ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-1-

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-1-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

தாரித்ர்ய சம்பத் -நரக ஸ்வர்க்க -அஸ்நேஹ ஸ்நேஹ-விஷ அம்ருத -ப்ரப்ருதி விதித்த பதார்த்த அந்தராத்ம பூதனாய் –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து என்னோடே ஸம்ஸ்லேஷித்த எம்பெருமானை
கைங்கர்ய ரதித்வ சம்பத் சம்ருத்த திவ்ய ஜன பரிபூரணமான திரு விண்ணகரிலே கண்டேன் -என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-1-

முதல் பாட்டில் விருத்த விபூதிகனான சர்வேஸ்வரனை திரு விண்ணகரிலே காணப் பெற்றேன் என்கிறார் –

நல்குரவும்  செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

தாரித்ரியமும் -வெல்லப்படும் பகையும் உறவும் -விபூதி முகத்தாலே பல படியும் விஸ்த்ருதனான-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -நான் அல்லேன் என்று அகலப் புக தான் மேல் விழுந்து என்னை சேர்த்துக் கொண்டு அடிமை கொள்ளுகிறவனை –செல்வம் மல்கு -சம்பத் மிகுகை-

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-1-

முதல் பாட்டில் -ப்ரீத் அப்ரீதி ஹேதுவான விருத்தார்த்தங்களை விபூதியாக யுடைய
ஸர்வ வ்யாபகனைத் திரு விண்ணகரிலே கண்டேன் -என்கிறார் –

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்-பதார்த்த சங்கோச ரூப தாரித்ர்யமும்-தத் விகாச ரூபமான சம்பத்தும் –
ஸ்த்தானமான நரகமும் ஸூக ஸ்தானமான ஸ்வர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்-எதிர்த்தலையைச் சாய்க்கும் ஸாத்ரவமும்-அதுக்கு எதிர்த்தட்டான மைத்ரமும் –
முடிக்கும் விஷமும் உஜ்ஜீவிப்பிக்கும் அம்ருதமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-இப்படி பலவகையிலும் வ்யாப்தனான சர்வாதிகனாய் –
இவ்வாகாரத்தை எல்லாம் எனக்குப் பிரகாசிப்பித்து
அடிமை கொண்ட ஸ்வாமியானவனை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–பகவத் அனுபவ ஐஸ்வர்யம் மிகா நிற்கிற
ஸஜ் ஜன சமவாயத்தையுடைய திரு விண்ணகரிலே அப ரோஷிக்கப் பெற்றேன்
ஆய் -என்கிறது பிரதி பதம் சேர்த்துக் கொள்வது –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-1-

விருத்த விபூதிகனான சர்வேஸ்வரனை திரு விண்ணகரிலே காணப் பெற்றேன் என்கிறார்-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்-வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
தாரித்ரியமும் -அதற்கு எதிர்த்தட்டான ஐஸ்வர்யமும் -துக்க அனுபவம் பண்ணும் நரகமும் -ஸூக அனுபவம் பண்ணும் சுவர்க்கமும் –
சமாதானத்தால் மீளுமது அன்றிக்கே வென்றே விட வேண்டும் பகையும் –அதற்கு எதிர்த்தட்டான உறவும்
முடித்தே விடக் கடவதான விஷமும் -முடியாத படி காத்து போக்யமுமாய் இருக்கும் அமுதமுமாய் –
அநிஷ்டமான தாரித்யாதிகளோடு இஷ்டமான ஐஸ்வர்யாதிகளோடு -வாசியற -ததீயத் ஆகாரத் வேண-இவருக்கு உத்தேசியமாய் இருக்கும் இ றே -இதில் தோஷ அம்சம் அஸஹ்யம் அன்றோ என்னில் -தன்னை தேஹ விசிஷ்டனாக அனுசந்தித்த போது த்யாஜ்யமாம் -சேஷத்வ விசிஷ்டனாக அனுசந்தித்த போது உபாதேயமாகக் கடவது -ராஜ புத்திரனுக்கு பிதாவினுடைய ஓலக்கத்தோடு சிறைக் கூட்டத்தோடு வாசியற பிதாவின் ஐஸ்வர்யம் என்று இருக்கும் இ றே
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
இப்படி விபூதி முகத்தாலே பல படியும் விஸ்ருத்தனானவன் -நாஸ்த்யந்தோ விஸ் தரஸ்ய மே என்று தன் விபூதிக்கு எல்லையில்லை என்று இ றே தானும் சொல்லுவது –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
சர்வகதனானது தமக்காக என்று இருக்கிறார் –ஒருவனை பிடிக்க சுற்றி ஒரூரை வளைப்பாரை போலே -இப்படி சர்வகதனான பெருமையை உடையனாய் வைத்து -ப்ரணய ரோஷத்தாலே அகன்று -முடிய புக்க என்னை தாழ நின்று சேர்த்துக் கொண்ட உபகாரகனை என்றுமாம் –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
நிரவதிக சம்பத்தை உடைய தேசம் -பிரிந்து தூது விட வேண்டாதே-ப்ரணய ரோஷத்தாலே -கிட்ட ஓட்டோம் -என்று வியசனப் படாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் இடம் என்கை -லஷ்மனோ லஷ்மி சம்பன்னவ் -என்கிறபடியே இடைவிடாதே பகவத் அனுபவ ஸ்ரீ -இ றே சம்பத்து ஆகிறது –
திருவிண்ணகர்க் கண்டேனே.-ஓர் இடத்திலே காண ஆசைப்பட்டு ஓர் இடத்தே காண்கை அன்றிக்கே தூது விட்ட அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

——

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-1-

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

வ்ருத்த -விபூதிகள் -குணங்கள் -பொருள்கள் -பாசுரம் தோறும் -மிகப் பெரியவன் -ப்ரீதி அப்ரீதி ஹேதுவான
வ்ருத்த அர்த்தங்களை விபூதியாக கொண்ட சர்வ வியாபகன் –
அனைத்தையும் சரீரமாகக் கொண்டவன் -பிரகாரம் -விசேஷணம்
நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்-பதார்த்த சங்கோச ரூப தாரித்ர்யம் –கீழே பகவத் அனுபவ தாரித்ர்யம்
தத் விகாச ரூபமான சம்பத் துக்க ஸ்தானம் சுக ஸ்தானம்
ஆய்-ஒவ் ஒரு இரட்டையிலும் சேர்த்துக் கொண்டு
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்-எதிர்த் தலையைச் சாய்க்கும் -சாத்ரமும் பகைமை -குணம் இங்கு -குணம் ஸ்தானம் பொருள் –
முடிக்கும் விஷம் உஜ்ஜீவிக்கும் அமிர்தம்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-வியாப்தன் -என்னை இந்த ஆகாரத்தை பிரகாசிப்பித்தது -காட்டி –
இது தானே விபூதி அத்யாயம் -அடுத்த அத்யாயம் சங்கதி –
ஸ்ரீ மத் எனபது எல்லாம் தேஜஸ் உடைய திவலை -விபூதி மானை சேவிக்க விஸ்வ ரூபம் காட்டி அருளினான் –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே-இது தான் 11 அத்யாயம் போலே -கண்டேனே என்கிறார் –
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அன்றோ -ஸ்ரீ கீதார்த்தமே விரவிக் கிடக்குமே
பகவத் அனுபவ ஐஸ்வர்யம் எதிர் பொங்கி வரும் -சத் ஜனம் வாழும் -திவ்ய தேசம் -அபரோஷிக்கப் பெற்றேன் -பிரத்யஷமாக கண்டேன் –

வறுமையும் செல்வமுமாகி, நரகமும் சுவர்க்கமுமாகி, வெல்லக்கூடிய பகையும் நட்புமாகி, விஷமும் அமுதமுமாகி, பலவகையாகவும் பரந்து
பெருமானாகி என்னை ஆள்கின்றவனைச் செல்வம் நிறைந்திருக்கின்ற மக்களை யுடைய திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் பார்த்தேன்.
ஆகி ஆகிப் பரந்த பெருமான் என்க. என்னை ஆள்வானைத் திருவிண்ணகர்க் கண்டேன் என்க. இந்தத் திவ்யதேசம்,
உப்பிலியப்பன் சந்நிதி என்றும், ஒப்பிலியப்பன் சந்நிதி என்றும் இப்பொழுது வழங்கப் படுகிறது. செல்வு – செல்வம்.
இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

விருத்த விபூதிகனான சர்வேசுவரனைத் திருவிண்ணகரிலே காணப்பெற்றேன் என்கிறார்.

நல்குரவும் செல்வும் –
வறுமையும், அதற்கு எதிர்த்தட்டான செல்வமும்,

நரகும் சுவர்க்கமும் –
துக்கத்திற்கே இருப்பிடமான நரகமும், சுகத்திற்கே இருப்பிடமான சுவர்க்கமும்.

வெல் பகையும் நட்பும் –
சமாதானத்தாலே மீளுமதன்றிக்கே வென்றே விட வேண்டும் பகையும், அதற்கு எதிர்த்தட்டான உறவும்.

விடமும் அமுதமுமாய் –
முடித்தே விடுவதான விஷமும், போன உயிரை மீட்கவற்றான அமுதமுமாய்.
போன உயிரை மீட்டுத் தான் போக்கியமுமாய் அன்றோ அமிருதம் இருப்பது.

விருப்பம் இல்லாத வறுமை முதலானவற்றோடு விரும்பக்கூடிய செல்வம் முதலானவற்றோடு வாசியறத் ததீயத்வ
ஆகாரத்தாலே இவர்க்கு உத்தேசியமாய் இருக்குமன்றோ.

பல் வகையும் பரந்த பெருமான் –
ஞானதிகனான தானும்கூட விபூதியைப் பேசப் புக்கு “என்னுடைய விபூதியின் பரப்பிற்கு முடிவு இல்லை” –
ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்மநஸ்ஸுபா:
ப்ராதாந்யத: குருசிரேஷ்ட நாஸ்தி அந்த: விஸ்தரஸ்ய மே”-என்பது, ஸ்ரீ கீதை, 10 : 19.
என்று இளைத்துக் கை வாங்கினத்தை, இவ்வளவு அன்பிலே கனத்த இவரால் சொல்லப் போகாது அன்றோ.
ஆனாலும் சிறிது பேசினாராகவும் வேணும் அன்றோ.

வஸ்துவுக்கு விசேடணத்தை ஒழியத் தோன்றுதல் இல்லை யன்றோ.
“வஸ்து விசேடணம் இல்லாதது” என்று விசேடணம் இல்லாததாக மாயாவாதம் சொல்லுகிறார் அலரே.
அங்ஙனேயாகில் மோக்ஷ சாஸ்திரந்தான் வேண்டாவே.
வஸ்துவின் உண்மையைக் கொள்ளும் போது விசேடணம் வேறுபடுத்துவதாயல்லது இராது.
ஒன்றற்கு ஒன்று விசேடணமாகும் போது அந்ய யோக வியவச்சேதம் பண்ணிக் கொண்டல்லது விசேடணம் ஆகமாட்டாது.
இங்கு, இவனுக்கு, தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களடங்கலும் விசேடணமாயிருக்கையாலே
அந்ய யோக வியவச்சேதம் பண்ண ஒண்ணாது.
ஆனால், மாறுபட்ட விசேடணங்கள் ஒரு பொருளிலே சேருகிறபடி எங்ஙனே? என்னில்,
அயோக வியவச்சேதம் பண்ணிக் கொண்டு சேருகிறது.

பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தம் -ஆய் -சப்தம் தானே அனைத்தையும் சேர்த்து -சரீரம் பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம்
கடிகாரம் இருக்கிறது என்றதும் மற்றதை வேறுபடுத்திக் காட்டுமே -அந்ய யோக வியச்சேதம் ராமனே வில்லாளி –
ராமன் வில்லாளியே -அயோக விவச்சேதம்-யோகம் சேர்த்தி –
இவை எல்லாம் சர்வேஸ்வரன் இடம் உண்டு -அயோக விவச்சேதம்
வேறு யார் இடம் இல்லை -அன்யோக விவச்சேதம் –
அனைவரும் இவருக்கு விசேஷணம் -ஆதலால் அன்யயோக விவச்சேதம் பண்ண வழி இல்லையே
அவனுக்கே விசேஷணம் தானே எல்லா குணங்களும் பொருள்களும் -அன்யோக விவச்சேதம் சொல்லவே முடியாதே
விசேஷணம் -கொண்டே ப்ரஹ்மம் இருக்கும் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -அடைந்து சோஸ்நுதே சர்வான் காமான்
ஆனந்தமாக அனுபவிக்கிறார் -மோஷ சாஸ்திரம் -விசேஷணம் இல்லை என்றால் இது சொல்ல வேண்டாவே என்றவாறு –

இவர் தாம் அவனை அநுபவிக்கவன்றோ இழிகிறது,
இந்த மாறுபட்ட விசேடணங்களைச் சொல்லுகிற இவற்றால் பிரயோஜனம் என்? என்னில்,
அவனை உள்ளபடி கண்டு அநுபவிக்கவேணுமே. இராஜபுத்திரனுக்கு, இராஜாவினுடைய இன்பத்திற் கிடமான ஓலக்கத்தோடு
சிறைக்கூடத்தோடு வாசி அற ‘என் தமப்பனுடைய செல்வம், என்று தோன்றுமன்றோ.
இவர் தமக்கு இங்கு உண்டான அநுசந்தானம், முக்தனுக்கு லீலா விபூதி அநுசந்தானம் போலே அன்றோ.
“ஜனங்களின் நடுவில் இருந்துள்ள இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்”
“நோபஜநம்ஸ்மரந் இதம் சரீரம்” (சாந்தோக்யம், 8. 12 : 3:) -என்னா நிற்கச் செய்தே,
முக்தனுக்கு லீலாவிபூதி ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேசியமாகா நின்றதன்றோ.
இவர்க்கும் அப்படி முக்தரோடு ஒக்கத் ததீயத்வ ஆகாரம் ஒழிய, வேறு ஆகாரமாக நினைவு இல்லாதபடி
இங்கே இருக்கச் செய்தே மயர்வு அறுத்துக் கொடுத்தான்.
தம்முடைய சம்பந்தத்தாலே பார்த்த போது கால்வாங்கியல்லது நிற்க ஒண்ணாதபடி தியாஜ்யமாகத் தோற்றும்.
அன்றிக்கே, ஞான அஜ்ஞானங்களுக்குப் பொதுவான இந்த இருப்பைக் கழித்து,
அதற்குக் கலக்கமில்லாத தேசத்திலே போகையிலே விரையக்கடவன் எனப்படுதலால் என்னுதல்.

பல்வகையும் பரந்த பெருமான் –
இப்படி உலக முகத்தாலே பலபடியாக விரிந்திருப்பவனானவன்.

பரந்த பெருமான் என்னை ஆள்வானை –
இங்ஙனம் பரந்து இருத்தல் எல்லாம் தம்மை அகப்படுத்த என்று இருக்கிறார்;
ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே.

செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேன்-
மரு பூமியிலே -மருபூமி – நீரும் நிழலும் அற்ற பாலை நிலம்.-பொய்கை கண்டாற்போலே இருக்கிறபடி.
மிக்க செல்வத்தை யுடைத்தான குடிகளையுடைய திருவிண்ணகர் என்பார் ‘செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்’ என்கிறார்.

“இலக்குமணன் செல்வத்தால் நிறைந்தவன்”
– ஸர்வ ப்ரியகர: தஸ்ய ராமஸ்ய அபி ஸரீரத:
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 28.-என்னுமாறுபோலே,
சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, கடக்கக் கிடந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போலன்றிக்கே,
கிட்ட நின்று அடிமை செய்யும் இளைய பெருமாளைப் போலே.
‘காண வேண்டும்’ என்னும் ஆசையோடே இருந்து வேறு சரீரத்தை அடைந்து வேறு தேசத்திலே போய்க் காண்கை யன்றிக்கே,
பசித்த இடத்தே சோறு பெறுமாறு போலே, -தேசாந்தரம் தேகாந்த்ரம் காலாந்த்ரம் இல்லாமல்
ஆசைப்பட்ட இடத்தே அநுபவிக்கப் பெறுதலின் ‘திருவிண்ணகர்க் கண்டேன்’ என்கிறார்;
“நான் சென்று நாடி நறையூரிற் கண்டேனே”- பெரிய திருமொழி, 6. 8 : 1.– என்னுமாறு போலே.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading