ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -86-அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன்-வள வேழ்வுலகு -1-5-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

என்ன என்று சொல்லி புலம்புவேன்-நீக்கியை -ஏந்தியை-கிரியை அல்ல -இரண்டாம் வேற்றுமை உருவு சேர்த்து –சோறாக்கி -சோறை ஆக்குபவன் -சோறாக்கியை போல்-தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் –துறை–கீழ் மகள் -தாய் பாசுரம்-இரண்டுக்கும் சேர்ந்து இங்குள்ள பதங்கள் நிர்வாகங்கள் உண்டு-வள வேழ்வுலகு -1-5-இதன் விவரணம் -நினைவு நைந்து பாடும் –திருவாய் மொழி–அடைக்காய் -வெற்றிலையும் பாக்கும் –அடை இலை -திருமேனி பச்சிலை –அதில் உள்ள பூ நாபி கமலம் –அதில் அலர்ந்த அயன்-அடைக்கலம் -ரஷ்ய வஸ்துவாய் -ரக்ஷிக்கிறவனையும் சொல்லலாம்-சிவன் துயரை நீக்கியவன்-அடியார் ரக்ஷிக்க திவ்ய ஆயுதங்கள் ஏந்தி உள்ளவனே-ஆஸ்ரிதர்களுக்கு அடங்கி -அடிக்கப்பட்டு அத்தாலே அலர்ந்து இருந்தவன்-அவன் இடம் குறை இல்லை–ஓங்கு -அடைக்கமலத்து ஓங்கும் கமலம் -பச்சை மா மலை போல் மேனி -அதில் உள்ள நாபி கமலம்-அடைக்கலத்து அரன் -சரண் அடைந்த ருத்ரன்-அடைக்கலத்து நீக்கி -ரக்ஷகமான பெருமாள் -துயரம் போக்குபவன்-அடைக்கலத்து அயன் -தான் வளரும் ஆதாரமாகக் கொண்ட -கர்ப்ப ஸ்தானம் என்றும் கொள்ளலாம் 

அவதாரிகை –எத்தனை ஏனும்  இருள் வந்து மேலிட்டு பாதகம் ஆனாலும் – அத் தலையில் ஒரு குறை சொல்ல ஒண்ணாத படி இறே–அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும்படி –மகள் நொந்த படியும்
தாயார் அவன் இடம் குறை இல்லை என்றும் கொள்ளலாம்-

இப்படி ஆர்த்தராய்ப் புலம்பினவர் ஆபத் சகன் அல்லாமையும் ஆபந் நிவ்ருத்தி பரிகரம் இல்லாமையும்
ஆஸ்ரித பவ்யன் இல்லாமையும் உதவாது ஒழிகிறானோ இப்படி இருக்க முகம் காட்டாத போதே நாம் எத்தைச் சொல்லி பிரலாபிப்பது என்று நிராசரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார்-இது நாயகி வார்த்தை யாகவுமாம்-

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே
– – 86-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –

அடை–இலையாகிய
கலந்து–இடத்திலே
ஓங்கு–உயர்ந்துதோன்றின
கமலத்து–(திருமாலின் நாபித்) தாமரை மலரிலே
அலர்–வெளிப்பட்டுத் தோன்றின
அயன்–ப்ரஹ்மாவினுடைய
சென்னி என்னும்–தலையாகிய
முடை கலந்து–முடை நாற்றமுடைய பிக்ஷாபாத்திரத்திலே
ஊண்–உணவு இரத்தலை
முன்–முன் ஒரு காலத்தில்
அரனுக்கு–சிவனுக்கு
நீக்கியை–போக்கியருளினவனும்
ஆழி சங்கம்படைக்கலம் ஏந்திய–ஸுதர்சந பாஞ்சஜந்யங்களை ஆயுதங்களாகத் திருக்கைகளிற் கொண்டுள்ளவனும்
வெண்ணெய்க்கு–வெண்ணெய்க்காக
அன்று–களவுங்கையுமாக அகப்பட்ட அந்நாளில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வல் தாம்புகளால்–வலிய கயிறுகளால்
புடைக்க-அடிக்க
அலந்தானை–வருந்தினாற்போலத் தோற்றினவனும்
எம்மானே–எமது தலைவனுமான திருமாலைக் குறித்து
என் சொல்லி புலம்புவனே–நான் என்னவென்று சொல்லிப் புலம்புவனே?

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—5–அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே
தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த அநந்தரம் அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து ஸூ ரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-உம்முடைய பொல்லாமையைப் பாராதே நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி தம்மை அவன் சேர்த்துக் கொள்ள அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை வளம் மிக்க -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி இவரையும் சேர விரும்பினான் –வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-

அடைக்கலத் தோங்கு-சர்வேஸ்வரன் பக்கலிலே நிஷேபம் போலே யாயிற்று ப்ரஹ்மா வளருவது-(வைத்த மா நிதி அன்றோ)-கமலத்தல ரயன் –நிஷேபம் போலே என்ற இடம் –ஒரு  குறை பிறவாதபடி உணர்ந்து – நோக்குகிற படியை சொன்ன இத்தனை –-அவ்வளவு அன்றிக்கே – நேரே சர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜன்மத்தால் வந்த ப்ராப்தியை உடையவன் –(அஜன் யோனி சம்பந்தம் இல்லாதவன் –அயன் -அவன் இடம் நேராகப் பிறந்த புத்ரன்)-சென்னி -இத்யாதி –லோக குருவுமாய் -பிதாவுமானவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் -ஒருவன் –தலை அறுப்புண்டு எளிவரவு பட்டு நின்றான் ஒருவன் –இவருடைய துக்கத்தையும் போக்கினான் ஆயிற்று இவன் –அயன் சென்னி என்னும் முடைக்கலம் –பிரம்ம சிரஸ் என்றொரு நாமம் மாத்ரமேயாய் –தான் முடைக்கலமாயிற்று –பூதி கந்த பஹூளம் (துர்நாற்றம் மிக்கு )ஆகையாலே கழுகும் பருந்துமாய் தொடர்ந்து திரியும்படி யாயிற்று சஞ்சரிப்பது –முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை –அதிலே உண்டு திரிகிற இத்தை முன் அரனுக்கு-நீக்கினவனை –சம்ஹர்த்தாவாய் தன் அதிகாரத்தோடு இருக்கச் செய்தே –இவ் எளிவரவு வர-
நாம் ஒருவன் ஆக்கிக் கார்யம் கொள்வான் ஒருவன் -நோவு பட விட்டு இருக்க ஒண்ணாது -என்று
அவனுடைய துக்கத்தைப் போக்கினவனை –இத்தால் –ஸ்ருஜ்யத்வ கர்ம வஸ்யத்வ ஷேத்ரஞ்சத்வங்கள் இருவருக்கும் அவிசிஷ்டம் என்றபடி –ஒருவன் தலை அறுப்புண்டு நின்றான் –ஒருவன் பாதகியாய் நின்றான் –இவன்-அவர்கள் இருவருக்கும் வந்த துக்கத்தைப் போக்கிக் கொண்டு நின்றான்

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை –இவர்கள் இப்படி அலைந்து கொண்டு கிடந்தால் – ரஷிக்க வேண்டும் போதாக கருவி எடுக்க பார்த்து இருக்க ஒண்ணாது -என்று திவ்ய ஆயுதங்களை எப்போதும் கையிலே தரித்துக் கொண்டு நிற்கிறவனை –திருவாழி உள்ளிட்ட திவ்ய ஆயுதங்கள் ஆகிற திவ்ய ஆபரணங்களை ரஷிக்க வேண்டும்படியாக- தரித்து கொண்டு இருக்கும் ஸ்வபாவன் ஆனவனை –வெண்ணெய் இத்யாதி –பிரம்மா ருத்ராதிகளுக்கும் கூட துக்க நிவர்த்தகனாய் –அதுக்கு ஈடான பரிகரத்தையும்  உடையவனாய் -இருக்கச் செய்தே –ஆஸ்ரிதரால் தனக்கு வந்த கிலேசத்தை-பரிஹரித்து கொள்ள மாட்டாதே இருக்குமவன் –ப்ரஹ்மாதிகளுக்கும் கூட நிர்வாஹனாய் –
சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிறவன் தன்னுடைய விபூதி யில் ஏக தேசத்தில் – சில அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லாது செல்லாதே -அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவனுக்கு -ஓன்று குறையாய் அது தான் நேர் கொடு நேர் கிடையாதே களவு காணப் புக்கு- வாயது கையதாக அகப்பட்டு -அதுக்கு பிரதி கிரியை பண்ண மாட்டாதே நிற்கிறவனை –அன்று –அவன் வந்து கட்டுண்டு எளியனாவது ஒரு நாள் உண்டே – அதுவும் ஒரு நாளே -(கீழ் தாய் பாசுரம் என்றால் இந்த நிர்வாகம் ) தானே வந்து கட்டுண்டு எளியனாய் இருக்கிற அன்று கிட்டப் பெறாதே -இன்று பெறுகைக்கு பிரார்த்தித்து இருப்பதே -நான் (கீழ் மகள் பாசுரம் என்றால் இந்த நிர்வாகம் ) ஆய்ச்சி –ஓர் இடைச்சியால் வந்த நலிவு பரிஹரிக்க மாட்டாதே இருப்பதே –வன் தாம்புகளால் –உரவியவை எல்லாம் அற்று அற்றுப் போக மேலே மேலே சிலவற்றை எடுத்து அடித்தாள் ஆயிற்று –-ஸ்நேஹம் (அன்புக்கும் வெண்ணெய்க்கும் ஸ்நேஹம்  )எவ்வளவு உண்டு -அவ்வளவு நிலை நிற்கும் இறே-சீற்றமும் –இடைச்சி குமைத் திறங்கள் (பெரிய திருவந்தாதி )-என்னக் கடவது இறே –புடைக்கலந்தானை –அலந்து இருக்கும் இதுக்கு மேற்பட இதுக்கு ஒரு பிரதி கிரியை இல்லை பண்ணலாவது –-அலந்தானை -அலவென்று மலர்வாய் –இவள் அடிக்க அடிக்க முகம் மலர்ந்து-இருந்த படியாகவும் –கண்ணியால் -குறும் கயிற்றால் கட்ட வெட்ட என்று இருந்தவனை (பெரிய திருமொழி)  -என்று இருந்தவன் இறே–எம்மானை –கட்டுண்டு அடியுண்டு கண்ணும் கண்ண நீருமாய் உடம்பு வெளுத்து இருந்த இருப்பைக் காட்டி என்னை அனந்யார்ஹமாக எழுதிக் கொண்டவனை –-பையவே நிலை (திருவாய் -5-10 )இறே ஈடு அழிப்பது –என் சொல்லிப் புலம்புவனே –இப்போது ஆசைப் பட்டு பெறாமையாலே புலம்ப வேண்டா நின்றது-முன்பு செய்து வைத்த  தொரு குறை -இல்லாதபடி யாலே சொல்லுகைக்கு ஒரு பாசுரம் காண்கிறிலேன் –நாம் இப்போது பெறாது ஒழிகிறது நம்முடைய க்ரம ப்ராப்தி பற்றாமை-என்று இத் தலையிலே கை வாங்கலாய் இருந்தது –அங்கனம் சொல்லலாவது ஓன்று இல்லை இறே-அத் தலைக்கு –மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்–அயன் -அஜன் -யோனி ஜன்மாவான் அன்று –

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாயும் இருந்து -ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு பரிகரமும் கொண்டு -ஆஸ்ரித ஸூலபனாயும்- பிரம்மா ருத்ராதிகள் துயரங்களையும் தீர்த்து அருளிய சர்வ ஸ்மாத் பரனாயும் இருந்து வைத்து –-அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் -தாமரைப் பூ பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலே திரு நாபித் தாமரை மலர் பசிய திருமேனி மீது எழுந்து தோன்றி இருக்குமே
அடைக்கமலமாக புகுந்த சிவனுக்கு நீக்கி -ரக்ஷகமாக இருந்து நீக்கினவன் என்றுமாம் – அடைக்கலத்தோங்கு அயன் –என்று தன்னிடம் அடைக்கலமாக வந்த நான் முக்கண் என்றுமாம் அடைக்கலம் என்றால் ரஷிப்பதற்கு உரிய பொருளும் ரக்ஷகனையும் குறிக்கும்
கமலத்து அலர் -தாமரைப் பூ என்று கொண்டால் தோன்றிய -வருவித்திக் கொள்ள வேண்டும் – முடை -கெட்ட நாற்றம்-புடைக் கலந்தானை-புடைக்க அலர்ந்தானை -பட்டர் திருகி கோஷ்ட்டியூரில் இருக்கும் பொழுது நஞ்சீயர் -பொருள் உரைக்க-ஆழ்வார் திரு உள்ளத்துக்கு உகந்த அர்த்தம் என்று புகழ்ந்தார் -அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்வான்-ஆற்றாமை மிக்கு ஆழ்வார் திருக் கல்யாண குணங்களையும் திரு நாமங்களையும் சொல்லி முறையிடுகிறார் – என் சொல்லிப் புலம்புவனே அவனது குண சேஷ்டிதங்களில் ஒன்றும் குறை இல்லாமல் எனது குறையே–வல் வினையேன் -என்றே சொல்லக் கடவேன் –

நாயகனைப் பிரிந்த நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. ஆபத்துக்கு உதவுந் தன்மையும் அடியார்களுடைய விரோதிகளை நிக்ரஹித்தற்கு ஏற்ற கருவிகளையுடையவனாருக்குந் தன்மையும் அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையும் எம்பெருமானுக்கு இயற்கையாகவுள்ளன;
இத்தன்மைகள் தன் பக்கலில் உதவாமையைக் குறித்துப் பராங்குசநாயகி இறங்குகிறானென்க.
அடைக்கலத்தோங்கு கமலத்தலரயன் சென்னியென்னும் முடைக்கதை தூண் முன்னரனுக்கு நீக்கியை” என்றதனால் ஆபத்துக்கு உதவுந் தன்மையும்,-“ஆழிசங்க படைக்கலமேந்தியை” என்றதனால் ஆச்ரித விரோதிகளை நிக்ரஹிப்பதற்கு ஏற்ற கருதியுடைமையும்
“வெண்ணெய்க் கன்றாய்ச்சி வன்தாம்புகளால் படைக்கலந்தானே.– என்றதனால் அடியார்க் கெளிமையும் தெரிவிக்கப்பட்டனவாம்.(என் சொல்லிப் புலம்புவனே.) சிவனுக்குத் துயரந் தீர்க்க ஆயுதமேந்தியுள்ளவனை நோக்கி என் துயரந்தீர்க்கக் கையில் கருவி கொள்ள வேணுமென்று சொல்வேனோ? ஆய்ச்சியர்க்குக் கட்டவு மடிக்கவும் எளியனானவனை நோக்கி எனக்கெளியனாக வேணுமென்று சொல்வேறோ?-யாது சொல்லிக் கூப்பிடுவே னென்கிறான். அந்தோ இத்தன்மைகள் பாவியேன் பக்கலில் உதவக் காணவில்லையே! என இரங்கியவாறு.

ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து சிரமுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு இடமாயிருக்கின்றதெனக் கருதி, அவனது சிரமொன்றைக் கொய்துவிட, அக்கபாலம் அப்படியே அவன் கையில் ஒட்டிக்கொள்ள ‘இதற்கு என்ன செய்வது? என்று கவலைப்பட, தேவர்களும், முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்” என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும் என்று சொல்ல, சிவபிரான் பலகாலம்
பல தலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
ஒருநாள் பதரிகாச்ரமத்தை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி ஏற்றபோது அப்பெருமான் அக்ஷயமென்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டகன்றது என்பது, அயன் சென்னிகலத்து ஊண் அரனுக்கு நீக்கிய கதை.

தாமரைப்பூப் பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலத் திருநாபித் தாமரை மலர் எம்பெருமானது பசிய திருமேனியின் மீது எழுந்து தோன்றினமை “அடைக்கலத்தோங்கு கமலம்” என்றதனால் விளங்கும்.-இனி, அடைக்கலமென்பதை அரனுக்கு விசேஷணமாக்கி, அடைக்கலமாகப் புகுந்த சிவனுக்கு, என்றும்,-நீக்கி என்பதற்கு விசேஷணமாக்கி ரக்ஷகமாக இருந்து நீக்கினவனென்றும் பொருள் கொள்ளலாம். அன்றி, ‘அடைக்கலத்தோங்கு அயன்’ என் அந்வயித்து (தன் பக்கலிலே) அடைக்கலமாக வளர்கிற பிரமன் என்று உரைப்பாருமுளர்.
அடைக்கலமென்பது ரக்ஷிப்பதற்கு உரிய பொருளையும் ரக்ஷகனையுங் குறிக்கும்
‘கமலத்து அலர்’ என்பதற்கு தாமரைப்பூ எனப்பொருள் கொண்டால், தோன்றின’ என்று வருவித்துக் கொள்ளவேணும். முடை– கெட்டநாற்றம்.-படைக்கலம் – போர்க்கருவி: எம்பெருமானுக்குச் சங்குச் சக்கரங்கள் ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் அமையும்.-படைக்கலம் ஏந்தி = படையும் கலமுமாக (ஆயுத ஆபரணங்களாக)த் தரித்தவன் என்றலும் பொருந்தும். திருவாழியாழ்வன் ஆயுத மாகலாம்;-திருச்சங்காழ்வான் எங்ஙனே ஆயுதமாகும் வகையென்னில்; ஸ்ரீபஞ்சஜக்யம் தனது பெரு முழக்கத்தால் பகைவரை அஞ்சுவித்து அழித்தலால் ஆயுதவர்க்கத்தின் பாற்படும்.அன்று ஆராய்ச்சி வன்தாம்புகளால் புடைக்க அலந்தானை= வெண்ணெய் திருடின குற்றத்திற்காக யசோதைப் பிராட்டி உரலோடு பிணைத்துத் தாம்பினால் கட்டியடிக்க வருந்திருந்தவனை என்றபடி; வருந்தி நின்றது அடிப்பதனாலுண்டான துன்பம் பொறுக்கமாட்டாமையாலன்று;-திருவாய்ப்பாடி யெங்கும் துருதுருக்கையாய்த் திரிந்து பெண்களையும் தயிர் பால் நெய் வெண்ணெண் முதலியவற்றையும்
கொள்ளைப் பெறாதபடி இங்ஙனே கட்டிப்போட்டு வைத்திருக்கிறாளே யென வருந்தியவாறு பெரிய திருவிழாக்களில் கள்ளப் பயல்களை அரசாங்கச்சேவகர்கள் சிறைபடுத்தி வைத்தாலி, ‘வேண்டினபடி திரிந்து களவு முதலிய செய்யப்பெறாமை நம்மையிப்படி சிறைப்படுதுதிவைப்பதே!’ என்று அப்பயல்கள் வருந்துவது போல.

பட்டர் திருகோட்டியூரி லெழுந்தருளியிருக்கும்போது ஒரு ஸ்வாமி வந்து ‘அடியேனுக்கு ஓருரு திருவிருத்தம் பொருளருளிச் செய்யவேணும்’ என்று பிரார்த்திக்க, ‘நம்பெருமானைப்பிரிந்த துயரத்தினால் எனக்கொன்றும் சொல்லப்போகிறதில்லை;-நஞ்சீயர் பக்கலிலே கேட்டுக்கொள்ளும் என்று சொல்லி, நஞ்சீயர்க்கு நியமிக்க, சீயரும் பொருளருளிச் செய்து வகையில்
இப்பாட்டளவிலே வந்தவாறே “புடைக்க அலந்தானை” என்கிற பாடப்படியே நஞ்சீயர் பொருளுரைக்க,
பட்டம் அதுகேட்டு ‘ஜீயா!” “அலந்தானை” என்ற பாடத்திற்காட்டிலும் “அலர்ந்தானை” என்ற பாடம்
ஆழ்வார் திருவுள்ளத்திற்கு மிகப் பொருந்தும் போரே இன்று தோன்றுகின்றது’ என்றருளிச் செய்தாராம்.
-ஆய்சச்சி அடிக்க அடிக்க முகமலர்ந்தானாம் கண்ணபிரான். (இதனை விவரிப்போம்.)
கண்ணபிரான், வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டு துண்டாக அறுத்து வைத்திடுவான்; அவற்றை அவன் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு கயிறுவடிவமாக்கி அதுகொண்டு கண்ணபிரானைக் கட்டுவள்; அப்படி கட்டும்போது தன் உடம்புக்கு எட்டம் போராதபடியான
அக்கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்ட முடியாதபடி எளிதில் தன்னைத் தப்பித்துக்கொள்ள வல்லவனாயினும் தனது ஸௌசீல்யம் ஸௌலப்யம் ஆச்ரித பாரதந்திரியம் முதலிய சீலங்களை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்த்து மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டு அடியுண்டிருக்கை முதலான இவ்வகைகளால்தான் அக்குணங்களை விளங்கச் செய்து கொள்ள வேணுமென்று கொண்டு, ஒரு சுற்றுக்கும் போராத தாம்பு இரண்டு மூன்று
சுற்றுக்கு போரும்படி உம்பைச் சுருக்கி அமைத்துக் கொண்டு ‘கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்” என்னும்படி அவன்; ‘இங்ஙனே நம்முடையய ஸௌசீல்ய ஸௌல்ப்ய குணங்கள் விளங்கப் பெற்றோமே;-அவதார ப்ரயோஜநம் நன்கு நிறைவேறப் பெற்றதன்றோ’ என்று முகமலர்ச்சியடைந்திடுவன் என்க.-எம்பெருமான் பக்கல் ஈடுபட்டு ஆற்றாமை கொண்ட ஆழ்வார் அவனது திருக்கல்யாண குணங்களையும், திரு நாமங்களையுஞ் சொல்லி முறையிடுதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருள்.-(என்சொல்லிப் புலம்புவனே?) அவனது குணசேஷ்டிதங்களில் குறையொன்றுங் காணாமையால் எனது குறையையே நான் சொல்லக்கடலே னென்பதாம்.

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-பசுத்த இலையாகிற இடத்திலே உயர்ந்த கமலத்திலே விகசிதனாய்த் தோன்றின
ப்ரஹ்மாவினுடைய தலை என்று சொல்லப்பட்ட முடை நாற்றத்தை யுடைய பாத்திரத்தில் ஊணை
சாப உபஹதனான காலத்தில் ஸம்ஹார கர்த்தாவான ருத்ரனுக்குப் போக்கினவனை-(பிஷாண்டர் கோயில் ஹர சாபம் போக்கிய கரம்பனூர் அருகில்)-இலையில் ஓங்கின கமலம் -என்கையாலே
பசுத்த திரு மேனியைக் காட்டுகிறது-அரனுக்கு நீக்கிவை -என்கையாலே ஸ்வ சாப ஸம்ஹாரம் பண்ண மாட்டாதவன் கிடீர் லோக ஸம்ஹாரம் பண்ண இருக்கிறான் என்றபடி-ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-என்றும்
அடங்காரை எரி அழலம் புக வூதி–திருவாய் -4-8-8-என்றும் விரோதி நிரசன பரிகரத்தைக் கை விடாதவனை-படைக்கலம் -ஆயுதம்-(படை-என்று ஆயுதம் என்றும் அவையே கலம்-கலன் -ஆபரணம் என்றுமாம்)-நீக்கி ஏந்தி என்று சொல்லாய் இரண்டாம் வேற்றுமையாய் இருக்கிறது-வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை-வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயான இடைச்சியானவள் திருமேனியின் மார்த்தவம் பாராதே
சிக்கெனத் தாம்புகள் கைக்கு எட்டியது எல்லாம் எடுத்துத் தன் கோப அநு ரூபமாகப் புடைக்க
அதுக்கு பிரதிகிரியை காணாதே அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -பெருமாள் திருமொழி -7-8- என்னும்படி அலமருகிறவனை–எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – இந்த அபதானத்தாலே எத்திறம் அபவ்யனானவன் பவ்யனாக வேணும் என்னவோ-அபரிகரனானவன் ஸ பரிகாரனாக வேணும் என்னவோ-எத்தைச் சொல்லிக் கூப்பிடுவது என்கிறார் ஆயிற்று–இது நாயகி புலம்பலுக்கும் ஒக்கும் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அடைக்கலத் தோங்கு-சர்வேஸ்வரன் பக்கலிலே போலே யாயிற்று ப்ரஹ்மா இருப்பது நிஷேபம் போலே என்றவிடம் குறை வராதபடி யுணர்ந்து நோக்குகின்ற படியைப் பற்றச் சொன்னது அத்தனை–கமலத்தல ரயன்-அவ்வளவு அன்றிக்கே -ஸர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜென்மத்தாலே வந்த ப்ராப்தியை யுடையவன்–சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-லோக குருவுமாய் பிதாவுமானவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் ஒருவன்
தலை யறுப்புண்டு கிலேசியா நின்றான் ஒருவன் இவருடைய கிலேசத்தையும் போக்கினவன்–அயன் சென்னி என்னும் முடைக்கலம்-ப்ரஹ்ம சிரஸ் என்ற ஒரு நாமத்தை யுடைத்தான முடைக்கலம் ஆயிற்று-பார் ஏறி யுண்ட தலைவாய் -இரண்டாம் திரு -63-என்னும்படி கழுகும் பருந்தும் தொடர்ந்து திரியும்படிக்கு ஈடாக வாயிற்று ஸஞ்சரிப்பது-முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அடைக்கலத் தோங்கு கமலத்தலரயன்-கதுப்பும் கருமையும் பசுமையும் அகலமுள்ள இலை உள்ளதும் ஓங்கினதுமான செங்கமலத்தில் உத்பவித்தவன் அவனுடைய–சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை-அவனுடைய சிரஸ் கபாலமான அதி ஹேய நாற்றமுள்ள பிஷா பாத்திரத்தில் பிஷிக்கும் ருத்ரனுக்கு ஸர்வரும் பார்க்க அவர் முன்னாகவே அந்த ப்ரஹ்ம ஹத்தியைப் போக்கினவனை–ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை-திருக் கைகளிலே திருவாழி திருச்சங்கு முதலான திவ்ய ஆயுதங்களை திவ்ய ஆபரணமாகப் பூ ஏந்தினால் போல் தரித்தவனை-வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை-வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயே பலவத்தான கண்ணி நுண் சிறுத் தாம்புகளால் கட்ட
உரவிடை யாப்புண்டு அவன் படைக்கப்புடைக்க முக கமல விகசநத்தோடே ஒளி விகஸநத்தை யுள்ளவனை–எம்மானை-இவைகளை எல்லாம் எனக்கு காட்டி என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை–என் சொல்லிப் புலம்புவனே – எத்தைச் சொல்லிப் புலம்ப வல்லேன் நான் என்கிறார் –

தாத்பர்யம்–இதில் சர்வேஸ்வரன் நம்மை ரக்ஷிக்க அவதரித்த போது ஒதுங்கிப் போன தம்மை வெறுத்து பேசுகிறார்-உமக்கு புத்ரன் சரண்யன் -நான்முகன்-ருத்ரனுடைய ப்ரஹ்மஹத்தி போக்கியும்
அங்க ஹீனனான ப்ரஹ்மாவை அதிகாரத்தில் இருந்து தள்ளி வைக்காதே தொடர்ந்தும் தங்களையே ஈஸ்வர் என்று அபிமானம் கொண்ட அவர்களுக்கு ரக்ஷகனாய் ரக்ஷண பரிகரங்களை எப்போதும் கையிலே ஏந்தி வெண்ணெய் உண்டு அபவாதம் பொறாமல் தாயான யசோதை உனது மேல் பரிவினால் கைக்கு எட்டிய தாம்பினால் உன்னை அடிக்க அத்தைத் தப்பித் போக மாட்டாமல் அலர்ந்து இருந்த உன்னை சேவிக்கப் பெறாமல் இருந்தது எனது குற்றமே என்கிறாள்

1-5-வள வேழ் உலகின் பிரவேசம் –

முதல் திருவாய்மொழியில் ‘சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரன் ஆகையாலே அவனைப் பற்றுவார்க்கு ஒரு குறை இல்லை,’ என்றார்;
இரண்டாந்திருவாய்மொழியால், அந்த ஆச்ரயணம் தான் புருடோத்தமனைப் பற்றுகிறது ஆகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது,’ என்றார்;
மூன்றாந்திருவாய்மொழியால், பஜிப்பார்க்காகத் தான் அவதரித்து ஸூலபனாகையாலே பஜிக்கத் தட்டு இல்லை,’ என்றார்;
நான்காந்திருவாய்மொழியால் ஸூலபனானவன் ஆனவன் தானே -அபராத சஹனாகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது ,’ என்றார்;
அயோக்ய அநுஸந்தானம் ‘தம் தாழ்வினை நினைந்து அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக் கொள்ளும் சீலவான்,’ என்கிறார், இத்திருவாய்மொழியால்.

கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்; இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞான காரியம்.அகலுவான் என்?’ என்னில்,- சேஷிக்கு – தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தம் தாம் விநாசத்தை அழிவினைப் பாரார்கள் அன்றே? -நான், நல்லார் தீயார் என்று நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் என் காலை வைத்ததைக் கண்டீரே,’
எனத் தான் திருவுலகு அளந்தருளின எளிமையைக்காட்ட,-ஒரு குணாதிக்யமோ வேண்டுவது ‘நம்மால் வரும் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று பின்னையும் அகலப்புக,-உம்மால் வரும் மேன்மையேயன்றோ நீர் வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேண்டுமோ, வேண்டாவோ?
நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று எனக்குத் தாரகங்காணும்;
இனி, நீர் அகலில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்;
நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு-சத்தா ஹானி ,’ என்று கூறி, பின்னர்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ‘நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த விபீடணன் -போட்கன்- வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்;
நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும்,கரிஷ்யே வசனம் தவ-என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும்,
வருந்தித் தம்மை இசை வித்து, சேர்தற்கு அவன் தான் விரும்பியவாறே -சம்ச்லேஷ உன்முகனான படியே ஸம்ஸ்லேஷித்து சேர்த்து- தலைக் கட்டினான்,’ என்கிறார்.-

இப்படி கடக முகத்தால் இவ் வாழ்வார் தம் தசையை அறிவித்த அநந்தரம் -இவர் ஆர்த்தி தீரும்படியாக –
அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணன் -என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே ஸ்வாமித்வ ஸுசீல்ய விசிஷ்டானாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து
சந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய நிரவதிக ஸுசீல்யத்தை அருளிச் செய்வதாக தத் உபபாதகமான -1-அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும்–2-சர்வ
காரணத்வத்தையும் –3-அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும் -4-விபூதி த்வய நிர்வாஹகத்வத்தையும் –5-ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்தியையும் —
6-போக்யமான ஸ்வபாவ நாம யோகத்தையும் -7–போக்யதா ப்ரகாசகமான ஸுலபயத்தையும் -8–ஆஸ்ரித விஷய வ்யாமோஹத்தையும் –
9-ஆஸ்ரித உபகார அதிசயத்தையும் -அனுசந்தித்து
இப்படி விலக்ஷணான சர்வேஸ்வரனை அத்யந்த நிக்ருஷ்டரான நாம் அணுகுகை அவ்த்யாவஹம் –
அதிசய ஞான அணுகிலும் அங்குத்தைக்கு மாலின்ய கரம் என்று அகலப் புக
இவரைத் தன் சீலத்தைக் காட்டி ஆகவிடத் தேட ஸமாஹிதராய் அனுபவித்தவர் பின்னையும் அவ்வனுசந்தானத்தாலே அகல தன்னுடைய ஹேய ப்ராதிபட்யத்தையும்
ஆஸ்ரித வ்யாமோஹத்தையும் பிரகாசிப்பித்து ஆக்கவிட்டுக் கொள்ள ஸமாஹிதராய்
தம் பக்கல் ஈஸ்வரனுக்குப் பிறந்த உபகாரகத்வத்தையும் மேலுண்டான பாரிப்பையும் அனுபவித்து ஸந்துஷ்டாராகிறார் –

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-

நித்திய சூரிகட்கு -அனுபாவ்யனானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை, 
மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.-‘வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து,  ‘அருவினையேன்’ என்கிறார்.-அருவினை’ என்னலாமோ?’ எனின்,
‘பாபம் என்பது, அநிஷ்டாவஹம் -தமக்கு விருப்பம் இல்லாததைக் கொடுப்பது’ என்று இருக்குமவர் ஆகையாலே, இறைவனை விட்டு அகன்று நீங்கியிருத்தல் தமக்கு விருப்பமாயினும் அதனைச் செய்ய ஒட்டாது தடுக்கின்றமையின் அன்பினை ‘அருவினை’ என்கிறார்.‘களவேழ்’ என்பதற்குக் ‘களவிலே வேட்கையுடையனாய்-அபி நிவிஷ்டனாய்- ஊற்றமுடையனாய்’ என்று கூறலும் ஆம்

இளஏறு ஏழும் தழுவிய – ம்ருத்யு சமமாய் -யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக ஒருக்காலே தழுவினான். பின்னர் அவளை அடைதலால், அவள் முலையிலே அணைந்தது போன்று இருக்கையாலே  ‘தழுவிய’  என்கிறார்.
எந்தாய் என்பன் – ஏழ் எருதுகளையும் அடர்த்த செயலுக்குத் தோற்று, ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தையும் சொன்னேன்.
யுக்தி மாத்ரமேயோ சொன்ன அளவேயோ!-நினைந்து நெஞ்சாலும் தூஷித்தேன் – நிந்தித்தேன்.
அவ்வளவேயோ நைந்தே – பிறர் அறியும்படி சிதிலனாய்-காயிகத்தாலும் உடலாலும்-தூஷித்தேன் – நிந்தித்தேன்.

‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றேன்;-‘எத்திறம்’ என்றேன்;-பிராட்டிமார் நிலையை ப்ராப்தனாய் – அடைந்து தூது விட்டேன்’ என்று, அவற்றுக்கு அநு தபிக்கிறார் வருந்துகிறார் என்று பொருள் கூறலும்

—————

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-

நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;-ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!-தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;

அவன் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் ‘சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று ‘அவனுக்கு என்று தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும்,-பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின்,
அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக் கொண்டு நிற்கக் காணுமதனையே பேறாக நினைத்திருப்பனாதலானும்  ‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால், ஈண்டு,  ‘நினைந்த’என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து  ‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச் செய்கிறார்.

————-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் ஓருவனே 
–1-5-3-

‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும் சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில், 
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே; சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

நாய்ச்சிமார் தொடும் போதும் பூத் தொடுமாறு போன்று கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு அன்றே காடும் ஓடையும் அளந்து கொண்டான்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.-கடுநடை யிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை நினைந்து கால் தாழ்க்கிறார்-அசேஷ ஜன சம்ஸ்லேஷ ரூபமான லோக விக்ரமண ஸ்வ பாவத்தை ஈஸ்வரன் காட்டக் கண்டு விஸ்மிதராகிறார் –.தான் ஓர் ஓருவனே-இது ஒரு பிரகாரமே-மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்கும் அவதி இன்றிக்கே இருக்கிறபடி என் -என்று விஸ்மிதர் ஆகிறார் –ப்ரீதி அதிசயத்தாலே –ஒருவனே தானோர் ஒருவன் –என்று அவனைக் கொண்டாடுகிறார் –

—————–

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –
1-5-4-

இனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று – ஸமாஹிதராகிறார்- ‘தான் ஓர் தனி’ என்னும் மூன்று பதங்கள் -அழகிய த்ரிவித மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

தன்னின் மூவர் முதலாய-தன்னில் -என்றது தன் பக்கலிலே என்ற படியாய் –
தன் சங்கல்ப ஞான ரூப ஞானத்தால் சேந்த்ர-என்று இந்திரனையும் கூட்டி –
பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம்.

நெடு நாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன், தான் தந்த அறிவைக் கொண்டு நான் அகன்று போகப் புக்கால்,
அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார்,‘எம்பெருமானே’ என்கிறார்.-இத்தலை இறாயா நிற்க -தன் பேறாகச் சேர விட்டுக் கொள்ளுமவன் இறே ஸ்வாமி யானவன் –இந்த ஸுசீல்யமானது அத்யந்த நிஹீனனான என்னோடே ஸம்ஸ்லேஷியா விடில் அவனுக்கு சித்தியாது -ஆதலால் ஸுசீல்ய குண சித்யர்த்தமாக இனி அவனுக்கு ஆத்மாந்தமாக சகல சேஷ வ்ருத்தியும் பண்ணுவேன் -என்கிறார் –

———-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே 
–1-5-5-

இவ்வளவிலே முகம் காட்டில் பழையபடியே அகலும் -அவர் தாமே அர்த்திக்கும் தனையும் முகம் காட்டக் கடவோம் அல்லோம் -என்று அகல நிற்க -உன்னைச் சேருமாறு அருளாய் என்கிறார் –

தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே  ‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார்

அருளாய் சேருமாறு வினையேன் – கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக் கொள்ள அகலுகைக்கு அடியான பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருள வேண்டும்.-தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.

இத்தால் -1–ப்ரார்த்த நீயனுடைய நித்ய புருஷகார யோகத்தையும் – -2-ஆஸ்ரித வக்ரதையைக் கழிக்கும் ஆர்ஜவ ஆபாதகத்வத்தையும் -3-க்ஷண அபி நிவேசத்தையும்
-4-ப்ராப்யமான தேச விக்ரஹ வை லக்ஷண்யத்தையும் -5-பிரதிபந்தக நிவர்த்ததையும் –சொல்லிற்று ஆயிற்று –

————-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –
1-5-6-

இவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;
இவர் ‘என்னை’ இழந்தாய்? கிடாய் ’ என்கிறார்.-இவர் அபேஷித்த போதே முகம் காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் ஸ்ம்ருதி விஷயமாய் நலிய சிதிலர் ஆகிறார் –அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவர்க்குமே யாதலின்‘வினையேன் வினை’என்கிறார்.

இனையாய்- ஏவம்விதமான குண சேஷ்டிதங்கள் -இவ்விதமான குணங்களையும் செயல்களையுமுடையவனே.-இனைய பெயரினாய்– அவற்றிற்கு வாசகங்களான திருப் பெயர்களை உடையவனே.-என்று நைவன் – ‘காண வேண்டும், கேட்க வேண்டும்’ என்ன மாட்டாதே – உருகுகின்றேன். அடியேனே –யார் உடைமை அழிகிறது?
இவ் வுயிர் ஏதேனும் தனக்குத் தானே உரியதாகி அழிகிறதோ, பிறர்க்கு உரிமைப்பட்டு அழிகிறதோ? உடையவர்கள் வேண்டுமாகில் தங்கள்-வஸ்துவை – பொருளை நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்பார்,அடியேனே’- என்கிறார்,
உன்னால் இரட்சிக்க ஒண்ணாமல் அழிகிறதோ? என்னால் இரட்சிக்கலாய் அழிகிறதோ?

இத்தால் -1-அனுபவ விரோதி நிவர்த்தகமும் –-2-அனுபாவ்ய விபூதி யோகமும் –-3-ஆஸ்ரித சத்தாதி ஹேதத்வமும்–4- தத் விஷய ஸுலப்யாதிகளும் -5-அத்தாலே வந்த உன்மேஷமும்
-6-தத் ஹேதுவான ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் -7-விசுவாச ஜனகத்வமும் –-8-தன் நிபந்தந உஜ்ஜ்வல்ய அதிசயமும் –தோற்றுகிறது –

————–

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-

நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;
அவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

அடியேன் சிறிய ஞானத்தன் – சம்சாரிகளில் அறிவு கேடர் -சர்வஞ்ஞர் -‘முற்றறிவினர்’ என்னும்படியன்றோ என் அறிவு கேடு!
‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே.
அன்றிக்கே , ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று;
ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று சேஷத்வத்தை -அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே. நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம்.தம்மைச் ‘சிறிய ஞானத்தன்’ என்றும், இறைவனை ‘அறிதல் ஆர்க்கும் அரியானை’ என்றும் அருளிச் செய்கிறார்-கண்ணனை- அறிய அரியனாயிருந்தும் ஆயர்கட்கும் ஆய்ச்சிகட்கும் தன்னை எளியன் ஆக்கி வைத்தவனை.

அவனையே உபாயமாகப் பற்றித் தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும் அடியார் உண்டு கேவலர்;-அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;-தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக் கொண்டு கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.கைவல்யாதி ப்ரயோஜனங்களைக் கொண்டு அகன்று போவார்கள் என்ன பாக்யம் பண்ணினாரோ –

அடியேன் காண்பான் அலற்றுவன்- அடியேன்’ என்று அலற்றுவன், காண வேண்டும்’ என்று அலற்றுவன். இதனின் மிக்க ஓர் அயர்வு உண்டே – உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு சேர்ந்து திரிந்த -சம்சாரியாக இருந்த -நாளில் அறிவே நன்றாக இருந்தது அன்றே!
‘அது நன்றாயினவாறு என்?’ என்னில், அப்போது கடக்க நின்று பகவத் தத்துவத்தைக் குறி அழியாமை வைத்தேன்; இப்போது அன்றோ நான் கிட்டி அழிக்கப் பார்த்தது! இதனைக் காட்டிலும் அறிவு கேடு உண்டோ?-சம்சார தசையிலே அஜ்ஞ்ஞானம் தன்னை அழிக்குமது இறே இது அவனை அழிக்குமது இறே –

————————

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே
 –1-5-8-

நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான். அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்.மாயோனே – ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -‘அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தாரகம் இல்லாதபடியான- ஆஸ்ரித வியாமோஹத்தாலே – அடியார்களிடத்துள்ள பெரு மோஹத்தாலே செய்தாய் இத்தனையன்றோ?’ ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே?-மண்ணை அமுது செய்தது, அதன் சத்தைக்காக;-வெண்ணெய் அமுது செய்தது, உன் சத்தைக்காக.-மண்ணை உண்கிற போது சேஷித்தது உண்டாகில் இறே உமிழ்கிற போதும் சேஷிப்பது-

————

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே 
–1-5-9-

பரிவரான யசோதாதிகள் வெண்ணெய் உனக்கு அம்ருத சமம் -என்னுடைய ஸ்பர்சம் விஷ சமம் -நான் அகலுகையே உக்தம் -என்ன -பூதனை நஞ்சு பாதகம் ஆகாதாப் போலே உம்முடைய தோஷமும் பாதகம் அன்று –பெற்ற தாய் போலே வந்த பேய்ச்சி -என்று போலியும் அமையும் -என்ன-ஆகில் அகல்வேன் அல்லேன் என்று சமாஹிதர் ஆகிறார்-‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க
என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,

என் அம்மான் –mநான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்.
இனி, ‘நித்திய சூரிகளும் மற்றும் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு தட்டும்
நாள் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே விசேடமான திருவருளைச் செய்தவன்’ என்பார், ‘என் அம்மான்’ என்கிறார் எனலுமாம். அம்மா மூர்த்தியைச் சார்ந்து- விலக்ஷணமான திருமேனியை யுடைய அம் மகா புருஷனைக் கிட்டி, ‘கிட்டி மாயோம் – இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம்; ‘பிரிகை யாவது – விநாசம்’ என்று இருக்கையாலே ‘மாயோம்’ என்கிறார்.-இது, ‘நானும் என்னோடு சம்பந்தமுடையாரும் முடியக் கடவோ மல்லோம்,’ எனப் படர்க்கையை உளப் படுத்திய உளப் பாட்டுப் பன்மை.
இனி, இறைவனை உளப் படுத்தியதாகக் கொண்டு, ‘இரண்டு தலையையும் அழித்துக் கொள்ளக் கடவோம் அல்லோம்’ என்று பொருள் கூறலுமாம்.

ஸ்வதஸ் சர்வஞ்ஞனான – தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனை யுடையவளான பூதனை முடியும்படியாக.-எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அநந்யார்ஹம் ஆக்குகையாலே அம்ருதம் ஆயிற்று –‘பூதனையுடைய விஷம் அமிருதமாம்படி அமுது செய்தவன் தான் யார்?’ என்னில், –வானோர் தனித் தலைவன் – அயர்வு அறும் அமரர்களுக்குத் தனித் தலைவன் ஆனவன்.-மலராள் மைந்தன்-‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, -அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன். மைந்தன் – அவளுக்கு மிடுக்கானவன். இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

————–

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே 
–1-5-10-

இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை
கோடிக்க-அலங்கரிக்கத் தொடங்கினான்.தீர்ந்து – தான்-க்ருதக்ருத்யனானான் – செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய்.-இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி, ‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.இறைவன் இவர் பக்கல் கொண்ட அவாவின் மிகுதியால் வீடு திருத்துகையில் விளம்பிக்க, அக்கால நீட்டிப்பிற்குப் பொறாராய் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்ற திருவாய் மொழி முடிய இறைவன் தமக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லிக் கூப்பிட்ட கூப்பீடு உலகத்தார்க்கு எல்லாம் பெரியதோர் உபகாரமாய் முடிந்தது)நெடுமால்- இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு – புதுக்கணித்தது -அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் -என்கிறார்.
இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய் இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார்-நெடுமாலே-‘முனியே நான்முகனே’ என்னும் அளவும் அவன் செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார். -அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமல் கூப்பிடுகிறார் அன்றே நடுவெல்லாம்.என்னைத் திருத்தி -பின்னை எனக்குத் திரு நாட்டையும் தந்து அருளுகைக்காக ஆகுவதே -எம்பெருமானுடைய சர்வஞ்ஞத்வ சர்வசக்திதவ
பரம காருணிகத்வ ஆஸ்ரித வத்சலத்வம் என்ற இப்படி அபர்யந்த குணங்கள் எல்லாம் 
என்கிறார் –

————–

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –
-1-5-11-

பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை  ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;
இசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; 
பத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். 

ஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;
பத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.

ஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading