Archive for the ‘திரு விருத்தம்’ Category

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -30-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –அஞ்சிறைய மட நாராய் -1-4-

February 20, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அஞ்சிறைய மட நாராய்-வண்டானம் -நாரை வகை ஓன்று-தலைவி தூது துறை-தொழுது காயிகம்
இரந்தேன் -வாஸா மானஸா -உப லக்ஷணம் கொள்ள வேண்டும்-நெஞ்சுக்குத் தூது -அவன் இடம் ஒன்றி உள்ளதே இது –கண்ணன் வைகுந்தனோடு -ஸுலப்யம் காட்டி அங்கே கூட்டிப் போனானே
நெஞ்சினார் -ஷேப யுக்தி -அவன் கொண்டாடியதாகவுமாம்-அவர் இடம் நீர் செல்லீரோ -இதுவோ தகவு
கூட்டி வந்தால் மறந்து முடியலாம் அன்றோ -இசைமின்கள் பாட்டுப்பாடுமா போல் சொல்லுங்கோள்-

சிலரை தூது போக விட்டால் ,அவர்கள் வரும் அளவு செல்ல ,ஆறி இருந்து , சூது சதுரங்கம் பொருது போது-போக்கும் விஷயம் அல்லாமை யாலே கண்ணால் கண்டவர் எல்லாரையும் தூது போக விடுகிறாள்–யாம் கபிநாம் சகஸ்ராணி ஸுப ஹூன்ய யுதானிச திஷு சர்வாஸூ மார்கந்தே சேய மாயாதி தாமயா–சுந்தர காண்டம் -30-3- என்று முதலிகள் எல்லாரும் கூட புஜித்தாலும் புஜித்து முடிய ஒண்ணாத ப்ரீதியாலே தனியே அகப் பட்டேன் என்று-முதலிகள் எல்லோரும் கூட மது வனத்தில் புகுந்த பொழுது-ததி முக பிரப்ருதிகள்  நலிய –அஹம் ஆவார் யிஷ்யாமி யுஷ்மா கம்பரி பந்தின -சுந்தர காண்டம்  62-2—என்று உங்களுக்கு விரோதி ஆனவர்களை நான் போக்குகிறேன் நீங்கள் அமுது செய்யுங்கோள்  என்ன —இப்படி மது வனம் அழிந்த படி யை மகா ராஜர் கேட்டு– இது வெறுமனே ஆக மாட்டாது –பிராட்டியை கண்டார்கள் –-த்ருஷ்டா தேவி -சுந்தர காண்டம் 63-17–என்று நிச்சயித்து ,
அப்போது அவ் அருகுக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே வாலானது வளர்ந்து  ருஷ்ய முக பர்வதத்திலே சென்று அமைந்தது- அறைந்தது —அம் மது வனம் இன்றாகில் ராஜ புத்ரர்கள் முதுகோடே போம் -என்று பட்டர் அருளி செய்வார்-

இப்படி கடக அபேக்ஷை பண்ணினவர்களுடைய கார்ய அபி முக்யத்தைத் கண்டு சொல்லி விடுகிற வார்த்தையை -அன்னம் தொடக்கமான வற்றை நாயகன் பின் சென்று தன்னை அகன்ற நெஞ்சை நோக்கித் தூது விடுகிற நாயகி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் 

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
சிலரைப் போக விட்டோமாகில் அவர்கள் க்ரமத்தாலே கார்யம் தலைக் கட்டிக் கொண்டு வருகிறார்கள் என்று க்ரம பிராப்தி பார்த்து அவ்வளவும் சூது சதுரங்களாலே போது போக்கி ஆறி இருக்கலாம் விஷயம் அன்று ஆகையாலே யாம் கபீ நாம் ஸஹஸ்ராணி ஸூப ஹுந்ய யுதாநி ச திஷு ஸர்வாஸூ மார்க்கந்தே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-அவதாரிகை
ஷணமும் அவன் பிரிவைப் பொறாதவள் ஆகையாலே கண்ணால் கண்டாரை எல்லாம் தூது விடவும்
இரக்கவும் செய்து தம் தூதாக முன்பு போன நெஞ்சுக்கு என் தசையை ஸ்மரிப்பித்து இவனோடு அவன் ஸ்தானத்தில் நின்ற உமக்கு இன்னம் அத்ருப்தியோ என்று அப்பெருமையுள்ள என் நெஞ்சுக்கு அவர் முன்னே சொல்லி உம்முடைய அருளும் இத்தோடு ரமிப்பதாயிற்றோ என்று அவர் இசையும் படி
விண்ணப்பம் செய்யுங்கோள் என்கிறாள் –

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே
–30-பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் –

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்-–4–அவதார சௌலப்யத்தை யுபதேசித்து அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறர்க்கு உபதேசித்த இடத்தில் அதில் அவர்கள் விமுகராய் இருக்கையாலே அவர்களை விட்டு
குண சாம்யத்தாலே கிருஷ்ணாவதாரத்தோடு போலியான த்ரிவிக்ரம அவதாரத்தை அனுசந்தித்து
தச் சரணங்களை திரிவித கரணங்களாலும் அனுபவிக்க பாரித்த இடத்தில் அது முற்காலத்திலே யாய் தாம் பிற்பாடர் ஆகையாலே பாரித்த படியே அனுபவிக்க பெறாமல் கலங்கின தசையில் மதியினால் குறள் மாணாய உலகு இரந்த கள்வரான அத்தலைக்கு அறிவிக்க வேணும் என்று கடகரை அர்த்தித்துச் சொல்லும் க்ரமத்தை கலந்து பிரிவாற்றாளாய் தலை மகள் -என் அபராதத்தைப் பார்த்து பிரிந்து போனவருக்கு-கிங்கோப மூலம் மனுஜேந்திர புத்திர -என்னும்படி-தம் அபராத சஹத்வத்தையும்
 ஒரு கால் பார்க்க கடவது அன்றோ என்று சொல்லுங்கோள் என்று-தன் உத்யானத்தில் வர்த்திக்ற பஷிகளை
தன் பிராண ரஷணத்துக்கு உறுப்பாக தூது விடுகிற பேச்சாலே சொல்லச் சொல்லுகிற –அஞ்சிறைய மட நாரையில் -அர்த்தத்தை அஞ்சிறைய புட்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —ஆழ்வார் இங்கே இவ்விடத்திலே கூப்பீடு கேட்கும் இடமான கடலிலே அடலாழி அம்மானான நாயகனைத் தேடி –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்று மலங்கியதும் பக்தி அதிசயம் – மதி எல்லாம் உள் கலங்கின பக்தி பிரபாவம் –

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –அன்னமாய் செல்வீரும் வண்டானமாய்   செல்வீரும் –தொழுது இரந்தேன்–ஐந்த்ர வ்யாகரண பண்டித -சிறிய திருவடி –ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-தூது  போக கடவத்தை உங்களை இரவா நின்றேன்-என் தசை– உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி–

கிடாம்பி ஆச்சானோடு நம்பி திரு வழுதி நாடு தாசரும் மற்றும் நம் முதலிகளும் இருந்து
அந்யத் பூர்ணாத் ஸ்லோஹம்–அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜனாத்  அந்யத் குசல சம்ப்ரசனா அந்ந சேச்சதி ஜனார்த்தன–  – கேளா நிற்க -அந்யத் என்கிறது ஒரு கால் அமையும் என்கிறதோ என்ன-அரை கால் அமையும்-என்று கிடாம்பி ஆச்சான் நியமித்தான்-(தொழுது இரந்தால் இரண்டும் வேண்டாமே )கிருத அபராதச்ய ஹிதே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேனா அஞ்சலிம் பத்வா லஷ்மணஸ்ய ப்ரசா தானாத் –கிஷ்கிந்தா காண்டம் -32-17- தீரக் கழிய அபராதம் பண்ணின வுமக்கு இளைய பெருமாள் பிரசாதிக்கும் போது ஓர் அஞ்சலி   நேராமல் போகாது என்று திருவடி மகாராஜற்கு சொன்னால் போல —அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க-இரப்பவும் செய்தேன்–தொழுகையும்  இரக்கையும் தன்னதே ஆய் இருந்த படி –உவாச ச மஹா ப்ராஜ்ஜா -யுத்த காண்டம் -17-11-விபீஷணன் சரண் அடைந்து இரக்கம் படும் படி பல சொல் சொன்னது போல்–வந்ததே போதும்-அஞ்சலியும் செய்தான்–உவாச ச மேலும் பேசவும் செய்தான்

மறவேல்மினோ-
மறவாமல் கொள்ளுங்கோள் என்கிறாள்–அங்கே புக்கவாறே-அஹம் அன்னம் -என்று-மறவாதே கொள்ளுங்கோள் —அவன் வருகையால் உண்டான த்வரையாலே மறவாதே என்றால் , மறவாது-ஒழிவார்களோ என்னில்–தொழுது இரந்தேன் -என்று உருக்கி விடுகிறாள்–பிரியேன் பிரியில் தரியேன்-என்றவர் போய் மறந்தார்-ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-பேதை-பிரிவிலும் கலவியிலும் ,ஒரு வகையோ என்று இருக்கும் பருவம்நின்னை–உன்னை பிரிகைக்கு சேதனன் அன்றோ நான்
பிரியேன் என்ற போதே –பிரிந்தானாகவேயாய் இருக்கிறது காணும் இவளுக்கு என் வென்னில்
பிரிவை பிரசங்கித போதே பிரிந்தானாம் அத்தனை இறே–அவனைத் தொடர்ந்து போன நெஞ்சம் மறந்தது முன்னம்  போவோர்க்கு எல்லாம் மறப்பேயோ உள்ளது  என்று இருக்கிறாள் —அவர் அங்குத்தைக்கு பரிவராய் அலைந்த பரிவட்டமும் தானுமாய் திரிகிறார் இறே

நிசாம் அதிஷ்டத் பரிதோச்ய கேவலாம்  –என்று பெருமாள்-ஸ்ரீ குகப் பெருமாள் பரிசரத்தே கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் ஜங்கமான மதிள் போல் கையும் வில்லுமாய் இளைய பெருமாள் திரிகிற படியை கண்டு-ஸ்ரீ குகப் பெருமாள் —இயந்தாத ஸூகாசய்ய தவதர்தம் உகல்பிதா -என்று
உமக்கு தகுதி ஆகும் படி பெருமாள் திரு அடிகளிலே தளிராலே  படுக்கை படுத்து கண் வளரீர் என்ன —கதந் தாசரதவ் பூமவ் சயானே–என்று அறுபதினாயிரம் சம்வச்த்ரம் மலடு நின்று பெற்ற பிள்ளை சுகுமாரமான வடிவைக் கொண்டு , தரைக் கிடை கிடக்க கண் உறங்குமோ ?சயானே சஹா சீதாயா
இவர் வசிஷ்டர் சிஷ்யர் ஆகையாலே இக் கிடை கிடக்கவும் பொறுக்கும்- படி நடந்து புறப்பட்டு அறியாத செல்வ பெண் பிள்ளை தரை கிடப்பதே-சக்யா நித்ரா மயா லப்தும்  —என் கண் தன்னில்-நித்தரை குடி புகுதரு தில்லை காணும் –யத்ர லஷ்மணா -என்ற ஒரு தம்பி அன்றோ தொடர்ந்து போந்தானும்–இளைய பெருமாளையும் கூட அசிர்ந்து இவர் இட்ட அடியிலே இட்டு ஸ்ரீ குகப் பெருமாள் திரியா நிற்க-
அதந்திரிபிர் ஞாதி பிரார்த கார்முகை -என்று இவர் தம்மையும் கூட அசிர்ந்து கொண்டு இங்கு உள்ளார் அடைய காத்த படி(ஒரு நாள் முகத்திலே விழித்தாரை வடிவு அழகு படுத்தும் பாடு-இப்படி இருக்க ஆழ்வார் திரு உள்ளம் அங்கு ஈடுபட்டு இருக்கச் சொல்ல வேணுமோ )

நெஞ்சு கண்ணன் மாயையை அனுசந்தித்த அளவிலே பரம பதம் ஏறப் போயிற்று
என் நெஞ்சினார்–பண்டு போல் அன்றியிலே அவனாலே கொண்டாட பட்ட அளவிலே சொல்கிறாள்
அவர் தான் இத் தலையை அழிக்க நினைத்தார் ஆகையாலே-பிரதான பரிக்ரமான நெஞ்சை படை அறுத்து-கொள்கைக்கு கொண்டாடா நிற்கும் இறே–கண்டால்–-காண்கை தான் அரிதாய் இருக்கும்
அவரைக் காணலாம்–-சதா பஸ்யந்தி -அவனைக் காண இயலும் — இவரைக் காண அரிது இதே-நாவிலும் பல்லிலும் நீர் அன்றியே இருந்தது —என் செய்கிறார் என்று தாமாக வினவும் அவர் அன்றிறே-என்னைச் சொல்லி-இன்னாளை அறிகை இல்லையோ என்று சொல்லி —அப்ரமேயம் ஹிததேஜ யஸ்ய யா ஜநகாத்மஜா —-ஆரண்ய காண்டம் –37-18-ஆற்றல் மிக்க யார் உடைய தர்ம பத்நியோ-என்னும் படி உள்ள சீதை பிராட்டி இப்படி உரைக்கிறாள் – என்னும் அவள் கிடீர் இப்படி சொல்கிறார்–அவர் இடை
அன்று பாடு ஓடி கிடந்த கிடை அறிந்தீரே-நீர் –இப் போது கொண்டு வருகிறேன் என்று கண்ணும் கண்ண நீருமாக போகும் படி அறிவீரோ-இன்னும் செல்லீரோ –தூது போந்த உமக்கு தூது வந்த பின்பும் போகீரோ —ந காலஸ் தத்ரவை பிரபு-என்று இருந்தீரோ-அவ் இடம் கால க்ருத பரிணாமம்  உள்ள தேசம் என்று அறிந்து இலீரோ —பகலும் இரவுமாய் இருக்கும் காணும் அங்கு-அது தன்னிலும் ஒரு பகல் ஆயிரம் ஊழி யாய் அன்றோ செல்லுகிறது-இது தகவோ--பிரணயித்வம் இல்லை ஆகிலும் ஆன்ரு சம்சயம் வேணுமே–-ஆன்ரு சம்சயம் பரோ தர்ம  சுத்வத்த ஏவம் ஆஸ்ரித –சுந்தர காண்டம் –38-41-
மற்றவர் துன்பம் அலட்ஷியம் செய்யாமல் இருப்பதே தர்மம்-தத்துவம் ஸ்வரூபம் புருஷகாரத்வம்
தகவு ஸ்வ பாவம் கிருபை தத்வம் அற்ற தாகவும் அன்று போல் –இசைமின்களே மனிச்  சடித்து  சொல்லாதே போராதே சொல்லி யவன் ஸ்வரூபத்தை அழித்தே போரும் காண் என்கிறாள்-அழிக்கை ஆவது-ஓராண் பிள்ளையாய் சொல்லுகிறது இல்லை —ஓர் பெண்டாட்டியை சொல்லுகிறது அல்ல
உன்னை எத்தை சொல்லுவது என்கை இறே-மனசுக்கு ஆன போது —அவனுக்கு ஆன போது சொல்லுகை தான் மிகை-

என் நெஞ்சினார் ஸ்ரீ வைகுண்ட நாதனையோ பிரசாதத்தையோ பெற சென்றார் –
அங்கே சென்று சீரிய சிங்காசனத்தில் அமர்ந்து அங்குள்ளார் பராக் ஸ்வாமி பராக் அருளப்பாடு நம்மாழ்வார் நெஞ்சினார் என்று திரி பரிவட்டம் சாத்தப் பெற்று மேநாணிப்புடன் எம்பெருமான் அந்தரங்க சன்னிதானத்தில் வீற்று இருப்பர் –-அந்தரங்கம் என்று உம்மை தூது அனுப்பினதுக்கு இதுவோ தக்கது –தொழுது இரந்தேன்–காயிக வாசிக — மாநஸமும் உப லக்ஷணம் –மறவேல்மினோ-
இவள் பிரக்ருதியை அறியும் நாயகன் மறந்தான் –அவன் கைப்பின்னே போன நெஞ்சும் மறந்து –
இனி யார் தான் மறவாதார் -என்பது நம்பிள்ளை ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்
–உங்களுக்கு மறப்பு இயற்க்கை இல்லா விடிலும் அங்கு சென்றதும் மறக்கப் பண்ணுபவன் அன்றோ அவன்–கண்ணன் வைகுந்தனோடு-என் நெஞ்சினாரை கண்டால் —ஸுலப்யத்தை முன்னம் காட்டி என் மனசைக் கவர்ந்து கொண்டு-பரத்வத்தால் என்னை இன்று அளவும் வந்து கலவாது நிற்பவன் இடம் என் மனம் வீணே சென்று சேர்ந்து அலைகிறதே – அவனைக் கண்டாலும் காணலாம் –அந்தரங்க பரிவாரங்களில் ஒன்றாக கலந்த நெஞ்சைக் காண்பது அரிதே-வைகுந்தனோடு-என் நெஞ்சினாரை கண்டால் என்கிறார்-என்னைச் சொல்லி —நெஞ்சுக்கு உடையவள் நான்-என் உடைமை அது –எனக்கு இன்றியமையாதது –யான் தனித்து உள்ளேன்–இவற்றை எல்லாம் மறந்து இருக்குமே –
புருஷோத்தமன் சிறந்த நாயகன் உடன் கூடிய மேன்மை பற்றி -நெஞ்சினார் –அவர் இடை நீர்-இன்னும் செல்லீரோ-நெஞ்சினாரே நீர் வரும் பொழுதே ஆற்றாமை மிக்கு -அவருக்கு அந்தகாரணமான நீர்
அவர் ஆற்றாமை அறிந்து வைத்தும் நாயகன் பொருட்டே அன்றி உம் பொருட்டும் தூது விடும் படி இன்னமும் போகாது இருக்கலாமோ –செல்வீர்கள்- மறவேல்மினோ,-இசைமின்களே-பன்மையில் –
இன்னது முன் போகும் தெரியாதே-ஆற்றாமை மிக்கு அவனை மறந்து இருப்பதே நன்று என்று வெறுத்து நெஞ்சை கூப்பிடுகிறாள்அன்னம் வந்து என்று ஆச்சார்யர் களைச் சொன்னவாறு
செல்வீர் என்று ஆச்சார்யர்கள் திவ்ய தேச யாத்திரைக்கு பிரயாணப் பட்டமை காட்டிற்று
எம்பெருமானை இடைவிடாது நினைத்து இருக்கையிலும் அவனைச் சேர்ந்து அனுபவித்து ஆனந்திக்கப் பெறாமையால் உண்டான ஆற்றாமைத் துயரினும் அவனை மறந்து இருப்பதே நன்று என்று அன்பு மிகுதியால் வெறுப்புக் கொண்டு நெஞ்சை மீட்கப் பார்க்கிறார்

அன்னம் செல்வீரும்-பிரதானமாய்ப் போகிற அன்னங்களும்–வண்டானம் செல்வீரும் -அவை போன வழியிலே கூடப் போகிற வண்டான குருகுகளும்–அன்னம்-வண்டானம் என்கிற ஒருமை சொல்லீர் என்கிற பன்மையாலே-ஜாதி பரம் –தொழுது இரந்தேன்-பத்தாஞ்சலி புடம் -யுத்த -18-27-என்கிறபடி
ஷிப்ர ப்ரஸாதமான அஞ்சலி பந்தத்தையும் பண்ண யாசந்தம் -யுத்த -18-27- என்கிறபடியே வாசகமான பிரார்த்தனையும் பண்ணினேன்–யத்தி மனஸா த்யாய -என்கிற நியாயத்தாலே வாசிக காயிகங்களுக்கு மானஸம் அர்த்தாத் ஸித்தமாய்க் கொண்டு பூர்வ பாவியாம் இறே-ஆக
கரண த்ரய யுக்தமான பூர்ண பிரபதனத்தைப் பண்ணினேன் என்றபடி
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,-உங்களில் குண பிரதான பாவம் இல்லை-முற்பட்டாரில் கார்யம் மறவாது ஒழிவதே வேண்டுவது-ஏது என்ன-கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்-தன் நீர்மையைக் காட்டி என் நெஞ்சை அபஹரித்த சேணுயர் வானத்து இருக்கிற -திருவாய் -5-3-9- ஸ்ரீ வைகுண்ட நாதனோடே எனக்குக் கரணமாகையாலே பரதந்த்ரமாய்ப் போன நெஞ்சைக் கண்டால்-நெஞ்சினாரை
அத் தலையில் ஆஸக்தியால் யுண்டான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்கிறாள்-ஸதா தர்சன விஷயமானவரைக் காணலாம்-ஆஸ்ரித பலத்தால் யுண்டான செருக்காலே அந்தரங்க பரிகரமாக நெஞ்சைக் காண்கையும் அரிது என்றபடி-என்னைச் சொல்லி-என்னோடு யுண்டான சம்பந்தத்தையும்
பூர்த்தியையும் தனிமையும் தோன்றச் சொல்லி
அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ-நீர் போருகிற போதை யாபத்திலே விஞ்சி இருக்கிறவர் பக்கலிலே அவருக்குக் கரண பூதரான எங்களையும் அகப்பட வரவிடும்படி இன்னமும் போகாது ஒழிவதே–அவர் என்று-உத்க்ருஷ்ட நாயக சம்பந்தம் அடியாக கடகர் தங்கள் சொல்லும் பாசுரத்தாலே சொல்லுகிறாள் தன்னோபாதி நெஞ்சை உபசரிக்கும்படி சொல்லுகிறாள்–இதுவோ தகவு-ஸ்வ ஸ்வாமி சம்பந்த ஸ்வ பாவம் இருக்கும்படி இதுவோ-என்று இசைமின்களே –இப்படிப் பலருமாகச் சொல்லுங்கோள்-சிஷ்டர் பலரும் கர்ஹித்துச் சொல்லுகை மீளுகைக்கு உறுப்பாம் இறே –

இத்தால்-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும்-கடகத்வத்தில் உன்முகராய்த் தோன்றினவர்களைக் குறித்து நடையாலும் பேச்சாலும் புத்தி யோகத்தால் ஸ்ரேஷ்டராய்க் கொண்டு ப்ராப்ய தேச அபி முகரான நீரும் பிரதான புருஷ அநு ஸாதகராய் தத் ஸமான தேச உன்முகரானவருமான உங்களைக் குறித்து என்றபடி –தொழுது இரந்தேன்-என்கையாலே -த்வர அதிசயத்தாலே கடக விஷயத்தில் அநு விருத்தியும் ஓர் அளவில் நில்லாது என்றபடி-முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,–என்றுஆர்த்தியினுடைய அதிசயத்தாலே முற்பட அறிவிக்கையை வேண்டுவது பிரதான நியமமும் இல்லை -என்றபடி–கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ-சீலத்தாலே அபஹ்ருதமாய்
திவ்ய போகத்திலே மூண்ட நெஞ்சைக் கண்டால் என் அவஸ்தையை அறிவித்து–இதுவோ தகவு என்று இசைமின்களே –-இப்படி அசஹாயாரானவர் பக்கல் இன்னம் போகாது ஒழிவதே-இதுவோ ஸ்வாமி கார்யம் செய்து தலைக் கட்டின படி என்று சொல்லுங்கோள் என்கையாலே நெஞ்சை மீட்டு வரக் காட்ட வேணும் என்கையில் தாத்பர்யம்–அதாவது அநு ஸ்மரணம் நடக்கச் செய்தே அனுபவம் பெறாமையால் யுண்டான ஆர்த்தியைக் காட்டில் விஸ்மரணமே அமையும் என்கிற வெறுப்பு இருந்தபடி–கடகரானவர்கள் நெஞ்சை மீட்க்குமோ பாதி மீண்டும் வரக் காட்டவும் வல்லவர்கள் என்று இருக்கிறார் –சாம்சாரிக விஷயத்தில் இருந்து மீளச் செல்ல வல்ல ஆச்சார்யர்களால்ஏது செய்ய முடியாது என்றவாறு-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி வியாக்யானம்-அன்னம் செல்வீரும்-அன்னமாய்ப் போமவர்களும்–வண்டானம் செல்வீரும்-குருகாய் போமவர்களும்–தொழுது இரந்தேன்-கேளுங்கோள் என் யாசனத்தை
காணுங்கோள் நான் உங்களைத் தொழுது இரந்தத்தை என்று–முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
முன்னாகச் சென்றவர்கள் என்னை மறவாதே கொள்ளுங்கோள் முன்னாகத் தூது விட்ட என் நெஞ்சு என்னை மறந்ததே நீங்களும் அப்படி செய்யாதே கொள்ளுங்கோள்–கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்–தன் ஸுலப்யத்தால் என் நெஞ்சை அபஹரித்து-சேணுயர் வானத்து இருந்த ஸ்ரீ வைகுண்ட நாதனோடு ரமண சீலமானவராய் எனக்கும் காரண பூதரானவராய் அவருக்குப் பூசும் சாந்தானவரைக் கண்டால்-அவரை நீங்கள் வேறுபாட்டுக் காண்பதே துர்லபம்-காணப் பெற்றால்–என்னை சொல்லி-எனது இவ்வாற்றாமையை அவருக்கு அறிவித்து–அவர் இடை-என்னோடு கலந்து என்னைப் பிரிந்த என் நாதரான என் நெஞ்சினாரோடே ரமிக்கும் புருஷ ரிஷபரிடைநீர் இன்னும் செல்லீரோ–இன்னம் அவகாஹியா நின்றீரோ–இதுவோ தகவு என்று-அவனுடைய அருளும் இவ்வளவேயோ-என் நெஞ்சினாருக்கு உள்ள தாகவும் இவ்வளவேயோ என்னா நின்றாள்-என்று இசைமின்களே –என்றுமாகச் சொல்லி என் நெஞ்சுக்கும் அவருக்கும் நாம் அயுக்தம் செய்தோம் என்று இசையப் பண்ணுங்கோள் –

தாத்பர்யம்
ஹம்ஸங்கள் போய் தன் தசையை அறிவியாமையாலே-தனது கண்ணில் தோற்றிய வேறே சில அம்சங்களையும் குருகுகளையும் மீண்டும் தூது விட தொழுது இரந்து பிரார்திக்கிறாள்
ஸுலப்யம் காட்டி என்னைக் கொண்ட அவனுக்கு-மனது அந்தரங்க கைங்கர்யம் செய்து என்னை மறந்து சென்றது-தான் தனியாகத் தவிக்கிறேன்-நீங்கள் அங்கு சென்று அந்த நெஞ்சு என்னும் பெரியவரைத் தேடிக் கண்டு எனது அவஸ்தையைத் தெரிவியுங்கோள்
பெண் பிறந்தார் வருத்தம் அறிந்த உமக்கு இதுவும் சொல்ல வேணுமோ-அறியாத அவனுக்கு சொல்ல வேண்டுமோ -உங்களைத் தொழுது யாசிக்கிறேன்
நீங்கள் எனது மனசு போல் அவனிடமே ஈடுபட்டு என்னை மறவாதே கொள்ளுங்கோள்
நீங்கள் எனது அபேக்ஷிதம் அங்குச் சென்று மனசுக்குச் சொல்ல வேணும் –

நீர் இருக்க மட மங்கை மீர் கிளிகள் தாம் இருக்க மதுகரம் எலாம் நிறைந்து இருக்க மடவன்னமும் உன்ன நிரையாய் இருக்க யுரையாமல் யான்
ஆர் இருக்கிலும் என் நெஞ்சம் அல்லதொரு வஞ்சமற்ற துணை இல்லை என்று ஆதரத்தினோடு தூது விட்ட பிழை யார் இடத்து உரை செய்து ஆறுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேட அரிய திரு வரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை யுறை மார்பில் பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –

1-4-அஞ்சிறைய மட நாராய்-பிரவேசம் 

கீழ் மூன்று திருவாய்மொழிகளால், பரத்வத்தையும் -பஜனீயத்வத்தையும் -ஸுலப்யத்தையும் -அனுபவித்து மகிழ்ந்தவராய்த் தாமான தன்மையில் நின்று பேசினார்;
இத் திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது.

கீழே ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே,’ என்பதற்கு
‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார்,’ என்று நஞ்சீயர் அருளிச் செய்த பொருள் அதற்கு அடுத்த இத் திருவாய்மொழிக்கு மிகப் பொருந்தும்.
‘அனுபவிக்கிறார்’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த பொருள்,
இவ் வாழ்வாருக்கு ‘முனியே நான்முகனே’ என்னும் திருவாய்மொழி முடிய உள்ளது
மானச அநுபவமாகையாலே அதற்குப் பொருந்துவதாம்.

‘ஆயின், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாகச் சொல்லுவதற்குக் காரணம் யாது?’ எனின்,
கீழே திரு உலகு அளந்தவனுடைய திருவடிகளை அனுபவிப்பதாக ஒருப் பட்டுக் கட்டிக் கொண்டார்; அது ஒரு கால விசேடத்திலேயாய், தாம் பிற்பாடராய்த் தோற்றுகையாலே, துணுக்கு என்று தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியினால் சொல்லும் பாசுரம் போய், ஆற்றாமையால் சொல்லும் பாசுரமாய் விட்டது.

ஞானத்தை மட்டும் உடையவராய் இருப்பின் கலங்கார்; ‘மயர்வற மதிநலம் அருளப்’ பெற்றவர் ஆகையாலே கலங்குகிறார்.-மற்றும், அவன் தானே கொடுத்த அறிவும்-விஸ்லேஷத்தில் – பிரிவில் அகிஞ்சித்கரமாம்படி அன்றோ அவனுடைய வைலக்ஷண்யம் இருப்பது? தத் தஸ்ய சத்ருசம் பவேத் ( ‘அவர் வந்து என்னை மீட்டுச் செல்வராகில், செல்லும் அச் செயல் அவ் விராமனுக்குத் தக்கதாம்,’ ) என்று கூறிய பிராட்டியே பிரிவுத் துன்பத்தைப் பொறுக்கிலளாகித் -வேண்யுத்க்ரத நாதிகளிலே- தன் சடையினைக் கொண்டு தூக்கிட்டு இறப்பதற்கு நினைந்தமையும் ஈண்டு நினைத்தல் தகும்.

ஆயின், பிராட்டியின் நிலை உண்டாகிறபடி எங்ஙனே?’ என்னில்,
அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அன்வயத்தில் -கூடி இருக்கும் போது தரிக்கை,-விஸ்லேஷத்தில் -பிரிந்திருக்கும் போது தரியாதொழிகை, -ததேக போகராகையாலும் -அவனுக்கே இன்பத்தை அளிக்கை,-அவன் நிர்வாஹகனாக- காப்பாற்றுகின்றவனாகத் தாம் நிர்வாஹ்யமாகையாலும்- காப்பாற்றப்படும் பொருளாக இருக்கை ஆகிய இவ்வாறு குணங்களும் ஆழ்வார்க்கும் உள ஆதலின், பிராட்டியின் நிலை உண்டாகத் தட்டு இல்லை.

வையங்கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று,
இங்குப் பிராட்டியாகவே பேசப்படுகிறது; முற்றுவமை இருக்கிறபடி.இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்ட வேண்டும்,’ என்னும் ஆற்றாமை பிறந்து, தன் அருகிலுள்ள தோழிகள் ‘எம்மின் முன் அவனுக்கு மாய்வர்’ என்கிறபடியே தளர்ந்தவர்கள் ஆதலின், கால்நடை தருவார் இல்லாமையாலே, அப் பக்கத்தில் வசிக்கின்ற விலங்குகள் சிலவற்றைப் பார்த்து,
‘இவை வார்த்தை சொல்ல மாட்டா,’ என்னுமது அறியாதே, ‘இவற்றுக்குப் பக்ஷபாதம் உண்டாய் இருந்தது ஆகையாலே, இவை கடுகப்போய் நங்காரியம் செய்யவல்லன்,’ என்று பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதமே பற்றாசாக, இராவண மாயையால் வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணாலே கண்டவற்றை எல்லாம் தூது விடுகிறாள்.
இவ்விடத்தில் ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும், ஆழ்வார்கள் திருவவதரித்துத் திரியக்குச் சாதி வீறு பெற்றபடி’ என்று பட்டர் ரஸோக்தியாக அருளிச்செய்வர்.

அபராத ஸஹத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தூது விடுகிறாள்.-என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றதை பற்ற அபராத சஹத்வம் –

அநாதி காலம் இவ்வாழ்வாரைத் தன்னோடே சேர விடுகைக்குக் காலம் பார்த்து இருந்த-அவசர பிரதீஷனாய்ப் போந்தவன் – இவர் பக்கல் அப்ரதிஷேதம் -வெறுப்பின்மை உண்டான சமயம் பார்த்து, இவருக்கு மயர்வற மதிநலம் அருளல் ஈண்டுப் புணர்ச்சி-யாதிருச்சிக்க சம்ச்லேஷம் – எனப்படும். அவன் கொடுத்த அந்த ஞானம் பேற்றோடே தலைக் கட்டப் பெறாமை-விஸ்லேஷம் – பிரிவு எனப்படும்.

நாலாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸூலபனாய் ஸூந்தரனான சேஷியை கரண த்ரயத்தாலும் அனுபவிக்க இழிந்தவர் – அவன் சடக்கென முகம் காட்டாமையாலே அவசன்னராய் -1-போக விளம்ப ஹேது பூர்வார்ஜித்த அபராதங்களைப் பொறுத்து
ரஷிக்கைக்கு உறுப்பான பரிகார உச்சராயத்தையும் -2-அமலங்களாக விழிக்கும் புண்டரீகாக்ஷத்வத்தையும் -3-அநந்யார்ஹம் ஆக்கும் அபதான வைபவத்தையும்
4-அதுக்கு அவ்யஹித சாதனமான அழகையும் -5-ச ஸ்னேஹமான சர்வ லோக ரக்ஷணத்தையும் –6-ரக்ஷண தவரைக்கு ஈடான பரிகரவத்தையும் –7-ஆஸ்ரித தோஷத்தை அத கரிக்கும் அநவதிக கிருபையையும் 8-தோஷமே போக்யமான நிரதிசய வாத்சல்யத்தையும் 9-அதுக்கு அடியான நிருபாதிக பந்தத்தையும் -10-அதூர வர்த்தித்தவத்தையும் உடையனாகையாலே நம் தசையை அறியாமல் விளம்பித்தான் அத்தனை என்று அறுதியிட்டு கடக முகத்தால் ஸ்வார்த்தி அறிவிக்கப் பார்த்து
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியினுடைய தூத ப்ரேஷணம் ஆகிற அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ 
–1-4-1-

அருளி –இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி. அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி? இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம். ‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.

வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு – அவர்கள் -பரம சாம்யா பன்னராய் -எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப்-வ்யாவர்த்தக விசேஷணமாய் – பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான். விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.
அன்றி, தன்னை விட்டு-நிர்த்தயமாக – அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே,
அக்ரூர க்ரூர ஹ்ருதய ‘தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று.

புள் உயர்த்தான்-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;-அன்றி, புள்ளைக் கொடியிலே உயர்த்தியவன் என்னுதல்.

‘என் விடுதூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில்’ என்பதற்கு, நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகின்றீர்களோ?
சிறை கட்டுதல், சிங்க விளக்கெரித்தல் செய்யில் செய்வது என்?’ என்று கூசுகைக்கு;
எனக்காகத் தூது போனாரை பரிஷ் வங்கோ ஹனுமதா (‘அனுமானுக்கு என்னாற்செய்யப்படும் இவ்வாலிங்கனமானது’) என்னுமாறு போன்று, மார்பிலே அணைக்கும் காணுங்கோள். நான் அணைய ஆசைப்படுகிற மார்பு அன்றோ உங்களுக்குப் பரிசிலாகக் கிடைக்கப் போகின்றது?’

இவ்விடத்தில் நாரை தொடக்கமானவற்றைத் தூதாகச் சொல்லிற்று -கடகருடைய கார்ய தேசிகத்வ ஸூ சக அர்த்தமாக – சிறையை கொண்டாடிற்று -ஞான ப்ரேம ரூப பஷத்வ அன்வயத்தாலே – பேடையும் சேவலுமான சேர்த்தி கடகருடைய பரஸ்பர சேஷ சேஷி பாவ ஸூசகம் –

——————

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2-

சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் கீழ் ;
அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு:
அந்யா துபக்ராந்த மன்யதா பதிதம் (‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ )என்கிறபடியே வந்து விழுந்தது.
‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும் நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமை யின்றி ஒழியுமே,
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாமித்தனை அன்றோ?

பெருமானார்க்கு-பிரிகிற போது கண்ணாலே நோக்கி இவளைத் தனக்கே உரிமை யாக்கிப் போன-அநந்யார்ஹையாக்கி-படி.

ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாது காண்-தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போகில் அத்தனை ஒழிய,
ஒன்று இரண்டு முழுக்கால் போகாது காண் நான் பண்ணின பாபம்,’ என்று
ஸ்ரீ திருக்கோட்டியூரிலே ஸ்ரீ தெற்காழ்வான் ஸ்ரீ கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையிற் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது

திருவடிக் கீழ் குற்றேவல் –திருவடிகளிலே கிட்டி அந்தரங்கத் தொண்டுகளைச் செய்வதற்கு,
‘தலைவி பிரிந்து வருந்துகிறவள் ஆதலின், ‘அவனைச் சேர்வதற்கு’ என்னாது
‘திருவடிக் கீழ்க் குற்றேவல்’ என்கிறது என்னை?’ எனின்,
அந்தணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமாறு போன்று, இவர் பிராட்டியானாலும் மார்பால் அணைக்க நினையார்;-திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை.

எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர்.

இழந்த கால விஷய சோகமும் -த்வரையும்-ததேக ரஷ்யத்வ அத்யாவசாயமும் -ஆகிஞ்சன்ய அநந்ய கத்வங்களும் ஸூசிதம்-இவ்விடத்தில் கடகருடைய யுக்தி மாதுர்யமும் சமவாயமும் ஸூசிதம் –

——————-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3-

அனுபவித்தே அற வேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு,
‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள்.

குறள்-கோடியைக் காணி யாக்கினாற் போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படிசிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.
மாணாய்-உண்டு’ என்று இட்ட போதொடு‘இல்லை’ என்று தள்ளிக் கதவு அடைத்த போதோடு வேற்றுமை அற முக மலர்ந்து போம்படி இரப்பிலே தழும்பு ஏறின வடிவை யுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள்.
உலகு இரந்த கள்வர் என்பதற்குத்-தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் ‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று பொருள் அருளிச் செய்வர் ஸ்ரீ திருமாலை யாண்டான்.
ஸ்ரீ எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச் செய்வர்.
அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி,

ஆயின், இவள் அச் செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின்,
‘பெருநிலம் கடந்த நல் அடிப் போது’ என்று அன்றோ இவள் ஆசைப் பட்டாள்?
மேலும்,‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒரு கால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது?
ஸ்ரீ திருமங்கையாழ்வாரும், ‘முன்னங் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார்.
ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச் செயலுக்கேயாம்.

வல்வினையே மாளாதோ–இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தி யாவள்.-மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–மதி கலங்கி,-அறிவு அழிந்தாள் என்மின்.-மதி எல்லாம் உள் கலங்கி-
தாம் தந்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கின-அறிவித்த பின்பு வாராது ஒழியின், அவனது அன்றோ பழிச்சொல்!’அருளாழி அம்மான் ஆகையாலே வருவர் என்றபடி.-இனி, உங்களுக்கு ஸ்வரூபம், அவனுக்குக் குணம், எனக்குச் சத்தை, உங்களுக்கு யுக்தி – ஒரு வார்த்தை என்பாள், ‘என்னீரே’ என்கிறாள்-

இத்தால் கடகருடைய ஆசார வைலக்ஷண்யமும் ஸ்ரைஷ்ட்யமும் தோற்றுகிறது –

———-

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ 
–1-4-4-

ஸ்ரீ பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.
கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன, ‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’ ‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச் செய்தார்.

இது தன் நிலை தானும் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்லாமல் இருத்தலின், ‘இது’ என்கிறாள்.நன்னீலம் மகன்றில்காள் இத்யாதி – அவர் நீலமுகில் வண்ணராய் இருந்தார்; நீங்களும் நீல மகன்றில்களாய் இருந்தீர்கள்; செயலும் அவரைப் போன்று இருப்பீர்களோ?’ என்றபடி-நல்குதிரோ நல்கீரோ- செய்வீர்களோ, மாட்டீர்களோ? முதல் வார்த்தையிலேயே பதின்கால் சொல் மறுத்தாரைச் சொல்லுமாறு போன்று, ஆற்றாமையின் கனத்தாலே ‘நல்குதிரோ நல்கீரோ!’ என்கிறாள்.

இதில் கடகருடைய ரூப வைலக்ஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –

—————

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே 
–1-4-5-

தம்முடைய நாராயணன் என்னும் பெயர் ஒறுவாய்ப் –விகலமாய்ப்போகாமல் நோக்கிக் கொள்ளச் சொல்,’ என்கிறாள்.-என் சத்தையில் அபேக்ஷை இல்லையே யாகிலும் தன் சத்தையில் அபேக்ஷை இல்லையோ -என்று தாத்பர்யம் –மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டு அருளாய்- ‘இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்’ என்பாள்,‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள்.
‘ஆயின், குருகு இரை தேடுவதனை விட்டு இதனைப் பார்க்குமோ!’ எனின்,
இங்கும் சேலும் கயலும் உண்டாகையாலே பார்க்கும்.
இனி, தன்னைக் கண்ண நீரைக் கொண்டே நிரூபிக்க வேண்டி யிருத்தலின் ‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள் -மறுக்கும் வார்த்தையும் அமையும்; அவர் பக்கல் உள்ளது ஒன்றே வேண்டுவது என்னும்நினைவினள் ஆதலின், ‘ஓர் வாசகம்’ என்கிறாள்.

‘தாரான் தரும் என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்’ என்றார் பரகால நாயகியார்.
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம்
நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’
 என்றார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார்.
கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே’ 
என்றார் இவ்வாழ்வார் நாயகியும்.

அருளாயே சொல்ல வேணும் என்னும் ஸ்தானத்திலே அருள வேணும் என்கிறது
எதிர்தலை திர்யக் ஆக்கவுமாம் -தான் ஜனக குலத்தில் பிரக்க்கவுமாம் –
இவ் விஷயத்தில் உபகாரகரை இங்கன் அல்லது சொல்ல விரகில்லை –

நம்பி யேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய,
பட்டர் துணுக்கு என்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் பரிமாறும் படிக்குத்
திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்று அருளிச் செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு ஓர்தல் தகும்.

இத்தால் -சிறு மா மனுஷர் என்கிறபடியே கடக விக்ரஹம் ஸூக்ரஹம் -என்று தோற்றுகிறது –

————

அருளாத நீர் அருளி அவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே –
1-4-6-

தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒருவழி உண்டு.
தாம் அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே? அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது; நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்;
இப்படி அவிருத்தமாக- மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு, அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள்.

‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேஷம் என்று அறிகிலோம்; அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்.நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப் புள்-அருட்கடலான பறவை.-‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே -உடல் ஆகையால் -‘அருளாழிப்புள்’ என்கிறாள்.கடவீர் – அனுகூலர் -‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும்-ஸூக ஸ்பர்சத்தாலும் -தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப் போகாதே பிசுகிச் சுழியா நிற்கும் ஆதலின்,அசேதனமான – அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள், ‘கடவீர்’ என்கிறாள். ‘

யாமும் என் பிழைத்தோம் – ‘நாங்கள் என்ன தப்புச் செய்தோம்?-தாம் பிரிந்து துவளவிட்டு வைத்தது போன்று, நாங்களும் கிரமத்திலே பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ?
திர்யக்கின் -விலங்கின் காலில் விழுவாரும், தூது விடுவாரும் தாமாக இருக்க, –
அத்தலை இத்தலையாகியும் வாராது இருக்கிற தம்மதோ, எங்களதோ குற்றம்?’ என்பாள்,
‘யாமும் என் பிழைத்தோம்?’என்கிறாள்.

இத்தால் கடகருடைய சார க்ராஹித்வமும் ரூப சோபையையும் தோற்றிற்று-

—————–

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7-

அருளாத திருமாலார்க்கு-இதற்கு- ந கச்சின் ந அபராத்யதி -‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க,-எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர். ‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகையால் அன்றோ
என்று இன்னாதாகிறாள்,’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.
‘ஆயின், பிராட்டியின் மேல் வெறுப்பாக, ஸ்ரீ பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின், உறவு உள்ள இடத்திலே யன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –-தேவரீர் திருவருளுக்குத் தண்ணீர் துரும்பாக-ப்ரதக்ஷிண – வலம் வருதல்,-நமஸ்காராதிகள் -வணங்குதல்-முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்யும் படி –என்பு இழைக்கும் இளங்கிளியே –முஃதயத்தாலும் -இளமையாலும், ஸ்நிக்தமான பிணிதியாலும் – அன்புடன் கூடிய சொற்களாலும், வடிவில் பசுமையாலும், வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டு பண்ணுவதனால், எலும்பைச் சிதைக்கின்ற கிளியே!
இனி, ‘என்பு இழைக்கும்’ என்று பிரிக்காமல், என் பிழைக்கும் என்று கொண்டு,
‘என் நிலையை அறிவித்தால் என்ன தவறு உண்டாம்?’யான் வளர்த்த நீயலையே-கலந்தார் செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ-நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ

இதில் -கடகருடைய அவயவ சோபாதிகளும் கிஞ்சித்க்கார பிரதி சம்பந்தித்வாதிகளால் வந்த பவ்யத்தையும் தோற்றுகிறது –

——————

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே
–1-4-8-

பூவையைப் பார்த்து, ‘நீ அலையே’ என்கிறாள்.-இதனால், ‘பகவல் லாபம் சேர்ப்பாராலே’ என்று இருக்கிறாள் என்பது போதரும்.நோய் எனது-‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள்.

இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;-தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

சிறு பூவாய் -என்று கடகருடைய பருவச் சிறுமையும் உத்தேச்யம் என்று தோற்றுகிறது –

—–

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே
–1-4-9-

நம்மை நலிகைக்காக ஸ்ரீ சர்வேஸ்வரன் இவ் வாடையை வரவிட்டானாக வேண்டும்’ என்று பார்த்து,-வேற்காரர் கொடு போம் நலியப் புக்கவாறே ‘நிதி உண்டு’ என்பாரைப் போன்று,
‘நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால்,
‘அத் தலையால் வரும் நன்மையும் வேண்டா’ என்று இருந்தானாகில்,
அவசியம் வந்து என்னை முடிக்கவேண்டும்,’ என்று அவ்வாடையை இரக்கிறாள்.

நாடாத மலர் நாடி –‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர்
ஸ்ரீ நஞ்சீயர், ‘எண் திசையும் உள்ள பூக் கொண்டு’ என்கிறபடியே,
‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச் செய்வர்.

அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் ஸ்வரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக் கொண்டு அன்றோ ஸ்வரூப சித்தி?அத் தலையால் வருங் கைங்கரியமும் நமக்கு வேண்டா,’ என்று இருந்தானாகில், ‘

இத்தால் கடககார அவஸ்தா விசேஷத்தாலே பாதகராகிலும் அதில் தாத்பர்யம் இல்லை -கார்யகரராகில் உத்தேச்யர் என்று கருத்து –

————–

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் ஓன்றாம் அளவே –
-1-4-10-

விடலாழி மட நெஞ்சே-அல்லாதவற்றை எல்லாம் விட்டு முடிவில் நெஞ்சினைத் தூது விடுகிறாள்,’ என்பாரும் உளர். அப்போது ‘விடல்’ என்பவற்கு, ‘அவனை விடாதே கொள்’ என்பது பொருளாம்.
அன்றிக்கே-முந்தின பாசுரத்தின் சேஷம் என்பதாகக் கொண்டு ‘வைக்கவே வகுக்கின்று’ என்று கைங்கர்யம் ப்ரஸ்துதமானவாறே –தொண்டினைப் பற்றிய வார்த்தை வந்தவாறே’
‘தாய் முலையை நினைந்த கன்று போன்று திருவுள்ளம் பதறிச் சரீரத்தை விட்டுப் போகப் புக்கது; நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதே கொள்’ என்கிறாள் என்னுதல்;

அடல் ஆழி அம்மானை- ஸ்ருஜ்ய பதார்த்தங்களுக்கு -படைத்த உயிர்களுக்கு விரோதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்காக ஆசிலே வைத்த கையுந்தானுமாக ஆயிற்றுக் கண் வளர்ந்தருளுவது.ஆழி மடம் நெஞ்சே- ஞானத்தினை யுடையையாய் எனக்கு உரிமைபட்டிருக்கிற மனமே! -அளவுடையையாய் பவ்யமான நெஞ்சே
அன்றி, இதற்கு, ‘சுழன்று வருகிற பேதை நெஞ்சே’ என்று பொருள் கூறலும் ஒன்று.-வினையோம் ஒன்றாம் அளவும் விடல்- படைப்பிற்குப் பயன் அங்கே அவரைக் கிட்டி அடிமை செய்கையாய் இருக்க, பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நாம் அவரோடே சேருமளவும் நீ அவரை விடாதே ஒழிய வேண்டும்.

இத்தால் கடகராவார் அந்தரங்க பூதர் என்று கருத்து –

—————-

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே
 –1-4-11-

கண்ணனை – இவ் வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே- ஆஸ்ரித ஸூலபனானவன் – அடியார்க்கு எளியவன் ஆனான்.
இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து, அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் ஸ்ரீ கிருஷ்ணன் என்னவும் ஆம்.-இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்யமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு – பொன்னுலகு ஆளீரோ -6-8-

February 20, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

நான்கு தூது பாசுரங்கள்-அன்னமோடு அழுதல் துறை-தூது போகாத அன்னம்-பரத்வ அந்தர்யாமி வ்யூஹ விபவ அர்ச்சை -இவையே தூது நாலுக்கும் விஷயம்-இது பரத்வ த்வயம் பொன்னுலகு ஆளீரோ
இதிலும் ஸ்ரீ வைகுந்தத்துக்கு தூது
–குடியாலே வந்த சீர்மை யுடைய அன்னங்கள் என்றும் -இல்லாத -அன்னங்கள் என்றும்-வேறே ஆள் இல்லாமல் இவற்றை இரந்தாலும்-பெருமாள் உலகம் -ஸ்ரீ வைகுண்டம் –-நீல தோயதம் -மின்னன்ன மேனி-பெண் தூது போக மாட்டார் போல்-வினையாட்டியேன் நான் இரந்தேன் -பொன்னுலகு ஆளீரிலும்-வந்து இருந்து உம்முடைய பெடையோடும் -அலர்மேல் அசையும் அன்னங்கள் -அங்கும் உண்டே-என் நலம் கொண்ட பிரானுக்கு உரையீர் -அங்கும் உண்டே –
சேர்ப்பார்களை பக்ஷிகள் -ஞான அனுஷ்டானம் சிறகு–அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு-ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்-சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம்-

பொரு நீர் திரு அரங்கா வருவாய் என்ற இடத்தில் , அருளுகிறேன் என்னுதல் அருளேன்  என்னுதல்  சொல்லாதே பேசாதே இருந்த படியால் – வார்த்தை சொல்லும் இடத்தில் சில அன்னங்களைத் தூது விடுகிறாள் –

இப்படி ஆர்த்தரான இவர் தன்னுடைய ஆர்த்தியை கடக முகத்தாலே அறிவிக்க என்று நினைத்து
தான் அபேக்ஷித்த (உபேக்ஷித்த) இடத்திலும் கடகராய் இருப்பார் ஒருவரைப் பெறாமையாலே
ஸ்வ கார்ய பரராய் ப்ரவர்த்திக்கச் செய்தேயும் நம் கார்யம் செய்யலாகாது இருக்கிற படியோ என்று சங்கித்து வெறுக்கிற பிரகாரத்தை நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே தூதாக அபேக்ஷிக்கச் செய்தேயும் அது செய்யாதன சில அன்னங்களைக் குறித்து வெறுத்துச் சொல்லுகிற நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
அருளாய் என்ற அநந்தரம் அருளக் கண்டது இல்லை அருளாய் என்று வடிம்பு இட வேண்டாத படி எல்லாருக்கும் ஓக்க ஓலக்கம் கொடுத்து இருக்கிற இடத்திலே–அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு–ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்-சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம்

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே
–29-தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் – -அன்னமோடு அழிதல் துறை

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்–
58-உண்ணும் சோற்றில் ஆற்றாமையோடு ஸ்ரீ திருமாலான ஸ்ரீ வைத்தமா நிதி திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு அனுபவிக்க வேணும் என்று த்வாரா பரவசராய்ப் புறப்பட்டு முட்டுப் போக மாட்டாமல் எங்கனே புகும் கொல் -என்றதுவே பலித்து-விழுந்து நோவுபடுகிற தசையை-அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பரம பதாதிகளிலே போய் அறிவியுங்கோள் என்று
பரிசர வர்த்திகளான கடகரை தாம் அர்த்திக்கிற பிரகாரத்தை தூத பரேஷண வ்யாஜத்தாலே அருளிச் செய்கிற – பொன்னுலகு ஆளீரோவில் அர்த்தத்தை பொன்னுலகு இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
ஸ்ரீ திருநாடு போலே நெடுகி இராதே ஸ்ரீ திரு நாட்டில் ஸ்ரீ திரு நகரி கிட்டிற்றாய் இறே இருப்பது –
நீங்கள் புருஷகார நிரபேஷராக ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயிங்கோள் –

இன்னன்ன தூது--இப்படி பட்ட தூது ,-தரித்து இருந்து விடுகிறது அன்று —-போகத்துக்கு விடுகிறது அன்று ..-சத்தா தாரகமாக விடுகின்ற தூது –இளைய பெருமாள் சுக்ரீவன் கூட இருக்க தரித்து இருந்து தூது விட்ட பெருமாள் போல் அல்ல–கிம் கார்யம் சீதயா மம போல் அல்லவேஅஞ்சிறைய மட நாராய் -தழுவ தூது -போகத்துக்குத் தூது -அலற்றுவன் தழுவுவன் என்றாரே அங்குகதேஹி  ஹரிசார்தூல புனராகமநாயது பிராணா நாமபி-சந்தேஹோ மாமாச்யாநாத்ரா சம்சய  -சுந்தர காண்டம் 39-22—என்று
பிராட்டி திரு வடிக்கு தன் தசையை அருளி செய்தது போலே–எம்மை-நான் இருக்கிற படியே அமைந்து கிடீர் இருக்கிறது-தூது போவார்க்கு-ஒரு ஐந்தர வியாகரண பண்டிதனை-தூது போக விடும் இடத்தை
உங்களைப் போக விடும்படியான தசை கிடீர்–ஆள் அற்ற பட்டு-ஆள் அறுதி பட்டு ..உபய விபூதி நாதனும் கூட ஆள் விட இருக்கும் அவள் இறே-மிதிலா மண்டலும் ஸ்ரீ கோசல வள நாடும் குறை வறுத்தாலும்
பின்னையும் குறை கிடந்ததற்கு ஒரு மூலையிலே பத்து கோடி பேர் பிணை உண்ணும் படிக்கு ஈடாக
பரிகரம் உடையவள் இறே இப்போது ஆள் அறுதி பட்டேன் என்கிறாள்–இரந்தாள்-அவன் தான் செய்யக் கடவத்தை இவள் செய்த படி ..-அத்தலை இட்டு விடக் கடவது  இது இறே இவள் தான் விடுகிறது-இவள்-
அப்ரேமேயம் ஹி தத் தேஜ
-ஆரண்ய காண்டம் -37-18-என்னும் இவள் கிடீர்–அன்னன்ன சொல்லா
அப்படி பட்டவை சொல்லா-நான் சொல்ல விட்ட வற்றை சொல்லி ,–தானும் வேண்டும் வார்த்தை இட்டுக் கொண்டு சொல்லுகிறதும் இல்லை–ஓலை பாதி தூது பாதி என்று சொல்லும் அது பொய்யாய் இருந்தபடி–நிரபேஷராய் இருப்பவர் சாபேஷர் கார்யம் செய்து- தாங்கள் நிரபேஷராய் இருக்க வேண்டாவோ–பெடையோடும் போய் வரும் – போம் போது -அனுபாவ்ய குணங்களை அனுசந்தித்து கொடு போம் -வரும் போது-அனுபூத குணங்களை அனுசந்தித்து கொடு போம் — அடிமை செய்வார் மிதுனமாய் இருந்து இறே அடிமை செய்வது-ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ ஸூத்ரவதி யாரோடே-
பெரிய திரு அடி ஸ்ரீ கீர்த்தியோடே-அத்ரி பகவான் அனுசூயையோடே- பாதேயம் புண்டரீகாஷம் நாம சங்கீர்த்தன அமிர்தம்–ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ ஸூத்ரவதி யாரோடே திருமால் இருஞ்சோலை சேவை உண்டே–

நீலம் உண்ட இத்யாதி —அங்கு உள்ளார்க்கு சர்வ ஸ்வதாநம் பண்ணும் வடிவு –
நீலதோ யத் மத்யஸ்தா வித்யுல்லே கேவ பாஸ்கரா  –நீளா ஸூக்தம்-பிரிந்த போது மின் இலங்கு திரு உருவு –திருநெடும் தாண்டகம் -25-என்னும் படியாய்-கலந்த போது கரு முகில் ஒப்பார் -திருநெடும் தாண்டகம் -24-என்னும்படியாய்  இறே இருப்பது–நீலம் உண்ட மேனி – ஒளி படைத்த மேனி -மின்னல் கறுப்பை விழுங்கி –கறுமைக்கு முக்யத்வம் -மின்னலுக்கு முக்யத்வம் இரண்டும் உண்டே-இரண்டுக்கும் பிரமாணம்–பெண் தூது செல்லா -அங்கு ஆண் தூதோ செல்லுவது —அபலைகள் தூது செல்லாதோ ?–
அபலைகள் தூது அங்கு செல்லாது என்று இருந்தீர்களோ ?–-அபலையாய் இருந்து வைத்து தூது விடுவாள் என்று இருந்தீர்களோ ?–உங்கள் பாடும் அவன் பாடும் குற்றம் என் ?-என் குற்றத்தாலே இறே
(மத் பாபமே -நானே தான் ஆயிடுக )–அன்னன்ன நீர்மை கொலோ –அப்படி பட்ட ஸ்வபாவங்களோ ?-குடி சீர்மை இல் அன்னங்களே —-உங்கள் பாடு குற்றம் உண்டோ ?-அவன் ஒரு குடியில் பிறவாதவன் ஆகையாலே கேட்டிலன்-நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் –பிறர்க்காக உடம்பு படைத்தவன் அன்றோ —நீங்கள் குடி பிறவாதவர் ஆகையாலே சொல்லிற்று இலி  கோள் என்றும்-

எம்பெருமான் இடத்திலே அன்றோ – ஸ்வயம் புருஷார்த்தமாக போக வேண்டிய இடம் அன்றோ
பெண்மையையும் ஆள் அற்ற நிலையையும் பார்த்து இரங்காமல் தூது போகாமல் – பேடை உடன் உலாவுவதே–அனுமன் தூது–கண்ணன் தூது–நளன் தூது – ஆண் பிள்ளைகள் பொருட்டாகவே தூதுகள் உள்ளனவே-குடிச் சீர்மை இல்லாத –என்று குலத்தையும் உட்படப் பழிக்கின்றாள்-நீலம் உண்ட-மின்னன்ன மேனி பெருமான்--மின் உண்ட நீலம் அன்ன மேனி –சத்வ குண பரிபூர்ணனாய்-சார அசாரங்கள் விவேகித்து அறிய சக்தன்-ஆச்சார்யன் விவஷிதம் –

இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூது–நம்மைப் போக விடுகிறது ஸர்வ உத்க்ருஷ்டமான பகவத் விஷயத்துக்குத் தூதாக வன்றோ–எம்மை-கார்ய உபயுக்தமான கரண பாடவத்தை யுடைய நம்மை அன்றோ-வீசும் சிறகால் பரப்பீர் –ஆள் அற்ற பட்டு–வேறு தனக்கு ஆள் இல்லாமை யன்றோ அபேக்ஷிக்கிறது–இரந்தாள்–அமோகமான அப்யர்த்தனத்தை அன்றோ பண்ணிற்று–இவள்-தன் வை லஷண்யம் எல்லாம் கிடக்க அன்றோ அபேக்ஷித்தது–என்று–1-விஷயம் உத்க்ருஷ்டம் ஆகையாலும்-2-நமக்கு யோக்யதை யுண்டாகையாலும்-3-தன் ஆள் அறுதியாலும்-4-தன் பெண்மை பாராதே -நம்மை இரந்தாள் என்று நினைத்து–அன்னன்ன சொல்லாப்–அப்படிப்பட்ட கார்யத்தைப் பற்ற ஒரு வார்த்தை சொல்லாது–பெடையொடும் போய் வரும்-ஸ்வ அபிமத விஷயத்தோடே கூட கத்யாகதி பண்ணித் திரியா நின்ற–நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் உலகில்–நீல தோயதத்தை விழுங்கின வித்யுத்லேகை போலே–ஸ்யா மளத்வ ஹிரண்மயத்வங்கள் கலசின வடிவை யுடைய ஸர்வேஸ்வரனுடைய லோகத்தில்–பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ?–பெண் பிறந்தாருக்குத் தூது செல்லக் கடவோம் அல்லோம் என்கிற ஸ்வ பாவத்தை யுடையனவாய் இருக்கின்றனவோ முன்பு பெண் தூது போனார் இல்லை இறே என்று ராகவ பாண்டவ தூத வ்ருத்தாந்தத்தைத் தனக்கு ஸ்வ பாவமாக நினைத்து இருக்கின்றனவோ–குடிச் சீர்மையில் அன்னங்களே –குடிப் பிறப்பால் வந்த சீர்மை–அன்னங்களானவை பெண் பிறந்தாருக்கு ஒப்புச் சொல்லலாம் படி குடியில் சீர்மை கண்டிலோம் என்றபடி–

இத்தால்
இன்னன்ன தூது -என்று தொடங்கி

1-ப்ராப்ய விஷயம் நிரதிசய உத்க்ருஷ்டமாகையாலும்
2-தனக்கு ஞான பிரேமாதிகள் ஆகிற கடகத்வ உத்பத்தி உண்டு என்று இருக்கையாலும்
3-தன்னுடைய அநந்ய கதித்வத்தாலும் இறே
4-தத் ஏக ரஷ்யத்வ பாரதந்தர்யத்தையும் பாராதே–நம் பக்கலிலேயும் பிரார்த்தனா ரூபமான ப்ரவ்ருத்தியைப் பண்ணிற்று என்று தங்கள் அபிசந்தி தோன்ற ஒரு வார்த்தை சொல்லாதே-ஸ்வ அநு வர்த்திகளான அபிமத விஷயத்தோடே அனுபவ பரராய்க் கொண்டு யாதாயாதம் பண்ணா நின்றார்கள்-உபாஸ்யத்வ போக்யத்வ ப்ரகாஸகத்வமாம் படி வேதாந்த வேத்யமான பர விக்ரஹத்தை யுடைய ஸர்வேஸ்வர விபூதியில் பரதந்த்ரராய் இருப்பாரைச் சேர விடலாகாது என்கிற இது ஸ்வ பாவமாய் இருக்கிறதோ – இவர்கள் ஆபி ஜாத் யத்தால் வந்த சீர்மையும் கண்டிலோம்–நீலம் உண்ட மின்னன்ன மேனி-உபாஸ்யத்வம் போக்யத்வம் ப்ரகாஸகத்வம் மூன்றுமே உண்டே–ஸ்வ பாவ ஸுத்தியும் ஸ்ரைஷ்ட்யமும் அகிஞ்சித் கரமாய் இருந்ததீ என்று சடக்கென பிரவர்த்தியாமையாலே அதி சங்கை பண்ணி வெறுத்து அருளினார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்
பெறாமையாலே பரவஸையாய் இருந்த அளவானாள் என்று-அன்னன்ன சொல்லாப்-அந்த அன்னமானது சொல்லுமது அல்ல–பெடையொடும் போய் வரும்-தங்கள் பிரிவால் வரும் வியஸனம் இல்லாமையாலும்-போய்வருமது யுண்டாயும் என் தசையை இவை சொல்லா என்று அந்வயம்சொல்லாது என்பதில் ஹேதுவை உத் ப்ரேஷிக்கிறாள்-நீலம் –இத்யாதியாலேநீலம் உண்ட மின்னன்ன மேனிப் பெருமான்-நீல மேகம் உள் கொண்ட மின்னல் போன்றவளாய் குளிர்ந்த திரு மேனி யுள்ள பெருமை யுடையவரில்–உலகில் பெண் தூது செல்லா-பெண் பிரிவால் வியஸனம் உள்ளவரில் பெண் தூது அது இல்லாதவரில் லோகத்தில் பெண் தூது கார்யகரம் அல்ல-அன்னன்ன நீர்மை கொலோ?
என்பதான பரமம் உள்ளவையே ஸ்வ பாவத்தால் இவை-குடிச் சீர்மையில் அன்னங்களே –குடிச் சீர்மையாவது-அப்போதைக்கு அப்போது விஸ்லேஷ வியஸனம் வர அது அறிகை-அது இல்லாத இவ்வன்னங்கள் என் தசையை அறிந்து சொல்லுமோ-அப்படி பிரம ஸ்வ பாவம் யுள்ளது சொல்லுமே என்பது அவ்வன்னத்தில் இன்னாப்பு என்னோடு கலந்தவனே பிரிவால் வியஸனப்படாமலே
என் தூதரைக் கண்டும் இருக்கிறான் என்பதான இன்னாப்பு அவனில் –

ஸ்வாபதேசம்-
பகவத் விஸ்லேஷத்தில் இவர் உடைய ஆற்றாமை இருந்தபடி-பிராப்திக்கு ஸஹ காரிகளாய் இருந்தவர்களையும் கூட இன்னாதாக வேண்டும் படியான தசையைச் சொல்லுகிறது 

தாத்பர்யம்
கீழ் நாயகியின் தசையை திருத்தாயார் திருவரங்கன் பதில் கிடைக்காமல் -அர்ச்சையில் பேசாரே
பரமபத நாதனுக்கு அங்கு கண்ட பக்ஷிகளைத் தூது விட-அவைகள் சொல்லாமல் தங்கள் கார்யமே பார்த்து இருக்க-ஓ ஹம்ஸங்களே-உங்களை விட வேறு ஒருவரும் இல்லாமல் தூது விட அவன் இருதயத்தில் படும்படி நீங்கள் முன்னமே அவன் சேவையைப் பெறுவீர்-எனது காரியமும் பார்க்காமல்-சொன்ன பின்பும் கூடப் போகாமல் கூட சென்று அறிவியாமையால் ஸ்த்ரீகள் உடன் திரிகின்றிர்களே திரு ஆபாரணங்கள் -அத் உஜ்ஜவலமான நீல மேக ஸ்யாமளன் ஸ்வயம் பிரயோஜனமாக போக வேண்டி இருக்க போகாமைக்கு -வெறுத்து ஒரு பென்னுக்குத் தூது போக்கத் தகாது பெரும் குலத்தில் பிறக்காமல் இது செய்தீர்

—-

6-8-பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழிகள் இரண்டும், மோஹமும் உணர்த்தியுமாய்,
இதில் தூது விடுகிறதாக அன்றோ இருக்கிறது;
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற இவர்க்கு “மரணத்தில் பாதி அவஸ்த்தை” என்னும் மோஹம் இல்லையே;

உலகத்திலே, ஒவ்வொருவருக்கும் நனவு கனவு சுஷுப்தி மூர்ச்சை மரணம் என்று சொல்லப்படுகின்ற
ஐந்து அவஸ்த்தைகள் உண்டு;

அவற்றுள்,நனவாவது,-ஜாக்ரத் தசை – புறக்கரணங்களும் அந்தத்கரணமும்
தனது தனது விஷயங்களை அறிந்து பற்றுகிற நிலை.

கனவாவது, புறக் கரணங்கள் எல்லாம் அடங்க மனம் மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்க
இந்தச்சரீரத்தோடு ஒத்த வேறு சரீரங்களையும் பகலில் காண்கிற விஷயங்களோடு ஒத்த விஷயங்களையும்
ஈசுவரன் உண்டாக்க அது காரணமாக, முடி சூடுதல் முதல், தலை அறுப்புண்ணல் இறுதியாகக் காண்டல்.

ஸூஷுப்தியாவது, புறக் கரணங்களும் மனமும் அடங்க, உஸ்வாச நிஸ்வாசங்களாலே பிராணன் மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்க,
நனவிலே தன் தன் விஷயங்களிலே இந்திரியங்கள் பரந்திருந்த காரணத்தால் வந்த இளைப்பெல்லாம் மாறும்படி, புரீதத் என்கிற
நாடியிலே பரமாத்மாவின் ஸ்வரூபத்திலே சேர்ந்து சிரமம் எல்லாம் நீங்கி இருத்தல்.

மூர்ச்சையாவது, ஸூஷ்ம பிராணனோடும் ஸூதூல சரீரத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கும் நிலை.

மரணமாவது, எல்லாப் பிராணன்களும் தேக சம்பந்தத்தினின்றும் நீங்குதல்.
இப்படிப்பட்ட ‘மரணத்துக்குப் பாதி அவஸ்த்தையாயிருக்கும் மூர்ச்சை’ என்று வேதாந்தத்திலே
சொல்லப்பட்டிருத்தலைத் திருவுள்ளம் பற்றி
‘மரணத்தில் பாதி அவஸ்த்தை’ என்கிறார். சாரீரகமீமாம்சை, அத். 3. பாதம். 2. சூத். 10.காண்க.

இனி இவர்க்கு மோஹமாவது,
புறத்திலேயுள்ள பொருள்களை நினைத்தற்கும் இயலாதவராய் விஷயங்களினின்றும்
அந்தக் கரணம் விடுபட்டதாய், மனத்திற்கு அவனே விஷயமாய், அவன் குணங்களையே அநுபவித்தல்.
அதாவது,
ஆத்மாவாய் இருப்பவனே ஞானத்திற்கு விஷயமாய்த் தன்னை மறக்கை.
மேல் திருவாய்மொழியில் நிலை “நான் மநு ஆகின்றேன்” என்றும்,
“அனந்தன் என்னும் திருநாமமுள்ள அப் பரம்பொருள் எங்கும் இருப்பதால் நான்
அப் பரம்பொருளாகவே இருக்கிறேன்” என்றும் சொல்லுகிற நிலைபோலே.

உணர்த்தியாவது,
“அந்தப் பிரஹ்லாதன் மீண்டும் ஆகாசம் முதலியவற்றோடு கூடிய உலகத்தைப் பார்த்துத்
தனது தோற்றத்தால் தன்னைப் பிரஹ்லாதனாக நினைத்தார்” என்கிற பிரஹ்லாதனைப் போலே
“மாலுக்கு” என்ற திருவாய்மொழியிலும், “உண்ணுஞ் சோறும்” என்ற திருவாய்மொழியிலும் உண்டான மோஹத்தையும்,
உணர்ச்சியையும் திருஷ்டாந்தத்தோடு காட்டுகிறார் ‘மேல்’ என்று தொடங்கி.
‘மேல் திருவாய்மொழியில்’ என்றது, “மாலுக்கு” என்ற திருவாய்மொழியில் என்றபடி.

“அஹம் மனுரபவம்” என்பது, பிருகதாரண்யகம், 4-வது பிராஹ்மணம்.
“சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.
‘உணர்த்தியாவது’ என்றது, “உண்ணும் சோறும்” என்ற திருவாய்மொழியில் உண்டான உணர்த்தியாவது என்றபடி.
“த்ருஷ்ட்வாஸச ஜகத் பூயோ ககநாத் யுபலக்ஷணம்
ப்ரஹ்லாத: அஸ்மீதி ஸஸ்மார புந: ஆத்மாநம் ஆத்மநா”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா, 1. 20 : 7.
தம்மையும் உணரக் கூடியவராய் உலக விருத்தாந்தத்தையும் நினைக்கக் கூடியவராதல்.
நிர்க் குணமான விஷயத்திலே அன்றே இவர் மூழ்கியது, குணாதிக விஷயத்திலே யன்றோ.
சேஷி பக்கலிலே நினைவுண்டானால் சேஷ பூதனான தன்னையும் காணும் அன்றோ.
மேல், நெடும் போது அவன் குணங்களை நினைக்கையாலே தரித்து வலிமை குறைவும் நீங்கிப் புறத்திலே யுள்ள
பொருள்களையும் நினைக்கக் கூடிய நிலையை அடைந்தார்;
அவ்வளவிலே, இவர் தரித்தவாறே பழைய அலாபமே தலையெடுத்து
ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தவராய் அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

மேல் திருவாய்மொழியில், திருத்தாயார் “எங்ஙனே புகுங்கொல்?” என்று நொந்ததுவே பலித்து,
தன் சாபலத்தாலே புறப்பட்டாள்,
முடியப் போய்ப் புக மாட்டாமல் தன்னுடைய நகரத்தை அடுத்த உபவனத்திலே விழுந்து கிடந்து,
அவ்வளவிலும் அவன் வரக் காணாமையாலே, கண்ட பறவைகளையெல்லாம் தூது விடுகிறாள்.
தனி வழியே புறப்பட்டுப் போம்படியாய் விழுந்த இவளுக்குத் தூது போவார் இலரே;
உண்டானாலும் இவள் தனக்கு முன்னே ஈடுபட்டுக் கிடப்பர்களே;
இனித் தன் பக்கத்தில் வசிக்கிற பறவைகளுக்கு மேற்படக் கால் நடை தந்து போக வல்லார் இலரே;
இவ்வளவிலே நீங்கள் என் நிலையை அறிவிக்க வேணும் என்று அவற்றின் காலிலே விழுகிறாள்.

“அஞ்சிறைய மடநாராய்” என்ற திருவாய்மொழியில் என்னை நினைத்தானத்தனை, தன்னை மறந்தான் என்றாள்;
இத் தலையில் அபராதம் பாராதே, அத் தலையில் அபராதத்தைச் சகித்துக் கோடல் பற்றாசாக,
அபராதத்தைச் சகித்துக் கொள்ளும் தன்மையைப் பார்த்து வருவது என்று ஆள் விட்டாள்.
“வைகல் பூங்கழி” என்ற திருவாய்மொழியில், மேலே, இருமுறை தூது விட்டாளே? அவற்றிற்கும் இதற்கும் வாசி யாது? என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘அஞ்சிறைய’ என்று தொடங்கி
என்னை-பாபம்செய்த என்னை. தன்னை-அபராதங்களைப் பொறுக்கின்ற தன்னை.

“வைகல் பூங்கழிவாய்” என்ற திருவாய்மொழியின் முன்னுரையில், ‘அவ்விடங்களிலே துன்புறுவார் பலர்
உளராகையாலே அவர்கள் ரக்ஷணத்திலே ஒருப்பட்டு இத்தலையை மறந்தானித்தனை’ என்றார்;
இங்கு,‘இருவரையும் அவ்வூரில் உள்ள இனிமை மறக்கப் பண்ணிற்று என்றாள்’
என்கிறார்; இதுவும் ஒரு நிர்வாகம் என்று கண்டுகொள்வது.
‘இருவரையும்’ என்றது,பிரிந்தால் தரித்திருக்கப் போகாத வைலக்ஷண்யத்தையுடைய அவனையும்,
பிரிந்தால் தரித்திருக்க ஒண்ணாத துன்பத்தையுடைய தன்னையும் என்றபடி.
‘விசேஷஜ்ஞனாகையாலே’ என்றது, தன் வைலக்ஷண்யத்தையும் இவளுடைய துன்பத்தையும் அறியுமவனாகையாலே என்றபடி.

இருவரையும் அவ்வூரில் உள்ள இனிமை மறக்கப் பண்ணிற்று என்றாள்;
விசேஷஜ்ஞனாகையாலே துன்பத்தை அறிவிக்க வரும் என்று ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாகத் தூதுவிட்டாள்.
இத் திருவாய்மொழியில், வாராமைக்கு அடி பரப்பனாகையாலே என்று பார்த்தாள்;
‘பரப்பனாகையாலே’ என்றது, இத் திருவாய்மொழியில் வருகிற“முன்னுலகங்கள் எல்லாம் படைத்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
“தன் மன்னு நீள் கழல்மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்”-திருவாய். 6. 8 : 6.– என்கிறபடியே,
அசாதாரணமானது அன்றே வடிவு; அடியார்களோடு ஏக ரசன் ஆகை யன்றோ என்று பார்த்து
ஐகரஸ்யம் பற்றாசாகத் தூது விடுகிறாள் என்று பட்டர் அருளிச் செய்வர்.
“பல பாசுரங்களிலும் ‘இதுவோ தக்கவாறு’ என்கையாலே,
உயிர்கள் மாட்டு அருளுடைமை பற்றாசாகத் தூது விடுகிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.

“இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவ போகங்களை
நுகர்ந்தவளான நான்”
“ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18.
என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே,
அங்கே புக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

‘புறப்பட்டவள் முடியப் போக மாட்டாதே நகரத்தை அடுத்த வனத்திலே கிடந்து தூது விடுகிறாள்’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி.

“கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே
உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது” என்கிறபடியே,தலைவனுடைய பேர் அருளையே பற்றாசாகக் கொண்டு தூதுவிட்ட பேர்
உளரோ? என்ன, ‘உளர்’ என்று, அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்‘கீர்த்தியை யுடைய’ என்று தொடங்கி.
இது, பிள்ளான் நிர்வாஹத்தைப் பற்றியது.

“ஜீவந்தீம் மாம் யதா ராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 10.
பிறர் இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச் சொல்ல வேண்டாவே.
கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க் கிடவாமே செய்ய
நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம் புகழை நோக்கிக் கொள்ளச் சொல் என்று சொன்னாள் அன்றோ;
அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.

“தினைத்தனையும் விடாள்” என்ற திருத் தாயாருடைய விருப்பமே பலித்தது;
அங்கே புக்கு அநுபவித்தாள் என்பது, பிள்ளான் நிர்வாஹத்திற்குக் கருத்து.
பட்டர் திருவுள்ளம், இத்திருவாய்மொழியின் முடிவிலே கலவி உண்டானால்,
“ஆடி ஆடி” என்ற திருவாய்மொழியின் ஈற்றிலே கலவி தோன்ற அருளிச் செய்து,
“அந்தாமத்து” என்ற திருவாய் மொழியிலே அதனை விரித்து அருளிச் செய்தாற் போன்று,
மேல் திருவாய்மொழியிலே கலவியை விளக்கி அருளிச் செய்வர்;
அங்ஙனம் அருளிச் செய்யாமையாலே கலவி இல்லை என்பது. பட்டர் நிர்வாஹம்
“எங்ஙனே புகுங்கொல்” என்றதனை நோக்காகக் கொண்டு எழுகின்றது.
“செல்ல வைத்தனள்” என்பதற்குச் செல்ல ஒருப்பட்டாள் என்பது பொருள்.

6-3/6-4 -மட்டும் தானான நிலை -இந்த பதிகத்தில் இது வரை –
அபராத சஹத்வம் /படைத்த பரப்பு முதல் இரண்டுக்கும் தூது
ஷமா -தீஷா -தம் பிழையை மறப்பித்தது ஷமா உணர்த்த வ்யூஹத்தில் தூது முதலில்
சிறந்த செல்வம் -மறக்கப் பண்ணிற்று -தீஷா உணர்த்த விபவத்தில் தூது இரண்டாவதில்
இதில் -படைத்த பரப்பு மறக்கப் பண்ண சாரஸ்யம் உணர்த்தி பரத்வ த்வயத்தில் தூது –
பரத்வ த்வயத்தில் தூது -வைகுண்ட நாதனைக் கண்டு பரத்வம் -எனக்குச் சென்றாகிலும் என்று அந்தர்யாமித்வம்
அடுத்து தமரோட்டை சஹ வாசம் மறக்கப் பண்ண சௌந்தர்யம் உணர்த்தி அர்ச்சையில் தூது

எட்டாம் திருவாய் மொழியில் -கீழே ப்ராப்ய விஷயத்தில் அதி த்வரிதரான இவர்க்கு த்வர அனுரூபமான ப்ரவ்ருத்தியில்
யோக்யதை இல்லாமையால் கடக முகத்தால் பிராபிக்கையில் அபேக்ஷை பிறந்து -கடக அனுரூபமான அவனுடைய
ஸ்ருஷ்ட்ருத்வாதி ஆகாரத்தையும்
அநு பாவ்யமான அசாதாரண சிஹ்னத்தையும்
ஆஸ்ரித விரோதி நிவர்த்தனத்தையும்
அதிசயித புருஷ அநு பாவ்யமான போக்யதா வை லக்ஷண்யத்தையும்
உதார ஸ்வ பாவத்தையும்
அத்யந்த பவ்யத்தையும்
அபி ரூபனாய் அகிலாத்ம பூதனானவனுடைய அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
சர்வாதிகாத்வத்தையும்
அந்த பரத்வத்தோடே கூடின ஸுலப்யாதி அதிசயத்தையும்
உபய ப்ரயுக்தமான ஸ்ரீ யபதித்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை வடிப்பித்த மஹா உபகாரத்தை ப்ரீதி அதிசயத்தாலே
ஐஹிக ஆமுஷ்மிக சகல பதார்த்தங்களையும் கடக்கருக்கு சமர்ப்பணீயம் என்கிற அதிசயித ஆதாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால் தூது விடத் தேடின நாயகி தூது போகிற பக்ஷிகளைக் குறித்து
பிரதியுபகார ப்ரதர்சனம் பண்ணின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே
.-6-8-1

பொன் உலகு ஆளீரோ –1-ஈஸ்வரனுடைய விபூதியானது பிரிவு நிலையில் அவனையும் தன்னையும் சேர்த்தார்க்குப் பரிசிலாகக் கண்டது என்று இருக்கிறாள்.-2-இரண்டு விபூதிகளும் ஒரு மிதுனத்துக்கு அடிமை அன்றோ.-அந்த நிலை பிறந்தால் சொல்லலாம் அன்றோ.-3-சர்வேஸ்வரன் இருக்க இவ்விடம் அராஜகமாய்க் கிடக்கிறது என்றிருக்கிறாள்.4-பிரகிருதி சம்பந்தம் அற்று ஒரு தேச விசேடத்திலே போய் அநுபவிக்குமதனை இங்கே இருந்தே கொடுக்கிறாள்.-5-ஒருவரை ஒருவர் பிரிந்து துழாவுகிற சமயத்திலே கொடுக்கை இருவர்க்கும் ஒக்கும். சேர்க்கைக்காக உடம்பு இழப்பாரும் உடம்போடே கூடி நின்று சேர விடுவாருமாய் அன்றோ-உங்கள் உலகமும் நான் பட்டது பட வேணுமோ? என்பாள் ஆளீரோ என்கிறாள். –ஈஸ்வர விபூதி தான் வீணாக கிடக்க உங்கள் விபூதிகளும் வீணாக வேண்டுமோ-அவன் தன்னையும் தன்னுடைமையையும் இவளுக்கு ஆக்கி வைத்தபடி.-இவள் தான் உபய விபூதியையும் கொடா நின்றாளாகில்,
அவன் வந்தால் தானும் அவனும் எங்கே இருப்பது?’ என்ன,-‘இக் குருவி காட்டின இடத்தே’ என்று அனந்தாழ்வான் அருளிச் செய்வர்

‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நோவிலே, பிள்ளை யுறங்கா வில்லி தாசரைக் கொண்டு ஆழ்வான் புக, ஆழ்வான் செய்த நெஞ்சாறல் ஆறுவது
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்து ஏறப் போனால் அன்றோ’ என்ற வார்த்தையை நினைப்பது.-பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –-எம்பெருமானார் இங்கேயே இருக்க -ஆளவந்தார் திருவடி என்கிறார் –பரமபதம் போக ஆழ்வான் வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்றவாறு-

பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –-1-கைப்பட்டதனைக் கொடுத்தன்றோ மற்றொன்று தேடிக் கொடுப்பது.-2-தனக்கு ஆக்கின அடைவிலே கொடுக்கிறாள்.
நித்திய விபூதியைக் கொடுத்தே அன்றோ, லீலா விபூதியைக் கொடுத்தது;-இங்கே இருந்தாலும் ஞானம் பிறந்தால் அணித்தாகத் தோற்றுவது அவ்விடம் அன்றோ:-3-“மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்” – திருவாய். 9. 3 : 7.-என்றே அன்றோ இருப்பது. பிராப்தி தசையிலும் முற்பட்டிருப்பது அவ்விடமே அன்றோ.-4-அவன் உடைமை என்னும் தன்மையாலே ஒருகால் உத்தேஸ்யமாவது அன்றோ இவ் விடம்.-5-அடிமைக்கு அடைத்து ஏற்றலாயன்றோ இவ்விடந்தான் இருப்பது;
அவ்விடம் அடிமையால் அல்லது செல்லாத இடமாய் அன்றோ இருப்பது.-6- அன்றிக்கே, தூது போனாரது பரம பதம், அது உடையாரது லீலா விபூதி என்னுதலுமாம்.-புவனி முழுது ஆளீரோ –7- உத்தேஸ்யமான நித்திய விபூதியைக் கொடுத்தவள், தியாச்சியமான லீலா விபூதியைக் கொடுப்பான் என்? என்னில், இவை செய்கிற உபகாரத்தை நினைத்து, ‘இன்னது கொடுப்போம்’ என்று அறியாமல் கலங்கி. பண்டு கலங்கினாரும் இப்படியே செய்தார்கள்;

உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே ‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ!-உங்கள் தரத்துக்கு அது ஓர் அறுகும் தாளிப் பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளை யமுதனார்.-உங்களுக்கு நான் சில செய்தேனோ! வெறும் உங்கள் நீர்மையாலே செய்தது அன்றோ.-பாண்டவர்களுக்குத் தூது போன கிருஷ்ணன் படியும்,
ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட மணக்கால் நம்பி படியும் போலே இருந்ததே உங்கள்படி!

நான் இரந்தேன் –-அத் தலை இத்தலையானபடி.-ஸ்ரீஜனகராஜன் திருமகளான வேண்டற்பாட்டோடே அன்றோ தான் தூது விடுகிறது இவள்!-இரந்தேன் – மேலே, அவன் திருவடிகளிலே நான்கு முறை சரணம் புக்கார்;-இப்போது அவன் அடியார்கள் பக்கலிலே சரணம் புகுகிறார்:-அது தப்பிலும் இது தப்பாதே அன்றோ. இதற்கு வேறு விலக்கடி இல்லையே.-பிரார்த்தனா மதி -பிரார்த்தித்தலாகிற புத்தியன்றோ சரணாகதி ஆகிறது.
தப்புதல் இல்லாத உபாயத்தைப் பற்றுகிறாள்.-இனங்காள் இரந்தேன் –மிதுனமாயிருப்பார்க்கு இரந்தார் வாசி தெரியுமன்றோ.-சரணாகதி செய்தவர்கட்குத் தன் உயிரைக் கொடுக்குமவையே. -கபோத உபோத்யானம் -சாஸ்திரம் புறா கதை –
நல் நலம் புள் இனங்களுக்கு அன்றியே படு கொலைக் காரர்க்கும் இரங்க வேண்டும்படி அன்றோ -என்னுடைய நிலை-நான் இரந்தேன் ‘சரணாகதி அடைதற்குரிய குணங்கள்’ என்றது,-“நலம்” என்ற சொல், வாத்சல்யம் முதலிய குணங்களையும்,-“புள்” என்ற சொல்,(இரு சிறகு) ஞான அநுஷ்டானங்களையும்,-“இனம்” என்ற சொல்,புருஷகாரத்தையும்-இரந்தேன் -ப்ரபத்யே அர்த்தமும் கூறுகின்றன –வினையாட்டியேன் நான் இரந்தேன் –-எல்லாம் கொடுத்தாலும் அவற்றுக்கு ஒன்றும் செய்ததாகத் தோற்றாதே பல் காட்டுகிறாள்.
அவர்கள் செய்கிற உபகாரம் அளவு பட்டிருக்கில் அன்றோ ஒப்பாக ஒன்று தேடிக் கொடுக்கலாவது.-இவனுக்குப் பணி குறையை அறிவிக்கையே அன்றோ,
மேல் உள்ளன எல்லாம் அவன் பணி அன்றோ.

என் நிலைமை உரைத்துப் பொன்னுலகு ஆளீரோ –-துயர ஒலி கேளாமல் ஜீவிக்கப் பாருங்கோள்! சக்கரவர்த்தி பெருமாளை முடி சூட்டப் பாரித்த போது, இருடிகள் இராக்கதர்களாலே நோவு படுகையாலே, இராச்சியம் திரு வுள்ளத்தில் பொருந்தாமை புறப்பட்டுப் போனார் அன்றோ; அப்படியே, பெண் கொலையும் துயர ஒலியும் கேட்டால் இவை உபய விபூதியையும் ஆள மாட்டா என்று இருக்கிறாள்.

————–

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே
.–6-8-2-

முதற் பாசுரத்தில் ‘அவன் பதம் கொடுத்தாள்; அதற்கு மேலே ஒரு பதம் தேடிக் கொடுக்கிறாள் இப் பாசுரத்தில்.-அவன் பதமாகிறது, உபய விபூதியையும் கொடுக்கை அன்றோ,-அதற்கு மேலான பதமாகிறது, அவனாலே விரும்பப்படும் தன்னைக் கொடுக்கை.
தன்னைக் கொடுக்குமிடத்திலும், ‘பின்னை முன்னே’ என்னாதே, எல்லாரும் காணக் கை மேலே அன்றோ கொடுக்கப் புகுகிறது.-அவன் திருமுடிக்கு ஆபரணமான என்னுடைய கையை உங்களுக்குப் பாத பீடம் ஆக்குகிறேன்.

நெய்யோடே கூடின இனிய அடிசிலை நாள் தோறும் பாலோடே கூட நான் தர, அதனை உண்டு நீங்கள் என்னை உஜ்ஜீவிப்பிக்க வேணும். “உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்று இருக்கக்கூடிய இவள்,
இவை உகப்பது தேடி இடுகிறாள் அன்றோ. இதனால், என் சொல்லியவாறோ? எனின்,
பகவத் விஷயத்தில் உபகார பரராயிருப்பார்க்கு, ‘உண்பதில் ஒரு கை பகுந்திட்டோமாகில்
செய்யலாவது உண்டோ?’ என்று கைவாங்குமதன்று;-அவர்கள் விரும்பினவற்றையே தேடி இட வேணும் என்னும் விசேடப் பொருளைத் தெரிவித்தபடி.

கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு –-உண்டாரை உண்ணுவிக்கத் தேடுகிறாள் அன்றோ. இதனால் என் சொல்லியவாறோ? எனின்,
இவர்க்கு முன்னே இவர் விரும்பிய பொருள், இவரைப் பற்றினார்க்கு முற்பட்டிருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-“வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்.-

என் சக்கரத்து கனி வாய்- கையும் திருவாழியுமான அழகினைக் காட்டுவது முறுவலைக் காட்டுவதாய் என்னைத் தனக்கே உரிமை ஆக்கினவன்.-பிரிந்து போகிற போது ‘இவள் சத்தை கிடக்க வேணும்’ என்று நினைத்துச் செய்த-புன்முறுவலுக் காயிற்று இவள் தோற்றது.-என் கனி வாய் –-திருவாழிக்கு முற்றூட்டு ஆயிற்றுத் திருக் கை;
தமக்கு முற்றூட்டு திருப் பவளம்.-அவன் ஜீவனத்தை நித்யமாக்கினான்,
என் ஜீவனத்தைக் காதா சித்கமாக்கினான்.-அவனுக்கே கை யடைப்பு ஆயிற்றே. கை மேலே இடுமே.

மெய் அமர் காதல் – ‘தம்மைப் போலே பொய்யுமாய் நிலை நில்லாததுமான காதல் அன்று எங்களது என்று சொல்லுங்கோள்’ என்று பிள்ளான் அருளிச் செய்வர்.-சத்தியமான காதல் என்றபடி.-அன்றிக்கே, ஆத்மாவோடே ஒன்றுபட்டிருக்கின்ற காதல் என்றுமாம்.
மெய் என்று ஆத்மாவாய், ஆத்மாவோடே பொருந்தின காதல் என்றபடி.
“மெய்ம்மையே மிக உணர்ந்து” –திருமாலை, 38-என்கிற இடத்தில், மெய் என்றது, ஆத்மாவை அன்றோ சொல்லிற்று.

கிளிகாள் விரைந்து ஓடி வந்து –-பிராட்டியைக் கண்டு மீண்ட பின்பு முதலிகள் வந்து பெருமாளை உகப்பித்தாற் போலேயும்,-பெருமாள் மீண்டு எழுந்தருளுகிற போது திருவடி முன்னே வந்து ஸ்ரீபரதாழ்வானை உகப்பித்தாற் போலேயும், நீங்கள் முன்னே வர வேணும்.-அறிவித்துக் கூட வர இராதே கொள்ளுங்கோள்.-நீங்கள் முற்பட வந்த பிரீதி-சாத்மித்தால் – பொறுத்தால், பின்பு அவன் வரவாக வேணும்-அவனுடனே கூட வரில் வாய் புகு நீராய் உங்களைக் கொண்டாட ஒண்ணாது;-ஆன பின்பு நான் முறை கெடாமல் அநுபவிக்கும்படி வாருங்கோள்-உபகாரகரான உங்கள் காலிலே முற்பட விழுந்த பின்பு அவன் காலிலே விழும்படி பண்ணுங்கோள்.-ஆகையால் அன்றோ, நம் முதலிகள் குரு பரம்பை முன்னாகத் துவயத்தை அநுசந்தானம் செய்கிறது-சேதன ஈஸ்வரர்களுக்கு –ஆச்சார்யர்–ஈஸ்வரர் -இருவருக்கும் -ஆழ்வார்-நாயகி -கைங்கர்யம் -போக்யதை -தானே-சாஸ்திரம் சஸ்த்ரம் கொண்ட இருவருக்கும் கைங்கர்யம் பண்ணக் குறை இல்லையே-அன்யாபதேசத்துக்கு இதனால் விரோதம் இல்லை –

—————–

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே
.–6-8-3-

என் குழல் மேல் –அவனுக்குத் தூது போய் வந்தாரிற் காட்டிலும் இவளுக்குத் தூது போனார்க்கு உண்டான தன்னேற்றம் இருக்கிறபடி.-அங்கு மஹாராஜருடைய மது வனம் அன்றோ அழிந்தது; இங்கு அவன் காவற் காட்டினை உங்களுக்குத் தருகிறேன் என்கிறாள்.
அளகாடவி அன்றோ. தலையான பரிசில் அன்றோ இது தான். -தலைக் குழல் என்னும் காடு -தலையான பரிசு-உங்களையும் அவனையும்-ஒரு கலத்திலே ஊட்டுகிறேன் என்கிறாள் என்றபடி.-தலையான ஊண் அன்றோ.

படை நீறு எழச் செற்ற பிரான்–ஆயுதம் எடாமைக்கு அநுமதி பண்ணுகையாலே, தேர்க் காலாலே சேனையைத் துகள் ஆக்கினான்.-தன்னை அழிய மாறியும் பரோபகாரம் செய்தலையே ஸ்வபாவமாக வுடையவன் ஆதலின் ‘செற்ற பிரான்’ என்கிறாள்.
இதனால், தாழ்த்தது ஒளபாதிகம் என்று இருக்கிறாள் என்றபடி.

சூடிய தண் துளபம் உண்ட – சாரதியாய் நின்று தேரினை ஓட்டுகிற போது வைத்த வளையத்திலே மதுவைக் குடிக்கிற வண்டுகள்,-அவதாரங்களில் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைத்தாலும், அந்த நிலையை அடைந்து அநுகூலிக்கிறது திருத் துழாயாகக் கடவது,-தூ மது வாய்கள் கொண்டே – அவ் வளையத்தில் மதுவைக் குடித்துச் சுத்தமாய் இனிதான வாய்களைக் கொண்டு.-அன்றிக்கே,-வாய்கள் கொண்டே என்பதற்கு, இனிதான பேச்சினைக் கொண்டு என்னலுமாம்.

—————

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.
–6-8-4-

என் முல்லைகள் மேல் தும்பிகாள் –-உடன் கேடராய் ஒக்கப் பட்டினி விட்டுக் கிடப்பாரைப் போலே அன்றோ நீங்கள் கிடக்கிறது.-இவள் குழலில் பூவைப் போன்று, உத்தியானத்திலுள்ள பூக்களும் சருகா யன்றோ கிடப்பது;-பூ மது உண்ணச் செல்லில் 
மதுவையே உண்பவைகள் ஆகையாலே பூக்கள் உள்ள இடம் தேடி மது பானம் செய்யப்போகக் கடவீர்கோள் அன்றோ.-இவள் பக்கத்தில் உள்ளவை அன்றோ உறாவிக் கிடப்பன; அங்கு உள்ளவை எல்லாம் செவ்வி பெற்றிருக்குமன்றோ;

பொய் செய்து –-கலவிக் காலத்தில் குறைவு இருக்கிறபடி.
பல காலம் ஜீவிக்கச் செய்தேயும் ‘ஒரு கனவாய்ப் போயிற்று’ என்பர்களே அன்றோ,
பிரிவோடே முடிவு பெறுகையாலே. கனவு என்றும், இந்திர ஜாலம் என்றும், பொய் என்றும்
முடிவு பெறாத போகத்தைச் சொல்லக் கடவது.
சிர காலம் கலந்து பிரிந்தான் -பிள்ளான் -எத்தனை வருஷம் கலந்தாலும் அபர்யார்த்தி பிறக்குமே-பொய் செய்து அகன்ற – அகன்று போவதற்கு இட்ட வழி இருக்கிறபடி. என்றது, ‘கலவி’ என்று பெயரை இட்டு,- முடிவு போகக் கலவாதே வஞ்சித்து அகன்றான் என்றபடி.

மா மதுவார் தண் துழாய் முடி –-இங்கு உள்ளதும் அங்கே ஆகையாலே மது இரட்டித்திருக்கும் அன்றோ. தலையான மதுவுமே அது தான்.-கலவியிலும் பிரிவிலும் ஒரு படிப்பட்டிருக்கு மவனைக் கண்டு. -வானவர் கோனைக் கண்டு –தந்தாமைப் பேணுவார்க்கு உடம்பு கொடுத்திருக்குமவனைக் கண்டு. என்றது,-பழைய உறவு கொண்டாடி இருக்குமவனைக் கண்டு என்றபடி.-யத்ர பூர்வே சந்தி தேவாயா நித்ய ஸூரிகளைக் கொண்டாடி அன்றோ இருக்கிறான் –

நுங்கட்கே –-அவன் அல்லாத உங்களுக்கு இத்தனையும் செய்ய வேணும். இல்லையாகில்,
இவ்வளவிலே முகங்காட்டின உங்களுக்கும் அவனுக்கும் வாசி இல்லை.-நுங்கட்கே – என் முல்லைகள் மேல் தும்பிகள் அன்றோ! உங்கள் ஜீவனம் நீங்களே நோக்கிக் கொள்ள வேணும்.-அவன் பெண் கொலை புரிந்து ஸ்வரூப ஹாநி பாராமல் ஓலக்கம் கொடுத்திருந்தான்;-நான் பாடோடிக் கிடந்தேன்;-இனி உங்கள் ஸ்வரூப ஹாநி நீங்களே போக்கிக் கொள்ளுங்கோள்.-(கடக புருஷகார ஸ்வரூபம் )-கலந்து வைத்து பொகட்டு போனவனில் காட்டில் -ஆற்றாமையை முகம் காட்டின உங்கட்க்கு இத்தனையும் செய்ய வேண்டாவோ-

——————

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!
–6-8-5-

வம்மின் –முன்கை மூன்று காதமாய் இருக்கிறபடி. -வருக என்று கை கூப்பி வணங்கி -கிளி மிகவும் கிட்ட வர கேட்டது போலே –-யான் வளர்த்த – நெய்யமர் இன் அடிசில் நிச்சல் பாலொடும் ஊட்டி வளர்த்த.

வெம் கண் புள் ஊர்ந்து வந்து –வெவ்வியவான கண்களை யுடைத்தான புள்ளை நடத்திக் கொண்டு வந்து. வருகிற போதே வழியில் விரோதிகளைப் போக்குகையிலே சினத்த கண்களை யுடையவனாதலின் ‘வெம்கண்’ என்கிறது.-அன்றிக்கே,-பிரித்துக் கொண்டு போகிற போது கண் பாராதே பிரித்துக் கொண்டு போனவனாதலின் ‘வெம்கண்’என்கிறது என்னுதல்.-அங்குரூரன் கொடிய மனமுடையவன்” என்னுமாறு போலே. “அக்ரூர: க்ரூர ஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.-வெம் கண் புள் ஊர்ந்து வந்து –-பட்டம் கட்டின யானையிலே ஏறிக் காதலியைக் கிட்டும் இராஜ புத்திரனைப் போலே,-“அருளாழிப் புட் கடவீர் அவர் வீதி ஒருநாள்” திருவாய். 1. 4 : 6.-என்றே அன்றோ அடியிலே தூது விட்டது,
அப்படியே வந்தபடி.-வினையேனை –-அவனைப் போலே இரண்டு மனம் படைக்கப் பெறாத பாவத்தைச் செய்தேன்;-புணர்ச்சிக் காலத்தில் அழிதற்கும், பிரிவு காலத்தில் தரித்திருக்கைக்குமாக இரண்டு மனம் உண்டாகப் பெற்றிலேன்.

நெஞ்சம் கவர்ந்த – நாட்டார்க்கு மனம் மலர்தற்குக் காரணமான விஷயம் என் மனத்தை அழிக்கும்படி ஆவதே! சாரத்தை எடுத்துக் கொண்டானாய்க் கோதை இட்டு வைத்துப் போனான்; பூக் கொண்டு புட்டில் பொகடுவாரைப் போலே. அறமணத் தன்றோ இவர் மனம் இருப்பது; “பூசும் சாந்து என் நெஞ்சம்” திருவாய். 4. 3 : 2.-என்னும்படி.

செம் கண் கரு முகில் –கண்களாலே குளிர நோக்கி, வடிவினை முற்றூட்டு ஆக்கி நின்ற நிலை.-அன்றிக்கே,-இத் தலையோடே வந்து கலந்த பின்பு, அத் தலைக்கு வந்த நிறைவினைச் சொல்லவுமாம்.-அன்றிக்கே பிரிவினைப் பற்றிப் பேசிக் கண்களாலே குளிர நோக்கி, அவன் விளைநீர் அடைத்துக் கொண்டு நின்றபடி.

செய்ய வாய்--நூற்றுக் கணக்கில் புனைந்துரைகளைச் சொல்லப் புக்குப் புன் சிரிப்பினைச் செய்கிற திருவாய்.-செழும் கற்பகத்தை – விலக்ஷணமான கற்பகத்தை;- தானே விரும்பித் தன்னைக் கொடுக்கை.-கற்பகம், தன்னைக் கொடுக்கவும் மாட்டாது விரும்பவும் மாட்டாதே;
இவன், தன்னைக் கொடுக்க வல்லவன் அன்றோ-அன்றிக்கே,-தான் கடக்க இருந்தாலும் தன் இரண்டு உலகத்தின் செல்வங்களையும் நான் நினைத்தார்க்குக் கொடுக்கும்படி-எனக்குத் தந்தவனை என்னுதல்.-எங்குச் சென்றாகிலும் கண்டு –-வானவர் கோனைக் கண்டு என்றாரே-‘ஆள் வாரா நின்றது’ என்று கேட்டு ஓலக்கத்தைக் கிளப்பாக் கடக்கப் போய்த் திரை வளைத்துக் கொண்டிருப்பர்.-அன்றிக்கே,-புகை புக்க இடம்-ஈஸ்வர கந்தம் -காரார் திரு மேனி காணும் அளவும் போய்-என்றவாறே-எங்கும் புக்கு – எங்கும் புகுங்கோள் என்னுதலுமாம். என்றது,-பரத்துவம் வியூகம் விபவம் அர்ச்சாவதாரம் ஆகிய இவற்றைக் குறித்தபடி.-அந்தர்யாமி – “அந்தப் பரமாத்வை ஆத்மா அறிகிறான் இல்லை” என்கிறபடியே, ஒளித்திருக்கும் இடம் எங்கும் புக்கு.-

————–

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!
–6-8-6-

இத் திருவாய்மொழிக்கு, நிதானமான பாட்டு அன்றோ இது.-அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாகையாலே, ‘அடியார்கட்குச் செல்வமான பின்பு அறிவிக்க வரும்’ என்று
ஐகரஸ்யம் பற்றாசாகத் தூது விடுகிறாள்.

என் மின்னு நூல் மார்வன் –என் மின்னு நூல் –என் மார்வன் –தன் திருமேனியிலே சாத்தச் செய்தே என் மனத்திலே இட்டாற் போலே பிரகாசிக்கிற பூணு நூலைக் காட்டி-
நெஞ்சிலே -அனுபவம் மானசம் என்றவாறு –-என்னைத் தனக்கே உரியவளாக்கினவன்.-என், என், என் என்று பதங்கள் தோறும் சொல்லுகையாலே, ஒப்பனை அழகிலும் வடிவழகிலும், சௌலப்யத்திலும் தனித்தனியே ஈடுபட்டபடி.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன,-‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது.-இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை:-நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது;
இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது.
பெருமாளை புண்படுத்தியது யாவது -விபீஷண சரணாகதி உக்தி அநந்தரம் உடன் கொள்ளாமல் வார்த்தைகளைச் சொல்லி-கால விளம்பம் -புறா இது எல்லாம் செய்ய வில்லையே -பிராணான் பரித்யஜ்ய -புறா செய்ய –-மேலே செய்ய வழி இல்லையே என்ற புண் என்றுமாம் – சரண்யன் புறாவாலே பல சித்தி வேடனுக்கு –சரண்யன் குணத்தாலே தான் பலிக்கும் என்றவாறு –

சொல்லிச் சென்மின்கள்-அது வழிக்குப் பாதேயம் காணும். அங்கே போனால் சொல்லப் பார்த்திராமல் போகிற போதே சொல்லிக் கொடு போங்கோள்.-அவனுடைய வை லஷண்யம் கண்டால் வாய் எழாமல் போனாலும் போகுமே -சொல்லிக் கொண்டே போமின்-அவனுக்கு மறு பேச்சு சொல்ல அவகாசம் கொடுக்காமல் -என்றுமாம்-

————————

பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே
.–6-8-7-

என் ஆழிப் பிரான் – தன்னுடைய அசாதாரணமான விக்கிரஹத்தை எனக்கு ஆக்கினவன்.
‘யாவையும் யாவருமாய் நின்ற மாயன்’ என்று உலகமே உருவமாய்க் கொண்டு நின்ற நிலையைச் சொல்லி வைத்து, ‘என் ஆழிப் பிரான்’ என்கிறார் அன்றோ, அசாதாரணமான வடிவுக்குத் தாம் ஈடுபட்டபடி.“நிராய் நிலனாய்” என்று வைத்து, “கூராராழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால் வாராய்” என்றாரே அன்றோ.-அவனுக்குப் புறம்பாய் இருப்பது ஒன்று இல்லை என்று சொல்லுவதற்காக,

வினையாட்டியேன் – உங்களைக் கொண்டாடுகை தவிர்ந்து, காரியம் கொள்ளும் படியான துக்கத்தை அடைந்தவளானேன்.-“மாசுச:” என்று சொன்னவன் விளைத்த சோகத்தை, அசேதனங்கொண்டு தீர்க்க இருக்கிற மஹா பாபியானேன்.-

————–

பாசற வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக்குருகே! அருள்செய் தொருநாள்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே
.–6-8-8-

நும்மை அல்லால் மறு நோக்கு இலள் –உம்மை ஒழிய வேறு குளிர்ந்த விழி இல்லை. நடந்ததைச் சொல்லிக் கொள்ளுவதற்கும், உம்மை ஒழிய வேறு ஒருவரை யுடையள் அல்லள். “தோழிமாருடன் சுகமாக விருப்பாய்” என்னும் நிலையும் குலைந்தது.
அன்றிக்கே,-நும்மை அல்லால் – ‘வாரா நின்றோம்’ என்று, ஸ்ரீ பரதாழ்வானைப் போலே ஆள் வர விடத் தரியாது என்னுதல்.-அன்றிக்கே, ஸ்வரூப குணங்களை நினைத்துத் தரித்திருக்கும் அளவல்லள் என்னுதல்; அன்றிக்கே, உம்மை ஒழிய, பந்துக்களை நோக்கும் நிலை கழிந்தது என்னுதல்.

———–

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே
.–6-8-9-

பேர்த்து மற்று ஓர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் –-தன் பரிகரங்களிலே ஒன்றைக் கொண்டு போது போக்குகிறாள் என்னும் நிலையும் குலைந்தது.
வெறுமையை முன்னிடுமத்தனை அன்றோ ததீயர் பக்கலிலும். உங்களை ஒழிய வேறு ஒரு ரக்ஷகரை யுடையேன் அல்லேன்.-ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -வெறுமை முன்னிட்டே -ஆச்சார்ய அபிமானத்துக்கு – ஸ்வ அபிமானம் குலைத்த நமக்கு -பரதந்த்ரன் அபிமானமே உத்தாரகம் – ஆச்சார்ய உபதேசம் எதிர் பார்த்து அவன் கார்யம் செய்ய இவர் அதுவும் இல்லாமல் அருளுவாரே –

கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் –எல்லா விடாயும் ஆறுங்கண்டீர் அவ் வடிவைக் காணப் பெறில். இவள் கண்களுக்குக் கருப்பா யிருக்கிறதன்றோ.
கருமை யெல்லாம் திரண்டாற் போலே இருக்கிற மஹா மேகம் போன்ற வடிவை யுடையவன்.-கார் காலத்தில் திரண்ட மஹா மேகம் என்றுமாம்.
அன்றிக்கே,-மாமுகில்–மாறாதே கொடுக்க வல்ல முகில் என்றுமாம்.

வார்த்தைகள் கொண்டருளி வந்திருந்து வைகலும் உரையீர் – ஒரு கால் போய் அவன் வார்த்தையைக் கேட்டு, என் பக்கலிலே கிருபையைச் செய்து வந்திருந்து,
அதனை எனக்கு எப்போதும் சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள்.
அன்றிக்கே,-விண்ணவர் கோமானான கண்ணனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு-
“மாசுக:” என்று பலத்தோடே முடிவு பெற்றிருக்கிற வார்த்தைகளைக் கொண்டு,
என் பக்கலிலே கிருபையைச் செய்து வந்திருந்து வைகலும் உரையீர் என்றுமாம்.
வாரான் என்றோ பல வ்யாப்த வார்த்தை யாகவோ –மாட்டேன் என்கிற வார்த்தை -தனது சத்தை தரிக்க அவன் பக்கலில் இருந்து ஏதேனும் -தாராயினும் –போலே -வேண்டும் –
ஜீவிஷ்ய பேஷஜம் போலே சீதை வார்த்தை சொல்லு அத்தைக் கொண்டு ஜீவிப்பேன் -என்றாரே பெருமாள் திருவடி இடம் –

————-

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே
.–6-8-10-

என்னை –அச்சேர்த்தியிலே அடிமைசெய்ய ஆசைப்பட்டிருக்கிற என்னை.
‘இப்படி சீர்கேட்டினை அடைந்தாள் இவள் என்று,-இவள் பசலை நிறத்தைத் தம்முடம்பிலே காட்டவும் வற்றாகாதே இவை’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
அன்றிக்கே,-உம்முடைய தேவாரமோ! இவள் அந்தப்புர பரிகரம் அன்றோ என்னுங்கோள் என்னுதல்.-தேவாரம் -க்ருஹார்ச்சை -அர்ச்சை – அர்ச்சகர்கட்கு வசப்பட்டதன்றோ.-மந்திரத்து ஒன்று உணர்த்தி–ஓலக்கத்திற் சொல்லாதே கொள்ளுங்கோள்;-அவள் சொல்லே கேட்குமிடத்தே சொல்லுங்கோள் என்னுதல்.-போக தசையில் அர்த்தாந்தரம்–கேவலம் ஏகாந்தம் ஆனால் மறுக்கவும் கூடும் –-மந்திரம் – பிரணவம். ஒன்று – அதில் நடுப்பதம்.
அதிற் சொல்லுகிறபடியே அநந்யார்ஹதையை விண்ணப்பம் செய்து.-உரையீர் மறுமாற்றங்களே – முன்பு செய்து போந்த குற்றங்களைப் பார்த்து அவன் சொல்லுகிற வார்த்தைகளையும், சம்பந்தத்தையும் நம் நிலையையும் பார்த்து அவள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்டு வந்து சொல்லுங்கோள்

—————

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே
.–6-8-11-

இவர் கலங்கிச் சொல்லச் செய்தேயும், பகவானுடைய அவதாரம் போலே தோன்றின என்றபடி. தோற்றம் – தோன்றுதல்.-ஆழ்வாருடைய திருவாக்கிலே புக்கு
‘அங்கிட்டுப் பிறந்து நாம் தூயராய் அடிமை செய்ய வேணும்’ என்று அச் சொற்கள் தாம்
‘என்னைக் கொள், என்னைக் கொள்’ என்று வந்து அடிமை செய்கிறபடி.
வைதிகர் அல்லாதாருடைய வாக்கில் புக்க தோஷம் தீர்ந்தது இப்போதே யன்றோ சொற்களுக்கு.

இவர் கிலேசம் அவன் முகம் காட்டத் தீரும்;-இப் பாசுரம் நித்தியமாகையாலே, கேட்டார் தரிக்க மாட்டார்;-ஊற்றிடத்து உண்டான நுண்ணிய மணல் போலே உருகுகின்ற மனத்தை யுடையராய் நீராய் உருகா நிற்பர்.-இதற்குப் பலமாகச் சொல்லப்பட்டது என்? என்னில்,
பகவானுடைய குணங்களிலே ஈடுபட்டவர்கள் பாசுரம் கேட்டு அழிகையும் பேற்றிலே சேர்ந்ததாகையாலே இது தானே பலம் என்கிறது.-உருகிண்டே இருப்பதே பிராப்ய அந்தர் பூதம் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே –எல்லியும் காலையும்–8-6-

February 19, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி மாலை பெற்று மகிழ்தல் -துறை-பகவத் ப்ரஸாதம் பெற்றபின்பு பிரதிகூலமானவை எல்லாம் அனுகூலமாகுமே-செறுவாரும் நன்மை செய்வார்களே–பெரியாருக்கு ஆட் பட்டால் பெறாத பயன் என்ன
திருத்தண்கா இப்பொழுது தான் குளிர்ந்ததானது-இதுவே கீழ்ப்பாட்டுக்கும் இதுக்கும் சங்கதி
மாலைப் பிரசாதம் பெற்றாள் -அதன் பயனே இது
-எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் -நாயகி துன்பம் நீங்கிய திருவாய் மொழி அதுவும்-

நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் உடைய கிருபையே இவ் ஆத்மாவுக்கு ரஷை
இவன் கடாஷித்தால் இவ் வருகில் உண்டான பிரதி பந்தங்களும் தானே அனுகூலிக்கும்

ராஜா குமாரன் தட்டியில் இருந்த பொழுது ,பிரதி கூலித்தவர்கள் அபிஷிக்தன் ஆனவாறே-
தாங்களே வந்து ,அனுசரிக்குமா போலேயும்-பிராட்டியை தர்ஜன பர்த்சனங்கள்  பண்ணின ஏகாஷீ ஏக கர்ணிகளான ராஷசிகள் அனுகூலித்தால்   போலேயும் –வேற்றுப் பொருள் வைப்பு அணி இது என்பர்
காற்று குளிர்ந்து இருப்பதுக்கு ஹேது சொன்னவாறு –

இப்படி தமக்குப் பிறந்த ஆஸ்வாசத்தாலே முன்பு பாதகமான லௌகிக பதார்த்தங்களும் அனுகூலித்த படியை நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாய் மாலையைத் தரிக்கையாலே முன்பு நலிந்து போந்த வாடை தணிந்த படியை நாயகி உட் கொண்டு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
பகவத் அலாபத்தாலும் சம்சாரத்தில் யுண்டான தாபத் த்ரயத்திலுமாக இவர் நொந்து இருக்கச் செய்தே
நெடுநாள் பாதகமாய்ப் போந்த வாடையானது இப்போது ஒரு ஸம்ஸ்லேஷ விசேஷத்தாலே வந்து அனுகூலமான படியைச் சொல்லுகிறது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி அவதாரிகை
அபிமத அன்வயத்தால் ஆஸ்வஸ்தையான தலைவி முன் பிரதிகூலித்தது எல்லாம் இப்போது அனுகூலமாயிற்று என்று தலைவனோடு சொல்லுமதாய் அருளிச் செய்கிறார்
முக்தனுக்கு இந்தப் ப்ரக்ருதியும் அனுகூலமேயாம் என்பதை ஸூசபிக்கைக்காக –

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே
–27-தலைவி மாலை பெற்று மகிழ்தல் –

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து–76-இவருடைய பெரு விடாய் கெடும்படி இவரோடு வந்து சம்ச்லேஷிக்கக் கோலி அடுத்து அணித்தாக ஸ்ரீ திருக் கடித் தானத்திலே வந்திருந்து தம் பக்கலிலே அத்ய அபி நிவிஷ்டனாய் இருக்கிறபடியை அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டர் ஆகிற எல்லியும் காலையில் -அர்த்தத்தை எல்லி பகல் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –இப்படி
இங்குற்றை இருப்பு-தம்மை விடாய் கெட விஷயீ கரிக்கைக்காக என்றும்-இஸ் ஸ்வபாவத்தை பொருந்தி இருந்து-அருளிச் செய்தார் -என்கை-அவன் வரவாற்றாலே – மாயக் கூத்தனில் விடாய் தீர்ந்து- பொருந்தி இருந்து அருளிச் செய்தார் -என்கை

சேமம் செம்கோன் அருளே —இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை-அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு  அநர்த்த அவஹானாய்  இருக்கும்-எங்கனே என்னில் —-ஜகத்தை உண்டாக்குகையும் ,-சேதனருக்கு கரண களேபராதிகளை  கொடுத்து பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி-திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே- சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும்-இத்தை கால் கடை கொண்டு , தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது–மாமேகம் -என்று தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில் அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே  இருப்பது அவன் படி-பக்தி உழவனின் பெரும் உபகாரங்கள் –ஷேம க்ருஷி பரம்பரைகளைப் பட்டியல் இடுகிறார்-யாதானும் பற்றி அன்றோ நாம் இவற்றைத் தப்புவது -இவன் சைதன்யம் –தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அவன் சைதன்யம்-உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி
இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்- தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோ பாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று
–உத்தமன் என்றும் உளன் கண்டாய் – நாம் பாராமுகனாய் இருக்கும் அவஸ்தையிலும் அவன் ரஷித்தே தீருவான்–செம்கோன்–செவ்விய நிர்வாககன் —
பதிம் விஸ்வஸ்ய — யஸ்யாஸ்மி ந தம் அந்தரேமி பாரார்த்யம் ஸ்வம் —என்று சொல்லலாம் படி இருக்கும்-

செருவாரும் நட்பாகுவார் என்று —
சத்ருக்களும் பந்துக்கள் ஆவார் என்று சத்ருக்களும் மேவுற்று செய்வார்கள் என்றுமாம்-
த்யாஜ்யமும் ,பகவத் கடாஷத்தாலே உபாய சக காரியாய் ஸ்வ யத்ந த்யாஜமாய் இருக்கும்–த்யாஜ்யமான சரீரமும் அவன் அருள் இருண்மதால் உபாயத்துக்கு ஸஹ காரியாய் -கைங்கர்யத்துக்கு
ஸ்வ யத்ன உபாயாந்தரம் த்யாஜ்யம் -உபாயாந்தரம் என்று கொண்டு சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் செய்தவை உபாயாந்தரம் இல்லை –அதிகார பூர்த்திக்கு சித்த்யர்த்தம் கைங்கர்யத்துக்கு உத்தேச்யம் அன்றோ இவை

ஏமம் பெற –
பழமை பெற-ரஷை பெற என்றும் ஆம்–வையம் சொல்லும் மெய்யே — லௌகிகமான  பழம் சொல்லும் சத்தியமாய் இருந்தது–சாவாதிருந்தால் காண்பன சில உள என்னுமா போலே —கல்யாணீ லௌகிக ப்ரதிபாதிமே -ஏதி ஜீவநதி இத்யாதி--நூறு வர்ஷம் ஆனாலும் வாழ்ந்து இருப்பவனுக்கே ஒரு நாள் ஆனந்தம் கிட்டும் -பிராட்டி அசோகா வனத்திலே இருந்து-இனி முடிய அமையும் என்று நிச்சயிப்பது
பெருமானை காணலாம் ஆகில் இருந்தால் ஆகாதோ-என்பதாமே- அவ் அளவிலே திரு அடி சென்று
ராம குணங்களை சொல்லி ,முகம் காட்டின அளவிலே , இங்கனேயும் ஓன்று சம்பவிப்பதே-என்று ஹிருஷ்ட்டையாய் – ஒரு காலத்தில் சோகித்தார் முடியாது இருந்தால் ஒரு காலத்தில் ஆனந்திக்கலாம் என்று சொல்லுவது- இன்று வாடை குளிர்ந்த படியால் மெய்யாகக் கண்டோம்
–பத்து மாதங்களில் ஒன்பது மாதம் இருந்தால் தானே இப்பொழுது திருவடி வார்த்தை கேட்கவும் முடிந்தது-பின்பு ராமர் கூட கூடவும் பெறுவாள் –

பண்டு எல்லாம்-
சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே என்றும் பிரிவேயாய் வாடையின் கையில் நோவு பட்ட படி–அறை கூய்–மகாராஜர் பெருமாளை அண்டை கொண்டு , வாலியை அறை கூவினால் போலே
இங்கு வாடை தனி வீரனான படி
யாமங்களோடு எரி வீசும் —பாதகத்தில் உறைப்பாலே கோமுக வியாக்ரம் என்கிற படியாலே–பசு தோல் போர்த்திய புலி போல் -வேறு பட்டு வருகிற படி-வீசும்-
தன் மேல் விரஹ அக்நி கதுவாமே கடக்க நின்று வீசும் படி–லௌகிக அக்நி போல அன்று இறே நரக அக்நி   —அத்தை நீர் என்னலாம் படி இறே விரஹ அக்நி

நம் கண்ணன் தண் அம் துழாய் இத்யாதி —
துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்–வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே –அழகியதாய் ஸ்ரமஹரமான திரு துழாய் மாலையை ஸ்பர்சிக்க —சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா–ஸ்பர்சிக்கவே அமையும்–அவ் வாடை – முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள் — முன்பு அப்படி தடிந்து போன வாடை–ஈதோ வந்து தண் என்றதே —இப்படி வந்து குளிரா நின்றது-.ஈதோ வந்து தண் என்றது வையம் சொல்லும் மெய்யே-

திருத் துழாய் மாலையை தரித்து -முன்பு நலிந்த வாடை இப்பொழுது தணிந்ததே –தலைவன் உடன் கலந்த அனுபவம் என்றுமாம்–சேமம் செங்கோன் அருளே விசுவாசம் பிறக்கவே பகைவரும் நண்பர் ஆவார்-அவன் குண விசேஷங்களில் ஆழ்ந்து உலக பொருள்கள் துன்பம் தவிர்ந்தமை சொல்கிறதுபந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் பூண் அகில் சிற்றில் தூதை முதலாவன
குண த்ரய விசித்ர கர்ம ஸூ த்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்து எழுந்தும் சுழன்றும் உழன்றும் பறி பட்டும் அற்ப சாரமாமாவையுமாய் மதீயம் என்னில் விட்டகலவும் ததீயம் என்னில் இகழ்வறவும் முனிவதும் இக்காலம் ஈதோ என்னப்படும் பொங்கைம் புலனில் போக்யாதி ஸமூஹம் –
ஆச்சார்ய ஹிருதயம் –இரண்டாம் பிரகாரணம் இறுதி சூர்ணிகை – -149 – இதில் ஈதோ-இந்த பாசுரச் சொல் –

சேமம் செம்கோன் அருளே-நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ரக்ஷகமானது–செருவாரும் நட்பாகுவர் என்று -அப்போது பாதகராவாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று-ஏமம் பெற-தஞ்சமாக விஸ்வசிக்கலாம் படி-வையம் சொல்லும் ,மெய்யே-நாடு மெய்யாகச் சொல்லா நிற்கும்–எங்கனே என்னில்-பண்டு எல்லாம் மறை கூய் யாமங்களோடு எரி வீசும்-முன்பு எல்லாம் எதிரேறி விரோதித்து ஜாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்-நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,-நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட–அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன் இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –

இத்தால்–சேமம் என்று தொடங்கி–நிருபாதிக சேஷியான ஈசுவரனுடைய கிருபையே ரக்ஷகமானால்
தத் விபூதி பூதரும் அனுகூலிப்பார்கள் என்று ஷேம உத்தரமாம் படி லோகம் ஸத்யம் சொல்லா நிற்கும்
எங்கே கண்டோம் என்னில் முன்பு ஸ்மா ரகமாய்க் கொண்டு காலம் தோறும் தாப ஹேது வானது
ஸர்வ ஸூலபனான சர்வேஸ்வரனுடைய விஷயீ காரம் யுண்டான அளவிலே அந்தப் பதார்த்தம் தானே அனுகூலித்து ஆஸ்வாஸகரமாயிற்று என்று அபரோஷித்து அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்-ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச
மூர்த்ந்யாதாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்-
ஸ்ரீ கீதை -8-12- ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்-8-13—எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில்
நிலை யுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,–ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான். உண்டானவாறே பூர்வ அனுபவ ஸ்ம்ருதி இன்றிக்கே ஒழிவது –அங்கன் அன்றிக்கே ஸம்ஸாரத்திலே இருந்து ஞான லாபம் பிறந்தது இரண்டு ஆகாரமும் தோற்றும் இறே-இது போக்யமாய்த்தோ இல்லையாகில் ஆகையாலே ஞானம் பிறந்தது இல்லையாம்
இது பிரதிகூலமாய்த் தோற்றிற்று இல்லையே யாகில் அப்ராப்தியே யாம் – இரண்டுக்கும் நடுவில் அவஸ்தை இறே இது –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியாக்யானம்-சேமம் செம்கோன் அருளே-நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ஸூக கரமானது –செருவாரும் நட்பாகுவர் என்று முன்பு பாதிப்பாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று ஏமம்பெற பழகினும்-வையம் சொல்லும் ,மெய்யே லௌகிகமான பழம் சொல்லும் மெய்யே எங்கனே என்னில் பண்டு எல்லாம் மறை கூய்-முற் காலம் எல்லாம் எதிரேறி விரோதித்து-யாமங்களோடு எரி வீசும் யாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்-நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,-நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட–அவ் வாடை ஈதோ வந்து அவ்வாடையே இப்போதாக வந்ததாய்-தண் என்றதே-ஸூக ஸீதமாய் இரா நின்றதே –

தாத்பர்யம்
கீழ் பகவத் ஆலாபத்தால் நொந்த -சம்சார அச்சத்தாலே பாதிக்கப்பட்ட ஆழ்வாரை தலைமகனே ஆஸ்வசிப்பித்த அளவில் அவற்றில் நெஞ்சு ஊன்றி – சந்தோஷமாக பாலை நிலத்தில் நடந்து இழைத்த துக்கம் தீரப்பெற்று-திவ்யதேசங்களைக் காட்டக் கண்டு ஸூகித்த ஆழ்வார்
அவனால் சாத்தி அருளப்பெற்ற திருத்துழாய் இப்போது குளிர்ந்து ஆனந்தகரமாய் இருக்கக் கண்டு
தெய்வம் அநு கூலித்தால் -அனைத்துமே அநு கூலிக்கும் என்கிற உலக மொழியை
இப்பொழுது யதார்த்தம் என்று அறிந்தோம்-பகவத் அருள் இல்லாவிட்டால் இன்று உள்ள அநு கூல்ய பதார்த்தங்கள் எல்லாம் பிரதிகூலிக்கும் என்றும்-அருள் இருந்தால் துக்கம் தருமவை எல்லாம் ஸூக கரம் ஆகும் என்கிற யதார்த்தம் நன்றாகவே இப்பொழுது அறிந்தேன்-
ஜகத் ரக்ஷணத்துக்கு ஸ்ரீ யப்பதியே ஏக ரக்ஷகம் என்றும் தேவ தாந்தரங்களும் சாதனாந்தரங்களும் ரக்ஷகம் ஆகாவே

8-6–எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ-ப்ரவேஸம்-

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

மாயக் கூத்தா என்கிற திருவாய் மொழியிலே-இவருக்கு ஓடின விடாய்க்கு உதவப் பெற்றிலோம்-
என்னுமதனாலே தபிக்கக் பட்டவனாய் -ஆகுலத்தை உடையவனாய் -பிற்பாட்டுக்கு
உங்களுக்கு வருகையினாலே நான் மிக்க நாணத்தை அடைந்தேன் -என்றபடி நாணி

ப்ரசீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷோ ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்த்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
இனி நாம் கடுக முகம் காட்டில் பிரீதியாலே உடைகுலைப் படுவர்-ப்ரீதியைப் பொறுப்பித்து உளர் ஆக்கி-
பரிமாற-வேண்டும் -என்று நாளை வதுவை -நாச்சியார் திருமொழி –சாத்மிப்பித்து-
பதினான்கு ஆண்டு பிரிவாலே நொந்த ஸ்ரீ பரத ஆழ்வானைத் தரிப்பித்து-
முகம் காட்டுகைக்காக திருவடியைப் போக விட்டு ஸ்ரீ பரத்வாஜ பகவான் ஆஸ்ரமத்தில் இருந்தாப் போலேயும் –

பாண்டவர்களுக்காக தூது போகிற போது அன்பினால் பரவசப் பட்டிருக்கிற ஸ்ரீ விதுர ஆழ்வான்-
முதலாயினோர்கள் பிரீதியைக் குறைத்து முகம் காட்டுகைக்காக
குசத் ஸ்தலத்திலே தங்கி உள்ளான் -அவன் காலையிலே இங்கு வருவான் -என்கிறபடியே-
உபப்லாவ்யாத் இஹ சத்த உபயாதோ ஜனார்த்தன-குசஸ் ச்தலே நிவசதி ச பிராதா இஹ ஏஷ்யதி -உத்தியோக பர்வம் -86-1-
குசஸ் ஸ்தலத்தில் விட்டுக் கொண்டு இருந்து பிற்றை நாள் அஸ்தினாபுரத்துக்கு-எழுந்தருளினாப் போலேயும்-

தூது போனதே ஸ்ரீ விதுர ஆழ்வானுக்காக ஆனால் போலே -அன்றோ
எண்ணாயிரத்து எச்சான் -வீட்டுக்கு போகாமல் பருத்திக்கு கொல்லை அம்மையார் திரு மாளிகைக்கு போனார் ஸ்வாமி –

தம்மோடு கலவியிலே நோக்குள்ளவனான சர்வேஸ்வரன்-
தம்முடைய ப்ரீதியைப் பொறுப்பித்து தம்மோடு கலக்கைக்காக-
திருக் கடித்தானத்திலே எழுந்தருளி இருந்து தம் பக்கல் செய்கிற வ்யாமோகத்தை இனியராய்-
அதனைப் பேசி அனுபவிக்கிறார் –

மேல் திருவாய்மொழியில் துக்கத்து காரணமான நினைவு தானே இப்போது-உஜ்ஜீவனம் ஆம்படி செய்தான்-
செறுவாரும் நட்பாகுவார் அன்றோ செங்கோன் அருள் பெற்றவாறே-திருவிருத்தம் -27-

38 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் நம்மாழ்வார் –
12 -மலையாள திவ்ய தேசங்கள் -திரு வித்துவக் கூடு -குலசேகர பெருமாள் -மட்டும் மங்களா சாசனம் –
சாத்ய ஹ்ருதி ஸ்த்தானாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்தா கந்தம் தாயப் பதியிலே –
ஸ்ரீ அற்புத நாராயணன் – ஸ்ரீ கற்பக வல்லி தாயார் –
திருக் கொடித்தானம் -சிதைவு
பரிமளம் கொண்ட ஸ்தானம் -ஆழ்வார் திரு உள்ளம் ஆத்ம குண பூர்த்தியால் பரிமளம் –
இங்கே தவம் புரிந்தது ஆழ்வார் திரு உள்ளம் பெற்றான் –
தாயப்பதி விசேஷ விசேஷண அசாதாரண க்ஷேத்ரம் இது –
அற்புதன் நாராயணன் -ஆழ்வார் திரு உள்ளம் புக தபஸ் -இதுவே அத்புதம் தானே –

ஆறாம் திருவாய் மொழியில் -இப்படி அனுபவ அபி நிவேசத்தாலே அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிட்ட இவ் வாழ்வாருடைய
ஆர்த்தி தீருகைக்காக இவருடைய சகல விரோதிகளை போக்கி ஸம்ஸ்லேஷிப்போம் என்று ஈஸ்வரன்
திருக் கடித்தானத்திலே ஆசன்னமாக வந்து ஸந்நிஹிதனான படியை பிரகாசிப்பிக்க அவனுடைய
ஆஸக்தி நிதானமான சேஷித்வத்தையும்
அசேஷ விரோதி நிவர்த்தகமான சாமர்த்யத்தையும்
பராக்ரம ஸைக்ர்யத்தால் வந்த வீர ஸ்ரீ யோகத்தையும்
ஆந்த்ர விரோதி நிவர்த்தகமான அந்த ப்ரவேசத்தையும்
ப்ரத்யாசக்திக்கு அடியான ப்ராப்ய தேச வர்த்தித்தையும்
அவனிலும் அவன் தேசம் விரோதி நிவர்த்தகம் என்னும் இடத்தையும்
தேச ஸ்ம்ருதி மாத்திரமே துக்க நிவர்த்தகம் என்னும் இடத்தையும்
ஆஸன்ன தேசத்தினுடைய அசாதாரண்யத்தையும்
அர்ச்சாந்தர ஸ்த் தலத்திலும் ஸந்நிஹிதன் என்னும் இடத்தையும்
ஆஸன்ன தேச ஸ்த்திதி அந்த ப்ரவேச அர்த்தம் என்னும் இடத்தையும்
அனுசந்தித்து -நெஞ்சிலே வந்து புகுந்து தம்முடைய விரோதியைப் போக்கி அனுபவிப்பதாக அத்யா சன்னனான
அவனுடைய அபி நிவேசத்தைக் கண்டு தமக்குப் பிறந்த ஹர்ஷத்தை அருளிச் செய்கிறார் –

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்-நிர்ஹேதுகம்-ஆகமனம் – ஆஸக்தி -விரோதி நிவர்த்தனம் – அனுபவம் -நிரதிசய உபகாரம் பண்ண வந்தவன் திவ்ய தேசம் இது –

நல்ல வருள்கள் –
என் குற்றத்தை யாதல்-
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்-
தன் பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே-விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-
என் வருத்தத்துக்காக அருளினார் என்றால் கிஞ்சித் ஸ்வாதந்த்ரய சாதனத்வம் கிட்டுமே-

நமக்கே தந்தருள் செய்வான் –
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே-
நித்ய ஸூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பன் –மேல் திருவாய் மொழியிலே-
மொய் பூம் தாமம் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமானே -என்று-இவர் ஆசைப்பட்டபடியே காட்டிக் கொடுத்தான் –

செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே –மாயக் கூத்தனும்-எல்லியும் காலையும் வேண்டாமலே-அனுபவத்தோடு காலம் கழிக்கிறார்கள்-

செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே –1-அருள் செய்வானாகிற அப்பனுடைய ஊராகும்

அன்றிக்கே
2-அருள் செய்வானாகிய அப்பனுடையதாய்ச்–செல்வர்கள் வாழும் ஊர் திருக் கடித்தானம் -என்னுதல்

அன்றிக்கே
3-தண் அம் துழாய் முடி அப்பன்-எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
நல்ல அருள்கள் நமக்கே அருள் செய்வான் –அவன் ஊர் – செல்வர்கள் வாழும் திருக் கடித்தானம் -என்னுதல் –

——–

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-

என் பக்கல் வருகைக்கு உள்ள தடைகளையும் தானே போக்கி–திருக் கடித்தானத்திலும் என் மனத்திலும்-
ஒக்கக் காதல் கொண்டு உள்ளே வசிக்கிறான்-என்கிறார்-ஒருக்கடுத்து – ஒருங்க அடுத்து என்றது ஒக்க நினைக்கை-

——–

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திரு வமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப் பிரானே–8-6-3-

பிராட்டியோடு கூடி திருக் கடித் தானத்திலே-நித்ய வாசம் செய்கிற ஆச்சர்யத்தை உடையனான உபகாரகன்-
நினைக்கும் தோறும் இனியன் ஆக நின்றான் -என்கிறார்-

வீர ஸ்ரீ ஸ்ரீ சீதா பிராட்டி இருவர் உடன் வந்து என் விரோதிகளை போக்கி கைங்கர்யம் கொள்ளும் மிதுனம் என்கிறார் –

——–

மாயப் பிரான் என் வல் வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே-8-6-4-

நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்-நெஞ்சை நாடாகக் கொண்டு -திவ்ய தேசம் -சிறிய ஸ்தானம்

திருக் கடித்தானத்தை-பகல் இருக்கை மாத்ரமாகக் கொண்டு–அன்பின் மிகுதியாலே என் மனத்தையே
எப்பொழுதும் வசிக்கும் இடமாகக் கொண்டான் -என்கிறார்-

நெஞ்சம் நாடு –கலவியலும் பிரிவினாலும்-ஒரு பரமபதத்தைப் போலே-ஆக்கினான் ஆயிற்று -இவர் திரு உள்ளத்தை –
நெஞ்சு ஸூ ஷ்மம்-நாடாகுமோ -விஸ்லேஷம் சுருங்கி -சம்ஸ்லேஷம் வளர்ந்து ஊதி ஊதி பெருக்கி -நாடாக்கினான் -என்றவாறு –

என் வல் வினை மாய்ந்தற-மாய -மட்டும் இல்லை மாய்ந்து அற –மறுகல் இடாதபடிக்கு

குடி கொண்டான் –பரிகரங்களோடு நித்ய வாசம் பண்ணா நின்றான் –
அரவத்து அமளியினோடும் -பெரியாழ்வார் திருமொழி -5-2-10-என்ற பாசுரப் படியே –
சர்வ மங்கள விக்ரகாய — ஸமஸ்த பரிவாராயா -ஸ்ரீ மதே நாராயாணாயா –

———–

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

என் பக்கல் கொண்ட மிக்க காதலாலே–திருக் கடித் தானத்தோடே கூட என் மனத்திலே புகுந்து அருளினான் –என்கிறார்-

செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே ஆக ஒண்ணாது -என்று
திருக் கடித் தானத்தோடே கூட வந்து என் நெஞ்சில் புகுந்து அருளினான் –

சாத்தியம் கை பட்டால் சாதனத்தில் இழிவார் இல்லையாய் இருக்க-
என்னைப் பெற்றது அத் தேசத்தில் நிற்கையாலே என்று-அத் தேசத்தோடு வந்து புகுந்தான் -என்கிறார்-

————

கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-

தம்முடைய மிக்க ப்ரீதியாலே-திருக் கடித் தானத்தை எல்லாரும் அடையும் கோள்-என்கிறார்-

பூத்த பொழில் –அவன் நித்ய வாசம் செய்கையாலே-எப்போதும் மலர்களோடு கூடின பொழில் –
திருவருள் ஆகிய மழை மாறினால் அன்றோ-பூக்கள் மாறுவது –நித்ய வசந்தம் –

திருக் கடித் தானத்தை ஏத்த இடர் நில்லா –சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே போல் இங்கும்
இனியதனைச் செய்ய-இடரானது நமக்கு இது தேசம் அன்று என்று-
சும்மனாதே கை விட்டோடும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-
போக்யத்தையினால் ஸ்தோத்ரம் பண்ணினார் -வியாதி போகுமோ –
ராஜ வித்யா ராஜ குஹ்யம் -ஸூ சுகம் கர்த்தும்-ஆரம்ப தசையில் இனிமையாய் இருக்குமே –

———–

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-

இடர் கெட -திருக் கடித்தான நகர் உள்ளத்துக் கொள்மின்–உங்கள் துன்பம் நீங்குவதற்கு ஏத்த வேண்டா-திருக் கடித்தானத்தை நெஞ்சாலே நினைக்க அமையும் -தேச ஸ்ம்ருதி மாத்திரமே நினைத்தாலே போதும் -ஸ்தோத்ரமும் பண்ண வேண்டா -உள்ளத்தில் கொண்டாலே இடர்கள் கெடும்

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –ஒரு தாமரைப் பூவை கொண்டாயிற்று–பூமியையும் வான் உலகத்தையும் அளந்து கொண்டது –

மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே–இங்கு உள்ளார் அங்கு போவது மேன்மையை அனுபவிக்க-
அங்கு உள்ளார் இங்கே வருவது சீல குணத்தை அனுபவிப்பதற்கு–கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு திரு மலை போலே-

————

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-

நகரங்கள் பலவும் உண்டாய் இருக்கச் செய்தேயும்–என்னுடைய நெஞ்சையும் திருக் கடித் தானத்தையும்
தாயத்தால் கிடைத்த இடமாக விரும்பி-இருக்கிறான் -என்கிறார் –

என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும் தான தாயம் பதியே –என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும்
தனக்கு தாய பாகமாகக் கிடைத்த இடமாக விரும்பி இரா நின்றான்-தாயப்பதி பரம்பரை சொத்து-இயற்கையாக-தாயாதி தாயத்தை ஆளுகிறவர்கள்-தானே வரும் –

——–

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே--8-6-9-

அல்லாத திருப்பதிகளும் எல்லாம் அவனுக்கு அப்படியே -தாயப்பதிகள்-அன்றோ -என்னில்
அது அப்படியே யாகிலும்-
என்னோடு கிட்டுகைக்கு உறுப்பான நிலம் என்று திருக் கடித் தானத்திலே மிக்க காதலன் ஆனான்-என்கிறார்-
இங்கு மாயத்தினால் வீற்று இருந்தான் என்றது சாதனமாக இருந்ததால் என்றபடி –

அற்புதன் –ஆச்சர்யமான படிகளை உடையவன் –தானே உகந்தருளின தேசங்கள் எல்லாவற்றிலும் விருப்பம் உண்டாகிலும்
என்னைப் பெறுவதற்காக திருக் கடித்தானத்திலே-தன் மேன்மையும் நீர்மையும் எல்லாம்-பிரகாசிக்க நின்றான் -என்கை –
தேசத்தமரர் -மேன்மை -ஆயருக்கு அதிபதி நீர்மை -இரண்டையும் காட்டிய அற்புதன் -தாமோதர நாராயணன் போலே –

——–

அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற் புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித் தானமே-8-6-10-நிதான பாசுரம்

கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-கற்பக வல்லி நாயகி சமேத அற்புத நாரணன் -காட்டி அருளுகிறார் –

மேவியிருப்பது என்னெஞ்சகம்-சாத்ய ஹிருதயம் மேவுதல் ஆழ்வார் திரு உள்ளம் -சாதன பூமி இது – -உறுப்பாக-நிற்பது திருக் கடித் தானமே

என்னைப் பெறுமளவும் திருக் கடித் தானத்தில் நின்றான்-
என்னைப் பெற்ற பின்பு நிற்பதும் இருப்பதும்-என் நெஞ்சிலே -என்கிறார்

நாரணன் –தன் உடைமையை விட்டுக் கொடாத வத்சலன்-பஹு வரீஹி சமாசம் —

அரி –அடியவர்கள் விரோதிகளை-அழிக்கின்ற ஆற்றலன் –

வாமனன் –தன்னைச் சிறுகவிட்டு-அடியார்கள் விருப்பங்கள் அனைத்தையும்-முடிக்குமவன்

அற்புதன்-இப்படிகளாலே-ஆச்சர்யத்தை உடையவன் –

————

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-

நிகமத்தில்-இத் திருவாய்மொழி கற்றவர்களை-இது தானே திரு நாட்டில் கொடு போய் விடும் -என்கிறார்

பாலோடு அமுதன்ன–வாச்ய வாசகங்களின் சேர்த்தி இருக்கிறபடி–பால் -என்றது-சோலைத் திருக் கடித் தானத்துறை திருமாலை–அமுது -என்றது-சடகோபன் சொல் வாசகத்தை –இது ஆளவந்தார் நிர்வாஹம்

மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியில் உண்டான விடாய்-நடையாடாத தேசத்திலே வைத்து
ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும் -என்றபடி-அதிஷ்டான தேவதை எம்பெருமான் கொடுக்கும் என்றபடி –

சாம வேத சமம் -திருவாய் மொழி -நடையாடுமே அங்கும் –வைகுந்தம் காண்மினே –குருகூர் ஈரரசு பட்டு இருக்குமே –
நீர் மலி வையத்து நீடு நிற்பார் பலம்-தெள்ளியீர் அனுபவம் இங்கே போலே -மாயக் கூத்து விஸ்லேஷ அனுபவம் இங்கே –

—–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -26-நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் -மாலை நண்ணி -9-10-

February 18, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

நான்கு நிலம் ரசம் சூர்யன் உண்டு பருகி-நன்னீர் அற மென்று -உமிழ்ந்த கோதே பாலை ஆனதே
இதுவே ஐந்தாவது நிலம் -நாலில் இருந்து பிறந்ததே ஐந்தாவது -ஆனது
திருத்தண்கா-திருவெஃகா-இதுவே ஷேம கரம் -திவ்ய தேசம் இருக்க ஏன் கவலை என்றவாறு
நகர் காட்டல் துறை-தலை மகன் வார்த்தை-ஒன்றாக போகிறார்கள்
குறிஞ்சி நிலத்தில் கலந்து-பாலை தாண்டி -மருத நிலம் போகிறார்கள்
திருவெஃகா நகரம் அடைந்து-கால் தோய்ந்து விண்ணோர்கள்-சொன்ன வண்ணம் செய்த -கண்ணன் ஊர் வந்தோம்-தாண்டி பொழில் திருத்தண்கா-நகரமும் பொழிலையும் கான்டக்டி
மாலை நண்ணி -திருக்கண்ண புரம் -கண்ணன் வெக்கா -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம்
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்-நகரம் காட்டுகிறான் -ஏழு மதில்கள் சூழ்ந்த நகரம்
வந்து பாடும் பொழில்-கழனி -அதிலும் உண்டே
கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள்-திரு வெக்கா -பெருமாள் கோயில்

புணர்ந்து உடன் போக்கு துறை-புணர்ந்து உடன் போகிறான் ஒரு தலை மகன் தலை மகளை –
பாலை நிலத்தை கடந்து-குளிர்ந்த நிலத்தே புகுந்தோம் காண்-என்று ஆஸ்வசிப்பிகிறான்-

நகர் காட்டல் இப்பாட்டுக்கு அகத்துறை-நடை இளைப்புத் துன்பம் தீர அதோ தெரிகிறதே அதுவே நம்முடைய நகர் என்று ஸாமீப்யம் தோன்றக் காட்டிச் சொல்வது –தைவா தீனமாக பாலை நிலம் கடந்தோம்–அதோ தெரிகின்றது அப்பெரிய நகர் நம் நகர் என்று புணர்ந்து உடன் போன தலைவன் –
இளைத்த தலைவியைக் குறித்து இடம் தலைப் பெய்தமை -நகர் காட்டும் துறை -நீர் அற்ற பாலை நிலம் கடந்தோமே –

இப்படி ஈடுபட்ட இவரைக் கண்ட அபிமதரான பாகவதர் இவர் ஸம்ஸார மார்க்கத்தைக் கழித்த பிரகாரத்தையும் அர்ச்சாவதாரத்தின் அதிசயித போக்யதையையும் இவருக்குப் பிரகாசிப்பித்து
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை உணர்ந்து உடன் போன தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடம் தலைப்பெய்தமை சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள் -திரு வெக்கா -பெருமாள் கோயில்

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை  அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே
 —-26-

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் 
–90-இந்த பத்துப் பாட்டையும் பிரீதி பூர்வகமாம் படி அவன் திருவடிகளிலே வணங்குங்கோள் -என்று சர்வரையும் தத் சமாஸ்ரயணத்தில்-அதிகார அனுகுணமாக மூட்டுகிற-மாலை நண்ணியில் அர்த்தத்தை மால் உமது வாஞ்சை முற்றும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்—தம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று-முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி ––-மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் – அதில் துர்பல புத்திகளுக்கு- மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி – அதில் அசக்தருக்கு தாள் அடையும் பிரபத்தி -அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்- சர்வ உபாய ஸூன்யருக்கு – இப் பத்தும் பாடிடும் தண்டன் -என்று- ஸ்ரீ கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-

வெக்காவுதம்–பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே–-திரு வெஃகா திவ்ய தேசம் அருகில் திருத் தண்கா -ஸ்ரீ தேசிகன் திருவவதாரம் ஸூசிதம்-இத்தால் என்பர்-

நால் நிலம் வாய் கொண்டு — ஆதித்யனாவன் நாலு வகை பட்ட நிலத்தையும்   வாயிலே கொண்டு–தமிழர் ஐந்து என்பர்–ஆழ்வாருக்கும் அதுவே மதம்–நல் நீர் இத்யாதி–இதனுடைய சத்தையான நீர் அரும் படி  மென்று கோதாக்கி-அக் கோதை வாயிலே கொண்ட- ஆதித்யன் ஆனவன் தன் உஷ்ண க்ரணத்தாலே சுவைத்து ஆஸ்ரயம் பொறாமையால் உமிழ்ந்து பாலை ஆயிற்று–பாலை -சம்சாரம்-ஆழ்வாரை ஆஸ்வாசப்படுத்தும் பாகவதர்கள்-108 திவ்ய தேசங்களில் ஒன்றே பரமபதம் –கடந்த –சம்சாரத்தை கடந்த என்ற படி-பொன்னே-சம்போதனம் — உன்னோடு போகிற எனக்கு பாலை நிலம் என்று அறிய வேண்டுமோ–என்கிறான்-அஞ்சாது இருக்கைக்கும்-அஸ்த்தானே பய சங்கை பண்ணுகைக்கும் பொன்னே என்கிறது--உண்டு என்ன உயிர் நிற்கும் படியும்-அபஹரணத்தைக்  குறித்து அஞ்சி இருக்கையும்–கால் நிலம் இத்யாதி–தேவர்கள் ஹவிஸ்ஸூக்காக கொள்ளும் இடத்தில் சம்சார வெக்காயம் தட்டாமே-ஒரு யோஜனைக்கு அவ் அருகே நின்று பின்னையும் இது பொறுக்க மாட்டாமை அவ் வருகே போய் சர்த்தி பண்ணுவார்கள்-இப்படியே அங்குற்று அங்கு பரம பதம் அம்கண் இருக்கிற நித்ய ஸூரிகள் ஆனவர்கள்-பூமியில்-இழிந்து ,-திரு வெக்காவிலே தங்கள் உடைய அபிமத விஷயம் கிடைக்கையாலே பிரதஷிண -நமஸ்காராதிகளை பண்ணா நிற்ப்பார்கள்-கண்ணன்-சர்வேஸ்வரன் —சிநேகம் உள்ள இடத்தில் குற்றம் தோற்றாது இறே–வெக்கா வுது – இப் படிப் பட்ட திரு வெக்கா இது என்று காட்டா நின்றான்-வுது-அதூர விப்ரக்ருஷ்டம்-ஏஷா சா த்ருச்யதே இத்யாதி-
புஷ்பக விமானத்தில் இருந்து ராஜ தானி புதிர் மம அயோத்தியைக் காட்டி பெருமாள் வார்த்தை -அவ் வருகு தோற்றுகிறது என் என்பது என்ன–அப் பூம் தேன் அலம் சோலை அப்பாலது– -அழகிய பூவையும் தேனையும் உடைய அழகிய சோலை —அது-சந்நிவேசம்–எப் பாலைக்கும் சேமத்ததே —எல்லா அவஸ்தைக்கும் சேமம் உடைத்து-திவ்ய தேசங்கள் —

நிலம் தான் நாலு என்பாரும் அஞ்சு என்பாருமாய் இருக்கும் –ஐந்து என்கிறவர்கள் -பாலை நிலத்தையும் தன்னிலே தன்னிலே ஒன்றாக்கிச் சொல்லுவார்கள் –நாலு என்றவர்கள் இப்பாலை நிலம் தான் மாற்ற நாலிலும் உண்டு என்கிறார்கள் –அதாவது நீரும் நிழலும் இல்லாத இடம் பாலையும் அத்தனை இறே–பாலை கடந்த பொன்னே என்று-நாயகன் உடன் சேர்ந்து இருப்பதால் பாலை வானம் நடந்து கடந்தாலும்
அவனுடன் இருப்பதே பேர் இன்பமாகக் கருதி ஒளி தேஜஸ்ஸு இருந்தபடி திருமகள் போன்றவளே என்றுமாம்–நல் நீர் அறம் என்று – ஸூர்ய கிரணங்களால் நீரைக் கவர்கின்றான் என்பதே –நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று நால் வகை நிலத்துள்ளும் பாலை நிலம் அசாரம் -இன்பத்துக்கு உரியது இல்லாமை – கோது கொண்ட -மென்று சுவைத்து உமிழ் –வேனிலம் செல்வன் –இள வேனில் முது வேனில் நடுப்பகல் -தெய்வம் சூர்யன்–திரு வெக்கா வில் -சொன்ன வண்ணம் பெருமாள் -யதோத்தகாரி –பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்பதால் கண்ணன் -என்கிறார் –வேகா சேது -வெஃகணை-வெக்கா —நம்மாழ்வார் திருவிருத்தத்தில் திருவரங்கம் திருவேங்கடம் திருவெஃகா மூன்றையுமே மங்களா சாசனம்-கோயில் திருமலை பெருமாள் கோயில் -என்று சிறப்பித்து கூறுவார்-எல்லா பாலை நிலங்களால் வந்த வெம்மையையும் போக்கி நமக்கு ரக்ஷகமான தேசம் திரு வெக்கா காண் அது–இந்தப் பாலை நிலம் அன்றிக்கே இன்னம் சில பாலை வனங்களும் கடக்கலாம் இந்நிலம் உண்டாக–அம் பூம் இளஞ்சோலை அப்பாலது -திருத் தண்கா -விளக்கொளி பெருமாள் ஸ்ரீ விசுவாமித்திரர் உபதேசித்த பலை அபலை மந்த்ர வித்யைகள் போலே தலைவிக்கு தாபம் தணிக்கும் திருத் தண்கா –

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட-முல்லை முதலான நாலு நிலத்தையும் தன் கிரண முகத்தாலே க்ரஸித்து சார அம்சமான நீர்ப்பசை அற ஆராய்ந்து புஜித்துக் கோதான அம்சம் இது என்று அறிந்து-வேனிலம் செல்வன்-கோடைக்காலத்தில் ப்ரபவ ஐஸ்வர்யத்தை யுடைய ஆதித்யன்-சுவைத் துமிழ் பாலை-பசை யறுதி கண்ட வழற்றியாலே உமிழ்ந்த பாலை நிலத்தை-கடந்த பொன்னே-நெருப்பிலே நடப்பாரைப் போலே இந்நிலத்திலே நடக்கச் செய்தே ஓட வைத்த பொன்னே போலே ஒளி விடுகிறவனே-கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும்-இப்படிக் கால் பொருந்தாது இருக்கை அன்றிக்கே பரம வ்யோம வாசிகளும் இங்கே வந்து கால் பொருந்தி அனுபவிக்கும் படியான-கண்ணன் வெக்காவுதம்-ஆஸ்ரித ஸுலப்யத்தாலே-சொன்ன வண்ணம் செய்வார் -என்ற திருநாமமான
கிருஷ்ணனுடைய திரு வெக்காவானது அடுத்து அணித்தாயிற்று-பூம்தேன் அலம் சோலை அப்பாலது
அழகிய பூவையும் தேனையும் யுடைத்தாய் நித்ய வஸந்தமாய் இளகித் தோற்றுகிற சோலை அவ்விடத்தது –-எப் பாலைக்கும் சேமத்ததே —இது நமக்கு எல்லா அவஸ்தை களுக்கும் ஷேம கரமாய் இருப்பதோர் இடம்-

இத்தால்
நானிலம் என்று தொடங்கி
– சேதனருடைய ஸ்வரூப ரூப குண விபவங்கள் ஆகிற நாலு வகைப்பட்ட போக ஸ்தலத்தையும் தன் ஸங்கல்ப முகத்தாலே அந்தர் பவிப்பித்து சார அம்சத்தை மிகவும் புஜித்து
நிஸ் சாரமான அம்சம் இது என்று திரு உள்ளம் பற்றி-கர்ம தாரதம்ய அனுரூப பல பிரதானத்தால் உண்டான ஸ்வா தந்தர்யத்தாலே பிரதாபோஷ் மளனான ஸ்ரீ யபதியானவன்–செல்வன் ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி செல்வ நாரணன்-கிரணம் -சங்கல்பம்-ஆத்மாவின் ஸ்வரூபம் சேஷத்வம்
ரூபம் வணக்கம்-குணம் -அடியேன்-வைபவம் -கைங்கர்யம்-சார அம்சம் புஜித்து -பகவத் ஞானப் ப்ரஸங்கம் இல்லாப் பசை அறுதி கண்டு அஹங்காராதி ரூபமான அழல் விஞ்சி இருக்கையாலே
ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19- என்று கை விட்ட ஸம்ஸார ஸ்தலத்தைக் கடந்து-அத்யுஜ்வலமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யுடையரான உமக்கு நித்ய ஸூரிகள் பொருந்தி வர்த்திக்கும் படி நிரதிசய ஸுலப்ய விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனுடைய அர்ச்சாவதார ஸ்தலம் அதூர வர்த்தியாய் அதிசயித போக்ய போக உபகரணாதி ஸம்ருத்தமாய் இரா நின்றதுஇது வன்றோ நமக்கு உபாய தசையோடு உபேய தசையோடு வாசியற ஷேம கரமான புகலிடம் என்கிற அபிமத பாகவத வசனத்தை வெளியிட்டு அருளினார் யாயிற்று –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் சம்சாரம் தவிர்ந்தமையையும் –உகந்து அருளினை நிலங்களின் போக்யதையும்-சொல்வது
கோது – சம்சாரம் -பாலை வானம் போலே – நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் போக்யதை -ஷேமங்கரமான புகலிடம்-

ஸ்வாபதேசம்-இத்தால் சம்சாரம் த்யாஜம் என்னும் இடத்தையும் பகவத் விஷயம் பிராப்யம் என்னும் இடத்தையும் அறிந்த ,இவர்க்கு பிராப்தி தசை தாழ்ந்த படியாலே ,வந்த ஆற்றாமையை கண்ட-ஸ்ரீ வைஷ்ணவர்கள் – சம்சாரம் சென்று அற்றதாகில் உகந்து அருளின தேசங்கள் இங்கே ஆகில்-
பிராப்த்திக்கு உள்ளே அன்றோ நீர் நிற்கிறது -என்று ஆற்ற வேண்டும் படி இருக்கிறது-சரணா கதி விளக்க வந்த பாசுரம்-சம்சார வெக்கை தாங்காமல் சோலைகள் சூழ்ந்த திரு வெக்கா சேர்ந்து சரண் அடைய அருளுகிறார்-

தாத்பர்யம்
கீழ் சம்சார ஸ்திதியாலும் பகவத் அலாபத்தாலும் தவித்த ஆழ்வாரைத் தேற்றி-நாயகன் உக்தியால் அருளிச் செய்கிறார்-லோக உத்தர மான ரூப லாவண்யம் கொண்ட -பொன்னே-சம்சாரமாகிய பாலை நிலத்தைத் தாண்டினோம்-இனி நாம் சிரமம் படவேண்டாம்-திருவெஃகா-யதோத்தாக்காரி-தோப்பு திருத்தண்கா விளக்கொளி பெருமாள் பாராய் என்கிறான்-ஸம்ஸாரத்திலேயே திவ்ய தேசங்களே ஸ்ரீ வைகுண்டம் போல் நிரதிசய போக்யமாகவே இருக்குமே என்றவாறு-

பொருள் -அகப் பொருள்–திணை –பாலைத் திணை–கிளவி –உடன் போக்கு -உட்பகுதி -தேற்றல்
துறை -தலைவிக்குத் தலைவன் தன் பதி அணுகினமை சாற்றல்–உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. –சடகோபர் அந்தாதி -67–சரவாதம் -பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்-மருதம் தாண்டி விட்டோம்-ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட–இது உருவக அணி-இடையில் எதிர்த்த சிம்மம் போன்றவற்றை அம்பால் எறிந்ததனை தலைவி அறிந்தவள் ஆகையால் அம்பின் வீழ்ச்சியைக் குறித்து சரவாதம் என்கிறான்
தடம் பணை அருகில் இருப்பதாகக் கொண்டு இனி மருத நிலமே என்கிறான்

9-10-மாலை நண்ணித் தொழுது எழுமினோ-ப்ரவேஸம்-

அறுக்கும் வினையாயின -என்ற திருவாய் மொழியிலே அவனை பெற-வேண்டும் என்ற எண்ணமேயாய்ச் சென்றது –
எண்ணின சமயத்திலே விரும்பியபடி கிடையாமையாலே
மிக்க துன்பத்தை அடைந்தபடி சொல்லிற்று -மல்லிகை கமழ் தென்றல் என்ற திருவாய் மொழியில்-
அது தான் இரவில் விசனமாக நோவு பட்ட படி அன்றோ –
இப்படி எண்ணினவாறு பெறாமையாலே-நோவு படுகிற இவருடைய துன்பத்தினை நினைத்து-
நான்கு திருவாயமொழி தொடர்ந்து நலிய -இதற்கு மேலே ஆழ்வார் பொறுக்க மாட்டார் என்று திரு உள்ளம் கொண்டு –
சர்வேஸ்வரன்-நீரோ இப்படி எண்ணுவீரும்-அது கிடையாமல் துன்பப் படுவீரும்
உம்மைப் பெற வேண்டும் என்று எண்ணுவோரும் நாம் அன்றோ-ஸ்வாமி யன்றோ சொத்தைப் பெற எண்ணுவர் —
-உம்மைப் பெறாமையால் இழவு பட்டோமும் நாம் அன்றோ-உமக்கு ஒரு குறை உண்டோ-
கலங்கா பெரு நகரம் கலவிருக்கையாய் இருக்க-அவ்விடத்தை விட்டு
திருக் கண்ணபுரத்திலே வந்து நாம் எழுந்து அருளி இருப்பதும் உமக்காக அன்றோ
நீர் விரும்பியதை உம்முடைய சரீரத்தின் முடிவிலே -செய்யக் கடவோம் –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்று சமாதானம் செய்ய
சமாதானத்தை அடைந்தவராய் இவரும்உவகையர் ஆகிறார் –
அவன் ஓன்று செய்யக் கடவோம் -என்றால்-
அப்போதே பெற்றதாக நினைத்து உவகையர் ஆகலாம்படி அன்றோ அவன்படி இருப்பது –

இப்படி உவகையராய்-அவன்படி இதுவான பின்பு-சர்வேஸ்வரன்-எல்லாராலும் பற்றப்படுபவனாய்க் கொண்டு –
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் –தொழுது எழுமினோ தொண்டீர் –
திருக் கண்ணபுரத்தில் அணித்தாக எழுந்து அருளி இருக்கிறான்
எல்லாரும் ஒரு சேர அவனை அடையுங்கோள்
அடையும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியைப் பண்ணுங்கோள் –முதல் நான்கு பாசுரங்களில் பக்தி பற்றி அருளி –
மேலே பிரபத்தி பற்றி அருளி-பக்திக்கு சாதனம் இல்லாதார் பிரபத்தியை செய்யுங்கோள்-
அதற்கு தகுதியான மன உறுதி இல்லாதார்-திருக் கண்ணபுரம் -என்ற வார்த்தை மாத்ரம் ஆகிலும் சொல்லுங்கோள் –
-பத்தாவது பாசுரத்தில் –அவ்வளவே கொண்டு அவன் தான் கை விடான்-
ஆனபின்பு எல்லாரும் ஒரு சேர அவனை அடையுங்கோள்-என்று பரோபதேசத்தில் மூளுகிறார்
மோகித்துக் கிடப்பார் ஆகில் கிடப்பார் இத்தனை போக்கி-உணர்ந்தார் ஆகில் பிறர்க்கு நலம் சொல்லி அல்லது நிற்க மாட்டார் –

பிராரப்த கர்மங்களின் முடிவில் மோஷமாகக் கடவது -என்று அன்றோ-வேதாந்தங்களில் சொல்லப் பட்டு இருக்கின்றது
சரீரத்தின் முடிவில் நீர் விரும்பியதை செய்யக் கடவோம்-என்று சர்வேஸ்வரன் சொன்ன இடமும்
அதனைக் கேட்டு இவர் உவகையர் ஆன இடமும் பொருந்தா -என்னில்
இத் திருவாய் மொழியில் -பக்தியை செய்யுங்கோள் என்றும்-
அது மாட்டாதார் பிரபத்தியை செய்யுங்கோள் என்றும்-சொல்லிற்றே அன்றோ –
வேதாந்தங்களில் உபாசகன் ஆகிற அதிகாரியை நோக்கிக் சொல்கிறது-இங்குப் பிரபன்னனுக்கு சொல்லுகிறது
தஸ்ய தாவதேவ சிரம யாவன்ன விமோஷ்யே-என்கிற-வாக்கியம் அன்றோ இவ் வர்தத்தைச் சொல்லுகிறது
இந்த உபநிஷ வாக்கியம் தான் சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ-
கர்மங்களின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ-என்று விசாரித்து
கர்மங்களின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறது-என்று -ஸ்ரீ பாஷ்யகாரர்-சித்தாந்திப் படுத்தி உள்ளாரே அன்றோ
தேகாவசேனே முக்தி -ஸ்ரீ தேவ பெருமாள் -அதிகாரி பேதத்தால் முரண்பாடு இல்லை என்றதாயிற்று –

அதனோடு சரீரத்தின் முடிவில் மோஷம் என்று இங்கே சொன்னது முரண் படாதோ என்னில்
நியாயத்தோடு கூடிய வாக்கியம் அன்றோ பொருளை அறிவிப்பதற்கு உரியது ஆவது
உபாசகனுக்கு தான் பற்றின உபாயம் முற்றுப் பெற்ற பின்னரே பலிக்க வேண்டி இருக்கையாலே-அவ்வளவும் நியாயம் நடக்கும்-
பிரபன்னன் முதல் அடியிலே -என்னுடைய எல்லா பாபங்களுக்கும் நீயே கடவாய் -என்று கொண்டு
சர்வேஸ்வரன் பக்கலிலே-பரந்யாசம் செய்தவன் அன்றோ-
இவன் தான் இனி செய்கிறது என்று ஓன்று உண்டாய்-அது முடிந்த பின்பு பெற வேண்டும் என்னும்
கால தாமதத்துக்கு காரணம் இல்லையே
இதனால் பரந்யாசம் பண்ணப் பட்ட சர்வேஸ்வரனுக்கு-ஆற்றல் இல்லை
அதனால் அது விளம்பதுக்கு காரணம் ஆகின்றது என்று சொல்லுவதற்கும் இன்று –
ஆக
இப்படி நியாயங்கள் காட்டினவாறே-இவனுக்கு சரீரத்தின் முடிவிலே பேறு கிடைப்பதற்கு தட்டு இல்லை அன்றோ

இனித் தான்
அதாத்ர மாதலீ சாப தபஸ் தப்த்வா ஸூ துஷ்கரம்
பகவந்தம் பிரபன்னா ஸா பகவந்தம் அவாப ஸா – காருட புராணம் -ஸ்ரீ ரங்க மகாத்மியம் -அத்யா-3
அவள் பகவானைச் சரண் அடைந்தாள்
பகவானை அடைந்தாள் -என்கிறபடியே மாதவி சரணாகதி செய்து மோஷத்தை பெற்றாள் ஆகச் சொல்லப் பட்டுள்ளது அன்றோ-
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று-அதனுக்கே கவல்கின்றேனே -திருமாலை
அவதார ரகஸ்ய ஞானம் உடையவன் இந்த சரீரத்தின் முடிவிலே பேறு பெறக் கடவேன் -என்றே சொல்லா நின்றது அன்றோ –
த்யக்த்வாம் தேஹம் புனர் ஜன்ம நைதிமாம் ஏதிச அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-
த்யக்த்வா தேஹம்-உபாசனனுக்கு விஷயமானாலும் கிம்புநர் நியாயத்தாலே பிரபன்னனுக்கும் சித்திக்கையாலும்
சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதற்கு பிரமாணம் ஆக குறை இல்லை –
புருஷோத்தம வித்யையையும் அவதார ரகஸ்யமும் அறிந்தால் அந்த தேவ அவசானத்திலே முக்தி என்றானே –
சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே பக்திக்கு -பாரதந்த்ர காஷ்டை என்பதாலே பூர்வாச்சார்யர்கள் -பிரபத்தி நிஷ்டர் ஆனார்கள்
-பார்த்தாவின் கையை எதிர்பார்க்கும் பார்யை போலே –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை –18-66
நன்று
ஆனால் சரணாகதி செய்த உடனே பகவானை அடைதல் வேண்டாவோ-
இந்த விரோதியைப் போக்கி உன் திருவடிகளைத் தர வேண்டும் என்று அன்றோ இவன் விரும்புவது-
பின்பும் தனக்கு விருப்பம் இல்லாத இச் சரீரத்தோடு இருக்கும் இருப்பு-
கர்மங்கள் அனுபவித்து முடிவு பெறாமையாலே ஆவதோ-சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆவதோ -என்னில்
சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆகில் அவனுக்கு சில குற்றங்கள் உண்டாகும்
அவன் தான் நம் இரு வினைகளையும் நடுவே துண்டித்து-அவ்வருகே கொண்டு-போகிறேன் என்று சொன்னதோடும் முரண்படும்
ஆனபின்பு கர்மங்கட்கு கட்டுப் பட்டவர்கள் போன்று இன்ப துன்பங்களை இவனும்-அனுபவித்து இருக்கையாலே கர்மத்தாலே யாம் இத்தனை அன்றோ –
நன்று
இனிக் கர்மம் நடையாடக் கடவது ஆனால்-பிராரப்த கர்மங்களை அனுபவித்து முடிகிற வரையிலும்
போகத் தட்டு என் என்னில்-அதிகாரி விசேடத்தாலே அது வேண்டா-யாங்கனம் எனின்-
இவன் சரணாகதி-செய்த அளவிலே முக்தனாம் ஆகில்-இது தன்னை நச்சுப் பொய்கை போன்றதாக நினைத்து அஞ்சுவார்கள் –
அதனால் ஆள் பற்றாது
இனி அவனை இங்கே சில நாள் வைக்கவே-ஸ்ரீ வீடுமரைக் கொண்டு நாட்டுக்கு வெளிச் சிறப்பைச் செய்து கொடுத்தால் போலே
இவன் சிலருக்கு உபதேசித்தும்-இவனுடைய ஒழுக்கைத்தைக் கண்டு திருந்துவாருமாய்-இங்கனம் சில நன்மைகளும் காரணமாக இருக்கும்
இனித் தான் -இவனை நமக்கு தந்த சரீரம் அன்றோ -என்று-இறுதியாக இந்த சரீரத்தை ஈஸ்வரன் தானாக உபஷிக்கவும் மாட்டான்
சந்தாம் ச யாக் சந்ததே ப்ரஹ்மனைஷ ரமதே தஸ்மின் உத ஜீர்னே-சயாநேன ஏனம் ஜாஹாதி அஹ ஸூ பூர்வயேஷூ-யஜுர் வேதம் ஆருணம்
முதுமை அடைந்த இவன் சரீரத்தை விடாதவன் ஆகி-இறைவன் இச் சரீரத்தில் இன்புற்று வசிக்கிறான் -பிரமாணம்-சரம விமல திருமேனி -அன்றோ –
இது காறும் ஆர்த்த பிரபன்னன் விஷயமாக மூன்று விஷயங்களை அருளி-மேலே த்ருப்த பிரபன்னன் விஷயமாக ஒரு விஷயம் அடுளிச் செய்கிறார்-
இவன் தான் சரணாகதி செய்யும் காலத்தில்-இப்போதே இவ் உடல் நீங்கி உன் திருவடிகளை பெற வேண்டும் -என்னும் விரைவும்
இவனுக்கு உண்டாக காரணம் இல்லை
முகம் பழகினது ஆகையாலே -இச் சரீரத்தை விட -என்றால் கடுக இசையான் –
இனி வேறு ஒரு சரீரத்தை அடைதல் கர்ப்ப வாசம் செய்தல்-செய்யாது ஒழிய வேண்டும் என்னும் அளவாயிற்று இவனுக்கு உண்டாகில் உண்டாவது-
ஆகையாலே -தத் க்ரது-நியாயத்தாலே எங்கனம் நினைத்தானோ அங்கனமே பலித்தல் –அப்படியே பேறாக இருக்கும்
ஆகையால் இவனுடைய நினைவையும் நோக்கி-இவன் தான் இச் சரீரத்தில் ஆசை வைத்து இருந்தானே ஆகில் நாலு நாள் இருந்திடுவானுக்கு
என்று இருப்பன் சர்வேஸ்வரன் –
ஆனால்-இங்கு இருக்கிற நான்கு நாள்களும் ஆதி வியாதிகளுக்கு இடம் கொடாதபடி-
மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு தோற்ற மிக உயர்ந்த இன்பத்தினை உடையவனாக-இவனை வையாது ஒழிவான் என் -என்ன
உலகத்து மக்களைப் போன்று ஒன்றனை இழந்த காலத்தில் துன்புற்றும்-விரும்பிய பொருள்களை பெற்ற காலத்தில் இன்புற்றும்
போரும்படிக்கு தகுதியாக வைக்கிறது என் -என்னில்
இவன் தன் சரீரத்தைப் போக்கி உன்னைத் தர வேண்டும்-என்றோ அன்றோ விரும்பியது
இச் சரீரம் தான் தண்ணியது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் விட மாட்டாது-இச் சரீரத்தில் இன்பத்தையே அனுபவிக்குமாறு வைக்கும் அன்று
இது தான் நன்றாய் இருந்ததாகில் ஈனனம் சில நாள் இச் சரீரமே தொடர்ந்து நமக்கு இருந்திடுக-என்று விரும்புவான் அன்றோ
இவனுடைய இச்சைக்கு ஈடாக வைக்கும் அன்று இன்னமும் ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி உண்டாகவும் கூடுமே
ஆகையால்
இவனுடைய நலத்திலே நோக்கு உடையவனாய்-இவன் இருந்தபடி இருக்கிறான் என்று இருப்பான் இறைவன்
-ஆகையால் முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிய-இனி வேறு ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி பிறப்பதற்கு முன்பே ஈஸ்வரனுக்கு
கார்யம் செய்து தலைக் கட்டலாய் இருக்கும்-
முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிந்து கொடு நிற்கும்-மேல் வரப் புகுகிறது அறியாமையாலே அச் சரீரத்திலே ருசி இல்லை
இது தான் பொல்லாதது என்று போலியாக அறிந்தும் வைக்குமே
இவன் முதலிலே இச் சரீரத்தை நீக்கி அருள வேணும் -என்று ஒரு வார்த்தை சொல்லி வைக்கையாலே
அவன் விரும்பாதது ஒன்றை செய்தானாகவும் சொல்ல ஒண்ணாதே அன்றோ –
விச்வாஸ ஆயாஸ பூம்நா -பக்திக்கு ஆயாசம் -பிரபத்திக்கு விச்வாஸம் -வேணுமே
அனுபவித்து -போகேனே அனுபவனே -பிராரப்த கர்மா முடிந்தால் மோக்ஷம் -முடிக்கும் பொறுப்பை பிரபன்னனுக்கு அவனே ஏறிட்டுக் கொள்கிறான் –
இனி
இறக்கும் நிலையிலே காஷ்ட பாஷானங்களைப் போலே இருப்பானே அன்றோ இவன் தானே-
ஆகையால் முதலில் சொன்ன வார்த்தையை கொண்டு இவன் விலக்க மாட்டாத அளவில்
ஈஸ்வரன் காரித்தைச் செய்து தலைக் கட்டுவான்-
தத தம் ம்ரியமானம்து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதம் -ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்
அறிவில்லாத பொருளைப் போன்று கிடக்கிறவன் தலையிலே ஒரு தேவை இடேன் –
நானே நினைக்கக் கடவேன் -என்று சொல்லி வைத்தானே அன்றோ –
இந்த இரண்டு ஸ்லோகங்களும் எம்பெருமானுடைய முழுச் செல்வம் -என்று சொல்லக் கடவது அன்றோ
மனஸி ஸ்திதே –
நின்றவா நில்லா நெஞ்சம் -பெரிய திருமொழி -1-1-4-ஓர் இடத்திலே நிற்பது-
பட்டி நின்று திரியும் பசு உடையவனுக்கு ஓர் கார்யத்தை செய்யத் தொடங்குவதற்கு முடியாதே அன்றோ –
மனத்தினைக் கொண்டு தொடங்க வேண்டும் அன்றோ புருஷார்த்தத்தை பெறும் போதும் –
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-தச்யாஹம் நிக்னஹம் மன்யே வயோரிவ ஸூ துஷ்கரம் -ஸ்ரீ கீதை -6-34-
காற்றினைப் போன்று அம் மனத்தினை அடக்குதல் எனபது செய்ய முடியாத கார்யம் என்று நான் நினைக்கிறேன்-என்றான் அன்றோ அவனும்

த்ருஷ்ட்வைவச ஊர்வசீம் ப்ராப்தாம் லஜ்ஜாவ்ருத விலோசன-பாதாபி வந்தனம் க்ருத்வா குரு பூஜாம் ப்ரயுக்த வான் -பாரதம் ஸ்லோகம்
-ஆரண்ய பர்வம் அர்ஜுனன் தவ நிலை சுருக்கும் -160-
உலகத்தார் ஊர்வசியின் உலகத்துக்கு செல்ல விரும்பி அதற்கு வேண்டிய சாதனங்களைச் செய்யா நிற்க
அந்த ஊர்வசியே வந்து கிட்டி நிற்க –
நீ என் தாயே அன்றோ -என்று கைகூப்பி வணங்கி கிடக்க வல்ல-விரக்தன் அன்றோ இவ் வார்த்தை சொல்கிறான்-
எந்தை பெயர் புனை யாயு எனும் பேர் முடி இறைவன்
தந்தைக்கு உயிர் நிகராகிய தளவத் திரு நகையாய்
கொந்து உற்றெழு குழலாய் குழல் நிகராகிய மொழியாய்
வந்துற்றது என என அன்னை மலர்த்தாள் களில் வீழ்ந்தான் –வில்லி புத்தூரார் செய்யுள்
ஸூஸ்வஸ்தே சரீரே –
வேறுபாட்டினை அடியைக் கூடியதான இந்த சரீரமும் ஒரு நிலையிலே நிற்பது
தாது சாம்யே ஸ்திதே –
அதற்கு உறுப்பாக தாதுக்களும் ஓன்று முடங்கி-ஓன்று நிமுருகை அன்றிக்கே இவை எல்லாம் சமமாய்
சரீரத்திலே ஒரு நொய்ம்மை பிறந்து-சத்துவம் தலை எடுத்த போதாக-நம்மை யாவன் ஒருவன்
ஸ்மர்த்தா –
நினைக்கிறான் -என்றது-நாம் யார் -சரீரம் ஆகிற இது அறிவில்லாத பொருளாய் இருந்தது –
சரீரத்துக்கு வேறு பட்டதாய் ஒரு ஆத்மா உண்டு-அவ்வாத்மாவானது ஈஸ்வரனுக்கு அடிமைப் பட்ட பொருள்-
சர்வேஸ்வரனைப் பெறுதல் இவ்வாத்மாவுக்கு மோஷம் ஆகிறது -என்று நினைக்கிறவன் -என்றபடி –
விஸ்வ ரூபஞ்ச மாம் –
குடல் தொடக்கத்தால் முள் பாய்ந்தால் வரும் துன்பம் ஆத்துமாவினது ஆமாறு போலே-
இவற்றுக்கு வந்த இன்ப துன்பங்கள் தனக்கு வந்தனவாம்படி-
எல்லா வற்றையும் சரீரமாக உடையனாய் இருக்கிற என்னை –
அஜம் –
இவனைப் போன்று பிறவி காரணமான கலக்கம் இன்றிக்கே இருக்கை அன்றோ –
விஸ்வ ரூபஞ்ச மாம் -அஜம் –
நாராயணன்-ஸ்வாமித்வம் சௌலப்யம் வாத்சல்யம் சௌசீல்யம்
அஜம் -ஞான சக்தியாதிகள் –
தத
ஆகையாலே
தம் காஷ்ட பாஷாண சந்நிபம் ம்ரியமாணம் அஹம் ஸ்மராமி
நடையாடித் திரியும் அன்று இவனுக்கும் உண்டே அன்றோ இந் நினைவு-
அறிவில்லாத பொருளைப் போன்று கிடந்த அன்றும்-இவன் நினைதிலன் -என்ற தேவை இடாதே-
நான் அவனை எப்போதே நினைத்தபடி நிற்பன்-
மத் பக்தம் –
அடைகொடு பாழ் பொகடுமவனையோ அவன் பற்றிற்று -என்றது –
பல நாள்கள் பச்சை இடுவித்துக் கொண்டு-காரிய காலத்தில் வந்தவாறே-
பச்சை இடாத நாள்களை எண்ணி-அகற்றுமவனையோ பற்றிற்று -என்றது-
நயாமி பரமாம் கதிம் –
கள்வன் கொல் -பெரிய திருமொழி – 7-7-1-பிராட்டியை-அத்வாளத்தலையை-முந்தானையின் தலையில் -இட்டு
மறைத்து கொடு போனால் போலே-தானே கையைப் பிடித்து கொடு போமாயிற்று -என்றது
ஆதி வாஹிகரை வரக் காட்டி யாதல்-பெரிய திருவடியை வரக் காட்டி யாதல்-கொடு போகை அன்றிக்கே
ஆதி வாஹிகரில் முதன்மையான தானே கொடு போம் -என்றபடி –

சரண்ய முகுந்தவம் உத்பலா வதகத்திலே பிரசித்தம் -சூர்ணிகை -181-

மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –
அதில் துர்பல புத்திகளுக்கு
மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு-தாள் அடையும் பிரபத்தி –
அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-
சர்வ உபாய ஸூன்யருக்கு -இப்பத்தும் பாடியிடும் தண்டன் -என்று
கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே
ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனாரும் அருளிச் செய்தது-சூர்ணிகை –227-

உத்பல -மாம்சத்தில் விருப்பம் இல்லா ரிஷிகள் -விமானம் -சரண்ய முகுந்தத்வம் -காட்டி அருள
-பர உபதேசம் பண்ணி -அழுகை நின்றால் உடனே உபதேசிப்பாரே –
முதல் 4 பாசுரங்கள் பக்தி பாரமாக
மேலே பிரபத்தி பாரமாக -5 பாசுரம் –
மேலே -திவ்ய தேசம் சொன்னாலே போதும் -மூன்று நிலைகள் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் -ஆகதோ மதுராம் புரிம்-தனி ஸ்லோக வியாக்யானம் –
ஏஷ -ஸவ்ரி -/நாராயண ஸவ்ரி /ஸ்ரீ மான் ஸவ்ரி -இப்படி ஒவ் ஒன்றும் -கீழை வீடு திருக் கண்ண புரம் -திருமங்கை ஆழ்வாரை பாடுவித்த முக்கோட்டை –
ஆனந்தமாக ஆழ்வார் அருளிச் செய்யும் திருவாய் மொழி -இது –
நீல மேகப் பெருமாள் மூலவர் -புண்டரீக விசாலாக்ஷம் -சரஸ் சந்த்ர ஆனணம்-நீலாத்ரி -நீல மலை போலே
மலை இலங்கு தோள் நான்கே-கருவரை போலே நின்றானை கண்ண புரத் தம்மானை கண்டாள் கொலோ
பதமினி தாயார் -திருக் கல்யாணம் –
பிரயோக சக்கரம் மூலவர் –
சர்வாங்க ஸூ ந்தரன் -அழகியான -திரு நாக்கை ஸூ உத்தர பெருமாள் -அச்சோ ஒரு அழகிய வா -சமுதாய சோபை –
ஸவ்ரி அழகால் இவர் ஈர்ப்பார்
உபரி சரவசூ அரசன் வேட்டை -ரிஷிகள் -சாமைக் கதிர் போலே இளைத்து -இருக்க -16 வயசு பாலகனாய் வந்து -ரக்ஷிக்க
பக்தர்களை காக்க -அவனை அனுக்ரஹித்து -அவன் ஏழு மதிள்கள் இருந்த -வேலை மோதும் மதிள் -அலைகள் வீசா நிற்கும்
திருமலை ராயன் பட்டணம் -மாசி மகம் தீர்த்தவாரி -பல்லக்கில் -மாப்பிள்ளை ஸ்வாமி –
பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தார் -கொற்றப் புள் ஒன்று ஏறி மன்னூடே வருகின்றான்
திருக்கைகள் மேலே -யதாஸ் ஸ்தானம் -இங்கு ஒரு திருவடி மேலும் ஒன்றும் கீழும் பரம பதன் போலே சேவை –
அரையர் -சோழ மன்னன் மதிள்களை இடிக்க -கையில் வில் பொம்மையா -சிலை இலங்கு பொன் ஆழி–தாளம் வீசி திரு முகம் நெற்றியில் வடு –
மயங்கினேன் பாசுர இனிமையால் -அம்பு பொழிந்து ரக்ஷித்தான்
அம்மாவாசை திருக் கைத் தல சேவை -கண்ண புரத்தமுதே என் அவலம் களைவாய் –
ராஜா ஒத்தக்க குழை -காதில் அழகிய மணி சூடி -நாஞ்சிலும் ஒரு பாடு இலக-
ராம சந்நிதியில் கண்ணன் சேவை -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம் -தண்டக மகரிஷிக்கு சேவை -முனியதரையர் பொங்கல் பிரசித்தம்-
அரசன் புத்ர காமோஷடி யாகம் -சுமதி -ராணி உபரி வசூ ராஜா -பதமினி தாயார் -தானம் பெரும் ஹஸ்தம் -64 சதுர் யுகம் கண்ட பெருமாள் –

பத்தாம் திருவாய் மொழியில் கீழே ப்ராப்ய ஆர்த்தராய்க் கூப்பிட்டவர்க்கு ஈஸ்வரன் அர்ச்சாவதார ஸூலபனாய்க் கொண்டு
திருக் கண்ணபுரத்திலே நிற்கிற நிலையைக் காட்டி இவருடைய ஆர்த்தியை சாமிப்பித்த இவ்வாபத் ஸகத்வத்திலே ஸந்துஷ்டாராய்
வடதள ஸாயித்தவ மஹா உபகாரத்வத்தையும்
வஸ்த்வய தேச வைலக்ஷண்யத்தையும்
விலக்ஷண விபூதி யோகத்தையும்
அதிசயித்த போக்யத்வத்தையும்
பரமபத பிரதத்வத்தையும்
அனுகூல விரோதி நிராசைக்காதவத்தையும்
அநந்ய ப்ரயோஜன ஸூலபதையையும்
சம்சார நிவர்த்தகத்வத்தையும்
காரணத்வத்தையும்
ஸ்ரீ யாபதித்தவத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டானாய்க் கொண்டு ஆஸ்ரயண ஸ்தலத்தில் அடிமை கொள்வதாக நிற்கிற
கைங்கர்ய பிரதி சம்பந்திவத்தையும் அனுசந்தித்து அத்யந்த ஹ்ருஷ்டராய் –
பக்தி பரராயும் பிரபத்தி பரராயும் யுக்தி பரராயும் அவனை
ஆஸ்ரயித்தும் அனுபவித்தும் அவன் திருவடிகளில் கைங்கர்யம் பண்ணியும்
நிவ்ருத்த சாம்சாரிக சகல கிலேசராய்க் கொண்டு வர்த்தியுங்கோள்-என்று
அவனுடைய கிஞ்சித்க்கார பிரதி சம்பந்தவத்தால் வந்த பல ரூபத்தை ப்ரதிபாதித்து நிகமிக்கிறார் –

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

இத் திருவாய் மொழியில் சொல்லப் படும் பொருளாவது–இறைவனைப் பற்றுமின் -என்பது-அதனை இப் பாசுரத்தில் சுருங்க அருளிச் செய்கிறார்-

மாலை நண்ணி-சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி-சிநேகத்தின் காரியமான அன்பினைப் பொருந்தி–அடைந்து-காலை மாலை –இறைவனைப் பற்றுதற்கு கால வரை யறை இல்லை கமல மலர் இட்டு–எல்லா மலர்கட்கும் உபலஷணம் –ஆயாஸ சாத்தியமான பக்தியை தொழுது எழு என்பது இவர் அபிப்ராயத்தால் –அருளினன் -என்று பிரபத்தியை பற்றி இழிந்தவர் ஆகையாலே-தன் வாசனை தோற்றச் சொல்லுகிறார்

ஆல் -நீரும் இடமும்–தண்ணீரின் மேல் இருக்கிற ஆல் என்னுதல்-ஆலின் மேலிடத்து என்னுதல்-இரண்டாவது பொருளில் -மேல் ஆல் -என்பதில் உள்ள ஆல் அசை நிலை-ஆல்-நீரை சொல்லுமோ -ஆலங்கட்டி -கந்தாடை ஆண்டான் சொல்ல பெரிய ஜீயர் உகந்து அருளினார் –

—————

கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-

சர்வேஸ்வரனுக்கு என் வருகிறதோ -என்று அஞ்சும் ஆசை உடையார்-காவலோடு கூடிய தேசம் என்று-அச்சம் இல்லாதவர்களாய் நாள் தோறும் தொழுது எழுமின் –என்கிறார்

——–

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே--9-10-3-

விலக்ஷண விபூதி உக்தன் -சுலபன் -ஏக கண்டமாய் —தொண்டர் -என்கையாலே எல்லாரும் ஒரே மிடறு ஆகலாம் அன்றோ -உங்கள் துயர் கெட-அநந்ய பிரயோஜனராய்-வேறு ஒரு பயனையும் கருதாதவர்களாய்-ஆராதிக்க -அருளிச் செய்கிறார்

விண்டு வாடா மலரிட்டு–அலரத் தொடங்கின அளவாய்-கழிய அலர்ந்து வாடாத பூ -என்றது-ஈஷத் விகசிதம் –

திருக் கண்ணபுரத்து -அண்ட வாணன் அமரர் பெருமானையே–இங்கே இறைவனைப் பற்றும் விரோதியைப் போக்கிக் கொண்டு-பூர்ண அனுபவம் பண்ண ஒரு தேச விசேடம் தேடித் போக வேண்டா-
நித்ய ஸூரிகளும் இங்கே வந்து சீல குணத்தை அனுபவிக்கும்படி ஏற்றம் உண்டே அன்றோ இங்கு-

பிரதிமாசு அப்ரப்புத்தானாம் -ஞானம் இல்லாதார்க்கு விக்கிரகத்தில் இருக்கிறார் -என்ற இதற்கு அம் மேட்டிலும் ஏறிப் பாயா நின்றால்-தேசிகருக்கு சொல்ல வேண்டுமோ -என்று-ஆளவந்தார் அருளிச் செய்யும்படி
ப்ரதிமாசு அப்ரப்புத்தானாம்-அபி -சேர்த்து -அப்பிரபுத்திகளுக்கும் சேவை -உம்மைத் தொகை சேர்த்து ஆளவந்தார் –விப்ரர் அக்னியில் -யோகிகள் இருதயத்தில் –ஸர்வத்ர சம தர்சனம் -நால்வரையும் சொல்லும் ஸ்லோகம் -அக்நோ த்ருஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி த்ருஷ்டதி யோகிநாம் பிரதிமாசு அப்ரப்புத்தானாம் அபி ஸர்வத்ர சம தர்சனம் 

——–

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனை மானானது நோக்கை -கண் அழகை – நைந்த கடைக் குறை-நோக்கி-நோக்கை உடைய—மான் நை நோக்கி-மானானது நையும்படியான நோக்கை உடையவன் -என்றது
மான் தோற்று நாணும்படி ஆயிற்று நோக்கு இருப்பது -என்றபடி –அதிசயித போக்யனான கிருஷ்ணனை நப்பின்னை பிராட்டி உடன் சேர்ந்து -ஆராதிக்க அருளிச் செய்கிறார்

தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்-திருவடியாகிய -தேனையும்-செவ்விப் பூவையும்-சேர்க்கை போலே காணும் பற்றுலதல் ஆவது –

தான் நயந்த பெருமான் –அடியார்களோடு கூடி இருந்து குளிர்வதற்கு பாங்கான தேசம்
என்று அதனை விரும்பி வசிக்கிற-சர்வேஸ்வரன் ஆனவன்

—————-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்–இப்படி பக்தி யோகத்தால் அடைவதற்கு-தகுதி இல்லாதவர்களாகி தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து-அவன் செய்து அருளும் படியை-அருளிச் செய்கிறார்-மேலே சொன்ன பாசுரங்களாலும் சொன்ன பக்தி யோகம்-எல்லாருக்கும் செய்யத் தக்கது அன்று-இப்பாசுரத்தில் சொல்லுகிற பிரபத்தி எல்லாராலும் செய்யத் தக்கது(முதல் பாசுரம் மட்டும் பக்தி பிரபத்தி இரண்டுக்கும் -அடுத்த மூன்றும் பக்தி பரம் -இது பிரபத்தி பரம் )

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்-திருவடி பற்றினார்களுக்கு உபாயம் தானே என்றுமாம் –திருவடியே சரணம் ஆகும் என்றுமாம் -திருவடியே உபாயம்-தரணி யாளன்-தரணி பூமியை ரக்ஷிக்க -பூமா தேவிக்கு ஸ்வாமி

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-ஆஸ்ரிதற்கு பரம பதம் -பிரதன் ஆனவன்-தனது அன்பர்க்கு அன்பாகுமே— ஸூ விஷயத்தில் கைங்கர்ய நிஷ்டர்க்கு அபி நிவேசமே வடிவாகக் கொண்டவன்-ஞானி பிரியோ- அத்யந்த மம பிரிய -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேய-அன்புடையவன் என்று பிரிக்க ஒண்ணாதபடி-அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருத்தலின்-அன்பாகும் -என்கிறார் –

நடுவில் இவன் இருக்கும் நான்கு நாள்களும்-அவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் இருக்கையாலே –மரணமானால் -என்கிறார் –தனக்கு ஆற்றல் இல்லாமையால் அன்று –
இவன் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து-முடிக்கப் பெறாமையாலும் அன்று –இவனுடைய ருசியைக் கடாஷித்து நிற்கிறான் இத்தனை-என்றபடியைத் தெரிவிக்கிறது

————

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-

ஸூ அனுபவ விரோதியை நிரசித்து -பரமார்த்திக உண்மையான அன்பை உடையார்க்கு பரமார்த்த பூதநாம்-நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே – தன் பக்கல் அநந்ய பிரயோஜனராய் இருப்பார்க்கு-தானும் அவர்கள் பக்கல் என்றும் ஒக்க-அநந்ய பிரயோஜனனாய் இருக்கும்
அன்றிக்கே-தன் பக்கல் சிநேக பாவம் உடையாரை-விட மாட்டேன் என்று இருக்குமவன் -என்னுதல் –

———–

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-

அநந்ய பிரயோஜனருக்கு ஸூலபனாய்-பிரயோஜனாந்தர பரருக்கு அதனைக் கொடுத்து
தான் அகல நிற்பான்–புறம்பே பிரயோஜனாந்தரங்களை பெற விரும்பிஅடைகின்றவர்கட்கு-
இவ் உலகில் மேலும் மேலும் ஆசையை உண்டாக்கக் கூடிய-அந்த பேறுகளை விரும்பிக் கொடுத்தவனாய் தன்னைக் கொண்டு அகலுவான் –-என்கிறார்-ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே – அநந்ய பிரயோஜனருக்கு – தன்னை மனத்தில் வைப்பவர்கட்கு-கையாளாய் இருப்பன் –

இமௌ ஸ்ம முனி சார்த்தூல கின்கரௌ சமுபச்திதௌ-ஆஜ்ஞ்ஞாபய யதேஷ்டம் வை ஸாசனம் கரவாவ கிம் -பால -31-4-முனி புங்கவரே-நாங்கள் உம்மை அடைந்தவர்களாய்-உமக்கு வேலையாளாய் இருக்கிறோம்-என்கிற படியே இருப்பன் –

———-

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-

அவனை அடையுங்கோள்-உங்கள் துக்கத்தையும்-துக்கத்துக்கு காரணமான பிறப்பினையும்
போக்கி அருளுவான் –என்கிறார்- —பிறவி கெடுத்து ஆளும் –அந்த துன்பங்களுக்கு காரணமான பிறப்பினைப் போக்கி-அடிமை கொள்ளும் –

பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே – பரமபததில் இருக்கும் படியில் ஒன்றும் குறை இல்லாத படி-ஆயிற்று இங்கு இருப்பது–அவன் திருவடிகளில் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான-கைங்கர்யத்தைச் செய்யுங்கோள் –
அங்கு நித்ய ஸூரிகள் பணிய இருக்குமவன்-இங்கே வந்த பின்பு நீங்களும் அவன் திருவடிகளிலே பணியப் பாருங்கோள் -என்பர்- திருக் கண்ணபுரம் பரமேட்டி பாதம் பணிமின் –என்கிறார்-

————-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

பணிந்து தணிந்தேன் -அடைந்து சகல துக்கங்களையும் தீர பெற்றேன் -தனக்கு ஆனதை பர உபதேசம் செய்து அருளுகிறார்-துன்பம் கடலில் எழுந்து முன் நான்கு -இதில் ஒரு தலை துலுக்கலில் நம்பி விஸ்வஸித்து பாடுகிறார்-ஒருவருடைய உபதேசமும் இல்லாமலே-நான் முன்னம் அவனை அடைந்து- இன்பத்தினை அடைந்தவன் ஆனேன்-என்று ப்ரீதர் ஆகிறார்-

நாளும் பணியத் தணியும் பிணி-நாள் தோறும் அனுபவிக்க – முன்புள்ள பிணிகள் போகுமே பணிந்தால் தணியும் என்றால் நிர்ஹேதுகம் ஆகாதே

தணியும் பிணி-ஏதம் சாரா -பாதம் பணிய- நாளும் பிணி–பலகாலமாக ஈட்டிய வினைகள் எல்லாம்-அநாதி கால ஆர்ஜித பிணி எல்லாம்  தணியும்–பிணி -பூர்வாகம் -ஏதம் -உத்தராகம் என்றுமாம் –போய பிழையும் -புகு தறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –தததிகம உத்தர பூர்வாகயோ அசலேஷ வினாசௌ தத் வ்யபதேசாத்

வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து ஆதியானை-காரணம் து த்யேய– காரணமாய் உள்ள பொருள் த்யானிக்கத் தக்கது -என்கிறபடியே-உலக காரணன் அன்றோ த்யானிக்கத் தக்கவன்-

வேதார்த்தம் —வேத சாரம் -சார தாரம் -சார தம காயத்ரி முன்னோதிய- வேதார்த்தம் திருக் கண்ண புரம்-சம்பந்தம் -திருமந்த்ரார்த்தம் -அருளியதால் –
திரு மங்கை ஆழ்வாரைப் போல்வாரை -வேத நாவர் -என்கிறது –விரும்புகையாவது
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவற்கு உரியேனோ -பெரிய திருமொழி –6-9-3–என்கை –

ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே –தாய் மடியிலே சாய்ந்தார்க்கு கிலேசம் இல்லையே -என்னும் இடம் உறுதி –

—————

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

ப்ரீதியின் மிகுதியாலே-மேல் இரண்டு திருப் பாசுரங்களாலே தமது பேற்றினைச் சொல்லி-
பக்தி பிரபக்தி இரண்டுக்கும் தகுதி இல்லாதவர்கள்–விச்வாஸம்-வேணுமே -சங்கா த்ரயம்-பல்கு-உயர்ந்த பலன் -பாப குவியல் மூன்றும் -உண்டே –திருக் கண்ணபுரம் என்ற வார்த்தையினைச் சொல்லவே-எல்லா துன்பங்களும் போம் —யுக்தி மாத்திரமே அமையும்–என்கிறார் –திரு மார்பினன்--திருக் கண்ண புர நாயகியும் இருக்க -என்ன குறை-அனுபவ அலாப துக்கம் இல்லை -அவிச்சின்ன அனுபவம் கிட்டும்

எனக்கேல் இனி என் குறை –-இனி எனக்கு என்ன குறை உண்டு -என்றது –பகவானை அனுபவிப்பதற்கு விரோதியான துன்பங்கள் எல்லாம் போன பின்பு நான் அனுபவிப்பதற்கு ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டி இருந்தது இல்லையே -என்றபடி –

———-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

உங்களுடைய துன்பங்கள் எல்லாம்-வாசனையோடு போக வேண்டி இருக்கில்-
இத் திருவாய் மொழியில்-ப்ரீதி முன்னாகச் சொல்லிக் கொண்டு-அவன் திருவடியைப் பற்றுங்கோள்-என்கிறார்- யுக்தி கூட சொல்ல முடியாதவர்கள் -இந்த திருவாய் மொழி சொல்ல அமையும் -இது நான்காவது நிலை —

பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே-மூன்று வினைச் சொற்கள் -ப்ரீதியால் பாடியும் ஆடியும் -சுலபனான அவன் திருவடிகளை வணங்கி அனுபவிக்க -பகவத் அனுபவம் பண்ணவே ஸமஸ்த துரிதங்களும் போகுமே -ஸூசுகம் கர்த்தவ்யம் –

ஆப்தர் உடைய உபதேசம் ஆகையாலே-திருவாய் மொழியில் பிறந்த வற்றில் அர்த்தவாதம் இல்லை-பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே –ப்ரீதி முன்னாகப் பாடி-இருந்த இடத்தில் இராதே ஆடி-ப்ரீதியினால் தூண்டப் பட்டவர்களாய் கொண்டு- அவன் திருவடிகளில் விளுங்கோள்- இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற-வேப்பங்குடி நீர்-
தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –

—–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் –25-எம் கோல் வளை முதலா–தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –-

February 18, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

ஸர்வ ரக்ஷகன்-மண்ணையும் விண்ணையும் ரக்ஷிப்பவன் -இருந்தாலும் அவன் திருத்துழாயின்
ஸர்வ போக்யத்வம் -இதன் ஈடுபாட்டால் -ஆழ்வாரை மட்டும் விட்டும் -ரக்ஷிக்காமல் இருக்க –
செங்கோல் வளைந்து -நடுநிலை இல்லாமல் செய்யுமானால் இந்தப் பெண்ணை என்ன பாடு படுத்தாது
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை -மாயக்கூத்தா திருவாய் மொழியிலும் இதே போல் உண்டே–என்னுடைய வளை நிமித்தமாக என்கையால் நாயகி-சம்சாரத்தில் அபலையான இவளை பெற்றால் என்ற வியாக்யானம் இருப்பதால் தோழி வார்த்தையாகவும் தாயார் வார்த்தையாகவும் கொள்ளலாம்-கடவுளை நம்பினார் கைவிடப்படார் அல்லவோ என்னில்-உனக்கும் ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ -ஆழ்வார் 

பகவத் சமாஸ்ரண்யம் பண்ணினாரில் இப் பாடு பட்டார் உண்டோ என்கிறாள்-ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார் காரே மலிந்த கருங்கடலை – நேரே கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி அடைந்தானை நாளும் அடைந்து —-மூன்றாம் திரு அந்தாதி  -27-அடைந்தாரும் ரஷிக்கப் படாததுக்கு மூன்றாம் திருவந்தாதி பாசுரம்

இப்படி ஸூஹ்ருத்துக்களும் ஈடுபடும்படி ஈஸ்வரனுடைய போக்யதையிலே ஈடுபட்டவர்-அந்த போக்யதையினுடைய அதி ப்ரவ்ருத்தியை அவன் உகந்த திருத்துழாயிலே ஈடுபட்ட தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
ஸர்வேஸ்வரன் அபலையானவள் நிமித்தமாகத் தன்னுடைய ஆஜ்ஜையை நெகிழப் பண்ணா நின்றான்
அவன் நினைவு அறிந்து கார்யம் செய்யும் திருத்துழாய் எத்தைச் செய்யாது என்னுதல்
அன்றிக்கே-உபக்ரமத்தில் அவனுடைய ஆஜ்ஜையையும் கூட அழிக்கிற இது இனி எல்லாம் செய்தது அன்றோ என்று இத் திரு துழாய் தன்னையே சொல்லிற்றாதால் திருத் தாயார் வார்த்தை யாகவுமாம்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி அவதாரிகை
இப்படி எனக்கு அதி போக்யமும்-எங்கோன் உகக்குமதுமான இத்திருத்துழாய் ஸர்வ ரக்ஷகனும் ஸர்வாதிகாரி நிர்வாஹகனுமானவனதான பெண்ணீர்மை ஈடழிக்க வல்ல திவ்ய ஆஜ்ஜையினுடைய ஸர்வ தேசா க்ரமணத்தை விஜ் ரும்பியா நின்றதே இனி இந்நான்னிலத்து இது எத்தைச் செய்யாதது என்று அதின் கொடுமைகளிலும் போக்யதையிலும் தலைமகள் ஈடுபடுகிறாள்

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே
–25-தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –

மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடா
யாயது அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்–75-கீழே ப்ரஸ்துதமான அனுபவம் மானச அனுபவ மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே-மிகவும் நோவு பட்டு காட்டுத் தீ கதுவினால் போலே-பரிதப்த சித்த காத்ரராய் அவயவ சோபை-ஆபரண சோபை-ஒப்பனை அழகு இவற்றுக்கு ஆஸ்ரயமான விக்ரஹம் இவற்றின் உடைய வைலஷண்யத்தை பல படியாக வர்ணித்துக் கொண்டு பெரும் கூப்பீடாக கூப்பிடுகிற மாயக் கூத்தனில் அர்த்தத்தை மாயன் வடிவு அழகை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-இப்படியான யசஸை யுடையரான ஸ்ரீ ஆழ்வாரை நாம் அநந்ய பிரயோஜனராய் கிட்டி நின்று அனுபவிக்கும் காலம் பகலாய் இருக்கும் வகுள பூஷண பாஸ்கரர்பராங்குச ஆதித்ய சந்நிதி -இறே -அவருடைய அனுபவ விச்சேத காலமானது சம்சாரம் ஆகிற காள ராத்ரியாம் –

எம்கோல் வளை முதலா –என்னுடைய வளை நிமித்தமாக-கண்ணன் இத்யாதி– சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும் ரஷியா நின்ற வாஞ்ஜையை பக்னம் ஆக்கா நின்றது-நம் கோன் உகக்கும் துழாய் —சம்சாரத்தின் அபலையான இவளைப் பெற்றால்-என் செய்யாது– சர்வேஸ்வரன் தானே உபய விபூதியையும் ரஷிக்க கடவ ஆஜ்ஜையை பக்னம் ஆக்கா நின்றான்-என் உடைய வளை நிமித்தமாக இவனை அழிக்க தொடங்கினால் வேறு ரஷிப்பார் யார் என்றுமாம்-திறல் சேர் இத்யாதி– மிடுக்கை உடைய இந்த்ராதி தேவதைகளுக்கு நாதனான பிரம்மாவுக்கும் நாதன் ஆனவன்-உம்பர் இத்யாதி–
மேலா தேவர்களான அயர்வறும் அமரர்கள் அதிபதி-இத்தால் உபய விபூதி நாதன் என்ற படி-நம் கோன்
உபய விபூதிக்கு நாதன் ஆனால் போல அன்று கிடீர்-எனக்கு நாதன் ஆயிற்று-அரங்கம் ஆளி என் ஆளி
ஸ்ரீ ரெங்க நாத மம நாத அங்கு எல்லாம் விசேஷ கடாக்ஷம் இங்கு பேர் அளவிலே நாதன்
உகக்கும் துழாய்–தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்–திருவாய்மொழி -1-9-7- இத்யாதி —

இவளை ரக்ஷிக்கா விடில் அவன் செங்கோலுக்கும் குறை ஆகாதோ–அவனே வாராமல் இருந்து தன் செங்கோலுக்கு வளைவை உண்டாக்கின பின்பு-திருத் துழாய் என்ன செய்ய மாட்டாது-என் வளை நிமித்தமாக இவனே அழிக்கத் தொடங்கினால் வேறே ரஷிப்பார் உண்டோ-தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை அம்மான் -நம் கோன் உகக்கும் துழாய் –போக்யதையில் ஈடுபட்ட ஆழ்வார் அந்த போக்யதா பிரகர்ஷம் ஆற்றாமை மிகுத்து வருத்துவத்தைக் கூறிற்றாம் –

எம்கோல் வளை முதலா-எங்கள் கையிலே கோல் வளை படியாக–கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்–ஸர்வ ஸூலபமான கிருஷ்ணன் லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற அபங்குரையான ஆஜ்ஜைக்கு வளைவை யுண்டாக்கா நின்றது–திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்-பிரபலரான லோக பாலாதி தேவர்களுக்கும் நிர்வாஹகனான ப்ரஹ்மாவுக்கும் அசாதாரண ஸ்வாமி யானவன்–உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்-மேலான நித்ய ஸூரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும் நிருபாதிக சேஷியானவன்-நம் கோன்-இந்த மேன்மையாலே நம்மை அடிமை கொண்ட ஸர்வேஸ்வரன்–உகக்கும் துழாய்-தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7- என்கிறபடியே விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைத்தான திருத்துழாயானது-என் செய்யாது இனி நால் நிலத்தே – குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் என்று நாலு வகைப்பட்ட பூமியிலே இனி எது செய்யாது என்றதாயிற்று(பாலை -ஐந்தாவது -மக்கள் வாழ மாட்டார்கள் அன்றோ )எம் கோல் வளை -என்று தலைமகளைச் சொல்லிற்று ஆயிற்று–தலைமகள் ஈடுபாட்டுக்கு தோழி ஆற்றாது உரைத்தலாகவுமாம்-

இத்தால்
எம் கோல் வளை இத்யாதி
-நம் கையிலே மினுங்கித் தோற்றுகிற பாரதந்தர்ய லக்ஷணம் அடியாக
உபய விபூதியையும் நிர்வஹிக்கிற பகவத் சங்கல்பத்தை அநு விதானம் பண்ணி ஆறி இருக்க ஒட்டாதபடி த்வரையை விளைக்கையாலே பகவத் ஆஜ்ஜா பங்கத்தைப் பண்ணுவதாய் இரா நின்றது-நிர்வாஹ்யமான விபூதி த்வயத்துக்கும் நிருபாதிக சேஷி யாகையாலே-அகில ஜகத் ஸ்வாமியாய்
அஸ்மத் ஸ்வாமி யானவனுக்கும் அபிமதம் ஆகையிலே அதிசயித வை லக்ஷண்யத்தை யுடைத்தான போக்யதையினுடைய அதி பிரவிருத்தி யானது இரண்டு விபூதியையும் விளாக்குலை கொள்ளுகையாலே பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான ஜகத்தில்
இனி ஏது செய்யாது என்று தம்முடைய ஸைதில்யத்தை அருளிச் செய்தாராயிற்று
-பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான- ஸூஷ்ம ரூப ப்ரக்ருதி -புருஷ -ஸ்தூல ரூப -காலம் -இப்படி நான்கும் – அந்திம ஷட்கம் ஸங்க்ரஹ ஸ்லோகம்-இப்பத பிரயோகங்கள் உண்டே
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் கர்ம தீர் பக்திரித்யாதி: பூர்வஶேஷோந்திமோதித:
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
– ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம், ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,-கர்ம: – கர்மயோகமும்,-தீ: – ஜ்ஞாநயோகமும்,-பக்தி: – பக்தியோகமும், இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்) பூர்வஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை, அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.)எம் கோல் வளை -என்று பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஆழ்வாருடைய ஸ்வரூபத்தை உத்தேசித்து பார்ஸ்வத்சரான ஸூஹ்ருத்துக்கள் சொன்ன வார்த்தை யாகவுமாம்

ஸ்ரீ நம்பிள்ளைவியாக்யானம்
எங்கோல் வளை முதலா-எனக்கு எல்லா வழியாலும் உஜ்ஜீவன ஹேதுவான இவள் நிமித்தமாக
பகவத் ஸ்பர்சம் க்லேசமாகப் புக்கது இவளைத் தொடங்கிக் கிடீர்-அவஸ்யம் அநு போக்த்வயம் -என்கிறபடியே-அனுபவ விநாஸ்யமான பாபத்தைப் பண்ணின பகவத் ப்ரத்யாஸன்னரில் அப் பாப பலம் அனுபவித்தார் யார்–அவன் தானும்-க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி
—৷৷9.31৷৷என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் – நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் – குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் – இப்படிப் பட்ட அநந்ய பக்தனுக்கு ரஜஸ் தமஸூக்கள் வாசனை ருசி உடன் கழன்று போகும் –நான் ஏலா பொய்கள் உரைப்பான் என்பர் -நீ சொன்னால் நம்புவார்கள் -ஷத்ரியன் ராஜா அன்றோ –அஷ்ட வித பக்தி -எனக்கு சமமாக நினைக்கத் தக்கவன் – மிலேச்சனாக இருந்தாலும் -கருட புராணம்- நின்னொடு ஓக்க -திருமாலை-மத் பக்த ஜன வாத்சல்யம் -பூஜா ஆமோதித்து ஆனந்தம் ஸ்வயம் பூஜா பண்ணி-மத் கதா ஸ்ரவணா ப்ரீதி -கொள்மின் கொடுமின் ஞானம் கொடுத்து பெறலாம் –ந வாஸூ தேவ பக்தா நாம சுபம் வித்யதே க்வசித் -ஸ்ரீ ஸஹஸ்ரநாம அத்யாயம்-ஸர்வேஸ்வரன் பக்கலிலே ப்ரேமத்தைப் பண்ணி இருக்கையும் பொல்லாங்குகள் உண்டாகுகையும் அக்னி நாஸிஞ்சேத் -போலே கூடாதது ஓன்று இறே-இவன் தான் போக்கிக் கொள்ளப் பார்த்தல் அவனுக்கு அசத்தி உண்டாதல் செய்யில் இறே இது உண்டாவது-ந வாஸூ தேவம் ப்ரணிபத்ய ஸீததி –என்றும்
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந-என்றும் –ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-இத்யாதியாலே கண்டோம்-

சர்வ பிரகாரங்களாலும் தோஷமே யாகிலும் ஞானத்துக்கு மேல் அவ்வருகு நன்மை இல்லையாகிலும்
பக்தி நெருப்பு இவன் இடம் இல்லை யாகிலும் இனி இவனை நிர்தோஷனாக பிரதிபத்தி பண்ண வேண்டுகிறது என்ன ஹேது கொண்டு என் என்னில்-ப்ரபாவாத் பரமாத்மந -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24- இத் தோஷங்களோடே பகவத் விஷயத்திலேயும் கை வைக்கும் பின்னை இத்தையே-தோஷத்தையே- பார்த்து இருக்கும் அத்தனை போக்கி இவனைக் குறைய நினைத்ததாகில் பகவத் ப்ரபாவத்தைக் குறைய நினைத்தானாம் இத்தனை – எலி எலும்பனான இவனைப் பார்த்து குறைய நினைக்கிறது-பகவத் ப்ரபாவத்தைப் பார்த்து இவனை நிர்தோஷனாகப் பிரதிபத்தி பண்ணுகிறது –
புரா -பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு இறே தோஷம் இருப்பது-பின்பு அவன் பக்கலில் நெஞ்சு வைக்கவும் பொல்லாங்கு உண்டாகையும் கூடாது-அவன் தானும் ஷிப்ரம் பவதி என்றான் இறே
பண்டு உய்யக் கொண்டார் பக்கலிலே -இவர் நாதமுனி சிஷ்யர் அல்லர்-சாதனாந்தர நிஷ்டர் வேறே உய்யக் கொண்டார் ராமானுஜர் காலம் அவரும் இல்லை-நான்காம் வர்ணம் பாகவத பிரபாவம் அறிந்தவர்-இவர் இடம் உசாவி -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாசர் இருவரும் சங்கை
அவரைக் கண்டு தான் இருந்த இடத்தை அவருக்கு கொடுத்து கடக்க நிற்க-தாசரும் தனது தன்மை அறிந்தவர் எல்லாரும் தாசர் என்று அறிந்து இருப்பார்களே என்ன-என்னால் உம்மை அறியப்போமோ
பகவான் நிர்ஹேதுகமாக கிருபையால் படைத்து -ஜகத்காரணம் இவனே என்று அறிந்தவன்
தேவர்கள் கூட அந்த பாகவதர் பெருமையை அறியவே மாட்டார்கள் பாரதம்-பிரானே உம்முடைய பெருமை தெரியாது என்று சொல்ல தேவர்கள் வேணும் -நான் யார் சொல்ல

என் கோல் வளை-எனது ஜீவனம் அழித்தோ தனது ஸ்வாதந்த்ரம் நடத்தப் பார்ப்பது இளைத்து கை வளை இழந்த ஆழ்வார் அழகு -மிக்கு இருக்குமே -ஆகிலும் இக் குறையும் வராதே இவர் இருக்க வேண்டும்-அம்ருத சாகரத்தில் ஆழ்ந்து அங்கு -சம்சாரம் அப்படி இல்லையே-உண்ணும் சோறு –கண்கள் நீர் மல்கி இருப்பவரையே நமக்குப் பிடிக்கும் -இப்படி இருந்தாலும் அவனை அன்றி வேறே ஒன்றை நினையாத -ஏங்குதலே அழகு
கண் எச்சில் படாமைக்கு இவை வேண்டாம் -த்ருஷ்ட்டி தோஷம் வரக் கூடாது-தாயார் ஆகையால் இப்படித்தானே நினைப்பாள்-ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு பார்ப்பது அழகு தான் இருந்தாலும்–தன்னை அழிய மாறி ஆஸ்ரித வத்ஸலனான கண்ணன் கூட இப்படி பண்ணுவானோ-தனது ஆணையை அழித்து அகர்மவஸ்யனாய் தேவகி வயிற்றில் பிறந்து வந்து சொல்கிறான் ஜாதோசி தேவ தேவ
ஜாதோஹம்
-அவன் சொன்னதைத் திரும்பி ரிஷிகள்-கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
ஈரக்கையால் தடவி ரக்ஷிக்கும் செங்கோல் அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற திருவரங்கச் செல்வனார்
ஆணை -அதுக்கு வளைவு -உண்டாக்கலாமோ திருத் துழாய் ஆணையை வளைத்து விடடாதே
ரஷ்ய வர்க்கத்தில் ஒருத்தி விட்டாலும் ஸர்வ ரக்ஷகத்வம் கொத்தை ஆகுமே –-அதுதானே ராம ராஜ்ஜியம்
-இத்தால் சொல்லிற்று ஆயிற்று இவரை இழந்தால் -இனிக் கிடையாது என்னில்
உபய விபூதியும் இழந்தது ஆகுமே அவனுக்கு-

பக்தி பிரியர் என்பார் ஒருவர் இவர் விரகம் அனுசந்தித்து ஆழ்வீர் என் பட்டீர் என்று திரிவாராம்
வியாசர் -சம்சார வாசனை கனத்து புத்ர வியோகத்தில் மலையில் இருந்து விழுந்து சாயா சுகரை வைத்து தரித்தார் பகவத் விஷயத்தில் இழிவாருக்கு-இவர் திருவாய் மொழி கொண்டே-கதிர் பொருக்கி தர்ம வீர்ய ஞானம் பெற்றவர்கள் போல் இல்லாமல் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
அத்தால் கூட தானே செங்கோல் -கூட வளைவிப்பானோ-திறல் சேர் அமரர்-சம்சாரிகள் ஸூத்ர விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டார்கள்-நித்ய ஸூரிகள் அவனை அனுபவித்து -மேலும் அனுபவிக்க நிரந்தரமாக திறமை கொண்டவர்கள் சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்க போக்த்ருத்வ சக்தி உடையவர்கள்-விஷ்வக்சேனருக்கும் கோன் தேவர்கள் கோன் ப்ரஹ்மாதிகளுக்கும் கோன் உகக்கும் துழாய் ராஜ குலா மஹாத்ம்யம்–இவன் தான் செங்கோல் வளைத்தாவது ஆழ்வாரை துன்பம் கொடுக்க சங்கல்பிக்க திருத்துழாயும் சஹகரித்து ஒரு பிரபு ஆயிரம் காசு கொண்டு வரச் சொல்ல இவன் மூன்று மடங்கு பண்ணி அவன் ப்ரீதிக்கு விஷயம் ஆக்குமே அழியாத விபூதியையும் அளிக்கப் பார்க்கும் இது லீலா விபூதியை அளிக்க சொல்ல வேணுமோ-சீதா பிராட்டி துக்கம் கண்டு-தெப்பம் முழுகினால் போல் துன்பம் புருஷகாரம் செய்து நம்மை சேர்ப்பிக்க இவளும் துக்கம் பட்டால் காலத்தின் கொடுமை என்ன சொல்வது திருவடி வார்த்தை சுந்தர காண்டம் காலம் என்பது –கால சக்கரத்தாய் -அழிக்கிற வஸ்துவில் நான் காலம் என்றானே கீதாச்சார்யன் அகால தேசத்திலும் துன்பம் கொடுக்கும் காலம் அவன் தானே
நீர்மைக்கு அவ்வருக்காய் இருப்பார் இப்பாட்டு படா நின்றால் என் செய்யாது
–இவளோ முடியா நின்றாள்-இனி யாரை அழிக்க என்று வத்யம் தேடித் திரியும்-திருத்துழாய் போக்யத்தை குமர் இருந்து போம் அத்தனை-காய்ந்து சருகாய் போக வேண்டுமே-ஹேய மான தேசத்தில் என்ன செய்யாது

இத்தால் சொல்லிற்று
நான்கு நிலமும் -வாசி இல்லாமல் ஏக ரூபமாய் துன்பம் நெடியானே என்று கிடைக்கும் நெஞ்சமே
காணக் கருதும் கண்ணும்
பாஹ்ய அந்தக்கரணம் அனைத்தும் ஈடுபட்டதுக்கு பிரமாணம்–ஆற்றாமை கைவிஞ்சி இருப்பு கண்ட பாகவதர்கள் இவர் ஸம்ஸாரிகளுடைய அன்ன பானாதிகளால் தரிக்குமவர் அல்லராய் இரா நின்றார் -தம்முடைய உத்தேச்யம் கைப் புக்கு இருக்கிறது இல்லை இனி இவ் விருப்பு அவருக்கு எவ்வளவாகக் கடவதோ இவர் ஜீவிப்பாரோ ஜீவியாரோ என்று சம்ஸயம் பண்ண வேண்டும்படியான தசை விளைந்த படியைச் சொல்லிற்று கீழ்-இதில் இவர் ஜீவிக்க மாட்டார் -சம்ஸயம் இல்லை -ஈஸ்வரன் இவரைக் கொண்டு சில பிரபந்தங்கள் தலைக்கட்டுவதாகக் கோரி இருந்தான்
இனி அவன் சங்கல்பமும் அழிந்ததாகாதே என்று நிர்ணயிக்க வேண்டும்படியான தசை பிறந்த படியைச் சொல்கிறது –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிவியாக்யானம்
எம்கோல் வளை முதலா
-என்னுடைய கையில் வளை முதல் கொண்டு–கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்-ஸர்வ ஸூலபனான கிருஷ்ணனுடைய லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற ஆஜ்ஜையினுடைய தேச சதுஷ்டய வ்யாபனத்தை சத சாகமாக விளைவியா நின்றதே–திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்-சமர்த்தகளான லோக பாலாதி தேவர்களுக்கு நிர்வாஹகானான ப்ரஹ்மாவுக்கும் அசாதாரண ஸ்வாமி யான-உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்-மேலான நித்ய ஸூ ரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும் நிருபாதிக சேஷியானவன்–நம் கோன்-இம்மாலை போலே எங்களை அடிமை கொண்டவன்–உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும்
-திருவாய் -1-9-7-என்னும்படி-விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைய திருத்துழாயானது–என் செய்யாது இனி-என்னை எந்தப்பாடு படுத்தாது – உபய விபூதியும் படாத படிகளை எல்லாம் படுத்தாதோ–நால் நிலத்தே – பாலை மருதம் நெய்தல் குறிஞ்சி என்றுள்ள நாலு வகையான நிலத்திலுள்ள தன்னை ஆசைப்பட்டாரையும் கழல் வளை ஆக்காமல் விடுமோ –அவளவள் தோழிமார்களையும் தாய்மார்களையும் அங்கனே புலம்பப் பண்ணாமல் விடுமோ
என்று தலைமகள் அவசன்னை யாகிறாள் –

ஸ்வாபதேசம்--ஆழ்வார் உடைய தசையைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் சர்வேஸ்வரன் உடைய ரஷகத்வையும் அதி சங்கை பண்ண வேண்டி இருக்கிற படி சொல்லிற்று-இத்தால் ஈஸ்வரனுடைய ரக்ஷகத்வமும் அசத் சமமாம் படி ஈஸ்வரனையே பாதியா நின்றது- ஆணையையே பக்னம் ஆக்கா நின்றால் என் செய்யாது

தாத்பர்யம்
சர்வேஸ்வரனுடைய திருத்துழாய் போக்யதையில் ஈடுபட்ட ஆழ்வார் நலிந்தமையை பாகவதர் உரைத்த பாசுரத்தை நாயகி நிலைமையைத் திருத்தாயார் வார்த்தை யாக அருளிச் செய்கிறார்-
உபயவிபூதி நாதன் சாத்தி அருளிய திருத்துழாய் என் பெண்ணை ரக்ஷிக்க இருந்தாலும்
அவனது பிரயத்தனமும் கார்யகரமாகா இருக்க -தலைக் காட்டாமல் இருக்க-அவனுடைய ஆணையையும் அழித்து இவளை பாதிக்கத் தொடங்கிற்றே-இனி அசாத்தியமான வியாபாரம் இதுக்கு ஒன்றுமே இல்லையே

8-5-மாயக் கூத்தா வாமனா-ப்ரவேஸம்-

மாயக் கூத்தா பிரவேசம் –
மேல் இரண்டு திருவாய் மொழிகளிலுமாக
பகவான் ஆகிய பரம்பொருள் -பகவத் தத்வம் -பிறராலே அழியப் புகுகிறது -என்று வெறுத்தார் –
இங்கு ஓர் பரிவர் இல்லையே என்று அஞ்சி -8-3-கம்சாதிகளுக்கு அஞ்சி -8-4- –
இதில் தம்முடைய-ஆர்த்த நாதம்- துயர ஒலியாலே அவனை அழிக்கப் பார்க்கிறார் –

மேல் திருவாய் மொழியில் அவனுக்கு பரிவர் உளர் என்று பயமும் தீர்ந்து-வடிவு அழகினை அனுபவித்தாராய் நின்றார் –
அவ் வழகு நெஞ்சிலே -திகழ என் சிந்தையுள் இருந்தான் -8-4-3-என்றபடி ஊற்றிருந்து–
பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை -புறக் காட்சியிலே விருப்பம் பிறந்து –அது பெறாமையாலே
மேலே பட்ட கிலேசங்கள் எல்லாம் ஒன்றும் அல்ல-வாளேறு காண தேளேறு கழியுமா போலே அவை அஸத் சமம் என்னும் படி –
இதற்கு அது ஒரு கலை மாத்ரம் -என்னும்படி நொந்து-
காட்டுத் தீ கதுவினாரைப் போலே தாபத்தை உடையராய்

தம்மில் காட்டிலும்-கண்ணும் வாயும் துவர்ந்து – விடாய்த்த உறுப்புகளை உடையராய் –
என் விடாய் எல்லாம் தீரும்படி திவ்ய உறுப்புகளோடு வர வேண்டும் -பவள வாயும் நாலு தோளும்
அழகிய திரு முடியோடு வர வேண்டும் -முடி சேர் சென்னி –
மேகம் போலே வர வேண்டும் -தூ நீர் முகில் –
அழகிய வடிவோடு வர வேண்டும் -கொண்டல் வண்ணா-
உதய காலத்தில் சூர்யனைப் போலே பெரிய புகரோடே வர வேண்டும் -கரு நாயிறு உதிக்கும்
இள நாயிறு இரண்டு போல் –அபூத் இல் பொருள் உவமை
என்றாப் போலே கூப்பிட்டு–

பின்னையும் அவன் வந்து முகம் காட்டாமையாலே –
எங்கே காண்கேனே –
நாம் இந்த கிலேசத்தோடே முடிந்து போம் இத்தனை ஆகாதே -என்று இழவோடே தலைக் கட்டுகிறது-

அஞ்சாம் திருவாய் மொழியிலே -கீழ்
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நிற்கிற நிலையிலே -திருச் செய்ய கமலக் கண்ணும் -என்று தொடங்கி
திவ்ய அவயவ சோபை தொடக்கமானவற்றை ப்ரத்யக்ஷ சாமானாகாரமாம் படி அந்தரங்கமாக அனுபவித்து ஹ்ருஷ்டரானவர்
அவ்வடிவு அழகோடு பாஹ்ய சம்ஸ்லேஷம் பண்ண வேணும் என்று அபி சந்தி பண்ணிக் கிட்டாமையாலே ஆர்த்தராய் அவனுடைய
அநு பாவ்யமான ஆபி ரூப்யாதிசயத்தையும்
ஆர்த்தி ஹராமான மயிர் முடியையும்
உதார குண வைலக்ஷண்யத்தையும்
ஆஸ்ரித உபகாரார்த்தமான அர்ணவ ஸாயித்த்வத்தையும்
ஆபத் ஸகத்வத்தையும்
ஆகர்ஷக ஸ்வபாவ யோகத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
ஏக ஆஸ்ரிதனையே அநேக வித கிஞ்சித்காரம் கொள்ளும்படியையும்
ஆஸ்ரித ஸூலபனாய் வைத்து அறிய வரியனான நிலையையும்
அனுசந்தித்து ஏவம் வித ஸ்வ பாவனானவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமையாலே அத்யந்தம் ஆர்த்தராய்
கிலேசித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்
இப்படி பிராவண்யத்தை ஈஸ்வரன் தன் பக்கலிலே களிப்பித்தது அனுபவ பிரதிபந்தகத்தைக் கழிக்கையில் யுண்டான கணிசம் என்று கருத்து –

மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-

வாமனா வினையேன்
இரந்தும் இரந்தவர்க்கு ஈகை தானே பிரயோஜனமாக இருக்கின்றவன் காண்-
தன்னை காண்கையே பிரயோஜனமாக இருக்கிற என்னை-இரப்பாளனாக்கி இரங்காது இருக்கிறான் –

ஆர்த்தி உடன் பிரபந்தம் –வாமனா என்னுமது பிரயோஜ நாந்தரர்களுக்கும் கொடுப்பவன் அன்றோ

வினையேன் கண்ணா –
ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்தது இந்தரனுக்கு ஆனாப் போலே-கிருஷ்ணனாய் வந்து அவதரித்தது தமக்காக என்று இருக்கிறார் –

வினையேன் கண்ணா கண் கை கால்-சேவிக்க முடியாத பாவியேன் -விருப்பப்பட்ட படி அனுபவிக்க முடியாமல் –
கண்ணா ஆசன்னனாய் பிறந்து வைத்து -த்வாபர யுகத்திலே வந்தும் -பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே –

கண் கை கால் தூய செய்ய மலர்களா –
கிட்டினாரோடு முதல் உறவு பண்ணும் கண்-
நோக்குக்கு தோற்றவர்களை அணைக்கும் கை-
பரிசத்துக்கு தோற்று விழும் திருவடிகள்-
அங்கே கிடந்து– தலை எடுத்து அனுபவிக்குமதாய்-கண்ட போதே– விடாய் தீரும்படியான
கரியதான திருமேனிக்கு பரபாகமான நிறத்தை உடைத்தான தாமரைப் பூவாக –

தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே–பத்ம தடாகம் -நடந்து வர வேணும் என்கிறார்-கடல் ஞாலம் பதிகம் -5-6 உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ -பேசும் மேகம் அங்கே -என் விடாய் எல்லாம் தீரும்படி ஒரு தாமரைத் தடாகம் போலே வந்து தோற்றி அருள வேண்டும் -என்கிறார்-

காண-
வந்தால் கொள்ளும் பிரயோஜனம் காணும் இதுவே-
ஒரு தேச விசேஷத்திலும் எப்போதும் காண்கையே அன்றோ இருப்பது-
சதா பஸ்யந்தி ஸூரயா –அப் பேறு பெறும்படி

வாராய் –
அத் தலையாலே வரக் காண இருக்குமவர் அல்லீரோ-
தான் விரும்பிய ஜீவனுக்கு இந்த பரமாத்வாவானவன் தனது திருமேனியைக் காட்டுகிறான்–என்கிறபடியே-
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் -முண்டக -2-3-
அன்றிக்கே தாம் கிட்டிக் காணுமது ஸ்வரூப விரோதமாய் இருக்கும் -என்னுதல்-

ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோஷ்மி -வெய்யில் காலத்தில் தடாகம் போலே-தாப த்ரயங்கள் அடங்க பரமாத்மா அனுபவம் –

வருவானே-
வரும் தன்மையானே–ஆர்த்தி உடன் பிரபந்தம்-முன்பு தம் பக்கல் வரும்படியை உபகாரத்தின் நினைவாலே சொல்லுகிறார்-

———–

காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன் மலை போல் சுடர்ச் சோதி
முடி சேர் சென்னி யம்மானே–8-5-2-

சென்னி-லக்ஷணையால்-திரு மேனி –கரு மா மாணிக்கம் நாள் நன் மலை–நாள் பூ என்னுமா போலே -அபிநவமாய் -புதியதாய் காட்சிக்கு இனியதான மலை-அதில் உதிக்கும் கரு ஞாயிறு திருக் குழல்-என் விடாய் கெடும்படி-அழகிய மயிர் முடியுடன் வந்து தோன்றி அருள வேண்டும்-என்கிறார் -காண வாராய்–வர வில்லையே அந்தோ -ஆசைப் பட்டு கூப்பிட்டாலும் வரலாகாதோ

கரு நாயிறு உதிக்கும் -என்கிற திருஷ்டாந்த பலத்தாலே முடி என்றது மயிர் முடியைக் காட்டுகிறது –கிரீடம் -செந் நாயிரு –

காண வாராய் என்று என்று –ஒரு கால் காண வாராய் -என்றால் வரக் காணா விட்டால் -ஆறி இருக்க வல்லர் அல்லீரே –
பின்னையும் காண வாராய் காண வாராய் -என்பார் ஆயிற்று-காரார் திருமேனி காணும் அளவும் -சீரார் திருவேங்கடம் -எங்கும் போவார்

கண்ணும் வாயும் துவர்ந்து –
எங்கனே வரும் என்று அறியாமையாலே திக்குகள் தோறும் பார்த்து கண்கள் பசை அற உலர்ந்தன என்றது –
கண்ண நீர் கைகளால் இறைக்கும் -திருவாய்மொழி -7-2-1-என்னும் நிலையும் கழிந்தது -என்றபடி –
கூப்பிட்டு வாயும் பசை அற உலர்ந்தது –

அடியேன் நாணி –அத் தலைக்கு வரும் குற்றம் நம்மது ஆம்படியான சம்பந்தம் உடைய நான் நாணி -என்றது
இவனை உலகத்தார் என் சொல்லுவார்களோ -என்று அதற்காக நாணி -என்றபடி –

நல் நாடு –அநந்த கிலேச பாஜநம் -எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் இருப்பிடம் ஆகையாலே விபரீத லஷணையால் சொல்லுகிறார் –

அன்றிக்கே
ஐம்புல இன்பங்களின் அனுபவத்தாலே மக்கள் களித்து வசிக்கும் தேசம் ஆகையாலே அவர்கள் நினைவாலே சொல்லுகிறார் ஆதல் –

அன்றிக்கே
பிள்ளான் -எம்பெருமானைப் பெற்று அனுபவிக்கும் நாடு காண் -என்பாராம்–இல்லையாகில் கூப்பிட்டார்களோ -என்று-
விபரீதமாக -குத்தலாக -கூப்பிடாமல் உண்டியே உடையே உகந்து போகிறார்களே -கூப்பிட வில்லை என்றால் அடைந்தார்கள் அன்றோ –

காண வாராய் –பிரயோஜனத்தின் பொருட்டு அழைக்கிறேனோ-காண்கையே பிரயோஜனம் –

சம்சாரி முத்தனாய்ச் சென்றால் தாபத்தைப் போக்குவதற்காக இவனால் செய்யப்படுவது-திருக் குழலை பேணுதல் இத்தனை –
கேசவன் கிலேசத்தை போக்குகிறவன்-என்றே அன்றோ இருப்பது-

முடி சேர் சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படி சேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3

உதார குணம் காட்டி -தெளிந்த நீரைப் பருகின காளமேகம் போலே ஸ்ரமத்தைப் போக்குகிற வடிவோடே–
என் துயரம் தீர வந்து தோற்ற வேண்டும் –என்கிறார்–தோன்றாயே-தோன்ற வேண்டும் -விதி வினை -சொல்

தோன்றாயே–அக வாயில் தண்ணளி -கிருபை -எல்லாம்–வடிவிலே காணலாம்படி வந்து தோற்ற வேண்டும்-

விசேஷணங்கள் கேவலம் முகிலுக்கு இல்லாமையாலே-அபூத -இல் பொருள் -உவமை

முடி சேர் சென்னி யம்மா –
ஆதி ராஜ்ய ஸூசகமான திருமுடி சேர்ந்த சென்னியை உடைய சர்வேஸ்வரனே –
நிவந்த நீள் முடியன் -உலகு அளந்த திருவடி உபய நாதன் -என்று கொள் சொல்லிக் கொடுக்கும் -ஜல்பித
நீர் வேத வேள்வியில் வந்து ஸூலபம் சொல்ல -திரு அபிஷேகம் பரத்வம் காட்டுகிறதே

படி சேர் மகரக் குழைகளும்
இயற்கையாய் -படியாய் சேர்ந்த -என்னுதல்
திருமேனியில்-படியிலே சேர்ந்த என்னுதல்-படி கண்டு அறிதியே –முதல் திருவந்தாதி -85-என்னக் கடவது அன்றோ –

—–

தூ நீர் முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன் மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே-8-5-4-

உன்னுடைய வடிவழகு வந்து என் மனத்திலே நிறைந்துநலிகிறபடி என்னால் பேச முடிகிறது இல்லை –என்கிறார் —

நின் சுடர் கொள் வடிவும் –
சுத்த சத்வ மயம் ஆகையாலே-நிர வதிக தேஜோ ரூபம் -எல்லை அற்ற ஒளி உருவமான விக்கிரகத்துக்கு
அன்னலும் துன்னலுமாய் –(அன்னலும் = புகையும்-துன்னலும் = சிறு திவலையும்)
திரண்ட மேகத்தை ஒப்பாகச் சொல்ல ஒண்ணாதே அன்றோ –
ஒண் சுடர்க் கற்றை -திருவாய்மொழி -1-7-4-அன்றோ –தேஜஸாம் ராசம் மூர்த்த்யே-

வந்தென் சிந்தை நிறைந்தவா –ரீதி பங்கமா -இல்லை அழுது கொண்டு இருப்பவர் –
மற்றைய விஷயங்கள் அனுபவித்து விட்டால் மறக்கக் கூடியவாய் இருக்கும் –
இவ்விஷயம் அனுபவித்து பேர நின்றாலும் நெஞ்சிலே ஊற்று இருக்கும்-
சிந்தை நிறைந்தவா -என்னுமதனை பின்னே வருகின்ற சொல்ல மாட்டேன் என்னுமதனுடன் கூட்டுக –
இதர விஷயம் போலே அன்றியே பகவத் விஷயம் -மறந்து போகும் விஷயம் இல்லையே –அனுபவித்து -விஸ்லேஷித்தாலும்
நெஞ்சிலே நினைந்து நலியும் படி அன்றோ இருக்கும் ஊற்று மிக்கு

விரக நிலையிலே குணங்களைச் சொல்லுதல் துக்கத்துக்கு காரணமாம் அத்தனை அன்றோ –

கடல் -வெள்ளி மலை -நீல முகில் மூன்றும் சொல்லி இருப்பதால் –
வெள்ளி மலை -என்ற உவமையால் –அரவணை -என்ற உபமேயத்தினை அமைத்துக் கொள்ளும் இத்தனை-ஓங்கின ஷீரார்ணவம் -என்றுமாம்

——–

சொல்ல மாட்டேன் அடியேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5

உன்னுடைய அழகு என் மனத்திலே நினைவுக்கு விஷயமாய்-நலியா நின்றது
இது மறக்க ஒரு விரகு சொல்ல வேண்டும் -என்கிறார்-

மறப்பாகிய இருள் -துக்க ரூபம் -கிட்ட உபாயம் -ஆனந்தமாக பிரகாசிக்க வெளியில் கட்டி அனுபவிக்கப் பெறாமல் -மறைக்கை உத்தேச்யம் –
பூர்வ உத்தர பாசுரங்கள் ஆர்த்தி போலே இதுவும் -கொள்ள வேண்டும்-

இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே –பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டி அனுபவிக்க பெறாமல் -கிலேசியாத படி –மறக்க உபாயம் ஏதோ என்கிறார் –

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த -திருவே -அடியேற்கு இரங்காயே –இது போராது–போலே –

என்னே -பிரிநிலை ஏகாரம் -உபாயம் இல்லை என்றுமாம் –பால ஆதித்யர்கள் உதித்த பின்பு துக்கமாத்மகமான அஞ்ஞானம் வராதே

எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா-
அளவிறந்த அழகை உடைய-இளம் சூரியர் இருவர் போலே-என் உள்ளத்தே நின்று நலிகிற படி-
கண்களால் பருகலாம் படி இருக்கையாலும்
வருத்தத் தொடங்கின இத்தனை என்று தோற்றுகையாலும்-இள நாயிறு -என்கிறார்-

அன்றிக்கே –
இள நாயிறு -என்பதற்கு-என்னை வருத்த வருத்த இளமை மிகுகிறபடி -என்னலுமாம்
என் உள்ளவா சொல்ல மாட்டேன் -என்று கூட்டுக –

மீனோடு ஆமை –இன்னம் கார் வண்ணனே -அவதரித்து அவதரித்து இளகிப் பதித்த படி —
யுவ குமாரா என்னுமா போலே இள நாயிறு -சேவை சாதிக்காமல் ஆழ்வாரை துடிக்கப் பண்ணப் பண்ண -இளமை கூடி
வா போகு-சக்கரவர்த்தி பஞ்ச விம்சதி போலே

——–

கொண்டல் வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்  தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-

உன் வனப்பு முதலானவற்றை நினைத்து –காண வேண்டும் என்று கூப்பிடுகிற நான் காணும்படி ஏதேனும்
ஓர் இடத்திலே வந்து தோற்றி அருள வேண்டும் –என்கிறார் –

வினையேன் கண்ணா கண்ணா –எனக்கு கண்களாய் இருக்கிறவனே -கிருஷ்ணனே –
கண்ணை இழந்து இருக்கும்படியான பாவத்தைச் செய்தவன் -என்பார் -தம்மை -வினையேன் -என்கிறார் –

என் அண்ட வாணா வென்று –
என்னை இலக்கு ஆக்கிக் கொள்ளுவதற்க்காக-அண்டத்துக்கு அதிபதி ஆனவனே -என்று
உபய விபூதி நாதத்வமும் தனக்காக என்கிறார்-என்னைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே என்கிறார் இவர் –

என்னை ஆளக் –கூப்பிட்டு அழைத்தக்கால்–
வேறு பிரயோஜனதுக்காக அழைக்கிறேனோ-
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி என்னை வழுவிலா-அடிமை கொள்ள வேண்டும் -என்று அன்றோ அழைக்கிறது-

கூப்பிட்டு அழைத்தக்கால்-
கிரமப் பிராப்தி பொறுக்க வல்லேனாய் தான் தாழ்க்கிறாயோ –
பரபரக்கிறார் -என் துயர ஒலி கேட்டால் -கிரமத்தில் வருகிறோம் -என்று ஆறி இருக்கலாய் இருந்ததோ –

மற்றுத் தான் –
தூணிலே வந்து தோன்றினால் போதே யாதல்-
யானைக்கு வந்து தோற்றினால் போதே யாதல் தோற்றவுமாம் –அந்தர்யாமி -வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்

———-

வந்து தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-

வந்து தோன்றாய்- முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-விதி வினைகள்

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33

உன் நிறைவினையும் என் சிறுமையும் பார்த்து முகம் காட்டப் பார்த்திலை யாகில் –திரு விருத்தம் -பாசுரம் 33 -படி -என்றுமாம் –

கூவிப் பணி கொள்ளாய் –
சோற்றை இட்டுப் பணி கொள்வாய்-
திரு மிடற்றின் ஓசை இனிமையாக இருக்கையாலே கூவிப் பணி கொள்ள வேண்டும் என்கிறார்-

பணி செய்வாய் என்று என்னை சொல்வீராக -என்னும் படி கிரியதாம் இதி மாம் வத– கண் முகப்பே அடிமை கொள்ள வேண்டும் -என்னவுமாம்–போக்யம் பிராப்தம் -குண ஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் தன்மையன் அல்லன் –
தண்ணீரின் நின்றும் மேலே எடுக்கப் பட்ட மீன்களைப் போன்றவர் -என்னும் இளைய பெருமாள்
தன்மையனான என்னை அடிமை கொள்ள வேணும் என்பார் –திருப் புளி கீழ் இருந்தாலும் -இவர் மநோ ரதம் இருந்த படி –
பணி கொள்ளாய் -என்கிறார் –பரத ப்ரக்ருதி –குண அனுபவ நிஷ்டர்-லஷ்மண ப்ரக்ருதி –கைங்கர்ய நிஷ்டர்

————

ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே-8-5-8-

உள்ளம் குழைந்து –
இது -மேக கூட்டத்தை கண்டதுக்கம் -தோற் புரையே அன்றி மனமும் அழிந்தது –

வாராய் –
இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொடு போய் நிறுத்து -என்ன
இரண்டு சேனைகளின் நடுவே தேரை நிறுத்தின நீ
அந்த தேரை இந்த மேகங்களின் நடுவே நிறுத்தினால் ஆகாதோ –
ஐவருமாய் எதிரிகளின் அளவுக்கு உட்பட்டவர்களும் ஆனாலோ உதவலாவது-
அங்கே நூற்றுவரை முடிக்க -இங்கே 25 –ஐ ஐந்து முடிப்பான் -அசேதன அனுபவம் கைவல்ய அனுபவம் அழிக்க
தனியனுமாய் மேகக் கூட்டங்களின் அளவுக்கு உட்படாதவை யானால் உதவலாகாதோ
இதுவோ பொருத்தம் –

அடியார்களோடு முன்பு நீ பொருந்திப் போந்த படி இதுவோ -என்றது
அடியார்களுக்காக தூது சென்றும்
தூது சென்றும்
சாரதியாய் நின்றும்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும்
பகலை இரவு ஆக்கியும்
ஒரு சார்வாகக் கார்யங்களைச் செய்தது பொய்யோ -என்றபடி

தனிப் பாகா –நூற்றுவரை தோற்கடிப்பதை விட ஐவரை வெல்ல வைக்கவே இவன் பட்ட பாடு
தனியே நிர்வாஹகன் ஆனவனே –இரதியைக் காண்கின்றிலர்
கிருஷ்ணா வெற்றியை யாவது-இராச்சியத்தை யாவது-சுகத்தை யாவது
நான் விரும்ப வில்லை -என்றவனை சேமம் சாத்தி வைத்து தானே செயலை செய்கையாலே

ந கான்க்ஷே விஜயம் கிருஷ்ண நச ராஜ்ஜியம் ஸூகா நிச
கிம் ந ராஜ்யென கோவிந்த கிம் போகை ஜீவே தேன வா -ஸ்ரீ கீதை – 1-32-சாரதியை யாயிற்று இவர் காண்கிறது –

வாராய்-எனக்கு இவை எல்லாம் வேண்டுமோ-முகம் காட்ட அமையாதோ –

———

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-8-5-9-

இறுதிக் காலத்தில் ஸ்வர்க்கத்து ஏறப் போன இவர்கள் நிற்க கிடீர்–
திருவாழி யாழ்வான் முதலான நித்யரோடும் பொருத்தம் இதுவோ –என்று ஸ்வ கதமாக -தமக்குள்ளே விசாரிக்கிறார் –

அன்றிக்கே –
இருந்ததே குடியாக காப்பாற்ற வந்த ஸ்ரீ கிருஷ்ணன் தன்னைக் காண்கையே தேட்டமான
எனக்கு என் செய்ய நினைக்கிறான் -என்கிறார் ஆகவுமாம் –

மின்னாழிப் படையாய் -கொடியா வுயர்த்தானே-மதுரைப் பிறந்த மாயனே-மூன்று விழிச் சொற்கள்

கருளப் புட்கொடி சக்க ரப்படை வான நாட!எம் கார்முகில் வண்ணா!
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்!-5-7-3-

என்று என்று –-இப்பாசுரம் மாறாதே பொருமி பொருமி அழா நின்றால் –ஏங்கி யழுதக்கால்

என்று என்று ஏங்கி யழுதக்கால் எதுவே யாகக் கருதுங்கொல்-என்னவாக கருதுவான் -இக் கூப்பீட்டுக்கு முகம் காட்ட நினைக்கிறானோ-
கூப்பிட்டே போவான் என்று இருக்கிறானோ-இக் கூப்பீட்டுக்கு அவன் திரு உள்ளம் எங்கனே புண் படுகிறதோ–மூன்றும் –

மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே-விழிச் சொல் சர்வேஸ்வர ஸூ சக சிஹனங்கள் உடன் திரு அவதரித்து –
சதுர் புஜம் உடன் -மின் ஆழிப் படையனாகவே பிறந்தான் அத்புதம் பாலகம் சங்க சக்கராயுதம் -ஆவீர் பூதம் ரிஷிகள் -ஆழ்வார்கள் ஒருத்தி மகனாய்ப் பிறந்து 

——-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெரு மாயா
உன்னை எங்கே காண்கேனே-4-5-10-

அவதாரத்துக்கு பிற்பாடனாய்-அந்தர்யாமித்வம் கண்களுக்கு புலப்படாதவாறு ஆயின பின்பு-
உன்னை நான் எவ்விடத்தே காண்பது -என்கிறார் —

சிறந்த கால் தீ நீர் வான் மண்-காற்றுக்கு சிறப்பாவது-அவரோஹண ஆரோஹண க்ரமம் ஒல்லாமல் கால் என்று தொடங்கியது -காரணமாம் தன்மை ஒத்து இருக்க தரிக்கும் தன்மையால் வந்த ஏற்றம் –

உன்னை எங்கே காண்கேனே –
பரம பதத்தில் காட்சிக்கு சரீர சம்பந்தம் அற வேண்டும்-
அவதாரத்துக்கு பிற்பாடன் ஆனேன்-
அர்ச்சாவதாரம் நான் நினைத்த படி கிடையாது-கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
அந்தர்யாமித்வம் கண்களுக்கு விஷயம் அன்று-
இனி இவ் இழவோடே நான் முடிந்து போம் இத்தனையே அன்றோ –

———

எங்கே காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே-8-5-11-

நிகமத்தில்
இத் திருவாய்மொழி வல்லார்-தாம் பட்ட துக்கம் படாதே இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே-அவனைப் பெற்று
எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர் –என்கிறார்

அந்தண் குருகூர்ச் சடகோபன் –
எல்லா நோய்களும் என்னை வந்து அடையட்டும்-
நான் விஷ்ணுவினுடைய அந்த பரம பதத்தை கடன் கழிந்தவனாக செல்லப் போகிறேன்-என்கிறபடியே
பீஷ்மர் -வசனம் -அனைத்து வியாதிகளும் -தனது சரீரத்தில் அடங்க -ஆடல் கொடுத்த ஆழ்வார் -ஆளவந்தார் நிர்வாகம் –
உபதிஷ்டந்து மாம் சர்வே வியாதய பூர்வ சஞ்சிதா-அன்ருண அஹம் கமிஷ்யாமி தத் விஷ்ணோ பரமம் பதம் -மகா பாரதம்
தனக்கு கிலேசம் உண்டானால் கர்ம பலம் கிருபா பலம் என்றாதல் பிறக்கும் பிரீதியும் சலியாது இருக்கையும் -ஸ்ரீ வசன பூஷணம்
சலியாது இருக்கையாலே ஊரும் தழைத்தது-இவ்வாற்றாமைக்கு எல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் -இடம் கொடுத்த ஆழ்வார் -ஆளவந்தார் நிர்வாஹம்-
பிரபன்ன ஜன கூடஸ்தர் -சலியாமல் தரித்து இருந்தாரே -அத்தை நினைத்து -உகந்து-குருகூர் அம் தண் குருகூர் ஆனது என்றவாறு –

இந்த உலகத்திலே–இப்பிறப்பிலே–பகல் இரவு என்ற வேறுபாடு இன்றிக்கே
பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவார்-
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்-என்று கூப்பிட-வந்து முகம் காட்டாத அவத்யத்தை-தாழ்வினை
இப் பத்தினை கற்று வல்லவர்களோடு-கடுக வந்து முகம் காட்டி தீருமாயிற்று ஈஸ்வரன் –
மனைவியோடு வெறுப்புண்டானால் அவள் பக்கல்-முகம் பெறுகைக்காக குழந்தைகளைக் கொண்டாடுவாரைப் போலே —

—–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் –24-இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் –கரு மாணிக்க மலை -8-9-

February 17, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

வளை -என்று இவள் பாரதந்தர்யம்-வஞ்ச நோய் -பக்தியாகிய நோய் -விரஹம் -வஞ்சித்து கொடுத்த நோய்-கண்ணில் உள்ள நோய் என்றும் ஆழ்வாருக்கு உள்ள நோய் என்றும் கொள்ளலாம்
உலாவும் -கண்களுக்கு விசேஷணம்-இயல்வாயின -ஸ்வா பாவிகம் -ஸஹஜ பக்தி
குடங்கை -பக்தி தத்வ த்ரயங்களிலும் அதிகமாக இருந்தாலும் நாம் அனுபவிக்கும் படி இருக்குமே
கண் -வெளி பாஹ்ய கரணம் ஈடுபாடு-மனம் -அந்தக்கரணம் ஈடுபாடு-கோவர்த்தன தாரிக்கு இயல்வான புள்ளூர்தி உண்டே-கருமாணிக்க மாலையிலும் திருத்துழாயில் ஈடுபட்டாள்
இங்கும் அப்படியே-செவிலித்தாய் இரங்கி பேசியதாகவும் தோழி சொல்வதாகவும் சொல்லலாம் -இது ரசம் இல்லை என்பர் வ்யாக்யாதா-கரு மாணிக்க மலையும் தோழி பாசுரம்

இவள் உடைய அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட திருத் தாயார் இது என்னைவாய் முடிகிறதோ என்கிறாள் (கரு மாணிக்க மாலையிலும் அப்படியே தாய் இருந்தாள் அன்றோ )

பிரிவாற்றாத தலை மகள் நிலையை செவிலித் தாய் சொல்வது –எனது மகள் கண் கலக்க முற்றாள்
நெஞ்சம் அழியப் பெற்றாள் -இவ்வளவுக்கும் மேலே இது ஏதாய் முடியுமோ என அஞ்சி உரைக்கின்றாள்

இப்படி பாகவதர் ஈடுபடும்படியான இவருடைய வை லக்ஷண்யம் பகவத் ப்ராவண்ய அதிசயம் ஆகையால் அந்த ப்ராவண்ய அனுரூபமாக பிராப்தி சித்தி யாகையாலே தமக்குப் பிறந்த ஸைதில்யத்தைக் கண்டு ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரத்தைத் தலைமகன் பிரிவு ஆற்றாளாய் தலைவி ஈடுபாடு கண்ட தோழி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –நாட்டைத் திருத்தவும்
நச்சுப் பொய்கை யாகாமைக்கும் ஆர்த்தி அதிகார பூர்த்திக்காகவே ஆழ்வாரை இங்கே வைத்து இருந்தார் –

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல் வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னான்கொல் எம் கோல வளைக்கே
 –24–பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி யுரைப்பால் -திறமாக
அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர்
இந்நிலையை யோரு நெடிதா –79-இப்படி விலஷணமான ஆத்ம ஸ்வரூபம் தான் தனக்கும் உரித்தது அன்றிக்கே அவனுக்கே -அனந்யார்ஹ -சேஷமாய் இருக்கும் படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற கரு மாணிக்க மலையில் அர்த்தத்தை கருமால் திறத்தில் -இத்யாதியால் அருளிச் செய்கிறார்-நிச்சயமாக அந்யருக்கு சேஷம் ஆகல் ஆகாது –-பிராப்த சேஷி யானவனுக்கே சேஷம் ஆகிற ஆத்ம ஸ்வரூபத்தின் நிஷ்டையை-ஆராய்ந்து போருங்கோள் –தீர்க்கமாக -என்னுதல் –-தீர்க்கமாக விசாரி என்று தன் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் -ஆதல்-

இயல்வாயின —
ஸ்வபாவமாய் உள்ளன(கண் ஞானம் -அதில் தேங்கி உள்ள அநுராகம் பக்தி –ஸஹஜ பக்தி )
அறியாக் காலத்து உள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து
–திருவாய்மொழி -2-6-6-
பால்யாத் பிரப்ருதி  ஸூஸ்நிக்த -பால காண்டம்-18-2-7-
(ஸ்ரீ ராமன் உடன் ஸ்ரீ லஷ்மணன் சிறிய வயது முதல் அன்புடன் இருந்தார் -என்னுமா போலே) வஞ்ச நோய்–
சர்வேஸ்வரனாலே வஞ்சிதமான நோய்(அழகைக் காட்டி -அறியாமல் விஷயாந்தர ப்ராவண்யம் விலக்கியதே வஞ்சனை ) ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலே -திருவாய்மொழி-6-7-2-
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணா ஓ –திருவாய்மொழி-8-5-6-
என்று சொல்லுகிற படி ,தன்னைக் கண்டார் தன்னைப் போலே யாம் படி வஞ்சித்து கொண்டு என்றும்
(வியாசர் -புத்திரரான ஸூகரைக் கூப்பிட மரங்களும் பதில் சொல்லிற்றனவே )-நோய் கொண்டுலாவும்–நோய் நடத்த-நடந்த படி–

ஸோபி வேலாமிமாஂ நூந மபிஷேகார்த முத்யதஃ.
வ்ருதா பிரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் –
ஆரண்ய காண்டம் -16-29–ப்ரக்ருதி வர்கத்தாலே-சூழப் பட்டு போன படி–பெருமாளைப் பிரிந்து ,மித்ர வர்க்கம் சேவிக்கப் ,போகிறானோ என்னில்-
கால் நடை கொடாமையாலே தாங்கிக் கொண்டு போன படி-

அத்யந்த ஸூக சம் விருத்த ஸூகுமார ஸூ கோஜித கதந்னு அபர ராத்ரேஷு  ஸரயூம் அவகாஹதே৷৷ –ஆரண்ய காண்டம் -16-30—சக்கரவர்த்தி அறுபத்தினாராயிரம் சம்வச்தரம் மலடு-நின்று பெற்றவன் ஆகையாலே , அவன் கொண்டாடின ஸூகம் இறே இவனுடைய ஸூகம்-உம்முடைய கண்ணாலே பார்க்கவும் பொறாத  சொவ்குமார்யம்-உம்மோடு கலவிக்கு உசிதன் அத்தனை அல்லது பிரிவுக்குசிதன் அன்று இறே--கதந்னு–தன் படியே என்று நினைக்கிறார் பிரிவு இல்லாமையாலே தமக்கு நீர் குளிருகிற படியாலே-சுடும் என்று அறியாதே குளிரும் என்று அஞ்சுகிறார்–ராஜ்ஜியம் போகங்களைத் துறந்து தபஸ் கோலத்தில் உயிர் வாழ மட்டும் உண்டு தரையிலே தூங்கினான்-குளிர்ந்த நீரில் எவ்வாறு குளிப்பான் என்று இளைய பெருமாள் சொல்ல-கூடி இருப்பதால் இவ்வாறு-இவன் தாபத்தால் சரயுவே சுடுமேதசரதன் கொண்டாடும் ஸுகுமாரம் பெருமாளுக்கு பெருமாளே கொண்டாடும் ஸூகுமாரன் பரதனுக்கு அபர ராத்ரேஷு —அகாலத்திலே போவான் என் என்னில் ,புதிசாக வைதவ்யம் (விதவை )வந்தவர்கள் ,ஆள் கிளம்புவதற்கு முன்னே-மனிதர் முகத்தில் விழியாமல் போமா போலே-கைகேயி மகன் என்றும், இவனாலே இப்படி புகுந்தது என்றும் சொல்லும் அதற்க்கு அஞ்சி–சரயூம் அவகானே –
நீரிலே முழுகினால் தடவி எடுக்க வேண்டும் படி- (நீர் எல்லாமே உறிஞ்சி போக -கீழே போவான் )தர்மஜ்ஞ ஸ்ஸத்யவாதீ ச ஹ்ரீநிஷேதோ ஜிதேந்த்ரியஃ৷৷3.16.31৷৷ ப்ரியாபிபாஷீ மதுரோ தீர்கபாஹுரரிந்தமஃ. ஸந்த்யஜ்ய விவிதாந்போகாநார்யஂ ஸர்வாத்மநா ஷ்ரிதஃ৷৷3.16.32৷৷–நோய் வந்தவன் நடந்ததுக்கு பிரமாணம் இந்த ஸ்லோகங்கள்-

ஒரோ குடங்கை –சிறுமை சொல்லிற்று அன்று —போக்தாக்களுக்கு அளவு பட்டு இருக்கை
(திவாகர முனி கண்களுக்கு அகப்படும் படி சுருங்கி அநந்த பத்ம நாப ஸ்வாமி போல் —கயல் பாய்வான பிள்ளும் மௌக்த்யவமும்-பாய்வான பெருநீர்-ஏகார்ணவம் பிரவஹித்தால் போலே இருக்கை-கயல் பாய்வான பெருநீர்–ஒரு கடலிலே ஒரு கயல் இடம் வலம் கொண்டால் போல் இருக்கை-கண்கள் தம்மொடும் –பாஹ்ய கரணங்கள் இங்கே பிரவணமான படி சொல்லிற்று-குன்றம் ஒன்றால்-ரஷிக்கும் இடத்தில் எடுத்தது பரிகரமாய் இருந்த படி–புயல்வாய் –புயல் இடத்து –திரு ஆய்ப்பாடியில் வர்ஷம்-தீ மழை-என்று தோற்றி இருக்கிற படி–இன நிரை காத்த–1-ரஷிக்கும் இடத்தில் ரஷகாந்தர்பாவமே வேண்டுவது-(ரக்ஷகனது அபிமானத்தில் அந்தர்பவித்து இருக்க வேண்டுமே ) ஞான அஞ்ஞானங்கள்  பாராதே ரஷிக்கும் –2-க்ருத அநுகார நிவ கோபிரார்ஜிவ– பசுக்களை இட்டுக் காட்டும் படி  இறே இடையர் உடைய ஸ்வாபம்-அவர்களையும் கடாஷித்த படி (ஆயர் காத்த என்னாமல் நிரை காத்த என்பதுக்கு இந்த வியாக்யானம்-பசுக்கள் விசுவாமித்திரர் வஸிஷ்டர் போல்-ஆயர்கள் அவற்றில் குறைந்த ஞானம் உள்ளவர் என்றபடி -ஞானம் குறைவானவர்களையே ரக்ஷிப்பதில் ஆசை கொண்டவன் அன்றோ ) இரண்டாவது அவ்வளவு சரசம் இலை முதல் நிர்வாகமே கொள்ள வேண்டும் என்று அரும்பதம் )புள்ளூர்தி – சர்வாதிகன்–கள்ளூரும் துழாய் –மதுஸ்யந்தியான திரு துழாய் –
திருவடி தோளிலே அலைய விட்ட திரு துழாய்  மாலை யோட கூட அணைக்க ஆசை படுகிறாள்
இவனும் விரும்பும் தார் ஆகையாலே –கருட வாகனத்தில் பொதுவாக அவன் மட்டுமே வைரமுடியில் உபய நாச்சியார் உண்டே-சத்யபாமையைக் கூட்டிக் கொண்டே நரகாசுர வதத்துக்கு கருட வாஹனாகச் சென்றான் )

பதி சம்மாநிதா சீதா -அயோத்யா காண்டம் -16-21–பெருமாள் சக்கரவர்த்தி பாடு சுமந்த்ரன் அழைக்க
எழுந்து அருளுகிற பொழுது ,-தொடர்ந்து-பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு திருத் தோளிலே மாலையை வாங்கி இட்டு , நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம் பண்ணி இரு என்று பழையவர்கள் நிர்வாகம் —
மாலையை இட்டு திரு அடிகளைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்.-சூடிக் களைந்த மாலையையா தருவது என்று அபராத ஷாமணம் பண்ணிப் போந்தான் என்றபடி–பதி பார்யைக்கு ஸம்மானம் பண்ண வேண்டுமோ-வஸ்திர பூஷணம் இவளுக்கு வேண்டாமே ஜனகராஜன் திருமகள்
தம்மைக்குறித்து பாரதந்தர்யம் காட்டவோ என்னில்–ஐயர் பார்த்து பண்ணிய கல்யாணம்-இனி உசிதம் என் என்னில்-தனக்கு அபிமதமான மாலை இவளுக்கு தாரகம் என்று அபராத ஷாமணமும் பண்ணிப் போந்தான் என்று பட்டர்  –அஸி  தேஷணா –இவர் தோளில் மாலை  இட்டதுக்கு-இவள் கண்ணாலே மாலை இட்ட படி-

கொயல்வாய் மலர் மேல்– வட்டமாய் செவ்வியை உடைத்தான மாலையிலே மனம் ஆயிற்று-எம் கோல் வளைக்கே –என்னாய் முடிய புகுகிறது என்று அறிகிலேன்–மலர் மேல் மனத்தொடு –அந்தக் கரணம் பிரவணம் ஆன படி-

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் எம் கோல வளைக்கே–உடம்பு மெலிதலால் கை வளை கழலும் படியான நிலை –இயல்வாயின வஞ்சநோய்வாயில் பல்லும் எழுந்திலே -மயிரும் முடி கூடிற்றிலே –மாயன் மா மணி வண்ணன் மேல்-இவள் மால் உறுகின்றாளே-பெரியாழ்வார் -3-7-2-
இளைமை தொடங்கி கண்ணபிரான் இடம் காதல் கொண்டமை –

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ வரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே
– திருவிருத்தம் -60- –

வஞ்ச நோய் –நாயகன் பிரிந்து சென்று வாராமல் வஞ்சித்த நோய் என்றுமாம் –பிறரை பார்வையால் அகப்படுத்திக் கொள்ளுதல் என்றுமாம் –பருத்து நீண்ட வடிவத்துக்கு-கயல் உவமை –கயல் பெருநீர் பாய்வு அன கண்கள்-என்று அன்வயித்து-கயல் மீன் மிக்க நீர் பெருக்கில் பாய்தல் போலே கண்ணீர் வெள்ளத்தில் புரளும் கண்கள் –இவளது கண்களோ ஆற்றாமை மிக்கு பரந்து கயல் மீன் போல் பிறழ்வனவாய் மிக்க நீர்ப்பெருக்கை யுடையவனாய் இருக்கின்றன-இவளது மனமோ குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்த -கருடவாஹனான கண்ணபிரானுடைய-தேன் பெருகும் திருத்துழாயின் மேல் ஆசைப் பட்டுச் சென்றது-இனி மேலும் என்ன நிலை நேருமோ என்று கவலைப்படுகிறாள் –கொயல்வார் மலர் –கொய்தல் வாய்ந்த மலர் -கொய்யப்பட்ட மலர்

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்–ஸ்வா பாவிகமாய் பிறர் அறியாத படியான காதல் நோயைக் கொண்டு ஆர்த்தி அதிசயத்தாலே யாதாயாதம் பண்ணா நிற்பனவாய்
(யாதாயாதம் பண்ணா நிற்பனவாய் -உலாவி-கண்கள் உலவுவதாக இங்கு – ஆழ்வார் உலவுவதாக மேலே சொல்வார் )ஒரோ குடங்கைக் கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,-ஒரோ சிறாங்கை போலே பெருத்து நீண்ட கயலானது நிரம்பின கயத்திலே பாயுமா போலே கண்ணீர் வெள்ளத்திலே அலமருகிற கண்களோடும்–கண்கள் தன்னோடும் என்றும் சொல்வர்–குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி--கண்டதொரு மலையாலே-பெரு மழையில் ஈடுபடாமல்-கோகுலங்களைக் காப்பானுமாய் ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனான கிருஷ்ணனுடைய–கள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு–மதுஸ்யந்தியான திருத் துழாயினுடைய கொயல் வாய்ந்த மலரிலே அபி நிவிஷ்டமான நெஞ்சோடும் கூட –என் னான்கொல் எம் கோல வளைக்கே–கையும் வளையுமான என் தலைவிக்கு ஏதாய் முடியுமோ–கோல் வளை -என்று
மழுக்கான வளை என்றபடி-(அழகிய வளை என்றும் வளைந்த வளை என்றும் )–என்னாம் கொல் என்று
கண் கலக்கமும் நெஞ்சு அழிவுமான அளவன்றியிலே இனி ஏதாய் முடியுமோ என்று வளைக்கும் அஞ்சி உரைத்தாள் யாயிற்று–இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் எம் கோல் வளை -என்று
அந்வயமாகவுமாம் (உலாவும் இங்கு ஆழ்வாருக்கு )

இத்தால்
ஸ்வாபாவிக ஆகாரமாய் –ஸ்வ ஸம் வேத்யமான பக்தி யோகத்தை யுடைத்தாய்க் கொண்டு –
ஒரு நிலை நில்லாமல் வியாபரிப்பதாய்-சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி தர்சநீய ஸம் ஸ்தானத்தை உடைத்தாய் ஆர்த்தி ஜெனிதமான அஸ்ரு வெள்ளத்திலே அலமருகிற பாஹ்ய கரணத்தோடும்-ஆர்த்த விஷயத்தில் யரும் தொழில் செய்து நோக்க வல்லனாய்–த்வராயை நம -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-57-என்னும்படி அதி த்வரித காமியானவனுடைய அதிசயித போக்யமான மாலை அழகை அனுபவிக்கையிலே அபி நிவிஷ்டமான அந்தக் கரணத்தோடும்–ஈடுபடுகிற இவர் கையிலே
நமக்குத் தஞ்சமான(ஆழ்வார் இடம் உள்ள பாரதந்தர்யமே நமக்குத் தஞ்சம் ) பாரதந்தர்ய லக்ஷணம் பிரியப்படுகிறதோ என்று நொந்த ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை அருளிச் செய்தார் யாயிற்று–சீதாபிராட்டி இளைய பெருமாள் இடம் -என்னை நான் அழித்துக் கொள்ள முடியாது என்று பாரதந்தர்யம் காட்டி அருளினாள் அன்றோ –இங்கும் வஞ்ச நோய் கொண்டு உலாவும் என்று ஆழ்வாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு-கண்டதோர் மாலையாலே மஹா மேக வர்ஷத்திலே அகப்படுவனவான கோ ஸமூஹங்களைக் காத்தவனுமாய் ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனுமானவனுடைய மது ஸ்யந்தியான திருத்துழாயின் கொய்தல் வாய்ந்த மலர் மேல் அபி நிவிஷ்டமான மனத்தோடும் நோய் கொண்டு உலாவும் என்று அந்வயம்என் னான்கொல் எம் கோல வளைக்கே –அழகிய கையும் வளையுமான என் மக்களுக்கு ஏதாய் முடியுமோ –

ஸ்வாபதேசம்-இப் பாட்டில் சம்சாரத்துக்கு இவர் உளர் என்று இருக்க ,இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான-அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்  –இவர் படியும்-இப்படி ஆவது இது என்னாய் முடியக் கடவதோ -என்று இருக்கிறபடி-

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் தன்மை கண்ட ஞானிகள் பாசுரம் –-இயல்வாயினை –-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாய்த்து அடியேனை வைத்தாயேல் -திருவாய் -2–3–3–வஞ்சம் –-தன்னால் அல்லது பிறரால் அறியப் படாததுமான–நோய் –ஆற்றாமை விளைக்கும் பக்தி மிகுதியை கொண்டு -உடையவையாய்–உலாவும் –ஒரு நிலை இல்லாமல் தடுமாறும்-ஒரோ குடங்கைக்-கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,–அகம் கைகளால் மொண்டு எடுத்து அனுபவிக்கும் படி அழகிய நிமைமை யுடையையாய் ஆற்றாமை யாகிய கண்ண நீர் வெள்ளத்தில் அலை படும் ஞான வகைகளோடும் கண்களோடும் –குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்-கொயல்வார் மலர் மேல் மனத்தொடு –சரணாகத ரக்ஷணத்தின் பொருட்டு அரும் தொழில் செய்பவனும் –பசு பிரப்யமான பிராணிகளை பாது காப்பவனும்-மிக்க விரைவுடைய எம்பெருமான் இனிய திருத் துழாய் மாலை அழகை அனுபவிப்பதில் ஆழ்ந்த மனத்தோடும் கூடிய–எம் கோல வளைக்கே–எமக்கு மிக இஷ்டமான இவர்க்கு–என் ஆம் கொலோ –-இன்னம் யாது நிலைமை நேர்ந்திடுமோ –

தாத்பர்யம்
கீழ் பாகவதர் பரமபதத்தை பிரஸ்தாபிக்க –-(சூட்டு நன் மாலைகள் பாசுரம் தொடங்கியே -முன் பாசுரத்திலும் கண்ணன் விண்ணாடு )அத்தைக்கேட்டு ஆழ்வார் திரு உள்ளம் அங்கு சென்று மக்நமான -ஈடுபட்ட படி-உள்ளமும் கண்ணும் ஈடுபட்டு இருக்க –-சம்சாரம் திருத்த அன்றோ இவரை வைத்து உபதேசிக்கப் பண்ணினான்-அது செய்யாமல் இவ்வாறு ஈடுபடுவதே-திருத்தாயார் பாசுரம்–பக்தி ஸ்வ பாவம் இவளுக்கு -ஸஹஜம் –-சர்வேஸ்வரன் தனது வடிவு அழகைக் காட்டி அத்தை விருத்தி அடையச் செய்து நின்ற இடத்தில் நிற்காமல் உலாவி பெரிய குளத்தில் இரண்டு மீன்கள் போல் இரண்டு கண்களும் விழிகளும் உலாவி இந்திரன் கல்மழை பொழிய கல் எடுத்து கல் மாரி காத்த கருட வாஹனான ஸ்ரீ யபதி சாத்தி அருளும் திருத்துழாய் ஆசைப்படா நின்றாள் இது என்னவாய் முடியுமோ என்கிறாள்

8-9-கருமாணிக்க மலை மேல்-ப்ரவேஸம்-

கரு மாணிக்க மலை பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களாலே-அவனுடைய அழகு சீலம் முதலானவைகளை அருளிச் செய்து –
அவற்றைப் போன்று சிறந்ததாய் –அனன்யார்ஹமுமாய்-இருக்கிற ஆத்தும ஸ்வரூபத்தை மற்றைப் பாசுரங்களாலே-
அருளிச் செய்து இனியர் ஆனார் –
அந்த அடிமை இன்பத்தாலே ப்ரீதராய்-ப்ரீதியின் பரவசத்தாலே -அப்பன் திருவருள் மூழ்கினளே-
தாமான தன்மை அழிந்து-ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய்-
அநந்யார்ஹ சேஷத்வம் -யானும் தானுமாய் ஒழிந்தேன் -என்ற ஸ்வ ஸ்வரூபம் -தம்முடைய நிலையை –
அன்யாபதேசத்தாலே பேசி இனியர் ஆகிறார் -இத் திருவாய் மொழியிலே –
ப்ரீதியில் அன்யாபதேசம் உள்ளது இத் திருவாய்மொழி ஒன்றுமே -என்று ஆழ்வான் நிர்வஹிப்பர்-

திருப் புலியூரிலே எம்பெருமானோடு இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்தால் ஒரு பிராட்டி –
அவனாலே கொள்ளப் பட்ட மனத்தினை உடையவளாய் இருக்கிறபடியை-உயிர் தோழி யானவள் கண்டு
இவள் வடிவில் வேறுபாட்டாலும் -புனை இழைகள் அணிவும் –
சொற்களின் வேறுபாட்டாலும் -அரு மாயன் பேர் அன்றி பேச்சிலள்-புணர்ச்சி உண்டானமையை அறிந்தாள் –
இவற்றில் ஒன்றையும் அறியாதே-
என்னுடைய தந்தையாரான ஜனக மகராஜர்-கணவனுடைய கல்விக்கு தகுந்த என் வயதைப் பார்த்து –என்கிறபடியே –
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா-சிந்தார்ணவகத பாரம் நாசசாத ஆப்லவோ யதா – அயோத்யா -118-34-
தகுந்த யௌவனப் பருவம் உடையவள் என்னும் இவ்வளவே கொண்டு-
தந்தை முதலியோர் சுயம் வரத்துக்கு ராஜ புத்ரர்கள் வருவது என்று நகரத்திலே-மண முரசு அறைவிக்க-
அதனைக் கேட்ட தோழி யானவள் -பரதன் இராஜா -என்று அறைவித்த முரசொலி செவிப்பட்ட போது-
ஸ்ரீ பரத ஆழ்வான் பட்டது எல்லாம் பட்டு-இம்முரசொலி பெண் பிள்ளை செவிப்படுமாகில்-
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்-நாச்சியார் திருமொழி -1-5-வாழாத தன்மையளாய்-இருக்கிற இவள் உயிர் தரியாள்-
ஏற்கவே தடுக்க வேண்டும்-அது செய்யும் இடத்தில் திருப் புலியூர் நாயனாரோடு புணர்ச்சி-
உண்டானமையை அறிவிப்போம் ஆகில்-நம் காவற் சோர்வால் வந்ததாம் என்றாம்-
அறிவியாது ஒழியில் இவள் வாழாள்-இனி இவ்வளவில் செய்வது என் என்று பார்த்தாள் –

அங்கனம் பார்த்தவள்-இவர்கள் தாமும் -இவளுக்கு வடிவிலே வேறுபாடு உண்டு
இதற்க்கு காரணம் யாதோ -என்று-விசாரியா நின்றார்கள்
நாமும் இவர்கள் தம்மோடு ஆராய்வதிலே இழிந்து-
அவ்வழியாலே அறிந்தோமாய் இதனை விலக்க வேண்டும்-என்று அறுதி இட்டுக் கொண்டு
இவள் வடிவு இருந்தபடியால் இவளுக்கு-
திருப் புலியூர் நாயனாரோடு புணர்ச்சி உண்டாயிற்று போலே இருந்தது –
அவனுடைய குணங்களையும் செயல்களையுமே வாய் புலற்றா நின்றாள்-
நீங்கள் செய்கிறவற்றைத் தவிருங்கோள் -என்று
அறத்தோடு நிற்க எண்ணினாளாய்–கிளவுத்துறையில் ஒரு பகுதி -அறம் -தர்மம் படி -இது தர்மம் அன்று -என்ன –
ஆனால் நீ சொல்லுகிற திருப் புலியூர் நாயனாருக்கு இவளுக்கு தகுதியான சிறப்பு உண்டாக வேண்டும்-
ஒப்பனையும் ஆண்மையும் குணமும் செல்வமும் கொடையும் காதலும் உண்டாக வேண்டும் –
நல் ஒழுக்கம் உடையனாக வேண்டும்-வேதார்த்த தத்வ ஞானம் உடையனாக வேண்டும் –இவை எல்லாம் உளவோ -என்ன
கூறுகிறாள் மேல் –
நீங்கள் கேட்கிற அளவு அன்று –இவை எல்லாம் குறைவு அற்றவன்-
இவை ஒன்றும் இல்லையாகிலும் இவள் தான்-திருப் புலியூர் நாயனாருக்கே உரியவள் ஆனாள்-
நீங்கள் செய்கிற இவற்றைத் தவிருமின் -என்று அதனை விலக்குகிறாள்-இது மணவிலக்கு -எனபது ஒரு கிளவித் துறை ஆகும் –

முதல் பாசுரத்தால் அவயவ சோபை -இரண்டாம் பாசுரத்தாலே –ஆபரண சோபை -மூன்றாம் பாசுரத்தாலே -ஆண் பிள்ளைத் தனம் – வீரம்
-நான்காம் பாசுரத்தால் –ஆபத் ஸகாத்வமும் –ஐந்தாம் பாசுரத்தால் – ஐஸ்வர்யம் ஆறாம் பாசுரத்தால் – உதாரத்வம் –
ஏழாம் பாசுரத்தால் -பிரணயித்தவம் -எட்டாம் பாசுரத்தால் -சமாச்சாரமும் –ஆச்சார்ய அனுஷ்டானம் –
-ஒன்பதாம் பாசுரத்தால் –வித்யா பூர்த்தியையும் –சொல்லி
பத்தாம் பாசுரத்தால் -இல்ல யாகிலும் -இவள் நேர் பட்டதே -அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லி தலைக் காட்டுகிறாள் –

திரு மந்த்ரத்திலே-தனக்கும் பிறர்க்குமாய் இருக்கும் இருப்பைக் கழித்து-அவனுக்கே அடிமை யாதல்
என்னும் தன்மையை சொல்லக் கடவது அன்றோ –அதனை இங்குச் சொல்லுகிறது-
மேல் திருவாய் மொழியில் அவனுக்கே அடிமையாக இருத்தல் என்னும் தன்மையைச் சொல்லிற்று-
இத் திருவாய் மொழியிலே-பிறர்க்கு உரியனாய் இருத்தலும்-தனக்குத் தானே உரியனாய் இருத்தலும்-
ஆகிய இரண்டும் பேறு அன்று -என்கிறது –ஒரு கன்னி யாகில் ஒருவனுக்கே யாய் இருக்கையும்-
ஒருவனுக்கே ஆனால் பிறர்க்கு உரியள் அல்லளாய் இருக்கையும்-அன்றோ ஸ்வரூபம்-
உகாரார்த்தம் நமஸ் அர்த்தம் -அநந்யார்ஹ சேஷத்வம் –கீழில் சொல்லி -அந்நிய சேஷத்வமும் ஸூஸ்வாதந்தர்யமும் கழிக்கும் இடம் சொல்கிறது

அதிக ப்ரீதியாலே உருகி பெண் பாவனை யால் அருளிச் செய்கிறார் -ஆண் பாவனையில் ஊடல் திரு இந்தளூர் போலே
சிபி சக்கரவர்த்தி -பீமன் -பிரதிஷ்டை -செங்கணாஞ்சேரி -ஆறு-திவ்ய தேசங்களில் ஒன்று -18 படி ஏறி சேவை –
சிபி சக்கரவர்த்தி அரசாண்ட பொழுது பஞ்சம் வர -ரிஷிகள் தானம் பெறாமல் -மறுக்க -வாழைப் பலம் உள்ளே தங்கம் வைத்து கொடுக்க
மறுக்க -ரிஷிகளை அழிக்க கிருத்ரியை -தேவேந்திரன் வஜ்ராயுதம் புலி வேஷம் கொண்டு ரக்ஷித்தான்
குட்ட நாடு பிரதேச பெயர் -மாயப்பிரான் –
அவகாஹித்தாரை அநந்யார்ஹம் ஆக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழுமூரிலே குட்டமிடும் –176–

ஒன்பதாம் திருவாய் மொழியில் கீழே -ஸுந்தர்ய சீலாதி விசிஷ்டனான சர்வேஸ்வரனுக்கு பரி ஸூத்தாத்ம ஸ்வரூபமானது
பிரகார தயா சேஷம் என்று தெளிந்தவர்
அந்த சேஷ பூதனான ஆத்மாவினுடைய ததேக ரஷ்யத்வ ததேக போக்யத்வங்களை ப்ரதிபாதிப்பதாக
சேஷியினுடைய திவ்ய அவயவ சோபையையும்
திவ்ய ஆபரண சோபையையும்
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
குணவத்தாதிசயத்தையும்
அபரிச்சின்ன விபூதி யோகத்தையும்
உதார குண உத்கர்ஷத்தையும்
பிரணயித்தவாதிசயத்தையும்
சர்வ கர்ம சமாராத்யதையும்
சர்வ வேத ப்ரதிபாத்யதையையும்
ஆச்சர்ய அவஹாவத்தையும்
அனுசந்தித்து ஏவம் வித பிரகார விசிஷ்டனாயத் திருப் புலியூரில் எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய அனுபவத்தில்
அவகாஹித்து ஹ்ருஷ்டரான இவருடைய ரூபாதி வைலக்ஷண்யத்தைக் கண்ட பரிவர் தொடக்கமான பார்ஸ்வஸ்த்தர்
இந்த வைலக்ஷண்யத்திலே ஜிஜ்ஞாஸூர்களாக –
ஸூஹ்ருத்த பூதரானவர் அவர்களுக்கு அறிவித்த பாசுரத்தைத்
திருப் புலியூரில் நாயனாருடனே இயற்கையிலே புணர்ந்த நாயகியினுடைய வேறுபாடு சம்ச்லேஷம் ப்ரவ்ருத்தம் என்று அறிந்த
தோழியானவள் -இது அறியாதே இவளுடைய பதி சம்யோக ஸூசகமான பருவத்தைக் கண்டு
பந்துக்கள் வேறே மணமுரசு அறைவிக்க –
நாயகிக்கு இது அஸஹ்யம் என்று அறிந்து விலக்குவதாக உத்யோகித்து-
யுக்தி பிரகாரத்தாலும் வடிவில் வேறுபட்டாலும் நிரூபித்து அறிந்தாளாக பந்துக்களைக் குறித்து
இவள் திருப் புலியூர் நாயனாருடைய குண நாமங்களையே பலகாலும் பேசா நின்றாள் –
இவளுக்கு அங்கே பாவ பந்தம் உண்டாகக் கூடும் –
அவனாகிறான் இவளுக்குத் தகுதியாம் படி
அபி ரூபனாய் அலங்கார விசிஷ்டனாய்-ஆண் பிள்ளையாய் –ஆசாரஸ்த்தனாய் -வேதவித் அக்ரேசனாய் –
ஆச்சர்ய பூதனாய் இருப்பான் ஒருவன் -ஆதலால்
இவள் வடிவில் அந்யதா ஸித்தமான சம்ச்லேஷ ஸூ சகமாக சிஹ்னங்கள் உண்டாகையாலும்
அவனுக்கே இவளாம் என்று அறத்தொடு நின்று உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

நாயக லக்ஷணம் காட்டும் திருவாய் மொழி

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

அவனுடைய திவ்ய அவயவங்களின் அழகினைக் கண்டு-மற்று ஓன்று அறியாதபடி ஈடுபட்டாள்-என்கிறாள் –

இருத்தும் வியந்து -திருவாய் மொழியில் அனுபவித்த-அதனை தோழி பேச்சிலே பேசி இனியர் ஆகிறார் –

பேரன்றிப் பேச்சிலள்-பரம் வியூகம் விபவம் என்னும் இவைகட்கு உரிய-திரு நாமங்களைச் சொல்லுகின்றிலள்-
அன்றிக்கே
அல்லாத உகந்து அருளின திவ்ய தேசங்களின்-நிற்கிறவர்கள் பெயர்களும் சொல்லுகின்றிலள்-என்னுதல் –

—–

அன்னைமீரிதற் கென் செய்கேன் அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ் திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2-

அவனுடைய ஆபரணங்களின்-அழகிலே அகப்பட்டாள் –என்கிறார்

புன்னை பூம் பொழில் சூழ்–சோலை வாய்ப்பை அன்றோ இவள் சொல்லுகிறது -என்றது-சோலையில் கலந்தார் வார்த்தையாய் அன்றோ-இது இருக்கிறது -என்றபடி –சங்கேச ஸ்தலம் இந்த பொழில் -இங்கே தானே சம்ச்லேஷம் என்பதால் இத்தையே வாய் வெருவி கொண்டு இருக்கிறாள் –

——–

புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப் புலியூர் வளமே–8-9-3-

ஆண் பிள்ளைத் தனம் -வீர தீரச் செயல்கள்-பர்த்தாராம் பரிஷஷ்வஜே -வீரத்தின் சிறப்பினைக் கண்டு அணைக்கும் பிராட்டியின் வார்த்தையாக அன்றோ
இவள் வார்த்தை இருக்கிறது

புகழும் இவள் நின்று இராப்பகல்–இவள் திரு நகரியை விட்டு திருப் புலியூர் புகழையே புகழா நின்றாள் -என்பாள் வளமே புகழும் -என்கிறாள் –
பகைவர்களால் வெல்ல முடியாத அயோதியை -என்கிற-பரமபதத்தை நினைத்து இருக்குமாறு போலே காணும்-இவள் இவ் ஊரை நினைத்து இருப்பது
மாக வைகுந்தம் காண்பதற்கு என்மனம்-ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –திருவாய் மொழி -9-3-7–எனபது அன்றோ இவருடைய பாசுரம் –குருகூர் பத பிரயோகம் -கீழ் திருவாய் மொழி யிலும் இதிலும் நிகமன பாசுரங்களில் இல்லையே

————-

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள் இன்று இப் புனை இழையே–8-9-4-

வெறும் ஆண்பிள்ளைத் தனமே போராதே –ஆபத்துக்கு துணைவன் ஆகவும் வேண்டுமே -என்ன –
அக்குறை தான் உண்டோ அவளுக்கு -என்கிறாள் –

மூவுலகு உண்டு உமிழ் தேவ பிரான்–ஆபத் சகத்வாதி குணங்களை-புனல் தரு புணர்ச்சியை அன்றோ -இவள் வாய் புலற்றுகிறது-

இப் புனை இழையே –திருப் பெயரைச் சொல்லச் சொல்ல-ஒருபடி ஆபரணம் பூண்டாப் போலே இரா நின்றாள் –

——-

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-

ஆபத்துக்கு துணையாதல் மாத்ரம் போருமோ – இவளுக்கு தக்க செல்வமும் அவனுக்கு உண்டாக வேணுமே -என்ன –அதுவும் உண்டு -என்கிறார் –
அவனுக்கு உள்ள ஐஸ்வர்யம் கொண்டாடத் தக்கதே -நமக்கு என்றால் கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் என்பார் –
பிரபன்ன ஜட கூடஸ்தர் -ஈஸ்வரனை சொத்தாகக் கொண்டவர் -தக்க ஐஸ்வர்யம் –

அப்பன் திருவருள் மூழ்கினளே–அதிசயித்த ஐஸ்வர்யம் உடையவன் உடன் சம்ஸ்லேஷித்தாள் -என்று தோற்றம்-

திருவருள் மூழ்கினளே –கடல் கொண்ட பொருளை எங்கனே மீட்கப் பார்க்கிறபடி –-அருட்கடலில் மூழ்கின இவளை மீட்கலாமோ உங்களாலே

——–

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை யாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

செல்வம் மாத்ரம் போருமோ –வள்ளலாக இருக்க வேண்டாவோ -என்ன-
அவனுடைய வள்ளல் தன்மையில் அகப்பட்டுக்-களைந்தமைக்கு அடையாளம்-தெளிவாக உண்டு -என்கிறாள் –

அவன் திருவருளால் அன்றோ திருவாய்மொழி –அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் -அவனது
உதார குணம் இவருக்கு கொடுத்து நாமும் அனுபவிக்க -அருளினார் –

———

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–8-9-7-

கேவலம் கொடையாளனாக மட்டும் இருந்தால் போராதே-காதல் குணம் உண்டாக வேணுமே -என்ன-பிரணியித்தவ ஐஸ்வர்யம் -உள்ளவனை அன்றோ இவள் கிட்டினாள்-அவ் ஊரில் தாவரங்களும் கூட ஒன்றுக்கு ஓன்று-பற்றுக் கோடாம்படி அன்றோ-அவனுடைய காதல் குணம் இருந்த படி -என்கிறாள் —

தாள் அடைந்தாள் –காதல் குணத்துக்குத் தோற்று-திருவடிகளைப் பற்றினாள் –

இம் மடவரலே –முன்பு எனக்கு அடங்கினவளாய் போந்த இவள் கண்டீர்-மீட்க ஒண்ணாதபடி ஆனாள் –

———

மடவரல் அன்னை மீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8-

விலக்ஷண சமாச்சார பிரியன் -–அனுஷ்டானம் இதில் –வித்யா பூர்த்தி அடுத்து-கற்ற பின்பு தானே அனுஷ்டானம்-அனுஷ்ட்டித்து காட்டிய ராமன் உபதேசம் கண்ணன் ஆகவே அனுஷ்டித்துக் காட்டிய பின்பு கற்றத்தைச் சொல்லி – –10 பாசுரம் இவை அனைத்தும் இல்லா விடிலும் அநந்யார்ஹை -என்கிறாள்

வெறும் காதல் மட்டும் இருந்தால் போராதே –
ஜனகர் முதலானோர் கர்மங்களைச் செய்ததனாலேயே-சித்தியை அடைந்தவர்கள் -என்னும்படி –
கர்மணைவ ஹி சம்சித்திம் ஆஸ்திதா ஜனகாதயா-லோக சங்கரஹ மேவாபி சம்பச்யன் கர்த்தும் அர்ஹசி-ஸ்ரீ கீதை -3-20-
அன்றோ இக்குடி இருப்பது –
ஆகையால் இதற்க்கு தக்க ஆசாரம் உண்டாக வேணுமே அவனுக்கு -என்ன-
ஆனால் அவ் ஊரில் உள்ளார் உடைய ஆசாரம் இருக்கிறபடி யைக் கேட்கலாகாதோ-என்கிறாள் –

———

பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம் தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-

ஆசாரமே போருமோ-செய்கின்ற தொழிலை அறிவிக்கிற நூலைப் பார்த்து
அனுஷ்டானத்துக்கு வேண்டுவது-அறிந்து இருக்க ஒண்ணாதே –
எல்லா நூல்களையும் ஆராய்ந்தவரும்-எல்லா வேதங்களையும் ஆராய்ந்தவரும்-ஆன ஜனகர் -எனபது அன்றோ-இக்குடியில் உள்ளார் படி
மிதிலாதிபதிம் சூரம் ஜனகம் சத்ய விக்ரமம்-நிஷ்டிதம் சர்வ சாஸ்த்ரேஷூ சர்வ வேதேஷூ நிஷ்டிதம் -பால -13-21-
இதற்க்கு தக்க வேதார்த்த தத்வ ஞானம் உண்டாக வேணுமே என்ன –அதற்கும் ஒரு குறை இல்லை -என்கிறாள் –

——–

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-

நின்ற மாயப் பிரான் திருவருளாம்-இவள் நேர் பட்டதே-ஆச்சர்ய பூதன் உடைய -கிருபையால் இவள் -நேர் பட்டாள்-
இதை விட வேறு எத்தை சொல்லி விசுவசிப்பது

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல் –
வேறு மற்று ஓர் உபாயம் உண்டோ –
இவள் -அழகியதாய்-குழிந்த திருத் துழாய் நாறுகைக்கு –இராச புத்திரனை அணையாதார்க்கு கோயில் சாந்து
நாறுகைக்கு விரகு உண்டோ –
என் உடம்பாதல்-உங்கள் உடம்பாதல்-திருத் துழாய் நாறுகின்றதோ –
அம்தண் துழாய் கமழ்தல் –என்கிறதற்கு –
அங்கீ காரத்துக்கு அறிகுறியாய் இருக்கிறது -என்பது-உள்ளுறை பொருள் -ஸ்வாபதேச பொருள்

———–

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

பகவத் கைங்கர்யம் -பல்ம் இதில்– அடுத்ததில் பாகவத கைங்கர்யம்-

சேஷியான அவன் இறைவனாம் தன்மைக்கு எல்லை ஆனால் போன்று-இவர் அடிமை யாம் தன்மைக்கு எல்லை யாம்படி –

நிகமத்தில்-இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு தகுதியான-கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்-
சேஷத்வ பாரதந்தர்யம் -சேர்ந்த ஸ்வரூபம் –பாகவத சேஷத்வம் பொசிந்து காட்டுகிறதே –

ஆக-இப்பாட்டால்
1-சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்-
2-ஆத்ம ஸ்வரூபத்தையும்-
3-இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்-
4-இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்-சொல்லிற்று ஆயிற்று —
வங்க கடல் கடைந்த -1-கோபிகள் -2-கோதை அநுகரித்து-3-தமிழ் மாலை -முப்பதும் -அப்யஸிக்க வல்லார் –
அனுஷ்டித்த -அநுகரித்த -அப்யஸிக்க – -தோல் கன்றுக்கும் கிட்டும் போலே –

—–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -23-புனமோ புனத்து அயலே –கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

February 17, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

விண்ணுளாரிலும் சீரியர்கள் நீங்கள்-தலைமகன் வார்த்தை -கிளைவித் தலைமகன் வார்த்தை
அந்தாமத்து அன்பை அனைத்தும் ஆழ்வார் பக்கலிலே வைக்குமவன் அன்றோ
நாடு -பரம பதம்-வான் -போக்யம்-ஒருவகையில் தான் நித்ய ஸூரிகள் இவர்களுக்கு ஒப்பு
தோட்டம் உங்கள் காவலா -என்னுடைய மனம் உங்கள் காவலா-ஆழ்வார் அளவும் வந்த மனத்தை அரு வினையேன்-விட முடியாதே -நித்ய அனுபவமும் கிட்டாத வினை-புனமா மனமா கேள்விக்கு பதில் வரவில்லை-சொல்லீர் என்கிறார்-பல சரீரம் எடுத்து உம்மை அனுபவிக்க நான் வர எனது மனத்தையும் காவலாக வைத்தீர்களே-இதுவா உங்கள் ஸ்வ பாவம் என்று குறை உற செய்தல்-யுக்தியும் பிரதி யுக்தியும் இதில் உண்டே-எல்லே இளங்கிளி போல்-22-பாசுர உக்திக்கு இது பிரதி யுக்தி
கடல் ஞாலம் -அநுகாரம் இதுக்கு விவரணம்
-இவனை நோக்கி இவர்கள் சில வசோக்தி –
நெஞ்சம் நிறைய அன்பை வைத்து கொண்டு தேவை அற்ற வினாக்களை எழுப்புதல்–சொல்ல ,
இவன் தானும் ,இவர்களை சில வசோக்திகள் சொல்கிறான்-வாஸ யுக்தி வாயாலே பேச்சு -வாய் வார்த்தை -உள்ளத்திலே இல்லையே –-உள்ளம் முழுவதும் ப்ரேமம் தானே-திருமால் இரும் சோலை மலை என்னேன் என்ன -நாமும் நாவினால் நவிற்றுகிறோம்

கொல்லையைக் காத்துக் கொண்டு இருக்கும் நாயகியையும் தோழியையும் கண்டு நாயகன்
தனது குறை வேண்டுதலைக் கூறும் துறை இது-தம் மனம் இவர்களுக்கு வசப்பட்டத்தைக் குறிப்பால் கூறியவாறு-நீங்கள் புனத்தை விட்டுப் போகாமல் இருப்பது போல் என் மனத்தை விட்டு நீங்குகிறது இல்லை -புனம் போல் என் மனமும் உங்கள் பாதுகாப்புக்கு உட்பட்டுக் கிடக்கிறது உங்கள் பெரியோர் இங்கே வைத்தது புனத்தைக் காக்கவோ என் மனத்தைக் காக்கவோ-புனக்காவலோடே நில்லாமல் என் மனம் காப்பது உங்களுக்குத் தகுதி அன்று – அவர்கள் அழகைத் தான் காணும் பொருட்டும் தன் முகத்தை அவர்கள் பார்க்கும் பொருட்டும் இவர்கள் அருகில் தடுமாறி திரிந்தமை தோற்ற புனத்தயலே வழி போகும் அரு வினையேன் என்கிறார்

இப்படி ஹித வசனம் கேட்டுத் திருந்தின ஞாதாக்கள் ஆழ்வார் பக்கலிலே நெஞ்சம் துவக்குண்டு சொல்லுகிற பாசுரத்தை புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு தலைமகன் குறைவற உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
இவனை நோக்கி இவர்கள் சில வக்ர யுக்திகளைச் சொல்ல-இவன் தானும் இவர்களைச் சில வக்ர உக்திகளைச் சொன்னான்-வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ்வான் புனத்தே -என்றார்கள்-அழகிது -இது சொல்ல ஒண்ணாதாகில் நீங்கள் பூனம் நோக்கி இருக்கிறி கோளோ
வழி போவார் மனம் நோக்கி இருக்கிறி கோளோ
-என்கிறான் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி அவதாரிகை
இப்டியுள்ள ஹித வசனத்தைக் கேட்டுத் திருத்தப்பட்ட பரம ஏகாந்தி பண்ணும் நிந்தா ஸ்துதியைப்
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு தலைவன் குறை யுரைத்த பாசுரத்தாலே
காட்டுகிறார் இதில்

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே
–23-தலைவன் குறை யுற உரைத்தல் –

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்கலுற்று திடமாக
வாய்ந்து அவனாய்த் தான் பேசும் மாறன் உரையதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் 
–46-எங்கனயோ -வில் பிரீதி அப்ரீதி சமமாய் சென்ற இடத்தில்
ப்ரீத்யம்சம் தலை எடுத்து தரிக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க பாஹ்ய ஹானியாலே அப்ரீதி யம்சமே தலை எடுத்து பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-ஆற்றாமை கரை புரண்டு
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்தால் போலே இவரும் உபய விபூதி நாதனை அனுகரித்து தரிக்கப் பார்க்கிற படியைக் கண்டு கண் கலங்கின பரிவர் சந்நிஹிதர்க்கு விலஷணராய் சொல்லிச் செல்லுகிற க்ரமத்தை
ஸ்ரீ நாயகனைப் பிரிந்த ஆற்றாமையாலே-தத் பிரகாரங்களை அனுகரித்து தரிக்கப் பார்க்கிற
தலைவி நிலையை வினவ வந்தவர்களுக்கு ஸ்ரீ திருத் தாயார் -ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆவிஷ்டன் ஆனானோ -என்று க்லேசத்தாலே சொல்லுகிற துறையிலே வைத்து அருளிச் செய்கிற -கடல் ஞாலத்தில் அர்த்தத்தை கடல் ஞாலத்து ஈசனை -என்று துடங்கி அருளிச் செய்கிறார்--யானே என்ன வாய்ந்து ஏறப் பேசி –ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் –என்றபடி அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியானதை –வைபவத்தை ஆராய்ந்து அனுசந்திப்பார் –ஸ்ரீ திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாருக்கு அடிமை செய்ய நோற்றார் ஆவார் வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-என்று இறே அவர் இருப்பது

புனமோ
பாவியேன் சேதனனாய் கெட்டேன்-என்கிறான்-இதற்குள் நின்றோம் ஆகில் முழு நோக்கு பெறல் ஆயிற்று இறே-இங்குற்றை அபாங்க  வீஷணம் தானும் ஒன்றுக்கு ஆக இறே–உன் தாமரைக் கண்களால் நோக்காய் -சேவித்த உடனே -கர்மங்கள் தொலையுமே-லௌகீகரை கடைக்கண்ணால் -ஈடுபடுத்த மாத்திரமே -முழு அனுபவத்துக்கு அல்லவே-புனமாய் இருந்தால் பூர்ணமான கடாக்ஷம் பெற்று இருப்போமே-ஸூகாச்சார்யார் உத்தவர் பிரார்த்தித்தார்-கோகுலத்தில் செடியாகவோ திருவடி பட்ட மண் துகளாகவோ ஆசைப்படுவார்கள் அன்றோ-அணைய ஊர புனைய –ஸ்தாவர ஜென்மங்களை
பெரு மக்கள் ஆதரிப்பார்கள் அன்றோ-பெரிய பிராட்டியார் முழு நோக்கு பெற்றால் பர ப்ரஹ்மம் ஆகிறான் -பட்டர்

புனத்தயலே வழி போகும் —
புனத்துக்கு உள்ளே புகுந்தோமோ?-உங்கள் புனத்துக்கு வேலி இல்லையா ?-சம்பந்த சம்பந்தத்தை இட்டு தொடருகிறீரே  —-எங்கேனும் போகிலும் புனத்து அருகு அல்லது வழி இல்லை இறே இவனுக்கு-நீங்கள் புனம் விட்டு நீங்காதது போல் எனது மனம் விட்டு நீங்காமல் உள்ளீர்கள்-புனம் போல் மனமும் உங்கள் இடம்-கேசவன் தமர் -அடியார்க்கு அடியார் -சம்பந்த சம்பந்தம் அடியாக -பிடித்தார் பிடித்தார்
புனம் -புனத்து அயல்-ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்
வழி போகும் –நாங்கள் வழி அன்றோ போகிறது ?-வழி போகுவார்க்கு காட்டிலும் முள்ளிலும் புகலாமோ ?-இவர்கள் ஒழிந்த  இடம் காடும் முள்ளுமாய் இருக்கிற படி-வழி பாதை உபாயம்-போகும் -போய் சேரும் இடம் ப்ராப்யம்-தூது மடல் அனைத்தும் ப்ராப்ய அந்தர்கதமே
கடாக்ஷம் ப்ராப்யம்-
அர்ச்சிராதி கதியே உபாயம் இல்லையே -ப்ராப்யத்திலே சேரும் –-சிந்தனையே வேண்டும்-காடு முள் -உபாயாந்தரங்கள் கர்ம யோகாதிகள்

அருவினையேன் மனமோ–
எங்கேனும் போகிலும்  புனத்தயலே வழி போக வேண்டும்-பாபத்தை பண்ணினேன் —
பாகவதர்களை அடைந்த பின்பு மீளவே கூடாதே-பிள்ளை திரு நறையூர் அரையர் -உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க- திரு நகரி அருகே போக வேண்டும் பாபம் உண்டாவதே – இது பாவம் ஆனால் இதற்க்கு எதிர் தட்டான பகவத் விஷயம் புண்ணியம்-தென் ஆனாய்-நாலு பக்கமும் யானையைத் தேடிப் போவார் தப்பலாம்-பாகவதர்கள் இடம் சேர்ந்து விலகாமல் -ஆழ்வார் திருவடிகளில் ஈடுபட்டு மீள முடியாமல் சிக்குண்டதுக்கு ஐதிக்யம்-சீரார் வேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -மண்டின இடங்களில் புகுந்தவர்-வேலிக்கு வெளியில் திருக்குருகூரில் அகப்பட்டதுக்கு – பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவர் பாதமே என்று இருந்ததற்கு–(நம்பிள்ளை ஈட்டில் ஆப்பான் திருவழுந்தூர் அரையர் மச்சிலே பிள்ளை திரு நறையூர் அரையர் இப்பாட்டை அநுஸந்தியா நிற்க-ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க-திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே சீலாதி குணம் அளவு இல்லையே-குண வித்தர் படி
-பகவத் விஷயத்தை சமாஸ்ரயித்து கொண்டை மேலே காற்று அடிக்க திரிய பெறாதே மீள ஒண்ணாத பாகவத சம்ச்லேஷத்தில் இழிவதே-என்று- கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது-தலைக்கு மேல் காற்று அடிக்க -அதாவது கவலை இன்றி இருத்தல்–கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது
அதிகமாக ஸூகப்படுவதுக்கு இந்த வார்த்தை-

நும் காவல்-புனமோ-மனமோ உங்களுக்கு காவல்–மகளிர்- ஒருவனை பாதிக்கைக்கு உங்களுக்கு கிடக்கிற ஐக கண்ட்யம்–சொல்வீர் –சிறை இட்டவர் ஜீவனம் இடாரோ ?-தன்னை அநாதரியா நிற்கச் செய்தேயும்  “சொல்லீர் “என்கிறான்- ஆசாதிசயம் இருந்த படி-(வாசலை திறவாதீராகிலும் வாயைத் திறக்கக் கூடாதோ- திருப்பாவை போல்)

புண்டரீகம் -இத்யாதி-
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷணீ
-என்னும் படி –அம் கேழ் –அழகிய நிறத்தை உடைய தாமரைக் காடு போலே ஆன கண்-ஓர் என்றது-ஒரு வகைக்கு ஒப்பு என்ற படி –அத்வீதியமான தாமரை காடு போல் என்றும்-ஆம் ஓர் என்றது அவ்வயவயுமாகவுமாம்

அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ
-ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-

அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே
அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே
க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே
பச்யதாம்-அந்தக்கரணஸ்ய -ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் —பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் –என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக் கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே
அநுப்ஜம்–உப்ஜ -ஆர்ஜவே -என்ற தாது பாடம்–ஆர்ஜவம் அற்றது என்றபடி –குடிலமாய் இறே தாமரை மலர் இருப்பது –
ஆக ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே
அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே-இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே-ஆழ்வாரும் –ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே
காட்டுமால் பரஞ்சோதி
–என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –

கண்ணன் -நீர்மை-புண்டரீக -இத்யாதியால் வடிவழகு சொல்லிற்று–வானாட மரும்  தெய்வத்தின்  மோரனை யீர்களாய் – பரமபதத்தை -சதா பச்யந்தி என்னும் படி- நித்ய வாசம் செய்யும் எல்லாரும் கூடினாலும் , இத் தலைக்கு ஒரு வகைக்கு ஒப்பாய் இருந்த படி-சம்சார போகம் ஒருவருக்கும் போராதே
இங்கு அறாட்டு பறாட்டாய் இருக்கையாலே இங்கு தனி அல்லது இல்லை-அங்கு எல்லாரும் புஜித்தாலும் ஆள் தேட்ட மாய் இருக்கையாலே இனமாய் இருக்கும்-இவையோ உங்கள் உடைய ஸ்வாபங்கள்–என் நெஞ்சை வளைக்கையும் ஜீவனம் இடாது ஒழிகையும்-கிட்டினவரை கிழிச்சீரை அறுத்து கொண்டு அவர்களை அநாதாரிக்குமா போலே நெஞ்சை  அபகரித்து முகம் கொடாதே இருக்கிற படி-

நாயகன் ஏங்குவது இவளின் கடை கண் பார்வைக்கு –புனம் ஆகவாது இல்லாமல் போனேனே –
பிருந்தாவனம் செடி கொடி-மண் துகள் ஒன்றாக ஆசை பட்டது போல் இவனும் புவன் ஆக இல்லாமல் போனேனே பாவி என்கிறான் இவர்கள் இல்லாத இடம் எல்லாம் முள்ளாக தோற்றுகிறதாம்)

புனம் போலே தம் மனமும் இவர்கள் ரஷிக்க வேண்டியதை நாயகன் சொல்கிறான் –-தம் முகத்தை அவர்கள் பார்க்கும் பொருட்டு-இவர்கள் இருக்கும் இடத்தின் சமீபத்தில் தடுமாறித் திரிந்தமை தோற்ற –
புனத் தயலே வழி போகும் அரு வினையேன்-என்கிறான்-பாகவதர் ஆழ்வார் பக்கல் தமது நெஞ்சு துவக்குண்ட படியைச் சொல்லுதல் உள்ளுறை பொருள்-விண்ணுளாரிலும் சீரியர் –-அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் தகுதி அல்லவே-உபாயாந்தரராய் வேறு வழியில் செல்வாரையும் திருத்த வல்லவர் அன்றோ நீர்-தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,– ஆழ்வார் ஒருவர் எழுந்து அருளி இருக்கும் இருப்பு நித்ய ஸூரிகள் திரள இருந்தால் போல் இருக்கிறதே என்றவாறு –

புனமோ-உங்கள் வேலிக்குள்ளே அகப்பட்டுத் திருத்துண்டு விளைந்து கிடக்கிற புனமோ–புனத் தயலே வழி போகும் அப்புனத்துக்கு அருகே வழி போகிற-அரு வினையேன் மனமோ அகப்பட்டால் தப்ப மாட்டாத பாபத்தைப் பண்ணின என்னுடைய நெஞ்சமோ-மகளிர் நும் காவல் சொல்லீர்-பெண்மைக்கு எல்லை நீளமான பிறவி அழகை யுடைய உங்கள் காவலுக்கு விஷயம் சொல்ல வேணும் புனம் விட்டு அகலாதவோ பாதிஎன் நெஞ்சம் விட்டு அகலுகிறிலீர் என்று கருத்து–புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்-புண்டரீகத்துடைய அழகிய செறிவை யுடைத்தான காட்டுடனே போலிமை
சொல்லும்படி வி லக்ஷணமான கண்களை யுடைய –

கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே –அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே

கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –-ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –73-

கண்ணன் வானாட மெரும்-கிருஷ்ணனுக்கு போக விபூதியான நாட்டிலே நித்ய வாஸம் பண்ணுகிற-தெய்வத் தினம் ஓர் அனையீர் களாய், திவ்ய சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே ஒப்புடையீராய் இருக்கை –இவையோ நும் இயல்வுகளே -பர சித்த அபஹாரியான பிரதிகூலா சரணம் உங்களுக்கு ஸ்வ பாவ மாகவாயோ என்று தன் குறையற யுரைத்தானாயிற்று–இத்தால்-புனமோ என்று உம்முடைய அநந்ய சாதனத்வாதி மர்யாதைக்கு உட்பட்டு போக உன்முகமாம் படி திருத்துண்ட இவ்விபூதி ப்ரதேசமோ என்றபடி-புனத்தயலே என்று தொடங்கி இதனுடைய பரிசர வர்த்தியான சாதன சரணியாலே நடக்கும் எங்கள் நெஞ்சோ என்றபடி –மனசால் தியானித்து –உபாயாந்தரங்கள் ஆகிய வழியிலே புனம் -சிந்தை அற்று -நெஞ்சு -சிந்தனை அன்றோ அஜடமாய் இருந்தால் தானே கார்யகரம் ஆகும் -இவ்விடத்தில் அருவினை -என்றது விடமாட்டாத பாவ பந்தத்தை–மகளிர் என்று தொடங்கி
பாரதந்த்ர ஏக நிரூ பணீயமான ஸ்வரூப வை லக்ஷண்யத்தை யுடைய உங்களுக்கு நியாம்யம் ஏது என்று அருளிச் செய்ய வேணும் என்றபடி–புண்டரீகம் இத்யாதி-ஸ்வாமித்வ வாத்ஸல்ய ஸூ சகமான கண் அழகை யுடையவனாய் (செவ்வரியோடும் அந்த நீண்ட பெரியவாய கண்கள் இவற்றைக் காட்டுமே )உத்துங்க லளிதனான கிருஷ்ணனுடைய அப்ராக்ருத பரம வ்யோம வாசிகளான ஸாத்ய தேவர்களுடைய சங்கத்தோடே சாத்ருஸ்யம் சொல்லலாம்படி விண்ணுளாரிலும் சீரியராய் வைத்து
மார்க்க அந்தர காமிகளையும் வர வலித்துக் கொள்ளும்படியான வியாபார வை லக்ஷண்யம் இருந்தபடி என் என்று திருந்தின விலக்ஷணர் பண்ணின நிந்தா ஸ்துதியை அருளிச் செய்தாராயிற்று –நிந்தா ஸ்துதி -நேராக ஸ்தோத்ரம் பண்ணவில்லையே –கிளைவித் தலைமகன் ஆழ்வாரைப் புகழ்ந்த படி 

ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்
விண்ணுளாரிலும் சீரியரே
-திரு விருத்தம் -79-என்னக் கடவது இறே இவர்களை–இவையோ நும் இயல்வுகளே-நான் உங்களை இங்கன் அன்று நினைத்து இருந்த படி-நாநா பவநம் பெற்று அநேக சரீர பரிக்ரஹத்தைப் பண்ணி அனுபவிக்கக் கோலி வர உள்ள நெஞ்சையும் கூடக் கைக்கொண்டு வாய் திறவாதே இருப்பதே அழகிதாக போதயந்த பரஸ்பரம் -கீதை -10-9- பண்ண வந்தேன்

இதுக்கு ஸ்வாபதேசம்
ஆழ்வார் பகவத் அலாபத்தாலே வந்த ஆற்றாமையுடனே-நல்லார் நவில் குருகூர் நகரான் –திரு விருத்தம் -100- என்கிற படியே ஸத்வ நிஷ்டர்கள் அடங்கலும் திரண்டு படுகாடு கிடைக்கும் படி இருக்கிற இருப்பைக் கண்ட அவர்களுடைய சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமாகிற படியைச் சொல்கிறது –தென் ஆனாய்-நாலு பக்கமும் யானையைத் தேடிப் போவார் தப்பலாம்-பாகவதர்கள் இடம் சேர்ந்து விலகாமல் -ஆழ்வார் திருவடிகளில் ஈடுபட்டு மீள முடியாமல் சிக்குண்டதுக்கு ஐதிக்யம்
சீரார் வேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -மண்டின இடங்களில் புகுந்தவர்-வேலிக்கு வெளியில் திருக்குருகூரில் அகப்பட்டதுக்கு –பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவர் பாதமே என்று இருந்தமைஆப்பான் திருவழுந்தூர் அரையர் மச்சிலே பிள்ளை திரு நறையூர் அரையர் இப்பாட்டை அநுஸந்தியா நிற்க-ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க-திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே-சீலாதி குணம் அளவு இல்லையே-குண வித்தர் படி

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி வியாக்யானம்
புனமோ-இது உங்கள் வேலிக்குள் அகப்பட்ட புனமோ என்பது ஹர்ஷ யுக்தி இங்கு–புனத் தயலே வழி போகும்-உங்கள் புனத்திலே புகுந்தோம் அல்லோமே-புனத்துக்கு அருகே அல்லது வழி இல்லை இறே நமக்கு புனத்துக்கு அருகே வழி போகிற-அரு வினையேன் மனமோ-ஈஷத் அநு ரக்தரிலும் அநு ரக்திக்க்கும் படியான பாபத்தைப் பண்ணின என் மனம் தான்-மகளிர் நும் காவல் சொல்லீர்-பெண்மைக்கு எல்லை நிலமான பிறவியையுடைய உங்கள் காவலுக்கு உட்பட்ட புனம் தானோ சொல்லுங்கோள்–புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்-புண்டரீகத்தினுடைய அழகிய ஸ்ரீ யை யுடைத்தான வனத்தோடே ஒரு போலியே சொல்லும்படியான கண்களை யுடைய–கண்ணன் வானாட மெரும்-கிருஷ்ணனுக்கு போக பூமியான நாட்டிலே நித்ய வாஸம் பண்ணுகிற-தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,-நித்ய ஸூரி சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே ஒப்புடையீர்களாய் இருக்கிறீகோளே–இவையோ நும் இயல்வுகளே-ஒருபடி நம் மநோ வ்ருத்தி அறியாதவர்களாய் ஒருபடி நம்மிடம் ப்ரீதி யுடையவர்களாய் இருக்கிறி கோளே-உங்களுடைய ஸ்வ பாவங்கள் இங்கே புனம் காக்கும் தோழி தலைவி இவர்களோடு ஒத்த ஸ்வ பாவத்தால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள்–புனம் -இவர்கள் இருக்கும் தேசம்-யுக்தமான ஸூரி சாத்ருஸ் யமும் இவ்விருவருக்கும் ஒக்கும் என்றதாயிற்று

ஸ்வாபதேசம்-
ஆழ்வார் நித்ய விபூதியில் பிரவணராய் இருக்கும் இருப்பைக் கண்டு இவர் பக்கல் பிரவணராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தை-

தாத்பர்யம்
ஆழ்வார் இருப்பில்-நித்ய விபூதியில் பிரவணராய் இருக்கும் இருப்பில் – ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை முன் பாசுரத்தில் தன்னைக் குறித்து பரிகாச உக்திகளைப் பேசின வற்றுக்கு பிரதி நிந்தா ஸ்துதியாக கிளவித் தலைமகன் வார்த்தை இது
ஓ பெண்களே
புனத்தைக் காக்க அன்றோ உங்களை வைத்தது-உங்கள் புனத்தில் வராமல் அயல் வழியிலே செல்லும் எனது மனத்தை அபஹரித்து அதி மநோ ஹரமான கண் அழகை யுடைய கண்ணனை நித்தியமாக அனுபவிக்கும் நித்ய ஸூரிகள் திரள் திரளாக அவர்கள் அனுபவிக்கும் நிரதிசய ஆனந்த யுக்தராய் இருக்கும் நீங்கள் தயை இல்லாதாரைப் போலே மனத்தையும் அபஹரித்ததுக்கு மேலே வார்த்தையும் சொல்ல மாட்டாதே உள்ளீர்கள் இவையே உங்கள் ஸ்வ பாவங்கள் என்கிறார் —

—-=—

5-6-கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-ப்ரவேஸம்-

கீழ் திருவாய் மொழியிலே பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாக அன்றோ சென்றன;
இரண்டுமாய்க் கலந்து சென்றால் பிரீதியாலே தலை எடுக்கவும் ஆம் அன்றோ, அது செய்யாதே,
புண்ணியத்தின் குறைவால் பிரீதி இன்மை ஒன்றே தலை எடுத்தது;
ஆகையாலே, கீழ் உரு வெளிப்பாட்டாலே அவனை நினைத்துத் தரித்தது ஒரு நிலையும் போய்,
அலாபத்தால் வரும் துவட்சியே ஆயிற்று;
இப்படித் துவண்ட இவள், பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கப் பார்க்கிறாள் இத் திருவாய் மொழியில்.

ஒவ்வோர் அர்த்தத்தைப் பற்றி உபந்யாசங்கள் செய்ய இருப்பாரைப் போலே ஞான முத்திரையும் தானுமாய்க்
கீதோபநிஷத ஆசாரியனைப் போலே இருந்தாள்; இதனைக் கண்ட திருத் தாயார்,
இது ஏதேனும் மணிமந்திர ஒளஷதம் முதலியவைகளாலே வந்த விகாரமோ’ என்று ஐயங்கொண்டு,
அத் தன்மைகள் காணாமையாலே ‘அவை அல்ல’ என்று அறிந்தாள்.
இனி, ‘அவனைப் பிரிகையாலே வந்த ஆற்றாமையாலே அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று
தெளிய மாட்டுகின்றிலள் தன் கலக்கத்தாலே.
தனக்கும் தன தன்மை அறிவரியான் போலே ஸுய வைபவம் அறியார் அன்றோ –
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் -என்கிறாள் -7 பாசுரத்தில்
இவ் வளவிலே புகுந்து ‘இது தான் என்?’ என்று வினவப் புகுந்த உறவினவர்களைப் பார்த்துத் திருத் தாயார்,
அவனுடைய வார்த்தைகளைப் பேசுகையால் வந்த ஒற்றுமையாலும்,
ஞான முத்திரை பார்வை முதலியவைகள் இருந்தபடியாலும்,
சர்வேச்வரன் இவள் பக்கல் ஆவேசித்தானாக வேணும் என்று சொல்லுகிறாள்,
‘அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறிய மாட்டாமையாலே.

பிரிவாற்றாமை உண்டானால் அநுகரித்துத் தரிக்கக் கடவதன்றோ.
ஸ்ரீகிருஷ்ணனை அநுகரித்தார்களே அன்றோ திருவாய்ப்பாடியில் பெண்கள்;
“கிருஷ்ணே நிபத்த ஹ்ருதயா இதமூசு: பரஸ்பரம் க்ருஷ்ண: அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்யதாம்கதி:”
“அந்யா ப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதி: நிஸம்யதாம் துஷ்டகாளீய திஷ்ட அத்ர க்ருஷ்ண:
அஹம் இதி ச அபரா”-என்பன, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 13 : 26, 27.
“கிருஷ்ணோஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்ய தாம்கதி: –
நான் கிருஷ்ணன், நடைச் சக்ரவத்துப் பிடிக்க வேண்டும்படியாக இங்ஙனம் நடக்கப் புகுகின்றேன்;
கண் படைத்தார் முழுதும் கண்டு கொள்ளுங்கோள் என்றாளே அன்றோ.
துஷ்ட காளீய திஷ்ட அத்ர – ஒருத்தி காளியனாய்க் கிடக்க, ஒருத்தி கிருஷ்ணனாய் ஏறி ஆடினாளே அன்றோ;”
பிரதி கூலனான காளியன் ஆனால் ஆகாதோ கிருஷ்ணனாகத் தன்னை அநுகரிக்கிற
பெண்ணின் பொடி படப் பெறில் என்று இருந்தாள்;
கிருஷ்ணனானவள் தானும் இவளைக் ‘காளியன்’ என்றே நினைத்துக் கண்ணறத்
துகைத்தாளே அன்றோ அநுகாரத்தின் மெய் ப்பட்டாலே.

அவர்கள் ஓர் அவதாரத்திலே அநுபவிக்கையாலே அங்குள்ள செயல்களை அநுகரித்தார்கள்;
இவள் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவள் ஆகையாலே –
கூந்தல் மலர் மங்கைக்கும்” என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி-
உபய விபூதிகளை யுமுடையவனை அநுகரிக்கிறாள்
இங்கு, கால், நடை தாராமையாலே அங்குப் போலே சரீரத்தால் செய்யப்படுகின்ற அநுகாரம் அன்று,
வாசிக மாத்திரத்தாலே ஆயிற்று அநுகரிக்கிறது.

ஆக, ‘பிறப்பே பரதந்திர ஜன்மத்திலே பிறந்தவள், பிறப்பே ஸ்வ தந்திரனானவன் வார்த்தையும் சொல்லா நின்றாள்,
பெண் தன்மைக்கு எல்லையான இவள், புருஷோத்தமன் சொல்லும் வார்த்தைகளையும் சொல்லா நின்றாள்,
அறிவிற்கு விஷயம் வியவஸ்திதமாக இருக்க, சர்வஜ்ஞன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லா நின்றாள்’ –
அஹம் க்ருத்ஸ்நஸ் ஜகத: பிரபவ:” என்று கொண்டு,
இவள் செய்கிற படிகளைத் திருத்தாயார், வினவப் புகுந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

கீழ் திருவாய் மொழியிலே, உரு வெளிப்பாட்டாலே அநுபவித்தது விக்கிரஹ வைலக்ஷண்யத்தை அன்றோ,
அந்த விக்கரஹமே அன்றோ பற்றத் தகுந்தது; -ஸூ பாஸ் ரயம் — த்யே வஸ்து
இதில், அங்ஙனம் பற்றத் தகுந்த விக்கிரஹத்துக்கும் உள்ளான ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது;அதனை அன்றோ பாவித்தது.
பாவனையின் மிகுதியாலே, அவனாகப் பாவித்தால் பின்னை அவன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லலாய் இருக்குமே அன்றோ.
அப்படியே, விபூதி அத்தியாயத்தில் அவன் சொன்ன படிகளைப் பெரும்பாலும் அநுகரிக்கிறாள்.
அதர்வ சிரஸ்ஸிலே, சிவன் தன் வைபவத்தைப் பரக்க நின்று பேசினான், தனக்கு அடங்காத ஐஸ்வர்யமாயிருந்தது,
இவன் இப்படிப் பேசுகைக்கு அடி என்? என்று சுருதி தானே சங்கித்து, “ஸோந்தராத் அந்தரம் பிராவிசத்” என்று,
பரமாத்ம பிரவேசத்தாலே சொன்னான் என்னா நின்றதே அன்றோ. அந்தப் பாவம் வந்தால் அப்படியே சொல்லலாய் இருக்குமே.

தேகாத்மா அபிமானி -ஒன்றாக -சொல்லுவது போலே நான் -ஆத்மாவே பரமாத்வுக்கு தேகம் -இந்த அபிமானம் முற்றி ப்ரஹ்மமே நான்
பிரகாரி அவன் அளவும் செல்ல -பர்யவசனாய விதி -பாவனா பிரகர்ஷத்தாலே அவனாகவே பேசுகிறாள் –
“தத் பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந
க்ருதோபவேத்”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 6. 7:95.-காண்டித்ய கேசித்வஜர் சம்வாதம் –
“சர்வேச்வரனுடைய குணங்களைப் போன்ற குணங்களை அடைந்த ஒரு சேதனன் முக்தி தசையில்
பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்” என்றும்,
“தத் ஹிதத் பஸ்யந் ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர்ய: ச”-என்பது, பிரு. உபநிட. 3 : 4.
பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்த வாம தேவ ருஷியானவர், நான் மநுவாக ஆனேன், சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்” என்றும்,
“மத்தஸ் ஸர்வம் அஹம்ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே அஹமேவ அவ்யய; அநந்த: பரமாத்ம
ஆத்ம ஸம்ஸ்ரய:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1, 19 : 85.
“என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின, அநாதியான என்னிடத்திலேயே எல்லாம் லயம் அடைகின்றன” என்றும்,

கோ பவான் இதி அஹம் ஏக ருத்ரன் பிரதம மாசம் -நானே ஒருவன் பவிஷ்யாமி- இனியும் நானே இருப்பேன் –
இதி -அந்தரங்தாராந்த பிராவிசத்-உள்ளே நுழைந்து -நானே அனைத்தும் திசைகளும் -சாவித்ரி காயத்ரி அனைத்தும் நானே –
முழுவதும் புகுந்து இருக்கிறபடியால் சா தர்மம் -பேசலாமே -ப்ரஹ்மம் சொன்ன வார்த்தையை –
அன்னமயம் -பிராண மநோ விஞ்ஞான மய -அந்தரங்களுக்கும் அந்தரங்கமாய் -ஜீவனுக்கும் அந்தரமாய் -அதர்வசிகையிலும் உண்டே

“தத்பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந க்ருதோபவேத்”-
“தத் பாவ பாவம் ஆபந்ந–தத் ஸ்வ பாவம் உடையவன் ஆகையாலே —
ததா -மோஷ தசையில்
அசௌ பரமாத்மநா பவத்யபேதீ -பரமாத்மா உடன் அபேதம் -ஏகி பூதம் -பிரகாரத்வேன
அத்வைதி வாதம் இல்லை –தேவாதி பேதம் கர்மம் அடியாக வந்தது
ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞ்ஞானம் பலவாக தோன்றும் -பூர்வ பஷம் –
அவன் பாவம் இவன் அடைகிறான் என்று இவர்களால் -சொல்ல முடியாதே –
அவன் இவன் என்று சொன்னால் அத்வைதம் குலையுமே
தேவாதி வாசி கர்ம நிபந்தம்
பாவ சப்தம் -அவனை நினைக்க நினைக்க -நினைவே உகளித்து என்றுமாம் நிரந்தர உபாசகன் –
பாவ -அபஹத பாப்மாதி -அஷ்ட கல்யாண குணங்களில் சாம்யம் -பரம சாம்யா பத்தி அடைந்து
பாவ -சப்தம் -பாவனா பிரகர்ஷம் -நினைவே உகளித்து -நிரந்தர தியான உக்தம் –
பின்னத்வேன-அனுசந்தானம் உண்டாகுமே -நஞ்சீயர் அருளிச் செய்வாராம் –
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே –
ஸ்வரூபத்தால் இரண்டு உண்டே -சரீராத்மா வானம் நம் சித்தாந்தம் –

ஆக, ‘இப்படிப் பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறிய மாட்டாமல்,
சர்வேச்வரன் ஆவேசித்தாற் போலே இரா நின்றது’ என்று, திருத் தாயார் வினவ வந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

ஆறாம் திருவாய் மொழியிலே -கீழ் -ஆந்திர அனுபவ ப்ரீதி நடக்கச் செய்தி பாஹ்ய சம்ச்லேஷ அலாபத்தாலே அப்ரீதியும் கலந்து நடந்த இது
பாவநா ப்ரகரஷத்தாலே அலாப நிபந்தமான ஆர்த்தியே விஞ்சும்படி அதிசயித அபி நிவேசம் பிறந்து பக்வத்தாதாம்ய பிரதிபத்தி பிறக்கும்படி பாவனை முதிர-
ஸர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரனுடைய ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களும்
தத் ப்ரதிபாதகமான வித்யா ஸ்த்தலங்களும்
ஜகத்துக்கு பிரதான காரண பூதமான மஹா பூதங்களும்
சகல கிரியைகளும்
ஜகத் விஷய ரக்ஷண வியாபாரங்களும்
அவதார சேஷ்டிதங்களும்
ஜகத்தில் யுண்டான ஸமஸ்த பந்து வர்க்கமும்
ப்ரஹ்மாதிகளான தேவ ரிஷி வர்க்கமும்
புண்ய பாப ரூப கர்மங்களும்
ஸ்வர்க்க நரகாதி ரூப பலங்களும்
நான் இட்ட வழக்கு என்று அநுகார ரூப உக்தியைப் பண்ணும்படி இவருக்கு அநந்ய பாவனை பிறந்தபடி கண்ட பரிவரானவர்கள்
ஜிஜ்ஞாஸூ க்களான பார்ஸ்வஸ்தர்க்கு இவர் படியை அறிவித்த பிரகாரத்தை
பிரிவாற்றாமையால் வந்த பாவனையால் ஸ்ரீ கிருஷ்ண அநு காரம் பண்ணின கோபிமாரைப் போலே
நாயகனான சர்வேஸ்வரனுடைய பாசுரங்களை அநு கரிக்கிற நாயகியுடைய ப்ரவ்ருத்தி விசேஷங்களை
நல் தாயானவள் வினவினார்க்கு யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே
.–5-6-1-

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-சித்து அசித்துக்களோடு கூடிய பொருளே காரணமுமாய் இருக்கையாலே, புறம்பு ஒரு காரணம் இல்லாமையாலே,-தானே முதற் காரணமும் நிமித்த காரணமும் துணைக் காரணமுமாய் அன்றோ இருப்பது.-இப்படி மூன்று வித காரணங்களும் தானேயாய் இதனை உண்டாக்கினேன் நான் என்னா நின்றாள்.-‘யானே’ என்ற பிரிநிலை ஏகாரத்தால், வேறு காரணம் இல்லை என்பதனைத் தெரிவித்தபடி.-கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் –இவற்றை உண்டாக்கி, இவை பொருளாதல் பெயரடைதல் முதலியவைகளுக்காக அநுப் பிரவேசித்து, இவற்றைச் சொல்லும் சொற்கள் தன்னளவும் வரும்படி இவையாகி நிற்கிறேன் நான் என்னா நின்றாள். கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்–மஹா பலி போல்வார், பருந்து இறாஞ்சினாற் போன்று இதனை அபஹரித்து ‘என்னது’ என்னும் அன்று, இதனை எல்லை நடந்து மீட்டுக் கொண்டேன் நான் என்னா நின்றாள்-இவற்றைப் படைத்து, ‘மேல் உள்ளன தாமே நடக்கின்றன’ என்று விடுகை அன்றிக்கே, இவற்றை-அடி ஒற்றிக்கொண்டு சென்று காத்தலைத் தெரிவித்தபடி.

கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ –எல்லாப் பொருள்களையும் படைத்தவனாய் -எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் -எல்லாருக்கும் வந்த ஆபத்துகளுக்குத் துணைவனான- சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அறிகின்றிலேன்.
‘கொலோ’ என்பது, ஐயத்தின் கண் வந்தது அன்று, காணுங்கோள் என்று அறுதி யிட்டுச் சொல்லுகிற வார்த்தை.-கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் –-“வைகுந்தத்து அமரர்” என்னுமாறு போன்று, நித்திய சம்சாரிகளாய், பகவத் விஷயம் புதியது உண்டறியாதே போருகிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்?-கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே--நித்திய ஸூரிகள் சொல்லக் கூடிய வார்த்தைகளை என் மகள் சம்சாரத்திலே இருந்து சொல்லுகிற இதற்கு நான் எதனைச் சொல்லுவது?
இவை தாம், நித்திய ஸூரிகள் சொல்லக்கூடிய வார்த்தைகள் ஆதலின், ‘ஞாலத்து என்மகள் கற்கின்றவே’ என்கிறாள்.-

————–

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் –அல்ப காலத்துக்குள்ளே -64 நாள்கள் -சாந்தீபனியோடே நான் கற்ற பரப்புக்கு ஓர் எல்லை இல்லை என்னா நின்றாள்-அன்றிக்கே-ஆனந்த குணத்தைக் கூற முடியாமல் அவனிடமிருந்து வேத வாக்குக்கள் மீண்டன” என்கிற சுருதிக்கு நிலம் அன்றிக்கே இருக்கிறேன் நான் என்னா நின்றாள் என்னுதல். என்றது,
கற்கும் கல்வியினுடைய எல்லைக்குள்ளே நிற்கிறேன் அல்லேன் நான் என்கிறாள் என்றபடி. அன்றிக்கே,-“வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை” என்கிறபடியே,
வேதாந்தங்களாலே அறியப்படுமவன் நான் என்கிறாள் என்னுதல்.-வேதாந்த – இல்லமாக உடையவன் –-இலனே-இல்லமாக உடையவன்-

கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் –-அவற்றால் அறியப்படாமல் இருக்கிற அளவேயோ,-மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை நாலிரு மூர்த்தி தன்னை நால்வேதக் கடலமுதை-மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளின் கற்கும் கல்வி ஆகிறவன் இவனே–“நீரே கல்வி”–“த்வமேவ மாதாச பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச குரு: த்வமேவ த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ”-

கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்- அந்தக் கல்விகளை அவ்வக்காலங்களில் உண்டாக்குவேனும் நான் என்னா நின்றாள்.-கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் –
அவற்றின் சந்தேகங்களைத் தீர்த்துத் தாத்பர்ய நிர்ணயம் செய்வேனும் நான்-தீர்ப்பேனும்-கற்கின்றவர்களும் கற்பிக்கின்றவர்களும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்-தீர்க்கையாவது, அவற்றினுடைய எல்லை காண்கை அன்றோ.-ஆச்சார்ய சிஷ்ய பாவம் -தீர்ப்பது -அவற்றின் எல்லை -நானே சிஷ்யன் நானே ஆச்சார்யாராய் -நர நாரணனாய்
சிஷ்ய ஆச்சாரியார் வழக்கத்தை தீர்த்து வைப்பவனும் நானே

கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் – அக் கல்வியினுடைய சாரமான பிரயோஜனமும் நான் என்னா நின்றாள்.-பயன் -பிரயோஜனம் நானே –-அந்த வித்யா சாரமான மூல மந்த்ராதிகளும் நான் இட்ட வழக்கு என்னும் -பன்னீராயிரப்படி நிர்வாகம்

கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக் கொலோ – எல்லாக் கல்விகளாலும் அறியப்படுகின்ற சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?-கற்கும் கல்வி உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் –இப்போது கற்று அறிய வேண்டும்படி, பகவத் விஷயத்தில் ஒவ்வோக் குழியிடாதே இருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது?-பாலர் எழுதும் குறி போலே -பகவத் விஷயத்தில் நீங்கள் ஆரம்ப பாடம் படிக்கிறீர்கள் என்றவாறு –-கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே –-சொன்ன வார்த்தையைச் சொல்லுமித்தனை போக்கி, தானாக ஒரு வார்த்தை சொல்ல மாட்டாத அளவாயிருக்கிற இவள், இவ் விஷயத்திலே இறங்குகிற எல்லையை, நான் எதனைச் சொல்லுவது?

———

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என்காரிகை செய்கின்றவே
.–5-6-3-

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்--காணப் புக்கால் கண்டதாய்த் தலைக் கட்ட முடியாத படியான பரப்பை யுடைத்தான பூமி எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்-இத்தை-ச் சொன்னது-காணப் படாத நிலம் எல்லாம் நானே-உப லஷணம் –-தன் மாத்திரை கந்தம்-சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டும்படி இருக்குமது -.அளவிட்டு அறிய முடியாத விஷயத்தை உட் புக்குப் பேசுகின்ற என் பெண் பிள்ளை செய்கிற இதனை நான் சொல்லுவது என்?-கரையிலே நின்றாரோடு உட்ப்புக்காரோடு வாசி இல்லை-

————–

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.
–5-6-4-

முக்காலத்திலும் உண்டான காரியங்களின் கூட்டம் எல்லாம் நான் இட்ட வழக்கு -நானே பஞ்ச மஹா யஜ்ஞம் முதலிய எல்லா நித்திய கர்மங்களின் பயனைப் புசிப்பவனும்-கிரியைகளின் பலன்களை அநுபவிக்கின்றவர்களும் நான் இட்ட வழக்கு -செய்கையாகிற கிரியையும், பலத்தை அநுபவிக்கின்றவனும் நான் இட்ட வழக்கு -கிரியைகளின் கர்த்தாக்களை இடுவித்து அவற்றைச் செய்விக்கின்றவனும் யானே -அவர்கள் இவற்றைக் கொண்டு என்னை அடையும்படி செய்வேனும் யானே-செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ – அஸி தேஷிணா -கரிய கண்ணை யுடையவளான தன்மை நீங்கி, புண்டரீகாக்ஷன் படியாய் விட்டது. என்றது,-மையக் கண்ணாளான தன்மை போய், செய்ய கோலத் தடங்கண்ணன் படியாய் விட்டது என்றபடி.-கரும் தடம் கண்ணி -தாயார் -திரு நாமம் -திருத் தொலை வில்லி மங்கலம் –-ஆழ்வார் தன் பாவனை மாறி பெண்ணாகி அதுவும் மாறி புருஷோத்தமனாது வாசா மகோசரம் அன்றோ –செய்ய கனி வாய் இளமான் திறத்தே-
அநுகாரத்தாலே புணர்ச்சி சமயத்திற் போலே இருக்கிற இவள், உதடு செவ்வி பெற்று வரும்படி வேறுபட்டவளாய், மிக இளையளாய் இருக்கிறபடி நான் எதனைச் சொல்லுவது.
பிரிவில் வெளுத்திருக்கை தக்கதாக இருக்க, இவள் உதடு செவ்வி பெற்று வருகின்றதே அன்றோ அநுகாரத்தால் வந்த தரிப்பாலே.-சிவந்த கனி போலே இருக்கிற உதட்டினை யுடையளாய், இளைய மான் போலே பேதையான இவள் இடையாட்டத்தே.-இவளுடைய அதரம் தன்நிறம் பெற்று இருக்கிற படியை -அவிக்ருதையாய் இருக்கிற நான் எத்தைச் சொல்லுவேன் –

————

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே
.–5-6-5-

ஜகத் ரக்ஷணாதி வியாபாரம் எல்லாம் செய்கிறேன் நானே என்னும் என்கிறாள்-திறம்பாத கடல் வண்ணன் -தன் சாசனத்தை ஒருவராலும் தப்ப ஒண்ணாத படியான சர்வேஸ்வரன்-திறம்பாது என் திருமகள் எய்தின – திருமகளை ஒத்த என் மகள், ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாதபடி அடைந்தவற்றை நான் எதனைச் சொல்லுவது?-ஆழங்காலிலே இழிந்தார் படியைக் கரையிலே நின்றாராலே சொல்லப் போமோ.

—————-

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே
.–5-6-6-

இன ஆன் கன்று-வான் பெரிய கன்று என்றுமாம்-பருவம் ஒத்து -ஸ்ரீ கிருஷ்ண திருக்கர ஸ்பர்ஸத்தால் பெரியனவாயின-முன்பு பிரஹ்மசர்யம் அநுஷ்டித்துப் பின்பு இல்லற தர்மம் அநுஷ்டிப்பாரைப் போலே, இளமைப் பருவத்தில் கன்றுகளை மேய்த்து, பருவம் நிரம்பின பின்பு பசுக்களை மேய்த்தேனும் நான் என்னும்.–இவள் நிலை எவ்வளவாய்த் தலைக் கட்டுகிறது என்று, வேல் ஒழுங்கு போலே கூர்க்கப் பார்த்துக் கொண்டிருக்கிற
உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்?-தன் கண்களுக்கு இலக்கானார் படுமதனைத் தான் படுகிறபடியைச் சொல்லப் போமோ?-

———-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.
–5-6-7-

எம்பெருமான் ஆஸ்ரிதர் விஷயத்தில் இருக்கும் இருப்பை தன் படியாக பேசா நின்றாள் -ஜகத்தில் பந்துக்கள் அளவில் அவன் படி எல்லாம் தன் படியாகச் சொல்லா நின்றாள்-பன்னீராயிரப்படி

உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்--அவர்களுக்கு வேறு பிரயோஜனங்களிலே ருசி உண்டானால், அந்தப் பிரயோஜனங்களைக் கொடுத்து என் பக்கல் நின்றும் அகற்றுவேனும் யானே என்னும்.
அன்றிக்கே,-அவர்களை அழகு முதலியவைகளாலே அழிப்பேனும் யானே என்னா நின்றாள் என்று ஸ்ரீ முதலி ஆண்டான் பணித்தானாக ஸ்ரீ இளைய பெருமாள் பணிப்பர்.
அநந்ய பிரயோஜனர்களை -பிரபன்னர்களுக்கு அழகைக் காட்டி துடிக்க வைக்கிறேன் -ஏழையர் ஆவி உண்ணும் -இணைக் கூற்றங்கள் –

உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்-அநந்ய பிரயோஜனர் அனைவருக்கும் அனந்யராக அனுபவிப்பான் –-ஸ்ரீ இளைய பெருமாள் -பிராதா பிதா -சொன்னான் -பெருமாளும் அவரையே பிதா சர்வம் என்றாரே –என்னையே எல்லா உறவு முறையுமாகப் பற்றினவர்கட்கு, நானும் அவர்களையே எல்லா உறவு முறையுமாக இருப்பேன்-

என்னுடைப் பேதை உற்று உரைக்கின்றவே--பருவம் நிரம்பாத என் பெண், மறுபாடுருவத் தைத்துச் சொல்லுகிறவற்றை, கரையிலே நிற்கிற நான் எதனைச் சொல்லுவது?
திருத் தாயாரான நிலையும் இவர்க்கே உள்ளது ஒன்றாகில் இங்குச் சொல்ல ஒண்ணாதபடி கலங்குகையாவது என்? என்னில், “தனக்கும் தன் தன்மை அறிவரியான்” என்கிறபடியே, ஸ்ரீ சர்வேச்வரனை, தன் படி தானும் அறியான் என்று சொல்லுமாறு போலே, தம் நிலை தமக்குங் கூடப் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறது. (பராங்குச நாயகிக்கே -மகளுக்கே தெரியாதே -)

—————

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே
.–5-6-8-

பதினோர் உருத்திரர்களுக்குள்ளே சங்கரன் நான் ஆகின்றேன்” என்கிறபடியே, ஸ்ரீ சர்வேச்வரனுக்குப் பிரகாரமாகச் சொல்லப்பட்டவனாதலின் ‘உரைக்கின்ற’ என்கிறார் -“வேதங்களில் சாமவேதம் நானாக இருக்கிறேன், தேவர்களில் இந்திரன் நானாக இருக்கிறேன்” என்கிறபடியே, ஸ்ரீ பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவன் ஆதலின், ‘உரைக்கின்ற’ என்கிறாள் -சிலவற்றைச் சொல்லுமித்தனையேயாய், ‘சொல்லலாம், சொல்ல ஒண்ணாது’ என்று பாராதே,-சொல்லு சொல்லு என்று வருத்துகின்ற உலகத்தீரான உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது?-

கோமளம்’ என்கையாலே, சௌகுமார்யத்தைச் சொல்லிற்று.
‘கொடி’ என்கையாலே,–சார்ந்தே இருக்கும் தன்மையை –
“பதி ஸம்யோக ஸு லபம் வய: த்ருஷ்டவா ச மே பிதா” என்பது, ஸ்ரீராமா.அயோத். 118 : 36. அநசூயைப் பார்த்து ஸ்ரீ பிராட்டி கூறியது.-“கணவனை அடைதற்குரிய வயதினை யுடையவள்” என்கிறபடியே,-ஒரு கொள் கொம்போடே சேராத போது தறைப்படும் பருவம் என்பதனைச் சொல்லிற்று.-

———–

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே
.–5-6-9-

என்னைக் கர்மங்கள் ஒட்டுவன இல்லை, கர்ம பலத்தில் எனக்கு ஆசை இல்லை” என்றும் சொல்லப்படுகிற அவன் படிகளைத் தான் சொல்லா நின்றாள். “நாட்டிற் பிறந்து படாதன பட்டு” என்கிற இடம், இச்சையால் வருவனவே அன்றோ.-கொடிய வினை செய்வேனும் யானே என்னும்–செய்வேன்’ என்றது அடியார்களுடைய பகைவர்களைப் பாவங்களிலே மூட்டுகையைக் குறித்தபடி.-என்னைப் பகைக்கின்ற அத்தகையரும் கொடுந்தன்மையரும் இழிந்தவருமான பாவிகளை எப்பொழுதும் பிறப்பு இறப்பு பரம்பரைகளில் அவற்றிலும் அசுரப் பிறவிகளில் தள்ளுகிறேன்

கொடியான் இலங்கை செற்றேனே என்னும்–சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமை யுடையவனாதலின் ‘-பெரிய திருமொழி, 5. 7 : 7.-கொடியான்’ என்கிறது.
இவ்விடத்தில் ‘கொடியான்’ என்றது, திருத் தாயார் வார்த்தை காண்’ என்று அருளிச் செய்வர் ஸ்ரீ நஞ்சீயர்,-எதிரிகளை இவன் ஒன்றாக மதித்திருந்தானாகாமைக்கு; அவனாலே ஆவேசிக்கப்பட்டவள் அன்றோ இவள்.-கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ -அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான ஸ்ரீ பெரிய திருவடியை வாஹனமாகவுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?-கொடியேன் கொடி என்மகள் கோலங்களே – இவள் அநுகரித்துச் சொல்லுகிற பாசுரங்களைக் கேட்க வேண்டும் படியான பாவத்தைச் செய்த என்னுடைய மகள் செய்கிற காணத்தக்க இனியவான செயல்களை. அன்றிக்கே, ஒருப்பாடுகளை என்னுதல்.

—————

கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.
–5-6-10-

கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் – சுகரூபமான சுவர்க்கமும் யானே என்னும். நிலை நில்லாமையாலே, முகப்பில் காட்சிக்கினியதாந் தன்மையைப் பற்ற,‘கோலம் கொள்’ என்கிறது.-‘நரகத்தோடு ஒத்திருக்கச் செய்தே, வாசலிலே கழஞ்சு செம்மண் பூசி இருக்குமாறு போலே காண்’ என்று அருளிச் செய்வர் நஞ்சீயர்.

கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்-கடல் ஞாலம் செய்தேன்” என்று, படைப்புத் தொடங்கி, “மோக்கமும் யானே”என்று மோக்ஷம் முடிவாகத் தன்னுடைய காரியம் என்கிறாள்.-கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்--நாடகம் கட்டி ஆடுவாரைப் போலே தேவனாகவும், மனிதனாகவும், இப்படிப் பல வகையான சரீரங்களை-மேற்கொள்ளுகிற ஆத்மாக்களும் யானே என்னும்.
அன்றிக்கே,-கோலம் கொள் உயிர்கள் – ஞான ஆனந்த லக்ஷணமான உயிர்கள் என்னுதல்.

கோலம் கொள் தனி முதல் யானே என்னும் –-இவற்றிற்கெல்லாம் காரணமான மூலப்பகுதியும் யானே என்னும்.
அன்றிக்கே,-சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல்.
அன்றிக்கே,-விசித்திர காரிய காரிணியான மூலப் பகுதியையும் சங்கல்ப ரூப ஞானத்தையும் பிரகாரமாக வுடையனாய்,-எல்லா நற்குணங்களையுமுடையனான சர்வேச்வரன் என்னுதல்.

கோலம் கொள் முகில் வண்ணன் –-திருமேனிக்கு மேகத்தை ஒப்பாகச் சொல்லும்போது அலங்கரித்துச் சொல்லவேணுமாதலின் ‘கோலம் கொள் முகில்’ என்கிறது.
மின்னி முழங்கி வில்லிட்டு வந்து தோற்றின போதாயிற்று ஒப்பாகச் சொல்லலாவது.

மயிரும் உகிரும் பேணி, உடம்பு பேணி வந்து அலங்கரித்துக்கொண்டு நிற்கிற- ‘கேட்க வேணும்’ என்று ஒருப்பட்டிருக்கிற உங்களுக்கு -இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுகிற பாட்டைத் தான் பட்டு அநுகரித்துச் சொல்லுகிறவற்றை நான் எதனைச் சொல்லுவது –

————-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே
.–5-6-11-

சர்வேச்வரனுடைய ஐச்வரியத்துக்கும் காரணமாயிருக்கிற பெரிய பிராட்டியார். -திருவுக்கும் திருவாகிய செல்வா –-சர்வேச்வரனுடைய செல்வமாயிருக்கிற பெரிய பிராட்டியார்-அந்தச் செல்வத்திற்கு விளை பூமியாயிருக்கிற ஸ்ரீ பூமிப்பிராட்டி.-அதனுடைய பல உருவமாயிருக்கும் நப்பின்னைப் பிராட்டி.-இவர்களுக்குப் பதியாயுள்ளவனை. இதனால், ஓர் அவதார மாத்திரமன்றிக்கே, உபய விபூதிநாதனான பூர்ண விஷயத்திலே
அநுகரிக்கிறார்

அநுகாரம் அடிமையானபடி எங்ஙனே? என்னில், அப்படியாகத் தட்டு என்? கொள்ளுகிறவன் கருத்தாலே.-அவன் உகப்பே அன்றோ அடிமையாலும் புருஷார்த்தம்.-இளைய புன் கவிதை — எம்பிராற்கு இனிய வாறே –-‘நம்முடைய பிரிவில் அநுகரித்துத் தரிக்க வேண்டும்படி சம்சாரத்திலே இப்படி உண்டாவதே!’ என்று திருவுள்ளம் போர உகக்கும்,-அது அடிமையாய்த் தலைக் கட்டுமித்தனை.

உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய் –இந்த உலகத்தில் எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய்.–நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே.-என்கிறபடியே, உலகத்திலே முகந்தெழு பானையான எல்லை யில்லாத செல்வத்தை யுடையராய்க் கொண்டு –திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே – ஸ்ரீமத் புத்திரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள். திருமால் அடியாரை ஆராதிக்கையாவது, இவர் அநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியமுள்ளவராக ஆனாற்போலே, இது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை. என்றது, இவர் அநுகரித்த இப் பாசுரங்களைச் சொல்லுகை.
“தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்”- 9. 4 : 9. என்னக் கடவதன்றோ.-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -22-கொம்பு ஆர் தழை கை ,சிறு நாண் எறிவிலம்-நல் குரவும் செல்வமும் -6-3–

February 16, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தோழி தலை மகள் புனத்தில் இருக்க-கொம்பார் தழை கொண்டு தலைமகன் வர
உன்னைப் பிரிந்து எவ்வாறு வாடி உள்ளேன் என்பதைக் காட்டவே கையில் தழையைக் கொண்டு வந்துள்ளார்-வில் தழும்பு கூட இல்லாமல் -சுவடே இல்லாமல் -வேட்டையாட வந்தது போல்-யானை வந்ததோ என்று வினவும் ஐயர்- பூஜ்யர்-கருட வாகனத்தில் வந்து மனம் கொள்ளை கொள்ளும்=லீலா விபூதி -பார் அகத்தில் -இவ்வாறு காண வில்லையே-அவரது உக்திக்கும் அனுஷ்டானத்துக்கும் சேராதவை-நீர் கேள்விக்கு பதில் சொல்லவோ இங்கே வைத்தீர்-திவ்ய தேசத்தில் இங்கே வைத்தது இவர்களைத் திருத்த அன்றோ-சம்பந்தம் இல்லாதா கேள்விகள் கேட்டு-தோழி கேலி பேசுவது-தலைவனைப் பார்த்து நகையாடும் துறை-நல்குரவும் -சேராச் சேர்க்கை -வெல்லும் வ்ருத்த விபூதிமான் -பதிகம் இதன் விரிவு

உங்களை புனம் காக்க இங்கன்   கொண்டு வைத்த தார்மிகரோ என்கிறாள்-அபிமத விஷயம் இருந்த இடத்தே -தண்ணீர் -என்று கொண்டு புகுவாரை போலே-கையிலே தழையை முறித்து பிடித்து இவர்கள் இருந்த இடத்தே சென்று ,- இங்கனே ஓர் யானை போந்ததோ என்று-கேட்க-அவர்கள் நாங்கள் புனம் காக்க இருக்கிறோமா உமக்கு மறு மாற்றம் சொல்ல இருக்கிறோமா என் சொன்னீர் ஆனீர் என்கிறார்கள்–தழை கொண்டு போகிறது என் என்னில் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் வாடுமா போலே காண்-உன்னை பிரிந்து-நான் பட்டது என்று-தன் தசையை அவர்களுக்கு அறிவித்து கொண்டு சொல்லுகிறபடி –இவன் உடைய கர ஸ்பர்சத்தாலே ,இது-சதசாகமாக பணைத்த படியை கண்டு ,
உம்முடைய ஆற்றாமை அறிவிக்க வந்தீர் ஆகில் ,-கொம்பிலே நிற்கச் செய்தே காட்டா விட்டது என் என்கிறாள் —பிறந்த இடத்தை விட்டு உம்முடைய பாடு வந்தாருக்கும் உண்டோ வாட்டம் – உம்மை பிரிந்து பிறந்த இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் என்கிறாள் –திரு மார்பிலே தானே திருவுக்கு வாழ்ச்சி-நின் பிரிவிலும் சுடுமோ காடு-விட்டுப் பிரிந்தால் ஸ்வர்க்கமும் நரகம் ஆகுமே உன் நாமங்களை சொன்னாலே நரகமே ஸ்வர்க்கமாகுமே )

கயலோ நுமது கண்கள் களிறு வினவி நின்றார் –15–அங்கும் அசங்கதமான பாஷணம் கேள்விகள்
களிறு வினவ வந்த பாகவதர் ஆகிய நாயகன் -கலந்து பிரிந்த சமநந்தரம் பல பல ஊழிகள் -16 -என்று -இரவு நெடுகி நோவு பட்ட நாயகியை சர்வேஸ்வரன் -நாயகன் – கலந்து-அந்த இரவிலே பிரிந்ததால் -கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் -16 –-போன வழியில் தேர் காலைக் கண்டு தரிக்கும் தசையில் அன்பார் தேர் வழி தூரல் -இருள் விரிந்தால் அன்ன -17-பாசுரத்தில் வரவைக் குறித்த வர்ஷா காலம் வரவே -18-காலத்தை மயக்கி தோழி -புயல் காலம் கொலோ -அத்தை அழிக்கும் படி அடுத்த மழை வர -19–தோழியும் நாயகியும் மோகிக்க-மாரி கை ஏறி அறை இடும் காலத்தில் -19- திருத் தாயார் சேரி பழி
வேலன் நோய் பரிகரிக்கப் புக -20-ஸஹி வெறி விலக்குதல்-அத்தைத் -தோழி விலக்கி -21-உமக்காக வந்தது அறிவிக்கை –சூட்டு நன் மாலைகள் -கிருஷ்ண அவதாரம்-உம்மை வைத்து -எனக்குப் பிடித்த புனல் -திவ்ய தேசம் -காவல் காக்க அன்றோ உம்மை வைத்தேன்-உமக்குப் பிடித்தவற்றை உண்ண வந்தேன்-கிருஷ்ண அவதாரம் ஈடுபட்ட ஆழ்வார் ஆழ்வாரை வைக்க தெளிவு பிறந்த ஆழ்வார்
பிராணிகளாக பயிர்களை ரக்ஷிக்க வைத்தது – சொல்ல ஈடுபட்ட ஆழ்வார் பாசுரத்தை தலை மகள் பாசுரம் -சங்கதி

தோழி நகையாடல் என்றும் உண்டே-தலைமகள்-தென்னானை –இத்யாதி –பாகவதர்கள் பிரபாவம் சொல்ல வந்தேனே ஒழிய–ஆனையை வினவ வந்த நாயகன் -கிளவித் தலைமகன் புனம் காக்க வைத்த புருஷோத்தமனைக் கொண்டாடி-ஆழ்வார் இடம் அவனைக் கொண்டாடச் சொல்லிக் கொண்டு ஆழ்வாரைப் பிரிந்தால் வாடுவோம் என்று சொல்லிக் கொண்டே-உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை பேசும் அசங்கத பாஷணம் -ஆழ்வாரைக் கொண்டாடி அவனைப் பற்றிக் கேட்க்கும் இரு கரையர் போல் கேட்க-அவதாரிகை அருளிச் செய்கிறார் –

காந்தர்வ விவாஹ முறையினால் நாயகியைப் புணர்ந்து பிரிந்த நாயகன் பின்பு தோழியின் மூலமாக நாயகியைச் சேர விரும்பி அத்தோழியைத் தனியே கண்டு தான் கருத்தை வெளிப்படையாகக் கூறி வேண்டிக் கொள்ளாமல் குறிப்பாக கூறக் கருதி புனம் காக்கும் இடத்தில்-தழையும் கண்ணியுமாக கையுறைகளை ஏந்திக் கொண்டு சென்று அவர்களை நோக்கி வேட்டை யாடுபவன் போல் எனது அம்போடு ஒரு மத யானை இவ்விடத்து வரக் கண்டது உண்டோ என்று வினவ அவனைப் பரிஹஸித்து தோழி நாயகியிடம் கூறும் பாசுரம்

இப்படி ஈஸ்வரனுக்கு அபிமத விஷயராய் இருக்கிற இவர் பக்கலிலே-நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த வித்வத் அபிமானி ஜனங்களைக் குறித்து உங்கள் படிகள் பரஸ்பர அசங்கதங்களாய் இருந்தன வென்று பார்ஸ்வத்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
மதி யுடன்படுவதற்குக் களிறு வினவி வந்து குறையுற்ற தலைமகனை தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –அவதாரிகை
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ண விஷயத்திலே ஈடு பட்டு இருக்கிற படியைக் கண்ட பாகவதர்கள் தடுமாறுகிற படியைச் சொல்லுகிறது-கலந்து பிரிந்த தலைமகள் தோழிமாருடனே புனம் நோக்கி இருந்த இடத்தே
கையிலே தழையைக் கொண்டு சென்று தன் ஆற்றாமையை ஆவிஷ்கரிக்க அவனை நிஷேதிப்பாரைப் போலே இடம் கொடுத்து வார்த்தை சொல்லுகிறாள் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி அவதாரிகை
இப்படி கண்ணனுக்கு அபிமத விஷயமாய் இருக்கிற இவரில் நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த ஆபாஸ வித்வஜ் ஜனங்களைக் குறித்து உங்கள் படி பரஸ்பர அசங்க தங்களாய் இருந்தன என்று ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை உடன் படுத்தக் களிறு வினவ வந்து குறையுற்ற தலைவனைத் தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவது ஐயர் ,புள் ளூரும் கள்வர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே
–22-தோழி தலைவனைக் கேலி செய்தல் –

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் 
—53-கீழே அல்லோம் -என்று இருந்த தம்மை ஆவோம் -என்னப் பண்ணினவனுடைய அகடிகதடநா சாமர்த்தியத்தை அனுசந்தித்து விஸ்மிதரான இவருக்கு-இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மிதர் ஆகிறது-நாட்டில் தன்னில் தான் சேராத பதார்த்தங்கள் எல்லாவற்றையும் நம்முடனே சேர்த்துக் கொண்டு-ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படி பாரீர்-என்று அவன் தன் வ்ருத்த விபூதி யோகத்தைக் காட்ட அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற -நல் குரவும் செல்வமும் – அர்த்தத்தை நல்ல வலத்தால் இத்யாதியால் அருளிச் செய்கிறார் –சர்வ ஸூலபமான திராவிட பாஷைக்கு தேசிகரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய்மொழியை அப்யசிக்க வல்லார் –அவனுடைய விபூதியை-ததீயத் ஆகாரண அனுபவிக்கிற நித்ய ஸூரிகளுக்கு அவ் வநுபவ விஷயமான இத் திருவாய்மொழியை இவர்கள் இங்கேயே இருந்து அனுசந்திக்கையாலே அவர்களுக்கு அனுரூபமான ஆதரணீயர் ஆவார் –

கொம்பார் தழைக் கை —தழையைக் காட்டி ஜெயிக்கும் இடத்தே ,-வில்லைக் காட்டி ஜெயிக்க ஒண்ணாது இறே-சிறு நாண் எறிவிலம்–கையிலே வில் பிடித்த தழும்பு கண்டிலம்-நாண் என்ற வில்லுக்கு தர்மம்–தர்மம் ஆகிறது-தர்மியை ஒழிந்து அன்று இறே இருப்பது-உம்முடைய கையிலே வில் கண்டிலம் என்கிறாள்–இது இறே வில் என்று தழையை காட்டுகிறான்-வேட்டை கொண்டாட்டு–-வில் இதுவே இருந்தது —நீர் புக்க இடம் எங்கும் கொண்டாடுகிறது வேட்டையாய் இருந்தது–இது ஒரு சேர்த்தி இருந்த படியே என்கிறார்கள் –வில் இதுவாகில் அம்பு எங்குற்று என்ன — இலக்கான ஆனையில் பட்டு ,உள்ளே குளித்தது (பிரவேசித்தது)என்கிறான்-அம்பார் களிறு வினவுவது ஐயர்
ஐயர் சொல் சேர்த்தியான வார்த்தைகளை சொல்லா நின்றீர்-பெரு முதலியாய் இருந்தீரே என்கிறார்கள்-புள் ஊரும் கள்வர்-சர்வாதிகர்–தம் பாரகத்  தென்று மாடாதன —இவருடைய லீலா விபூதிக்குளே நடை ஆடாதனவாய் இருந்தது ..நித்ய விபூதியில் உண்டோ ?-இல்லையோ ? என்று அறிய மாட்டுகிறிலோம்-தம்மில் கூடாதன —இரண்டு இடத்திலும் இல்லை ஆகிலும் , இன்று தொடங்கி இத்தை வார்த்தையாகக் கொண்டாலோ என்னில்- இருவர் கூட நிரூபத்தால் சேருகிறதில்லை–
தமக்கும் தம்முடைய வார்த்தைக்கும் ஒரு சேர்த்தி இல்லை–சதாகாரையான ப்ரநீதியும்-அசாதகாரையான பிரநீதியும் ஒழிய —சதசத் விலஷணம் – என்ற தனக்கு என்ற ஒன்றை-மாயாவதி சொல்லுமா போலே லீலா விபூதியிலும் , நித்ய விபூதி யிலும்  அன்றியே உமக்கு என்ன ஓன்று எங்கனே சம்பாதித்த படி-என்கிறார்கள்–வம்பார் வினா சொல்லவோ எம்மை வைத்தது — புதுமை மிக்கு இருந்துள்ள பிரசன்னத்துக்கு ,பிரதி வசனம் பண்ணவோ ?–எங்களை வைத்தது .. புதுமை மிக்கு இருந்துள்ள வார்த்தைக்கு நீர் பிரசனம் பண்ணவோ ?எங்களை வைத்தது என்னவுமாம்–இவ் வான் புனத்தே —இதுக்கு அவசரம் உண்டோ ?-இப் பரம்பு நோக்கவே போராதோ பணி என்கிறாள்-
(திவ்ய தேசங்கள் கைங்கர்யத்தில் போது போக்கலாய் உள்ளதே )-

கையிலே -கொம்பார் தழை-கொண்டாடுகிறது- வேட்டை-ஐயர் வினவுவது -அம்பார் களிறு
புள்ளூரும் கள்வர் என்றும் ஆடாதன தம்மில் கூடாதன ஆகையால் இந்த வான் புனத்தே எம்மை வைத்தது வம்பார் வினாச் சொல்லவோ என்று கேட்க்கிறார்

இவர் மெய்யே வேட்டைக்கு வந்தவராகில் கையில் வில் இராதோ – நாணியைக் கையாலே தெறித்து ஒலி எழுப்ப மாட்டாரோ -அஃது ஒன்றுமே இல்லையே கையில் தழைக்கும் வேட்டைக்கும் என்ன சம்பந்தம் – வம்பு வினாக்களுக்கு விடை கூறவோ எங்களை புனம் காக்க வைத்தது-குறிஞ்சி நிலத்து நாயகி –தழையையும் கண்ணியையும் கை உறையாகக் கொண்டு கொடுத்து காணுதல் குல முறை
தழை போலே தானும் பிரிவால் வாடி இருப்பதைக் காட்டுமே – தோழி இத்தன்மையை கருத்தூன்றி இவர் கைப் பட்டதால் தழை வாடி உள்ளதே ஒழிய உமக்கு இத்தன்மை இல்லையே என்கிறார் –இத்தழை இவர் கை பட்டதனால் தளிர்ச்சி பெற்றது – நாயகிக்கு இத்தன்மை நிகழ்கிறது இல்லையே என்று இரங்கின படி–கொம்பார் தழை கை-என்று சிறு நாண் எறிவிலம்- இப்போது காண்கிலாம் மட்டும் அன்றி தழும்பையும் காண்கின்றிலோம்–வேட்டை கொண்டாட்டு –வேட்டை வியாஜ்யமே -நாயகி பக்கல் வேட்க்கையே விஞ்சி உள்ளது–அம்பார் களிறு வினவுவதுபண்ணுற்ற தேன் மொழிப்பாவை நல்லீர் ஓர் பகழி மூழ்கப் புண்ணுற்ற மா ஓன்று போந்தது யுண்டோ நும் புனத்தயலே -இறையினார் அகப்பொருளுரையில் மண் பட்ட கோடும் மதம் பட்ட வாயும் வடிக்கணை தோய் புண் பட்ட மேனியுமாய் வந்ததோ ஒரு போர் களிறே –தஞ்சை வாணன் கோவையில்-இவள் கண்ணுக்கு இலக்காய் நான் படுகிற பாடு அம்பு தைத்து ஊடுருவும் களிற்றின் நிலைமை போன்றது காண்-அம்பு யானையில் பட்டுப் போயிற்று போன்ற பல புனைந்துரைகளை வேட்க்கை மிக்கு நாணம் இன்றி கூறினவன்-ஐயர் -ஏளனமாக சொல்கிறாள் –புள் ளூரும் கள்வர்-தம்பாரகத் தென்று மாடாதன –-உயிர்கள் அறியாமல் தாமே உரிமை கொள்பவர் –கள்ளர்-சேராச் சேர்த்தி இங்கு கண்டோம் இல்லோம் -விண்ணுலகத்தில் இருக்கலாம் –வம்பார் வினா-வீண் கேள்விகள் இதுவரையில் கேட்டார் அறியாத கேள்விகள் –எம்மை வைத்தது இவ் வான் புனத்தே-நாங்கள் பெரியோருக்கு பரதந்த்ரப் பட்டவர்கள்-ஆதலால் அப் பெரியோரை அடுத்துப் பலரும் அறிய விவாகம் செய்து கொள்ளுதல்-முறைமை என்று ஸூசகப் படுத்திய படி-

கொம்பார் தழை கை-கொம்பிலே செறித்த தழை-கைக்குப் பரிகரம் ஆயிற்று-சிறு நாண் எறிவிலம்-வில் இல்லாமையாலே-சிறிய நாண் ஒலியும் கேட்டிலோம்-வேட்டை கொண்டாட்டு-வேட்டை கொண்டாடுகை
நாட்டுக்கு வார்த்தை-அம்பார் களிறு வினவுவது அம்போடே யானை போந்ததோ என்று வினவா நிற்பது-ஐயர் -இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இராய் நின்றது-புள் ளூரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன-பெரிய திருவடியை மேற்கொண்டு எதிரி அறியாமல் ஜகத்தை ரஷித்துக் கொண்டு திரிகிற
ஈஸ்வரனுடைய விபூதியிலே எக் காலத்திலும் நடை யாடாததான–தம்மிற் கூடாதன-தன்னில் தான் சேர்த்தி அற்றன-வம்பார் வினாச் சொல்லவோ-நிஷ் ப்ரயோஜனமாகக் கேட்ட வார்த்தைகளுக்கு மறு மாற்றம் சொல்லவோ-வம்பார் வினா -என்று-புதுமையால் மிக்க வினா என்னலுமாம்-எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –எங்களைப் பெரிய புனத்திலே உடையவர்கள் வைத்தது –இந்திரியங்கள் -தந்தியான யானை ஞானம் என்ற அம்பு கொண்டு அடக்கப் பார்த்தோம் – கையிலே இருக்கும் தழையை வில்லாகக் கொண்டு அடக்கவோ

இத்தால்
கொம்பார் தழை கை
-என்கையாலே-விஷய ப்ரவாஹங்கள் கை விட்டதில்லை -என்றபடி–சிறு நாண் எறிவிலம் -என்கையாலே ப்ரணவ தநுர் விஷ்பாரித ஸ்வர மாத்ரமும் இல்லை என்றபடி –பிரணவம் தனுஷ் -ப்ரஹ்மம் லஷ்யம் -ஞானம் கொண்டு விட வேண்டுமே-ஆத்மா அம்பு -மூன்று மாத்திரை உள் அட வாங்கி விட வேண்டுமே-மூன்றரை மாத்திரை ஸ்வரமும் இல்லையே-ஸ்வரூப ஞானத்துக்கு பிரணவ தனுஸ் வேணுமேவேட்டை கொண்டாடு-என்கையாலே-ஸம்ஸார அந்தகாரத்திலே -பாலைவனத்தில் –
துஷ்ட ஸத்வமான ராக த்வேஷ லோப மோஹாதிகளுடைய நிரஸனத்திலே ஒருப்பட்டோம் நாங்கள் என்கிற கொண்டாட்டமே உள்ளது
என்றபடி–அம்பார் களிறு வினவுவது -என்கையாலே ஞான சர வித்தமாய் இருக்கச் செய்தே இந்த்ரிய தந்தியானது விஷய அடாவீ வித்ருதமாயிற்று என்று தத் அநுயானம் பண்ணிற்று என்கிறது–தத் அநுயானம் பண்ணிற்று -இந்திரியங்கள் போன வழியிலே போகிறோமே-சதுர் தந்து -நான்கு கொம்பு உள்ள மிருகங்கள் -ராமாயணம் சொல்லுமே
சம்சாரம் மரம் தலை கீழ் -படைக்கும் பிரம்மா மேல் இருப்பதால் இத்தை வெட்டிச் சாய்க்க
அஸங்கம்-பற்றின்மை வைத்தே வெட்ட வேண்டும் -திடமான வைராக்யம் வேணும் -ஐயர் ,-என்று
ஞாத்ருத்வ உத்கர்ஷத்தாலே வந்த கௌரவ்யதை இருந்தபடி என்கிறது-புள் ளூரும் கள்வர்
வேத மயமான பெரிய திருவடியை நடத்துகையாலே ப்ராமண கதி ப்ரவர்த்தகனாய்
-வேதம் நான்காய் -வேதம் தந்தவனும்-வேதத்தால் சொல்லப்படுபவனும் அவனே –யமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22-என்கிறபடியே-கள்வர்– முகம் தோற்றாமல் நின்று ரக்ஷிக்கிற ஸர்வேஸ்வரனுடைய–தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன –ஸ்வாதந்த்ர கடினையான பூமியிலே ஒரு காலத்திலும் நடையாடாதே பரஸ்பர சங்கதி அற்று ப்ரயோஜன பர்யவசாயி அன்றியிலே-வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே – அபி நவமான ப்ரஸ்னத்துக்கு பிரதி வசனம் பண்ணுகைக்காகவோ-ஈஸ்வரன் தனக்கு போக சக்திக்கு உறுப்பாகத் திருத்தி நோக்குகின்ற இத் தேசத்திலே-புனம் காத்து -நம்மைத் திருத்தி – இசைவித்து நின் கண் வேட்க்கை எழுவிக்க -தனக்கு நிர்தேச காரிகளாய் இருக்கிற எங்களை நியமித்து வைத்தது என்று
ஞாத்ருத்வ ஆபாஸத்தாலே துர் அபிமானிகளான புருஷர்களைத் திருத்துக்கைக்காக
பார்ஸ்வத்தரான ஸூஹ்ருத்துக்கள் சொன்ன ஹித வசனத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்
அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் சுண்ணாம்பு என்பாரைப் போலே
தழையை முறித்துப் பிடித்துக் கொண்டு இவர்கள் இருந்த புனத்தே சென்று
இங்கனே ஓர் ஆனை அம்போடே போந்ததோ என்று கேட்டான்
கொம்பார் தழை கை-கையிலே தழையைக் கொண்டு சென்றான் தன் ஆற்றாமையை அறிவிக்கைக்காக – நீர் ஒன்றை நினைத்து இருந்தீர் அது விபரீத பலத்தைப் பலியா நின்றது
ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே உங்களைப் பிரிந்து நான் உறாவினேன் -என்கைக்காகக் கொடு நின்றான் இவன் – அது உன் கையிலே ஸ்பர்சத்தாலே தளிரும் முறியுமாய் சத சாகமாகா நின்றது
பாவியேன் உம்முடைய ஆற்றாமை காட்டுகைக்காகக் கொடு வந்தீராகில் கொம்பிலே காட்ட மாட்டு கிறீலிரே –பிறர் இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் உள்ளது-உம்முடைய கைப்பட்டாருக்கு வாட்டம் யுண்டோ கொம்பாய் உம்முடைய கையிலே இருந்தோம் அல்லோம் கொடியாய் உம்முடைய தோளில் அணைந்தோம் அல்லோம் நாங்கள் என்ன இருப்பு இருக்கிறோம் தான் வேட்டை கொண்டாடு-வேட்டைக்குப் போந்தானாக வாயிற்றுச் சொல்லுகிறது-வில்லோ என்றவாறே தழையைக் காட்டா நின்றான் கையைப் பார்த்தவாறே நாண் தோய்ந்த தழும்பும் கூட இன்றியே இரா நின்றது–சிறு நாண் எறிவிலம்-இப்போது கையிலே வில் இல்லாமையே அன்றிக்கே முன்பு விற் பிடித்த தழும்பு கூடக் கண்டிலோமீ இவர்கள் தான் வீர பத்னிகள் யாகையாலே கையைக் கண்டபோதே அறிவார்கள் ஆயிற்று
அன்றியே சிறு நாண் எய்யப்படுவதான வில்லை யுடையீர் அல்லீர் என்று-ஒரு கதிர் போகில் ஜகத் உப ஸம்ஹாரமாம் படி யன்றோ எங்கள் நிலை-இவ்வான் புனம்-அவனுடைய உபய விபூதியோ பாதியும் பரப்புப் போராதோ எங்கள் புனம்-எங்களுக்குக் கிட்டாருக்குத் தான் உத்தரம் சொல்லுகைக்கு அவசரம் யுண்டோ எங்கள் கார்யமே போரும் காணும் என்கிறார்கள்-இத்தால் ஸம்ஸார ஜன்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது பகவத் பிரவணர் படியைக் காண்கையே இறே –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியாக்யானம்
ஒரு வியாஜத்தால் அபிமத விஷயத்தைக் கிட்டுவாரைப் போலே தளிருள்ள தழையை முறித்துப் பிடித்து
இங்கு ஓர் ஆனை போந்ததோ என்று வினவிக் கொண்டு நின்றான் அவனைப் பரிஹஸித்துக் கொண்டு சொல்லுகிறாள் –கொம்பார் தழை கை-கொம்பிலே செறித்த தழை கைக்குப் பரிகரமாயிற்று-சிறு நாண் எறிவிலம்-வில் இல்லாமையாலே சிறு நாண் ஒலியும் கேட்டிலோம்-வேட்டை கொண்டாட்டு-வேட்டை கொண்டாடுகை–அம்பார் களிறு வினவுவது-அம்போடே ஓர் யானை வந்ததோ என்று வினவப்பாரித்தது ஐயர்-இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இரா நின்றது-புள்ளூரும் கள்வர் தம் பாரகத்து என்றும் ஆடாதனர் -புள்ளூர்ந்து வஞ்சித்துத் திரிகிற ஈசுவரனுடைய விபூதியில் நடையாடுமது அல்ல–தம்மில் கூடாதன-தம்மில் தான் சேர்ந்தன அல்ல-வம்பார் வினாச் சொல்லவோ-ஆரோ கேட்ட உடனே நிஷ் பிரயோஜனமாக மறு மாற்றம் சொல்லவோ–எம்மை வைத்தது இவ் வான் புனத்தே – எங்களை இந்தப் பெரிய புனத்திலே வைத்தது நமக்குள்ள சேஷிகள் –

ஸ்வாபதேசம்-
எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குணங்களிலே ஈடு பட்ட ஆழ்வார் உடைய ஸ்வரூப ரூப குணங்களை-கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்(திரு வேங்கடமுடையானைப் பற்றிச் சொல்லும் என்ற )வார்த்தைக்கு ஆழ்வார் வார்த்தை-

ஸ்வாபதேசம் —
ஆழ்வாரை சில கேள்விகள் கேட்ப்போம் என்று வந்த சிலர் -கற்று செருக்கி உள்ளார் இடம் –இவர்களது சொற்களும் செயல்களும் பரஸ்பர விருத்தங்கள் என்று சொல்வதாகும்–கொம்பார் தழை கை ஐம்புலன் ஆசை ஆகிய தளிர்களை விடாமல் உள்ளோர்–சிறு நாண் எறிவிலம் –பிரணவ மஹா மந்த்ரம் -வில்லின் -உச்சாரணமும் நாண் ஒலியும் இல்லாதவர்கள்-வேட்டை கொண்டாட்டு –சம்சார காட்டில் உள்ள கொடிய விலங்குகளை காம க்ரோதங்களை தொலைக்கத் தொடங்கி விட்டோம் என்ற கொண்டாட்டம் மட்டும் –அம்பார் களிறு வினவு-இந்திரியம் ஆகிய யானை சப் தாதி விஷயங்களில் போக பின் தொடர்வதே இவர்கள் செயல் –ஐயர் –இவர்கள் செருக்கை இகழ்ந்த படி–புள் ளூரும் கள்வர் தம்பாரகத் தென்று மாடாதனதம் மிற்கூடாதன-வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே-இவர்கள் வீண் கேள்விகளுக்கு உத்தரம் சொல்வதற்கோ இவர்களை எம்பெருமான் இங்கே வைத்தது
வேதமாகிய பிரபல பிரமாணம் எங்கும் பரவச் செய்து –யாவரும் அறியாமல் மறைந்து நின்று ரஷிக்கும் எம்பெருமான் தத்வ ஞானமும் பிரபத்தி மார்க்கத்தில் இல்லாத போலி யான செருக்கு கொண்ட இவர்களைத் திருத்துவதற்கே இங்கனம் கூறியவாறு –

தாத்பர்யம்
இப் பாசுரத்தில்-சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூபாதிகளில் ஈடுபட்ட பாகவதர்கள்
ஸர்வேஸ்வரனுடைய குண சேஷ்டிதங்களை அருளிச் செய்ய வேணும் என்று ஆழ்வாரைக் கேட்க
சர்வஞ்ஞரான உங்களுக்கு நான் எத்தைச் சொல்வது என்கிற ஆழ்வார் வார்த்தையை புனம் காத்து இருக்கும் நாயகி நாயகன் வரவைப் பார்த்து அருளிச் செய்த பாசுரமாக அருளிச் செய்கிறார்-நாயகன் கையில் தழையைப் பிடித்து வந்து விரஹ வேதனையை நாயகிக்கு அறிவிக்கக் கருதி நாயகியைக் கண்டு ஸல்லாபிக்க ஆசை கொண்டு இங்கே அம்பு பட்ட களிறு வந்ததோ என்று நாயகி இடம் வினவினான் வேட்டையாட வந்தீராகில் கையிலே வில்லைக் காணோம்
தழையைப் பிடித்து நின்றீர்-இவ்வாறு பொருந்தாத உக்திகளும் அனுஷ்டானங்களை எங்கும் காணோம்
இப்படி அசம்பாவித வினாக்களுக்கு உத்தரம் சொல்லவோ எங்கள் பெரியோர்கள் எங்களை இங்கே வைத்தது உமக்குப் பதில் சொல்ல எங்களுக்குப் போதில்லை போம் என்கிறாள்

6-3-நல்குரவும் செல்வும் -ப்ரவேஸம்

இப்படித் தாழ நின்றவன் சர்வேஸ்வரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச் செய்வர்.
அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய
சர்வேஸ்வரத்வத்தை அருளிச் செய்கிறார் என்றபடி.

‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச் செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.–
பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது,
“சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேர விட்டுக் கொண்ட ஆச்சரியத்தைக்
கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.

சேர விட்டுக் கொண்ட படி தாம் பலவாக இருக்குமன்றோ:
முதல் தன்னிலே-1-1- தம்மையும் அறியாதே அவனையும் அறியாதே இருக்க,
தன் படிகளை அறிவித்துக் கூட்டுவித்துக் கொண்டான்.

உள்ளே புகுர நின்று தம்முடைய தாழ்வினையும் அவனுடைய உயர்வினையும் அநுசந்தித்து
‘நாம் அங்குத்தைக்குத் தக்கவர் அல்லோம்’ என்று அகல,-1-5- தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக் கொண்டான்.

இனி, அவை போன்றது அன்றே இது; ஒன்றால் போக்கக் கூடியது அன்றே.
அகலில் குற்றம், அணுகில் குற்றமாய் இருப்பது ஒன்றே யன்றோ!
ஜாதி சண்டாளனை நோக்கினால் பிராயச் சித்தம் உண்டு;
பிரணயத்தால் உண்டாகிய கோபம் ஆகிற காரணத்தால் சண்டாளர் ஆனவர்க்கு அதுவும் இல்லை.
ஆக, இந்தப் படிகளாலே
தன் செல்லாமையைக் காட்டி அவன் பொருந்த விட்டுக் கொண்ட படியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்றபடி.

பாவியேன் மனத்தே -கடாஷித்து -ஜாதி சண்டாளன் -என்கிறார் –
ஈஸ்வரன் மேல் விழா நிற்க -சேராமல் விலக்கிய பிராயச்சித்தம் இல்லாத பாபம்
சந்த்யா வந்தனம் பண்ணா விடில் பிராயச்சித்தம் தேடலாம் -பகவத் அனுபவம் இல்லாததுக்கு இல்லையே -கூரத் ஆழ்வான்
நாயக விஷயத்தில் நாயகிக்கு ஏற்பட்ட பிரணய ரோஷத்துக்கு பரிகாரம் இல்லை
பிரணயத்தால் பிறந்த கோபம் ஆகிற அபராதத்தால் -வந்த பாபிஷ்டருக்கு பிராயச்சித்தம் இல்லையே
ஈஸ்வரனை சொல்லாமல் -பிரணய கோபத்தையே சொல்கிறார் –

அங்ஙனம் ஆச்சரியப்படுகிற இவர்க்கு, ‘இவ்வளவு அல்ல காணும் நம்முடைய ஆச்சரியங்கள் இருக்கும்படி.
உலகத்தில் தம்மில் தாம் சேராத மாறுபட்ட பொருள்களும் எல்லாம் நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்!
ஆன பின்னர், நம்மோடு சேராதார் இலர் காணும்!’ என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தைக் காட்டிக் கொடுக்க இவரும் கண்டார்.
கண்ட இவர் ‘இவை இருந்தபடி என்!’ கொடுத்த அறிவைக் கொண்டு அகலுகைக்குக் காரணமாயிருக்கிற இவற்றை
எல்லாம் கூட விட்டுக்கொடு நிற்கிற படிகளும்,
இனி, நிமித்த காரணமானது உபாதான காரணமாக மாட்டாது; உபாதான காரணமானது நிமித்த காரணமாக மாட்டாது;
இங்ஙனே இருக்க, இவை எல்லாம் தானே யாயிருக்கிற படியையும்,-பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-
இவற்றோடே கூடி இருக்கச் செய்தேயும் இவற்றின் குற்றங்கள் தன்னைத் தீண்டாமல் இருக்கிற படியையும்,-பரஞ்சுடர் –
குற்றம் தீண்டாமல் கடக்க இருக்கை மாத்திரமன்றிக்கே நியமிக்கின்றவனாய் இருக்கிற படியையும்,-
இனி, நாட்டில், பிராப்யமானது பிராபகம் ஆக மாட்டாது; பிராபகமானது பிராப்யம் ஆகமாட்டாது; இங்ஙனே இருக்க,
பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் தானே யாக இருக்கிற படியையும்,–என் சரண் என்னை ஆளுடை –
மற்றும், இவனுடைய அழகு சீலம் முதலானவைகளையும் அநுசந்தித்து, -பொன்னப்பன் -தந்தனன் தன் தாள் நிழல்-
‘இப்படி உபகார சீலனான சர்வேசுவரன் திருவிண்ணகரிலே வந்து அண்மையில் இருப்பவனானான்;
இவன் அல்லது நமக்குப் பரம பந்துக்கள் இலர்’ என்று அறுதி யிட்டு,
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-6-3-9-
‘இவன் திருவடிகள் அல்லது பற்று இல்லை’ என்று பேசுகிறாராயிருக்கிறது.
திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10

முதல் திருவாய்மொழியிலே பரத்துவ அநுபவம் பண்ணி,
மூன்றாந் திருவாய்மொழியிலே சௌலப்யத்தை அநுசந்தித்து “எத்திறம்” என்று கிடந்தார்.

இங்கு, “போகு நம்பி” என்று தள்ளச் செய்தேயும் கால் வாங்க மாட்டாதே நின்ற நீர்மையை அநுசந்தித்து,
அதற்கு எதிர்த்தட்டான பரத்துவத்தை அநுசந்திக்கிறார்.

இப்படிக் கிரமம் இல்லாமல் அருளிச் செய்கிறதற்குக் காரணம் யாது? என்னில்,
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அலரோ; மேன்மையை அநுசந்திப்பது, நீர்மையை அநுசந்திப்பதாமத்தனை அன்றோ!

இத் திருவாய்மொழியிற் கூறப்படுகின்ற பொருளோடு
“தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ வேதத்து மறை நீ பூதத்து முதலு நீ
வெஞ்சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ அனைத்தும் நீ அனைத்தினுட் பொருளும் நீ”-என்ற பரிபாடற் பகுதி ஒப்பு நோக்கத் தகும்.

1-வைகுண்ட விண்ணகரம்
2-பரமேஸ்வர விண்ணகரம்
3-காளிச்சீராம விண்ணகரம்
4-நந்திபுர விண்ணகரம்
5-அரி மேய விண்ணகரம்
6-காழிச் சீராம விண்ணகரம்
7-ஸ்ரீ வைகுண்டம் -நவ திருப்பதி நின்ற திருக்கோலம்

8-திரு விண்ணகர் -அடை மொழி இல்லாமல்
உத்சவ மூர்த்தி பொன்னப்பன் –
மிகுநர் இலன் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
சமாப்யதிக ராகித்யன் -தரித்திரம் -குறை சொல்லலாம் படி அன்றோ –
பூமா தேவி -துளசி தேவி -ஸ்ரீ மஹா லஷ்மி போல் ஆக ஆசை கொள்ள
மார்க்கண்டேயர் திருக்குமாரி –
லவண வர்ஜித ஸ்வாமி –

விளம்ப விரோதம் அழிக்கும்-வ்ருத்த கடநா – சாமர்த்தியம் -நன்னகரிலே விஸ்தீரணம்
நன்னகரிலே-தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-
விஸ்தீரணம் -பல் வகையும் பரந்த பெருமான்-6-3-1-

மூன்றாம் திருவாய்மொழியில்-இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே
பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு
நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்து
அதுக்கு அடியான ஸர்வ வ்யாபகத்வத்தையும்
இதர விசஜாதீயதையையும்
உஜ்ஜ்வல கீர்த்தித்தவத்தையும்
அதிசயித கிருபா யோகத்தையும்
லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித அநு பாவ்யமான உஜ்ஜ்வல்யத்தையும்
ஸர்வ லோக சரண்யத்வத்தையும்
ஆஸ்ரித பவ்யத்தையையும்
நிருபம உபகாரகத்வத்தையும்
அசாதாரண ரக்ஷகத்வத்தையும்
அநு சந்தித்து -இவ்வோ ஆகாரங்களாலே அகடி தங்களை கடிப்பிக்க வல்லவன் –
நித்ய சம்சாரிகளான நம்மையும் நித்ய ஸூரி களோடு சேர்க்க வல்லவன் என்று
அவனுடைய பல பிரதத்வ சக்தியை அநு சந்தித்து தாம் கண்டபடியே உபதேசித்து அருளுகிறார்-

—-=—

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -21-சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி-வீற்று இருந்து ஏழு உலகம் -4-5–

February 14, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

சாது பரித்ராணாம் போன்றவை கீதையில் அவதார பிரயோஜனம்-இங்கு உண்மை அறிந்தவர் சரியான காரணங்கைக் காட்டி அருளுகிறார்-ஏறு கோள் கூறி வரைவு தடவுதல் -ஏறு தழுவுதல்

கீழ் சொன்ன பகவத் பிரபாவம் இருவரும் அறிந்திலர்கள்-எங்கனே என்னில்-சொன்ன உக்தி செவி படுவதற்கு முன்னே உணருகையினாலே உயர்வற உயர் நலம் உடையவன் என்னா — உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு  எத்திறம் என்னும் படியாலே- மோஹித்த போது அறியாதே கிடக்கவும் , உணர்ந்தார் ஆகில் ,தம் உடைய பாழியான கிருஷ்ண அவதாரத்தில் மண்டும் இத்தனைத்வராவதி மன்னனை ஏத்துமின் -சொன்னதும் உணர்ந்தாள் அங்கு – அதே போல் –மாலையைச் சூட்டுமின் என்ற சொல் கேட்டதுமே உணர்ந்தாள் –

இப்படி அவசன்னரான இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக(வேலன் வந்ததால் சிதிலம் ஆன ஆழ்வாரை )
ஒரு விபூதியாக நம்மை ஆதரியா நிற்கச் செய்தே(நீதி வானவர் அன்றோ-இங்கு அநீதி மன்னவர் )
நீர் இருந்த தேசத்திலே வந்து -(லீலா விபூதியில் )நீர் அபிமானித்த வஸ்துக்களை ஆதரித்து விரும்புகைக்காகவும்-ஸர்வஞ்ஞன்-ஆழ்வாருக்குப் பிடித்த ஈட்டிய வெண்ணெய் உண்ண
உம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி உம்மை அனுபவிப்பைக்காகவும் அன்றோ இங்கு வந்தது-(ஏழு ரிஷபங்கள் அடக்கி நப்பின்னையைச் சொன்னது ஆழ்வாரையும் நம்மையும் சொன்னதற்காகவே
பரித்ராணாய ஸாதூ நாம் -ஆழ்வாரை அணைத்தல்-துஷ்க்ருதாம் வி நாஸநம் -ஏழு ரிஷபங்கள் அடக்கி
தர்ம சமஸ்தானம் -வெண்ணெய் உண்டது -அஹம் ஹி போக்தா -யஜ்ஜமாகவும் -பிரபு எவச –
செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
செய்வான்நின் றனகளும் யானே என்னும்
செய்துமுன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக்கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத்தீர்க் கிவைஎன் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-கர்த்தாவாகவும் போக்தாவாகவும்
)-என்ற சர்வேஸ்வரன் திரு உள்ளத்தைக் கருத்தை ஆவிஷ்கரிக்க ஒக்கும் இறே என்று ஸந்துஷ்டாராய்
ஆசன்னரான கிருஷ்ண -(பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே )-மானஸ அனுபவ ஸந்நிஹிதனான -(முன்னால் நிற்கும் கிருஷ்ணனை –ஆடினை கூத்து முன்னிலை பிரயோகம் ) (ஆழ்வார் காலத்தில் இல்லையே யாயினும் அக்காலத்தில் நடந்தவற்றை அப்படியே காட்டி அருளினான் அன்றோ )
அவன் இடம் விண்ணப்பம் செய்கிறார்

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
–21-எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –

சூட்டு–சிரோ பூஷணமாய் இருப்பது ஒன்றுக்கு பேர்-ஆஸ்ரிதர் காலில் -காலால் – இட்டாலும் ,-
கிருஷ்ணாதி சிரசா ஸ்வயம்-என்றபடி யாலே-ஏற்பது தன் தலையால் இருக்கையாலே-பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன் நாச்சியாருக்கு அருளிச் செய்த வார்த்தை–
பத்ரம் புஷ்பம்   கீதை -9-26–இலை ,மலர் ,தண்ணீர் என எதனை அன்புடன் அளித்தாலும்
ஏற்பேன் என்று அருளியதை சொல்லிக் காட்டினார்–-அஸ்நாமி-என்னுமா போலே-பொன் ஆச்சியார் கேட்டதுக்கு தாஸர் பதில்-எத்தைக் கொடுத்தாலும் உண்ணுவது போல் போக்யமாகக் கொள்ளுபவன் -நன் மாலைகள் —இவன் ஆதரிக்கும் என்னா-எருக்கும் தும்பையுமாக தேடி இடும் அளவு இன்றிக்கே ,
இங்குத்தைக்கு சத்ருசமாய்-ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும் ( பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயா -என்றும் –
கள்ளார் துழாய் -என்றும் நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார வடிசில் சொல்லுவது எவ்வாறு பொருந்தும்-அந்யத் பூர்ணத்துக்கும் அதமம் -அவனைப் பார்த்தால்)

மாலைகள் — ஈரம் கொல்லியை கொன்று திரு  பரியட்டம் சாத்தி ஸ்ரீ மாலாகாரர் கிருகத்திலே எழுந்து அருளி- திரு பள்ளி தாமம் சாத்தி ,-சாந்து சாத்த அபேஷிதமான தசையிலே கூனி சாந்து கொண்டு போகா நிற்க ,–பெண்டாட்டி ஆகையாலே  மறுக்க மாட்டாதே – இடை பிள்ளைகளுக்கு முடை நாற்றத்தோடு கூடின வடிவுகளுக்கு ஏதேனும் வழக்கான சாந்தை இட்டு ,மருட்டுகிறோம் – என்று தண்ணிய சாந்தைக் கொடுக்க ,-முன் கையை நீட்டி மோந்து பார்த்து ,–சுகந்தமேதத் –-இது உனக்காய் இருந்தது என்ன–அதற்க்கு மேல் தரமாய் இருந்ததொரு சாந்தைக் காட்ட –ராஜார்ஹம்–இது உம் கண் ஆயனார்க்காய் இருந்தது — அதற்க்கு மேல் தரமாய்  இருப்பதோர் சாந்தைக் காட்ட –ருசிரம்-நிறம் அழகியதாய் இருந்தது – கந்தத்தாலே நன்றாம் இது நிறம் அழகிது என்கை-அதுக்கு உறுப்பு அன்று இறே –ருசிரானனே –இடை பிள்ளைகள் சாந்தின் வாசி அறியார் என்று என்று இருந்தோம் ..
இது இவர்கள் வாசி அறிந்த படி என் என்று ஹிருதயத்தில் கிடந்த பிரியம் முகத்திலே தோற்றி இருந்த படி-ஒரு சாந்து இட வேணுமோ –ஒரு முகம் இருந்த படி என் என்று ஏத்துகிறான்–கம்சனுக்கு வைத்த சாந்து இடுகைக்காக-ஆவயோர்காத்ர சத்ரு சந்தீயதா மனுலேபனம் — நல் சரக்கு பரிமாறுகிற நீ   உடம்பின் வாசி அறிய வேண்டாமோ-அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் சத்ருசமான சாந்து நீயே அறிந்து தா-

சூட்டு நன் மாலைகள்
சூடுவதற்குத் தகுதியான நல்ல மாலைகள்-(தலையில் சூடி -தோளில் மாலை )
(நல் -இரண்டுக்கும் -ஹார மத்ய மணி நியாயம் தேஹளீ தீப நியாயம் -நாயக ஸ்ரீ போல் )மாலைக்கு நன்மை யாவது-அப்ராக்ருதம் -ஆகவே நல்ல மாலை-அனுரூபமாய் புனுகினில் தோய்த்தால் போல்
அநுராக ரஞ்சிதம் -(பக்தியில் தோய்க்கப் பெற்ற )-சூட்டு -திருமுடி சாத்தாய்-மாலை -தோளுக்கு விடுவதாகவும்(மூன்று முடிக்கு உரிய அரசு-பார் அளந்த பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே-வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முனி -மூன்று முடிக்கு உள்ள அரசே -நாயனார் )
கிரீட மகுட சூடாவதாம்சம்) அப்போது நன்மை மத்யம விளக்கு போல் இரண்டுக்கும் அந்வயமாம்

தூயன
புஷ்பத்துக்குத் தூய்மையாவது-த்ரிவித தியாகம் -கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும்
கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிய மூன்றும் இல்லாமல்(புழு மயிறு ஸ்ராய் இல்லாமல் )

தூயன —
அநந்ய பிரயோஜனர் இடுமதாய் இருக்கை–-கெண்டை ஒண் கண்  இத்யாதி–மிக்க சீர் தொண்டர் இட்ட
தொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்-சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்-மிக்க சீர் தொண்டர் -ஸ்வயம் பிரயோஜனம் )

ஏந்தி
பாரதந்தர்யத்தால்-யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று இருப்பதே தூய்மை
(கொண்டு வைத்தேன் -நீ நீராட வேண்டும் பிரார்த்தனை தான் செய்யலாம் )

ஏந்தி–
தன்னை அங்குத்தைக்கு உறுப்பாக்கி , இருக்கும் அதுக்கு-மேற் பட வில்லையாய் இருக்கை
அங்குற்றைக்கு இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் என்கிற படி —
மஞ்சளும் செம்கழு நீரும் வாசிகையும்–பெரியாழ்வார் திரு மொழி -2-4-4–என்கிறபடி  –(கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்-ஏற்றுக் கொள்வது அவன் இச்சை இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் )

விண்ணோர்கள் இத்யாதி –
மண்ணோர்கள் இட்டதை கொள்ளும் அவன்-விண்ணோர்கள் இட்டால் சொல்ல வேண்டா இறே-
பிரயோஜனந்ததுக்கு அன்றி லோகம் வாழ பண்ணும் திரு மஞ்சனம்–அம் தூபம் தரா நிற்கும் அங்கு –
முறை  மாற வேண்டாதே ,-முதுகு நோவ வேண்டாதே ,-தானே போஷக தாரக போக்யமாய் இருக்கை –
நமஸ்நானம் –(பரதாழ்வான் இடம் கூடின பின்பே ஸ்நானம்
விபீஷணன் தாங்கிப் போகப் பிரார்த்திக்க -மறுத்து பெருமாள் கடுக விரைந்தால் போல் )பரம வ்யோம வாசிகளான அப்ராக்ருத புருஷர்கள்-நன்னீர் ஆட்டி-அன்பினானால் ஞான நீர் கொண்டு
அன்பும் ஞானமும் கலந்து -பரிசுத்த பக்தி ரூபா பன்ன ஞானதாலே திருமஞ்சனம் ஆட்டி
(திருக்குறும் தாண்டகம் -இதுவும் ஸ்நாநாசனம் போது அனுசந்திக்கிறோமே )அம் தூபம் தரா நிற்கவே
அலங்கார அந்தர பாவியாய் சர்வ கந்த வஸ்துவுக்கும் அதி வாசனை கரமாகையாலே ஊட்ட-அழகிய தூபம் தாரா நிற்கவே (வகையால் மனம் ஒன்றி மாதவனை -நாளும் புகையால் விளக்கால் நீரால்
சுமந்து மா மலர் –நீர் சுடர் தூபம் கொண்டு
-இத்யாதி-ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -வேங்கடத்து வந்தாலும் அவர்களும் வந்து ஆராதிப்பார்களே )அங்கு-அந்த நித்ய விபூதியில்

விண்ணோர்கள் -நன்னீராட்டி – சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -நிற்கவே -என்று அன்வயம்
ஸ்நாநாசனமும் அலங்காரசனமும் ஆன பின்பு அங்கே சென்ற பின்பு போஜ்யாசனத்துக்குப் போந்த படி
(காலத்துக்கு வேலை இல்லை அங்கு என்றாலும் அடுத்து அடுத்து இவை உண்டே )

ஓர் மாயையினால்-
அத்வதீயமான ஆச்சர்யம் –அவ்விடம் அங்கனே செல்லா நிற்க செய்தே ,-திரு ஆய்ப்பாடியிலே அனுகூலர் பக்கல் வெண்ணெய் உண்டாய் இருந்தது என்று நாரதராதிகள்-சொல்ல —
தனது சங்கல்பத்தால் கிடைக்கும் வெண்ணெய் விட-கோபிமார் ஸ்பர்சத்தால் கிடைக்கும் வெண்ணெயில் விருப்பம் கொண்டு ,-தூபம் உண்டாகிய புகையிலே தன்னை மறைத்து –
ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று இருக்கிறவர்களை-கண்ணில் மணல் தூவின படி
மாயை
மாயா வயுனம் ஞானம் என்கிற படியே இச்சை-அப் புகை நிழலிலே ஒளித்துப் போருவாரைப் போலே
அத்விதீயமான தனது அபிநிவேச சங்கல்பத்தினாலே

ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து —
சிர காலம் கூட சம்பாதித்த வெண்ணெயை–க்ருத்ரிமத்தாலே ,புஜிக்க போந்து ,-இவன் கையிலே சிலவர் அடிலும் அநபிமதமாய் இருந்த படி ..-இவர் தாம் அங்கும் கூட நின்று இங்கும் கூட போந்தார் போல் காணும்-ஆழ்வாருக்கு பரத்வத் தோடு-அவதாரத்தோடு வாசி அற நிலமாய் இருந்த படி-(கையிலே கொடுத்தாலும் கொள்ளான்-தானே களவு கண்டு உண்ணும் அத்தனை–திருவாய்ப்பாடியில் நாள் தோறும் கடைந்து ஈட்டிய வெண்ணெயை அபஹரித்து-அதுவும் ஆய்ச்சியர் வெண்ணெயை மட்டுமே கொள்வான்-அங்கு நடந்தவற்றையும்-இங்கு நடந்தவற்றையும் பிரத்யக்ஷமாகக் கண்டு அன்றோ அருளிச் செய்கிறார் )

அத பஞ்சவடீம் கச்சன் -என்னுமா போலே– பஞ்ச வடிக்கு போகும் வழியில் ஜடாயுவை கண்டால் போல் –
வெண்ணெய்க்கு போந்த இடத்தே ஸ்திரீ ரத்னத்தை லபித்த படி — விறகுக்கு போந்த இடத்தே விற்பிடி மாணிக்கம் பெற்ற படி–இமில் ஏற்று இத்யாதி–ககுத்தை உடைத்தான எருத்தை உடைய வலிதாய்- வளைந்து இருந்துள்ள கொம்பிலே விழுந்தான் ..-அனந்தரம் நப்பின்னை பிராட்டியை அணைக்கப் புகுகிறோம் என்னும் -அத்தாலே அவன் நின்ற படி–உத்தேசம் ஆகையாலே-கூத்து -என்கிறார்–
(கிஞ்சித் தாண்டவம் -நின்ற திருக்கோலமே கூத்து போல் இருக்குமே )ககுத்துக்களை யுடைய எருதுகளின் வலித்தாய் வளைந்த கொம்புகளின் நடுவே வல்லார் ஆடினால் போலே வியாபாரித்தாய்

அடல் ஆயர் தம் கொம்பினுக்கே–
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலா கிருஷ்ண நாதசபாண்டவ
-என்று-இவன் பிறந்த பின்பு யுத்தோன் முகமாய் இருந்த படி–    இவனைக் கண்டு வைத்து  கடுக நீராட்டிக் கொடாதே -நடுவே எருத்தை இருத்துவதே –தம் கொம்பினுக்கே-அம் கொம்போடே பொரலாம் ஆகில் ,  -இக் கொம்புகளோடே பொருதல் என்றே வேணும் என்று பொருதான்-கரு மாறி பாய்ந்தாலும் பேற்றுக்கு தக்கது போராதாய் இருக்கிற படி–ஜனகானாம் குலே கீர்த்தி மா ஹரிஷ்யதி மேசுதா–என்னும் படியே  —சீதை பிராட்டியால் ஜனகன் குலத்துக்கு கீர்த்தி உண்டானது போல் –பால காண்டம் -68-21–நம் கொம்பினுக்கே -அக் குலத்தை எல்லாம் உண்டாக்க பிறந்த படி-ஆயர் பன்மை -கொம்பு ஒருமை -இதுக்கு இந்த பிரமாணம் -பிரபலரான கோப குலத்தில் பிறந்த நப்பின்னை பிராட்டிக்கு நாம் போக்தா ஆக வேணும் என்று
ஸய்யாசனம் இது

திருவாராதனம் விளக்க வந்த பாசுரம்-அமர்ந்து திருவாராதனம் ஏற்றுக் கொள்கிறான்
1-அந்தூபம் தாரா நிற்கவே -அங்கு -ஆஸ்தே -மந்த்ராஸனம்
2-நன்னீராட்டி -ஸ்நாநாசனம்
3-நன் மாலைகள் தூயன ஏந்தி அலங்காராசனம்
4-வெண்ணெய் தொடு உண்ணப் போந்து போஜ்யாசனம்
5-புனர் மந்த்ராஸனம் -இப்பாசுர அனுசந்தானம்
6-ஸய்யாசனம் -நப்பின்னைப் பிராட்டியை அணைக்க -அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
ஆகவே இப்பாசுரம் நித்ய அனுசந்தானமாகக் கொள்கிறோம்

முன்னிரண்டு அடிகளால் பரத்வத்தையும் -பின்னிரண்டு அடிகளால் ஸுலப்யத்தையும் அருளிச் செய்கிறார் –புகை நிழலில் ஒளித்து வருவாரைப் போலே அங்கு நின்று இங்கு வந்தமை தோற்ற –
அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் போந்த -என்கிறார்
ஸ்நாநாசனம் அலங்காராசனம் அங்கே நடக்க -போஜ்யாசனமும் சயனாசனமும் இங்கே –
அவனுக்கு இரண்டும் வேறுபாடு இன்றி நிகராக உரியவை –ஓர் மாயையினால் -பகவானுடைய சங்கல்ப ஞானம் – ஸம்பவாமி ஆத்ம மாயயா போல் மாய வகையினால் என்றுமாம்–ஈட்டிய வெண்ணெய்-திருவாய்ப்பாடியில் மனைகள் தோறும் திரட்டி வைத்த வெண்ணெய் –அடலாயர் -பிரபலமான இடையர் என்றபடி–பூர்வர்கள் இது தானான தன்மை பாசுரம் என்றே சொல்வர்-சிலர் அகத்துறை -ஏறு கோள் கூறி வரைவு கடாதல்-முல்லை நிலத்து தலைமகள்-எருதுகளின் வலியை அடக்குமாறு சொல்லி விவாஹம் செய்து கொள்ளச் சொல்லுதல்

ஆகையால்
அந்த விபூதியில் ஆராதனம் செய்து கொண்டே இருக்கும் போது(சம்சாரி -முமுஷு முக்தன் -தசை மாறி வர வேண்டுமே) தயிர் பால் சம்சாரி-வெண்ணெய் முமுஷு-நெய் முக்தன் )இந்த விபூதியில் சம்பந்த ஞானம் உடையார் -மதி மந்தானம் -புத்தியான மத்து-முமுஷுக்கள் உடன் கலந்து பரிமாறி-ஸம்ஸாரம் பிடிக்காமல் உபேக்ஷித்து – ருசி விளைத்து மேலே மேலே கூட்டிப் போக-உபநிஷத் கடலைக் கடைந்து -மஹாபாரதம் சந்திரன் –அதே போல் பக்தாம்ருதம் திருவாய் மொழி-நாள் தோறும் இடது வலது -மனன மதனம் பண்ணி ஈட்டுகை-பால் மாறி -நெய் வராமல்-அந்தரேவ- நடுவே நிற்கும் வெண்ணெய் போல்-சம்சாரம் கழித்து – உண்டியே உடையே உகந்து திரியாமல் அவஸ்தையைக் கழித்துஆகதோ பரமபதம் புகப் பெறாமல்-ஆந்தராளிகர் இடைப்பட்ட முமுஷுக்களை அனுபவிக்க-இவர்கள் எதிர்பாராமல் -ஈட்டிய வெண்ணெய் – எப்போது திருவடி சேர்ப்பார் எதிர்பார்த்தே இருக்க வேண்டுமே-அபிநிவேசத்தால் -பேராசை கொண்டு போந்து-கோட்டிடை இத்யாதி-ரஜோ தமோ குண பிரதிபந்தங்களைப் போக்கி
செருக்கை யுடைய சரீரம்-அவஸ்தா சப்தகம் போக்கி-கர்ப்ப ஜென்ம பால்ய யவ்வனம் விருத்தம் -மரணம் -ஏழு தசைகளிலும் இரண்டு கொம்புகள் பிரபலமாய் -கர்மங்கள் -குத்திப் போக்கும்–அநாயாசன போக்கி ஆட்டம் பார்த்தாலே தெரியுமே-நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே போகும்–பாரதந்தர்ய ஏவ ஸ்வரூபம் நிரூபணம்-ஸ்வ ரக்ஷணம் ஸ்வ அந்வயம் இல்லாத நப்பின்னை –அடலாயர் கொம்பு-அநந்ய ரஷ்யம் – அநந்ய போக்யம் –கொம்புக்கு இரண்டும் உண்டே-இதே தான் முமுஷுக்குவுக்கும் இருக்க வேண்டும்-என் நான் செய்கேன் -யாரே களை கண் -இத்யாதி
இப்படிப்பட்ட ஆத்ம வஸ்துவை நீ புஜிக்க குறை யுண்டோ என்று விண்ணப்பம் செய்தார் ஆயிற்று

தாத்பர்யம்–கீழ் பாசுரத்தில் ஸூஹ்ருத்துக்கள் உச்சரித்த பகவத் திரு நாமங்களைக் கேட்டு-வெறி விலக்க பகவத் நாமங்களைச் சொல்லுங்கோள் என்பதைக் கேட்டு மோகம் தெளிந்து- (மோகம்-பக்தி மேலிட்டு -ப்ரேமம் –தாமான தன்மையால் கிருஷ்ண அவதாரம் -தனது பாழியிலே ஆழ்ந்து
கிருஷ்ண த்ருஷ்ண தத்வம்
-ஏறு தழுவுதகள் துறை என்பதையும் பார்த்தோம்
ஸ்ரீ வைகுண்ட மா நகரத்தில் வீற்று இருந்து-உன்னை நித்ய ஸூரிகள் திருமஞ்சனம் செய்வித்து
வஸ்திரம் மால்யா திரு ஆபரணாத்திகள் -உபசாரங்கள் சமர்ப்பித்து-16 உபசாரங்கள்-சந்தனம் சாத்தி -பூ சமர்ப்பித்து சாம் ஸ்பர்சிகம்-தீபம் ஒத்துவாடை சமர்ப்பித்து உபசாரிகம் தொடாமல்-உள்ளே செல்வது போனகம் -போன்ற மூன்று வகைகள் உண்டே –
தூபம் சமர்ப்பிக்க-அவர்களுக்குத் தெரியாமல் புகை மண்டலத்தில் ஒளிந்து ஓடி வந்து -சமத்காரமாக சாதிக்கிறார்-திருவாய்ப் பாடியில் கோபிமார் கடைந்து ஈட்டிய-திரட்டி வைத்த வெண்ணெயை தானே திருடி புஜித்து -அமுது செய்ய- கிருஷ்ண அவதாரம் செய்து-நப்பின்னைப் பிராட்டியைப் புணருகைக்காக-கோபர்கள் -கும்பன் இட்ட-ஏழு எருதுகளைப் பொருது-அக் கொம்புகளில் அகப்படாமல் நடுவே கூத்தாடிய படி-வல்லார் தாண்டவம் போல் சஞ்சரித்து இது என்ன ஆச்சார்யம் என்று ஈடுபட்டு அருளிச் செய்கிறார் –கொம்புகளை ஆட்டி தாமும் தாண்டவம் ஆடினார் அன்றோ

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிஜன விசிஷ்டனாய்க் கொண்டு பரமபதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும் ஸ்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள அத்தைக் கண்டு சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால் பண்ணுகிற மங்களா சாசனத்தை இங்கேயே இருந்து அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி க்ருத்க்ருத்யராய்
உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்-சென்ற துயர் -தீர்ந்து – மாறன் -நன்கு -உகந்து -வீறு -உரைத்தான் –
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய் ப்ரீதி பிரகர்ஷத்தாலே தம்முடைய பெருமையை தாமே பேசினார் -ஆயிற்று-

4-5-வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, -ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே அப்படி விடாய்த்தவர், ‘இனி என்ன குறை எழுமையுமே?’ என்னப் பெறுவதே!
உன்மச்தக ப்ரீதி அப்ரீதி மாறி மாறி வருமே -இந்த இரண்டு திருவாய்மொழிக்கும் ஏற்றம் என் என்னில் –
மேல் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கிக் ‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழி முடிய,
‘மண்ணையிருந்து துழாவி’ என்னுந் திருவாய்மொழியில் உண்டான விடாய்க்குக் கிருஷி செய்தபடி.
அப்படி விடாய்க்கும்படி செய்த கிருஷியின் பலம் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில்.
‘பேற்றுக்கு இதற்கு -பல்லாண்டு பாடுவதற்கு மேல் என்றபடி -அவ்வருகு சொல்லலாவது இனி ஒன்று இல்லை.
‘அங்குப் போய்ச் செய்யும் அடிமைகளை இங்கே இருந்தே செய்யும்படி தன் சொரூபம் முதலானவைகளைத் தெளிவாகக் காட்டிக்
கொடுத்தானாகையினாலே,அவ்வருகு சொல்லலாவது இல்லை,’ என்றபடி.
அவ்வர்ச்சிராதி கதியைப்பற்றிப் பேசுகின்ற-‘சூழ்விசும்பு அணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின்
இத்திருவாய்மொழியாகப் பெற்றது இல்லையே!’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
-நம்மாழ்வார் மங்களா சாசனப் பதிகம் இது –
( பல்லாண்டு என்று பரமேஷ்ட்டியை -என்று நிகமத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்தலால் அது அங்கு சென்று
பெற்ற பேறு என்பதில் சங்கை இல்லையே -ஆகையால் இதுவும் சூழ் விசும்புக்கு அப்புறம் இருக்க வேண்டும் என்றார் ஆயிற்று )

பெருமாளும் இளைய பெருமாளுமான இருப்பிலே பிராட்டிக்குப் பிரிவு உண்டாக, மஹாராஜரையும் சேனைகளையும் கூட்டிக்கொண்டு
சென்று பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்து அவளோடே கூடினாற்போலே, போலி கண்டு இவர் மயங்கின இழவு எல்லாம் போகும்படி,
நித்திய விபூதியையும் லீலா விபூதியையுமுடையனாய் இருக்கின்ற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து காட்டிக் கொடுத்து,
‘கண்டீரே நாம் இருக்கின்றபடி?
இந்த ஐசுவரியங்களெல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டுவது, நீர் உம்முடைய வாயாலே ஒரு சொல்லுச் சொன்னால் காணும்,’ என்று
இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்கு மங்களாசாசனம் பண்ணி,
‘இவ்வுலகம் பரமபதம் என்னும் இரண்டு உலகங்களிலும் என்னோடு ஒப்பார் இலர்,’ என்று மிக்க பிரீதியையுடையவர் ஆகிறார்.

ஆழ்வார் விடாய் கொண்டமைக்குப் பெருமாளைத் திருஷ்டாந்தமாக்கினாற்போலே, விடாய் தீர்ந்தமைக்கும் பெருமாளைத்
திருஷ்டாந்தமாக்குகிறார் இங்கு. என்றது, இச் சேர்த்தியைச் சேர்த்து வைக்கின்றவர்கள் கூட இருக்கச் செய்தே பிரிகையும்,
போலி கண்டு மயங்குகையும், தக்க பரிகரத்தைக்கொண்டு பரிஹரிக்கையும்,
இரண்டு இடங்களிலும் உண்டு ஆகையாலே, திருஷ்டாந்த தார்ஷ்டாந்திக பாவத்தைத் தெரிவித்தபடி.
அங்கு, அச்சேர்த்திக்குக் கடகர் இளைய பெருமாள்; இங்கு, நித்தியசூரிகள்;
அங்கு மிருகத்தின் போலி; இங்கு அவன் போலி.
அங்குப் பரிகரம் மஹாராஜர் முதலானோர்;
இங்கு யாதோர் ஆகாரத்தைக் கண்டு மயங்கினார், அந்த ஆகாரத்தோடு கூடிய வேஷத்தைக் காட்டுகை.
அங்குப் பிராட்டியோடு கூடிச் சந்தோஷித்தாற்போலே இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க,
இவரும் சந்தோஷித்து மங்களாசாசனம் பண்ணுகிறார்-என்க.

நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால்’ ஆக மயங்கின மயக்கத்திற்கு வான மாமலையான தன்னைக் காட்டிக்கொடுத்தான்;
‘நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்று’ மயங்கி ஓடினதற்கு,
‘தூவி அம்புள் உடையான் அடல் ஆழி அம்மான்’ என்கிற நித்திய புருஷர்களைக் காட்டிக்கொடுத்தான்;
‘செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈது’ என்றதற்கு,
‘மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறைமார்பினன்’ என்று தானும் பெரிய பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்;
‘திருவுடை மன்னரைக் காணில் திருமால்’ என்றதற்கு, உபய விபூதிகளையுடையனான தன் ஐசுவரியத்தைக் காட்டிக்கொடுத்தான்;
‘விரும்பிப் பகவரைக் காணில், வியலிடம் உண்டான்’ என்று சிறிய ஆனந்தமுடையாரைக் கண்டு மயங்கினவர்க்கு,
‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்’ என்று ஆனந்தமயனாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்;
பிறர் வாயால் ‘என் செய்கேன்’ என்றதைத் தவிர்த்து, தம் திருவாயாலே ‘என்ன குறை எழுமையுமே’ என்னப் பண்ணினான்.

அஞ்சாம் திருவாய் மொழியில் –
கீழ் சத்ருசமாயும் சம்பந்தியாயும் உள்ள வஸ்துக்களுடைய தர்சனத்தாலே பிரமிக்கும் படி இவர்க்கு உண்டான
ஆர்த்தி அதிசயம் தீருகைக்காக சர்வேஸ்வரன் தன்னுடைய நிரதிசய விபூதி வைலக்ஷண்யத்தையும்
மஹா உதார சேஷ்டிதங்களையும் அனுபவிக்க அனுபவித்து ப்ரீதராய் –
அவனுடைய அகில லோக நிர்வாஹகத்வத்தையும்
அதுக்கு அடியான லஷ்மீ பதித்தவத்தையும்
உபய ஸித்தமான ஆனந்தாதி குண யோகத்தையும்
இக்குணாதி போக்தாக்களை காத்தூட்டும் வாஹன ஆயுதவாஹத்தையும்
போக அனுகுணமான ஞான ப்ரேமாதி பிரதத்வத்தையும்
அஸ் கலித ஞானர்க்கு அநு பாவ் யமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
இந்த போக்யதைக்கு சர்வ அவஸ்தையிலும் ஓத்தாரும் மிக்காரும் இல்லாத மேன்மையையும்
அதுக்கு உபபாதகமான விபூதி திவ்ய யோகத்தையும்
தத் விஷயமான வ்யாப்த்யாதிகளையும்
வ்யாப்ய ரக்ஷண அர்த்தமான தர்சனீய வியாபாரங்களையும்
அனுசந்தித்து -இப்படி பரி பூர்ணனான சர்வேஸ்வரனை அனுபவித்துப் பிறந்த ஹர்ஷ அதிசயத்தாலே ஸூரிகளைப் போலே
வாய் விட்டுப் புகழ்ந்து இந்தளத்திலே தாமரை போலே இங்கே இந்த அனுபவம் கிடைக்கையாலே
எனக்கு சத்ருசம் உண்டோ என்று தமக்குப் பிறந்த செருக்கை அருளிச் செய்கிறார் –

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?
–4-5-1-

வீற்றிருந்து-தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது-ஏழுலகும் தனிக்கோல் செல்ல, மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.-நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு; இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது, கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி, ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.வீவு இல் சீர் –அழிவில்லாத கல்யாண குணங்களைச் சொல்லுதல்; நித்தியமான பரமபதத்தைச் சொல்லுதல்.

வெம் மா பிளந்தான் தன்னை –-‘ஆற்றல் மிக்கு ஆளும்படி சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி-இவர்களோடே ஒரே சாதியையுடையனாய் வந்து அவதரித்து, இவர்கள் செய்யும் பரிபவங்களை அடையப் பொறுத்து, களை பிடுங்கிக் காக்கும்படியைச் சொல்லுகிறது-வெம் மா பிளந்தான்றன்னை’ என்பதற்கு, ‘ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் யார்?’ என்றால்,-இன்னான் என்கிறது என்று அம்மங்கி அம்மாள் நிர்வஹிப்பர்.-கேசி வாயை அங்காந்துகொண்டு வந்த போது, சிறு குழந்தைகள் துவாரம் கண்ட இடங்களிலே கையை நீட்டுமாறு போலே, இவன் பேதைமையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்;
முன்பு இல்லாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை பூரித்துக் கொடுத்தது; கையைத் திரும்ப வாங்கினான்; அவன் இருபிளவாய் விழுந்தான்

போற்றி – சொரூபத்திற்குத் தக்கனவாய் அன்றோ பரிவுகள் இருப்பன? கேசி பட்டுப் போகச் செய்தேயும் சமகாலத்திற் போலே வயிறு எரிந்து படுகிறாராயிற்று இவர்.-கைகள் ஆரத் தொழுது –‘வைகுந்தம் என்று கைகாட்டும்’ என்று வெற்று ஆகாசத்தைப் பற்றித் தொழுத கைகளின் விடாய் தீர்ந்து வயிறு நிறையும்படி தொழுது.
சொல் மாலைகள் –-வாடாத மாலைகள். என்றது, ‘அநசூயை கொடுத்த மாலை போலே செவ்வி அழியாத மாலைகள்’ என்றபடி.
ஏற்ற –-‘ஆராதனத்தைத் தாமாகவே தலையாலே ஏற்றுக்கொள்ளுகிறார்’ என்கிறபடியே, திருக்குழலிலே ஏற்றும்படியாக.
நோற்றேற்கு –-இவர் இப்போது நோற்றாராகச் சொல்லுகிறது,
1- ‘மண்ணையிருந்து துழாவி’ என்னும் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட விடாயை;
முன் கணத்திலே நிகழ்வது ஒன்றேயன்றோ ஒன்றுக்கு ஏதுவாவது?
அன்றிக்கே,2-‘பகவானுடைய கிருபையை’ என்னலுமாம்.
கிருபை என்றுமே இருந்தாலும்–பூர்வ ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது வாகும்–
அதனால் விடாய்த்தது அன்றோ என்கிறார் –

இனி என்ன குறை –பரமபதத்திற்குச் சென்றாலும் தொண்டு செய்தலாலேயாகில் சொரூபம்;-அதனை இங்கே பெற்ற தனக்கு ஒரு குறை உண்டோ?
‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில்,
எழுமையுமே –முடிய நிற்குமவற்றை எவ்வேழாகச் சொல்லக் கடவதன்றோ?-என்றும் ஓக்க சப்த சப்த ச சப்த ச –தச பூர்வாந்த சாபரான் -என்றது இறே-

————-

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.
–4-5-2-

அவளோடே கூடக் கேட்பித்து அச்சேர்த்தியிலே மங்களா சாசனம் செய்தார் இவர்;
மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை மார்பினனை ஆயிற்றுக் கவி பாடிற்று. மலர்மேல் உறைவாள் –-செவ்வித்தாமரை மலரின் வாசனை வடிவு எடுத்தாற்போன்று பிறந்தவள். அவயவ சோபை அது; சௌகுமார்யம் இது.
உறை மார்பினன் –பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வசிக்கும் மார்வு படைத்தவன். ‘ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் பெருமாளைக் கை பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினையாதது போன்று, இவளும் இவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு தாமரையை நினையாதவள்’ என்பார்,‘உறை மார்பினன்’ என்கிறார்.

மைப்படி மேனி’ என்கிறபடியே, சர்வேசுவரனுடைய கரிய மேனியை ஒருபடியே பார்த்துக் கொண்டிருப்பாளே அன்றோ இவள்? இவள் திருக்கண்களிலே அவன் திருமேனியின் நிறம் ஊறி இவள் மைய கண்ணாளாயிருக்கும்;
‘செய்யாள் திருமார்வினில் சேர் திருமால்’–9-4-1- என்கிறபடியே, மார்பில் இருக்கின்ற
அவளை ஒருபடியே பார்த்துக் கொண்டிருக்கையாலே அவள் திருமேனியில் சிவப்பு ஊறி இவன் தாமரைக் கண்ணனாய் இருக்கும்; ‘இருவர் படியும் இருவர் கண்களிலே காணலாம்;
அவன் படி இவள் கண்களிலே காணலாம்; இவள் படி அவன் கண்களிலே காணலாம். இவர்களுடைய கண் கலவி இருக்கும்படியிறே இது.-இவர் கவி விண்ணப்பம் செய்யக் கேட்டு அத்தாலே வந்த பிரீதிக்குப் போக்கு விட்டு அவன் பிராட்டியைப் பார்க்க, அவள்,அந்ய பரதை பண்ணாமல் –‘வேறு ஒன்றிலே நோக்கில்லாமல் -என்னைப் பார்க்காமல் –அத்தைக் கேட்கலாகாதோ?’ என்று சொல்ல, இப்படிக் காணும் கேட்டது.-விண்ணோர் பெருமான் தன்னை –பெரிய பிராட்டியாரும் அவனும் கூடவிருக்க நித்தியசூரிகள் ஓலக்கங்கொடுக்க
ஆயிற்றுக் கவி கேட்பித்தது,’ என்றவாறு.

‘மொய்’ என்பது செறிவைச் சொல்லுதல்; அல்லது, பெருமையைச் சொல்லுதல்-கேட்டார் கட்டு உண்ணும்படி இசை மிகுந்து இருப்பனவாதலின், ‘இசை மாலைகள்’ என்கிறது.
நினைத்து அன்று போலே காணும் ஏத்திற்று; ஆதலால், ‘ஏத்தி உள்ளப் பெற்றேன்’ என்கிறது.
இதனால், ‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்கிற நியதி இல்லையாயிற்று இவர் பக்கல் என்கிறது.-‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் உறுப்புகள் விடாய்த்தாற்போலே, இங்கும் தனித்தனியேஆயிற்று அனுபவிக்கிறது’

வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,
தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது
பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர். பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.-வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.

————

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே
.–4-5-3-

அச்சுதன்-இவ்வானந்தத்திற்கு ஒருகாலும் அழிவு இல்லை என்னுமிடம் திருப்பெயரே சொல்லுகிறதே அன்றோ?மலர்க்கண்ணன் –ஆனந்தத்தை இயல்பாகவேயுடையவன் என்னுமிடத்தைத் திருக்கண்கள் தாமே கோள் சொல்லிக் கொடுப்பனவாம்.மேவி – ஆனந்தத்தில் சாம்யாபத்தி உண்டே -அவனுக்கு இயல்பிலே அமைந்தது; எனக்கு அவனை அடைந்த காரணத்தால் வந்தது; அவனுடைய ஆனந்தத்திற்கு அடி இல்லை;-என்னுடைய ஆனந்தத்திற்கு அடி உண்டு.அவனுடைய ஆனந்தம் தான் தோன்றி-என்னுடைய ஆனந்தம் அபிஜாதம்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி –

———–

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே
.–4-5-4-

மேவி நின்று தொழுவார் –கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே ,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,
அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,
‘இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி. கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –மேவும் பிரான் –இவன் வேறு பிரயோஜனங்களைக் கருதாதவனாய்க் கிட்டினவாறே சர்வேசுவரனும் வேறு பிரயோஜனத்தைக் கருதாதவனாய்க் கிட்டுவானே அன்றோ? நடுவில் வினைகளுக்கு ஒதுங்க இடமில்லாமையாலே அழிந்து போகும்;

அம் புள்’ என்றதனால், ‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின தழும்பினாலே சோபிக்கிறவன்’-அடல் ஆழி – ‘பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று
அச்சங்கொண்டிருப்பவன் ஆகையாலே, எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய் இருப்பவன் இவர் நண்ணியன்று ஏத்தியது; ஏத்தியாயிற்று நண்ணியது.-‘உலகமே உருவமாய் இருக்கின்ற ஒருவன், தன் சரீரத்திலே ஒன்றைப் பெறாப்பேறு-

———–

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே
.–4-5-5-

ஆற்ற –அமைய : பொறுக்கப் பொறுக்க என்றது, ‘குளப்படியிலே கடலை மடுத்தாற் போலே யன்றிக்கே, பொறுக்கப் பொறுக்க ஆயிற்றுத் தன் கல்யாண குணங்களை அனுபவிப்பித்தது’-கிரமத்தாலே தன்னுடைய குணங்களையும் செயல்களையும் இவரை அனுபவிப்பித்தபடி.- என்றபடி. ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றதன் பின்
‘வீற்றிருந்து ஏழ் உலகு’ என்ற திருவாய்மொழியின் அனுபவத்தை அனுபவிப்பித்தானாகில்,
நான் உளேன் ஆகேன் ஆன்றோ?’ என்கிறார்-தான் சர்வேசுவரனாய் இருந்து வைத்தும், தன் படிகளை அனுபவிக்கும் நித்திய ஸூரிகளையுடையனாய் இருந்து வைத்தும் என்னை அனுபவிப்பித்தான்,’ -அவன் செய்த உபகாரத்திலே தோற்று ஏத்தினார்; அது திருவாய்மொழியாய்த் தலைக்கட்டிற்று,’-வினைகளும் வினைகளின் பயனான பிறவியும், காற்றினைக்காட்டிலும் விரைந்து எரிந்து சாம்பல் ஆயின.-வினை நோய்கள் கரியும்படி-மாற்ற மாலை-

————–

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?
–4-5-6-

‘இடும்’ என்பதனைக் கண்ணுக்கு அடைமொழியாக்குவர் வியாக்கியாதா.
அதனைப் பெருமானுக்கு அடைமொழியாக்குவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.‘இதற்கு முன்பு பெறாததாய் இனிப் பெற வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.-கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-திருமேனியில் கறுத்த நிறத்தாலே வந்த அழகுக்கு மேலே அதற்குப் பரபாகமான திருக்கண்களிலே அஞ்சனத்தை இடுகின்ற’-கரி’ என்று யானையாய், அத்தால் நினைக்கிறது குவலயாபீடமாய், குவலயாபீடமானது,
அம்மேனி மிசை –அழகிய திருமேனியிலே, வெளிய – சீற. ‘நீறு சிறிதே இடும் – பொடியாக்கும்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர்.

ஈஸ்வரோஹம்-‘ஈசுவரன் நான்’ என்று இருக்கிற இவ்வுலகத்திலே அடிமை இனிக்கப்பெற்று,
சொரூபத்திற்குத் தகுதியாக வாசிகமான அடிமை செய்யப்பெற்று,‘வினை நோய்கள் கரிய’ என்கிறபடியே, விரோதிகள் கழியப்பெற்று இருக்கிற எனக்கு.-இன்று தொட்டும் இனி என்றுமே – அடிமையில் இழிந்த இன்று தொடங்கி இனி மேல் உள்ள காலம் எல்லாம் அரியது இல்லை.-பின்பு ‘தீர்ப்பாரை யாம் இனி’ என்ற திருவாய்மொழியாவது அறியாமலே அன்றோ இவர் இவ்வார்த்தை சொல்லுகிறது?-பேற்றில் இழவு தோற்றாத படியான விஷயம் இறே

——–

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?
–4-5-7-

“அரியது உண்டோ எனக்கு?’ என்கிற இந்த நிறைவு உமக்கு எத்தாலே வந்தது?’ என்ன
‘பகவானுடைய கிருபையாலே வந்தது,’ என்கிறார்.

‘தன் தனக்கு இன்றி நின்றானை’ என்பதற்கு, எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே, ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை: ‘தன் தனக்கு என்றது, தானான தனக்கு என்றபடி. ஒரு படிக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கிறது பரத்துவத்தில் அன்று; ‘என்னை நான் மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்கிறபடியே, அவதரித்து மனிச்சு ஏறிட்டுக் கொண்டு நிற்கிற நிலையிலே’ என்றாராம்.

சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் – சொன்மாலைகள் நன்று சூட்டும்படியான பாக்கியத்தை அடையப்பெற்றோம். பரத்துவத்தில் குணங்கள் உளவாம் தன்மை மாத்திரமே உள்ளது,-அவதரித்த இடத்தே அன்றோ அவை பிரகாசிப்பன? ‘இப்படி விஷயம் நிறைவுற்றிருந்தால் ‘பேச ஒண்ணாது’ என்று மீளுகை அன்றிக்கே,
இந்நிலையிலே விளாக்குலை கொண்டு பேசும்படியானேன்,’ என்பார், ‘நன்று சூட்டும்’ என்கிறார்.-இவர் இப்போது ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை. தமக்குப் பலிக்கையாலும், அவனுக்குத் தவிர ஒண்ணாதாகையாலும், விதி’ என்கிறார். ‘விதி சூழ்ந்ததால்’ -திருவாய்.2. 7 : 6.-என்றாரேயன்றோ முன்னரும்?

கிருபயா பரிபாலயது –‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர்
ஆகையாலே நினைத்த காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்;-அதற்கு மேலே கிருபையும் விளைந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்? ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
(பெருமானுக்கு கிருபை விளையும் பூமி -பூமி பிராட்டி -சீதையால் – கிருபை விளைந்தது
எடுத்த கார்யம் செயல் முடிக்காமல் அன்றோ கிருபை தடுத்தது இங்கு
 )நமக்கு ஒரு குறை உண்டாகை யாகிறது கிருபையை பரிச்சின்னம் ஆக்குகை இறே-

————

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?
–4-5-8-

இன்று தன் திருவடிகளைப் பற்றிய நமக்கும்.-பிறந்து இறந்து பிறிவிகளிலே உழன்று திரிகின்றவர்கட்கும் இவ்வருகாயிருக்கிற நமக்கும்;-ரூப குணத்தாலும் ஆத்தும குணத்தாலும் நிறைந்திருக்கிற பெரிய பிராட்டியார்க்கும். மலரில் மணத்தை வகுத்தாற் போலே இருந்துள்ள மிருதுத் தன்மையையும் இனிமையையும் உடையவளாதலின்,
‘பூவின் மிசை நங்கை’ என்கிறது.‘இத்தலை நிறைவு இன்றியே இருக்கிறாப் போலே யாயிற்று அத்தலை குறைவு அற்றிருக்கிறபடி’ என்பார், ‘நங்கை’ என்கிறார்.இன்பனை 
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.-தாமே இவனுக்கு பரிகரம் என்ற நினைவால் அர்ஜுனனுக்கு இவன் தான் முன்னே இன்று பார்த்த சாரதி பெயர் வாங்கிக் கொண்டார் –-அன்று ஈன்ற கன்றின் மேல் உள்ள வாத்சல்ய அதிசயம் –

‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்;
‘இவன் புகுராவிடில் நாம் உளோம் ஆகோம்,’ என்கிறார் பெருமாள்;
‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க,
‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது,
‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்;
‘ராகவம் சரணம் கத:’-(சுக்ரீவம் நாதம் இச்சதி -வார்த்தைக்கு இந்த அர்த்தம் என்றபடி ) என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி
‘அங்ஙனமாயின், மஹாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலை குலையாதோ?’ எனின், ஆகையாலே அன்றோ
‘ஆநயைநம் ஹரி சிரேஷ்ட – வானரங்களுக்குத் தலைவனே!
இவனை அழைத்துக் கொண்டு வா’ என்று அவரை இடுவித்து அழைத்துக்கொள்ள வேண்டிற்று?

சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு –
அவனுடைய உபய விபூதிகளை உடைமையால் வந்த ஐசுவரியத்துக்கும் மிருதுத்தன்மைக்கும் தகுதியாம்படியான கவி பாட வல்ல எனக்கு.
இதற்கு, ‘சர்வேசுவரன்,ஆழ்வீர்! நம்மை ஒரு கவி சொல்லும்,’ என்றால்,
அப்போதே கவி சொல்லிச் சமையும்படியாக வல்ல எனக்கு,’-ஆசு கவித்துவம்- என்கிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி.
அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே,-சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை;
அவன் அங்கீகரித்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி,
‘நீர் ஒரு கவி சொல்லும்,’ என்றால் ‘பிரீதியாலே உடை குலைப்படாமல்
தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்று அருளிச்செய்வர்.-ஈஸ்வரன் விஷயீ கரித்து குளிர நோக்கினால் அவ் வழகிலே சுழி யாறு பட வேண்டி இறே இருப்பது

இனி யாவர் நிகர் அகல் வானத்தே 
பரமபதத்திலே தரித்து நின்று, ‘அஹமந்நம் அஹமந்நம் – நான் பரமாத்துமாவுக்கு இனியன், நான் பரமாத்துமாவுக்கு இனியன்’ என்னுமவர்கள் எனக்கு என் கொண்டார்? திரிபாத் விபூதியாய்ப் பரப்பை யுடைத்தாமத்தனையோ வேண்டுவது? – அகல் வானம் அது -நிகர் அற்றவன் அடியேனே-தெளிவிசும்பு ஆகையாலே அந்நிலந்தானே சொல்லுவிக்கும்;
இருள் தருமாஞாலமாகையாலே இந்நிலம் அதனைத் தவிர்ப்பிக்கும்;
‘சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்’-திருவிருத்தம், 79.– என்னக் கடவதன்றோ?

————–

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?
–4-5-9-

நித்தியசூரிகள் தாங்கள் அனுபவிக்கின்ற விஷயத்தில் இனிமையின் மிகுதியாலே வேறு ஒன்று அறியார்கள்;
யாரைக் கண்டால் கண் பார்க்காதோ புத்தி வேறு ஒன்றில் போகாதோ -சுருதி வாக்கியம் –
வேறு ஒரு பிரகாரம் போகாது என்று கொண்டு -ஆழ்வார் –
முத்தர்கள் ‘இந்தச் சரீரத்தை நினையாமலே எங்கும் சஞ்சரிக்கிறார்கள்’ என்கிறபடியே, இவ்வுலக வாழ்க்கையை நினையாமல்
நிற்பர்களாகையாலே, அவர்களும் நித்தியசூரிகளோடு ஒப்பர்கள்;
இங்குள்ள பராசரர் வியாசர் முதலிய முனி புங்கவர்கள் ஒரோ துறையிலே மண்டியிருப்பர்கள்; ‘எங்ஙனே?’ என்னில்,
‘ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ ராமாவதாரமல்லது அறியாதே இருக்கும்.
ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ வேதவியாச பகவானும் கிருஷ்ணாவதாரமல்லது அறியார்கள்;-கிருஷ்ண த்வைபாயனர் —
ஸ்ரீ சௌனக பகவான் அர்ச்சாவதாரத்திலே ஈடுபட்டவனாய் இருக்கும்;
அங்ஙனன்றிக்கே, சர்வேசுவரனை எல்லா நிலைகளிலும் புக்குக் கவி பாடப்பெற்ற என்னோடு ஒப்பார் உளரோ?’ என்கிறார்.

‘ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த’ என்கிறபடியே,
தன்னுடைய பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கிக்கொண்டாயிற்று வந்து அவதரிப்பது,’ என்கிறது. என்றது,
‘தேவர்களுக்கும் தேவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்தவனாய் வந்து அவதரித்தாய்,’ என்று சொல்லும்படியாயிற்று இருந்தது என்றபடி.

‘அஞ்சலி செய்தவராய் வணக்கத்துடன் இருக்கின்ற’ என்கிற இளைய பெருமாளைப் போலே, பகவானுடைய அனுபவத்தால் வந்த மகிழ்ச்சியாலே சரீரத்தை வளைத்துக் கொண்டிருப்பவன் ஆதலின், ‘கூனல் சங்கம்’ என்கிறது. என்றது, ‘வாயது கையதுவாக அனுபவிக்கின்றவன் அன்றோ?’ என்றபடி.
‘உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்; கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே;
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்; பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே!

லீலா விபூதியும் நித்திய விபூதியுமாகிய இரு வகைப்பட்ட உலகங்களும்வந்து ஒதுங்கினாலும், பின்னையும் கையே விஞ்சி இருக்குமாதலின் ‘தடக்கை’ என்கிறது.
குடமாடியை – எங்கும் ஒரே தன்மையாய்ப் பரந்து நின்றாற்போலே, ஓர் ஊராகக் காணும்படி குடக்கூத்து ஆடினபடி.-குடக்கூத்தினைக் கூறியது, எல்லாச் செயல்களுக்கும் உபலக்ஷணம்
வானம் கோனை –ஓர் ஊர் அளவன்றிக்கே ஒரு நாட்டுக்காகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறபடி-கவி சொல்ல வல்லேற்கு – இப்படி இருக்கிறவனை எங்கும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு.-இனி மாறு உண்டே –அகல்வானம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டுமோ? ‘உபய விபூதியிலும் எதிரில்லை-

——————

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே
.–4-5-10-

கிடந்தும் -கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக,-ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.-மணம் கூடியும் 
பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.- ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது-எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’

தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது.
அன்றிக்கே.-இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று,-லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே – பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல். கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?

அடியார்க்கு இன்பமாரியே –சர்வேசுவரனைக் கவி பாடப் பெற்ற இதுவேயோ? இது, வைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கக் கூடியதாகவும் ஆயிற்று.
இன்பத்தையுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது.
‘இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை.-‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?

————–

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே
–4-5-11-

‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே, நித்திய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு முன்பே நித்திய சமுசாரிகளுக்கும் முகங்கொடுக்கும் சீலமுடையவனது தன்மையைச் சொல்லிற்றாகையாலே, சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று.திருநகரிக்கு ஸஹ்யம் திருமலையாகையாலே, திருமலை மாரி மாறாதாப் போலே திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.ஆறாக் கயமாகையாலே -பொற்றாமரை கயமாகையாலே –பிராட்டியுடைய ஆசனமாகிய தாமரை வேரி மாறாது.(வேரி பரிமளம் -கீழே பன்னீராயிரத்தில் மது அர்த்தம்-மாரி-வாரி -வேரி-மூன்றும் மாறாது –

‘இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் கருணையின் மிகுதியாலே, –
பிரசாத வெள்ளம் திருக்கண்களில் வழிய பிரவாஹமாக வெளியிட – சர்வேசுவரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி,‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, பலம் கொடுக்கும்.
இத்திருவாய்மொழி கற்றாருடைய, பகவானுடைய அனுபவத்திற்கு விரோதியான
எல்லாத்தடைகளையும் ஈண்டு ‘வினை’ என்கிறது. தீர்க்கும் – போக்குவாள்.
இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’ என்கை.-

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிஜன விசிஷ்டனாய்க் கொண்டு பரமபதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும் ஸ்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள அத்தைக் கண்டு சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால் பண்ணுகிற மங்களா சாசனத்தை இங்கேயே இருந்து அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி க்ருத்க்ருத்யராய்
உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்-சென்ற துயர் -தீர்ந்து – மாறன் -நன்கு -உகந்து -வீறு -உரைத்தான் –
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய் ப்ரீதி பிரகர்ஷத்தாலே தம்முடைய பெருமையை தாமே பேசினார் -ஆயிற்று-

—-=—

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -20-சின்மொழி நோயோ கழி பெரும் தெய்வம்–

February 14, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

வெறி விலக்கு துறை –-மேஹ சந்தர்சனத்திலே தோழியும் தானும் மோஹித்துக் கிடக்க-
இத் தசையைக் கண்டு சோகித்து இருக்கிற திருத் தாயார் முன்னே-தேவதாந்த்ர ஸ்பர்ச முடையார் புகுந்து பரிஹாரத்திலே பிரவ்ருத்தராக-அபிஜாதையுமாய் இவள் பிரபாவத்தையும் அறிந்து இருப்பாள் ஒரு தோழி கருமுக மாலையை (செவ்வி பெருக்க ) நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரைப் போலே –இவளுக்கு பரிஹாரம் என்று தொடங்கி விநாசத்தையே உத்பத்தியா நின்றி கோள்-என்று
அத்தை நிஷேதித்திக் கொண்டு – இவளுடைய நோயையும் (பக்தியையும்) இந் நோய்க்கு நிதானத்தையும் இதுக்கு பரிகாரத்தையும் சொல்லுகிறாள் –(நம்பியை –என் சொல்லி மறப்பனோ என்று இருக்கும் இவளை எத்தால் மறக்க பண்ணுவீர்கள் )

வெறி விலக்கு துறை பாசுரம்-தீர்ப்பாரை யாம் இனி -திருவாய் மொழி பாசுரம் போல் உலகமுண்ட பெரு வாயனின் திரு நாமங்களை செவிப்படுமாறு சொல்வதும் அவன் திருத்துழாயைத் தருவதும் பரிஹாரம் இது தெய்வ நல் நோய் -என்கிறாள் தோழி

இப்படி நோவு படுகிற இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கைக்காக-ஈஸ்வரன் அநந்ய ஸாத்யன் -என்று அறியாதே இவர் பக்கல் பரிவாலே உண்டான கலக்கத்தாலே
ஸர்வான் தேவான் நமஸ்யந்தி -அயோத்யா காண்டம் -2-52-என்னுமா போலேயும்
நாய்ச்சியார் காமன் காலிலே விழுந்தால் போலேயும்
பகவத் விபூதி பூதரான தேவதாந்தர அனுவர்த்தனத்தாலே யாகிலும் இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கலாமோ என்று ப்ரவர்த்தித்த பரிவரைக் குறித்து
இவருடைய ப்ரக்ருதி அறிந்து இருக்கும் ஸ ப்ரஹ்மசாரியான ஸூஹ்ருத்துக்கள் விலக்கின பாசுரத்தை
தலை மகள் ஈடுபாட்டுக்கு நிதானம் அறியாதே வெறி யாடலுற்ற தாயாரைக் குறித்து இவள் பிரகிருதி அறிந்த தோழி வெறி விலக்கின பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை -ஈடு-அவதாரிகை
காலமும் போய் மர முதிர்ந்து மேகங்களுமாகக் கை வளர்ந்து நாயகனும் வாராமையாலே இவள் மோஹங்கதையாக இத்தைக் கண்ட தாயார் தொடக்கமான பந்து வர்க்கமும் போய் அறிவு இழந்து
இவளுக்கு இது ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாக நினைத்து-பாஹ்ய ஆகமங்களைத் த்ருஷ்டியாகக் கொண்டு தேவதாந்தர ஸ்பர்சமுடையாரை சிகித் சகரராய்க் கொண்டு சிகிச் ஸஹையிலே இழிய இவள் பிரக்ருதியை அறிந்த தோழி யானவள்-இவர்கள் இவளை இழக்கும்படி வ்யாபரியா நின்றார்கள் -அவன் வந்திலனேயாகிலும் நாம் இவள் சத்தியை நோக்கி இட்டு வைப்போம் என்று பார்த்து வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து -திருவாய் -4-6-8-என்கிறபடியே வேதத்தைத் த்ருஷ்டியாகக் கொண்டு வேத தனரைத் தேசிகராய்க் கொண்டு வேதாந்த வேத்யமான பரதத்வம் அடியாக வந்தது என்று புத்தி பண்ணி இக்குடிக்கு அனுரூபமாகப் பரிஹரிக்கப் பாருங்கோள் என்று பரிஹாரத்தைச் சொல்லி இவள் வெறி யாட்டத்தை விலக்குகிறாள்

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே
–20–துறையடைவு -வெறி விலக்கு-

திசைக்கின்றதே யிவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்காடும் இளந்தெய்வம் அன்றிது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றேயில் பெறுமிது காண்மினே-4–6-2–

இது காண் மின் அன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற்கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவளுற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே -4–6-3

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—36-கலந்து பிரிந்த தலைமகள் அறிவு அழிவு கண்டு கலங்கி பரிவின் கனத்தாலே -தேவதாந்திர பரையாய் பிரதிபன்ன பாஷிணியான கட்டுவிச்சி பாசுரம் கொண்டு
வெறி யாட்டாலே பரிஹரிக்க தேடுகிற தாய்மாரை நோக்கி-இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள் நோயின் நிதானத்தை நிரூபணத்தாலே அறிந்தாளாய்க் கொண்டு கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனைக் கொண்டே பரிஹரிக்கும் அது ஒழிய நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்கும் தத் சம்பந்தி ஸ்பர்சத்துக்கும் தேர் பாகனாரான வண் துவாராபதி மன்னனை ஆஸ்ரயித்து மாயன் தமர் அடி நீர் கொண்டு அணியுங்கோள் என்று வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிற தீர்ப்பாரை யாமினி — யில் தாத்பர்யத்தை தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று -(மயங்கின நிலையிலும்) செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் – செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-

சின்மொழி –
சொல்லிற்று சொல்ல மாட்டாத அளவு –சப்த அவசேஷை -என்னவுமாம் – பேசும் பருவமே இல்லாத போது பெற்ற ஸஹஜ பக்தி தானே இவரது–அங்கனே யாகில்-இத் தசை கூடினபடி எங்கனே என்னில்-
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூஸ்நிக்த -போலே –இளையவள் மொழி இதுவரை மேல் இளைத்து -சிதிலமான இவள் மொழி-சின் மொழி -என்றது முக்தை-இம் முக்த்யையை விதக்தை யாக்கும் போது-ஒரு விதக்தன் வேண்டாவோ என்கிறது-சத்தா மாத்திரம் என்னும் படியான இவளை உண்டாக்கும் போது ஒரு சர்வ சக்தி வேண்டாவோ –நோயோ –நோய் ஓ –பரிஹாரத்துக்கு புகுந்தவள் -நோயைக் கொண்டு கிடக்கப் பெறாதே இந் நோய்க்கு பரிஹாரம் சொல்ல இருப்பதே என்கிறாள் –இவள் பருவம் அளவு அன்று –
கிட்டி இந்நோய் கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய் –பகவத் விஸ்லேஷத்திலே தரியாமை ஸ்வரூபமாய் இருந்த படி

கழி பெருந்தெய்வம்–
கழிய மிக்க பெரும் தெய்வம் –
அவ் வருகு இல்லாத தெய்வம் –பதிம் விஸ்வஸ்ய-என்றும்-
பதிம் பதீனம் -என்றும் தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்-என்றும் – அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்-என்றும்-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் – உபபாதிக்கிற பிரமாணங்களுக்கும் அவ்வருகாய் இருக்கை-

இன்னஇந் நோய் இது என்று –இந்நோயும்-இந்நோய்க்கு நிதானமும் இன்னது என்று–இன் மொழி –
1-அர்த்த ரஹிதமான மொழி –2-கேட்கும் இளந்தெய்வம் அன்று இது –தனக்கு இல்லாததை யுண்டாக்கிக் செல்லப் புக்கால் கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று இது கைக்கூலி கொடுத்து கவி பாடுவித்திக் கொள்ளும் தேவதைகள் அன்று-3-இன் மொழி –வாசகத்துக்கு வாஸ்யம் போராது-புறம்பு – பகவத் விஷயத்தில் வந்தால் வாஸ்யத்துக்குத் தக்க வாசக சப்தம் போராது –

வேல! நில் நீ –
தன் காரியத்தை நிஷேதிக்கப் புக்கவாறே-பெற்றது உடலாக க்ரஹிப்போம் என்று பதறினான் –
இங்கே புகுராதே கொள்–எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம் -என்கிறாள் –கூராழி வெண் சங்கு ஏந்தி -என்று சொல்லுகிறபடியே கையும் திருவாழியுமாக காண வேண்டி இருக்கிற இடத்தே நீ கையும் வேலுமாகத் தோற்றுவதே-என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் !–-அம்மனைமீர் என்று சம்போதித்து நான் சொல்லுகிற வார்த்தையை கேளுங்கோள் என்கிறாள்

புத்ரகா இதி ஹோவாச –(சுக்ரன் பிரம சாபம்தீர்க்க வந்த பித்ருக்களை -வயது மூத்து இருந்தாலும் -சிஷ்யர் என்றால் போல் ) சிஷ்யர்களை புத்திரர்களை சொல்லுமா போல் அன்றியே அம்மனைமீர் என்பான் என் என்னில்-இவ்வர்த்தம் இவர்களுக்கு அபூர்வம் இல்லாமை –(பகவத் பிரபாவம் ஆழ்வார் பிரபாவம் அறிந்தவர்கள் தானே-அறிந்தவர்களே யானாலும் இவளது ஆற்றாமை விஞ்சி இருக்கும் காலத்திலேயே கலங்கி அன்றோ இருப்பார்கள் ) தாங்களே இவ் வர்த்தத்திலே தேசிகராய் இருக்கச் செய்தே-வியதிரேகத்திலே இவள் கலங்கின கலக்கம் கண்டு கலங்கின படி-உலகு ஏழும் உண்டான் -சொல் மொழி-பிரளயம் முதலிய ஆபத்து வந்தால் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கும்
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்லு
–ஜகத்துக்காக வரும் நோயைப் பரிஹரிக்குமவன் –
இவளுடைய நோயைப் பரிஹரிக்கவே -ஜகத்தை அடைய பரிஹரித்தாம் இறே-ஜகத்துக்காக உண்டான நோய் இவள் ஒருத்திக்குமே உண்டான படியால்

மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –
அவன் தோளில் இட்ட அழகிய திருத் துழாயைக் கொண்டு இவள் மேல் ஸ்பர்சிப்பது–சொல் மொழி என்று உப ஜீவிக்கும் மருந்தும் –தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று-மேல் பூசும் மருந்தும் –தேவதாந்த்ர ஸ்பர்சமும் தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்–
பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது

சின் மொழி –
மித பாஷிணி -மழலைச் சொல் மிழற்றுபவள் -குளிர்ந்த மொழிகள்
பிறர் நன்மைக்காக பேசுவது அன்றி ஸ்வ கார்யார்த்தமாக மிக்குப் பேச அறியாதவள் –நோய் கழி பெரும் தெய்வம்-நோயோ -ஓ இரக்கம்-எம்பெருமானுக்கும் ஷூத்ர தேவதைக்கும் வாசி பர்வத பரம அணு போல் கழி பெரும் தெய்வம் -இளம் தெய்வம் ஷூத்ர தேவதாந்த்ர விஷயம் அடியாக வந்த நோய் அல்லவே-அர்த்த ரஹிதமான மொழி கேட்க்கும் இளம் தெய்வம் அன்று இது-தனக்கு இல்லாததை உண்டாகச் சொல்லப் புக்கால் கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று -கைக்கூலி கொடுத்துக் கவி பாடுவித்துக் கொள்ளும் தேவதைகள் அன்று -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்வேலன் என்றது –கையிலே வேலைக்கொண்டு ஆடுபவன்-வேல நில் நீ –தேவதாந்த்ர பரர் புகும் மாளிகை அன்று
கூராழி வெண் சங்கு ஏந்தி ஸேவை சாதிக்க வேண்டிய திரு மாளிகையில் நீ கையும் வேலுமாக நிற்பதே பாவீ ஒழிந்து போ என்கிறாள்-சூட்டுமின் –சஞ்சீவி மூலிகை உட் கொள்வது அன்றிக்கே சிரஸா வகிக்க வேண்டுமே –உள் மருந்து -செவி வழிய திரு நாமம் -பூச்சு மருந்து திருத் துழாய் சூடிக் கொள்வதுமொழி –ஏவல் ஒருமை வினை முற்று–உலகு எழும் உண்டானுடைய சொற்களை -திரு நாமங்களைச் சொல்லு –வேல நில் நீஉலகு எழும் உண்டான் சொல் மொழிஎன் அன்னைமீர் என் மொழி கேண்மின் மாலை யம் தண் துழாய் கொண்டு சூட்டுமின் என்று அன்வயித்து வேலனுக்கு கட்டளை விடுகிறாள்-ஆழ்வாரது தன்மையை அறிந்த அன்பர்கள் தேவதாந்த்ர பஜனத்தாலாவது ஆழ்வாருடைய ஆற்றாமையைத் தீர்க்க முயலும் ஞானிகளை விலக்குகிறார்கள்
சின்மொழி -பிறரது நன்மைக்காகவே பேசுமவள்

சின்மொழி நோயோ-வாய் விட்டு வார்த்தை சொல்லவும் மாட்டாத இவளுடைய நோய்--நோயின் முதிர்த்திக்கு ஈடுபட்ட படி-கழி பெருந்தெய்வம்-மிகவும் பெரிய ஈஸ்வரன் அடியாக வந்தது–இன்ன-இந்நோய் இது என்று-இந்த நோய் இப்படிப்பட்டது என்று ஸ்வரூப பிரகாரங்களைப் பரிச்சேதித்து-இன்மொழி கேட்கும்-இல்லாத மொழியைக் கேட்கப்படுவதான-இளந்தெய்வம் அன்று இது-இது அர்வாஸீன (தாழ்ந்த )தேவதை அன்று-வேல! நில் நீ-முருகனே -நீ வெறி யாடுகிற வேலனே -கடக்க நில்லு-என் மொழி கேண்மின்-இவள் பிரகிருதி அறிந்த என்னுடைய வார்த்தையை கேளுங்கோள்
ப்ரக்ருதி அறியாதே அசம்பாவிதத்தைச் சொல்லுகிற கட்டு விச்சி வேலன் தொடக்கமானவர் வார்த்தையைக் கேளாதே என்று கருத்து –என்னம்மனை மீர் !-மெய் சொல்லுகைக்கு அடியான பந்தமும்
ப்ரக்ருதி அனுகுணமாகப் பிரவர்த்திப்பிக்கும் வாத்சல்யத்தையும் யுடைய நீங்கள்-உலகு ஏழும் உண்டான் சொல் மொழி-ஸப்த லோகத்தையும் தனது வயிற்றிலே வைத்து நோக்கினவன் திரு நாமத்தைச் சொல்லுகை–மாலை யம் தண் யம் துழாய்-மாலா ரூபமாய் தர்ச நீயமுமாய்க் குளிர்ந்த திருத்துழாய்–கொண்டு சூட்டுமினே –-சொன்மொழியைக் கொண்டு திருத்துழாயைச் சூட்டுமின் என்று நேர் நிரல் நிறை-இந்நோய்க்கு பகவன் நாமமாகிற மந்த்ரத்தை உச்சரித்து ப்ரஸாதமாகிற பசு மருந்தை சிரஸா வஹியுங்கோள் என்றதாயிற்று –

இத்தால்
சின்மொழி நோய் –
என்று ஸ்வ காரியத்தில் ஸக்ருத் வசனமும் ஒழிய அறியாதவள் என்றபடி –நோயாவது-அனுபவ அபி நிவேச ரூபமான பக்தி யோகம்–கழி பெருந்தெய்வம் -என்று
ஸமாப்யதிக ரஹித ஸர்வேஸ்வரன் என்றபடி(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ )-இந்நோய் இது என்று-இத்யாதியாலே இந்த ஆர்த்தி ஏவம் விதம் என்று பரிச்சேதிக்கலாம் படி
அஸத்ய ப்ரலாப ஸ்ரவண விஷயமான அர்வாஸீன தேவதைகளுக்கு ஸாத்யம் அன்று
ஆகையாலே வேல நில் நீ -என்று தேவதாந்த்ர அந்வயம் நிற்கப்படுவதாக என்றபடி-பிரதமத்திலே பகவத் சம்பந்தம் உடையோருக்கு அவதானித்துக் கழிக்க வேண்டுவது தேவதாந்த்ர சம்பந்தம் ஓன்று இறே-பின்பு இறே ஆர்த்தி பரிஹாரமும் போக ஸித்தியும்–பகவத் சேஷத்வத்திலும் அந்நிய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் –என் மொழி கேண்மின் -என்று ஆர்த்தி பரிஹாரம் -ஆப்த உபதேச மூலம் என்றபடி-என்னம்மனை மீர் ! -என்று-பிதா புத்ர ஸம்வாதம் போலே மூப்பு இளமையால் வரும் தாரதம்யம் இன்றியே அறிவுடையார் உபதேஷ்டாக்கள் என்றபடி–உலகு ஏழும் உண்டான் சொல் மொழி -என்று
நாம உச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோகா -என்கிறபடியே ரக்ஷகனுடைய நாம உச்சாரணமே ஆர்த்தி சாந்தி கரம் என்றபடி–மாலை யம் தண் யம் துழாய் -என்று போக்ய வஸ்து ஸம்ஸ்லேஷமும் ஆஹ்லாத ஜனன முகத்தாலே ஆர்த்தியை சமிப்பிக்கும் என்றதாயிற்று–கொண்டு சூட்டுமினே –என்கையாலே போக்ய விஷயத்திலே தலை வைக்கப் பண்ணி-அத்தாலே-நோ பஜநம் ஸ்மரன் -சாந்தோக்யம் -8-12- என்கிறபடியே ஆர்த்தியை நினைக்கைக்கும் வழி இல்லை இறே-ஆகையால்
உபதேச மூலமான ஸப்த உச்சாரணமும் போக்ய அந்வயமும் விஸ்லேஷ ஆர்த்தி நிவர்த்தகம் என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளைவியாக்யானம்
சின் மொழி
-கீழ்ச் சொன்ன தசா விசேஷம் தன்னையே சொல்லிற்றாகவுமாம்
அன்றிக்கே சில கற்ப்பித்தவை சொல்லுமது ஒழியத் தானாக ஒன்றும் சொல்ல மாட்டாத படி யன்றோ இவள் பருவம் -இப் பாவைக்கு வந்தது அவனடியாக வேண்டாவோ-சின்மொழி நோயோ-இவள் கொண்ட நோய் அறிந்து ஸர்வேஸ்வரன் அடியாக வந்தது என்னுதல்–அன்றிக்கே –சின் மொழி நோய் கழி பெரும் தெய்வம் ஓ -என்னவுமாம்-இவள் இந்நோய் கொள்ள பாக்யம் பண்ணுவதே-இது என்ன ஆச்சார்யமோ-நாம் இந்நோயைக் கொள்ளாதே-இதுக்குப் பரிஹாரம் பண்ணுவதாகப் புகுந்து அவிக்ருதிகளாய் இருப்பதே என்று-ஓ என்னவுமாம்–கழி பெரும் தெய்வம்-இவளுடைய இந்நோய் கழியப் பெரிதான பரதேவதை அடியாக வந்தது-இந்த்ராதிகளில் காட்டில் ப்ரஹ்மாதிகள் யுடைய ஐஸ்வர்யத்துக்கு ஏற்றம் உண்டே யாகிலும் இருவருக்கும் ஷேத்ரஞ்ஞத்வம் அவிசிஷ்டம் இறே
சேஷித்வ ப்ரயுக்தமான இதர விஸஜாதியை யுள்ளது அவன் ஒருவனுக்கும் ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வ ஷேத்ரஞ்ஞத்வங்கள் இங்கு உள்ளார் எல்லாருக்கும் ஒக்கும் இறேகழி பெரும் தெய்வம்-அவ் வருகு இல்லாத தத்வம்-பதிம் விஸ்வஸ்ய -தைத்ரியம்-பதிம் பதீ நாம் -ஸ்வேதாஸ்-தமீஸ் வரணாம் பரமம் மஹேஸ்வரம் -ஸ்வேதாஸ்-யதோ வாஸோ நிவர்த்தந்தே -தைத்ரியம்

தாத்பர்யம் –நாயகியினுடைய வேதனை சமிப்பிக்கைக்காக சில தேவதாந்த்ர பஜனம் பண்ணத் தொடங்க மோகம் தெளிந்த தோழி ஒருத்தி நிஷேதிக்கிறாள்
ஓ தாய்மாரே
இப்பெண்ணுக்கு வந்த நோய் இன்னது இதுக்கு நிதானம் இன்னது இதுக்கு பரிஹாரம் இன்னது
இதுக்கு ஏறிட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் பெறும் வேலன் போன்ற ஷுத்ர தெய்வம்
அவனை நிறுத்தி -அவனது பூஜையையும் நிறுத்தி – தாய் மாறே நான் சொல்லுமுபாயம் கேளுங்கோள்
சர்வேஸ்வரனுடைய திரு நாமம் அனுசந்தித்து அவனது திருத்துழாயையும் சூட்டுங்கோள் -என்கிறாள்

4-6-தீர்ப்பாரை யாம் இனி -ப்ரவேஸம்-

கீழ் -வீற்று இருந்து ஏழ் உலகில் – தாம் அனுபவித்த அனுபவம் மானஸ அனுபவ மாத்ரமாய் பாஹ்ய கரண யோக்யம் அல்லாமையாலே
அத்யந்தம் அவசன்னரானார் -எத்தனையேனும் உயர ஏறினால் தகர விழுகைக்கு உறுப்பாமா போலே மோஹங்கதராய் -பிறர் அனுசந்தித்து
பரிஹரிக்க வேண்டும்படி தமக்கு பிறந்த தசையை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –
நோய் இன்னது -நோய்க்கு நிதானம் இன்னது என்றும் அறியாமையால் -வேர் அறிவார் மந்த்ரம் அறிவார் -ஒளஷதம் அறிவார் புகுந்து
பரிஹாரம் பண்ணிச் செல்லா நிற்க -அவ்வளவிலும் தேவதாந்த்ர ஸ்பர்சம் உடையாள் ஒரு கட்டுவிச்சி வந்து புகுந்து
-த்ரவ்யம் நிந்த்ய ஸூ ராதி தைவத மதி ஷூத்ரஞ்ச பாஹ்யாக மோ த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிக ஜநா-என்கிறபடியே –
பாஹ்ய ஆகமத்தை த்ருஷ்டியாகவும் -நிந்த்யமான த்ரவ்யங்களை உபகரணங்களாகவும் கொண்டு ஷூத்ர தேவதையால் ஆவிஷ்டையாய்-
அம்முகத்தாலே சிகித்சிக்க உபக்ரமிக்க -பந்துக்களும் இவளை பெறலாமோ -என்னும் ஆசையால் அனுமதி பண்ண –
இத்தசையிலே இவள் பிரக்ருதியையும் நோவையும் நேரே அறிந்த தோழியானவள் ஓடுகிற நோவைத் தான் அறிந்தாளாக சொல்லில் தன் காவல் சோர்வாம்
-பேசாது இருக்கில் இவளை இழக்க வரும் -என்று இவர்களோ பாதி தானும் நிரூபித்து அறிந்தாளாய் –
நோவும் பரிஹாரமும் நீங்கள் நினைக்கிறவை அல்ல –நோய் இன்னது -நோய்க்கு நிதானம் கிருஷ்ணனே -என்று சொல்லி நீங்கள் பண்ணுகிற பரிஹாரம்
இவளுடைய சத்தையையும் கூட இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை –
பரிஹாரம் பண்ண பார்த்தி கோளாகில் வைஷ்ணவ கோஷ்ட்டியில் பிரசித்தமான பகவான் நாம சக்ரீத நாதிகளாலே இவளை பிழைப்பியுங்கோள் -என்கிறாள்
இது திருவாய்மொழி யால சொல்லிற்று யாயிற்று -அஞ்ஞான தசையிலும்-தேவதாந்த்ர ஸ்பர்சமும்-ததீய ஸ்பர்சமும் விநாச ஹேதுவாய்
அத்தசையிலும் பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தா தாரகமாம் படி இவருடைய வைஷ்ணத்வம் அதிசயித்தபடி சொல்லுகிறது –

ஆறாம் திருவாய் மொழியில்
கீழில் திருவாய் மொழியில் இவருக்குப் பிறந்த ஹர்ஷ ப்ரகர்ஷம் மானஸ அனுபவ ஜெனிதமாகையாலே தத் அனுரூபமாக
அவனுடைய ஆலோகநா லாபாதி முகத்தாலே ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பெறாத அவசாதம் அதிசயிக்க
அநு பாவ்யனான அவனுடைய ஆஸ்ரித விஷய பக்ஷ பாதத்தையும்
ஆதிக்ய ஸூ சகமான அசாதாரண சிஹ்னங்களையும் அதிசயித போக்யத்வத்தையும்
ஆபத் ஸகத்வத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
அத்யாச்ரயமான உபகாரகத்வத்தையும்
நித்ய ஸூரி சேவ்யத்வத்தையும்
நிரதிசய ஸுலப்யத்வத்தையும்
நித்ய பிராமண கம்யத்தவத்தையும்
அனுசந்தித்து -ஏவம்விதமானவன் நம்மை அனுபவிப்பியாது ஒழிவதே என்று அப்ரக்ருதிங்கதராய் மோஹிக்க
பார்ஸ்வஸ்தரான பரிவார் இவரை ஆஸ்வசிப்பிக்கத் தேடி பரிவின் கனத்தாலே அமார்க்கங்களாலே யாகிலும் பரிஹரிக்கப் போமோ
என்று உத்யோகிக்க இவர் பிரகிருதி அறிந்த பிரபல ஸூ ஹ்ருத்துக்களான ஸ்ரீ மதுரகவி போல்வார் அத்தை விலக்கி
பகவத் திரு நாம சங்கீர்த்தன ததீய பாத பராஸ் ஸ்பர்சாதிகளாலே பரிஹரணீயம் என்று ப்ரதிபாதித்த பாசுரத்தை
நாயகனைப் பிரிந்து ஆற்றாளாகிய தலைமகள் வேறுபாடு கண்டு ப்திரா பன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி வார்த்தை கேட்டு
வெறியாட்டாலே பரிஹரிக்கத் தொடங்கின செவிலி தொடக்கமானாரைப் பார்த்து இவள் ப்ரக்ருதி அறிந்த பிரபல்ப்பையான தோழி
அவர்கள் உத்யோகத்தை விலக்கித் தான் இப்போது நிரூபித்து நோயின் நிதானம் அறிந்தாளாக பாவித்து
ஸ்ரீ கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனை அநு சந்தித்துப் பிழைக்குமது ஒழிய இது பரிஹாரம் அல்ல -என்று
வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே
.–4-6-1-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் –இதற்கு, மூன்று படியாக அருளிச்செய்வர்;
‘தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்’ என்கையாலே, ‘நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல’ என்று அவற்றை விலக்குவதிலே தாத்பரியம்;‘என்னை?’ எனின், இவர்கள், நோயினை நீக்குவதற்கு வேண்டிய உபாயங்களைச் செய்து கொண்டிருக்கும் போது‘தீர்ப்பாரை எங்கே தேடுவோம்’ என்று கூறினால், இவை பரிஹாரம் அல்ல என்பது தானே போதருமே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,‘இவள் ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலே ஆக்கிக்கொண்டே அன்றோ இருப்பது?ஆதலால், இவளோடு ஒக்க மோஹிப்பவர்கள் கிடைப்பார்களத்தனை போக்கித் தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’ என்னுதல்;
அன்றிக்கே,
‘தோழியாகிய தானும் இப்போது தீர்ப்பாரை ஆராயா நிற்கிறாள் என்று தோற்றி இருந்தது’ என்னுதல்.
அன்றிக்கே,
‘கடல்வண்ணர் இது செய்தார்; காப்பார் ஆர்?’ என்கிறபடியே, -சொல் என்றே கட்டுவிச்சி சொன்னாள் –‘மருந்தே நோய் நீங்குதற்குத் தடையாய் இருந்தால், பரிஹாரம் உண்டோ?’ ‘நச்சு மா மருந்த’மேயன்றோ தடையாகிறது?‘ஆனந்தமாக இருப்பவர், மருந்தாக இருப்பவர், மருத்துவராக இருப்பவர்’–நிர்வாணம் பேஷஜம் பிஷக் –மருந்தே அபத்யம்-
என்கிறவன் ஆயிற்று விரோதி ஆகிறான்’ என்பாள், ‘இனி’ என்கிறாள்,’ என்னுதல்.

யாம் –அன்னைமீர்?’ என்று விளித்தவள் அவர்களையும் உளப்படுத்தி, ‘யாம்’ என்கிறாள்;
இதனால், தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அற்று இருத்தலைத் தெரிவித்தபடி.-அன்றிக்கே,-தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அறுக்கும் விஷயம் என்று தோழிமார்க்கு ஏற்றம் சொல்லுகிறது என்னுதல்.-இனி, நாம் முன்னே அறிந்தோமாகச் சொல்லில் நம் காவற் சோர்வாலே வந்தது ஆம்;நாம் இப்போதே ஆராய்ந்தோம் ஆவோம்,’ என்று பார்த்து,-ஓர்ப்பால் –இப்போது ஓர்ந்து பார்த்தவிடத்து’ என்கிறாள்.-இவள் தான் ஒரு கூரத்தாழ்வானோடு ஓக்குங்காணும்; –போதாயன வ்ருத்தி கிரந்தம் -இழந்தோம் -துக்கம் பட -ஸ்வாமி திரு உள்ளம் ஆகில் சொல்லவா என்றாரே —

இவ் ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் –-இத்தகைய சிறப்பினையுடைய நுதலை யுடையவள் இம் முகத்தை யுடையவளுக்கு வேறு முகத்தாலே வருவது ஒரு நோய் உண்டோ?
முகாந்தரத்தாலே -சாடு -வேறு காரணத்தால் -கண்ணன் திரு முகத்தைப் பார்த்தே இவள் மயங்குவாள் –‘கண்ணன், கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே!’ -7-7-8-என்கிறபடியே,-அம்முகத்தால் வர வேண்டாவோ?-இவள் நோய் என்றால் அவன் அடியாக வர வேண்டாவோ? ஸ்ரீ பரதாழ்வான் நோய் என்றால், சாதுர்த்திகமா யிருக்குமோ?
ஸ்ரீ ராம விரஹத்தாலே வந்தது என்று பிரசித்தமன்றோ? இவளை இப்படிப் படுத்துவது ஒரு விஷயமாக வேண்டாவோ?-அம்பு பட்ட வாட்டத்தோடே முடிந்தாரையும், நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ?-அப்படியே, குணங்களால் மிக்க சர்வேசுவரனை ஆசைப்பட்டுப் பெறாமையால் உண்டான மோஹம் ஆகையாலே முகத்தில் செவ்விக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி ஆயிற்று இருக்கிறது.

இந்நோய் கொள்ளுகைக்கே அன்றோ முமுக்ஷூக்கள் முயற்சி செய்வது?-பரிஹாரம் இல்லாதபடி மறுபாடுருவக் கொண்ட நோய் ஆதலின்,-உற்ற நோய்’ என்கிறாள்.-இந்நோய்தான் பரிஹரிக்கவேண்டா;-‘கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய்,’ என்பாள், ‘நல்நோய்’ என்கிறாள்.-சிலாக்கியமான ஆபத்தை அடைந்தவனாய்’ என்கிறபடியே,அடிக்கழஞ்சு பெற்ற ஆபத்தாயிற்று;-இடர்ப்பட்ட இடத்திலே சர்வேசுவரன் அரை குலைய வந்து விழும்படியான ஆபத்தாயிற்று இது.

போர்ப் பாகு தான் செய்து –போர்க்கு வேண்டும் வகைகளை எல்லாம் தானே செய்து-பாகு – நிர்வாஹகர் செய்யும் தொழில்.-‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்த தான் -ஆசன பலத்தாலே எல்லாவற்றையும் நடத்தக் கடவ தான் செய்து கை தொடனாய்’-செய்து’ -என்று மேன்மை சொல்லிற்று.அம் மேன்மை யுடையவன் தாழ நின்றதிலே அகப்படுமவளே அன்றோ இவள்-துரியோதனன் முதலியோர்களையும் இவளையும் தோற்பித்தவதிலும்
அரிது காணும் பாண்டவர்களை வெல்வித்தது ஆதலின், ‘ஐவரை வெல்வித்த’ என்கிறது.

மாயம் போர் –ஆச்சரியமான போர்;-அன்றிக்கே, ‘ வஞ்சனையுடைய போர்’ என்னுதல். பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது ஆனவைஇத் தலையிலும் உண்டு; மஹாரதர் பலர் கூடி ஒருவனான அபிமன்யுவைக் கொன்றது தொடக்கமானது அத் தலையிலும் உண்டு; இவற்றைச் சொன்னபடி.

தேர்ப்பாகனார்க்கு – அருச்சுனனைப் பகைவர்கள் சீறினால் அழியச் செய்வது தன்னை யாம்படி, உடம்புக்கு ஈடு இடாதே வெறுங்கையோடே -கவசம் சாத்திக் கொள்ளாமல் –சாரதிக்கு கவசம் கூடாது யுத்த நீதியாம் -தேர்த்தட்டிலே முன்னே நின்று சாரதி வேஷத்தோடே செய்த தொழிலைச் சொல்லுகிறது.அப் பாகிலே பிடிபட்ட இவள்.சாரதியாய் இருக்கும் வேஷம் இவள் வடிவிலே நிழல் எழுந்து தோற்றுகிறது இல்லையோ? –
அன்று தேர் கடாவிய கனை கழல் காண்பது என் கொலோ கண்கள் -விபவத்திலே மூழ்கி

சிந்தை துழாஅய்த் திசைக்கின்றது – இவள் நெஞ்சு கலங்கி மோஹிப்பது தேர்ப்பாகனார்க்கு; ‘கடல் கலங்கிற்று’ என்றால், ‘மந்தரத்தாலே’ என்று இருக்க வேண்டாவோ?(பராங்குச பயோதி ரஸீமா பூமா அன்றோ ஆழ்வார் )
சாரதியாய் இருந்து செய்த தொழில்களைத் தவிர, பரமபதத்தில் முதன்மைக்கு மோஹிப்பாளோ மயர்வு அற மதிநலம் அருளப்பெற்ற இவள்?
மயர்வுஅற மதிநலம் அருளப்பெற்றார் கலங்கும் போது அவனுடைய அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்கும் குணத்திலே ஆகவேண்டாவோ?
ஒருவனுக்குச் சோகத்தை நீக்கினவன் காணுங்கோள் இவளுக்குச் சோகத்தை விளைத்தான்.-ஆணுக்குச் சோகத்தைப் போக்கினான்; அபலைக்குச் சோகத்தை விளைத்தான்.-

————

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெருமிது காண்மினே
 –4-6-2-

இது மிக்க பெரும் தெய்வம்-கம்பீர -வானோர் தலைமகன் சீராயின வந்த நோய் -திருவிருத்தம்-53–சாமாநாதி காரண்யம் -கார்ய காரண பாவனத்தால் சர்வேஸ்வரன் அடியாக வந்த கனவிய-இந்த நோய்க்கும் இத்தை உண்டாக்கிய அவனுக்கும் அபேதம் -கார்ய காரண பாவத்தால் – இது தன்னை அவனாக சொல்கிறாள்

நீர் பரிகாரம் செய்யும் உங்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லை-இந்த நோய்க்கும் சேர்த்தி இல்லை-இவளுக்கும் சேர்த்தி இல்லை பகவத் விஷயத்தில் முதலில் கை வைத்தார் பெரும் நோய் இல்லையே-ஒரு வழியாலும் ஒரு சேர்த்தி இல்லை –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -குடி மகன் -ஒருவனுக்கு ஐயனார் ஏறி வலித்தவாறே
உனக்கு வேண்டியது என் என்று கேட்க-பால் பழம் சாந்து -தண்டு ஏற வேண்டும் அணுக்கன் குடை வேணும் என்ன-சாந்து புழுகு ஆபராணாதிகள் வாங்கி சாந்தி செய்து வர
அன்று இரவு – பண்டை விட இரண்டு பக்கம்-பிள்ளை -பிடிக்கும் குடைக்கு கீழே நான் வரவோ -கூவிக் கொண்டே ஓடிற்றே-பரமபக்தன் உடைமை சேராது – கோவர்த்தனம் -இதனால் தான் -செய்து அருளினான் -தேவதாந்திர பிரசாதம் பக்தருக்கு கூடாதே
பகவத் விஷயத்தில் விக்ரதராக வேண்டிய நீர் உதவாத ஷூத்ர தேவதை கண்டு ஆடுவதோ 

சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் இசைக்கிற்றீர் ஆகில்-சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்-சங்கு என்னும்-வட்ட வாய் நேமி வலம் கையா என்று மயங்கும்-இத்தையே சொல்லி -மருந்தாகுமே நோவு வந்த வழியை அறிந்து பரிகரிக்க வேண்டாமோ-

ஆய்ச்சி மகன் அந்திம சமயத்தில் -பட்டர் -தம்மை அறியாதே கலங்கிக் கிடக்கிற படியைக் கண்டு-மெல்ல அழகிய மணவாள பெருமாளே சரணம் -காதில் சொல்ல -இவர் பக்தியை அறிந்த பட்டர் -இவர் காதில் சொல்ல–அனந்தரம் அதிலே உணர்த்தி உண்டாய் -நெடும் பொழுது அத்தையே சொல்லி திருநாட்டுக்கு நடந்தாராம்

நான் கை கண்டு சொன்னேன் -சங்கு சக்கரம் கையிலே கண்டதை சொன்னபடி- ஒன்றேயோ பரிகாரம்-பலத்துடன் சேர்விக்கும்-பெண் புள்ளைக் கடாவுகின்றது காணீர்
இது காண்மின்-இவள் தன நெஞ்சில் பிரகாசிக்கிற படியை காண்மின்
நெஞ்சினூடே ஏசல் காண்கிறான்-வெள்ளைச் சுரி சங்கினுடன் ஆழி ஏந்தி –நன்றேயில் பெருமிது காண்மினே-இல் பெரும் -சரீரம் என்றும் குடும்பம் என்றும் அர்த்தம்
ஆத்மாவுக்கு ஆயதனமான சரீரம் பெரும்–இல் கிளத்தி – க்ருஹுணியாக பெரும் -என்று தமிழர்-ஏ இல் -எயில் கானமாய் பண்ணை வென்ற வார்த்தை சொல்லும்-மயக்கம் தெளிந்து மதுரா மதுராலாபா போலே –

—————-

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே
.–4-6-3-

அன்னைமீர் இது காண்மின்-வயிற்றில் பிறந்தவர்கள் என்னுமது ஒன்றனையே கொண்டு சொல்லுகிற நலத்தைக் கேளாதொழிய வேண்டுமோ?-ஏவுகின்றவர்கள் என்னும் இத்தனையோ வேண்டுவது? வயிற்றிலே பிறந்தவர்களாகிலும் சொன்ன வார்த்தை
நல்லதாக இருக்குமாகில் கைக்கொள்ள வேண்டாவோ? 

இவள் சொன்ன வார்த்தையை யான் கூறினாலும் என்னையுங்கூடத் துறக்கும்படி அன்றோ
வார்த்தையின் பொல்லாங்கு இருப்பது?’ என்பாள், ‘இச்சொல்’ என்கிறாள். ‘செவிக்கு இனாத கீர்த்திய’ராய் இருக்கின்றமையைத் தெரிவித்தபடிநீர்-பேய் முலை நஞ்சு, ஊணாக உண்டான் உருவொடு பேர் அல்லால், காணா கண் கேளா செவி,’ என்று இருக்கக்கூடிய நீங்கள்-‘செய்யாதன செய்யோம்’ என்றும், ‘மேலையார் செய்வனகள் வேண்டுவன’ என்றும் அன்றோ உங்கள் ஒழுக்கம்?அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!-’ என்று முகத்தை மாற வைத்துச் சொல்லுகிறாள். ‘

மது வார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் – ‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’ என்று நீங்கள் சொல்ல அன்றோ நான் கேட்டது? திருக்குழலின் சம்பந்தத்தாலே தேன் பெருக்கு எடுத்து ஓடுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலே யுடையனாய்,
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியத்தையுடையனாய், அந்த அழகு முதலானவற்றை அடியார்களுக்காக ஆக்கி வைக்கும் உபகாரகன் திருவடிகளை வாழ்த்தினால். ‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’ என்றே அன்றோ வாழ்த்துவது?
ஆதலால், இவர்கள் திருநாமம் சொல்லுவதுதான் மங்களாசாசன முகத்தாலே ஆயிற்று என்க.-மிக்க சீர்த்தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகிலே –பெரிய திருமொழி 11-1-9- உறக்கத்தால் அல்லாத செல்லாத கண் துயிலும்
கலப்பதற்கு முன்னே -பண்டு பண்டு நிலை – -வாசி அறியாதார்-பரிவர் இல்லை என்றே இவள் துக்கம் -வியாதியும் போனது பரிவர் உள்ளார் என்று அறிந்துநஞ்சீயர் நம்பிள்ளை சம்வாதம் 

அதுவே-அடையத் தக்கதுமாய் இனியதுமான அதுதானே-இவள் உற்ற நோய்க்கும் அருமருந்து ஆகும் – இவள் மறுபாடு உருவக் கொண்ட நோய்க்கு பெறுதற்கு அரிய மருந்தாம். என்றது,‘மேல் காற்றிலே காட்டப் பரிஹாரமாம்,’ என்றபடி.அரு மருந்தாகுமே.–-
பெறுதற்கு அரிய மருந்தாம்-ஸ்பர்ஸ வேதியான மருந்தாம்-உங்கள் நோயும் இவள் நோயும் தீரும் என்றுமாம் –

———-

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.
–4-6-4-

நீர் –சத்துவ குணத்தை உடையவர்களாய், பகவத் விஷயமல்லது சொல்லாதவர்களாய், நேர்மையாளர்களா யிருக்குமவர்கள் வார்த்தையைக் கேட்கக்கூடிய நீங்கள் படும் எளிவரவே!
அன்றிக்கே, ‘போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே?’ என்ற சத்துவ குணமுடையார் அமுது செய்த பிரசாதத்தின் பெருமையை அறிந்த நீங்கள். என்றது,
‘சத்துவகுணமுடைய அன்னமல்லது தொடக்கூடியவர் அல்லாத நீங்கள்’ என்றபடி.

தாமச அன்னமும் அதனோடு தோள் தீண்டியான இராஜச அன்னமும். களன் இழைத்து என் பயன் –-பிரயோஜனம் இல்லாமை மாத்திரமேயன்று; அழிவோடே முடியும்-‘ஒருவர் களன் இழையாதிருக்கச்செய்தே வந்து,வரையாதே பாதுகாக்குமவன்’ என்பாள், ‘ஒருங்காகவே’ என்கிறாள்.‘ஒருவர் விரும்பாதிருக்க, ஆபத்தே காரணமாக வந்து உதவுமவன்’ என்பாள், ‘உலகு’ என்கிறாள். ஆக, ‘அத்தகைய எம்பெருமானைப் பற்றுங்கோள்,’ என்கிறாள்-தளர்ந்தார் தாவளமானவன்-ஆர்த்த ரக்ஷகன்-இத்தலையில் காப்பதற்கு அறிகுறியான விலக்காமையே வேண்டுவது.-இங்கு நேர்த்தி திருநாம மாத்திரம் சொல்லுகையாய், பேற்றில் வந்தால் இவளைப் பெறுதலாகிற பெரிய பலத்தைப் பெறலாம்.
‘பேர் சொல்ல வல்லீர்கோளாகில் இவளைப் பெறலாம்; இல்லையாகில் இழக்குமித்தனை,’ 

—————

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே
.–4-6-5-

இந்த நற் சரக்கைப் பெறப் பார்ப்பவர்கள் இந்தத் தாழ்ந்த செயல்களாலேயோ பெறப் பார்ப்பது?’-அந்தோ –‘ஐயோ! இவளை இழந்தோமே அன்றோ!’குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் –‘குவளை அம் கண்ணி’ என்கிறபடியே,
குவளைப் பூப்போலேயாய் அனுபவிக்கின்றவர்கள் அளவு அல்லாத பரப்பையுடைத்தான கண்ணும்,‘கோவை வாயாள்’ என்கிறபடியே, கோவைப்பழம் போன்ற சிவந்த உதடும் பசலை நிறத்தை யடைந்தாள்.
‘தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தானை’-பெரிய திருமொழி-3-7-2- என்றும்,
‘மணநோக்கம் உண்டான்’-பெரிய திருமொழி -8-10-1- என்றும் சொல்லுகிறவாறே ‘இவை அல்லவோ அவனுக்கு ஊண்? ஆதலால், அவனுடைய வாய்புகுசோறு அன்றோ பறி உண்டாகிறது?’ என்கிறாள்.(ஞானியை விக்ரகத்தோடே ஆராதிக்குமே )

கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால் தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; ‘பிரபலமான தடைகளையும் வருத்தம் இன்றிப் போக்க வல்லவன்’ இட்டிடுமின்’ என்றது, ‘இவள் மேலே இடுங்கோள்’ என்றவாறு. ‘வேறு தெய்வங்களின் சம்பந்தம் உண்டானதற்குப் பகவானுடையநாமத்தைச் சொல்லிப் பரிஹரிக்கப் பாருங்கோள்;
வேறு தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தத்துக்கு ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள்
ஆக, ‘இங்கே புகுந்த அநீதிகள் இரண்டு உள :-அவ்விரண்டனுக்கும் இவ்விரண்டனையுங் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ -தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்குப் பரிஹாரம் -திரு நாம சங்கீர்த்தனம் –ததீய சந்நிதிக்கு பரிஹாரம் -ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத தூளி-என்கிறாள்-தணியுமே – இவள் கண்ணும் விழித்து நிறமும் வரும்படி காட்டித் தரக் கடவேன்.

———–

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே
.–4-6-6-

பாததூளியினுடைய பிரபாவத்தைப் பார்த்தால் இவையெல்லாம் வேண்டா; முயலுதல் மாத்திரம் அமையும்,’ என்பாள்,‘அணிய முயலின்’ என்கிறாள்.-‘தொண்டர் அடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே!’

நலம் தரும் காரியங்களில் நினைதல் மாத்திரமே அமையும்; தீமை தரும் காரியங்களில் வர்ஜனமே வேண்டும்.
வண்டரும் சுண்டர் ( செண்டர் என்பர் ) என்கிறவர்களுக்கு –த்ரவ்யம் சேமிக்க வைக்கும் கைங்கர்ய பரர்-ராமானுஜர் நியமித்தவர்கள் – அரையன் சொன்ன வார்த்தைக்குப் பிள்ளை உறங்கா வில்லிதாசர் பரிஹாரம் செய்தபடியை இங்கே நினைப்பது. ‘என்றது
என் சொல்லியவாறோ?’ எனின், அகளங்க நாட்டாழ்வான் இவர்களுக்கு அமணன் பாழியிலே சிங்கத்தைக் காட்டித் ‘திருமுற்றம்; திருவடி தொழுங்கோள்,’ என்ன, அவர்களும் மெய் என்று திருவடி தொழுது, ‘அது அமணன் பாழி’ என்று அறிந்தவாறே மோஹித்து விழ,
பிள்ளை உறங்கா வில்லி தாசர் தம் ஸ்ரீ பாத தூளியை அவர்களுக்கு இட, உணர்ந்து எழுந்திருந்த உண்மை வரலாற்றினை உணர்த்தியபடி.

திருக்கொட்டாரத்தின் அருகே கைந்நிரை கட்டிக் கொண்டிருக்கிற நாளிலே, சீயர் இத் திருவாய் மொழி அருளிச் செய்கிறாராய் இப்பாசுரத்தளவிலே வந்தவாறே, ‘
தேர்ப்பாகனார்க்கு’ என்று நோய்க்கு நிதானம் சொன்னாளாகில், அத்தேர்ப்பாகனை யிட்டு நீக்கிக்கொள்ளாமல், ‘மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின்’ என்று இதனைப் பரிஹாரமாகச் சொல்லுவான் என்? நோய்க்குக் காரணம் ஒன்றும் பரிஹாரம் ஒன்றுமேயாயோ இருப்பது?’ என்று நான் (நம்பிள்ளை) கேட்டேன்;
‘மோர்க்குழம்பு இழியாதே மோஹித்துக் கிடந்த சமயத்தில் சுக்கு இட்டு ஊதிப் பின்பு மோர்க்குழம்பு கொடுத்துப் பரிஹரிப்பாரைப் போலே, ‘தேர்ப்பாகனார்க்கு’ என்ற போதே அவரைக் கொடுவந்து காட்டப்பெறாமையாலே, முற்பட இவ்வழியாலே தேற்றிப் பின்னை அவரைக் கொடு வந்து காட்டுவதாகக்காணும்’ என்று அருளிச்செய்தார்.
(சுக்கு ஸ்லாங்க்யம் -மாறன் திரு அடி நீரை விட தமர் திரு அடி நீர் ஸ்ரேஷ்டம் என்றவாறு )

அழகு சீலம் முதலியவைகளாலே ஆயிற்று இவள் மோஹித்தது; நீங்களும் அழகு சீலம் முதலியவைகளிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்பாள்,‘மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு’ என்கிறாள்.-‘பொடி படத் தீரும்’ என்றபடி.
மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே – பொடி பொடி யாகத் தீரும் என்றுமாம் –
இஃது அல்லது பரிஹாரம் இல்லாதபடியான மேன்மையை உடைய இவளுக்கு இதனையே பரிஹாரமாகப் பாருங்கோள்.-

————-

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.
–4-6-7-

துணங்கை எறிந்து – துணங்கை என்பது ஒரு கூத்து விசேடம். எறிதல் – இடுதல். ‘ஆடல் இட்டு’ என்றபடி.-துணங்கைக் கூத்து என்று கைதட்டி ஆடுவதொரு கூத்து உண்டு; அதனைச் சொல்லிற்றாதல்;-அன்றிக்கே, மஞ்சட் பொடியைக் கையிலே பிடித்து ஒருவர்க்கு ஒருவர் எறிந்து ஆடுவது ஒன்று உண்டு. அதனைச் சொல்லிற்றாதல்.

நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –பகவானிடத்தில் செய்த அஞ்சலி மாத்திரமும் ‘இறைவனுடைய நீர்மையாலே மிகை’ என்று இருக்கக்கூடிய நீங்கள் படும் எளிவரவே இது! ‘தொழுது எழுதும் என்னும் இது மிகை’ என்றே அன்றோ இவர்கள் இருப்பது? சம்பந்தம் உணர்த்தும் பதிகம் -தோழி -பிரணவார்த்தம்-உபாய நிரபேஷன்-கை கூப்புச் செயலும் கூடாதே -நமஸ்-தாயார் நிலை -என்பதால் -இப்படி இருக்கக் கடவ நீங்கள் என்றவாறு-

உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன் – ஜீவனத்திற்குச் சாதனமாய் இருக்கின்ற நெல்லானது அழிந்துபோகும்படிக்குத் தகுதியாக, அதனைத் தின்னுகிற கழுதையினுடைய உதட்டின் செயலைக் கண்டிருந்தால் என்ன பிரயோஜனம் உண்டு?
அப்படியே இவளைக் கொண்டு வாழ்வதற்கு இருக்கிற நீங்கள் இவளுக்கு அழிவினை உண்டாக்கக் கூடியதான வேறு தேவதைகளின் சம்பந்தமுடையாருடைய செயல்களைக் கண்டுகொண்டிருக்கிற இதனால் என்ன பிரயோஜனம் உண்டு? பிரயோஜனம் இல்லாமை மாத்திரமே அன்று; அழிவே சித்திப்பது.
அன்றிக்கே,-உணங்கல் கெட – இவளுடைய உணங்குதல் கெட; ‘இவள் இளைப்புத் தீர’ என்றபடி.
கழுதை – பேயை, கழுது – பேய். உதடு ஆட்டம் கண்டு என் பயன் – நீங்கள் ஆடும் கள்ளும் பிரார்த்தித்துக் கொடுக்க, அது அதனை உண்ணும்போது அதனுடைய உதடு ஆடுகிற படியைக் கண்டிருப்பதனால் என்ன பயன் உண்டு?’ என்று ஐயன் திருக்குருகைப் பெருமாள் அரையர் நிர்வஹிப்பர். ‘கழுது பேயும் பரணும்’ என்னக் கடவதன்றோ?

மாயப்பிரான் தமர் வேதம் வல்லாரை வணங்கீர்கள் -அவனை ஒழிந்தது ஒரு தேவதைக்குத் தனித்து ஓர் உயிர்ப்பு இல்லை;அவனே உத்தேஸ்யம்,’ என்று இருக்குமவர் காலிலே விழுங்கோள்,’- (பரன் திறம் அன்று பல்லுலகீர் தேவம் ஒன்றும் இல்லையே )
‘தேவதைகள் தோறும் தனித்தனியே காரியம் உண்டு’ என்று இராமல்,‘எல்லாச் சொற்களும் ஒரே பொருளைச் சொல்லுவது’ என்று இருக்குமவர்களைப் பற்றப் பாருங்கோள் –

———

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே
.–4-6-8-

வேறாக, ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்,’ என்கிறபடியே,
அவர்கள் காலிலே விழப்பெறில் விரைவில் நோய் தீர்தல் கூடும். அது கூடாதே அன்றோ? இது உலகில் நடை பெறாதே –தம்மைப் போன்றவர்களாக நினைத்திருக்கையாலே ருசி விசுவாசங்கள் அவர்கள் பக்கல் கனக்கப் பிறவாதே அன்றோ?-ஆன பின்னர், அவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு அவனைப் பற்றுதற்குப் பாருங்கோள் என்கிறாள்,

சர்வேசுவரன் திருப்பாதம்’ என்னாதே,-விண்ணோர் பெருமான் திருப்பாதம்’ என்று அருளிச் செய்வதனால்-நித்தியஸூரிகளும் புருஷகாரமாய் இருப்பவர்கள் என்பது தோன்றுகிறது; நோய் கொண்டவள் இவள்; நோய் தான் இது; இதற்குத் தகுதியான பரிஹாரத்தைச் செய்ய வேண்டுமே-அவனைக் கொண்டு பெறுதற்குப் பாராமல், அவனுக்குப் புறம்புமாய் யான் எனது என்னும் செருக்குகளை உட்கொண்டதான கிரியா கலாபங்களாலே பெறுதற்குப் பார்க்கையும் அதனைப் போன்றது ஒன்றே ஆயிற்று-அற மேலாய் இருக்கும் மருந்தே அன்றோ இவள் சொல்லிற்று? அதனை அன்றோ இவர்கள் விரும்புதல் இன்றி நிற்கிறது?

நீர் அணங்கு ஆடுதல் – பகவானுடைய குணங்களை அனுபவிக்கின்ற அனுபவத்தாலே ‘உண்டு களித்தேற்கு உம்பர் என்குறை?’ என்னக்கூடிய நீங்கள் தெய்வம் ஏறினவர்களாய்க்கொண்டு ஆடுவது.-கீழ்மையே –‘சாலத் தண்ணிது. உங்கள் அளவில் போகுமது அன்று; உங்கள் வழிக்கும் கொத்தை’ என்றபடி. ஊடு -உள்ளே.-

————

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே
.–4-6-9-

நாழ் என்பது குற்றத்திற்கும் இல்லாததனைச் சொல்லுகைக்கும் ‘நான்’ என்று அபிமானித்திருக்கைக்கும் பேர்.நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் –நீங்கள் தெய்வம் ஏறினவர்களாய்க்கொண்டு ஆடுகின்ற இப்பொய் என்கண்களுக்கு ஒரு பொருளாய்த் தோற்றுகிறது இல்லை.
‘பலவகைப்பட்ட பொருள்கள் இல்லை,’ -ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாத வஸ்துவே இல்லையே -என்கிறபடியே, ‘அவனை ஒழிந்தது ஒரு தெய்வத்திற்கு அவன் துணை இன்றித் தானே ஒரு பொருளாய் இருக்கும் தன்மை உண்டு,’ என்று
இருக்கில் அன்றோ அவர்கள் செய்வது ‘மெய்’ என்று தோற்றுவது?

ஏழ்மை பிறப்புக்கும் சேமம் – எல்லாப் பிறவிகளிலும் காவலாம்; ஒரு நன்மை உண்டானால், அதனை ஏழ் ஏழாகச் சொல்லக் கடவதன்றோ? அதனால், ‘ஏழ்மை’ என்கிறாள்.
அன்றிக்கே,-தண்ணிதான பிறவி’ என்னலுமாம். ஏழ்மை – தண்மை

இந்நோய்க்கும் ஈதே மருந்து –-அடி பற்றின மருந்து அன்றோ-கண்ணபிரான் கழல் உன்னித்து வாழ்த்துமின் –-‘உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளை வாழ்த்தப் பாருங்கோள். ‘அடிக்கழஞ்சு பெறும் மருந்தே யன்றோ அது?-வாழ்த்துமின் -பன்மை-எல்லாரும் ஒக்க நினைத்து வாழ்த்தப்பாருங்கோள்,-ஸம்ருத்தி மாத்திரத்திலே போம் –

————

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே
.–4-6-10-

பிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள்.-பிறரை தொழுது அறியாள் -சந்தரன் தலையில் கொண்ட ருத்ரனை தொழ மாட்டாள் என்றுமாம் — பிறை பல் முளைக்கும் பொழுதும் என்றுமாம் –
‘முலையோ முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே!’ என்று நீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ்விளமைப் பருவத்திலும் இருந்தது? –சாதனா பக்தி இல்லை சாத்திய பக்தியும் இல்லை -சஹஜ பத்தி –
‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க்கூட்டத்தைப் பற்றுமோ? ஆகையாலே,

நும் இச்சை சொல்லி – உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும் வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ? இனி உள்ளது உங்களுக்குத் தோற்றிய வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி.

நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – துர்விருத்தர் செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?‘தோள் அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது?
ததேக சேஷத்வம் –விருத்தவான்கள் -பஞ்ச சம்ஸ்காரம் பண்ணாத துர்வ்ருத்தர்கள் –
ஆதலால், நீங்கள் இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன,

மன்னப்படு மறைவாணனை – நித்தியமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;-மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே, வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே பின்னே பின்னே உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.
அன்றிக்கே
‘மன்னுகையாவது, பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும்
வேதங்களால் சொல்லப்படுகின்றவனை’ என்னுதல்.
ஆக, ‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது?
வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி
அஷட் கரணம் கேட்காமல் மூன்றாவது ஆள் கேட்காமல் காலஷேபம் -வேத அத்யயனம் –

வண் துவராபதி மன்னனை –
கேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை.-‘நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே, தேர்ப்பாகனார்க்கு மோஹித்த இவளை, வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் பாருங்கோள்,’ என்பாள்,
‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.
32 சேவை -மூல மூர்த்தி முதல் சேவை பரவாசு தேவன் -உத்சவர் -32 சேவை ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் –32 சேவைகள் கொடுத்த -வண்மை –வண்டு வராத -செண்பகா ஷேத்ரம் –

ஏத்துமின் – வாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள். ‘
சீர் பரவாது, உண்ண வாய்தான் உறுமோ ஒன்று?-பெரிய திருவந்தாதி -51-’ என்று அன்றோ நீங்கள் சொல்லுவது?
மிண்டர் பாய்த்து உணும் சோற்றை விலக்கி நாயக்கி இட்டு -இவர்களுக்கு புல்லைத் திணிமின் -திருமாலை –
ஏத்துதலும் தொழுது ஆடும்– நீங்கள் செய்யத்தகும் காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று;-பிறகு அவன் அச்சம் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே ஏத்தின உடனேயே தெளிவையுடையவளாய்த் தொழுது ஆடுவாள். உணர்த்தி உண்டானால் செய்வது அது போலே காணும். என்றது, ‘தரித்து ஆடுதற்குத் தக்க ஆற்றலையுடையவளும் ஆவாள்,’ என்றபடி.விழிக்கும்- தொழுது ஆடு என்னாமல் –சொல்ல வேண்டியது இல்லை இவளுக்கு –உணர்த்தி உண்டானால் இத்தையே செய்பவள் அன்றோ -தரித்து -வியாபரிப்பாள்-என்றவாறு –நீர் ஏறுண்டு மோஹித்தார்க்கு நீரே பரிஹாரமாம் போலே நோவுக்கு அடியானை கிருஷ்ணனுடைய குண கீர்த்தனமே பரிஹாரம் என்று கருத்து –

மன்னார் குடி ஸ்ரீ ராஜமன்னார் சமர்ப்பித்து அருளினார் மணவாள மா முனிகள்-தெற்கு த்வாராபதி-

————-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்கசீலம் இலர்களே.
–4-6-11-

மோஹித்தவள் சிறிது தெளிந்தவாறே, மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண் விழித்தாள்,வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’ அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர்.
பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது.
மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய்மொழி யாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது. இந்தத் தோழி தானும் அறிந்திலள் காணும் பகவானுடைய பெருமையை. அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ?
அது வேண்டாதே, தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இது தானே அமைந்தது இவள் உணருகைக்கு.
பகவானுடைய பெருமை புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று, உட்புகுந்தாராய் அறிந்தாராய் உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க் காணும் இருப்பது.-தனக்கும் தன் தன்மை அறியாதவன் அன்றோ –
முன்பு மயக்கம் -அழுகை இல்லை-தெளிந்தாள்-சம்ச்லேஷம் இல்லையே என்று கூவுவாள் அடுத்த பதிகம் -நடுவு நிலை இல்லையே இவளுக்கு
தோழி வார்த்தை கேட்டதுமே தெளிந்தாள் -திரு நாம சங்கீர்த்தனம் –-நமனும் முத்கலனும் பேச நரகமும் ஸ்வர்க்கமும் ஆகும் நாமங்கள் உடைய நம்பி பிரபாவம் தோழியும் அறிய வில்லையே –

மயங்கிக் கிடக்கிற நிலையிலும் பகவானுடைய திருப்பெயரும் அவன் அடியார்களுடைய சம்பந்தமும்-பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயிலே நிலைநின்ற புகழ்.-ஒருவன் வைஷ்ணவனாகையாவது, இது. ‘சர்வேசுவரன் ரக்ஷகன்’ என்று ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு, வேறு தெய்வங்களின் சம்பந்தமும் பாகவதர் அல்லாதார் சம்பந்தமும் உண்டாகுமே யானால், வைஷ்ணவன் ஆவதற்கு விரகு இல்லை கண்டீர்.
முன் பகுதியை அநுசந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும் தகுதி இல்லாதபடியாய் இருக்கும்; பின் பகுதியை நினைத்தால், இளைய பெருமாளைப்போலே கண்ணுறங்கவும் விரகு இல்லையாய் இருக்கும்;

அவகாத ஸ்வேதம் போலே ஆனுகூல்ய சங்கல்பம் அங்கங்கள் -பிரபத்திக்கு அங்கமாக கொள்ளக் கூடாது -என்றவாறு-
‘திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழாமாந்தர்’ என்றும்,
‘திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்றும்,
‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே’ என்றும்,-எண்ணும் கோஷ்டியில் இருக்க வேண்டும் –
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’ என்றும் அன்றோ இவர்கள்படி?
பல காலங்களாக இவன் சூழ்த்துக்கொண்ட பாவங்கள் போகையும், நித்திய கைங்கரியம் பெறுகையுமாகிற இப் பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகு உண்டோ?

தொழுது அடிப்பாட வல்லார் – பெண்பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’ என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.
துக்க சீலம் இலர்களே –மோஹித்த விடத்து வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும்,-பாகவத சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது.
அஃது இல்லாமையே தன்மையாக உடையர் ஆவர்.-சீலம் – -ஸ்வ பாவம்-தன்மை.

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—36-கலந்து பிரிந்த தலைமகள் அறிவு அழிவு கண்டு கலங்கி பரிவின் கனத்தாலே -தேவதாந்திர பரையாய் பிரதிபன்ன பாஷிணியான கட்டுவிச்சி பாசுரம் கொண்டு
வெறி யாட்டாலே பரிஹரிக்க தேடுகிற தாய்மாரை நோக்கி-இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள் நோயின் நிதானத்தை நிரூபணத்தாலே அறிந்தாளாய்க் கொண்டு கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனைக் கொண்டே பரிஹரிக்கும் அது ஒழிய நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்கும் தத் சம்பந்தி ஸ்பர்சத்துக்கும் தேர் பாகனாரான வண் துவாராபதி மன்னனை ஆஸ்ரயித்து மாயன் தமர் அடி நீர் கொண்டு அணியுங்கோள் என்று வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிற தீர்ப்பாரை யாமினி — யில் தாத்பர்யத்தை தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று -(மயங்கின நிலையிலும்) செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் – செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –