முதல் இரண்டு ஸ்கந்தங்கள் திருப்பாதங்கள் அடுத்த இரண்டும் திருத் தொடைகள்-ஊரு ஐந்தாவது -திரு நாபி ஆறாவது -திரு மார்பு – புஜாந்தரம் ஏழாவதும் எட்டாவதும் -திருக்கைகள் -தோர் யுகலம் ஒன்பதாவது -திருக்கண்டம் பத்தாவது திரு முகாரவிந்தம் பதினொன்றாவது -லலாட பதக்கம் பன்னிரண்டாவது சிரஸ்ஸூ
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ ஸூகர் திருவடிகளே சரணம் . ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் திருவடிகளே சரணம் . ஸ்ரீ நாரதர் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
திவ்யப்பிரபந்தங்களில் அவர் ஆழ அவகாஹித்திருந்ததனாலேயே. ஆழ்வார்கள் எம்பெருமானுடைய திருக்கண்ணழகைப்பற்றிப் பேசுமிடங்களில் மேலே காட்டிய மூன்று விசேஷங்களையும் வெகு அற்புதமாகப் பேசியுள்ளார்கள்.
கம்பீராம்பஸ் ஸமுத்பூத புண்டரீக] ஜல மென்றும் அம்புஜமென்றும்-அம்போஜமென்றும் நீரஜமென்றும் பேர்பெற்ற புண்டரீகமானது நீரில் நின்று முண்டாகாமல் மற்றொன்றினின்று உண்டாக ப்ரஸக்தியில்லாமையாலே அம்பஸ் ஸமுத்பூத” என்றதன் கருத்து, நீரை விட்டுப் பிரியாமலிருக்கையைச் சொல்லுவதேயாம்.
‘தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன்தானே நீரைப் பிரிந்தால் அத்தை யுலர்த்துமாபோலே” என்கிற ஸ்ரீவசனபூஷண ஸ்ரீஸூக்தியும், “கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி” என்கிற ப்ரமாணமும் இங்கே அநுஸந்தேயம். நீரைவிட்டுப் பிரியாமலிருக்கிற தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவன் என்றதாயிற்று.
“நீரார் கமலம் போல் செங்கண்மாலென்றொருவன்”-என்கிற சிறிய திருமடற் பாசுரத்திலும்‘அழறலர் தாமரைக் கண்ணன்” (58)என்ற திருவிருத்தப் பாசுரத்திலும் ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றிய அர்த்த மென்றே இஃது எம்பெருமானாரால் ஆதரிக்கப்பட்டது. ‘நீரார் கமலம் போல்” என்றவிடத்தில் (நீரார்) என்ற விசேஷணம் எதுகை யின்பத்திற்காக மாத்திரம் இடப்பட்டதன்று. ” அழறலர் தாமரைக் கண்ணன்” என்றவிடத்து நம்பிள்ளை யீட்டில் கப்யாஸ ஸ்ருதி ஸ்பஷ்டமாகவே உதாஹரிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்து ஸ்ரீஸூக்தி வருமாறு-” அழறலர் தாமரைக் கண்ணன்) அழற்றிலே நின்றலர்ந்த தாமரைப் பூப் போலே யிருந்துள்ள திருக் கண்களை யுடையவன். யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ.என்னக் கடவதிறே.” இங்கு வாதி கேசரியின் ஸ்வாபதேச வுரை வருமாறு- அழறு என்று அளறு; நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்துசெவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவனென்ற படி “
நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –ஒரு தடாகம் பரப்பு மாறத் தாமரைப் பூத்தால் போலே திருக் கண்கள் –ஒரு தடாகத்தை ஒரு தாமரையே கண் செறியிட அலர்ந்தால் போலே ஆயிற்று வடிவடையக் கண்ணாய் இருந்தபடி –கமலம் போல் செங்கண் -என்கையாலே குளிர்த்தி மென்மை நாற்றம் விகாசம் எல்லாம் சொல்லுகிறது
கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய் நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரே இல்லா அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-
ஆக, நீரார் கமலம்போல் செங்கண் மாலென்றொருவன்’ என்ற சிறிய திரு மடற் பாசுரத்தையும், அழறலர் தாமரைக் கண்ணன்’ என்ற திருவிருத்தப் பாசு ரத்தையும் “தண்பெருநீர்த்தடந்தாமரை மலர்ந்தாலொக்குங் கண் பெருங் கண் ணன் ‘ என்கிற திருவாய் மொழிப் பாசுரத்தையும் திருவுள்ளம்பற்றியே கம்பீராம் பஸ்ஸமூத்பூத’ என்ற விசேஷணத்தை ஸ்வாமி யிட்டருளினாரென்பது பொருத்த மாக முடிந்தது.
பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின் புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல் தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலேயாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்
[ஸும்ருஷ்டநாள புண்டர்க] நீரை விட்டுப் பிரிந்த தாமரைக்கு சோபையில்லாதது போலவே நாளத்தை விட்டு நீங்கின தாமரைக்கும் சோபையில்லாமையாலே தாமரைக்கு நாளத்திலிருப்பும் அவச்ய வக்த யமாயிற்று. இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவிருத்தத்தில் “வன்காற்றறைய’ என்கிற பாட்டிலே “எம்பிரான்தடங்கண்கள் – மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன” என்றருளிச் செய்யப்பட்டிருக்கிறது. கமலத்திற்கு இடப்பட்டிருக்கிற ‘மென்கால்’ என்னும் விசேஷணத்திற்கு ‘மெல்லிய நாளத்திலே யிருக்கின்ற’ என்பது பொருள்.(நாளமாவது தண்டு). கமலத்திற்கு அது கால் போன்றிருத்தலால் கால்என்னுஞ் சொல்லால் குறிக்கப்பட்டது. நாளமென்கிற பொருளையே பூருவர்களும் உரை செய்துள்ளார்கள். ஆக இந்த திவ்ய ஸூக்திக்குச் சேர (ஸும்ருஷ்டநாள) என் றருளிச்செய்யப்பட்டது.
வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும் என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-மென் கால் கமலம் என்றது – ஆபி முக்ய ஸூசகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத அவனுடைய ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்-வன் காற்று -பூர்ண பிரபத்தி அறைகை –ஆர்த்த பிரபத்தி )மென் கால் ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில் மார்த்தவத்தை யுடைய-கமலத் தடம் போல் தாமரைத் தடாகம் போலே-பொலிந்தன-அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை – (தடங்கல் இல்லாத சீதளமான திருக்கண்கள் திருக்கச்சி நம்பி )ஒருங்கே மறிகை யாவது ஆழ்வார் பக்கலிலே ஒருபடிப்பட்ட ஆபி முக்யத்தை உடைத்தாகை-கிடந்து அலரு கையாவது இவைரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை-மென் காலாவது இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)-கமலத் தடம் என்று நிறத்தாலும் குளிர்த்தியாலும் பரப்பாலும் போக்யமாய் இருக்கை-பொலிவாவது காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப் போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )-ஊர்த்தவ லோகங்களும் என் காலுக்கு அளவு போராது நீங்கள் காணுங்கோள் என்று தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம் என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபாரித்து-த்ரை விக்ரம அபதானத்தாலே அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய பெரிய திருக்கண்கள்
ரவிகரவிக“த புண்டரீக.) தாமரை நீரிலிருந்தாலும் நாளத்திலிருந்தாலும் ஸூர்ய கிரணங்களால் அலர்த்தப்பட்ட நிலையில்தான் எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு ஒப்பாகு மாதலால் இந்த விசேஷணமும் ஆவச்யகமாயிற்று.இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவாய்மொழியில் (5-4-9) “செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வன்” என்றுள்ள பாசுரம் இங்கே கொள்ளக்கடவது.இவ்விடத்து ஈட்டிலும் கப்யாஸ ச்ருதியை உதாஹரித்தருளி யுள்ளார். இதில்(செஞ்சுடர்த் தாமரை) என்பதற்கு செவ்விய சுடரையுடைய தாமரை என்று பொருளாகிறது. அச்செவ்விய சுடர் அதற்கு எங்ஙனம் வந்ததென்னில், அதற்கு முன்னடியில் ‘அஞ்சுடர வெய்யோன்’ என்று ஸூர்யனை ப்ரஸ்தாவித் திருக்கையாலே தததீநமென்று காட்டப்படுகிறது. ஆக ஸூர்ய ப்ரகாசமடியாக வந்த செவ்விய சுடரை யுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவன் என்றதாயிற்று.இந்த ஸ்ரீக்தியைத் திருவுள்ளம்பற்றியே, “ரவிகரவிகளித புண்டரீக” என்றருளிச் செய்தது. “செந்தண்கமலக்கண் சிவந்த வாயோர் கருநாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்த தொக்குமம்மானே” என்கிற திருவாய்மொழிப் பாசுரமும் இங்கு யோஜிக்க வுரியது.( ‘செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்” என்கிற பெருமாள் திருமொழிப் பாசுரமும் இங்கு நினைக்கத்தக்கதுஆனால் அப்பாசுரத்தில் திருக்கண் ப்ரஸ்தாவ மில்லாமையுணர்க.]
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய் அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால் செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால் நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–தன்னுடைய தோற்றத்தில் இருளை போக்கி துக்க நிவ்ருத்தியை பண்ண வல்ல ஒளியோடு கூடின ஆதித்யனுடைய அழகிதான உதய ஸூ சகமான தேரும் தோன்றுகிறது இல்லை-இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீ யபதியும் வருகிறிலன் –சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இறே
‘‘கப்யாஸம் புண்டரீகமேவ மக்ஷி ” என்கிற உபநிஷத்வாக்யத்திற்கு விவரணமாக ஸ்வாமியருளிச்செய்த கம்பீராம்பஸ் ஸமுத் தேத்யாதி திவ்யஸுக்தியில் “புண்டரீகதளாமலாயதேக்ஷண என்றிருக்கின்றதன்றோ? மூல ச்ருதியில் “புண்டரீகமேவ மக்ஷி” என்றிருக்கிறதேயொழிய வேறில்லை; உள்ள மூலத்திற்குச்சேர “புண்டரீககக்ஷிண என்றிவ்வளவே அருளிச்செய்திருக்க வேண்டும்; அதிகப்படியாக மூன்று பதங்களைச் சேர்த்திருக்கிறார். (1) தள . (2) அமல. (3) ஆயத. என்னுமிந்த மூன்று சொற்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டு ஸ்வாமியாலருளிச் செய்யப்பட்டனவென்று விசாரம் செய்யுமளவில், ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளை ஆதாரமாகக் கொண்டுதானென்று நிர்ணயிக்க ப்ராப்தம்.-ஆழ்வார்கள் ‘தாமரைக்கண்ணன்‘ என்று சிலவிடங்களிலும் “தாமரைத்தடங்கண்ணன்” “கமலத்தடங்கண்ணன்” “கமலத்தடம் பெருங்கண்ணன்” என்று பல விடங்களிலுமருளிச் செய்து போருகிறார்கள்-வடமொழிலுள்ள லகரமும் ளகரமும் தன்மொழியில் டகரமாக மாறுபடுவதுமுண்டு; “லடயோரபேத: ”என்கிற நியாயம் ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரஜ்ஞர்களுமிசைந்ததே. தமிழர்கள் எழுத்துப்போலி யென்பர்கள். ஏவஞ்ச, ” பத்ரம் பலாசம் சதனம் தளம் பர்ணம் சது: புமாந்”என்ற அமர கோசத்தில் படிக்கப்பட்ட தலமென்கிற வடசொல்லே தமிழில் தட மென்றாயிற்று என்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமானார் கமலத்தடங்கண்ணன் தாம்ரைத் தடங்கண்ணன்‘ என்னுமிடங்களிலே மன்னும் பொருளிலே தட மெனவந்ததென்று கொண்டு “புண்டரீகதள”என்றருளிச்செய்தார். தடமென்னுஞ் சொல்லுக்குவிசால மென்கிற பொருளும் தடாகமென்கிற பொருளும் தள மென்கிற பொருளும் ஆங்காங்கு வியாக்கியான கர்த்தாக்களால் ஆதரிக்கப்படு கின்றன. “நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல…. எம்பிரான் கண்ணின் கோலங்களே” என்ற திருவிருத்தப் பாசுரத்தில் தடமென்பதற்கு தடாகமென்பது பொருள்.
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே-பொலிந்து தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி அழகு விஞ்சி-எமக்கு எல்லா இடத்தவும் சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன-பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்-கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்–இத்தால்-ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல் முந்நீர் ஆனால் போலே-அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை-ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி போக ப்ரதனாயக் கொண்டு தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி-விசும்புக்கும் பிரான்-வெளி நாடான நித்ய விபூதிக்கும்-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது
“கமலக் கண்ணன் ….அமலங்களாக விழிக்கும்” என்கிற நம்மாழ்வார் பாசுரத்தை யுட்கொண்டே“புண்டரீகதளாமல்.. ஈஷண” என்றார் ஸ்வாமி. கீழே காட்டிய பாசுரங்களையும் “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்பெரியவாய கண்கள்’ என்கிற அத்தீயான திருப்பாணாழ்வார் பாசுரத்தையுமநுஸந்தித்துக் கொண்டே “புண்டரீக… ஆயதேக்ஷண: என்றார்.
——————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஈயுண்ணி மாதவப் பெருமாள் திருக்குமாரர் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அருளிச் செய்தது. இதன் திரண்ட பொருள்: வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரரும், ஸம்ஸாரப் பாம்பினால் கடியுண்டு கட்டுண்டவர்களின் உயிர் காக்கும் மருந்தும் ஆகிய அடியேன் ஆசார்யர் பிள்ளை லோகாசார்யரை வணங்குகிறேன்.
ஸ்ரீ பிள்ளை லோகாசாயார்யாரின் க்ருபைக்குப் பாத்ரரானவரும்,கௌண்டிந்ய குலத்துக்கு அணிகலனுமான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரை வணங்குகிறேன்.
நம: ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே | ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே ||-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது
குந்தீ நகரம் (இப்போது கொந்தகை) எனும் ஊரில் திருவவதரித்தவரும், ஸ்ரீசைலநாதர் (திருமலை ஆழ்வார், திருவாய்மொழிப் பிள்ளை) எனும் திருநாமம் கொண்டவரும், கைங்கர்ய ஸ்ரீயினால் எப்போதும் ப்ரகாசமாய் ஜ்வலிப்பவரும் ஆன அடியேன் ஆசார்யரை வணங்குகிறேன்.
செந்தாமரையில் சேர்ந்த ராஜ ஹம்ஸ பக்ஷி போல் பிள்ளை லோகாசார்யர் திருவடியில் பணிந்த (மாதாமஹரான) ஞான வைராக்யங்களில் கடல் போன்ற அழகிய மணவாள பெருமாள் பிள்ளையை வணங்குகிறேன்.
ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ சாஸ்த்ர விதம் | ஸுந்தர குருவர கருணாகந்தளித ஜ்ஞாந மந்திரம் கலயே ||-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது
அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளையின் திவ்ய க்ருபையால் பேணப் பட்டவரும் குற்றமற்ற சாஸ்த்ர ஞானம் பெற்றவரும் ஆன திகழக் கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாதரை வணங்குகிறேன்.
ஸ்ரீவசன பூஷணத்துக்கே உரிய விசேஷத் தனியன்கள்-ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆறு ப்ரகரணங்களாகவும் (பகுதி), ஒன்பது ப்ரகரணங்களாகவும் பகுக்கும் க்ரமத்தை இந்தத் தனியன்கள் விளக்குகின்றன:
1-எம்பெருமான் சேதனரை ஏற்கும்படி சிபாரிசு செய்யும் பிராட்டியின் மஹிமைகள் 2-பகவானை அடைய பகவானே உபாயம் எனும் ஸித்தோபாயப் பெருமை 3-எம்பெருமானையே உபாயமாகப் பற்றிய அதிகாரிகள் இயல்பு-செயல்கள் 4-இந்த அதிகாரிகள் தங்கள் ஆசார்யனிடம் செய்யும் ஸேவை 5-எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா விசேஷம் 6-ஆசார்யன் அறுதி உபாயம் (வழி) என்பது–விஷயங்களை ஸ்ரீவசன பூஷணத்தில் கருணையுடன் விளக்கிய பிள்ளை லோகாசார்யரை நான் சரணடைகிறேன்.
பேறு தருவிக்குமவள் தன் பெருமை (1) ஆறு (2) பெறுவான் முறை (3) அவன் கூறு குருவைப்பனுவல் (4) கொள்வதிலையாகிய குளிர்ந்த அருள்தான் (5) மாறில்புகழ் நற்குருவின் வண்மை (6) யொடெலாம் வசன பூடணமதில் தேறிட நமக்கருள் முடும்பை இறையவன் கழல்கள் சேரென்மனனே
மனமே! முடும்பை குலம் வந்த வள்ளல் லோகாசார்யர் திருவடிகளை சரணம் பற்றி உஜ்ஜீவனம் அடைவோம். அவர் அருளிய நூலின் ஆறு விஷயங்களாவன: 1-புருஷகாரம் செய்யும் பிராட்டியின் பெருமை 2-எம்பெருமானே உபாயமாய் இருக்கும் ஸித்தோபாயப் பெருமை 3-எம்பெருமானையே உபாயமாகப் பற்றினோர் பெருமை 4-அத்தகையோர் தங்கள் ஆசார்யனிடம் செய்யும் ஸேவை 5-எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா விசேஷம் 6-ஆசார்யனே அறுதி உபாயம் என்பது
ஸர்வஜ்ஞரான ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸாதித்ததும் கற்றறிந்த ஞானிகளுக்கு மகிழ்வூட்டுவதும் வேத வேதாந்த விஷயங்களை மிகச் சில சொற்களிலேயே எளிதாக விளக்குவதுமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை அடியேன் எப்போதும் வணங்குகிறேன்.
அகுண்டோத் கண்ட வைகுண்ட ப்ரியாணாம் கண்ட பூஷணம் | குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசந பூஷணம் ||
பேரின்பம் விளைக்கும் பரம பதம் அடைய விழையும் முமுக்ஷுக்களின் பேச்சுக்கு ஆபரணம் போன்றது லோக குருவாகிய ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணம்.
ஸ்ரீ முடும்பை வந்த வள்ளல் ஆசார்ய ஸ்ரேஷ்டர்,வேத விற்பன்னர்களின் முடியில் ரத்னமாக இருப்பவரோ, சாஸ்த்ரத்தின் ஸாரார்த்தங்களை ஸ்ரீவசன பூஷணத்தின் மூலம் வெளியிட்டாரோ, அத்தகைய ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் தேன் போன்ற திருவடிகளை யார் த்யானம் செய்கிறாரோ அவர் இவ்வுலகிலேயே பேரின்பமான பகவத் பாகவத அனுபவம் மற்றும் கைங்கர்யத்தைப் பெறுவார். ஸ்ரீ வசன பூஷண சாஸ்த்திரத்தில் அருளிய பொருள்களாவன: 1-ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயார் ஏற்றம் 2-எம்பெருமானை அடைய அவனே உபாயமாய் இருப்பதின் ஏற்றம் 3-கர்ம ஞான பக்திகளாகிற பிற உபாயங்களின் தாழ்ச்சி 4-எம்பெருமானே உபாயம் என்றுள்ள ப்ரபந்நர் ஏற்றம் 5-ப்ரபந்நர் நித்யாநுஷ்டானம் 6-சீரிய ஆசார்யனின் குணங்களும் அவர் அநுஷ்டானங்களும் 7-நல்ல சிஷ்யனின் இயல்புகள் 8-நித்ய ஸூரிகள் தலைவன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா 9-ஆசார்யன் உபாயமும் உபேயமும் எனும் சரம பர்வ நிஷ்டை
(1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-(1-22) 2-திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும் (23-114 ) 3-அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (115-141 ) 4-மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும் (142-242 ) 5-ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும் (ப்ரபந்ந தினசர்யா 243-307 ) 6-நாரணன் தாள் தரு நல் குரு நீதியும் (சதாசார்ய லக்ஷணம் – 308-320 ) 7-சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர் தன்மையும் (ஸச் சிஷ்ய லக்ஷணம் -321-365 ) 8-தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும் (நிர்ஹேதுக தயை 366-406) 9-மன்னிய இன்பமும் மா கதியும் குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும் (407-469 ) அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன் தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்)
லோகாசார்யரால் ஜீவர் உத்தரணத்துக்காக அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீ வசனபூஷணத்தை நன்கு அறிந்தோரும் அதை அநுஷ்டிப்போரும் காண அரிது.
த்ராவிட ஸ்ருதி குஹ்யா நாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் தம் லோகார்ய குரும் வந்தே யோ அவதாரஸ் ஸ்ரீ யப்பதே–
திவ்ய ப்ரபந்தங்களுடைய குஹ்யங்களான ரஹஸ்ய த்ரய ஜ்வரத்தை ஆற்றியவர் – ஸ்ரீ பெரும் தேவியார் மணாளன் – ஸ்ரீ பேர் அருளாளன் -அவதாரம் அந்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனை சேவிக்கிறேன் என்றவாறு
ஜகதாசார்யரான யதிராஜரே! பிள்ளை லோகாசார்யரால் அருளப்பட்ட ஸ்ரீமத் வசன பூஷண திவ்ய சாஸ்த்ர ஞானம் பெறவும் அதை அநுஷ்டிக்கவும் அடியேனுக்கு க்ருபை செய்தருள்வீராக!
அவிஸ்த்ருதா ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிரஸ் தர்ச யந்து ப்ரஸாதேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம் -ஸ்ருத பிரகாசிகை இதே போலவே ஸ்ரீ சைலேச குரோர் கிரஸ் -விஸ்தாரமாக இல்லாமல் -அதே சமயம் ஆழ்ந்த பொருள்கள் உள்ள திரு வாக்கு
ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூத்ரங்கள்-மேல்- -18-ஸூத்ரங்கள் புருஷகார வைபவம்-
2– சாதனச்ய கௌரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூத்ரங்கள் –23- முதல் -70 -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூத்ரங்கள்-பிராசங்கிகம்-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-6-பிரபன்ன தினசரியா – –243 -307- இப்படி பிரித்து அனுபவம் –இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும் இந்த -307-ஸூ த்ரங்களில் -பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –
7–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூத்ரங்கள் –308-முதல் -365-ஸூத்ரங்கள் வரை 8–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூத்ரங்கள் –366–முதல் -406 –வரை 9–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூத்ரங்கள் -407-முதல் -463-ஸூத்ரங்கள் வரை –
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் – ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-
மதி மந்த்தான மாவித்ய யேதாஸெள ஸ்ருதி ஸாகராத் ஜகத்திதாய ஜனிதோ மஹாபாரத சந்த்ரமா : “ ஸ்ரீவேத வ்யாசர் தமது புத்தி என்கிற மத்தைக் கொண்டு வேதம் என்னும் கடலைக் கடைந்து உலக நன்மைக்காக மஹா பாரதம் என்கிற சந்திரனை கொடுத்ததாகக் கூறப் பட்டுள்ளது.
————–
தமிழ் மஹாபாரதம் – ம.வீ.ராமானுஜாசாரியர் பதிப்பு
ஆதி பர்வம் 260 அத்தியாயங்கள் 956 பக்கங்கள் சபா பர்வம் 103 அத்தியாயங்கள் 359 பக்கங்கள் வனபர்வம் 315 அத்தியாயங்கள் 1242 பக்கங்கள் விராட பர்வம் 78 அத்தியாயங்கள் 337 பக்கங்கள் உத்யோக பர்வம் 196 அத்தியாயங்கள் 663 பக்கங்கள் பீஷ்ம பர்வம் 122 அத்தியாயங்கள் 510 பக்கங்கள் துரோண பர்வம் 203 அத்தியாயங்கள் 858 பக்கங்கள் கர்ண பர்வம் 101 அத்தியாயங்கள் 482 பக்கங்கள் சல்ய பர்வம் 66 அத்தியாயங்கள் 303 பக்கங்கள் சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள் 72 பக்கங்கள் ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள் 72 பக்கங்கள் சாந்தி பர்வம் 375 அத்தியாயங்கள் 1414 பக்கங்கள் அநுசாஸன பர்வம் 274 அத்தியாயங்கள் 1068 பக்கங்கள் அஸ்வமேதிக பர்வம் 118 அத்தியாயங்கள் 403 பக்கங்கள் ஆஸ்ரமவாசிக பர்வம் 41 அத்தியாயங்கள் 98 பக்கங்கள் மௌஸல பர்வம் 9 அத்தியாயங்கள் 28 பக்கங்கள் மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள் 10 பக்கங்கள் 18 ஸ்வர்காரோஹண பர்வம் 5 அத்தியாயங்கள் 20 பக்கங்கள்
மொத்தம் 2314 அத்தியாயங்கள் 8895 பக்கங்கள்
பாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.
தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடலுக்கடியில் மூழ்கிய துவாரகா நகரத்துக்கு கி.மு. 3000 என்று அறிஞர்கள் அறிவியல் முறைப்படி தேதி குறித்துள்ளனர். கிருஷ்ணர் இறந்த பின்னர் சுனாமி தாக்குதலில் துவாரகா கடலுக்கடியில் சென்றதை பாகவதம் முதலிய புராணங்கள் சொல்லும்.
ஸ்ரீ வியாஸர் ஸ்ரீ பராசரருக்கும் சத்யவதிக்கும் பிறந்த இவர் யமுனைக்கரையில் த்வீ பத்தில் -விடப்பட்டவர் -கிருஷ்ண த்வைபாயனர் -எனப்படுபவர்
சத்தியம் மிக உயர்ந்த தருமம்’, ‘தருமம் வெற்றி பெறும்’ என்ற ஓர் உண்மைத் தத்துவத்தை மகாபாரதம் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது. தருமம் இரண்டு மனித உருவம் தாங்கிச் செயற்பட்டதையும் மகாபாரதத்தில் காண்கின்றோம். ஒருவர் தருமர், மற்றவர் விதுரர். அறவுரை கூறி நின்றார் விதுரர். அதேநேரம் தருமர் அறத்தைப் பேணிக் காக்க ஆயுதத்தை நாடினார். அதில் இருவரும் வென்றனர்.
பார்வதி, பரமசிவன், இந்திரன், வாயுபகவான், தருமதேவதை, முருகக் கடவுள், சூரியன், அசுவினித்தேவர்கள், சப்தரிஷிகள், முனிவர்கள், மகரிஷிகள், நாரதர், வியாசர், துர்வாச மகரிஷி, பராசர முனிவர், கண்ணன், பலராமர், அகஸ்தியர், சத்தியபாமா, அனுமன் ஆகிய மேலோர் அனைவரும் மகாபாரதம் முழுவதும் உலாவித் திரிந்து தத்தமது ஞானத் தத்துவங்களை வீசிச் சென்றமையால் மகாபாரதம் ஈடிணையற்ற இதிகாசமாக மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
மகாபாரதத்தில் நட்பு, ஞானம், சத்தியம், தவம், தானம், ஆசை, தியாகம், அறியாமை, விரோதம், சுவர்க்கம், நரகம், பிறப்பு, காதல், திருமணம், இறப்பு, போர், அழிவு, பணிவு, அறிவு, சுத்தம், தூய்மை, பரிசுத்தம், கல்வி, அறம், பொருள், இன்பம், முக்தி, காலத்தின் வலிமை, காலத்தின் நியதி, வினையின் பயன், பாவம், புண்ணியம், இன்சொல்லின் சிறப்பு, உபவாசத்தின் உயர்ச்சி, குதிரை யாகம், இராஜசூய யாகம், கர்மவினை, சாபம், துறவு வாழ்க்கை ஆகிய விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டு அவற்றிற்குரிய விடைகளும் காணப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.
அறம், மறம் ஆகிய இரு நிலைகளில் நின்றவர்களையும் மகாபாரதம் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அறநிலையில் சந்தனு, பீஷ்மர், விதுரர், பாண்டு, தருமர், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், துரோணர், துருபதன், பலராமர், கிருஷ்ணன், கங்காதேவி, சத்தியவதி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் நின்று அறங்கூறிப் பேரும் புகழும் பெற்றனர். அதேநேரம் மறநிலையில் திருதராட்டிரன், காந்தாரி, துரியோதனன் ஆகிய தொண்ணூற்றி ஒன்பது சகோதரர்கள், சகுனி, அசுவத்தாமன், கர்ணன் ஆகியோர் மறங்காத்து மாண்டொழிந்தனர்.
குந்தியானவள் ஒரு முனிவரால் அருளிக் கொடுக்கப்பட்ட மந்திரத்தை உச்சரித்ததால் கர்ணன், தருமர், பீமன், அருச்சுனன் ஆகியோர் வந்துதித்தனர். அதன்பின் குந்தி, மாத்ரிக்கு அந்த மந்திரத்தை உபதேசித்தாள். மாத்ரி அந்த மந்திரத்தை இரட்டையர்களான அசுவினி தேவர்களை நினைந்து உச்சரிக்க நகுலன், சகாதேவர் என்னும் இரட்டையர் பிறந்தனர். இன்னும் வியாசர் மூலமாக அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் முறையே திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் பிறந்தனர். அக்காலத்தில் அரச மகளிர் மந்திரம் உச்சரித்தும், முனிவர்கள் மூலமும் மகப்பேறு பெற்ற அதிசயச் செய்திகளையும் காண்கின்றோம்.
மன்னர் பலதார மணம் புரிவது ஒரு வழக்காக இருந்துள்ளதை மகாபாரதத்தில் காணக் கூடியதாக உள்ளது. சந்தனு மன்னன் கங்காதேவி, சத்தியவதி ஆகிய இருவரையும், விசித்திரவீரிய அரசன் அம்பிகை, அம்பாலிகை ஆகியோரையும், வியாச மகரிஷி அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவரையும், திருதராட்டிர வேந்தன் காந்தாரி, காந்தாரியின் பத்துச் rNfhதரிகள் ஆகிய பதினொருவரையும், பாண்டு மன்னன் குந்தி, மாத்ரி ஆகிய இருவரையும், அருச்சுன அரசன் திரௌபதி, சுபத்திரை ஆகிய இருவரையும், பீமன் ஆன அரசன் திரௌபதி, இடும்பி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டனர். அக்கால மன்னர்கள் அதிகமாகப் போர் தொடுத்து மடிவதாலும், தத்தமது அரசுக்குப் பல வாரிசுகளை வைத்திருக்க வேண்டியதாலும், அவர்கள் பலதார மணம் புரிந்தனர் போலும்.
மேற்காட்டிய அரசியர்களான கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் தத்தமக்குரிய மன்னர்களுடன் இணைந்து வாழ்ந்து, அரசுப் பரம்பரையை நிலைநாட்ட உதவி நின்று, அரச வாரிசுகளைப் பெற்றுக் கொடுத்து, ஆட்சிப் பொறுப்பிலும் உதவி நின்று, தம் மன்னர்களை அறநெறிக்குட்படுத்தி ஆகிய பெரும் பொறுப்புகளில் ஈடுபட்டுள்ள அரசியர்கள் வாழ்த்திப் போற்றற்குரியோராவர்.
பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம் புலன்கள் தான். அந்த ஐம்புலன்களையும், தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கவுரவர்கள். தீமைகள் பலவாறான எண்ணிக்கையில், படைபலம் மிகுந்த சக்தியோடு இருக்கும் என்பதைச் சொல்லவே, மகாபாரதம்
உன்னுடைய ஐம்புலன்களின் சகோதரனே, கர்ணன். இந்தக் கலியுகத்தில் அவனது பெயர் ஆசை, மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன். ஆனால் அவன்எப்போதுமே தீமைகளின் பக்கம் தான் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கும் கூட தெரியும். ஆனால் உனக்குள் எழும் ஆசைக்காக, விருப்பத்திற்காக அந்த தவறைச்சரியாக்கும் விதமாக சாக்குபோக்கு சொல்வான். நீயே யோசித்துச் சொல்.. நம் மனம் எப்போதும் ஆசைக்குத்தானே அடிமையாக நினைக்கிறது?’
டம்பாஸுரன் -சஹஸ்ர கவசம் -நர நாராயணன் -இவனே குந்திக்கு சூர்யன் அம்சத்துடன் கர்ணன் -துரியோதனன் பொறாமை -இருவரும் கூட்டு சேர்ந்து -நர நாராயணனே -அர்ஜுனன் கண்ணன்-ஸஹஸ்ர கவசன் -ஏக கவசன் -12 வர்ஷம் தபஸ் இருந்து இவனை முடிக்கவே -12 வருஷம் வனவாசம் –ஓட்டைக் கைக்கும் யானைக்கும் இடையே ஓர் ஆயிரம் மைல் தூரம் இடையே நடப்பது புடவை வியாபாரம் -த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க – கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம் ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம் -உத்தியோக பர்வதம் -58-22- அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் – எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –
——–
பதிவின் சுருக்கம் : நைமிசாரண்யம் வந்த சௌதி; வியாசர் சொன்ன கதைகளைச் சொல்லட்டுமா என்று முனிவர்களைக் கேட்கும் சௌதி; முனிவர்கள் சௌதியிடம் பாரதம் உரைக்க வேண்டும் என்று கேட்டல்; வியாசர் சொன்ன பாரதத்தின் வரலாறு; தேவர் பிறப்பு; அண்டத்தின் படைப்பு; பாரதத்தின் சுலோகப் பிரிவினை; கௌரவர்களையும், பாண்டவர்களையும் மரமாக உருவகப்படுத்துதல்…
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் [ஜயா] என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}ஒரு நாள், “சௌதி” என்ற குடும்பப் பெயர் கொண்டவரும், புராணங்களை நன்கறிந்தவரும், லோமஹர்ஷணரின் {ரோமஹர்ஷணரின்} மகனுமான உக்ரசிரவன் {சௌதி }[1], (வேறு மொழிபெயர்ப்புகளிலும், வேறு பல சுருக்கங்களிலும் இவர் சூத முனிவர் என்று அழைக்கப்படுகிறார். சௌதி என்பது, சூதன் மகன் என்ற பொருளைக் கொண்டதாகும். பௌராணிகர் என்பது புராணங்களை உரைப்பவரின் பெயராகும். .)நைமிச வனத்தில் நடந்து வந்ததும், “குலபதி” என்ற குடும்பப் பெயர் கொண்ட சௌனகரால் நடத்தப்பட்டதுமான பன்னிரண்டு வருட {12} {சத்ரம் என்று அழைக்கப்பட்ட} வேள்வியில் பங்கெடுத்தவர்களும், கடினமான நோன்புகளை மேற்கொண்டு, சுகமாக அமர்ந்திருந்தவர்களுமான பெரும் முனிவர்களைத் தன்னடக்கத்துடன் அணுகினார் {சௌதி}.(1,2) இவ்வாறு அந்த நைமிசக்காட்டுவாசிகளின் {துறவிகளின்} தனிப்பட்ட வசிப்பிடத்திற்கு {ஆசிரமத்திற்கு} வந்த சௌதியிடம், அவரது அழகான வர்ணனைகளைக் கேட்கும் ஆர்வத்தில் அந்தத் தவசிகள் பேசத் தொடங்கினர்.(3) சரியான முறையில் அந்தத் தெய்வீக மனிதர்களால் உற்சாகமூட்டப்பட்ட அவர் {சௌதி}, தமது கரங்களைக் கூப்பி அவர்களை வணங்கியபடியே, தவத்தில் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து விசாரித்தார்.(4)
அனைவரும் அமர்ந்த பின்னர், அந்த லோமஹர்ஷனரின் மகன் {சௌதி}, தமக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் பணிவாக அமர்ந்தார்.(5) அவர் சுகமாக அமர்ந்ததையும், அவரது பயணக் களைப்பு நீங்கியதையும் கண்ட அந்த முனிவர்களில் ஒருவர், விவாதத்தைத் தொடங்கும் வகையில்.(6) “நீர் எங்கிருந்து வருகிறீர்? ஓ! தாமரைக்கண் சௌதியே, நீர் உமது காலத்தை எங்கு கழித்தீர்? {இவற்றைக்} கேட்பவனான எனக்கு விவரமாகச் சொல்வீராக!” என்றார்.(7) இவ்வாறு கேட்கப்பட்டவரும், பேச்சில் வல்லவருமான சௌதி, ஆழ்நிலை தியானம் செய்பவர்களான முனிவர்களின் அந்தப் பெரிய கூட்டத்திற்கு மத்தியில், அவர்களது வாழ்வு முறைக்கு ஏற்ற சொற்களைக் கொண்டு, முறையாகவும், முழுமையாகவும் பதிலளிக்க முற்பட்டார்.(8)
சௌதி,“கிருஷ்ண-துவைபாயனரால் {வியாசரால்}, தமது மஹாபாரதத்தில் இயற்றப்பட்டவையும், உயர்-ஆன்மா கொண்டவனும், பரீக்ஷித்தின் மகனும், இளவரசர்களின் தலைவனுமான அரசமுனி ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், அவனது {ஜனமேஜயனின் முன்னிலையிலேயே,{வியாசரின்சீடர்} வைசம்பாயனரால் முழுமையாக உரைக்கப்பட்டவையும், புனிதமானவையும், அற்புதம் நிறைந்தவையுமான பல்வேறு கதைகளைக் கேட்ட பிறகு,(9-11) புனித நீர்நிலைகளுக்கும், புண்ணியத்தலங்களுக்கும் சென்ற நான், முன்பொரு சமயம், குரு மற்றும் பாண்டுவின் பிள்ளைகளுக்கும், அந்த இருதரப்பிற்கும் அடங்கிய நிலத்தின் தலைவர்கள் அனைவருக்கும் இடையில் போர் நடைபெற்ற களமும், த்விஜர்களால் {இருபிறப்பாளர்களால்} போற்றப்படுவதும், சமந்தபஞ்சகம் என்றழைக்கப்படுவதுமான நாட்டிற்கு {குருசேத்திரம் என்னும் புண்ணியத்தலத்திற்குப்} பயணித்தேன்.(12-13) அங்கிருந்தே உங்களைக் காணும் ஆவலில், உங்களிடம் {நைமிசாரண்யம்} வந்தேன். பிரம்மாவைப் போன்ற பெரும் முனிவர்களே; இந்த வேள்விச்சாலையில் சூரிய நெருப்பின் காந்தியோடு ஒளிரும் வகையில் மிகவும் அருளப்பட்டவர்களே; புனித நெருப்புக்கு {அக்னிக்கு} உணவு அளித்து, மௌன தியானங்களை நிறைவு செய்தவர்களே; இருப்பினும் {இவ்வளவு செய்திருந்தாலும்} அலட்சியமாக அமர்ந்திருப்பவர்களே, ஓ! த்விஜர்களே (இருபிறப்பாளர்களே), அறக்கடமைகள் மற்றும் உலக ஆதாயங்கள் குறித்த கட்டளைகளை {விதிகளைக்} கொண்டவையான புராணங்களில் உள்ள புனிதக் கதைளை நான் மறுபடியும் சொல்லட்டுமா? அல்லது, சிறப்புமிக்கத் தவசிகள் மற்றும் மனித குலத்தின் மன்னர்கள் ஆகியோரின் செயல்பாடுகளைக் குறித்துச் சொல்லட்டுமா? ” என்று கேட்டார் {சௌதி}”.(14-16)
அந்த முனிவர், {சௌதியிடம்}, “பெருமுனிவர் துவைபாயனரால் {வியாசரால்} முதலில் அறிவிக்கப்பட்டதும், தேவர்களாலும், பிரம்மமுனிவர்களாலும் கேட்கப்பட்ட பிறகு உயர்வாக மதிக்கப்பட்டதும், இருக்கும் உரைநடைகளிலேயே மிகச் சிறப்புவாய்ந்ததும், சொற்தேர்வு {பதங்கள்} மற்றும் பிரிவுகள் {பர்வங்கள்} ஆகிய இரண்டிலும் பலவகைகளில் விரிவானதும், அளவையியலோடு இயைந்த {தர்க்க ரீதியில்} அதிநுட்பமான பொருள்களைக் கொண்டதும், வேதங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதுமான {சம்ஹிதையான} அந்தப் புராணம் {மஹாபாரதம்}, ஒரு புனிதமான படைப்பாகும்.(17,18) நேர்த்தியான மொழியில் இயற்றப்பட்டிருக்கும் அது, பிற நூல்களின் உட்பொருள்களையும் {தனக்குள்} கொண்டிருக்கிறது. வேறு சாத்திரங்களால் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும் அது, நான்கு வேதங்களின் பொருளையும் {தனக்குள்} உள்ளடக்கியிருக்கிறது. அற்புதம் நிறைந்ததும், வியாசருடைய புனிதத் தொகுப்பும், தீமை குறித்த அச்சத்தை அகற்றுவதும், பாரதம் என்றும் அழைக்கப்படுவதுமான அந்த வரலாற்றை {மஹாபாரதத்தை}, மன்னன் ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், துவைபாயனரின் {வியாசரின்} வழிகாட்டுதலின் படி, முனிவர் வைசம்பாயனரால் உற்சாகத்தோடு உரைக்கப்பட்டதைப் போலவே, உள்ளபடியே அதை {மஹாபாரதத்தை} நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார் {முனிவர்}.(19-21)
சௌதி சொன்னார், “{வேள்விகளில்} பலரால் படையல்கள் அளிக்கப்படுபவனும், பலரால் துதிக்கப்படுபவனும்; உண்மையில் அழிவில்லாத, உணரப்படக்கூடிய, புலப்படாத, நித்தியமான பிரம்மமே ஆனவனும்; இருப்பானவனும், இல்லாமையே ஆனவனும்; இந்த அண்டமே ஆனவனும்; இருக்கும் மற்றும் இல்லாத அண்டத்தில் முற்றாக மாறுபட்டவனும்; உயர்வு தாழ்வைப் படைத்தவனும்; பழமையான, மேன்மையான, முடிவில்லாத ஒருவனும்; நலம் பயப்பவனும்; நலமேயானவனும்; அனைத்து முன்னுரிமைகளுக்கும் தகுந்தவனும்; தூய்மையானவனும், மாசற்றவனுமான விஷ்ணுவே ஆனவனும்; அனைத்துப் பிரிவுகளின் {துறைகளின்} ஆட்சியாளனும்; அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் வழிகாட்டியுமான ஹரியே ஆனவனும்; ஆதி இருப்புமான அந்த ஈசானனை வணங்கிப் பணியும் நான், அற்புதமான காரியங்களைச் செய்தவரும், இங்கே அனைவராலும் வழிபடப்படுபவரும், சிறப்புமிக்கத் தவசியுமான வியாசரின் புனித எண்ணங்களை நான் அறிவிக்கப் போகிறேன்.(22-25) சில புலவர்கள் ஏற்கனவே இந்த வரலாற்றை வெளியிட்டிருக்கின்றனர், சிலர் இப்போது இதைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர், இதே போலவே, இதன்பிறகும் மேலும் பலர் இதை அறிவிப்பார்கள் {என்பதில் ஐயமில்லை}.(26) உலகின் மூன்று பகுதிகளிலும் முழுமையாக நிறுவப்பட்ட இஃது அறிவின் பெரும் கொள்ளிடமாகும். விவரமாகவும், சுருக்கமாகவும் என இருபிறப்பாளர்களிடம் {பிராமணர்களிடம்} இஃது இரு வடிவங்களில் இருக்கிறது.(27) நேர்த்தியான வெளிப்பாடுகள், மனித மற்றும் தெய்வீக உரையாடல்கள், பல்வேறு கவித்துவ அளவீடுகள் ஆகியவற்றால் கல்விமான்களுக்கு இது மகிழ்ச்சியை அளிக்கிறது[2]. (28)(வேறொரு பதிப்பில் “இது அழகான சொற்களாலும், தேவர்களுடைய வரலாறுகளாலும், மனிதர்களுடைய வரலாறுகளாலும் அலங்கரிக்கப்பட்டது; பலவகையான சந்தங்களோடு கூடியது; பண்டிதர்களுக்குப் பிடித்தமானது; சத்தியவதியின் மகனான வியாசர், தம்முடைய தவத்தினாலும், பிரமச்சரியத்தினாலும், நித்தியமான வேதத்தை வகுத்த பிறகு, இந்தப் புண்ணியமான இதிஹாசத்தைச் செய்தார். புண்ணியத்தலமான இமய மலையின் அடிவாரத்தில் பரிசுத்தமான குஹாக்ருஹத்தில் அற ஆன்மா கொண்டவரான அந்த வியாசர், நீராடிவிட்டு, தர்ப்பையைப் பரப்பி, அதன்மேல் அமர்ந்து கொண்டு, தூய்மையும், நியமமும் கொண்டவராக மனதையடக்கித் தியானத்திலேயே நிலைபெற்றிருந்து பாரதமென்னும் இதிஹாசத்தின் வரலாற்றைத் தபோ பலத்தினால் ஆராய்ந்து, யோகத்தில் ஊடுருவி, ஞானத்தால் அனைத்தையும் முழுவதுமாகப் பார்த்தார்” அதன் பிறகு பின்வருவன தொடர்கிறது.)இவ்வுலகம், ஒளியற்று, சுற்றிலும் முற்றுமுழுதாக இருளால் சூழப்பட்டிருந்தபோது, அனைத்து உயிரினங்களின் ஒரே வற்றாத விதையும், படைப்பின் அடிப்படைக் காரணமுமான ஒரு பெரிய முட்டை அங்கே இருப்புக்கு வந்தது.(29) அழிவற்றதும், அற்புதம் நிறைந்ததும், ஒரே தன்மையுடன் அனைத்திடங்களிலும் ஊடுருவியிருப்பதும், நினைப்பதற்கரியதும், காணமுடியாத நுட்பமான காரணமாக இருப்பதுமான பிரம்மத்தின் உண்மை ஒளியைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அது மஹாதிவ்யம் {அந்த முட்டை} என்றழைக்கப்பட்டது.(30,31)
முதல் பிரஜாபதியும், தலைவனும், பிதாமகனுமான பிரம்மன்,சூரகுரு {சுக்ராச்சாரியார்} மற்றும் ஸ்தாணுவுடன் அந்த முட்டையிலிருந்து வெளியே வந்தான்.(32) அதன் பிறகு, மனு, வசிஷ்டர், பரமேஷ்டி, பத்துப் பிரசேதர்கள், தக்ஷன், தக்ஷனின் மகன்கள் எழுவர் ஆகிய இருபத்தோரு பிரஜாபதிகள் தோன்றினர். அதன் பிறகு, முனிவர்கள் அனைவராலும் அறியப்பட்டவனும், நினைத்துப் பார்க்க முடியாத இயல்புடையவனுமான மனிதன் {விராட்புருஷன்} தோன்றினான்; அவ்வாறே, விஸ்வதேவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோரும்; யக்ஷர்கள், சத்யஸ்கள், பிசாசங்கள், குஹ்யர்கள் மற்றும் பித்ருக்களும் தோன்றினர்.(33-35)
அதன்பிறகு, ஒவ்வொரு உன்னதக் குணத்தாலும் புகழ்பெற்ற விவேகிகளும், மிகப் புனிதமானவர்களுமான பிரம்மமுனிகளும் {பிரம்மரிஷிகளும்}, எண்ணற்ற அரசமுனிகளும் {ராஜரிஷிகளும்} படைக்கப்பட்டனர். அதே போல, நீர், சொர்க்கங்கள், பூமி, காற்று, வானம், திசைப்புள்ளிகள், வருடங்கள், காலங்கள் {பருவங்கள்}, மாதங்கள், பக்ஷங்கள் என்றழைக்கப்படும் பிறைநாட்கள், இரவு மற்றும் பகல் ஆகியன முறையாக அடுத்தடுத்துப் படைக்கப்பட்டன. இவ்வாறே மனிதகுலத்தால் அறியப்பட்ட பொருள்கள் அனைத்தும் படைக்கப்பட்டன.(36-37)
இந்த அண்டத்தில் காணப்படும் படைக்கப்பட்ட பொருள்களில், அசைவனவோ, அசையாதனவோ, உலகின் இறுதிக் காலத்தில், யுகம் தீர்ந்த பிறகு மீண்டும் சீர்குலைகின்றன.(38) வேறு யுகங்கள் தொடங்குகையில், பூமியின் பல்வேறு கனிகளை {பலன்களைப்} போல, அனைத்துப் பொருள்களும், தங்கள் காலங்களில் {பருவங்களில்} முறையான வரிசையில் அடுத்தடுத்து புணரமைக்கப்படுகின்றன.(39) இவ்வாறே அனைத்துப் பொருள்களுக்கும் அழிவை உண்டாக்கும் இந்தச் சக்கரம், தொடக்கமும், முடிவும் இல்லாமல் நிரந்தரமாக இவ்வுலகில் தொடர்ந்து சுழன்று வருகிறது.(40)
இந்தப் பழைய காலத்து விவஸ்வான்களில், இளையவனான மஹ்யனின் மகன், தேவவிரதன் {தேவப்ராட்} ஆவான். பின்னவனின் {தேவவிரதனின்} மகன் சுவவிரதனுக்கு {ஸுப்ராட்டுக்கு}, தசஜோதி, சதஜோதி, சஹஸ்ரஜோதி என்று மூன்று மகன்கள் இருந்ததாகவும், அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணற்ற வாரிசுகளை உண்டாக்கினர் என்றும் நாம் அறிகிறோம்.(43,44) சிறப்புமிக்கத் தசஜோதிக்குப் பத்தாயிரம் {10,000} மக்களும், சதஜோதிக்கு அதைவிடப் பத்து மடங்கும் {1,00,000}, சஹஸ்ரஜோதிக்கு அதைவிடப் பத்துமடங்கும் {10,00,000} மக்கள் இருந்தனர்.(45,46) இவர்களிலிருந்தே குருக்கள், யதுக்கள், பாரதர்கள், யயாதியின் குடும்பத்தினர் மற்றும் இக்ஷவாகுவின் குடும்பத்தினர் ஆகியோரும், அரசமுனிகள் அனைவரும் இந்த வரிசையிலேயே வந்தனர்.(47) {இவர்களால்} உண்டாக்கப்பட்ட தலைமுறைகள் எண்ணற்றவையாகவும், உயிரினங்களும், அவற்றின் வசிப்பிடங்களும் மிக அதிகமாகவும் இருந்தன.
முவ்வழி புதிர்களான வேதங்கள், யோகம், விஞ்ஞானம்; தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியனவும்;(48) தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை விளக்கும் பல்வேறு நூல்களும்; மனிதகுலத்தின் நடத்தைவிதிகளும்;(49) வரலாறுகள் மற்றும் பல்வேறு சுருதிகள் குறித்த உரைகளும், என இவையனைத்தும் முனிவர் வியாசரால் காணப்பட்டு, இந்த நூலில் {மஹாபாரதத்தில்} எடுத்துக்காட்டுகளாக {மாதிரிகளாக} முறையான வரிசையில் குறிப்பிடப்படுகின்றன. (50,51)
முனிவர் வியாசர் இந்த அறிவுத்திரளை விவரமாகவும், சுருக்கமாகவும் இரு வடிவங்களில் வெளியிட்டார். விவரமானதைக் கொள்வதா? சுருக்கமானதைக் கொள்வதா? என்பது உலகில் உள்ள கல்விமான்களின் விருப்பத்தைப் பொருத்ததாகும்.(52) சிலர் பாரதத்தைத் தொடக்க மந்திரத்துடன்[3-நாராயணம் நமஸ்க்ருத்ய” என்ற சுலோகம் முதலாகவும் என்பது இங்கே பொருள்.] படிக்கத் தொடங்குகின்றனர், சிலர் ஆஸ்தீகர் கதையிலிருந்தும், சிலர் உபரிசரனிலிருந்தும், மேலும் சில பிராமணர்கள் முற்றுமுழுதாகவும் படிக்கின்றனர்.(53) கல்விமான்கள், இந்தத் தொகுப்பைக் குறித்துக் கருத்துத் தெரிவித்து, பல்வேறு அறிவுத்துறைகளில் {ஸ்மிருதிகளில்} தங்கள் அறிவை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அதை விளக்குவதிலும், மேலும் சிலர், அதன் உள்ளடக்கத்தை நினைவுகொள்வதிலும் திறன்மிக்கவர்களாக இருக்கின்றனர். (54)
அந்தச் சத்யவதியின் மகன் {வியாசர்}, தவம் மற்றும் தியானத்தைக் கொண்டு நித்தியமான வேதத்தை ஆய்வு செய்த பிறகே இந்தப் புனித வரலாற்றைத் இயற்றினார்.(55) கடும் நோன்புகளைக் கொண்டவரும், கல்விமானும், பராசரரின் வாரிசுமான துவைபாயன வியாசர், விவரிப்புகளில் சிறந்த இந்த விவரிப்பை நிறைவு செய்த போது, அதைத் தன் சீடர்களுக்குத் தன்னால் எவ்வாறு கற்பிக்க முடியும் என்று பரிசீலனை செய்யத் தொடங்கினார்.(56) ஆறு குணங்களைக் கொண்டவனும், உலகங்களின் ஆசானுமான பிரம்மன், முனிவர் துவைபாயனரின் {வியாசரின்} கவலையை அறிந்து, அந்தத் தவசியை {வியாசரை} நிறைவு செய்வதற்காகவும், மக்களுக்கு நன்மையைச் செய்வதற்காகவும், அவர் {வியாசர்} இருந்த இடத்திற்கு வந்தான்.(57) முனி இனங்கள் அனைத்தாலும் சூழப்பட்ட வியாசர், அவனைக் {பிரம்மனை} கண்டு ஆச்சரியமடைந்தார்; கூப்பிய கரங்களோடு நின்று வணங்கிய அவர் {வியாசர்}, ஓர் ஆசனத்தைக் கொண்டு வருமாறு {அந்த முனிவர்களில் இருந்த தம் சீடர்களை} பணித்தார்.(58) வியாசர், ஹிரண்யகர்பன் என்று அழைக்கப்பட்ட அவனை {பிரம்மனை} வலம் வந்து, அந்தப் புகழ்மிக்க ஆசனத்தின் அருகே நின்றார்;(59) பிரம்ம பரமேஷ்டியினால் ஆணையிடப்பட்ட அவர், நிறைந்த அன்புடனும், மகிழ்ச்சியில் புன்னகைத்துக் கொண்டும் அந்த ஆசனத்தின் அருகே அமர்ந்தார்.(60)
அப்போது, பெரும்புகழ்வாய்ந்த வியாசர், அந்தப் பிரம்ம பரமேஷ்டியிடம், “ஓ! தெய்வீகப் பிரம்மனே, பெரிதும் மதிக்கப்படும் செய்யுள் தொகையொன்று {காவியமொன்று} என்னால் இயற்றப்பட்டிருக்கிறது.(61) வேதத்தின் புதிர், மற்றும் வேறு அனைத்து உட்பொருள்களும் என்னால் அதில் விளக்கப்பட்டிருக்கின்றன; அங்கங்களோடு கூடிய உபநிஷத்துகளின் பல்வேறு சடங்குகள்;(62) காலத்தின் மூன்று பிரிவுகளான கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் பெயரால் என்னால் அமைக்கப்பட்ட புராணங்கள் மற்றும் வரலாற்றின் தொகுப்பு; (63) சிதைவு {மூப்பு, இறப்பு}, அச்சம், நோய், இருப்பு மற்றும் இல்லாமை ஆகியவற்றைக் கொண்ட இயற்கையின் உறுதிப்பாடு; சமய நம்பிக்கைகள் மற்றும் பல்வேறு வாழ்வுமுறைகளைக் குறித்த விளக்கங்கள்;(64) நான்கு சாதிகளின் {வர்ணங்களின்} விதி மற்றும் புராணங்கள் அனைத்தின் சாரம்; தவம் மற்றும் ஓர் அற மாணவனின் கடமைகள்;
நான்கு காலங்களின் {யுகங்களின்} காலவரையறைகளுடன் சேர்த்து சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கூட்டங்கள் {நட்சத்திரக்கூட்டங்கள்}, நட்சத்திரங்கள் ஆகியவற்றின் பரிமாணங்கள்; ரிக், சாமம் மற்றும் யஜூர் வேதங்கள்; ஆதியாத்மம்;(65,66) நியாயம் {தர்க்கசாஸ்திரப் பயிற்சி}, மருத்துவம் மற்றும் நோய்களுக்கான சிகிச்சைகள் என்று அழைக்கப்படும் அறிவியல்கள்; ஈகை மற்றும் பாசுபததர்மம்; குறிப்பிட்ட காரியங்களுக்காகப் பிறந்த தேவர்கள் மற்றும் மனிதர்கள்;(67)
புனிதப்பயணத்திற்கான இடங்கள், ஆறுகள், மலைகள், காடுகள், பெருங்கடல்கள்,(68) தெய்வீக நகரங்கள் ஆகிய பிற புனித இடங்கள் மற்றும் கல்பங்கள் {பிரம்மனின் நாட்கள்}; போர்க்கலை; பல்வேறு வகைகளிலான நாடுகள் மற்றும் மொழிகள்; மக்களுடைய நடைமுறைகளின் {செயல்பாடுகளின்} இயல்பு;(69) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆவி {பரம்பொருள்} ஆகிய அனைத்தின் உட்பொருள்களும் அதில் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை யாவற்றுக்கும் பிறகு, இந்தப் படைப்புக்கான எழுத்தர் எவரும் பூமியில் காணப்படவில்லை” என்றார் {வியாசர்}.(61-70)
பிரம்மன் {வியாசரிடம்}, “தெய்வீகப் புதிர்களில் உனக்கிருக்கும் அறிவைக் கொண்டு உன்னை, வாழ்வின் புனிதத்தன்மைக்காகக் கொண்டாடப்படும் இந்த முனிவர்க்கூட்டத்திற்கு முன்னிலையில் நான் உயர்வாக மதிக்கிறேன்.(71) தெய்வீகச் சொற்களை, அவை முதலில் உச்சரிக்கப்பட்டதிலிருந்தே, உண்மையான மொழியில் நீ வெளிக்கொணர்வாய் என்பதை நான் அறிவேன். உன் தற்போதைய படைப்பை நீ செய்யுள் தொகுப்பு {காவியம்} என்று அழைத்தாய், எனவே அது செய்யுள் தொகுப்பாகவே இருக்கட்டும் {காவியமேயாகும்}.(72) இல்லற ஆசிரமத்தின் தகுதிக்கு, மற்ற மூன்று வகை ஆசிரமங்களும் ஒருபோதும் இணையாகாததைப் போலவே, இந்தச் செய்யுள்தொகுப்பின் விளக்கங்களுக்கு இணையான படைப்பைத் தரக்கூடிய எந்தப் புலவரும் எப்போதும் இருக்க மாட்டார்கள்.(73) ஓ! முனியே, இந்தச் செய்யுள் தொகுப்பை {காவியத்தை} எழுதும் காரியத்திற்காகக் கணேசன் {விநாயகர்} நினைக்கப்பட வேண்டும் {கணபதியைத் தியானிப்பாயாக}” என்றான் {பிரம்மன்}.(74)
சௌதி சொன்னார், “இவ்வாறு வியாசரிடம் பேசிய பிரம்மன், தன் வசிப்பிடத்திற்குச் சென்று சேர்ந்தார். பிறகு வியாசர் கணேசனைத் தமது மனத்தில் அழைக்கத் தொடங்கினார். தன் பற்றார்வலர்களின் {பக்தர்களின்} விருப்பங்களை நிறைவேற்றத் தயாராக இருப்பவனும், தடைகளை அகற்றுபவனுமான கணேசன், நினைக்கப்பட்ட மாத்திரத்திலேயே, வியாசர் அமர்ந்திருந்த இடத்தை அடைந்தான்.(75,76) அவன் {கணேசன்} வணங்கப்பட்டு, அமர்ந்த பிறகு, வியாசர் அவனிடம் இவ்வாறு பேசினார், “ஓ! கணங்களின் வழிகாட்டியே, என் மனத்தில் நான் அமைத்ததும், நான் திரும்பச் சொல்லப்போவதுமான பாரதத்திற்கு நீ எழுத்தனாவாயாக” என்று கேட்டார்.(77)
இந்த அறிமுகத்தைக் கேட்ட கணேசன், இவ்வாறு பதலளித்தான், “{நீர் சொல்லும்போது} என் எழுத்தாணி ஒரு கணமும் எழுதாமல் நிற்காதென்றால், நான் உமது படைப்பின் எழுத்தனாவேன்” {என்றான் கணேசன்}.(78) வியாசர் அந்தத் தெய்வீகத்தன்மையிடம் {கணேசனிடம்}, “எங்காவது, ஏதாவது உனக்குப் புரியாதபோது, தொடர்ந்து எழுதுவதை நிறுத்துவாயாக” என்றார். கணேசன், “ஓம்” என்ற சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லி, தன் இசைவைக் குறிப்பிட்டுவிட்டு, எழுத முனைந்தான்; வியாசரும் {சொல்லத்} தொடங்கினார்;(79) திசை திருப்பும் வழியின் மூலம் அவர் {வியாசர்} அந்தத் தொகுப்பில் மிக நெருக்கமான முடிச்சுகளைப் {பொருள் விளங்கிக் கொள்ள முடியாத வியாசகூடங்களைப்} பின்னினார்; அதைச் செய்ததன் மூலம் அவர், தமது ஒப்பந்தத்தின்படி இந்தப் படைப்பை எழுதுவதற்குக் கூறினார்.(80)
(சௌதி தொடர்ந்தார்), {சௌதியான} எனக்கு அவற்றில் {வியாசகூடங்களில்} எட்டாயிரத்து எண்ணூறு (8800) செய்யுள்கள் தெரியும், அதே போலச் சுகருக்கும் {வியாசரின் மகனுக்கும்}, ஒருவேளை சஞ்சயனுக்கும் தெரியும். ஓ! முனிவரே, {வியாசகூடங்களால்} நெருக்கமாகப் பின்னப்பட்டு, புதிர்த்தன்மையுடன் கூடிய அந்தக் கடினமான சுலோகங்களுக்குள் யாராலும் ஊடுருவிப் புரிந்து கொள்ள இந்நாள் வரை முடியவில்லை.(81,82) அனைத்தையும் அறிந்த கணேசனே கூட, கருத்தில் கொள்ள ஒரு கணத்தை எடுத்துக் கொண்டான் {அதனால் கண நேரம் தாமதமானது}; எனினும், அதேவேளையில் வியாசர், {அதே வேளையில்} தொடர்ந்து வேறு செய்யுள்களை மிக அபரிமிதமாக இயற்றினார்.(83)
அஞ்சனமிட {கண்களைக் கழுவும் மருந்தை இடப்} பயன்படும் கருவியொன்றைப் போல, இந்தப் படைப்பின் அறிவானது, அறியாமை எனும் இருளில் குருடாகியிருந்ததும், அறிவார்வம் கொண்டதுமான இந்த உலகத்தின் கண்களைத் திறந்திருக்கிறது.(84) சூரியன் இருளை அகற்றுவதைப் போலவே, இந்தப் பாரதம், அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றில் தான் கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்களால், மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறது.(85) முழு நிலவானது, தன் மென்மையான ஒளியால், ஆம்பல் மலர்களின் இதழ்களை விரிப்பதுபோலவே, இந்தப் புராணமும், சுருதியின் ஒளியை வெளிப்படுத்தி, மனித அறிவை மலரச் செய்திருக்கிறது.(86) அறியாமையெனும் இருளை அளிக்கும் வரலாறு {மஹாபாரதம்} எனும் விளக்கால், இயற்கையெனும் மொத்த மாளிகையும், சரியாகவும், முழுமையாகவும் ஒளியூட்டப்படுகிறது.(87)
இந்தப் படைப்பு {பாரதம்} ஒரு மரமாகும். அதன் பகுதிகளின் பொருளடக்கம் {அனுக்கிரமணிகம்} அதன் விதையாகும்; பௌலோமம் மற்றும் ஆஸ்தீகம் என்றழைக்கப்படும் பிரிவுகள் {உபபர்வங்கள்} அதன் வேர்களாகும். சம்பவம் என்றழைக்கப்படும் பகுதி அதன் தண்டாகும்; சபா மற்றும் ஆரண்யம் என்றழைக்கப்படும் நூல்கள் ஓங்கி உயர்ந்த கிளைகளாகும்; ஆரணி என்றழைக்கப்படும் நூல் முடிக்கப்பட்ட முடிச்சுகளாகும் {புதிர்களாகும்};(88) விராடம் மற்றும் உத்யோகம் என்றழைக்கப்படும் நூல்கள் நடுப்பாகமாகும்; பீஷ்மர் என்றழைக்கப்படும் நூலானது முக்கியக் கிளையாகும்; துரோணர் என்றழைக்கப்படும் நூலானது இலைகளாகும்; கர்ணன் என்றழைக்கப்படும் நூலானது அழகிய மலர்களாகும்; சல்லியன் என்ற பெயரைக் கொண்ட நூலானது அவற்றின் இனிய மணமாகும்; ஸ்திரீ மற்றும் ஐஷீகம் என்று தலைப்பிடப்பட்ட நூல்கள் புத்துணர்ச்சியளிக்கும் நிழலாகும்; சாந்தி என்றழைக்கப்படும் நூலானது பெரும் கனியாகும்;(89,90) அஸ்வமேதம் என்றழைக்கப்படும் நூலானது அழிவில்லாத இனப்பாலாகும் {அமிர்தத்திற்கு ஒப்பான பழரசமாகும்}; ஆசிரமவாசிகம் என்ற பெயரிடப்பட்டது, அது {மரம்} வளரும் இடமாகும்; மௌசலம் என்றழைக்கப்படும் நூலானது, வேதங்களின் சுருக்கமும், நல்ல பிராமணர்களால் பெரிதாக மதிக்கப்படுவதுமாகும். பாரதம் எனும் இந்த மரமானது, மேகங்களைப் போல மனித குலத்திற்கு வற்றாததாகி, புகழ்வாய்ந்த புலவர்கள் அனைவரின் வாழ்வாதாரமாக அமையும்.(91,92)
நான் இப்போது இந்த மரத்தில் இறுதிவரை மலர்ந்திருப்பவையும், கனிநிறைந்தவையாக இருப்பவையும், தூய்மை மற்றும் இனிய சுவையைக் கொண்டவையும், தேவர்களாலும் அழிக்கப்பட முடியாதவையுமான படைப்புகளைச் சொல்லப் போகிறேன்.(93)
முன்பொரு சமயம், உற்சாகமுள்ளவரும், அறம் சார்ந்தவருமான கிருஷ்ண-துவைபாயனர் {வியாசர்}, கங்கையின் ஞானமகனான பீஷ்மர், மற்றும் தன் சொந்த தாயார் {சத்தியவதி} ஆகியோரின் உத்தரவுகளின்டி, விசித்திரவீரியனின்மனைவியர் இருவரின் மூலமும், மூன்று நெருப்புகளைப் போன்றவர்களான மூன்று ஆண்பிள்ளைகளுக்குத் தந்தையானார்;(94) இவ்வாறு திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோரை பெற்ற அவர், தமது அறப்பயிற்சியின் வழக்கத்தைத் தொடர தமது தனிப்பட்ட வசிப்பிடத்திற்கு {ஆசிரமத்திற்குச்} சென்றார்.(95)
பெரும் முனிவரான வியாசர், இவர்கள் {அந்த மூவரும்} பிறந்து, வளர்ந்து, உயர்ந்த பயணத்தில் பிரிந்து போகும் வரை இம்மனிதகுலவுலகில் பாரதத்தை வெளியிடவில்லை;(96) ஜனமேஜயனாலும்,[4-விசித்திரவீரயன் மகன் பாண்டு. பாண்டு மகன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மகன் பரிக்ஷித்.பரிக்ஷித் மகன் ஜனமேஜயன்.–அந்த ஜனமேஜயன் நடத்திய நாகயாகத்தின் போது, ஜனமேஜயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க வியாசரின் முன்னிலையிலேயே வியாசரின் சீடரான வைசம்பாயனர் உரைத்ததே இந்த மகாபாரதம்.வைசம்பாயனர் உரைத்ததைக் கேட்ட சௌதியே தற்போது நைமிசாரண்யத்தில் உரையாற்றுகிறார்.] ஆயிரக்கணக்கான பிராமணர்களாலும் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டபோது, தமதருகே அமர்ந்திருந்த தம் சீடரான வைசம்பாயனரை அவர் அறிவுறுத்தினார்;(97) அவரோ {வைசம்பாயனரோ}, சத்யஸ்களுடன் அமர்ந்து கொண்டு, மீண்டும் மீண்டும் உரைக்கத் தூண்டப்பட்டு, வேள்வி சடங்குகளின் {ஹோம காரியங்களின்} இடைவேளைகளின் போது இந்தப் பாரதத்தை உரைத்தார்.(98)
குரு {கௌரவக்} குடும்பம், காந்தாரியின் அறக்கொள்கைகள், விதுரனின் அறிவு, குந்தியின் பண்பு மாறா இயல்பு நிலை ஆகியவற்றின் பெருமைகளை வியாசர் இதில் முழுமையாகப் பிரதிபலித்திருக்கிறார்.(99) உன்னதமான அந்த முனிவர் {வியாசர்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தெய்வீகத் தன்மையையும், பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} நன்னெறிகளையும், திருதராஷ்டிரனுடைய மகன்கள் மற்றும் அவர்களுடைய பங்காளிகளின் தீய நடைமுறைகளையும் விளக்கியிருக்கிறார்.(100)
ஆதிபர்வம் – பகுதி 1 ஆ-(பதிவின் சுருக்கம் : பாண்டு மற்றும் பாண்டவர்களின் வரலாற்றுச் சுருக்கம்; திருதராஷ்டிரன் கவலை; மஹாபாரதத்தின் பெயர்க்காரணம்…)
உண்மையாக வியாசர்முதலில் இருபத்துநாலாயிரம் {24,000} செய்யுள்களில் தனிபட்ட பகுதிகளை {அத்யாயங்களைக்} கொண்ட பாரதத் தொகுப்பையே செய்தார்; அவ்வளவு மட்டுமே கல்விமான்களால் {உண்மையான} பாரதம் என்றழைக்கப்படுகிறது.(101) அதன்பிறகு அவர், அறிமுகம் மற்றும் அந்தப் பகுதிகளின் பொருளடக்கத்துடன் கூடிய நூற்றைம்பது {150} செய்யுள்களில் ஒரு சுருக்கத்தை இயற்றினார்[5-இந்த 102ம் ஸ்லோகத்திற்குப் பிறகு, 103ம் ஸ்லோகத்திலிருந்து 272ம் ஸ்லோகம் வரையில் உள்ள 170 ஸ்லோகங்களுக்குள்ளாகவே இங்கே குறிப்பிடப்படும் நூற்றைம்பது {150} சுலோகங்களைக் கொண்ட அனுக்கிரமாணிகம் என்ற மஹாபாரதச் சுருக்கம் இருக்க வேண்டும்.].(102) இதை அவர், முதலில் தமது மகன் சுகருக்குக் கற்பித்தார்; அதன் பிறகு அவர், அதே தகுதிகளைக் கொண்ட தமது பிற சீடர்களுக்கு அதைக் கொடுத்தார்.(103)
அதன் பிறகு அவர், அறுபது நூறாயிரம் (அறுபது லட்சம் 60,00,000} செய்யுள்களுடன் {கிரந்தஸங்கியைகளுடன்} கூடிய மற்றொரு தொகுப்பைச் செய்தார்.
அவற்றில், முப்பது நூறாயிரத்தை {முப்பது லட்சத்தை 30,00,000} தேவர்களின் உலகம் அறிந்திருக்கிறது;(104)
பதினைந்து நூறாயிரத்தை {பதினைந்து லட்சத்தை 15,00,000} பித்ருக்களின் உலகம் அறிந்திருக்கிறது;
பதினான்கு நூறாயிரம் {பதினான்கு லட்சம் 14,00,000} கந்தர்வர்களுக்கு மத்தியில் அறியப்பட்டிருக்கிறது,
அதேவேளையில் ஒரு நூறூயிரமானது {ஒரு லட்சமானது 1,00,000} இந்த மனிதகுல உலகால் அறியப்பட்டிருக்கிறது.(105)
தேவர்களுக்கு அவற்றை {மஹாபாரதச் சுலோகங்களை} நாரதர் உரைத்தார், பித்ருக்களுக்குத் தேவலரும், கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களுக்குச் சுகரும் வெளியிட்டனர்;(106)
நீதியுடன் கூடிய கொள்கைகள் கொண்டவரும், வேதங்களை அறிந்தர் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசரின் சீடர்களில் ஒருவரான வைசம்பாயனரால் இவ்வுலகில் அவை உரைக்கப்பட்டன. சௌதியாகிய நானும், அந்த ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம் 1,00,000} செய்யுள்களையும் மீண்டும் சொல்லப் போகிறேன் என்பதை அறிவீராக.(107)
துரியோதனன்,ஆசையால் உண்டாக்கப்பட்ட ஒரு பெரும் மரமாவான்,கர்ணனே அதன் தண்டாவான்; சகுனி அதன் கிளைகளாவான்; துச்சாசனனே அதன் கனியும், மலர்களுமாவான்; பலவீனனான திருதராஷ்டிரனே அதன் வேராவான்.(108) {இந்த ஸ்லோகம் கங்குலியின் பதிப்பில் இல்லை}
யுதிஷ்டிரன்அறம் மற்றும் நல்லொழுக்கம் கொண்ட ஒரு பெரும் மரமாவான்,அர்ஜுனன் அதன் தண்டாவான், பீமசேனன் அதன் கிளைகளாவான், மாத்ரியின் மைந்தர்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} அதில் முழுதாக வளர்ந்த கனியும் மலர்களுமாவர். கிருஷ்ணன், பிரம்மன் மற்றும் பிராமணர்கள் அந்த மரத்தின் வேராவர்.(109)-
பாண்டு தன் விவேகத்தாலும், ஆற்றலாலும் பல நாடுகளை அடக்கி, ஒரு விளையாட்டு வீரனாக, முனிவர்களுடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட காட்டில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட போது, தன் இணையோடு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மானைக் கொன்றதால், மிகக் கடுமையானதும், தன் குடும்பத்து இளவரசர்கள் {பாண்டவர்கள்} வாழ்ந்தவரை, அவர்களது நடத்தைக்கு எச்சரிக்கையாக அமைந்ததுமான தீப்பேறு ஒன்றை அடைந்தான்.(110,111) அவர்களது {அந்த இளவரசர்களின்} தாய்மார் {குந்தி மற்றும் மாத்ரி}, விதிகளை நிறைவேற்றும்பொருட்டு {பாண்டுவின் குலம் அழிந்து போகாமல் இருப்பதற்காக}, தேவர்களான தர்மன் {யமதர்மராஜன்}, வாயு, சக்ரன் {இந்திரன்}, தெய்வத்தன்மை கொண்ட அசுவினி இரட்டையர்கள் ஆகியோரைத் தங்கள் அரவணைப்புகளுக்கு மாற்றாக ஏற்றுக்கொண்டனர்[6-வேறொரு பதிப்பில், “பிறகு, பர்த்தாவினிடத்து அன்புள்ளவர்களாகிய குந்தி பதிவிரதாதர்மத்துக்குரிய துர்வாஸரிஷியின் மந்திரத்தையடைந்து புத்திரர்களை இச்சித்து அந்த மந்தித்தினால், தர்மதேவதை, வாயு, இந்திரன் இவர்களையழைத்தாள். குந்தி உபதேசித்த மந்திரத்தினால் மாத்திரி அசுவினி தேவர்களையழைத்தாள். பிறகு, பாண்டவர் யாவரும் குந்தி மாத்திரி இவர்களுடைய மந்திரங்களினாற் பிறந்தனர்” என்றிருக்கிறது.].(112) அவர்களது வாரிசுகள் {பாண்டவர்கள்} தாய்மாரின் கவனிப்பின் கீழ், தவசிகள் சமூகத்தில், புனிதமான சோலைகள் மற்றும் அறவோருக்குச் சொந்தமான, தனிப்பட்ட, புனிதமான வசிப்பிடங்களில் வளர்ந்து வந்தபோது, தங்கள் முடிகளைத் தங்கள் தலைகளில் முடிந்து கட்டிக் கொண்டவர்களாகவும் {சடை தரித்தவர்களாகவும்}, பிரம்மச்சரிய வழக்கம் கொண்ட மாணவர்களாகவும் யாரைப் பின்தொடர்ந்து சென்றார்களோ, அந்த முனிவர்களால் அவர்கள், திருதராஷ்டிரன் மற்றும் அவனது மகன்களின் முன்னிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.(113-114) “இந்த எங்கள் சீடர்கள்” என்று சொன்ன அவர்கள் {முனிவர்கள்}, “உங்கள் மகன்களும், உங்கள் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர்; இவர்கள் பாண்டவர்களாவர்” என்றும் சொன்னார்கள். {பிறகு} இதைச் சொன்ன அந்த முனிவர்கள் மறைந்து போனார்கள்.(115)
அவர்கள் பாண்டுவின் மகன்களாக முனிவர்களால்} அறிமுகப்படுத்தப்பட்டதைக் கௌரவர்கள் {குருஜாங்கல நாட்டு மக்கள்} கண்ட போது, புகழ்பெற்ற {உயர்ந்த} வகுப்பைச் சார்ந்த குடிமக்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் கூச்சலிட்டனர்.(116) எனினும் சிலர், “அவர்கள் பாண்டுவின் மகன்கள் அல்ல” என்றனர்; சிலர் “அவர்களே {மகன்களே}” என்றனர்; மேலும் சிலரோ, அவன் {பாண்டு} இறந்து நெடுங்காலமானதைக் கண்டு, “அவர்கள் அவனது {பாண்டுவின்} வாரிசாக எவ்வாறு இருக்க முடியும்?” என்று கேட்டனர்.(117) இருப்பினும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும், “அனைத்து வகையிலும் அவர்களுக்கு நல்வரவு! தெய்வீக முன்னறிவாலேயே {காலம் நல்லதாக இருப்பதாலேயே} பாண்டுவின் குடும்பத்தை நாம் காண்கிறோம். அவர்களது வரவு நல்வரவாகவே அறிவிக்கப்பட வேண்டும்” என்ற கூக்குரல்கள் கேட்கப்பட்டன.(118) இந்த இசைவுப்பேரொலிகள் நின்றதும், சொர்க்கத்தின் அனைத்துப் புள்ளிகளிலும் {அனைத்துத் திசைகளிலும்} எதிரொலித்தவையான, கண்களுக்குப் புலப்படாத ஆவிகளின்[7] ( ஆவி என்ற சொல் இங்கே பொருந்தவில்லை. வேறொரு பதிப்பில், “அந்தச் சத்தம் ஓய்ந்த பின் மறைந்திருந்த தேவதைகளுடைய பெருமுழக்கமானது எல்லாத் திசைகளிலும் எதிரொலியை உண்டாக்கிக் கொண்டு எழும்பியது” என்றிருக்கிறது.)பாராட்டுகள், மிகப்பெரியனவாக இருந்தன. அங்கே இனிய நறுமணமிக்க மலர்களின் மழையும், சங்குகள் மற்றும் துந்துபிகளின் ஒலியும் இருந்தன. அந்த இளம் இளவரசர்களின் {பாண்டவர்களின்} வருகையின் போது இத்தகு ஆச்சரியங்கள் நடந்தன.(119,120) அந்தச் சந்தர்ப்பத்தில், குடிமக்கள் தங்கள் நிறைவை வெளிப்படுத்தும் வகையில், அவர்கள் அனைவரின் மகிழ்ச்சி நிறைந்த ஒலியானது, பாராட்டுகளாகப் பெருகி, சொர்க்கங்களையே {வானத்தையே} எட்டும் வகையில் மிகப் பெரியதாக இருந்தது.(121)
வேதங்களையும், பல்வேறு சாத்திரங்களையும் முழுமையாகக் கற்ற பாண்டவர்கள், எவரிடமும் எந்த அச்சவுணர்வுமின்றி, அனைவராலும் மதிக்கப்பட்டு அங்கே {ஹஸ்தினாபுரத்தில்} வசித்து வந்தனர்.(122) முக்கியமான மனிதர்கள், யுதிஷ்டிரனின் தூய்மையிலும், பீமசேனனின் பலத்திலும், அர்ஜுனனின் வீரத்திலும்,(123) மூத்தோருக்கு அடங்கி நடக்கும் குந்தியின் கவனிப்பிலும், இரட்டையரான நகுலன் மற்றும் சகாதேவனின் பணிவிலும் நிறைவடைந்தனர்; அவர்களது வீர அறங்களால் {நல்லொழுக்கங்களால்} மக்கள் அனைவரும் {அவர்களிடம்} மகிழ்ச்சியடைந்தனர்.(124) சிறிது காலங்கழித்து, அர்ஜுனன், ராஜாக்களின் {மன்னர்களின்} கூட்டத்திற்கு மத்தியில், ஒரு ஸ்வயம்வரத்தில் {தன்னேற்பில்}, வில்லாண்மையில் {வில்வித்தையில்} மிகக் கடினமான அருஞ்செயல் ஒன்றைச் செய்து, கிருஷ்ணை {திரௌபதி} என்ற கன்னிகையை அடைந்தான்.(125) இந்தக் காலத்திலிருந்தே அவன் {அர்ஜுனன்} இவ்வுலகின் வில்லாளிகள் அனைவருக்கும் மத்தியில் மிகவும் மதிக்கப்படலானான்; போர்க்களங்களிலும் அவன், அந்தச் சூரியனைப் போல, எதிரிகளால் கடினமானவனாகக் காணப்பட்டான்.(126) அண்டை {நாடுகளின்} இளவரசர்கள் அனைவரையும், கருத்திற்கொள்ளத்தக்க அனைத்து இனங்களையும் வென்ற அவன் {அர்ஜுனன்}, ராஜா (தன் அண்ணன்) {யுதிஷ்டிரன்}, ராஜசூயம் என்று அழைக்கப்பட்ட பெரும் வேள்வியை நடத்துவதற்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றினான்.(127)
வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அறிவாலோசனைகள் {நல்ல உபாயங்கள்}, பீமசேனன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் வீரம் {சக்தி} ஆகியவற்றின் மூலம், (மகதத்தின் மன்னன்) ஜராசந்தனையும், செருக்குமிக்கச் சைத்யனையும் {சேதி நாட்டு மன்னன் சிசுபாலனையும்} கொன்று, தகுதிகள் கடந்த நிலையை அடைந்த யுதிஷ்டிரன், பொருள்கள் {அன்னம்}, காணிக்கைகள் {தக்ஷிணைகள்} ஆகியவை நிறைந்த மகத்தான ராஜசூய வேள்வியைச் செய்யும் உரிமையை அடைந்தான்.(128,129) இந்த வேள்விக்குத் துரியோதனன் வந்தான்; காணிக்கைகள், விலைமதிப்புமிக்கக் கற்கள் {முத்துக்கள்}, தங்கம் மற்றும் ரத்தினங்களையும்; பசுக்கள், மாடுகள், யானைகள், குதிரைகள் ஆகிய செல்வங்களையும்; ஆர்வத்தைத் தூண்டும் இழைமங்கள் {துணிகள்}, ஆடைகள் மற்றும் மேலாடைகளையும்; விலைமதிப்பற்ற சால்வைகள், விலங்கின் மென்மயிர் ஆடைகள், ரங்குவின் {ரங்கு என்ற மானின்} தோலாலான விரிப்புகளையும்; சுற்றிலும் சிதறிக் கிடக்கும் பாண்டவர்களின் பரந்த செல்வத்தையும் அவன் {துரியோதனன்} கண்டபோது, பொறாமையால் நிறைந்து, மிகவும் மகிழ்ச்சியற்றவனானான் {உற்சாகத்தை இழந்தவனானான்}.(130-132) தெய்வீக சபையின் பாணியில், (அசுரத்தச்சன்) மயனால் நேர்த்தியாகக் கட்டப்பட்ட சபா மண்டபத்தைக் கண்ட போது அவன் சினத்தால் எரிந்தான்.(133) அந்தக் கட்டடத்திற்குள் உள்ள குறிப்பிட்ட கட்டடக்கலை மாயங்களால் குழம்பத் தொடங்கிய போது, இழிந்த பரம்பரையைச் சேர்ந்த ஒருவனைப் போல அவன் {துரியோதனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் பீமசேனனால் ஏளனம் செய்யப்பட்டான்[8].(134)(வேறொரு பதிப்பில், “அந்த ஸபையில் நாகரிகமறியாதவனைப் போல் தடுமாறி இடறி விழுந்த துரியோதனன் கிருஷ்ணனுக்கெதிரில் பீமஸேனனால் நகைக்கப்பட்டான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.)
பல்வேறு இன்பநுகர் பொருள்கள், பல்வேறு விலைமதிப்பற்ற பொருள்கள் ஆகிவற்றைப் பகிர்ந்தளிக்கும்போது, குறைவடைந்தவனாகவும், குருதியற்றவனாகவும், வெளிறியவனாகவும் அவனது மகன் {துரியோதனன்} மாறிக்கொண்டிருப்பதாகத் திருதராஷ்டிரனிடம் தெரிவிக்கப்பட்டது.(135) சில காலம் கழித்து, அந்தத் திருதராஷ்டிரன், தன் மகன் {துரியோதனன்} மீது கொண்ட பாசத்தின் காரணமாக, (பாண்டவர்களுடன்) அவர்கள் {கௌரவர்கள்} பகடை விளையாட தன் ஒப்புதலை அளித்தான். இதை அறியவந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} மிகவும் கோபமடைந்தான்.(136) இதனால் நிறைவையிழந்த {அதிருப்தியடைந்த} அவன், சச்சரவுகளைத் தவிர்க்க ஏதும் செய்யாமல், அந்த விளையாட்டையும், அதனால் எழுந்தவையும், நியாயப்படுத்தப்பட முடியாதவையும், பயங்கரமானவையுமான பரிமாற்றங்களைப் புறக்கணித்தான்;(137) விதுரன், பீஷ்மர், துரோணர், சரத்வானின் மகனான கிருபர் ஆகியோர் இருந்தாலும், அதை {அந்த விளையாட்டைத்} தொடர்ந்து வந்த பயங்கரப் போரில் அவன் {கிருஷ்ணன்} க்ஷத்திரியர்களைத் தங்களுக்குள் ஒருவரையொருவர் கொல்லச் செய்தான்.(138)
{குருக்ஷேத்திரப் போரின் முடிவில்} பாண்டவர்களின் வெற்றி குறித்த தீய செய்தியைக் கேட்டவனும், துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரின் தீர்மானங்களை நினைத்துப் பார்த்தவனுமான திருதராஷ்டிரன்,(139) சிறிது நேரம் சிந்தித்து, சஞ்சயனிடம் பின்வருமாறு பேசினான்: “ஓ! சஞ்சயா, நான் சொல்லப்போகும் அனைத்தையும் கவனித்தால் {கவனத்துடன் கேட்டால்}, என்னை நீ வெறுக்க மாட்டாய்.(140) சாத்திரங்களை நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவு மற்றும் நல்லறிவைக் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய். நான் எப்போதும் போரை விரும்பியதில்லை, என் குல அழிவிலும் நான் மகிழ்ச்சி கொண்டதில்லை.(141) என் சொந்தப் பிள்ளைகள் மற்றும் பாண்டுவின் பிள்ளைகள் ஆகியோருக்கிடையில் எனக்கு {எப்போதும்} எந்த வேறுபாடுமில்லை.(142) நான் கிழவன் என்பதால், என் மகன்கள், தங்கள் விருப்பபடிக்கு ஏறுக்குமாறானவர்களாகி என்னை இகழ்ந்தனர். பார்வையற்றவனான நான், என் பரிதாப நிலையினாலும், தந்தை பாசத்தாலும் அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.(143)
சிந்தையற்ற {புத்தியில்லாத} துரியோதனனிடம் எப்போதும் வளர்ந்த மடமையின் பின்னால் சென்று நானும் மூடனானேன். பாண்டு மகன்களின் பெரும் செல்வங்களைக் காணச் சென்ற என் மகன் {துரியோதனன்}, மண்டபத்தில் {மண்டபத்தின் படிகளில்} ஏறிச் சென்ற போது, அவனது தடுமாற்றத்திற்காக ஏளனம் செய்யப்பட்டான்.(144) அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனும், களத்தில் பாண்டுவின் மகன்களை வெற்றிகொள்ள இயலாதவனுமான அவன் {துரியோதனன்}, தானே படைவீரனாக இருப்பினும், தன் சொந்த முயற்சியால் நற்பேற்றை அடைய விரும்பாமல், காந்தாரத்தின் மன்னனுடைய {சகுனியுடைய} உதவியோடு, பகடையெனும் ஒரு நியாயமற்ற விளையாட்டை நடத்தினான்.(145,146) ஓ! சஞ்சயா, அதன்பேரில் நடந்தவையும், என் அறிவுக்கு எட்டியவையுமான அனைத்தையும் கேட்பாயாக. நான் சொல்லும் அனைத்தையும் நீ கேட்கும்போதே, அவை அனைத்தையும் நீ நினைத்துப் பார்த்தால், முன்கண்டுணரும் {தீர்க்கதரிசனக்} கண்களைக் கொண்ட ஒருவனாக என்னை நீ அறிவாய்.(147)
எப்போது அர்ஜுனன் வில்லை வளைத்து, ஆவலுடன் இலக்கைத் துளைத்து, அதைத் தரையில் வீழ்த்தினான் என்றும், கூடியிருந்த இளவரசர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கன்னிகையான கிருஷ்ணையை {திரௌபதியை} வெற்றிகரமாகக் கொண்டு சென்றான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(148)
எப்போது மது குலத்தைச் சேர்ந்த சுபத்திரை, வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப்பட்ட பிறகு, துவாரகை நகரத்தில், அர்ஜுனனால் திருமணம் செய்யப்பட்டாள் என்றும், விருஷ்ணி குலத்தின் இரு வீரர்களும் (சுபத்திரையின் சகோதரர்களான கிருஷ்ணனும், பலராமனும்) அதற்காகக் கோபமடையாமல் இந்திரப்பிரஸ்தத்திற்குள் நண்பர்களாக நுழைந்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(149)
எப்போது அர்ஜுனன், தன் தெய்வீகக் கணையைக் கொண்டு, தேவர்களின் மன்னனான இந்திரனால் பொழியப்பட்ட மழையைத் தடுத்தான் என்றும், காண்டவத்தின் காட்டை {காண்டவவனத்தை} அக்னிக்குக் கொடுத்து, அவனை நிறைவுகொள்ளச் செய்தான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(150)
எப்போது ஐந்து பாண்டவர்களும், தங்கள் தாயான குந்தியுடன் அரக்கு வீட்டில் இருந்து தப்பித்தனர் என்றும், அவர்களுக்கான ஏற்பாடுகளை நிறைவேற்றுவதில் விதுரன் ஈடுபட்டான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(151)
எப்போது அர்ஜுனன், அரங்கில் உள்ள இலக்கைத் துளைத்துத் திரௌபதியை வென்றான் என்றும், துணிச்சல்மிக்கப் பாஞ்சாலர்கள், பாண்டவர்களைச் சேர்ந்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(152)
எப்போது மகத அரசகுலத்தில் முதன்மையானவனும், க்ஷத்திரியர்களுக்கு மத்தியில் சுடர்விடுபவனுமான ஜராசந்தன், வெறுங்கரங்களைக் கொண்டே பீமனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(153)
எப்போது பாண்டு மகன்கள் தங்கள் பொதுப்போர்த்தொடரில் {திக்விஜயத்தில்} நிலத்தின் தலைவர்களை வென்று, மகத்தான ராஜசூய வேள்வியைச் செய்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(154)
எப்போது திரௌபதி, கண்ணீரால் தடைபட்ட தன் குரலுடனும், இதயம் நிறைந்த வேதனையுடனும், தூய்மையற்ற {தீட்டுக்} காலத்தில், ஒற்றையுடுப்புடன் சபைக்கு இழுத்து வரப்பட்டாள் என்றும், பாதுகாவலர்களைக் கொண்டவளானாலும், பாதுகாவலர்களற்றவளைப் போல நடத்தப்பட்டாள் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(155)
எப்போது தீயவனும், பொல்லாதவனுமான துச்சாசனன், அவளது {திரௌபதியின்} அந்த ஒற்றையாடையை உருவ முயன்று, அவளது மேனியில் இருந்து ஒரு பெரும் துணிக்குவியலை மட்டுமே உருவி, அதன் முனையை அடைய முடியாமல் போனான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(156)
எப்போது யுதிஷ்டிரன், பகடையாட்டத்தில் சௌபலனால் {சகுனியால்} வீழ்த்தப்பட்டு, அதன் விளைவாக அவனது நாட்டை இழந்தும், ஒப்பற்ற ஆற்றலையுடைய அவனது தம்பிமாரால் கவனிக்கப்பட்டான் {சேவகம் செய்யப்பட்டான்} என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(157)
எப்போது நல்லோரான பாண்டவர்கள், துன்பத்துடன் அழுதுகொண்டே, தங்கள் அண்ணனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து காட்டுக்குச் சென்றனர் என்றும், தங்கள் நலமின்மையைத் தணிக்கப் பல்வேறு வகைகளில் முயன்றனர் என்றும் கேட்டேனோ, ஓ சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(158)
எப்போது யுதிஷ்டிரன், ஸ்நாதகர்களாலும், பிச்சை பெற்று வாழும் உன்னத மனம் கொண்ட பிராமணர்களாலும் காட்டுக்குள் பின்தொடரப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(159)
எப்போது அர்ஜுனன், ஒரு மோதலில், வேடனின் வடிவில் இருந்தவனும், தேவர்களுக்குத் தேவனுமான திரையம்பகனை (முக்கண்ணனை) {சிவனை} நிறைவு செய்து, பாசுபதம் என்ற பெரும் ஆயுதத்தை அடைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(160)
எப்போது நீதிமானும், புகழ்பெற்றவனுமான அர்ஜுனன், தேவலோகங்களுக்குச் சென்று, இந்திரனிடமே தெய்வீக ஆயுதங்களை அடைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(161)
எப்போது அர்ஜுனன், அதன் பிறகு காலகேயர்களையும், தேவர்களால் பாதிப்படைய முடியாதவர்களும், தாங்கள் அடைந்திருந்த வரத்தால் செருக்குடன் இருந்தவர்களுமான பௌலோமர்களையும் வென்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(162)
எப்போது எதிரிகளைத் தண்டிப்பவனான அர்ஜுனன், அசுரர்களின் அழிவுக்காக இந்திரலோகத்திற்குச் சென்று வெற்றியோடு திரும்பினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(163)
எப்போது பீமனும், பிருதையின் (குந்தியின்) பிற மகன்களும், வைஸ்ரவணனுடன் {குபேரனோடு} சென்று மனிதர்களால் அடைய முடியாத நாட்டை அடைந்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(164)
எப்போது என் மகன்கள், கர்ணனின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்டுச் சென்று, தங்கள் கோஷயாத்திரை பயணத்தின் போது, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டனர் என்றும், அர்ஜுனனால் விடுவிக்கப்பட்டனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(165)
எப்போது தர்மன் (நீதிதேவன்), யக்ஷனின் வடிவில் வந்து, யுதிஷ்டிரனிடம் குறிப்பிட்ட கேள்விகளை முன்வைத்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(166)
எப்போது என் மகன்கள், விராடனின் ஆட்சிப்பகுதிகளுக்குள், தங்கள் மாற்றுவடிவத்தில் திரௌபதியுடன் வசித்த பாண்டவர்களைக் கண்டுபிடிக்கத் தவறினர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(167)
எப்போது என் தரப்பின் முக்கிய மனிதர்கள் அனைவரும், விராடனின் ஆட்சிப்பகுதிகளில் வசித்தவனும், ஒரே தேரில் வந்தவனுமான உன்னதமான அர்ஜுனனால் வெல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(168)
எப்போது மதுகுலத்தவனும், ஓர் அடியால் மொத்த உலகத்தையும் மறைத்தவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் நன்மையில் இதயப்பூர்வமான ஆர்வம் கொண்டிருந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(இந்த ஸ்லோகம் மன்மதநாததத்தரின் பதிப்பில் சுலோகம் எண் 171-ஆக இருக்கிறது)
எப்போது மத்ஸ்யத்தின் {மத்ஸ்ய நாட்டின்} மன்னன் {விராடன்}, நல்லொழுக்கம் கொண்ட தன் மகள் உத்தரையை, அர்ஜுனனுக்குக் கொடுக்க முன்வந்தான் என்றும், அர்ஜுனனோ அவளை {உத்தரையைத்} தன் மகனுக்காக {அபிமன்யுவிற்காக} ஏற்றான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(169)
எப்போது யுதிஷ்டிரன், பகடையில் வீழ்த்தப்பட்டும், செல்வத்தை இழந்தும், நாடு கடத்தப்பட்டும், தன் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டும் கூட, ஏழு அக்ஷௌஹிணிகள் கொண்ட ஒரு படையைத் திரட்டினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(170)
எப்போது நாரதர், கிருஷ்ணனும், அர்ஜுனனுமாக இருப்போர் நரனும் நாராயணனுமாவர் என்றும், பிரம்மலோகத்தில் அவர்கள் ஒன்றாக இருந்ததைத் தாம் கண்டதாக அறிவித்ததையும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(172)
எப்போது கிருஷ்ணன், குருக்களிடம் {கௌரவர்களிடம்} மனிதகுலத்தின் நன்மைக்காக வந்து, அமைதியை ஏற்படுத்த விரும்பினான் என்றும், {ஆனால்} தான் வந்த நோக்கத்தை அடைய முடியாமல் திரும்பினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(173)
எப்போது கர்ணனும், துரியோதனனும் கிருஷ்ணனைச் சிறைபிடிக்கத் தீர்மானித்தபோது, அவன் {கிருஷ்ணன்} மொத்த அண்டத்தையும் தன்னில் வெளிப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(174)
எப்போது கிருஷ்ணன் புறப்படும் நேரத்தில், சோகத்தால் நிறைந்து, அவனது தேரின் அருகே நின்ற பிருதை (குந்தி), அவனால் {கிருஷ்ணனால்} ஆறுதலளிக்கப்பட்டாள் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(175)
எப்போது வாசுதேவன், சந்தனுவின் மகனான பீஷ்மர் ஆகியோர் பாண்டவர்களின் ஆலோசகர்களாக் இருந்தார்கள் என்றும், பரத்வாஜரின் மகனான துரோணர் அவர்களுக்கு ஆசி வழங்கினார் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(176)
எப்போது கர்ணன் பீஷ்மரிடம், “நீர் போரிடும் வரை நான் போரிட மாட்டேன்” என்று சொல்லிப் படையை விட்டு சென்றுவிட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(177)
எப்போது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், அளவிலா ஆற்றலைக் கொண்ட காண்டீவ வில்லும் என இம்மூன்று பயங்கர சக்திகளும் ஒன்றாகச் சேர்ந்தன என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(178)
எப்போது அர்ஜுனன், குற்றவுணர்வுக்கு ஆட்பட்டுர தன் தேரில் மூழ்கிப் போக இருந்த {அழுதுகொண்டிருந்த} சமயத்தில், கிருஷ்ணன் அவனுக்கு உலகங்கள் அனைத்தையும் தன் உடலுக்குள் காட்டினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(179)
எப்போது எதிரிகளைத் துணையற்றவர்களாகச் செய்யும் பீஷ்மர், போர்க்களத்தில் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் தேர்வீரர்கள் கொன்றும், குறிப்பிட்டோரில் (பாண்டவர்களில்) ஒருவரையேனும் கொல்லவில்லை என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(180)
எப்போது கங்கையின் நீதிமிக்க மகனான பீஷ்மர், போர்க்களத்தில் தம்மைக் கொல்லும் வழிகளைக் குறிப்பிட்டார் என்றும், மேலும் அது {பீஷ்மரின் அழிவு} மகிழ்ச்சிநிறைந்த பாண்டவர்களால் நிறைவேற்றப்பட்டது என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(181)
எப்போது அர்ஜுனன் தன் தேருக்கு முன்னணியில் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, எல்லையில்லா வீரம் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான பீஷ்மரைக் காயப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(182)
எப்போது வயது முதிர்ந்த வீரரான பீஷ்மர், சோமகக் குலத்தை எண்ணிக்கையில் ஒரு சிலராகக் குறைத்தும், பல்வேறு காயங்களால் வெற்றிகொள்ளப்பட்டுக் கணைகளின் படுக்கையில் கிடந்தார் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(183)
எப்போது தண்ணீருக்கான தாகத்துடன் தரையில் கிடந்த பீஷ்மர், அர்ஜுனனை வேண்டிக்கொண்டதும், தரையைத் துளைத்து அவரது தாகத்தை அவன் {அர்ஜுனன்} தணித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(184)
எப்போது குந்தி மகன்களின் {பாண்டவர்களின்} வெற்றிக்காக இந்திரன், சூரியனுடன் மற்றும் வாயு ஆகியோர் கூட்டணியாக ஒருங்கிணைந்தனரோ, ஊனுண்ணும் விலங்குகள் (அவர்களது {மேற்கண்ட மூன்று தேவர்களின்} மங்கலமற்ற இருப்பால்) நம்மை {சகுனங்களால்} அச்சுறுத்தினவோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(185)
எப்போது அற்புதப் போர்வீரரான துரோணர், களத்தில் நடந்த போரில் பல்வேறு வழிமுறைகளை வெளிப்படுத்தியும், பாண்டவர்களில் மேன்மையானவர்கள் {முக்கியமானவர்கள்} எவரையும் கொல்லமுடியவில்லையோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(186)
எப்போது நமது படையைச் சேர்ந்தவர்களும், அர்ஜுனனை வீழ்த்துவதற்காக நியமிக்கப்பட்டவர்களும், மஹாரதர்களுமான சம்சப்தகர்கள் அனைவரும், அர்ஜுனனாலேயே கொல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(187)
எப்போது பிறரால் ஊடுருவப்பட முடியாதவையும், நன்கு ஆயுதம் தரித்த பரத்வாஜராலேயே {துரோணராலேயே} காக்கப்பட்டவையுமான நமது படைகளின் நிலைகளைச் சுபத்திரையின் துணிச்சல்மிக்க மகன் {அபிமன்யு}, தனியொருவனாகத் தாக்கி அதனுள் நுழைந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(188)
எப்போது அர்ஜுனனை வெற்றிக் கொள்ள முடியாத நமது மஹாரதர்கள், களிப்பான முகங்களுடன் சிறுவன் அபிமன்யுவால் சூழப்பட்டு மொத்தமாகக் கொல்லப்பட்டனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(189)
எப்போது குருட்டுக் கௌரவர்கள், அபிமன்யுவைக் கொன்றுவிட்டு மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர் என்றும், அதன்பேரில் கோபமடைந்த அர்ஜுனன், சைந்தவனை {ஜெயத்ரதனைச்} சுட்டும் வகையில் கொண்டாடப்படும் தன்னுரையைப் பேசினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(190)
எப்போது அர்ஜுனன் சைந்தவனை {ஜெயத்ரதனைக்}கொல்ல சபதம் செய்து, தன் எதிரிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தனது அந்தச் சபதத்தை நிறைவேற்றினான் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(191)
எப்போது அர்ஜுனனுடைய குதிரைகள் களைப்படைந்ததும், வாசுதேவன் {கிருஷ்ணன்} அவற்றை விடுவித்து, நீரருந்தச் செய்து, மீண்டும் கொண்டு வந்து அவற்றுக்குச் சேணம் பூட்டி, முன்பு போலவே வழிகாட்டத் தொடங்கினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(192)
எப்போது குதிரைகள் களைப்படைந்ததும், தன் தேரிலேயே நின்ற அர்ஜுனன், தன்னைத் தாக்கியோர் அனைவரையும் தடுத்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(193)
எப்போது விருஷ்ணி குலத்தின் யுயுதானன் {சாத்யகி}, துரோணரின் படையைக் குழப்பத்தில் ஆழ்த்தி, யானைகளின் முன்னிலையிலும் தாங்க முடியாத ஆற்றலை வெளிப்படுத்தி, கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் இருந்த இடத்திற்குச் சென்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(194)
எப்போது கர்ணன், பீமனைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தும், தன் வில்லின் முனையால் அவனை இழுத்தும், அவமானப்படுத்தும் வகையில் மட்டும் பேசிவிட்டு, அவனைத் தப்பிச் செல்ல அனுமதித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(195)
எப்போது துரோணர், கிருதவர்மன், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ரத்தின் வீர மன்னன் (சல்லியன்) ஆகியோர் சைந்தவன் {ஜெயத்ரதன்} கொல்லப்படுவதைப் பொறுத்தார்கள் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(196)
எப்போது இந்திரனால் (கர்ணனுக்குக்) கொடுக்கப்பட தெய்வீக சக்தியை {ஈட்டி போன்ற ஆயுதத்தை}, மாதவன் {கிருஷ்ணன்} தனது தீயத் திட்டங்களால், அச்சந்தரும் முகத்தோற்றம் கொண்ட ராட்சசன் கடோத்கசனின் மீது ஏவச்செய்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(197)
எப்போது கர்ணனுக்கும், கடோத்கசனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில், போரில் அர்ஜுனனை நிச்சயம் கொன்றிருக்கக்கூடிய அந்தச் சக்தியை {ஈட்டி போன்ற ஆயுதத்தைக்} கடோத்கசன் மீது கர்ணன் ஏவினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(198)
எப்போது திருஷ்டத்யும்னன், இறக்கத் தீர்மானித்த துரோணர், தமது தேரில் தனியாக இருந்த போது, போர் விதிகளை மீறிக் கொன்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(199)
எப்போது மாத்ரியின் மகனான நகுலன், மொத்தப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே துரோணர் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} தனிப்போரில் ஈடுபட்டு, அவனுக்கு இணையாகத் தன்னை வெளிக்காட்டி, சுற்றிலும் தன் தேரில் வட்டமாகச் சுழன்றான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(200)
எப்போது துரோணர் இறந்ததன் பேரில், அவரது மகன் {அஸ்வத்தாமன்} நாராயணம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், பாண்டவர்களின் அழிவை அடையத் தவறினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(201)
எப்போது பீமசேனன், எவராலும் தடுக்கப்பட முடியாதபடி போர்க்களத்தில், தன் தம்பியான துச்சாசனனின் குருதியைக் குடித்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(202)
எப்போது எல்லையற்ற துணிச்சல் கொண்டவனும், போரில் வெல்லப்பட முடியாதவனுமான கர்ணன், தேவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாததும், சகோதரர்களுக்கிடையில் நடந்ததுமான அந்தப் போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(203)
எப்போது நீதிமானான யுதிஷ்டிரன், வீரனான துரோணர் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, துச்சாசனனையும், சீற்றமிக்கக் கிருதவர்மனையும் வெற்றிக் கொண்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(204)
எப்போது துணிச்சல்மிக்கவனும், போரில் கிருஷ்ணனையே எதிர்க்கத் துணிந்தவனுமான மத்ர மன்னன் {சல்லியன்}, யுதிஷ்டிரனால் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(205)
எப்போது மாயசக்தி கொண்டவனும், விளையாட்டு {சூதாட்டம்} மற்றும் வழிவழியான பகைக்கு வேராக இருந்தவனுமான தீய சுபலன் {சகுனி}, சகாதேவனால் போரில் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(206)
எப்போது களைப்படைந்த துரியோதனன், ஒரு தடாகத்துக்குச் சென்று, அதன் நீருக்குள் புகலிடத்தை அமைத்துக் கொண்டு, தன் பலத்தையும், தேரையும் இழந்தவனாக அங்கே தனியாகக் கிடந்தான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(207)
எப்போது பாண்டவர்கள், வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} அந்தத் தடாகத்துக்குச் சென்று, அதன் கரையில் நின்று கொண்டு, அவமதிப்புகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத என் மகனிடம் {துரியோதனனிடம்} அவமதிப்பாகப் பேசத் தொடங்கினர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(208)
எப்போது கதாயுதங்களுடன் கூடிய ஒரு மோதலில், பல்வேறு புதிய (தாக்குதல் மற்றும் தற்காத்தல்) முறைகளுடன் கூடிய சுழற்சியை வெளிக்காட்டிய அவன் {துரியோதனன்}, கிருஷ்ணனின் ஆலோசனைகளின்படி நியாயமற்ற வழியில் கொல்லப்பட்டான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(209)
எப்போது துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்}, பிறரும் {கிருபரும், கிருதவர்மனும்}, உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலர்களையும், திரௌபதியின் மகன்களையும் கொன்று, பயங்கரமானதும், இகழ்வைத் தருவதுமான {அருவருப்பானதுமான} ஒரு செயலைச் செய்தனர் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(210)
எப்போது பீமசேனனால் பின்தொடரப்பட்ட அஸ்வத்தாமன், ஐஷீகம் என்றழைக்கப்பட்ட முதன்மையான ஆயுதத்தை வெளிப்படுத்தி, (உத்தரையின்) கருவறையில் இருந்த கருவை {பரீக்ஷித்தைக்} காயப்படுத்தினான் என்று கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(211)
எப்போது (அஸ்வத்தாமனால் வெளியிடப்பட்ட) பிரம்மசிரஸ் ஆயுதத்தை, “சஷ்டி” என்ற சொல்லைச் சொல்லி மற்றொரு ஆயுதத்தால் அர்ஜுனன் தடுத்தான் என்றும், அஸ்வத்தாமனின் தலையில் ஆபரணம் போல இருக்கும் குருப்பு ஒன்றை அவன் {அஸ்வத்தாமன்} கொடுக்க வேண்டியிருந்தது என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(212)
எப்போது விராடன் மகளின் {உத்தரையின்} கருவறையில் இருந்த கருவானது, அஸ்வத்தாமனின் வலிமைமிக்க ஆயுதத்தால் காயப்படுத்தப்பட்டது என்றும், துவைபாயனரும் {வியாசரும்}, கிருஷ்ணனும் அவனுக்கு {அஸ்வத்தாமனுக்குச்} சாபமளித்தனர் என்றும் கேட்டேனோ, ஓ! சஞ்சயா, அப்போதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.(213)
ஐயோ! பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள் மற்றும் சொந்தங்களை இழந்தவளான காந்தாரியின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பாண்டவர்களால் செய்யப்பட்டப் பணி கடினமானதாக இருக்கிறது; எந்த எதிரியுமற்ற ஓர் அரசானது அவர்களால் மீட்கப்பட்டிருக்கிறது.(214)
ஐயோ! போரானது பத்து பேரை மட்டுமே உயிருடன் விட்டு வைத்துள்ளது என்று நான் கேட்டேன்: நம் தரப்பில் மூவரும், பாண்டவர்களின் தரப்பில் எழுவரும், அந்தப் பயங்கரப் போரில் பதினெட்டு அக்ஷௌஹிணிகளின் க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(215) என்னைச் சுற்றிலும் இருளாக இருக்கிறது, பொருத்தமான மயக்கம் என்னைத் தாக்குகிறது: ஓ சூதா, சுயநினைவு என்னைவிட்டு அகல்கிறது, என் மனமும் சஞ்சலமடைகிறது” என்றான் {திருதராஷ்டிரன்}”.(216)
சௌதி சொன்னார், “இவ்வார்த்தைகளால் தன் விதியை நொந்து கொண்ட திருதராஷ்டிரன், கடும் வேதனையை அடைந்து, சிறிது நேரத்திற்கு உணர்வை இழந்தவனானான்; எனினும் புத்துயிரடைந்த அவன், பின் வரும் வார்த்தைகளை சஞ்சயனிடம் பேசினான்.(217)
{திருதராஷ்டிரன் சஞ்சயனிடம்}, “இவ்வாறு நடந்த பிறகு, ஓ! சஞ்சயா, தாமதமில்லாமல் என் உயிருக்கு ஒரு முடிவைக் கொடுக்க விரும்புகிறேன்; இனியும் அதைப் பேணிக் காப்பதற்கான சிறு பயன் ஒன்றையும் நான் காணவில்லை” என்றான்”.(218) சௌதி சொன்னார், “அறிவாளியான கவல்கணன் மகன் (சஞ்சயன்), கலங்கிப் போயிருந்த பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்}, இவ்வாறு பேசிக்கொண்டும், வருந்திப்புலம்பிக் கொண்டும், பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டும், மீண்டும் மீண்டும் மயங்கிக் கொண்டும் இருந்தபோது, ஆழ்ந்த பொருள் கொண்ட இவ்வார்த்தைகளில் {அவனிடம்} பேசினான்.(219)
{சஞ்சயன்}, ஓ! ராஜாவே {திருதராஷ்டிரரே}, பரந்துபட்ட முயற்சிகளைச் செய்த பெரும் பலமிக்க மனிதர்களைக் குறித்து வியாசரும், ஞானியான நாரதரும் பேசியதை நீர் கேட்டீர்;(220) தகுந்த குணங்களுடன் பிரகாசித்தவர்களும், தெய்வீக ஆயுதங்களின் அறிவியலை நன்கறிந்தவர்களும், மகிமையில் இந்திரனின் சின்னங்களுக்கு ஒப்பானவர்களும், பெரும் அரச குடும்பங்களில் பிறந்தவர்களுமான மனிதர்கள்;(221) நீதியால் உலகை வென்று, தகுந்த காணிக்கைகளை (பிராமணர்களுக்கு) அளித்துப் பெரும் வேள்வியைச் செய்தவர்களான அவர்கள், இவ்வுலகில் பெரும் புகழை அடைந்தும், இறுதியில் காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கினர் {இறக்கவே செய்தனர்}.(222,223)
வீரமான மஹாரதனான {வலிமைமிக்கத் தேர்வீரனான} சைப்யன், வெற்றியாளர்களுக்கு மத்தியில் பெரியவனான சிருஞ்சயன், சுஹோத்ரன், ரந்திதேவன், பெரும்புகழைக் கொண்ட {உசிக்கின் மகனாகிய} கக்ஷீவான், பாஹ்லீகன், தமனன், {சைத்யன்,} சர்யாதி, அஜிதன், நளன், எதிரிகளை அழிப்பவரான விஸ்வமித்திரர், பெரும் பலம் கொண்டவனான அம்பரீஷன், மருத்தன், மனு, இக்ஷ்வாகு, கயன், பரதன், தசரதன் மகனான இராமன், சசவிந்து {சசிபிந்து}, பகீரதன், பெரும் பேறு பெற்ற கிருதவீரியன், ஜனமேஜயன், வேள்விகளைச் செய்வதற்குத் தேவர்களாலேயே துணைபுரியப்பட்டவனும், வசிப்பிடங்கள் மற்றும் வசியாயிடங்கள் ஆகியவற்றுடன் கூடிய பூமாதேவியின் மேனி எங்கும் வேள்விப்பீடங்கள் மற்றும் வேள்வி மரங்கள் {யூபஸ்தம்பம்} ஆகியவற்றால் குறிப்பிட்டவனும், நல்ல செயல்களைச் செய்தவனுமான யயாதி ஆகியோர் அப்படிப்பட்டோரே.(224,227) முன்பொரு சமயம், தன் பிள்ளைகளின் இழப்பால் மிகவும் துன்பப்பட்ட சைப்யனுக்கு இந்த இருபத்துநான்கு, ராஜாக்களும் தெய்வீக முனிவரான நாரதரால் குறிப்பிடப்பட்டனர்.(228)
இவர்களைத் தவிர, இன்னும் பலம் நிறைந்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், உன்னத மனம் கொண்டவர்களும், ஒவ்வொரு தகுந்த குணத்தாலும் ஒளிர்ந்தவர்களுமான வேறு ராஜாக்களும் இவர்களுக்கு முன்னே சென்றிருக்கின்றனர் {இறந்திருக்கின்றனர்}.(229) அவர்கள் பூரு, குரு, யது, சூரன், பெரும் புகழைக் கொண்ட விஸ்வகஸ்வன்; அணுஹன், யுவனாஸ்வன், ககுத்ஸ்தன், விக்ரமி, ரகு; விஜயன், விதிஹோத்ன், அங்கன், பவன், சுவேதன், பிருபத்குரு {பிருஹத்குரு}; உசீனரன், சத-ரதன், கங்கன், துலிதுஹன், துருமன்; தம்போத்பவன், பரன், வேனன், ஸகரன், ஸங்கிருதி, நிமி; அஜயன், பரசு, புண்டரன், சம்பு, புனிதமான தேவ-விரதன்; தேவாஹுயன் {தேவாஹ்வயன்}, {சுப்ரதிமன்,} சுப்ரதீகன், பிருஹத்-ரதன்; மஹாத்சாகன், வினிதாத்மன், சுக்கிரது, நிஷாதர்களின் மன்னன் நளன்; சத்தியவிரதன், சாந்தபயன், சுமித்திரன், தலைவன் சுபலன்; ஜானுஜங்கன், அனரண்யன், அர்க்கன், பிரியபிருத்யன், சுசி-விரதன், பலபந்து, நிராமர்த்தன், கேதுசிருங்கன், பிருஹத்பலன்; திருஷ்டகேது, பிருஹத்கேது, திருப்தகேது, நிராமயன்; அவிக்ஷித், சபலன், தூர்த்தன், கிருதபந்து, திருதே-சுத்தி; மஹாபுராணனன் சம்பவ்யன், பிரத்யங்கன், பரஹன், சுருதி ஆவர்.(230-236)
ஓ! தலைவா, இவர்களும், இன்னும் வேறு ராஜாக்களும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், பத்து லட்சம் கணக்கிலும், பெரும் சக்தியும், அறிவும் வாய்ந்த இளவரசர்களும், பெரும் இன்பங்களை விட்டுத் தங்கள் {உமது} மகன்களைப் போலவே மரணத்தைச் சந்தித்தனர்.(237,238) அவர்களது நல்ல செயல்கள், வீரம், ஈகை, மகிமை, நம்பிக்கை, உண்மை, தூய்மை, எளிமை மற்றும் கருணை ஆகியவை, பெரும் கல்விமான்களான புனிதமான புலவர்களால் உலகின் முற்காலப் பதிவுகளில் வெளியிடப்பட்டன. உன்னதமான ஒவ்வொரு நற்குணத்துடனும் கூடிய அவர்களும் தங்கள் உயிரைவிட்டனர்.(239)
உமது மகன்கள், பேரார்வம், பேராசை மற்றும் தீய மனநிலை ஆகியவற்றால் தூண்டப்பட்ட தீயவர்களாகவே இருந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் சாத்திரங்களை அறிந்தவராகவும், நுண்ணறிவும், ஞானமும் கொண்டவராக இருக்கிறீர்; சாத்திரங்களால் வழிநடத்தப்படுவதைத் தங்கள் அறிவாகக் கொண்டோர், தீயூழில் ஒருபோதும் மூழ்குவதில்லை.(240,241) ஓ! இளவரசரே {திருதராஷ்டிரரே}, விதியின் மென்மையையும், வன்மையையும் நீர் அறிந்தவராக இருக்கிறீர்; எனவே உமது பிள்ளைகளைப் பாதுகாப்பதைக் குறித்துக் கவலை கொள்வது உமக்குத் தகாது; மேலும் நடக்க வேண்டியவற்றுக்காக வருந்தாமலிருப்பதே உமக்குத் தகும்:(242) தன் ஞானத்தைக் கொண்டு விதியின் கட்டளைகளை எவரால் திசைதிருப்ப முடியும்? வருங்காலத் தேவைக்காக ஒருவனுக்காகக் குறிக்கப்பட்ட பாதையில் இருந்து எவனாலும் விலக முடியாது.(243)
இருப்பு மற்றும் இல்லாமை, இன்பம் மற்றும் துன்பம் ஆகிய அனைத்தும் காலத்தையே தங்கள் வேர்களாகக் கொண்டிருக்கின்றன.(244) காலமே அனைத்துப் பொருள்களையும் படைக்கிறது; காலமே அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறது. காலமே உயிரினங்களை எரிக்கிறது, மேலும் காலமே அந்நெருப்பை அணைக்கவும் செய்கிறது.(245) மூன்று உலகிலும் நன்மை மற்றும் தீமையின் அனைத்து நிலைகளும் காலத்தாலேயே உண்டாக்கப்படுகின்றன. காலம் அனைத்துப் பொருள்களையும் வெட்டிக் குறுக்குகிறது, மேலும் புதியனவற்றையும் உண்டாக்குகிறது.(246) அனைத்துப் பொருட்களும் உறங்கும்போது காலம் மட்டுமே விழித்திருக்கிறது. காலமே எந்தப் பாதிப்புமின்றி அனைத்துப் பொருள்களையும் கடந்து செல்கிறது.(247) நீர் அறிந்தது போலவே, கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் அனைத்துப் பொருள்களும், நிகழ்கணத்தில் இருப்பவை யாவையும் காலத்தின் குழந்தைகளே என்பதை அறிந்து கொண்டு, உமது விவேகத்தை இழக்காமல் இருப்பதே உமக்குத் தகும்” என்றான் {சஞ்சயன்}”.(248)
சௌதி சொன்னார், “கவல்கணன் மகன் {சஞ்சயன்}, தன் மகன்களுக்காகத் துயரில் மூழ்கியிருந்த அரசன் திருதராஷ்டிரனுக்கு இம்முறையில் ஆறுதலை அளித்து, அவனது {திருதராஷ்டிரனின்} மன அமைதியை மீட்டான்.(249)
துவைபாயனர் {வியாசர்} இந்த உண்மைகளையே தமது உட்பொருளாக எடுத்துக் கொண்டு, இவ்வுலகிற்காகக் கல்விமான்களாலும், புனிதமான புலவர்களாலும் இயற்றப்பட்ட புராணங்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு புனிதமான உபநிஷத்தை {பகவத்கீதையைத்} இயற்றினார்[9].(250)-(வேறொரு பதிப்பில், “முனிஸ்ரேஷ்டராகிய கிருஷ்ணத்வைபாயனர் உலகங்களுக்கெல்லாம் நன்மைக்காகக் கருணையினாற் பாபத்தைப் போக்கத்தக்க உபநிஷத்தென்று சொல்லப்பட்ட பகவத்கீதையை இந்தப் பாரதத்திற்சொன்னார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பெரும் துவைபாயனர், இவ்வுண்மைகளைக் கொண்டு ஒரு புனிதமான உபநிஷத்தைத் தொகுத்தார்; அதுவே இவ்வுலகில் கல்விமான்களாலும், புனிதமான புலவர்களாலும் புராணங்களில் வெளியிடப்பட்டது” என்றிருக்கிறது.)
பாரதம் குறித்த ஆய்வானது ஒரு பக்தி {பற்றார்வத்தின்} செயல்பாடாகும் {பாரதம் ஓதுவது புண்ணியமாகும்}. எவன் நம்பிக்கையுடன் {இவற்றில்} ஓர் அடியையேனும் படிப்பானோ அவனது பாவங்கள் முற்றிலுமாக நீக்கப்படுகின்றன {அழிக்கப்படுகின்றன}.(251) தேவர்கள், தேவ முனிவர்கள், நல்ல செயல்களைச் செய்யும் களங்கமற்ற பிரம்மமுனிவர்கள் ஆகியோர் இதற்குள் பேசப்பட்டிருக்கின்றனர்; அதே போல யக்ஷர்களும், பெரும் உரகர்களும் (நாகர்களும்) பேசப்பட்டிருக்கின்றனர்.(252) ஆறு குணங்களைக் கொண்ட அழிவற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்} இதற்குள் விளக்கப்பட்டிருக்கிறான். அவனே {கிருஷ்ணனே} உண்மையாளன், நீதிமான், தூயன், புனிதன், அழிவற்ற பிரம்மம், உண்மையான நிலையான ஒளி, அவனுடைய தெய்வீகச் செயல்களையே அறிவாளிகளும், கல்விமான்களும் மீண்டும் உரைக்கின்றனர்;(253,254) படைப்புக் கொள்கைகளையும், முன்னேற்றத்தையும், பிறவி, மரணம், மறுபிறவி ஆகியவற்றையும், இருப்பு மற்றும் இல்லாமையையும் கொண்ட அண்டம் அவனிலிருந்து {கிருஷ்ணனிலிருந்தே} உண்டானது.(255) இதற்குள் அத்யாத்மம் என்று அழைக்கப்படும் அதுவே (இயற்கையின் மேற்பார்வையிடும் தன்மையே) {கிருஷ்ணனே} ஐம்பூதங்களின் பண்புகளைப் பகிர்ந்தளிக்கிறது {பகிர்ந்தளிக்கிறான்} என்று சொல்லப்பட்டிருக்கிறது. “வடிவற்றது” என்பது போன்ற அடைமொழிகளால் “எவன் புருஷன்?” என்பது விளக்கப்பட்டிருக்கிறது;(256) பொதுவிதியில் இருந்து விலக்களிக்கப்பட்ட யதிகளில் முதன்மையானோரும், தியானம் மற்றும் தவம் செய்வோரும், கண்ணாடியில் பிம்பத்தைப் பார்ப்பது போல, தங்கள் இதயங்களில் வசிப்பதாக அதையே {அவனையே} காண்பார்கள்.(257)
நம்பிக்கை கொண்டவனும், பக்தியில் {பற்றார்வத்தில்} அர்ப்பணிப்பு கொண்டவனும், அறப்பயிற்சியில் நிலைத்திருப்பவனுமான ஒரு மனிதன், இந்தப் பகுதியைப் படிப்பதால், பாவத்திலிருந்து விடுபடுகிறான்.(258) அறிமுகம் {அனுக்கிரமணிக அத்யாயம்} என்று அழைக்கப்படும் பாரதத்தின் இந்தப் பகுதியைத் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து கேட்கும் நம்பிக்கையாளன் இடர்பாடுகளுக்குள் வீழமாட்டான்.(259) அறிமுகத்தின் எந்தப் பகுதியையாவது இரு சந்திப்பொழுதுகளில் மீண்டும் உரைக்கும் ஒரு மனிதன், அந்தச் செயலின் போது, பகல், அல்லது இரவில் ஈர்க்கப்பட்ட பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.(260) பாரதத்தின் உடலான இந்தப் பகுதி உண்மையானதும், அமுதமானதுமாகும். தயிரில் உள்ள வெண்ணையைப் போலவும், இருகால்களைக் கொண்டோரில் பிராமணர்களைப் போலவும்,(261) வேதங்களில் ஆரண்யகத்தைப் போலவும், மருந்துகளில் அமுதத்தைப் போலவும்; நீர்க்கொள்ளிடங்களில் கடலைப் போலவும், நான்கு கால் கொண்டவற்றில் பசுவைப் போலவும்;(262) (குறிப்பிடப்பட்ட பொருள்களின் மத்தியில்) இவற்றைப் போலவே வரலாறுகளுக்கு மத்தியில் பாரதமும் சொல்லப்படுகிறது. ஒரு சிராத்தத்தின் போது, இவற்றில் ஓர் அடியையாவது பிராமணர்களுக்கு ஒருவன் உரைக்கச் செய்வானாயின், தன் மூதாதையருக்கு அவன் அளிக்கும் உணவும், நீரும் வற்றாததாகின்றன {அழிவில்லாதவை ஆகின்றன}.(263)
வரலாறு, புராணங்கள் ஆகியவற்றின் உதவியோடு வேதமானது விளக்கப்படலாம்;(264) ஆனால் வேதமோ குறைந்த அறிவைக் கொண்டோனின் விளக்கத்திற்கு {அவன் தன்னை மோசம் செய்வான் என்று} அஞ்சுகிறது. வியாசரின் இந்த வேதத்தை {இந்த மஹாபாரதத்தைப்} பிறருக்கு உரைக்கும் கல்வியாளன் பயனையே அறுவடை செய்கிறான்.(265) கருவைக் கொன்ற பாவத்தையோ, அதற்கு இணையானதையோ கூட இஃது அழித்துவிடும் என்பதில் ஐயமில்லை.(266) சந்திரனின் இந்தப் புனித அதிகாரத்தை[10] (வேறொரு பதிப்பில், “எவன் பரிசுத்தனாக இருந்து இந்த அனுக்கிரமகாத்தியாயத்தை ஒவ்வொரு புண்ணியக் காலத்திலும் படிப்பானோ அவனாற் பாரதம் முழுமையும் படிக்கப்பட்டது போலாகும் என்பது என் கருத்து” என்றிருக்கிறது. மன்மதநாதத்தரின் பதிப்பில், “சந்திரனின் ஒவ்வொரு மாற்றத்தின்போதும் மதிப்புடன் இதைப் படிப்பவர்கள் கருவையே கொன்றிருந்தாலும் அந்தப் பாவம் அழிவடைகிறது” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “கருவைக் கொன்ற பாவம் கூட இதனால் அழிக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. சந்திரனின் ஒவ்வொரு மாற்றத்திலும் ஒரு தூய மனிதன் இந்த அத்யாயத்தைப் படிப்பானாகில், அவன் மொத்த பாரதத்தையும் படித்தவன் என நான் நினைக்கிறேன்” என்றிருக்கிறது.){இந்த அனுக்கிரமணிக அத்யாயத்தைப்} படிக்கும் ஒருவன், மொத்த பாரதத்தையுமே படித்தவனாவான் என நான் நினைக்கிறேன். எந்த மனிதன் மதிப்புடன் இந்தப் புனித படைப்பைத் தினமும் கேட்பானோ,(267) அவன் நீண்ட வாழ்வையும், புகழையும் அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான். முந்தைய நாட்களில், நான்கு வேதங்களை ஒரு பக்கத்திலும், பாரதத்தை மறுபக்கத்திலும் நிறுத்திப் பார்க்கும் காரியத்திற்காகக் கூடிய தேவர்கள், அவற்றைத் தராசில் நிறுத்தினர். பின்னதே {பாரதமே}, புதிர்களுடன் {உபநிஷத்துகளுடன்} கூடிய நான்குவேதங்களைவிடக் கனமாக இருந்ததால்,(268,269) அந்தக் காலத்தில் இருந்து அது மஹாபாரதம் (பெரும் பாரதம்) என்று இவ்வுலகில் அழைக்கப்படுகிறது. பொருள் மற்றும் உள்ளடக்கத்தின் கனம் ஆகிய இரண்டிலும் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருப்பதால்,(270) அது மஹாபாரதம் என்று பெயரிடப்பட்டது. எவன் அதன் பொருளை அறிவானோ, அவன் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் காக்கப்படுகிறான்.(271) தவம் பாவமற்றது, கல்வி தீங்கற்றது, இனங்கள் அனைத்திற்கும் பரிந்துரைக்கப்படும் வேதங்களின் கட்டளைகள் தீங்கற்றவை, உழைப்பால் அடையப்படும் செல்வம் தீங்கற்றது; ஆனால், அவற்றின் நடைமுறைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, அவை தீமையின் ஊற்றுக்கண்களாகின்றன {பாவத்தைத் தருகின்றன}” {என்றார் சௌதி}[11].(272)([11] வேறு பதிப்புகளில் இந்த இறுதிப் பத்தி, “தவம் பாவத்தைப் போக்குகிறது; வேதத்தில் சொல்லப்பட்ட குலவிதிகளும் பாவத்தைப் போக்குகின்றன; சிரமத்தைப் பொறுத்துப் பொருளீட்டுவதும் பாவத்தைப் போக்குகிறது. மேற்சொன்னவையே கெட்ட எண்ணத்தோடு செய்யப்பட்டால் பாவங்களாகின்றன” என்று இருக்கிறது.)
ஆதிபர்வம் – பகுதி 2 அ((பர்வசங்கிரகப் பர்வம்))(பதிவின் சுருக்கம் : சமந்த பஞ்சகம் குறித்து முனிவர்கள் வினவுவது; சமந்த பஞ்சகம் உருவான வரலாற்றைச் சௌதி சொல்வது; பரசுராமர் க்ஷத்திரியர்களைக் கொன்றது; க்ஷத்திரியர்களின் இரத்தத்தால் உருவான ஏரி; அக்ஷௌஹிணி என்பதற்கு விளக்கம்; எவர் எவர் தலைமையில் போர் எத்தனை நாட்கள் நடந்ததென்ற விளக்கம்; மஹாபாரதத்தின் உட்கட்டமைப்பு எப்படி உப பர்வங்களாகப் பிரிந்திருக்கின்றன என்பதற்கான விளக்கம்; உப பர்வங்களின் பெயர்களும் அதில் வரும் செய்திகளும்; முதல் பர்வமான ஆதிபர்வத்தின் சுருக்கம்...)
முனிவர்கள் ‘ஓ! சூதன் மகனே {சௌதியே}, நீர் குறிப்பிட்ட இடமான சமந்த பஞ்சகம் {குருக்ஷேத்திரம்} என்ற இடத்தைப் பற்றிய வரலாற்றை நாங்கள் முழுமையாகக் கேட்க விரும்புகிறோம்” என்று கேட்டனர்.(1)
சௌதி சொன்னார், “ஓ! பிராமணர்களே, நான் சொல்லப்போகும் புனிதமான விளக்கங்களைக் கேட்பீராக. ஓ மனிதர்களில் சிறந்தோரே, சமந்த-பஞ்சகம் என்று அழைக்கப்படும் இடத்தைக் குறித்துக் கேட்க நீங்கள் தகுந்தோரே.(2) திரேத மற்றும் துவாபர யுகங்களுக்கு இடையில், ஆயுதங்கள் தரித்தோர் அனைவருக்கும் மத்தியில் பெரியவரான (ஜமதக்னியின் மகன்) ராமர் {பரசுராமர்}, குற்றங்களின் கொண்ட பொறுமையின்மையால் தூண்டப்பட்டு, க்ஷத்திரியர்களின் உன்னதக் குலத்தை மீண்டும் மீண்டும் தாக்கினார் {அழித்தார்}.(3) அந்தக் கடும் எரிநட்சத்திரம் {பரசுராமர்}, தம் வீரத்தால் க்ஷத்திரியர்களின் மொத்த இனத்தையுமே அழித்தபோது, அந்தச் சமந்த-பஞ்சகத்தில் குருதியாலான ஐந்து தடாகங்களை அமைத்தார்.(4) கோபத்தில் மயங்கிய அறிவுடன் கூடிய அவர், அத்தடாகங்களுடைய குருதிநீரின் மத்தியில் நின்று கொண்டு தமது மூதாதையரின் ஆவிகளுக்கு {பித்ருக்களுக்கு} இரத்த காணிக்கையளித்தார் என நமக்குச் சொல்லப்படுகிறது.(5) அதன் பேரில் அப்போது, அவரது மூதாதையரில் ரிசீகரை முதலாகக் கொண்டோர் அவரிடம் வந்து, “ஓ ராமா, ஓ அருளப்பட்ட ராமா, ஓ பிருகுவின் வாரிசே, ஓ வலிமைமிக்கோனே, உன் வீரத்தைக் கொண்டு உன் மூதாதையருக்கு நீ காட்டிய மதிப்பால் நாங்கள் நிறைவடைந்திருக்கிறோம். உன் மீது அருள் பொழியட்டும். ஓ சிறப்புமிக்கவனே, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக” என்றனர்.(6,7)
ராமர் {பரசுராமர்}, “ஓ ஐயன்மீர், நீங்கள் என்னிடம் சாதகமான மனநிலையைக் கொண்டிருப்பீர்களென்றால், கோபத்தில் க்ஷத்திரியர்களை அழித்ததன் மூலம் பிறந்த என் பாவங்களில் இருந்து நான் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், நான் அமைத்த தடாகங்கள் இவ்வுலகில் புண்ணியத்தலங்களாகப் புகழ்பெற வேண்டும் என்றும் நான் வரம் கேட்கிறேன்” என்றார்.(8,9) பித்ருக்கள், “அப்படியே ஆகட்டும். ஆனால் நீ தணிவடைவாயாக” என்றனர். ராமரும் அதன்படியே தணிவையடைந்தார்.(10) குருதிநீரைக் கொண்ட அந்தத் தடாகாங்களுக்கு அருகே கிடக்கும் பகுதியானது அந்தக் காலத்தில் இருந்து புனிதமான சமந்த-பஞ்சகம் என்று கொண்டாடப்படுகிறது.(11) ஒவ்வொரு நாடும், அதைப் புகழ்பெறச் செய்த ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க சூழலின் பெயரால் வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டும் என்று ஞானியர் தீர்மானித்திருக்கின்றனர்.(12) துவாபர மற்றும் கலி யுகங்களின் இடைவெளியில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளுக்கு இடையிலான மோதல் அங்கே அந்தச் சமந்த-பஞ்சகத்தில் நடந்தது.(13) எந்த வகையான முரட்டுத்தன்மையுமற்ற அந்தப் புனிதமான பகுதியில் போரிடும் ஆவலுடன் பதினெட்டு அக்ஷௌஹிணிகள் படைவீரர்கள் அங்கே திரண்டனர். ஓ பிராமணர்களே, அங்கே வந்த நிலையிலேயே அவர்கள் அனைவரும் அவ்விடத்தில் கொல்லப்பட்டனர்.(14) ஓ பிராமணர்களே, அந்தப் பகுதியின் பெயரும், புனிதமானதாக, இனிமைநிறைந்ததாக உங்களுக்கு விவரிக்கப்படும் அந்த நாடும் இவ்வாறே விளக்கப்படுகின்றன.(15) மூவுலகங்கள் முழுவதிலும் கொண்டாடப்படும் அந்தப் பகுதி சம்பந்தமாக முழுமையாக நான் {இப்போது} குறிப்பிட்டிருக்கிறேன்” {என்றார் சௌதி}.(16)
முனிவர்கள் {சௌதியிடம்}, “ஓ சூதன் மகனே {சௌதியே}, நீர் பயன்படுத்திய அக்ஷௌஹிணி என்ற சொல்லில் {பதத்தில்} உள்ளடங்கிய அனைத்தையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.(17) நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர் என்பதால், ஓர் அக்ஷௌஹிணியானது எத்தனை குதிரைகள் {குதிரைவீரர்கள்}, காலாட்படை வீரர்கள், தேர்கள் {தேர்வீரர்கள்}, யானைகள் {யானைமேல் அமர்ந்து போரிடும் வீரர்கள்} ஆகியவற்றைக் கொண்டது என்பதை எங்களுக்கு முழுமையாகவே சொல்வீராக” என்று கேட்டனர்.(18)
சௌதி சொன்னார், “ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்படை வீரர்கள், மூன்று குதிரைகள் ஒரு பட்டியை அமைக்கின்றன;(19) மூன்று பட்டிகள் ஒரு சேனா-முகத்தை அமைக்கின்றன; மூன்று சேனா-முகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படுகிறது;(20) மூன்று குல்மங்கள், ஒரு கணமென அழைக்கப்படுகிறது; மூன்று கணங்கள், ஒரு வாஹினியாகும்; ஒன்றான மூன்று வாஹினிகள் ஒரு பிருதனை என்று அழைக்கப்படுகிறது(21); மூன்று பிருதனைகள் ஒரு சமுவை அமைக்கின்றன; மூன்று சமுக்கள், ஓர் அனீகினியாகும்; பத்து மடங்காகப் பெருகும் ஓர் அனீகினியானது, அவற்றை அறிந்தோரால் ஓர் அக்ஷௌஹிணி என்ற நடைமாற்றப்படுகிறது {ஓர் அக்ஷௌஹிணி என்று அழைக்கப்படுகிறது}.(22) பிராமணர்களில் சிறந்தோரே, ஓர் அக்ஷௌஹிணியில் உள்ள தேர்களின் எண்ணிக்கையானது, இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபது {21,870} என்று எண்கணிப்பியலாளர்களால் கணிக்கப்படுகிறது. யானைகளின் அளவும் அதே எண்ணிக்கையிலேயே {21,870} உறுதிப்படுத்தப்பட வேண்டும்.(23,24) ஓ தூயோரே, காலாட்படை வீரர்களின் எண்ணிக்கையானது, நூற்றொன்பது ஆயிரத்து, முன்னூற்று ஐம்பது {ஒரு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து முன்னூற்றைம்பது, 109,350} என்பதையும், குதிரைகளின் எண்ணிக்கையானது, அறுபத்தைந்தாயிரத்து, அறுநூற்று பத்து {65,610} என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.(25,26) , ஓ பிராமணர்களே, ஓர் அக்ஷௌஹிணியின் எண்ணிக்கையானது என்னால் முழுமையாக விளக்கப்படுவதைப் போலவே, எண்களின் கொள்கைகளை {விதிகளை} அறிந்தோராலும் சொல்லப்படுகிறது.(27) ஓ பிராமணர்களில் சிறந்தோரே, இந்தக் கணக்கீட்டின்படியே, கௌரவ மற்றும் பாண்டவப்படையின் பதினெட்டு அக்ஷௌஹிணிகள் தொகுக்கப்பட்டிருந்தன.(28) அற்புதம் நிறைந்த செயல்களைச் செய்யும் காலமானது, அந்த இடத்தில் அவர்களைத் திரட்டி, கௌரவர்களையே காரணமாக்கி, அவர்கள் அனைவரையும் அழித்தது.(29) ஆயுதங்களின் தேர்வை அறிந்தவரான பீஷ்மர், பத்து நாட்களுக்குப் போரிட்டார். கௌரவ வாஹினிகளைத் துரோணர் ஐந்து நாட்களுக்குப் பாதுகாத்தார்.(30) பகைவரின் படைகளைத் துணையற்றவையாகச் செய்யும் கர்ணன், இரண்டு நாட்களுக்குப் போரிட்டான்; சல்லியன் அரை நாள் போரிட்டான். அதன்பிறகு துரியோதனனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த, கதாயுத மோதல் அரை நாள் நீடித்தது. அந்த நாளின் முடிவில் அஸ்வத்தாமனும், கிருபரும், ஆபத்து குறித்த எந்த எச்சரிக்கையுமில்லாமல் இரவில் தூங்கிக் கொண்டிருந்த யுதிஷ்டிரனின் படையை அழித்தனர்.(31-33)
ஓ சௌனகரே, உமது வேள்வியில் மீண்டும் சொல்லத் தொடங்கப்படுவதும், பாரதம் என்று அழைக்கப்படுவதுமான இந்தச் சிறந்த விளக்கமானது, முன்பொரு சமயம், ஜனமேஜயனின் வேள்வியில், நுண்ணறிவு கொண்ட வியாசரின் சீடரால் {வைசம்பாயனரால்} மீண்டும் உரைக்கப்பட்டதாகும். இது பல்வேறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கிறது; தொடக்கத்தில், பௌசியம், பௌலோமம் மற்றும் ஆஸ்தீக பர்வகளில், வீரமும், புகழும் மிக்கவர்களான மன்னர்கள் முழுமையாக விளக்கப்பட்டிருக்கின்றனர்.(34,35) இது, விளக்கம், மொழிநடை, பொருள் ஆகியவற்றை மாறுபட்டவையாகவும், அற்புதம் நிறைந்தவையாகும் கொண்டிருக்கும் ஒரு படைப்பாகும். பல்வேறு நடைமுறைகள் மற்றும் சடங்குகளின் விவரங்களை இது கொண்டிருக்கிறது. இறுதி விடுதலையை {முக்தியை} விரும்பும் மனிதர்களால் வைராக்யம் என்றழைக்கப்படும் நிலையைப் போலவே இது {மஹாபாரதம்} ஞானியரால் ஏற்கப்படுகிறது.(36) அறியப்பட வேண்டிய பொருள்களில் தன்னை {சுயத்தைப்} போலவும், அன்புக்குரிய பொருள்களின் மத்தியில் உயிரைப் போலவும், பிரம்ம அறிவை அடையும் வழிமுறைகளைச் சொல்லும் இந்த வரலாறானது {மஹாபாரதமானது}, சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். பாதங்களின் மேலிருக்கும் உடலைப் போலவே, இந்த வரலாற்றின் சார்பில்லாத எந்தக் கதையும் தற்போது இவ்வுலகில் இல்லை. நல்ல பரம்பரையில் வந்த ஆசான்கள், முன்னுரிமையை விரும்பும் பணியாட்களால் பணிவிடை செய்யப்படுவதைப் போலவே, பாரதமும் புலவர்கள் அனைவராலும் பேணிக் காக்கப்படுகிறது.(37-39) உலகம் தொடர்பான பல்வேறு அறிவுக் கிளைகள் மற்றும் வேதத்தில் உள்ளடங்கியிருக்கும் சொற்களானவை, உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் மட்டும் வெளிக்காட்டுவதைப் போலவே, இந்த அற்புத வரலாறும் உயர்ந்த அறிவை {ஞானத்தை} மட்டுமே வெளிக்காட்டுகிறது.(40) ஓ தவசிகளே, பெரும் அறிவைக் கொண்டிருப்பதும், வேதங்களின் உட்பொருளால் அலங்கரிக்கப்பட்டதும், நுட்பமான பொருள்கள் மற்றும் காரணகாரியங்களின் {தர்க்கத்} தொடர்புகளைக் கொண்டதும் பாரதம் என்றழைக்கப்படுவதுமான இந்த வரலாற்றின் பல்வேறு பிரிவுகள் (பர்வங்கள்), மற்றும் பகுதிகளின் {அத்யாயங்களின்} திட்டவரையை {சுருக்கத்தைக்} கேட்பீராக.(41)
முதல் பர்வம் அனுக்கிரமணிகம் என்றழைக்கப்படுகிறது; இரண்டாவது சங்கிரகம்; அடுத்துப் பௌசியம், அதன்பிறகு பௌலோமம், ஆஸ்தீகம், அடுத்து ஆதிவம்சவதரணம்.(42) அடுத்து வருவது அற்புதமான உணர்ச்சிகரமான சம்பவங்களைக் கொண்ட சம்பவம். ஜதுக்ருகதாஹம் (அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைத்தல்) என்பது அடுத்து வருவது. அடுத்து ஹிடிம்பவத பர்வம் (இடும்ப வதம்).(43) அதற்கடுத்து பகவத (பகாசுரன் வதம்), அடுத்துச் சைத்ரரதம். அடுத்து திரௌபதியைத் தனது க்ஷத்திரியத் திறமைகளால் அர்ஜுனன் வெல்லும் சுயம்வரம் (பாஞ்சாலி தன் கணவனைத் தேர்ந்தெடுப்பது).(44) அடுத்து வைவாஹிகம் (திருமணம்). அடுத்து வருவது விதுராகமனம் (விதுரனின் வருகை), ராஜ்யலாபம் (அரசைப் பெறுவது),(45) அர்ஜுன வனவாசம் (அர்ஜுனன் நாடு கடந்து செல்வது), அடுத்துச் சுபத்திராஹரணம் (சுபத்திரை கடத்தப்படுவது). இதற்கெல்லாம் அடுத்து ஹரணாஹரிகம்,(46) காண்டவ-தாஹம் (காண்டவ வன தகனம்), மய தர்சனம் (அசுர சிற்பி மயனை சந்தித்தல்). அதற்கடுத்து வருவது சபா பர்வமாகும், மந்திரம்,(47) ஜராசந்தவதம், திக்விஜயம் (தொடர் போர்). திக்விஜயத்திற்கு அடுத்து ராஜசூயம்,(48) அர்க்காபிஹரணம் (அர்க்கியம் திருட்டு), சிசுபாலவதம் (சிசுபாலன் கொல்லப்படுவது). இதற்கெல்லாம் அடுத்துத் தியூதம் (சூதாடுதல்), அனுதியூதம் (சூதாட்ட தொடர்ச்சி),(49) ஆரண்யகம், கிர்மீரவதம் (கிரிமீரன் வதம்). அர்ஜுனாபிகமனம் (அர்ஜுனனின் பயணங்கள்),(50) கைராதி ஆகியன வருகின்றன.
இறுதியாக அர்ஜுனனுக்கும் வேடன் உருவத்தில் இருந்த மஹாதேவனுக்கும் {சிவனுக்கும்} இடையில் நடந்த போர் {கைராதம்}. அதற்கடுத்து இந்திரலோகபிகமனம் (இந்திரலோகப் பயணம்);(51) அடுத்து, அறம் மற்றும் நற்பண்புகளின் புதையலும், மிகவும் சோகமானதுமான நளோபாக்யானம் (நளனின் கதை). அடுத்து தீர்த்தயாத்ரா அல்லது விவேகிகளான குரு இளவரசர்களின் புனிதப் பயணம்,(52) ஜடாசுரன் மரணம் {ஜடாசுரவதம்}, யக்ஷர்களுடன் போர் {யக்ஷயுத்தம்}. அதன் பிறகு, நிவாதகவசர்களுடனான போர் {நிவாதகவசயுத்தம்}, அஜகரம்,(53) மார்கண்டேய சமாஸ்யம் (மார்கண்டேயரைச் சந்தித்தல்). திரௌபதி சத்தியபாமா சந்திப்பு {திரௌபதி சத்யபாமா சம்வாதம்},(54) கோஷயாத்திரை, மிருக சுவப்னம் (மானின் கனவு). வருஹதாரண்யகம் {விரீஹித்ரௌணிகம்} மற்றும் ஐந்திரத்துரும்னம் {இந்திரத்யும்னோபாக்யானம்}.(55) திரௌபதிஹரணம் (திரௌபதி அபகரிப்பு), ஜயத்ரதா விமோக்ஷணம் (ஜயத்ரதன் விடுதலை). அடுத்து வருவது கற்புக்கரசி சாவித்திரியின் கதை {பதிவிரதாமாகாத்மியம்}.(56)
அதன்பிறகு ராமனின் கதை {ராமோபாக்யானம்}. அடுத்தப் பர்வம் குண்டலாஹரணம் (காதணி திருட்டு) என்று அழைக்கப்படும்.(57) அதற்கடுத்து “ஆரண்யம் {ஆரணேயம்}” அதற்கடுத்து “வைராடம் {விராடம்}”. அதன்பிறகு பாண்டவர்களின் உறுதிமொழி நுழைவும், அவர்கள் அதை நிறைவேற்றுவதும் (பாண்டவர்கள் செய்திருந்த ஒப்பந்தப்படி ஒருவருட தலைமறைவு வாழ்க்கை {பாண்டவப் பிரவேசம்}).(58) பிறகு “கீசகர்களின்” அழிவு. அதன்பிறகு (விராடத்திலிருந்து) பசுக்களைக் கடத்த (கௌரவர்களால்) செய்யப்பட்ட முயற்சி. அதற்கடுத்து வருவது விராடனின் மகளுடன் அபிமன்யு திருமணம் என்றழைக்கப்படுகிறது.(59) அதன்பிறகு, நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய உத்தியோகம் என்றழைக்கப்படும் மிக அற்புதமான பர்வம். அதன்பிறகு “சஞ்சய யானம்” (சஞ்சயனின் வருகை).(60) அதற்கடுத்து வருவது “பிரஜாகரம்” (திருதராட்டிரனின் தூக்கமின்மை). அடுத்து ஆன்ம தத்துவங்களின் புதிர்களைக் கொண்ட “சனத்சுஜாதீயம்”.(61) அடுத்து “யானசந்தி”, அதற்கடுத்து கிருஷ்ணனின் வருகை {பகவத்யானம்}. அதன்பிறகு “மாதலி”யின் கதை, அடுத்து “காலவர்”.(62) அதன்பிறகு “சாவித்திரி” {சாவித்திரோபாக்கியானம்}, “வாமதேவர்” {வாமதேவோபாக்கியானம்}, “வைனியன்” ஆகியோரின் கதைகள். அதன்பிறகு “ஜமதக்கினீயம்” மற்றும் “ஷோடசராஜகம்” கதைகள்.(63) அதன்பிறகு கிருஷ்ணனின் அரசவை வருகை {கிருஷ்ணசபாப்பிரவேசம்}, அதன்பிறகு விதுலபுத்ரசாசனம். அதன்பிறகு படைகளைத் திரட்டலும், சேதனின் {ஸ்வேதனின்} கதை.(64) அதன்பின் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது உயர்பிறப்பாளன் கர்ணனின் சச்சரவு {வாக்குவாதம்}. அதன்பிறகு, இருதரப்பு படைகளின் அணிவகுப்பு.(65) அடுத்து ரதி மற்றும் அதிரதர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுவது. அடுத்து (பாண்டவர்களின்) கோபத்தைத் தூண்டும் உலூகனின் தூது.(66) அடுத்து வருவது நீங்கள் அவசியம் அறிய வேண்டிய அம்பையின் கதை. அடுத்து பீஷ்மர் படைத்தலைவராக நியமிக்கபட்ட உணர்ச்சிமயமான கதை.(67) அதற்கடுத்துத் தனிப்பட்ட தன்மையுடன் கூடிய ஜம்பூ என்று பகுதி {ஜம்பூத்வீபம்} பூமியில் உண்டான கதை {ஜம்பூத்வீபநிர்மாணம்}; அடுத்து தீவுகளின் அமைப்பைக் குறித்த பூமி {பூமிபர்வம்}.(68) அதன்பிறகு “பகவத் கீதை” வருகிறது; பிறகு பீஷ்மரின் மரணம் {பீஷ்மவதம்}. துரோணர் படைத்தலைமையில் நிறுவப்படுவது {துரோணாபிஷேகம்}. பிறகு “சம்சப்தகர்களின்” அழிவு {சம்சப்தகவதம்},(69) பிறகு அபிமன்யுவின் மரணம் {அபிமன்யுவதம்}; பிறகு அர்ஜுனன் (ஜெயத்ரதனைக் கொல்வதாக) உறுதி மொழி ஏற்பது. அதன் பிறகு ஜெயத்ரதன் மரணம் {ஜயத்ரதவதம்}, பிறகு கடோத்கசனின் மரணம் {கடோத்கசவதம்}.(70) அதன்பிறகு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய கதையானது, யாரும் எதிர்பாராத துரோணரின் திடீர் மரணமாகும் {துரோணவதம்}. அதற்கடுத்து வருவது, நாராயணம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தை வெளிப்படுத்துவது {நாராயணாஸ்திரமோக்ஷம்}.(71) அதன்பிறகு கர்ணன் மற்றும் சல்லியன் {ஆகியோரின் மறைவு} என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்பிறகு துரியோதனன் தடாகத்திற்குள் மூழ்குவது, பிறகு (பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நடந்த) கதாயுத மோதல்.(72) அதன்பிறகு, சரஸ்வதம் மற்றும் புண்ணியத் தலங்களின் வர்ணனை, பிறகு குலவரலாறு {குறித்த வர்ணனை}. அதன்பிறகு (கௌரவர்களின் கௌரவத்திற்கு) இழிவுநிறைந்த சம்பவங்களை விளக்கும் சௌப்திகம் {சௌப்திக பர்வம்}.(73) அடுத்து பயங்கர நிகழ்வுகளைக் கொண்ட “ஐஷீகம் {ஐஷீகபர்வம்}.
அடுத்து, “ஜலப்பிரதானிகம்” முன்னோர்களுக்கு (இறந்தவர்களுக்கான) நீர்க்காணிக்கை {ஆகுதி, அஞ்சலி}, பிறகு, பெண்களின் அழுகை {ஸ்திரீவிலாபம்}.(74) அதன் பிறகு கொல்லப்பட்டவர்களான கௌரவர்களுக்குச் செய்யப்பட்ட இறுதி சடங்குகளை விளக்கும் “சிராத்தம்” என்றழைக்கப்பட்டதை {பர்வத்தை} அறிய வேண்டும். அதன்பிறகு (யுதிஷ்டிரனை ஏமாற்றுவதற்காக) ஒரு பிராமணன் வடிவத்தை ஏற்று வந்த ராட்சசன் சார்வாகனின் அழிவு {சார்வாகநிக்கிரகம்}.(75) பிறகு ஞானியான யுதிஷ்டிரனின் பட்டமேற்பு {அபிஷேகம்}. அடுத்து “கிரகவிபாகம்” என்றழைக்கப்படுகிறது.(76) அடுத்து வருவது “சாந்தி”, அதற்கடுத்து “ராஜதர்மனுசாசனம்”, அதன்பிறகு “ஆபதர்மம்”, பிறகு “மோக்ஷதர்மம்”.(77) அடுத்து பின்தொடர்ந்த வருவன “சுகப்பிரசனாபிகமனம்”, “பிரம்ம-பிரசனனுசாசனம்”, துர்வாசரின் தோற்றம் (அவரின் பிறப்பு), மயனுடன் விவாதம் ஆகியனவாகும்.(78) அதன் பிறகு வருவது “ஆனுசாசனிகம்” என்று அறியப்பட வேண்டும். பிறகு பீஷமர் சொர்க்கத்திற்கு உயர்வது {ஸ்வர்க்கரோஹணம்}.(79) அதன்பிறகு, பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் குதிரை-வேள்வி {ஆசுவமேதிகம்}. அதன்பிறகு, ஆன்ம தத்துவ வார்த்தைகளைக் கொண்ட “அனுகீதை” என்று அறியப்பட வேண்டும்.(80) அதன்பின் தொடர்வன “ஆசிரமவாசம்”, (இறந்து போன தங்கள் மக்களின் ஆவியைக் காணும்) “புத்ரதர்சனம்”, மற்றும் நாரதர் வருகை {நாரதாகமனம்}.(81) அடுத்து பயங்கரமான கொடிய நிகழ்வுகளைக் கொண்ட “மௌசலம்” என்றழைக்கப்படுகிறது. அடுத்து வருவது “மஹாபிரஸ்தாணிகம்” மற்றும் சொர்க்கத்திற்கு உயர்வது {ஸ்வர்க்காரோஹணம்}.(82) அதன்பிறகு வருவது “கிலவம்சம்” என்றழைக்கப்படும் புராணமாகும் {ஹரிவம்சம்}. இறுதியில் “விஷ்ணு பர்வம்”, விஷ்ணுவின் கேளிக்கைகள், குழந்தையாக அவன் செய்த அருஞ்செயல்கள், “கம்சனின்” அழிவு ஆகியன இருக்கின்றன.(83) இறுதியிலும் இறுதியாக (எதிர்காலத்தைக் குறித்த வருவனவுரைத்தல் (தீர்க்கதரிசனங்கள்) அடங்கிய) அற்புதங்கள் நிறைந்த “பவிஷ்யபர்வம்” இருக்கிறது” {என்றார் சௌதி}. உயர் ஆன்மா கொண்ட வியாசரால் இயற்றப்பட்ட இந்த நூறு பர்வங்களில் மேற்கண்டவை சுருக்கம் மட்டுமே;(84) அவற்றைப் பதினெட்டாகப் பிரித்த சூதன் மகன் {சௌதி}, அதனைத் தொடர்ந்து நைமிசக் காட்டில் பின்வருமாறு உரைத்தார்[1].(85)(இங்கே சொல்லப்பட்டுள்ள உபபர்வங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கின்றன.)
ஆதிபர்வத்தில் பௌசியம், பௌலோமம், ஆஸ்தீகம், அதிவப்ணாவதரணம்,(86) சம்பவம், அரக்கு மாளிகை எரியூட்டல் {ஜதுக்ருகதாஹம்}, ஹிடிம்பன் {இடும்பன்} வதம் {ஹிடிம்பவதம்}, அசுரர்கள் பகன் {பகவதம்} மற்றும் சித்ரரதன் வதம் {சைத்ரரதம்}, திரௌபதி சுயம்வரம்,(87) அதைத்தொடர்ந்து அவள் {திரௌபதி} திருமணத்தை முன்னிட்டு நடக்கும் போர் {வைவாஹிகம்|, விதுரனின் வருகை {விதுராகமனம்}, {ராஜ்யலாபம்},(88) அர்ஜுனன் நாடுகடந்து செல்தல் {அர்ஜுனவனவாசம்}, சுபத்திரை அபகரிப்பு {சுபத்ராஹரணம்}, பரிசு மற்றும் சீர்வரிசை {ஹரணாஹரணம்}, காண்டவ வனம் எரிந்துபோதல் {காண்டவதாஹம்},(89) அசுர சிற்பி மயனுடனான சந்திப்பு {மயதர்சனம்}. பௌசிய பர்வத்தில் உதங்கரின் மேன்மை சொல்லப்படுகிறது.(90) பௌலமத்தில் பிருகு மைந்தர்களின் மேன்மை சொல்லப்படுகிறது. ஆஸ்தீக பர்வத்தில் கருடன் மற்றும் நாகங்களின் பிறப்பு,(91) ஆழி கடைதல் {பாற்கடல் கடைதல்}, தெய்வீகக் குதிரை உச்சைசிரவசின் பிறப்பு, ஜனமேஜயனின் நாகவேள்வியில் விவரிக்கப்படும் பரதனின் பரம்பரை ஆகியன. சம்பவ பர்வத்தில் பல மன்னர்கள், வீரர்கள் மற்றும் கிருஷ்ண துவைபாயனரின் (வியாசரின்) பிறப்பு, தேவர்களின் பாதி அவதாரங்கள்,(92-94) தானவர்கள், மற்றும் பெரும் ஆற்றலைக் கொண்ட யக்ஷர்கள், பாம்புகள், கந்தர்வர்கள், பறவைகள்,(95) மற்றும் அனைத்து உயிரினங்களின் பிறப்பு; அடுத்து மன்னன் பரதனின் வரலாறு, அவனது பெயரால் உண்டான பரம்பரை, கண்வரின் ஆசிரமத்தில் சகுந்தலைக்கு மகனாக {பரதன்} பிறப்பு ஆகியவை வருகின்றன.(96,97)
மேலும் இந்தப் பர்வத்தில் பாகீரதி நதியின் பெருமை, சந்தனுவின் இல்லத்தில் வசுக்களின் பிறப்பும், அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வது ஆகியன சொல்லப்படுகின்றன.(98) மேலும் இந்தப் பர்வத்தில் மற்ற வசுக்களின் சக்திப் பகுதிகளைத் தன்னுள் அடக்கிப் பிறக்கும் பீஷ்மரின் பிறப்பு, அரசைத் துறத்தல் மற்றும் அவர் பிரம்மச்சரியம் கொள்வது,(99) ஏற்ற நோன்புகளில் அவருக்கு இருந்த உறுதி, சித்திராங்கதனைப் பாதுகாப்பது, அவனது {சித்திராங்கதனது} மறைவிற்குப் பிறகு விசித்திரவீரியனைப் பாதுகாப்பது, அவனை {விசித்திரவீரியனை} அரியணையில் அமர்த்துவது, தர்மதேவன் ஆணிமாண்டவ்யரின் சாபம் பெற்றதால் மனிதனாக {விதுரனாகப்} பிறப்பது.(100-101) வியாசர் மூலம் திருதராட்டிரன் மற்றும் பாண்டுவின் பிறப்பு, பாண்டவர்களின் பிறப்பு,(102) துரியோதனின் திட்டத்தால் பாண்டவர்கள் வாரணாவதம் செல்வது, பாண்டவர்கள் குறித்துத் திருதராஷ்டிரன் மகன்கள் செய்த தீய ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன.(103) பாண்டவர்களின் நலன்விரும்பியான விதுரன், மிலேச்ச மொழியில் யுதிஷ்டிரனை எச்சரிப்பது,(104) சுரங்கம் தோண்டுவது, அரக்கு மாளிகையில் வைத்து, வேடுவப்பெண்ணையும், அவளது ஐந்து பிள்ளைகளையும் புரோச்சனனையும் எரிப்பது, அரக்கு மாளிகை எரிவது, ஹிடிம்பையைச் {இடும்பியைச்} சந்தித்தல்,(105,106) ஹிடிம்பனை {இடும்பனை} வதம் செய்வது. கடோத்கசனின் பிறப்பு,(107) பாண்டவர்கள் வியாசரைச் சந்திப்பது, அவரின் {வியாசரின்} ஆலோசனைகளை ஏற்றுப் பிராமணத் தோற்றத்தில் ஏகச்சக்கர நகரத்தில் தலைமறைவாக வசிப்பது, அசுரன் பகன் வதம், அதைக் கண்டு மலைத்த மக்கள்;(108,109) திரௌபதி மற்றும் திருஷ்டத்யும்னனின் அமானுஷ்ய பிறப்பு, வியாசரின் அறிவுரைப்படியும், ஒரு பிராமணரின் மூலம் கேள்விப்பட்டு, திரௌபதியின் கரங்களை வெல்வதற்காகவும் சுயம்வரத்தில் பங்கேற்பதற்காகப் பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்லத் தீர்மானிப்பது; பாகீரதி நதிக்கரையில் அங்காரபர்ணன் என்ற கந்தர்வனிடம் அர்ஜுனனின் வெற்றி, தங்கள் எதிராளியிடம் நட்பு கொள்வது,(110-112) கந்தர்வன் தபதி, வசிஷ்டர் மற்றும் அவுர்வாவின் வரலாறுகள் சொல்லப்படுகின்றன.
பாஞ்சாலம் நோக்கிச் செல்லும் பாண்டவர்களின் பயணம்,(113) அனைத்து மன்னர்கள் முன்னிலையிலும் கொடுத்த குறியை அடித்து, திரௌபதியை அர்ஜுனன் வென்றெடுப்பது;(114) அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போரில் சல்லியன், கர்ணன் ஆகியோர் அர்ஜுனனிடம் தோற்பது, மகுடம் தரித்த தலைகளைக் கொண்ட பிறர் அனைவரும் பெரும் ஆற்றலைக் கொண்ட பீமனிடமும் அர்ஜுனனிடமும் தோற்பது;(115) இந்த ஒப்பற்ற அருஞ்செயல்களைக் கண்ட பலராமனும், கிருஷ்ணனும் அந்த வீரர்களை {பாண்டவர்களை} அடையாளம் காண்பது.(116) பாண்டவர்கள் தங்கியிருந்த ஒரு குயவனின் இல்லத்தை அச்சகோதரர்கள் வந்தடைவது; திரௌபதி ஐவருக்கு மணமுடிக்கப்படப் போகிறாள் என்பதை அறிந்து துருபதன் மனம் தளர்வது;(117) அதன் விளைவாகச் சொல்லப்படும் ஐந்து இந்திரர்களைப் பற்றிய அற்புதமான கதை, இயல்புக்கு மிக்க வகையில் தெய்வீக ஆணையால் நடந்த திரௌபதியின் திருமணம்,(118) திருதராஷ்டிரனின் மைந்தர்கள் பாண்டவர்களிடம் விதுரனைத் தூதனாக அனுப்புவது; விதுரனின் வருகையும், அவன் கிருஷ்ணனைப் பார்ப்பதும்,(119) காண்டவப்பிரஸ்தத்தில் அமைந்த பாண்டவர்களின் வசிப்பிடம், பாதி நாட்டின் மேல் அவர்கள் செலுத்திய ஆட்சி; நாரதரின் அறிவுரைப்படி, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} உறவு கொள்ளும் முறைகளைப் பாண்டவர்கள் நிர்ணயித்துக் கொள்வது.(120) இதற்காகச் சுந்தன் உபசுந்தன் வரலாறு சொல்லப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட பிராமணரின் பசுக்களைக் காக்க ஆயுதமெடுக்கச் செல்கையில், யுதிஷ்டிரனும் திரௌபதியும் இணைந்து அமர்ந்திருப்பதைக் கண்டதால், அர்ஜுனன் தான் நோற்ற நோன்பின்படி தானே நாடு கடந்து வனவாசம் செல்வது. அர்ஜுனன் நாகத்தின் மகளான உலூபியை வழியில் சந்திப்பது;(121-123) அர்ஜுனன் பல்வேறு புண்ணியத் தலங்களுக்குச் செல்வது, பப்ருவாகனனின் பிறப்பு; ஒரு பிராமணரின் சாபத்தால் முதலைகளாக மாறி ஐந்து தேவமங்கையருக்கு அர்ஜுனன் விடுதலை அளிப்பது, பிரபாசம் என்ற புண்ணியத் தலத்தில் மாதவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் சந்திப்பது;(124,125) சுபத்திரையின் அண்ணனான கிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில், நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றில் சாரதியின் விருப்பப்படி செல்லக்கூடிய அற்புதத் தேரொன்றில் அர்ஜுனன் அவளைக் கடத்திச் செல்வது;(126) சீருடன் இந்திரப்பிரஸ்தம் புறப்படுதல்; சுபத்திரையின் கருவறையில் பெரும் ஆற்றலைக் கொண்ட அபிமன்யு கருத்தரித்தல்;(127) யக்ஞசேனிக்கு {திரௌபதிக்கு} குழந்தைகள் பிறப்பு; யமுனையின் கரைக்கு உல்லாசப் பயணம் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும், சக்கரத்தையும், கொண்டாடப்படும் வில்லான காண்டீவத்தையும் அடைதல்; காண்டவ வனம் எரித்தல்; அர்ஜுனனால் மயன் காப்பாற்றப்படுதல் மற்றும் பாம்பு தப்பித்தல்;(128,129) பறவையான சாரங்கியின் கருவறையில், முனிவர் மந்தபாலர், தன் மகனைப் பெறுதல் ஆகியன இருக்கின்றன. இந்தப் பர்வமானது இருநூற்றி இருபத்தேழு அதிகாரங்களைக் கொண்டதாக வியாசரால் பிரிக்கப்பட்டுள்ளது. (130,131) இருநூற்றி இருபத்தேழு அதிகாரங்களில் {227) எட்டாயிரத்தி எண்ணூற்றி எண்பத்திநான்கு {8884} பாடல்கள் (சுலோகங்கள்) உள்ளன[2].(132)(கங்குலியின் இந்த மொழிபெயர்ப்பில் ஆதிபர்வத்தில் மட்டும் மொத்தம் 236 பகுதிகள் இருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், “இருநூற்றிருபத்தேழு {227} அத்தியாயங்களும், அவற்றில் எண்ணாயிரத்து தொண்ணெண்பத்து நான்கு {8984} சுலோகங்களும் சொல்லப்பட்டன” என்றிருக்கிறது.)
ஆதிபர்வம் – பகுதி 2 ஆ-((பர்வசங்கிரகப் பர்வம்))இரண்டவது பர்வமான சபாபர்வம் சுருக்கம்; மூன்றாவது பர்வமான வன பர்வம் சுருக்கம்; அதன் பிறகு வரும் விராட பர்வ சுருக்கம் …
இரண்டாவதாக வரும் நீண்ட சபா பர்வமானது பொருள் நிறைந்ததாகும். இந்தப் பர்வத்தில் வரும் நிகழ்வுகளாவன: பாண்டவர்கள் நிறுவிய அரசவையும் {சபா மண்டபம்}, அவர்களுடன் தொடர்புடையோரின் மதிப்புரைகளும்;(133) தேவலோகங்களை நன்கறிந்தவரான நாரதரின் லோகபாலகர்கள் குறித்த வர்ணனை; ராஜசூய வேள்விக்கான ஆயத்தம்; ஜராசந்த வதம்;(134) மலையடிவாரத்தில் {மகதத்தின் தலைநகரான கிரிவ்ரஜம் [மலையடிவாரம்]} அடைபட்டுக் கிடந்த இளவரசர்களை வாசுதேவன் {கிருஷ்ணன்} விடுதலை செய்வது; பாண்டவர்களின் உலகளாவிய படையெடுப்புகள்;(135) ராஜசூய வேள்விக்குக் காணிக்கையோடு வந்த பிற இளவரசர்களின் வருகை; வேள்வியின் போது ஆர்கியம் அளித்தல் தொடர்பாகச் சிசுபாலன் கொல்லப்படுவது;(136) சபையில் துரியோதனனைப் பீமன் கேலி செய்வது; பெருமளவில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைக் கண்டு துரியோதனன் அடையும் பொறாமையும், கவலையும்; துரியோதனனின் உளக்கொதிப்பும்,(137) பகடையாட்டத்திற்கான ஆயத்தங்களும்; வஞ்சகன் சகுனியுடனான ஆட்டத்தில் {சூதாட்டத்தில்} யுதிஷ்டிரன் தோல்வியுறல்;(138) திருதராஷ்டிரன், புயலின் அலைகளால் கலங்கடிக்கப்பட்ட படகைப் போலச் சூதாட்டத்தால் விளைந்த துன்பக்கடலில் மூழ்கியிருந்த தன் மருமகள் திரௌபதியைத் துன்பத்தில் இருந்து விடுவித்தல்.(139) யுதிஷ்டிரனை மீண்டும் சூதாட வைக்கத் துரியோதனன் செய்த முயற்சி;(140) {சூதாட்டத்தில்} வீழ்த்தப்பட்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் வனவாசம் புகுதல். பெரும் வியாசரால் தொகுக்கப்பட்ட சபா பர்வம் இவற்றால் {இந்தச் சம்பவங்களால்} ஆனதே.(141) இந்தப் பர்வமானது எழுபத்தி எட்டு {78}[3] பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஓ பிராமணர்களில் சிறந்தோரே, இரண்டாயிரத்தி ஐநூற்றி ஏழு {2507} பாடல்களுடன் {சுலோகங்களுடன்} உள்ளது.(கங்குலியின் பதிப்பில் சபாபர்வத்தில் 80 பகுதிகளும், 2708 சுலோகங்களும் உள்ளன)
அதன்பிறகு மூன்றாவதாக வருவது (காடு தொடர்பான) ஆரண்யகம் என்றழைக்கப்படும் பர்வம் ஆகும்.(142,143) இந்தப் பர்வத்தில் பாண்டவர்கள் காட்டுக்குச் செல்வதும், ஞானியான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து குடிமக்கள் செல்வதும்,(144) தன்னைச் சார்ந்திருக்கும் பிராமணர்களுக்கு உணவும், நீரும் அளிக்கத் தௌமியரின் சொல் கேட்டு யுதிஷ்டிரன் நாளின் தேவனை {சூரியனைத்} துதித்தலும் சொல்லப்பட்டுள்ளது; சூரியனின் அருளால் உணவை உண்டாக்குவது; தலைவனின் நன்மைக்காகவே எப்போதும் பேசும் விதுரனை திருதராஷ்டிரன் வெளியேற்றுதல்;(145,146) விதுரன் பாண்டவர்களிடம் வந்ததும், பின்னவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் மீண்டும் அவன் திரும்பச் சென்றதும்;(147) காட்டில் வாழ்ந்துவரும் பாண்டவர்களை அழிக்க, கர்ணனின் தூண்டுதலின் பேரில் துரியோதனன் திட்டம் தீட்டுவது;(148) வியாசர் வருவதும், காட்டுக்குப் போகும் துரியோதனனைத் தடுத்தலும்; சுரபியின் வரலாறு;(149) மைத்திரேயரின் வரவு; அவர் திருதராஷ்டிரனுக்கு விதித்த நடைமுறையும்; துரியோதனனுக்கு அவர் அளித்த சாபமும்;(150) போரில் பீமன் கிர்மீரனைக் கொல்வது; சகுனியால் சூதாட்டத்தில் வஞ்சகமாக யுதிஷ்டிரன் வீழ்த்தப்பட்டதைக் கேட்டுப் பாஞ்சாலர்களும், விருஷ்ணி குலத்தின் இளவரசர்களும் வருவது; கிருஷ்ணனின் கோபத்தைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} தணிப்பது;(151,152) மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} திரௌபதி அழுது புலம்புவது; கிருஷ்ணன் அவளுக்கு உற்சாகமூட்டுவது;(153) {வியாச} முனிவரால் இங்கே சௌபனின் வீழ்ச்சியும் விளக்கப்படுகிறது; கிருஷ்ணன் சுபத்திரையையும், அவள் பிள்ளையையும் {அபிமன்யுவையும்} துவாரகைக்கு அழைத்துப் போவது;(154) திருஷ்டத்யும்னன் திரௌபதியின் மகனை பாஞ்சாலம் அழைத்துப் போவது; அழகான துவைத வனத்திற்குப் பாண்டுவின் மைந்தர்கள் செல்வது;(155) பீமன், யுதிஷ்டிரன், திரௌபதி விவாதம்;(156) பாண்டவர்களிடம் வியாசரின் வருகை, பிராதிசிம்ரிதி என்ற சக்தியை அவர் யுதிஷ்டிரனுக்கு அளித்தல்;(157) அதன்பிறகு, வியாசர் புறப்பாடு, பாண்டவர்கள் காம்யக வனம் செல்வது; சக்தி வாய்ந்த ஆயுதங்களை {அஸ்திரங்களைத்} தேடி அர்ஜுனன் அலைவது;(158) வேடுவ ரூபத்தில் இருக்கும் மகாதேவனுடன் {சிவனுடன்} அர்ஜுனன் போர்புரிவது; லோகபாலகர்களைச் சந்தித்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெறுவது;(159) அவனது {அர்ஜுனனின்} இந்திரலோகப் பயணமும், அதன் விளைவாகத் திருதராட்டிரன் அடைந்த கவலையும்;(160) வழிபடத்தக்க பெருமுனிவர் பிருகதஸ்வரைச் சந்திக்கும் போது, அவரிடம் யுதிஷ்டிரனின் அழுகையும், துயருரைப்பும் விளக்கப்படுகிறது.(161)
இந்த இடத்தில்தான் புனிதமானதும், மிகத்துயர்நிறைந்ததும், தமயந்தியின் பொறுமையையும், நளனின் குணத்தையும் எடுத்துரைப்பதுமான நளனின் கதை சொல்லப்படுகிறது.(162) அதே பெருமுனிவரிடம் இருந்து யுதிஷ்டிரன் பகடையின் (சூதாட்டத்தின்) புதிர்களை {இரகசியம்} அறிவது; அதன்பிறகு, மேலுலகிலிருந்து பாண்டவர்கள் இருந்த இடத்திற்குப் பெருமுனி லோமசர் வருகை,(163) சகோதரன் அர்ஜுனன் சொர்க்கத்தில் இருப்பதைத் தெரிவித்த முனிவரை, அந்த உயர் ஆன்ம காட்டுவாசிகள் {பாண்டவர்கள்} வரவேற்றது;(164) புனிதப் பயணம் மேற்கொள்ளும் பாண்டவர்கள், பல்வேறு புண்ணியத்தலகளுக்குச் செல்வது;(165) பிறகு பெருமுனிவர் நாரதர் புண்ணியத்தலமான புடஸ்டாவுக்குப் புனிதப் பயணம் செல்வதும்; உயர் ஆன்மப் பாண்டவர்களின் புனிதப் பயணமும்.(166) இங்கேதான் இந்திரன் கர்ணனிடம் காதணிகளை வாங்குவது விளக்கப்படுகிறது. மேலும் இங்கேதான் கயனின் வேள்வி மகத்துவம் விளக்கப்படுகிறது.(167)
பிறகு அசுரன் வாதாபியை அகத்தியர் உண்பதும், வாரிசு பெறும் விருப்பத்தால் லோபாமுத்திரையைத் திருமணம் செய்வதும் சொல்லப்பட்டுள்ளது.(168) பிறகு பிள்ளைப் பருவம் முதலே ரிஷ்யசிருங்கர் பிரம்மச்சரிய வாழ்வை ஏற்ற கதை சொல்லப்படுகிறது; பிறகு ஜமதக்னி முனிவரின் மைந்தனும், பேராற்றல் கொண்டவருமான இராமரின் {பரசுராமரின்} வரலாறும்,(169) கார்த்தவீரியன் மற்றும் ஹைஹயர்களின் மரணமும் விளக்கப்படுகிறது; பிரபாசம் என்றழைக்கப்படும் புனிதத்தலத்தில் பாண்டவர்களும், விருஷ்ணிகளும் சந்திப்பது;(170) பிருகு முனிவரின் மைந்தனான சியவனன், சர்யாதி மன்னனின் வேள்வியில் அசுவினி இரட்டையர்களைச் {மற்ற தேவர்களால் அவர்களுக்கு விலக்கப்பட்டிருந்த} சோம பானம் அருந்தச் செய்த நிகழ்வுடன் கூடிய சுகன்யாவின் கதையும், (அதன் மூலம் நன்றியுடன் கூடிய அசுவினி இரட்டையர்களிடம் இருந்து வரமாக) முடிவில்லாத இளமையைச் சியவனன் பெறுவதும் சொல்லப்படுகிறது[4]. (கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில், “பிருகுபுத்திரராகிய ச்யவனமுனி சர்யாதிமுனிவருடைய யாகத்தில் அசுவினிதேவர்களுக்கு ஸோம்பானம் செய்வித்ததையும், அசுவினிதேவர்கள் இந்தச் சியவனமுனிக்கு யௌவனம் கொடுத்ததையும் பற்றிய ஸுகன்னியின் உபாக்கியானமும், மாந்தாதாவென்னும் ராஜாவின் உபாக்கியானமும் இதிற்சொல்லப்பட்டிருக்கின்றன” என்றிருக்கிறது)பிறகு மன்னன் மாந்தாதாவின் வரலாறு விளக்கப்படுகிறது;(171,172) பிறகு ஜந்துவின் வரலாறு; மன்னன் சோமகன், தன் ஒரே மகனை (ஜந்துவை) வேள்வியில் காணிக்கையாக்கி, நூறு மகன்களை அடைந்தது;(173) பிறகு பருந்து மற்றும் புறாவின் அற்புத வரலாறு; இந்திரன், அக்னி மற்றும் தர்மனால் சோதிக்கப்படும் மன்னன் சிபி {சிபிச்சக்கரவர்த்தி};(174) வருணனின் மகனும், ஏரணவியலாளருமான {தர்க்கவியலாளருமான} வந்தினுக்கும், அஷ்டவக்கிர முனிவருக்கும் இடையில் ஜனகரின் வேள்வியில் நடக்கும் சச்சரவு;(175.176) பெரும் அஷ்டவக்கிரனால் வந்தின் {வாதில்} வீழ்த்தப்படுவதும், பெருங்கடலின் ஆழத்தில் இருந்து அம்முனிவரின் தந்தை விடுதலையடைவதும்.
பிறகு யவக்கிரீதியின் கதை மற்றும் பெரும் ரைவ்யனின் கதை;(177) பிறகு கந்தமாதனத்திற்குப் புறப்பட்டு (பாண்டவர்கள்) நாராயண ஆசிரமத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டது; திரௌபதியின் வேண்டுகோளுக்கிணங்க கந்தமாதனத்தில் (இனிய நறுமணமிக்க மலரைத்தேடி) பீமன் மேற்கொள்ளும் பயணம்.(178) பீமன் தன் வழியில், ஒரு வாழைத்தோப்பில் வைத்து பெரும் ஆற்றலைக் கொண்ட பவனனின் மகனான {வாயு மைந்தன்} அனுமானைச் சந்திப்பது;(179) பீமன் தடாகத்தில் குளித்து, (தான் தேடி வந்த) நறுமணமிக்க மலருக்காகப் பிற மலர்களைப் அழிப்பது; வலிமிக்க ராட்சசர்களுடன் அவன் {பீமன்} போரிடுவது(180), பெரும் ஆற்றலைக் கொண்ட மணிமான் மற்றும் பிற யக்ஷர்களுடன் அவன் போரிடுவது; பீமன் அசுரன் ஜடனை அழிப்பது;(181) அரசமுனியான விருஷபர்வனை (பாண்டவர்கள்) சந்திப்பது; ஆர்ஷ்டிசேனரின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டு, அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வது;(182) (பழிதீர்ப்பதற்காக) திரௌபதியால் தூண்டப்படும் பீமன். பிறகு, கைலாச மலைச்சரிவில், மணிமான் தலைமையிலான வலிமைமிக்க யக்ஷர்களுடன் பீமசேனன் பயங்கரமாகப் போரிடுவது சொல்லப்படுகிறது; பிறகு வைஸ்ரவணனுடன் (குபேரனுடன்) பாண்டவர்கள் சந்திப்பதும், யுதிஷ்டிரனின் காரியத்திற்காகப் பல தெய்வீக ஆயுதங்களை அடைந்து வந்த அர்ஜுனனைச் சந்திப்பதும்;(183,184) ஹிரண்யபுரத்தில் வசிக்கும் நிவாதகவசர்களுடன் அர்ஜுனன் பயங்கரமாக மோதுவது;(185) பௌலோமர்கள் மற்றும் காலகேயர்களுடனும் மோதுவது; அர்ஜுனன் கரங்களில் அவர்களுக்கு ஏற்படும் அழிவு;(186) யுதிஷ்டிரனின் முன்னிலையில் தெய்வீக ஆயுதங்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கும் அர்ஜுனனும், அதைத் தடுத்த நாரதரும்;(187) கந்தமாதனத்தில் இருந்து பாண்டவர்கள் இறங்குவது; காட்டில் மலையைப் போன்ற பெரும்பாம்பொன்றிடம் {நகுஷனிடம்} பீமன் அகப்படுவது;(188) குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு யுதிஷ்டிரன் பதிலளித்ததும், அந்தப் பாம்பின் சுருளில் இருந்து {பீமன்} விடுபடுவது;(189) காம்யக வனத்திற்குப் பாண்டவர்கள் திரும்புவது.
இங்கேதான் வலிமைமிக்கப் பாண்டுவின் மகன்களை வாசுதேவன் {கிருஷ்ணன்} மீண்டும் சந்திப்பது விளக்கப்படுகிறது; மார்க்கண்டேயரின் வருகையும், அவரால் பல்வேறு கதைகள் உரைக்கப்படுதலும்(190,191), அந்தப் பெரும் முனிவரால் வேனனின் மகனான பிருதுவின் வரலாறு உரைக்கப்படுகிறது; சரஸ்வதி மற்றும் முனிவர் தார்க்ஷியரின் கதைகளும் உரைக்கப்படுகின்றன.(192) இதன் பிறகு, மத்ஸ்யத்தின் {மீனின்} கதை; மற்றும் பிற பழங்கதைகளை மார்க்கண்டேயர் உரைப்பது;(193) இந்திரத்யும்னன் மற்றும் துந்துமாரனின் கதைகள்; பிறகு கற்புடைய மனைவியின் வரலாறு; அங்கிரஸின் வரலாறு;(194) திரௌபதி மற்றும் சத்யபாமா சந்திப்பும், உரையாடலும்; துவைதவனத்திற்குப் பாண்டவர்கள் திரும்புவது;(195) கன்றுகளைக் கணக்கெடுத்தலும் {கோஷயாத்திரையும்}, துரியோதனன் கைப்பற்றப்படுவதும்; அந்தப் பொல்லாதவன் தூக்கிச் செல்லப்படும்போது அர்ஜுனன் அவனை மீட்பது;(196) யுதிஷ்டிரனின் மான் கனவு; பாண்டவர்கள் மீண்டும் காம்யக வனத்திற்குள் நுழைவதும்,(197) விரீஹித்ரௌணிகம் எனும் நெடுங்கதையும் இங்கே சொல்லப்படுகிறது. இங்கே துர்வாசரின் கதை உரைக்கப்படுகிறது;(198)
பிறகு ஆசிரமத்திலிருந்து ஜெயத்ரதனால் திரௌபதி அபகரிக்கப்படுவது; கடத்தியவனைப் பின்தொடர்ந்து சென்று பிடித்து, அவனது முடியை பீமன் சிரைப்பது ஆகியன இங்கே உரைக்கப்படுகின்றன. ராமன் தன் ஆற்றலால் எவ்வாறு போரில் ராவணனைக் கொன்றான் என்ற ராமனின் நெடும் வரலாறு இங்கே சொல்லப்படுகிறது. இங்கே சாவித்ரியின் கதையும் சொல்லப்படுகிறது;(199-201), இந்திரன் கர்ணனின் குண்டலங்களைப் பெற்று அதற்குப் பதிலாக, வீசப்பட்டால் ஒருவனை மட்டும் நிச்சயம் கொல்லக்கூடிய சக்தி ஆயுதத்தைக் கொடுப்பது.(202) (நீதி தேவன்) தர்மன் {யமன்} தன் மகனுக்கு (யுதிஷ்டிரனுக்கு) அறிவுரை வழங்கிய ஆரண்யம் என்றழைக்கப்படும் கதை; வரத்தை அடைந்து மேற்கு நோக்கிச் செல்லும் பாண்டவர்கள் இங்கு விவரிக்கப்படுகின்றனர்.(203) இவையே மூன்றாவது பர்வமான ஆரண்யக பர்வத்தில் வருவன. இருநூற்று அறுபத்து ஒன்பது {269} பகுதிகளுக்குள்[5] பதினோராயிரத்து அறுநூற்று அறுபத்து நாலு {11664} பாடல்களைக் {சுலோகங்களைக்} கொண்டது இந்தப் பர்வம்.(கங்குலியில் வனபர்வத்தில் 313 பகுதிகள் இருக்கின்றன.)
அதன்பிறகு வருவது விரிவானதும், விராடம் என்றழைக்கப்படுவதுமான பர்வமாகும்.(204-206) விராடனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் வரும் பாண்டவர்கள், அந்நகரத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள மயானத்தில் ஒரு பெரிய சமி {வன்னி} மரத்தைக் கண்டு, அதில் தங்கள் ஆயுதங்களை {பதுக்கி} வைப்பது.(207) இங்கேதான் அவர்கள் {பாண்டவர்கள்} நகருக்குள் நுழைவதும், மாறுவேடத்தில் அங்கே தங்குவதும் உரைக்கப்படுகிறது. பிறகு, காமத்தால் மதியிழந்து திரௌபதியை வேண்டும் தீய கீசகனைப் பீமன் கொல்வது; இளவரசன் துரியோதனனால் புத்திசாலி ஒற்றர்கள் நியமிக்கப்படுவது; வலிமைமிக்கப் பாண்டு மகன்களைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தோற்பது;(208-210) முதலில் திரிகர்த்தர்களால் விராடனின் பசுக்கள் கவரப்படுவதும்; அதைத் தொடர்ந்த பயங்கரப் போரும்;(211) பகைவனால் விராடன் கைப்பற்றப்படுவதும்; அவனைப் பீமசேனன் மீட்பதும்;(211) பாண்டவன் (பீமன்) பசுக்களை விடுவிப்பது;(212) குருக்களால் மீண்டும் விராடனின் பசுக்கள் கைப்பற்றப்படுவது; தனியொருவனான அர்ஜுனனால் போரில் குருக்கள் அனைவரும் வீழ்த்தப்படுவதும்;(213) மன்னனின் பசுக்கள் விடுவிக்கப்படுவதும்; சுபத்திரையின் மூலமான தன் மகனும், எதிரிகளை அழிப்பவனுமான அபிமன்யுவுக்காக விராடனின் மகள் உத்தரையை அர்ஜுனன் ஏற்பதும் சொல்லப்படுகின்றன. இவையே விரிவான நான்காம் பர்வமான விராட பர்வத்தின் உள்ளடக்கங்கள் ஆகும்.(214,215) பெருமுனிவரான வியாசர் அறுபத்தி ஏழு {67} பகுதிகளாக[6] இதைப் பிரித்து, இரண்டாயிரத்து ஐம்பது {2050} பாடல்களுக்குள் {சுலோகங்களுக்குள்} இதை அடக்கியுள்ளார்.(216,217)(கங்குலியில் விராட பர்வத்தில் 72 பகுதிகள் இருக்கின்றன.)
ஆதிபர்வம் – பகுதி 2 இ(பர்வசங்கிரகப் பர்வம்))ஐந்தாவது பர்வமான உத்யோகபர்வம் சுருக்கம்; ஆறாவது பர்வமான பீஷ்ம பர்வம் சுருக்கம்; அதன் பிறகு வரும் ஏழாவது பர்வமான துரோண பர்வ சுருக்கம்; அதன் பிறகு வரும் எட்டாவது பர்வமான கர்ண பர்வ சுருக்கம் …
அடுத்து, உத்யோக பர்வம் என்று அறியப்படும் ஐந்தாவது பர்வத்தை (உத்யோக பர்வத்தின் உள்ளடக்கத்தைக்) கேட்பீராக. வெற்றியை விரும்பிய பாண்டவர்கள், உபப்பிலாவ்யம் என்றழைக்கப்படும் இடத்தில் இருந்த போது,(218) துரியோதனனும் அர்ஜுனனும் ஒரே நேரத்தில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} சென்று, “இந்தப் போரில் உன் துணையை எங்களுக்கு அளிக்க வேண்டும்” என்று கேட்டனர்.(219) இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்மக் கிருஷ்ணன் “மனிதர்களில் முதன்மையானவர்களே! ஒருபுறம் போர் புரியாத ஆலோசகராக நானும்,(220) மற்றொருபுறம் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளும் இருக்கிறோம். இதில் உங்கள் இருவரில் யாருக்கு எதைக் கொடுப்பது?” என்றான். தன் சுய விருப்பங்களால் குருடனாவனும், மூடனுமான துரியோதனன் துருப்புகளைக் கோரியது;(221) அர்ஜுனன் போரிடாத ஆலோசகராகக் கிருஷ்ணனயே வேண்டியது. அதன்பிறகு, மத்ரத்தின் மன்னன் {சல்லியன்} பாண்டவர்களுக்குத் துணைபுரிய வந்து கொண்டிருந்தபோது, கொடைகளாலும், விருந்தோம்பலாலும் அவனை வஞ்சித்த துரியோதனன், அவனை ஒரு வரம் தரத் தூண்டி, பிறகு அந்த வரமாகப் போரில் அவனது துணையை வேண்டுவது;(222,223) சல்லியன் துரியோதனனிடம் இப்படி வார்த்தையைக் கொடுத்துவிட்டுப் பாண்டவர்களிடம் வந்து நடந்த நிகழ்ச்சியையும் சொல்லி, இந்திரனின் வெற்றிக் கதை (இந்திரனுக்கு விருத்திராசுரனுக்கும் நடைபெற்ற போர்) ஒன்றையும் சொல்லி பாண்டவர்களுக்கு ஆறுதலளித்தது.(224)
அதன்பிறகு, பாண்டவர்களின் புரோகிதர் கௌரவர்களிடம் அனுப்பப்படுதல் வருகிறது. அதன்பிறகு மன்னன் திருதராஷ்டிரனிடம் பாண்டவர்களின் புரோகிதர் சொல்லும் இந்திரனின் வெற்றிக்கதையைக் கேட்ட பின் {திருதராஷ்டிரன்} தனது புரோகிதரை அனுப்ப நினைத்து இறுதியில் சஞ்சயனை பாண்டவர்களிடம் அமைதியேற்பட அனுப்புவது.(225,226) இங்கேதான் பாண்டவர்களையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} அவர்களது நண்பர்களையும் பற்றிக் கேள்விப்பட்டுக் கவலையடையும் திருதராஷ்டிரனின் தூக்கமற்ற நிலை விவரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில்தான் உண்மை பிறழாத விதுரன் திருதராஷ்டிரனிடம் விவேகம் நிறைந்த பல ஆலோசனைகளைக் கூறும் சம்பவம் வருகிறது.(227,228) மேலும் இந்த இடத்தில்தான் கவலையில் மூழ்கியிருக்கும் மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} ஆன்மிகத் தத்துவங்களின் உண்மைத் தன்மையைச் சனத்சுஜாதர் விவரிக்கிறார். அடுத்த நாள் காலையில் மன்னனின் {திருதராஷ்டிரனின்} சபையில், சஞ்சயன், வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் உடல் மற்றும் மனக் குறிப்புகளைத் தெரிவிக்கிறான்.
அப்போதுதான் அன்பாலும், அமைதிக்கான ஆசையாலும் உந்தப்பட்ட சிறப்புமிக்கக் கிருஷ்ணன், தானே கௌரவத் தலைநகரான ஹஸ்தினாபுரம்த்திற்குச் சென்று அமைதியை வேண்டுகிறான். இரு தரப்புக்கும் நன்மையைத் தரக்கூடிய கிருஷ்ணனின் ஆலோசனைகள் துரியோதனனால் மறுக்கப்படுவது. இந்த இடத்தில் தம்போத்பவனின் கதை சொல்லப்படுகிறது;(229-233) உயர்ந்த உள்ளங்கொண்ட மாதலி தனது மகளுக்குக் கணவனைத் தேடுவது; அதன்பிறகு பெருமுனிவரான காலவரின் வரலாறு;(234) அதன்பிறகு விதுலையின் பயிற்சிகளும் ஒழுக்கமுறைகளும் வருகின்றன. மன்னர்களின் முன்னிலையில், துரியோதனன் மற்றும் கர்ணனின் தீய ஆலோசனைகளை அறிந்து கொண்டு, தனது யோக வலிமையால் கிருஷ்ணன் விஸ்வரூபக் காட்சி தருவது; அதன்பிறகு கிருஷ்ணன் தனது தேரில் கர்ணனை அழைத்துப் போய் அறிவுரை கூறுவதும்,(235,236) கர்ணன் தற்பெருமையால் {கர்வத்தால்} அதை மறுப்பதும் வருகிறது. பிறகு எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணன், ஹஸ்தினாபுரத்திலிருந்து உபப்பிலாவியத்திற்குத் திரும்பி,(237) பாண்டவர்களிடம் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறான். அதன்பிறகு பகைவர்களை ஒடுக்குபவர்களான பாண்டவர்கள், அனைத்தையும் கேட்டு, ஒருவரோடொருவர் நன்கு ஆலோசித்து, போருக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றனர்.(238-239)
அதன்பிறகு காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகள் போருக்கு அணிவகுத்து வருவது. பிறகு இருதரப்பில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது. போருக்கு முன்பு உலூகனை துரியோதனன் பாண்டவர்களிடம் தூதனுப்புகிறான். பல்வேறு பிரிவுகளின் தேரோட்டிகள் கதை அதன்பிறகு வருகிறது. அதன்பிறகு அம்பையின் கதை.(240,241) போர் தயாரிப்புகளும், அமைதி ஏற்பாடுகளுமான இவையனைத்தும் மஹாபாரதத்தின் ஐந்தாவது பர்வமான உத்யோக பர்வத்தில் வருகின்றன.(242) ஓ துறவிகளே! பெருமுனிவர் வியாசர் நூற்று எண்பத்து ஆறு {186} பகுதிகளில்[7] ஆறாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு {6698} பாடல்களில் {சுலோகங்களில்} விவரித்துள்ளார். (243,244)(கங்குலியில் உத்யோக பர்வத்தில் 199 பகுதிகள் இருக்கின்றன.)
அதன்பிறகு அற்புதமான நிகழ்வுகள் கொண்ட பீஷ்ம பர்வம் உரைக்கப்படுகிறது. ஜம்பூ என்ற இடம் உருவான வரலாற்றுக் குறித்துச் சஞ்சயனால் இங்குச் சொல்லப்படுகிறது.(245) யுதிஷ்டிர சேனையின் பெரிய மனத்தளர்ச்சியும், அடுத்தடுத்து பத்து நாட்கள் நடந்த கொடூரப் போரும் வருகின்றன.(246) தன் பாட்டன் மீது கொண்ட மதிப்பால் அர்ஜுனனிடம் எழுந்த கழிவிரக்கத்தை, உயர் ஆன்ம வாசுதேவன் {கிருஷ்ணன்}, இறுதி விடுதலை தத்துவத்தின் {பகவத்கீதையின்} மூலம் அவனிடம் இருந்து விரட்டுவது.(247) மகத்தானவனும், யுதிஷ்டிரனின் நன்மையில் கவனமாக இருப்பவனுமான கிருஷ்ணன், (பாண்டவப் படைக்கு) நேர்ந்த அழிவைக் கண்டு, தைரியமான இதயத்துடனும், கையில் சாட்டையுடனும், தன் தேரில் இருந்து இறங்கி பீஷ்மரைக் கொல்ல அவரை நோக்கி வேகமாக ஓடுவதும் இதில் {இந்தப் பர்வத்தில்} வருகிறது. இதில்தான், காண்டீவதாரியும், ஆயுததாரிகள் அனைவரிலும் போரில் முதன்மையானவனுமான அர்ஜுனனைத் துளைக்கும் வார்த்தைகளால் கிருஷ்ணன் தாக்குவது வருகிறது. வில்லாளிகளில் முதன்மையான அர்ஜுனன், தன் முன் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, தன் கூரிய கணைகளால் பீஷ்மரைத் துளைத்து, அவரது தேரில் இருந்து வீழ்த்துவது வருகிறது. இதில் தான் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் நீண்டு கிடப்பதும் வருகிறது.(248-251) இந்தப் பெரிய பர்வமானது மஹாபாரதத்தின் ஆறாவது பர்வமாக அறியப்படுகிறது. வேதங்களை அறிந்த வியாசரால் நூற்றுப் பதினேழு {117} பகுதிகளில்[8], ஐயாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு {5888} பாடல்களில் இவையனைத்தும் விவரிக்கப்படுகின்றன(கங்குலியில் பீஷ்ம பர்வத்தில் 124 பகுதிகள் இருக்கின்றன)
அதன்பிறகு நிகழ்வுகள் நிறைந்த அற்புத பர்வமாகிய துரோண பர்வம் வருகிறது.(252-254) முதலில், பெரும் ஆயுத ஆசானான துரோணரைப் படைத் தலைமையில் நிறுவப்படுவது; துரியோதனனை மனநிறைவு செய்வதற்காக யுதிஷ்டிரனைக் கைப்பற்றுவதாகத் துரோணர் சூளுரைப்பது; சம்சப்தகர்களிடம் இருந்து அர்ஜுனன் பின்வாங்கி,(255,256) களத்தில் இரண்டாவது இந்திரனைப் போல இருந்த பகதத்தனையும், அவனது யானையையும் வீழ்த்துவது; தனியனாக, ஆதரவற்றவனாகத் தன் பதின்ம வயதில் இருந்த வீரன் அபிமன்யு, ஜெயத்ரதன் உள்ளிட்ட பல மஹாரதர்களின் கைகளில் மரணத்தை அடைவது;(258) அபிமன்யுவின் மரணத்திற்குப் பிறகு, ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளையும் ஜெயத்ரதனையும் அர்ஜுனன் அழிப்பது;(259) யுதிஷ்டிரனின் கட்டளையை ஏற்று, தேவர்களாலும் ஊடுருவப்பட முடியாத கௌரவத் துருப்புகளுக்குள் வலிய கரங்களைக் கொண்ட பீமனும், தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியும் அர்ஜுனனைத் தேடி ஊடுருவுவதும், சம்சப்தகர்களின் அழிவும்.(260,261) அலம்புசன், சுருதாயு, ஜலசந்தன், சௌமதத்தன் {சோமதத்தன்}, விராடன், பெரும் தேர்வீரனான துருபதன், கடோத்கசன் ஆகியோரும், இன்னும் பிறரும் மரணமடைவது இந்தத் துரோண பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன; மேலும் அஸ்வத்தாமன் தனது தந்தையின் மரணத்தால் கோபங்கொண்டு நாராயணக் கணையை ஏவுதல். (மூன்று நகரங்களை) அழித்ததில் ருத்ரனின் மகிமை.(262-264) கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பெருமைகளை வியாசர் வந்து விவரித்தல் ஆகியவை வருகின்றன.(265) இதுவே, வீரத்தலைவர்களும், இளவரசர்களும் மரணமடைந்ததைச் சொல்லும் மஹாபாரதத்தின் ஏழாவது பர்வமான துரோண பர்வமாகும்.(266) இதில் மொத்தம் நூற்று எழுபது {170} பகுதிகள் இருக்கின்றன.[9] மேலும் பராசரர் மகனும், அதிகத் தியானத்திற்குப் பிறகு உண்மை ஞானத்தை அடைந்தவருமான வியாசமுனிவரால் தொகுக்கப்பட்ட இந்தத் துரோண பர்வத்தில் எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது {8909} பாடல்கள் {சுலோகங்கள்} இருக்கின்றன.(267,268)(கங்குலியில் துரோண பர்வத்தில் 203 பகுதிகள் இருக்கின்றன.)
இதன் பிறகு அற்புதமான கர்ண பர்வம் வருகிறது. இதில் (கர்ணனின்) தேரோட்டியாக ஞானியான மத்ர மன்னன் {சல்லியன் நியமிக்கப்பட்டது உரைக்கப்படுகிறது.(269) அதற்கடுத்து திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு சொல்லப்படுகிறது. போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கர்ணனை அவமதிக்க அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு {சல்லியன்} கதை சொல்வது; அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது;(271) தண்டசேனன் மற்றும் தண்டன் ஆகியோரின் மரணம்; ஆபத்து என்றறிந்தும் அனைத்து வீரர்களுக்கு மத்தியில் கர்ணனுடன் யுதிஷ்டிரன் தனித்துப் போர் புரிவது; அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் ஒருவருக்கொருவர் கோபத்துடன் பேசிக்கொள்வது;(272,273) கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. இந்தப் பர்வத்தில், பீமன் தன் சபதத்தை நிறைவு செய்யும் வகையில், துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராகக் கர்ணனிடம் போர் புரிந்து அவனை {கர்ணனை} வீழ்த்துவது வருகின்றது.(274,275) பாரதத்தை உரைப்பவர்கள் இதை எட்டாவது பர்வம் என்று சொல்கின்றனர். இஃது அறுபத்தொன்பது {69) பகுதிகளும்,[10] நாலாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு {4964} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்பட்டுள்ளது.(276,277)(கங்குலியில் கர்ண பர்வத்தில் 96 பகுதிகளும், 4887 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
ஆதிபர்வம் – பகுதி 2 ஈ(பர்வசங்கிரகப் பர்வம்) ஒன்பதாவது முதல் பதினெட்டாவது பர்வங்கள் வரையிலான சுருக்கங்கள்; பாரதம் படிப்பதன் பலன்
அடுத்ததாக அற்புதமான பர்வமான சல்லிய பர்வம் உரைக்கப்படுகிறது. பெரும் போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்துவிட்ட நிலையில், மத்ர மன்னன் சல்லியன் {கௌரவப்} படையின் தலைவனாகிறான்.(278) தேர்வீரர்களுக்கிடையில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் மோதல்கள் இங்கே விளக்கப்படுகின்றன.(279) பெரும் சல்லியன், நீதிமானான யுதிஷ்டிரனின் கையில் வீழ்கிறான். இந்தப் பர்வத்தில்தான் சகாதேவனின் கையால் சகுனி மரணத்தைத் தழுவுகிறான்.(280) பேரழிவுக்குப்பின்னர் சில துருப்புகளே எஞ்சியிருக்கும் நிலையில் தடாகத்திற்குச் சென்ற துரியோதனன், அந்த நீர் நிலைக்குள் ஓர் அறையை உண்டாக்கிக் கொண்டு அங்கே சிறிது நேரம் படுத்துக் கிடக்கிறான்.(281) வேடர்களிடம் இருந்து பீமனுக்கு இந்தச் செய்தி கிடைப்பது உரைக்கப்படுகிறது; நுண்ணறிவு கொண்ட யுதிஷ்டிரனுடைய அவமதிப்பான பேச்சுகளால் தூண்டப்பட்டு, அந்த அவமதிப்புகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நீர்நிலையில் இருந்து துரியோதனன் வெளிவருவது. அதன் பிறகு பீம துரியோதன கதாயுதப் போர்;(282,283) இத்தகு மோதல் நடந்து கொண்டிருக்கும்போது பலராமன் வருகை; சரஸ்வதி நதியின் புனிதத்தன்மை விவரிக்கப்படுகிறது;(284) கதாமோதல் தொடர்வது; போரில் தன் கதாயுதத்தால் {அதன் பயங்கர வீச்சால்} பீமன் துரியோதனனின் தொடைகள் முறிப்பது. இவை அனைத்தும் இந்த அற்புதமான ஒன்பதாவது பர்வத்தில் விளக்கப்படுகின்றன.(285,286) மொத்தம் ஐம்பத்து ஒன்பது {59} பகுதிகளில்[11] மூவாயிரத்து இருநூற்று இருபது {3220} பாடல்களில் {சுலோகங்களில்} கௌரவர்களின் புகழைப் பரப்புபவரான பெரும் வியாசர் இவற்றை விவரிக்கிறார்.(287,288)(கங்குலியில் சல்லிய பர்வத்தில் 65 பகுதிகளும் 3503 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
இதன் பிறகு பயமுறுத்தும் நிகழ்வுகள் கொண்ட சௌப்திக பர்வத்தைக் குறித்து நான் விளக்கப் போகிறேன். பாண்டவர்கள் சென்றவுடன், பெரிய வீரர்களான கிருதவர்மன், கிருபர், துரோண மைந்தன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், தொடை உடைந்து இரத்தத்தில் நனைந்து கிடக்கும் துரியோதனனைக் காண்கின்றனர். இந்தக் காட்சியைக் கண்ட துரோணரின் மைந்தன் {அசுவத்தாமன்} கோபங்கொண்டு “பாஞ்சாலர்கள், திருஷ்டத்யுமனன், பாண்டவர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளைக் கொல்லாமல் என் கவசம் களைவதில்லை” என்று சபதமேற்கிறான்.(289-292) பிறகு மூவரும் துரியோதனனை விட்டுவிட்டு கதிர் அடங்கும் வேளையில் கானகத்துக்குள் நுழைகின்றனர்.(293)
ஒரு பெரிய ஆலமரத்தடியில் அவர்கள் மூவரும் உட்கார்ந்திருக்கையில், ஓர் ஆந்தை பல காக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்வதைக் காண்கின்றனர்.(294) இக்காட்சியைக் கண்ட அஸ்வத்தாமன், இதயம் நிறைந்த கோபத்தால், தன் தந்தையைக் கொன்ற பாஞ்சாலர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களைப் பழி வாங்குவது என்று தீர்மானிக்கிறான்.(295) பாசறையின் வாசலை பயங்கரமான ஓர் இராட்சசன் காவல் காப்பதைக் காண்கிறான்.(296) தன் போர்க்கருவிகள் அவனிடம் செயலிழப்பதைக் கண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} மனத்தில் முக்கண் ருத்திரனை வழிபட்டு அவனைக் {ருத்திரனைக்} குளிர்விக்கிறான்.(297)
பிறகு கிருதவர்மனையும், கிருபரையும் அழைத்துக் கொண்டு இரவு வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில், திரௌபதி மைந்தர்கள் அனைவரையும், திருஷ்டத்யும்னனுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரையும், அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களது உறவினர்களுடன் சேர்த்துக் கொல்கிறான். ஐந்து பாண்டவர்களையும், சாத்யகியையும் தவிர்த்து மற்ற அனைவரும் அந்தப் பயங்கர இரவில் இறக்கின்றனர். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி தப்பியவர்களிடம்,(298-300) உறங்கிக் கொண்டிருக்கும்போது துரோணர் மகனால் பாஞ்சாலர்கள் கொல்லப்பட்டதைத் திருஷ்டத்யும்னனின் தேரோட்டி சொல்கிறான். பிள்ளைகள், தமையன், தந்தை ஆகியோரின் பிரிவால் துயருற்ற திரௌபதி உண்ணாதிருந்து சாக முடிவு செய்து, தனது கணவர்களின் முன்னால் அமர்கிறாள். திரௌபதியின் வார்த்தைகளில் இரக்கமடைந்த பீமசேனன், அவளை நிறைவு செய்ய எண்ணி, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஆயுதாசானின் மகனைத் {அசுவத்தாமனை} தேடுகிறான்.(301-303) பீமசேனன் மீதிருக்கும் பயத்தாலும், விதியின் வசத்தாலும் அசுவத்தாமன் பாண்டவர்கள் அனைவரையும் அழிக்கும்படி, “இது பாண்டவர்கள் அனைவரின் அழிவுக்காக” எனச் சொல்லி தெய்வீகக் கணையொன்றை ஏவுகிறான்;(304) கிருஷ்ணன் அசுவத்தாமனின் வார்த்தைகளைக் கேட்டு “இது நடக்காது” என்று சொல்லி அந்தக் கணையை அர்ஜுனனைக் கொண்டு செயலிழக்க வைக்கிறான்.(305) துவைபாயனரும் {வியாசரும்}, கிருஷ்ணனும் அழிவு நோக்கம் கொண்ட அசுவத்தாமனுக்குச் மாறி மாறி சாபம் கொடுக்கின்றனர். அஸ்வத்தாமனும் பதிலுக்குச் சாபமிடுகிறான்.(306) அஸ்வத்தாமனிடம் அவனது தலையில் பிறப்பிலிருந்தே இருக்கும் நகையொன்றை அறுத்தெடுத்து, மிகவும் மகிழ்ச்சியடைந்து, தங்கள் வெற்றி குறித்துப் பெருமை பேசி, துயரத்தில் இருக்கும் திரௌபதிக்கு அதை {அந்நகையைப்} பரிசளிக்கின்றனர் பாண்டவர்கள்.(307) இப்படியே சௌப்திகம் என்று அழைக்கப்படும் இந்தப் பத்தாவது பர்வம் உரைக்கப்படுகிறது. மொத்தம் பதினெட்டு {18} பகுதிகளில்[12] எண்ணூற்று எழுபது {870} பாடல்களில் {சுலோகங்களில்} சௌப்திக பர்வத்தை விவரிக்கிறார் பெரும் வியாசர்.(308,309) இந்தப் பர்வத்தில் சௌப்திக மற்றும் ஐஷிக பர்வங்கள் பெருமுனிவரால் சேர்க்கப்பட்டிருக்கிறது.(கங்குலியில் சௌப்திக பர்வத்தில் 18 பகுதிகளும், 791 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
இதன்பிறகு துயர்நிறைந்த பர்வமான ஸ்த்ரீ பர்வம் உரைக்கப்படுகிறது.(310) மைந்தர்களின் பிரிவால் துயருற்றிருந்த, முன்னறி கண் கொண்ட திருதராஷ்டிரன் முன்னால் “இது பீமன்” என்று கிருஷ்ணன் ஓர் இரும்புச் சிலையைக் காட்ட, பீமன் மீதிருந்த கோபத்தால் அந்தச் சிலையை இறுகப் பற்றித் தூள் தூளாக்குகிறான் திருதராஷ்டிரன். விதுரன் திருதராட்டிரனின் கோபத்தை அமைதிப்படுத்தி, உலகப்பற்றை விடச்சொல்லி விவேகம் நிறைந்த அந்த ஏகாதிபதிக்கு அறிவுறுத்துகிறான்.(311-313) அடுத்து திருதராஷ்டிரன் தனது இல்லத்தில் உள்ள பெண்மணிகளை அழைத்துக் கொண்டு, போர் நடந்த இடத்திற்குச் செல்லும் காட்சி விவரிக்கப்படுகிறது.(314) இதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட வீரர்களுடைய மனைவியரின் துயரமான ஓலங்களும், புலம்பல்களும் சொல்லப்படுகின்றன. காந்தாரியும் திருதராஷ்டிரனும் கோப மிகுதியால் மயக்கம் கொண்டு நினைவிழப்பது.(315) திரும்பி வராதவர்களான தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைகள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பதை க்ஷத்திரியப் பெண்மணிகள் காண்கின்றனர்.(316) மகன்களும், பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்ட காந்தாரிக்கு கிருஷ்ணன் ஆறுதல் வார்த்தைகள் சொல்வது.(317) இறந்த மன்னர்களின் சடலங்களுக்கு, பெரும் ஞானியும், அறவோர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} உரிய இறுதிச்சடங்குகளைச் செய்வது.(318) கமுக்கத்தில் தனக்கு மகனாய் பிறந்த கர்ணனை அங்கீகரிக்கும் குந்தியின் கதை.(319) இவையாவும் பெரும் முனிவரான வியாசரால் இந்தப் பதினோராவது பர்வத்தில் விளக்கப்படுகிறது.(320) உணர்வுள்ள நெஞ்சங்களில் கவலையையும், கண்ணீரையும் வர வைக்கும் பர்வம் இது. மொத்தம் இருபத்து ஏழு {27} பகுதிகளில்[13] எழுநூற்று எழுபத்தைந்து {775} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.(321,322)(கங்குலியில் ஸ்திரீ பர்வத்தில் 27 பகுதிகளும், 803 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
பனிரெண்டாவதாகப் பர்வமாக, புரிதலை {அறிவை} அதிகரிக்க வல்லதும், தன் தந்தைமார், சகோதரர்கள், மகன்கள், தாய்மாமன்கள், மற்றும் சம்பந்திகள் கொல்லப்பட்ட யுதிஷ்டிரனின் மனத்தளர்ச்சி சம்பந்தமானதுமான சாந்தி பர்வம் வருகிறது. இந்தப் பர்வத்தில், அறிவை விரும்பும் மன்னர்களுக்குத் தகுந்த பல்வேறு கடமைகளைக் குறித்துப் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் இருந்து எவ்வாறு விளக்குகிறார் என்பது சொல்லப்பட்டுள்ளது; ஆபத்துக் காலங்களுக்கு உகந்த கடமைகளையும், காலம் மற்றும் அறிவு ஆகியவற்றையும் முழுமையாக விளக்குகிறது இந்தப் பர்வம்.(323-325) இதைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதன் முழுமையான அறிவை அடைகிறான். இறுதி விடுதலை {முக்தி} குறித்தும் இந்தப் பர்வத்தில் விவரிக்கப்படுகிறது. இதுவே ஞானிகளுக்குப் பிடித்தமான பனிரெண்டாவது பர்வமாகும். மொத்தம் முந்நூற்று முப்பத்தொன்பது {339} பகுதிகளில்[14] பதினாலாயிரத்து எழுநூற்று முப்பத்திரண்டு {14732} பாடல்களில் {சுலோகங்களில்} இது விவரிக்கப்படுகிறது.(கங்குலியில் சாந்தி பர்வத்தில் 366 பகுதிகளும் 13682 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
வரிசையில் அடுத்தது அற்புதமான அனுசாசன பர்வம் ஆகும்.(328-329) பாகீரதியின் {கங்கையின்} மைந்தனான பீஷ்மரால் விளக்கப்பட்டுக் கடமைகளை {நீதிகளைக்} கேட்டு குருக்களின் மன்னனான யுதிஷ்டிரன் எவ்வாறு தன்னைச் சீர்படுத்திக் கொண்டான் என்பது இதில் விளக்கப்படுகிறது.(330) தர்மம் {அறம்} மற்றும் அர்த்தம் {பொருள்} ஆகியவற்றின் விதிகளும்; கொடை {தானம்} மற்றும் தகுதிகளின் {புண்ணியங்களின்} விதிகளும்; தானம் பெறுபவர்களின் தகுதிகளும், தானம் செய்வதற்கான முக்கியமான விதிமுறைகளும் இப்பர்வத்தில் விவரமாக விளக்கப்படுகின்றன. மேலும் இந்தப் பர்வத்தில், சடங்குகளில் ஒரு தனி மனிதனின் கடமை, நடத்தை விதிகள் மற்றும் ஒப்பற்ற வாய்மையின் தகுதி {சத்தியத்தின் பயன்} ஆகியனவும் விளக்கப்படுகின்றன.(331,332) மேலும் இந்தப் பர்வம், பிராமணர்கள் மற்றும் பசுக்களின் பெரும் தகுதியை {மகிமையை} வெளிப்படுத்தி, காலம் மற்றும் இடம் தொடர்பான கடமைகளின் புதிர்களைக் கட்டவிழ்க்கிறது.(333) இவையே, பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட அனுசாசனம் என்றழைக்கப்படும் இந்த அற்புத பர்வத்தின் உள்ளடக்கங்களாகும். பீஷ்மர் சொர்க்கத்திற்கு உயர்வதும் இந்தப் பர்வத்தில்தான் விளக்கப்படுகிறது.(334) நூற்று நாற்பத்தாறு {146} பகுதிகளில்[15] எட்டாயிரம் {8000} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.(கங்குலியில் அனுசாசன பர்வத்தில் 168 பகுதிகளும் 7670 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
அதன்பிறகு வருவது பதினான்காவது பர்வமான அஸ்வமேத பர்வம் ஆகும். (335,336) இதில் சம்வர்த்தர் மற்றும் மருத்தத்தனின் அற்புதமான கதை விவரிக்கப்படுகிறது. அதன்பிறகு (பாண்டவர்கள்) தங்கக் கருவூலங்களைக் கண்டடைவது; அஸ்வத்தாமனின் (தெய்வீக) ஆயுதத்தால் {கருவில்} எரிக்கப்பட்ட பரீக்ஷித் கிருஷ்ணனால் மீட்கப்பட்டுப் பிறப்பை அடைவதும் விவரிக்கப்படுகிறது. அவிழ்த்துவிடப்பட்ட வேள்விக் குதிரையைப் பின்தொடர்ந்து செல்கையில், அதைக் கோபத்துடன் கைப்பற்றிய பல்வேறு இளவரசர்களுடன், பாண்டுவின் மகனான அர்ஜுனன் செய்த போர்கள் சொல்லப்படுகின்றன. மணிப்பூரின் தலைவனுடைய மகளான சித்திராங்கதையின் (அர்ஜுனன் மூலம் பிறந்த) மகனான பப்ருவாகனனுடன் மோதி பேராபத்தை அடையும் அர்ஜுனனின் நிலை விவரிக்கப்படுகிறது. அதன் பிறகு குதிரை வேள்வியில் கீரிப்பிள்ளையின் கதை சொல்லப்படுகிறது.(337-340) இதுவே அஸ்வமேதிகம் என்றழைக்கப்படும் மிக அற்புதமான பர்வமாகும். இதில் நூற்று மூன்று {103} பகுதிகள் இருக்கின்றன[16].(341) உண்மை ஞானம் கொண்ட வியாசரால் (இதில்) தொகுக்கப்பட்ட சுலோகங்களின் எண்ணிக்கை மூவாயிரத்து முன்னூற்று இருபது {3320} ஆகும்.(342)(கங்குலியில் அஸ்வமேத பர்வத்தில் 92 பகுதிகளும், 2844 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
அதன்பிறகு வருவது பதினைந்தாவது பர்வமான ஆஸ்ரமவாஸிக பர்வம் ஆகும். இதில், திருதராஷ்டிரன் நாட்டைத்துறந்து, தனது மனைவி காந்தாரி மற்றும் விதுரனுடன் காட்டுக்குச் செல்வது விளக்கப்படுகிறது. இதைக் கண்டவளும், மூத்தவர்களைப் பேணிக் காப்பதில் எப்போதும் ஈடுபடுபவளுமான நல்லாள் பிருதையும் {குந்தியும்} அந்த முதிர்ந்த தம்பதியினரை {திருதராஷ்டிரனையும், காந்தாரியையும்} பின்தொடர்ந்து செல்வது.(343-345) வியாசரின் கருணையால், மன்னன் (திருதராஷ்டிரன்) கொல்லப்பட்ட தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பிற இளவரசர்களின் ஆவிகளைச் சந்திக்கும் அற்புத நிகழ்வு விளக்கப்படுகிறது.(346) பிறகு தன் கவலைகளை அனைத்தையும் கைவிட்ட அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, தன் புண்ணியச் செயல்களின் உயர்ந்த கனிகளைத் தன் மனைவியுடன் சேர்ந்து அடைந்தான். இந்தப் பர்வத்தில், தன் வாழ்வு முழுவதும் அறவோனாக வாழ்ந்த விதுரன் பெரும் அருள்நிலையை அடைந்தான்.(347) கல்விமானும், அமைச்சர்களில் முதன்மையானவனும், கவல்கணன் மகனுமான சஞ்சயன், ஆசைகளைத் தன் முழுக் கட்டுக்குள் கொண்டு வந்து, அருள் நிலையை அடைந்தது இந்தப் பர்வத்தில் சொல்லப்படுகிறது. இதில் நீதிமானான யுதிஷ்டிரன், நாரதரைச் சந்தித்து, விருஷ்ணிகளின் குலம் அழிந்ததைக் குறித்து அவரிடம் இருந்து கேள்விப்படுகிறான். இதுவே ஆஸ்ரமவாசிகம் என்றழைக்கப்படும் மிக அற்புதமான பர்வமாகும்.(348,349) உண்மையை அறிந்தவரான வியாசரால் நாற்பத்திரண்டு {42} பகுதிகளில்[17], ஆயிரத்து ஐநூற்று ஆறு {1506} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.(350.,351)(கங்குலியில் ஆஸ்ரமவாஸிக பர்வத்தில் 39 பகுதிகளும், 1081 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
அதன்பிறகு வருவது வலிநிறைந்த நிகழ்வுகள் கொண்ட மௌஸல பர்வம் ஆகும். இதில், சிங்கம் போன்ற இதயம் கொண்டவர்களும், பல போர்களங்களில் பெற்ற விழுப்புண்களை மார்பில் கொண்டவர்களுமான விருஷ்ணி குல {யாதவக் குல} நாயகர்கள் {சாத்யகியும், கிருதவர்மனும்}, ஓர் அந்தணனின் சாபத்தால், குடிவெறியில் மதியிழந்து, வஜ்ரத்தைப் போன்ற நிலையை அடைந்த சவட்டைக்கோரைப் புற்களால் (கையில் கொண்டு, அவற்றால்) ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உப்புக்கடலருகே அழிந்து போவது விளக்கப்படுகிறது.(352,353) பலராமனும், கேசவனும் (கிருஷ்ணனும்) தங்கள் குலம் அழியக் காரணமாக அமைந்து, தங்கள் நேரம் வந்ததும், அனைத்தையும் அழிக்கும் காலத்திற்கு முன் மேன்மையாக எழாமலே சென்றனர்.(354) மனிதர்களில் முதன்மையான அர்ஜுனன் தூவாராவதிக்கு {துவாரகைக்குச்} சென்று, விருஷ்ணிகள் இல்லாத நகரத்தின் வெறுமையைக் கண்டு துயருறுதல் இதில் விவரிக்கப்படுகிறது.(355) யதுக்களில் (விருஷ்ணிகளில்) முதன்மையானவரான தன் தாய்மாமன் வசுதேவரின் இறுதிச்சடங்கைச் செய்த அவன் {அர்ஜுனன்}, யது குலத்தின் வீரர்கள் எங்குக் குடித்தனரோ அங்கேயே இறந்து கிடப்பதைக் கண்டான்.(356) பிறகு அவன் {அர்ஜுனன்}, சிறப்புமிக்கக் கிருஷ்ணன், பலராமன் மற்றும் விருஷ்ணி குலத்தின் முக்கிய உறுப்பினர்களின் உடல்களை எரியூட்ட {தகனம் செய்ய} ஏற்பாடு செய்தான்.(357) பிறகு அவன் {அர்ஜுனன்}, யது குலத்தில் எஞ்சியவர்களான மகளிர், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பேரிடரைச் சந்திக்கிறான். பிறகு அவன், தன் வில்லான காண்டிவம் அவமதிக்கப்படுவதையும், தன் தெய்வீக ஆயுதங்கள் பயனற்றுப் போவதையும் காண்கிறான். இவையாவற்றையும் கண்டு, மனக்குழப்பமடையும் அர்ஜுனன், வியாசரின் அறிவுரைக்கிணங்க, யுதிஷ்டிரனிடம் சென்று, சந்நியாச வாழ்வு முறையைப் பின்பற்ற அனுமதி கோருகிறான்.(358-360) இதுதான் பதினாறாவது {16} பர்வமான மௌசல பர்வம் ஆகும். உண்மையை அறிந்தவரான வியாசர், எட்டு {8} பகுதிகளில்[18] முன்னூற்று இருபது {320} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வத்தை விளக்குகிறார்.(கங்குலியில் மௌஸல பர்வத்தில் 8 பகுதிகளும், 288 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
அடுத்தது, மஹாப்ரஸ்தானிகம் என்றழைக்கப்படும் பதினேழாவது பர்வம் ஆகும்.(361,362) மனிதர்களில் சிறந்தவர்களான பாண்டவர்கள் தங்கள் நாட்டைத் துறந்து, திரௌபதியுடன் சேர்ந்து மஹாபிரஸ்தானம் என்றழைக்கப்படும் தங்கள் நெடும்பயணத்தைச் செய்கின்றனர்.(363) சிவப்பு நீர் கொண்ட கடலின் கரையை அடைந்த அவர்கள் அக்னியை சந்திக்கின்றனர். அக்னியை முறையாக வழிபட்ட அர்ஜுனன், அக்னி தேவனின் வேண்டுகோளுக்கிணங்க சிறந்ததும், தெய்வீகமான வில்லுமான காண்டீவத்தை அவனிடமே ஒப்படைக்கிறான். ஒருவர் பின் ஒருவராக விழும் தனது தம்பிகளையும், அடுத்து விழும் திரௌபதியையும் விட்டு விட்டு ஒரு முறைகூடத் திரும்பிப் பார்க்காமல் யுதிஷ்டிரன் செல்கிறான். இதுவே மஹாபிரஸ்தானிகம் என்று அழைக்கப்படும் பதினேழாவது பர்வமாகும்.(364-366) இது மூன்று {3} பகுதிகளாகப் பிரிக்கட்டிருக்கிறது.[19] உண்மையை அறிந்தவரான வியாசரால், முன்னூற்று இருபது {320} பாடல்களில் {சுலோகங்களில்} இது விவரிக்கப்படுகிறது.(367)(கங்குலியில் மஹாப்ரஸ்தானிக பர்வத்தில் 3 பகுதிகளும், 109 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
அடுத்து வரும் பர்வம் இயல்புக்குமீறிய தெய்வீக நிகழ்வுகள் கொண்ட சுவர்க்கம் என்றழைக்கப்படும் பர்வம் ஆகும். யுதிஷ்டிரனை அழைத்துப் போக தெய்வலோகத் தேர் வந்தும், தன்னுடன் கடைசி வரை வந்த நாய் மீது எற்பட்ட அன்பால், அதில் அவன் ஏற மறுக்கிறான். சிறப்புமிக்க யுதிஷ்டிரனின் நிலையான அறப்பற்றைக் கண்டு தனது மாற்றுருவத்தைக் களைத்து தர்மதேவன் காட்சி அளிக்கிறான். அதன் பிறகு நல்லுலகம் ஏறும் வழியில் மிகுந்த வலியை உணர்கிறான் யுதிஷ்டிரன்.(368-370) தெய்வீகத் தூதுவர் ஒரு மாயச் செயலால் நரகத்தை அவனுக்குக் காண்பிக்கின்றனர். அப்போது நீதியின் ஆன்மாவான யுதிஷ்டிரன், யமனின் ஆட்சிக்குட்பட்ட அந்தப் பகுதியில், இதயத்தைப் பிளக்கும் வகையில் தனது தம்பிகளின் அழுகுரல்களைக் கேட்கிறான். பிறகு தர்மதேவனும், இந்திரனும் பாவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைக் காண்பிக்கின்றனர். அதன்பிறகு தெய்வீகக் கங்கையில் {ஆகாயக் கங்கையில்} மூழ்கித் தனது மனித உடலைத் துறந்த யுதிஷ்டிரன், தன் புண்ணியச் செயல்களுக்கான பகுதியை அடைந்து, இந்திரன் முதலான தேவர்களுடன் இன்பமயமாக இருக்கிறான். சிறப்புமிக்க வியாசரால் உரைக்கப்படும் இது பதினெட்டாவது பர்வம் ஆகும். பெருமுனிவரால் {ஆறு {6} பகுதிகளாக[20] பிரிக்கப்பட்ட இதில்} தொகுக்கப்பட்ட பாடல்களின் {சுலோகங்களின்} எண்ணிக்கை இருநூற்று ஒன்பது {209} ஆகும்.(கங்குலியில் சுவர்க்க பர்வத்தில் 6 பகுதிகளும், 316 ஸ்லோகங்களும் இருக்கின்றன.)
மேற்குறிப்பிட்டவையே பதினெட்டு {18} பர்வங்களின் உள்ளடக்கமாகும்.(375,376) பின்னிணைப்பில் (கிலத்தில்) ஹரி வம்சம், பவிஷ்யம் ஆகியன வருகின்றன. ஹரி வம்சத்தில் பனிரெண்டாயிரம் {12000} பாடல்கள் {சுலோகங்கள்} உள்ளன. பர்வ சங்கிரகம் என்றழைக்கப்படும் இந்தப் பகதியின் உள்ளடக்கங்களை இவையே[21].(377,378)(ஆகமொத்தமாகச் சௌதி இங்கே சொல்லியிருப்பது 18 பர்வங்களில் 1934 பகுதிகளும், 84835 பாடல்களுமாகும்; ஹரிவம்சத்துடன் 96835 பாடல்களுமாகும். சில பாடல்கள் Coupletகளாக இல்லாமல் tripletகளாக இருப்பதாகக் கங்குலி ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுகிறார். அந்த வகையில் மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்டதாக இருக்கலாம். கங்குலியில் ஹரிவம்சத்தைச் சேர்க்காமலேயே 2114 பகுதிகள் வருகின்றன. சுலோகங்களின் எண்ணிக்கையைப் பின்னர்தான் பார்க்க வேண்டும். பிபேக் திப்ராயின் பதிப்பில் 18 பர்வங்கள் மட்டும் 1995 பகுதிகளும், 73784 சுலோகங்களும் இருக்கின்றன. ஹரிவம்சத்தையும் சேர்த்து மொத்தமாக 2113 பகுதிகளும், 79,857 சுலோகங்களும் உள்ளன.)
சௌதி சொன்னார் “பதினெட்டு அக்ஷௌஹிணி படைகள் இந்தப் போரில் கலந்து கொண்டன. இந்தப் போர் பதினெட்டு நாட்கள் கொடூரமாக நடந்தது. நான்கு வேதங்களையும், அதன் அங்கங்கள் மற்றும் உபநிஷத்துகளுடன் அறிந்திருந்தாலும், (பாரதம் என்ற) இந்த வரலாற்றை அறியாமல் இருந்தால் அவன் ஞானியாகக் கருதப்படமாட்டான்.(380) அளவிலா நுண்ணறிவைக் கொண்ட வியாசர், அர்த்தம் {பொருள்}, தர்மம் {அறம்}, காமம் {இன்பம்} ஆகியவற்றின் ஆய்வாகவே மஹாபாரதத்தை உரைக்கிறார்.(381) உண்மையில், ஆண் கோகிலத்தின் {ஆண்குயிலின்} இனிய குரலைக் கேட்டவர்களால், கா என்ற காகத்தின் இசையொவ்வாமையைக் கேட்க முடியாததைப் போலவே, இந்த வரலாற்றை {மஹாபாரதத்தைக்} கேட்டவர்களுக்குப் பிறவற்றைக் கேட்கப் பிடிக்காது.(382) ஐம்பூதங்களில் இருந்து மூவுலகங்களும் உண்டானதைப் போலவே, அனைத்துப் புலவர்களின் அகத்தூண்டுதல்களும் இந்தச் சிறந்த தொகுப்பில் இருந்தே எழுகின்றன.(383) ஓ பிராமணர்களே, (ஈன்று பிறப்பவை, [முட்டை] பொரித்துப் பிறப்பவை, வெப்ப ஈரப்பதத்தில் பிறப்பவை [புழுக்கள்] மற்றும் பூமியைப் பிளந்து பிறப்பவை [தாவரங்கள்] ஆகிய} நால்வகை உயிரினங்களும் தங்கள் இருப்புக்காக வெளியை {ஆகாயத்தைச்} சார்ந்திருப்பதைப் போலவே, புராணங்களும் இந்த வரலாற்றைச் சார்ந்தே இருக்கின்றன.(384) புலன்கள் அனைத்தும் தங்கள் செயல்பாட்டுக்கு, மனத்தின் பல்வேறு மாற்றங்களைச் சார்ந்திருப்பதைப் போலவே, அனைத்துச் செயல்பாடுகளும் (சடங்குகளும்), ஒழுக்கத்தன்மைகளும் இந்த ஆய்வைச் சார்ந்தே இருக்கின்றன.(385) உடலானது எவ்வாறு தான் உட்கொள்ளும் உணவைச் சார்ந்திருக்கிறதோ, அவ்வாறே இந்த வரலாற்றைச் சாராத எந்தக் கதையும் இப்போதும் உலகில் இல்லை. {உணவைச் சாராமல் உடலில்லாததைப் போல, இவ்வரலாற்றைச் சாராத எந்தக் கதையும் இப்போதும் இவ்வுலகில் இல்லை}.(386) மேன்மையை அடைய விரும்பும் பணியாட்களால் நல்ல குலத்தில் பிறந்த தலைவர்கள் கவனிக்கப்படுவதைப் போலவே பாரதத்தை அனைத்துப் புலவர்களும் மனத்தில் கொள்கின்றனர்.(387) அருளப்பட்ட குடும்ப ஆசிரமத்தை {இல்லறத்தை} ஒரு போதும் மற்ற மூன்று ஆசிரமங்களால் (வாழ்வியல் முறைகளால்) விஞ்சமுடியாததைப் போலவே, இந்தச் செய்யுள் தொகுப்பை எந்தப் புலவர்களாலும் விஞ்ச இயலாது.(388)
தவசிகளே செயலின்மைகள் அனைத்தையும் உதறுவீராக. {விடாமுயற்சி கொள்வீராக}. அடுத்த உலகத்திற்குச் செல்பவனுக்கு உற்ற ஒரே நண்பன் அறமேயாதலால், அறத்தில் உங்கள் இதயங்களை நிலைக்கச் செய்வீராக. மிகப் புத்திசாலிகளே கூட, செல்வத்தையும் மனைவியரையும் விரும்பினாலும் இவற்றை {செல்வம் மற்றும் மனைவிகள் ஆகியவற்றைத்} தங்களுடையதாக்கிக் கொள்ளவும் முடியாது, இந்த உடமைகளை நிலைத்திருக்கவும் செய்யாது.(389)
துவைபாயனரின் உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பாரதம் இணையற்றதாகும்; அது தானே அறமாகவும், புனிதமானதாகவும் இருக்கிறது. அது பாவத்தை அழித்து நன்மையை உண்டாக்குகிறது. அஃது உரைக்கப்படும்போது கேட்டவன், புஷ்கரங்களின் புனித நீர்களில் நீராட வேண்டிய அவசியம் இல்லை.(390) பகல் பொழுதில் தன் புலன்களால் ஒரு பிராமணன் எந்தப் பாவங்களைச் செய்தாலும், மாலையில் பாரத்தைப் படிப்பதால் அவை அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(391) செயல்கள், வார்த்தைகள் அல்லது மனம் ஆகியவற்றால் இரவில் எந்தப் பாவங்களைச் செய்தாலும், முதல் சந்தியில் (அதிகாலையில்) பாரதத்தைப் படிப்பதால் அவனை அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(392) வேதங்கள், மற்றும் கல்வியின் அனைத்துக் கிளைகள் ஆகியவற்றை நன்கறிந்த ஒரு பிராமணனுக்குத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைத் தானமளிக்கும் ஒருவனும், பாரதத்தின் புனித விவரிப்புகளைத் தினமும் கேட்பவன் ஆகிய இருவரும் சம தகுதியையே {புண்ணியத்தையே} அடைகின்றனர்.(393) மரக்கலங்களைக் கொண்டோரால் பரந்த பெருங்கடலை எளிதாகக் கடக்க முடிவதைப் போலவே, பர்வ சங்கிரகம் என்றழைக்கப்படும் இந்த மிக முக்கியமான பகுதியின் {அத்தியாயத்தின்} உதவியுடன், மிகச் சிறப்பானதும், விரிவானதுமான இந்த வரலாற்றைக் கடக்கலாம்.(394)
ஆதிபர்வம் – பகுதி 3 அ-(பௌசிய பர்வம்)-ஜனமேஜயன் வேள்வி; சரமை என்ற நாயின் சாபம்; ஆருணி, உபமன்யு ஆகியோரின் கதைகள்; அஸ்வினித் தேவர்களுக்குரிய துதி …
சௌதி சொன்னார், “பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன் தனது தம்பிகளுடன் சேர்ந்து குருக்ஷேத்திரத்தின் சமவெளியில் நீண்ட கால வேள்வி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான்.(1) சுருதசேனன், உக்ரசேனன், பீமசேனன் ஆகியோர் அவனுடன் பிறந்த மூன்று தம்பிகளாவர். அவர்கள் வேள்வியில் உட்கார்ந்திருக்கும் சமயத்தில், (தெய்வீகப் பெண்நாயான) சரமாவின் {சரமையின்} குட்டி ஒன்று, அந்த வேள்வி நடக்கும் இடத்திற்கு வந்தது.(2) ஜனமேஜயனின் தம்பிகள் மூவராலும், நையப் புடைக்கப்பட்ட அது, வலியுடன் கதறிக் கொண்டே தன் தாயிடம் ஓடியது.(3) அதன் தாய் “ஏன் அழுகிறாய்? யார் உன்னை அடித்தது?’ என்று கேட்டது.(4) இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் குட்டி, தன் தாயிடம் “நான் ஜனமேஜயனின் தம்பிகளால் அடித்து விரட்டப்பட்டேன்” என்று சொன்னது.(5) அதற்குக் குட்டியின் தாய் “நீ ஏதாவது தவறு செய்து உன்னை அடித்தார்களா?” என்று கேட்டது.(6) “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வேள்விக்கு வைத்திருந்த நெய்யை எனது நாவால் தொடவில்லை; அதன் பக்கம்கூட நான் பார்க்கவில்லை” என்றது குட்டி.(7) அத்தனையும் கேட்ட குட்டியின் தாய் சரமா, தனது குட்டியின் துயரைப் பொறுக்கமுடியாமல், ஜனமேஜயனும் அவனது தம்பிகளும் இருக்கும் அந்தப் பெரிய வேள்வி நடக்கும் இடத்திற்கு வந்தது.(8)
ஜனமேஜயனிடம் கோபத்துடன் “இவன் எனது மைந்தன் எந்தத் தவறையும் செய்யவில்லையே; உனது வேள்வியின் நெய்யை இவன் நாவால் தொடவில்லை, அதன் பக்கமே பார்வையைச் செலுத்தவில்லை. இவன் தண்டிக்கப்பட்டது எவ்வாறு?” என்று கேட்டது.(9) அவர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பிறகு சரமா “எக்குற்றமும் செய்யாத என் மைந்தன் உங்களால் அடிக்கப்பட்டதால், நீங்கள் அறியாதிருக்கும் சமயத்தில் தீமை உங்களை வந்தடையட்டும்” என்று சபித்தது.(10)
தெய்வீகப் பெண் நாயான சரமாவால் இப்படிச் சபிக்கப்பட்ட ஜனமேஜயன், மிகவும் அச்சமடைந்து மனத்தளர்ச்சியடைந்தான்.(11) வேள்வி முடிந்ததும் ஹஸ்தினாபுரம் திரும்பி, தன் பாவத்திலிருந்து விடுபடவும், சாபத்தின் விளைவைத் தணிக்கவும் கூடிய ஒரு புரோகிதரைத் தேடுவதில் பெரும் முயற்சி செய்யத் தொடங்கினான்.(12)
ஒருநாள், பரீக்ஷித்தின் மைந்தனான அந்த ஜனமேஜயன் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், தனது ஆளுகைக்குட்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, பிரபலமாக இருந்த சுருதசிரவன் என்ற முனிவரைக் கவனித்து வந்தான். அவருக்குச் சோமசிரவன் என்ற பெயரில், அர்ப்பணிப்புடன் ஆழமான தவத்தில் ஈடுபடக்கூடிய மைந்தன் ஒருவர் இருந்தார்.(13,14) அந்த முனி மைந்தனைத் தனது புரோகிதராக நியமிக்க விருப்பங்கொண்டவனும், பரீக்ஷித்தின் மகனுமான ஜனமேஜயன்,(15) அந்த முனிவரை {சுருதசிரவரை} வணங்கி, “ஓ {பிராமணர்களுக்குரிய} ஆறு குணங்களைக் கொண்டவரே! இந்த உமது மைந்தன் {சோமசிரவர்} எனது புரோகிதராகட்டும்” என்றான்.(16) இப்படிக் கேட்கப்பட்ட முனிவர் {சுருதசரவர்} “ஓ ஜனமேஜயா! தவ அர்ப்பணிப்புகளில் ஆழமானவனும், வேதக் கல்வி கற்றவனும், என் தவத்தின் முழுச்சக்தியைக் கொண்டவனுமான இந்த எனது மைந்தன் {சோமசிரவன்}, என் உயிர்நீரைக் குடித்த ஒரு பெண் பாம்புக்குப் (அதன் கருவறையில்) பிறந்தவன் ஆவான்.(17) அவன், மகாதேவனுக்கு {சிவனுக்கு} எதிராக இழைக்கப்பட்டவை தவிர, பிற குற்றங்கள் அனைத்தில் இருந்தும் உன்னை விடுவிக்க இயன்றவனாவான்.(18) ஆனால், தன்னிடம் இரந்து கேட்கும் எந்தப் பிராமணனுக்கும் எதையும் கொடுத்துவிடும் பழக்கம் அவனுக்கு இருக்கிறது. அதை உன்னால் ஏற்க முடியும் என்றால், நீ அவனை {சோமசிரவனை} அழைத்துச் செல்லலாம்” என்றார்.(19) முனிவரால் {சுருதசிரவரால்} இப்படி மறுமொழி கூறப்பட்ட ஜனமேஜயன், “அப்படியே ஆகட்டும்” என்றான்.(20) ஜனமேஜயன் அவரைப் {சோமசிரவரை} புரோகிதராக ஏற்றுக் கொண்டு தனது தலைநகரம் திரும்பி, தன் தம்பிகளிடம் “இந்த மனிதரை நான் என் ஆன்ம குருவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; இவர் என்ன கேட்கிறாரோ அதை ஆய்ந்துபார்க்காமல் முடித்துக் கொடுங்கள்” என்றான்.(21)
தம்பிகளும் அதன்படியே நடந்துகொண்டனர். மன்னன், தம்பிகளுக்கு இப்படிக் கட்டளையிட்டுவிட்டுத் தக்ஷசீலத்திற்குப் படையெடுத்துச் சென்று அந்நாட்டையும் தனது ஆளுகைக்குள் இணைத்துக் கொண்டான்.(22) அதே சமயத்தில், அயோதா தௌம்யர்[1] (அயோதா என்றால் இரும்பு போன்ற பற்களை உடையவர் என்றும், நீரைக் குடிப்பவர் என்றும் இரு பொருள் உண்டு என்று சொல்லப்படுகிறது.)என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அந்த அயோதா தௌம்யருக்கு உபமன்யு, ஆருணி, வேதா {பைதன்} என்ற மூன்று சீடர்கள் இருந்தனர்.(23) பாஞ்சாலத்தைச் சேர்ந்த ஆருணி என்ற சீடனைத் தனது வயலில் உள்ள ஒரு வாய்க்கால் நீரை அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார் அம்முனிவர்.(24) அங்கு சென்ற போது அந்த வாய்க்காலின் நீரைச் சாதாரணமாக அடைக்க முடியாது என்பதை ஆருணி உணர்ந்தான்.(25) தனது ஆசானின் {அயோதா தௌம்யரின்} கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருக்கும்போது, {அவனுக்கு} ஒரு வழி கிடைத்தது. “நன்று, நான் இஃதை இவ்வழியில் செய்யப் போகிறேன்” என்று சொல்லி,(26) நேராக அந்த வாய்க்காலை அடைத்துக் கொண்டு தானே படுத்துக் கொண்டான். நீரும் இவ்வாறு அடைபட்டது.(27)
சிறிது நேரங்கழித்து ஆசான் அயோதா தௌம்யர், “பாஞ்சாலத்தின் ஆருணி எங்கே?” என்று மற்ற இரு சீடர்களிடமும் கேட்டார்.(28) அவர்கள், “ஐயா, நீங்கள் தானே அவனை {ஆருணியை} வாய்க்காலின் நீரை அடைக்க அனுப்பினீர்கள்” என்றார்கள். இப்படி நினைவுப்படுத்தப்படவே “அவ்வாறெனில், அவன் இருக்கும் இடத்திற்கு நாம் அனைவரும் செல்வோம்” என்றார்.(29) அந்த இடத்திற்கு வந்ததும், “ஓ பாஞ்சாலத்தின் ஆருணியே! நீ எங்கிருக்கிறாய்? இங்கே வா மகனே” என்று உரக்க அழைத்தார்.(30) ஆசானின் {அயோதா தௌம்யரின்} குரலைக் கேட்ட ஆருணி வாய்க்காலில் இருந்து உடனே எழுந்திருந்து தனது ஆசானின் முன்னிலையில் வந்து நின்றான்.(31) பின்னவரிடம் {ஆசானிடம்} பேசிய ஆருணி, “இதோ நான் வாய்க்காலில் இருக்கிறேன். இஃதை அடைக்க வேறு வழியேதும் தெரியாததால், நீர் வெளியேறுவதைத் தடுப்பதற்காக நானே இதற்குள் இறங்கிவிட்டேன். ஆசானே, நீர் வந்து அழைத்தபிறகு, அதைவிட்டெழுந்து, நீரோட அனுமதித்து உமது முன்னால் நிற்கிறேன் ஆசானே நான் உம்மை வணங்குகிறேன்; நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான் {ஆருணி}.(32)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்த ஆசான், “வாய்க்காலில் இருந்து எழுந்து, நீரோட்டத்தைத் திறந்ததால், உன் ஆசானுக்கு உதவி செய்த ஒரு குறியீடாக உத்தாலகன்[2] என்று இன்று முதல் நீ அழைக்கப்படுவாய்.(33) என்னுடைய வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படிந்ததால் உனக்கு நற்பேறு கிட்டும். எல்லா வேதங்களும், தர்மசாத்திரங்களும் உன்னுள் ஒளிரும்” என்றார்.(35) தன் ஆசானால் இவ்வாறு சொல்லப்பட்ட ஆருணி தன் இதயம் விரும்பிய நாட்டுக்குச் சென்றான்.(உத்தாலகன் என்றால் பிளப்பவன் என்று பொருளாம். மடையைப் பிளந்து வந்ததால் ஏற்பட்ட காரணப் பெயர் இதுவாகும்.)
அயோதா தௌம்யரின் மற்றொரு சீடனின் பெயர் உபமன்யு என்பதாகும்.(36) அவனை {உபமன்யுவை} ஒருநாள் தௌம்யர் அழைத்து “மகனே, நீ கால்நடைகளைக் கவனித்துக் கொள்” என்றார்.(37) அவனும் தன் ஆசானின் {அயோதா தௌம்யரின்} கட்டளையை ஏற்று மாடு மேய்க்கச் சென்றான். அவற்றை நாளெல்லாம் மேய்த்துவிட்டு, மாலையில் தன் ஆசானின் {அயோதா தௌம்யரின்} இல்லத்திற்குத் திரும்பி வந்து, அவரை மரியாதையுடன் வணங்கி நின்றான்.(38) அவன் {உபமன்யு} நல்ல நிலைமையில் வந்திருப்பதைக் கவனித்த ஆசான், அவனிடம், “உபமன்யு, என் மகனே, நீ எதைக் கொண்டு உன்னைத் தாங்கிக் கொள்கிறாய்? நீ மிகவும் பருமனாக இருக்கிறாயே?” என்று கேட்டார்.(39) அதற்கு அவன், “ஐயா, நான் பிச்சை எடுத்து என்னைத் தாங்கிக் கொள்கிறேன்” என்றான்.(40)
அவனது ஆசான் {அயோதா தௌம்யர்} “பிச்சையின் மூலம் எது உனக்குக் கிடைக்கிறதோ, அதை எனக்குக் கொடுக்காமல் நீ பயன்படுத்தக் கூடாது” என்றார். இவ்வாறு சொல்லப்பட்ட உபமன்யு அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டான். பிச்சை எடுத்து, அதைத் தனது ஆசானுக்குக் கொடுத்தான்.(41) அவனது ஆசான் அவனிடமிருந்த முழுவதையும் தானே எடுத்துக் கொண்டார். இவ்வாறு நடத்தப்பட்ட உபமன்யு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிட்டான். நாளெல்லாம் மாடுகளை மேய்த்துவிட்டு, மாலையில் தன் ஆசானின் முன்பு வந்து நின்று அவரை மரியாதையுடன் வணங்கினான்.(42) ஆசான் அவன் இன்னும் நல்ல நிலையிலேயே இருப்பதைக் கண்டு, அவனிடம், “உபமன்யு, என் மகனே, நீ பிச்சை எடுத்துக் கொண்டு வந்த அனைத்தையும், உனக்கென எதையும் விடாமல் நானே எடுத்துக் கொண்டேன். இப்போதும் நீ எவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டாய்?” என்று கேட்டார்.(43) உபமன்யு “ஐயா, பிச்சை எடுத்த அனைத்தையும் உங்களிடம் கொடுத்துவிட்டதால், மறுபடியும் இரண்டாவது முறை பிச்சை எடுத்து, என்னை நான் தாங்கிக் கொண்டேன்” என்றான்.(44)
இதற்கு மறுமொழியுரைத்த ஆசான், “இது நீ உன் ஆசானுக்குச் செலுத்தும் மரியாதை அல்ல. இப்படிச் செய்வதால், பிச்சை எடுத்து வாழ்பவர் பலரின் தேவைகளை நீ அழிக்கிறாய். இவ்வாறு உன்னைத் தாங்கிக் கொள்வதால் நீ பேராசைக்காரன் என்பதையே நிரூபிக்கிறாய்” என்றார்.(45) தன் ஆசான் சொன்ன அனைத்துக்கும் சம்மதித்த உபமன்யு, மாடு மேய்ப்பதற்குச் சென்று விட்டான். மாடுகளை நாளெல்லாம் மேய்த்துவிட்டு, மாலையில் தன் ஆசானின் இல்லத்திற்குத் திரும்பினான். பிறகு தன் ஆசானின் முன் நின்று மரியாதையுடன் அவரை வணங்கினான்.(46) அவன் {உபமன்யு} இன்னும் பருமனாகவே இருப்பதைக் கவனித்த ஆசான், அவனிடம் மீண்டும், “உபமன்யு, என் மகனே, நீ பிச்சை எடுத்துக் கொண்டு வந்த அனைத்தையும் நானே எடுத்துக் கொண்டேன். நீ இரண்டாவது முறை பிச்சை எடுக்கவும் செல்வதில்லை. இருந்தும் நீ ஆரோக்கியமாக இருக்கிறாயே. நீ எவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டாய்” என்று கேட்டார்.(47)
இப்படிக் கேட்கப்பட்ட உபமன்யு “ஐயா, நான் இந்த மாடுகளின் பால் குடித்து என்னைத் தாங்கிக் கொள்கிறேன்” என்று பதிலளித்தான். அதன்பேரில் அவனது ஆசான், “முதலில் என் சம்மதத்தைப் பெறாமல், நீ மாடுகளிடம் பால் எடுப்பது சரியல்ல” என்றார்.(48) உபமன்யுவும் இந்த அவதானிப்புகளில் உள்ள நீதியை ஏற்றுக் கொண்டு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிட்டான். அவன் தன் ஆசானின் இல்லத்திற்குத் திரும்பியபோது, அவர் முன்பு வழக்கம் போலவே நின்று வணங்கினான்.(49) இப்போதும் அவன் பருமனாகவே இருப்பதைக் கவனித்துவிட்ட அவனது ஆசான், “உபமன்யு, என் மகனே, நீ இப்போது பிச்சை எடுத்து உண்பதில்லை, இரண்டாவது முறை பிச்சை எடுப்பதுமில்லை, பாலும் குடிப்பதில்லை; இருப்பினும் பருமனாகவே இருக்கிறாயே. இப்போது எவ்வழிமுறைகளில் நீ உன்னைத் தாங்கிக் கொள்கிறாய்” என்று கேட்டார்.(50) “ஐயா, கன்றுக்குட்டிகள் தனது தாயின் மடியை உறிஞ்சும் போது, சிந்தும் உமிழ்பாலை {நுரையை} உறிஞ்சி உண்கிறேன்” என்றான்.(51) அதற்கு ஆசான், “இந்தக் கன்றுக்குட்டிகள், உன் மீதிருக்கும் அன்பால் நிறைய உமிழ்பாலை {நுரையை} வெளியிடுகின்றன என்று நினைக்கிறேன். இவ்வாறு நீ நடந்து கொள்வதால், அவை {கன்றுக்குட்டிகள்} முழு உணவைப் பெறும் வழியில் நீ குறுக்கிடுகிறாய். உமிழ்பாலை {நுரையை} குடிப்பதும் சரியல்ல” என்றார்.
இதற்கும் சம்மதித்த உபமன்யு, மாடுகளைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.(52) ஆசானால் கட்டுப்படுத்தப்பட்ட அவன், பிச்சை எடுத்து உண்பதில்லை, உண்பதற்கு வேறு எதுவும் இல்லை; பாலைக் குடிக்கவும் இல்லை; உமிழ்பாலைச் {நுரையை} சுவைப்பதுமில்லை. ஒரு நாள் பசியால் ஒடுக்கப்பட்ட உபமன்யு, காட்டில் இருக்கும்போது, எருக்கிலைகளை உண்டு விட்டான். அவன் உண்ட அந்த இலைகளின் கொடூரமான, எரிச்சலுள்ள, முரட்டுத்தனமான உப்புத் தன்மைகளால் அவன் குருடானான். தவழ்ந்து கொண்டே சென்ற அவன், ஒரு குழிக்குள்ளும் விழுந்துவிட்டான்.(53,54) அந்த நாளில் மேற்கு மலைகளின் சிகரங்களுக்குப் பின்னால் சூரியன் மறைந்த பிறகும் அவன் திரும்பாததால், அந்த ஆசான், உபமன்யு இன்னும் வரவில்லை என்பதைக்கண்டு தன் சீடர்களிடம் சொன்னார். அவர்கள் மாடுகளுடன் அவன் சென்றதாக அவரிடம் சொன்னார்கள்.(55)
அப்போது அந்த ஆசான், “அனைத்தையும் பயன்படுத்துவதில் இருந்து உபமன்யு என்னால் தடுக்கப்பட்டான் என்பதாலேயே, உண்மையில், தாமதமாகியும் அவன் இன்னும் இல்லத்திற்கு வராமல் இருக்கிறான். நாம் அவனைத் தேடிச் செல்வோம்” என்றார். இதைச் சொன்ன அவர், தன் சீடர்களுடன் காட்டுச் சென்று, “ஓ உபமன்யு, நீ எங்கிருக்கிறாய்?” என்று கூவத் தொடங்கினார்.(56) தன் ஆசானின் குரலைக் கேட்ட உபமன்யு, “இங்கே நான் கிணற்றுக்கடியில் இருக்கிறேன்” என்று உரத்தத் தொனியில் பதிலுரைத்தான். அவன் அங்கே எவ்வாறு சென்றான் என அவனது ஆசான் கேட்டார்.(57) உபமன்யு “எருக்கஞ்செடியின் இலைகளையுண்டதால், நான் குருடானேன், எனவே இந்தக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன்” என்றான்.(58) அதன் பேரில் அவனது ஆசான், “தேவர்களுக்கே மருத்துவர்களான அசுவினி இரட்டையர்களைப் போற்றி மகிழ்விப்பாயாக. அவர்கள் உனது பார்வையை மீட்பார்கள்” என்றார். ஆசானால் இவ்வாறு வழிநடத்தப்பட்ட உபமன்யு, ரிக் வேதத்தின் வார்த்தைகளின் பின்வருமாறு அசுவினி இரட்டையர்களைப் போற்றத் தொடங்கினான்.(59)
“படைப்புக்கு முன்பிருந்தவர்கள் நீங்களே, முதலில் பிறந்தவர்கள் நீங்களே, ஐம்பூதங்களில் காட்சியளிப்பவர்கள் நீங்களே, எனது கேள்வி ஞானத்தாலும், தியானத்தாலும் இதை அறிந்த நான் உங்களது உதவியை நாடி நிற்கிறேன். நீங்கள் முடிவில்லாதவர்கள், நீங்கள் இயற்கையில் ஆன்மாவிலும் உறைபவர்கள், நீங்களே மரம் போன்ற உடலில் இறகுள்ள பறவை. நீங்களே எல்லா உயிர்களின் பொதுத்தன்மை, நீங்களே ஒப்பற்றவர்கள், நீங்களே படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் இந்த அண்டத்தை ஊடுருவியிருக்கும் ஆவி.
நீங்களே பொற்கழுகுகள், நீங்களே எல்லாப்பொருட்களும் எதில் மறையுமோ, அதன் சாரம். நீங்களே தவறிழைக்காதவர்கள், அழியும் தன்மையற்றவர்கள், நீங்களே நியாயமற்ற முறையில் அடிக்காமல் அனைத்து மோதல்களிலும் வெற்றிகொள்ளும் அழகான அலகு. நீங்களே காலத்திற்கு மேல் பணி செய்பவர்கள். கதிரவனைப் படைத்து, பகலெனும் வெள்ளை நூலாலும், இரவெனும் கருப்பு நூலாலும் பின்னப்பட்ட ஆடை நீங்களே. அப்படிப் பிண்ணப்பட்ட ஆடையால், நீங்களே இரண்டு செயல்களை (கர்மங்களை) தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படைத்தவர்கள். காலத்தால் பற்றப்பட்ட உயிர்ப்பறவையின் பலத்தையும், முடிவில்லா ஆன்மாவையும் பிரதிபலித்து, அவளை விடுவித்து அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பவர்கள் நீங்களே. புலன்களால் மயங்கி ஆழ்ந்த அறியாமையில் இருப்பவர்களுக்கு நீங்களே மிகப்பெரிய பரிசு
முன்னூற்று அறுபது {360} மாடுகள், முன்னூற்று அறுபது {360} நாட்களைப் பிரதிபலித்து ஒரு கன்றுக்குட்டியை ஈன்றெடுக்கின்றன அதுதான் ஒரு வருடம். அந்தக் கன்றுக்குட்டியே அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் செய்கிறது. உண்மையைத் தேடுபவர்கள் பல பாதைகளில் தொடர்ந்து, ஞானம் எனும் பாலை அந்தக் கன்றுக்குட்டியின் தயவால் பெறுகின்றனர். அசுவினிகளாகிய நீங்களே, அந்தக் கன்றுக்குட்டியைப் படைப்பவர்கள். வருடம் என்பது பல பகல்களையும் இரவுகளையும் பிரதிபலிக்கும் எழுநூற்று இருபது {720} கோல்களை {சட்டங்களை} இணைத்த ஒரு சக்கரத்தின் மையம். சக்கரத்தின் சுற்றளவு பனிரெண்டு மாதங்களை முடிவில்லாமல் பிரதிபலிக்கிறது. இந்தச் சக்கரம் மாயத்தோற்றம் கொண்டது. அழிவை அறியாதது. அஃது எல்லா உயிரினங்களையும் மற்ற உலகங்களையும் பாதிக்கின்றது. அசுவினிகளாகிய நீங்களே, இந்தச் சக்கரத்தின் ஓட்டத்தை முடுக்குபவர்கள்.
காலச்சக்கரத்தால் பிரதிபலிக்கப்படும் வருடம் ஆறு {6} பருவங்களைப் பிரதிபலிக்கும் மையத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சக்கரத்துடன் சேர்ந்த பனிரெண்டு {12} கோல்களை ஜாதகத்தின் பனிரெண்டு {12} ராசிச் சின்னங்கள் பிரதிபலிக்கின்றன. காலத்தின் சக்கரமான இந்தச் சக்கரம் அனைத்துப் பொருட்களின் செயலுக்குமான பலனை வெளிப்படுத்துகிறது. காலத்திற்கான தேவதைகள் இந்தச் சக்கரத்தில் லயித்திருக்கின்றன. நான் இப்போது அப்படிப்பட்ட ஒரு சிரமகாலத்தில் அகப்பட்டிருக்கிறேன். ஓ அசுவினிகளே, என்னைக் காலச்சக்கரத்தின் பிடியில் இருந்து விடுவியுங்கள். ஓ அசுவினிகளே, நீங்களே இந்த அண்டத்தின் ஐம்பூதங்கள். நீங்களே அனைத்து உலகங்களின் பயன்படுபொருளாக உள்ளீர்கள். என்னை ஐம்பூதங்களின் பிடியில் இருந்து விடுவியுங்கள். நீங்களே பிரம்மாவாக இருந்தாலும், உலகத்தின் மீது புலன்கள் தரும் மகிழ்ச்சியில் வலம் வருகிறீர்கள்.
ஆதியில் நீங்களே அண்டத்தின் பத்துப் புள்ளிகளை உருவாக்கினீர்கள். அதன்பிறகு நீங்களே கதிரவனையும், வானத்தையும் மேலே வைத்தீர்கள். அதே கதிரவனின் ஓட்டத்தைக் கணக்கிட்டு முனிவர்கள், தங்கள் வேள்விகளைச் செய்கின்றனர். தேவர்களும், மனிதர்களும் அவர்களுக்கு என்ன விதித்திருக்கிறதோ அதன்படி தமது வேள்விகளைச் செய்து பலன்களைப் பெறுகின்றனர். மூன்று நிறங்களைக் கலந்து, பார்வையில் படும் பொருட்களைப் படைத்திருக்கிறீர்கள். இதிலிருந்துதான் அண்டமே உண்டாயிற்று. அதனால்தான் தேவர்களும் மனிதர்களும் தங்களது தொழில்களை முறையே செய்ய முடிகின்றது. அசுவினிகளாகிய உங்களை நான் துதிக்கிறேன். உங்கள் கைவண்ணத்தால் உருவான வானத்தையும் நான் துதிக்கிறேன். தேவர்களும் எதில் {செயல்களின் பலன்களில்} சுதந்திரமாக இல்லையோ அந்த அனைத்துச் செயல்களின் கனிகளையும் விதிப்பதும் நீங்களே.
அனைவருக்கும் பெற்றோர் நீங்களே. ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து உணவை விழுங்குபவர்கள் நீங்களே. இதுவே {அந்த உணவு} பின்னர், உயிரை உண்டாக்கும் நீர்மையையும் இரத்தத்தையும் உருவாக்குகிறது. புதிதாகப் பிறந்த குட்டிகள் தனது தாயின் மார்பை உறிஞ்சுகின்றன. அந்தக் குழந்தையின் உருவத்தை எடுத்தவர்கள் {அந்தக் குழந்தைகளும்} நீங்களே. அசுவினிகளே, எனக்குப் பார்வையைக் கொடுத்து எனது வாழ்வைக் காப்பீராக!” (என்று துதித்தான் உபமன்யு}.(60-70)
இவ்வாறு அழைக்கப்பட்ட அந்த அசுவினி இரட்டையர்கள், அங்கே தோன்றி, “நாங்கள் நிறைவு கொண்டோம். உனக்காக ஓர் அப்பம் இங்கே இருக்கிறது. எடுத்து உண்பாயாக” என்றனர்.(71) இப்படிச் சொல்லப்பட்ட உபமன்யு, “ஓ அசுவினிகளே, உங்கள் சொற்கள் எப்போதும் பொய்த்ததில்லை. ஆனாலும், எனது ஆசானுக்குக் காணிக்கை கொடுக்காமல் இந்த அப்பத்தை எடுத்துக் கொள்ள நான் துணியமாட்டேன்” என்றான்.(72) அதற்கு அசுவினிகள் “இதற்கு முன்பு, உனது ஆசானும் எங்களை இருப்புக்கு அழைத்தார். அதன்பேரில் இதே போன்ற அப்பத்தை நாங்கள் அவருக்குக் கொடுத்தோம்; அப்போது அவர் {அயோதா தௌம்யர்} தனது குருவுக்குக் காணிக்கையாகக் கொடுக்காமலே அதை எடுத்துக் கொண்டார். உனது ஆசான் எப்படி நடந்து கொண்டாரோ, அப்படியே நீயும் நடந்து கொள்வாயாக” என்றனர்.(73) இப்படிச் சொல்லப்பட்ட உபமன்யு, “ஓ அசுவினிகளே, உங்கள் மன்னிப்பை மன்றாடிக் கேட்கிறேன். எனது குருவுக்கு {அயோதா தௌம்யருக்கு} காணிக்கைக் கொடுக்காமல் இந்த அப்பத்தைப் ஏற்றுக் கொள்ளத் துணிய மாட்டேன்” என்றான்.(74) அசுவினிகள், “ஓ, உன் ஆசானிடம் நீ கொண்டுள்ள அர்ப்பணிப்பால் நாங்கள் நிறைவடைந்தோம். உன் குருவின் பற்கள் உருக்காலானாது. உனக்கு அவை தங்கமாக இருக்கட்டும். உனது பார்வை உனக்குத் திரும்பட்டும், நீ நற்பேற்றை அடைவாய்” என்றனர்.(75)
அசுவினிகள் இப்படிச் சொல்லப்பட்ட அவன் தன் பார்வையை மீண்டும் அடைந்து, தன் ஆசானின் முன்னிலைக்குச் சென்று அவரை வணங்கி அனைத்தையும் சொன்னான். அவனது ஆசானும் அதைக் கேட்டு உள்ளம் நிறைந்து, அவனிடம், “நீ அசுவினிகள் சொன்னதைப் போலவே, எல்லாச் செல்வங்களையும் செழுமையும் பெறுவாய்.(76) வேதங்கள் மற்றும் தர்ம சாத்திரங்களும் அனைத்தும் உன்னுள் ஒளிரும்” என்றார். இதுவே உபமன்யுவுக்கு வந்த சோதனை.(77)
ஆதிபர்வம் – பகுதி 3 ஆ(பௌசிய பர்வம்)வேதாவின் கதை; உதங்கரின் குருகுல வாசம்; வேதாவின் மனைவி உதங்கரிடம் கேட்ட குரு தட்சணை; பௌசியன் மனைவியிடம் உதங்கர் பெற்ற காதணி; உதங்கரும், பௌசியனும் மாறி மாறி அளித்த சாபங்கள்…
அதன்பிறகு அயோதா தௌம்யரின் மற்றொரு சீடனான வேதா {பைதன்} அழைக்கப்பட்டான். அவனிடம் மீண்டும் பேசிய அவனது ஆசான் {அயோதா தௌம்யர்}, “வேதா, எனது மகனே, எனது இல்லத்திலேயே சில நாட்கள் தங்கியிருந்து எனக்குச் சேவை செய்வாயாக. அஃது உனக்கு ஆதாயத்தைத் தரும்” என்றார்.(78) வேதாவும் அவரது {அயோதா தௌம்யரின்} இல்லத்திலேயே தங்கி எப்போதும் சேவை செய்யத் தயாராக இருந்தான். அந்த வீட்டிற்காக வெயில், குளிர், பசி, தாகம் என அனைத்தையும் முணுமுணுப்பின்றித் தாங்கி, ஓர் எருதைப் போல உழைத்தான். அவனது ஆசானும் {அயோதா தௌம்யரும்} விரைவில் மனநிறைவு கொண்டார்.(79) அந்த மனநிறைவின் விளைவாக வேதா நற்பேற்றையும், உலகளாவிய அறிவையும் பெற்றான். இதுவே வேதாவின் சோதனை.(80) “வேதா, தனது ஆசானிடம் அனுமதி பெற்று, தனது கல்வியனைத்தையும் முடித்து அங்கிருந்து விடைபெற்று, இல்லற வாழ்வுமுறைக்குள் நுழைந்தார்.(81) அவர் {வேதாவின்} தன் வீட்டில் வாழ்ந்து வந்தபோது, மூன்று சீடர்களை அடைந்தார். தன் ஆசானின் குடும்பத்தில் வசித்துவந்தபோது, அதிகத் துன்பத்தைத் தானே அடைந்திருந்ததால், அவர்களை {தன் சீடர்களை} எந்த வேலை செய்யவோ, lன் சொந்த வேலைகளுக்குக் கீழ்ப்படியவோ சொல்லாத அவர், அவர்களைக் கடுமையாக நடத்த விரும்பவில்லை.(82,83) ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு க்ஷத்திரிய வகையைச் சேர்ந்தோரான ஜனமேஜயன் மற்றும் பௌஸ்யன் ஆகிய இருவரும், அவரது வசிப்பிடத்திற்கு வந்து, பிராமணரான வேதாவைத் தங்கள் ஆன்ம வழிகாட்டியாக (உபாத்யாயராக) நியமித்துக் கொண்டனர்.(84) ஒரு நாள் வேள்வி சம்பந்தமான ஏதோ ஒரு காரியத்திற்காகப் புறப்படும்போது, தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவதற்குத் தன் சீடர்களில் ஒருவனான உதங்கனை நியமித்தார்.(85) அவர், “உதங்கா, வீட்டில் எவையெல்லாம் நடக்க வேண்டுமோ அவையெல்லாம் புறக்கணிக்கப்படாமல் உன்னால் செய்யப்பட வேண்டும்” என்று சொன்னார். உதங்கனுக்கு இந்த உத்தரவுகளைக் கொடுத்துவிட்டு பயணிக்கலானார்.(86)
“தன் ஆசான் சொன்னவற்றை எப்போதும் மனத்தில் நிறுத்திய உதங்கன், பின்னவரின் இல்லத்திலேயே வசித்தான். உதங்கன் அங்கே வசித்து வந்தபோது, தன் ஆசானின் இல்லத்தில் இருந்த பெண்கள் கூடி அவனிடம் பேசினர், “ஓ உதங்கா,(87) உனது குருவின் மனைவி தாம்பத்யத் தொடர்பு கனி கொடுக்கும் காலத்தில் {ருது ஸ்நானம் செய்து} இருக்கிறாள். உனது ஆசானும் {வேதாவும்} இல்லை; எனவே, அவரது இடத்தில் நீ இருந்து, தேவையானதைச் செய்வாயாக” என்றனர்.(88) இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கன், அந்தப் பெண்களிடம் “பெண்களின் உத்தரவின் பேரில் நான் இதைச் செய்வது முறையாகாது. முறையற்றதைச் செய்ய நான் என் ஆசானால் பணிக்கப்படவில்லை” என்றான்.(89)
சிறிது காலத்திற்குப் பிறகு அவனது ஆசான் வேதா தனது பயணத்திலிருந்து திரும்பினார். அவனது ஆசான் அங்கு நடந்தது அத்தனையும் அறிந்து, மிகவும் மகிழ்ந்து,(90) உதங்கனிடம், “உதங்கா, என் மகனே, உனக்கு என்ன உதவியை நான் அளிப்பது? உன் கடமை உணர்ச்சியால் நான் நன்றாகத் தொண்டாற்றப்பட்டேன்; எனவே நம்மில் ஒருவருக்கொருவர் நட்பு பெருகிற்று. எனவே, நீ விடைபெற்றுச் செல்ல நான் அனுமதியளிக்கிறேன். செல்; உனது ஆசைகளனைத்தும் நிறைவேறட்டும்” என்றார்.(91)
இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கன், மறுமொழியாக, “நீர் விரும்பியதை நான் செய்வதற்கு எனக்கு உத்தரவு அளிப்பீராக. பயன்பாட்டுக்கு {வழக்கத்துக்கு} முரணாகக் கல்வியை அளிப்பவன், பயன்பாட்டுக்கு முரணாக அதைப் பெறுபவன் ஆகிய அந்த இருவரில் ஒருவர் இறப்பர் என்றும், {அல்லது} அந்த இருவருக்குள் பகை ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.(93) எனவே, உம்மிடம் விடை கிடைத்தாலும், ஆசானுக்குரிய ஏதாவது வெகுமானத்தை உமக்குக் கொண்டு வர நான் விரும்புகிறேன்” என்றான். இதைக்கேட்ட அவனது ஆசான் {வேதா}, “உதங்கா, என் மகனே, சிறிது காலம் பொறுத்திரு” என்றார்.(94)
சிறிது காலம் கழித்து, உதங்கன் மறுபடியும் தன் ஆசானிடம், “நீர் விரும்பும் வெகுமானத்தைக் கொண்டு வர எனக்கு உத்தரவளிப்பீராக” என்றான். அதற்கு அவனது ஆசான் {வேதா}, “எனதன்பு உதங்கா, நீ பெற்ற கல்விக்கான காணிக்கையாக ஏதாவது பெறும்படி நீ அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாய். எனவே, உள்ளே சென்று உனது குருவின் மனைவியிடம் என்ன கொண்டு வர வேண்டுமென்று கேட்பாயாக. அவள் கேட்பதைக் கொண்டு வருவாயாக” என்றார். இவ்வாறு தன் ஆசானால் வழிநடத்தப்பட்ட உதங்கன் தன் ஆசானின் மனைவியிடம், “அம்மா, நான் வீடு செல்வதற்கு ஆசானின் அனுமதியைப் பெற்றேன். ஒரு கடனாளியாக நான் செல்லாதிருப்பதற்காக, நான் பெற்ற கல்விக்கு ஈடாக உங்களுக்கு ஏற்புடைய எதையாவது வெகுமானமாகக் கொண்டு வர விரும்புகிறேன். எனவே, நான் என்ன கொண்டு வர வேண்டும் என் ஆணையிடுவாயாக” என்றான் {உதங்கன்}.(96)
இவ்வாறு சொல்லப்பட்ட அவனது ஆசானின் மனைவி, “மன்னன் பௌசியனிடம் சென்று, அவனது ராணி அணிந்திருக்கும் ஒரு ஜோடி கம்மலை பிச்சையாக அவனிடம் கேட்டு,(97) அதை இங்குக் கொண்டு வா. இன்றிலிருந்து நான்காவது நாள் புனிதமான நாளாகும். அன்று (என் வீட்டில் விருந்துண்ண வரும்) பிராமணர்கள் முன்னிலையில் அந்தக் குண்டலங்களுடன் காட்சியளிக்க விரும்புகிறேன். ஓ உதங்கா, இதை நிறைவேற்றுவாயாக. நீ இதில் வெற்றிக் கொண்டால் நற்பேறு உன்னைத் தேடி வரும்; தோல்வியுற்றால் நீ என்ன எதிர்பார்க்க முடியும்?” என்றாள்.(98)
இவ்வாறு ஆணையிடப்பட்ட உதங்கன், அங்கிருந்து புறப்பட்டான். அப்படியே வீதியோரமாக நடந்து செல்கையில் இயல்புக்குமிக்கப் பெரிய தோற்றத்தில் ஒரு காளையும், அதன்மீது அசாதாரண உடலமைப்பைக் கொண்ட மனிதன் ஒருவன் அமர்ந்திருப்பதையும் பார்த்தான். அந்த மனிதன் உதங்கனைப் பார்த்து,(99) “இந்தக் காளையின் சாணத்தை உண்பாயாக” என்றான். {இதற்கு} உதங்கன் உடன்பட விரும்பவில்லை.(100)
அந்த மனிதன் மறுபடியும், “ஓ உதங்கா, ஆராயாமல் உண்பாயாக. உனது ஆசானும் {வேதாவும்} இதற்கு முன் இதை உண்டிருக்கிறார்” என்றான்.(101) உதங்கன் சம்மதித்து, அந்தச் சாணத்தை உண்டு, அந்தக் காளையின் சிறுநீரைக் குடித்து, மரியாதையுடன் எழுந்து, தன் கைகளையும் வாயையும் தூய்மைப்படுத்திக் கொண்டு மரியாதையாக எழுந்து மன்னன் பௌசியன் இருக்குமிடம் சென்றான்.(102)
அரண்மனையை அடைந்து, மன்னன் பௌசியன் (தனது அரியாசனத்தில்) அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனை {மன்னன் பௌசியனை} அணுகிய உதங்கன், தனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு,(103) “நான் உன்னிடம் ஒரு விண்ணப்பதாரனாக வந்தேன்” என்றான். மன்னனும் பதில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு, “ஐயா, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(104) உதங்கன் “ஒரு ஜோடி காதுகுண்டலங்களை என் ஆசானுக்குப் பரிசளிப்பதற்காக உன்னிடம் பிச்சை கேட்டு நான் வந்தேன். ராணி அணிந்திருக்கும் காது குண்டலங்களை எனக்குக் கொடுப்பதே உனக்குத் தகும்” என்றான்.(105)
மன்னன் {பௌசியன்}, “உள்ளே இராணி இருக்கும் பெண்கள் அறைகளுக்குச் {அந்தப்புரத்திற்கு} சென்று அவளிடம் கேட்பீராக” என்றான். உதங்கனும் அந்தப்புரத்திற்குள் சென்றான். ஆனால் அவனால் இராணியைக் காண முடியவில்லை,(106) எனவே மீண்டும் மன்னனிடம் அவன், “நான் உன்னால் வஞ்சிக்கப்படுவது முறையாகாது. என்னால் உன் இராணியைக் காணமுடியவில்லை, அவள் அந்தப்புரத்திற்குள் இல்லை” என்றான்.(107) இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் சற்று நேரம் சிந்தித்த பின் மறுமொழி கூறினான், “ஐயா, அசுத்தங்கள் எதனுடனாவது ஏற்பட்ட தொடர்பால் நீர் மாசடையவில்லை என்பது உறுதிதானா என்பதைச் சற்றுக் கவனத்துடன் நினைவுப்படுத்திப் பாரும். கற்புடைய மனைவியான என் ராணி, உணவின் எச்சங்களால் தூய்மையற்றிருப்பவர்கள் எவராலும் காணப்பட முடியாதவள் ஆவாள். அதே போல, மாசுடனிருப்பவர்கள் முன் அவள் தோன்றுவதுமில்லை” என்றான்.(108)
இவ்வாறு சொல்லப்பட்ட உதங்கன், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும். அவசரமாக வந்ததால், (உணவருந்தி்விட்டு {சாணமாக இருக்க வேண்டும்} நின்ற நிலையிலேயே தூய்மைச் சடங்கைச் {நீராடலை} செய்தேன்” என்றான். அப்போது, மன்னன் பௌசியன் “இதுதான் வரம்பை மீறிய குற்றம். நின்றபடி சடங்கைச் செய்தல் சுத்திகரிப்பு ஆகாது. அதுவும் பயணம் மேற்கொள்ளும்போது அப்படிச் செய்தல் கூடாது” என்றான்.(109)
இதை ஏற்றுக் கொண்ட உதங்கன், கிழக்கு முகமாக {கிழக்கை நோக்கி} அமர்ந்து, தன் முகம், கைகள் மற்றும் பாதங்களைக் கழுவினான். பிறகு சத்தமிடாமல் மூன்று முறை நுரையும் வெதுவெதுப்புமில்லாத நீர், தனது குடலை அடையும் வரை எச்சில்படாமல் உறிஞ்சினான். தனது முகத்தை இரு முறை துடைத்தான். பிறகு நீரைக் கொண்டு (காது, மூக்கு போன்ற) தனது உறுப்புகளைத் தொட்டான். இவை யாவற்றையும் செய்து, மீண்டும் பெண்களின் அறைகளுக்குள் அவன் நுழைந்தான்[3].(110)(கும்பகோணம் பதிப்பில், “கிழக்கு முகமாக உட்கார்ந்து, கை கால் முகங்களைச் செவ்வையாகக் கழுவிக் கொண்டு, நுரையில்லாமலும், காய்ச்சப்படாமலுமிருந்த தீர்த்தம் உள்ளே போவது மார்பு வரையில் உணரப்படும்படி சப்தமில்லாமல் மூன்று முறை ஆசமனஞ்செய்து இரண்டு முறை கண், காது, மூக்கு முதலி இடங்களை ஜலத்தினால் துடைத்துக் கொண்டு அந்தப்புரத்திற்குப் போனார்” என்றிருக்கிறது.)
இம்முறை அவன் ராணியைக் கண்டான். ராணியும் அவனைக் {உதங்கனை} கண்டு, மரியாதையாக வணங்கி, ” ஐயா, உமக்கு நல்வரவு. நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டாள்.(111) உதங்கன் அவளிடம், “அந்தக் குண்டலங்களை நீ எனக்குக் கொடுப்பதே தகும். அவற்றை எனது ஆசானுக்குக் {வேதாவுக்குக்} காணிக்கையாகக் கொடுக்க நான் பிச்சை கேட்கிறேன்” என்றான். உதங்கனின் நடத்தையில் மிகவும் மகிழ்ந்த ராணி கொடைக்குத் தகுந்தவனான உதங்கனைக் கடக்க இயலாது என்றெண்ணி, தனது குண்டலங்களைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள். மேலும் அவள், “இந்தக் குண்டலங்களைப் பாம்புகளின் மன்னனான தக்ஷகன் விரும்புகிறான். எனவே, இந்தக் குண்டலங்களை மிகவும் கவனமாக நீர் கொண்டு செல்ல வேண்டும்” என்றாள்.(112)
“இப்படிச்சொல்லப்பட்ட உதங்கன், ‘பெண்ணே, அச்சங்கொள்ளாதே, பாம்புகளுக்குத் தலைவனா தக்ஷகனால் என்னை விஞ்ச முடியாது” என்றான்.(113) இதைச் சொல்லிவிட்டு ராணியிடம் விடைபெற்றுக் கொண்ட அவன் {உதங்கன்}, பௌசியன் முன்பு வந்து “பௌசியா, நான் மனம் நிறைந்தேன்” என்றான். பௌசியன் உதங்கனிடம், “கொடைக்குத் தகுந்த பொருளை நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகே கொள்ள முடியும். நீர் தகுதியுள்ள விருந்தினர், எனவே, நான் சிராத்தம் செய்ய விரும்புகிறேன். சற்றுப் பொறுப்பீராக” என்றான்.(114,115)
உதங்கன், “சரி, நான் பொறுத்திருக்கிறேன். தயாராக வைத்திருக்கும் தூய பொருட்களை விரைவாகக் கொண்டு வருமாறு வேண்டுகிறேன்” என்றான். இதை ஏற்றுக் கொண்ட மன்னன் {பௌசியன்}, உதங்கனை முறையாக உபசரித்தான்.(116) தனக்கு முன்பாக வைக்கப்பட்ட உணவு, முடியுடன் கூடியதாகவும், குளிர்ந்ததாகவும், தூய்மையற்றதாகவும் இருப்பதை உதங்கன் கண்டான். அவன் பௌசியனிடம், “நீ எனக்குச் தூய்மையற்ற உணவைக் கொடுத்ததால், பார்வையை இழப்பாயாக” என்று சபித்தான்.(117) பதிலுக்குப் பௌசியனும், “தூய்மையான உணவைத் தூய்மையற்றது என்று சொன்னதால் நீர் பிள்ளைப்பேறில்லாமல் போவீராக’ என்று சபித்தான்.(118) அதன் பேரில் உதங்கன் மீண்டும், “எனக்குத் தூய்மையற்ற உணவைக் கொடுத்து, பதில் சாபமும் கொடுப்பது உனக்குத் தகாது. கண்ணால் சாட்சி கண்டு உன்னில் நீ மனம் நிறைவாயாக” என்றான்.(119)
உணவு தூய்மையற்றதாகத்தான் இருக்கிறது என்பதைப் பௌசியன், நேரடியாகவே கண்டு கொண்டான். அந்த உணவு உண்மையிலேயே உண்மையிலேயே தூய்மையற்றதாகவும், குளிர்ந்ததாகவும், பின்னலிடாத பெண்ணால் தயாரிக்கப்பட்டு அதில் முடி கலந்திருப்பதையும் உறுதி செய்து கொண்ட பௌசியன் உதங்க முனியை அமைதிப்படுத்த முயலும் வகையில்,(120) “ஐயா, உம் முன்னால் வைத்த உணவு குளிர்ந்ததாகவும், முடியுடனும் இருக்கிறது. சரியான அக்கறையுடன் இந்த உணவு தயாரிக்கப்படவில்லை. ஆகவே என்னை மன்னிப்பீராக. நான் குருடனாக வேண்டாம்” என்றான்.(121) உதங்கன், “நான் சொல்வது நடந்தாக வேண்டும். எனினும், நீ குருடானாலும் மிக விரைவில் பார்வையை அடைவாய். உனது சாபமும் பலனளிக்காமல் போக அருள்வாயாக” என்றான்.(122)
பௌசியன் சொன்னான், “என் கோபம் இன்னும் தணியாதிருப்பதால், எனது சாபத்தைத் திரும்பப்பெற இயலாதவனாக நான் இருக்கிறேன். ஆனால் நீர் இதை அறியாதிருக்கிறீர்.(123) பிராமணனின் வார்த்தைகள் கூர்முனை கொண்ட கத்தியைப் போன்றதாக இருந்தாலும், அவனது இதயம் புதிதாய்க் கடையப்பட்ட வெண்ணையைப் போன்று மென்மையானது. க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரையில் இது வேறு வகையாகும். அவனது வார்த்தைகள் புதிதாய்க் கடையப்பட்ட வெண்ணையைப் போல இருந்தாலும், அவனது இதயம் கூர்முனை கொண்ட கருவியைப் போன்றதாகும்.(124) வழக்கம் இப்படியிருப்பதால், என் இதயத்தின் கடினத்தால் என் சாபத்தை என்னால் தணிக்க முடியவில்லை. எனவே, நீர் உம் வழியில் செல்வீராக” என்றான். அதற்கு உதங்கன், “நீ தூய்மையற்ற உணவினைத்தான் கொடுத்தாய் என்பதை நான் காண்பித்தேன். நீ என்னை அமைதிப்படுத்தினாய்.(125) அஃது ஒருபக்கம் இருந்தாலும், தூய்மையான உணவைத் தூய்மையற்றது என்று நான் சொன்னதாகக் கருதிய நீ, எனக்குப் பிள்ளைப் பேறற்றுப் போகட்டும் என்று சபித்தாய். ஆனால், உணவு தூய்மையற்றதாகவே இருந்தது. எனவே, உனது சாபம் என்னை ஒன்றும் செய்யாது. இதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்” என்று சொன்னான்.(126)
ஜனமேஜயன் துயரம் | ஆதிபர்வம் – பகுதி 3 இ(பௌசிய பர்வம்)உதங்கரிடம் இருந்து காதணிகளைத் திருடிய தக்ஷகன்; இந்திரன் உதவியுடன் மீண்டும் காதணிகளை அடைந்த உதங்கர்; ஜனமேஜயனைப் பாம்பு வேள்வி செய்யத் தூண்டிய உதங்கர்
இதைச் சொன்ன உதங்கன், காதுகுண்டலங்களுடன் அங்கிருந்து புறப்பட்டான். சில நேரம் தோன்றுவதும், சில நேரம் மறைவதுமாகச் சாலையில் ஓர் அம்மணப் பிச்சைக்காரன் தன்னை நோக்கி வருவதை உதங்கன் கண்டான்.(128) குண்டலங்களைத் தரையில் வைத்துவிட்டு, நீரை நோக்கி உதங்கன் சென்றான். அந்நேரத்தில் அந்தப் பிச்சைக்காரன் வெகுவிரைவாக அந்த இடத்திற்கு வந்து, குண்டலங்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.(128) உதங்கன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் சடங்குகளை முடித்துக் கொண்டு, தேவர்களையும், ஆன்ம ஆசான்களையும் மரியாதையுடன் வணங்கி வெகுவிரைவாக அந்தக் கள்வனைப் பின்தொடர்ந்து சென்றான்.(129) மிகவும் சிரமப்பட்டு அவனை {திருடனை} முந்தி வந்து, குண்டலங்களை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்க முயற்சித்தான். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில், பிச்சைக்காரத் தோற்றத்தை விட்டு தன் உண்மை வடிவை ஏற்ற தக்ஷகன், தரையில் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்தான்.(130) அதற்குள் நுழைந்த தக்ஷகன், தன் வசிப்பிடமான பாம்புகளின் உலகிற்குச் சென்று சேர்ந்தான். உதங்கன், ராணி {மன்னன் பௌசியனின் மனைவி} சொன்னதை இப்போது நினைத்துப் பார்த்து, பாம்பைப் பின்தொடரவென,(131) அந்தப் பொந்தைத் தனது குச்சியை வைத்துப் பெரிதாக்கத் தொடங்கினான். ஆனால் பெரிய முன்னேற்றத்தை அவனால் {உதங்கனால்} காண முடியவில்லை. இந்திரன் அவனுக்கு {உதங்கனுக்கு} உதவ முன் வந்து தனது இடியை (வஜ்ரம்) அனுப்பினான். அந்த இடி, அந்தக் குச்சிக்குள் நுழைந்து, அந்தப் பொந்தைப் பெரிதாக்கியது.(132,133) உதங்கன் அந்த இடியைப் பின்தொடர்ந்து பொந்துக்குள் சென்றான். உள்ளே சென்று பார்த்ததும், பாம்புகளின் உலகம் ஒரு முடிவே இல்லாதிருப்பதைக் கண்டான். நூற்றுக்கணக்கான அரண்மனைகள், பெரிய கோபுரங்களுடனும், பெரிய வாயிற்கதவுகளுடனும் கூடிய மாளிகைகள், விளையாட்டுக்கும் கேளிக்கைக்கும் உகந்த பல்வேறு அற்புதமான இடங்கள் எனப் பலவும் அங்கே இருந்தன.(134)
உதங்கன் பின்வரும் ஸ்லோகங்களைச் சொல்லிப் பாம்புகளைத் துதித்தான்:
“மன்னன் ஐராவதனின் ஆளுகைக்குட்பட்டவர்களும், போரில் வல்லவர்களுமான பாம்புகளே, காற்றினால் உந்தப்பட்ட மேகங்கள் வேகமாகச் சென்று, இடியுடன் கூடிய மழையைப் பொழிவது போல் போர்க்களங்களில் போர்க்கருவிகளைப் பொழிபவர்கள் நீங்கள்.(135) அழகானவர்களாகவும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கும் ஐராவதனின் பிள்ளைகளே, பல வண்ணங்களிலான காது குண்டலங்களை அணிந்த நீங்கள் ஆகாயத்துச் சூரியனைப் போல ஒளிவீசுகிறீர்கள்.(136) கங்கையின் வடக்குக் கரையில், பாம்புகளின் பல வசிப்பிடங்கள் இருக்கின்றன. அங்கேதான் நான் பாம்புகளாகிய உங்களைத் தொடர்ந்து துதித்து வருகிறேன்.(137) சூரியனின் கதிர்களில் எரிந்து கொண்டே நகர ஐராவதனைத் தவிர வேறு எவனால் முடியும்? (ஐராவதனின் சகோதரனான) திருதராஷ்டிரன் செல்லும்போது, அவனுக்குப் பணிசெய்ய இருபத்தெட்டாயிரத்து எட்டு {28008} பாம்புகள் பின்தொடர்ந்து செல்வர்.(138) அவனருகில் உலவுபவர்களே, அவனுக்குத் தொலைவில் இருப்பவர்களே, ஐராவதனை உங்கள் அண்ணனாகக் கொண்ட உங்கள் அனைவரையும் நான் துதிக்கிறேன்.(139)
முன்பு குருக்ஷேத்திரத்தையும், காண்டவ வனத்தையும் தனது வசிப்பிடமாக வைத்திருந்த ஓ தக்ஷகனே, குண்டலங்களை அடைய நான் உன்னையும் வணங்குகிறேன்.(140) தக்ஷகன், அஸ்வசேனன் ஆகிய நீங்கள் இக்ஷுமதி {நதியின்} கரையில் உள்ள குருக்ஷேத்திரத்தில் தங்கியிருக்கும் தோழர்கள் ஆவீர்கள்.(141) மஹத்யும்னா என்ற புனிதமான இடத்தில் வசிக்கும் தக்ஷகனின் தம்பியும் பாம்புகளின் தலைவனுமான சிறப்பு மிக்கச் சுருதசேனா, உன்னையும் நான் வணங்குகிறேன்” என்று வணங்கினான் {உதங்கன்}.(142)
பிராமண முனிவனான உதங்கன் முக்கியமான பாம்புகளையெல்லாம் இப்படி வணங்கியும், குண்டலங்கள் தனக்குக் கிடைக்காததை எண்ணிய போது,(143) இரு பெண்கள் கருப்பும், வெள்ளையுமாக இருந்த நூலைக் கொண்டு ஒரு துணியை நெய்வது போலக் கண்டான். அதே போலப் பனிரெண்டு ஆரங்களைக் கொண்ட சக்கரத்தை ஆறு சிறுவர்கள் சுழற்றுவது போலவும் கண்டான். அதே போல, ஓர் அழகான குதிரையுடன் ஒரு மனிதனையும் கண்டான். அவர்களையெல்லாம் நிறைவு செய்யப் பின்வரும் இந்த மந்திரங்களைச் சொன்னான்:(144)
“இந்தச் சக்கரமானது தனது சுற்றளவில் இருபத்து நாலாகப் {24} பிரிக்கப்பட்டு முன்னூறு {300} ஆரங்களுடன் ஆறு {6} சிறுவர்களால் (காலங்களால்) சுற்றப்பட்டு, எப்போதும் செயலில் வைக்கப்பட்டு, சந்திரனின் மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன.(145) அண்டத்தின் பிரதிபலிப்பான இந்த மங்கையர், தொடர்ந்து கருப்பு வெள்ளை நூல்களால் துணியைத் தடையில்லாமல் தொடர்ந்து நெய்து பல பயனுள்ள பொருட்களைக் கொண்ட உலகங்களுக்கும், அதில் வசித்துவரும் உயிர்களுக்கும் வாழும் வகையைச் செய்கின்றனர்.(146) இடியைப் பயன்படுத்துபவனே, அண்டத்தைக் காப்பவனே, விருத்திரனையும் நமுசியையும் கொன்றவனே {இந்திரனே}, கருப்பு உடையணிந்து உண்மையையும், பொய்ம்மையையும் இந்த அண்டத்தில் காட்டுபவனே,(147) பெருங்கடலின் ஆழங்களில் இருந்து கண்டெடுத்த அக்னியின் மாற்றுருவான குதிரையை உனது வாகனமாய்க் கொண்டவனே, தேவர்களின் தலைவனே, மூவுலகங்களின் தலைவனே, ஓ புரந்தரா {இந்திரா}! உன்னை வணங்குகிறேன்” என்றான் {உதங்கன்}.(148)
குதிரையுடன் இருந்த மனிதன் உதங்கனிடம், “உனது துதியால் என் மனம் நிறைந்தேன். நான் உனக்கு என்ன நல்லதைச் செய்யட்டும்?” என்றான்.(149) உதங்கன், “பாம்புகளை எனது ஆளுகைக்குள் கொண்டு வா” என்றான். அந்த மனிதன், “இந்தக் குதிரைக்குள் {ஆசனவாய்க்குள்} ஊதுவாயாக” என்றான்.(150) உதங்கன் அந்தக் குதிரைக்குள் ஊதினான். அப்படி ஊதப்பட்ட குதிரையின் உடலின் அங்கங்களிலெல்லாம் நெருப்புடன் கூடிய புகை தோன்றி அந்தப் பாம்புகளின் உலகத்தையே பொசுக்கியது.(151) அளவிலா ஆச்சரியத்தை அடைந்த தக்ஷகன், அந்த நெருப்பின் வெம்மையைத் தாங்க முடியாமல், தனது இருப்பிடத்தை விட்டு உதங்கனிடம் வந்து,(152) “ஐயா, உம்மை வேண்டுகிறேன். உமது குண்டலங்களை எடுத்துக் கொள்ளும்” என்றான் {தட்சகன்}. உதங்கன் அதை எடுத்துக் கொண்டான். குண்டலங்களை மீண்டும் அடைந்த உதங்கன்,(153) ‘ஓ, இன்றுதானே ஆசானின் {வேதாவின்} மனைவி சொன்ன புனிதமான நாள். நான் வெகுதொலைவிலல்லவா இருக்கிறேன். எப்படி எனது மரியாதையை அவளுக்குச் செலுத்துவது’ என்று நினைத்தான். உதங்கன் இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில் குதிரையுடன் இருந்த மனிதன்,(154) “உதங்கா, இந்தக் குதிரையில் ஏறுவாயாக, இஃது உன் ஆசானின் {வேதாவின்} வசிப்பிடத்திற்கு நொடியில் அழைத்துச் செல்லும்” என்றான்.(155)
உதங்கனும் அதற்குச் சம்மதித்து, அந்தக் குதிரையின் மீதேறி குருவின் {வேதாவின்} இல்லத்திற்குச் சென்றான். அவனது {உதங்கனின்} ஆசானின் மனைவி {வேதாவின் மனைவி}, காலையிலேயே குளித்து முடித்துத் தனது கூந்தலை அலங்கரித்து, உதங்கன் வரவில்லையென்றால் அவனைச் சபிக்கக் காத்திருந்தாள்.(156) அதே வேளையில், உதங்கன் குருவின் {வேதாவின்} இருப்பிடத்திற்குள் நுழைந்து, தனது குருவின் மனைவிக்குத் தனது மரியாதையைத் தெரிவித்தான். அப்போது அவள்,(157) “உதங்கா, நீ சரியான சமயத்தில், சரியான இடத்திற்கு வந்தாய், உன்னை வரவேற்கிறேன். மகனே, நீ ஓர் அப்பாவி, உன்னைச் சபிக்க மாட்டேன். நற்பேறு உன்னெதிரிலேயே இருக்கிறது. உன் விருப்பங்கள் யாவும் வெற்றியால் முடிசூடப்படட்டும்” என்றாள்.(158)
உதங்கன் ஆசானுக்காகக் காத்திருந்தான். அவனது ஆசானும் {வேதா}, “உனக்கு நல்வரவு. உன்னை நீண்ட நாளாகக் காணமுடியவில்லையே என்ன காரணம்?” என்றார்.(159) உதங்கன், “ஐயா, என்னுடைய அலுவலை நான் பார்க்கும்போது பாம்புகளின் அரசன் தக்ஷகனால் தடை வந்தது. அதனால் நான் பாம்புகளின் வசிப்பிடம் சென்றேன்.(160) அங்கே நான் இரு பெண்கள் கருப்பும் வெள்ளையுமான நூல்களால் ஒரு துணியை நெய்துகொண்டிருப்பதைக் கண்டேன். அதற்கு என்ன பொருள் என்று உங்களிடம் வேண்டிக் கேட்கிறேன்?(161) அதே போல, பனிரெண்டு {12} ஆரங்களுடன் கூடிய ஒரு சக்கரத்தை ஆறு {6} சிறுவர்கள் சுழற்றிக் கொண்டிருந்தனர். அஃது எதைக் குறிக்கிறது? நான் கண்ட அந்த மனிதன் யார்? நான் பின்தொடர்ந்து வந்த அந்த இயல்புக்குமிக்க {அசாதாரண} குதிரை என்ன?(162) அதேபோல் சாலைவழியில் காளையின் மீதமர்ந்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன். அவன் “உதங்கா, இந்தக் காளையின் சாணத்தை உண்பாயாக, முன்பு உன் குருவும் இதை உண்டிருக்கிறார்” என்றான்.(163) எனவே அவனது வார்த்தைகளின்படி, நான் அந்தச் சாணத்தை உண்டேன். அவன் யார்? உம்மால் கல்விபெற்ற நான், இவை அனைத்தையும் உம்மிடமிருந்து அறிய விரும்புகிறேன்” என்றான்.(164)
இவ்வாறு கேட்கப்பட்ட அவனது ஆசான் {வேதா}, “அந்த இரு மங்கையரும் ததாவும், விததாவும் ஆவர், கருப்பும் வெள்ளையுமான நூல்கள், இரவையும் பகலையும் குறிக்கின்றன. ஆறு {6} சிறுவர்களால் சுழற்றப்படும் பனிரெண்டு {12} ஆரங்களுடன் கூடிய சக்கரம், ஆறு {6} காலங்களைக் கொண்ட வருடத்தைக் குறிக்கிறது.(165) குதிரையுடன் கூடிய அந்த மனிதன் மழை தேவனான பரஜன்யன் {இந்திரன்} ஆவான். அந்தக் குதிரை நெருப்பு தேவனான அக்னி ஆவான். சாலைவழியில் கண்ட அந்தக் காளை யானைகளுக்கு அரசனான ஐராவதமாகும்.(166) அதன்மீதிருந்த மனிதன் இந்திரனாவான். உன்னால் உண்ணப்பட்ட காளையின் சாணம் அமிர்தமாகும். அதனால்தான் நீ பாம்புகளின் வசிப்பிடத்திலிருந்து உயிருடன் திரும்பினாய்.(167) இந்திரன் எனது நண்பன். உன் மீதிருந்த கருணையால் உனக்கு உதவி செய்திருக்கிறான். அதனால் தான் குண்டலங்களுடன் நீ பாதுகாப்பாக இங்கு வந்தாய்.(168) ஓ மனதுக்கினியவனே, நான் உன்னை விடுவிக்கிறேன். நீ நற்பேறு பெறுவாய்” என்றார் {குரு வேதா}. தனது குருவிடம் இருந்து விடுபட்ட உதங்கன், தக்ஷகன் மீதிருந்த அதிகமான கோபத்தால் உந்தப்பட்டு ஹஸ்தினாபுரம் சென்றான்.(169)
அந்த நல்ல பிராமணன் {உதங்கன்}, விரைவாக ஹஸ்தினாபுரம் சென்றடைந்தான். சிறிது காலத்திற்கு முன் தக்ஷசீலத்திலிருந்து வெற்றியுடன் திரும்பிய ஜனமேஜயனுக்காகக் காத்திருந்தான். வெற்றியடைந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்} அமைச்சர்களால் சூழப்பட்டிருப்பதை உதங்கன் கண்டான்.(170,171) தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் சரியான முறையில் அவனுக்குச் {ஜனமேஜயனுகுச்} சொன்னான். அந்த ஏகாதிபதியிடம் சரியான நேரத்தில், இனிமையாகப் பேசிய உதங்கன்,(172) “ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயா}! உனது கவனத்துக்கு அவசரமாக வரவேண்டிய செய்திகளிருக்கும் போது, இப்படிச் சிறுபிள்ளையைப் போல் பொழுதைப் போக்குகிறாயே, எப்படி?” என்றான்.(173)
“சௌதி சொன்னார், “இவ்வாறு கேட்கப்பட்ட அந்த ஏகாதிபதி ஜனமேஜயன், அந்தப் பிராமணர்களில் சிறந்தவனை வணங்கி,(174) “என் குடிமக்களின் நலனை மனத்தில் வைத்தே, எனது கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் செய்ய வேண்டிய கடமை குறித்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்?” என்று கேட்டான்.(175)
பிராமணர்களில் முதன்மையானவனும், நற்செயல்களால் அடையாளங்காணப் படுபவனுமான உதங்கன், பெரும் இதயம் கொண்ட அந்த ஏகாதிபதியிடம் {ஜனமேஜயனிடம்}, “ஓ மன்னா! உனது கவனத்திற்கு வர வேண்டிய அந்தக் கடமை உன்னுடையதுதான். அதனால் தயைகூர்ந்து அதைச் செய்வாயாக.(176) ஓ மன்னர்களுக்கு மன்னா! உனது தந்தை {பரீக்ஷித்} தக்ஷகனால் கொல்லப்பட்டான்.(177) உனது தந்தையின் மரணத்திற்காக அந்தப் பாம்பை நீ பழிவாங்க வேண்டும். விதிவசத்தால் நீ பழிக்கு பழி வாங்கும் நேரமும் வந்துவிட்டது.(178) காரணமில்லாமல் உனது தந்தை {பரீக்ஷித்} அந்தப் பாம்பால் கடிக்கப்பட்டு, இடிவிழுந்த மரமாக ஐம்பூதங்களாகக் குறைக்கப்பட்டான்.(179)
அந்தத் தீய தக்ஷகன், பாம்பு இனத்திலேயே இழிவானவன். அதிகாரத்தால் போதையுண்டு, தேவனைப் போன்றவனும் புனிதமான முனிவர்களைக் காக்கும் மன்னனுமான உனது தந்தையைத் தேவையில்லாமல் தீண்டினான்.(180) செயல்களால் தீயவனான அந்தத் தக்ஷகன், உனது தந்தையைக் காப்பாற்ற வந்த மருத்துவர்களின் தலைவன் கசியபரையும் காப்பாற்ற விடாமல் திரும்பப் போக வைத்தான்.(181) அந்தத் தீய பாதகனைத் தீயில் விழ வைக்கப் பாம்பு வேள்வி ஒன்றை நீ செய்ய வேண்டும். ஓ மன்னா! அதற்கான உத்தரவைக் கொடுப்பாயாக.(182) இப்படித்தான் நீ உனது தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்க முடியும். இதனால், நீ எனக்கும் பெரிய உதவியைச் செய்தவனாவாய்.(183) ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் கொடிய பாதகன் {தட்சகன்}, எனது ஆசானுக்கான அலுவலை நான் செய்யும்போது, அந்த அலுவலுக்குத் தடையேற்படுத்தியிருக்கிறான்” என்றான் {உதங்கன்}.(184)
சௌதி தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த ஏகாதிபதி, தக்ஷகன் மீது பெரு கோபம் கொண்டான். உதங்கனின் பேச்சு வேள்வித் தீயில் நெய்யூற்றியது போல் அந்த மன்னனின் {ஜனமேஜயன்} கோபத்தை அதிகரித்தது.(185) உதங்கனின் முன்னிலையில், துயரால் உந்தப்பட்டு, தனது அமைச்சர்களை அழைத்துத் தனது தந்தையின் {பரிக்ஷித்தின்} மோட்சப் பயணத்தைக் குறித்து விசாரித்தான்.(186) தனது தந்தை மரணித்ததின் சூழல்களை உதங்கனின் உதடுகளால் கேட்டபோது, துன்பத்தின் வலியால் அவன் {ஜனமேஜன்} துயருற்றான்” {என்றார் சௌதி}.(187)
சௌனகருக்கு அந்தணர்கள் காத்திருப்பு! | ஆதிபர்வம் – பகுதி 4(பௌலோம பர்வம்)நெருப்பு கடனில் {அக்னிஹோத்ரத்தில்} ஈடுபட்டுக் கொண்டிருந்த சௌனகருக்காக அந்தணர்களும் சௌதியும் காத்திருப்பு…
நைமிச வனத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்ததும், குலபதி என்று அழைக்கப்பட்ட சௌனகரால் நடத்தப்பட்டதுமான பனிரெண்டு வருட வேள்வியில் பங்கெடுத்த முனிவர்கள் முன்பு, புராணங்களில் தெளிந்த புலமை கொண்ட லோமஹர்ஷணரின் மகனான சௌதி நின்று கொண்டிருந்தார்.(1)
புராணங்களை ஆழ்ந்த கவனத்துடன் கற்றதனால் அவற்றை முழுமையாக அறிந்தவரான அவர் {சௌதி} குவிந்த கரங்களுடன், “மன்னன் ஜனமேஜயனின் நாக வேள்விக்கு, ஒரு காரணமாயிருந்த உதங்கனின் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டிவிட்டேன்? மரியாதைக்கு உரியவர்களே, இப்போது நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன சொல்லட்டும்?” என்று கேட்டார்.(2)
அதற்கு அந்தப் புனிதமானவர்கள், “ஓ லோமஹர்ஷணரின் மகனே {சௌதியே}, எங்களுக்குக் கேட்பதில் ஆர்வமுள்ளதையே உம்மிடம் கேட்போம், நீரும் ஒவ்வொரு கதையாகச் சொல்வீராக.(3) எங்கள் தலைவரான {குலபதியான} சௌனகர், தற்போது நெருப்புக்கடன் செய்யும் புனித அறையில் {அக்னி ஹோத்ர சாலையில்} இருக்கிறார்.(4) தேவர்களும், அசுரர்களும் சம்பந்தப்பட்ட கதைகளில், அவர் தேர்ந்த புலமையுள்ளவராவார். அவருக்கு மனிதர்கள், பாம்புகள், கந்தர்வர்கள் குறித்த வரலாறுகள் நன்றாகத் தெரியும்.(5) மேலும், ஓ சௌதியே! கல்விமானான அந்தப் பிராமணரே {சௌனகரே} இந்த வேள்விக்குத் தலைவராவார்.
தன் உறுதிகளுக்கு உண்மையுள்ளவராக, சாத்திரங்கள் மற்றும் ஆரண்யகத்தில் பண்டிதராக, உண்மை பேசுபவராக, அமைதியை விரும்புபவராக, புலன்களை அடக்கியவராக, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி நோன்புகளை நோற்பவராக இருக்கும் அவரே {சௌனகரே} {இதற்குத்} தகுதிவாய்ந்தவராவார்.(6,7) எங்கள் அனைவருக்கும் அவர் மதிப்புக்குறியவராவார். எனவே, அவருக்காகக் {சௌனகருக்காகக்} காத்திருப்பதே நமக்குத் தகும்.(8) அவர் எப்போது வந்து, உயர்ந்த மதிப்புடைய தன் இருக்கையில் {தலைமை ஆசனத்தில்} அமர்கிறாரோ, அப்போது அந்த இருபிறப்பாளர்களில் சிறந்தவர் {சௌனகர்} உம்மிடம் கேட்பனவற்றிற்குப் பதிலளிப்பீராக” என்றார்கள்.(9)
சௌதி, “அப்படியே ஆகட்டும். அந்த உயரான்ம தலைவர் {சௌனகர்} வந்து அமர்ந்ததும், அவரது கேள்விகளுக்கேற்றபடி, பல வகையான தலைப்புகளிலான புனிதமான கதைகளை நான் உரைப்பேன்” என்று சொன்னார்.(10)
சிறிது நேரங்கழித்து, தனது கடமைகள் அனைத்தையும் முடித்து, கடவுளரைத் துதிகளாலும் {மந்திரங்களாலும்}, ஆவிகளை {பிதிர்களை} நீர்க்காணிக்கையாலும் அமைதிப்படுத்திய அந்தச் சிறப்புவாய்ந்த அந்தணர் (சௌனகர்), பிறகு, நிம்மதியுடன் அமர்ந்திருந்தவர்களும், கடும் நோன்புகளைக் கொண்டவர்களுமான அந்தத் தவசிகளின் கூட்டத்துக்கு {சபைக்கு} எதிரில் சௌதி எங்கு அமர்ந்திருந்தாரோ அந்த வேள்வி நடக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தார். தத்தமது இருக்கையில் அமர்ந்திருந்த ரித்விக்குகள், சாத்யர்கள் ஆகியோருக்கு மத்தியில் அமர்ந்த அந்தச் சௌனகர் பின்வருமாறு பேசினார்.(11,12)
பிருகு பரம்பரை | ஆதிபர்வம் – பகுதி 5(பௌலோம பர்வம் – 2)பிருகு குலத்தின் வரலாற்றைக் கேட்ட சௌனகர்; அவற்றைச் சௌனகருக்குச் சொன்ன சௌதி; புலோமையை மணந்த பிருகு; அக்னியிடம் கேள்வி கேட்ட ராட்சசன்..
“சௌனகர் சொன்னார், “குழந்தாய் {சௌதியே}, முன்பு, உன் தகப்பனார் அனைத்துப் புராணங்களையும், பாரதத்தையும் கிருஷ்ண துவைபாயனரிடம் கற்றுத் தேர்ந்திருந்தார். நீயும் அவற்றைக் கற்றறிந்திருக்கிறாயா?(1) அந்தப் பண்டைய ஆவணங்களில் வரிசை படுத்தப்பட்டிருப்பனவான, ஆர்வத்தைத் தூண்டும் கதைகள், விவேகமுள்ள முதல் தலைமுறையினரின் வரலாறுகள் ஆகிய அனைத்தையும் உன் தந்தை திரும்பக் கூறும்போது நாங்கள் கேட்டிருக்கிறோம்.(2) முதலில், பிருகு குலத்தின் வரலாற்றையே நான் அறிய விரும்புகிறேன். அந்த வரலாற்றை மறுபடியும் நீ விவரித்துச் சொல்வாயாக, நீ சொல்வதை நாங்கள் கவனத்துடன் கேட்போம்” என்றார்.(3)
சௌதி சொன்னார், “முன்பு வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} உட்பட உயர்-ஆன்ம அந்தணர்கள் படித்து ஓதியதையெல்லாம் நானும் கற்றிருக்கிறேன்;(4) என் தந்தை {ரோமஹர்ஷணர்} கற்றிருந்ததையெல்லாம் நானும் கற்றிருக்கிறேன். ஓ பிருகு பரம்பரையின் வழித்தோன்றலே {சௌனகரே}! இந்திரனாலும், தேவர்களாலும், முனிவர் குழுக்களாலும், மருத்துகளாலும் (காற்று) போற்றத்தக்க பிருகு குலத்தைக் குறித்தவற்றைக் கேட்பீராக.(5,6) ஓ பெருமுனிவரே, இந்தக் குடும்பத்தின் கதையைப் புராணங்களில் விவரித்திருப்பது போல விவரிக்கிறேன். நாம் அறிந்தவரையில், அருள்நிறைந்த பெருமுனிவர் பிருகு[1], (பிருகு [அ] ப்ருகு என்றால் தானே தோன்றியவர் என்பது பொருளாம்.)தான்தோன்றியாகத் {சுயம்புவாகத்} தன்னாலேயே நிலைத்திருக்கும் பிரம்மனிடம் இருந்து வருணனின் வேள்வி ஒன்றில் பிறந்தவர் ஆவார். பிருகுவிற்குச் சியவனன் என்று ஒரு மகன் இருந்தான்; அவர் {பிருகு} அவன்மீது {சியவனன் மீது} மிகுந்த அன்புடனிருந்தார்.(7,8) சியவனனுக்கு நற்குணமிக்க பிரம்மாதி {பிரமதி} என்று ஒருவன் பிறந்தான். பிரம்மாதிக்கு தேவலோக நடனமாது கிரிடச்சி {கிருதாசி} மூலம் ருரு என்றொரு மகன் பிறந்தான்.(9) ருருவுக்கு, பிரமத்வரை என்ற தன் மனைவி மூலம் சுனகன் என்றொரு மகன் பிறந்தான். ஓ சௌனகரே![2] (சுனகரின் வழிவந்தவர் என்பதால் சௌனகர்)உமது பெரும் மூதாதையான அவர் {சுனகர்} தன் வழிகளில் மிகவும் நற்குணமிக்கவராகத் திகழ்ந்தார்.(10) தன்னைத் தவத்திற்கு {ஆன்மிகத்திற்கு} அர்ப்பணித்திருந்த அவர் {சுனகர்}, நற்பெயருடன், நீதிமானாக, வேதம் அறிந்தவர்களில் மேம்பட்டவராக இருந்தார். அவர் நற்குணமுள்ளவராக, உண்மையானவராக, ஒழுக்கமுடையவராகவும் இருந்தார்” என்று பதிலுரைத்தார் {சௌதி}.(11)
சௌனகர், “ஓ சூத மைந்தனே {சௌதியே}, புகழ்பெற்ற பிருகுவின் மைந்தனுக்குச் சியவனன் என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது? அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக!” என்று கேட்டார்.(12)
சௌதி சொன்னார், “பிருகுவுக்குப் புலோமை என்ற பெயரில் ஒரு மனைவியிருந்தாள். பிருகு அவளிடம் {புலோமையிடம்} அன்புடன் இருந்தார். பிருகுவின் மைந்தனை {சியவனனை} சுமந்து அவள் {புலோமை} பெரிய உருவம் பெற்றாள்.(13) அந்த அறம்சார்ந்த இடத்தில் புலோமை அந்நிலையில் இருந்த போது, ஒருநாள், தன்னறத்திற்கு உண்மையுடன் இருப்பவர்களில் மேன்மையான பிருகு, அவளை {புலோமையை} வீட்டில் விட்டுவிட்டு, நீராடுவதற்காக {தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள} வெளியே சென்றார். அப்போதுதான், புலோமன் என்றழைக்கப்பட்ட {அவள் பெயரையே கொண்ட} ராட்சசன் ஒருவன், பிருகுவின் இல்லத்திற்கு வந்தான்.(14,15) முனிவரின் இல்லத்திற்குள் நுழைந்த ராட்சசன் {புலோமன்}, எவ்விதத்திலும் களங்கமில்லாத பிருகுவின் மனைவியைக் {புலோமையைக்} கண்டான். அவளைக் கண்டதும் காமத்தில் நிறைந்து தன் அறிவை இழந்தான்.(16) அழகான புலோமை, கானகத்தின் கிழங்குகளையும், கனிகளையும் கொடுத்து அந்த ராட்சசனை உபசரித்தாள்.(17)
ஓ நன்முனிவரே {சௌனகரே}! அவளை {புலோமையைப்} பார்த்ததுமுதல் காமத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ராட்சசன் {புலோமன்} மிகவும் மகிழ்ந்து, அனைத்து வகையிலும் களங்கமில்லாத அவளை {புலோமையை} அபகரிப்பது எனத் தீர்மானித்தான்.(18) “என் திட்டம் நிறைவேறியது” என்று சொன்ன அந்த ராட்சசன் {புலோமன்}, அந்த அழகான பெண்ணை அபகரித்துச் செல்ல எண்ணினான். உண்மையில், மனதிற்கினிய புன்னகைக் கொண்ட அவளை {புலோமையை} அவளது தந்தை முன்னர் அவனுக்கு {ராட்சசன் புலோமாவிற்குத்தான்} நிச்சயித்திருந்தாலும்[3], (புலோமையின் குழந்தைப் பருவத்தில் அவள் அழுது கொண்டிருந்த போது, அவளை அச்சுறுத்துவதற்காக, “ராட்சசா, இவளைப் பிடித்துக் கொள்!” என்று அவளது தந்தை சொன்னார். அப்போது, அங்கு மறைந்திருந்த புலோமன் என்ற ராட்சசன் அதைக் கேட்டு அவளையே தன் மனைவியாக நினைத்தான்)பின்னர், முறையான சடங்குகளுடன் பிருகுவிற்கே அவளை {புலோமையை} அளித்தார். ஓ பிருகுகுலத்தவரே {சௌனகரே}, ஆழமான இந்தக் காயம் {புலோமையை பிருகுவிடம் இழந்தது} அந்த ராட்சசன் மனத்தைப் பெரும் பாடுபடுத்தியது, அந்தக் கணமே, அந்த மங்கையைக் {புலோமையைக்} கடத்துவதற்கு மிகவும் சிறந்த சந்தர்ப்பம் என்று நிச்சயித்தான். அறையின் மூலையில் வேள்வித்தீ சுடர்விட்டு எரிவதை அந்த ராட்சசன் {புலோமன்} கண்டான்.(19-21)
அந்த நெருப்பிடம் அந்த ராட்சசன், “ஓ அக்னியே சொல், நியாயமாக இந்தப் பெண் யாருடைய மனைவி என்பதை எனக்குச் சொல்வாயாக.(22) நீயே தேவர்களின் வாயாக இருக்கிறாய்; அதனால் என் கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறாய். மேலான நிறமுடைய இந்த பெண் முதலில் என்னால்தான் மனைவியாக வரிக்கப்பட்டாள், ஆனால் பிறகு இவள் தந்தை பொய்யனான பிருகுவிடம் இவளை ஒப்படைத்தான். இவளைத் தனிமையில் கண்ட நான், ஆசிரமத்திலிருந்து வலுக்கட்டாயமாக அபகரித்து செல்லத் தீர்மானித்திருப்பதால், பிருகுவின் மனைவியாக இவ்வழகிக் கருதத்தக்கவளா என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. முதலில் எனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இந்தக் மெல்லிடையாளைப் பிருகு அடைந்தான் என்று நினைக்கும் போதே கோபத்தால் என் இதயம் எரிகிறது” என்றான் {புலோமன்}.(23-25)
“சௌதி தொடர்ந்தார், “இந்த வகையிலே அந்த ராட்சன் {புலோமன்}, தழலுடன் கூடிய அந்த நெருப்பு தேவனிடம் {அக்னியிடம்}, அந்த மங்கை பிருகுவின் மனைவிதானா என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.(26) அந்தத் தேவனோ {அக்னி} பதில் கூற அச்சப்பட்டான். “ஓ நெருப்பு தேவா {அக்னியே}” என்று சொன்ன அவன் {ராட்சசன் புலோமன்}, “ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் எப்போதும் உறைந்திருந்து அவன் அல்லது அவளின் நற்செயல்களுக்கும், தீச்செயல்களுக்கும் சாட்சியாக இருப்பவன் நீ. ஓ மரியாதைக்குரியவனே {அக்னியே}! என் கேள்விக்கு உண்மையான பதிலைக் கூறுவாயாக.(27) என் மனைவியாக நான் தேர்ந்தெடுத்திருந்தவளை பிருகு அபகரிக்கவில்லையா? நான் முதலில் தேர்ந்தெடுத்ததால் இவள் என்னுடைய மனைவிதான் என்ற உண்மையை அறிவிப்பாயாக.(28) இவள் பிருகுவின் மனைவிதானா என்று நீ பதிலுரைத்த பின்பு, உன் கண்ணெதிரிலேயே இவளை இந்த ஆசிரமத்திலிருந்து நான் தூக்கிச் செல்வேன். எனவே நீ உண்மையுடன் பதிலுரைப்பாயாக” {என்று அந்த ராட்சசன் சொன்னான்}.(29)
சௌதி தொடர்ந்தார் “ஏழு தழல்களைக் கொண்ட அந்தத் தேவன் {அக்னி} அரக்கனின் வார்த்தைகளைக் கேட்டு பொய்யுரைக்கவும் அஞ்சி, அதேயளவு பிருகுவின் சாபத்திற்கும் அஞ்சி பெரும் துயருக்கு ஆளானான். நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்தத் தேவன் {அக்னி} மென்னொலி வார்த்தைகளால் பதிலளித்தான். (30)
“ஓ ராட்சசா {புலோமா}, இந்தப் புலோமையை முதலில் நீயே தேர்ந்தெடுத்தாய். ஆனால் முறையான புனிதமான சடங்குகளுடனும், வேண்டுதல்களுடனும் நீ அவளை {புலோமையை} ஏற்கவில்லை.(31) அருள் கிடைக்கும் என்ற விருப்பத்தில், வெகுதொலைவுக்கும் புகழ்மிகுந்த இந்த மங்கையை {புலோமையை}, பிருகுவுக்கு அவளது தகப்பன் அளித்தான்.(32) ஓ ராட்சசா, அவள் {புலோமா} உனக்கு அளிக்கப்படவில்லை. வேதச்சடங்குகளுடன், என் முன்னிலையில்தான் இந்த மங்கை பிருகு முனிவரால் முறையாக தன் மனைவியாக வரிக்கப்பட்டாள்.(33) இவளே அவள் என்று நானறிவேன். பொய்ம்மை பேச நான் துணிய மாட்டேன். ஓ ராட்சசர்களில் சிறந்தவனே, பொய்ம்மைக்கு இந்த உலகில் மதிப்பில்லை” என்று பதிலளித்தான் {அக்னி}.(34)
சியவனன் பிறப்பு! | ஆதிபர்வம் – பகுதி 6(பௌலோம பர்வம் – 3)சியவனன் பிறப்பும் பெயர்க்காரணமும்; ராட்சசன் மாண்டது; பிருகுவிடமிருந்து அக்னிக்குக் கிடைத்த சாபம்…
சௌதி சொன்னார், “ஓ பிராமணரே {சௌனகரே}, இந்த வார்த்தைகளை நெருப்பு தேவனிடமிருந்து {அக்னியிடமிருந்து} கேட்ட அரக்கன் {புலோமா}, ஆண் காட்டுப் பன்றியின் உருவமெடுத்து, காற்றின் வேகத்துக்கு இணையாக, மனத்தின் வேகத்துடன், அந்த மங்கையைக் {புலோமையைக்} கைப்பற்றித் தூக்கிச் சென்றான்.(1)
இந்தப் பெரும் கொடுமையைத் தாங்கமுடியாமல் கோபப்பட்ட பிருகுவின் குழந்தை, கருப்பையிலிருந்து நழுவி விழுந்தது. அதனாலேயே அந்தக் குழந்தைக்குச் சியவனன்[1] (சியவனன் [அ] ச்யவனன் என்றால் நழுவி விழுந்தவன் என்று பொருள். ச்யவனம் என்றால் நழுவுதல் என்று பொருள்.)என்று பெயர் வந்தது.(2) குழந்தை, தாயின் கருவிலிருந்து நழுவியதையும், அந்தக் குழந்தை சூரியனைப் போல ஒளிர்வதையும் கண்ட ராட்சசன் {புலோமன்} அந்தப் பெண்ணின் {பிருகுவின் மனைவி புலோமையின்} மீதிருந்த பிடியை விட்டுக் கீழே விழுந்து சாம்பலாக மாறினான்.(3)
ஓ பிருகு பரம்பரையில் வந்த பிராமணரே, துயரத்தால் தடுமாறிப் போயிருந்த அந்த அழகிய புலோமை, பிருகு மைந்தனான தனது குழந்தை சியவனனை எடுத்துக் கொண்டு நடந்துசென்றாள்.(4) தனது மைந்தனின் {பிருகுவின்} களங்கமற்ற மனைவி {புலோமை} அழுதுகொண்டிருப்பதைப் பெருந்தகப்பன் பிரம்மனே கண்டான்.(5) அனைவருக்கும் பெருந்தகப்பனான அவன் {பிரம்மன்}, குழந்தையிடம் பாசம் கொண்ட அவளைத் தேற்றினான். அவளது {புலோமாவின்} கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் ஒரு பெரிய நதியை உண்டாக்கின.(6) அந்த ஆறு பெரும் துறவியான பிருகுவின் மனைவியுடைய காலடிகளைத் தொடர்ந்தது. உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} தனது மகனின் {பிருகுவின்} மனைவியைத் {புலோமாவை} தொடரும் அந்த ஆற்றைக் கண்டு, அதற்கு வதுசாரை[2] (வதுசாரை என்றால் பெண்ணுடன் சென்றது என்று பொருள். வது – பெண்; சாரை – ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும் வரிசை.)என்று பெயர் வைத்தான் {பிரம்மன்}. அது சியவனனின் ஆசிரமத்தைக் கடந்து செல்கிறது.(7,8) {அதாவது பின்னாளில் இந்த ஆற்றின் கரையில் தன்னுடைய ஆசிரமத்தை சியவனன் அமைத்துக் கொண்டான்}. இந்த விதத்தில்தான் பிருகுவின் மைந்தனான பெரும் ஆன்ம சக்தியுள்ள சியவனன் பிறந்தான்.
பிருகு, தனது குழந்தை சியவனனையும், அதன் அழகான தாயையும் {மனைவி புலோமையையும்} கண்டார். முனிவர் {பிருகு} கோபத்தில்,(9) “உன்னைக் கடத்த முடிவு செய்து வந்த ராட்சசனிடம் யார் உன்னைக் காட்டிக் கொடுத்தது? ஓ மனதிற்கினிய புன்னகை கொண்டவளே {புலோமையே}, நீ என் மனைவியென்று ராட்சசனுக்குத் தெரிந்திருக்க முடியாது.(10) எனவே, அப்படி உன்னை அரக்கனிடம் சொன்னது {காட்டிக் கொடுத்தது} யார் என்பதைச் சொல், எனது கோபத்தால் அவனைச் சபிக்கப் போகிறேன்” என்று கேட்டார்.(11)
அதற்குப் புலோமை “ஓ, அறுகுணங்கொண்டவரே, அக்னியே (நெருப்பு தேவனே} அந்த ராட்சசனிடம் {புலோமனிடம்} என்னைக் காட்டிக் கொடுத்தது. அவன் (அந்த ராட்சசன் {புலோமன்}}, குராரியைப் {பெண் அன்றிலைப்} போலக் கதறிக் கொண்டிருந்த என்னைக் கடத்திக் கொண்டு போனான்.(12) உமது மகனின் {சியவனனின்} தீவிரப் பிரகாசத்தால் தான் நான் காப்பாற்றப்பட்டேன். அரக்கன் (இந்தக் குழந்தையைப் பார்த்துத்தான்) {சியவனனைப் பார்த்துத்தான்} எனது மீதிருந்த பிடியைவிட்டு, கீழே விழுந்து சாம்பலானான்” என்றாள் {பிருகுவின் மனைவி புலோமை}.(13)
சௌதி தொடர்ந்தார், “புலோமையிடமிருந்து இந்த விவரத்தைக் கேட்ட பிருகு, மிகுந்த கோபங்கொண்டார். கட்டுக்கடங்காத கோபத்தால், “நீ அனைத்தையும் உண்பாயாக” என்று அக்னியைச் சபித்தார்” {என்றார் சௌதி}.(14)
விலகினான் அக்னி! | ஆதிபர்வம் – பகுதி 7(பௌலோம பர்வம் – 4)பொய் சாட்சி சொல்வதின் தீமை; அனைத்துப் புறங்களில் இருந்தும் விலகிக் கொண்ட அக்னி; பிரம்மனின் அறிவுரை; சாபத்தின் பாதிப்புக் குறைப்பு…
சௌதி சொன்னார், “பிருகுவின் சாபத்தால் கோபங்கொண்ட அக்னிதேவன், முனிவரிடம் {பிருகுவிடம்}, “ஓ பிராமணரே {பிருகுவே}, என்னிடம் நீர் இப்படிக் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதற்கு என்ன பொருள்?(1) நான் பெருமுயற்சி செய்து, பாரபட்சமின்றி உண்மையைப் பேசி, நீதியை நிலைக்கச் செய்த போது, வரம்பு {விதிகளை} மீறியதாகத் தாம் என்மேல் எவ்வாறு குற்றம் சாட்ட முடியும்? என்னைக் கேட்டதால், நான் உண்மையான பதிலைச் சொன்னேன்.(2) ஓர் உண்மையை அறிந்தவனைச் சாட்சியாகக் கூப்பிட்டு விசாரிக்கும்பொழுது, அவன் உண்மைக்கு மாறாகப் பேசினால், அவனது முன்னோர்கள் ஏழு தலைமுறையினரையும், சந்ததியினர் ஏழு தலைமுறையினரையும் பாழாக்கியவனாவான் {நரகத்தில் தள்ளியவனாவான்}.(3) தான் முழுவதும் அறிந்திருந்தும், அறிந்ததை முழுமையாகக் கூறவில்லை என்றால், அவனும் குற்ற உணர்வால் கறைபட்டிருப்பான்.(4) என்னாலும் உமக்குச் சாபமிட முடியும். ஆனால் பிராமணர்கள் என்னால் பெரிதும் மதிக்கப்படுபவர்கள். இவையெல்லாம் உமக்கும் தெரிந்தாலும், ஓ பிராமணரே, நான் சொல்வதைக் கேளும்!(5) எனது தவசக்தியால், நான் என்னைப் பெருக்கிக் கொண்டு, பல உருவங்களில் இருக்கிறேன். தினசரி ஹோமங்கள் நடக்கும் இடங்களிலும், வருடக்கணக்காக நடைபெறும் வேள்விகளிலும் இருக்கிறேன்.(6) (திருமணம் போன்ற) புனிதச் சடங்குகள், பலிகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருக்கிறேன். என் தழல்களின் மேல் வேத விதிகளின் படி இடப்படும் நெய்யைத் தேவர்களும், பித்ருக்களும் பெற்றுச் சாந்தம் அடைகின்றனர்.(7) தேவர்களும், பித்ருக்களும் நீர் {தண்ணீர்} ஆவர். தர்ஷம், பூர்ணமஷம் என்னும் வேள்விகளில் அளிக்கப்படுவனவற்றில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் சமபங்கு உரிமை உள்ளது.(8) ஆகையால் தேவர்களே பித்ருக்கள், பித்ருக்களே தேவர்கள். ஒரேமாதிரியான {சமமான} அவர்களைச் சேர்த்து வைத்தும், பிரித்தும் சந்திரனின் மாறுதல்களுக்கு ஏற்ப வழிபடப்படுகிறார்கள்.(9)
அந்தத் தேவர்களும் பித்ருக்களும் என் மீது ஊற்றப்படுவதையே உண்கின்றனர். எனவே, என்னைத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்குமான வாய் என்று அழைக்கிறார்கள்.(10) புதுமதியில் (அமாவாசையில்) பித்ருக்களும், முழுமதியில் (பௌர்ணமியில்) தேவர்களும், தூய்மையாக்கப்பட்ட நெய்யை, எனது வாய்மூலமாகத்தான் உண்கிறார்கள். அவர்களின் வாயாக இருப்பதால், அனைத்தையும் (சுத்தமானதும், சுத்தமில்லாததும்) உண்பவனாக எவ்வாறு நான் ஆக முடியும்?” என்றான் {அக்னி}.(11)
அதன்பிறகு, அக்னி சிறிது யோசித்துவிட்டு பிராமணர்களின் ஹோமங்களிலிருந்தும், நீண்ட வேள்விகளிலிருந்தும், புனிதச் சடங்குகள் மற்றும் வைபவங்களிலிருந்தும் என எல்லா இடங்களிலிருந்தும் விலகிக் கொண்டான்.(12) நெருப்பில்லாததால் ஓம்களும், வஷட்களும், சுவதாக்களும், சுவாஹாக்களும் (பிரார்த்தனைகளில் சொல்லப்படும் மந்திரங்கள்) இல்லாமல்[1], (ஓம் என்று வேதம் ஓதுவது, வஷட் என்று வேள்வி செய்வது, சுவதா என்று பிதுர்க்கடன் {சிராத்தம்} செய்வது, சுவாகா என்று ஹோமம் செய்வது ஆகியன நின்று போயின என்பது இங்கே பொருள்.)அனைத்து உயிரினங்களும் துயரடைந்தன.(13)
கவலை கொண்ட முனிவர்கள், தேவர்களிடம் சென்று, “குறைவற்றவர்களே! அக்னி இல்லாமல் வேள்விகள் மற்றும் சடங்குகள் தொடர்ந்து நின்று போனதால் மூன்று உலகங்களும் குழப்பத்தில் உள்ளன. காலந்தாழ்த்தாமல் இந்தக் காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுங்கள்” என்றனர். பிறகு முனிவர்களும் தேவர்களும் சேர்ந்து பிரம்மனிடம் சென்றனர்.(14,15) அவனிடம் {பிரம்மனிடம்} அக்னியின் சாபத்தைப் பற்றியும், அதனால் அனைத்து விழாக்களும் தடைப்பட்டிருப்பதையும் பற்றிய விவரங்களையும் எடுத்துரைத்தனர். அவர்கள், “ஓ நற்பேறுபெற்றவரே! ஏதோ காரணத்திற்காகப் பிருகு முனிவரால் அக்னி சபிக்கப்பட்டிருக்கிறான்.(16) உண்மையில் தேவர்களுக்கு வாயாக இருப்பவனும், வேள்விகளில் தரப்படுவதை முதலில் உண்பவனும், வேள்வி நெய்யை உண்பவனுமாகிய அக்னியானவன் எவ்வாறு வரைமுறை இல்லாமல் அனைத்தையும் உண்ணும் நிலைக்கு ஆளாகலாம்?” என்று கேட்டனர்.(17)
இந்த வார்த்தைகளைக் கேட்ட அண்டப்படைப்பாளன் {பிரம்மன்}, அக்னியைத் தன் முன் வர ஆணையிட்டான். பிரம்மன் தன்னைப் போன்றே அனைத்தையும் படைப்பவனும், என்றும் நிலைத்திருப்பவனுமான அக்னியிடம் மென்மையான வார்த்தைகளால்,(18) “உலகங்களைப் படைத்தவன் நீயே, அவற்றை அழிப்பவன் நீயே! மூவுலகங்களைப் பாதுகாப்பவன் நீயே! வேள்விகள் அனைத்தையும் வளர்ப்பவனும் நீயே!(19) எனவே, சடங்குகள் தடைபெறாமல் இருக்குமாறு நடந்து கொள்வாயாக. ஓ வேள்வி நெய்யை உண்பவனே, நீயே எல்லாவற்றிற்கும் தலைவனாக இருக்கும்போது, ஏன் இவ்வளவு மூடனாக நடந்து கொள்கிறாய்?(20) அண்டத்தில் என்றுமே தூய்மையானவன் நீயே! அண்டத்தை நிலைத்திருக்க வைத்திருப்பவனும் நீயே! உன் முழு உடலாலும் வரைமுறையில்லாமல் அனைத்தையும் உண்ணும் தாழ்ந்த நிலைக்கு நீ ஆளாகமாட்டாய்.(21)
ஓ தழல்களால் ஆனவனே, பின்புறத்தில் இருக்கும் தழல்கள் {ஜ்வாலைகள்} மட்டுமே அனைத்தையும் உண்ணும்[2].(தீயின் நாக்கு (அனல்) என்பது முன்பகுதி ஆகும். கனல் எனப்படும் கீழ்ப்பகுதி மட்டுமே தான் பற்றிய பொருட்கள் அனைத்தையும் உண்ணும். அனல் எனும் மேற்பகுதி, எரியும் (உண்ணப்படும்) பொருளிலிருந்து விலகியே இருக்கும்.) (ஊனுண்ணிகள் அனைத்தின் வயிற்றிலும் இருக்கும்) இறைச்சியை உண்ணும் உன்னுடைய உடலும்[3] (இறைச்சியுண்ணும் விலங்குகளின் வயிற்றில் செரிமானம் செய்யும் அக்னி, செரிக்காததைச் செரிக்க வைப்பது. எல்லா உயிரினங்களின் வயிற்றிலும் உணவை செரிப்பதற்காக ஜாடராக்னி என்ற பெயரில் அக்னி இருக்கிறான். அவன் இறைச்சியைச் செரிக்கச் செய்யும் போது உண்ணத்தகாததை உண்பவனாகக் கருதப்படுகிறான்.)வரைமுறையில்லாமல் அனைத்தையும் உண்ணும். எப்படிக் கதிரவனின் கதிர்பட்டதும் எல்லாம் தூய்மையாகின்றனவோ,(22) அப்படியே உன் தழல்களால் எரிக்கப்படுபவை அனைத்தும் தூய்மையாகும். ஓ நெருப்பே, தானாக உருவான எல்லாம்வல்ல சக்தி நீயே.(23) ஓ தலைவனே, உனது அந்தச் சக்தியால் {பிருகு} முனிவரின் சாபம் உண்மையாகட்டும். உன் வாயில் படைக்கப்படுவனவற்றில் உனக்குச் சேர வேண்டிய பங்கையும், தேவர்களுக்குச் சேர வேண்டிய பங்கையும் எடுத்துக் கொண்டு உனது பணியைத் தொடர்வாயாக” என்றான் {பிரம்மன்}.(24)
சௌதி தொடர்ந்தார், “அக்னி அந்தப் பிதாமகனிடம் {பிரம்மனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். மிக உயர்ந்த தலைவனின் {பிரம்மனின்} ஆணைப்படியே, அக்னி தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான்.(25) தேவர்களும், முனிவர்களும், தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே மகிழ்ச்சியுடன் திரும்பினர். முனிவர்கள், சடங்குகளையும், வேள்விகளையும் செய்யத் தொடங்கினார்கள்.(26) உலகில் அனைத்து உயிரினங்களும், மேலுலகில் தேவர்களும் மகிழ்வுற்றனர். அக்னியும் பாவத்திலிருந்து விடுபட்டதால் மகிழ்ந்தான்.(27)
ஓ அறுகுணங்கொண்டவரே! இவ்வாறு பழங்காலத்தில் பிருகுவினால் அக்னி சபிக்கப்பட்டான். புலோமை, அரக்கனின் {புலோமனின்} அழிவு, சியவனனின் பிறப்பு ஆகியனவற்றுடன் தொடர்புடைய பழைய வரலாறுகள் இவ்வாறே இருக்கின்றன” {என்றார் சௌதி}.(28)
ருருவும் பிரமத்வரையும்! | ஆதிபர்வம் – பகுதி 8(பௌலோம பர்வம் – 5)மேனகைக்குப் பிறந்த பிரமத்வரையின் கதை; சியவனனின் பேரன் ருரு; பிரமத்வரையை விரும்பிய ருரு; பிரமத்வரைக்கும், ருருவுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்; மணப்பெண்ணைக் கடித்த பாம்பு; தனிமையில் சென்ற ருரு…
சௌதி சொன்னார், “ஓ பிராமணரே, பிருகுவின் மைந்தன் சியவனன், தனது மனைவி சுகன்யாவின் {சுகன்னியின்} கருவறையில் ஒரு மைந்தனைப் பெற்றெடுத்தான். அந்த மைந்தன்தான் ஒப்பற்ற சக்தி கொண்ட, புகழ்பெற்ற பிரமதி ஆவான்.(1) பிரமதி கிரீடச்சி {கிருதாசி} கருவறையில் ருருவைப் பெற்றான். ருரு, தனது மனைவி பிரமத்வரையின் மூலம் சுனகன் என்ற மகனைப் பெற்றான்.(2) ஓ பிராமணரே, அபரிமிதமான சக்தி கொண்ட ருருவின் வரலாற்றை முழுவதுமாகக் கூறுகிறேன் கேட்பீராக.(3)
முன்பொரு காலத்தில் தவசக்தியும், கல்வியும், அனைத்துயிரிடமும் அன்பு செலுத்தும் குணமும் கொண்ட ஸ்தூலகேசர் என்ற ஒரு முனிவர் இருந்தார்.(4) ஓ பிராமண முனிவரே {சௌனகரே}, அந்த நேரத்தில், கந்தர்வர்களின் மன்னன் விஸ்வாவசு, தேவலோக நடனமங்கை மேனகையுடன் நெருக்கமாக இருந்தான்.(5) ஓ பிருகுவின் வழித்தோன்றலே {சௌனகரே}, அந்த அப்சரஸ் மேனகை, அவளது நேரம் நெருங்கியதும், ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கருகே ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(6)
புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையை அவள் ஆற்றங்கரையிலேயே விட்டுச் சென்று விட்டாள். ஓ பிராமணரே {சௌனகரே}, மேனகை என்ற அந்த அப்சரஸ் இரக்கத்தையும், வெட்கத்தையும் துறந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.(7) பெரும் தவவலிமை பொருந்திய ஸ்தூலகேசர், ஆள் நடமாட்டமில்லாத நதிக்கரைப் பகுதியில் அந்தக் குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தையானது இறப்பில்லாதவர்களின் {தேவர்களின்} குழந்தை என்றும், அழகால் ஒளிவீசும் ஒரு பெண்குழந்தை என்றும் கண்டுகொண்டார்.(8,9) அந்தப் பெரும் பிராமணரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஸ்தூலகேசர், இரக்கத்தினால் {மனம்} நிறைந்து அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார். அந்தக் குழந்தையும் அவருடைய புனிதமான இருப்பிடத்திலேயே {ஆசிரமத்திலேயே} வளர்ந்தாள்.(10)
உயர்ந்த மனம் படைத்தவரும், ஆசிர்வதிக்கப்பட்டவருமான ஸ்தூலகேசர் தெய்வீக விதிகளுக்குட்பட்டு {சாஸ்திரங்களுக்குட்பட்டு} பிறந்ததிலிருந்து செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் அந்தந்த காலத்தில் அக்குழந்தைக்குச் செய்தார்.(11) தனது நற்குணங்களாலும், அழகாலும், மற்றும் எல்லாப் பண்புகளாலும் அனைத்துப் பெண்களையும் அவள் மிஞ்சி நின்றதால், பிரமத்வரை[1] (பிரமதா என்றால் பெண்கள் என்று பொருள். வரா என்றால் சிறந்தவள் என்று பொருள். எனவே, பிரமத்வரா என்பது பெண்களிற்சிறந்தவள் என்ற பொருளைத் தரும்.)என்று அந்த முனிவர் அவளை அழைத்தார்.(12) தெய்வத்திற்கு அஞ்சி நடக்கும் ருரு, ஒரு நாள் ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கு அருகே இருந்த பிரமத்வரையைக் கண்டு, காம தேவனின் {மன்மதனின்} கணையால் இதயத்தில் துளைக்கப்பட்டவன் ஆனான்.(13) ருரு, தனது நண்பர்கள் மூலம், பிருகுவின் மகனான தனது தந்தை பிரமதி, தன் ஆசையை அறியும்படி செய்தான்.
பிரமதி தனது மகனுக்காக மிகவும் புகழ்வாய்ந்த ஸ்தூலகேசரிடம் அவளைக் {பிரமத்வரையைக்} கேட்டான்(14). அவளது வளர்ப்புத்தந்தை {ஸ்தூலகேசர்}, அந்தக் கன்னிப்பெண் பிரமத்வரையை ருருவுக்கு நிச்சயித்துக் கொடுத்தார். திருமணம் அடுத்து வரும் வர்க தைவதா {பூரம்} நட்சத்திரத்தில்[2] (கும்பகோணம் ஹஸ்தம் நட்சத்திரம் என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே பூரம் நட்சத்திரம் என்றே இருக்கிறது.)என நிச்சயமானது.(15)
திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, அந்த அழகான கன்னிப்பெண் மற்ற பெண்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது,(16) விதி வசத்தால் அவளது நேரம் நெருங்கி வந்தது. வழியில் சுருண்டு கிடந்த ஒரு பாம்பைக், கவனியாமல், அதை மிதித்துவிட்டாள்.(17) அந்த ஊர்வனவும் {பாம்பும்}, விதியின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தூண்டப்பட்டு, கவனக்குறைவாக இருந்த அவளது உடம்பில் தனது நஞ்சுப் பற்களைச் செலுத்தியது.(18)
பாம்பால் கடிபட்டதும், அவள் {பிரமத்வரை} உணர்விழந்து தரையில் விழுந்தாள். அவளது நிறம் மங்கி ஒளி குன்றியது.(19) கலைந்த கேசத்துடன் கிடந்த அவள் துன்பத்தைத் தருகின்ற ஒரு காட்சி பொருளானாள். காண்பதற்கு இனிமையானவளான அவள் இறந்து கிடப்பதைக் காண்பது வேதனையைத் தந்தது.(20) விஷம் ஏறி, தரையில் விழுந்து கிடந்த அந்தக் கொடியிடையாள், தூங்குபவளை போலக் காட்சியளித்து, அந்நிலையிலும், உயிரோடு இருந்தபோதை விட அழகாக இருந்தாள்.(21)
வளர்ப்புத் தந்தையும் {ஸ்தூலகேசரும்}, மற்ற முனிவர்கள் அனைவரும் அங்கு வந்து, அழகான தாமரை மலரைப் போலத் தரையில் அசைவில்லாமல் கிடக்கும் அவளைக் {பிரமத்வரையை} கண்டனர்.(22) சுவஸ்தியாத்ரேயர், மஹாஜானு, குசிகர், சங்கமேகலர்,(23) உத்தாலகர், கடர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஸ்வேதர், பரத்வாஜர், கௌணகுத்சியர், ஆர்ஷ்டிஷேணர், கௌதமர்,(24) பிரமதி, அவனது மகனான ருரு, மற்றும் அந்தக் கானகத்தில் வசிப்போர் ஆகியோர் அங்கே வந்தனர். பாம்பு கடித்ததால், தரையில் உயிரற்ற சடலமாகக் கிடக்கும் அந்த மங்கையைக் கண்டு அனைவரும் துக்கத்தில் அழுதனர். இந்த நிகழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட ருரு அந்த இடத்தைவிட்டு அகன்றான்.” {என்றார் சௌதி}.(25)
பாம்பினத்தை அழிப்பதாக ருரு ஏற்ற உறுதி | ஆதிபர்வம் – பகுதி 9)(பௌலோம பர்வம் – 6)ருருவின் புலம்பல்; ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு மீண்டும் உயிர்பெற்ற பிரமத்வரை; ருரு பிரமத்வரை திருமணம்; துந்துபா பாம்பைக் கண்ட ருரு..
சௌதி சொன்னார், “பிரமத்வரையின் உயிரற்ற சடலத்தைச் சுற்றி புகழ்பெற்ற பிராமணர்கள் அமர்ந்திருக்கும்போது, பெரும் துக்கமடைந்த ருரு அடர்ந்த கானகத்தின் ஆழத்துக்குச் சென்று சத்தம்போட்டு கதறி அழுதான்.(1) துயரத்தால் உந்தப்பட்டுப் பரிதாபகரமாக ஒப்பாரி வைத்தான். தன் அன்பிற்குரியவளான பிரமத்வரையை நினைத்த ருரு தன் துக்கத்தைத் தீர்த்துக்கொள்ளப் பின் வரும் வார்த்தைகளில்,(2) “ஐயோ! {அந்தப்} பேரழகி இப்படிக் கட்டாந்தரையில் கிடந்து என் துயரைப் பெருகச் செய்தாளே! இதைவிட எங்களுக்கும், அவள் நண்பர்களுக்கும் துயர் தருவது ஏது?(3) நான் கொடையளித்திருந்தால், தவம் செய்திருந்தால், மேலோரை எப்போதும் மதித்திருந்தால், இந்தச் செயல்களின் புண்ணியம் என் அன்பிற்குரியவளை உயிர்மீட்டுத் தரட்டும்!(4) நான் பிறந்ததிலிருந்து ஆசைகளை அடக்கி, நோன்புகளைக் கடைப்பிடித்திருந்தேன் என்றால் அந்த அழகான பிரமத்வரை தரையிலிருந்து எழுந்திருக்கட்டும்” என்று புலம்பினான்.(5)
தன் துணையை இழந்ததினால் ருரு இப்படிக் கதறிக்கொண்டிருக்கையில், தேவலோகத் தூதுவன் ஒருவன், அந்தக் கானகத்துக்கு வந்து, அவனிடம் {ருருவிடம்},(6) “ஓ ருருவே, உனது துயர் மேலீட்டால் நீ இப்போது உதிர்த்தாயே வார்த்தைகள், அவை பயனற்றவை. ஓ நல்லவனே, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு நாட்கள் முடிந்தால், அவர்கள் திரும்பி வருவதில்லை.(7) கந்தர்வருக்கும், அப்சரசுக்கும் பிறந்த அந்தப் பரிதாபத்திற்குரிய குழந்தையின் நாட்கள் முடிந்துவிட்டன. அதனால் மகனே, நீ உன் இதயத்தைத் துயருக்குப் பறிகொடுக்காதே.(8) இருந்தாலும், ஒப்பற்ற தேவர்கள் அவளது உயிரை மீட்கும் வழி குறித்து முன்பே சொல்லி வைத்துள்ளனர். நீ அதன்படி நடந்தால் பிரமத்வரை {மீண்டும்} கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்றான்.(9)
ருரு, “ஓ தேவலோகத் தூதுவரே! அந்தத் தேவர்கள் என்னதான் கட்டளையிட்டிருகின்றனர். முழுவதும் {முழு விவரம்} கூறினால், நான் (அதைக் கேட்டு) அப்படியே நடந்துகொள்வேன். என்னைத் துன்பத்திலிருத்து விடுவிப்பதே உமக்குத் தகும்” என்றான்.(10) அதற்குத் தேவதூதுவன், “உனது வாழ்நாட்களில் பாதியை உனது துணைக்குக் கொடுக்க வேண்டும். பிருகுவின் பரம்பரையில் வந்த ஓ ருருவே, உனது பிரமத்வரை தரையில் இருந்து எழுந்து வருவாள்” என்றான்.(11)
ருரு, “ஓ தேவதூதர்களில் சிறந்தவரே, நான் எனது வாழ்நாளில் பாதியை எனது துணைக்கு அதிவிருப்பத்துடன் கொடுப்பேன். எனது அன்புக்குரியவளை மறுபடியும் அவளது {பழைய} உடைகளுடனே, அழகான அவள் தோற்றத்துடனே எழுப்புவீராக” என்றான்.”(12)
சௌதி சொன்னார், “பிறகு நற்குணங்கள் கொண்டவர்களாகிய கந்தர்வ மன்னனும் (பிரமத்வரையின் தகப்பனும்), தேவதூதனும், இருவரும் தர்மதேவனிடம் சென்று,(13) “ஓ அறமன்னா {தர்மராஜா}, உமக்கு விருப்பமிருந்தால் {சம்மதமிருந்தால்} ருருவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இனிமையான பிரமத்வரையை, அவனது {ருருவின்} பாதி வாழ்நாட்களைக் கொண்டு உயிர்ப்பிப்பாயாக” என்றான்.(14) அதற்கு அந்த அறமன்னன், “ஓ தேவதூதா, உனது விருப்பத்தின்படியே, ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு, அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரமத்வரை எழுந்திருக்கட்டும்” என்றான்.”(15)
சௌதி தொடர்ந்தார், “அறமன்னன் இவ்வாறு சொன்னதும், தேர்ந்த நிறமுடைய அந்த மங்கை பிரமத்வரை, ருருவின் பாதி ஆயுளை எடுத்துக் கொண்டு, தூக்கத்திலிருந்து எழுவதைப் போல் எழுந்தாள்.(16) ருரு தனது பாதி ஆயுளைத் தனது துணை உயிர்த்தெழ தந்ததால், பின்னர் அவனது ஆயுள் சுருங்கியது.(17)
ஒரு நன்னாளில், அவர்களது தந்தைமார், அவர்களுக்கு முறையான சடங்குகளுடன் திருமணம் செய்து வைத்தனர். அந்தத் தம்பதியினரும் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் தங்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.(18) அவ்வளவு அழகான, கிடைப்பதற்கரிதான, தாமரை இதழ்களின் காந்தியை ஒத்த மங்கையை மணந்து கொண்ட பிறகும் கூட, ருரு {பாம்பினத்தின் மீது கொண்ட கோபம் காரணமாக} பாம்பினத்தையே அழிப்பதாக உறுதியேற்றான்.(19) எப்பொழுதெல்லாம் அவன் பாம்பைக் கண்டானோ அப்பொதெல்லாம் பெரும்கோபத்தில் நிறைந்து, ஒரு ஆயுதத்தை எடுத்து அந்தப் பாம்பைக் கொன்று வந்தான்.(20)
ஓ பிராமணரே {சௌனகரே}, ஒரு நாள் ருரு ஒரு பெரிய கானகத்திற்குள் நுழைந்தான். அங்கே ஒரு வயதான துந்துபா {டுண்டுப} வகையைச் {நீர்பாம்பு வகை} சார்ந்த ஒரு பாம்பு தரையில் கிடப்பதைக் கண்டான்.(21) கோபத்தால் உந்தப்பட்ட ருரு, அந்தப் பாம்பைக் கொல்ல மரணக்கோல் {யமனின் தண்டத்தைப்} போல இருந்த தன் தடியை உயத்தினான். அப்போது அந்தத் துந்துபா {தண்ணீர்ப்பாம்பு} ருருவிடம்,(22) “ஓ பிராமணா! நான் உனக்கு எந்தக் கெடுதலையும் செய்யவில்லையே. பிறகு ஏன் கோபங்கொண்டு என்னைக் கொல்ல வருகிறாய்” என்றது” {என்றார் சௌதி}.(23)
சஹஸ்ரபத் பெற்ற சாபம்! | ஆதிபர்வம் – பகுதி 10(பௌலோம பர்வம் – 7)நீர்ப்பாம்புகளுக்கு நேரும் அநீதி குறித்துச் சொன்ன பாம்பு; துந்துபா பாம்பின் முற்பிறவி வரலாறு; சகஸ்ரபத் எனும் முனிவன்…
சௌதி சொன்னார், “{பாம்பின்} அந்த வார்த்தைகளைக் கேட்ட ருரு, “எனது உயிருக்கு ஒப்பான, எனது அன்பு மனைவி ஒரு பாம்பால் கடிக்கப்பட்டாள். ஓ பாம்பே, அதுமுதல் எனது வழியில் வரும் எந்தப் பாம்பையும் கொல்வது எனும் பயங்கரமான உறுதிமொழியை ஏற்றுள்ளேன். எனவே, இப்போது உன்னை நான் அடிக்கப் போகிறேன். நீ உனது உயிரை இழக்கப் போகிறாய்” என்றான்.(1,2)
அதற்குத் துந்துபா, “ஓ பிராமணா, மனிதர்களைக் கடிக்கும் பாம்பினம் வேறு வகை. பெயரளவில் மட்டுமே பாம்புகளாக இருக்கும் துந்துபாக்களை {நீர்ப்பாம்புகளை} நீ கொல்வது தகாது.(3) கடிக்கும் வகையிலான பாம்புகளின் நற்பேறுகள் எங்களுக்கு {நீர்ப்பாம்புகளுக்கு} கிடைப்பதில்லை. ஆனால் அவற்றுக்கு நேரும் கெடுதிகள் அனைத்தும் எங்களுக்கும் {நீர்ப் பாம்புகளுக்கு} நேருகின்றன. அவற்றின் துயரம் எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் அவற்றின் மகிழ்ச்சி எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆகையால் தவறான புரிதலால் துந்துபாக்களைக் {டுண்டுபங்களைக் = நீர்ப்பாம்புகளைக்} கொன்றுவிடாதே” என்றது.”(4)
“சௌதி தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைப் பாம்பிடமிருந்து கேட்ட முனிவர் ருரு, அது பயத்தில் திகைத்து நிற்பதையும், அது நீர்ப்பாம்பே என்பதையும் கண்டு, அந்தத் துந்துபாவைக் {நீர்ப்பாம்பை} கொல்லவில்லை.(5) ஆறு குணங்களைக் கொண்ட முனிவனான அந்த ருரு, “ஓ பாம்பே, முழுவதுமாகச் சொல். இந்த உருவத்தில் இருக்கும் நீ யார்?” என்றான்.(6) அதற்கு அந்தத் துந்துபா, “ஓ ருரு, முன்பு நான் சஹஸ்ரபத் என்ற பெயர் கொண்ட ஒரு முனிவனாக இருந்தேன். ஒரு பிராமணனின் சாபத்தால் இந்தப் பாம்புருவிற்கு மாறினேன்” என்றது.(7) ருரு, “ஓ பாம்புகளில் சிறந்தவனே, கோபத்தில் இருந்த பிராமணனின் சாபத்துக்கு நீ ஏன் ஆளானாய்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு உன்னுடைய {இந்த} பாம்புருவம் தொடரும்?” என்று கேட்டான்.(8)
ருருவுக்கு சஹஸ்ரபத்தின் அறிவுரை! | ஆதிபர்வம் – பகுதி 11(பௌலோம பர்வம் – 8)சஹஸ்ரபத்தும் ககமனும்; ககமனை அச்சமூட்டிய சஹஸ்ரபத்; சஹஸ்ரபத் பெற்ற சாபம்; சகஸ்ரபத்துக்கு அளிக்கப்பட்ட சாப விமோசனம்…
சௌதி தொடர்ந்தார், “அந்தத் துந்துபா பாம்பானது {சஹஸ்ரபத்} ருருவிடம், “முன்பு ஒரு காலத்தில், ககமன் என்ற பெயரில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.(1) அவன் பேச்சில் அவசரப்படுபவனாகவும், கடுந்தவங்களின் பயனால் ஆன்மச் சக்தி கூடியவனாகவும் இருந்தான். ஒருநாள் அவன் {ககமன்} நெருப்பு வேள்வி (அக்னி ஹோத்ரம்) செய்து கொண்டிருக்கும்போது, புற்களால் பாம்பு போன்ற தோற்றத்தைச் செய்து, அதைக்காட்டி விளையாட்டுக்காக அவனை {ககமனை} அச்சுறுத்தினேன். அவன் உடனே மயக்கமுற்று விழுந்தான்.(2) உண்மை பேசுபவனும், தனது விரதங்களில் உறுதியாய் இருக்கும் துறவியுமான அவன் புலனுணர்வு மீண்டவுடன், கோபம் கொண்டு,(3) “சக்தியில்லாத பொய்ப்பாம்பைக் காட்டி என்னை அச்சுறுத்தினாய் ஆதலால், என் சாபத்தினால் நீ நஞ்சில்லாப் பாம்பாகப் போவாயாக” என்ற சபித்தான்.(4) ஓ துறவியே, எனக்கு அவனது தவமகிமை தெரியும், ஆகையால்,(5) கலங்கிய உள்ளத்துடன், கைகூப்பிக் குனிந்து, “நண்பா, விளையாட்டுக்காக, உன்னை மகிழ்விக்கவே அப்படிச் செய்தேன்.(6) என்னை மன்னிப்பதே உனக்குத் தகும். உன் சாபத்தைத் திருப்பி எடுத்துக் கொள்வாயாக” என்றேன்.
அப்படிக் கலங்கிய நிலையில் என்னைக் கண்ட அந்தத் துறவி {ககமன்}, சற்றே நெகிழ்ந்து சூடான கடுமையான மூச்சுடன், “நான் சொன்னது நடக்கவே வேண்டும்.(7,8) நான் சொல்வதைக் கேட்டு உனது இதயத்தில் பதிய வைத்துக் கொள்வாயாக.(9) ஓ நல்லவனே, பிரமதியின் தூய்மையான மைந்தன் ருரு எப்போது உன் முன் தோன்றுவானோ, அப்போது அவனைக் கண்ட மாத்திரத்தில் உனக்குச் சாப விடுதலை கிடைக்கும்” என்றான் {ககமன்}.(10)
நீயே அந்தப் பிரமதியின் மைந்தன் ருரு. எனது சுய உருவை அடைந்ததும், உனக்கு ஒரு நல்லதைச் சொல்கிறேன்” என்றான் துந்துபா {சஹஸ்ரபத்}.(11)
“அப்படிச் சொன்ன பிராமணர்களில் சிறந்தவனான அந்த ஒப்பற்ற மனிதன் {சஹஸ்ரபத்}, தனது பாம்பு வடிவம் நீங்கிப் பிரகாசமான உண்மை வடிவத்தை அடைந்தான்.(12) அதன்பிறகு சிறப்புமிக்க சக்தி கொண்ட ருருவிடம், “ஓ படைத்தவற்றில் முதன்மையானவனே, மனிதர்களுக்கு உயர்ந்த அறம் கொல்லாமையே.(13) எனவே, எந்தப் பிராமணனும் எந்த உயிரினத்தின் உயிரையும் எடுக்கக்கூடாது. பிராமணன் எப்போதும் மென்மையானவனாகவே இருக்க வேண்டும். இதுவே வேதங்களின் மிகப் புனிதமான விதி.(14) ஒரு பிராமணன் வேதங்களையும், வேதாங்கங்களையும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். உயிரினங்களுக்குக் கடவுள் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். எப்படி வேதங்களை நினைவில் வைத்திருப்பது முதற்கடமையோ அவ்விதமே எல்லா உயிர்களுக்கு நன்மை கருதுவதும், உண்மையோடு இருப்பதும், மன்னிப்பதும் {கடமையே} ஆகும். உனது கடமை, க்ஷத்திரியரின் கடமையன்று.(15,16) கடுமையாக நடந்து கொள்வது, செங்கோலுடன் அதிகாரம் செய்வது, குடிமக்களை முறையாக ஆள்வது ஆகியவை க்ஷத்திரியனின் கடமைகள். ஓ ருருவே, முன்பொரு காலத்தில் ஜனமேஜயன் பாம்புகளின் அழிவிற்காக ஒரு வேள்வி நடத்தியபோது[1] (ஆக இந்த ருருவின் கதை மகாபாரதம் நடந்த காலத்திற்குப் பிந்தையது மட்டுமல்ல, மகாபாரதக் கதை நடந்து, கணேசரைக் கொண்டு வியாசர் எழுதிய பிறகு, ஜனமேஜயன் வேள்வியில் மகாபாரதம் வைசம்பாயனரால் உரைக்கப்பட்ட பிறகே நடந்திருக்கிறது. எனவே, இது வியாசரின் சீடரான தன் தந்தை ரோமஹர்ஷணரால் முன்பு நைமிசாரண்யத்தில் சொல்லப்பட்டது என்று சௌதியால் சொல்லப்படும் வரலாறேயன்றி, வைசம்பாயனராலோ, வியாசராலோ சொல்லப்பட்டது அல்ல என்பது இங்கே தெளிவாகிறது.)வேத சாத்திரங்களில் தேர்ந்தவரும், தவசக்தி மிக்கவரும், இருபிறப்பாளர்களில் சிறந்தவருமான ஆஸ்தீகரால் எப்படி அந்தப் பயங்கொண்ட பாம்புகளுக்கு விடுதலை கிடைத்தது என்ற வரலாற்றைக் கேட்பாயாக” என்றான் {சஹஸ்ரபத்}” {என்றார் சௌதி}.(17,18)
உணர்விழந்த ருரு! | ஆதிபர்வம் – பகுதி 12(பௌலோம பர்வம் – 9)ஜனமேஜயன் நடத்திய வேள்வி குறித்து ருரு சஹஸ்ரபத்திடம் கேட்பது; சஹஸ்ரபத் மறைந்துவிடுவது; ஓடிக் களைத்து உணர்விழந்த ருரு, தந்தையிடம் ஆஸ்திகர் வரலாறு கேட்பது …
{சௌனகர் மற்றும் முனிவர்களிடம்} சௌதி தொடர்ந்தார், “ருரு அதன்பிறகு, “இருபிறப்பாளரில் {பிராமணர்களில்} சிறந்தவரே {சஹஸ்ரபத்தே}, ஏன் ஜனமேஜயன் பாம்புகளின் அழிவை விரும்பினான்?(1) ஞானமிகுந்த ஆஸ்தீகர் ஏன் பாம்புகளைக் காப்பாற்றினார்? எப்படிக் காப்பாற்றினார்? அதை முழுவதும் அறிய ஆவலுடன் உள்ளேன்” என்றான்.(2)
முனிவர் {சஹஸ்ரபத்}, “ஓ ருருவே, இந்த முக்கியமான ஆஸ்தீக வரலாற்றை, பிராமணர்களின் உதடுகளால் {வாயிலாக} நீ அறிவாய்” என்று சொல்லி மறைந்து விட்டார்.”(3) சௌதி தொடர்ந்தார், “மறைந்த முனிவரைத் {சஹஸ்ரபத்தைத்} தேடி ருரு ஓடினான். அந்தக் கானகத்தில் அவரைக் கண்டுபிடிக்கமுடியாமல், களைத்துச் சோர்வடைந்து தரையில் விழுந்தான்.(4) முனிவர் {சஹஸ்ரபத்} சொன்னதை மனத்தில் நினைத்துப் பார்த்தான். மிகவும் குழம்பிப் போய்ப் புலன் உணர்வை இழந்தான்.(5) உணர்வு மீண்டதும், ருரு தனது இல்லத்திற்கு வந்து, தனது தந்தையிடம் {பிரமதியிடம்} இந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டான். அப்படிக் கேட்கப்பட்டதால், அவனது தந்தையும் {பிரமதியும்} கதையைச் முழுவதுமாகச் சொன்னார்” {என்றார் சௌதி}.(6)
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்தஇதத்தாய் இராமாநுசன். * திருவாய்மொழித் தனியன்களில் ஒன்றான* வான் திகழுஞ்சோலைப்பாசுரத்தின் பிற்பகுதி இது. இது பட்டரருளிச்செய்தவெண்பா. ‘திருவாய்மொழியைப் பெற்ற தாய்நம்மாழ்வார் ; வளர்த்த தாய்எம்பெருமானார்” என்கிறது இதில். மணவாள மாமுனிகளருளிச் செய்தஉடையவரது வாழிதிருநாமத்திலும் * மாறனுரை செய்த தமிழ்மறை வளர்த்தோன்வழியே * என்றருளிச் செய்யப்பட்டுள்ளது. திவ்யப்ரபந்தங்களைஎம்பெருமானார் வளர்த்தவிதம் யாது? என்று பலர் கேட்பதுண்டு. விளங்கச்சொல்லுகிறேன் கேண்மின். *சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள்நான்கும் எல்லையில்லாவறநெறி யாவுந் தெரிந்தவன் * என்று இராமானுசநூற்றந்தாதியில் (44) போற்றப் பெற்ற எம்பெருமானார்க்குத் தமிழறிவில்சங்கிப்பார் ஆருமில்லை. திவ்யப்ரபந்தங்களிலுள்ள அர்த்த விசேஷங்களைஸ்ரீபாஷ்யத்திலும் கீதாபாஷ்யத்திலும் கத்யத்ரயத்திலும் ஆச்சரியமாகப் பதியவைத்தருளியிருப்பதை அடியேன் த்ரமிடோபநிஷத் ப்ரபா வஸர்வஸ்வ நூலில்விரியவுரைத்திருப்பது தவிர உபந்யாஸங்கள் தோறும் விளக்கி வருவதைஉலகமுணரும். முக்கியமாக நிரூபிக்க வேண்டிய விஷயங்களைப் புறச்சான்றுகொண்டும் அகச்சான்று கொண்டும் மூதலிப்பது முறை. இவ்விஷயத்தில்ஏய்ந்தபெருங்கீர்த்தி யிராமானுச முனிதன், வாய்ந்த மலர்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த பெருஞ், சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,பேரா தவுள்ளம் பெற என்பது முதலான தனியன்களும், மாறனடிபணிந்துய்ந்தவிராமானுசன்என்பது முதலான இராமானுச நூற்றந்தாதிப் பாசுரங்ககள் பலபலவும் புறச்சான்றுகளாம். அவற்றைவிட அகச்சான்றுகளையேஅடியேன் அதிகமாகக் காட்டுபவன். எம்பெருமானாருடைய திவ்யஸூக்திகளில் அருளிச் செயல் விசேஷார்த்தங்களே அதிகமாக கமழ்கின்றனவென்பதைச் சில பாக்கியசாலிகளே அறிந்து அநுபவிக்கவல்லவர்கள். ஆளவந்தார் ஸ்ரீஸூக்திகளில் இது பரிமிதம். உடையவர் ஸ்ரீஸூக்திகளில் கொள்ளை கொள்ளையானவை. நிதிபோல் புதைந்து கிடப்பவை. திருவராதனத்தில் அருளிச் செயல் ஸேவித்துச் சாத்துமுறை செய்யவேணுமென்பதை ஸ்வாமி தமது நித்ய க்ரந்தத்தின் முடிவில் ‘ச்ருதிஸுகை: ஸ்தோத்ரை: அபிஷ்டூயஎன்பதனால் காட்டியருளினர். *செவிக்கினிய செஞ்சொற்களாலே * என்றபடி.இவ்வண்ணமாகவே நுட்பமாகக் காட்டியருள்வது எம்பெருமானாரியல்பு.சிகரமானவொரு விஷயத்தை இங்குப் பொறித்திடுகின்றேன். ஸ்ரீ பாஷ்யத்தில் கடைசியாக முடிக்கும் ஸ்ரீஸூக்தி என்ன வென்று பார்ப்போம்.ய ஏவமாஹ என்றாரம்பித்து ‘வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ. மஹாத்மாஸுதுர்ல : * இதி. என்பது ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவான ஸ்ரீஸூக்தி ஸூத்ரம் என்னவென்றால் * அநாவ்ருத்திச் சப்தாத் * என்பது. ‘முக்தாத்மாதிருநாட்டிலிருந்து திரும்பி வருவதில்லை, சாஸ்த்ரம் அங்ஙனே சொல்லியிருக்கையாலே” என்பது ஸூத்ரத்தின் பொருள்; சாஸ்த்ரம் இன்னதென்பதைக் காட்டவேண்டும்; அது காட்டியாயிற்று. *ஸ கல்வேவம் வர்த்தயந் இத்யாதியான உபநிஷத் வாக்யமும் * மாமுபேத்ய து கெளந்தேய! புநர்ந்ம ந வித்யதே * என்கிற கீதா வசனமும் காட்டியாயிற்று. ஸூத்ர வியாக்கியானம் செவ்வனே முடிவு பெற்றதாயிற்று. பின்னை ப்ரியோ ஹி ஜ்ஞாநிந்:என்று தொடங்கி ஸ மஹாத்மா ஸு துர்லப:என்னுமளவாக விஸ்தரம் செய்திருப்பது எதற்காக ? என்று விமர்சிக்க வேண்டுவது மிக அவசியமாகும்.விஜ்ஞாபிக்கிறேன், குறிக்கொண்மின். ஸூத்ரகாரர் கூறியபடி [சப்தாத் என்றுசொன்னபடி] சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்சியில்லை யென்று நிரூபித்தாயிற்று.அதன் மேலும் பூர்வபம் தோன்றும்; ஈச்வரனோ கேட்பாரற்ற சுதந்திரன்;நிரங்குச ஸ்வதந்த்ரனெனப்படுகிறான். *நாஸௌ புருஷகாரேண × சாபிஅந்யேந ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித்கதாசந என்று பேசுபவன். அவன் சாஸ்த்ரத்தையும் மீறி முக்தாத்மாவைநோக்கி மீண்டொழிந்து போ ‘ என்று சொல்லித் தள்ளிவிட்டால் தடுப்பாருண்டா? யாரே தடுக்கவல்லார்? என்று சோத்யம் விளைந்தே தீரும். இந்த சோத்யம் சங்கராசார்யாதிகளான இதர பாஷ்யகாரர்களுக்குத் தோன்றவில்லை. நமது பாஷ்யகாரருக்குத் தோன்றிற்று. அருளிச்செயற் கடலில் அமுதமானவொரு பொருளை யெடுத்து வெளியிடுவதற்காகத் தோன்றிற்று அதைப் பூர்வபமாக வைத்துக் காட்டாமல் ஸமாதானத்தை மட்டும் மிகவழகாகக்காட்டியருளினர்- க ந ச பரம புருஷஸ் ஸத்யஸங்கல்ப: அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் கதாசித் ஆவர்த்தயிஷ்யதி” என்கிற ஸ்ரீ பாஷ்ய ஸூக்தியாலே,இதன் பொருளாவது – எம்பெருமான் தன்னுடைய பரமப்ரீ திக்கு இலக்கான ஞானியை ஒருநாளும் திருப்பியனுப்பமாட்டானென்பதாம். இவ்விஷயத்திற்கு ப்ரமாணமாக ய ஏவமா ? என்று தொடங்கி * ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:* என்கிற கீதா ச்லோகத்தை [பகவத் வசனத்தை] எடுத்துக் காட்டினார். அவ்வளவே போதுமானது. அதற்கு மேலும் வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப : * என்னுமளவும் எதற்காக எடுத்துக் காட்டினாரென்று ஆராய வேண்டும். கேண்மின்; கீழேகாட்டிய ஸ்ரீ பாஷ்ய பங்க்தியில் ‘அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் நகதாசித்ஆவர்த்தயிஷ்யதி” என்றிவ்வளவே ஸாதித்திருக்கவில்லை. இடையில் லப்த்வா என்றொரு விலையுயர்ந்த பதத்தை ப்ரயோகித்தருளியுளளார். அந்தப் பதம் இல்லாமலே வாக்கியம் ஆந்வயிக்காமற் போகாது. எளிதாக அந்வயிக்கும்.அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் ந கதாசித் ஆவர்த்தயிஷ்யதி’ என்றால் இதில்அநவயம் ஒன்றுமில்லையே. இடையில் லப்த்வா என்றொரு பதத்தை இட்டருளினது த்ராவிட வேதாந்த ஸாரார்த்த பரமார்த்தத்தை விளக்குவதற்கேயாம்.சேதநலாபம் ஈச்வரனுக்கே யொழிய ஈச்வரலாபம் சேதனனுக்கன்று’ என்கிற ஸத்ஸம்ப்ரதாயார்த்த நிதியன்றே இங்கு வாரியளிக்கப்பட்டது. ஆழ்வார் யானொட்டி யென்னுள் இருத்துவமென்றிலன், தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து, ஊனொட்டி நின்றென்னுயிருள் கலந்து, இயல்வானொட்டுமோ இனியென்னை நெகிழ்க்கவே. (திருவாய்மொழி 1-7-7) என்றருளிய பாசுரத்தை அக்ஷரச: அடியொற்றியன்றோ ஸ்ரீபாஷ்யஸூக்தி அவதரித்துள்ளது. ஜ்ஞாநியான வொருவனைப் பெறுவதற்கு எம்பெருமான் எவ்வளவோபாடுபட்டவனாயிருந்து, அப்படிப்பட்ட ஞானியைப் பெற்றபின்பும் போய்விடுஎன்று தள்ளுவனோ? என்கிற பொருள் தோன்றவே லப்த்வா என்கிற பதத்தைச் சேர்த்தருளினர்; எம்பெருமான் ஞானியான சேதனனைத் தேடுகிறான், தேடிப் பெற்றால் களிக்கிறான், பெறாவிட்டால் வருந்துகிறான் என்பதைக் காட்டவே,[லப்த்வா என்ற தமது ஸூக்திக்கு ப்ரமாணமாகவே ஸ மஹாத்மாஸு துர்லப :என்னுமளவும் உதாகரித்தது. இத்தகைய பல நூறு அருளிச்செயலர்த்த விசேஷங்களை அமைத்தருளினதுபற்றி மொய்ம்பால் வளர்த்தஇதத்தாய் இராமானுசன் * என்று பணித்தது . முக்கியமாக ஒரு வார்த்தை;“ ஸர்வதேச தசாகாலேஷ அவ்யாஹத பராக்ரமா, ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்.‘ என்கிற சலோக ரத்னத்தை ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபாதிகளில் ஸேவிக்கின்றிலோம். பகவத் விஷய ரஹஸ்யாதி காலக்ஷேபங்களிலும் ஸேவிக்கின்றிலோம். அருளிச்செயல் கோஷ்டிகளில் மட்டுமே ஸேவித்து வருகிறோம். இதனாலும் * மொய்ம்பால் வளர்த்த இதத்தாயான இராமாநுசருடைய பெருமையை யுணரலாம்.
இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார் வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே
வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் – வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் – இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது – ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று – இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் – தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-3-17– வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து – ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும் தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8- போதர் கண்டாய் –2-9-6- தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –
அது எங்கனே என்னில் — இங்கும் ஆழ்வார் அவதரித்து அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு பாஹ்ய குத்ருஷ்டிகளால் பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத் திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே – மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் – ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —
————-
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக் கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர் தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார் பக்தம் -உணவு
ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது –
இவர் தான் – மாறன் அடி பணிந்து உய்ந்தவராய் மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை –இராமா -46- என்றும் தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த ராமானுஜன் -இராமா –29-என்றும் பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாக யுடையராய் –இராமா –64- திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் இருக்குமவராய் –இரா –60- உறு பெரும் செல்வமும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் என்று அறிதர நிற்குமவர் ஆகையாலும் –இராமா -19- அவர் திருவடிகள் ராமானுஜர் ஆகையால் – இவரை அர்த்திக்கிறது –
ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும் ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும் ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும் பஞ்ச உபநிஷத்துக்களாலும் புருஷ ஸூக்த ருக்குகளினாலும் பிற பகவன் மந்த்ரங்களாலும் சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து
——————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
3-(ஈசாநோபி ) ‘சிவன் பிரமன் இந்திரன் ஸூர்யன் இவர்கள் ஒருவரும் தெய்வமன்று,ஸ்ரீமந் நாராயணனே பரதெய்வம்” என்று வைதிகர்களின் ஸித்தாந்த மிருந்தாலும் அடியேனுள்ளத்திற் பதிந்த ஸித்தாந்தம் மணவாளமாமுனிகளே பரதெய்வமென்பதாம்.
4-(சத்தோநைவ ) எம்பெருமானே பரதெய்வமென்று கொண்டாடப்பட்டாலும் அப்பெருமான் செவிக்கினிய செஞ்சொற்களாலே விவேகிகளின் மனத்தைக் கவர வல்லவனல்லன்: ஏன்? ஸ்ரீ விஷ்ணு புராணம் பகவத்கீதை முதலியவற்றில் அப்பெருமானருளிச் செய்த திவ்ய கூக்திகள் பல இல்லையோ வென்னில் வ்யாஸ பராசராதி மஹர்ஷிகள் எதையோ எழுதிவைத்து பகவத்வாக்யமாக நம்மை வஞ்சிக்கிறார்களத்தனை;மணவாளமாமுனிகளோ வென்னில் அப்படி யல்லாமல் நேராகத் திருவவதரித்தருளி அமுதமன்ன மென்மொழிகளைத் தாமே யருளிச்செய்து அறிஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றார்.
5-(ஐஸ்வர்யம் ) சிலர் லக்ஷ்மீ கடாக்ஷத்தாலாகும் சிறிது செல்வத்தைப் பெற்றுத் தங்களை ஒப்பற்றவர்களாக மதிக்கின்றார்கள்; அந்த அழியுஞ் செல்வத்தினால் என்னாகும்? உபயவிபூதியிலும் நித்யபோக்யமும் எல்லை யற்றதுமான நிதி அடியேனுக்குக் கிடைத்திருக்கின்றது; அந்த நிதிக்கு மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியென்று பெயர்; அப்படிப்பட்ட நிதியைப் பெற்றுள்ள அடியேனே மிகவும் தன்யன்
6-(லக்ஷ்மீச:) எம்பெருமான் முன்பு இராமபிரானாயும் கண்ணபிரானாயும்.அவதரித்து விச்வாமித்ரர் ஸாந்தீபிநி போல்வாரிடத்தில் சிஷ்யனாயிருந்து, அவர்கள் ஜிதேந்த்ரியர்களன்றிக்கே நித்ய ஸம்ஸாரிகளா யிருக்கும்படியைப் பிறகு தெரிந்து கொண்டு அந்தோ! ஆசார்யத்வ பூர்த்தியில்லாத இவர்களையா நாம் ஆசார்யராக வரித்தோமென்று எம்பெருமான் திருவுள்ளம் வெறுப்புற்றே யிருந்தது. அக்குறையை அர்ச்சாவதாரத்தில் தீர்த்துக்கொள்ள விரும்பி ஒரு நாளும் விடவொண்ணாத ஆசார்யரைப் பெற விரும்பி ஆசார்யத்வ பூர்த்தியுடைய மணவாளமாமுனிகளை ஆசார்யராக வரித்து க்ருதக்ருத்யனாயினன்.
7-(ஏஷஸ்ரீவரயோகி.) மணவாளமாமுனிகளுக்கு விசதவாக் சிகாமணியென்கிற விருது ப்ரஸித்தமானது; உண்மையில் இந்த விருது இவரொருவர்க்கே தகுமேயன்றி மற்றெவர்க்கும் ஏற்காது. ஏனெனில், ஸந்தேஹிக்க இடமில்லாமலும் விபரீதார்த்தங்கொள்ள வொட்டாமலும் வீண்வம்புவார்த்தைகளுக்குச் சிறிதும் இடமளிக்காமலும் மிகவும் லலிதமாய் பரமபோக்யமான ஸ்ரீஸுக்திகள் நிரம்பிய வியாக்கியானங்களை அருளிச் செய்தவரென்கிற புகழ் மாமுனிகளுக்கே அஸாதாரணமாய் விளங்குமதன்றோ.
8-(ஏதத்பத்த்ய.) எனது செவிக்கினியதோர் செஞ்சொல்லைக் கேண்மின்; மண வாளமாமுனிகளின் மதுரமான ஸ்ரீஸூக்திகளை இடைவிடாது ஸேவித்துப் பாருங்கள்: அவரைப் போன்ற வோராசிரியர் இதுகாறும் இந்நிலவுலகில் அவதரித்ததுண்டா? இனியாகிலும் அவதரிக்க முடியுமா வென்று, நன்மதியுடையீர்! நீங்களேசிறிது சிந்தித்துப்பாருங்கள்
9-(சாந்திர் தாந்தி:) சமம் தமம் முதலிய ஆத்ம குணங்கள் சேதநர்களுக்கு அவசியம் வேண்டியவை யென்றும் அவரவர்கள் தங்கள் நூல்களில் கம்பீரமாக எழுதிவைக்கிறார்கள். ஆனால், அந்தத் திருக்குணங்களுக்குக் கொள்கலமான ஆசிரியர்யாவர்? என்று சிலர்சிந்திக்கப் புகுந்தால் அவர்களின் உள்ளத்தில் மணவாளமாமுனிகளே குடிகொண்டிருக்கக் கூடியவர். மாமுனிகளைப் போன்ற சமதமஸம்பந்நர் வேறொருவருமிலர்.
10-அந்தர்வாணி ) அஸூயை யற்றவித்வான்களை அடிபணிந்து ஒன்று விண்ணப்பம் செய்கிறேன்; நீங்கள் பல பல ஆசாரியர்கள் இயற்றிய பல நூல்களைப் பார்த்திருக்கிறீர்களே; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளிலுள்ள இன்சுவை எந்த ஆசிரியருடைய திருவாக்கிலாவது கண்டதுண்டா? உள்ளவாறுரையீர்.
11-(தம்பம் கேவலம்) சில ஆசாரியர்கள் தங்கள் வாக்கினால் டம்பத்தை மாத்திரமே வெளியிட்டுக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய வாக்குகளில் பெரும்பாலும் பரநிந்தை தவிர வேறு என்ன காணமுடியும் ? நீறுபூத்த நெருப்பு என்னும்படியான மணவாளமாமுனிகள் ஒருவரே பரநிந்தாதிதோஷ லேசமுமற்ற பரமபோக்ய ஸ்ரீ ஸூக்திகளை யருளிச்செய்தவர்
12-(அந்தர்மாநஸம்) மற்றையோர்கள், நெஞ்சில் ஒன்றைவைத்துக் கொண்டுவாக்கில் வேறொன்றை வெளியிடுபவர்களாய் நூல்கள் எழுதிப் போருவர்கள்; பெரும்பாலும் அவர்கள் வஞ்சிக்க வல்லவர்கள்; அப்படிப்பட்ட துர்க்குண லேசமும் அற்றவரான மணவாளமாமுனிகள் ஸ்ரீரங்கநாதனுடைய தவப்பயனாகத்தோன்றினவர்:-அவர் எப்போதும் பக்தர்களின் உள்ளத்துள்ளே உறைபவர்.
13( யஸ் ஸர்வஜ்ஞ : ) (இந்தச்லோகத்தில் ஏழு வேற்றுமைகளும் வரிசையாக வரும்படி தொடையழகு காண்க.) எவர் ஸர்ஜ்ஞரென்று புகழ்பெற்றாரோ,எவரை ஸ்ரீரங்கநாதன் ஆசார்யராகக் கொண்டானே,எவரால் ஸ்ரீராமாநுஜதர்சநம் காக்கப்பட்டதோ, எவர் பொருட்டு நமஸ்காரம் நன்மை பயக்குமோ, எவரைக் காட்டிலும் மேம்பட்ட ஆசாரியர் இல்லையோ, எவருடைய தனியன் இவ்வுலகில் எஞ்ஞான்றும் வெற்றி பெற்று விளங்குமோ, எவரிடத்தில் ஸகல திருக் குணங்களும் பொருந்தி யுள்ளனவோ அந்த மணவாளமாமுனிகளைப் போற்றுகிறோம்
14-(ஆகாரம் வர) மணவாளமாமுனிகளின் பாற்கடல் போன்று பரமபோக்யமான திருமேனியை அடியேன் எப்போது ஸேவிக்கப்பெறுவேனென்று நெடுநாளாகக் கண்ணீர் விட்டழுது நைந்து கிடந்தேன்; அங்ஙனே துவண்டு கிடந்த அடியேனுக்கு மாமுனிகள் ஐயோவென்றிரங்கி அருள்செய்த படியை என்சொல்லுவேன்? எனக்குப் பெறாப்பேறு பெறுவித்தவரான அவரே மஹான்.
16-(ஆகாசே) சிறுவர்கள் (அவிவேகிகள்) சேற்றையெடுத்து ஆகாசத்தில் விட்டெறிந்தால் என்னாகிற தென்பதை அனைவரும் காணத் தட்டில்லையே.மண வாளமாமுனிகள் விஷயத்திலும் இந்த நியாயமே காணத்தகும். கருவிலே திருவிலாதார் மாமுனிகளின் அமுதமொழிகளில் தூஷணைகளைப் பிதற்றுவது அவர் களுக்கே அநர்த்தத்தை விளைக்குமதாம்.
17-(தம் தம் தேசிகம்) உலகில் புத்திமான்கள் அந்தந்த ஆசாரியரைத் துதிக்கும்போது ” மற்றஆசாரியர்களை விட்டு இவ்வாசிரியரையே தொழுங்கள்” என்று சொல்லுவதுண்டு; அடியேன் மணவாளமாமு களைத் துதிப்பது அந்த முறைமை யில் அல்ல; உண்மையில் மாமுனிகளைத் தவிர வேறு ஆசாரியர் இல்லை யென்று ஆணையிட்டுரைப்பேன்.
18-(ரங்கீ யஸ்ய) ஸ்ரீரங்கநாதன் யாவரொரு மணவாளமாமுனிகளின் திருக் குணங்களை நெடுநாள் ஆராய்ந்து நோக்கி சிஷ்யனானானோ அந்த மாமுனிகளுக்குப் பிறகு வேறொரு ஆசாரியர் இருக்கக் கூடாதென்று அவரோடு ஆசார்ய பரம்பரையை ஸமாப்தி செய்து விட்டான்; (அதாவது)பூருவாசாரியர்கள் என்கிற வியபதேசம் மாமுனிகளோடு முற்றுப்புள்ளி யடைந்திட்டது. இவ்விஷயம் உலகமெல்லாம்அறிந்ததேயாதலால் மாமுனிகளுக்குமேற்பட்ட ஆசார்யார் இல்லையென்று அடியேன் துணிந்து கூறுகின்றேன்.
19-(அத்யாச்சர்ய) பிள்ளைலோகாசார்யரின் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்யஹ்ருதயமென்னும் திவ்ய க்ரந்தத்தை உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகள் வியாக்கியானித்தருளினார்; பரம போக்யமான அந்த வியாக்கியானத்தை இடைவிடாது ஸேவித்தால் ஸர்வஜ்ஞராகப் பெறலாம்.
21-(தந்யாஸ் ஸ்யாம்.) எப்போதும் நாம் பாக்யசாலிகளாகவே யிருக்க வேணு மென்னும் விருப்புடையீர்! கேண்மின் ; மணவாளமாமுனிகளருளிச் செய்த வியாக் கியானத்தோடு கூட ஸ்ரீ வசநபூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆசார்ய ஸந்நிதியில் அடிக்கடி ஸேவியுங்கள்; இதுவே பரமபாக்யம்; இதற்கு மேற்பட்ட பாக்யமில்லை
22-(ஈர்ஷ்யாதுர்க்குண) *பிறர்மினுக்கம் பொறாமையிலாப் பெருமைபெற்றுசமதமக் கடலாக விளங்குகின்ற மணவாளமாமுனிகளை விட்டு வேறொரு ஆசார்யரை ஆசரயிக்கின்றவற்கு என்னத்ரூப்தியுண்டாகும்? அன்னவற்கு ஆயுள் முழுவதிலும் உண்மைப்பொருள்களை யுணர்வதற்கு ப்ரஸக்தியில்லையாகுமன்றே
23-(பங்கோதைவ) மணவாளமாமுனிகளின் தனியனுக்கு இப்பூமண்டலத் தில் ஓரிடத்திலும் ஒருபோதும் பங்கம் விளைவதில்லையென்கிற (இந்தத்தத்துவத்தை நன்கு உணரவல்ல மஹான்களின் மனத்தில்மாமுனிகள் தவிர மற்றொரு ஆசாரியர் திருவடிவைக்கமுடியுமோ? அஸூயை யற்றவர்கள்இதனை ஆராய்ந்துணர்க
24-(அந்யாய்யார்த்த ) சிலர் தங்கள் சுவடிகளில் தப்பான அர்த்தங்களையேகூசாமல் பெரும்பாலும் எழுதிவைத்து, அவ்வளவோடும் நில்லாமல் “இதில் தப்பான அர்த்தம் ஒன்றுகூட இல்லை; எல்லாம் மஹாப்ராமாணிகமான அர்த்தமே எழுதிவைத்தோம்” என்றும் ஊடே யூடேயெழுதி உலகத்தை வஞ்சித்துக் கீர்த்தி பெறுவாருளர் ; அன்னவர்கள் கிடக்க ; மணவாள மாமுனிகளொருவரே பிராமாணிகர்களில் தலைவர்.
25-(கச்சிந்மாமிஹ) கீதையில் கண்ணபிரான் *கச்சிந்மாம் வேத்தி தத்வதஎன்று என்றைக்கோ சொல்லி வைத்தான்; ‘தன்னை யுள்ளபடி யறியவல்லவர்யாரோ வொருவர் ‘ என்று சொன்னஅந்தகீதையின்படி மணவாளமாமுனிகளொருவரே தத்வஜ்ஞராகத் திருவவதரித்தவர் ; அவருடைய ஸ்ரீஸூக்திகளில் ப்ராவண்யமுடையோமுக்கும் தத்வஜ் பாவனை உரியதேயாம்.
27-(யஸ்ய ஸ்வாது ) தம்முடைய பரமமதுரமான ஸ்ரீஸுக்திகளில் தமது பரம பராமாணிகத்வத்தை விளங்க வைத்தவரும், குடில் புத்தியின்றிக்கே ருபுத்தியா யிருப்பவரும், பிள்ளை யுலகாசிரியருடைய ஸ்ரீஸூக்திகளைக் காக்கவே அவதரித்தவரும், ஸ்ரீரங்கநாதனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவருமான மணவாளமாமுனிகள் எனது உள்ளத்துள்ளே யுறைகின்றார்.
28-(ஆதாவாதி.) முதலில் ஆதிசேஷனாயிருந்து பிறகு இளையபெருமாளாகவும் அதன்பிறகு எம்பெருமானாராகவும் அதற்குப்பிறகு மணவாளமானிகளாகவும் இங்னே அடைவே திருவவதாரமாயிற்றென்று ஸத்துக்கள் உண்மையுணர்ந்துபேசப்பெற்ற மாமுனிகள் அடியேனுடைய அகவிருளைப் போக்கியருளினார்.
29-(த ஸ்ஸந்தி ) ஆச்சரியமான பந்தங்களுடன் கூடின பல கவிதைகளைச்கணப்பொழுதில் இயற்றவல்ல கவிச்ரேஷ்டர்கள் பலர் இவ்வுலகிலுளர் ; இது கிடக்கட்டும். அவற்றால் என்னபயன்? அவையெல்லாம் ஒன்றுகூடினாலும் மணவாளமாமுனிகளின் அமுதமென் மொழிகளில் ஒரு அக்ஷரத்திற்கு இணையாகாவென்பது ஸத்யம்.
30-(இந்தேஸந்ததம்) மணவாளமாமுனிகள் பாற்கடல் போன்ற தமது திருமேனியொளியை என்னெஞ்சினுள்ளே விளங்கக் காட்டியருளா நின்று கொண்டுஸேவைஸாதிக்கின்றார். கனவிலுங் காண வரிதான அத்திருமேனி விளக்கத்தைப் பாவியேன் நனவிற்காணுமாறு அருள்செய்த அதிசயம் என்னே.
31-(கச்ேயம் யதி) ஒருகால் அடியேன் பரமபதத்திற்குச் செல்வேனாயின் அங்கும் மணவாளமாமுனிகளின் திருவடி வாரத்திலேயே ஸகல கைங்கரியங்களையும் செய்துகொண்டு அவருடைய மதுர ஸ்ரீஸுக்திகளையே அநுபவித்துக்கொண்டு வாழக்கடவேன்; இல்லையாகில் ஜூனர்ய மண்டலத்தைப் பிளந்து கொண்டு மீண்டும் இந் நிலவுலகுக்கே வந்து விடுவேனென்பது திண்ணம்.
32-(உர்வ்யாமத்ர) இவ்விருள் தருமாஞாலத்தில் பிறப்பு வெறுக்கத்தக்கதென்று பெரியார்கள் கூறுகின்றார்களெனினும் அது அடியேனுக்கு ருசிக்கவில்லை;ஏனெனில், அடியேன் இவ்வுலகில் இருந்துகொண்டும் மணவாள மாமுனிகளின் திவ்யஸுக்தி யமுதத்தையே பருகிக்கொண்டு எப்போதும் ஆனந்தசாலியாகவே யிருக்கிறேனன்றோ! ( துன்பமுண்டானாலன்றோ உலகவாழ்க்கை வெறுக்கதக்கதாம்).
33-(உக்தம் யத் ) நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் “கலியுங்கெடுங் கண்டு கொண்மின்” என்றருளிச் செய்தது எம்பெருமானாரை நோக்கி யென்பர்கள் அவ்வெம்பெருமானார் தாமே மீண்டும் மணவாளமாமுனிகளாகத் திருவவதரித் தருளிக் கலி வித்வம்ஸநமாகிற ஸ்வக்ருத்யத்தைக் குறையறச் செய்து தலைக்கட்டி அவ்வாழ்வார் ஸ்ரீஸூக்தியை யதார்த்தமாக்கி யருளினார்.
34-பாணிநி முனியின் சாஸ்த்ரமான வியாகரணத்தில் விபரீதங்கள் பலகாணப் படும்.ந-காரம் ண- காரமாய் மாறிவிடும், ஸ – காரம் ஷ-காரமாய்மாறிவிடும். ப்ர நயதி, ப்ரணயதி வி-ஸஹதே,விஷஹதே. இத்யாதிகள் காண்க. மணவாளமாமுனிகளின் திருவாக்குக்களில் இங்ஙனே ஒரு விபரீதங்கூடக் காணமுடியாது. எதுவும் யதாவத்தாகவேயிருக்கும். இது சாடூக்தி.
35-(ஆவேசம் ) பொய்கையார் முதலான ஆழ்வார்களனைவரும் ஸ்ரீமந்நாதமுனிகள் முதலான ஆசார்யர்களனைவரும் மணவாளமாமுனிகள் பக்கலில் ஆவேசித்தனர் என்னலாம், அல்லது, வடமொழி தென்மொழி மறைகளின் பாக்யஸர்வஸ்வமும் ஒன்றுசேர்ந்து மாமுனிகளாக வடிவு பூண்டு உதித்தது என்று நிஷ்கர்ஷிக்கத்தட்டில்லை.
36-(ரங்காதீச்வர) ஸ்ரீரங்கநாதனுடைய பாக்ய பரம்பரையே மணவாளமாமுனிகளென்கிற திருநாமங் கொண்டு உலகில் அவதரித்தது என்கிற ப்ரதிபத்தியே அடியேனது நெஞ்சில் கொழுந்துவிட்டோங்குகின்றது; இவ்விஷயத்தில் அதிகமான உபபத்தியிருப்பதால் இதுவே திடமான ஸித்தாந்தமாக வடுக்கும்.
37-(ணத்வம்பாததே.)மஹாபண்டிதரென்று புகழ் பெற்ற அப்பயதீக்ஷிதர் நாராயண நாமத்தை சிவபரமாக நயிப்பிக்கவேணுமென்று சிரமப்பட்டு ணத்வம்பாதிக்கிறது ‘ என்றுசொல்லிக் கையொழிந்தார் என்பது ப்ரஸித்தமான விஷயம்;அவர்க்கு ஸ்ரீமந்நாராயணனிடத்தில் இருந்த த்வேஷம் உலகமறிந்ததே.அதனால்நாராயணனுக்கு ஒருகுறைவு நேர்ந்ததாகவில்லை. இதுபோலவே, வித்வான்களென்று பேர் படைத்த பிறர்கள் மணவாளமாமுனிகளிடத்தில் மாச்சரியம் கொண்டாலும் அதனால் குறையொன்றுமில்லை; அன்னவர்கள் படும் பாடு சொல்லவேணுமோ?
38-(அல்பீயா நஹம்) உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகளை பக்தியிற் சிறந்த மஹான்கள் துதிக்கவேணுமே யன்றி நீசனேன் நிறையொன்றுமிலேன் துதிப்பது தகுதியே யன்று; ஆயினும் அடியேன் ஓயாமல் அவரையே துதித் துக்கொண்டிருக்கிறேன்; இதற்காக நான் சிறிதும் வெட்கப்படுகின்றிலேன்; ஏனெனில், மாமுனிகளின் ஸகல வைபவங்களையும் உள்ளபடி யுணர இவ்வுலகினுள் அடி யேனொருவனே பாக்யம் பெற்றேனன்றோ.
39-(வல்லீதுல்ய ) வல்லிசேர்நுண்ணிடை மாதர்களோடு அணைவதனால் இன்பமுள்ள தென்று நீசர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு இன்பமிருக்கலாம்; ஆனால் அது மிகவும் அற்பமானது; ஸ்ரீரங்கநாதனுக்கு ஆசார்யராக அமைந்த மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ஸாகரத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து உலகிலுள்ள ஸகலவித போகங்களாலும் விளையக்கூடிய ஸகலவிதமான இன்பங்களையும் நுகர்வோம் யாம்.
40-(அந்யாந்யேஷு ) உலகில் ஒவ்வொருவர்க்கும் லௌகிகமான பலபலகாரியங்க ளிருப்பதால் அவற்றில் போது போக்கநேர்ந்து அதிசுகாலம் வீணாகவே கழிந்து போகிறது; மணவாளமாமுனிகளே! அடியேனுக்கு அப்படியல்லாமல் தேவரீருடைய திவ்யஸ்ரீஸூக்திகளிலேயே ஸகல காலமும் செல்லும்படி அருள்புரிய வேணுமென்று திருவடிவாரத்தில் வேண்டிக்கொள்கிறேன்.
44-(அத்வாதம்) மணவாளமாமுனிகள் காட்டியருளின பத்ததியைப் பற்றினவர்களுக்குத் தத்வார்த்தங்களில் தூய நன்மதி விளங்குவது ப்ரஸித்தம்; தெளர்ப்பாக்யவசத்தாலே அந்த நல்வழியில் விமுகராயிருக்குமவர்கள படும்பாட்டை என்சொல்வேன்? அன்னவர்களின் பிறவியே வெறுக்கத்தக்கது.
45-(தந்யாந்திஸ்துல) மணவாளமாமுனிகள் தம்முடைய திவ்ய ஸ்ரீஸுக்தி)களில் விமுகராயிருப்பார்கட்கும் அன்பு உண்டாகும்படி கடாக்ஷித்தருளவேணுமென்று அடியேன் வேண்டிக்கொள்ளுகிறேன். ஏனெனில் ஸ்ரீவைஷ்ணவர்களாகபிறந்து மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளில் மாச்சரியங் கொண்டிருந்தால் அவர்களுக்கு இடையறாத துர்க்கதிகளன்றோ நேரும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு துர்க்கதி நேருவதென்றால் இந்த துக்கம் ஸஹிக்கக் கூடிய தன்றே. ஆகவே, தீயவர்களையும் நல்லவர்களாக்கி யருள்க.
46-ஈஷத்பத்தி:)மண வாளமாமுனிகளின் திருவடிகளில் ஸ்வல்பபக்தியிருந்தாலும், பரமார்த்தங்களை உள்ளபடி உணர் தற்கு அவ்வளவே போதுமானது.இங்ஙனமே மாமுனிகள் திறத்தில் சிறிது மாச்சரியமுண்டானாலும் பல கொடிய நரகங்களில் விழுந்துழல்வதற்கு அவ்வளவேபோதும். அந்தோ! இவ்வுண்மையை அறிந்து வைத்தும் நசித்துப்போக நினைப்பார் பலருளரே!!
47-( நத்வா ஸ்ரீவரயோகி ) அடியேனுடைய தலை மணவாளமாமுனிகளின் திரு வடிகளைத் தொழுது தன்யமாகின்றது. வாக்கு அவருடைய திருக்குணங்களைத் துதித்து க்ருதார்த்தமாகின்றது. உள்ளம் அவருடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்தை செய்து பவித்திரமாகின்றது. கை அவருடைய பரந்த புகழை யெழுதி ஸத்தை பெறுகின்றது.
48-(தத்தேரம்யவர ) மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி உண்மையில் கட லென்னத்தகும். கடல் செய்வதெல்லாம் செய்கின்றது இதுவும். கடல் ஸ்ரீயைத் தந்தது.இந்தக்கடல் பக்தர்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தந்திடுகின்றது. கடல் ரத்னங்களைத் தருகின்றது; இக்கடல் ஸக்குணங்களாகிற ரத்னங்களைத் தருகின்றது. (மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைப் பயில்பவர்கட்கு நற்குணங்கள் விளையுமென்கை.) கடல் அலைகளைத்தரும். இக்கடல் மதுரோபதேச தரங்கங்களைத் தரும். கடல் சந் திரனைத் தந்தது; இக்கடல் நல்ல கீர்த்தியாகிற சந்திரனைத் தருகின்றது. (மாமுனி களின் ஸ்ரீஸுக்திகளைப் பயில்பவர்கட்கு நல்லபுகழுண்டாமென்கை)அக்கடல் கல்ப வ்ருக்ஷத்தைப்பயந்தது. இக்கடல் ஞானமாகிற கற்பகத்தருவைத் தரும். அக்கடல் அமுதமளித்தது. இக்கடல் வேதாந்த விழுப்பொருளாகிற அமுதமளிக்கவல்லது அக்கடல் ஹாலாஹல மென்னும் நஞ்சை நல்கிற்று; இக்கடல் (தத்வத்ரய வ்யா க்யாநாதிகளில்) பரமத த்வம்ஸந ஸ்ரீஸுக்தியாகிற ஹாலாஹலத்தைத்தரும். ஆகவே கடலென்னப் பொருந்தும். ( பரமத த்வம்ஸந ஸ்ரீஸூக்திகளும்தொண்டர்க்கு அமுதமேயானாலும் பிறருடைய திருஷ்டியாலே ஹாலாஹலமென்றது.)
49-(ரக்ஷயாம் நிபுண: ரக்ஷிக்க வல்லவன் லக்ஷ்மீபதி என்றொரு ப்ரஸித்தி வீணாகவே உலகிற் பரவியது. உண்மையில் மணவாளமாமுனிகளே நம்மைரக்ஷிப்பவராவர். இஷ்டப்ராப்தியையும் அநிஷ்ட நிவாரணத்தையும் செய்பவரே ரக்ஷக ராதலால் மாமுனிகள் தாமே தமது ஸ்ரீஸூக்திகளால் அவ்விரண்டையும் செய்துகொண்டு ஸம்ஸாரிகளை நன்கு ரக்ஷித்தருளா நின்றார்.
50-(அந்தநாம் ரவி) குருடர்களுக்கு ஸூர்ய கிரணங்களால் ஒரு பலனுமில்லை யென்பதால் ஸூர்யனுக்கு ஏதேனும் குற்ற முண்டோ? அதுபோல கருவிலே திருவிலாதார் சிலர் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளால் பயன் பெற்றிலரென்றால் அதனால் என்ன சேதம்? பயன் பெற்று வாழ்கிற புனிதர்களைக் கண்டு தெளிக.
51-(பர்ஜந்யோ ஜல) மேகமானது கடல்நீரைப் பருகிப் பரமமதுரமாக வர் ஷிப்பதுபோல மணவாள மாமுனிகளும் சாஸ்த்ரக் கடலில் நின்றும் அளவற்றவிஷயங்களை முகந்து கொண்டு அதிமதுரமாக வர்ஷித்து பாக்யசாலிகள் பலரும் பருகிக்களிக்குமாறு செய்தருளா நின்றார்.
52-(ரக்ஷாபேக்ஷண.) “ஸர்வஜ்ஞோபி ஹி விச்வேசஸ் ஸதா காருணிகோபி ஸந் ஸம்ஸார தந்த்ரவாஹித்வாத் ரக்ஷ்யா பேக்ஷாம் ப்ர தீக்ஷதே”என்கிறப யே ரக்ஷா பேக்ஷ மாத்திரத்தையே எம்பெருமான் எதிர் பார்க்கிறானாதலால் நாம் பரக்கவொரு ஸாதநாநுஷ்டானம் பண்ணலாகாதென்று பிள்ளை லோகாசாரியர் அருளிச் செய் ததை நன்கு விளக்குகின்ற மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ரத்னம் எம்பெருமானார் தரிசனத்திற்கு உயர்ந்த மணி விளக்காகவுள்ளது.
53-அந்தர்த்வாந்தம்.) அகவிருளையகற்றுவதற்கு உலகில் ஞானவிளக்கொன்று தவிர வேறொரு கருவி கிடையாதென்பது நிர்விவாதம். அப்படிப்பட்ட அணி விளக்கை இன்னருளால் ஏற்றிவைத்தவர் மணவாள மாமுனிகள் ஓருவரேயாவர். ஆயினும் அந்தோ! அவ்விளக்கில் சலபமாகி யொழிவாரும் சிலருளரே! அன்னவர் கட்கு நேரப்போகும் துர்க்கதியை என் சொல்வோம்!
54-(வந்தே ஸுந்தர.) க்ஷத்ர ஜனங்களுக்கு வியாமோஹத்தை விளைக்க வல்ல பலபல சுவடிகளை யெழுதி வைத்து உலகை வஞ்சிப்பார் பலருளர்; அன்னவர்களுடைய உக்திராசிகளால் அடியேனுடைய மனம் ஒருபோதும் விகாரமடையாதிருக்க வேணுமென்று மணவாளமாமுனிகளின் திருவடியிணையை இறைஞ்சுகிறேன்.
55-(அப்திர் லங்கித:) * அப்திர் லங்கித ஏவ வாநர படை:* என்று முராரிகவி பணித்தபடியே கடலைக்கடந்த வானர முதலிகளுக்குக் கடலின் ஆழம் தெரியாதாப்போலே உலகில் பண்டித்தரென்று பேர்படைத்தவர்களெல்லாரும் மேலெழுந்தவாரியாக அறிந்தவர்களே யன்றி சாஸ்த்ரார்த்த ஸாரங்களை உட்புகுந்து அறிந்தாரிலர்;மணவாள மாமுனிகளொருவரே ஆழ்ந்த அறிஞரென்று திண்ணமாகவெண்ணுக
64-( ரக்ஷிஷ்யதி. ) உலகில் பலரும் எம்பெருமானையே ரக்ஷகனாக மயங்கி அவனையே துதிக்கின்றனர். அந்த பகவான் தானும் ஆசார்ய ஸம்பந்த மில்லா தாரைக் கடாக்ஷிக்க வல்லவனல்லன்; மணவாள மாமுனிகளிடத்திலேயே ஆசார்யத்வம் புஷ்கலமாதலால் இவருடைய ஸம்பந்தத்தை நோக்கியே அவன் ரக்ஷிக்கவல்லவன்; ஆதலால் மாமுனிகளே முமுக்ஷக்களுக்குத் தஞ்சம்.
65-(அத்வாத்வ ) நல்வழி தீ வழி தெரியாது திகைக்கின்றவர்களுக்குக் கை கொடுக்கவே பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்த ரஹஸ்யார்த்தக்ரந்தங்களை மணவாளமாமுனிகள் பரமகிருபையோடு விசதமாக வியாக்யானித்தருளாதிருந்தால், அந்தோ ! உலகம் முழுவதும் ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்தித் துவளுமே! மாமுனிகளின் பேரருள் பேச்சுக்கு நிலமோ?
66-(மக்நாநாம்) மணவாள மாமுனிகளின் திருவடிகள் பிறவிக்கடலுள் அழுந்தினார்க்கு நாவாய் போலும்; அவருடைய திருவாக்குக்கள் விஷயவிஷதரங்களாலே கடியுண்டார்க்கு கருட மந்த்ரம் போலும்; அவருடைய திருமேனிவிளக்கத்தைச் சிந்தை செய்வது பாவங்களாகிற காட்டுத் தீயில் வேகின்றவர்களுக்கு வர்ஷதாரை போலும், அன்னவர் வாழ்க-
68-(அஹ்தாயாச்ரயத ) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளை உகந்து விரைந்து பணிமின்: பின்னை அவருடைய திவ்ய ஸூக்திகளுள் ஆர்த்திப் பிரபந்தத்தை உரக்க அநுஸந்தித்து எல்லா ஆர்த்திகளையும் உடனே தொலையப் பெறுங்கள்; ஸகல ச்ரேயஸ்ஸுகளும் தன்னடையே வந்து சேரும்படி கண்டு மகிழுங்கள்.
69-(ஐந்மாந்யத்ர) அடியேன் இப்போது போலவே எப்போதும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளையே சுவைத்திருப்பேனாயின் அடியேன் மீண்டு மீண்டும் இவ்வுலகிலே பிறக்கப் பெறுவேனாக; பிறவிதோறும் இப்பெரும் பாக்கியம் வாய்க்குமாகில் பரமபதத்திலும் வாஞ்சை யுடையேனல்லேன்; மாமுனிகளே! இதுவே உண்மையுரை : பூர்ணமாகக் கடாக்ஷித்தருள வேணும்.
71-(மந்த்ராஸ் ஸந்திஹி) மணவாள மாமுனிகளே! உலகில் பலபல பகவந் மந்த்ரங்கள் உள்ளன; அவற்றிற்கு என்ன பெருமை ஏற்பட்டது? அவற்றைச் சிந்திப்பாரார்? அவற்றில் யாருடைய உள்ளம் ஊன்றியிருக்கிறது? ஸ்ரீரங்கநாதனுடைய முகாரவிந்தத்தில் தோன்றின மதுவென்னலான (தேவரீர் விஷயமான) ஸ்ரீசைலேச மந்திரத்தின் பெருமையேயன்றோ உலக முழுவது மோங்கி நிற்கின்றது.
72-(ஆசார்யப்ரவரம் ) மணவாள மாமுனிகளிடத்தில் எல்லாப் பெருமைகளும் விளங்க நின்றாலும் ஒரு குறை மாத்திரம் உள்ளதேயாம்: அது என்னெனில்; மிகச் சிறந்து பரமபாவனமாய் விளங்கும் ஸ்ரீசைலேச மந்திரத்தைச் சிந்தை செய்யும் பாக்கியம் அவர்க்கு இல்லையாயிற்றே.
73-( த்வம் கிஞ்சந.) மணவாளமாமுனிகளே! ஒரு உண்மைகேளீர் : தேவரீருடைய மஹோத்ஸவம் கச்சிநகர் முதலான பலதலங்களில் பெருக்க நடக்கிறதன்றோ. அந்த ஸமயங்களில் அடியேன் அனுபவிக்கும் ஆனந்தாதிசயத்தை தேவரீர் விபவத்தில் அனுபவிக்கப் பெற்றிலீரன்றோ ( அப்போது மணவாளமாமுனிகளுத்ஸவமென்று ஒன்று நடைபெறவும் அவ்வானந்தத்தை அநுபவிக்கவும் ப்ராப்தமாகவில்லையே.] ஆதலால் இவ்வகையால் தேவரீரைவிட அடியேனே பாக்யசாலியாவேன்.
74-(அத்யேஷாமபி) திவ்ய தேசங்களில் மற்றும் பல ஆசிரியர்களுக்கும் உத்ஸவம் நடைபெற்றாலும் மணவாள மாமுனிகளுத்ஸவத்தின் வீறு விலக்ஷணமானதே. ஐப்பசி மாதம் அவதரிக்கப் போகிறதென்னும்போதே பிடித்து எமது நெஞ்சில் நடைபெறும் உத்ஸாஹ மஹோத்ஸவத்தை என் சொல்வோம்.
76-(அத்யாஹம்வரயோகி) மணவாளமாமுனிகளே! இன்று அடியேன் தேவரீரைத் துதிக்கவிழிந்து, சிறிதும் ஆலோசனையின்றியே இங்ஙனே ச்லோக மாலிகையை விரைவாகவே விண்ணப்பம் செய்து வருகிறேன்; இந்த ஸ்தோத்திரமோ முடிவு பெற்று விடும். தேவரீருடைய பெருமைக் கடலிலோ சில திவலைகள் மாத்திரமே அநுபவிக்கப்பட்டன, முழுவதும் அநுபவிக்க எங்ஙனே முடியும்?
77-(மந்தப்ரஜ் ): மணவாள மாமுனிகளே! அடியேன் மந்தமதி யென்று பேர் பெற்றவனாயினும், தேவரீருடைய பெருமைகளை விளக்கும் ச்லோகங்களையே இடைவீடின்றித் தொடுத்துக் கொண்டிருக்கி றேனாதலால் மஹாப்ராஜ்ஞ னென்று விருது பெற்றேனானேன்; தேவரீருடைய திருவருளை என் சொல்வேன்?
78-(மந்த்ரம் த்வத்விஷயம்) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய தனியனான ஸ்ரீசைலேசத் திருமந்த்ரம் ஸகல திவ்ய தேசங்களிலும் புகழ் பெற்றுவருவதைக் கண்டு பொறாதார் சிலர் தாம் வேறொரு பத்யத்தை ஸ்ருஷ்டித்து அடிக்கடி பிரபலமான பரிபவத்தைப் பெற்று வருகிறார்களென்பதை நன்கு அறிந்தேயிருக்குமவர்கட்கும் அந்தோ! தேவரீருடைய பெருமை தெரியவில்லையே!
79-(உத்திஸ்ஸத்யதமா) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸூக்திகளே பொய்யொன்றுமில்லாதவை என்கிற உண்மையை நன்கு அநுபவித்துத் தெரிந்து கொண்டவர்களான பூருவாசாரியர்கள் * பொய்யிலா தமணவாளமாமுனி புந்திவாழி * என்று வாழ்த்தினார்கள், தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை ஆராயு மளவில் அந்த வாழ்த்து ஸத்யமானதே யென்று பறைசாற்றத் தட்டில்லை.
81-(இந்த்ரஸ் ஸம்யமிநாம் ) பெரிய ஜீயர், மணவாளமாமுனிகள், அழகிய மணவாள மாமுனிகள், திருவாய்மொழிப்பிள்ளை மாதகாவால் வாழ்ந்தவர், திருவனந்தாழ்வான் திருவவதாரமானவர் என்றிங்ஙனே நாமாவளிகளை எனது நெஞ்சம் நிச்சலும் சிந்தை செய்து தூய்மை பெறுகின்றது.
82-(இந்தே ருத்ர வர) மணவாள மாமுனிகள் எங்கு எழுந்தருளியுள்ளாரென்று கேட்டால். தம்மைச்சிந்திப்பார் சிந்தையினுள்ளும், திவ்ய தேசங்களிலும், திருவாய் மொழியின் இன்னிசை மன்னுமிடங்களிலும் எழுந்தருளியிருப்பதாகப் பலரும் கூறுவர்; அடியேன் விண்ணப்பம் செய்வது அங்ஙனன்று; அவை யெல்லாவற்றோடுங்கூட என்னுள்ளத்துள்ளே யுறைகின்றா ரென்பதே உண்மை.
(அவதாரிகை )எம்பெருமான்விஷயத்தில் ஈடுபட்டவர்கள் * மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று சொல்லி மங்களாசாஸநம் செய்வது போல மணவாள மாமுனிகளிடத்தில் ஈடுபட்டவர்கள் * வரவரமுநி பத கமல! ஐயஎன்று (வடமொழியில்) சொல்லி மங்களா சாஸநம் பண்ண ப்ராப்த மாகையாலே அந்த வாக்ய ஸந்நிவேசத்தை யிட்டு அதிலுள்ள அக்ஷரங்களின் அடைவே ஒரு ஸ்தோத்ரம் விஜ்ஞா பிக்கலாயிற்று. இதற்கு ஸ்ரீமத் வரவரமுநிகாணாம்ருதமென்று ஒரு பெரியார் நாமமிட்டருளினார். மேலேவரும் ரஸாயந ஸ்தோத்ரமும் இதுவும் லகுவான அக்ஷரங்களே நிரம்பப் பெற்றது.
86-(வரவர) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரையே! நீ வாழ்க என்னும் பொருளதான * வரவரமுநிபதகமல! ஐய * என்கிற இந்த வொருபாதத்தையே சிந்தை செய்மின்; (அதற்குமேல் சக்தியிருந்தால்) இந்த பாதத்தின் எழுத்தடைவே அமைக்கப்பட்ட இந்த கர்ணாம்ருத ஸ்துதியையும் கண்ட பாடம் செய்து சொலலுமன். (வடமொழியிலுள்ளவது தேவநாகரலிபியிலுள்ளது)
91-{முநிரிதி) முநியென்றும் குருவென்றும் யதியென்றும் இவ்வுலகில் மற்றும் பலரும் பேசப்பட்டிருந்தாலும் அந்த முநி -குரு – யதிபதங்களெல்லாம் மணவாளமாமுனிகள் திறத்திலே தான் அர்த்த புஷ்டியுடன் விளங்குவன
92-(நிதிமிவ) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்ய ஸ்ரீ ஸுக்திகளை உள்ளத்துள் நிதிபோல வைத்துக் காக்க வல்லவர்கள் பலபிறவிகளில் செய்தபாவங்களெல்லாம் ஒருநொடிப் பொழுதில் தொலையப்பெறுமவராவர்கள்.
93-(படுமதிரி ) இவ்வுலகில் விவேகியான வொருவன் தேவரீருடைய ஸ்ரீஸுக்திகளை ஓயாமல் வாய்க்கொள்வனாகில் அவன் ஹயக்ரீவனை வென்றவனென்று புகழ் பெற்றவனேயாவன்.
94-(தமசமமுக) சமதமாதி குணக்கடலென்று பெற்ற புகழினால் உலகத்தை யெல்லாம் பரிமளிக்கச் செய்தருளாநின்ற மணவாள் மாமுனிகளே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை என்னுடைய நெஞ்சகம் பால் எழுதியருள வேணும்.
95-(கலிபலம்) கலியின் கொடுமை நாள்தோறும் எவ்வனவு வளர்ந்து சென்றாலும் அதுபற்றி எனது நெஞ்சில் சிறிதும் அச்சமில்லை. ஏனென்றால். மணவாள மா னிகளின் ஸ்ரீஸக்திகளினால் என்னுள்ளம் தெளிவுபெற்றிருப்பதனால்.
96-(மம மதிரி ) மணவாள் மாமுனிகளே! அடியேன் எப்போதும் தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளையே நெஞ்சில் நிதியாகக்கொண்டிருக்கிறே னென்பதுபற்றி அடியேனது புத்தியைப் பலரும் கொண்டாடுகின்றனர், இஃது ஒக்கும்.
97-( லஸத்தி)மணவாளமாமுனிகளே! இவ்வுலகில் மற்றும் பல ஆசிரியர்களின் திருவாக்குகள் பல விளங்கினாலும் அவற்றால் பயனொன்றும் காணோம்; தேவரீருடைய ஸ்ரீஸூக்திகள் அவதரியாதிருந்தால் இருள் செறிந்தேயிருக்கும்.
100-(வரவர) மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸ்தோத்ரமானது ஒருகுணமுமற்றதாயினும் வித்யான்களின் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியைத் தருமென்பது திண்ணம், என்று விஜ்ஞாபித்து இந்த வடமொழி ஸ்தோத்ரம் தலைக்கட்டப்பட்டது.
ஸ்ரீ மத்வரவரமுநீந்த்ரக்லோக ஷட்சதியில் இரண்டாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி கர் ணாமருதம் முற்றிற்று.
ஸ்ரீமத்வரவரமுநீந்த்ர ஷட்சதியில்:- மூன்றாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி வைபவ ஸ்தோத்ரம்
“ ஸ்ரீ சைலேசதயாபாத்ரம் “ என்கிற தனியனிலுள்ள முப்பத்திரண்டு அக்ஷரங்களில் ஒவ்வொரு அக்ஷரத்தையும் அடைவே ஒவ்வொரு ச்லோகத்தின் முதலெழுத்தாகக் கொண்டது இந்த ஸ்தோத்ரம்.
101-(ஸ்ரீமத்வர.) கற்பகக்கொடிபோல் விரும்பிய பொருளனைத்தையும் பதந்தோறும் அளிக்கவல்ல ஸ்ரீஸூக்திகளையருளிச் செய்தவரும் ஸமஸ்த திருக்கல்யாண குணங்களுக்கும் கொள்கலமுமான மணவாளமாமுனிகளை எப்போதும் வணங்குவன்
113-(குருபிரிஹ) இவ்வுலகில் பல பல ஆசிரியர்களால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீஸூக்திகள் அளவு கடந்தவை யுண்டெனினும் மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளிலுள்ள இனிமை இணையற்றதேயாம்
114-(குணவை) ஒரு யோக்யதையும் சிறிதுமில்லாத அடியேனுக்கும் மணவாளமா முனிகளின் திவ்யஸூக்திகளின் ஆழ்பொருள்களெல்லாம் நன்கு தெரியும் படி அந்தமாமுனிகளின் திருவருளே வாய்க்கவேணும். [ இந்த ச்லோகத்தில் ணகலைரம் இரண்டாமெழுத்தாக அமைக்கப்பட்டது.
115-(அர்ணவ ) .’ அப்ரமேயோ மஹோததி:” என்னப்பட்ட, கடலின் காம்பீர்யத்தையும் அளவிடவல்லார் சிலருண்டு: மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திக்கடலின்காம்பீர்யம் மாத்திரம் ஒருவர்க்கும் நிலமன்று. I இந்த ச்லோகத்தில் (ர்ண ) என்கிற எழுத்து இரண்டாமக்ஷரமாக அமைக்கப் பட்டது .)
131-(முஹ ரிஹ) மணவாளமா னிகளின் ஸ்ரீஸத்தியமுதத்தைப் பருகிப் பருகிக் களித்த ஸ்ரீரங்கநாதன் சோதிவாய் திறந்து பணித்த* ஸ்ரீசைலேசத்தனியன் உலகிலுள்ள ஸகல மந்த்ரங்களையும் வென்று வீறுபெற்று விளங்குகின்றது.
132-(நிகில பி) ஆங்காங்குக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் எம்பெருமான்கள னைவரும் மணவாளமாமுனிகளையே தேவதையாகக்கொண்ட எந்த ஸ்ரீசைல மந்தரத்தையே நாடோறும் திருச்செவிசாத்தித் திருவுள்ளம் பூரிக்கின் றனரோ அந்த மந்த்ரத்தையே நான் எப்போதும் ஜபிக்கக்கடவேன்.
133-(மஹதாம் சுபகுல) ஸ்ரீவைஷ்ணவதாஸனானவடியேன் பெரியோர்களின் நற்குலத்திற் பிறந்ததனாலும் பேராசிரியர் திருவருளுக்கு இலக்காகப் பெற்றதனாலும் இந்த ஸ்தோத்ரத்தை விண்ணப்பஞ் செய்யலானேன்.
ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரஷ் சதியில் மூன்றாவதான ஸ்ரீவரவரமுநி வைபவ ஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.
ஸ்ரீசைலேசதயாபாத்ரமென்னும் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே நெடிலெழுத்து இன்றியே குறிலெழுத்துக்களையே அமைத்து இந்த ஸ்தோத்ர ரஸாயநம்இயற்றப்படுகிறது. (பாதங்களின் முடிவில் மாத்திரம் நெடி லெழுத்து இருப்பது விருத்தமன்று) இந்த ஸ்தோத்ரத்தில் தீர்க்காக்ஷரம் புகாமையினாலே ஸ்ரீசைலேசத்தனியனில் தீர்க்கமாகவுள்ள அஷரங்களும் இதில் ஹ்ரஸ்வமாயிருப்பது பொருந்தும்.
134-(ச் தஜநீ) அடியார்கள் செய்த பாவங்ளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் தீயினில் தூசாக்குகின்ற மணவாளமாமுனிகள் தமது திருமேனியை எப் போதும் என்னுள்ளத்துள்ளே காட்டியருளா நின்றார்.
136-(லகுமயி )மணவாளமுனிகளே ! அடியேனுக்கு நல்ல புத்தியை நல்தவற்றான சிறந்த திருவருளை என்மீது விரைவில் செய்தருளவேணும். அந்தத் திருவருள் இல்லையேல் என் ஜன்மம் எப்படிஸபலமாகும்.
138-(தர தலத்) மணவாளமாமுனிகளே! சிறிது மலர்ந்த தாமரை போன்ற திருக் கண்ணோக்கத்தை அடியேன்மீது வீழ்த்தியருளவேணும்; இவ்வருள் வாய்க்காவிடில் என்னிற்காட்டில் வேறொரு மூடன் உலகில் தேறமாட்டான்.
139-( யதிபதி) தமது வியாக்கியான ஸ்ரீஸூக்திகளாலே ஸ்ரீராமாநுஜ தர்சந ஸாரார்த்தங்களை யெல்லாம் விளக்கினவரும் சிறந்த குணக்கடலென்று புகழ்பெற்ற வருமான மணவாள மாமுனிகள் வாழ்க.
142-(தியமஹம்) மணவாளமாமுனிகளே! ஒவ்வொரு நிமிஷமும் தேவரீருடையதிருக் குணங்களைத் துதிப்பதிலேயே என்னுடைய புத்தியையெல்லாம் உபயோகித்து வருகிறேன் ; தேவரீருடைய சிறந்த திருவருளே இதற்குக் காரணம்.
143-(பவமய) அருள்மிகுந்த மணவாள மாமுனிகளே! பிறவிக் கடலினுள்ளே விழுந்து துவளும் பலபல ஜனங்களுக்குக் கை கொடுக்க வல்லமையினாலே அவர்களெல்லாரும் துன்பம் தீர்ந்து இன்பம் பெறுமாறு செய்தருளாநின்றீர்.
145-(திவி புவி )மணவாளமாமுனிகளே! அடியேனை விண்ணுலகில் கொண்டு வைத்தாலும் இம்மண்ணுலகிலேயே வைத்தாலும் என்மனத்தால் ஒருவாசியுமில்லை; எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களையே என்னுடைய ஸ்தோத்ரங்களுக்கு விஷயமாக்கிக் கொண்டிருக்க வேணுமென்பதொன்றே கோரிக்கை.
146-(குருவர ) மணவாளமாமுனிகளே! திருவாய் மொழியின் ஆழ்ந்த அழகியகருத்தை யெல்லாம் அடியேனது உள்ளத்தில் நன்கு பதிய வைத்தருளினீர்; அடியேன்பால் தேவரீருடைய திருவருள் மிகக்கனத்தது.
148-( ரசயிதும் ) மணவாள மாமுனிகளே! தேவரீரைத் துதிக்க வேணுமென்று அடியேன் நெஞ்சிற்கொண்டவனல்லேன்; ஆனாலும் தேவரீருடைய திருக்குணங்களெல்லாம் என்னெஞ்சில் அஹமஹமிகயா வந்து கூத்தாடுவதனால் இங்ஙனேதுதிகள் அமைகின்றன. ( இந்த ச்லோகத்தில் [ ர்ண )என்கிற எழுத்துக்கு பதிலாகரேபம் மாத்திரமே கொள்ளப்பட்டது.)
149-(வச ச.)மணவாளமாமு களே ! என்வாக்கிலும் மனத்திலும் எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களே விளங்குமாறு செய்தருளினீர் ; இனி வேறு எந்த ஆசாரியரும் என் மனத்தில் அடிவைக்க முடியாதபடி ஆய்விட்டது.
150-( யசஇ )மணவாளமாமுனிகளே ! தேவரீருடைய திருப்புகழ் இவ்வுலகமெங்கும்பரவி ” மணவ ள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்.” என்றுவீடுதோறும் நாடுதோறும் வாழ்த்தும்படியமைந்துளது. இப்பெருமையைச் சிலகுமதிகள் அபலாபம் செய்ய முயன்றதனால் என்ன சேதம்?
151-(த்திதிரிதி.) மணவாளமாமுனிகளே! * ஆண்டுகள் நாள் திங்களாய்நிகழ்காலமெல்லாம் என்கிறபடியே திதியாகவும் கிழமையாகவும் நக்ஷத்ரமாகவும் அயநமாகவும் கழிந்து செல்லுகின்ற நாட்களில் ஒருநொடிப் பொழுதும் தேவரீ ருடைய திவ்ய ஸக்தியின் அனுபவமின்றிக்கே யிருக்ககில்லேன்.
153-(ப்ரதயதி) மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விளக்குவது போலவே பல குத்ருஷ்டி மதங்களையும் கண்டித் தொழிக்கின்றன; இத்தகைய ஸ்ரீஸக்திகள் எனக்கு வாசோவிதேயமாக வேணும்.
154-(வபுஷிச.) மணவாளமாமுனிகளே! எனது மனமொழி மெய்களில் தேவர் ருடைய திவ்யமங்கள விக்ரஹவொளியே இடையறாது புரள்கின்றது; இப்படிப் பட்ட பாக்கியம் பாவியேனுக்கு எங்ஙனே வாய்த்ததோ?
156-(வரகவி) இப்புவியில் தைவ கடாக்ஷத்தாலே கவியியற்றும் வல்லமை வாய்ந்த பல பண்டிதர்கள் வரகவி யென்று விருது பெறுவதுண்டு; ஆனாலும் வரமு னிகவியென்று ஒருவரும் இதுகாறும் விருது பெறவில்லை; மணவாள மாமுனிகளையே இடைவிடாது துதிப்பதனால் அடியேனே அந்த உயர்ந்த விருதைப் பெற்றேனானேன்.
157-.(தச சக )மணவாளமாமுனிகளின் திருப்புகழைப் பேசுவதென்றால் அடி யேனுடைய கொண்டேயிருக்கும். வாக்கிலிருந்து ஆயிரமாயிரம் ஸ்துதிகளும் நாள்தோறும் அவதரித்துக் அவை ஸூர்ய சந்திரர்களுள்ளவளவும் விளங்கக் கூடும்.
158-(ரமயதி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனி யழகே அடி யேனது உள்ளத்தை மகிழ்விக்கிறது; எனது ஒப்பற்றவனுபவத்தை நான் எங்ஙனம் எடுத்துரைப்பேன்.
159 (யதிபதி .) மணவாளமாமுனிகளே! எம்பெருமானார் நம்மாழ்வார் உலகா சிரியர் முதலான ஆசாரியர்கள் விஷயமாகவும் கௌரவபுத்தியுடன் நான் பல ஸ்து திகளைப் பண்டு விண்ணப்பம் செய்திருக்கிறேன்; ஆயினும், ஐயோ! அதெல்லாம் எதற்குச் செய்தோமென்கிற அனுதாபமே மிகவுமடியேனுக்குள்ளது.
160-(ஜகதிதம்) இவ்வுலகில் பலபல காலங்களில் (பலபல மதங்களில்) பல பல ஆசிரியர் ஆசிரியர்கள் தோன்றியே வருகிறார்கள்: ஆயினும் மணவாள மாமுனிகளைப் போன்ற எந்த மதத்திலும் தோன்றவேயில்லையென்று ஆணையிடுவேன்.
161-(மஹிமஸு)மணவாள மாமுனிகளே! தேவரீருடைய பெருமைக்கடலில் ஒரு சிறு திவலையளவு கூட அடியேன் அநுபவிக்கவல்லவனல்லேன்; ஆயினும் ஓயாது தேவரீர் விஷயமான ஸ்துதிகளை எழுதுவதிலேஊன்றிக்கிடக்கிறேன்.
162-(தரலஹ்ருத்.) நான் சஞ்சலசித்தனேயானாலும் மணவாள மாமுனிகளிடத்தில் அன்பு இன்றிக்கே ஒரு நிமிஷமும் இருப்பதில்லை; தேவப் பெருமாளை ஸேவித்தாலுங் கூட மணவாளமாமுனிகளென்கிற நினைவோடு தான் ஸேவிக்கிறேன். (வரதன் என் கிற திருநாமத்தில் வரவர முனியின் திருநாமத்திலேகதேசம் கலந்திருப்பதனால்
163-(ரசயது.) இவ்வுலகில் பல கவிகள் மிகச் சிறந்த பல பல நூல்களை இயற்றட்டும்; யார் எந்த நூல் இயற்றினாலும் மணவாள மாமுனிகளின் திவ்யகுணங்களைப் பேசப் பிறந்த எனது நூல் தான் ஓங்கிநிற்கும்.
165-.(நிரவதி)ஒப்பற்ற எண்ணில் பல் புகழ் வாய்ந்த மணவாளமாமுனிகளே! தேவ ருடைய திருவருளால் நலம் மிகுந்த இத்தகைய ஸ்துதிகள் நாடோறும் நிமி ஷந்தோறும் அவதரித்துக் கொண்டே யிருக்க வேணும்.
200 (ச்லோ) க்ருதம் பூய பாபம் ப்ரதி கிமிதி சிந்தா பவதி வ ? கலத்ரே தாதே வா தநய உத பந்துஷ்வபி புந:, விரக்த்யா மத்வாக்யே ருசிரிஹ பவேத்வாபரமித: கலித்வர்ந்தத்வம்ஸ் வரவரமுநிர் வோ த்ருவமவேத்– இதில் நான்கு பாதங்களிலும் க்ருத த்ரேதாத்வாபர கலியுகங்களின் பெயர் (முத்ராலங்கார ரீதியில்) அமைந்திருப்பது காண்க. (இனி கருத்துக்கேண்மின்.) ஜனங்களே! நீங்கள் செய்த அபரிமிதமான பாபத்தைப்பற்றி உங்களுக்கு ஏதுக்கு விசாரம்? மனைவி தந்தை மகன் உற்றாருறவினர் என்னுமிவர்களிடத்தில் நசையற்று என் வார்த்தையில் உங்களுக்கு ருசியுண்டாகுமா? (அப்படியானால் ) இன்று தொட்டு மெழுமையும் கலிகல்மஷத்தைப் போக்கவல்லவரான மணவாளமாமுனிகள் உங்களை அப தபாப்மாக்களாக்கி ரக்ஷித்தே தீருவர். மூன்றாம்பாதத்தில் பவேத் வாபரமித: என்றதில் த்வாபரயுகஸ்பூர்த்திகாண்க. இத பரம் மத்வாக்யே ருசிர் பவேத் வா? என்று அந்வயக்ரமம் காண்பது . மேல்வரும் நக்ஷத்ரமாலா பர்யந்த ஸ்தோத்ரங்களிலெல்லாம் இவ்வண்ணமாகவே முத்ராலங்கார ரீதியிலே ஸம்வத்ஸராதி நாமங்களின் விந்யாஸ முணரத்தக்கது.
ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோக ஷட்சதியில் இரண்டாவது சதகம் முற்றுப்பெற்றது.
ஸ்ரீ வரவரமுநி ஸம்வத்ஸரமாலாஸ்தோதாம் ஏழாவது.-ப்ரபவ முதலான அறுபது ஸம்வத்ஸாங்களின் பெயர்களை முறையே அறுபது சுலோகங்களில் அமைத்து மாமுனிகளின் திவ்ய குணாநுபவமாகச்செய்த தோத்திரமிது. இந்தத் தோத்திரத்தில் (வடமொழியமைப்பில்) இரண்டு நிர்ப்பந்தங்கள் கொள்ளப்பட்டன; (1) ப்ரபவாதி ஸம்வத்ஸநாமத்தை ச்லோகங்களின் தொடக்கத்திலேயே வைப்பது. (2) சுலோகந்தோறும் முதலில் வரும் எழுத்தையே மற்றமூன்று பாதங்களிலும் முதலெழுத்தாக வைப்பது.
201-(ப்ரபவோ பஹவஸ் ஸந்தி.) இவ்வுலகின்கண் புகழ் பெற்ற ப்ரபுக்கள் பலருளர்; இருக்கட்டுமே. மஹாப்ராஜ்ஞரான மணவாள மாமுனிகளே விவேகிகளுக்கு அத்விதீய ப்ரபுவாவர்.
202-(விபவாந் விவிதாந்ஸத்ப்ய:) மணவாள மாமுனிகளின் வைபவங்களைச் சிந்தை செய்வதில் ஊக்கமுண்டானால் அது ஸத்துக்களுக்குப் பலவகைப்பட்ட விபவங்களை விளைக்கவல்லதாகும்.
203-(சுக்லபக்ஷேந்துவந்நித்யம்.) மணவாள மாமுனிகளின் திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தூயமனத்தில் வைத்துச் சிந்தை செய்பவர்களுக்கு சுத்தஸத்வ குணமானது சுக்லபக்ஷத்துச்சந்திரன் போல் மேன்மேலும் வளர்ந்து செல்லும்.
204-(ப்ரமோதோதநுரஸ்மாகம்) எங்கும் புகழ்பெற்ற மணவாள மாமுனிகளின் ப்ரபாவங்களைச் சிந்தை செய்வதனால் நமது உள்ளத்தினுள் பேரின்ப வெள்ளம் பெருகுகின்றது.
205(ப்ரஜோத்பத்திக்ருதௌ நித்யம்) பரமபுருஷன் நிச்சலும் ப்ரஜைகளைப் படைத்துக் கொண்டே போவதில் வல்லவனே யொழிய, பெற்ற ப்ரஜைகளுக்கு உணவளிக்கவல்லவனல்லன்; அவன் படைத்த ப்ரஜைகளுக்கெல்லாம் உணர்வாகிற உணவையளிக்க அவதரித்தவர் நம் மணவாள மாமுனிகள்.
206(ஆங்கீரஸக்ருதாநந்தம்) மணவாள மாமுனிகள் எனக்குஆனந்தத்தை விளைவிக்கவல்ல தமது திவ்யமங்கள விக்ர திவ்யகாந்திகளை எனது நெஞ்சினுள் அடிக்கடி விளக்கிக் கொண்டே யெழுந்தருளியிருக்கிறார்.
207- (ஸ்ரீமுகாம்போஜநிர்கச்சத்) தமது முகாரவிந்தத்தில் நின்றும் வெளி வருகின்ற ஸ்ரீஸூக்திகளாகிற அமுதவெள்ளத்தைப் பெருக்குவதனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தை வளர்த்தருளாநின்ற மணவாளமாமுனிகள் வாழ்க.
208- (பவஸாகரஸந்தார்:) அன்பர்களே! ஸம்ஸாரஸாகரத்தைக் கடந்து வாழவேணுமென்று விரும்புகின்றீர்களாகில், மணவாள மாமுனிகளின் திவ்ய ஸ்ரீஸக்திகளில் பக்தி செலுத்துங்கள்.
209(யுவத்வம் ப்ராபுஷாம் மாபூத்) பாலப்பிராயத்திலும் முதுமைப்பிராயத்திலும் பெறமுடியாத நன்மைகளை யௌவனபிராயத்தில்தான் பெறமுடியும்; அந்தப் பிராயத்தைப் பெற்றிருப்பவர்களே! அதனைப் பாழ்படுத்தாமல் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைச் சிந்தனை செய்வதே உந்தமக்குத் தக்கதாம்)
210 (தாதுஸாம்யே ஸதி ஸ்வைரம்) கை நாடிகளெல்லாம் விஷமநிலையிலன்றிக்கே ஸம நிலையிலிருக்கும்போதே (நல்லகாரியங்களை ஸாதிக்கவேண்டியிருக்க. அது செய்யாதே )யதேஷ்டமாகத் தீயவழிகளிற்சென்றுழல்வதனால் என்னபேறுபெற்றதாகும்? எப்போதும் கண்டபாடமாகத் தரிக்கவேண்டியதான மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் கண்டபாடமாக்கிக்கொள்ள முயலுங்கள்.
211 (ஈச்வரோ ஜகதாம் விஷ்ணு)ஜகத்துக்களுக்கெல்லாம் போஷகன்ஸ்ரீமஹாவிஷ்ணு வென்கிறார்கள்; அது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை; அந்த ஸர்வேச்வரனையும் போஷிப்பவர் மணவாள மாமுனிகளேயாவர்.
212(பஹுதாங்யநேச்சாபி 🙂 தனதான்யங்களை அபரிமிதமாக ஸம்பாதிக்க வேணுமென்று எங்கும் சுழன்று திரிகின்ற ஸம்ஸாரிகளின் சிந்தையில் மணவாள மாமுனிகள் பெரும்பாலும் எழுந்தருளியிருப்பதில்லை யந்தோ!
215 (வ்ருஷபம் முநிவர்யாணாம்.) (விக்ரமவருஷத்திற்கு அடுத்தவருஷத்தை வ்ருஷவர்ஷமென்று சிலரும் விஷ வருஷமென்று சிலரும் சொல்லுவர்கள். இரண்டுபடிக்குஞ்சேர இரண்டு சு லோகங்கள் விஜ்ஞாபிப்போம். (வ்ருஷ) என்கிற பக்ஷத்திற்கு இந்த சுலோகம்.) முனிவர்களேறு என்றும் ஞானவ்ருத்த ரென்றும் புகழப்பெற்ற மணவாள மாமுனிகளை என்னுடைய ஸகலபாபங்களும் தீயினில் தூசாவதற்காகத் தஞ்சமாகப்பற்றுகிறேன்.-(விஷு என்பது வர்ஷநாம மென்னும் பக்ஷத்தில்){விஷ்வக்வ்யாபியச காய) எங்கும் பரந்த புகழ்த் திருமேனியினால் விளங்கா நின்ற நிரவத்யரான மணவாளமாமுனிகள் நூருண்டு வாழ வேணும்.
216 (சித்ரபா நுலஸத்பூ 🙂 எம்பெருமான் விசித்திரமான ஒளிகள் திகழும் திருவாபரணங்களை யணிந்து என்முன்னே நின்றாலும் அவனை விட்டு, என் சிந்தனைக்கினிய மணவாள மாமுனிகளை மட்டுமே யான் சித்தை செய்வேன்.
217 (ஸ்வபாநுபிஸ் தமோ பாஹ்யம்) கதிரவன் தனது கிரணங்களினால் வெளியிருளை மட்டும் போக்குகின்றான். பரமமதுர திவ்ய க்திகளையளித்த மணவாள மாமுனிகள் தமது திருவாக்குக்களினால் அகவிருளை அகற்றுகின்றார்.
218-.(தாரணோ பவவாராசே:) பிறவிக்கடலைக் கடக்கச் செய்பவரும்.திங்கள் போன்ற திருமுகத்தையுடையவரும், தாபத்ரயத்தையும் தணிக்க வல்லவருமான மணவாள மா முனிகள் என்னுடைய இருள்மலிந்த மதியை மாற்றி யருளவேணும். தெருள் கொள்ளச் செய்யவேணும்.
219- (பார்த்திவாந் தந்தர்ப்பாடயா ) செல்வச்செருக்குற்றபாமரப்ரபுக்களை நோக்கிச் செல்கின்றவர்கள் மணவாள மாமுகளின் பரமபவித்திரமான திருவடித் தாமரையை நோக்கிச் செல்லக்கடவர்கள்.
220 (வ்யயம் வாசாம் விதந்வந்தி) அறிஞர்களுங்கூட தங்களுடைய வாக்கை வீணாகவே அஸ்தானத்தில் விநியோகிக்கின்றார்கள்; அன்னவர்கள் தங்களது விவேக சக்தியைச் செலுத்தி, தாங்கள் படைத்த நாவீறுகொண்டு மணவாளமாமுனிகளைத் துதித்துத் துயர் தீர்வது நலம்.
221 (ஸர்வஜித் பகவாந் விஷ்ணு:) தனது மேன்மையினால் எங்கும் வெற்றி பெற்றவனான எம்பெருமான் ஸ்ரீரங்கநாதனாய் மணவாளமாமுனிகளுக்கு ஸச்சிஷ்யனாகி க்ருதார்த்தனாயினன்.
222 (ஸர்வதாரீ ஹரிஸ் ஸாக்ஷாத் )எல்லார்க்கும் ஆதாரபூதன் ஸாக்ஷாத் ஸர்வேச்வரனே யென்பதை நாம் மதிப்பதில்லை ; ஸர்வஜ்ஞரான மணவாளமாமுனிகளே தமது திவ்யஸூக்திகளால் அனைவர்க்கும் ஆதாரபூதராகிறார்.
223 (விரோதீதி கமப்யஸ்யாம்) இந்த நிலவுலகத்தில் ஒருவரையும் விரோதியென்று கொள்ளாதவராக ப்ரஸித்தரான மணவாளமாமுனிகள் விலக்ஷணரான ஆசாரியராவர். ( இந்த சுலோகத்தில் விபுலாயாம் – என்றது நிலவுலகத்திலென்றபடி விபுலா என்று பூமிக்குப்பெயர்; அமரகோசங்காண்க.)…
224( விக்ருதிம் யாந்தி பூயாம்:)பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ என்று ஆழ்வார் வெருவியருளிச்செய்த விஷயக்ராமங்களைக்கண்டு பலர் விகாரமடைகின்றார்கள்; நாம் விகாரமடைவது அவற்றலல்ல; மணவாளமாமுனிகளின் விசதவாக் விசேஷங்களாலேயாம். விகாரமடைவதாவது ககண்டேந ஸ்வரகத்கதேந நயநேநோத்தீர்ணபாஷ்பாம் புநா *காலாழும் நெஞ்சழியுங்கண் சுழலும் என்னும்படியான நிலைமை பெறுதல்.)
225 (வரா இவ விவேகாந்தா:) கழுதைகள்போல் விவேக சூநயர்களான சில தூர்த்தர்கள் மிகவும் மத்தர்களாய்க்கொண்டு மணவாளமாமுனிகளை தூஷிப்பது பொறாமை யினாலன்றோ. அதனாலென்ன ?
226(நந்தநந்தந க்ருஷ்ணேதி.).நந் தன்மைந்தனே! கண்ணனே! என்று பகவந்நாமங்கள் சொல்லுவதை யான் விட்டிட்டு மணவாள மாமுனிகளின் திரு நாமங்களைச் சிந்தை செய்வதிலேயே ஊன்றியிருந்து மகிழக்கடவேன்.
227 (விஜயோ விபுலஸ் தேஷாம்) மணவாளமாமுனிகளின் உலகமறிந்த பெருமைகளை யாவர் உபந்யஸிக்கின்றார்களோ, அவர்களுக்கு எங்கும் வெற்றியே விளையும் ; உலகம் பரந்த புகழுமுண்டாகும்.
228.(ஜய ஏவ பவேந்நித்யம்) ‘மணவாளமாமுனியே! வாழி வாழி’ என்று உரக்க அநுஸந்திக்குமவர்களுக்கு இந்நிலவுலகில் எங்கும் ஐயமே யொழிய பராஜய ப்ரஸக்தியேயிராது
234 (சார்வரீசப்ரபாஜிஷ்ணு) திங்களொளியை வென்று விளங்கும் திரு மேனியை யுடையவரும் கூமாநிதியுமான மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி களை ஸேவிப்பதனால் ஸகல பாபங்களும் தொலையும்.
236 (சுபக்ருத் ப்ரதிதோ விஷ்ணு:) நமக்கு நன்மைகள் செய்பவனென்று ப்ரஸித்தி பெற்றவனான எம்பெருமான் நமக்கு ஒரு நன்மையும் செய்தருளவில்லை; மணவாள மாமுனிகளே தமது திவ்ய ஸூக்திகளினால் உலகுக்கெல்லாம் நன்மை செய்து விளங்கினார்.
237-(சோபக்ருத்தாமஸாஹாரை:) தாமஸாஹாரங்களென்று கழிக்கப்பட்ட உணவுகளை யுண்டு ஊன்மல்கி மோடுபருத்தவர்களாகி வருந்தத்தக்க நிலைமையில் நிற்குமவர்கள் மணவாள மாமுனிகளின் திருமேனியழகைச் சிந்திப்பதனால் தங்கள் உடலைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுக. ச்லோகத்தில் (சோபக்ருத்] என்ற விடத்தில் இரண்டாமெழுத்து பவர்க்கத்விதீயம் –சோபமாவது தடிப்பு; அதை யுண்டு பண்ணவல்ல உணவுகள் தாமஸாஹாரங்கள் )
241- (ப்லவம்கவேஷமாணா யே) பிறவியென்னுங்கடலில் தோணி பெரு துழல்கின்றவர்கள் மணவாளமாமுனிகளைத் தோணியாகப் பற்றினால் வானரமுதலி கள் கடலைக்கடந்தது போல் பிறவிக்கடலை அநாயாஸமாகக் கடக்கவல்லராவர்.
242(கீலகோத்பாடநோத்யுக்த.) கீலோத்பாடீவ வாநர: என்னும் நியாயத்தின்படி (அதாவது, வெறுமனே யிருக்க மாட்டால் தன்னுடைய அனர்த் தத்தைத் தானே விளைவித்துக் கொண்டதொரு குரங்கின் கதையின்படி) சில பாமரர்கள் தங்கள் விபத்தைத் தாமே தேடுகிறவர்களாய் மணவாளமாமுனிகளைப் பழிக்கப் புகுகிறார்கள் அந்தோ !
243. (ஸௌம்யஜாமாத்ருபகவாந்) ஸௌம்ய ஜாமாதா ‘ என்று திருநாமம் பெற்ற அழகிய மணவாளன் மணவாளமாமுனிகள் பக்கல் மிகவழகிய ஸ்ரீஸூக்திகளைக் கேட்டுதிவ்யமான தனியனை வெளியிட்டருளினான்.
244 (ஸாதாரணாஹ்வயே வர்ஷே) பகவத்ராமாநுஜரான எம்பெருமானார் ஸாத்விகர்களை நன்கு காத்தருளவேண்டி ஸாதாரண ஸம்வத்ஸரத்தில் மணவாள மாமுனிகளாக மீண்டும் அவதரித்தனர்.
255(துர்மதித்வம்ஸநீஸ் ஸூக்தீ:) மணவாளமாமுனிகள் தீயபுந்தியைத் தொலைக்கவல்ல திவ்ய க்திகளை யளித்தருளினார். பிறர் அவற்றில் குறை கூறிப்பாவங்களைக் கூடுபூரித்துக் கொள்கின்றனர்.
268- (ஸ்ரீமத்வசோபூஷண.) ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்திற்கு வியாக்கியான மருளிச் செய்தது முதலானவற்றாலே பரந்த புகழ்பெற்றவரும் யதீந்த்ரப்ரவணருமான மாமுனிகள் இவ்வுலகில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
269- (யோகீந்த்ர! ஹேமந்தரி.) மணவாள மாமுனிகளே! மிகச்சிறந்த மந்த்ரமான தேவரீருடைய தனியனை ஸதா அநுஸந்தித்து வருகின்ற அடியேன் பால் காருண்ய மாருதாநீத கடாக்ஷ தாரைகளைப் பெருக்கிப் பல பல நன்மைகளை மேன் மேலும் வளரச் செய்தருளவேணும்.
270-காருண்யபூரைச் சிசிராந்தரங்க) தி ரு வருள் வெள்ளங்களினால் குளிர்ந்த திருவுள்ள முடையவரான மணவாளமாமுனிகள் இப்போது போலவே எப்போதும் தமது திருக்கல்யாண குணங்களை ய நுஸந்திப்பதிலேயே அடியேளைக் குதூஹலமுடையேனாகச் செய்தருளவேணும்.
ஸ்ரீமத் வரவரமுநிருதுமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.
(ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோகஷட்சதியில் பத்தாவதான.)மாஸமாலா ஸ்தோத்ரம் (மேஷ மாஸம் முதல் மீன மாஸமளவும் பன்னிரண்டு மாதங்களின் நாமங்களை உள்ளீடாக்கி மணவாளமாமுனிகளைத் துதிப்பது.)
271- (கலா நா மேஷ ஸர்வாஸாம்) ஸகல கலைகளுக்கும் நிதி போன்றவரான நம் மணவாளமாமுனிகள் அருள் கூர்ந்து எஞ்ஞான்றும் என்னுள்ளத்துள்ளேஉறைவாராக.
281- (பகவாந் கும்பஸம்பூதி:) கும்பஸம்பவரான அகஸ்த்யர், பராசரர், வியாஸர் இத்யாதிகளான முனிவர்களிற்காட்டிலும் மணவாளமாமுனிகள் மிகச் சிறந்த முனிவராவார்.
282- (யே படந்தி.) ஸ்ரீவரவரமுனிமாஸ மாலையென்னும் இந்த ஸ்துதியை மகிழ்ந்து ஓதுமவர்கள் யாவரோ, அந்த இந்த பக்தர்கள் ஒருபோதும் இறையும் இடர்ப்படார். (ச்லோகத்தில் “‘அமீ ந ஜாதுசித்” என்றவிடத்தில் மீ நமாஸ ஸ்பூர்த்திகாண்க.)
284-(ஸ்யூதாம் வரவரமுநிவர.) மணவாளமாமுனிகளின் திருக்கல்யாண குணங்களாகிற முத்துக்களால் கோக்கப்பட்ட இந்த ஸ்துதிமாலையை எப்போதும் கண்ட பூஷணமாகக் கொள்ளுமளவில் ஸ்ரீ க்ருஷ்ணபகவான் உங்களுக்கு மங்களங்களை யளிப்பன்.
287-(நச்வரபுமர்த்தவாஞ்சாம்)த்விதீயை – நச்வரங்களான புருஷார்த்தங்களில் ஆசையை விட்டுத் தொலைத்து மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் அன்புமிக்கவர்கள் யாவரோ அவர்களுக்கு அத்விதீயமான நற்புகழ்விளையும். (சுலோகத்தில் நான்காம் பாதத்தில் சுபகீர்த்தி ரத்விதீயாஸ்யாத் என்பதில் த்விதீயாஸ்பூர்த்தி காண்க.)
288-(ஸ்யாதிஹ வரவரயோகீ த்ருதீயா -மணவாள மாமுனிகளின் யாதொரு கருணையின் கனத்தினால் உள்ளே மூன்றாவது கண் (ஞானக்கண்) விகளிக்குமோ, அப்படிப்பட்ட கருணையை அவர் எஞ்ஞான்றும் என் பக்கலிலேயே செய்தருளவேணும்.
289 (திமிரம் நிரஸிதுமவநெள .) சதுர்த்தீ- இவ்வுலகின் கண் அகவிருளை அகற்றுவதற்காக ஸமய விசேஷங்களில் வந்து திருவவதரிக்கின்ற திருவனந்தாழ்வானுடைய நான்காவது மூர்த்தியான மணவாளமாமுனிகளை எஞ்ஞான்றும் வழுத்துவோம்.
292- (தமிதேந்த்ரியா : ப்ரஸித்தா:. ஸப்த மீ- ஜிதேந்த்ரியர்களென்று பேர் பெற்ற ஸப்தரிஷிகளும் கருப்புவில் மலர்க்கணைக்காமவேளுக்கு இலக்கானவர்களே ; மணவாளமாமுனிகளொருவரே விரக்தமு நிஸார்வபௌமர்.
293- (யஸ்யாஷ்டமீந்துஸந்கிப)-அஷ்டமி அஷ்டமீ சந்திரன் போன்ற தமது திருநெற்றியில் விளங்கும் ஊர்த்வபுண்ட்ர ரேகையே நெடுநாளாக ஸகல திவ்ய தேசத் தெம்பெருமான்களும் உகந்து அணிந்து கொள்வதென்னும்படியான மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.
294-(கீர்வாணவாசி ஸததம்)- நவமீ-ஸம்ஸ்க்ருதபாஷையில் இங்ஙனேபுதிது புதிதான ஸ்துதிகளை விண்ணப்பஞ் செய்து கொண்டு மணவாளமாமுனிகளுக்குத் தொண்டுபூண்டமுதமுண்பவனாக வா க்கடவேன்.
புண்யாபபோஜ விகாஸாய பாபத்வாந்த க்ஷயாயச, ஸ்ரீமாந் ஆவிரபூத்பூமெள ராமாநுஜ திவாகர ” என்றபடி எம்டெருமானாராகிற விலக்ஷண ஸ் ர்யன் இவ்வுலகில் திருவவதரித்து “கடலளவாய திசை யெட்டினுள்ளுங் கலியிருளே, மிடைதரு காலத்திராமானுசன் – மிக்க நான் மறையின் சுடரொளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை யுடையவன் நாரணனென்று அறிவாரில்லை யுற்றுணர்ந்தே” என்ற அமுதனாரருளிச்செயலின்படியே மஹோபகாரம் செய்தருளும்படியாயிற்று. “தற்கச்சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன், சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும், நான்மறையும் நிற்கக் குறும்புசெய் நீசரும்மாண்டனர் நீணிலத்தே. பொற்கற்பகம் எம்மிராமானுசமுனி போந்த பின்னே’ என்கிறபடியே ஸம்ஸ்க்ருத வேத பாஸ்குத்ருஷ்டிகளையெல்லாம் தம் ஒக்தி சரங்களாலே நிரஸித்தருளி,”வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரமும், ஈன்ற முதல் தாய் சடகோபன். மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமாநுசன்” என்னும்படியாக ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் ப்ரவர்த்திப்பித் தருளி, திவ்யதேசங்களையும் உத்தரிப்பித்து ஒருவாறு அவதார க்ருத்யத்தைத் தலைக்கட்டிக்கொண்டு சுடரொளிச் சோதிக்கு எழுந்தருளினபின், சிலகாலம் கடந்தபிறகு, அவ்வவதாரத்தில் சிதைந்தொழிந்த ஸம்ஸ்க்ருத வேத பாஹ்யகுத்ருஷ்டிகள் தாமே மீண்டும் த்ராவிட வேத பாஹ்ய குத்ருஷ்டிகளாக ஜனித்து இவ்வுலகை நலியஅந்தஎம்பெருமானார் தாமே மீண்டும் வைகுந்தநாதனுடைய திருவாணையினால் இந்நிலவுலகில் திருவவதரித்து மணவாள மாமுனிகளென்கிறதிருநாமத்துடனே விளங்கி, முன்னவதாரத்திற் செய்த ளின மஹோபகாரங்களிற் காட்டிலும் பன்மடங்கு அதிசயித்தசேமங்களைச் செய்தருளி இவ்விருள் தருமா ஞாலத்தைத் தெருள் தருமா ஞாலமாகத் திருத்திப்பணிகொண்டார். அவ்வாசார்ய சிகாமணியின் எண்ணில் பல் குணங்களைக் கூறுதற்கு அவர் தம்முடைய நிஜரூபமான ஆதிசேஷனும்அசக்தன் என்கிறவிது அதிசயோக்தியன்று
மதுரேண ஸமாபயேத் என்பது நியாயமாதலால் மாதுர்யமே வடிவெடுத்த மாமுனிகளோடு பூர்வாசார்ய பரம்பரையை எம்பெருமான் ஸமாபநம் செய்தது மிகப்பொருந்தும். மதுரம் என்கிற வடசொல்லானது, ‘மகாரத்தை முன்னே யுடையது’ என்னும் பொருளையு முடைத்தாதலால் மகாராதியான திருநாமமணிந்த மணவாளமாமுனிகளோடே ஸமாபநம் செய்தருளின பகவான் ஸுஸமர்த்தனே.-*மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிற லயோத்தியெம்மரசாயும் கோவலனாய் வெண்ணெ யுண்டவாயனாயு முள்ள அழகிய மணவாளனான திருக்கோலத்தில், ஆசார்யத்வபூர்த்தி யுள்ள மணவாள மாமுனிகள் பக்கலிலே சிஷ்யவருத்தியை வஹிந்து க்ருதார்த்தனானான். இத்தகைய ஒப்புயர்வற்ற பெருமை வாய்ந்த மாமுனிகளின் வைபவம் ஸ்ரீ வைஷ்ணவஉலகுக்கெல்லாம் ஜீவாது-திருவனந்தாழ்வான் நல்லார் நவில் குருகூரெங்கிற ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடைய பிரான் தா ஸரண்ணர்என்கிறமஹாசா யனை-பிதரம்ரோசயாமாஸ என்கிற கணக்கிலே தந்தையாக வுகந்து அவருடைய திருக்குமாரராய் (கலியுகாதி நாலாயிரத்து நானூற்றெழுபத்திரண்டாவதான ) ஸாதாரண வருடத்தில் ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்திரத்தில் அந்தத் திருநகரியில் திருவவதரித்தருளினான்.
-இங்ஙனே உலகுக்கெல்லாம் ஓருயிராகத் திருவவதரித்தருளின திவ்யமூர்த்திக்கு ஸ்ரீரங்கநாதனுடைய திருநாமத்தைச் சாத்த விரும்பிய பெரியார் ‘அழகிய மணவாளன்’ என்று திருப்பெயரிட்டனர். அழகிய மணவாள நாயனார் என்று சிறப்புத்திருநாமமாக வழங்கி வந்தது.
ஸ்ரீ வசனபூஷணத்தில்- “என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக்கொடுத்தாய்என்றாப்போலே சிலவற்றைஏறிட்டு மடிமாங்காயிட்டு… … ஜன்மபரம்பரைகள் தோறும்யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருதவிசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்றுபத்தாக்கி நடத்திக்கொண்டு போரும்“-என்கிறஸ்ரீஸூக்தி ரத்னங்களை ஸந்தத் சிந்தனை பண்ணியே யென்பதில் ஐயுறவேண்டா. மேலே யெடுத்துக் காட்டிய வசனபூஷண ஸ்ரீஸூக்திகளில் காணும் பொருள்*ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண-என்கிற இந்த சலோகத்தில் கண்ணாடியிற்போல் அப்படியே பிரதி பலிக்க வில்லையா?
இதற்கு மேலும் நோக்கவேணும். ஸ்வப்ராப்தயே த ப்ருதாம்-த்வரஸே முருந்த! * என்பது மூன்றாவது பாதம். இதில் த்வரஸே என்கிற க்ரியாபதம் பேறு யாருடையதென்பதை நிஸ்ஸந்தேஹ விபரியமாகக் கரட்டித்தரவில்லையா? இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகிரு. என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை மொழிபெயர்த்தவத்தனையேயோ? சாஸ்த்ரார்த்தத்தைச் சந்தித்து உள்ளமுருகியன்றோஉரைத்திருக்கிறார்.-சுமாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து தொலையட்டுமிவன் என்று கைவாங்கிய யிராதே, கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ ! என்றுஇவன் கதறுவது அற்பமென்னும்படி ‘கூடி வாழுங்காலமின்னுங் குறுகாதோ ? என்று அவன் பதறியிருப்பது பெருங்கடல் போன்றது என்கிற தத்துவத் தையன்றோத்வரஸே என்பதனால் தெள்ளிதாக உணர்த்தியிருக்கின்றார் தேசிகன்-உபநிஷத்தானது,ரஸோ வை ஸ:,ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆநந்தீ பவதி என்றது. இதில் [அயம் லப்த்வா] என்று லாபத்தைசேதநகதமாக ஓதியிருக்கச் செய்தேயும், ஸ்வாமி பாயகாரர் அநா ருத்திஸ்த்ர ஸ்ரீபாஷ்யத்தில் ” பரம புருஷ: ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா” என்றருளிச்செய்துள்ள ஸ்ரீஸு க்தியானது ஸாம்பரதாயிக தத்வார்த்தங்களுக்கெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினது போலன்றோவுள்ளது-ெய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியவோதித்தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே என்று சொல்லியுள்ள ஸ்வாமி இத்தகைய விஷயத்தையன்றோ முக்கியமாக நெஞ்சிற்கொண்டது. வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் காணி லென்றுஆர்வுற்ற என்னையொழிய என்னில் முன்னம் பாரித்துத், தானென்னைமுற்றப் பருகினான் என்கிற திருவாய்மொழிப் பாசுரமன்றோ நமது ஸ்ரீபாஷ்யகாரர்க்கு ஜீவாதுவாயிருந்தது.-ந ச பரமபுருஷஸ் ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞா நம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி”–வேதாந்தா சார்யஸம்ஜ்ஞாம் அவஹித பஹுவித்ஸார்த்தம் அந்வர்த்தயாமி என்ற தேசிகன் இவ்வர்த்த தத்வத்தை யுணர்ந்தும் உணர்த்தியும் அந்வார்த்த ஸம்ஜ்ஞராகி இருக்கிறார்.
அஹமந்நம் அஹமந்நம் அஹமந்தம் என்று ஒரு தடவைக்கு மூன்று தடவையாக ஓதுவதனால்- என்னில் முன்னம்பாரித்து விடாய்த்திருக்கிற எம்பெருமானுடைய பசியைத் தீர்க்க அவனுக்கு நான் அன்னமாகிறேனென்றதாயிற்று. எம்பெருமானுக்கு மட்டுமன்றே விடாய்;சேத னுன இவனுக்கும் விடாயுண்டே; அவனுடைய விடாயைமுன்னம் தீர்த்தபிறகு தன்விடாயும் தீரப்பெறுகையை .அஹமந்நாதஅஹமந்நாத: அஹமந்நாத என்கிற அனுஸந்தான முணர்த்துகிறது.இங்ஙனே இரண்டு வாக்கியங்களினால் சொல்லப்பட்ட அர்த்தத்தைஅஹமந்நம் அந்நமதந்தம் அத்மி என்கிற மூன்றாவது வாக்கியம் நன்கு விவரிக்கின்றது.-நான் முந்துற முன்னம் எம்பெருமானுக்கு அன்னமாகியிருந்து, என்னையநுபவித்து மகிழ்கிற அவனை நானுமநுபவித்து மகிழ்கிறேன் என்பதாம்.படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே* என்கிற குலசேகரப்பெருமாள் பாசுரத்தில் & படியாய்க்கிடந்து * என்பதனால் அசேதநவ்ருத்தியை முன்னம் அபேக்ஷித்து, பின்னை உன்பவளவாய் காண்பேனே* என்று சேதனவருத்தியும் அபேக்ஷிக்கப்பட்டது. இத் தலையை வி நியோகங்கொண்ட எம்பெருமானுக்கு விளையும் உகப்பைக்கண்டு உகப்பதுதவிர வேறு பயனில்லை சேதனனுடைய ஆனந்தித்வத்திற்கு- என்று நம் ஆசாரியர்களனைவரும் பணிக்கும்படி.
ப்ரபத்தி இன்னதென்பதைக் காட்டும் வசனம் யாவருமறிந்தது; த்வமேவ உபாயபூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி, சரணாகத்திரித்யுக்தா * என்பது. நீயே உபாயமாயிருக்க வேணுமென்கைதான் ப்ரபத்தி-என்னாநிற்க, ப்ரபத்தியும் உபாயமென்றால் இதற்கு ஏதேனும் அர்த்தமுண்டோ?-கீதார்த்த ஸங்க்ரஹத்தில்-நிஜகர்மாதி பாத்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவா காரித , உபாயதாம் பரித்யஜ்ய யஸ்யேத் தேவே து தாம் அபீ என்று ஸ்பஷ்டமாகச் சொல்லிவைத்தார்.-(ரக்ஷாயாம்] முக்தவ்யாபாரந்யாயேந ஸ்வயம் ஸ்வாதுத்லாத் ணிகஸ்ய காலாந்தரபாவி பலஸாதநத்வ அநுப்பத்தி தர்சநாச்ச நாஸ்ய ஸ்வவ்யாபாரே மோக்ஷோபாயதாபுத்திரபி ஸ்யாத் இதி பாவ , அத: தைஸ்தைராராதிதோ பகவாநேவ ஸர்வத்ர உபாய?” என்று கல்வெட்டாக எழுதியிருக்கிறார். இங்கு”முக்தவ்யாபாரந்யாயோ என்றெழுதியிருக்கிற இதுதான் இவ்விஷயத்தில் ஜீவநாடியானது.-கேவலம் பலாநுபவத்தில் ஊன்றின க்தனுக்கு ஸாதநாநுஷ்டான ரூபமான செயல் லவலேசமுமில்லை, அது அபேக்ஷிதமுமன்று; ஆனாலும் முக்தன் வாளாவிருப்பதில்லை. செய்வனவெல்லாம் ஸ்வயம் போக்ய மாகக்கொண்டு செய்கிறான். பரமைகாந்திகளான முமுக்ஷக்களின் வியாபாரங்களும் அப்படிப்பட்டவையே யென்று நிரூபித்திருக்கிறார்.
அஷ்டத்திக்கஜாசார்யர்களின் அஷ்டப் பிரபந்தங்களும் தமிழில்தோன்றியுள்ளன. எறும்பியப்பா வென்னுமாசிரியர் வடமொழியில் வரவரமுநி சதகமொன்றேயன்றி வரவரமுநி காவியம் வரவரமுநி சம்பூ வரவரமுநி கர்ணாம்ருதம் அம்ருதத்வநி இத்யாதிகளான பல துதிநூல்களையும் பணித்துள்ளார்.-ப்ரஹ்ம ஸத்ரத்திற்குப் பல வியாக்கியானங்களிட்டவர் ரஹஸ்யப்பொருள் விளக்கமாக ஒரு நூலும் பணித்திலர்.அது அவர்க்குப் பெரிய குறையேயாம். அக்குறையைத் தீர்த்துக்கொள்வதற்காகவே அவர்தாமே மாமுனி களாகத் திருக்கோலம் பூண்டார். இவ்வவதாரத்தில் செய்தருளின காரியங்களே மிகமிகப் புகழத்தக்கவையாயின. ஆனதுபற்றியே இவ்வவதாரத் தனியன் வாழி களுக்கே நாடு நகரமும் நன்கறிந்த பெருமை விளைந்து அது சந்திர ஸூரியர்களுள்ள வரையில் விளங்குமதாயிற்று.-உடையவரை ஸூர்யனாகவும் மாமுனிகளைச் சந்திரனாகவும் அறுதியிடலாம். ஆனால் ஆகாசத்திலுள்ள சந்திரனுக்குக் கலைகள் குறைவதும் ஏறுவதுமாகவேயிருக்கும். மாதத்தில் ஒருநாள்தான் ஸகலகலாபரிபூர்ணனாகச்சந்திரனைப் பார்க்கமுடியும். ஸ்ரீமத்வரவரமுநி சந்திரனுக்கு எப்போதும் ஸகலகலாபரி பூர்ணஸ்திதியொழிய வேறில்லை. அந்தசந்திரனுக்குக் களங்க ஸம்பந்தமுள்ளது ப்ரஸித்தம்.சாஸ்த்ர ஸித்தமுமானது.-ஸ்ரீமத் வரவரமுனிசந்திரனுக்கு எவ்விதமான களங்கப்ரஸக்தியுமில்லை.
விசதவாக் சிகாகணியென்கிற விருது மாமுனிகளொருவர்க்கே அஸாதாரணம். கூறினது கூறல், மயங்கவைத்தல், நலிந்து பொருள்கொள்வைத்தல், இன்னது சொல்லிற்றென்று தெரியாதபடி பேசிவைத்தல்,பிறர்மனம்நோவப் பேசுதல், வீணாக வளர்த்துதல், முன்னோர் மொழிந்த மொழிகளுக்கு மாறாகப் பேசுதல் முன்பின் முரண்படப் பேசுதல்,நிந்தா பரிஹாஸங்களை நிரப்புதல் முதலிய குற்றங்குறைகளை இதர ஆசிரியர்களின் நூல்களில் பார்க்க இயலும்.
நாமார் பெரியதிரு மண்டபமார் நம்பெருமாள் தாமாக வெம்மைத் தனித்தழைத்து நீமாறன் செந்தமிழ்வேதத்தின் செம்பொருளை நாளுமிங்கே வந்துரை யென்றேவுவதே வாய்ந்து” என்று நைச்சியமாய் அநுஸந்தித்து மறுநாள் தொடங்கி ஓராண்டளவும் பகவத் விஷய பிரவசனம் நடத்திவந்தார், அவ்வாண்டில் ஸகல உத்ஸவங்களும் நிறுத்தப்பட்டன-பிறகு ஸமாப்தி தினத்தில் ஸ்ரீரங்கநாதன் ஒரு சிறு குமாரனாய்த் திருவோலக்கத்திலே வந்து நின்று,”ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்,யதீத்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்.”என்கிற திவ்ய பத்யத்தைக் கைகூப்பி நின்று விஜ்ஞாபித்தனனாக இதிஹாஸம் ப்ரஸித்தமாகவுள்ளது.-இத்தனியனில் சொற்கள் அமைந்திருக்கிற அமைப்பை ஆராயுமிடத்தில் இது தெய்வவாக்கேயன்றி மானிட வாக்காக இருக்கமுடியாதென் பதை ப்ராமாணிகர்கள் எளிதில் உணரலாம்.இராமபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் கண்ணபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் சில வியக்திகளிடத்தில் ஆச்ரயித்து, அவ்விடங்களில் திருவுள்ளத்திற்கு திருப்தியில்லாமலே முடிந்திருக்கிறது. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு குறைகண்டு வெறுப்புடனிருக்க நேர்ந்தது. அந்த வெறுப்பெல்லாந்தீர இப்போது மணவாளமாமுனிகளை ஆச்ரயித்து “ஸதாசார்ய லக்ஷணபூர்த்தியுள்ளஇவரை ஆச்ரயிக்கப் பெற்றோமே!” என்று மகிழ்ச்சிகொண்டமை இந்த ச்லோகத்தில் ஒவ்வொரு விசேஷணத்தினாலும் ஸ்புடமாகக் காட்டப்பட்டிருப்பதை நிரூபிக்கிறோங்காண்மின் :–
ஸ்ரீசைலேசதயாபாத்ரம் என்பது முதல் விசேஷணம். ராமாவதாரத்தில்சைலேசதயா பாத்ரமானவொரு வ்யக்தியை வணங்கிக் கெட்டேன்; இப்போதுஸ்ரீசைலேசதயாபாத்ரமான வ்யக்திவிசேஷத்தை வணங்கி வாழ்கிறேன் என்கிறது. ராமாவதாரத்தில் வணங்கப்பட்ட சைலேசதயாபாத்ரமான வ்யக்தி யாரென்னில்; ஸு க்ரீவன். சைலமாவது ரிச்யமூக பர்வதம்.அதற்கு ஈசர்- மதங்கமுனிவர். அவருடைய தயைக்குப் பாத்ரபூதன் ஸுக்ரீவன் என்பது ஸ்ரீராமாயணம் கிஷ்கிந்த-காண்டத்தில் பதினோராவது ஸர்க்கத்திலுள்ள கதையினால் ஸ்பஷ்டம். ஆயிரம் பலங்கொண்டவனான துந்துபியென்னுமரக்கன் எருமைக்காடா வடிவமெடுத் துக் கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைச் சண்டைக்கழைக்க, இருவர்க்கும் பிரபலமான போர் நடந்து வாலியினால் துந்துபியின் சரீரம் முழுதும் மடியும்படிபிசையப்பட்டு அவ்வரக்கன்யோசனைமரணமடைந்து தரையில்விழ, வாலி அவனுடையவுடலை ஒரு தூரம் போய் விழும்படி வீசியெறிய, அப்போது அவனது வாயிலிருந்து ரத்தத்துளிகள் காற்றினால் தள்ளுண்டு [சைலேசரான ] மதங்கமாமுனிவரின் ஞானத்ருஷ்டியினால்ஆச்ரமத்தில்போய்விழ, அதைக்கண்ட அம்முனிவர் மிகுந்த சீற்றங்கொண்டு தன் இங்ஙனம் தீச்செயல் செய்தவன் வாலியென்றுணர்ந்து “பரிசுத்தமான எனது ஆச்ரமத்தை இவ்விதம் அபரிசுத்தமாக்கினவன் யாவனோ அவனும் அவனன்பர்களும் இவ்வாச்ரம பரிஸரங்களில் வந்தால் உடனே மரண மடையக் கடவர்கள்” என்று சாபமிட்டு அச்சாபம் நடத்தைக்கு வருவதற்கு ஒரு நாள்கெடு கொடுத்திருப்பதாகவும் சொல்ல, உடனே அவ்வனத்திலுள்ள [வாலி யைச்சேர்ந்த வானரர்களெல்லாரும் ஓடிச்சென்றனர். சாபபயத்தினால் வாலி அவ்விடம் வருவதற்கில்லாதபடியாயிற்று. அவனுடைய ஸம்பந்தமற்றவனான ஸுக்ரீவன்மாத்திரம் தனது அன்பர்களுடன் அவ்வாசரமத்தில் வாழ்ந்து வந்தன னாதலால் அவன் சைலேச தயாபாத்ரமாயினன். ” ஸு க்ரீவம் சரணம் கத என்கிற படியே அவனை வணங்கியிருந்த இராமன் பிறகு அவனோடே மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டது. அவ்விஷயம் கிஷ்கிந்தாகாண்டம் முப்பதாவது ர்க்கத்தில் விளங்கியதே. அதாவது-மாரிகாலம் முடிந்தபின்பும் ஸுக்ரீவன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு வராமற்போகவே பெருமாள் இளையோனை நோக்கி’லஷ்மணா! இன்னமும் சுக்ரீவன் என்னை அடியோடு மறந்துவாளாகிடக்கின்றனன்காண்; செய்ந்நன்றிமறந்த காதகனன்றோ சுக்ரீவன்; நீ உடனே அவனிடஞ்சென்று நான் சொன்னதாகச் சொல்லு; செய்ந்நன்றிமறந்த பாபிஷ்டன் புருஷர்களில் கடையான வன் அவன் மரணமடைந்தால் அவனது உடலை மாமிசந்தின்னும் ஜந்துக்களும் தின்னமாட்டா . லஷ்மணா; என் பராக்ரமத்தைச் சுக்ரீவன் நன்றாக அறிந்திருந்தும் சிறிதும் அச்சமில்லாமல் கிடக்கிறானே; வாலி சென்றவழி அவனுக்கும் திறந்திருக் கிறதென்று அவனிடம் கூறு. அவனை உற்றாருறவினரோடும் யமபுரமனுப்பச் சித்தமாயிருக்கிறேனென்று தெரிவி’ என்று கூறியிருப்பதேயாம். ” ஸு க்ரீவம் நாத மிச்சதி” என்றும் ” ஸுக்ரீவம் சரணம் கத ” என்றும் ஈடுபட்டவிடத்திலே இப்படி மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டதனால், முன்புசைலேச தயாபாத்ர பூதனானவொரு வனை வணங்கி வருந்தின குறைதீர இப்போது ஸ்ரீசைலேச தயாபாத்ர பூதரை வணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று. திருமலையாழ்வாரென்கிற திருவாய் மொழிப்பிள்ளையின் இன்னருளுக்கு இலக்கான மாமுனிகளை வணங்குகின்றே னென்கை.
இனி இரண்டாவது விசேஷணம் தீபக்த்யாதி குனார்ணவம். ஸ்ரீராமனாக அவதரித்திருந்த அக்காலத்திலே ஸுக்ரீவன் காலிலே குனிந்ததுபோலவே லவணார்ணவத்தின் காலிலும் குனிந்தமை யுத்தகாண்ட ப்ரஸித்தம். “ஸமுத்ரம் ராகவோராஜா சரணம் கந்துமர்ஹதி” என்ற விபீஷணாழ்வானுடைய வாக்கின்படி லவணார் ணவத்தை நோக்கிச் சரணகதி பண்ணியிருந்து அங்கும் மநஸ்தாபம் மிகுந்தது. அக்கடலரசன் முகங்காட்டிற்றிலனாக, மிகவும் சீறிச் சிவந்து “சாபமாநய ஸௌமித்ரே!…..ஸாகரம் சோஷயிஷ்யாமி – லக்ஷ்மணா! வில்லையும் கொடிய அம்புகளையும் கொண்டுவா; இதோ கடலை வெறுந்தரையாக்கி விடுகிறேன் என்று கூறி நிக்ரஹத்தி லேயன்றோ துணிந்து நின்றது. சரணாகதி பண்ணினவிடத்திலே இது தகுமோ ?-அப்படியான குறைதீர அந்த லவணார்ணவத்தைவிட்டு தீபக்த்யாதி குணார்ண வத்தை அடிபணிந்து வாழப்பார்க்கிறபடி. ஞானபக்தி விரக்திகளுக்குக் கடலானமாமுனிகளை வணங்குகின்றேனென்கை.)
இனி மூள்றாவது விசேஷணம் யதிந்த்ரப்ரவணம்.இப்போது ஸ்ரீரங்க நாதனாயிருக்கின்ற பெருமானே”மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்” என்கிறபடியே திருவேங்கடமுடையானாகவும் நின்ற நிலையிலே எம்பெருமானார்க்கு [ஸ்ரீராமாநுஜர்க்கு]சிஷ்யனாயினன். “அப்பனுக்குச் சங்காழியளித்தருளும் பெருமாள்” என்று போற்றப்படுகின்றஸ்ரீராமா நுஜரிடம் திருமலையப்பன் திருவாழி திருச்சங்கு பெற்றதனால் அந்த ய ந்த்ரரிடத்தில் சிஷ்யவருத்தி கொண்டிருந்தது ப்ரஸித்தம். ஆனால் அங்கு மநஸ்தாபமொன்றும் நேரவில்லையானாலும் இராம ச நூற்றந்தாதியில் ‘தன்னையுற்றாட்செய்யுந் தன்மையினார்” என்கிற பாட்டைத் திருச்செவி சாத்தினபின்பு “ய ந்த்ரரிடத் திலே சிஷ்யவருத்தி செய்வதிற்காட்டிலும் யதீந்த்ரப்ரவணரானார் திறத்திலே சிஷ்ய வருத்தி செய்வதுதான் சிறந்ததென்று தோன்றி விட்டது. அந்தப் பாசுரத்தில், தன்னையுற்றாட் செய்வதிற்காட்டிலும் தன்னையுற்றாட் செய்யுந் தன்மையினோர் மன்னுதாமரைத்தாள் தன்னையுற்று ஆட்செய்வாரே சிறந்தவரென்று எம்பெருமானார் திருவுள்ளம்பற்றியதாக வெளியிடப்பட்டுள்ள தன்றோ. அதனால் யதீந்த்ரப்ரவணரை யிறைஞ்சுகின்றே னென்கிறதாயிற்று.மணவாளமா முனிகளுக்கு யதீந்த்ர ப்ரவணரென்ற திருநாமம் சிறப்பாகக் கிடைத்ததென்றுணர்க.
இனிச்லோகத்தின் ஸமாப்தி . வந்தேரம்யஜாமாதரம் முனீம் + இராமனாயும் கண்ணனாயுமவதரித்த இரண்டவதாரங்களிலும் இரண்டு முனிகளிடத்திலே சிஷ்யவருத்தி செய்திருந்தானெம்பெருமான். ராமாவதாரத்தில் விச்வாமித்ர முனிவன் பக்கலிலும் க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபனி ழனிவன் பக்கலிலும் சிஷ்ய வருத்திசெய்திருந்து அவ்விருவரிடத்திலும் வெறுப்பேயாயிற்று எம்பெருமானுக்கு. எங்ஙனேயென்னில், விச்வாமித்திரர் ஸ்ரீராமலக்ஷ்மணர்களுடன் மிதிலையில் ஜனக சக்ரவர்த்தியினது வேள்விச் சாலையில் புகுந்தபின் கௌதம புத்திரரும் ஜநக புரோஹிதருமான சதாநந்தர் [பாலகாண்டம் 51 – ஆம் ஸர்க்கம் முதலாக ] விச்வா மித்ரருடைய பழைய கதைகளைச் சொல்லத்தொடங்கி அவர் ரஜோகுண தமோ குணங்களுக்கு வசப்பட்டுச் செய்த செயல்களை யெல்லாம் சொல்லிவர, அதெல்லாம் கேட்ட இராமன் இப்படிப்பட்ட வொருவரையா நாம் ஆசாரியனாகக் கொண்டோம்!என்று வெறுத்திருக்க நேர்ந்தது. கிருஷ்ணாவதாரத்தில் அவந்திகாபுரியில் வாழ்ந்துவந்த ஸாத்தீப நிமுனிவரிடத்தில் அறுபத்துநான்கு கலைகளையும் பயின்ற கண்ணபிரான் “ஆசார்யாய ப்ரீயம்தநமாஹ்ருத்ய” என்ற உபநிஷத்தின் கட்டளையிலே குருதக்ஷிணை ஸமர்ப்பிக்கின்றவளவிலே அம்முனிவர் “மாதவத்தோன் புத்திரன்போய்மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்“என்கிறபடியே என்றைக்கோ பிரபாஸ தீர்த்தத்தில் விழுந்து மாண்டுபோன மகனைமீட்டுத்தரவேணுமென்று வேண்ட அப்படியே கொடுத்தனன். கண்ணபிரானைஸாஷாத் நாராயணமூர்த்தியென்று அறியாதவனல்லன் அந்தஸாந்தீப நிமுனிவன்.அறிந்துவைத்தும் மோக்ஷபுருஷார்த்தத்தை விரும்பாதே மகனை மீட்டுத்தருகையாகிற க்ஷத்ர புருஷார்த்தத்தை விரும்பினபடியால் அவன் பக்கலிலும் வெறுப்பேயாயிருந்தது. இப்படி வெறுப்புக்கு இலக்ான இரண்டு முனிகளையும்விட்டு ஸமஸ்த கல்யாண குணக்கடலாய் விரக்தாக்ரேஸரரான ரம்யஜாமா ருமுனியைவணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று.
ியாக்கியான மருளிச்செய்வதில் மாமுனிகளின் திறமை ஒப்புயர்வற்றது. ஒத்ரம் போன்ற ஸ்ரீ லோகாசார்ய திவ்ய க்திகளுக்கு அவதாரிகையிடுகிற அழகும், மூலத்திற்கு அர்த்தமருளிச் செய்கிற வைகரியும்,ஆங்காங்குஅர்த்தங்களைப் பிண்டீகரித்து நிகமித்தருளுகிற சைலியும், மதாந்தரங்களைக் கண்டித்தெழுதினாலும்கூட ஒருவருடைய மனமும் நோகாதபடிக்கும் வீணான தூஷணபரிஹாஸங்கள் சிறிதும் புகாதபடிக்கும் எந்த இடத்தை யெடுத்தாலும் சாஸ்த்ரார்த்தமே கைகொள்கனியாம் படிக்கும் ஸ்கல சாஸ்த்ரஸாகர பாரங்கதர் இவரொருவரே’ என்றுதிண்ணமாக எண்ணும்படிக்கும் மயங்கவைத்தல் முதலிய குற்றங்களுக்குச் சிறிதுமிடமில்லாதபடிக்கும் ஸூக்திகளருளிச் செய்தவர் மாமுனிகளொருவரே யென்பதை எத்தனை தடவை சொன்னாலும் எழுதினாலும் புநருக்தி துஷ்டமாகாது.-மாமுனிகளின் வியாக்கியானங்களை ஸேவிக்குமளவில் மாருதியைநோக்கி இராமபிரானருளிய வாசகமே நினைவுக்குவருகிறது. நாந்ருகவேத வி தஸ்ய நாயஜ ர்வேத்தாரிண , நாஸாமவேதவிதுஷா சக்யமேவம் ப்ரபாஷிதும் நூநம் வ்யாகரணம் க்ருத்ஸ்நம் அநேநபஹதா சருதம் இத்யாதி. இல்லாத வுலகத்தெங்கும் என்கிற கம்பர்
உலகில் பேசுவதெல்லாம் பேச்சல்ல, எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.-பட்டர் ஸ்ரீ குணரத்நகோசத்தில் “அநாக்ராதாவத்யம் பஹுருணபரீ ” என்றுஆரம்பித்து ஐந்து விசேஷணங்களிட்டுச்சிறப்பித்த வாக்வி ஸிதம் மாமுனிகளுடையதேயாகும் “பதாநாம் ஸௌப்ராத்ராத் அ மிஷ ஷேவ்யம் சரவணயோ:” என்று அந்தச்லோகத்தில் பட்டர் பணித்த அதிசயம் மாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் தவிரவேறெங்கும் காணக் கிடைக்காது. சொல்லமைப்பென்பதொன்றுண்டே அதுமற்றையோருடைய வியாக்கியானங்களில் ஸாதாரணமாகவேயிருக்கும். மணவாளமாமுனிகளின் வியாக்கியானங்களில் அது ஆச்சரியம் அற்புதம் அந்யாத்ருசம் என்றே சொல்லத்தக்கதாக விளங்கும். இதைத் தெரிந்து கொள்வது எல்லார்க்கும் எளிதன்று. முராரி யென்கிறவொரு மஹாகவி “அப்திர் லங்கீத ஏவ வானரபடை கீந்த்வஸ்ய கம்பீரதாம் ஆபாதால மநபீவரதநுர் ஜாநாதி மந்தாசல ‘‘ என்கிறான். வானமுதலிகள் கடலைக் கடந்துவிட்டார்களானாலும் மேலெழச் சென்ற வவர்களுக்குக் கடலின் ஆழம் சிறிதும் தெரியாதென்றும் மந்தரமலை யொன்றே அதனை அறியவல்லதென்றும் இந்தச்லோகத்தில் கூறப்பட்டிருப்பதுபோல, ஸாரஸ்வதஸரத்தை உட்புகுந்து மர்மஸ்பர்சிபாக உணரப்பெற்றவர் கடல்சூழ்ந்த மண்ணுலகுக்குள்மணவாளமா முனிகளொருவரேயென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பர் அவருடைய திவ்ய ஸ்ரீஸக்திகளில் நன்கு ஆழ்ந்தவர்கள்.
அ யையினாலும் த்வேஷத்தினாலும் பலர் அவருடைய ஸக்தியமுதக்கடலில் அவகாஹிக்கப்புகுவதில்லை. அவகாஹிக்கும் பாக்யம் பெற்றவர்களிலும் பலர் ‘மணிப்ரவாள ஸ்ரீஸூக்திதானே’ என்று ஸமான்யமாக நினைத்து மேலெழப் பார்த்துச் செல்வர்கள்.”தேநாவலோக்ய கருதித பரிபஞ்ஜதே நம்” என்று பட்டர் அருளிச்செய்தபடி அனுபவபாகிய பரிபாகசாலிகள் யாரோசில ஸுக்ருதிகளேயாவர் .
மாமுனிகளின் திவ்யகரந்தங்களுக்குள் தத்வத்ய வியாக்கியான மொன்றைஸேவிக்குங்கால்- : கலசாஸ்த்ரங்களிலும் ஸ்ரீபாஷ்ய ஸதா நிதியிலும் ஆழ அவகாஹித்தமஹாஜ்ஞான நிதி மாமுனிகளல்லது வேறு எவருமில்லை” என்று சபதமிட்டுரைக்கலாம். ஞானம் என்பது வேறு, வ்யுத்பத்தி என்பது வேறு.அந்த வ்யுத்பத்தியானது ஸகலதந்த்ரங்களிலும் மணவாளமாமுனிகளுக்கு மிகவும் அதி சயிக்கத்தக்கது. இதை நிரூபிக்க அவருடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளில் பலபல விடங்களுண்டு; பலகால் பரக்க நிருபித்துமிருக்கிறோம்.
மணவாள் மாமுனிகளை எம்பெருமானாருடைய அபராவதார மென்று அஷ்டதிக்கஜாசாரயர்க னைவரும் ஸாக்ஷாதநுபவத்தினால் நிர்ணயித்துப் பல பாசுரங்களும் ச்லோகங்களும் பணித்துள்ளார்கள். அவை ஜகத் ப்ரஸித்தமா னவை. அவ்வளவு ப்ரஸித்தமல்லாமல் வித்வத் கோஷ்டியில்மட்டும் பரஸித்தமான தொரு விஷயம் இங்கு விஜ்ஞாபிக்கப்படுகிறது . திருநாராயணபுரத்தில் மண்டயம் அனந்தாழ்வாரென்று ஸுப்ரஸித்தரான மஹா வித்வான் எழுந்தருளியிருந்தார். மை ர் அனந்தாழ்வானென்றும் அவர் வழங்கப்படுவதுண்டு. வேதாந்த வாதாவளி யென்று ஜகத்ப்ரஸித்தமான மஹா கரந்தரத்னங்களை யருளிச்செய்தவர் இவரே. இவர் ஜீவித்திருந்த காலம் மிகவும் ஸமீபமானதே. (அதாவது சென்ற நூற்றாண் டில் எழுந்தருளியிருந்தவர்.) இவருடைய சிஷ்யர்களை ஸேவித்திருக்கிறேன். இவருடைய சதுச் சாஸ்த்ரபாண்டித்யப்ரபாவங்களைக் கொண்டாடாதவர்களில்லை. அவரிடத்தில் ஸாமாந்ய சாஸ்த்ரங்கள் பயின்ற வித்வான்களின் சிஷ்யர்கள் (பல மதஸ்தர்கள்] கன்னட நாட்டில் ப்ரஸித்திபெற்று விளங்குகிறார்கள். இம்மஹாவித் வான் மை ர் பரகாலமடத்தில் ஆஸ்தானவித்வானாக அமர்த்தப்பட்டிருந்தார் அங்கு இதர ஸம்ரதாயஸ்தர்களான பல வித்வான்களிடையே இவரொருவரே ஸ்ரீமத் வரவரமுநி ஸம்ப்ரதாயஸ்தராக விளங்கிவந்தார்.இவரையும் தம் ஸம்ப்ரதா யஸ்தராக்கிக் கொள்ளவேணுமென்று அந்த ஸ்ரீ பரகால மடாதிபதி ஸ்வாமிக்குத் தோன்றி அந்த அவாவை அடிக்கடி தெரிவித்துவர, இவர் அதற்கு இடங்கொடாது வந்தார். கடைசியாக, விசேஷ த்ர யோபபத்திகளையும் ஜாகீர் ஜமீன்களையும் கொடுப்பதாகச் சொல்லி நிர்ப்பந்திக்கவே இவரும் சிறிது இசைவுகாட்டியிருந்தார். நாளை காலைமுதல் திருமண் காப்பை மாற்றிக்கொள்வது’ என்று ஒருநாள் இவர் எண்ணியிருக்கையில் அன்றிரவு கனவிலே எம்பெருமானார் ஆதிசேஷ ரூபேண இவர்க்கு ஸேவைஸாதித்து உடனே மணவாளமாமுனிகளான திருக்கோலத்துட னும் ஸேவைஸாதித்து நாமே அவர், அவரே நாம்’ என்று சொல்லி மறைந்தருளி னார். இவரும் துயில் விழித்தெழுந்து எம்பெருமானாருடைய கருணைத் திறத்திற்கு மிகவும் வியந்து தாம் எண்ணியிருந்த எண்ணத்திற்காக மிகவும் அநுதபித்து, காலை யனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஒரு சலோகத்தையெழுதி அந்த மடாதிபதி ஸ்வாமி ஸன்னிதியீலே ஸமர்ப்பித்தார். அந்த ச்லோகமாவது:- சேஷ ஸ்ரீமாந் நிகமமகுடீயுக்மரக்ஷாப்ரவ்ருத்த ஸ்ரீமத்ராமாவரஜமுந்தாம் ரம்யஜாமாத்ருதாஞ் ச,-வீந்தத் திருப்யத்விமத படலீபாடநோத்தாம ஸூக்தி. பூயாத் பவ்யப்ரத்தமஹிமா ச்ரேயஸே பூயஸே ந | -என்பது.-அந்த ஸமயத்தில் அந்த அனந்தாழ்வான்ஸ்வாமி ந்யாய பாஸ்கரமென்கிற மஹா கரந்தமெழுதிக்கொண்டிருந்தார் அதில் இரண்டாவது பரிச்சேதமெழுதி வருகையில் இந்த மஹா நுக்ரஹம் நேர்ந்தபடியினால் அந்த மஹாக்ரந்தத்தோடு கூடவே இவ்வநுக்ரஹ விசேஷமும் சாசவதமாக உலகில் விளங்கவேணுமென்றுகருதி மேலே குறித்தச்லோகத்தை அந்தக்ரந்தத்தில் இரண்டாவது பரிச்சேதத்தில் விந்யாஸம் செய்தருளித் தாமே அச்சிட்டு வெளியிட்டார். இந்த சுலோகத்தின்கருத்தாவது- உபய வேதாந்தங்களையும் காத்தருளவேணுமென்று திருவுள்ளங்கொண்ட திருவனந்தாழ்வான் எம்பெருமானாராகத் திருவவதரித்து ஸம்ஸ்க்ருத வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும், மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்து த்ராவிட வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும் இப்படி உபயவேதாந்த ப்ரதிஷ்டாபனம்செய்து பெருமைபெற்றனன்.-அத்திருவனந்தாழ்வான் நமக்கு ஸகலவிதநன்மைகளும் அளித்தருளவேணுமென்பதாம்.
மாமுனிகளருளிச்செய்த நூற்றந்தாதியின் பெருமையை விளக்கி இவ் வநுபவத்தைத் தலைக்கட்டுகிறேன். உலகில் தோன்றியுள்ள அந்தாதி வெண்பா நூல்களில் நிகரற்றது திருவாய்மொழிநூற்றந்தாதியொன்றேயாம். ஆசிரியர்களருளிய எந்த நூலை யெடுத்துக்கொண்டாலும் இது நிகரற்றது” ‘இஃது ஒப்பற்றது’ என்றே சொல்லும்படியாயிருக்கும். அப்படிச்சொல்லுவதன்று இது. இதன் சிறப்பையாவரு மிசையும்படி நன்கு நிரூபிக்கிறேன் கேண்மின். திருவாய்மொழியாயிரமும் அந்தாதியே; இயற்பாவில் எட்டு திவ்வியப் பிரபந்தங்கள் அந்தாதிய ;கண்ணி நுண் சிறுத்தாம்பு அந்தாதியே; பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தம்தம் திருமொழிகளில் ஒவ்வொரு பதிகம் அந்தாதி பாடியுள்ளார்கள். கிம் பஹ நா? உலகில் பல்லாயிரம் அந்தாதிப் பிரபந்தங்கள் தோன்றியுள்ளன. அவை யெல்லா வற்றினுடையவும் ப்ரக்ரியை எப்படிப்பட்டதென்றால் செய்யுளைத் தொடங்க) வேண்டியது நூலாசிரியர்களின் தம்தம் இஷ்டத்தைப் பொறுத்தது.செய்யுளை முடிக்கவேண்டியதும் தங்கள் தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. தங்களிஷ்டப் படி முடித்தசீரையோ சொல்லையோ எழுத்தையோதொட்டுக்கொண்டு மேற்பாட்டு ஆரம்பம் செய்வதென்பதொன்றே அந்தாதி பாடுகிறவர்களனைவருங்கொண்ட நியதியாகும். (உதாரணம்) பொய்கையாழ்வார் * வையம் தகளியா * என்று தொடங்கினார். (வையம்) என்று ஆரம்பம்செய்தது அவரிஷ்டமே கடையடியை இடராழி நீங்குகவே யென்று” என்று முடித்தார். இதுவும் அவரிஷ்டமே. “‘இடராழி நீங்குகவேயிங்கு’ என்றாலும் கேள்வியில்லை. அந்தாதி பாடுவார் வெண்பாவிலோ கட்டளைக் கலித்துறையிலோ முடிக்குஞ்சொல்லை அவரவர்களிஷ் டப்படி பாடலாம், பாடியிருக்கிறார்கள் என்பது நிர்விவாதம். இனி மணவாள மாமுனிகளின் திருவாய்மொழி நூற்றந்தாதியின் அமைப்பைப்பற்றிக் கேண்மீன்; நம்மாழ்வார் “உயர்வற” என்று திருவாய்மொழி தொடங்கினபடியால் அதற்குக் கட்டுப்பட்டு உயர்வே பரன்படியை என்று தம்முடைய அந்தாதியைத் தொடங்கினார். (திருவாய்மொழியில்) அடுத்த பதிகம் (வீடுமின் முற்றவும்) என்று தொடங்குவதால் (மாமுனிகள் தம்முடைய அந்தாதி) அத்தோடும் சேரும்படி”வேராகவே விளையும் வீடு” என்று (வீடு) என்பதையே கடைச் சீராகவைத்துப் பாசுரத்தைமுடித்தார், அதற்கு மேற்பாட்டைத் தம் இஷ்டப்படி தொடங்காமல்தமது நூலுக்கும் அந்தாதியடைவு குலையாதபடிக்கு (வீடுசெய்து) என்றே தொடங் கினார். நூறுபாட்டும் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டே அவதரித்துள்ளன .செய்யுளுக்குரிய மோனையின்பமும் எதுகையின்பமுங்கூட தம்மிஷ்டத்தைப் பொறுத்ததல்லவென்பதை உற்றுநோக்கவேணும் . (வீடு) என்றதற்கு மோனை சேரும்படி (வேராகவே) என்னவேண்டிற்று. (வேராக)என்றதற்கு எதுகை சேரும்படி முன்னடியில் (வாராமல்) என்னவேண்டிற்று. இவ்வளவோடுங்கூட ஒவ்வொரு பதிகத்தின் ஸரத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் அடக்கவேண் டிற்று பாட்டுத்தோறும் நம்மாழ்வார் திருநாமமும்தவறாது வரவேண்டியதாயிற்று. இத்தனை நிர்ப்பந்தங்களைக்கொண்டு பாடின அந்தாதி நூல்இஃதொன்றுதவிர மாநிலத்தில் வேறொன்று கிடையாது.
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
யக –யார் ஒருத்தர்-ஈடே துதிக்கிறேன்/ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் தம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் -பகவான் –ஞானம் பக்தி வைராக்கியம் சேஷத்வம்-பாரதந்தர்யம்-குணங்கள் அமைந்த தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரை ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்-ராஜ போல பூஜிக்க தக்க-பெரிய பெருமாளையே –பரவா ஸூ தேவம்-பர வாசுதேவனாக – மத்வா-நினைத்து கொண்டு- ஸூ க்திமாலாம்-வார்த்த மாலை–ப்ராபோதிகீம்-திரு மாலை இல்லை-திரு பள்ளி உணர்த்துகிற – அக்ருத-செய்தாரோ-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் அவதாரிகை இஸ் ஸ்லோகத்தில் செய்யும் பசுத்துளபத் தொழில் மாலையும் -செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத் தையன் கழற்கு அணியும் பரன் –13-என்னும் படி தொண்டார் அடிப்பொடி ஆழ்வாரை ஸ்தித் அபி வாதநம் பண்ணும் படி சொல்கிறது திருமாலை என்னும் திவ்ய பிரபந்தம் அன்றிக்கே திருப்பள்ளி எழுச்சியையும் -ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம்-என்று சொல்மாலையாக விறே சொல்லுவது -இது தான் திருப்பள்ளி எழுச்சிக்குத் தனியனாக இருப்பது -திருமாலை என்ற சொல்ல அது ஒரு பா மாலை என்று காட்டுகிறது -ஆண்டாள் பெரியாழ்வாரைப் போல பா மாலை பூ மாலை இரண்டையும் பெரியபெருமாள் திருவடிகளிலே சமர்ப்பித்ததைக் கூறுகிறது –
ராஜவத் அர்ஹணீயம்-ரங்கேசயம்-பர வாஸூ தேவம்-மத்வா –அதாவது ராஜவத் பூஜ்யராய் -ரங்க ராஜதானியிலே கண் வளர்ந்து அருளுபவரான -ஸ்ரீ ரங்கராஜரை -ஸ்ருதி ப்ரஸித்தரான பர வாஸூ தேவராகவே பிரதிபத்தி பண்ணி என்றபடி – ராஜவத் அர்ஹணீயராவது -ராஜவத் பூஜ்யர் என்றபடி -ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திருமகனாராலும் ஆராதீயநராய் இருக்கை – ரங்கேசயம்-அதாவது ஒரு வில்லால் ஓங்கு முந்நீர், அனைத்து உலகங்கள் உய்ய, செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார், மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா கருவிலே திரு இலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே. (திருமாலை 11) -என்றும்
பிரதி ஜலதித வேலா ஸய்யாம் விபீஷண கௌதுகாத் புந இவ புரஸ் கர்த்தும் ஸ்ரீ ரங்கினப் பணி புங்கவே சமுபததத கஞ்சித் கஞ்சித் ப்ரசாரயத புஜ த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே –1-–106-
பிரதி ஜலதித–கடலுக்கு எதிர்முகமாக வேலா ஸய்யாம் -கடற்கரையில் பள்ளி கொண்டதை விபீஷண கௌதுகாத் புந–ஸ்ரீ விபீஷணனுடையய குதூஹலத்தினால் மறுபடியும் இவ புரஸ் கர்த்தும்–ஆதரித்து அங்கீ கரிப்பதற்குப் போலே-மன்னுடைய விபீடணற்காய் மதில் இலங்கை திசை நோக்கி மலர்க் கண் வைத்த என்னுடைய திருவரங்கன் -அன்றோ பணி புங்கவே–திரு வநந்த ஆழ்வான் மீது சமுபததத கஞ்சித் புஜ -ஒரு திருக் கையை தலையணையாக வைத்துக் கொண்டு இருப்பவரும் கஞ்சித் ப்ரசாரயத புஜ-மற்றொரு திருக் கையை நீட்டிக் கொண்டு இருப்பவருமான ஸ்ரீ ரங்கின த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே –-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நீண்டதும் – அலம் புரிந்த நெடும் தடக்கை என்றபடி எப்போதும் தானம் பண்ணுவதில் கருத்துடையதுமான இரண்டு திருக் கைகளையும் சிந்திக்கிறோம் –
அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன் அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப் புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –திரு நெடும் தாண்டகம்–6-
அரங்கத்து அரவணைப் பள்ளியான் -பெரியாழ்வார் -4-10-என்றும் அறிவுடையார் பேசும்படி பெரிய பெருமாள் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொள்ளுகை
இப்படிப் படுக்கை வாய்ப்பாலே பள்ளி கொண்டருளும் பெரிய பெருமாளை-பர வாஸூ தேவம் மத்வா -வாஸூ தேவோ அஸி பூர்ண -ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ்ஸூக்களால் பூரணமான வாஸூ தேவனாய் இருக்கிறீர் -என்று புத்தி பண்ணி-இங்குத்தையில் படியே விசாரியாதே -அங்குத்தையில் படி யாகவே அனுசந்தித்து (அர்ச்சக பராதீனனாய் அடியார்கள் குற்றங்களைப் பொறுத்திருக்கும் அர்ச்சாவதாரமாக எண்ணாமல் வீற்று இருந்து ஏழுலகும் தனிக்கோல் செலுத்தும் பர வாஸூதேவனாகவே எண்ணி (ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -திருவாய் -3-5-5-என்றும் நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -3-6-9-என்றும் சொல்லப்படுகிறது அன்றோ –நம்மாழ்வார் பெரியபெருமாளை கடலிடம் கொண்ட கடல் வண்ணா -7-2-7-என்று அனுசந்தித்தார் அன்றோ ஆகையால் இவரும் அப்பரவாஸூதேவனைப் போலவே பூர்ண ஷாட் குண்யமாய் -ஞான பல ஐஸ்வர்ய சக்தி தேஜஸ் வீர்ய-இவற்றால் பரிபூர்ணனாய் ஸர்வம் பூர்ணம் -த்வய உபநிஷத் –என்கிறபடியே அர்ச்சாவதாரமே சவ் ஸீல்யாதி நீர்மைக் குணங்களாலும் நிறைந்து இருப்பவர் அன்றோ – ஆகையால் –யாவரும் வந்து அடி வணங்கி அரங்க நகர் துயின்றவனே -பெருமாள் திருமொழி -8-10-என்கிறபடி ஸர்வ சமாஸ்ரயணீயமாய் யாய்த்து -இவ்விஷயம் இருப்பது நித்ய ஸூரிகளோடே நித்ய சம்சாரிகளோடே வாசியற அனைவரும் வந்து அடி பணிய நிற்பவர் அன்றோ பெரிய பெருமாள் –
தம் -பர வாஸூ தேவம் ஏவ மத்வா– என்னும் இடத்தில் -அவதாரணத்தாலே-ஏவ கார்த்தாலே -கைங்கர்யம் பண்ணும் இடத்தே –முகப்பே கூவிப் பணி கொள்ளாய் –8-5-7-என்றும் பரவா நஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே -ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -1-57-என்று ஏவிக் கொண்டு -அருள்பாடிட்டு அழைத்து வானாடு அமரும் குளிர் விழிகளாலே -திருவிருத்தம் -63 என்கிறபடியே எதிர் விழி கொடுக்கும் பர வாஸூதேவனாகவே இவரை புத்தி பண்ணி-ஆதி மூர்த்தி அரங்கன் மா நகருளானே –திருமாலை -16 என்றும் இவ்வாழ்வாரே இவரைப் பர வாஸூதேவனாக அருளிச் செய்தார் இறே இந்திரலோகமாளும் அச்சுவை பெறினேம் வேண்டேன் அரங்க மா நகருளானே -2-என்று பர வாஸூதேவனைக் காட்டிலும் சிறப்புற்றவனாக அன்றோ இவர் இவ்விஷயத்தில் மண்டி இருப்பது ராஜவத் அர்ஹணீயம் ரங்கேஸேயம்-என்று கூட்டி -இங்குத்தையில் ஸுலப்ய ப்ரஸித்தியைச் சொல்லுகிறது ஆகவுமாம்
பர வாஸூதேவம் என்கையாலே வ்யூஹ வாஸூதேவனைக் காட்டிலும் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது ஆத்ம மாயா மயீம் திவ்யாம் யோக நித்ராம் ஸமாஸ்ரித ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தயன் மது ஸூதன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-6- வாஸூதேவன் என்னும் பெயருள்ள தமது ஸ்வரூபத்தை சிந்தித்துக் கொண்டு தன்னுடைய மூல ப்ரக்ருதிக்கு அபிமான தேவதையான யோக நித்ரையை அறி துயிலை மேற்கொண்டான் -என்னும்படி இவள் திறத்து என் சிந்தித்தாயே -7-2-4- உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை -5-4-11-என்றும் -ஜகத் ரக்ஷண சிந்தையாகிற -வ்யூஹ ஸுஹார்த்தம் உண்டு இறே இங்கு -இவர் பரிபூர்ண அனுபவம் பண்ணும் பர விஷயமாகவே பெரிய பெருமாளைக் ப்ரீதி பண்ணி இருப்பாராய்த்து-
காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் ஸ வாஸூதேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம் -ஸ்ரீ ரங்க மஹாத்ம்யம் சொல்லப்படுகிறது அன்றோ – அண்டர் கோன் அணி யரங்கன் -அமலனாதி -10-என்றும் வடிவுடை வானவர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே -திருவாய் -7-2-10-என்றும் பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச்சியார் -11-2- என்றும் அடி அறிந்தார் அனுசந்தித்தார்கள் அன்றோ பெரிய பெருமாள் எங்கிருந்து வந்தார் என்றும் திருவடிகளை அறிந்தவர் என்றும் சாடு –
விசேஷித்து கோயில் திரு த்வாதஸ அக்ஷரீ (ஓம் நமோ பகவதே வாஸூதேவாய ) பிரதானமாய் இறே திருவாராதனம் கொண்டு அருளுவது – த்வாதஸ அக்ஷர மந்த்ரோயம் மந்த்ராணாம் த்ராய உச்யதே –இந்த மந்த்ரம் மற்ற மந்திரங்களுக்கும் ரக்ஷகமாக சொல்லப்படுகிறது -என்ற ப்ரமாணப்படியே ஸ்ரீ ரங்கநாத ஜகந்நாத -என்னும்படி அர்ச்யரான இவருக்கும் சர்வருக்கு ராஜாவாய் இருப்பர் -இங்கும் ராஜவத் அர்ஹணீயம் -என்றது இறே – ஆகையால் ராஜாக்களைப் பள்ளி யுணர்த்துமாப் போலே அந்தப் ராஜாக்களுக்கு ராஜாவான ஸ்ரீ ரங்கராஜரைத் திருப்பள்ளி உணர்த்தினபடி சொல்லுகிறது
அர்த்த க்ரமத்தால் கோர்த்து – ப்ராபோதீகீம் ஸூக்திமாலாம் -யோக்ருத—தம் -பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே- இங்கும் தம் -சேர்த்து -கீழே அந்த ரெங்கன் -இதில் -பக்தாங்க்ரிரேணும் – அந்த அந்த விட இவருக்கு இந்த அந்த உகக்குமே அங்குத்தைக்கு அநுரூபமாய் -ஸ்ராவ்யமாய் -இனிமையாய்-திருப்பள்ளி யுணர்த்துமதான பாமாலையை யாதொருத்தர் பணித்தார் -அப்படிப்பட்ட வைபவத்தை யுடைய ஞானத்திற்கு குண பூர்ணரான தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரை (தம்-ஆழ்வாருக்கு விசேஷணம்-அவரை விளக்கும் படும் பெருமை) (ஏற்கும் பெரும் புகழ் -பகவானுக்கு ஆழ்வாருக்கு பாட்டுக்கு சொல்ல வல்லாருக்கும் சாம்யம்-போல் -இங்கும்-பணித்த ஆழ்வாருக்கும் பெருமை-குண பூர்ணர் பகவான் இவருக்கும் –ஆத்மா குணம் நிறைந்து துதித்து தொழுவோம் என்கிறார் அவன் அவன் தான் -நான் நான் தான் -பாட்டு பாட்டு தான் -சொல்வார் சொல்வாரே –ஏற்கும் நால்வருக்கும்) ஈடே என்கிற பத பிரயோகம் ஸ்துதித்துத் தொழுவோம் -இரண்டையும் வகிக்கக் கடவது –
ராஜவத் அர்ஹணீயானாகையாலே ராஜவத் உபசாரமாம்படி திருப்பள்ளி யுணர்த்த வேணும் இறே அயோத்தி எம்மரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே -8-என்று இறே இவர் திருப்பள்ளி உணர்த்துவது ரஷோ கண பரி ஷிப்தோ ராஜா ஹ்யேஷ விபீஷண ஸ்ரீ மதா ராஜ ராஜேந லங்காயாம் அபி ஷேசித-யுத்த -28-7- ராக்ஷசர்களால் துரத்தப்பட்டவனாய் அரசனான இந்த விபீஷணன் அரசர்க்கு அரசனாய் ஸ்ரீ மானான ராமபிரானாலே லங்கா ராஜ்யத்தில் அபிஷேகம் செய்விக்கப் பட்டான் -என்றும் ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணு ப்ரஹ்ம மயோ மஹான் ஈஸ்வரம் தம் விஜாநீமஸ் ஸ பிதா ஸ பிரஜாபதி -ஆஸ்வ பர்வம் -43-13 பர ப்ரஹ்ம ஸ்வரூபியும் -பெரியோனும் அரசர்களுக்கு எல்லாமே அரசராயும் இருப்பவன் விஷ்ணு -ஈஸ்வரனாக அவனை அறிவோம் -அவனே தந்தை -அவனே பிரஜாபதி -என்றும் வீர சவும்ய விபுத்யஸ்ய கௌசல்ய ஆனந்த வர்த்தந ஜகத்தி ஸர்வம் ஸ்வபிதி த்வயி ஸூப்தே நராதிப -உத்தர -37-4- கௌசல்யா தேவியி இன்பத்தை வளர்ப்பவனும் -வீரனான அழகனுமான ராமபிரான் பள்ளி உணர்ந்து அருள வேண்டும் -நீ உறங்கினால் உலகம் எல்லாமே உறங்குகிறது-என்றும் கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவம் ஆஹ்நிகம் -பால-23-2- என்று வந்திகள் -விச்வாமித்திராதிகள் உணர்த்துமா போலேயும் அவருக்கும் பெரிய பெருமாளாய் பெரிய பெருமாளான ஸ்ரீ ரங்கராஜரை அன்றோ இவர் திருப்பள்ளி உணர்த்துவது –
இவர் தாம் இப் பிரபந்தத்திலே கால அதிக்ரமமான படியையும் ப்ரஹ்மாதி தேவதைகள் ஸாவதாநராய் வந்து திருவாசலில் காத்து நிற்கிற படியையும் அங்குத்தையில் சம்மர்த்தத்தையும் திருப்பள்ளி யுணர்ந்தால் கண்டு அருளும்படி மங்கள வஸ்துக்கள் பாரித்த படியையும் மங்கள வாத்யங்கள் முழங்குகிற படியையும் மங்கள தீபம் போலே ஆதித்யன் உதித்துத் தோற்ற அதில் அரவிந்தங்கள் தீபிகை -சிறு விளக்குகள் -போலே விகஸித்த படியையும் அருளிச் செய்து அன்றோ திருப்பள்ளி யுணர்த்துகிறது – இவை எல்லாமே ராஜவத் அர்ஹணீயதைக்கு ஏற்கும்படியாய்த்து இருப்பது
ரங்கேஸயம் ப்ராபோதி கீம் ஸூக்தி மாலாம் அக்ருத -என்கையாலே -அடிக்கடி அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் -என்றும் -விசேஷித்து –இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே –என்றும் இறே அருளிச் செய்தது – ப்ராபோதி கீம் ஸூக்தி மாலாம்-என்கையாலே திருப்பள்ளி எழுச்சியாகிய சொல் மாலையை இறே இவர் சொல்லிற்று –திருமாலையும் ஸூக்தி மாலை இறே -அதிலும் என்னை-நோக்காது ஒழிவதே -36-என்றும் –அளியல் நம் பையல் என்னார் -37-என்று இறே ஆலோகநாலா பாதிகளை அபேக்ஷித்தது -அபேக்ஷித்து –கிடந்ததோர் கிடைக்கை -23-என்று கிடை அழகை அனுபவித்து நடையழகு தொடக்கமானவற்றைக் கண்டு அனுபவிக்கத் துயில் எழப் பாடுகிறார் -இரண்டுமே பெரிய பெருமாளைப் ப்ரதிபாதித்த பிரபந்தங்கள் இறே -ஆகையால் ஸூக்திமாலாம் -என்றதில் இரண்டுமே அந்தர்பூதம் –
மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –36-
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும் ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார் எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் அளியல் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –37-
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப் பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள் எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே-23-
பகவந்தம் -என்கையாலே ஞானாதிகளைச் சொல்லி -(ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யயஸ ஸ்ரீ ரிய ஞான வைராக்யோஸ் ச ஏவ ஷண்ணாம் பக இதீரணா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-74-)ஞானம் பலம் ததீய சேஷத்வம் என்றது தோற்ற பகவத் அங்க்ரி ரேணும் -என்கிறது அவரும் –அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்றும் –துளவத் தொண்டாய சீர்த் தொண்டரடிப்பொடி -என்றும் இறே அருளிச் செய்து தலைக்கட்டிற்று-
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்று திருப்பள்ளி யுணர்த்தி –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி இத்யாதி -படியே -பகவத் முக உல்லாஸ ஹேதுவான பகவத் கைங்கர்யத்தைப் பிரார்த்தித்த ஆழ்வார் போலவே –ஈடே -என்று இதில் அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யங்களை சொல்லித் தலைக் கட்டுகிறார் – ஸ்ரீ திருமாலை ஆண்டான் இத் தனியனில்-
———
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர் தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்–ஸ்ரீதிரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்தது..
வண்டு–வண்டுகளானவை திணர்த்த -நெருங்கிப் படிந்து இருக்கப் பெற்ற வயல் -கழனிகள் சூழ்ந்த தென் -அழகிய அரங்கத்தம்மானை-திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாளை பள்ளி வுணர்த்தும்–திருப்பள்ளி யுணர்த்துமவராய் பிரான் –பரம உபாகரராய் மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர் தொண்டர் அடி பொடி தொன் நகரம் வுதித்த ஊர்- தொண்டரடிப்பொடி – “தொண்டரடிப் பொடி” என்னும் திரு நாமமுடையரான ஆழ்வார், உதித்த ஊர் – திருவவதரித்த திவ்ய தேசமாவது, சீர் மன்னிய–சீர்மையுடைய, மண்டங்குடி – திருமண்டங்குடி என்கிற, தொல் நகரம் — அநாதி,யான நகரமாகும். என்பர் மறையோர் – என்று வேதம் வல்ல பெரியோர் கூறுவர்
அது தான் தொண்டரடிப்பொடி தொல் நகரமிறே-(தொல் நகரம்) பழையதாய்ப் போருகிற நகரம், நகரங் களிலேயிறே நல்ல வஸ்துக்களுண்டாவது; நல்லார் நவில் குருகூர் நகரான்”(திரு விருத்தம்-100) ” என்னுமா போலே. இது நகரமாகைக்கு ஹேது சொல்லுகிறது (வண்டு திணர்த்த) இத்யாதியால்-(இது நகரமாவதற்குக் காரணம் திருப் பள்ளி யெழுச்சி பாடிய தொண்டரடிப் பொடி யாழ்வார் அவதரித்ததே என்று பாட்டின் எஞ்சிய பகுதியாலே)
வண்டுகள் நெருங்கின வயலை யுடைய, ‘’வயலுள் இரிந்தன சுருப்பினம்‘ என் றருளிச் செய்தாரிறே–பூங்குவளைப போதில் பொறி வண்டு கண் படுப்ப-(திருப்பாவை-3] என்று ஆண்டாளும் அருளினாள் அன்றோ – இப்படி நீர்ப் பூவிலே வண்டுகள் நெருங்கின வயல் சூழ்ந்த கோயிலுக்கு நிர் வாஹகரான பெரிய பெருமாளை- ”வண்டு திணர்த்த வயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி யுணர்த்தும்” என்கையாலே “வயலுள் இரிந்தன சுரும்பினம்-இத்யாதிப்படியே (மஞ்ஜரீஸுப்தப், ருங்கா) என்று பூக்களிலே கண்படுத்த வண்டுகள் உணர்ந்தன. தரளத தரங்கைர் மந்த மாந்தோள்யமாந ஸ்வதட விட பிராஜீ மஞ்ஜரீ ஸுப்த ப்,ருங்க க்ஷிபது கநக நாம் நீ நிம் நகா நாரிகேௗ- க்ரமுகஜ மகரந்தைர் மாம்ஸ லாபா மதம்ஹ: (ர-ஸ்த 1-24 [அசையும் மெல்லிய அலைகளாலே மெல்ல அலைக்கப் படுகின்ற தன் கரையிலுள்ள சோலைகளினுடைய பூங்கொத்துக்களிலே உறங்குகின்ற வண்டுகளை யுடையதும், தென்னை பாக்கு மரங்களிலிருந்து உண்டான மகரந்தம் நிர்ம்பிய நீரை யுடையதுமான பொன்னியெனும் பெயரை யுடைய காவேரி நதியானது என்னுடைய பாபத்தை அழிக்கட்டும்.] என்கிற படியே பூக்களிலே உறங்கின வண்டுகள் உணர்ந்தன என்று கூறி-ஸ்ரீரங்க ராஜனாகிற வண்டை “அரங்கத்தம்மா பள்ளி யெழுந் தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்துபவர் என்று சொல்லப் படுகிறது.-ஸ்ரீரங்க நாச்சியார் ஸ்தநஸ்தபகத்திலே கண் வளர்ந் தருளுகிற ஸ்ரீரங்காராஜ ப்ருங்கத்தை “அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்துமவர்.(பள்ளியுணர்த்தும் பிரான்) திருப் பள்ளி யுணர்த்தி, பின்புள்ளார்க்கும் இப் பிரபந்த,த்தை யுண்டாக்கி உபகரித் தருளினவர்.
(உதித்த வூர்) அறிவிலா மனிசர்க்கு (திருமாலை 13]அறியாதன அறிவித்து [திருவாய் 2-3-2] என்கிறபடியே அவர்களால் அறியப்படாத நல்ல விஷயங்களை அறிவித்து அஜ்ஞாநத்தைப் போக்குகைக்காக இவர் அவ் வூரிலே உதித்தது. “கதிரவன் குண திசைச் சிகரம் வந்தணைந்தான் கன விருளகன்றது” [திருப்பள்ளி-1] என்னும்படி யன்றிக்கே -ஸூர்யனைப் போலே வெளி யிருளை மாத்திரம் போக்காமல், –ஆந்தரமான அந்த காரத்தைப் போக்கிற்று-அஞ்ஞாக இருளாகிற உள்ளிருளையே போக்கினாரன்றோ- ஆகையால் தொண்டரடிப் பொடி தொன்னகரம் மண்டங் குடியென்பர்– என்று முற்பாதியோடே கூட்டிப் பொருள் கொள்வது.
—————-
ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த திருப் பள்ளி யெழுச்சி வ்யாக்யானம் அவதாரிகை ஸுப்தோ யதா ஜீவ: ப்ரபு,த் யதே -(அநாதி,மாயயா ஸுப்தோ யதா ஜீவ: ப்ரபு,த் யதே [கௌட பாதகாரிகை] [அநாதி மாயையினால் உறங்கும் ஜீவன் எப்போது உணருகின்றானோ] என்கிறபடியே அநாதி காலம் அஜ்ஞாநத்தாலே உறங்குகிற இவரைப் பெரிய பெருமாள் தம்முடைய நிரவதிக க்ருபையாலே (எல்லை யற்ற நிர்ஹேதுக கிருபையாலே மயர் வற மதிநலமருளி)உணர்த்தி யருள-உணர்ந்து, பெரிய பெருமாளே ப்ராப்யரும் ப்ராபகரும் என்னுமிடம் ” ஐம்புலனகத் தடக்கிக் காம்பறத் தலை சிரைத்துன் கடைத்தலை யிருந்து வாழும் சோம்பரை யுகத்தி -திருமாலை-38” என்று இவரை யிட்டு நிலை யிடுவித்து, இப் பிரபந்த,த்தாலே நாட்டுக்கு வெளிச் செறிப்பைப் பண்ணி வைத்து நிர்ப் பரராய்க் கண் வளர்ந்தருள,அத்தலை யித்தலையாய்ப் பெரிய பெருமாளை யுணர்த்தி அடிமை செய்யப் பாரிக்கிறார்
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் அவனே என்றறுதி யிட்டால்-பின்பு திருப் பள்ளி யுணரும் படியையும், அழகோலக்க மிருக்கும்-படியையும், அருகே திருமாலை யெடுத்து அடிமை செய்யும் படியையும், மநோரதி த்து, இவையே யாத்ரையாய்ச் செல்லுமித்தனை யிறே. (அவன் திருப்பள்ளி யெழுந்திருக்கும் படியையும், சீரிய சிங்காசநத்திலே இருக்கும்படி யையும் கண்டு அநுபவித்து அருகில் பூமாலைகளை எடுத்து அடிமை செய்ய வேண்டுமென்று பாரித்து இதுவே தொழிலாக இருக்க வேண்டி வருமன்றே. )நாய்ச்சியாருக்கு ” மாரி மலை முழைஞ்சில் ; என்கிற பாட்டிலே இதுவே யிறே அநுஸந்தமாநம். நம்மாழ்வாரும், நெடு மாற்கடிமையிலே -(8-10)புருஷார்த்தத்தினுடைய சரமாவதியை நிலையிட்டு. அநந்தரம் கொண்ட பெண்டிரிலே (9-1)நாட்டுக்கு வேண்டும் ஹிதமருளிச் செய்து, பின்பு “கிடந்த நாள் கிடந்தாய்எத்தனை காலம் கிடத்தி‘ (திருவாய் 9-2-3] என்கிற பாட்டிலே உணர்த்தி யெழுப்பி அடிமை செய்யப் பாரித்தாரிறே. விச்வாமித்ரனும் –கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார் தூல கர்த்தவ்யம் தை,வமாஹ்நிகம்) என்றானிறே; அப்படியே இவரும் (நம்மாழ்வார், ஆண்டாள், விஸ்வாமித்ரர் ஆகியவர்களைப் போலே )பெரிய பெருமாள் உணர்ந்தருளும் போதை யழகு கண்டு அடிமை செய்ய ஆசைப் பட்டுத் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.
திருப் பள்ளி யுணர்த்துகைக்கு நிபந்தனம் என் என்னில்: – “ஆம் பரிசறிந்து கொண்டு” (திருமாலை 38] – எம்பெருமான் உகந்த கைங்கரியமே பேறு” என்னும் உண்மையை அறிந்திவராகையாலே-)என்கிறபடியே – கைங்கர்ய யாதாத்ம்யம் அறியுமவராகையாலே,(பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே | அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபத ச தே!![ரா-அ 31-25] (நீர் வைதேஹி யுடன் கூட மலைத் தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும் போதும் தூங்குப் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.] என்றும், ) ” ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ’(திருவாய் 3-3-1) என்கிறபடியே-ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வ வித,கைங்கர்யத்தையும் பண்ணுமிடத்தில் “தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே” –2-9-4-என்று அவனுகந்த கைங்கர்யமாக வேணும்; அதுசெய்யுமிடத்தில் (க்ரியதாமிதி மாம் வத.)என்றும், “எனக்கே யாட் செய்” -2-9-4-என்றும், முகப்பே கூவிப் பணி கொள்ளாய்’’ -8-5-7-என்றும் சொல்லுகிறபடியே – ஏவிக் கொள்ள வேணுமென்றிருக்குமவ ராகையாலே ப்ரபாத ஸூ சகங்களைச் சொல்லித் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.
————–
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திருப்பள்ளி யெழுச்சி வ்யாக்யானம் அவதாரிகை இவ் வாழ்வாராகிறார் – முதலிலே ஸ்வரூப உபாய புருஷார்த்த, விவேக ஸூந்யராய் தேஹத்தில் ஆத்ம புத்தியைப் பண்ணி தத,நுபந்தி,களான ஸப்தாதி | விஷயங்களிலே மண்டி, தம்மோடு சேர்ந்தாரையும் தத் ஸ்வபாவராக்கிப் போரா நிற்க, (அதாவது – இவ்வாழ்வார் அநாதி,காலமாக ஸம்ஸாரியாய் இருந்து “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” [திருவாய் 2-6-5] என்கிறபடியே பல பிறவிகள் எடுத்து வரும் போது, தம் ஸ்வரூபம் எத்தகையது, தாம் அடைய வேண்டிய பயன் எது, அதற்கு உபாயம் எது என்னும் அறிவு இல்லாதவராய், தேஹத்தையே ஆத்மாவாக எண்ணி இந்த தேஹத்தைக் கொண்டு அநுபவிக்கப்படுகிற ஸப்த ஸ்பர்ஸ ரூப ரஸ கந்தங்களாகிற ப்ராக்ருத விஷயங்களிலே ஈடுபட்டு, தம்மோடு சேர்ந்தவர்களையும் தம்மைப் போலவே ஆக்கிப் போந்தார். )இவ்வாறு போரா நிற்க'(அவர் அநுகூலரான பின்பு உறங்குகிறார் என்கைக்கு, முன்பு உறக்க மில்லையோ வென்ன அருளிச் செய்கிறார்-மாதராரித்யாதி)மாதரார் கயற் கணென்னும் வலையுள் பட்டழுந்துவேனைப் போதரே யென்று சொல்லிப்போதரே யென்று சொல்லிப் புந்தியிற் புகுந்து தன் பாலாதரம் பெருக வைத்த அழகன்” [திருமாலை-16) என்கிறபடியே பெரிய பெருமாள் தம் நிர்ஹேதுக க்ருபையாலே தம் வடிவழகைக் காட்டி, விஷயாந்தர ப்ராவண்யத்தை மாற்றி, ஸ்வரூபாநுரூபமாகத் தம் பக்கலிலே அபி. நிவேசத்தைப் பிறப்பிக்க, இவரும் ப்ரீதி காரிதமான கைங்கர்யத்தைப் பாரித்துக் கொண்டு பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்ற விடத்திலே, திருக் கண்களாலே குளிர நோக்குதல், கையை நீட்டி அணைத்தல், குசல ப்ரஸ்நம் பண்ணுதல், (<ஸிரஸா தே,வ: ப்ரதி க்ருஹ்ணாதி) என்கிறபடியே (யா: க்ரியா: ஸம் ப்ரயுக்தா: ஸ்யுரேகாந்தக,த புத்தி,பி : |தா: ஸர்வா: ஸிரஸா தே வ: ப்ரதி க்குஹ்ணாதி வை ஸ்வயம் (பரதம் -மோக்ஷ 171-63)[மறந்தும் புறந்தொழாமையில் நிலை நிற்கும் அறிவை யுடையவர்களாலே யாவை சில கிரியைகள் (கைங்கர்யங்கள்) நன்கு அனுஷ்டிக்கப் படுகின்றனவோ, அவை யெல்லாவற்றையும் தேவன் தானே தலையாலே ஏற்றுக் கொள்கிறான் ]சூட்டு நன் மாலைகளை ஸிரஸா வஹித்தல் செய்யாதே பள்ளி கொண்டருளினார் பெரிய பெருமாள்.
அதற்கு நிபந்தநம் அநாதரம் என்ன ஒண்ணாது -ப்ரிய பூதராகையாலே -உண்டது அறாமையாலே யாதல்(உண்ட உணவு ஜெரிக்காமையாலோ ) -தம அபி பாவத்தாலே யாதல் -என்ன ஒண்ணாது -ஸூத்த ஸத்வமாகையாலே -பின்பு இதற்கு நிபந்தநம் என் என்னில் -ஆதலால் பிறவி வேண்டேன் -திருமாலை -3- என்னும்படி -ப்ரக்ருதி ஸம்பந்தம் அப்ராப்தம் என்னும்படி யான ஞான விசேஷத்தை யுடையவரான படிையும், “போனகஞ் செய்த சேடந் தருவரேல் புனித தமன்றே”( திருமாலை 41] என்னும்படி அவனடியார்க்கும் ஆட்பட்டிருக்க வேண்டும் என்னுமளவுக்கு ஆழ்வாருக்கு ஸ்வரூப ஜ்ஞநம் பிறந்தபடியையும், )ததீய சேஷத்வ பர்யந்தமாக ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞாநம் பிறந்த படியையும் “இச் சுவை தவிர அச்சுவை பெறினும் வேண்டேன்”-(திருமாலை-2] என்னும்படி ப்ரக்ருதி புருஷ யாதாத்ம்ய ஜ்ஞாநம் பிறந்த படியையும், “காவலிற் புலனை வைத்து” -திருமாலை 1]என்னும்படி இந்த்ரியங்களை நியமித்தபடியையும், குளித்து மூன்றனலை யோம்புங் குறிகொளந்தணமை தன்னை யொளித்திட்டேன்” -திருமாலை 25)என்னும்படி உபாயாந்தரங்களில் துவக்கற்ற படியையும், “உன்னருளென்னுமாசை தன்னால் பொய்ய னேன் வந்து நின்றேன்” -திருமாலை 33-என்னும்படி- எம்பெருமானுடைய இரக்கமே உபாயம்’ என்னும் – உபாய யாதாத்ம்ய ஜ்ஞாநம் பிறந்தபடியையும் அநுஸந்தித்து, “சோம்பரை யுகத்தி போலும்”-திருமாலை 38] என்கிறபடியே இவரை யிப்படிப் பெறுவோமென்கிற ப்ரீதி ப்ரகர்ஷத்தாலும், –ஆத்மாநம் வாஸுதே வாக்யம் சிந்தயந்) என்கிறபடியே இவரைப் புகுர நிறுத்தின தன் வைபவத்தையும் அநுஸந்தி,த்து. “நாகமிசை த் துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க யோகணைவான்” -திருவாய் 4-8-9-என்கிறபடியே-“எல்லாரையும் இவரைப் போலே நம் பக்கலிலே ப்ரவணராக்கும் விரகேதோ?” என்று ததேகாக்ர சித்தராய்க் கொண்டு பள்ளி கொண்டருளினார். “‘மாதரார் கயற்கணென்னும் வலையுட்பட்டு-திருமாலை 16” என்கிற படியே இந்த்ரிய வஸ்யராய்க் கைகழிந்தவன்று, (அநித்ரஸ்ஸததம் ராம:) என்கிறபடியே-(அநித்ரஸ் ஸததம் ராம: ஸூப்தோபி ச நரோத்தம: ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரந் ப்ரதிபுத்யதே||(ரா-ஸு 36-44][(ஸீதையைப் பிரிந்த) ராமன் எப்போதும் தூக்கமற்றவராகவே இருக்கிறார்; நர ஸ்ரேஷ்ட்ட,ரான அவர் தூங்கினாலும் ‘ஸீதே’ என்னும் அழகிய சொல்லை உச்சரித்துக் கொண்டே விழித்தெழுகிறார்) எ-உறங்காதிருந்த பெரியபெருமாள், “அடியரோர்க்ககலலாமே”-திருமாலை 20-என்னும்படி கை புகுந்த பின்பு கரைச்சல் கெட்டு மார்பிலே கை வைத்து உறங்கப் புக்கார். –எம்பிராற்காட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே” – திருமாலை 28-என்றிருக்கு மவராகையாலே கைங்கர்ய த்வரையாலே – (உத்திஷ்ட, நரார்தூல) (ஸ மயா போதி த : ஸ்ரீமாந் -வாயஸேந ததஸ்தேந பலவத் க்லிஸ்யமா நயா | ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுக,ஸுப்த: பாந்தப: !(ரா-ஸூ -38-25 J [பிறகு அந்தக் காகாஸுரனால் பலாத்காரமாகத் துன்புறுத்தப்பட்ட என்னால், ஸுகமாகக் கண் வளர்ந்தருளியவரும், (அதனாலே) அழகாயிருப்பவரும், எதிரிகளைத் தபிக்கச் செய்பவருமான ஸ்ரீராமபிரான் எழுப்பப்பட்டார் ] என்று ஸீதாப் பிராட்டி எழுப்பியது போலும், ) “உம்பர் கோமானே உறங்காதெழுந்திராய்” -திருப்பாவை 17] என்று ஆண்டாள் எழுப்பியது போலும்– ‘அரங்கத் தம்மா பள்ளி யெழுந் தருளாயே” என்று திருப் பள்ளி யுணர்த்தி, உனக்கே நாமாட் செய்வோம்” – [திருப்பாவை-29) என்று ஆண்டாள் அவன் உகந்த கைங்கர்யத்தை ஆசைப்பட்டது போலே – “தொண்டரடிப் பொடி யென்னு மடியனை அளியனென்றருளி யுன்னடியார்க் காட் படுத்தாய்” -திருப்பள்ளி-10-என்று ததீய பர்யந்தமான கைங்கர்யத்தைக் கொண்டருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறரா யிருக்கிறது-அடியார் வரையிலான கைங் கர்யத்தைக் கொண்டருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறவராய் இப் பிரபந்தத்தைத் தலைக் கட்டுகிறார்.
ஆதித்யன் உதய கிரியிலே வந்து தோற்றினான். திருவாராதநத்துக்கு ஸமுசிதமான ஸகலோபகரணங்களுங் கொண்டு துர்மாநிகளான தேவ ஜாதிகளும், ராஜாக்களும் பக்நாபி மாநராய்த் திருக் கண்ணோக்காகத் தெற்கு திக்கிலே ப்ரதம கடாக்ஷத்துக்காக “நான் முற்பட்டேன் நான் முற்பட்டேன்” என்று முற்கோலிக் கொண்டு வந்து நின்றார்கள்; ஸர்வ ரஷகராய், ஸ்ரீய:பதியாய்-ஆஸ்ரித வத்ஸலராய், ஸர்வ ஸமாரயணீயரான தேவரீர் அடியேனுக்காக உணர்ந்தருளினீரென்கிற தரத்தை அடியேனுக்குத் தந்தருளித் திருப் பள்ளி யுணர்ந்து அடியோங்களடிமை கொண்டருள வேணுமென்கிறார். ப்ரஜைகளைக் காட்டி ஜீவநம் வேண்டுவாரைப் போலே ஆராத கரான தேவ ஜாதியை முன்னிட்டுக் கொண்டு ஸ்வ ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கிறார்.
திருமாலையில் திருப்பள்ளி யெழுச்சிக்கு வாசி யென்னென்னில்; 1-அநாதி மாயயா ஸுப்தரான இவரைப் பெரிய பெருமாளுணர்த்தினார் அதில்; இவர் தம் பக்கல் வ்யாமோஹத்தாலே ஸுப்தரான அவரைத் திருப் பள்ளி யுணர்த்துகிறார். இதில் 2-“புன் கவிதையேலு மெம்பிராற் கினியவாறே” திருமாலை – 45-என்று வாசிக கைங்கர்யத்தை இனிதாகக் கைக் கொண்டபடி சொல்லிற்று- அதில்; “தொடை யொத்த துளவமும் கூடை யும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி யென்னும் அடியனை அளியனென்றருளி-திருப்பள்ளி 10- என்கையாலே காயிக கைங்கர்யத்தை இனிதாகக் கைக் கொண்டருள வேணு மென்கிறது இதில். 3-“எம்பிராற்கினியவாறே” என்று பெரிய பெருமாளுக்கினிதான கைங்கர்யத்தைப் பெற்று நின்றார்-அதில்; ‘‘அடியார்க்காட்படுத்தாய்” என்று-ததீயருகந்த கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார் இதில் 4-அதில் பெரிய பெருமாளுடைய க்ருஷியைச் சொல்லிற்று; இதில் அவருடைய க்ருஷி பலித்த படியைச் சொல்லுகிறது. 5-“’எளியதோரருளுமன்றே யென் திறத்து”- திருமாலை 37]- என்று தம்மை விஷயீகரிக்க வேணுமென்றார் அதில்; அவர்க்கு நாளோலக்க மருள” -திருப்பள்ளி 9]என்று பர ஸம்ருத்தியை ஆஸாஸிக்கும் படியாகப் பாகம் பிறந்தபடி சொல்லுகிறது இதில்- பிறரைக் கடாக்ஷிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கும் படியான பரிபக்குவ நிலை தமக்குப் பிறந்த படியைச் சொல்லுகிறார் ஆழ்வார் இத் திருப்பள்ளியெழுச்சியில் இவை திருமாலையைக் காட்டிலும் திருப் பள்ளி யெழுச்சிக்குள்ள சிறப்புக்கள்.
————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம். ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம். ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம். ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல். நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
———
ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ மன் நாத முனிகள்–ஸ்துதிகள்
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்துக்குள் ஸ்ரீ மன் நாதமுனிகள் விஷயமாக சதுஸ் ஸ்லோஹி –
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்
எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –
அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –
ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்
இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –
இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –
முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –
————————————————————————
ஸ்லோகம் -1- அவதாரிகை –
முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –
மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே
நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –
அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதிகராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை
அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –
அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-
ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –
ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –
வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிஸ்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-
ராசயே –
ராசி என்று சமூஹம்-
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –
லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –
யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ் தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர் கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே
ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –
பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனு த்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –
பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது
அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –
சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —
வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)
பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –
——————————————————————————-
ஸ்லோகம் -3- அவதாரிகை –
த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்
ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –
அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர்–இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்
பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே
அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –
அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தம் தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –
பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –
பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை
பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று
நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-
ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது -பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்
அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே
யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –
பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –
பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –
(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)
———————————————————————————
ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –
ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன
அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண
தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –
இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-
ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —
ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –
——————-
இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்
ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்
என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்
தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக் கட்டுகிறார்
தனமாய தானே கை கூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி
ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –
ச து –அந்த எம்பெருமானாரோ
யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –
ச ச –அந்த ஆளவந்தார் தாமும்
நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே
ச ச -அந்த நாதமுனிகளும்
பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ
ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹி
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே
நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் பக்தி அவக்ரஹே வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்––1-5-
நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் -ஸ்ரீ நாதமுனிகள் என்ற பிரசித்தமான மேகத்தை ஸ்துதிக்கிறேன்
பக்தி அவக்ரஹே-பக்தியாகிற தீர்த்தம் அருமைப்பட்டு இருந்த துர் பிஷ காலத்தில்
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –பகவத் வியதிரிக்த விஷயாந்தரங்களில் விரக்தியில் என்ன –பகவத் ஞான பக்திகள் என்ன ஆகிய இவற்றை எங்கும் வர்ஷிக்க வல்ல
—————
ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
வேதங்களில் பொதிந்துள்ள உண்மைகள் அனைத்தும் அவரிட்மன் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக நிற்கும் நிலை பெற்றது
அப்படிப்பட்ட நாதமுனிகள் மூலம் நான் உயர்ந்த நல்லவரை அடைவேன் ஆவேன்
நாதமுனியை எனது நாதராக (எஜமானர்) நான் வைத்திருக்கிறேன்,
யாருடைய கைகளில் வேதங்களின் அடிப்படையான கருவானது புரிதலின் தெளிவைப் பெற்றதோ –
இதை ஹஸ்தாஅமலகா என்று அழைக்கலாம்,
இந்த நாதத்தைக் கொண்டு ஒருவர் கூறுவது போல், நான் ” அநாத ” (ஸ்வாமி இல்லாமல் ) இருக்க முடியாது.
குரு பரம்பரை -தேவாதி நாதன் தொடங்கி -கமலா -ப்ருதனேசர் -ஸ்ரீ விஷ்வக்சேனர் -வகுளா பூஷணர்-
நாதா முக்யை-ஸ்ரீ நாத முனிகள் தொடக்கமாக -பெரிய நம்பி -ஸ்ரீ ராமானுஜர்-அஸ்மத் ஆச்சார்யர் வரை – –குரு பங்க்தி-
ஸ்ரீ ராமனுடைய ஸ்ரீ பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தி உள்ளதை உலகுக்கு எடுத்துக் காட்டிய
பரம பாகவதனாகிய பரதனை சேவிக்கின்றேன்
பரதன் -என்றது ஸ்ரீ நாத முனிகளையும் குறிக்கும் -பாவ ராக தாள கொண்டு அருளிச் செயலை அளித்தார் அன்றோ –
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் ஸ்ரீ நாத முனி-
பாதுகையான நம்மாழ்வார் பெருமை உலோகர் இவரால் தானே பரவப் பெற்றது
ஸ்ரீ நம்மாழ்வாரையும் திருவாய் மொழியும் தானே உலகை உஜ்ஜீவிக்கும் பரம சக்திகள்
ஸ்ரீபரதாழ்வானால் தான் ஸ்ரீராமானுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிற தென்பது எல்லா வுலகத்திற்கும் தெரிந்தது.
ஆகையால் ஸ்ரீபரதாழ்வாரைத் தான் ஸேவிக்கிறேன்.
ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் இருபத்தைந்தாவது ஸ்லோகத்தில்
“பரத” என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது.
அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால் தான் உலகத்திற்கு தெரிந்தது
“பரத” என்பதால் தெரியப்படுத்தபட்டதில் பாவ, ராக, தாள் என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும்
மஹா பண்டிதராகிய நாதமுனிகளை ஸேவிக்கிறேன்
——————-
ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ யாமுன முனிகள்–ஸ்துதிகள் –
ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்—
“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள்,
ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே குறிப்பனவாகக் கொள்ள வேணும்.
இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு,
யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட எம்பெருமான், ஆழ்வார், நாதமுனிகளின் திருவடிகள்,
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் –
அவர் தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால். ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.
ஸ்ரீ ஸ்வாமியின் இத் தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே நம்மாழ்வார் திருநாமம்.
இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.
ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில்
ஸ்ரீ இராமானுசருக்கு அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.
இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம்.
ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதா விலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.
இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
அகில புவன–ஆசீர் வசனம் ஆசீர்வாத ரூப -வஸ்து நிர்த்தேச-இரண்டும்
அசேஷ -விஷ்ணவே நம -நமஸ்கார ரூப
வஸ்து நிர்த்தேச மங்களா சாசனம் -இரண்டும்
ஆக மூன்று வகை
ஸ்ரீ ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி –
மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
ஸ்ரீ பராங்குச தாசர் -பெரிய நம்பி–என்று ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்
ஸ்ரீ கீதா பாஷ்யம் -தடங்கல் இல்லாமல் நிறைவு பெறவும் -உலகில் பரவவும் தமது ஆச்சார்யரை நமஸ்கரிக்கிறார்
ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கும் மங்கள ஸ்லோகம்
யத் -என்னும் பதம்
எந்த -என்று பிரசித்தமான -ஆச்சார்ய குண பூர்த்தி உள்ள மேன்மையைக் காட்டும்
பத -அம் போருஹ-
தாமரை மலர் போன்ற என்ற உதாஹரணம் -அந்த திருவடிகள் அனுபவிக்க வல்லவை
அந்த த்யானம் மகிழ்வோடு இணைந்து உள்ளதால் பக்தி என்றும் கூறப்படும்
த்யான
துரோணாச்சார்யாருக்கு ஏகலைவன் போலே தான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு என்றத்தைக் காட்டும்
த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ
அழிக்கப்பட்ட அனைத்து பாபங்களையும் கொண்ட -என்பதால்
ஒரு முறை கடாக்ஷ லேசத்தாலே பலவிதமான பாபங்களும் அழிக்கப் பட்டன –
அதன் பின்னர் இடைவிடாமல் அந்த ஸ்ரீ ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளையே எண்ணி இருப்பதால்
அவை வாசனையோடு முழுமையாக நீக்கப் பட்டன -என்றவாறு
வஸ்துதாம்
வஸ்துவாக இருத்தல் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் -2-6-1-ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவன்
என்றால் அவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்
அஹம் வஸ்துதாம் உபயாத
நான் அடைந்துள்ளேனா -என்ற வியப்பால் அருளிச் செய்கிறார்
இப்படியாக தனது அநிஷ்டங்களும் அப்ராப்தங்களும் நீங்கப்பெற்று இஷ்டப் பிராப்தி அருளியதற்கு
மனம் வாக்கு காயம் -முக்கரணங்களாலும் ஏவப்பட்டு நமஸ்காரம் செய்கிறார்
இதைக் கேட்பவர்களுக்கும் அநேக மங்களங்களும் உண்டாகும்
இத்தால் ஆச்சார்ய வந்தனம் குரு பரம்பரயா த்யானம் பூர்வகமாக பக்தி செய்ய வேண்டும்
என்று உணர்த்தப்பட்டது
யதா பதாம் —அம்போருஹம் தாமரை திருவடிகளை தியானித்து
அசேஷ கல்மஷம்
வஸ்துத்வத்வம் அடைந்தேன் -இரண்டும்
த்யாநேன–கண்டு -இடைவிடாமல் நினைப்பதே-விமல சரீர சேவையால்
ஸ்ரீ ஆளவந்தாரை குறித்து மட்டும்
இந்திரியங்களை விலக்கி என்னிடம் செலுத்து -த்யானம் பண்ண பண்ண சத்வ குணம் வளர்ந்து
ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை வைத்து
அதே போலே திருவடித் தாமரை த்யானம்
வஸ்துத்வம் அடைந்தது -அடுத்த நிலை
இருப்பு -தன்மையுடன் -ஸத்வித்யா பிரகரணம் -சங்கல்பித்து ஸ்ருஷ்ட்டி செய்தது -சங்காத்வம்-உள்ளே புகுந்து
தேறி இருத்தல் -சஸாபி ராம –பரிஷத் கத சனையி அனுபவிக்க ஆசை உடன் –
பூ சத்தாயாம் சத்தை பெற ஸ்ரீ ராமாயணம் கேட்க இறங்கி-
கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமியின் ஆளவந்தார் பற்றிய தனியன்”
“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள், ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே
குறிப்பனவாகக் கொள்ள வேணும்.
இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு, யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட ஸ்ரீ எம்பெருமான், ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ நாதமுனிகளின் திருவடிகள்,
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவர்தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால்.
ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.
ஸ்ரீ ஸ்வாமியின் இத்தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்ரீ ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே ஸ்ரீ நம்மாழ்வார் திருநாமம்.
இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.
ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் ஸ்ரீ சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில் ஸ்ரீ இராமானுசருக்கு
அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.
இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம். ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதாவிலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.
பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தமியேனுக்கு அருளாய் முந்திய பாசுரம்
அறிவித்து சத்தாக ஆக்கி
வஸ்துவை உருவாக்கி உஜ்ஜீவனமும் கொடுத்து
அசந்நேவ பவதி–
நான்கு நிலைகள் பார்த்தோம்
1-இருத்தல் 2-நிலை பெருத்து இருத்தல் -3-பகவத் ஞானம் -4-கைங்கர்யம்
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -4 –
மருள் சுரந்த முன்னை வினை -சூழலாக அஞ்ஞானம் கர்மா இரண்டும் உண்டே –
வேர் அறுத்து அசேஷ -சவாசனமாக ருசி யுடன் போக்கி
பன்ன பணித்த –ஆராய -பரன் பாதம் சென்னியில் தரிக்க வைத்தான்
பொருள் ஆக்குதல் இல்லை -ஒரு பொருள் -அத்விதீயமாய் -ஒருத்தி மகனாய் போலே
சேஷ பூதனாக அறிந்து அடிமை
ஆச்சார்ய நிஷ்டை ஸ்ரீ வடுக நம்பி நிலை
ஸ்ரீ அமுதனார் -அதுக்கும் மேலே -அன்பு செய்யும் சீரிய பேறுடையார் அடிக்கீழ் –
இந்த தனித்தன்மை ஒரு பொருள் பாகவத சேஷத்வம்
ஸ்ரீ ஸ்வாமி தனித்தன்மையுடன் அழகாக பிரமாணங்களைத் தொகுத்து அருளிச் செய்தார்
ஆச்சார்யர் கடாக்ஷத்தாலும் வாக் அம்ருத வர்ஷீயான இவர் பிதா மஹரின் ஆசீர்வாதத்தாலும்
இவர் பிதாவின் ஆசீர்வாதத்தாலும் ஸ்ரீ ஸ்வாமி நம்மை எல்லாம்
அமுத மொழிகளால் நீண்ட ஆண்டுகள் நனைக்கட்டும்
இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.
அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.
இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.
சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்
(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி
ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்
“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.
ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.
அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?
”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே
தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.
அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.
ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.
மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.
முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.
(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்
ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.
இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.
“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.
மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.
யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.
அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.
அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.
வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.
ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.
”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.
ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.
“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.
கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?
விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.
அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?
விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.
இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.
வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.
ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.
ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:
(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!
தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.
தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.
வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.
தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.
விதாய வைதிகம் மார்க்கம் -வைதிக நெறியை செய்து அருளி
அகௌதஸ் க்ருத கண்டகம் விதாய -தூர்வாதிகள் ஆகிற முள் அற்றதாக செய்து அருளி
சித்தி த்ரயம் -ஆகம பிராமண்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் இத்யாதி திவ்ய பிரபந்தங்களைச் செய்து அருளி -என்றவாறு
குத குத அது என் இது என் என்று துர் ஆக்ஷேபங்கள் செய்து கொண்டு இருக்கும் தூர்வாதிகளே கௌதஸ்குதர்-
உலகத்தில் மிகவும் உயர்ந்த இடமான பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதியிடம் மிகவும் அன்புடன் கிருஷ்ணன் இருந்தான்
அந்த நீரில் இருந்து காளியனை அவ்விடத்து விட்டு விலக்கினான்
இந்த யமுனை நதி போன்றே அடியார்களைக் காப்பாற்றவும் தீய புத்தியை விலக்கவும் உறுதியுடையவர் ஆளவந்தார் ஆவார்
அப்படிப்பட்ட அவரிடம் நான் ஆழ்ந்து உள்ளேன்
இந்த ஸ்லோகத்தில் யாமுனம் யமுனை ஆற்றையும் ஆளவந்தாரையும் குறிக்கும் –
யமுனையின் புனித நீரில் ( ஆளவந்தார் ) நீராடுவோம்,
அவர் சராசரி மோகம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர்,
சாதுக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர்,
மற்றும் கிருஷ்ணரால் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன .
(இரண்டாவது பொருள்: பிருந்தாவனத்திற்கு அருகில் உள்ள விஷப் பாம்பு அகற்றப்பட்ட யமுனை நதியின்
புனித நீரில் ஸ்நானம் செய்வோம், அதில் கிருஷ்ணர் ஆர்வம் காட்டினார்.)
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-
பாபாநாம் வா ஸூபாநாம் வா -பாபிகள் விஷயத்திலும் புண்ணியவான்கள் விஷயத்திலும்
வதார்ஹாணாம் -கொல்லத் தக்கவர் விஷயத்திலும்
பிலவங்கம-வானரனே
கார்யம் கருண கார்யேண-நல்லோனாலே கருணை யானது செய்யத் தக்கது
ந கச்சின் நாபராத்யதி-எவனும் குற்றம் செய்ய வில்லை எனபது இல்லையே –
அவதாரிகை –
ராவணனும் பட்டுப் பெருமாளும் விஜயிகளானார்என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாய் இருக்க
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம் போலே
கிந்நு சிந்தயசே தேவி கிம் தவம் மாம் நாபி பாஷசே -116-16- என்று
பெரிய பிரியத்தை விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாதே தேவர் எழுந்து அருளி இருக்கிற இருப்பு என் தான் -என்று திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் உனக்கு சத்ருசமாகத் தரலாவது ஓன்று இல்லாமை காண்நான் பேசாது இருந்தது என்ன
இவனும் இவ்வளவில் நம் அபேஷிதத்தை விண்ணப்பம் செய்து கொள்வோம் என்று பார்த்து
தேவரை சுற்று முற்றும் நலிந்த ராஷசிகள் ஆகிறார்-க்ரூரைகளாய் தத் அநு குண பாவைகளாய் ஆயிற்று –
ராவணனுக்கு முன்னே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளை யாயிற்று –
அவனும் இவர்களோபாதி கேடன் அல்லன் –
இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினால் போலே இருக்கிறார்கள் அத்தனை ஆயிற்று
இவர்களை பஹூ பிரகாரமாக ஹிம்சிக்கப் பாரா நின்றேன் –
முஷ்டிபி பாணிபிஸ் சைவ -116-33- என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சேதித்தும் பற்களாலே கடித்தும் துடித்தும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -94-22-என்று பெருமாள் திருச் சரங்கள் செய்தது எல்லாம் நானே பண்ணப் பாரா நின்றேன்
முன்பு வந்த போது இடம் இல்லாமல் விட்டுப் போனேன் இத்தனை
இப்போது எனக்கு எல்லா பிரத்யுபகாரங்களும் பண்ணி அருளிற்று ஆகலாம் -இத்தனையும் திரு உள்ளமாக வேணும் -என்ன -பாபா நாம் வா -என்று அருளிச் செய்கிறாள் –
பாபாநாம் வா ஸூபாநாம் வா –
இவர்கள் நீ நினைத்து இருக்கிறபடியே பாபைகள் ஆக வுமாம் –
நான் நினைத்து இருக்கிறபடியே ஸூபைகள் ஆக வுமாம் –
அது தானே யன்றே உத்தேச்யம் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றால் போலே அழுக்கு உடையவன் அன்றோ குளிக்க ப்ராப்தி யுடையான்
அவர்கள் பாபைகள் ஆகில் அன்றோ நாம் முகம் கொடுக்க வேண்டுவது
சுபைகள் ஆகில் உன் வால் வேணுமோ –அவர்கள் புண்யங்களே கை கொடுக்குமே –
கை முதல் இல்லார்தார்க்கு அன்றோ கை முதலாக வேண்டுவது -என்றாள்-
ப்லவங்கம்-
பின்னையும் அவன் புத்தி திரிய விடாமையாலே -ஹரி ஹரி -என்கிறாள் –
அன்றிக்கே -ப்லவங்கம் -என்று
நச்சினத்தை நச்சும் ஜாதி யானமை கண்டோம் -என்கிறாள் –
வசிஷ்ட ப்ரப்ருதிகள் மந்த்ரிக்கும் படியான இஷ்வாகு வம்சத்தில் பிறந்தாய் அல்லை –
யோகிகளாய் ஜனக குலத்திலே பிறந்தாய் அல்லை –
காட்டிலே பணை யோடு பணை தாவித் திரிகிற ஜாதியிலே இ றே பிறந்தது –
அங்கன் ஒத்தாருக்கு சரணாகதியோட்டையது தெரியாது -என்கிறாள் –
வா நரோத்தம -16-18-என்றவள் தானே இ றே ப்லவங்கம் -என்றாள்
ராஜாக்க்களுமாய் மூலையடியெ நடக்க யுரியருமாய் இருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்
நீ வா நர ஜாதியாய் இருந்து வைத்து இங்கனே கோபிக்கக் கடவையோ –
கார்யம் கருண கார்யேண –
இவர்கள் புண்ய பாபம் கிடக்க இப்போது ஓடுகிற தய நீய தசையைப் பாராய் –
இவர்களுக்கு ஒரு ரஷகன் அல்லையே
இப்போது இவ்வளவிலே நாம் இரங்க வேணும் காண் –
ஆர்யேண-நல்லோனாலே –
இவை எல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும்படி யாவதே உனக்கு –
ஆர்யேண-
ஐந்த்ரவ்யாகரண பண்டிதன் என்கிறது பொய்யோ –
அவையும் எல்லாம் கற்றுக் கேட்டு இருக்கச் செய்தேயும் இப்போது ராம கோஷ்டியில் பரிசயமான படி யாகாதே
அந்த கோஷ்டியில் பரிசயம் பழக்கம் இ றே நீ இங்கனே சொல்ல வல்லை யாயிற்று
நான் பிரிந்த பின்பு அக் கோஷ்டி இங்கனே நீர்த்தது ஆகாதே -நீர் விடப் பட்ட பால் போலே -என்று கருத்து –
ந கச்சின் நாபராத்யதி -குற்றம் செய்யாதவன் ஒருத்தனும் இல்லை –
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார் –
திரை நீக்கிக் கடலாடப் போமோ
நல குதிரையாக பாவித்து இருக்கிற பெருமாள் தான் குற்றவாளர் அல்லரோ
நான் தான் குற்றப்பட்டவள் அல்லேனோ-
பெருமாள் குற்றவாளர் ஆனபடி என் என்னில் -தாம் காடேறப் போனார் -அவர் பின்னே மடலூருவாரைப் போலே இளைய பெருமாளும் போந்தார்
தம்மோடு ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்-
என்னைப் பிரிந்து பத்து மாசம் இருந்தார்
நான் வராவிட்டால் தன்னதோரம்பு இயங்க மாட்டாமை இல்லை இ றே
இவ்வழி இத்தனை நாள் பிரிந்து இருக்க வல்லரான போதுபெருமாள் பக்கலிலே யல்லவே குற்றம்
பார தந்த்ர்யத்துக்கு அநுகுணமாக பேசாது இராதே அது தன்னைச் சொன்ன என் பக்கலில் அன்றோ குற்றம்
இந் நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரை தண்டிக்கப் பார்த்த அன்று பெருமாள் அருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்பட தண்டித்து கொண்டு அன்றோ
ராவணன் சொன்ன கார்யம் செய்த இவர்களை தண்டிப்பது
ஆகையால் நீ அல்லையோ குற்றவாளன்
எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி யோடு போக வேண்டி இருந்த அன்று எனக்கு நீ யுண்டு -என்று இருந்தேன்
நீயும் இங்கனே யானால் அபராதம் செய்வார்க்குப் புகலாவார் உண்டோ -என்கிறாள் –
அஜ்ஞாத நிக்ரஹ -கோபம் என்பதையே அறியாதவள் -நம் போல்வாருக்கு தஞ்சம் ஆவது பெருமாள் உடைய சரம ஸ்லோகம் அன்று
பிராட்டி யுடைய இந்த சரம ஸ்லோகமே நமக்கு தஞ்சமாகக் கடவது –
பொழிப்புரை:
வானரனே! பாபிகள் விஷயத்திலும், புண்ணியவான்கள் விஷயத்திலும்,கொல்லத்தக்கவர் விஷயத்திலும்
நல்லோனாலே கருணையானது செய்யத்தக்கது. எவனும் குற்றம் செய்யவில்லை என்பது இல்லையே.
இராவணன் அழிந்து, இராமபிரான் போரில் ஜயித்தார் என்னும் இனிய செய்தியை ஸீதா பிராட்டியிடம் அநுமன் விண்ணப்பம் செய்ய,
பிராட்டியும் உகப்பின் மிகுதியாலே, விம்மல், பொருமல்கள் ஏற்பட்டு செயலற்றவளாயிருக்க, ‘தேவி! என்ன நினைக்கிறீர்? தேவரீர் எதனால் என்னோடு பேசவில்லை?’
[கிந்நு சிந்தயஸே தே3வி, கிம் த்வம் மாம் நாபி4பா4ஷஸே; யுத்.கா. 116-16 ] என்று வினவினான்.
தேவியும் பதிலிறுத்தாள்
‘நீ செய்த பேருபகாரத்துக்குத் தக்கபடி தரக்கூடியதொன்றில்லையே என்று நினைத்தே பேசாமலிருந்தேன்’ என்று கூற
அநுமனும், ‘தேவரீரைச் சூழ்ந்திருந்து துன்புறுத்திய இந்த அரக்கிகள் ராவணனைக் காட்டிலும் கொடியவர்கள்,
ராவணனுக்கு முன்னமேயே இவர்களைக் கொன்றிருக்க வேண்டும். ராவணன் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதனால் அடங்கி இருக்கிறார்கள்.
இவர்களை என் கையால் துன்புறுத்திக் கொல்வதற்கு தேவரீர் அநுமதி தரவேண்டும்
பகவானிடம் அபசாரம் செய்தவர்களையும், பாகவதாபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் ரீதியிலே தண்டிக்க முயற்சிக்கிறேன்.
முன்பு வந்தபோது அவகாஶமின்மையாலே விட்டுப்போனேன்.
இபோது இந்த வரத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்.
இதைக் கேட்ட பிராட்டி பதிலிறுக்கும் வண்ணம் இந்த ஶ்லோகத்தை அருளிச் செய்கிறார்.
பாபிகளானும், பரிஶுத்தர்களானாலும்
(பாபாநாம் வா ஶுபா4நாம் வா) நீ நினைக்கிறபடி பாபமே செய்தவர்களாக இருப்பினும் சரி,
நான் நினைத்தபடி பரிஶுத்தர்களாக இருப்பினும் சரி, எப்படியிருந்தாலும் கருணை காட்டவேண்டியதே.
பரிஶுத்தர்களாகில் கருணை காட்டவேண்டும் என்பதை நீயே அறிவாய்.
பாபிகள் பக்ஷத்திலும் கருணையே காட்டப்படவேண்டும் என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டுகிறேன்.
‘கருணை காட்டுவதற்கு மஹாபாபிகள் கிடைக்கமாட்டார்களா?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நல்லோர்கள்.
‘குற்றமுளதாகில் மிகவும் நன்று’ [ தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்; யுத்.கா.18-3] என்ற இராமபிரானைப் போலே,
அழுக்குடையவனைத்தானே குளிப்பாட்ட வேண்டும். அதுபோலவே பாபமாகிற அழுக்குடையவர்கள் அகப்பட்டால்,
கருணையான குளிர்நீராலே அவர்களைக் குளிப்பாட்ட வேண்டியிருக்கும்.
ஆகையால் ராக்ஷஸிகள் பாபம் செய்திருப்பதால்தான் அவர்களுக்குக் கருணை முகம் காட்டவேண்டும்.
பாபமற்றவராகில் அவர்கள் தாமாகவே கடைத்தேறிவிடுவார்கள்.
தங்களைக் கடைத்தேற்றிக் கொள்ளத் தம் கையில் ஒன்றும் இல்லாதவர்களையன்றோ நல்லோர்கள் கைதூக்கி விடவேண்டும்.
இதைக்கேட்ட அநுமன், ‘அப்படியென்றால் தர்ம ஶாஸ்திரங்களைத் தூக்கி எறிய வேண்டுமோ?’ என வினவ,
அதற்கு பிராட்டி சொன்னாள், ‘கொல்லத்தக்கவரானாலும் (வதா4ர்ஹாணாம்) நீ சொன்னது ஸாமாந்ய ஶாஸ்திரம்’.
ஆகையால், கொல்லத்தக்கவனாயினும் ஶரணமடைந்தவனைக் கைவிடுவதில்லை’
[தஸ்மாத3பி வத்3யம் ப்ரபந்நம் ப்ரதிப்ரயச்சந்தி; யஜு.ஸம்.6-5-20] என்கிற விஶேஷ ஶாஸ்திரத்தைக் கிழித்துப் போடவேண்டுமே’.
ஸாமாந்ய ஶாஸ்திரத்துக்கும், விஶேஷ ஶாஸ்திரத்துக்கும் விரோதம் வந்தால், ஸாமாந்ய ஶாஸ்திரத்தைத் தள்ளி
விஶேஷ ஶாஸ்திரத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்கிறாள் பிராட்டி.
இதைக் கேட்டும் அநுமன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமையாலே, பிராட்டி, ‘ஹரி, ஹரி’ என்கிறாள்.
பிடித்த பிடியை விடாத உன் குரங்கு புத்தியைத்தான் உன் செயலில் காண்கிறேன்.
வஸிஷ்டர், வாமதேவர் முதலானோர் மந்த்ராலோசனை வழங்கக்கூடிய இக்ஷ்வாகு வம்ஶத்தில் பிறந்தவன் அல்லையே நீ.
கர்மயோகியான ஜனகரின் வம்ஶமுமன்று.
காட்டில் கிளைக்குக் கிளை தாவித்திரியும் ஜாதியிலன்றோ நீ பிறந்தது!
அப்பேர்பட்ட உனக்கு ஶரணாகதியின் பெருமை எப்படித் தெரியும்?
பேருபகாரம் செய்த அநுமனை இப்படிப் பிராட்டி நிந்திக்கலாமோவெனில்,
அன்று அவன் செய்த பேருபகாரத்துக்குத் தோற்று ‘வானரோத்தம’ என்றவள்,
இன்று அவன் அடாத செயல் புரிவதில் பிடிவாதமாய் இருப்பதைக் காண்கையாலே, அவனைத் திருத்துமுகமாக
‘குரங்கே’ என்று நிந்திக்கிறாள் என்று கொண்டால் குற்றமில்லை.
ராஜாவாய், இஷ்டப்படி நடக்கத்தக்க ஸ்வாதந்த்ரியமுடைய இராமபிரானும் எங்கள்முன் இத்தனை கோபமாகப் பேசியறியார்.
நீ கேவலம் ஒரு குரங்காயிருந்து என்முன்னம் இத்தனை கோபமாய்ப் பேசலாமோ?
நல்லோனால் கருணை காட்டப்படவேண்டும் (கார்யம் கருணமார்யேண).
இவர்களுடைய புண்ணிய பாபத்தைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு? அது நிற்க.
இப்போது இவர்களுடைய வருந்தத்தக்க நிலையைப் பார். உன்னைப்போல் ஒருவன் இவர்களைத் துன்புறுத்தினால், ரக்ஷிப்பதற்கு இங்கு ஒருவருமில்லை.
இப்படிப்பட்ட ஸமயத்தில் இவர்களுக்காகவன்றோ நாம் இரங்க வேண்டும்.
நல்லோனன உனக்கு நான் இப்போது இவையெல்லாம் சொல்லித்தரவேண்டியுள்ளதே!
நீ ஐந்திர வியாகரணம் கற்றிலையோ? இப்படி எல்லா ஶாஸ்திரமும் கற்றிருந்தும், ராம கோஷ்டியில் பழகின பின்னர் இத்தன்மையுடையனானாய் போலும்!
நான் பிரிந்த பின்னர் பெருமாளுடைய கோஷ்டி நீர் விடப்பட்ட பால்போலே தரம் குறைந்து போயிற்று போலும்!
குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே (ந கஶ்சிந் நாபராத்4யதி)
இந்த உலக வாழ்க்கையில் குற்றமில்லாதவர் யார்?
அலைபோனபின்பு கடலில் குளிக்கலாம் என்று சொல்லமுடியுமோ?
அதுபோலவே, குற்றமில்லாதாரைப் பார்த்து கருணை காட்டுவேன் என்று சொன்னால்,
கருணை காட்டுவதற்கு ஒருவருமே அகப்படமாட்டார்களன்றோ?
குதிரைகளில் சிறந்த குதிரை ‘நற்குதிரை’ என்பதுபோலே, ‘நன்மனிதர்’ என்று மனிதரில் சிறந்தவராகத் வேஷமிட்டுக்
கொண்டிருக்கும் இராமபிரான் மட்டும் குற்றம் செய்யாதவரா?
நான்தான் குற்றம் செய்யாதவளா?
நீதான் குற்றம் செய்யாதவனோ?
ராமபிரான் என்ன குற்றம் செய்தார்-எனில்,
அவர் காடு சென்றார். மடலூருவாரைபோலே இலக்ஷ்மணனும் இவர் சென்றவிடமெல்லாம் சென்றார்.
இராமபிரானோடு காட்டில் இஷ்டப்படியெல்லாம் திரிந்து விளையாடலாம் என்று நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.
இப்படிப்பட்ட என்னைப் பிரிந்து பத்து மாஸம் இருந்தார்.
ஓர் அம்பைவிட்டு ராவணனை நினைத்த மாத்திரத்தில் ஏன் மாய்க்கவில்லை?
இதைச் செய்ய வல்லவராயிருந்தும் என்னைப்பிரிந்தே இருக்க வல்லவரானபோதே பெருமாள் குற்றம் செய்தவர் என்பது தெரியவில்லையா?
என்னுடைய பாரதந்திரியத்துக்குத் தக்கவாறு அவர் என்ன செய்தபோதிலும் நான் பேசாமலிராமல்,
அவர் குற்றத்தை உன்னிடம் சொன்னபோதே, நானும் குற்றவாளியாகிறேன்.
தன் தலைவனான ராவணன் கட்டளையை நிறைவேற்ற இந்த அரக்கிகளை நீ தண்டிக்க நினைத்தால்,
முதலில் நீ உன் தலைவனான ராமனின் கட்டளையைச் செய்வதால் உன்னையன்றோ முதலில் தண்டிக்க வேண்டும்!
ஆகையால், நீ சொல்லுகின்ற காரணத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் நீயும் குற்றம் செய்தவனாகிறாய்.
ஆகவிப்படி, ராமபிரானும், நானும், நீயும் குற்றவாளிகள் ஆனபடியால், உலகில் குற்றம் செய்யாதவர்கள் யார்?
அதாவது, எல்லாவிதத்திலும் ஒரு சேதனனைப் பெருமாள் கோபித்தபோது, அந்தக் கோபத்தை ஆற்றிவிடுவதற்காக (புருஷகார பூ4தையான) நான் உண்டு.
நானும் அவர் வழியிலே சென்று ஒரு சேதனனைக் கைவிடுமேயானால் ஆசார்யனான நீ உண்டு
அச்சேதனனையும் எங்களையும் திருத்திச் சேர்ப்பிப்பதற்கு என்று நினைத்திருந்தேன்.
நீயும் இப்படிக் கருணையற்றவனானால் குற்றம் செய்தவற்கு யார் புகல்? என்கிறாள்
கோபம் என்பதையே அறியாதவள் (அஜ்ஞாத நிக்3ரஹா), கருணையே வடிவெடுத்தவள் (கருணா) என்று ஶாஸ்திரங்களில் பேசப்படும் பிராட்டி.
அரக்கிகளிலும் கொடிய நம்மைப் போன்ற மஹாபாபிகளுக்குத் தஞ்சமாவது பெருமாளுடைய சரமஶ்லோகங்களல்ல; பிராட்டியினுடைய இந்தச் சரமஶ்லோகமே நமக்கு எப்போதும் தஞ்சமாகக் கடவது.
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .