஜீவிக்கப் போனேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்

என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வாதிகனை –
ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பெரியவனை –அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன் –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

சேஷ பூதனான நான் – வேறு சிலர்க்கு உரியேன் அல்லேன் –இத்தால்-தம் ஸ்வரூபம் சொல்லுகிறார் –
பிறர்க்கு உரியேன் அல்லேன் என்னும் இடம் சொல்லுகிறார் –
அசாதாராண விபூதி உக்தன் ஆனவனுக்கு என்னும் இடம் சொல்லுகிறார் –மூன்றாம் பாசுரத்தில்

ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க தானே போய் புகுவதே –
இது ஒரு நீர்மை இருக்கும்படியே என்று இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த
மிக்க புகழை உடையனாய்க் கொண்டு உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை –
அடைந்து உய்ந்து போனேனே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன –
நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் – ஸ்ரீ திருக் குடந்தையிலே கண் வளர்ந்து
நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று அத்தாலே உகந்து –
இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் – நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் –
நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நெஞ்சே -நீ ஜ்ஞான பிரசார த்வாரம் அன்றோ-நீ நினை என்று என்னை பிரேரிக்க வேண்டாவோ –
ஒரு ஷண காலமும் நீ நினையாதே இரா நின்றாய் –
நினைக்க அருமைப் பட வேண்டும்படி அவன் தன்னை அரியனாகத் தான் நீ நினையாது இருக்கிறாயா –
மேக பதத் தளவும் ஓங்கின மாடங்கள் சூழ்ந்து இருப்பதாய் வயலோடு கூடின ஸ்ரீ திரு வாலியிலே வந்து
சந்நிஹிதன் ஆன மைந்தனையே –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ –புறம்பேயும் ஒரு புகல் உண்டாய் மறக்கவோ –
சம்சாரத்தே சில விடவுமாய்-பற்றவுமாய் இருக்கிற இருப்பைக் கொண்டு
பகவத் விஷயத்தை மறக்கலாம் என்று இருக்கிற நீ சொல்லு –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

திரை மேலே திரையாக கொண்டு போந்து ஏறடுமா போலே ஒரு ஜன்மம் ஒரு ஜன்மத்திலே தோள் மாற
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து போனேன் –
இப்படி பிறந்து போரா நிற்கச் செய்தே
நான் பிறந்த சம்சாரத்திலே அவன் வந்து சந்நிஹிதன் ஆகையாலே அவனைப் பெற்றுக் கொண்டு நின்றேன்
உபகார் ஸ்ம்ருதி அனுவர்த்தித்த அன்று பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டும்படி இருக்கும் இறே
அது வேண்டாத படி பிராப்தம் இது என்று இருக்கும் படி உபகரித்தான் ஆயிற்று –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஒரு தேச விசேஷத்திலே போனால் சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை
இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே-

பத்தாம் பாசுரத்தில்
இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –கடல் சூழ்ந்த பூமியிலே
இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –
அன்றிக்கே –
சர்க்கே பி நோ பஜா யந்தே பிரளயே நவ்ய தந்திச -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி
நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை
உஜ்ஜீவிப்பிக்க பாருங்கோள் என்னுதல் –

———————–

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-

ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்னும் சாபல்யத்தை உடைய எனக்கு –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனும் அவளுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் நினைத்து இருப்பது –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –
பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சுலபனான நீ சொல்லு –என்கிறார் முதல் பாசுரத்தில்

பிரளய ஆபத்தை பரிஹரித்து இன்று ஆஸ்ரயநீயன் என்னும் இடம் தோற்ற நீ வந்து சந்நிஹிதனாக
நான் எங்கனே வேறு சிலரை ஆஸ்ரயநீயன் என்று இருக்கும் படி –
சம்சார பிரளயத்தை பரிஹரிக்கைகாக இறே நீ இங்கே வந்து நிற்கிறது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
ஸ்ரீ கண்ண புரத்துறை அம்மானே –நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றாவது –
உன் அளவில் நின்றவன் அல்லேன் -என்ற போது அவன் திரு உள்ளம் என் படுகிறதோ -என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்ய
ஸ்ரீ பிள்ளை -அல்லிக் கமலக் கண்ணன் ஆகிறான் -என்று அருளிச் செய்தார் –
நீக்கமில்லா அடியார் தன் அடியார் அடியார் எம் கோக்கள் -என்று
இவர் பாகவத சேஷத் தளவில் நின்றவாறே அவன் அல்லிக் கமலக் கண்ணன் ஆனான் –
பிரபன்னன் உடைய லஷணம் ஆகிறது –
ஸ்ரீயபதியே -உபாய உபேயங்கள் என்று இருக்கையும்
தேவதாந்தர ஸ்பர்சமும்-தாமஸ புருஷர்களோடு சம்சர்க்கமும் இன்றிக்கே இருக்கையும் –
பாகவதரை ஒழிய செல்லாமை யுண்டாய் இருக்கையும் –
தர்மியை அனுபந்தித்து இருக்கும் தர்மங்களை நேரே வ்யவஹரித்தது இல்லையே யாகிலும்
தர்மியைச் சொன்ன போதே தர்மங்களை எல்லாம் சொல்லிற்றாம் இறே-

விஷம் தாரகமான உனக்கு ஆகாதார் இல்லை –
நீ கை விடப் பார்க்கும் அன்றும் விட ஒண்ணாத புருஷகாரம் உண்டு –
தான் பொறை யாளாய் இருக்கும் அளவன்றிக்கே செய்த குற்றங்களை அவன் திரு உள்ளத்திலே படாத படி
ந கச்சின் ந அபராத்யதி – என்று அவனையும் பொறுப்பிக்கும் அவள் ஆயிற்று –
நோக்காலும் போக்யதையாலும் அவன் தன் வழியே போம்படி நியமிக்கும் அவள் ஆயிற்று –
இவை எல்லாம் உண்டானாலும் கார்யகரம் ஆகாது இறே நீ தூரஸ்தனாய் இருந்தாய் ஆகில் –
அக் கண் அழிவையும் அறுத்து வைத்தாயே -என்கிறார் நாலாம் பாசுரத்தில்

என்னால் அறுத்துக் கொள்ள ஒண்ணாத சம்பந்தம் உன் கை யதன்றோ –
இவன் கீழ் விட்டுப் போந்த உறவு முறை எல்லாம் நாமே அன்றோ என்ற இத்தை திரு உள்ளத்திலே கொண்டு
என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேண்டும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அந்திம சமயத்திலே யமபடர் வந்து கிட்டாதே-அவர்கள் அனுகூலராய் இருப்பாரைக் கண்டால்
சொல்லுவன இச் சப்தங்கள் –
இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் -என்கிறபடியே –அவர்களைக் கண்டால் நாங்கள் அருகு வாரோம் -என்று
கடக்கப் போம் படியாய் அன்றோ உன் ஸ்வபாவம்
அவ்வளவுகள் அறிந்து நோக்குகைக்காக அன்றோ இங்கு வந்து நிற்கிறது –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உன்னுடையாரைக் கண்டால்-யமபடர் கிட்டாமையேயோ–மறைந்து அன்றோ வர்திபபது
காக்கிற நீ சந்நிஹிதனாய் இருக்க அவர்கள் எங்கனே வெளியில் திரியும் படி –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தேகாத் வ்யதிரிக்தமாய் இருப்பதோர் ஆத்மா உண்டு என்று அதுக்கு ஒரு நன்மை பாராதே
தேஹாத்மா அபிமானியாய்-மகா பாபங்களை திரட்டின நான்
அவை அடங்கலும் நிஸ் சேஷமாக போய் கொடு நிற்கக் கண்டேன் –
போக்குமவன் அளவுக்கு ஈடாய் அன்றோ போமதின் அளவு இருப்பது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

விரோதி போகப் பெற்ற அளவேயோ –அது போனால் பெறக் கடவ கைங்கரியத்தையும் பெற்றேன் –
வாசிகமான வடிமையும் செய்யப் பெற்றேன் –
நாம் பாடின கவியினுடைய மதிப்பு இருந்த படியாலே இது நம்மால் வந்ததாகக் கூடாது –
உள்ளே இருந்து பாடுவிக்கிறான் ஒருத்தன் உண்டு என்று அறிந்த இது கொண்டே
நீ என் ஹிருதயத்தில் இருக்கிற இருப்பை நிச்சயிக்கலாம் படி பண்ணினாய் –
ஸ்ரீ கண்ண புரத்துறை யம்மானே –-இவரைப் பாடுவித்த முக்கோட்டையாய் இருந்தபடி –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே ஸ்ரீ பரமபதம் ஆட்சியாகக் கடவது –
ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி கண்டேனுக்கு இத்தை அப்யசித்தவர்களுக்கும்
அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம்
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-எட்டாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

July 8, 2019

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

தன் பெண் பிள்ளை சொல்லக் கடவ இது தனக்கு ரசித்த படியாலே அப்பாசுரத்தை தன் வாயாலேயும் ஒரு கால் பேசி
அனுபவிக்கப் பார்க்கிறாள் –

————————-

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-

கையும் திவ்ய ஆயுதங்களுமாய் பண்ணின உபகாரம் இன்னளவு என்று பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ –
நிருபாதிக பந்து என்று தோற்றி யன்றோ செயல் இருக்கிறது –
தன்னை உபகரிக்கைக்கு தான் முற்பாடனாய் அவசர ப்ரதீஷனாய் -வந்து நிற்கிறபடி –
அஞ்சன கிரி போலே யாயிற்று கண்ணுக்கு விஷயமான போது இருக்கிறபடி –
அவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கையே அன்றிக்கே-இவளும் ஆபி முக்கியம் பண்ணப் பெற்றது
வடிவு அழகிலும் ஔதார்யம் தோற்ற நின்ற நிலையிலும் போலே காணும் இவள் கண் விழித்தது –

——————-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

இத்தனை அதிமாத்ர பிராவாண்யம் ஆகாது காண்-
எல்லாம் செய்தாலும் நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்தை நீ கேட்க வேணும் காண் என்று
நீங்கள் சொன்னால் -அவனுடைய ஆபரண சோபை கண்களுக்கு முற்படா நின்றது –
உங்கள் வார்த்தை செவிப் படுகிற இத்தை நான் கேட்கவோ
கண்ணுக்கு இலக்கான அவன் அழகிலே துவக்குண்ணவோ -என்னா நின்றாள் –
சேஷித்வ ஸூசகமாய் இருக்கவோ -என்னா நின்றாள் –

——————-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ–8-1-4-

ஸ்ரீ பெரிய திருவடி முதுகில் இருந்து இருப்பைக் காட்டி என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் –
ஹிதம் சொல்லி விலக்குகிற நீங்களும் பாருங்கோள்-
அழகிய பவளம் போலே இருந்துள்ள திரு வதரத்தைக் கண்டார்க்கு விட்டுப் போகலாய் இருந்ததோ –
உக்தி மாத்ரத்திலே மீளாதே அவ்விஷயத்தைக் கண்டு அனுபவித்தாள் என்று தோற்றி இரா நின்றது –

———————–

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித் தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-5-

நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது –
சேர்ப்பாரும் அருகே இருக்க -நான் எத்தைச் சொல்லி அகலுவது -என்னா நின்றாள் –
எனக்கு பற்றாசானார் இருக்க நான் என்ன கண் அழிவு சொல்லிக் கடக்க போவது
போக்யதை இல்லாமையோ –பிராப்தன் அல்லாமையோ –சேர்ப்பார் இல்லாமையோ –நான் எத்தைச் சொல்லி அகலுவது –
நிரதிசய போக்யனான இவனை இவள் அனுபவித்து சொல்லுகிறாள் போலே இருந்தது

———————-

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-6-

உபமானம் கதிர் பெருக்க வேண்டி இருக்கிறபடி –
கடலைக் கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலேயும்-அஞ்சன கிரி போலேயும்
இருக்கிற வடிவை உடையவன் என்னா நின்றாள் –
ஸ்ரமஹரதையும் அபரிச்சேத்யையும் இரண்டையும் சொல்லுகிறது –

———————

செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-7-

அவன் உடைய உடை வாய்ப்பிலே தோற்றமை தோற்ற வாய் விடா நின்றாள் –
திருப் பீதாம்பரம் சாத்தினால்- கௌசேய புஷ்பித கடீ தடம் -என்கிறபடியே
திருவரை பூத்தாப் போலே யாயிற்று இருப்பது –

——————

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-8-

கீழே அவன் அடியைப் பிடித்தும் மடியைப் பற்றியும் படியை அனுபவித்ததை கேட்டவர்கள்-
இவளுக்கு இப்படி அனுபவம் செல்லா நின்றால்
முலையில் பூம் பயலை பிறக்கும்படி விரஹ வ்யசனம் நடக்கைக்கு அடி என் என்று கேட்க –
இவளுக்கு கிட்டே வந்து சம்ச்லேஷித்தது அல்லாதே
அதூர விப்ரக்ருஷ்டமாய் வந்தாப் போலே தோற்றுகையாலே
தன்னிடத்தில் வரவில் நிர்ணயம் பிறவாதே விரஹ கிலேசத்தை அடைந்தாள் என்று
அவள் வார்த்தையாலே அறிந்தாளாக -அனுவதிக்கிறாள் -என்று சங்கதி –

ஸ்ரீ பிள்ளை அமுதனார் இத் திருமொழிக்கு பிரவேசம் சொல்லா நிற்க
ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே -பள்ளி யந்துலாத்திலே ஏறி உலவா நிற்பர்கள் காண் –
என்றாப் போலே அநேகம் வாக்ய சில்பங்களை பண்ணினார் –
அப்போது பால்யத்தாலே அவ்வடைவுகள் புத்தி பண்ணப் பெற்றிலோம்
அவற்றுக்கு இதில் பற்றாசு ஏது என்று விசாரித்தோம் –
இதுவாகாதே என்று தெளிந்தோம் காண் என்று இவ்வளவிலே ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் –

————————-

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-

நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே –எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஸ்ரீ ஜீயர் –
கண்டவர்கள் நெஞ்சை மேல் எழுத்துக் கொடா நிற்பர்கள் ஆயிற்று

————————

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே
தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள் –

————————-

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-

கை வளை கொள்ளுவது தக்கதே என்ன -என்றாள்
நமகக்குக் கைவளை கொள்ளத் தகாமை என் -என்று ஸ்ரீ சௌரிப் பெருமாள் கேட்க –
தகாது என்னும் இடத்தை உபபாதிக்கிறாள் –

——————-

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-

ந நமேயம் -என்கிற பிரதிஞ்ஞை குலைந்து-ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -என்கிறபடியே
அவிவாதம் தோற்ற ஓர் அஞ்சலி பண்ணினாள் ஆகில் இது குறையோ -என்று இறே கீழ்ச் சொல்லிற்று –
இத்தைக் கேட்ட ஸ்ரீ சௌரி பெருமாள் -நீ நம்மைக் குறை சொல்லக் கடவையோ
உன் மகளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ
ஸ்திரீகளுக்கு நாண் மடம் அச்சம் பயிர்ப்பு -என்கிற ஆத்மா குணங்களில் பிரதான குணம் அன்றோ லஜ்ஜை –
அது உன் மகளுக்கு இல்லையான பின்பு அவளை நியமிக்க வன்றோ அடுப்பது -என்ன
அவளுடைய உக்தி வியாபாரங்கள் இருந்தபடியாலும் –
சம்சர்க்க தோஷம் இருந்த படியாலும் – அவளை நியமிக்க என்பதும் ஓன்று உண்டோ
இவளை அடியிலே அலைவலையாக்கி புறப்பட விட்ட இவர் கார்யமே தலை காட்டிற்று -என்கிறாள் –

————————

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ –8-2-3-

இனி இவள் நாணுமோ என்று இறே கீழ் சொல்லிற்று
அந்த லஜ்ஜை தான் உண்டாவது சத்தை உண்டானால் இறே
தான் பண்ணுகிற சிசுரோபசாரங்கள் கார்யமாய்த் தலைக் கட்ட காண்கிறிலோம்
என்னாய் முடியப் போகிறதோ -என்கிறாள்
தாபார்த்தராய் இருப்பார் தாப ஹரனான ஜலநிலையனை இறே பற்றுவது
அவனைப் பற்றுமவள் அல்லை இறே இவள்
அவனைப் பற்றுவார் முக்த ப்ராயரான சநகாதிகள் இறே
இவள் பற்றுவது அர்ச்சாரூபத்திலே இறே
அதில் தனக்கு தாப ஹராமான திருப்பதிகளிலே சிலவற்றைச் சொல்லுகிறாள் –

—————-

உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லைப்
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான்
கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல்
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ —8-2-4-

வாய் வெருவினாள்-வினவி இருக்கின்றாள்-பேசினாள்-உருகினாள்
என்கிற இவ்வாற்றாமை தான் உண்டானது தாரகம் உண்டானால் இறே
அது இருந்தபடி என் என்ன-அது தானே இல்லை -என்கிறாள் –
கீழ் உண்டான தசைகள் ஸ்வஸ்த்த தசைகள் என்னும்படி இருந்ததீ -என்கிறாள்
ஊணும் உறக்கமும் உண்டானால் இறே கீழ்ப் பிறந்த அவஸ்தைகளுக்கு அவகாசம் உள்ளது –

—————————-

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே —-8-2-5-

பெண்மையும் சால நிறைந்திலள் -என்று இறே கீழ்ப் பாட்டில் சொல்லிற்று –
அது காலாந்தரேண உண்டாகிறது –-அதுக்கடியான பெண்மை தான் உண்டோ -என்ன
அது தானே இல்லை என்கிறாள் –
நீ எது கொண்டு அறிந்தாய் என்ன
கரண த்ரயங்களும் அவனை நினைத்த மாத்ரத்திலே விக்ருதமாகா நின்றன-இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –

——————-

வடவரை நின்றும் வந்தின்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்
கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே —8-2-6-

கீழ்ப் பாட்டிலே-தன்னுடை உண்மை உரைக்கின்றாள் -என்றும்
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால் வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியும் -என்றும் சொன்னாய்
அதில் உண்மை எது-பொன்னிறம் போனபடி என் -என்ன -அத்தைச் சொல்லுகிறாள் –
ஸ்ரீ கண்ணனூர் -என்றாள் இறே கீழ்-அந்த ஸ்ரீ கண்ணனூரான ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலெ பெண்கள் அடைய
குரவ கிம் கரிஷ்யந்தி தக்த்தா நாம் விரஹாக்னி நா -என்று-இக்குருக்கள் நம்மைச் செய்யப் புகுகிறது என் –
விரஹ அக்னியால் வெந்து கிடக்கிற நம்மை ஆற்றி ஒரு குடம் நீர் சொரிவார்களோ -என்று
பந்து வர்க்கங்களை நேராக விட்டு ஸ்ரீ கிருஷ்ணனை அனுபவிக்கக் கடவதாக யமுனா தீரத்தேற வந்தார்கள் –
அங்கு ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்டிலர்கள் – பின்பு அனுகாரத்திலே இழிந்து
நான் நடவா நின்றேன் -நீ நடைச் சக்கரவத்து பிடித்துக் காண் -எனபது
துஷ்ட காளிய திஷ்டாத்ரா கிருஷ்ணோஹமிதி சாபரா -என்று
பாரடா காளியனே -நான் உன் மேல் ஏறி ஆடப் புகா நின்றேன் -எனபது-இப்படிகளாலே அனுகரித்தார்கள் இறே
இவளும் -ஸ்ரீ திரு ஆய்ப்பாடி -ஸ்ரீ திருக் கண்ணபுரம் ஆகவும் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ சௌரிப் பெருமாள் ஆகவும் –
ஸ்ரீ சௌரிப் பெருமாள் தான் ஆகவும் அனுகரித்து பேசுகிறாள் –

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-அஹம் பிரஹ்மாஸ்மி-என்று தான் அவனாய்-அவன் தானாய்-இறே இருப்பது
இது இறே இவளுடைய வைதிக லோகாயுத மதம் இருக்கிறபடி –
வேறே அனுகரித்தாரும் சிலர் உண்டு இறே
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -என்று-அவளைப் போலே ஜகத் காரண ரூபியை பற்றுமவள் அன்று இறே இவள் –
அர்ச்சாவதார ரூபியை இறே இவள் அனுகரிப்பது
இவ் வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அனுபவம் ஒழிய
அந்த அந்த அவதாரங்களால் பிறக்கும் அனுபவத்தை நாய்க்கு இட என்று இருக்குமவள் இறே இவள் –
ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் ஸ்ரீ ஆழ்வார் திரு நறையூர் அரையரும் இப்பாட்டை அனுசந்தித்து
இப்பாட்டுக்கு ஒரு சேர்த்தி கண்டிலோம் -என்று ஸ்ரீ பட்டர் பாடே வந்து இப்பாட்டு இருக்கிறபடி என் -என்று கேட்க –
மகள் அனுகாரத்தை தாய் அநு பாஷிக்கிறாள் -என்று அருளிச் செய்தார் –
ஆரூட யோகராய் இருப்பார் சிலர் வந்தால் யோபவான் யன்நிமித்தம் வாயதாகம நகாரணம் -என்கிறபடியே
நீ யார்-வந்தது எங்கு நின்றும் -என்று கேட்கக் கடவது இறே-அப்படியே -நீ எங்கு நின்றும் வந்தது -வந்த காரணம் ஏது -என்ன
வந்தது இன்னிடத்தில் நின்றும் –-வந்த கார்யம் இன்னது -என்கிறாள் –

—————-

தரங்க நீர் பேசிலும் தண் மதி காயினும்
இரங்குமோ வெத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
அரங்கமே எனபது இவள் தனக்காசையே —8-2-7-

இவர்க்கு இவள் கடவது என் -என்று இவள் கண்ணுறக்கத்தை இவர் கொள்ளுகைக்கு பிராப்தி உண்டோ என்றாய்
இப்படி இவரோடும் இவளோடும் கொள் கொடை அற்றோ இருக்கிறது
கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் என்றும்
கண்ண புரம் தொழும் என்றும்
கண்ண புரம் என்று பேசினாள் என்றும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அவனேயாம் படி அன்றோ அவள் இருக்கிறது –
அவரோடு அவளோடு பிராப்தி இல்லை என்று சொல்லக் கடவையோ
அது கிடக்கட்டும்
உன் மகள் தான் இவ்வீடுபாடுகள் தானே பொறுக்க ஷமையோ-என்ன
இவற்றுக்கு இவள் இளைக்குமவளோ -என்கிறாள் –

—————————

தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே —8-2-8-

முதல் பாட்டிலே -தெள்ளியீர் தொழுத இவள் கை வளை கொள்வது தக்கதே -என்று
தொழுத இவள் கையில் வளையை வாங்குகை தகுதி அல்ல தப்பச் செய்தோம் -என்று இசைந்து நின்றார் ஸ்ரீ சௌரிப் பெருமாள் –
பின்பு தன்னிலே-இவர்க்கு இவள் கடவது என் கண் துயில் இன்றி இவர் கொள்ள -என்றும் –
அரங்கமே இவள் தனக்கு ஆசையே -என்றும் சொன்னதை ஸ்ரீ சௌரிப் பெருமாள் கேட்டார் –
சர்வதஸ் ஸ்ருதி மல்லோகே -என்று இருக்குமவர் இறே அவர்
இப்படி இவள் சொன்னவாறே-வளை கொடுப்பதாக நினைத்து இருந்தோம் –
இனி கொண்டு அது கொடுக்கிறது என் – இன்னம் எட்டுமது உண்டாகில் வாங்க அமையாதோ -என்று
ஸ்ரீ சௌரிப் பெருமாள் சிவட்கு என்று-உன் மகளுக்கு ஸ்ரீ அரங்கமே எனபது ஆசை என்றாய் –
அவளோடு நம்மோடு பிராப்தி இல்லை என்றும் சொன்னாய் –
ஆனால் நம்மூருக்கு இவள் வருவான் என்-நாம் இவளை அழைத்தோமோ
ஆசைப் பட்ட இடத்தேறப் போகல் ஆகாதோ -என்ன
அதில் சம்சயம் இல்லை -ஸ்ரீ அரங்கமே இவள் தனக்கு ஆசை -நினைவும் அதுவே
ஸ்வ அபிமத சித்திக்கு உறுப்பாக நாட்டார் செய்கிறதைக் கண்டு
தனக்கும் தன் அபிமதம் சித்திக்குமோ -என்று தன் ஆசையாலே
செய்வான் முறைமை கண்டு போனாள் இத்தனை -என்கிறாள் –
கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் என்று என்றே இவளுக்கு மநோ ரதம்
இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி யுண்ண பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்று
கடலைப் பருகின காள மேகம் போலே இறே ஸ்ரீ பெரிய பெருமாள் வடிவு இருப்பது –
ஆகையாலே நினைவும் அங்கே என்னும் இடம் சித்தம் இறே –

——————–

முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே —8-2-9-

கீழ்ப் பாட்டிலே -என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே -என்று
நிவாரகர் இல்லாத தேசத்திலே வழி யடிப்பாரைப் போலே முக்த்தையான இவள்
நிறத்தை கொள்ள வேணுமோ என்று இவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட ஸ்ரீ சௌரிப் பெருமாள் –
நீர் நம்மை நியமிக்கக் கடவையோ –
சர்வச்ய வஸி சர்வச்ய ஈசானா -என்று சர்வர்க்கும் நியாமகராய் நம்மை நியமிக்கக் கடவையோ
மடவரல் மாதர் என் பேதை -என்று-உன் மகள் என்றும்-உனக்கு பவ்யை என்றும் -சொன்னாய்
அவளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ – நீ நம்மை நியமிக்க போராய் காண் -என்ன
இவள் பருவம் இது-பாவம் இது-ஆனபின்பு என்னால் நியமிக்கலாயோ இருப்பது -என்கிறாள் –
இவள் அளவு இதுவாய் இருக்க இவளைப் போலே அவஹாகித்தாள் ஒரு பெண் பிள்ளை வார்த்தையாலே
சொன்னாள் இறே அவள் உடைய திருத் தாயார் –

முலையோ -இத்யாதி –
இவள் அளவு இதுவாய் இருக்க -அவகாஹனம் இருந்த படி என் –அளவன்றி இருந்ததீ-என்றாள் இறே –
முலையோ முழு முற்றும் போந்தில – முலை புரைகிற வித்தனை –வளரும் அளவும் செல்ல வரையிட்டதில்லை –
இது பருவம் இருந்தபடி –
ஸ்ரீ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே –
ஸ்ரீ திருமலையை விடாமல் சொல்லா நின்றாள் இது அவகாஹனம் இருந்த படி –
இவள் பரமே –
இவள் அளவன்றிக்கே இருந்ததீ-என்றாள் இறே – அவளுடைய பருவம் இல்லையே இவளுக்கு
அவகாஹனத்திலும் வாசிக மாத்ரமே இறே அவளுக்கு உள்ளது –
காயிகத்தால் வந்த அவகாஹனம் உண்டே இவளுக்கு –
பங்குக்களாய் இருப்பார்க்கும் அந்தரராய் இருப்பார்க்கும் போக ஒண்ணாதபடி ஸ்ரீ பரமபதத்துக்கு அடுத்து அணித்தாய்
அர்ச்சிராதி போலே பெரிய ஏற்றம் ஏற வேண்டி இறே ஸ்ரீ திருமலை இருப்பது
அத்தனை துஷ்ப்ராப்யமாய் அன்றே ஸ்ரீ திருக் கண்ண புரம் இருப்பது
இருந்தபடியே எல்லார்க்கும் புக்கு அனுபவிக்கலாம் படி இறே ஸ்ரீ திருக் கண்ண புரம் இருக்கிற படி –
ஆகையால் இவள் அளவு இதுவாய் இருந்தது – அவகாஹநத்தில் எல்லை இதுவாய் இருந்தது
ஆன பின்பு இவளை நியமிப்பார் உண்டோ என்று பொதுவிலே சொல்லுகிறாள் –

பெறுவேனோ என்னாதே பெறுவரே -பொதுவிலே
மமமத்பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்ற உன்னாலும் இவ்வளவு அவகாஹிக்கப் போமோ –

————————

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை
பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே –8-2-10-

இத்தால்-கவி பாடிற்று இன்னாரை பாடினேன் இந் நான் என் கவி தான் இன்னது -இது கற்றார்க்கு பலம் இன்னது -என்று
இவை நாலையும் சொல்லுகிறார் –

———————–

கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரையெடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-

மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய் பெரிய மிடுக்கையும் உடைத்தாய்
மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக
மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன் –

——————–

அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தரு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளை —8-3-2-

குவலயா பீடமானது வெருவும்படியாக அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட
அச் செயலுக்கு வளை இழந்தேன் –

——————-

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக் கண்ண புரத் துறையும்
பைங்கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்துகந்த
செங்கண் மால் யம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-3-

சந்த்ரனுக்கு வந்த ஷயத்தை போக்கி-அது தன்னை தன் பேறாக நினைத்து இருக்கிற
புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன் –

——————

கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில்
திணம் மருவும் கன மதிள் சூழ் திருக் கண்ண புரத் துறையும்
மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப் போய் உரலோடும்
புணர் மருதம் இற நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-

இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர்விவரமாய் இருக்கிற மருதுகள் முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு
என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன் –

———————–

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே—8-3-5-

ஈடுபட்டு ஓடி அமுது செய்த-தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து
அத்தை இல்லை செய்கைக்காக –முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன் –

——————-

மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக் கண்ண புரத் துறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-

அன்று ஹிரண்யன் மிடுக்கு அழியும்படி யாக ஸ்ரீ பிராட்டிமாரும் கண்டு கொண்டு இருக்கும் படியாக
ஸ்ரீ உகிராலே-அவன் உடைய சரீரத்தை பேதித்து தன்னுடைய ஸ்ரீ ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு
என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ-என்று இருந்தாயிற்று வளை இழந்தது –

—————–

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-

பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு
அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார் –

————————

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-

தர்ச நீயமான வடிவை உடையனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற –
சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை விஸ்வசித்து முடிந்தேன் -என்கிறாள் –

————————-

வாராளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-

தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு தன்னை கொடுக்குமவன் அன்றோ –
நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து வளை இழந்தேன் -என்கிறாள் –

——————-

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே —8-3-10-

நாவிலே பொருந்தும் படி பாட சஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் –
உக்தி மாத்ரத்தைச் சொல்ல புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார் –

——————–

விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-1-

சீல குணம் சத் கார்ய வாதம் கொண்டு அறிய வேண்டும்படியாய் இருக்கும் –அங்கு பிரமாணங்கள் சொல்ல அறியும் இத்தனை –
இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்ணாலே காண்கையாலே
அது ஸ்பஷ்டம் ஆவது இங்கே யாயிற்று –
கோல்களிலும் பணை களிலும் வைத்த மதுவை பானம் பண்ணக் கடவ உன்னை
சர்வரச -என்கிற வஸ்துவைப் போய் அனுபவி என்று அன்றோ சொல்கிறது –
ஸ்வாபதேசம்-சப்தாதி விஷய நிச்சாரதையும் –-பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும் சிஷ்யருக்கு அறிவிக்கிறார்

———————–

வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-2-

திருவடிகளை அக்ரமமாக ஏத்தி அதிலே விழுந்து எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணி ஸ்நேஹத்தைப் பண்ணுகிற
நிதித்யாசிதவ்ய -என்று விதிக்கிற விஷயத்தில் அன்றோ நான் உன்னைப் பற்றச் சொல்லுகிறது

————————-

விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-3-

தங்களை ஆஸ்ரயணீயராக நினைத்து இறுமாந்து இருக்கிறவர்கள் எல்லாரும் அவ்விறுமாப்பைப் பொகட்டு
திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும் படி ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிறவன் –
சஜாதீயர் உடைய யாத்ரை அமையாதோ உனக்கு –

———————-

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-

எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான வடிவை உடையனுமாய்க் கொண்டு
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது –

————————–

ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ —8-4-5-

பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய் –

————————–

மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ–8-4-6-

நீ அங்கே சென்றால் முகம் தருவிப்பார் உண்டு அவன் தான் விரோதி நிரசன சீலன்-
என்றும் ஒக்க ஆபத்துக்களில் உதவிப் போந்தவன்
உதவாது ஒழியிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன்
ஆனபின்பு அவன் பக்கலிலே சென்று இங்கே வந்தூதப் பாராய் -என்கிறாள் –

————————

வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன்
தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான்
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-7-

ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே வளைத்து கார்யம் கொள்ளலாம் படி இருக்குமவன் –
அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கும் கூட உத்பாதகன் –
மாலையாய் பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய் –

——————-

நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலரெல்லாமூதாதே வாளரக்கர்
காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ —8-4-8-

விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் – ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய
புகரை உடைத்தான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-தர்ச நீயமான திருத் துழாய் மாலையிலே வந்தூதாய் –

———————-

நந்தன் மதலை நிலமங்கை நற்துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ —8-4-9-

நமக்கு அபூமியான இருக்கிற இடத்தில் போகச் சொல்லுகிறேனோ –

——————–

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ -8-4-10-

சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு
அவன் பக்கலிலே அறிவித்து எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும் –

——————–

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1-

பிறரால் வந்த விலங்கு பரிஹரிக்குமவன் தன்னால் வந்த விலங்கு பரிஹரியாது ஒழிவதே –
ஸ்ரீ வசுதேவர் காலிலே விலங்கு கழலும்படி வந்து அவதரித்த முக்த்தன் உடைய ஸவபாவத்தை அனுசந்தித்து
ஆபத்துக்களிலே வந்து உதவும் ஸ்வ பாவனான பின்பு
அந்த பித்ராதிகள் அளவில்லாத ஆசையை உடைய நமக்கு வந்து உதவுவானோ என்று பிரிந்து தனி இருக்கிற
என் நெஞ்சானது அவன் பின்னே போயிற்று –

————————-

மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று – நாயகனோ வந்து அணைகிறிலன்-
இனி எத்தைச் செய்வது –

——————

ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் இறை நில்லா
பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ
தூய மா மதிக் கதிர் சுடத் துணை யில்லை யிணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சல் என்பார் இல்லையே–8-5-3-

இவ்வளவிலே வாராதே இரான் என்கிற நெஞ்சையும் அழித்து கொடு வந்து தோற்றா நின்றதாயிற்று
இடையன் ஊதுகிற குழல் –பிராமணர் ஊதுகிற குழலுக்கு அகப்படாள் காணும் இவள் –
மாஸூச -என்பார் ஒருவரையும் காண்கிறதில்லை –

———————–

கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல்
இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே –8-5-4-

ரஷகன் ஆனவன் இவ்வளவில் வந்து உதவிற்றிலன்
பாதக பதார்த்தம் தானே இனிக் கிருபை பண்ணி மீளில் நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம் –

——————-

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே -8-5-5-

நமக்கு அவன் பண்ணின அருளோடு கூட அதினுடைய பல ரூபமான பகலும் போய் நின்றதாயிற்று –
அருள் போகவே பகலும் போம் இறே –

—————–

முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண் துயிலா
கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே -8-5-6-

நெருப்பை தூவா நின்றுள்ள அம்பை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற வில்லை வளைத்த
மிடுக்கன் வருகிறிலன்-இனி ஒரு அபலை இருந்து நோக்கிக் கொள்ளவோ –

———————-

கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடு மாயன்
விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-

நான் முடியவே அவனைக் கிடையாது –
அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்
ஆனபின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –

———————-

முழுது இவ்வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித்
தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே —8-5-8-

அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு
பாபம் உண்டாக அறிகிறிலேன் –
இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன் –

——————-

கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக விருந்தேனை
சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை என் சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலினிரி குரல் பாவியேன் ஆவியை யடுகின்றதே —-8-5-9-

கண்டத்துக்கு எல்லாம் பாத்த்ய கோடியிலே அந்வயிக்கும் படி மகா பாபத்தை பண்ணின என்னுடைய
தரமி லோபத்தை பண்ணுகையிலே ஒருப்படா நின்றது –

—————————

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே —8-5-10-

இத் திரு மொழியை அப்யசிக்க வல்லார் –பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து நித்ய விபூதியில் நித்ய சூரிகளோடே கூடி
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்கிறபடியே ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு பின்னை
ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவர் –

——————

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1-

ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே
பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று –
அவனும் நாமும் இவர்களும் சேர வர்திக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த ஸ்ரீ திருக் கண்ண புரத்தை தொழுவோம் –

———————–

பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் போன்ற வன்று புள்ளூர்ந்து
பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை
இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒழிப்பக்
கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-2-

அது ஸ்ரீ பிராட்டி பக்கல் ஓரத்தால் செய்த செய்யல் அன்றோ – நாம் அதற்க்கு பிற்பாடர் ஆனோமே -என்ன
அது வேண்டா -அவன் விரோதி நிரசன சீலன் -என்கிறார் –

————————–

வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான்
வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-3-

ப்ரஸ்துதமான ஸ்ரீ ராமாவதாரம் பின்னாட்டின படி சொல்லுகிறது-

——————–

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-4-

நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு
வாசஸ் ஸ்தானமான ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே –

——————-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே—-8-6-5-

ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாதே ரஷிக்கும்-ஸ்வபாவன் -ஆயிற்று-

————————–

வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன்
திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள்
பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன்
கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-6-

ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனுமாய் – முன் கறுத்து திண்ணியதான தாளை உடைய
குவலயா பீடத்தை அநாயாசேன முறித்தானூர் –

————————

இலையார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
அலைநீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-7-

ராவணன் பண்ணின பிராதி கூல்யம் தம்பி அளவாக வந்தேறுவதாக இருக்கச் செய்தேயும்
அத்தைப் பாராதே அவன் தம்பிக்கு ராஜ்யத்தை கொடுத்தான் ஆயிற்று –அதுக்கு முன்பு
தமையனுடைய வைரத்துக்கு ஹேதுவாய்க் கொண்டு வந்த மாயா மிருகத்தை ஓர் அம்பாலே முடித்தவன் –

———————–

மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
காலார் மறுத்தும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்
மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே—8-6-8-

கீழ்ப் பாட்டில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு திவ்யம் வர்ஷ சஹச்ரம்-என்று பதினாயிரம் சம்வத்சரம் கிலேசப் பட்டு
ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு வந்து உதவினான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு -த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச்ச-என்று பிராப்ய ஆபாசங்களையும் விட்டு
சரணம் புகுருகையாலே அரசு அளித்தான் –
எனக்கு அங்கனே இருப்பதொரு நிலையும் அன்றிக்கே சஞ்சலம் ஹி மன -என்கிறபடியே
நின்றவா நில்லாத ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கை உண்டாகையாலே
எங்கனே வந்து இருப்பது என்ன
ஸ்ரீ பாஞ்சாலிக்கு விரோதிகள் என்ற பேர் பெற்றவற்றை எல்லாம் போக்கி அருளினவன் -என்கிறார் –
நெஞ்சை தேற்றுகிறார் -இரண்டு பாட்டாலும்

———————

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-9-

மலையை எடுத்து இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்தமாம் படி பண்ணி கொடி போலே அழகிய இடையை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக வலிய தாளை உடைய ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்த –
ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே –

———————-

கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்
திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன்
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச வாழ்வாரே –8-6-10-

இத் திரு மொழியை வல்லார் –பௌமம் மநோ ரதம் ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே
அலங்காரங்கள் எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –இவ்வளவிலே போகாதே
ஸ்ரீ பரமபதத்திலே போய் புக்கு பதியினில் பாங்கினில் -என்கிறபடி
ஸ்ரீ நித்ய சூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார் –

———————-

வியமுடை விடையின முடைதர மட மகள்
குயமிடை தடவரை யகலம துடையவர்
நயமுடை நடையன மிளையவர் நடை பயில
கயமிடை கண புர மடிகள் தமிடமே —8-7-1-

பொய்கைகளாலே நெருங்கி இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் நமக்கு ஸ்ரீ ஸ்வாமி யானவனுடைய
வாசஸ் ஸ்தானம் –

————————

இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து
துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்
மண மலி விழவினொடடிய வரளவிய
கண மலி கண புர மடிகள் தமிடமே –8-7-2-

ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய நெஞ்சு கலந்த திரள் மிக்கு இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் –

——————–

புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை
மயலுற வரை குடை யெடுவிய நெடியவர்
முயல் துளர் மிளை முயல் துளவள விளை வயல்
கயல் துளு கண புர மடிகள் தமிடமே —8-7-3-

அவனும் ரஷிக்க-தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே அவனே ரஷகனாம்படி இருக்கை-
மலையை குடையாக எடுத்து பரிஹரித்து ரஷணத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாத படி இருக்கிறவர் –

——————

ஏதலர் நகை செய விளைய வரளை வெணெ
போது செய்தமரிய புனிதர் நல் விரை மலர்
கோதிய மது கரம் குலவிய மலர் மகள்
காதல் செய் கண புர மடிகள் தமிடமே —8-7-4-

பூவை இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி வர்த்திக்கிற தேசம் –

————————

தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொட கலிடமளந்த வரமர் செய்து
விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி யெழக்
கண்டவர் கண புரமடி கள் தமிடமே —8-7-5-

பூசல் செய்து –-த்விதாபஜ்யேயம் -என்று பொருந்தாமையிலே நின்றவர்கள் முடிய –
ப்ரஹ்மாதிகளும் கூட கணிசிக்க வரிதான ஊரை

—————————-

மழு வியல் படை யுடையவனிடம் மழை முகில்
தழுவிய வுருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கண புர மடிகள் தமிடமே —8-7-6-

ஸ்ரீ பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே இளைதாய் கொழுவியதாய் அழகியதான பூவிலே
முழுகின வண்டின் உடைய பண் கிளர்ந்த ஸ்ரீ திருக் கண்ண புரம் அடிகள் தம் இடமே

——————————-

பரிதி யொடணிமதி பனிவரை திசை நிலம்
எரிதி யொடென வினவியல் வினர் செலவினர்
சுருதியொ டருமறை முறை சொலு மடியவர்
கருதிய கண புர மடிகள் தமிடமே–8-7-7-

அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்று இருக்கிற முறையிலே சொல்லுகிற அடியார்
தங்களுக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கண்ண புரம் –

——————–

படி புல்கு மடி யிணைப் பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை யகலமது டையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே –8-7-8-

பூமிப் பரப்பை அளந்து கொண்ட திருவடிகள்-சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே
அவற்றை எல்லாரும் ஒக்க இருந்ததே குடியாக ஆஸ்ரயிக்க-
ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி அணையா நின்றுள்ள பெரிய வரை போன்று இருந்த மார்வை உடையவர் –

—————–

புல மனு மலர் மிசை மலர் மகள் புணரிய
நில மகளென வின மகிளர் களிவரொடும்
வலமனு படை யுடை மணி வணர் நிதி குவை
கல மனு கண புர மடிகள் தமிடமே —-8-7-9-

மலரை தனக்கு இருப்பிடமாக வுடையாளாக இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் –
தன்னோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் ஸ்ரீ பூமிப் பிராட்டி என்று இப்படி சொல்லப் படுகிற நிருபாதிக
ஸ்த்ரீத்வத்தை உடையராய் இருக்கிற இவர்களோடும் –
வலத் திருக் கையிலே மன்னா நின்றுள்ள ஸ்ரீ திரு ஆழியை உடையனுமாய்
நீல மணி போலே போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை உடையவர் –

———————

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை
வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு
ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே —-8-7-10-

அழகிய இசையோடு கூட – இத் திரு மொழியை –வண் குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் –
இத்தை அப்யசிக்குமவர்கள் –அவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபங்கள் கிட்டாது –

——————

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் –
சேஷ பூதனான நான் காணப் பெற்றேன் –

———————–

மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-2-

தேஜஸ்சை உடைத்தான அம்ருதமானது தோற்றும் அளவும் நீருக்கு இறாயாதாய வடிவை உடைய ஆமையாய்-
மலை திரிந்து வரும்படியாக பரப்பை உடைத்தான கடலிலே அதுக்கு தாரக பூதனாய்க் கொண்டு
கிடந்த விஸ்மய நீயனை ஸ்ரீ கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–

—————————–

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

அண்டபித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான
வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை

–———————–

உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம் வெஞ்சமத்து
பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4-

சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்-உளை மயிருமாய் மனுஷ்ய வேஷமும்
சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –சத்ருவான ஹிரண்யனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த
திரு வுகிரை உடையவனை –

———————–

தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-5-

சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு நிலை நின்ற வடிவு

——————

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-

வடித்த வாயை உடைய மழுவே ஆயுதமாக வந்து தோன்றி இருபத்தொரு படி கால் பூமி நெளியும்படியாக
வந்து தோன்றின –ஷத்ரிய குலத்தை அறுத்துப் பொகட்ட வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை

—————-

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7-

வெவ்விய சீற்றத்தை உடைய கடியிலங்கை குடி கொண்டோட யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின
நம்முடைய ஸ்ரீ ஸ்வாமியை –

———————

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8-

வெற்றியே தொழிலாக உடைய வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல
யுத்தத்திலே செற்ற வெற்றியை தொழிலாக உடையவனை –

———————–

துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-9-

அபர பஷத்திலே அஷ்டமியிலே நள் இருளிலே பிறந்தவனை –

———————-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த
தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம் –

——————-

கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை
எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே—8-9-1-

வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்டவனை – எனக்கு உபகாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை –
என் நெஞ்சிலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –அடைந்து உஜ்ஜீவிக்கப் போனேன் –

—————–

தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில்
திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே —8-9-2-

என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வாதிகனை –
ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பெரியவனை –அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன் –

———————-

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-

இது தான் உமக்கு எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன
நான் பிறர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார் –

——————–

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே–8-9-4-

ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க தானே போய் புகுவதே –
இது ஒரு நீர்மை இருக்கும்படியே என்று இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த
மிக்க புகழை உடையனாய்க் கொண்டு உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை –
அடைந்து உய்ந்து போனேனே –

—————————-

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே —8-9-5-

நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன –
நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் – ஸ்ரீ திருக் குடந்தையிலே கண் வளர்ந்து
நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று அத்தாலே உகந்து –
இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் – நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் –
நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ –

—————-

எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6-

நெஞ்சைப் பார்த்து அதினுடைய நினைவை காதாசித்கமாக்கி அவன் நம்மை உபகரித்து நின்றான்
நீ தப்பச் செய்யா நின்றாய் – என்கிறார் –

———————-

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7-

உமக்கு இத்தனை அதி மாத்திர நிர்பந்தம் என் என்ன –
இவ்விஷயத்தை விட்டுப் போய்-பின்னை நீ ஆரை நினைக்க இருக்கிறாய் -என்
புறம்பு நினைக்க ஒருவரும் இல்லையோ என்னில் இது வன்றோ புறம்பு உள்ளார் படி –

———————–

கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே —4-8-8-

உமக்கு உற்றானாய் நின்றவன் பண்ணின உபகாரம் தான் என் என்ன
ஸ்வ அனுபவத்துக்கு விச்சேதம் வாராத படி பண்ணி தந்தவன் அன்றோ -என்கிறார்
அதுக்கு உம்முடைய பக்கல் உள்ளது என் என்னில் –

——————–

கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-

ஒரு தேச விசேஷத்திலே போனால் சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை
இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் –
இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே-

———————-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே —8-9-10-

இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –கடல் சூழ்ந்த பூமியிலே
இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –
அன்றிக்கே –
சர்க்கே பி நோ பஜா யந்தே பிரளயே நவ்ய தந்திச -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி
நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை
உஜ்ஜீவிப்பிக்க பாருங்கோள் என்னுதல் –

—————————————————————

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-

ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்னும் சாபல்யத்தை உடைய எனக்கு –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனும் அவளுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் நினைத்து இருப்பது –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –
பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சுலபனான நீ சொல்லு –

———————–

பெரு நீரும் விண்ணும் மலையும் உலகேழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை யல்லால்
வருதேவர் மற்றுளர் என்று என் மனத்திறையும்
கருதேன் நான் கண்ண புரத்துறை யம்மானே —8-10-2-

உன் தனக்கே தொண்டனானேன் என்றாரே-இங்கன் சொல்லுவான் என்
புறம்பே ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயநீயருமாய் அன்றோ இருக்கிறது -என்ன
அவர்கள் செய்தபடி செய்கிறார்கள் –-எனக்கு முன்னம் இதர விஷயங்களில் புத்தி இல்லை -என்கிறார்

———————–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

வேறு சிலரை ஆஸ்ரயநீயர் அல்லர் -என்று நினைத்து இருக்கும் அளவேயோ –
தாமஸ புருஷர்களோடு சம்பர்க்கமும் இல்லை –
சாத்விகரை ஒழிய காலம் செலுத்தவும் மாட்டேன் -என்கிறார் –
எண்ணாத மானிடத்தை எண்ணுமவன் அல்லேன் -என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிவிலேன்-என்கிறார் –

——————-

பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான்
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே —8-10-4-

அக்குணங்கள் எல்லாம் உண்டானாலும் நாம் விரும்பி இருத்தல் -செய்த அன்று -அன்றோ –
அது -கார்யகரமாவது என்ன –
நஞ்சு தாரகமான உனக்கு ஆகாதது -இல்லை
ஸ்ரீ பிராட்டிமார் எனக்கு புருஷகாரம் ஆனபின்பு என் கார்யத்துக்கு குறை உண்டோ -என்கிறார் –

———————–

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-

நாமும் உகந்து –வலிய புருஷகாரமும் உண்டாய் –சுலபனும் -ஆனாலும்-நீர் புறம்பு பற்றற்று
அகிஞ்சனராய் வரும் அன்று அன்றோ கார்யகரம் ஆவது -என்ன
என் குறை அறுத்து வைத்தேன்-நீ உன் தலையிலே குறை கிடவாதபடி பரிஹரித்துக் கொள்ளாய்-என்கிறார் –

———————-

ஏத்தி உன் சேவடி எண்ணி யிருப்பாரை
பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதம் என்று தொடாமை நீ
காத்தி போல் கண்ண புரத்துறை யம்மானே–8-10-6-

என்னைக் கொள்ளும் அளவு போராது- செய்த குற்றங்கள் ஆராய்வதாக நீ இட்ட
யமாதிகளும் என் பக்கல் வாராத படி பண்ண வேணும் -என்கிறார்

——————-

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே—8-10-7-

அவர்கள் கிட்டாமையையோ –
உன் பிரபாவத்தாலே அவர்களுக்கு மறைந்து வர்த்திக வேண்டும்படியாய் அன்றோ
இருக்கிறது -என்கிறார் –

———————–

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ண புரத்துறை யம்மானே—8-10-8-

நீ பாபங்களைக் கனக்க கூடு பூரித்து வைக்க –அதனுடைய பலானுபவத்தை பண்ணுவிக்குமவர்களுக்கு
மறைந்து வர்திக்கைக்கு ஹேது என் -என்ன –
நீ ஆஸ்ரிதர்க்காக உன்னை அர்த்தி யாக்கின படியையும்-விரோதி நிரசன சீலனாய் இருக்கிற படியையும் அனுசந்தித்தேன் –
அவை வாசனையோடே போய் நிற்க்கக் கண்டேன் -என்கிறார்-

———————-

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே —8-10-9-

உம்முடைய விரோதி போன படி தான் என் – நீர் பெற்ற பேறு தான் என் -என்ன –

———————-

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10-

இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே ஸ்ரீ பரமபதம் ஆட்சியாகக் கடவது –
ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி கண்டேனுக்கு இத்தை அப்யசித்தவர்களுக்கும்
அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம்

———————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -ஏழாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

July 5, 2019

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-பிரவேசம் –

கீழே சம்பந்த ஞானம் பிறக்கை யாலே
கைங்கர்ய லாபத்துக்கு கூப்பிட்டார் –
நீர் இங்கனே கிடந்தது படுகிறது என்ன
உமக்கு எல்லாம் பெறுகைக்கு உறுப்பாக அன்றோ
நாம் இவ்வோ இடங்களிலே நிற்கிறது என்று
உகந்து அருளின நிலங்களில் நிலையைக் காட்ட
இவரும் எல்லாம் பெற்றாராய்
க்ருதார்த்தர் ஆகிறார் –

————————

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-பிரவேசம் –

கீழ் சம்பந்த ஜ்ஞானம் பிறந்த படி சொல்லிற்று –
பின்பு தாம் நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே-பிறவாமை என்னைப் பணி -என்று அபேஷித்தார்-
நீர் இப்பாடு படுவது என்-உமக்காக அன்றோ நாம் உகந்து அருளின இடங்களில் வந்து நிற்கிறது -என்ன
எல்லாம் பெற்றாராய் சமாஹிதர் ஆனார் –
இதுவே பேறும் இழவும் ஆகைக்கு நம் தலையில் ஏதேனும் உண்டோ -என்று ஆராய்ந்து பார்த்தார் –
இத்தலையில் ஒன்றும் இன்றிக்கே-அவன் எதிர் சூழல் புக்குப் பண்ணின கிருஷி
இப்படி பலித்த பலமாய் இருந்தது –
ஊனேர் ஆக்கை தன்னை யுழந்தோம்பி வைத்தமையால் நானே எய்தப் பெற்றேன் –
இத் த்யாஜ்யமான சரீரத்தைக் கொண்டே பேற்றுக்கு உடலாம்படி பண்ணி அருளினான் – என்கிறார் –

——————–

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-பிரவேசம் –

நானே எய்தப் பெற்றேன் -என்றார் கீழ் – அந்தப் பேறு தன்னைப் பேசுகிறார் இதில் –

—————–

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1- பிரவேசம் –

இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை – ஸ்ரீ பாகவத சேஷத்வத்தைச் சொல்லுகிற திரு மொழி யாய்த்து –
ஸ்ரீ பெரிய நம்பி ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றார் ஒருவர் ஸ்ரீ திரு நாட்டுக்கு நடந்தாராய்
அவரை அநு கமனம் பண்ணி தீர்த்தமாடாதே வந்து எழுந்து அருளி இருக்க
இத்தை ஸ்ரீ எம்பெருமானார் கேட்டு அருளி ஸ்ரீ பெரிய நம்பி பாடே வந்து மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ என்ன
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -கடலோசையோ பாதியோ
சிறிது குறைவாகிலும் ஆஸ்ரயகிக்க வேண்டாவோ என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாள அரையர் கரையே போகா நிற்க
உள்ளே ஸ்ரீ மா மதலைப் பிரானை திருவடி தொழுது போனாலோ என்ன
ஆர் தான் திருமங்கை ஆழ்வார் உடைய பசைந்த வளையத்திலே கால் வைக்க வல்லார் -என்று அருளிச் செய்தார் –

ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு ஸ்ரீ நம்பி அழகை அனுசந்தித்து அங்கு நின்றும் போந்து
ஸ்ரீ திருச் சேறையிலே வந்து ஸ்ரீ மா மதலைப் பிரான் உடைய மௌக்த்யத்தை அனுசந்தித்து
அவ் வழியாலே அவதாரங்கள் எல்லாவற்றையும் அனுசந்தித்து
அவை எல்லாவற்றுக்கும் அடியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்தித்து
இப்படி அவன் படிகளை அனுசந்தித்து
குணைர் தாஸ்யம் உபாகத -என்று தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தமக்கு உத்தேச்யர் என்று இங்கனே பாகவத் சேஷத்வத்தை அனுசந்தித்து பேசி அனுபவிக்கிறார் –

இத்தால் அனன்யார்ஹ சேஷத்வத்தை சொல்லிற்று ஆகிறது –
அதாகிறது
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆகை இறே-ஓன்று இரண்டு கிரயம் சென்றால் மீளாது இறே –

பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –

————————–

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-பிரவேசம் –

கீழே பாகவத சேஷத்வத்தை அனுசந்தித்தார் –-அது பகவத் விஷயத்துக்கு உத்தம்பகமாய் இருக்கும் இறே-
ஆகையால் அபேஷை பிறந்தது –-பிறந்த அபேஷை தான் -வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று
ஆறி இருக்கும் அளவு அன்றிக்கே-இப்போதே பெற வேணும் என்னும் அளவாய் இருந்தது –
அப்போதே பெறாமையால் வந்த ஆற்றாமை ஒரு பிராட்டி தசையைப் பிறப்பிக்க
அத்தாலே அவனோடு காதா சித்கமாக சம்ச்லேஷத்தை உடையளாய் இருப்பாள் ஒருத்தி
நம்மோடு நித்ய சம்ச்லேஷத்தை பிறப்பிக்கைகாக ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அவள் பாசுரத்தாலே அங்குத்தைப் படிகளை அனுசந்திக்கிறார் –

——————

சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-பிரவேசம் –

போன புனிதர் -என்று இன்னாதானார் –நாம் எங்கேனும் போனோமோ – உமக்காகா வன்றோ இவ்வவோ இடங்களில்
வந்து நிற்கிறது –என்று உகந்து அருளின கோயில்களில் நிலையைக் காட்டினான் –
இனித்தான் சிறுக்கன் உடைய பிரதிஞ்ஞா சம காலத்திலேயே வந்து உதவினவன் என்று நம்மை நீர் அறிந்து இலீரோ –
உமக்கு நினைத்த வகை எல்லாம் பரிமாறுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
உம்முடைய விரோதியைப் போக்கி-உம்மை அடிமை கொள்ளுகைக்காக இங்கே வந்து நின்றோம் –
என்று ஸ்ரீ திரு வழுந்தூரிலே நிற்கிற நிலையைக் காட்டக் கண்டு த்ருப்தராய் அனுபவிக்கிறார் –
ததேவ கோபாயா யத பிரசாதாயச ஜாயதே -என்கிறபடியே
இந்நிலை தான் இவர்க்கு இழவுக்கும் உடலாய் பேற்றுக்கும் உடலாய் யாய்த்து இருப்பது –
ஆகையால் இப்போது தமக்கு சமாதானமாய் விட்டது –

————————

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-பிரவேசம்-

அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -என்றார் கீழ்
அது தானேயாய் நிற்கப் பெறாதே -பாதகமான இந்த்ரியங்கள் விடாதே அணித்தாய் நின்று நலிகிற படியை அனுசந்தித்து அஞ்சி
ஸ்ரீ நம்மாழ்வார் -உண்ணிலாவியில் பட்ட க்லேசத்தை அடையப் பட்டு –
இதுக்குப் போக்கடி அவன் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகைக்கு மேற்பட இல்லை என்று அத்யவசித்து
புருஷகார பூதையான பிராட்டி முன்னாக
தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லிக் கொண்டு சரணம் புகுகிறார்-

————————-

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1-பிரவேசம் –

இந்த்ரிய அவஸ்தைக்கு அஞ்சிக் கூப்பிட்டார் –நீர் இங்கனே கிடந்தது கூப்பிடுகிறது என் –
பேரளவுடைய ப்ரஹ்மாதிகள் தங்கள் ஆபத்தை அறிவிப்பிக்கும் போது அக்கரையிலே நின்று கூப்பிடுமது ஒழிய
அவர்களுக்கும் கிட்ட ஒண்ணாத படி இருக்கக் கடவ நாம் –
உமக்குப் பட்ட குறை அறிவிக்கலாம்படி பண்ணினோமாய் நின்றோமே –
இவ்வளவும் வர நின்ற நாம்-இனி மேல் உள்ள கார்யம் செய்வுதோம் என்று உமக்கு ஆறி இருக்கக் குறை உண்டோ –
உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்கைக்கு அன்றோ நாம் இங்கு வந்து நிற்கிறது என்று
அங்குற்றை நிலையைக் காட்டிக் கொடுக்க-அத்தை அனுசந்தித்து திருப்தராய்
பிறரைப் பார்த்து-இவன் அல்லது ஆஸ்ரயநீயன் இல்லை
ஆன பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் – என்கிறார் –

————————-

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே —7-9-1-பிரவேசம் –

கீழ்த் திரு மொழியிலே அவனே கிடி கோள் ஆஸ்ரயநீயன் -என்றார் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் உடைய வார்த்தையைக் கேட்டு அனர்த்தப் பட்டு போகாதே –
ஆஸ்ரயநீயன் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்து போகப் பாருங்கோள் என்கிறார் –

———————

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யானை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-பிரவேசம் –

அவன் அல்லது ஆஸ்ரயநீயன் இல்லை என்று பிறருக்கு உபதேசிக்கப் புக்கவர்
அருளாய் -என்றும்
உனதடியே சரணாமே -என்றும்
தம்முடைய அபேஷையின் மிகுதியைச் சொல்லி தலைக் கட்டினார் –

இவர்க்கு இனிச் செய்யலாவது என் என்று பார்த்து-வேறே ஒராசனமாக இருந்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அடைய காட்டிக் கொடுத்து
நம்மை ஒழிந்த வஸ்துக்கள் அடைய நமக்கு உபமானமாய் இருத்தல்
பிரகாரமாய் இருத்தல் செய்யும்படி இருக்கிற நாம்
உமக்கு கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து நின்றோம் ஆகில்
நீர் என் பெறாதாராய் தான் கிடந்தது கூப்பிடுகிறது –
இனி மேல் உள்ள காரியமும் நாமே செய்வுதோம் காணும் -என்று சமாதனம் பண்ண –
அப்படியே அனுசந்தித்து த்ருப்தராகிறார் –

ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்டஸ் சத்ருக்க்ன சஹிதோ பலீ –
பெரிய ஆசை உடன் வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நினைத்து வந்த கார்யத்தில் செய்தது ஒன்றும் இல்லை –
ஆகிலும் மீண்டு போகிற போது ஹ்ருஷ்டனாய்ப் போனான் இறே-
அப்படியே யாய்த்து இவர் விஷயத்தில் சமாதானம் பண்ணின படியும் –

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-ஏழாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

July 5, 2019

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை கழித்து அருள வேணும் -என்கிறார் –

——————

வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும்
துற்றாக முன் துற்றிய தொல் புகழானே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே —7-1-2-

இது தான் மிகை அன்றோ –பிரளயம் கொண்ட பூமியை நீ எடுத்தது ஆர் கூப்பிட –
நீ அறிந்த ஆபத்தும் விலக்காமையும் அன்றோ வேண்டுவது உனக்கு ரஷிக்கைக்கு –
பிரளயம் கொண்ட பூமி ஆழ்ந்த இத்தனை அல்லது என்னை எடுக்க வேண்டும் -என்றதோ –

————————

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்
காரேய் கடலே மலையே திருக் கோட்டி
ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே–7-1-3-

ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே அநேக வடிவம் கொண்டு
அவ்வோ இடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி வர்த்தியா நின்றான் –
ஸ்ரீ திருப் பாற் கடலில் கிடந்ததும்-ஸ்ரீ திரு மலையில் நின்றதும்-ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்ததும் தமக்காக -என்று
அறிந்த ஹர்ஷம் -அதுவே பருகிக் களிக்கின்றேன் -என்கிறார் –

———————

புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே –7-1-4-

ஆஸ்ரித விரோதியை ஆளிட்டு அந்தி தொழாதே-தானே கை தொட்டுப் போக்கினான் என்னும் சுத்தியை
உடையனாய் இருக்கிறபடி –

——————-

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

நர நாரணனே –ஸ்த நந்தய பிரஜைகாகா தாய் குடி நீரை குடிக்குமா போலே
இவர்களுக்காகா தபஸ் ஸூ பண்ணுமவனே-
எங்கள் நம்பி-குறைவாளரான எங்கள் குறையை நிரப்புகைக்கு ஈடான பௌஷ்கல்யத்தை உடையவனே –
உன்னுடைய கைங்கர்யத்துக்கு நானே விரோதிகளை நானே போக்கித் தருகிறேன்-அஞ்சாதே கொள் -என்று
மாஸூச என்றாப் போலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
சர்வ பூதேப்ய அபயம் ததாமி -என்றாப் போலே இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –

————————

பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-

தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் –
அப்போதே எடுத்து நுகரலாம் படி கனி போலே இருக்கிறவனே –
காணப் பெறாமையாலே அசந்நேவ-என்கிறபடியே உரு மாய்ந்த நான் கண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –

——————

கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-7-

என்னோடு ச கோத்ரிகளாய் தான் உகந்த ஊர் எல்லாம் -என்கிறபடியே
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே –
நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே உன்னைக் கண்டு கொண்டு
உஜ்ஜீவிக்கப் பெற்றேன்

——————

அத்தா அரியே என்று உன்னை அழைக்கப்
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8-

பிறர் என்னை பேசா நின்றார்கள் என்று கை விடலாம்படி இருக்கிறாய் அல்லையே நீ –
முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –பெரு விலையனான மாணிக்கம் போலே இருக்கிறவனே
பலத்தோடு வ்யபசரியாதவனே -முளையாத வித்து -நிஷ்பலம் என்பதால் முளைக்கின்ற வித்தே -என்கிறார்
உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது –

———————–

தூயாய் சுடர் மா மதி போல் உயிர் க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா வலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –7-1-9-

ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே –
திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த திருப் பவளத்தை உடையவனே –
இப்படி ஆபத் சகனான உன்னை எங்கனே மறக்கும் படி –

—————

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே -7-1-10-

என்னைப் போலே நீங்களும் இவ் விஷயத்திலே ருசியை உடையிகோளாய் பாடுவது ஆடுவதாகவே
ஸ்ரீ பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் – அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம் –

————————

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

இனி வேறே நூறாயிரம் இதர விஷயங்கள் முகம் காட்டினாலும் அவற்றோடு செறியேன் –
நான் நோவு படுகிற சம்சாரத்தில் நீயே முற்பாடனாய் வந்து நின்ற பின்பு அவற்றோடு பொருந்துமோ –
ப்ரீதி அதிசயத்தாலே -ஒ -என்கிறார் –

———————–

ஓடா வாளரியின் உருவாய் மருவி என்தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-2-

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் –
நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ – நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் –
ஸ்ரீ நரசிம்ஹ வேஷ பரிக்ரஹம் பண்ணின அன்று தொடங்கி இவர் உடைய ஹிருதயத்திலே காணும் கிட்டுவது –

—————————

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே–7-2-3-

அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய உன்னை அல்லது புறம்பே சிலரை –
இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை –
எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும் ப்ரீதி புரஸ் சரமாக ஏத்துமது இல்லை –

——————–

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-

சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே
ஸ்ரீ பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே
நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் –
அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் -உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ –
உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு –

——————–

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல ஒட்டேன்
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-

என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய ஹிருதயத்திலே புகுந்த உன்னைப் போக ஒட்டுவேனோ
சேஷ பூதராவார் சேஷி செய்தபடி செய்யக் கண்டு இருக்குமவர்கள் அன்றோ
ஒட்டேன் என்று நிர்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குப் போருமோ -என்ன –
மடல் எடுக்க நினைப்பார் இது ஆம் இது ஆகாது என்று கார்யம் பார்த்தோ செய்வது –
நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –-நீ முந்துற மடல் எடுத்து பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது –
அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே-

————–

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-6-

நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி என் பக்கலிலே அருளைப் பண்ணின
ஸ்ரீ திரு நறையூரிலே வந்து நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று –

—————–

மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-7-

நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் –
நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன –
நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும்ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள் –

—————–

எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-8-

விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை குடைந்து வண்டு உண்ணும் -என்கிறபடியே
உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி
போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே-
அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ
அவ் ஊரில் போக்யதை இருப்பது –

———————–

ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-9-

தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க
தமக்கு இனிதாக நின்றது –எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே –
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே
இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் –
அது செய்த படி தான் எங்கனே என்ன –நீ வர நிற்கையாலே நான் இப் பேறு பெற்றேன் –

——————–

நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே –7-2-10-

இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற
சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்-இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் –
அதுக்கு மேலே-போக பூமிகளிலே மேலாய் இருக்கிற ஸ்ரீ பரம பதத்திலே போய்
இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய்
பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள் –

————————-

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-

ஸ்வ யத்னத்தால் அன்றிக்கே அவன் காட்டின வழியாலே காணப் பெற்ற அடியேனான நான் –
ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூர்ணனை –
மனஸ் ஸூ சஹகரிக்க -அத்தாலே கண்ணால் காணும் காட்சி அன்றிக்கே அந்த நெஞ்சு தானே முழு மிடறு செய்து
பூரணமாக நெறிபட அனுபவிக்கப் பெற்றேன் –
நெஞ்சே அனுபவித்து கண்கள் அனுபவிக்கப் பெற்றது இல்லை -என்கிற குறை கிடவாமை -கண்கள் கண்டு அனுபவிக்க
அவற்றுக்கு ஆஸ்ரய பூதனாய் இருக்கிற நானும் –
என் கண்கள் களிப்பக் களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேனே -திரு வாய் மொழி -10-8-4-
என்கிறபடியே களிக்கப் பெற்றேன் –

——————–

தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்
காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி
யாயினை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே –7-3-2-

இப்படி பூர்ணனாய் இருந்து வைத்து என் பக்கலில் அன்பைப் பண்ணினவனை –
அவன் என்பக்களில் அன்பைப் பண்ணி மேல் விழா நிற்க
நான் அவனை ஒழிய வேறு சிலரை ஆதரிப்பேனோ –

————————–

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் –
பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு அனுபவித்தால் போலே
இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –
எனக்கு ஜனகன் ஆனவனை-என்னுடைய குல நாதன் ஆனவனை –
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எனக்கு பிரகாசிப்பித்த மகா உபாகாரகனை –
எத்தால் மறக்கேனே –பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ
நான் இட்ட பச்சையை நினைத்து ஆறி இருக்கவோ-எவ்வழியால் மறப்பது –

—————

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4-

ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது
வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

——————-

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே –7-3-5-

ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமை பிறந்து-அது நேர் கொடு நேர் கிடையாமை
களவு கண்டு புஜிக்கப் புக்கு-அது தன்னை முடியச் செய்து தலைக் கட்டாமை
வாயது கையதாக அகப்பட்டு-உரலோடு சேர்த்து கட்டுண்டு-அடியுண்டு அடிக்கு இறாய்த்து
உடம்பு வெளுத்து-பயர்த்து-பேகணித்து நின்ற நிலையை அனுசந்திக்க அனுசந்திக்க
இவர்க்கு இவ்விருப்பு தானே யாய்த்து-சர்வ வித போக்யமுமாய் இருக்கிறது –
சர்வ ரச-என்கிற படியே இனியதாக நின்றது –இப்படி சர்வ வித போக்யனாய் இருக்கிறவனை ஒழிய
என் உடைய நெஞ்சு வேறு சிலரை அநவரத பாவனை பண்ணாது –

—————-

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்
கட்டியைக் கரும்பு ஈன்ற இன் சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே –7-3-6-

இதுக்கு முன்பு ஒதப் போகாதவன் அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே
சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை –
இவ்வதாரத்துக்கு நாற்றங்காலாயக் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின நீர்மை
உடையவனை அல்லது பாடல் செய்யேன் –

——————-

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-

சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயம் ஆனான் –பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –
இந்நிறத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய
என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –

——————–

இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-

ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்-என்னை சர்வாஸ்வாபஹாரம் பண்ணினவனை –
நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை-அரை ஷணத்திலே பண்ணினவனை
இன்று-நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன் –

——————-

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9-

இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது மங்களா சாசனம் பண்ணாது –
பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது –
நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் -சம்சாரியான நான் –
பர தந்த்ரனாய் இருக்கையாலே பிரத்யுபகாரம் பண்ணலாவது காண்கிறிலேன்
எத்தைச் செய்வேன் சொல்லி கோள்-

—————–

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10-

ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-கரும்பு தின்னக் கூலி இறே
பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க அதுக்கு மேலே பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள்
நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று தன்னடையே விட்டுப் போம் –

———————–

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

ஸ்ரீ திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது –
உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன
இங்கு உமக்கு ஒழியாது வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை –

———————–

அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே
ஸ்பர்தையாலே ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற ஸ்ரீ கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய
திருவடிகளைத் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –
நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்குஇடம் காண்கிறிலேன் –

———————–

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-

ஸ்ரீ திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய சூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் –
அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே –

———————-

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே -7-4-4-

வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு
சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு – அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற
மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும்
பிரிய ஷமன் அல்லேன் –

———————-

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

ஸ்ரமஹரமாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை
நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது
இது வெருமனேயோ

—————————–

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

ஸ்ரீ வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும்
கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ –

—————-

பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே -7-4-7-

ஸ்ரமஹரமான திருச் சேறையிலே நிற்கிற ஸ்ரீ நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகைஅனுசந்தித்தேற்கு –
ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –
அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை –
அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –

———————-

உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-

பாகவதர்களை நெஞ்சாலே நினைக்க மிருத்யுவால் வரும் பயம் போம் –
பாபங்கள் உடைய நலிவால் வரும் பயத்துக்கும் அஞ்ச வேண்டா என்கிறது –

———————

கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மண நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

எனக்கு இது தான் உண்டான படி எங்கனே என்கிறார் –

————————

பூ மாண் சேர் கருங்கழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10-

ஸ்ரீ ஆழ்வார்-ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு-பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –
ஹேய ப்ரத்ய நீகமாய்-தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்-
அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது
இம்மாலையைச் சூட்டுங்கோள் –

———————-

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-

பிராப்ய பூதனான அவன் வந்து நிற்கையாலே நமக்கு பிராப்ய பூமி தான் போலே இருந்தது என்று
ஆதர அதிசயம் தோற்ற சொல்லுகிறது-

————–

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத்
தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகினங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-2-

பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதி ரதர் மகா ரதர் -என்று இங்கனே ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம்
இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது
தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது -என்று அகலுவதாய்க் கொண்டு
அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும் –

——————

செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும்
கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3-

இந்த்ராதிகள் உடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை
மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து-

—————–

வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4-

சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை-அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே
சஞ்சரியா நிற்கும்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து-பிரளயம் என்று பாராதே
ஜகத் ரஷணத்துக்காக ஸ்ரீ மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து –

——————–

பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-5-

ஜகதாகாரனானவன் அசாதாரண விக்ரஹத்தைக் கண்டு அனுபவிக்கலாம் படி வந்து நிற்கிற ஊர் போலும் –

—————————-

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப்போவா அணியூர் வீதி அழுந்தூரே–7-5-6-

என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்தன்னது என்னும் இடம் தோற்ற ஸ்மிதம் பண்ணி –
தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து-என் அருகே வந்து நின்று
அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து
இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்

———————–

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல்போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே —7-5-7-

பிரிவை பிரசங்கித்து-என்னுடைய கண்ணும் கண்ணீருமான ஆற்றாமையைக் கண்டு
பின்னை கால் வாங்கிப் போக மாட்டாதே நின்றவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும் –

———————-

வஞ்சி மருங்கிலிடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
பஞ்சியன்ன மெல்லடி நற்பாவை மார்கள் ஆடகத்தின்
அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே —7-5-8-

இன்ன பரிமாற்றம் பெற்றிலோம் -என்கிற அத்ருப்தி நெஞ்சில் கிடவாதபடி யாக வாய்த்து
நெஞ்சிலே குறைவறப் புகுந்து நின்றபடி –

———————–

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-9-

இத்தலையில் உள்ளதை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி தன் பக்கல் உள்ளது ஒன்றும் தொங்காத படி பண்ணிப் போந்த
சுத்தியை உடையவர் வர்த்திக்கிற தேசம் போலும் –

———————

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10-

சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல –
பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல பாவங்கள் தன்னடையே போம் –

——————–

சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-

அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே
இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

————————–

கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை யடியார்க்கு
ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-

அசாதாரண பரிகரத்துக்கு ஐயோ என்று கிருபையைப் பண்ணி ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நிற்கிற
அயர்வறும் அமரர்கள் அதிபதியை-நான் கண்ணாலே காணப் பெற்று ஷோபம் அடையத் தீர்ந்து
களிக்கப் பெற்றேன் –

————————-

உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை
அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-

நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –ஸ்ரீ திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது –
அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –உஜ்ஜீவித்து –க்ருதார்த்தனாகப் பெற்றேன் –

——————–

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-

அன்று பசுவின் நெய்யை அமர்ந்து அமுது செய்த ஸ்ரீ திரு வழுந்தூர் நின்றானை-
ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது –
கண்ணாலே காணப் பெற்று அபூர்ணனான நான் பூர்ணனாகப் பெற்றேன்

————————-

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5-

ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு தாபத்ரயம் போம் படி நின்றவனை
தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு என்னுடைய தாபத்ரயங்கள் தீரப் பெற்றேன் –

————————-

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6-

ஸ்ரீ திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன் –

———————

திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா
உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே -7–6-7-

ஸ்ரீ திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து-
ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

————————

நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன்
முலையாள் வித்தகனை முது நான்மறை வீதி தோறும்
அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே —7-6-8-

முது நான்மறை உண்டு -பாசி பூத்த வேதம் –அது திரு வீதிகள் தோறும் திரைக் கிளப்பத்தை உடைய
கடல் போலே கோஷியா நின்றுள்ள ஸ்ரீ தென் அழுந்தையில் மன்னி நின்ற –
சகல கலைகளாலும் புருஷார்த்தமாக பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

———————-

பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

ஸ்ரீ திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற –
கார் காலத்திலேயே மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை –
கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –

———————

திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே—7-6-10-

அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள்-ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள் –

——————–

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும்
நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்-
உண்ணிலாய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால் நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள்
என் பக்கல் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை-
என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே
அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு
அத்தை முடிய நடத்த வேண்டாவோ –

——————–

பந்தார் மெல்விரலி நல் வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் யுடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்ரியா சாமவேதனே நெடுமாலே
அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-2-

வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –
அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –
அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

————————

நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-3-

நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –
நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-

———————–

பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மதுசூதா மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண்
நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமானும் பாராளும்
அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே—7-7-4-

ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே
ஸ்ரீ மகா வராஹமாய் வந்து அவதரித்து கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே-
அது தன்னை பழம் கதை யாக்கி இபொழுது இங்கே வந்து நிற்கிறவனே

———————–

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் கருமமாவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே-7-7-5-

இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி -பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து முடிக்கும்
சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –
எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –

———————–

தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது எங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகமிவை நான்கும் ஆனாய்
ஆயா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-6-

காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன்
அந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு அன்றோ நீ இங்கே வந்து நிற்கிறது –

————————–

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-

இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்கவேணும் என்று
ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

———————-

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-8-

வகுத்த ஸ்வாமியான நீ -ராஜ புத்ரனாய் பிறந்து முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே
அடியேனாய் இருக்கிற என்னை நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம் படி கடல்கரை வெளியிலே வந்து நின்றால் போலே
எனக்கு உறவுமுறையார் கை விட்ட அன்று வந்து கிட்டலாம் படி அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

————————-

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-

அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாவது
இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்
ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்
கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –

————————–

அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மன்னுவாரே–7-7-10-

இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் –சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து
பெரிய முத்தின் குடைக்கீழே இருந்து நிரவதிக ப்ரீதி யுக்தராய்ப் பெறுவார் –
இந்த்ரிய வஸ்தையை அனுசந்தித்து அஞ்சின ஸ்ரீ ஆழ்வார் இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே
அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தாராம் –

————————

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1-

தனித் தனியே பிரஹ்மாவைப் போலே சிருஷ்டிக்க ஷமராய் இருக்கிற பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகையாலே
வந்த நிரவதிக சம்பத்தை உடைய ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நின்று அருளின இது தான் அலாப்யலாபமாகக் கொண்டு நிற்கிறவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடி கோள்-அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் போகப் பாருங்கோள் –

———————–

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முநிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய வெம்பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2-

அன்னமானது அப்பூம் படுக்கையிலே போக ஸ்ரோதஸ்ஸில் தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற
நிரவதிக சம்பத்தை உடைய –அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட போக பிரதாநமாய்த்து இருப்பது –

————————–

குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-3-

ஆஸ்ரிதர் உடைய விரோதியைப் போக்கி –அவர்கள் உடைய அபேஷிதம் சம்விதானம் பண்ணும்
ஸ்வபாவன் என்கிற சுத்தியை எனக்கு பிரகாசிப்பித்தவன் கிடீர் –

—————————

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கற்குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம்மீசன் காண்மின்
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –அந்த பூமிக்கும் அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின
அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் –
நிரவதிக சம்பத்தை உடைத்தாய் –சம்சார விபூதிக்கு ஆபரணம் போலே இருக்கிற ஸ்ரீ திரு அழுந்தூரிலே –

—————-

சின மேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின்
இனமேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன்சொல்
அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே —7-8-5-

ஸ்ரீ நரசிம்ஹத்துக்கும் பிற்காலியாத மிடுக்கை உடைய ஹிரண்யன் உடைய உடலைக் கீண்டு –
அவள் உடைய முலை வழியே அவளுடைய பிராணங்களும் வற்றி வரும்படி முலையை அமுது செய்த
ஆச்சர்ய பூதன் கிடி கோள் இங்கு வந்து நிற்கிறவன் –

——————-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆனதொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-6-

அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும்
அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –அத்விதீயமாய்
ஆயதங்களுக்கு எல்லாம் பிரதாநமாய் இருக்கிற திரு ஆழியைப் பரிகரமாக உடையவனான என் ஸ்வாமி கிடி கோள்

———————

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-7-

ஒரு கொலை அம்பாலே எய்து அவனை அழித்து விரோதி போக்கப் பெற்றோம் -ஆஸ்ரிதர்களும் குடி இருப்புப் பெற்றார்கள் –
என்று அவர்களுக்கு உகவக் கடவ உகப்பை தான் உகந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் –

———————–

கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை யடர்த்துக் குரவை கோத்து
வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்
செம்பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே —7-8-8-

அனுகூல ஸ்பர்சம் ஒழிய த்ரவ்யம் ஒழிய செல்லாமையாலே
பரிமள பிரசுரமான பூவை உடைத்தான குழலை உடைய யசோதை பிராட்டி வைத்த
தயிரையும் வெண்ணெயும் அமுது செய்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாக இருக்கிற ஆச்சர்ய பூதன் கிடீர் –

————————

ஊடேறு கஞ்சனொடு வில்லும் மல்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் –
சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில் மணியணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே —7-8-9-

நாள் செல்ல நாள் செல்ல மிடுக்கு ஏறி வாரா நிற்பதான தோளை உடையனாய் விஜயமானது எப்போதும் ஒக்க வர்த்தியா நின்ற
புகழை உடைத்தான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே உடைய சர்வாதிகன் கிடீர் –

————————-

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே —7-8-10-

சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில்தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற
சர்வாதிகனை –ஸ்ரீ திரு வழுந்தூரிலே நின்று அருளின சர்வாதிகன் ஆனவனை –
இப்பத்தையும் வல்லார்-ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்-என்று தாம் சேர்த்து அனுபவித்த பிரகாரம் இருக்கிறபடி –
முதல் பாட்டு -ஸ்ரீ ஷீரார்ணவம்/ 2-4-5-10—திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும் ஸ்ரீ கஜேந்திர ரஷணம்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள்
இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார்
என்று அருளிச் செய்வர் –

———————-

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே —7-9-1-

உகந்து அருளின நிலங்களும் இவர் திரு உள்ளமும் ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது –
இப்படி இருக்கையாலே ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயநீய ஸ்தானம் இவை இரண்டும் யாய்த்து –
சல சயனன் -என்றது-அது அவனுக்குத் திரு நாமமாய்-ஜல சயனன் வர்த்திக்கிற இடம்
சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது –

————————

தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர் வாய் மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர் சிருபுலியூர்ச் சல சயனத்து
உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே –7-9-2-

அழகியதாய் கண்டார்க்கு மேல் விழும்படியான வடிவை உடைய ஸ்ரீ வாமனன் ஆன ஸ்ரீ சர்வேஸ்வரன்
உடைய திருவடிகளை ஸ்மரியுங்கோள்-

————————

பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

கண்டிகோளே நாம் இருக்கிறபடி நீங்களும் இப்படியே இருக்கப் பாருங்கோள் -என்கிறார் –
ஸ்ரீ சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஒழிய
வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –

——————

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே —7-9-4-

தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால் தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று பார்த்து
தம்படியை அவர்களுக்கு அறிவித்து-நீங்களும் என்னைப் போலே அவனைக் கொண்டு
உங்கள் விரோதிகளைப் போக்கிக் கொள்ளப் பாருங்கோள் என்கிறார் –

————————

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே—7-9-5-

அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய
கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும் –

——————

முழு ஆம்பலும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும்
செழுநீர் வயல் தழுவும் சிறுபுலியீர்ச் சலசயனம்
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே —7-9-6-

ஸ்ரீ சிறுபுலியீர்ச் சலசயனத்தை தொழுகையே ஸ்வபாவமாக உடையாருடைய திருவடிகளைத் தொழுவார்க்கு
துக்கங்கள் நில்லா –அவை தன்னடியே விட்டுப் போம் –

————————–

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீயோம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே—7-9-7-

உன் திருவடிகளில் அசாதாரணராய் இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை –
எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –
இத்தால் சொல்லிற்று ஆயத்து –ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

———————-

மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே –7-9-8-

அனுபவ ஜனித ப்ரீதிக்குப் போக்கு விடுகைக்கு பலவாய்த் தலைகளை உடையனாய் சைத்யாதிகளை பிரக்ருதியாக உடைய
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி பிரயோஜன நிரபேஷமாக ரஷணத்திலே ஒருப் பட்டு இருக்கிறவனே –
என் பக்கலிலே உன்னுடைய கிருபையைப் பண்ணி அருள வேணும்

————————-

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை யுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே—7-9-9-

நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் கூட சிறுபுலியூர்ச் சல சயனத்த்திலே
சாய்ந்து அருளினவனே-ஸ்ரீ யபதியான உனது திருவடிகளை ஒழிய எனக்கு வேறு ஒரு புகல் இல்லை
பிராப்யம் இல்லை –

————————

சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே —7-9-10-

பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும் இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க-
பாபங்கள் தானே நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்-

———————-

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யானை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே
பிறக்கிற ஆசை யானவனை –அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே நிரதிசய போக்ய பூதமான
கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –
அப்போதே நுகரலாம்படி பக்வ பலமாய் இருக்கிறவனை –பசித்த இடத்தே ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே
அபேஷை பிறந்த இடத்தே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

————————–

மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-2-

நிரதிசய போக்கியம் ஆனவனை –நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே அப்போதே பருகலாம்படி இருக்கிற
கரும்பில் ராசம்சம் ஆனவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

——————-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-

அசாதாரணமான விக்ரஹத்தோடே ஸ்ரீ திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை –
நசையை உடையோமாய்க் கொண்டு நம்மாலே ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை –
அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான காலம் ஆனவனை சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

————————

பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-

இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –எனக்கு கைம்முதல் இல்லாத வன்று
அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான நிதியானவனை –பொன் போலே ஸ்ப்ருஹநீயம் ஆனவனை –
அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை –
சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

————————

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-

அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு காட்சி கொடுக்கைக்காக ஸ்ரீ திரு நின்றவூரிலே நிற்கிற
முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –
ஸ்வ ஸ்பர்சத்தால் வரும் ஸூகமாய் இருக்கிறவனை –
தாரகம் ஆனவனை –-சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

———————–

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினைத் திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினைக் கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-

சர்வைஸ் ஸ்ப்ருஹநீயமானவனை-போக்ய-போகோ உபகரண போக ஸ்தானங்களாய் உள்ளவனை –
காலமே சேஷித்த அன்று காலமாய் நின்றவனை –
நித்தியமான திவ்ய ஆயுதங்களை ஏந்தும் திருக் கையை உடையவனை –
நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி –
பிராமணர் உடைய மரியாதை போலே இருக்கிற சங்கல்பத்தை உடையவனை –
பிராமணராலே அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

———————

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-

விரோதிகளைப் போக்குமவன் –விரோதி நிரசனத்தை சீலமாக உடைய உபகாரகனை –
படபாமுகாக்னி ஜலம் அடைய தகன் பக்கலிலே வந்து சுவரும்படி இருக்குமா போலே
சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை –
களிவண்டு அறையும் பொழில் ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே-

—————————

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-

நிருபாதிக சேஷியை-தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்-
அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை –
கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை –
ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே –

——————

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை–ததாமி புத்தியோகம் தம் -என்கிறபடியே
தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான புத்தி யோகத்தை கொடுக்குமவனை –
வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –
காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

—————–

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது-என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே-ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
இவை பத்தையும் –அனுசந்திப்பார்க்கு அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே வல்லராய்
உபாதான லோகங்களில் போக பூமிகள் எல்லாம் புக்கு அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்

————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – ஏழாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

July 5, 2019

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

கடவ நீயே என்னுடைய விரோதியைப் போக்கா விட்டால் வேறு சிலர் கடவார் உண்டோ –
நீயே நினைத்து கார்யம் செய்யில் உளேனாய்-இல்லையாகில் இல்லை யாம் படி
அநந்ய கதியாய் இருக்கிற நான்-ஸ்வாமியான உன்னையே நினைத்துக் கூப்பிடா நின்றேன் –
என்னுடைய விரோதியை நீயே போக்கா விடில் வேறு சிலர் போக்குவார் உண்டோ என்கிறார் முதல் பாசுரத்தில்

ஆபன்னனான போதாக என்னுடைய ரஷணத்துக்காக நான் நாலடி இடத் தொடாதே
உன்னையே சொல்லிக் கூப்புடுகை யாகிற இப் பேறு பெற்றேன் –
இனி உன்னுடைய அருளுக்கு தண்ணீர் துரும்பு இல்லை இறே –
நாம் எல்லாம் செய்வோமாக இருக்கச் செய்தே நீ ஒட்டுகிறலை என்ன வேண்டாவே –
நான் கை வாங்கினேன் – அருள் தந்திடு எனக்கு என் குல நாதனே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே அநேக வடிவம் கொண்டு
அவ்வோ இடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி வர்த்தியா நின்றான் –
ஸ்ரீ திருப் பாற் கடலில் கிடந்ததும்-ஸ்ரீ திரு மலையில் நின்றதும்-ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்ததும் தமக்காக -என்று
அறிந்த ஹர்ஷம் -அதுவே பருகிக் களிக்கின்றேன் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

மகா உபகாரகனாய் இருக்கிற உன்னை உன்னாலே உபகாரம் கொண்டு இருக்கிற நான்
எத்தைச் சொல்லி மறப்பது –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நர நாரணனே –ஸ்த நந்தய பிரஜைகாகா தாய் குடி நீரை குடிக்குமா போலே
இவர்களுக்காகா தபஸ் ஸூ பண்ணுமவனே-
எங்கள் நம்பி-குறைவாளரான எங்கள் குறையை நிரப்புகைக்கு ஈடான பௌஷ்கல்யத்தை உடையவனே –
உன்னுடைய கைங்கர்யத்துக்கு நானே விரோதிகளை நானே போக்கித் தருகிறேன்-அஞ்சாதே கொள் -என்று
மாஸூச என்றாப் போலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
சர்வ பூதேப்ய அபயம் ததாமி -என்றாப் போலே இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் –
அப்போதே எடுத்து நுகரலாம் படி கனி போலே இருக்கிறவனே –
காணப் பெறாமையாலே அசந்நேவ-என்கிறபடியே உரு மாய்ந்த நான் கண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

என்னோடு ச கோத்ரிகளாய் தான் உகந்த ஊர் எல்லாம் -என்கிறபடியே
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே –
நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே உன்னைக் கண்டு கொண்டு
உஜ்ஜீவிக்கப் பெற்றேன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பிறர் என்னை பேசா நின்றார்கள் என்று கை விடலாம்படி இருக்கிறாய் அல்லையே நீ –
முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –பெரு விலையனான மாணிக்கம் போலே இருக்கிறவனே
பலத்தோடு வ்யபசரியாதவனே -முளையாத வித்து -நிஷ்பலம் என்பதால் முளைக்கின்ற வித்தே -என்கிறார்
உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே –
திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த திருப் பவளத்தை உடையவனே –
இப்படி ஆபத் சகனான உன்னை எங்கனே மறக்கும் படி –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

என்னைப் போலே நீங்களும் இவ் விஷயத்திலே ருசியை உடையிகோளாய் பாடுவது ஆடுவதாகவே
ஸ்ரீ பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் – அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————-

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

இனி வேறே நூறாயிரம் இதர விஷயங்கள் முகம் காட்டினாலும் அவற்றோடு செறியேன் –
நான் நோவு படுகிற சம்சாரத்தில் நீயே முற்பாடனாய் வந்து நின்ற பின்பு அவற்றோடு பொருந்துமோ –
ப்ரீதி அதிசயத்தாலே -ஒ -என்கிறார் –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் நெஞ்சை உனக்காக்கிக் கொண்டாய் என்கிற இது உனக்கு ஒரு மிடுக்கோ –
என்னை உனக்காக்கிக் கொண்ட உனக்கு –
நீ என்னுடைய சர்வ இந்த்ரியங்களுக்கும் உன்னை விஷயம் ஆக்கி வைக்க
நான் உன்னை விட்டு புறம்பே கவி பாடுகைக்கு பிராப்தி உண்டோ –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய உன்னை அல்லது புறம்பே சிலரை –
இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை –
எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும் ப்ரீதி புரஸ் சரமாக ஏத்துமது இல்லை –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே
ஸ்ரீ பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே
நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் –
அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் -உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ –
உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய ஹிருதயத்திலே புகுந்த உன்னைப் போக ஒட்டுவேனோ
சேஷ பூதராவார் சேஷி செய்தபடி செய்யக் கண்டு இருக்குமவர்கள் அன்றோ
ஒட்டேன் என்று நிர்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குப் போருமோ -என்ன –
மடல் எடுக்க நினைப்பார் இது ஆம் இது ஆகாது என்று கார்யம் பார்த்தோ செய்வது –
நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –-நீ முந்துற மடல் எடுத்து பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது –
அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி என் பக்கலிலே அருளைப் பண்ணின
ஸ்ரீ திரு நறையூரிலே வந்து நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் –
நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன –
நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும்ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள்
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை குடைந்து வண்டு உண்ணும் -என்கிறபடியே
உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி
போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே-
அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ
அவ் ஊரில் போக்யதை இருப்பது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க
தமக்கு இனிதாக நின்றது –எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே –
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே
இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் –
அது செய்த படி தான் எங்கனே என்ன –நீ வர நிற்கையாலே நான் இப் பேறு பெற்றேன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற
சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்-இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் –
அதுக்கு மேலே-போக பூமிகளிலே மேலாய் இருக்கிற ஸ்ரீ பரம பதத்திலே போய்
இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய்
பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-

ஸ்வ யத்னத்தால் அன்றிக்கே அவன் காட்டின வழியாலே காணப் பெற்ற அடியேனான நான் –
ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூர்ணனை –
மனஸ் ஸூ சஹகரிக்க -அத்தாலே கண்ணால் காணும் காட்சி அன்றிக்கே அந்த நெஞ்சு தானே முழு மிடறு செய்து
பூரணமாக நெறிபட அனுபவிக்கப் பெற்றேன் –
நெஞ்சே அனுபவித்து கண்கள் அனுபவிக்கப் பெற்றது இல்லை -என்கிற குறை கிடவாமை -கண்கள் கண்டு அனுபவிக்க
அவற்றுக்கு ஆஸ்ரய பூதனாய் இருக்கிற நானும் –
என் கண்கள் களிப்பக் களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேனே -திரு வாய் மொழி -10-8-4-
என்கிறபடியே களிக்கப் பெற்றேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்

இப்படி பூர்ணனாய் இருந்து வைத்து என் பக்கலில் அன்பைப் பண்ணினவனை –
அவன் என்பக்களில் அன்பைப் பண்ணி மேல் விழா நிற்க
நான் அவனை ஒழிய வேறு சிலரை ஆதரிப்பேனோ –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் –
பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு அனுபவித்தால் போலே
இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –
எனக்கு ஜனகன் ஆனவனை-என்னுடைய குல நாதன் ஆனவனை –
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எனக்கு பிரகாசிப்பித்த மகா உபாகாரகனை –
எத்தால் மறக்கேனே –பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ
நான் இட்ட பச்சையை நினைத்து ஆறி இருக்கவோ-எவ்வழியால் மறப்பது –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது
வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமை பிறந்து-அது நேர் கொடு நேர் கிடையாமை
களவு கண்டு புஜிக்கப் புக்கு-அது தன்னை முடியச் செய்து தலைக் கட்டாமை
வாயது கையதாக அகப்பட்டு-உரலோடு சேர்த்து கட்டுண்டு-அடியுண்டு அடிக்கு இறாய்த்து
உடம்பு வெளுத்து-பயர்த்து-பேகணித்து நின்ற நிலையை அனுசந்திக்க அனுசந்திக்க
இவர்க்கு இவ்விருப்பு தானே யாய்த்து-சர்வ வித போக்யமுமாய் இருக்கிறது –
சர்வ ரச-என்கிற படியே இனியதாக நின்றது –இப்படி சர்வ வித போக்யனாய் இருக்கிறவனை ஒழிய
என் உடைய நெஞ்சு வேறு சிலரை அநவரத பாவனை பண்ணாது –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இதுக்கு முன்பு ஒதப் போகாதவன் அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே
சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை –
இவ்வதாரத்துக்கு நாற்றங்காலாயக் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின நீர்மை
உடையவனை அல்லது பாடல் செய்யேன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயம் ஆனான் –பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –
இந்நிறத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய
என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்-என்னை சர்வாஸ்வாபஹாரம் பண்ணினவனை –
நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை-அரை ஷணத்திலே பண்ணினவனை
இன்று-நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது மங்களா சாசனம் பண்ணாது –
பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது –
நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் -சம்சாரியான நான் –
பர தந்த்ரனாய் இருக்கையாலே பிரத்யுபகாரம் பண்ணலாவது காண்கிறிலேன்
எத்தைச் செய்வேன் சொல்லி கோள் என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-கரும்பு தின்னக் கூலி இறே
பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க அதுக்கு மேலே பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள்
நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று தன்னடையே விட்டுப் போம் – என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————-

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

ஸ்ரீ திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது –
உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன
இங்கு உமக்கு ஒழியாது வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை –என்கிறார் முதல் பாசுரத்தில்

நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே
ஸ்பர்தையாலே ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற ஸ்ரீ கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய
திருவடிகளைத் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –
நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய சூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் –
அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு
சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு – அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற
மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும்
பிரிய ஷமன் அல்லேன் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரமஹரமாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை
நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது
இது வெருமனேயோ -என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும்
கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரமஹரமான திருச் சேறையிலே நிற்கிற ஸ்ரீ நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகைஅனுசந்தித்தேற்கு –
ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –
அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை –
அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ தண் சேறை அம்மான் தன்னை –கண்களின் உடைய விடாய் தீரக் கண்டு –அந்த ப்ரீதியாலே இறைஞ்சி
உருகி என்றும் பாடம் ஆகவுமாம்-
கைகளின் விடாய் தீரும்படி தொழுவாரை நினைக்கும் கால்-உண்ணாது வெங்கூற்றம்-ஓவாத பாவங்கள் சேரா –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ தண் சேறை எம்பெருமான் திருவடிகளை என்றும் ஒக்க ஹிருதயத்தில் வைக்குமவர்களுக்கு –
என்னுடைய ஹிருதயம் அழிகிற படி கண்டி கோளே –இப் பேறு எனக்கு வந்த படி எங்கனேயோ –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆழ்வார்-ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு-பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –
ஹேய ப்ரத்ய நீகமாய்-தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்-
அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது
இம்மாலையைச் சூட்டுங்கோள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————–

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-

பிராப்ய பூதனான அவன் வந்து நிற்கையாலே நமக்கு பிராப்ய பூமி தான் போலே இருந்தது என்று
ஆதர அதிசயம் தோற்ற சொல்லுகிறது-என்கிறார் முதல் பாசுரத்தில்

பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதி ரதர் மகா ரதர் -என்று இங்கனே ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம்
இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது
தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது -என்று அகலுவதாய்க் கொண்டு
அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இந்த்ராதிகள் உடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை
மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை-அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே
சஞ்சரியா நிற்கும்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து-பிரளயம் என்று பாராதே
ஜகத் ரஷணத்துக்காக ஸ்ரீ மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஜகதாகாரனானவன் அசாதாரண விக்ரஹத்தைக் கண்டு அனுபவிக்கலாம் படி வந்து நிற்கிற ஊர் போலும்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்தன்னது என்னும் இடம் தோற்ற ஸ்மிதம் பண்ணி –
தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து-என் அருகே வந்து நின்று
அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து
இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிரிவை பிரசங்கித்து-என்னுடைய கண்ணும் கண்ணீருமான ஆற்றாமையைக் கண்டு
பின்னை கால் வாங்கிப் போக மாட்டாதே நின்றவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இன்ன பரிமாற்றம் பெற்றிலோம் -என்கிற அத்ருப்தி நெஞ்சில் கிடவாதபடி யாக வாய்த்து
நெஞ்சிலே குறைவறப் புகுந்து நின்றபடி –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

இத்தலையில் உள்ளதை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி தன் பக்கல் உள்ளது ஒன்றும் தொங்காத படி பண்ணிப் போந்த
சுத்தியை உடையவர் வர்த்திக்கிற தேசம் போலும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல –
பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல பாவங்கள் தன்னடையே போம் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-

அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே
இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்

அசாதாரண பரிகரத்துக்கு ஐயோ என்று கிருபையைப் பண்ணி ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நிற்கிற
அயர்வறும் அமரர்கள் அதிபதியை-நான் கண்ணாலே காணப் பெற்று ஷோபம் அடையத் தீர்ந்து
களிக்கப் பெற்றேன் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –ஸ்ரீ திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது –
அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –உஜ்ஜீவித்து –க்ருதார்த்தனாகப் பெற்றேன் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அன்று பசுவின் நெய்யை அமர்ந்து அமுது செய்த ஸ்ரீ திரு வழுந்தூர் நின்றானை-
ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது –
கண்ணாலே காணப் பெற்று அபூர்ணனான நான் பூர்ணனாகப் பெற்றேன்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு தாபத்ரயம் போம் படி நின்றவனை
தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு என்னுடைய தாபத்ரயங்கள் தீரப் பெற்றேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து-
ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

முது நான்மறை உண்டு -பாசி பூத்த வேதம் –அது திரு வீதிகள் தோறும் திரைக் கிளப்பத்தை உடைய
கடல் போலே கோஷியா நின்றுள்ள ஸ்ரீ தென் அழுந்தையில் மன்னி நின்ற –
சகல கலைகளாலும் புருஷார்த்தமாக பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு
என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற –
கார் காலத்திலேயே மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை –
கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள் ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும்
நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்-
உண்ணிலாய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால் நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள்
என் பக்கல் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை-
என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே
அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு
அத்தை முடிய நடத்த வேண்டாவோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –
அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –
அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –
நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே
ஸ்ரீ மகா வராஹமாய் வந்து அவதரித்து கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே-
அது தன்னை பழம் கதை யாக்கி இபொழுது இங்கே வந்து நிற்கிறவனே-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி -பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து முடிக்கும்
சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –
எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன்
அந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு அன்றோ நீ இங்கே வந்து நிற்கிறது –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்கவேணும் என்று
ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

வகுத்த ஸ்வாமியான நீ -ராஜ புத்ரனாய் பிறந்து முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே
அடியேனாய் இருக்கிற என்னை நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம் படி கடல்கரை வெளியிலே வந்து நின்றால் போலே
எனக்கு உறவுமுறையார் கை விட்ட அன்று வந்து கிட்டலாம் படி அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாவது
இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்
ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்
கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் –சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து
பெரிய முத்தின் குடைக்கீழே இருந்து நிரவதிக ப்ரீதி யுக்தராய்ப் பெறுவார் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
இந்த்ரிய வஸ்தையை அனுசந்தித்து அஞ்சின ஸ்ரீ ஆழ்வார் இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே
அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தாராம் –

———————

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1-

தனித் தனியே பிரஹ்மாவைப் போலே சிருஷ்டிக்க ஷமராய் இருக்கிற பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகையாலே
வந்த நிரவதிக சம்பத்தை உடைய ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நின்று அருளின இது தான் அலாப்யலாபமாகக் கொண்டு நிற்கிறவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடி கோள்-அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் போகப் பாருங்கோள் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

அன்னமானது அப்பூம் படுக்கையிலே போக ஸ்ரோதஸ்ஸில் தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற
நிரவதிக சம்பத்தை உடைய –அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட போக பிரதாநமாய்த்து இருப்பது –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஆஸ்ரிதர் உடைய விரோதியைப் போக்கி –அவர்கள் உடைய அபேஷிதம் சம்விதானம் பண்ணும்
ஸ்வபாவன் என்கிற சுத்தியை எனக்கு பிரகாசிப்பித்தவன் கிடீர் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –அந்த பூமிக்கும் அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின
அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் –
நிரவதிக சம்பத்தை உடைத்தாய் –சம்சார விபூதிக்கு ஆபரணம் போலே இருக்கிற ஸ்ரீ திரு அழுந்தூரிலே –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ நரசிம்ஹத்துக்கும் பிற்காலியாத மிடுக்கை உடைய ஹிரண்யன் உடைய உடலைக் கீண்டு –
அவள் உடைய முலை வழியே அவளுடைய பிராணங்களும் வற்றி வரும்படி முலையை அமுது செய்த
ஆச்சர்ய பூதன் கிடி கோள் இங்கு வந்து நிற்கிறவன் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும்
அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –அத்விதீயமாய்
ஆயதங்களுக்கு எல்லாம் பிரதாநமாய் இருக்கிற திரு ஆழியைப் பரிகரமாக உடையவனான என் ஸ்வாமி கிடி கோள்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஒரு கொலை அம்பாலே எய்து அவனை அழித்து விரோதி போக்கப் பெற்றோம் -ஆஸ்ரிதர்களும் குடி இருப்புப் பெற்றார்கள் –
என்று அவர்களுக்கு உகவக் கடவ உகப்பை தான் உகந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

அனுகூல ஸ்பர்சம் ஒழிய த்ரவ்யம் ஒழிய செல்லாமையாலே
பரிமள பிரசுரமான பூவை உடைத்தான குழலை உடைய யசோதை பிராட்டி வைத்த
தயிரையும் வெண்ணெயும் அமுது செய்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாக இருக்கிற ஆச்சர்ய பூதன் கிடீர் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நாள் செல்ல நாள் செல்ல மிடுக்கு ஏறி வாரா நிற்பதான தோளை உடையனாய் விஜயமானது எப்போதும் ஒக்க வர்த்தியா நின்ற
புகழை உடைத்தான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே உடைய சர்வாதிகன் கிடீர் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில்தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற
சர்வாதிகனை –ஸ்ரீ திரு வழுந்தூரிலே நின்று அருளின சர்வாதிகன் ஆனவனை –
இப்பத்தையும் வல்லார்-ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்-என்று தாம் சேர்த்து அனுபவித்த பிரகாரம் இருக்கிறபடி –
முதல் பாட்டு -ஸ்ரீ ஷீரார்ணவம்/ 2-4-5-10—திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும் ஸ்ரீ கஜேந்திர ரஷணம்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள்
இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார்
என்று அருளிச் செய்வர் –

—————–

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே —7-9-1-

உகந்து அருளின நிலங்களும் இவர் திரு உள்ளமும் ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது –
இப்படி இருக்கையாலே ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயநீய ஸ்தானம் இவை இரண்டும் யாய்த்து –
சல சயனன் -என்றது-அது அவனுக்குத் திரு நாமமாய்-ஜல சயனன் வர்த்திக்கிற இடம்
சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது –என்கிறார் முதல் பாசுரத்தில்

அழகியதாய் கண்டார்க்கு மேல் விழும்படியான வடிவை உடைய ஸ்ரீ வாமனன் ஆன ஸ்ரீ சர்வேஸ்வரன்
உடைய திருவடிகளை ஸ்மரியுங்கோள்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஒழிய
வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால் தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று பார்த்து
தம்படியை அவர்களுக்கு அறிவித்து-நீங்களும் என்னைப் போலே அவனைக் கொண்டு
உங்கள் விரோதிகளைப் போக்கிக் கொள்ளப் பாருங்கோள் என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய
கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ சிறுபுலியீர்ச் சலசயனத்தை தொழுகையே ஸ்வபாவமாக உடையாருடைய திருவடிகளைத் தொழுவார்க்கு
துக்கங்கள் நில்லா –அவை தன்னடியே விட்டுப் போம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உன் திருவடிகளில் அசாதாரணராய் இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை –
எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –
இத்தால் சொல்லிற்று ஆயத்து –ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

அனுபவ ஜனித ப்ரீதிக்குப் போக்கு விடுகைக்கு பலவாய்த் தலைகளை உடையனாய் சைத்யாதிகளை பிரக்ருதியாக உடைய
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி பிரயோஜன நிரபேஷமாக ரஷணத்திலே ஒருப் பட்டு இருக்கிறவனே –
என் பக்கலிலே உன்னுடைய கிருபையைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் கூட சிறுபுலியூர்ச் சல சயனத்த்திலே
சாய்ந்து அருளினவனே-ஸ்ரீ யபதியான உனது திருவடிகளை ஒழிய எனக்கு வேறு ஒரு புகல் இல்லை
பிராப்யம் இல்லை –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும் இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க-
பாபங்கள் தானே நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————–

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யானை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே
பிறக்கிற ஆசை யானவனை –அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே நிரதிசய போக்ய பூதமான
கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –
அப்போதே நுகரலாம்படி பக்வ பலமாய் இருக்கிறவனை –பசித்த இடத்தே ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே
அபேஷை பிறந்த இடத்தே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –என்கிறார் முதல் பாசுரத்தில்

நிரதிசய போக்கியம் ஆனவனை –நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே அப்போதே பருகலாம்படி இருக்கிற
கரும்பில் ராசம்சம் ஆனவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அசாதாரணமான விக்ரஹத்தோடே ஸ்ரீ திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை –
நசையை உடையோமாய்க் கொண்டு நம்மாலே ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை –
அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான காலம் ஆனவனை சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –எனக்கு கைம்முதல் இல்லாத வன்று
அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான நிதியானவனை –பொன் போலே ஸ்ப்ருஹநீயம் ஆனவனை –
அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை –
சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு காட்சி கொடுக்கைக்காக ஸ்ரீ திரு நின்றவூரிலே நிற்கிற
முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –
ஸ்வ ஸ்பர்சத்தால் வரும் ஸூகமாய் இருக்கிறவனை –
தாரகம் ஆனவனை –-சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

சர்வைஸ் ஸ்ப்ருஹநீயமானவனை-போக்ய-போகோ உபகரண போக ஸ்தானங்களாய் உள்ளவனை –
காலமே சேஷித்த அன்று காலமாய் நின்றவனை –
நித்தியமான திவ்ய ஆயுதங்களை ஏந்தும் திருக் கையை உடையவனை –
நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி –
பிராமணர் உடைய மரியாதை போலே இருக்கிற சங்கல்பத்தை உடையவனை –
பிராமணராலே அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

விரோதிகளைப் போக்குமவன் –விரோதி நிரசனத்தை சீலமாக உடைய உபகாரகனை –
படபாமுகாக்னி ஜலம் அடைய தகன் பக்கலிலே வந்து சுவரும்படி இருக்குமா போலே
சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை –
களிவண்டு அறையும் பொழில் ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நிருபாதிக சேஷியை-தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்-
அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை –
கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை –
ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை–ததாமி புத்தியோகம் தம் -என்கிறபடியே
தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான புத்தி யோகத்தை கொடுக்குமவனை –
வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –
காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது-என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே-ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
இவை பத்தையும் –அனுசந்திப்பார்க்கு அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே வல்லராய்
உபாதான லோகங்களில் போக பூமிகள் எல்லாம் புக்கு அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

–——————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .