ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73–
பதவுரை
அனைத்து உலகும்–எல்லா வுலகங்களையும்
உண்டு உமிழ்ந்த–(பிரளயத்தில்) உண்பதும் (பிறகு) உமிழ்வதும் செய்தவனும்
பேர் ஆழியான் தன்–பெருமை தங்கிய திருவாழி யாழ்வானைத் திருக்கையிலுயைவனுமான எம்பெருமானுடைய
பெருமையை–மஹிமையை
அறிவார் ஆரே–அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை)
அவன் வைத்த–அப்பெருமான் (முன்பே) ஸாதித்து வைத்த
பண்டைத் தானத்தின் பதி–பரமபத மார்க்க மென்னத் தகுந்த சரம ச்லோகத்தை
கார் செறிந்த கண்டத்தான்–நீலகண்டனான சிவனும்
எண் கண்ணான்–நான் முகனும்
காணான்–அறியமாட்டார்கள்.
(அவர்களே அறிய மாட்டாத போது மற்ற பேர்கள் அறிய மாட்டார்களென்பது சொல்ல வேணுமோ?)
அவன் வைத்த-பண்டைத் தானத்தின் பதி–அப்பெருமான் முன்பே சாதித்து வைத்த பரமபத மார்க்கம்
என்னத் தகுந்த சரம ஸ்லோகத்தை —பண்டத்தானத்தின் -நித்ய விபூதி
அவன் உபாயமாகும் இடத்து வேறு ஒரு உபாயத்தையும் எதிர்பாராமல் தானே பூரணமாய் இருந்து
கார்யம் தலைக் கட்ட வல்லனாகும் பெருமை -என்று பட்டர் அருளிச் செய்வாராம்
அவன் உண்ட போதும் உமிழ்ந்த போதும் நிரபேஷனாக செய்து அருளியததால் நிரபேஷத்வ உபாயத்வம் அறியாலாமே
நீல கண்டனும் நான் முகனும் பேர் ஆழியான் தன் பெருமை அறிவார்களா –
சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அவனையே உபாயமாக பற்றினவர்களுக்கே நித்ய விபூதி ஸூ லபமாகும் –
சிவனும் பிரமனும் சரம ச்லோகத்தையறியார்கள் என்றதற்குக் கருத்து யாதெனில்,
புறம் புண்டானவற்றை விட்டு அவனையே தஞ்சமாகப் பற்றுகைக் குட்லான ஸ்வரூப வுண்மையை உணரார்கள் என்பதாம்.
———————————————————————————————–
பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-
பதவுரை
பதி பகைஞற்கு ஆற்றாது–ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி,
பாய் திரை நீர்பாழி–பாம்பின அலைகளோடே கூடின நீரை யுடைத்தான கடல் போலே குளிர்ந்த திருப் படுக்கையை
மதித்து–புகலிடமாக நம்பி
அடைந்த–வந்து பற்றின
வாள் அரவம் தன்னை–ஒளி பொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை
மதித்து–ஆதரித்து
அவன் தன்–அந்த (சத்ருவான) கருடனுடைய
வல் ஆகத்து ஏற்றிய–வலிமை தங்கிய சரீரத்திலே ஏற விட்டவனும்
மாமேனி மாயவனை அல்லாது–சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேச்சரனை யன்றி
ஒன்று வேறொன்றை
என் நா–எனது நாவானது
ஏத்தாது–தோத்திரம் செய்யாது.
அஞ்சி வந்து அடி பணிந்த ஸூ முகனுக்கு அபயம் அளித்த வரலாற்றை அருளிச் செய்கிறார் –
தேவேந்திரன் சாரதி மாதலி புத்ரி-குணகேசி க்கு வரனாக -ஸூ முகன் – பிதாமகன் -ஆர்யகன் –தன் புத்ரனை
பெரிய திருவடி பஷித்து ஸூமுகனையும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக சொல்லி போந்ததை சொல்லி –பெரிய திருவடியையே
தோளிலே அடைக்கலமாக கொள்ளச் செய்து அருளினான் –
தேவந்திரனுக்குப் பரம ஆப்தனும் ஸாரதியுமான மாதலியென்பவன் தனது புத்திரியான குணகேசி யென்னுங் கன்னிகைக்குத்
தகுந்த வரனைத் தேட நாரத மஹர்ஷியோடு புறப்பட்டுப் பலவுலகங்களிலுஞ் சென்று கடைசியாகப் பாதாளலோகத்தில்
போகவதி யென்னுஞ் சிறந்த நகரத்தை யடைந்து ஸுமுக னென்னும் நாக்குமாரனைக் கண்டு
அவனது அழகு குணம் முதலியவற்றிலீடுபட்டு அவனுக்குத் தன்மகளை மணம் புரிவிக்க வுத்தேசித்து அவனது
பிதாமஹனான ஆர்யகனைக் கண்டு தன் உத்தேசத்தைத் தெரிவிக்க, ஆர்யகன் ஆநந்தத்தையும் ஸங்கடத்தையும்
ஏககாலத்தில் கொண்டவனாகி ‘இவனது தந்தையைக் கருடன் பக்ஷித்து இவனையும் ஒரு மாதத்திற்குள் பக்ஷிப்பேனென்று
சொல்லியிருக்கிறானாதலால் இவனுக்கு இப்போது துவிவாஹம் நடத்துவது உசிதமன்று‘ என்று தெரிவித்தான்.
அதற்கு மாதலி ‘இவன் என்னோடு வநது தேவேநதிரனைக் காணட்டும், இவனுக்கு ஆயுளைத் தந்து கருடனால்
கேடுவராமல் தடுக்க முயல்வேன்‘ என்று சொல்லி அச்சுமுகனை உடனழைத்துக் கொண்டு சென்று
உபேந்திர மூர்த்தியோடிருந்த தேவேந்திரனைக் கண்டு நாரதர்மூலமாகச் செய்தியைத் தெரிவிக்க,
அதுகேட்ட உபேந்திரனான ஸ்ரீமஹாவிஷ்ணு ‘இவனுக்கு அம்ருத்தைத் தரலாம், அதனால் இஷ்டஸித்தி உண்டாகும்‘ என்று சொல்ல,
இந்திரன் கருடனுடைய பராக்ரமத்தை நினைத்து சிறிது அச்சத்துடனே அம்ருத முண்பியாமல் அந்த ஸுமுகனுக்கு
நீண்ட ஆயுளை மாத்திரம் வரமாக அளிக்க, உடனே மாதலி அச்சுமுகனுக்குத் தன் மகளை மணஞ்செய்வித்தான்,
இச்செய்தியைக் கேள்வியுற்ற கருடன் இந்திரனோடு மாறுபட்டுத்தன் இரையைத் தடுத்ததற்காக நிஷ்டூரமாகப் பேசுகையில்,
ஸுமுகன் தான் நீண்ட ஆயுளை வரம் பெற்றிருந்தாலும் கருடனுடைய கறுவுதலைக் கண்டஞ்சிப் பாம்பு வடிவமாயத் திருமாலினருகிற் சேர்ந்து
அப்பெருமானது கட்டிலின் காலைக் கட்டிக்கொண்டு சரண்புக, பின்பு கருடன் திருமாலை நோக்கி
‘ஸகலதேவர்களினுள்ளும் மஹா பலசாலான வுன்னைச் சிறிதும் சிரமமின்றி இறகு முனையால் சுமக்கின்ற
என்னைவிட வலிமையுடையார் யார்? இதனை சற்று ஆலோசியும்‘ என்று கருவங்கொண்டு பேச
கடூரமான அந்த வார்த்தையைக் கேட்ட எம்பெருமான் கருடனை நோக்கி ‘மிகவும் துர்ப்பலனான நீ தன்னை
மஹாபலசாலியாக எண்ணி என்முன்னே ஆத்மஸ்துதி செய்து கொண்டது போதும்,
மூன்று லோகமும் எனது உடம்பை வஹிக்க முடியாதே, யானே எனது சக்தியால் என்னையும் வஹித்துக் கொண்டு
உன்னையுமல்லவோ வஹிக்கிறேன் எனது இந்த வலக்கையொன்றை மாத்திரமாவது நீ தாங்குவையா? என்று சொல்லித்
தமது வலக்கையைக் கருடனது தோளில் வைத்த மாத்திரத்தில் அவன் அந்தத் திருக்கையின் அதிபாரத்தைத் தாங்கமாட்டாமல் வருந்தி
வலியழிந்து மூர்ச்சித்து விழுந்து பின்பு அரிதில் தெளிந்து எம்பெருமானை வணங்கித் துதித்து அபராதக்ஷாமணஞ்செய்து கொள்ள,
திருமால் திருவுள்ளமிரங்கி அவனுக்கு ஸமாதானஞ் சொல்லித் தனது திருவடியின் பெருவிரலால் ஸுமுகனென்ற நாகத்தை யெடுத்துக்
கருடன் தோளிலிட்டு ‘இவனை நீ உனது அடைக்கலமாகக் கொண்டு பாதுகாக்கக் கடவை‘ என்று குறிப்பிக்க அது முதலாக
ஸுமுகனோடு கருடன் ஸநேஹங் கொண்டு அவனைத் தோளில் தரிக்க, அவனும் அச்சமின்றி ‘கருடா! ஸுகமா? என்று
க்ஷேமம் விசாரிப்பவனாயினன் என்ற உபாக்கியானம் இங்கு அறியத்தக்கது.
அடுத்த கடும் பகைஞ்ஞாற்கு ஆற்றேன் என்றோதி படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்தரவை
வல்லாளன் கைக் கொடுத்த மா மேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள் -பொய்கையார் -80 –
நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா
நெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –அடியேன் –நின்னடி
இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -4 -8 -4 –
பாய்த்திரை நீர்ப்பாழி – இந்த உபாக்கியானம் ஸ்ரீமஹாபாரதத்தில் உத்யோகபர்வத்தில் நூறாவது அத்யாயந் தொடங்கி
ஐந்து அத்யாயங்களில் பரக்கக் கூறப்பட்டுள்ளது. ஸுமுகன் எம்பெருமானைச் சரணமடைந்தது இந்திரனருகில் என்பதாக
அங்குக் கூறப்பட்டுள்ளதனால் ‘பாய்திரை நீர்ப்பாழி‘ என்ற விதற்கு ‘கடல் போலே குளிர்ந்த திருப்படுக்கை‘ எனப் பொருளுரைக்கப்பட்டது.
இனி, பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் –“ஓரோயுகத்திலே ஓரோவிடங்களிலே எல்லாம் பிறக்கக் கூடுகையாலே
திருப்பாற்கடல் தன்னிலேயாகவுமாம்“ என்று இரண்டாவது நிர்வாஹமாக அருளிச் செய்துள்ளபடி
திருப்பாற்கடலையே பொருளாகக் கொள்ளவுமாம். கல்பபேதத்ததாலே இது கூடுமென்க.
ஆஸ்ரித விரோதிகளை க்ஷமிக்க மாட்டேன் -அடியார்களைக் கை விட்டேன் -இரண்டையும் காட்டி அருளிய செயல் அன்றோ-
-இதையே அவன் –தன்-வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனுக்கு என்கிறார்
பாய் திரை நீர்ப் பாழி--கடல் போன்ற குளிர்ந்த படுக்கை என்றும் திருப் பாற் கடல் என்றுமாம் –
—————————————————————————————————-
நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-—
பதவுரை
தீக் கொண்ட செம் சடையான்–நெருப்புப் போலே சிவந்த சடையை யுடையனான ருத்ரன்
நலம் ஆக–தகுதியாக
என்றும்–எந்நாளும்
பூ கொண்டு–புஷ்பங்களைக் கையிற்கொண்டு
பின் சென்று–அநுஸித்து
வல்ல ஆறு–தன் சக்தியுள்ள வளவும்
ஏத்த–துதிக்க
மகிழாத–(இதைத் தனக்கொரு பெருமையாக நினைத்து) மேனாணிப்புக் கொள்ளாத
வைகுந்தம் செல்வனார்–ஸ்ரீவைகுண்ட நாதனுடைய
சே அடி மேல் பாட்டு–திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல)
நாக் கொண்டு–நாவினால்
மானிடம்–மனிதர்களை
பாடேன்–பாட மாட்டேன்
மகிழாத -பெருமையாகக் கொண்டு மேனாணிப்பு கொள்ளாத என்றபடி
எம்பெருமானொருவனையே துதிப்பதற்கென்று படைக்கப்பட்ட நாவைக் கொண்டு அற்ப மனிதர்களைக் கவிபாட மாட்டேனென்று
தமது உறுதியை வெளியிடுகின்றார். சடைமுடியனானவற்றைக் கொண்டு ஆராதித்து அநுவர்த்தித்தாலும்
நித்யஸூரிஸேவ்யனான தனக்கு இது ஒரு பெருமையன்றாகையாலே இதனால் சிறிதும் மகிழ்ச்சி கொள்ளாத
ஸ்ரீவைகுண்ட நாதனுடைய திருவடிகள் மேல் கவிபாடுதற்கே ஏற்றநாவைக் கொண்டு மானிசரைப் பாடுதல் தகாது என்றதாயிற்று.
இவ்வாழ்வார் காலத்தில் வாழ்ந்த இவரது சிஷ்யரான கணிகண்ணன் வாக்கினால் தான் ஒரு பாடல் பெறக்கருதிப்
பெருமுயற்சி செய்தும் பெற்றிலனென்பத இவ்வாழ்வார்வைபவத்தில் விரியும்.
சிஷ்யருடைய உறுதியே அங்ஙனிருக்கும்போது ஆசாரியரான இவரது உறுதியைப் பற்றிச் சொல்லவேணுமோ?
——————————————————————————————
கீழ்ப்பாட்டில் “வைகுந்தச்செல்வனார் சேவடிமேல் பாட்டு –நாக்கொண்டு மானிடம்பாடேன்“ என்றார்,
எம்பெருமானொருவனையே கவிபாடும்படியான உறுதி தமக்கு உண்டானபடி யெங்ஙனேயென்ன,
உலகத்திலுள்ள வாச்யங்கள் வாசகங்கள் எல்லாம் அப்பெருமானுடைய திவ்யஸங்கல்பத்தாலே உண்டாயினவென்று
இப்பாட்டால் அருளிச்செய்யும் முகத்தால் தமது உறுதிக்கு அடிகூறினாராயிற்று
பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-—
பதவுரை
பாட்டும் முறையும்–இயலும் இசையும்
படு கதையும்–பழைய சரிதங்களைக் கூறவந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
ஈட்டிய தீயும்–(பஞ்சீகரணத்தாலே பலகுணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும்
இரு விசும்பும்–பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்)
கேட்ட மனுவும்–வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும்
கருதி–அநாதியாக உச்சாரண அநூச்சாரண ச்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும்–நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
மாயன் தன்–ஆச்சர்ய சக்தியுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட–ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு–தத்துவங்களாம்.
பாட்டும் முறையும் –இயலும் இசையும் –
படுகதையும் –பழைய சரித்ரங்களைக் கூற வந்த -இதிஹாசங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை அறிவிக்கும் புராணங்களும்
ஈட்டிய தீயும் -பஞ்சீ கரணத்தால் பல குணங்களும் தன்னிலே அமையும் படி சேர்க்கப் பட்ட அக்னியும் –
இரு விசும்பும் –பரந்த ஆகாசம் முதலான பஞ்ச பூதங்களும் –
-கேட்ட-மனுவும் -வேதங்களில் ஓதப்பட்ட மனு பகவான் அருளிச் செய்த தர்ம சாஸ்திரமும் —
மனு சொல்வது எல்லாம் மருந்தாய் இருக்குமே -என்பர்
சுருதி மறை நான்கும் மாயன்-தனமாயையில் பட்டதற்பு-சங்கல்பத்தால் உண்டான தத்வங்களாகும் –
———————————————————————————————–
தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-
பதவுரை
தட கடலை–பரந்த தெற்கு சமுத்ரத்தை
கல் கொண்டு–மலைகளினால்
தூர்த்த–அணை செய்து அடைத்தவனும்
கடல் வண்ணன் தான்–கடல் போன்ற கருநிற முடையனுமான எம்பெருமான்
என்னை–(தோஷமு வடிவெடுத்தவனான) என்னை
தற்பு–உள்ளபடியே
அறியான் ஏலும்–அறிந்திலனாயினும்,
எற் கொண்ட–என்னைக் கொள்ளை கொண்டிருக்கிற
வெம் வினையும்–கொடிய பாவங்கள் யாவும்
நீங்க–என்னை விட்டு நீங்கும்படியாக
கண்டு–அழகிய திருக் கண்களாலே குளிரக் கடாக்ஷித்து
மனம்–தனது திருவுள்ளத்தை
விலங்கா வேறு எங்கும் விலகிப் போகாதபடி
வைத்தான்–(என்மீதே ஒரு மடைப்படுத்தி) வைத்தருளினன் (ஆகையாலே)
ஏ வினையும்–பாபமென்று பேர் பெற்றவை யடங்கலும்
மாயும்–உரு வழிந்து போம்
எனது குற்ற மிகுதியைக் கண்டு இகழாமல் -என்னுடைய ஸமஸ்த கருமங்களை உரு மாய்ந்து போம்படி
திரு உள்ளத்தை என் பக்கலில் வைத்து அருளினான் -என்கிறார்
கடல்வண்ணன் தான் என்னைத் தற்பு அறியானேலும் – ஆழ்வாராகிய தம்மை எம்பெருமான் உள்ளபடி யறிந்திலனென்கிற
இதன் கருத்து யாதெனில், இவர் குற்றங்களுக்குக் கொள்கலமாயிருப்பவர், இவிடத்தில் ஒருவகைக்குணமும் கிடையாது“ என்று
அறிந்து கொள்ள வேண்டியிருக்க அப்படியறிந்து கொண்டிலன் என்கிறார் நைச்யா நுஸநதாந நிஷ்டையினால்.
(எம்பெருமானை நாம் உள்ளபடி அறிகையாவது –ஒருவகைக் குற்றங்குறையுமற்ற குணநிதி என்று அறிவதாம்.
அப்பெருமான் நம்மை உள்ளபடி யறிகையாவது ‘ஒருவகைக்குணமுமற்ற தோஷநிதி‘ என்று அறிவதாம்.
அவனை நாம் உள்ளபடியறியப் பெற்றால் அவனிடத்தில் நமக்கு அன்பு கரைபுரளும்,
நம்மை அவன் உள்ளபடியறிந்து கொண்டால் நம்மிடத்தில் அவனுக்கு இகழ்ச்சியுண்டாகும்.)
இங்கு ஆழ்வார்தம்மிடத்தில் எம்பெருமானுக்கு இகழ்ச்சி பிறவாமல் விருப்பமே பெருகிச் செல்கின்றமைக்குக் காரணம்
இவருடைய ஞானபக்தி முதலிய குணங்களைக் கண்டே, அப்படியிருந்தும் ஆழ்வார் நைச்யாநுஸந்தான வுறைப்பினால்
‘என் ற்றங்குளைகளை எம்பெருமான் தெரிந்துகொள்ளாமையினால் மேல்விழுகிறான்‘ என்கிறார்.
தடங்கடலைக் கற்கொண்டு தூர்த்தது ஸ்ரீராமாவதாரத்தில்.
எற் கொண்ட எவ்வினையும் -எற் கொண்ட-வெவ்வினையும் -பாட பேதங்கள் –
வெவ்வினையும் மோனை இன்பத்துக்கு ஒக்கும் –
———————————————————————————–
எம்பெருமான் திருநாமத்தை யாதிருச்சிகமாக கேட்கப் பெற்ற பரமசிவன் விகாரம் அடைந்ததே வாசா மகோசரம்
என்றால் சாஷாத் கரிக்கப் பட்டவர்கள் படும் பாடு சொல்லக் கூடியதோ-
கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78–
பதவுரை
காமன்–மன்மதனுடைய
உடல்–சரீரத்தை
கொண்ட–நீறாக்கின
தவத்தாற்கு–தபஸ்வியான பரம சிவனுக்கு
உமை–(மனைவியான) பார்வதி யானவள்
உணர்த்த–தெரிவிக்க,
அங்கு–அப்போதே
ஆர் அலங்கல் ஆனமை–மிகவும் அசைந்து போனமையை
ஆய்ந்தால்–ஆராய்ந்து பார்க்கில்,
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள்முடியான தன் பெயர்கேட்டிருந்தே–வண்டுகள் ஒலிக்கப் பெற்ற பூமாலயை
நீண்ட திருவபிஷேகத்திலுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே
கண்டு வணங்கினார்க்கு–நேரே கண்டு வணங்குமவர்கட்கு
என் ஆம் கொல்–எப்படிப்பட்ட விகாரமுண்டாகுமோ (என்பது சொல்ல முடியாது)
திருவாய்மொழியில், (6-7-3) உண்ணுஞசோறு பருகு நீரில் மூன்றாம்பாட்டில்
“கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ“ என்றவிடத்து
ஈடு முப்பத்தாறாயிரப்படி திவ்யஸூக்திகள் உற்று நோக்கத்தக்கன, (அவற்றை இங்கு அநுவதிப்போம்.)
“(என்செய்யுங்கொலோ). சொல்லமாட்டாள், தவிரமாட்டாள், அழாடிதாழியமாட்டாள், எங்ஙனே படுகிறாளோ!.
நம்மையும் பிறரையும்விட்டு அவன் திருநாமங்களை யநுபவிக்கிற போதையழகு காணப்பெற்றோம்,
அவன்றன்னையே கண்டு அநுபவிக்கிற போதையழகு காணப்பெற்றிலோமே! அநுஸந்தாத வேளையிற்போலன்றிறே கண்டால்
பிறக்கும் விகாரங்கள் ‘காமனுடல்கொண்ட தவத்தாற்கு உமையுணர்த்த வண்டலம்புந் தாரலங்கள் நீண்முடியான்றன் பெயரே
கேட்டிருந்து அங்காரலங்கலானமையால் –கண்டு வணங்கினார்க்கு என்னாங்கொல்! என்றிறே யிருப்பது“.
பரமசிவனுக்குப் பார்வதி பகவந்நாமத்தை யுணர்த்தினவிதம் அவ்விடத்து அடையவளைந்தா னரும்பதவுரையிற் காணப்படுகின்றது. –
ஒருகால் ருத்ரன் த்யாநபரனாயிருக்கக்கண்ட பார்வதி யானவள் ‘எல்லாரும் உம்மை உபாஸநைபண்ணாநிற்க நீர் யாரை உபாஸிக்கின்றீர்?
உமக்கும் உபாஸ்ய விஷயம் ஒன்றுண்டோ? என்று கேட்டாளாம் இப்படி இவள் கேட்டதற்குப் பரமசிவன்
“ஸ்ரீமந்நாராயணனை உபாஸிக்கிறேன்“ என்று மறுமொழி கூறவேண்டி அத்திருநாமத்தை ஸ்மரித்தமாத்திரத்திலேயே
‘காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்‘ என்றும்
‘உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்தேனுடம்பெலாங் கண்ணநீர்சோர‘ என்றுஞ் சொல்லலாம்படி விகாரமடைந்தானாம்.
உமை உணர்த்த –‘நீர் யாரை உபாஸிக்கிறீர்? என்கிற கேள்வி வியாஜத்தாலே பகவந்நாமங்களைச்
சிவபிரானுக்குப் பார்வதி உணர்த்தினளென்க. இந்த ப்ரஸங்கத்தால் பகவந்நாமங்களை ஸ்மரிக்கப்பெற்ற சிவபிரான்
செங்கண்மால் நாமங்களைச் செவிக்கின்பமாகக் கேட்க விரும்பி அப்பார்வதியையே பாடச்சொல்ல,
அப்படியே அவள்பாட, தென்றலும் சிறுதுளியும் பாட்டாற்போலே இனிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது உள்குழைந்தானென்ப.
-என் செய்யுங்கோலோ –சொல்ல மாட்டாள் –தவிர மாட்டாள் –அழாது ஒழிய மாட்டாள் –எங்கனே படுகிறாளோ –
-நம்மையும் பிறரையும் விட்டு அவன் திரு நாமங்களை அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றோம்
-அவன் தன்னையே கண்டு அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றிலோமே
-அனுசந்தான வேளையில் போல் அன்று இறே கண்டால் பிறக்கும் விகாரங்கள் –
காமன் உடல்-கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த -வண்டலம்பும்-தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து
அங்கு-ஆர் அலங்கல் ஆனமையால் –ஆய்ந்தால் -மிகவும் அசைந்து போனமையை ஆராய்ந்து பார்த்தால் —
கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல்-
உண்மை உணர்த்த -நீர் யாரை உபாசிக்கிறீர் -என்ற கேள்வி வியாஜத்தாலே-பகவான் நாமங்களை சிவபெருமானுக்கு உணர்த்த
–ஸ்மரித்த மாத்திரத்திலே -கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்றும் உள்ளம் எல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எல்லாம் கண்ண நீர் சோர-என்றபடி உள் குழைந்தான்-
ஆர் அலங்கல் ஆனமை–அலங்கல் மாலைக்கும் அசைவுக்கும் பெயர் -பூ மாலை போலே துவண்டு விழுந்தான் என்கை
ஆனமையால் -ஆல்-என்பதை ஆய்ந்து என்பதுடன் கூட்டி ஆய்ந்தால் -என்ற படி
————————————————————————————————
ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-
பதவுரை
ஆதி–ஜகத் காரண பூதனான
பெருமானை–ஸர்வேச்வரனை
அன்பினால்–ப்ரேமத்துடன்
ஆய்ந்து கொண்டு–அநுஸந்தித்துக் கொண்டு
வாய்ந்த மனத்து–(தமது) பாங்கான நெஞ்சிலே
இருத்த வல்லார்கள் தாமும்–நிலை நிறுத்திக்கொள்ள சக்தரானவர்கள்
தம் வைகுந்தம்–தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரமபத்ததை
விரைந்து–சீக்கிரமாக
காண்பார்–காண விரும்பமுடையராய்
ஏய்ந்த–ஆத்மாவோடு செறிந்த
தம் மெய்–தங்களுடைய உடம்பை
குந்தம் ஆக–வியாதியாக
விரும்புவர்-எண்ணுவர்
தம்-மெய்குந்த மாக விரும்புவரே–தங்கள் உடம்பை வியாதியாக எண்ணுவர் –
ஆதிப்பெருமானை அன்பினால் ஆய்ந்து கொண்டு -தங்களுடைய வாய்ந்த மனத்திலே அவனை இருத்த வேணும் என்னும்
விருப்பம் யுடையவர்கள் -தங்களுக்கு என்று இருப்பட்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை பெற்ற போது பெறுகிறோம்
என்று ஆறி இருக்கை அன்றிக்கே -கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ-என்று விரைந்தவராய்க் கொண்டு
-அதற்கு இடையூறாய் இருக்கிற இவ் உடல் என்று தொலையும் -என்று இருப்பார்கள் –
வடுக பாஷையில் –குந்தம் என்று வியாதிக்குப் பெயர் -என்பர் பூர்வர்கள் –
————————————————————————————————–
விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-
பதவுரை
உலகம்–சிறந்த பாகவதர்கள்
பரந்து–எங்குத் திரிந்து
பாடின–பாடின பாடல்களையும்
ஆடின–ஆடின ஆட்டங்களையும்
கேட்டு–கேட்டதனால்
படு நரகம் வாசல்–க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த
கதவு–கதவுகள்
வீடின–விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின)
மேல் ஒருநாள்–முன்னொரு காலத்தில்
வெள்ளம் பரக்க–பிரளய வெள்ளம் பரவின போது
உலகம்–உலகங்களை யெல்லாம்
கரந்து–(திருவயிற்றில்) மறைத்து வைத்து
காத்து அளித்த-துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த
கண்ணன்–கண்ண பிரானை
விரைந்து அடைமின்–சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்
– உலகம்-பரந்து—பாடின வாடின கேட்டு –சிறந்த பாகவதர்கள் எங்கும் திரிந்து பாடின பாட்டுக்களையும்
ஆடின ஆட்டங்களையும் கேட்டதனால் –
உலகம் உயர்ந்தோர் மாட்டே -சிறந்த பாகவதர்கள் -என்றபடி
படு நரகம்– வாசற் கதவு-வீடின–குரூரமான நரகங்கள் வாசல் கதவுகள் விட்டு ஒழிந்தன -நரகங்கள் புல் மூடிப்போனவே
ஆனபின்பு –
அறிவிலா மனுஷர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒலியும் அன்றே –
மேலொருநாள் வெள்ளம் பரக்க–முன்னொரு காலத்தில் பிரளய வெள்ளம் பரவின போது
உலகம் கரந்து காத்து அளித்த கண்ணன் -உலகங்களை எல்லாம் திரு வயிற்றிலே மறைத்து வைத்து
துன்பங்களைப் போக்கி ரஷித்த -கண்ணன் விரைந்து அடைமின் –
————————————————————————————————–
கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-
பதவுரை
நீ–(ஞானம் சக்தி முதலியவற்றால் குறைவற்றவனான) நீ
கற்ற மொழி ஆகி–நான் கற்ற சொற்களுக்குப் பொருளாக இருந்து கொண்டு
கலந்து–என்னோடு ஒரு நீராகக் கலந்து
நல் தமிழை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப்பிரபந்தத்தை
விதை ஆக வித்தி–(பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து
என் உள்ளத்தை–எனது ஹ்ருதயத்தை
விளைத்தாய்–விளையும்படி க்ருஷி பண்ணினாய்
மனம்–மனமானது
கதவு என்றும்–எம்பெருமானை யடைவதற்குப் பிரதிபந்தகம் என்று (சில மையங்களில்) நினைத்தும்
(மனம்) காணல் ஆம் என்றும்–(மனமானது) எம்பெருமானைக் காண்பதற்கு உறுப்பாகும் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன்–(ஆக விப்படி ஒரு நிலை நில்லாமல் மாறி மாறி) பிரமிப்பதையே தொழிலாக வுடைத்தான நெஞ்சைத் தவிர்த்தேன்.
நீ -ஞானம் சக்திகளில் குறைவற்ற நீ
கற்ற மொழியாகிக் கலந்து -நான் கற்ற சொற்களுக்கு பொருளாக இருந்து கொண்டு -என்னோடு ஒரு நீராகக் கலந்து –
நற்றமிழை விதையாக வித்தி–இப்பிரபந்தத்தை பக்தியாகிய பயிருக்கு விதையாக விதைத்து
என்னுள்ளத்தை – விளைத்தாய்-என் இருதயத்தை விளையும் படி கிருஷி பண்ணினாய்
மனம் கதவு –என்றும் மனம் -காணலாம் என்றும்–மனமே எம்பெருமானை அடைய பிரதிபந்தகம் என்றும்-
-காண்பதற்கு உறுப்பாகும் என்றும் வெவேறு சமயங்களில் நினைத்து
குதையும் வினையாவி தீர்ந்தேன் -பிரமிப்பதையே தொழிலாகக் கொண்ட நெஞ்சைத் தவிர்ந்தேன் –
மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோஷயா -நெஞ்சினால் நினைக்க முடியாத ஞான சக்திகளை யுடையனான நீ
என் வாக்கில் வரும் சொற்களுக்கு பொருளாய் இருந்து கொண்டு என்னுடைய நெஞ்சம் ஆகிற நிலத்திலே
தமிழாகிற விதையை வித்தை பக்தியாகிற பயிர் செழித்து விளையும்படி செய்தாய் யாகையாலே
நிலைபெற்ற நெஞ்சுடையேன் ஆனேன் என்கிறார் –
சாஸ்த்ரங்களில் = மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ“ என்று சொல்லப்பட்டுள்ளது.
அதாவது – ஸம்ஸார பந்தங்களைப் பூண்கட்டிக் கொண்டு எம்பெருமானை மறந்தொழிவதற்கும் மனமே காரணம்,
வீண்பாசங்களை விட்டொழிந்து அப்பெருமானைக் கண்டுகளிக்கப் பெறுதற்கும் மனமே காரணம் என்கை.
இவ்விரண்டு வகையான ஸங்கதியும் ஸம்ஸாரிகளின் அநுபவத்தில் மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும்,
ஊழ்வினையின் கனத்தால் விஷய ப்ராவண்யம் மேலிடுகிற காலங்களில் மனமானது ஸம்ஸாரபந்தத்திற்குக் காரணம் என்று அறுதியிடப்பெறும்,
பகவத் பாகவத கடாக்ஷலேசத்தால் பகவத் விஷயத்தில் பற்று உண்டாகுங் காலங்களில் மனமானது மோக்ஷத்திற்குக் காரணம் என்று அறுதியிடப் பெறும்.
ஆகவே, இவ்விபூதியிலுள்ள நம்போல்வார்க்கு விஷயாந்தரப் பற்றும் நிலைத்திராது, பகவத் விஷயப் பற்றும் நிலைத்திராது,
இரண்டும் மாறிமாறி வந்துகொண்டே யிருக்குமாதலால் ஒரு மையத்தில் ‘மனம் பந்தஹேது‘ என்கிற உணர்ச்சியும்
பின்னுமோர் ஸமயத்தில் ‘மனம் மோக்ஷஹேது‘ என்கிற உணர்ச்சியுமாயிருக்கும்.
நம்மைப் போலன்றிக்கே ஆழ்வார் எப்போதும் எம்பெருமானையே அநுபவிக்கும்படியான உறைப்புப் பெற்றவராதலால்
‘மனம் பந்தஹேதுவோ மோக்ஷஹேதுவோ‘ என்கிற குழப்பம் இவர்க்கு நேர ப்ரஸக்தியில்லை,
‘மனம் மோக்ஷஹேதுதான்‘ என்கிற நிச்சய வுணர்ச்சியே இவர்க்குள்ளது, இதைத்தான் இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.
கதவுமனமென்றும் காணலாமென்றும் குதையும் வினையாவி தீர்ந்தேன் –ஒரு வாசலுக்குக் கதவு இருட்டிருந்தால்
உள்ளே புகுவதற்கு அது தடையாயிருக்குமாதலாலே கதவு என்கிற சொல் பிரதிபந்தகத்தைச் சொல்லுகிறது
இங்கு, மனம் (பகவத் ப்ராப்திக்குப்) பிரதிப்பந்தகமோ அல்லது (பகவானைக்) காண்கைக்கு உறுப்போ என்று
அலைபாய்வது தவிர்ந்தேன் என்றவாறு. அவர்ந்தமைக்குக் காரணங் கூறுவன பின்னடிகள்.
நெஞ்சினால் நினைக்கவும் முடியாத ஜ்ஞாநகக்திகளையுடையனான நீ என்னுடைய வாக்கில் வரும் சொற்களுக்குப் பொருளாயிருந்து
கொண்டு என்னுடைய நெஞ்சமாகிற நிலத்திலே தமிழாகிற விதையை விதைத்துப் பக்தியாகிற பயிர் செழித்து
விளையும்படி செய்தாயாகையாலே நிலை நின்ற நெஞ்சுடையேனாயினேன் என்றாராயிற்று.
—————————————————————————-
கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-
பதவுரை
காம வேள் தாதை–மன்மதனுக்குத் தந்தையானவனும்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும்–மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
வேந்து–தேவாதிதேவன்
என் உள்ளத்து–எனது நெஞ்சிலே
கலந்தான்–சேர்ந்து கொண்டான்
நான்முகனும்–பிரமனென்ன
என்ற இவர்கள்–என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்த மாட்டாத–நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர்–இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –நன்றாக ஸ்துதிக்க மாட்டாத இந்திரனும் –
என் உள்ளத்தோடு நீராக கலந்து கொண்ட நன்மைக்கு ஈடுண்டோ –
நான் பெற்ற நன்மை வேறு யாரும் பெறமுடியாது, இதுவரையில் நான் பெற்ற நன்மைகளுள் இப்போது பெற்ற நன்மைக்கு
ஈடானதும் வேறொன்றில்லை, அரன் அயன் என்னும் படியான மேம்பட்ட தெய்வங்களாலும் துதித்துத் தலைக்கட்டப் போகாத
பெரும்புகழ் படைத்த பெருமான் என் உள்ளத்தோடு ஒரு நீராகக் கலந்து கொண்டானே! இஃது என்ன நன்மை! என வியக்கிறார்.
காமவேள் தாதை – மன்மதனுடைய அம்ஸமாகிய பிரத்யும்நனுக்கு கண்ணபிரான் தந்தையாதல் அறிக.
‘காமன்‘ என்பது வடசொல் ‘வேள்‘ என்பது தமிழ்ச் சொல், இரண்டையும் சேரப் பிரயோகித்த விடத்து
ஒரு சொல்லை விசேஷணமாகவும் மற்றொன்றை விசேஷ்யமாகவுங் கொள்ளலாம்,
ஆசையை விளைக்குமவனான மன்மதன் என்க
தாதை –தாத அலர்ந்த + அலர்கள், அலந்தலர்கள், தொகுத்தல், ‘என்றிவர்கள்‘ என்றிவிடத்து மிதுவே.
——————————————————————————————
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83–
பதவுரை
நேமியான்–திருவாழி யாழ்வானை யுடையவனும்
மால் வண்ணன்–வியாமோஹமே வடிவெடுத்தவனுமான எம்பெருமான்
சார்ந்தவர்க்கு–தன்னை யடைந்தவர்கள் விஷயத்தில்
வேந்தர் ஆய்–அரசர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
விண்ணவர் ஆய்–தேவர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
மாது ஆய்–தாய் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
மற்று எல்லாம் ஆய்–மற்றுமுள்ள எல்லா வகை நன்மைகளையும் செய்பவனாய் (எவ்வளவு நன்மைகள் செய்தாலும்)
ஆற்றான்–ஆறுதல் இல்லாதவனாய்க் கொண்டு (திருப்தி பெறாதவனாய்)
விண் ஆகி–ஸ்வர்க்க போகத்தைக் கொடுக்குமவனாய்
தண்ணளி ஆய்–அருள் செய்பவனாய்
மாந்தர் ஆய்–மனிசர்களான உறவினர் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
பின்னால்–இவ்வளவுக்கு மேலும்
தன் கொடுக்கும்–தன்னை (முற்றூட்டாகக் கொடுத்தருள்வன்
தான் செய்யும் பிதிர்–(இவை) எம்பெருமான் செய்யும் அதிசயங்களாம்
ஆஸ்ரிதர் விஷயத்தில் எம்பெருமான் செய்து அருளும் உபகார பரம்பரைகளையும்- எத்தனை செய்தாலும்
திருப்தி அடையாமல் அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன்
வேந்தராய்-விஷ்ணுவின் அம்சம் இன்றி அரசராய் இருக்க முடியாதே –
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் –திருவாய் -4-4-8-
விண்ணவராய்-வருணாதி தேவர்களையும் இருப்பவன்
விண்ணாகி-ஸ்வர்க்காதி அனுபவங்களை அளிப்பவனும் அவனே
தண்ணளி –கிருபை -அருள் சேதுபவனுமாய் -/ மால் வண்ணன்-வியாமோஹமே வடிவு எடுத்தவன்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய்–எல்லா நன்மைகளும் செய்யும் -உறவினர் -தாய் மற்றும் எல்லாருமாய்
பின்னால் தான் கொடுக்கும்-இவ்வளவுக்கும் மேலே தன்னை முற்றூட்டாகக் கொடுத்து அருள்வான் –
தான் செய்யும் பிதிர்-இவை எம்பெருமான் செய்யும் அதிசயங்கள் –
———————————————————————————————
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-
பதவுரை
அதிரும் கழல் கால–ஒலிக்கின்ற வீரக்கழலைத் திருவடிகளிலே அணிந்துள்ள
மன்னனை–ராஜாதிராஜனான
கண்ணனையே–கண்ண பிரானையே
நாளும்–எந்நாளும்
தொழ–தொழும் படியாக
காதல்–ஆசைப்படுவதையே
தொழில்–நித்ய கருமமாக
பூண்டேன்–ஏற்றுக் கொண்டிருக்கிற நான்
பிதிரும் மனம் இலேன்–(விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடு எதிரவன்–(ஞானத்தில்) பரமசிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்)
அவன் எனக்கு நேரான்–அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான்.
பிதிரும் மனம் இலேன் -விஷயாந்தரங்களில் புகுந்து விகாரப்படும் நெஞ்சுடையேன் அல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடு–எதிர்வன்–ஞானத்தில் பரமசிவனொடு ஒத்து இருப்பான் -என்னலாமாயினும்
அவன் எனக்கு நேரான் –ஈஸ்வரோஹம் என்னும் -அந்த ருத்ரன் நித்ய தாசனான -என்னோடு ஒவ்வான்
சாஸ்த்ரங்களில் (சிவனிடத்திலிருந்து அறிவைப் பெற்றுக் கொள்க) என்று விதித்திருக்கையாலே
உலகுக்கெல்லாம் உணர்வையிளக்க வல்லனாம்படி மஹாஜ்ஞாநியாக ருத்ரன் ப்ரஸித்தி பெற்றிருப்பதனால்
அங்ஙனே மஹாஜ்ஞாதாவான ஆழ்வாரோடு அவனுக்கு ஒப்புச் சொல்ல ப்ரஸக்தியுண்டு, ப்ரஸக்தமான அது கழிகப்படுகிறது.
இரண்டாமடிமுதலாக. ருத்ரன் ஸ்தவகுணம் தலையெடுத்தபோது ‘எம்பெருமானே ரக்ஷகன்‘ என்றிருப்பதும்,
ரஜஸ்தமோகுணங்க்ள தலையெடுத்தபோது ‘நானே ஈச்வரன்‘ என்று மார்பு நெறித்திருப்பதுமா யிருக்கையாலே,
ஸர்வகாலத்திலும் பகவத் ப்ராவண்யமே யாத்ரையாயிருக்கு மிவர்க்கு ஒப்பாகமாட்டானென்க.
-அதிரும்-கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –ஒலிக்கும் வீரக் கழலை அணிந்துள்ள ராஜாதி ராஜனான கண்ணபிரானையே
எந்நாளும் தொழும் படியாக ஆசைப்படுவதையே நித்ய கர்மயமாக ஏற்றுக் கொண்டு இருக்கிற அடியேன் –
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply