கொங்குப் பிராட்டியார் ஆண்டாளைப் போலே அவதரித்தவள் ஆகையால் எம்பெருமானார் இப் பிராட்டியாருக்கும் சகோதரர் ஆகிறார்
ஆகையால் ஆச்சான் எம்பெருமானாருக்கு மாப்பிள்ளை ஆகிறார்
அவதார ஸ்தலம் -லத்துவாடி கிராமம் -சேலம் மாவட்டம்
இயல் திரு நாமம் -ஸூந்தர ராஜன்
தாஸ்ய திரு நாமம் -கொங்கில் ஆச்சான் -கொங்கில் அண்ணன்
திருத் தகப்பனார் -விஷ்ணு தாஸன் என்று அழைக்கப்படும் ஆதி சேஷ ஐயங்கார்
திருத் தாயார் -அலர்மேல் மங்கையார்
கோத்திரம் -காஸ்யப கோத்திரம்-
கிபி –1053–கலி -4150-ஸர்வாரி வருஷம் -ஆவணி கேட்டை
யாரங்க ஸ்தல வாஸினம் யதிபதிம் மாது கரார்த்த தங்கதம் தத் ரத்தியை
அவி வந்திதம் ஸ விநயம் த்ருஷ்ட்வா பிரணம் மூர்த்தி தாம்
ஸ்ரீ ராமானுஜ பாதுக அர்ச்சிதம் பதம் பஸ்ஸாத் நரஸிம்ஹ அர்ச்சிதாம்
தாம் தேவிம் பஜதாம் அபீஷ்ட பலதாம் ஸ்ரீ கொங்கில் பிராட்டிம் பஜே –ஸ்ரீ கொங்கில் பிராட்டியாரின் தனியன்
ஸ்ரீ கொங்கில் பிராட்டியாரின் திரு அவதார ஸ்தலம் -கோயம்புத்தூரில் அருகில் உள்ள -கட்டளை வாரி எனப்படும்-கொள்ளை காலம் கிராமம்
இயல் திரு நாமம் -லஷ்மி -ஸூமதி -சோலாஞ்சலை -சோலாஞ்ச லாம்பா -சேல அஞ்சல -முந்தானை -தெலுங்கில் கொங்கு
திருத் தகப்பனார் -நாராயணன்
திருத்தாயார் -பத்மாக்ஷி
காவேரி வடபகுதி -சேலம் வட கொங்கு –
தென் பாகம் கோவை –பெரியார் மாவட்டங்கள் -தென் கொங்கு
மேல் பகுதி -கொள்ளை காலம் மலைப்பகுதி-மேல் கொங்கு எனப்படும்
நம்மையாளுடையவர்-கொங்கர் கோன் குலசேகரன்–3-9- -சம்பந்தம் பெற்றதால் கொங்குப் பிராட்டி திரு நாமம் எம்பெருமானாரே ஸாத்தி அருளினார்
எம்பெருமானார் திருவடி நிலைகளைப் பெற்று அவரது வடிவு அழகை மனம் என்னும் உள் கண்ணால் த்யானித்துக் கொண்டு -பெரிய திருவந்தாதி -28-கொங்கு நாட்டில் நித்ய வாஸம் செய்து வந்தாள்
வெள்ளை வஸ்திரம் சாத்திக்கொண்டு காவேரி ஆற்றங்கரை வழியாக மேற்கு நோக்கிச் சென்று
கணக்கம் பாளையம் அருகில் உள்ள அந்தியூர் ஸத்ய மங்கலம் மலைத்தொடர் வழியாக அன்றைய மைசூர் ராஜ்யத்தில் இருந்த கொள்ளே காலம் -இது அன்று தமிழ் நாட்டில் இருந்தது -வழியாகச் சென்றார் என்று தெரிகிறது-அப்பொழுது ராமானுஜர் திரு நக்ஷத்ரம் 53 இருக்கலாம் என்பர்-
கணக்கம் பாளையம் அருகில் உள்ள எக்கரம் மலை உச்சியில் இருந்து காட்டுப் பாதையாகச் சென்றால் 25-30 கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளே காலம் உள்ளது
சத்ய மங்கலம் -பழைய கொங்கு நாடு -ஈரோடு மாவட்டத்தில் உள்ளது -எக்கரை மலையில் பழைய பெருமாள் கோயிலில் ராமானுஜர் திவ்ய மங்கள விக்ரஹம் 2000 ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது
எம்பெருமானாரைத் துரத்திக் கொண்டு சோழ தேச அரசரின் வேலையாட்கள் வர
எம்பெருமானார் முதலிகளிடம்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா -தடவரைத் தோள் சக்ரபாணீ சார்ங்க வில் சேவகனே -பெரியாழ்வார் -5-4-4-என்று சொல்லி
அவர்கள் வரும் பாதையில் மணலைத் தூவி வரச்சொல்ல-அத்தை மிதித்து மேலே செல்ல முடியாமல்
போகும் பார்ப்பர் மந்த்ர வாதம் செய்து போனார்கள் என்று சொல்லி மீண்டு போனார்கள்-
அங்கு பரிவர்களான பாகவத வேட முதலிகளைக் கண்ட எம்பெருமானார் -ஸ்ரீ நல்லான் இதி மேகோ அயம் வந மத்யே பர்வர்ஷதி -நல்லானாகிற மழை மேகம் நடுக் காட்டிலும் மழை பொழிகிறதே -என்று அருளிச் செய்தார்
இங்கே பழைய சம்பந்தமும் நேர் பட்டு இருக்கிறதே -என்று கொங்கில் பிராட்டியாரைக் கண்டதும் மகிழ்ந்தார்
எம்பெருமானார் க்ருபா கடாக்ஷத்தால் அவர்களுக்கு 7 புத்ரிகளும் 2 புதரர்களும் பிறந்தனர்
கொங்கில் ஆச்சான் வம்சத்தில் ஆறு கோத்திரங்கள்
காஸ்யப –
பாரத்வாஜ
மௌத்கல்ய
கௌண்டின்ய
ஆயஸ்கல்ய
பால கல்லியர் –ஆகிய ஆறு கோத்ரங்கள்
இவர்கள் வசித்து வரும் ஸமுத்ரங்கள்
1-ரெங்க சமுத்திரம் -லத்துவாடி செருக்கலை சேலம் வேல கவுண்டம் பட்டி
2- லக்க ஸமுத்ரம் -லக்காபுரம்
3-கர்ப்பா ஸமுத்ரம் –பருத்திப்பள்ளி
4-அநந்த க்ருஷ்ணராய ஸமுத்ரம் -மூணு சாவடி -பாச்சல்
5-தேவ ராய ஸமுத்ரம் -திருமலை நாம ஸமுத்ரம் -புதுப் பாளையம் இடையாறு
6-காங்கேய ஸமுத்ரம் -படியூர்
7-ஆருத்ர கபால புரி -பஸ்ஸிம த்வாரகா புரி –ஈரோடு கருங்கல் பாளையம் -புதுப்பாளையம் -பரமத்தி
வர்த்தமான ஸ்ரீ ரெங்கம் நாராயண ஜீயர் -50 பட்டம் -பூர்வாஸ்ரமத்தில் கொங்கில் ஆச்சான் வம்சத்தவரே
இப்பரம்பரை வம்சத்தவர் ஸ்ரீ தர நரசிம்ஹ ஆச்சார்யர் ஸ்வாமிகள்-55- மங்கம்பா நகர் ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய கைங்கர்யம் செய்து வருகிறார்
சிவனே பரம் பிறிதில்லையை னாநாற் சிரம் துணிக்க
உவந்தனன் சோழன் என மாரு வேடமா வோடி வந்து
கவன்றிடு ராமானுஜன் தனைத் தேற்றியும் காத்தளித்த
மவனகைக் பிராட்டியரும் கொங்கு மண்டலமே –கொங்கு மண்டல ஸதகப் பாடல்–68
சிவபெருமானே பரம் (துரியமூர்த்தி) வேறு இல்லை?
எனக்கையெழுத்துப் போடாவிடின் சோழன் கழுத்தை வெட்விடுவானென்று,
பயந்து வெளியேறி வந்த ராமாநுஜரது பயத்தை நீக்கி, ஊண் உடை முதலிய
ஆதரவு செய்த கொங்குப் பிராட்டியாருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு : திரிபுவன சக்கரவர்த்திகள் என்றும், சுங்கந் தவிர்த்த
சோழன் என்றும், பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் என்றும் கூறப்படும்
குலோத்துங்க சோழன் (1) என்பான் மிகுந்த பராக்கிரமசாலியும், கல்விமானுஞ்
சிறந்த தெய்வபக்தியுமுள்ளவன். இவன் வேண்டிக் கொள்ளவே சேக்கிழார்
பெரியபுராணம் பாடினார். கி.பி. 1070 – ல் பட்டந்தரித்து 1119 வரை அரசு
புரிந்தான். இராமாநுஜர் காலமும் இதுதான். இச்சோழவேந்தன் முன்னிலையில்
சைவ வைஷ்ணவ சமயவாத சபை ஒன்று வித்வான்கள் ஏற்படுத்தினார்கள்.
அதில் வைஷ்ணவர்கள் தோல்வியடைந்ததால் “சிவாத்பரேதரம் நாஸ்தி”
என்றெழுதிக் கையெழுத்திட வேண்டுமென்று தீர்மானித்தார்கள். இந்தச்
சபைக்கு இராமாநுஜரும் வரவேண்டு மென்று முடித்திருக்கிறார்கள்.
இதனையறிந்த நடாதூராழ்வார், உடையவர் பாலணுகி விவரமறிவிக்கும்
பொருட்டு, நடாதூராழ்வாரிடம் சொன்னார். கூரத்தாழ்வார் உடையவரிடம்
அரசன் வஞ்சகனாக இருக்கிறான், தேவரீர் சபைக்கு எழுந்தருளுவது
யுக்தமன்று நான் போய் வருகிறேனென்று, உடையவருடைய திரிதண்ட
காஷாயாதிகளைத் தரித்துக்கொண்டு ராஜ சபைக்குப் பெரிய நம்பி முதலானவர்களுடன் சென்றார். முதலியாண்டான்
முதலியவர்களுடன் வெள்ளை சாத்திக் கொண்டு மாறுவேடமாக உடையவர்
மேல் நாட்டுக்குப் புறப்பட்டனர். வழி நடந்து கொல்லிமலைத் தொடர்
நீங்கி லத்திவாடி (செருக்கலைக்) கிராமத்தில் சில வேட்டுவர்களால்
உபசரிக்கப் பெற்று, பழவகை முதலியன உதவக் களை நீங்கிச் சமீபத்தில்
அக்கிராமமிருக்கிறது, அங்கு உங்களுக்கு ஆகாரத்துக்கு இடம்
செய்கிறோமென்று அழைத்து வந்து ஒரு வீட்டில் இருத்தினார்கள்.
அவ்வீட்டு அம்மையார் இவ்வைணவர்களைக் கண்டு உவந்து முறைப்படி
வணங்கி, உடையவரிடத்து அடியாள் சமஸ்காரம் பெற்றுளேன் தளிகை
செய்கிறேன் அமுது செய்தருளள் வேண்டுமென்று கனிவாக வேண்டினள்
அம்ம! எவ்விடத்து உடையவரைச் சேவித்துக் கொண்டனை என ஒரு
வைணவர் கேட்டனர்.
பனிரண்டு வருஷம் மழை பெய்த லொழிந்து கொங்கு நாடு கடும்
பஞ்சமுற்றது. ஸ்ரீரங்கத்தில் சதிபதிகளிருவரும் வாழ்ந்தோம். அந்நாள்
எம்பெருமானார் மாதுகர பிக்ஷைக்கு வருவதை மேல் மாடியிலிருந்து
கண்டேன். மன நெகிழ்ச்சி கொண்டு உடனே கீழே வந்து பிக்ஷையிட்டுச்
சேவித்தேன். உபதேசித்தனர். அது முதலாக அம்மந்திரத்தை ஜபித்துக்
கொண்டிருந்தேன். சில பகல் கழியவே, கொங்கு நாடு செழிப்புற்று எனக்
கேட்டு, எம்பெருமானார் சந்நிதியை அடைந்து அநுக்கிரகித்த மந்திரத்தை
மறந்தவளானேன். உபதேசித்தருளல் வேண்டுமென விண்ணப்பித்தேன்.
முறைப்படிக்குச் சமாசிரணம் அருளினர், நித்யப்படி பூசித்தற்குச் சுவாமிகள்
பாதுகை வேண்டுமென்றேன். உவந்து தமது திருவடி நிலையைப்
பிரசாதித்தனர். அதைப்பெற்ற நாள் முதல் பூசித்து வருகிறேன் என்றனள்.
ஆனால் அவர் உபதேசித்த மந்திரத்தை என்னிடத்து சொல் என்று
இராமாநுஜர் கேட்டனர். சொல்லாவிடில் வைணவ ப்ராமணர்கள்
புசிக்கமாட்டார்களே எனப்பயந்து அவர் காதில் மெதுவாகக் கூறினள்.
அப்படியானால் இங்கு உள்ளவர்களுள் உமக்கு உபதேசித்தவர்
இருக்கிறாரா? என்று வைணவர் வினவினர். எல்லாரையும் நன்றாகப் பல
முறை கவனமாகப் பார்த்து, உடையவரைக் குறித்து, சுவாமிகள் தான் என
நினைக்கிறேன்; ஆனால் அவர்கள் காஷாயம் திரிதண்ட தாரியாக இருக்கக்
கண்டேன் என்றனள். பாதுகையை எடுத்துவர அருளிய உடனே
இருகரத்தாலுந் தாங்கி வந்தனள். சரியாகவே இருக்கக் கண்டார்கள்.
திருவமுது செய்யுமாறு நியமனம் புரிந்தனர்.
அமுது கொள்ளுமாறு பிராட்டியார் அழைத்தனள். எனது பாதுகைக்கு
நிவேதனமான பதார்த்தத்தை நான் உட்கொள்ளுதல் சரியன்று என்று மற்றைவைஷ்ணவர்களை உண்ணும்படிசெய்து, உடையவர்
பாலுண்டு சயனித்தனர். மற்றை வைஷணவர்கள் அன்னமருந்து உறங்கினர்.
இந்த அம்மையார் பின்பு ஆகவேண்டிய காரியங்களைச் செய்து
முடித்துத் தரையில் தனியே படுத்தனள், இதுவரை துயின்ற கணவனார்
விழித்து நீ கீழே படுக்கக் காரணமென்ன வென்று மனையாளைக் கேட்டனர்.
உடையவர் முதலிய பெரியோர்கள் எழுந்தருளி உள்ளார்கள். உடையவர்
மாத்திரம் அமுது அருந்தவில்லை என்று வருந்தினள். ஆனால் அதற்கு
என்னாலாக வேண்டியதிருந்தால் செய்கிறேன் என்றனர் சமஸ்காரஞ் செய்து
கொண்டால் நாளை மத்தியானம் அருந்துவ ரென்றனள். அப்படியே செய்து
கொள்கிறேனென்றனர். காலையில் மனமுவந்த உடையவர்,
சதிபதிகளிருவருக்கும் முறைபடிக்குப் பஞ்ச சமஸ்காரம் செய்தனர். பின்பு
அன்னமருந்தினார்கள். வழி நடைக்களைப்பு முதலின நீங்கி நன்றாக
நித்திரை புரிந்தார்கள். சிலநாள் அன்புடன் அம்மனையிலேயே வசித்துப்
பின்பு வஸ்திரம் காஷாயம் திரிதண்டம் மற்றையனவும் பெற்றுக்கொண்டு
மேற்றிசைப் பிரயாணமாயினர்.
தனியன்கள்
ஸ்ரீரங்கத்திற் பாஷியஞ் செய்தருளிய உடையவருடைய தளிர்போன்ற
இரண்டு திருவடிகளை அடைந்து, அவர் பிக்ஷை கொள்ளத்தக்க வீட்டில்
இருந்து தான் பிறந்த (கொங்கு) தேசத்துச் செல்ல இச்சித்து அவருடைய
பாதுகைகளைப் பெற்ற லக்ஷ்மியென்னும் பெயரை உடைய அம்மையாரைத்
துதிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன். நினைக்கிறேன்.
உடையவருடைய திருவடிக் குறியான பாதுகைகளைப் பூசிப்பவரும்,
அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின்
தத்வஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று
அடைகிறேன்.
உடையவருடைய திருவடி சம்பந்தமுற்ற மனத்தராய்ப், பல சீஷர்கள்
கேட்கும் தத்வங்களைத் தெரிவிக்க வல்லராய், லக்ஷ்மீ நரசிம்மமூர்த்தியின்
திருவடிக்கமலத்தில் வீழும் வண்டு போலும் நேர்மை மிகுந்தவராயுள்ள
கொங்குப் பிராட்டியாரை நான் தஞ்சமாக அடைகிறேன்.
கிரிமி கண்டன் காரணமாய், ஸ்ரீரங்கத்தை உடனே விட்டு,
மேற்றிசையில் மேன்மையான கொங்கு தேசத்தை அடைந்த உடையவர்,
வேட்டுவர்களின் உபசரணையை ஏற்றுக்கொண்டு தெய்வச் செயலால்
ஏழாவதுதினம் *சேலாஞ்சலாம்பா (கொங்கு பிராட்டியார்) இல்லத்தை
அடைந்தனர்.
உடையவர் கொங்குப் பிராட்டியாரது பேராதரவால், அரங்கநாதன்
சேவை பெறாத துக்கமுமகன்று, சிஷியர்களுடன் சௌக்கியமாகச் சிலநாள்
அவர் திருமனையிலேயே வசித்தனர். (இவர் பதிகொங்கிலண்ணன் –
கொங்கிலாச்சான் எழுபத்துநான்கு வைணவ சிங்காசனாதிபதிகளில் ஒருவர்)
—————
ஸ்ரீராமானுஜர் திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தினால் தம்முடைய திரிதண்டம் காஷாயங்களை ஆழ்வானுக்கு கொடுத்துத் தாம் வெள்ளை சாற்றிக்கொண்டு திருநாராயணத்துக்கு போகும் வழியில்
கூரத்தாழ்வான், பெரிய நம்பிக்கு என்ன ஆனதோ என்று மனம் கலங்கிய ராமானுஜர், அரங்கனே துணையாக நீலகிரித் தொடரை சிஷ்யர்களுடன் வந்தடைந்தார். அன்று ஏழாம் நாள் உபவாசம், மாலை இருட்டு சூழ்ந்துகொண்டது நல்ல மழை வேறு. தூரத்தே கொஞ்சம் வெளிச்சம் தெரிய சீடர்கள் அதை நோக்கி வழி கேட்க சென்றார்கள்.
விளக்கு எரிந்த இடத்தில் வேடுவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம் “வழி எங்கே?” என்றார்கள். சீடர்களைப் பார்த்த வேடுவர்கள் “நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் ?”என்று கேட்க
“கோயிலிலிருந்து(ஸ்ரீரங்கத்திலிருந்து) வருகிறோம்” என்று பதில் சொல்ல “அங்கு எம்பெருமானார் நலமா ?” என்று பரிவுடன் கேட்கச் சீடர்கள் வியப்புற்று “எம்பெருமானாரை உங்களுக்கு எப்படித் தெரியும் ?”
அதற்கு வேடுவரின் தலைவன் “நாங்கள் நல்லான் சீடர்கள் எங்களுக்கு நல்லான் உபதேசிக்கும் போது த்வயத்தை உபதேசித்துவிட்டு ஸ்ரீமானுஜரின் பிரபாவத்தைச் சொல்லிவிட்டு ‘நமக்கு எல்லோருக்கும் பரமாசார்யர் எம்பெருமானார் நீங்கள் அவர் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கள்” என்று உபதேசம் செய்தார் என்று பதிலை கேட்ட உடையவர்
“நல்லான் என்கிற காளமேகம் நடுக்காட்டிலும் மழை நீரைப் பொழிய செய்துள்ளதே!” என்று வியப்புற்றுச் சொல்ல அங்கிருந்த ஒரு சீடர்
“இவர் தான் எம்பெருமானார்” என்று உடையவர் திருவடிகளை காட்ட அவர்கள் விழுந்து எம்பெருமானாரின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டார்கள். ( நல்லான் பற்றி பிறகு ஒரு சமயம் விரிவாக எழுதுகிறேன்)
அன்று இரவு அவர்களுக்குத் தேனும் தினைமாவும் அமுது செய்ய கொடுத்து இரவு கண்வளர்ந்தருளினார்கள் ( உறங்கினார்கள் ).
மறுநாள் வேடர்கள் ஸ்ரீராமானுஜரையும் அவருடைய சீடர்களையும் அழைத்துச் சென்று மலை மேலே இருக்கும் ஒரு வேடுவர் தலைவனிடம் விட “பிராமணர்கள் பட்டினியிருக்க நாம் எப்படி உண்ணலாம் ?” என்று நினைத்து அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் “கட்டளை வாரி” என்ற பிராமணன் இல்லத்துக்கு அனுப்பி “சீக்கிரம் இவர்களுக்கு அமுது செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்று ததியாராதனைக்கு வேண்டிய பொருள்களையும் கொடுத்தனுப்பினான்.
அப்போது அந்த இல்லத்தில் பிராமணன் இல்லை. அவன் மனைவி மட்டுமே இருந்தாள். அவள் அந்தச் சீடர்களை வரவேற்று “அமுது செய்ய வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய “இவள் யாரோ எப்படிச் சாப்பிடுவது?” என்று நினைத்த சீடர்கள் “வேண்டாம்” என்றார்கள்.
அந்தப் பெண் “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் ? இங்கே அமுது செய்வதில் சந்தேகம் ஏதும் வேண்டாம். அடியாளும் எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆசிரயித்தவளே!” என்று அதிர்வைக் கொடுத்தாள்.
”எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தது எப்படி ?” எப்படி என்று சீடர்கள் முழிக்க அந்த அந்தணப் பெண் பழைய கதையை இவ்வாறு சொன்னாள்.
”ஒரு சமயம் இங்கே மழை இல்லாமல் பஞ்சம் வந்தது. நானும் என் கணவரும் ஸ்ரீரங்கம் சென்று சில காலம் வசித்தோம். அங்கு எம்பெருமானார் தினம் மாதுகரம் செய்ய வருவார். அவரைப் பிரபுக்களும், செல்வந்தர்களும் விழுந்து வணங்குவார்கள். ஒருநாள் மாதுகரம் செய்ய வரும் போது அவரைத் தடுத்தேன்
“இப்படிச் செய்யலாமா ? ஏன்” என்று கேட்டார் உடையவர் அதற்கு நான்
“மகாராஜாக்களும், பிரபுக்களும் உமது திருவடிகளில் விழுந்து வணங்குகிறார்கள் ஆனால் நீரோ மாதுகரம் செய்கிறீர் எதனால் ?” என்று கேட்டேன் அதற்கு அவர் புன்முறுவல் கொண்டு “நாம் அவர்களுக்கு பகவத் விஷயத்தில் சில நல்லவார்த்தைகள் சொல்லுகையாலே” என்றார்
“அந்த நல்ல வார்த்தைகளை அடியவளுக்கும் அருளக்கூடாதா ?” என்று கேட்டேன்
அவரும் மனமுவந்து என் காதில் அந்த மகா மந்திரத்தை ஓதினார்.
எங்கள் ஊரில் மீண்டும் மழை பொழிந்து பஞ்சம் போனது. ஊருக்குப் புறப்படும் போது அவர் எனக்குக் காதில் சொன்ன வார்த்தையை மறந்துபோனேன். மீண்டும் அவரைச் சேவிக்க சென்றேன். அப்போது
“தேவரீர் முன்பு அருளிச் செய்த நல்வார்த்தையை மறந்துபோனேன் அதை என் நெஞ்சிலே நிலைக்கும்படி மறுபடி அருளிச்செய்ய வேணும்” என்றேன். மீண்டும் ஒரு முறை த்வயத்தை நெஞ்சிலே நிலைக்கும்படி உபதேசித்தார்.
புறப்படும் முன் “தேவரீர் ஆத்ம ரக்ஷயாக ஏதேனும் ஒன்றை தந்தருள வேண்டும்” என்று கேட்டேன் … எம்பெருமானாரின் கருணையை என்ன என்று சொல்வேன். தாம் தரித்திருந்த திருவடி ஜோடியைக் கழற்றி பிரசாதித்து அருளினார். அவர் உபதேசங்களுடன், ஸ்ரீபாதுகைகளுடன் இங்கு வந்து சேர்ந்தோம். பிறகு மழைக்குக் குறைவில்லை. வாழ்வு வளம் பெற்றது. அதனால் பயப்படாமல் இங்கேயே நீங்கள் அமுது செய்யலாம்” என்றாள்.
சீடர்களுடன் உடையவர் வெள்ளை சாத்திக்கொண்டு இருந்தால் அவளுக்கு ராமானுசர் இருக்கிறார் என்று தெரியவில்லை. உடையவர் அவள் கூறியவற்றை தம் திருவுள்ளத்தில் நன்கு ஆராய்ந்து அமுது உண்ணச் சம்மதித்தார். தம் சீடர் ஒருவரை அவள் செய்யும் காரியங்களைக் கண்காணிக்கும்படி நியமித்தார். பிறகு என்ன நடந்தது என்று விசாரித்தார். அந்தச் சீடர் மேற்கொண்ட விஷயத்தைச் சொன்னார்.
”அந்தப் பெண் சுத்தமான புடவை தரித்துக்கொண்டு, சமையலறை சென்று “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று கூறி தளிகை செய்துமுடித்து, கதவைச் சாத்திக்கொண்டு எம்பெருமானார் திருவடிகளுக்கு திருமஞ்சனம் செய்து, அதற்கு அமுது கண்டருளப் பண்ணி பிறகு வெளியே வந்து “அமுது செய்யலாம்” என்றாள்.
உடையவர் அந்தப் பெண்ணை பார்த்து “உள்ளே கதவைச் சாத்திக் கொண்டு என்ன செய்தாய் ?” என்று கேட்க அதற்கு அவள்
“எம்பெருமானார் ஸ்ரீபாதுகைளைச் சோதித்து அவற்றுக்கு அமுது கண்டருளப் பண்ணினேன்” என்றாள்.
“அவற்றைக் காட்டு” என்றார் உடையவர்
அவளும் அதைக் கொண்டு வந்து காட்ட தமது பாதுகைகள் என்று கண்டுகொண்ட ராமானுசர் “ராமானுசரிடம் நீ உபதேசம் பெற்றது உணமையாகில் எங்களில் யாராவது இராமானுசர் போலிருக்கிறாரா ?” என்று கேட்டார்
அப்போது பொழுது சாய்ந்துவிட்டபடியால் விளக்கு ஒன்றை ஏற்றிவந்து அந்தப் பெண் ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டு வந்து ஸ்ரீராமானுசர் முன்பு வந்ததும் நின்று ஊன்றிக் கவனித்து அவர் திருவடிகளை கண்டதும் திகைத்து “திரிதண்டமும், காஷாயமும் இல்லாததால் தெரியவில்லை என்று அழத் தொடங்கினாள். அவளைத் தேற்றிய உடையவர் அங்கே சில நாள்கள் தங்கி திரிதண்ட காஷாயாதிகளை தயாரிக்கச் சொல்லி அவற்றை தமது திருவாராதனப் பெருமாளான தேவப் பெருமாள் முன்பு சமர்ப்பித்து அடிபணிந்து பழைய எம்பெருமானாராக தன் பயணத்தை தொடர்ந்தார்.
கொங்கில் ஆச்சான் கதை
’கொங்கில் பிராட்டி கதை’ என்று போன பகுதியில் கொங்கில் பிராட்டியின் கணவரான ’கொங்கில் ஆச்சான்’ பற்றி எதுவுமே கூறவில்லை. அவருடைய வைபவத்தை இந்தப் பகுதியில் பார்ப்பதற்கு முன், ‘முன் கதை’ சுருக்கமாக என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
கிருமிகண்ட சோழனால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து ஸ்ரீராமானுஜர் மற்றும் அவருடைய சீடர்கள் மேல் கோட்டையை நோக்கிச் சென்றார்கள். வழியில் நல்லானின் வேடுவ சீடர்கள் அவர்களுக்கு உதவி செய்து, தேனும் திணை மாவும் அமுது செய்யக் கொடுத்து வழி அனுப்பினார்கள்.
பிறகு அவர்கள் கொங்கில் பிராட்டி இல்லத்தை அடைந்தார்கள். அங்கே கொங்கில் பிராட்டி ஸ்ரீராமானுஜரையும் சீடர்களையும் வரவேற்று “அமுது செய்ய வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய “இவள் யாரோ எப்படிச் சாப்பிடுவது?” என்று நினைத்த சீடர்கள் உணவு அருந்த தயக்கம் காட்டுகிறார்கள்.
கொங்கில் பிராட்டி ‘எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆசிரயித்தவள்’ என்று தன் கதையைக் கூறி, தான் சமைத்த உணவை ராமானுஜர் பாதங்களுக்குச் சமர்ப்பித்துக் கொடுக்க, ’விதுரர் ஆசையுடன் கொடுத்த உணவைக் கண்ணன் உண்டது போல, இந்த அம்மையார் ஆசையுடன் கொடுக்கும் ஆசாரிய பிரசாதத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ராமானுஜர் கூற சீடர்கள் உணவை எடுத்துக்கொண்டார்கள். தன் பாதுகைக்கு வைத்த உணவைத் தானே எடுத்துக்கொள்ள முடியாது, மேலும் ஒரு பெண் சமைத்த உணவை யதிகள் உட்கொள்ளக் கூடாது என்பது மரபு என்று ராமானுஜர் கூற கொங்கில் பிராட்டி பாலும், பழமும், சர்க்கரையும் கொண்டு வந்து கொடுத்தாள். ராமானுஜர் தான் ஆராதிக்கும் பெருமாளுக்குக் கண்டருளச் செய்து உட்கொண்டார்.
சீடர்கள் உட்கொண்ட மிச்ச பிரசாதங்களையும், ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாத தீர்த்தத்தையும் தூங்கிக்கொண்டு இருந்த தன் கணவரை எழுப்பி அவருக்குக் கொடுத்துவிட்டு, தான் ஒன்றும் உண்ணாமல், தரையில் படுத்துக்கொண்டாள். ஆனால் தூக்கம் வராமல் தவித்தாள். இதைக் கண்ட அவளுடைய கணவர் “ஏன்?” என்று கேட்க, ”திருவரங்கத்திலிருந்து வந்த எம்பெருமானாரும் அவருடைய சீடர்களும் நம் அகத்தில் உணவு உட்கொள்ளத் தயங்கி உறங்கச் சென்றார்கள்” என்றாள். அதற்கு அவர் “நான் என்ன செய்ய வேண்டும் ?” என்று கேட்க, “நீர் எம்பெருமானாரை ஆச்ரயிக்க வேண்டும். நீங்கள் ஆச்ரயித்தால் நம் அகத்தில் அவர்கள் பிரசாதிப்பார்கள்(உணவு உட்கொள்வார்கள்)” என்று கூறினாள். அவளுடைய கணவரும் இதற்கு இசைந்து “அப்படியே செய்கிறேன்” என்றார். இதைக் கேட்ட கொங்கில் பிராட்டி மகிழ்ச்சியுடன் நிம்மதியாக உறங்கினாள்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் யார் கையால், என்ன உணவை, எங்கே உட்கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருந்திருக்கிறார்கள். இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்
கூரத்தாழ்வானும் அவருடைய பத்தினி ஆண்டாளும் பாதயாத்திரை சென்று திருவரங்கத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து உணவு அருந்தலாம் என்று தேடும் போது ஒரு வீட்டு வாசலில் திருமண் சாத்திக்கொண்டு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அங்கே தென்படச் சரி அவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பிரசாதக் கட்டைத் திறந்து சாப்பிட ஆயத்தமாகிறார் ஆழ்வான்.
ஆண்டாளைப் பார்த்து “நீயும் சாப்பிடலாமே “ என்று சொல்ல அதற்கு ஆண்டாள் திருமண் மட்டுமே பார்த்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து பிரசாதம் சாப்பிட உங்களை மாதிரி அடியேனுக்கு முடியாது. உள்ளே இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர் நெற்றியில் தான் திருமண் இருக்கிறது ஆனால் அவர் நிஷ்டை எப்படி இருக்கிறது ? அவர் பகவன் நிஷ்டரா அல்லது பாகவத நிஷ்டரா ? அவர் பாகவத நிஷ்டராக இல்லாமல் இருந்தால் இந்த இடத்தில் எப்படி நான் உணவு உண்ண முடியும் என்று கூற அதற்கு ஆழ்வான் ஆண்டாளின் கையை பிடித்துக்கொண்டு
“உன்னைப் போல் எனக்கு ஞானம் வர நம்பெருமாளிடம் பிரார்த்தனை செய்து எனக்கு இதை வாங்கித் தரவேண்டும்” என்றாராம்.
இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
ஒருமுறை கொங்கு நாட்டுக்குப் பிள்ளான் சென்றிருந்தார். அங்கே ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இல்லத்தில் தங்கினார். அங்கே தாமே தளிகை(சமையல்) செய்து உண்ண நினைத்தபோது அவருக்கு அங்கே ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் பெருமாள் திருநாமங்களைப் பாடிக்கொண்டு இருந்தார்கள். பிள்ளான் இவர்கள் இல்லத்தில் உணவு அருந்துவது தகாத விஷயம் என்று புறப்பட்டார்.
பிள்ளான் ஏன் இப்படிச் செய்தார் ? என்று நமக்குத் தோன்றும். காரணம் இருக்கிறது. அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசாரியர்களுடைய திருநாமங்களைச் சொல்லாமல் எம்பெருமான் திருநாமங்களை மட்டுமே கூறியதால் ஆசாரிய அபிமானம் இல்லாதவர்கள் இல்லத்தில் அமுது செய்வது தகாது என்று அங்கிருந்து புறப்பட்டார்.
இப்போது மீண்டும் கொங்கில் பிராட்டியின் அகத்துக்குச் செல்லலாம்.
மறுநாள், பொழுதுவிடிந்தவுடன் உடையவர் திருவடியில் தண்டம் சமர்ப்பித்து,
“இவர் திருரங்கத்தில் பஞ்சசமஸ்காரம், மந்திர உபதேசம் பெற்றுக்கொள்ளவில்லை, நேற்று ஸ்ரீவைஷ்ணவர்கள் உண்ட மிச்சத்தையும், உங்களின் ஸ்ரீபாத தீர்த்தத்தையும் உட்கொண்டதால் இவர் மனம் உங்களை ஆச்ரடிக்க இசைந்துள்ளது” என்றாள்.
உடையவரும் மனம் உகந்து “பஞ்சசமஸ்காரம் செய்வித்து, உபதேசம் செய்தருளி அவருக்கு ‘கொங்கில் ஆச்சான்’ என்று தாஸ திருநாமம் சூட்டி, அவர் கையால் செய்த பிரசாதத்தை எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்து, கண்டருளச் செய்து அவ்வமுதை உட்கொண்டு எல்லோருக்கும் சாதிக்கப்பட்டது. அங்கேயே நாலைந்து நாட்கள் அவர்கள் இல்லத்தில் எழுந்தருளி பிறகு அங்கிருந்து திருநாராயணபுரம் நோக்கிப் புறப்பட்டார். புறப்படும் முன் அவர்களுக்குத் திருவாராதனப் பெட்டியில் உள்ளச் சாளக்கிராமம், லஷ்மி நரசிம்ம பெருமாளையும் கொடுத்தார்.
ஸ்ரீராமானுஜர் மேல்கோட்டை வந்த பிறகு அங்கே ஓர் ஏரி அமைக்க விரும்பினார். இன்று ’தொண்டனூர் ஏறி’ என்று புகழ்பெற்ற அந்த ஏரியை நிர்மாணிக்கப் பொருள் உதவி தேவைப்பட்டது. அப்போது அவருக்கு நினைவுக்கு வந்தவர் கொங்கில் ஆச்சான். அவருக்கு ஒரு கடிதம் எழுத, அனுப்ப வேண்டிய பொற்காசுகளை உடனே தன் ஆசாரியனின் கைங்கரியத்துக்கு அனுப்பி வைத்தார்.
ஸ்ரீராமானுஜருடைய கடைசிக் காலத்தில், ஆசாரியரைப் பிரியப் போகிறோம் என்று அவருடைய சீடர்கள் மனக்கலக்கம் அடைந்தார்கள். அப்போது உடையவர் சிஷ்யர்களை கொங்கு பிராட்டி இல்லத்துக்குச் செல்லும்படி கூறினார்.
சீடர்களும் அம்மையார் இல்லத்துக்குச் சென்றார்கள். அவர்களை வரவேற்று உபசரித்து வந்த காரணத்தைக் கேட்டாள். அவர்களும் உடையவர் அனுப்பினார் என்று கூற, ராமானுஜர் ஏன் அனுப்பினார் என்ற காரணத்தைத் தன் நுண்ணறிவால் அறிந்துகொண்டு ஓர் அறைக்குச் சென்று சிவந்த பட்டு கயிற்றையும், ஒரு வெள்ளைப் பட்டு கயிற்றையும் எடுத்து வந்தாள். அவர்கள் முன் அமர்ந்துகொண்டு அலைந்து இருந்த கூந்தலை எண்ணெய் தடவி, சிக்கலை எடுத்து, சிகப்புப் பட்டு கயிற்றால் முடிச்சு போட்டாள். பிறகு வெள்ளைப் பட்டு கயிற்றால் முடிச்சு போட்டாள். வந்திருப்பவர்களை வணங்கி அனுப்பி வைத்தாள்.
சீடர்கள் ஒன்றும் புரியாமல் திரும்பினார்கள். நடந்தவற்றை உடையவரிடம் கூறினார்கள். ராமானுஜர் “கொங்கு பிராட்டி ஒரு சாதாரணப் பெண் அல்ல” என்று அம்மையார் கூறிய குறிப்பால் உணர்த்திய விஷயத்தை உடையவர் விளக்கினார்.
வேத தேவதை பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள். கொங்கில் பிராட்டியே வேத அவதாரம். அவளுடைய கூந்தல் வேத சிரஸ் என்று சொல்லப்படும் உபநிஷத்துகள். மற்ற மதத்தினரின் அபத்தமான பொருள்களால் அலைந்து கலைந்து சீர்குலைந்தது. எண்ணைத் தடவி அதைச் சரி செய்தது, வேதத்தின் பொருளைச் சீர் செய்து அதை மக்களுக்குப் புரியும்படி விளக்கியதைக் காட்டுகிறது. பின் சிகப்பு கயிற்றால் கட்டியது, காஷாயம் தரித்த சந்நியாசியாகிய அடியேன் பல நூல்களை அருளிப் பாதுகாத்ததைக் குறிக்கிறது. மறுபடி வெள்ளை கயிற்றினால் கட்டியது, பல ஆண்டுகள் கிரஹஸ்தராக தேசிகராக அவதாரம் செய்து மீண்டும் வேதத்தை நிலை நிறுத்தப் போகிறோம் கலக்கம் வேண்டாம் என்று கூறினாள் என்று விளக்கம் அளித்தார்.
ஸ்வாமி தேசிகன் ‘யதிராஜ சப்ததி’யில் ஒரு ஸ்லோகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார். அரண்மனையில் பட்டத்து ராணிக்குப் பணி புரியும் பணிப் பெண்கள் அரசியின் கலைந்த கூந்தல் முடிகளை, சரி செய்து, ஒன்று கூட்டி வாரி முடிந்து அழகு செய்வார்கள். இங்கே வேதத்தை வேத மாதாவாக உருவகம் செய்கிறார் தேசிகன். வேதம் திருமாலுடைய பட்டத்து ராணி. மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அதை அலங்கோலப் படுத்த, ராமானுஜர் என்ற பணிப்பெண் அந்தக் கூந்தலை ஒன்று சேர்த்து சீராக்கித் தான் அருளிய நூல்கள் மூலம் அழகு படுத்தினார் என்கிறார்.
——–
ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ கொங்கில் ஆச்சான் ஆசிரமத்தில் 800 ஆண்டுகளாக வழிபடப்பட்டு வரும் ஜகதாஆச்சாரியார் சுவாமி ராமானுஜரின் மூல பாதுகைகள்.
இன்றும் எண் 55, மங்கம்மா நகர், ஸ்ரீரங்கம் எனும் முகவரியில் கொங்கில் ஆச்சான் மாளிகை உள்ளது. அங்கு இவர்களின் வம்சத்தார் இராமானுசரின் பாதுகையைப் பாதுகாத்து வருகின்றனர்.
இராமானுசரின் பாதுகை (அடி) பெற்று வழிபட்ட கொங்கில் பிராட்டியைப் போல, நான் சிறப்புறவில்லையே என வருத்தமடைகிறாள். நம் திருக்கோளூர் பெண்பிள்ளை.-அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே
————
இராமானுஜரை உபசரித்த கொங்கு பிராட்டியாரைக் கொண்டது கொங்கு மண்டலமே எனப் பெருமையுடன் கூறுகிறது 68ஆம் பாடலில் கொங்கு மண்டல சதகம்.
பாடல் இதோ:
“சிவனே பரம்பிறி தில்லையெ னாதாற் சிரந்துணிக்க
உவந்தனன் சோழ னெனமறு வேடமா யோடிவந்து
கவன்றிடி ராமா நுஜன்றனைத் தேற்றியுங் காத்தளித்த
மவனகைக் கொங்கு பிராட்டிய ருங்கொங்கு மண்டலமே”
பாடலின் பொருள் :-
‘சிவபெருமான பரம் (துரிய மூர்த்தி), வேறு இல்லை’ எனக் கையெழுத்துப் போடாவிடில் சோழன் கழுத்தை வெட்டி விடுவான் என்று மாறுவேடம் அணிந்து வெளியேறி வந்த இராமானுஜரது பயத்தைப் போக்கி ஊண், உடை முதலிய அனைத்தும் கொடுத்து ஆதரவு தந்த கொங்கு பிராட்டியாரைக் கொண்டதும் கொங்கு மண்டலமே.
இந்த வரலாறைக் குறிக்கும் வகையில் ஐந்து தனியன்கள் உள்ளன. அவற்றின் பொருள் மட்டும் இங்கு தரப்படுகிறது. (மூல ஸ்லோகங்கள் தரப்படவில்லை- க்ரந்த எழுத்துக்களில் இருப்பதால்.)
ஸ்ரீரங்கத்திற் பாஷியஞ் செய்தருளிய உடையவருடைய தளிர்போன்ற இரண்டு திருவடிகளை அடைந்து, அவர் பிக்ஷை கொள்ளத்தக்க வீட்டில் இருந்து, தான் பிறந்த (கொங்கு) தேசத்துக்குச் செல்ல இச்சித்து அவருடைய பாதுகைகளைப் பெற்ற லக்ஷ்மியென்னும் பெயரை உடைய அம்மையாரைத் துதிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன். நினைக்கிறேன்.
உடையவருடைய திருவடிக் குறியான பாதுகைகளைப் பூசிப்பவரும், அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின் தத்வஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று அடைகிறேன்.
உடையவருடைய திருவடிக்குறியான பாதுகைகளைப் பூஜிப்பவரும், அடிக்கடி உத்தமமான மந்திரத்தை ஜபிப்பவரும், தமிழ் வேதங்களின் தத்துவ ஞானச் சுடருற்றவருமான கொங்கு பிராட்டியாரை நான் தஞ்சமென்று அடைகிறேன்.
உடையவருடைய திருவடி சம்பந்தமுற்ற மனத்தராய்ப், பல சீஷர்கள் கேட்கும் தத்வங்களைத் தெரிவிக்க வல்லராய், லக்ஷ்மீ நரசிம்மமூர்த்தியின் திருவடிக்கமலத்தில் வீழும் வண்டு போலும் நேர்மை மிகுந்தவராயுள்ள கொங்குப் பிராட்டியாரை நான் தஞ்சமாக அடைகிறேன்.
பிரபந்நாம்ருதம்
கிரிமி கண்டன் காரணமாய், ஸ்ரீரங்கத்தை உடனே விட்டு, மேற்றிசையில் மேன்மையான கொங்கு தேசத்தை அடைந்த உடையவர், வேட்டுவர்களின் உபசரணையை ஏற்றுக்கொண்டு தெய்வச் செயலால் ஏழாவதுதினம் *சேலாஞ்சலாம்பா (கொங்கு பிராட்டியார்) இல்லத்தை அடைந்தனர்.
உடையவர் கொங்குப் பிராட்டியாரது பேராதரவால், அரங்கநாதன் சேவை பெறாத துக்கமும் அகன்று, சிஷியர்களுடன் சௌக்கியமாகச் சிலநாள் அவர் திருமனையிலேயே வசித்தனர். (இவர் பதி கொங்கிலண்ணன் - கொங்கிலாச்சான் எழுபத்துநான்கு வைணவ சிங்காசனாதிபதிகளில் ஒருவர்)
—————
ஆவணியில் கேட்டை தனில் அவதரித்தான் வாழியே
அழகாரும் கொங்கு தமிழ் அமர்ந்த செல்வன் வாழியே
தேவி எனும் மற்றறியேன் என்று உரைத்தான் வாழியே
தேவி எனும் மனையாளால் தெளிவுற்றான் வாழியே
பாவணிந்த மாறனுரை பரிந்துகந்தான் வாழியே
பாகவத ஆராதனத்தால் பருகினான் வாழியே
கோயில் நம் எம்பெருமானாருக்கு மருகனார் வாழியே
கொங்கில் அண்ணன் தம்முடைய குரை கழல்கள் வாழியே l
————-
ஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள் !!
1. சொட்டை நம்பி/ஆளவந்தாரின் வம்சத்தவர்.
2. புண்டரீகர்/பெரிய நம்பி வம்சத்தினை சேர்ந்தவர்.
3. தெற்காழ்வான்/திருக்கோட்டியூர் நம்பி வம்சத்தவர்.
4. சுந்தரதோளுடையான்/திருமலையாண்டான் வம்சத்தவர்.
5. ராமானுஜம்/பெரிய திருமலை நம்பி வம்சத்தவர்.
6. கூரத்தாழ்வான்/பட்டர்/ஸ்ரீராம பிள்ளை
7. முதலியாண்டான்/கந்தாடை ஆண்டான்
8. நடுவில் ஆழ்வான்
9. கோமாடத்து ஆழ்வான்
10. திருக்கோவலூர் ஆழ்வான்
11. திருமோகூர் ஆழ்வான்
12. பிள்ளைபிள்ளை ஆழ்வான்
13. நடாதூர் ஆழ்வான்
14. எங்களாழ்வான்
15. அனந்தாழ்வான்
16. மிளகாழ்வான்
17. நெய்யுந்தாழ்வான்
18. ஸேத்தலூர் சிறியாழ்வான்
19. வேதாந்தியாழ்வான்
20. கோயில் ஆழ்வான்
21. உக்கள் ஆழ்வான்
22. அரண புரத்து ஆழ்வான்
23. எம்பார்
24. கிடாம்பி ஆச்சான்
25. கனியனூர் சிறியாச்சான்
26. ஈச்சம்பாடி ஆச்சான்
27. கொங்கில் ஆச்சான்
28. ஈச்சம்பாடி ஜீயர்
29. திருமலை நல்லாண்
30. சட்டாம்பள்ளி ஜீயர்
31. திருவெள்ளறை ஜீயர்
32. ஆட்கொண்டவில்லி ஜீயர்
33. திருநகரி பிள்ளான்
34. காரான்சி சோமாஜியார்
35. அலங்கார வேங்கடவர்
36. நம்பி கருந்தேவர்
37. சிறுப்புள்ளி தேவராஜ பட்டர்
38. பிள்ளி உறந்தை உடையார்
39. திருக்குறுக்கைபிரான் பிள்ளான்
40. பெரிய கோவில் வள்ளலார்
41. திருக்கண்ணபுரத்து அரையர்
42. ஆசூரிப் பெருமாள்
43. முனிப் பெருமாள்
44. அம்மாங்கிப் பெருமாள்
45. மாருதிப் பெரியாண்டான்
46. மற்றொன்றில்லா மாருதி சிறியாண்டான்
47. சோமாசியாண்டான்
48. ஜீயர் ஆண்டான்
49. ஈஸ்வர் ஆண்டான்
50. ஈயுண்ணி பிள்ளை ஆண்டான்
51. பெரியாண்டான்
52. சிறியாண்டான்
53. குறிஞ்சியூர் சிறியாண்டான்
54. அம்மாங்கியாண்டான்
55. ஆளவந்தார் ஆண்டான்
56. அருளாளப்பெருமாள் எம்பெருமானார்
57. தொண்டனூர் நம்பி
58. மருதூர் நம்பி
59. மழுவூர் நம்பி
60. திருக்குறுங்குடி நம்பி
61. குரவை நம்பி
62. முடும்பை நம்பி
63. வடுக நம்பி
64. வாங்கீப்புரத்து நம்பி
65. ஸ்ரீ பராங்குச நம்பி
66. அம்மாங்கி அம்மாள்
67. பருத்தி கொள்ளை அம்மாள்
68. உக்காலம் அம்மாள்
69. சொட்டை அம்மாள்
70. முடும்பை அம்மாள்
71. கொமாண்டூர்ப்பிள்ளை
72. கொமாண்டூர் இளையவில்லி
73. கிடாம்பி பெருமாள்
74. காட்டுப்பிள்ளான்ஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள் !!
1. சொட்டை நம்பி/ஆளவந்தாரின் வம்சத்தவர்.
2. புண்டரீகர்/பெரிய நம்பி வம்சத்தினை சேர்ந்தவர்.
3. தெற்காழ்வான்/திருக்கோட்டியூர் நம்பி வம்சத்தவர்.
4. சுந்தரதோளுடையான்/திருமலையாண்டான் வம்சத்தவர்.
5. ராமானுஜம்/பெரிய திருமலை நம்பி வம்சத்தவர்.
6. கூரத்தாழ்வான்/பட்டர்/ஸ்ரீராம பிள்ளை
7. முதலியாண்டான்/கந்தாடை ஆண்டான்
8. நடுவில் ஆழ்வான்
9. கோமாடத்து ஆழ்வான்
10. திருக்கோவலூர் ஆழ்வான்
11. திருமோகூர் ஆழ்வான்
12. பிள்ளைபிள்ளை ஆழ்வான்
13. நடாதூர் ஆழ்வான்
14. எங்களாழ்வான்
15. அனந்தாழ்வான்
16. மிளகாழ்வான்
17. நெய்யுந்தாழ்வான்
18. ஸேத்தலூர் சிறியாழ்வான்
19. வேதாந்தியாழ்வான்
20. கோயில் ஆழ்வான்
21. உக்கள் ஆழ்வான்
22. அரண புரத்து ஆழ்வான்
23. எம்பார்
24. கிடாம்பி ஆச்சான்
25. கனியனூர் சிறியாச்சான்
26. ஈச்சம்பாடி ஆச்சான்
27. கொங்கில் ஆச்சான்
28. ஈச்சம்பாடி ஜீயர்
29. திருமலை நல்லாண்
30. சட்டாம்பள்ளி ஜீயர்
31. திருவெள்ளறை ஜீயர்
32. ஆட்கொண்டவில்லி ஜீயர்
33. திருநகரி பிள்ளான்
34. காரான்சி சோமாஜியார்
35. அலங்கார வேங்கடவர்
36. நம்பி கருந்தேவர்
37. சிறுப்புள்ளி தேவராஜ பட்டர்
38. பிள்ளி உறந்தை உடையார்
39. திருக்குறுக்கைபிரான் பிள்ளான்
40. பெரிய கோவில் வள்ளலார்
41. திருக்கண்ணபுரத்து அரையர்
42. ஆசூரிப் பெருமாள்
43. முனிப் பெருமாள்
44. அம்மாங்கிப் பெருமாள்
45. மாருதிப் பெரியாண்டான்
46. மற்றொன்றில்லா மாருதி சிறியாண்டான்
47. சோமாசியாண்டான்
48. ஜீயர் ஆண்டான்
49. ஈஸ்வர் ஆண்டான்
50. ஈயுண்ணி பிள்ளை ஆண்டான்
51. பெரியாண்டான்
52. சிறியாண்டான்
53. குறிஞ்சியூர் சிறியாண்டான்
54. அம்மாங்கியாண்டான்
55. ஆளவந்தார் ஆண்டான்
56. அருளாளப்பெருமாள் எம்பெருமானார்
57. தொண்டனூர் நம்பி
58. மருதூர் நம்பி
59. மழுவூர் நம்பி
60. திருக்குறுங்குடி நம்பி
61. குரவை நம்பி
62. முடும்பை நம்பி
63. வடுக நம்பி
64. வாங்கீப்புரத்து நம்பி
65. ஸ்ரீ பராங்குச நம்பி
66. அம்மாங்கி அம்மாள்
67. பருத்தி கொள்ளை அம்மாள்
68. உக்காலம் அம்மாள்
69. சொட்டை அம்மாள்
70. முடும்பை அம்மாள்
71. கொமாண்டூர்ப்பிள்ளை
72. கொமாண்டூர் இளையவில்லி
73. கிடாம்பி பெருமாள்
74. காட்டுப்பிள்ளான்
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கொங்கில் பிராட்டி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கொங்கில் ஆச்சான் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply