Archive for the ‘நான் முகன் திரு அந்தாதி’ Category

ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 12, 2019

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே
திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹஸ்யத்தை உபதேசித்து அருளுகிறார் –
சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-
ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

———————————————–

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

நான் முகனை நாராயணன் படைத்தான் -இத்யாதி
ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –
ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –
அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –
ஆழ் பொருள்
மங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –
சிந்தாமல் -இத்யாதி
நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

————————————————————————–

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திரு அவதாரம்
விபவ சம்வஸ்தரம்
தை மாசம்
கிருஷ்ண பஷம் தசமி
குருவாரம்
மக நஷத்ரம் துலா லக்னம்
ஸ்ரீ பார்க்கவ மகரிஷிக்கு திரு அவதாரம்
ஸ்ரீ கனகாங்கி அப்சரச ஸ்திரீ தாயார்
வளர்த்தவர் ஸ்ரீ ஹரிதாசர் -ஸ்ரீ பத்ம வல்லி -பிறம்பு அறுத்து ஜீவிக்கும் குறவ ஜாதி
ஸ்ரீ சுதர்சன அம்ச பூதர்
ஸ்ரீ பக்தி சாரர் -மகிஷா சார புரதீசர் -பார்க்கவாத்மஜர் –திரு மழிசைப் பிரான் –
திரு ஆராதன பெருமாள் -ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
சிஷ்யர் ஸ்ரீ கணி கண்டன் -த்ருடவ்ரதர்
ஆசார்யர் ஸ்ரீ பேயாழ்வார்
மங்களாசாசன திவ்ய தேசங்கள்–18-
ஸ்ரீ கோயில் –ஸ்ரீ திருமலை- ஸ்ரீ பெருமாள் கோயில் –
ஸ்ரீ யத்தோதகாரி -ஸ்ரீ திருக் குடைந்தை -ஸ்ரீ திருப்பேர் –
ஸ்ரீ அன்பில் -ஸ்ரீ கபிஸ்தலம் -ஸ்ரீ திரு ஊரகம்
ஸ்ரீ திருப் பாடகம் -ஸ்ரீ திருக் குறுங்குடி -ஸ்ரீ திரு வல்லிக் கேணி
ஸ்ரீ திருக் கோட்டியூர்- ஸ்ரீ திரு எவ்வுள்ளூர்- ஸ்ரீ திருத் த்வாரகை
ஸ்ரீ திருக் கூடல் -ஸ்ரீ திருப் பாற் கடல் -ஸ்ரீ வைகுண்டம்

ஸ்ரீ பிராஞ்ஞன் என்னும் சத்சூத்தரர் தனது பார்யை உடன் இவர் அமுத செய்த மிகுந்த பாலை
ஸ்வீகரித்து கிழத்தனம் விட்டு ஸ்ரீ கணிகண்டனை -பாகவதோததமரை பெற்று எடுத்தார்கள்
க்ருஷ்ணானாம் வ்ரீஹீனாம் நகநிர் பிண்ணம் கிருஷ்ணா கூடாதஷிணா-வேத வாக்கியம் எடுத்துக் கொடுத்த விருத்தாந்தம் –

தனியன் –
மகாயாம் மகரே மாசி சக்ராம் சம்பார்க்க வோத்பவம்
மகீசார புராதீசம் பக்திசார மகாம் பஜே

சக்தி பஞ்சமயவிக்ரஹாத்மனே சுக்தி ஹார ஜித சித்த ஹாரிணே
முக்தி தாயக முராரி பாதயோர் பக்திசார முனையே நமோ நம-

அன்புடன் அந்தாதி தொண்ணூற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திரு மழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையின் மகத்து இங்கு உதித்தான் வாழியே
எழில் சந்த விருத்தம் நூற்று இருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லான் வாழியே
நன் புவியில் நாலாயிரத்து முநநூற்றான் வாழியே
நங்கள் பக்தி சாரர் இரு நல பதங்கள் வாழியே

————————————————————————–

ஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்

அவதாரிகை –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த
ஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூக்தியான திவ்ய பிரபந்தத்தை
அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி -மனசே –
பக்தி சார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே
ஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –

வியாக்யானம் –
நாராயணன் படைத்தான் நான்முகனை –
ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா -என்றும்
நாராயணா பரஞ்சோதி -என்றும் –
நாரயனே ப்ரலீயந்தே -என்றும்
ஏகஸ்திஷ்டதி விச்வாத்மாச ச நாராயண பிரபு -என்றும் –
சிருஷ்டி ஸ்திதி யந்த கரணீம்-என்று தொடங்கி -ஏக ஏவ ஜனார்த்தன -என்றும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமா நவ்யய பிரபு -என்றும்
அவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்

என்நாபி பத்மாதபவன் மகாத்மா பிரஜாபதி -என்றும்
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத்த்ருத்ரோ ஜாயதே
விருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
பரஹமணஸ் சாபிசம் பூதச்சிவ இத்ய வதார்யதாம்
என்று அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும்
சொல்லப்படும் வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்
ஆழ பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று
உபக்ரமித்து
இனி அறிந்தேன் -என்று தலைக் கட்டிலும்
நற்கிரிசை நாரணன் நீ-என்று இறே அருளிச் செய்தது –அத்தை ஆயிற்று-

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –
என்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது
சொல் சீரார் மொழி யாவது –
தமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே ஆர்ந்த மொழி என்னுதல்-
சீர் கலந்த சொல் -கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்
மொழி செப்பி -ஏவம்விதமான ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை அனுசந்தித்து
வாழலாம் -உஜ்ஜீவிக்கலாம்
நெஞ்சே -மனசே நீ சஹ கரிக்க வேணும்

மொய்பூ மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –
பிரபந்த வக்தாவான ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது -என்னும்படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு
மொய் பூ -செறிந்த பூ -அழகிய பூ –
பூ என்றும் அழகு என்று கொண்டு மிக்க அழகு என்னவுமாம்
மொய் பூ -ஸ்ரீ மழிசைக்கும் ஸ்ரீ திருவடிகளுக்கும் விசேஷணம்
படிக்கும் அடிக்கும் விசேஷணம்
அவர் வாழி கேசனே என்றும்
மாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்
ஸ்ரீ பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்
நீ ஸ்ரீ ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-

————————————————————————–

அவதாரிகை –
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க
அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1

ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–
தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –

நான்முகனை நாராயணன் படைத்தான் –
சர்வேஸ்வரன் சிருஷ்டிக்கு உபகரணமாக
நாலு முகத்தை உடைய பிரம்மாவை சிருஷ்டித்தான்

நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்-
பின்பு பிரம்மாவும் தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –

யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை-
இப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு
இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்
ஆழ் பொருளை -என்று நசிக்கிற பொருளை -என்றுமாம் –
சம்சாரத்தின் உடைய தண்மையையும்
நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசைப் பிரான் சாத்தி அருளிய திவ்ய நாமங்கள்–

March 9, 2019

ஆதி அந்தம் இல்லவன்
ஆதி பூதம்
ஆதி தேவன்
ஆலிலை துயின்ற ஆதி தேவன்
ஆதி பெருமான்
ஆக்கை கொடுத்து ஆழ்த்த கோன்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்
அத்தன்
ஆயன்
ஆழியான்
ஆளும் எம்பிரான்
ஆமையான கேசவன்
ஆய்ச்சி பிள்ளை
அஞ்சனத்த வண்ணன்
அனந்தன் மேலே கிடந்த எம் புண்ணியன்
அனந்த சயனன்
அன்பாவாய் ஆராவமுதவமாய் அடியேனுக்கு என்பாவாய் எல்லாம் நீ யாவாய் பொன் பாவை கேள்வா
அண்ணல்
அரங்கன்
அணியன்
அரங்க வாணன்
அற்புதன்
அரி உருவான்
அச்யுதன்
அழகியான்

போக மூர்த்தி
பூமி நாதன்
சக்ரபாணி
தேவ தேவன்
ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
ஏக மூர்த்தி
இலங்கை கட்டழித்தவன்
இலங்கை கட்டளித்த காகுஸ்தன்
எம் ஈசன்
இமையோர் பெருமான்
என் கண்ணன்
என் நெஞ்சம் மேய் என் இருள் நீக்கி எம்பிரான்
என்றும் திரு இருந்த மார்பன்
எந்தை
எட்டு எழுத்து
ஞான மூர்த்தி
ஞானப் பிரான்

காரணனன்
கடல் கிடந்த கண்ணன்
கடல் கிடைக்கும் மாயன்
கள்வன்
கண்ணன்
கார் செறித்த கண்டன்
கற்பவை நீ
கரும்பு இருந்த கட்டி
கரு கலந்த காள மேகன்
கவிக்கு நிறை பொருள்
கேசன்
கற்றவை நீ
கேட்ப்பார்க்கு யரும் பொருளாய் நின்ற அரங்கன்
கூத்தன்
கொண்டல் வண்ணன்
கோவலன்
கண்ணபிரான்

மாதவன்
மால்
மாயன்
மது ஸூ தன்
மலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி தலையாமை தான் ஒரு கைப்பற்றி அலையாமல் பீற்றக் கடைந்த பெருமான்
மங்கை மன்னு வாழ் மார்பன்
மண்ணளந்தான்
மண் அளந்து கொண்ட காலன்
மாயன்
மாய வாமனன்
மேக வண்ணன்
மெய்ப்பொருள்
மிகப்பெரியவன்
மூன்று மூர்த்தி
முகுந்தனார்
முத்தனார்

நாதன்
நற்கிரிசை நாரணன்
நின்மலன்
நாலு மூர்த்தி
நாக மூர்த்தி சயனமாய்
நாகணைகே கிடந்த நாதன்
நல்லான்
நாராயணன்
நாங்கள் கண்ணன்
நெடுமால்
நீள் முடியின்
ஒளி உருவன் ஒருவனாகி தாரணி இடர்ந்து எடுத்தவன்

பாலன்
பாம்பின் அணையான்
பத்ம நாபன்
பங்கயகே கண்ணன்
பாவை சேரும் மார்பன்
பாவ நாச நாதன்
பிறப்பு அறுக்கும் சொல்லான்
பொன் மகரக் காதன்
பூவை வண்ணன்
புண்ணியத்தின் மூர்த்தி
புண்டரீகன்
புனிதன்

சாம வேதி கீதன்
சார்ங்க பாணி
சீர் அண்ணன்
செம் கண் மால்
சேயன்
சிங்கமாய தேவ தேவன்
ஸ்ரீதரன்
ஸ்ரீ யன்
தம்பிரான்
தன் ஓப்பான் தான்
திரு வேங்கடத்தான்
திரு இருந்த மார்பன்
தோன்று ஜோதி

துவரைக் கோன்
உத்தமன்
உகப் புருவான்
உலகம் உண்டு உமிழ்ந்த பேர் ஆழியான்
வானரக் கோன் வாலி மதன் அழித்த வில்லாளன்
வள்ளலார்
வைகுண்டச் செல்வனார்
வீரன்
வேதன்
வேத முதல் பொருள்
வேத கீதன்
வேலை வண்ணன்
வெள்ளம் பரக்க கரந்து உலகம் காத்து அழித்த கண்ணன்
வேங்கடத்து மேயான்
வில் கை வீரன்
வில்லி ராமன்
விண் கடந்த ஜோதி
விண்ணவர்க்கு நற் பொருள்
விண்ணின் நாதன்

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப் பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி தனியன்– ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்-

January 24, 2019

ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்

அவதாரிகை –
சர்வேச்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த
ஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூ க்தியான திவ்ய பிரபந்தத்தை
அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி -மனசே –
பக்தி சார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே
ஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –

வியாக்யானம் –
நாராயணன் படைத்தான் நான்முகனை –
ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா -என்றும்
நாராயணா பரஞ்சோதி -என்றும் –
நாரயனே ப்ரலீயந்தே -என்றும்
ஏக ஸ்திஷ்டதி விஸ்வாத்மாச ச நாராயண பிரபு -என்றும் –
சிருஷ்டி ஸ்திதி யந்த கரணீம்-என்று தொடங்கி -ஏக ஏவ ஜனார்த்தன -என்றும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமா நவ்யய பிரபு -என்றும்
அவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்
என் நாபி பத்மாதபவன் மகாத்மா பிரஜாபதி -என்றும்
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத் தருத்ரோ ஜாயதே
விருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
பரஹமணஸ் சாபிசம் பூதச்சிவ இத்ய வதார்யதாம்
என்று அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும்
சொல்லப்படும் வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்
ஆழ பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று
உபக்ரமித்து
இனி அறிந்தேன் -என்று தலைக் கட்டிலும்
நற்கிரிசை நாரணன் நீ-என்று இறே அருளிச் செய்தது –அத்தை ஆயிற்று-

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –
என்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது
சொல் சீரார் மொழி யாவது –
தமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே ஆர்ந்த மொழி என்னுதல்-
சீர் கலந்த சொல் -கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்

மொழி செப்பி –
ஏவம் விதமான நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை அனுசந்தித்து

வாழலாம் –
உஜ்ஜீவிக்கலாம்

நெஞ்சே –
மனசே நீ சககரிக்க வேணும்

மொய்பூ மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –
பிரபந்த வக்தாவான திரு மழிசை ஆழ்வார் திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது -என்னும்படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு
மொய் பூ –
செறிந்த பூ -அழகிய பூ –
பூ என்றும் அழகு என்று கொண்டு மிக்க அழகு என்னவுமாம்
மொய் பூ –
மழிசை க்கும் திருவடிகளுக்கும் விசேஷணம்
படிக்கும் அடிக்கும் விசேஷணம்
அவர் வாழி கேசனே என்றும்
மாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்
பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்
நீ ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம்-அவதாரிகை-பாசுர பிரவேசம்- தொகுப்பு -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி —

April 21, 2017

1-சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்-தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து-தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் -சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

2-ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்-ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –
இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-ப்ரஹ்மாதிகளுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள
நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் –என்கிறார்
தத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற
ஸ்லோகத்திற் படியே ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்-

3-ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும்-முட்டக் காண வல்லார் இல்லை-நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் –என்கிறார்-

4-சர்வேஸ்வரனோடு ஒக்க வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று-ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் –
பிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன் -என்கிறார் என்றுமாம் –

5-நானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங்கனே என்று எம்பெருமான் அருளிச் செய்ய-இத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து
திருவவதாரம் பண்ணி ரஷகன் ஆகையாலே -என்கிறார் -எனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இ றே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று எம்பெருமான்
அருளிச் செய்ய-ஜகத்து அவனுக்கு பிரகாரம் என்னும் -இடத்துக்கு உறுப்பாக-உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே-
சகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் -ஆகையாலே சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறார் -என்றுமாம் –

6-இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத-பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார்

7-அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க-
நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் –

8-நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க
உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் –

9-அவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில் அவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக மாட்டார் –
எம்பெருமானுக்கு சேஷ பூதர் என்கிறார் –
நாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் –

10-எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம்-ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்-

11-ஆனபின்பு எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

12-எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன-நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-ஆச்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் –

13-மோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள்-எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் –

14-இப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள் சொல்லுவதைக் கேட்டு-அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் –

15-இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில்-ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே அவ்யவதாநேந காணலாம் –என்கிறார் –

16-உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன -நான் எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷபாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் –என்கிறார்-

17-நம்மளவே அன்று –எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது-எம்பெருமானை ஆச்ரயிக்கும்படியை -என்கிறார்-

18-பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

19-எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷபாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

20-இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் –நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் –

21-ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார்

22-ஆனபின்பு சர்வ காரணமான நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –

23-அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில்-அவை எல்லா வற்றையும் எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்–

24-ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் –
நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன
யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து-அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்-

25-ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே-அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் –

26-இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று-அவன் படியை வெளியிடுகிறார்

27-எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு
இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ –என்கிறார்-

28-பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்-

29-ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே-தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார்
ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு தேஜோ ரூபமாய்- பேர் அழகாய் – இருக்கும் -என்கிறார் –

30-அப்பேர் அழகோடு –கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் தாமே -என்னை யடிமை கொண்டவன்என்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில்
புகாதபடி காப்பான் –அவ்வளவு அன்றிக்கே-நெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான்-
இனி திருப் பாற் கடலில் திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை –என்கிறார்-

31-எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன் எம்பெருமானே யான பின்பு-அபரிமித துக்க பாக்குகளான பூமியில்
உள்ளார் எல்லாரும் எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

32-அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே மண்டி நசித்துப் போருவார்கள் -ஆனபின்பு –
ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

33-தாம் கிருஷ்ண சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் –

34-என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் –

35-திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் 

36-எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே –அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம்
என்று பார்த்துத் திருக் குடந்தை தொடக்கமான-திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் –

37-எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே –என்கிறார் –
ஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-முதலிலே சகல பதார்த்தமும் அவனுடைய சங்கல்ப்பத்தாலே யுண்டாயுத்து என்கிறார் -ஆகவுமாம்-

38-மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் –
அதுவும் பண்ணினான் அவன் தானே –ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில் அந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் –

39-லோக வ்ருத்தாந்தம் ஆனபடியாகிறது என்று கை வாங்கி-தமக்குத் திருமலையையும்
அங்கு நின்று அருளுகிற திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்-

40-திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் -நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

41-எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்-நான் திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்-

42-நான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக திருமலையிலே சென்று நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள்
நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –
திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் –

43-பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன உபகரணங்களைக் கொண்டு
ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் –

44-ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் –

45-அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க பிராப்யம் திருமலை –என்கிறார் –

46-திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீயமாய் இருக்கிற திருமலையை-எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்-

47-திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி திருமலையை அனுபவிக்கிறார் –

48-ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து-பரம ப்ராப்யமான திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்-

49-பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய நாமங்களைச்-சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் –என்கிறார் –

50-சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –
எப்போதும் எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்-

51-அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் பரம பதத்திலும் இல்லை –என்கிறார் –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ –என்கிறார் ஆகவுமாம்-

52-எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்-

53-ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்-
நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

54-சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் –என்கிறார்-

55-இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து
-ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் -உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-

56-இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் –

57-அவனுடைய ச்வீகாரம் தான் புண்ய பலமாய் அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று –அவனுடைய விஷயீகார பஹிஷ்காரங்களே
புண்ய பாபங்கள் ஆகிறன-அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ச்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்-

58-அஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த எம்பெருமான் பக்கலிலே-தமக்குப் பிறந்த ச்நேஹத்தை அருளிச் செய்கிறார்-

59-தம்மளவில் இல்லாதபடி எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை –என்கிறார்-

60-இவர் தன்னை விடில் செய்வது என் என்று எம்பெருமான் அதி சங்கிக்க
விட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-

61-எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்-

62-எம்பெருமானே ரஷகனாக வல்லான் என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈச்வரர்களாக பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்-

63-நான் எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் –

64-அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை-உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

65-ஸ்மர்தவ்யனான எம்பெருமானுடைய நீர்மையாலே பரமபத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு அவ்வருகு வேண்டா என்கிறார்
அன்றிக்கே-பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய-ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்-

66-நான் எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன்-அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்-

67-நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை –பஹூ குணனான எம்பெருமானுடைய திரு நாமங்களை -ஏத்துகையே உத்தேச்யம்
-என்கிறார் –நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இ றே என்கிறார் ஆகவுமாம் -இங்கனே என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து-

68-யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ராஜ குலத்தை அருளிச் செய்கிறார் –

69-செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்
-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம்-பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே கிடிகோள்-

70-இஜ் ஜகத்துக்கு எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்-கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்-

71-எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை-அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-

72-ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் -இவ்வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் –

73-அவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று -வேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்-

74-தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
தான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் –என்கிறார் ஆகவுமாம்-

75-ஏவம்விதமான எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்-

76-லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-
அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –

77-என்னுடைய தோஷத்தையும் பாராதே எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு-என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் –

78-உமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால்-அநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ –என்கிறார் –
திரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க-நேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் –

79-எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து-பரமபதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் –என்கிறார்

80-லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது -இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் –

81-நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ-என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் –

82-ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் -இது போலே இருக்கும் நன்மை யுண்டோ –என்கிறார்-

83-ஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில் சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று -தரிக்க மாட்டாதே இருக்கும்
-சரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று- என்கிறார்-

84-ருத்ரனும் எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்-

85-சர்வ காலமும் ராம வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிமிது எனக்குத் தொழில் -என்கிறார் –
என் நெஞ்சிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் திரு நாமம் ஏத்தப் போரும் போது என்கிறார் ஆகவுமாம்-

86-நெஞ்சே நமக்கு ஒருவன் உளன் என்னும் இடத்தை அனுசந்தி -என்கிறார்-

87-நம் அளவிலே அன்று-ஈஸ்வரத்வேன அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே கூடின ஜகத்துக்கு எல்லாம் ரஷகன் அவனே –என்கிறார்
தம்மை ஒக்கும் அகிஞ்சனருக்கு அவன் நிர்வாஹகனாம் படி காட்டுகிறார் ஆகவுமாம் –

88-தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு சரீர விஸ்லேஷ தசையில் யம வச்யதை தொடக்கமான துக்கங்களைப் போக்கும் பெருமானை
ஆஸ்ரயிக்கும் அவர்கள் க்ருதார்த்தராவர் -ஷூத்ர சமயவாதிகள் உடைய வாழ்வு வ்யர்த்தம் -என்கிறார் –

89-எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் -இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் – ஆகவுமாம் –

90-பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்- பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-

91-தன் திருவடிகளை ஆஸ்ரயித்தார் ப்ரஹ்மா தொடக்கமானவர் எல்லாருக்கும் நிர்வாஹகர் -என்கிறார் –
எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் உபய விபூதியில் உள்ளாருக்கும் நிர்வாஹகராம் படியான
பெருமையை யுடையவர்கள் என்கிறார் -என்றாகவுமாம்-

92-கர்ப்பாவஸ்தையே தொடங்கிசர்வ காலத்திலும் ரஷித்துக் கொண்டு போருகையாலே சர்வேஸ்வரனை-நான் ஒரு நாளும் மறந்து அறியேன் -என்கிறார் –

93-சேதனராய் இருப்பார் -சர்வ சேஷியாய்-குணாதிகனான உன்னை விடத் துணியார் -என்கிறார் –

94-அத்யந்த ஹேயனே யாகிலும் என்னை விஷயீ கரித்து அருள வேணும் -என்னில் தண்ணியாரையும் -யதி வா ராவணஸ் வயம் -யுத்த -18-33-என்னும்படியாலே
வஸ்து ஸ்தியையை அழகிதாக அறியுமவர்கள் விஷயீ கரிப்பர் -என்கிறார்-

95-எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-

96-சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் –என்கிறார் –
சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே முடிக்கிறார்

மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று
பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்-அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக
உபபாதித்துக் கொண்டு போந்து-அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -அவதாரிகை தொகுப்பு –பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

April 20, 2017

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி -அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

1-ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –

2-விசாரிக்கும் போது சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று சொல்வார்கள் –ஒருத்தனும் அவனுடைய பெருமையை பரிச்சேதிக்க அறியார்கள் –
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் எங்கும் ஆராயும் அர்த்தத்தின் உடைய-நிர்ணயமும் இவ்வளவே -எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

3-அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி-ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது-

4-தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் -சர்வ சப்த வாச்யன் ஆனவனை-எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை-தொகுத்து சொன்னேன் –

5-தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே-அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற இவ்வர்த்தம் தேவரே அறிந்து அருள வேணும் –

6-வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார்-

7-அகிஞ்சநனாக -எனக்கு உன்னை ஒழிய வேறு ஒரு அபாஸ்ரயம் இல்லை -பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும்-விடப் போகாது –

8-உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்–வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் –

9-வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு-தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் –

10-அவனுடைய ஸ்ப்ருஹணீயமான திரு மேனி-ச்வரூபதுக்கே மேல் ஓன்று இல்லை என்று இருக்கிற-நமக்குக் காண குறை உண்டோ -ப்ரஹ்மருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே-

11-சர்வேஸ்வரன் உடைய-திருநாமத்தை மாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குமின்கள்-என்று பர உபதேசம் செய்கிறார்

12-உன்னை மதியாதவர்களை– சதுர்வித யோநிகளிலும் போய்-விழும்படிக்கு ஈடாக நினைத்தாய்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் பற்றின பற்று-விடும்படிக்கு ஈடாக
சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு அன்றோ நினைத்தாய் –

13-மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் -நித்ய சூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் -நாராயணன் -சர்வேஸ்வரன் -என்கிறார் –

14-சர்வ ரக்ஷகனானவனுடைய திரு நாமங்களைப் பேசப்பெறாதே -இருக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்-அனர்த்தப் படுவார் என்றும்-பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

15-மார்கண்டேயனும் கரியே என்று காட்டி அருளுகிறார் –

16-ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆன பின்பு-நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என்–என்கிறார் –

17-ஞானாதிகனான ருத்ரனும் தன்னை-ஆஸ்ரயித்தவர்களுக்கு இவ்வர்த்தத்தை இறே சொல்லிற்று-என்கிறார்-

18-குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு-பற்றுகை சீரீயது- என்கிறார் –

19-பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு-எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார்-

20-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான-இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்-உன்னை ஒழிய ஜகத்துக்கு-ப்ருதுக் ஸ்திதியும்
ப்ருதுக் உபலம்பமும் இல்லை -உன் பிரசாதம் அடியாக-பெரும் பேறு மட்டுமே நிலை நிற்பது -என்கிறார் –

21-இப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது -நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –

22-ஸ்ரீ நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது -ஆஸ்ரயிக்க பாருங்கோள்–என்கிறார்-

23-அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூ க்ருதம் உண்டோ –
சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –

24-ஆஸ்ரிதர் உகந்த வண்ணத்தன்ஆச்ரித பக்ஷபாதி என்கிறார் –

25-ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார்

26-நான் தேவதாந்திர சமாஸ்ரயணம் பண்ணேன்-என்னும் இடத்துக்கு ஆள் பிடித்துத்-தொழுவித்துக் கொள்ளும் ருத்ரன் சாஷி -ஸ்ரமஹரமான வடிவை
உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும்

27-பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் –

28-பெருமாள் -வில் பிடித்த படியில்- பிரத்யஷமாக கண்டு அனுபவிப்பது போலே -ஈடுபட்டு அருளுகிறார்-

29-பெருமாள் -வில் பிடித்த படியில்- பிரத்யஷமாக கண்டு அனுபவிக்கும் ஈடுபாடு தொடர்கிறது இதிலும் –

30-என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு
திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ

31-நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-ருத்ராதிகளுக்கும் -இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்-அவனை அன்றோ பற்ற அடுப்பது –என்கிறார் –

32-ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார்-

33-அசாதாரணையான நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க-விரோதியைப் போக்குமவன்- என்கிறார் –

34-உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் –

35-பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
நீர்க்கரையைப் பற்றி கண் வளருகிறதும் ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-மங்களாசாசனம் பண்ணாத -லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ –என்கிறார்-

36–பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் -பல திவ்ய தேசங்களில்
கண் வளர்ந்து அருளுகிறதும்-தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில்ப புகுருகைகாக-என்கிறார் –

37-ஆதி நெடுமாலை விவரிக்கிறது –

38-தேவதாந்தரங்கள்-ஈச்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே-பண்ணும் அபிமானமும்-அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா
பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும்-அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும்

39-இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-திருக் கூடல் இழைப்பன் -என்கிறார் –

40-அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி-திருமலை-சொல்ல-ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்-என்கிறார் –

41-திருமலை யை உடைய நீ என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் -நான் திருமலையை அடைந்து காணல் உறுகின்றேன்-என்கிறார் –

42-பிரயோஜனாந்த பரரும் தங்கள் அதிகாரம் பெறுவது-இத் திருமலையிலே அவனை ஆஸ்ரயித்து-என்கிறார் –

43-சதுர் முகனும்-லலாட நேத்ரனும்-திருமலையில் ஒரு கால் ஆஸ்ரயித்து போம் அளவு அன்று -சமாராதான காலங்கள் தோறும்
சமாராதான-உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிப்பார்-என்கிறது –

44-அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

45-வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் –

46-திருமலையில் வர்த்திக்கும் குறவர்-வில் எடுத்தபடி எதிர்க்கும் திருமலையே அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று-

47-திருமலையில் வர்த்திக்கும் நித்ய சூரிகளைச் சொல்லுகிறது

48-திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே-இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்-

49-சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது-

50-உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்-

51-சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

52-என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான்-என் என்னில்-இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-

53-சக்கரவர்த்தி திருமகனை ஒழிய வேறு ஓன்று-சமாஸ்ரயணீ யமாக நினைத்து இரேன்

54-சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –

55-ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி-ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர்

56-காமனுக்கு உத்பாதகனுக்கு ஒருத்தரும்-உபமானம் இல்லாமைக்கு விசேஷஞ்ஞரோடு-அவிசேஷஞ்ஞரோடு வாசி இல்லாமை கண்டிகோளே-

57-அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகனானவனே -அனாயாசேன -நம்முடைய வலிய பிரதிபந்தங்களைப் போக்குவான்-
-ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –

58-என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-அத்தாலே எனக்கு உபகாரகனாய்-
என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறான்

59-அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும்

60-தேவர் திருவடிகளை காண்கையே ஸ்வ பாவமான என்னை-ஆரோ நமக்கு அகப்படுவார் என்று பார்க்கும் அதுவே-
ஸ்வ பாவமாக இருக்கிற நீ-காலம் எல்லாம் இப்படியேயாகப் பார்த்து அருள வேணும்

61-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்-தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது -அது தானும் இன்று-

62-ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீ ய பதி தானே-தங்களோடு ஒக்க கர்ப்ப வஸ்யராய்-கர்ப்ப வாஸம் பண்ணுகிறவர்களை
ஆஸ்ரயணீயராக தங்களோடு ஒத்த-அறிவு கேடராக எண்ணி இழக்கிறார்கள்

63-கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை -இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –

64-நமக்கு உத்பாதகனானவன் -ஸ்வாமியாய் வத்சலன் ஆகையாலே நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும்
திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே-இவ்வாத்மாவுக்கு உறுவது –

65-பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே-ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா-

66-கூரியர் ஆனவர்கள்-சார அசார விவேகஞ்ஞர்கள்- தேவதாந்தர பஜனம் பண்ணார்கள் இ றே-என்கை-

67– சர்வ ஸ்வாமியாய்-என் நாவுக்கு நிர்வாஹனாய்-ஜ்ஞான குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்-இருக்கிறவனை-ஏத்துகையே உத்தேச்யம்-

68-பகவத் பரிகரமே பலம் என்னும் இத்தை-ஸ்வ புருஷ ம்பி வீஷ்ய-என்கிற ஸ்லோகத்தின்-படியே விவரிக்கிறார்-

69-கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால்-குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக-லபித்தேன்
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும்-அத்தனையே –

70-வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி-எங்கனே என்னில்-நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ-பிரசித்தம் அன்றோ -என்கிறார் –

71-பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது-அறியாது இருந்த அளவேயோ -சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்-அறியப் போமோ -என்கிறார்-

72-நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும்-என்னச் சொல்லுகிறார்

73-அவன் என்றும் உண்டாக்கி வைத்த பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-என்கிறவர்களால் காணப் போகாது
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது- என்றுமாம்-

74-ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன –ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –
மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி –

75-நாக்கொண்டு மானிடம் பாடேன்–என்கிறார்-

76-ஸ்ருத்யாதிகளில் ஆப்த தமனமாகக் கேட்ட-மனுவும் என்றும் ஒதுவித்துப் போகிற நாலு வேதமும்-இவை எல்லாம்
ஆச்சர்யபூதன் சங்கல்ப்பத்தால் உண்டான உண்மை உடையவை -என்கிறார்-

77-வேறு ஒரு இடத்திலும் போகாதபடி -திரு உள்ளத்தாலே கொண்டு-என் பக்கலிலே மனஸை வைத்தான் –
ஆதலால் பாபம் என்று சொல்லப் படுகிறவை அடைய மாயும் –

78-அபிமத விஷயத்தில் ப்ராவண்யத்தை விளைத்தவனை-அநங்கன் ஆக்கினவன் -நெஞ்சும் கூட-ஸ்ரவண மாத்ரத்திலே பரவசமான படியைக் கண்டால் –
இவ்வஸ்துவை சாஷாத் கரித்து ப்ரணாமாதிகளைப்-பண்ணினார்க்கு எத்தனை நன்மை பிறவாது -என்கிறார்-

79-பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் பரமபதம்-என்று ஆசைப்பட்டு அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று
-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை -சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார்-

80-பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த-கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள் -என்கிறார்-

81-மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி-பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –
காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –

82-எல்லாரும் தன்னை ஆசைப்பட இருக்குமவன்-என்னை ஆசைப்பட்டு ஹிருதயத்திலே கலந்தான்-அழகாலே எல்லாரையும் அகப்படுத்தும் காமனுக்கும்-உத்பாதகன் ஆனான் –

83-இப்படி எல்லாம் ஆவது-தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு-எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யானாகக் கொடுக்கும்-என்கிறார்-

84-கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது -ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று -என்கிறார்-

85-எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க-இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த-

86-அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்-நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

87-தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்

88-இப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –

89-இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் -என்கிறது-

90-விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க வேண்டி-இருக்கப் பெற்றவர்கள்
-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்-

91-நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்கிறார்-

92-கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே- சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று-வ்யாமுக்தனானவனை-
என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க-நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் -என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

93-ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான-சம்பந்தத்தை யுடையவனே
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார்-

94-அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்-என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே
வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் -என்கிறார்-

95-ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-
ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-
ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி-இப்போது பரபக்தி யுக்தனானேன்- என்கிறார்-

96-இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம் என்று எனக்கு-கை வந்தது -இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன் -சர்வத்துக்கும் காரணன் நீ-
இதுக்கு முன்பு அறிந்தனவும்-இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம் நீ இட்ட வழக்கு- -நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-
அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ–இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது -என்கிறார்-

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -85-96–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

எம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் -மாற்று வேறு ஒன்றில் நெஞ்சு
செலுத்த ஒண்ணாதபடி -எம்பெருமான் என் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-

பதவுரை

கழி சினத்த–மிகக் கோபத்தை யுடையவனும்
வல்லாளன்–மிக்க வலிமை யுடையவனும்
வானார் கோன்–குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி–வாலியினுடைய
மதன்–மதத்தை (கொழுப்பை
அழித்த–தொலைத்த
வில் ஆளன்–சார்ங்க வில்லை ஆள்பவனான இராமபிரான்
நெஞ்சத்து–எனது நெஞசிடத்து
உளன்–எழுந்தருளி யிருக்கின்றான்
எனக்கு–(அந்த இராம பிரானுடைய திருக் குணங்களில் அகப்பட்ட) எனக்கு
தொழில்–நித்ய கருமம்
தொல்லை மால் தன் நாமம் ஏத்த–புராணனான அந்த ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்
எனக்கு–(உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு
மற்றதுவே–கீழ்ச் சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே
பொழுது போதும்–போது போகும்.

வானரக் கோன் — -வெள்ளி மலை பறித்த பெரு வீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்த வாலி –
கழி சினத்த வல்லாளன் -மிக்க கோபத்தை யுடைய -மிக்க வலிமை யுடைய -மதன் -மதத்தை -கொழுப்பை –

சூது சதுரங்கமாடியே போதைப் போக்கும் சில லௌகிகர்கள் ‘ஆழ்வாரே! எங்களோடே ஒருகை ஆடவருவீரோ?! என்றழைக்க,
அவர்கட்கு மறுமொழிகூறும் பாசுரமிது என்று விநோதமாகப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காண்மின், –
“எதிரிகள் சதுரங்கம் பொரப் போருவீரோ என்றழைக்க இவர் சொல்லும்படி“ என்று.

எம்பெருமானுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணுவதே எனக்கு நித்யகர்மாநுஷ்டாநம்,
என்போதெல்லாம் அதிலே போகின்றது, அதற்கே போது போராதிருக்க வேறொன்றுக்குப் போதுகிடைக்குமோ?
வேறொன்றிலே நெஞ்சைச் செலுத்தவுமொட்டாதபடி.. எம்பெருமான் என்னெஞ்சினுள் உறைகின்றான் காண்மின் என்றாராயிற்று.

வானார் + கோன், வானரக்கோன். மதன் –மதம், மகரனகரப்போலி.
வெள்ளிமலை பறித்த பெருவீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்தவனான வாலிக்கு
‘கழிசினத்த, வல்லாளன்‘ என்ற அடைமொழிகள் பொருந்தும். (வாலி மதனழித்த வரலாறு, கீழ் இருபத்தெட்டாம் பாட்டினுரையிற் காண்க.)

இராமபிரான் வாலியைக் கொன்றவிதனில் ஸாமாந்யர் சில ஆக்ஷேபங்கள் கூறுவதுண்டு, அவையும் அவற்றுக்கு ஸமாதானங்களும் வருமாறு. –
‘இராவணவதத்திற்கு உதவி தேடுகிற இராமன் இராவணை எளிதில் வெல்லவல்ல வாலியைக் கொன்று விட்டு,
பயங்கொள்ளியான ஸுக்ரீவனை உதவிசெய்து கொண்டது என்ன புத்திசாலித்தனம்!‘ என்பர் சிலர், கேண்மின் –
வாலி முன்னமே இராவணனுடன் அக்நிஸாக்ஷிகமாக ஸ்நேஹங் கொண்டிருந்தமைபற்றி அவனைத்தான் உதவிகொண்டால்
இராவணன் முதலிய துஷ்டர்களைத் தொலைக்க வகையில்லாமையால் இராமன் ஸுக்ரீவனை நண்பனாகக் கொண்டு
அவன் வேண்டுகோளின்படி வாலியை வதைத்திட்டனன். இனிச் செய்ய வேண்டிய ராவண ஸம்ஹாரமாகிற தேவகாரியத்திற்கு
இவ்வாலி வதம் அங்கமெனக் கருதத்தக்கது, எவ்வகைப் பெருந்தீங்கு செய்திருந்தாலும் சரணமடைந்தால்
அவர்களைப் பாதுகாப்பதென்ற சிறந்த தருமத்தை மேற்கொண்டு நடப்பவனான இராமபிரான், அத்தருமத்தை முழுதும் விட்டவனும்
ஸுக்ரீவன் சரணமடைந்த பின்னரும் அவனை மிக வருந்திக் கொல்லத் தொடங்கி அந்தத் தருமத்திற்கு
எதிரானவனுமான வாலியைக் கொன்றது பொருந்தும். அன்றியும், பிறர் மனைவியைக் காதலித்துக் கவர்தலும்,
தம்பியிடம் பகை பாராட்டுதலும், வலியழிந்து முதுகுகாட்டி ஓடுகின்றவனைத் துரத்தி துரத்திக் கொல்லத் தொடங்குதலும்
முதலிய தீச்செயல்கள் வாலியினிடம் இருந்ததனாலும் பரமதார்மிகனான இராமன் வாலியை அழிக்கலானான்.
இராமபிரான் தான் ஏகபத்நீ விரதமுடையனாய், தம்பியரைத் தன்னுயிர்போலக் கொள்பவனாய், வலியிழந்த பகைவனை
‘இன்றுபோய் நாளைவா‘ என்று அன்போடு சொல்லி விடுத்தருளும் மஹாவீரனாவான்.

இஃதெல்லாமிருக்கட்டும், மறைந்து நின்று அம்பு எய்தது கூடுமோ? எனின், இது அரசர் கொடிய விலங்குகளைப் பதுங்கி
நின்று அழிக்கும் வேட்டைமுறையா லென்பர். “***“ என்று அதிமாநுஷஸ்வத்தில் ஆழ்வானருளிச் செய்ததுங்காண்க.
வேறு வகையான ஸமாதானங்களும் உள்ளன. முதலில் சரணமடைந்த ஸுக்ரீவனுக்கு அபயமளித்து வாலியைக் கொல்வதாக
வாக்குதத்தஞ் செய்துவிட்ட பெருமாள் பின்னர் வாலியினெதிரில் நின்று போர்செய்தால் இப்பெருமானது திறத்தைக் கண்டு
அஞ்சி வாலியும் இவனைச் சரணமடைந்திருவனாயின் தஞ்சமடைந்தவனைக் கொலை செய்யக்கூடாமை பற்றி
அவனைக் கொல்லாதுவிட நேர்ந்தால் முன்னைய வாக்கு (ஸுக்ரீவனுக்கு அளித்த வாக்கு)த் தவறி விடுமேயென்ற நோக்கம் முக்கிய காரணமாம்.
அன்றியும், எதிர்ந்தார் வலிமையிற் பாதி தன்னிடம் வந்து கூடும்படி வாலி சிவபிரானிடத்துப் பெற்றிருக்கின்ற வரம்
பழுது படாமலிக்குமாறு மறைந்து நின்று அம்பெய்தனன் என்றலு மொன்று. அவரவர்கள் தேவதாந்தரங்களிடத்துப் பெற்ற வரங்கள்
பழுதுபடாதபடியன்றோ எம்பெருமான் காரியஞ்செய்வது. இங்ஙனம் பல காரணங்களுள. இங்கு விரிப்பிற் பெருகும்.
ஸ்ரீராமாயணம் அதன் வியாக்கியானங்கள் வல்லார்வாய்க் கேட்டுணர்க.
கடவுளரது நியாயம் நுட்பமனாதும் அறிதற்கு அரியதுமாதலால் அது மனிதரது நியாயத்தோடு ஒப்பு நோக்கி
ஆராய்தற்கு உரியதன்றென்பது உணரத்தக்கது நிற்க.

————————————————————————————-

ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார் 

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

பதவுரை

நல் நெஞ்சை–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்
தன் ஒப்பான்–(தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத்தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான்
தமியேற்கு–ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும்
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க.
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்யவாஸம் பண்ணுமவன் காண்
என் ஒப்பார்க்கு–என்னைப் போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும்
தான் ஈசன் ஆய் உளன் காண்–தானே நிர்வாகனாயிருக்கிறான் காண்
இமை–இதனை அறி.

உத்தமன் உளன் கண்டாய் -ரக்ஷிப்பதாலேயே சத்தை பெற்று இருக்கும் புருஷோத்தமன்
உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் -ஆஸ்ரிதர் மனசிலே நித்ய வாசம் பண்ணி அருளுபவர் காண் –
என்றும் உளன் கண்டாய் -எக்காலத்திலும் ரக்ஷிப்பதற்கு தீக்ஷை கொண்டு இருக்கிறான் காண் –
என்னொப்பார்க்கு தான் ஈசனாய் உளன் காண் இமை–என்னைப் போல் உபாய ஸூன்யராய் இருப்பாற்கடக்கும் தானே
நிர்வாஹகானாய் இருக்கிறான் என்பதை புத்தி பண்ணு –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் -என்றபடி கைம்முதல் இல்லாதார்க்கு கைமுதலும் அவனே
என்னொப்பார்க்கு–மற்றுள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்ளுகிறபடி –

————————————————————————–

சர்வ ரக்ஷகன் அவனே என்பதை மூதலிக்கிறார் —

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

பதவுரை

இமயம் பெரு மலை போல்-பெரிய இமயமலை போன்றிருக்கும்படி
இந்திரனார்க்கு இட்ட–இந்திரனுக்காகச் சமைத்து வைத்த
சமயம் விருந்து–வழக்கமான ஆராதனையை
உண்டு–உட் கொண்ட போது (நேர்ந்த கல்மழையாலாகிய ஆபத்தில் நின்றும்)
கார்க்கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்–சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்?
ஆர் காப்பார்–காப்பாற்றினது யார்?
சமயங்கள்–வைதிக மதங்களை
கண்டான்–பிரவர்த்திப்பித்தவன்
ஆர்–யார்?
அவை காப்பான்–அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன்
ஆர்–யார்?
உலகோடு உயிர் உண்டான் ஆர்–
உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்?
(எல்லாம் எம்பெருமானே யன்றோ)

ஸர்வரக்ஷகன் எம்பெருமானே யென்பதை மூதலிக்கிறார். பண்டு திருவாய்ப்பாடியில் கண்ணபிரானுடைய
அதிமாநுஷ சீலவ்ருத்த வேஷங்களைக் கண்டு ஆயர்களனைவரும் ‘இவனே நம் குலக்கொழுந்து,
இவன் கட்டளைப்படியே நாம் நடக்கவேண்டும்‘ என்று நிச்சயித்திருந்தனர். இங்ஙனமிருக்கையில் சரத்காலம் வந்தது,
அப்போது இடையர்கள் வருஷந்தோறும் நடத்துவதுபோல் வழக்கபடி இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பற்பல வண்டிகளில்
சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜாத்ரவ்யங்களுமாகிய இவற்றைச் சேகரிப்பதைக் கண்டு
கிருஷ்ணன் ‘ஓ பெரியோர்களே! நாமும் நம்முடைய பசுக்களும் எதனால் ஜீவிக்கிறோமோ அதற்குப் பூஜை செய்வதன்றோ தகுதி,
இக் கோவர்தனகிரியே பசுக்களுக்குப் புல்லுந் தண்ணீருங் கொடுத்துக் காப்பாற்றுகின்றது, இந்திரனால் நமக்கு என்ன பயணுன்டு?
ஒன்றுமில்லை, ஆகையால் நீங்கள் இப்பூசனை யனைத்தையும் இம்மலைக்கே இடுங்கள்‘ என்ன,
இடையர்கள் இதைக்கேட்டு அங்ஙனமே செய், கண்ணபிரான் தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அவற்றைமுற்றும் அமுது செய்தருள,
அவ்விந்திரன் மிகக்கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல மேகங்களை ஏவி, கண்ணன் விரும்பியமேய்க்கிற
கன்று கட்கும் பசுக்கட்கும் இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும் படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது,
கண்ணபிரான் கோவர்த்தனமலையை யெடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களைங் காத்தருளினன்
என்ற வரலாறு முன்னடிகட்கு அறியதக்கது.

இடையர் இந்திரனுக்கு இட்ட பூஜை “அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர்வாவியும் நெய்யளறும்“ என்னும்படியாகப்
பெரியமலை போன்றிருந்ததனால் ‘இமய பெருமலைபோல்‘ என்றார்.

சமயவிருந்து – ‘ஸமயம்‘ என்னும் வடசொல்லுக்குள்ள பல பொருள்களில் ‘ஸங்கேதம்‘ என்கிற பொருள் இங்கு விவக்ஷிதம்,
வினாச்சுட்டு மேல் ஒவ்வொரு வினையிலும் அந்வயிக்கவுரியது.

வைதிகமதங்களை ஏற்படுத்தினவன் யார்?
பாஹ்யகுத்ருஷ்டி மதங்களாலே அவற்றுக்குக் குலைதல் வாராதபடி அவற்றைப் பரிபாலனம் செய்தருள்பவன் யார்?
சிவனுக்கு நேர்ந்திருந்த பிரமஹத்தியாகிற ஆபத்தை நீக்கிக் காத்தவன் யார்?
வேதங்களை அசுரர்க்குப் பறி கொடுத்துக் கண்கெட்டு நின்று தவித்த பிரமன் துயரைத் தீர்த்தது யார்?
உலகங்களைப் பிரளங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் யார்?
எல்லாவகை ரக்ஷணங்களுஞ் செய்தவன் எம்பெருமானே யென்று தெளிவித்தபடி.
ஆளவந்தார் இப்பாசுரத்தையே திருவுள்ளம்பற்றி ஸ்தோத்ரத்நத்தில் மூன்று ச்லோகங்களருளிச் செய்தன ரென்னலாம்.

கார்கண்டன் நான்முகனோடு-காப்பான் ஆர் – உண்டான் உலகோடு உயிர்-உண்டான் ஆர் -தனியாகவும்
-கார்கண்டன் நான்முகனோடு- உலகோடு உயிர்-உண்டான் ஆர் -என்று ஒரே வாக்யமாகவும் யோஜிக்கவுமாம் –
அன்று எல்லாரும் அறியாரோ-எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் –பெரிய திருமொழி -11 -6 -2 –
இந்த பாசுரம் கொண்டே ஆளவந்தார் -க ஸ்ரீ –தொடங்கி மூன்று ஸ்லோகங்கள் -அருளிச் செய்தார் –

—————————————————————————————-

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

பதவுரை

உடல் ஒழிய–சரீரத்தைப் போட்டு விட்டு
உயிர் கொண்டு–ஆத்மாவைப் பிடித்துக் கொண்டு
ஓடும்போது–(யமபடர்கள்) ஓடும்போது
ஓடி–(எம்பெருமானாகிய தானே) ஓடிச் சென்று
செயல் தீர–பேற்றுக்காக நாம் செய்ய வேண்டிய செயல் (ப்ரவ்ருத்தி) ஒன்றுமில்லை யென்று
சிந்தித்து–ஸ்வரூபத்தை யுணர்ந்து
வாழ்வாரே–வாழ நினைப்பவர்களே
வாழ்வார்–வாழ்ச்சி பெறுவர்
அயர்வு என்ற–கஷ்ட மென்று சொல்லப் படுகிற எல்லாவற்றையும்
தீர்ப்பான்–தீர்க்குமவனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
பாடி–வாய்விட்டுப் பாடி
சிறு சமயம் பந்தனையார்–அற்பங்களாய் பல நியமங்களோடு கூடினவையாய் ஸம்ஸார பந்தத்திற்கே
காரணமாக வுள்ளவையான உபாயங்களைப் பற்றினவர்களுடைய
வாழ்வு ஏல்–வாழ்ச்சியோ வென்றால்
பழுது–உபயோகமற்றது.

உபாடாந்தரங்களை அனுஷ்ட்டிக்கும் ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் போல் அன்றிக்கே -ஸ்வரூப உசிதங்களான-திரு விளக்கு எரிக்கை
திருமாலை எடுக்கை போன்ற பிரவ்ருத்திகளையும் உபாய புத்தி இன்றிக்கே ஸ்வயம் புருஷார்த்த புத்தியுடன் அனுஷ்ட்டித்து
அவன் நிர்ஹேதுக கிருபை அன்றி பேற்றுக்கு உபாயம் இல்லை என்று அத்யவசித்து
-காம்பறத் தலை சிரைத்து அவன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்-
அகிஞ்சனராய் இருக்கும் நிவ்ருத்தி தர்ம நிஷ்டர் -இவர்களுக்கு தானே நேரில் சென்று அயர்வுகளை தீர்க்கும் எம்பெருமான்
திரு நாமங்களையே மகிழ்ந்து பாடி வாழ்வதே வாழ்வு
தீர்ப்பான் பெயர் பாடி -பாட பேதம் -வெண்டளை பிறழும் –பேர் பாடி ப்ராசீன பாடமே பொருந்தும்
பந்தனையாய் -பந்தம் உடையவர் -கால் கட்டுக்களை யுடையவர் என்றவாறு –
சிறு சமய பந்தனையார் -அல்ப மாயும் நியமங்கள் உடன் கூடிய தாயும் –
சம்சார பந்தத்தத்துக்கு காரணமாயும் உள்ள உபாயாந்தரங்களை பற்றினவர் –

—————————————————————————————————

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பதவுரை

பழுது ஆகாது ஒன்று–பழுதுபடாத (சிறந்த) ஒரு உபாயத்தை
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன் (அது என்னவென்றால் கேண்மின்)
பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
வாழுவா வகை நினைத்து–தப்பாதபடி அநுஸந்தித்து
வைகல் தொழுவாரை–எப்போதும் வணங்குமவர்களை
கண்டு இறைஞ்சி–கண்டு வணங்கி
வாழ்வார்–வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்)
கலந்த வினைகெடுத்து–ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து
விண் திறந்து–பரமபத வாசலைத் திறந்து
மிக்கு–சிறப்புடனே
வீற்றிருப்பார்–எழுந்தருளி யிருக்கப் பெறுவர்

கலந்த வினை கெடுத்து--ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
-நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –
என்று அருளிச் செய்வது அறிக

—————————————————————————————————-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பதவுரை

விண்–பரமபதத்தில்
வீற்றிருந்து–பெருமை பொலிய இருந்து
ஆள வேண்டுவார்–ஆட்சி செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
வேங்கடத்தான் பால்–திருவேங்கட முடையான் பக்கலில்
பல் மலர்கள்–பலவகைப்பட்ட மலர்களை
திருந்த–நன்றாக
வைத்தாரே–ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை)
வரும் மதி பார்த்து–(எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து
அன்பினர் ஆய்–பக்தியை யுடையவர்களாய்
மற்றவற்கே–அந்த எம்பெருமானுக்கே
தாழ்வு ஆய் இருப்பார்–அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு
தமர்–அடிமைப்பட்டவர்கள்
மேல் திருந்த வாழ்வார்–முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம்.

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் பன் மலர்கள் திறந்து வைத்தாரே -பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட் செய்ய விரும்பி அப்படியே
பேறு பெற்றவர்கள் திருவேங்கடமுடையான் பக்கலிலே பல வகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்ப்பித்தவர்களே யாவர் –
பகவானை ஆராதித்தவர்கள் வின் ஆழ்வார் -என்றபடி
வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-மேல் திருந்து வாழ்வார் -எம்பெருமான் திரு உள்ளத்திலே
ஓடுகிற கருத்தை அறிந்து -பக்தி யுடையவர்களாய் -அந்த எம்பெருமானுக்கே அடிமைப் பட்டு இருப்பவர்களுக்கு அடிமை பட்டவர்கள் –
முன்பு சொல்லப் பட்டவர்களில் காட்டிலும் விலக்ஷணராக வாழ்வார்
பாகவத அங்கீ காரமே உத்க்ருஷ்டம் -என்றவாறு
திருந்த -பாடமே ஏற்கும் –திருந்து பாட பேதம் ஒவ்வாது –

——————————————————————————————–

எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயங்கள் என்று உறுதி கொண்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
உபய விபூதில் உள்ளார்க்கும் நிர்வாஹகராகும் படியான பெருமையை யுடையவர்கள் -என்கிறார் –

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

பதவுரை

மால் வண்ணன்–கரியமேனியனான எம்பெருமானுடைய
தாள் தாமரை–திருவடித் தாமரைகளில்
மலர்கள் இட்டு–புஷ்பங்களை ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
தாள் தாமரை அடைவோம் என்று–அத்திருவடித் தாமரைகளை யடைவோமென்று
தமர் ஆவார்–பக்தராயிருக்குமவர்கள்
தாமரை மேலாற்கும்–திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்
ஆடு அரவு ஆர்த்தாற்கும்–ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும்
அமரர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
யாவர்க்கும்–மற்றுமெல்லார்க்கும்
அமரர்கள்–மேற்பட்டவராவர்

ஆடு அரவு ஆர்த்தார்க்கும் -ஆடரவத்தார்க்கும்–ஆடுகின்ற சர்ப்பங்களை ஆபரணமாக உடம்பில் கட்டிக் கொண்டு இருக்கும் சிவனுக்கும் –
தாருக வன முனிவர் தன்னை மதியாமல் இருக்க -அவர்கள் கர்வத்தை பங்கம் செய்யவும் -அவர்கள் மனைவிகளின் கற்பைப் பரிசோதிக்கவும்
ஒரு காமுகன் வடிவைக் கொண்டு பிஷாடணம் செய்து தன் மேல் காதல் கொண்ட முனி பத்தினிகள் கற்பு நிலையைக் கெடச் செய்ய
கோபம் கொண்ட முனிகள் அபிசார யாகம் செய்து ஹோமத்தீயில் இருந்து எழுந்த நாகங்கள் -பூதங்கள் மான் புலி முயலகன் வெண்டலை
-முதலவற்றை சிவனை கொல்ல ஏவ -சிவபெருமான் நாகங்களை ஆபரணங்களாகவும் -பூதங்களை கணங்களாகவும்
-மானைக் கையில் ஏந்தி புலி தோல் உடுத்து முயலகன் முதுகில் காலூன்றி
வெண்டலையைக் கையால் பற்றி சிரம் மேல் அணிந்து அவற்றை பயன் இல்லாதனவாகச் செய்தான் என்பர் –

——————————————————————————–

நான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு
வருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் –

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

பதவுரை

கரு இருந்த நாள் முதலா–(நான்) கர்ப்பத்திலிருந்த நாள் தொடங்கி
காப்பு–(எம்பெருமானாலே) ரக்ஷை பெற்றவனாகையாலே
திரு என்றும் இருந்த மார்வன் சிரீதரனுக்கு–பிராட்டி நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வை யுடைய அந்தத்திருமாலுக்கு
ஆள் ஆய்–ஆட்பட்டவனாய்
நெடு மாலை–(அந்த) ஸர்வேச்வரனை
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
வைத்து–ஸ்தாபித்து
நின்றும் இருந்தும் என்றும்–நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும்
மறந்தறியேன்–மறவாமல் (அவனையே) சிந்திப்பவனா யிருக்கின்றேன்.

நான் கர்ப்பவாஸம் பண்ணும்போதே தொடங்கி எம்பெருமான் என்னை ரக்ஷித்துக் கொண்டு வருகையாலே
ஒரு காலும் நான் அவனை மறந்தறியேனென்கிறார்.

இவ்வாழ்வார் கீழ்க்கழிந்த காலங்களில் பல சமயங்களிலும் புகுந்து பல தெய்வங்களையும் வழிப்பட்டவரா யிருந்து வைத்து,
திருமாலை ஒரு நாளும் மறந்தறியேனென்று சொல்வது பொருந்துமோ? என்று சங்கிப்பர் சிலர் உண்மை கேண்மின்,
எம்பெருமானுக்கு ஆட்பட்டிருக்குந் தன்மையானது ஸகல ஆத்மாக்களுக்கும் இயற்கையாகவே யுள்ளது,

ஆட்பட்டு இருப்பது அனைவருக்கும் இயற்க்கை அன்றோ -அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்
அபிமான துங்கன் செல்வனைப் போலே நானும் உனக்கு பழ வடியேன் –
மாணிக்கத்தின் ஒளி அழுக்கினால் மழுங்கி இருந்து ஒரு நாள் அளவில் அழுக்கு நீங்கி விளங்கினாலும் அவ்வொளி இயற்க்கை என்னத் தட்டில்லை —
இடையில் அடிமையை இழந்தால் -வயிறு எரிந்து -பொழுதே பல காலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் –என்றும் அன்று நான் பிறந்திலேன் -என்பர்
நிற்கும் இருந்தும் –எல்லா நிலைகளிலும் என்றபடி —
நிற்கும் போதும் இருக்கும் போதும் நடக்கும் போதும் படுக்கும் போதும்

நாராயணா என்றால் உங்கள் தலையில் இடி விழுமோ -என்றானே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் –

—————————————————————————————–

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

பதவுரை

அங்கு–அந்தப் பிரளய காலத்தில்
பல் உயிர்க்கும்–எல்லா ஆத்மாக்களுக்கும்
ஆப்பு ஒழியவும்–சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்)
ஆக்கை கொடுத்து–சரீரங்களைக் கொடுத்து
அளித்த–அருள்செய்த
கோனே–ஸ்வாமிந்!
காப்பு–(நீ செய்தருளும்) ரக்ஷைணை
மறந்தறியேன்–ஒருநாளும் மறக்கமாட்டேன்
கண்ணனே என்று இருப்பன்–எல்லாம் கண்ணனே என்று உறுதிகொண்டிருப்பேன்
குணம்–திருக்குணங்களினால்
பரனே–சிறந்த பெருமானே!
மெய் தெளிந்தார் தாம்–உள்ளபடி (ஸ்வரூபத்தைத்) தெளிவாக அறிந்தவர்கள்
உன்னைவிட துணியார்–உன்னை விட மாட்டார்கள்.

ஆப்பு ஒழியவும் -சரீரங்கள் அழிந்து போய் இருந்தாலும்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே-பிரளய தசையில் இறகு ஒடிந்த பறவை போலே இருக்க கரண களேபரங்களை
இழந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் கொடுத்தமை சொல்லிற்று
கண்ணனே என்று இருப்பன் –எல்லாம் கண்ணனே என்று உறுதி கொண்டு இருப்பேன்
குணம் பரனே -திருக் குணங்களால் சிறந்த பெருமானே
மெய் தெளிந்தார் -உள்ளபடி ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் –
உன் சம்பந்தத்தையும் உன் அரிய பெரிய திருக் குணங்களையும் உணருமவர்கள்
காப்பு மறந்தறியேன்–எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும் நான் எம்பெருமானுக்கு
மங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் –

இவ்வாழ்வார் வாழ்ந்தகாலத்தில் குணபரன் என்னுமோரரசன் இருந்ததாகவும்,
எம்பெருமானுக்கே ஏற்றிருக்கத்தக்கதான அந்த நாமத்தை அவ்வரசன் தரித்திருப்பது பொருந்தாதென்று அதில் வெறுப்புக்கொண்டு,
“அஃது அனந்த கல்யாணகுண பரிபூர்ணனான எம்பெருமானுக்கெ உரியதாம்“ என்ற திருவுள்ளத்தை வெளியிட வெண்டி
இப்பாசுரத்தில் “கோனே குணபரனே“ என்று எம்பெருமானை இவர் அழைத்திருப்பதாகவும் இக்காலத்துச் சில ஆராய்ச்சிக்காரர். கூறுகின்றனர்.
இக்கூற்றின் பொருத்தமின்மையைத் தனிப் புத்தகத்தில் விரித்துரைப்போம் நிற்க.

மெய்தெளிந்தார்தாம் உன்னை விடத் துணியார் – உன்னோடுண்டான உறவையும் உனது அரிய பெரிய திருக்குணங்களையும்
உள்ளபடி உணருமவர்கள் உன்னை விடமாட்டார்கள் என்றவிதனால் தாம் எம்பெருமானை விடமாட்டாமையைத் தெரிவித்தாராவர்.

———————————————————————————————–

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-

பதவுரை

வேறு ஆனார்–வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள்
நீறு ஆக–சாம்பலாய் ஒழிந்து போம்படியாக
தெளிந்து–(ஆச்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி
தெளிந்த பை பாம்பு இன்அணையாய்–விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே!
அடியேற்கு–அடியேனுக்கு
அருளாய்–அருள் புரிய வேணும்
என்று–வேணுமென்று விரும்பினால்
கைகாட்டி–(பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து
களம படுத்து–(அந்த எதிரிகளைப் போர்களத்தில் கொன்றொழித்து) (இவ்வகையாலே மண்ணின் பாரம் நீக்கி)
வேம்பும் கறி ஆகும்–வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ள கூடியதே
மெய் தெளிந்தார்–உள்ளதை உள்ளபடியறியுமவர்கள்
என் செய்யார்–எதுதான் செய்யமுடியாதவர்கள் (எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே)

வேறானார் நீறாக தெளிந்து –பகைவர்களாக துர்யோதனாதிகள் சாம்பலாய் ஒழிந்து போம் படியாக
-ஆஸ்ரித விரோதிகளை கொல்லுவது தர்மமே என்று தேறி
ஆஸ்ரித விரோதிகள் என்பதால் எம்பெருமான் தனக்கு விரோதிகள் என்று கொள்வான் அன்றோ –
கை காட்டிக்–பாண்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து –
களப்படுத்து -அந்த எதிரிகளை போர் களத்திலே கொன்று ஒழித்து -இவ்வகையாலே மண்ணின் பாரம் நீக்கி –
-பை தெளித்த-பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள் செய்ய வேண்டும் –
குற்றமே வடிவாக உள்ளவர்களை இகழ்ந்து ஒழிய வேண்டுமே அன்றி கைக் கொள்வது தகாது என்று திரு உள்ளம் பற்றலாகாது –
வேப்பிலை கைக்கும் என்றாலும் இத்தை கறியாகச் சமைத்து உட் கொள்ள வேணும் என்னும் விருப்புடையார்க்கு
அது கறி யாகும் அன்றோ -அப்படியே தெரிந்தவர்கள் என்னைக் கைக் கொள்ளுவார்கள் –
மெய் தெளிந்தார் என் செய்யார் –எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே
அடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ -அல்லது அவற்றில் திருக் கண் செலுத்தாமலோ
அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் –

—————————————————————————————-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

பதவுரை

அடிமை–அடிமையை
என்றேன்–ஏற்றுக் கொண்டேன்
பிறப்பு இடும்பை–ஸம்ஸார துக்கங்களில் நின்றும்
இழிந்தேன்–நீங்கினேன்
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்களுக்கும்
அமராமை–என் அருகு நாடாவெண்ணாதபடி
ஆன்றேன்–(ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன்
கடன்நாடும்–ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும்
மண் நாடும்–இப் பூலோகத்தையும்
கை விட்டு–உபேக்ஷித்து
மேலே–எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய்
இடம்–(அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான்
நாடு–திருநாட்டை
காண–கண்டு அநுபவிக்கலாம்படி
இனி–இப்போது
ஆன்றேன்–(பரம பக்தி) நிரம்பப் பெற்றேன்

ஏன்றேன் அடிமை-அடிமையை ஏற்றுக் கொண்டேன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளை போலே உத்ஸாஹம் கொண்டு பாரித்தேன்
இழிந்தேன் பிறப்பு இடும்பை-சம்சார துக்கங்களில் நின்றும் நீங்கினேன்-தாபத்த்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேன்
ஆன்றேன் அமரர்க்கு அமராமை -ப்ரஹ்மாதி தேவர்கள் என் அருகில் நாட ஒண்ணாத படி ஞான பக்தாதிகளாலே நிரம்பினேன்
அவர்கள் கூசி அகல வேண்டும் படி பெரும் பதம் பெற்றேன் –
கடனாடும் மண்ணாடும் கை விட்டு–ஸ்வர்க்காதி லோகங்களையும் பூ லோகத்தையும் உபேக்ஷித்து –
பண்ணிய புண்யங்களுக்கு பலம் அனுபவித்தே தீர்க்க வேண்டும் பட்ட -கடனை தீர்ப்பது போலே
புண்ய பலன் அனுபவிக்கும் ஸ்வர்க்கத்தையும் -புண்ணியம் திரட்டும் இடமான பூ லோகத்தையும் வெறுத்து
மேலை-இடநாடு காண வினி–எல்லாவற்றுக்கும் மேல் பட்டுள்ளதாய் -அடியார் குழாங்களுக்குத் தகுதியான இடமுடைத்தான
திரு நாட்டை கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது –
ஆன்றேன்– – -திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்-
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே –
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் –

—————————————————————————————-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

பதவுரை

எம்பெருமான்–எம்பெருமானே!
உன்னை–உன்னை
ஈசற்கும்–ருத்ரனுக்கும்
நான் முகற்கும்–பிரமனுக்கும்
தெய்வம்–தெய்வமாக
இனி அறிந்தேன் இனி அறிந்தேன்–இப்போது திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ–ஸகல ஜகத்துக்கும் காரண பூதன் நீ
கற்றவை நீ–இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ
கற்பவை நீ–இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்)
நல் கிரிசை–நிர்ஹேதுகரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான
நாரணன் நீ–நாராயணன் நீ
நான் நன்கு அறிந்தேன்–நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்

எம்பெருமான் உன்னை – ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்-இனி அறிந்தேன்-இனி அறிந்தேன்-எம்பெருமானே உன்னை இப்போது
ருத்ரனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ –சகல ஜகத்துக்கும் காரண புதன் நீ –
கற்றவை நீ-இதற்கு முன்பு அறியப் பட்ட பொருள்கள் எல்லாம் நீ
கற்பவை நீ -இனி மேல் அறியப் படும் பொருள்களும் நீ
இனி அறிந்தேன்-என்பனவற்றை எல்லாம் அறிந்தேன்
நற்கிரிசை-நிர்ஹேதுக ரக்ஷணம் ஆகிய நல்ல வியாபாரத்தை யுடைய
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –நாராயணன் நீ -நன்றாகத் தெரிந்து கொண்டேன்

சகல பிரபஞ்சத்துக்கும் காரணனான நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி
சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும் அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து
அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார்
தேவதாந்த்ர பரத்வப்ரமத்தை தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப்பிரபந்தத்தின் முழு நோக்கு –

————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -73-84–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73–

பதவுரை

அனைத்து உலகும்–எல்லா வுலகங்களையும்
உண்டு உமிழ்ந்த–(பிரளயத்தில்) உண்பதும் (பிறகு) உமிழ்வதும் செய்தவனும்
பேர் ஆழியான் தன்–பெருமை தங்கிய திருவாழி யாழ்வானைத் திருக்கையிலுயைவனுமான எம்பெருமானுடைய
பெருமையை–மஹிமையை
அறிவார் ஆரே–அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை)
அவன் வைத்த–அப்பெருமான் (முன்பே) ஸாதித்து வைத்த
பண்டைத் தானத்தின் பதி–பரமபத மார்க்க மென்னத் தகுந்த சரம ச்லோகத்தை
கார் செறிந்த கண்டத்தான்–நீலகண்டனான சிவனும்
எண் கண்ணான்–நான் முகனும்
காணான்–அறியமாட்டார்கள்.
(அவர்களே அறிய மாட்டாத போது மற்ற பேர்கள் அறிய மாட்டார்களென்பது சொல்ல வேணுமோ?)

அவன் வைத்த-பண்டைத் தானத்தின் பதி–அப்பெருமான் முன்பே சாதித்து வைத்த பரமபத மார்க்கம்
என்னத் தகுந்த சரம ஸ்லோகத்தை —பண்டத்தானத்தின் -நித்ய விபூதி
அவன் உபாயமாகும் இடத்து வேறு ஒரு உபாயத்தையும் எதிர்பாராமல் தானே பூரணமாய் இருந்து
கார்யம் தலைக் கட்ட வல்லனாகும் பெருமை -என்று பட்டர் அருளிச் செய்வாராம்
அவன் உண்ட போதும் உமிழ்ந்த போதும் நிரபேஷனாக செய்து அருளியததால் நிரபேஷத்வ உபாயத்வம் அறியாலாமே
நீல கண்டனும் நான் முகனும் பேர் ஆழியான் தன் பெருமை அறிவார்களா –
சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அவனையே உபாயமாக பற்றினவர்களுக்கே நித்ய விபூதி ஸூ லபமாகும் –
சிவனும் பிரமனும் சரம ச்லோகத்தையறியார்கள் என்றதற்குக் கருத்து யாதெனில்,
புறம் புண்டானவற்றை விட்டு அவனையே தஞ்சமாகப் பற்றுகைக் குட்லான ஸ்வரூப வுண்மையை உணரார்கள் என்பதாம்.

———————————————————————————————–

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

பதவுரை

பதி பகைஞற்கு ஆற்றாது–ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி,
பாய் திரை நீர்பாழி–பாம்பின அலைகளோடே கூடின நீரை யுடைத்தான கடல் போலே குளிர்ந்த திருப் படுக்கையை
மதித்து–புகலிடமாக நம்பி
அடைந்த–வந்து பற்றின
வாள் அரவம் தன்னை–ஒளி பொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை
மதித்து–ஆதரித்து
அவன் தன்–அந்த (சத்ருவான) கருடனுடைய
வல் ஆகத்து ஏற்றிய–வலிமை தங்கிய சரீரத்திலே ஏற விட்டவனும்
மாமேனி மாயவனை அல்லாது–சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேச்சரனை யன்றி
ஒன்று வேறொன்றை
என் நா–எனது நாவானது
ஏத்தாது–தோத்திரம் செய்யாது.

அஞ்சி வந்து அடி பணிந்த ஸூ முகனுக்கு அபயம் அளித்த வரலாற்றை அருளிச் செய்கிறார் –
தேவேந்திரன் சாரதி மாதலி புத்ரி-குணகேசி க்கு வரனாக -ஸூ முகன் – பிதாமகன் -ஆர்யகன் –தன் புத்ரனை
பெரிய திருவடி பஷித்து ஸூமுகனையும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக சொல்லி போந்ததை சொல்லி –பெரிய திருவடியையே
தோளிலே அடைக்கலமாக கொள்ளச் செய்து அருளினான் –

தேவந்திரனுக்குப் பரம ஆப்தனும் ஸாரதியுமான மாதலியென்பவன் தனது புத்திரியான குணகேசி யென்னுங் கன்னிகைக்குத்
தகுந்த வரனைத் தேட நாரத மஹர்ஷியோடு புறப்பட்டுப் பலவுலகங்களிலுஞ் சென்று கடைசியாகப் பாதாளலோகத்தில்
போகவதி யென்னுஞ் சிறந்த நகரத்தை யடைந்து ஸுமுக னென்னும் நாக்குமாரனைக் கண்டு
அவனது அழகு குணம் முதலியவற்றிலீடுபட்டு அவனுக்குத் தன்மகளை மணம் புரிவிக்க வுத்தேசித்து அவனது
பிதாமஹனான ஆர்யகனைக் கண்டு தன் உத்தேசத்தைத் தெரிவிக்க, ஆர்யகன் ஆநந்தத்தையும் ஸங்கடத்தையும்
ஏககாலத்தில் கொண்டவனாகி ‘இவனது தந்தையைக் கருடன் பக்ஷித்து இவனையும் ஒரு மாதத்திற்குள் பக்ஷிப்பேனென்று
சொல்லியிருக்கிறானாதலால் இவனுக்கு இப்போது துவிவாஹம் நடத்துவது உசிதமன்று‘ என்று தெரிவித்தான்.

அதற்கு மாதலி ‘இவன் என்னோடு வநது தேவேநதிரனைக் காணட்டும், இவனுக்கு ஆயுளைத் தந்து கருடனால்
கேடுவராமல் தடுக்க முயல்வேன்‘ என்று சொல்லி அச்சுமுகனை உடனழைத்துக் கொண்டு சென்று
உபேந்திர மூர்த்தியோடிருந்த தேவேந்திரனைக் கண்டு நாரதர்மூலமாகச் செய்தியைத் தெரிவிக்க,
அதுகேட்ட உபேந்திரனான ஸ்ரீமஹாவிஷ்ணு ‘இவனுக்கு அம்ருத்தைத் தரலாம், அதனால் இஷ்டஸித்தி உண்டாகும்‘ என்று சொல்ல,
இந்திரன் கருடனுடைய பராக்ரமத்தை நினைத்து சிறிது அச்சத்துடனே அம்ருத முண்பியாமல் அந்த ஸுமுகனுக்கு
நீண்ட ஆயுளை மாத்திரம் வரமாக அளிக்க, உடனே மாதலி அச்சுமுகனுக்குத் தன் மகளை மணஞ்செய்வித்தான்,

இச்செய்தியைக் கேள்வியுற்ற கருடன் இந்திரனோடு மாறுபட்டுத்தன் இரையைத் தடுத்ததற்காக நிஷ்டூரமாகப் பேசுகையில்,
ஸுமுகன் தான் நீண்ட ஆயுளை வரம் பெற்றிருந்தாலும் கருடனுடைய கறுவுதலைக் கண்டஞ்சிப் பாம்பு வடிவமாயத் திருமாலினருகிற் சேர்ந்து
அப்பெருமானது கட்டிலின் காலைக் கட்டிக்கொண்டு சரண்புக, பின்பு கருடன் திருமாலை நோக்கி
‘ஸகலதேவர்களினுள்ளும் மஹா பலசாலான வுன்னைச் சிறிதும் சிரமமின்றி இறகு முனையால் சுமக்கின்ற
என்னைவிட வலிமையுடையார் யார்? இதனை சற்று ஆலோசியும்‘ என்று கருவங்கொண்டு பேச
கடூரமான அந்த வார்த்தையைக் கேட்ட எம்பெருமான் கருடனை நோக்கி ‘மிகவும் துர்ப்பலனான நீ தன்னை
மஹாபலசாலியாக எண்ணி என்முன்னே ஆத்மஸ்துதி செய்து கொண்டது போதும்,
மூன்று லோகமும் எனது உடம்பை வஹிக்க முடியாதே, யானே எனது சக்தியால் என்னையும் வஹித்துக் கொண்டு
உன்னையுமல்லவோ வஹிக்கிறேன் எனது இந்த வலக்கையொன்றை மாத்திரமாவது நீ தாங்குவையா? என்று சொல்லித்
தமது வலக்கையைக் கருடனது தோளில் வைத்த மாத்திரத்தில் அவன் அந்தத் திருக்கையின் அதிபாரத்தைத் தாங்கமாட்டாமல் வருந்தி
வலியழிந்து மூர்ச்சித்து விழுந்து பின்பு அரிதில் தெளிந்து எம்பெருமானை வணங்கித் துதித்து அபராதக்ஷாமணஞ்செய்து கொள்ள,

திருமால் திருவுள்ளமிரங்கி அவனுக்கு ஸமாதானஞ் சொல்லித் தனது திருவடியின் பெருவிரலால் ஸுமுகனென்ற நாகத்தை யெடுத்துக்
கருடன் தோளிலிட்டு ‘இவனை நீ உனது அடைக்கலமாகக் கொண்டு பாதுகாக்கக் கடவை‘ என்று குறிப்பிக்க அது முதலாக
ஸுமுகனோடு கருடன் ஸநேஹங் கொண்டு அவனைத் தோளில் தரிக்க, அவனும் அச்சமின்றி ‘கருடா! ஸுகமா? என்று
க்ஷேமம் விசாரிப்பவனாயினன் என்ற உபாக்கியானம் இங்கு அறியத்தக்கது.

அடுத்த கடும் பகைஞ்ஞாற்கு ஆற்றேன் என்றோதி படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்தரவை
வல்லாளன் கைக் கொடுத்த மா மேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள் -பொய்கையார் -80 –

நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா
நெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –அடியேன் –நின்னடி
இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -4 -8 -4 –

பாய்த்திரை நீர்ப்பாழி – இந்த உபாக்கியானம் ஸ்ரீமஹாபாரதத்தில் உத்யோகபர்வத்தில் நூறாவது அத்யாயந் தொடங்கி
ஐந்து அத்யாயங்களில் பரக்கக் கூறப்பட்டுள்ளது. ஸுமுகன் எம்பெருமானைச் சரணமடைந்தது இந்திரனருகில் என்பதாக
அங்குக் கூறப்பட்டுள்ளதனால் ‘பாய்திரை நீர்ப்பாழி‘ என்ற விதற்கு ‘கடல் போலே குளிர்ந்த திருப்படுக்கை‘ எனப் பொருளுரைக்கப்பட்டது.

இனி, பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் –“ஓரோயுகத்திலே ஓரோவிடங்களிலே எல்லாம் பிறக்கக் கூடுகையாலே
திருப்பாற்கடல் தன்னிலேயாகவுமாம்“ என்று இரண்டாவது நிர்வாஹமாக அருளிச் செய்துள்ளபடி
திருப்பாற்கடலையே பொருளாகக் கொள்ளவுமாம். கல்பபேதத்ததாலே இது கூடுமென்க.

ஆஸ்ரித விரோதிகளை க்ஷமிக்க மாட்டேன் -அடியார்களைக் கை விட்டேன் -இரண்டையும் காட்டி அருளிய செயல் அன்றோ-
-இதையே அவன் –தன்-வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனுக்கு என்கிறார்
பாய் திரை நீர்ப் பாழி--கடல் போன்ற குளிர்ந்த படுக்கை என்றும் திருப் பாற் கடல் என்றுமாம் –

—————————————————————————————————-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

பதவுரை

தீக் கொண்ட செம் சடையான்–நெருப்புப் போலே சிவந்த சடையை யுடையனான ருத்ரன்
நலம் ஆக–தகுதியாக
என்றும்–எந்நாளும்
பூ கொண்டு–புஷ்பங்களைக் கையிற்கொண்டு
பின் சென்று–அநுஸித்து
வல்ல ஆறு–தன் சக்தியுள்ள வளவும்
ஏத்த–துதிக்க
மகிழாத–(இதைத் தனக்கொரு பெருமையாக நினைத்து) மேனாணிப்புக் கொள்ளாத
வைகுந்தம் செல்வனார்–ஸ்ரீவைகுண்ட நாதனுடைய
சே அடி மேல் பாட்டு–திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல)
நாக் கொண்டு–நாவினால்
மானிடம்–மனிதர்களை
பாடேன்–பாட மாட்டேன்

மகிழாத -பெருமையாகக் கொண்டு மேனாணிப்பு கொள்ளாத என்றபடி

எம்பெருமானொருவனையே துதிப்பதற்கென்று படைக்கப்பட்ட நாவைக் கொண்டு அற்ப மனிதர்களைக் கவிபாட மாட்டேனென்று
தமது உறுதியை வெளியிடுகின்றார். சடைமுடியனானவற்றைக் கொண்டு ஆராதித்து அநுவர்த்தித்தாலும்
நித்யஸூரிஸேவ்யனான தனக்கு இது ஒரு பெருமையன்றாகையாலே இதனால் சிறிதும் மகிழ்ச்சி கொள்ளாத
ஸ்ரீவைகுண்ட நாதனுடைய திருவடிகள் மேல் கவிபாடுதற்கே ஏற்றநாவைக் கொண்டு மானிசரைப் பாடுதல் தகாது என்றதாயிற்று.

இவ்வாழ்வார் காலத்தில் வாழ்ந்த இவரது சிஷ்யரான கணிகண்ணன் வாக்கினால் தான் ஒரு பாடல் பெறக்கருதிப்
பெருமுயற்சி செய்தும் பெற்றிலனென்பத இவ்வாழ்வார்வைபவத்தில் விரியும்.
சிஷ்யருடைய உறுதியே அங்ஙனிருக்கும்போது ஆசாரியரான இவரது உறுதியைப் பற்றிச் சொல்லவேணுமோ?

——————————————————————————————

கீழ்ப்பாட்டில் “வைகுந்தச்செல்வனார் சேவடிமேல் பாட்டு –நாக்கொண்டு மானிடம்பாடேன்“ என்றார்,
எம்பெருமானொருவனையே கவிபாடும்படியான உறுதி தமக்கு உண்டானபடி யெங்ஙனேயென்ன,
உலகத்திலுள்ள வாச்யங்கள் வாசகங்கள் எல்லாம் அப்பெருமானுடைய திவ்யஸங்கல்பத்தாலே உண்டாயினவென்று
இப்பாட்டால் அருளிச்செய்யும் முகத்தால் தமது உறுதிக்கு அடிகூறினாராயிற்று

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பதவுரை

பாட்டும் முறையும்–இயலும் இசையும்
படு கதையும்–பழைய சரிதங்களைக் கூறவந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
ஈட்டிய தீயும்–(பஞ்சீகரணத்தாலே பலகுணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும்
இரு விசும்பும்–பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்)
கேட்ட மனுவும்–வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும்
கருதி–அநாதியாக உச்சாரண அநூச்சாரண ச்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும்–நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
மாயன் தன்–ஆச்சர்ய சக்தியுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட–ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு–தத்துவங்களாம்.

பாட்டும் முறையும் –இயலும் இசையும்
படுகதையும் –பழைய சரித்ரங்களைக் கூற வந்த -இதிஹாசங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை அறிவிக்கும் புராணங்களும்
ஈட்டிய தீயும் -பஞ்சீ கரணத்தால் பல குணங்களும் தன்னிலே அமையும் படி சேர்க்கப் பட்ட அக்னியும் –
இரு விசும்பும் –பரந்த ஆகாசம் முதலான பஞ்ச பூதங்களும் –
-கேட்ட-மனுவும் -வேதங்களில் ஓதப்பட்ட மனு பகவான் அருளிச் செய்த தர்ம சாஸ்திரமும் —
மனு சொல்வது எல்லாம் மருந்தாய் இருக்குமே -என்பர்
சுருதி மறை நான்கும் மாயன்-தனமாயையில் பட்டதற்பு-சங்கல்பத்தால் உண்டான தத்வங்களாகும் –

———————————————————————————————–

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

பதவுரை

தட கடலை–பரந்த தெற்கு சமுத்ரத்தை
கல் கொண்டு–மலைகளினால்
தூர்த்த–அணை செய்து அடைத்தவனும்
கடல் வண்ணன் தான்–கடல் போன்ற கருநிற முடையனுமான எம்பெருமான்
என்னை–(தோஷமு வடிவெடுத்தவனான) என்னை
தற்பு–உள்ளபடியே
அறியான் ஏலும்–அறிந்திலனாயினும்,
எற் கொண்ட–என்னைக் கொள்ளை கொண்டிருக்கிற
வெம் வினையும்–கொடிய பாவங்கள் யாவும்
நீங்க–என்னை விட்டு நீங்கும்படியாக
கண்டு–அழகிய திருக் கண்களாலே குளிரக் கடாக்ஷித்து
மனம்–தனது திருவுள்ளத்தை
விலங்கா வேறு எங்கும் விலகிப் போகாதபடி
வைத்தான்–(என்மீதே ஒரு மடைப்படுத்தி) வைத்தருளினன் (ஆகையாலே)
ஏ வினையும்–பாபமென்று பேர் பெற்றவை யடங்கலும்
மாயும்–உரு வழிந்து போம்

எனது குற்ற மிகுதியைக் கண்டு இகழாமல் -என்னுடைய ஸமஸ்த கருமங்களை உரு மாய்ந்து போம்படி
திரு உள்ளத்தை என் பக்கலில் வைத்து அருளினான் -என்கிறார்

கடல்வண்ணன் தான் என்னைத் தற்பு அறியானேலும் – ஆழ்வாராகிய தம்மை எம்பெருமான் உள்ளபடி யறிந்திலனென்கிற
இதன் கருத்து யாதெனில், இவர் குற்றங்களுக்குக் கொள்கலமாயிருப்பவர், இவிடத்தில் ஒருவகைக்குணமும் கிடையாது“ என்று
அறிந்து கொள்ள வேண்டியிருக்க அப்படியறிந்து கொண்டிலன் என்கிறார் நைச்யா நுஸநதாந நிஷ்டையினால்.

(எம்பெருமானை நாம் உள்ளபடி அறிகையாவது –ஒருவகைக் குற்றங்குறையுமற்ற குணநிதி என்று அறிவதாம்.
அப்பெருமான் நம்மை உள்ளபடி யறிகையாவது ‘ஒருவகைக்குணமுமற்ற தோஷநிதி‘ என்று அறிவதாம்.
அவனை நாம் உள்ளபடியறியப் பெற்றால் அவனிடத்தில் நமக்கு அன்பு கரைபுரளும்,
நம்மை அவன் உள்ளபடியறிந்து கொண்டால் நம்மிடத்தில் அவனுக்கு இகழ்ச்சியுண்டாகும்.)
இங்கு ஆழ்வார்தம்மிடத்தில் எம்பெருமானுக்கு இகழ்ச்சி பிறவாமல் விருப்பமே பெருகிச் செல்கின்றமைக்குக் காரணம்
இவருடைய ஞானபக்தி முதலிய குணங்களைக் கண்டே, அப்படியிருந்தும் ஆழ்வார் நைச்யாநுஸந்தான வுறைப்பினால்
‘என் ற்றங்குளைகளை எம்பெருமான் தெரிந்துகொள்ளாமையினால் மேல்விழுகிறான்‘ என்கிறார்.

தடங்கடலைக் கற்கொண்டு தூர்த்தது ஸ்ரீராமாவதாரத்தில்.

எற் கொண்ட எவ்வினையும் -எற் கொண்ட-வெவ்வினையும் -பாட பேதங்கள் –
வெவ்வினையும் மோனை இன்பத்துக்கு ஒக்கும் –

———————————————————————————–

எம்பெருமான் திருநாமத்தை யாதிருச்சிகமாக கேட்கப் பெற்ற பரமசிவன் விகாரம் அடைந்ததே வாசா மகோசரம்
என்றால் சாஷாத் கரிக்கப் பட்டவர்கள் படும் பாடு சொல்லக் கூடியதோ-

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78–

பதவுரை

காமன்–மன்மதனுடைய
உடல்–சரீரத்தை
கொண்ட–நீறாக்கின
தவத்தாற்கு–தபஸ்வியான பரம சிவனுக்கு
உமை–(மனைவியான) பார்வதி யானவள்
உணர்த்த–தெரிவிக்க,
அங்கு–அப்போதே
ஆர் அலங்கல் ஆனமை–மிகவும் அசைந்து போனமையை
ஆய்ந்தால்–ஆராய்ந்து பார்க்கில்,
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள்முடியான தன் பெயர்கேட்டிருந்தே–வண்டுகள் ஒலிக்கப் பெற்ற பூமாலயை
நீண்ட திருவபிஷேகத்திலுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே
கண்டு வணங்கினார்க்கு–நேரே கண்டு வணங்குமவர்கட்கு
என் ஆம் கொல்–எப்படிப்பட்ட விகாரமுண்டாகுமோ (என்பது சொல்ல முடியாது)

திருவாய்மொழியில், (6-7-3) உண்ணுஞசோறு பருகு நீரில் மூன்றாம்பாட்டில்
“கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ“ என்றவிடத்து
ஈடு முப்பத்தாறாயிரப்படி திவ்யஸூக்திகள் உற்று நோக்கத்தக்கன, (அவற்றை இங்கு அநுவதிப்போம்.)
“(என்செய்யுங்கொலோ). சொல்லமாட்டாள், தவிரமாட்டாள், அழாடிதாழியமாட்டாள், எங்ஙனே படுகிறாளோ!.
நம்மையும் பிறரையும்விட்டு அவன் திருநாமங்களை யநுபவிக்கிற போதையழகு காணப்பெற்றோம்,
அவன்றன்னையே கண்டு அநுபவிக்கிற போதையழகு காணப்பெற்றிலோமே! அநுஸந்தாத வேளையிற்போலன்றிறே கண்டால்
பிறக்கும் விகாரங்கள் ‘காமனுடல்கொண்ட தவத்தாற்கு உமையுணர்த்த வண்டலம்புந் தாரலங்கள் நீண்முடியான்றன் பெயரே
கேட்டிருந்து அங்காரலங்கலானமையால் –கண்டு வணங்கினார்க்கு என்னாங்கொல்! என்றிறே யிருப்பது“.

பரமசிவனுக்குப் பார்வதி பகவந்நாமத்தை யுணர்த்தினவிதம் அவ்விடத்து அடையவளைந்தா னரும்பதவுரையிற் காணப்படுகின்றது. –
ஒருகால் ருத்ரன் த்யாநபரனாயிருக்கக்கண்ட பார்வதி யானவள் ‘எல்லாரும் உம்மை உபாஸநைபண்ணாநிற்க நீர் யாரை உபாஸிக்கின்றீர்?
உமக்கும் உபாஸ்ய விஷயம் ஒன்றுண்டோ? என்று கேட்டாளாம் இப்படி இவள் கேட்டதற்குப் பரமசிவன்
“ஸ்ரீமந்நாராயணனை உபாஸிக்கிறேன்“ என்று மறுமொழி கூறவேண்டி அத்திருநாமத்தை ஸ்மரித்தமாத்திரத்திலேயே
‘காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்‘ என்றும்
‘உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்தேனுடம்பெலாங் கண்ணநீர்சோர‘ என்றுஞ் சொல்லலாம்படி விகாரமடைந்தானாம்.

உமை உணர்த்த –‘நீர் யாரை உபாஸிக்கிறீர்? என்கிற கேள்வி வியாஜத்தாலே பகவந்நாமங்களைச்
சிவபிரானுக்குப் பார்வதி உணர்த்தினளென்க. இந்த ப்ரஸங்கத்தால் பகவந்நாமங்களை ஸ்மரிக்கப்பெற்ற சிவபிரான்
செங்கண்மால் நாமங்களைச் செவிக்கின்பமாகக் கேட்க விரும்பி அப்பார்வதியையே பாடச்சொல்ல,
அப்படியே அவள்பாட, தென்றலும் சிறுதுளியும் பாட்டாற்போலே இனிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது உள்குழைந்தானென்ப.

-என் செய்யுங்கோலோ –சொல்ல மாட்டாள் –தவிர மாட்டாள் –அழாது ஒழிய மாட்டாள் –எங்கனே படுகிறாளோ –
-நம்மையும் பிறரையும் விட்டு அவன் திரு நாமங்களை அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றோம்
-அவன் தன்னையே கண்டு அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றிலோமே
-அனுசந்தான வேளையில் போல் அன்று இறே கண்டால் பிறக்கும் விகாரங்கள் –
காமன் உடல்-கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த -வண்டலம்பும்-தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து
அங்கு-ஆர் அலங்கல் ஆனமையால் –ஆய்ந்தால் -மிகவும் அசைந்து போனமையை ஆராய்ந்து பார்த்தால் —
கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல்-
உண்மை உணர்த்த -நீர் யாரை உபாசிக்கிறீர் -என்ற கேள்வி வியாஜத்தாலே-பகவான் நாமங்களை சிவபெருமானுக்கு உணர்த்த
–ஸ்மரித்த மாத்திரத்திலே -கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்றும் உள்ளம் எல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எல்லாம் கண்ண நீர் சோர-என்றபடி உள் குழைந்தான்-
ஆர் அலங்கல் ஆனமை–அலங்கல் மாலைக்கும் அசைவுக்கும் பெயர் -பூ மாலை போலே துவண்டு விழுந்தான் என்கை
ஆனமையால் -ஆல்-என்பதை ஆய்ந்து என்பதுடன் கூட்டி ஆய்ந்தால் -என்ற படி

————————————————————————————————

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

பதவுரை

ஆதி–ஜகத் காரண பூதனான
பெருமானை–ஸர்வேச்வரனை
அன்பினால்–ப்ரேமத்துடன்
ஆய்ந்து கொண்டு–அநுஸந்தித்துக் கொண்டு
வாய்ந்த மனத்து–(தமது) பாங்கான நெஞ்சிலே
இருத்த வல்லார்கள் தாமும்–நிலை நிறுத்திக்கொள்ள சக்தரானவர்கள்
தம் வைகுந்தம்–தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரமபத்ததை
விரைந்து–சீக்கிரமாக
காண்பார்–காண விரும்பமுடையராய்
ஏய்ந்த–ஆத்மாவோடு செறிந்த
தம் மெய்–தங்களுடைய உடம்பை
குந்தம் ஆக–வியாதியாக
விரும்புவர்-எண்ணுவர்

தம்-மெய்குந்த மாக விரும்புவரே–தங்கள் உடம்பை வியாதியாக எண்ணுவர் –
ஆதிப்பெருமானை அன்பினால் ஆய்ந்து கொண்டு -தங்களுடைய வாய்ந்த மனத்திலே அவனை இருத்த வேணும் என்னும்
விருப்பம் யுடையவர்கள் -தங்களுக்கு என்று இருப்பட்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை பெற்ற போது பெறுகிறோம்
என்று ஆறி இருக்கை அன்றிக்கே -கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ-என்று விரைந்தவராய்க் கொண்டு
-அதற்கு இடையூறாய் இருக்கிற இவ் உடல் என்று தொலையும் -என்று இருப்பார்கள் –
வடுக பாஷையில் –குந்தம் என்று வியாதிக்குப் பெயர் -என்பர் பூர்வர்கள் –

————————————————————————————————–

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

பதவுரை

உலகம்–சிறந்த பாகவதர்கள்
பரந்து–எங்குத் திரிந்து
பாடின–பாடின பாடல்களையும்
ஆடின–ஆடின ஆட்டங்களையும்
கேட்டு–கேட்டதனால்
படு நரகம் வாசல்–க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த
கதவு–கதவுகள்
வீடின–விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின)
மேல் ஒருநாள்–முன்னொரு காலத்தில்
வெள்ளம் பரக்க–பிரளய வெள்ளம் பரவின போது
உலகம்–உலகங்களை யெல்லாம்
கரந்து–(திருவயிற்றில்) மறைத்து வைத்து
காத்து அளித்த-துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த
கண்ணன்–கண்ண பிரானை
விரைந்து அடைமின்–சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்

– உலகம்-பரந்து—பாடின வாடின கேட்டு –சிறந்த பாகவதர்கள் எங்கும் திரிந்து பாடின பாட்டுக்களையும்
ஆடின ஆட்டங்களையும் கேட்டதனால் –
உலகம் உயர்ந்தோர் மாட்டே -சிறந்த பாகவதர்கள் -என்றபடி
படு நரகம்– வாசற் கதவு-வீடின–குரூரமான நரகங்கள் வாசல் கதவுகள் விட்டு ஒழிந்தன -நரகங்கள் புல் மூடிப்போனவே
ஆனபின்பு –
அறிவிலா மனுஷர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒலியும் அன்றே –
மேலொருநாள் வெள்ளம் பரக்க–முன்னொரு காலத்தில் பிரளய வெள்ளம் பரவின போது
உலகம் கரந்து காத்து அளித்த கண்ணன் -உலகங்களை எல்லாம் திரு வயிற்றிலே மறைத்து வைத்து
துன்பங்களைப் போக்கி ரஷித்த -கண்ணன் விரைந்து அடைமின் –

————————————————————————————————–

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

பதவுரை

நீ–(ஞானம் சக்தி முதலியவற்றால் குறைவற்றவனான) நீ
கற்ற மொழி ஆகி–நான் கற்ற சொற்களுக்குப் பொருளாக இருந்து கொண்டு
கலந்து–என்னோடு ஒரு நீராகக் கலந்து
நல் தமிழை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப்பிரபந்தத்தை
விதை ஆக வித்தி–(பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து
என் உள்ளத்தை–எனது ஹ்ருதயத்தை
விளைத்தாய்–விளையும்படி க்ருஷி பண்ணினாய்
மனம்–மனமானது
கதவு என்றும்–எம்பெருமானை யடைவதற்குப் பிரதிபந்தகம் என்று (சில மையங்களில்) நினைத்தும்
(மனம்) காணல் ஆம் என்றும்–(மனமானது) எம்பெருமானைக் காண்பதற்கு உறுப்பாகும் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன்–(ஆக விப்படி ஒரு நிலை நில்லாமல் மாறி மாறி) பிரமிப்பதையே தொழிலாக வுடைத்தான நெஞ்சைத் தவிர்த்தேன்.

நீ -ஞானம் சக்திகளில் குறைவற்ற நீ
கற்ற மொழியாகிக் கலந்து -நான் கற்ற சொற்களுக்கு பொருளாக இருந்து கொண்டு -என்னோடு ஒரு நீராகக் கலந்து –
நற்றமிழை விதையாக வித்தி–இப்பிரபந்தத்தை பக்தியாகிய பயிருக்கு விதையாக விதைத்து
என்னுள்ளத்தை – விளைத்தாய்-என் இருதயத்தை விளையும் படி கிருஷி பண்ணினாய்
மனம் கதவு –என்றும் மனம் -காணலாம் என்றும்–மனமே எம்பெருமானை அடைய பிரதிபந்தகம் என்றும்-
-காண்பதற்கு உறுப்பாகும் என்றும் வெவேறு சமயங்களில் நினைத்து
குதையும் வினையாவி தீர்ந்தேன் -பிரமிப்பதையே தொழிலாகக் கொண்ட நெஞ்சைத் தவிர்ந்தேன் –
மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோஷயா -நெஞ்சினால் நினைக்க முடியாத ஞான சக்திகளை யுடையனான நீ
என் வாக்கில் வரும் சொற்களுக்கு பொருளாய் இருந்து கொண்டு என்னுடைய நெஞ்சம் ஆகிற நிலத்திலே
தமிழாகிற விதையை வித்தை பக்தியாகிற பயிர் செழித்து விளையும்படி செய்தாய் யாகையாலே
நிலைபெற்ற நெஞ்சுடையேன் ஆனேன் என்கிறார் –

சாஸ்த்ரங்களில் = மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ“ என்று சொல்லப்பட்டுள்ளது.
அதாவது – ஸம்ஸார பந்தங்களைப் பூண்கட்டிக் கொண்டு எம்பெருமானை மறந்தொழிவதற்கும் மனமே காரணம்,
வீண்பாசங்களை விட்டொழிந்து அப்பெருமானைக் கண்டுகளிக்கப் பெறுதற்கும் மனமே காரணம் என்கை.
இவ்விரண்டு வகையான ஸங்கதியும் ஸம்ஸாரிகளின் அநுபவத்தில் மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும்,
ஊழ்வினையின் கனத்தால் விஷய ப்ராவண்யம் மேலிடுகிற காலங்களில் மனமானது ஸம்ஸாரபந்தத்திற்குக் காரணம் என்று அறுதியிடப்பெறும்,
பகவத் பாகவத கடாக்ஷலேசத்தால் பகவத் விஷயத்தில் பற்று உண்டாகுங் காலங்களில் மனமானது மோக்ஷத்திற்குக் காரணம் என்று அறுதியிடப் பெறும்.
ஆகவே, இவ்விபூதியிலுள்ள நம்போல்வார்க்கு விஷயாந்தரப் பற்றும் நிலைத்திராது, பகவத் விஷயப் பற்றும் நிலைத்திராது,
இரண்டும் மாறிமாறி வந்துகொண்டே யிருக்குமாதலால் ஒரு மையத்தில் ‘மனம் பந்தஹேது‘ என்கிற உணர்ச்சியும்
பின்னுமோர் ஸமயத்தில் ‘மனம் மோக்ஷஹேது‘ என்கிற உணர்ச்சியுமாயிருக்கும்.
நம்மைப் போலன்றிக்கே ஆழ்வார் எப்போதும் எம்பெருமானையே அநுபவிக்கும்படியான உறைப்புப் பெற்றவராதலால்
‘மனம் பந்தஹேதுவோ மோக்ஷஹேதுவோ‘ என்கிற குழப்பம் இவர்க்கு நேர ப்ரஸக்தியில்லை,
‘மனம் மோக்ஷஹேதுதான்‘ என்கிற நிச்சய வுணர்ச்சியே இவர்க்குள்ளது, இதைத்தான் இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

கதவுமனமென்றும் காணலாமென்றும் குதையும் வினையாவி தீர்ந்தேன் –ஒரு வாசலுக்குக் கதவு இருட்டிருந்தால்
உள்ளே புகுவதற்கு அது தடையாயிருக்குமாதலாலே கதவு என்கிற சொல் பிரதிபந்தகத்தைச் சொல்லுகிறது
இங்கு, மனம் (பகவத் ப்ராப்திக்குப்) பிரதிப்பந்தகமோ அல்லது (பகவானைக்) காண்கைக்கு உறுப்போ என்று
அலைபாய்வது தவிர்ந்தேன் என்றவாறு. அவர்ந்தமைக்குக் காரணங் கூறுவன பின்னடிகள்.

நெஞ்சினால் நினைக்கவும் முடியாத ஜ்ஞாநகக்திகளையுடையனான நீ என்னுடைய வாக்கில் வரும் சொற்களுக்குப் பொருளாயிருந்து
கொண்டு என்னுடைய நெஞ்சமாகிற நிலத்திலே தமிழாகிற விதையை விதைத்துப் பக்தியாகிற பயிர் செழித்து
விளையும்படி செய்தாயாகையாலே நிலை நின்ற நெஞ்சுடையேனாயினேன் என்றாராயிற்று.

—————————————————————————-

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-

பதவுரை

காம வேள் தாதை–மன்மதனுக்குத் தந்தையானவனும்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும்–மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
வேந்து–தேவாதிதேவன்
என் உள்ளத்து–எனது நெஞ்சிலே
கலந்தான்–சேர்ந்து கொண்டான்
நான்முகனும்–பிரமனென்ன
என்ற இவர்கள்–என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்த மாட்டாத–நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர்–இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)

விட்டு ஏத்த மாட்டாத வேந்து –நன்றாக ஸ்துதிக்க மாட்டாத இந்திரனும் –
என் உள்ளத்தோடு நீராக கலந்து கொண்ட நன்மைக்கு ஈடுண்டோ –

நான் பெற்ற நன்மை வேறு யாரும் பெறமுடியாது, இதுவரையில் நான் பெற்ற நன்மைகளுள் இப்போது பெற்ற நன்மைக்கு
ஈடானதும் வேறொன்றில்லை, அரன் அயன் என்னும் படியான மேம்பட்ட தெய்வங்களாலும் துதித்துத் தலைக்கட்டப் போகாத
பெரும்புகழ் படைத்த பெருமான் என் உள்ளத்தோடு ஒரு நீராகக் கலந்து கொண்டானே! இஃது என்ன நன்மை! என வியக்கிறார்.

காமவேள் தாதை – மன்மதனுடைய அம்ஸமாகிய பிரத்யும்நனுக்கு கண்ணபிரான் தந்தையாதல் அறிக.
‘காமன்‘ என்பது வடசொல் ‘வேள்‘ என்பது தமிழ்ச் சொல், இரண்டையும் சேரப் பிரயோகித்த விடத்து
ஒரு சொல்லை விசேஷணமாகவும் மற்றொன்றை விசேஷ்யமாகவுங் கொள்ளலாம்,
ஆசையை விளைக்குமவனான மன்மதன் என்க
தாதை –தாத அலர்ந்த + அலர்கள், அலந்தலர்கள், தொகுத்தல், ‘என்றிவர்கள்‘ என்றிவிடத்து மிதுவே.

——————————————————————————————

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் 
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83–

பதவுரை

நேமியான்–திருவாழி யாழ்வானை யுடையவனும்
மால் வண்ணன்–வியாமோஹமே வடிவெடுத்தவனுமான எம்பெருமான்
சார்ந்தவர்க்கு–தன்னை யடைந்தவர்கள் விஷயத்தில்
வேந்தர் ஆய்–அரசர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
விண்ணவர் ஆய்–தேவர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
மாது ஆய்–தாய் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
மற்று எல்லாம் ஆய்–மற்றுமுள்ள எல்லா வகை நன்மைகளையும் செய்பவனாய் (எவ்வளவு நன்மைகள் செய்தாலும்)
ஆற்றான்–ஆறுதல் இல்லாதவனாய்க் கொண்டு (திருப்தி பெறாதவனாய்)
விண் ஆகி–ஸ்வர்க்க போகத்தைக் கொடுக்குமவனாய்
தண்ணளி ஆய்–அருள் செய்பவனாய்
மாந்தர் ஆய்–மனிசர்களான உறவினர் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
பின்னால்–இவ்வளவுக்கு மேலும்
தன் கொடுக்கும்–தன்னை (முற்றூட்டாகக் கொடுத்தருள்வன்
தான் செய்யும் பிதிர்–(இவை) எம்பெருமான் செய்யும் அதிசயங்களாம்

ஆஸ்ரிதர் விஷயத்தில் எம்பெருமான் செய்து அருளும் உபகார பரம்பரைகளையும்- எத்தனை செய்தாலும்
திருப்தி அடையாமல் அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன்
வேந்தராய்-விஷ்ணுவின் அம்சம் இன்றி அரசராய் இருக்க முடியாதே –
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் –திருவாய் -4-4-8-
விண்ணவராய்-வருணாதி தேவர்களையும் இருப்பவன்
விண்ணாகி-ஸ்வர்க்காதி அனுபவங்களை அளிப்பவனும் அவனே
தண்ணளி –கிருபை -அருள் சேதுபவனுமாய் -/ மால் வண்ணன்-வியாமோஹமே வடிவு எடுத்தவன்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய்–எல்லா நன்மைகளும் செய்யும் -உறவினர் -தாய் மற்றும் எல்லாருமாய்
பின்னால் தான் கொடுக்கும்-இவ்வளவுக்கும் மேலே தன்னை முற்றூட்டாகக் கொடுத்து அருள்வான் –
தான் செய்யும் பிதிர்-இவை எம்பெருமான் செய்யும் அதிசயங்கள் –

———————————————————————————————

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பதவுரை

அதிரும் கழல் கால–ஒலிக்கின்ற வீரக்கழலைத் திருவடிகளிலே அணிந்துள்ள
மன்னனை–ராஜாதிராஜனான
கண்ணனையே–கண்ண பிரானையே
நாளும்–எந்நாளும்
தொழ–தொழும் படியாக
காதல்–ஆசைப்படுவதையே
தொழில்–நித்ய கருமமாக
பூண்டேன்–ஏற்றுக் கொண்டிருக்கிற நான்
பிதிரும் மனம் இலேன்–(விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடு எதிரவன்–(ஞானத்தில்) பரமசிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்)
அவன் எனக்கு நேரான்–அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான்.

பிதிரும் மனம் இலேன் -விஷயாந்தரங்களில் புகுந்து விகாரப்படும் நெஞ்சுடையேன் அல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடுஎதிர்வன்–ஞானத்தில் பரமசிவனொடு ஒத்து இருப்பான் -என்னலாமாயினும்
அவன் எனக்கு நேரான் –ஈஸ்வரோஹம் என்னும் -அந்த ருத்ரன் நித்ய தாசனான -என்னோடு ஒவ்வான்

சாஸ்த்ரங்களில் (சிவனிடத்திலிருந்து அறிவைப் பெற்றுக் கொள்க) என்று விதித்திருக்கையாலே
உலகுக்கெல்லாம் உணர்வையிளக்க வல்லனாம்படி மஹாஜ்ஞாநியாக ருத்ரன் ப்ரஸித்தி பெற்றிருப்பதனால்
அங்ஙனே மஹாஜ்ஞாதாவான ஆழ்வாரோடு அவனுக்கு ஒப்புச் சொல்ல ப்ரஸக்தியுண்டு, ப்ரஸக்தமான அது கழிகப்படுகிறது.
இரண்டாமடிமுதலாக. ருத்ரன் ஸ்தவகுணம் தலையெடுத்தபோது ‘எம்பெருமானே ரக்ஷகன்‘ என்றிருப்பதும்,
ரஜஸ்தமோகுணங்க்ள தலையெடுத்தபோது ‘நானே ஈச்வரன்‘ என்று மார்பு நெறித்திருப்பதுமா யிருக்கையாலே,
ஸர்வகாலத்திலும் பகவத் ப்ராவண்யமே யாத்ரையாயிருக்கு மிவர்க்கு ஒப்பாகமாட்டானென்க.

-அதிரும்-கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –ஒலிக்கும் வீரக் கழலை அணிந்துள்ள ராஜாதி ராஜனான கண்ணபிரானையே
எந்நாளும் தொழும் படியாக ஆசைப்படுவதையே நித்ய கர்மயமாக ஏற்றுக் கொண்டு இருக்கிற அடியேன் –

——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61-

பதவுரை

மதுசூதன் தன்னை–மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை
மனம் கேதம்–மன வருத்தங்கள்
சாரா–வந்து சேராவாம்
ஒன்றி நின்று–பொருந்தி நின்று
ஏழ் உலகை–ஸப்த லோகங்களிலும்
ஆணை ஒட்டினான்–(தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்
இன்று–இப்போது
தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்–தனக்கே ரக்ஷகனென்று ஒருவன் கொண்டால்
சென்று–(நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து
ஒன்றி நின்ற திரு–(என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது
எனக்கே தான்–என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.

எம்பெருமான் நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்ற பாக்யம் தன்னத்தே என்கிறார் –
மதுவை அளித்த எம்பெருமானை மனசில் கொண்டால் துக்கம் வாராது –
அப்படி செய்ய வேண்டி இல்லாமல் தானே தம்மை விஷயீ கரித்தான் என்கிறார்-

நீர் மதுசூதனையே தஞ்சமாகக் கொண்டிருக்கிறீரோ? என்று சிலர் கேட்க, அப்பெருமானை நான் தஞ்சமாகக்
கொள்ளவேண்டும்படி அவன் எனக்கு ஒரு காரியம் வைக்கவில்லை அவன்றானே என்னெஞ்சில் வந்து குடிகொண்டான்,
இப்படிப்பட்ட பாக்கியம் எனக்கே அஸாதாரணமாக அமைந்தது என்றார் பின்னடிகளில்.

நின்று ஒன்றி நின்று உலகை ஏழ்–இன்று ஒன்றி நின்று உலகை –
சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –

மூன்றாமடியின் முதற்பதம் ‘நின்று‘ என்பதாகவே பலரும் ஓதுவர்கள், பல அச்சுப்பிரதிகளிற் பாடமுமிதுவே.
இஃது இடையில் மாறுபட்ட பாடமாகும். “இன்றொன்றி நின்றுலகை“ என்றே பூர்வவ்யாக்யான பாடம்
“ஸமஸ்த லோகத்தையும் விடாதே நின்று தன் ஆஜ்ஞை செல்லும்படி கடத்தினவன் தானேவந்து
அபிநிவிஷ்டனான ஸம்பத்து எனக்கேயுள்ளது, அது தானும் இன்று“ என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்.
மோனையின்பமும் பொருட்பொருத்தமும் இப்பாடத்திற்கே இணங்கும்.
பாசுரத்தை யெழுதும்போது அடிகளில் நிறுத்தாமல் மேலடியோடு ஸந்திசெய்தே யெழுதுகிற வழக்கப்படி
பழைய எட்டுப் பிரதிகளில் “எனக்கேதானின்றொன்றிநின்றுலகை“ என்றெழுதி யிருந்த்தன்பயனாக
“நின்றொன்றி நின்றுலகை“ என்றபாடம் நிகழ்ந்தது போலும்.

“ஏழுலகை ஒன்றிநின்று ஆணையோட்டினான் சென்று ஒன்றி நின்ற திரு இன்று எனக்கேதான்“ என்று அந்வயிப்பது.
எவ்வுலகத்தும் தன்னுடைய செங்கோலே செல்லும்படியாகத் தனியாக புரிகின்ற திருமால் தானே யெழுந்தருளிப் பொருந்தி
நெஞ்சிலே வாழும்படியான செல்வம் இன்று எனக்கே வாய்த்தது என்றவாறு.

—————————————————————————–

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62–

பதவுரை

திரு இருந்த மார்வன்–பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே)
சிரீதரன் தன்–‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய
வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை–வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை
சூடி–தலைக்கு அலங்காரமாக அணிந்து
தரித்து–அதனால் ஸத்தை பெற்று,
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–‘பிராட்டி பொருந்தி யிருக்கப் பெற்ற வலப் பக்கத்தை யுடைய
வஸ்துவே பரதத்துவம்!‘ என்று துணிந்தறிய மாட்டாதவர்கள்.
கரு நின்ற–(தங்களைப் போலே) கர்ப்ப வாஸம் பண்ணிப் பிறக்கின்ற சிலரை
கல்லாக்கு உரைப்பர்–(பரதெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள்.

திருமாலின் தேன் மிக்க திருத் துழாய் மாலையை அணிந்து கொள்ளப் பெற்றால் -ஸ்ரீ யபதியே சிறந்த தெய்வம் -என்று அறியலாகும் –
திருவிருந்த-மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடிப் பெறாமையாலே
திரு நின்ற பக்கம் திறவிது என்று -உணரப்பெற்றிலர்-என்ற கருத்தை உய்த்து உணர வேண்டும்
அபாங்க பூயாம் சோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்-பிராட்டி உடைய நிரம்பிய கடாக்ஷம் பட்ட வஸ்துவே பரப்ரஹ்மம் ஆனது -பட்டர் –
(பிராட்டியின் நிரம்பிய கடாக்ஷம் பட்ட வஸ்து பரப்ரஹ்மமாய் விட்டது என்பது இதன் கருத்து.)

கரு நின்ற -கரு நின்றவர்களை -கர்ப்பப் பையில் தாங்கிப் பிறப்பது இறப்பது -இப்படிப் பட்டவர்களை
பரதெய்வம் என்று கற்றார் இடம் சொன்னால் முகம் சிதறப் புடைப்பார்கள் ஆதலால் அன்னவர்கள் இடம்
வாய் திறவாமல் கல்லார்க்கு உரைப்பாராம் -கல்லார் -கல்வி பயிலாத மூடர் –

——————————————————————————————-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-

பதவுரை

தாராகணம்–நக்ஷத்ரகணங்களினுடைய
போர்–(சுபாசுப நிமித்தமான) ஸஞசாரத்தை
விரித்து உரைத்த–(ஜ்யோதிச்சாஸ்தர முகத்தாலே) விஸ்தாரமாக வெளியிட்டவனும்
வெம் நாகத்து உன்னை–(பிரதிகூலர்க்குத் தீக்ஷ்ணனுமான திருவனந் தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை
தெரித்து–அநுஸந்தித்தும்
எழுதி–எழுதியும்
வாசித்தும்–(எழுதினவற்றைப் படித்தும்)
கேட்டும்–(ஆங் காங்கு) ச்ரவணம் பண்ணியும்
வணங்கி–நமஸ்காரம்பண்ணியும்
வழிபட்டும்–உபசாரங்களைச் செய்தும்
பூசித்தும்–பூஜித்தும்
போது போக்கினேன்–காலத்தைக் கழத்துக் கொண்டிருக்கிறேன் (இப்படி செய்வது எதுக்காக வென்னில்)
தரித்திருந்தேன் ஆகவே–ஸத்தை பெறுவதற்காக.

தாரா கணப் போர்-நக்ஷத்ரங்களுடைய சுப அசுப நிமித்தமான சஞ்சாரத்தை
விரித்துரைத்த -ஜ்யோதிஸ் சாஸ்த்ர முகத்தால் வெளியிட்டு அருளினவனும்
வென்னாகத்துன்னை-பிரதிகூலருக்கு தீக்ஷணமான திருவனந்த ஆழ்வானுக்கு அந்தராத்மா ஆகிய உன்னை –
தெரித்து -அனுசந்தித்து –
எழுதி-வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்-பூசித்தும் போக்கினேன் போது–எதுக்கு என்னில்
தரித்து இருந்தேனாகவே–சத்தை பெறுவதற்காக -சாதன அனுஷ்டான ரூபமாக அல்ல –

தம்முடைய போதுபோக்கைப் பேசுகிறார். எம்பெருமானை அநுஸந்திக்கை, அவனது திருப்புகழைப் புத்தகமாக எழுதுகை,
அவற்றை வாசிக்கை, செவித்தினவுகெடச் சொல்லுவார் பக்கல் கேட்கை, வணங்குகை, தம்மாலியன்ற உபசாரங்களைப் பண்ணுகை,
அர்ச்சிக்கை முதலிய தொழில்களால் தம்முடைய போதுபோவதாக அருளிச் செய்தாராயிற்று.
இப்படி செய்வனவெல்லாம் ஸாதநாநுஷ்டாந ரூபமாக அல்ல,
ஆத்மா ஸத்தை பெறுவதற்காக ஸ்வயம் புருஷார்த்தமாய்ச் செய்வன என்பதை வெளியிடுகிறார் “தரித்திருந்தேனாகவே“ என்பதனால்.

(“தாராகணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்துன்னை“) இக்காலத்துப் புதிய ஆராய்ச்சிக்காரர் சிலர் வெளியிட்டுள்ள
‘ஆழ்வார்கள் காலநிலை‘ என்னுமோர் புத்தகத்தில் இப்பாசுரத்தை ஆராய்ச்சி செய்யப் புகுந்து.

“இதன் முதலிரண்ட்டிகட்கு –‘நக்ஷத்ரகதியாயிருக்கிற ஜ்யோதிஸ் –சாஸ்திரத்தைச்சொன்ன திருவனந்தாழ்வானுக்கு
ஆத்மா வாயிருக்கிற உன்னை‘ என்பது பூர்வவியாக்கியானம்.
இதன்படி ‘தாராகணப்போர் விரித்துரைத்த‘ என்ற விசேடணம் ஆதிசேடனுக்கு உரியதாகும்.
ஆனால் அவனை இவ்வாறு விசேடிப்பதற்குரிய நேரான பொருத்தமொன்றுங் காணப்படவில்லை.
ஆதிசேடன் செய்த சோதிடநூல் இன்னதென்பதுந் தெரிந்திலது.
அதனால், ‘வெந்நாகத்துன்னை‘ என்றுள்ள பாடம்
‘விரித்துரைத்த வென்னாகத்துன்னை‘ என்றிருந்த பழம் பாடத்தினின்றும் மாறியதோ என்று கருத இடந்தருகின்றது.
‘(சோதிட நூலை) விரித்துரைத்த (என்-ஆகத்து) எனது நெஞ்சிடமாகவுள்ள, உன்னை‘ என்பது இப்பாடப்படி பொருளாகும்-

இங்ஙனம் ‘தாராகணப்போர் விரித்துரைத்த‘ என்பது ஆழ்வார்க்குரிய விசேடணமாயின், தம்மாற் செய்யப்பெற்ற
சோதிடநூலொன்றைப்பற்றி அவர் குறிப்பிட்டனராவர். அத்தகைய நூல் யாது என்பது ஆராய்ந்து அறிதற்குரியது. என்று எழுதியுள்ளார்.

இதனாற் சொல்லிற்றாகிறதென்னென்னில், பகவத் கிருபையாலும் ஸதாசார்ய கடாக்ஷத்தாலும் ஆழ்வார்களருளிச் செயல்களின்
உண்மைப் பொருள்களை நன்குணர்ந்து அருளிச் செய்தவரும், இற்றைக்குச் சற்றேறக் குறையத் தொள்ளாயிரம் ஆண்டுகட்கு முன்பு
ஸர்வஜ்ஞராயப் புகழ்பெற்று விளங்கின வருமான பெரியவாச்சான் பிள்ளை பிழையான பாடமொன்றைக் கொண்டனரென்றும்,
அப்பாடப்படி உரைக்கும் பொருள் பொருத்தமற்றதென்றும் சொல்லிற்றாகிறது.
“வெம் நாகத்து“ என்பது பெரிய வாச்சான் பிள்ளை உரைசெய்தருளின பாடம்.
“என் ஆகத்து“ என்பது இப்புதிய புலவர் கற்பிக்கும் பாடம்.
பழைய பாடத்திற் பொருத்தமின்மை கூறப்புகுமவர் தாங்கூறும் பாடத்தில் ஒரு பொருத்தம்காட்டித் தீரவேண்டும்.
ஆதிசேஷன் செய்த சோதிட நூல் இன்னதென்று தெரியவில்லை யென்னுமிவர்
திருமழிசைப்பிரான் செய்த சோதிட நூல் இன்னதென்று தெரிந்து கொண்டவராதல்வேண்டும்.

“பார்க்கவம் பிருகு சூத்திர முதலிய கணித சோதிட கிரந்தங்கள் உள்ளன,
இவை போன்றதொன்றே பிருகு வமிசத்தவரான ஆழ்வார் அருளிச்செய்ததாக வேண்டும்.“ என்று அநுமானங் கூறுகின்றார்.
இத்தகைய அநுமானம் ஆதி சேஷன் பக்கல் கூடாமைக்குக் காரணமறிகின்றிலோம்.
வேதாங்கங்களுள் ஒன்றான ஜ்யோதிக்ஷத்திற்கு ஆதிசேஷன் ப்ரவர்த்தகன் என்னுமிடத்தை பல பிரமாணங்களினால், நன்கறிந்தே
பூருவர்கள் மிகப் பொருத்தமாக வியாக்கியானஞ் செய்தருளினர்.
இவ்விஷயமாகச் சில வாண்டுகட்கு முன்னர் நாம் பலவிடங்களிலும் பல பெரியோர்களை விசாரித்து வருகையில்,
மலை நாட்டில் திருவனந்தசயனத்தில் மலையாளிச் சோதிட நிபுணரொருவர் எடுத்துரைத்த ச்லோகம் மேற்குறித்தது.
புராதநமான சோதிடநூலொன்றின் வியாக்கியானத்தில் மங்களச்லோகமாக அமைந்ததாமிது.
இன்னமும் ஊன்றி ஆராயப்புகில் இத்தகைய ஆதாரங்கள் ஆகரத்துடன் பல கிடைக்கக் குறையில்லை. இது நிற்க.

திருமழிசைப்பிரான் பல மதங்களிலும் புகுந்து அந்தந்த மதங்கட்குச் சார்பாகப் பல நூல்களும் இயற்றினரென்னும்
ப்ரஸித்தியிருந்தாலும் சோதிட நூல் இயற்றியருளினராக எங்குங்கூறப்படவில்லை.
அங்ஙனே ஏதேனுமொருநூல் தாம் செய்தருளியிருந்தாலும் அதனை இங்கு அநுவதித்தருளிச் செய்தற்கு ப்ரஸக்தியொன்றுமில்லை.
இவ்வண்ண மருளிச்செய்யும் வழக்கம் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களி லொன்றிலுமில்லை.
ஆகவே ‘என் ஆகத்து‘ என்று பாடத்தை மாறுபடுத்தல் பயனற்றது. ஸர்வஜ்ஞர்களான பூர்வாசார்யர்களின் வியாக்கியான ஸ்ரீஸூக்திகளில்
அல்பஜ்ஞரான நாம் குறைகூறுதற்குச் சிறிது மதிகாரமுடையோமல்லோம்.
பூருவர்கள் ப்ரமித்தார்களெனினும் அந்த ப்ரமமே நமக்கும் தஞ்சமகாத்தக்கது.

ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீமணவாளமாமுனிகள் வரையிலுள்ள ஸதாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகள் வேதவாக்கினுஞ் சிறந்து
பிரமாணமாவனவென்று திண்ணிதாகக் கொள்வாரது திருவடிகளே சரணம். பூருவர்களருளிச்செய்த பொருள் கட்கு முரண்படாமல்
விசேஷார்த்தங்களை விவேகித்துக்கூறின் குறையொன்றுமில்லை. இதுவே கலையறக்கற்ற மாந்தர்பணியாம்.

தாராகணப்போர் –‘தாராகணம்‘ என்னும் வடசொல் தொடர் நக்ஷத்ரஸமுஹமெனப் பொருள்படும்.
அவற்றின் ஸஞ்சாரத்தை ஜ்யோதிச் சாஸ்த்ரமுகத்தால் விரித்துரைத்தவரான திருவனந்தாழ்வானுக்கு அந்தாரத்மாவாயிருக்கிற வுன்னை.
வேதம், பஞ்சராத்ரம், இதிஹாஸ புராணம் முதலிய வேதோபப்ரும்ஹணங்கள் முதலானவற்றை, தன் முகமாகவும்
பிரமன் முகமாகவும் சில முனிவர்க்குத் தான் அந்தராத்மாவாயிருந்து அவர்கள் முகமாகவும் வெளியிட்டதுபோல்
ஆதிசேஷனுக்கு அந்தராத்மாவாயிருந்து ஜ்யோதிஸ் சாஸ்த்ரத்தை வெளியிட்டருளினன் என்னும் உண்மையை
வெளியிடுதலே இவ்விசேஷணத்திற்குப் பிரயோஜன மென்க.

நாகம் – வடசொல் திரிபு, ஸர்ப்பம் ‘வெம்‘ என்ற அடைமொழி இயற்கை பற்றியது.

———————————————————————————————–

தம் கால ஷேப க்ரமத்தை அருளிச் செய்தார் கீழ் இதில் பிறர் கால ஷேப க்ரமம் உபதேசிக்கிறார்
அவன் திருவடிகளில் புஷபங்களை பரிமாறி திரு நாமங்களை சொல்லி ஏத்தி இறைஞ்சுவதே வேண்டும் என்கிறார்

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

பதவுரை

பொன் மகரம் காதானை–அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பெருமானை–பெருமை பொருந்தியவனும்
நாதனை–(அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை–(ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை–நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்
நம் ஏழ்பிறப்பு அறுக்கும் சொல்லானை–நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்க வல்ல திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேச்வரனைக் குறித்து
போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்–புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்
சொல்லுவதே–(அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே
சூது–நல்ல வாய்ப்பு

‘போதுகளை யிட்டிறைஞ்சி‘ என்னாமல் ‘போதான விட்டிறைஞ்சி‘ என்றதன் கருத்து யாதெனில்,
எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேணுமென்கிற சுத்தபாவத்துடனே கொள்ளுகிற புஷ்பம் எதுவாயினுங் குற்றமில்லை,
‘செண்பக மல்லிகைமொரு பூவாயிருக்கலாம் என்பதாம்.
பெரியவாச்சான் பிள்ளையும் இவ்விடத்து வியாக்கியானத்தில் – “இன்ன புஷ்பமென்று நியதியில்லை,
பூவானதை யெல்லாவற்றையுங்கொண்டு திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்கி ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்“ என்றருளிச்செய்தது காண்க.
இதனால், இன்ன பூ என்று நிர்ப்பந்த மில்லாமையால் பூவென்று பேர்பெற்றிருக்கு மத்தனையே வேண்டுமென்றதாயிற்று.

திருவாய்மொழியில் (1-6-1) “பரிவதிலீசனைப் பாடி விரிவது மேவலுறுவீர், பிரிவகையின்றி நன்னீர்தூய்ப் புரிவதுவும் மேவலுறுவீர்,
பிரிவகையின்றி நன்னீர்தூயப் புரிவதும் புகைபூவே“ என்ற பாசுரத்தை ஸ்ரீபட்டர் உபந்யஸிக்கும் போது
“புரிவதுவும் புகைபூவே“ என்ற சப்த ஸ்வாரஸ்யத்தைத் திருவுள்ளம்பற்றி
‘இவ்விடத்தில் அகில்புகையென்றாவது, கருமுகைப்பூ என்றாவது சிறப்பித்துச் சொல்லாமையாலே
ஏதேனும் ஒரு புகையும் ஏதேனுமொருபூவும் எம்பெருமானுக்கு அமையும், செதுயிட்டுப் புகைக்கலாம்,
கண்ட காலிப்பூவும் சூட்டலாம்‘ என்று உபந்யஸித்தருளினராம்,

அதை நஞ்சீயர் கேட்டு “ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்“ (கண்டகாலிப்பூவை எம்பெருமானுக்குச் சாத்தலாகாது)
என்று சாஸ்த்ரம் மறுத்திருக்க, இப்படி அருளிச்செய்த ரஸோக்தி – ‘சாஸ்த்ரம் மறுத்தது மெய்தான், கண்டகாலிப்பூ
எம்பெருமானுக்கு ஆகாதென்று மறுக்கவில்லை, அடியார்கள் அப்பூவைப்பறித்தால் கையில் நிஷேதித்ததேயன்றி
எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவுமில்லை, என்றாம். திருவாய்மொழிக்குப் பதினெண்ணாயிரமுரைத்த பரகால ஸ்வாமி
இந்த ஸம்வாதத்தைக் கொண்டு ரஸியாமல் திரஸ்கரித்துரைத்தது கிடக்க.

(பக்தி எல்லை கடந்தால் நூல்வரம்பில்லை) என்றதையும் அருளிச்செயல் தொடையழகையும் நோக்கி
ரஸப் பொருளுரைத்தவற்றில் குதர்க்கவாதஞ்செய்கை விவேகிகட்குப் பணியன்று.
பொன்மகரக் காதானை – மகரமென்றது மரக்குழைக்கு ஆகுபெயர்.
சுறாமீன் வடிவமாகச் செய்யப்படுவதோர் காதணி மகரகுண்டல மெனப்படும்.

நாதானை…. ‘நாதனை‘ என்பதன் நீட்டல். * செய்யுள் வேண்டுழி வந்த விகாரம்.

நம்மேழ்பிறப்பறுக்குஞ் சொல்லானை – ஒன்றின்பின் ஒன்றாக இடையறாது நிகழ்ந்து செல்கின்ற நமது ஜன்மங்களைப்
போக்கவல்ல திருநாமங்களையுடையவன் எம்பெருமான்.

‘ஏழ்பிறப்பு‘ என்பதற்குப் பலவகையாகப் பொருள்கூறுவதுண்டு.
கர்ப்பவாஸஞ் செய்யும் கஷ்டம், கர்ப்பத்தினின்று வெளிப்படுங் கஷ்டம், பல பிணிகளை யநுபவிக்குங் கஷ்டம்,
கிழத்தன மநுபவிக்குங்கஷ்டம், மரண வேதனைகள் படுங்கஷ்டம், மரணமடையுங் கஷ்டம்,
நரகயாதனைகளை யநுபவிக்குங் கஷ்டம் ஆகிய ஏழுவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாகிய பிறப்பு என்பர் சிலர்
1. “பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், ஏரியின் வட்டம் புகையின் வட்டம், இருளின் வட்டம் பெருங்கீழ் வட்டம்,
அரிபடை வட்டமென்றெழுவகை நரகம்“ என்னப்பட்ட ஏழு நரகங்களிலும் புகுவதற்கு ஏதுவான பிறப்பு என்பர் சிலர்.
‘ஏழு‘ என்றது உபலக்ஷணமாய்ப் பலவகைப் பிறப்புகளென்றபடி என்பர் சிலர்.
மற்றும் பல வகைகளுங் காண்க.
ஏழுவகைத் தோற்றத் தின்னாப்பிறப்பின்“ “ஏழுபிறப்பி லடியவரை யெழுதாப் பெரியபெருமானை“ (திருவரங்கக்கலம்பகம்)
என்றவையுங் காண்க. சூது – உற்றது.

——————————————————————————–

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

பதவுரை

மாது ஆய–அழகுதான் ஒரு வடிவகொண்டாற்போலே யிருப்பனும்
மாலவனை–(ஆச்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
மாதவனை–திருமாலைக் குறித்து
சொல் மாலை–இச்சொல் தொடைகளை (சொல்லி)
யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு–ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு
வைகுந்தத்து இடம் இல்லையோ சொல்லீர்–ஸ்ரீவைகுண்டத்தில் இடம் இல்லையோ?
சொல்லீர்–சொல்லுங்கள்
சூது ஆவது–இதுவே நமக்கு நல்லவாய்ப்பு என்று
என் நெஞ்சத்து எண்ணினேன்–என்மனத்தில் உறுதி கொண்டேன்.

எம்பெருமான் விஷயமாக இப்படிப்பட்ட சொல் மாலைகளை சிந்தித்து இருப்பதுவே நமக்கு உற்றது என்ற அத்யவசாயம் கொண்டேன் –
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் 9 -1 -7 –கண்டீர்கள் அந்தோ —-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே —
மாதவனை சொல்மாலைகள் கொண்டு யாதேனும் வல்லவா சிந்தித்து இருக்கிற தமக்கே வைகுந்தம் உண்டு -மற்றையோர்க்கு இல்லை –
மாதாயா--மாது -அழகுக்குப் பெயர் -தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார்
தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே-
மாதா -தாய் போலே அளிப்பவன் என்றுமாம் -/ மாலவனை-மாயவனை -பாட பேதம் –

———————————————————————————————

கீழே -யாதானும்-வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து-இல்லையோ சொல்லீர் இடம்–என்றதுமே எம்பருமான்
நம் இருப்பிடத்தை இவர் ஆசைப்படுவது என் -இவர் நெஞ்சு அன்றோ நமக்கு உத்தேச்யம் -என்று
இவர் திரு உள்ளத்தே புகுந்து அருள -அத்தை அருளிச் செய்கிறார் –

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66–

பதவுரை

பண்டு–என்னைத் திருத்திப் பணி கொள்வதற்கு முன்பு
படம் நாக அணை நெடிய மாற்கு–படங்களை யுடைய சேஷ சயனத்தில் பள்ளி கொண்டருள்பவனாயிருந்த ஸர்வேஸ்வரனுக்கு
இன்று–இப்போது முதலாக
எல்லாம்–மேலுள்ள காலமெல்லாம்
இடம் ஆவது–வாஸ ஸ்தானமாவது
என் நெஞ்சம்–எனது நெஞ்சமாகும்
மதி சூடி தன்னோடு–பிறைச் சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும்
அயனை–பிரமனையும்
திடம் ஆக–பரம் பொருளாக
வையேன்–மனத்திற்கொள்ள மாட்டேன்
வையேன் நான்–(தத்துவமின்னதென்று கண்டறியத்தக்க) ஸூக்ஷ்ம புத்தியுடையேனான நான்
ஆள் செய்யேன்–(அந்த தேவதாந்தரங்களுக்குத்) தொண்டு செய்யவும் மாட்டேன்
(இப்படி நான் சொல்லுவதற்குக் காரணமென்னவெனில்)
வலம்–(திருமாலின் பரிக்ஹமாயிருக்கப் பெற்ற) மிடுக்கேயாம்.

இதற்கு முன்னே சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -சகல வித கைங்கர்யங்களுக்கும் உரிய திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி
இன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம் எனது நெஞ்சையே தனக்கு இடமாக அமைத்துக் கொண்டான் ஆயிற்று –
இப்படி அவன் தானே வந்து விரும்பப் பெற்ற பாக்யத்தால் -அடியேன் நளிர் மதிச் சடையனாவது நான் முகக் கடவுளையோ
நெஞ்சில் கொள்ளவோ வாங்கவோ இனி பிராப்தி எது -எம்பெருமானை அண்டை கொண்ட மிடுக்கு எனக்கே அன்றோ

திடமாக வையேன்-பரம் பொருளாக மனத்தில் கொள்ள மாட்டேன் / வையேன் நான் ஆள் செய்யேன் –-பரதத்வம் இன்னது என்று
கண்டு அறியத்தக்க ஸூஷ்ம புத்தி யுடையேனான நான் அந்த தேவதாந்தரங்களுக்கு தொண்டு செய்யவும் மாட்டேன் —வை -கூர்மை -என்றவாறு –
இப்படி சொல்வதற்கு காரணம் – வலம் -திருமாலின் பரிக்ரஹமாய் இருக்கப் பெற்ற மிடுக்கே யாம் –

மதிசூடி –தக்ஷமுனிவனது சாபத்தால் க்ஷயமடைபவனாய்க் கலைகுறைந்து வந்து சரணடந்த சந்திரனை முடியின்மீது
கொண்டு வரமளித்துப் பாதுகாத்தமையால் சிவன் மதிசூடியாயினன்.

இப்பாட்டில் ‘வையேன்‘ என்பது இரண்டிடத்து வந்துள்ளது, ஒன்று எதிர்மறை வினைமுற்று,
மற்றொன்று உடன்பாட்டு வினையாலணையம் பெயர்
வை-கூர்மை, கூர்மை தங்கிய மதியுடையேன் என்றவாறு.
தேவதாந்தரப் பற்றையொழித்து ஸ்ரீமந்நாராயணனையே பரதெய்வமாகக் கடைப்பிடித்த தமது மதியைத் தாம் சிறப்பித்துக் கூறுதல் ஏற்குமென்க.

ஆட்செய்யேன் வலம் –ஆட்செய்யேன், வலஞ்செய்யேன் என்று யோஜித்து, (அவர்களைப்) பிரதக்ஷிணம் செய்யமாட்டேன் என்றுரைக்கவுமாம்.

————————————————————————————-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச்
சீரணனை ஏத்தும் திறம்-67–

பதவுரை

நாரணைனை–ஸ்ரீமந் நாராயணனாய்
நாபதியை–(என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
ஞானம் பெருமானை–அறிவிற்பெயரியவனாய்
வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்–எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த
வலம் ஆக–நன்மை தருவதாகிலுமாகுக
சீர்அணனை–நற் குணங்களை பொருந்தி யிருக்கப் பெற்றவனான ஸர்வேச்வரனை
மாட்டாமை தான் ஆக–நன்மை தர மாட்டாதாகிலுமாகுக,
குலம் ஆக–நற் குலத்தைத் தருவதாகிலுமாகுக
குற்றம் தான் ஆக–கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக (எத்துவதை நான் தவிரமாட்டேன்)

எம்பெருமானை ஸ்துதிப்பதே நன்மை -நல் குலம் தரும் என்று நான் விஸ்வஸித்து இருக்கிறேன் -இதற்கு விபரீதமாக
கெடுதலை விளைத்தலும் ஆனாலும் -எம்பெருமானை எத்தகையே உத்தேச்யம் –
வலமாக -குலமாக-அன்றிக்கே மாட்டாமை தானாக -இருந்தாலும்
ஸ்வயம் புருஷார்த்தமாக எம்பெருமானை ஸ்துதிப்பேன் -என்கிறார் –
குலம் தரும் செல்வம் தந்திடும் –வலம் தரும் மற்றும் தந்திடும் –நாராயணா என்னும் நாமம் —

—————————————————————————————

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

பதவுரை

நமனும்–யமனும்
தன் தூதுவரை–தனது சேவகர்களை
கூவி–அழைத்து
செவிக்கு–(அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)
திருவடி தன்–ஸர்வேச்வரனுடைய
நாமம்–திருநாமத்தை
மறந்தும்–மறந்தொழிந்தாலும்
புறம் தொழாமாந்தர்–தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்)
திறம்பேல் மின் கண்டீர்–(ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவறவேண்டா
இறைஞ்சி–வணங்கி
சாதுவர் ஆய் போதுமின்கள் என்றான்–(கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்களாய் வர்த்திக்க கடவீர்கள் என்று சொன்னான்.

யமனுடைய தூதர்கள் பாசங்களைக் கையிற்கொண்டு தங்கள் கடமையைச் செலுத்தப் புறப்படும்போது
யமன் அத்தூதர்களை யழைத்து, ரஹஸ்யங்கள் சொல்லுமாபோலே காதோடே ஒரு வார்த்தை சொன்னான்,
அஃதென்னென்னில், ‘ஓ தூதர்களே! நீங்கள் பாகவதர்களிடத்தில் சிறிதும் அதிகாரஞ் செலுத்த வேண்டா,
அவர்களருகில் நீங்கள் செல்லவே கூடாது, ஒருகால் அவர்கள் நேர்பட்டால் வணங்கி வலஞ்செய்து
பரம ஸாத்விகர்களாய் விலகுங்கோள்‘ என்றானாம். இதனால் பாகவதர்கட்கு யமபய ப்ரஸக்தியே யில்லையென்றதாம்.

ஸ்வ புருஷ மபீ வீஷ்யே பாச ஹஸ்தம் வததி யம-கில தஸ்ய கர்ண மூல –பரிஹர மது ஸூதன ப்ரபந்நான்
பிரபுரஹம் அந்நிய ந்ரூணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –3 -7 -14 –

அவன் தமர் எவ்வினையாராகிலும் எம் கோன் அவன் தமர் என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால் ஆராயப்பட்டு
அறியார் கண்டீர் -அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் -பொய்கையார் –

கெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்–நம்மாழ்வார்

மூவுலகு யுண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -நாவலிட்டுழி தருகின்றோம்
நமன் தமர் தலைகள் மீதே -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்

ஏத்தியுன் சேவடி எண்ணி இருப்பாரைப் பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாமல் சோத்தம் நாம் அஞ்சுதம் என்று
தொடாமை நீ காத்தி போய்க் கண்ண புரத்துறை யம்மானே-திரு மங்கை ஆழ்வார் –

திறம்பேல்மின் கண்டீர் -ஞாபகப் பிசகினால் அந்த தூதர்கள் அதிகாரம் செலுத்தினால் அனர்த்தம் விளையும்
திருவடி தன் நாமம்-மறந்தும் புறம் தொழா மாந்தரை –திருவடி -அடி -அடிகள் –ஸ்வாமிக்கு வாசகம் –
தேவதாந்த்ர பற்று இல்லாமையே முக்கியம் -அந்நிய சேஷத்வம் ஒழிவதே பிரதானம் -தேவர்களுக்கு சேஷமான
புரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை சம்சாரிகளுக்கு சேஷமாக்குகை –
மாந்தரை-பாட பேதம் -தப்பாகும் வெண்டளை பிறழும்
ராஜ மஹிஷியிடம் காதல் கொள்ளாதே என்பதை ரகசியமாக சொல்லுவது போலே இங்கும்
காதில் சொல்ல வேணும் -பிறர் அறிந்தால் பொல்லாது ஆகுமே –

முமுக்ஷுப்படியில் உகாரார்த்தம் விவரிக்குமிடத்து “அந்யசேஷத்வம் கழிகையே ப்ரதாநம், தேவர்களுக்கு சேஷமான புரோடாசத்தை
நாய்க்கிடுமாபோலே ஈச்வரசேஷமான ஆத்ம வஸ்துவை ஸம்ஸாரிகளுக்கு சேஷமாக்குகை.
பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே ப்ரதாநம், ‘மறந்தும் புற்தொழா மாந்தர்‘ என்கையாலே“ என்றருளிச் செய்த
ஸ்ரீஸூக்திகள் இங்குக் குறிக் கொள்ளத் தக்கன.

————————————————————————–

கீழே எம்பெருமான் திருநாம பாவானத்வம் அருளிச் செய்து இதில் அதன் போக்யத்தை அருளிச் செய்கிறார் –
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானைக் கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோம் –பெரிய திரு -11 -7 -2 –

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69-

பதவுரை

செவிக்கு இன்பம் ஆவதுவும்–கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு–பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே–(நிழல்பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத் திருநாமமே
கவிக்கு நிறை பொருள் ஆய் நின்றானே–பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை
நேர் பட்டேன்–தெய்வாதீனமாக அடையப் பெற்றேன்,
பார்க்கில்–ஆராய்ந்து பார்த்தால்
மறை பொருளும் அத்தனையே தான்–வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.

புவிக்கும் புவி யதுவே கண்டீர் -பூமியில் உள்ளவர்க்கு எல்லாம் நிழல் ஒதுங்க இடம் ஆவதும் புண்டரீகாக்ஷன் திரு நாமமே –
கவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்–எம்பெருமானை யாதிருச்சிகமாகக் கிட்டப் பெற்றேன்
-நான் கிருஷி பண்ணி பெற்றேன் அல்லேன் -விதி வாய்த்தது
வேதார்த்த ரகஸ்ய சாரார்த்தமும் இதுவே
கவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை –மற்றவர்களை பாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் திருட வேண்டும் –
-இவனே ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -அன்றோ –

——————————————————————————————–

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

பதவுரை

தான் ஒருவன் ஆகி–(விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேச்வரனாயிருந்து
சென்று–(மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று
ஆங்கு–அந்த மாவலியின் யாக பூமியிலே
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
அடிப்படுத்த–திருவடியினளவாக ஆக்கிக் கொண்ட (அளந்து கொண்ட)
சேய்–சிறு பிள்ளையானவன்
ஏன் ஒருவன் ஆய்–விலக்ஷண வராஹ ரூபியாய்
தரணி–பூமியை
இடந்து அடுத்து–(அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்து
எயிற்றில்–(தனது) கோரைப் பல்லின்மீது
தாங்கியது–தரித்தமையை
யான் ஒருவன்–நானொருவன் மாத்திரம்
இன்றா–இன்றாக
அறிகின்றேன் அல்லேன்–அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்)
லோக பிரசித்தம் அன்றோ –

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து–தான் ஒருவனாகி—ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்–
தான் ஒருவனாகி—இரு நிலத்தைச்-சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்–மூன்று இடங்களிலும் அன்வயம் –
யானொருவன்- வறிகின்றேன் அல்லேன் –உலகம் எல்லாம் அறியும் -அன்றோ –

————————————————————————————————-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

பதவுரை

சிறியன்–(ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு
அணியன்–ஸுலபனாயும்
மிக பெரியன்–(அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க் கொண்டு
சேயன்–எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக)
ஆயன் ஆய் நின்ற–இடைப்பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையை யுடையனாயும்
துவரை கோன் ஆய் நின்ற–த்வாரகாபுரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிருந்த
மாயன்–எம்பெருமான்
அன்று–(பாரத யுத்தம் நடந்த) அக் காலத்தில்
ஓதிய–(திருத் தேர்த் தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச் செய்த
வாக்கு அதனை–(சரம ச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை
கல்லார்–அதிகரிக்கப் பெறாதவர்கள்
மெய் ஞானம் இல்–தத்துவ வுணர்ச்சி யற்ற
ஏதிலர் ஆம்–பகவத் விரோதிகளாவர்.

துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று-ஓதிய வாக்கதனை கல்லார்–சரம ஸ்லோகத்தையும்-அதன்-பொருளையும்
-அறியப் பெறாதவர்கள் -தத்வ ஞானம் பெறாதவர்கள் –

பாரதயுத்தத்து முதனாட்போரில் “உற்றாரையெல்லாம்“ என்றெண்ணி, ஸவதர்மத்தில் அதர்மபுத்தியால் போர்புரியேனென்று
காண்டீவம் கைநெகிழத் தேர்த்தட்டின் மீதேதிகைத்து நின்ற அர்ஜுநனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் தத்வோபதேசஞ் செய்து
அவனது கலக்கத்தைப்போக்க உபதேசித்ததாதலால் கீதை சிறந்தது. அதில் முதலிலே அர்ஜுநனுக்கு சேஹாத்ம விவேகத்தைப் போதித்து
அதன் மூலமாக கர்மயோகம் புருஷோத்தமவித்யை அவதார ரஹஸ்ய்ஜ்ஞானம் முதலியவற்றை உபதேசிக்க,
அர்ஜுநன் அந்த எம்பெருமான் உபதேசித்த உபாய விசேஷங்களைக்கட்டு அவை செயற்கரியனவென்றும்
ஸ்வரூப விரோதிகளென்றும் வுயாயாங்களீலும் மேபட்ட பிரபத்தியுபாயத்தை யுபதேசிப்பத்து
(நீ என்னையே சரணமாகப் பற்றினால் நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிப்பேன், கலங்கவேண்டா) என்று
அவனது கலக்கத்தைப் போக்கினது சரமச்லோகத்தினாலென்க

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி –
-உபநிஷத் சாரம் -இதுவே -இத்தை அறியாதவர் -மெய்ஞ்ஞானம் இல்ல்லாத ஏதிலாராம்
சம்பந்தம் இல்லாதவர் -பகைவர் என்றபடி -த்விஷத-என்றபடி –

‘ஏதலர்‘ என்றாலும் ‘ஏதிலர்‘ என்றாலும் பகைவர், ஏது இலர் – யாதொரு ஸம்பந்தமுமில்லாதவர் என்கை.
ஆகவே பகைவரைக் குறிக்கும். பகவத்கீதையில் (16-19) ச்லோகத்தில் ‘த்விஷத‘ என்று அப்பெருமான்றனே சொன்னதைத்
திருவுள்ளம்பற்றி இங்கு ‘எதிலராம்‘ என்றனரென்னலாம்

இப்பாட்டில் சேயன் என்பது மிகப் பெரியன் என்பதோடு அந்வயிக்கும்,
அணியன் என்பது சிறியன் என்பதோடு அந்வயிக்கும்,
எம்பெருமான் எளியனாயு மிருப்பன் அரியனாயு மிருப்பன் என்றவாறு.

சேயன்–மிகப் பெரியன் –அணியன் -சிறியன்–அரியனாயும் எளியனாயும் இருப்பான் என்றவாறு –

———————————————————————————-

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

பதவுரை

(முக்திமார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு)
இல்லறம் என்னும் சொல்லும்–க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்ம யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனன்றிக்கே,
துறவறம் என்னும் சொல்லும்–ஜ்ஞாந யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனுமன்றிக்கே
அல்லன அறம் என்னும் சொல்–(பக்தி யோகம் தேச வாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள்
தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
நல் அறம் ஆவனவும்–நல்ல தருமங்களாகிய திருநாம ஸங்கீர்த்தநாதிகளும்
நால் வேதம் மா தவமும்–நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம்
நாரணனே ஆவது–ஸ்ரீமந்நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பனவாகின்றன.
ஈது–இவ்வுண்மையை
அன்று என்பார் அது–மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத் தக்கது.

‘இல்லறம் என்னும் சொல்லும் சொல் அல்ல. இல்லேல் துறவறம் என்னும் சொல்லும் சொல் அல்ல,
இல்லேல் அல்லன அறம் என்னும் சொல்லும் சொல் அல்ல‘ என்று இங்ஙனே மூன்று வாக்யார்த்தமாக முன்னடிகளை அந்வயித்துக்கொள்க.
‘அல்லன்வும்‘ என்றவிடத்துள்ள உம்மை இரண்டாமடியின் முதலிலுள்ள ‘சொல்‘ என்ற சொல்லோடு கூட்டிக்கொள்ளப்பட்டது.
கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் ஒன்றும் தஞ்சமல்ல என்பன முன்னடிகள். எந்த யோகமும் எம்பெருமானடியாகவே
பயன் தருவனவாதலால் ஸாக்ஷாத்தாக அவனையே உபாயமாகக் கொள்ளுதல் சிறக்கும் என்பன பின்னடிகள்.

இல்லறம் என்னும் சொல்லும் சொல் அல்ல –க்ருஹஸ்தனாயிருந்துகொண்டு அநுஷ்டிக்கவுரிய தருமங்களாகிய யஜ்ஞதாநதப,
ப்ரப்ருதிகளான கர்மயோகம் இங்கு இல்லற மெனப்படுகிறது. “ஸ்ர்வதர்மாந் பரித்யஜய“ இத்யாதி சரமச்லோகாதிகாரிக்குக்
கர்மயோக விதாயகங்களான சாஸ்த்ரங்கள் தஞ்சமல்ல என்கை.

இல்லேல் துறவறம் என்னுஞ் சொல்லும் சொல்லல்ல – ‘துறவறம்‘ என்று ஸந்ந்யாஸத்தைச் சொல்வது ப்ரஸித்தம்,
கீதையில் ஸந்ந்யாஸ சப்தத்தால் ஜ்ஞாநயோகத்தை வ்யவஹரிப்பது காண்க.
(ஐந்தாவது அத்யாயத்தில் ஒன்று, இரண்டு, ஆறு முதலிய ச்லோகங்களிற் காணலாம்)
கர்மத்தைவிட பற்ற வேண்டியதான ஞானயோகம் ஸந்ந்யாஸமென்றும் தறவறமென்றும் பெயர் பெற்றதாகும் என்றதுணர்க.
சரமச்லோகதிகாரிக்கு இந்த ஜ்ஞாநயோக விதாயக சாஸ்த்ரங்களும் தஞ்சமல்ல என்கை.

அல்லன அறம் என்னும் சொல்லும் சொல் அல்ல – கீழ்ச்சொன்ன கர்மயோக ஜ்ஞாநயோகங்களையொழிந்த பக்தியோகமும்,
அவதாரரஹஸ்யஜ்ஞாநம் புருஷோத்தம வித்யை தேசவாஸம் திருநாமஸங்கீர்த்தநம் திருவிளக்கெரிக்கை திருமாலையெடுக்கை முதலான
(உபாயபுத்தியோடு செய்யும) வையும் இங்கு ‘அல்லன அறம்‘ என்றதனால் கொள்ளத்தக்கன.
ஆக இவை யொன்றும் தஞ்சமல்ல என்கையாலே எம்பெருமானையே உபாயமாக வரிப்பதாகிற ப்ரபத்தி யோகமே தஞ்சமென்னுமிடம் பெறப்பட்டதாகும்.
ஆளவந்தார் ஸ்தோத்ர ஸூக்தி இதற்குச் சார்பாக இங்கு அநுஸந்தேயம்.
(வரதராஜஸ்தவம் – 93) ஆழ்வான் ஸ்ரீஸூக்தி அநுந்தேயம். எந்த யோகத்தைப் பற்றினாலும் முடிவில் அந்நதந்த யோகங்களினால்
திருவுற்றமுவக்கும் எம்பெருமானே பலன் பெறுவிக்கவல்லவன் ஆதலால் அவனது திருவருளையே தஞ்சமாகக் கொள்ளுதல் ஏற்குமென்றவாறு.

ஈது அன்று என்பாரார்? – இவ்வர்த்தம் ஸகல சாஸ்த்ரங்களிலும் பொதிந்து கிடக்கையாலே இது ஸர்வஸம்மதமாகவற்று என்கை.

முத்தி மார்க்கம் தெரியாமல் சம்சாரத்தில் உழலும் ஆத்மாக்களுக்கு
இல்லறம் -என்னும்-சொல்லறம்--க்ருஹஸ்த விஹித தரமமாக -கர்மா யோகம் தஞ்சம் என்று சாஸ்திரம் சொல்வதும்
சொல் அல்ல -பிரமாணம் அல்ல
இல்லேல் துறவறம் இல் என்னும் சொல்லும் -அன்றிக்கே ஞான யோகம் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களை
சொல் அல்ல -பிரமாணம் அல்ல -ஞான யோகம் சன்யாசம் என்றும் துறவறம் எண்டும் சொல்லக் கடவது இ றே –
இல்லேல் அல்லற அறம் என்னும் சொல்லும் -பக்தி யோகம் -தேச வாசம் திரு நாம சங்கீர்த்தனம்
-இவை உபாயங்கள் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களும்
சொல் அல்ல -பிரமாணம் அல்ல –
-நல்லறம் ஆவனவும் -நல்ல தர்மங்களான திரு நாம சங்கீர்த்தநாதிகளும்
நால் வேத மாத்தவமும் –நான்கு வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்கள் எல்லாம் –
நாரணனே-ஆவது-ஸ்ரீ மன் நாராயணன் உடைய அனுக்ரஹத்தாலே பயன் அளிப்பன ஆகின்றன –
ஈதன்று என்பார் ஆர்-இவ்வுண்மையை மறுப்பார் யுண்டோ -அனைவராலும் அங்கீகரிக்கத் தக்கதே –
எந்த யோகத்தைப் பற்றினாலும் -முடிவில் அந்த அந்த யோகங்களினால் திரு உள்ளம் உகக்கும்
எம்பெருமானே பலன் பெறுவிக்க வல்லவன் -என்பதால் -அவன் திருவருளையே தஞ்சமாக கொள்ளுதல் ஏற்கும்
-இவ்வர்த்தம் சகல சாஸ்த்ர சித்தம்-சர்வ சம்மதம் -என்பதை –ஈதன்று என்பார் ஆர்–என்கிறார்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -49-60–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

பதவுரை

மலை–மந்தர பர்வதத்தை
ஆமை மேல் வைத்து–கூர்ம ரூபியான தன் மேல் வைத்து
வாசுகியை–வாஸுகி நாகத்தை
சுற்றி–(கடை கயிறாகச்) சுற்றி
அலையாமல்–நீர் வெளியில் புரளாமல்
பீற–(அமுதம்) புறப்படும்படியாக
கடைந்த–(கடலைக்) கடைந்தருளின
பெருமான்–எம்பெருமானுடைய
ஆமை–கூர்ம ரூபியாகத் திருவவதரித்த தானே
ஒரு கை பற்றி–(மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி
திருநாமம்–திருநாமங்களை
கூறுவதே–வாய்விட்டுச் சொல்லுவதே
யாவர்க்கும்–அனைவர்க்கும்
கூற்று–வாய்ப் பேச்சாகக் கடவது

கீழே வானவரைக்காப்பான் மலை -என்றார் -அப்படி ரஷித்த ஒரு சேஷ்டிதத்தை அருளிச் செய்கிறார்
தலையாமைதான் ஒரு கை பற்றி -ஆமையான தான் இரு கை தலைப் பற்றி -என்றபடி
மேலே கொந்தளியாத படி மந்திரத்தின் உச்சியை ஒரு கையால் அமுக்கின படி –
இப்படி பரோபகாரமே போது போக்கானவன் திரு நாமங்களை வாயாராகி கூறுவதே வாய் பெற்ற பிரயோஜனம் –

துர்வாஸ மாமுனிவர் தேவேந்திரனுக்கு அன்புடன் அளித்திட்ட பூமாலையை அவன் அலக்ஷியஞ் செய்ததுகண்டு
‘இப்படி செல்வச்செருக்குற்ற உன்னுடைய செல்வமெல்லாம் கடலில் ஒளிந்து போகக்கடவன‘ என்று சபிக்கவே,
அப்படியே போய்விட, அசுரர் வந்து பொருது அமரை வென்றுவிட்டனர். பிறகு தேவர்களெல்லாரும் திரண்டுவந்து
எம்பெருமானைச் சரணமடைய, திருமால் திருவருள்கூர்ந்து கடல்கடைந்து அமுதமளித்து வாழ்வித்தனன் என்பது பிரஸித்தம்.

அப்போது மந்தரமலையை பூட்டிக் கடைந்தனன். மந்தாகிய மந்தரமலை கடவிலுள்ளே அழுந்தி விட,
தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமை வடிவமெடுத்து அம்மலையின்கீழே சென்று
அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி
அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனன் என்பத்தும் அறியத்தக்கது.

“தலையாமை தானொருகைபற்றி“ என்ற இரண்டாமடியை ‘ஆமை (யான) தான் ஒருகை தலைபற்றி‘ என்று அந்வயித்து உரைப்ப.
முதலில் கடல் கடையும்போது வாஸுகியின் வாலைப்பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட
அசுரர்களும் ஆகிய இருதிறத்தாரும் அதனை வலியப் பிடித்திழுத்துக்கடைய வல்லமையில்லாதவராய்நிற்க,
அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத்தரித்துத் தேவர்கள் பக்கத்திலும் வேறொரு திருமேனியைத் தரித்து
அசுரர் பக்கத்திலும் நின்று கடைந்தருளினமை கூறப்படுகின்றதென்க.
மேலே கொந்தளியாதபடி மலையினுச்சியை ஒரு கையா லமுக்கினபடியைக் கூறுகின்ற தென்றலுமாம்.

ஆக விப்படி பரோபகாரமே போது போக்கான பெருமானுடைய திருநாமங்களை வாயாரக் கூறுவதே
வாய் படைத்த பலனாகுமென்றாராயிற்று.

————————————————————————

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

பதவுரை

கடல்–திருப்பாற் கடலிலே
கிடக்கும்–(பிரமன் முதலியோர்க்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு) திருக்கண் வளர்ந்தருள்கிற
மாயன்–ஆச்சரியபூதனாய்
ஆறு கரை–திருக் காவேரிக் கரையான கபிஸ்தலத்திலே
கிடக்கும்–திருக்கண் வளர்ந்தருள்கிற
கண்ணன்–எம்பெருமானுடைய
உரை–ஸ்ரீஸூக்தியாகிய சரமச்லோகம்
எனக்கு–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
கிடக்கும்–பதிந்திருக்கின்றது
(ஆனபின்பு)
கூற்றமும் சாரா–மிருத்யு பயம் அணுகாமலும்
கொடு வினையும் சாரா–கொடிய பாவங்கள் அணுகாமலும்
தீ மாற்றமும் சாரா வகை–கெட்ட விஷயங்களொன்றும் அணுகாமலுமிருக்கத் தக்க உபாயத்தை
அறிந்தேன்–அறிந்தவனானேன்.

திரு கபிஸ்தலம் பள்ளி கொண்ட பெருமாளை மங்களா சாசனம் அருளிச் செய்கிறார்
காணியும் இல்லமும் கைப்பொருளும் ஈன்றோரும் பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் -சேணில் புவித்தலத்து இன்பமும்
-பொங்கு அரவம் ஏறிக் கவித்தலத்தில் கண் துயில்வோன் கால் –பிள்ளை பெருமாள் ஐயங்கார் -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
இந்த ஆற்றம் கரைக் கிடக்கும் கண்ணன் அருளிச் செய்த சரம ஸ்லோகமே நெஞ்சில் பதிந்து இருப்பதால் ஒரு வகைக் கெடுதலும் வராதே –

“ஆற்றங்கரை கிடக்குங்கண்ணன்“ என்று திருக்காவேரியின் கரையிலுள்ள கபிஸ்தல மென்னுந் திருப்பதியிற்
பள்ளி கொண்ட திருக்கோலமான எம்பெருமானை மங்களாசாஸநஞ் செய்வதாகப் பூர்வாசாரியர்கள் அருளிச்செய்வர்.
அத்திருப்பதிக்குப் பாடலான பாசுரம் நாலாயிரத் திவ்யப்ரபந்தங்களுள் இஃதொன்றேயாம்.
இப்பாசுரத்தில் கபிஸ்தலமென்கிற திருநாமம் ஸ்பஷ்டமாக இல்லையாயினும் ஆழ்வார் திருவுள்ளக் கருத்தைக் கண்டறிந்து கூறும்
பேராற்றலுடைய ஸ்ரீமந்நாதமுனிகள் ஆளவந்தார். எம்பெருமானார் பட்டர் முதலான ஆசாரியர்கள்
இது திருக்கவித்தலத்தை நோக்கின பாசுரமேயாகுமென்று நிர்வஹித்து வந்தார்களென்பது பெரியவாச்சான் பிள்ளைக்கு
முற்பட்டவரான பிள்ளைப் பெருமாளையங்காராலும் தமது நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காணியு மில்லமுங் கைப்பொருளுமீன்றோரும், பேணிய வாழ்க்கையும் பேருறவும் –
சேணிற், புவித்தலத்திலின்பமும் பொங்கரவமேறிக், கவித்தலத்திற்கண்டுயில்வோன் கால்“ என்கிற செய்யுள் அவ்வந்தாதியிலுள்ளது. *
பதின்மருரைத்த பதியொரு நூற்றெட்டுக் துதிசெய்யப் பிறந்த அவ்வந்தாதியில் கவிஸ்தல விஷயமான இப்பாசுரம் சேர்ந்துள்ளதனால்
“ஆற்றங்கரை கிடக்குங் கண்ணன்“ என்கிற இத்திருமழிசைப்பிரான் பாடல்கொண்டே அது கூறினர் என்பது விளங்கிற்றாம்.

பிரமன் முதலிய தேவர்களுக்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு திருப்பாற்கடலில திருக்கண் வளர்ந்தருள்பவனே
திருக் கவித்தலத்தில் ஸந்நிதிபண்ணியிரா நின்றான், இப்பெருமானே பண்டொருகால் பாரதப்போரில் தேர்த்தட்டில் நின்று
அர்ஜுநனை வியாஜஸமாகக் கொண்டு அனைவர்க்கும் உஜ்ஜீவநமாக சரமச்லோகத்தை யருளிச்செய்தன்,
அந்த திவ்யஸூக்தி எனது நெஞ்சிற்பதிந்திருப்பதனால் இனி நான் ஒருவகையான கெடுதலையும் அடையவழியில்லை என்றாராயிற்று.

கண்ணபிரான் சரமச்லோகத்தில் நியமித்தபடியே ஸர்வ தர்மபரித்யாக பூர்வகமாய்ச் சரணாகதி பண்ணினவர் பக்கலில்
‘ஸர்வபா பேப்யா மோக்ஷயிஷ்யாமி‘ என்கிற தன்னுடைய பிரதிஜ்ஞை தவறமாட்டாதவனாகையாலும்,
அப்படியே நான் நிவ்ருத்தி தர்ம நிஷ்டனாயிருப்பதாலும் இனி ஒரு பாபமும் என்ன யணுக ப்ராப்தியில்லை யென்றாவது.

———————————————————————————————–

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

பதவுரை

புனம்–தன்னிலத்திலே வளர்கிற
காயா–காயாம்பூவினுடைய
வண்ணனே–நிறம் போன்ற நிறமுடைய பெருமானே!
எனக்கு–(உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்ர பூதனான) எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை)
எம்பெருமான்–ஸர்வேச்வரனாகிய நீயும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனே யன்றி
மற்று–எனக்கு ஒப்பாக வல்லையோ?
உன்னை பிறர் அறியார்–நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள்,
என் மதிக்கு–(உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு
விண் எல்லாம் விலை உண்டோ–மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ?

நிர்ஹேதுக கடாக்ஷ பூதனான எனக்கு ஒப்பார் உண்டோ -நீ அருளிச் செய்த மயர்வற மதி நலத்துக்கும் ஒப்பு உண்டோ –
சரம ஸ்லோகத்தின் படியே புறம்புள்ள உபாயங்களை ருசி வாசனைகளோடே விட்டு ஒழிந்து  உன்னையே பற்றி
நிர்ப்பரனாயும் நிர்ப்பயனாயும் உள்ளேனே
அநந்ய உபாயத்வ அத்யவசாயம் உடைய எனக்கு –ஸ்வ பிரயத்தனம் கொண்டு உன்னை
அடையப் பார்ர்க்கும் உலகோர் ஒப்பில்லை
சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டையில் நிற்கும் எனக்கு சேஷித்வ ரக்ஷகத்தில் நிற்கும் நீயும் ஒப்பில்லை
அடிமைச் சுவடு அசாதாரணம் என்றவாறு
உன்னையே சகல புருஷார்த்தமாக கொண்டு உன் வடிவு அழகிலே ஈடுபட்ட
நீ அருளிய மயர்வற மதி நலம் பெற்ற நான் விலஷணன் அன்றோ -என்றவாறு –

எம்பெருமானும் ‘நானே ஸர்வரக்ஷகன்‘ என்றிருப்பதனால் அவனைப்போன்ற ரக்ஷகன் வேறொருவனு மில்லாமையால்
ரக்ஷகத்வத்தில் தனக்குத் தானே ஒப்பாகுமவனேயன்றி, சேஷத்வபாரதந்திரிய காஷ்டையில் நிற்குமெனக்கு ஒப்பாவானல்லன்.
சேஷியாயிருக்குந் தன்மையிற்காட்டிலும் சேஷபூதனா யிருக்குந்தன்மை சிறந்ததாதலால் அப்படிப்பட்ட அடிமைச்சுவடு எனக்கே
அஸாதாரணமாயிருப்பதால் எம்பெருமானிலும் நான் மேற்பட்டவன் என்றவாறு. இப்படி எம்பெருமானது அடிமையிலீடுபட்டு
தன் மூலமான செருக்கைக் கொள்ளுதல் அடிக்கழஞ்சு பெறுதலால்தான் “எனக்கினியார் நிகர் நீணிலத்தே“ என்றும்
“எனக்காரும் நிகரில்லையே“ என்றும் மற்றையோரு மருளிச்செய்வது.
இவ்வஹங்காரம் ஹேயமன்று, உபாதேயமாம். ஸாத்விகாஹங்காரமெனப்படும்.

தனக்குரிய நிலத்தில் தோன்றி காயாம்பூவின் நிறம்போன்றழகிய நிறங்கொண்ட பெருமானே!
நான் தவிர உன்னை உள்ளபடியறிவாரார்? எல்லாரும் உன்னைக்கொண்டு வேறு புருஷார்த்தங்களை
ஸாதித்துக் கொள்ளப் பார்ப்பவர்களேயன்றி உன்னையே ஸகல புருஷார்த்தமுமாகக்கொள்வாராருமில்லையே,
உனது வடிவழகிலீடுபடுவாருமில்லையே, உலகத்தாருடைய புத்தியைப் போன்றதோ என்னுடைய புத்தி?
மேலுலகத்திலுள்ளார்க்கும் அரிதான புத்தியன்றோ என்னுடையது இப்படி விலக்ஷணமான புத்தியைப் பெற்ற
நான் ஒப்பற்றவன் என்னத் தட்டுண்டோ?

இந்நிலத்திலுள்ளவர்கள் உன்னையே பரமபிரயோஜநமாகக் கொள்ளாமல் அற்ப்பலன்களை நச்சி
அவற்றுக்கு உபாயமாக உன்னைப்பற்றுமவர்களாகையாலே இவர்கள் உன்னுடைய உபேயத்வாகாரத்தை அறிந்திலர்
அங்குள்ள நித்யஸூரிகளோவென்னில் பலன் கைபுகுந்தவர்களாகையாலே உன்னுடைய உபேயத்வாகாரத்தை அறிந்தவர்களேயன்றி
உபாயத்வாகாரத்தைச் சிறிது மறிந்தவர்களல்லர்,
நானோவென்னில், உன்னையே பரமபுருஷார்த்தமாகக் கொண்டவனாகையாலும் உன்னுடைய உபாயோபேய
த்வாகாரங்களிரண்டையும் நன்கறிந்தவனாகிறேன்,
ஆகையாலே எனக்கு உபயவிபூதியிலும் நிகரில்லை – என்றது நன்கு பொருந்தும்.

——————————————————————————————–

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

பதவுரை

தக்கோர்–அறிவு முதலியவற்றால் பெருமை பெருந்தியவராகத் தங்களை அபிமானித்திருக்கும் நீசர்கள்
விலைக்கு ஆள்படுவர்–ஜீவனத்திற்காகப் பிறர்க்கு அடிமைப் பட்டிருப்பர்கள்
விசாதி ஏற்று உண்பர்–(மிகுதி தானங்கள் வாங்கும் முகத்தால் பிறருடைய) வியாதிகளைத் தாம் வாங்கி அநுபவிப்பர்கள்
தலைக்கு ஆள்பலி திரிவர்–ஒருவன் தலைக்காகத் தம் தலைமை அறுப்பதாகச் சொல்லி நரபலியாகத் திரிவர்கள்
முலைக்கால்விடம் உண்ட வேந்தனையே–(பூதனையின்) முலையிடத் துண்டான விஷத்தை உட்கொண்ட பெருமானையே
வேறுஆ எத்தாதார்–விலக்ஷணமாகத் துதிக்கமாட்டாதவர்களாய்
கல்லாதவர்–அறிவு கெட்டவர்களாய்க் கொண்டு
கடம் உண்டார்–பாபங்களை யநுபவிப்பவர்களாயிரா நின்றார்கள்.

இவ்வுலகத்தோர் படியை விரித்து அருளிச் செய்கிறார்
பரம நீசர்கள் என்பதை -தக்கோர் -என்று இழிவு சிறப்பு -ஷேப யுக்தி -மஹா வியாபர்களாக நினைத்து இருக்கும் சம்சாரிகள்
-விலைக்காட்படுவர்-திருமந்திரத்தின் பொருளுக்கு எதிர்த்தடையாக வயிற்று பிழைப்புக்கு பிறர்க்கு அடிமை பட்டு
-காசுக்கும் கூறைக்கும் கற்றை நெல்லுக்கும் தங்களை விற்று இருப்பர்
விசாதி ஏற்று உண்பர்-தங்கள் வியாதி நோய் மட்டும் இன்றி பிறர் நோய் வியாதி தீர எருமைக்கடா தானம் செய்ய
அத்தை நாலு நாள் ஜீவனத்துக்கு என்று வேறே ஏற்பார்கள் -அவ்வழியால் அவர்கள் வியாதியையும் அனுபவிப்பார்கள் –
தலைக்காட் பலி திரிவர் –பிழைத்தால் பிரஜை தலை அறுத்துக் கொடுப்பதாக ஷூத்ர தேவதைகளுக்கு பிரார்த்தித்து
அப்படியே அறுத்துக் கொடுத்து ஒழிவர்-
அபிராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்-ப்ராப்த விஷய
ப்ரவணனுக்குச் சொல்ல வேண்டா இறே -ஸ்ரீ வசன பூஷணம்
இதற்கு மா முனிகள் -கொடுத்த கதை உண்டே –
அதாவது – ஒரு தாஸியினிடத்தில் ஒருவன் மிக்க அன்புடையவனாயிருக்கையில் அவளுக்குக் கடுமையான நோய்
தலையை அரிந்து தருகிறேன்‘ என்று ஒரு தேவதைக்குப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டு பின்பு
அப்படியே தன் தலைமை அறுத்துக் கொடுத்த கதை உண்டே –

முலைக் கால்–முலை வழியே
முலைக்கால் விடமுண்ட வரலாறு. –ஸ்ரீகிருஷ்ணனைப்பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாய்
அக் கண்ண புத்திரன் ஒளித்து வளர்கின்றான்பதை யறிந்து அக் குழந்தையை நாடி யுணர்ந்து கொல்லும் பொருட்டுப்
பல அசுரர்களையேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே
திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணசிசுவை யெடுத்துத் தனது விஷந்தடவினமுலையை
உண்ணக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப்
பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி
விழுந்து இறங்கும்படி செய்தனன் என்பதாம். இப்படிப்பட்ட விரோதி நிரஸநசீலனான எம்பெருமானை விலக்ஷணமாக
ஸ்துதி செய்ய மாட்டாத அறிவு கேடர்கள் பாப்பலன்களை அநுபவிப்பதற்கென்றே ஜன்மமெடுத்தவர்க ளென்றவாறு.

விடமுண்ட வேந்தனையே வேறாக -மற்றப் பேர் ஸ்துதிப்பதில் காட்டிலும் விலக்ஷணமாக
-வேறாக -பாட பேகம் ஒவ்வாது -தளை கெடுவதால் –

——————————————————————————————

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53-

பதவுரை

கல்லாதவர் இலங்கை–அறிவு கெட்ட ராக்ஷஸருடையதான இலங்கா புரியை
கட்டு அழித்த–அரணழித்த
காகுத்தன் அல்லால்–இராமபிரானை யல்லது
ஒரு தெய்வம்–வேறொரு தெய்வத்தை
யான் இலேன்–நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை–கண் கொண்டு காணக் கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை–(உண்மையில்) தெய்வத் தன்மை யற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை–பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும் வுள்ள சிலரை
தேவு–தெய்வங்களாக
தேறேல்மின்–நீங்கள் நினைக்க வேண்டா.

கல்லாதவர் இலங்கை
இலங்கையிலிருந்த அரக்கர்களனைவரும் தங்களுடைய கெட்ட நடத்தைகளினாலேயே தமது அறிவின்மையை
வெளிப்படுத்திக் கொண்டவர்களாதலால் “கல்லாதவரிலங்கை“ என்றார்.
கற்றுணர்ந்த மஹாநுபாவன் ஒருவன் (விபீஷணாழ்வான்) இருந்தானே யென்னில், அவனை யடித்துத்துரத்தினார்களிறே

பொல்லாத-தேவரைத் -அமங்களுக்கு கொள்கலம் –ச்மாசானமே இருப்பிடம் –எலும்பு மாலை -விருபாக்ஷன் –
கண் கொண்டு காணக்-அமங்களங்களை ஸஹித்துக் கொண்டாலும் ஸ்வ தந்திரமாக
கார்யம் செல்ல வல்லமை இல்லாதவர்கள் அன்றோ

திரு இல்லாத்-தேவரைத் தேறேல்மின் தேவு—ஸ்ரீ யபதித்தவம் இல்லாதவர்கள் -இவர்களைத் தெய்வங்களாக நினைக்க வேண்டாம்
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் -பேணிலும் வரம் தர மிடுக்கிலாத தேவரை -ஆணம் என்று
அடைந்து வாழும் மாதர்கள் -எம்மாதி பால் -பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்க கிற்றிரே –திருச் சந்த விருத்தம்

———————————————————————————

தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

பதவுரை

தேவர் ஆய் நிற்கும் அத்தேவும்–(அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும்,
முது புணர்ப்பும்–அநாதியான நிலைமையும்
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம்– மற்றும் மனிதர் முதலியனவாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும் (ஆகிய எல்லாம்)
அத் தேவரில்–அந்த தேவர்களுக்குள்ளே
மூவர் ஆய் நிற்கும்–த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற
நெடுமால் என்று ஓராதார்–ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந் துணர மாட்டாதவர்கள்
கற்கின்றது எல்லாம் கடை–பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது.

சகல தெய்வங்களும் சகல பதார்த்தங்களும் எம்பெருமானுக்கு சேஷ பூதம் என்று
அறிய மாட்டாதார்கள் எவ்வளுவு கற்றாலும் பயன் இல்லையே
தேவராய் நிற்கும் அத்தேவும் -நெடுமால் —
அத்தேவரில்-மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் நெடுமால்
–யவராய்-நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்று அறியவாருடைய கல்வியே பயன் பெற்றதாம்
அனைத்துக்கும் அந்தர்யாமி அவன் அன்றோ -த்ரி மூர்த்தி அவதாரம் எடுத்ததும் திருமாலே
இப்படி பிரித்து பிரித்து சொல்லுவான் என் –சர்வம் அவனே என்ற
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் நிலையே கற்று உணர்ந்தார் நிலை என்றவாறு –

———————————————————————————————

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

பதவுரை

அமரர் கடை நின்று–(இவ்வுலகத்தவர்கள்) தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும்-நெடுங்காலம் வரையில்
கழல் தொழுது–(அவர்களுடைய) காலில் விழுந்து (பரம புருஷார்த்தம் பெற மாட்டாமல்)
இடை நின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்
குடை நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ் வுலகத்தைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
நின் அடியை–உனது திருவடிகளை
ஓத வல்லாரவர் ஆர்–அநுஸந்திக்க வல்லார் ஆரேனுமுண்டோ? (யாருமில்லையே!)

தேவதாந்தர பஜனம் செய்து அல்ப அஸ்திர பயன்களை பெற்று போவார் மலிந்து உன்னை உணர்ந்து
ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பார் இல்லையே என்று வருந்தி அருளிச் செய்கிறார் –
அமரர் கடை -மனை வாசல் -நின்று கழல் தொழுகிறார்கள் –
கடை நின்ற அமரர் -தாழ்ந்த தெய்வங்கள் என்றுமாம் –
இடை நின்ற இன்பத்தராவார் -அல்ப அஸ்திரத்தவாதி -இன்பம் என்றது பிரமித்தவர்களின் கருத்தால்
இடை -சம்சார ஸூகமும் இன்றி –நிரதிசய மோக்ஷ ஸூகமும் இன்றிக்கே
ஸ்வர்க்க ஸூ கத்தை யுடையவர் -என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

——————————————————————————–

அற்ப பலன்களைத் தருமவர்களான ருத்ரன் முதலியோர் தங்களைப் பற்றினவர்களுக்கு ஒரு ஆபத்து வந்தால்
அப்போது முதுகு காட்டி ஓடுமவர்களேயன்றி நிலைநின்று ரக்ஷிக்கவல்ல திறமையரல்லர்
என்று முதலித்துக் காட்டுகிறார்.

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56

பதவுரை

அவர் இவர் என்று இல்லை–பெரியார் சிறியார் என்று ஒருவாசி யில்லை
அனங்கவேள் தாதைக்கு–காமனுக்குத் தந்தையான் கண்ண பிரானுக்கு
எவரும்–ஒருவரும்
எதிர் இல்லை கண்டீர்–எதிர் நிற்க வல்லாரில்லை காண்மின்
உவரிக் கடல் நஞ்சம் உண்டான்–கடலில் தோன்றின விஷத்தை உட் கொண்டவனான சிவன்
வாணற்கு–பாணாஸுரனுக்கு
கடன் என்று–‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி
உடன் நின்று–அவனோடு கூடவே யிருந்து
ஒருங்கு தோற்றான்– குடும்பத்தோடே தோற்று ஓடிப்போனான்.

அல்ப பலன் தருமவர்களே ஆகிலும் ரக்ஷிக்க வல்லவர்கள் இல்லை என்பதை பாணாஸூர விருத்தாந்தத்தால் காட்டி அருளுகிறார்
அவர் இவர் என்று இல்லை -உயர்ந்தவர்கள் – தாழ்ந்தவர்கள் என்றவாறு
தாழ்ந்தவர்களான நம்போலியர் எம்பெருமானுக்கு எப்படி எதிராக முடியாதோ, அப்படியே,
உயர்ந்தவர்களென்று கருதப்படுகின்ற ருத்ராதிகளும் எம்பெருமானுக்கு எதிராக முடியாததென்றுணர்த்தியவாறு.

அநங்க வேள் தாதை -மன்மதன் -ப்ரத்யும்னனுக்கு ஜனகன் –
கண்ணபிரான் மன்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாதல் அறிக.
மன்மதன் ஒருகால் பரமசிவனது தவநிலையைக் குலைக்கமுயன்றபோது அவனுடைய நெற்றிக் கண்ணால்
கொளுத்தப்பட்டு உடலிழந்ததனால் அனங்கனென்று பெயர் பெற்றான்.

ருத்ர தாண்டவத்துக்கு பாணன் மத்தளம் தட்ட மகிழ்ந்து ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிலையும் வலிமை செல்வம் அருளி
ச பரிவாரனாய்க் கொண்டு வாசலில் காவலும் செய்தான் -பரிவாரங்களோடு தோற்றதால் —ஒருங்கு தோற்றான் -என்கிறார் –

கடல்நஞ்சமுண்டான் வாணற்குடனின்று தோற்ற வரலாறு வலி சக்ரவர்த்தியின் ஸந்ததியிற் பிறந்த பாணாஸுரனுடைய
பெண்னாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு,
முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிகுந்த ஆசைபற்றியவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு
அச் செய்தியைத் தெரிவித்து அவள் மூலமாய் அந்தப்புருஷன் கிருஷ்ணனுடைய பௌத்திரனும்
ப்ரத்யும்நனுடைய புத்திரனுமாகிய அநிருத்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுதற்கு உபாயஞ்செய்யவேண்டும்‘ என்று
அத் தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தை மகிகையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து
அந்த புரத்திலேவிட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளராலறிந்த அந்தப்பாணன்
தன் ஸேனையுடன் அநிருத்தனை யெதிர்த்து மாயையினாலே பொருது நாகாஸ்த்ரத்தினால் கட்டிப்போட்டிருக்க,
துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாருங் கலங்கியிருந்தபோது,
நடந்த வரலாறு நாரதமுனிவனால் சொல்லப்பெற்ற ஸ்ரீகிருஷ்ணபகவான், பெரிய திருவடியை நினைதருளி,
உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோள்மேலேறிக்கொண்டு பலராமன் முதலானாரோடு கூடப் பாணபுரமாகிய
சோணிதபுரத்துக்கு எழுந்தருளும்போதே அப்பட்டணத்தின் ஸமீபத்தில் காவல் காத்துக்கொண்டிருந்த சிவபிரானது
பிரமதகணங்கள் எதிர்த்துவர அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானால் ஏவப்பட்டதொரு ஜ்வரதேவதை
மூன்றுகால்களும் மூன்று தலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக் (ஒரு காலத்தில் பரமசிவன் கூத்தாடுகையில்
பாணாஸுரன் அந்த நடனத்தைக்கண்டு அதற்குத் தகுதியாகத் தன் இரண்டு கைகளால் மத்தளம் தட்ட,
சிவன் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிளையும் அளவிறந்த வலிமையையும் மிக்க செல்வத்தையும்,
தான் ஸபரிவாரனாய்க்யும் தந்தருளி அப்படியே சிவன் தனது குடும்பத்தோடு
அவன் மாளிகை வாசலிற் காத்துக் கொண்டிருந்தனன் என்பது இங்கு அறியத்தக்கது.)

காப்பாற்றும் பொருட்டுத் தன்னோடு யுத்தஞ்செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தை யுண்டாக்கி அதன் சக்தியினாலே அதனைத் துரத்திவிட்ட
பின்பு, சிவபிரானது அநுவரர்களாய்ப் பணாஸுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்நிதேவர் ஐவரும்
தன்னோடு எதிர்த்துவர அவர்களையும் நாசஞ்செய்து பாணாஸுரனோடு போர் செய்யத்தொடங்க,
அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் ஸுப்ரஹ்மண்யன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப்போரிட,
கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்த்ரத்தைப் பிரயோகித்துச் சிவன் ஒன்றுஞ் செய்யமாட்டாமல் கொட்டாவி விட்டுக்கொண்டு
சோர்வடைந்து போம்படிசெய்து ஸுப்ரஹ்மண்யனையும் கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்தி ஒட்டி, பின்னர்,
அனேகமாயிரஞ்கித்து அப்பாணனது ஆயிரந் தோள்களையும் தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்து
அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில் பரமசிவன் அருகில் வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால்
அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது
அநிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க, அதன்பின் கண்ணபிரான் துவாரகைக்கு சிறப்பாக மணம்புரிவிக்க,
அதன் பின் கண்ணபிரான் துவாரகைக்கு மீண்டெழுந்தருளினன்.
இவ்வரலாற்றினால் அனங்கவேள்தாதைக்கு எவருமெதிரில்லை யென்னுமிடம் நன்கு விளக்கப்பட்டதாம்.

பாணாஸுரயுத்தத்தில் சிவன் தனது பாரிவாரங்களோடு தோற்றனனாதலால் “ஒருங்கு தோற்றான்“ என்றார்.

திருப் பாற் கடலை உவரிக் கடல் என்றது -சமுத்திர சாம்யத்தைப் பற்ற -என்பது
பூருவர்களின் வியாக்கியான வாக்கியம்.
பாற்கடல் கடையும்போது அதில் நின்றும் விஷம் உண்டாக, அதனை
எம்பெருமானுடைய நியமனத்தினால் பரமசிவன் உட்கொண்டானென்க.

—————————————————————————————-

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

பதவுரை

பேசில்–உண்மை பேசப் புகுந்தால்
பெரு குருந்தம் சாய்த்தவனே–பெரிய குருந்தமரத்தை வேர் பறியத் தள்ளி முறித்த கண்ணபிரானே
ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்–உடன் நிற்கும் புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகன்,
மருங்கு இருந்த–ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)
வானவர் தாம்–தேவர்களும்
தானவர் தாம்–அசுரர்களும்
தாரகை தான்–இப் பூமியும் (ஆகிய இவையெல்லாம்)
என் நெஞ்சம் ஆனவர் தாம்–என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேச்வரனேயாம்
அல்லாத்து என்–அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது

புண்ணியம் பாவம் முதலான ஸகல பதார்த்தங்களும் எம்பெருமானிட்ட வழக்காயிருக்கும்,
அவனிட்ட வழக்காகாத வஸ்து ஒன்றுமேயில்லை யென்கிறார்.
நல்வினையும் தீவினையும் அவனேயாவான் என்கிற விதன் கருத்து யாதெனில், சுருதியின்படியே தன்னுடைய அநுக்ரஹத்துக்கு
இலக்காக வேண்டினாரைக் கொண்டு நல்வினைகளைச் செய்வித்தும், தன்னுடைய நிக்ரஹத்துக்கு இலக்காக
வேண்டினாரைக்கொண்டு தீவினைகளைச் செய்வித்தும் போருகிறவன் என்கை.

நலவினைகளின்பயனாகத் தேவயோநியிற் விறப்பதும், தீவினைகளின் பயனாக அஸுரயோநியிற் பிறப்பதும்
இவ்விருவினைகளினுடையவும் பயனாக இப்பூமியிற் பிறப்பது மெல்லாம் பகவத் ஸங்கல்பாதீன மென்கிறது பின்னடிகளால்.

குருந்தம் சாய்ந்த வரலாறு – கண்ணபிரான் யமுனையில் நீராடும் ஆயர் மங்கைகளின் துகிலையெடுத்துக் கொண்டு
அதன் கரையிலுள்ள குருந்த மரத்தின் மேலேறுகிற வழக்கத்தைக் கண்டிருந்தவனும் கம்ஸனா ஏவப்பட்டவனுமான
ஓர் அஸுரன் கண்ணனை நலிவதற்காக அக் குருந்த மரத்தை ஆவேசித்துக் கிடந்தான்,
அதையறிந்த கண்ணபிரான் அந்த மரத்தை முறித்தொழித்தனன் என்பதாம்.

எம்பெருமானுக்குப் பல திருநாமங்கள் இருப்பதுபோல் “என்னெஞ்ச மானவர்“ என்பதும்
ஒரு திருநாமம் போலும் ஆழ்வார் திருவுள்ளத்தால். என்னெஞ்சத்திலே ஸத்தை பெற்றிருப்பவர் என்றபடி.
அன்றியே அஃறிணையான நெஞ்சையே கௌரவந்தோற்ற “நெஞ்சினார்“ என்பதுபோல இங்கு “நெஞ்சமானவர்“ என்று
சொல்லியிருப்பதாகக்கொண்டு தம் திருவுள்ளத்தையே குறிப்பதாகவும் உரைக்கலாம்,
அப்போது, வானவர் தானவர் தாரகை என்னெஞ்சு (ஆகிய எல்லாம்) பெருங்குருந்தம் சாய்ந்தவனே என்றவறாம்.

————————————————————————

என் நெஞ்சமேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –

பதவுரை

என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே நித்ய வாஸம் செய்பவனும்
இருள் நீக்கி எம்பிரான்–(நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும்
முன் ஒருநாள்–முன்பொரு காலத்தில்
மன் அஞ்ச–மஹாபலி சக்ரவர்த்தி பயப்படும் படியாக
மண் அளந்தான்–பூமியை அளந்து கொண்டவனும்
என் நெஞ்சம் மேயானை–(அந்த திருக் கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை
இல்லா–நெஞ்சில் உடையனாகாத
விடை ஏற்றான்–ரிஷப வாஹநனான ருத்ரனுடைய
வெம் வினை–மஹா பாதகத்தை
தீர்த்து–தொலைத்து
ஆயானுக்கு–(அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு
அன்பு ஆக்கினேன்–என் அன்பைச் செலுத்தினேன்.

“என்னெஞ்சமேயான்“ என்பது இரண்டிடத்தில் வந்துள்ளது.
பொருள் ஒன்றேயாயினும் கருத்தில் வாசியுண்டு, முதலடியில் என்னெஞ்சமேயான் என்றது பொதுவான வ்யாப்தியைச் சொன்னபடி.
இரண்டாமடியில் “மண்ணளந்தானென்னெஞ்ச மேயான்“ என்றது உலகளந்த திருக்கோலம் தம் நெஞ்சிலே பொலியும்படி
காட்சி தந்தருள்கின்றமையைச் சொன்னவாறு.

“இருள் நீக்கி“ என்றது வினையெச்சமன்று, பெயர்ச்சொல், இருளை நீக்குகின்றவன் என்கை.
விளையெச்சமாக்கொண்டால், இருனை நீங்கச் செய்து அதனால் எம்பிரான் – எனக்கு உபகாரகனானவ் என்க.
தன் நெஞ்சத்தில் அஞ்ஞானம் போக்கி அங்கே நிரந்தர வாசம் பண்ணி அருளும் ஆபத் ரக்ஷகன் –
பக்கல் அன்பு விளைந்தமையை அருளிச் செய்கிறார்

இருள் நீக்கி -வினை எச்சம் அன்று -பெயர்ச் சொல் -இருளை நீக்குகின்றவன் என்றபடி –
அத்தாலே எம்பிரான் -உபகாரகன் -ஆனான் –

இப்படிப்பட்ட எம்பெருமான் நெஞ்சிற்கொள்ளமாட்டாத (துர்மாநியான) ரிஷபவாஹநனாகிய ருத்ரனுடைய
வெவ்வினையுண்டு ப்ரஹ்மஹத்யாரூபமான பாபம், அதனைத்தீர்த்து, தன் காரியம் ஆனதுபோல்
உவந்தவனான எம்பெருமானுக்கு என்னுடைய அன்பைச் செலுத்தினேன் என்றாராயிற்று.

———————————————————————————

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

பதவுரை

அன்பு ஆவாய்–(என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே!
ஆர் அமுதம் ஆவாய்–பரம போக்யனாயிருப்பவனே!
அடியேனுக்கு இன்பு ஆவாய்–(உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே!
என் கேசவனே–எம்பெருமானே!
கேடு இன்றி–ஒரு குறையுமில்லாமல்
ஆள்வாய்க்கு–ரக்ஷிக்க வல்லவுனுக்கு
எல்லாமும் நீ ஆவாய்–மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயே யாயிருப்பவனே!
பொன் பாவை கேள்வா–திருமகள் நாதனே!
கிளர் ஒளி–(அத் திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியையுடைய
நான் அடியேன்–நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன்
ஆள்–(அடியேனைக் காத்தருள்)

அன்பு ஆவாய் – “அன்பு“ என்பது வேறொன்றாய், அதை நீ உடையவனாயிருக்கின்றாய் எனறு சொல்லவேண்டாமல்,
நீயே அன்புதானாக வடிவெடுத்திருக்கின்றாய் என்கை.
என்பக்கல் அளவற்ற அன்புவைத்திருக்கின்றாயென்றவாறு.
ஆரமுதமாவாய் அடியேனுக்கு-இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய்–தாய் தந்தை மக்கள் மனைவி மற்றும் அனைவராலும்
உண்டான ஆனந்தம் உன்னை அடைந்து பெற்றேன் –இப்படியெல்லாமும் ஆவதற்கு ஆதி ஸ்ரீ யபதி–

லக்ஷமீபதித்வமே யென்கைக்காகப் பொன்பாவை கேள்வா! என விளித்தார்.
பிராட்டியைக் கைப்பிடித்ததனால் ஒரு விலக்ஷணமான தேஜஸ்ஸு விளைகின்றதென்பது தோன்ற
“பொன்பாவை கேள்வா கிளரொளி“ என்றார்.
அப்ரமேய ஜனகாத்மஜாயா–மாரீசவசநமும் காண்க.
என் கேசவனே கேடின்றி-ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள்
ஆள் என்பதை முன்னிலை வினைமுற்றாக கொள்ளாமல், அடியேனான நான் ஆள்பட்டேன் -காத்து அருள்வாய் -என்கிறார் –

—————————————————————————

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60–

பதவுரை

கேட்பார்க்கு–ஸ்வ யத்நத்தாலே கேட்டறிய விரும்புவர்களுக்கு
அரு பொருள் ஆய் நின்றி அரங்கனே–அறிய வொண்ணாத பரம் பொருளான அரங்க நாதனே!
ஆள் பார்த்து உழிதருவாய்–நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே!
நின் தாள் பார்த்து உழி தருவேன்–உனது திருவடிகளின் ஸேவைக்காக அலைந்து திரிகின்ற என்னுடைய
தன்மையை–இந்த ஸ்வபாவத்தை
என்றும்–என்றைக்கும் நிலைத்திருக்கும் படியாகக் கடாக்ஷித் தருள வேணும்
உன்னை விரும்புவதே–நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை
மனம்–நெஞ்சில்
விள்ளேன்–தவிராதவனா யிருக்கின்றேன்.

ஆட் பார்த்து உழி தருவாய்-நம்மைத் தேடிப்பிடிக்க அலைந்து திரிகின்றானே –
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

-ஞாஎம்பெருமானை நோக்கி “ஆள்பார்த்து உழிதருவாய்!“ என்று விளிக்கிற விளியின் அழகை என் சொல்லுவோம்.
வேதாந்தங்கள் எம்பெருமானை நாம் தேடிப் பிடிக்கவேணுமென்று ஓதுகின்றன,
அப்படியிருந்தும் எம்பெருமான் நம்மைத் தேடிப் பிடிப்பதற்கு அலைந்து திரிகின்றானென்கிறார் காண்மின்.
எம்பெருமான் ஸர்வ ஸ்வாமி யென்பதும் சேதநாசேதநங்களடங்கலும் அவனுடைய ஸொத்து என்பதும் தேர்ந்த விஷயம்.
ஸொத்து தவறிப் போனால் அதனைத் ஸ்வாமியான தன்னுடைய திருவடிகளில் நின்றும் தவறிப்போன தானேயாகையால்
இந்த விளி மிகப் பொருந்தும். ஸ்ரீவசநபூஷணத்தில் “ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்குகப்பானுமவனே“ என்றருளிச் செய்த்தும்
இதுபோன்ற அருளிச் செயல்களை அடியொற்றியேயாம்.

ஞானம் லப்தவா –பரமார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
நம் வலையில் சிக்குவார் என்று நீ திரிய -யாதிருச்சிகமாக சிக்கிக் கொண்ட என்னை விட்டு விடலாகாது -என்கிறார்
கண்டு கொள் என்றும் நின்-தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை
இப்போது உன் திருவடிகளையே நோக்கிக் கொண்டு
இருக்கும் நிலைமையை என்றுமே இருப்பதாக நீ கடாக்ஷித்து அருள வேணும்

கேட்பார்க்கு-அரும் பொருளாய் நின்ற–நீயே காட்டக் கண்டு -உன் திருவருளால் அறியும் அத்தனை –
வரங்கனே உன்னை-விரும்புவதே விள்ளேன் மனம்
இத்தை கண்டு கொள் –என்று கூட்டிப் பொருள் கொள்க –

நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை நெஞ்சில் தவிராதவனா யிருக்கும்படியாக
நீயே கடாக்ஷித் தருளவேணும் என்பதாம். இது தாத்பர்ய வ்ருத்தியாகும்.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -37-48–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37-

பதவுரை

வான்–ஆகாசமும்
தீ–அக்நியும்
உலவு வளி–உலாவுகின்ற வாயுவும்
மா கடல்–பெரிய கடலும்
மா பொருப்பு–பெரிய குலபர்வதங்களும்
உலவு–திரிகின்ற
வெம் கதிர்தானும்–உஷ்ணகிரணனான ஸூர்யனும்
தண்மதியும்–குளிர்ந்த சந்திரனும்
மேல் நிலவு–மேலே நிலாவுகின்ற
கொண்டல்–மேகங்களும்
பெயரும்–சேதநவர்க்கமும்
திசை எட்டும்–எட்டுத் திசைகளும்
சூழ்ச்சியும்–ஆவரணங்களும்
அண்டம்–ஆகிய இவையெல்லாவற்றோடுங் கூடின அண்டமும்
திருமால்–ஸர்வேச்வரனுடைய
அகைப்பு–ஸங்கல்பத்தினாலாயது.

பஞ்ச பூதங்களும் -சந்த்ர ஸூ ர்யர்களும் -மேக மண்டலங்களும் -ஜீவ ராசியும் -எண் திசையும்
-ஆவரணங்களும் -அண்டம் எல்லாம் -எம்பெருமானுடைய விபூதிகள் -என்கிறார்
கொண்டல் பெயரும் -மேகங்களும் -சேதன வர்க்கமும் -/ மேகம் என்று பெயர் பெற்றவையும் -என்றுமாம்
அகைப்பு -எழுச்சி -முயற்சி -திரு உள்ளத்தில் சங்கல்பம் என்றபடி –

——————————————————————-

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38-

பதவுரை

அகைப்பு இல் மனிசரை–உஜ்ஜீவிக்க மாட்டாத மனிசர்களை
ஆறு சமயம்–(நீ சங்களான) ஆறு மதங்களில்
புகைத்தான்–புகும்படி செய்தவனும்
பொரு கடல் நீர் வண்ணன்–அலையெறிகின்ற கடல் நீர்போன்ற திருநிறத்தை யுடையவனுமான ஸர்வேச்வரன்
உகைக்கும் ஏல்–உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்
அப்போது–அப்போதே
எத் தேவர் வாலாட்டும்–எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்
எவ்வாறு செய்கையும்–எவ்விதமான (யஜ்ஞம் முதலிய) காரியங்களும்
அழைப்பு–(தேவதைகளின்) ஆஹ்வாகமும்
ஒழியும்–ஒழிந்து போய்விடும்

அகைப்பில் மனிசரை -உஜ்ஜீவிக்க மாட்டாத மனிசர்களை

உகைக்குமேல் -உதாசீனாய் இருந்து விடும் பக்ஷத்தில் -உபேக்ஷித்தல் -தேவதாந்த்ரங்கள் இடத்தில் ஆவேசியாத பக்ஷத்தில்
அஹங்காரப்படுகிறவர்களை லோக வழக்கில் வாலாட்டும் என்பார்களே

எத்தேவர் வாலட்டும் – பிரமன் உலகங்களைப் படைத்தானென்றும், சிவன் திரிபுரடிமரித்தானென்றும்,
இந்திரன் வ்ருத்ராஸுரவதம் பண்ணினானென்றும் இப்படி பல தெய்வங்களைக் குறித்துப் பேசுவமெல்லாம் தெரியுமே,
எம்பெருமான் அநுப்ர வேசித்திராவிடில் ஒரு தெய்வமாவது ஒரு காரியமாவது செய்திருக்கமுடியுமோ? என்றவாறு.
‘வாலாட்டும்‘ என்றது உலக வழுக்கச்சொல்லின் அநுகாரம் அஹங்காரப்படுகிறவனே ‘வாலாட்டுகிறான்‘ என்பது வழக்கம்.

எவ்வாறு செய்கையும் – அந்தணர்கள் யஜ்ஞயாகங்களை அநுஷ்டித்து ஹவிஸ்ஸை யளிப்பதெல்லாம் அந்தர்யாமித்வேந
எம்பெருமானை உத்தேசித்தேயன்றோ, அந்த இந்திரன் முதலிய தெய்வங்களில் எம்பெருமான் உள்ளுறைகின்றிலனாயின்
அத்தெய்வங்களை நோக்கி ‘ஸ்வாஹா ஸ்வாஹா‘ என்று சொல்லி செய்வது ஒன்றுமில்லையாகும் என்கை.
அழைப்பு -தேவதைகளின் ஆஹ்வாநமும்

அவரவர் தமது தமது அறிவகை வகை அவரவர் இறையவர் என வடி யடையவர்கள் -அவரவர் இறையவர் குறைவலர்
இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே-திருவாயமொழி -பாசுரத்தில் அன்வய முகத்தால் -சொல்வதையே
வியதிரேக முகத்தில் சொல்லிஎம்பெருமான் ஆவேசியா விட்டால் ஒரு தெய்வமும் ஒரு பலனும்
அளிக்க வல்லதாக மாட்டாது
-என்கிறார் –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் உலகில்லை என்றே –4 -10 -6 –

அப்பாசுரத்தின் கருத்தாவது – பலவகைப் பயன்களை விரும்புகின்ற உலகத்தவர்கள் தங்கள் தங்கள் ருசிக்குத் தக்கபடி
பிரமன் சிவன் இந்திரன் என்றுள்ள பலபல தெய்வங்களை ஆச்ரயிக்கின்றனர், அத்தெய்வங்கள் இவர்கள் விரும்பிய
பலன்களைக் கொடுக்கக் குறையில்லை, ஏனென்றால், ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணன் அத்தெய்வங்களுக்கு
அந்தர்யாமியாயிருப்பதனாலே அந்த மாஹத்மியத்தினால் அத்தெய்வங்கள் பலன்கொடுக்கும் சக்தியுடையனவாக ஆய்விடுகின்றன. என்கை.
ஆகவே எம்பெருமானுடைய ஆவேசத்தினால் தான் ஸாமாந்ய தெய்வங்களெல்லாம் தங்களைப் பற்றின அபேக்ஷகர்களுக்கு
அந்தந்த ப்ரயோஜனங்களை யளிக்கின்றன வென்றதாயிற்று.

ஒரு அர்த்தத்தை அந்வயமுகத்தால் சொல்லுவதென்றும் வ்யதிரேகமுகத்தால் சொல்லுவதென்றும் இரண்டு படிகளுண்டு.
‘அரசன் கொடுத்தால் நாம் உண்ணலாம்‘ என்றாற்போலே சொல்லுவது அந்வய முகத்தால் சொல்லுவதாம்,
‘அரசன் கொடாவிடில் நாம் உண்ணமுடியாது‘ என்றாற்போலே சொல்லுவது வயதிரேக முகத்தாற் சொல்லுவதாம்.
கீழெடுத்துக்காட்டிய திருவாய்மொழிப் பாசுரத்திற் சொன்ன கட்டளை அந்வயமுகமாகும்.
இப்பாட்டிற் சொல்லுகிற கட்டளை வ்யதிரேகமுகமாகும்.
எம்பெருமானுடைய ஆவேசத்தினால்தான் தேவதாந்தரங்கள் பலனளிக்கின்றன. என்று திருவாய்மொழிப் பாசுரத்திற்சொல்லிற்று,
எம்பெருமான் ஆவேசியாவிடில் ஒரு தெய்வமும் ஒரு பலனையும் அளிக்கவல்லதாகமாட்டாது என்கிறது இப்பாட்டில்.

ஆறுசமயங்களாவன – சாக்யர் உலூக்யர் அக்ஷபாதர் க்ஷபணர் கபிலர் பதஞ்ஜலி என்னும் அறுவரால் பிரவர்த்திப்பிக்கப்பட்ட மதங்கள்.
இவை அவைதிகங்க ளெனப்படும். உஜ்ஜீவிக்கமாட்டாத மனிசர்களை இந்த பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் புகுவித்தானாம் எம்பெருமான்.

———————————————————————–

உலகோர் எக்கேடு பெற்றாலும் பெறட்டும் -என்னுடைய பொழுது போக்கு நல்லதாக இருக்கப் பெற்றேன் –
திருவேங்கடமுடையானை சேவிக்க வேணும் என்றும் திரு வேங்கடத்திலே நித்யவாஸம்

பண்ண வேணும் என்றும் ஆசைப்படா நின்றேன் -என்கிறார்

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-

பதவுரை

திருவேங்கடத்தானை–திருவேங்கடமுடையானை
காண–கண்ணால் ஸேவிக்க
அழைப்பன்–வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன்
வரண்டி வந்து இழிய–திரட்டிக்கொண்டு வந்து இழிய (அச்சு ரத்னங்களின் ஒளியைக்கண்டு அக்நிஜ்வாலைகளாக ப்ரமித்து)
யானை–யானைகளானவை
வெருவி–பயப்பட்டு நிற்கவும்
அரவு–மலைப் பாம்புகளானவை
மழை–மழை போல் சொரிகின்ற
பேர் அருவி–பெரிய அருவிகளானவை
மணி–அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை
ஒடுங்கும்–(அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற
வெற்பு–திருமலையை
கூட–சென்று கூடவேணுமென்று
திருக்கூடல் இழைப்பன்–கூடலிழைக்கின்றேன்

இழைப்பன் திருக்கூடல் – கூடலிழைத்தலாவது – வட்டமாகக் கோடுகீறி அதற்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து
இரண்டிரண்டு சுழியாகக் கூட்டிப் பார்க்கும்போது இரட்டைக்கணக்காக முடிவுபெற்றால் கூடுகை,
ஒற்றைக்கணக்காக முடிவுபெற்றால் கூடாமை என்று ஒரு ஸங்கேதம் ஏற்படுத்திக்கொண்டு குறிபார்க்கையாம்.
சகுனம் பார்க்கும் வகையில் இஃது ஒருவகை, இது கூடல், கூடலிழைத்தல், கூடல்வளைத்தல், கூடற்குறி இத்யாதி
நாமங்களால் வழங்கப்பெறுமென்ப. நாச்சியார் திருமொழியில் நான்காந்திருமொழியில் (தெள்ளியார் பலர்) ஆண்டாளனுட்டித்ததாமிது.
பகவத் ஸம்ச்லேஷத்திலே ஆவலுள்ளபடியைக்கூறும் முறைகளிலே இதுவொருமுறை என்னுமிவ்வளவே உணரத்தக்கது.

கூடலிழைத்தல் பெண்டிர்க்கே உரியதென்றும், இங்கு “இழைப்பன் திருக்கூடல்“ என்று ஆழ்வாரருளிச்செய்தது
நாயகீ ஸமாதியில் என்றும் அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்வர்.

வரண்டி வந்திழிய–திரட்டிக்  கொண்டு வந்து இழிய-வரண்டி–பாட பேதம்

மணிகளை கண்டு இவை கொள்ளி வட்டம் என்று அஸ்தானே பய சங்கை பண்ணுமா யானைகளும் -மலைப் பாம்புகளும்
-யானைகள் ஓடி மலைப் பாம்புகளின் வாயிலே விழும் படி என்றுமாம் –
யானை வெருவவும் அரவு ஒடுக்குகவும் -என்றும் யானை வருவி அரவின் வாயிலே ஒடுங்கவும் என்றுமாம் –

பின்னடிகட்கு இரண்டுவகையாகக் கருத்துரைக்கலாம்,
மலையருவிகளில் மணிகள் பளபளவென்று ஜ்வலித்துக்கொண்டு உடன் விழுகின்றவனவாம்,
அவற்றை யானைகள் கண்டு ‘இவை கொள்ளிவட்டம்‘ என்று ப்ரமித்து அஞ்சிச்சிதறுகின்றனவாம்.
பாம்புகளோவென்னில், அந்த ரத்னங்களை மின்னலாக ப்ரமித்து அஞ்சிப் புற்றிலேசென்று ஒடுங்குகின்றனவாம்,
ஆக இப்படி அஸ்தாநே பயசங்கை பண்ணுதற்கு இடமான திருமலையைக்கூடக் கூடலிழைப்பன் என்கை.
அன்றியே,
அருவிகளில் விழுந்த ரத்னங்களைக்கண்ட யானைகள் “இவை கொள்ளிவட்டம்“ என்று ப்ரமித்து ஒடப்புக்கவாறே
மலைப்பாம்பின் வாயிலே விழும்படியாயின என்னவுமாம்.

சில மலைப்பாம்புகள் யானையைப்பார்த்து அஞ்சி நடுங்கி ஓடிப் போய்விடுமென்றும்,
பல மலைப்பாம்புகள் யானையை அணுகி விழுங்கிவிடுமென்றும் தமிழ்நூல்களால் தெரிகின்றது.
“திரையன்பாட்டு“ என்ற ஓர் பழையநூலில் –
“கடுங்கண்யானை நெடுங்கை சேர்த்தி, திடங்கொண்டறைதல் திண்ணமென்றஞ்சிப்,
படங்கொள் பாம்பும் விடாகம்புகூஉம், தடங்கொள் உச்சித்தாழ்வரை யடுக்கத்து“
மலைப்பாம்பு யானையைக்கண்டு அஞ்சி யொளிக்குமென்பது தெரிகின்றது.

“ஞால்வாய்க்களிறு பாந்தட்பட்டெனத், துஞ்சாத்துயரத்தஞ்சுபிடிப்பூசல்,
நெடுவரை விடரகத்தியம்பும், கடுமான் புல்லிய காடிறந்தோரே“ என்று சங்க நூல்களுள் ஒன்றான நற்றிணையிலும்,
“பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த, கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே“ என்று தேவாரத்திலும்,
“இடிகொள் வேழத்தை எயிற்றொடு மெடுத்துடன் விழுங்கும், கடியமாசுணங் கற்றறிந்தவரென வடங்கிச்
சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமிதித்தேற்ப,- படிகடாமெனத்தாழ்வரை கிடப்பனபாராய்“ என்று கம்பராமாயணத்திலும்
உள்ள பாட்டுக்களால் மலைப்பாம்பு யானையை விழுங்குமென்பது தெரிகின்றது.
அஞ்சியோசித்தல் சிறுபான்மையும், விழுங்குதல் பெரும்பான்மையுமோ யிருக்குமென்ப.
யானை வெருவவும், அரவு ஒடுங்கவும் பெற்ற மலை, என்பது முதல் யோஜனை பதவுரை,
யானையானது வெருவி அரவின் யிலே ஒடுங்கப்பெற்ற மலை என்ப்து இரண்டாவது யோஜனையின் பதவுரை.

—————————————————————————-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லிவருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘ என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

வெற்பென்று வேங்கடம் பாடினேன் – ‘மலை‘ என்று வருகிற பெயர்களையெல்லாம் அடுக்காகச் சொல்லுவோமென்று
விநோதமாக முயற்சிசெய்து ‘பசுமலை, அடைவிலே பறங்கிமலை‘ என்று பலவற்றையும் சொல்லிவருகிற அடைவிலே
என்னையுமறியாமல் ‘திருவேங்கடமலை‘ என்று என்வாயில் வந்துவிட்டது,
இவ்வளவையே கொண்டு எம்பெருமான் என்னைத் திருவேங்கடம் பாடினவனாகக் கணக்குசெய்து கொண்டானென்பது இதன் கருத்து.

வீடாக்கி நிற்கின்றேன் – யாத்ருச்சிகமான இந்த உத்திமாத்திரத்தில் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றதுகையதுவே“ என்னும்படியாகப்
பரமபதமும் ஸித்தமென்னப் பேறுபெற்றயனாயினேன் என்கை.

நின்று நினைக்கிறேன் – நாம் புத்திபூர்வமாக ஒரு நல்ல சொல்லும் சொல்லாதிருக்கவும் எம்பெருமான்றாளே ம
டிமாங்காயிட்டு திருவுள்ளம் பற்றுகிறவிது என்ன ஆச்சரியம்! என்று இதனையே அநுஸந்தித்து ஈடுபடா நின்றேனென்கை.

கற்கின்ற நூல்வலையிற்பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையிற் பட்டிருந்தேன் – எம்பெருமான் ஸகலசாஸ்த்ரங்களாலும்
பிரதிபாதிக்கப்படுபவனாதலால் அவனுக்கு ‘நூலாளன்‘ என்று பெயர் இப்பெயர்க்குப் பெண்பால் ‘நூலாட்டி‘ என்பதாம்.
(பெரிய பிராட்டியாரே! வேதங்களும் வேதாங்கங்களும் எல்லாங்கூடி உமது திருக்கல்யாண குணங்களையே
பிரதிபாதிப்பனவாகப் பெரியோர் கூறுவர்) என்று பட்டர் அருளிச்செய்தபடியே எல்லா நூல்களையும் தனக்குப்
பிரதிபாதகமாகவுடையவள் என்ற காரணத்தினாலும் ‘நூலாட்டி‘ என்று பெயர் பெறுவள் பிராட்டி,
அவளுடைய கேள்வனார் – எம்பெருமான், அவன் எப்படிப்பட்டவனென்றால் கற்கின்ற நூல்வலையிற் பட்டிருந்தவன்,
(அதாவது) பரம்பரையாக அஸ்மதாதிகளால் ஓதப்பட்டுவருகின்ற சாஸ்த்ரங்களாகிற வலையிலே பாஹ்யகுத்ருஷ்டிகளால்
அசைக்க வொண்ணாதபடி அகப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளாகிய வலையிலே நான் சிக்கிக் கொண்டிருக்கின்றேன் என்கை.

மூன்றாமடியில் சாஸ்த்ரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்,
ஈற்றடியில் அவ்வெம்பெருமான் திருவடிகளைத் தமக்கு வலையாகவும் அருளிச்செய்தார்,
எம்பெருமானை சாஸ்த்ரங்களில் நின்றும் எப்படி பிரிக்கமுடியாதோ அப்படியே
என்னை அப்பெருமான் திருவடிகளில் நின்றும் பிரிக்கமுடியாது என்றவாறு, எம்பெருமான் ஒருவலையிலே அகப்பட்டான்,
நானொருவலையிலே அகப்பட்டேன் என்று சமத்காரமாகச் சொல்லுகிறபடி.

நான் அஹ்ருதயமாகச் சொன்ன சொல்லையும் அவன் ஸஹ்ருதயமாகக் கொண்டு மடிமாங்காயிட்டு என்னை
விஷயீகரித்தருளாகிறானாகையாலே நான் அவனுடைய திருவடிகட்கே அற்றுத் தீர்ந்தே னென்றாராயிற்று.

வேதைக சமய-மிதுனமே -நூலாளன்-நூலாட்டி -அசமதாதிகளால் பரம்பரையாக ஓதப்படும் நூல்களாலே
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாத ஸ்திரமாக உள்ள எம்பெருமான் திருவடிகளில் அகப்பட்டேன்
அவனை சாஸ்திரங்களில் நின்றும் பிரிக்க ஒண்ணாதா போலே அடியேனையும் அவன் திருவடிகளில் நின்றும் பிரிக்க முடியாதே
நான் அஸஹ்ருதயமாக சொன்ன சொல்லையும் சஹ்ருதயமாகக் கொண்டு மாடி மாங்காயிட்டு விஷயீ கரித்து
அருளியதால் அவன் திருவடிகளுக்கே அற்றுத் தீர்ந்தேன் –

—————————————————————————————-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

பதவுரை

கல் அருவி–ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக
முத்து உதிர–முத்துக்கள் உதிரப் பெற்றதாய்,
ஒணம் விழவில்–திருவோணத்திருநாளில்
ஒலி அதிர–(திருப்பல்லாண்டு பாடுகை வேத்பாராயணம் செய்கை ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய்
பேணி வரு–(பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான
வேங்கடவா–திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடையவனே!
என் உள்ளம் புகுந்தாய்–நீ என் நெஞ்சிலே புகுந்துவிட்டாய் (நீ திருமலையைவிட்டு என்னுள்ளத்திலே வந்துவிட்டாலும்)
திருவேங்கடம் அதனை சென்று காணல் உறுகின்றேன்–நான் அத்திருமலையிற் சென்று ஸேவிக்க விருப்பங்கொண்டிருக்கிறேன்.

நீ திருவேங்கடமலையை விட்டு என் உள்ளத்தே வந்தாயாயேயாயினும் -நீ வருவதற்கு சாதனமான அந்த திரு மலையை
சேவிக்க காதல் கொண்டுள்ளேன் -நீ உகந்து வாழ்ந்த இடம் என்றே எனக்கும் உத்தேச்யம் -திருவோண திரு உத்சவத்தில்
மங்களா சாசன ஒலியும்-பேரொலி செய்து மாணிக்கங்களை உதிரும் அருவி ஒலியும் நிறைந்த திரு வேங்கடம் –
நான் உன்னை திருவேங்கடத்தில் சேவிக்க விரும்ப நீயோ அங்கு நின்றும் என் உள்ளத்தே வந்து உறைகின்றாயே -என்றுமாம் –

எம்பெருமானே!, நீ திருவேங்கடமலையைவிட்டு என்னுள்ளத்தே குடி கொண்டாயாயினும்,
நீ இங்குவந்து சேர்வதற்கு ஸாதநமாயிருந்த அந்தத் திருலை தன்னையும் சென்று ஸேவிக்க வேணுமென்று
நான் காதல் கொண்டிருக்கின்றே னென்கிறார்.

“கல்லருவி முத்துதிர“ என்பதும் “ஓணவிழவி லொலியதிர“ கடத்தில் விசேஷணமாக அந்வயிக்கக்கடவன.
‘உதிர‘ ‘அதிர‘ என்பவை வினையைச் சங்களாயினும் பெயரிலே அந்வயிருக்குமென்க,
எப்போதும் பேரொலி செய்துகொண்டு வீழ்கின்ற அருவிகளிலே முத்துக்கள் உதிரப்பெற்றதும்
(திருவேங்கட முடையானுடைய திருவ்வதார நக்ஷத்திரமான) திருவோணத் திருவிழவில்
மங்களா சாஸந த்வநிகள் மிகப்பெற்றதுமான திருவேங்கடம் என்கை. “பேணி வரு“ என்பதும் திருவேங்கடத்திற்கு விசேஷணம்,
பல திசைகளில் நின்றும் பலர் விரும்பி வந்து பணியப்பெற்ற தென்கை. இப்படிப்பட்ட திருமலையிலெழுந்தருளி யிருக்கும் பிரானே!
நீ அத்திருமலையை விட்டு என்னுள்ளம் புகுந்தாய், இனி நீ திருமலையில் இல்லையாயினும்
‘நீ உகந்து வாழ்ந்தவிடம்‘ என்கிற காரணத்தினால் அத்திருமலை தன்னைச் சென்று காணவே நான் விரும்புகின்றேனென்றவாறு.

நானோ திருமலையில் வந்து உன்னைக் காண விரும்பியிருக்கின்றேன்.
நீயோ அங்கு நின்றும் என்னுள்ளத்தே வந்து உறைகின்றாய், இனி நான் என்செய்வேன்! என்கிறாராகவுமாம்.

————————————————————————————-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42–

பதவுரை

சேண் உயர் வேங்கடத்தை–மிகவும் ஓங்கின (சிகரத்தையுடைய) திருமலையை
சென்று வணங்குமின்–சென்று வணங்குங்கோள் (அத்திருமலையானது)
நீர்மையால்–தன் ஸ்வபாவத்தினால்
நின்று வினைகெடுக்கும்–பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும்
அங்கு–அத்திருமலையில்,
கடி கமலம் நான்முகனும்–பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும்
கண் மூன்றத்தானும்–முக்கண்ணனான சிவபிரானும்
என்றும்–எக்காலத்தும்
அடி–(எம்பெருமானது) திருவடிகளிலே
கமலம்–தாமரைப் புஷ்பங்களை
இட்டு–ஸமர்ப்பித்து
ஏத்தும்–துதித்துக்கொண்டிருப்பார்கள்.

சென்னியோங்கு தண் திருவேங்கடத்தை சென்று வணங்குமின் என்று உபதேசிக்கிறார் –சேண் உயர் –மீமிசைச் சொல்
நீர்மையால் -பாபங்களை போக்குவதே அன்றோ ஸ்வபாவம் திரு வேங்கடத்துக்கு
வெம் கொடும் பாவங்கள் எல்லாம் வெந்திடச் செய்வதால் நல் மங்கலம் பொருந்தும் சீர் வேங்கடமலை யான தொன்று -புராணச் செய்யுள் –

——————————————————————————

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-

பதவுரை

மங்குல் தோய் சென்னி–மேகமண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான
வடவேங் கடத்தானை–வட திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு
காப்பு அணிவான்–திருவந்திக் காப்பிடுவதற்காக
திங்கள் சடை ஏற வைத்தானும்–சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்
தாமரை மேலானும்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்
தாம்–ஆகிய இவர்கள்
குடை ஏற குவித்துக் கொண்டு–திருமுத்துக் குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு
கங்குல்–ஸந்த்யா காலந்தோறும்
புகுந்தார்கள்–திருமலைக்குச் செல்லுவர்கள்

அந்தி தோறும் வந்து திருவந்திக் காப்பிடுவார்கள் -கங்குல் இரவுக்கு வாசகமாயினும் இங்கு அந்திப் பொழுதை குறிக்கும் –
நளிர் மதிச் சடையன் -சந்த்ர மௌலி -திங்கள் சடை ஏற வைத்தான் -என்கிறார்
குடை -சத்ர சமராதி உபகரணங்களும் உப லக்ஷணம்
புகுந்தார்கள் -புகுந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றவாறு
அணிவான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் –

————————————————————————————-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டிவிட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசைகொண்டு செல்லுங்கோள்

கிளர் ஒளி இளமை கெடாமல் இருக்கப் பெற்ற குமரர்களே-தண்டு காலா வூன்றி வூன்றி தள்ளி நடக்கும் முதுமையில்
திருமலையை நினைக்கவும் முடியாதலால் -இப்பொழுதே திருமலைக்கே போவீர் -என்கிறார்

ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க -தாமே யறிகிற்போம் நல் நெஞ்சே -பூ மேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை பாதமத்தாலே எண்ணினான் பண்பு –பொய்கையார் -45 –
ஆய்ந்த வருமறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண் —பேயார் -77
புராணங்களில் இல்லாமல் ஆழ்வார்கள் மட்டுமே சாஷாத்கரித்த விருத்தாந்தம் —

இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத்கதை முதல் திருவந்தாதியில், “ஆமேயமரக்கறிய“ என்ற நாற்பத்தைந்தாம் பாட்டிலும்,
முன்றாந்திருவந்தாதியில் “ஆய்ந்தவருமறையோன்“ என்ற எழுபத்தேழாயம் பாட்டிலும்
பொய்கையாழ்வாராலும் பேயாழ்வாராலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது.
முன்பு இராவணன் தனது பத்துத் தலைகளை மறைத்துக்கொண்டு நான்முகனிடஞ்சென்று வரம் வேண்டிக் கொள்ளுமளவில்
எம்பெருமான் ஒரு சிறு குழந்தைவடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான் போலே கிடந்து
“இவன் பத்துத் தலைகளையுடைய இராவணன் காண், ஸ்வஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உன்னை வஞ்சித்து
வரம் வேண்டிக் கொள்ள வந்திருக்கிறான். இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீங்காக முடியும்“ என்று தெரிவிப்பவன் போன்று
தன் திருவடியால் அவ்விராவண்ணுடைய பத்துத் தலைகளையும் எண்ணிக் காட்டினன் – என்பதாக இவ்வரலாறு விளங்குகின்றது.

இக்கதை இதிஹாஸ புராணங்களில் உள்ளவிடம் தெரியவில்லை;
பெரியாழ்வார் திருமொழியில் “சீமாலிகனவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ யெண்ணிச்
சக்கரத்தால் தலை கொண்டாய்“ (2-7-8) என்றும்,
“எல்லியம் போதினி திருத்தலிருந்த தோரிடவகையில், மல்லிகைமாமாலை கொண்டங்கார்த்தது மேரடையாளம்“ (3-10-2) என்றும்
அருளிச்செய்த கதைகள் வ்யாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல்
ஆழ்வாரால் மாத்திரம் நிர்ஹேதுக கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை யென்று நம் பூருவாசாரியர்கள்
நிர்வஹித் திருப்பது போலவே இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட தென்று பெரியோர் கூறுவர்.
இனி இதற்கு இதிஹாஸ புராணங்களில் ஆகா முண்டேல் கண்டு கொள்க விரிவும் வல்லார் வாய்க் கேட்டுணர்க.

இப்படிப்பட்ட எம்பெருமான் நின்றருளும் திருவேங்கடமலைக்கே விரும்பிச் சென்று சேருங்கள் என்றாராயிற்று.
வயது முதிர்ந்த பின்பு * தண்டுகாலா யூன்றித் தள்ளிநடக்கும் முதுமையில் திருமலையை நெஞ்சால் நினைக்கவும்
முடியாதாதலால் கிளரொளியிளமை கெடுவதன் முன்ன திருமலைக்குப் போகவேணுமென்கிறார் ‘குமர்ருள்ளீர்!‘ என்ற விளியால்.

——————————————————————————————-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-

பதவுரை

புண்டரீகம் பாதம்–திருவடித் தாமரைகளில்
புரிந்து–அன்பு பூண்டு
மலர் இட்டு–புஷ்பங்களைப் பணிமாறி
பரிந்து–மங்களாசாஸநம் பண்ணி
படுகாடு நிற்ப–வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால்பேராமல் நிற்கும்படியாக
எங்கும்–ஸகல ப்ரதேசங்களிலும்
தெரிந்து–விளங்கி
தான் ஓங்கி நிற்கின்றான்–குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளியிருக்கும் பெருமானுடையதாய்
தண் அருவி வேங்கடமே–குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே
வானோர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
மண்ணோர்க்கும்–நிலத் தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
வைப்பு–நிதியாயிருக்கும்.

ஆதாரத்துடன் திருவடித் தாமரைகளில் புஷ்பங்களைப் பணிமாறி ‘ பல்லாண்டு பல்லாண்டு‘ என்றும்
‘ஜிதம்தே புண்டரீகாக்ஷ!‘ என்றும் மங்களாசலாஸநம் பண்ணி, கால்பெயர்ந்து வெளியில் போக மாட்டாமல்
அவ்விடத்திலேயே அன்பர் குடிகொண்டிருக்கும்படியாகக் கடாக்ஷித்தருள்கின்ற ஸ்ரீநிவாஸன் நித்யவாஸம் பண்ணுமிடமாய்,
குளிர்ந்த அருவிகள் பாய்ந்து போக்யமான திருவேங்கடங்மலை நித்யஸூகனோடு ஸம்ஸாரிகளோடு வாசியற
அனைவர்க்கும் புகலிடமாயிருக்கின்றது என்றதாயிற்கு.

பரிந்து – பரிவாவது பயசங்கை பண்ணுதற்கு இடமல்லாதவிடத்தில் பயசங்கை பண்ணி
அன்பு பாராட்டுதல் காப்பிடுதலைச் சொன்னபடி.

படுகாடுநிற்ப – படுகாடுபோல் நிற்கும்படியாக என்றபடி, உவமவுருபு தொக்கிக்கிடக்கிறது,
வெட்டித்தள்ளப்பட்ட மரங்களைப் படுகாடு என்கிறது. அதுபோல் நிற்கும்படியாக வென்றது. – அம்மரங்கள் ஆடாது அசையாது
அவ்விடத்திலேயே கிடப்பதுபோல் கிடக்கும்படியாக என்றவாறு
வைப்பு – நிதி பூமிக்குள் புதைத்து வைக்கப்படுவது காரணக்குறி நிதிபோல் விரும்பத்தகுமென்கை.

———————————————————————————-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

பதவுரை

மா மதியை–‘சிறந்த (இந்த) சந்திரனை
மணி விளக்கு ஆ–மங்கள தீபமாக
வைப்பன் என்று–(திருமுன்பே) வைக்கப்படவேன் என்றெண்ணி (அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக)
கை நீட்டும்–உயரத் தூக்கின கை தூக்கினபடியே யிருக்கிற
யானையை–ஒருயானையை (பிடிப்பதற்காக)
எப்பாடும்–நாற்புறமும்
வேடு வளைக்க–வேடர் சூழ்ந்து கொள்ள
குறவர்–(அங்குள்ள) குறவர்கள்
வில் எடுக்கும்–(அவ்யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக்கொண்டு போகுமிடமான
வேங்கடமே–திருமலையையே
நாடு–நாட்டிலுள்ளாரனைவரும்
வளைத்து–பிரதக்ஷிணம் பண்ணி
ஆடுதும் ஏல்–(மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம் பண்ணப் பெற்றால்
நன்று–நல்லது

திருமலையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை வருணிக்கின்றாரிதில். ஆகாயத்திலே அழகிய விளக்குப்போல் தோன்றும்
சந்திரனைக் கண்ட ஒரு யானையானது ‘இதனை நமது துதிக்கையினால் பிடித் தெடுத்து ஸ்ரீநிவாஸன் ஸந்நிதியில்
நந்தாவிளக்காக வைத்திட்டால் நன்றாயிருக்கும்‘ என்று கருதி அச்சநதிரனைப் பிடிப்பதற்காக
நீட்டின கை நீட்டினபடியே யிருக்கையில் அவ்யானையின் நோக்கமெல்லாம் சந்திரனைப் பிடிப்பதாகிற
அக்காரிய மென்றிலேயே ஊன்றியிருந்ததனால் அந்த அந்யபரத்வத்தையே பற்றாசாகக் கொண்டு வேடர்கள் மெல்ல
அருகில் வந்து வளைத்துக்கொள்ள குறவர் அம்பு தொடுக்கின்றனராம்,
ஆக இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையை நாமெல்லாரும் வலம் வந்து மகிழ்ந்து கூத்தாடுவோமாயின்
இதுவே நமக்கு ஸ்வருபம் என்றாராயிற்று.

திருமலை சந்திரமண்டலத்தை எட்டியிருக்கின்றதென்று அதன் ஒக்கம் வெளியிடப்பட்டதாமிதனால்,
மலைகளில் சந்திரனை மிக்க ஸமீபத்திலிருப்பதாகக் காணும் மலைப்பிராணிகள்
அவனைக் கைக்கொள்ள விரும்பிப் பல முயற்சிகள் செய்வது இயல்பு,
1.“நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர்மாமதியைச் செஞ்சுடர் நாவளைக்குந் திருமாலிருஞ்சோலையதே“ என்றதுங்காண்க.

மாமதியை மாலுக்கு மணிவிளக்கா வைப்பன் என்று கை நீட்டும் யானையை என்கிறாரே ஆழ்வார்,
யானை சந்திரனைப்பிடிக்க முயற்சிசெய்வது வெளிக்குத் தெரியுமேயன்றி
இன்ன காரியத்திற்காக அதனைப் பிடிக்க முயல்கிறது என்பது தெரியமாட்டாதே,
திருமலையப்பனுக்கு நந்தாவிளக்காக வைப்பதற்குப் பிடிக்க முயல்கின்றதென்று ஆழ்வார் எங்ஙனே அறிந்தார்? என்று சிலர் கேட்கக் கூடும்
திருமலையில் பிறக்கப்பெற்ற பெருமையினால் அவ்யானைக்கு இப்படிப்பட்ட நற்கருத்தே இருக்கத்தகும் என்று திருவுள்ளம் பற்றினரென்க.
அன்றியும், 2. “வாயுந்திரையுகளும்“ என்கிற திருவாய்மொழியிற்படியே பிறர் செய்யும் காரியங்களையெல்லாம்
தாம் செய்யுங் காரியங்கள்போல் பகவத் விஷய ப்ராவண்யத்தால் செய்வனவாகவே கொள்வதும் மெய்யன்பர்களின் வழக்கமாகும்.

ஆழ்வார் சந்திரனைப் பார்க்கும்போது “இவன் திருவேங்கடமுடையானுக்கு நந்தாவிளக்காக அமையத்தரும்“ என்று தோற்றவே,
இத்தோற்றமே அவ்விடத்து யானைக்கும் இருந்த்தாகக் கொண்டு கூறுதல் பொருந்தியதே

ஈற்றடியில் “ஆடுதுமேல்“ “ஆடுதிரேல்“ என்பன பாட பேதங்கள்.

—————————————————————————————–

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

பதவுரை

ஆளியும்–யாளிகளும்
கோள் அரியும்–வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்–பொன்களும்
மணியும்–மாணிக்கங்களும்
முத்தமும்–முத்துக்களும்
பூ மரமும்–பூத்த மரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்–பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே கலந்து உருண்டு விழப்பெற்ற காடுகளும்
வானரமும்–குரங்குகளும்
வேடும்–வேடச்சாதியுமாகிற இவற்றை
உடை–உடையதான
வேங்கடம்–திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர்–நல்ல நீலரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ்தானமாம்

அவனைப் போலே இங்கு உள்ள அனைத்தும் உத்தேச்யம் -யாளிகள் – சிங்கங்கள் -நவ ரத்தினங்கள் -புஷ்ப்ப வ்ருக்ஷங்கள்
-நவ மணிகள் கொழித்து கொண்டு வரும் அருவிகள் -காடுகள் -குரங்குகள் -வேடர்கள்
-இவை எல்லாம் யுடைத்தான திரு மலை மணி வண்ணனுடைய திருப்பதி –

—————————————————————————————–

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48-

பதவுரை

விண்ணோர்–நித்யஸூரிகளால்
மெய்ம்மையால்–உண்மையான பக்தியுடனே
தொழுவதுவும்—ஆச்ரயிக்கப்படுவதும்
வேங்கடமே–திருமலையே
வினை–பாவங்களையும்
மெய் நோய்–உடம்பைப் பற்றின நோய்களையும்
தீர்ப்பதுவும்–போக்கடிக்க வல்லதும்
வேங்கடமே–திருமலையே
தானவர் வீழ–அசுரர்கள் மாளும்படி
தன் ஆழிபடை தொட்டு–தனது சக்ராயுதத்தைப் பிடித்து
வானவரை–தேவர்களை
காப்பான்–காத்தருளுமெம் பெருமானுடைய
மலை–திருமலை
வேங்கடமே–திருவேங்கடமேயாம்

அசுர ஜாதியால் வரும் துன்பங்களை தேவர்களுக்கு போக்கி அருளியது போலே ஆஸ்ரிதர் துன்பங்களை
தொலைத்து அருள எழுந்து அருளி இருப்பவன் திருவேங்கடத்தான் என்றவாறு –
விண்ணோர் மெய்மையால் -நித்ய ஸூரிகள் உண்மையான பக்தியால் –
ஸுலப்யம் கண்டு அனுபவிக்க ஆஸ்ரயிப்பதும் இவனே –

நித்யஸூரிகள் பரமபதத்திலே எம்பெருமானை இடைவிடாது அநுபவீக்கப்பெற்றாலும் அங்கே பரத்வத்திற்கு உரிய
மேன்மைக் குணங்களை அநுபவிகலாயிருக்குமேயன்றி ஸௌலப்ய ஸௌசீலயங்களுக் குப்பாங்கான எளிமைக் குணங்களை
இந் நிலத்திலே வந்து அநுபவிக்க வேண்டியிருப்பதால் அந்த சீலாதி குணங்களை யநுபவிப்பதற்காகத்
திருமலையில் வந்து தொழும்படியைக் கூறுவது முதலடி.

‘வேங்கடம்‘ என்ற திருநாமத்தின் அவயவார்த்தத்தைத் திருவுள்ளம்பற்றி இரண்டாமடி அருளிச் செய்யப்பட்டது.
வேங்கட பதத்திற்கு ஸம்ஸ்க்ருத ரீதியில் பொருள் விவரிக்குமிடத்து,
வேம்பாவம், கடம் – எரித்தல், பாவங்களை எரிப்பதனால் வேங்கடமென்று பெயர் பெற்றது என்று நிருக்தியுள்ளது.
“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடமலை யாதென்று“
என்னும் புராணச் செய்யுளுமுணர்க.

திருமலையின் மேற்கிலுள்ள நந்தநபுரமென்னும் ஊரில் புரந்தரனென்னும் ப்ராஹ்மணோத்தமனது குமாரனாகிய
மாதவனென்பவன் தன் மனைவியாகிய சந்தர்ரேகையென்பவளோடு பூஞ்சோலையிற் சென்று விளையாடிக் கொண்டிருக்கையில்
மாலிநியென்பாளொரு சண்டாள கன்னிகையின் கட்டழகைக்கண்டு காமுற்று அவளைக்கூடி மனையாளைத் துறந்து
அப்புலைமங்கையுடனே சென்று புலால் நுகர்ந்தும் கட்குடித்தும் கைப்பொருள் முழுவதையும் இழந்து
பின்பு வழிபறித்தல் உயிர்கொலை முதலிய கொடுந்தொழில்புரிந்து பொருள்சேர்த்து அவளுக்குக் கொடுத்துவந்து
முடிவில் தரித்ரனாகிப் பலநோய்களை யுமடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பல பாவமுந்தொடரப் பித்தன்போல
அலைந்து திரிந்து இத்திருமலையை அடைந்தமாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்பலாகப்பெற்று
முன்னைய ப்ரஹ்மதேஜஸ்ஸைப் பொருந்தி நல்லறிவுகொண்டு திருமாலைச் சேவித்து வழிபட்டுப் பரமபதமடைந்ததனால்
இதற்கு ‘வேங்கடாசலம்‘ என்னும் பெயர் நிகழ்ந்ததென்று வடமொழியில்
ப்ரஹ்மாண்ட புராணத்திலும் பவிஷ்யோத்தர புராணத்திலும் கூறப்படுதல் காண்க.
இங்ஙனே பல இதிஹாஸங்களுண்டு. திருமலை நோய் தீர்க்கும் விஷயம் இப்போதும் பிரத்யக்ஷமாக அனைவருங் காணத்தக்கதாம்.

தேவஜாதிக்கு அஸுரஜாதியால் நேருந் துன்பங்களைத் திருவாழியால் தொலைத்துக் காத்தருளுமெம்பெருமான்
அப்படியே நம்போன்ற ஆச்ரிதர்களினுடையவும் துன்பங்களைத் தொலைத்தருள எழுந்தருளியிருக்குமிடம் திருமலை என்பன பின்னடிகள்.

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்