ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-2-7-

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

இப்படி அவன் நிவார்யமாணனாய் இருக்கச் செய்தேயும் இவளுடைய பரிஷத்திலே ஏறி
இவளுடைய கையில் பாவையைப் பறித்து அருள –
எங்கள் கையில் பாவை பறிப்பது உனக்கு அவத்யாவஹமாம்-அநந்ய ப்ரயோஜனனாய்க் கொண்டு சர்வாத்மாக்களையும்
திரு வயிற்றிலே வைத்து
மஹா குணத்தை விளைத்தால் போலே இத்தீமையும் உனக்கு மஹா அவத்யத்தை விளைக்கும் என்று இவள் சொல்ல
அதன் மேலே பணி மொழிகளை இவன் அருளிச் செய்ய –
இங்கனே அதி துஸ் ஸஹமான வார்த்தைகளையே சொல்லி எம்மை விளையாடுதி
அது கேட்க்கில் என்னைமார் இது கூடும் கூடாது என்று பாராதே உன்னை யுபேஷித்து
ஒரு நாளும் கடாக்ஷிப்பதும் செய்யார் -என்கிறாள் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

இவர்கள் கழகத்தில் ஏறப் புக்கு -இவர்களால் நிவாரய மாணனாய் ஏறப் பெறாது ஒழிந்த எம்பெருமான் -செய்யலாவது காணாமையாலே -அவர்களுடைய லீலா உபகரணமான பாவையை சென்று எடுக்க கணிசிக்க -அத்தை இவன் தான் அவர்கள் கையில் நின்றும் பறிக்கப் புக -அவர்களும் எங்கள் கையில் பாவையைப் பறிப்பது உனக்கு போராது என்று சொல்ல -அவனும் பஹு குணனான எனக்கு அல்ப தோஷம் தோற்றப் படுமோ என்று அருளிச் செய்ய -அவர்களும் நிர்ஹேதுகமாக ஜகாத்தை பிரளய காலத்திலே திரு வயிற்றிலே வைத்து  பரிகரிக்கை தொடக்கமான அபரிச்சேதய மஹா குணங்களை உடையையாய் இருந்தாயே யாகிலும் -அக் குணங்களுக்கு நிறம் தருமா போலே இப் போராச் செயலும் உனக்கு அவித்யாவஹம் என்று அருளிச் செய்ய -அதுக்கு மேலே சில பணி மொழிகளை எம்பெருமான் அருளிச் செய்ய -இப்படி பொறுக்க ஒண்ணாத வார்த்தைகளை சொல்லி எங்களோடு நீ விளையாடுதி-அது கேட்க்கில் எம்மனைமார் கூடும் கூடாது என்று நிரூபியாது ஒழிவர்கள் என்ன -ஆனால் வந்தது என் என்ன -ஒரு நாளாக அவர்களுக்கும் உனக்கும் விப்ரதிபத்தியாய் முடியும் என்கிறாள் -ஐ ம்மார் -ஆணுடன் பிறந்தார் –

—————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-2-7-

அநந்தரம் ப்ரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும் பெருமையை யுடைய உனக்கு எங்களை
ஸ்பர்சித்துகே கையில் பாவையைப் பறிக்கிற இது கார்யம் அன்று என்கிறாள் –

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது –என்கை கையில் இருக்கிற பாவையை தீண்டிப் பறிப்பது காரியம் அன்று
கடல்ஞாலம் உண்டிட்ட நின்மலா! –பிரளய ஆர்ணவத்திலே அழுந்துகிற ஜகத்தை அமுது செய்து திரு வயிற்றிலே வைத்து ரஷித்து
அது தானே பிரயோஜனமாம் படியான உஜ்ஜ்வல்யத்தை யுடையையாய் –
நெடியாய்! -இன்னமும் செய்தது போராது-என்று அவற்றை வெளிநாடு காட்டி ரசிக்கும் பெருமையை யுடையவனே
உனக்கேலும் பிழை பிழையே;-இப்படிப்பட்ட உனக்கும் அப்படி அபலைகளாய் இருப்பாரைத்
தீண்டிப் பறித்தாய் என்கிற பிழையே அவத்யமாய் விடும்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; –இப்படி பெரியையாய் இருக்கிற நீ நான் உங்களை ஸ்பர்சிக்கலாமோ –
அன்று ஆரை நினைத்து இருந்து கோள் என்று பூர்வ சம்ச்லேஷ ஸ்மரணத்தைப் பண்ணுவித்து
எங்களுக்கு நினைக்கவும் சொல்லவும் ஒண்ணாத மர்மங்களை எங்களை நோக்கி சொல்லி லீலை கொண்டாட நின்றாய்
அது கேட்கில்என்னைமார்–எங்களுடைய ஆணுடன் பிறந்தார் அது கேட்ப்பாராகில்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–தர்மமும் பாபமும் என்று நிரூபியார்கள் –
ஒரு நாள் வரையில் வந்து தடியை எடுத்து பிணங்கும்படியாம்
என்னை மார் –ஆணுடன் பிறந்தார் –
என்னை மார் என்கிறது -ஸஹஜமான துர்மான தம்பமதாதிகள் பகவத் விரோதிகள் என்று ஸூசிப்பிக்கிறது
பாவை -என்கிறது ஆஸ்ரித விஷயத்தில் பரதந்த்ரமான அசித் வஸ்துவும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யம் என்று ஸூசிப்பிக்கிறது

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-2-7-

கழகம் ஏறேல்  நம்பீ -என்று தங்கள் திரளில் புகுர ஒட்டிற்று இலர்கள் -அவனும் செய்யலாவது  காணாமையாலே அவள் கையில் பாவையை கடாக்ஷித்தான் -ப்ரேஷி தஞ்ஜாஸ்து கோசலா -என்று நினைவு அறியுமவர்கள் ஆகையால் எல்லாரும் கூட அத்தைப் பற்ற இவன் அத்தை அவர்கள் கையில் நின்றும் பறிக்கப் புக்கான்

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது
எங்கள் கையில் பாவையை பறிப்பது கார்யம் அன்று -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை –எங்கள் அனுமதி இல்லாமையால் பறிக்கப் போகாது –தன்னுடைய சக்தி கொண்டு அழிக்கலாவது எதிரிகள் ஆகில் இ றே-அபலைகள் கையில் அத்தை பறிக்க சக்தன் அல்லனே -ஒரு கலத்தில் உண்பாரை போலே அவர்கள் கையிலும் தன் கையிலும் இருக்குமாகில் இறே பிரயோஜனம் உள்ளது -பிரயோஜனம் இல்லாமையே அன்று -உனக்கு குண ஹானியாய் வரும் என்ன -பஹு குணனான எனக்கு ஒரு அல்ப தோஷம் தோற்றப் படுமோ என்ன
கடல்ஞாலம் உண்டிட்ட-நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
நிர்ஹேதுகமாக பிரளய ஆபத்தில் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து நோக்கினவனாய் -ஆகாச இவ நிர்மல-என்கிறபடியே ஹேயப்ரத்ய நீகனாய் -யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று அபரிச்சேதய மஹா குணனாய் இருந்த உனக்கு வந்ததாகிலும் பிழையானது பிழையே காண் -லோகத்துக்கு பிரகாசகனான சந்திரனுக்கு உண்டான மறுவும் லோக பிரசித்தம் அன்றோ -குணங்கள் புக்க இடம் எங்கும் குண ஹானியும் புகும் காண் -குணங்கள் உனக்கு நிறம் தருமா போலே இந்த ஷூத்ர ப்ரவ்ருத்தியும் உனக்கு அவத்யாவஹம் காண் மேல் சொல்லலாவது கண்டிலேன் –அவர்கள் செவியில் இன்னது சொன்னான் -என்று அநு பாஷிக்க ஒண்ணாதாய் இருப்பது ஒன்றை சொன்னான் -அதாவது பிரணய வேளையில் பணி மொழிகள்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி;
நினைக்கவும் கூட கூச வேண்டும் நெஞ்சு அறிந்த வார்த்தையைச் சொல்லி எங்களோடு விளையாடுதீ -இவன் போக புத்தியால் நோக்கு அழிய சொன்ன வார்த்தையை தங்களோடு அவனுக்கு பாவ பந்தம் இல்லை என்று தோற்றுகைக்காக அஸத் சமமாகி விளையாடுதீ என்கிறாள் -எங்களோடு விளையாட முறை யுண்டோ –என்ன பஞ்ச லசஷம் குடியில் பெண்களிலும் எனக்கு விளையாட முறை இல்லார் உண்டோ என்ன
அது கேட்கில்என்னைமார்-தன்மம் பாவம் என்னார்;
என் பந்துக்கள் அத்தை கேட்க்கில் கூடும் கூடாது என்று நிரூபியார்கள்-என்னைமார் -தமையன்மார் -ஐம் மார் -ஆணுடன் பிறந்தார் வேலைப்பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ -என்ன கடவது இ றே -பந்துக்களுக்கு உப லக்ஷணம் -உன்னோடு பாவ பந்தம் இல்லை என்று அறியாதே உன்னுடைய சள பிரவ்ருத்தியை மெய் என்று சம்ச்லேஷம் வருத்தம் என்று மேலிடுவார்கள் -நிரூபித்து சொல்லுகை தர்மம் -நிரூபியாதே சொல்லுகை பாபம் என்னாதே கேட்ட மாத்திரத்திலே பொறாதார்கள்-அவர்கள் அறிய புகா நின்றார்களோ என்ன -பிறந்தது ஓன்று நாள் ஓட்டத்தில் அறியார்களோ என்ன -ஆனால் வருவது என் என்ன
ஒரு நான்று தடிபிணக்கே.
ஒரு நாளாக உன்னோடே விவாதமாய் முடியும் என்கை -இடையர் பெரு மிடுக்கரை அளியச் செய்யும் போதும் தடியால் அழிக்கும் அத்தனை-

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-2-7-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7-

பிரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும்-பெருமை -எங்களை ஸ்பர்சித்து -கையில் உள்ள பாவையைப் பறிப்பது
கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட-இது கார்யம் இல்லையே உனக்கு -திரு வயிற்றில் வைத்து ரஷித்து
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;-தன் பேறாக செய்து அத்தாலே ஔஜ்வல்யம் -அடைந்து -இன்னமும் செய்தது
போராது என்று வெளிநாடு உமிழ்ந்து அருளி –உனக்கும் பிழை பிழையே -அவத்யமே ஆகும்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்-பெரியவனான நீ -பூர்வ சம்ஸ்லேஷ ஸ்மரணம் சொல்லி மர்மம் –
சம்ஸ்லேஷம் போது நடந்தவற்றை சொல்லி -எங்களுக்கு நினைக்கவும் முடியாத -சொல்லவும் வெட்க்கப் படும் வார்த்தைகளை சொல்லி –
இத்தை எங்கள் பந்துக்கள் கேட்கில்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.-தர்மம் -பாபம் -இருவருக்கும் சம்பந்தம் உண்டு என்று உணர்ந்து அடிக்க –
சம்பந்தம் நிரூபிகாமால் உதை பாபம் – தடி அடி பிரயோகம் -தர்ம அடியா பாப அடியா –
சஹஜ துர்மான -என்னைமார் – டம்பம் மதம் உள்ளவர்கள் –
பாவை -ஆஸ்ரித விஷயத்தில் பரதந்த்ரமான அசித் வஸ்துவும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யம்
ஆய்ச்சியர் கை வெண்ணெய்-கண்டால் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்

பிரளய வெள்ளத்தில் அழுந்துகிற உலகத்தைப் புசித்துக் காப்பாற்றிய குற்றமற்றவனே! நெடியவனே! எங்கள் கையிலேயுள்ள பாவையைப் பறிப்பது
செய்யத்தக்க காரியம் அன்று; இப்படிப்பட்ட உனக்கும் குற்றம் குற்றமேயாகும்; எம்மைப் பார்த்து மர்மமான வார்த்தைகளைச் சொல்லி நீ விளையாடுகின்றாய்;
அதனைக் கேட்கில், எங்களுடைய தமையன்மார்கள் தர்மம் பாவம் என்று நினையார்கள்; ஒரு நாள் தடியைக் கொண்டு மாறுபடுவர்.
கர்மம் வர்மம் தர்மம் என்பன, கன்மம் வன்மம் தன்மம் எனத் திரிந்து வந்தன. பாவை – விளையாடுதற்குரிய பொம்மை.
என்னை மார் – தமப்பன், தமையன்மார்கள். நான்று – காலம்.

ஸ்ரீபரதாழ்வான் எல்லா உபாயங்களையும் அநுஷ்டித்துத் தன்பக்கல் பட்டன எல்லாம் தான் இவர்கள் பக்கலிலே பட்டான்.
“ஸ்ரீராம பிரான் திரும்புவதற்கு எல்லாவிதமான உபாயங்களையும் மேற்கொள்ளப் போகின்றேன்”
“ஸர்வோபாயம் து வர்திஷ்யே விநிவர்தயிதும் பலாத்
ஸமக்ஷம் ஆர்ய மிச்ராணாம் ஸாதூனாம் குண வர்திநாம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 19.
என்று மீட்கையிலே போர வருந்தினான் அன்றோ.
தாமே இரங்கி மீளும்படி செய்கிறேன், அது தான் கேட்டார் வாய்க் கேட்க வேண்டுமோ?
“எவ்வளவு வரையில் அவர் என்னிடம் இரங்க வில்லையோ அவ் வளவு வரையிலும் பர்ண சாலையில் அவருக்கு முன்பு படுக்கிறேன்”
“அநாஹாரோ நிராலோகோ தநஹீநோ யதா த்விஜ:
சேஷ்யே புரஸ்தாத் சாலாயா யாவந்மே ந ப்ரஸீததி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 111 : 14.
என்றான் அன்றோ.

இவனும் அப்படியே எல்லா உபாயங்களையும் செய்து பார்த்த விடத்திலும்
அணுக ஒண்ணாதபடி கடுமை தோற்ற இருந்தார்கள். ‘இனிச் செய்யலாவது என்?’ என்று பார்த்தான்;
‘பலத்தாலே காரியங்கொள்ளுவோம்’ என்று நிச்சயித்து, இவர்களுடைய பாவையை எடுப்பதற்குக் கணிசித்தான்;
“கோசல தேசத்தவர்கள் பார்வையைக் கொண்டே பிறர் எண்ணத்தை அறிவார்கள்”
“இங்கிதஜ்ஞாஸ்து மகதா: பிரேக்ஷிதஜ்ஞாஸ்து கோஸலா: அர்த்தோக்தா: குரு பாஞ்சாலா: ஸர்வோக்தா தக்ஷிணாபதா:”
நினைந்த முனி பகர்ந்தவெலாம் நெறி யுன்னி அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்
வனைந்தனைய திருமேனி வள்ளலும் அம் மாதவத்தோன்
நினைந்தவெலாம் நினைந்து அந்த நெடுஞ்சிலையை நோக்கினான்.-என்ற கம்பர்
என்கிறபடியே, நினைவு அறியுமவர்களாகையாலே, எல்லாரும் கூடிச் சென்று, வைத்த பாவையை எடுத்துக் கொண்டார்கள்;
அது தான் “நம் காரியம்” என்றே இருந்தான்.
‘தனித்து முயற்சி செய்ய விருப்பம் இன்றிக்கே ஒழியப் பெற்றோம்’ என்று பார்த்தான். என்றது
திருக் குரவை போலே ஆளுக்கு ஆளாய் நின்று கைப் பிடிக்க வேண்டாவாய் இருந்தது என்றபடி.
‘நல்ல வாய்ப்பு’ என்று இவர்கள் பாவையைச் சென்று பற்றினான்.
(எங்கள் -பஹு வசனம் பாவை ஒருமை என்பதால் இவ் வியாக்யானம் )

கன்மம் அன்று –
வாராய்! உனக்கு இது காரியம் அன்று காண் என்கிறார்கள்.
‘ஏன் தான் இது காரியம் அன்றிக்கே ஒழிவான் என்?’ என்றான்.
எங்கள் கையில் பாவை பறிப்பது –
இதுதான் யாரது என்று இருக்கிறாய்? நீ நினைக்கிறவர்களது அன்று காண்!
இது எங்களது காண்! என்றார்கள். ‘அது தான் மெய்யே’ என்றான்;
“மனைவி முதலான இவர்கள் எவருக்கு உடைமைப்பட்டவர்களோ, இவர்களுடைய செல்வமும் அவருடைமையே”
“த்ரய ஏவாதநா ராஐந் பார்யா தாஸஸ் ததா ஸு த:
யத்தே ஸமதி கச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத்தநம்”-என்பது பாரதம் உத்யோக பர்.–என்பதே யன்றோ பிரமாணம்.
இவர்கள் ‘எங்களது’ என்கை அன்றோ அவன் விருப்பத்துக்கு அடி.
‘இவர்களது’ என்னுமிடம் அறுதியிட்டுக் கொள்ளுகையிலே யன்றோ அவனுக்குத் தாத்பரியம்.
நீ நினைக்கிறவர்களது அன்று என்கையிலே யன்றோ இவர்களுக்குத் தாத்பரியம்.

எங்கள் கையில் பாவை பறிப்பது –
இவர்கள் கையிலே பாதி கொடுத்துப் போலே காணும் பறிப்பது!
அவர்கள் விட்டுக் கடக்க நிற்குமதில் ஒரு பிரயோஜனம் இல்லையே; -ஒல்லை நானும் கடைவன் என்று -இருந்தவன் அன்றோ –
அதனை அவர்கள் ஒருதலை பற்றத் தானும் ஒரு தலை பற்றும் போதே யன்றோ ஒரு கலத்திலே உண்பாரைப் போலே இன்பமாயிருப்பது.

கையில் பாவை பறிப்பது –
கிடக்குமவை யெல்லாம் கிடக்க, எங்கள் கையிற் பாவை பறிப்பது கர்மம் அன்று.
செய்யக் கடவது அல்லாததனைச் செய்யா நின்றாய்; உனக்கு இதனால் ஒரு பிரயோஜனம் இல்லை காண் என்றார்கள்.
ஆக, இதனால், பலித்தது என்? என்னில்,
ஒரு வைஷ்ணவன் “என்னது” என்று அபிமானித்துக் கைப்பிடித்தால் “அவன் விரும்புவது” என்றபடி.
“‘செய்யக் கடவது அல்லாததைச் செய்யா நின்றாய்’ என்று நீங்கள் சொல்லுவான் என்?
செய்யக் கடவனவற்றிற்கும் செய்யக் கடவவல்லாதனவற்றிற்கும் வரம்பு கட்டினேன் நானே அன்றோ” என்றான்.

கடல் ஞாலம் உண்டிட்ட –
பிரளய ஆபத்திலே இவற்றை எல்லாம் எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கிற்றிலேனோ?
இவர்கள் அளவும் அப்படியே ஆகாதே தான். இவன் சென்று பறித்திலனாகில் அழியுமளவே அன்றோ இவர்களது.
அது வேறு நிலையை அடைந்தாகிலும் கிடக்குமன்றோ. இவர்களுக்கு இவனை ஒழிந்த அன்று சத்தைக்கு அழிவன்றோ உள்ளது.
இவர்களும் அவன் ஸ்பர்சித்தான் ஆனால் தான் ரஷிக்கப் படுவார்கள் -இவன் தொடாமல் இருந்தால் அழிந்து போகுமே
அதனாலே பாவையைப் பறித்தான் -அசித் அழிந்தால் அவஸ்தான்தரம்–ஸ்வரூப நாசம் அன்றோ இவர்களுக்கு –

அன்றிக்கே –
‘ஆபத்து ரக்ஷகனன்றோ நான், ஆன பின்பு, நான் செய்யுமவையெல்லாம் பிரயோஜனத்தை எதிர்பாராமலே அன்றோ இருப்பன.
ஆகையினால் எனக்கு இது தானே யன்றோ பிரயோஜனம்.
பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் வருமன்று முடிவு இல்லாமை ஆகுமன்றோ.
இதனைச் சாதனமாக நினைத்திருக்கிலன்றோ நான் வேறே ஒன்றனைப் பிரயோஜனமாகச் சாதித்துக்கொள்வது’ என்றான்.
நீ இங்ஙன் சொல்லுமது வார்த்தை அன்று காண்;
எங்கள் இசைவு இன்றிக்கே இருக்க, நீ பலத்தாலே பறிக்கிற இதற்கு “ஆபத்து ரக்ஷகன்” என்று
சொல்லுகிற இது எடுத்துக்காட்டு ஆக மாட்டாது காண்.
ஆன பின்பு, உன்னுடைய குணத்திற்குக் கேடு காண் மேற்படுவது என்றார்கள்

நின்மலா நெடியாய் –
குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டானவனாய் அளவிடமுடியாத மஹா குணங்களையுடையவனே!
‘பலகுணங்களை யுடைய எனக்கு ஒரு குற்றம் கிடந்த அளவிலே அது தெரியா நின்றதோ?’ என்றான்.
நின்மலா! நெடியாய்!-நின்மலனான சந்திரனுக்கும் அன்றோ மறு கிடக்கிறது?
ஆன பின்பு, குணங்கள் பிரகாசிக்கின்ற இடங்கள் எங்கும் குண மின்மையும் பிரகாசிக்குங்காண்.

உனக்கேலும் பிழை பிழையே –
அளவிடமுடியாத குணங்களை யுடையையாயிருந்தாயே யாகிலும், குற்றம் குற்றமேயாய்க் கிடக்குங்காண்.
இவர்கள் இப்படிச் சொன்னவாறே, இதற்கு ஒரு மறுமாற்றம் காணாமையாலே,
பிறர்க்குப் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இவர்கள் செவிகளிலே சிலவற்றைச் சொல்லப் புக்கான்.

‘வன்மமே சொல்லி’
என்கிறார்கள். தங்கள் மனமும் அவன் மனமும் அறியுமித்தனை;-
வார்த்தைகளால் சொல்ல ஒண்ணாது.

எம்மை நீ விளையாடுதி –
நீ மர்மம் சொல்லும்போது, சொல்லுகிற உன்னையும் கேட்கிற எங்களையும் அறிந்தன்றோ சொல்லுவது.
‘இவன் சொன்ன மர்மம் ஏது?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, “மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் பாசுரமிட மாட்டாமல்
‘வன்மம்’ என்னா நின்றார்; என்னைப் பாசுரம் இடச் சொல்லுகிறீர்களோ?” என்று அருளிச் செய்தார்.

விளையாடுதி-
அவன் தன்னை அழிய மாறி ஒரு மர்மம் சொன்னானானான்;
இவர்கள் அதனை விளையாட்டாக்குகிறார்கள்.
நெஞ்சில் இல்லாதனவற்றைச் சொல்லுகிறதனால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்கிறார்கள்.
மீளவும் சிலவற்றைச் சொல்லப் புக்கான்.
பஞ்ச லஷம் பெண்கள் -உடன் சம்சலேஷித்த பிரகாரம் –அடியைப் பிடி பாரதம் என்றவாறு பேசப் புக்கான்
அது கேட்கில் என்னைமார் தன்மம் பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே –
சொல்லுகிறவை எல்லாம் எங்கள் பந்துக்கள் கேட்பாராகில் சாலத் தப்பாய் விடுங்காண்.

என்னைமார் –
ஆணுடன் பிறந்தார்.
‘தன்மம் பாவம் என்னார்’
என்றதனால், உன் பக்கல் எங்களுக்குப் பாவபந்தம் இல்லை என்னுமிடம் அறியார்கள்.
நீ மேல் விழுகிறவதனைக் கண்டு, ‘இது செய்யலாம், இது செய்ய ஒண்ணாது’ என்ற பாராதே
நலிவர் காண் என்பதனைத் தெரிவித்தபடி.
‘ஆனால் என்? அவர்கள் இதனை அறியா நின்றார்களோ? அவர்கள் இங்கு இல்லையே?’ என்றான்.

ஒரு நான்று –
அதுவோ! முதலிலே தவிரில் அறியாதொழியுமத்தனை போக்கி எல்லாம் செய்தாலும் உண்டானால்
ஒரு நாள் வரையிலே அறிவர்கள் காண். ‘அழகிது; அறிந்தால் தான் வருவது என்?’ என்றான்

தடி பிணக்கே –
பின்னைக் குத்தும் பூசலுமாயன்றோ தலைக் கட்டுவது.
இராமாவதாரத்தில் எல்லாக் காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே,
கிருஷ்ணாவதாரத்திலே தடி கொண்டே காரியம் கொள்ளுமத்தனை.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading