ஸ்ரீ ஆழ்வார்‌ திருவுள்ளம்‌-பகுதி -1-

ஸ்ரீ வைண்ணவ சம்பிரதாயத்தை விளக்க எழுந்த இரகசியக்‌ கிரந்தங்களுள்‌ இறந்தது. ஆசாரிய இருதயம்‌:

ஆழ்வார்களின்‌ அருளிச்செயவில்‌ ஈடுபாடு கொண்டு, திருமாலின்‌ தீதில்‌ நன்னெறியை வளர்த்தவர்கள்‌,-

நம்மாழ்வாரையே முதலாசாரியர்‌-மற்ற ஆழ்வார்களை நம்மாழ்வாருக்கு. அங்கங்கள்‌ எனக்‌ கூறுதல்‌ மரபாதலால்‌, “நம்மாழ்வார்‌
திருவுள்ளம்‌” எனக்‌ கொள்வதே சாலவும்‌ பொருத்தமாம்‌..-ஈட்டு உரையின்‌ போக்கினை ஒட்டியே ஆசார்யஹிருதயம்‌ எழுந்தது.

முதற்‌ சூர்ணையில்‌ (மறையாய்‌ விரிந்த துளக்கமில்‌ விளக்கில்‌ கொளுத்‌தின” என்னும்‌ சொற்றொடர்‌ வருகின்‌றது.
மிக்கானை மறையாய்‌ விரிந்த விளக்கை” என்பது திருமங்கையாழ்வார்‌ பாசுரம்‌.
“தோன்று சோதி மூன்று மாய்த்‌ துளக்கமில்‌ விளக்கமாய்‌”?என்றருளிச்‌ செய்‌திருப்பவர்‌ திருமழிசையாழ்வார்‌.
இவ்விரு தொடர்களில்‌ ஒவ்வொரு பகுதியை எடுத்து இணைத்து *மறையாய்‌ விரிந்த துளக்கமில்‌ விளக்கு” என்றமைத்தார்‌
முன்‌ பாசுரங்கட்கு உரை வகுத்தவர்கள்‌ *விளக்கு” என்பது இறைவனைக்‌ குறிப்பதாகவே கொண்டுள்ளனர்‌.
எல்லாச்‌ சொற்‌களுக்கும்‌ வித்தான அகரத்தையே மறையாய்‌ விரிந்த விளக்‌கென்று இவ்வாசிரியர்‌ கொள்வது உரையால்‌ விளங்குகின்றது.
*விரிந்த என்ற” என்ற சொல்லாட்சி, இவர்‌ கொள்ளும்‌ பொருளின்‌ பொருத்தத்தை உணர்த்தும்‌, அகரத்‌ திற்கும்‌ எம்பெருமான்‌ பொருளாயிருப்பவன்‌ என்ற காரணத்‌ தால்‌ *விளக்கு” என்பது இலக்கணையாய்‌ இறைவனை உணர்த்துவதெனக்‌ கூறுவதாகக்‌ கொள்ளல்‌ வேண்டும்‌,

——-

50 சூர்ணையில்‌ “பண்ணார் பாடல்‌ பண்புரை இசை கொள்‌ வேதம்‌ போலே” என்ற தொடர்‌ வருகின்றது.
பண்ணார் பாடல்‌” என்பதற்குப்‌ “பண்ணோடு சேர்ந்துள்ள இசையை யுடைய திருவாய்மொழி ” என்பது பொருளாகும்‌.
இத்தொடர்‌ திருவாய்மெ௱ழியில்‌ வருவது.”
“பண்புரை இசை கொள் வேதம்‌? என்பது பண்புரை வேதம்‌,-இசைகொள்வேதம்‌ என்று பொருந்தும்‌.
அருளிச்‌ செயலிலும்‌ அதன்‌ உரை களிலும்‌ ;பண்புரை வேதம்‌” என்ற தொடர்‌ எங்கும்‌ வரவில்லை.
ஆனால்‌ “பண்புடை. வேதம்‌”* என்ற தொடர்‌ எடுத்‌ தாளப்பட்டுள்ளது.
“பண்புரை” என்பது, பண்ணைஃ-இசையைப்‌ புரைந்திருக்கின்ற–பண்ணுக்கு ஆதரவாயிருக்கின்ற வேதம்‌ என்னும்‌ பொருள்‌ தரும்‌,
இது ஒரு புதிய ஆட்சி என்றே உரையாசிரியரும்‌ எடுத்துக்‌ காட்டுகின்றார்‌.

திருவாய் மொழியின் வியாக்யானங்களில் -பண்புடை வேதம் -என்று ஒழிய -பண்புரை வேதம்-என்ற பாடமும் ,
இசை கொள் வேதம் என்கிறதுக்கு -சாம வேத பரத்வம் கண்டது இல்லை ஆகிலும் ,

ஆப்த தமரான இவர் ,இப் பிரபந்தத்திலே இப்படி அருளிச் செய்கையாலே ,இப்படியும் கொள்ள வேணும் ..
அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் சாம வேத வைலஷண்யத்தைப் பற்ற இத்தைச் சொன்னதே உள்ளது .
மற்றயவற்றுக்கும் இது உப லஷணம் என்று கொள்ளக் கடவது .

——–

சூர்ணை, 75ல்‌(வீட்டு இன்ப இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில்ஆராய்ச்சி)  “இன்ப மாரியில்‌ ஆராய்ச்சி” என்ற தொடர்‌ வருகின்றது.
அடியார்க்கு இன்ப மாரியே” என்பது திருவாய்மொழிப்‌ பாசரப்பகுதி.
இந்த உலகமெல்லாம்‌ தனக்கு. உரிமையானது என்று சொல்லும்படி நின்ற இறைவனைப் பற்றி
வளப்பமான தமிழ் நூலைச்‌ செய்தற்கு நான்‌ புண்ணியத்தைச்‌ செய்தவன்‌.
இந்நால்‌ “அடியார்க்கு இன்பத்தை உண்டாக்கும்‌ மழையாகும்‌–மேகமாகும்‌”என்பது அதற்கு முன்னோர்‌ வகுத்துள்ள உரை.
இது தமக்கு இனிப்பதனால்‌ மற்றவர்கட்கும்‌ அவ்வாறே இனிக்குமென்பது ஆழ்வார்‌ எண்ணம்‌,

இன்ப மாரி -(திருவாய் மொழி ஈட்டில் )
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு திரு வாய் மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார் பக்கல் உத்பத்தி நிரூபணம் என்கை-

திருவாய்மொழி பரமாக ஈடு கூற,–ஆழ்வார்‌ பரமாகக்‌ கொண்டு இவர்‌ பொருள்‌ அமைக்கின்றார்‌.
இவ்வாறு ஆழ்‌வார்‌ பாடல்களுக்கு முன்னோர்‌ கொண்ட. பொருளுக்கு சற்று மாறான பொருள்‌ இவர்‌ அமைத்துக்‌ காட்டலை நாம்‌ காண்‌கின்றோம்‌.

திருவாய்மொழியின்‌ நாலாம்பத்து ஐந்தாம்‌ திருவாய்‌ மொழியின்‌ மற்றப்‌ பாடல்களை நோக்கும்போது
“இன்பமாரியே? என்பதற்கு நான்‌ அடியவர்க்கு இன்ப மாரிஆயினேன்‌”,” என்று ஆழ்வார்‌ தமக்குள்‌ மகிழ்வதாகச்‌
கொள்ளும்‌ பொருளே, பொருத்தமுடையதாகவும்‌ சிறப்‌ புடையதாகவும்‌ தோன்றுகின்றது.
அப்பாடலின்‌ அவதாரிகையில்‌ அதன்‌ உரையாசிரியர்‌ இப்பொருளையும்‌ குறித்தல்‌ அறியத் தகும்‌.

————

(4) சூர்ணை 99, இறைவனை அடைவதற்குச்‌ சாதனமாகக்‌ கொண்டொமுகும்‌ சாதன பத்தியின்‌ இயல்பை விளக்குகின்றது.
அதில்‌ முறைப்படி. இறை வழிபாடு செய்து, அவனை இடையறாது நினைப்பதனால்‌ அந்தக் கரண்ங்கள்‌ தூயராகப்‌ பெற்று,
இந்திரியங்களை அடக்கி, அவற்றை இறைவனைப்‌ பற்றியதாகிய செந்நெறியிலே நிறுத்தி,
அவற்றின்‌ போக்கினைத் தடுத்து, ஐந்து வகைக்‌ துன்பங்களையும்‌ போக்கி, “விளக்கினைக்‌ கண்டு” என்பது வருகின்றது.
விளக்கினை விதியில்‌ காண்பார்‌‘” என்பது திருமங்கை மன்னன்‌ பாசுரம்‌.
அங்கு “விளக்காகிய இறைவன்‌? என்றே பொருள்‌ கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால்‌ ஆசார்ய இருதயத்‌தில்‌ மணவாள மாமுனிகள்‌ ஆத்தும தரிசனம்‌ செய்து” என்றே பொருள்‌ கொள்கின்றார்‌.
அதற்குரிய காரணத்தையும்‌ அவர்‌ அங்கு எழுதியுள்ளார்‌.

விளக்கினை விதியில் காண்பார்-என்கிற இது பகவத் சாஷாத் காரமாக பூர்வர்கள்
வியாக்யானம் பண்ணி வைத்தார்கள் ஆகிலும் ,இவர் ஆத்ம பரமாகவே அருளிச் செய்தார் என்று கொள்ள வேணும் –
பகவத் த்யான தர்சனங்களை மேலே சொல்லுகையாலே —
விதியில் காணும் பிரதம மத்திய தசைகளை சூரனை -23–என்று ஆத்ம பரமாகவே இறே கீழும் இவர் அருளிச் செய்தது ..
யோஜனா பேதங்களும் உண்டாய் இருக்கும் இறே –

அதே சூர்ணையில்‌ பிற்பகுதியில்‌
அரும்‌ பெருஞ்‌ சுடரைக்‌ கண்டு” என்றும்‌,-“கனவில்‌ மிக்க தர்சன சமமாய்‌” என்றும்‌
வரும்‌ தொடர்களால்‌ இறைவனைக்‌ காணுதல்‌ பற்றிச்‌ ‘சொல்லுகையால்‌
இங்கு :விளக்கினைக்‌ கண்டு என்பது ஆன்மாவினைக்‌ காணுதல்‌ அல்லது அறிதல்‌ என்றே கொள்ளவேண்டும்‌.

——–

சூர்ணை 184 -வளம்‌ மிக்க வாட்டாற்றில்‌ காணும்‌ அர்ச்சாவதாரச்‌ சிறப்பை விளக்குவது.
அடியவர்களுக்குமுத்தியைக்‌ கொடுக்குமளவில்‌ அவர்கள்‌ விதித்தபடி நிற்கிற‘ஆஸ்ரித பாரதந்தர்யம்‌? அங்கு அளவற்ற வகையில்‌ ஒடும்‌ என்‌கின்றார்‌.
மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும்” என்பது சூர்ணை.
பிரணத பாரதந்தர்யமாவது, அடியவர்‌ விரும்புகிறவாறு நடந்து கொள்ளும்‌ தன்மை. அஃதாவது, அவர்கள்‌ உடைமையாம்‌ தன்மையை இறைவன்‌ அடைதல்‌.

அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே –திருவாய்-10-6-1-என்றும் –
விண்ணுலகு தருவானாய் விரைகின்றான் விதி வகையே-திருவாய்-10-6-3- -என்றும்
திருவாய்மொழியில்‌ “அருள்‌ தருவான்‌ அமைகின்றான்‌ அது நமது விதிவகையே ” என்ற பகுதிக்கு முன்னோர்கள்‌ கூறும்‌ உரை, :
நமது புண்ணியத்திற்குத்‌ தகுதியாக அவன்‌ அருள்‌ தருவான்‌” என்பது.
ஸ்ரீ உடையவர்‌ அது கேட்டு இது முன்‌ பாசுரங்களில்‌ வரும்‌ பொருளுக்கு ஏற்றவாறு இல்லையாகையால்‌,
“நாம்‌ விதித்தபடியே செய்வானாய்‌ இருந்தான்‌” என்று அருளிச்‌ செய்தாராம்‌. ஈடு இவ்விரு பொருள்களையும்‌ தருகின்றது.
இவ் வாசிரியர்‌ உடையவர்‌ கூறும்‌ பொருளே பொருத்தமுடையது எனக்‌ கொண்டு அதனையே தம்‌ நூலில்‌ அருளிச் செய்வதைக் காண்கின்றோம்‌.

தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே ஆழ்வார் கேட்டபடியே கொடுத்து அருளினான் -ஆஸ்ரித ப்ரணய பாரதந்தர்யம் )

———-

சூர்ணை 205 ஆழ்வாருடைய உபதேசம்‌ பயனுடைய தாயிற்று என்பதை விளக்க எழுந்தது.

(க்யாதி அபேக்ஷை அற்று –பூஜா அபேக்ஷை அற்று -லாப அபேக்ஷை அற்று –
மலர் நாடி யாட் செய்ய- உய்யக் கொண்டு என்கிற இழவும் – ஆரைக் கொண்டு என்கிற இழவும் –
வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும் -தீரப் பெற்றது
மூன்றிலும் ஆசை அற்று மூன்று இழவுகளும் தீரப்பெற்றார் -)
அதில்‌ புகழில்‌ விருப்பமும்‌ செல்வ ஆசையும்‌ பிறர்‌ போற்ற வேண்டுமென்ற அவாவும்‌ இன்றி
மலர்நாடி, ஆட்செய்ய உலகர்‌ யாவரும்‌ திருந்தினர்‌.
அதனால்‌ உலகினர்‌ நல்வாழ்வு பெறவில்லையே என்று இவர்‌ கொண்ட வருத்தமும்‌,
தமக்குப்‌ பேச்சுத்‌ துணை பில்லாமையால்‌ வந்த ஏக்கமும்‌,
அவன்‌ மென்மைத்‌ தன்மையறிந்து பரிவு காட்டுவதற்கு ஒருவருமில்லையே என்ற இழவும்‌
தீரப்‌ பெற்றன என்கின்றார்‌.
இங்கு “மலர்நாடி” என வரும்‌:தொடர்‌ *நறிய நன்மலர்‌ நாடி”? என வரும்‌ திருவாய்மொழிச்‌ சொற்றொடராகும்‌.
இதற்கு ஈட்டிலும்‌ மற்ற உரைகளிலும்‌ “மணமுடையதாய்‌ நன்றாயிருப்பதான மலர்கள்‌ போலே யிருக்கின்ற
சொற்களை ஆராய்ந்து சொன்ன ஆயிரம்‌” என்னும்‌ பொருள்‌ உள்ளது.
நூலின்‌ சிறப்புக்‌ கூறுவதாகவே இத்தொடர்‌ அமைந்துள்ளது. அப் பொருளை இங்குக் கொள்ள இயலவில்லை. எனவே, *ஆத்தும மலர்களைத்‌ தேடி” என்று”
கொள்ளுதலே ஆரியர்‌ நினைவாய்‌ இருத்தல்‌ வேண்டும்‌,
ஆத்தும மலர்களைத்‌ தேடிக்‌ கைங்கரிய வடிவமாக இவர்‌ உபதேசிக்கையால்‌ நாடெல்லாம்‌ திருந்திற்று என்று கொள்ளல்‌ வேண்டும்‌.

மலர் நாடி யாட் செய்ய-அதாவது-நறிய நன் மலர் நாடி-5-5-11 -என்கிறபடியே –
சேஷத்வ பரிமள யுக்தமாய் ஸ்லாக்யமான ஆத்ம புஷ்பங்களைத் தேடி —
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் -4-10-11–என்று-கைங்கர்ய ரூபமாக உபதேசிக்கையாலே ஜகத்தாக திருந்துகையாலும் —

சர்வ வ்யாக்யானங்களிலும் -பரிமளத்தை உடையதாய் -ஸ்லாக்யமான புஷ்பங்கள்
போல ஆராய்ந்து சொன்ன ஆயிரம்-என்று பிரபந்த விசேஷணமாகச் சொல்லி இருக்கையாலே –
இவருக்கு நினைவு-(ஸ்ரீ நாயனார் நினைவு ) ஆத்ம புஷ்பங்களைத் தேடி -என்கிற இது என்று கொள்ள வேண்டும் ..
அன்றிக்கே
மலர்நாடி -என்கிற இது –
நாடாத மலர்-1-4-9– -என்கிறதை நினைத்து அருளிச் செய்தார் என்று கொள்ளில் ஒரு விரோதமும் இல்லை ..
வாடாத மலர் அடிக் கீழ் வைக்க -என்று கைங்கர்ய பிரசங்கம் உண்டு ஆகையாலே-ஆட் செய்ய -என்றதோடு சேரும் இறே-

——–

தமிழ்‌ மொழி பற்றிய ஆசிரியர்‌ கருத்து

தமிழைத்‌ திராவிடம்‌” என்ற சொல்லால்‌ குறிக்கின்றார்‌ —இதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே-சூரணை -40-

இரண்டும்‌ ஒத்த சிறப்புடையன என்பதையும்‌ விளக்குகின்றார்‌. தமிமுக்கு“ஆகஸ்தியம்‌”, என்பது ஒரு பெயர்‌.
அதற்கு அகத்தியரால்‌ செய்யப்பட்டது” என்று பொருள்‌ கொண்டு, “ஒரு முனிவரால்‌ உண்டாக்கப்பட்ட மொழியை
அநாதியான வடமொழிக்கு ஒப்பாகக்‌ கூறுவது எவ்வாறு பொருந்தும்‌?? என்ற கேள்வியை எழுப்பி, விடையும்‌ தருகின்றார்‌

செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்யமும் அநாதி-சூரணை -41-

அகத்தியரால்‌ வெளிப்படுத்தப்பட்டது என்பதால்‌, தமிழ்‌ அப்பெயர்‌ பெற்றதே யன்றித்‌ தமிழ்‌ அகத்தியர்க்கு முன்னும்‌ உள்ளதே.
அதுவும்‌ அநாதி ஆனதே” என்பதே அவர்‌ தரும்‌ விடை.-இவ்வாறே வேதப் பாடல்கள்‌ எல்லாம்‌ இருடிகள்‌ வழியே
வெளியானதைக்‌ காணலாம்‌.
கவிச்சக்கரவர்த்தியாரான் கம்பரும்‌ (என்றுமுள தென் தமிழ்‌ இயம்பி இசை கொண்டான்‌” என்று அகத்தியரைச்‌ சொல்லும்‌ முறையால்‌ “தமிழ்‌ என்று முள்ளது. அநாதி* என்பது தெளிவிப்பர்‌,

(நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழர் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் -என்றும் –
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் -என்றும் -கம்ப நாட்டு ஆழ்வார் –
ஆழ்வார்‌ பாடல்களைச்‌ சான்று காட்டித்‌ தம்‌ கருத்தை நிலைநாட்டுகின்றார்‌ நம்‌ ஆசிரியர்‌,
இறைவனைப்பற்றிப்‌ பேசும்‌ ஆழ்வார்‌கள்‌ அவன்‌ பலபல வடிவங்களில்‌ அமைந்திருப்பதாகக்‌ கூறுவார்கள்‌.
இல இடங்களில்‌ அவ்விறைவன்‌ தமிழும்‌ வடமொழியுமாய்‌ இருப்பதாகப்‌ பேசப்பட்டுள்ளது…
செந்திறத்த தமிழோசை வட.சொல்‌லாக: என்று திருமங்கை மன்னன்‌ பாடல்‌” கூறுவதை எடுத்துக்‌ காட்டுகின்றார்‌.
இதன்கண்‌ தமிழும்‌ வடமொழியும்‌ சேர்த்துச்‌ சொல்லப்பட்டுள்ளமை, அவை இரண்டும்‌ ஒத்த தன்மையன என்பதனை உணர்த்தும்‌,

வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இறே-சூரணை -42-
ஒத்தனவேனும்‌, அவற்றுள்ளும்‌ தமிழே ஏற்றமுடையது” என்பது, “செந்திறத்த தமிழ்‌” என்று அடைமொழி கொடுக்கப்பட்டும்‌,
இரண்டிலும்‌ முதலிற்‌சொல்லப்பட்டும்‌ இருப்பது காட்டும்‌ என்பது விளக்கப்படுகின்றது.
தமிழிலும்‌ வேதம்‌ உண்டு என்பர்‌ இந் நூலாசிரியர்‌..“வட மொழி மறை-திருவாய் -8-9-8-:” என்று வரும்‌ தொடர்‌ அக் கருத்தை வலியுறுத்தும்‌ என்கிறார்‌.
தென்மொழியாய தமிழிலும்‌ மறையில்லை என்றால்‌, வடமொழிமறை என்று அடை, கொடுத்துச்‌ சொல்ல வேண்டாவன்றோ?
மறைகள்‌ அநாதி யானவை: அவை ப்ரஹ்மம் பிரமனுக்கு உபதேசம் மூலமாக வந்தன. அதே போன்று,
ஆழ்வார் மூலம்‌ தென்மொழி மறை எழுந்தது.

கருத்துகள்‌ என்றும்‌ உள்ளனவே. ஞானம்‌–உண்மை ஞானம்‌–என்றும்‌ உள்ளது.
நூல்‌ வடிவில்‌ பாராத போது அஃது ஆண்டவன்‌ திரு வுள்ளத்‌திற் கிடந்தது எனலாம்‌?
இருடிகளும்‌ கவிகளும்‌ அதனை வெளிப்படுத்துவதால்‌ அவ்வுண்மைகளை அவர்களோடு இணைத்துக்‌ கூறும்‌ வழக்கம்‌ உண்டு.
“நியூட்டன்‌ நியதிகள்‌”அல்லது “சட்டங்கள்‌” அவர்‌ வெளியிட்டது. உண்மையானாலும்‌, அவருக்கு முன்‌ இயற்கையில்‌ அவை விளங்கவில்லை என்று கூற இயலாது.-அவர்‌ அதன்‌ இருப்பினை முதலில் கண்டு.விளக்கியதால்‌, அவர்‌ பெயரால்‌ அந்த நியதிகள்‌
இன்று வழங்குதலை இங்கே மனங்கொளல்‌ தகும்‌. சுவாமி விவேகாகந்தர்‌ இத்தகைய விளக்கம்‌ தந்துள்ளார்‌.
இதனால்‌, மொழிப்‌ போராட்டமின்றி உண்மைகளை அனைவருக்கும்‌ உரிமையாக்கும்‌ பரந்த மனப்பான்மை தெரிகின்றது.

தமிழ் மா முனி திக்கு சரண்யம்‌” என்ற குறிப்பு, தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே
க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-சூர்ணை 91ல்‌ வருகின்றது.

வண்தமிழ்‌ மாமுனி* என்று அகத்தியரைக்‌ குறிக்கின்றார்‌ குலசேகர ஆழ்யார்‌.
அந்த முனிவர்க்கு இருப்‌பிடமாதலால்‌, தென்திசை யாவர்க்கும்‌ புகலிடமானது என்பது கூறப்படுகின்றது.

சர்வருக்கும் புகல் இடம் என்ற மக ரிஷிகளால் –( வால்மீகி போலே சுகர் சொன்னதால் என்றவர்களாலே -என்கிறார்
அத்தகைய சிறப்புக்‌ கூறப்படுவதற்குக்‌ காரணம்‌, அவர்‌ தமிழ்‌ மாமுனிவராய்‌ இருப்பது தான்‌.
தமிழ்‌ நூல்களின்‌ மரபே இங்கு விளக்கப்படுவது தெளிவு.

—-

தமிழிலே அமைந்த ஆழ்வார்‌ பாடல்களின்‌ பெருமை பெறிதும்‌ விரிவாக இந்நூலில்‌ எடுத்துக்‌ காட்டப் படுகின்றது.
அவை *திவ்வியப்பிரபந்தம்‌* என்றும்‌ (சகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய பிரபந்த பிரதானம்-சூ. 44),
அருளிச்‌ செயல்‌” என்றும்‌ (ஸ்ரீ ராமாயணம் ,நாராயண கதை என்று தொடங்கி ,கங்கா காங்கேய சம்பவாத் யசத் கீர்த்தனம்
பண்ணின எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் ,திரு மால் அவன் கவி என்றே ,வாயோலை படியே
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்த இது வேதாதிகளில் , பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள்
போலே அருளிசெயல் சாரம்-சூ. 63) குறிக்கப்படுகின்றன.

நம்மாழ்‌வாருடைய நூல்கள்‌ நான்கும்‌ நான்கு வேதங்கள்‌ஆகுமென்றும்‌, திருமங்கையாழ்வருடைய நூல்கள்‌ ஆறும்‌
“சிக்ஷ, வியாகரணம்‌, நிருக்தம்‌, சந்தம்‌, கற்பம்‌, சோதிடம்‌ ஆகிய ஆறு அங்கமும்‌ ஆகுமென்றும்‌,
மற்ற ஆழ்வார்‌ எண்மரின்‌ நூல்களும்‌ எட்டு உபாங்கங்கள்‌ ஆகுமென்றும்‌ சொல்லப்படுகின்றன.
மங்கை மன்னனுடைய நூல்களின்‌போக்கு, நம்மாழ்வாரின்‌ நூல்களின்‌ போக்கைப்‌ பெரிதும்‌ ஒத்திருப்பதால்‌, அவற்றை “அங்கங்கள்‌” என்பர்‌,
மற்றவர்‌ நூல்களும்‌ அப்பொருள்களையே வெளிப்படுத்துபவையாய்‌ அவற்றை விளக்கம்‌ செய்வதற்கு உறுப்பாவதால்‌, அவை ‘உப அங்கங்கள்‌?–துணை உறுப்புகள்‌ எனப்‌ படுகின்றன

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)சூ. 43),

வேதம்‌ தோன்றிய பின்னரே அங்கம்‌ முதலியன தோன்றின என்றாலும்‌,

முதலும்‌ விளக்கமும்‌ ஒன்றாய் இயைந்து பொருள்‌ விளக்கம்‌ பெற்று உயிரோடு நிலவும்‌ ஒர் உறுப்பாய்‌ ஒளிர்வதனைஉள்ளத்தே கொண்டு இவ்வாறு விளக்குவது தவறன்று.
நம்மாழ்வார்‌ பாடல்களே முழு வடிவம்‌ தர வருகின்றன.அந்த உயிர்ப்பில் முன்னோர் விளக்கங்கள்‌ என்றுமுள உண்மையின்‌ விளக்கங்களாதலின்‌, ஒன்றாய்த்‌ திரண்டு திகழ்‌கின்றன.

எனவே, வரலாற்றோடு முரணுமாறு இல்லை. மரக்‌கட்டை. முன்னே அமைந்து கிடந்ததேனும்‌ செம்மை யாக்கப்‌
பட்ட மரத்தாலானமேசை முதலியன முன்னதான மரத்‌தினும்‌ சிறப்புப்‌ பெறுதலை இங்கு நினைதல்‌ தகும்‌.

தன்‌ தந்தையான எம்பெருமானிடத்தில்‌ நான்முகன்‌ வேதங்களை ஓதி உணர்ந்து, அவற்றைத் தன்‌ மூத்த புதல்வனான ருத்திரன்‌ முதலியவர்க்கு ஓதுவித்தான்‌.

அது போன்றே தம்‌ தந்தையான எம்பெருமானிடத்திலே ஆழ்வாரும்‌ வேதங்‌களைக்‌ கற்று அவற்றை மதுர கவிகள்‌ போல்வார்க்குப்‌ பயிற்றுவித்தார்‌.

வேதம்‌ முதலில்‌ ஓதுகின்றவர்களையிட்டுப்‌ பெயர்‌ கூறப்படும்‌. அதனால்‌, ஆழ்வார்‌ அருளிய வேதமும்‌
சடகோபன்‌ சொல்‌”? என்னும்‌ பெயர்‌ பெற்றது,

இருக்கு வேதமே சாமமாய்‌ விரிந்தது. அது போன்றே திருவிருத்தம்‌ நூறுமே திருவாய்மொழி ஆயிரமாய்‌ விரிந்தது.
சாம வேதத்திலும்‌ சாந்தோக்கியம்‌ என்னும்‌ பிரிவை ஓக்கும்‌ திருவாய்மொழி(சூ. 52, 53),

சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து(சாமான்யம் ஆகாமல் -முதலிலே -சந்தோகன் என்று பிரித்து )
யாழ் பயில் கான ஸ்வரூபியை-பாலையாகி என்று விசேஷிக்கையாலே வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற
உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி சரம கதி முடிவாக தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி
மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்ன பாடுகையாலே இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்..சூரணை-52-

உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி-என்று கீழ் சொன்னதின்
கருத்தை ஆப்த உபதேச முகேன அறிவிக்கிறார் மேல் ..

புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே திரு சக்கரம் ஒத்து கால சக்கரச் செங்கோல் நடாவி ஜோதிஸ் சக்கர ஒளி சுருக்கி
அக்நீஷோ மீய தேஜோ அம்ருதத்துக்குக் ஊற்றும் மந்தேஹர்க்கு செம் தீயும் முக்தி மார்க்கத் தலை வாசலும்
கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே தண் தாமரை சுமக்க
தோள் வளையும் குழையும் திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழும் பொன் மேனியும்
செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற
செய்யாளான வித்தை யோடே அருக்கன் மேவின சதாத்யேய தேஜஸ்ஸின் சாம ரச உத்கான நாமம் உள்ளுறையான
ஆத்யந்தங்களாலே ஓர் ஆயிரமாம் அவற்றிலே ஒன்றை ஆயிரம் முகத்தினால் அருளின தீர்த்தம் போலே
தீர்த்தங்கள் ஆயிரமுமாக விஸ்தரிக்கிறார் என்று வேத குரு உபதேசம் .–சூரணை -53-

வேதத்திற்கு ஒப்பாதலே அன்றி வேதத்தை விளக்கும்‌ வேத உப ப்ரஹ்மணத்திற்கு ஒப்பான தன்மையும்‌ திருவாய்மொழிக்கு உண்டு (சூ. 54)

1-ஸ்வரூப குணங்களை விசதமாக்குகிற பஞ்சராத்ரம் போலேயும்
2-விபூதியை விசதமாக்குகிற புராணங்கள் போலேயும்
3-சேஷ்டிதங்களை விசதமாக்குகிற இதிகாசங்கள் போலேயும்
நீலபாரூப உக்தியைத் தெரியச் சொன்ன-இத்திருவாய் மொழியை வேத உப ப்ருஹ்மணம்-என்பர்கள்-சூரணை -54-

வேதத்தில்‌ இறைவனின்‌ இயல்பு, பண்பு, விபூதி(இருப்பு), செயல்‌ யாவும்‌ சேர்த்துச்‌ சொல்லப்பட்டிருக்கும்‌.
ஆனால்‌, இயல்பையும்‌ பண்பையும்‌ முதன்மையாகவும்‌ விரிவாகவும்‌ விளக்குவது வைணவாகமங்களுள்‌ ஒன்றானபாஞ்சராத்திரம்‌:
விபூதியை முதன்மையாக விளக்கி உரைப்‌பது புராணம்‌;
அவன்‌ செயல்களை முதன்மையாக விளக்குவது இதிகாசம்‌.
அதே போன்று இறைவனது திருவுருவ அழகினை விளக்குதலை முதன்மையாகக்‌ கொண்டது திருவாய்மொழி,
அவ்வகையில்‌ பாஞ்சர௱த்திரம்‌ முதலியன போன்று இதுவும்‌ ஒர்‌ உப பிரம்மணம்‌ ஆகும்‌. அந்த உப பிரம்மணங்கள்‌ (விளக்க நூல்கள்‌) யாவற்றிலும்‌ இதற்கு உள்ள ஏற்றம்‌ அவை அவை தோன்றிய முறையை நோக்க விளங்கும்‌. .

இருடிகளிலும்‌ ஆழ்வார்க்குள்ள சிறப்‌. பினை விளக்குவன சூர்ணைகள்‌ 58 முதல்‌ 62 முடிய உள்ள ஐந்தும்‌.

தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போல் அன்றி
அருளின பக்தியாலே உள் கலங்கி சோகித்து மூவாறு மாசம் மோஹித்து
வருந்தி ஏங்கி தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-சூரணை -58-

(பக்தியாலே உள் கலங்கி-தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-ஞானத்தாலே மேலே மேலே
தொடுப்பாரைப் போல் அன்றே -பக்திஸ்த ஞான விசேஷம் )

ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்
இன்னும் ஆசாபாச பத்தர் அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கார் செறிந்த நீறாடி
கட்கரிய அரும் பொருளை கண்ட போதே யாமுறாமை என்னும் படி இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று ..சூரணை -59-

(ஸ்வாத்யாயம் -வேதம் –ஓதி உணர்ந்தவர் கண்டமை மைப்பாலே –கண்ட காட்சியில் கலக்கத்தாலே -மயக்கத்தால் –
( வானமே நோக்கும் மையாக்கும் –திருவாய் -7-2-3-மையாக்கும்-மயங்கும் என்றபடி )இன்னும் ஆசாபாச பத்தர்-
அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கண்ட போதே இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று .)

அவர்களுக்கு காயோடு என்னும் இவையே தாரகாதிகள் ..
இவர்க்கு எல்லாம் கண்ணன் இறே-சூரணை -60-

அழுநீர் துளும்ப கடலும் மலையும் விசும்பும் துழாய் திரு மால் என்று எங்கே காண்கேன் என்னும் இவர் அலமாப்பு ,
அவர்களுக்கு புத்ர வ்யோகத்திலே ..சூரணை -61-

பல சாதன தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்-சூரணை -62-

நூலின்‌ சிறப்பை நோக்கும் போதும்‌ இத்திருவாய்மொழி அருளிச்‌ செயலின்‌ சாரமாய்‌ விளங்குவதை அறியலாம்‌.
திருமால்‌ பற்றிய செய்திகளன்றிப்‌ புறச்செய்தியொன்றும்‌ கலசாத தூய்மையது இந்நூல்‌.
இருடிகளின்‌ நூல்களில்‌குருவின்‌ நூலுக்கும்‌ சீடனின்‌ நூலுக்கும்‌ வேறுபாடுகள்‌ காணப்படும்‌.
ஆனால்‌, ஆழ்வார்களின்‌ பாடல்கள் யாவும்‌ ஒரே கருத்துக்‌ கொண்டவை: பேசிற்றே பேசும்‌ ஏக கண்டர்‌கள்‌ இவர்கள்‌.
எனவே,வேதங்களிலும்‌ உப ப்ரஹ்மணங்களிலும்‌ ஐயத்திற்கு இடமான பொருள்களை, இவர்‌ தம்‌ மொழியின்‌
துணை சொண்டு ஐயம்‌ திரிபின்றி உறுதி செய்தல் வேண்டும்‌.
இந்நூலுக்கு மாறுபட்டவை மனுவின்‌ நூலுக்கு மாறு பட்டவை கழிக்கப் படுமாறு போல ஓதுக்கப்படும்‌,
மூன்றாவதாக, வேதம்‌ பரத்துவம்‌ பற்றியும்‌ பாஞ்சராத்‌திர்ம்‌ (ஒதினாய்‌ நீதி ) வியூகம்‌ பற்றியும்‌ கேட்ட. மனு எனப்‌
பட்ட மனு முதலிய ஸ்மிருதிகள்‌ அந்தர்யாமியாய்‌ நின்ற பரவிய நிலை பற்றியும்‌
படுகதை எனப்பெற்ற இதிகாசங்கள்‌ அவதாரங்களைப் பற்றியும்‌ பேச எழுந்தது போன்று,
பண்ணிய தமிழில்‌ ஆக மூர்த்தியான அர்ச்சாவதாரம்‌ பேசப்பட்டது என்பது வேறும்‌ ஒரு முறை,
அதன்படி வேதமே திராவிட மாக்கப்பெற்றது நம்மாழ்வாரால்‌ என்பது உணர்த்தப்‌ பெற்றது. ‘
வேதம் வெறு நிலை பெற்றதால்‌ கலங்கிப்‌ பொருளை விளக்கும்‌ தன்மை குன்றப் பெறாதோ!” என்ற ஐயம்‌ எழுதல்‌ இயல்பு.
சொல்வோன்‌ சிறப்பால்‌ அது கலக்கமடைவதற்கு மாறாகத்‌ தெளிவு பெற்றது என்றும்‌, ஆழ்‌பொருளையும்‌ தெளிவுற விளக்கும்‌
இயல்பினது ஆயிற்‌றென்றும்‌ ஆற்றினை எடுத்துக்‌ காட்டாகக்‌ க௱ட்டி விளக்குகின்றார்‌ ஆரியர்‌.
மேலும்‌, அதனால்‌ (1) எல்லோருக்கும்‌ பயன்படுதல்‌, (2) எவரும்‌ எளிதில்‌ பயன்‌ கொள்ளுமாறு அமைதல்‌
ஆகிய இரண்டு பெரும் பயன்களும்‌ ஏற்பட்டன என்பது உதாரணங்களோடு விளக்கப்படுகின்றன (சூ. 72,73, 74).

மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே
சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –சூரணை -72-

( ஸ்ரீ லஷ்மீ நாதாக்ய சிந்து -சடரி பு ஜலத-ப்ராப்த காருண்ய நீரம் மேகம் பருகின சமுத்ராம்பு )

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ம்ருத் கடம் போல் அன்றே பொற்குடம்-சூரணை -73-

(பொன்-தங்கம் என்றவாறு – தங்கமும் மண்ணிலே வந்தது தானே ஆகவே கார்யம் இது மண் காரணம் )

பெரும் புறக் கடலும் சுருதி சாகரமும் அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களில்
அயோக்யருக்கு சமைத்த மடுவும் சாய் கரகமும் மாண மேய சரமம்-சூரணை -74-

(பெரும் புறக் கடல் -இறைவன் -பிருஹத் பஹி சிந்து -திருக்கண்ண மங்கை -அபிஷேக வல்லித்தாயாய் -திருக்கல்யாணம் -தேன் வண்டுகள் தேவர்கள்-
அலைந்து நிற்கும் இடத்திலும் -வியூக நிலை -/ஆழ்ந்து நிற்கும் இடத்திலும் -உயிர்க்கு உயிராய் அந்தராமியாய் நிற்கும் நிலை
ஓடும் இடத்திலும் -அவதாரங்கள் /அயோக்யருக்கு சமைத்த மடு மேய சரமம்-அர்ச்சாவதாரம் -ப்ரமேய சரமம்
ஸ்ருதி சாகரம் -வேதக்கடல்
அலைத்து நிற்கும் இடத்திலும் -வியூகத்தை பேசும் பாஞ்சராத்ரம் /ஆழ்ந்து நிற்கும் இடத்திலும் -அந்தராமியைப் பேசும் மனு ஸ்ம்ருதிகள்
ஓடும் இடத்திலும் -அவதாரங்களை பேசும் இதிகாச புராணங்கள் /
அயோக்யருக்கு சமைத்த சாய் கரம்-அர்ச்சாவதாரத்தை அருளிச் செய்யும் திருவாயமொழி -பிரமாணங்களில் சரமம் –
சாய் கரகம் -சாய்க்கப்பட்ட கரகம் -திருக்காவேரி திரு உள்ளமா-தண்ணீர் வேண்டுமா -)

வேதங்களிலும்‌ உபநிடதங்களிலும்‌ புராண இதிகாசங்களிலும்‌ காணும்‌ அனைத்தும்‌ ஆழ்வார்‌ பாடல்களில்‌ இருப்பதை இவர்‌ விளக்கக்‌ காண்கிறோம்‌.
இறைவனிடத்தும்‌ அவன்‌ அடியவரிடத்தும்‌ அவர்களை அவன் பால்‌ சேர்ப்பிக்கும்‌ தமிழ்ப்‌ பாடலிடத்தும்‌
இவர்‌ கொண்டிருந்த காதல்‌ அளவிடற்கரியதென்பதும்‌ விளங்குகின்றது.

—————-

திருவாய்மொழியும்‌- கீதையும்‌? ஒற்றுமையும்‌ வேற்றுமையும்‌
கீதை: கண்ண பெருமானால்‌ அருச்சுனனுக்கு உரைக்கப்‌பட்ட நூல்‌) 18 அத்தியாயங்களை உடையது-பல நெறிகளையும்‌ அழகுற எடுத்து விளக்குவது; சுருங்கிய அளவினது?எல்லாச்‌ செய்திகளையும்‌ தன்னுட்‌கொண்டதாய்‌ விளங்குவது. ‘ வேதத்‌ததின்‌ முடிவு-சாரம்‌” என்று போற்றிக்‌ கொண்‌ பாடப்படுவது,
திருவாய்மொழி:
நீர்‌ பாலாய்‌, பால்நெய்யாய்‌,நெய்‌ அமுதமாய்‌, அதனால்‌ நிறைந்ததோர்‌ ஏரி கரை பொறாது நெளிந்து உடைபடும்‌.
அது போன்று ஆழ்வாருக்கு இறைவன்‌ ஞானம்‌ அருளினன்‌. அது பரபக்தி வடிவு பெற்றது. அப்‌ பரபக்தி , பரஞானமாயிற்று, பரஞானம்‌, பரம ஞானமாய்‌ மலர்ந்தது.
அமுதக்‌ கடலானது, தான்‌ உள்ள இடத்தை அழித்து விடாமல்‌ இருப்பதற்காக வெள்ளமெடுப்பது போன்று, ஆழ்வார்‌ உள்ளம்‌ வெடித்துவிடாமல்‌ இருப்பதற்காக, அவர்தம்‌ ஆர்வம்‌ பாடல்கள்‌ வடிவாய்‌ வெள்ளமிட்டு *அவாவில்‌ அந்தாதி: என்று பக்தியின்‌ வலிமையால்‌ பிறந்த
அந்தாதியான ஆயிரம்‌ என்ற சிறப்புடைய நூலாயிற்று

முன்னது தத்துவ ஞானத்தை அறிவுறுத்தும்‌ நூல்‌- பின்னது பக்தியை வெளியிடும்‌ நூல்‌ என்று பொதுவாக எண்ணத்‌ தோன்றும்‌.
திருவாய்மொழி பத்திநூல்‌ மட்டுமன்று? தத்துவ ஞானமும்‌ கூறுன்றது. என்பதனை ஒப்புமை கூறத்‌ தொடங்கும்‌
சூர்ணையின்‌ தொடக்கத்திலேயே ஆசிரியர்‌ உணர்த்துகின்றார்‌.

திருவாய்மொழியின்‌ முதல்‌ நடு இறுதி மூன்று இடங்களிலிருந்து மூன்று பாடலை எடுத்துக் காட்டி
ஆழ்வார்‌ இறைவனின்‌ இயல்பை நன்கு அறிந்தவர்‌ என்பது உணர்த்தப்‌பட்டுள்ளது.
மேலும்‌, ஆழ்வார்‌ ஒரு ஞானியார்‌, அவர்‌ சிந்தை செய்தது நிறைந்த ஞான மூர்த்தியை? அவர்‌ கண்டு கொண்டது ஞானப் பிரானை;
உபதேசம்‌ செய்தது (ஞானப்‌ பிரானை ஞானத்து வைம்மின்‌” என்பது. எனவே, திருவாய்‌மொழி ஒரு ஞான தூலும்‌ ஆகும்‌ என்பது காட்டப்படுகின்‌றது.

பின்னர்க்‌ கீழ்க்காணும்‌ 18 பொருள்களையும்‌ சொல்லுதலில்‌ இரண்டிற்கும்‌ ஒற்றுமை உள்ளமையை உணர்த்துகின்றார்‌. அவையாவன:
1-2-3. உண்மைப்‌ பொருளினைப்‌ பகுத்தறியும்‌ ஆராய்ச்சி,இறைவன்‌ உயிர்‌ இவற்றிடையே உள்ள வேறுபாடு,
உயிர்‌களுக்குள்‌ உள்ள வேறுபாடு, அறிவுள்ளவை அறிவற்றவைஇவற்றிடை. உள்ள வேறுபாடு.
4, உயிரின்‌ நிலைத்த இயல்பும்‌ உடலின்‌ அழியும்‌ தன்மையும்‌.-5, எல்லாவற்றையும்‌ நடத்துகின்ற இறைவனின்‌ தலைமைத்‌ தன்மை. தியாய மகத்துவம்‌.
6. அதே சமயத்தில்‌ அடியவர்‌ உள்ளத்தே உறைதலும்‌ அவதாரம்‌ எடுத்தலும்‌ ஆகிய அவனது எளிமைத்தன்மை.
7. ஏற்றுக் கொள்ளும்‌ போது யாவரையும்‌ ஒரே தன்மை யாகக்‌ கொள்ளும்‌ சமத்துவக்‌ தன்மை-8. ஆணவமாகிய குற்றம்‌-9. பொறிகளின்‌ வலிமை
10, பொறிகளினும்‌ மனத்திற்குள்ள முதன்மை-11. புலனடக்கும்‌ முறை-12. வழி படுவோரின்‌ வகை -13. அசுரர்‌ அமரர்‌ என்னும்‌ வேறுபாடு
14. இறைவன்‌ உலகு பல உடையனாதல்‌-15. இறைவனுடைய விசுவரூபக்‌ காட்சி-16, அங்கங்களோடு கூடிய பத்தி 17-18, இருவகையான பிரபத்தி
இப் பதினெட்டுப்‌ பொருள்‌ பற்றியும்‌ கீதையும்‌ பேசுகின்றது;-திருவாய்மொழியும்‌ செப்புகின்றது. ஓரே பொருளை ஒரே தன்மையாக விளக்கும்‌ இவ் விரு நூல்களும்‌ ஒத்தன என்பதற்குக்‌ தடை யாது இருக்க இயலும்‌?

1. ஆக்கியோன்‌ –தத்வ தர்ஸி அருளிச் செய்த ஏற்றம் திருவாய் மொழிக்கே

2. தோன்றிய நோக்கம்‌

கீதை, “ஐவரான பாண்டவர்‌ வெற்றிபெற வேண்டும்‌:நூற்றுவர்‌ மடியவேண்டும்‌”, என்ற நோக்கத்தோடு எழுந்‌தது.
திருவாய்மொழி, *ஊரும்‌ நாடும்‌ எல்லாம்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ நெஞ்சு தோற்கும்படியாகவும்‌, 24 தத்துவங்‌களான அசத்திலும்‌ 25 ஆம்‌
தத்துவமான ஆன்மாவின்‌ அனுபவத்திலும்‌ பற்று முடியும்படியாக அருளிச்‌ செய்யப்‌பட்டது.
இரண்டும்‌ வீடு பேறளிக்குமாயினும்‌, வீடு பேறளிக்‌ கும்‌ பொருட்டாக வன்றி வேறு ஒன்றின்‌ பொருட்டாகத்‌
தோன்றிய கீதையினும்‌ திருவாய்மொழி ஏற்றமுடைமை தெளிவு.

3. தொடக்க நிலை, முடிவு நிலை இவற்றால்‌ மாறுபட்டுள்ள சிறப்பு

கீதையில்‌ உபதேசம்‌ தொடங்கும்போது, “நான்‌ உன்னுடைய சிடன்‌: உன்னைச்‌ சரணடை.ந்த என்னை ஏவுக!” என்றுஅருச்சுனன்‌ பணிய,
அதனால்‌ உபதேசிப்பவனின்‌ விருப்‌போடு–உகப்போடு–கீதை தோன்றியது.
முடிவில்‌ அருச்‌சுனன்பால்‌ மன ஒருமைப்பாடு காணாமையால்‌, விருப்பக்‌ குறை ஏற்பட்டது, இதை அநு கீதையில்‌ காணலாம்‌.
திருவாய்மொழியிலோ என்னில்‌, பராமுகமாக விருப்பமற்றவராக-இருப்பாரை நோக்கி ஆழ்வாரின்‌ உபதேசம்‌ தொடங்குகின்றது.
அருள்‌ உள்ளம்‌ மிக்க அவர்‌, *ஏ பாவம்‌ பரமே??? (என்ன அருமைப்பாடு! இவர்கட்கு உபதேசம்‌ செய்ய நேர்ந்ததே!)
என்று வெறுப்போடு தொடங்குதலினால்‌, உபதேசம்‌ உகப்பின்றித்‌ தொடக்கம்‌ ஆயிற்று,
அறிவுரை கேட்டு உலகம்‌ முழுவதும்‌ திருந்திவிட்டபடியால்‌, யாவரையும்‌ கண்டு மகிழ்ந்து , *பொலிக! பொலிக! பொலிக!1 என்றுவாழ்த்துக்‌ கூறுகின்றார்‌.
“உற்றேன்‌ உகந்து? என்று உகப்‌போடு முடிச்கின்றார்‌.
சித்த தா்மத்தின்‌ அளவும்‌ உபதேசம்‌ பலன்‌ அளிக்கவில்லை கீதையில்‌? அருச்சுனன்‌ போர்‌ செய்யும்‌ நிலைமையே ஏற்பட்டது.
திருவாய்மொழியில்‌, பலன்‌ முழுவதும்‌ கை கூடிய . உகப்பு உளது. எனவே, இதுவும்‌ திருவாய்மொழியின்‌ ஏற்றத்துக்குரிய காரணங்களுள்‌ ஒன்றாதலில்‌ தடையில்லை.

4. கூறப்படும்‌ பொருளில்‌ மேன்மை
கீதையில்‌, “என்னையே சரணமாக அடைவாய்‌”? என்று சித்த தர்மத்தைப்‌ பற்றும்படி, விதித்தலே உள்ளது.
திருவாய்‌மொழியில்‌ *திருநாரணன் தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்து உய்மினோ!?1* என்று விதியும்‌,
“அடியேன்‌ உன்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே!’ என்று தன்‌ நடைமுறையும்‌ ஆகிய இரண்டும்‌ கூறப்பட்டுள்ளன.
எது சிறப்புடையது என்பதை எடுத்து ஆராயவும்‌ வேண்டுமோ?

5. பிரமாணமாக ஏற்றுக் கொள்ளப்படும்‌ பெருமை
“ஆதியம்‌ பகவன்‌ வணக்குடைத்‌ தவதெறி:* என்றும்‌,
*ஞானவிதி ? என்றும்‌,
“பண்டே. பரமன்‌ பணித்த பணி வகை? என்றும்‌ வரும்‌ பாசுரப்‌ பகுதிகளில்‌ ஆழ்வார்‌ கீதையைப்‌ பிரமாணமாகக்‌ கொள்ளுகிறார்‌.
அதனால்‌, கீதைக்கு உயர்வு வருகின்றது. புத்த முனியாயும்‌ கபிலமுனியாயும்‌ நின்று இறைவன்‌ அருளிய நூல்களும்‌ வைதிகரால்‌ ஏற்றுக்‌ கொள்ளப் படாமையால்‌, அவை பிரமாணமல்லவாயின.
அவை போற்றப்படுதல்‌ இல்லை. *கீதைக்குப்‌ பெருமை ஆழ்வார்‌ அதனை ஏற்றுக் கொண்டமையாலே”, என வேண்டும்‌.
ஆழ்வார்‌ செயலுக்கு வேறு பிறர்‌ ஏற்றுக் கொள்ள வேண்டு மென்ற நியதி இல்லை. எனவே, இந்த வகையில்‌ நோக்கும்‌ போதும்‌ திருவாய்மொழியின்‌ ஏற்றம்‌ விளங்கும்‌.

————-

சாதி முதலியன பற்றிய விளக்கம்‌
சாதி ஆச்சிரம இகைரகளில்‌ பேதிக்கும்‌ தருமங்கள்‌ போலே” என்பது 31ஆம்‌ சூர்ணையில்‌ வரும்‌ ஒர்‌ உவமை,
இதனால்‌ பிராமணர்‌, க்ஷத்திரியர்‌, வைசியர்‌, சூத்திரர்‌ என்னும்‌ நான்கு சாதி வேறுபாட்டையும்‌, பிரம சரியம்‌
இல்லறம்‌ வானப் பிரக்தம்‌ துறவறம்‌ என்னும்‌ நான்கு ஆஸ்ரமங்களையும்‌,
ஜோதிஷ்டோமம்‌ முதலிய தீஷைகளையும்‌ இந் நூலாசிரியர்‌ உடன்படுகின்றார்‌:

அந்த அந்தச்‌ சாதி ஆஸ்ரமங்கட்குக்‌ கூறப்படும்‌ தருமங்கள்‌ அவரவர்களாலே செய்ய வேண்டுபவை என்ற வேதக்‌கருத்தினை இவர்‌ ஏற்றுக் கொள்ளுகின்றார்‌ என்பது தெளியலாம்‌.
பிராமணியம்‌ என்றும்‌ வைண்வத்துவம்‌ என்றும்‌ இருநிலைகளை (ஸூ . 37) இவர்‌ குறிப்பிடுகின்றார்‌. இவ் விரண்டிலும்‌ வைண்வக்துவமே முக்கியமானது என்றும்‌, வைணவத்துவம்‌ பெறாத போது பிராமணியம்‌ ஐயப்படும்‌ தன்மையதாய் விடும்‌ என்றும்‌ கூறுகின்றார்‌ (ஸூ . 38).
இதனால்‌, திருமால்‌ வழிபாட்‌டி.ற்கு முதன்மை வழங்குவது தெரிய வரும்‌. “பிறப்பால்‌ வந்த சாதியால்‌ உயர்வு த௱ழ்வு இல்லை?
திருமால்‌ அடியவர்‌,அடியார்‌ அல்லாதவர்‌ என்பதாலேயே உயர்வு தாழ்வு அமைகின்றன” என்று ஆழ்வார்கள்‌ கூறுவதையே இவ்வாசிரியர்‌ தம்‌ கொள்கையாக வற்புறுத்தி உரைக்‌கின்றார்‌.
வைணவத்துவம்‌ கைகூடுவது *சந்தங்களாயிரமும்‌ அறியக்‌ கற்று வல்லாரானால்‌? (ஸூ 37), என்பதால்‌ தமிழில்‌ அமைந்த திருவாய்மொழியான சந்தங்களாயிரத்திற்கும்‌ இவர்‌ தரும்‌ ஏற்றம்‌ விளங்கும்‌,
இஃதுணராதாரை *அயற்சதுப்பேதிமார்‌* என்கின்றார்‌ ஆசிரியர்‌. *சதுர்வேதி” என்பது நால்‌ வேதம்‌ உணர்ந்தாரைக்‌ குறிக்கும்‌ சொல்‌
“சதுப்பேதி” என்பது, அதன்‌ திரிபே: தமிழ்‌ நால்‌ வேதம்‌ அறியாதவர்‌ *அயல்‌ சதுப்‌பேதிமார்‌” எனப்பட்டனர்‌. இத்தொடர்‌ ஓரளவு இகழ்ச்சிப்‌ பொருளில்‌ வழங்கப் பட்டிருத்தலும்‌ கூடும்‌,

ஆழ்வார்‌ பன்னிருவருள்‌ பல சாதியினரும்‌ உளர்‌. அவர்‌களில்‌ தலைவராம்‌ நம்மாழ்வார்‌ நாலாம்‌ வருணத்திற்‌ பிறந்‌தவர்‌?
அவர்‌ தம்‌ பிறவியை ஆராயலாகாது என்பதை இவ்‌வாசிரியர்‌ வற்புறுத்துகின்றார்‌. இன்ப மாரியான ஆழ்வார்‌ தம்‌ பிறவியை ஆராய்வது
இல்லங்களில்‌ வைத்து வணங்கும்‌ இன்பப்‌ பொருளான இறைவன்‌ உரு எந்த உலோகத்தால்‌ ஆனது?” என்று ஆராய்வதை ஓக்கும்‌,
மற்றும்‌ இறைவன்‌ மொழி என்று சொல்லும்படி. இருக்கின்ற இன்ப வாழ்வான திருவாய்‌ மொழி எந்த மொழியில்‌ அமைந்தது என்று ஆராய்‌வதையும்‌ அது ஒக்கும்‌,
இம்‌ மூன்று செயல்களும்‌ மிகப்‌ பாவமானவை என்பதும்‌ செய்யக் தகாதன என்பதும்‌ அவர்‌ அறுதியிட்டு உரைக்கும்‌ கருத்தாம்‌.
இச்செயல்‌, ஒருவன்‌ தன்னைப்‌ பெற்ற தாயின்‌ பிறப்பு உறுப்பினை ஆராய்வதனை ஒத்ததாகும்‌ என்று வரும்‌ வட,மொழிச்‌ சுலோகம்‌ ஒன்று இங்கு எடுத்துக்‌ காட்டப்படுகின்றது

நாலாம்‌ வருணத்தவரான ஆழ்வாரல்‌ செய்யப்‌பட்டது என்ற காரணத்தால்‌ அவர்‌ தம்‌ பாடல்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட.வில்லை யானால்‌,
மீனவர்‌ குலத்து உதித்த மச்சகந்தியின்‌ மைந்தரான வியாசர்‌ கூறிய ஐந்தாம்‌ வேதமான பாரதம்‌ தள்ளத்தக்கது ஆதல்‌ வேண்டும்‌.
அவ்வாறே இடை.க்குலத்துதிக்த கண்ணன்‌ கூறிய கீதை என்ற அறு மூன்று அத்தியாயங்களைக்‌ கொண்ட உபறிஷக்‌ நூலும்‌ தள்ளத்‌ தக்கதாதல்‌ வேண்டும்‌ (ஸூ . 76).
இவை ஒருவருக்கும்‌ உடன்பாடல்ல. இரு நூல்களும்‌ யாவராலும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்‌ பட்டவையே. எனவே, ஆழ்வார்‌ பாடல்களை மட்டும்‌ ஏற்றுக்‌ கொள்ளாமை, ஒவ்வாத செயலாம்‌.
நூல்‌ செய்த ஆசிரியனது பிறவி அடிப்படையில்‌ அதை ஏற்றுக்‌ கொள்ளுதலும்‌ தள்ளுதலும்‌ செய்யத் தகாதன என்பது போதரும்‌.

வியாசர்‌, கண்ணன்‌ ஆகிய இவர்‌ தம்‌ பிறப்பிலும்‌ ஆழ்‌வார் தம்‌ பிறப்பு சிறந்ததாதலை அவர்களைப்‌ பெற்ற தாய்மார்‌, அவர்‌ பிறப்பிடம்‌,
அவர்க்குரிய ஆறு, துறை, ஊர்‌ இவை முதலியவற்றின்‌ வேறுபாடுகளை எடுத்துக்காட்டி. அழகுற விளக்குகின்றார்‌ ஆசிரியர்‌ (ஸூ 77, 78, 79, 80).

தேவர்க்கும்‌ தேவனான இறைவன்‌, உலகினைக்‌ காத்தற்‌ பொருட்டு மானிடனாய்‌ அவதரித்தான்‌. அவன்‌ இராமாவதாரத்தில்‌ இராவணனைக்‌ கொன்றான்‌. அப்போது பிரமன்‌ முதலான தேவர்கள்‌ அவனைப்‌ பார்த்து, “நீவிர்‌ நாராயணராகிய தேவர்‌” என்று புகழ்ந்தார்கள்‌. அதற்கு அவன்‌, நான்‌ என்னை மனிதனெனவே நினைக்கின்றேன்‌? தயரதன்‌ பிள்ளை யாகிய இராமன்‌ நான்‌”” என்று விளக்கினான்‌.
கோவர்த்தன மலையைக்‌ தூக்கத்‌ தங்களைக்‌ காத்த வியக்கத்தக்க செயலைக்‌ கண்ட ஆயர்கள்‌ பலவாறு அவனைப்‌ புகழ ,
அதைப்‌ பொறாமல்‌, யான்‌ தேவனும்‌, கந்தருவனும்‌, இயக்கனும்‌, அசுரனும்‌ அல்லேன்‌?
இடையர்களுக்கு உறவிளனாய்ப்‌ பிறந்த என்னை வேறாக நினைக்கவும்‌ கூடாது” என்று அறிவுறுத்தினாள்‌
தேவனான அவன்‌, உலகில்‌ பிறந்ததனாலேயே. உயர்ந்தவனாகின்றான்
பிறவிகளினாலேயே அவன்‌ குணங்கள்‌ ஒளி பெறுகின்றன, ஆகையால்‌ பிராமணக்‌ தன்மைக்கு எல்லை நிலமான பிரமனாய்ப்‌ பிறத்தலும்‌ அடிமைத்‌ தன்மைக்குப்‌ பகையான ஆணவத்திற்கு ஏதுவாகையாலே அஃது ஆன்மாவுக்கு இழிவைச்‌ செய்வது என்று இகழத் தக்கதாகும்‌.
இறைவனுக்குச்‌ செய்யும்‌ தொண்டின்‌ சுவை அறிந்தவர்க்குப்‌ பண்டை நாளாலே” (9-2-1) என்னும்‌ திருவாய்மொழியில்‌’ கூறப்படும்‌ செருக்கற்றதும்‌ இறைவனது கைங்கரியத்திற்கு ஏற்றதுமான குடிப்பிறவியே ஆன்மாவிற்கு ஒளியைச்‌ செய்வது.-அதுவே பரமபதத்தில்‌ மேற்கொள்ளும்‌ உடல்‌ போன்றதுமாகும்‌.
ஆழ்வாரது பிறவியால்‌ உலகிற்கு ஏற்பட்ட நன்மைகள்‌ மிகப் பலவாம்‌ (ஸூ 82, 83), இறைவன்‌, சாபத்தால்‌ இழிவடை.ந்த யதுகுலத்தை உயர்த்த ஆயர்குலத்தில்‌
கோபாலனாய்ப்‌ பிறந்தான்‌. பிரளய வெள்ளத்தில்‌ மூழ்கிய பூமியை மேலே கொணரக்‌ கேழல்‌ ஆனான்‌.
அவ்வாறே,“நாங்கள்‌ உயர் குலத்தவர்கள்‌” என்ற பற்றுதலாலே கீழ்மை யடைந்தவர்களை அந் நிலையிலிருந்து மாறி உயர்வடையச்‌ செய்வதற்காகவே
அகங்காரத்திற்குக்‌ காரணமல்லாததான நாலாவது வருணத்தில்‌ ஆம்வார்‌ பிறந்தார்‌.
“பிறவியால்‌ வரும்‌ அகங்காரம்‌ கூடரது’ என்பதை இது தெளிவுற உணர்த்தும்‌.
“பிறப்பில்‌ உயர்வு தாழ்வு இல்லை? அவ்வாறு கொள்ளலாகாது” என்பதைப்‌ பல எடுத்துக் காட்டுகள்‌ மூலம்‌
ஆசிரியர்‌ விளக்குகின்றார்‌ (ஸூ 85). அவற்றை மூறையே காண்போம்‌:

(1) என்‌ அடியவர் பால்‌ அன்பும்‌, என்‌ வழிபாட்டில்‌ உகப்பும்‌, தானே என்னை வழிபடுதலும்‌, என்பக்கல்‌ ஆரவார மற்றிருக்கையும்‌, என்‌ கதையைக்‌ கேட்பதில்‌ ஈடுபாடும்‌,
பத்தியின்‌ காரியமான குரல்‌ தழுதழுத்தலும்‌, கண்ணீர்‌ பெருக்குதலும்‌, மயிர்க்குச்செறிவதும்‌, இடையறாது என்னை நினைப்பதும்‌,
என்னிடமிருந்து வேறு பயன்களைக்‌ கொள்ளாமையும்‌ ஆகிய இவ்வெட்டுவகைப்‌ பத்திகள்‌ எந்த மிலேச்‌சனிட.மிருக்கிறதோ”!* என்கிறபடி
இழிகுலத்தவனானாலும்‌ இந்த எட்டுவிதப்‌ பத்தியை உடையனானால்‌ அவன்‌ உத்தமப்‌ பிராமணன்‌- முனிவன்‌: செல்வம்‌ மிக்கவன்‌. அவனே துறவி-
அவனே பண்டிதன்‌-அவனுக்கு ஞானம்‌ அளிக்கத்தக்கது, அவனிடமிருந்து ஞானம்‌ கொள்ளத்‌ தக்கது,
அவனும்‌ என்னைப்‌ போற்றுவது போன்றே போற்றத்‌ தக்கவன்‌, என்று கூறியவாறு அவன்‌ வழிபடப்பெறுவான்‌.
“அவனுடைய திருவடிகளைக் கழுவிய நீரானது ஒப்பற்ற தீர்த்தம்‌? அவன்‌ அமுது செய்த மிச்சில்‌ மிகக்‌ தூயது?” என்று கொள்ளப்படும்‌.
இது இறைவன்‌ அருளிய திருமுகப்பாசுரம்‌. இக்கருத்தே பொருந்த ஆழ்வார்கள்‌ அருளிய பாசுரங்களும்‌ இங்கு நினைவு கொள்ளத் தக்கன:

பழுதிலா ஒழுக லாற்றுப்‌ பல சதுப்‌ பேதிமார்கள்‌ இழி குலத்‌தவர்க்ளேனும்‌, எம்‌ அடி யார்க ளாகில்‌, தொழுமினீர்‌ கொடுமின்‌ கொண்மின்‌ (திருமாலை,– 42)
“போனகம்‌ செய்த சேடம்‌ தருவரேல்‌ புனிதமன்றே-(திருமாலை,– 41)
““கடல்‌ மல்லைத்‌ தலசயனத்‌ துறைவாரைக்‌ கொண்டாடும்‌ நெஞ்சுடையார்‌ அவரெங்கள்‌ குல தெய்வமே”? (பெ, தி 2-6-4)

(2) விசுவாமித்திரர்‌ இராம பிரானைத்‌ துயில்‌ எழுப்பினார்‌?பெரியாழ்வார்‌. ஆயரேற்றை அம்மம்‌ (முலை) உண்ணத்‌ துயில்‌ எழுப்பினார்‌;
தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ அரங்கத்‌ தம்மானைத்‌ துயில்‌ உணர்த்தினார்‌. இவர்களோடு நிலைக்கச்‌ சொல்லும்‌ தன்மையரான
நான்கு சாதியிலும்‌ இழிந்த நலமொன்றுமில்லாத சண்டாளராய்ப்‌ பிறந்து, திருங்குறுங்குடி, தம்பியைத்‌ திருப்பள்ளி உணர்த்தியும்‌,
“சக்கரத்‌ தண்ணல்‌ ம்ணிவண்ணற்கு ஆள்‌” என்று பயன்‌ கருதாது பாடுதல்‌ தொழிலில்‌ சேர்ந்தும்‌,
“எம்‌ தொழுகுலம்‌ தாங்களே: (3-7-8) என்று நம்மாழ்வார்‌ போன்றவர்களாலே ஆதரிக்கும்‌ ஏற்றத்‌ தைப்‌ பெற்றும்‌ வாழ்ந்த அடியவர்‌ நம்பாடுவான்‌ என்பவர்‌.
சரவ குலத்தில் பிறந்தவன்‌ “வேடன்‌” சோம சர்மா என்ற பிராமண்ன்‌, அவன்‌ தான்‌ தொடங்கிய வேள்வியை முறையாக நடத்தி முடிப்பதற்குமுன்‌ இறந்து போயினன்‌,
அதனால்‌ பிரமராட்சதனாய்ப்‌ பிறந்து அலைந்து திரிந்தான்‌,
அவன்‌ சண்டாளனான நம்பாடுவானைப்‌ பார்த்து, “நீ உன்‌ பாட்டின்‌ பெருமையால்‌ இப்பாவத்திலிருந்து என்னை மீட்கும்‌ தகுதி யுடையவன்‌,” என்று சொல்லிச்‌ சரணடைந்தான்‌.
கைசிகம்‌ என்னும்‌ பண்ணின்‌ பலத்தால்‌ இந்தப்‌ பாவத்திலிருந்தும்‌ விடுவிக்கின்றேன்‌* என்று பாடி, பிராமணனுடைய வேள்விக்‌ குறையால்‌ வந்த
இராட்சகக்‌ தன்மையைப்‌ போக்கி யாகத்தை முடித்தார்‌*நம்பாடுவான்‌’ என்னும்‌ இழிகுலப்‌பிறப்புடைய பக்தர்‌, இது கைசிக புராணத்தால்‌* அறிவது,

(3) வேடர்‌ குலத்தில்‌ பிறந்தவராகையாலே “ஏழை: ஏதவன்‌ கீழ் மகன்‌”” என்னும்படி. பிறவி, தொழில்‌, அறிவுஇவற்றால்‌. இழிந்தவரான குகப்பெருமாள்‌,
அயோத்தியா்‌ கோமானாகையால்‌ இவை எல்லாவற்றாலும்‌ உயர்ந்தவராயிருக்கின்ற அளவுமன்றிக்கே தருமத்தோடு ஒன்றின தன்மையாலே
“வானோர்‌ தலைமகனா:யிருக்கின்ற இராம பிரானுக்கு.“உகந்த தோழன்‌ நீ* என்று சொல்லும்படி ஓத்து தோழனானான்‌.
இராம பிரானே அவனைப்‌ பார்த்து “உம்பி எம்பி,* என்கையாலே இவர்‌ தம்பியான இலக்குவனுக்கு முன்‌ பிறந்தவரானார்‌.
இவ்வாறு தம்மை ஏற்றுக்கொண்ட அன்று இரவே, பெருமாள்‌ பள்ளிகொண்டிருந்த காலை அவர்‌ அழகில்‌: ஈடுபட்டுக்‌
கண்ணுறக்கமற்றுக்‌ கையும்‌ வில்லுமாய்க்‌ காத்து தின்றார்‌ இளையபெருமாள்‌.
பின்னர்ப்‌ பரதன்‌ பிரிவுத்துன்பத்‌துடன்‌ சித்திரகூடத்திற்கு வந்தபோது தம்பியான இளைய பெருமாளுடை.ய அடிமைத்‌ தன்மையின்‌ சிறப்பியல்பை அவனுக்கு எடுத்துரைத்தார்‌ குகப்பெருமாள்‌.
இப்படித்‌ தாழ்குலத்திலே பிறந்தும்‌, தன்‌ பத்தியின்‌ ஈடுபாட்டின்‌ சிறப்பாலே இராமபிரானுடைய இஷ்வாகு வமிசத்திலே ஒருவர்‌ ஆனார்‌ குகப்பெருமான்‌.
இது திருமங்கை மன்னர்‌ பாடலிற்‌ கண்டதாகும்‌.-கவிச்சக்கரவர்த்தியாரான கம்பரும்‌ இவ்வாறே கூறுவர்‌

4) “தூது வாரைத்தின்‌ வாயில்‌ மொழிந்து” என்கிற:படி. பிராட்டிக்குத்‌ தூது மொழியை அனுமாவிடம்‌ சொல்லியனுப்பிய இராமபிரான்‌,
தசரதன்‌ பிள்ளையான இராமபிரான்‌ சபரியினால்‌ வழிபடப்பட்டான்‌.–வான்மீகம்‌ கூறுகிறபடி சபரி கையில்‌ நல்ல விருந்துண்டான்‌.
பாண்ட வருக்குத்‌ தூது சென்ற கண்ணன்‌, வீடுமர்‌ துரோணர்‌ முதலியவர்‌ மாளிகைகளை விட்டு, “பயனை எதிர்‌ பாராததால்‌
தூய்மையுடையதும்‌ குணமுடையதுமான விதுரனுடைய அன்னத்தை உண்டான்‌,” என்று பாரதம்‌ கூறுகிறபடி
பிறவியில்‌ பெருமையில்லாக விதுரர்‌ திருமானியையில்‌ குணத்தோடு கூடிய விருந்துண்டான்‌.
தூது வந்த குரங்கான திருவடி, “சீதாதேவியார்‌ பார்க்கப்பட்டாள்‌!” என்ற பிரியத்‌தாலே
“உதவி விரும்பிச்‌ சுக்ரீவனும்‌ அரசை வீடணனும்‌ ஒரு பயனும்‌ கருதாது அனுமானும்‌ கைங்கரியம்‌ செய்தனர்‌?
ஆதலால்‌, அனுமானுடன்‌ உண்பது தக்கது”* என்று
எண்ணி” “கோதில்‌ வாய்மையினாயொடும்‌ உடனே உண்பன்‌ நான்‌”? என்றபடி பெருமாள்‌ அனுமானுடன்‌ உணவுண்டார்‌.
கீழ்க்குலம்‌, குரங்கு, காற்றின்‌ மகன்‌ என்று அவன்‌ விலக்கப்‌ படவில்லை. இவ்வெடுத்துக்‌ காட்டுகள்‌ பலகாலம்‌பலராலும்‌ எடுத்து ஆளப்படுவதுண்டு.
அவர்கள்‌ கண்ணன்‌ இராமன்‌ முதலானோர்‌. பெருமையையும்‌ எளிமையையும்‌ உணர்த்த எடுத்தாள்வர்‌.
இவ்வாசிரியர்‌ குகன்‌, சபரி, விதுரன்‌, அனுமன்‌ என்னும்‌ இவர்‌ தம்‌ குலம்‌ இகழப்படாது, இவர்‌ தம்‌ பத்தியால்‌
இவர்கள்‌ மற்றவர்களினும்‌ உயர்வாக மதிக்கப்‌ பட்டமையை விளக்க இவற்றை எடுத்துக்‌ காட்டுவது அறிதற்பாலது.

(5) ஒரு பிறவியில்‌ இரு பிறவி ஆனார்‌ இருவர்‌; கண்ணபிரானும்‌ திருமழிசைப்பிரானும்‌.- அவர் தம்‌ செய்தி சொல்லப்‌ படுகின்றது இங்கு.
யதுகுலத்தில்‌ பிறந்து ஆயர்‌ குலத்தில்‌ அக்குலத்தவனைப் போல வளர்ந்த கண்ணனுக்குத்‌ தருமர்‌ தாம்‌ செய்த இராசசூய யாகத்தில்‌ முதல்‌ தாம்பூலம்‌ வழங்க மரியாதை செய்தார்‌.
ருஷியின்‌ மகனாய்ப்‌ பிறந்து மற்றோரிடத்திலே பொருந்தாதாரிடத்திலே பிரம்பன்‌ குடியிலே அந்த இனத்தராய்‌ வளர்ந்த திருமழிசைப்பிரானுக்குப்‌
பெரும்புலியூரில்‌ உள்ள பிராமண உத்தமர்கள்‌, தாங்கள்‌ செய்த யாகத்தில்‌ முதல்‌ மரியாதை கொடுத்தார்கள்‌.

(6) பாண்டவர்‌ ஐவரில்‌ முதல்வரான தரும புத்திரர் விதுரர்க்கு அவர்‌ தம்‌ ஞானமிகுதியைக்‌ கண்டும்‌ அசரீரி
மொழி நினைத்தும்‌ ஐயப் படாமல்‌ இறுதிக் கடன்‌ செய்தார்‌.
தசரதர்‌ மக்கள்‌” நால்வரில்‌ முதல்வரான பெருமாள்‌ உடன்‌ பிறந்த இளையபெருமாள்‌ உடன்‌ இருக்கச்‌ செய்தேயும்‌
அவரை செய்யச்‌ சொல்லாது தானே தம்பொருட்டு உயிர்விட்ட, கழுகரசனான சடாயுவுக்கு இறுதிக்கடன்‌ செய்தார்‌.
பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி, பெரியதிருமலை நம்பி என்னும்‌ மூவர்‌ ஆளவந்தாருக்குச்‌ சீடர்‌, இம்மூவரும்‌ உடையவர்க்கு ஆசாரியராகும்‌ பேறு பெற்றவர்‌.
இம்மூவரில்‌ முதல்வரான பெரியதம்பி, கீழ்க்குலத்திற்‌ பிறந்தவரான மாறனேரிநம்பிக்கு ஆளவந்தார்‌ கட்டளையின் படியே இறுதிக் கடன்‌ செய்தார்‌.
இவை பிறவி காரணமாக நல்லோர்‌ விடப்படாமல்‌ பெருமை செய்‌யப்படுவர்‌ என்பதை வலியுறுத்தும்‌,

7) புஷ்ய மண்டபம்‌ என்னும்‌ *சிந்துபூ மகிழும்‌,” திருவேங்கட மலையில்‌ குயவளாய்ப்‌ பிறந்து பானைகள்‌ செய்யும்‌ போது மிகுந்ததாகிய
மண்ணைப்‌ பூலாகத்‌ திருத்திப்‌ பணிப்‌ பூவும் கையுமாகத்‌ திருவேங்கட.நாகனை வழிபட்ட குறும்பறுத்த நம்பியை
அந்தாட்டின்‌ அரசனான தொண்டைமான்‌ சக்ரவர்த்‌தியர்‌ பின்பற்றினார்‌.
தியாகமண்டபம்‌ என்னும்‌ கச்சிப்பதியில்‌ திருவால வட்டமும்‌ கையுமாய்ப்‌ பேரருளாளனுக்கு அந்தரங்கராய்‌ நின்ற திருக்கச்சி நம்பிகளாகிய
குலச்சிறப்பில்லாதாரை வைதிக உத்தமரான உடையவர்‌ பின்பற்றினார்‌.
போக மண்டபமான திருவரங்கம்‌ டெரிய கோவிலில்‌ வீணையும்‌ கையுமாய்ப்‌ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கராய்‌
வாழ்ந்த திருப்பாணாழ்வாரை உலோக சாரங்க மாமுனிவர்‌ என்னும்‌ அந்தணார்‌ சார்ந்து ஒழுகினர்‌.
இம்முறைகளை அறிபவர்‌ எது உயர் பிறவி எது தாழ்‌ பிறவி என்பதை நன்கு அறிவர்‌.

(8) யாகம்‌ எனப்படும்‌ திருவாராதனத்தில்‌ பிள்ளை உறங்கா வில்லிதாசர்‌ என்பவரைத்‌ தொடுதலால்‌ தமக்கு உடல்‌ தூய்மை அமையுமென்று கொண்டார்‌?
அநுயாகம்‌”எனப்படும்‌ பிரசாதம்‌ கொள்ளுதலில்‌ பிள்ளை யேறு திருவுடை தாசர்‌ கரம்படுதலால்‌, அன்னம்‌ தூய்மை பெறுகின்றதென்று கொண்டார்‌.
நம்பிள்ளை . வடக்குத்‌ திருவீதியில்‌ புதிதாகக்‌ கட்டிய தம்‌ வீட்டில்‌ குடிபுகும்போது பிள்ளை வான மா மலைத்‌
தாசர்‌ நடத்தலாலே தம்‌ புது வீட்டைத்‌ தூய்மையுடைய தாக்கிக்கொண்டார்‌ நடுவில்‌ திருவீதிப்‌ பிள்ளைபட்டர்‌.
இந்த ஞானம்‌ மிக்க பெரியோர்களின்‌ ஒழுக்க முறையை அறிந்தவர்‌களுக்கே உலகில்‌ எந்தப்‌ பிறவி உயர்ந்தது, எப்‌ பிறவி தாழ்ந்தது என்பது விளங்கும்‌,
மற்றவர்‌ உயர்வு தாழ்வு என்று கொள்வன தவறுடையன என்பது இதனால்‌ விளங்கும்‌-

——————-

வருணம்‌, ஆச்சிரமம்‌, ஞானம்‌, அநுட்டானம்‌-இவற்றின்‌ உயர்வும்‌ தாழ்வும்‌

இறைவனுக்கு அடிமைத்‌ தொழில்‌ செய்வதேஆன்மாவிற்குரிய சிறப்பியல்‌–இலக்கணம்‌ என்பதை அறிந்து,
அதற்கு ஏற்பக்‌ கொள்ளத்‌ தக்கனவும்‌ தள்ளத்‌ தக்கனவும்‌ பகுத்தறி கின்ற அறிவினைப்‌ பெறாதவர்‌, உயர்‌ பிறவி எது? தாழ்‌ பிறவி எது? என்பதை அறியார்‌.
இறைவனோடு தொடர்பற்றது எதுவாயினும்‌, அது இழிவானது. “எந்த மறையவன்‌ நான்கு வேதங்கள்‌ அறிந்தவனாயினும்‌, வாசுதேவனான இறையவனை
அறியாமலிருக்கின்றானோ,
அவனே வேதங்களாகிற சுமையால்‌ அழுந்துகின்ற பிராமணக்‌ கழுதை”, என்றபடி
வேதத்தின்‌ உட்பொருளான இறைவனை அறியாதவன்‌, வேதம்‌ அறிந்‌திருப்பினும்‌, குங்குமத்தின்‌ மணம்‌ அறியாத குங்குமம்‌ சுமந்த கழுதைக்கு ஒப்பாவன்‌?
அவன்‌ வருணம்‌ உயர்ந்தது அன்று.“மன்னரே! நாய்‌ தின்னும்‌ புலையனும்‌, திருமால்‌ பத்தனானால்‌, பிராமணனிலும்‌ மேலானவன்‌;
துறவியேயாயி னும்‌ திருமால்‌ பத்தியில்லாவிடில்‌ நாய்‌ தின்னும்‌ புலையவினும்‌ கீழானவன்‌,’- என்றபடி, இறுதி ஆச்சிரமத்தைச்‌ சேர்ந்த வனானாலும்‌-
இறைபத்தி இல்லாதவன்‌ புலையனினும்‌ கீழ்மையன்‌ என்பதை ஆச்சிரமம்‌ தன்னளவில்‌ உயர்ந்ததன்று என்பது விளக்கப்படுகின்றது.
எக்கருமம்‌ உலக பந்தத்தின்‌ பொருட்டு இல்லையோ அதுவே நற்கருமம்‌; எந்த வித்தை மோட்சத்தின்பொருட்டு ஆகின்ற்தோ, அதுதான்‌ வித்தை;
பொருள்‌ இன்பங்களின்‌ பொருட்டுச்‌ செய்கிற வியாபாரமானது, உடலுழைப்பே ஆகின்றது.
வேறு வித்தையானது திறமான இந்திர ஜால வித்தை போலப்‌ பயனற்றது!3” என்பதனால்‌,
“இறைவனைப்‌ பொருளாக உடைமையால்‌ மோட்சத்தை வேண்டுவதே வித்தை? அல்லாதது செருப்புத்‌ தைக்கக்‌ கற்றதைப்‌ போன்றது,” என்று வித்தையின்‌ தன்மை விளக்கப்படுகின்றது.
“எந்த நாராயண்னுடைய்‌ திருவடி.த் தாமரையிணைகளின்‌ நினைவில்லாமல்‌ செய்யும்‌ வேதப்‌ பயிற்சி காட்டில்‌ அழுதல்‌ போன்றதோ,
வேதத்திற்‌ கூறப்படும்‌ நாட் கடனாய விரதங்கள்‌ தசை குறைதலை மட்டும்‌ பலனாக உடையனவோ, குளம்‌ வெட்டல்‌ முதலியவெல்லாம்‌ சாம்பலில்‌ செய்த ஆகுதியோ,
தீர்ததங்களில்‌ நீராடல்‌ யானை முழகுவது போன்றதோ அந்த நாராயணன்‌ என்ற தேவன்‌ வெல்க- என்றபடி, இறைவன்‌ நினைவு இல்லாதவர்களுடைய தருமங்களும்‌ ஒமுகலாறுகளும்‌ சாம்பலில்‌ இட்ட ஆகுதி போன்ற பயனற்றவை ஆம்‌.

“எல்லோருடைய பாவங்களையும்‌ போக்குவனவும்‌ நலங்‌களைக்‌ கொடுப்பனவும்‌ ஆன கண்ணபிரானுடைய குணம்‌ செயல்‌
அவதாரங்களுடன்‌ சேர்ந்‌த சொற்கள்‌ உலகை வாழச்‌ செய்கின்‌ றன? ஒளிபெறச்‌ செய்கின்றன? தூயதாக்குகின்‌றன?
அவைகளால்‌ விடப்பட்டவை பிணத்திற்குச்‌ செய்யப்பட்ட அலங்காரங்களே என்று கருதப்படுகின்றன!”?? என்றும்‌,
“திருமால்‌ பத்தி யில்லாதவனுடை.ய வேதமோதுதலும்‌ நூல் அறிவும்‌ ஜபமும்‌ தவமும்‌ முதலானவை, உயிரற்ற உடலுக்கு
உலகத்தவர்‌ மகிழும் பொருட்டுச்‌ செய்த அழகு போன்‌றவை என்றும்‌ சொல்லுகிறபடியே இறைவன்‌ தொடர்பற்ற பேச்சுகளும்‌, இறைபத்தியில்லாதவனுடைய கல்வி ஒழுக்கங்‌களும்‌ பிணத்திற்குச்‌ செய்த அலங்காரங்கள்‌ போன்றவை என்பதாம்‌.

இறைவன்‌, அவதாரங்களால்‌ தேவனும்‌ மனிதனும்‌ ஆகின்றான்‌? இறையடியார்களும்‌ சாதியினாலும்‌ நடவடிக்கைகளாலும்‌ குணங்களாலும்‌ அப்படியே ஆகின்றார்கள்‌.
இதில்‌ ஒரு குறையுமில்லை. ஆனால்‌, இப்படி. அவதரிப்பது எல்லா வகையிலும்‌ உயர்ந்தது; எதனாலென்றால்‌, அது இவ்வுலகின்‌ நன்மைக்காக நடைபெறுவதால்‌. இறைவன்‌
அடியவர்களல்‌லாத பிறரிடத்தில்‌ உள்ள கல்வியாலும்‌ தொழில்‌ திறனாலும்‌ ஆய மேன்மை, விதவைக்குச்‌ செய்த அலங்காரம்‌ போலே நிந்தனைக்குரியதாம்‌
.”இறைவன்‌ தொடர்பே திருமாங்கல்‌யம்‌ போன்றது, அது இல்லாதபோது அவர்களது மேன்மையை விதவையின்‌ அலங்காரம்‌ போன்றது என்று மேலோர்‌ இகழ்வர்‌.
ஆகவே, இறைவன்‌ தொடர்புடைய வருணம்‌, ஆச்சிரமம்‌, கல்வி, செயல்‌ ஆகியவைகளே உயர்வுடையன என்பதும்‌,
அத் தொடர்பில்லாத நிலையில்‌ உயர்வுடையதாக மக்களால்‌ எண்ணப்படும்‌ வருணம்‌ முதலானவை
தாழ்வுடை.யனவாகவே மேலோர்களால்‌ கொள்ளப்படும்‌ என்பதையும்‌, அவர்‌ உயர்வால்‌ பயனில்லை; அவை இகழத் தக்கவை என்பதையும்‌ ஆசிரியர்‌ ஐயத்திற்கு இடமின்றி விளக்குகிறார்‌.
“உயர்ந்த பிறவி எது?” என்பதன்‌ விளக்கம்‌ ஆன்மாவின்‌ இறப்பியல்பான இறைவனுக்கு அடிமை செய்யும்‌ தன்மைக்கு ஏற்றதான பிறவி எதுவாயினும்‌,
அதுவே உயர்ந்த பிறவி என்பதைப்‌ பெரியோர்களின்‌ செயல்‌களையும்‌ பேச்சுகளையும்‌ சுட்டிக்‌ காட்டி விளக்குகிறார்‌ ஆசிரியர்

இறைவன்‌ கண்வளர்தற்கு ஏற்றதான அரவணையாயும்‌, அவன்‌ ஏறி ஊர்தற்கு ஏற்றதான கருடப்‌ புள்ளாயும்‌, அவன்‌ விரும்பி அணிதற்குத்‌
தகுதியான திருத்துழாயாயு மிருச்கும்‌ விலங்கு பறவை தாவரப்‌ பிறவிகளைப்‌ பெருமக்களாகிய நித்திய ஸூரிகள்‌ இறைவனுக்குத்‌ தொண்டு செய்யும்‌ இச்சையாலே மேற்கொண்டார்கள்‌.
“உயிர்களுக்குத்‌ தலைவனான பிரம்மனுடைய அல்லது பசுபதியான சிவனுடைய செல்வங்களை நான்‌ விரும்பவில்லை?
யமுனைக்‌ கரையில்‌. கடம்ப மரமோ, குருந்த மரமோ ஆகச்‌ கட்வேன்‌”,?” என்கிறபடியும்‌?
“எந்த மகளிர்‌ விடமுடியாத தங்கள்‌ சுற்றத்தார்களையும்‌ பெரியோர்‌ சென்ற நெறியையும்‌ துறந்து வேதங்களால்‌ தேடப்படுபவனான
கண்ணன்‌ சென்ற வழியைப்‌ பின்‌ தொடர்ந்தனரோ, அம் மகளிரின்‌ பாத தூளிபட்ட பிருந்தாவனத்திலுள்ள செடி. கொடிகளில்‌ ஏதேனும்‌ ஒன்றாகக்‌ கடவேன்‌”, என்றபடியும்‌:
“கோனேரி வாழும்‌ குருகாய்ப்‌ பிறப்பேனே!”?*
“மீனாய்ப்‌ பிறக்கும்‌ விதியுடையே னாவேனே!’**
“*செண்பகமாய்‌ நிற்கும்‌ திருவுடையே னாவேனே!:”?
“தம்பகமாய்‌ நிற்கும்‌ தவமுடையே னாவேனே!**
எம்பெருமான்‌ பொன்‌ மலைமேல்‌ ஏதேனும்‌ ஆவேனே!*?*
என்று திருமலையோடு தொடர்புடைய பறவை, விலங்கு பிறவிகளில்‌ ஏதேனுமொன்றாவேனாக என்றார்‌ குலசேகரர்‌.
உன்‌ தொண்டு: புரிதலுண்டாகிய இன்பாமொன்றிலேயே விருப்புடையவர்களுடைய திருமாளிகைகளிலே புழுவாகிய பிறவியேனும்‌ எனக்கு உண்டாகட்டும்‌”?(ஆள. ஸ்‌. 55) என்றபடி,
இறைவனுக்குத்‌ தொண்டிலேயே இன்பம்‌ கொள்ளும்‌ விருப்புடையரான ஸ்ரீவைணவர்‌திருமாளிசைகளிலே
பிறப்பும்‌ இறப்பும்‌ ஆம்படியான புழுப்‌பிறவியே எனக்கு உண்பாக வேண்டும்‌”, என்கிறார்‌ ஆளவந்தார்‌.
இவ்வாறு இறைவன்‌ அடிபடவும்‌, அவனை அணைத்தார்‌ அடியில்‌ பொடிபடவம்‌ அவன்‌ உகந்தருளின நிலத்திலேயாதல்‌
அவனடியார்‌ விரும்பிய நிலத்திலேயாதல்‌ வாழுதற்குப்‌ பிறக்கிற புள்‌ விலங்கு தாவரப்‌ பிறவிகளில்‌
பெரியோர்களான சுகமுனிவர்‌, உத்தவர்‌, குலசேகரப்‌ பெருமாள்‌, ஆளவந்தார்‌ வேண்டினார்கள்‌ என்பது தெரிகின்றது.

விளக்கம்‌
உலகில்‌ விலங்கு பறவை தாவரப்‌ பிறவிகள்‌ ‘மொழியாலும்‌ உடலாலும்‌ ‘ஏற்படுகின்ற குற்றங்களின்‌ பலனாக வருவன என்று நூல்கள்‌ சொல்லுகின்றன.
ஆனால்‌, இங்கு இறைவன்‌ விருப்பப்படி. அவனுக்குப்‌ பயன்ப்டத்தக்க இப்‌பிறவிகளை நித்திய ஸூரிகள்‌ விரும்பி ஏற்பார்கள்‌ என்றும்‌,
கைங்கரியத்தை இன்பமென அறிகின்றவர்‌, முக்தி விரும்புவோர்‌ இறைவன்‌ தொடர்பும்‌ அவனடியார்‌ தொடர்பும்‌ கொண்ட. விலங்கு தாவரப்‌ பிறப்புகளை வேண்டுவார்கள்‌ என்பதும்‌ கூறப்படுகின்றது.
ஆகையால்‌, கைங்கரியம்‌ செய்‌தற்கு ஒத்த பிறவியே உயர்ந்தது என்பது விளங்கும்‌. மரம்‌, பறவை, புழு முதலானவற்றை மக்களினும்‌ உயர்வுடையன என மதிக்க முடியாது தான்‌, எனினும்‌ அவையும்‌ மாண்புடை. யனவாகின்றன
இறைபணியில்‌ ஈடுபடும்போது, உலகத்துப்‌ பிறவிகளில்‌ உள்ள. உயர்வு தாழ்வுகள்‌ பொருட்படுத்தத்‌ தகாதவை; அதுபற்றி இழிவில்லை என்பதை உணர்த்துவதே இதன்‌ கருத்தாம்‌.

வருணம்‌ முதலானவை மாறும்‌ தன்மையனவா?இறைவனுக்கு அடிமை செய்தலே ஆன்மாவின்‌ சிறப்பி’யல்‌.-அதற்குப்‌ பகையான ஆணவத்திற்குக்‌ காரணமரக உள்ளமையால்‌ வருணம்‌ விடத்தக்கது.
கருமத்திற்கு உட்‌பட்டதாகையால்‌ காரணத்திற்கு ஏற்ப மாறுபடுவதாயிருக்‌கின்றது அது. எனவே முத்தி விரும்புவோரான பெரியோர்‌ வருணம்‌ முதலியவற்றை ஆதரியார்‌.
வருணம்‌ மாறுபடும்‌ தன்மையது.என்பது கீழ்வரும்‌ நிகழ்ச்சியால்‌ நன்கு விளங்கும்‌:
அரச குலத்திற்‌ பிறந்த விசுவாமித்திரன்‌ பிரமரிஷி ஆக விரும்பினன்‌: நெடுங்காலம்‌ தவம்‌ செய்து, வசிட்டன்‌ உதவி யால்‌ மறைமுனிவன்‌ ஆயினன்‌.
அவ்வசிட்டனை அவமதித்த காரணத்தால்‌, இட்சுவாகு குல மன்னனான திரிசங்குவை வசிட்டன்‌ புதல்வர்‌ சண்டாளனாமாறு சாபமிட்டனர்‌.

அத்திரிசங்கு மன்னனை அவன்‌ அணிந்திருந்த வாரையே வேள்வி உறுப்பாகக்‌ கொண்டு வேட்டுத்‌ தன்‌ தவ வலிமையால்‌ விசுவாமித்திரன்‌ துறக்கமேறப்‌ பண்ணினன்‌.
இவை புராணம்‌ கூறும்‌ செய்திகள்‌,
ஒர்‌ அரசன்‌ நல்வினைச்‌ சிறப்பால்‌ அந்த உடவிலேயே மறை முனிவன்‌ ஆயினன்‌-வேறு ஓர்‌ அரசன்‌, தன்‌ தீ வினை வலிமையால்‌ அந்த உடலோடே. சண்டாளனாயினன்‌?: மற்றும்‌ அரசத்‌ தன்மை போய்‌ பிரம ரிஷியானவன்‌ அரசகோலம்‌ நீங்கச்‌ சண்டாளன்‌ வடிவாய்‌ நிற்கின்றவனை “அந்தக்‌ கோலத்‌தோடே வேள்வி செய்து துறக்கத்திலே ஏற்றினான்‌: இச்செயல்‌களால்‌ வருணம்‌ கருமத்திற்கு ஏற்ப மாறும்‌ தன்மையது என்பது குன்றிலிட்ட விளக்குப்‌ போன்று தெளிவாம்‌.(ஸூ . 89).

இறைபத்தி உடையவரே உயர்ந்தவர்‌; பிறப்பு உயர்வு தாழ்வு-அங்கில்லை

“இறை பத்தர்‌ சூத்திரர்‌ அல்லர்‌? அடியவரான பிராமணரென நினைக்கத்‌ தக்கவர்‌?
எல்லா வருணங்களிலும்‌ எவர்‌ இறை பத்தி இல்லாதவரோ, அவரே சூத்திரர்‌,”?* (பாரத–ஆச்வ.-..118-32) என்பதால்‌ இறைபத்தி இல்லாதவர்‌ விடத்‌தக்கவர்‌ என்பது விளங்கும்‌. ்‌
“மன்னனே” தாய்‌ இறைச்சி தின்பவனும்‌, திருமாலிடம்‌ பத்தி உடையவன்‌ ஆனால்‌, பிராமணனைக் காட்டிலும்‌ மேலானவன்‌,- என வரும்‌ பிரமாணத்தால்‌,
இறைவனிடம்‌ செலுத்‌தும்‌ பத்தியான செல்வமுடையவர்களே கொள்ளத்‌தக்கவர்கள்‌.
இவ்வுண்மை அறிபவர்கள்‌, பரமபதத்தை அடைவார்கள்‌. அப்படி அல்லாது : அடியவர்‌ பிறப்பை ஆராய்பவர்‌ *அமரவோ ரங்கமாறும்‌??? என்ற பாட்டின்‌ நிலையை
வைணவர்களைப்‌ பிறப்பு முதலியன காட்டி இகழ்வாராகில்‌, அவர்கள்‌ வேறு காலத்தில்‌ வேறு நாட்டில்‌ அன்றிக்கே அப்போதே அவ்விடத்திலேயே, தாம்‌ உயர்‌ பிறப்பினராயினும்‌ சண்டாளரேயாவர்‌.

இவ்வாறு பெரியார்களுடைய ஓழுகலாற்றையும்‌ நூல்கள்‌ கூறும்‌ செய்திகளையும்‌ எடுத்துக்‌ காட்டிப்‌ பிறவி காரணமாக
எவ்விதக்‌ குறைபாடும்‌ எவர்க்கும்‌ இல்லை: பிறவியால்‌ உயர்வு தாழ்வு பாராட்டலாகாது? தெய்வ பத்தி யாவரையும்‌ உயர்‌வுடையராக்கும்‌ என்று சாதிபற்றி உயர்வு தாழ்வு இன்மையையும்‌ கடவுள்‌ முன்னிலையில்‌
யாவரும்‌. ஒரு தன்மையரே என்‌பதையும்‌ அழுத்தம்‌ திருத்தமாக இவ்வாசிரியர்‌ விளக்குகிறார்‌.

———————-

ஆழ்வார்‌ கூறும்‌ சமயக் கொள்கைகளும்‌ தத்துவ விளக்கமும்‌

பகுதி 1–ஆழ்வார்‌ நெறியும்‌ பிறநெறியும்‌

இந்நூலின்‌ முதல்‌ அத்தியாயங்களில்‌ தத்துவங்களும்‌-மதமும்‌ பற்றிய முக்கியமான கருத்துகள்‌ விளக்கப்படுகின்றன.
பிற் பகுதியிலும்‌ ஆங்காங்கே வரும்‌ பல பகுதிகள்‌ தத்துவத்தை உணரத்‌ துணை செய்வனவாகும்‌,
சிறப்பாக ஆழ்வார்‌ அருளிச்செயல்களும்‌, முன்‌ ஆசிரியர்களுரைத்த வேத உபநிஷதங்களும்‌ இதிகாச புராணங்களும்‌
ஆயஇவற்றில்‌ காணப்படும்‌ கருத்துகளின்படியே தத்துவம்‌ கூறப்‌ படுகிறது. வேத உபநிடதங்களில்‌ ஐயப்பாடுகள்‌ தோன்றும்‌ போது
ஆழ்வார்களின்‌ அருளிச் செயலைக் கொண்டு அவை உறுதி செய்யப்படும்‌, இவற்றிற்கு மாறான கருத்துகள்‌ இருப்‌பின்‌, அவை தவிர்க்கப்பட்டு ஆழ்வார்தம்‌ கருத்துகளே ஏற்றுக்‌: கொள்ளப்படும்‌.
அதுவே, இராமானுசர்‌ மேற்கண்ட நெறி என்பதைச்‌ ஸூர்ணை 64, 65, 66 விளக்கும்‌,

“இறைவன்‌ உளன்‌; மனிதர்‌ இருக்கின்றனர்‌,” என்னும்‌ செய்தி முதற் ஸூர்ணேயிலேயே சொல்லப்படுகிறது,
இறைவன்‌ கருணை வடிவினன்‌; மனிதர்‌ இருளாற்‌ சூழப்பட்டுள்ளனர்‌ என்னும்‌ இரண்டு கருத்துகளும்‌ அதிலேயே குறிக்கப்படுகின்றன.
இவர்கள்‌ இருளை -விட்டு நீங்க வேண்டும்‌;-இறைவனைக்‌ காண்‌ வேண்டும்‌ அடைய வேண்டும்‌.
அதற்குக்‌ காரணமானது அவனது கருணையே என்பதும்‌ மிகவும்‌ அழுத்தமாக முதற்‌ ஸூர்ணையிலேயே சொல்லப்படுகின்றது,
அக் கருணையினால்‌ மக்கள்‌ அவனைப்‌ பற்றுதலும்‌ இருள்‌ உலகை விடுதலும்‌ செய்ய–பகுத்தறிய–அவன்‌ சாத்‌திரங்களை அருளினான்‌.

உயிர்கள்‌–மனிதர்கள்‌–அநாதியாக அசித்தோடு சம்‌பந்தம்‌ கொண்டதால்‌, அவித்தை பெற்றார்கள்‌. அதனால்‌ புண்ணியமும்‌ பாவமும்‌ ஆன செயல்கள்‌ புரிந்தனர்‌:
அதனால்‌, இருள்‌ எனப்பட்ட. அஞ்ஞானம்‌ நிரம்பிய உலகில்‌ பிறந்தனர்‌;-அது காரணமாக இராஜச தாமத குணங்களாற்‌ பற்றப்‌ பட்டனர்‌:
அதனால்‌, அவர்கள்‌ ஐம்பொருள்‌ (இறைவன்‌ நிலை, உயிர்நிலை, பகை நிலை, உபாயநிலை, மெய்ந்நிலை ஆகிய ஐந்து அறிவு) இல்லாதவர்களானார்கள்‌?
எனவே, பல இன்பங்களிலே அகப்பட்டு எல்லையற்ற துன்பங்களுக்கு இருப்பிடமான சம்சாரத்திலே (பிறந்து இறத்தலிலே) அழுந்தினார்கள்‌.
இத்‌தகைய துக்கம்‌ விடத்தக்கது என்பதை அறிதல் வேண்டும்‌.-உயிர்களுக்கு அநாதியாக நாராயண்னோடு சம்பந்தம்‌ உண்டு.
இறைவனோடு கொண்ட அந்தச்‌ சம்பந்தத்தால்‌ இறைவனுக்கு உயிர்கள்பால்‌ அருள்‌ புரிந்த சிந்தை (செளஹார்தம்‌) உண்டு.
அதனால்‌, அவன்‌ அருள்‌ புரிவன்‌.-அவ்வருளால்‌ அவன்‌ தூய்மையைச்‌ செய்யும்‌ கடைக்கண்ணாற்‌ காண்பன்‌.
அதன்‌ பயனாகச்‌ ௪த்துவ குண மிகுதி ஏற்படும்‌,-அதன்‌ பயனாக உண்மை அறிவு ஏற்பட்டு ஐம்பொருள்‌ அறிவு உண்டாகும்‌,
அதனைப்‌ பெற்ற காரணத்தால்‌ பேரின்பமாகிய (வீடாய்‌) சுகம்‌ கிட்டும்‌, இச் சுகம்‌ பற்றத் தக்கது என்பதை அறிதல்‌ வேண்டும்‌.

மேற்‌ கூறிய அசித்துச்‌ சம்பந்தம்‌ தன்னோடே. சேர்ந்த மாணிக்கத்தை ஒளியத்தின்று உரு அழித்துத்‌ தன்னைப் போலவே ஆக்கும்‌ சிட்டம்‌ போலத் தானும்‌
ஆன்மாவின்‌ சீர்மை பாராதே தன்னைப்‌ போலாம்படி அதன்‌ அறிவு சிறிதும்‌ இல்‌லாதபடி தின்று, அதற்கு ஒரு முடிவை உண்டாக்கும்‌.
இறைவனோடு உள்ள சம்பந்தம்‌, எதேனும்‌ ஒரு புழுவைக்‌ கொண்டு வந்து வைத்து ஊதித்‌ தன்னை ஓத்ததாக்கும்‌ வேட்டுவேளான்‌ என்ற குளவியைப்போல,
பொருளல்லாததாய்க்‌ கிடக்கிற ஆன்மாவின்‌ சிறுமையைப்‌ பாராதே இயல்பாகவே எங்கும்‌ பரந்துள்ள தன்னோடு ஒத்ததன்மையை
ஞானம்‌ வழியாகப்‌ பெறும்படி தன்னிறமாக வூதி வாழ்வாகிற சத்தை (இருப்பை)உண்டாக்கும்‌.

இந்த இரு சம்பந்தங்களும்‌ ஆன்மாவிற்கு அநாதியாகவே இருக்கின்றன என்றால்‌, ஆன்மா எந்தச்‌ சம்பந்தத்தைப்
பற்றி எவ்வாறு கடைத் தேறுவது என்னும்‌ கேள்வி எழுகின்றது.
இதில்‌ அசித்தின்‌ சம்பந்தம்‌ ஆன்மாவிற்கு இயல்பாகவே உள்ளதன்று. அது பின்னர்‌ வந்து ஆன்மாவைப்‌ பற்றிக்‌’கொண்ட.தே .
“பெருந்துயர்‌ இடும்பையில்‌ பிறந்து கூடினேன்‌”, என்பதால்‌ அது விளங்கும்‌. அது எல்லாம்‌ வல்ல இறைவன்‌
போக்க, வாசனையும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌ தன்மையது.
ஆனால்‌, இறைவனோடு கொண்ட. உறவு, “உறவேல்‌ நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது”, (திருப்பாவை 28) என்றபடி
உயிர்‌களாலும்‌ இறைவனாலும்‌ அவ்லது இருவர்‌ தம்‌ உடன்பாட்டாலும் ஒழிக்க இயலாத ஒரு தொடர்பாகும்‌.
எனவே, அது தாய்க்கும்‌ அவள்‌ குழவிக்கும்‌ உள்ளது போன்ற நிலையான சம்பந்தமாம்‌.

“ஆனால்‌, பின்னர்‌ வந்த அசித்துச்‌ சம்பந்தத்தை அநாதி என்று மேலே சொல்லியது ஏன்‌?” என்று கேட்கலாம்‌.
பின்னர்‌ வந்தது என்பது உண்மையானாலும்‌, அது என்று வந்தது என்பது தெரியாமையால்‌, “அதையும்‌” என்று கூறினர்‌ என்பதை அறிதல்‌ வேண்டும்‌.
இந்த இறைவனோடு கொண்ட தொடர்பு தான்‌ அவன்‌ சாஸ்த்திரங்கள்‌–வேதங்கள்‌–அருளியதந்கு ஏது என்பது அறியத்தக்கது.
நாராயணன்‌ என்பதற்கு எல்லா உயிர்‌களுக்கும்‌ .: பிற பொருள்களுக்கும்‌ இருப்பிடமானவன்‌ என்பதும்‌ எல்லாப்‌ பொருள்களிலும்‌ உறைபவன்‌ என்பதும்‌ ஆகிய இரு பொருளும்‌ உண்டு. -இக்கருத்தை,
அறிகிலேன்‌ தன்னுள்‌ அனைத்துலகம்‌ நிற்க-நெறிமையால்‌ தானும்‌ அவற்றுள் நிற்‌கும் பிரான்‌ (9- 6- 4) என்னும்‌ நம்மாழ்வார்‌. வாக்கில்‌ காணலாம்‌.
இந்தக்‌“குடல்‌ துடக்கு” தான்‌–அயந சம்பற்தந்தான்‌–அவன்‌ சாஸ்த்திரம்‌ அருளக்‌ காரணம்‌. அப்படியானால்‌, அவன்‌ உயிர்களை மோக்ஷம்‌ பெறுவிக்கும்‌ சாஸ்த்திரங்களை
மட்டுமருளாமல்‌, கட்டுவிக்கும்‌ பந்தக சாத்திரங்களையும்‌ அருளியது “ஏன்‌,” என்னும்‌ கேள்வி எழுகின்றது.

அதுவும்‌ அவன்‌? மிக்க அன்பாலே வாச்ஸல்யத்தாலே–செய்தான்‌.
அன்பு மிக்க தாயானவள்‌ தன்‌ பிள்ளை, மண்‌ தின்னப்‌ போனால்‌ அதைத்‌ தடுத்தால்‌ அதன்‌ முகம்‌ வாடும்மென்று அதைத்‌ தின்ன விட்டுவிட்டுப்‌
பின்‌ அம்‌ மண்ணால்‌ கேடு வாராதவாறு வேறு மருந்து கொடுத்து நோயைச்‌ சரி செய்வாள்‌. அதே போன்று, இறைவனும்‌ எல்லா உயிர்களுக்கும்‌ தாயினும்‌
சாலப்பரிந்த தன்மையன்‌ ஆகையினால்‌, உயிர்களின்‌ சுவைக்குத்‌ தக்கவாறு பந்தத்தையும்‌ காட்டி, அதை அறுக்கும்‌ மருந்தினையும்‌ காட்டுகின்றானாம்‌.
இவ்வாறு செய்வது முறைப்படி. அவர்களை ஈடேற்றுவதற்கு ஆன வழி. விடுதலை (மோக்ஷம்‌) உண்‌டாக்கும்‌ சாஸ்த்திரத்தை மட்டும்‌ காட்டினால்‌,
அறிவற்றுப்‌ பொருள்‌ நாட்டம்‌ கொண்டு, பிற உயிர்களுக்கு இன்னா செய்யும்‌ தன்மையருக்கு அவற்றின்பால்‌ சுவை தோன்றாது.
அவர்களையும்‌ வளைத்துப்‌ பிடிப்பதற்காக அவர்களுக்குச்‌-சுவை தரும்‌ பிற உயிர்களுக்குத்‌ துன்பம்‌ தரும்‌ சாயலில்‌ அமைந்த அபிசார கருமத்தை (ஏவல்‌ வினைகளை)ச்‌
செய்‌யும்படி விதித்து, அவற்றால்‌ பலன்‌ ஏற்படும்போது அவருக்குச்‌ ஸாஸ்த்ரம் உண்டு என்கிற நம்பிக்கை (ஆஸ்திக்யம்‌) ஏற்படுகின்றது.

பின்பு சுவர்க்கம்‌ முதலிய உறுதிப்‌ பொருள்களைப்‌ பெறுதற்கேதுவான கருவிகளை விதித்து, அவ்வழியால்‌
“ப்ரக்ருதி ஆன்மா” என்பவற்றைப்‌ பகுத்துணரும்‌ அறிவை உண்டாக்கியும்‌,
அப்படி பகுத்தறிவு பிறந்த பின்பு ஆன்‌மாவின்‌ இன்பத்திற்கு வழிகாட்டி, அவ்வழியாலே பிறர்க்கு அடிமையாயிருக்தலை நீக்க ,
அதன்‌ பிறகு இறை இன்பத்தின்‌ தனிச் சிறப்பையும்‌, அதனை அடையும்‌ கருவியான பக்தியையும்‌ காட்டி, அவ்வழியாலே தன்னுரிமை நீக்கத்தை உண்‌டாக்கியும்‌, அதன்பின்‌ வேறு வழிகளில்‌ சென்று செயற்‌கருமை முதலியவற்றால்‌ அவர்கள்‌ தளருமளவில்‌ தன்‌ முயற்சி நீக்கமான சரணாகதி அடை.தலிலே செலுத்தி, ஆன்மாவின்‌ உண்மை இயல்பானதும்‌, அதற்கு உரிமையுடையதுமான
“அவனுக்கு உடைமையாதல்‌” (பாரதந்தியம்‌) பான்மையை உண்டாக்கியும்‌ இப்படி முறையாக ஈடேற்றுவதற்காகவே
இறைவன்‌ பந்தக சஈஸ்த்திரங்களையும்‌-பற்று விளைக்கும்‌ சாஸ்த்‌திரங்களையும்‌ அருளினன்‌. _சூ.–15)

இறைவன்‌ கருணை காரணமாக இவற்றை வெளியிட்‌டாலும்‌, உயிர்கட்கு இவற்றைக்‌ கற்கப்‌ பல தகுதிகள்‌ வேண்டும்‌?
அவை யெல்லாம்‌ பெற்றுக்‌ கற்பது அரிது என்று எண்ணி, எளிய வழி ஒன்றையும்‌ காட்டியருளினன்‌.
வேதங்‌களின்‌ சாரம்‌. உபநிடதங்கள்‌ அவற்றின்‌ தெளிந்த சஈரம்‌ நாராயண அனுவாகம்‌. அதன்‌ மிகத்‌ தெளிந்த சாரம்‌, காயத்திரி மந்திரம்‌. அதன்‌ முகுலில்‌ சொல்லப்படுவது பிரணவம்‌. அதுவே வேதத்தின்‌ சுருக்கம்‌.
“மாதவன்‌ பேர்‌ சொல்லுவதே வேதத்தின்‌ சுருக்கு”.
பிரணவ மந்திரத்தை தெய்வ வண்டாகய இறைவன்‌ வேதச்‌சாகைகளிலிருந்து தேனெடுப்பது போல எடுத்தும்‌ அன்னமாய்‌ அவன்‌ நீரிலே கலந்து கடக்கும்‌ பாலைப்‌ பிரித்தெடுப்பதுபோல எல்லோருக்கும்‌ தக்கதான பாலான இதனை எடுத்தும்‌,
தேவா்‌களைக்‌ காத்தலின்பொருட்டுப்‌ பாற்கடலிலிருந்து அமுது மெடுத்தவாறு நால்வேதக்‌ கடலிலிருந்து பிறப்பை அஞ்சுபவர்‌களைக்‌ காக்க இதனை எடுத்தும்‌,
தன்‌ பேரருளையே பரவும்படி பண்ணினன்‌. எனவே, சாஸ்த்திரங்களைவிடத்‌ திருமந்திரம்‌ சிறந்தது என்பதனைக்‌ கீழ்க்‌ காணுமாறு காட்டுகின்றார்‌.

சாஸ்த்திர நெறியும்‌ திருமந்திர நெறியும்‌

1-சாஸ்த்திரம்‌ முனிவர்‌ வழியாக வெளிப்படுத்‌தியது.–திருமந்திரம் அவனே அருளியது
2-உடலிலே நோக்குடையது.-ஆன்ம வடிவிலே நோக்குடையது
3-பழுதிலாத்‌ தகுதியுடையரே பின்பற்றற்குரியர்‌.-மனமுடைய அனைவரும்‌ பின்பற்றத்‌ தகுதியுடையர்‌
4-சாஸ்த்திரமறிந்தவர்‌ தெப்பத்தின்‌ துணை கொண்டு கையால்‌ நீந்திக்‌ கடல்‌ கடக்கும்‌ நிலையினர்‌.
சாரமறிந்தவர்‌ தெப்பத்தின்‌ விட்‌.ட.த்திலேறிக்‌ கரை குறுகும்‌ காலம்‌ கருதிக் கொண்டிருக்‌கும்‌ தன்மையர்‌,
5-இதற்குக்‌ காரணம்‌, இவர்கள்‌ ஆன்மாவின்‌ இயல்பை அறிந்‌துள்ள வகையே.
இதற்குக்‌ காரணம்‌, ஆன்மாவை இவர்‌கள்‌ அறிய வந்த வகையே
6-ஆன்மா உடலினும்‌ வேறுபட்டதாய்‌, அறிதல்‌ தன்மை-செய்தல்‌ தன்மை அனுபவிக்கும்‌ தன்மைகளை உடையதாயிருக்குமென்று அறியும்போது அத்நிலைமை
உண்டாகும்‌.
எல்லாம்‌ அழிபவை என்ற உணர்வைப்‌ பெறும்படி இறைவன்‌ செய்ய, அவனுக்கு உடைமையாதலும்‌-அநுபவப்‌ பொருளாதலும்‌
ஆகியவையே ஆன்‌மாவின்‌ உண்மைத்‌தன்மை என உணரும்போது இந்‌ நிலைமை ஏற்படும்‌.
7–இவ்வுணர்வு இவர்களை உமாயத்‌தைச்‌ செய்தலில்‌ மூட்டும்‌.
இவ்வுணர்வு அதுபவப்‌ பொருளான்‌ தன்னைப்‌ பெற இறைவனே முயல வேண்டும்‌ என்று எண்ணி உபாயமாக ஒன்றும்‌ செய்யாது நிலையராக்கும்‌, .-
8-இவர்களுடைய கருமங்கள்‌ உண்‌மை யற்றதும்‌ நிலை யற்றதுமான சாதிக்கு ஏற்ப அமைந்திருக்கும்‌,
இவர்களது செயல்‌ உண்மையானதும்‌ நிலயானதுமான அடிமைத்‌ தன்‌மைக்கு ஏற்ற கைங்‌கரியமாய்‌ இருக்கும்‌.
9-இவர்களைக்‌ கருமம்‌ செய்யத்‌ தூண்டுவது சாஸ்த்திரமாகும்‌,
இவர்களைக்‌ கைங்‌கரியம்‌ செய்யத்‌ தூண்டுவது இறை அனுபவத்தில்‌ உண்‌டான உகப்பேயாகும்‌.
10-இவ்வாறு செல்பவர்கள்‌ இறைவனைப்‌ பல்வேறு சாதனங்களால்‌ வழிபாடு செய்பவர்கள்‌,
இறைவன்‌ அர்ச்சாவதாரமாய்‌ விளங்‌கும்‌ பல திவ்ய தேசங்களிலே ஈடுபட்ட பிரபந்தர்‌ ஆவார்‌.
11-இவர்களுக்கு இலக்கு எப்படிப்‌பட்ட தவத்தைச்‌ செய்தவர்‌களுக்கும்‌ பலனை அளிப்பது ஆழியான்பால்‌ உண்டான அருளே என்னும்படி.
பல்‌ தெய்‌வங்களாகவும்‌ நிறுத்தி மக்கள்‌ விதிகளின்படி. தன்னை யடையும்படி. அந்தர்‌யாமியாய்‌ நின்ற இடம்‌.
இவர்க்கு இலக்கு தனது அருளினாலே மிகவும்‌ எளியனாய் வந்து அர்ச்சாவதாரமாய்‌ நிற்கிற இடம்‌,
12-அந்தார்யாமியாய்‌ உள்ள வடிவு“பொது? என்று பெயர்‌ பெறும்‌.-அதைப்‌ பொருளாகக்‌ கொண்டு செய்யும்‌ கருமமும்‌ பொது என வழங்கப்படும்‌.
திவ்விய மங்கள விக்‌கிரகத்தே௱டு கூடிய *சிறப்பு வடிவு”எனப்‌படும்‌. அதை தம்‌ பொருளாகக்‌ கொண்டு செய்யும்‌ கைங்கரியம்‌ சிறப்பு” எனப்படும்‌.
(அந்தரங்க சேவை செய்கின்ற இவர்‌களுக்குப்‌ பொதுவான கருமம் செய்ய வேண்டுவதில்லை-அவை தாமே கழியும்‌.)
13-மேற்கண்ட கருமம்‌ சாதனத்‌தில்‌ முதல்நிலைய்ஈகும்‌,-இவர்கள்‌ வருணத்திற்கேற்ற தர்மம்‌ செய்‌யும்‌ வர்ண தர்மிகள்‌ எனப்‌ பெறுவர்‌.
கைங்கரியம்‌ பேற்‌றில்‌ முடிந்த நிலை.-இவர்கள்‌ தொண்டு புரிபவர்களாகிய தாச விருத்திகள்‌ எனப்படுவார்கள்‌.
14-வேதத்தை அறிந்தவர்கள்‌ செய்து பிறப்பிக்கும்‌ அது இவர்க்குச்‌ சிறந்த பிறப்பு -இவருக்கு உபநயனச் சடங்கு உண்டு
வேதத்தின்‌ கருத்‌தினை உணர்ந்த மிக்க வேதியர்‌ வேதங்களின்‌ சுருக்கமாகையால்‌ காயத்‌திரிக்கும்‌ தாயாய்த்‌தாயினும்‌ ஆயின செய்யும் ஞானத்தை உண்டாக்கும்‌,
15. இவர்கள்‌ அந்தணர்கள்‌ என்றும்‌, மறையோர்‌ என்றும்‌ வருணமும்‌ அது காரண்மாக வந்த வேத நம்பிக்கையும்‌ பற்றிச்‌ சிறப்பான பெயரில்‌ வழங்கப்படுவார்கள்‌.
அடியார்‌ என்றும்‌ தொண்டர்‌ என்றும்‌ ஆன்மாவாகிய பொருட்கு ஞானம்‌ ஆனந்தம்‌ இவற்றினும்‌ நெருங்கிய சிறப்பியலான அடிமைத்‌ தன்மையும்‌ அது காரண்மாய்த்‌
தோன்றிய கைங்‌கர்யமும்‌ பற்றிச்‌ சிறப்பான பெயரால்‌ வழங்கப்படுவார்கள்‌.
16. கிராமம்‌, குலம்‌ இவற்றின்‌ அடிப்படையில்‌ பெயரிட்டு வழங்‌கப்படுவார்கள்
அது பழியென்று இறைவனோடு கூடியுள்ள தேசத்தையிட்டு அல்லது அடியவர்‌ சம்பந்தத்தையிட்டு வழங்கப்‌படுவர்‌,
17-அந்தணர்க்குக்‌ கோத்திரமும்‌ சரணமும்‌ சூந்திரம்‌–. இவற்றின்‌ தலைவர்‌ முறையே பராசரர்‌, பராங்குசர்‌,போதாயனர்‌ முதலானவர்‌
அடியவர்க்கு பிரபந்தர்க்கு முதல்வர்‌ -பராங்குசர் பரகாலர் லார்‌, யதிராசர்‌ முதலானவர்‌
18.–வேதங்களை ஆசாரியர்‌ வாயிலாக ஓதுதல்‌-பொருளறிதல்‌ கடைப்பிடித்தல்‌ ஆகிய இவற்றால்‌ அந்தண்மை (பிராமணியம்‌) அமையும்
சந்தங்கள் ஆயிரம் எனப்பட்ட வேத வடிவான திருவாய்‌ மொழியை ஒதிஅமையும்‌. உணர்ந்து அதன்‌ படி ஒழுகவும்‌ வல்‌லாரானால்‌ ஸ்ரீ வைஷ்ணவத்துவம்‌ கை கூடும்‌

இப்படிச்‌ சாஸ்த்திர நெறியை, ஒரு பிரிவாகவும்‌ சாரஞர்‌ வேறு ஒரு பிரிவு போலும்‌ ஆசிரியர்‌ எடுத்துக்‌ காட்டுகின்றார்‌,
இரண்டும்‌ இருவேறு துறைகள்‌ என்று வேறுபடுத்தியும்‌ கூறப்‌ படுகின்றன. ஆனால்‌ ஓர்‌ ஆற்றிலுள்ள இருதுறைகள்‌
என்பதையும்‌ அவர்‌ குறிப்பாக உணர்த்துகின்றார்‌.
கருமம்‌ ஞானம்‌ பத்தி என்பவற்றை முன் நெறியைச்‌ சேர்ந்தனவாகவும்‌ பிரபத்தியைப்‌ பின்னெறியாகவும்‌ கொள்ளலாம்‌ என்பது தெரிகின்றது.
முன்னது வருணத்திற்கேற்ப அமைந்தது; சில தகுதிகளை உடையவர்களுக்கு மட்டும்‌ அமைந்தது.
பின்னது, வருணம்‌ ஆச்சிரமம்‌ முதலிய பமிரிவுகளற்றறு;-எத் தகுதி யுடையவர்க்கும்‌ கைக் கொள்ளத்‌ தக்கது; எளிமை உடைய நெறி.

*இவந்றில்‌ எது உயர்ந்தது?” என்னும்‌ கேள்வி எழுதல்‌ கூடும்‌. *வேதந்தானே பெரியது; அதனைப் பின்பற்றும்‌
நெறி உயர்ந்தது”, எனின்‌ அதற்கு விடை பகர்வன ஸூர்‌38, 39.
வேதங்கள்‌ இருவகைய: ஒன்று வடமொழி வேதம்‌) மற்றொன்று தமிழ்‌ வேதம்‌. இரண்டிலும்‌ சொல்லப்பெறும்‌
கருத்து ஒன்றே. எனினும்‌ எளிமை, தெளிவு எல்லோர்க்கும்‌ உரிமையாதல்‌ ஆய ஒரு சில வகைகளில்‌ தமிழ்‌ வேதம்‌
ஏற்றமுடையது என்பது விளக்கப்படுகின்றது,
அந்த:முறையிலே பிரபத்தி நெறி சிறப்புடையது என்பதும்‌ ஆசிரியர்‌: கருத்தாகும்‌,

வேதங்கள்‌ நான்கும்‌ கற்று உணர்ந்து ஒழுகுகலை ஒருவன்‌: செய்யினும்‌, இந்தச்‌ சந்தங்களாயிரத்தின்‌ பொருள்‌ கற்று உணர்ந்து உயர்ந்தவனாகாவிடில்‌ அசலானவன்‌ என்று கூறி,.
அவர்கள்‌ அந்தணர்கள்‌ தாமா என்பதும்‌ ஆராயப்படும்‌. என்று தெரிவிப்பதன்‌ மூலம்‌ வேதாந்திகளும்‌ தமிழ்‌ வேதம்‌. கற்றல்‌ வேண்டுமென்றும்‌,
இல்லையேல்‌ அவர்கட்கு வைணவத்மே யன்‌றி பிராமணத்‌ தன்மையிலும்‌ குறைவு ஏற்படுமென்றும்‌ நூலாசிரியர்‌ தெளிவுறவே இதில்‌ கூறுகின்றார்‌,
அதன்‌ மூலம்‌ இந்த நெறி யாரேர சிலர்‌ இழிந்த நிலையில்‌: உள்ளவர்கட்கு மட்டுமே என்ற எண்ணம்‌ கடியப்படுகின்றது: என்பது தெளிவுற அறியலாம்‌.

மேலும்‌ வியாசர்‌ எழுதிய ப்ரஹ்ம ஸூத்திரங்கள்‌ போன்ற:வற்றில்‌ குருவிற்கும்‌ சீடனுக்கும்‌ உள்ள வேறுபாடுகளைக் காரணம்‌ காட்டி நீக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகின்றது.
ஆழ்வார்‌ அனைவரும்‌ ஒரே குரலில்‌ பேசுபவர்‌..-இவர்‌ தம்‌ நூற் செய்திகளுக்குப்‌ பொருந்தாதன வேறு சாஸ்த்திரங்களில்‌ இருந்தால்‌ அவை நீக்கத்தக்கன. சொல்லப்‌:படும்‌ பொருளைத்‌ திறம்பட, எடுத்துச்‌ சொல்லும்‌ இதற்குச்‌ சேராதவை மனுவின்‌ நூலுக்கு மாறானவை புகழப்படாதவாறு போலப்‌ புகழப்படாது தள்ளப்படும்‌ :ஸூ .-64),
இதுவும்‌ மேலே சொல்லிய கருத்தை வலியுறுத்தும்‌ மற்றும்‌ ஆளவந்தார்‌ பாடிய குறிப்பை ஒட்டி இராமநுஜரும்‌ தம்‌ பாஷ்‌யத்தில்‌ ஐயப்பாடான பொருள்களையெல்லாம்‌ இத்‌ திருவாய்‌மொறிப்‌ பாடல்களின்‌ துணை கொண்டு உறுதி செய்து, இதற்குப்‌ பொருந்த விடுவர்‌ (சூ. 65) என்பதாலும்‌ முன்‌ ஆசிரியர்கள்‌ ஆழ்வார்‌ நூல்‌ பற்றியும்‌ -அதில்‌ கூறும்‌ நெறி’ பற்றியும்‌ கொண்டிருந்த கருத்து மிகவும்‌ தெளிவுறும்‌.

மேலும்‌ வியாசர்‌ எழுதிய ப்ரஹ்ம ஸூத்திரங்கள்‌ போன்ற:வற்றில்‌ குருவிற்கும்‌ சீடனுக்கும்‌ உள்ள வேறுபாடுகளைக் காரணம்‌ காட்டி நீக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகின்றது.
ஆழ்வார்‌ அனைவரும்‌ ஒரே குரலில்‌ பேசுபவர்‌..-இவர்‌ தம்‌ நூற் செய்திகளுக்குப்‌ பொருந்தாதன வேறு சாஸ்த்திரங்களில்‌ இருந்தால்‌ அவை நீக்கத்தக்கன. சொல்லப்‌:படும்‌ பொருளைத்‌ திறம்பட, எடுத்துச்‌ சொல்லும்‌ இதற்குச்‌ சேராதவை மனுவின்‌ நூலுக்கு மாறானவை புகழப்படாதவாறு போலப்‌ புகழப்படாது தள்ளப்படும்‌ :ஸூ .-64),
இதுவும்‌ மேலே சொல்லிய கருத்தை வலியுறுத்தும்‌ மற்றும்‌ ஆளவந்தார்‌ பாடிய குறிப்பை ஒட்டி இராமநுஜரும்‌ தம்‌ பாஷ்‌யத்தில்‌ ஐயப்பாடான பொருள்களையெல்லாம்‌ இத்‌ திருவாய்‌மொறிப்‌ பாடல்களின்‌ துணை கொண்டு உறுதி செய்து, இதற்குப்‌ பொருந்த விடுவர்‌ (சூ. 65) என்பதாலும்‌ முன்‌ ஆசிரியர்கள்‌ ஆழ்வார்‌ நூல்‌ பற்றியும்‌ -அதில்‌ கூறும்‌ நெறி’ பற்றியும்‌ கொண்டிருந்த கருத்து மிகவும்‌ தெளிவுறும்‌.

இறைவனுடைய அருட்பார்வைதான்‌ ஆழ்வாருடைய எல்லாப்‌. பெருமைக்கும்‌ உயர்வுக்கும்‌ காரணம்‌ ஆகும்‌-(ஸூத்‌, 91).
இறைவனான இராமபிரானுடைய திருக்கண்‌ பார்வையால் வேடுவச்சியான சபரி தூய்மை பெற்றவளானாள்‌.
“அழகே செந்தாமரைக்‌ கண்ணா என்று பகைவனாலும்‌ பாராட்டப் பெறும்‌ கண்ணனுடைய அருட்பார்வையில்‌
(அவன்‌ தன்‌ வீட்டில்‌ உணவு உட்கொள்ளுதலால்‌) விதுர ருடைய கேடுகளெல்லாம்‌ நீங்கி அவர்‌ தூயரானர்‌,
பக்த விலோசனத்தில்‌ முனிவர்களின்‌ மகளிரை அப்போதே வீடு பெறும்படி செய்தது இறைவனுடைய அருட்பார்வை. இவ்‌வாறு இவர்களை யெல்லாம்‌ பூ.தராக்கிய (தூயராக்கின) புண்டரிகாட்சன்‌ நெடுநோக்கு யாவர்மீது படினும்‌ அநுபவித்தாலல்லது நசிபாத அவர் தம்‌ பாவங்களெல்லாம்‌ ஓழிந்து போம்‌*,

ஆனிரைகளைக்‌ காப்பதற்காசக்‌ கண்ணன்‌ நெருஞ்சிக்‌ காடாய்‌ இருந்த இடத்தையெல்லாம்‌ பசும்புல்‌ நிறைந்த காடாக்கினான்‌.
அதே போன்று, உலக நன்மையின்‌ பொருட்டு எல்லா உயிர்களிடமும்‌ செலுத்தும்‌ அருளையெல்லாம்‌ ஒரு மடையாக்கி
இவரைத்‌ தன்னைப்‌ போன்ற ஞானமும்‌ சத்தியும்‌ உடையராம்படி செய்தான்‌.
அதனை இவரே “எதீர்‌ சூழல்புக்கு எனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய விதி சூழ்ந்‌தால்‌ எனக்கேல்‌ ௮ம்மான்‌ திரிவிக்ரமனையே (2-7-0) என்று பாடுகின்றார்‌.
இப்படிச்‌ செய்ததால்‌ இவர்‌ ஊர்களையும்‌ நாட்டையும்‌ உலகத்தையும்‌ தம்மைப்போல அவனுடைய
பேர்களையும்‌ தார்களையும்‌ பிதற்றி அவன்‌ பால்‌ ஈடுபடும்படி செய்யும்‌ தன்மை யரானார்‌.
இவர்க்குச்‌ செய்த அருளாவது இவர்க்கு மயர்வற மதிநலமருளியதே யாகும்‌. அதாவது
அஞ்ஞானத்தை அடியோடு போக்கி ) பத்தி வடிவான ஞானத்தை இவர்க்கு அருளினன்‌ இறைவன்‌ என்பது.

சாஸ்த்திரங்களிலே “சாதனபத்தி, சாத்தியபத்தி’ என இரண்டு சொல்லப்படுகின்றன. அவ்விரண்டிலும்‌ சேராதது ஆழ்வார் தம்‌ பத்தி ,
அது திருத்துழாய்க்கு மணம் போல, ஆழ்வார்‌ பிறந்த போதே அவருடன்‌ ஓக்கப்‌ பிறந்து விட நினைத்தாலும்‌ விட வொண்ணாதபடி. உடன்‌ வந்தது.
அநுபவிக்கத்‌ தக்க பொருளை விரும்பியவாறு அநுபவிக்காத போது உணவு பெறாத நிலையில்‌ பசி போன்று கஷ்டத்தையும்‌ நோயையும்‌ பெறும்படி செய்வது;
அவனை அறுபலிக்க வேண்டுமென்ற ஆசையால்‌ வற்றாத இயல்புடைய ஆன்மாவையும்‌ குருத்து வற்றும்படி செய்வது? இன்பமான அவனைக்‌ காணவேண்டுமென்று அலமறும்படி செய்வது
அதற்கு மேலும்‌ இதர உபாயங்களை யெல்லாம்‌ விட்டு அவனையே உபாயமாக உறுதியுடன்‌ பற்றியிருக்கும்‌ இவரை
‘குதிரியாய்‌ மடலார்தும்‌” என்று விடத்தக்க உபாயத்திலே இழியமாறு செய்கையாலே விட.த்தக்கதில்‌ நிலையாக நிற்கும்‌ கேட்டைப்‌ பெறச்‌ செய்யும்‌ தன்மையது. –

*நாகணைமிசை தம்பிரான்‌ சரணே சரண்‌’ என்று ஒரு தரம்‌ செய்ய வேண்டிய ‘பிரபத்தியை-சரணாகதியை-மீண்டும்‌மீண்டும்‌ செய்யும்படி செய்கையாலே
கொள்ளத்‌ தக்கதில்‌ நிளையாக நிற்றலிலிருந்து விலகச்‌ செய்யும்‌ தன்மையது, இவ்‌வாறு இருப்பதால்‌, இவர்‌ தம்‌ பத்தி
இறைவனை நினையாமை என்றும்‌,சத்துச்கேடு என்றும்‌ இரண்டு இல்லை என்று இருக்கும்‌
இவர்க்கு எப்பொழுதும்‌ அவனைப்‌ பற்றியே நினைப்பதற்கு ஏதுவாகையாலே, இவர்தம்‌ சத்தைக்‌குத் துணையானது ஆகும்‌?
“எல்லாம்‌ கண்ணன்‌” என்றிருக்கும்‌ இவர்க்கு அவனை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசையை மேன்மேலும்‌ விளைக்‌ கையாலே,
அவனை அநுபவிப்பதற்குத்‌ துணையானது ஆகும்‌;
*வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌” என்றிருக்கும்‌ இவர்க்கு முடிவில்லாத அடிமைத்‌ தன்மையாகிய ஒரே ஆசைக்குக்‌ காரணமாகையாலே,
தொண்டு செய்தற்குத்‌ துணையானதாயிருக்கும்‌. இப்படி மூன்றுக்கும்‌ துணையானது இவர்தம்‌ பத்தியாம்‌.
இறைவனது காரணமற்ற அருளே அவன்‌ உயிர்களை ஆட்‌ கொள்ளுதற்கு ஏது என்பது இவர்கள்‌ கருத்து.
அதற்கு உயிர்கள்‌ இப்பிறலியிலோ, அல்லது முன்‌ பிறவியிலோ மேற்‌கொண்ட கர்மம்‌, ஞானம்‌ உபாயமான பத்தி யாதொன்றும்‌ ஏதுவாகாது.
இறைவனுடைய முயற்சியின்‌ பலனாலேயே இப்‌ பத்தி ஆம்வார்க்கு உண்டாயிற்று என்பதனை
உருவகித்துஅழகுறக்‌ கூறுகின்றது (ஸூ 104).

“ஒரு நல்வினையும்‌ இல்லாத போதும்‌ இறைவன்‌ அருள்‌ பாவித்தலுண்டோ?” என்னும்‌ வினா எழுகின்றது,
கோசல்‌ நாட்டிலிருந்த புல்‌ எறும்பு முதலிய யாவும்‌ ஓர்‌ ஏதுவு மின்றியே நல்ல நிலை இராமனால்‌ பெற்றன. கோகுலத்தில்‌ கண்ணன்‌ குமலூதினபோது கண்டவர்‌ “அற்புதம்‌!* என்று வியக்குமாறு அங்கிருந்த சராசரங்கள்‌ யாவும்‌ இறைவன்‌ பால்‌ ஈடுபட்டன.
ஆகையால்‌ காரணமின்றியே இறைவனது அருள்‌ பலிக்குமென்பது விளங்கும்‌,
*அப்படியானால்‌ இறைவன்‌ காரணமின்றி ஆட்கொள்வதானால்‌-அவன்‌ எல்லாரையுமன்றோ ஆட்கொள்ள வேண்டும்‌!
ஒருவரை மட்டும்‌ ஆட்கொள்வானேன்‌?” என்னும்‌ கேள்வி எழுகின்றது,-அதற்கு ஆசாரிய ஹிருதயக்காரர்‌ கூறும்‌ விடை,

‘பட்டத்‌துக்குரிய யானையும்‌ அரசும்‌ செய்யுமவை ஆராயாது” (ஸூ 106.என்பதுதான்‌. ‘ஆட்சியற்ற நாட்டில்‌ பட்டத்துக்குரிய ஆனையைக்‌ கண்ணைக்கட்டி விட்டால்‌,
அவ்வானையால்‌ எடுக்கப்பட்டவன்‌. அரசனாவான்‌… மற்றவர்களை. விட்டு இவனை மட்டும்‌ எடுக்கக்‌ காரணமென்‌?” என்று ஆராய்தல்‌ கூடாது.
அதே போன்று அரச குமாரன்‌ தன்‌ செருக்காலே ஒருத்தியைத்‌ தனக்குப்‌ பட்டத்தரசியாகக்‌ கொண்டால்‌
இவளைப்‌ போன்ற பலர்‌ இருக்கவும்‌ இவளைத் தேர்ந்தெடுப்‌பானென்‌ என்று ஆராய்தல்‌ ஆகாது.
அது போன்று குறைவற்ற உரிமை உடையவனான இறைவன்‌ தனக்கு அடிமைப்‌பட்டனவும்‌. தனக்கே உரியனவும் ஆன ஆன்மாக்களில்‌ ஒன்றினைத்‌ தன்‌ அநுபவத்திற்கு உரியதாம்படி ஏற்றுக்‌ கொண்டால்‌, அதற்குரிய காரணம்‌ ஆராயப்படாது எனப்‌ படுகின்றது.

“இறைவனுக்கு உரிமை உண்டு என்பது.ஏற்றுக்‌ கொள்ளலாம்‌. ஆயினும்‌, அவனுக்கு ஒரு தலை நோக்கு (பட்சபாதம்‌) என்ற குறையாகாதோ?”* என்று வினவலாம்‌, அதற்கு விடை. காணும்‌ முன்‌ இறைவன்‌ தன்பால்‌ யாவர்‌ பிரபத்தி செய்கின்றாரோ அவரையே ஆட்கொள்ளுகின்றான்‌ என்பதும்‌ அறியத்தக்கது.
ஆழ்வார்க்கு இறைவன்‌ மயர்வற மதிநல மருளினான்‌. அந்நிலையடைந்து பின்‌, அவர்‌ *புகலொன்றில்லா அடியேன்‌, அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!” என்று
சரணாகதி யடைந்த பின்னரே அவரைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துப்‌ பின்‌ அவரையும்‌ ஆட் கொள்கிறான்‌ இறைவன்‌.
அவன்‌ இவரை ஆட்கொள்ளுதற்கு உபாயமாக இவர்‌ ஒன்றும்‌ செய்யவில்லை என்பது 107 முதல்‌ 113 முடிய 7 ஸூர்ணைகளில்‌ எடுத்துக்‌ காட்டப்‌ பெற்றுள்ளது.
இவர்‌ அறிந்து செய்த நல் வினையுமில்லை. இவர்‌ அறியாது தானே வந்தமைந்த நல் வினையும்‌ இருத்தற்கு இடமில்லை.
இவருக்குத்‌ தீ மனம்‌ கெட்டதற்கும்‌ மருவித்தொழும்‌ மனம்‌ வந்ததற்கும்‌ காரணமும்‌ அவனருளே; இவர்தம்‌ நல்வினை யன்று,
இறைவன்‌ எண்ணினும்‌ வரும்‌ எளியனாயினும்‌, இவருக்கு எண் தானுமின்றியே அருள்‌ செய்தான்‌. அவன்‌ மனத்தில்‌ தங்குதற்கு அனுமதி செய்தாரே,
அதற்கு இவரும்‌ உள்ளமும்‌ ஒத்துக்‌ கொண்டனவோ?” என்றால்‌, இல்லை, அவ்விரண்டும்‌ அவன்‌ முயற்சியின்‌ பலனே என்பதும்‌ அவர்‌ பாகரங்களிலேயே கூறப்‌ பெற்றுள்ளது.

மாதவன்‌” என்றும்‌ “திருமாலிருஞ்சோலை” என்றும்‌ இவர்‌பேச அவன்‌ தன்‌ பெயரையும்‌ தன்‌ ஊர்ப்‌ பெயரையும்‌சொன்னதாக ஏறிட்டுக்‌ கொண்டு வந்து
இவர்‌ நெஞ்சில்‌ புகுந்ததாகவும்‌, மற்றும்‌ அவ்வாறே இவர்‌ வேறு செயல்‌களையும்‌ அவனைக்‌ கருதிச்‌ செய்ததாகக்‌ கொண்டு இவரை வந்து ஆட்கொண்ட தாகவும்‌ சொல்லலாமென்றால்‌, அதுவும்‌ பொருந்தாது.
ஏனென்றால்‌ இவை முறையே வேறுபாடு தோன்றச்‌ சொல்லிய சொற்கள்‌; வேறு காரணம்‌ பொருட்‌’டாகச்‌ சொல்லியவை? மனத்தோடு: மொழிந்தன அல்ல?பலத்திற்காக நூல்களில்‌ விதித்தனவமாகா.
பெரும் பேற்றுக்கு ஏற்ற ஏதுமாகா; பல பயன்களுக்குக்‌ காரணமானால்‌ ஆகலாம்‌.-ஆகையால்‌, இவையும்‌ பேற்றுக்குக்‌ காரணமானவை: யல்லவாம்‌. ்‌
மற்றப்படி இறைவனே. ஒரு காரணமின்றியே, “இவன்‌அடியான்‌? எனறு வந்து ஆரருள்‌ செய்தான்‌. “இவர்‌ தாம்‌அடியவர்‌ என்பதற்குச் சான்று என்‌?” என்று கேட்க,
இறைவன்‌ வேதத்தைப்‌ பிரமாணமாகக்‌ காட்ட, இவர்‌, “அது ஓலைப்‌ படாததனால்‌ பிராமாணமாகது,” என்று மறுக்க,
இறைவன்‌ தன்‌ பல காலமாக வரும்‌ அநுபவத்தை வலிமையாகக்‌ கருதி அதைக்‌ கூற, அதற்கும்‌ சான்று கேட்ட பொழுது அவன்‌ உண்மை உணர்ந்தவர்களான ஞானிகளைக்‌ காட்ட, அதற்கும்‌
“அவர்கள்‌ உன் பக்கம்‌ நோக்குடையவர்கள்‌–பட்சபாதிகள்‌,* என்று இவர்‌ மறுத்துவிட்டார்‌. இப்படி அழகானதொரு கற்பனையை ஆசிரியர்‌ தருகின்றார்‌.

அந்த நிலையில்‌ எல்லையற்ற காலமாக நான்‌ என்னுடை,யவன்‌ என்று இருந்த அநுபவம்‌ வவிய களவாலே வந்துதென்று இவர்‌ இரக்கப்படும்படி
இந்திர ஞாலங்கள்‌ போலே கண்ணையும்‌ கருத்தையும்‌ கவரும்‌ வடி .வழகையும்‌ சீல குணத்‌தையும்‌ காட்டி அவரைக்‌ கைக்கொள்ளும்படி
இறைவனைத் தடுக்க முடியாதபடி. இயல்பான அருள்‌ வளைத்துச்‌ கொண்டது (ஸூ . 112). அதனால் தான்‌ ஆழ்வாரும்‌ வரவாறு ஓன்றில்லையால்‌ வாழ்வினிதால்‌” என்றும்‌,
“வெறிதே அருள்‌ செய்வார்‌ செய்வார்கட்கு” (6-7-8) என்றும்‌ அறுதியிட்டுப்‌ . பேசுகின்றார்‌.
ஆகையால்‌ வாழ்க்கைக்கு ஒப்பற்ற முதலாகிய அவன்‌ தன்னை ஒழிய வேறு நினைத்துப்‌ பார்த்தற்கு ஏற்றதான காரணமும்‌ இல்லை என்பது தெளிவாகும்‌.
“இவ்வாறு காரணமின்றி அவன்‌ கருணை புரிவது ஏன்‌ அப்படிச்‌ செய்பவன்‌ எல்லாருக்கும்‌ செய்யாமை குறை வுடையதாகாதோ?” என்பது சிந்திக்க வேண்டுவதாகும்‌.
நல்ல தந்தையானவன்‌ எந்த வித உதவியும்‌ காரணமும்‌ எதிர்‌ பார்த்துத்‌ தன்னைச்‌ சார்ந்தவர்களுக்கு அருள்‌ காட்டுதல்‌ இல்லையே!
அதே போன்று பல மடங்கு புரிவுடைய உலகின்‌ தந்தையும்‌ செய்யக் காண்கின்றோம்‌. அவனும்‌ தன்னையே
சுதியென அடைந்துள்ள தன்‌ மக்களுக்குத்தான்‌ முதலில்‌நலம்‌ செய்வனன்றோ!
அப்படியே தன்னையே நம்பிச்‌ சரணமடைந்தவர்களுக்கு மட்டுமே அவன்‌ முதலில்‌ அருள்‌ செய்‌ கின்றான்‌,
மற்றவர்கள்‌ நிலை பின்னால்‌ வரும்‌. தக்கதொன்றைத்‌ தன்‌ பிள்ளை கேட்டுவிட்டால்‌, அதை எப்படியும்‌ தந்துவிட வேண்டுமென்று தந்தை அவாவுறுதலில்‌ வியப்‌பில்லை யன்றே?
சில சமயங்களில்‌ தந்தையை தேரே அணுகுவதகைக்‌ காட்டிலும்‌ தாய்‌ மூலம்‌ அணுகும்போது அச்‌ செயல்‌ முடிவது எளிதாகன்றதன்றோ?
அம்முறைப்படியே பிராட்டியின்‌ புருஷகாரமும்‌ பேசப்படுகின்றது. இப்படியேஉலகியலை
ஒட்டிக்‌ காணும்போது பல கருத்துகளின்‌ பொருத்தம்‌ தெளிவாய்‌ விளங்கக்‌ காணலாம்‌,

இறைவனுக்குப்‌ *பரத்துவம்‌, அந்தரியாமித்துவம்‌, வியூகத்துவம்‌, அவதாரம்‌, அர்ச்சை” என்னும்‌ ஜந்து நிலைகள்‌ உண்டு.
நிலை ஐந்து ஆனாலும்‌, பொருள்‌ ஒன்றே, அரசன்‌ ஒருவன்‌, தன்‌ உடன்‌ கூட்டத்தாரால்‌ வழிபாடு செய்யப்படுபவனாய்க்‌
தன்‌ வீறு தோற்றப்‌ பகலோலக்கமிருப்பன்‌: தன்‌ தாட்டிலுள்ள குணங்‌ குறைகளை அறிவதற்காக இரவிலே பிறர்‌ அறியாதவாறு கறுப்புடையுடுத்து
நகர சோதனை செய்து வருவன்‌: தன்‌ ஆட்டியின்‌ கீழுள்ளவர்களில்‌ குற்றம்‌ செய்தவரைக்‌ தண்டிக்கவும்‌ நல்லோரைக்‌ காக்கவும்‌ தான்‌ செய்ய வேண்டிய செயல்களை ஆராய்வன்‌?
தீய விலங்குகளை அழிக்க வேட்டை. ஆடுவன்‌?களைப்பு நீங்கச்‌ சோலைகளிலே தன்‌ உரிமைச்‌ சுற்றத்தோடு உலாவி வருவன்‌,
இப்படி. அவன்‌ தன்‌ அரச நீதி (முறை) செலுத்தி வருவது போன்றே, இரு உலகுகளிலும்‌ அரசு செலுத்தும்‌ வானிளவரசான இறைவனும்‌ செய்வான்‌.

விண்‌ மீதிருப்பாய்‌” என்றபடி அவன்‌ பரமபதத்தில்‌ தன்‌ தேவியுடன்‌ நித்ய முத்தர்‌ வழிபட ஓலக்கமிருப்பன்‌,
“இவற்றுள்‌ எங்கும்‌ மறைந்துறைவாய்‌? என்றபடி. பரந்து பல பொருள்களுக்கும்‌ தெரியாதபடி அவன்‌ அவற்றுள்‌ உறையும்‌ பொருளாய்‌ இருந்து அவை செய்யுமவற்றை பெல்லாம்‌ அறிவான்‌,
*சுடல்‌ சேர்ப்பாய்‌” யென்றபடி, பாற்கடலில்‌ சேர்ந்து அறி துயில்‌ புறிந்து உலகத்துயிர்களைக்‌ காக்கும்‌ வழியை– உபாயத்தைச்‌ சிந்தித்துக்‌ கொண்டிருப்பான்‌.
*மண்மீ துழல்‌வாய்‌” என்றபடி. அவ்வுயிர்களைக்‌ காத்தற்‌ பொருட்டு உலகில்‌ வந்து அவதரித்து அடியவர்க்குப்‌ பகையானவர்களை அழிக்கையாகிற வேட்டையாடுவன்‌,
*மலைமேல்‌ நிற்பாய்‌* என்றபடி. பகை அழித்த களைப்புத்‌ தீரச்‌ சோலை சூழ்ந்த:கோயில்‌, திருமலை முதலான இடங்களிலே வாழ்வன்‌.
இப்படி இவ்வைத்து வகை யாகவும்‌ இறைவன்‌ ஒருவனே விளங்குவதைக்‌ காணலாம்‌.

இப்படி எல்லா நிலைகளிலும்‌ அவன்‌ இருப்பினும்‌, *பின்‌னானார்‌ வணங்கும்‌ சோதி” என்றபடி. அவதாரங்களுக்கும்‌ பிற்‌பட்டவர்களும்‌
இழக்காதபடி அமைந்த அர்ச்சாவதார,த்தில்‌ பரத்துவம்‌ முதலான எல்லா நிலைகளிலும்‌ அநுபவிக்கும்‌
எல்லாக்‌ குணங்களும்‌ நிறைந்திருக்கும்‌ (ஸூத்‌, 158).
அத்‌தகைய திவ்விய தேசங்கள்‌ பல உள்ளன. அவற்றுள்‌ ஒவ்‌’வொன்றிலும்‌ ஒவ்வொரு குணம்‌ பொலிந்துவிளங்கும்‌.
என்பதும்‌ தெளிவுற எடுத்து விளக்கப்படுன்றது (ஸூ . 159முதல் 186 முடிய),

ஆழ்வார்‌. அடிக்கடி பரோபதேசம்‌ செய்வர்‌. -திரு விருத்தம்‌ முதல்‌ பாட்டிலேயே, *அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பம்‌ கேட்டருளாய்‌’ என்று சொல்லுகிறவர்‌,
*பொய் நின்ற ஞானம்‌ முதலியவற்றை யாமுறாமைச்‌ செய்ய வேண்டும்‌” என்று பன்மையில்‌ பேசுகிறார்‌,
தனக்கு மட்டும்‌ ஓன்று வேண்டுமென்று கேளாது, தம்மைச்‌ சேர்ந்தவர்‌ யாவர்க்குமாக வேண்டுகின்றார்‌!
பிறர் துன்பங்கண்டு பொறாதவர்‌ ஆகையால்‌, பிறர்க்காகத்‌ தாம்‌ மன்றாடுகின்றார்‌-என்று எடுத்துக்‌ காட்டுவர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை என்ற உரையாசிரியர்‌.
திருவாய்மொழி என்ற நூலின்‌ முதற்‌ பத்து இரண்டாம்‌. திருவாய்‌ மொழியும்‌, ஓவ்வொரு பத்திலும்‌ ஒவ்வொரு திருவாய்‌ மொழியும்‌ பரோபதேசமாக அமைந்‌துள்ளன. ‘
பெற வேண்டுவதெல்லாம்‌ பெற்று விட்டாரோ! பிறர்க்கு உபதேசம்‌ செய்யத்‌ தொடங்கி விட்டாரே!” என்னும்‌ கேள்வி எழலாம்‌.
பிறர்‌ துன்பங்கண்டு பொறாமையும்‌, ஞாலத்தார்க்கு இறைவன்பால்‌ உள்ள,தொடர்பை அறிந்துள்ளமையும்‌, மிக்க கிருபையும்‌ ஆகிய இம்மூன்றுமே
இவரை உபதேசம்‌ செய்யச்‌ செய்வன.-செல்வம்‌ அழிவிற்குக்‌ காரணமாக இருத்தலைக்‌ கண்டும்‌, பின்னும்‌ அதனையே பெற வேண்டுமென்ற அறியாமையில்‌
நிலைத்து நிற்கும்‌ உலகினர்க்குத்‌ தம்‌ உபதேசத்தாலே
இறை.பக்தியைத்‌ தோற்றுவிப்பது, தம்‌ சம்பந்தம்‌ அடியாக அவர்‌களையும்‌ விடாது இருத்தித்‌ தம்மைப்போல இறை அநுபவத்‌தில்‌ ஈடுபட்டவராக்க வேண்டுமென்கிற ஞானத்தாலாகும்‌.
உலகினார்க்கு மட்டுமேயன்றி, ஆழ்வார்‌ இறைவனுக்குமே அடிக்கடி உபதேசம்‌ செய்தலை நாம்‌ காண்கின்றோம்‌.

எல்லாம்‌ அறிந்தவனான அவனுக்கு இவர்‌, ‘உனக்கொன்று உணர்த்‌துவன்‌” (6. 2. 3.) என்று உபதேசம்‌ செய்வது அவன்‌ மாட்டுள்ள அன்பின்‌ மிகுதியாலேயாகும்‌, ‘
கர்மத்திற்கு உட்பட்டவராய்‌ சாதனம்‌ இன்னது சாத்தியம்‌ இன்னது என்று அறியாதே கலங்கி நிற்கிற உலகினரான
சேதனர்க்கு, *வீடுமின்‌ முற்றவும்‌? (திரு, 1, 2) என்று தொடங்கி *சுனை நன்‌ மலரிட்டு நினைமின்‌ நெடியானே” (திரு, 10.5) என்னுமளவும்‌ விட.த்தக்கவற்றையும்‌ கொள்ளத்‌தக்கவற்றையும்‌ உபதேப்பர்‌.
அன்புக்கு அடியவனாய்ச்‌ சாதன சாத்தியம்‌ இன்ன வென்றறியாது கலங்கும்‌ இறைவனுக்குத்‌ “தன்னைத்‌ தகுதி யற்றவன்‌ என்று எண்ணி
ஆழ்வார்‌ தன்னை விட்டுவிட்டால்‌ என்‌ செய்வது என்று ஐயங்கொண்டு அலமறும்‌ அளவில்‌ *உன்னை நான்‌ பிடித்தேன் கொள்‌ சிக்கெனவே!,
“உன்னை நானடைந்தேன்‌ விடுவனோ!” என்று சொல்லி, மேலும்‌ அவனுக்குச்‌ சாதன சாத்தியங்கள்‌ அறிவிப்பது,
‘செய்யத் தகாதவற்றைச்‌ செய்யாதே” என்பது, “செய்ய வேண்டுமவற்றைச்‌ செய்‌” என்பது இப்படிப்‌ பல இடங்களிலும்‌ உபதேசித்தலும்‌,
நன்மை தீமைகள்‌ சொல்லுதலும்‌ ஆழ்வார்‌ செய்தலைக்‌ காணலாம்‌. ஆழ்வாருடைய முதற்சீடர்‌ இறைவரே.
இறைவர் பால்‌ நல்ல சீடனுக்குரிய குணங்கள்‌ யாவும்‌ அமையப் பெற்று இருக்கின்றமையை(ஸூ த்‌. 202) தெளிவுறுத்தும்‌.

இப்படிப்‌ பரோபதேசம்‌ பல காலும்‌ நடந்தாலும்‌, உள்ளே இறை யநுபவம்‌ நடந்து கொண்டே யிருக்கும்‌. உள்ளே அனுபவம்‌ நடந்துகொண்டேயிருக்கவே, புறத்தே உபதேசமும்‌ நடை பெறா நிற்கும்‌.-எனவே, அநுபவ இடையீடு இராது என்பதும்‌ வற்புறுத்தப்‌ படுகின்றது. உபதேசப்‌ பகுதிகளே திருவாய்மொழியின்‌ முக்கியமான பகுதிகள்‌. அவை திருவாய்மொழி 1.2,– 2.10,–3.9, –4.10, –5.2, –6 3, –7.10, –8.6,– 9.10,– 10.5 ஆகும்‌.

*பயிலுஞ்சுடரொளி”, *நெடுமாற்‌ கடிமை: என்னும்‌
இரண்டு திருவாய் மொழிகள்‌ அடியவா்களைப்‌ பற்றியவை. இவை. யல்லாமல்‌, மற்ற இறைவன்‌ தோத்திரமாக அமைந்த திருவாய்‌ மொழிகள்‌ முடிவுபெறாவே .
எனவே, இவை இன்றியமையாத திருவாய்மொழிகளே என்பது அறியத் தக்கது
(ஸூத்‌. 217). இறைவன் பக்‌தி , பக்தியின்‌ முதல்‌ நிலை; அடியவர் பக்தி, பத்தியின்‌ முடிந்தநிலை. அதுவே, “கோதில்‌ அடிமை” என்று பேசப்படுகின்றது.
இது வைணவ தத்துவமும்‌ சமயமும் மனிதாபிமானத்தை எவ்வ௱று மதித்து வந்தது என்பதை நன்கு விளக்கும்‌.

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading