ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமான் திறத்துப் படுவோம் அல்லோம் -என்று இருந்த ஆழ்வார் தம்மோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காகத்
திரு விண்ணகரிலே எழுந்து அருளின எம்பெருமானுடைய நிரவதிக ஸுந்தர்யத்தாலும்
ஸ்வ சம்ச்லேஷ ரஸ ஜெனிதமான அவசாதத்தாலும் நிவ்ருத்த ப்ரணய கோபராய் அவனோடே ஸம்ஸ்லேஷித்து
தத் சம்ச்லேஷ ஜெனித நிரவதிக ப்ரீதியாலே
ச சம்ப்ரமமாக அந்தத் திரு விண்ணகரிலே தாம் அவனைக் கண்டு ஸம்ஸ்லேஷித்த படியையும்
கீழ் ப்ரஸ்துதமான ஜகத் ஐஸ்வர்யத்தையும் அசேஷ தோஷ ப்ரத்ய நீகத்வ அசங்க்யேய
கல்யாண குணங்களையும் பேசுகிறார் –
———————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
இப்படி பிரணய கோபம் தலையெடுத்து சர்வ பிரகாரத்தாலும் எம்பெருமானோடு சம்ச்லேஷிப்போம் அல்லோம் -என்று இருந்த தம்மை
தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி சேர்த்துக் கொண்டு சம்ச்லேஷித்த படியைக் கண்டு -தன்னோடு சேர்வோம் அல்லோம்
என்பாரையும் சேர்த்துக் கொள்ள வல்ல திரு விண்ணகர் அப்பனுடைய விருத்த கடநா சாமர்த்தியம் இருந்த படி என் -என்று விஸ்மிதராக
-இப் பிரசங்கத்தாலே -இன்னமும் பாரீர் -என்று -தன்னுடைய விபூதி கத்வத்தைக் காட்டி அருளக் கண்டு -பண்டு -தன்னைப் பிரிந்து
-மஹா அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று இன்னாதாரான ஆழ்வார் -இப்படி உபகாரகனாய் கொண்டு தானே தனக்கு ப்ராப்யமும் ப்ராபகமும்
-மற்றும் எல்லாமாயும் இருக்கிற படியையும் -அவனுடைய விருத்த விபூதி கத்வத்தையும்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வத்தையும்
-மற்றும் உண்டான ஸுந்தரியாதிகளையும் ப்ரீதராய்க் கொண்டு பேசுகிறார் –
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி —
மூன்றாம் திருவாய்மொழியில்-இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே
பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு
நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்து
அதுக்கு அடியான ஸர்வ வ்யாபகத்வத்தையும்
இதர விசஜாதீயதையையும்
உஜ்ஜ்வல கீர்த்தித்தவத்தையும்
அதிசயித கிருபா யோகத்தையும்
லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித அநு பாவ்யமான உஜ்ஜ்வல்யத்தையும்
ஸர்வ லோக சரண்யத்வத்தையும்
ஆஸ்ரித பவ்யத்தையையும்
நிருபம உபகாரகத்வத்தையும்
அசாதாரண ரக்ஷகத்வத்தையும்
அநு சந்தித்து -இவ்வோ ஆகாரங்களாலே அகடி தங்களை கடிப்பிக்க வல்லவன் –
நித்ய சம்சாரிகளான நம்மையும் நித்ய ஸூரி களோடு சேர்க்க வல்லவன் என்று
அவனுடைய பல பிரதத்வ சக்தியை அநு சந்தித்து தாம் கண்டபடியே உபதேசித்து அருளுகிறார்-
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –
கீழ் பிரணய ரோஷத்தாலே -அவனோடே சம்ச்லேஷிப்போம் அல்லோம் என்று இருந்த தம்மை -தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி
சேர்த்துக் கொண்ட படியைக் கண்டு விஸ்மிதராக -நீர் இது ஓன்று கொண்டோ விஸ்மிதர் ஆகிறது -நாம் சேராத வற்றை எல்லாம்
சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு -முன்பு பிரிவாலே வந்த
அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே
நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்
-நித்ய சம்சாரியாய் போனவன்றும் மயர்வற மதி நலத்தை நிர்ஹேதுகமாக அருளி என்னை பொருந்த வீட்டுக் கொண்டான்
-வள வேழ் உலகில் அயோக்யதையை அனுசந்தித்து -அகலப் புக-தன் நீர்மையைக் காட்டி சேர்த்துக் கொண்டான்
-இப்போது பிரணய ரோஷத்தாலே அகன்று முடிய புக -தன்னுடைய சர்வ சக்தி யோகத்தாலே சேர விட்டுக் கொண்டான்
-அவை போல் அன்று இ றே பிரணய ரோஷம் -அகல ஒண்ணாதே அணுக ஒண்ணாதே இருப்பது ஓன்று இ றே -இத்தால் சொல்லிற்று ஆயிற்று
–அகன்று முடிந்து போவோம் என்பாரையும் உடையவன் முடிய விட்டுக் கொடான்-என்கிறது –
முதல் திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்தித்து -பத்துடை அடியவரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்தார் –
இங்கு மின்னிடை மடவாரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்து இது திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்திக்கிறார்-
இப்படி கண் அழிவு அற்ற மேன்மையும் நீர்மையும் உள்ளது இவனுக்கே என்று அனுசந்தித்து ப்ரீதி பிரகர்ஷத்தாலே பேசுகிறார் –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —
இப்படித் தாழ நின்றவன் சர்வேஸ்வரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச் செய்வர்.
அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய
சர்வேஸ்வரத்வத்தை அருளிச் செய்கிறார் என்றபடி.
‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச் செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.–
பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது,
“சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேர விட்டுக் கொண்ட ஆச்சரியத்தைக்
கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.
சேர விட்டுக் கொண்ட படி தாம் பலவாக இருக்குமன்றோ:
முதல் தன்னிலே-1-1- தம்மையும் அறியாதே அவனையும் அறியாதே இருக்க,
தன் படிகளை அறிவித்துக் கூட்டுவித்துக் கொண்டான்.
உள்ளே புகுர நின்று தம்முடைய தாழ்வினையும் அவனுடைய உயர்வினையும் அநுசந்தித்து
‘நாம் அங்குத்தைக்குத் தக்கவர் அல்லோம்’ என்று அகல,-1-5- தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக் கொண்டான்.
இனி, அவை போன்றது அன்றே இது; ஒன்றால் போக்கக் கூடியது அன்றே.
அகலில் குற்றம், அணுகில் குற்றமாய் இருப்பது ஒன்றே யன்றோ!
ஜாதி சண்டாளனை நோக்கினால் பிராயச் சித்தம் உண்டு;
பிரணயத்தால் உண்டாகிய கோபம் ஆகிற காரணத்தால் சண்டாளர் ஆனவர்க்கு அதுவும் இல்லை.
ஆக, இந்தப் படிகளாலே
தன் செல்லாமையைக் காட்டி அவன் பொருந்த விட்டுக் கொண்ட படியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்றபடி.
பாவியேன் மனத்தே -கடாஷித்து -ஜாதி சண்டாளன் -என்கிறார் –
ஈஸ்வரன் மேல் விழா நிற்க -சேராமல் விலக்கிய பிராயச்சித்தம் இல்லாத பாபம்
சந்த்யா வந்தனம் பண்ணா விடில் பிராயச்சித்தம் தேடலாம் -பகவத் அனுபவம் இல்லாததுக்கு இல்லையே -கூரத் ஆழ்வான்
நாயக விஷயத்தில் நாயகிக்கு ஏற்பட்ட பிரணய ரோஷத்துக்கு பரிகாரம் இல்லை
பிரணயத்தால் பிறந்த கோபம் ஆகிற அபராதத்தால் -வந்த பாபிஷ்டருக்கு பிராயச்சித்தம் இல்லையே
ஈஸ்வரனை சொல்லாமல் -பிரணய கோபத்தையே சொல்கிறார் –
அங்ஙனம் ஆச்சரியப்படுகிற இவர்க்கு, ‘இவ்வளவு அல்ல காணும் நம்முடைய ஆச்சரியங்கள் இருக்கும்படி.
உலகத்தில் தம்மில் தாம் சேராத மாறுபட்ட பொருள்களும் எல்லாம் நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்!
ஆன பின்னர், நம்மோடு சேராதார் இலர் காணும்!’ என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தைக் காட்டிக் கொடுக்க இவரும் கண்டார்.
கண்ட இவர் ‘இவை இருந்தபடி என்!’ கொடுத்த அறிவைக் கொண்டு அகலுகைக்குக் காரணமாயிருக்கிற இவற்றை
எல்லாம் கூட விட்டுக்கொடு நிற்கிற படிகளும்,
இனி, நிமித்த காரணமானது உபாதான காரணமாக மாட்டாது; உபாதான காரணமானது நிமித்த காரணமாக மாட்டாது;
இங்ஙனே இருக்க, இவை எல்லாம் தானே யாயிருக்கிற படியையும்,-பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-
இவற்றோடே கூடி இருக்கச் செய்தேயும் இவற்றின் குற்றங்கள் தன்னைத் தீண்டாமல் இருக்கிற படியையும்,-பரஞ்சுடர் –
குற்றம் தீண்டாமல் கடக்க இருக்கை மாத்திரமன்றிக்கே நியமிக்கின்றவனாய் இருக்கிற படியையும்,-
இனி, நாட்டில், பிராப்யமானது பிராபகம் ஆக மாட்டாது; பிராபகமானது பிராப்யம் ஆகமாட்டாது; இங்ஙனே இருக்க,
பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் தானே யாக இருக்கிற படியையும்,–என் சரண் என்னை ஆளுடை –
மற்றும், இவனுடைய அழகு சீலம் முதலானவைகளையும் அநுசந்தித்து, -பொன்னப்பன் -தந்தனன் தன் தாள் நிழல்-
‘இப்படி உபகார சீலனான சர்வேசுவரன் திருவிண்ணகரிலே வந்து அண்மையில் இருப்பவனானான்;
இவன் அல்லது நமக்குப் பரம பந்துக்கள் இலர்’ என்று அறுதி யிட்டு,
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-6-3-9-
‘இவன் திருவடிகள் அல்லது பற்று இல்லை’ என்று பேசுகிறாராயிருக்கிறது.
திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10
முதல் திருவாய்மொழியிலே பரத்துவ அநுபவம் பண்ணி,
மூன்றாந் திருவாய்மொழியிலே சௌலப்யத்தை அநுசந்தித்து “எத்திறம்” என்று கிடந்தார்.
இங்கு, “போகு நம்பி” என்று தள்ளச் செய்தேயும் கால் வாங்க மாட்டாதே நின்ற நீர்மையை அநுசந்தித்து,
அதற்கு எதிர்த்தட்டான பரத்துவத்தை அநுசந்திக்கிறார்.
இப்படிக் கிரமம் இல்லாமல் அருளிச் செய்கிறதற்குக் காரணம் யாது? என்னில்,
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அலரோ; மேன்மையை அநுசந்திப்பது, நீர்மையை அநுசந்திப்பதாமத்தனை அன்றோ!
இத் திருவாய்மொழியிற் கூறப்படுகின்ற பொருளோடு
“தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ வேதத்து மறை நீ பூதத்து முதலு நீ
வெஞ்சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ அனைத்தும் நீ அனைத்தினுட் பொருளும் நீ”-என்ற பரிபாடற் பகுதி ஒப்பு நோக்கத் தகும்.
1-வைகுண்ட விண்ணகரம்
2-பரமேஸ்வர விண்ணகரம்
3-காளிச்சீராம விண்ணகரம்
4-நந்திபுர விண்ணகரம்
5-அரி மேய விண்ணகரம்
6-காழிச் சீராம விண்ணகரம்
7-ஸ்ரீ வைகுண்டம் -நவ திருப்பதி நின்ற திருக்கோலம்
8-திரு விண்ணகர் -அடை மொழி இல்லாமல்
உத்சவ மூர்த்தி பொன்னப்பன் –
மிகுநர் இலன் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
சமாப்யதிக ராகித்யன் -தரித்திரம் -குறை சொல்லலாம் படி அன்றோ –
பூமா தேவி -துளசி தேவி -ஸ்ரீ மஹா லஷ்மி போல் ஆக ஆசை கொள்ள
மார்க்கண்டேயர் திருக்குமாரி –
லவண வர்ஜித ஸ்வாமி –
விளம்ப விரோதம் அழிக்கும்-வ்ருத்த கடநா – சாமர்த்தியம் -நன்னகரிலே விஸ்தீரணம்
நன்னகரிலே-தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-
விஸ்தீரணம் -பல் வகையும் பரந்த பெருமான்-6-3-1-
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply