ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
கள்வனை-பெரு வயிற்றாளனை–பெரும்கிறியானை-மூன்றுமே கள்ளத்தனம் தானே நெஞ்சத்தையும் என்னை அறியாமல் கள்ளத்தனமாகத் திருடிய அவனைத் தவிர வேறே ஒருவரையும் பேணாதே-கோபிகள் மனசைத் திருடவே வெண்ணெயைத் திருடினான் அன்றோ–கற்பு நிலை உரைக்கிறாள் -தோழிக்குத் தலைமகள் பாசுரம் –வார் கடா அருவி -8–4-இதன் விவரணம்—மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)–இம் மூன்று இடங்களிலும் காணலாம்-சரீரம் தள்ளி ஆத்மாவை-பிரளயம் -வயிற்றில் வைத்து ரஷித்தே தீருவேன்
இரந்தாலும் ரஷித்தே தீருவேன் –அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்தநறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-
இங்கே கிடந்தது காலம் நெடுகா நின்றது –குறுகா நின்றது என்னா –ஆழங்கால் படா நில்லாதே-நாங்கள் கண்டீரே –புறம்புள்ள விஷயங்களிலே தரித்து -காலம் குறுகுதல் நெடுகுதல் செய்தாலும் ஸூகித்துத் திரிகிறோம் –அப்படியே நீரும் பகவத் விஷயத்திலே நின்றும் நெஞ்சை மாற வைக்கப் பாரத்தாலோ என்ன –ஓம் அப்படி செய்யலாற்றிற்று இறே அதுக்கு ஈடாய் இருப்பதோர் நெஞ்சு பெற்றோம் ஆகில் –என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஒன்றை அறியாது என்கிறார் –இந் நெஞ்சு தன்னையும் வைக்கல் ஆயிற்றே-அவன் ஸௌர்யம் பண்ணிற்று இலனாகில் –
இப்படி கால விளம்பம் போறாது ஒழிந்தாலும்-அவன் தானே வந்து முகம் காட்ட வேண்டுகையாலே
பதறினாலும் பிரயோஜனம் இல்லை-அவன் தன் நினைவாலே இருக்கிற உமக்கு அவன் விபூதியைக் கண்டு கால ஷேபம் பண்ணி இருக்கக் குறை என் என்ன–ஆஸ்ரித வ்யாமுக்தனாய்-ஆபத் சகனாய்-ஸர்வஞ்ஞனானவனை ஒழிய என் நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது -என்கிறார் –இப் பாட்டு தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தோடே நின்று உரைத்தல் ஆகவுமாம் –
சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –
சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெயை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமன வடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக் கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒரு சேர விடாமல் உட் கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.
வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத்
தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல்
மானிடவரைச் சார்ந்து மாய்—74-இன்னமும் இவருக்கு நம் பக்கல் பரிவின் கனத்தாலே பயம் மறுவல் இடக் கூடும் என்று விசாரித்து ப்ரதிகூலர்க்கு கணிசிக்க ஒண்ணாத படி அரண் உடைத்தான ஸ்ரீ திருச் செங்குன்றூரிலே ஸ்ருஷ்டி ஸ்திதியாதிகளை நிர்வஹிக்க வல்ல சக்திமான்களாய்-சாபா நுக்ரஹ ஸ்மர்த்தரான மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிந்து நோக்க அவர்களும் குழைச் சரக்காம் படி-பிசாசான் தானாவான் அங்குல் யக்ரேணதான் ஹன்யாமிச்சன் ஹரி கணேஸ்வர -என்று சௌர்ய வீர்ய பராக்ரமாதிகளோடே தான் எழுந்து அருளி இருக்கும் நிலையை ஸ்ரீ சர்வேஸ்வரன் காட்டிக் கொடுக்க -அத்தாலே அச்சம் கேட்டு அவன் வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிற -வார்கடாவருயில் அர்த்தத்தை -வாராமல் அச்சம் இனி -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அவ் அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-நெஞ்சே –ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம் உஜ்ஜீவன ஹேது தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது-என்றது ஆயிற்று –
சுருந்குறி வெண்ணெய்--சுருங்கு உறி வெண்ணெய் -கள்ளக் கயிறு வைத்த உறி யாயிற்றே –வெண்ணெய் தொடு உண்ட –வைத்த குறி அழியாமே -வெண்ணெயை களவு கண்டு அமுது செய்தான் கள்வனை –களவு தன்னை யாயிற்று களவு கண்டது –ஆகையால் -சிலர் இது களவு கண்டல்ல –தெய்வம்-கொண்டதோ -நாம் வைத்திலோமோ -என்னும்படி யாயிற்று களவு கண்டது –வையம் இத்யாதி –இவ் வெண்ணெயாலே வயிறு நிறைய செய்தேயும் -ஜகத்தாக எடுத்து வைத்தால்-
அரை வயிறு ஆம்படியாய் இற்று இருப்பது –இத்தால் ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -த்ரவ்யத்தாலே தரிக்கையும் – ஜகத் ரஷணத்திலே பர்யாப்தம் இன்றிக்கே இருக்கும் படியையும் சொல்லிற்று –மாவலி இத்யாதி –தான் காவலாக இட்டு வைத்த கடல் -இவ் விபூதியை களவு காணும் அன்று-தன் வயிற்றிலே இட்டு வைத்துக் கொண்டு நோக்கும் –நான் என்னது -என்று இருப்பன் ஒருத்தன் இத்தை-அபஹரித்த அன்று அவனோடு இசைய இருந்து சென்று கொள்ளும் –மாவலி மாட்டு – ஆசூர பிரக்ருதி யானவன் பக்கலிலே சென்று கிட்டிற்று – தன்னை ஒழிய வேறு ஒன்றைப் பேணாத-நெஞ்சு உடைய என் பக்கலிலே அன்றோ கிட்ட அடுப்பது –இரும் குறளாகி –பெரிய குறளாகி –அதாவது-லோகத்திலே வாமனர்கள் அடைய வளர்ந்து அருளின இடத்துக்கு ஒப்பாம்படி ஆயிற்று -இவனுடைய சிறுமை –இசைய –இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் –அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் –ஆரேனும் வேண்டா என்னிலும் அவனும் இசைந்து கொடுக்கும் படியும்-ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து – இரண்டு அடியும் அளந்து விடாதே- ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் – தான் சர்வ நிரபேஷன் என்று தோற்றாதபடி சென்றவன் – நாம் கொடுக்கிற வித்தால் அல்லது தரியான் – என்று தோற்றும்படியாக யாயிற்று சென்றது –தன் ஈஸ்வரத்வத்தைக் களவு கண்ட படி –அவாப்த சமஸ்த காமன் ஓர் அபேஷை தோற்ற வந்தான் -என்று இத்தனை தோற்றாமை –இரப்பாளனாய் சென்றபடி –
அவன் தயை பிறந்து கொடுக்கும் படியான வடிவைக் கொண்டு –பெரும் கிறியான் –பெரு விரகன் –அடியேன் –மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க இருக்கிறார் அல்லர் –-இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் –-அச் செயலுக்குத் தோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் –நெஞ்சம் பேணலதே –பரத்வதையும் கொள்ளாது –பாவோ நான் யத்ர கச்சதி –ஒருங்கற –பிறி கதிர் படாமே -ஒரு காலே என்றாய் -நிச்சேஷமாக -என்றபடி –யானே என் தனதே என்று இருந்த என் நெஞ்சையும் நான் அறியாதபடி அபஹரித்தான் –
ஸுலப்ய பரத்வ பசும் கூட்டம் அன்றோ அவன் -சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்பதனால் ஸௌலப்ப குணமும் ‘வையம் முற்றும் ஒருங்குறவுண்ட பெருவயிற்றாளன்’ என்றதனால் பரத்வ குணமும், மாவலி மாட்டிருங்குறளாகி யிசையவோர் மூவடி வேண்டிச்சென்று பெருஙகிறியான்’ என்றதனால் பரத்வ ஸௌலப்யங்களிரண்டுங் கூடின கூட்டாவும் குறிப்பிடப்பட்டன.–-சுருந்குறி-கள்ளக் கயிற்றை உருவி விரல் நுழைக்க ஒண்ணாத படி நெருக்கப் பட்ட உறி-இருங்குறளாகி-மிகக் குறுகிய வடிவம் -பெரிய வடிவத்தை உட்க்கொண்ட சிறிய வடிவம் – மஹிமை யுடைய வடிவம் – கரிய குறள் வடிவம்-பெரும்கிறி யானை–வடிவு அழகு பேச்சின் இனிமையாலே மாயையை மயக்கி -சுக்கிராதிகள் விலக்கினாலும்-உடன் படாதே மூவடி நிலம் பெற்ற சமர்த்தன்-சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை -உடம்பாகிய சிக்கத்திலே கட்டுப் பட்டுள்ள வெண்ணெயின் தன்மையதான முமுஷுவாகிய ஆத்மாவை யாவரும் அறியாத படி விரும்பிக் கைக்கு கொண்டு அனுபவிப்பவன் –-மா வலி மாட்டு -மாடு -பொன் பக்கம் செல்வம் -நிகண்டு –தோழிக்குத் தலைவி தன் கற்பு உணர்ச்சி அறத்தோடு நிற்றல் இது பாரங்குச நாயகியாகிய தலைமகள் களவொழுக்கத்தால்-ஸர்வேச்வரனாகிய தலைமகனைக் கூடி நிற்க, அந்நிலையை யறியாத பெற்றோர் அவளைப் பிறர்க்கு விவாஹஞ் செய்விக்க முயற்சி கொள்ள,
அதனை யறிந்த நாயகி தனது களவைத் தோழிமூலமாக செவிலிக்கும் அவள் மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்குந் தெரிவித்துத் தன்னை அத்திருமாலுக்கே விவாஹஞ் செய்து வைக்கும்படி செய்துகொள்ள விரும்பி அத்தலைமகள் தன் கருத்தை தோழிக்கு வெளிப்படுத்தியது இது’. இங்ஙனம் களவை வெளிப்படுத்தல் ‘அறத்தொடு நிற்றல்’ எனப்படும்.‘சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்றதனால் இவ்வுடம்பாகிய சிக்கத்திலே கட்டுப்பட்டுள்ள வெண்ணெயின்
தன்மையதான முமுக்ஷுவாகிய ஆத்மாவை எவரும் அறியாதபடி விரும்பிக் கைக்கொண்டு அநுபவிப்பவன் எம்பெருமான் என்பது தோன்றுமென்ப.
சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை-கள்ளக் கயிறு உருவிக் கட்டுகையால் சுருங்கின உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவிலே புக்கு அமுத செய்த க்ருத்ரிமனானவனை-இத்தால்-இச்சரீரமாகிற சிக்கத்திலே கட்டுண்ட நவநீத ப்ராயனான முமுஷு சேதனனைப் பிறர் அறியாதபடி அபி நிவிஷ்டனாய் புஜிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –வையமுற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை-இப்படி ஆஸ்ரிதர் உகந்த விஷயத்தை உகக்கும் அளவு அன்றிக்கே
ஸாமான்யமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் ஒன்றும் பிரி கதிர்ப் படாமல் பசியர் யுண்டால் போலே மேல் விழுந்து திரு வயிற்றிலே வைத்து நோக்கும்படியான ரக்ஷகத்வ சக்தியின் மிகுதியை யுடையவனை –(மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)–மாவலி மாட்டு-இருங்குறளாகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால்-மஹா பலி யருகே லோகத்தில் வாமன வேஷம் வளர்ந்து அருளின இடம் என்னும்படி மிக்க வாமனனாய்-அவன் தானே இசையும்படி அத்விதீயமான சிற்றடியாலே மூன்றடி வேண்டி அழகிய நடையிலே மதி மயங்கும்படி சென்ற பெரிய நல் விரகை யுடையவனை ஒழிய–பெரும் கிறியாரை -என்றும் சொல்லுவார்–இத்தால் தன்னுடைய வஸ்து பிறர் கொள்ளாமல் தன்னதே யாக்கிக் கொள்ளும் பேர் அறிவுடையவன் என்கை—அடியேன் நெஞ்சம் பேணலதே –இந்த ஸ்வ பாவங்களால் அவனுக்கே சேஷமான நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது–தொடு உண்ட கள்வன்-என்கையாலே புணர்ச்சி தோற்றிற்று–வையம் இத்யாதியாலே – நீரிடை யுதவி தோற்றிற்று ( புனல் தரு புணர்ச்சி )-மாவலி மாட்டு -இத்யாதிகளாலே ‘தானே குறை நயந்து வரைந்து கொள்ளும் பேர் அறிவுடைமை தோற்றிற்று-
தாத்பர்யம்-இதில் பகவத் அலாபத்தாலே ஆழ்வார் படும் பாட்டைக் கண்ட சம்சாரிகள் நீர் இவ் விஷயத்தை விட்டு எங்களைப் போலே சப்தாதி விஷயங்களிலே ப்ரவணராய் ஸூகித்து இரும் என்று சொல்ல நான் அப்படி செய்யினும் என் மனஸ்ஸூ அவனை விட்டு மற்று ஒன்றையும் விரும்பாதே என்கிறார் –ஆஸ்ரிதர் ஸ்பர்சம் உள்ள வெண்ணெயைத் திருடி கோபிகள் மனம் கவர்ந்த கள்வன் அன்றோ-கள்ளக்கயிற்றை உருவி மோர் விற்கப் போக அந்தக் குறிகள் மாறாதே -அப்படியே தெய்வம் கொண்டு போனது என்று சொல்லும்படி அன்றோ இவனது களவு வியாபாரம்-பிரளய காலத்தில் ஸமஸ்த லோகத்தையும் திருவயிற்றிலே உண்டு -மேலும் இடம் உள்ளபடி-ரக்ஷகத்வ பாரிப்பு மிக்க உபகார ஆபத் சகத் வத்தையும்-மிக குறளாகி -இரண்டு அடி யாசித்தால் சிறை வைக்க உபாயம் இல்லை என்று மூன்று அடி யாசித்து பூமி அந்தரஷிம் இவற்றை எல்லாம் அளந்து மகாபலியை சிறை வைத்த-நடை அழகிலும்-புத்தி சாமர்த்தியத்திலும்-ஈடுபட்ட நெஞ்சு வேறே ஒன்றைப் பேணாதே-பாவோ நான்யத்ர கச்சதி போல்-இவரும் ஸுலப்ய குண அனுசந்தானத்தைத் தாண்டி பரத்வத்துக்கும் போக வல்லார் அல்லரே –
8-4-வார்கடா வருவி யானை மா மலையின்மருப்பிணைக் குவடிறுத்துருட்டி-ப்ரவேஸம்-
வார் கடா அருவி -பிரவேசம்
சர்வேஸ்வரன் சம்சாரிகள் உடைய விருப்பையே பற்றுக் கோடாகக் கொண்டு
சம்சாரத்திலே வந்து அவதரித்து தனியே உலாவா நிற்கும் –
சம்சாரிகளும் தாங்கள் தாங்கள் விரும்பினவற்றை பெறுமதற்கு கிட்டுமது ஒழிய
இவன் வாசி அறிந்து பரியக் கூடிய சம்சாரிகள் இலர் –
என் புகுகிறதோ -என்று அஞ்சின இவர்க்கு அச்சம் தீரும்படி நமக்கு பரிவர் உளர் –
ஒருவர் பரிய வேண்டாதபடியான மிடுக்கும் நமக்கு உண்டு –
என்று தன் படிகளைக் காட்டி சமாதானம் செய்ய-சமாதானத்தை அடைந்தவராய் நின்றார் மேல் –
இத் திருவாய்மொழியில் –
இவர் ஆகிறார் காதலையே இயல்பாக உடையவராய் இருப்பர்-
காதல் மையல் ஏறி கலங்கி-முத்தரும் நித்தியரும் இங்கு இலரே-
சனகன் முதலான முமுஷுக்கள் -நல்ல தவத்தையும் மனனத்தையும் தியானத்தையும் விட மாட்டார்கள்-
கடல் கடைந்தது தெய்வப் பிறப்பில் அன்றோ -என்று கலங்குவர்-
இன்னம் இவருக்கு இது மறுவல் இடக்கூடும் என்று பார்த்து–மறுவல் இடாதபடி தன்னுடைய சூரத்தன்மை-
வீரத் தன்மை முதலான குணங்களையும் -சீர்கொள் சிற்றாயன்-பாசுரத்தில் –
படைத்தல் முதலான ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் -படைத்து அளித்து அழிக்கும் –
எதிரிட்ட பகைவர்களை கூட்டத்தோடு வேரோடே வாங்கிப் பொகட வல்ல ஆற்றலையும் காட்டிக் கொடுத்து -கஞ்சனைத் தகர்த்த –
அதுக்கு மேலே
மேம்பட்ட ஞானத்தையும் சக்தியும் உடையவர்களாய்-தனக்கு பரிவராய் இருப்பர் –
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் -மனக்கொள் சீர் மூவாயிரவர் –
மூவாயிரம் பிராமணர் உளர் -என்று
காட்டிக் கொடுக்கக் கண்டு கிருதார்த்தராய்
அவன் வடிவு அழகிலும்-திருச் செய்ய கமலக் கண்ணனும் –நெஞ்சு சென்று அனுபவித்து இனியர் ஆகிறார்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராகவனைச் சரணம் அடைந்தவன் ஆகிறேன் -என்று விழுந்த போது
சோஹம் பருஷித தேன தாசவச்ச அவமானித-த்யக்த்வா புத்ராம்ச ஸதாராம்ச ராகவம் சரணம் கத -யுத்த -17-14
மகா ராஜர் பெருமாள் பக்கலில் பிரேமத்தால் கலங்கி துணுக்கு என்று
இவன் கூறிய சொல் பெருமாள் திருச் செவியில் படுமாகில் சாலத் தப்பாம் -என்று
நாயந்தே
ராவணனுடைய தம்பி-ராஷச சாதி–அவன் புகுரக் கடவன் அல்லன் -என்ன
இவர் நம் பக்கல் பரிவாலே சொல்லுகிற வார்த்தை நம் மிடுக்கைக் காட்டவே தெளிவர் என்று பார்த்து –
பிசாசான் தானாவான் யஷான் ப்ருதிவ்யாம் ஸ ஏவ ராஷசான்
அங்குள் அக்ரேன தான் ஹன்யம் இச்சன் ஹரி கணேஸ்வர -யுத்த -18-23
வானரக் கூட்டத்துக்கு அரசனான சுக்ரீவர்
பிசாசர்களாயும் அசுரர்களையும் யஷர்களாயும் பூமியில் இருக்கிற இராக்கதர்களை
விரல் நுனியாலே விரும்பினவனாய்க் கொல்லுவேன் -என்பன போன்ற வார்த்தைகளால்
தன மிடுக்கைக் காட்டக் கண்டு அவர் அச்சம் தீர்ந்து
கிம் அத்ரசித்ரம் தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹா-யத் த்வம் ஆர்யம் பிரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித -18-36-
தேவரீர் கூறிய வார்த்தையில் என்ன ஆச்சர்யம் -என்று இனியர் ஆனால் போலேயும்
மல் போரில்
பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ -யுத்த 103-5-
தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும்
தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று-என்று கூறினார்கள் -என்றபடியே –
கூறிய பக்கத்தில் உள்ளவர்கள் உடைய அச்சத்தை அவர்கள் முன்னிலையிலே-
மல்லர்களை அழியச் செய்து தீர்த்து அருளினாப் போலேயும்
தம்முடைய அச்சத்தை போக்கி அருள–அதனால் கிருத்தாரத்தராய்-
நம்முடைய உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்-எல்லாம் இவன் அல்லது இல்லை -என்று ப்ரீதராய்
முன்பு அழகினைக் கண்டு பரிவாலே அஞ்சினவர்
அழகிலே நெஞ்சு சென்று அனுபவித்து கிருத்தார்தராய்த் தலைக் கட்டுகிறார்-
செங்கணாஞ்சேரி -ஆரம் உளா -ஆறு திவ்ய தேசங்கள் சேர்ந்த இடம் -நவ திருப்பதிகள் சேர்ந்த திரு நகரி போல் -ஸப்த ரிஷிகளுக்கு சேவை திருவாழ் மார்பன்
இமையவர் அப்பன் -தர்ம புத்ரன் –புனர் நிர்வாணம் செய்த திவ்யதேசம் சிற்றாறு –
மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -விது ரஸ்ய மஹா மதி —
ஸுர்ய வீர்ய பராக்ரமங்கள் -குணவான் -வீர்யவான் -அடுத்து -பெருமாள் குணங்கள்
எதிரிகள் சேனை கண்டு கலங்காமல் வீரன் –
உள்ளே புகுந்து கலக்குபவன் – ஸூரன்-
தனக்கு விகாரம் இல்லாமல் கலக்குபவன் பராக்ரமன் –
நாலாம் திருவாய் மொழியில் -கீழ் –
அவனுடைய ஸுகுமார்யத்தாலே தனிமைக்கு அஞ்சின இவருடைய பயம் தீரும்படி பரிவரையும் சக்தியையும் காட்டி
ஆஸ்வசிப்பித்த சர்வேஸ்வரன் இவர் இப்படி அஞ்சிற்று விரோதி பூயிஷ்ட தேசம் என்றாய் இருக்கும் –
நம்முடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சக்தியையும் காட்டுவோம் என்று இவர் திரு உள்ளத்திலே பிரகாசிப்பிக்க
அவனுடைய அகில விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அசேஷ ஜகத் விஷயமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரத்தையும்
ஆஸ்ரித ஆபத்சகத்வத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான அதிசயித வியாபாரத்தையும்
ஆஸ்ரயணீய ஸ்தலாந்தர விலக்ஷணமான தேச விசேஷ ஸ்ததிதியையும்
ஆசிரயணீயதா வை லக்ஷண்யத்துக்கு அடியான சர்வ பிரகார உபகாரகத்வத்தையும்
அநு பாவ்யமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்துவத்தையும்
ஸ்ரஷ்ட ருஸ் ருஜ்யாதி விபாகம் இல்லாத சர்வாத்ம பாவத்தையும்
சத்தா விபூதி ஹேதுவான நிருபாதிக சேஷித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் பரிவரான வைதிக அக்ரேஸருடைய சம்பத்தே தனக்கு சம்பத்தாம் படி
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நின்ற அதிசயத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராகிறார்-
வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-
இராசத துரோகிகளை கொல்லும் போது இராச சின்னங்களை-வாங்கிக் கொல்லுமாறு போலே-
தான் கொடுத்த முடியை வாங்கிக் காண் கொன்றது -என்று-அம்மங்கி அம்மாள் பணிப்பர்-
எங்கள் செல் சார்வே-கேசவன் தர்மருக்கு பின் தமியர் அல்லர் -வம்ச பூமிகளை உத்தரிக்க வராக கோபாலர்
எங்கள் –
மகா ராஜர் -பெரியாழ்வார்- ஸ்ரீ விதுரர் –தாம்-பிள்ளை உறங்கா வல்லி தாசர்–இன்னோர் அன்ன பரிவர்-
செல் சார்வே –அச்சம் இல்லாத இடம் என்று புகும் புகல்-
மேல் இவர்க்கு ஓடின அச்சம் நீங்கிற்று என்னும் இடம் இயல் தழைப்பிலே தெளிந்து இருக்கிறபடி கண்டதே-
இயல் ஓசையிலே தெளிய வேண்டுமே –
எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-
உலகத்தை படைத்தல் முதலாயின வற்றில் வல்லவனாய்–திருச் செங்குன்றூரிலே நின்று அருளினவன்–
அல்லது எனக்கு நல் துணை இல்லை என்கிறார்–
எங்கள் செல் சார்வு –
அனுகூல்யராய் இருப்பார்க்கு எல்லாம் அஞ்ச வேண்டாத புகல்-
யாமுடை யமுதம் –
புகல் மாத்ரமேயாய் இனிய பொருள் வேறே தேட வேண்டாதபடி இருக்கை-அனுபாவ்ய போக்ய வஸ்து -ப்ராப்யமும் ப்ராபகமும் இவனே
எம்மருவன் –
மற்று எல்லார் உடைய காரியமும் நம் புத்தி அதீனமாய் இருக்கும் அல்லது
நம் கார்யம் அல்லாதார் நினைவின் படி அல்ல காணும் இருப்பது-என்று எனக்கு அறிவித்து
என் அச்சத்தை நீக்கி–எனக்கு தாரகன் ஆனவன்-
அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே –இவனை ஒழிய எனக்கு சேர்ந்த துணை இல்லை-
அல்லாதார் கழுத்து கட்டியாதல்-துணை என்ற பேராய் ஆபத்தில் கூட அழுதல் செய்வர் இத்தனை-
—-
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணி கொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-
வராஹ ரூபி -பிரளய ஆபத்தில் ரஷித்தவன் திருவடிகளே சார்வு -கிருஷ்ணன் -விஷ்ணு -முதல் இரண்டாலும் சொல்லி-ஏனத்துருவாய் கிடந்த பிரான் – ஞானப் பிரானை அல்லால் இல்லை-நான் கண்ட நல்லதுவே-அவன் திருவடிகளை ஒழிய மற்று புகலிடமாய் இருப்பது–ஒரு பொருள் மநோ ரத திசையிலும் எண்ணத்திலும் இல்லை
——–
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-
ஆஸ்ரித அர்த்தமாக -த்ரிவிக்ரம -சமுத்திர மதன ரூபமான –அதிதன்-திருநாமம் –பிறிதில்லை எனக்கு-வேறு ரக்ஷகன் அல்ல
கோல மாணிக்கம் –பெரிய விலையதான இரத்தினம் போலே இருக்கின்ற அழகிய வடிவைக் கொண்டாயிற்று கடலைக் கடைந்தது –
மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்-நான் என்னை மனிதனாகவே நினைக்கின்றேன் -என்றும்
உங்களுக்கு உறவினனாகவே பிறந்து இருக்கிறேன் -என்றும் மறைக்க வேண்டாதபடி பத்தம் பத்துமாக நின்ற என் ஸ்வாமி-
பத்து அவதானங்கள் பத்து பாசுரங்களில் அருளிச் செய்யும் படி அருளினான் –
——–
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே–8-4-5-
அர்ச்சா ஸ்தலாந்தரங்களும் -அவனை ஒழிந்து இராது இருக்க -இங்கு நிலை ஒழிய -அடியேனுக்கு பொருந்துகிறது இல்லை
நல்ல நான் மறையோர்-அநந்ய ப்ரயோஜனர் -ப்ரேம பூயிஷ்டர்–எம்பெருமானாரைப் போலே ஆயிற்று அவ் ஊரில் பிராமணர்களும் –
——–
எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளி யம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-
சர்வ பிரகார உபகாரகன்- ஷீராப்தி நாதன் -பரிவர் நிறைந்த திவ்ய தேசம் –
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் –
மூவர் செய்யும் கார்யங்களும் ஓர் ஒருவரே செய்ய வல்லராய் இருப்பார்கள் –
அதிகாரி புருஷர்களில் இவர்களுக்கு உண்டான ஏற்றம் –
——
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-
அதிசயித அவயவ ஆபரண ஆயுத சோபை -உடன் உள்ளத்தில் இருப்பதால் பயம் தீர்ந்தேன் -நித்ய சந்நிஹிதன் ஆகா நின்றான் –
நான்கு செய்ய -இரண்டு செம்மை
திருச் செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன்–
தன் அழகோடு என் நெஞ்சிலே வந்து புகுந்தான் -என்கிறார்-
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு வந்தான் -முன்பு இங்கு அனைத்துடன் வந்து மறக்க முடியாமல் புகுந்து உள்ளான் –
திருச் செய்ய கமலக் கண்ணும் –
அழகியதாய் சிவந்து இருப்பதாய் மலர்த்தி செவ்வி முதலானவற்றாலே தாமரை போலே இருக்கிற திருக் கண்களும் –
தூது செய் கண்கள் பிரதம கடாக்ஷம் முதல் உறவு பண்ணி அருளும் –
செவ் வாயும் –
நோக்காலே பிறந்த முதல் உறவைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும் புன்முறுவலும்-
செவ் வடியும் –
புன்முறுவலுக்கு தோற்று விழும் திருவடிகளும் –
செய்ய கையும் –
திருவடிகளிலே விழுந்தாரை எடுத்து அணைக்கும் திருக்கைகளும் –
திருச் செய்ய கமல வுந்தியும் –
அணைத்தார்க்கு எப்பொழுதும் அனுபவிக்கத் தக்கதாய் –
அழகுக்கு எல்லையாய் –
எல்லா பொருள்கட்கும் பிறப்பிடம் என்று தோன்றும் படி இருக்கிற திரு நாபியும் –
செய்ய கமல மார்பும் –
பகவான் உடைய சம்பந்தம் இல்லார்க்கும் -சம்பந்த ஞானம் -இல்லாதார்க்கும் -பற்றாசான-பிராட்டிக்கு இருப்பிடம் ஆகையாலே
சிவந்த திரு மார்பும்
கமலை -என்றுமாம் –நீல மேனி -மாற்றி சிவந்ததாக ஆக்கி அருளும் செய்யாள் இருப்பதால் –
செய்ய வுடையும் –
திருமேனிக்கு பரபாகமான தன்மையைக் குறிப்பதான திருப் பீதாம்பரமும் –
திருச் செய்ய முடியும் –
அப்படி திரு மேனிக்கு பரபாகமாய்-அச்சம் தீரும்படி காப்பதற்கு அறிகுறியான திரு முடியும் –
ஆரமும் –
பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55 -என்கிறபடியே-திருமார்புக்கு தகுதியான திரு ஆரமும் –
படையும் –
வினைத் தலையில் ஆயுதமாய்– போக நிலையில் ஆபரணமாய்– இருந்துள்ள திவ்ய ஆயுதங்களும் –ஜாதி ஏக வசனம் –
என்றும் வென்ன சிந்தை யுளானே –
அவன் என்றும் ஒக்க என் சிந்தையிலே வசிக்கையாலே-அச்சத்துக்கு ஒதுங்க இடம் இல்லை –
அழகுடன் மறக்க ஒண்ணாத படி நெஞ்சில் புகுந்தான்-ந ச புநரா வ்ருத்தி போல் நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-
இப்படி நிறைவாக அனுபவித்த சீர் கொள் சிற்றாயன் உடைய– விலஷணமான குணங்களிலும் கீழ்ப் பாசுரத்தில் அருளிச் செய்த அழகிலும் அழுந்தி-
அவனைப் புகழும்படி அறிகின்றிலேன் -புகழாது ஒழியவும் மாட்டுகின்றிலன்-என்கிறார் –
திகழ என் சிந்தையுள் இருந்தானைச்
இதுவும் இவருக்கு ஓர் அச்சம் நீங்குவதற்கு காரணம் –
தம் நெஞ்சிலே இருக்கையாலே ஒரு அரணுக்கு உள்ளே இருக்கிறாப் போலே இருக்கிறது ஆயிற்று –
திகழ சிந்தையுள் இருந்தானை-என்றுஉகவாதார் நெஞ்சிலே இருக்கிற அச்சமும் போயிற்று –என் சிந்தையுள்-என்பதால்
இனிப் போய் பிறர் ஒருவர் வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் -பெரிய திருமொழி -7-2-7-என்னுமவர்களே அன்றோ
பொருந்து மூ வுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே –
தனக்கு வசப் பட்டு இருக்கின்ற எல்லா உலகத்தின் உடைய-படைத்தல் முதலானவற்றை செய்யுமவன்
என்று திரளச் செய்யும் அத்தனை-பொருந்து-அப்ருதக் ஸித்தம் அன்றோ ஸமஸ்தமும் -பிரகாரம் சரீர பூதம் –
பிரித்து வகை இட்டு சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -என்றது
சுருங்க சொல்லுதலே சொல்லுவது அத்தனை -என்றபடி-
தென் அரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று திரள செல்வத்தைச் சொல்லுமா போலே –
விபூதி அத்யாயம் அருளிச் செய்தால் போலே –
ஏ பாவம் பரமே -தலையில் கை வைத்து -சொல்ல முடியாமல் சங்க்ரஹமாக அருளிச் செய்தானே
ஏ பாவம்! பரமே! ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார்ஆர்?
மா பாவம் விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி ஏறு அன்றீயே?–2-2-2-
———-
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே-8-4-9-
யாவையும் தானே –
இங்கன் பிரித்து சொல்லுகிறது என் –சேதனம் அசேதனம் என்னும் வேறுபாடு அற அவனுக்கு உரிமை ஆகும் –
சர்வ சப்த வாச்யன் அவனே -சர்வம் கல் இதம் ப்ரஹ்ம -வேதம் தமிழ் செய்த மாறன் -பிரகார பிரகாரி பாவம் —
கொடைப் பெரும் புகழார் –
அவ் ஊரில் உள்ளார் கொடையால் வந்த பெரும் புகழை உடையார் -என்றது –
எதிரிகளையும் கொடையால் வசீகரிக்க வல்லராய் இருக்கையைத் தெரிவித்த படி –
தானமும் சாமம் முதலானவைகளில் ஓன்று அன்றோ –பெரும் புகழாவது-ஞானத்தை கொடுத்ததால் உண்டாகும் புகழ் –
———–
அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம் பதி
அவனி தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக் கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே--8-4-10-
சர்வேஸ்வரனாய் வைத்து-எல்லாப் பொருட்கட்கும் பற்றப் படுமவன் ஆகைக்காக-
திருச் செங்குன்றூரில் நின்று அருளினவனை-அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார்
நிருபாதிக சேஷி -அவாந்தர சேஷிகள் ப்ரஹ்மாதிகள் -சத்தையும் -தான் இட்ட வழக்கு -தத் பிரயோஜனம் தனக்காம் படி –
அந்தராத்மாவாக இருப்பதும்
அமர்ந்த நாதனை யவரவராகி-பொருத்தமாக ஸ்வாமி -சகல சேதன நிர்வாகம் என்றால் இவனுக்கே பொருந்தும் -நிருபாதிக சேஷி
யவரவராகி–
இரவலர் கிட்டினால் அவர்கள் தம் தாமுக்கு நல்லவர் ஆம்போலே அவர்களுக்கும் நல்லனாய் இருக்குமவன் -என்றது
அவர்கள் -இது நமக்கு வேண்டும் -என்று இருக்குமாறு போலே
இவர்களுக்கு இது வேண்டும் -என்று இவன் இருக்கையைத் தெரிவித்தபடி –
அங்கன் அன்றிக்கே –
அவர்களுக்கு பெறுகையிலே விருப்பம்
கொடுக்க கொடுக்க அவர்கள் கொள்ளுகையிலே அர்தித்வம் விருப்பம் இவனுக்கு -என்றது
பெற்றோம் என்ற உவகை அவர்களுக்கு-கொடுக்கப் பெற்றோம் -என்ற உவகை இவனுக்கு -என்றபடி –
அவர்க்கு அருள் அருளும் –
அவர்கள் விரும்பினவற்றைத் தன் பேறாகக் கொடுக்கை
கொள்ளுகிறவனுடைய இரப்பை தான் உடையனாய் கொடுக்கை –
அம்மான் -பூர்த்தி -பகவானுக்கு பூர்த்தி அர்த்தித்தவத்துக்கு ஹேதுவாகும்
அம்மான் -சம்பந்தம் -இழவும் பேறும் தனது பேறாக இருக்குமே
முக்கண் அம்மானை நான்முகனை
பிரமன் சிவன் இவர்களுடைய இருப்பு முதலானவற்றுக்கு நிர்வாஹகன் ஆனவனே-
பிரமன் சிவன் -இவர்களை பலகால் சொல்லுகிறது–
இவனுடைய நிர்வாஹகத் தன்மை தோற்றுகைக்காகவும்
நிர்வஹிக்கப்படும் பொருள்களில் ஒன்றால் நலிவு உண்டாகை கூடாது என்கைக்கும்
அன்றிக்கே
அமர்ந்த மாயோன் -என்று வைத்து இவர்களைச் சொல்லித் தலைக் கட்டுகையாலே
சாமாநாதி கரணத்தைக் காட்டுகிற சொற்கள் விசேடியத்தில் சென்று சேரக் கடவை ஆகையாலே
சரீரியாய் இருக்கிறவனை என்றுமாம் –
——–
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-
நிகமத்தில்
அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே-இத் திருவாய்மொழியை கற்றவர்கட்கு இது தானே முதலில் பரமபதத்து ஏறக் கொடுபோய்-பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும் -என்கிறார்-
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் –
இவர் ஐயம் கொண்டு அஞ்சுதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன-
அவனுடைய இனிமை அன்றோ இவரை அஞ்சப் பண்ணுகிறது –
எனக்கு எல்ல வித இனிய பொருள்களும் ஆனவனே- சர்வ ரச -என்னக் கடவது அன்றோ –
மேலே அச்சம் நீங்குவதற்கு உரிய காரணங்கள் சொல்லப் படுகின்றன –
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –