ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-2-

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-2-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

உப லப்யமான ஸூக துக்க காலுஷ்ய பிரசாத நிக்ரஹ அநு க்ரஹ ஸீத உஷ்ணாதி அந்யோன்ய
விருத்த வஸ்த்வந்தராத்ம பூதனாய்
ஸூ துர்த்தரசனாய் இருந்த சர்வேஸ்வரனை
நான் கண்ணாலே கண்டு அடிமை செய்யும் படி
புகுந்து அருளின திரு நகரி திரு விண்ணகர் என்று திரு நகரியை அநு பவிக்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-2-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

விருத்தமான விபூதி விஸ்தாரங்களை யுடையனாய் -ஸ்வ பாஹு பலத்தாலே ஒருவராலும் காண ஒண்ணாத படி அறப் பெரியனாய் இருந்து வைத்து என்னை அடிமை கொள்ளுகிறவனுடைய ஊரான திரு விண்ணகர் அவனுடைய திவ்ய நகரங்கள் எல்லா வற்றிலும் நல்ல நகரம் என்கிறார் -கண்ட இன்பம்-பரிச்சின்ன ஸூ கம் / தண்டமும் தண்மையும் -கொடுமையும் தண்ணளியும் /
தழலும் நிழலுமாய்க்-உஷ்ணிக்கும் நெருப்பும் குளிரும் நிழலும் –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-2-

அநந்தரம் அந்த ப்ரீத் அப்ரீதி ரூப ஸூக துக்கங்களை அநு பந்தித்து வரும் பதார்த்தங்களை விபூதியாக யுடையனாய்
தத் சஜாதீய தயா த்ரஷ்டும் அஸக்யனான சர்வேஸ்வரனுக்கு அசாதாரண தேசம் திரு விண்ணகரம் -என்கிறார்

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்-லோக த்ருஷ்டமான ஸூக துக்கங்களையும்
துக்கம் அடியாக வரும் சித்த வ்யாகுலத்தைகளும் ஸூகம் அடியாக வரும் தெளிவுகளுமாய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்-அக்கலக்கம் அடியாக வரும் கோபமும் -தேற்றம் அடியாக வரும் பிரசாதமும்
கோப சமமான உஷ்ணத்தை யுடைய அக்னியும் பிரசாத சமமான சைத்யத்தையுடைய நிழலுமாய்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்-சஜாதீய தயா காண அரியனாய் இருக்கிற சர்வேஸ்வரனாய்
என்னை அடிமை கொண்டவன் ஊர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–தெளிந்து திரைக் கிளப்பத்தையுமுடைய ஜலத்தால் சூழப்பட்ட
விண்ணகர் ஆகிற தர்ச நீய நகரம் –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-2-

ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் காண ஒண்ணாத பெருமையை யுடையனாய் வைத்து என்னை அடிமை கொள்ளுகிறவன் ஊரான திரு விண்ணகர் சர்வ வி லக்ஷணம் என்கிறார் –

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

கண்ட இன்பம் – பரிச்சின்ன ஸூ கம் -ப்ரத்யக்ஷ சித்தம் அன்றிக்கே -சாஸ்திர ஸித்தமாய்-அபரிச்சின்னமான ஸூ கத்திலே இ றே தமக்கு அந்வயம்
துன்பம் -அதற்கு எதிர்த்தட்டான துக்கம் –தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கலக்கங்களும் தேற்றமுமாய்த்-அஞ்ஞானங்கள் / ஞானம் /கோபம் /பிரசாதம் /உஷ்ணத்தை பண்ணும் அக்னியும் /சீதா ஸ்வ பாவமான நிழலும்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
ஸ்வ யத்னத்தாலே காண ஆசைப்பட்டார்க்கு அரியனாய் இருக்கிறவன் கிடீர்-தான் மேல் விழுந்து என்னைக் காண ஆசைப்படுகிறான் –கண்டு கொள்வதற்கு அரிய சர்வேஸ்வரனாய் என்னை அடிமை கொண்டவனூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–தெளிந்த திரையை யுடைத்தான ஜலத்தாலே சூழப்பட்ட திரு விண்ணகர் -பரமபதம் உத்தேச்யம் ஆனவாறே -விரஜாய் உத்தேச்யம் ஆமா போலே -அவ்வூர் உத்தேச்யம் ஆனவாறே அங்கு உள்ள ஜல ஸம்ருத்தியும் உத்தேச்யமாய் இருக்கிறது இ றே இவர்க்கு –-நன்னகரே-கலங்கா பெருநகரம் இதற்கு சத்ருசம் அன்று -விடாய்த்த இடத்திலே விடாய் தீரலாம் படி இருக்கிற ஏற்றம் உண்டு இ றே இதுக்கு –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-2-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

ப்ரீதி அப்ரீதிகங்கள் -அனுபந்தித்து வரும் பதார்த்தங்கள் விபூதி -மானாகவும் இருந்து -சஜாதீயர் இல்லாமல் -விஜாதீயன் –
அனைத்தையும் சரீரம் பிரகாரம் -உள்ளும் இருப்பார்
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்-விபூதியாக இருந்தும் -லோகத்தில் பார்க்கும் -துக்கம் -வந்தால் மனக்கலக்கம்
சுகம் -மனப் பிரசாதம் -தெளிவு தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்-கலக்கத்தால் வரும் கோபமும் -தெளிவால் வரும் பிரசாதமும் –
அக்னியும் அவனது நிழலும் அவனது -பிரசாத சமமான சைத்யமான நிழல் –
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்-ஸூசஜாதீயமாக காண அரியவன் சர்வேஸ்வரன் -என்னை அடிமை கொண்டவன்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே-நன்னகரிலே விஸ்தீரணம் -அலை நீர் வாய்ப்பு -அஹோ ராத்திரி புஷ்கரணி

அநுபவிக்கின்ற இன்பமும் துன்பமுமாகி, கலக்கமும் தேற்றமுமாகி, சீற்றமும் அருளுமாகி. நெருப்பும் நிழலுமாகிக் கண்டு கொள்வதற்கு
அரியவனாகிய பெருமானாகி, என்னை ஆள்கின்றவனுடைய ஊரானது, தெளிந்த அலைகளையுடைய புனலால் சூழப்பட்ட
திருவிண்ணகரம் என்னும் நல்ல நகரமேயாகும்.
ஆய் ஆய் கண்டுகோடற்கு அரிய பெருமான். ஊர் திருவிண்ணகராகிய நல் நகர் என்க. தண்டம் – கோபம். தழல் – நெருப்பு.

தங்கள் முயற்சியாலே ஒருவர்க்கும் காண ஒண்ணாத பெருமையையுடையனாய் வைத்து என்னை
அடிமை கொண்டவனுடைய ஊரான திருவிண்ணகரம் எல்லா நன்மைகளும் பொருந்திய நகரம் என்கிறார்.

கண்ட இன்பம் –
“ஐங்கருவி கண்ட இன்பம்”-திருவாய். 4. 9 : 10.- என்னுமாறு போலே, அளவிற்கு உட்பட்ட சுகம்.

துன்பம் –
பெயர் வேறுபாடு மாத்திரமேயாய் அதனோடு ஒத்த துக்கம்.

கலக்கங்களும் தோற்றமுமாய் –
இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும்.

தண்டமும் தண்மையும் –
கோபமும் அருளும்.

தழலும் நிழலுமாய் –
வெப்பத்தைச் செய்யக் கூடிய நெருப்பும், குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான நிழலுமாய்,

கண்டு கோடற்கு அரிய பெருமான் –
இவை எல்லாவற்றாலும் அவனுடைய அளவு இடற்கு அரிய தன்மையைச் சொன்னபடி. –அபரிச்சேத்யம்-

இவருடைய ஞானத்தின் தெளிவு இருந்தபடி என் தான்!
இங்கே சில விசேடணங்களை சொல்லா, “கண்டு கோடற்கு அரிய பெருமான்” என்று அவனைச் சொல்லா நின்றார்;
மேலே சிலவற்றைச் சொல்லா, “பல்வகையும் பரந்த பெருமான்” என்னா நின்றார்;
இது என்ன அநுசந்தான முறை தான்!
இவனை ஒழிந்தது ஒரு வஸ்துவுக்கு சத் பாவம் இன்றிக்கே இருக்கிறபடி அன்றோ.
இதுவும் ஒரு வ்ருத்த ஸ்வ பாவம் என்றவாறு -அப்ரஹ்மாத்மக வஸ்துவே இல்லையே –

நல்லாரும், நம்பி ஸ்ரீ சேநாபதி தாசரும் கூடத் திருமலைக்குப் போகா நிற்க,
ஸ்ரீ சேநாபதி தாசர் ஒரு கோலை யிட்டுத் தூற்றை அடிக்க,
நல்லார் ‘அர்த்த காம நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கே இருக்க,
ஒரு காரணமும் இல்லாமல் ஈஸ்வரனுடைய விபூதியை நலிவதே!’ என்ற வார்த்தையை நினைப்பது.

என்னை ஆள்வான் ஊர் –
என்னை இழக்க மாட்டாமல் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் மிறுக்கு எல்லாம் பட்டு
என்னை அடிமை கொண்டவனுடைய ஊர்.

தெண் திரைப் புனல்சூழ் திரு விண்ணகர் நல்நகரே –
தெளிந்த திரைகளை யுடைத்தான புனலாலே சூழப்பட்ட திரு விண்ணகராகிற நன்னகர்.
திவ்விய நதியான விரஜைக்குப் போலியான ஆறும் உண்டாகப் பெற்றது என்பார் ‘தெண்திரைப் புனல் சூழ்’ என்கிறார்.
அங்கு இருக்கிறவன் இங்கே வந்து நின்றால் அங்கு உள்ளவை எல்லாம் இங்கு உண்டாகத் தட்டு இல்லையே.
அன்றிக்கே, இவ்வளவில் முகங்காட்டாத ஸ்ரீ வைகுண்டமும் ஒரு தேசமாயிற்றதோ?
அவன் விரும்பின இடம் பிராப்பிய பூமியாமித்தனை யன்றோ.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading