Archive for July, 2023

ஸ்ரீ ஆர்த்தி ப்ரபந்தம்–

July 12, 2023

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*
தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*
மணவாள மாமுனிவன் வந்து–

மணவாள மாமுனிகள் யதிராஜரான எம்பெருமானாரின் தேன் பெருகும் திருவடி மேலே
பரமபக்தி என்று சொல்லப்படும் அளவிறந்த அன்பால், அந்த எம்பெருமானாரைப் பிரிந்து வாடும் வாட்டத்தை
வெளியிட்டுக் கொண்டு, அறிவில் குறைந்தவர்களின் ஆத்மாவுக்கு அந்த எம்பெருமானாரிடத்தில்
பக்தியை வளர்க்கும் உணவாக, அழகிய தமிழ் ப்ரபந்தமாக இந்த ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செய்துள்ளார்.

———–

வம்பவிழ்தார் வண்மை மணவாள மாமுனிகள்*
அம்புவியில் கால் பொருந்தா ஆர்த்தியினால்* – உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள் *
நண்ணி உரைத்தார் நமக்கு-

தேன் பெருகும் மாலையை அணிந்து, வள்ளல் தன்மையுடன் இருக்கும் மணவாள மாமுனிகள்
யதிராஜரான எம்பெருமானாரைப் பிரிந்து இந்த நிலவுலகில் வாழ முடியாத ஆற்றாமையினால்,
நித்யஸூரிகள் நித்யமாக எம்பெருமானைத் தொழும் பரமபதத்தில் உள்ள எம்பெருமானாரின் திருவடிகளை
விரைந்து சென்றடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதை நம்மைப் பார்த்து உபதேசிக்கிறார்.

———–

ஆர்த்தி தான் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்–பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
முந்நீர் ஞாலத்திலும்–அறுக்கும் வினையிலும்–ஆழ்வார் அருளிச் செய்தது –

அத்தைப் பற்றி இறே-வம்பவிழும் தாரான் -என்றும் –தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று
——————

மெய் கொள் காண வேணும் -என்கிற அபி நிவேச அதிசயத்தால் மெய் வெளுத்து-தத் கார்யமான பிராப்தி தசையை பிராப்தராய்
இப்படி கரை புரண்ட ஆற்றாமையை யுடையராய் இருக்கிற தாம்-ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தாலே
தமக்குப் பிறந்த பரம பக்தி தசையைப் பேசி அனுபவித்து அருளுகிற முகத்தாலே-சரம பர்வ நிஷ்டராய் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
பிராவண்யத்தை யுடையராய் இருக்கும் சரம அதிகாரிகள் எல்லாருக்கும் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி
இப் பிரபந்த முகேன அவற்றை வெளி இட்டு அருளுகிறார்

முடிந்த அவா -என்னும்படியும்-சொல்லும் படியான பரம பக்தியை பிராப்தராய்
அந்த தசையைப் பேசின பாசுரம் ஆகையாலே ஆர்த்தி -என்று இதுக்கு நிரூபக திரு நாமமே இருப்பது

தம் அபி நிவேசம் எல்லாம் தோற்ற –பராங்குச பாத பத்தாம் -என்றும்
சடகோபன் தேன் மலர் தாட்கே ஏய்ந்து இனிய பாதகமாம் எந்தை இராமானுசன் -என்றும்
முடிந்த நிலமாகச் சொல்லப்படுகிற சரம பர்வமே சரமாவதி என்று
இச் சரம அர்த்தத்தை =சரம காலத்தில் -சரம பிரபந்த ரூபேண இதிலே யாய்த்து வெளி இட்டு அருளிற்று –

அதில்
ஸ்ரீ யதிராஜ விம்சதி-ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று தொடங்கி
தஸ்மாத் அநந்ய சரணோ பவ தீதிமத்வா -என்று தலைக் கட்டுகையாலே-பிராபக பரமாய் இருக்கும்

இங்கு -வாழி எதிராசா -என்று தொடங்கி -இந்த அரங்கத்து இனிது இரு நீ -என்று தலைக் கட்டுகையாலே
இது பிராப்ய பரமாய் இருக்கும்

இவருக்கு இப்பிரபந்தத்தில் ஓடுகிற தசை தான் அநேக பாவ வ்ருத்திகளை யுடைத்தாய்
இது தான் ஒரு சந்தஸ்சில் அடங்காமல்-பல சந்தஸ் ஸூக்களிலும்-அவற்றை அருளிச் செய்கிறார் –

—————-

எப்படிப் பெரியாழ்வார் பாசுரம் பாடத் தொடங்கும்போதே எம்பெருமான் விஷயத்திலும்
அவன் அடியார்கள் விஷயத்திலும் பல்லாண்டு பாடினாரோ,
அப்படி மணவாள மாமுனிகளும், எம்பெருமானார் விஷயத்திலும்
அவர் அடியார்கள் விஷயத்திலும் பல்லாண்டு பாடுகிறார்

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழியென
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை–1-

யார் எப்பொழுதும் “வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!” என்று
எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ,
அப்படிப்பட்ட எம்பெருமானார் அடியார்களுக்கு யார் மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ,
அப்படிப்பட்ட (முன் சொன்ன) அடியார்களுக்கு யார் மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ,
அப்படிப்பட்ட (முன் சொன்ன) அடியார்களுடைய திருவடிகளில் யார் வணங்கி இருக்கிறார்களோ,
அவர்கள், நித்ய ஸூரிகளுக்குத் தலைவர்களாக விளங்குவார்கள்.

விண்ணோர் தலை –நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –அன்றிக்கே -அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–

————-

நம்மாழ்வார் எப்படி திருவாய்மொழியின் முதல் பதிகத்தில் “தொழுதெழு என் மனனே” என்று சொல்லி,
தொழுகைக்கு விஷயமான எம்பெருமானைக் காட்டும் மந்த்ரத்தை அடுத்த பதிகத்தில்
“வண் புகழ் நாரணன்” என்று காட்டினாரோ, அதே போல,
மணவாள மாமுனிகளும், இப் பாட்டில் எம்பெருமானார் விஷயமான மந்த்ரத்தை வெளியிடுகிறார்.

இராமாநுசாய நம என்று சிந்தித்திரா
மாநுசரோடு இறைப் போழ்து இராமாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு–2-

யாரெல்லாம் “ராமாநுஜாய நம:” என்று சிந்திக்காமல் உளரோ அவர்களோடு
ஒரு க்ஷணப் பொழுதும் பழகாமல் இருக்கப் பார்ப்பவர்களுடைய இரண்டு திருவடிகளில்
சேர்ந்திருப்பவர்களுடைய இரண்டு திருவடிகளை வணங்குபவர்கள்
நித்ய ஸூரிகளுக்கு எப்பொழுதும் இருக்கும் செல்வமாக இருப்பார்கள்.

கீழில் பாட்டில்–அந்வய முகத்தாலே சாதித்த அர்த்தத்தை-இதில் வ்யதிரேக முகத்தாலே வெளியிட்டு அருளி
இம் முகத்தாலும்-ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தை-எல்லை நிலத்து அளவும் பேசி அனுபவித்து அருளுகிறார் —

——-

எம்பெருமானாரைப் பார்த்து “அடியேனுக்கு எல்லா உறவும் தேவரீராக இருக்க,
அந்த நிலைக்கு தடையாக இருக்கும் என் உடம்பை ஏன் இன்னம் அறுத்து அருள வில்லை?” என்கிறார்.

தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம்*
என் தனக்கு நீயே எதிராசா!* இந்நிலைக்கு
ஏராத இவ்வுடலை இன்றே அறுத்தருளப்*
பாராதது என்னோ? பகர்–3-

எதிராசரே! தேவரீரே அடியேனைப் போன்றவர்களுக்குத்
தந்தை, அன்புடைய தாய், மனைவி, பிள்ளைகள் மற்றும் பெரிய செல்வம்.
இந்த நிலைக்குப் பொருந்தாத என்னுடைய இந்த உடம்பை இப்போதே அறுத்து அருளாதது
என்ன காரணத்தினாலேயோ? அதைச் சொல்லி அருள வேண்டும்.

சர்வஞ்ஞரான தேவரே அருளிச் செய்ய வேணும்
அது வருத்தமாய் இருந்ததோ –அதுக்கும் ஒரு கால் சிந்தனை செய்யும் அத்தனை அன்றோ உள்ளது –

நல் -என்கிற இத்தை எல்லாத்திலும் கூட்டிக் கொள்ளவுமாம்

—————–

கீழ்ப் பாசுரத்தில் விரோதியாகச் சொன்ன உடம்பையே தனக்கு (ஆத்மாவுக்கு) சிறைக் கூடமாக நினைத்து,
எம்பெருமானாரே தன்னை இந்தச் சிறையிலிருந்து விடுவிக்கக் கூடியவர் என்று கொண்டு
அதை அவரிடத்தில் ப்ரார்த்திக்கிறார்.

இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யானேகி*
அந்தமில் பேரின்பத்துள் ஆகுவேன்* – அந்தோ
இரங்காய் எதிராசா! என்னை இனி உய்க்கை*
பரங்காண் உனக்கு உணர்ந்து பார்–4-

இந்த உடல் என்னும் சிறையில் இருந்து விடுதலை பெற்று எப்பொழுது அடியேன்
அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று முடிவு இல்லாத பேரின்பத்தை உடைய பரம பதத்துக்குள் இருக்கப் பெறுவேன்?
யதிகட்கு இறைவரே! கருணையைப் பொழிய வேண்டும்.
அடியேனை ரக்ஷிப்பது தேவரீருடைய பொறுப்பன்றோ? ஆலோசித்துப் பார்த்தருளவும்.

ஸ்ரீ ஈஸ்வரனும் கூட -ஷிபாமி -என்று கை விட்டவரை-சிறையான அடியேனை-இனி உஜ்ஜீவிப்பித்து ரஷிக்கை
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் அவதரித்த தேவர்க்கே பரம் காணும்-இவ்வர்த்தத்தை திரு உள்ளம் பற்றிப் பார்த்து அருளீர் –

————

எம்பெருமானாராலே தன்னைக் கை விட முடியாது என்பதை ஒரு உதாரணத்தைக் கொண்டு உணர்த்துகிறார்.

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்*
இன்புறுமோ? தந்தை எதிராசா! * – உன் புதல்வன்
அன்றோ உரையாய் யான் ஆதலால்* உன் போகம்
நன்றோ? எனை ஒழிந்த நாள்–5-

தன்னுடைய பிள்ளை அருகில் இல்லாத போது தான் அனுபவிக்கும் செல்வம் முதலியவை தந்தைக்கு இன்பத்தைக் கொடுக்குமோ?
யதிகட்குத் தலைவரே! அடியேன் தேவரீரின் புத்ரன் அல்லவோ?
தேவரீரே இதைச் சொல்லி அருள வேண்டும்.
ஆகையாலே, அடியேனைப் பிரிந்து இருக்கும் நிலையில் தேவரீருடைய இன்பம் நன்றாக இருக்குமோ?
“அது இன்பமாக இருக்காது என்பதால் அடியேனையும் தேவரீரிடத்தில் அழைத்துக் கொள்ள வேண்டும்” என்று கருத்து

அடியேனும் தேவர்க்கும் அவர்ஜநீயனான புத்திரன் அன்றோ –-இதில் சந்தேஹம் இல்லை என்பதை தேவரீரே அருளிச் செய்து அருளீர்

——————-

தேவரீர் விஷயத்தில் அனுகூலமாய் இருப்பவர்களுக்கு தேவரீர் தக்க ஸமயத்தில் நன்மையைச் செய்யலாம்.
அடியேன் ப்ரதிகூலனாக இருப்பதால் மேலும் மேலும் தவறுகளே செய்வேன்.
ஆகையால் அதற்கு முன்பு என்னுடைய தேஹத்தைப் போக்கி யருள வேண்டும் என்கிறார்.

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகமுற்றிச் செல்லுங்கால் ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா! இவ் வுடலைத்
தீர்க்கவே ஆன வழி செய்–6-

எப்படி வேப்ப மரம் முற்ற முற்ற, அதின் கசப்பு அதிகம் ஆகுமோ, அதே போல
க்ரூரமான கர்மங்களை உடைய நான், உடம்பு முற்ற முற்ற, மேலும் மேலும் தவறுகளையே செய்வேன்.
ஆகையால், யதிகளுக்கு நாதரானவரே! அடியேனுடைய ஸ்வரூபம் நிலைத்து இருப்பதற்காக,
தேவரீர் முற்பட்டுச் சிந்தித்து அடியேனுடைய இந்த உடலை முடிப்பதற்கான வழியைச் செய்தருள வேண்டும்.

ஆம் பரிசால் -ஸ்வரூப சத்தை  யுண்டாம் பிரகாரத்திலே-முற்கோலிச் சிந்தித்து –எதிகளுக்கு நாதரானவரே
இந்த ஹேய சமுதாயமான தேஹத்தை முடிக்கைக்கேயான உபாயம் செய்து அருள வேணும் –

பிரதிகூலனான எனக்கு அரை ஷணம் தாழ்க்கிலும் பிராதிகூல்யமே கை விஞ்சி வரும்
ஆகையால் ஹேய குண வர்த்தகமான தேஹத்தை தத் பூர்வமே போக்கும்படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

——————

உம்முடைய கார்யம் நாம் ஏன் பண்ண வேண்டும் என்று எம்பெருமானார் கேட்பதாகக் கொண்டு,
மணவாள மாமுனிகள் “பால் குடிக்கும் குழந்தை என்று தன் கார்யத்தைத் தானே செய்து கொள்ளுமோ
அன்று தான் தேவரீரையே நம்பி இருக்கும் அடியேனும் அடியேன் கார்யத்தைச் செய்து கொள்வேன்” என்கிறார்.

அன்னை குடி நீர் அருந்தி முலையுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ? என்னே
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்
உனக்கது தாழ்வோ? உரை–7-

தன் குழந்தையிடத்திலே மிகவும் அன்பு கொண்ட தாயானவள் அக்குழந்தைக்கு ஏதேனும் நோய் வந்தால்
தான் நீர் முதலியவற்றை அந்த நோயை வளர்க்காத விதத்தில் பருகி, தன்னால் ஊட்டப்படும் குழந்தையின் நோயைப் போக்காளோ?
என்ன ஆச்சர்யம்! அடியேனிடத்தில் தாயன்பு கொண்டிருக்கும் எதிராசரே!
அடியேன் பண்ண வேண்டிய அனுஷ்டானங்களை அடியேனுக்குப் பதிலாக தேவரீர் அனுஷ்டித்தால்
அடியேனுக்கு நன்மையை ஏற்படுத்தினால், அது தேவரீருக்குக் கெடுதலோ?-இதைத் தேவரீரே அருளிச் செய்யலாமே.

ஸ்த நந்த்ய பிரஜை தன் கார்யத்துக்கு வேண்டுமவை தானே செய்து கொள்ளில் அன்றோ
தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யமான அடியேனும்-ஸ்வ காரியத்துக்கு ஷமனாய் செய்து கொள்வது -என்கிறார்-

ஆச்சார்ய அபிமானம் ஆவது-இவை ஒன்றுக்கும் சக்தி இன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து
இவனுடைய இழவையும்-இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டாகும் பிரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே

இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான-மகா பாகவத அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று சொல்லுகிறபடியே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்கு ஆக்குகை-என்னும் அளவாக
அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை யாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது

——————

எம்பெருமானார் “நாம் தாயைப் போலே உம்மை ரக்ஷிக்க வேண்டும் என்று சொன்னீர்.
ஆனால் நீரே நல்ல மற்று தீய செயல்களைச் செய்கிறீரே. நாம் எப்படி உம்மை ரக்ஷிப்பது?”
என்று கேட்பதாகக் கொண்டு, மணவாள மாமுனிகள் “அடியேனை தேவரீர் ரக்ஷிக்கவில்லை என்றால்
அது தேவரீருக்கே அவப் பெயரைக் கொடுக்கும்” என்கிறார்.

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்திருக்கக் கண்டிருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் நன்குணரில்
என்னாலே என்னாசமேலும் எதிராசா!
உன்னாலே ஆமுறவையோர்–8-

தாயானவள், தன்னுடைய குழந்தை பெரிய கிணற்றுக்கு அருகில் சேர்ந்து இருக்க,
அதைத் தடுக்காமல் இருந்தாள் என்பதையே தனக்கு அவப்பெயராகப் பெறுகின்றாள்.
எதிராசரே! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் பாபாமாகிற படுகுழியைக் கிட்டின என்னாலே
என்னுடைய நாசத்தை விளைத்துக் கொள்ளப்பட்டது என்றாலும் தேவரீரிடத்தில்
அடியேனுக்கு இருக்கும் ஸம்பந்தத்தை ஆராய்ந்து பார்க்கவும்.

பாபங்கள் ஆகிற படு குழியை கிட்டி நின்ற என்னாலே-ஸ்வ விநாசத்தை விளைத்துக் கொள்ளப் பார்த்தேனே யாகிலும்
அத்தை நிஷேதித்து ரஷிக்க வேணும்படி-எதிகளுக்கு நாதரான தேவராலே யுண்டாம் சம்பந்தத்தை திரு உள்ளம் பற்ற வேணும் –

இத்தால்-சம்பந்தம் அடியாக சர்வ தசையிலும் ரஷிக்க வேணும் -என்று கருத்து –
இதத்தாய் இராமானுசன் -என்கிற திவ்ய ஸூக்தியையும்
பிரஜையை கிணற்றின் கரையில் நின்றும் வாங்காது ஒழிந்தால்
தாயே தள்ளினாள் என்னக் கடவது – இறே -என்கிற திவ்ய ஸூக்தியும்-ஆயத்து இதுக்காகும் –

——————

அருகில் இருப்பவர்களுக்கு “நீர் பாபங்களே செய்து இன்னம் பல பிறவிகள் எடுக்கவேண்டும்படி இருந்தால்
எம்பெருமானாராலே என்ன செய்ய முடியும்” என்பது கருத்தாகக் கொண்டு
“அப்படியானாலும், அடியேனுக்காக அவரும் அவதாரம் செய்து அடியேனை ரக்ஷித்து அருளுவார்” என்கிறார்.

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் பாபத்தால்
யான் பிறப்பேனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா–9-

கிணற்றில் விழும் குழந்தையோடே குதித்து அவ்வாபத்தை நீக்கும் தாயைப்போலே
அடியேன் பண்ணிய பாபத்தாலே அடியேன் இன்னும் சில பிறவிகளை எடுத்தாலும் அடியேனுக்குத் தந்தையாகிய எதிராசர்,
அடியேனைக் கை தூக்கி விடுவதற்காக தாமும் அவதரித்து அருளுவார்.

நான் பிறந்த ஜென்மத்துக்கு ஈடாக தாமும் என்னை உத்தரிப்பதாக-எதிர் சூழல் புக்கு அவதரித்து அருளுவார் –

உடைமைக்கு ஒரு முழுக்கு-உடையவனுக்கு உடமை பெறும் தனையும் -முழுக்க வேண்டி இறே இருப்பது –

—————

எம்பெருமானார் திருவடிகளை விட்டு விலகி, மனது வேறு விஷயங்களில் ஈடுபடுவதனாலேயே
கர்மமும் அதன் மூலம் ஜன்மமும் கிடைக்கிறது.
இனி அப்பேச்சுக்கே இடம் இல்லாதபடி அவர் திருவடிகளைப் பொருந்தி வாழ்
என்று தன் திருவுள்ளத்தைக் குறித்து அருளுகிறார்.

பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்த் தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமாநுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே! வாழ்–10-

எனக்கு பவ்யமான நெஞ்சே!
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -இத்யாதிப் படியே–மலர்மகளான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான
பெரிய பெருமாளுடைய-பூவார் கழல்களுக்கு –திருவடித் தாமரைகளுக்குப் பாதுகைகளாய்–
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று ஸ்ரீ சடகோபனாய்- அத்தாலே தாம் ஆனந்தப்படும் செல்வமான நம்மாழ்வாருடைய-

தேன் பெருகும் மலர் போன்ற திருவடிகளுக்குப் பொருந்திய, ப்ரியமான திருவடி நிலைகளாய்,
நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளுக்கு ஸ்வரூப பிராப்தமாய் இருக்கையாலே அனுரூபமாய்
மேவினேன் அவன் பொன்னடி -என்னும்படி பொருந்தி-அத்யந்த அபிமதமான திருவடி நிலைகளாய்-
இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி நெஞ்சே வாழ -என்கிறபடி அடியேனுக்குத் தந்தையாய் இருக்கும்
ராமானுஜர் என்னும் எம்பெருமானாரைச் சரணடைந்து வாழ்.

இத்தால்-ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யத்துக்கு எல்லை நிலம் இவர் ஆகையாலே
அவர் திருவடி நிலைகளுக்கும்-ஸ்ரீ யதீந்திர பிரவணர் என்று நிரூபக மாக வேணும் இறே-

———–

எம்பெருமானார் “நீர் நாமே எல்லாம் என்றிருக்கும் வடுகநம்பி போன்றோர்
பெற்ற பேற்றை ஆசைப் படுகிறீர்” என்று சொல்ல,
மணவாள மாமுனிகள் “தேவரீரே அந்நிலையை அடியேனுக்கு உண்டாக்கி,
அடியேனை எப்பொழுதும் அடிமை கொண்டு அருள வேண்டும்” என்கிறார்.

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா! எந் நாளும்
உன் தனக்கே ஆட்கொள் உகந்து–11-

எம்பெருமானாரே! தேவரீரைத் தவிர எம்பெருமானைக் கூட தெய்வமாக அறியாத,
பொருந்திய புகழை உடைய வடுகநம்பி யுடைய சரம பர்வ நிஷ்டையை தேவரீர் தந்தருளி
எக் காலத்திலும் தேவரீருக்கே அடியேனை அடிமையாகக் கொள்ள வேண்டும்.

எனக்கே ஆட் செய் எக் காலத்தும் -என்கிறபடியே -தேவர்க்கே ரசவஹமாம்படி
சர்வ காலத்திலும் உகப்போடே அடிமை கொண்டு அருள வேணும்
அங்கே போகிலும் அவர் உகந்த அடிமையேயாக வேணும் என்று கருத்து –

மன்னு நிலை சேர் வடுக நம்பி என்று பாடமான போது-நிழலும் அடிதாறும் ஆனோம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா என்றும் பேசும்படி அத்யந்த பரதந்த்ரராய் -பொருந்தி இருக்கிற சரம பர்வ நிஷ்டை வேணும் என்று கருத்து –

————————

எம்பெருமானார் “இப்படி நீர் சொல்வதைச் செய்வதற்கு நமக்குள் என்ன உறவு உள்ளது” என்று
கேட்பதாகக் கொண்டு தனக்குத் திருவாய்மொழிப் பிள்ளையுடன் உள்ள உறவை
எடுத்துரைக்கிறார் மணவாள மாமுனிகள்.

தேசந் திகழும் திருவாய்மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா!
அப்படியே நீ செய்தருள்–12-

எம்பெருமானாரே!
எல்லா இடங்களிலும் ப்ரகாசிக்கும் வைபவத்தை உடையராய் திருவாய்மொழியில் உள்ள ஈடுபாட்டாலே
திருவாய்மொழிப் பிள்ளை என்றே அழைக்கப் படுபவரான, தன்னிடத்தில் தானே ஆசார்யத்வத்தை ஏறிட்டுக் கொள்கை
முதலான குற்றங்கள் இல்லாத திருமலை ஆழ்வார், தம்முடைய தயைக்குப் பாத்ரமான அடியேனை
“இவன் எப்படி மாறினால் உஜ்ஜீவனத்தை அடைவான்?” என்று ஆராய்ந்து
தேவரீர் திருவடிகளிலே சேர்த்தருளினாரோ, அவ்வழியிலேயே
தேவரீர் அடியேனை உஜ்ஜீவனம் அடையச் செய்ய வேண்டும்.

ஸ்ரீ சைல நாதன்-தம்முடைய தயா பாத்ரமான அடியேனை -கருணா பரிணாம ரூப ஸ்நேஹத்தாலே
இவன் எப்படி யானால் ஜீவிக்கும் என்று விசாரித்து-பிராப்த சேஷியான தேவர் திருவடிகளிலே சேர்த்து அருளினார்

அப்படியே தேவரும் திரு உள்ளம் பற்றி உஜ்ஜீவிப்பித்து அருள வேணும் –

—————

தாம் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கக் கூடிய எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் பண்ணி
அவர் திருவடிகளில் பரம்பரையாக ஸம்பந்தம் பெற்றவர்கள் பெறும் பேற்றை அருளிச் செய்கிறார்.

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று ஏத்திச் சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்–13-

“யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக”, “யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக”,
“யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக” என்று பல முறை சொல்லி, ஸ்தோத்ரம் பண்ணி,
ஸாமர்த்யமாக வாழ்பவர்களுடைய திருவடிகளின் கீழே வாழ்பவர்கள்
ஆழ்வார்களுடைய அருளை முழுவதுமாகப் பெறுவர்கள்.

இத்தால்–இவர்களுக்கு சரம அவதி தாஸ்யம் நிலை நிற்கும்படி கடாஷிப்பார்கள் -என்றபடி

முதல் பாட்டிலே-மங்களா சாசன பரருடைய சம்பந்த சம்பந்திகளை-அயர்வறும் அமரர்கள் ஆதரிப்பார் என்றார்

இதில்-அவர்களை மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆதரிக்கும் படியை-அருளிச் செய்கிறார் –

—————————–

“தேசம் திகழும்” என்னும் பாசுரத்தோடு இப்பாசுரத்துக்குத் தொடர்பு.
நடுவில் வந்த பாசுரம், எம்பெருமானார் வைபவத்தை நினைத்து சொல்லப்பட்டது.
எம்பெருமானார் “திருவாய்மொழிப் பிள்ளை உம்மை நம்மிடத்திலே சேர்த்ததைச் சொன்னீர்.
நீர் அதற்கு மேலே எதுவும் அதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளீரோ?” என்று கேட்பதாகக் கொண்டு,
மணவாள மாமுனிகள் “அதிகாரம் இருந்தால் தேவரீரிடத்தில் வரவேண்டிய அவச்யம் இல்லையே என்கிறார்”.

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!–14-

எம்பெருமானாரே! ஞானம் மற்றும் அநுஷ்டானங்களில் பூர்த்தியோடு இருக்கும் அதிகாரம் இருந்தால்
பெரிய பெருமாளே தன் அருளைக் கொடுக்க மாட்டாரோ?
அப்படிப்பட்ட அதிகாரம் இல்லாதவர்களுக்காகத் தானே தேவரீர் அருள் புரிந்து ரக்ஷிக்க வேண்டுவது?
தேவரீரும் அதிகாரிகளுக்கே அருள் புரிவேன் என்று சொன்னால் அடியேனைப் போன்ற
அதிகாரமில்லாதவர்கள் என் செய்து உஜ்ஜீவனத்தை அடையப் போகிறோம்?

அகதிகளுக்கே கதியாக இருக்கிற ஈத்ருச ஸ்வ பாவரான தேவரும் அதிகார சம்பத்தை உடையவர்களுக்கே கிருபை பண்ணி ரஷிக்கில்
அநாதிகாரிகளாய் இருக்கிற அஸ்மதாதிகள் எந்த யோக்யதையை உப பாதித்து கொண்டு உஜ்ஜீவிக்கப் புகுகிறோம்
அநாதி காலத்தோபாதி இழந்தே போம் அத்தனை அன்றோ-

——————-

பரம தார்மிகரான எம்பெருமானாரை மீண்டும் மீண்டும் குற்றம் சொல்கிறோம்.
அவர் திருவடிகளை அன்போடு நினைத்தால் அவரே நமக்கு எல்லா நன்மைகளையும் செய்வார்.
இப்படியிருக்க, அவரிடத்திலே நமக்கு உண்மையான அன்பு இல்லையே என்று வருந்துகிறார்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா உரைக்கும் இத்தால் என்? அன்பவர் பால்
இப்போதளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது உண்டாவது இனி?--15

“எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று சொல்லப்படும் இந்த வாசகத்தையே
அடியேனுடைய நாக்கு அன்பில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும்.
இதனால் என்ன பயன்?
இந்த க்ஷணம் வரை அவர் விஷயத்தில் ஒரு அன்பையும் என்னிடத்தில் பார்க்கவில்லை.
இது வரை வாராத அது இனி எப்பொழுது வர போகிறது?

ஸ்ரீ பிள்ளை கொல்லி காவல் தாசருக்கு ஸ்வரூப உஜ்ஜீவனமாயும்
ஸ்ரீ சோமாசி ஆண்டானுக்கு நித்ய பிராப்யமுமாய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று சொல்லப் படுகிற இந்த வாசகத்தையே
அஹ்ருதயமாக என் நாவானது சொல்லா நிற்கும் –

அடியிலே-ஸ்ரீ இராமானுசாய நம -என்று உத்தர வாக்ய தாத்பர்யத்தையும்
இதில் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சரணம் -என்று பூர்வ வாக்கியம் தாத்பர்யத்தையும்-வெளியிட்டு அருளுகிறார் –
(ஸ்ரீ ராமானுஜ த்வயமே சரம பர்வ நிஷ்டர்க்கு ஸதா வக்த்தவ்யம்-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -மதுர கவி ஆழ்வார் -அனுபவ தசையில் )

————————

எம்பெருமானார் “நம்மிடத்தில் உமக்குச் சிறிதளவும் அன்பில்லை என்றாலும்,
விரோதமாகவாவது செய்யாமல் இருக்கிறீரோ?” என்று கேட்பதாகக் கொண்டு,
மணவாள மாமுனிகள் “அதுவும் இல்லை. அறிவிலியான அடியேனுடைய குற்றத்தை
போகமாகக் கொள்ளும் தேவரீர் திருவடிகளை என்று நான் அடைவேன்?” என்கிறார்.

ஆகாதது ஈது என்றறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வன் ஆதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா!
என்று உன் அடி சேர்வன் யான்?–16-

யதிராஜரே! நல்லோர்களால் கைவிடப்படுபவன எது என்று நன்கறிந்தும்,
அதை மற்றவர்களுக்கு உபதேசித்தும்
அப்படிப்பட்ட செயல்களையே எப்பொழுதும் செய்வேன்.
இப்படி இருப்பதால், -மோகாந்தன் – மோஹத்தால் அந்தகன்-மயக்கத்தால் குருடன்-என்று
திருவுள்ளத்திலே கொண்டு, அடியேனைத் தள்ளி விட வேண்டாம்.
எப்போது அடியேன் தேவரீர் திருவடிகளை அடையக் கடவேன்?

இப்படி மோஹாந்தனாய் முன்னடி தோன்றாதே இருக்கிற அடியேனுக்குத் தளப்பம் தீரும்படி
சர்வஞ்ஞரான தேவரீர் ஒரு நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் என்கிறார் ஆகவுமாம்-

—————————

கீழே “எப்பொழுது தேவரீரை அடைவேன்?” என்று கேட்ட இவருக்கு எம்பெருமானார்
“சரீர வியோகத்தில் கொடுக்கிறோம்” என்று சொன்னதாகக் கொண்டு
“உடனே கொடுக்காமல் காலம் தாழ்த்துவதன் காரணம் ஏதோ?” என்கிறார்.

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஒன்று
இல்லா எனக்கும் எதிராசா! நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவேன் என்ற நீ
தண் என்றிருக்கிறது என் தான்?–17-

யதிராஜரே! தீய செயல்கள் எல்லாவற்றையும் பதித்துக் கொண்டு,
நல்ல செயல்கள் ஒன்றும் இல்லாத அடியேனுக்கு,
ஸத் புருஷர்கள் அடையத் தகுந்த பரமபதத்தை நாமே தருகிறோம் என்று அருளிச்செய்த தேவரீர்
கால் தாமதம் செய்வதன் காரணம் என்ன?–உடனே தந்தருள வேண்டும் என்று கருத்து-

வேறு சிலர் ரஷகர் யுண்டோ–தானே சாதன அனுஷ்டானம் பண்ணி வருகிறான் என்றோ –-எத்தாலே தான் தாழ்க்கிறது-

அநந்ய கதியாய் அகிஞ்சனனாய் இருக்கும் அடியேனுக்கு–சீக்ரமாக பிராப்ய தேசத்தை பிராபித்து அருள வேணும் -என்று கருத்து-

———————

எம்பெருமானார் இவர் ஆசைப்பட்டதைச் செய்து தருவதாக இருக்க,
அது கிடைக்கும் வரை பொறுக்க முடியாமல், இந்த ஸம்ஸாரமாகிற இருட்டு
அடியேனுக்கு எப்போது முடியும் என்று அவரையே கேட்கிறார்.

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா!
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் குன்றாமல்
இப்படியே இந்த உயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு–18-

அடியேனுக்குத் தந்தையான யதிராஜரே!
குறையாமல் இப்படியே இந்த ஆத்மாவுக்கு அறியாமை என்னும் இருட்டை விளைக்கும் இந்த ஸம்ஸாரமாகிற
காள ராத்ரியில் (கருப்பு இரவு) அகப்பட்டு வழி தெரியாமல் திகைக்கும் அடியேனுக்கு
எப்போது தேவரீரை அடைவதான நல் விடிவு ஏற்படும்?
இவ்விஷயத்தில் அடியேன் ஒன்றும் அறியாமல் இருக்கிறேன்.
எல்லாம் அறிந்த தேவரீர் இதற்கு ஒரு நல்ல விடிவை அருள வேண்டும்.

என்னுடைய சம்சாரம் ஆகிற விடியா வெம் நரகமான காள ராத்ரிக்கு என்று
ஒரு நல் விடிவு பிறக்கும் என்று ஸ்ரீ ராமானுஜ திவாகரான அவர் தம்மையே கேட்கிறார் –

—————–

எம்பெருமானாரின் கை பார்த்திருக்கும் தான் இப்படி உடம்புக்கு வசப்பட்டிருப்பது
அவருக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளக்குகிறார்

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது உன் தேசுக்குத் தீங்கன்றோ? நல்லார்கள்
தந்தனயர் நீசர்க்கு ஆட்செய்யச் சகிப்பரோ?
எந்தை எதிராசா! இசை–19-

அடியேனுக்குத் தந்தையான யதிராஜரே! இரவும் பகலும் அடியேன் இந்த உடம்பின் வழி
சென்று ஈடுபட்டிருப்பது தேவரீருடைய பெருமைக்கு ஒரு கேடன்றோ?
ப்ரஹ்ம ஞானத்தை உடைய நல்லார்கள் தங்கள் புதல்வர்கள் தாழ்ந்தவர்களுக்கு
தாழ்ந்த தொண்டுகளைச் செய்து கொண்டிருப்பதைப் பொறுப்பார்களோ?
இதைத் தேவரீரே அருளிச் செய்ய வேண்டும்

அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே தேக கிங்கரனாய்-அதுவே யாத்ரையாய்த் திரிகிறது –
உனக்குப் பணி செய்து இருக்கும்-(பெரியாழ்வார் ) இத்யாதிப் படியே தேவர்க்கு தேஜோ ஹானி அன்றோ

ஆகையால் அத்தைத் தவிர்த்து இவ் வாத்மாவுக்கு சேஷியான தேவரே அநவரதம் அடிமை கொண்டு அருள வேணும் என்று கருத்து –

——————-

எம்பெருமானார் தனக்கு அர்ச்சிராதி கதியில் சென்று பரமபதத்தை அடையும் பேற்றைச்
செய்து கொடுக்க இருக்கிறார் என்பதை உணர்ந்து இனி நமக்குப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பி,
அர்ச்சிராதி கதியில் போவது தொடங்கி பரமாத்மாவுக்குத் தொண்டு செய்வது முடிய
எல்லாவற்றையும் தாம் பெற்றதாக நினைத்து ஆனந்தம் அடைகிறார்.

ஆழ்வாரது சூழ் விசும்பு திருவாய் மொழி போல் பர ஞான தசையில் அருளிச் செய்கிறார்

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை ஆற்றில்
நாம் மூழ்கி மலம் அற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலந்திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப மாமணி மண்டபத்துச் சென்று
மாமலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே–20-

கள்வன் கொல் ஸ்ரீ பிராட்டியைப் போலே-அவன் முன்னே வழி நடத்த பின்னே
பரம பதத்தை அடைவதை விடப் போகும் வழியே சிறந்தது என்று சொல்லும்படியான
அர்ச்சிராதி கதியில் போகும் இன்பம் எல்லாம் அனுபவித்து,
அம்ருத மயமான விரஜா நதியிலே நாம் நம்முடைய வருத்தம் எல்லாம் தீரும்படித் தீர்த்தமாடி,
எல்லா தோஷங்களும் நீங்கப் பெற்று, பரிசுத்தமான பரமபதத்தை அடைந்து,
குணங்களெல்லாம் திகழும், சுத்த ஸத்வ மயமான திவ்ய உடம்பைப் பெற்று,
நித்யஸூரிகள் எதிர் கொண்டு அழைத்து, ப்ரஹ்மாலங்காரத்தைப் பண்ணி
ஸத் காரங்கள் செய்து, அவர்களுடன் திரு மா மணி மண்டபத்திலே சென்று
ஸ்ரீ ய:பதியான ஸ்ரீமந்நாராயணன் தன் மடியிலே நம்மை வைத்து மகிழும் செல்வம்,
யதிராஜர் இதில் ஆசையுடைய நமக்கு அருளும் செல்வமே.

இதிலே அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே
இது ஒரு பேறு இருந்தபடியே-

———————–

மணவாள மாமுனிகள் தம் நெஞ்சைக் குறித்து
“நம் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளை அருளின ஞானத்தைக் கொண்டு
அவருடைய அபிமானமே நமக்கு உத்தாரகம் (ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பது) என்று இரு.
எம்பெருமானாரே நமக்கு அதைச் செய்து கொடுப்பார். ஆகையால் இது விஷயமாக –
நிர்ப் பயோ நிர்ப் பரோஸ்மி -என்று இருக்கும் நமக்கு என்ன பயம் என்கிறார் –

திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டவர் தம்மை உத்தாரகராக எண்ணி
இரு மனமே! அவர்க்கா எதிராசர் எமைக் கடுகப்
பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே?–21-

மனமே! ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமத்தையுடைய திருவாய்மொழிப் பிள்ளை
தம்முடைய இயற்கையான கருணையாலே அருளும் ஞானத்தைக் கொண்டு,
இவரையே நம்மை ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பவராகக் கொண்டு, உறுதியோடு இரு!
நம் ஆசார்யருக்காக யதிராஜர் “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்றிருக்கிற நம்மை
விரைவில் பரமபதத்தில் ஏற்றி அருளுவார்.-மனமே நையல் மேவுதற்கே -என்கிறபடி
ஏதத் விஷயமாக நமக்கு என்ன பயம் ஒரு பயமும் வேண்டா –மார்பிலே கை வைத்து உறங்கும் அத்தனை அன்றோ -என்ற கருத்து

—————-

திருவாய் மொழிப் பிள்ளை யுடைய இயற்கையான கருணையால்,
எம்பெருமானாருடைய அபிமானத்தால் ஸம்ஸாரத்தைக் கடந்து
ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை அடைவேன் என்கிறார்.

தீதற்ற ஞானத் திருவாய்மொழிப் பிள்ளை சீரருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தம் அபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே–22-

குற்றமற்ற ஆத்ம ஜ்ஞான குணங்களை யுடைய திருவாய் மொழிப் பிள்ளை யுடைய இயற்கையான கருணையாலே,
காமம் முதலிய தோஷங்களைப் போக்கும் யதிராஜருடைய அபிமானம் (கருணை) என்கிற கப்பலில் ஏறி
ஸம்ஸாரமாகிற பெருங்கடலைக் கடந்து குற்றங்களுக்கு எதிர்த் தட்டாயிருக்கும்
ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகள் என்னும் கரையை அடைவேன்.

வேறு ஒரு பிரப்யாந்தரத்தை அபேஷிக்கும்படியான கோது இன்றிக்கே
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகள் ஆகிற தீரத்தை கிட்டப் பெறுவன்-இது நிச்சயம் –

கோதற்ற மாதவன் -என்று கோது அறுகையாவது அவனுக்கு விசேஷணம் ஆன போது
ஸ்ரீ பிராட்டியோடு கூடி இருக்கையாலே-திருவில்லாத கோது அற்றவன் – ஸ்ரீ யபதி இறே நித்ய பிராப்யன் ஆவான் –

—————-

கீழ் இரண்டு பாசுரங்களில்
தம்முடைய ஆசார்யரான பிள்ளை, பரமாசார்யரான எம்பெருமானார் ஆகியோருடைய அபிமானத்தாலே
தமக்கு பேறு உறுதியாகக் கிட்டும் என்றவர், இப்படி-வடிவுடை மாதவன் -என்னும்படி புதுக் கணிப்போடு சபரிகரனாய் –
ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிமார்களோடு எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் நிலையை
விரைவில் அனுபவிக்கும்படி தேவரீர் பண்ணி யருள வேண்டும் என்று
எம்பெருமானாரிடம் ப்ரார்த்திக்கிறார்.

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க
ஆனந்த மயமான மாமணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகும் மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அநுபவிக்கும் வகை நல்கென் எதிராசா!–23

அடியேனுக்கு நாதரான யதிராஜரே!
நித்யர்கள் முக்தர்கள் என்கிற –அந்தமில் பேரின்பத்து அடியவர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ அனந்த-ஸ்ரீ கருட-ஸ்ரீ விஷ்வக்சேன-பிரமுகரான நித்ய வர்க்கமும்
ஸ்ரீ பராங்குச-ஸ்ரீ பரகால-ஸ்ரீ யதிவராதிகள் தொடக்கமான முக்த வர்க்கமும்
மணி முத்தாதிகளை நிறைத்தால் போலே அழகு ஓலக்கமாக வரிசை அடைவே
சேவித்து இருக்கிற உயர்ந்த ஆனந்தத்தைக் கொடுக்கும் திரு மா மணி மண்டபத்திலே,
ஒப்பற்ற திவ்யமான படுக்கையாயிருக்கும் ஆதி சேஷனுடைய பணா மணிகளின் ஒளி வட்டத்துக்குள்ளே
மிக்க அழகையும் மென்மைத் தன்மையும் உடைய பெரிய பிராட்டியார் வலது பக்கத்திலும்,
அவளைப் போன்ற பூமிப் பிராட்டியும் நீளா தேவியும் இடது பக்கத்திலும் ஸேவித்திருக்க,
இவர்களுக்கு நடுவே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமந் நாராயணனை, –
வீற்று இருந்து ஏழ் உலகம் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற
வாழ் புகழ் நாரணனான ஸ்ரீ வைகுண்ட நாதனை கால விளம்பம் இன்றிக்கே
கடுக நான் அனுபவிக்கும் பிரகாரம் -வகையை அருள வேண்டும்.

———————-

இதில் தேஹத்தில் இருந்து விடுதலை பெறுவது தொடங்கி
பரமபதத்தில் அடியார் குழாங்களை அடைந்து
தேசிகரோடு ஒரு கோவையாய் இருக்கும் அளவாய் இருக்கிற பேற்றைப் ப்ரார்த்திக்கிறார்.

இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மாமண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!--24-

அடியேனுக்கு நாதரான யதிராஜரே!
இம் மாய வாக்கை -என்னுமா போலே அத்யந்தம் ஹேய சமுதமாய் இருக்கிற
இந்த ஸ்தூல சரீரத்தை உபேஷையோடே மங்க ஒட்டு -என்று த்யஜித்து –,
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன் நடுவுள் அன்ன தோர் இல்லியினூடு போய் -என்கிறபடியே
ஸூர்ய மண்டலத்தைக் கீண்டு அதற்கும் மேலே போய்,
இந்த ப்ரஹ்மாண்டத்தையும் கடந்து, நடுவிலுள்ள ஏழு ஆவரணங்களையும் கடந்து,
முடிவில்லாத மூல ப்ரக்ருதியைக் கடந்து, மிகவும் அழகாக இருக்கிற விரஜா நதியில் குளித்து,
அங்கே அமாநவனுடைய கர ஸ்பர்சத்தைப் பெற்று, ஒளிபடைத்த திவ்யமான தேஹத்தையும் பெற்று,
நித்ய ஸூரிகள் எதிர் கொண்டு வரவேற்று, பகவானை அலங்கரிப்பதைப் போலே அலங்கரித்து,
ஸ்தோத்ரம் பண்ணி, நல்ல வழியிலே சென்று, வைகுந்த மாநகரத்தை அடைந்து, உள்ளே சென்று,
திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி, நமக்கு ஸ்வாமிகளாகவும்
ஸ்ரீமந் நாராயணனுக்கு அடியார்களுமான குழாங்களுடன் கூடும் நாளானது
குறுக்கும் வகை யுண்டு கொலோ -என்கிறபடியே அத்தை அபேஷிக்கிற
அடியேனுக்கு அருகே ஏற்படும் வழியை நன்றாக ப்ரகாசிக்கும்படிச் செய்ய வேண்டும்.

————————

எம்பெருமானார் “நீரோ உம்முடைய அபராதத்தைப் பார்க்காமல் பெரிய பேற்றை ஆசைப்படுகிறீர்.
அதற்கு நாம் செய்வது என்?” என்று நினைப்பதாகக் கொண்டு, முதலில் இருந்து
அடியேனுடைய அபராதங்களைப் பொறுத்து, மோக்ஷத்தையும் கொடுக்கிறேன் என்று
எண்ணி யிருக்கும் தேவரீர், கால விளம்பம் பண்ணாமல்அத்தைச் செய்து அருள வேணும் என்கிறார்-

என்று நிரேதுகமாக என்னை அபிமானித்து
யானும் அது அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்றளவும் அநவரதம் பிழையே
அடுத்தடுத்துச் செய்வது அநுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திருநாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்தருள வேண்டும் எதிராசா!–25-

யதிராஜரே! என்று ஒரு காரணமும் இல்லாமல் அடியேனை “இவன் நம்முடையவன்” என்று அபிமானித்து அருளி,
என்று அடியேனும் அந்தக் கருணையை அறிந்து தேவரீருக்கே அடிமையாய் இருக்கும்படி செய்தருளினீரோ,
அன்று முதல் இன்று வரை தவறுகளையே செய்து விட்டு, அத் தவறுகளுக்கு அனுதாபப்படுவது,
இனி மேல் செய்ய மாட்டேன் என்று தேவரீரிடத்தில் ப்ரார்த்திப்பது ஆகிற அடியேனுடைய
கொடும் செயல்களைக் கண்டும், அடியேனை இகழாமல், தேவரீர் திருவடிகளில் எப்போதும் கைங்கர்யம் கொண்டு அருளினீர்.
இவ்வளவோடு நிறுத்தாமல் இன்று அடியேனுக்கு சத்துக்களுக்கு கந்தவ்ய பூமியான
ஸ்ரீ திரு நாட்டையும் யோக்யதை இல்லாத எனக்கு பிரசாதிப்பதாக இச்சித்து திருவுள்ளத்தில் நினைக்கிறீர்.
காலக் கழிவு செய்யாமல் கடுக செய்து அருள வேணும்-

———————–

தம்மை ஒழிய வேறு யாரும் இவரை ரக்ஷிக்க முடியாது என்கிற எம்பெருமானாரின் திருவுள்ளக் கருத்தை
“தேவரீரே அடியேனை ரக்ஷித்து, அடியேனுக்கு ப்ராப்ய ருசியையும் உண்டாக்கி,
ப்ராப்ய தேசத்தை அடையும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –

தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ?
சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ?
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ?
மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ?
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்?
எதிராசா! உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே–26-

எம்பெருமானாரே! அடியேனுடைய அபராதங்களை மன்னிக்க, பெரிய பெருமாளுக்கு முடியுமோ?
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –
பெரிய பிராட்டியார் தொடக்கமான எம்பெருமானின் தேவிமார்களுக்கு முடியுமோ?
ஸேனை முதலியார் முதலான நித்யஸூரிகளுக்கு முடியுமோ?
நித்யமாயிருக்கும் திருக் கல்யாண குணங்களை உடைய நம்மாழ்வார்,
அடியார்கள் விஷயத்தில் அருள் புரியும் திருமங்கை ஆழ்வார் முதலானவர்களுக்கு முடியுமோ?
மற்றுமுண்டான நம் ஆசார்யர்களுக்கு முடியுமோ?
ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபா மாத்ர பிரசன்னாச்சார்யர் களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ்வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ
என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ள யாருக்கு முடியும்?
தேவரீரைத் தவிர வேறு யாருக்கும் அடிமை இல்லாத அடியேனுக்கு,
தேவரீர் க்ருபையால் ருசியையும் உண்டாக்கி, மிகவும் ஒளி படைத்த பரமபதத்தில்
அடியேனை விரைவில் சேர்த்து அருள வேண்டும்.

உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –

உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே-பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்-தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி-ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –

பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு இல் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே–39- என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –

——————

எம்பெருமானார் தனக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதில் ஆர்வத்துடன் இருப்பதைக் கண்ட மணவாள மாமுனிகள்
ஸம்ஸாரத்தில் எல்லாம் கைவிட வேண்டியதாகவும், பரமபதத்தில் எல்லாம் கைக்கொள்ள வேண்டியதாகவும்
ஆன பின்பு அவ்வவற்றை மறப்பது மற்றும் நினைப்பது ஆகியவற்றை தனக்கு அடங்கிய
மனதுக்கு அருளிச் செய்கிறார்.

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே!
இரவு பகல் எதிராசர் எமக்கு இனிமேல் அருளும்
அவ்வுலகை அலர்மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் தமை அவர்கள் அநுபவத்தை
இவ்வுயிரும் அதுக்கிட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னும் அத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ்வினையால் வந்த உடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே–27-

நெஞ்சே! இந்த உலகத்தில் இனி ஒன்றையும் சிந்தியாதே, இரவும் பகலும் எம்பெருமானார்
நமக்கு அருளும் பரம பதத்தையும், மலர் மகளான பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமான்
அங்கே திவ்ய ஸிம்ஹாஸனத்தில் இருக்கும் இருப்பையும், நித்யர்கள் மற்றும் முக்தர்கள் குழாங்களையும்,
அவர்கள் அனுபவத்தை அதற்காக இட்டுப் பிறந்தும் இந்த ஆத்மா இழந்து கிடந்தது என்பதையும்,
எக் காலமும் அந்த அனுபவத்துக்குத் தடையாய் இருக்கும் நம்முடைய க்ரூர கர்மங்களால் வந்த இந்த உடலில் இருந்து
விடுதலை பெறும் காலத்தையும், இந்த தேஹத்தை விட்ட பிறகு கிடைக்கும் பேரின்பத்தையும்,
இவை எல்லாவற்றையும் இடை விடாமல் சிந்தித்திரு.

இப்படி உக்தங்களாய்-ஸ்வரூப அனுரூபங்களாய் உள்ளவை எல்லாவற்றையும் -திவா ராத்திரி விபாகம் அற
இடைவிடாமல் ஒருப்பட்டு இருந்து சிந்தித்துப் போரு-

அன்றிக்கே-உக்தங்களான அவற்றில் ஒன்றும் விடாமல் ஒருப் பட்டு இருந்து சிந்தித்து – என்னவுமாம் –

இவ்வுலகினில் இனி ஒன்றும் எண்ணாதே -என்ற இதுக்கு-மருள் ஒழி நீ -என்று சொல்லுகிற
அந்திம தசா விரோதியான அர்ச்சாவதார பிராவண்யம் ஆகவுமாம்-

——————

அநாதி காலமில்லாத ப்ராப்ய ருசி (பகவானை அடைவதில் உள்ள ருசி) இப்போது
எம்பெருமானார் க்ருபையால் உண்டானது என்று அந்த லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.

பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதி அவை கற்றிருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவொன்றும் இன்றிப் பொருந்தி இங்கேயிருந்தேன்
எண் திசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பே அன்றி இப்போது என் மனம் எண்ணாதே–28–

முற்காலத்தில் ஆத்மாவை உஜ்ஜீவனம் அடையச் செய்வதிலே நோக்காக இருக்கும்
நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த உலகத்தில் இருப்போர் அனைவரும் உஜ்ஜீவனம்
அடைய வேண்டும் என்பதற்காக இவர்களிடத்தில் உள்ள அன்பினாலே அருளிச் செய்த
பல ப்ரபந்தங்களைப் பார்த்ததெல்லாம் எழுதி, அவற்றை ஆசார்யன் மூலமாகக் கற்று,
மற்றவர்களுக்கு அன்புடனே கற்பித்தும் காலத்தைப் போக்கினேன்;
மலர்மகளான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற
பரம பதத்துக்குப் போகவேண்டும் என்கிற நினைவு சிறிதும் இல்லாமல் இந்த ஸம்ஸாரத்தில் பொருந்தி வாழ்ந்தேன்;
திசை அனைத்தும் ஏறும் குணன் ஆகையாலே–எட்டுத் திக்கில் உள்ளோரும்
ஸ்தோத்ரம் பண்ணும்படியான பெருமையை உடைய யதிராஜரின் க்ருபையாலே
சிறந்ததான பரம பதத்தைத் தவிர என் மனமானது வேறொன்றை இப்போது எண்ணாது.

தெரித்து எழுதி -வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -ஸ்ரீ நான் முகன் -63– இத்யாதிப் படியே–

இது ஒரு கிருபா விசேஷம் இருந்தபடி என் –என்று கருத்து –இவ்விடத்தில் ஏகாரம் தேற்றத்தில்

———————

தம்முடைய தடைகளைப் போக்கி எம்பெருமானை அடையும்படிச் செய்யும் எம்பெருமானார்,
ஸ்ரீபாஷ்யம் முதலான் க்ரந்தங்கள் மூலம் பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதத்தவர்களை ஜயித்து அருளினவற்றைச் சொல்லி,
அவருடைய வீரஸ்ரீக்கு மங்களாசாஸனம் பண்ணுகிறார்.

சாருவாக மதம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்தற மிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறும் மாகுரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதம் அவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகிய மாய வாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே–29-

கண்ணால் காண்பது மட்டுமே உண்மை என்று சொல்லக்கூடிய சாருவாக மதத்தை பஸ்மமாகும்படிச் செய்து,
சமண மதம் என்கிற செடியை எரித்து,
சாக்கிய (பௌத்த) மதம் என்கிற கடலை வற்றிப்போகும்படிச் செய்து,
பெருத்திருந்த ஸாங்க்ய மதம் என்கிற மலையைத் தகர்த்து,
எதிர் வாதம் செய்யும் கணாத மதத்தவர்கள் [கணபதியை வழிபடுபவர்கள்] வாக்கை உடைத்தெறிந்து,
மிகவும் எதிரிட்டு வந்த பாசுபத மதத்தைச் சேர்ந்தவர்கள் சிதறி ஓடும்படி வாது செய்தார் யதிராஜர்;
பின்பு அவரே பெரிய பிதற்றலான ப்ரபாகர மதத்தோடு
பாட்ட மதத்தின் மேல் தன்னுடைய வெல்வதற்கரிய தர்க்க பாணங்களை விட்டார்;
பின்பு மாயா வாதியரை வென்று அதற்கு மேலே மிகவும் வாதித்து வரும் பாஸ்கர மதம்
என்கிற வேர்க் கொடிகள் நெருக்க அவற்றை வெட்டி வீழ்த்தினார்;
பின்பு மிகுத்திருந்த யாதவ ப்ரகாச மதத்தை அழித்த பெரிய வீரரான யதிராஜர்
எப்பொழுதும் வளர்ந்து வரும் மங்களத்தை உடையவராக வேண்டும்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய இதர தர்சன நிரசனத்தாலே வந்த மகா வீரம் நாள் தோறும் அபி விருத்தமாய் வாழ வேணும் –

————-

இனி, இப்படி அனைத்து பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதங்களை ஜயித்த பிறகு,
எம்பெருமானார் பகவத் விஷயமான திருவாய்மொழிக்கு விளக்கங்கள் அளித்துக் கொண்டு இருப்பது
தம்மை மிகவும் ஈர்க்க, அவருடைய திருவடிகள் முதல் திருமுடிவரை அனுபவித்து
அவை நித்யமாகச் செல்ல வேண்டும் என்று மங்களாசாஸனம் பண்ணுகிறார்.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவர் ஆடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே–30-

திருக் கல்யாண குணங்கள் நிறைந்திருக்கும் யதிராஜருடைய திருவடித் தாமரைகள்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
இடுப்பிலே சாற்றியிருக்கும் காஷாய வஸ்த்ரமானது எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
அழகு மிக்கிருக்கும் சிவந்த திருமேனி எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
திரு மார்பில் விளங்கிக் கொண்டிருக்கும் யஜ்ஞோபவீதம் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
பொருத்தமான மாலைகளாலே அலங்கரிக்கப்பட்ட இரண்டு திருத்தோள்கள்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
எப்பொழுதும் சுருங்காத, தூய்மையான, சிறந்ததான முகத்தின் ஒளி
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; அடியார்களை ரக்ஷிப்பதால் வரும் ஆனந்தத்தை
வெளியிடும் புன்முறுவல் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
அடியார்களின் அமலங்களைப் போக்கும் இரண்டு தாமரை போன்ற கண்கள்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
சிவந்த திருமேனியில் அணிந்திருக்கும் பன்னிரு திருநாமங்கள் அணிந்திருக்கும் அழகு
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
பத்மாஸ்தனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதார்த்த பிரகாசகமாய் இருக்கிற
பரதத்வ போத  ஜ்ஞான முத்தரை யானது காதாசித்கம் அன்றிக்கே   நித்ய மங்களமாய்- சதா தர்சன யோக்யதாம் படி வாழக் கடவதாக வேணும்

——————

ஆசையின் மிகுதியாலே எம்பெருமானார் பண்ணிய உபகாரங்களுக்கு மீண்டும் மங்களாசாஸனம் செய்து அருளுகிறார்.

கீழ் பாட்டு விக்ரஹ பரம்-இப் பாட்டு ஸ்வரூப பரம் –

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற்பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே–31-

பௌத்த, நையாயிக, வைசேஷிக, ஜைன, ஸாங்க்ய, யோக மதங்களாகிற ஆறு பாஹ்ய மதங்களான
செடிகளை அறுத்துத் தள்ளியவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
கூட்டமாய் கூடி வருகிற வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லும் குத்ருஷ்டி மதத்தவர்கள்
முழுவதுமாகத் துறத்தியவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
இவற்றுக்குக் காரணமாய், நிறைந்து வருகிற கலியைச் சிறிதும் இல்லாதபடி போக்கடித்தவர்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
ஸ்ரீ மன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அனுபத்ரவா அனுதினம் சம்வர்த்தயா-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திருச் செல்வம் எல்லாம் கட்டளைப் படும்படி பண்ணி அருளினவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
வேதத்தில் காட்டப்படும் எல்லா அர்த்தங்களையும் தன்னுடைய க்ரந்தங்களான
ஸ்ரீபாஷ்யம் முதலியவை மூலமாக அருளிச்செய்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதங்களை நன்கு வளர்த்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
அந்தத் தமிழ் ப்ரபந்தங்களுடைய தாத்பர்யமான சரணாகதி தர்மம் இவ்வுலகில் நன்கு பரவ-வளர்த்த இதத் தாய் -என்னும்படி
சிறந்ததான ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
அழகு முதலியவைகளால் பூர்த்தியை யுடைய எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.

அற மிகு நல் பெரும் பூதூர் -என்றும் பாடம் சொல்வார்
அப்போது -ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்கிற தர்மத்தை அதிகமாக உடைத்து என்னவுமாம்

—————-

எம்பெருமானாரின் திருநக்ஷத்ர தினமான திருவாதிரைத் திருநாளைக் கொண்டாடுகிறார்.

சங்கர பாற்கர யாதவ பாட்ட பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கு இனி வீறு நமக்கிலை என்று மிகத் தளர்நாள்
மேதினி நம் சுமையாறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே–32-

சங்கரனின் மதம் (அத்வைதம்), பாஸ்கரனின் மதம் (பேதாபேதம்),
யாதவ ப்ரகாசனின் மதம் (பேதாபேதம்), குமாரில பட்டன் மற்றும் ப்ரபாகரனின் மதங்கள் (மீமாம்ஸா)
நாசம் அடைவதால், வாதம் செய்யும் அவ்வவ மதஸ்தர்கள் ஐயமின்றி நாசம் அடைவார்கள் என்று
நான்கு வேதங்களும் நன்றாக வளரும் நாள்.-கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று
க்ரூரமான கலியும் “இனி நம்மால் இங்கு ஆட்சி செய்ய முடியாது” என்று மிகவும் தளர்ந்து போகும் நாள்.
தவம் தாரணி பெற்றது -என்றும் சொல்லுகிறபடியே-பூமியும் “நம் தலைச் சுமை கழியும்” என்று துக்கத்தை விட்டு நன்றாக ப்ரகாசிக்கும் நாள்.
திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் மற்றும் பூர்வாசார்யர்களுடைய் வாழ்வு நன்றாக முளைக்கும் நாள்.
பொருந்தி இருக்கும் அழகிய திருவரங்கம், திருமலை மற்றும் ஏனைய திவ்யதேசங்களும் ஆனந்தம் அடையும் நாள்.
இதெல்லாம் நடக்கும் நாள் எந்நாள் என்றால் சிவந்து அழகாய் இருக்கும் மீன்களையுடைய தடாகங்களால் சூழப்பட்டுள்ள
சிறந்ததாய் இருக்கும் ஸ்ரீபெரும்பூதூரை திருவவதார ஸ்தலமாக உடைய கைங்கர்ய ஸ்ரீயை உடைய
இளையாழ்வார் என்ற திருநாமத்தை உடைய எம்பெருமானார் வந்தருளிய நாளான திருவாதிரைத் திருநாளே.

இதுவும் ஒரு நாளே-ஸ்ரீ மன் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர —

உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்க என்கிறபடியே
இவருக்கு தத் வாசகமான திரு நாமங்கள் தான் அனுபாவ்யமாய் இருக்கையாலே

ஸ்ரீ எதிராசன் என்றும்
ஸ்ரீ இராமானுசன் என்றும்
ஸ்ரீ எம்பெருமானார் என்றும்
ஸ்ரீ இளையாழ்வார் என்றும்–அனுசந்தித்து அருளினார்-

—————–

எம்பெருமானாருக்குச் சில பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்த பிறகு மீண்டும்
முன்பு சொன்ன விஷயத்தையே சொல்ல நினைத்து
“அடியேனுடைய நிலையை நன்கறிந்திருந்தும்
அடியேனைப் பரமபதத்தில் சேர்க்கத் திருவுள்ளம் பற்றியும்,
ஏன் காலம் தாமதம் செய்கிறீர்?” என்கிறார்.

இன்னம் எத்தனை காலம் இந்த உடம்புடன் யான் இருப்பேன்?
இன்ன பொழுது உடம்பு விடும் இன்ன படியதுதான்
இன்ன இடத்தே அதுவும் என்னும் இவையெல்லாம்
எதிராசா! நீயறிதி யான் இவை ஒன்று அறியேன்
என்னை இனி இவ்வுடம்பை விடுவித்து உன் அருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறதென்? பேசாய்
பேதைமை தீர்த்து எனை அடிமை கொண்ட பெருமானே!–33-

யதிராஜரே! இன்னமும் எவ்வளவு காலம் கைவிட வேண்டிய இந்த தேஹத்தோடே
இதில் பொருத்தமற்றிருக்கிற அடியேன் இருப்பேன்?
எப்பொழுது இந்த தேஹம் கீழே விழும்?
அதுதான் எந்த விதத்திலே எந்த இடத்திலே நடக்கும்?
இவ்வாறு சொல்லப்படும் விஷயங்களையெல்லாம் தேவரீர் அறிவீர்.
அஜ்ஞனான அடியேன் இவை ஒன்றும் அறியேன்.
ஆன பின்பு, இப்படி அடியேனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி அடியேனை அடிமை கொண்ட பெருமானே!
இனி, இவ் வுலகில் பொருத்தமற்றிருக்கிற அடியேனை தேவரீர் க்ருபையாலே விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -என்கிறபடியே
இவ் வுடம்பிலிருந்து விடுவித்து அழகு மிகுந்த பரமபதத்திலே ஏற்றத் திருவுள்ளமாகில்,
பின் விரைந்து செய்யாமல் மறந்திருப்பதற்குக் காரணம் என்ன?
அதை அருளிச் செய்ய வேண்டும்.

——————-

எம்பெருமானார் “நாம் உமக்கு உதவ நினைத்தாலும் உம்முடைய பாபங்கள் கிடக்க நாம் எப்படிச் செய்வது”
என்று நினைப்பதாகக் கொண்டு, “எல்லாப் பாபங்களையும் போக்கக் கூடிய எம்பெருமானே
தேவரீருக்கு அடங்கி இருப்பதால், தேவரீரையே எல்லாமாகக் கொண்டிருக்கும் அடியேனை
முக்தனாக ஆக்க வேண்டும்” என்கிறார்.

முன்னை வினை பின்னை வினை ஆரத்தம் என்னும்
மூன்று வகையான வினைத் தொகை அனைத்தும் யானே
என்னை அடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா! நீ இட்ட வழக்கன்றோ? சொல்லாய்
உன்னை அல்லது அறியாத யான் இந்த உடம்போடு
உழன்று வினைப் பயன் புசிக்க வேண்டுவது ஒன்று உண்டோ?
என்னுடைய இருவினையை இறைப் பொழுதில் மாற்றி
ஏராரும் வைகுந்தத்தேற்றிவிடாய் நீயே–34-

யதிராஜரே!
பூர்வாகம் (சரணாகதிக்கு முன்பு பண்ணிய கர்மங்கள்),
உத்தராகம் (சரணாகதிக்குப் பின்பு பண்ணும் கர்மங்கள்),
ப்ராரப்தம் (பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மங்கள்) என்று சொல்லப்படும்
மூன்று வகையான கர்மங்களின் கூட்டங்கள் எல்லாவற்றையும்
ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்தித்வம் போன்ற குணங்களை உடைய நானே
வாத்ஸல்யம் போன்ற குணங்கள் நிறைந்த என்னையே தஞ்சம் என்று பற்றியவர்களுக்கு கழிப்பேன்
என்று அருளிச் செய்த ஸ்ரீரங்கநாதனான பெரிய பெருமாள் தேவரீர் இட்ட வழக்கன்றோ?
இப்படிப்பட்ட தேவரீரை அல்லது வேறொரு ரக்ஷகரை அறியாத அடியேன் இந்த உடம்போடு பொருந்தி இருந்து
இவ்வுடம்பின் பலனான கர்ம பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று கட்டாயமோ?
தேவரீரே அடியேனுடைய கர்ம பலன்களை –கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -என்கிறபடியே-
க்ஷண காலத்தில் போக்கி அழகு நிறைந்துள்ள ஸ்ரீ வைகுந்தத்தில் ஏற்றி விட்டு அருள வேண்டும்.

——————

அடியேனை ரக்ஷிக்க முயலும் தேவரீர் அடியேனுக்கு நித்ய கைங்கர்யத்தைக் கொடுக்க நினைக்க,
அதையும் மீறி அடியேன் செய்யும் பாபங்களைப் போக்கி தேவரீரையே-த்வத் ஏகம் அநாவாம் படி பண்ணி 
நினைக்கும்படிப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

அருளாலே அடியேனை அபிமானித்தருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீயிருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செய்யும் என்றன்
வல்வினையை மாற்றி உன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத்தாழ்வானும் அவர் செல்வத்
திருமகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளான அத்தனையும் சேர உள்ள என்னைத்
திருத்தி உய்யக் கொள்ளும் வகை தேரும் எதிராசா!–35–

யதிராஜரே! அருளாலே அடியேன் விஷயத்தில் கருணையைக் காட்டி, நிரந்தரமாக
நித்ய கைங்கர்யம் கொண்டருளுவதாக தேவரீர் இருக்க,
அதை அறிய விடாத அஜ்ஞானத்தாலே புலன்களுடைய விஷயமான இன்பங்களை ஆசைப்படுகிற
அடியேனுடைய வலிமை பொருந்திய கர்மங்களை மாற்றி தேவரீர் விஷயத்தில் மனதை வைக்கும்படிப் பண்ணி யருள வேண்டும்.
ஞானம் நிறைந்திருக்கும் ஸ்ரீ கூரத்தாழ்வானும், அவர் திருக் குமாரராக இருக்கும் செல்வத்தை யுடைய பராசர பட்டரும்
தங்கள் விஷயத்தில் தாழ்வுகளாகச் சொல்லிக் கொண்ட பாபக் கூட்டங்கள் எல்லாவற்றையும் ஒரு சேர
உண்டான அடியேனை நன்றாகத் திருத்தி உஜ்ஜீவனம் அடைவிக்கும் வழியை தேவரீரே சிந்தித்தருளும்.

இந்தரிய பரிச்சின்னங்களான விஷய போகங்களில் வாஞ்சையைப் பண்ணும்
என்னுடைய வநிவர்த்யமான பிரபல கர்மங்களை அதில் நின்றும் முகம் மாறப் பண்ணி
தன் பால் மனம் வைக்கத் திருத்தி -என்கிறபடியே
பிராப்த சேஷியானதேவர் விஷயத்தில் மனசை வைக்கும்படி பண்ணி அருள வேணும்

———————-

உலக விஷயங்களில் தனக்கிருக்கும் ஆசையானது தன் மனதை மூடுவதற்குக் காரணம் வாஸனையும் கர்மங்களும் என்கிறார்.

வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?*
ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து–36–

யதிராஜரே! இவ்வாத்மாவுக்குத் தீயதாக இருக்கும் ஐங்கருவி கண்ட இன்பம் -என்னும்படி-ஐம்புலன்களுக்கு விஷயமான
உலக இன்பங்களில் ஆசையானது பலாத்காரத்தோடே என் மனதின் மேலே வந்து விழுந்து மூடுகிறது.
என்னை அந்த இன்பங்களில் தள்ளுகிறது.
இதற்குக் காரணம் அநாதி பாப வாஸனையில் இருக்கும் உறுதியான பிடிப்போ அல்லது
அனுபவித்தோ அல்லது  ப்ராயச்சித்தம் பண்ணியோ தீராத
வலிமையான என்னுடைய பாபங்களோ அறியேன்.

அருளாலே–வாசனை–என்கிற இரண்டு பாட்டாலும் ஐம்புலன் என்று விஷயங்களைச் சொல்லுகிறது –

——————

எம்பெருமானார் “உம்முடைய கஷ்டம் எமக்குப் புரிகிறது; உம்முடைய பக்தியை வளர்த்து-உமக்கு அதிகாரத்தை ஏற்படுத்தி-
ஆர்த்தி -அதிகார பூர்த்தி உண்டாக்கி உமக்கு பேற்றைக் கொடுக்கிறோம்” என்பதாகக் கொண்டு
“இப்பொழுதில்லாத அதிகாரம் எப்பொழுது ஏற்படப் போகிறது.
ஆகையால் அந்த அதிகாரம் ஏற்படுவதுற்குத் தடையானவற்றை அழித்து
அடியேனுக்கு பேற்றைக் கொடுக்காமல் இருப்பது ஏன்?” என்கிறார்.

இன்றளவும் இல்லா அதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம்? சொல்லாய் எதிராசா! – குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்து
எனைக் கடுக ஏற்றாதது என்?–37-

யதிராஜரே! இதுவரை இல்லாத அதிகாரம் இனிமேல் அடியேனுக்கு எப்பொழுது உண்டாகும்?
இதை தேவரீரே அருளிச்செய்ய வேண்டும்.-தொன் மா வல்வினைத் தொடர் -என்னும்படியான
எத்தாலும் அழியாமல் இருக்கும் பாபக் கூட்டங்களின் தொடர்ச்சியை வெட்டி விட்டு,-மேலை வைகுந்தத்து இருத்தும் -என்கிறபடி
மிக உயர்ந்ததான பரம பதத்தில் அடியேனை உடனே ஏற்றாமல் இருப்பதற்கு என்ன காரணமோ?

——————

தர்க்க ரீதியாக தனக்கு அதிகாரம் ஏற்படாது என்பதை தார்கிக லௌகிக சப்த நியாயத்தாலே-தர்சிப்பியா நின்று கொண்டு  உரைக்கிறார்.

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ? எதிராசா! – நெஞ்சம்
உனதாள் ஒழிந்தவற்றையே உகக்க இன்றும்
அநுதாபம் அற்று இருக்கையால்–38-

யதிராஜரே! தாழ்ந்த விஷயங்களில் மூழ்கியிருக்கும் அடியேனது மனதானது அடியேனுக்குத் தகுந்த
தலைவரான தேவரீருடைய மிக இனிமையான திருவடித் தாமரைகளுக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களையே
மகிழ்ந்து அனுபவிக்க, அதற்கு மேலே “இப்பொழுதும் இப்படித் தகாத விஷயங்களை விரும்புகிறதே” என்கிற
பச்சாதாபமும் இல்லாமல் இருப்பதினாலே, உலகில் சொல்லப்படும்
“ஞானம் துளிர்க்கும் ஐந்து வயதில் அறியாதவர்கள் ஐம்பது வயதிலும் அறியமாட்டார்கள்” என்கிற
வார்த்தை என் விஷயமாகவே சொல்லப்பட்டதோ?–

நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று பாடமான போது
அஞ்சில் அறியாதாரை ஐம்பதிலும் அறியாதார் என் சொல் எனக்கோ -எதிராசா
இன்று அனுதாபம் அற்று இருக்கையாலே நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே யுகக்கும் -என்றும்-இப்படி யோஜிக்கக் கடவது –

—————-

அருகிலிருப்பவர்களுக்கு “நீர் எம்பெருமானார் திருவடிகளுக்கு வெளிப்பட்ட விஷயத்தையே விரும்பினீர் என்றால்
அவர் எப்படி உம்மைக் கைக் கொள்வார்?” என்று கருத்தாக
“அவரைத் தஞ்சம் என்று பற்றும் போது தோஷங்களோடு இருந்த அடியேனை விரும்பி ஏற்றுக் கொண்டவர்
அடியேனைக் கை விட மாட்டார்” என்று  ஸ நிதர்சனமாக -மணவாள மாமுனிகள் அருளுகிறார்.

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் புகடாதே புசிக்கும் தன்மை போல் தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழார் எதிராசர்
அன்று அறிந்து அங்கீகரிக்கையால்–39-

வேப்பிலையைக் கறியமுதாக விரும்புமவர்கள் அது கசக்கிறது என்று தள்ளாமல் உண்கிற ஸ்வபாவம் போலே,
எம்பெருமானார் அடியேனை ஏற்றுக் கொண்ட ஸமயத்தில் “இவன் துஷ்டன்” என்று ஆராய்ந்து
அந்த தோஷத்தையே போக்யமாகக் கொண்டு அடியேனை ஏற்றுக் கொண்டார்.
ஆகையாலே அவர் அடியேனைக் கை விடார்.

நத்யஜேயம் -என்னும்படி இது ஓர் அங்கீகார த்ராட்யம் இருந்த படி என் என்று கருத்து-

——————

எம்பெருமானார் “உம்மை தோஷத்துடனே ஏற்றுக் கொண்ட நாம், தக்க காலத்தில் உமக்குப் பேற்றைச் செய்து
கொடுக்கிறோம்” என்பதாகக் கொண்டு, “அக்காலம் வரை அடியேனுடைய பொழுதை வீணாகக் கழிப்பேன்,
ஆகையால் உடனே அடியேனைப் பரம பதத்தில் சேர்த்தருள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

அவத்தே பொழுதை அடியேன் கழித்து இப்
பவத்தே இருக்கும் அது பண்போ? திவத்தே யான்
சேரும் வகை அருளாய் சீரார் எதிராசா!
போரும் இனி இவ்வுடம்பைப் போக்கு–40-

திருக் கல்யாண குணங்களால் நிறைந்த யதிராஜரே!
தேவரீருக்கு அடியவனான நான் தேவரீர் அனுபவ கைங்கர்யங்களுக்கு ஏற்பட்ட பொழுதை வீணாகப் போக்கி
இந்த ஸம்ஸாரத்தில் பொருந்தி இருப்பது தேவரீரின் கருணைத் தன்மைக்குப் பொருத்தமானதோ?
அடியேன் பரம பதத்தை அடையும் வகைய க்ருபை செய்தருள வேண்டும்!
ஸம்ஸாரத்தில் கஷ்டப்பட்டது போதும். இனி, இவ்வுடம்பைப் போக்கி யருள வேண்டும்.

பகவத் ஸ்வரூப திரோதா நகரியாய் விபரீத ஜ்ஞ்ஞாந ஜனனியாய்
ஆத்மாவோடு பொருந்தி இருக்கிற இந்த தேஹத்தை போக்கி அருள வேணும்-இதுவே புருஷார்த்தம் –

பண்பு -ஸ்வ பாவம்
அடியேன் இப் பவத்தோடே இருக்குமது பண்போ -என்று கீழோடு கூட்டவுமாம் –

—————-

எம்பெருமானார் “உம்முடைய தோஷத்தைப் பார்க்காமல் நாம் எப்படி ரக்ஷிப்பது” என்பதாகக் கொண்டு,
“உலகம் எல்லாம் வாழப் பிறந்தவறான தேவரீர் அடியேனைக் கருணையோடே ரக்ஷிக்க வேண்டும்” என்கிறார்.

எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?
உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!
ஏழைக்கு இரங்காய் இனி–41-

யதிராஜரே! நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு -என்கிறபடியே-அடியேனைப் போலே தவறு செய்பவர்கள் இந்த உலகம் எங்கும் தேடினால் கிடைப்பார்களோ?
அருளுக்கும் அக்தே புகல் -என்கிறபடியே-தேவரீரைப்போலே மற்றவர் தவறுகளைப் பொறுத்துக்கொள்பவர் உபய விபூதியிலும் உண்டோ?
எல்லா உலகங்களும் உஜ்ஜீவித்து வாழ்வதற்கு அவதரித்தருளின வணங்கத் தகுந்த மஹா முனிவரே!
சபலானாயிருக்கும் அடியேனுக்குக் கருணையைக் காட்ட வேண்டும்.

——————

எம்பெருமானார் இவருடைய தன்மைகளைக் கண்டு இவருக்குப் பேற்றை அளிப்பதாக நினைத்து
இவரை ஆசையோடே கடாக்ஷிக்க அதைக் கண்டு இவ்வுலகில் தான் படும்
துன்பங்களை அறிவித்துத் தனக்கு விரைவில் பேறு வேண்டும் என்கிறார்.

அவருக்கும் ரஷித்து அல்லாது நிற்க ஒண்ணாத படி –
உண்ணிலாவியில்-என்றபடி இந்த்ரிய பயக்ரோசமான பாசுரத்தாலே
தம்முடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கூப்பிடுகிறார் –

ஐம்புலன்கள் மேல் இட்டு அடரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலம் இட்டால் பின்பவைதாம்
என்னை அடராமல் இரங்காய் எதிராசா!
உன்னை அல்லால் எனக்கு உண்டோ?–42-

யதிராஜரே! கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி -இத்யாதிப் படியே=ஐம்புலன்கள் என்னை ஆக்ரமித்துத் துன்புறுத்தும் போது தேவரீரின் அடியவனான நான்
தேவரீருடைய திருவடிகளை நினைத்து “ராமானுசரே!” என்று ஓலமிட்டால் அதற்குப் பிறகு
அவை என்னைத் துன்புறுத்தாமல் க்ருபை செய்து அருள வேண்டும்!
தேவரீரைத் தவிர அடியேனுக்கு வேறு ரக்ஷகர் உண்டோ?

உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்-என்னவுமாம் –

—————–

எம்பெருமானார் கருணை காட்டவில்லை என்று நினைத்து என்ன பயன்,
பரமபதத்தில் ஆசையும் இவ்வுலகில் வெறுப்பும் இருந்தால் தானே அவர் அதைத் தந்தருள்வார்.
நமக்கு அவை இல்லா விடுகிறார்.

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசையில்லை இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திருநாடு உகந்து–43–

கொடு வுலகம் காட்டேல் -என்னும்படியான இந்த த்யாஜ்ய பூமியில் அடிக் கொதிப்பு அல்பமும் இல்லை –
வான் உலகம் தெளிந்தே என்று எய்வது -என்னும்படியான
அந்த பிராப்ய பூமியை பிராபிக்க வேணும் என்கிற பிராவண்யமும் இல்லை –
இப்படிப்பட்ட நமக்குத் தந்தையான யதிராஜர் ஒப்பில்லாத வைபவத்தையுடைய பரம பதத்தை எப்படி மகிழ்ந்து அளிப்பார்?

—————-

தன்னிலையை யோஜித்த பிறகு, உலகத்தவர்களைப் பார்க்க, அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாக இருக்க,
இவர்கள் பாபத்தினாலேயே இப்படி இருக்கிறார்கள் என்று நொந் கொள்கிறார்

மாகாந்த நாரணனார் வைகும் வகை யறிந்தோர்க்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயம் அற்றிருந்து
செய்வார்கள் தாம் பாவத்திறம்–44-

நாராயண பரோஜ்யோதி என்றும்
அவன் என் இருள் தான் அற வீற்று இருந்தான் -என்றும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்றும்-சொல்லுகிறபடியே

செல்வ நாரணன் -என்கிறபடியே-ஸ்ரீ லக்ஷ்மீ வல்லபனான ஸர்வேஸ்வரன் ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களையும் வ்யாபித்திருக்கும்
என்பதை அறிந்தோர்க்குத் தனிமையும் இல்லை இருட்டும் இல்லை;
மோஹத்துக்கு வசப்பட்டிருப்பவர்கள் இவ்விடம் தனிமையாக உள்ளது,
இவ்விடம் இருட்டாக இருக்கிறது என்று கொண்டு, அறிவிலிகளாக இருந்து கொண்டு,
பயம் இல்லாமல் பாபக் கூட்டங்களைச் செய்வார்கள்..

வைகல் -சொல்லலும் -இருத்தலும்
திறம் -சமூஹம்
இப் பாட்டுக்கு அடி உக்த்ய அனுஷ்டங்களாய் இருக்கும்-

—————–

தம் நெஞ்சைக் குறித்து “அஜ்ஞரான நாமும் ஆசார்ய ஸம்பந்தத்தினாலே அன்றோ நம் உஜ்ஜீவனத்தைப் பெற்றது;
ஆகையால் எப்பொழுதும் அதையே சிந்தித்திரு” என்று அருளிச் செய்கிறார்.

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னும் உறவு
ஆராயில் நெஞ்சே! அநாதி அன்றோ? சீராரும்
ஆசாரியனாலே அன்றோ? நாம் உய்ந்தது என்று
கூசாமல் எப்பொழுதும் கூறு–45-

நெஞ்சே! “ஸ்ரீ ய:பதியான நாராயணன் ஆத்மாக்களை உடையவன்; நாம் நார சப்தத்துக்குள் அடக்கம்” என்கிற
இந்த ஸம்பந்தத்தை ஆராய்ந்து பார்த்தால் இது அநாதி யன்றோ?-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்கிறபடியே-
(ஆரம்பம் அற்றது – எப்பொழுதும் இருப்பது). “இந்த ஸம்பந்தத்தை நமக்கு உணர்த்திய ஆசார்யனாலே
யன்றோ நாம் உஜ்ஜீவனத்தைப் பெறுகிறோம்?” என்று –பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் -என்கிறபடியே-எப்பொழுதும் வெட்கம், கர்வம் இவற்றை விட்டு நன்றாக நினைத்துக் கொண்டு இரு.

—————–

கீழ் ஆசார்ய ஸம்பந்தத்தாலே பேறு என்றார். இதில் ஆசார்யன் யாரென்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை
குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில்
மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே!
எதிராசர்க்கு ஆளானோம் யாம்–46-

நெஞ்சே! திருவாய்மொழியிலே மிகவும் ஈடுபாடு கொண்டு அதனாலே திருவாய்மொழிப் பிள்ளை
என்ற திருநாமத்தைப் பெற்றவர் ஆசார்யராக எழுந்தருளியிருந்து கொடுவினைகளை உடைய
நம்மைத் தேடி வந்து நாம் உஜ்ஜீவனத்தைப் பெறும்படி நம்மை ஏற்றுக்கொண்டு ஒப்பற்றதான ஞானத்தைத்
தாம் அளித்தருளிய செல்வத்தாலன்றோ நம் யதிராஜருக்கு அடிமை யானோம்?

சாஸ்திர ஜ்ஞாநாதிகள் போல் அன்றிக்கே
உபமான ரஹிதமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிறக்குமதான ஜ்ஞானத்தை யுபகரித்து அருளும் சம்பத் அன்றோ

பத த்ரய அர்த்த நிஷ்டை தான்-ததீய பர்யந்தமாய் அல்லாது இராது-என்று கருத்து –

(சடகோபர் தாசர் என்றே இன்றும் அருளப்பாடு உண்டே இவர் வம்சத்தாருக்கு )

————————–

“நாராயண” என்ற திருநாமத்துக்கு ஸமமான வைபவம் கொண்ட “ராமானுஜ” என்ற
திரு நாமத்தின் வைபவத்தை எதிர் மறையான பொருள் கொண்டு விளக்குகிறார்.

இராமாநுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்திரா
மாநுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதுமிரா
மாநுசர் அவர்க்கு எல்லா அடிமையும் செய்ய எண்ணி
இரா மாநுசர் தம்மை மாநுசராக என் கொல் எண்ணுவதே?–47-

ராமானுஜர் விஷயத்தில் “நம:” என்று இரவும் பகலும் நினைத்து இராத மனுஷ்யர்களுடைய இருப்பிடத்தில்
க்ஷண காலமும் வாழாத ஆழ்வான் போன்ற பெரியோர்களுக்கு எல்லா விதமான கைங்கர்யங்களையும்
செய்ய எண்ணி அவற்றைச் செய்யாமல் இருக்கிற அறிவற்ற மனுஷ்யர்களை எப்படி மனுஷ்யர்களாக எண்ணுவது?

சாஸ்திர வச்யரான மனுஷ்ய ஜன்மாக்களுக்கு-எத் தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் -என்கிறபடியும்
சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய எண்ணி இருக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாதே இருக்கிற க்ருதக்ன மனுஷ்யர்தங்களை-மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேன் -என்கிறபடியே
பசு சமரான அவர்களை மனுஷ்யராக எப்படி எண்ணுவது-பஸூபிஸ் சமான -என்னும் இத்தனை –

—————–

தம்முடைய வாக்கு, மனம், காயம் ஆகிய மூன்று கரணங்களையும் இப்படி இராமானுசனடியார்கள்
விஷயத்தில் பெரிய பெருமாள் ஆக்கியருளினபடியை நினைத்து மகிழ்கிறார்.

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை ஒன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை அரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் -என்கிறபடியே-கலியுகத்தில் இருக்கும் ஆத்மாக்கள் துன்பப்படாதபடி உலகத்தை ரக்ஷித்தவரான் எம்பெருமானாருடைய
திருவடிகளை அடையாதவர்களை அடியேனுடைய நெஞ்சானது நினைக்காது; நாக்கானது கொண்டாடாது;
தலையானது வணங்காது; கண்களானவை இவை எதையும் காணாது;
இப்படி இருக்கும்படி இக்கரணங்களை நமக்களித்த ஸ்ரீரங்கராஜனான பெரிய பெருமாள் நமக்குச் செய்த நன்மையே.

கலியார் -என்கிறது–ஏவினார் கலியார் -என்கிறபடியே-பாதகத்வித்தின் உறைப்பை பற்ற வாய்த்து –

காணல் உறுகின்றேன் -(நான்முகன்-41 )-என்கிற இடத்துக்கு-காண ஆசைப் படுகிறேன் என்று இறே அருளிச் செய்தது –

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -(நான்முகன் -41)-

காணல் உறுகின்றேன் – – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க-வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –

———————-

ஸம்ஸாரிகளுடைய துன்பத்தைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அவர்களுக்கு
மோக்ஷத்துக்கு உபாயமாக எம்பெருமானாரைச் சரணடைவதைக் காட்டுகிறார்.

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்!
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றும் அவன்
அந்தாதி தன்னை அனுசந்தியும் அவன் தொண்டருடன்
சிந்தா குலம் கெடச் சேர்ந்திரும் முத்தி பின் சித்திக்குமே–49–

நான்கு விதமான நிலங்களை உடைய பூமியில் உள்ளவர்களே!
அனுபவித்துத் தீர்க்க அழியாத ஸம்ஸாரம் என்கிற நரகத்திலே அழுந்த வேண்டாம் என்று இருப்பீர்களாகில்
அடியேனுக்குத் தந்தையான யதிராஜரைச் சரணடையுங்கோள்!
எல்லாக் காலத்திலும் அவர் விஷயமான இராமானுச நூற்றந்தாதியை அநுஸந்தானம் பண்ணுங்கோள்;
அவர் திருவடிகளில் அன்புடன் இருப்பவர்களுடன் மனோ துக்கங்களெல்லாம் தீரும்படி பொருந்தி யிருங்கோள்;
இப்படிச் செய்தால் மோக்ஷமானது உறுதியாகக் கிடைக்கும்,

இத்தால்
இவருடைய ஆஸ்ரயணாதிகளுக்கு தானே
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியைப் பண்ணும்-என்று கருத்து –

—————-

அவர்கள் அப்படியே செய்கிறோம் என்று ஆறி யிருக்க மீண்டும் அவர்களைக் குறித்து
“இப்படி ஏன் காலத்தை வீணாக்குகிறீர்கள்;
அவர் திருநாமத்தை நினைக்க மிக அரிதான பலம் ஸித்திக்கும்” என்கிறார்.

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி அறிவின்மையால் இப்
பவத்தே உழல்கின்ற பாவியர்காள்! பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்கட்கும் எய்த ஒண்ணாத அந்தத்
திவத்தே உம்மை வைக்கும் சிந்தியும் நீர் எதிராசன் என்றே–50-

திருநாமத்தை சொல்லுவதற்குப் பொருத்தமான காலத்தை வீணாகப் போக்கி, அஜ்ஞானத்தால் இந்த ஸம்ஸாரத்தில்
உழல்கின்ற பாபத்தை உடையவர்களே! எல்லாக் காலத்திலும் ஒரு நிலையில் நின்று தவம் செய்தவர்களுக்கும்
அடைய முடியாத பரமபதத்திலே நித்ய ஸம்ஸாரிகளான் உங்களைக் கொண்டு வைப்பார் எம்பெருமானார்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது “யதிராஜரே” என்று சிந்திப்பது மட்டுமே.-நேர்த்தி-யத்னம் -அல்பம் -பலம் -அதிகம் –

—————–

ஸம்ஸாரிகளைப் போலே இழந்த விஷயங்களை உணராமல் இருந்த எனக்கு தேவரீர் க்ருபை உண்டான
பின்பே எப்பொழுது பேறு கிடைக்கும் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார்

என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவின்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தவிக்கும் எதிராசா! நீ அருள் செய்த பின்னே–51-

யதிராஜரே! எல்லாரையும் ஆளும் எம்பெருமான் எப்படி எப்பொழுதும் இருக்கிறானோ அதே போல
அவனாலே ஆளப்படும் ஆத்மாக்களும் எப்பொழுதும் இருக்கிறார்கள்.
இப்படி அநாதி காலம் தொடங்கி இன்று வரை, புண்ய பாப ரூபமான கர்மங்களால் வீணாகவே கழிந்தது என்று
இந்த இழவையும் நினைக்காமல் இருந்த அடியேனுடைய மனது தேவரீர் அருளிய பின்பு
இதிலே இரவும் பகலும் நின்று பரிதபிக்கும் (மிகவும் அனுதாபப்படும்)..-இழவு -அலாப க்லேசம் –

இருவினை –பெரிய வினைகள் என்றும் – புண்ய பாபங்கள் என்றும் ஆகவுமாம்-

——————-

தன்னுடைய நிலையை நினைத்து அனுதாபப்படவே எம்பெருமானாருக்காகப் பெரிய பெருமாள்
கருட வாஹனத்தில் எழுந்தருளி வந்து கொடுக்கும் பேற்றின் பெருமையை நினைக்கிறார்.

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து–52-

காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-

பொன்மயமான மேரு மலையின் மேலே படிந்திருக்கிற கார் மேகம் போலே வினதையின் பிள்ளையான பெரிய திருவடியை
வாஹநமாகக் கொண்டு அழகு நிறைந்தவரான பெரிய பெருமாள் யதிராஜருக்காக
அடியேனுடைய சரீரம் கீழே விழும்போது அடியேன் இருந்த இடத்தே வந்து மகிழ்ச்சியோடே அடியேன் முன்னே நிற்பார்.

விநதை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு-தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )

இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் – என்பது நிச்சயம் -என்று கருத்து –

—————-

இப்படிப்பட்ட ஸம்ஸாரத்தில் துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது என்பதால்
விரைவில் தேவரீர் அடியேனை இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிறார்.

இதத்தாலே தென்னரங்கர் செய்கின்றது என்றறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆ ஓ என்னும் இந்தப் பாவ உடம்புடனே
பல நோவும் அநுபவித்து இப்பவத்து இருக்கப் போமோ?
மதத்தாலே crவல்வினையின் வழி உழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை உனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா! என்னை
இனிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே–53-

அடியேனுக்கு நன்மை வேண்டும் என்கிற ஹித புத்தியாலே பெரிய பெருமாள் அடியேனைத் துன்பப்படும்படி
செய்கிறான் என்பதை அறிந்திருந்தும், அவ்வவ காலங்களில் ஏற்படும் வேதனையின் மிகுதியால் துடித்து,
அதை வெளிப்படுத்தும் வகையில் “ஆ! ஓ!” என்ற ஓசைகளை எழுப்பும் இந்தப் பாவ உடம்போடே
பல துன்பங்களை அனுபவித்து இந்த ஸம்ஸாரத்தில் இருக்க முடியுமோ?
தேஹத்தின் மதத்தாலே, வலிமை பொருந்திய கர்மத்தின் வழியே திரிந்த மஹாபாபியான அடியேனை
தேவரீருக்கு அடிமையாக்கிக் கொண்டு அருளின நன்மையைச் செய்யும் தாயாகவும் தந்தையாகவும்
இருக்கிற யதிராஜரே! இனி, விரைவில் அடியேனை இந்த ஸம்ஸாரத்திலிருந்து எடுத்து
பரம பதத்தில் சேர்த்தருள வேண்டும்,

மாதாவும் பிதாவுமாய் இருக்கிற தேவர் சம்பந்தத்தை அறிந்த பின்பு அடியேனை சீக்கிரமாக இந்த சம்சாரத்தில் நின்றும்
மாந்தாரய -என்னும்படி எடுத்துக் கரை ஏற்றி அருள வேணும் –அவர்ஜ நீய சம்பந்தம் அடியாக இறே உத்தரிப்பித்து அருளுவர்-என்று கருத்து –

—————–

இப்படிக் கேட்டவுடன் எம்பெருமானார் அதை செய்து தருவதாக நினைத்திருக்க,
“கால தாமதம் பண்ணாமல் உடனே அடியேனைப் பரமபதத்தில் ஏற்றியருள வேண்டும்” என்கிறார்.

இன்னம் எத்தனை நாள் இவ்வுடம்புடன்
இருந்து நோவு படக் கடவேன் ஐயோ!
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்றுதான் திருநாட்டினுள் ஏற்றுவீர்?
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்தருள் நாதனே!
என் இதத்தை இராப் பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே!–54-

அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் -என்கிறபடியே-
நமக்குப் பிடித்ததைச் செய்யும் தாயும், நன்மையைச் செய்யும் தந்தையும், மற்றும் உள்ள உறவினர்களும் ஆகி
அடியேனை ரக்ஷித்தருளுகிற ஸ்வாமீ! அடியேனுடைய விருப்பத்தை இரவு பகல் என்றில்லாமல்
என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -என்கிறபடியே-
ஒரே நிலையில் சிந்திக்கிற யதிராஜராகிய வள்ளலே!
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்கிறபடியே-
தேவரீருக்கு அடிமைப் பட்டும்  இன்னம் எத்தனை காலம் இந்த உடம்பில் இருந்து துன்பப்படுவேன்!
ஐயோ! அடியேனை இந்த உடம்பிலிருந்து விடுவித்து தேவரீர் எப்பொழுது
பரம பதத்திலே ஏற்றி யருளப் போகிறீர்?-அந்நாளும் ஒரு நாள் ஆமோ

—————–

எம்பெருமானார் க்ருபையால் தனக்குக் கிடைத்த நன்மைகளை நன்றி யுணர்வுடன் உரைக்கிறார்.

செய்த அம்சத்தில் ‘க்ருதஞ்ஞதையும் செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷிதையும்
அதிகாரிக்கு வேண்டுவது ஒன்றாகையாலே
அந்த கிருதஞ்ஞதா ஸூசகமாக ஸ்ரீ எம்பெருமானார் யுடைய பிரசாதத்தாலே
தாம் பெற்ற பேறுகளை அனுசந்தித்து -வித்தராய் – அருளுகிறார் –

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

திருவரங்கம் பெரிய கோயிலில் பள்ளிகொண்டருளும் பெரிய பெருமாளின் நிர்ஹேதுக க்ருபைக்கு (காரணமில்லாத அருளுக்கு) விஷயமானோம்.
நம் ஸம்ப்ரதாயத்துக்கு வேர் பற்றான திருவரங்கம் திருப்பதியே நம் வசிக்கும் இடமாகப் பெற்றோம்.
நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங்களே நமக்கு எப்பொழுதும் அனுபவிக்கும் உணவாகப் பெற்றோம்.
மதுரகவி ஆழ்வாரின் “தேவு மற்றறியேன்” வார்த்தைகளின் படியே–வடுக நம்பியைப் போலே எம்பெருமானாரே எல்லாம் என்கிற நிலையைப் பெற்றோம்.-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலைமை-என்று
நாமும் நம்முடையாரும் பேசும் படியான சரம பர்வ நிஷ்டையே நிஷ்டையாகப் பெற்றோம் –
நம்முடைய பூர்வாசார்யர்களின் திவ்ய ஸூக்திகளான வ்யாக்யானங்கள், ஸ்தோத்ரங்கள்,
ரஹஸ்ய க்ரந்தங்கள் ஆகியவற்றையே எப்பொழுதும் நினைக்கப் பெற்றோம்.
அவையே நமக்கு எப்பொழுதும் பொழுது போக்காக அமையப் பெற்றோம்.
இதற்குப் பிறகு மனது வேறெதிலும் புகாமல் இருக்கப் பெற்றோம்.
இது எல்லாம் ஒரு தட்டும் -தான் ஒரு தட்டுமாய் இருக்குமதாய்-இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஏற்றம் அறிந்து இருக்கையும் -என்னும்படி அரிதாய் இருப்பதான பர உச்சாராயம் கண்டால்
அசஹிஷ்ணுதை இல்லாத மஹாத்மத்தையும் லபிததோமே-இது ஒரு மகா லாபம் இருந்தபடியே —இதென்ன ஆச்சர்யம்!

————————

மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் என்று தம் நிலையைச் சொன்ன பிறகு,
அதற்குப் பொருத்தமாக எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்யத்தைக் கேட்கிறார்.

உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ!
எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத்தாள் தா–56-

யதிராஜரே! தேவரீருடைய அபிமானமே (கருணையே) இவ்வாத்மாவுக்கு உத்தாரகம் (ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பது).
அடியேன் மனத் தெளிவோடே இருக்கும்படிச் செய்த தேவரீர், ஐயோ! வேதனைகளால்
அடியேனைத் துன்புறுத்தாமல் ஸாமர்த்யமாக-உன் பாத யுகமாமேர் கொண்ட வீடு -என்கிறபடியே தேவர் திருவடிகளையே பிரசாதித்து அருள வேணும் –

——————

எம்பெருமானார் “எந்த உறவைக் கொண்டு இப்படிக் கேட்கிறீர்” என்பதாகக் கொண்டு
“திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளில் ஆஸ்ரயித்த காரணத்தால் ராஜ குல மகாத்ம்யத்தாலே
ஒரு வஸ்து என்று அபிமானித்து-அடியேனுடைய அபராதங்களைப் பாராமல்
ஏற்றுக் கொண்ட தேவரீர் அடியேனுடைய புன் சொற்களையும் கேட்டருள வேண்டும்” என்கிறார்.

தேசிகர்கள் போற்றும் திருவாய்மொழிப் பிள்ளை
வாசமலர்த் தாள் அடைந்த வத்துவென்னும் நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசரே! அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து–57-

யதிராஜரே! -செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான
மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான
திருவடிகளை ஆஸ்ரயித்துச் சரணடைந்த அடியவன் என்கிற அன்பினாலே
அடியேனை ஏற்றுக் கொண்ட தேவரீர் அடியேனுடைய அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும் –

—————-

“திருவாய்மொழிப் பிள்ளையுடைய வாச மலர் தாள் அடைந்தது – என்கிற மாத்ரமேயோ
அவரிடத்திலே ஞானத்தைப் பெற்ற அடியேனுக்கு தேவரீரிடத்தில் ஒரு ஸம்பந்தம் இல்லையோ?” என்கிறார்.

எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்
உந்தன் உறவை உணர்த்தியபின் இந்த உயிர்க்கு
எல்லா உறவும் நீ என்றே எதிராசா!
நில்லாதது உண்டோ என் நெஞ்சு?–58-

யதிராஜரே! அடியேனுக்குத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையுடைய நிர்ஹேதுக க்ருபையாலே
தேவரீர் திருவடிகளில் அடியேனுக்கு இருக்கும் எல்லாவிதமான உறவுகளையும் உணர்த்தியபின்
இப்படிப்பட்ட இந்த ஆத்மாவுக்கு திருமந்த்ரத்தில் காட்டப்படும் ஒன்பது விதமான உறவுகளும்
தேவரீரென்றே அடியேனுடைய மனது நிலை நில்லாமல் இருக்குமோ?
தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே -என்றும்
அல்லாச் சுற்றமுமாகி -என்றும் அன்றோ இருப்பது-

—————-

“இப்படி தேவரீரிடத்திலே அன்பு பூண்ட அடியேனை திருவரங்க நாதனான பெரிய பெருமாள்
பரம பதத்துக்கு அழைத்துச் செல்லப் போவது எந் நாளோ?” என்கிறார்.

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த சிந்தை செய்து இப்
பொல்லா உடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ?
சொல்லாய் எதிராசா! சூழ்ந்து–59-

யதிராஜரே! அடியேனுக்குத் தந்தையும் தாயுமான திருவரங்கநாதனான பெரிய பெருமாள்
அழகு நிறைந்த பெரிய திருவடியின் மேல் எழுந்தருளி
சரீர வியோக சமயத்திலே-எனக்கு அபேஷிதமான கஸ்தூரி திரு நாமத்தையும்
நல் கதிர் முத்தம் வெண்ணகை செவ்வாய் -என்று முறுவலை யுடைத்தான
ஒளி மதி சேர் திரு முகத்தையும் காட்டி அனுபவிப்பித்து
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே-என்னும்படியே
நயாமி -யில் படியே -அர்ச்சிராதி கதியிலே வழி நடத்த மனனம் பண்ணி –
அதுக்கு அந்தர பாவியாக வந்த ஹேயமான தேஹம் தன்னை தேவர்க்காகப் போக்கி அருளுவது எந்நாள்
அத்தை நான் தேறி இருக்கும்படி விசாரித்து அருளிச் செய்து அருளுவீர்

சூழ்ந்து -என்கிறது-ஸ்ரீ பெரிய பெருமாள் அவா அறச் சூழ்ந்தபடி யாகவுமாம்–
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –என்னும் இடத்துக்கு –விசாரித்து -என்று இறே வியாக்யானம் பண்ணி அருளினார்கள்-

—————–

இனி நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே
சம்பந்தம் உடைய நமக்கு தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்–60-

நெஞ்சே! பெரிய பெருமாள் “இந்தக் கோயிலிலே (திருவரங்கம்) நீர் ஸுகமாக இரும்” என்று
அடியேனுடைய தந்தையான யதிராஜருக்கு கொடுத்தருளின வரத்தை ஆராய்ந்து பார்த்தால்
அது நம்மதன்றோ? அது எப்படி என்றால் நல்ல தந்தையின் இயற்கையான சொத்துக்கள் தந்தை வழி உறவு என்ற வழியாலே
புத்ரனுக்காகத் தானே இருப்பது? ஆகையால் நம் ப்ராப்திக்கு நாம் முயல வேண்டாம்,
எம்பெருமானார் க்ருபையால் தானே கிடைக்கும் என்று கருத்து.

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின பிராப்ய பிரார்த்தனை
அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள் என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது-எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

நியாய ஸித்தாஞ்சனம்–நியாய பரிசுத்தி-நியாய சாஸ்திரம் –சம்பிரதாய பரிசுத்தி-

July 9, 2023

உலகில் உள்ளவை அனைத்துமே நான்கு பிரிவுக்குள்ளே அமையும்
1-பிரமாணம்
2-பிரமேயம்
3-பிரமாதா
4-பிரமிதி -என்ற பிரிவுக்குள்ளே அமையும்

நியாய பரிசுத்தி -பிரமாணம் பற்றியும்
நியாய சித்தாஞ்சனம் -ப்ரமேயம் பற்றியும் அருளிச் செய்யப்பட்டவை

ஸ்ருதி சிரஸ் தாத்பர்ய பத தீ லப்தர்தோ வரதார்ய பாத ரசிகாத் ராமாநுஜார் யதா
பாலாநாம் அதி வேல மோஹ பத லாபஷ்டம்ப ஸீத த்ருஸம்
ஸம் யக்த தத்வ நிரீக்ஷணாய தநுதே ஸத் தர்க ஸித்தாஞ்சனம்–மங்கள ஸ்லோகம் 

1-ஜட த்ரவ்ய பரிச்சேதம்
2-ஜீவ பரிச்சேதம்
3-ஈஸ்வர பரிச்சேதம்
4-நித்ய விபூதி பரிச்சேதம்
5-புத்தி பரிச்சேதம்
6-அத்ரவ்ய பரிச்சேதம்
ஆகிய ஆறு அதிகாரங்கள் நியாய சித்தாஞ்சனத்தில் உண்டு

ஸ்ரீ ஸூ க்திகளின் ஏற்றங்கள்
1-ப்ரவிட கம்பீர பரிமித ஸ்ரீ ஸூக்தி
2-யுக்தி பிரமாண கர்ப்ப ஸ்ரீ ஸூக்தி
3-மதாந்திர விவேச்சன பூர்வக ப்ரமேய நிஷ் கர்ஷ வாஸா ஸ்ரீ ஸூக்தி
4-ஸகல சங்கா நிராச பூர்வகம் வாஸா ஸ்ரீ ஸூக்தி

——————-

விவாதத்தின் போக்கில் உள்ள நிலைகள்) பதினாறு படிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது:

  • 1) பிரமாணம் (அறிவின் வழிமுறைகள்);
  • 2) பிரமேய (சரியான அறிவின் பொருள்);
  • 3)  சம்சயா (சந்தேகம் அல்லது தவறான தீர்ப்பை உருவாக்குதல்);
  • 4) பிரயோஜனா (நோக்கம்);
  • 5) த்ருஷ்டாந்தம்   (பழக்கமான உதாரணம்);
  • 6) சித்தாந்தா (நிறுவப்பட்ட கோட்பாடு அல்லது கொள்கை);
  • 7) அவயவ (சிலஜிசத்தின் ஒரு உறுப்பு);
  • 8) தர்கா ( நியாயமான வாதம்);
  • 9) நிரணயா (கேள்வியின் துப்பறிதல் அல்லது தீர்மானம்);
  • 10) வாத (காக்க அல்லது உண்மையை அடைய விவாதம்);
  • 11) ஜல்பா (ஒரு வெற்றியைப் பெறுவதற்கான சண்டை அல்லது தகராறு);
  • 12) விதாண்டா (விளக்கம் அல்லது வெறும் தாக்குதல்);
  • 13) ஹெத்வபாசா (தவறு, ஒழுங்கற்ற எதிர்நிலை , தவறான நேர சவால்கள்);
  • 14) சாலா (தவறாக வழிநடத்துதல் அல்லது வேண்டுமென்றே வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொள்வது);
  • 15) ஜாதி (ஒற்றுமைகள் அல்லது வேறுவிதமாக நிறுவப்பட்ட வீண் ஆட்சேபனைகள்) ;மற்றும்
  • 16) நிக்ரஹஸ்ல்ஹானா (கொள்கையில் கருத்து வேறுபாடு அல்லது மேலும் வாதிடுவதில் எந்த நோக்கமும் இல்லை அல்லது தோல்வியை நெருங்கும் புள்ளி).

————

இந்த பதினாறு படிகள் ‘உண்மை என்ன’ ( யதார்த்தம் ) கண்டறிவதற்கும் நிறுவுவதற்கும் ஆகும் . முதல் நான்கு படிகள் முக்கியமாக தர்க்கத்துடன் தொடர்புடையவை; பிந்தைய ஏழு பிழைகளைத் தடுக்கும் மற்றும் நீக்கும் செயல்பாட்டைச் செய்கிறது. 

துஷ்க-ஜன்ம-ப்ரவ்ருத்திதோஷ-மித்யாஜ்ஞானம் உத்தரோத்தரபாயே ததானந்தரா பயத் அபவர்க: (1.1.2: )

சம்வதா ஒரு தீவிரமான உண்மையைத் தேடுபவருக்கும் அறிவொளி பெற்ற ஆசிரியருக்கும் இடையே அனைத்து ஆர்வத்துடன் நடக்கும் உன்னதமான உரையாடலாகக் கருதப்படுகிறது. பண்டைய இந்திய நூல்களில் பெரும்பாலானவை இந்த வடிவத்தில் உள்ளன.

சம்வதா ஒரு சொற்பொழிவு அல்லது போதனையை வழங்கும்போது, ​​மற்ற மூன்று – வாத , ஜல்ப் அ மற்றும் விட்டண்டா – புத்திசாலி மற்றும் கட்டமைக்கப்பட்ட ( தந்திரம் – யுக்தி ) போட்டியாளர்களிடையே விவாதங்கள் மற்றும் வாதங்கள்.

நியாயா (மனித அறிவின் பொருள்கள் மற்றும் பொருள்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்கான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தர்க்க வழிகள்) மற்றும் ஒரு பகுதியில் சம்வாதத்தைப் பற்றி பேசலாம் ; மற்றும், மற்ற விவாதங்கள்/வாதங்கள்.

நியாய சூத்திரம் முக்கியமாக ஐந்து பாடங்களைக் கையாளுகிறது:
1-பிரமாணம்  (சரியான அறிவின் கருவிகள் அல்லது வழிமுறைகள்);
2-பிரமேயம்  (சரியான அறிவின் பொருள்);
3-வாத (விவாதம் அல்லது விவாதம்);
4-அவயவ (சிலஜிசத்தின் கூறுகள் அல்லது படிகள்);
5- அன்யா-மதா-பரிக்ஷா (பிற பள்ளிகளின் கோட்பாடுகளின் மதிப்பாய்வு அல்லது ஆய்வு).

சம்வதா என்பது ஆசிரியருக்கும் கற்பித்தவருக்கும் இடையே உள்ள ஒரு உரையாடலாகும்.
ஆசிரியரை அணுகுபவர் சீடராக இருக்கலாம்;
மாணவர்; நண்பர் (கிருஷ்ணர்-அர்ஜுனா அல்லது கிருஷ்ணர்-உத்தவர் போல) ;
மகன் (சிவன்-ஸ்கந்தா அல்லது உத்தாலக-ஸ்வேதகேதுவைப் போல);
அல்லது மனைவி (சிவன்-பார்வதி அல்லது யாக்ஞவல்கியா-மைத்ரேயியைப் போல);
அல்லது பெற்றோர் (கபில முனிவர் தனது தாய் தேவஹூதிக்கு கற்பிப்பது போல);
அல்லது அறிவைத் தேடும் வேறு எவரேனும் (நச்சிகேதா-யமாவைப் போல
அல்லது பிரஸ்ண உபநிஷத்தில் பிப்பலாத முனிவரை அணுகும் ஆறு நபர்கள் ).

அத்தகைய சந்தர்ப்பங்களில் சம்வாதத்தின் சிறப்பியல்பு என்னவென்றால்,
கற்பவரின் நேர்மையும் ஆர்வமும் ஆகும்;
அவன்/அவள் அணுகுமுறையில் உள்ள பணிவு;
மற்றும் ஆசிரியர் மீது பூரண நம்பிக்கை.
புத்திசாலியான ஆசிரியர், முழு கருணையுடன், உண்மையைத் தேடுபவர் மீது
மிகுந்த அன்பினால் அறிவுரைகளை வழங்குகிறார்.

ஒரு சம்வதா என்பது ஒரு சொற்பொழிவு அல்லது உரையாடலாகும்,
இது உண்மையுள்ள உண்மையைத் தேடுபவருக்கு கற்பிக்கிறது,
அறிவுறுத்துகிறது அல்லது அறிவைக் கடத்துகிறது.

உபநிஷத் போதனைகளின் பெரும்பகுதி சம்வாத வடிவில் நமக்கு வந்துள்ளது ,
இது பல்வேறு சூழல்களில் நிகழ்ந்தது.
ஒரு ஒளிமயமான ஆசிரியர் ஒரு ஆர்வலருக்கு அறிவுரைகளை வழங்கும் நெருக்கமான அமர்வுகளைத் தவிர,
பல்வேறு வகையான நிகழ்வுகள் உள்ளன, சொல்லுங்கள்:
ஒரு மனைவி தன் கணவனிடமிருந்து அழியாமையின் ரகசியங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறாள்;
ஒரு டீனேஜ் பையன் வாழ்க்கை மற்றும் மரணத்தின் உண்மையை அறிய மரணத்தை அணுகுகிறான்;
ஒரு அரசன் தன் அனுபவத்தில் இருந்து பேசும் ஒரு துறவு முனிவரிடம் அறிவுரை கேட்கிறான்;
வயது மற்றும் ஞானத்தில் முன்னேறிய பிராமணர்கள் ஒரு க்ஷத்திரிய இளவரசனின் காலடியில் அமர்ந்து உத்வேகமாக அறிவுறுத்துகிறார்கள்;
மற்றும் , சில சமயங்களில் முனிவர்கள் அரசர்களால் அணுகப்படும் பெண்களாக இருக்கும்போது .
வேறு வகையான உரையாடல்கள் உள்ளன ,
ஜபாலா காளைகள் மற்றும் பறவைகளால் கற்பிக்கப்படும் போது ( அதி. அப் 4.4-9) ,
புனித நெருப்புகளால் உபகோசலை ( சி. அப். 4.10-15 ),
மற்றும் பாகா ஒரு நாய் (சி. அப். 1.12 ).

ஒரு மாணவனுக்கும் அவனது வழிகாட்டிக்கும் இடையே உள்ள உறவை விட உபநிடதங்களில் எதுவும் இன்றியமையாதது.
ஆசிரியர் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி, உலகின் இயல்பு,
உண்மை போன்றவற்றைப் பற்றிய தனது கருத்துக்களைப் பற்றி அல்லது நினைவகத்தில் பதிந்திருக்கும் மனப் படிமங்கள்
மூலம் காட்சிப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறார்.

உங்கள் ஆழ்ந்த, உந்துதல் ஆசை என்னவோ அதுதான் நீங்கள்; உங்கள் விருப்பம் போல், உங்கள் விருப்பமும் உள்ளது ச யதா காமோ பவதி தத் க்ருதுர் பவதி 

உங்கள் விருப்பம் போல், உங்கள் செயல் ( யத்-க்ரதுர்-பவதி தத்-கர்ம குருதே) ;

உங்கள் செயல் எப்படி இருக்கிறதோ, அதே போல் உங்கள் விதியும் உள்ளது ( யத்-கர்ம குருதே தத்-அபி-ச ṃ பத்யதே ”- ( ப்ரு. அப். 4.4.5 ).

ச யதாகாமோ பவதி தத்-க்ரதுர் பவதி | யத்-க்ரதுர் பவதி தத் கர்ம குருதே | யத் கர்ம குருதே தத் அபி-ஸம்பத்யதே || BrhUp_4,4.5 |

இறுதியில், அனைத்து சாதனைகளும்  எரியும் ஆசையால் தூண்டப்படுகின்றன .

பகவத் கீதை, உண்மையின் தீவிர தேடுபவர், ஒரு கற்றறிந்த ஆசிரியரை பணிவுடன் அணுகி, அவரிடம் அறிவுரைகளைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறது; அவரிடம் மீண்டும் மீண்டும் கேள்விகள்:

தத் வித்தி ப்ரணிபதேன பரிப்ரஸ்நேன ஸேவயா I உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினாஸ் தத்வ-தர்சினா II (பி ஜி.; சா.4; வசனம் 34)  

———

சம்பிரதாய பரிசுத்தி
தம் பரம் என்று இரங்கித் தளரா மனம் தந்து அருளால்
உம்பர் தொழும் திருமால் உகந்து ஏற்கும் உபாயம் ஒன்றால்
நம் பிறவித் துயர் மாற்றிய ஞானப் பெரும் தகவோர்
சம்ப்ரதாயம் ஒன்றிச் சத்திற்கும் நெறி சார்ந்தனமே

கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமாலடி நம் தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே

ஸாஸ்த்ர ஞானம் பஹு கிலேசம் புத்திஸ் சலேந காரணம்
உபதேசாத் ஹரிம் புத்வா விரமேத் ஸர்வ கர்மாஸூ

ஸாஸ்த்ர மூலத்வ ஸம் பிரதிபத்தி உண்டான ஸம் ப்ரதாயமே உப ஜீவ்யம்
தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந சேவயா –வேத்ய உபா தேயங்கள்

அத்யந்த அதிந்தரிய விஷயத்தில் ஸாஸ்த்ர மூலம் இல்லாத ஸம் ப்ரதாயமும்
ஸம் பிரதிபன்ன ஸாஸ்த்ரார்த்த விருத்தமான ஸம் ப்ரதாயமும்
ப்ரஹ்ம விப்ரலம்ப ஸம் பாவனை உண்டானால் பாஹ்ய துல்யமாகையாலே

யதார்த்த அபேக்ஷித அர்த்த நிர்ணயம் உபதேசத்தால் பெறலாம்
ஸத் ஸம் ப்ரதாய ரஹிதமான ஸாஸ்த்ரத்தால் அர்த்த நிர்ணயம் துஷ் கரம் –
ஸூ கரம் தான் ஆகிலும் உப யுக்தம் ஆகாது

ஸதஸ்யம் -ரஹஸ்யம் இரண்டு வகைப்படும்
கீதா சரம ஸ்லோகம் ஸதஸ்யம்
ஸம் ப்ரதாய-உபதேசத்தால் அர்த்த விஷயங்கள் பெற்ற சரம ஸ்லோகம் ரஹஸ்யம்

விரோசனன் இந்திரன் இருவரும் பிரம்மாவிடம் ஆத்ம ஞானம் பெற வர
சரீரமே ஆத்மா என்ற உடன் விரோசனன் போக
இந்திரன் மேல் கேள்விகள் கேட்டு சரீர விலக்ஷணன் ஆத்மா என்ற உபதேசம் பெற்றான் அன்றோ

வ்யாஸ பகவான் -போதாயனர் -டங்கர் -டிராமிடர் -குஹ தேவர் -ஆச்சார்ய பரம்பரை
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் நம்மாழ்வார் -மதுர கவி ஆழ்வாருக்கு உபதேசம்
விதுரர் தர்மபுத்ரனுக்கு பொது தர்ம உபதேசம் செய்தார் ஒழிய ப்ரஹ்ம வித்யையோ மந்த்ரங்களோ உபதேசம் செய்யவில்லையே

ஸ்ரீ ஆளவந்தாருடைய நியோகத்தாலே
ஸ்ரீ பாஷ்யகாரரை அங்கீ கரித்த பூர்ணரான பெரிய நம்பி
அவரை தமக்கு ச ப்ரஹ்மச்சாரிகளான
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த சிஷை பண்ணவும்
ஸ்ரீ திருமாலை ஆண்டான் பக்கலிலே திருவாய் மொழி கெடுக்கவும்
ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பக்கலிலே நாலாயிரத்தைக் கேட்கவும்
நியோகித்ததும்
பஹுப்ய ஸ்ரோதவ்யம்-பஹுதா ஸ்ரோ தவ்யம் ஞான விருத்த மயாராஜன் பகவ
பரி உபாஸித இத் யாதி களையும் ஸூகாதி விருத்தங்களையும் பார்த்து
சிஷ்ய பூதரை பஹு முகமாக திருத்த வேண்டுமாகிற அபி சந்தியாலே உப பன்ன தமம்
இப்படி ஆச்சார்ய அபிமத விஷயத்தில் ஆச்சார்ய ஆஞ்ஜை யாலேயே அபேக்ஷிதா ஞானம் உப ஜீவிதம் பண்ணுவது
ஸாஸ்த்ரார்த்தம் என்னும் இடம்
அந்திம தச அவதியாக அத்யந்த அவஹிதராகக் கொண்டு சதாச்சார்ய அநு பாலநம்
பண்ணின ஸ்ரீ பாஷ்யகாரருடைய அனுஷ்டானத்தாலே ஸித்தம்

ஆசர்வஞானாத் அஸ்மத் ஆச்சார்ய பங்க்தே
அப்ரத் யுகம் ஸத் பதம் ஸ்தா பயந்தீ
ஸைஷா நித்யம் ஸம் ப்ரதாயஸ்ய ஸூத்தி
ஸ்ரத்தாத் வ்யா ஸாதக ந்யாநிஷ் தை-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மன் நாத முனிகள் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள் –திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு 30 பண்கள்–

July 9, 2023

ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்:

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

ஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய  திருப்பேரனார்  ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக  ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார்.

“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம்,
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.”

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை யறிவாரார்
அருளிச் செயலை அறிவாரார் அருள் பெற்ற
நாதமுனி முதலாம் நம் தேசிகரை யல்லால்
பேதை மனமே உண்டோ பேசு   –உபதேச ரத்ன மாலை

ஜ்யேஷ்டா மாஸே த்வநூராதே ஜாதம் நாத முநிம் பஜே|

ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ:

ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்ய ப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை: நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம்

—————

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந் நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தி யடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச் சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்ம வந்தம் |
பிதா மஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

——–

மேலே கண்ட 4 ஶ்லோகங்களிலிருந்து நாதமுனிகளுடைய பெருமையை நாம் அறிகிறோம். அச்சுதன் மீதும் ஆழ்வார் மீதும் ப்ரீதி அபிவ்ருத்தி அடைய நாமும் நாதமுனிகளுடைய திருவடித் தாமரைகளை வணங்குவோம்.

————

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் பக்தி அவக்ரஹே
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–5-

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் -ஸ்ரீ நாதமுனிகள் என்ற பிரசித்தமான மேகத்தை ஸ்துதிக்கிறேன்
பக்தி அவக்ரஹே-பக்தியாகிற தீர்த்தம் அருமைப்பட்டு இருந்த துர் பிஷ காலத்தில்
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –பகவத் வியதிரிக்த விஷயாந்தரங்களில் விரக்தியில் என்ன –
பகவத் ஞான பக்திகள் என்ன ஆகிய இவற்றை எங்கும் வர்ஷிக்க வல்ல-நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம்

———-

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

சர்வ வேதங்களின் உட்ப்பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

—————

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

ஸ்ரீ நம் ஆழ்வார் -இசை உணர்ந்தோர் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -இனியவர் -ஸ்ரீ பராங்குச நம்பி -சீரை பயின்று உய்யும் ஸ்ரீ நாதமுனி
நெஞ்சால் வாரிப் பருகும் ஸ்ரீ ராமானுஜன் -ஐந்து பேர் இங்கும் –இது அன்றோ நமது ஸ்ரீ அமுதனாருக்கு பஞ்சாம்ருதம் –

சீலம் கொள் நாத முனியை –
இப்படி உஜ்ஜீவனமே ஸ்வபாவமாக உடையரான ஸ்ரீ மன் நாத முனிகளை-ஸ்ரீ ரங்க நாதருடைய திருநாமத்தை வகித்து –
ஆழ்வார் தமக்கு உபதேசித்த அர்த்தங்களை அடைவே சர்வதா -மனனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ மன் நாதமுனிகளை -என்றபடி –

நெஞ்சால் வாரிப் பருகும் –
சமான காலமானால் -காயிகமாகத் தழுவி -முழுசிப் பரிமாறி அனுபவிப்பார் காணும் –
அத்யந்த கால வ்யவதானமாக இருக்கையாலே அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளை -நெஞ்சாலே அள்ளிக் கொண்டு
பிரி கதிர் படாதபடி விக்ரக குணங்களோடு கூட அனுபவிக்கை –

இனியவர் தம் சீரைப் பயின்று நீராய் உருகினார் -ஸ்ரீ மன் நாதமுனிகள்-
அத்தகைய நீரைப் பருகி விடாய் தீர்த்து இன்புறுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ மன் நாத முனிகளை ஆர்வத்துடன் நெஞ்சால் நினைந்து இனிது அனுபவிக்கிறார் எம்பெருமானார்

என் தன் மாநிதி –
அடியேனுடைய மகா நிதி
நவநிதியான தனங்களும் பிரளயத்திலும் அழிவு உண்டு -அப்படி அன்றிக்கே அவற்றைக் காட்டில் விலஷணமாய்
அப்ராக்ருதமான நிதி -என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யாதிய சரணவ் சரணம் மதீயம் என்று அருளிச் செய்தார் இறே ஸ்ரீ ஆள வந்தாரும்

ஏனைய நிதிகள் போலே அழிவுறாத புதையல் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ ஆழ்வான் உதவிய ஞானக் கண்ணால் அப் புதையலைக் கண்டு எடுத்து ஆண்டு அனுபவிக்கும் தனது பாக்கியம்
தோற்ற –என் தன் மா நிதி -என்கிறார் –
கொள்ள குறை இலன்…குறையாத நிதி..வாரிப் பருகும் மா நிதி–

———-

மூளும் தவ நெறி மூட்டிய நாத முனி கழலே நாளும் தொழுது எழுவோம்
நமக்கார் நிகர் நானிலத்தே –ஸ்ரீ வேதாந்த தேசிகர்

நாதேந முனி நாதேனே பவேயம் நாதவான் அஹம் -நாதனை உடையவனாக ஆகக்கடவேன் -ஸ்ரீ வேதாந்த தேசிகர்

அநாதன் அவஸ்தை கழிந்து ச நாதன் ஆனேன்

யஸ்ய நைகமிக தத்வம் -ஆகமத்தில் கூறப்பட்ட பர ப்ரஹ்மம் –ஹஸ்த ஆ கமலம் -உள்ளங்ககை நெல்லிக்கனி போல் -கண்டவர் நாதமுனி அன்றோ

———-

முனியே நான்முகனே முக்கண் அப்பா –
சடகோப முனி
ரெங்கநாத முனி -சுருங்கி நாத முனி -93 திருநக்ஷத்ரம் இங்கே எழுந்து அருளி இருந்தார்
ஆளவந்தார் முனி
ராமானுஜ முனி
அனைவரும் உஜ்ஜீவன உபாயம் மனனம் பண்ணிக் கொண்டே இருப்பதால் முனி

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

யோகிகள் -ஒரே விஷத்தில் த்யானம் –
அவர்கள் நினைத்த கார்யங்கள் ஸித்தி அடையும் வரையில் இவ்வுலகினில் வாழும்படி அருளுவான்
வேதங்களை தமிழ் செய்ய மாறனையும்
மாறன் பெருமையை விளக்க மதுரகவி ஆழ்வாரையும்-தேவு மற்று அறியேன் -என்று ஆயிற்று இவர் பேச்சு இருப்பது
கண்ணி நுண் சிறுதாம்பின் பெருமையை உணர்த்த பராங்குச தாஸரையும்-மதுரகவியார் எம்மை யாள்வார் யவரே யரண் -என்று இருப்பது
அருளிச் செயல்களை நித்தியமாக ஸ்தாபிக்க கட்டமைக்க நாதமுனிகளையும்
ராமாநுஜரைக் கடாக்ஷித்து ஆ முதல்வன் இவன் என்று ஆக்கப் பிரார்த்திக்க ஆளவந்தாரையும்
நம் போல்வாரையும் உஜ்ஜீவித்து அருள சரணாகதி நமக்காக மிதுன பெரிய பிராட்டியார் நம்பெருமாளை
சரண் அடைய ராமாநுஜரையும்
இங்கே வைத்து அருளினான்

பெருமாள் பிராட்டி அருளால் நான்முகன் வேதம் வெளிப்படுத்த
அவர் அருளால் வசிஷ்டர் போல்வார் பெற்றது போல்
வ்யாசம் வசிஷ்ட நப்தாரம்–இத்யாதி –
வசிஷ்டர் சக்தி பராசரர் -வியாசர் சக்தி வேத பரம்பரை
வசிஷ்டர் போல் நம்மாழ்வார்
சக்தி போல் மதுரகவி யாழ்வார்
பராங்குசர் -பராங்குச நம்பி
வியாசர் போல் நாதமுனி
ஸூகாச்சார்யார் போல் ஆளவந்தார் ராமானுஜர்

திருக்கண்ண மங்கை ஆண்டான் -நாதமுனிகள் சிஷ்யர் ஸூய வியாபாரத்தை விட்டு பிரபத்தி நிஷ்டையின் ஸ்ரேஷ்டம் வெளியிட்டு அருளினார்

——————-

குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி –ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த திருப்பல்லாண்டு தனியன்

அவிதித விஷயாந்தரச் சடாரே ருபநிஷதன் முபகான மாத்ர போக
அபி ச குண வசரத்த தேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து —ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத் தாம்பு தனியன்

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹரம் –ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்த-ஸ்ரீ திருவாய் மொழி-தனியன்

————-

நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான் —ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது

நாதர் ஆகிறார் -ஸ்ரீ ரெங்க நாதர் -என்னும் நாமதேயத்தை யுடையராய்
ஆத்யாய குலநாதாயா -என்னும்படியான ஆழ்வாரை நாதராக யுடையவராய்
வ்யோம்ன பரஸ்மாத் சவிதம் சமேத்ய லஷ்ம்யா நியோகாத் குருகாதி ராஜ
சமந்தரராஜ த்வயமாஹ யஸ்மை நாதாய தஸ்மை முனயே நமோஸ்து -என்று
திருமாலால் அருளப் பட்ட சடகோபன்
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் -என்கிறபடியே அந்த ஆழ்வாருடைய அருள் பெற்ற நாத முனி என்கை-
ஆழ்வாரை திருப் புளி யடியிலே மயர்வற மதி நலம் அருளி விசேஷ கடாஷம் பண்ணினாப் போலே
அவ்விடம் தன்னிலே ஆழ்வாரும் விசேஷ கடாஷம் -செய்து அருளினார் –
தாம் மயர்வற மதிநலம் பண்ணி யருளி பஜனத்தில் சேர்க்கிறார்–ஆச்சார்ய ஹிருதயம் சூர்ணிகை 213- -என்னக் கடவது இ றே
ஆழ்வார் உடைய பக்தியோடு விகல்பிக்கலாம் படியான -அகாத பகவத் பக்தி – இ றே இவரது

திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –ஸ்ரீ மா முனிகள் அருளியது

———

வேதாந்த தேசிகர் தத்வ முக்த கலாபத்திலே
உக்தம் கலு நாதமுனிபி வேதாந்த அநு கூலம்
ந்யாய தத்வாபி தேயேந தச்ச பரிக்ருஹீதம் யாமுநா சார்யாதிபி
நியாய தத்வம் என்ற பெயர் வைத்ததாலேயே வேதங்களுக்கு அநு கூலமானதையே அருளிச் செய்தார் என்றவாறு

தேசிகர் நியாய பரிசுத்தியில்
பகவன் நாத முனிபி ந்யாய தத்வ சமாஹ்வயாப்
அவதீர்யாஷா பாதாதீன் ந்யவந்தி நியாய பத்ததி
அக்ஷபாதர் முதலிய நியாய ஸாஸ்த்ர ப்ரவர்த்தகர்களை மீறி நியாய ஸாஸ்த்ர சம்பிரதாயத்தை ஏற்படுத்தி அருளியவர் அன்றோ நம் நாதமுனிகள் ஸ்வாமிகள்

தத்ர தர்ம பூத ஞானஸ்ய த்ரவ்யத்வம்
ந்யாய தத்வாதம் ஸித்தி பாஹ்யாதி
ஸித்தம் அநு சரதாம் தந் நிஷ்ட ஸ்ம்ருத் யாக்ய
விகார உத்பாதக ஸம்ஸ்காரோபி தந் நிஷ்ட
ப்ராப்த அந்தரங்கத் வாத பாதாச் ச

அங்கு ஞானம் தர்மம் என்று ஒத்துக்க கொள்பவர் ஞானம் த்ரவ்யம் என்று கொள்ள வேண்டும்
ஆம் ஒத்துக் கொள்வர் -ஏன் எனில்
அவர்கள்
ந்யாய தத்வம்
ஆத்ம ஸித்தி –
அதன் பாஷ்யம் ஆகியவற்றில் வலியுறுத்தப் பட்டவையை பின் போற்றுபவர் ஆயிற்றே
அப்படியானால் அந்தத் த்ரவ்யத்தின் உள்ளிட்ட நினைவு என்ற விசாரம் இன்றி
அந்நினைவை உண்டாக்கும் ஸம்ஸ்காரமும் -தொடர்ந்த உணர்வும் -அதன் உட்பட்டதாகவே இருக்கும் என்றாகி விடும்
ஏன் எனில் அவை இரண்டும் நெருங்கி இருப்பதால் மட்டும் அல்ல-தடையும் இல்லை என்பதாலும்

யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்த்ரம் ந்யாய தத்வம் ப்ரசஷ்மஹே –ந்யாய தத்வ மங்கள ஸ்லோகம்

ஜகத் காரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் அன்றோ
உள்ளங்கை நெல்லிக்கனி போல் முக்காலமும் உள்ள
எல்லாவற்றையும்
எல்லாக் காலத்திலும்
ஸ்வதஸ் தம் ப்ரபாவத்தினாலேயே
எவர் ப்ரத்யஷீ கரிக்கிறாரோ -அந்த ஹரியை வணங்கி
நியாய தத்துவத்தை நன்கு விவரிப்போம் –

ப்ரணம்ய ஹரிம்
ப்ரணவ ஜபம் -யோகிகளுக்கு அப்பியாசம் செய்வது
ப்ரகர்ஷேண நூயதே அநேந இதி ப்ரணவ –
சேஷத்வத்தை உணர்ந்து நினைத்துக் கொண்டு ஜபிப்பது யோக அப்யாசம் –

தத்வம் ஜிஞ்ஞாச மாநாநாம் ஹேதுபிர் ஸர்வதோ முகை தத்வம் ஏகோ மஹா யோகீ ஹரிர் நாராயணப் பர–ஸ்ருத ப்ரகாசிகை ஸ்லோகம்

———————

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

மங்கள ஸ்லோகம்
யோ வேத்தி யுகபத் -உள்ளூர் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி
ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக
ஸதா -எப்போதும் –
ஸ்வத -இயல்பாகவே
தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம்
ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத்
உவமானம் நான்காவதாக நையாயிகர்
லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம்
மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன்
அபின்ன நிமித்த காரணம்
நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள்
வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே
எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா
கட்டைப் போல் -நையாயிகன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார்
நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார்

ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை –
கண்டிக்க ஸ்லோகங்கள்
ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம்

அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே  

குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே
பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார்
இரண்டாவது இல்லையே

அஞ்ஞானம் அநிர் வசனீயம்
ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும்
கயிறு பாம்பு போல்

ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால்
ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு

விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே
விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும்
ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை
தன்னைத்தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே
ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே

ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும்
இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே
ப்ரஹ்மம் அனுபவம் அறிவு
அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம்
ஞானம் அஞ்ஞான விரோதி

அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே
ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம்

————

திவ்ய ப்ரபந்த பாசுரங்களுக்கு நாதமுனிகள் 30 பண்கள்  அமைத்தார்.
அவை யாவன:
1.இந்தளம் 2 கவ்வானம்.3 காந்தாரம்
4.குறண்டி 5 குறிஞ்சி 6 கொல்லி
7 கைசிகம் 8 சீகாமரம் 9 செந்திருத்தி
10 செருத்தி 11 தக்க ராகம் 12 தக்கேசி
13.தோடி 14.நட்ட பாடை 15.நட்டராகம்
16.நாட்டம் 17 நைவளம் 18 பஞ்சமம்
19.பஞ்சுரம் 20 பழஞ்சுரம் 21 பழந்தக்க ராகம் 22 பழம்பஞ்சுரம் 23 பாலையாழ்
24 பியந்தை 25 புற நீர்மை 26 முதிர்ந்த குறிஞ்சி 27 மேகராகக் குறிஞ்சி 28.வியந்தம் 29 வியாழக் குறிஞ்சி
30.அந்தாளிக் குறிஞ்சி
இவற்றை சங்ககாலத் தமிழிசை மரபு அடிப் படையிலேயே அமைத்துள்ளார்.
ஆனால் நாதமுனிகள் அமைத்த பண்கள் பற்றிய விவரங்கள் இன்றுள்ள நாலாயிரத் திவ்யப்பிரபந்த நூல்களில் காணப்படவில்லை.
அவற்றுக்குப் பதிலாக இன்று நடைமுறையில் உள்ள ராகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் சில திவ்யப்ரபந்தங்களில் சில பதிகங்களுக்கான ராகங்களும்,
அவற்றுக்கான நாதமுனிகள் அமைத்த பண்களும் வருமாறு:
பல்லாண்டு: நாட்டை(ராகம்) நட்டபாடை(பண்)
🔔🎷🎸🔔
பெரியாழ்வார் திருமொழி :
🔔🔔🔔🔔🔔🔔🔔
வெண்ணை விழுங்கி : கேதார கெளளம்(ரா);பாலையாழ்(ப)
மாணிக்கம் கட்டி: நீலாம்பரி(ரா); மேகராகக் குறிஞ்சி(ப)
நாச்சியார் திருமொழி :
🌹🌺🌻🌼🌷🌹🏵🥀
தையொரு திங்களும்: சாவேரி(ரா); கொல்லி(ப)
பெருமாள் திருமொழி:
🙏🙏🙏🙏🙏🙏
ஊனேறு :தன்யாசி(ரா); காந்தாரம்(ப)
திருமாலை(முழுதும்): சஹானா(ரா);அந்தாளி(ப)
திருப்பள்ளி எழுச்சி: பூபாளம்(ரா); புறநீர்மை(ப)
அமலனாதிபிரான்: யமுநா கல்யாணி(ரா); சீகாமரம்(ப)
கண்ணிநுண் சிறுத்தாம்பு: பைரவி(ரா); செந்திருத்தி(ப)
திருப்பாவை:
📢📣📢📣📢📣
திருப்பாவை முப்பது பாசுரங்களும் இன்னிசை அமுதம்.நாதமுனிகள் முப்பது பாசுரங்களை இருபது வேறு வேறு பண்களில் அமைத்துள்ளார்.
மார்கழித் திங்கள்:பிலஹரி(ரா) நட்டராகம்(ப)
மாயனை,மன்னு வடமதுரை மைந்தனை: தோடி(ரா);தோடி(ப)
சிற்றஞ் சிறுகாலே: கல்யாணி(ரா) செருந்தி(ப)
பெரிய திருமொழி:
👌👌👌👌👌👌👌
வாடினேன் வாடி: தேசிய ராகம்(ரா) இந்தளம்(ப)
வாலிமா வலத்து: அடாணா(ரா)முதிர்ந்த குறிஞ்சி(ப)
தூவிரிய மலருழக்கி: மோஹனம்(ரா); பஞ்சமம்(ப)
விற்பெரு விழவும்: பூபாளம்(ரா); புறநீர்மை(ப)
திருவாய் மொழி:
👣👣👣👣👣👣👣
முடிச்சோதியாய் : தேசிய ராகம்(ரா); இந்தளம்(ப)
அஞ்சிறைய : அபரூபம்(ரா)நட்டபாடை(ப)
பொலிக! பொலிக!!: யமுநாகல்யாணி (ரா); சீகாமரம்(ப)
திண்ணன்வீடு : பந்துவராளி(ரா) தக்கராகம்(ப)
தேவகான இசை மேதை நாதமுனிகள் !
🥁🔔🎸🎷🎻🎺📣🔔🥁
நாதமுனிகள் நுணுக்கமான இசை ஞானம் பெற்றவர்.ஏழிசை வல்லவர்.
திவ்ய பிரபந்த பாசுரங்களுக்குப் பண், தாளம்,இசை அமைத்து வைத்தார்.
அவரும் அவர் மருமக்கள் இருவரும் இசையோடு பாடினர்.
சாதாரண மனிதர்களுக்கும் புரியும் மனுஷகானம் தவிர,தேவ கானத்திலும் விற்பன்னர் நாதமுனிகள்.
அக்காலத்தில் ஒரு நாள் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த
சோழமன்னரின் அரசவையில் மனுஷகானம் பாடும் ஒரு பெண்ணும்,தேவகானம் பாடும்
ஒரு பெண்ணும், ராஜா மற்றும் வித்வான்கள் முன்னிலையில் தங்கள் கானங்களைப் பாடினர்.
அவர்களுக்குத் தேவகானத்தின் மேன்மை தெரியாததால், மனுஷகானம் பாடியவளைக் கொண்டாடி
அவளுக்குப் பொன்னும்,மணியும்,பரிசும் கொடுத்து, தேவகானம் பாடியவளை நிராகரித்தனர்.
அவள் மிக சோகத்துடன், தேவர்கள் அறியும் கானத்தை இவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று,
திவ்ய தேசங்களுக்குச் சென்று தேவகானம் பாடிக்கொண்டு,காட்டுமன்னார் கோயிலுக்கு வந்தாள்.
அங்கு அவள் பாடிய போது,அங்கிருந்த நாதமுனிகள் அதை உகந்து கொண்டாடி
பெருமாளின் தீர்த்தப்பிரசாதமும்,திருப்பரியட்டமும் பிரசாதித்து அருளினார்.
அந்தப்பெண் மீண்டும் அரசவை சென்று,ராஜாவிடம் தேவகானம் அறிந்த நாதமுனிகளை அழைத்து வந்து கேட்குமாறுவேண்டினாள்.
ராஜாவும் நாதமுனிகளை தகுந்த மரியாதையுடன் அவைக்கு அழைத்து வந்து,தேவகானம் பற்றி விளக்குமாறு வேண்டினார்.
நாதமுனிகள் இருவரையும் பாடச் சொல்லி, தேவ கானத்தின் ஏற்றங்களை எடுத்துரைத்து,
தேவகானம் தேவர்களுக்குத் தெரியுமே யொழிய அவர்களுக்குத் தெரியாது என்றார்
.”இதன் மேன்மை உங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் எப்படி அறிவது” என்று ராஜா கேட்டார்.
நாதமுனிகள் நாலாயிரம் தாளங்களை ஒரு சேர இசைக்கச் சொல்லி,
ஒவ்வொரு தாளமும் இத்தனை எடை,இத்தனை எடை என்று உடனே சொன்னார்.
பின்னர் அந்தத் தாளங்களை எடை போட்டுப் பார்த்தபோது,அவை நாதமுனிகள் சொன்னதிலிருந்து
கொஞ்சம் கூட குறையாமல்/கூடாமல் இருந்ததைக் கண்டு மிக ஆச்சரியமு ப்பட்டனர்.
ராஜா, ஸ்வாமிகளின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து, அவருக்குப் பல பஹூமானங்களை சமர்ப்பித்தார்.
இதில் எவற்றிலும் பற்றற்ற நாதமுனிகள் அவற்றை ஏற்காமல், ராஜாவை ஆசீர்வதித்து, வீரநாராயணபுரம் திரும்பினார்.
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே !
🔔👏🔔👏🔔👏🔔👏🔔👏
தாளங்களில் வல்லுனரான ஸ்ரீமந் நாதமுனிகள் திவ்யப்ரபந்தப் பாசுரங்களுக்கு தாளத்தை நிர்ணயித்தே இசை வகுத்தார்.
இசையின் கால பிரமாணத்தை நிர்ணயித்து அதனை நிலைப்படுத்துவது தாளமே.இசைக்கு உயிர் போன்றது தாளம் ஆகும்.
தாளம் என்னும் சொல் குமிழ் வடிவான வெண்கலத்தாலான ஒரு கருவியைக் குறிப்பிடும் சொல்லாகவும்,
காலத்தைக் கணக்கிடும் கருவியாகவும் உள்ளது.
ஸ்ரீமந் நாதமுனிகள் திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு ஏழு வகையான தாளங்கள் அமைத்தார்.அவையாவன:
1.ஏழொத்து 2.ஒன்பதொத்து,
3.இடையொத்து 4.நடையொத்து.
5. மிடைத்தொத்து 6.முடுகினமிடைந் தொத்து 7.மழுமுடித்தல்
தாளத்தின் உரு,மடிப்புகள்,அமைப்பு,எடை, வீச்சு அளவு போன்றவையின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் வழங்கப் பட்டுள்ளன.
ஸ்ரீமந் நாதமுனிகளை,”தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்” என்று ஸ்ரீ வேதாந்த தேசிகர் கொண்டாடுகிறார்.
——————
வேத வியாசர் வேதங்களை ரிக்,யஜுர், சாம,அதர்வணம் என்று நான்காகப் பிரித்தது போல,
நாதமுனிகள் திவ்யப் பிரபந்தங்களை முதலாயிரம், இரண்டாம் ஆயிரம்,மூன்றாம் ஆயிரம்,நான்காம் ஆயிரம் என்று பிரித்தார்.
இவ்வாறு பிரித்துத் தொகுக்கும் போது
1) அநுஸந்தான க்ரமம்,2) அவதார க்ரமம் ஆகிய இரண்டு முறைகளைப் பயன்படுத்தி உள்ளார்.
அநுஸந்தான க்ரமம் என்பது,”முமுக்ஷுவுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யம் மூன்று” என்ற அடிப்படையில்
திருமந்திரம்,த்வயம், சரம ஸ்லோகம் என்னும் மூன்று மந்திரங்களின் விவரணமாக அமைந்துள்ளது.
முதல்,இரண்டு,மூன்றாம் ஆயிரங்கள் அநுஸந்தான க்ரமத்தின் படியும்,
நான்காம் ஆயிரமான இயற்பா அவதார க்ரமத்திலும் அமைத்துள்ளார்.
அநுஸந்தான க்ரமம்: “திருமந்திரம்”
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முதலில் அவதரித்தது பிரதம ரஹஸ்ய மான திருமந்திரம்.இது மூன்று பதங்களை உடையது
“ஓம்,நம:, நாராயணாய”.இதில் முதல் பதம் ஓம் என்னும் ப்ரணவம்.
இந்த ப்ரணவத்தின் விளக்கமாக 1)திருப்பல்லாண்டு,
2) பெரியாழ்வார் திருமொழி,3)திருப்பாவை,4)நாச்சியார் திருமொழி,
5)பெருமாள் திருமொழி,6)திருச்சந்த விருத்தம்,7)திருமாலை,8) திருப்பள்ளி எழுச்சி,9)அமலனாதிபிரான் ஆகியவற்றை அமைத்தார்.
“நம:” –இரண்டாவது பதமான “நம:” என்பது ‘ந’ ‘ம’ என்று இரண்டுபதங்களைக் கொண்டது.
‘ம’ என்பது தனக்கு உரியன் என்பது.’ந’ என்பது அதைத் தவிர்ப்பது.
நம: என்றால் ‘நான் எனக்கு உரியன் அல்லேன்’ என்பதாகும்.
ஸ்வாதந்தர்யத்தை விட்டு இன்னொருவருக்கு–எம்பெருமானுக்குப் பாரதந்தர்யமாக இருப்பது.
‘கண்ணிநுண் சிறுத்தாம்பில்’ மதுரகவியாழ்வார் ஒரு படி மேலே போய் எம்பெருமானை அறியேன்,
ஆனால் அவர் அடியார்களுக்கு எல்லா அடிமைகளும் செய்வேன்–
“மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே ! தேவுமற்றறியேன் !குருகூர் நம்பி, பாவின் இசை பாடித் திரிவனே”
என்று பாரதந்தர்யத்தின் எல்லை நிலமான ஆசார்ய/பாகவத சேஷத்வத்தைப் பாடினார்.
ஆதலால் ‘நம:’ பதத்தின் விளக்கமாக கண்ணிநுண் சிறுத்தாம்பை 10 ஆவது பிரபந்தமாகச் சேர்த்து முதலாயிரம் என்னும் தொகுப்பை அமைத்தார்.
“நாராயண”–நாராயண என்னும் பதம் பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணைச் சொல்கிறது.
நாராயண என்றால் நாரங்களுக்கு அயனம்(இருப்பிடம்) என்பது.
நாரங்கள் என்றால் “அனைத்து நித்ய வஸ்துக்கள்–
அவையாவன: ஜ்ஞாநாநந்த அமலத்வாதிகளும்,ஞான சக்தியாதிகளும்,வாத்ஸல்யம்,செளசீல்யம்,திருமேனி காந்தி,செளகுமார்யம்,திவ்ய பூஷணங்கள்,திவ்ய ஆயுதங்கள்,பெரிய பிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்கள்
நித்ய ஸூரிகள்,குடை,சாமரம் முதலியவை,
திருவாசல் காக்கும் முதலிகள், பரமாகாசம்,ப்ரக்ருதி,காலம்,அண்டம்,
அண்டத்துக்கு உட்பட்ட தேவாதி பதார்த்தங்களும்”.
இதனால் பலித்தது பரத்வம்,செளசீல்யம்,அந்தர்யாமித்வம், உபாயத்வம்,உபேயத்வம் ஆகியவை.
இவற்றின் விளக்கமாகத் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி,
திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம் ஆகிய மூன்று பிரபந்தங்களை இரணடாம் ஆயிரமாக வைத்தார் நாத முனிகள்.
அநுஸந்தான க்ரமம்: த்வய மந்த்ரம் !
👍👌👍👌👌👍👌👍👌👍👌
த்வய மஹா மந்த்ரம் இரண்டு வாக்கியங்களை உடையது.
பூர்வ(முதல்) வாக்கியம் பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பற்றுகிறது.
உத்திர (இரண்டாம்) வாக்கியம் பெருமாளும் பாராட்டியுமான அடிமையை–கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறது.
இந்த த்வய மந்த்ர விவரணமாகத் திருவாய்மொழி அமைந்துள்ளதால் அதனை மூன்றாவது ஆயிரமாக நியமித்தார்.
(சேவிக்கும் க்ரமம்) அநுஸந்தான க்ரமத்தில் அவதார க்ரமம்: சரம ஸ்லோகம் !
👣👣👣👣👣👣👣👣👣👣👣
சரம ஸ்லோக விவரமான இயற்பா பிரபந்தங்களை அவதார க்ரமத்திலே நான்காம் ஆயிரமாகத் தொகுத்தார்.
அவதார க்ரமம்– முதல் திருவந்தாதி (100),இரண்டாம் திருவந்தாதி(100),
மூன்றாம் திருவந்தாதி(100),நான்காம் திருவந்தாதி(96),திருவிருத்தம்(100),திருவாசிரியம்(7),பெரிய திருவந்தாதி(87),
திருவெழு கூற்றிருக்கை(1),சிறிய திருமடல்(77. 1/2) பெரிய திருமடல் (148.1/2)–(மொத்தம் 817)
திருப்பல்லாண்டுக்குத் தனி மேன்மை !
🔔🥁🔔🥁🔔🥁🔔🥁🔔🥁
நாதமுனிகள் திருப்பல்லாண்டை முதல் பிரபந்தமாகவும்,தனிப் பிரபந்தமாகவும் வைத்தார்.
திருப்பல்லாண்டுக்குத் தாமே,
“குருமுகமநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்” தனியனை அருளிச் செய்தார்
இந்த அடிப்படையிலேயே சந்நிதிகளில்,
நாலாயிரத் திவ்யப்ரபந்த சேவா காலங்களில்,குறிப்பாக எந்த ஆழ்வார் பிரபந்தங்களையும் சேவிக்கும் போது,
திருப்பல்லாண்டு தொடங்கி,சேவித்த பிறகே,மற்ற பிரபந்தங்களும் சேவிக்கப் படுகின்றன.
மேலும் அத்யயன உற்சவம் நிறைவு பெற்றவுடன் எல்லா திவ்ய தேசங்களிலும் திருப்பல்லாண்டு பிரபந்தமே தொடக்கம் செய்யப் படுகிறது.
இது “திருப்பல்லாண்டு தொடக்கம்” என்றே கொண்டாடப் பட்டு,நாலாயிர ப்ரபந்த சேவா காலம் தொடங்கப் படுகிறது.
இதன் அடிப்படையிலேயே,
திருப்பல்லாண்டைக் கொண்டாடும் மணவாள மாமுனிகள்,
“கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்,
ஆதி திருப்பல்லாண்டானதுவும், வேதத்துக்கு,
ஓமென்னுபது போல்,உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய்த்,
தான் மங்கலமாதல்”(உப.ர.மாலை 16)
“உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்,
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர்”(20)-என்று பாடுகிறார்
நாதமுனிகள் தொகுத்த பாசுரங்களின் எண்ணிக்கை :
🙏👏👏👏👏👏👏🙏
முதல் ஆயிரம்: 947
இரண்டாம் ஆயிரம்: 1134
மூன்றாம் ஆயிரம் : 1102
நான்காம் ஆயிரம் : 817
மொத்தம் : 4000
நாதமுனிகள் காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட இராமாநுச நூற்றந்தாதி 108 பாசுரங்களும்,
நம்பெருமாள் நியமனப்படி நாலாயிரத்தோடு சேர்க்கப் பட்டது.
ப்ரணவார்த்தமான முதலாயிரத் தோடு,நம்மாழ்வார் விஷ்யமாக கண்ணிநுண் சிறுத்தாம்பை நாதமுனி கள் சேர்த்தது போல,
சரமபர்வமாய் இருப்பதான இராமாநுச நூற்றந்தாதி இயற்பாவோடு நிறைவாகச் சேர்த்து சேவிக்கப்படுகிறது.
—————-
நாதமுனிகளுடைய வாழி திருநாமம்:

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

108 திவ்ய தேச பெருமாள், தாயார் திருநாமங்கள்-/ ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்*

July 8, 2023
108 திவ்ய தேச பெருமாள், தாயார் திருநாமங்களை வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, போற்றி துதிப்போம்.
ஹரி ஓம் ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ரெங்கநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மணவாளப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உறையூர் வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புருஷோதமப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூரணவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புண்டரிகாக்ஷப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பங்கயச் செல்வித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வடிவழகியப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அழகியவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ இந்திராதேவித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கமலவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வையங்காத்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புஷ்பவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கஜேந்திரவரதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ரமாமணிவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வில்வில்ராமப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹேமாம்புஜவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆண்டளக் குமையப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அஹோபிலவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோமளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஒப்பிலியப்பப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூமிதேவித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருநிறையூர்நம்பி பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வஞ்சீளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸாரநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸாரநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கண்ணபுரநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ லோகநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ லோகநாயாகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நீலமேகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சௌந்தர் ராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சௌந்தர்யவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மணிகுன்றப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அம்புஜவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஜெகநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செண்பகவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோலவல்வில்லிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மரகதவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தேவாதி ராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சலசயனப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருமாமகன் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நான்மதியப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தலை சங்கத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரிமளரங்கநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரிமளரங்கநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோபால கிருஷ்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மடவரல் தங்கைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தாடாளப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மட்டவிழ் குழவித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குடமாடுகூத்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அம்ருத கடவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நரசிம்மப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தஞ்சை நாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பேரருளாப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அல்லிமாமலர் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புண்டரீவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வைகுண்ட நாதக் குமையப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வைகுந்தவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அம்ருதவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தெய்வநாகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கடல்மகள் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செங்கண்மால் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மணிகூடநாயகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பத்மாவதித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தாமரையாள் கேள்வப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தாமரை நாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோவிந்த நாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹேராம்புஜவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திரிவிக்கிரப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூங்கோவல் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பெருந்தேவித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ எதிராஜவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ விளக்கொளி பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செம்பகலட்சுமித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அழகியசிங்கர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வேளுக்கை வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஜகதீஸ்வரப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நிலமங்கை தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ருக்குமணித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சந்திர சூடப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நிலாத்திங்கள் துண்டத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உலகளந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சத்தியபாமாத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சொன்னவண்ணம்செய்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோமளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கருணாகரப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பத்மா மணித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கள்வர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரநந்தினித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அஞ்சிலைவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பவளவண்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பவளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரமபதநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மகாலட்சுமித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ விஜயராகவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அரவிந்தவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பத்தாவிப்ப பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சீதாவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வீரராகவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கனகவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வேதவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நீர் வண்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அணிமாமலர் மங்கைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ லட்சுமிவராகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோதைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸ்தலசயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கூர்மநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ யோகா நரசிம்மப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மேகவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ரகுநாயகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சீதாபிராட்டித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹரிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹரிலட்சுமித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரபுருஷப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரிமளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பாண்டுரங்கப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ யதுகிரித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பத்ரிநாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நாமகிரித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மூர்த்திப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வாத்ஸல்ய வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பாலகிருஷ்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ எதிராஜ வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நவமோகன பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மோகன வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கல்யாண நாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கல்யாணத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பிரகலாத வரதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செஞ்சுலட்சுமித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருவேங்கடமுடையப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அலர்மேலு மங்கைத் தாயாரே
ஹரி ஓம் ஸ்ரீ நாவாய் முகுந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மலர்மங்கைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உய்யவந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வித்வக்கோட்டு வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ காட்கரையப்ப பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பெருஞ்செல்வநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மூழிக்களத்தான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மதுரவேணித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருவாழ்மார்பன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செல்வக்கொழுந்துத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அற்புதநாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கற்பகவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ இமயவரம்பன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குறு கூர்வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மாயப் பிரான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பொற்கொடித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருக்குறப்பன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரகுண மங்கைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கமலநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூமகள் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அனந்தபத்மனாபப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அனந்தவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வாசுதேவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிலட்சுமித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சேதுமாதவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அரூபவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நிறைநம்பியப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குறுங்குடி வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நாத் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸ்ரீவரமங்கைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கண்ணப்பிரான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூதேவித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ விஜயாஸனப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரகுண வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ காய்சினவேந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புளிங்குடிவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தேவபிரான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோளூர் வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மாயக்கூத்தன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குளந்தை வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குமுதவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கார்முகில் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருப்போரைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிநாத வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ரெங்கமன்னார் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆண்டாள் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அன்னநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கூடலழகர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வகுளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கள்ளழகர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ காளமேகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மோகூர் வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உரகமெல்லனையார் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருமாமகள்த் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கல்யாணஜெனநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கல்யாண வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சத்யகிரிநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உய்யவந்தத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ க்ஷீராப்தி நாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கடல்மகள் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வைகுண்டப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பெரியபிராட்டி மகாலட்சுமித் தாயாரே போற்றி
————————
ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்*
1.விசுத்தம் பரம் ஸச்சிதானந்த ரூபம்
குணாதாரம் ஆதார ஹீநம் வரேண்யம்
மஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம்
ஸூகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரபத்யே
மேன்மை, தூய்மை பெற்று ஸத்-சித்-ஆனந்தம் என்ற மைந்தவரும்,
குணங்களுக்கு ஆதாரமாயும்,
ஆனால் ஆதாரமேதுல்லாதவரும்,
சிறந்தவரும்
பெரியவரும்,
விளங்குபவரும்,
ஸூக்ஷ்மம், குணம் இவற்றின் எல்லையாயும்
ஸ்வயம் பிரகாசமாயுருக்கிற
ராமரை சரணடைகிறேன்.
2.சிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம்
ஸுகாதார மாகார ஸுன்யம் ஸுமான்யம்
மஹேசம் கலேசம், ஸுரேசம் பரேசம்
நரேசம் நரீசம் மஹீசம் ப்ரபத்யே
ஸ்ரீதராக ராமர் என்ற ஒருவரே நித்யமானவர்,
எங்கும் வியாபித்த மங்கள ரூபமானவர்.
அவர் உருவமற்றவரெனினும் ஆனந்தமே உருவானவர்,
அனைவரும் போற்றக்குரியவர்
மஹேசர்,
கலைகளுக்கு ஈசர்,
தேவர்களுக்கு ஈசர்,
பர-ஈசர்,
நரர்களுக்கு ஈசர்,
பூக்கு ஈசர்,
ஆனால் தனக்கு மேல் ஈசர் இல்லாதவர்
அந்த ராமரை சரணடைகிறேன்.
————
3.யதா வர்ணயத் கர்ண மூலேsந்த காலே
சிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம்
ததேகம் பரம் தாரக ப்ரஹ்ம ரூபம்
பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்
காசியில் சிவன் உபதேசித்த வண்ணம் ( ராம ராம ராம ) என்ற
ஒரே தாரக ப்ரஹம ரூபமான அந்த ராமனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.
———
4.மஹா ரத்ன பீடே சுபே கல்ப மூலே
ஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்
ஸதா ஜானகீ லக்ஷ்மணோபேத மேகம்
ஸதா ராம சந்த்ரம் பஜேஹம் பஜேஹம்
கல்பகமரத் தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஸுகமாக அமர்ந்திருப்பவரும்
பல சூர்யர்கள் போன்று ப்ரகாசிக்கிறவரும்,
எப்பொழுதும் ஸ்ரீஸீதா லக்ஷ்மணர்களோடு சேர்ந்திருப்பவரும் ஆன
ஸ்ரீராம சந்த்ரனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.
——–
5.க்வணத் ரத்ன மஞ்ஜீர பாதாரவிந்தம்
லஸன் மேகலா சாரு பீதாம்பராட்யம்
மஹா ரத்ன ஹாரோல்லஸத் கௌஸ்பாங்கம்
நதத் சஞ்சரீ மஞ்ஜரீ லோல மாலம்
ஒலிக்கும் சதங்கை திருவடித் தாமரையில்,
அழகிய ஒட்டியாணமும் பீதாம்பரமும் இடையில்,
பெரிய வைர ஹாரமும், கௌஸ்துபமும் மார்பில்,
தேனீக்கள் ரீங்காரம் செய்யும் மாலையும் அவனது மார்பில் அன்றோ!
———
6.லஸத் சந்த்ரிகா ஸ்மேர சோணாதராபம்
ஸமுத்யத் பதங்கேந்து கோடி ப்ரகாசம்
நமத் ப்ரஹ்ம ருத்ராதி கோடீ ரரத்ன
ஸ்புரத்காந்தி நீராஜனா ராதிதாங்க்ரிம்
செவ்விய உதட்டில் தவழும் நிலவே போன்ற புன்சிரிப்புடையவர்,
உதயகால சூர்ய சந்த்ரர்களின் ஒளி போன்று ப்ராகாசிப்பவர்,
பிரம்மன், ருத்ரன் இவர்கள் வணங்கும் பொழுது அவர்களின் கிரீட ரத்ன ப்ரபைபால்
நீராஜனம் செய்விக்கப்பட்ட திருவடிகளை யுடையவர் அப்பெருமான்.
————
7.புர:ப்ராஞ்ஜலீன் ஆஞ்ஜனேயாதி பக்தான்
ஸ்வசின் முத்ரயா பத்ரயா போத யந்தம்
பஜேஹம் பஜேஹம் ஸதா ராமசந்த்ரம்
த்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே
தன் எதிரில் கை கூப்பிய வண்ணம் நிற்கும் ஆஞ்ஜனேயர் முதலிய பக்தர்களை
சீரிய சின்முத்ரையால் போதித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமசந்திரனை சேவிக்கிறேன்.
அவனன்றி வேறேவரையும் நினைக்கவில்லை. நினைக்கவில்லை.
————
8.யதா மத்யமீபம் க்ருதாந்த: ஸமேத்ய
ப்ரசண்ட ப்ரகோபை: படை: பீஷயேத்மாம்
ததாவிஷ்கரோஷி த்வதீயம் ஸ்வரூபம்
ஸதாபத் ப்ரணாசம் ஸகோண்ட பாணம்
என்னருகில் யமன் வந்து கோபங்கொண்ட தூதர்கள் மூலம் என்னை பயமுறுத்தும் பொழுது,
ஆபத்தை நீக்கும், கோதண்டம், பாணம் இவற்றுடன் விளங்கும் உனது ஸ்வய ரூபத்தைக் காட்டி யருள்வாயல்லவா?
———–
9.த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம்
ஸுசைதன்ய மேதத் த்வதன்யம் ந மன்யே
யதோபூத் அமேயம் வியத் வாயு தேஜோ
ஜலோர் வ்யாதி கார்யம் சரம் ச அசரம்ச
ராம! எனக்கு நீர் ஒருவரே மேலான தைவம்,
உன்னை யன்றி வேறொரு சைதன்யத்தை மனதாலும் நினையேன்.
உம் இடம் இருந்து தானே இந்த அளவற்ற அப்தேஜோ வாயு ஆகாசாதி சராசர ப்ரபஞ்சம் தோன்றி யுள்ளது!
———-
10.நம:ஸச்சிதானந்த ரூபாய தஸ்மை
நமோ தேவ தேவாய ராமாய துப்யம்
நமோ ஜானகூ ஜீவிதேசாய துப்யம்
நம:புண்டரீகாயதாக்ஷ£ய துப்யம்
ஸத்-சித்-ஆனந்த ரூபியான அந்தராமனுக்கு நமஸ்காரம்,
தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஜானகீபிராண நாதனான,
வெண்தாமரை போன்ற கண்களையுடைய ராமனுக்கு நமஸ்காரம்.
————-
11.நமோ பக்தியுக்தாணு ரக்தாய துப்யம்
நம: புண்ய புஞ்ஜைக லப்யாய துப்யம்
நமோ வேத வேத்யாய ச ஆத்யாய துப்பம்
நம: ஸுந்தராயேந்திரா வல்லபாய
பக்தியும், அன்பும் கொண்ட சேவகர்களையுடைய உமக்கு நமஸ்காரம்.
புண்யம் ஒன்றால் மட்டுமே யடைய முடிந்த உமக்கு நமஸ்காரம்.
வேதத்தால் அறியத் தக்க ஆதி புருஷரான உமக்கு நமஸ்காரம்.
லக்ஷ்மீ தேவியின் அழகிய மணாளனான உமக்கு நமஸ்காரம்.
————
12.நமோ விச்வ கர்த்ரே நமோ விச்வ ஹர்த்ரேத
நமோ விச்வ போக்த்ரே நமோ விச்வ மாத்ரே
நமோ விச்வ நேத்ரே நமோ விச்வ ஜேத்ரே
நமோ விச்வ பித்ரே நமோ விச்வ மாத்ரே
உலகை ஆக்கியும், அழித்தும், வருகிற உமக்கு நமஸ்காரம்.
உலகை அனுபவிப்பவரும், அதை உள்ளவாரு அளப்பவரும்,
அதன் தலைவரும், அதையே வெற்றி கொள்பவரும்,
உலகத் தாயும் தந்தையுமான ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.
———–
13.நமஸ்தே நமஸ்தே ஸமஸ்த ப்ரபஞ்ச
ப்ரபோக ப்ரயோக ப்ரமாண ப்ரண
மதீயம் மனஸ்த்வத் மதத்வந்த்வ ஸேவாம்
விதாதும் ப்ரவ்ருத்தம் ஸுசைத்ன்ய ஸித்யை
உலகமனைத்தையும் அனுபவிக்கவோ, இயக்கவோ, அளவிடவோ தக்கபடி
அறிந்துள்ள உமக்கு, ஹே ராம! நமஸ்காரம்.
நல்ல ஞானம் பெறுவதற்கு என் மனம் உன் திருவடி சேவையை மேற்கொண்டுள்ளது.
————-
14.சிலாபி த்வதங்க்ரி-க்ஷமா-ஸங்கிரேணு-
ப்ரஸாதாத் சைதன்ய மாதத்த ராம
நரஸ்த்வத் பத த்வந்த்வ ஸேவா விதானாத்
ஸுசைதன்யமேதீதி கிம்சித்ர மத்ர
ஹே ராம! உனது திருவடிமண் தூசு பட்டதால் அல்லவா சிலை வடிவமாகிய அஹல்யை ஸ்வய உணர்வு பெற்றாள்.
உனது திருவடி சேவை புரிந்து மனிதன் நல்ல ஞானம் பெறுவதில் என்ன வியப்பு உள்ளது?
—————
15.பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம்
நரா யே ஸ்மரந்த்யன் வஹம் ராம சந்த்ர
பவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ
லபந்தே: க்ருதாந்தம் நபச் யந்த்ய தோந்தே
உனது விசித்ரமான சரித்ரம் மிகப் புண்யம் வாய்ந்தது.
ஹே ராம! அந்த சரிரத்தை தினமும் ஸ்மரிக்கின்ற மனிதர்களும்,
போஷித்து வளர்க்கும் உன்னை சேவிப்பவரும்
ஸம்ஸாரத்தை முடித்து விட்டு அதன் பின் யமனைக் காணவே மாட்டார்.
———–
16.ஸ புண்ய: ஸ கண்ய: சரண்யோ மமாயம்
நரோ வேத யோ தேவ சூடா மணிம் த்வாம்
ஸதாகாரமேகம் சிதானந்த ரூபம்
மனோ வாக கம்யம் பரம் தாம ராம
ஹேராம! எந்த ஒரு மனிதர், தேவர் தலைவனாயும் ஸத் வடிவமாயும், சித் ஆனந்த ஸ்வரூபியாயும்,
மனம், வாக் இவற்றிற்கு எட்டாதவராயும், பெரும் ஒளியாயுருக்கிற உம்மை அறிந்துள்ளாரோ
அவர் புண்யமானவர், மதிக்கத் தக்கவர்; எனக்கு சரணடையத் தகுந்தவர்.
————–
17.ப்ரசண்ட் ப்ரதாப ப்ரபாவாபிபூத-
ப்ரபூதாரிர ப்ரபோ ராமசந்த்ர
பலம் தே கதம் வர்ண்யதே தீவ பால்யே
யதோ கண்டி சண்டீச கோதண்ட தண்ட:
ஹே ப்ரபோ! ராமசந்த்ர! கடிய ப்ரதாபத்தின் தாக்கம் மேலிட்ட பலப் பகைவரை வீழ்த்தியவரே!
உமது பலம் வர்ணிக்கமுடியாதது; ஏனெனில் சிறுவயதிலேயே மகேச்வரன் வில்லை ஓடித்தீரே!
—————
18.தசக்ரீவமுக்ரம் ஸபுத்ரம் ஸத்ரம்
ஸரித் துர்க மத்யஸ்தர க்ஷே£கணேசம்
பவந்தம் விநா ராம! ரோ நரோவா
ஸுரோ வாமரோ வா ஜயேத்க: த்ரிலோக்யாம்
ஸமுத்திரத்தின் நடுவில் இருந்த ராக்ஷஸத் தலைவனான கொடிய ராவனனை
பிள்ளையுடனும், நண்பர்களுடனும் ஜயிக்க வல்லவர் உம்மைத் தவிர வேறு யார் மூவுலகிலும் உள்ளனர்?
——
19.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம்
பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்
ஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம்
எப்பொழுதும் ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகி, வணங்கி,
வாய்விட்டு சிரித்து சாதுக்களின் களிப்பிடமாயும்,
ஆனந்தப் பெருக்கின் வேராகவும் இருக்கின்ற ஹனுமனை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்.
————
20.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதா ராம மானந்த நிஷ்யந்தகந்தம்
பிபன் அன்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ:
பிபே ப்ரஸாதாத் அஸாதாத் தவைவ
சாதுக்களைக் களிக்கச்தெய்யும் ஆனந்தப் பெருக்கின் வேர் போலிருக்கின்ற
ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகிக் கொண்டு அனுதினமும் நான் இருப்பேன்.
உனது குறைவற்ற அருளால் மரணத்திற்காக பயப்பட மாட்டேன்.
———
21.அஸீதாஸமேதை ரகோதண்ட பூஷை:
அஸெளத்ரிவந்த்யை ரசண்யப்ரதாபை :
அலங்கேச காலை ரஸுக்ரீவ த்ரை:
அராமாபிதேயைரலம் தைவதைர்ந:
ஸீதையுடனில்லாத, கோதண்டத்தால் அழகு பெறாத, லக்ஷ்மணன் ஸேவிக்காத,
ராமரல்லாத, ராவணனை அழிக்காத, சுக்ரீவனைத் தோழமை கொள்ளாத,
ராமன் என்று பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்களுக்கு தெய்வல்லை.
——-
22.அராஸனஸ்தை ரசின் முத்ரி காட்யை :
அபக்தாஞ்ஜனே யாதித்த்வ ப்ரகாசை :
அமந்தாரமூலை ரமந்தாரமாலை :
அராமாபி தேயைரலம் தைவதைர்ந:
ராஸனத்தில் அமராத, சின்முத்ரை தரிக்காத, பக்த ஆஞ்ஜயர் முதலிய தத்வ ப்ரகாசகரில்லாத,
மந்தார மரத்தடியில் அமராத, மந்தாரமாலை யணியாத,
ராமர் எனப் பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.
———
23.அஸிந்துப்ரகோபை ரவந்த்யப்ரதாபை :
அபந்துப்ரயாணை: அமந்தஸ்தாட்யை:
அதண்யப்ரவாஸை: அகண்டப்ரபோதை:
அராமாபிதேயை ரலம் தைவதைர்ந :
ஸமுத்ரராஜாவிடம் கோபங் கொள்ளாத புகழ்க்கப்ரதாபல்லாத, பரதன் போன்ற உறவினர் சந்திப்பில்லாத,
புன்சிரிப்பு இல்லாத, தண்டகவனத்தில் பிரவாசம் கொள்ளாத, அகண்ட ஞானம் பெறாத
ஸ்ரீ ராமர் என்ற பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.
———
24.ஹரே ராம ஸீதாபதே ராவணாரே
கராகே முராரே ஸுராரே பரேதி
லபந்தம் நயந்தம் ஸதா கால மேவம்
ஸமாலோகயா லோகயாசேஷபந்தோ
ஹே ஹரே ராம! ஸீதாபதே! ராவணனின் பகாவனே! கரனையழித்தவனே! முராரே!
அஸுரர்களை ழ்த்தியவரே பரனே என்று எப்பொழுதும் ஜபித்துக்கொண்டு காலம் கழிக்கும்
இந்த அடியேனை அனைவரையும் உறவு கொண்டாடும் ஹே ராம நன்கு கவனி, கவனி!
———
25.நமஸ்தே ஸுத்ராஸுபுத்ராபிவந்த்ய
நமஸ்தேஸதா கைகயாநந்தனேட்ய
நமஸ்தேஸதா வாநராதீசவந்த்ய
நமஸ்தே நமஸ்தேஸதா ராமசந்த்ர
ஸுத்ரையின் மகன் மக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டவனே!
எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே !
வானரத் தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர! உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
————
26.ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்ய ப்ரதாப
ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்டாரிகால
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபன்னானுகம்பின்
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர
கோரப்ரதாபம் வாய்ந்த ஹேராம! எனக்கு அருள்செய்.
கொடிய பகைவரை அழித்த ஹேராம! எனக்கருள்வாயாக
சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே! எனக்கு அருள்செய்.
ஹேப்ரபோ ராமசந்த்ரா அருள்வாய் அருள்வாய்.
————
27.புஜங்கப்ரயாதம் பரம் வேதஸாரம்
முதாராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம்
படன் ஸந்ததம் சிந்தயன் ஸ்வாந்தரங்கே
ஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர: ஸ தன்ய:
எவனெருவன் ஸ்ரீ ராமனிடம் பக்தியுடன்
இந்த வேத ஸாரமான புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரத்தை படித்து வருகிறானோ
அவனே ஸ்ரீ ராமனாகி விடுகிறான் அவனே புண்யசாலியாகவும் ஆவான்.
ஸ்ரீ ராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ (ஜகன்நாத்- புரி)ரத யாத்திரை —

July 7, 2023

சலபேகாவின் கதை: அன்பு மற்றும் பக்தியின் ஒரு உருவகம்

பக்த் சலபேகா 17 ஆம் நூற்றாண்டில் பிறந்தார்
மற்றும் ஒடிசாவில் வாழும் ஒரு புகழ்பெற்ற மத ஒரியா கவிஞரானார்.
அவரது தாயார் ஒரு இந்து பிராமணர் மற்றும் அவரது தந்தை ஒரு பெங்காலி முஸ்லீம்.
வங்காள நவாப் ராணுவத்தில் சுபேதாராக இருந்த லால்பேக் ஒடிசாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் பங்கேற்றார்.
ஒருமுறை லால்பேக், பூரியில் உள்ள தண்டமுகுந்தபூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​
ஒரு அழகான பிராமண விதவை ஒருத்தி குளித்தலை விட்டு திரும்பி வருவதைக் கண்டார்.
அவளுடைய இளமை மற்றும் அழகில் மயங்கிய அவன் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டான்.
பின்னர் அவர் பாத்திமா பீவி என்று அறியப்பட்டார்.

அவரது குழந்தை பருவத்திலிருந்தே, அவரது தாயார் அவருக்கு விஷ்ணுவின் புராணக் கதைகளை விவரித்தார்.
இறைவன் மீது மிகுந்த பக்தியை வளர்த்துக் கொண்டார்.
சலாபேகா வளர்ந்தவுடன், அவர் தனது தந்தையுடன் பிரச்சாரங்களில் பங்கேற்றார்.
ஒருமுறை அவர் பலத்த காயம் அடைந்தார்,
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பதை நிராகரித்தனர்.
சில பக்தர்கள் கிருஷ்ணர் மற்றும் ஜகந்நாதரைப் பற்றி பஜனைப் பாடுவதை அவர் கேட்டார்.
அவரும் பகவானின் திருநாமங்களை உச்சரிக்கத் தொடங்கினார்,
யானைகளின் அரசனான கஜேந்திரனை முதலையிடம் சிக்கியபோது விஷ்ணு காப்பாற்றியதைத்
தன் தாயார் கூறியதை நினைவு கூர்ந்தார்.
துருவ மகாராஜா மற்றும் ஸ்ரீ பிரஹலாதாவைப் போலவே, சலபேகாவும் இறைவனின் கருணையில்
தீவிர குழந்தை நம்பிக்கை கொண்டிருந்தார்.
பிரபஞ்சத்தின் அதிபதியான ஜகன்னாதர் தன்னை குணப்படுத்த முடியும் என்று அவர் நினைத்தார்.
அவர் ஜெகநாதரிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து இறுதியாக குணமடைந்தார்.

சலபேகாவின் அற்புதமான மீட்பு அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணமாக மாறியது.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் ஜெகநாதரின் தீவிர பக்தரானார்.
இந்த காரணத்திற்காக அவரது தந்தை அவரை நிராகரித்தார்.
எப்பொழுதும் ஜகந்நாதரின் நாமத்தை உச்சரித்துக்கொண்டே சுற்றித் திரிந்த அவர் இறுதியாக பூரியை அடைந்தார்.
ஜெகநாதரை மகிமைப்படுத்தும் வகையில் அவர் பல பிரார்த்தனைகளை எழுதினார்,
ஆனால் அவர் பிறப்பால் முஸ்லீம் என்பதால் பூரியில் உள்ள ஜெகநாதரின் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இருப்பினும், இது இறைவனை தியானிப்பதில் இருந்து அவரைத் தடுக்கவில்லை.
பகவான் ஜெகந்நாதர் தனது பக்தர்களைச் சந்திக்க ஊர்வலமாகச் செல்லும்போதும்,
அவரது அருளால் அவர்களை ஆசீர்வதிப்பதற்காகவும் அவர் வருடாந்திர ரத யாத்திரையை
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்.

ரத யாத்திரை (ஜகன்நாத் புரி)
768px-நந்திகோச_ரத்திருவிழா ரத யாத்ரா, கார் திருவிழா, குண்டிச்சா யாத்ரா, கோசா யாத்ரா, நவதீன யாத்ரா, தசாவதார யாத்ரா மற்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ரத யாத்திரை கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு மிகவும் முன்னதாகவே தொடங்குகிறது, ஏனெனில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் தேர்களை கட்டுவதற்கும் அலங்கரிப்பதற்கும் மூதாதையர் உரிமைகளைக் கொண்ட தச்சர்களால் ரதங்கள் அல்லது தேர்களை நிர்மாணித்து அலங்காரம் செய்வது. மூன்று தேர்களும் யாத்திரையின் சிறப்பம்சங்கள் மற்றும் கயிறுகளால் இழுக்கப்படுகின்றன.
ஜகந்நாதரின் தேர் 18 சக்கரங்களைக் கொண்ட 45.6 அடி உயரம் கொண்டது, நந்திகோசா என்று அழைக்கப்படுகிறது.ஜகந்நாத பகவான் கிருஷ்ணருடன் அடையாளம் காணப்படுகிறார், அவர் பீதாம்பரர் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் தங்க மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருப்பார், எனவே இந்த தேரின் விதானத்தில் மஞ்சள் கோடுகள் வேறுபடுகின்றன. பாலபத்ரரின் தேர் 44 அடி உயரத்தில் 16 சக்கரங்களுடன் தலத்வஜா என்று அழைக்கப்படுகிறது .
தலத்வஜ_ரத்

அதன் கொடியில் பனை மரத்துடன் சிவப்பு மற்றும் நீல நிற துணியால் மூடப்பட்டிருக்கும்.

பத்மத்வஜ_ரத்சுபத்ராவின் தேர் துவாரபடலனா என்று அழைக்கப்படுகிறது , அதாவது “பெருமையின் மிதி”, பன்னிரண்டு சக்கரங்களுடன் நாற்பத்து மூன்று அடி உயரம் கொண்டது.

இந்த தேர் சிவப்பு மற்றும் கருப்பு துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது – கருப்பு பாரம்பரியமாக சக்தி மற்றும் தாய் தெய்வத்துடன் தொடர்புடையது.

ரத யாத்திரைரத யாத்திரை என்பது ஜகந்நாதர் தனது உடன்பிறந்த சகோதரிகளான பலபத்ரா மற்றும் சுபத்ராவுடன் ராணி குண்டிச்சா கோவிலுக்கு வருகை தந்ததைக் குறிக்கும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். ஜெகநாத் பூரி ரத யாத்திரையுடன் தொடர்புடைய மிகவும் பிரபலமான சடங்கு செரா பஹாரா. திருவிழாவின் போது, ​​கஜபதி மன்னன் தெய்வங்களையும் தேர்களையும் சுற்றி துடைப்பார். துடைப்பம் (தங்கம் கைப்பிடி) கொண்டு சாலையை சுத்தம் செய்து சந்தன நீரையும் பொடியையும் தூவி விடுகிறார். ஜகந்நாதரின் பார்வையில் அரசராக இருந்தாலும் சரி, சாமானியராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பக்தரும் சமம் என்பதை இந்த வழக்கம் காட்டுகிறது. இந்த சடங்கு இரண்டு நாட்களில் நடைபெறும், முதலில் ரத யாத்திரை தொடங்கும் போது முப்பெரும் தெய்வங்கள் செல்லும் போது மற்றும் கடைசி நாளில் மீண்டும் பூரி கோவிலுக்கு சம்பிரதாயமாக கொண்டு வரப்படும்.

மூன்று தேர்களும் படா தண்டா எனப்படும் பூரியின் பிரதான வீதிக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பயணத்தின் போது, ​​பகவான் ஜகந்நாதர் தனது வான வட்டுடன் இருக்கிறார், சுதர்சன சக்கரம் குண்டிச்சா கோயிலுக்கும் அவர்களின் அத்தையின் வீட்டிற்கும் (மௌசிமா கோயில்) கொண்டு செல்லப்படுகிறது, அங்கு தெய்வங்கள் ஒன்பது நாட்கள் தங்கி மகிழ்ந்து இனிப்பு அப்பத்தை ( போடா பிதா ) பரிமாறுகிறார்கள். ஜெகநாதருக்குப் பிடித்த உணவு.

பூரி ரத யாத்திரை திருவிழாவின் கொண்டாட்டம் மற்றும் கவனிப்பு புராணங்களின் காலத்திற்கு முந்தையது. பூரியை சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக மாற்றும் முக்கிய காரணிகளில் ஒன்று, இது சார் தாம் கோவில்களில் ஒன்றாகும். பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின் மகத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு “juggernaut” என்ற ஆங்கில வார்த்தை உருவாக்கப்பட்டது!

ரத யாத்திரையின் விவரணைகளை பிரம்ம புராணம், பத்ம புராணம், மற்றும் ஸ்கந்த புராணம் மற்றும் கபில சம்ஹிதையில் காணலாம். தேரின் கருத்து கதா உபநிடதத்தில் பின்வரும் வார்த்தைகளில்
விளக்கப்பட்டுள்ளது : “ஆத்மானம் ரதினம் வித்தி ஷரீரம் ரதமேவது புத்திம் து சாரதிம் வித்தி மனஹ் ப்ரக்ரஹமேவ ச” – உடலே தேர், ஆன்மாவே தேரில் நிறுவப்பட்ட தெய்வம். மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தும் தேரோட்டியாக ஞானம் செயல்படுகிறது. ஸ்கந்த புராணம் ரத யாத்திரையின் புனிதத்தன்மையை பின்வரும் வார்த்தைகளில் மகிமைப்படுத்துகிறது:

“குண்டிச்ச மண்டபம் நாமம் யத்ரஹமஜனம் புர அஸ்வமேத ஸஹஸ்ரஸ்ய மஹாபேதி ததத்வபத்” – தேர் ஊர்வலத்தின் இறுதித் தலமான குண்டிச்சா கோயிலில் உள்ள ஸ்ரீமந்திர மூர்த்திகளைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஆயிரம் குதிரைகளைப் பலியிட்டதன் பலனைப் பெறுகிறார்கள்.

2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய் ஜெகநாத்ஜகந்நாதர் பகவான் கிருஷ்ணருடன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஜகந்நாதரின் பிரசன்னத்தின் காரணமாக புனித நகரமான பூரி – ஸ்ரீக்ஷேத்திரத்தில் மரணத்தின் கடவுளான யமனின் செல்வாக்கு குறைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது, எனவே இது “யமனிகா தீர்த்தம்” என்றும் அழைக்கப்படுகிறது .

தேரின் மீது ஜகந்நாதரின் ஒரு பார்வை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் புனிதர்கள், கவிஞர்கள் மற்றும் புனித நூல்கள் இந்த சிறப்பு திருவிழாவின் புனிதத்தன்மையை மீண்டும் மீண்டும் போற்றியுள்ளன. திருவிழாவின் புனிதத்தன்மை என்னவென்றால், தேர் அல்லது கயிறுகள் இழுக்கப்படும் ஒரு தொட்டு கூட பல புண்ணிய செயல்கள் அல்லது பல ஆண்டுகளாக தவம் செய்த பலன்களை வழங்க போதுமானதாக கருதப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தேர், சக்கரங்கள், பிரமாண்ட வீதிகள் அனைத்தும் பகவான் ஜகந்நாதருடன் ஒன்றிவிடுகின்றன என்பதை வலியுறுத்தும் புகழ்பெற்ற ஒரியப் பாடல் ஒன்று உள்ளது.

ஒலிம்பஸ் டிஜிட்டல் கேமராபக்த சலபேகா கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால், இறைவனை அருகில் இருந்து பார்க்க நினைத்தார். அவர் ஸ்ரீமந்திரத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில், இறைவனின் தரிசனம் பெறுவதற்காக வசித்து வந்தார். ஜகந்நாதரின் தேர் அவரது வீட்டிற்கு அருகில் வந்ததும், அவர் அழத் தொடங்கினார். திடீரென்று, தேர் அங்கே நின்றது, சாலபேகா ஜெகநாதரைக் கண்டார். அன்றிலிருந்து அவருக்கு இறைவனை தரிசனம் செய்ய அனுமதித்த அர்ச்சகர்களுக்கு இந்த அதிசயம் தெரிந்தது.

சலபேகாவின் பக்திப் பாடல்கள் அனைத்திலும் பொதுவான கருப்பொருள் ஒன்று உள்ளது. அவர் தனது பிறப்பு மற்றும் இந்து அல்லது முஸ்லீம் அல்லாத அவரது பரம்பரை குறித்து தன்னைத்தானே தண்டிக்கிறார். சுருக்கமாக, அவர் கூறுகிறார், ‘என் தந்தை முகலாயரின் மகன், என் தாய் ஒரு பிராமணர், ஓ என் ஆண்டவரே, நீங்கள் எனக்கு ஒரு தாழ்ந்த பிறப்பைக் கொடுத்தீர்கள்.’ இருண்ட ஜகந்நாதரைப் போற்றிப் பாடிய அவர், காட்டு யானை கிராண்ட் அவென்யூவில் வந்து தேரில் ஏறிச் செல்வது போல் அசைந்து அசைந்து, தன் பக்தர்களின் பாவங்கள் எல்லாம் கொடியதாயினும், நொடிப்பொழுதில் அழித்துவிடுகிறார் என்று கூறுகிறார். அல்லது மன்னிக்க முடியாதது.

ஜகன்னாத் - நகல்ஒருமுறை ரத யாத்திரை திருவிழாவின் போது, ​​சலபேகா வெளியூர் சென்றதால், ஊர்வலத்தின் போது அவரை அடைய முடியவில்லை. அவர் வரும் வரை தனது தேரில் காத்திருக்குமாறு ஜெகநாதரை வேண்டிக் கொண்டார், அதைத்தான் இறைவன் செய்தார்!

ரதம் சலபேகாவின் வீட்டை அடைந்ததும் நின்றது. அர்ச்சகர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் ஜெகநாதரின் தேர் நகரவில்லை என்று புராணங்கள் கூறுகின்றன. சலபேகா அந்த இடத்தை அடைந்து இறைவனுடன் உறவாடி, அதன் பிறகுதான் தேர் நகர்ந்தது!

தேர் நிலையாக இருந்த இடம் பின்னர் ஜகந்நாதரின் நினைவாக பல பஜனைகளை இயற்றுவதற்காக சாலபேகாவால் பயன்படுத்தப்பட்டது.

சலபேகாஅவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது மற்றும் அவரது சமாதி பூரியில் உள்ள கிராண்ட் சாலையில் உள்ளது. அவர் ஜெகநாதரின் பக்தர்களால் நினைவுகூரப்படுகிறார் மற்றும் அவரது பஜனைகள் இன்றுவரை பாடப்படுகின்றன.

அவர் ஜெகநாதரின் ஆசீர்வாதத்தைப் பெற்றார் மற்றும் ஒரு சிறந்த பக்தராகக் கருதப்படுகிறார்.

சலபேகாவைக் கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ரத யாத்திரையின் போது, ​​ஜகந்நாதரின் தேர் அவரது சமாதிக்கு அருகில் சிறிது நேரம் நிலைத்திருக்கும்.

பக்த சலபேகாவின் மற்றொரு கதை:
சாலபேகா தனது அருளை அவர் மீது பொழிந்தபோது மற்றொரு நிகழ்வு இருந்தது. சலாபேகா டெல்லியில் இருந்து பாலசோர் வழியாக பூரிக்கு வந்து ஷியாம்சுந்தர் கோவில் அருகே தங்கியிருந்தார். மாலை தொழுகையின் போது, ​​சலபேகா இறைவனை உள்ளே பார்க்க விரும்பினார், ஆனால் அவர் ஒரு முஸ்லீம் என்பதால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாள் மாலைப் பூசாரி தனது சிம்மாசனத்தில் இறைவன் காணாமல் போனதைக் கண்டு அரசனிடம் தெரிவித்தார். அன்றிரவே பாலசோரின் அரசன் ஒரு கனவில் இறைவனின் பெரும் பக்தர் ஒருவர் கிருஷ்ணரை தரிசனம் செய்வதற்காக வெளியில் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். சலபேகா இறைவனைக் காணும்படி சுவரில் துளையிடுவதற்கு மன்னர் ஏற்பாடு செய்தார். சாலபேகா துளை வழியாக பார்த்தவுடன், தெய்வங்கள் அதிசயமாக மீண்டும் தோன்றின.

பகவான் தனது தீவிர பக்தர்களுக்கு அக்ரனியாக இருந்து அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

குண்டிச்சா கோயிலில் இருந்து திரும்பும் வழியில் , மூன்று தெய்வங்களும் மவுசி மா கோயில் (அத்தையின் இருப்பிடம்) அருகே சிறிது நேரம் நின்று , கடவுளுக்கு விருப்பமானதாகக் கருதப்படும் ஒரு சிறப்பு வகை பான்கேக் என்ற போடா பிதாவை பிரசாதமாக வழங்குகிறார்கள். ஏழு நாட்கள் தங்கிய பிறகு, தெய்வங்கள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றன.

ஜகன்னாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய மூன்று தேர்களும் ஒவ்வொரு ஆண்டும் பாசி, தௌசா போன்ற குறிப்பிட்ட மரங்களைக் கொண்டு புதிதாகக் கட்டப்படுகின்றன. அவை பரம்பரை உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளைக் கொண்ட தச்சபல்லாவின் முன்னாள் அரசர்களின் சிறப்புக் குழுவால் கொண்டு வரப்படுவது வழக்கம் . அதற்கு. மரக்கட்டைகள் மகாநதி ஆற்றில் மரக்கட்டைகளாக மிதப்பது வழக்கம். இவை பூரி அருகே சேகரிக்கப்பட்டு பின்னர் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. [4]

மூன்று தேர்களும் கிராண்ட் அவென்யூவான படா தண்டாவில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் தனித்துவமான திட்டத்தின்படி அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிங்கத்வாரா அல்லது சிம்ம வாசல் என்றும் அழைக்கப்படும் அதன் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கோவிலின் முன் பரந்த அவென்யூ முழுவதும் தேர்கள் வரிசையாக நிற்கின்றன

ஒவ்வொரு தேர்களையும் சுற்றி ஒன்பது பார்ஸ்வ தேவதைகள், தேர்களின் பக்கங்களில் வெவ்வேறு தெய்வங்களைக் குறிக்கும் மரப் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேருக்கும் ஒரு தேரோட்டியும் (சாரதி) நான்கு குதிரைகளும் உள்ளன.

தேர் விவரங்கள் ஜகந்நாத் பாலபத்ரா சுபத்ரா
தேரின் பெயர் நந்திகோஷா (ନନ୍ଦିଘୋଷ) தலத்வாஜா (ତାଳଧ୍ୱଜ) தர்படலானா (ଦର୍ପଦନ)
தேரின் மாற்றுப் பெயர் கருடத்வஜா, கபித்வஜா லங்காலத்வஜா தேவதாலனா, பத்மத்வஜா
படம்
Lord Shri Jagannath on His Chariot Nandighosha.jpg
Chariot Taladhwaja of Lord Balabhadra.jpg
Chariot Devidalana of Goddess Subhadra.jpg
சக்கரங்களின் எண்ணிக்கை 16 14 12
பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை 832 763 593
உயரம் 44′ 2″ 43′ 3″ 42′ 3″
நீளம் மற்றும் அகலம் 34’6″ x 34’6″ 33′ x 33′ 31’6″ x 31’6″
விதானங்களின் நிறங்கள் சிவப்பு, மஞ்சள்(விஷ்ணுவுடன் தொடர்புடைய மஞ்சள்) சிவப்பு, நீல பச்சை சிவப்பு, கருப்பு(தெய்வத்துடன் தொடர்புடைய கருப்பு)
பாதுகாவலர் கருடன் வாசுதேவா ஜெயதுர்கா
தேரோட்டி தாருகா மாதலி அர்ஜுனா
கொடி பெயர் த்ரைலோக்யமோஹினி உன்னனி நாதாம்பிகா
கொடி சின்னம் பனை மரம்
குதிரைகளின் பெயர்
  1. சங்கா
  2. பலஹாகா
  3. ஸ்வேதா
  4. ஹரிதாஷ்வா
  1. திப்ரா
  2. கோர
  3. திர்காஷர்மா
  4. ஸ்வர்ணனவ
  1. ரோச்சிகா
  2. மோச்சிகா
  3. ஜிதா
  4. அபராஜிதா
குதிரைகளின் நிறம் வெள்ளை கருப்பு சிவப்பு
தேர் கயிற்றின் பெயர் சங்கசூடா நாகினி பாசுகி நாகா ஸ்வர்ணசூடா நாகினி
பரிவார தெய்வம் மதன்மோகன் ராமகிருஷ்ணா சுதர்சன
கேட் கீப்பர்கள் ( துவாரபால )
  1. ஜெயா
  2. விஜயா
  1. நந்தா
  2. சுனந்தா
  1. கங்கை
  2. ஜமுனா
ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்)
  1. பஞ்சமுகி மகாபீர் ( ஹனுமான் )
  2. ஹரிஹர
  3. மதுசூதனன் ( விஷ்ணு )
  4. கிரிதர் ( கிருஷ்ணா )
  5. பாண்டு நரசிங்க
  6. சித்தமணி கிருஷ்ணா
  7. நாராயண (விஷ்ணு)
  8. சத்ர பங்கா ரபனா (ராம)
  9. ராமர் அனுமன் மீது அமர்ந்தார்
  1. விநாயகர்
  2. கார்த்திகேயா
  3. சர்வமங்களா
  4. பிரலம்பரி (பலராமன்)
  5. ஹலாயுதா (பலராமன்)
  6. மிருத்யுஞ்சயா ( சிவன் )
  7. நாதம்வர (சிவன்)
  8. முக்தேஸ்வர் (சிவன்)
  9. ஷேஷதேவா
  1. சண்டி
  2. சாமுண்டா
  3. உக்ரதாரா
  4. பனதுர்கா ( துர்கா )
  5. சுலிதுர்கா (துர்கா)
  6. வாராஹி
  7. ஷ்யாமகாலி
  8. மங்கள
  9. விமலா

சந்தன யாத்திரை–

சந்தன் யாத்திரை அல்லது “சந்தன மர விழா” என்பது 42 நாட்கள் நடைபெறும், இது தேர்களுக்கான கட்டுமானப் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. காலம் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் 21 நாட்கள் கொண்டது. முதல் பாதி பஹர் சந்தன் என்று அழைக்கப்படுகிறது , இதன் மூலம் தலைமை தெய்வங்களின் பிரதிநிதித்துவ படங்கள் வண்ணமயமான ஊர்வலங்களில் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு நாளும் நரேந்திர தொட்டியில் ஒரு சடங்கு படகு சவாரி வழங்கப்படுகிறது. இந்த தெய்வங்களில் மதன் மோகன் (ஜகன்நாத்), ராம-கிருஷ்ணா, லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பஞ்ச பாண்டவர் – ஐந்து முக்கிய சிவன் கோவில்களின் தலைமை தெய்வங்கள். பிதார் சந்தன் என்று அழைக்கப்படும் பிந்தையது , பொதுமக்களுக்குத் திறக்கப்படாத பல்வேறு சடங்குகளைக் கொண்டுள்ளது. [5]வைசாகத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களில் மூன்றாவது நாளான அக்ஷய திருதியை அன்று சடங்கு தீ வழிபாட்டுடன் தேர்களின் கட்டுமானம் தொடங்குகிறது. இது பூரி மன்னரின் அரண்மனைக்கு முன்பாகவும், பூரி கோவிலின் பிரதான அலுவலகத்திற்கு எதிரேயும் நடைபெறுகிறது. பின்னர், தேவர்கள் தொட்டியின் நடுவில் உள்ள ஒரு சிறிய கோவிலில், தண்ணீர், சந்தனப் பசை, வாசனைகள் மற்றும் மலர்களால் நிரப்பப்பட்ட கல் தொட்டிகளில் சடங்கு ஸ்நானம் செய்கிறார்கள்.இந்த சந்தன விழாவானது ஸ்னான யாத்திரை அல்லது “ஸ்நான திருவிழாவில்” முடிவடைகிறது, இது ஜ்யேஷ்ட மாதத்தின் முழு நிலவு நாளில் நடைபெறுகிறது. ஜகன்னாதர், பால்பத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் 108 பானை நீரில் குளித்து, பின்னர் இரண்டு வாரங்களுக்கு அடையாள மற்றும் சடங்குகளுடன் குணமடைகின்றன. அவை பொதுமக்களின் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளன. [6]மூன்று சிறப்பு பட்டா சித்திரங்கள், அனாசரா பட்டீஸ் எனப்படும் ஸ்டார்ச் இறுகிய துணியில் இயற்கை வண்ணங்களின் பாரம்பரிய ஒரியா ஓவியங்கள், பொது மக்களின் பார்வையில் இருந்து தெய்வங்களை மறைக்கும் மூங்கில் திரையில் கட்டப்பட்டுள்ளன, பொதுமக்களால் பார்க்க முடியும். இந்த காலகட்டத்தில், தெய்வங்களுக்கு அவர்களின் நோய் தீர்க்க வேர்கள், இலைகள், பெர்ரி மற்றும் பழங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இந்த சடங்கு ஜெகன்னாத வழிபாட்டு முறையின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியில் வலுவான பழங்குடி கூறுகளை நினைவூட்டுகிறது. அசல் பழங்குடி வழிபாட்டாளரான பிஸ்வபாசுவின் மகள் லலிதா, வேட்டையாடுபவர்களின் தலைவன் மற்றும் பிராமண பாதிரியார் வித்யாபதி ஆகியோரின் சந்ததியினர் தைதாபதிகள் அல்லது தைதாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குணமடையும் காலத்திலும், ரத ஜாத்ரா அல்லது தேர் திருவிழாவின் முழு காலத்திலும் தெய்வத்திற்கு சேவை செய்யும் பாக்கியம் அவர்களுக்கு உள்ளது.

ஒவ்வொரு தேர்களையும் சுற்றி ஒன்பது பார்ஸ்வ தேவதைகள், தேர்களின் பக்கங்களில் வெவ்வேறு தெய்வங்களைக் குறிக்கும் மரப் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேருக்கும் ஒரு தேரோட்டியும் (சாரதி) நான்கு குதிரைகளும் உள்ளன.

தேர் விவரங்கள் ஜகந்நாத் பாலபத்ரா சுபத்ரா
தேரின் பெயர் நந்திகோஷா (ନନ୍ଦିଘୋଷ) தலத்வாஜா (ତାଳଧ୍ୱଜ) தர்படலானா (ଦର୍ପଦନ)
தேரின் மாற்றுப் பெயர் கருடத்வஜா, கபித்வஜா லங்காலத்வஜா தேவதாலனா, பத்மத்வஜா
படம்
Lord Shri Jagannath on His Chariot Nandighosha.jpg
Chariot Taladhwaja of Lord Balabhadra.jpg
Chariot Devidalana of Goddess Subhadra.jpg
சக்கரங்களின் எண்ணிக்கை 16 14 12
பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை 832 763 593
உயரம் 44′ 2″ 43′ 3″ 42′ 3″
நீளம் மற்றும் அகலம் 34’6″ x 34’6″ 33′ x 33′ 31’6″ x 31’6″
விதானங்களின் நிறங்கள் சிவப்பு, மஞ்சள்(விஷ்ணுவுடன் தொடர்புடைய மஞ்சள்) சிவப்பு, நீல பச்சை சிவப்பு, கருப்பு(தெய்வத்துடன் தொடர்புடைய கருப்பு)
பாதுகாவலர் கருடன் வாசுதேவா ஜெயதுர்கா
தேரோட்டி தாருகா மாதலி அர்ஜுனா
கொடி பெயர் த்ரைலோக்யமோஹினி உன்னனி நாதாம்பிகா
கொடி சின்னம் பனை மரம்
குதிரைகளின் பெயர்
  1. சங்கா
  2. பலஹாகா
  3. ஸ்வேதா
  4. ஹரிதாஷ்வா
  1. திப்ரா
  2. கோர
  3. திர்காஷர்மா
  4. ஸ்வர்ணனவ
  1. ரோச்சிகா
  2. மோச்சிகா
  3. ஜிதா
  4. அபராஜிதா
குதிரைகளின் நிறம் வெள்ளை கருப்பு சிவப்பு
தேர் கயிற்றின் பெயர் சங்கசூடா நாகினி பாசுகி நாகா ஸ்வர்ணசூடா நாகினி
பரிவார தெய்வம் மதன்மோகன் ராமகிருஷ்ணா சுதர்சன
கேட் கீப்பர்கள் ( துவாரபால )
  1. ஜெயா
  2. விஜயா
  1. நந்தா
  2. சுனந்தா
  1. கங்கை
  2. ஜமுனா
ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்)
  1. பஞ்சமுகி மகாபீர் ( ஹனுமான் )
  2. ஹரிஹர
  3. மதுசூதனன் ( விஷ்ணு )
  4. கிரிதர் ( கிருஷ்ணா )
  5. பாண்டு நரசிங்க
  6. சித்தமணி கிருஷ்ணா
  7. நாராயண (விஷ்ணு)
  8. சத்ர பங்கா ரபனா (ராம)
  9. ராமர் அனுமன் மீது அமர்ந்தார்
  1. விநாயகர்
  2. கார்த்திகேயா
  3. சர்வமங்களா
  4. பிரலம்பரி (பலராமன்)
  5. ஹலாயுதா (பலராமன்)
  6. மிருத்யுஞ்சயா ( சிவன் )
  7. நாதம்வர (சிவன்)
  8. முக்தேஸ்வர் (சிவன்)
  9. ஷேஷதேவா
  1. சண்டி
  2. சாமுண்டா
  3. உக்ரதாரா
  4. பனதுர்கா ( துர்கா )
  5. சுலிதுர்கா (துர்கா)
  6. வாராஹி
  7. ஷ்யாமகாலி
  8. மங்கள
  9. விமலா

சந்தன யாத்திரைதொகு

சந்தன் யாத்திரை அல்லது “சந்தன மர விழா” என்பது 42 நாட்கள் நடைபெறும், இது தேர்களுக்கான கட்டுமானப் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. காலம் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் 21 நாட்கள் கொண்டது. முதல் பாதி பஹர் சந்தன் என்று அழைக்கப்படுகிறது , இதன் மூலம் தலைமை தெய்வங்களின் பிரதிநிதித்துவ படங்கள் வண்ணமயமான ஊர்வலங்களில் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு நாளும் நரேந்திர தொட்டியில் ஒரு சடங்கு படகு சவாரி வழங்கப்படுகிறது. இந்த தெய்வங்களில் மதன் மோகன் (ஜகன்நாத்), ராம-கிருஷ்ணா, லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பஞ்ச பாண்டவர் – ஐந்து முக்கிய சிவன் கோவில்களின் தலைமை தெய்வங்கள். பிதார் சந்தன் என்று அழைக்கப்படும் பிந்தையது , பொதுமக்களுக்குத் திறக்கப்படாத பல்வேறு சடங்குகளைக் கொண்டுள்ளது. [5]வைசாகத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களில் மூன்றாவது நாளான அக்ஷய திருதியை அன்று சடங்கு தீ வழிபாட்டுடன் தேர்களின் கட்டுமானம் தொடங்குகிறது. இது பூரி மன்னரின் அரண்மனைக்கு முன்பாகவும், பூரி கோவிலின் பிரதான அலுவலகத்திற்கு எதிரேயும் நடைபெறுகிறது. பின்னர், தேவர்கள் தொட்டியின் நடுவில் உள்ள ஒரு சிறிய கோவிலில், தண்ணீர், சந்தனப் பசை, வாசனைகள் மற்றும் மலர்களால் நிரப்பப்பட்ட கல் தொட்டிகளில் சடங்கு ஸ்நானம் செய்கிறார்கள்.இந்த சந்தன விழாவானது ஸ்னான யாத்திரை அல்லது “ஸ்நான திருவிழாவில்” முடிவடைகிறது, இது ஜ்யேஷ்ட மாதத்தின் முழு நிலவு நாளில் நடைபெறுகிறது. ஜகன்னாதர், பால்பத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் 108 பானை நீரில் குளித்து, பின்னர் இரண்டு வாரங்களுக்கு அடையாள மற்றும் சடங்குகளுடன் குணமடைகின்றன. அவை பொதுமக்களின் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளன. [6]மூன்று சிறப்பு பட்டா சித்திரங்கள், அனாசரா பட்டீஸ் எனப்படும் ஸ்டார்ச் இறுகிய துணியில் இயற்கை வண்ணங்களின் பாரம்பரிய ஒரியா ஓவியங்கள், பொது மக்களின் பார்வையில் இருந்து தெய்வங்களை மறைக்கும் மூங்கில் திரையில் கட்டப்பட்டுள்ளன, பொதுமக்களால் பார்க்க முடியும். இந்த காலகட்டத்தில், தெய்வங்களுக்கு அவர்களின் நோய் தீர்க்க வேர்கள், இலைகள், பெர்ரி மற்றும் பழங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இந்த சடங்கு ஜெகன்னாத வழிபாட்டு முறையின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியில் வலுவான பழங்குடி கூறுகளை நினைவூட்டுகிறது. அசல் பழங்குடி வழிபாட்டாளரான பிஸ்வபாசுவின் மகள் லலிதா, வேட்டையாடுபவர்களின் தலைவன் மற்றும் பிராமண பாதிரியார் வித்யாபதி ஆகியோரின் சந்ததியினர் தைதாபதிகள் அல்லது தைதாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குணமடையும் காலத்திலும், ரத ஜாத்ரா அல்லது தேர் திருவிழாவின் முழு காலத்திலும் தெய்வத்திற்கு சேவை செய்யும் பாக்கியம் அவர்களுக்கு உள்ளது.

குண்டிச்சா கோவிலில் இருந்து தேர்களின் தேர்கள் பிரதான கோவிலுக்கு திரும்பிய பிறகு, தெய்வங்கள் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தேர்களில் வழிபடப்படுகின்றன. இந்த கொண்டாட்டம் சுனா பேஷா என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு முதன்முதலில் 1460 இல் மன்னர் கபிலேந்திர தேவாவால் தொடங்கப்பட்டது என்று பாரம்பரியம் கூறுகிறது, போரில் வெற்றிபெற்று திரும்பிய பிறகு அவர் ஜெகநாதருக்கு தங்கத்தை தானம் செய்தார்.  தெய்வங்கள் கிட்டத்தட்ட 208 கிலோ எடையுள்ள தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வை கிட்டத்தட்ட ஒன்பது இலட்சம் பக்தர்கள் கண்டுகளித்தனர் 

ஹேரா பஞ்சமி–

ஹேரா பஞ்சமி என்பது பூரியின் பிரமாண்ட ஜெகநாதர் கோயிலில் ரத யாத்திரையின் போது அனுசரிக்கப்படும் ஒரு சடங்கு . இது லட்சுமி தேவியின் சடங்கு என அறியப்படுகிறது . ரத யாத்திரையின் ஐந்தாவது நாள், அதாவது பிரகாசமான பதினைந்து நாட்களில் ஐந்தாவது நாள்ரத யாத்திரையின் ஐந்தாவது நாள், அதாவது, ஆஷாடத்தின் ஹேரா பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. ரத யாத்திரையின் போது, ​​பகவான் ஜகந்நாதர் தனது மனைவி மகாலட்சுமியை விட்டுவிட்டு, தனது தெய்வீக ஆயுதமான ஸ்ரீ சுதர்சனத்துடன் தனது சகோதரர் ஸ்ரீ பாலபத்ரா மற்றும் சகோதரி மா சுபத்ராவுடன் தெய்வீக வெளியீடாக வெளியே வருகிறார். தெய்வத்தின் மீதான கோபத்தை தேவி வெளிப்படுத்துகிறாள். அவள் குண்டிச்சா கோயிலுக்கு செல்கிறாள், அடப்பா மண்டபம் ஒரு சுவர்ண மஹாலக்ஷ்மி வடிவில் பல்லக்கில் உள்ளது மற்றும் அவரை சீக்கிரம் கோவிலுக்கு வருமாறு அச்சுறுத்துகிறது. அவளை மகிழ்விப்பதற்காக, தெய்வம் அவளுக்கு ஆக்யன் மாலையை (சம்மத மாலை) வழங்குவதன் மூலம் ஒப்புக்கொள்கிறது. தேவி கோபமடைந்ததைப் பார்த்து, சேவகர்கள் குண்டிச்சாவின் பிரதான கதவை மூடுகிறார்கள். மகாலட்சுமி நாகச்சனா வாசல் வழியாக பிரதான கோயிலுக்குத் திரும்புகிறார். ஒரு தனித்துவமான சடங்கில், நந்திகோச தேரின் ஒரு பகுதியை சேதப்படுத்தும்படி தேவி தனது உதவியாளர்களில் ஒருவருக்கு கட்டளையிடுகிறார். இதைத் தொடர்ந்து அவள் குண்டிச்சா கோயிலுக்கு வெளியே ஒரு புளிய மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஹெரா கோஹ்ரி லேன் [17] எனப்படும் தனிப் பாதை வழியாக, ரகசியமாகத் தன் வீட்டுக் கோவிலுக்குத் தப்பிச் செல்கிறாள் .

ஸ்ரீமந்திரத்தின் முக்கியமான செயல்பாடாக ஹேர பஞ்சமியின் சடங்குகள் ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன . கோயிலின் வரலாற்றின் படி, இந்த “உத்சவ்” மகாராஜா கபிலேந்திர தேப் காலத்தில் தொடங்கியது. அவரது ஆட்சிக்கு முன், ஹீரா பஞ்சமி விழா மந்திரங்களை ஓதுவதன் மூலம் ஒரு குறியீட்டு வழியில் அனுசரிக்கப்பட்டது. மதலா பஞ்சியில் கூறப்பட்டுள்ளபடி , ராஜா கபிலேந்திர தேப் இந்த நடைமுறைக்கு பதிலாக தங்கத்தால் செய்யப்பட்ட மகாலட்சுமியின் சிலையை அறிமுகப்படுத்தி கொண்டாட்டத்தை மிகவும் யதார்த்தமாக்கினார். 

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீபாஷ்யம்–

July 7, 2023

ஸ்ரீபாஷ்யம் முகவுரை..
வேதாந்த சூத்ரம் என்றால் என்ன?
இவை வேத வியாசரால் உபநிஷத் கூறுவது பிரம்மத்தை பற்றியே என்று நிலை நிறுத்துவதற்காக சொல்லப் பட்டது.
இதை மறுக்கும் வேதாந்தம் தவிர பிற மதங்களாவன பெளத்த ஜைனம், சாங்கியம் நியாயம் முதலியன.

இவைகளில் சாங்கியம் ஞாயம் இவை இரண்டும் வேதத்தை ஆதரித்தாலும் பிரம்மம், ஜீவன், ஜகத் இவைகளைப்பற்றி வேறுவிதமான கருத்தை வலியுருத்துகின்றன . பௌத்தமும் ஜைனமும் வேதத்தையே ஒத்துக்கொள்வதில்லை.
இவைகளின் வாதங்களை முறியடித்து பிரம்மம்தான் உபநிஷத் வாக்கியங்களின் முக்கிய கருத்து என்பதை நிலை நாட்டுவதும் இல்லாமல் பிரம்மத்திடமிருந்துதான் உலகம் தோன்றியது என்பதையும் பிரம்ம சூத்ரம் விளக்குகிறது.
சங்கரர் ராமானுஜர் இவர்களுடைய பாஷ்யங்கள் பிரம்ம சூத்ரத்தின் முக்கிய விளக்கங்களை ஒட்டியே இருந்தபோதிலும் அவரவர் சித்தாந்தத்தின்படி ஒரு சில விஷயங்களில் வேறுபடுகின்றன.
முக்கியமாக அத்வைதத்துக்கும் விசிஷ்டாத்வதத்துக்கும் உள்ள முக்கிய வேற்றுமைகளை ஆராய்ந்து பிறகு மற்ற மதங்களின் வேறுபாடுகளையும் பார்ப்போம்.
ஜீவன் பிரம்மம் ஜகத் இவைகளைப் பற்றிய கொள்கைகள் தான் இந்த வேற்றுமைக்குக் காரணம்.

அத்வைதம்
ப்ரஹ்மம் சத்யம்- ப்ரஹமமே உண்மை.
ஜகத் மித்யா- உலகம் ஒரு மாயத் தோற்றம்.
ஜீவோ ப்ஹ்ம்மைவ நாபர: -ஜீவன் ப்ர்ஹமத்தைத் தவிர வேறு இல்லை.
பிரம்மம் நிர்குணம் நிர்விசேஷ சின்மாத்ரம்- குணங்களற்ற வேறுபடுத்தமுடியாத ஞானமே.
மாயை அல்லது அவித்யை என்பது தோற்றுவிக்கப் படாத (அனாதியான) நேர் மறையான (பாசிடிவ்) வஸ்து.
பிரம்மம் உலகைப் படைத்தது எப்படி என்றால் ஒரு கயிறு பாம்பைப் படைத்தது போல.
அதாவது கயிறைப் பாம்பென்று எண்ணுவது போல.

விசிஷ்டாத்வைதம்
ப்ரஹ்மம், ஜீவன், ஜகத் மூன்றும் உண்மைத் தோற்றமே.
சேதனம் அசேதனம் ஆகிய இவை கொண்ட உலகம் ஈஸ்வரனின் சரீரம்.
ப்ரஹ்ம ஜீவ ஐக்கியம் என்பது உயிருக்கும் சரீரத்துக்கும் உள்ளதைப்போன்றது.
பிரம்மம் என்பது அனந்த கல்யாண குணங்களுடன் கூடிய நாராயணனே.
மாயை என்பது ஈஸ்வர சக்தி . அவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பது.
பிரம்மமே உலகின் காரணம். உலகம் அதனால் செய்யப்பட காரியம்
.மண்ணிலிருந்து குடம் போல. மண் எப்படி உண்மையோ அதே போல குடமும் உண்மை. காரியம் என்பது காரணத்தின் இன்னொரு உருவமே

உலகம் மாயை என்பதை அத்வைதம் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பார்த்துவிட்டு பிறகு விசிஷ்டத்வைத கொள்கையை பார்க்கலாம்.
உலகம் மாயை என்றால் உலகம் என்று ஒன்று இல்லவே இல்லையா?. ஆகாசத்தாமரை , முயல் கொம்பு இவை போன்ற இல்லவே இல்லாத ஆனால் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஒன்றா? மந்திரவாதியின் மாயாஜாலம் மாதிரியா?
அத்வைதம் சொல்வது என்னவென்றால் அது அப்படி அல்ல. இருக்கும் பொருளை வேறு மாதிரியாகக் காண்பது.
அரை இருட்டில் ஒரு கயிறைப்பார்த்து பாம்பென்று நினைக்கிறோம். அது இல்லாத வஸ்து அன்று. ஆனால் அது வேறு மாதிரியான தோற்றத்தை அளிக்கிறது.

இதை வ்யாவஹாரிகக சத்தியம் என்று அத்வைதம் சொல்லுகிறது, அதாவது நடைமுறையில் உலகம் பொய் அல்ல. ஆனால் எல்லாம் பிரம்மமே என்ற உண்மையை நம் அவித்யை மறைப்பதனால் அது பிரம்மமாகத் தோன்றுவதில்லை. உலகமாகத் தோன்றுகிறது.
பிரம்மம் பாரமார்த்திக சத்தியம் அதாவது எக்காலத்திலும் உள்ள உண்மை. அதைத்தவிர உலகம் என்பது மந்திரவாதி காட்டுவது மாதிரி உருவெளித் தோற்றமோ இல்லை ஆகாசத்தாமரை , முயல் கொம்பு என்ற இல்லவே இல்லாத வஸ்துவோ அல்ல.
இது எதனால் ஏற்படுகிறது.? இதற்கு விடை அத்தியாசம் என்று அத்வைதம் கூறுகிறது,. அதாவது ஒன்றின் குணங்களை அறியாமையினால் இன்னொன்றின் மேல் காண்பது.
இது error perception அல்லது தவறான பார்வை என்பது .

அத்தியாசம் என்பது என்ன?
அதாவது ஒன்றின் குணங்களை தவறான பார்வையினால் இன்னொன்றின் மேல் காண்பது.
தவறான பார்வை எப்படி ஏற்படுகிறது? ஒரு கயிறைப் பார்க்கிறோம், சிறிது தூரத்தில் இருந்து பார்க்கும்போது அது ஒரு பாம்புபோலத் தோன்றுகிறது. இது தவறான பார்வை அல்லது erraneous perception. அது ஏன் பாம்புபோலத் தோன்றவேண்டும்? ஏனென்றால் நாம் பாம்பை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
ஒரு பொருளைப் பார்க்கின்றபோது அது என்னவென்றே தெரியவில்லை என்றால் அது புரியாத பார்வை (non-apprehension).
அதை வேறு ஒன்றாகப புரிந்து கொள்வது தவறான பார்வை(misapprehension or erraneous perception)
என்னவென்று தெரியாத ஒன்றைப் பார்க்கும்போது மனித மனம் தனக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றை அதனுடன் பொருத்திப் பார்த்துத் தவறாகப் புரிந்துகொள்கிறது. பாம்பின் குணாதிசயங்களை கயிற்றின்மேல் ஏற்றி அதைப பாம்பாகப் பார்ப்பதுதான் அத்தியாசம்.

அத்வைதம் கூறுவது என்னவென்றால் கயிறு பாம்பாகத் தோன்றும்போது அது நிஜம் . ஆனால் அது பாம்பல்ல கயிறு என்று அறியும்போது அது பொய்.
அதே போல பிரம்மத்தை உலகமாகக் காணும்போது அது நிஜம் . ஆனால் பிரம்மஞானம் ஏற்பட்டுவிட்டால் எல்லாம் பிரம்மம் என்ற நிலையில் உலகம் உண்மை அல்ல என்ற தெளிவு ஏற்படுகிறது.
அதனால் பிரம்மம் பாரமார்த்திக சத்தியம் , அதாவது எப்போதும் உள்ள உண்மை, பிரபஞ்சம் வ்யாவ்ஹாரிக்க சத்யம் , நடைமுறையில் உண்மை என்று அத்வைதம் கூறுகிறது,
பிரம்மஞானியும் உலகத்தை உணர்கிறான், அது மாயமாய் மறைவதில்லை. ஆனால் அது பிரம்மமே என்று அறிகிறான்.

இதற்கு மாறாக விசிஷ்டாத்வைதம் கூறுவது பிரபஞ்சம் உண்மை பிரம்மமும் உண்மை . இதை சரீர சரீரி பாவம் மூலமாக ஸ்தாபிக்கிறார். பிரம்மமே பிரபஞ்சம் . இதைப் பிறகு விரிவாகக் காணலாம் .
ஸ்ரீபாஷ்யம் வேதாந்த சூத்ரங்களின் விசிஷ்டாத்வைத பரமான விளக்கம்.
இதன் சரித்திரப் பின்னணியை சிறிது ஆராய்வோம். வேதத்தை அனுசரித்து யாகயக்ஞாதிகள் செய்து அதன் பலனை அடைந்தவர்கள் மீமாம்சகர்கள் . இதைச் சொல்லும் பாகம் பூர்வ மீமாம்சம் அல்லது கர்மகாண்டம் எனப்படும். வேதத்தின் பின் பகுதி உத்தர மீமாம்சம் அல்லது ஞானகாண்டம் எனப்படும். இதில்தான் உபநிஷத்துக்கள் காணப்படுகின்றன.

மீமாம்சகர்களைப் பொறுத்தவரையில் வேதம் சொல்லுவது கர்மகாண்டம்தான். பின் பாகமான உபநிஷத்துக்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அந்த காலகட்டத்தில் யாகம் யக்ஞம் முதலியவை மட்டுமே வைதிக காரியங்கள் எனக் கருதப்பட்டு உயிர் பலி மிகுதியாக செய்யப்பட்டு வந்தபோது புத்தர் தோன்றினார் ,
அவர் இறப்பிற்கு பிறகு எதுவும் இல்லை. எல்லாம் அநித்தியம். சுவர்க்கம் மறுபிறப்பு இவைகளுக்காக உயிர்ப்பலி கொடுப்பது பாவம் என்று அஹிம்சையை வலியுறுத்தினார். இந்த கொள்கை பரவினதும் மக்கள் யாகம் முதல்யவைகளை விட்டதுமல்லாமல் வேதத்தையே விட்டுவிட்டனர்.
இந்த காலகட்டத்தில்தான் சங்கரர் தோன்றினார். உலகம் அநித்தியம்தான். ஆனால் நித்தியமான வஸ்து ஒன்று உண்டு. அதுதான் உபநிஷத்துக்களில் சொல்ல்ப்பட்டிருக்கிறது என்று பிரம்மத்தை நிலை நாட்டினார்.
இவ்வாறு அந்தந்த சூழ்நிலையை ஒட்டியே வேதங்களின் உபதேசங்களை மக்கள் சரிவரப் புரிந்துகொள்ளாமல் தவறான மார்கத்தில் செல்வதைத்தடுக்க இறைவனே அனுப்பியவர்கள்தான் மகான்கள்.

சங்கரர் காலத்திற்குப்பிறகு அவருடைய மித்யாவாதம் அவர்பின் வந்தவர்களால் பலத்து பக்தி என்பதே குறைந்துவிடுமோ என்ற சந்தர்ப்பத்தில் இறைவனின் தூதர்களாக ராமானுஜர் மத்வர் இவர்கள் தோன்றினர்.
வடக்கிலும் பல பக்தர்கள் தோன்றி பக்தியை வளர்த்தனர்.
வேதாந்தசூத்ரங்கள் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட உண்மைகளை ஒழுங்குபடுத்தி சுருக்கமாக சொல்வதற்கு முற்படுகின்றன. சங்கரராலும் ராமானுஜராலும் எழுதப்பட்ட பாஷ்யங்கள் ப்ரம்ம்சூத்ரத்தைத் தழுவியே இருந்தாலும் பிரம்மம், ஜகத், ஜீவன் இவைகளின் நிலை பற்றிய விளக்கங்களில் அவரவர் கொள்கைக்கேற்ப மாறுபடுகின்றன.

மங்களச்லோகம்
வேதார்த்த சங்க்ரஹத்தில் உள்ளபடி இதிலேயும் ராமானுஜர் நாராயணனை ஸ்ரீனிவாசன் என்று குறிப்பிடுகிறார். ஆயினும் ஸ்ரீனிவாசன் என்பது நாராயணனையும் குறிக்கும் அல்லவா?
அகிலபுவனஜன்மஸ்தேமபங்காதி லீலே
வினதவிதிதபூதவ்ராதரக்ஷைகதீக்ஷே
ஸ்ருதிசிரஸிவிதீப்தேபரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மமபரஸ்மின் சேமுஷீ பக்திரூபா
என் புத்தியானது பக்திரூபத்தில் வேதத்தின் முடிமேல் விளங்கி தன்னை வணங்கும் எவரையும் காக்கும் வ்ரதம் கொண்டு பிரபஞ்சத்தைப் படித்து, காத்து அழிக்கும் அலகிலா விளையாட்டுடைய பரபிரம்மஸ்வரூபமான நாராயணனிடத்தில் லயிக்கட்டும்.
அகிலபுவனஜன்மஸ்தேமபங்காதி லீலே– பிரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி, , ஜன்ம , காத்தல், ஸ்தேம, அழித்தல், பங்க, இவை யாவையும் அவனுடைய லீலை. பங்காதி என்றால் அழித்தல் முதலிய என்பது பொருள். சிருஷ்டி, காத்தல் அழித்தல் மூன்றையும் சொல்லிய பிறகு எதற்கு ஒரு ஆதி பதம்?
அதாவது அவன் பிரபஞ்சத்தை ப்படைத்தது மட்டும் அல்லாமல் அதன் உள்ளே அந்தர்யாமியாக இருக்கிறான் என்பதைக் குறிக்கிறது.
அகிலம் என்றால் சர்வம் என்று பொருள். ஆனால் அகிலம் என்ற சொல்லை கையாண்டது ஏனென்றால் அ என்ற அகாரம் மங்களகரமானதும் அல்லாமல் அகாரம் நாராயணனைக் குறிக்கிறது. ,
பக்திரூபா சேமுஷீ– பக்தி ரூபமான புத்தி என்பதன் மூலம் பகவானை அடைய பக்தியே வழி என்று சொல்கிறார், புத்திபூர்வமான ஞானம் பக்திமூலம் வருவதாகும்.
வேதத்தின் முடிமேல் விளங்கி, சுருதி சிரசி விதீப்த, அதாவது வேதத்தின் முடிபோன்றது உபநிஷத்,. அதனால் சொல்லப்படுபவன் நாராயணனே என்று பொருள்.
பக்தியுடன் தன்னை ஆச்ரயிக்கும் உயிர்களை ரட்சிக்கும் வ்ரதத்தை உடையவன் வினதவிதிதபூதவ்ராதரக்ஷைகதீக்ஷே என்கிறார்.
ராமாவதாரத்தில் விபீஷண சரணாகதி கட்டத்தில் இதை அவன் வாயிலிருந்தே கேட்டோம் அல்லவா?
‘சக்ருத் ஏவ பிரபன்னானாம் தவாஸ்மி இதி வாதினாம்
அபயம் சர்வபூதானாம் ததாமி இதி வரதம் மம” என்று.
சர்வபூதானாம் என்றால் எந்த உயிர்க்கும் என்று பொருள் கஜேந்த்ரனுக்கும் ஜடாயுவுக்கும் அருள் பாலிக்கவில்லையா?
ஸுதர்சனசூரி ஸ்ரீபாஷ்ய விளக்கத்தில் கூறுகிறார், அவன் காப்பது மட்டும் அல்ல கடைசியில் மோக்ஷமே தந்துவிடுகிறான் என்று.

பிரம்மசூத்ரம் நான்கு பெரிய பிரிவுகளைக்கொண்டது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பகுதிகள். முதல் பிரிவின் முதல் பகுதியில் அத்வைதத்தின் கொள்கைகளும் அதற்கு விசிஷ்டாத்வைதத்தின் மறுப்புகளும் வேதார்த்த ஸங்க்ரஹத்தில் எளிதாகப் புரியும்படி இருப்பதனால் அதை அங்கு பார்ர்க்கலாம்.
பிரம்மசூத்ரம் – பிரிவு 1 பகுதி 1
சூத்ரம் 1
अथ अथो ब्रह्म जिग्ज्ञासा
அதாதோ பிரம்மஜிக்ஞாஸா
(अथ) அத-அதன் பின்
(अत) அத:-ஆகையால்
(ब्रह्म जिग्ज्ञासा) பிரம்மஜிக்ஞாஸா- பிரம்மத்தைப்பற்றி அறியும் ஆவல் ஏற்படுகிறது.
அத (अथ) என்னும் சொல் மங்களம், ஆரம்பம், பிறகு, இவைகளைக் குறிக்கும் சொல். இவ்விடத்தில் பிறகு என்ற அர்த்தத்திலேயே சொல்லப்பட்டிருந்தாலும் எதற்குப் பிறகு என்பது சங்கரராலும் ராமானுஜராலும் இரண்டு விதமாக விளக்கப்படுகிறது.
சங்கரரின் விளக்கம்- அத- அதற்குப்பிறகு என்பது எதைக்குறிக்கிறது என்றால் பிரம்மத்தைப் பற்றிய ஆராய்ச்சி ஆத்மசாதனைக்கு அப்புறம் எடுத்துக்கொள்ளப் படுகிறது என்று பொருள் என்கிறார்.
ஆத்மசாதனை என்றால் என்ன? இது சாதனா சம்பத் என்று கூறப்படும் நால்வகைப் பட்டது.
நித்ய அநித்திய விவேகம்- அதாவது எது அழியாப் பொருள் எது அழியும் பொருள் என்ற பகுத்தறிவு.பிரம்மமே நித்தியம் பிரபஞ்சம் அநித்தியம் என்று அறிவது.
இஹ அமுத்ர பல விராகம்- இந்த லோகத்திலும் மற்ற லோகங்களிலும் கிடைக்கக் கூடிய பலன்களில் ஆசையின்மை. அதாவது யாகயக்ஞாதிகள் மூலம் கிடிக்கக்கூடிய பலன்கள் அநித்தியம் என்று அவைகளில் பற்றின்மை.
சமதமாதிசம்பத்- இந்த்ரியங்கள் மனம் இவற்றை வசப்படுத்துவது.
முமுக்ஷுத்வம் – பிறப்பிறப்பற்ற முக்தி நிலையை அடைவதில் ஆர்வம்.
இது உள்ளவர் எவராயினும் பிரம்மஞானத்திற்கு முயற்சிக்கலாம் என்பது சங்கரர் கூற்று.

வேதத்தின் கர்மகாண்டத்திற்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கர்மகாண்டத்தை . அதாவது பூர்வமீமாம்சம் என்று சொல்லப்படும் வேதத்தின் முதல் பகுதியை கற்காமலேயே பிற்பகுதியான உபநிஷத் அல்லது ஞானகாண்டம் மூலம் பிரம்மஞானத்தை அடையலாம் என்று சொல்கிறார்.
ராமானுஜரின் சித்தாந்தத்தின்படி வேதம் ஓர் முழுமையான பொருள் . அதனால் பூர்வபாகம் உத்தரபாகம் இரண்டுமே முக்கியமானவை,.
அதனால் கர்ம காண்டத்தில் சொல்லி உள்ளபடி வேத கர்மாக்களை செய்து விட்டு அதன் பின் அவைகளால் அடையும் பலன் தாற்காலிகம் ஆனதே என்று உணர்ந்து பிரம்மத்தை அடையும் முயற்சியையே அத (பிறகு) என்ற சொல் குறிக்கிறது என்கிறார்.

இந்த வேற்றுமை காரணமாகவே சன்யாசம் ஏற்கும் முறை அத்வைதத்திலும் விசிஷ்டாத்வைதத்திலும் மாறுபடுகிறது. பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலிருந்து நேராகவே சன்யாசம் கொள்வது அத்வைதம் கிருஹதாஸ்ரமத்திற்குப் பிறகு சன்யாசம் கொள்வது விசிஷ்டாத்வதம்
.அத: ஆகையினால் என்பது இந்த மேற் சொன்ன அறிவினால் என்பது பொருள்.
பிரம்மஜிக்ஞாஸா-பிரம்மத்தை அறியும் ஆவல் இது எப்படி ஏற்படுகிறது?
வேதத்தின் கர்ம காண்டத்தை பின்பற்றி வேதத்தில் சொல்லியுள்ள தர்மங்களை அனுசரித்து யாகயக்ஞாதிகளை செய்தபோதிலும் பிறப்பு இறப்பு இவை மாறி மாறி வருவதால் களைப்படிந்த ஜீவன் இதிலிருந்து மீள வழி உள்ளதா என எண்ணி வேதங்களின் முடிவுப்பகுதியான உபநிஷத்துக்களை நாடுகிறான்.
அங்கு வேதாந்த வாக்கியங்கள் மூலம் பிரம்மத்தை அடைவதுதான் ஒரே வழி என்று தெரிந்து பிரம்மத்தைப் பற்றி அறிய ஆவல் கொள்கிறான்.
இதுதான் இந்த சூத்ரத்தின் பொருள்.

சரி. பிரம்மம் என்றால் என்ன ? இது அடுத்த சூத்ரம்.
ஜன்மாத்யஸ்ய யத:- சூத்ரம் 1.1.2 continued
அத்வைதக் கொள்கையின்படி இந்த உலகம் உண்மையன்று. அப்படி இருக்கையில் இந்த சூத்திரத்தை சங்கரர் எவ்வாறு விளக்குகிறார் ?
அத்வைதகோட்பாட்டின்படி உலகம் உண்மை அல்ல. அப்படி இருக்கையில் பிரம்மம் தான் உலகத்தைத் தோற்றுவிக்கிறது, அதைக் காக்கிறது பின்னர் அழிக்கிறது என்பது எவ்விதத்தில் பொருந்தும்?
இதற்கு அத்வைதத்தின் பதில்.
கயிறைப் பாம்பென்று நினைக்கிறோம். பாம்பைத் தோற்றுவித்தது எது?
கயிறே அல்லவா? அது கயிறு என்று தெரிந்த பின் பாம்பு எங்கே போகிறது? கயிறிலேயே மறைகிறது. கயிறைப் பாம்பாகப் பார்க்கும் வரை அந்தப் பாம்பை எது நிலைக்கச் செய்கிறது?
கயிறுதானே?

இதே போல பிரம்மம்தான் உண்மை என்று தெரியும் வரை உலகம் உண்மையாகவே தெரிகிறது. அதனால் இந்த உலகம் தோன்றுவதற்குக் காரணம் பிரம்மம்தான் என்று ஆகிறதல்லவா? உலகத்தைக் காணும்போது அதை நிலை நிறுத்துவது பிரம்மம்தானே? பிறகு பிரம்மத்தை அறிந்த பிறகு இந்த உலகம் உண்மை அல்ல என்று தெரியும்போது அது பிரம்மமாகவே காண்கிறோம் . அப்போது அதை அழிப்பதும் பிரம்மம் தானே ?
விசிஷ்டத்வைத சித்தாந்தத்தின் படி உலகம் பொய் அல்ல . பிரம்மத்தின் படிவம் (another form). எல்லாம் சூக்ஷ்ம வடிவில் இருப்பது பிரம்மத்தில். அதுவே ஸ்தூல வடிவத்தில் உலகமாக இருக்கிறது.

அதனால் உலகம், ஜகத், ஜீவன் , ஈஸ்வரன் மூன்றும் பிரிக்கமுடியாதவை. பிரம்மம் உயிர் என்றால் ஜகத் ,ஜீவன் இவை அதன் உடல். எப்படி பானை என்பது சூக்ஷ்ம உருவத்தில் மண்ணாக இருக்கிறதோ அதுபோல.
இங்கு திருமூலர் வாக்கைப் பார்ப்போம்.
மரத்தில் மறைத்தது மாமதயானை மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம் பரத்தை மறைத்தது பார் முதல் பூதம். இங்கு யானையும் நிஜம் மரமும் நிஜம் .பார்வையில் தான் வேறுபாடு. அதே போல பார் முதல் பூதம் அதாவது இந்த பிரபஞ்சமும் நிஜம் பிரம்மனும் நிஜம்.
பருகும் நீர் உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றது ஆழ்வார் பார்வையில். நம் பார்வையில் வெற்றிலையும் சோறும் தான் படுகிறது, இதுதான் வித்தியாசம்.

பிரம்மத்தை அறிய வேதமே பிரமாணம்.
ஸ்ரீபாஷ்யம் -1.1.3–பிரம்மசூத்ரம் – –சூத்ரம். 3
சாஸ்திர யோனித்வாத்-
சாஸ்திரம் அதாவது உபநிஷத்தில் சொல்லியுள்ளபடி.
இது எதற்கு என்றால் பிரம்மத்தை உபநிஷத்தில் சொல்லியதால்தான் அறிய வேண்டுமா என்ற கேள்விக்கு பதில்.
ஒரு வஸ்துவைப் பற்றி அறிய சாதாரணமாக உலகத்தில் மூன்று முக்கிய வழிகள் உண்டு.

ப்ரத்யக்ஷம்- நேரில் பார்த்து அறிவது.
அதாவது நம் இந்த்ரியங்கள் மூலம், கண்ணால் பார்த்தோ, செவியால் கேட்டோ, நாசியால் நுகர்ந்தோ, நாக்கினால் ருசி பார்த்தோ அல்லது தொடு உணர்ச்சியாலோ தான் எந்த விஷயத்தைப் பற்றியும் அனுபவம் ஏற்படுகிறது.
சுகம் துக்கம் என்பதைக் கூட இந்த்ரியங்கள் மூலம் உண்டான அனுபவத்தினால்தான் உணர்கிறோம். இவ்வாறு உணர்ச்சி எண்ணம் எல்லாமே ப்ரத்யக்ஷம் மூலம் தான் ஏற்படுகிறது.

அனுமானம் – ஒன்றை அனுமானத்தினால் அறிவது.
ஒரு மலையில் புகை காண்கிறோம் . உடனே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிகிறோம். அதை பிரத்யக்ஷமாகப் பார்க்கவில்லை என்றாலும், நெருப்பில்லாமல் புகையுமா என்ற அனுமானத்தின் மூலம் அறிகிறோம் அல்லவா?

உவமானம் – சில விஷயங்களை இதைப்போல் அது என்ற உவமானத்தின் மூலம் அறிகிறோம்.
ஒருவன் புலியைப் பார்த்ததில்லை என்று வைத்துக்கொள்ளலாம். அவன் காட்டுக்குப் போகிறான். அவனிடம் ஒரு நண்பன் ‘அங்கே புலி இருக்கும் ஜாக்கிரதை” என்கிறான் அதற்கு அவன் புலி எப்படி இருக்கும் என்று கேட்டால் அது பூனயைப்போலதான் இருக்கும் ஆனால் பெரிதாக மஞ்சளாக இருக்கும் மேலே கோடுகள் இருக்கும் ” என்று கூறுகிறான். உடனே அவன் காட்டில் அந்த மாதிரி ஒரு மிருகத்தைப் பார்த்தவுடன் இது புலிதான் என்று அறிந்து கொள்வான் அல்லவா?

இதையெல்லாம் தாண்டிய நாலாவது அறியும் முறை தர்க சாஸ்திரப்படி சப்தம் அல்லது verbal testimony.
சப்தம் என்பதை ஆப்த வாக்கியம் என்று சொல்வது உண்டு. அதாவது நமக்கு நம்பத்தகுந்த நபர் ஒன்று சொன்னால் அதை அப்படியே உண்மையாக எடுத்துக் கொள்கிறோம் . ஒருவன் வேற்றூரில் இருக்கும்போது அவன் நண்பனோ அல்லது நெருங்கிய உறவினரோ ஒரு செய்தி நல்லதோ அல்லதோ சொன்னால் அதை நம்பி உடனே செயல் படுவான் அல்லவா?
நமக்கு மிகவும் நெருங்கிய நம்பத்தகுந்த ஆதாரம் வேதம்தானே?
ஆதலால் பிரம்மத்தை அறிய ஆதாரமாயிருப்பது வேதம் அல்லது உபநிஷ என்பது இந்த சூத்ரத்தின் பொருள்.
ஏனென்றால் பிரம்மத்தை ப்ரத்யக்ஷம் மூலம் அறியமுடியாது. இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டது என்பதனால்.
அனுமானமும் உபயோகம் ஆகாது ஏனென்றால் அதைக் குறிக்கும் அடையாளம் நெருப்புக்கு புகையைப் போல எதுவும் கிடையாது.
உபமானம் காட்ட முடியாது அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லாததால்.
அதை அறிந்தவர் யாரும் நமக்கு அது என்ன என்பதைச் சொல்ல முடியாது. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். அதனால் வேதமே அதாவது உபநிஷதமே பிரம்மத்திற்கு பிரமாணம்.

நான்காவது  சமன்வயாதிகாரணம் எனப்படும். சூத்திரம் “தத்து சமன்வயத்“.

ஸ்ரீ பாஷ்யம்-பிரம்மசூத்ரம் – -சூத்ரம் 5
பிரபஞ்சத்தின் காரணம் பிரம்மம் என்று உபநிஷத் வாக்கியங்களின் மூலம் ஸ்தாபித்த பின்னர் உலகம் தோன்றுவதற்கு காரணம் ப்ரகருதி பிரம்மம் அல்ல என்ற ஸாங்கிய மதத்தின் கொள்கையை மறுப்பது இந்த சூத்ரம்.
ஈக்ஷதே: ந அசப்தம்
அதுவல்ல (அதாவது ப்ரக்ருதி) காரணம், ஏனென்றால் ‘ஈக்ஷதே’ அது ஸங்கல்பித்தது’ என்ற உபநிஷத் வாக்கியத்தின்படி வேதத்திற்கு விரோதமானது.
ஸாங்கிய சாஸ்திரத்தின்படி, உலகம் மூன்று குணங்களால் ஆனது. இந்த மூன்று குணங்கள் பிரகிருதி அல்லது இயற்கையில் உள்ளவை. இது எப்படி என்று தெரிந்துகொள்ள் சற்று ஸாங்கிய வாதத்தை பார்ப்போம்.
அவர்கள் கூற்றுப்படி ஜீவன் என்பது புருஷன் இயற்கை என்பது பிரகிருதி. இரண்டும் உண்மையான தத்துவங்கள். பிரகிருதி உருவமற்றது அதில் சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களும் ஒன்றுக்கொன்று கலக்காமல் தனித்தனியாக உள்ளன. அப்போது சிருஷ்டி ஏற்படுவதில்லை.
பிறகு இவை கலந்து மஹத் அல்லது புத்தி என்ற தத்துவம் உண்டாகிறது. புத்தியில் இருந்து அஹங்காரம் தோன்றி அது சாத்விகம், ராஜஸிகம் தாமஸிகம் என்று மூன்றுவகையாகப் பிரிகிறது. சாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்த்ரியங்கள் மனம் இவை தோன்றுகின்றன. தாமஸிக அஹங்காரத்தில் இருந்து பஞ்ச பூதங்கள் தோன்றுகின்றன. ராஜச அஹங்காரம் இவை இரண்டும் செயல்பட உதவுகிறது (like a catalytic agent)

புருஷன் அல்லது ஜீவன் இந்த பிரகிருதியுடன் தன்னை அக்ஞானத்தினால் ஐக்யப்படுத்திக்கொண்டு சுகதுக்கங்களை அனுபவித்து சம்சாரத்தில் சிக்கி ஜனனமரணங்களை அனுபவிக்கிறான். ஒரு சமயம் இதை உணர்ந்து பிரகிருதியில் இருந்து விடுபட்டு முக்தியை அடைகிறான்.
பிரக்ருதி சிருஷ்டிக்கு காரணம் என்ன என்றால் புருஷனின் சமீபமே.
இதற்கு என்ன காரணம் கூறப்படுகிறது என்றால் ஒரு பொருள் எதனில் இருந்து தோன்றியதோ அதன் குணங்கள் அந்தப் பொருளுக்கு இருப்பதைப் பார்க்கிறோம். உலகத்தில் உள்ள எல்லாமே மூன்று குணங்களின் மாறுபாடு. ஆகையால் அவற்றிற்கு காரணம் ஆன பிரகிருதியே உலகத்தின் காரணம்.
இதை மறுப்பது இந்த சூத்திரம்.

உபநிஷத்தில் ‘தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய‘ என்ற வாக்கியத்தின் மூலம் உலகை படைத்தது ஜடமான பிரகிருதி அல்ல என்பது தெளிவாகிறது. ‘அது சங்கல்பித்தது நான் பலவாக ஆவேன் என்று,’ என்பது உணரும் திறமற்ற (insentient) பிரக்ருதிக்கு சரியாக அமையாது.
ஆனால் காரணத்தின் குணங்கள் அதன் மூலம் தோன்றியதில் இருக்க வேண்டுமே , முக்குணங்கள் அற்ற பிரம்மம் எப்படி இந்த உலகத்தின் காரணமாகும் என்பதற்கு ராமானுஜரின் பதில் என்னவென்றால்,
பிரம்மம் எல்லாவற்றிற்கும் உள்ளே அந்தராத்மாவாக இருப்பதனால் எல்லாமே பிரம்மத்தின் உடல் ஆதலால் எப்படி இந்த பஞ்சபூதங்களினால் ஆன உடலுக்கு உயிர் காரணமோ அதே போல இந்த ப்ரபஞ்சத்திற்கு பிரம்மமே காரணம்,
சூக்ஷ்ம சித் அசித் விசிஷ்ட பிரம்மம் ஆத்மா , ஸ்தூல சித் அசித் விசிஷ்ட பிரம்மம் உலகம். அதாவது எல்லா உயிர்களும் ஜடவஸ்துக்களும் உருவற்ற வடிவில் உள்ளது பிரம்மம். அதுவே உருவமாக உள்ளது உலகம்.
ஸாங்க்ய வாதம் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. சங்கல்பித்தது என்ற ஒரே சொல் அது பிரம்மமாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. வேதத்தில் ‘அக்னி சங்கல்பித்தது’ ‘நீர் சங்கல்பித்தது’ எனற வாக்கியங்கள் உண்டு,.அதனால் உணரும் திறன்(sentiency) என்பது அவசியமில்லை என்று. இதற்கு அடுத்த சூத்திரம் பதிலாகிறது.

வேதங்கள் அறிவின் எல்லையற்ற பொக்கிஷம். அவை யாராலும் இயற்றப்படவில்லை, எனவே அவை “அபௌருஷேயா” என்று அழைக்கப்படுகின்றன. வேதங்களின் முக்கிய அம்சங்கள், அவை ஆரம்பம் (அனாதி), நித்தியம் (நித்யம்) மற்றும் களங்கமற்றவை (நிர்தோஷம்) ஆகும்.-வேதங்கள் உலகில் மிக உயர்ந்த அதிகாரம் மற்றும் வேதங்களை விட உயர்ந்த சாஸ்திரம் அல்லது வேதம் எதுவும் இல்லை. வைதிகர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு (அதாவது, வேதங்களின் அதிகாரத்தை நம்புபவர்கள்), வேதத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு அதிகாரம். அதிகாரம் சமஸ்கிருதத்தில் பிரமனா என்று அழைக்கப்படுகிறது.

பராசர முனிவரின் மகன் பதராயண முனிவர் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம். இவர் கிருஷ்ணத்வைபாயன வியாசர் என்றும் அழைக்கப்படுகிறார். வியாசர் என்ற சொல்லுக்கு வேதங்களைத் துறந்தவர் என்று பொருள். எனவே பதராயண முனிவர் வேதங்களை நான்கு மடங்காகப் பிரித்தார்.-முதல் அலகு ரிக்வேதம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது குழுக்கள் யஜுர்வேதம், சாமவேதம் மற்றும் அதர்வண வேதம் என்று அழைக்கப்படுகின்றன. ரிக் வேதத்தில் 21 கிளைகளும், யஜுர் வேதத்தில் 100 கிளைகளும், சாமவேதத்தில் 1000 கிளைகளும், அதர்வண வேதத்தில் 9 கிளைகளும் உள்ளன. அதனால் வேதங்கள் அறிவின் எல்லையற்ற பொக்கிஷமாக மாறியது. எல்லையற்றது என்பது முடிவில்லாதது.

ஒவ்வொரு வேதத்திலும் உள்ள ஒவ்வொரு கிளையும் மீண்டும் சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம் மற்றும் உபநிடதங்கள் என நான்கு பிசிஷன்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. யாகம் அல்லது யாகத்தில் சொல்லப்படும் அல்லது உச்சரிக்கப்படும் மந்திரங்களை சம்ஹிதை கையாள்கிறது. பிராமணர் ஒரு யாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையைக் கையாளுகிறார்.

ஆரண்யகம் என்பது ஒரு காட்டில் ஓதப்படும் வேதங்களின் பகுதி. வேதங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் உபநிடதம், பர பிரம்மன் அல்லது வெறும் பிரம்மன் என்று அழைக்கப்படும் பரமபிதாவை நேரடியாகக் கையாள்கிறது, மேலும் அவர் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அல்லது விஷ்ணு.வேத வாசகங்கள் அல்லது மேற்கோள்கள் வேத வாக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வேத வாக்கியங்கள் அல்லது வேறு வார்த்தைகளில் வேதங்கள் மீண்டும் விதி, அர்த்தவாதம் மற்றும் மந்திரம் என வகைப்படுத்தப்படுகின்றன. விதி என்பது ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட யாகம் செய்ய, ஒரு வார்த்தையின் பலனை அல்லது பிற உலகங்களில் ஒரு பலனை அடைய ஒரு கட்டளை அல்லது கட்டளை. உதாரணமாக ஒருவர் சொர்க்கம் அல்லது ஸ்வர்கத்தை அடைய விரும்பினால், அவர் ஜோதிஷ்டோம யாகம் செய்ய வேண்டும். அர்த்தவாத வாக்யா என்பது ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட கர்மாவைச் செய்வதற்கான விளம்பரம், விளம்பரம் அல்லது தூண்டுதலுடன் தொடர்புடையது. மந்திரம் என்பது வேதங்களின் ஒரு பகுதி, இது ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் ஆசீர்வாதங்களைத் தூண்டுவதற்காக ஓதப்படுகிறது.

உபநிடதங்கள் பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனைப் போற்றுகின்றன.-ஒரு உபநிடதம் என்பது ஒரு வேதம், இது பரமாத்மாவிற்கு மிகவும் “அருகில்” உள்ளது.-ஒரு உபநிடதம் ஸ்ரீமன் நாராயணனை நேரடியாகக் கையாள்கிறது.உபநிடதங்கள் வேதாந்தம், த்ரய்யந்தம், நிகமந்தா அல்லது ஸ்ருத்யந்தம் என்றும் அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வேதங்களின் கடைசிப் பகுதிகளாகும். வேதங்கள் ஸ்ருதி என்றும் அழைக்கப்படுகின்றன. சாஸ்திரம் என்பது படிப்பதன் மூலம் படிப்பவர்களுக்கு அறிவைத் தரும் ஒரு வேதமாகும்.

உபநிடதங்கள் தத்வம், ஹிதம், புருஷார்த்தம் ஆகிய மூன்று விஷயங்களைக் கற்பிக்கும் வேதாந்த சாஸ்திரங்கள். இவை இந்நூலின் போக்கில் பொருத்தமான இடங்களில் கையாளப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில்தான் பிரம்மசூத்திரத்தின் பரிணாம வளர்ச்சியை அறிய வேண்டும். வேதங்களின் பொருள் தெளிவாக இல்லை மற்றும் மறைந்துள்ளது. சில வேத வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன.-வெளிப்படையான முரண்பாட்டை அகற்ற சரியான விளக்கம் தேவை. அரசியலமைப்பின் சில பிரிவுகள் குறித்து சந்தேகம் எழும் போது சரியான விளக்கத்திற்காக உச்ச நீதிமன்றத்தை இந்திய ஜனாதிபதி குறிப்பிடுவது போன்றது இது.

வேதங்கள் என்பது பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தை உருவாக்கும் போது அவற்றைப் பயன்படுத்திய பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அமைப்பு. அவர் வேதங்களை எழுதியவர் அல்ல, ஆனால் அவற்றை மட்டுமே நினைவு கூர்கிறார், மேலும் “சதுர்முக பிரம்மா” (நான்கு தலை பிரம்மா) தனது தொப்புளில் இருந்து உருவாக்கி அதையே கற்பிக்கிறார்.

வேதங்களின் பொருள் மறைந்திருப்பதால், வேதங்களின் சரியான விளக்கத்திற்கு ஒரு கற்றல் பிரிவு அவசியம் தேவைப்பட்டது.-கற்றலில் 14 கிளைகள் உள்ளன, அவற்றில் வேதங்களைச் சரியாக உச்சரிப்பதற்கும் ஒவ்வொரு வேதச் சொல்லின் தோற்றத்தை அறிந்து கொள்வதற்கும் ஆறு கிளைகள் உள்ளன; ஒவ்வொரு வேத வார்த்தையின் அர்த்தத்தையும் அறிந்து, யாகங்களைச் செய்வதற்கு ஏற்ற மங்களகரமான தேதிகளைத் தீர்மானித்தல், யாகங்களைச் செய்வதில் முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க மற்றும் ஒவ்வொரு மந்திரத்தின் அளவை அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆறு கிளைகள் வேதங்கள் அல்லது வேதங்களின் துணைப் பொருட்கள் என்று அறியப்படுகின்றன.

சமஸ்கிருதத்தில் அவை சிக்ஷா, வியாகரனா, சண்டஸ், நிருக்தம், ஜோதிஷம் மற்றும் கல்பம் என்று அழைக்கப்படுகின்றன.

மற்ற நான்கு கிளைகள் மீமாம்சா, நியாயா, புராணங்கள் ஸ்ரீமத் ராமாயணம் மற்றும் மகாபாரதம் மற்றும் தர்ம சாஸ்திரம் உட்பட. இப்போது பிரம்மசூத்திரங்கள் மீமாம்சா சாஸ்திரம் அல்லது மீமாம்சா கற்றலின் கீழ் வருகின்றன. மீமாம்சா என்ற வார்த்தையின் அர்த்தம், ஒரு முடிவுக்கு வருவதற்கு வேத நூல்களின் தொடர்புடைய மற்றும் பொருத்தமான விவாதம்.

எனவே மீமாம்சா என்பது கற்றலின் கிளையாகும், இது முக்கியமாக வேத வாக்கியங்களைப் பற்றி விவாதிக்கும், அவை தெளிவு இல்லாத மற்றும் பல்வேறு விளக்கங்கள் சாத்தியமாகும். எனவே உபநிடதங்கள் உள்ளிட்ட வேதங்களுக்கு சரியான விளக்கங்களை சூத்திரங்களை இயற்றுவதன் மூலம் செய்ய முடியும் என்று வியாச முனிவர் நினைத்தார். சூத்ரா என்பது அபோரிசம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு சூத்திரத்தின் சிறப்பியல்புகள் என்னவென்றால், அது ஒரு குறிப்பிட்ட சூழலுடன் தொடர்புடைய முழுமையான, தெளிவான மற்றும் தெளிவற்ற பொருளைக் கொடுக்கும் குறைந்தபட்ச எழுத்துக்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்டுள்ளது. ஒரு சூத்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு திட்டவட்டமான நோக்கம் உள்ளது, எதுவும் அர்த்தமற்றது அல்லது நோக்கமற்றது. இந்திய தத்துவத்தின் பல்வேறு அமைப்புகளின் அழகு என்னவென்றால், ஒவ்வொரு அமைப்பின் அடிப்படை உரையும் சூத்திர வடிவில் உள்ளது. சூத்திரங்களை இயற்றியவர்கள் எல்லாம் அறிஞர்கள் (சர்வஜ்ஞர்கள்) சூப்பர் மனித சக்திகளையும் அறிவையும் கொண்டவர்கள்.

சூத்திரங்களின் அர்த்தத்தை விரிவுபடுத்துவதற்காக, பல அறிஞர்கள் பின்னர் தோன்றி அவற்றுக்கு விளக்கவுரைகளை எழுதினார்கள். எனவே வியாச முனிவர் ஏற்கனவே கூறியது போல் வேதங்களை நான்கு குழுக்களாகப் பிரித்த பிறகு, உபநிடதங்கள் உள்ளிட்ட வேதங்களுக்கு சூத்திர வடிவில் சரியான விளக்கங்களை வழங்க முடிவு செய்தார்.

மீண்டும் வேதங்களின் மற்றொரு வகைப்பாடு அது கையாளும் விஷயத்தைப் பொறுத்து உள்ளது. வகைப்பாடு கர்மகாண்டம் (2) தேவதா காண்டா மற்றும் (3) பிரம்ம காண்டா

கர்மகாண்டம் என்பது யாகங்கள் அல்லது யாகங்கள் தொடர்பான வேதங்களின் பகுதியைக் குறிக்கிறது, அவை பகவான் ஸ்ரீமன் நாராயணனின் வழிபாட்டு முறைகளாகக் கருதப்படுகின்றன.=அக்னி, சோமா, இந்திரன், வருணன், சூரியன், யமன், ருத்ரன், பிரஜாபதி, வாயு, மித்ரவருணன் போன்ற கடவுள்களின் (தேவதாக்கள்) இயல்புகள் மற்றும் பண்புகளைக் கையாளும் வேதங்களின் பகுதியை தேவதகண்டம் குறிக்கிறது.

பிரம்மகாண்டம் பிரத்தியேகமாக பகவான் ஸ்ரீமன் நாராயணனின் இயல்பு, வடிவம், பண்புகள், சர்வ வல்லமை மற்றும் சூப்பர் மனித சக்தியைக் கையாளும் உபநிடதங்களைக் குறிக்கிறது.

ஜைமினி முனிவர் மற்றும் கசகிருத முனிவர் வேத வியாசர் என்றும் அழைக்கப்படும் பதராயண முனிவரின் சீடர்கள். கர்மகாண்டத்தின் கீழ் வரும் வேத நூல்களின் சரியான மற்றும் சரியான விளக்கத்திற்கான சூத்திரங்களை இயற்றும்படி பகவான் பாதராயணன் ஜைமினியை வழிநடத்தினார், அதன்படி ஜைமினி சூத்திரங்களை இயற்றினார். இந்த சூத்திரங்கள் பூர்வ மீமாம்ச சூத்திரங்கள், கர்மமீமாம்ச சூத்திரங்கள் அல்லது கர்மகண்ட சூத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சூத்திரங்கள் பன்னிரண்டு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

தேவதா காண்டத்தின் வகையின் கீழ் வரும் வேத நூல்களின் சரியான மற்றும் சரியான விளக்கத்திற்காக சூத்திரங்களை இயற்றும்படி மீண்டும் பதராயணன் கசக்ரிட்ஸ்னாவை வழிநடத்தினார். அதன்படி கசக்ரிட்ஸ்னா இயற்றிய சூத்திரங்கள் மற்றும் இந்த சூத்திரங்கள் தேவதா காண்டா அல்லது சங்கர்ஷ காண்டா என்று அழைக்கப்படுகின்றன. இந்த சூத்திரங்கள் மீண்டும் நான்கு அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக இந்த சூத்திரங்கள் இப்போது கிடைக்கவில்லை.

உபநிடத நூல்களின் சரியான மற்றும் சரியான விளக்கத்திற்காக பிரம்மகாண்டத்திற்கு அவரே சூத்திரங்களை இயற்ற வேண்டும் என்று பதராயண நினைத்தார். இந்த சூத்திரங்கள் பிரம்ம சூத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன மற்றும் பிரம்ம சூத்திரங்களை உள்ளடக்கிய இந்த மீமாம்சம் உத்தர மீமாம்சா, பிரம்ம மீமாம்சா அல்லது சரிரக மீமாம்சா என்று அழைக்கப்படுகிறது. பரமாத்மாவாகிய பகவான் ஸ்ரீமன் நாராயணனை பிரம்மன் என்றும், உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் அனைத்தும் அவரது உடல்கள் என்பதால் அவர் சாரிரக என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த பிரம்ம சூத்திரங்கள் மீண்டும் நான்கு அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

விசிஷ்டாத்வைத தத்துவத்தில் கர்மகாண்டம், தேவதா காண்டம் மற்றும் பிரம்ம காண்டம் அடங்கிய மீமாம்சசாஸ்திரம் கற்றலின் ஒரே கிளையாகும், இது ஸ்ரீ பாஷ்யத்தின் தொடக்கத்தில் ஸ்ரீ ராமானுஜரால் வலியுறுத்தப்படுகிறது. எனவே இந்த மீமாம்ச சாஸ்திரம் மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி மொத்தம் 20 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

கர்ம காண்டத்தின் முதல் சூத்திரம் “அதாதோ தர்ம ஜிஜ்னாஸ”.-பிரம்ம சூத்திரங்களில் முதல் சூத்திரம் “அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்னாஸ” ஆகும். பிரம்ம சூத்திரங்களில் கடைசி சூத்திரம் “அனாவிருத்தி சப்தத், அனாவிருத்தி சப்தத்” ஆகும்.

மீமாம்ச சாஸ்திரத்தின் அமைப்பு பின்வருமாறு. சூத்திரங்கள், அதிகாரங்கள், பதங்கள் மற்றும் அத்தியாயங்கள். பல சூத்திரங்கள் ஒரு அதிகாரத்தை உருவாக்குகின்றன, பல அதிகாரங்கள் கால் பகுதியை உருவாக்குகின்றன, இது பாதம் என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் பிரம்மசூத்திரத்தில், நான்கு பாதங்கள் ஒரு அத்தியாயத்தை உருவாக்குகின்றன.

தேவதகண்டத்தில் உள்ள கடைசி மூன்று சூத்திரங்கள் சில ஆச்சார்யர்களால் தங்கள் படைப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன, அவை “அந்தே: ஹரௌ ததர்ஷநாத், ச விஸ்ருரஹஹி, தத் ப்ரம்ஹேத்ய சக்ஷதே”. எனவே கடைசி சூத்திரத்தில் உள்ள பிரம்மன் என்ற சொல் முதல் பிரம்மசூத்திரத்தில் “அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்னாஸ” என்று வருகிறது என்று கூறப்படுகிறது. இங்கு பிரம்மா (பிரம்மன்) என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கும், நான்கு தலை பிரம்மா அல்ல.

மீமாம்ச சாஸ்திரத்தின் படிப்பின் வரிசை பின்வருமாறு, இது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வழக்கத்தில் இருந்தது. ஒரு சிறுவன் தனது 8வது வயதில் நூல் வைபவம் அல்லது உபநயனம் செய்து, குருவின் பாதத்தில் அமர்ந்து உபநிடதங்கள் உள்ளிட்ட வேதங்களைக் கற்பதற்காக அவனது தந்தையால் குருகுலத்திற்கு அனுப்பப்படுகிறான்.

வேதங்களில் தேர்ச்சி பெற்ற பிறகு, வேதங்களின் அர்த்தத்தை அறியும் ஆர்வம் அவருக்கு இயல்பாகவே இருக்கும். பின்னர் அவர் வேதங்களின் பொருளைப் படிப்பார் மற்றும் கர்ம காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு யாகங்களைப் பற்றிய பொதுவான அறிவைப் பெறுவார், தேவதா காண்டத்தில் உள்ள தேவதைகள் மற்றும் உபநிடதங்களில் உள்ள பிரம்மன். பின்னர் அவர் பூர்வ மீமாம்சை மற்றும் தேவதா மீமாம்சை படிப்பை மேற்கொள்கிறார்.

யாகங்கள் அல்லது சொர்க்கம் (ஸ்வர்கம்) போன்ற யாகங்களைச் செய்வதன் மூலம் அடையும் புண்ணியங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் நித்தியமானவை அல்ல என்பதை மேற்கூறியவற்றைப் படிப்பதில் அவர் அறிந்து கொள்கிறார். சொர்க்கம் செல்வதற்காக யாகங்கள் செய்து பெற்ற புண்ணியத்தை சொர்க்கத்தில் கழித்தபின், அங்குள்ள சுகங்களை அனுபவித்துவிட்டு, மீண்டும் ஒரு பிறவிக்காக இவ்வுலகிற்கு வந்து, இவ்வுலகில் உள்ள துன்பங்களுக்கு ஆளாகிறான்.

ஆகவே, யாகங்களின் மூலம் சொர்க்கத்தை அடைவதன் பயனற்ற தன்மையை அவன் உணரும் போது, ​​அவன் சொல் இன்பங்கள் மற்றும் சொர்க்க இன்பங்களிலிருந்து பற்றின்மை உணர்வை வளர்த்து, மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளால் வெறுப்படைகிறான். அவர் முன்பு செய்த உபநிடதங்களைப் படிப்பதன் மூலம், அவருக்கு பிரம்மத்தைப் பற்றிய பொதுவான அறிவு உள்ளது. பிரம்மன் மீது தியானம் செய்வதன் மூலம் அவர் ஸ்ரீ வைகுண்ட லோகத்தில் நித்திய மற்றும் எல்லையற்ற பேரின்பத்தை அடைய முடியும். பிரம்மனைப் பற்றிய இந்த மேலோட்டமான அறிவு, பிரம்மன் அல்லது பரமாத்மாவைப் பற்றிய தீவிரமான மற்றும் ஆழமான விவாதத்திற்கு அவரைத் தூண்டுகிறது, இந்த கட்டத்தில்தான் பிரம்மசூத்திரங்கள் பொருத்தத்தை அடைகின்றன.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி முதல் சூத்திரம் “அதாதோ பிரம்மா ஜிஜ்னாஸ” ஆகும். இதன் பொருள் அத: பிறகு என்றும் அத: எனவே என்றும் பொருள். “அதாதோ ப்ரஹ்ம ஜிகுவாஸ” என்றால் பிரம்மத்தை அறியும் ஆசை.

“அகில புவன ஜென்ம ஸ்தேம பங்கடி லீலே விநாத விவிதா பூத வ்ரதா ரக்ஷைகதீக்ஷே,

ஸ்ருதி ஶிரஸி விதீப்தே ப்ராஹ்மணீ ஶ்ரீநிவாஸே பவது மம பரஸ்மின் ஷேமுஷி பக்தி ரூபா

ஸ்ரீ ராமானுஜர், உபநிடதங்களில் ஒளிரும் பிரம்மனாகவும், பிரபஞ்சத்தின் உருவாக்கம், காத்தல் மற்றும் அழித்தல் விளையாட்டை விளையாடுபவரும், பக்தி யோகம் செய்தோ, பக்தி யோகம் செய்தோ அல்லது தம்முடைய பாதத்தில் பிரபத்தி செய்தோ மோட்சத்தை அருளும் ஸ்ரீநிவாஸரைப் பிரார்த்திக்கிறார். ராமானுஜர், பக்தியின் வடிவத்தின் அறிவை (மனநிலை) பெற்றவராக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். இந்நூலின் எஞ்சிய பகுதி ஸ்ரீ பாஷ்யத்தின் சுருக்கம்.

ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரங்களில் 4 அத்தியாயங்கள் மற்றும் 16 பதங்கள் (ஒவ்வொரு அத்தியாயத்திலும் 4 பதங்கள்) பெயர்களைக் கொடுக்கிறார். ஸ்ரீ வேதாந்த தேசிகர் தனது புகழ்பெற்ற படைப்பான ஸ்ரீ அதிகார சாராவளியில் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பண்புகளை நான்கு அத்தியாயங்களிலும் 16  பாதங்களிலும் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ பாஷ்ய விசாவி பிரம்மசூத்ரங்களில் விவாதத்திற்கு வரும் உபநிடதங்களின் பெயர்கள் ஈசாவாஸ்யோபனிஷத், கேனோபநிஷத், கடோபநிஷத், முண்டகௌபநிஷத், மாண்டூக்ய உபநிஷத், பிரஷ்ணோபநிஷத், இதரேய உபநிஷத், சந்தோக்ய உபநிஷத், பிருஹதாரண்யக உபநிஷத், தாத்தீய உபநிஷத் அனிஷத், சுபலோபநிஷத், மஹோபநிஷத், அக்னி ரகசியம், அதர்வசிகோபநிஷத் மற்றும் மைத்ராயணி உபநிஷத் போன்றவை.

ஒவ்வொரு வேதாந்த வேதமும் தத்துவம், ஹித மற்றும் புருஷார்த்தத்தைப் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். தத்வ என்பது உண்மையான பொருள், ஹித என்பது பொருள், புருஷார்த்தம் இலக்கு.

தத்வாவைப் பொறுத்த வரையில், பரமாத்மா பரமாத்மா (உயிர்மை), ஜீவாத்மா என்பது உள்ளுணர்வான ஆத்மா மற்றும் பிரகிருதி, உணர்ச்சியற்ற பொருள் ஆகிய மூன்று உண்மையான பொருள்கள் உள்ளன.

மேற்கூறிய ஒவ்வொன்றிலும் பரா என்ற பெயரடைச் சேர்ந்தால் பரதத்வா என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணன், பரமஹிதா என்பது அவரது காலடியில் இருக்கும் பிரபத்தி, பரம புருஷார்த்தம் என்பது பைன் தம்பதிகளின் தாமரை பாதங்களை அடைவதே உச்ச லட்சியம். ஸ்ரீ வைகுண்டம் மற்றும் அவர்களுக்கு எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் நித்திய பொருத்தமான மற்றும் எல்லா வகையான சேவைகளையும் செய்து வருகிறது. இதுவே நித்திய மற்றும் எல்லையற்ற பேரின்பம் அல்லது மோட்சம்.

ஸ்ரீ பாஷ்யத்தில் முதல் இரண்டு அத்தியாயங்கள் பரதத்வாவையும், மூன்றாவது அத்தியாயம் பரமஹிதையையும், நான்காவது அத்தியாயம் பரம புருஷார்த்தத்தையும், பரம லட்சியத்தையும் கூறுகிறது.

நான்கு அத்தியாயங்களின் பெயர்கள்

1) முதல் அத்தியாயம் சமன்வய அத்யாயா என்று அழைக்கப்படுகிறது. அன்வய என்றால் இணைப்பு, இணைப்பு அல்லது உறவு. சமன்வய என்றால் சரியான இணைப்பு அல்லது நல்ல இணைப்பு.

இந்த முதல் அத்தியாயத்தில் சூத்ரகார பாதராயணம் பிரபஞ்சத்தின் உருவாக்கம் தொடர்பான அனைத்து வேத மற்றும் உபநிடத நூல்களையும் கையாள்கிறது. பிரபஞ்சத்தை உருவாக்கியவர் “ஜகத் கரணா” என்று அழைக்கப்படுகிறார். உபநிடதங்கள் ஜகத் கரண வஸ்துவைக் குறிக்க பல சொற்களைப் பயன்படுத்துகின்றன. அவை சத், அஸத், பிரம்மா, ஆத்மா, ஆகாசம், பிராணன், ஜோதி, ஹிரண்யகர்ப்ப, ஷம்பு, நாராயண முதலியன.

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் ஒருவரே இருக்க முடியும், அதுவே பகவான் ஸ்ரீமன் நாராயணன். பிரளயம் அல்லது பிரளய காலத்தில் ஸ்ரீமன் நாராயணன் தன் துணைவியான மஹாலக்ஷ்மியுடன் இருந்தான், வேறு யாரும் இல்லை என்று மஹோபநிஷத்தில் உள்ள வாசகத்திலிருந்து இது தெளிவாகிறது. மேலும் ஸ்ரீமன் நாராயணன் நான்கு தலைகள் கொண்ட பிரம்மா, சிவன், இந்திரன் மற்றும் பிறரைப் படைத்தார். எனவே ஸ்ரீமன் நாராயணனே ஜகத்காரண வஸ்து. எனவே மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பெயர்களும் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கின்றன, எனவே அவை அவருடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அத்தியாயத்தில் ஸ்ரீமன் நாராயணனின் பண்பு (காரணம்). இது சமஸ்கிருதத்தில் காரணத்வம் என்று அழைக்கப்படுகிறது.

2) 2 வது அத்தியாயம் அவிரோதா அத்யாயா என்று அழைக்கப்படுகிறது.

விரோதா என்றால் ஆட்சேபனை. அவிரோதா என்றால் ஆட்சேபனை இல்லை. இந்த அத்தியாயத்தில் ஸ்ரீமன் நாராயணனே ஜகத்காரணவஸ்து என்று மற்றவர்கள் எழுப்பிய தர்க்கரீதியான ஆட்சேபனைகளுக்கு சூத்ரகாரர் உறுதியுடன் பதிலளித்து, அவர்களின் வாதங்களை மறுத்து, பிரபஞ்சத்தை உருவாக்கியவர் பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்று நிறுவுகிறார். எனவே இந்த அத்தியாயத்தில் உள்ள கல்யாண குணம் அல்லது மங்கள குணம் அபத்யத்வம் என்பது இந்த உண்மைக்கு துணை (மறுப்பு) இல்லை.

3) 3வது அத்தியாயம் சாதனா அத்யாயா என்று அழைக்கப்படுகிறது.

சாதனா என்பது நித்திய பேரின்பம் அல்லது மோட்சத்தை அடைவதற்கு ஏற்றுக்கொள்வதாகும். சாதனா என்பது உபய போன்றதே. நமது தத்துவத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனே உபய (அர்த்தம்) மற்றும் அவரே உபேயாக, அடைய வேண்டிய பொருளாகவும் இருக்கிறார். அவரைப் பிரியப்படுத்தவும் அவருடைய அருளைப் பெறவும் பக்தி அல்லது பிரபத்தி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவர் சித்தோபாய (தயாரான பொருள்) என்று அழைக்கப்படுகிறார் மற்றும் ஏற்றுக்கொள்கிறார். தனிப்பட்ட ஒருவரால் செய்யப்படும் பக்தி அல்லது பிரபத்தி சதியோபாயா எனப்படும். பக்தி என்பது அவரைப் பற்றிய ஆழ்ந்த தியானம் மற்றும் பிரபத்தி அவர் காலடியில் சரணடைவது. எனவே 3 வது அத்தியாயத்தில் கல்யாண குணம் என்பது உபயத்வம் அதாவது அவர் தயாராக அல்லது எப்போதும் கிடைக்கக்கூடிய வழிமுறையாகும்.

4) நான்காவது அத்தியாயம் பல அத்யாயா என்று அழைக்கப்படுகிறது.

பலா என்றால் பழம். பக்தி அல்லது பிரபத்தி செய்த பிறகு ஒரு தனி ஆன்மா அல்லது ஜீவாத்மா பரமபதம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ வைகுந்தத்தில் உள்ள பைன் தம்பதிகளின் தாமரையை அடைகிறது. இந்த அத்தியாயத்தில் சிறப்பிக்கப்படும் கல்யாண குணம் உபேயத்வா அதாவது பகவான் ஸ்ரீமன் நாராயணனை அடைய வேண்டிய பொருள். மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீமன் நாராயணன் இருவரும் எப்போதும் ஒன்றாகவும், பிரிக்க முடியாதவர்களாகவும் இருப்பதால் இருவரும் ஒன்றாக உயர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றிய குறிப்பு எங்கிருந்தாலும் அது மஹாலக்ஷ்மியையும் உள்ளடக்கியது, ஏனெனில் ஜகத்கரனத்வம், உபயத்வம் மற்றும் உபயத்வம் ஆகியவை தெய்வீக தம்பதிகளுக்கு எந்த இட ஒதுக்கீடும் இல்லாமல் பொருந்தும்.

இறுதியாக பிரம்மசூத்திரத்தில் உள்ள 16 பாதங்களின் பெயர்களையும் அவை ஒவ்வொன்றிலும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்களையும் தெரிந்து கொள்வோம்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, முதல் அத்தியாயம் அல்லது சமன்வய அத்யாயா பிரபஞ்சத்தின் காரணத்தைப் பற்றி பேசும் அனைத்து வகையான உபநிடத பத்திகளையும் கையாள்கிறது. சில நூல்களில், ஜீவா அல்லது தனிப்பட்ட ஆன்மா ஜகத் காரனாக அல்லது பிரபஞ்சத்தின் படைப்பாளராகத் தோன்றுகிறது.

சில வாக்கியங்களில் பிரகிருதியில் பிரபஞ்சத்திற்குக் காரணமான முதற்பொருள் என்றும் அழைக்கப்படும் உணர்வு அல்லாத பொருள் தோன்றுகிறது. பிரகிருதிக்கு பிரதானா என்றும் பெயர். இந்த வாக்கியங்கள் கீழே குறிப்பிட்டுள்ளபடி முதல் அத்தியாயத்தின் நான்கு பதங்களில் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1) முதல் பாதத்தில், மிகவும் தெளிவாக இல்லாத பத்திகள் கையாளப்படுகின்றன.–சமஸ்கிருதத்தில் இது “அஸ்பஷ்டதர ஜீவாடி லிங்க வாக்யா” என்று அழைக்கப்படுகிறது. எனவே முதல் பாதம் அஸ்பஷ்டதார ஜீவாதி லிங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணம் அல்லது இந்த பாதத்தில் உள்ள மங்களகரமான பண்பு மற்றும் அதன் விளைவான அடைமொழி (ஸ்ரஷ்டா). அவர் பிரபஞ்சத்தின் காரணம் அல்லது படைப்பாளர் என்று அர்த்தம். கல்யாண குணம் ஸ்ரஷ்ட்ர்த்வம்.

2) முதல் அத்தியாயத்தின் இரண்டாவது பாதம் அவற்றின் இறக்குமதியில் தெளிவாக இல்லாத பத்திகளைக் கையாள்கிறது. இது சமஸ்கிருதத்தில் அஸ்பஷ்டா என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த பாதம் “அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் உள்ள பிரம்மன் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அடைமொழி தேஹி ஆகும். தேஹி என்பது ஒவ்வொரு உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற நிறுவனத்திலும் உள்ள உள்ள ஆத்மா அல்லது அந்தர்யாமி. கல்யாண குணம் தேஹித்வம். உணர்வு மற்றும் உணர்வு இல்லாத இரண்டும் ஸ்ரீமன் நாராயணனின் உடல்கள். தேஹி என்றால் உடலை உடையவன் என்று பொருள், அதனால் ஆத்மா என்று பொருள். பகவான் ஸ்ரீமன் நாராயணரே அனைத்து உயிர்களுக்கும் ஆத்மா (ஆன்மா) ஆவார்.

3) முதல் அத்தியாயத்தின் 3வது பாதம் தெளிவான ஜகத் கரண வாக்கியங்களைக் கையாள்கிறது. ‘தெளிவு’ என்றால் ஸ்பஷ்டம். எனவே இந்த பாதம் ‘ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க’ பாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் உள்ள இறைவனின் அடைமொழி ஸ்வனிஷ்டா, அதாவது அவர் முழு பிரபஞ்சத்தையும் தனது சொந்த விருப்பத்தால் ஆதரிக்கும் அதே வேளையில் அவர் தன்னையும் ஆதரிக்கிறார். கல்யாண குணம் ஸ்வநிஷ்டத்வம்.

4) 4வது பாதம் மிகத் தெளிவான ஜகத்காரண-வாக்கியங்களைக் கையாள்கிறது. மிகவும் தெளிவானது ஸ்பஷ்டதாரா என்று பொருள்படும். எனவே இந்த பாதம் ஸ்பஷ்டதர ஜீவாதி லிங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் பிராமணன் நிரவாதி மஹிமா என்று அழைக்கப்படுகிறான். ஸ்ரீமன் நாராயணனின் மகத்துவம் வரம்பற்றது அல்லது எல்லையற்றது என்பது இதன் பொருள். பிரபஞ்சத்திற்கு இறைவன் உபாதான காரனாகவும், நிமித்த காரனாகவும் இருப்பதனால்தான் இந்த அளவற்ற பெருமை. உலகில் எந்தவொரு பொருளுக்கும் மூன்று கரணங்கள் அல்லது காரணங்கள் உள்ளன. முதலாவது பொருள் காரணம் அல்லது உபாதான கரணமாகும். இரண்டாவது செயல்பாட்டு காரணம் அல்லது நிமித்த கரணமாகும். மூன்றாவது கருவி காரணம் அல்லது சககாரி கரணம். உதாரணமாக ஒரு தங்க ஆபரணம் செய்ய வேண்டும் என்றால், தங்கம் உபாதான கரணத்தை உருவாக்குகிறது. ஆபரணம் செய்யும் பொற்கொல்லன் நிமித்த கரணன். அவர் ஆபரணத்தை உருவாக்குவதற்கு பல கருவிகளைப் பயன்படுத்துகிறார், மேலும் இந்த கருவிகள் கருவி காரணமாக அல்லது சககாரி கரணம் ஆகும். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை, பகவான் ஸ்ரீமன் நாராயணனே உபாதான கர்ணனாகவும், நிமித்த காரனாகவும், சககாரி காரனாகவும் இருக்கிறார். அவர் தனது சொந்த விருப்பத்தால் பிரபஞ்சத்தை உருவாக்குகிறார் மற்றும் எந்த கருவியும் தேவையில்லை என்பதால், சககாரி கரணமானது நிமித்த கரணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உபாதான கரணமாகவும், நிமித்த காரனாகவும் இருக்கும் அதே சரீரம் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு எந்த உடலாகவும் இருக்க முடியாது, எனவே அவர் எல்லையற்ற பேருண்மை உடையவர். எனவே இந்த பாதத்தில் உள்ள கல்யாண குணம் “நிரவதி மஹிமத்வம்”. உபாதான கரணமாகவும், நிமித்த காரனாகவும் இருக்கும் அதே சரீரம் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு எந்த உடலாகவும் இருக்க முடியாது, எனவே அவர் எல்லையற்ற பேருண்மை உடையவர். எனவே இந்த பாதத்தில் உள்ள கல்யாண குணம் “நிரவதி மஹிமத்வம்”. உபாதான கரணமாகவும், நிமித்த காரனாகவும் இருக்கும் அதே சரீரம் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு எந்த உடலாகவும் இருக்க முடியாது, எனவே அவர் எல்லையற்ற பேருண்மை உடையவர். எனவே இந்த பாதத்தில் உள்ள கல்யாண குணம் “நிரவதி மஹிமத்வம்”.

5) இரண்டாவது அத்தியாயத்தில் முதல் காலாண்டு அல்லது பாதம் ஸ்மிருதி பாதம் என அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கபிலரே பௌத்தம் போன்ற நிரீஷ்வர சாங்கிய தத்துவத்தின் ஸ்தாபகர் மற்றும் பிரச்சாரகர் ஆவார். அவருடைய போதனைகள் வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் எதிரானது என்பதால், அவற்றின் தத்துவங்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கபில ஸ்மிருதியை எழுதியவர் ஸ்ரீ கபிலா. இந்த ஸ்மிருதியின் அடிப்படையில் ஸ்ரீ விஷ்ணு பிரபஞ்சத்திற்குக் காரணமானவர் என்று எதிர்ப்புகள் எழுந்தன. இந்த சிந்தனைப் பள்ளியின்படி, பிரகிருதியே பிரபஞ்சத்திற்குக் காரணம். சூத்ரகாரர் அல்லது பிரம்மசூத்திரத்தின் ஆசிரியர் மேற்கண்ட ஆட்சேபனைகளை விதித்து ஸ்ரீமன் நாராயணனே ஜகத் கரணன் என்று நிறுவுகிறார். இந்த பாதத்தில் அவர் “அபஸ்த பாத” என்று அழைக்கப்படுகிறார், அதாவது அவர் சவால் செய்ய முடியாதவர். கல்யாண குணம் என்பது “அபஸ்த பாதத்வம்”.

6) இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள இரண்டாவது பாதம் தர்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. இதில் சூத்ரகாரரான பதராயண முனிவர் சங்கய, வைசேசிக, பௌத்த, ஜைன மற்றும் பசுபத போன்ற மற்ற தத்துவ அமைப்புகளுக்கு எதிராக அவர்களின் தத்துவங்களில் உள்ள குறைகளை எடுத்துரைத்து, அவற்றையெல்லாம் தர்க்க ரீதியாக மறுதலிக்கிறார். எனவே இந்த பாதம் தர்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாத முனிவர் பதராயணன், விஷ்ணு கோவில்களில் வழிபாடுகளைக் கையாளும் பாஞ்சராத்ர ஆகமங்களின் அதிகாரத்தை நிறுவுகிறார், மேலும் அது வேதங்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது என்பதை நிரூபிக்கிறார்.

இந்த பாதத்தில் உள்ள பிராமணனின் பெயர் “ஸ்ரீதப்த:” அதாவது பஞ்சராத்ர சாஸ்திரப்படி தினசரி சடங்குகளை செய்பவர்களின் நண்பன். இந்த பாதத்தில் உள்ள கல்யாண குணம் “ஸ்ரீதப்தத்வம்”.

7) இரண்டாவது அத்தியாயத்தில் மூன்றாவது பாதம் வியாத் பாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் தான் சூத்ரகாரர் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய பஞ்சபூதங்களை உருவாக்குவதைக் குறிப்பிடுகிறார். இந்த உருவாக்கம் “மாற்றம்” மூலம். களிமண் பானையாக மாறுவது போன்ற மாற்றம் அன்யதாபாவா என்று அழைக்கப்படுகிறது. ஜீவாஸ்கள் நித்தியமானவை என்பதால் உடல் ரீதியாக எந்த மாற்றமும் இருக்க முடியாது.

அவற்றில் மாற்றம் “பண்புகளில்” உள்ளது. இந்த பண்பு தர்மபூத ஞானம் என்று அழைக்கப்படுகிறது, இதன் மூலம் ஜீவர்கள் பொருட்களை அறிய முடியும். இந்த குணம் பூஜ்ஜியத்திலிருந்து முடிவிலி வரை மாறுபடும். பரமாத்மா (ஸ்ரீமன் நாராயணன்), ஆதிசேஷர், விஷ்வக்சேனர், கருடன் போன்ற நித்யாக்கள் மற்றும் முக்தர்கள் முக்தி பெற்றவர்கள் ஆகியோரின் உணர்ச்சியற்ற அல்லது உயிரற்ற பொருட்கள் மற்றும் முடிவிலியின் விஷயத்தில் இது பூஜ்ஜியமாகும். சம்சாரத்தின் பந்தத்தில் இருக்கும் ஜீவர்களின் விஷயத்தில், தர்மபூத குணம் ஒருவருடைய கடந்தகால செயல்கள் அல்லது கர்மாவைப் பொறுத்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாறுபடும். எனவே இந்த தர்ம பூத குணமானது, ஸ்ரீமந் நாராயணன் அவர்களின் கடந்த கால செயல்களின்படி உண்டாக்கும் ஜீவாக்களில் விரிவடைவதற்கும் சுருங்குவதற்கும் உட்பட்டது.

இந்த குணாதிசயம் ஸ்வபாவா என்று அழைக்கப்படுகிறது மற்றும் அதன் விரிவாக்கம் அல்லது சுருக்கத்தின் மாற்றம் ஸ்வபாவ அன்யதாபாவா ஆகும். இந்த பாதத்தில் ஸ்ரீமன் நாராயணனின் பெயர் “காத்மாதே: உச்சித ஜனன கிருத்“, அதாவது காவில் (காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமியை உள்ளடக்கியது) மற்றும் ஜீவாத்மாக்களில் பொருத்தமான மாற்றத்தை ஏற்படுத்துபவர். பஞ்சபூதங்களின் விஷயத்தில் பொருத்தமான மாற்றம் “ஸ்வரூப அன்யதாபவ” மற்றும் ஜீவாத்மாக்களின் விஷயத்தில் “ஸ்வபவ அன்யதாபவ” ஆகும். இந்த பாதத்தில் உள்ள கல்யாண குணம் “காத்மாதே: உச்சித ஜனன கிருத்வம்”.

8) 2வது அத்தியாயத்தில் நான்காவது பாதம் இந்திரிய பாதம் எனப்படும். இந்திரியம் என்றால் புலன்கள். ஸ்ரீமன் நாராயணன் புலன்களின் உருவாக்கத்தை ஏற்படுத்துகிறார். எனவே இந்த பாதத்தில் அவரது பெயர் “இந்திரியதே: உசித ஜனன கிருத்வ்”, அதாவது அவர் புலன்களின் பொருத்தமான படைப்பை உருவாக்குகிறார். இந்த பாதத்தில் உள்ள மங்களகரமான பண்பு “இந்த்ரியதே: உச்சித ஜனன கிருத்வம்”.

9) 3வது அத்தியாயத்தில் முதல் காலாண்டு வைராக்ய பாதம். வைராக்கியம் என்றால் இங்கே அல்லது சொர்க்கத்தில் உள்ள வார்த்தை இன்பங்களிலிருந்து பற்றின்மை உணர்வு. மோட்சம் அல்லது முக்தி என்ற எல்லையற்ற மற்றும் நித்திய பேரின்பத்தை ஒரு நபர் விரும்புவதற்கு இந்தப் பற்றின்மை அவசியம். சம்சார பந்தத்தில் அல்லது வெவ்வேறு அவஸ்தைகள் அல்லது நிலைகளில் ஒரு ஜீவன் (நபர்) அனுபவிக்கும் துன்பங்களை உணர்ந்து இந்த வைராக்யத்தைப் பெறலாம்.

அவை (1) ஜாக்ரதாவஸ்தா எனப்படும் விழிப்பு நிலை (2) சுஷுப்தி அவஸ்தா எனப்படும் நல்ல உறக்க நிலை (3) ஸ்வப்னா அவஸ்தா எனப்படும் கனவு நிலை மற்றும் (4) மூர்ச்ச அவஸ்தா எனப்படும் கோமா நிலை (நினைவற்ற நிலை). இந்த பாதத்தில் உள்ள இறைவனின் பெயர் “சம்ஸ்ருதௌ தந்த்ர வஹி” அதாவது இறைவன் ஜீவனை சம்சாரத்தின் மூலம் நடத்துகிறார். கல்யாணகுணே ஸம்ஸ்ருதௌ தந்த்ர வஹித்வம்

10) 3வது அத்தியாயத்தில் 2வது பாதம் உபய லிங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. உபய லிங்கம் ஸ்ரீமன் நாராயணனின் இரண்டு பிரத்யேக குணாதிசயங்களாகும், அவை ஹேயபிரத்யநீகத்வா மற்றும் கல்யாண குணகரத்வா. ஹேயபிரத்யநீகத்வா என்றால் களங்கமற்ற அல்லது கெட்ட குணங்கள் இல்லாதது. கல்யாண குண அகாரத்வம் என்றால் அனைத்து கல்யாண குணங்கள் அல்லது மங்களகரமான பண்புகளின் களஞ்சியமாக இருப்பது. சம்சாரத்தில் இருக்கும் ஜீவன் ஒவ்வொரு அம்சத்திலும் தன்னை விட மேலான ஒரு பொருளை அடைய ஆசைப்படுகிறான். இந்த உயர்ந்த மேன்மை என்பது மேற்கூறிய இரண்டு பண்புகளின் உடைமையாகும். சூத்ரகார ஸ்ரீ பாதராயணன் இந்த பாதத்தில் மேற்கண்ட குணாதிசயங்களைக் கையாள்கிறார். இந்த பாதத்தில் உள்ள கல்யாணகுணம் “நிர்தோஷத்வாதி-ரம்யத்வம்”. நிர்தோஷத்வா என்றால் களங்கமற்ற தன்மை. ரம்யத்வா என்றால் மங்களகரமான பண்புகள்.

11) 3வது அத்தியாயத்தில் 3வது பாதம் “குண உபசம்ஹார பாதம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் முப்பத்திரண்டு பிரம்மவித்யாக்கள், அவை ஒவ்வொன்றும் மோட்சத்தை அடைவதற்கான வழிவகையான பக்தி யோகத்தின் ஒரு வகை அல்லது வடிவமாகும். பிரம்மவித்யா என்றால் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனை தியானிப்பது. குண உபசம்ஹாரம் என்பது வெவ்வேறு உபநிடதங்களில் உபதேசிக்கப்படும் அதே பிரம்மவித்யாவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரம்மனின் குணங்களைச் சேர்ப்பது. இந்த பாதத்தில் உள்ள பெயர், பல்வேறு பிரம்ம வித்யாக்களில் பிராமணன் தியானத்தின் பொருள். இது பஹுபஜனபாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடலில், “நானா சபாதி பேதாத்” என்ற சூத்திரத்தில் பிரபத்தி ஒரு சுயாதீனமான வழிமுறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

12) 3 வது அத்தியாயத்தின் 4 வது பாதம் அங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது, இதில் பக்தி யோகாவின் பல்வேறு முன் தேவைகள் விவாதிக்கப்படுகின்றன. இந்த பாதத்தில் உள்ள இறைவனின் பெயர் “ஸ்வராஹ கர்ம ப்ரஸாத்யா” அதாவது வர்ண மற்றும் ஆசிரம நிலைக்குத் தகுந்த தினசரி சடங்குகளைச் செய்பவர்களுக்கு அவர் அருள் புரிகிறார்.

13) 4 வது அத்தியாயத்தில் முதல் பாதம் ஆவ்ரித்தி பாதம் என்று அழைக்கப்படுகிறது. இதில் தியானம் செய்யும் முறை மற்றும் முறை பற்றி விவாதிக்கப்படுகிறது. ஆவ்ரித்தி என்றால் மீண்டும் மீண்டும் பக்தி யோகம் செய்வது. மோட்சம் அடையும் வரை இதை தினமும் செய்ய வேண்டும். இறைவனின் பெயர் பாபச்சித், அதாவது பக்தி அல்லது பிரபத்தி செய்பவர்களின் பாவங்களை அழிப்பவர்.

14) 4 வது அத்தியாயத்தில் உள்ள இரண்டாவது பாதத்திற்கு உத்கிராந்தி பாதம் என்று பெயரிடப்பட்டுள்ளது, இதில் ஜீவா (மோட்சத்தை அடைய வேண்டியவர்) மரண சரீரத்திலிருந்து புறப்படும் முறை விவாதிக்கப்படுகிறது.

இந்த பாதத்தில் உள்ள பிரம்மனின் பெயர் “பிரம்ம நாடி கதி கிருத்” அதாவது ஜீவாவை பிரம்மநாடிக்குள் நுழைய அவர் உதவுகிறார். பிரம்மநதி என்பது உடலின் தொப்புளிலிருந்து தலை வரை இயங்கும் நாடி. இந்த நாடி வழியாக ஜீவா உடலை விட்டு வெளியே வந்தால் மோட்சத்தை அடைகிறான்.

15) 4 வது அத்தியாயத்தில் உள்ள மூன்றாவது பாதம் கதி பாதம் என்று அழைக்கப்படுகிறது, இது ஜீவன் ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்து முக்தாத்மாவாக (முக்தாத்மா) ஆகும் பாதையைக் குறிக்கிறது. இந்த பாதை அர்ச்சிராதி மார்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் உள்ள இறைவனின் பெயர் “ஆதிவாஹா” அதாவது ஆதிவாஹிகர்கள் எனப்படும் பன்னிரண்டு பேர் மூலம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு ஜீவாத்மா நடத்த ஏற்பாடு செய்கிறார்.

16) 4 வது அத்தியாயத்தில் உள்ள கடைசி பாதம் பல பாதம் என்று அழைக்கப்படுகிறது, இது முக்தியடைந்த ஆத்மா தெய்வீக தம்பதியினரின் தாமரை பாதங்களை அடைந்து, எட்டு குணங்கள் அல்லது பரிபூரணத்தைப் பெறுகிறது மற்றும் நித்திய சேவை செய்வதன் மூலம் நித்திய மற்றும் எல்லையற்ற பேரின்பத்தை அடைகிறது. அங்கே தெய்வீக ஜோடி. ஸ்ரீமன் நாராயணன், பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்குக் காரணமானவராகவும், மஹாலக்ஷ்மியின் மனைவியாகவும் இருப்பதைத் தவிர, எல்லா வகையிலும் முக்தாத்மாவை தனக்குச் சமமாக ஆக்குகிறார். இந்த பாதத்தில் உள்ள இறைவனின் பெயர் “சாம்யதா” அதாவது சமத்துவத்தை வழங்குபவர்.

இதுவே ஸ்ரீ பாஷ்யத்தின் சாராம்சம்.

————

முதல் அத்யாய சமன்வய அத்யாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தில் (பதா என்பது கால்) 11 அதிகாரங்கள் உள்ளன.

அதிகாரம் என்பது ஒரு உபநிடதத்தின் ஒரு குறிப்பிட்ட உரையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் ஒரு பாதத்தில் உள்ள ஒரு துணைப் பிரிவு அல்லது பிஷன் ஆகும், இறுதியில் பதராயண முனிவரான சூத்ரகாரர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட உரைக்கு சரியான விளக்கத்தை அளித்து தீர்ப்பை வழங்குகிறார். விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உபநிடத உரை தற்செயலாக தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஆனால் அது “சங்கதி” யின் படி ஒரு முறையான வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டது, அதாவது முந்தைய அதிகாரத்திற்கும் அடுத்த அதிகாரத்திற்கும் இடையிலான வரிசை அல்லது இணைப்பு (இணைப்பு). மீமாம்ச சாஸ்திரத்தில் பொதுவாக தர்க்கரீதியான இணைப்பு என்று பொருள்படும் இந்த சங்கதி, சாஸ்திரம், காந்தா, த்விகா, அத்யாய, பாத, பீடிகா, அதிகாரம் மற்றும் சூத்திரம் எனப்படும் எட்டு நிலைகளைக் குறிக்கிறது.

சூத்திரம் அதிகாரத்தில் உள்ளது. அதிகாரம் பீடிகைக்குள் உள்ளது, பீடிகை என்பது பாதத்தில் உள்ளது, பாதம் என்பது அத்யாயத்திற்குள் உள்ளது, அத்யாயமானது காண்டத்திற்குள் உள்ளது மற்றும் காண்டம் சாஸ்திரத்திற்குள் உள்ளது.

இங்கே சாஸ்திரம் என்பது உபநிடதங்கள் உட்பட வேதங்களின் விளக்கத்தை கையாளும் மீமாம்சா ஆகும். சாஸ்திரம் கர்ம காண்டமாகவும் பிரம்ம காண்டமாகவும் இணைக்கப்பட்டுள்ளது.

யாகங்கள் மற்றும் இஷ்டிகள் என்றும் அழைக்கப்படும் யாகங்களைச் செய்வதோடு தொடர்புடைய வேத நூல்களின் விளக்கத்தைக் கையாளும் கர்மகாண்டம். யாகத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக பசு (ஆடு போன்ற) விலங்கு பலியிடப்படுகிறது. யாகம் செய்பவன் மட்டுமின்றி மிருகமும் சொர்க்கம் செல்லும் என்பது நம்பிக்கை. இஷ்டி என்பது எந்த ஒரு பிராணியையும் பலியிடாத ஒரு யாகமாகும், மேலும் இது குழந்தைகளைப் பெறுவதற்கான புத்திர காமேஷ்டி, செல்வம் பெற வயவ்ய இஷ்டி, மழை பெறுவதற்கான கரிரி இஷ்டி போன்ற வார்த்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக செய்யப்படுகிறது. கர்ம காண்டம் கர்ம மீமாம்சா, பூர்வ மீமாம்சா அல்லது கபந்த மீமாம்சா என்றும் அழைக்கப்படுகிறது.

சாஸ்திரத்தின் இரண்டாவது கோட்பாடு, பிரம்ம காண்டம், பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனுடன் நேரடியாக தொடர்புடைய உபநிடத நூல்களின் விளக்கத்தைக் கையாள்வதாகும். கர்ம காண்டத்திற்கும் பிரம்ம காண்டத்திற்கும் உள்ள தொடர்பு கந்த சங்கதி என்று அழைக்கப்படுகிறது. பிரம்மா காண்டமானது பூர்வ த்விகா அல்லது முன்னாள் த்விகா மற்றும் உத்தர  த்விகா அல்லது பிந்தைய த்விகா ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ளது. திவிகா என்றால் இரண்டு அத்தியாயங்கள்.

பூர்வ த்விகா பிரபஞ்சத்தை உருவாக்கிய பிரம்மனை நேரடியாகக் கையாள்வதால் சித்தத் த்விகா என்றும் அழைக்கப்படுகிறது. பக்தி (தியானம்) அல்லது பிரபத்தி மூலம் பிரம்மனை அடைய வேண்டும் என்பதால் உத்தரா த்விகா சத்யா த்விகா என்று அழைக்கப்படுகிறது. பூர்வ த்விகா மற்றும் உத்தரா த்விகா இடையே உள்ள இணைப்பு த்விகா சங்கதி என்று அழைக்கப்படுகிறது.

அத்யாய சங்கதி : – ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பிரம்ம காண்டத்தில் சமன்வய அத்யாயா, அவிரோத அத்யாயா, சாதனா அத்யாயா மற்றும் பல அத்யாயா என்று நான்கு அத்தியாயங்கள் உள்ளன. ஒரு அத்யாயாவிற்கும் பின் வரும் அத்யாயாவிற்கும் இடையிலான தொடர்பு அத்யாய சங்கதி என்று அழைக்கப்படுகிறது.

பத சங்கதி :– ஒவ்வொரு அத்யாயமும் நான்கு பாதங்களுக்குள் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் 16 பாதங்கள் அறிமுகத்தில் மிகவும் விரிவாகக் கையாளப்பட்டுள்ளன. முந்திய பாதவிற்கும் பின் வரும் பாதவிற்கும் இடையே உள்ள தொடர்பு பத சங்கதி.

பேடிகா :- ஒரு பாதத்தில் உள்ள பேடிகா என்பது பொதுவான கருப்பொருளைக் கொண்ட அதிகாரங்களின் குழு. அதிகாரங்களை கையாளும் போது இது விரிவாகக் கூறப்படும். ஒரு பேடிகாவிற்கும் அடுத்த பேடிகாவிற்கும் உள்ள தொடர் தொடர்பு பெட்டிக சங்கதி.

அதிகார சங்கதி :- ஏற்கனவே கூறியது போல், முந்தைய அதிகாரத்திற்கும் பின் வரும் அதிகாரத்திற்கும் இடையே உள்ள இணைப்பு அதிகார சங்கதி எனப்படும்.

சூத்ர சங்கதி :- முந்தைய சூத்திரத்திற்கும் பின் வரும் சூத்திரத்திற்கும் இடையே உள்ள தர்க்கரீதியான தொடர்பை சூத்ர சங்கதி என்று அழைக்கப்படுகிறது.

மேலே பட்டியலிடப்பட்ட அனைத்து எட்டு வகையான சங்கதிகளிலும், அதிகார சங்கதி மிகவும் முக்கியமானது, ஏனெனில் இந்த சங்கதி ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் விவாதத்திற்கு பொருத்தமான உபநிடத உரையைத் தேர்ந்தெடுப்பதில் கருவியாக உள்ளது.

ஒவ்வொரு அதிகாரத்திலும் ஐந்து கூறுகள் உள்ளன.

சங்கதி – முந்தைய அதிகாரத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே உள்ள தொடர் இணைப்பு கருத்தில் கொள்ளப்பட்டது.

விஷயம் – உபநிடதத்தின் ஒரு குறிப்பிட்ட தலைப்பு, இது விவாதத்திற்கும் அதன் சரியான விளக்கத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சம்ஷய உத்தானகரணம் – விளக்கத்தில் எழும் சந்தேகத்திற்கான அடிப்படை அல்லது காரணம்.

பூர்வ பக்ஷா – ஒவ்வொரு காட்சிப் புள்ளிக்கும் எப்போதும் ஒரு எதிர் பார்வைப் புள்ளி இருக்கும். எதிர் பார்வையை முன்வைப்பவர் பூர்வபக்ஷி என்றும் அவருடைய வாதம் பூர்வ பக்ஷ என்றும் அழைக்கப்படுகிறார். பூர்வ பக்ஷி எதிரி என்றும் அழைக்கப்படுகிறது.

சித்தாந்த – பூர்வ பக்ஷியின் வாதத்தைக் கேட்டபின் சூத்ரகாரர் பாதராயணன் (வேத வியாசர்) சூத்திர வடிவில் தீர்ப்பை வழங்குகிறார்.

மேற்கூறியவற்றின் அடிப்படையில் இப்போது அதிகாரங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம்.

———-

முதல் அத்தியாயத்தின் முதல் பாதத்தில் 11 அதிகரணங்கள் உள்ளன.

முதல் நான்கு அதிகரணங்களான ஜிஜ்ஞாஸ அதிகாரம், ஜன்மாதி அதிகாரம், சாஸ்த்ர யோனித்வா அதிகாரம் மற்றும் சமன்வயாதிகரணமும் ஒரே பேடிகாவைச் சேர்ந்தவையாகும், ஏனெனில் இயற்கையில் அறிமுகமான நான்கு அதிகரணங்களும் பொதுவாக பூர்வபக்ஷினின் (எதிர்ப்பவர்கள்) ஆய்வுக்கு எழுப்பும் ஆட்சேபனைகளை முறியடிக்கும் பொதுவான அம்சமாகும். பிரம்மனின்.

அடுத்த மூன்று அதிகாரங்களான இக்ஷத்யாதிகாரணம், ஆனந்தமயாதிகாரணம், அந்தர் அதிகாரங்கள் இரண்டாம் பீடிகையைச் சேர்ந்தவை, ஏனென்றால் உணர்வற்ற ஒருவன் பிராமணனாக இருக்க முடியாது, ஜீவன் பிரம்மனாக இருக்க முடியாது, விஸ்வாமித்திர முனிவர் போன்ற அதீத மனித சக்திகளைப் பெற்ற நல்லொழுக்கமுள்ளவனும் பிரம்மனாக முடியாது. .

அடுத்த இரண்டு அதிகாரங்களான ஆகாச அதிகாரம் மற்றும் பிராண அதிகாரம் 3வது பீடிகையைச் சேர்ந்தவை ஆகாசம் மற்றும் பிராண இரண்டும் “பிரம்மன்”, முதன்மையாக பகவான் ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கின்றன.

ஜோதிராதிகரணம் மற்றும் இந்திரன் பிரணாதிகரணம் என்ற இரண்டு அதிகாரங்களும் 4வது பீடிகையைச் சேர்ந்தவை, ஏனென்றால் பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஜோதி, இந்திரன் மற்றும் பிராணனுக்கு அந்தர்யாமியாக உள்ளார்.

முதல் அதிகாரம் ஜிஜ்னாஸ அதிகாரணா என்றும், முதல் சூத்திரம் அத்ததோ பிரம்மஜிஜ்ஞாசா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சூத்திரத்தில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம், பின்வருமாறு. ‘அதா’ என்றால் “பிறகு”, அதாவது கர்ம காண்டத்தில் அல்லது பூர்வ மீமாம்சத்தில் கர்ம விசாரத்தைச் செய்த பிறகு, ஜைமினி முனிவர் சூத்திரங்களை இயற்றினார்.

அதா: என்றால் “எனவே”, அதாவது, “யாகங்கள் போன்ற யாகங்களைச் செய்வதை உள்ளடக்கிய கர்மாக்கள் செய்பவர்களுக்கு நித்தியமான மற்றும் வரம்பற்ற பலன்களைத் தருவதில்லை என்ற உண்மையை உணர்ந்ததால்.”

பிரம்மா ஜிஜ்னாசா என்பது பிரம்மத்தைப் பற்றிய ஆய்வு அல்லது தியானம் செய்பவருக்கு நித்திய மற்றும் வரம்பற்ற பேரின்பத்தை அளிக்கும் தியானத்திற்கு (பக்தி யோகா) வழிவகுக்கும் பிரம்மத்தைப் பற்றிய விவாதம் என்று பொருள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்து தெய்வீக தம்பதியருக்கு நித்திய சேவை செய்தல்.

இங்கு நிரீஷ்வர மீமாம்சகரான பூர்வபக்ஷி (எதிரி) பிரம்மன் பற்றிய விவாதத்தைத் தொடங்குவதற்கு ஆட்சேபனையை எழுப்புகிறார். பிரம்மன் பற்றிய அடிப்படைக் கருத்தைப் பெற முடியாதபோது, ​​பிரம்மத்தைப் பற்றிய விசாரணையை எவ்வாறு தொடங்குவது என்று கூறுகிறார்.

அடிப்படைக் கருத்து சமஸ்கிருதத்தில் வியூட்பட்டி என்று அழைக்கப்படுகிறது. 2 அல்லது 3 வயதுடைய சிறு குழந்தைகள், தாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் முதலில் தெரிந்து கொண்ட பிறகு பேசத் தொடங்குவார்கள்.

நிரீஷ்வர மீமாம்சகா கூறுகையில், சிறு குழந்தையால் பிடிக்கப்படும் எந்தவொரு பொருளும் செயல் சார்ந்தது. உதாரணமாக, ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனிக்கும் குழந்தையின் முன்னிலையில், ஒருவர் மற்றொரு நபரிடம் மின்விசிறியை இயக்கச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மற்றொரு நபர் மின்விசிறியை இயக்குகிறார், மின்விசிறி சுழலத் தொடங்குகிறது. இந்த செயலை கூர்ந்து கவனிக்கும் குழந்தை சுவிட்ச் மற்றும் ஃபேன் பற்றிய அடிப்படைக் கருத்தைப் பெறுகிறது, இது செயல் சார்ந்த கருத்து என்று அழைக்கப்படுகிறது, இது சமஸ்கிருதத்தில் காரியே வ்யுத்பட்டி என்று அழைக்கப்படுகிறது.

மற்ற வகை வ்யூட்பட்டி சித்தே வ்யூட்பட்டி என்று அழைக்கப்படுகிறது, அதாவது செயலில் ஈடுபடாத மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களின் அடிப்படைக் கருத்தை குழந்தை பெறுகிறது.-இந்த பொருள்கள் சித்தா என்று அழைக்கப்படுகின்றன.

ஸ்ரீ ராமானுஜர் முதல் சூத்ரத்தைப் பற்றிக் கூறும் போது, ​​ஒரு சிறு குழந்தை பின்வரும் முறையில் சித்தே வ்யுத்பத்தியையும் பெற வல்லது என்று கூறுகிறார். ஒரு முதியவர் குழந்தைக்கு ஒவ்வொரு பொருளையும் காட்டுகிறார், அந்தப் பொருளை நோக்கி விரலைக் காட்டி அதன் பெயரைச் சொல்கிறார். இது இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், குழந்தை பொருட்களைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு பெயர்களைக் கூறுகிறது. எனவே சித்தே வ்யுத்பத்தி மற்றும் காரியே வ்யுத்பத்தி இரண்டும் உண்மை மற்றும் செல்லுபடியாகும்.

நிரீஷ்வர மீமாம்சகர், பிரம்மன் எந்தச் செயலிலும் சம்பந்தப்படாததால், அவனைப் பற்றிய எந்த எண்ணமும் சாத்தியமில்லை என்று வாதிடுகிறார். இந்த வாதத்தை ஸ்ரீ பகவத் ராமானுஜம் மறுத்தார், ஏனென்றால் பிரம்மனைப் பொறுத்தவரை சித்தே வ்யுத்பத்தியும் சாத்தியமாகும். எனவே பிரம்மன் பற்றிய விவாதம் தொடங்கலாம்.

முண்டக உபநிடதம் கூறுகிறது, ஒரு நபர் வெறும் யாகங்களைச் செய்வதால் தனக்கு நித்தியமான மற்றும் எல்லையற்ற பேரின்பம் கிடைக்காது என்று வெறுப்படைந்த பிறகு, ஒரு கற்றறிந்த ஆச்சார்யாவை அணுகி, ஆச்சார்யாவின் தினசரி பயன்பாட்டிற்காக சமஸ்கிருதத்தில் சமித் என்ற குச்சியை அவருக்கு வழங்குகிறார். மேலும் அவரை பிராமணப் படிப்பில் ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறார். பின்னர் ஆச்சார்யா தீட்சையைத் தொடங்குகிறார். இதுவே முதல் அதிகாரத்தின் தொகையும் பொருளும் ஆகும்.

இரண்டாவது அதிகாரம் ஜன்மத்யாதிகாரணம் எனப்படும். “ஜன்மத்யஸ்ய யதஹ்” என்பது சூத்ரம். பிராமணனின் வரையறையோ அல்லது தனித்தன்மையோ தெளிவாக இல்லாதபோது அதை எப்படி விசாரிப்பது என்பது குறித்து இங்கு மீண்டும் ஆட்சேபனை எழுப்பப்பட்டது.

இந்த தனித்துவமான பண்பு சமஸ்கிருதத்தில் லக்ஷணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தனிச்சிறப்பு தைத்தரிய உபநிஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருணனின் மகனான பிருகு முனிவர் தன் தந்தையை அணுகி பிரம்மனைப் பற்றி சொல்லுமாறு வேண்டினார். பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழித்து, “அதை” தியானிப்பவர்களுக்கு முக்தியை அளிப்பது பிரம்மன் என்று பிருகுவிடம் தந்தை கூறினார். சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

அஸ்யா – நம்மைச் சுற்றி நாம் காணும் இந்தப் பிரபஞ்சத்திற்கு.

ஜன்மாதி – உருவாக்கம், முதலியன. அதாவது, பாதுகாப்பு, அழிவு மற்றும் விடுதலை.

யத:- யாரால் மேற்சொன்ன விஷயங்கள் நடக்கின்றனவோ அதுவே பிரம்மம்.

மூன்றாவது அதிகாரம் சாஸ்த்ர யோனித்வாதிகாரணம் என்றும் சூத்ரம் “சாஸ்த்ரயோனித்வாத்” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் உள்ள பூர்வபக்ஷின் அல்லது எதிரி தர்கிகா அல்லது தர்க்கவாதி. சரியான அறிவுக்கு மூன்று வழிகள் உள்ளன, இதன் மூலம் நாம் விஷயங்களை அறிய முடியும். அவை (1) பிரத்யக்ஷம் அதாவது சிற்றின்ப உணர்வு (2) அனுமன் அதாவது அனுமன் (3) சப்தா அதாவது வாய்மொழி சாட்சி.அதாவது, நாம் எதைப் பார்க்கிறோம், அறிவோம் என்பது பிரத்யக்ஷா எனப்படும். சமையலுக்கு விறகு பயன்படுத்தும் சமையலறையில், விறகு ஈரமாக இருந்தால் புகை வரும். எனவே நாம் புகையையும் நெருப்பையும் ஒன்றாகப் பார்க்கிறோம்.

தொலைதூரத்தில் புகையைக் கண்டால், நெருப்பு இருப்பதாக அனுமானிக்கிறோம். இதை அனுமன பிரமாணம் என்பர். நாம் முழு நம்பிக்கை கொண்ட ஒரு நபர் ஒரு அறிக்கையை வெளியிட்டால் அதை நாம் வெறுமனே நம்புகிறோம், இது சப்த பிராமணம் என்று அழைக்கப்படுகிறது. உபநிடதங்கள் உள்ளிட்ட வேதங்கள் எவராலும் இயற்றப்படாததால் அவை உச்ச அதிகாரம் பெற்றவை. அவற்றில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் நமக்கு உண்மையாகவும் செல்லுபடியாகவும் இருக்கிறது.

நமது புலன்களால் உணர முடியாத பிரம்மனை அனுமனாலோ அனுமானினாலோ உணர முடியும் என்கிறது இந்த அதிகாரத்தின் எதிரி அல்லது பூர்வபக்ஷி. அனுமனாலேயே அவரை ஸ்தாபிக்க முடிந்தால், உபநிடதங்களிலிருந்து அவரை அறிய வேண்டிய அவசியமில்லை. மேலே கூறப்பட்ட பிரம்மத்தின் பிரத்தியேக பண்பைக் குறிப்பிட்ட தைத்தரிய உபநிடதம் பிரம்மத்தை நிலைநாட்டுவதற்கான அதிகாரமாக இருக்க முடியாது.

இந்த வாதத்தை மறுப்பதற்காக பதராய முனிவர் இந்த அதிகாரத்தின் சூத்திரத்தை மேலே கூறியவாறு இயற்றினார். சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

சாஸ்த்ர யோனி – பிராமணன் இருப்பதை வேறு எந்த பிரமாணத்தாலும் உணர முடியாது என்பதால் சாஸ்திரம் மட்டுமே பிரமாணம் அல்லது அதிகாரம்.

எனவே பிரம்மம் உபநிடதங்களின் உதவியுடன் விவாதிக்கத் தகுந்தது. எனவே பிரம்மன் சாஸ்திரிக சமாதிகம்யா என்று அழைக்கப்படுகிறார், அதாவது அவர் வேத சாஸ்திரத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

நான்காவது அதிகாரம் சமன்வயாதிகாரணம் எனப்படும். சூத்திரம் “தத்து சமன்வயத்“.

இந்த அதிகாரத்தில் உள்ள பூர்வபக்ஷி அல்லது எதிரி நிரீஷ்வர மீமாம்சகா.

மீமாம்சகா என்பது யாகங்கள் அல்லது சடங்குகள் தொடர்பான வேதங்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்பவர். நெருப்புக்கு அளிக்கப்படும் எந்தப் பிரசாதமும் தகுந்த பலனைத் தரும் ஆனால் அதே சமயம் அவர் பிராமணத்தை ஏற்கவில்லை என்று கூறுகிறார்.

நிரீஷ்வரா என்றால் ஈஸ்வரன் அல்லது பிரம்மன் இல்லாதது என்று பொருள்.

கடைசியாக அவர் பிராமணத்தைப் பற்றிய விவாதம் பயனற்றது, நோக்கமற்றது அல்லது தனிப்பட்ட ஒருவருக்கு எந்தப் பலனையும் அளிக்காதபோது, ​​பிராமணத்தைப் பற்றி விவாதிப்பதில் நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை என்று பிராமணப் படிப்பைத் தொடங்குவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார்.

அதனால் பிரம்மன் படிக்கும் திட்டத்தை கைவிடலாம் என்கிறார்.

இந்த வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார், பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனைப் பற்றிய ஆய்வு அல்லது விவாதம் நோக்கமற்றது அல்ல, ஏனென்றால் பிரம்மமே நித்தியமானது மற்றும் எல்லையற்ற ஆனந்த வடிவமானது நிரதிசய ஆனந்தம்.

எனவே பிரம்மன் இயற்கையாகவே இந்த நித்திய மற்றும் எல்லையற்ற பேரின்பத்தை பிரம்மனின் இயல்பை முழுமையாகவும் முழுமையாகவும் ஆராய்ந்து பின்னர் தியானம் செய்பவருக்கு வழங்குகிறார்.

பக்தி யோகா அல்லது அவரது தாமரை பாதத்தில் பிரபத்தி செய்கிறார்.

சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

தத் – பிராமணனுக்கு அந்த வேத அதிகாரம் (சாஸ்திரப் பிரமாணம்) உறுதி செய்யப்படுகிறது.

து – மேற்கூறியவை தொடர்பாக எழுந்த சந்தேகம் நீங்கியது.

சமன்வயாத் – ஏனெனில் அடையும் உயர்ந்த குறிக்கோளான நித்திய பேரின்பத்திற்கும் பிரம்மத்திற்கும் இடையே நல்ல தொடர்பு உள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, மேற்கூறிய நான்கு அதிகாரங்களும் இயல்பில் அறிமுகமானவை மற்றும் பிரம்மனின் தன்மை பற்றிய விசாரணையைத் தொடங்குவதற்கு எழுப்பப்பட்ட நான்கு ஆட்சேபனைகளை மீறுகின்றன.

மேற்கண்ட அதிகாரங்கள் ஒரு பீடிகையைச் சேர்ந்தவை. இப்போது பிரம்மனைப் பற்றிய ஆய்வு சரியான ஆர்வத்துடன் தொடங்குகிறது.

பிரம்மன் என்றால் யார் என்பதுதான் இப்போது எழும் கேள்வி. அதாவது, பிரம்மம் என்பது உணர்ச்சியற்ற ஒரு பொருளா, அல்லது ஒரு உணர்வுள்ள உயிரினமா (ஜீவா) அல்லது அது மேற்கூறிய இரண்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டதா.

இந்தக் கேள்விக்கு அடுத்தடுத்து வரும் அதிகாரங்களில் பதில் இருக்கிறது. ஐந்தாவது அதிகாரம் இக்ஷ்த்யாதிகாரணம் எனப்படும். இது எட்டு சூத்திரங்களைக் கொண்டுள்ளது மற்றும் முதல் சூத்திரம் “இக்ஷதே: ந அசப்தம்” ஆகும்.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு சத்வித்யா எனப்படும் சந்தோக்யோபநிஷத்தின் 6வது அத்தியாயம்.

இந்த உபநிடதத்தில் உத்தாலக முனிவர் தனது மகன் ஸ்வேதகேதுவை பிரம்மனைப் பற்றிய அறிவைத் தொடங்குகிறார்.

ஸ்வேதகேது, குருகுலத்தில் 12 வருடங்கள் தங்கியிருந்து, அங்கு அவருக்கு அனைத்து வேதங்களையும் ஆறு வேதங்களையும் கற்பித்த பிறகு, மீண்டும் தனது வீட்டிற்கு வருகிறார். அவர் தனது குருவின் கீழ் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார் என்று உணர்ந்ததால், அவர் யாருடன் உரையாட முடியுமோ அவருக்கு எந்த உடலும் சமமாக இல்லை, எனவே அவர் அமைதியாக இருந்தார்.

பிரபஞ்சம் முழுவதையும் கட்டுப்படுத்தும் அந்த குறிப்பிட்ட பொருளைப் பற்றிய அறிவையும், இந்த உலகில் உள்ள அனைத்தையும் யாரைப் பற்றிக் கேட்க வேண்டும் என்பதையும், இந்த உலகில் உள்ள அனைத்தையும் யாரைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதையும் அவரது குரு அவருக்குத் தந்தாரா என்று அவரது தந்தை கேட்டார். சிந்திக்கப்படும் மற்றும் யாரை அறிவதன் மூலம் மற்ற அனைத்தும் அறியப்படும். ஸ்வேதகேது தன் தந்தையிடம் இப்படி ஒரு பொருள் எப்படி இருக்கும் என்று கேட்டான்.

உத்தாலக முனிவர் அவருக்கு களிமண், தங்கம் மற்றும் இரும்பு ஆகிய மூன்று எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கிறார். பல களிமண் பொருட்களுக்கு அடிப்படையான களிமண்ணைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் அனைத்து களிமண் பொருட்களும் அறியப்படும் என்கிறார். இரும்பு மற்றும் தங்கம் பற்றிய வழக்கு இதுதான். அதுபோலவே பிரபஞ்சம் முழுவதற்கும் ஸ்தூலமாகவும், இயக்கமாகவும், கருவியாகவும் விளங்கும் பிரம்மனை அறிவதன் மூலம் ஒவ்வொரு விஷயமும் அறியப்படும். இதற்கு ஏகவிஜ்ஞாநேன ஸர்வ விஜ்ஞானம் என்று பெயர். ஸ்வேதகேது தனது குருவால் தனக்கு பிராமண அறிவில் தீட்சை அளிக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டு, தந்தையிடம் தனக்கு பிரம்மனைப் பற்றிக் கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

படைப்பிற்கு முன், இந்த உபநிடதத்தில் சத் என்று அழைக்கப்படும் பிரம்மன் மட்டுமே இருந்ததாக தந்தை கூறுகிறார். – மகாலட்சுமி மற்றும் ஸ்ரீமன் நாராயணன் இருவரையும் உள்ளடக்கியது. இந்த சத் விரும்பி பிரபஞ்சத்தை உருவாக்கியது. இங்கே பூர்வபக்ஷி அல்லது ஒரு சாங்கிய தத்துவவாதியான எதிரி, சத் என்பது பிரபஞ்சத்தின் காரணமான பிரக்ருதியை மட்டுமே குறிக்கிறது என்று கூறுகிறார். இந்தப் பிரகிருதியை அசப்தம், பிரதானம் அல்லது அனுமாணிக்கம் என்பர்.

இந்த அதிகாரத்தின் இந்த முதல் சூத்திரத்தில் மேற்கூறிய வாதத்தை சூத்ரகாரர் மறுத்து, பிரகிருதி, உணர்வற்ற பொருள் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது, ஏனெனில் அது உயிரற்றதாக இருக்க முடியாது. எனவே சத் என்றால் பிரம்மம் மட்டுமே.

எனவே இந்த அதிகாரம் பிராமணன் உணர்வற்ற பொருளாக இருக்க முடியாது என்ற உண்மையை நிறுவுகிறது.

அடுத்த அதிகாரம் ஆனந்தமயதிகரணமாகும், இது பிரம்மன் ஜீவாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று கூறுகிறது. இந்த அதிகாரத்தில் 8 சூத்திரங்கள் உள்ளன.-இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு வரும் உபநிடத உரை தைத்தரிய உபநிடதத்தின் ஆனந்தவல்லியிலிருந்து. பிரம்மனை தியானிப்பவன் மோட்சத்தை அடைகிறான் என்று ஆனந்தவல்லி தொடங்குகிறது.

அந்த பிரம்மம் சத்யம், அதாவது அது எந்த மாற்றத்தையும் அடையாது, எனவே தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகும் மனித உடலிலிருந்து வேறுபட்டது மற்றும் உடலில் வசிக்கும் விடுதலையற்ற ஜீவாவிலிருந்து வேறுபட்டது.

இந்த பிரம்மம் ஞானம், அதாவது அவர் எப்போதும் எல்லாம் அறிந்தவர் (எல்லாவற்றையும் அறிந்தவர் அல்லது சர்வஜ்ஞர்) எனவே முக்தாத்மா அல்லது முக்தி பெற்ற ஆத்மாவிலிருந்து வேறுபட்டவர். இந்த பிரம்மம் அனந்தம், அதாவது அவர் ஒவ்வொரு உயிரினத்திலும் அல்லது பொருளிலும் அந்தர்யாமியாக (உள் ஆத்மாவாக) வசிக்கிறார், எனவே அவர் அனந்தம், கருடன், விஷ்வக்சேனர் மற்றும் பிற நித்யசூரிகளிடமிருந்து வேறுபட்டவர்.

பிரம்மன் ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிக்கிறார், மேலும் அவரது இருப்பிடம் வைகுண்டம். இதை அறிந்தவன், பரமவ்யோமத்தில் அல்லது பரமபதத்தில் இந்த பிரம்மத்தையும் அவனது அருட் பண்புகளையும் அனுபவிக்கிறான்.

இந்த பிரம்மன் அல்லது பரமாத்மாவிலிருந்து ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகள் அல்லது பஞ்ச பூதங்கள் உருவாக்கப்படுகின்றன. அன்னமயம், பிராணமயம், மனோமயம் மற்றும் விஞ்ஞானமயகோசங்களுக்கு மீண்டும் அந்தர்யமின்மை பிரம்மன். ஜீவனாகிய விக்ஞானமயத்திலிருந்து வேறுபட்ட ஆனந்தமயனாகிய பிரம்மன் தானே. ஆனந்தமயமாகிய இந்த பிரம்மமே பிரபஞ்சத்துக்குக் காரணம் என்று உபநிடதம் மேலும் கூறுகிறது.

இந்த உபநிடதம் ஜீவாக்களின் பல வகைகளை அடையாளம் கண்டு அவர்கள் அனுபவிக்கும் பேரின்பத்தின் அளவைப் பற்றி பேசுகிறது மற்றும் இறுதியாக பிரம்மானந்தத்தைப் பற்றி பின்வருமாறு வெளிப்படுத்துகிறது.

பிரம்மானந்தா – பிரஜாபதி ஆனந்தனின் 100 முறை

பிரஜாபதி ஆனந்தா – பிருஹஸ்பதி ஆனந்தனின் 100 முறை.

பிருஹஸ்பதி ஆனந்தா. – 100 முறை இந்திரன் ஆனந்தன்

இந்திரனின் ஆனந்தா – தேவானந்தாவின் 100 முறை

தேவானந்தா – கர்ம தேவதைகளின் ஆனந்தாவின் 100 மடங்கு

கர்ம தேவதாக்களின் ஆனந்தம் – அஜனாஜன தேவதாக்களின் 100 மடங்கு ஆனந்தம்

அஜனாஜன தேவதைகள் – பித்ரிகள் அல்லது மேனிகளின் 100 மடங்கு ஆனந்தம்

பித்ரிகளின் ஆனந்தம் – தேவ கந்தர்வர்களின் ஆனந்தத்தின் 100 மடங்கு

தேவ கந்தர்வ ஆனந்தா – மனுஷ்ய கந்தர்வத்தின் 100 முறை

மனுஷ்ய கந்தர்வ ஆனந்த – மனுஷ்ய ஆனந்தத்தின் 100 முறை

ஆக பிரம்மானந்தம் என்பது மனுஷ்ய ஆனந்தத்தின் 10010 = 1020 மடங்கு

இந்த பிரம்மானந்தமே நித்திய மற்றும் எல்லையற்ற பேரின்பம், இது முக்தி அல்லது மோட்சமாகும்.

இந்த பிரம்மானந்தத்தை ஸ்ரீ வைகுண்டத்தில் எல்லா முக்தர்களும் நித்யங்களும் என்றென்றும் அனுபவிக்கிறார்கள். இந்த முக்தாக்கள் சம்சாரத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆத்மாக்கள் மற்றும் பக்தி யோகம் அல்லது சரணாகதி செய்தவர்கள் மகாலட்சுமி தேவி மற்றும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் தாமரை பாதங்களில் பிரபத்தி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பூர்வபக்ஷி அல்லது எதிரி ஜீவாவில் இந்த ஆனந்தமயம் என்று கூறுகிறார், ஏனெனில் உபநிஷத்தில் இந்த அறிக்கையைத் தொடர்ந்து ஆனந்தமாயா “உடல்” உடையவர் என்று கூறப்படுகிறது. ஜீவா மட்டுமே உடலைப் பெற்றிருக்கிறதே தவிர பரமாத்மாவை அல்ல என்று அவர் கருத்து கூறுகிறார்.

“ஆனந்தமய அபயாசாத்” என்ற முதல் சூத்திரத்தில் எதிரியின் இந்த பார்வையை சூத்திரகாரர் மறுத்தார்.

சூத்திரத்தின் பொருள் ஆனந்தமயம் – ஆனந்தமயம் என்பது பிரம்மம் மற்றும் ஜீவன் அல்ல, ஏனெனில்

அப்யாசாத் – அதாவது இந்த உபநிஷத்தின் பிற்பகுதியில் பிரம்மானந்தம் 100 மடங்கு பிரஜாபதி ஆனந்தம் மற்றும் பல என்று கூறப்பட்டுள்ளது. மனுஷ்ய ஆனந்தத்தில் தொடங்கி, மேலே விவரித்தபடி பிரம்மானந்தம் வரை இது மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. அப்யாச என்றால் மறுமொழி.

விஸ்வாமித்திர முனிவர் போன்ற ஆன்மீக மற்றும் யோக சக்திகளைப் பெற்ற ஜீவனிலிருந்து பிரம்மன் வேறுபட்டவன் என்ற உண்மையை மீண்டும் நிறுவும் அடுத்த அதிகாரம் அந்தர அதிகாரம்.

இந்த அதிகாரத்தில் இரண்டு சூத்திரங்கள் உள்ளன மற்றும் விவாதத்திற்கு வரும் உபநிடத உரை சந்தோக்யோபனிஷத்தின் முதல் அத்தியாயத்தில் உள்ளது.

சூரிய மண்டலம் அல்லது ஆதித்ய மண்டலத்தின் மையத்தில் காணப்படுபவர் பிரம்மன் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்று இந்த உபநிடதம் கூறுகிறது. அவர் தங்க முடிகள் மற்றும் மீசைகள் மற்றும் தாமரை கண்களுடன் மிகவும் வசீகரமான மற்றும் அழகான உடலைக் கொண்டிருக்கிறார். அவர் களங்கமற்றவர்.

சூரிய மண்டலத்தின் மையத்தில் இருப்பவர் யோக, ஆன்மிக ஆற்றல் கொண்ட ஜீவன் என்பது பூர்வபக்ஷினின் கருத்து, ஏனென்றால் முந்தைய அதிகாரத்தில் ஆனந்தமயனுக்கு உடல் இருக்கிறது, அவரும் சூரிய மண்டலத்தில் இருக்கிறார், அவர் ஜீவனாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. .

இந்தக் கருத்து ஏற்கப்படவில்லை, ஏனெனில் இந்த அதிகாரத்தில் முதல் சூத்திரம் “அந்த: தத் தர்மோபதேசாத்” என்று கூறுகிறது.

அந்தா:- சூரியக் குடும்பத்தின் உட்புறத்தில் இருப்பது பிரம்மம், ஜீவன் அல்ல. ஏனெனில் தத் தர்மோபதேசத் – இந்த உபநிடதத்தில் கூறப்பட்டுள்ள சூரிய மண்டலத்தில் உள்ளவரின் பண்புகள் ஜீவாவுக்கு ஒருபோதும் பொருந்தாது. குணங்கள் தாமரை கண்கள் மற்றும் கறையற்ற தன்மை.

அடுத்து ஒரே ஒரு சூத்திரம் கொண்ட ஆகாஷ அதிகாரம் வருகிறது.

இந்த அதிகாரத்தில் உள்ள விவாதம் சாந்தோக்யோபனிஷ்கத்தின் முதல் அத்தியாயத்தில் உள்ள ஒரு கூற்றில் உள்ளது, இந்த உலகில் உள்ள அனைத்து பூதங்களும் ஆகாசத்தால் உருவாக்கப்பட்டவை, அவை பிரளய காலத்தில் ஆகாசத்திலேயே மறைந்துவிடும்; ஆகாஷம் என்பது அனைவரும் அடைய வேண்டிய விஷயம், ஆகாசம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. இந்த ஆகாசம் நாம் எங்கும் காணும் வானமாகிய புகழ்பெற்ற ஆகாஷைக் குறிக்கிறது என்று எதிர்ப்பாளர் கூறுகிறார். சூத்ரம் ஆகாஷா: தத் லிங்கத் -மேற் கூறிய கருத்தை மறுத்து, ஆகாஷம் என்பது ப்ரம்மம் மட்டுமே அன்றி நாம் காணும் ஆகாயம் அல்ல.

ஆகாஷம் என்றால் எல்லாப் பக்கங்களிலும் பிரகாசமாக ஒளிர்வது என்று பொருள், இந்த அம்சம் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும். சூத்திரத்தின் பொருள் “ஆகாசம் – பரமாத்மா அல்லது பிரம்மன் ஏனெனில்,

தல்லிங்கா – உபநிஷத்தில் இந்தச் சூழலில் குறிப்பிடப்பட்டுள்ள சில பிரத்தியேக பண்புகள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், நாம் பார்க்கும் புகழ்பெற்ற வானத்திற்கு அல்ல.

அடுத்த அதிகாரம் பிராண அதிகாரம், இது ஒரே ஒரு சூத்திரத்தைக் கொண்டுள்ளது.

விவாதத்திற்கு வரும் உபநிடத உரை சந்தோக்யோபநிஷத்தில் இருந்து மட்டுமே. பிரளயம் அல்லது பிரளயத்தின் போது அனைத்து உயிரினங்களும் பிராணனுடன் ஒன்றிணைந்து மீண்டும் இந்த உலகில் பிராணனிலிருந்து மட்டுமே தோன்றுகின்றன என்று இந்த உரை கூறுகிறது.

இந்த பிராணன் ஒவ்வொரு உயிரையும் சுவாசிக்க வைக்கும் மூச்சு என்று எதிரி கூறுகிறார். சூத்ரகாரர் இந்தக் கருத்தை எதிர்க்கிறார், பிராணன் பரமாத்மா மட்டுமே, மூச்சு அல்ல.

பரமாத்மா இங்கே பிராணன் என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அவருடைய விருப்பத்தின் பேரில் மட்டுமே இந்த உலகில் அனைவரும் வாழ்கிறார்கள். சூத்ரம் என்பது அத ஏவ பிராண: அதாவது

பிராண: பரமாத்மா என்பது மூச்சு அல்ல, ஏனெனில்

அத ஏவ – ஆகாஷ விஷயத்திலும் அதே காரணத்திற்காக.

அடுத்து ஜோதிராதிகரணம் மற்றும் முந்தைய பிராண அதிகாரத்திற்கு இடையேயான சங்கதி வருகிறது, இது பிரத்யுதாஹ்ரிதி. பிரத்யுதாஹரணம் என்றால் எதிர் விளக்கம் என்று பொருள். இதற்கு ஒரு விரிவுரை தேவை.

முந்தைய அதிகாரத்தில் (பிராண அதிகாரம்) சந்தோக்யோபனிஷத்தின்படி பிரபஞ்சத்தை உருவாக்கியவர் பிராணன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிராணன் என்றால் பொதுவாக மூச்சு (சுவாசம்) என்று பொருள். சுவாசம் காற்றின் ஒரு வடிவம் என்பதால், அது படைப்பாளராக இருக்க முடியாது. எனவே பிராணன் என்பது பிரம்மனை மட்டுமே குறிக்க வேண்டும்.

இந்த ஜோதிராதிகரணத்தில் விவாதத்திற்குரிய குறிப்பிட்ட உபநிடத உரை சாந்தோக்யோபநிஷத்தில் உள்ளது, அதில் ஸ்ரீ வைகுந்தத்தில் ஜொலிக்கும் பிரகாசம் (வரம்பற்ற பிரகாசத்துடன் கூடிய ஒளி) கூறப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு உடலின் கல்லீரலில் சுரக்கும் ஜாமீன் சாறு போன்றது. நாம் உண்ணும் உணவின் செரிமானம். இதற்கு ஜடராக்னி என்று பெயர். இந்த உபநிடதக் கூற்றில், முதல் வாக்கியத்தில் பிரம்மம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை, மேலும் ஜடராக்னியைப் போலவே ஜொலிக்கும் என்று கூறப்படும்போதும். இது ஒரு எதிர் விளக்கமாக மாறும்.

எனவே பிரகாசம் என்று பொருள்படும் ஜோதி என்பது பிரம்மனையே குறிப்பதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே ஜோதி என்பது சாதாரண சூரிய ஒளி அல்லது வேறு எந்த ஒளியையும் குறிக்கிறது என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

ஜோதி என்ற சொல்லுக்கு பிரம்மன் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்று சூத்ரகாரர் தீர்ப்பு வழங்குகிறார், ஏனெனில் இந்த உபநிடத உரையில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள உணர்ச்சியற்ற உடல்களில் (ஜீவாக்கள்) வசிக்கும் அனைத்து உணர்ச்சிகளும் (ஜீவாக்கள்) ஒரு எல்லையற்ற பிரம்மத்தின் கால் பகுதியும் முக்கால் பகுதியும் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளன.

இது சாதாரண சூரிய ஒளிக்கு பொருந்தாது, ஜோதி என்ற சொல்லுக்கு பரமாத்மா (உயர்ந்த ஆன்மா) என்று பொருள், மேலும் ஜடராக்னியைப் போலவே அவர் இருப்பதாலும் அவர் ஜடராக்னியின் உள் ஆன்மா அல்லது அந்தர்யாமி என்று பொருள். “பிரம்மன்” எல்லையற்ற பிரகாசத்தின் பிரகாசமாக இல்லாவிட்டால், அவர் பிரபஞ்சத்தின் படைப்பாளராக முடியாது.

அடுத்த அதிகாரம் இந்திரன் பிரணாதிகரணம் இதில் விவாதத்திற்கு வரும் உபநிடத உரை கௌஷிதகி உபநிஷத்தில் இருந்து.

முந்தைய ஜோதிர் அதிகாரத்துடன் இணைப்பு அல்லது சங்கதி பின்வருமாறு. ஜோதிர் அதிகாரத்தில் ஜோதிர் என்ற சொல்லுக்கு பரமபுருஷன் அல்லது பரமாத்மா என்று பொருள் என்று நிரூபிக்கப்பட்டது. கௌசிதகி உபநிடதத்தில் இந்திரன் உச்சமானவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அது சரியல்ல என்று பூர்வபக்ஷினம் கூறுகிறது.

சந்தேகத்தை நீக்க இந்த அதிகாரம் பொருந்துகிறது. எனவே ஜோதிர் அதிகாரத்தின் கூற்று வேறுவிதமாகத் தோன்றுவதால் சங்கதி அபவாதமாகிறது. தனது வீரத்திற்கு பெயர் பெற்ற திவோதாசியின் மகன் பிரதர்தனன் இந்திரனைச் சந்திக்க ஸ்வர்க லோகத்திற்குச் சென்றதாக உபநிஷத உரை கூறுகிறது.

அவரைப் பார்த்து மகிழ்ந்த இந்திரன், அவரிடம் வரம் கேட்கச் சொன்னான். பிரதர்தனன் இந்திரனிடம், “உனக்கு எல்லாம் தெரியும், எனவே மனிதர்களின் நலனுக்காக ஒரு வரம் கொடு. இந்திரன் பிரதர்தனனை பிராணனும் அமிர்தமும் ஆனதால் அவனைத் தியானிக்கச் சொன்னான். மோட்சம் அல்லது நித்திய பேரின்பத்தை அடைவதே ஹிட்டாமமான மனிதர்களுக்கு சிறந்த ஆர்வம். அப்படியானால் நம்மைப் போல் சம்சார பந்தத்தில் இருக்கும் இந்திரனையும் தியானிப்பதன் மூலம் ஒருவருக்கு மோட்சம் கிடைக்குமா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது.

இந்த உபநிஷத உரையின் உண்மையான பொருள் என்னவென்றால், இந்திரன் பிரதர்தனனை அந்தர்யமின் அல்லது இந்திரனின் உள் ஆன்மாவை தியானிக்கச் சொன்னான். அந்த அந்தர்யமின் தான் மோட்சத்தை அளிக்கும் சக்தி கொண்ட பகவான் ஸ்ரீமன் நாராயணன். எனவே இந்த உபநிடதத்தில் இந்திரன் என்பது ஜீவாத்மாவாகிய இந்திரனைத் தன் உடலாகக் கொண்ட பரமாத்மா.

எனவே ஸ்ரீமன் நாராயணன் பிராணனுக்கும் இந்திரனுக்கும் அந்தர்யமின்மை என்றும், அவர் ஆனந்த, அஜரா (அவருக்கு முதுமை இல்லை என்று அர்த்தம்) மற்றும் அமிர்தம் (அவரது இயல்பிலும் அல்லது வடிவத்திலும் எந்த மாற்றமும் இல்லை) என்றும் சூத்ரகாரர் தீர்ப்பு வழங்குகிறார்.

எனவே முதல் பாதம் இந்த அதிகாரத்துடன் முடிவடைகிறது மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தனது புகழ்பெற்ற படைப்பான அதிகார சாராவளியில் 11 அதிகாரங்களில் உள்ள அல்லது பொதிந்துள்ள பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருளும் பண்புகளின் பட்டியலை அழகாகத் தருகிறார். சுப குணங்கள் ஆகும்

அக்ரிதா – அவர் வைகுண்ட திவ்ய லோகத்தில் நிரந்தரமாக இருக்கிறார்.

விஸ்வஹேது – அவர் பிரபஞ்சத்தின் படைப்பாளர் அல்லது காரணம், இது அவரது தனித்துவமான அம்சமாகும்.

சாஸ்திரிக ஸ்தாபனியா – அவர் வேத சாஸ்திரங்களால் மட்டுமே நிறுவப்பட வேண்டும்.

நிருபாதிபரமா ப்ரேம யோக்யா – அவர் எல்லையற்ற மற்றும் நித்திய ஆனந்தம்.

ஸ்வேச்சத: ஸர்வஹேது:- தன் விருப்பத்தினாலேயே முழு பிரபஞ்சத்திற்கும் காரணமானான்.

சுபகுண விபவ அனந்த நிஸ்ஸேம ஹர்ஷா – அனைத்து எல்லையற்ற மற்றும் மங்களகரமான பண்புகளின் களஞ்சியம்.

சுத்த அகர்ம உத்த திவ்யகிருதி: – அவர் அழகான மற்றும் பைன் வடிவம் அல்லது அப்ரகிருத மற்றும் ரஜோகுணம் மற்றும் தமோ குணம் இல்லாத உடலைக் கொண்டவர்.

அநுபாதிகா ஆகாசநாதி ஸ்வபாவா:- இடம், காலம், பொருள் ஆகியவற்றில் வரம்பற்றவர், சுற்றிலும் ஒளிர்கிறார்.

சப்ராண அப்ராண பேத வ்யதிபிதுர ஜகத் ப்ராணன:- உயிரற்ற மற்றும் உயிரற்ற பொருட்களை வாழ வைக்கிறார்.

திவ்யதீப்தி:- அவர் அளவற்ற பிரகாசம் கொண்ட பிரகாசம்.

பிராணேந்திராதி அந்தராத்மா:- அவர் பிராணனுக்கும் இந்திரனுக்கும் உள்ளான ஆத்மா அல்லது அந்தர்யாமி.

அயோக வ்யவச்சேத பாதம் எனப்படும் முதல் பாதத்தின் 11 அதிகாரங்களில் ஸ்ரீமன் நாராயணனுடன் பிரபஞ்சத்தை உருவாக்குவது தொடர்பான உபநிடத வாக்கியங்களின் தொடர்பற்ற தன்மை நீக்கப்பட்ட ஸ்ரீமன் நாராயணனின் 11 அருளும் பண்புகளும் மேலே உள்ளன.

யோகா என்றால் இணைப்பு என்று பொருள்.

முதல் மலிவான இரண்டாவது பாதத்தில் 6 அதிகாரங்கள் உள்ளன, மேலும் அவை உபநிடத நூல்களைக் கையாளும், அதில் ஜீவா மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள் பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு காரணம் என்று நிராகரிக்கப்படுகின்றன. எனவே இந்த பாதம் அன்ய யோக வ்யவச்சேதா என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாதத்தில் முழுப் பிரபஞ்சமும் பரமாத்மாவின் உடல் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பாதத்தில் உள்ள முதல் அதிகாரம் “சர்வத்ர பிரசித்தி அதிகாரம்” ஆகும், இது சாந்தோக்ய உபநிடதத்திலிருந்து ஒரு உரையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறது, அதில் நாம் சுற்றிலும் பார்ப்பது பிரம்மம் என்றும், அவர் பிரபஞ்சத்தை உருவாக்குபவர், பாதுகாவலர் மற்றும் அழிப்பவர் என்றும் அவர் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அமைதியான மனதுடன் தியானித்தார். முந்தைய அதிகாரத்தில், அதாவது இந்திரபிராண அதிகாரத்தில், இந்திரனும் பிராணனும் உடலாகிய பரமாத்மாவே பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த அதிகாரத்தில் ஜகத்காரண வஸ்து என்று ஜீவா குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் விலகுகிறது. மேற்கூறிய சந்தேகத்திற்குக் காரணம், எண்ணற்ற பிறவிகளில் பல உடல்களை எடுத்துக்கொண்ட ஒருவர், நாம் சுற்றிலும் பார்க்கும் பொருளாக இருக்கத் தகுதியானவர் என்பதும், அவர் பிரபஞ்சத்தின் படைப்பாளராக இருக்க வேண்டும் என்பதும் ஆகும்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் உள் ஆன்மாவாகவும் இருப்பதில் பிரம்மன் பிரபலமானவர் மற்றும் பிரபலமானவர் என்றும் அவர் மட்டுமே படைப்பவர், பாதுகாவலர் மற்றும் அழிப்பவராக இருக்கத் தகுதியானவர் என்றும் இந்த உபநிடத உரை குறிப்பிட்டுச் சொல்வதால், ஜீவா பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது என்று சூத்ரகாரர் கூறுகிறார். பிரம்மன், பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தா என்று ஒரே குரலில் கூறும் மற்ற உபநிடத வாசகங்களுக்கு இசைவாக அல்லது உடன்படுவதால் பிரபஞ்சம். “சர்வத்ர பிரசித்த உபதேசத்” என்பது சூத்திரம்.

சர்வத்ர பிரசித்தம் என்றால் பரமாத்மா எங்கும் அந்தர்யாமினியாகவும் அதே சமயம் பிரபஞ்சத்துக்கும் காரணமானவராகவும் இருக்கிறார். மேலே உள்ள உபநிடத கூற்று, நாம் சுற்றிலும் பார்ப்பது பிரம்மம் என்று சொல்லத் தொடங்கியது, அதாவது எல்லாமே அல்லது பொருளும் பிரம்மத்தை அதன் உள் ஆத்மாவாகக் கொண்டுள்ளது மற்றும் மேலும் பிரம்மனின் பன்னிரண்டு மங்கள குணங்களை (கல்யாண குணங்கள்) பட்டியலிடுகிறது.

அவையாவன – பிரம்மனை தூய்மையான மனத்தால் மட்டுமே உணர முடியும், அவன் மூச்சை (பிராணனை) அவனுடைய உடலாகக் கொண்டிருக்கிறான், அவனுக்கு மிக அழகான வடிவம் அல்லது உடல் இருக்கிறது, அவனுக்கு சித்தம் அல்லது சங்கல்பம் உள்ளது, அதை மாற்ற முடியாது, அவன் ஆகாசம், ஆத்மா, அவர் ஆகாசம் அல்லது வானத்திற்கு உள்ளார்ந்த ஆன்மாவா, அவர் முழு பிரபஞ்சத்தையும் தனது உடலாகக் கொண்டிருக்கிறார், ஏனெனில் அது அவரால் படைக்கப்பட்டது, அவர் அனைத்து தூய்மையான மற்றும் மகிழ்ச்சியான பொருட்களைக் கொண்டிருக்கிறார், அவரது உடல் அனைத்து சிறந்த நறுமணத்தையும் கொண்டுள்ளது, அவர் அனைத்து நல்ல சுவைகளையும் ஏற்றுக்கொண்டார், அவர் எந்த உடலுடனும் பேசுவதில்லை, ஏனென்றால் அவர் மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை, மேலும் அவர் விரும்பியதை அவருடன் பெற்றுள்ளார்.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் “அட்ர் அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது, இது கத்தோ உபநிடதத்தின் ஒரு அறிக்கையை விவாதத்திற்கான தலைப்பாகக் கொண்டுள்ளது. முந்தைய அதிகாரத்தின் இறுதிப் பகுதியில், பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் ஜீவனுடன் சேர்ந்து வாழ்ந்தாலும், ஜீவன் அனுபவிக்கும் எந்த துன்பத்திற்கும் இன்பத்திற்கும் ஆளாகவில்லை, அதாவது, ஜீவன் தனது பலனை உண்பதாகக் கூறப்பட்டது. கடந்த கால செயல்கள். எனவே உபநிடதத்தில் உண்பவன் எங்கு உண்பவன் ஜீவாத்மாவாக இருக்க வேண்டுமோ, பரமாத்மாவாக இருக்க வேண்டுமோ என்ற ஐயம் எழுந்தது. இந்த சந்தேகத்தைப் போக்க இந்த அதிகாரம் பரிசீலனைக்கு வந்தது.

கடோபநிஷத் என்பது நச்சிகேதஸ் மற்றும் மிருத்யு என்று அழைக்கப்படும் யமனுக்கு இடையேயான ஒரு உரையாடல் அல்லது உரையாடலாகும். நச்சிகேதஸ் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் யமன் பதிலளித்தான். கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, ​​யமன் நசிகேதாவிடம், இந்த உலகில் உள்ள அசையும் மற்றும் அசையாத அனைத்து பொருட்களையும் (உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள் அல்லது உயிருள்ள மற்றும் உயிருள்ளவை ஆகிய இரண்டையும்) உணவைப் போல உண்ணும் ஒரு நபரை அந்த நேரத்தில் உணர முடியும் என்று கூறுகிறார். இந்த குறிப்பிட்ட சூழலில் மிருத்யு என்று அழைக்கப்படும் பகவான் ருத்ரனின் உதவியுடன் பிரபஞ்சத்தின் பிரளயம், அவரை கான்டிமென்ட் (உபசேச்சனா) என்று பயன்படுத்துவது இந்த சூழலில் குறிப்பிடப்படுகிறது. உபசேசனம் என்பது உண்ணக்கூடிய பொருளாகும், இது மோர் பாலுடன் கலந்த சாதத்தை உட்கொள்ள உதவுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உபசேசனம் என்பது உண்பதற்கு மட்டுமல்ல, மற்றவற்றை சாப்பிடுவதற்கும் உதவும் ஒரு பொருள்.

எனவே உண்பவன் ஜீவா அல்லது பரமாத்மா என்ற கேள்வி இங்கு எழுகிறது, ஏனெனில் முன்னவர் தன்னை உடம்பில் வாழ வைப்பதற்காக உணவை உண்பவர் மட்டுமல்ல, முன்பு கூறியது போல் கர்மபலத்தையும் உண்பவர்.

இந்த ஐயத்தைப் போக்க சூத்ரகாரர் “அட்ட சராச்சர கிரஹணாத்” என்ற சூத்திரத்தில் சொன்னார், அதாவது, அட்டா, சார-ஆசார (உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள்) அடங்கிய பிரபஞ்சம் முழுவதும் அவரால் நுகரப்படுவதால், உண்பவர் பரமாத்மா ஸ்ரீமன் நாராயணர். பிரளயம். உண்மையில் புராணங்களும் ஆழ்வார்களும் பிரளயத்தின் போது முழு பிரபஞ்சத்தையும் தனது வயிற்றில் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், படைப்பின் போது அதை வெளியேற்றுவதாகவும் கூறுகின்றன.

இந்த இரண்டாவது பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரத்திற்கு அந்தரா அதிகாரன் என்று பெயர். இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு, சந்தோக்யோபநிஷத்தில் உள்ள ஒரு பகுதி, அதில் சத்தியகாமா என்று அழைக்கப்படும் ஒரு குரு, உபகோசலை என்ற மாணவனுக்கு பிரம்மனைப் பற்றிய அறிவைப் போதித்தார். போதனை செய்வதற்கு முன், உபகோசலை ஆஹாவனீய, கர்ஹபத்ய மற்றும் தக்ஷிணை எனப்படும் மூன்று அக்னிகளால் (அக்கினிகள்) பிரம்மனின் ஞானத்திற்குத் தீட்சை பெற்றார், அவை அக்னிஹோத்ரத்தின் தினசரி சடங்குகளைச் செய்ய குருவால் பயன்படுத்தப்பட்டன. ஏறக்குறைய ஒரு வருடம் குரு.

முந்திய அதிகாரத்தில் ஒருவன் பிரபஞ்சத்தை உண்ணும் பரமாத்மாவை உணரக்கூடியவன் என்றும் அவனைக் காண முடியாது என்றும் கூறப்பட்டது. எனவே பார்க்க முடியாதது பரமாத்மாவாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகம் இந்த அதிகாரசபையில் தீர்ந்தது.

தியானம் செய்பவரின் கண்களில் காணப்படுபவன் அல்லது தோன்றுபவனே முழுப் பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்தும் பரமாத்மா என்றும், எந்த ஒரு துக்கத்திலும் சிறிதளவு கூட கலக்காமல் அளவற்ற இன்பமுடையவனாக இருப்பான் என்கிறது இந்த அதிகார உபநிஷத நூல். மற்றும் அவரது இயல்பு (ஸ்வரூபம்) மற்றும் மங்கள குணங்கள் (கல்யாண குணங்கள்) இரண்டிலும் எல்லையற்றவர். மேலும் அவர் அனைத்து கல்யாண குணங்களின் களஞ்சியமாகவும் திவ்ய மங்கள விக்ரஹ வடிவில் வரம்பற்ற பிரகாசம் கொண்டவராகவும் இருக்கிறார்.

தியானம் செய்பவரின் கண்களில் தோன்றும் நபர் கண்ணில் பிரதிபலிக்கும் உருவமாக இருக்க முடியுமா, ஜீவா அல்லது வான கடவுளாக (தேவதாவிஷேஷா) இருக்க முடியுமா என்ற சந்தேகம் இங்கே எழுகிறது, ஏனெனில் அவர் உண்மையில் கண்ணில் இருக்கிறார், ஆனால் பிரம்மனையோ அல்லது ஸ்ரீமன் நாராயணனையோ வெறும் கண்களால் பார்க்க முடியாது. .

இந்த சந்தேகத்தை போக்க பதராயண முனிவர் “அந்தர உபபத்தே:” என்ற சூத்திரத்தில் தீர்ப்பை வழங்குகிறார், அதாவது கண்களில் தோன்றுபவர் பரமாத்மா அல்லது பிரம்மன் மட்டுமே, அவர் மட்டுமே அமிர்தத்வ (இன்பம்), அபயத்வா (அபயத்வா) என்ற உயர்ந்த நற்குணங்களை உடையவர். துக்கத்துடன் கலக்காதது), பிரம்மத்வா (எல்லையற்ற தன்மை), சம்யத்வமத்வா (கல்யாண குணங்களின் களஞ்சியம்), பாமணித்வா (எல்லையற்ற பிரகாசத்தின் திவ்ய மங்கள விக்ரஹம்) இவை பிரம்மனின் தனித்துவமான மற்றும் பிரத்தியேகமான பண்புகள் மற்றும் அவை ஜீவாக்கள், உருவங்கள் அல்லது பிற வான கடவுள்களுக்கு பொருந்தாது. .

இந்த பாதத்தில் உள்ள நான்காவது அதிகாரத்திற்கு அந்தர்யாமி அதிகாரன் என்று பெயர். இந்த அதிகாரம் முந்தைய அதிகாரத்திற்கு அடுத்தபடியாக உள்ளது, ஏனெனில் முந்தைய அதிகாரத்தில் உள்ள தீர்ப்பு எப்பொழுதும் கண்களில் தோன்றுகிறதோ அவர் பரமாத்மாவாக இருக்கிறார். இந்த அதிகாரம் மேற்கண்ட உண்மையை வலுப்படுத்துகிறது.

விவாதத்திற்கான தலைப்பை உருவாக்கும் மற்றும் விஷயவாக்கியஸ் என்று அழைக்கப்படும் உபநிஷத உரை பிருஹத்ரண்யக உபநிஷத்தின் அந்தர்யாமி பிராமணத்தில் காணப்படுகிறது. அந்தர்யாமி பிராமணம் என்பது விசிஷ்டாத்வைத தத்துவத்தின் அடித்தளமாகும், இது இல்லாமல் ஸ்ரீ பகவத் ராமானுஜரால் விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிறுவ முடியாது. அந்தர்யாமி பிராமணம் கடக ஸ்ருதி என்றும் அழைக்கப்படுகிறது. கட்டகா என்பது அபேதா மற்றும் பேதா ஆகிய உபநிஷத்தின் இரண்டு போட்டி அல்லது முற்றிலும் எதிர்நிலை அறிக்கைகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தும் மத்தியஸ்தம் என்று பொருள். அத்வைதம் என்பது தனித்துவம், த்வைதம் என்பது இருமைவாதம், விசிஷ்டாத்வைதம் என்பது தகுதியான ஏகத்துவம். அத்வைத முறை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரால் நிறுவப்பட்டது மற்றும் த்வைத முறை ஸ்ரீ மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்டது.

அத்வைதமானது அபேத ஸ்ருதிகள் எனப்படும் உபநிடத நூல்களை அடிப்படையாகக் கொண்டது, அதாவது “நீ பிரம்மன்” மற்றும் “நான் பிரம்மன், உன்னதமானவன்”. ‘நீ’ மற்றும் ‘நான்’ என்ற வார்த்தைகள் ஜீவாக்களை மட்டுமே குறிக்கின்றன. ஆக ஸ்ரீ சங்கரர் பிரம்மமே ஜீவன் என்றும், ஜீவன் பிரம்மத்திலிருந்து வேறுபட்டதல்ல என்றும் கூறுகிறார், ஏனென்றால் பிரம்மமே மாயையான ஜீவாவின் வடிவத்தை அல்லது அவித்யாவின் காரணமாக, அதாவது அறியாமை. ஒரு ஆச்சார்யாவின் உபதேசத்திலிருந்து ஜீவா தான் பிரம்மனைப் போன்றே என்பதை உணர்ந்தால், அவன் பிரம்மன் அல்லது பிரம்மனுடன் ஒன்றாகிறான். சமஸ்கிருதத்தில் நான்கெழுத்துக்களைக் கொண்ட தத்வமசி என்பது “அபேத” என்று கூறும் உபநிடத கூற்று. இந்த கூற்றிலிருந்து பெறப்படும் “அபேத” (ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையே வேறுபாடு இல்லை) பற்றிய அறிவு “வாக்யஜன்ய ஞானம்” என்று அழைக்கப்படுகிறது. அத்வைதிகளுக்கு இந்த “வாக்ய ஜன்ய ஞானம்” தான் முக்திக்கான வழிமுறையாகும்.

ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் அவற்றுக்கிடையே முற்றிலும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஸ்ரீ மத்வாச்சாரியார் கூறுகிறார். அவரது கூற்றுப்படி பேதஸ்ருதியில் போக்தா என்று அழைக்கப்படும் ஜீவாத்மா, அதே பேத ஸ்ருதியில் போக்யம் என்று அழைக்கப்படும் பிரகிருதி மற்றும் அதே பேத ஸ்ருதியில் பிரேரிதா (கட்டுப்படுத்துபவர்) என்று அழைக்கப்படும் பரமாத்மா ஆகியவை ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டவை, இதைப் பெற்றவர். பேத அறிவு, அதாவது வேறுபாடு பற்றிய அறிவு, மோட்சத்தை அடைகிறது.

எனவே அபேத ஸ்ருதியும் பேத ஸ்ருதியும் முற்றிலும் எதிர் மற்றும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆனால் வேதங்களில் ஒவ்வொரு எழுத்தும் நமக்கு ஒரு அதிகாரம் அல்லது பிரமாணம் மற்றும் இந்த கோட்பாடு “சர்வஷாக பிரத்யாயந்யாயா” என்று அழைக்கப்படுகிறது. எனவே அபேத ஸ்ருதியை ஏற்றுக்கொண்டால், பேத ஸ்ருதியை நிராகரிக்க வேண்டும், அதாவது அதன் அதிகாரம் இழக்கப்படும் என்று சிக்கல் எழுகிறது. பேத ஸ்ருதியை ஏற்றுக்கொண்டால், அபேத ஸ்ருதி நிராகரிக்கப்பட வேண்டும், அது அதன் அதிகாரத்தை இழக்கிறது. மேற்கூறிய இரண்டுமே மேற்கண்ட நியாயத்திற்கு எதிரானது.

எனவே ஸ்ரீ பகவத் ராமானுஜர் அந்தர்யாமி பிராமணத்தில் கடக ஸ்ருதியைக் கண்டுபிடித்து, மேற்கூறிய இரண்டு முரண்பட்ட ஸ்ருதிகளுக்கு இடையே சமரசம் செய்து, “சர்வஷாக பிரத்யாயந்யாய” என்பதன் பொருத்தத்தை மீட்டெடுத்தார். இந்த நியாயத்தின் பொருள் என்னவென்றால், உபநிடதங்கள் உட்பட அனைத்து வேத நூல்களும் நமக்கு மிக உயர்ந்த அதிகாரம் கொண்டவை. ஒவ்வொரு அசையும் உண்மை, ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் அறிக்கைகளுக்கு சரியான விளக்கம் மட்டுமே தேவை. இந்த கடக ஸ்ருதி சுருக்கமாக, உணர்வுள்ள உயிரினங்கள் (ஜீவாக்கள்) மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள் (உயிருள்ள பொருட்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள்) பரமாத்மாவின் உடல்கள் என்று கூறுகிறது, மேலும் இது “சரீர ஆத்மா பவ” அல்லது “உடல் மற்றும் ஆன்மா” உறவு என்று அழைக்கப்படுகிறது. எனவே உடலும் ஆன்மாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத இரண்டு தனித்தனி நிறுவனங்களாகும். இதன் பொருள் ஆன்மா இல்லாமல் உடல் இல்லை மற்றும் உடல் இல்லாமல் ஆன்மா இல்லை. உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் இருவரும் பரமாத்மாவின் சரீரமாக மாறும்போது, ​​சுபலோபநிஷத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணராக அடையாளம் காணப்பட்ட பரமாத்மாவாகும், ஸ்ரீமன் நாராயணனை உச்ச ஆத்மாவாகவோ அல்லது அந்தர்யாமியாகவோ ஜீவர்கள் மற்றும் அச்சேதன பொருட்களுடன் எப்போதும் இணைந்து இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து பிரிக்க முடியாததாகிறது. எனவே இது அபேத மற்றும் பேத ஸ்ருதிகளின் செல்லுபடியை நிறுவுகிறது.

அந்தர்யாமி பிராமணத்தின் பொருள் பின்வருமாறு. “பூமியில் வசிப்பவர், பூமியில் இருந்து வேறுபட்டவர், பூமி யாரை அறியவில்லை, பூமி யாருக்கு உடல், பூமியின் செயல்களை உள்ளிருந்து கட்டுப்படுத்துகிறதோ அவரே உன்னதமான ஆத்மா, உங்களுக்கும் அந்தர்யாமி” மேலும் அவர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறார்.

அந்தர்யாமி பிராமணம் என்பது யாக்ஞவல்கிய முனிவர் மற்றும் அருணியின் மகனான உத்தாலக முனிவர் ஆகியோரின் உரையாடல் ஆகும். மேலே உள்ள உரையில் ‘நீ’ என்ற சொல் யாக்ஞவல்கியரிடம் ஒரு கேள்வியை எழுப்பி அவரிடமிருந்து பதிலைப் பெற்ற உத்தாலகாவைக் குறிக்கிறது. யாக்ஞவல்கியர் 21 பொருட்களைக் கண்டறிந்து மேலே குறிப்பிட்டுள்ளபடி மீண்டும் கூறுகிறார். பூமி, நீர், நெருப்பு, வானம் (அந்தரிக்ஷா), காற்று, சொர்க்கம், சூரியன் (சூரியன்), திசை (திக்), சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள், ஆகாசம், இருள், தேஜஸ், அனைத்து பூதங்கள், பிராணன் (மூச்சு), பேச்சு, கண்கள் ஆகிய 21 பொருள்கள். , காதுகள், மனம், தோல், ஜீவாத்மா மற்றும் விந்து.

பூமியைப் பற்றி அவர் கூறியது போல், “ஜீவாவுடன் வசிப்பவர், ஜீவாவிலிருந்து வேறுபட்டவர், ஜீவா அறியாதவர் மற்றும் ஜீவா உடலானது மற்றும் ஜீவாவின் செயல்களை உள்ளிருந்து கட்டுப்படுத்துகிறவனும் உயர்ந்த ஆன்மா என்று கூறுகிறார். அல்லது அந்தர்யாமி” யார் கண்கள், காதுகள் போன்ற புலன்கள் இல்லாமல் விஷயங்களை உணரக்கூடிய பகவான் ஸ்ரீமன் நாராயணராக இருக்கிறார், அதேசமயம் ஜீவாவில், அவர் தனது புலன்களால் மட்டுமே விஷயங்களை உணர முடியும். பரமாத்மா, ஜீவாத்மா வேறு என்ற உண்மையை இது தெளிவாக நிறுவுகிறது.

மேற்கூறியவை இருந்தபோதிலும், பூர்வபக்ஷி (எதிர்ப்பவர்) இந்த அந்தர்யாமி ஜீவா என்று கூறுகிறார், ஏனென்றால் இந்த சிற்றின்ப உணர்வு ஜீவாவுக்கு மட்டுமே பொருந்தும், பரமாத்மாவுக்கு அல்ல; ஜீவாத்மாவைத் தவிர வேறு பார்ப்பனர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூத்ரகாரர் இந்த வாதத்தை மறுத்து, “அந்தர்யாமி அதிதைவாதி லோகாதிஷு தத்தர்மவ்யபதேசாத் என்ற சூத்திரத்தில் மட்டுமே அந்தர்யாமி பரமாத்மா என்று கூறுகிறார். “அந்தர்யாமி பரமாத்மா என்று அர்த்தம், அந்தர்யாமி பிராமணத்தில் களங்கமில்லாதவன் அந்தர்யாமி என்று சொல்லப்பட்டிருக்கிறது.

2வது பாதத்தில் ஐந்தாவது அதிகாரம் அத்ரிஸ்யத்வாதி குணகாதிகாரன். பிராமணன் புலன்கள் இல்லாவிட்டாலும் பார்க்க முடியும் என்று முந்தைய அதிகாரத்தில் கூறப்பட்டதை அடுத்து இந்த அதிகாரம் வருகிறது. ஆதலால் பார்க்கும் செயல் கேட்காத இடத்தில் அந்த பொருள் பிரம்மம் அல்லாததாக இருக்க வேண்டும். அது பிரகிருதியாகவோ அல்லது பிரதாபனாகவோ கூட இருக்கலாம், இது முதன்மையான பொருளாகும். இந்த அதிகாரத்தில் மேற்கூறிய கருத்து மறுக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு அதர்வ வேதத்தைச் சேர்ந்த முண்டக உபநிடதத்தில் உள்ள ஒரு உரை. இதில் சன்னக முனிவர் அங்கீராச முனிவரை அணுகி, “உலகில் உள்ள மற்ற எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்வதன் மூலம் பொருள் எது?” என்று கேட்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் யாரை அறிந்து கொள்ள முடியும் என்பதை அறிவதன் மூலம் பிரபஞ்சத்திற்கு காரணமான நபரைப் பற்றிய கேள்வி. அங்கிராச முனிவர் சன்னகத்திற்குப் பதிலளித்தார், அறியப்பட வேண்டிய இரண்டு பிரிவுகள் உள்ளன, அவை அபரவித்யா மற்றும் பரவித்யா என்று அழைக்கப்படுகின்றன. அபரவித்யா என்பது ரிக்வேதம், யஜுர் வேதம், சாமவேதம் மற்றும் அதர்வ வேதம் மற்றும் இந்த நான்கு வேதங்களின் ஆறு துணைகளைக் குறிக்கிறது. சிக்ஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம் மற்றும் கல்பம் ஆகியவை இந்த ஆறு துணை. இவை ஏற்கனவே விரிவாகக் கூறப்பட்டுள்ளன, இங்கு மீண்டும் கூறத் தேவையில்லை. மேலே உள்ளவற்றில் ஸ்ரீமத் ராமாயணம் போன்ற இதிகாசங்களும் அடங்கும்.

இந்த உபநிடதத்தில் அக்ஷரா என்று பெயரிடப்பட்ட பிரம்மனைப் பற்றியது பரவித்யா. இந்த அக்ஷரத்தைப் பற்றி இந்த உபநிடதம் கூறுகிறது, அக்ஷரமாகிய பரமபிதாவானது கண், காது, மூக்கு, தோல், நாக்கு ஆகிய ஐந்து புலன்களிலிருந்து எழும் அறிவாலும், கைகள், பேச்சு, கால்கள், கழிச்சல் ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களின் செயல்களாலும் உணர முடியாது. பிறப்பு உறுப்புகள். அவர் எந்த கோத்திரத்தையும், இனத்தையும் சார்ந்தவர் அல்ல. அதற்கு பிராமணர், க்ஷத்ரியர் போன்ற எந்த ஜாதியும் கிடையாது.அவருக்கு புலன்கள் கிடையாது. அவர் நித்தியமானவர் மற்றும் எங்கும் நிறைந்தவர். அந்தர்யாமியாக அவர் எந்த உயிரினத்திலும் நுழையும் திறன் கொண்டவர் – அவரது அணுவின் அளவு காரணமாக அவர் உணர்வு மற்றும் உணர்ச்சியற்றவர் மற்றும் ஞானிகளால் முழு பிரபஞ்சத்திற்கும் காரணமானவர். அதே உபநிடதத்தில் மற்றொரு கூற்று உள்ளது, இது ஜீவனை விட பிரம்மம் உயர்ந்தது என்றும், அக்ஷரம் என்றும் அழைக்கப்படும் பிரகிருதியை விட ஜீவன் உயர்ந்தது என்றும் கூறுகிறது. எனவே இந்த உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அக்ஷரா என்ற வார்த்தை உண்மையில் பிரம்மனை (பரமாத்மா) குறிக்கிறதா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. இந்தச் சூழலில் ஜீவனும் பிரகிருதியும் மட்டுமே பொருத்தமானவை என்று பூர்வபக்ஷி கூறுகிறது. இந்த வாதத்தை மறுப்பதற்காக சூத்திரம் இங்கே வருகிறது, அது “அத்ரிஷ்யத்வாதி குணக தர்மோக்தே:”. பராவித்யாவில் புலன்களால் உணர முடியாதவர் என்று குறிப்பிடப்பட்டவர், அனைத்தையும் அறிந்தவராகவும், பிற குணங்களை உடையவராகவும் குறிப்பிடப்படுவதால், அவர் பரமாத்மா என்று பொருள்.

இந்த பாதத்தில் உள்ள ஆறாவது அல்லது கடைசி அதிகாரத்திற்கு “வைஷ்வாணரா” என்று பெயர். முந்தைய அதிகாரத்தில் அக்ஷரர் என்று பெயர் பெற்ற பகவான் ஸ்ரீமன் நாராயணன் மூன்று உலகங்களையும் தனது உடலாகக் கொண்டவர் என்றும் அவர் ட்ரைலோக்ய சாரிரகன் என்றும் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முண்டக உபநிடதம் இந்த ட்ரைலோக்ய சாரிரக பரமாத்மாவிற்கு, அக்னி அல்லது நெருப்பு தலை, சூரியன் மற்றும் சந்திரன் அவரது கண்கள் என்று கூறுகிறது; திசைகள் அவன் காதுகள்; வேதங்கள் அவன் பேச்சு; காற்று அவன் மூச்சு; பிரபஞ்சம் அவரது இதயம் மற்றும் பூமி, அவரது கால்கள். இறுதியாக அவர் சர்வபூத அந்தராத்மா என்று வர்ணிக்கப்பட்டார், அவர் அனைத்து உயிரினங்களுக்கும் உள்ளார்ந்த ஆன்மா அல்லது அந்தர்யாமி. ட்ரைலோக்ய சரீரகத்வம் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்காக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அது வேறு சில உடல்கள் சம்பந்தமாகவும் இருக்கலாம் என்றும் ஒரு ஆட்சேபனை எழுப்பப்பட்டது. எனவே இது ஸ்ரீமன் நாராயணனுக்குப் பொருந்தும் என்பதை மீண்டும் நிலைநாட்ட இந்த அதிகாரம் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் உபநிஷத உரை சாந்தோக்யோபநிஷத்தில் 5வது அத்தியாயத்தில் உள்ளது.

பிரச்சீன சால, சத்ய யாகு, இந்திரத்யும்ன, ஜனா, புடில என்ற ஐந்து பெரிய முனிவர்கள் நன்கு படித்தவர்கள், பரம ஆன்மாவைப் பற்றி தங்களுக்குள் விவாதித்து ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே அவர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வைஸ்வாணரைத் தியானித்துக் கொண்டிருந்த உத்தாலக முனிவரிடம் சென்றனர். ஆனால் உத்தாலகா அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க இயலாமையை ஒப்புக்கொண்டார், அதன் பிறகு ஆறு முனிவர்களும் கேகய ராஜ்யத்தின் மன்னன் அஸ்வபதியிடம் சென்றனர்.

அரசர் முனிவர்களை வரவேற்று அவர்கள் வருகையின் நோக்கத்தைக் கேட்டார். முனிவர்கள் அவரிடம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, முக்தியை அடைவதற்கான வழிமுறையான வைஸ்வானர பிரமவித்யாவில் தீட்சை பெற வந்ததாகக் கூறினார்கள். ராஜா ஒவ்வொரு முனிவரையும் தனித்தனியாக அழைத்து, அவர்கள் தியானத்தில் ஈடுபடும் விதம் அல்லது விதம் குறித்து அவர்களிடமிருந்து பதில்களைப் பெற்றார்.

பின்னர் அவர் வைஸ்வானர புருஷரைப் பற்றிய ஒவ்வொரு முனிவரின் பார்வையையும் சரிசெய்து, வைஸ்வானர வடிவில் உள்ள ஆறு முனிவர்களையும் ஒருங்கிணைத்த கருத்து பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய இறுதி பதில் புருஷன் என்று அவர்களிடம் கூறினார்.

இங்கு வைஸ்வாணரா என்ற வார்த்தை ஜாமீன் சாறு, மூன்றாவது பூதமான அக்னி, விண்ணுலகக் கடவுள் வைஸ்வாநரம் மற்றும் பரமாத்மாவைக் குறிப்பதால் ஐயம் நான்கு மடங்கு. எனவே பூர்வபக்ஷி அல்லது எதிர்ப்பாளர் மேற்கூறிய சந்தேகங்களால் வைஸ்வாணரை மட்டுமே பரமாத்மா என்றும் வேறு யாரும் இல்லை என்றும் நிறுவுவது மிகவும் கடினம் என்று கூறுகிறார்கள்.

எனவே மேற்கூறியவற்றின் வெளிச்சத்தில் சூத்திரகாரர் சூத்திரத்தில் தீர்ப்பை வழங்குகிறார். வைஸ்வாணரா: சதாரண சப்த விசேஷத், “இதன் பொருள் வைஸ்வானர: பரமாத்மா, ஏனெனில் இந்தச் சூழலில் குறிப்பிடப்பட்டுள்ள சில பண்புக்கூறுகள் அவருக்கு மட்டுமே பொருந்தும், வேறு யாருக்கும் பொருந்தாது.

இந்த அதிகார முனிவரான பதராயணன், விசிஷ்டாத்வைத தத்துவ முறைக்கு மிக முக்கியமான மற்றும் மிக முக்கியமான விளைவுகளைப் பற்றிய தனது கருத்தைத் தருகிறார். வேதங்களில் கூறப்பட்டுள்ள வான கடவுளின் ஒவ்வொரு நாமத்தின் மூலத்தையும், மூலப் பின்னொட்டையும் ஆராய்வதன் மூலம் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு நேரடியாகப் பொருந்தும் என்று அவர் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, அக்னி என்ற பெயர் பரமாத்மாவுக்கு நேரடியாகப் பொருந்தும், அதாவது அக்ரம் நயதி என்ற பெயரைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஸ்ரீமன் நாராயணன் பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்த அனைத்து ஜீவர்களையும் மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறார். அதே போல வைஸ்வாநரம் என்றால் விஸ்வேஷம் நரணம் நேதா என்பது மேலே சொன்ன அதே பொருள். அதுபோலவே ருத்ரா என்றால் பகவான் ஸ்ரீமன் நாராயணரே மோட்சம் முதலியவற்றை வழங்குவதன் மூலம் சம்சார நோயை அவர் ஒருவரே கரைப்பதால்.

சமன்வய அத்யாயா முழுவதுமே பிரபஞ்சத்திற்கு காரணமான பிரம்மனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜீவாவையும் பிரகிருதியையும் (உணர்வற்ற விஷயம்) பிரபஞ்சத்தின் காரணத்திலிருந்து விலக்குவதைக் குறிக்கும் உபநிடத நூல்களைக் கையாள்கிறது.

மூன்றாவது பாதத்தில் பத்து அதிகாரங்கள் உள்ளன, அவற்றில் ஏழு அதிகாரங்கள் சூழலுக்குள் உள்ளன மற்றும் மூன்று அதிகாரங்கள் சூழலுக்கு வெளியே உள்ளன. சூழலில் உள்ள அதிகாரங்கள் “சாக்ஷாத் சங்கதி” என்று கூறப்படுகிறது, அதாவது ஒன்றோடொன்று “நேரடி இணைப்பு” என்று பொருள்படும் மற்றும் சூழலுக்கு வெளியே உள்ள மூன்று அதிகாரங்கள் “பிரசங்கிகம்” (சூழல்) என்று அழைக்கப்படுகின்றன.

முதல் அத்தியாயத்தின் மூன்றாவது பாதம் “ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க” பாதம், ஏனென்றால் விவாதத்திற்கு வரும் உபநிஷத நூல்கள் ஜீவா அல்லது பிரகிருதியை நோக்கி தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன, அவை பிரபஞ்சத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. ஏழு அதிகாரங்களிலும் சூத்ரகாரரால் இது மறுக்கப்படுகிறது.

1. முதல் அதிகாரம் தியுபவாதி அதிகாரம் எனப்படும். இது ஆறு சூத்திரங்களைக் கொண்டுள்ளது.

முந்தைய பாடலுடன் இந்த அதிகாரத்திற்கான இணைப்பு, வரிசை அல்லது சங்கதி பின்வருமாறு.

அத்ரிஷ்யத்வாதி குணகாதிகாரணமான முந்தைய பாதத்தின் ஐந்தாவது அதிகாரத்தில், அந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அக்ஷரம் என்ற சொல் பரமாத்மாவுக்கு மட்டுமே உரியது, ஜீவா அல்லது ஆதிப் பொருளான பிரகிருதிக்கு அல்ல என்று நிறுவப்பட்டது. அதே முண்டக உபநிடதத்தில் ஜீவாவை நோக்கிய தெளிவான சுட்டியைக் கொண்டுள்ள அடுத்தடுத்த உச்சரிப்புகள் காரணமாக அது ஜீவாவாக இருக்கலாம் என்று சிலர் மீண்டும் சந்தேகிக்கிறார்கள். இது இங்கே மறுக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு வரும் உபநிடத உரை முண்டக உபநிடதத்திலிருந்து. இந்த உரை பின்வருமாறு கூறுகிறது.

பரமாத்மா (பிரம்மன்) பரமாத்மா (பிரம்மன்) பரலோகம், பூமி, ஆகாயம், மனம், மூச்சு மற்றும் அவருடன் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை ஆதரிக்கிறார், மேலும் அவர் முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய உயர்ந்த கட்டுப்பாட்டாளராக அறியப்பட வேண்டும். எனவே பரமாத்மாவைத் தவிர மற்ற விஷயங்களைப் பற்றிய பேச்சைக் கைவிட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் முக்திக்கான பாலம், அவர் சம்சாரம் அல்லது பிணைப்புக்கான பாலம், இதில் எதிர் கரை வைகுண்ட திவ்யலோகம் மற்றும் இந்த பாலம் நேரடியாக இந்த உபநிடதத்தில் அமிர்தம் என்று அழைக்கப்படும் மோட்சத்திற்கு வழிவகுக்கிறது. இந்த பரமாத்மா ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிக்கிறார், மேலும் அவர் சக்கரத்தின் விளிம்புடன் ஸ்போக்களால் இணைக்கப்பட்ட சக்கரத்தின் மையத்தைப் போன்றவர். எனவே இங்கும் பரமாத்மா “நாடிகள்” எனப்படும் ஆயிரக்கணக்கான இரத்த நாளங்கள் மூலம் உடலின் அனைத்து பாகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. பிறக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் பல பிறவிகளை மேற்கொள்கிறார். அவர் அனைத்தையும் அறிந்தவர் மற்றும் ஒவ்வொரு உயிரினத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் அறிந்திருக்கிறார். பிரணவத்தின் மூலம் அவரைத் தியானிக்க வேண்டும்.

பூர்வபக்ஷி அல்லது எதிர்ப்பாளர் கூறுகையில், அக்ஷரா என்ற வார்த்தைக்கு பரமாத்மா என்று அர்த்தம் இல்லை, அது ஜீவா என்று தெளிவாகக் குறிக்கிறது, ஏனெனில் அவர் நாடியுடனான தொடர்பு மற்றும் இந்த உலகில் எண்ணற்ற பிறவிகளை எடுத்தார்.

த்யுப்வத்யதானம் ஸ்வஸப்தாத் என்று முதல் சூத்திரத்தில் கூறும் சூத்ரகாரரால் இதை மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

த்யுபவாத்யாயதனம் – சொர்க்கம், பூமி முதலியவற்றை ஆதரிப்பவர் பரமாத்மா, ஏனெனில்,

ஸ்வஸப்தாத் – ‘பரமாத்மா’வின் பிரத்தியேக பண்புகள் இந்தச் சூழலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரத்தியேக பண்புகள் பின்வருமாறு:

1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களின் ஆதரவாளர்

2. மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் சம்சாரப் பெருங்கடலுக்கு அவர் பாலம்.

3. இந்தச் சூழலில் உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆத்மா என்ற சொல் பரமாத்மாவை மட்டுமே குறிக்கிறது.

4. எல்லாம் அறிந்தவராகவும், ஒவ்வொரு உயிரினத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிந்தவராகவும் இருப்பது ஜீவாவுக்குப் பொருந்தாது, அது பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும்.

5. பரமாத்மாவுக்கு கர்மா இல்லாததால் இவ்வுலகில் பிறக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், துன்மார்க்கரைத் தண்டித்து நல்லதைக் காக்க ராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்கள் அல்லது அவதாரங்கள் வடிவில் தன் சொந்த விருப்பத்தின் பேரில் பல பிறவிகள் எடுக்கிறார். மக்கள். பக்தி யோகம் அல்லது சரணாகதி செய்த ஜீவன் தன் புண்ணியத்தையும், பாபத்தையும் துறந்து மோட்சத்தை அடைந்து, சம்சாரத்துடன் தொடர்பு கொண்டு மோட்சத்தை அடைந்து, திவ்யமங்கல விக்ரஹம் எனப்படும் பரமாத்மாவின் மிகவும் வசீகரமான மற்றும் அழகான பரமாத்மாவைக் கண்டு, பகவான் ஸ்ரீமனுக்குச் சமமாகிறான் என்றும் இந்த உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு சிலவற்றைத் தவிர அனைத்து அம்சங்களிலும் நாராயணனே.

எனவே இந்த உபநிடதத்தில் உள்ள அக்ஷரம் என்ற சொல் பரமதத்தை மட்டுமே குறிக்கிறது, ஜீவனை அல்ல என்பதை இது நிரூபிக்கிறது.

2.இந்தப் பாதத்தில் உள்ள இரண்டாம் அதிகாரம் பூம அதிகாரம் எனப்படும். முந்தைய அதிகாரத்துடனான தொடர்பு அல்லது சங்கதி என்னவென்றால், முந்தைய அதிகாரத்தில் பரமாத்மாவின் சூழலில் எந்த இடைவெளியும் இல்லை, எனவே அக்ஷரா பரமாத்மா என்று நிறுவப்பட்டது. இந்த அதிகாரத்தின் உபநிடத உரையில் ஜீவாவின் சூழலில் எந்த இடைவெளியும் இல்லை, மேலும் இந்த உபநிடத உரை ஜீவாவை மட்டுமே குறிக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகம் இந்த அதிகாரத்தில் களையப்படுகிறது.

விவாதத்திற்கு வரும் உபநிஷத உரை சாந்தோக்யோபநிஷத்தின் ஏழாவது அத்தியாயம். இந்த அத்தியாயம் “பூம வித்யா பிரகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த உபநிஷத உரையின் சுருக்கமான சுருக்கம் பின்வருமாறு: நாரத முனிவர் சனத் குமார முனிவரை அணுகி, பிரம்மனைப் பற்றிய அறிவை அவருக்குத் தொடங்கும்படி கேட்டுக்கொள்கிறார். ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வணவேதம், இதிகாசமான ஸ்ரீமத் ராமாயணம், புராணங்கள், ஐந்தாம் வேதம், ஸ்ரீ மகாபாரதம், இலக்கணம், சடங்குகள், கணிதம், பாடங்கள் போன்ற அனைத்துக் கல்விகளிலும் தேர்ச்சி பெற்றதாக நாரத முனிவர் சனத்குமாரவிடம் கூறுகிறார். இயற்கைப் பேரிடர்களின் முன்னறிவிப்பு, நிலத்தடியில் மறைந்துள்ள செல்வத்தைக் கண்டறியும் வழியைக் கையாள்வது, தர்க்கம், ஏகாயன சகா என்று அழைக்கப்படும் கோயில்களில் பூஜைகள் நடத்தப்படுவதைக் கையாளும் பொருள்.

நாரதர் மேலும் கூறும்போது, ​​மேற்கூறிய அனைத்துக் கல்விக் கிளைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தும், பிராமணத்தைப் பற்றிய ஞானம் பெறாததாலும், ஆத்மா வித்தாகாததாலும் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். ஆத்மா என்ற சொல் பரமாத்மாவை மட்டுமே குறிக்கிறது. அவர் சனத்குமார முனிவரிடம் பிராமண அறிவைத் தொடங்குவதன் மூலம் துன்பத்திலிருந்து விடுபடுமாறு கேட்டுக்கொள்கிறார்.

சனத்குமார பாஹ்மனைப் பற்றி அவருக்குப் பிரசங்கிப்பதற்குப் பதிலாக, பல பொருட்களைக் குறிப்பிட்டு, நாரதரிடம் ஒவ்வொரு பொருளையும் பிரம்மன் அல்லது பரமாத்மா என்று கருதி தியானிக்கச் சொல்கிறார். பொருள்கள் நாமம் (பெயர்), பேச்சு, மனம், சித்தம், உறுதி, வலிமை, உணவு, நீர், நெருப்பு, ஆகாயம், மன்மதம், திசைகள், பிராணன் அதாவது ஜீவா மற்றும் இறுதியாக இந்த உபநிஷத்தில் பரமாத்மா சத்யா.

நாரதர் நாமத்தில் தொடங்கி ஒவ்வொன்றையும் தியானம் செய்கிறார், அதை நம்பாமல் மீண்டும் சனத்குமாரனிடம் வந்து, தான் முன்பு தியானித்ததை விட உயர்ந்த பொருள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டார். பிராணனை (இந்தச் சூழலில் ஜீவா என்று பொருள்படும்) தியானம் செய்த பிறகு, பிராணனை விட உயர்ந்த பொருள் ஏதும் உண்டா என்று சனத்குமாரனிடம் கேட்கவில்லை. பிராணன் என்றால் சுவாசம் என்றாலும், இந்த சூழலில் அது ஜீவாவைக் குறிக்கிறது, ஏனென்றால் ஜீவா எப்போதும் பிராணனுடன் இருக்கும்.

இறுதியாக சனத்குமாரர் நாரதரிடம், ஒருவன் வேறு எதையும் பார்க்கவில்லை, வேறு எதையும் கேட்கவில்லை, வேறு எதையும் அறியவில்லை, அது எல்லையற்ற பேரின்பம் என்றும், வேறு ஏதாவது காணப்படுகிறதோ, கேட்கிறதோ அல்லது அறியப்படுகிறதோ அங்கு அற்பமானதாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்.

சனத்குமாரர் மேலும் நாரதரிடம், பரமாத்மாவான பரமாத்மாவை உச்சபட்ச சத்யாவை தியானிக்கச் சொல்கிறார்.

நாரதர் மேலும் சனத்குமாரனிடம் முழு பிரபஞ்சத்தின் ஆதரவாளர் யார் என்று கேட்கிறார். பரமாத்மா (பிரம்மன்) ஆதரவாளர் என்று சனத்குமார பதிலளிக்கிறார். நாரதர் மீண்டும் பரமாத்மாவை ஆதரிப்பவர் யார் என்று கேட்கிறார், இதற்குப் பதில் பரமாதா தன்னை ஆதரிக்கிறார், தனி ஆதரவாளர் இல்லை.

இங்கு பூமா என்ற வார்த்தையின் விளக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. பூர்வபக்ஷி அல்லது எதிரி, பூமா ஜீவன் மட்டுமே, பரமாத்மா அல்ல என்று கூறுகிறார், ஏனென்றால் நாரதருக்கு சனத்குமாரர் செய்த உபதேசம் பிராணனில் நிறுத்தப்பட்டது, அதாவது இந்த சூழலில் ஜீவன். “பூமா சம்ப்ரசாதாத் அத்யுபதேசத்” என்று கூறும் இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தின் மூலம் இந்த வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார். சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

பூமா என்பது பரமாத்மா ஏனெனில், ஸம்ப்ரசாதாத் அத்யுபதேசத் – ஸம்ப்ரஸாதா ஜீவன், பரமாத்மா ஜீவாவை விட எல்லா அம்சங்களிலும் மேலானதாக இந்த உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பூமா என்பதன் பொருள் எல்லையற்ற ஆனந்தம். பரமாத்மாவின் சில பிரத்தியேக குணாதிசயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன, அவை பரமாத்மா என்பது அவரது உள்ளார்ந்த இயல்பினால் உயர்ந்த குறிக்கோள் ஆகும். பரமாத்மா தன்னை ஆதரிக்கிறார், மேலும் அவர் அனைத்து உயிரினங்களுக்கும் அந்தர்யாமி அல்லது உள் ஆத்மா.

3. இந்தப் பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரத்திற்கு அக்ஷராதிகாரன் என்று பெயர். இதற்கு மூன்று சூத்திரங்கள் உள்ளன. முந்தைய அதிகாரத்துடன் உள்ள இணைப்பு அல்லது ‘சங்கதி’ பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தில் பரமாத்மா தன்னை ஆதரிக்கிறார் என்று கூறப்பட்டது. பிரம்மன் (பரமாத்மா) அல்லாத பிற பொருளும் தன்னைத்தானே ஆதரிக்கும் ஐயத்தை நீக்கவே இந்த அதிகாரம் வருகிறது.

இந்த அதிகாரத்திற்குரிய விஷயவாக்கியமான உபநிஷத உரை பிருஹதாரண்யக உபநிஷத்தில் இருந்து வந்தது.

மிதிலா சாம்ராஜ்யத்தின் மன்னன் ஜனக, பிரம்மனைப் பற்றி ஆழ்ந்த ஞானம் உள்ள அனைத்து முனிவர்களின் மாநாட்டைக் கூட்டி, பிராமணத்தைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற்ற ஒருவருக்கு ஒவ்வொரு பசுவின் ஒவ்வொரு கொம்பிலும் தங்கம் வைக்கப்பட்ட கன்றுகளுடன் கூடிய 1000 பசுக்களை அற்புதமான பரிசாக அறிவிக்கிறார். . ஆரம்பத்தில் சில காலம் மாநாட்டில் யாரும் எழுந்து பரமாத்மாவைப் பற்றி தனக்கு ஆழ்ந்த அறிவு இருப்பதாகக் கூறவில்லை. சிறிது நேரம் கழித்து யாக்ஞவல்கிய முனிவர் எழுந்து தனது மாணவனை அழைத்து, கன்றுகளுடன் கூடிய அனைத்து பசுக்களையும் தனது ஆசிரமத்திற்கு ஓட்டச் சொன்னார். இதைப் பார்த்த மற்றவர்கள், யாக்ஞவல்கியர் தான் பிராமணீஷ்டா என்று நிரூபிக்காமல், எப்படி அந்த அற்புதமான பரிசைப் பெற முடியும் என்று எதிர்ப்புத் தெரிவித்து, தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்தனர். சத்தம் தணிந்ததும் அங்கு கூடியிருந்த முனிவர்கள் யாக்ஞவல்கியரிடம் பிரம்மனைப் பற்றிய கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுப்பத் தொடங்கினர், அதற்கு யாக்ஞவல்கியர் நிதானமாகவும் உறுதியாகவும் பதிலளித்தார். கார்கி என்று பெயர் கொண்ட ஒரு பெண் யாக்ஞவல்கியரிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறாள். அக்காலத்தில் பெண்களுக்கும் பிராமணத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதில் ஆண்களுக்கு நிகரான உரிமை இருந்தது.

அவளது முதல் கேள்வி, ஓ யாக்ஞவல்கியா, இதில் பூமிக்குக் கீழே உள்ள லோகங்கள் அல்லது உலகங்கள் (பூலோகம்), வானத்துக்கும் மேலே உள்ள லோகங்களும், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள லோகங்களும் நூல்கள் இருக்கும் துணியைப் போலவே நீளமாகவும் அகலமாகவும் இணைக்கப்பட்டுள்ளன. நீளமாகவும் அகலமாகவும் பிணைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றிற்கு யாக்ஞவல்கியரின் பதில் ஆகாசம் என்பது அனைத்து உலகங்களும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பொருளாகும். இந்த பதிலில் மகிழ்ச்சியடைந்த கார்கி அவருக்கு வணக்கம் செலுத்தினார். ஆகாசா எந்தப் பொருளில் இணைக்கப்பட்டுள்ளது அல்லது ஆதரிக்கப்படுகிறது என்பது அவளுடைய இரண்டாவது கேள்வி. யாக்ஞவல்கியாவின் பதில் என்னவென்றால், அக்ஷரா என்பது ஆகாஷாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல்லது அக்ஷரா ஆகாஷாவை ஆதரிக்கும் பொருளாகும்.

மேலும், இந்த அக்ஷரா பருமனானதல்ல, மெலிதானது, உயரமானது அல்ல, குட்டையானதும் இல்லை, சிவந்திருப்பதும் இல்லை, அல்லது உருவம் இல்லாதது, பாவமற்றது, எண்ணெய் இல்லை, கருமை இல்லை, காற்று இல்லை, வானமும் இல்லை, சுவையும் இல்லை, கண்களும் இல்லை என்று கூறுகிறார். காது அல்ல, பேச்சு அல்ல, மனம் அல்ல, நெருப்பு அல்ல, மூச்சு இல்லை, முகம் இல்லை, புலன்கள் இல்லை, அது உள்ளும் இல்லை, புறமும் இல்லை, எதையும் உண்பதில்லை. இந்த அக்ஷரா சூரியன் மற்றும் சந்திரன் உட்பட அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இங்கு அக்ஷரா என்ற வார்த்தையின் விளக்கம் கேள்விக்கு உட்பட்டது. இந்த அக்ஷரம் பிரகிருதியாகவோ அல்லது ஜீவாவாகவோ இருக்க வேண்டும் என்றும் அது பரமாத்மாவாக இருக்க முடியாது என்றும் எதிரி கூறுகிறார். அவரது வாதம் கார்கியின் கேள்வியில் உள்ளது, அதில் ஆகாஷாவின் ஆதரவு என்ன என்று கேட்கப்பட்டது. ஆகாஷாவை பிரகிருதி அல்லது பிரதானம் மட்டுமே ஆதரிக்கிறது, எனவே அக்ஷரா பிரகிருதி மட்டுமே. எந்த உயிரற்ற பொருளும் ஜீவாவால் ஆதரிக்கப்படுவதால் இந்த அக்ஷரா ஜீவாவாக கூட இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த வாதத்தை சூத்ரகாரர் தனது “அக்ஷரம் அம்பராந்தத்ருதே:” என்ற சூத்திரத்தில் மறுக்கிறார். இதன் பொருள் பின்வருமாறு.

அக்ஷரம் – பரமாத்மா ஏனெனில், அம்பராந்தேத்ருதே: – இந்த பரமாத்மா நாம் பார்க்கும் அம்பரம் அல்லது வானத்திற்கு காரணமான அவ்யாகிருதம் அல்லது பிரகிருதியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

இரண்டாவது சூத்திரத்தில் அக்ஷரா ஜீவா என்பது நிராகரிக்கப்பட்டது. ஆக அக்ஷரா பரமாத்மா.

4. இந்த பாதத்தில் 4வது அதிகாரத்திற்கு ஈக்ஷதி கர்மாதிகாரணம் என்று பெயர். இதற்கு ஒரே ஒரு சூத்திரம் உள்ளது.

இந்த அதிகாரம் அல்லது சங்கதிக்கும் முந்தைய அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பு பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தின் உபநிடத உரையின் இறுதிப் பகுதியில், பரமாத்மாவை நமது நிர்வாணக் கண்களால் பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் காணக்கூடிய அவரது திவ்யத்மா ஸ்வரூபம்.

எனவே இந்த அதிகாரத்தின் உபநிடத உரையில் சொல்லப்பட்ட புருஷன் பரமாத்மாவாக இருக்க முடியாது என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகம் இந்த அதிகாரத்தில் நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு வரும் விஷயவாக்கியம் (உபநிஷத உரை) பிரஸ்னோபநிஷத்தில் இருந்து வந்தது.

இந்த பிரஸ்னோபநிஷத்தில் சுகேஷா, சத்யகாமா, கார்க்யா, கௌசல்யா, பார்கவ மற்றும் கபந்தி ஆகிய ஆறு முனிவர்கள் பிரம்ம ஞானத்தில் தீட்சை பெறுவதற்காக பிப்பலத முனிவரை அணுகுகிறார்கள். பிப்பலாதா அவர்களிடம் ஒரு வருடம் கண்டிப்பான பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்குமாறும், பின்னர் அவரிடம் கேள்விகள் கேட்கவும் பதில்களைப் பெறவும் கூறுகிறார். அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள் தனக்குத் தெரிந்தால் தான் பதிலளிப்பேன் என்று பணிவுடன் பிப்பலாதா முனிவர் அவர்களிடம் கூறுகிறார்.

மேலே உள்ள ஒவ்வொரு ஞானிகளும் அவரிடமிருந்து கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெறுகிறார்கள். எனவே இந்த பிரஸ்னோபநிஷத்தில் ஆறு கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் உள்ளன.

சத்யகாம முனிவரின் கேள்வி என்னவென்றால், ஒருவர் இறக்கும் வரை பிரணவத்தில் தியானம் செய்தால் அவர் எந்த உலகத்திற்கு செல்கிறார்.

பிரணவ தியானம் பிரணவ உபாசனை எனப்படும். பிரணவ உபாசனையில் மூன்று வகை உண்டு.

1. ஏகமாத்ரா பிரணவ உபாசனா

2. த்விமாத்ரா பிரணவ உபாசனா

3. திரிமாத்ரா பிரணவ உபாசனா

மாத்ரா என்பது ஒரு நொடி அல்லது தருணத்தைக் குறிக்கிறது.

எனவே ‘ஏக மாத்ரா’ என்பது பிரணவ மந்திரத்தை உச்சரிக்க எடுக்கும் சாதாரண நேரத்தை குறிக்கிறது. த்விமாத்ரா என்பது ஒரே பிரணவத்தை உச்சரிக்க எடுக்கும் நேரத்தின் இரட்டிப்பாகும், அதாவது ஏகாமாத்ரா பிரணவத்தை விட மெதுவாகவும், திரிமாத்ரா பிரணவ உபாசனையில் எடுக்கும் நேரத்தை விட மூன்று முறையும் ஆகும்.

மேற்கூறிய உபாசனைகளின் பலன்கள் (1) ஏகாமாத்ரா பிரணவத்திற்காக தியானம் செய்பவர் மனுஷ்ய லோகத்தை அடைகிறார், அதாவது ரிக்வேத மந்திரங்கள் அவருக்கு மனுஷ்ய லோகத்தை வழங்குகின்றன, அதாவது அவர் இந்த உலகில் மரியாதையையும் பதவியையும் கட்டளையிடுகிறார், பின்னர் பரமாத்மாவை தியானிக்கத் தொடங்குகிறார். த்விமாத்ரா பிரணவத்தின் தியானம் செய்பவன் சொர்க்கத்தை அடைகிறான், அவன் யஜுர் வேதத்தில் உள்ள மந்திரங்களால் இந்த லோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இன்பங்களை அனுபவித்த பிறகு மீண்டும் இந்த உலகில் பிறக்கிறான்.

3. திரிமாத்ரா பிரணவ தியானம் செய்பவர் ஸ்ரீ வைகுண்ட திவ்யலோகத்தை அடைந்து சாமவேதத்தில் உள்ள மந்திரங்களால் இந்த லோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். தியானத்தின் போது அவர் பரமாத்மாவைத் தன் சுயத்தில் காண்கிறார். இந்த பரமாத்மா, தியானம் செய்பவரின் இதயத்தில் அந்தர்யாமியாக வசிப்பதால், “பரத் பரம் புரிஷயம் புருஷம்” என்று அழைக்கப்படுகிறார். இந்த அந்தர்யாமி 4 தலை பிரம்மாவாகிய ஜீவ கானாவை விட உயர்ந்தது. இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், இந்த “பரத் பரம்புருஷர்” ஹிரண்யகர்ப்பா, இல்லையெனில் சதுர்முக பிரம்மா அல்லது பரமாத்மா என்று அழைக்கப்படுகிறாரா என்பதுதான்.

பூர்வபக்ஷி, மனுஷ்ய லோகத்திற்கு மேலான சொர்க்கத்திற்கு தர்க்கரீதியாக லோகம் இருப்பதால் தான் ஹிரண்யகர்பா என்றும், தியானத்தின் பொருளான இந்த பரத் பரம்புருஷன் ஹிராயண கர்பா என்றும் கூறுகிறார்.

இந்த வாதம் “ஈக்ஷாதிகர்ம வ்யாபதேஷாத் ச:” என்ற சூத்திரத்தில் மறுக்கப்படுகிறது, அதாவது ச : பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பரமாத்மா, ஏனெனில் “ஈக்ஷதி கர்மா” – தியானத்தின் பொருள் மற்றும் தியானத்தின் போது பார்க்கப்படும் பொருள்.

வியாபதேசத் – பரமாத்மாவுக்கு மட்டுமே உபநிடதத்தில் சில பிரத்தியேக குணாதிசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, அவர் பசி, தாகம், துக்கம், மாயை, முதுமை மற்றும் மரணம் ஆகிய ஊர்மிஷட்கங்கள் இல்லாதவர், பயம் இல்லாதவர் மற்றும் அவர் முழு பிரபஞ்சத்திற்கும் காரணமானவர் என்பதால் உயர்ந்தவர். .

5. மூன்றாவது பாதத்தில் உள்ள ஐந்தாவது அதிகாரத்திற்கு தஹராதிகாரன் என்று பெயர். இது பத்து சூத்திரங்களைக் கொண்டது.

முந்தைய அதிகாரத்துடனான இணைப்பு அல்லது ‘சங்கதி’ பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தில் ஒவ்வொரு உடலின் இதயத்திலும் வசிப்பவர் பரமாத்மா என்று நிரூபிக்கப்பட்டது. அதே பிரமாத்மா தான் பிரசித்தி பெற்ற மற்றும் நாம் பார்க்கும் ஆகாசம் என்று கூறப்படுகிறது. எனவே அந்தர்யாமியாக இதயத்தில் வசிப்பவர் பரமாத்மாவாக இருக்க முடியாது என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகம் இந்த அதிகாரசபையில் தீர்ந்தது.

தர்க்கரீதியாக விவாதத்திற்கு வரும் உபநிஷத உரையானது சந்தோக்யோபனிஷத்தின் 8வது அத்தியாயமான தஹரவித்யாவைக் கையாளும் கடைசி அத்தியாயமாகும், இது மோட்சத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையாகும்.

2 கண்கள், 2 காதுகள், 2 மூக்குகள், வாய் மற்றும் இரண்டு கழிவறைகள் ஆகிய ஒன்பது திறப்புகள் அல்லது வெளியேறும் புள்ளிகளைக் கொண்ட மனித உடல் & பகவான் ஸ்ரீமன் நாராயணன் வசிக்கும் இடம் என்று இந்த உபநிடத உரை கூறுகிறது. இந்த உடல் பிரம்மபுரா என்று அழைக்கப்படுகிறது. இந்த இறைவனை தியானிக்க வேண்டும் என்றும், பகவான் ஸ்ரீமத் நாராயணனுக்குள் இருக்கும் எட்டு அருளும் பண்புகளையும் தியானிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மனித உடலின் இதயத்தில் அவர் வசிக்கும் இடம் சிறியதாகவும் தாமரை வடிவமாகவும் இருப்பதால் அவர் தஹராகாஷா அல்லது வெறுமனே தஹாரா என்று அழைக்கப்படுகிறார். தஹரா என்றால் மிகவும் சிறியது. எட்டு சுப குணங்கள்.

1. அபஹதபாப்மா – பாவமற்ற அல்லது களங்கமற்ற

2. விஜரா: – முதுமை இல்லாதது அல்லது முதுமையால் துன்பப்படாமல் இருப்பது.

3. விம்ருத்யு: – மரணத்திற்கு உட்பட்டது அல்ல.

4. விசோகா:- எந்த விதமான துக்கத்திற்கும் ஆளாகாதவர்.

5. விஜித்சா:- பசி இல்லை

6. அபிபாச:- தாகம் இல்லை.

7. சத்யகாமா:- ஒவ்வொரு ஆசையையும் நிறைவேற்றும் திறன் கொண்டது.

8. சத்ய சங்கல்பம்: தான் விரும்பிய அனைத்தையும் செய்யும் திறன் கொண்டவர்.

இந்த எட்டு குணாதிசயங்கள் “குணாஷ்டகம்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த தஹர ஆகாஷம் நாம் காணும் வானத்தைப் போல ஏராளமாக உள்ளது என்றும் அவர் போக்யம், போகஸ்தானம், போகோபகரணம் மற்றும் போக்தா போன்றவற்றிற்கு துணை என்றும் உபநிஷதம் மேலும் கூறுகிறது.

இங்கே போக்தா என்பது ஜீவாவாக இருக்கும் அனுபவிப்பவர்,

போக்யா என்பது இன்பத்தின் பொருள்

போகஸ்தானம் இன்பம் தரும் இடம்

போகோபகரணம் – இன்பத்திற்குப் பயன்படும் விஷயங்கள்.

இவ்வுலகில் மனிதன் எதை விரும்புகிறானோ அது தஹரா அக்ஷனுக்குள் இருக்கிறது, அதாவது ‘பரமாத்மா’வாக இருக்கும் “தஹராகாஷா” இன்பத்தின் உச்சப் பொருள்.

இந்த உபநிடதம் மேலும் கூறுகிறது, தஹராகாசத்திலும், எட்டு குணங்களிலும் தியானம் செய்பவர் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தியை அடைகிறார். ஸ்ரீ வைகுண்ட திவ்யலோகத்தை அடைந்த பிறகு, ‘முக்தாத்மா’ க்காக, புண்ய மற்றும் பாபாவை உள்ளடக்கிய கர்மாவின் காரணமாக சம்சார பந்தத்தில் இருக்கும் போது செயலற்ற நிலையில் இருக்கும் மேற்கண்ட எட்டு “குணங்கள்” மலரும், அதாவது முக்தாத்மா இந்த 8 குணங்களையும் உடையவர் என்று அர்த்தம். பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்குச் சமமாகிறார். முக்தாத்மா எங்கும் எங்கும் பயணம் செய்ய சுதந்திரமாகி, பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் உடலாகவும், பரமாத்மாவுக்குக் கீழ்ப்பட்டதாகவும் பார்க்கிறது. முக்தி பெற்ற ஆன்மாவாகிய முக்தாத்மாவுக்குத் தன் தாய், தந்தையர்களைப் பார்க்கும் சுதந்திரம் உண்டு. நான்கு தலை பிரம்மாவின் இருப்பிடமான சத்யலோகத்தில் தொடங்கி “பாதாலா” வரை 14 உலகங்களை உள்ளடக்கிய இந்த சம்சாரத்தில் அவரது முந்தைய எண்ணற்ற பிறவிகளின் சகோதரர்கள் மற்றும் பிற உறவினர்கள். 14 உலகங்களின் கொத்து ஒரு பிரம்மாண்டம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் ஸ்ரீமன் நாராயணனின் லீலா விபூதியில் எண்ணற்ற பிரம்மாண்டங்கள் உள்ளன. லீலா விபூதி என்பது ஸ்ரீமன் நாராயண நித்ய விபூதியின் விளையாட்டு மைதானம் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம், இது லீலா விபூதியை விட மூன்று மடங்கு பெரியது. விபூதி என்றால் செல்வம். ஒருவனுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அவனுடைய விபூதியைப் போலவே “லீலா விபூதி” மற்றும் “நித்ய விபூதி” ஆகியவையும் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்குச் சொந்தமானவை. லீலா விபூதி என்பது ஸ்ரீமன் நாராயண நித்ய விபூதியின் விளையாட்டு மைதானம் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம், இது லீலா விபூதியை விட மூன்று மடங்கு பெரியது. விபூதி என்றால் செல்வம். ஒருவனுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அவனுடைய விபூதியைப் போலவே “லீலா விபூதி” மற்றும் “நித்ய விபூதி” ஆகியவையும் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்குச் சொந்தமானவை. லீலா விபூதி என்பது ஸ்ரீமன் நாராயண நித்ய விபூதியின் விளையாட்டு மைதானம் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம், இது லீலா விபூதியை விட மூன்று மடங்கு பெரியது. விபூதி என்றால் செல்வம். ஒருவனுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அவனுடைய விபூதியைப் போலவே “லீலா விபூதி” மற்றும் “நித்ய விபூதி” ஆகியவையும் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்குச் சொந்தமானவை.

இங்கு “தஹராகாஷா” என்பது ஜீவா, வானமா அல்லது பரமாத்மா என்ற சந்தேகம் எழுகிறது. வானம் பூத ஆகாஷா என்று அழைக்கப்படுகிறது. பூர்வபக்ஷி தஹராகாஷம் பூதாகாஷம் என்று கூறுகிறது, ஏனெனில் இரண்டும் ஆகாஷாவின் பெயரைக் கொண்டுள்ளன, மேலும் ஆகாஷா என்ற சொல் பூத ஆகாஷத்தில் மட்டுமே பிரபலமானது மற்றும் பிரபலமானது. மேற்கூறிய போக்யம், போகோபகரணம், போகஸ்தானம் மற்றும் போக்த்ரியுவர்காவை உள்ளடக்கிய பிரபஞ்சம் முழுவதையும் ஆதரிப்பதே தஹர ஆகாஷம் என்று உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளதால், ‘தஹர ஆகாஷா’ பூத ஆகாஷமாக இருக்க முடியாது என்று சூத்ரகாரர் இந்த வாதத்தை நிராகரிக்கிறார். ‘பூத ஆகாஷா’ விஷயத்தில் சாத்தியம்.

பிற்பகுதியில் இந்திரனிடம் கூறப்படும் பிரஜாபதியின் (சதுர்முக) வார்த்தைகளின்படி, ஏற்கனவே செயலற்ற நிலையில் இருந்த எட்டு குணங்கள் மலரும் இடத்தில் சம்ப்ரசாதா என்று அழைக்கப்படும் ஜீவன் மோட்சத்தை அடைகிறான் என்று கூறப்படுவதால், ‘தஹரா ஆகாஷா’ ஜீவாவாக இருக்கலாம் என்று எதிரியும் உணர்கிறான். இந்த உபநிடதமும் இந்தப் பகுதியும் ‘பிரஜாபதி வாக்யா’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “தஹரா உத்தரேப்யா” என்று படிக்கும் சாத்தியத்தை சூத்ரகாரம் நிராகரிக்கிறது. இந்த சூத்திரத்தின் பொருள் “தஹரா:” அதாவது தஹரா ஆகாஷா என்பது ‘பரப்ரஹ்மன்’ அல்லது ‘பரமாத்மா’ என்பதால்,

உத்தரேப்யா: இந்த உபநிடதத்தின் அடுத்த பகுதி, தஹரா அக்ஷே முழு பிரபஞ்சத்திற்கும் ஆதரவாகவும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் மேலான கட்டுப்பாட்டாளராகவும் உள்ளது என்றும் இந்த அம்சங்கள் ஜீவாவின் விஷயத்தில் நிராகரிக்கப்படுகின்றன என்றும் கூறுகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ‘முக்தாத்மா’வில் எட்டு குணங்கள் மலர்வது கூட பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருளாலும் விருப்பத்தாலும் மட்டுமே அதுவும் சாத்தியமில்லை.

6. இந்த 3வது பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் “பிரமிதா அதிகாரம்” எனப்படும். இந்த அதிகாரத்தில் 4 சூத்திரங்கள் உள்ளன. முந்தைய அதிகாரத்துடன் தர்க்கரீதியான தொடர் இணைப்பு விளக்கப்பட்டுள்ளது. தஹரா அதிகாரத்தில், உபாசகர் அல்லது தியானியின் இதயத்தில் வசிக்கும் பரமாத்மாவான தஹராகாஷா மிகவும் சிறியவர் என்றும், இது தியானத்திற்காக சொல்லப்பட்டது என்றும் கூறப்பட்டது. இந்த மிகச் சிறிய அளவு ஜீவாவுக்கும் பொருந்தும், எனவே இதயத்தில் வசிப்பவர் ஜீவாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இந்த சந்தேகத்தை நீக்க இந்த அதிகாரம் அவசியமாகிறது அல்லது பொருத்தமானதாகிறது. இந்தச் சங்கதியை வேறொரு வகையிலும் விளக்கலாம். முந்தைய தஹராதி கரணத்தில் ‘பரமாத்மா’ மிகவும் சிறியது என்று கூறப்பட்டது.

ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே கவனிக்க வேண்டும் மற்றும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஐந்து வடிவங்கள் உள்ளன, அவை பின்வருமாறு.

(அ) ​​பரா – இந்த வடிவம் ஸ்ரீவைகுண்ட திவ்யலோகத்தில் அல்லது பரமபதத்தில் உள்ளது, இது ஆதிசேஷா, கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்யாக்களால் மற்றும் முக்தி பெற்ற ஆத்மாக்களால் அனுபவிக்கப்படுகிறது. இந்த பாரா வடிவத்திற்கு ‘பரவாசுதேவா’ என்று பெயர். அஷ்டாக்ஷர ஜபம் செய்யும் போது இந்த வடிவத்தை தியானிக்க வேண்டும். பரவாசுதேவர் தனது மனைவியான மகாலட்சுமியுடன் எப்போதும் இருக்கிறார்.

(ஆ) வியூஹா – இந்த வடிவம் பாற்கடலான க்ஷீரப்தியில் உள்ளது. வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னா, அநிருத்தன் என்று நான்கு வ்யூஹ வடிவங்கள் உள்ளன. பரவாசுதேவா மற்றும் வ்யூஹ, வாசுதேவா இடையே உள்ள வேறுபாடு நடைமுறையில் பூஜ்யமாக உள்ளது. பிரளய காலத்தில் பிரபஞ்சம் அழிந்ததற்கு சங்கர்சன வடிவில் உள்ள பரமாத்மாவே காரணம்.

பிரத்யும்ன வ்யூஹ வடிவில் உள்ள பரமாத்மா பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு காரணமாக உள்ளார். அநிருத்த வியூஹ வடிவில் உள்ள பரமாத்மா பிரபஞ்சத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்.

(c) விபவ – பகவான் ஸ்ரீராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்கள் விபவ வடிவங்கள்.

(ஈ) அர்ச்சா – ஸ்ரீமன் நாராயண பகவான் அனைத்து கோவில்களிலும், வீடுகளிலும் விக்ரஹ வடிவில் அல்லது சாலிகிராம வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார், மேலும் இந்த வடிவம் அர்ச்ச வடிவம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒருவரால் வணங்கப்படுகிறது.

(இ) அந்தர்யாமி – அந்தர்யாமியின் வடிவில் உணர்வுள்ளவராகவோ அல்லது உணராதவராகவோ இருந்தாலும், இறைவன் ஒவ்வொரு உயிரினத்திலும் வசிக்கிறார், அவர் ‘உள் ஆத்மா’ அல்லது ‘உயர்ந்த ஆன்மா’ அல்லது ‘உள் கட்டுப்பாட்டாளர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்த அந்தர்யாமி வடிவம் இரண்டு வகைப்படும். முதல் வகை ஸ்வரூப அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறது, இது எறும்புகள், கொசுக்கள், ஈக்கள், பாக்டீரியா மற்றும் பிற உயிரினங்கள் உட்பட அனைத்து உயிரினங்களிலும் உள்ளது. “ஸ்வரூபம்” என்பது உள்ளார்ந்த இயல்பு.

இரண்டாவதாக விக்ரஹ அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறது, இதில் பகவான் ஸ்ரீமன் நாராயணன் உபாசகர்களின் இதயத்தில் ஒரு திட்டவட்டமான வடிவத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் இந்த வடிவம் உபாசகர்களின் கட்டைவிரல் அளவில் உள்ளது, ஏனெனில் ‘உபாசகர்’ பரமாத்மாவின் திட்டவட்டமான மற்றும் மங்களகரமான வடிவத்தில் தியானிக்க வேண்டும். தியானம் எல்லாம் சாத்தியமில்லை. ஸ்வரூப அந்தர்யாமி மற்றும் விக்ரஹ அந்தர்யாமி உட்பட மேலே உள்ள அனைத்து வடிவங்களிலும், பகவான் ஸ்ரீமன் நாராயணர் எப்போதும் தனது மனைவியான மகாலட்சுமியுடன் இருக்கிறார். இந்த அதிகாரத்திற்கு வரும்போது, ​​விஷயவாக்கியம் கடோபநிஷத்தில் இருந்து வருகிறது, இதில் யம பகவான் நாச்சி கேடங்களை பின்வருமாறு கற்பிக்கிறார்.

உபாசகரின் இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மா, உபாசகரின் கட்டை விரலின் அளவு கொண்டவர். நேற்று இருந்த, இன்று இங்கு இருக்கும், நாளை இருக்கப்போகும் அனைத்து உயிர்களுக்கும் அவன் தலைவன். பரமாத்மா உபாசகர் மீது கொண்ட ஆழ்ந்த பாசத்தின் காரணமாக உடலின் குறைபாடுகள் அல்லது குறைபாடுகளை புறக்கணிக்கிறார் மற்றும் வெறுப்பை உணரவில்லை.

உபாசகரின் உடலில் வசிப்பவர் ஜீவா அல்லது பரமாத்மா என்ற கேள்வி இங்கு எழுகிறது. மற்றோர் உபநிடதத்தில் அனைத்து புலன்கள் அல்லது இந்திரியங்களின் தலையாயிருக்கும் ஜீவன் கட்டைவிரல் அளவு மற்றும் உடல் முழுவதும் நகர்கிறது என்று கூறப்படுவதால் மட்டுமே அது ஜீவா என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

சூத்ரகாரர் இந்த வாதத்தை ஏற்கவில்லை, அவர் பரமாத்மா மட்டுமே என்று கூறி, “சப்தாதேவ ப்ரமிதஹ்” என்ற சூத்திரத்தை வழங்குகிறார்.

பிரமிதா: கட்டைவிரல் அளவுள்ள பொருள் ‘பரமாத்மா’ ஏனெனில் ‘சப்தாதேவா’ – இந்த உபநிடதத்தில் இறைவன் கடந்த காலத்தில் இருந்த அனைத்து உயிரினங்களுக்கும் எஜமானர் என்று கூறப்பட்டுள்ளது, அவை தற்போது உள்ளன மற்றும் எதிர்காலத்தில் உள்ளன.

இந்த அதிகாரத்தில் இரண்டாவது சூத்திரம் “ஹ்ருத்யபேக்ஷயதௌ மனுஷ்யாதிகாரத்வாத்”. உபாசகரின் உடலில் பரமாத்மா கட்டைவிரல் அளவில் இருக்கிறார் என்று கூறுகிறது, ஏனெனில் அவரது உடலில் அவ்வளவு இடம் மட்டுமே உள்ளது. இந்த குறிப்பிட்ட உண்மை சில சந்தேகங்களுக்கு இடமளித்தது, இது சூத்ரகாரரால் நீக்கப்பட்டது. எனவே சூழலுக்கு அப்பாற்பட்ட பதராய முனிவரான சூத்ரகாரரால் மூன்று ‘அதிகாரங்கள்’ அறிமுகப்படுத்தப்பட வேண்டியிருந்தது.

இதில் முதல் அதிகாரம் “தேவதாதிகாரணம்” இது இந்திரன் உட்பட தேவதைகள் என்று அழைக்கப்படும் வானவர்கள் உபாசனை அல்லது தியானம் செய்து மோட்சத்தை அடைய தகுதியுடையவர்கள் என்பதை நிறுவுகிறது.

இதற்கு ஐந்து சூத்திரங்கள் உள்ளன. நிரீஷ்வர மீமாம்சகனாகிய இந்த அதிகரனுக்கு பூர்வபக்ஷி கூறுகிறாள், வானவர்களான தேவதைகள் சரீரம் இல்லாததால் உபாசனை செய்யத் தகுதியற்றவர்கள்.

தேவதைகளுக்கு ஐந்து விஷயங்கள் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள் – உடல், யாகங்களில் செய்யப்படும் சலுகைகளை ஏற்றுக்கொள்வது, ஒரே நேரத்தில் பல யாகங்களில் தங்கள் இருப்பை உருவாக்குவது, பிரசாதங்களில் மகிழ்ச்சி அடைவது மற்றும் பலன்களை வழங்குவது.

உபாசனைக்கு தேவையான இரண்டு அடிப்படை முன்நிபந்தனைகள் – ‘ஆர்த்தித்வம்’ மற்றும் ‘சாமர்த்தியம்’ என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள். சாமர்த்தியம் என்பது உபாசனை செய்வதற்கு பௌதிக உடலின் இருப்பு. ஆர்த்தித்வம் என்பது மோட்சத்தை அடைவதற்கான அடிப்படை ஆசை. அவர்களுக்கென்று ஸ்தூல சரீரம் இல்லாததால், அவர்களுக்கு ‘ஆர்த்தித்வம்’, ‘சாமர்த்தியம்’ கிடையாது. அதனால் அவர்கள் உபாசனை செய்ய தகுதியற்றவர்கள்.

இந்த வாதத்தை சூத்ரகாரர் தனது இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“ததுபர்யாபி பத்ராயணஹ் ஸம்பவாத்”. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றிய உபாசனை அல்லது தியானம் மற்றும் தகுதியான உபர்யாபி – மனிதர்களை விட மேலான ‘தேவதாக்களுக்கு’ கூட உண்டு என்கிறார் பாதராயணன். ஏனெனில், ‘சம்பவத்’ – தேவதாக்களிலும் ‘அத்தித்வா’ மற்றும் ‘சாமர்த்தியம்’ ஆகிய இரண்டு அடிப்படை முன்நிபந்தனைகள் சாத்தியமாகும். பல வேத நூல்களில், தேவதாக்கள் பௌதிக உடல்களைக் கொண்டிருப்பதாகவும், அதனால் ‘சாமர்த்தியம்’ இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திரனின் கையில் வஜ்ராயுதம் (இடிமுழக்கம், ஆயுதம்) இருப்பதாக ஒரு நூல் கூறுகிறது. உடல் இல்லாமல் கை இருக்க முடியாது.

‘தேவதாக்களும்’ ‘தபத்ரயாஸால்’ பாதிக்கப்பட்டுள்ளனர். தபத்ரயங்கள் ‘ஆத்யாத்மிகா’, ‘ஆதிபௌதிகா’ மற்றும் ‘ஆதிதைவிகா’.

அத்யாத்மிகா என்பது நோய்களால் உடலில் ஏற்படும் துன்பம் மற்றும் பல காரணிகளால் மனதில் ஏற்படும் துன்பம். ஆதிதைவிகா என்பது பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் துன்பம் ஆகும். ஆதிபௌதிகா என்பது சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் துன்பம். மோகத்தை அடைந்தால் இந்த தாபத்ரயங்கள் தானாகவே மறைந்துவிடும். எனவே தேவதைகள் இயல்பாகவே மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் அதாவது அவர்களுக்கு ‘ஆர்த்தித்வம்’ உள்ளது. எனவே அவர்கள் உபாசனை செய்ய தகுதியுடையவர்கள்.

சில சுவாரசியமான கேள்விகள் இங்கே எழுப்பப்படுகின்றன, அவை சூத்திரகாரரால் பதிலளிக்கப்படுகின்றன.

‘தேவதைகள்’ உடல்களைக் கொண்டிருந்தால், ஒரே உடலுடன் ஒரு தேவதை ஒரே நேரத்தில் பல யாகங்களில் எப்படி இருக்க முடியும். ஆன்மீக மற்றும் யோக சக்திகளைக் கொண்ட தேவதைகள் ஒரே நேரத்தில் பல உடல்களைக் கொண்டிருக்கலாம் என்று சூத்ரகாரர் இந்த கேள்விக்கு பதிலளிக்கிறார். சௌபரி முனிவரின் உதாரணம் இந்தச் சூழலில் கூறப்படுகிறது. இந்த முனிவர், தனது தவம் அல்லது தபஸ் மூலம் தனது ஆன்மீக மற்றும் யோக சக்திகளின் காரணமாக, மன்னன் மன்னனின் 50 மகள்களை மணந்து அவர்களுடன் வாழ ஒரே நேரத்தில் 50 உடல்களை ஏற்றுக்கொண்டார்.

அடுத்த கேள்வி என்னவென்றால், ஒரு தேவதை உடலை வைத்திருந்தால், அது மரணத்திற்குரியது, அது ஒரு காலத்தில் அல்லது வேறு நேரத்தில் செல்ல வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்திரன் இறந்துவிட்டால், இந்திரனைக் கையாளும் வேத நூல்கள் அர்த்தமற்றதாகிவிடும், இதில் வேத நூல்களின் நித்தியம் இழக்கப்படுகிறது. பதில் “இந்திரன்” என்ற சொல் தனிப்பட்ட நபரைக் குறிக்கவில்லை, ஆனால் அது பதவி அல்லது பதவியைக் குறிக்கிறது. இது அக்ரிதிவாச்சகம் எனப்படும். எனவே இந்திரன் பதவியில் ஒருவர் போனால் இன்னொரு தனிமனிதன் உடனே இந்திரன் ஆவான். இது “ராஜா இறந்துவிட்டார், ராஜா வாழ்க” என்ற புகழ்பெற்ற பழமொழியைப் போன்றது. எனவே வேதங்களின் நித்தியமும் அர்த்தமும் அப்படியே உள்ளது.

மூன்றாவது கேள்வி என்னவென்றால், வேதங்கள் அபௌருஷேயமாக இருக்கும்போது (ஸ்ரீமன் நாராயணன் உட்பட எந்த உடலாலும் இயற்றப்படவில்லை) வேதங்களின் சில பகுதிகளை எப்படி ‘வசிஷ்டஹஸுக்தம்’ மற்றும் ‘விஸ்வாமித்ர சூக்தம்’ என்று அழைக்க முடியும்?.

பதில் என்னவென்றால், வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள் அவர்களின் ஆன்மீக சக்திகளின் காரணமாக வேதங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளைப் பார்ப்பவர்கள், எனவே அந்த பகுதிகள் அவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. இது நியூட்டனின் இயக்க விதிகள், ஆர்க்கிமிடீஸின் கோட்பாடு போன்றது. நியூட்டன் கண்டுபிடித்து, முன்வைத்து, உலகுக்கு அறிவிப்பதற்கு முன்பே இயக்க விதிகள் இருந்தன.

எனவே வேதங்கள் நித்தியமானவை, ஆரம்பம் இல்லாதவை; அவை பழுதற்றவை, ஒவ்வொரு எழுத்தும் நமக்கு அதிகாரம். படைப்பின் போது பகவான் ஸ்ரீமன் நாராயணன் வேதங்களை நினைவு கூர்ந்து, பிரபஞ்சத்தைப் படைத்து, சதுர்முகப் பிரம்மாவைத் தனது ‘நாபிகமலா’வில் இருந்து படைத்து அதையே உபதேசிக்கிறார்.

தேவதா அதிகாரத்திற்கு அடுத்ததாக, மூன்று சூத்திரங்களைக் கொண்ட மத்வாதிகரணம் வருகிறது. தேவதாக்களில் வசுக்கள், ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்கள் என்று ஒரு சிறப்புப் பிரிவு உள்ளது. வசுக்கள் ஏற்கனவே பிரம்மன் வடிவில் உள்ளனர், அவர்களும் உபாசனை அல்லது தியானம் செய்து மோட்சத்தை அடைவது அவசியமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மதுவித்யா என்று பெயர். முதல் இரண்டு சூத்திரங்களில் ஜைமினி முனிவர் அவர்கள் ஏற்கனவே பிராமண வடிவில் இருப்பதால் உபாசனை செய்ய தகுதியற்றவர்கள் என்று கூறுகிறார். முனிவர் பதராயண மேற்கண்ட கருத்தை மறுத்து, பல கல்பங்கள் கழிந்த பிறகு படிப்படியாக மோட்சத்தை அடைய உபாசனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அவர்களின் முக்தி ‘க்ரமமுக்தி’ என்று அழைக்கப்படுகிறது, அதாவது “மோட்சத்தின் படி நிலை”. முதல் இரண்டு சூத்திரங்கள் “பூர்வபக்ஷ சூத்திரங்கள்” என்றும் மூன்றாவது சூத்திரம் “சித்தாந்த சூத்திரம்” என்றும் அழைக்கப்படுகிறது.

சித்தாந்த சூத்திரம் “பவந்து பதராயண அஸ்திஹி” அதாவது பதராயண முனிவர் வசுக்களும் உபாசனை செய்ய தகுதியானவர்கள் என்று கூறுகிறார்.

அடுத்த அதிகாரம் ‘அபசுத்ராதிகரணம்‘ எனப்படும். இதற்கு ஏழு சூத்திரங்கள் உள்ளன.

இந்த அதிகாரத்தில் ‘உபநயன சம்ஸ்காரம்’ செய்யத் தகுதியில்லாதவர்கள் வேதம் கற்கத் தகுதியற்றவர்களென்றும், அதனால் அவர்கள் இம்மாதிரியான உபாசனைகளைச் செய்வதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

32 பிரம்ம வித்யாக்களில் ஒன்றான ‘சம்வர்க வித்யா‘வைப் போதித்த ரைக்வா முனிவரால், மிகவும் தொண்டு செய்யும் குணம் கொண்ட ஜனாஸ்ருதி என்ற மன்னன் “சூத்திரன்” என்று அழைக்கப்பட்டதால் சந்தேகம் எழுந்தது. இந்த ஆதிகர்ணத்திற்கான உபநிடத உரை சாந்தோக்யோபநிஷத்தில் இருந்து வந்தது. ஜனஸ்ருதி ஒரு குறிப்பிட்ட இரவில் தனது அரண்மனையின் திறந்த மாடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். (ஹம்சவ்ஸ்) என்று அழைக்கப்படும் இரண்டு அன்னங்கள் அவர் மீது பறந்தன, ஒரு அன்னம் மற்றொன்றிடம் கேட்கிறது, மன்னன் ஜனஸ்ருதி அங்கே ஓய்வெடுப்பதால் அங்கு சத்தம் போட வேண்டாம். மற்ற அன்னம், ஜனாஸ்ருதி ரைக்வா முனிவரா என்று கேட்கிறது, அவர் பிரம்மத்தைப் பற்றி ஆழமான அறிவைக் கொண்டவர். உலகில் உள்ள மக்களிடம் உள்ள அறிவின் கூட்டுத்தொகை ரைக்வாவின் அறிவின் ஒரு துளி மட்டுமே என்று கூறப்படுகிறது. ஜனஸ்ருதி உடனே எழுந்து ரைக்வா முனிவர் எங்கே இருக்கிறார் என்று அறிய தன் வேலைக்காரனை அனுப்பினார். வேலைக்காரன் அவனைக் கண்டுபிடித்து அரசனிடம் சொன்னான். பின்னர் மன்னன் ரைக்வாவை ஏராளமான பரிசுகளுடன் அணுகி, பிரம்மனைப் பற்றிய அறிவை அவருக்குத் தரும்படி வேண்டினான். ரைக்வா முதலில் மறுத்து பின்னர் ஜனஸ்ருதி தனது மகளை ரைக்வாவுக்கு திருமணம் செய்து கொடுத்த பிறகு அவரை ஏற்றுக்கொண்டார். ரைக்வா ஜனாஸ்ருதியை ‘சூத்ரா’ என்று அழைத்தார், ஏனென்றால் ஜனாஸ்ருதிக்கு பிரம்மஞானம் இல்லாததால் மிகவும் வருத்தப்பட்டார். சமஸ்கிருத இலக்கணப்படி ‘சூத்ரா’ என்றால் “மிகவும் துன்பத்தில் இருப்பவன்” என்று பொருள். எனவே ஜனஸ்ருதி உண்மையில் பிறப்பால் ஒரு க்ஷத்ரியர் என்பதையும், அவர் 4வது ஜாதியைச் சேர்ந்தவர் அல்ல என்பதையும் இது நிறுவுகிறது. எனவே, 4வது குலத்தில் பிறந்தவர்கள் உபாசனை செய்ய தகுதியற்றவர்கள். முதல் சூத்ரம் “சுகஸ்ய ததநாதரஸ்ரவநாத் தத் அதத்ரவநாத் சூச்யதே ஹி.

இந்தப் பாதத்தில் உள்ள அடுத்த அதிகாரமும் கடைசி அதிகாரமும் அர்த்தாந்தர வியாபதேசாதிகரணம் எனப்படும்.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு சந்தோக்யோபநிஷத்தின் எட்டாவது அத்தியாயத்தில் உள்ள ஒரு பகுதி. இந்த பத்தி கீழே உள்ளது:

ஆகாஷ:ஹவை நாம ரூபயோ: நிர்வஹித தே யதாந்தர தத் ப்ரஹ்மதத் அம்ருதம் ச: ஆத்மா”.

ஆகாஷா என்ற சொல் மக்தாத்மாவை (முக்தி பெற்ற ஆன்மாவை) குறிக்கிறது என்றும் பரமாத்மாவை அல்ல என்றும் பூர்வபக்ஷி வாதிடுகிறார், ஏனெனில் அவர் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் நாம ரூப வியாகரணத்தை (பெயர் மற்றும் வடிவத்தை வழங்குதல்) செய்ய வல்லவர். “ஆகாஷ: அர்த்தாந்தர வியாபதேசத்” என்ற சூத்திரத்தில் இந்த சர்ச்சை சூத்ரகாரரால் மறுக்கப்படுகிறது. ஆகாஷ என்ற சொல் பரமாத்மா ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கிறது, ஏனெனில் அவர் ஒருவரே நாமரூப வ்யாகரணத்தைச் செய்யக்கூடியவர்.

இந்த அதிகாரத்தில் எஞ்சியிருக்கும் சூத்திரங்கள் மேற்கண்ட கருத்தை வலுப்படுத்துகின்றன. மூன்றாவது பாதம் முடிவுக்கு வருகிறது.

முதல் அத்தியாயம் ‘சமன்வய அத்யாயா‘ என்றும் நான்காவது பாதம் ‘ஸ்பஷ்ட தர ஜிவாதிலிங்க பாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் முனிவர் பதராயண உபநிடதப் பகுதிகளைக் கையாள்கிறார், இது பிரபஞ்சத்திற்கு யார் காரணம் என்பதை விவாதித்து தீர்மானிக்கிறது. உபநிடதப் பகுதிகள் அனைத்தும் ஸ்ரீமந் நாராயணனை நோக்கியே சுட்டிக் காட்டுகின்றன, அவர் உபதானகரனாகவும் (பொருள் காரணமாகவும்), நிமித்தகரனாகவும் (செயல்காரணமாகவும்) இருக்கிறார், மேலும் அவர் சககாரிகரன் (இன்ஸ்ட்மென்ட் காரணம்) என்றும் சொல்லத் தேவையில்லை.

இதைப் பற்றி குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லை என்றாலும், ‘ஸ்பஷ்ட தரா’ என்ற வார்த்தை மிகவும் தெளிவானது. பிரகிருதி, பிரதாபம், அனுமானிகா மற்றும் அஷப்தா போன்ற பல பெயர்களைக் கொண்ட ஆதிப் பொருள்தான் பிரபஞ்சத்திற்குக் காரணம் என்று கூறும் சாங்கிய தத்துவத்தின் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் உபநிடதப் பகுதிகளை இந்த பாதம் கையாள்கிறது என்றும் கூறப்படுகிறது. சாங்கிய அமைப்பைப் பிரதிபலிக்கும் இந்த உபநிசதப் பகுதிகள் சாயனுசாரி வாக்கியங்கள் அல்லது நிழல் வாக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வாக்யா என்றால் உபநிடதத்தின் உரை அல்லது பகுதி என்று பொருள். இந்தப் பாதத்தில் எட்டு அதிகாரங்கள் உள்ளன.

முதல் இரண்டு அதிகாரங்கள் கபிலரால் நிறுவப்பட்ட நிரீஷ்வர சாங்கிய அமைப்பை மறுக்கின்றன. இந்த அமைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள தத்வாக்கள் அல்லது வகைகளின் எண்ணிக்கையை மூன்றாம் அதிகாரம் மறுக்கிறது. நான்காவது அதிகாரம், “அவ்யகிருத” என்ற சொல் பொதுவாக ஆதிப்பொருள் என்று பொருள்படும், அது பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கிறது என்ற உண்மையை நிறுவுகிறது.

தொடக்கத்தில் இருந்து 5வது மற்றும் 6வது இடத்தில் இருக்கும் அடுத்த இரண்டு அதிகாரங்கள், பத்தஜீவா எனப்படும் சம்சாரத்தின் எல்லையில் உள்ள ஜீவா அல்லது ஆத்மா என்ற வாதத்தை மறுக்கின்றன. பிரபஞ்சம். பிரம்மன் அல்லது பரமாத்மா என்பது பிரபஞ்சத்திற்கு நிமித்தகரணமே தவிர உபதான கரணமல்ல என்று கூறும் கடைசி இரண்டு அதிகாரங்கள், அதாவது சேஷ்வர சாங்கிய தத்துவத்தின் 7வது மற்றும் 8வது மறுப்பு.

முதல் அதிகாரம் ‘அனுமானிகாதிகாரணம்’ எனப்படும். விவாதத்திற்கு வரும் உபநிடத உரை, கடோபநிஷத்தில் யமனுக்கும் நச்சிகேதாவுக்கும் இடையிலான உரையாடலாகும். யம பகவான் நசிகேத பிரம்மனைப் பற்றிய அறிவை விரிவாகக் கற்பிக்கிறார்.

தனது போதனைகளில் ஒரு கட்டத்தில், இந்த மனித உடல் ஒரு ‘ரதா’ அல்லது தேர் என்று யமன் கூறுகிறார். சாரதி புத்தி (புத்தி.) பயணிப்பவர், இந்த ரதத்தில் ஜீவன், அதாவது புலன்கள். இந்திரியங்கள் என்பது தேர் இழுக்கும் குதிரைகள். குதிரைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஓட்டுநரின் கையில் உள்ள கடிவாளமே மனம். விஷயங்களான இன்பப் பொருள்கள் குதிரைகள் குதிக்க விரும்பும் திசைகளாகும். ஞானேந்திரியங்கள் எனப்படும் ஐந்து புலன்கள் உள்ளன. காதுகளுக்கு ஒலி, தோலுக்குத் தொடு, கண்களுக்கு நிறம், நாவுக்குச் சுவை, மூக்குக்கு மணம் ஆகியவையே விசயங்கள் அல்லது இன்பப் பொருள்கள்.

மனித உடலை ஒரு தேருடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு (இந்த ஒப்பீடு ரூபகா என்று அழைக்கப்படுகிறது), யமன் நசிகேதனிடம் ஒன்றன் பின் ஒன்றாக அல்லது ஒன்றுக்கு மேலான ஒன்றைக் கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்களை ஒரு உபாசகர் (தியானம்) சொல்கிறான். மோட்சத்தை அடைய பக்தியோகம். கட்டுப்படுத்தப்பட வேண்டிய புலன்களைக் காட்டிலும், முதலில் கட்டுப்படுத்தப்பட வேண்டிய விஷயம், விசயங்கள் மிக முக்கியமானவை. விஷயங்களுக்கு மிகவும் முக்கியமானது, கட்டுப்படுத்தப்பட வேண்டிய மனது, ஏனென்றால் விஷயங்கள் தனிப்பட்டவற்றிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், மனம் அவற்றைப் பற்றி சிந்திக்கக்கூடும். எனவே மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். அடுத்ததாக கட்டுப்படுத்த வேண்டியது புத்தி அல்லது புத்தி. புத்திக்கு மிகவும் முக்கியமானது ஜீவா, சுயம். ஜீவாவுக்கு அடுத்தபடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டியது உடலாகும், ஏனென்றால் உடல் முழுமையான ஆரோக்கியத்துடன் இருந்தால் உபாசனா அல்லது ஆழ்ந்த தியானம் மட்டுமே சாத்தியமாகும். இந்த உபநிடதத்தில் இந்த உடல் அவ்யக்தா என்று அழைக்கப்படுகிறது. அடுத்த முக்கியமானவர் உச்ச ஜீவியம். பரமாத்மாவைக் கட்டுப்படுத்துவது என்பது அவரது தாமரை பாதங்களில் சரணாகதி செய்வதன் மூலம் அவரது அருளைப் பெறுவதாகும், ஆனால் அவரது அருளால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. இந்த கட்டுப்பாட்டு வரிசையே ‘வசீகர்ய பரம்பரா’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிரீஸ்வர சாங்கியமான நிரீஷ்வர சாங்கியரின் கருத்து என்னவென்றால், இந்தச் சூழலில் அவ்யக்தா என்ற சொல் பிரகிருதி அல்லது அனுமானிகா என்ற ஆதிப்பொருளை மட்டுமே குறிக்கிறது மற்றும் இதைவிட உயர்ந்தது ஜீவா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் புருஷனாக. அவரைப் பொறுத்தவரை பிரகிருதி அல்லது அனுமானிகா பிரபஞ்சத்தை ஜீவா முன்னிலையில் உருவாக்குகிறது. இந்த கலவை பிரகிருதி புருஷம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவருடைய அருளால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. இந்த கட்டுப்பாட்டு வரிசையே ‘வசீகர்ய பரம்பரா’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிரீஸ்வர சாங்கியமான நிரீஷ்வர சாங்கியரின் கருத்து என்னவென்றால், இந்தச் சூழலில் அவ்யக்தா என்ற சொல் பிரகிருதி அல்லது அனுமானிகா என்ற ஆதிப்பொருளை மட்டுமே குறிக்கிறது மற்றும் இதைவிட உயர்ந்தது ஜீவா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் புருஷனாக. அவரைப் பொறுத்தவரை பிரகிருதி அல்லது அனுமானிகா பிரபஞ்சத்தை ஜீவா முன்னிலையில் உருவாக்குகிறது. இந்த கலவை பிரகிருதி புருஷம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அவருடைய அருளால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. இந்த கட்டுப்பாட்டு வரிசையே ‘வசீகர்ய பரம்பரா’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிரீஸ்வர சாங்கியமான நிரீஷ்வர சாங்கியரின் கருத்து என்னவென்றால், இந்தச் சூழலில் அவ்யக்தா என்ற சொல் பிரகிருதி அல்லது அனுமானிகா என்ற ஆதிப்பொருளை மட்டுமே குறிக்கிறது மற்றும் இதைவிட உயர்ந்தது ஜீவா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் புருஷனாக. அவரைப் பொறுத்தவரை பிரகிருதி அல்லது அனுமானிகா பிரபஞ்சத்தை ஜீவா முன்னிலையில் உருவாக்குகிறது. இந்த கலவை பிரகிருதி புருஷம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிரீஸ்வர சாங்கிய நிரீஷ்வர சாங்கியம் என்ற எதிரி அல்லது பூர்வபக்ஷியின் கருத்து என்னவென்றால், இந்தச் சூழலில் அவ்யக்தா என்ற சொல் பிரகிருதி அல்லது அனுமானிகா என்ற ஆதிப்பொருளை மட்டுமே குறிக்கிறது மற்றும் இதைவிட உயர்ந்தது ஜீவா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் புருஷனாக. அவரைப் பொறுத்தவரை பிரகிருதி அல்லது அனுமானிகா பிரபஞ்சத்தை ஜீவா முன்னிலையில் உருவாக்குகிறது. இந்த கலவை பிரகிருதி புருஷம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நிரீஸ்வர சாங்கியமான நிரீஷ்வர சாங்கியரின் கருத்து என்னவென்றால், இந்தச் சூழலில் அவ்யக்தா என்ற சொல் பிரகிருதி அல்லது அனுமானிகா என்ற ஆதிப்பொருளை மட்டுமே குறிக்கிறது மற்றும் இதைவிட உயர்ந்தது ஜீவா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சூழலில் புருஷனாக. அவரைப் பொறுத்தவரை பிரகிருதி அல்லது அனுமானிகா பிரபஞ்சத்தை ஜீவா முன்னிலையில் உருவாக்குகிறது. இந்த கலவை பிரகிருதி புருஷம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கருத்தை சூத்ரகாரர் முதல் சூத்திரத்தில் மறுத்துள்ளார், இது “அனுமானிகாமபி ஏகேஷாம் ஏதிச்சேத் ந சரிரரூபகாவிந்யஸ்த க்ரிஹிதே: தர்ஷயதிச்ச” என்று வாசிக்கிறது. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

ஏகேஷம் என்றால் கடோபநிஷத்தில், அனுமாணிக்கம் என்றால் ப்ரதானம் அல்லது பிரகிருதி, அபி என்பது பிரபஞ்சத்தின் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ந என்றால் இந்த பார்வை சரியல்ல, ஏனெனில் சரீர ரூபகா விந்யஸ்த க்ரிஹிதே: அதாவது மனித உடலை இந்த சூழலில் தேருடன் ஒப்பிடப்படுகிறது, க்ரிஹிதே: இந்த சூழலில் குறிப்பிடப்பட்டுள்ள வசீகர்ய பரம்பரையில் அவ்யக்தா என்றால் உடல், தர்ஷயதிச்சா என்றால் இந்த சூழலில் உபநிடதம் என்பது கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்களின் வரிசையைக் குறிக்கிறது.

அவ்யக்தா என்றால் தெளிவாக இல்லை அல்லது பார்க்க முடியாத பொருளைக் குறிக்கிறது. இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், உடல் நமக்குத் தெளிவாகத் தெரியும் போது அதை எப்படி அவ்யக்தா என்று அழைக்க முடியும். உருமாற்றத்திற்கு முன் நிமிட வடிவில் இருக்கும் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகளின் மாற்றமே உடல் என்று கூறுவதன் மூலம் இந்த சந்தேகம் நிவர்த்தி செய்யப்படுகிறது.

எனவே அவ்யக்தம் என்பது உடல் என்பதை நிறுவும் இந்த அதிகாரத்தின் முக்கிய நோக்கம் அடையப்படுகிறது.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் சாமசாதிகாரணம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மூன்று சூத்திரங்கள் உள்ளன. முந்தைய அதிகாரத்துடன் (சங்கதி) தருக்க வரிசை அல்லது இணைப்பு பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தில், பிராதானம் அல்லது பிரகிருதி என்பது சுயாதீனமானது என்பதை நிரூபித்து, அவ்யக்தம் பிரதாபனை அல்லது அனுமானிகத்தைக் குறிக்கவில்லை, ஏனெனில் அது உடலை மட்டுமே குறிக்கிறது. ஸ்வேதாஷ்வதார உபநிடதத்தில் பிரகிருதி முற்றிலும் சுதந்திரமானது என்று கூறப்படுகிறது. எனவே முந்தைய அதிகாரசபையின் தீர்ப்பு சரியாக இருக்காது என்பது சந்தேகம். இந்த சந்தேகத்தை நீக்கி, முந்தைய அதிகாரத்தின் தீர்ப்பை மீட்டெடுக்க இந்த அதிகாரம் படம் வருகிறது.

இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு வரும் உபநிடத உரை ஸ்வேதாஷ்வதார உபநிஷத்தில் இருந்து வருகிறது. மேற்கூறிய உபநிடதத்தின் ஒரு பத்தியில், முதன்மையான பொருளான பிரகிருதி முற்றிலும் சுதந்திரமானது என்று கூறப்படுகிறது, இது நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது, அவை முறையே சிவப்பு, வெண்மை மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளன. தேவர்கள் மற்றும் மனிதர்கள் முதலியன. அஜ என்றால் பிறக்காதது என்று பொருள். எனவே அஜா அல்லது பிரகிருதி இங்கே பிரபஞ்சத்தின் காரணமாக குறிப்பிடப்படுகிறது.

எனவே மீண்டும் நிரீஷ்வர சாங்கிய பூர்வபக்ஷி, பிரகிருதி மட்டுமே ஜீவாவின் முன்னிலையில் பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்று கூறுகிறார். சாமஸவத் அவிசேஷத் என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் இந்த புள்ளி சூத்ரகாரரால் மறுக்கப்படுகிறது. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. சாமசா என்பது ஒரு யாகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பாத்திரமாகும், அதில் ‘சோம லதா’ சாறு வைக்கப்பட்டு, இந்த சாற்றை யாகத்துடன் தொடர்புடைய அனைத்து ரித்விக்களும் குடிக்கிறார்கள்.

எனவே சாமசா என்பது யாகத்தில் பயன்படுத்தப்படும் மரத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தை மட்டுமே குறிக்கிறது. மற்றொரு சூழலில் சமாசா என்பது ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் பாத்திரத்தைக் குறிக்கிறது. ஆனால் சாமசா என்பது பொதுவாக ஒரு பாத்திரம். எனவே சூத்திரத்தின் துல்லியமான பொருள் என்னவென்றால், சாமசா என்பது பொதுவாக ஒரு யாகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தை குறிக்கிறது, அதே போல் இங்கும் அஜா என்பது பிறக்காதது என்று அர்த்தம், மேலும் இந்த அதிகாரத்தின் உபநிடத உரையில் இது சுயாதீனமானது என்று பரிந்துரைக்க எதுவும் இல்லை. பிரபஞ்சத்தை தானே உருவாக்கும் திறன் கொண்டது.

இரண்டாவது சூத்திரத்தில், தைத்திரீய உபநிஷத்தின் கூற்றை மேற்கோள்காட்டி, அஜா, பரமாத்மாவை அதன் காரணமாகக் கொண்டுள்ளது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தில் பரமாத்மாவை அந்தர்யாமியாகவோ அல்லது அதன் உள் ஆத்மாவாகவோ இல்லாத எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை என்பது முன்னரே நிறுவப்பட்டுள்ளது. எனவே, பிரகிருதியும் கூட, பரமாத்மாவையே அந்தர்யாமியாகக் கொண்டுள்ளது. எனவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் பிரம்மத்மகம் அதாவது பரமாத்மா ஒரு ஆத்மா மற்றும் பொருள் உடலாகும்.

இந்த காலாண்டில் 3 வது அதிகாரம் சாங்க்யோப-சங்கிரஹாதிகரணம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மூன்று சூத்திரங்கள் உள்ளன. முந்தைய அதிகாரத்துடன் தர்க்கரீதியான தொடர்பு பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தில், பிரகிருதி அப்ரஹ்மாத்மகம் அல்ல, அது பிரம்மத்மகம் என்று நிறுவப்பட்டது. பிரம்மத்மக என்றால் பரமாத்மாவை அந்தர்யாமியாகவும், அப்ரஹ்மாத்மக என்றால் அந்தர்யாமியாக பரமாத்மா இல்லாததையும் குறிக்கிறது. எனவே அப்ரஹ்மாத்மக தத்துவங்கள் விலக்கப்பட்டு அனைத்து தத்துவங்களும் சப்ரஹ்மாத்மகமாகும்.

ஆனால் பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ள ஒரு கூற்று காரணமாக இது எதிர்க்கப்படுகிறது. இந்த ஆட்சேபனை இந்த அதிகாரத்தில் ஆளப்பட்டது. பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள உபநிடதப் பகுதி இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு உட்பட்டது.

பரமாத்மா என்பது ஐந்து உறுப்புகளுக்கும் ஐந்து அறிவு தரும் புலன்களுக்கும் துணையாக இருக்கிறது. இந்த புலன்களுக்கு இந்த உபநிடதத்தில் பஞ்சஜனம் என்று ஒரு சிறப்புப் பெயர் வழங்கப்படுகிறது. ஐந்து ஞானேந்திரியங்கள் (அறிவு தரும் புலன்கள்) இருப்பதால், இவை ‘பஞ்ச பஞ்சஜனங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அமிர்தம் என்று அழைக்கப்படும் இந்த பரமாத்மாவை அறிந்த ஒரு தனிமனிதனால் இந்த உண்மை தெரிந்தால், அறிபவனும் அமிர்தமாகிறான், அதாவது மோட்சத்தை அடைகிறான். இந்தச் சூழலில் பஞ்சஜனம் என்ற சொல்லால் குறிப்பிடப்படும் இந்திரியங்கள் (புலன்கள்) எவை என்ற கேள்வி வரும்போது உபநிடதமே பிராணன், கண்கள், காதுகள் மற்றும் மனம் என்று கூறுகிறது. இங்கே பிராணன் என்றால் தோல் என்று பொருள், பிராணன் என்பது மூச்சு அல்லது முக்ய பிராணன் என்று பொருள்படாது.

பிருஹதாரண்யக உபநிஷத்தின் மத்யந்தியான சகா என்று அழைக்கப்படும் மற்றொரு கிளையில், அதே சூழலில் மூக்கு பற்றிய குறிப்பு உள்ளது, இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் இது நாக்கு மற்றும் மூக்கு இரண்டையும் குறிக்கும் இந்த சூழலில் அண்ணா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிரீஷ்வர சாங்க்யனாகிய எதிராளி, பஞ்ச பஞ்சஜனம் என்று கூறப்படுவதால், பஞ்ச பஞ்சம் என்றால் 5 x 5 என்று 25 என்றும், அவர் முன்வைத்த 25 தத்துவங்களின் எண்ணிக்கைக்கு இது பொருந்தும், பரமாத்மா யார் என்று 26வது தத்துவம் குறிப்பிடப்படவில்லை. இருபத்தி நான்கு தத்துவங்களைக் கொண்ட பிரகிருதி பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க வேண்டும் என்றும் புருஷன் அல்லது ஜீவா என்று அழைக்கப்படும் 25 வது தத்துவத்தின் முன்னிலையில் படைப்பு நடைபெறுகிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

நிரீஷ்வர சாங்க்யாவின் படி, 25 தடவைகள்.

1) பிரகிருதி, மஹத், அஹங்காரா – 3

2) ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகள் அல்லது பூதங்கள் – 5 (வானம் ஆகாஷம்)

3) சப தன்மாத்ரா, ஸ்பர்ஷ தன்மாத்ரா, ரூபா தன்மாத்ரா, ரஸ தன்மாத்ரா, கந்த தன்மாத்ரா என அழைக்கப்படும் ஐந்து தன்மாத்ராக்கள் (நுட்பமான வடிவங்கள்)

தன்மாத்ரா என்பது முந்தைய பூதத்திற்கும் பின் வரும் பூதத்திற்கும் இடையில் உள்ள ஒரு நிலை. பால் மற்றும் தயிர் இடையே உள்ள மேடை போல.

4) இந்திரியங்கள் அல்லது புலன்கள் – 11

5) நிரீஷ்வர சாங்கியத்தால் புருஷன் என்று அழைக்கப்படும் ஜீவாத்மா- 1

மொத்தம் – 25

நாமும் (விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைச் சேர்ந்த) மேற்கூறிய இருபத்தைந்து தத்துவங்களையும் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் மேற்கூறியவற்றைத் தவிர 26வது தத்துவமாகிய பரமாத்மாவை ஏற்றுக்கொள்கிறோம். எனவே பரமாத்மா 26வது தத்துவமாக இருப்பதால் ஷத்விம்சகர் என்றும், ஜீவாத்மா 25வது தத்வமாக இருப்பதால் பஞ்சவிம்சகர் என்றும் அழைக்கப்படுகிறது.

பதினொரு புலன்கள் ஆகும்

1) மனம் – 1

2) அறிவு தரும் புலன்கள்- 5 அவை காதுகள், கண்கள், மூக்கு, தோல் மற்றும் நாக்கு (ஞானேந்திரியங்கள்)

3) செயல் சார்ந்த புலன்கள் (கர்மேந்திரியங்கள்) கைகள், கால்கள், பேச்சு, பிறப்பு உறுப்பு மற்றும் வெளியேற்ற உறுப்பு – 5

மொத்தம்: 11

இந்த சூழலில் படைப்பின் வரிசையை நாம் அறிவது நல்லது.

பிரகிருதி, மஹத், அஹங்காரா, சப்ததன்மாத்ரா, ஆகாச ஸ்பர்ஷதன்மாத்ரா, வாயு ரூபதன்மாத்ரா, தேஜஸ், ரஸ தன்மாத்ரா, நீர், கந்த தன்மாத்ரா, பூமி.

மேற்கூறிய ஒவ்வொன்றிலும், பகவான் ஸ்ரீமன் நாராயணனே அந்தர்யாமியாக இருக்கிறார், அவர் சித்தமாக இருக்கிறார், அதைத் தொடர்ந்து தத்துவம் உருவாக்கப்படுகிறது. அஹங்காரா என்பது மூன்று வகையானது, சாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்திரியங்கள் உருவாகின்றன.

தாமஸ அஹங்காரத்திலிருந்து ஐந்து பூதங்கள் உருவாகின்றன. மேற்கண்ட இரண்டிற்கும் ராஜஸ அஹங்காரம் உதவுகிறது.

இந்த உபநிடதப் பகுதியானது, பரமாத்மாவின் இருப்பை ஏற்காமல், 25 தத்துவங்களின் கோட்பாட்டுடன் சிறந்த உடன்பாட்டில் இருப்பதாகவும், மேலே உள்ள ஒவ்வொன்றிலும் பரமாத்மா அந்தர்யாமியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிப்பதாகவும் எதிர்ப்பாளர் கருதுகிறார்.

என குறிப்பிடும் முதல் சூத்திரத்தில் இந்த கருத்தை சூத்திரகாரர் மறுத்துள்ளார்

“நாஸங்க்யோபஸங்க்ரஹதாபி நானாபவத் அதிரேகாச்ச”. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. 25 தத்துவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவை நிரீஷ்வர சாங்கியம் சொல்வதிலிருந்து வேறுபட்டவை, ஏனென்றால் இந்த உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளபடி இருபத்தைந்திற்குள் இருக்கும் ஆகாசமும் ஜீவாத்மாவும் இருபத்தைந்திற்கு வெளியே இருப்பது சரியல்ல. எனவே பஞ்ச பஞ்சாங்கம் என்ற சொல் 25 தத்துவங்களைக் குறிக்கவில்லை. “பிராணதாயா: வாக்ய சேஷாத்” என்று கூறும் இரண்டாவது சூத்திரத்தில் பஞ்ச பஞ்ச ஜனம் என்பது ஐந்தாக உள்ள கணேந்திரியங்களை மட்டுமே குறிக்கிறது என்று நிறுவப்பட்டுள்ளது. எனவே அப்ரஹ்மாத்மக தத்வத்திற்கு நிகராக எதுவும் இல்லை.

4வது அதிகாரம் கரணத்வாதிகாரணம் எனப்படும். இது இரண்டு சூத்திரங்களைக் கொண்டுள்ளது.

இந்த அதிகாரத்திற்கும் முந்தைய அதிகாரத்திற்கும் உள்ள தர்க்கரீதியான தொடர்பு பின்வருமாறு. ஆகாசமும் இந்திரியங்களும் பிரம்மன் அல்லது பரமாத்மாவால் ஆதரிக்கப்படுவதால், பிரதாபமோ அல்லது ஆதிப்பொருளோ உலகத்திற்குக் காரணமாக இருக்க முடியாது என்று முந்தைய அதிகாரத்தில் நிறுவப்பட்டது. இப்போது நிரீஷ்வர சாங்கியமான அதே பூர்வபக்ஷி மீண்டும் எழுந்து, பிரபஞ்சத்திற்குக் காரணமான பொருள் குறித்து உபநிடதங்களில் ஒருமித்த கருத்து இல்லை என்று கூறுகிறார். பிரபஞ்சத்திற்குக் காரணமான பிராதானம் (பிரகிருதி) என்பதில் சில ஒருமைப்பாடு இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இந்த வாக்குவாதம் இந்த அதிகாரத்தில் மறுக்கப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் உருவாக்கம் தொடர்பான பல்வேறு உபநிடத நூல்களில், உபநிடதங்கள் பிரபஞ்சத்தின் காரணங்களாக பல நிறுவனங்களை அடையாளம் காட்டுகின்றன. அசத் தான் காரணம் என்று ஒரு உபநிடதம் கூறுகிறது. மற்றொரு உபநிடதம் சத் தான் காரணம் என்கிறது. மூன்றாவது உபநிடதம் அவ்யாகிருதமே காரணம் என்கிறது. மேற்கூறியவற்றால் அந்த பிரம்மத்தை பிரபஞ்சத்தின் காரணமாக நிறுவுவது மிகவும் கடினம் என்று எதிரி கூறுகிறார். எக்ஷனா அல்லது உருவாக்க விருப்பம் அல்லது உறுதிப்பாடு ஆகியவை பிராதானத்திற்கும் பொருந்தும், எனவே அது ஜகத்தின் காரணமாகும். இதுதான் எதிரணியின் வாதம்.

“காரணத்வேன ஆகாஸாதிஷு யதா வ்யாபதிஷ்டா உக்தே:” – சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு படிக்கும் முதல் சூத்திரத்தில் சூத்ரகாரரால் இது மறுக்கப்படுகிறது.

ஆகாஷா திஷு காரணாத்வேன யதா வ்யாபதிஷ்டா உக்தே: – பிரம்மன் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணனின் சர்வ அறிவாற்றல் (ஒவ்வொரு விஷயத்தையும் அறிந்தவர்), அனைத்து சக்திகள், எதையும் மற்றும் எதையும் செயல்படுத்தும் திறன் போன்றவற்றால் ஆகாசம் மற்றும் நெருப்பு போன்றவற்றுக்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகாசமும் பிற கூறுகளும் பிரம்மனால் படைக்கப்பட்டவை என்று தைத்தரிய உபநிடதம் தெளிவாகச் சொல்வதே இதற்குக் காரணம்.

சமகர்ஷத் என்று படிக்கும் இரண்டாவது சூத்திரத்தில் – ஸத், அஸத், அவ்யகிருதி என்ற சொற்களுக்குப் பிராமணன் என்று பொருள்படுவதற்குச் சரியான மற்றும் உறுதியான காரணங்களைச் சூத்ரகாரம் தருகிறது.

இந்த காலாண்டில் ஐந்தாவது அதிகாரம் ஜகத் வச்சித்வாதிகாரணம் எனப்படும். இது மூன்று சூத்திரங்களைக் கொண்டுள்ளது. முந்தைய அதிகாரத்துடன் இணைப்பு பின்வருமாறு.

முந்திய அதிகாரத்தில் ஒரு உணர்வு ஜீவிதான் பிரபஞ்சத்துக்குக் காரணம் என்று நிறுவப்பட்டது. நிரீஷ்வர சாங்கியம் பரமாத்மாவின் இருப்பை ஏற்காததால், முக்தி பெறாத ஆன்மா மட்டுமே காரணமாக இருக்க முடியும். முக்தி பெறாத ஜீவா என்ற உணர்வு ஜீவன் பிரகிருதி தத்வத்தின் உட்பொருட்களைக் கொண்ட ஒரு மரண உடலுடன் மட்டுமே இருக்க முடியும். எனவே இந்த பிரகிருதி அல்லது பிராதானம் மறைமுக காரணமாகவும் இருக்கலாம்.

விவாதத்திற்கு வரும் உபநிடத உரை கௌசிதகி உபநிஷத்தில் இருந்து ஒரு பகுதி. தொடர்புடைய பத்தியின் சுருக்கத்தைக் குறிப்பிடுவதற்கு முன், அந்த பத்திக்கு வழிவகுக்கும் ஒரு கதை இங்கே உச்சரிக்கப்படுகிறது. கதை என்னவென்றால், கார்க்யா கோத்ராவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பாலகி என்ற பெயர் கொண்ட காசியில் வசிப்பவர், இது இப்போது பெனாரிஸ் அல்லது வாரணாசி என்று அழைக்கப்படுகிறது. அவர் நன்றாகப் படிப்பவராக இருந்தார். அவர் காசியின் அரசனாக இருந்த அஜாதசத்ருவைச் சந்தித்து, அஜாதசத்ருவாகிய அவருக்கு பிரம்மனின் அறிவில் தீட்சை கொடுப்பதாகக் கூறினார்.

அஜாதசத்ரு அதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்தார், ஏனென்றால் ஒவ்வொரு உடலும் ஜனக மன்னனிடம் செல்ல விரும்புகிறது, ஏனென்றால் அவர் பிரம்மனைப் பற்றி கற்பிப்பவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை வழங்குகிறார், மேலும் அஜாத சத்ரு மேலும் பாலகி ஜனகரிடம் செல்லாமல் தன்னிடம் வந்ததைக் கவனித்தார். பாராட்டத்தக்கது. ஜனகன் வழங்கும் அதே பரிசை பாலகிக்கும் கொடுப்பான் என்பது மறைமுகமாக உள்ளது.

பின்னர் பாலாகி அஜாதசத்ருவை பிரம்மனைப் பற்றிய அறிவைத் தொடங்கத் தொடங்கினார், அவர் சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள புருஷரை பிரம்மனாக தியானிக்கப் பழகியதாகக் கூறி, அஜாத சத்ருவையும் அதைச் செய்யும்படி கேட்டார். அஜாதசத்ரு தனக்கும் அது பற்றி தெரியும் என்றும் பாலகியிடம் இருந்து அதைப் பற்றி பிரசங்கம் தேவையில்லை என்றும் கூறுகிறார். சந்திரன், மின்னல், மேகம், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், உருவம், எதிரொலி, சாயல், நிழல், ஜீவா, நல்ல உறக்கத்தில் ஜீவன், கனவு காணும் ஜீவன், வலது கண்ணில் உருவம் என்று தியானம் செய்கிறேன் என்று ஞானியான பாலகி சொல்லிக்கொண்டே போனார். , இடது கண்ணில் உள்ள உருவம் மற்றும் அஜாத சத்ரு தனக்கும் மேற்கூறிய அனைத்தும் தெரியும் என்றும் பாலகியின் தீட்சை தேவையில்லை என்றும் கூறுகிறார். பாலாகி பின்னர் அமைதியாகிவிட்டார். அஜாதசத்ரு பாலாகியிடம், பாலாகி உறுதிமொழியாக பதிலளிக்கும் அளவுக்கு மட்டும் தெரியுமா என்று கேட்கிறார். பிறகு அஜாதசத்ரு பாலகியிடம் பிரம்மன் அல்லாத பொருட்களை மட்டுமே விவரித்தார், மேலும் அவர் பாலகியை பிரம்மனின் அறிவில் தொடங்குவார். அஜாதசத்ரு, பாலாகி சொன்ன அனைத்துப் பொருட்களையும் படைத்தவனும், இந்த உலகத்தைப் படைத்தவனும், புலன்கள் மற்றும் உணர்வற்ற உயிரினங்கள் இரண்டையும் கொண்டவன், தியானிக்கப்பட வேண்டியவன் பிரம்மன் என்று தொடர்ந்து கூறுகிறார். பிறகு பாலாகி அஜாதசத்ருவின் சீடரானார். அப்போது அஜாதசத்ரு பாலகியின் கைகளைப் பிடித்துக் கொண்டு வெளியே வர இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவரின் அருகில் சென்றனர். அப்போது அஜாதசத்ரு உறங்கிக் கொண்டிருந்தவரின் அகலத்தை நிவர்த்தி செய்தும் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போது அஜாதசத்ரு அவரை ஒரு தடியால் அடிக்க, அந்த நபர் உடனடியாக எழுந்தார். இந்த செயலின் மூலம் ஜீவா பிராணனில் இருந்து வேறுபட்டது, இல்லையெனில் சுவாசம் என்று அவர் விளக்கினார். ஜீவா பரமாத்மாவின் மீது உறங்கிக் கொண்டிருந்ததாக பாலகியிடம் கூறுகிறார், அவரிடமிருந்து ஜீவா வெளியே வந்து எழுந்தார். ஜீவா பரமாத்மாவிலிருந்து வேறுபட்டது என்பதை இது மேலும் விளக்குகிறது.

இதில் பாலாகி குறிப்பிடும் பொருள்கள் ஒருவரால் அவரவர் கர்மவினைக்கு ஏற்ப உருவாக்கப்படும் இன்பப் பொருள்கள், இன்பத்தின் துணைகள் என்றும், கர்மா என்ற சொல் தனிமனிதனின் புண்ணியத்தையும் பாபாவையும் குறிப்பதாகக் கூறுகிறது. புண்ணியத்தை உடையவர் மற்றும் பாப்பா பிரபஞ்சத்தின் படைப்பாளராக இருக்க வேண்டும், மேலும் அவர் உடலில் இருந்து வேறுபட்டவராகவோ அல்லது தனித்தவராகவோ தியானிக்கப்பட வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், ஜீவா அல்லது புருஷனால் ஆதரிக்கப்படும் பிராதானம் அல்லது பிரகிருதி பிரபஞ்சத்தின் படைப்பாளராக இருக்க வேண்டும் என்பதே நிரீஷ்வர சாங்க்யாவின் வாதம்.

ஜகத்வசித்வாத்” என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் எதிரியின் இந்த வாதத்தை சூத்ரகாரர் மறுத்துள்ளார் – இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், உபநிடத உரையில் குறிப்பிடப்பட்டுள்ள கர்மா என்ற சொல் பிரபஞ்சத்தை மட்டுமே குறிக்கிறது, புண்ணியத்தையும் பாபாவையும் அல்ல, அங்கு முன் விவாதம். பிரபஞ்சத்தின் காரணமான புருஷன் அல்லது ஜீவாவால் ஆதரிக்கப்படும் உடல் அல்லது பிரகிருதி சரியானது அல்ல. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரம்மம் மட்டுமே பிரபஞ்சத்திற்கு காரணம்.

இந்த காலாண்டில் உள்ள ஆறாவது அதிகாரம் வாக்கியன்வாதிகாரன் என்று அழைக்கப்படுகிறது. முந்தைய அதிகாரத்துடன் உள்ள இணைப்பு பின்வருமாறு:- முந்தைய அதிகாரத்தில் கர்மா என்ற சொல் உலகம் என்று விளக்கப்பட்டது, அதன் விளைவாக உபநிடத உரையின் குறிப்பிட்ட பகுதி ஜீவாவுக்கு பொருந்தாது என்று நிரூபிக்கப்பட்டது. இந்த அதிகாரத்தைப் பற்றிய உபநிடத உரை, புண்ய பாபாவின் பலன்களை அனுபவிக்கும் ஜீவாவைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது என்று எதிரி கூறுகிறார். இந்தக் கண்ணோட்டம் இங்கே மறுக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் விவாதத்திற்கு வரும் உபநிடதப் பகுதி பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள மைத்ரேயி பிராமணம். இது அந்த உபநிடதத்தில் 4வது அத்தியாயத்தின் 5வது உட்பிரிவு.

இந்த உரையின் சுருக்கமான சுருக்கம் பின்வருமாறு. யாக்ஞவல்கிய முனிவருக்கு காத்யாயனி, மைத்ரேயி என இரண்டு மனைவிகள் இருந்தனர். காத்யாயனிக்கு மைத்ரேயியின் வெளித்தோற்றம் ஆன்மிகமாக இருந்ததைப் போன்ற தோற்றம் இருந்தது. யாக்ஞவல்கியர் சன்யாசத்திற்கு செல்ல முடிவு செய்தார், மேலும் தனது சொத்துக்களை இரண்டு மனைவிகளுக்கு இடையே ஒரு உயிலை நிறைவேற்ற விரும்பினார். மைத்ரேயி யாக்ஞவல்கியரிடம் யாக்ஞவல்கியரிடமிருந்து பெறப் போகும் செல்வம் நித்திய பேரின்பமான மோட்சத்தை அடைய உதவுமா என்று கேட்டாள். யாக்ஞவல்கியர் எதிர்மறையாக பதிலளித்தார். பின்னர் மைத்ரேயி யாக்ஞவல்கியரிடம் மாவோக்ஷத்தை அடைவதற்கான வழிமுறைகளை உபதேசிக்குமாறு வேண்டுகிறாள்.

யாக்ஞவல்கியரின் உபதேசம் பின்வருமாறு. ஒரு கணவன் தன் சொந்த விருப்பத்தின் காரணமாக மனைவிக்கு அன்பாக மாறுவதில்லை, ஆனால் பரமாத்மாவின் விருப்பத்தின் காரணமாக கணவன் தன் மனைவியை நேசிக்கிறான். அதுபோலவே ஒரு மனைவியும் தன் கணவனுக்கு அன்பானவளாக மாறாமல் தன் சொந்த விருப்பத்தின் காரணமாகவும், பரமாத்மாவின் விருப்பத்தின் காரணமாகவும் தன் கணவனை நேசிக்கிறாள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற பழமொழியின் உண்மையை இது நிறுவுகிறது. அதேபோல, குழந்தைகள் பெற்றோரிடம் பாசமாக மாறாமல், தங்கள் சொந்தக் காரணத்தால், பரமாத்மாவின் விருப்பத்தால், பெற்றோரிடம் பாசமாக மாறுகிறார்கள். அதுபோலவே செல்வம், ஒரு பிராமணன், ஒரு க்ஷத்திரியன், ஸ்வர்கலோகம், இந்திரன் முதலிய வான தெய்வங்கள், ஜீவராசிகள் மற்றும் பிற எல்லாப் பொருட்களும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் விருப்பத்தால் ஒருவருக்குப் பிடிக்கும்.

பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றி ஒரு ஆச்சார்யா அல்லது ஆசானின் காலடியில் கேட்பதன் மூலம் அறியப்பட வேண்டும். அவரைப் பற்றி பெற்ற அறிவை ஒருங்கிணைக்க அவர் மனதிற்குள் மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும், அவர் பரமாத்மாவைக் கண்ட பிறகு தியானிக்க வேண்டும்.

பரமாத்மாவைப் பற்றிய முழு அறிவைப் பெறுவதன் மூலம் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு விஷயமும் அறியப்படும். பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் பிற உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் (உயிருள்ள மற்றும் உயிருள்ள பொருட்களில்) பரமாத்மாவுக்கு வெளியே இருப்பதாகவும், பரமாத்மாவிற்குள் இல்லை என்றும் நினைப்பவர் மோட்சத்தை அடைய மாட்டார், மேலும் அவர் இந்த சம்சாரத்தில் அல்லது உலகில் மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளை அனுபவிக்க வேண்டும். . பறையை ஒரு குச்சியால் அடிக்காதபோது, ​​​​ஒலி உருவாகாது அல்லது மேளம் இல்லாதபோதும் அல்லது அடிப்பவர் இல்லாதபோதும் இந்திரியங்கள் அல்லது புலன்கள் அந்தந்தத்தைப் பற்றி சிந்திக்காதபோது ஞானம் போல் ஒலி உருவாகாது. பொருள்கள் அல்லது புலன்கள் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மனம் வெளிப் பொருட்களை உணராது, பரமாத்மாவில் கவனம் செலுத்தும். மேலே விவரிக்கப்பட்ட டிரம் விளக்கப்படத்தைப் போலவே,

வெறும் ஈரமான நெருப்பு விறகு, நெருப்புடன் இணைந்து புகையை உண்டாக்குகிறது, அதுபோல் பகவான் ஸ்ரீமன் நாராயணனும் பிரபஞ்சத்தின் ஸ்தூல மற்றும் செயல்பாட்டுக் காரணங்களாக இருக்கிறார். இங்கே புகையை உண்டாக்குவதற்கு, நெருப்பு நிமித்த கரணம் (செயல்படுத்தும் காரணம்) மற்றும் ஈரமான நெருப்பு மரம் உபாதான காரணம் (பொருள் காரணம்).

மேற்கூறியவற்றைத் தவிர, நான்கு வேதங்கள், ஸ்ரீமத் ராமாயணம் போன்ற இதிகாசங்கள், ஸ்ரீ விஷ்ணுபுராணம் போன்ற புராணங்கள் மற்றும் உபநிடதங்கள் பரமாத்மாவிலிருந்து தோன்றியதாக இங்கு கூறப்பட்டுள்ளது.

இந்த உபநிடதப் பத்தியின் முதல் வாக்கியத்தில் “ஆத்மா” என்ற வார்த்தை உள்ளது, அதில் கணவன் மனைவியிடம் அன்பாக மாறுவதில்லை என்றும், இந்த பத்தியில் ஆத்மா என்று சொல்லப்படும் பரமாத்மா கணவன் தன் மனைவியை நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறான் என்றும் கூறப்படுகிறது. நிரீஷ்வர சாங்கிய எதிரி, ஆத்மா என்பது கணவன் என்ற சொல்லுக்கு எதிரிடையான நபரைக் குறிக்க வேண்டும் என்கிறார். ஆத்மா என்பது ஜீவா என்ற மனைவியைக் குறிக்கிறது. அடுத்த பத்தியில் உள்ள “ஆத்மா” என்ற வார்த்தை ஜீவனை மட்டுமே குறிக்கிறது, பரமாத்மா அல்ல, இந்த ஜீவாவை மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

நிரீஷ்வர சாங்கிய தத்துவத்தில், புருஷன் (ஜீவா) உடலிலிருந்து பிரிந்து தியானம் செய்தால் அவனுக்கு மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. SO இந்த பத்திக்கும் பரமாத்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எதிராளி கூறுகிறார். எனவே அவர் புருஷன் அல்லது ஜீவா முன்னிலையில் பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்ற உண்மையை அவர் உறுதிப்படுத்துகிறார்.

“வாக்ய அன்வயத்” என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் எதிரியின் இந்த பார்வையை சூத்திரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. இந்த உபநிடதப் பகுதி முழுக்க முழுக்க பரமாத்மாவைப் பற்றியது, ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே இந்த பத்தியில் உள்ள வாக்கியங்கள் பரமாத்மாவைக் குறிக்கின்றன, ஏனென்றால் மைத்ரயி ஆதியில் யாக்ஞவல்கியாவிடம் நித்திய பேரின்பத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் கேட்டாள், இது தியானத்தால் மட்டுமே சாத்தியமாகும். பரமாத்மா மீது அல்ல ஜீவாத்மா மீது.

இந்த அதிகாரத்தில் விசிஷ்டாத்வைத தத்துவத்தின் ஒரு முக்கியமான கோட்பாடு சூத்ரகாரரால் நிறுவப்பட்டுள்ளது. வேதவியாச முனிவரின் சீடர்களான அஷ்மரத்யா, அவுதுலோமி மற்றும் கசக்ரித்ஸ்னா ஆகிய முனிவர்களின் மூன்று சிந்தனைப் பள்ளிகளைப் பற்றி சூத்ரகாரம் குறிப்பிடுகிறது. விசிஷ்டாத்வைத அமைப்பின் அடிப்படைக் கோட்பாடான ஜீவா என்பது பரமாத்மாவின் சரீரம் என்று கூறும் கசக்ருத்சனின் வாதத்தை வேதவியாச முனிவர் இறுதியாக ஏற்றுக்கொள்கிறார். எனவே இந்த அதிகாரம் மிக முக்கியமான அதிகாரங்களில் ஒன்றாகும்.

இந்த அத்தியாயத்தில் ஏழாவது அதிகாரம் பிரகிருதி அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆறு சூத்திரங்கள் உள்ளன. முந்தைய ஆறு அதிகாரங்களில், பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான கபிலரால் நிறுவப்பட்டு பரப்பப்பட்ட நிரீஷ்வர சாங்கிய தத்துவம் முற்றிலும் மறுக்கப்பட்டது. இந்த அமைப்பில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி பரமாத்மாவின் இருப்பு ஏற்கப்படவில்லை. பிரக்ருதி என்று அழைக்கப்படும் பிரதானம் அல்லது ஆதிப் பொருள்தான் ஸ்தூலமான காரணம் மற்றும் இந்த பிரகிருதி புருஷன் அல்லது ஜீவாவின் முன்னிலையில் பிரபஞ்சத்தை உருவாக்குவதால், புருஷன் நிமித்த கரணமாகிறான்.

இந்த அதிகாரத்தில், சேஷ்வர சாங்கிய தத்துவ முறையை நிறுவிய நான்கு தலை பிரம்மா பரமாத்மாவின் இருப்பை ஏற்றுக்கொள்கிறார், ஆனால் அவர் நிமித்தகர்ணன் மட்டுமே (செயல்பாட்டுக் காரணம்) என்றும், ஆதிப்பொருள் ஜடக் காரணம் அல்லது உபாதான கரணமாகத் தொடர்கிறது என்றும் கூறுகிறார்.

மேற்கூறிய இரண்டு தத்துவ அமைப்புகளும் வேதங்களில் உள்ள கோட்பாட்டிற்கு எதிரானது, இது பகவான் ஸ்ரீமன் நாராயணனே ஜடக் காரணமும், செயல் காரணமும் என்று ஐயத்திற்கு இடமின்றி அறிவிக்கும் அபின்ன நிமித்த உபாதான கரணமானது இந்த அதிகாரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

எனவே முந்தைய அதிகாரத்துடன் இந்த அதிகாரத்தின் இணைப்பு என்னவென்றால், முந்தைய அதிகாரத்தில் நிரீஷ்வர சாங்கிய முறை மறுக்கப்பட்டது, இந்த அதிகாரத்தில் சேஷ்வர சாங்கிய முறை மறுக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் எதிராளி அல்லது பூர்வபக்ஷி எழுந்து, உபநிடதங்கள் பொதுவாக பிரம்மம் என்பது நிமித்த கரணமே தவிர இந்த பிரபஞ்சத்திற்கு உபாதன கரணமல்ல என்று கூறுகிறது. ஸ்வேதாஷ்வர உபநிஷத்தில் உள்ள சில இரண்டு பத்திகள் தான் அவர் மேற்கூறிய வாதத்திற்குக் குறிப்பிடுகிறார். பிரம்மனாகிய மயி பிரகிருதியை பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்று அது எப்போதும் கூறுகிறது. பிரகிருதி என்பது மாயா, மயி என்பது பரமாத்மா.

ஸ்ரீ பகவத்கீதையிலும் பகவான் கிருஷ்ணர் தனது முன்னிலையில் அல்லது மேற்பார்வையில் பிரகிருதி பிரபஞ்சத்தை வழங்குகிறது என்று கூறுகிறார். ஜீவாத்மா பரமாத்மாவால் உருவாக்கப்பட்ட மாயாவிற்கு உட்பட்டது.

எந்த ஒரு பொருளுக்கும் உபாதன கரணமும் நிமித்த கரணமும் வேறுபடும் என்பது இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உடலுக்கும் பொதுவான அறிவு. உதாரணமாக, ஒரு தங்க நகையில் தங்கத்தை உபாதான கரணமாகவும், பொற்கொல்லரை நிமித்த கரணமாகவும் கொண்டுள்ளது. அதுபோலவே இந்த பிரபஞ்சத்திற்கும் பிரகிருதியே உபதான கரணமாகவும், பிரம்மன் அல்லது பரமாத்மா நிமித்த காரனாகவும் இருக்கிறது.

இந்த வாதத்தை சூத்ரகாரர் “பிரகிருதிஷா ப்ரதிஜ்னா த்ரிஷ்டாந்த அனுபரோதாத்” என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. பிரகிருதிஷா என்றால் உபாதானம் (பொருள் காரணம்) என்பதும், அதாவது பிரம்மம் உபாதான கரணம் என்பதும் (அவர் நிமித்த கரணம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை) ஏனெனில் அடிப்படைக் காரணத்தைத் தெரிந்துகொள்வதன் மூலம் எல்லாப் பொருட்களும் உற்பத்தியாகும் என்று உபநிடதங்கள் உறுதியளித்தன. களிமண், தங்கம் மற்றும் இரும்பு ஆகிய மூன்று உவமைகளும் ஸ்வேத கேதுவுக்கு உத்தாலகாவால் மேற்கோள் காட்டப்பட்டன. களிமண்ணை அறிவதன் மூலம் அனைத்து களிமண் பொருட்களும் அறியப்படுகின்றன, தங்கத்தை அறிந்தால் தங்கத்தால் செய்யக்கூடிய அனைத்து ஆபரணங்களும் அறியப்படுகின்றன மற்றும் இரும்பினால் அனைத்து இரும்பு பொருட்கள் தெரியும். உறுதிமொழிக்கும் விளக்கப்படங்களுக்கும் இடையே மிக நெருக்கமான உடன்பாடு உள்ளது.

எனவே காரண நிலையில் உள்ள பிரம்மம் அண்ட வடிவில் உள்ள உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களுடன் தொடர்புடையது. அவர் இந்த உயிரினங்களுக்கு அந்தர்யாமியாக இருப்பதால், ஒவ்வொரு உயிரினத்திற்கும் பெயரையும் வடிவத்தையும் கொடுத்து உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களை ஒரு பெரிய வடிவத்திற்கு மாற்ற விரும்புகிறார், அதாவது அவர் அனைத்து ஜீவாக்களுக்கும் உடல்களையும் புலன்களையும் வழங்குகிறார்.

அவர் உள் ஆன்மா மற்றும் விருப்பமாக இல்லாமல், மாற்றம் நிகழ்ந்திருக்காது. எனவே அவர் உபாதான கரணன். சிலந்தியின் உதாரணம் உள்ளது. சிலந்தி என்பது புழுவாகும், இது தானாக நூலை உருவாக்குகிறது மற்றும் அது உபாதான கரணமாகவும் நிமித்தமாகவும் இருக்கிறது என்பதை விளக்குகிறது. ஒரு சிலந்தி இரண்டு கரணங்களாக இருக்க முடியும் என்றால், பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஏன் உபாதான கரணமாகவும் நிமித்த காரனாகவும் இருக்கக்கூடாது.

8வது மற்றும் கடைசி அதிகாரம் சர்வ வியாக்யான அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரே ஒரு சூத்திரம் உள்ளது.

முந்தைய அதிகாரத்துடன் இணைப்பு பின்வருமாறு. சமன்வய அத்யாயா என்று அழைக்கப்படும் முதல் அத்தியாயத்தில் தற்போதுள்ள 35வது அதிகாரம் உட்பட 35 அதிகாரங்கள் உள்ளன.

முந்தைய 34 அதிகாரங்களில் ஸ்தாபிக்கப்பட்ட பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தாவாக இருக்கிறார். ஆனால் பல்வேறு உபநிடதங்களில் ருத்ரா, ஹிரண்ய கர்பா, இந்திரன் மற்றும் பிற வான கடவுள்கள் பிரபஞ்சத்தின் காரணம் என்று குறிப்பிடப்பட்ட சில பகுதிகள் உள்ளன, இது பிரபஞ்சத்தின் உண்மையான காரணம் யார் என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. எனவே இந்த சந்தேகத்தைப் போக்கவே இந்த அதிகாரம் சூத்ரகாரரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்வேதாஷ்வதார உபநிடதத்தில் ருத்ரனே பிரபஞ்சத்திற்குக் காரணமானவர் என்றும், மோட்சத்தை அடைய அவரை தியானிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது என்று எதிர்ப்பாளர் கூறுகிறார்.

“ஏதேன ஸர்வே வ்யாக்யதா வ்யாக்யத:” என்ற சூத்திரத்தில் ஸ்சூத்ரகாரரால் இதை மறுக்கப்படுகிறது.

இந்த அத்தியாயம் இந்த சூத்திரத்துடன் முடிவடைகிறது என்பதைக் குறிக்க உலகம் “வியாகாயத:” இரண்டு முறை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இந்த சூத்திரத்தின் பொருள்

முந்தைய 34 அதிகாரங்களில் நிறுவப்பட்ட விதிகளைப் பயன்படுத்துவதன் மூலம், ருத்திரன், இந்திரன், ஹிரண்ய கர்ப்பம் போன்ற பல வான கடவுள்கள் பிரபஞ்சத்தின் காரணமாகக் குறிப்பிடப்பட்ட பல்வேறு உபநிடதங்களில் மீதமுள்ள கூற்றுகள் மற்றும் மோட்சத்தை அடைய தியானிக்கப்படும். அவர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிப்பிடுகிறார்கள் என்பதும், ஜடப்பொருள் மற்றும் இயக்கம் ஆகிய இரண்டிற்கும் அவர் ஒருவரே காரணம் என்பதை நிரூபிக்க வேண்டும். பிரபஞ்சத்திற்கு அணுக்கள் தான் காரணம் என்ற வாதத்தையும் இந்த சூத்திரம் தற்செயலாக மறுக்கிறது.

ஸ்ரீ பாஷ்யத்தின் அழகிய வர்ணனையான ஸ்ருதப்ரகாசிகாவில், வர்ணனையாளர் ஸ்ரீ சுதர்சன சூரி, பிரபஞ்சத்தின் காரணத்தைப் பற்றி சந்தேகத்திற்குரிய பல உபநிடத நூல்களை மேற்கோள் காட்டுகிறார். அந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பெயர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கின்றன, வேறு எதுவும் இல்லை என்று தீர்மானிப்பதற்கான உறுதியான காரணங்களை உரையாசிரியர் அழகாக கூறுகிறார். அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

உபநிஷத்

காரணம் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது

சந்தேகத்திற்கு இடம்

பெயர் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கிறது என்று வலியுறுத்துவதற்கான காரணம்.

பிருஹதாரண்யக உபநிஷத்

பிரம்மன்

பிரம்மா என்பது பிராமண ஜாதி அல்லது அக்னி தேவதா அல்லது நான்கு தலை பிரம்மா என்று பொருள் கொள்ளலாம்.

இங்கு ஸ்ரீமன் நாராயணனே சதுர்முகனைப் படைக்கிறார் என்று கூறுகிறார். எனவே பிரம்மா என்றால் நாராயணன்.

பிருஹதாரண்யக உபநிஷத்

மிருத்யு

முழு விஷயமும் மிருத்யுவால் சூழப்பட்டது.

மிருத்யு என்பது ஸ்ரீ நாராயணனை மட்டுமே குறிக்கிறது, சுபலோபநிஷத்தில் மிருத்யு பரமாத்மாவின் உடல் என்று கூறப்படுகிறது.

சுபலோபநிஷத்

அது சத் அல்ல, அஸத் அல்ல, சத் அல்லது அஸத் அல்ல.

இதிலிருந்து தமஸ் உண்டாகிறது.

இந்த உபநிடதத்தில் அவ்வப்போது நாராயணன் குறிப்பிடப்படுகிறார். எனவே சத் அல்லது அசத் என்பது நாராயணனை மட்டுமே குறிக்கிறது.

யஜுர்வேத ஆரண்யகம்

ஆதித்யா அல்லது சூர்யா

சூர்யா உலகத்திற்கு ஆத்மா என்று குறிப்பிடப்படுகிறார்.

சூரியன் அல்லது ஆதித்யா என்பது அந்தர்யாமியான ஸ்ரீமன் நாராயணனாகிய அவனது உள் ஆன்மாவைக் குறிக்கிறது.

பிரஸ்னோபநிஷத்

பிரஜாபதி

பிரஜாபதி விரும்பி பிரபஞ்சத்தைப் படைத்தார்

பிரஜாபதி என்றால் அவனது உள் ஆன்மா, ஸ்ரீமன் நாராயணன். பிற்பகுதியில் பரமபுருஷர் பற்றிய குறிப்பு உள்ளது

பிருஹதாரண்யக உபநிஷத்.

ஹிரண்ய கர்பா.

பிரளயம் அல்லது பிரளயத்தின் போது ஹிரண்யகர்பா தனியாக இருந்ததாகவும், அவர் பிரபஞ்சத்தை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் உள்ள ஆயிரம் பெயர்களில் ஹிரண்யகர்பாவும் ஒன்று என்பதால் ஹிரண்யகர்பா என்ற சொல் ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கிறது.

தைத்தரிய உபநிடதம்

தாதா

தாதா சூரியனையும் சந்திரனையும் படைத்தார்

பாற்கடலின் மையத்தில் பரமாத்மா உறங்குகிறார் என்று ஆதியில் கூறப்பட்டிருப்பதால் ததா என்றால் ஸ்ரீமன் நாராயணன் என்று பொருள்.

ஸ்வேதாஷ்வதரா உபநிஷத்

ருத்ரா

ருத்திரன் ஹிரண்யகர்ப்பனை உருவாக்கியதாக கூறப்படுகிறது

ஸ்ரீமன் நாராயணனால் தன் நாபியிலிருந்து உருவான நான்கு தலை பிரம்மாவிடமிருந்து ருத்ரர் பிறந்தார், எனவே ருத்திரன் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது. மேலும் ஸ்ரீமன் நாராயணனின் ஆயிரம் நாமங்களில் ருத்ரனும் ஒன்று. எனவே ருத்ரா நேரடியாக ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கிறது. மேலும் ருக் என்றால் இந்த நோயை கரைக்கும் சம்சார ஸ்ரீமன் நாராயண திரவயாதியின் நோயாகும், எனவே அவர் ருத்ரா என்று அழைக்கப்படுகிறார்.

இதேபோல் உபநிடதங்களில் பல்வேறு சூழல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிவசம்பு என்ற வார்த்தைகள் பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கின்றன.

மேற்கூறியவற்றைச் சுருக்கி, முடிவாகப் பின்வரும் இரண்டு ஸ்லோகங்களும் மிகவும் பொருத்தமானதாகி, இந்த முதல் அத்தியாயத்தின் சாராம்சத்தை ஒரு கொட்டை ஓடுக்குள் வைக்கிறது.

“தத்வம் ஜிஜ்ஞாஸமானாம் ஹேதுபிஹ் ஸர்வதோ முகை:

தத்வமேகோ மஹாயோகி ஹரி: நாராயண: பர:

பல காரணங்களைச் சொல்லி உண்மையான உண்மையைக் கண்டறிய ஒரு விவாதம் நடத்தப்பட்டால், இறுதி முடிவு என்னவென்றால், ஹரி என்றும் அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயணனே பரதத்வா அல்லது உன்னதமான உண்மை அல்லது யதார்த்தம்.

“ஆலோத்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்யாச்ச புன: புன:

இடம் ஏகம் ஸுநிஷ்பானந்நம், த்யேயோ நாராயண: ஸதா”.

இதன் பொருள் என்னவென்றால், அனைத்து சாஸ்திரங்களையும், சாஸ்திரங்களையும் ஆழமாக ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் விவாதித்து, இறுதி முடிவு என்னவென்றால், ஸ்ரீமன் நாராயணனே தியானிக்கப்பட வேண்டிய உயர்ந்தவர், இந்த உண்மையை தத்துவங்களைச் சேர்ந்தவர்களால் அசைக்க முடியாது. வேதங்களுக்குப் புறம்பானவை (வேதங்களை உச்ச அதிகாரமாக ஏற்கவில்லை) மற்றும் உபநிடதங்கள் மற்றும் வேதங்களுக்கு தவறான மற்றும் அபத்தமான விளக்கங்களை அளிக்கும் தத்துவங்களுக்கு. இத்துடன் முதல் அத்தியாயம் நிறைவு பெறுகிறது.

வேதங்களை அதிகாரங்களாக ஏற்றுக்கொள்ளாத தத்துவ அமைப்புகள் பாஹ்யமதாக்கள் எனப்படும். பாஹ்யா என்றால் வெளியே என்று அர்த்தம், அவை அனைத்தும் வேதங்களின் தத்துவத்திற்குப் புறம்பானவை, அவை பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே உபாதான கரணமும் நிமித்த கரணமும் என்று ஒரே குரலில் பறைசாற்றுகின்றன. வேதங்களை அதிகாரமாக ஏற்று அதற்கு தவறான விளக்கங்களை அளிக்கும் சில தத்துவ அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் குத்ரிஷ்டிமதாஸ் என்று அழைக்கப்படுகின்றன.

முதல் அத்தியாயம் சமன்வய அத்யாயா என்று அழைக்கப்பட்டது, ஏனென்றால் பிரபஞ்சத்தின் படைப்பாளர் மற்றும் படைப்பைப் பற்றிய அனைத்து உபநிடத நூல்களும் வேறுவிதமாகக் கூறினால் பிரபஞ்சத்தின் காரணமான ஸ்ரீமன் நாராயணனுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள்ளன, அதாவது பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்திற்கும் காரணம். பொருள் (உபாதன கரண) மற்றும் திறமையான (நிமித்த கரண).

இது கருவி காரணம் அல்லது சககாரிகரணத்தையும் குறிக்கிறது அல்லது உள்ளடக்கியது.

இரண்டாவது அத்தியாயம் அவிரோத அத்யாயா என்று அழைக்கப்படுகிறது. அவிரோதா என்றால் எதிர்ப்பு இல்லை அல்லது எதிர்ப்பு இல்லை. பிரபஞ்சத்திற்குக் காரணமான பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு எதிரான அனைத்து ஆட்சேபனைகளும் அல்லது எதிர்ப்புகளும் ஆளப்பட்டு, அவர் பிரபஞ்சத்திற்குக் காரணம் என்று மீண்டும் நிறுவப்பட்டது. வேறுவிதமாகக் கூறினால், இது முதல் அத்தியாயத்தின் இறுதி முடிவை வலுப்படுத்துகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில் நான்கு பாதங்கள் அல்லது காலாண்டுகள் உள்ளன. முதல் பாதம் ஸ்மிருதி பாதம் எனப்படும். இரண்டாவது பாதம் தர்கா பாதம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாவது பாதம் வியாத் பாதம் எனப்படும். நான்காவது பாதம் இந்திரிய பாதம் அல்லது பிராண பாதம் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தா என்பதை முதல் இரண்டு பாதங்கள் வலுப்படுத்துகின்றன. மூன்றாவது மற்றும் நான்காவது பாதங்கள் பிரம்மனால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கையாள்கின்றன. மற்றொரு அம்சத்திலிருந்து, முதல் இரண்டு பாதங்கள் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்திற்குக் காரணம் என்று எதிரிகள் எழுப்பிய ஆட்சேபனைகளை நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது இரண்டு பாதங்கள் உபநிடதங்கள் உட்பட வேதங்களில் உள்ள உள் தகராறு அல்லது வீட்டுச் சண்டையைத் தீர்க்கின்றன. எங்களுக்கு உச்ச அதிகாரம். இயல்பிலேயே ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் சில நூல்கள் உள்ளன. ஆகாசம் அல்லது ஆகாஷா நித்தியமானது என்றும் உருவாக்கப்படவில்லை என்றும் ஒரு உரை கூறும்போது, ​​மற்றொரு உரை ஆகாஷா உருவாக்கப்பட்டது என்று கூறுவது முரண்பாடானது.

இதேபோல் ஜீவாக்கள் அல்லது உணர்வுகள் உருவாக்கப்பட்டன என்று கூறும் நூல்கள் உள்ளன, அதே நேரத்தில் ஜீவாக்கள் உருவாக்கப்படவில்லை, அவை நித்தியமானவை என்று கூறும் நூல்கள் உள்ளன. அதேபோல் இந்திரியங்கள் என்று அழைக்கப்படும் புலன்கள் உருவாக்கப்பட்டன என்று கூறும் நூல்கள் உள்ளன, அவை உருவாக்கப்படவில்லை என்று உபநிடதங்கள் உள்ளன. உபநிடதங்கள் உட்பட வேதங்களின் ஒவ்வொரு எழுத்தும் நமக்கு அதிகாரமாக இருப்பதால், இயற்கையில் மேலோட்டமான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் நியாயமான மற்றும் விவேகமான தர்க்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சமரசம் செய்ய வேண்டும்.

முனிவர் பாதராயணன் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ வேதவ்யாசரான ஸ்ரீ வேதவ்யாஸர் முதல் பாதத்தில், பிரபஞ்சத்திற்குக் காரணமான பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு எதிராக நிரீஷ்வர சாங்கியர்கள் மற்றும் சேஷ்வர சாங்கியர்கள் இருவரும் எழுப்பிய தர்க்கரீதியான ஆட்சேபனைகளை முறியடித்து தற்காப்புக்காக நிற்கிறார்.

இரண்டாவது பாதத்தில் சூத்ரகாரர் தாக்குதலைத் தொடர்கிறார் மற்றும் சாங்கிய தத்துவம், வைசேஷிக தத்துவம், பௌத்தம், சமணம் மற்றும் பசுபத தத்துவ முறைகளை அவற்றுள் பிளவுகளை சுட்டிக்காட்டி மறுக்கிறார். இறுதியாக இரண்டாவது பாதத்தில் பகவத் சாஸ்திரம் எனப்படும் பஞ்சராத்ர சாஸ்திரத்தின் அதிகாரத்தை சூத்திரகாரர் நிறுவுகிறார்.

இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள முதல் பாதம் ஸ்மிருதி பாதம் என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் நிரீஸ்வர சாங்கிய தத்துவத்தின் அடிப்படை உரையான கபில ஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்ட நிரீஷ்வர சாங்க்யா எழுப்பிய ஆட்சேபனைகளால் முழு பாதமும் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த பாதத்தில் பத்து அதிகாரங்கள் உள்ளன. இந்த பாதத்தில் உள்ள முதல் அதிகாரம் ஸ்மிருதி அதிகாரம் ஆகும். ஏற்கனவே கூறியது போல் அனைத்து பத்து அதிகாரங்களிலும் பூர்வபக்ஷி அல்லது எதிரி நிரீஸ்வர சாங்க்யா. நிரீஷ்வர சாங்கிய தத்துவத்தின் நிறுவனர் மற்றும் பிரச்சாரகர் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான கபில முனிவர் ஆவார். கபில முனிவரால் இயற்றப்பட்ட படைப்பு கபில ஸ்மிருதி என்று அழைக்கப்படுகிறது.

சாங்க்யா என்ற சொல்லுக்கு எண் என்று பொருள். இந்த எண்ணை அடிப்படையாகக் கொண்ட தத்துவம் சாங்கிய அமைப்பு. பிரம்மன் அல்லது ஈஸ்வரன் என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் இருப்பை நம்பாத இந்த சாங்கிய அமைப்பு நிரீஸ்வர சாங்க்ய அமைப்பு என்று அழைக்கப்படுகிறது, இது பிரக்ருதியின் 24 தத்வங்கள் இருப்பதாகக் கூறுகிறது, இது பிரதாபனம், அனுமானிகா அல்லது அசப்தா என்றும் அழைக்கப்படுகிறது. ஜீவா என்பது 25வது தத்துவம். இந்த தத்துவம் இந்த 25 தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இது நிரீஷ்வர சாங்கிய அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த தத்துவத்தில் பிரகிருதி என்பது பிரபஞ்சத்திற்கு ஜடக் காரணம் மற்றும் அது ஜீவாவின் முன்னிலையில் பிரபஞ்சத்தை உருவாக்குகிறது.

சாங்க்ய அமைப்பின் மற்ற கிளை ஹிரண்ய கர்பா அல்லது நான்கு தலை பிரம்மாவால் நிறுவப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்ட சேஷ்வர சங்கியா ஆகும். இந்த அமைப்பு 26 வது தத்துவமான ஈஸ்வர அல்லது பிரம்மனின் இருப்பை நம்புகிறது. இந்த அமைப்பில் பிரகிருதியை உபதான கரணமாகவும், ஈஸ்வர (நாராயணன்) நிமித்த கரணமாகவும் கூறப்படுகிறது.

இந்த இரண்டு அமைப்புகளும் பிரம்மமே ஜடக் காரணம் மற்றும் செயல்பாட்டுக் காரணம் (உபாதான கர்ணம் மற்றும் நிமித்த காரணம்) என்று கூறும் வேத தத்துவத்திற்கு எதிரானது.

நமது விசிஷ்டாத்வைத தத்துவம் முழுக்க முழுக்க வேத தத்துவத்துடன் ஒத்துப்போகிறது. 26 எண்ணிக்கையில் உள்ள தத்வாக்களின் எண்ணிக்கையைப்பற்றிய sankhya உடன் நாங்கள் உடன்படுகிறோம்.

எனவே முதல் அதிகாரத்தில், ஸ்மிருதிகளின் உதவியின்றி வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் விளக்கம் சாத்தியமற்றது என்று நிரீஷ்வர சாங்கியம் கூறுகிறது. வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் விளக்கங்களைச் செய்ய வேண்டிய பல ஸ்மிருதிகள் இருந்தாலும், கபில ஸ்மிருதி மிகவும் பொருத்தமானது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஏனெனில் இது தத்துவத்தின் தத்துவங்களை மட்டுமே கையாள்கிறது, எனவே இது மிகவும் சக்தி வாய்ந்தது. மனு ஸ்மிருதி போன்ற பிற ஸ்மிருதிகள், ஏனெனில் இந்த ஸ்மிருதிகள் கோட்பாடுகள் மற்றும் தினசரி சடங்குகளின் செயல்திறன் இரண்டையும் கையாள்கின்றன. வேதங்களின் விளக்கத்திற்கு கபில ஸ்மிருதியைக் கருத்தில் கொள்ளாவிட்டால் அது அர்த்தமற்றதாகவும் நோக்கமற்றதாகவும் மாறும் என்று அவர் மேலும் வாதிடுகிறார். இது நடக்கக்கூடாது. சூத்திரத்தில், சூத்ரகாரர் அனவகாஷா எனப்படும் தொழில்நுட்பச் சொல்லைப் பயன்படுத்துகிறார். அனவகாஷ என்றால் குறைவான அல்லது நோக்கமற்ற பொருள். உபநிடதங்கள் மற்றும் ஸ்மிருதிகள் உள்ளிட்ட வேதங்களுக்கு இடையே முரண்பாடு இருக்கும்போது, ​​ஸ்மிருதிகளை விட வேதங்கள் அதிக சக்தி வாய்ந்தவை என்று கூறப்படும் ஒரு மாக்சிம் இங்கே உண்ணப்படுகிறது. பூர்வபக்ஷி மேலும் கருத்துப்படி வேதங்களே கபில முனிவரின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன; பிறகு வேதங்களை கபில ஸ்மிருதியின் துணை கொண்டுதான் விளக்க வேண்டும்.

நிரீஷ்வர சாங்கிய பூர்வபக்ஷியின் இந்த வாதத்தை “ஸ்மிருதி அநவகாச தோஷ ப்ரஸங்காத் இதி சேத் நாண்யஸ்மிருதி அநவகாச தோஷ ப்ரஸங்காத்” என்று சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரரால் மறுக்கப்படுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு:

வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் விளக்கத்திற்கு கபில ஸ்மிருதியைப் பயன்படுத்தாவிட்டால், அது அர்த்தமற்றதாகவும், நோக்கமற்றதாகவும் மாறும், இது ஒரு கடுமையான குறைபாடாகும். நோக்கமற்ற.

பிரபஞ்சத்திற்குக் காரணம் பகவான் ஸ்ரீமன் நாராயணனே என்று கூறும் வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் கபில ஸ்மிருதி எதிரானது என்பதும் இந்த உண்மையை மனு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி போன்ற மற்ற எல்லா ஸ்மிருதிகளும் முழு மனதுடன் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றன என்பதும் இந்த சூத்திரத்திலிருந்து மறைமுகமாகத் தெரிகிறது.

மனு ஸ்மிருதி கூறுகிறது, “அபோநரா இதி ப்ரோக்தா: அபோவை நர சுனவ:தா யதஸ்ய அயனம் பூர்வம்: தேன நாராயண ஸ்ம்ருதி: ||”

இந்த ஸ்லோகம் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தா என்று தெளிவாகக் கூறுகிறது. மனு எதைச் சொல்கிறதோ அதுவே சம்சார நோய்க்கு மருந்து என்று வேதமும் கூறுகிறது. எனவே மனுவின் வாசகங்கள் வேதங்களைப் போல நமக்கு அதிகாரம்.

பூர்வபக்ஷி மேலும் கூறும்போது, ​​கபில முனிவர் தனது யோக சக்தியால் மனிதனின் அனைத்து அதீதமான விஷயங்களையும் தன்னால் பார்க்க முடிந்தது என்றும், அவருடைய கூற்றுகள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியபோது, ​​சூத்ரகாரர் இதை மறுத்து, மனு மற்றும் பிற முனிவர்களும் கூட கூறினார். யோக சக்திகள் கபிலனைப் பார்த்த விதத்தில் சூப்பர் மனித விஷயங்களைப் பார்க்கவில்லை.

எனவே கபில ஸ்மிருதியை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது முடிவு.

இரண்டாவது அதிகாரம் யோகா பிரதுக்தி அதிகாரம். இந்த அதிகாரத்தில் சூத்ரகாரர் முந்தைய அதிகாரத்தில் இருந்த அதே வாதத்தைப் பயன்படுத்தி ஹிரண்யகர்பாவால் நிறுவப்பட்ட சேஷ்வர சாங்கிய தத்துவ அமைப்பைக் கண்டிக்கிறார். இந்த சேஷ்வர சாங்கிய அமைப்பு யோக முறை தத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தத்துவ முறைப்படி, பகவான் ஸ்ரீமன் நாராயணன் பிரபஞ்சத்திற்கு உபாதன கர்ணன் அல்ல, ஆனால் அவனுடைய ஒரே நிமித்த கரண உபாதன கரேனா பிரகிருதியே.

ஸூத்ரம் ஏர்தேந யோக ப்ரத்யுக்தா:

சதுர்முக பிரம்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனின் நாபியில் இருந்து பிறந்தாலும், ராஜஸ மற்றும் தாமஸ குணங்களால் பாதிக்கப்பட்டவர் என்பதால், அதே வாதத்தால் யோக முறை மறுக்கப்படுகிறது. எனவே அவருடைய வார்த்தைகளை அதிகாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

மூன்றாவது அதிகாரம் விலக்ஷணத்வாதிகாரணம் எனப்படும். இந்த அதிகாரம் முதல் நிரீஷ்வர சாங்கியம் கபில ஸ்மிருதியின் அடிப்படையில் பொது அறிவுக் கண்ணோட்டத்தில் எதிர்ப்புகளை எழுப்புகிறது மற்றும் உபாதான கர்ணம் மற்றும் நிமித்த கரணமாகிய பிரபஞ்சத்திற்கு காரணமான பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்ற நமது கட்டிடத்தை அழிக்க முயற்சிக்கிறது. சூத்திரகாரர் அவருக்கு மிகவும் பொருத்தமான பதில்களை அளித்து, அவரது ஆட்சேபனைகளை நிராகரித்து, கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை நிறுவுகிறார்.

முதல் ஆட்சேபனை இந்த அதிகாரத்தில் உள்ளது. இந்த அதிகாரத்தில் ஒன்பது சூத்திரங்கள் உள்ளன, அவற்றில் முதல் இரண்டு சூத்திரங்கள் பூர்வபக்ஷ சூத்திரங்கள் ஆகும், அவை எதிராளியின் பார்வை அல்லது ஆட்சேபனையை எதிரொலிக்கின்றன, மீதமுள்ள ஏழு சூத்திரங்கள் எதிரியின் ஆட்சேபனைக்கு பதிலளிக்கும் சித்தாந்த சூத்திரங்கள்.

முதல் சூத்ரம் “ந விலக்ஷணத்வாத் அஸ்யதத்தத்வம்ச சப்தாத்”.

அதன் பொருள் என்னவென்றால், “சத்வ, ரஜஸ, தாமஸம் என்ற மூன்று குணங்களைக் கொண்ட இந்த பிரபஞ்சத்திற்குப் பிரபஞ்சத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும், பிரம்மம் ஜடக் காரணமோ, உபாதனக் காரணமோ ஆகாது. உண்மையில் பிரபஞ்சத்தின் பொருள் பிரம்மத்தில் இருந்து வேறுபட்டது என்பது உபநிடதங்களில் தெளிவாக உள்ளது.

மேற்கூறிய ஆட்சேபனை மிகவும் பொதுவான ஒன்று, ஏனென்றால் மண் பானையின் பொருள் களிமண்ணைப் போலவே உபதான கரணமாக இருப்பதை நாம் பார்த்தோம். இதேபோல் மஞ்சள் நிறத்தில் இருக்கும் தங்கம் பல ஆபரணங்களுக்குப் பொருள் காரணமாகும். இந்த ஆபரணங்களும் மஞ்சள் நிறத்தில் உள்ளன மற்றும் பொருள் தங்கம் போன்றது. உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் இரண்டையும் உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்திற்கு பிரகிருதியாகிய மூலப்பொருள் உபதான கரணமாகும்.

பிராமணன் எங்கும் நிறைந்தவர், சர்வ வல்லமை படைத்தவர் மற்றும் எல்லாம் அறிந்தவர், ஜீவா அறியாமை மற்றும் குற்றமற்றவர். பூமி பேசியது மற்றும் நீர் விரும்பியது போன்ற உபநிடதங்களில் உள்ள சில கூற்றுகள் உண்மையில் எந்த அறிவும் இல்லாத உயிரற்ற பொருட்களைக் குறிக்கவில்லை, அது அந்தந்த பேச்சாளர்களைக் குறிக்கிறது. இந்தியா பாகிஸ்தானிடம் சொல்கிறது, அதில் அந்தந்த பேச்சாளர்களைக் குறிப்பிடுவது போன்ற ஒரு விஷயம் இது. ஜீவா பிரம்மத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், உயிரற்ற பொருட்களும் பிரம்மத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும் இருக்கும் போது, ​​அறிவுள்ள மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களுக்கு பிரம்மம் எப்படி ஜடக் காரணியாக இருக்கும் என்று எதிரி கேட்கிறார்.

எதிரணியின் இந்த ஆட்சேபனைக்கு சூத்திரகாரர் பின்வருமாறு பதிலளிக்கிறார். அவரது பதிலில் முதல் சூத்திரம் “த்ரிஷ்யதேது“. இதன் பொருள், இந்த உலகில், பொருள் மற்றும் நிறத்தில் காரணமும் விளைவும் முற்றிலும் வேறுபட்ட சில நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம்.

தேள் பசுவின் சாணத்தால் உருவாக்கப்படுகிறது. இரண்டுக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா என்பதுதான் நமது கேள்வி. பசுவின் சாணம் காரணம், தேள் விளைவு. எனவே கரணமும் காரியமும் என்ற காரணத்திற்கும் விளைவுக்கும் இடையே எந்த ஒரு ஒற்றுமையும் கண்டிப்பாகத் தேவையில்லை. காரணம் மற்றும் விளைவின் பொருள் ஒன்று மற்றும் ஒன்று இல்லை என்றால், எந்தவொரு பொருளும் எதிலிருந்தும் அல்லது ஒன்றுமில்லாததிலிருந்தும் கூட உருவாக்கப்படலாம் என்று வாதிடலாம். அது அப்படியல்ல. இந்தச் சூழலில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் காரணம் மற்றும் விளைவு அதாவது கரண மற்றும் காரியத்தின் கொள்கையை விளக்குவதற்கும் குறியிடுவதற்கும் ஒரு அழகான விளக்கத்தைத் தருகிறார். உவமை என்னவென்றால், ஒரு குழந்தை பிறந்த நாளிலிருந்தே பல உடல் மாற்றங்களைச் சந்திக்கிறது. மாற்றங்கள் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், இளமைப் பருவம், பின்னர் முதுமைப் பருவம். குழந்தை முழுவதும் உயிருடன் இருக்கும் போது மட்டுமே இந்த மாற்றங்கள் சாத்தியமாகும், அதாவது ஆன்மா உடலுக்குள் இருக்கும். இந்த மாற்றங்கள் உடலுக்கு மட்டுமே அன்றி உடலில் வாழும் ஜீவா அல்லது ஆன்மாவிற்கு அல்ல. பிரபஞ்சத்திற்குக் காரணம் பிரம்மன் என்ற விஷயத்திலும் இதே உதாரணம் நன்றாக இருக்கிறது. பிரம்மன் அல்லது பரமாத்மா என்பது அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் உள் ஆன்மா அல்லது அந்தர்யாமி ஆகும், அவை வேறுவிதமாகக் கூறினால் உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள்.

‘காரநாதவா’ கட்டத்தில் அல்லது காரண நிலையில் அவர் சூக்ஷ்ம (அணு) வடிவில் உள்ள அனைத்து உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களுக்கும் அந்தர்யாமியாக இருக்கிறார், இந்த நிலை பிரளய காலத்தில் உள்ளது. பரமாத்மா உலகைப் படைக்க விரும்பினால், சூக்ஷ்ம வடிவில் இருந்த உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் திட்டவட்டமான வடிவத்தையும் பெயரையும் எடுத்துக் கொண்டு பெரியதாக மாறும். எனவே கரண மற்றும் காரிய பாவத்தின் குறியிடப்பட்ட பதிப்பு பின்வருமாறு.

‘காரணவஸ்தா’வில் பரமாத்மா சூக்ஷ்ம சேதன அசேதன விசிஷ்டா (சூக்ஷ்மம் என்றால் நுட்பமானது, சேத்தனா என்பது உணர்வு மற்றும் அசேதனம் என்பது உணர்ச்சியற்றது, மற்றும் விசிஷ்டம் என்றால் இணைவு). விளைவின் கட்டத்தில் இருக்கும் காரிய வஸ்தாவில் பரமாத்மா ஸ்தூல சேதன அசேதன விசிஷ்டா (ஸ்தூல என்றால் பெரியது).

எனவே மாற்றம் என்பது அந்தர்யாமிக்கோ அல்லது பரமாத்மாவுக்கோ அல்ல, மாறாக சேதன மற்றும் அசேதனான அவனது உடல்களுக்கு. காரண கட்டத்தில் உடல்கள் சூக்ஷ்மா (அணு) மற்றும் விளைவு கட்டத்தில் அவை திட்டவட்டமான வடிவம் மற்றும் பெயரைப் பெறுகின்றன. இது மேலே குறிப்பிடப்பட்ட விளக்கத்தின் படி உள்ளது. எனவே அணு நிலை மற்றும் திட்டவட்டமான நிலை ஆகியவற்றின் பொருளில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் எதிரணியின் ஆட்சேபனை நிராகரிக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் மரண சரீரத்திற்கு அழகான விளக்கம் தருகிறார். இது உடலுக்கு மிகவும் பொருத்தமான வரையறை. வரையறை பின்வருமாறு.

ஒரு தனி ஆன்மாவால் ஆதரிக்கப்படும், ஆன்மாவால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் ஆன்மாவுக்குக் கீழ்ப்பட்ட பொருள் அல்லது பொருள் ஆன்மாவின் உடல். பரமாத்மாவின் உடலாகிய ஜீவா அல்லது ஆன்மாவிற்கும் அதே வரையறை நல்லது.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் சிஷ்ட அபரிகிரஹாதிகரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில், நிரீஷ்வர சாங்கியத்திற்குக் கொடுக்கப்பட்ட பதிலைப் பிரயோகித்து, அவருடைய ஆட்சேபனையைத் தீர்ப்பதன் மூலம், வேதத்தின் அதிகாரத்தை ஏற்காத மற்ற தத்துவ அமைப்புகள் தானாகவே அழிந்துவிடும் என்று சூத்ரகாரர் கூறுகிறார். இந்த அமைப்புகள் கனட முனிவரால் நிறுவப்பட்ட வைசேஷிக அமைப்பு, அக்ஷபாதா என்று அழைக்கப்படும் கௌதம முனிவரால் நிறுவப்பட்ட நியாய அமைப்பு. பௌத்தமும் சமணமும். இந்த அமைப்புகள் பிரபஞ்சத்தின் காரணம் பிரம்மம் அல்ல, பிராதானம் அல்லது பிரகிருதி அல்ல, ஆனால் அணுக்கள் என்று கூறுகின்றன. இந்த அமைப்புகள் பரமானுகார வடிகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஐந்தாவது அதிகாரம் போக்திரப்பட்டி அதிகாரம் எனப்படும். இந்த அதிகரணம் விலக்ஷனாத்வாதிகாரனுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது, இதில் சேதனம் மற்றும் அசேதனப் பொருள்கள் பரமாத்மாவின் உடல்கள் என்று கூறப்படுகிறது.

எதிராளியான நிரீஷ்வர சங்கியா மீண்டும் எழுகிறார். உணர்வு மற்றும் உணர்வற்ற உயிரினங்கள் பரமாத்மாவின் உடல்களாக இருக்கும் போது அணு வடிவிலும் திட்டவட்டமான அல்லது பெரிய வடிவத்திலும் ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்று அவர் கூறுகிறார். ஜீவாத்மா உடலில் ஏற்படும் துன்பத்தையும் இன்பத்தையும் பெறுவது போல, பரமாத்மாவும் தனது உடலில் ஏற்படும் இந்த துன்பத்திற்கும் இன்பத்திற்கும் உட்பட வேண்டும்.

எனவே பிரபஞ்சம் முழுவதையும் தனது உடலாகக் கொண்டதன் மூலம் மீண்டும் பிரபஞ்சத்திற்குக் காரணமான பிரம்மன் தன் உடலில் ஏற்படும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் ஆளாகிறான். பிரகிருதி அல்லது பிராதானம் பிரபஞ்சத்திற்குக் காரணம் என்ற நமது நிலைப்பாடு மிகவும் சிறந்தது என்று அவர் மேலும் கூறுகிறார். எனவே பிரபஞ்சத்தின் காரணமாக பிரம்மனைக் கருத முடியாது, ஏனென்றால் உடலின் உடைமையே அவனைத் துன்பத்திற்கு ஆளாக்குகிறது.

“போக்த்ரபத்தே: அவிபாக: சேத் ஸ்யாத் லோகவத்” என்ற சூத்திரத்தில் இந்த வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் வித்தியாசம் எப்போதும் உண்டு. உடல் உடைமை துன்பத்திற்குக் காரணம் அல்ல. துன்பம் அல்லது இன்பம் என்பது ஜீவாவின் கடந்தகால செயல்களான புண்யா மற்றும் பாபாவின் கணக்கில் உள்ளது.

மேற்கூறிய விஷயத்தை விளக்குவதற்கு சூத்ரகாரரே ஒரு நடைமுறை உதாரணத்தை தருகிறார்.

சிறை அல்லது சிறைச்சாலையில் சிறை கண்காணிப்பாளரும் குற்றவாளியும் அவரது குற்றங்களுக்கான தண்டனையை அனுபவிக்கிறார்கள். சிறைக்காவலர் தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளியை மேற்பார்வையிடுகிறார். அதனால் சிறையில் ஏற்படும் துன்பங்கள் சிறை கண்காணிப்பாளரை பாதிக்காது. அவ்வாறே இங்கு அந்தர்யாமியாகிய பரமாத்மா எந்த துன்பத்திற்கும் ஆளாகவில்லை, ஜீவன் மட்டுமே துன்பத்திற்கு ஆளாகிறான். ஆக பிரம்மம் மட்டுமே பிரபஞ்சத்தின் காரணமாகும்.

அடுத்த அதிகாரம் ஆரம்பநாதிகரணம். இது விலக்ஷனாத்வாதிகாரத்தில் உள்ள சூத்திரங்களில் ஒன்றோடு தொடர்பு கொண்டுள்ளது, அதில் கரணத்திலும் காரியத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான் என்று கூறப்பட்டது. பின்வரும் காரணிகளால் கரணமானது காரியத்திலிருந்து வேறுபட்டது என்று எதிராளி கூறுகிறார்.

1) பெயர்கள் வேறு. உதாரணமாக, களிமண் மற்றும் பானை. களிமண் காரணம், பானை விளைவு.

2) வடிவங்கள் அல்லது வடிவங்கள் வேறுபட்டவை – பானையின் வடிவம் களிமண் குவியலில் இருந்து வேறுபட்டது.

3) களிமண்ணால் செய்யப்படும் வேலை பானையில் இருந்து வேறுபட்டது. களிமண்ணின் விஷயத்தில் அது சாத்தியமில்லாத போது பானை தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது.

4) களிமண்ணிலிருந்து ஒரு பானை தயாரிப்பதில் நேரம் அடங்கும்.

5) களிமண்ணும் பானையும் ஒன்றானால் பானை செய்பவரின் முயற்சிக்கு அர்த்தம் குறையும்.

எனவே காரியம் கரணத்திலிருந்து வேறுபட்டது, அதே ஒப்புமையில் காரியமாகிய பிரபஞ்சம் பிரம்மமாகிய கரணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டால், பிரபஞ்சத்திற்கு பிரம்மம் காரணமாக இருக்க முடியாது என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “தத் அநந்யத்வம் ஆரம்பனா சப்தாதிப்ய” என்று சூத்ரகாரர் மேற்கூறிய எதிராளியின் பார்வையை மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் கீழே விளக்கப்பட்டுள்ளது. உத்தாலக முனிவர் தனது மகன் ஸ்வேதகேதுவுக்கு களிமண், பொன், இரும்பு ஆகிய மூன்று உவமைகளில், இந்த உலகம் சிருஷ்டிக்கு முன் சத்தாக இருந்தது என்று கூறுகிறார். இச்சூழலில் சத் என்று அழைக்கப்படும் பிரம்மன் பிரபஞ்சத்தை உருவாக்க விரும்பியபோது அவர் தன்னை பிரபஞ்சமாக மாற்றினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், படைப்பிற்கு முன் ஏற்கனவே கூறியது போல், சத் பிராமணன் அணு வடிவில் உள்ள உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களுக்கு அந்தர்யாமியாக இருந்தான், மேலும் அவன் விரும்பிய போது மாற்றம் நிகழ்ந்தது, அதே சத் தான் உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களுக்கு அந்தர்யாமியாகிறது. ஒரு திட்டவட்டமான மற்றும் பெரிய வடிவம். பிராமணன் கடந்த காலச் செயல்களின்படி ஜீவர்களுக்கு நான்கு விதமான உடல்களை அளித்தான் என்பது இதன் பொருள். நான்கு வெவ்வேறு வகையான உடல்கள் வான உயிரினங்கள் (தேவா), பூமிக்குரிய உயிரினங்கள் (மனித வடிவம்), விலங்குகள் மற்றும் உயிரற்ற பொருட்கள். எனவே பரமாத்மா ஜீவாக்களுடன் மேலே விவரிக்கப்பட்ட நான்கு வடிவங்களில் ஒவ்வொரு உடலுக்குள்ளும் நுழைந்து அவற்றிற்கு திட்டவட்டமான வடிவத்தையும் பெயரையும் கொடுத்தார்.

விளக்கப்படத்தில் காலையில் களிமண்ணாக இருந்த களிமண் குவியல் பிற்பகலில் கட்டா (பானை), தட்டுகள் அல்லது வட்டு (தட்டு அல்லது வட்டு) ஆனது. தட்டு அல்லது வட்டு ஷரவா எனப்படும். இந்த அனைத்து களிமண் பொருட்களிலும் ஒரே மாதிரியான பொருள் இருந்தாலும், அவை தேவைப்படும் நோக்கத்திற்கு ஏற்ப பெயர்கள் வேறுபடுகின்றன. கட்டா அல்லது பானை தண்ணீரை எடுத்துச் செல்வதற்கும் தண்ணீரை அப்படியே வைத்திருப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. வெவ்வேறு களிமண் பொருட்களின் பெயர்கள் மற்றும் நோக்கங்கள் வேறுபட்டாலும், அவை அனைத்தும் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டவை என்பது உண்மையாகவே உள்ளது. எனவே, காரியம் உருவாகும் மூலப்பொருளின் அம்சத்தில் கரணமும் காரியமும் ஒன்றே.

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை, பிரபஞ்சம் பரமாத்மாவின் சரீரம் மற்றும் அவர் உயர்ந்த ஆத்மா அல்லது அந்தர்யாமி. உடலும் ஆன்மாவும் பிரிக்க முடியாதவை என்பதால் அவை அனன்யா என்று அழைக்கப்படுகின்றன, அதாவது பிரிக்க முடியாதவை.

சில உபநிஷத நூல்களில், அதே சத் அஸத் என்றும் அவ்யக்ருத என்றும் அழைக்கப்படுகிறது., இதன் பொருள் அசத் அல்லது அவ்யக்ருதம் என்பது மாற்றப்படாத நிலை அல்லது கரண நிலையைக் குறிக்கிறது. அதுவே பிரம்மன்.

இந்தப் பாதத்தில் ஏழாவது அதிகாரம் இடரா வியாபதேசாதிகரணம் எனப்படும். பிரபஞ்சத்திற்கு பிரம்மம் காரணமாக இருக்க முடியாது என்று எதிராளி மீண்டும் எழுகிறார். அவர் பயன்படுத்திய தர்க்கம் அல்லது நியாயம் பின்வருமாறு.

கரணமும் காரியமும் வெவ்வேறாக இல்லாமல், இரண்டும் ஒன்றே, ஜீவனும் பரமாத்மாவின் காரியமாக இருக்கும் போது, ​​கரணமாக இருக்கும் போது, ​​இருவரும் அனன்யமாக இருக்கும் போது, ​​ஜீவனாகிய பிராமணன் பிரபஞ்சத்தைப் படைத்திருக்க முடியாது. ஒவ்வொரு அம்சத்திலும் அவர். எனவே ஜீவாவாகிய பிரம்மனுக்கு இரண்டு குறைபாடுகள் உள்ளன. முதல் குறைபாடு தனக்கு மிகவும் பாதகமான உலகத்தை உருவாக்குவது இரண்டாவது குறைபாடு தனக்கு சாதகமான உலகத்தை உருவாக்கவில்லை. எனவே பிரபஞ்சத்தின் காரணமாக பிரம்மன் இருக்க முடியாது. இந்த வாதம் அல்லது பகுத்தறிவு ஸ்ரீ ஆதிசங்கரரால் முன்வைக்கப்பட்ட அட்வைத முறையை எதிரொலிக்கிறது. அத்வைத தத்துவ அமைப்பில் பிரம்மமும் ஜீவாவும் ஒன்றுதான். பிரம்மன் அவித்யா அல்லது அறியாமையின் காரணமாக ஜீவ வடிவத்தை எடுத்துக்கொள்கிறார், மேலும் இந்த ஜீவன் குருவிடம் இருந்து “தத்வமசி” கற்றுக் கொள்ளும்போது மீண்டும் பிரம்மனாக மாறுகிறான், அதாவது நீ பிரம்மன்.

இந்த அதிகாரத்தில் முதல் சூத்திரம் இதர வியாபதேசத்ஹித அகரானாதி தோஷ பிரசக்தி மற்றும் இது பூர்வபக்ஷ சூத்திரம் ஆகும், இதன் பொருள் மேலே விளக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சூத்திரம் சித்தாந்த சூத்திரம் ஆகும், இது மேற்கூறியவற்றை மறுக்கும் வடிவத்தில் மேற்கூறியவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் உள்ளது. இந்த சூத்திரம் “அதிகம்து பேத நிர்தேசத்” என்று படிக்கிறது. பிரம்மன் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஜீவாவை விட மிகவும் மேலானவர் மற்றும் உயர்ந்தவர், எனவே பிரம்மன் ஜீவ வடிவத்தை ஏற்று சாதகமற்ற உலகத்தை உருவாக்குவது பற்றிய கேள்வி எழவே இல்லை.

இந்த பாதத்தில் உள்ள எட்டு அதிகாரங்கள் உபசம்ஹார அதிகாரம் ஆகும். இந்த அதிகாரம் பிரம்ம கரணத்துவத்தை மறுப்பதில் குறியாக இருக்கும் நிரீஷ்வர சாங்கிய வாதியும், பிரதான காரண வாதியுமானவர் மீண்டும் எழுந்து பிரம்மகாரணவாதத்திற்கு எதிராக மற்றொரு நியாயத்தைப் பயன்படுத்துகிறார். மண் பானை செய்வதற்கு சக்கரம் மற்றும் குச்சியைப் பயன்படுத்தி ஒரு பானை தயாரிப்பதை இந்த உலகில் நாம் பார்த்திருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். இதேபோல், ஒரு பொன் தொழிலாளி ஒரு ஆபரணத்தை உருவாக்க பல கருவிகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் பிரளய காலத்தில் பிரபஞ்சத்தைப் பொறுத்தமட்டில் பிரம்மம் மட்டுமே உள்ளது, வேறு எதுவும் இல்லை. நிச்சயமாக இங்கே பிரம்மன் என்பது மகாலட்சுமி தேவி மற்றும் ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கிறது. கருவி மற்றும் பிற கருவிகள் இல்லாத போது பரமாத்மா எவ்வாறு பிரபஞ்சத்தை உருவாக்க முடியும் என்பது அவரது கேள்வி.

மேற்கண்ட கேள்விக்கு விடையாக சூத்ரகாரர் முதல் சூத்திரத்தில் “உபசம்ஹாரதர்ஷனாத் நைதிசேத் ந க்ஷீரவதி” என்று கூறுகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், உலகில் உபாதான கரணம், நிமித்த கரணங்கள் தவிர எந்த ஒரு பொருளையும் உருவாக்க சககாரிகரணமும் இருக்க வேண்டும் என்று பார்த்தோம். சககாரிகரணம் இல்லாதபோது, ​​பிரம்மம் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது. க்ஷீரவதி என்று கூறி இது மறுக்கப்படுகிறது. சூத்ரகாரர் இந்தச் சூழலில் ஒரு நடைமுறை உதாரணத்தைக் கூறுகிறார். பால் தயிராக மாறுவதற்கு கூடுதல் கருவியோ அல்லது கருவியோ தேவையில்லை. அதுபோலவே பிரம்மனுக்கு எந்த ஒரு கருவியோ, கருவியோ, கருவியோ தேவையில்லை. விஸ்வாமித்ர முனிவர் தனது யோக மற்றும் ஆன்மீக சக்திகளால் திரிசங்குவுக்காக சொர்க்கத்தை உருவாக்க விரும்புவதைப் போல. இந்திரன், சிவன், நான்கு தலை பிரம்மன் போன்ற தெய்வீகக் கடவுள்கள் எந்தப் பொருளின் உதவியும் இல்லாமல் பொருட்களைப் படைப்பது போல, ஞானமுள்ள பரமாத்மா எந்த உதவியும் இல்லாமல் பிரபஞ்சத்தைப் படைக்க வல்லவர்.

9வது அதிகாரம் கிருதஸ்ன பிரசக்தி அதிகாரம் என அழைக்கப்படுகிறது. இதில் பிரபஞ்சத்திற்கு பிரம்மம் காரணமாக இருக்க முடியாது என்று எதிர்ப்பவர் மற்றொரு நியாயத்தை அல்லது தர்க்கத்தை எடுக்கிறார்.

பிரபஞ்சம் பிரம்மத்தின் மாற்றம் என்று சொல்லப்பட்ட ஆரம்பநாதிகரணத்துடன் இந்த அதிகாரம் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது. பிரம்மன் தன்னை பிரபஞ்ச வடிவத்திற்கு மாற்றும்போது. பிராமணன் என்பதே இல்லை. பிரம்மன் என்பது வெட்டப்படவோ அல்லது பிடுங்கவோ முடியாத ஒரு பொருள். பிரம்மம் இருந்தால் உலகமோ பிரபஞ்சமோ இல்லை என்கிறார். பிரபஞ்சம் இருந்தால் பிரம்மம் இல்லை.

இந்த அதிகாரத்தில் உள்ள முதல் சூத்திரம் “கிருத்ஸ்ன ப்ரசக்தி: நிரவயவத்வா சப்தகோபோவ”. இந்த சூத்திரத்தின் பொருள் மேலே குறிப்பிட்டது மற்றும் இது பூர்வபக்ஷ சூத்திரம். மேற்கூறியவற்றிற்குப் பதில் சூத்திரகாரர் “ஸ்ருதேஸ்து சப்த மூலத்வத்” என்று சித்தாந்த சூத்திரத்தைக் கூறுகிறார். இதன் பொருள் ஸ்ருதி அல்லது உபநிஷதம் பிரம்மன் நிரவயவ என்று கூறுகிறது, அதாவது அவருக்கு கைகால்கள், கைகள் போன்ற உறுப்புகள் இல்லை, அதனால்தான் அவரை பகுதிகளாக வெட்ட முடியாது. அதே சமயம் பரமாத்மா மகத்தான மனித சக்திகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அவர் விரும்பி பிரபஞ்சமாக மாறுகிறார், அதே நேரத்தில் பிரம்மனாக அப்படியே இருக்கிறார். நமது பொதுவான அனுபவத்தின் அடிப்படையில் நிரீஷ்வர சாங்க்யா எழுப்பிய ஆட்சேபனை பிரம்மனுக்குப் பொருந்தாது.

நிரீஷ்வர சாங்கிய அமைப்பில் உள்ள சில குறைபாடுகளை சூத்ரகாரரே சுட்டிக்காட்டுகிறார்.

பத்தாவது அல்லது கடைசி அதிகாரம் பிரயோஜனத்வாதிகாரம் எனப்படும்.

இந்த அதிகாரத்தில், பிரபஞ்சத்திற்குக் காரணமான பிராமணனை எதிர்ப்பவர் தனது கடைசி ஆட்சேபனையை எழுப்புகிறார். அவரது ஆட்சேபனை மிகவும் பொருத்தமானது மற்றும் தர்க்கரீதியானது. உன்னால் கூறப்படும் பிராமணனுக்கு நிறைவேறாத ஆசை இல்லை என்றும், அவப்த சமஸ்த காமம் என்றும் அவர் கூறுகிறார். அப்படி இருக்கும் போது அவன் படைப்பின் மூலம் பூமிக்குரிய பலன் என்ன. மேலும் பலன் இரண்டு வகைப்படும் என்கிறார். (1) தன் சுயத்திற்கு நன்மை. (2) மற்றவர்களுக்கு நன்மை.

அவர் அவப்த சமஸ்த காமாவாக இருப்பதால், அவருக்கு எந்த நன்மையும் இல்லை. அவர் உருவாக்கிய பிரபஞ்சம் பெரும்பான்மையான மனிதர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துவதால், மற்றவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. தனக்கோ அல்லது பிறருக்கோ எந்த நன்மையும் இல்லாதபோது, ​​அவனால் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது. எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு முட்டாள் கூட எதையும் செய்ய மாட்டான் என்று இந்த உலகில் ஒரு கோட்பாடு உள்ளது. எனவே மேற்கூறியவற்றின் அடிப்படையில் பிரம்மன் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது என்று நிரீஸ்வர சாங்கிய வாதி கூறுகிறது.

முதல் சூத்ரம் “ந ப்ரயோஜனத்வாத்”. சூத்திரத்தின் பொருள் மேலே குறிப்பிட்டது. இதுவே பூர்வபக்ஷ சூத்திரம். இந்த அதிகாரத்தில் இரண்டாவது சூத்திரம் “லோகவத்து லீலாகைவல்யம்” என்று படிக்கும் சித்தாந்த சூத்திரம் ஆகும்.

இதன் பொருள் பிரபஞ்சத்தின் உருவாக்கம், காத்தல், அழித்தல் ஆகியவை பரமாத்மாவின் விளையாட்டு மற்றும் அது அவரது கடந்த காலம்.

மேலே சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டால், பிரம்மனுக்கு இரண்டு தோஷங்கள் ஏற்படும் என்று எதிர்ப்பாளர் கூறுகிறார், ஏனென்றால் படைப்பு சமமாக இல்லை. குறைபாடுகள் பாரபட்சம் மற்றும் இரக்கமற்ற தன்மை. இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் அவர் ஒரு சார்புடையவர், இந்த உலகில் துன்பத்தில் இருப்பவர்களிடம் இரக்கமற்றவர்.

ஜீவர்களின் பூர்வ கிரியைகளின்படி சிருஷ்டியை உண்டாக்குவதால், மேற்கூறிய இரண்டு தோஷங்களும் பிரம்மனுக்குச் சொல்லக்கூடாது என்கிறார் சூத்ரகாரர்.

பிராமணன் பிரளயத்தின் போது அல்லது சிருஷ்டிக்கு முன் தனியாக இருந்தபோது, ​​ஜீவனோ அல்லது அவனது கடந்தகால செயல்களோ எங்கே இல்லை என்று கூறி எதிராளி மீண்டும் இந்தக் கருத்தை எதிர்க்கிறார்.

இந்த சூத்ரகாரரான வியாச முனிவரிடம், ஜீவாத்மாக்கள் நித்தியமானவை, அவை உடலால் உருவாக்கப்படவில்லை, எனவே அவர்களின் கடந்த கால செயல்களும் ஆரம்பம் இல்லாமல் உள்ளன என்று கூறுகிறார்.

எனவே இந்த பாதத்தில் நிரீஷ்வர சாங்கியம் எழுப்பிய அனைத்து ஆட்சேபனைகளும் முறியடிக்கப்பட்டன, எனவே பிரபஞ்சத்தின் பொருள், செயல்பாட்டு மற்றும் கருவியாக பிரம்மன் என்ற உண்மை நிறுவப்பட்டு வலுவடைந்தது.

இந்த இரண்டாவது அத்தியாயத்தில் இரண்டாவது காலாண்டு தர்கா பாதம் என்று அழைக்கப்படுகிறது, இதில் ஸ்ரீ விசிஷ்டாத்வைத முறைக்கு எதிரான தத்துவ அமைப்புகளைத் தாக்கும் வகையில் பதராயண முனிவரான சூத்திரகாரர் தாக்குதல் நடத்துகிறார்.

தாக்கப்படும் மற்றும் கண்டனம் செய்யப்படும் தத்துவ அமைப்புகள் பின்வருமாறு.

1) கபிலரின் நிரீஸ்வர சங்கிய அமைப்பு.

2) கனடாவின் வைஷேஷிகா அமைப்பு

3) பௌத்தத்தின் நான்கு வகைப்பாடுகள்.

4) ஜைன அமைப்பு.

5) பாசுபத அமைப்பு.

மேற்கூறியவற்றை மறுத்த பிறகு, சூத்திரகாரர் இறுதியாக பகவத் சாஸ்திரம் என்றும் அழைக்கப்படும் பஞ்சராத்ர சாஸ்திரத்தின் அதிகாரத்தை நிறுவுகிறார். மேலே குறிப்பிடப்பட்ட இந்த அமைப்புகளில், நிரீஷ்வர சாங்கிய அமைப்பு வேதங்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறது, மற்றவை வேதங்களின் அதிகாரத்தை ஏற்கவில்லை. இந்தப் பாதத்தில் எட்டு அதிகாரங்கள் உள்ளன. முதல் அதிகாரம் “இரச்சனா அனுபபத்தி அதிகாரம்” இதில் நிரீஷ்வர சங்க்ய அமைப்பு மறுக்கப்படுகிறது. அவர்களுக்கான அடிப்படை நூல் கபில ஸ்மிருதி, அது இப்போது இல்லை. கபிலரின் சீடரான ஈஸ்வர கிருஷ்ணர், இந்த முறைக்குக் கிடைக்கக்கூடிய அடிப்படை உரையான சங்கிய காரிகா என்ற படைப்பை இயற்றியுள்ளார்.

வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமநாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கபில பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம். அவரது முக்கிய விவாதம் பிரகிருதி, இது பிரபஞ்சத்தின் ஜடக் காரணம், பிரம்மம் அல்ல. பிரகிருதி என்பது பிரதானம், அனுமாணிக்கம் அல்லது அசப்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சூழலில் புருஷன் என்று அழைக்கப்படும் ஜீவாவின் முன்னிலையில் இந்த பிரகிருதி பிரபஞ்சத்தை உருவாக்குகிறது.

இந்த அதிகாரத்தில் ஒன்பது சூத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு சூத்திரமும் சாங்க்யா அமைப்பின் கண்ணோட்டத்தை மறுப்பதாகும். இந்த பிரபஞ்சம் சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய பண்புகளை உள்ளடக்கிய ஒரு விசித்திரமான அமைப்பு என்பது முதல் பார்வை. சத்வா மகிழ்ச்சியையும், ரஜஸ் ஜட ஆசையையும், தமஸ் மாயையையும் உண்டாக்குகிறது. பிரகிருதியின் மாற்றத்தின் வரிசை மஹத், அஹங்காரா, தன்மாத்ராக்கள் மற்றும் பூதங்கள் ஆகும். பிரகிருதி பிரபஞ்சத்தை தானே உருவாக்குகிறது என்று இந்த அமைப்பு மேலும் கூறுகிறது.

1) இந்த பார்வையை சூத்ரகாரர் மறுத்துள்ளார், அவர் முதல் சூத்திரத்தில் “ரச்சனா அனுப்பத்தேஷாச்ச நானுமானம் ப்ரவ்ருத்தேஷச்சா” என்று கூறுகிறார்.

பிரக்ஞையின் அர்த்தம் என்னவென்றால், பிரக்ஞை அல்லது பரமாத்மாவை உள் ஆன்மாவாக (அந்தர்யாமி) கொண்டிருக்க முடியாது என்பது ஒரு அற்புதமான அமைப்பைக் கொண்ட பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது. உள் ஆன்மா பரமாத்மா பிரகிருதியை பிரபஞ்சமாக மாற்ற விரும்புகிறது மற்றும் ஏற்படுத்துகிறது.

2) இரண்டாவது சூத்திரத்தில் எதிரி அல்லது பூர்வபக்ஷி (அ) பால் தானே தயிர் ஆகிறது என்று வாதிடுகிறார். (ஆ) ஒரு தென்னை மரத்தின் வேரில் ஊற்றப்படும் தண்ணீர், சுவையான நீரைக் கொண்ட இளந்தேங்காயாக மாறும். (இ) ஒரு மா மரத்தின் வேரில் ஊற்றப்படும் தண்ணீர், சுவையான சாறுடன் மாம்பழமாக மாறும். எனவே மேற்கூறிய எல்லா நிகழ்வுகளிலும், மேற்கூறியவைகள் நடக்க வேண்டும் என்று சித்தம் செய்ய பரமாத்மா உள் ஆன்மாவாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மேற்கூறியவற்றிற்கு சூத்ரகாரரின் பதில் என்னவென்றால், மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளிலும், சித்தங்களிலும், மேற்கூறியவைகள் நடக்கும்போதும் பிரம்மமே உள் ஆன்மாவாகும்.

3 வது சூத்திரத்தில் சூத்ரகாரர் கூறுகிறார், பிராமணன் உள்ளார்ந்த ஆன்மா மற்றும் சித்தம் இல்லை என்றால், எந்த உடலாலும் கட்டுப்படுத்த முடியாததால், படைப்பு மற்றும் பிரளயம் அடிக்கடி நடக்கும். எப்பொழுது பரமாத்மா உள்ளிருந்து விரும்புகிறாரோ அப்போதுதான் சீரான இடைவெளியில் சிருஷ்டியும் பிரளயமும் ஏற்படும்.

3) பூர்வபக்ஷியான சாங்க்யா மேலும் வாதிடுகிறார், புல்லை மேய்ந்த பிறகு ஒரு பசு எப்படி இயற்கையான செயல்முறையான பால் கொடுக்கிறது, அதே போல் பிரகிருதியும் தானே பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. புல்லை மேயும் காளையும் பால் கொடுக்காது, அதாவது பசு மேய்ந்த புல்லில் பரமாத்மா அந்தர்யாமியாக இருக்கிறார், இந்த அந்தர்யாமியே விரும்பி பசுவின் மூலம் பாலை உற்பத்தி செய்கிறார் என்பதே மேற்கூறிய வாதத்திற்கு சூத்ரகாரரின் பதில்.

4) ப்ரதானம் (பிரகிருதி) பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்ற தனது கண்ணோட்டத்தை வீட்டிற்கு ஓட்டுவதற்கு எதிராளி மற்றொரு உதாரணம் கொடுக்கிறார். ஒரு முடமானவன் பார்வையற்றவனைத் தன் முன்னிலையில் நடமாடச் செய்வது போலவும், காந்தம் இரும்புப் பொருட்களைக் கவர்ந்து இழுப்பது போலவும், ஜீவாவின் முன்னிலையில் பிரபஞ்சத்தைப் படைக்கிறது. குருடனின் கழுத்தில் அமர்ந்திருக்கும் முடவன் பார்வையற்றவனுக்குச் செல்லும் பாதை குறித்து வழிகாட்டுவதால், பரமாத்மா சித்தமான அந்தர்யாமியின்றி பிரபஞ்சம் உண்டாவது சாத்தியமில்லை என்று மேற்கூறியவற்றுக்குப் பதிலளித்த சூத்ரகாரர் கூறுகிறார். அவர்கள் செல்ல வேண்டும் அதாவது முடவருக்கு பரமாத்மா அந்தர்யாமி. காந்தம் பரமாத்மா விஷயத்தில் இரும்பு பொருட்களை ஈர்க்கும் காந்தத்திற்கு அந்தர்யாமி.

5) சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் சம சதவீதமாக இருக்கும் நேரத்தில் பிரளயம் நிகழும் என்றும், அவை சமமற்ற சதவீதத்தில் இருக்கும்போது சிருஷ்டி வரும் என்றும் சாங்கியரின் அடுத்த வாதம். பிரளய காலத்தில் சமச்சீரற்ற சதவீதம் ஏற்படும் என்று வாதிட்டாலும், எப்போதும் படைப்பு இருக்க வேண்டும். எனவே, பரமாத்மா அந்தர்யாமியாக இல்லாமல் பிரபஞ்சத்தின் காரணமாக மாறுவது சாத்தியமில்லை.

6) ஜீவா முன்னிலையில் பிரபஞ்சத்திற்குக் காரணம் பிரபஞ்சம் என்பதை மிகவும் சிரமத்துடன் ஏற்றுக்கொண்டாலும், ஜீவாவால் ஒருபோதும் மோட்சத்தையோ அல்லது முக்தியையோ அடைய முடியாது என்று சூத்ரகாரம் மேலும் கூறுகிறது. ஜீவா மோட்சத்தை அடைய வேண்டும் என்பதால், பரமாத்மா அதன் அந்தர்யாமி வடிவத்தில் பிரபஞ்சத்தை உள்ளே இருந்து கட்டுப்படுத்தாமல் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்க முடியாது.

7) இறுதியாக சூத்ரகாரர் அந்த அமைப்பிலேயே பல உள்முரண்பாடுகள் இருப்பதால் சங்கிய முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் மஹத் தீர்கவாதத்வாதிகரண என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த அதிகாரமானது கனடாவால் நிறுவப்பட்ட வைஷேஷிக முறையை மறுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. நெல் தானியத்தையே உண்பதால் அவன் கனடா.

அணுக்கள்தான் பிரபஞ்சத்துக்குக் காரணம், பிராதானம் அல்ல என்பது அவருடைய முக்கியக் கருத்து. மேலும் இரண்டு அணுக்கள் டயட்டோமிக் ஆகின்றன என்றும், இரு அணுவிலிருந்து முக்கோண அணுக்கள் உருவாகின்றன என்றும் கூறுகிறார். டையடோமிக் என்பதன் தொழில்நுட்பச் சொல் ஹ்ரஸ்வா மற்றும் முக்கோணத்திற்கு பரிமண்டலம். இந்த சூழலில் உள்ள வாதம் என்னவென்றால், முக்கோணங்கள் ஆறு முகங்களிலும் ஒன்றுசேர்ந்து பெரிய பொருளாக மாறுகின்றன. இவ்வாறு முக்கோணங்கள் இணைவதே கடுகு போன்ற சிறிய பொருளாகவும், மலை போன்ற மிகப் பெரிய பொருளாகவும் மாறக் காரணமாகும்.

அவரது மேற்கூறிய வாதத்தின் பின்னணியில், சூத்ரகாரர் ஏழு சூத்திரங்களால் இந்த அமைப்பை மறுக்கிறார்.

1) முதல் சூத்திரத்தில் “மஹத் தீர்கவத்வா ஹ்ரஸ்வ பரிமண்டலப்யம்”. இந்தப் பிரபஞ்சம் டையட்டம்களும், முக்கோணங்களும் ஒன்று சேர்ந்து பெரியதாகவும் நீளமாகவும் ஆனதால் ஆனது என்று கனடா சொல்வது சரியல்ல என்று பதராயண முனிவரான சூத்ரகாரர் கூறுகிறார். ஏனென்றால், துணியை உற்பத்தி செய்யும் இழைகளின் காரணமாக, ஒரு துணி போன்ற எந்தவொரு பொருளும் உருவாகி, ஆறு பக்கங்களிலும் நீள அகலத்தில் நெய்யப்பட்டு, பின்னர் துணியாக மாறுகிறது. ஒருவரோடு ஒருவர் இணைவதற்கான இந்த வடிவம் டையட்டோமிக்ஸ் விஷயத்தில் சாத்தியமில்லை, ஏனெனில் அவை கண்ணுக்கு தெரியாதவை. தெளிவின்மை நிரவயவ எனப்படும். பரமானுஸ் என்று அழைக்கப்படும் அணுக்கள் ஆறு முகங்களைக் கொண்டதாக ஏற்றுக் கொள்ளப்பட்டால், இது அனவஸ்தா எனப்படும் முடிவின்றி சென்றால். எனவே பிரபஞ்சத்தை அணுக்களால் உருவாக்க முடியாது என்று சூத்ரகாரர் வாதிடுகிறார்.

2) இரண்டாவது சூத்திரத்தில், சூத்ரகாரர் வைஷேஷிகாமாதாவின் மற்றொரு வாதத்தை மறுக்கிறார்.

கர்மா அல்லது அத்ரிஷ்டம் எனப்படும் கடந்த கால செயல்களின் காரணமாக பரமானுஸின் இயக்கம் உள்ளது என்பது விவாதம். இந்த அத்ரிஷ்டம் பரமானுஸில் இருக்கிறதா அல்லது ஜீவத்தில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த இரண்டும் இருக்க முடியாது, ஏனென்றால் அத்ரிஷ்டம் நித்தியமானது மற்றும் கர்மா அல்லது அத்ரிஷ்டம் நித்தியமானது என்றால், எப்போதும் படைப்பு இருக்க வேண்டும். எனவே அணுக்களிலிருந்து பிரபஞ்சம் தோன்ற முடியாது.

3) மூன்றாவது சூத்திரத்தில் வைஷேஷிகாவின் மற்றொரு கருத்து மறுக்கப்படுகிறது.

பொருள்களுக்கிடையேயான தொடர்பு சமவாய எனப்படும் என்பது விவாதம். குணி எனப்படும் பொருள் மற்றும் அதன் குணாதிசயமான குணா மற்றும் ஜாத்ன் எனப்படும் வகை மற்றும் வ்யக்தி எனப்படும் தனித்தன்மையின் விஷயத்தில் இது அப்ரிதக் சித்த சம்பந்தத்திலிருந்து வேறுபட்டது. சமவாய உறவை ஏற்றுக்கொண்டால், ஒரு சமவாயத்திற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும், எனவே முடிவில்லாமல் மற்றொரு சமவயத்தை உருவாக்க வேண்டும்.

4) 4 வது சூத்திரத்தில், மற்றொரு சர்ச்சை மறுக்கப்படுகிறது. சமவய உறவே நித்தியமானது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால், பானையும் அதன் அடித்தளமும் நித்தியமாகிவிடும், எந்த உருவாக்கமும் அழிவும் இருக்காது. இது நடக்காது என்பதால் வைஷேஷிகா முறை சரியல்ல.

5) இந்த அதிகாரத்தின் 5வது சூத்திரத்தில் இவர்களின் மற்றொரு கருத்து மறுக்கப்படுகிறது. மண் பானைக்கு ஒரு திட்டவட்டமான நிறம் இருப்பதால், அதை உருவாக்கும் அணுக்களில் இந்த நிறம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அணுக்கள் நித்தியமானவை, மிக நுணுக்கமானவை மற்றும் கண்ணுக்குத் தெரியாதவை மற்றும் நிறத்தைக் கொண்டிருக்க முடியாது என்ற அவர்களின் அசல் நிலைப்பாட்டிற்கு இது முரணானது. எனவே வைசேஷிக முறை சரியல்ல.

6) 6 வது சூத்திரத்தில், சூத்ரகாரர் கூறுகிறார், கனடா அணுக்களுக்கு நிறத்தை ஏற்க மாட்டேன் என்று சொன்னாலும், கரணத்தில் நிறம் இல்லாதபோது (காரணம்) எதுவும் இருக்க முடியாது என்ற உண்மையின் காரணமாக அவனது முரண்பாட்டிலிருந்து தப்பிக்க முடியாது. கார்யாவில் வண்ணம் மற்றும் அவரது அமைப்பு சரியாக இல்லை, ஏனெனில் அது எந்த ஒலி தர்க்கத்தின் அடிப்படையிலும் இல்லை.

7) 7 வது சூத்திரத்தில், வேதங்களின் அதிகாரத்தை ஏற்கும் கபில அமைப்பைக் கருத்தில் கொள்ள முடியும் என்றாலும், எந்த சூழ்நிலையிலும் கனட முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சூத்திரகாரர் கூறுகிறார்.

மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது அதிகாரங்கள் சமுதாய அதிகாரம், உபலாப்தி அதிகாரம், சர்வத அனுபவத்தி ஆதிக்கம் எனப்படும். இந்த மூன்று அதிகாரங்களில், பௌத்த தத்துவ முறை மறுக்கப்படுகிறது.

பௌத்த அமைப்பில் கீழ்க்கண்டவாறு 4 துணை அமைப்புகள் உள்ளன.

(1) வைபாஷிகா அமைப்பு, இதில் நாம் சுற்றிப் பார்க்கும் பொருட்களைக் கண்களால் (பிரத்யக்ஷம்) உணர முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவை க்ஷனிகா என்று அழைக்கப்படுகின்றன. அவர்களின் அறிவும் கணநேரமானது.

(2) சௌத்ராந்திகா அமைப்பு, இதில் வெளிப் பொருள்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால் அவை அனுமானால் உணர முடியும் (அனுமானம்) மற்றும் பிரத்யக்ஷ (உணர்ச்சி உணர்வு) மூலம் அல்ல. பொருள்கள் தற்காலிகமானவை, அவற்றின் அறிவு கணநேரம்.

(3) புறப் பொருள்கள் எல்லாம் இல்லை என்று கூறும் யோகச்சர அமைப்பு, ஆனால் அவற்றின் அறிவு அங்கேயே உள்ளது.

(4) இந்த உலகில் எதுவுமே இல்லை என்றும், எல்லாமே அர்த்தமற்றது என்றும் கூறும் மத்யமிக அமைப்பு. அவர் சர்வ சூன்ய வாதி என்று அழைக்கப்படுகிறார்.

மேற்கூறியவை அனைத்தும் இந்த பிரபஞ்சம் அணுக்களால் உருவாக்கப்பட்டது என்றும் அதனால் அவை பரமானுகார வாதிகள் என்றும் கூறுகின்றன.

வைபாஷிக அமைப்பில், பூமி, நீர், நெருப்பு மற்றும் காற்று ஆகியவற்றின் அணுக்கள் மற்றும் அறிவு மற்றும் ஆசைகளின் தொடர்ச்சி போன்ற உள் பொருட்களின் கலவையே வெளிப்புற பொருட்கள் என்று கூறப்படுகிறது. பூமிக்குரிய அணுக்கள் ஒரு வடிவம், சுவை, தொடுதல் மற்றும் வாசனை ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன என்று மேலும் கூறப்படுகிறது. நீரின் அணுக்களுக்கு வடிவம், சுவை மற்றும் தொடுதல் உணர்வு உள்ளது.

நெருப்பின் அணுக்களுக்கு வடிவம் மற்றும் தொடு உணர்வு உள்ளது. காற்றின் அணுக்களுக்கு தொடு உணர்வு மட்டுமே உள்ளது. அவர்கள் வானத்தை உறுப்புகளில் ஒன்றாக ஏற்கவில்லை.

வைபாஷிகா மற்றும் சௌத்ராந்திகாவில் மறுப்பு புள்ளிகள்.

1) அணுக்கள் பூமி, நீர், நெருப்பு மற்றும் காற்றை உருவாக்குகின்றன, இந்த நான்கு கூறுகளும் நம் உடல் மற்றும் புலன்களுக்கு காரணம் என்று அவர்கள் கூறுவது சரியல்ல, ஏனென்றால் ஒவ்வொரு விஷயமும் கணம் அல்லது க்ஷனிகம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும் உலகில் அவர்களைப் பற்றிய எந்தப் பேச்சும் குறிப்பும் இருக்காது, ஏனெனில் அவர்களின் இருப்பு தற்காலிகமானது. எழும் மற்றும் அவை நம்பத்தகுந்த வகையில் பதிலளிக்க முடியாத கேள்விகள் (1) அணுக்கள் எப்படி, எப்போது ஒன்றிணைகின்றன அல்லது ஒன்றிணைந்து அந்தந்த வேலைகளைச் செய்வதற்கான கூறுகளாக மாறும் போது (1)

(2) அவை உணர்வின் பொருளாக மாறும்போது (3) அவை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் பொருளாக மாறும் போது. (4) ஆன்மா யார் முதலியன.

2) அவித்யா (ஜீவாவின் அறியாமை) அல்லது ஜீவ மாயையின் காரணமாக பொருள்களும் அவற்றின் அறிவும் தற்காலிகமானதாக இருந்தாலும், அவை நித்தியமானவை என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த உலகம் எப்படி உருவானது என்பதை அவர்களால் தெளிவாகச் சொல்ல முடியாததால் இதுவும் சரியல்ல என்கிறார் சூத்ரகாரர். இங்கே அவித்யா ஒரு கணப் பொருளை நித்தியமாக உணரும் முற்றிலும் எதிர் உணர்வை உருவாக்குகிறது.

3)முந்தைய மண் பானை மறைந்த பிறகு வரும் மண் பானை, அதன் தற்காலிக இருப்பு மற்றும் முந்தைய மண் பானை அடுத்தடுத்த மண் பானைக்கு காரணம் என்பது அவர்களின் கருத்து.

இது சரியல்ல, ஏனென்றால் முந்தைய மண் பானை மறைந்த பிறகுதான் வருகிறது. எனவே முந்தையது அடுத்தவருக்கு காரணமாக இருக்க முடியாது. அபவா அல்லது முட்டாள்தனம் காரணமாக இருந்தால், ஒவ்வொரு பொருளும் எப்போதும் ஒன்றுமில்லாதது. இது நடக்காது. மேலும் சில புள்ளிகளை மேற்கோள் காட்டி சூத்ரகாரம் வைபாஷிக முறையை மறுக்கிறது.

வானம் அல்லது ஆகாஷா என்பது அர்த்தமற்றது என்றும் அது இல்லை என்றும் அவர்கள் மேலும் கூறுகிறார்கள். பூமியைப் போலவே வானமும் மிகவும் அதிகமாக உள்ளது என்று இந்தச் சூழலில் இதுவும் மறுக்கப்படுகிறது.

துச்ச என்று அழைக்கப்படும் ஒன்றுமில்லாத (அபத்தம்) சில விஷயங்கள் வெளிவருகின்றன என்ற வைஷா ஷிகாவின் வாதமும் சரியல்ல. முட்டாள்தனத்தால் உருவாக்கப்பட்ட உலகம் முட்டாள்தனமாக மட்டுமே இருக்க வேண்டும். களிமண் ஒரு மண் பானையை உற்பத்தி செய்கிறது. தங்கம் ஒரு ஆபரணத்தை உருவாக்குகிறது. எனவே முட்டாள்தனம் எதையாவது உற்பத்தி செய்யாது அல்லது ஏதோ முட்டாள்தனத்தை உருவாக்குகிறது.

சில காலத்திற்கு முன்பு ஒரு பொருளைப் பார்த்த பிறகு, அந்த குறிப்பிட்ட பொருளை நாம் நினைவில் கொள்ள முடிகிறது. இது பொருளின் பிரத்ய பிக்னா எனப்படும். பிரத்யா பிக்னா இருக்கும் போது ஒரு பொருள் எப்படி தற்காலிகமாக இருக்கும் அல்லது அதன் அறிவும் கணமாக இருக்கும். ஒரு பொருளின் குணாதிசயங்கள் மற்றொரு பொருளுக்கு மாற்றப்படும் என்ற சௌத்ராந்திகாவின் மற்றொரு வாதமும் இந்தச் சூழலில் சூத்திரகாரரால் குறிப்பிடப்படுகிறது.

வைசி ஷிகா மற்றும் சௌத்திரன் திரிகா ஆகிய இரண்டும் சூத்ரகாரரால் மற்றொரு புள்ளியில் எதிர்க்கப்பட்டது.

ஒன்றுமில்லாதவற்றிலிருந்து உற்பத்தியாகி, நிரண்வய வினாசம் (ஒரு பொருள் அழிந்தால் எதுவும் மிச்சமில்லை) என்ற வாதம் உண்மையாக இருந்தால், அதை உற்பத்தி செய்வதற்கு எந்த உடலும் எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. எந்தவொரு முயற்சியும் தீமையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது அல்லது விரும்பிய நோக்கத்தை அடைவதற்காக இந்த உலகில் நாம் பார்த்தோம். ஒவ்வொரு பொருளும் ஒரு நொடியில் அழிந்தால் அல்லது அழிந்து போனால், முயற்சியால் சாதிக்க எதுவும் இல்லை. சுறுசுறுப்பாக இருக்கும் அல்லது எந்த முயற்சியும் செய்யாத நபர்களுக்கு ஒன்றும் செய்யாமல் அடையும் போது, ​​உலக ஆசை, பரலோக ஆசை அல்லது முக்தி போன்ற அனைத்தும் நிறைவேற வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி இல்லை.

எனவே வைசேஷிகா மற்றும் சௌத்ராந்திகா அமைப்புகள் எந்த காரணத்திற்காகவும் நிற்காது, எனவே அவை கண்டிக்கப்பட வேண்டியவை.

சூத்ரகாரர் வைஷேஷிகாவின் அமைப்புக்கு மறுப்பு தெரிவிக்கிறார், இப்போது நீங்கள் ஒன்றும் ஒன்றும் இல்லாதது என்று சொன்னாலும், இந்த அறிக்கை உங்கள் உறுதிமொழி அல்லது பிரதிக்ஞைக்கு எதிரானது, பொருளை உணரும் குறிப்பிட்ட புலன் அதிபதி என்று அழைக்கப்படுகிறது, இந்த உணர்வு எடுத்துக்காட்டாக கண். ஒரு பொருளைப் பார்க்கவும், பின் வார்த்தைகள் அதை உணரவும். ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிய அறிவைக் கொடுக்கும் நான்கு நிலைகள் உள்ளன. அவை உணர்வு, பார்த்தல், பொருள், உணர்தல். இதுவே பிரதிக்ஞை. மேற்கூறிய உறுதிமொழியை உண்மையாக்க, ஒரு பானை தருணம் இருக்கும் போது, ​​மற்றொரு பானை தருணமும் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இங்கு பானை கணம் என்றால் பானை உணரப்பட்ட தருணம் என்று பொருள். முதல் பானை கணம் காரணம் என்றும், இரண்டாவது பானை கணம் எஃபெட் என்றும் சொல்ல வேண்டும். ஆனால் இரண்டு பானை தருணங்கள் ஒன்று காரணமாகவும் மற்றொன்று விளைவு ஒரே நேரத்தில் எப்படி இருக்கும் என்பது கேள்வி. கருத்து அப்படி இல்லை. கணநேரம் என்ற உறுதிமொழியும் தோல்வியடைகிறது.

மேலும், வைபாஷிகாவின் கருத்து என்னவென்றால், ஒரு பொருள் அழிவுக்கு உள்ளாகும்போது எதுவும் மீதமில்லை என்பதும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இதற்கு நிரண்வய விநாசம் என்று பெயர். விளக்கின் சுடரை அணைத்தால் எதுவும் மிச்சமில்லை என்கிறார் வைபாஷிகா. விளக்கின் சுடரில் திரி, எண்ணெய் மற்றும் சுடர் இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார். ஒவ்வொரு கணமும் எண்ணெயின் ஒரு புதிய சிறிய பகுதி எரிகிறது மற்றும் திரியும் படிப்படியாக எரிகிறது. எனவே எண்ணெய் மற்றும் திரியை எரிப்பதன் விளைவாக ஏற்படும் சுடர் ஒவ்வொரு கணமும் வேறுபட்டது. கண்ணின் (பிரத்யக்ஷ பிரமோனா) உணர்வின் மூலம் சுடர் சிலவாகத் தோன்றினாலும், ஒவ்வொரு கணமும் சுடர் வித்தியாசமாகிறது.

இச்சூழலில் இரண்டு விதமான அழிவுகளை வைஷாசிகா கூறுகிறது. சுடர் நம்மால் அணைக்கப்படும் போது. அழிவுக்கு அப்ரதி சங்கிய நிரோதா என்று பெயர். (வைஷா ஷிகாவால் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப சொல்) எண்ணெய் தீர்ந்துவிட்டதாலோ அல்லது திரி முழுவதுமாக எரிந்ததாலோ அல்லது இரண்டினாலோ தீப்பிழம்பு தானாகவே அணைந்துவிட்டால், அது ப்ரதி சங்கிய நிரோதா எனப்படும்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அழிவை நிரண்வய விநாசம் என்று கூறுகிறார்கள், ஏனென்றால் எதுவும் எஞ்சவில்லை. ஸ்தூல வினாஷம் என்பது ப்ரதி சாங்க்ய நிரோதா என்றும், அதில் அழிவுக்குப் பின் எச்சங்கள் தெரியும் என்றும் கூறப்படுகிறது. அப்ரதி சாங்க்ய நிரோதா என்பது சூக்ஷ்ம வினாஷமாகும், அதில் எச்சங்கள் தெரியவில்லை.

அழிவு எப்பொழுதும் சந்வயமாக இருக்கும் என்று கூறும் சூத்ரகாரரால் அவரது மேற்கூறிய வாதத்தை ஏற்கவில்லை, ஏனென்றால் அழிவு எப்போதும் ஒரு மாற்றம்தான். ஒரு பானையை ஒரு சுத்தியலால் அடித்தால், பானை அழிக்கப்பட்டு, பானை துண்டுகளாக உடைக்கப்படும், அவை கபாலா என்று அழைக்கப்படுகின்றன, மேலும் இந்த வினாஷம் (அழிவு) மட்டுமே சான்வயமாகும். சுடரை அணைக்கும் விஷயத்தில் கூட, அணு இயல்புடைய எச்சங்கள் காற்றில் கலக்கப்பட்டு, வினாஷம் மட்டுமே சான்வயமாகும் என்று சூத்ரகாரர் கூறுகிறார். இந்த அதிகாரத்தில் உள்ள ஒரு சூத்திரத்தில் பௌத்த தத்துவத்தின் சௌத்திர திகா அமைப்பும் மறுக்கப்பட்டுள்ளது. சூத்திரம் “நாசதா அத்ரிஷ்டா த்வத்” என்று கூறுகிறது.

சௌத்ரங்கிகா பொதுவாக வெளியில் இருக்கும் பொருள்கள் அங்கே இருந்தாலும் அவை குறிப்பால் மட்டுமே உணரப்பட வேண்டும் என்று வாதிடுகிறது. மேலும் பொருள்கள் மற்றும் அவற்றின் அறிவு இரண்டும் தற்காலிக இயல்புடையவை.

2வது அத்தியாயத்தின் இந்த 2வது காலாண்டில் உள்ள 4வது அதிகாரம் “உபலாப்தி அதி கரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆதிக்கரணத்தில் தேசத்தைக் கண்டிப்பதற்காக பௌத்த தத்துவத்தின் யோகாசார அமைப்பு வருகிறது.

இது மூன்று சூத்திரங்களைக் கொண்டுள்ளது.

யோகாச்சரத்தின் முக்கிய கருத்துக்கள்

1) பொருள்கள் பௌதீகமாக இல்லை ஆனால் அவற்றின் அறிவு இருக்கிறது. அந்த அறிவு கூட ஒரு கணம் நீடிக்கும்.

2) கனவில் நாம் காணும் பொருள்கள் கணநேரம் போல. எனவே விழிப்பு நிலையில் உள்ள பொருட்களும்.

அந்த வகையான அறிவில் அவர்கள் முன்வைக்கும் இந்த வாதம் பல்வேறு வகையான பொருட்களின் அடிப்படையில் இல்லை. பல்வேறு அறிவு என்பது வசனம் எனப்படும் கருத்தின் தொடர்ச்சியின் கணக்காகும்.

வசனத்தின் சரியான பொருள் வேறுபாடு உணர்வின் தொடர்ச்சி. ஒரு மண் பானை பற்றிய அறிவு இருக்கும் போது அது கப்லா (மண் பானையின் உடைந்த துண்டுகள்) பற்றிய அறிவுக்கு வழிவகுக்கிறது. மண் பானை பற்றிய கருத்து மீண்டும் முன்பு இருந்த மண் பானையின் உணர்விலிருந்து வருகிறது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு புலன் மறைந்து மற்றொரு புலன் அந்த இடத்தில் தோன்றும் மற்றும் பல.

கடுகு, மலை போன்ற வெளிப்புறப் பொருட்களின் வடிவம் உள்மனதில் இருக்கும் அறிவுக்கு எப்படி வருகிறது என்று யோகாச்சரரிடம் கேட்டபோது, ​​ஒரு பொருளைக் குறிப்பிடுவது கூட அதன் குரல் வெளிப்பாட்டால்தான் என்று பதிலளித்தார்.

“நபவ உபலப்தே:” என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் மேற்கூறிய வாதத்தை சூத்ரகார மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பொருள் உடல் ரீதியாக இருக்கும்போது அதன் இருப்பை நிறுவ முடியாது. அதாவது பொருளும் அதன் கருத்தும் இணைந்து இருப்பவை என்று வேறுவிதமாகக் கூறினால். புலனுணர்வும் பொருளும் இணைந்து இருக்கும் போது, ​​அது “சஹோபலம்ப” “உபலாம்பா” என்றால் உணர்தல் என்றும், “சஹா” என்றால் கூட்டல் என்றும் யோகச்சாரம் கூறுகிறது. “சஹோ பலம்ப” விஷயத்தில் அறிவும் பொருளும் ஒன்றே என்று கூறுகிறார்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் மேற்கூறிய வாதத்தை எதிர்கொண்டு சஹலாம்பா என்பது பொருளும் புலனும் ஒன்றே என்று அர்த்தம் இல்லை என்று கூறுகிறார். ஒரு நபர் “நான் இந்த பானையை உணர்கிறேன்” என்று சொன்னால். இந்த கூற்றில் “நான்” என்பது பொருள் (“கர்த்தா”) நபரைக் குறிக்கிறது, மண் பானை என்பது உணரப்பட்ட பொருளைக் குறிக்கிறது. பொருளுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இருக்கும்போது பொருளுக்கும் அதன் கருத்துக்கும் வித்தியாசம் இருக்கும்.

இரண்டாவது சூத்திரகாரர் கனவுகளின் போது உணரப்பட்ட பொருட்களுக்கும் விழித்திருக்கும் நிலையில் உணரப்பட்ட பொருட்களுக்கும் வித்தியாசம் இருப்பதாக கூறுகிறார். கனவுகளின் போது உணரப்படும் பொருள்கள் தூக்கம் மற்றும் குறைபாடுள்ள மனம் மற்றும் பிற விஷயங்களால் ஏற்படும் குறைபாடுகளுக்கு உட்பட்டவை.

மேலும் பொருள் இல்லாமல் கருத்து இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. அத்தகைய கருத்து இருக்க முடியாது. பொருளும் பொருளும் இன்றி அறிவு இருக்க முடியாது.

எனவே யோகாச்சர முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே இறுதி முடிவு.

ஐந்தாவது அதிகாரம் “சர்வத அனுபபத்தி” அதிகாரம். இந்த அதிகாரம் பௌத்த தத்துவத்தின் மத்யமிக அமைப்பை மறுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த மத்யமிகா “சர்வ சூன்யவாதி” என்று அழைக்கப்படுகிறார். பொருளோ அல்லது அதன் உணர்வோ இல்லை என்றும் அதுவே புத்தரின் இறுதி முடிவு என்றும் கூறுகிறார். உணர்வின்மை அவனது அமைப்பின் கோட்பாடு மற்றும் முட்டாள்தனம் அதுவே இரட்சிப்பு. ஒரு பொருள் இருப்பதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஏதோவொன்றில் இருந்து சிலவற்றை உருவாக்குவதைக் காணவில்லை என்கிறார். களிமண் குவியல் இழக்கப்படும்போது முட்டாள்தனம் மட்டுமே இருக்கும், அதில் இருந்து முட்டாள்தனமான பானை உருவாகிறது. மேலும் இவ்வுலகில் ஒவ்வொரு பொருளும் மாயையே.

“சர்வதா அனுபபத்தேஷ்ச” என்று படிக்கும் சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரரால் இந்த சர்ச்சை மறுக்கப்படுகிறது. இந்த சூத்திரத்தின் அர்த்தம், கற்பனையின் எந்த நீளத்திலும், இந்த சூன்யத்வவாதத்திற்கு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒவ்வொரு பொருளும் சத் (உண்மையான பொருள்) உண்மையில் இருக்கிறதா, அது இல்லாததா, மேற்கூறிய இரண்டைத் தவிர மற்றவையா என்று அவர் உறுதிமொழி கூறுகிறாரா என்று கேள்வி கேட்கப்பட வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் தனது வாதத்தை நிறுவ முடியாது.

இந்தப் பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் நான்கு சூத்திரங்களைக் கொண்ட “ஏகஸ்மிந் அஸம்பவாதிகரண” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரம் சமண தத்துவ முறையைக் கண்டிப்பதற்காகவே முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஜைனர்களும் பரமனுக்கரணவாதிகள். அவர்களின் முக்கிய கோட்பாடுகள் பின்வருமாறு.

உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தில் ஈஸ்வரன் என்று அழைக்கப்படும் ஒரு உயர்ந்த உயிரினம் இல்லை. இந்த பிரபஞ்சம் திரவியங்கள் எனப்படும் ஆறு பொருட்களால் ஆனது. இந்த திரவியங்கள் ஜீவா, தர்மம், அதர்மம், புத்கலா, கலா மற்றும் ஆகாஷா. மேலே விவரிக்கப்பட்டவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன. ஜீவா என்பது தனிப்பட்ட ஆன்மா (உணர்வு உள்ளவர்) மூன்று வகைகளாகும். பத்தர்கள், யோகசித்தர்கள் மற்றும் முக்தாக்கள் என்பன பிரிவுகள். பத்தர்கள் சம்சாரத்தின் பந்தம் கொண்ட முக்தி பெறாத ஆத்மாக்கள். தியானத்தின் மூலம் பற்றின்மை உணர்வுடன் யோக சக்திகளைப் பெற்ற ஜீவர்கள் யோகசித்தர்கள். முக்தர்கள் முக்தி பெற்றவர்கள். தர்மம் என்பது ஒரு ஜீவனைப் பிரிந்து முக்தி அடையச் செய்யும் சக்தி (புண்யம்). அதர்மம் என்பது ஜீவாத்மாக்களை இந்தப் பிரபஞ்சத்திலேயே இருக்கச் செய்யும் பாவச் செயல்.

புட்கலா என்றால் நிறம், மணம், சுவை, தொடுதல் ஆகியவற்றைக் கொண்ட பொருட்கள். இந்த புட்கல மீண்டும் இரண்டு வகை. முதலாவது அணுக்களின் வடிவத்திலும், இரண்டாவது அவற்றின் சேர்க்கையிலும் உள்ளது. அணுக்களின் கலவையானது காற்று, நெருப்பு, நீர், பூமி, உடல், உலகம் போன்றவற்றை உருவாக்குகிறது.

காலா அல்லது காலம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என பிரிக்கப்பட்டுள்ளது. காலம் அணுவானது. வானம் அல்லது ஆகாஷா என்பது எல்லையற்ற வெளி. அணுக்கள் தவிர மேலே உள்ள அனைத்து பொருட்களும் மீண்டும் ஐந்து அஸ்திகாயங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு பொருள் ஒரு பெரிய இடத்தைச் சூழ்ந்தால் அது அஸ்திகாயா எனப்படும். ஜீவஸ்திகாயா, தர்ம ஆஸ்திகாயா, அதர்ம அஸ்திகாயா, புத்கல ஆஸ்திகாயா, ஆகாஷ அஸ்திகாயா என்பவை ஐந்து ஆஸ்திகாயங்கள். இரட்சிப்புக்கான வழிமுறையானது, நல்ல அறிவு மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் பின்னணியில் நேர்மையான நடத்தை ஆகும். முக்தி என்பது ஜீவாத்மாவாகிய ஒருவரின் சொந்த சுயத்தின் உள்ளார்ந்த மற்றும் உள்ளார்ந்த இயல்பை மலரச் செய்வதாகும்.

மேற்கூறியவற்றைத் தவிர, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஏழு மடங்கு ஒன்றுக்கொன்று முரணான குணாதிசயங்களைக் கொண்டவை என்று கூறுகிறார்கள். ஏழு மடங்கு பண்புகள் (1) ஒரு பொருள் இருக்கலாம் (2) ஒரு பொருள் இல்லாமல் இருக்கலாம் (3) ஒரு பொருள் இருக்கலாம் மற்றும் இல்லாமல் இருக்கலாம். (4) ஒரு பொருள் விவரிக்க முடியாததாக இருக்கலாம் (5) ஒரு பொருள் உள்ளது மற்றும் விவரிக்க முடியாததாக இருக்கலாம் (6) ஒரு பொருள் இல்லை மற்றும் விவரிக்க முடியாததாக இருக்கலாம் (7) ஒரு பொருள் இருக்கலாம் & இல்லை மற்றும் விவரிக்க முடியாதது.

இந்த ஏழு மடங்கு பண்பு சப்தபங்கிவாதா என்று அழைக்கப்படுகிறது. “நைகஸ்மிந் அசம்பவாத்” என்று சூத்ர வாசிப்புடன் மேற்கூறிய ஜைன மதத்தை மறுதலிக்கத் தொடங்குகிறார் சூத்ரகாரர். இதன் பொருள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பண்புகள் ஒரே பொருளில் ஒரே நேரத்தில் இருப்பது சாத்தியமில்லை. நிழலும் வெப்பமான சூரியனும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருப்பதாகச் சொல்வது போலத்தான். இது சாத்தியமில்லாததால், ஒரே நேரத்தில் ஒரே பொருளில் உள்ள ஏழு மடங்கு பரஸ்பர முரண்பாடான பண்புகள் சாத்தியமில்லை. எனவே சமணத்தை ஏற்க முடியாது. இரண்டாவது மற்றும் மூன்றாவது சூத்திரங்களில், ஜைனர்களின் மற்றொரு பார்வையை சூத்திரகாரர் மறுக்கிறார். ஜீவாவின் தனிப்பட்ட ஆத்மாவுக்கு நிலையான அளவு இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜீவாக்கள் ஒவ்வொரு பிறப்பின் போதும் அவர்கள் எடுக்கும் உடலின் அளவு என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு பிறவியில் ஒரு ஜீவன் யானையாக மாறக்கூடும் என்பதாலும், அந்த பிறவியில் ஜீவாவின் அளவு யானையின் அளவாக இருக்கும் என்பதாலும், அடுத்த பிறவியில் ஜீவா இருந்தால், இந்த கூற்று முகத்தில் அபத்தமானது. எறும்பாக மாற, ஜீவாவின் அளவு எறும்பாக இருக்கும். யானை அளவு ஜீவா எப்படி தன்னை எறும்பாக குறைக்க முடியும். ஜீவா கண்ணுக்கு தெரியாதது என்பதால் இது நடக்காது.

எனவே ஜெயின் அமைப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகி விடுகிறது, எனவே கண்டிக்கப்பட வேண்டும்.

இந்தப் பாதத்தில் உள்ள ஏழாவது அதிகாரம் நான்கு சூத்திரங்களைக் கொண்ட பசுபதி அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் பசுபதி என்று அழைக்கப்படும் சிவபெருமான் நிறுவிய பசுபதி தத்துவ முறையை சூத்திரகாரர் கண்டிக்கிறார். அவரது போதனைகள், 1. பிரபஞ்சத்திற்கு நிமித்த கரணமானது சிவபெருமான் ஆகும், மேலும் உபதானகரனாகிய பிரகிருதி ஆதிப் பொருளாகும். அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் மிகவும் மோசமானவை மற்றும் மோசமானவை. அவர்களின் போதனைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் வேதங்களுக்கு முற்றிலும் வெறுக்கத்தக்கவை. இந்த மதம் மற்றும் தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் நான்கு பிரிவுகளாக உள்ளனர்.

1) கபாலிகா – ஆறு முத்திரைகளின் பெயர்களை அறிந்து (உடலில் சில பொருட்களை அணிந்து) தன்னையே தியானம் செய்பவன் மோட்சத்தை அடைகிறான். முத்ரிகை என்பது கழுத்தணி, விரல் மோதிரம், காது வளையம், தலைமுடியில் அணியும் மணி, சாம்பல், புனித நூல் ஆகிய ஆறு முத்திரைகளாகும்.

2) காளாமுகர்கள் – இங்கும் பிற உலகங்களிலும் உள்ள அனைத்துப் பலன்களையும் அடைவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு கூறுகின்றனர். மனித மண்டை ஓட்டில் இருந்து உண்பது, தகன பூமியின் சாம்பலைக் கொண்டு குளித்து, அதை வாயில் போட்டுக் கொள்வது, குச்சியை ஏந்துவது, பானையில் கள் (மது) நிரப்பி வழிபடுவது என்பன வழிமுறைகள்.

இதேபோல் மற்ற இரண்டு பிரிவுகளான பாசுபதங்கள் மற்றும் சைவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரே மாதிரியான வழிகளில் கற்பிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை உயர்ந்த சாதியாக மாற்றலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “பத்யு: அஸமஞ்ச ஸ்யாத்” என்று படிக்கும் சூத்ரகாரரால் மேற்கண்ட பாசுபத தத்துவ முறை கண்டிக்கப்படுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பரஸ்பர உள் முரண்பாடுகளின் காரணமாக பசுபதரின் (சிவபெருமான்) தத்துவம் மற்றும் மதம் நிராகரிக்கப்பட வேண்டும் மற்றும் அவருடைய போதனைகள் வேதங்களில் உள்ளவற்றுக்கு முற்றிலும் எதிரானவை. அனைத்து வேதங்களும் ஒரே குரலில் பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் ஜட மற்றும் செயல்பாட்டுக் காரணம் என்று பறைசாற்றுகின்றன. சில வேத மற்றும் உபநிடத நூல்களில் நான்கு தலைகள் கொண்ட பிரம்மா மற்றும் சிவன் பற்றிய சில குறிப்புகள் முதல் காலாண்டு மற்றும் முதல் அத்தியாயத்தின் இந்திர பிராண அதிகாரத்தில் உள்ள சூத்திரத்தின்படி விளக்கப்பட வேண்டும். “சாஸ்த்ர த்ரிஷ்ட்யது உபதேச: வாமத்வ தத்” என்பது சூத்திரம், அதாவது தியானம் தொடர்பான உபநிடதச் சூழலில் வேறு ஏதேனும் தெய்வம் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தச் சூழல்களில் தியானத்தின் பொருள் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே குறிப்பிடப்பட்ட தெய்வத்தின் உள் ஆன்மாவில் இருக்கிறார். அங்கு.

பாசுபத தத்துவத்தின் மற்ற ஆட்சேபனைகள் என்னவென்றால், இந்த தத்துவ அமைப்பில் வேதங்களுக்கு எதிரானது, மேலான இருப்பை செயல்பாட்டுக் காரணம் என்று மட்டுமே மேற்கோள் காட்டி, ஜடக் காரணமல்ல, அனுமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது (அனுமன பிரமனா). ஒரு மண் பானையின் செயல்பாட்டுக் காரணமான ஒரு பானை தயாரிப்பாளர் களிமண் குவியலைக் கையாளுகிறார் மற்றும் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருக்கிறார். அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பாக இருப்பது அதிஷ்டானம் எனப்படும். பானை செய்பவன் உடல் உள்ளதால் அதிஷ்டானான். பகவான் பசுபதியிடம் ஒரு உடலை ஏற்றுக் கொண்டாலும், அந்த உடல் என்றென்றும் நிலைத்திருக்க முடியாது, அது ஒரு நாள் அல்லது இன்னொரு நாளில் அழிய வேண்டும். எனவே சிவபெருமான் நிமித்த கரணமாக இருக்க முடியாது.

உடலாக இல்லாமல் ஒரு தனி ஆன்மா தனது உடலுக்கும், புலன்களுக்கும் இன்பம் மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் அதிஷ்டானம் என்று வாதிடப்படுகிறது. எனவே சிவபெருமான் பிரகிருதிக்கு அதிஷ்டானாகவும் நிமித்த கரணமாகவும் இருக்க முடியும். ஜீவா தனது புண்யா மற்றும் அப்பாவின் காரணமாக அதிஷ்டானாக இருக்கிறார். சிவபெருமானுக்கு புண்ணியமும் பாபாவும் இல்லாததால், அவர் அதிஷ்டனாக இருக்க முடியாது.

புண்ணிய, பாபா சிவபெருமானிடம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர் மற்ற சாதாரண ஆன்மாவைப் போல (ஜீவா) மற்றும் குறைந்த அறிவுடன் இருப்பார். எனவே அவர் நிமித்த காரனாக (செயல்பாட்டுக் காரணம்) இருக்க முடியாது. எனவே பாசுபத மடம் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்.

பௌத்தம் மற்றும் சமணத்தை நிராகரிக்கும் சூத்திரகாரரான பதராய முனிவர் விஷயத்தில், பலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

புத்தரும் ஜைனரும் கலியுகத்தில் இவ்வுலகில் தோன்றி அந்தந்த அமைப்புகளைப் பரப்பினார்கள். சூத்ரகாரர் துவாபர யுகத்தில் இருந்தார் மற்றும் சூத்திரங்களை இயற்றினார். கலியுகத்தில் மட்டும் பிரச்சாரம் செய்யப்பட்ட அமைப்புகளை சூத்திரகாரர்கள் எப்படிக் கண்டிக்க முடியும் என்பது சந்தேகம்.

இந்த சந்தேகம் பின்வருமாறு தீர்க்கப்படுகிறது:-

புத்தரும் ஜைனரும் ஏற்கனவே இருந்த அந்தந்த மதங்கள் மற்றும் தத்துவங்களைத் தங்களைப் பின்பற்றுபவர்களுக்குப் போதித்தார்கள். இந்த தத்துவங்கள் அனாதி அல்லது ஆரம்பம் இல்லாதவை. எனவே சூத்ரகாரர் அவர்களை நிராகரித்துள்ளார். மற்றொரு விளக்கம் என்னவென்றால், தற்போதைய கலியுகம் 71 சதுர் யுகங்களின் சுழற்சியில் 28 வது கலியுகமாகும் (கிருதம், திரேதா, துவாபர மற்றும் கலி ஆகியவை நான்கு யுகங்கள் மற்றும் அவை ஒன்றுகூடி ஒரு சதுர் யுகம்) வைவஸ்வத மன்வந்தரமாகும்.

ஒவ்வொரு மன்வந்தரத்திலும் 71 சதுர் யுகங்கள் உள்ளன. புத்தரும் ஜைனரும் 27வது கலியுகத்தில் பிறந்து அந்தந்த மதங்களைப் போதித்திருப்பார்கள். எனவே 28வது துவாபர யுகத்தில் பிறந்த பதராயண முனிவர் 27வது கலியுகத்தில் பிரசங்கிக்கப்பட்ட பௌத்தத்தையும் சமணத்தையும் கண்டித்திருப்பார்.

2வது அத்தியாயத்தின் இந்த 2வது பாதத்தில் 8வது அல்லது கடைசி அதிகாரம் “உத்பதி அசம்பாவாதிகாரனா”. இந்த அதிகாரத்தில் ஸ்ரீ பாஞ்சராத்ர சாஸ்திரத்தின் எதிர்ப்பாளர்கள் கண்டிக்கப்பட்டு பாஞ்சராத்ர சாஸ்திரத்தின் அதிகாரம் நிறுவப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீமன் நாராயணர் வேதங்களை இயற்றவில்லை, ஆனால் அவர் தனது நாபியில் உருவாக்கப்பட்ட நான்கு தலை பிரம்மாவுக்கு மட்டுமே வேதங்களைக் கற்பித்தார். ஆனால் அவர் பாஞ்சராத்ர சாஸ்திரம் முழுவதையும் எழுதியவர் என்றும் அதையே மற்றவர்களுக்குப் பரப்பினார் என்றும் கூறப்படுகிறது.

இந்த பாஞ்சராத்ர சாஸ்திரம் பகவான் ஸ்ரீமன் நாராயணனால் அனந்த, கருடன், விஷ்வக்சேனர், பிரம்மா மற்றும் இந்திரன் ஆகிய ஐந்து வான கடவுள்களுக்கு உபதேசிக்கப்பட்டது, மேலும் இந்த உபதேசம் ஐந்து இரவுகளில் செய்யப்பட்டது, எனவே இது “பாஞ்சராத்ரா” என்று அழைக்கப்படுகிறது. இதை பஞ்சராத்ரா என்று அழைப்பதற்கு மற்றொரு காரணம், இந்த சாஸ்திரம் ஒரு தனிப்பட்ட நபரால் அனுசரிக்கப்பட வேண்டிய அல்லது செய்ய வேண்டிய தினசரி வழக்கத்தைப் பற்றியது. இந்த தினசரி வழக்கம் அபிகமன, உபாதன, இஜ்யா, ஸ்வாத்யாயா மற்றும் யோகா என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த பாஞ்சராத்ர சாஸ்திரம் 108 சம்ஹிதைகளை உள்ளடக்கியது, அவை நான்கு வகைகளாகும். (1) ஆகமசித்தாந்தம் (2) மந்திர சித்தாந்தம் (3) தந்திர சித்தாந்தம் (4) தந்திர சித்தாந்தம்.

இது ரிக்வேதம், யஜுர் வேதம், சாமவேதம் மற்றும் அதர்வண வேதம் போன்ற பிஷனை போன்றது. ஒரு தனிமனிதன் ஒரு சம்ஹிதையில் உள்ள உபதேசங்களை கண்டிப்பாக கடைபிடித்தால், அவர் நித்திய பேரின்பமான மோட்சத்தை அடைவார் என்று கூறப்படுகிறது. இது மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையாக உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள 32 பிரம்ம வித்யாக்களில் ஏதேனும் ஒன்றை பக்தியோகத்தில் கடைப்பிடிப்பதற்குச் சமம்.

ஸ்ரீ பாஞ்சராத்ர சாஸ்திரத்தின் அதிகாரம் பற்றிய சந்தேகம் எழுந்தது, ஏனெனில் ஒரு சம்ஹிதையில் “சங்கரஷ்ணோ நாம ஜீவோ ஜாயதே” அதாவது சங்கர்ஷனா என்ற பெயரில் ஒரு ஜீவன் பிறந்தார். உபநிடதங்களின்படி ஜீவா என்ற தனி ஆன்மாவிற்கு பிறப்பு அல்லது இறப்பு இல்லை என்பதால் மேற்கண்ட கூற்று வேதங்களில் நிறுவப்பட்டதற்கு முரணானது. முரண்பாடு இருக்கும் போது மற்றும் வேதங்கள் உச்ச அதிகாரம் கொண்டவையாக இருக்கும்போது, ​​வேதங்களுக்கு முரணான பாஞ்சராத்ர சாஸ்திரம் ஒரு அதிகாரம் அல்ல என்று வாதிடப்பட்டது.

முதல் இரண்டு சூத்திரங்கள் பூர்வபக்ஷ சூத்திரங்கள் எதிரிகளின் பார்வையை குறிப்பிடுகின்றன. பிந்தைய இரண்டு சூத்திரங்கள் சித்தாந்த சூத்திரங்கள் எதிரி அல்லது பூர்வபக்ஷியின் பார்வையை மறுக்கின்றன.

முதல் சூத்திரம் “உத்பத்தி அசம்பவத்”. இந்த சூத்திரத்தின் பொருள் “ஜீவாவின் உருவாக்கம் இல்லாததால், ஜீவாவின் படைப்பைக் குறிப்பிடும் பஞ்சராத்ர சாஸ்திரம் ஒரு அதிகாரமாக இருக்க முடியாது. இந்த வாதத்தை சூத்திரகாரர் எதிர்த்தார், அவர் சூத்திரத்தில் விக்னானாதி பாவேவதத்த ப்ரதிஷேதா:” என்று கூறுகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், சங்கர்ஷணம், ப்ரத்யும்னா, அநிருத்தம் பகவான் ஸ்ரீ பரவாசுதேவரின் (ஸ்ரீமன் நாராயணனின்) வ்யூஹ வடிவங்கள் மற்றும் சங்கர்ஷனா என்ற பெயரில் ஜீவா இல்லை, எனவே வேதத்திற்கும் பஞ்சராத்ர சாஸ்திரத்திற்கும் முரண்பாடு இல்லை. எனவே பாஞ்சராத்திரம் முழுவதுமாக ஒரு அதிகாரம்.

சங்கர்ஷணம் என்பது ஜீவாத்மாக்களைக் குறிக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் வடிவம் மற்றும் பிரத்யும்னன் புலன்களைக் குறிக்கிறது. பிரளய காலத்தில் பிரபஞ்சம் அழிவதுதான் சங்கர்ஷணத்தின் போர்ட் ஃபோலியோ. பிரத்யும்னன் படைப்பாளி, அனிருத்தன் பாதுகாவலன்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் பல சம்ஹிதைகளில் இருந்து ஏராளமாக மேற்கோள் காட்டியுள்ளார், வேதங்களுடனான பாஞ்சராத்ர சாஸ்திரத்தின் முழு உடன்பாட்டை நிறுவினார். எனவே பாஞ்சராத்ர சாஸ்திரம் நமக்கு முழு அதிகாரம்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, முந்தைய இரண்டாவது அத்தியாயம் “அவிரோத அத்யாயா” என்று அழைக்கப்படுகிறது. அவிரோதா என்ற சொல்லுக்கு “எதிர்ப்பு இல்லை அல்லது ஆட்சேபனை இல்லை” என்று பொருள். மேலும் இதன் பொருள் பரபிரம்மம் அல்லது பிரம்மன் என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணரே, பிரபஞ்சத்தின் மூன்று காரணங்களான உபாதான கரணம் (பொருள் காரணம்), நிமித்த காரணம் (செயல்பாட்டுக் காரணம்) மற்றும் சககாரிகரணம் (கருவி காரணம்). இந்த உண்மை சமன்வய அத்யாயா என்ற முதல் அத்தியாயத்தில் நிறுவப்பட்டது, இது இரண்டாவது அத்தியாயத்தில் மேலும் வலுப்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டது. எனவே, பிரபஞ்சத்தின் மூன்று காரணகர்த்தாவாக இருப்பதில் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இரண்டாவது அத்தியாயம் உறுதியளிக்கிறது.

நிராகரிக்கப்பட்ட அமைப்புகள் (1) கபிலரின் நிரீஷ்வர சாங்கிய அமைப்பு (2) கானடாவின் வைஷேஷிக அமைப்பு, அதாவது பரமனுக்கரணவாதி, அதாவது அணுக்கள் பிரபஞ்சத்திற்கு காரணம் (3) பௌத்தத்தின் நான்கு துணை அமைப்புகளான வைபாஷிகா, சௌத்ராந்திகா, யோகச்சாரம் மற்றும் பரமனு கரண வாதிகள் எல்லாம் மத்யமிகா. (4) பரமனுக்கரணவாதியாகவும் இருக்கும் ஜைன அமைப்பு. (5) அவர்கள் கூறும் பரமசிவன் பசுபதியின் பாசுபத அமைப்பு நிமித்தக் கரணமே அன்றி உபாதனக் கரணமல்ல.

மேற்கூறிய தாக்குதலுக்குப் பிறகு, சூத்ரகாரர் இறுதியாக பகவத் சாஸ்திரம் என்றும் அழைக்கப்படும் பஞ்சராத்ர சாஸ்திரத்தின் அதிகாரத்தை நிறுவுகிறார். முன்பு கூறியது போல் முதல் பாதம் ஸ்மிருதி பாதம் என்றும் இரண்டாவது பாதம் தர்கா பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

முந்தைய ஆறு பாதங்களில் (முதல் அத்தியாயத்தின் நான்கு பாதங்கள், இரண்டாவது அத்தியாயத்தில் இரண்டு பாதங்கள்) பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தா என்று தீர்க்கமாக நிறுவிய பிறகு, இப்போது ஸ்ரீமனாகிய பிரம்மனால் உருவாக்கப்பட்ட பொருட்களைப் பற்றிய விவாதத்தை சூத்ரகாரர் தொடங்குகிறார். இரண்டாவது அத்தியாயத்தின் இந்த 3வது காலாண்டிலும் 4வது காலாண்டிலும் நாராயணா.

3வது காலாண்டு வியாத்பாதம் என்றும், 4வது காலாண்டு இந்திரிய பாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு காலாண்டுகளிலும் சூத்திரகாரர் உள் சண்டை அல்லது வீட்டுச் சண்டையைத் தீர்த்து வைக்கிறார். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி படைப்பின் பொருள்கள் தொடர்பாக வேதங்களில் உள்ள வெளிப்படையான உள் முரண்பாடுகளே உள்நாட்டு சண்டைக்கான காரணம்.

1)ஆகாயம் படைக்கப்படவில்லை என்றும் நித்தியமானது என்றும் வேதங்களில் சில நூல்கள் உள்ளன. அதே வேதங்களில் ஆகாசம் படைக்கப்பட்டது என்றும் நித்தியமானது அல்ல என்றும் கூறும் நூல்கள் உள்ளன.

2)வேதங்களில் ஜீவாக்கள் அல்லது தனிப்பட்ட ஆத்மாக்கள் உருவாக்கப்பட்டதாக சில குறிப்புகள் உள்ளன மற்றும் இந்த குறிப்புகளுக்கு முரணாக ஜீவாக்கள் உருவாக்கப்படவில்லை மற்றும் அவை நித்தியமானவை என்று உபநிடத வாசகங்கள் உள்ளன.

3) ஜீவா அல்லது தனிப்பட்ட ஆன்மா உணர்வு உள்ளதா. இங்கே உணர்வு என்பது ஞானம் அல்லது அறிவு, அதாவது விஷயங்களை உணரும் திறன். ஜீவாவின் அளவும் விவாதிக்கப்படுகிறது.

4)வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் சில மேற்கோள்கள் உள்ளன, ஜீவாக்கள் எந்தச் செயலையும் செய்பவர்கள் அல்ல, அதாவது ஜீவன் ஒரு கர்த்தா அல்ல என்று அர்த்தம். ஜீவா ஒரு செய்பவர் (கர்த்தா) என்றும் மேற்கோள்கள் உள்ளன.

5) ஜீவா கர்த்தா என்று உண்ணப்பட்டால், ஒரு செயலைச் செய்வது சுதந்திரமானதா அல்லது இறைவன் அல்லது பரமாத்மாவின் விருப்பத்திற்கு உட்பட்டதா என்ற சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

6) ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வேதங்களில் மீண்டும் சில குறிப்புகள் உள்ளன. மேற்கூறியவற்றுக்கு முரணாக வேதங்களிலும் ஸ்ரீ பகவத்கீதையிலும் ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் உடல் என்று குறிப்புகள் உள்ளன.

7) சில உபநிடத நூல்கள் இந்திரியங்கள் அல்லது இந்திரியங்கள் உருவாக்கப்படவில்லை என்று கூறுகின்றன, மேலும் இந்திரியங்கள் உருவாக்கப்பட்டன என்று கூறும் நூல்கள் உள்ளன. புலன்களின் எண்ணிக்கை குறித்து சில முரண்பட்ட அறிக்கைகள் உள்ளன.

8) முக்யபிரான் என்பது அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும் காற்று. இந்த முக்யபிரான் படைக்கப்படவில்லை என்று ஒரு பழமொழி உண்டு ஆனால் இந்த முக்யபிரான் படைக்கப்பட்டது என்று இன்னொரு பழமொழி உண்டு.

9) புலன்கள் மற்றும் முக்யபிரானின் அளவு குறித்து சந்தேகம் எழுகிறது. சிலர் அவை பெரிய அளவில் இருப்பதாகவும் இன்னும் சிலர் அணு அளவு மிக அருகில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

10) படைப்பின் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் மற்றும் வடிவம் கொடுக்கும் பணி நான்கு தலை பிரம்மாவின் பணியா அல்லது ஹிரண்யகர்ப்பா என்று அழைக்கப்படும் நான்கு தலை பிரம்மாவின் அந்தர்யாமியாக இருப்பதால் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பணியா? பெயர் மற்றும் வடிவம் கொடுக்கும் இந்த செயல் நாமரூப வியாகரணம் என்று அழைக்கப்படுகிறது.

உள் அல்லது உள்நாட்டு சண்டைக்கு வழிவகுத்த மேற்கண்ட முரண்பாடுகள் 3 மற்றும் 4 வது காலாண்டுகளில் (இரண்டாம் அத்தியாயத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பாதங்கள்) தீர்க்கப்படுகின்றன.

3வது பாதத்தில் ஏழு அதிகாரங்கள் உள்ளன. முதல் அதிகாரம் வியாத் அதிகாரம் எனப்படும். வியாத் என்றால் வானம் அல்லது ஆகாசம்.

இந்த அதிகாரத்தில் ஆகாசம் உண்டா அல்லது ஆகாயத்துக்குப் படைப்பு உண்டா என்பதுதான் விவாதத்திற்குரிய தலைப்பு. ஆகாசத்தின் உருவாக்கம் கேட்கப்படாததால் உருவாக்கப்படவில்லை என்று எதிர்ப்பாளர் கூறுகிறார். அவரது பார்வையை ஆதரிக்க இரண்டு காரணங்கள் உள்ளன.

(அ) ​​ஆகாசமாகவும் வாயுவாகிய அந்தரிக்ஷமும் நித்தியமானவை என்று உபநிடத நூல்களில் ஒன்று கூறுகிறது.

(ஆ) சந்தோக்யோபநிஷத்தில், சத்வித்யாவைப் பற்றிக் கூறும் 6வது அத்தியாயத்தில், பிரபஞ்சம் உருவாவதற்கு முன், “சத்” என்ற ஒரு பொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சத் என்பது பரமாத்மா அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் அவரது மனைவியான மகாலட்சுமியை குறிக்கிறது. நமது விசிஷ்டாத்வைத அமைப்பில் மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீமன் நாராயணா ஆகிய இரு தேவிகளும் எப்போதும் ஒன்றாகவும், பிரிக்க முடியாதவர்களாகவும், இருவருமே பிரம்மன் எனப்படும் ஒரு தனித்துவத்தை உருவாக்குகிறார்கள். எனவே பிரபஞ்சத்தின் படைப்பில் மகாலட்சுமிக்கும் ஈடுபாடு உண்டு.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன், பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய இந்த “சத்” சித்தம் செய்து, நெருப்பையும், பிறகு தண்ணீரையும், பூமிக்குப் பின் பூமியையும் உருவாக்கினார். படைப்பின் இந்த வரிசையில் ஆகாசம் (வானம்) மற்றும் வாயு (காற்று) ஆகியவை தவிர்க்கப்பட்டுள்ளன. எனவே இது ஆகாசம் உருவாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த அதிகாரத்தில், சூத்ரகாரர் எதிராளியின் மேற்கூறிய கண்ணோட்டத்தை எதிர்த்து, ஆகாசத்திற்கு உருவாக்கம் உள்ளது என்பதை நிறுவ பல காரணங்களைக் கூறுகிறார்.

வானத்தை உருவாக்குவதற்கான மேற்கூறிய உண்மையை நிறுவ சூத்ரகாரர் மேற்கோள் காட்டிய காரணங்கள் பின்வருமாறு.

(அ) ​​தைத்தரிய உபநிடதத்தில் ஆகாசத்தை உருவாக்குவது பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது. இந்த உபநிடதம் பரமாத்மாவிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர் (ஏபி), பூமி (பிருதிவி) எனப் படைப்பின் வரிசையை தெளிவாக வகுத்தது.

(ஆ) முண்டக உபநிடதத்தில், முண்டக உபநிடதத்தில், பகவான் ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து, முக்ய பிராணன் சுவாசம், மனம், மற்ற பத்து இந்திரியங்கள் ஆகாசம், வாயு, நெருப்பு, நீர் மற்றும் பூமி பிறந்தன, அதாவது அவை உருவாக்கப்பட்டன என்று ஒரு தெளிவற்ற வாசகம் உள்ளது.

(இ) ஆகாசத்திற்கு சிருஷ்டி இல்லை என்ற கருத்தை இன்னும் வைத்திருக்கும் எதிர்ப்பாளர் கூறுகிறார், சாண்டோக்ய உபநிடதத்தில் ஆகாசம் மற்றும் வாயுவை சிருஷ்டி வரிசையில் குறிப்பிடாமல் விட்டபோது, ​​அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆகாயம் மற்றும் வாயுவை உருவாக்குவதற்கு நேரடியான அர்த்தம் எதுவும் இணைக்கப்பட வேண்டியதில்லை. தைத்தரிய உபநிடதம்.

(ஈ) ஒரே உபநிடதத்தில் நெருப்பு, நீர் மற்றும் பூமிக்கு நேரடி அர்த்தம் இருக்கும் போது, ​​வானம் மற்றும் வாயு உருவாக்கம் என்ற வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. முண்டக உபநிடதத்தில் பிராமணன் என்ற சொல்லுக்கு ஒரு சூழலில் நேரடிப் பொருள் உண்டு என்றும், தைத்தரிய உபநிடதத்திலும் சொல்லும்போது இன்னொரு சூழலில் பிராமணனுக்கு நேரடிப் பொருள் இல்லை என்றும் இந்த எதிர்ப்பாளர் பதிலளிக்கிறார்.

(இ) சாண்டோக்யோ உபநிடதத்தின் 6 வது அத்தியாயத்தில் (சத்வித்யா) மேற்கூறிய உறுதிமொழி பின்வருமாறு கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கு விதிவிலக்கு இல்லை என்று கூறும் சூத்ரகாரரால் எதிராளியின் இந்த வாதம் நிராகரிக்கப்பட்டது:

அடிப்படை மூலப்பொருள் அறியப்பட்டால், இந்த பொருளிலிருந்து தயாரிக்கப்படும் பல பொருட்கள் அறியப்படுகின்றன. இந்த உறுதிமொழியின்படி பிரம்மன் பிரபஞ்சத்தின் காரணமாக இருக்கும்போது பிரம்மத்தைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களும் படைக்கப்படுகின்றன, மேலும் இந்த உறுதிமொழிக்கு விதிவிலக்கு இல்லை. வானமும் வாயுவும் உருவாக்கப்படாவிட்டால், மேலே உள்ள உறுதிமொழி அதன் முக்கியத்துவத்தை அல்லது செல்லுபடியை இழக்கிறது.

ஆக ஆகாசம் சிருஷ்டிக்கு உட்பட்டது, நித்தியமானது அல்ல என்ற உண்மையை சூத்ரகாரம் இறுதியாக நிறுவுகிறது.

இந்த காலாண்டில் உள்ள இரண்டாவது அதிகாரம் தேஜோதிகரண எனப்படும்.

இங்கு ஐந்து பூதங்களும் அவற்றுக்கிடையே உள்ள தன்மாத்ரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நிகழ்கின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. பிரகிருதியிலிருந்து மஹத், மஹத்திலிருந்து அஹம்காரம், அஹம்காரத்திலிருந்து சப்ததன்மாத்ரா, சப்ததன்மாத்ராவிலிருந்து ஆகாயம், வானத்திலிருந்து ஸ்பர்ஷ தன்மாத்ரா, ஸ்பர்ஷதன்மாத்ராவிலிருந்து ரூபதன்மாத்ரா, காற்றிலிருந்து ரூபதன்மாத்ரா, ரூபதன்மாத்ராவிலிருந்து தேஜஸ் அல்லது தீ, தேஜஸிலிருந்து ரஸதன்மாத்ரா மற்றும் ரசகன்மாத்ராவிலிருந்து நீர். காந்தா தன்மாத்ராவிலிருந்து நீர் மற்றும் இறுதியாக பூமி.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அடுத்து வரும் தத்வா அல்லது உறுப்பு முந்தைய மூலகத்திலிருந்து நேரடியாக உருவாக்கப்பட்டதா அல்லது அதற்குப் பின் வரும் உறுப்பு அல்லது தத்வா என்பது பரமாத்மாவின் விருப்பத்திலிருந்து உருவாக்கப்பட்டதா என்பது சந்தேகம்.

ஐந்து பூதங்களின் சிருஷ்டி தன்மாத்ராவைப் பற்றிக் குறிப்பிடாமல் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுவதாக தைத்தரிய உபநிடதம் கூறுகிறது. சாந்தோக்ய உபநிடதத்தில் அந்தர்யாமி (உள் ஆன்மா) விருப்பப்பட்டு அடுத்த உறுப்பு அல்லது தத்வாவை உருவாக்குவது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. உபஹோபநிஷத்தில், தத்மந்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. தன்மாத்ரா என்பது இரண்டு தொடர்ச்சியான பூதங்களுக்கு இடையிலான ஒரு நிலை. இது பால் மற்றும் தயிர் இடையே உள்ள நிலை போன்றது. சாந்தோக்யோபனிஷத் தேஜஸ் அல்லது நெருப்பின் சித்தம், நீர் படைக்கப்பட்டது, ஜலத்தால் பூமி படைக்கப்படுகிறது என்று கூறுகிறது. நெருப்புக்கும் நீருக்கும் உணர்வு அல்லது ஞானம் இல்லாததால், அவைகளால் சித்தம் முடியாது, அதாவது உயிரற்ற பொருட்களால் விரும்பவே முடியாது. எனவே ஒவ்வொரு உறுப்பு அல்லது தத்வ விருப்பத்தின் உள் ஆன்மா அல்லது அந்தர்யாமி மற்றும் முந்தைய பாராவில் குறிப்பிடப்பட்ட வரிசையில் அடுத்த உறுப்பு உருவாக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தத்வத்திலும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா அடுத்த தத்வத்தை அல்லது அங்கத்தை விரும்பி உருவாக்குகிறார் என்ற மேற்கண்ட உண்மையை முண்டகோபநிஷத் தெளிவாகக் கூறுகிறது. பகவான் ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து முக்ய பிராணன், மனம், பத்து புலன்கள் (இந்திரியங்கள்) என்று அழைக்கப்படும் சுவாசம், ஐந்து பூதங்கள் உருவாக்கப்படுகின்றன என்று உபநிடதம் கூறுகிறது.

எனவே தைத்தரிய உபநிடதம், சந்தோக்யோபநிஷத், சுபாலோபநிஷத், முண்டக உபநிஷத் ஆகியவற்றின் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு, படைப்பு மற்றும் அதன் வரிசையைப் பற்றிய இறுதி முடிவு பின்வருமாறு.

பரமாத்மா (ஸ்ரீமன் நாராயணனை பிரம்மன் என்றும் அழைப்பர்)

பிரகிருதி (பிரகிருதியில் அந்தர்யாமியாக இருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணன்)

மகான் படைக்கப்பட்டார் (மஹான் விருப்பத்தின் அந்தர்யாமி)

அஹம்காரம் உருவாக்கப்பட்டது (இந்த அஹம்காரம் மூன்று வகைப்படும்)

1) சாத்விக அஹம்காரம் – சாத்விக அஹம்கார சித்தங்களின் அந்தர்யாமியாகிய பகவான் ஸ்ரீமன் நாராயணன் பின்னர் பதினொரு புலன்கள் உருவாக்கப்படுகின்றன. புலன்களின் விவரங்கள் 2 வது அத்தியாயத்தின் 4 வது பாதத்தில் கையாளப்படும்.

2) ராஜஸ அஹம்கார – இந்த அஹங்காரத்தின் அந்தர்யாமி முறையே சாத்விக அஹம்காரம் மற்றும் தாமச க்ரரா ஆகிய இரண்டிற்கும் இந்திரியங்களை உருவாக்குவதற்கும் தன்மாத்ராக்கள் மற்றும் பூதங்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

தாமஸ அஹங்காரா (இந்த அஹம்கார பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அந்தர்யாமி)

சப்ததன்மாத்ரா உருவாக்கப்பட்டது (சப்ததாப்மாத்ரா விருப்பத்தின் அந்தர்யாமி)

ஆகாஷா அல்லது ஆகாயம் உருவாக்கப்பட்டது (ஆகாச சித்தத்தின் அந்தர்யாமி)

ஸ்பர்ச தன்மாத்ரா உருவாக்கப்பட்டது (அதன் அந்தர்யாமி விருப்பம்)

வாயு அல்லது காற்று உருவாக்கப்பட்டது (அதன் அந்தர்யாமி விருப்பம்)

ரூபா தன்மாத்ரா உருவாக்கப்பட்டது. ரூபா என்றால் நிறம் அல்லது வடிவம் (அதன் அந்தர்யாமி விருப்பம்)

தேஜஸ், அக்னி அல்லது நெருப்பு உருவாக்கப்பட்டது (அதன் அந்தர்யாமி விருப்பம்)

ராசா தன்மாத்ரா (அதன் அந்தர்யாமி விருப்பம்)

Ap அல்லது தண்ணீர் உருவாக்கப்பட்டது (அவர்களின் அந்தர்யாமி விருப்பம்)

காந்தா தன்மாத்ரா உருவாக்கப்பட்டது (அதன் அந்தர்யாமி விருப்பம்)

பூமி அல்லது பூமி உருவாக்கப்பட்டது.

சமஸ்கிருத இலக்கணப்படி அபா அல்லது நீர் எப்போதும் பன்மை என்று மேலே குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும், எனவே அது அவர்களின் அந்தர்யாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சப்தம் அல்லது ஒலி என்பது ஆகாசத்தின் பண்பு, ஸ்பர்ஷம் அல்லது ஸ்பரிசம் வாயுவின் பண்பு, ரூபம் அல்லது நிறம் தேஜஸின் பண்பு, ரஸம் அல்லது சுவை என்பது நீரின் பண்பு, கந்தம் அல்லது மணம் என்பது அதன் பண்பு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பூமி.

தற்செயலாக சப்தம், ஸ்பர்ஸம், ரூபம், ரஸம் மற்றும் கந்தா ஆகியவை இன்பத்தின் பொருள்கள் என்பதைக் குறிப்பிடலாம். அவை விசயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சப்தா என்பது செவிகளை அனுபவிக்கும் பொருள், ஸ்பர்ஷம் தோல் அனுபவிக்கும் பொருள், ரூபா கண்களை அனுபவிக்கும் பொருள், ரஸம் என்பது நாக்கின் இன்பம், காந்தா என்பது மூக்கை அனுபவிக்கும் பொருள்.

இறுதியாக இந்த அதிகாரத்தில் எதிராளியின் (பூர்வ பக்ஷி) கருத்து என்னவென்றால், படைப்பானது வரிசைமுறையானது மற்றும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொன்றிலும் அந்தர்யாமியாக இருப்பதில் எந்த கேள்வியும் இல்லை. பாதராயண முனிவரான சூத்ரகாரர், எதிராளியின் கருத்தை மறுத்து, பூதங்களை விரும்பி உருவாக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பரமாத்மா அந்தர்யாமி என்று கூறுகிறார். விருப்பத்திற்கு சமஸ்கிருதத்தில் சங்கல்பம் என்று பெயர்.

இந்த அதிகாரத்தில் 8 சூத்திரங்கள் உள்ளன, அவற்றில் நான்கு சூத்திரங்கள் பூர்வபக்ஷியின் காட்சிப் புள்ளிகளை விவரிக்கின்றன மற்றும் பிந்தைய நான்கு சூத்திரங்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி சூத்திரகாரத்தின் பார்வை புள்ளிகளாகும்.

இந்த அதிகாரத்தின் கடைசி சூத்திரத்தில் சூத்ரகாரர் “அபர்யவசன விருத்தி” என்று அழைக்கப்படும் விசிஷ்டாத்வைத தத்துவத்தின் மிக முக்கியமான கொள்கையை நிறுவுகிறார். இதன் பொருள் இந்த உலகில் உள்ள எந்தவொரு பொருளின் பெயரும் இறுதியாக அந்தர்யாமியான பகவான் ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கிறது, ஏனென்றால் ஒவ்வொரு பொருளும் அவரது உடல் மற்றும் உடலைப் பற்றிய எந்தக் குறிப்பும் இறுதியாக ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களைக் குறிக்கும் இரண்டு சொற்களும் இறுதியாக பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கின்றன.

இந்த பாதத்தில் மூன்றாவது அதிகாரம் ஆத்மதிகாரணம் எனப்படும். இந்த அதிகாரத்தில் ஜீவாத்மாவாக இருக்கும் அந்தரங்க ஆத்மா சிருஷ்டிக்கு உட்பட்டதா இல்லையா என்ற சந்தேகம். பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தில் உள்ள உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களை உருவாக்கியவர் என்பதால், பிரம்மத்தைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களும் படைப்புக்கு உட்பட்டதால், ஜீவாவும் உருவாக்கப்படுகிறது என்பது எதிரியின் கருத்து. தைத்தரிய உபநிடதத்திலும் மற்றொன்று யஜுர்வேத சம்ஹிதையிலும் இரண்டு கூற்றுகள் உள்ளன, அவை பிரபஞ்சம் முழுவதற்கும் காரணமானவர் என்பதால் தனிப்பட்ட ஆன்மாக்கள் பிரம்மனால் உருவாக்கப்பட்டன என்ற எதிர்ப்பாளரின் பார்வையை ஆதரிக்கிறது. மேலும் உபநிடதங்களில் ஜீவாத்மாக்கள் உருவாக்கப்பட்டதாக இன்னும் இரண்டு கூற்றுகள் உள்ளன.

தைத்தரிய உபநிடதத்தில் பிரம்மன் (பகவான் ஸ்ரீமன் நாராயணன்) பிரபஞ்சம் யாரிடமிருந்து பிறந்ததோ, யார் இந்த பிரபஞ்சத்தை நிலைநிறுத்துகிறார் அல்லது பாதுகாக்கிறார் மற்றும் பிரளய காலத்தில் பிரபஞ்சத்தின் அழிவுக்கு காரணமானவர் என்று கூறப்படுகிறது. அதே உபநிடதத்தில் மற்றொரு சூழலில், பிரபஞ்சம் தண்ணீருடன் சேர்ந்து ஜீவாத்மாக்களை உருவாக்கிய பிரம்மனிடமிருந்து பிறந்தது என்று கூறப்படுகிறது. யஜுர்வேத சம்ஹிதையில் பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரஜாபதியே ஜீவாத்மாக்களாகிய பிரஜைகளைப் படைத்தார். சாந்தோக்யோபநிஷத்தில், இந்த பிரஜாக்கள் அல்லது தனிப்பட்ட ஆன்மாக்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய சத்திலிருந்து பிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இதே சாண்டோக்யோபனிஷத் “தத்வமசி” என்று சொல்கிறது, அதாவது ஜீவமே பிரம்மம், ஜீவமே பிரம்மமாக இருக்கும்போது, ​​அவர் நித்தியமானவர். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் பிரம்மம் என்று அதே சாண்டோக்யோபநிஷத் கூறுகிறது என்று கூறி இந்தக் கருத்து எதிர்க்கப்படுகிறது. அப்படியானால் பிரம்மமாகிய ஆகாயம் நித்தியமாகிறது ஆனால் ஆகாயம் படைப்பிற்கு உட்பட்டது என்று நிறுவப்பட்டது. எனவே அதே ஒப்புமையில் ஜீவாவும் நித்தியமாக இருக்க முடியாது.

நாத்மாஸ்ருதே: நித்யத்வச்சச்சதாப்ய:” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரரால் எதிராளியின் இந்தக் கண்ணோட்டம் மறுக்கப்படுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவாத்மா அல்லது வெறுமனே ஆத்மா இரண்டு காரணங்களால் படைப்புக்கு உட்பட்டது அல்ல.

i) கடோபநிஷத் தெளிவாக ஜீவா உருவாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது. மேலும் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் முறையே பரம ஆன்மாவாகவும், தனி ஆன்மாவாகவும் இருப்பவை நித்தியமானவை மற்றும் படைப்பிற்கு உட்பட்டவை அல்ல என்று கூறப்படுகிறது.

ii) மேலும் அதே கதூபநிஷத், எண்ணிக்கையில் எல்லையற்ற தனிமனித ஆத்மாக்கள் நித்தியமானவை என்றும், நித்தியமான உயர்ந்த ஆத்மா மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாகவும் கூறுகிறது.

ஜீவன் எந்தப் படைப்புக்கும் ஆட்படாதபோது, ​​ஏகவிஜ்ஞான சர்வவிஜ்ஞானம் (காரணத்தை அறிந்து, படைக்கப்பட்ட அனைத்தையும் அறிந்துகொள்வதன் மூலம்) உறுதிமொழி அல்லது வாக்கு எப்படிச் செல்லுபடியாகும், உண்மையாக இருக்கும் என்ற கேள்வி இப்போது எழுகிறது. இந்த கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மன் அல்லது பரமாத்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர, அனைத்து உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள் உருவாக்கப்பட்டன. படைப்பு இரண்டு வகைப்படும்.

1) உணர்ச்சியற்ற உயிரினங்களில் ஏற்படும் உடல் மாற்றம், இது ஸ்வரூப அன்யதா பாவம் என்று அழைக்கப்படுகிறது. அன்யதா பாவம் என்பது உடல் மாற்றம். களிமண் பானையாக மாறுகிறது, பானை துண்டுகளாக உடைக்கப்பட்ட பானை கபாலமாக மாறுகிறது மற்றும் பல. இதுவே உடல் மாற்றம்.

2) இயல்பு அல்லது பண்புகளில் மாற்றம் மற்றும் இந்த மாற்றம் ஜீவாக்களான உணர்வுள்ள உயிரினங்களில் நடைபெறுகிறது. ஜீவாவுக்கு உணர்வு அல்லது அறிவு உள்ளது. இந்த உணர்வு தர்ம பூத ஞானம் என்று அழைக்கப்படுகிறது, இதன் மூலம் ஒரு ஜீவா பொருட்களை உணர முடியும். இந்த அறிவு ஒரு மாற்றத்திற்கு செல்கிறது (சுருங்குதல் அல்லது விரிவாக்கம் மூலம்) சுருக்கம் என்றால் சங்கோச்சா மற்றும் விரிவாக்கம் என்றால் விகாசா. தர்மபூத ஞானத்தின் இந்த அளவு ஒரு ஜீவனிலிருந்து மற்றொரு ஜீவனுக்கு அவனுடைய கடந்தகால செயல்களைப் பொறுத்து மாறுபடும். இந்த தர்ம பூத ஞானமானது உயிரற்ற பொருளின் விஷயத்தில் பூஜ்ஜியத்திலிருந்து பரமாத்மா, நித்யசூரிகள் மற்றும் முக்தாத்மாக்கள் (முக்தி பெற்ற ஆத்மாக்கள்) விஷயத்தில் முடிவிலி வரை மாறுபடும். ஜீவாவின் தர்மபூத ஞானத்தில் ஏற்படும் இந்த மாற்றம் ஸ்வபாவ அன்யதாபவ எனப்படும். இந்த மாற்றத்தின் காரணமாக, ஜீவாவும் படைப்பின் பிரிவில் சேர்க்கப்படுகிறார், இருப்பினும் அவரது உள்ளார்ந்த இயல்பு படைப்பு மற்றும் அழிவுக்கு உட்பட்டது அல்ல. எனவே ஏகவிஞானம், சர்வ விஞ்ஞானம் என்ற உறுதிமொழி செல்லுபடியாகவும் உண்மையாகவும் தொடர்கிறது.

மேலே கூறப்பட்ட சில உபநிடத நூல்களின் அடிப்படையில் ஜீவாவுக்கு ஆக்கமும் அழிவும் உண்டு என்ற எதிராளியின் கருத்து, ஜீவா நித்தியமானது என்றாலும், ஒவ்வொரு பிறப்பிலும் அவர் எடுக்கும் உடலே பிறந்து இறக்கும், இது ஜீவாவுக்குப் பொருந்தாது என்று பதிலளித்தார்.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் ஞானாதிகாரன் எனப்படும். இந்த அதிகாரத்திலிருந்து இந்த பாதத்தின் மீதமுள்ள நான்கு அதிகாரங்கள் அடிப்படையில் ஜீவாவின் தன்மை, அளவு மற்றும் பண்புக்கூறுகள் மற்றும் பரமாத்மாவிற்கும் ஜீவாவிற்கும் இடையிலான உறவைக் கையாளுகின்றன.

இந்த அதிகாரத்தில் ஜீவன் சுயமாக ஒளிர்கிறது என்பதும், தன் சுயத்தை அறிய வேறு எதன் உதவியும் தேவையில்லை என்பதும் நிறுவப்படும். சுய ஒளிர்வு என்பதும் உணர்வின் ஒரு வடிவம், இது தர்மிஞானம் என்று அழைக்கப்படுகிறது. தர்மி என்பது ஜீவா மற்றும் அவரது ஒளிர்வு ஞானம் என்று அழைக்கப்படுகிறது. ஜீவனுக்கு தர்மபூத ஞானம் தன் சுயத்தைத் தவிர மற்ற பொருட்களை உணர வேண்டும். எனவே ஜீவனுக்கு இரண்டு குணங்கள் ஒன்று தர்மஞானம் மற்றொன்று தர்ம பூதை ஞானம். “நான்” அது ஜீவா அல்லது தனிப்பட்ட ஆன்மா மற்றும் அவரை “நான்” என்று அறிவது தர்மி ஞானம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இருளிலும், கனவிலும் கூட இந்த தர்மி ஞானம் இருக்கிறது. ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கத்தின் விஷயத்தில் கூட அவரது சுயத்தை உணர்ந்து கொள்ள முடியும், ஏனென்றால் எழுந்த பிறகு எனக்கு ஒரு நல்ல தூக்கம் இருந்தது என்று அவர் கூறுகிறார். தன்னை அறியவில்லை என்றும் கூறுவர்.

பரமாத்மா மற்றும் ஜீவாத்மா இரண்டிற்கும் “நான்” என்ற சுய ஒளிமயமான மனசாட்சி இருப்பதால் தர்மி ஞானம் ஒன்றுதான். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு தர்மபூத ஞானத்தைப் பொறுத்தவரை மட்டுமே. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பரமாத்மா விஷயத்தில் அது எல்லையற்றது மற்றும் நம்மைப் போன்ற முக்தி பெறாத ஆத்மாக்களின் விஷயத்தில் இது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகும், மேலும் புண்ணிய மற்றும் பாப கர்மாவாகிய நமது கடந்தகால செயல்களுக்கு ஏற்ப அதன் அளவு மாறுபடும்.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் புள்ளிகள் (1) பௌத்தத்தின்படி ஜீவன் சுயமாக ஒளிர்கிறதா மற்றும் சங்கியா (2) கனட முனிவரின் கூற்றுப்படி ஜீவன் எந்த உணர்வும் இல்லாமல் ஒரு கல்லைப் போன்றதா (3) ஜீவனில் உள்ள உணர்வு என்பது. எப்போதும் இல்லை மற்றும் உணர்வு அவருக்கு அவ்வப்போது வருகிறது. மற்றொரு சிந்தனைப் பள்ளி, ஜீவா ஞானா மற்றும் அவரால் விஷயங்களை உணர முடியுமா என்பது. மேலும் ஒரு சிந்தனைப் பள்ளி உள்ளது, அதில் ஜீவாவின் சுய ஒளிரும் தன்மையும் உணர்வும் இயற்கையானது மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்று கூறப்பட்டால், ஜீவாத்மா எங்கும் உள்ளது மற்றும் அவரது உணர்வு எப்போதும் உள்ளது. அப்படியானால், அவருக்கு புலன்கள் அல்லது இந்திரியங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை.

நல்ல உறக்கம் மற்றும் கோமா நிலையில் உள்ள நேரத்தில் உணர்வு இல்லை, எனவே அது எப்போதும் இருக்க முடியாது. விழிப்பு நிலையில், ஜீவாவுக்கு ஒளி, பொருள் மற்றும் தர்ம பூத ஞானம் போன்ற தேவையான அனைத்து உதவிகளும் இருந்தால், அவர் உணர்வுடன் இருக்கிறார். எனவே, மேற்கண்ட சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த எதிரி, ஜீவாவுக்கு சுய ஒளியும் இல்லை அல்லது தர்ம பூத ஞானமும் இல்லை என்று வாதிடுகிறார். எனவே ஜீவாவின் உணர்வு காலப்போக்கில் மட்டுமே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் எல்லா இடங்களிலும் வேலை மாறியதால் ஜீவா எல்லா இடங்களிலும் உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜீவா தனது உடலின் இயக்கத்தால் மட்டுமே வேலை செய்கிறது என்பதை நிரூபிக்க எந்த அதிகாரமும் சாட்சியும் இல்லை.

நல்ல உறக்கத்தின் போது உணர்வு இல்லாமை மற்றும் மோட்சம் அல்லது விடுதலை நிலை போன்றவற்றின் போது உபநிடத நூல்கள் உள்ளன.

ஜீவாவின் உள்ளார்ந்த இயல்பு மற்றும் பண்பு பற்றிய மேற்கூறிய பெர்ஜென்ட் பார்வைகளின் வெளிச்சத்தில் சூத்திரகாரர் இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “ஞான ஏவா” என்று கூறுகிறார். இந்த அதிகாரம் 14 சூத்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவா சுய ஒளியுடன் இருப்பதோடு, தர்ம பூத ஞானத்தையும் கொண்டிருக்கிறார், அதாவது அவர் ஞானம், அதாவது அவர் ஞானத்தின் உள்ளார்ந்த தன்மையைக் கொண்டவர். பல உபநிடத நூல்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன. பார்ப்பவர், கேட்பவர், மணம் புரிபவர், சுவைப்பவர், சிந்திப்பவர், அறிபவர், செய்பவர், உணர்வுள்ளவர் என்று ஒரு உபநிடதம் கூறுகிறது. இதன் பொருள் அவர் தனது தர்ம பூத ஞானத்தின் மூலம் தனது புலன்கள் மூலம் பொருட்களை உணர முடியும். மீதமுள்ள 13 சூத்திரங்களின் கூட்டுத்தொகை மற்றும் பொருள் பின்வருமாறு.

(1) இந்த ஜீவாத்மா, மரணத்தின் போது இந்த சரீரத்திலிருந்து வெளியேறி, அதன் பிறப்பில் மற்றொரு உடலுக்குள் நுழைவதால் அணு அளவு உள்ளது.

(2) எனவே வெளியே செல்வதும் திரும்பி வருவதும் ஜீவாவின் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் (புண்யா மற்றும் பாப்பா) காரணமாக உடல் ரீதியாக செய்யப்பட வேண்டும் மற்றும் இறந்த பிறகு விரைவில் அழிந்துவிடும் மரண சரீரத்தால் வெளியே செல்வதும் திரும்பி வருவதும் சாத்தியமில்லை.

(3) ஜீவாத்மாவின் அளவைப் பற்றி உபநிடத உரை தெளிவாகக் கூறுகிறது. இந்த சூழலில் ஸ்வேதாஷ்வதரா உபநிஷத் குறிப்பாக ஜீவாவின் அளவை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

ஜீவாவின் அளவு குதிரையின் வாலில் உள்ள முடிகளில் ஒன்றின் 1/100 வது பிஷனில் 1/100 வது பிஷன் ஆகும். இந்த ஜீவனின் தர்மபூத ஞானம் அவன் முக்தி அடைந்த பிறகு எல்லையற்றதாகிறது. மற்றொரு உபநிஷத உரை ஜீவாவின் அளவு தோல் பை அல்லது காலணிகளை தைக்கப் பயன்படும் ஊசியின் நுனியின் அளவு என்று கூறுகிறது. இது அவர் மைக்ரோ சைஸ் என்று கூறுகிறது.

(4) இப்போது ஜீவா ஒரு சிறிய அளவு மற்றும் உடலின் இதயத்தின் மூலையில் இருக்கும்போது, ​​​​உடலில் மற்றொரு இடத்தில் ஏற்படும் வலி அல்லது இன்பத்தை எப்படி உணர முடியும் என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகம் ஒரு உவமையின் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. உவமை என்னவென்றால், ஈரமான செருப்பை உடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூசும்போது இதயத்தில் உள்ள ஜீவா குளிர்ச்சியின் இன்பத்தை உணர்கிறது. அதே வழியில் ஜீவா உணர்வை உணர்கிறார்.

(5) ஜீவாத்மா ஒரு மனிதனின் உடலின் இதயத்தில் இருந்தாலும், தர்ம பூத ஞானத்தின் காரணமாக உடலின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் உணர்வுகளை அவரால் உணர முடிகிறது, மேலும் இந்த விஷயத்தை விளக்குவதற்கு சூத்திரகாரம் மற்றொரு உதாரணத்தை அளிக்கிறது. விளக்கு அல்லது விளக்கு ஒரு குறிப்பிட்ட புள்ளியில் எரிந்தாலும் அதன் ஒளி அது வைக்கப்பட்டுள்ள இடம் முழுவதும் பரவுகிறது என்று அவர் கூறுகிறார்.

(6) ஒரு சூத்திரத்தில், “நான்” மற்றும் தர்ம பூத ஞானம் ஆகிய தர்மி ஞானத்திற்கு இடையே ஒரு தெளிவான வேறுபாட்டை சூத்திரகாரர் வரைகிறார். இங்கே தர்ம பூத ஞானம் என்பது தெளிவாக ஜீவாவின் பண்பாகும், ஜீவன் அல்ல. இந்த விஷயத்தை விளக்க மற்றொரு எடுத்துக்காட்டு என்னவென்றால், வாசனை என்பது பூமியின் பண்பு மற்றும் பூமியின் பண்பு அல்ல. அவர்களுக்கு இடையே ஒரு தெளிவான வேறுபாடு உள்ளது.

(7) இச்சூழலில் எழும் மற்றொரு சந்தேகம், தர்ம பூத ஞானமாகிய விக்ஞானம் அல்லது உணர்வு ஜீவத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும்போது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணன் எப்போதும் விகுவானின் பக்கம் நிற்கிறார் என்று இரண்டு வெவ்வேறு உபநிஷத நூல்களில் ஜீவாவை எவ்வாறு விஜ்ஞானம் என்று அழைக்க முடியும். (ஜீவா) மற்றும் விக்னானா யாகம் செய்கிறது (ஜீவா யாகம் செய்கிறது). சூத்ரகாரர் இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறார், பெயர்ச்சொல்லை அதன் பண்பின் மூலம் அழைக்கும் வழக்கம் எப்போதும் உள்ளது. ஆனந்தம் என்பது ஸ்ரீமன் நாராயணனின் பண்பாக இருந்தாலும், எல்லையற்ற பேரின்பத்தின் பொருள் “ஆனந்தா” என்பது பரமாத்மாவின் பெயரே என்று இந்தச் சூழலில் ஒரு இணையான உவமை குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மற்றொரு காரணம் தர்ம பூத ஞானம், இது ஜீவாவின் நிரந்தர மற்றும் நித்திய பண்பாகும், எனவே அவரை “விஜ்ஞானம்” என்று அழைக்கலாம்.

(8) தர்ம பூத ஞானம் ஜீவாவின் நிரந்தரமான மற்றும் எப்போதும் பண்பாக இருக்கும் போது, ​​நல்ல தூக்க நிலையில் அதன் இருப்பை ஏன் உணரவில்லை என்ற சந்தேகம் இந்தச் சூழலில் எழுகிறது. ஒரு குழந்தையின் விஷயத்தில் தர்மபூத ஞானமும் மிகவும் சுருங்குகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் குழந்தை வளரும்போது அது விரிவடைகிறது. இந்த ஐயத்தை சூத்ரகாரர் மற்றொரு உவமையின் மூலம் தெளிவுபடுத்துகிறார். ஒரு ஆண் குழந்தையில் ஆண்மை அல்லது ஆற்றல் குழந்தை பேட்டையில் செயலற்ற நிலையில் உள்ளது மற்றும் குழந்தை இளமை பருவத்தை அடையும் நேரத்தில் அது மலரும். அதுபோலவே தர்ம பூத ஞானமும் சுகமான உறக்க நிலையில் உறங்கி, விழிப்பு நிலையில் மலரும்.

(9) இறுதியாக சூத்ரகாரர் ஜீவா சர்வ பிரசன்னம் மற்றும் ஜீவா சுயமாக ஒளிர்கிறது என்ற வாதத்தை மறுக்கிறார். அவர் சர்வ சாதாரணமாக இருந்தால் தர்மபூத ஞானம் என்றென்றும் மலர வேண்டும் அல்லது மலரவே கூடாது என்கிறார். ஜீவா சுயமாக ஒளிரும் என்றால் இதே நிலைதான். எனவே ஜீவனுக்கு தர்மி ஞானம் மற்றும் தர்மபூத ஞானம் இரண்டும் உண்டு என்பது இறுதி முடிவு.

ஐந்தாவது அதிகாரம் கர்த்ரு அதிகாரம். ஜீவன் கர்த்தா அல்லது செய்பவன் என்பது இங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைப் பற்றிய சந்தேகம் ஒன்று கடோபநிஷத்திலும் மற்றொன்று பகவத்கீதையிலும் உள்ள இரண்டு கூற்றுகளின் காரணமாக எழுகிறது. கடோபநிஷத்தில் உள்ள அறிக்கை, ஒருவரைக் கொன்றவர் தான் ஒருவரைக் கொன்றதாகக் கூறுகிறார் என்றும், கொலையாளி மற்றும் கொல்லப்பட்ட இருவருக்கும் ஒருவர் கொலையாளியாகவும் மற்றவரைக் கொல்லலாம் என்றும் தெரியாது. அதுபோலவே பகவத்கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனன் கூறுகிறார், உண்மையில் பிரகிருதியின் குணாதிசயங்களைப் போலவே ஜீவன் செய்பவன் என்பது ஒரு மாயை. சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவை செய்பவர்கள். எனவே ஜீவா செய்பவர் அல்ல என்பது எதிரணியின் வாதம்.

எதிரியின் இந்த வாதத்தை சூத்ரகாரர் மறுத்துள்ளார், அவர் முதல் சூத்திரத்தில் “கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வத்” என்று கூறுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவாத்மா தான் செய்பவன் அல்லது கர்த்தா, ஏனென்றால் ஜீவன் தான் செய்த பலனை அனுபவிப்பவன்.

ஸ்வர்கலோகம் அல்லது சொர்க்கத்தை விரும்புபவர் ஜோதிஷ்டம யாகம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அதுபோல மோட்சம் அல்லது முக்தியை அடைய விரும்புபவர் பகவான் ஸ்ரீமன் நாராயணனை தியானிக்க வேண்டும். எனவே தனி ஆன்மா யாகம் செய்தால் யாகத்தின் பலனை ஸ்வர்கலோகமாக அனுபவிப்பவராக இருப்பார். அதுபோல ஒரு ஜீவன் பரமாத்மாவை தியானித்தால் மோட்சமாகிய தியானத்தின் பலனை அனுபவிப்பான். அப்படி இருக்கும் போது பிரகிருதியின் மூன்று பண்புகளும் (முதன்மைப் பொருள்) எவ்வாறு செய்பவர்களாக இருக்க முடியும். இந்த அதிகாரத்தில் மேலும் ஆறு சூத்திரங்கள் உள்ளன, அதில் ஜீவா தான் செய்பவன் என்ற உண்மையை நிறுவ சூத்ரகாரர் பல உபநிடத நூல்களை மேற்கோள் காட்டுகிறார். தைத்திரிய உபநிடதத்தின் கூற்று ஒன்றில், விகுவானம் யாகம் செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது. எதிராளியின் கூற்றுப்படி விகுவானம் என்பது புத்தி என்பது ஒரு நிலையான மனநிலை என்று அழைக்கப்படலாம். ஆனால் விகுவானம் புத்தி அல்ல ஜீவா என்று சூத்ரகாரர் கூறுகிறார். அது புத்தியாக இருந்தால் உபநிடதம் விக்னனேனா என்று கூறியிருக்க வேண்டும். சமஸ்கிருதத்தில் மூன்றாவது வழக்கு திரிதீய விபக்தி என்று அழைக்கப்படுகிறது. அதனால் ஜீவன் பலனை அனுபவிப்பவன் போல செய்பவன்.

அடுத்த அதிகாரம் “பராயட்டாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் ஜீவாவின் செயல்கள் அல்லது செயல்கள் பரமாத்மாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது நிறுவப்பட்டுள்ளது.

ஒரு தனி ஆன்மாவின் ஒவ்வொரு செயலும் பரமாத்மா அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணனால் கட்டுப்படுத்தப்பட்டால், “இதைச் செய்” மற்றும் “அதைச் செய்யாதே” என்று சொல்லும் வேதங்கள் அர்த்தத்தை குறைக்கின்றன என்று எதிரி கூறுகிறார். “இதைச் செய்” என்று சொல்லும் சாஸ்திரம் விதிசாஸ்திரம் என்றும், அதைச் செய்யாதே என்று சொல்லும் சாஸ்திரம் நிஷேதசாஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. சாஸ்திரம் என்றால் வேதம். உபநிடதங்களில் உள்ள சில கூற்றுகளால் செயல்களும் செயல்களும் பரமாத்மாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று சூத்திரகாரர் இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் கூறுகிறார். உபநிடதத்தின் முதல் கூற்று என்னவென்றால், அந்தர்யாமி அல்லது ஒவ்வொரு உயிரினத்தின் உள் ஆத்மாவாக இருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு உயிரினத்தின் அல்லது தனிப்பட்ட ஆத்மாவின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துகிறார். பரமாத்மா ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் ஜீவாவின் பக்கத்தில் இருக்கிறார், அவர் ஜீவாவிலிருந்து வேறுபட்டவர், ஜீவா அவரது உடலாகும், மேலும் அவர் ஜீவாவின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துகிறார்.

பகவத்கீதையிலும் பகவான் கிருஷ்ணர், ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் வசிப்பதாகவும், ஜீவாவின் செயல்களை இயக்குவதாகவும் கூறுகிறார். மற்றொரு ஸ்லோகத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஈஸ்வரன் அல்லது பரமாத்மா ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் இருப்பதாகவும், ஒவ்வொரு பூதத்தையும் அல்லது ஜீவனையும் இயந்திரம் போன்ற சக்கரத்தில் சுழற்றச் செய்கிறார் என்றும் கூறுகிறார். முதல் சூத்திரம் “பரத்து தத் ஸ்ருதே:”

இரண்டாவது சூத்திரத்தில், ஜீவாத்மா தனது செயலுக்கு சுதந்திரம் இல்லாவிட்டால், உடல் மற்றும் உணர்வுகள் இல்லாமல் ஒரு ஜீவாவை தன்னால் செய்ய முடியாது என்றால் விதி நிஷேத சாஸ்திரம் அர்த்தமற்றதாக மாறும் என்று சூத்திரகாரர் எதிரியின் பார்வைக்கு பதிலளிக்கிறார். ஜீவாவின் புண்ய பாபா கர்மாவைப் பொறுத்து, பரமாத்மா ஜீவாவுக்கு ஒரு உடலையும் புலன்களையும் தருகிறார். ஜீவாவின் செயல்கள் மற்றும் செயல்கள் உடல் மற்றும் புலன்கள் மூலம் மட்டுமே. ஒரு ஜீவா ஒரு குறிப்பிட்ட காரியத்தை நல்லது அல்லது கெட்டது செய்ய முயலும் போது, ​​பரமாத்மா அதற்கு அவர் சம்மதம் தருகிறார். பரமாத்மா சம்மதம் தெரிவித்த பிறகு, ஜீவன் தானே தீய செயல்களையோ பாவங்களையோ செய்ய முனைந்தால், பரமாத்மா இரக்கமற்றவர் என்றும், தனிமனிதனின் கெட்ட மற்றும் நல்ல செயல்களுக்கு அவரே பொறுப்பு என்றும் கூற முடியாது. இந்தச் சூழலில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஒரு அழகான உதாரணம் தருகிறார். பரமாத்மாவால் கொடுக்கப்பட்ட உடலும் புலன்களும் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா இரண்டிற்கும் சொந்தமானதாக இருக்கும் போது ஒருவர் மற்றவரின் அனுமதியின்றி ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய முயற்சிக்க முடியாது. ஒரு தந்தை ஒரு வெற்று காசோலையில் கையெழுத்திட்டு, அதைத் தனது மகனுக்குத் தொகையை எடுப்பதற்காகக் கொடுப்பது போலவும், அதை அவர் விரும்பும் விதத்தில் பயன்படுத்தவும். அவர் அதை ஒரு நல்ல காரணத்திற்காகவோ அல்லது கெட்ட காரியத்திற்காகவோ பயன்படுத்தலாம். இரண்டிலும் அவன் தன் செயலின் பலனை அனுபவிக்க வேண்டும். நல்ல காரியத்துக்குப் பயன்படுத்திப் புண்ணியத்தைப் பெற்றிருந்தால் சந்தோஷப்படுவார், கெட்ட காரியத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு பாப்பாவைப் பெற்றிருந்தால் வருந்துவார். ஆகவே, தொடர்ந்து நற்செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மோட்சம் வரையிலும் மேல்நோக்கி உயர்த்தப்படுபவருக்கு பரமாத்மாவின் அருள் இருக்கும். தொடர்ந்து தீய செயல்களைச் செய்து மண்டபத்திற்குக் கீழே தள்ளப்படுபவனுக்குப் பரமாத்மாவின் அவமானம் உண்டு.

இந்த 3வது பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் அம்சாதிகரணம் எனப்படும். பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுதான் இங்கு எழும் கேள்வி. இந்த இரண்டும் முற்றிலும் வேறுபட்ட அடையாளங்கள்தானா? அல்லது அவித்யா எனப்படும் மாயையின் காரணமாக பரமாத்மாவே ஜீவ ரூபம் எடுக்கிறாரா? பரமாத்மா உபாதியால் பாதிக்கப்பட்ட பிறகு ஜீவாவாக மாறுமா அல்லது அது ஜீவா பரமாத்மாவின் ஒரு பகுதியாகும். உபாதி என்றால் பரமாத்மா அல்லது பிரம்மன் பல மரண உடல்களுக்குள் நுழைந்த பிறகு ஜீவ வடிவத்தை எடுப்பதற்கு காரணம்.

ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையேயான சரியான தொடர்பைப் பற்றிய தெளிவான கருத்துக்களை மேலோட்டமாக வெளிப்படுத்தும் சில உபநிடத நூல்களின் காரணமாக இந்த நான்கு மடங்கு சந்தேகம் எழுகிறது. ஒரு உபநிஷத உரை, பரமாத்மா சர்வஞானம் என்றும், ஜீவன் அறியாமை என்றும் கூறுகிறது. இதன் பொருள் ஜீவா மற்றும் பரமாத்மா இரண்டு தனித்தனி நிறுவனங்கள். மற்றொரு உபநிஷதக் கூற்றில் பிரம்மம் ஜீவா, இந்த ஜீவா பிரம்மம். இந்த கூற்றுகளின்படி பிரம்மன் அவித்யா அல்லது மாயையின் காரணமாக ஜீவாவாக முடியும்.

மேற்கூறிய சந்தேகங்களின் பின்னணியில் பதராயண முனிவரான சூத்ரகாரர் முதல் சூத்திரத்தில் “அம்சோனன வ்யாபதேஷாத் அன்யத சாபி தசகித வாதித்வம் அதீயத ஏகே” என்று கூறுகிறார்.

இந்த சூத்திரம் என்றால் ஜீவா என்பது பிரம்மத்தின் ஒரு பகுதி. அம்சா ஒரு பகுதி. பிரம்மன் அம்சி என்றும், ஜீவா அம்சம் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே இந்த உறவு அம்சம்சி பவ என்று அழைக்கப்படுகிறது, இது சரிரா ஆத்ம பவ போன்றது. அதாவது பரமாத்மா ஆன்மா, ஜீவாத்மா என்பது உடல். அதர்வ வேதத்தில் பிரம்மன் அல்லது பரமாத்மா ஒரு மீனவர் என்றும், அவர் ஒரு முரடர் என்றும் ஒரு கூற்று உள்ளது. மீனவர், முரடர் போன்றவர்களின் உடலில் உள்ள ஜீவாத்மாவுக்கு பிரம்மன் தான் ஆன்மா என்பது இதன் பொருள்.

எனவே ஒவ்வொரு உடலிலும் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒவ்வொரு ஜீவனும் பரமாத்மாவின் உடலாகும். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணரும் இதையே அர்ஜுனனிடம் கூறுகிறார். எல்லா ஜீவாத்மாக்களும் ஒரே மாதிரியாகவும், பரமாத்மாவின் உடல்களாகவும் இருக்கும்போது, ​​ஜாதி, மதம், நிறம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் ஒரு ஜீவனுக்கும் மற்ற ஜீவனுக்கும் எப்படி வித்தியாசம் இருக்க முடியும் என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. ஒரு ஜீவாவுக்கும் மற்றொரு ஜீவாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் அந்த வித்தியாசம் அடிப்படையில் ஜீவன் வசிக்கும் உடலில் உள்ளது என்று சூத்ரகாரர் கூறியதன் மூலம் இந்த சந்தேகம் தீர்க்கப்படுகிறது. எனவே சாதி, மதம், நிறம் அல்லது பாலினம் உடலுக்குப் பொருந்தும், உடலில் வசிக்கும் ஜீவாவுக்கு அல்ல. இந்தக் கண்ணோட்டத்தை விளக்க, சூத்ரகாரர் ஒரு அழகான உவமையைத் தருகிறார். நெருப்பு அல்லது அக்னி தானாகவே தூய்மையானது. ஆனால், தகனம் செய்யும் இடத்தில் ஏற்படும் தீ, நம் வீட்டின் சமையலறையில் எரியும் நெருப்புக்கு சமம் என்று சொல்ல முடியுமா? மேற்கூறிய இரண்டு இடங்களிலும் உள்ள நெருப்பு ஒன்றுதான் என்பதை எந்த உடலும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வேறுபாடு அடிப்படையில் நெருப்புடன் தொடர்பு கொள்ளும் பொருளில் உள்ளது.

தகனம் செய்யும் இடத்தில், இறந்த உடலுடன் தீ எரிகிறது. வீட்டில் நெருப்பு அடுப்புடன் தொடர்பு கொண்டு எரிகிறது. ஒரு ஜீவாவிற்கும் மற்ற ஜீவாவிற்கும் உள்ள வித்தியாசம் ஒரு ஜீவாவின் உடலிலும் மற்ற ஜீவாவின் உடலிலும் உள்ளது. ஒரு உடல் உயர்ந்த சாதியைச் சேர்ந்ததாக இருக்கலாம், மற்றொரு உடல் தாழ்ந்த சாதியைச் சேர்ந்ததாக இருக்கலாம். எனவே, பிராமணனின் உடலிலுள்ள ஜீவன், வேதத்தில் கூறப்பட்டுள்ள சந்த்யாவந்தனம் போன்ற அனைத்து சடங்குகளையும் செய்ய வேண்டும், அங்கு தாழ்த்தப்பட்ட சாதியின் உடலில் உள்ள ஜீவன் நான்காவது ஜாதியில் உபநயன சம்ஸ்காரம் இல்லாததால் சடங்குகளைச் செய்ய எதிர்பார்க்கப்படுவதில்லை.

இந்த அதிகாரம் பதினொரு சூத்திரங்களைக் கொண்டது. மீதமுள்ள சூத்திரங்களில் அத்வைத முறை, பாஸ்கர முறை, த்வைத முறை தத்துவங்கள் மறுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அத்தியாயத்தின் 3வது காலாண்டு இந்த அதிகாரத்துடன் முடிகிறது.

*********

2 வது அத்தியாயத்தின் 4 வது காலாண்டு இந்திரிய பாதம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இந்திரியங்களின் உருவாக்கம், இந்திரியங்களின் எண்ணிக்கை, முக்ய பிராணனின் உருவாக்கம் (நாம் சுவாசிக்கும் காற்று) மற்றும் சில தொடர்புடைய தலைப்புகளைக் கையாள்கிறது.

இந்திரியங்களின் உருவாக்கம் இல்லை என்று உபநிடத நூல்களும் மேற்கூறியவற்றுக்கு முரணாக இந்திரியங்களின் உருவாக்கம் இருப்பதாகக் கூறும் வேறு சில உபநிடத நூல்களும் இருப்பதால் எழுந்த உள்நாட்டு சண்டையை இந்த இந்திரிய பாதம் தீர்க்கிறது.

புலன்கள் என்று அழைக்கப்படும் இந்திரியங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவு குறித்தும் சர்ச்சை உள்ளது. மேலும் முக்ய பிராணனை உருவாக்குவது பற்றிய சந்தேகம் இந்தப் பாதத்தில் நிவர்த்தி செய்யப்பட்டு, இறுதியாகப் பஞ்சீகரணம் என்று அழைக்கப்படும் ஐந்து பூதங்களைக் கலந்து படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் மற்றும் வடிவம் கொடுக்கும் பணியை பகவான் ஸ்ரீமன் நாராயணரே செய்கிறார் என்பதை சூத்திரகாரர் நிறுவுகிறார். நான்கு தலைகள் கொண்ட பிரம்மாவை அவரது தொப்புளில் இருந்து படைத்த பிறகு அந்தர்யாமியாக இருந்தார்.

முதல் அதிகாரம் “பிராண உத்பத்தி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. பிராணன் என்றால் இந்திரியம். இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு, உபநிடதத்தில் உள்ள ஒரு வாசகம், படைப்பிற்கு முன், ரிஷிகள் மட்டுமே இருந்தனர் என்றும், ரிஷிகள் யார் என்ற கேள்விக்கு, ரிஷிகள் பிராணன் அல்லது இந்திரியங்கள் என்று உபநிடதம் கூறுகிறது.

இந்த உபநிடத கூற்று இந்திரியங்கள் உருவாக்கப்பட்டதா இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சூத்ரகாரர் முதல் சூத்திரத்தில் “ததா பிராண:” என்று கூறுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் ஆகாயம் மற்றும் பிற கூறுகள் உருவாக்கப்படுவது போல் புலன்களும் உருவாக்கப்படுகின்றன. ஏனென்றால், சிருஷ்டிப்பதற்கு முன் பகவான் ஸ்ரீமன் நாராயணன் தனது மனைவியான மஹாலக்ஷ்மி மற்றும் இந்த இருவரையும் “சத்” என்று அழைக்கும் ஒரே ஒரு பொருள் மட்டுமே இருந்தது. முண்டக உபநிஷத் பிராமணன் அல்லது பரமாத்மாவிடமிருந்து முக்ய பிராணன், இந்திரியங்கள் மற்றும் ஐந்து பூதங்கள் பிறக்கின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன என்று கூறுகிறது.

ஆனால், பிராணன்கள் அல்லது இந்திரியங்களான ரிஷிகள் சிருஷ்டிக்கு முன் இருந்ததாகக் கூறப்பட்ட உபநிடதக் கூற்றின் பொருள் வைட் என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது. ரிஷிகள் என்பது பரமாத்மாவை மட்டுமே குறிக்கும் என்றும் அவை இந்திரியங்களைக் குறிக்கவில்லை என்றும் சூத்ரகாரர் கூறுகிறார். பன்மையில் இருக்கும் ரிஷிகள் என்ற சொல்லுக்கு ஒருமையில் இருக்கும் பரமாத்மா என்று எப்படி அர்த்தம் என்று மீண்டும் கேள்வி எழுகிறது. இரண்டாவது சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரம், ரிஷிகள் மற்றும் பிராணன்கள் என்ற வார்த்தைகளுக்கு எந்த நேரடி அர்த்தமும் இணைக்கப்பட வேண்டியதில்லை என்றும் அவை பரமாத்மாவை மட்டுமே குறிக்கின்றன என்றும் கூறுகிறது.

மேலும் பிராணன் என்ற சொல்லுக்கு பரமாத்மா என்று பொருள் என்று சூத்ரகாரர் மேலும் கூறுகிறார், ஏனென்றால் பரமாத்மாவைத் தவிர மற்ற அனைத்து பொருட்களும் அவற்றின் உருவாக்கத்தால் மட்டுமே அவற்றின் பெயர்களைப் பெறுகின்றன. மேலும் படைப்பிற்கு முன் எந்த ஒரு பொருளுக்கும் அல்லது பொருளுக்கும் வடிவமும் பெயரும் இல்லை. அதனால் புலன்கள் உருவாகின்றன.

இந்தப் பாடலில் உள்ள இரண்டாவது அதிகாரம் “சப்தகதி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் இந்திரியங்களின் எண்ணிக்கை பற்றிய விவாதம் நடைபெறுகிறது. இந்திரியங்களின் எண்ணிக்கை ஏழா அல்லது பதினொன்றா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்திரியங்களின் எண்ணிக்கை ஏழு மட்டுமே என்று எதிராளி அல்லது பூர்வபக்ஷி கூறுகிறது. தைத்தரிய உபநிடதத்தில் உள்ள ஒரு ஸ்ருதியின் படி, ஜீவா ஏழு இந்திரியங்களுடன் ஒரு உடலிலிருந்து மற்றொன்றுக்கு நகர்கிறது என்று கூறுகிறது. மனம், புத்தி, கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஏழு இந்திரியங்கள்.

எதிரியின் இந்த பார்வை இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் உள்ளது மற்றும் சூத்திரம் “சப்த கதே: விசேஷிதத்வாச்ச” என்று படிக்கிறது. இந்த சூத்திரம் பூர்வபக்ஷ சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவா பிறக்கும் போது ஒரு உடலுக்குள் நுழைந்து இறக்கும் போது உடலை விட்டு வெளியேறும்போது, ​​அவர் எப்போதும் ஏழு புலன்களுடன் தொடர்புடையவர்.

சித்தாந்த சூத்திரம் என்று அழைக்கப்படும் இரண்டாவது சூத்திரத்தில் எதிரியின் இந்த வாதத்தை சூத்திரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரம் “ஹஸ்த தயாஸ்து ஸ்திதே அதோனைவம்” என்று படிக்கிறது. கை முதலிய இந்திரியங்கள் இருக்கும் போது இந்திரியங்களின் எண்ணிக்கை ஏழு மட்டுமல்ல பதினொன்றாகும் என்பது இந்த சூத்திரத்தின் பொருள். எனவே இந்திரியங்கள் பின்வருமாறு.

மனம் – (இந்திரியங்களைக் கொடுக்கும் அறிவு):

1. கண்கள்

2. காதுகள்

3. மூக்கு

4. நாக்கு

5. தோல்

செயல் சார்ந்த இந்திரியங்கள்:

6. கைகள்

7. கால்கள்

8. பேச்சு

9. பிறப்பு உறுப்பு (பாலியல் உறுப்பு)

10. வெளியேற்ற உறுப்பு.

புத்தி என்பது ஒரு இந்திரியமாக கருதப்படுவதில்லை, ஏனெனில் புத்தி என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது நிலைபெற்ற மன நிலை.

இந்த பாதத்தில் மூன்றாவது அதிகாரம் “பிராண அனுத்வாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த அதிகாரத்தில் இந்திரியங்களின் அளவு தீர்மானிக்கப்படுகிறது.

அனைத்து புலன்களும் சமமானவை, முடிவில்லாதவை என்று பிருஹதாரண்யக உபநிடதத்தில் ஒரு மேற்கோள் இருப்பதால், அளவு பற்றிய சந்தேகம் எழுகிறது. முடிவில்லாத வார்த்தை, புலன்கள் எல்லா இடங்களிலும் இருப்பதைக் குறிக்கலாம், அதாவது அவை பரமாத்மாவைப் போலவே விபு.

இந்த சந்தேகத்தின் காரணமாக சூத்ரகாரர் “அனுவாஷா” என்ற சூத்திரத்தில் கூறுகிறார், அதாவது அனைத்து புலன்களும் மிகக் குறைந்த அளவிலானவை. சூத்ரம் அளவு “அனு” (அணு) என்று சொன்னாலும், உடலின் வெளியே இருக்கும் தோலின் விஷயத்தில் இந்திரியங்களின் அளவு அணு அளவு இருக்க முடியாது, தோல் என்று சொல்ல முடியாது. அணு அளவு. இந்தச் சூழலில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் கூறுகிறார், புலன்கள் மிகக் குறைந்த அளவைக் கொண்டுள்ளன, அதாவது அவை வெளியேறும் அல்லது உடலை விட்டு வெளியேறும் போது, ​​​​உடலுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களால் மறுபரிசீலனை செய்ய முடியாது. உடலில் இருந்து ஆன்மா.

“அனவஷ்சா” என்ற சூத்திரம், ஜீவா உடலை விட்டு வெளியேறும்போது, ​​​​அவரது சுவாசம் நிறுத்தப்படும் என்று கூறும் உபநிடதத்தின் அடிப்படையில் அமைந்தது, அதாவது முக்ய பிராணன் என்று அழைக்கப்படும் சுவாசமும் உடலை விட்டு வெளியேறி, பின்தொடர்கிறது. முக்ய பிராணன் வெளியேறியதும் பதினொரு புலன்களும் விலகின. புலன்கள் மிகக்குறைந்த அளவில் இருக்கும்போதுதான் வெளியேறுவதும் நுழைவதும் சாத்தியமாகும்.

இந்த அதிகாரணத்திலேயே முக்ய பிராணன் அல்லது மூச்சு கூட படைக்கப்படுகிறது என்று சூத்ரகாரம் கூறுகிறது. மகா பிரளய (மஹா பிரளய) காலத்திலும் காற்று வடிவில் உள்ள முக்ய பிராணன் இருந்ததாக உபநிடத வாசகத்தில் எழுந்த சந்தேகம் காரணமாக அதன் உருவாக்கம் பற்றி குறிப்பாக குறிப்பிட வேண்டியிருந்தது. நான்கு தலை பிரம்மாவின் பதவிக்காலம் முடிந்த பிறகு மகாபிரளயம் நடைபெறுகிறது. நான்கு தலை பிரம்மாவின் பதவிக் காலம் 2 x 1017 ஆண்டுகள் (இரண்டு பரார்தாக்கள்). ஒரு பரார்தா என்பது நமது ஆண்டு கணக்கின்படி 1017 ஆண்டுகள்.

ரிக்வேதத்தில் உள்ள மேற்கூறிய உபநிடத வாசகம் பிரளய காலத்தில் முக்ய பிராணன் இருந்ததைக் குறிப்பிடவில்லை, ஆனால் அதில் ஸ்வதா என்ற வார்த்தை இருப்பதால் மகாலட்சுமி தேவியுடன் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே இருந்ததாகக் கூறுகிறது என்பது சூத்ரகாரரின் வாதம். உபநிடதச் சொல் மகாலட்சுமியைக் குறிக்கிறது. நமது சித்தாந்தத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனும் அவரது துணைவியான மஹாலக்ஷ்மியும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவர்கள் என்பதால் ஒரே உருவமாக இருக்கிறார்கள். பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இந்த ஒற்றைப் பொருள் மட்டுமே இருந்தது. முண்டக உபநிடதம் முக்ய பிராணன் (மூச்சு) உருவாக்கம் பற்றி தெளிவற்ற முறையில் குறிப்பிடுகிறது, எனவே அது படைப்பு இல்லாமல் இல்லை.

எனவே “ஸ்ரேஷ்டஷாச்சா” சூத்திரத்தில் முக்ய பிராணன் படைப்பிற்கு உட்பட்டது என்று சூத்ரகாரம் தெளிவாகக் கூறுகிறது. முக்ய பிராணன் “ஸ்ரேஷ்ட பிராணன்” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் “வாயுக்ரியாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் முக்ய பிராணனின் சரியான தன்மையும் அதன் செயல்பாடும் கையாளப்படுகிறது. இந்த அதிகாரம் நான்கு சூத்திரங்களைக் கொண்டுள்ளது. முக்ய பிராணனின் தன்மை குறித்து மூன்று மடங்கு சந்தேகங்கள் உள்ளன. அவை 1) முக்ய பிராணன் வாயுவான இரண்டாவது பூதமா 2) வாயுவின் இயக்கம் அல்லது செயலா 3) அது ஒரு சிறப்பு வகை வாயு அல்லது காற்று.

சூத்ரகாரர் முதல் இரண்டு பார்வைகளை நிராகரித்து, “நவயுக்ரியே பிருதக் உபதேசத்” என்று கூறும் முதல் சூத்திரத்தில் மூன்றாவது பார்வை சரியானது என்று கூறுகிறார். முக்ய பிராணன் என்பது வாயுவின் செயல்பாடு அல்லது செயல் அல்ல, அது ஒரு சிறப்பு வகை வாயுவாகும், ஏனெனில் முண்டக உபநிடதம் பகவான் ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து, முக்ய பிராணன், மனம், பத்து புலன்கள் மற்றும் ஐந்து பூதங்கள் அல்லது உறுப்புகள் பிறக்கின்றன என்று கூறுகிறது. இந்தச் சொல்லில் 2வது பூதமான வாயு முக்ய பிராணனிலிருந்து வேறுபட்டது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தில் உள்ள இரண்டாவது சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரமானது, முக்ய பிராணன் வாயு அல்லது காற்றின் மாற்றப்பட்ட வடிவம் மற்றும் அது நெருப்பைப் போன்ற மற்றொரு பூதமாகும் என்ற கருத்தை நிராகரிக்கிறது. இந்த முக்ய பிராணன் கண்களைப் போலவே ஜீவாவுக்கு ஒரு உதவி என்று மேலும் கூறப்படுகிறது. பிராணனின் செயல்பாடு கண்கள் மற்றும் பிற புலன்களைப் போல் சரியாக இல்லாவிட்டாலும் அது ஜீவா உடலையும் இந்திரியங்களையும் ஆதரிக்க உதவுகிறது.

சாந்தோக்யோபநிஷத்தில் முக்ய பிராணன் பற்றி ஒரு கதை உள்ளது. ஜீவாவின் உடலில் அந்தர்யாமி, ஜீவாத்மா, முக்ய பிராணன், மனம் மற்றும் பத்து புலன்கள் என பரமாத்மா உள்ளன. புலன்களுக்கிடையே ஒரு சண்டை எழுந்தது, அதில் ஒவ்வொரு புலனும் மற்றவர்களை விட மேன்மை எனக் கூறி, அனைத்து புலன்களும் நான்கு தலைகள் கொண்ட பிரம்மாவிடம் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு ஒரு இணக்கமான தீர்வை ஏற்பாடு செய்யச் சென்றன. பிரம்மா ஒவ்வொரு புலனையும் உடலை விட்டு வெளியேறி ஒரு வருடம் வெளியில் இருக்கவும், உடலின் செயல்பாட்டை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கவும் கூறினார். முதலில் பேச்சு உடலை விட்டு வெளியேறி வேறு இடத்தில் இருந்தது, அந்த நபர் ஊமை ஆனார், இது உடலின் செயல்பாட்டைத் தடுக்கவில்லை, பின்னர் பேச்சு திரும்பியது. பின்னர் கண்கள் உடலை விட்டு வெளியேறி பக்கவாட்டில் இருந்ததால் அந்த நபர் பார்வையற்றவரானார்.

பார்வையற்றவராக மாறினாலும் அவரது உடல் செயல்பாடு இயல்பாகவே இருந்தது. பிறகு கண்கள் திரும்பின. பின்னர், காதுகளும் மனமும் உடலை விட்டு வெளியேறியது, உடலின் செயல்பாடுகள் அதிகம் பாதிக்கப்படவில்லை, பின்னர் முக்ய பிராணன் உடலை விட்டு வெளியேறியது, மற்ற இந்திரியங்கள் அதைப் பின்பற்றின. பின்னர் உடல் இறந்து அழுக ஆரம்பித்தது. எனவே முக்ய பிராணன் எல்லா புலன்களையும் விட மேலானவன் என்றும், புலன்களுக்கெல்லாம் தலைவன் என்றும் புலன்களுக்குக் கூறினார். இதற்கு சாந்தோக்யோபநிஷத்தில் பிராண சம்வாதம் என்று பெயர். இதன்படி முக்ய பிராணன் ஜீவா உடலையும் புலன்களையும் ஆதரிக்க உதவுகிறது.

இந்த முக்ய பிராணன் உடல் முழுவதும் ஐந்து வெவ்வேறு இடங்களில் ஐந்து வெவ்வேறு பெயர்களுடன் செயல்படுகிறது. இதயத்தில் பிராணன், வெளியேற்றும் உறுப்பில் அபானன், தொப்புளில் சமணன், கழுத்தில் உதனா மற்றும் வைகனா உடல் முழுவதும் இயங்குகிறது. ஆசை, விருப்பம், சந்தேகம், நேர்மை, நேர்மையில் நேர்மை இல்லாதது, தைரியம், பயம், கூச்சம் போன்ற மனதின் பல நிலைகளைப் போலவே இதுவும் உள்ளது. மேலும் மேற்கண்ட ஐந்து பெயர்களைக் கொண்ட முக்ய பிராணனும் உடலில் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு, உதவி செய்கிறது. தனிப்பட்ட ஆன்மா உடலில் இருக்க வேண்டும். இந்த நான்காவது பாதத்தில் உள்ள ஐந்தாவது அதிகாரம் “ஸ்ரேஷ்ட அனுத்வாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது, அதில் இந்த ஷ்ரேஷ்ட பிராணன் அல்லது முக்ய பிராணன் மிகக் குறைந்த அளவுடையது என்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த சூழலில் எழும் சந்தேகம் என்னவென்றால், இந்த பிராணன் எல்லா இடங்களிலும் உள்ளது, அதாவது விபு அல்லது முடிவில்லாத ஆனந்தம் என்று உபநிடதங்களில் சில கூற்றுகள் உள்ளன. ஒரு அறிக்கையில், ஒவ்வொரு பொருளும் பிராணனுக்குள் இருப்பதாகவும், முழு விஷயமும் பிராணனால் சூழப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேற்கூறிய சந்தேகம் “அனுஷ்சா” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரரால் தீர்க்கப்பட்டது, அதாவது இந்த முக்ய பிராணன் (மூச்சு) மிகக் குறைந்த அளவு அல்லது பிரபஞ்ச அளவிலானது, ஏனெனில் அது ஜீவாவுடன் சேர்ந்து உடலை விட்டு வெளியேறுகிறது. ஷ்ரேஷ்ட பிராணன் எல்லா இடங்களிலும் அல்லது விபு இருந்தால் உடலை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை. ஜீவாவுடன் இந்த பிராணன் உடலிலிருந்து வெளியேறுவதைக் கூறும் தெளிவான உபநிடத உரை உள்ளது.

இந்த பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் “ஜோதிராதி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்திரியங்களும், முக்ய பிராணனும் பிரம்மன் (பகவான் ஸ்ரீமன் நாராயணன்) என்ற பரமாத்மாவிடமிருந்து படைக்கப்பட்டதாகவும், அவை மிகக் குறைந்த அளவுடையதாகவும், புலன்களின் எண்ணிக்கை பதினொன்றாக நிர்ணயிக்கப்பட்டதாகவும் இதுவரை சூத்ரகாரர் நிறுவினார்.

இரண்டாவது அத்தியாயத்தின் முதல் பாதத்தில் அபிமானி வ்யாபதேசஸ்து விஷேஷ அனு கதிப்யம் என்று ஒரு சூத்திரம் உள்ளது” என்று சூத்ரகாரர், அறிவோ உணர்வோ இல்லாத ஒவ்வொரு உயிரற்ற பொருளும் தேவதா என்ற வானக் கடவுளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை நிறுவினார்.

இந்த வான கடவுள் ஒரு குறிப்பிட்ட பொருளின் அபிமானிதேவதா அல்லது அதிஷ்டானதேவதா என்று அழைக்கப்படுகிறார். எல்லாப் புலன்களும் தங்களில் யார் மேலானவர் என்பதைத் தீர்மானிக்க நான்கு தலை பிரம்மாவிடம் சென்றது என்று முன்பு குறிப்பிடப்பட்ட பிராணசம்வாதத்தில் கூட, பிரம்மாவுடன் புலன்களைப் பேசுவது அந்தந்த அபிமான தேவதைகள் அல்லது அதிஷ்டான தேவதைகளால் மட்டுமே செய்யப்பட்டது. இது, இந்தியா பாகிஸ்தானைச் சொல்கிறது, அதாவது இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளரிடம் சொல்வது போன்றது. எனவே அபிமான தேவதா என்றால் பேச்சாளர் என்றும் பொருள்.

தெய்வங்களின் தூதராக இருக்கும் அக்னி தேவதை (அக்கினி தேவன்) அபிமானி தேவதை அல்லது உணர்வைக் கட்டுப்படுத்தும் நபர் என்று தெளிவாகக் கூறும் உபநிடத உரை உள்ளது “”பேச்சு மற்றும் ஒரு நபரின் நாவில் நுழைந்தது. அதே சமயம் சூரிய கடவுள் (சூர்யா) என்பது அபிமானி தேவதை அல்லது ஒரு நபரின் உடலில் உள்ள கண்களுக்குள் நுழைந்த “கண்கள்” என்ற உணர்வின் கட்டுப்படுத்தும் தெய்வம். அபிமானி தேவதை அல்லது முக்ய பிராணனைக் கட்டுப்படுத்தும் கடவுளான வாயு தேவதையும் சுவாசிப்பதற்காக ஒரு தனிப்பட்ட நபரின் மூக்கில் நுழைந்தார்.

அதே ஒப்புமையில், ஜீவா என்பது அதிஷ்டான தேவதா அல்லது உடலில் உள்ள அனைத்து இந்திரியங்களையும் தனது இன்பத்திற்காகக் கட்டுப்படுத்தும் அமைப்பாகும். ஜீவா தனது காதுகள் மூலம் ஒலி அல்லது இசையை அதன் கட்டுப்பாட்டாளராக இருந்து அனுபவிக்கிறார். அவற்றின் கட்டுப்பாட்டாளராக இருப்பதன் மூலம் அவர் தனது கண்களால் வண்ணம் அல்லது ரூபாவை அனுபவிக்கிறார். அவர் தனது தோல் உணர்வின் மூலம் தொடுதலின் இன்பத்தை அதன் கட்டுப்படுத்தியாக அனுபவிக்கிறார். அவனால் கட்டுப்படுத்தப்படும் நாக்கின் மூலம் உண்ணக்கூடிய உணவின் சுவையை அவன் அனுபவிக்கிறான். அவன் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் மூக்கு வழியாக ஒரு பொருளின் இனிமையான வாசனையை அனுபவிக்கிறான்.

எனவே முக்ய பிராணனும் மற்ற புலன்களும் அந்தந்த வான தெய்வங்களாலும் ஜீவாவாலும் அபிமான தேவதைகளாகவோ அல்லது அதிஷ்டான தேவதைகளாகவோ இருப்பதன் மூலம் அவனுடைய அல்லது அவள் இன்பத்திற்காக சேர்க்கப்படுகின்றன என்பது மேற்கூறியவற்றிலிருந்து தெளிவாகிறது.

இச்சூழலில், இந்தச் செயலை கட்டுப்படுத்துவது அல்லது அதிஷ்டனாக இருப்பது ஒரு ஜீவாவின் (வானக் கடவுளின் விருப்பமும்) அவரது சொந்த விருப்பத்தினாலா அல்லது ஸ்ரீமனாகிய பரமாத்மாவின் விருப்பம் அல்லது சங்கல்பத்தால் கட்டுப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. நாராயணா. தியானிக்கப்படும் அல்லது வழிபடப்படும் பட்டியலில் உள்ள அந்த ஜீவனும் பலன்களை வழங்க முடியும் என்பதால், ஜீவாவின் சொந்த விருப்பத்தின் பேரில் கட்டுப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்திற்கு இடம் உள்ளது.

இந்த பார்வையை சூத்ரகாரர் “ஜோதிராதி அதிஷ்டானம் து ததமானநாத் ப்ரணவதா ஷப்தாத்” என்ற சூத்திரத்தில் நிராகரித்துள்ளார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

ஜோதிராதி அதிஷ்டானம் பிரணவதா என்பது முக்ய பிராணன் மற்றும் பிற புலன்களை அக்னி தேவதை போன்ற பரலோக கடவுள்களால் கட்டுப்படுத்துவது மற்றும் ஜீவாவுடன் சேர்த்து பரமாத்மாவின் சித்தம் அல்லது சங்கல்பத்தின் காரணமாகும். இங்கு பிரணவதம் என்றால் ஜீவா என்று பொருள். தண்டமானநாத் என்றால்

பரமாத்மாவின் விருப்பம். தத்மேஸ் பரமாத்மா, அமனானம் என்றால் அவருடைய விருப்பம் அல்லது சங்கல்பம்.

மேலே கூறப்பட்ட முடிவுக்கான காரணம் “சப்தாத்”, இங்கு சப்தா என்றால் “உபநிஷத மேற்கோள்” என்று பொருள். பிருஹதாரண்யக உபநிடதத்தின் மூன்றாம் அத்தியாயத்தின் அந்தர்யாமி பிராமணத்தில், உத்தாலக முனிவருக்குப் பதிலளித்த யாக்ஞவல்கிய முனிவர் இருபத்தி ஒரு பொருளைக் கண்டறிந்து, ஒவ்வொரு பொருளிலும் அல்லது பொருளிலும் பரமாத்மா இருக்கிறார், அவர் அந்த பொருளிலிருந்து வேறுபட்டவர், இந்த பொருள் பரமாத்மாவையும் இந்த பொருளையும் அறியாது. என்பது பரமாத்மாவின் உடல் மற்றும் பரமாத்மா என்பது அந்த பொருளின் உள் ஆன்மா அல்லது அந்தர்யாமி மற்றும் அதன் செயல்பாடுகளை உள்ளே இருந்து கட்டுப்படுத்துகிறது, மேலும் அவர் கேள்வி கேட்பவரின் அந்தர்யாமியாகவும் இருக்கிறார், அது உத்தாலகாகும்.

இந்த பொருள்கள் ஐந்து கூறுகள், புலன்கள், ஜீவன், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள், உயிரினங்கள் என்று அனைத்து பூதங்கள், இருள், ஒளி, திசைகள் போன்றவை. இந்த அந்தர்யாமி பிராமணத்தின்படி, ஜீவாக்கள், வான தெய்வங்கள் மற்றும் ஒவ்வொரு பொருளும் உட்பட ஒவ்வொரு உயிரினத்தின் ஒவ்வொரு செயல்பாடும். பிரபஞ்சம் பரமாத்மாவால் கட்டுப்படுத்தப்படுகிறது, இந்த அந்தர்யாமி ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்தில் வசிப்பவர் ஸ்ரீமன் நாராயண பகவான் என்று சுபலோபநிஷத் கூறுகிறது. அவர் முழு பிரபஞ்சத்தையும் உள்நோக்கியும் வெளியேயும் சூழ்ந்துள்ளார். ஒவ்வொரு விஷயத்திலும் அந்தர்யாமியாக இருந்து அதன் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் பரமாத்மாவின் இந்த இயல்பு நிரந்தரமானது.

இந்த பாதத்தில் ஏழாவது அதிகாரம் “இந்திரயாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில் எழும் சந்தேகம் என்னவென்றால், முக்ய பிராணன் இந்திரியங்கள் அல்லது இந்திரியங்களின் பிரிவில் உள்ளதா அல்லது இந்த வகைக்கு வெளியே உள்ளதா என்பதுதான். மூச்சாகிய முக்ய பிராணனை பிராணன் என்றும், இந்திரியங்கள் பிராணன் என்றும் அழைக்கப்படுகின்றன, இவை அனைத்தும் உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவின் உதவிகள் என்பது இந்த சந்தேகத்திற்கு இடம்.

இந்த சந்தேகத்தைப் போக்க சூத்ரகாரர் “தா இந்திரியானிதாத் வ்யாபதேசத் அன்யத்ர ஷ்ரேஷ்டாத்” என்ற சூத்திரத்தை இயற்றுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பதினொரு இந்திரியங்களும் புலன்கள் மற்றும் முக்ய பிராணன் ஒரு இந்திரியம் அல்ல.

சூத்ரகாரர் இந்த அதிகாரத்தில் இரண்டாவது சூத்திரத்தில் “பேத ஸ்ருதே: வைலக்ஷ்ண்யச்ச” என்று படிக்கும் மற்றொரு உபநிடத உரையை மேற்கோள் காட்டுகிறார். இதன் பொருள், சூத்ரகாரர் மேற்கோள் காட்டிய உபநிடத உரையில், பரமாத்மாவிடமிருந்து முக்ய பிராணனும் பதினொரு புலன்களும் பிறந்தன என்று கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த ஸ்ருதி அல்லது உபநிடதச் சொல் முக்ய பிராணனுக்கும் புலன்களுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. இந்த பாதத்தில் உள்ள கடைசி மற்றும் எட்டாவது அதிகாரம் சம்ஞான மூர்த்தி கிளிப்தி அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. சம்ஞா என்றால் பெயர், மூர்த்தி என்பது வடிவம். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அல்லது பொருளுக்கும் ஒரு திட்டவட்டமான பெயர் மற்றும் வடிவம் உள்ளது. இந்த திட்டவட்டமான பெயர் மற்றும் வடிவம் ஒரு பொருளை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துகிறது.

பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தின் உருவாக்கம் நடைபெறுகிறது. பிரளயம் நான்கு தலை பிரம்மாவின் பதவிக்காலம் முடிந்த பிறகு நடைபெறுகிறது, மனித ஆண்டுகளின் கணக்கீட்டின்படி, நான்கு தலை பிரம்மாவின் பதவிக்காலம் 2 x 1017 ஆண்டுகள் ஆகும், அதாவது இரண்டு பரார்த்தங்களின் முடிவில். ஒரு பரார்தா என்பது 1 x 1017 ஆண்டுகள். தற்செயலாக சதுர்மோக பிரம்மாவிற்கு ஒரு கல்பம் பகல் ஆகும், இது ஸ்வேத வராஹ கல்பம் என்றும் மற்றொரு கல்பம் இரவு என்றும் இது பத்மகல்பம். ஒரு கல்பம் என்பது 1000 சதுர் யுகங்கள். ஒரு கல்பா என்பது 4320000000 ஆரம்பத்தின்_ஸ்கைப்_ஹைலைட்டிங் 4320000000 மனித ஆண்டுகளின்_ஸ்கைப்_ஹைலைட்_முடிவு. ஒரு சதுர் யுகத்தின் காலம் 4320000 மனித ஆண்டுகள்.

கலியுகத்தின் காலம் 432000 ஆண்டுகள். துவாபர யுகத்தின் காலம் 864000, திரேதா யுகத்தின் காலம் 1296000 ஆண்டுகள், கிருத யுகத்தின் காலம் 1728000 ஆண்டுகள். பிரளய காலமும் இரண்டு பரார்தாக்கள் அதாவது 2 x 1017 ஆண்டுகள்.

பிரபஞ்சத்தின் உருவாக்கம் பின்வரும் நிலைகளைக் கொண்டுள்ளது.

அ) சமசுதிஸ்ருஷ்டி – பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஐந்து பூதங்கள் அல்லது கூறுகளை உருவாக்குகிறார்.

ஆ) திரி வ்ருத்கரணம் பஞ்சீகரணம் என்றும் அழைக்கப்படுகிறது

c) அந்த ஸ்ருஷ்டி – ஆண்டை உருவாக்குதல். அண்டா முட்டை வடிவில் உள்ளது மற்றும் அது சதுர் தசா புவனா எனப்படும் பதினான்கு உலகங்கள் அல்லது லோகங்களை உள்ளடக்கியது. பதினான்கு லோகங்களின் பெயர்கள் 1) பூலோகம் 2) புவர்லோகம் 3) சுவர்லோகம் 4) மஹர்லோகம் 5) ஜனோலோகம் 6) தபோலோகம் 7) சத்ய லோகம்.

நாம் இப்போது வாழும் உலகம் பூலோகம். பூலோகத்திற்கு கீழே, 1) அத்தலம் 2) வித்தலம் 3) சுதலம் 4) தலத்தலம் 5) மகாதலம் 6) ரசாதலம் 7) பாதாளம் என ஏழு லோகங்கள் உள்ளன.

பதினான்கு லோகங்களிலும், ஒவ்வொரு ஆண்டாவின் தலையும் நான்கு தலை பிரம்மாவாகிய அந்தாதிபதி என்று அழைக்கப்படுகிறார். எண்ணிலடங்கா அந்தாக்கள் இருப்பதால் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அனந்தகோடி பிரம்மாண்ட நாயகர். ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு சதுர்முக பிரம்மா, சிவன், இந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.

ஈ) ஆண்ட சிருஷ்டி (சிருஷ்டி என்றால் படைப்பு என்று பொருள்) செய்த பிறகு ஒவ்வொரு ஆண்டாவின் சதுர் முக பிரம்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனின் தொப்புளிலிருந்து பிறக்கிறார்.

இ) பகவான் ஸ்ரீமன் நாராயணன் சதுர்முக பிரம்மாவின் அந்தர்யாமியாக இருப்பதால் வ்யஷ்டி சிருஷ்டி என்று அழைக்கப்படும் நாம ரூப வியாகரணம் செய்கிறார். இந்தச் சூழலில் சதுர்முக பிரம்மா சமஷ்டி புருஷன் என்று அழைக்கப்படுகிறார். பஞ்சுகரணம் என்று அழைக்கப்படும் திரிவ்ருத்கரணம் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

ஊ) சமஷ்டி சிருஷ்டி பரமாத்மா செய்த பிறகு, எந்த வேலையும் நடக்கவில்லை. ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் ஒரு வாசகம் உள்ளது, அதில் உருவாக்கப்பட்ட ஐந்து பூதங்களும் திறன் கொண்டவை என்றாலும், எந்த வேலையும் செய்ய முடியாது, தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களின் உருவாக்கம் நடக்காது என்று தெளிவாக உச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பூதங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கப்படவில்லை. பூதங்கள் ஒன்றோடு ஒன்று கலப்பது பஞ்சீகரணம் எனப்படும்.

சிமென்ட் இருக்கிறது, மணல் இருக்கிறது, தண்ணீர் இருக்கிறது, ஜெல்லி இருக்கிறது, எஃகு இருக்கிறது என்று சொல்வதைப் போன்றதுதான் இதுவும் இன்னும் கட்டுமானம் இல்லை. எனவே வெறும் பொருட்களைக் கொள்முதல் செய்வதால் எந்தக் கட்டுமானமும் ஏற்படாது என்பது தெளிவாகிறது. வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் கட்டமைப்பானது சிமென்ட், மணல், ஜெல்லி ஆகியவற்றை தண்ணீருடன் கலப்பதன் மூலம் உருவாகலாம். எனவே, எந்த ஒரு வேலையும் முடிவடைய, அங்கப் பொருட்களைக் கலக்க வேண்டியது அவசியம். அதுபோலவே பிரபஞ்சத்தின் விஷயத்திலும் பூதங்கள் (உறுப்புகள்) ஒன்றோடு ஒன்று கலந்தால் மட்டுமே மேலும் உருவாக்கம் முடியும்.

ஆண்டாள் மற்றும் அந்தாதிபதி சதுர் முக பிரம்மாவை உருவாக்குவதற்கு முன்பே பகவான் ஸ்ரீமன் நாராயணன் பஞ்சீகரணம் செய்கிறார். பஞ்சீகரணம் செய்யப்படும் முறை பின்வருமாறு. ஏற்கனவே சொன்னது போல் பஞ்சீகரணம் என்றால் பூதங்கள் ஒன்றோடு ஒன்று கலப்பது.

ஆகாஷாவின் பஞ்சீகரணம் (வானம்)

ஆகாஷா – 50 %

வாயு (காற்று) – 12.5 %

தேஜஸ் (தீ) – 12.5%

நீர் – 12.5 %

பூமி – 12.5 %

அதாவது, 50 % ஆகாஷம் மீதமுள்ள நான்கு பூதங்களில் ஒவ்வொன்றிலும் 12.5% ​​உடன் கலக்கப்படுகிறது மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள சதவீதத்தின்படி ஐந்து பூதங்களின் கலவையே இப்போது நாம் காணும் வானம். மற்ற பூதங்களின் பஞ்சீகரணம் பின்வருமாறு உள்ளது.

அ) வாயு (காற்று)

வாயு – 50%, ஆகாஷா – 12.5%, நெருப்பு – 12.5%, நீர் – 12.5%, பூமி – 12.5%

b) தேஜஸ் (தீ)

தேஜஸ் – 50%, ஆகாஷா – 12.5%, வாயு – 12.5%, நீர் – 12.5%, பூமி – 12.5%

c) தண்ணீர்

நீர் – 50%, ஆகாஷா – 12.5%, வாயு – 12.5%, நெருப்பு – 12.5%, பூமி – 12.5%

ஈ) பூமி

பூமி – 50%, ஆகாஷா – 12.5%, வாயு – 12.5%, நெருப்பு – 12.5%, நீர் – 12.5%

எனவே பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளின் அல்லது பொருளின் உட்பொருட்கள் ஐந்து பூதங்கள். அதுபோலவே மனித உடலும் ஐந்து பூதங்களைக் கொண்டது எனவே இது பஞ்ச பூதிகா சரிரம் எனப்படுகிறது.

சாந்தோக்யோபநிஷத்தில், நெருப்பு, நீர், பூமி ஆகிய மூன்று பூதங்களை மட்டுமே உருவாக்குவதைக் குறிப்பிடுவதால் மட்டுமே இது திரிவ்ருத்கரணம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த 3 பூதங்களின் கலவையே திரிவிருத்கரணம் எனப்படும். உத்தாலக முனிவர் இந்த திரிவிருத்திகரணம் பற்றி தனது மகன் சுவேதகேதுவிடம் ஒரு உவமை மூலம் கூறுகிறார். உத்தாலகா ஸ்வேதகேதுவிடம், அந்தச் சுடர் சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய மூன்று நிறங்களைக் கொண்டது என்று கூறுகிறார்.

சிகப்பு நிறம் சுடரில் பூத தேஜஸ் இருப்பதையும், வெள்ளை நிறம் சுடரில் உள்ள நீரின் மூலப்பொருளையும், கருப்பு நிறம் சுடரில் பூமி இருப்பதையும் உறுதி செய்கிறது.

ஆனால் தைத்தரிய உபநிடதத்தில், ஐந்து பூதங்களின் உருவாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே பஞ்சீகரணம். பஞ்ச ஐந்து. இந்த உபநிடதத்தில் சத் என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஹிரண்ய கர்ப்பமாகிய (சதுர்முக பிரம்மா) சமஷ்டிஜீவாவின் உடலில் நுழைந்து பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு பொருட்களுக்கு பெயர்களையும் வடிவங்களையும் வழங்கினார் என்று சாண்டோக்யோபனிஷத் கூறுகிறது.

பரமாத்மா ஜீவாவுடன் சேர்ந்து ஒவ்வொரு பொருளிலும் நுழைவதால் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் அல்லது பொருளும் ஒரு பெயரையும் வடிவத்தையும் பெறுகின்றன. எனவே ஜீவனும் அவனது அந்தர்யாமியான பரமாத்மாவும் இல்லாத எந்தப் பொருளும் இல்லை.

உயிரற்ற பொருட்களின் விஷயத்தில் ஜீவா மற்றும் அதன் அந்தர்யாமி செயலற்ற நிலையில் உள்ளது, உயிருள்ள பொருட்களின் விஷயத்தில் ஜீவா மற்றும் பரமாத்மாவின் இருப்பு தெளிவாக உள்ளது.

எனவே உணர்வு மற்றும் உணர்வு இல்லாத அனைத்தும் பரமாத்மாவின் உடல்கள் என்பது மேலே உள்ளவற்றிலிருந்து தெளிவாகிறது.

இந்த அதிகாரத்தில் உள்ள முதல் சூத்திரம் “சம்ஜ்ஞ மூர்த்தி க்லிப்திஸ்து த்ரிவ்ருத் குர்வத உபதேசத்”.

முன்னதாக த்ரிவ்ருத் கரணத்தைச் செய்யும் பகவான் ஸ்ரீமன் நாராயணனும் நாமரூப வ்யாகரணம் செய்கிறார் என்பதுதான் இந்த ஸூத்ரம்.

இத்துடன் இரண்டாவது அத்தியாயம் நிறைவு பெறுகிறது.

******

மூன்றாவது அத்தியாயம் “சாதனா” அத்யாயா மோட்சம் அல்லது நித்திய பேரின்பத்தை அடைவதற்கான வழிமுறைகளை (உபயம்) கையாள்கிறது.

முதல் இரண்டு அத்தியாயங்கள் பிரபஞ்சத்திற்குக் காரணமான (பொருள் காரணம், செயல்பாட்டுக் காரணம் மற்றும் கருவிக் காரணம்) மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட பொருள்களைக் கையாள்வதில் பிரத்தியேகமாக உள்ளன. சமன்வய அத்யாய எனப்படும் முதல் அத்தியாயத்திலும், “அவிரோத அத்யாய” எனப்படும் இரண்டாவது அத்தியாயத்தின் முதல் இரண்டு பாதங்களிலும் பிரம்மன் அல்லது பர பிரம்மன் என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணனே பிரபஞ்சத்தின் காரணகர்த்தாவாக இருக்கிறார் என்பது உறுதியாகவும், மாற்ற முடியாததாகவும் நிறுவப்பட்டது. . 2வது அத்யயத்தில் 3வது மற்றும் 4வது காலாண்டுகளில் பிராமணனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் மற்றும் அவற்றின் தன்மை பற்றி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

இந்த அத்தியாயத்தில் நான்கு பாதங்கள் உள்ளன, அவை (1) வைராக்ய பாதம் (2) உபய லிங்க பாதம் (3) குணோபசம்ஹார பாதம் (4) அங்க பாதம்.

மோட்சத்தை அடைவதற்கான வழிமுறைகளை ஒருவர் பின்பற்றுவதற்கு இரண்டு அத்தியாவசிய முன்நிபந்தனைகள் உள்ளன. முன்நிபந்தனைகள் (1) வைராக்கியம் என்று அழைக்கப்படும் உலக இன்பங்களிலிருந்து பற்றின்மை உணர்வு (2) ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகம் எனப்படும் சூப்பர் உலகில் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளை அடைய தீவிர அல்லது தீவிர ஆசை.

இந்த இரண்டு முன்நிபந்தனைகள் இருந்தால், ஒரு நபர் மட்டுமே பக்தி யோகத்தை நாடுகிறார், இது எட்டு துணைகளைக் கொண்ட பகவான் ஸ்ரீமன் நாராயணனை ஆழ்ந்த தியானம், இந்த பக்தி யோகம் அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது.

சம்சாரத்தின் பந்தத்தில் இருக்கும் ஒரு தனி ஆன்மாவிற்கு நான்கு நிலைகள் அல்லது மரண உடலில் எஞ்சியிருக்கும் நிலைகள் உள்ளன. நான்கு கட்டங்கள் ஆகும்

1) விழிப்பு நிலை: இது ஜாக்ரத் அவஸ்தா எனப்படும். அவஸ்தா என்றால் நிலை அல்லது நிலை, ஜாக்ரத் என்றால் விழிப்பு என்று பொருள்.

2) ஒலி நிலை அல்லது ஆழ்ந்த உறக்கம்: இது சுஷுப்தி அவஸ்தா எனப்படும். சுஷுப்தி என்றால் நல்ல தூக்கம்.

3) கனவுகள் காணும் நிலை: இது ஸ்வப்னா அவஸ்தா எனப்படும். ஸ்வப்னா என்றால் கனவுகள்.

4) மயக்க நிலை அல்லது கோமா நிலை: இது மூர்ச்சாவஸ்தா எனப்படும். மூர்ச்சா என்றால் மயக்கம்.

எனவே, பாதராயண முனிவரான சூத்ரகாரர், மேற்கூறிய நான்கு நிலைகளிலும் உள்ள குறைகள் அல்லது குறைபாடுகளை முதல் பாதத்தில் எடுத்துக்காட்டினால், இவற்றைக் கேட்கும் நபருக்கு உலக இன்பங்களில் வைராக்கியம் அல்லது பற்றின்மை உணர்வு உருவாகி பின்னர் தியானம் செய்யத் தொடங்கும். அல்லது மோட்சத்தை அடைய பக்தி யோகா. இந்த முதல் பாதத்தில் விழிப்பு நிலையில் உள்ள குறைபாடுகள் தீர்க்கப்படுகின்றன, இரண்டாவது பாதத்தில் மற்ற மூன்று நிலைகளான நல்ல தூக்க நிலை, கனவுகள் காணும் நிலை மற்றும் கோமா நிலை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் கையாளப்படுகின்றன. இதற்குக் காரணம், இந்த மூன்று நிலைகளிலும் ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்கள் என்று சில மங்கள குணங்கள் நிறுவப்பட்டுள்ளன. கனவுகள் காணும் நிலையில் உள்ள கல்யாண குணம், கனவில் நாம் காணும் பொருட்களைப் படைத்தவர் பகவான் ஸ்ரீமன் நாராயணரே. ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள கல்யாண குணம் என்னவென்றால், பகவான் ஸ்ரீமன் நாராயணன் அந்தர்யாமியாக இருப்பதால், ஒவ்வொரு உடலின் இதயத்திலும் வசிப்பதால், தனிப்பட்ட ஆன்மாவைத் தன் மீது தூங்க அனுமதிக்கிறார். கோமா நிலையில் உள்ள கல்யாண குணம், பகவான் ஸ்ரீமன் நாராயணன் தனிமனித ஆன்மாவை உடலை விட்டுப் பிரிந்து செல்லாமல் காப்பதாகும்.

உபய லிங்க பாதம் என்று அழைக்கப்படும் இரண்டாவது பாதத்தில், சூத்ரகாரர் பகவான் ஸ்ரீமோன் நாராயணனின் இரண்டு அடிப்படை பண்புகளை நிறுவுகிறார், அவை (1) களங்கமற்றவை மற்றும் (2) எண்ணற்ற கல்யாண குணங்களின் களஞ்சியமாகும். இந்த இரண்டு குணாதிசயங்களும் உபய லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. உபயா என்றால் இரண்டு மற்றும் லிங்கம் என்றால் அடிப்படை பண்பு அல்லது வேறுபாடு. ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தில் பக்தி யோகம் அல்லது பிரபத்தி (சரணாகதி என்றும் அழைக்கப்படுகிறது.) செய்வதன் மூலம் ஜீவன் அடைய வேண்டிய பொருள் அவரை விட மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதாலேயே ஸ்ரீமோன் நாராயணனின் இந்த உபய லிங்க ஸ்தாபனம் அவசியமானது. எல்லா வகையிலும்.

குண உபசம்ஹார பாதம் என்று அழைக்கப்படும் இந்த அத்தியாயத்தின் மூன்றாவது பாதத்தில் உபநிடதங்களில் உள்ள பல்வேறு பிரம்ம வித்யாக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. வித்யா என்பது தியானம் பற்றிய அறிவு மற்றும் பிரம்ம வித்யா என்றால் பகவான் ஸ்ரீமோன் நாராயணனாகிய பிரம்மனை தியானம் செய்யும் அறிவு. தியானம் என்பது பிரம்மத்தைப் பற்றிய அறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மன செயல்பாடு. இந்த பிரம்ம வித்யா நித்திய ஆனந்தத்தை அடைவதற்கான பக்தி யோகமே தவிர வேறில்லை.

இந்த மூன்றாவது அத்தியாயத்தின் கடைசி பாதம் அங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது. அங்க என்பது துணை என்று பொருள்படும் இந்த பாதம் பக்தி யோகம் செய்வதற்கு தேவையான அத்தியாவசிய துணைப்பொருட்களைக் குறிக்கிறது.

எனவே இந்த மூன்றாவது அத்தியாயத்தை சுருக்கமாகச் சொல்வது முக்கியமாக சாதனா அல்லது நித்திய பேரின்பத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் குறிக்கிறது. ஏற்கனவே கூறியது போல் வைராக்ய பாதம் என்று அழைக்கப்படும் முதல் பாதம் இந்த சம்சாரத்தில் போராடும் ஜீவாவின் விழிப்பு நிலையில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. பரலோகத்தில் அல்லது ஸ்வர்க லோகத்தில் அனுபவித்த பிறகு அல்லது நரக லோகம் என்று அழைக்கப்படும் நரகத்தில் அவர் துன்பத்திற்குப் பிறகு இந்த உலகில் ஜீவா மீண்டும் தோன்றும் செயல்முறையை இது கையாள்கிறது. இந்த செயல்முறையை விளக்குவதற்கு சாண்டோக்யோபனிஷத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி கருதப்படுகிறது. இந்த பாடத்தில் விவாதிக்கப்படும் அடிப்படை உபநிடத உரையாக இருப்பதால், இந்த பகுதி இங்கே சுருக்கமாக கையாளப்படுகிறது.

அருணி முனிவரின் மகனான ஸ்வேதகேது, ஜிபிலாவின் மகனான பிரவாஹனா என்ற அரசனிடம் அனுப்பப்பட்டார். இந்த மன்னன் ஸ்வேதுகேதுவிடம் யாருடைய கீழ் அறிவுரைகள் பெற்றிருக்கிறாய் என்று கேட்கிறான் அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவன் கற்பிக்கப்பட்டுள்ளான் என்று கேட்கிறான். அரசர் அவரிடம் பின்வரும் ஐந்து கேள்விகளை முன்வைத்தார்.

1) யாகங்களைச் செய்த ஜீவன், இந்த உலகில் உள்ள சரீரத்தை விட்டுப் பிரிந்த பிறகு செல்லும் இடம் அல்லது இலக்கு.

2) ஜீவா ஸ்வர்க லோகத்தில் அனுபவித்த பிறகு மறுபிறப்புக்காக இந்த உலகத்திற்கு வரும் பாதை.

3) தேவ யான வழிக்கும் பித்ரு யான வழிக்கும் உள்ள வேறுபாடு.

இவ்வுலகில் ஒரு ஜீவாத்மா மரண சரீரத்திலிருந்து புறப்படுவதற்கு மூன்று இடங்கள் இருப்பதை இந்தச் சூழலில் குறிப்பிடலாம். சேருமிடங்கள் (அ) ஸ்ரீ வைகுண்ட பை லோகம் மற்றும் பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்த ஜீவா இந்த இலக்கை அடைய முடியும். இந்த இடத்திற்கான பாதை தேவ யான மார்கா என்றும், அர்ச்சிராதி கதி என்றும் அழைக்கப்படுகிறது.

b) ஜோதிஷ்டோம யாகம் போன்ற யாகங்களைச் செய்யும் ஜீவனால் அடையக்கூடிய ஸ்வர்க லோகம் அல்லது சொர்க்கம். இந்த லோகத்திற்கான பாதை பித்ரு யான மார்கா என்றும் தூமாதி மார்கா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஜீவா இஷ்டாதிகாரி என்று அழைக்கப்படுகிறது, இது பின்னர் விரிவாக விவரிக்கப்படும்.

c) மூன்றாவது இலக்கு நரக லோகம் அல்லது இந்த உலகில் கொடூரமான குற்றங்கள் மற்றும் பாவங்களைச் செய்யும் ஜீவாவால் அடையப்படும் நரகம். அவர் அனிஷ்டாதிகாரி என்று அழைக்கப்படுகிறார். இந்த நரகா லோகத்திற்கு செல்லும் பாதை மிகவும் கடினமான நிலப்பரப்பு மற்றும் இந்த பாதை கஷ்ட மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது.

4) 4வது கேள்வி – சொர்க்கம் அல்லது ஸ்வர்க லோகம் ஏன் ஜீவாஸால் நிரப்பப்படவில்லை.

5) வானத்திலிருந்து பூமிக்கு திரும்பும் ஜீவா நான்கு அக்னிகள் அல்லது நெருப்புகளுக்குப் பிறகு ஒரு தாயின் வயிற்றில் உடலை எப்படி எடுத்துக்கொள்கிறார்.

இந்தச் சூழலில், ஒரு ஜீவன் தாயின் வயிற்றில் நுழைவதற்கு முன், தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து, தன் புண்ணியத்தின் பலன்களை மீண்டும் அனுபவிக்க இந்த உலகில் மறுபிறப்புடன் வரும் ஐந்து அக்னிகள் அல்லது நெருப்புகளைக் குறிப்பிட வேண்டும். இந்த உலகில் அப்பா.

ஐந்து அக்னிகள் சொர்க்கம், மழை, பூமி, ஆண் மற்றும் பெண். ஜீவன் ஸ்வர்க லோகத்தில் புண்ணியத்தை அனுபவித்த பிறகு, யாக நெருப்பில் நெய் ஊற்றப்படுவது போல சொர்க்கத்தின் நெருப்பில் ஊற்றப்படுகிறது. வானத்திலிருந்து ஜீவா பூமியில் பெய்யும் மழைக்கு வருகிறார். பூமியில் மழை பெய்யும் போது பயிர்கள் வளர்ந்து, நெல் கோதுமை அல்லது வேறு ஏதேனும் உண்ணக்கூடிய பயிர்கள் போன்ற பயிர்களின் தானியங்களில் ஜீவா நுழைகிறது. பின்னர் ஜீவா ஒரு ஆணின் உடலுக்குள் நுழைந்து அந்த ஆண் உண்ணும் உணவின் மூலம் அவனது விந்துக்குள் கிடக்கிறான், அவன் தந்தையாகிறான். தந்தை மற்றும் தாயின் இனச்சேர்க்கையின் போது ஜீவா விந்து மூலம் தாயின் கருப்பையில் நுழைகிறது. பின்னர் ஜீவா தாயின் வயிற்றில் ஒரு உடலை ஏற்றுக்கொண்டு பத்து மாதங்கள் அல்லது அதற்கும் குறைவாகவோ அல்லது குறைவாகவோ தங்கி, தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து, மறுபிறவி எடுக்கிறது. குழந்தை வளர்ந்து, புண்ணிய மற்றும் பாப்பாவின் சமநிலையின் பலனை அனுபவித்து, மீண்டும் தனது வாழ்நாளில் புண்ணியத்தையும் பாபாவையும் செய்து, மீண்டும் மற்ற உலக சொர்க்கம் அல்லது நரகத்திற்குச் சென்று, மீண்டும் மீண்டும் வருகிறது, மேலே விவரிக்கப்பட்ட செயல்பாட்டில், இந்த பிறப்பு சுழற்சி மற்றும் பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்து மோட்சம் அல்லது முக்தி அடையும் வரை மரணம் தொடரும். மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அக்னிகள் உண்மையான நெருப்பு அல்ல, அவை ஜீவா இந்த உலகில் மறுபிறவி எடுப்பதில் ஈடுபட்டுள்ள புள்ளியை வீட்டிற்கு ஓட்டுவதற்காக மட்டுமே அக்னிகளுடன் ஒப்பிடப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து அக்னிகளின் சமஸ்கிருத பெயர்கள் தியு.(சொர்க்கம்) பர்ஜன்யா (மழை), பிருதிவி (பூமி) , புருஷா (ஆண் நபர்) மற்றும் யோஷித் (பெண் நபர்). இந்த அக்னிகளில் ஊற்றப்படும் பொருட்கள் ஸ்ரத்தா, சோமராஜா, வர்ஷம், அன்னம் மற்றும் ரேதங்கள். ஸ்ரத்தா திரவ வடிவில் உள்ளது. சொர்க்கத்தில் இருக்கும் ஜீவாவின் அழகிய உடலே சோமராஜா. வர்ஷா என்றால் மழை. அன்னம் என்றால் உணவு, ரேதஸ் என்றால் விந்து.

மேற்கூறியவற்றின் வெளிச்சத்தில் இப்போது இந்த பாடலில் உள்ள அதிகாரங்களை விவாதம் மற்றும் முடிவுக்காக எடுத்துக் கொள்ளலாம். இந்த பாதத்தில் ஆறு அதிகாரங்கள் உள்ளன.

முதல் அதிகாரம் “தடந்தர பிரதிபத்தி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு, மேலே கையாளப்பட்ட சாண்டோக்ய உபநிடதத்தில் உள்ள உபநிடத உரையின் குறிப்பிட்ட பகுதி. இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்குச் செல்லும் ஜீவா, வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகளுடன் அவற்றின் நகைச்சுவை வடிவத்தில் எப்போதும் தொடர்புடையதா என்பதுதான். பிரபஞ்ச வடிவில் உள்ள இந்த ஐந்து பூதங்கள் “பூத சூக்ஷ்மஸ்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த மரண சரீரம் ஐந்து பூதங்களால் ஆனது, எனவே இந்த உடல் பஞ்ச பூதிக சரிரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பூத சூக்ஷ்மங்கள், ஜீவாவுடன் எப்போதும் இணைந்து செல்ல வேண்டும், அவருக்கு மறுபிறப்புக்காக தாயின் வயிற்றில் ஒரு உடலை எடுக்க உதவுகிறது.

எதிரி அல்லது பூர்வபக்ஷி, ஜீவா எங்கு சென்றாலும் பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்புடையவர் என்று வாதிடுகிறார், ஏனெனில் அவை எளிதில் கிடைக்கின்றன. இந்த வாக்குவாதத்தை, இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “ததந்தர ப்ரதி பத்தன் ரம்ஹதி ஸம்பரிஷ்வக்த: ப்ரஸ்னா நிரூ பாணாப்யம்” என்று படிக்கும் சூத்ரகாரரால் மறுக்கப்படுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவா ஒரு உலகத்திலிருந்து மற்றொன்றுக்கு (ஒரு உடலிலிருந்து மற்ற உடலுக்கு) செல்லும் போது, ​​அவர் எப்போதும் பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்புடையவர், ஏனெனில் இந்த உண்மை அரசன் பிரவாஹனன் கேட்கும் கேள்விகளிலும் அவரே பதில்களிலும் வெளிப்படுகிறது. கொடுத்தார். ஜீவா ஸ்வர்க லோகத்தில் இன்பத்திற்காக நுழைந்தவுடன், அங்குள்ள இன்பங்களை அனுபவிப்பதற்காக ஒரு அழகான உடலை எடுத்துக்கொள்கிறார், மேலும் இந்த உடலை அவர் தேவர்கள் சொர்க்கத்தின் நெருப்பில் ஊற்றிய “ஸ்ரத்தா”விலிருந்து வெளியேறுகிறார். இந்திரியஸ். இந்த “ஸ்ரத்தா” திரவ வடிவில் உள்ளது, இதில் ஜீவா மற்றும் பூத சூக்ஷ்மங்கள் உள்ளன. இந்த அதிகாரத்தில் ஏழு சூத்திரங்கள் உள்ளன. இந்த சூத்திரங்கள் அனைத்திலும் சூத்ரகாரர் இந்த சூழலில் சில உபநிடத சொற்களின் அடிப்படையில் பூர்வபக்ஷியின் வாதத்தை மறுத்து, ஜீவா ஒரு உடலில் இருந்து மற்றொன்றுக்கு எப்போதும் பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்புடையது என்ற உண்மையை நிறுவுகிறார். ஜீவாவுடன் இந்திரியங்களும் செல்வதாக கூறப்படுகிறது. மற்ற சூத்திரங்களில் உள்ள புள்ளிகள் சுருக்கமாக பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன.

அ) தந்தையின் உடலில் இருந்து தாயின் வயிற்றில் பாயும் விந்து மனித உடலைப் பெறுகிறது என்று உபநிடத உரையில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜீவா திரவ வடிவில் விந்துவுடன் தொடர்பு கொண்டு தாயின் கருப்பையில் நுழையும் போது ஜீவா நீரின் பூத (உறுப்பு) க்கு சொந்தமான திரவத்துடன் தொடர்பு கொள்கிறது என்று கூற வேண்டும். அப்போது ஜீவா மற்ற பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்பில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. முன்பு விளக்கப்பட்ட பஞ்சீகரணம் (சாந்தோக்யோ உபநிடதத்தில் பஞ்சீகரணம் த்ரிவிருத்கரணம் என்று அழைக்கப்படுகிறது) திரவ வடிவில் இருக்கும் விந்து ஐந்து பூதங்களையும் நிமிட வடிவில் கொண்டுள்ளது என்றும் இந்த திரவத்தில் தண்ணீருக்கு முக்கிய அங்கம் இருப்பதாகவும் சூத்ரகாரர் இந்த சந்தேகத்தை நீக்குகிறார்.

ஆ) ஜீவா மரணத்தின் போது மரண உடலை விட்டு வெளியேறும் போது, ​​முக்ய பிராணன் மற்றும் அனைத்து பதினொரு புலன்களும் ஜீவாவுடன் செல்கிறது என்றும் கூறப்படுகிறது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், ஜீவன் எப்பொழுதெல்லாம் ஒரு உடலை விட்டுப் பிரிந்து மற்றொரு உடலுக்குள் நுழைகிறானோ, அந்த நேரத்தில் அவன் சொர்க்கத்தில் வசித்த பிறகு அவன் எப்போதும் இந்திரியங்கள் மற்றும் பூத சூக்ஷ்மங்களுடன் இணைந்தே இருப்பான்.

இ) மீண்டும் உபநிஷதத்தின் இந்தப் பகுதியில் ஜீவா உடலை விட்டு வெளியேறும் போது இந்திரியமான அவனது பேச்சு அக்னியில் (அக்கினி) உறிஞ்சப்படுகிறது, முக்ய பிராணன் காற்றில் உறிஞ்சப்பட்டு கண்கள் சூரியனில் உறிஞ்சப்படுகிறது. (சூரியக் கடவுள்). இந்தச் சூழலில் புலன்கள் உள்வாங்கப்படும்போது, ​​இந்த புலன்கள் ஜீவாவுடன் இணைந்து செல்வது எப்படி சாத்தியமாகும் என்ற சந்தேகம் எழுகிறது. மேற்கூறியவற்றின் தொடர்ச்சியாக, உடலில் உள்ள முடிகள் தாவரங்களில் உறிஞ்சப்பட்டு, தலையில் உள்ள முடிகள் உறிஞ்சப்படும் என்று கூறப்படுவதால், இந்த உபநிடத வாசகத்திற்கு நேரடி அர்த்தம் இணைக்கப்பட வேண்டியதில்லை என்று சூத்ரகாரர் இந்த சந்தேகத்தை நீக்குகிறார். மரங்கள் மற்றும் இந்த உறிஞ்சுதல் உண்மையல்ல, ஏனென்றால் இறந்த உடலில் உள்ள முடிகளை நாம் உடல் ரீதியாக பார்க்கிறோம், எனவே அவை மறைந்துவிடாது. எனவே மேற்கூறியவற்றுடன் நேரடி அர்த்தம் இணைக்கப்படக்கூடாது.

ஈ) மீண்டும் எதிராளி வாதிடுகிறார், இது பரலோகத்தில் முதல் நெருப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஸ்ராத்தம் ஊற்றப்படுகிறது, விந்து என்ற ஜலப் பொருள் அல்ல, பூத சூக்ஷ்மங்களுடன் ஜீவா எப்படிச் செல்ல முடியும். ஸ்ரத்தா என்றால் நீர் அல்லது நீர் நிறைந்த பொருள் என்று சூத்ரகாரம் கூறுகிறது, எனவே உபநிடதக் கூற்றில் எந்த முரண்பாடும் இல்லை.

இ) இந்த உபநிடத அறிக்கையில் ஜீவா பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை என்றும், அதனால் அவர் பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் எதிர்ப்பாளர் மீண்டும் ஒருமுறை வாதிடுகிறார். இதற்குப் பதிலளித்த சூத்ரகாரர், அடுத்த உபநிடதத்தில் ஜீவனாகவும், யாகம் செய்தவனுமான இஷ்டதிகாரி சொர்க்கத்திற்குச் சென்று, அங்குள்ள இன்பங்களை அனுபவித்து, அங்கேயே இன்பத்தை அனுபவிக்கும் பொருட்டு, அழகிய உடலை ஏற்று, அங்கேயே இன்பத்தின் முடிவில் சொர்க்கத்திற்குச் செல்கிறாள் என்று கூறுகிறார். அவர் மறுபிறவிக்காக இந்த உலகத்திற்கு வருகிறார். அங்கு அவர் கருதும் அழகிய உடல் சோமராஜா என்று அழைக்கப்படுகிறது. சோமராஜா என்று அழைக்கப்படும் இந்த உடலை அவர் முதல் அக்னி அல்லது சொர்க்கம் என்று அழைக்கப்படும் நெருப்பில் ஸ்ராத்தத்தை ஊற்றிய பிறகு கருதுகிறார், கடைசியாக ஜீவா மீண்டும் பூமிக்கு வந்து அதே “ஸ்னாதா” திரவ வடிவிலோ அல்லது நீர்ப் பொருளிலோ மற்றும் வேறு வார்த்தைகளில் “” என்று அழைக்கப்படுகிறது. விந்து” தாயின் கருப்பையில் நுழைகிறது.

f) ஜீவா பூத சூக்ஷ்மங்களுடன் தொடர்புடையதாக இல்லை என்ற தனது கருத்தை மீண்டும் வலியுறுத்த, இந்தச் சூழலுடன் தொடர்புடைய உபநிடதத்தில் உள்ள மற்றொரு வாசகத்தை எதிராளி பயன்படுத்திக் கொண்டார். சொர்க்கத்தில் இருக்கும் தேவர்கள் அல்லது வானவர்கள் அங்கு செல்லும்போது ஜீவா என்பது உண்ணக்கூடிய பொருளாகும் என்பது பழமொழி. ஜீவாவை உண்ண முடியாது என்பதால், ஜீவாவுக்கு வழங்கப்பட்ட சோமராஜா மற்றும் ஸ்வர்க லோகத்தில் உள்ள அவரது அழகான உடலும் ஜீவாவாக இருக்க முடியாது என்று எதிரி கூறுகிறார். எதிரியின் இந்த பார்வையை சூத்ரகாரர் எதிர்க்கிறார், ஜீவா அங்கு உண்ணப்படுவதில்லை, ஆனால் அங்கு அவர் அனுபவிக்கும் இன்பம் தேவர்களுக்குச் சமமானது, மேலும் அவர் அங்கு அவர்களுக்கு உதவியாளராகவும் மாறுகிறார். எனவே அவர் தேவர்களால் அங்கு உண்ணப்படுகிறார் என்ற கூற்றுக்கு நேரடி அர்த்தம் இல்லை.

எனவே ஜீவா “பூத சூக்ஷ்மஸ்” உடன் சொர்க்கத்திற்கு செல்கிறார்.

இந்த அத்தியாயத்தில் இரண்டாவது அதிகாரம் “கிருதத்யாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. ஸ்வர்க லோகத்தில் இன்பங்களை அனுபவித்த ஜீவன் இந்த உலகில் புண்ணிய மற்றும் பாபா சமநிலையுடன் அல்லது கர்மாவின் சமநிலை இல்லாமல் இந்த உலகில் மீண்டும் பிறப்பாரா என்பது இங்கே விவாதத்திற்குரிய தலைப்பு. எதிரி அல்லது பூர்வபக்ஷி, புண்ணிய மற்றும் பாபா இரண்டையும் உள்ளடக்கிய கர்மாவின் பூஜ்ய சமநிலையுடன் ஜீவா பூமிக்குத் திரும்புகிறார் என்று கருதுகிறார். அவரது வாதத்திற்கு ஆதரவாக அவர் ஒரு உபநிடத உரையை மேற்கோள் காட்டுகிறார், அதில் ஜீவா தனது புண்ணிய கர்மா தீரும் வரை ஸ்வர்க லோகத்தில் இருப்பார், பின்னர் அவர் கர்மாவின் சமநிலை இல்லாமல் இந்த உலகத்திற்குத் திரும்புவார் என்று கூறுகிறார். மற்றொரு உபநிடதக் கூற்றும் அவருடைய மேற்கூறிய கருத்தை உறுதிப்படுத்துகிறது.

“கிருதத்யயே அனுசயவான் ரிஷ்டஸ்மிருதிப்யம் யதேதம் அனேவம்ச” என்று சூத்திரத்தில் உள்ள பூர்வபக்ஷியின் மேற்கூறிய வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார்.

மேற்கூறிய சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜீவா புண்ய மற்றும் பாப கர்மாவின் சமநிலையுடன் மீண்டும் இந்த காதுக்கு திரும்புகிறார் மற்றும் உபநிடதங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் சில சிறப்பு அறிக்கைகள் காரணமாக மறுபிறப்பு எடுக்கிறார், மேலும் அவர் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் போது சிறிது மாற்றப்பட்ட பாதையில் செல்கிறார். புண்ணியம் செய்து புண்ணியத்தைப் பெற்றவர்கள் இங்கு உயர்ந்த ஜாதியிலும், தீய செயல் செய்தவர்கள் அல்லது பாவம் செய்து பாபம் செய்தவர்கள் தாழ்ந்த ஜாதியிலும் மிருகங்களாகவும் பிறப்பார்கள் என்பது உபநிஷத வாக்கியம். அறம் செய்தவர்கள் ரமணீய சரணர் என்றும், பாவம் செய்தவர்கள் கபுய சரணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சரண என்றால் செயல்.

ஒரு ஜீவன் சொர்க்கத்திற்கு ஏறும் போது தூமாதி மார்கா என்று அழைக்கப்படும் பாதை பின்வருமாறு. இந்த பாதை பித்ரு யனமார்கா என்றும் அழைக்கப்படுகிறது. தூமம் (புகை), ராத்திரி (இரவு), அபரபக்ஷம் (கிருஷ்ண பக்ஷம் அல்லது அமாவாசையில் முடிவடையும் பதினைந்து நாட்கள்), தக்ஷிணாயனம் மற்றும் பின்னர் பித்ருலோகம், ஆகாசம், சந்திரன் மற்றும் பிறகு சொர்க்கம். கீழே இறங்கும் பாதை சந்திரன், ஆகாசம், வாயு, தூமம், அபிராம், மேகா. அபிராமி என்றால் நீரால் பரவும் மேகம், மேகமும் மழை பெய்யும் மேகம்.

மேலே கூறப்பட்ட இரண்டு வழிகளிலும் உள்ள வித்தியாசம், ஏறுமுகத்தில் பித்ரு லோகமும் வாயு லோகமும் இல்லை, இறங்குவதில் வாயு லோகமும் பித்ரு லோகமும் இல்லை.

பாதையில் உள்ள மேலே குறிப்பிடப்பட்ட பெயர்கள் அனைத்தும் லோகங்கள் மற்றும் வான கடவுள்களின் பெயர்கள் மற்றும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் பிரதேசத்தின் வழியாக ஜீவாவை நடத்துகின்றன, மேலும் வரிசையில் அடுத்தவர் ஜீவாவைப் பொறுப்பேற்கிறார்.

சூத்ரகாரரின் மேற்கூறிய கூற்றை எதிர்க்கும் பூர்வபக்ஷியின் பார்வை என்னவென்றால், உபநிடத உரையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சரணம் என்பது நீதியான நடத்தை அல்லது ஆச்சாரம் என்று பொருள்படும், இது சீலம் மற்றும் விருத்தம் போன்ற சொற்களுக்கு ஒத்ததாக இருக்கிறது, ஏனெனில் இது தைத்தரிய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது. குறைபாடுகள் குறைவாக இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும், மேலும் நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் பதராயண முனிவரின் இரு சீடர்களின் பார்வைப் புள்ளிகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. சீடர்களின் பெயர்கள் கர்ஷ்ணாஜினி முனிவர் மற்றும் பதரி முனிவர். ஆகவே, ஜீவா உயர்ந்த சாதிகளில் மறுபிறவி எடுக்க நீதியான நடத்தை மட்டுமே காரணம் என்றும், புண்ய மற்றும் பாப கர்மாவின் சமநிலையைக் குறிக்கும் அனுஷயா அல்ல என்றும் மேற்கண்ட முனிவர் கர்ஷ்ண ஜினி வாதிடுகிறார்.

இந்தச் சூழலில், ஸ்மிருதிகள் மற்றும் வேதங்களில் உள்ள நமது பண்டைய ரிஷிகளின் பிரசங்கங்களுக்கு ஏற்ப நாம் தினசரி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

நாம் தினமும் செய்ய வேண்டியது (1) நித்யகர்மானுஷ்டானம் மற்றும் (2) நைமித்திக கர்மானுஷ்டானம் ஆகிய இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியது.

I. நித்ய கர்மானுஷ்டானம்(கட்டாய சடங்குகள்)

நித்யகர்மானுஷ்டானம் என்பது நாம் தினமும் செய்ய வேண்டியதைக் குறிக்கிறது, இது ஒன்றன் பின் ஒன்றாக வரிசை வாரியாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

(அ) ​​சங்கல்பம் செய்த பிறகு குளித்தல். ஆசமனம், பிராணாயாமம் செய்தபின் இந்த சங்கல்பம் செய்ய வேண்டும்.

(ஆ) குளித்த பிறகு தோசை அணிய வேண்டும். திருமணமான ஒருவர் கச்சத்துடன் கூடிய வேட்டியை அணிய வேண்டும், அது மிக முக்கியமானது. கச்சா என்றால் இடுப்புப் பட்டையுடன் ஒட்டிய கீழ் ஆடையின் ஓரம் என்று பொருள். கச்ச இல்லாமல், திருமணமானவர் சந்தியாவந்தனம் போன்ற வைதீக கர்மாவைச் செய்யத் தகுதியற்றவர். இளங்கலை கச்சா அணியக்கூடாது.

(இ) பஞ்ச சம்ஸ்காரம் செய்திருந்தால் உடலில் 12 இடங்களில் ஊர்த்துவபுண்டரங்கள் இருப்பது. இல்லையெனில் நெற்றியில் (முகத்தில்) ஒற்றை ஊர்த்துவபுந்திரம் செய்யும்.

(ஈ) ஸ்நானங்க தேவர்ஷி தர்ப்பணம் செய்தல்.

(இ) காயத்திரி ஜபத்துடன் 10 முறையாவது பிரத சந்தியாவந்தனம் செய்தல்.

(ஊ) பஞ்சசம்ஸ்காரம் செய்தவர்கள், அஷ்டாக்ஷர மந்திர ஜபம் செய்ய வேண்டும்.

(g) ஆதார சக்தி தர்ப்பணம்.

(h) தேவர்ஷி கந்தர்ஷி தர்ப்பணம்

(i) பிரம்ம யக்ஞம்.

(j) குறைந்தது 10 முறை காயத்திரி ஜபம் கொண்ட மத்யான்ஹிகம்.

(k) சாளக்கிராம மூர்த்திக்கு திருவாராதனம் செய்தல் அல்லது வைஸ்வதேவர் மற்றும் பஞ்ச மகா யக்ஞம் செய்தல்.

(எல்) மாலையில் குறைந்தது 10 முறை காயத்திரி ஜபம் மற்றும் மாலையில் வைஷ்வதேவத்துடன் சந்தியாவந்தம் செய்தல்.

முக்கிய குறிப்பு:- எந்த ஒரு வைதிக கர்மத்தையும் செய்வதற்கு ஒரு நாளைக்கு மூன்று முறை சந்தியாவந்தம் செய்வது மிகவும் இன்றியமையாத முன்நிபந்தனையாகும். சந்தியாவந்தனம் இல்லாமல் பொதுவாக எந்த பிராமணருக்கும் குறிப்பாக ஸ்ரீ வைஷ்ணருக்கும் வேறு எந்த கர்மாவும் செய்ய அடிப்படைத் தகுதி இல்லை. “சந்தியாஹீனா: அசுசி: நித்யம் என்று கூறப்படுகிறது. அனார்ஹ : சர்வ கர்மசு. சந்தியாவந்தனம் செய்யாதவரின் உடல் எப்பொழுதும் அசுத்தமாக (தூய்மையற்றதாக) வேறு எந்த கர்மாவையும் செய்யத் தகுதியற்றதாக இருக்கும்.

II. நைமித்திக கர்மானுஷ்டானம் (அவ்வப்போது நடக்கும் சடங்குகள்)

நைமித்திக கர்மாக்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி விசேஷ நாட்களில் மட்டுமே செய்ய வேண்டும்.

(அ) ​​சிராவண மாதம் பௌர்ணமி நாளில் உபகர்மா.

(ஆ) உபாகர்மாவின் மறுநாள் காயத்திரி ஜபம்

(இ) ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி மற்றும் ந்ரிசிம்ம ஜெயந்தி மற்றும் திருக்கார்த்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள்.

(ஈ) தந்தை விழா மற்றும் தாய் விழாவை பெற்றோர்கள் உயிருடன் இல்லாதவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் பின்வரும் தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும். அமாவாசை தர்ப்பணம், சங்கராமண நாட்களில் தர்ப்பணம் (சூரிய மாதத்தின் ஆரம்பம்), மஹாளய தர்ப்பணம், அஷ்டக நாட்களில் தர்ப்பணம் மற்றும் “மாசி” (கும்ப மாதம்) மாதத்தில் அன்வாஷ்டகம். சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது தர்ப்பணம்.

மேற்கூறிய காரியங்கள் தவறாமல் நிறைவேற்றப்பட்டால், ஒருவருக்கு மட்டுமே அச்சாரம் என்று கூறப்படுகிறது. வேதங்கள் ஆச்சாரம் இல்லாமல் ஒருவரைத் தூய்மைப்படுத்தாது என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் கர்ஷ்ணாஜினி முனிவரின் கருத்து என்னவெனில், உபநிஷத உரையான ரமணீய சரணமானது, மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி ஒரு தனிப்பட்ட ஆத்மாவால் செய்யப்படும் நித்யா மற்றும் நைமித்திக கர்மாவாக கருதப்பட வேண்டும், மேலும் அவர் ஆச்சாரம் அல்லது நீதியான நடத்தையுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

புண்ணிய கர்மா என்பது யாகம் மற்றும் மேலே விளக்கப்பட்ட ஆச்சாரத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் யாகம் செய்யலாம். உபநிடதத்தில் உள்ள கபுயா சரணம் என்பது பாபகர்மா அல்லது பாவச் செயல்களைக் குறிக்கிறது மற்றும் ஆச்சாராவின் மேற்கூறிய அடிப்படைக் கொள்கைகள் வெளிப்படையாகவே கொடுக்கப்பட்டுள்ளன. சுகத்தின் இன்பம் புண்ணிய கர்மாவின் விளைவு மற்றும் துன்பம் பாபா கர்மாவின் விளைவு.

பூர்வபக்ஷி, வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ள சன்மார்க்க நடத்தை அல்லது ஆச்சாரம் ஆகியவை ஜீவனுக்குப் பயன்படாத பட்சத்தில் நோக்கமற்றதாகிவிடும் என்ற ஐயத்தை எழுப்புகிறார், இந்த சந்தேகத்தை கர்ஷ்ணாஜினி முனிவர் தீர்த்து, ஒருவருக்கு ஆச்சாரம் இல்லை என்றால் அவர் என்று கூறுகிறார். புண்ணிய கர்மா செய்வதற்கான அடிப்படைத் தகுதியைப் பெறவில்லை.

ஸ்ருதி அல்லது உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரணம் என்பது நல்ல அல்லது கெட்ட செயல்களான புண்யா அல்லது பாபா கர்மாவை மட்டுமே செய்வதாகும் என்று பதரி முனிவர் இந்த சூழலில் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். எனவே உபநிஷத வாசகமான ரமணீய சரண: மற்றும் கபுய சரணம் என்றால் புண்ய, பாபா கர்மா மற்றும் ஒரு ஜீவன் புண்ணியத்தின் சமநிலையுடன் மறுபிறப்பிற்காக பூமிக்கு இறங்குகிறான். சந்தியா வந்தனா செய்வது அவசியம், இதில் எந்த தளர்வும் இல்லை.

இந்த பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரணம் “அனிஷ்ட திகார்ய திகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த உலகில் மனிதர்களில் மூன்று பிரிவுகள் மட்டுமே உள்ளன. அவர்கள்

(1) இஷ்டதிகாரி – வேதத்தின்படி நற்செயல்கள் அல்லது புண்ய காரியங்களை மட்டுமே செய்பவர். இதில் நித்யா, நைமித்திகா, கர்மானுஷ்டானங்கள் தவிர யாகங்கள் நடத்துதல் ஆகியவை அடங்கும். இந்த இஷ்டதிகாரிகள் சொர்க்கம் செல்கின்றனர்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் சரணாகதிகாத்யாவில் ஐந்து வகையான பாவச் செயல்களைக் குறிப்பிடுகிறார். அவை (அ) அக்ரித்ய கரணம் அதாவது செய்யக்கூடாத காரியத்தைச் செய்தல்.

(ஆ) கிருத்ய அகரணம் – செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாமல் இருப்பது.

(இ) பகவதா அபச்சாரா – அபச்சாரா என்றால் தவறான நடத்தை என்று பொருள். பகவதாபாச்சாரம் என்றால் பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் தவறான நடத்தை என்று பொருள். ஸ்ரீமன் நாராயணனிடம் பக்தி செலுத்தாமல் இருப்பதும், அதே சமயம் அவரை மதிக்காமல் இருப்பதும் இதன் பொருள்.

(ஈ) பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் அதீத பக்தி கொண்ட பகவதர்களுக்கு அவமரியாதையாக இருப்பது.

(இ) கொடூரமான குற்றங்களைச் செய்தல். இதற்கு அசஹ்ய அபச்சாரா என்று பெயர்.

எனவே இஷ்டதி காரிகள் என்பவர்கள் செய்ய வேண்டியதைச் செய்பவர்கள் (கிருத்ய கரணம்) மற்றும் செய்யக்கூடாததைச் செய்யாதவர்கள் (அக்ரித்ய அகரணம்) மற்றும் பகவதாபாச்சாரம், பகவதி அபச்சாரம் மற்றும் அசஹ்ய பச்சாரம் செய்யாதவர்கள். இந்த இஷ்டதிகாரிகள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி தூமாதி மார்கா எனப்படும் பாதையின் மூலம் சொர்க்கத்தை அடைகிறார்கள்.

இரண்டாவது வகை

2) அனிஷ்டா திகாரிகள் – செய்யக்கூடாததைச் செய்பவர்கள் ( அக்ரித்திய கரணம்), செய்ய வேண்டியதைச் செய்யாதவர்கள், பகவதாபாச்சாரம், பகவதாபாச்சாரம் மற்றும் அஷ்யபச்சாரம் செய்தவர்கள் அனிஷ்டாதி காரியங்கள். கஷ்ட மார்கா என்று அழைக்கப்படும் கடினமான நிலப்பரப்பின் வழியாக அவர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்.

3) மூன்றாவது வகை மோக்ஷாதிகாரிகள் – வார்த்தை இன்பங்களிலிருந்தும், நீண்ட காலம் நீடிக்காத பரலோக இன்பங்களிலிருந்தும் பற்றின்மையை வளர்த்துக் கொண்டு நித்திய பேரின்பத்தை அடைய விரும்புபவர்கள் மோக்ஷாதிகாரிகள். அவர்கள் பக்தி யோகம் செய்கிறார்கள் அல்லது பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் சரணாகதி செய்கிறார்கள் மற்றும் அர்ச்சிராதி மார்கா அல்லது தேவயான மார்கா என்று அழைக்கப்படும் பாதையின் மூலம் மோட்சத்தை (ஸ்ரீ வைகுண்ட பை லோகம்) அடைகிறார்கள்.

இந்த அனிஷ்டாதிகாரிகள் நரகத்திற்குச் செல்வதற்கு முன் சந்திரனுக்குச் செல்கிறார்களா என்பது இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு. இவ்வுலகை விட்டுப் பிரிந்தவர்கள் தவறாமல் சந்திரனுக்குச் சென்று அவருடன் உரையாடுவார்கள் என்று கௌஷிதகி உபநிடதத்தின் கூற்றில் இருந்து இந்த சந்தேகம் எழுகிறது.

இந்த அறிக்கையின்படி, மூன்று வகை மனிதர்களும் அந்தந்த இடங்களை அடைவதற்கு முன்பே சந்திரனுக்குச் செல்கிறார்கள். இந்த அறிக்கை மிகவும் பொதுவான அறிக்கை.

இந்த அதிகரணம் பத்து சூத்திரங்களைக் கொண்டுள்ளது, அதில் ஐந்து சூத்திரங்கள் பூர்வ பக்ஷ சூத்திரங்கள் மற்றும் மீதமுள்ள ஐந்து சூத்திரங்கள் சித்தாந்த சூத்திரங்கள்.

முதல் ஐந்து சூத்திரங்களில், எதிரி அல்லது பூர்வபக்ஷி, அனிஷ்டாதிகாரிகளும் கூட நரகா அல்லது நரகத்தில் செய்த பாவச் செயல்களுக்காகத் தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்குப் பிறகு சந்திரனுக்குச் செல்கிறார்கள் என்ற உண்மையை உறுதியாகக் கூறுகிறார்.

முதல் சூத்திரம் “அனிஷ்டாதிகாரினாமபிச்ச ஸ்ருதம்” என்று கூறுகிறது.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், கௌசிதகி உபநிடதத்தில் மேலே விவரிக்கப்பட்ட அனிஷ்டாதிகாரிகள் கூட சந்திரனுக்குச் செல்கிறார்கள் என்று நாம் கேட்கிறோம், ஏனென்றால் இந்த உலகத்தை விட்டு வெளியேறுபவர்கள் அனைவரும் சந்திரனுக்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் செல்கிறார்கள் என்று உபநிடத வாக்கியம் பொதுவாக உள்ளது.

இரண்டாவது சூத்திரத்தில், இஷ்டாதிகாரிகளும் அனிஷ்டாதி காரிகளும் ஒரே பாதையில் சந்திரனுக்குச் செல்வதா என்ற சந்தேகத்தை சூத்ரகாரருக்கு நிவர்த்தி செய்து, அனிஷ்டாதிகாரிகளால் சந்திரனுக்குச் செல்வது யமனின் கட்டுப்பாட்டில் உள்ள நரகத்தில் தண்டனைக்குப் பிறகு ஆகும்.

அடுத்த சூத்திரத்தில், சூத்ரகாரர் விஷ்ணு புராணத்தில் உள்ள ஒரு ஸ்லோகத்தை நினைவுபடுத்துகிறார், அதில் பராசர முனிவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறுபவர்கள் அனைவரும் யமனின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்று கூறுகிறார்.

மேலே உள்ள சூத்திரத்தில் ஏழு நரகம் அல்லது நரகங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது, அவை பாவச் செயல்களைச் செய்பவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஏழு நரகங்களின் பெயர்கள் ரௌரவ, சுகர, ரோத, தல, விஷசனா, மஹாஜ்வாலா, தப்த கும்பம்.

உண்மையில் விஷ்ணுபுராணத்தில், பராசர முனிவர் இருபத்தெட்டு நரகங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கான பெயர்களைக் கொடுத்துள்ளார். பராசர முனிவர் மனிதர்களால் செய்யக்கூடிய பல்வேறு பாவங்களையும், ஒரு குறிப்பிட்ட ஜீவன் ஒரு குறிப்பிட்ட பாவச் செயலைச் செய்துவிட்டு எந்த நரகத்திற்குச் செல்கிறான் என்பதையும் விரிவாகக் கூறுகிறார்.

அடுத்த சூத்திரத்தில், அனைத்து நரகங்களும் யமனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எனவே ஒரு பாவி எந்த நரகத்திற்குச் சென்றாலும், அவர் யமசாதனம் அல்லது யமனின் வீட்டிற்குச் செல்கிறார், ஏனெனில் அனைத்து நரகங்களும் அதிகார வரம்பிற்குள் உள்ளன அல்லது யமாவின் கட்டுப்பாடு. ஒரு குற்றவாளியை நீதிபதி சிறைக்கு அனுப்புவது போலத்தான் யமனின் கட்டளைப்படி பாவி நரகத்திற்குச் செல்கிறான்.

பூர்வபக்ஷியின் கருத்துக்களை ஐந்து சூத்திரங்கள் மூலம் வெளிப்படுத்திய பிறகு, ஒரு அனிஷ்டாதிகாரி கூட நரகத்தில் தண்டனை பெற்ற பிறகு சந்திரனுக்குச் செல்கிறார் என்று வாதிட்ட பிறகு, அடுத்த ஐந்து சூத்திரங்களில் உள்ள சூத்திரகாரர் மேற்கண்ட கருத்தை மறுத்து, இந்த சூழலில் சில கூடுதல் தகவல்களைத் தருகிறார்.

இந்த ஐந்து சூத்திரங்களில் முதலாவது “வித்யகர்மநோரிதி து ப்ரக்ரதத்வத்” என்று கூறுகிறது. இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், அனிஷ்டாதிகாரிகள் சந்திரனுக்குச் செல்வதில்லை, சந்திரனுக்குச் செல்வது இஷ்டாதிகாரிகளுக்கும் மோக்ஷாதிகாரிகளுக்கும் மட்டுமே. சூத்திரத்தில் உள்ள “து” என்ற வார்த்தைக்கு எதிராளியின் பார்வை மறுக்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்று பொருள். இது பிரம்ம சூத்திரங்களில் உள்ள ஒரு மரபு, எந்த ஒரு பிரம்ம சூத்திரத்திலும் “து” என்ற சொல் எங்கிருந்தாலும் எதிராளியின் பார்வை நிராகரிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

சூத்திரத்தில் உள்ள “வித்யா” என்ற சொல் பக்தி யோகமாகிய பிரம்மவித்யாவைப் பயிற்சி செய்யும் மோக்ஷாதிகாரிகளைக் குறிக்கிறது. பக்தி யோகத்திற்கு பதிலாக இறைவனின் பாதத்தில் செய்யப்படும் சரணாகதி அல்லது பிரபத்தி கூட நியாசவித்யா எனப்படும்.

சூத்திரத்தில் குறிப்பிடப்படும் “கர்மா” என்ற வார்த்தைக்கு இஷ்டாதிகாரிஸ் என்று பொருள். சூத்ரகாரர் கூறும் காரணம் என்னவென்றால், மன்னன் பிரவாஹனன் சாண்டோக்யோபநிஷத்தில் அருணி முனிவரிடம் தேவயான மார்கத்திலோ அல்லது மோட்சதிகாரிகள் ஸ்ரீ வைகுண்டம் செல்லும் பாதையிலோ சந்திரனைச் சந்தித்து அவருடன் உரையாடுவதாகக் கூறுகிறார். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி தேவயானை மார்கத்தை அர்ச்சிராதிமார்கா என்றும் அழைப்பர்.

அவர் மேலும் பித்ரு யான மார்க்கத்தில் இஷ்டதிகாரிகள் சொர்க்கத்திற்குச் செல்லும் போது, ​​அவர்கள் சந்திரனைச் சந்தித்து அவருடன் உரையாடுகிறார்கள். இந்த பித்ரு யான மார்க்கம் ஏற்கனவே குறிப்பிட்டபடி தூமாதி மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த இரண்டு வழிகளிலும் சந்திரனின் நிலை ஒரு சந்திப்பு புள்ளியாகும். எனவே மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு தனித்தனி பாதைகள் தேவயான மார்க்கத்தில் உள்ள அக்னிலோகத்திலிருந்து தொடங்கி பித்ரு யான மார்க்கத்தில் உள்ள தூமலோகத்திலிருந்து தொடங்கி சந்திரனின் ஸ்தானத்தில் சங்கமித்து மீண்டும் ஒன்று ஸ்ரீ வைகுண்டத்திற்கும் மற்றொன்று சொர்க்கத்திற்கும் செல்லும்.

நரகங்கள் (நரகங்கள்) பூலோகம் அல்லது பூமிக்கு கீழே அமைந்துள்ளன என்பதை இங்கே கவனிக்க வேண்டும், அங்கு சொர்க்கம் மற்றும் வைகுண்ட பை லோகம் பூமிக்கு மேலே உள்ளன. சந்திரன் பூமிக்கு மேலே உள்ளது. எனவே பூமிக்குக் கீழே நரகத்திற்குச் செல்லும் அனிஷ்டாதிகாரிகள் சந்திரனைச் சந்திக்கும் சாத்தியக்கூறுகள் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றன.

மேற்கூறிய சூத்திரத்தில் மற்றொரு சந்தேகமும் நிவர்த்தி செய்யப்படுகிறது. அனிஷ்டாதிகாரி சந்திரனுக்குப் போகிறார் என்ற கேள்வியே இல்லாதபோது, ​​அப்பாவின் உடலிலிருந்து தாயின் வயிற்றில் ஜீவா நுழையாமல், பாப்பா கர்மி என்றும் அழைக்கப்படும் இந்த அனிஷ்டாதிகாரியின் ஜீவன் எப்படி இந்த உலகில் மறுபிறவி எடுக்க முடியும் என்று எதிர்ப்பாளர் கூறுகிறார். தந்தையின் உடலில் இருந்து தாயின் கருப்பைக்குள் ஜீவா நுழையும் இந்த செயல்முறை “பஞ்சம ஆஹுதி” என்று அழைக்கப்படுகிறது. பஞ்சமஹுதிக்குப் பிறகு ஒரு ஜீவன் தாயின் வயிற்றில் எப்படி சரீரத்தை எடுக்கிறது என்று தெரியுமா என்று ஆதியில் சொன்னபடி ஸ்வேதகேதுவிடம் மன்னன் பிரவாஹனன் கேட்டான்.

அனிஷ்டாதிகாரிகளில் மூன்றாவது வகையினருக்கு (முதல் இரண்டு வகை இஷ்டாதிகாரிகளும் மோக்ஷாதிகாரிகளும்) அந்த ஜீவாத்மாக்கள் இவ்வுலகில் மறுபிறவி எடுக்க பஞ்சமஹுதி தேவையில்லை என்று சூத்ரகாரரால் இந்த சந்தேகம் நிவர்த்தி செய்யப்படுகிறது. அங்கே தண்டனையை அனுபவித்து நரகத்திலிருந்து திரும்பும் அனிஷ்டாதிகாரிகளின் இந்த ஜீவர்கள் உயிரினங்களாகவும் பூச்சிகளாகவும் பிறக்கிறார்கள். இந்த உயிரினங்கள் மற்றும் பூச்சிகள் மிகவும் அடிக்கடி இடைவெளியில் பிறந்து இறக்கின்றன. இந்த பூச்சிகள் மற்றும் உயிரினங்கள் எண்ணற்ற முந்தைய பிறவிகளில் ஏதேனும் ஒரு புண்ணியத்தை செய்திருந்தால் மனிதனாக பிறக்க முடியும். புண்ணிய, பாப கர்மாக்களுக்குப் பலன்களைத் தருபவனும், மனிதனாகப் பிறப்பதற்காகப் புண்ணிய கர்மா செய்தவனுமான ஸ்ரீமந் நாராயணன் ஒருவரே அறிவார்.

மேலும் சூத்திரங்களில் உள்ள சூத்ரகாரர் கூறுகிறது, சாதாரண புண்ணிய கர்மாக்கள் செய்த ஜீவர்களின் விஷயத்தில், தியாக நெருப்பு அல்லது அக்னி குண்டத்தில் இருந்து இந்த உலகில் தோன்றிய பாண்டவர்களின் மனைவி திரௌபதியைப் போல பஞ்சமஹுதி இல்லாமல் இந்த உலகில் பிறக்க முடியும். இந்த உலகில் வாழும் உயிரினங்கள் அல்லது உயிரினங்கள் மூன்று வகைகளாக இருப்பதாக உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது என்று சூத்ரகாரர் மேலும் கூறுகிறார். நான்காவது வகையும் உள்ளது. இந்த வகைகள்,

(1) ஜீவஜம் ஜராயுஜம் என்றும் அழைக்கப்படுகிறது – இவை ஆண் மற்றும் பெண் கூட்டாளிகளின் புணர்ச்சியால் பிறந்த உயிரினங்கள். அவர்கள் மனிதர்கள், மாடு, ஆடு, நாய் போன்ற விலங்குகள் இவை அனைத்திற்கும் பஞ்சமஹுதி தேவை.

(2) அண்டஜம் – இவை முட்டையிலிருந்து இவ்வுலகில் தோன்றும் உயிரினங்கள். அவை பாம்புகள், பறவைகள் போன்றவை.பஞ்சமஹுதி தேவை.

(3) ஸ்வேதாஜம் – வெப்பத்தின் காரணமாக தோன்றும் பூச்சிகள் அல்லது உயிரினங்கள். உதாரணமாக அரிசி அல்லது வேறு ஏதேனும் உணவு தானியங்களை காற்று அல்லது சூரிய ஒளியில் படாமல் வைத்திருந்தால், அவற்றில் சில பூச்சிகள் தோன்றும். இவை ஸ்வேதாஜஸ் என்று அழைக்கப்படுகின்றன.

(4) உத்பிஜ்ஜம் – இவை அந்தந்த விதைகளை விதைப்பதன் மூலம் நிலத்திற்கு மேலே வளரும் தாவரங்கள்.

மேற்கண்ட வகைகளில், ஸ்வேதஜம் மற்றும் உத்பிஜ்ஜம் வகைகளில் பஞ்சமஹுதி தேவையில்லை. எனவே பாவங்களை மட்டுமே செய்த ஜீவர்கள் சந்திரனுக்கு செல்ல மாட்டார்கள்.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் அந்த ஸ்வபவ்யபத்தி அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரனைச் சந்தித்த பிறகு புண்ணிய மற்றும் பாப கர்மா சமநிலையுடன் இஷ்டதிகாரிகள் இந்த பூமிக்குத் திரும்புகிறார்கள் என்பது இப்போது உண்ணப்படுகிறது. சொர்க்கத்தில் இருந்து இறங்கும் போது ஜீவாக்கள் ஆகாஷா (ஆகாயம்), வாயு (காற்று), தூமம் (புகை), அப்ரம் (நீரைத் தாங்கும் மேகம்), மேகா (மழை பொழியும் மேகம்) ஆகியவற்றுடன் தொடர்பு கொள்கின்றன என்றும் அவை மழைநீரின் மூலம் பூமியில் விழுகின்றன என்றும் கூறப்படுகிறது. .

ஜீவாத்மாக்கள் பூமிக்குத் திரும்பும்போது மேற்கூறியவற்றுடன் தொடர்பு கொள்கிறார்களா அல்லது சொர்க்கத்தில் சோமபாவம் அல்லது இந்த உலகில் மனித பாவம் போன்ற எதையும் அவர்கள் அனுபவிக்கிறார்களா என்ற சந்தேகம் இங்கே எழுகிறது.

இந்த சந்தேகத்தை சூத்ரகாரர் “தத் ஸ்வபவ்யபத்தி: உபபத்தே:” என்ற சூத்திரத்தில் தீர்த்து வைத்துள்ளார். இதன் பொருள் என்னவென்றால், ஜீவாக்கள் மேற்கூறியதைப் போலவே மாறுகின்றன, மேலும் அங்கு எந்த அனுபவமும் இல்லை. சொர்க்கத்தில் சோம பாவமும், இவ்வுலகில் மனுஷ்ய பாவமும் மட்டுமே இன்பம்.

ஐந்தாவது அதிகாரம் “நதிசிராதிகாரணம்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், ஜீவாத்மாக்கள் ஆகாசம், வாயு போன்ற லோகங்களில் தங்கி, நெல் போன்ற உணவு தானியங்களுக்குள் நுழைவது வரை நீண்ட காலமா அல்லது குறுகிய காலமா என்பதுதான். உணவு தானியங்களில் இருந்து ஜீவாக்கள் வெளியேறுவதும், ஆண் உயிரினங்களின் உடலில் நுழைவதும் மிகவும் கடினம் என்று உபநிஷதம் கூறுகிறது. குறிப்பாக உணவு தானியங்களான நெல் போன்றவற்றில் உள்ள ஜீவாத்மாக்களைப் பற்றி உபநிஷதம் கூறும்போது, ​​ஆகாஷம், வாயு, தூமம், அபிராமி, மேகம் போன்றவற்றில் ஜீவாத்மாக்கள் நீண்ட காலம் தங்காது, அவை விரைவாக வெளியேறுகின்றன என்று கருத வேண்டும். மேலே.

இந்த பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் “அன்யாதிஷ்டித அதிகாரன்” என்று அழைக்கப்படுகிறது. மறுபிறப்பிற்காக சொர்க்கத்திலிருந்து இறங்கி, நெல் போன்ற உணவு தானியத்தில் நுழைந்த ஜீவன், நெல் தானியத்தை தன் உடலாகக் கருதுகிறானா அல்லது வெறுமனே அதனுடன் தொடர்புடையதா என்பதுதான் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு.

மழையின் மூலம் பூமியில் விழும் ஜீவாத்மாக்கள் நெல் மற்றும் பிற உணவு தானியங்களாகப் பிறக்கின்றன என்று கூறும் உபநிடதக் கூற்று இந்த ஐயத்திற்கு அறை. பிறந்தது எனச் சொல்லப்படுவதால் மேற்கண்ட ஐயம் எழுந்தது. “பிறப்பு” என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் இணைக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பாளர் கூறுகிறார், மேலும் மனிதன் பிறந்தான் என்று நாம் சொல்வது போல் நெல் தானியத்தின் உடலைக் கருதி ஜீவா பிறந்தது என்று சொல்ல வேண்டும்.

பூர்வபக்ஷியின் இந்த விவாதம் சூத்ரகாரரால் எதிர்க்கப்படுகிறது, அவர் “அன்யாதிஷ்டிதே பூர்வவத் அபிலாபத்” என்று படிக்கும் முதல் சூத்திரத்தில் கூறுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. நெல் தானியம் என்பது மற்றொரு ஜீவாவின் உடலாகும், அவர் தனது பாபா கர்மாவின் காரணமாக அதை குறிப்பாக ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் இந்த உலகில் மறுபிறப்புக்காக சொர்க்கத்திலிருந்து இறங்கிய ஜீவாவாக உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி அல்லது எந்த ஒரு பிராணியும் அல்லது உயிரினமும் அவனது புண்ணியத்தின் சமநிலையான அனுசயாவின் படி, ஆகாஷா, வாயு, தூமம் போன்றவற்றைப் போலவே, பாப கர்மாவும் நெல் தானியத்துடன் தொடர்புடையது.

யாகத்தில் ஒரு மிருகத்தைக் கொன்று, அதையே யாகத்தில் தெய்வங்களுக்கு அர்ப்பணம் செய்த பாவத்தின் நிமித்தம், ஜீவன் நெல் தானியத்தை எடுத்துக்கொண்டு துன்பத்திற்கு ஆளாகிறான் என்று பூர்வபக்ஷி மேற்கூறிய விவாதத்தை எதிர்க்கிறார்.

விலங்குகள் மற்றும் உயிரினங்களைத் துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ அல்லது கொல்லவோ கூடாது என்று கூறப்படுகிறது. மிருகம் கொல்லப்பட்டால் அது பாவச் செயல். ஆனால் அதே நேரத்தில் மிருகத்தைக் கொன்று யாகம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது. இது ஒரு பாவச் செயலாக இருப்பதால், இதற்கு முன் ஜீவன் சொர்க்கத்தை அடைந்து, அங்குள்ள அனைத்து சுகங்களையும் அனுபவித்தாலும், ஒரு நெல்மணியின் உடலை எடுத்துக்கொண்டு தண்டிக்கப்படுகிறான்.

பூர்வபக்ஷியின் இந்த வாதம், “அசுத்த மிச்சென்ன சப்தத்” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரரால் மறுக்கப்படுகிறது. “அசுத்தமிதி சேத்” என்றால் மிருகத்தைக் கொல்வது பாவச் செயல் என்று எதிராளி சொல்லுகிறார். சூத்ரகாரர் “நசப்தத்” என்ற வார்த்தைகளால் மேற்கூறியவற்றை மறுத்து, மிருகவதை ஒரு பாவச் செயல் அல்ல என்று உறுதியாகக் கூறுகிறார், ஏனெனில் யாகத்தின் போது கொல்லப்பட்ட விலங்கில் உள்ள ஜீவா ஸ்வர்கத்திற்குச் சென்று அங்கு அழகான உடலை ஏற்று அங்குள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கிறது. .

ஜீவா உண்ணும் உணவின் மூலம் ஒரு ஆண் உறுப்பின் உடலுக்குள் நுழைந்து, தந்தையின் உடலில் இருந்து தாயின் உடலில் நுழைந்த பிறகு தாயின் வயிற்றில் ஒரு உடலைப் பெறுகிறது.

மூன்றாவது அத்தியாயத்தின் முதல் பாதம் இந்த அதிகாரத்துடன் முடிகிறது.

3 வது அத்தியாயம் “சாதன அத்யாயா” என்றும் இந்த இரண்டாவது பாதம் உபயலிங்க பாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே விளக்கியபடி, உபய லிங்கமானது பகவான் ஸ்ரீமன் நாராயணனின் இரண்டு அடிப்படை குணாதிசயங்களைக் குறிக்கிறது, அவை (1) களங்கமின்மை (2) எண்ணற்ற அருள் பண்புகளின் களஞ்சியம்.

களங்கமற்ற தன்மை “ஹேய ப்ரத்யநிகத்வம்” என்றும், இரண்டாவது குணம் “அசாங்க்யேய கல்யாண குண மஹோதாதி” என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் மேற்கூறிய இரண்டு குணாதிசயங்கள் நிரூபிக்கப்படாவிட்டால், நான்கு தலை பிரம்மா, சிவன், இந்திரன் போன்ற மற்ற கடவுள்களின் மேல் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மேலாதிக்கம் இருக்க முடியாது. நிறுவப்பட்டது. இந்த மற்ற கடவுள்களை தேவதந்திரர்கள் என்றும், பகவான் ஸ்ரீமன் நாராயணன் பரதேவதை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

நான்கு தலைகள் கொண்ட பிரம்மா, சிவன் மற்றும் இந்திரன் நம்மைப் போன்ற புண்ய மற்றும் பாப கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் அசுப கர்த்தாக்கள் அல்லது அமங்கல தேவதைகள் என்றும் கூறப்படுகிறது. திருமழிசை ஆழ்வார் மேற்கூறிய அசுப கர்த்தாக்கள் அல்லது தேவதைகள் எச்சில் தேவர்கள் மற்றும் திருஇல்லா தேவர்கள் என்று அறிவிக்கிறார் அல்லது சத்தியம் செய்கிறார்.

எச்சில் தேவர்கள் என்பதன் பொருள் என்னவென்றால், பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பவராக விளங்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணன், இந்தப் பிரபஞ்சத்தின் பிரளயத்தின் போது அதை விழுங்கித் தன் வயிற்றில் பத்திரமாக வைத்துக் கொண்டார். படைப்பின் போது அவர் தனது வாயிலிருந்து பிரபஞ்சத்தை உமிழ்ந்தார், அப்போது நான்கு தலை பிரம்மா, சிவன் மற்றும் இந்திரன் போன்ற தேவதாந்திரர்கள் இந்த உலகில் தோன்றினர். அதனால் எச்சில் தேவர்கள் ஆனார்கள். பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு மட்டுமே தமிழில் திரு என்றும் சமஸ்கிருதத்தில் “ஸ்ரீ” என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமி தேவியை அவரது மனைவியாகக் கொண்டுள்ளார். மற்ற ஸ்வாமிகள் மகாலக்ஷ்மியை மனைவியாகக் கொள்ள முடியாது, எனவே அவர்கள் திரு இல்லா தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

எனவே மோட்சத்தை விரும்புபவர்கள் இந்த தேவதந்திரர்களிடம் எந்த விதமான பக்தியும் கொண்டிருக்கக் கூடாது என்று தீர்க்கமாகச் சொல்லப்படுகிறது, ஏனெனில் அவர்களால் வழங்கப்படும் பலன்கள் மிகவும் குறைவாகவும் முடிவடைகின்றன. அவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது. பகவான் ஸ்ரீமன் நாராயணனால் வழங்கப்பட்ட மோட்சத்தின் பலன் எல்லையற்றது மற்றும் முடிவில்லாத நித்திய பேரின்பம், அதாவது ஸ்ரீ வைகுண்ட பையலோகத்தில் உள்ள மகாலட்சுமிக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் என்றென்றும், எங்கும், எல்லா நிலைகளிலும் சேவை அல்லது கைங்கர்யம் செய்வது. சமஸ்கிருதத்தில் இந்த கைங்கர்யத்திற்கான சொற்றொடர் சர்வதேசம், சர்வகலா, சர்வ அவஸ்தா உசித சர்வ வித கைங்கர்யம்.

எனவே மேற்கூறியவற்றின் பொருட்டு பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மேன்மை நிலைநாட்டப்பட வேண்டும். இந்தப் பாடலின் முக்கிய நோக்கம் மேற்கூறியவை மட்டுமே.

முன்பு கூறியது போல், விடுதலை பெறாத தனி ஆன்மா அல்லது சம்சாரி ஜீவனின் கனவுகள், நல்ல தூக்கம் மற்றும் கோமா நிலை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் இந்த பாதத்தில் தீர்க்கப்படுகின்றன, அதே நேரத்தில் ஜீவாவுக்கு உதவும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மங்களகரமான அஞ்சலிகள். மேலே உள்ள மூன்று கட்டங்களும் உய்த்துணரப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன. விழிப்பு நிலையில் உள்ள குறைபாடுகள் வைராக்ய பாதம் எனப்படும் முந்தைய பாதத்தில் தீர்க்கப்பட்டன.

இந்த பாதத்தில் உள்ள முதல் அதிகாரம் “சந்தியாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது, இது ஸ்வப்னா-அவஸ்தா அல்லது கனவுகள் காணும் நிலை (கட்டம்) பற்றியது. சந்தியா என்றால் ஸ்வப்ன ஸ்தானம் என்பது கனவுகளைக் காணும் நிலை. இது விழிப்பு நிலைக்கும் நல்ல உறக்க நிலைக்கும் இடையே உள்ள நிலை. விவாதத்திற்கான தலைப்பு பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள ஒரு பத்தியாகும், அதில் யாக்ஞவல்கிய முனிவர் ஸ்வப்னவஸ்தாவின் தன்மையைப் பற்றி விவாதிக்கிறார்.

இங்கு யாக்ஞவல்கிய முனிவர் கனவு நிலையில் தேர்கள் இல்லை, குதிரைகள் இல்லை, சாலைகள் இல்லை என்று கூறுகிறார். பின்னர் தேர்கள், குதிரைகள் மற்றும் சாலைகள் உருவாக்கப்படுகின்றன. அதுபோலவே சந்தோஷங்கள், மகிழ்ச்சிகள் மற்றும் மகிழ்ச்சிகள் இல்லை, ஆனால் மகிழ்ச்சிகள், மகிழ்ச்சிகள் மற்றும் மகிழ்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன. மேலும் யாக்ஞவல்கியர் குளங்கள், தாமரைக் குளங்கள் அல்லது ஆறுகள் எதுவும் இல்லை ஆனால் அவை உருவாக்கப்பட்டவை என்கிறார். அவனே படைப்பவன். உபநிடத உரையில் அந்த “அவர்” அல்லது ச: ஜீவா அல்லது பரமாத்மாவா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. அதே போல் கடோபநிஷத்தில் ஒரு கூற்று உள்ளது, அது தூக்கத்தின் போது கனவு நிலையில் இருக்கும், விரும்பியவை அனைத்தும் உருவாக்கப்படுகின்றன என்று கூறுகிறது. கனவில் வரும் பொருட்களைப் படைத்தவர் ஜீவா அல்லது பரமாத்மா என்ற சந்தேகம் இங்கும் எழுகிறது.

ஜீவா தான் கனவில் அனுபவிக்கும் பொருட்களை உருவாக்குபவன் என்பது எதிராளியின் பார்வை. இந்த எதிர்ப்பின் கருத்து இந்த அதிகாரத்தின் முதல் இரண்டு சூத்திரங்களில் உள்ளது. ஸந்த்யே ஸ்ருஷ்டிர் அஹஹி மற்றும் நிர்மாதரம் ச ஏகே புத்ரதய ஷா என்பது சூத்திரங்கள்.

முதல் இரண்டு சூத்திரங்களின் பொருள் பின்வருமாறு.

சந்தியா என்று அழைக்கப்படும் கனவுகளைக் காணும் நிலையில், கனவில் காணப்படும் பொருள்கள் கனவுகளைக் காணும் ஜீவா அல்லது தனிப்பட்ட ஆத்மாவால் உருவாக்கப்படுகின்றன. இரண்டாவது சூத்திரத்தில் கண்ணோட்டம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது, இதன் பொருள் என்னவென்றால், கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளபடி, கனவுகளின் நிலையில் ஜீவா மகன்கள் போன்ற பொருட்களை உருவாக்குகிறது.

சித்தாந்த சூத்திரங்கள் என்று அழைக்கப்படும் இந்த அதிகாரத்தின் மீதமுள்ள நான்கு சூத்திரங்களில், சூத்திரகாரர் எதிரியின் மேற்கூறிய கருத்தை மறுத்து, பார்ப்பவரின் புண்ணிய பாப கர்மாவின்படி கனவில் வரும் பொருட்களை உருவாக்கியவர் பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்று கூறுகிறார். ஜீவா என்று கனவு காண்கிறான்.

முதல் சித்தாந்த சூத்திரம் “மாயாமாத்ரம் து கார்ட்ஸ்ந்யேன அநபிவ்யக்த ஸ்வரூபத்வாத்”. இதன் பொருள் எதிராளியின் பார்வை நிராகரிக்கப்படுகிறது.

மாயாமாத்ரம் என்றால் கனவில் வரும் பொருள்களின் முழுப் படைப்பும் உண்மையிலேயே அற்புதமானது. கர்ஷ்ண்யேன அனாபிவ்யக்தி என்றால், தனிப்பட்ட ஆன்மா அல்லது ஜீவா கனவில் உள்ள பொருட்களை உருவாக்கும் திறன் கொண்டது என்று அர்த்தம், ஏனெனில் அவர் சத்ய சங்கல்பமாக இருந்தாலும் (விருப்பம் மற்றும் உருவாக்கும் திறன் கொண்டவர்) இந்த குறிப்பிட்ட பண்பு அவர் சம்சாரத்தில் இருக்கும்போது மலரவோ அல்லது பிரகாசிக்கவோ இல்லை. எனவே கனவில் உள்ள பொருள்கள் பரம புருஷன் அல்லது பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட கடோபநிஷத்தில் உள்ள வாசகம் கூட ஜீவனைக் குறிக்கவில்லை, ஆனால் அது பரமாத்மாவை மட்டுமே குறிக்கிறது.

பிருஹதாரண்யக உபநிடதத்தின் சொப்பன நிலை தொடர்பான ச: என்ற வார்த்தை பரமாத்மாவை மட்டுமே குறிக்கிறது, ஜீவனை அல்ல.

ஜீவா அல்லது ஜீவ ஸ்வரூபத்தின் உள்ளார்ந்த இயல்பில் சத்ய சங்கல்பத்வ குணம் இயல்பாக இருக்கும்போது, ​​சத்ய சங்கல்பத்வம் ஏன் மலரவில்லை, செயலற்ற நிலையில் இருந்தது என்ற அடுத்த கேள்வி எழுகிறது. மேற்கண்ட கேள்விக்கான பதில், பரமாத்மா தனது புண்ணிய பாப கர்மாவின் காரணமாக மேற்கண்ட பண்பு முக்தி பெறாத ஆத்மாவில் செயலற்ற நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே ஒரு ஜீவன் தனது புண்ணிய பாபா கர்மாவின் காரணமாக சம்சாரத்தில் நிலைத்திருக்கிறான், அவன் அனுபவிக்கும் பலன்கள் பரமாத்மாவால் வழங்கப்படுகின்றன, மேலும் ஜீவனுக்கு மோட்சத்தின் பலனைத் தரும் பரம புருஷனின் விருப்பத்தால் ஜீவன் சம்சாரத்திலிருந்து விடுதலை பெறுகிறான். பக்தி யோகம் (தியானம்) அல்லது சரணாகதி அல்லது சரணாகதி என்ற பிரபத்தி யோகம்.

இந்தச் சூழலில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் தைத்தரிய உபநிடதத்திலிருந்து சில மேற்கோள்களை மேற்கோள் காட்டுகிறார். ஜீவாவில் உள்ள சத்திய சங்கல்பத்தின் பண்பின் செயலற்ற தன்மை, அவர் சிருஷ்டியின் போது ஒரு மரண உடலுக்குள் நுழைவதன் மூலமும், பிரளயத்தின் போது அணு (சூக்ஷ்மா) வடிவத்தில் இருக்கும் உணர்ச்சியற்ற உயிரினத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் நடைபெறுகிறது. மேற்கூறிய பொருளைத் தரும் சூத்திரம் “தேஹயோகத்வா சோபி” என்று வாசிக்கிறது. இந்த அதிகாரத்தில் உள்ள 4 வது சித்தாந்த சூத்திரத்தில், ஒரு தனிப்பட்ட நபர் கெட்ட கனவுகள் மற்றும் நல்ல கனவுகள் இரண்டையும் பார்க்கிறார் என்று சூத்திரகாரர் கூறுகிறார். இந்த கெட்ட கனவுகள் கெட்ட சகுனத்தையும், நல்ல கனவுகள் நல்ல சகுனத்தையும் குறிக்கும். நல்ல சகுனம் நல்ல கனவுகளைக் காணும் நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. கெட்ட சகுனம் மகிழ்ச்சியற்ற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.

இந்தச் சூழலில், ஜீவாவின் ‘புண்ய’, ‘பாபா’ கர்மாவின் பலன்கள் பின்வரும் வழிகளில் அனுபவிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(அ) ​​புண்ணிய மற்றும் பாப கர்மாவின் ஒரு பகுதியின் பலன்கள் ஒரு ஜீவாவின் விழிப்பு நிலையின் போது அனுபவிக்கப்படுகின்றன.

(ஆ) இரண்டாவது பகுதியின் பழங்கள் கனவு நிலையில் அனுபவிக்கப்படுகின்றன.

(இ) மூன்றாவது பகுதியின் பழங்கள் சொர்க்கம் அல்லது ஸ்வர்க லோகத்தில் அனுபவிக்கப்படுகின்றன. பிரத்தியேகமான புண்ணிய கர்மாவின் பலன்கள் ஸ்வர்கலோகத்தில் அனுபவிக்கப்படுகின்றன. பிரத்தியேகமாக பாபா கர்மாவின் பலன்கள் நரகத்தில் அல்லது நரகத்தில் அனுபவிக்கப்படுகின்றன.

(ஈ) எஞ்சியிருக்கும் புண்ணியமும், பாப கர்மாவும் ஜீவனுக்கு இவ்வுலகில் மறுபிறவி எடுக்கவும், மரண சரீரத்தை எடுக்கவும் உதவுகின்றன, மேலும் புண்ணிய மற்றும் பாபாவின் பலனை இந்த உலகில் தொடர்ந்து அனுபவித்து மீண்டும் வாழ்நாளில் புண்ணியத்தையும் பாபாவையும் செய்ய உதவுகின்றன. ஜீவா மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையை நாடும் வரை இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் “ததாபாவாதிகாரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் ஜீவாவின் நல்ல தூக்கத்தின் நிலை விவாதிக்கப்படுகிறது. இதற்கு இரண்டு சூத்திரங்கள் உள்ளன. மூன்று உபநிடத நூல்கள் விவாதத்திற்கு வருகின்றன. இம்மூன்று நூல்களும் நல்ல உறக்க நிலையைப் பற்றியது.

முதல் வாசகம் சாண்டோக்யோபனிஷத்தின் 8வது அத்தியாயத்தில் இருந்து, தனிப்பட்ட ஆன்மா நாடிகளில் (துடிப்புகள் அல்லது இதயத்தில் உள்ள குழாய் உறுப்புகள்) நல்ல தூக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறது. இரண்டாவது வாசகம் பிருஹதாரண்யக உபநிடதத்தின் 4 வது அத்தியாயத்திலிருந்து ஜீவா பூரிதத்தில் (இதயத்தில் ஒரு சிவப்பு நிற சதைப்பகுதி) தூங்குகிறது என்று கூறுகிறது, மேலும் 72000 நாடிகள் “ஹிதா” என்று அழைக்கப்படுகின்றன, அவை பூரிதத்தை நோக்கி செல்கின்றன.

மூன்றாவது வாசகம் சந்தோக்யோபனிஷத்தின் 6 வது அத்தியாயத்தில் உள்ளது, இது சாந்தோக்யோபனிஷத்தின் இந்த அத்தியாயத்தில் “சத்” என்று அழைக்கப்படும் பரமாத்மாவின் மீது ஜீவன் தூங்குகிறது என்று கூறுகிறது.

மேற்கூறிய உபநிடத வாசகங்களில் இருந்து ஜீவன் தன் வசதிக்கேற்ப தன்னிச்சையாக நாடிகளா, பூரிதாதா அல்லது பரமாத்மாவா அல்லது மேலே உள்ள அனைத்தின் மீதும் உறங்குகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. முதலாவது விகல்பா (மேலே உள்ள மூன்றில் ஏதேனும் ஒன்றில்) மற்றும் இரண்டாவது சமுச்சயா (மேலே உள்ள மூன்றிலும்) என்று அழைக்கப்படுகிறது.

எதிரி அல்லது பூர்வபக்ஷி இது விகல்பம் மட்டுமே, சமுச்சயா அல்ல என்று கூறுகிறார். ஜீவா உறங்க முடியும் என்று சொல்லப்பட்ட மேற்படி மூன்று இடங்களிலும் ஒன்று மற்றொன்றிலிருந்து சாராதது, ஜீவா மூன்றிலும் ஒரே நேரத்தில் தூங்க முடியாது என்பதே அவரது வாதத்தின் அடிப்படை. இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “ததாபவ நதீஷு தத் ஸ்ருதே: அத்னானிச்ச” என்று படிக்கும் சூத்திரகாரர் எதிரியின் மேற்கூறிய பார்வையை மறுக்கிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

ததாபவ:- ஸ்வப்னா அல்லது கனவுகள் இல்லாத நிலையில், நல்ல தூக்க நிலையில் இருக்கும்.

நதீஷு ஆத்மானிச்சா – ஜீவாவின் நல்ல தூக்க நிலை நாடிகள், பூரிததா மற்றும் பரமாத்மாவில் நடைபெறுகிறது. இங்கே சா என்பது பூரிதத்தை குறிக்கிறது ஏனெனில்,

தத் ஸ்ருதே:- மேற்கூறிய ஸ்ருதிகள் அல்லது உபநிடதங்களில் மேற்கண்ட மூன்று உறக்க இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இங்கே ஸ்ரீ பகவத் ராமானுஜர் பிரசாதம், கட்வாங்க, பர்யங்க நியாயம் என்று ஒரு உச்சரிப்பைக் குறிப்பிடுகிறார்.

பிரசாதம் என்றால் அரண்மனை. கட்வாங்கா என்றால் கட்டில். பர்யங்கா என்றால் படுக்கை. இங்கு நாடிகள் பிரசாத இடத்தில் உள்ளனர். பூரிதத்தம் கட்வாங்க இடத்தில் உள்ளது. பரமாத்மா படுக்கையில் இருக்கிறார்.

இறுதியாக, தனிப்பட்ட ஆன்மா படுக்கையாகிய பரமாத்மாவின் மீது நல்ல உறக்கத்தை அனுபவிக்கிறது என்றும், பரமாத்மா கட்டிலாகிய பூரிதத்தில் இருப்பதாகவும், இந்த கட்டிலில் நாடிகள் என்று கூறப்படும் அரண்மனையின் தரையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பூர்வபக்ஷியின் வாதம் நிராகரிக்கப்பட்டதற்கான சரியான காரணம் அரண்மனை, கட்டில் மற்றும் படுக்கையில் வேறுபாடு இருப்பதைப் போலவே, நாடிகளின் செயல்பாடுகளிலும், புரிதாத்தா மற்றும் பரமாத்மாவின் செயல்பாடுகளிலும் வேறுபாடு உள்ளது. இதில் ஒன்று மட்டுமே மற்றொன்றுக்கு மேல் இருக்க வேண்டும். எனவே நாடிகள் அல்லது பூரிததா அல்லது பரமாத்மா உறங்கும் இடமாக இருக்கும் விகல்பா (மாற்று) மற்றும் ஒவ்வொரு இடமும் மற்றொன்றை விட சரியானது. விகல்ப வாதத்தில் பல குறைபாடுகள் உள்ளன, எனவே சமுச்சய வாதமே சரியானது. விகல்ப என்றால் ஒன்று அல்லது (மாற்று) மற்றும் சமுச்சயா என்றால் ஒருங்கிணைந்த (அனைத்தும் ஒன்றாக).

இந்த அதிகாரத்தில் உள்ள இரண்டாவது சூத்திரம் பரமாத்மாவின் மீது நல்ல உறக்கத்தை அனுபவித்த பிறகு ஜீவா பரமாத்மாவால் மட்டுமே எழுப்பப்படுகிறது என்று கூறுகிறது.

இந்த பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரம் கர்மானுஸ்மிருதி அதிகாரம் எனப்படும். இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், முந்தைய நாள் இரவு பரமாத்மா மீது உறங்கியவர் மறுநாள் காலையில் எழுந்திருப்பாரா அல்லது வேறு ஒருவர் எழுந்து தோன்றுகிறாரா என்பதுதான். இந்த சந்தேகம் முட்டாள்தனமானதாக இருந்தாலும் அல்லது முட்டாள்தனமாக இருந்தாலும், பூர்வபக்ஷி மேற்கண்ட சந்தேகத்தை நியாயப்படுத்த சரியான கருத்தை எழுப்புகிறார். மோட்சம் அல்லது முக்தி என்பது ஜீவா பரமாத்மாவுடன் இணைவது என்பது அவரது சரியான கருத்து. நல்ல தூக்கத்தின் போது இந்த தொழிற்சங்கம் நடந்தவுடன், அந்த நபர் மீண்டும் எங்கே வருகிறார் என்ற கேள்வியை அவர் கேட்கிறார், எனவே மற்றொரு நபர் தனியாக எழுந்து தோன்ற வேண்டும்.

மேற்கூறிய வாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, சூத்திரகாரர் சூத்திரத்தில் தனது கருத்தை மறுக்கிறார். “ஸ ஏவ, கர்ம, அனுஸ்மிருதி சபல விதிப்ய:” – இந்த சூத்ரத்தின் அர்த்தம், காலையில் எழுந்தவர், முந்தைய நாள் இரவு உறங்கச் சென்றவர்தான். சூத்திரத்தில் ச ஏவா என்ற வார்த்தைகளின் அர்த்தம் இதுதான். சூத்ரகாரர் அதற்கு நான்கு காரணங்களை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

(1) முதலாவது கர்மா. இங்கு கர்மா என்றால் புண்ய பாப கர்மா. புண்ணிய பாப கர்மாவின் சமநிலையின் பலன்களை முந்தைய நாள் இரவு தூங்கச் சென்றவர் காலையில் எழுந்தவுடன் அனுபவிக்க வேண்டும். இங்கே ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் “தத்வஞானத் ப்ராக் தேனைவ போக்தவ்யம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, முந்தைய இரவில் தூங்கி காலையில் எழுந்தவர், பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்யும் வரை, பிரம்மன் அல்லது பரமாத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு முன்பு அவர் செய்த புண்ணிய பாப கர்மாவின் சமநிலையின் பலனை மட்டுமே அனுபவிக்க வேண்டும். . ஒருவர் பக்தி யோகத்தைத் தொடங்கும் அல்லது பிரபத்தி செய்யும் தருணத்தில், மேற்கூறிய தருணத்தில் தனிப்பட்ட ஒருவரால் அனுபவிக்கப்படாத புண்ணிய பாப கர்மாவின் பலன்கள் உறைந்து, அதன் பலனை அந்த நபர் அனுபவிக்கத் தேவையில்லை என்று பகவான் ஸ்ரீமன் நாராயணன் விரும்புகிறார். பக்தி யோகம் தொடங்கிய பிறகு அல்லது பிரபத்தி செய்த பிறகு அவர் தெரிந்தோ அல்லது வேண்டுமென்றோ பாவங்களைச் செய்ய மாட்டார். தற்செயலாக பாவங்களைச் செய்வது அவரை எந்த வகையிலும் பாதிக்காது, பரமாத்மா தானாகவே மன்னிக்கிறார்.

(2) அனுஸ்மிருதி – இந்த அனுஸ்மிருதி என்றால் மறு சேகரிப்பு அல்லது மீண்டும் எண்ணுதல். முந்தைய நாள் இரவு தூங்கச் சென்றவர் மறுநாள் காலையில் எழுந்ததாகக் கூறுகிறார்.

(3) சப்தா – சப்தா என்றால் உபநிடதச் சொல். மேற்கூறிய வாதத்திற்கு ஆதரவாக உபநிடதச் சொல் இருப்பதாக சூத்திரகாரர் கூறுகிறார்.

சாந்தோக்யோபநிஷத்தில் புலி, சிங்கம், நரி அல்லது பன்றி பூச்சி பறவை, ஈ அல்லது கொசு தூங்கும் அதே வடிவத்தில் எழும் என்று ஒரு பழமொழி உள்ளது. அதனால் தூங்கிய அதே ஜீவா எழுந்து நிற்கிறார்.

(4) விதிப்ய:- விதி என்பது ஒரு கட்டளை அல்லது ஒழுங்கு. பரமாத்மாவின் மீது சயனித்தவர் மகோஷத்திற்குச் சென்றாலோ அல்லது முக்தி அடைந்தாலோ, பக்தி யோகம் அல்லது பிரபத்தியை முக்திக்கான வழிமுறையாகக் கூறும் உபநிடத நூல்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகவோ அல்லது நோக்கம் குறைவாகவோ மாறும்.

பரமாத்மாவின் மீது உறங்கும் நபர் இன்னும் சம்சாரத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடவில்லை, எனவே அவர் பரமாத்மாவின் மீது உறங்குவதால் மோட்சத்திற்குச் செல்வது அபத்தமானது அல்லது அர்த்தமற்றது.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் முக்தாதிகாரனா என்று அழைக்கப்படுகிறது, இதில் ஒரு ஜீவாவின் மயக்க நிலை அல்லது கோமா நிலை விவாதிக்கப்படுகிறது.

இங்கே எழும் சந்தேகம் என்னவென்றால், கோமா நிலை என்பது அமைதியான தூக்கத்தின் மற்றொரு வடிவமா அல்லது அது முற்றிலும் வேறுபட்ட அல்லது தனியான அவஸ்தா அல்லது நிலையா என்பதுதான்.

மூர்ச்சாவஸ்தாவை (கோமா நிலை) சுஷுப்தி அவஸ்தாவின் மற்றொரு வடிவமாக அழைக்கும் வழக்கம் இருப்பதால், இந்த கோமா நிலை சுஷுப்தி அவஸ்தாவின் மற்றொரு வடிவம் என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

முகதே அர்த்த சம்பத்தி:: பரிஷேஷாத்” என்று படிக்கும் சூத்திரத்தில் சூத்ரகாரர் மேற்கண்ட சந்தேகத்தை நீக்குகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. முகதே என்றால் கோமா நிலையில் இருப்பவர் என்று பொருள். அர்த்த சம்பத்தி: – பாதி மரணம். ஏனெனில் பரிஷேஷாத் – சிற்றின்ப உணர்வு இல்லாததால் அது விழிப்பு நிலை அல்ல. மன செயல்பாடு இல்லாததால் அது கனவுகளின் நிலை அல்ல. ஒரு நபரை எழுப்ப முடியாது என்பதால், அது நல்ல தூக்கத்தின் நிலை அல்ல. சுவாசம் நிற்காததால் அது மரணம் அல்ல. சுவாசம் இருப்பதால், அது பாதி மரணம்.

எனவே கோமா நிலை பாதி மரணம் என்பது முடிவு.

எனவே மேற்கண்ட நான்கு அதிகாரங்களில், சம்சாரத்தில் ஒரு ஜீவாவின் கனவுகள், நல்ல தூக்கம் மற்றும் சுயநினைவின்மை போன்ற நிலைகள் மோட்சம் அல்லது நித்திய பேரின்பத்தை அடைவதற்கான வழிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு வைராக்கியம் அல்லது பற்றின்மை உணர்வை உருவாக்க கையாளப்பட்டன.

ஸ்ரீமன் நாராயணனின் மேற்கண்ட மூன்று மங்கள குணங்களும் (கல்யாண குணங்கள்) நிறுவப்பட்டுள்ளன, அவை ஒவ்வொரு நபரின் கனவிலும் பொருட்களை உருவாக்குகின்றன, அவை நல்ல தூக்கத்தின் போது ஒவ்வொரு ஜீவனையும் தானே உறங்க அனுமதிக்கின்றன மற்றும் ஜீவன் வெளியேறுவதைத் தடுக்கின்றன. அல்லது கோமா நிலையில் உள்ள உடலில் இருந்து ஆன்மா உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

விழிப்பு நிலையில் உள்ள குறைபாடுகள் வைராக்ய பாதம் எனப்படும் முந்தைய பாதத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.

எனவே, ஒரு நபர் தனது நான்கு நிலைகளிலும் உள்ள குறைபாடுகளை அறிந்த பிறகு, உலக இன்பத்திலிருந்து முற்றிலும் பற்றின்மை உணர்வை வளர்த்துக் கொள்வார், இது பக்தி யோகத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராகிறது, இது மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையாகும்.

இந்த முழுமையான பற்றின்மை பக்தி யோகம் செய்வதற்கு இன்றியமையாத முன்நிபந்தனையாகும். மற்ற இன்றியமையாத முன்நிபந்தனை, ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளை அடையவும், அங்குள்ள பைன் தம்பதிகளுக்கு நித்திய சேவை செய்யவும் அசைக்க முடியாத தீவிர ஆசை. இது மோட்சம், முக்தி அல்லது நித்திய பேரின்பம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சூழலில் ஒரு சந்தேகம் எழலாம். சரணாகதி என்று அழைக்கப்படும் பிரபத்தியை நாடிய ஒருவருக்குப் பிரபத்தி செய்வதற்கு முழுமையான பற்றின்மை ஏற்படுவது அவசியமா. பிரபத்தி செய்வதற்கு இன்றியமையாத முன்நிபந்தனைகள் அவனுடைய முழுமையையும் பக்தி யோகத்தைச் செய்ய இயலாமையையும் முழுமையாக உணர்தல் ஆகும் ஸ்ரீவைகுண்ட பய லோகத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளைத் தவிர வேறு எதையும் அடைய முடியாது.

பக்தி யோகாவின் எட்டு துணைகளும், பிரபத்தியின் ஐந்து துணைகளும் பின்னர் கையாளப்படும்.

மோட்சத்தை அடைவதற்கான வழிமுறைகளை நாடுவதற்கு முன், ஒரு நபர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்த பிறகு அடையப் போகும் பொருள் அனைத்து அம்சங்களிலும் தன்னை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று திட்டவட்டமான முடிவுக்கு வர வேண்டும்.

எல்லா அம்சங்களிலும் இந்த மேன்மையான பொருள், பகவான் ஸ்ரீமன் நாராயணனாக எப்போதும் தனது மனைவியான மஹாலக்ஷ்மி தேவியுடன் இணைந்திருக்கும் உயர்ந்தவர். நமது ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில், “மிதுனம்” (எப்போதும் ஒன்றாக) என்று அழைக்கப்படும் மஹாலக்ஷ்மி தேவியுடன் பகவான் ஸ்ரீமன் நாராயணன் தெய்வீக தம்பதிகள் என்று அழைக்கப்படுகிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றி எந்தச் சூழலிலும் அல்லது சந்தர்ப்பத்திலும் குறிப்பிடப்பட்டாலும், அவர் மகாலட்சுமியுடன் தொடர்புடையவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீமன் நாராயணன் மற்றும் மஹாலக்ஷ்மியின் மேற்கூறிய நித்திய இணைப்பின் காரணமாக, நான்கு தலை பிரம்மா, சிவன், இந்திரன் மற்றும் பிற வான கடவுள்கள் தானாக நிராகரிக்கப்படுகிறார்கள் அல்லது உயர்ந்த நிலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட விண்ணுலகக் கடவுள்களும் நம்மைப் போலவே புண்ணிய, பாபாவின் புண்ணியங்களை அனுபவிக்கிறார்கள். எனவே அவை கர்ம வாஸ்யங்கள் அதாவது புண்யா மற்றும் பாபாவால் துன்புறுத்தப்படுகின்றன. பல கோடி பிரம்மாண்டங்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சம் முழுவதிலும் பகவான் ஸ்ரீமன் நாராயணனையும் மஹாலக்ஷ்மியையும் தவிர அனைத்து ஜீவராசிகளும் கர்ம வாஸ்யர்களே. ஒரு பிரம்மாண்டமானது சத்யலோகத்திலிருந்து பாதாள லோகம் வரை 14 லோகங்களை (உலகங்கள்) கொண்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் தனித்தனி நான்கு தலை பிரம்மா, சிவன், இந்திரன் மற்றும் பிற வான கடவுள்கள் உள்ளனர்.

இப்போது சரியான விஷயத்திற்கு வருகிறேன், உபாய லிங்கம் என்று அழைக்கப்படும் இரண்டு பண்புகள் (மகாலட்சுமியுடன் தொடர்புடைய பகவான் ஸ்ரீமன் நாராயணன்) உள்ளன. உபய என்றால் இரண்டு என்றும் லிங்கம் என்றால் பண்பு என்றும் பொருள்.

இரண்டு குணாதிசயங்கள் (1) களங்கமின்மை (2) எண்ணற்ற மங்களகரமான பண்புகளின் களஞ்சியமாக இருப்பது. சமஸ்கிருதத்தில் அவை ஹேயபிரத்யாநிகத்வா மற்றும் கல்யாண குண கரத்வா என்று அழைக்கப்படுகின்றன. எனவே இந்த இரண்டு குணாதிசயங்களால் ஒரு உன்னதமானவர் அடையாளம் காணப்படுகிறார்.

இச்சூழலில்தான் இந்தப் பாதத்தில் உள்ள ஐந்தாவது அதிகாரம், உபய லிங்கதிகரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த உபய லிங்காதிகரணம் 15 சூத்திரங்களைக் கொண்டது. பூர்வபக்ஷி, பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பரபிரம்மம் ஒவ்வொரு உயிரிலும் அல்லது உயிரற்ற பொருளிலும் அந்தர்யாமியாக (உள் ஆன்மாவாக) இருக்கும்போது, ​​ஜீவனைப் போல துன்பத்திலிருந்தும் இன்பத்திலிருந்தும் தப்பிக்க முடியாது என்று வாதிடுகிறார்.

முந்தைய அதிகாரங்கள் சிலவற்றில், பரமாத்மா என்பது அபஹதபாப்மம் என்று கூறப்பட்டிருந்தாலும், ஜீவனின் புண்ணிய பாப கர்மா அவருக்கு ஒரு உடலை அளிக்கிறது மற்றும் பரமாத்மா ஜீவன் மற்றும் உடல் இரண்டையும் கட்டுப்படுத்தும் அந்தர்யாமியாக மாறுகிறார். ஜீவன் தனது பாபா கர்மாவின் பலனாக துன்பங்களை அனுபவிக்கும் போது, ​​ஜீவனுடன் எப்போதும் இருக்கும் பரமாத்மாவும் மேற்கூறியவற்றிற்கு உட்பட்டவர். உடலில் சீழ், ​​இரத்தம், சிறுநீர், மலம் போன்ற மோசமான பொருட்கள் உள்ளன, இவற்றுடன் தொடர்பு கொண்ட பரமாத்மா நிச்சயமாக அதைப் பற்றி மோசமாக உணர்கிறார், அதுவே அவருக்கு ஒரு களங்கம். உதாரணமாக, ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ சாக்கடை அல்லது அழுக்குத் தண்ணீரைச் சுமந்து செல்லும் சாக்கடையில் விழுந்தாலும், அவர் அதைப் பற்றி மிகவும் மோசமாக உணர்கிறார், மேலும் உடலை சுத்தம் செய்கிறார். பரமாத்மா விஷயத்திலும் அப்படித்தான். எனவே பூர்வபக்ஷி பரமாத்மா என்பது பழுதற்றது அல்ல.

மேற்கூறியவற்றிற்குப் பதிலளிக்கும் வகையில் அல்லது மேற்கூறியவற்றை மறுத்து சூத்ரகாரர் முதல் சூத்திரத்தில் “ந ஸ்தானதோபி பரஸ்ய உபயலிங்கம் சர்வத்ர ஹி” என்று கூறுகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பரமாத்மா எப்பொழுதும் உபாய லிங்கத்தை வைத்திருக்கிறார் என்பதும், மேலே குறிப்பிட்டுள்ள கேவலமான பொருட்களுடன் அவர் தொடர்பு கொள்வதும் அவருக்கு எந்தக் களங்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் எப்பவும் அபஹத பாப்மா. அவருடைய உபாய லிங்கத்வம், கறையற்ற தன்மை மற்றும் அனைத்து மங்களகரமான அஞ்சலிகளின் களஞ்சியமாக உள்ளது அல்லது வேறு வார்த்தைகளில் கூறினால், “ஹேய பரத்யநீகத்வம்” மற்றும் “கல்யாண குணகரத்வம்” எந்த மாற்றமும் இல்லாமல் எப்போதும் எல்லா இடங்களிலும் பராமரிக்கப்படுகிறது.

மேற்கூறிய சூத்திரத்தை சூத்ரகாரர் உருவாக்கிய உபநிடத அதிகாரம் மற்றும் பிற வேத அதிகாரங்கள் பின்வருமாறு.

(1) சந்தோக்யோபநிஷத்தின் 8வது அத்தியாயத்தில் பரமாத்மா அபஹதபாப்மா (கறையற்றவர், அல்லது எல்லா வகையான குறைபாடுகள் மற்றும் குறைபாடுகள் இல்லாதவர்), விஜரா (முதுமையின் குறைபாடுகள் இல்லாதவர்), விம்ருத்யு (மரணத்திலிருந்து விடுபட்டவர்) என்று கூறப்படுகிறது. விசோகா (துக்கத்திலிருந்து விடுபடுதல்), விஜிகட்சா (பசியிலிருந்து விடுபடுதல்) , அபிபாசா (தாகத்திலிருந்து விடுபடுதல்).

சத்யகாமா (அவரது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் திறன் கொண்டவர்) மற்றும் சத்ய சங்கல்பம் (அவர் விரும்பும் எதையும் நிறைவேற்றும் திறன் கொண்டவர்).

மேலே உள்ள முதல் ஆறுகளில், பரமாத்மா குறைபாடற்றவர் (கறையற்றவர்) அதாவது ஹேயபிரத்யானிகா என்றும், கடைசி இரண்டு அவர் அனைத்து மங்களகரமான அஞ்சலிகளின் களஞ்சியமாகவும் இருப்பதைக் குறிக்கிறது.

(2) ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பராசர முனிவர், பகவான் ஸ்ரீமன் நாராயணன் அல்லது பரமாத்மா அனைத்து மங்களகரமான காணிக்கைகளின் களஞ்சியமாக இருக்கிறார், மேலும் அவர் தனது எல்லையற்ற வலிமை அல்லது சக்தியின் எல்லையற்ற அளவைப் பயன்படுத்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினார்.

பரமாத்மா அனைத்து கல்யாண குணங்களின் பொக்கிஷம் அல்லது சுரங்கம், அவருக்கு எந்த துக்கமும் ஜீவத் துன்பங்களும் இல்லை.

உன்னதமான இருப்பிடம் அனைத்து குறைபாடுகள் அல்லது குறைபாடுகளிலிருந்து விடுபட்டது, மேலும் பரமாத்மாவும் மேலே உள்ள எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும்.

மீதமுள்ள 14 சூத்திரங்களில் சூத்ரகாரர் தெரிந்து கொள்ள வேண்டிய பல சுவாரஸ்யமான விஷயங்களைக் குறிப்பிடுகிறார், அவை பின்வருமாறு.

(அ) ​​சாண்டோக்யோபநிஷத்தின் அதே 8வது அத்தியாயத்தில், பிரஜாபதி என்ற நான்கு தலை பிராமணன் இந்திரனுக்கு பிரம்ம வித்யா உபதேசம் செய்யும் அபஹத பாப்மாவில் இருந்து மேலே குறிப்பிட்டுள்ள 8 குணாதிசயங்கள் ஜீவனுக்கும் உண்டு என்று கூறும்போது, ​​பூர்வபக்ஷியின் வினாவிற்கு. அந்தர்யாமியாக இருக்கும்போது பரமாத்மாவும் ஏன் மேற்கூறியவற்றிற்கு உட்பட்டு இருக்கக்கூடாது என்று அவர் உடலில் இருக்கும் போது ஏற்படும் துன்பங்களுக்கு, சூத்ரகாரர் பதிலளிக்கிறார், பிருஹதராயக உபநிஷத்தின் அந்தர்யாமி பிராமணத்தில், யாக்ஞவல்கிய முனிவர், பரமாத்மா அந்தர்யாமியாக இருக்கும் 21 பொருட்களைக் கண்டறிந்து, ஒவ்வொரு பொருளிலும் பரமாத்மா என்று கூறுகிறார். அந்தர்யாமி மற்றும் அமிர்தா. இந்த அமிர்தம் என்பது ஜீவாஸ் மற்றும் அவரது உடல்களின் அனைத்து செயல்களையும் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது மற்றும் உடல்கள் மற்றும் ஜீவாக்களின் குறைபாடுகளிலிருந்து விடுபடுகிறது. ஜீவனைப் பொறுத்தவரை, அவர் சம்சார பந்தத்திலிருந்து விடுபடும் வரை மேற்கண்ட 8 பண்புகளும் செயலற்ற நிலையில் இருக்கும்.

பரமாத்மா தன் விருப்பப்படி ஒவ்வொரு காரியத்தையும் செய்தாலும், உடலில் உள்ள அசுத்தமான பொருட்களுடனான தொடர்பிலிருந்து அவனால் தப்ப முடியாது. இந்த ஆட்சேபனை சூத்திரத்தில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், சூத்ரகாரரால் நிராகரிக்கப்பட்டது, ஆனால் ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் பல மேற்கோள்களை மேற்கோள் காட்டி மேற்கண்ட விஷயத்திற்கு அழகான விளக்கத்தை அளிக்கிறார். ஒரு பொருள் அல்லது பொருள் ஒருவருக்குப் பிடிக்கும், மற்றொன்று விரும்பாதது என்பது விளக்கம். உதாரணமாக, ஒரு இனிப்பு சிலரால் விரும்பப்படுகிறது, அதே இனிப்பு வெவ்வேறு நபர்களால் விரும்பப்படுவதில்லை. இதற்குக் காரணம், தவறு பொருளில் இல்லை, ஆனால் அது விரும்பும் அல்லது பிடிக்காத தனிப்பட்ட நபரிடம் உள்ளது. ஒரு பொருளின் மீது விருப்பம் அல்லது வெறுப்பு என்பது அந்த நபரின் கர்மாவைப் பொறுத்தது.

ஒருவரின் புண்ணிய பாபா கர்மா அவரை இனிமையாக விரும்ப வைக்கும்.

வேறொரு நபரின் ‘புண்ய பாப கர்மா’ அவரை இனிமையின் மீது வெறுப்பை வளர்க்கிறது. அதேபோன்று, அதே நபருக்கு இனிப்பு ஒரு கணத்தில் பிடிக்கலாம், அதே போல் மற்றொரு தருணத்தில் அவருக்கு பிடிக்காமல் போகலாம். இதுவும் அவனது புண்ணிய பாப கர்மாவின் தெளிவின்மையின்படி. பரமாத்மா கர்மாவிலிருந்து விடுபட்டிருப்பதால், அவருக்குப் பிடிக்கும் அல்லது அவருக்குப் பிடிக்காத பொருள் என்ற கேள்வியே இல்லை. அதனால் உடலில் உள்ள கேவலமான பொருட்கள் அவனது உபாய லிங்கத்வத்தை பாதிக்காது.

(ஆ) முண்டக மற்றும் ஸ்வேதாஷ்வதார உபநிடதங்களில், பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒரு மரத்தின் ஒரே கிளையில் (இங்கே உடல் மரம், இதயம் கிளை) இரண்டு பறவைகள் என்று கூறப்பட்டுள்ளது, அதில் ஜீவாத்மா தனது புண்ய மற்றும் பாபாவின் பலனை அனுபவிக்கிறார். புண்ணிய பாப கர்மாவின் பலன்களை அனுபவிக்காமல் கர்மமும் பரமாத்மாவும் பிரகாசிக்கின்றன. எனவே பரமாத்மா என்பது உபாய லிங்கம்.

(இ) இங்கும் சூத்ரகாரர் ஒரு சந்தேகத்தை எழுப்பி அதையே தெளிவுபடுத்துகிறார். ஜீவாவுக்கு ஆத்மாவாக இருக்கும் ஸ்ரீமன் நாராயண பகவான் ஜீவாவுடன் சேர்ந்து உடலுக்குள் பிரவேசித்து, நாம ரூப வ்யாகரணம் என்று பொருள்படும் சரீரம் அல்லது ரூபம் மற்றும் நாமம் இரண்டையும் செய்கிறார் என்று சாண்டோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு ஜீவா தனது புண்ணிய பாபா கர்மாவின் படி நான்கு வகையான உடல்களை எடுத்துக்கொள்ளலாம். அவை வான உடல் (தேவா என்று அழைக்கப்படும்), மனித உடல் (மனுஷ்யா), விலங்கு உடல் (திரியக் என்று அழைக்கப்படும்) மற்றும் உயிரற்ற பொருள் (ஸ்தாவர என்று அழைக்கப்படும்). எனவே உள் ஆன்மா அல்லது பரமாத்மா தனக்கும் பொருந்தக்கூடிய விதிநிஷேத சாஸ்திரத்திலிருந்து தப்ப முடியாது. விதிநிஷேத சாஸ்திரம் என்பது ஜீவாவை கட்டாயப்படுத்தும் வேதம் இதை (விதி சாஸ்திரம்), அதை செய்யாதே (நிஷேத சாஸ்திரம்).

இந்தச் சந்தேகத்திற்குப் பதில், பரமாத்மா ஜீவாத்மாவுடன் சேர்ந்து ஒரு உடலுக்குள் வசித்தாலும், அவர் எந்த வடிவமும் இல்லாமல் இருக்கிறார், அதாவது அவரது புண்ணிய பாப கர்மாவின்படி ஜீவாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வகையான உடல்களும் நேரடியாக பரமாத்மாவை அல்ல. கர்மாவிலிருந்து விடுபட்டவர். மேலும் பரமாத்மா நாம ரூப வ்யாகரணத்தைச் செய்பவர் என்றும், இந்த தனித்தன்மை இருக்கும் போது அவர் அந்தர்யாமியாக இருந்தாலும் உபாய லிங்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

(ஈ) இங்கு எதிராளி பரமாத்மா எந்தப் பண்பும் இல்லாதவர் என்றும், சத்தியம், ஞானம், அனந்தம் பிரம்மா என்ற உபநிஷத உரையின்படி நிரிவிஷேஷம் (விஷேஷ என்றால் பண்பு அல்லது நல்லொழுக்க குணம்) என்றும் வாதிடுகிறார். அவர்களின் கருத்துப்படி சத்யத்வம் என்றால் சத்தியம் அல்ல, ஞானம் என்றால் அப்பாவி அல்லது அறியாமை. அனந்தம் என்றால் வரம்பு இல்லை. எனவே இவை மூன்றும் பண்புக்கூறுகள் அல்ல, அவை பிரம்மனின் உள்ளார்ந்த இயல்பு அல்லது ஸ்வரூபத்தில் உள்ளன. பரமாத்மாவுக்கு நேத்தி நேத்தி (இல்லை, இல்லை) என்றும், அதனால் அனைத்தையும் அறிந்தவனாகவும், மாற்ற முடியாத சித்தத்தை உடையவனாகவும், பிரபஞ்சத்தின் காரணமானவனாகவும், ஒவ்வொரு பொருளிலும் அந்தர்யாமியாகவும், அவனது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவனாகவும் இருக்க வேண்டும் என்று மற்றொரு உரை கூறுகிறது. பொய்யும் அப்படி இருக்கும்போது அவர் எப்படி உபயலிங்கமாக இருக்க முடியும். சத்யம் என்ற வாசகத்தின் மூலம் எதிராளியின் இந்தக் கருத்து மறுக்கப்படுகிறது. ஞானம் மற்றும் அனந்தம் பிரம்மம் பரமாத்மா நிர்விசேஷம் (பண்பு இல்லாதது) என்று கூறவில்லை, மறுபுறம் பரமாத்மா சத்யத்வம், ஞானத்வம் மற்றும் அனந்தத்வ குணங்களால் பிரகாசிக்கிறார் என்று அர்த்தம். சத்யத்வா என்பது அவரது ஸ்வரூபத்தில் அல்லது உள்ளார்ந்த இயல்பில் எந்த மாற்றமும் இல்லை, எனவே அவர் உணர்ச்சியற்ற உடலிலிருந்தும், உடலுக்குள் இருக்கும் விடுவிக்கப்படாத ஆன்மாவிலிருந்தும் வேறுபட்டவர் (உணர்வற்ற உடல் தொடர்ச்சியான மாற்றத்திற்கு கீழ் செல்கிறது). ஞானத்வா என்றால் உணர்வு அல்லது தர்ம பூத ஞானம் என்பது எப்போதும் வரம்பற்றதாகவோ அல்லது எல்லையற்றதாகவோ இருக்க உதவுகிறது. எனவே அவர் முக்தாத்மா அல்லது முக்தி பெற்ற ஆத்மாவிலிருந்து வேறுபட்டவர், ஏனென்றால் அவர் முக்தியற்ற நிலையில் அல்லது சம்சாரத்தில் இருந்தபோது அவரது தர்ம பூத ஞானம் குறைவாக இருந்தது. அனந்தத்வா என்றால் பரமாத்மா என்பது இடம், நேரம் மற்றும் பொருள் ஆகியவற்றில் வரம்பற்றது. எனவே அவர் நித்யசூரிகளிடமிருந்து வேறுபட்டவர். பரமாத்மா விண்வெளியைப் பொறுத்தவரை எல்லையற்றவர் என்றால் அவர் எங்கும் இருக்கிறார். நேரத்தைப் பொறுத்தவரை அவர் வரம்பற்றவர் என்றால் அவர் எப்போதும் இருக்கிறார். பொருளைப் பொறுத்தவரை அவர் வரம்பற்றவர் என்றால், அவர் உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களில் அந்தர்யாமியாக இருக்கிறார், மேலும் ஒவ்வொரு பொருளும் அவருக்கு உடல். அவ்வாறே மேலே கூறப்பட்ட சர்வ அறிவாற்றல் போன்ற மற்ற குணங்களும் உள்ளன. எனவே பரமாத்மா என்பது உபாய லிங்கம். நேத்தி, நேத்தி என்ற வார்த்தைகளின் பொருள் வேறு, அது பின்னர் கையாளப்படும்.

(இ) உபநிடத நூல்கள், பகவத் கீதை மற்றும் புராணங்களில் பரமாத்மா உபாய லிங்கம் என்று ஏராளமான நூல்கள் உள்ளன.

(ஊ) சூரியன் (சூர்யா) மற்றும் ஆகாஷாவின் உவமைகள் சூத்ரகாரரால் இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது பரமாத்மா ஒவ்வொரு உயிரினத்திலும் அல்லது பொருளிலும் அந்தர்யாமியாக வாழ்ந்தாலும் களங்கமற்றவர் என்பதை நிறுவுவதற்காக. ஆகாசம் ஒவ்வொரு பொருளோடும் தொடர்பு கொள்கிறது, ஏனெனில் அது ஒவ்வொரு பொருளுக்கும் மேலானது மற்றும் குறைபாடற்றது. தண்ணீரின் ஒவ்வொரு அடுக்கிலும் சூரியனின் படங்கள் காணப்படுகின்றன மற்றும் கண்ணாடியில் பொருட்களின் படங்கள் காணப்படுகின்றன. சூரியன் குறைபாடுகளிலிருந்து விடுபட்டது, மேலும் பிரம்மம் அல்லது பரமாத்மாவும் குறையற்றது மற்றும் உபய லிங்கம்.

(g) இந்தச் சூழலில், ஒவ்வொரு உயிரினத்திலும் பரமாத்மாவின் இருப்பு உண்மையாக இருப்பதால், மேலே கூறப்பட்ட உவமை நல்லதல்ல என்ற கருத்தை எதிராளி எழுப்புகிறார். மேற்கூறிய கருத்துக்கு சூத்திரகாரர் பின்வருமாறு பதிலளிக்கிறார்.

ஆகாஷா அல்லது ஆகாயம் ஒவ்வொரு பொருளுடனும் தொடர்பு கொண்டாலும் பொருளின் அளவு மாறுபாடுகளுக்கு உட்பட்டது அல்ல. ஒரு பொருள் பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருக்கலாம். அதே போல் தண்ணீரில் சூரியனின் உருவம் உண்மையில் இல்லை என்றாலும். ஆனால் புள்ளி என்னவென்றால், சூரியனின் படம் தண்ணீரின் கொள்கலனின் அளவிற்கு உட்பட்டது அல்ல. உதாரணத்திற்கு,. படம் ஒரு சிறிய பாத்திரத்தில் அல்லது ஒரு பெரிய தொட்டி அல்லது ஏரியில் உள்ள தண்ணீரில் இருக்கலாம். அதுபோலவே அனைத்துப் பொருட்களிலும் பரமாத்மா வசிப்பது, உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் களங்கமற்றது மற்றும் மங்களகரமான பண்புகளின் களஞ்சியமாகும்.

(h) பூர்வபக்ஷி மற்றொரு கருத்தை எழுப்புகிறது, இது பிரம்ம சூத்திரங்களை இயற்றிய முனிவரான பதராயணன் (வேதவியாச பகவான்) பதிலளித்தார். புள்ளி பின்வருமாறு.

பிருஹதாரண்யக உபநிடதத்தில் (4 வது அத்தியாயம் 3 வது உப பீஷன்) பிரம்மன் அல்லது பரமாத்மாவுக்கு இரண்டு வடிவங்கள் அல்லது உடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்று உணரக்கூடியது மூர்த்தம் என்றும் மற்றொன்று உணர முடியாதது அமூர்தம் என்றும். மூர்த்தம் என்றால் கடினமானது, அமூர்தம் என்றால் மென்மையானது.

பூமி, நீர் மற்றும் நெருப்பு ஆகிய கூறுகள் மூர்த்தத்தை உருவாக்குகின்றன; அவை கடினமானவை, அழியக்கூடியவை அல்ல, அவை நம் புலன்களால் உணரப்படுகின்றன. சூரிய மண்டலம் என்றும் அழைக்கப்படும் சூரிய வட்டு இந்த மூன்று கூறுகளின் சாராம்சமாகும். இந்த சோலார் டிஸ்க்கை நம் கண்களால் பார்க்க முடியும் மற்றும் மேலே விவரிக்கப்பட்ட முறையில் தியானம் செய்ய வேண்டும்.

ஆகாயம் மற்றும் காற்று ஆகிய கூறுகள் அமுர்த்தம் ஆகும், அவை மென்மையானவை, அழியாதவை. இந்த இரண்டு கூறுகளின் சாராம்சம் சூரிய வட்டின் மையத்தில் இருக்கும் புருஷா அல்லது பரமாத்மாவில் உள்ளது. அவரை அப்படியே தியானிக்க வேண்டும். இந்த புருஷன் மஞ்சள் நிற வேட்டியையும், சிவப்பு நிற பூச்சியைப் போன்ற நிறமுள்ள போர்வையையும் அணிந்துள்ளார், மேலும் அவரது உடல் சிவப்பு நிற தாமரை மலர் போன்றது (நெருப்பின் சுடரைப் போன்ற சிவப்பு நிறம்) மற்றும் பல மின்னல்கள் ஒரே நேரத்தில் நிகழும். சூரிய வட்டில் அல்லது சூரிய மண்டலத்தில் மேற்குறிப்பிட்ட புருஷரை தியானிப்பவர், ஒரே நேரத்தில் நிகழும் பல மின்னல்களைப் போல பிரகாசிக்கிறார்.

மேற்கூறியவற்றைத் தவிர, சூரிய வட்டின் மையத்தில் இருக்கும் பிரம்மன் அல்லது ஸ்ரீமன் நாராயணனைப் பற்றி மேற்கூறியவற்றைப் பிரசங்கித்த பிறகு, பிரம்மனின் மகத்துவம் மேலே விவரிக்கப்படவில்லை என்று உபநிடதம் கூறுகிறது. உண்மையில் அவரது மகத்துவம் வரம்பற்றது மற்றும் மேலே கூறப்பட்டதை விட எந்த பொருளும் அல்லது உயர்ந்ததாக இருப்பதும் இல்லை. உணர்வற்ற உயிரினமான பிரகிருதியிலிருந்தும், அனைத்து அம்சங்களிலும் உணர்வுள்ள ஜீவாவிலிருந்தும் அவர் வேறுபட்டவர்.

ஆனால் உபநிடதம் மேற்கூறியவற்றைக் கூறும்போது “நேதி நேதி” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.

ஒரு அத்வைதினாக இருக்கக்கூடிய பூர்வபக்ஷி நேத்தி நேத்தி (இல்லை, இல்லை என்று பொருள்) என்ற வார்த்தைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மேலே சொன்ன உபநிடதம் பிரம்மனின் மகத்துவத்தை விளக்கியது, அதன் பிறகு திடீரென்று பிரம்மன் நிர்குணன் அல்லது நிர்விஷேஷம் என்று எந்த அர்த்தமும் இல்லாமல் சொன்னது. .

இந்த சூழலில் சூத்ரகாரர் பூர்வபக்ஷியின் மேற்கண்ட வாதத்தை “ப்ரக்ருத ஏதவத்வம் ப்ரதிஷேததி ததோ ப்ரவீதிச்ச பூய:” என்ற சூத்திரத்தில் மறுத்தார்.

இதன் பொருள் என்னவென்றால், உபநிடதம் பிரம்மத்தின் மகத்துவத்தின் எல்லையை மறுத்து, மேலும் அதன் தன்மை மற்றும் பண்புகளில் மேற்கூறிய பிரம்மத்தை விட உயர்ந்த பொருள் எதுவும் இல்லை என்று கூறியது. எனவே ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே உயர்ந்தவர் மற்றும் உபய லிங்கம்.

(i) பிரத்யக்ஷ மற்றும் அனுமன் போன்ற வேறு எந்த அதிகாரத்தினாலும் பிரம்மனை உணர முடியாது. (பிரத்யக்ஷ என்பது சிற்றின்ப உணர்வு மற்றும் அனுமன் அனுமானம்) மேலும் அவர் வேதங்களால் மட்டுமே உணரப்பட வேண்டும். பக்தி யோகம் எனப்படும் தீவிர தியானத்தால் அவரை உணர முடியும். முனிவர் வாமதேவர் பக்தி யோகம் செய்ததன் மூலம் பரமாத்மாவை அவரது உடல் வடிவில் உணர்ந்தார்.

இறுதியாக, சூத்ரகாரர் மேலே விவரிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே பரமாத்மா உபய லிங்கம் என்றும், அவர் அனைத்து எல்லையற்ற மங்கள குணங்கள் அல்லது கல்யாண குணங்களின் களஞ்சியமாக இருக்கிறார் என்றும் முடிவு செய்கிறார்.

இந்தப் பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் அஹிகுண்டலாதிகரணம் எனப்படும். இது நான்கு சூத்திரங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் முதல் இரண்டு பூர்வபக்ஷ சூத்திரங்கள் மற்றும் பிந்தைய இரண்டு சித்தாந்த சூத்திரங்கள்.

இந்த அதிகாரத்தில் பிராமணனுக்கும் உணர்வற்ற உயிரினத்துக்கும் இடையே சரியான உறவு நிலைநாட்டப்படுகிறது. அந்தர்யாமியாகவும் ஆத்மாவாகவும் இருக்கும் பிரம்மன் (ஸ்ரீமன் நாராயணன்) தனது உடல்களாகிய அணு வடிவில் (சூக்ஷ்ம வடிவம்) உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களுக்கு அந்தர்யாமி மற்றும் ஆத்மா என்று முன்பே நிரூபிக்கப்பட்டது. அவர் பிரபஞ்சத்திற்கு உபாதானகரனாகவும், நிமித்த காரனாகவும் மாற விரும்புகிறார் (உபாதானகாரணம் ஜடக் காரணம் மற்றும் நிமித்த கரணமே செயல்பாட்டுக் காரணமாகும்) பின்னர் அந்தர்யாமி அல்லது ஆத்மாவாக மாறி உணர்வுள்ள உயிரினங்கள் மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களாக மாறுகிறார். ஜீவா என்றாலும் உணர்வுப்பூர்வமான உயிரினம் அணு அளவுள்ளது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

அவரது புண்ணிய பாப கர்மாவின் படி அவரது உடல் தேவ சரீர (வான) மனுஷ்ய சரீர (மனித உடல்), திரியாக்ஷரீரா (விலங்கு உடல்) அல்லது ஸ்தாவர (உயிரற்ற) வடிவத்தில் இருக்கலாம். மனித உடலிலும் கூட அது ஆண் உடலாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.

ஒவ்வொரு பொருளும் பிரம்மம், ஒவ்வொன்றும் ஆத்மா என்று சில உபநிடத நூல்கள் உள்ளன. இங்கு ஆத்மா என்பது பரமாத்மா. இந்த இரண்டு நூல்களும் பிரம்மன் தன்னை ஒரு உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினம் என்று கருதுகின்றன. இது அபேத ஸ்ருதி என்று அழைக்கப்படுகிறது, பிரம்மன் தாமே சேதனா (உணர்வு) மற்றும் அசேதன (உணர்வற்றவர்) மற்றும் வேறுபாடு இல்லை. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் நாமமும் வடிவமும் அளித்து நாம ரூப வியாகாரம் செய்ய ஜீவனைத் தன் உடலாகக் கொண்ட ஜீவாவுடன் சேர்ந்து ஒவ்வொரு உடலுக்குள்ளும் பிரம்மன் அல்லது பரமாத்மா பிரவேசிக்கிறார் என்று சாந்தோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது, இந்த உரையில் தெளிவாகிறது. பிரம்மன் ஜீவனிலிருந்து வேறுபட்டது, ஜீவா என்பது உயிரற்ற அவனது உடலிலிருந்து வேறுபட்டது. இந்தப் பின்னணியில்தான், இந்த அதிகாரத்தில் பூர்வ பக்ஷ சூத்திரமான முதல் சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரர் “உபய வ்யாபதேசத் அஹிகுண்டலவத்” என்று வாசிக்கிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. பிரம்மன் அல்லது பரமாத்மா என்பது சிருஷ்டிக்கு முன் ஒரே ஒரு பொருளாகும், அது சிருஷ்டியின் போது உணர்வு மற்றும் உணர்வு இல்லாத இரு பொருள்களின் வடிவங்களை எடுத்துக்கொள்கிறது.

இது படைப்பிற்கு முன் ஏகா (ஒன்று) என்றும், படைப்பின் போது நானா (பல) என்றும் கூறப்படுகிறது. பூர்வபக்ஷி, பரமாத்மா ஏகா (ஒன்று) அல்லது நானா (சேதனா மற்றும் அச்சேதனா போன்ற பலர்) இரண்டு வெவ்வேறு வடிவங்களில் ஒன்று ருஜுபவம் (உண்மையான வடிவம் அல்லது நேரான வடிவம்) மற்றும் மற்றொன்று குண்டல பாவம் (சுருண்ட வடிவம்) ஆகியவற்றைக் கொண்ட ஒரு பாம்பாக இருக்கலாம் என்று வாதிடுகிறார். உண்மையான வடிவத்தில் அல்லது நேரான வடிவத்தில் அது ஏகா (ஒன்று) மற்றும் சுருள் வடிவத்தில் அது நானா (பல) ஆகும்.

எனவே இந்த சூத்திரத்தின்படி பிராமணனே உயிருள்ள பொருட்களில் வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறார்.

இரண்டாவது பூர்வ பக்ஷ சூத்திரத்தில், பிராமணனும், உணர்வற்ற உயிரினமும் (அச்சேதனா அல்லது உயிருள்ளவை) எரியும் விளக்கு மற்றும் அது வெளியிடும் ஒளி போன்ற ஒரே வகையைச் சேர்ந்தவை என்று வாதிடப்படுகிறது. விளக்கு ஒளியிலிருந்து வேறுபட்டது. பிரம்மன் இரண்டு வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறார் என்ற முந்தைய பார்வைக்கு மாறாக இது உள்ளது.

“பூர்வவத்வா” என்று படிக்கும் மூன்றாவது சூத்திரத்தில், முந்தைய இரண்டு வெவ்வேறு வாதங்களும் நிராகரிக்கப்படுகின்றன, அதே போல் ஜீவா என்பது 3 ஆம் அதிகாரத்தில் கடைசி அதிகாரத்தில் நிறுவப்பட்ட ஒரு உடல் என்பது போல உணர்ச்சியற்ற உயிரினமும் பரமாத்மாவின் உடல் என்று கூறி நிராகரிக்கப்படுகிறது. 2வது அத்தியாயத்தின் பதம். பூர்வவத் என்றால் முன்பு போல் என்றும், “வா” என்றால் முந்தைய இரண்டு சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை நிராகரித்தல் அல்லது மறுத்தல் என்றும் பொருள்.

கடைசி சூத்திரத்தில் “பிரதிஷேதச்சா” என்று வாசிக்கப்படுகிறது. இரண்டு உபநிடத நூல்களை மேற்கோள் காட்டி பிரம்மன், உணர்வற்ற உயிரினங்களின் கறைகள் அல்லது குறைபாடுகளுக்கு உட்பட்டது அல்ல, அவை உடல்களுக்கு முதுமை மற்றும் பிற உயிரற்ற பொருட்களுக்கு அழுகும். எனவே பிரம்மம் தனது உடலாகிய உயிரற்ற பொருட்களுக்கு மட்டுமே ஆத்மாவாகவோ அல்லது ஆத்மாவாகவோ இருக்க முடியும். உடல் மற்றும் ஆன்மா வடிவம் விஷேஷனை என்றும் அழைக்கப்படுகிறது. இது அம்சம்சிபவ (அம்சா என்பது விஷேஷணம் அல்லது உடல் மற்றும் அம்சம் விசேஷம் அல்லது ஆத்மா) மற்றும் பிரகார பிரகாரி பாவம் (பிரகாரம் உடல் மற்றும் பிரகாரி ஆத்மா) என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இந்த அதிகாரமானது பரமாத்மாவின் உபாய லிங்கத்தையும், அவர் பிரபஞ்சத்தின் பொருள் மற்றும் செயல்பாட்டுக் காரணத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது அல்லது பலப்படுத்துகிறது.

இந்த பாதத்தில் உள்ள ஏழாவது அதிகாரம் “பராதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மேன்மை சந்தேகத்திற்கு இடமின்றி உண்ணப்படுகிறது, மேலும் அவர் சித்தோபாய (தயாரான பொருள்) மற்றும் அவர் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்தில் அடையும் பொருள் என்பதை நிரூபிக்க. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிராப்யா (அடையக்கூடிய பொருள்) மற்றும் பிரபகா ஆகியவை ஒன்றுதான். பிரபகா என்பது உபய என்றும், ப்ராப்யா என்பது உபேய என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நபரின் பக்தியோகம் அல்லது பிரபத்தியோகம் (சரணாகதி) செய்யக்கூடிய சத்தியோபாயத்தின் மூலம் மகிழ்ச்சியடைந்த பிறகு, சித்தோபாயரான ஸ்ரீமன் நாராயண பகவான் மோட்சத்தை வழங்குகிறார்.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் பக்தி அல்லது சத்யோபாயமாகிய பிரபத்தி செய்யாமல் வெறுமனே சித்தோபாயத்தை விட்டுவிட்டு மோட்சத்தை வழங்குகிறார் என்ற வாதம் சரியல்ல. எனவே “நிர்ஹேலுத்க கிருபா” என்ற கோட்பாடு குறைவான அருள் முற்றிலும் விலக்கப்பட்டதாகும். இந்த அதிகாரத்தில் ஏழு சூத்திரங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று பூர்வபக்ஷ சூத்திரம் மற்றும் மீதமுள்ள ஆறு சூத்திரங்கள் சித்தாந்த சூத்திரங்கள். முதல் சூத்திரம் “பரமத: சேது-உன்மன, சம்பந்த-பேத வ்யாபதேஸ்ப்ய:” என்று கூறுகிறது.

இந்த சூத்திரத்தில் பின்வரும் நான்கு காரணங்களுக்காக பகவான் ஸ்ரீமன் நாராயணனை விட உயர்ந்த ஒரு நிறுவனம் இருப்பதாக வாதிடப்படுகிறது.

(1) சேது – இதன் பொருள் பாலம். சம்சாரப் பெருங்கடலைக் கடப்பதற்கான பாலம் பரமாத்மா என்று இரண்டு உபநிடத நூல்கள் கூறுகின்றன. பாலம் என்ற சொல் பொதுவாக ஒரு கரையிலிருந்து எதிர்க் கரைக்குச் செல்வதற்கான பொருளைக் குறிக்கிறது. எனவே, எதிர்க் கரையை அடைந்த பிறகு அடையும் பொருள் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு அழைத்துச் செல்லும் பாலத்திலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். பரமாத்மா பாலமாக இருக்கும்போது, ​​எதிர்க் கரையை அடைந்த பிறகு பரமாத்மாவை விட மேலான ஒருவர் இருக்க வேண்டும் என்ற பார்வைக்கு அது வழிவகுக்கிறது. சேது என்பது பிரபகா மற்றும் மறு கரையில் உள்ள பொருள் பிராப்யா.

(2) உன்மன – இதன் பொருள் வரையறுக்கப்பட்ட அளவு. பரமாத்மாவுக்கு நான்கு கால்களும் பதினாறு உறுப்புகளும் இருப்பதாக சாண்டோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. உபநிடதத்தில் பாதம் கால் என்றும், காலா உறுப்பு என்றும் கூறப்படுகிறது. உன்னதமான உயிரினம் எல்லையற்ற அளவு என்று கூறப்படும்போது, ​​மேலே குறிப்பிட்டுள்ளபடி வரையறுக்கப்பட்ட அளவு கொண்ட பரமாத்மாவைத் தவிர வேறொரு உன்னதமான உயிரினம் இருக்க வேண்டும் என்ற பார்வைக்கு வழிவகுக்கிறது.

(3) சம்பந்த – இதன் பொருள் உறவு. ப்ராப்யாவிற்கும் பிரபகாவிற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கும்போது அவை வேறுபட்டதாக இருக்க வேண்டும், அதாவது வேறுவிதமாகக் கூறினால், பிராப்யா என்பது பிரபாகத்திலிருந்து வேறுபட்டது.

(4) பேடா – இதன் பொருள் வேறு. முண்டக உபநிடதத்தில் ஜீவன் உன்னதமான ஒரு பொருளை அடைகிறான் என்று கூறப்படுகிறது. தைத்தரிய உபநிடதத்தில் உயர்ந்ததை விட உயர்ந்தது பெரியதை விட பெரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீமன் நாராயணனே உயர்ந்தவர் என்றும் அவரை விட மேலான அல்லது பெரிய உடல் வேறு இருப்பதாகவும் இது வாதிடுகிறது.

மேலும் ஸ்வேதாஷ்வதார உபநிடதத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய புருஷரே பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளார் என்றும், ஸ்ரீமன் நாராயணனை விட மேலான (உத்தரதாரம்) ஒரு பொருள் பழுதற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய நான்கு காரணங்களால் பகவான் ஸ்ரீமன் நாராயணனை விட மேலான ஒருவர் இருக்கிறார் என்பது முடிவு.

மேற்கூறிய சூத்திரத்தைப் பின்பற்றும் ஆறு சூத்திரங்களில் உள்ள சூத்ரகாரமானது, மேலே குறிப்பிட்டுள்ள புள்ளிகளுக்கு திருப்திகரமான மற்றும் உறுதியான பதில்களை அளித்து, பகவான் ஸ்ரீமன் நாராயணனே உயர்ந்தவர், அவருக்கு மேல் வேறு எந்த உடலும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

(அ) ​​பரமாத்மா என்பது சேது அல்லது பாலம், அவருக்கு மேலே ஒருவர் எதிர்க் கரையில் இருக்கிறார் என்பதற்கு “சாமான்யத்து” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரர், சேது என்ற சொல் வேறு ஏதோ உடல் இருக்கிறது என்று பொருள் கொடுக்கப் பயன்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார். அடைய வேண்டும். சேது என்ற வார்த்தையின் அர்த்தம், பகவான் ஸ்ரீமன் நாராயணன் முழு பிரபஞ்சத்தையும் தன்னுள் வைத்திருக்கிறார், உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்கள். அவற்றுக்கிடையே எந்த கலவையும் அல்லது இணைப்பும் இல்லாமல். சேது என்ற வார்த்தை “சினோதி” என்ற வார்த்தையிலிருந்து உருவாகிறது, அதாவது பிணைத்தல் அல்லது ஒன்றாக இணைத்தல். மேலும் சேது என்பது பொதுவாக கடப்பது என்பது இந்த சூழலில் அடைவது என்று பொருள்.

எந்த கலவையும் அல்லது இணைப்பும் இல்லாமல் உண்மையில் ஜீவாக்களான உணர்வுள்ள உயிரினங்களின் குணாதிசயங்கள் பிரத்தியேகமாக வேறுபட்டவை அல்லது உணர்ச்சியற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டவை என்று அர்த்தம். ஜீவாக்களாகிய உணர்வுள்ள உயிரினங்கள் அழியும் உடல்களான உணர்வற்ற உயிரினங்களுக்குள் வசித்தாலும், அவற்றின் பிரத்தியேகமான மற்றும் உள்ளார்ந்த குணாதிசயங்களைக் கலப்பது அல்லது இணைப்பது பற்றிய கேள்வியே இல்லை. ஜீவாவின் பிரத்தியேக குணாதிசயங்கள் i) மைக்ரோ அணு அளவு (அனுத்வா) ii) எந்த வெளிப்புற உதவியும் இல்லாமல் தன் சுயத்தை உணர்ந்து கொள்வது. இது பிரத்யக்த்வா எனப்படும். அவரது உள்ளார்ந்த இயல்பு அல்லது ஸ்வரூபத்தில் உணர்வுடன் இருப்பது. iii) தர்மபூத ஞானத்தை உடையவர், இதன் மூலம் பொருள்கள் உணரப்படுகின்றன (iv) புண்ணிய மற்றும் பாவச் செயல்களைச் செய்பவர் (v) பரமாத்மாவின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட இந்தச் செயல்கள். (vi) ஒரு ஆச்சார்யா மூலம் ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளில் பிரபத்தி செய்து மோட்சத்தை அடைதல். இந்த பண்புகள் உணர்வு இல்லாத உயிரினங்களில் இல்லை.

ஆ) பரமாத்மாவின் வரையறுக்கப்பட்ட அளவைப் பற்றி, தியானத்திற்காக உபநிடதங்களில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்று சூத்திரகாரர் கூறுகிறார். இருப்பினும், பரமாத்மாவின் ஸ்வரூபத்திலும் (உள்ளார்ந்த இயல்பு) அவரது கல்யாண குணங்களிலும் எல்லையற்றவராக இருப்பதன் பண்பை இது பாதிக்காது.

c) தியானத்திற்காக எல்லையற்ற பரமாத்மா எவ்வாறு வரையறுக்கப்பட்டவராக இருக்க முடியும் என்ற கேள்விக்கு, கிடைக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமிக்க பரமாத்மா வரையறுக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது. இது ஒரு எல்லையற்ற வானம் ஒரு சாளரத்தின் வழியாகப் பார்க்கும்போது வரையறுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பதைப் போன்றது. ஆக்கிரமிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட இடம் உபாதி என்று அழைக்கப்படுகிறது.

ஈ) தொடர்புடைய உபநிடத உரையில் அமிர்தம் என்று அழைக்கப்படும் அடையும் பொருள், அதே உபநிஷத உரையில் சேது அல்லது பாலம் என்று அழைக்கப்படும் பரமாத்மாவிலிருந்து வேறுபட்டது அல்லது உயர்ந்தது என்று சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரர் கூறுகிறார். அடையும் பொருள் பிராப்யா என்று அழைக்கப்படுவதும், இந்த சூழலில் சேது என்று குறிப்பிடப்படுவதும் மட்டுமே பொருத்தமானது. எனவே இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி பகவான் ஸ்ரீமன் நாராயணன் தனது துணைவியான மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்து சித்தோபாய (தயாரான பொருள்) அல்லது பிரபாக மற்றும் மகாலட்சுமியுடன் அவரே உபேயா அல்லது பிராப்யா ஆவார். மோட்சம் அல்லது நித்திய பேரின்பம் இருவராலும் (தெய்வீக தம்பதிகள்) தங்கள் தாமரை பாதங்களில் பிரபத்தி (சரணாகதி) செய்யும் நபர் அல்லது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைந்த பிறகு வழங்கப்படுகிறது. மோட்சத்தில் அல்லது ஸ்ரீ வைகுண்ட பய லோகத்தில், இரண்டும் அடையப்பட வேண்டும் மற்றும் நித்திய சேவை இருவருக்கும் (தெய்வீக ஜோடி) செய்யப்பட வேண்டும். எனவே நமது ஸ்வாமி தேசிக சம்பிரதாயத்தில் சித்தோபயத்வம் என்பது மோட்சத்திற்கான பொருள் மற்றும் உபயத்வம் இரண்டிலும் உள்ளது.

மகாலட்சுமியின் தாமரை பாதத்தில் செய்யப்படும் சரணாகதி “புருஷகர” பிரபத்தி எனப்படும். புருஷகர் என்றால் சிபாரிசு செய்பவர் (மத்தியஸ்தம் செய்பவர்) தேவி மஹாலக்ஷ்மி பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் ஒரு நபர் (ஜீவா அல்லது தனிப்பட்டவர்) தனது தாமரை பாதத்தில் செய்யப்படும் பிரபத்தியை ஏற்கும்படி பரிந்துரைக்கவில்லை என்றால். பகவான் ஸ்ரீமன் நாராயணன் மோட்சத்தை வழங்குவதில்லை, ஏனென்றால் அவர் செய்த பாவங்களுக்காக ஒருவரை தண்டிப்பதற்காக அவர் கோலை (தண்டதாரா – தண்டா என்பது குச்சி) வைத்திருப்பவர். எனவே மனைவி மகாலட்சுமி புருஷராக இருப்பதால் இறைவனிடம் உள்ள தண்ட தாரத்வத்தின் அம்சம் மாறுகிறது.

எனவே பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு தண்ட தாரத்வம், உபயத்வம் மற்றும் உபயத்வம் என்ற மூன்று அம்சங்களும், மனைவியான மஹாலக்ஷ்மி புருஷகரத்வம், உபயத்வம் மற்றும் உபயத்வம் ஆகிய மூன்று அம்சங்களும் உடையவர். இது “அகரத்ரயா” என்று அழைக்கப்படுகிறது.

இதனாலேயே மகாலட்சுமியைப் பற்றி அகராத்ரய சம்பந்தம் அரவிந்தநிவாஸினீம் அஷ்ஷேஷ ஜகத் இஷாத்ரம் வந்தே வரத வல்லபம் என்று கூறப்படுகிறது. தற்செயலாக, மஹாலக்ஷ்மி தேவி, ஸ்ரீமன் நாராயணனைப் போலவே, பிரபஞ்சம் முழுவதையும் தன் ஸ்வரூபத்தால் வியாபிப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் இது ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பராசர முனிவரின் ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது, இது “யதா சர்வகதோ விஷ்ணு: ததைவ ஏயம் த்விஜோததேமா” என்று கூறப்பட்டுள்ளது. எனவே மஹாலக்ஷ்மியும் விபு அல்லது சர்வ பிரசன்னமாக இருக்கிறாள் அதாவது ஸ்ரீமன் நாராயணனுடன் எல்லா இடங்களிலும் இருக்கிறாள். ஒரு சிலரின் கருத்துப்படி அவள் அணு அளவு அல்லது அனு அல்ல.

(இ) ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் (ததா: யதுத்தர தாரம்) உள்ள ஒரு வாசகத்தின் அடிப்படையில் பகவான் ஸ்ரீமன் நாராயணனை விட மேலானவர் அல்லது உயர்ந்தவர் ஒருவர் இருப்பதாகக் குறிப்பிடப்பட்ட விஷயத்தைப் பொறுத்தவரை, சூத்ரகாரர் “ததா அன்ய ப்ரதிஷேதத்” என்ற சூத்திரத்தில் பல உபநிஷத நூல்கள் இருப்பதாகக் கூறுகிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணரே உயர்ந்தவர் என்றும் அவருக்கு உயர்ந்தவர் வேறு யாரும் இல்லை என்றும் பறைசாற்றுங்கள்.

அனேன ஸர்வகத்தத்வம் அயமா சப்தாதிப்ய:” என்ற சூத்திரத்தில் சூத்ரகாரர் கூறுவதுடன் இந்த அதிகாரம் முடிவடைகிறது. உபநிடதங்களில் உள்ள பல மேற்கோள்களின்படி பகவான் ஸ்ரீமன் நாராயணன் எல்லாவற்றிலும் வியாபித்து சர்வ வியாபித்திருக்கிறார், எனவே அவர் மிக உயர்ந்தவர்.

இந்த பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் “பலாதிகாரணம்” என்று அழைக்கப்படுகிறது. மோட்சம் உட்பட மனிதர்கள் செய்யும் அனைத்து கர்மாக்களுக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனே பலன்களை வழங்குகிறார் என்பது இதில் உண்ணப்படுகிறது. இவ்வுலகில் மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

I) ஐஸ்வர்யாரதி – குழந்தைகளைப் பெறுதல், செல்வம் மற்றும் தொழில் வாழ்க்கையில் உயர் பதவிகளைப் பெறுதல் போன்ற உலக இன்பங்களை அடைவதிலும், ஸ்வர்க லோகத்தில் இன்பங்களை அடைவதிலும் விருப்பம் கொண்டவர்.

வேதங்களில் வார்த்தை இன்பங்களையும் சொர்க்க இன்பங்களையும் பெறுவதற்குப் பல வழிகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

(அ) ​​புத்திரகாமேஷ்டியாக – குழந்தைகளைப் பெறுவதற்காக

(ஆ) வயவ்ய இஷ்டி – செல்வத்தைப் பெறுவதற்கு

(c) ராஜசூய யாகம் – ராஜா அல்லது மன்னராக ஆவதற்கு

(ஈ) கரீரி இஷ்டி – அல்பவிருஷ்டி என்றழைக்கப்படும் மழையின் கீழ் அல்லாமல் அதி விருஷ்டி எனப்படும் சுவிஷ்டி என்று அழைக்கப்படும் நல்ல மழையைப் பெறுவதற்கு.

(இ) ஜோதிஷ்டோம யாகம் மற்றும் பிற யாகங்கள் – பரலோக இன்பங்களைப் பெறுவதற்காக

(ஊ) நூறு அஸ்வமேத யாகங்கள் – இந்திரன் அல்லது திரிலோகாதிபதி ஆக

மற்றும் பல.

II) கைவல்யார்த்தி – தனது சொந்த ஆன்மா அல்லது ஆத்மாவை அனுபவிக்க ஆசை.

பரமாத்மாவின் அருளுக்கு உட்பட்டு தன்னையே தியானிப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.

III) மோக்ஷார்த்தி – மோட்சத்தை அடைய (சம்சாரத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுதல்) ஆசை, அது அர்ச்சிராதி மார்கா வழியாக ஸ்ரீ வைகுண்ட பையலோகத்தை அடைகிறது (திவ்ய பர்யங்கா) அங்கு பைன் தம்பதிகள் அமர்ந்து அங்கு நித்திய சேவை செய்கிறார்கள். பக்தி யோகா அல்லது பிரபத்தி செய்வதன் மூலம் இதை அடையலாம்.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம், மேலே விவரிக்கப்பட்ட பல்வேறு வழிகளுக்கு யார் பலன்களை வழங்குவது என்பதுதான்.

இந்த அதிகாரத்தில் நான்கு சூத்திரங்கள் உள்ளன, அதில் முதல் இரண்டு சித்தாந்த சூத்திரங்கள், மூன்றாவது பூர்வபக்ஷ சூத்திரம் மற்றும் 4வது சித்தாந்த சூத்திரம் பூர்வபக்ஷியின் வாதத்திற்கு பதிலளிக்கும் வகையில் உள்ளது. இந்த அதிகார முனிவர் ஜைம்னின் பூர்வபக்ஷி ஆவார், அவர் பூர்வ மீமாம்சம் அல்லது கர்மகாண்டத்திற்கான சூத்திரங்களை இயற்றினார்.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதினான்கு கற்றல் பிரிவுகளில் ஒன்றான மீமாம்ச சாத்திரம் மூன்று பிசிஷன்களைக் கொண்ட ஒரே சாத்திரம் என்பதை இந்தச் சூழலில் நினைவுபடுத்துகிறோம். மீமாம்ச சாஸ்திரம் அடிப்படையில் வேத நூல்களை சரியான முறையில் விளக்குவதற்கும் அவற்றின் அர்த்தங்களை தீர்மானிப்பதற்கும் ஆகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

யாகங்கள் மற்றும் பிற கர்மாக்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனை வழிபடுவது மற்றும் பலன்களை வழங்க அவரைப் பிரியப்படுத்துவது போன்றவற்றைக் கையாளும் வேத நூல்களைக் கொண்ட வேதங்களின் முதல் பீஷன் கர்மகாண்டம் என்று அழைக்கப்படுகிறது.

பதராயண முனிவர் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ வேதவியாச பகவானின் சீடரான ஜைமினி முனிவர், கர்ம காண்டத்தின் வேத நூல்களின் சரியான விளக்கத்திற்காக சூத்திரங்களை இயற்றும்படி ஜைமினியை வழிநடத்தினார். அதன்படி அவர் 12 அத்தியாயங்கள், 60 பதங்கள் மற்றும் 907 அதிகாரங்கள் என தொகுக்கப்பட்ட சூத்திரங்களை இயற்றினார். இவை கர்மகாண்ட சூத்திரங்கள் அல்லது பூர்வ மீமாம்ச சூத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பிரஜாபதி (நான்கு தலை பிரம்மா) பசுபதி (ருத்ரா அல்லது சிவன்), சச்சிபதி (இந்திரன்), சூரியன், சோமா (சந்திரன்), வாயு, அக்னி போன்ற பல்வேறு வானக் கடவுள்களின் இயல்பு மற்றும் வடிவத்தைக் கையாளும் தேவதா காண்டம் வேதங்களின் இரண்டாவது கோட்பாடு ஆகும். , வருணா மற்றும் பலர். இந்த வேத நூல்களின் விளக்கத்திற்காக பதராயண முனிவர் தனது சீடரான காசகிருத முனிவரை சூத்திரங்களை இயற்றும்படி பணித்தார். இந்த சூத்திரங்கள் மீண்டும் 4 அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்த சூத்திரங்களின் படைப்பாற்றலில் சில சந்தேகங்கள் உள்ளன, மேலும் ஒரு சிந்தனைப் பள்ளி எழுதியவர் ஜைமினி என்றும் மற்றொரு சிந்தனைப் பள்ளி ஆசிரியர் கசகிருதஸ்னா என்றும் கூறுகிறது. ஸ்ரீ ஸ்வாமி தேசிகன், ஜைமினி ஆசிரியராக இருந்திருந்தால், காசகிறிஸ்தர் விருத்தியை இயற்றியிருப்பார் என்று ஸ்ரீ அதிகார சரவலியில் கூறுகிறார். ஜைமினியை விட கசகிருதஸ்னா ஆசிரியராக இருந்தால் விருத்தி இயற்றியிருப்பார்.

மூன்றாவது தத்துவம் பிரம்மகாண்டத்தை உருவாக்கும் உபநிடதங்கள். இது வேதங்களின் தலைப்பகுதி அல்லது கடைசிப் பகுதி, எனவே ஸ்ருதிசிரஸ், வேதாந்தம், த்ரய்யந்த நிகமந்தம் என்று அழைக்கப்படுகிறது. பதராயண முனிவர் 545 எண்களைக் கொண்ட பிரம்ம சூத்திரங்களை இயற்றியவர் என்பதையும், 4 அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளது என்பதையும், இந்த பிரம்ம சூத்திரங்கள் இப்போது கையாளப்படுகின்றன என்பதையும் இங்கே மீண்டும் சொல்லத் தேவையில்லை. இந்த பிரம்ம சூத்திரங்களுக்கு போதாயன முனிவர் ஒரு விரிவான விருத்தியை எழுதினார்.

விருத்தி என்பது சூத்திரங்களின் அர்த்தங்களை சுருக்கமாக அல்லது விரிவாக விளக்கும் ஒரு படைப்பு. இப்போது இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில், முனிவரான பதராயணரான சூத்ரகாரர், எந்தவொரு கர்மத்திற்கும் (யாகங்களுக்கும்) உபாசனத்திற்கும் (பக்தி அல்லது தியானம்) பலன்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனால் வழங்கப்படுவதாகக் கூறுகிறார், அவர் சந்தேகத்திற்கு இடமின்றி உயர்ந்தவர் என்று நிரூபிக்கப்பட்டார். முந்தைய அதிகாரம். முதல் சூத்திரம் “பழமத: உப்பத்தே:” பழம் என்பது பழம், அத்த என்றால் ஸ்ரீமன் நாராயண உபபத்தே: அதாவது பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லமை படைத்தவர், தாராள மனப்பான்மை கொண்டவர், எனவே அவர் யாகங்கள், தானங்கள் போன்றவற்றுக்கு பலன்களை வழங்குவது மட்டுமே பொருத்தமானது. , ஹோமங்கள் மற்றும் உபாசனைகள். இரண்டாவது சூத்திரத்தில் மேற்கூறியவற்றை நிறுவுவதற்கு உபநிடத நூல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

பூர்வபக்ஷ சூத்திரமான மூன்றாவது சூத்திரத்தில், கர்மாக்கள் நேரடியாக பலன்களைத் தருகின்றன, ஆனால் உபாஸனைகள் அல்ல என்று ஜுவைமினி முனிவர் கூறுகிறார். ஜைமினி யாகங்களுக்குப் பலன் அளிக்கும் ஒரு கற்பனையான அபூர்வா இருப்பதாக கூறுகிறார்.

புண்ணிய செயல்கள் அல்லது புண்ய கர்மாக்கள் யாகங்கள், தானங்கள் மற்றும் ஹோமங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். யாகங்கள் என்பது ஒரு மிருகத்தை (ஆடு) பலியிடப்பட்டு, சோம லதாவின் சாறு (லதா என்றால் கொடி) குடிக்கப்படுகிறது. யாகங்களில் தக்ஷ்ணாகி, ஆஹவனியாக்னி, கர்ஹபத்யாக்னி என மூன்று பெயர்களைக் கொண்ட யாகத் தீகளுக்குப் பலவிதமான பொருள்களைச் செலுத்துவதற்காக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவர் யஜ, அவர் யஜாமஹே, அஸ்து வோஷட், அஷ்ரவய மற்றும் வௌஷத்.

தானங்கள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம். ஹோமங்கள் என்பது மிருக பலி இல்லாமல் அக்னிக்கு செய்யப்படும் பிரசாதம் ஆகும்.

பூர்வந்து பாதராயண ஹேது வ்யாபதேசத் என்று கூறப்படும் கடைசி சூத்திரத்தில், ஜைமினி முனிவரின் வாதத்தை மறுத்து, ஸ்ரீமந்நாராயணன் யாகங்கள் செய்யும் கர்மங்களுக்கு பலன்களை வழங்குகிறார் என்ற உண்மையை நிறுவுகிறார். உபாசனை அல்லது பக்தியோகத்திற்கு பதிலாக பிரபத்தி செய்தவருக்கு அவர் மோட்சத்தை வழங்குகிறார். ஸ்ரீ வேதாந்த தேசிகர் கூறுகிறார் மற்றும் உபாசனைகள்.

பக்தி யோகமே மோட்சத்தை அடைவதற்கான வழி என்று அனைத்து உபநிடதங்களும் ஒரே குரலில் கூறுகின்றன. பக்தி என்பது அடிப்படையில் பெரியவர்களிடம் பக்தி என்று பொருள். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மீது ஏக மனதுடன் தீவிர தியானம் செய்வது பக்தி யோகமாகும்.

பக்தி யோகாவின் எட்டு பொருட்களைக் கையாள்வதற்கு முன், அதன் துணைப் பொருட்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

இரண்டு அடிப்படை துணைகள் (1) கர்ம யோகா மற்றும் (2) ஞான யோகா.

ஸ்ரீ பகவத் கீதையில் கர்ம யோகம் மற்றும் ஞான யோகாவின் தன்மைகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

இந்த கர்ம யோகமானது சமாதி எனப்படும் ஆழ்ந்த தியானத்திற்கு இன்றியமையாத முன்நிபந்தனையான பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் மனதை ஒருமுகப்படுத்த உதவும் மனதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே உள்ளது.

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயசரத்தின் 9வது அத்தியாயத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகர் (ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் எனப் போற்றப்படுகிறார்) கர்மா மற்றும் ஞான யோகத்தின் இயல்பை மிகவும் விரிவுபடுத்தாமலோ அல்லது விரிவுபடுத்தாமலோ துல்லியமாக பின்வருமாறு விளக்குகிறார்.

கர்மயோகம்:- ஜீவா (தன் சுயம்) மற்றும் பரமாத்மாவான பரமாத்மாவின் உண்மையான இயல்பைப் பற்றிய அறிவைப் பெற்ற பிறகு, ஒருவர் தன்னால் (ஜீவா) செய்யக்கூடிய கர்ம யோகத்தை நாட வேண்டும். இந்த கர்மயோகம் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும்.

கர்ம யோகாவின் பல்வேறு வகைப்பாடுகள்

(அ) ​​தேவர்ச்சன ரூப – நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி பகவான் ஸ்ரீமன் நாராயணனை வழிபடுதல்.

(ஆ) ஜோதிஷ்டோம யாகம், வாஜபேய யாகம் போன்ற யாகம் அல்லது யாகம் செய்தல், அதில் ஆடு போன்ற விலங்குகள் பலியிடப்படும்.

(இ) சப்த, ஸ்பர்ஷ, ரூப, ரஸ மற்றும் காந்தா போன்ற சிற்றின்ப இன்பங்களின் பொருள்களிலிருந்து நமது புலன்களைக் கட்டுப்படுத்தி, அவற்றை பகவான் பரமாத்மாவை நோக்கிச் செலுத்துதல்.

(ஈ) பிராணாயாமம் செய்வதன் மூலம் நமது சுவாசத்தைக் கட்டுப்படுத்துதல்

(இ) தேவைப்படுபவர்களுக்கு அன்னதானம் வழங்குதல்.

(ஊ) உபாசினம், அக்னிஹோத்ரா மற்றும் பஞ்சமஹா யாகங்களின் தினசரி சடங்குகளைச் செய்தல்.

(g) தபஸ் செய்தல். தபஸ் என்றால் தவம்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் தவங்களை கிருச்ச்ரா, சந்திராயணம் போன்றவற்றை விளக்குகிறார். சிரமப்பட்டு சபதத்துடன் செய்யப்படும் செயலே கிரிச்சரம் எனப்படும். அதில் உண்ணாவிரதமும் அடங்கும். எந்த ஒரு சபதத்துடன் செய்யப்படுகிறதோ அதுவே விரதம் எனப்படும்.

சந்திராயண விரதத்தில் உணவு உட்கொள்வதை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒரு வாய் நிறைய உணவு கிராசா. உணவு உட்கொள்வதற்கான கட்டுப்பாடு பின்வருமாறு.

சுக்ல பக்ஷத்தின் ஆரம்பம் (பௌர்ணமி அல்லது பூர்ணிமாவுடன் முடிவடையும் பதினைந்து நாட்கள்) பௌர்ணமி நாள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு கிராஸால் உணவின் அளவை அதிகரிக்க வேண்டும் மற்றும் பௌர்ணமி நாளில் முழு சதுரம் இருக்கும். உணவுகள். அமாவாசை நாளில் முடிவடையும் கிருஷ்ண பக்ஷத்தின் தொடக்கத்தில் இருந்து, அமாவாசை நாளில் (அமாவாசை) கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக மாறும் வகையில், ஒவ்வொரு நாளும் கிராஸால் உணவின் அளவைக் குறைக்க வேண்டும், அன்று விரதம் இருக்க வேண்டும். நாள்.

மேற்கூறியவை தபஸ் எனப்படும்.

h) புனித நீரில் புனித நீராடுவதும் கர்ம யோகத்தின் ஒரு வடிவமாகும்.

i) வேதங்களைக் கற்றல்

j) வேத நூல்களின் பொருளை அறிவது

மேலே உள்ள அனைத்தும் கர்ம யோகாவின் கடினமான வடிவங்கள் மற்றும் ஒரு நபர் அவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொள்ளலாம். இந்த கர்ம யோகத்தைச் செய்வதன் மூலம், ஒருவரின் சுயத்தை உணர்ந்து மனம் தூய்மையடைகிறது.

இந்த கர்ம யோகம் தினசரி மூன்று முறை சந்தியா வந்தனம் மற்றும் நித்ய நைமித்திக கர்மாக்கள் என்று அழைக்கப்படும் பிற தொடர்புடைய கர்மாக்களை செய்வதைத் தவிர என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஞானயோகம்:- மேலே விளக்கியபடி கர்மயோகம் செய்து மனதைத் தூய்மைப்படுத்தி, மனதை வென்ற பிறகு, உடலிலிருந்து வேறுபட்டு, ஜீவா என்பது பரமாத்மாவால் ஆதரிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு தனக்குக் கீழ்ப்பட்டதாக உணர்ந்த பிறகு, ஜீவாத்மாவாகும். . ஒரு நபர் இடைவேளையின்றி எப்போதும் தன்னைப் பற்றியே தியானிக்க வேண்டும். கர்ம யோகம், ஞான யோகம் ஆகியவற்றால் ஒருவன் தன் சுயத்தை உணர்ந்து, தன் சுய இன்பத்தின் இன்பத்தில் அகப்படாமல் இருந்தால், அவன் பக்தி யோகத்தில் இறங்குகிறான், அதுவே உயர்ந்த இலக்கை அடைவதற்கான நேரடி வழிமுறையாகும். ஸ்ரீ வைகுண்ட பய லோகத்தில் பரமாத்மாவின் இன்பம். ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஒரு அழகான உதாரணத்தைக் கூறுகிறார். நகைகள் அடங்கிய நகை மற்றும் நகை பெட்டி உள்ளது. நகைப் பெட்டிக்குள் இருக்கும் நகையைப் பார்க்க, முதலில் நகைப் பெட்டியைப் பார்க்க வேண்டும். அதுபோலவே இங்கும் ஒவ்வொரு உயிரினத்திலும் அந்தர்யாமி அல்லது உள் ஆன்மாவாக இருக்கும் பரமாத்மா ரத்தினமாகவும், ஜீவாத்மாவாகிய அந்தரங்க ஆத்மாவும் நகைப் பெட்டியாகவும் இருக்கிறது. ஆத்மவலோகனம் எனப்படும் தன் சுயத்தை உணர்ந்த பிறகு இருக்கும் நகைப்பெட்டியைப் பார்த்த பிறகு, ஜீவாத்மாவே அவருக்கு உயர்ந்த ஆத்மாவாகிய அந்தர்யாமியைக் காண ஆசைப்படுவது இயற்கையாகவோ அல்லது வெளிப்படையாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ இருக்கிறது. எனவே இந்த ஆத்மவலோகனம் பக்தி யோகத்தை நாட விரும்பும் ஒருவருக்கு நித்திய பேரின்பம் அல்லது மோட்சத்தை அடைய அடிப்படை தகுதியை வழங்குகிறது.

பக்தி யோகா பற்றிய விவரங்கள் பின்னர் கையாளப்படும்.

கர்ம யோகா மற்றும் ஞான யோகா பயிற்சியில் பின்வரும் ஏழு பொருட்களும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த ஏழு பொருட்கள் சாதனாசப்தகம் என்று அழைக்கப்படுகின்றன, ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தின் தொடக்கத்தில் லகு சித்தாந்தத்தில் குறிப்பிடுகிறார்.

சாதனா சப்தகா அல்லது ஏழு பொருட்கள் பின்வருமாறு.

இந்தச் சூழலில் பக்தி யோகம் துருவ ஸ்மிருதி அல்லது துருவனுஸ்மிருதி என்று அழைக்கப்படுகிறது. ஸ்மிருதி அல்லது அனுஸ்மிருதி என்பது அந்தர்யாமி அல்லது தியானம் செய்பவரின் உள் ஆன்மாவாக இருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை தியானிப்பதாகும். துருவா என்பது மனதின் ஆழ்ந்த செறிவு என்று பொருள்படும், அதாவது தியானத்தின் போது இடையில் வேறு எந்த சிந்தனையும் வர அனுமதிக்காது. மேலே குறிப்பிடப்பட்ட சாதனா சப்தகத்தால் மட்டுமே இந்த மனநிலை சாத்தியமாகும்.

சாதனா சப்தகத்தின் விவரங்கள் பின்வருமாறு.

1) விவேகா – நாம் உண்ணும் உணவு மூன்று குறைபாடுகள் இல்லாததாக இருக்க வேண்டும். ஜாதிதுஷ்டம், ஆஷ்ரய துஷ்டம், நிமித்த துஷ்டம் ஆகிய மூன்று தோஷங்கள்.

ஜாதிதுஷ்டம் – வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், முருங்கைக்காய் போன்ற தடைசெய்யப்பட்ட வகைகளில் இருந்து எழும் குறைபாடுகள்.

ஆஷ்ரய துஷ்டம் – முடி போன்ற சில புனிதமற்ற பொருட்களுடன் உணவின் இணைப்பில் ஏற்படும் குறைபாடுகள். பித்தளை அல்லது வெண்கல பாத்திரத்தில் தேங்காய், செம்பு பாத்திரத்தில் தேன், நெய் மற்றும் பால் இரும்பு பாத்திரத்தில் பரிமாறப்படுகிறது.

நிமித்த துஷ்டம் – சில விசேஷமான அல்லது வித்தியாசமான சூழ்நிலைகளில் தயாரிக்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த சூழ்நிலைகள் நிமித்தம் என்று அழைக்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தொடும் உணவு. பிராமணர்களால் விற்கப்படும் பால், நாய்கள், காக்கைகள், சேவல்கள், எலிகள், பூனைகள் மற்றும் சிறு குழந்தைகள் தொடும் உணவு. மனிதர்கள் மற்றும் கால்நடைகளால் உணவு மணம். நம் கால்களை கழுவிய பின் பாத்திரத்தில் உள்ள நீர் சமநிலை போன்றவை.

சாண்டோக்யோபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, நாம் உண்ணும் உணவு தூய்மையாக இருந்தால், பக்தி யோகத்தில் தியானம் செய்ய உதவும் சத்வ குணம் நம் மனதில் அதிகரிக்கும்.

2) விமோகா – ஆசைகள் குறிப்பாக பாலுறவில் இருந்து விடுபட்டது. அமைதியான மனதுடன் தியானம் செய்ய வேண்டும். ஒலி, தொடுதல், அழகு, சுவை, மணம் போன்ற பொருட்களை ரசிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கக்கூடாது. ஆசை நிறைவேறவில்லை என்றால் அது கோபத்திற்கு வழிவகுக்கும். கோபம் இருந்தால் நிம்மதி இருக்காது.

3) அபியாசா – இதன் பொருள் மீண்டும் மீண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருள் வடிவத்தை மனம் தியானிக்க வேண்டும். தியானத்திற்கு பொருத்தமான இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுப்பதையும் இது குறிக்கிறது, இதனால் கவனம் செலுத்துவது சாத்தியமாகும்.

4) க்ரியா – க்ரியா என்பது தினசரி சடங்குகளை முடிந்தவரை நிறைவேற்றுவதாகும், குறிப்பாக தேவயக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம், மோனுஷ்ய யாகம் மற்றும் பிரம்ம யக்ஞம் போன்ற பஞ்சமஹாயக்ஞங்கள். மேற்குறிப்பிட்ட பஞ்ச மகா யக்ஞம் உள்ளிட்ட அன்றாடச் சடங்குகளைச் செய்பவர்கள் பிரம்ம வித்தாகங்களில் சிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பிரம்ம வித் என்றால் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றிய முழுமையான ஞானம் கொண்டவர்.

5) கல்யாணம் – சத்ய, அர்ஜவ, தயா, தான, அஹிம்சை மற்றும் அனாபித்யா ஆகிய நற்குணங்களைக் கொண்டிருத்தல்.

சத்யம் என்றால் ஜீவராசிகளிடம் கருணை காட்டுவது, ஆர்ஜவம் என்றால் மனம், பேச்சு மற்றும் செயலை முழுமையாக ஒருங்கிணைத்தல் என்று நாம் நினைப்பதையே பேச வேண்டும், பேசுவதை செயலில் வைக்க வேண்டும்.

தயா என்பது கருணை அல்லது இரக்கம் என்று பொருள்படும், வேறுவிதமாகக் கூறினால், பிறரின் துன்பத்தை அதிலிருந்து எந்தப் பிரதிபலனையோ அல்லது வெகுமதியையோ எதிர்பார்க்காமல் அதை அகற்றுவதற்கான உண்மையான விருப்பம்.

அஹிம்சை என்பது மற்றவர்களுக்கு மனம், பேச்சு மற்றும் செயலால் துன்பம் தராத முழுமையான அகிம்சை.

தானம் என்றால் பேராசை அல்லது பேராசை இல்லாதது என்று பொருள். தகுதியான மற்றும் தேவையுள்ள நபருக்கு அவர் நேர்மையான வழிகளில் பெற்ற எந்தவொரு பொருளையும் வழங்குவதும் இதன் பொருள்.

அனாபித்யா என்றால் மற்றொரு மனிதனின் சொத்து மற்றும் செல்வத்தை தன்வசப்படுத்த ஆசைப்படாமல் இருப்பது.

மற்றவர்களுக்குத் தீங்கிழைக்க நினைக்காதது என்றும் பொருள். மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் இருக்கக்கூடாது. பகவத் கீதையின் 13 வது அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணரால் சொல்லப்பட்ட குணங்கள் மற்றும் கௌதம தர்ம சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தனிப்பட்ட ஆன்மாவின் எட்டு குணங்களையும் இது குறிக்கிறது.

6) அவவசதா – அவசாதா என்றால் துன்பம், துக்கம் அல்லது துக்கம். அனவசாதா என்றால், துன்பம் இல்லாமல் இருப்பது அதற்கு நேர் எதிரானது. பக்தி யோகத்தை நாடுபவர் மன வருத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.

7) அனுதர்ஷா – உத்தர்ஷா என்றால் அதிகப்படியான மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சி. அனுத்தர்சா என்றால் அதற்கு நேர் எதிரானது, அதிக மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது. பக்தி யோகம் செய்ய ஒருவருக்கு இதுவும் இருக்கக்கூடாது.

மேலே விவரிக்கப்பட்ட சாதனா சப்தகம் (ஏழு புள்ளிகள்) கர்ம யோகத்துடன் இருக்க வேண்டும் அல்லது மேலே விளக்கப்பட்டுள்ளபடி கர்ம யோகம் மற்றும் ஞான யோகம் இரண்டையும் சேர்த்து இருக்க வேண்டும், மேலும் இவை ஒரு நபர் பக்தி யோகம் செய்வதற்கு இன்றியமையாத முன்நிபந்தனைகள் ஆகும்.

பக்தி யோகம்:- மீண்டும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாராவின் உபய விபாக அதிகாரத்தில் பக்தி யோகத்தின் தன்மையை அழகாக விளக்குகிறார் அது பின்வருமாறு.

பக்தி யோகம் என்பது தியானத்தின் ஆதரவாளரான, வேறு எந்த உடலின் கட்டுப்பாட்டிலும் இல்லாத, வேறு எந்த உடலுக்கும் அடிபணியாத பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மீது அதீத பக்தியுடன் ஆழ்ந்த தியானம் ஆகும். இந்த தியானம் என்பது எண்ண ஓட்டம் போன்ற எண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டம், இது மனதில் இறைவனை உணரும் நிலைக்கு வழிவகுக்கும், இது வெளிப்புற மற்றும் முழு உணர்தலுக்கு கிட்டத்தட்ட சமமானது. பரம ஸ்தலமான ஸ்ரீ வைகுண்ட திவ்யலோகத்திற்கு அவர் பயணம் செய்யும் நாள் வரை ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய வேண்டும், மேலும் இந்த ஆன்மா இந்த சரீரத்தை விட்டு வெளியேறும் முன் இறைவனை நினைவு கூர்ந்து முடிவடையும். இதற்கு ஆன்டிமாஸ்மிருதி என்று பெயர். கர்ம யோகத்துடன் ஒருவரின் வர்ணம் (சாதி) மற்றும் ஆசிரமம் (வாழ்க்கை நிலை) ஆகியவற்றின் படி தினசரி சடங்குகளின் செயல்திறன் ஏற்கனவே கூறியது போல். சாதனா சப்தகா மற்றும் ஆத்மா அல்லது கர்ம யோகத்துடன் ஒரு சுயத்தை உணர்தல்,

பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு சாதிகள். வாழ்க்கையின் நான்கு நிலைகள் அல்லது நான்கு ஆசிரமங்கள் பிரமச்சார்யா, க்ரிஹஸ்தா, வானபிரஸ்தம் மற்றும் சம்யாசம் (இளங்கலை, திருமணம், காட்டில் வாழ்வது மற்றும் துறவி).

பக்தி யோகத்தை பிராமண, க்ஷத்திரிய, வைசிய சாதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். (இந்த பக்தி யோகம் திரிவர்ணிகாதிகாரம் அல்லது மூன்று வர்ணங்களுக்குள் மட்டுமே உள்ளது). பெண்களும் பக்தி யோகம் செய்யத் தகுதியற்றவர்கள், ஏனென்றால் சூத்திரர்கள் மற்றும் பெண்கள் இருவரும் வேதம் ஓதத் தகுதியற்றவர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேதங்கள் அவர்களுக்கு அணுகப்படவில்லை.

மோட்சம் அல்லது முக்திக்கான வழிமுறையாக பரிந்துரைக்கப்படும் இந்த பக்தி யோகம் பரபக்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த பரபக்தியானது பகவான் ஸ்ரீமன் நாராயணனை உணரும் ஆழ்ந்த விருப்பத்தை உருவாக்குகிறது. தியானத்தின் போது இந்த உணர்தல் அடையப்படும் போது இந்த நிலை பரஞானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பரஞானம் பரம பக்தி எனப்படும் பரம பக்தி என்று அழைக்கப்படுகிறது. பரபக்தி, பரஞானம், பரம பக்தி ஆகிய மூன்று நிலைகளைக் (நிலைகள்) கடந்த சம்பந்தப்பட்ட நபருக்கு மோக்ஷம் வழங்குவதை விரைவுபடுத்த இந்த பரம பக்தி ஸ்ரீமன் நாராயணனைச் செய்கிறது.

“சமாதி” என்று அழைக்கப்படும் ஆழ்ந்த தியான நிலையை அடைய ஏழு கீழ் படிகள் உள்ளன, மேலும் இந்த ஏழு படிகள் சமாதி நிலையுடன் அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது.

பக்தி யோகாவின் எட்டு அங்கங்கள் அல்லது துணை (கூறுகள்) ஆகும்

1) யமம் – இது புலன்களைக் கட்டுப்படுத்தும் பொருள். இதில் ஐந்து துணைத் துணைகளை மட்டும் பயிற்சி செய்து சாதித்தால் இது சாத்தியமாகும். ஐந்து துணை துணைகள் ஆகும்

(அ) ​​பிரம்மச்சரியம் அல்லது பிரம்மச்சரியம் – ஒருவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்களை விரும்பக் கூடாது. அவன் தன் மனைவிக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.

(ஆ) அஹிம்சை – ஒருவர் மற்றவர்களுக்குத் தீங்கு செய்யவோ, பேசவோ, சிந்திக்கவோ கூடாது.

(இ) அஸ்தேயா – ஒருவர் மற்றவரின் உடைமைகளையோ அல்லது சொத்தையோ திருடக்கூடாது. பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு எப்போதும் கீழ்ப்படிந்த மற்றும் பிரத்தியேகமான சொத்தாக இருக்கும் அவரது ஆன்மா முற்றிலும் சுதந்திரமானது மற்றும் கீழ்ப்படிந்தது இல்லை என்று ஒருவர் நினைக்கக்கூடாது. மேற்கூறியவாறு அவர் நினைத்தால் அவர் ஆத்மபஹாரி (ஆன்மாவைத் திருடியவர்) என்று குற்றம் சாட்டப்படுவார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பொருளை மற்றொன்றைச் சொந்தமாக நினைப்பதே திருடுதல். ஆத்ம பஹாரா இந்த உலகிலேயே மிகப் பெரிய குற்றம்.

(ஈ) அபரிகிரஹா – தன் சுயநலத்திற்காக எந்தப் பரிசையும் ஏற்காதது.

(இ) சத்தியம் – ஒருவன் மற்றவர்களுக்குச் சுவையாக இருக்கும், அவர்களால் நன்றாகப் புரிந்துகொள்ளப்படும் உண்மையைப் பேச வேண்டும். விரும்பத்தகாத விஷயம் என்றாலும் உண்மை அல்லது உண்மை பேசக்கூடாது.

2) நியமா – அனைத்து புலன்களையும் ஒருவரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல் மற்றும் எந்த ஒரு பொருள் இன்பம் தரும் பொருளின் பின்னால் ஓட அனுமதிக்காது. இது மீண்டும் ஐந்து துணை துணைகளைக் கொண்டுள்ளது, அவை பின்வருமாறு.

(அ) ​​சந்தோஷம்:- தனக்குக் கிடைத்ததில் திருப்தியடைதல் மற்றும் பொருள் இன்பப் பொருட்களைத் தவிர்ப்பது.

(ஆ) சௌசம் – சௌசம் என்றால் சுத்திகரிப்பு என்று பொருள். இந்த சுத்திகரிப்பு இரண்டு வகைப்படும். முதலாவது வெளிப்புற சுத்திகரிப்பு, இது சேறு மற்றும் நீரைக் கொண்டு உடலை சுத்தப்படுத்துதல் மற்றும் இரண்டாவது வகை மனதை தூய்மைப்படுத்துவதாகும். உண்ணும் உணவில் தூய்மை இருக்க வேண்டும்.

ஜாதி துஷ்டம், ஆஷ்ரய துஷ்டம் மற்றும் நிமித்ததுஷ்டம் கூடாது என்றால், சாதனா சப்தகத்தின் கீழ் முன்பு விளக்கப்பட்டது.

ஒருவர் எடுக்கும் எந்த உணவையும் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு அர்ச்சனை வடிவில் அர்ச்சனை செய்த பிறகு, சாளக்கிராமம் அல்லது பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹம் அல்லது இரண்டும் செய்திருக்க வேண்டும்.

(இ) தபஸ் – இது ஏகாதசி, ஸ்ரவண துவாதசி, ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி போன்ற விசேஷ நாட்களில் விரதம் இருக்க வேண்டும். தபஸ் என்றால் சாப்பிடுவதற்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்ப்பது அல்லது சாப்பிடாமல் இருப்பது எப்போதும் தியானத்திற்கு எதிரி.

(ஈ) ஸ்வாத்யாயா – ஒரு போதகரின் காலடியில் சாய்ந்தபின் வேதங்களை ஓதுதல். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் நாமங்களை உச்சரிப்பது என்றும் பொருள்.

(இ) ப்ரணிதானம் (பிரம்ம பிரவண்யம்) – மனதை பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் தங்க வைப்பது.

(3) ஆசனம் – அமர்ந்திருப்பது. தியானம் செய்பவர் சுத்திகரிக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும். இந்த தர்பம் (குசா புல்) மீது கோமயம் (மாட்டு சாணம்) சேர்த்து தண்ணீர் தடவி அந்த இடத்தை சுத்திகரிக்க வேண்டும். இதற்கு மேல் அகினம் (மான் தோல்) வைக்க வேண்டும். மேலே உள்ள துணியை மேலே வைக்க வேண்டும் மற்றும் இந்த ஏற்பாடு ஒரு குஷனிங் விளைவை அளிக்கிறது. மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒரு வடிவில் ஒரு மரப் பலகை. சக்கரம், பத்மம், கூர்மம், மயூரம், குக்குதம், வீரம், ஸ்வஸ்திகா, பத்ரா, சிம்ஹாசனம், முக்தாசனம், கோமுகம் ஆகியவற்றை வைத்து தியானம் செய்பவர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்க வேண்டும்.

(4) பிராணயாமம் – இதன் பொருள் மூச்சைக் கட்டுப்படுத்துவது. இது செயல்பாட்டின் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. முதல் கட்டம் ரேசகா என்று அழைக்கப்படுகிறது, இதில் இடது மூக்கை மிகக் குறுகிய விரலால் மூடி, அதற்கு அடுத்ததாக, கண்களை மூடிக்கொண்டு வலது மூக்கிலிருந்து காற்றை வெளியேற்றும். இரண்டாவது கட்டம் பூராகா என்று அழைக்கப்படுகிறது, இதில் வலது மூக்கை கட்டைவிரலால் மூடி, இடதுபுறத்தில் உள்ள காற்றை இடது மூக்கின் வழியாக உள்ளிழுக்க வேண்டும். மூன்றாவது நிலை கும்பகா என்று அழைக்கப்படுகிறது, இதில் இரண்டு மூக்குகளும் மேலே குறிப்பிட்டபடி மூன்று விரல்களால் மூடப்பட்டு, மூச்சைக் கட்டுப்படுத்தி அந்த மட்டத்தில் சுமார் 36 வினாடிகள் பராமரிக்கப்படுகிறது, இது சிறந்த காலம், 24 வினாடிகள் அடுத்தது சிறந்தது அல்லது குறைந்தபட்சம். 12 வினாடிகள். முதல் எழுத்து Aa போன்ற ஒரு குறுகிய எழுத்துக்களை உச்சரிக்க தேவையான ஒரு வினாடியை மாத்ரா என்று கருதலாம். மூச்சை அடக்கும் போது அஷ்டாக்ஷர மந்திரம் அல்லது த்வய மந்திரத்தை மனதிற்குள் 25 முறை சொல்ல வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த பிராணாயாமம் அவசியம்.

(5) ப்ரத்யாஹார – இதன் பொருள், இந்திரியங்களுக்கும் புலன்களுக்கும் பின்னால் இருக்கும் மனதை, பற்றின்மை உணர்வை வளர்த்து, சிற்றின்ப இன்பங்களில் உள்ள குறைபாடுகளை உணர்ந்து, பகவான் ஸ்ரீமன் நாராயணனை நோக்கி இழுப்பது.

(6) தாரணை – சிற்றின்ப இன்பங்களில் பற்றின்மை அடைந்த பிறகு, திவ்ய மங்கள விக்ரஹம் (சுபமானது சுபாஷ்ரயா) என்று அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயணனின் மங்களகரமான மற்றும் அழகான வடிவத்தின் மீது அன்பு அல்லது பக்தியை வளர்த்துக் கொண்ட பிறகு, தியானம் அவரது மனதை தொடர்ந்து மற்றும் தொடர்ந்து பெற வேண்டும். உன்னதமானவரின் தாமரை பாதங்களில் மற்றும் மனம் மேலே இருந்து நகராமல் இருப்பதைப் பார்த்து.

(7) தியானம் – பல்வேறு பிரம்ம வித்யாக்களின் பின்னணியில் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள மங்களகரமான பண்புகளுடன் பகவான் ஸ்ரீமன் நாராயணனை ஆழ்ந்த தியானம் செய்வதாகும், இதன் விவரங்கள் இதற்குப் பிறகு கையாளப்படும். இந்த தியானம் எப்போதும் எண்ணெய் ஓட்டத்துடன் ஒப்பிடப்படுகிறது, இது இடைவெளி இல்லை என்பதைக் குறிக்கிறது. எனவே இந்த தியானம் ஒரு தொடர்ச்சியான சிந்தனையாகும், இது வேறு எந்த சிந்தனைக்கும் இடையூறு ஏற்படாது. இந்த தியானத்தை மேற்கொள்ளும் போது, ​​ஐந்து ஆயுதங்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பரமபிதாவின் திவ்ய மங்கள விக்ரஹத்தை மனம் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆயுதங்கள் ஆகும்

சுதர்சன சக்கரம் – இது ஒரு மனிதனின் மனதைக் குறிக்கிறது.

பாஞ்சஜன்யா – சங்கு- சங்கு – இது 24 கோட்பாடுகளில் ஒன்றான சாத்விகா அஹம்காரத்தைக் குறிக்கிறது.

கௌமோதகி – கடா – சூலாயுதம் – இது மகானைக் குறிக்கிறது.

சார்ங்கம் – வில் – இது அஹம்காரத்தைக் குறிக்கிறது

அம்புகள் – இவை பத்து புலன்களைக் குறிக்கும்.

கட்கா – வாள். இது ஞானம் அல்லது நனவைக் குறிக்கிறது.

ஆபரணங்கள் ஆகும்

கிரீட்டா – கிரீடம்

மகுடா – தலையின் ஆபரணம்

சூடாவதம்சம் – தலையில் அணியும் மாலை.

மகர குண்டலம் – காது வளையங்கள் முதலை வடிவில் உள்ளன.

கிரைவயகஹாரா – கழுத்து சரிகை

கேயுரா – ஆர்ம் லெட்

கடக – வளையல்

ஸ்ரீவத்சா – இறைவனின் மார்பில் முடி

கௌஸ்துபா – இறைவனின் மார்பில் உள்ள ரத்தினம். இந்தக் கௌஸ்துபா ஜீவாத்மாவைக் குறிக்கிறது.

முக்தா – முத்துக்களின் ஒற்றை சரம்.

பீதாம்பர – மஞ்சள் ஆடை

காஞ்சி குணா – தங்க இடுப்பு பெல்ட்.

நுபுரா – ஒரு கணுக்கால்.

(8) சமாதி – தியானாவின் தினசரி பயிற்சிக்குப் பிறகு அடையும் ஒரு நிலை, இதில் உயர்ந்த உயிரினத்தின் உள்ளார்ந்த இயல்பு அல்லது ஸ்வரூபம் தியானிக்கப்படுகிறது. சமாதி என்பது தியானத்தில் இருந்து எழுந்த பிறகும் இறைவனை முழுமையாக உணர்ந்து கொள்வதைக் குறிக்கிறது.

முப்பத்திரண்டு பிரம்மவித்யா:

வித்யா என்றால் அறிவு. இந்த வார்த்தையின் அடிப்படை வேர் “வித் ஞானே”. இந்த அறிவு (1) சாதாரண அறிவு (2) தியான அறிவு என இரண்டு வகைப்படும். பிரம்மா என்றால் உயர்ந்த கடவுள் ஸ்ரீமன் நாராயணன் என்று பொருள். ஆக பிரம்ம வித்யா என்றால் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறவும் நித்திய ஆனந்தத்தை அடையவும் பிரம்மனை தியானம் செய்வதாகும். எனவே இந்த பிரம்ம வித்யா பக்தி யோகமாகும், அதன் விவரங்கள் முந்தைய பத்திகளில் கையாளப்பட்டன.

இந்த பிரம்மவித்யாக்கள், ஒவ்வொன்றும் மோட்சத்தை அடைவதற்கான ஒரு சுயாதீனமான வழிமுறையாகும், அவை ஒவ்வொன்றும் முப்பத்திரண்டு எண்ணிக்கையில் உள்ளன, மேலும் அவை ஒவ்வொன்றும் பக்தி யோகத்தின் ஒரு வடிவமாகும், இது சரணாகதி அல்லது பிரப்பத்தி, இது மோட்சத்தை அடைவதற்கான சுயாதீனமான வழிமுறையாகும்.

முன்பு விளக்கியபடி கர்ம யோகமும் ஞான யோகமும் பக்தி யோகத்திற்கு (பிரம்மவித்யா) துணையாக உள்ளன. இத்துடன் ப்ரபத்தி அல்லது சரணாகதியை பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளில் செய்ய வேண்டும், இது ஒரு திரிவர்ணிக மனிதனை பக்தி யோகம் செய்ய விடாமல் தடுக்கும் பாவங்களை (புண்ணிய மற்றும் பாபா) கழுவ வேண்டும் அல்லது வைசிய சாதிகள்). பக்தி யோகத்தைத் தொடங்குவதற்கான இடையூறுகளை நீக்கும் இந்தப் பிரபத்தியை அங்க பிரபத்தி என்று அழைக்கப்படுகிறது. அங்க என்றால் துணை. பக்தி யோகம் அல்லது பிரம்ம வித்யா தொடங்கும் வரிசை பின்வருமாறு. இரண்டு மாற்று வரிசைகள் உள்ளன.

நான் – முதல் வரிசை:

(அ) ​​கர்ம யோகம் மற்றும் சாதனா சப்தக பயிற்சி

(ஆ) ஒரு சுயத்தை உணர்ந்து கொள்ளுதல் (ஆத்மசக்ஷத்கரா அல்லது ஆத்மவலோகனா)

(இ) அங்க பிரபத்தி

(ஈ) பக்தி யோகம் – அஷ்டாங்க யோகத்தைப் பின்பற்றி கீழே குறிப்பிடப்படும் பிரம்மவித்யாக்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது.

II-இரண்டாம் வரிசை:

(அ) ​​கர்ம யோகம் மற்றும் சாதனா சப்தக பயிற்சி

(ஆ) ஞான யோகா

(இ) ஆத்மவலோகனா

(ஈ) அங்கபிரப்பட்டி

(இ) பக்தி யோகம், அஷ்டாங்க யோகத்தைப் பின்பற்றும் பிரம்ம வித்யாக்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது

பக்தி யோகம் செய்யும் போது அஷ்டாங்க யோகத்தை கடைபிடிக்கும்போது மூன்று விஷயங்களை முக்கியமாக தியானிக்க வேண்டும்

(அ) ​​திவ்ய மங்கள விக்ரஹம் கொண்ட பகவான் ஸ்ரீமன் நாராயணனைத் தியானிப்பதும், அவரது மனைவியான மகாலட்சுமியுடன் எப்போதும் இணைந்திருப்பதும், தியானம் செய்பவரின் உடலாகிய தியானம் அல்லது ஜீவாத்மா ஆகிய இருவருமே ஒரே ஆன்மாவாகவோ அல்லது அந்தர்யாமியாகவோ ஆகிறது. பரமாத்மா அல்லது பரமாத்மாவின் உடல் ஜீவாத்மாவின் ஆன்மா.

மேலே குறிப்பிட்டுள்ளபடி பரமாத்மா அல்லது பரமாத்மாவைப் பற்றி தியானிக்கும்போது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருள் பண்புகளில் இரண்டு வகைகளையும் தியானிக்க வேண்டும். அவை (I) ஸ்வரூப நிருபக தர்மங்கள் (இங்கு தர்மம் என்பது கல்யாண குணம்) மற்றும் (ii) தியானம் செய்பவர் தியானம் செய்யத் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட பிரம்ம வித்யாவுடன் மட்டுமே தொடர்புடைய மங்களகரமான பண்புக்கூறுகள் என்று அழைக்கப்படும் ஆறு அடிப்படை மங்களகரமான பண்புகளாகும்.

(ஆ) தன்னை அறிந்தவன், செய்பவன், அனுபவிப்பவன், எப்பொழுதும் ஸ்ரீமன் நாராயணனுக்கு அடிபணிந்தவன், அணுவைப் பற்றி, தன் சுயத்தை அறிந்துகொள்வது (பிரத்யக்த்வா எனப்படும்)

(இ) முக்தியை அடைவதற்காக ஒருவர் கடைப்பிடித்த பிரம்மவித்யாவைப் பற்றி சிந்திப்பது.

(ஈ) பிரம்ம வித்யாவின் முடிவில் ஒருவர் அனுபவிக்கப் போகும் பலன்களின் வரிசை, அதாவது ஆன்டிமா ஸ்மிருதி (கடைசி நினைவகம்), ஒரு சிறிய உடலுடன் ஆன்மா வெளியேறுவது அல்லது மரண சரீரத்திலிருந்து சூக்ஷ்ம சரிரா, விரஜா நதிக் கரையை அடைவது, அர்ச்சிராடி மார்கா அல்லது வழித்தடத்தில் சூக்ஷ்ம சரிராவை விட்டு வெளியேறி, விரஜா நதியைக் கடந்து எதிர் கரையை அடைந்து, ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தின் எல்லைக்குள் நுழைந்து, பிரம்மலங்காரத்தைப் பெற்று, பைன் தம்பதிகள் அமர்ந்திருக்கும் பியா பர்யநாக அல்லது சிம்மாசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். , சிம்மாசனத்தில் ஏறி தெய்வீக தம்பதியருக்கு அறிக்கை செய்தல், குணாஷ்டகம் எனப்படும் எட்டு பண்புகளை மலரச் செய்தல், மோட்ச சாம்ராஜ்யத்தை அடைவதன் மூலம் பைன் தம்பதிகளுக்கு நித்திய சேவையில் அர்ச்சனை செய்யப்படுதல் அல்லது தீட்சை பெறுதல்.

முப்பத்திரண்டு பிரம்ம வித்யாக்கள் பின்வருமாறு. இது ஸ்ரீ பாஷ்யத்தில் உள்ள அதிகாரங்களின் வரிசையில் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

(1) சத்வித்யா: இந்த பிரம்மவித்யா ஸ்வேதகேதுவிற்கு சாந்தோக்யோபனிஷத்தின் 6 வது அத்தியாயத்தில் அவரது தந்தை உத்தாலக முனிவரால் கற்பிக்கப்படுகிறது.

(அ) ​​ஸ்வரூப நிருபக தர்மங்கள் எனப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் ஆறு குணங்கள் தியானிக்கப்பட வேண்டியவை,

i) சத்யத்வா – இந்த பண்பின் மூலம் உயர்ந்த ஜீவன் பத்த ஜீவா என்று அழைக்கப்படும் விடுவிக்கப்படாத ஆன்மாவிலிருந்து வேறுபட்டது, மேலும் பத்த ஜீவன் வசிக்கும் மரண உடலிலிருந்து வேறுபட்டது.

சத்யத்வா என்பது ஸ்வரூபம் என்று அழைக்கப்படும் உள்ளார்ந்த இயல்பு மற்றும் ஸ்வபாவா என்று அழைக்கப்படும் சாதாரண இயல்பு ஆகிய இரண்டிலும் மாற்றத்திலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது.

ii) ஞானத்வா- எப்போதும் எல்லாம் அறிந்தவர். இந்த பண்பின் மூலம் பரமாத்மா முக்தாத்மாவிலிருந்து வேறுபட்டது (முக்தி பெற்ற ஆன்மா)

iii) அனந்தத்வா- பரமாத்மா வெளி, நேரம் மற்றும் பொருள் ஆகியவற்றில் வரம்பு குறைவாகவோ அல்லது எல்லையற்றவராகவோ இருக்கிறார், வேறுவிதமாகக் கூறினால், அவர் முழு பிரபஞ்சத்தையும் வெளிப்புறமாகவும் அகமாகவும் சூழ்ந்துள்ளார், அவர் உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களுக்கு அந்தர்யாமி ஆவார். இந்த அம்சம் அவரை நித்யா சூரியிலிருந்து வேறுபடுத்துகிறது.

iv) ஆனந்தத்வா – எப்போதும் எல்லையற்ற ஆனந்தத்துடன்.

v) அமலாத்வா – களங்கமற்ற தன்மை

vi) ஸ்ரீயாபதிவா – மகாலட்சுமி தேவியின் மனைவி.

பகவான் ஸ்ரீமன் நாராயணனின் ஸ்வரூபம் அல்லது உள்ளார்ந்த இயல்பை நிலைநாட்டும் மேற்கண்ட ஆறு குணாதிசயங்கள் ந்யாசவித்யா உட்பட விதிவிலக்கு இல்லாமல் ஒவ்வொரு பிரம்மவித்யாவிலும் தியானிக்கப்பட வேண்டும்.

(ஆ) இந்த வித்யாவில் மட்டுமே தியானிக்கப்பட வேண்டிய பிரத்தியேக குணங்கள் அல்லது கல்யாண குணங்கள் பின்வருமாறு:

i) ஜகதுபாதனத்வம் – இந்த பிரபஞ்சத்திற்கான பொருள் காரணம்

ii) ஜகந்நிமிதத்வம் – இந்த பிரபஞ்சத்திற்கான செயல்பாட்டுக் காரணம்.

iii) சர்வஜ்ஞாத்வா – சர்வ அறிவாளி

iv) சர்வ சக்தி யோகம் – சர்வ சக்தி

v) சத்ய சங்கல்பத்வம் – அசைக்க முடியாத விருப்பத்தை உடையது.

vi) சர்வாந்தரத்வம் – எல்லாவற்றிலும் உள்ளான ஆத்மா அல்லது அந்தர்யாமி.

vii) சர்வதாரத்வம் – முழு பிரபஞ்சத்தையும் ஆதரிக்கிறது.

viii) சர்வ நியந்த்ருத்வம் – ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துதல் அல்லது ஒழுங்குபடுத்துதல்.

(இ) இந்த வித்யாவில் மோட்ச பலனைப் பற்றிய குறிப்பிட்ட குறிப்பு: சாண்டோக்யோபனிஷத்தின் ஆறாவது அத்தியாயத்தில், இந்த பிரம்ம வித்யாவை (சத் வித்யா) பயிற்சி செய்து, தியானம் செய்பவர் பிராரப கர்மாவின் காலாவதியில் மோட்சத்தை அடைவார் என்று கூறப்படுகிறது.

2) ஆனந்தமய வித்யா:- இந்த பிரம்மவித்யா தைத்தரிய உபநிஷத்தின் ஆனந்தவல்லியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அ) ​​மேலே குறிப்பிட்டுள்ள ஆறு ஸ்வரூப நிருபக தர்மங்களையும், ஆனந்தமயமான பகவான் ஸ்ரீமன் நாராயணனை தியானிக்கும்போது தியானிக்க வேண்டும்.

(ஆ) இந்த வித்யாவில் தியானிக்கப்பட வேண்டிய பிரத்தியேகமான பண்புகள்

i) ஆகாசம், வாயு, தேஜஸ், நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து கூறுகள் அல்லது பூதங்களை உருவாக்கியவர்

ii) அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம் ஆகியவற்றுக்கு அவர் அந்தர்யாமி

iii) அவர் பிரபஞ்சத்தை விரும்பி உருவாக்குகிறார்

iv) அவர் உணர்வு மற்றும் உணர்வு இல்லாத அனைத்து உயிரினங்களிலும் அந்தர்யாமியாக நுழைந்தார், மேலும் அவை அவருக்கு உடல்களாக மாறிவிட்டன.

v) அவர் அனைத்து ஜீவாக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறார், அவருடைய கிருபை இல்லாமல் யாரும் வாழ முடியாது.

vi) சூரியன், சந்திரன், வாயு, இந்திரன், அக்னி, யமன் மற்றும் பிற விண்ணுலகக் கடவுள்களுக்கு அவர் பயங்கரமானவர், அவர்கள் ஆனந்தமயமான ஸ்ரீமன் நாராயணனிடம் பயத்தின் காரணமாக தங்கள் கடமைகளைச் சரியாகவும் உடனடியாகவும் செய்கிறார்கள்.

(இ) இந்த பிரம்ம வித்யாவை நாடுபவருக்கு மோக்ஷ பலனைக் குறிப்பிடவும்

இந்த ஆனந்தவல்லியின் முடிவில் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் நித்தியமான மற்றும் எல்லையற்ற ஆனந்தமாக இருக்கும் பிரம்மானந்தம் அகமோஹத ஸ்ராத்ரியத்தால் அடையப்படுகிறது, அதாவது வைராக்கியம் உள்ளவர், பரமாத்மாவான ஆனந்தமயனை தியானம் செய்தவர்.

குறிப்பு: தியானிக்கப்படும் ஒவ்வொரு பிரம்ம வித்யாவிற்கும் தொடர்புடைய அனைத்து பிரம்ம வித்யாக்களின் பெயர்கள் மற்றும் பிரத்தியேகமான மங்களகரமான பண்புகளை அறிவது கல்விசார் ஆர்வமாக உள்ளது மற்றும் இது மிகவும் விரிவான மற்றும் நீண்ட விவகாரமாக இருக்கும். இந்த கலியுகத்தில் எந்த உடலும் பக்தி யோகத்தை நாடுவதில்லை, இது பயிற்சி செய்வது மிகவும் கடினம். நம்மாழ்வாரைப் போற்றிப் புகழ்ந்து மதுரகவி ஆழ்வார் இயற்றிய “கண்ணினுன் சிறுத்தம்பு” என்ற தமிழ்த் தெய்வத்தமிழ் 12000 முறை பாடிய யோகநிஷ்டரான நாதமுனி முனிவர் கூட நம்மாழ்வாரைக் கண்டு உணர்ந்து 4000 திவ்யப் பாசுரங்களின் உபதேசத்தைப் பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பக்தி யோகா பயிற்சி செய்யவில்லை. பக்தி யோகத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அந்த பிறவி அல்லது ஜென்மத்தின் முடிவில் மோட்சத்தை வழங்குவார் என்று துல்லியமாக கூற முடியாது, அதில் ஒருவர் பக்தி யோகத்தை நாடலாம்.

எனவே இந்த கலியுகத்தில் பக்தி யோகம் செய்ய எந்த உடலும் துணிவதில்லை.

எனவே இந்த விரிவுரையில் நான் 32 பிரம்ம வித்யாக்களின் பெயர்களையும் அது குறிப்பிடப்பட்டுள்ள உபநிடதத்தின் பெயரையும் மட்டுமே குறிப்பிடுகிறேன். இந்த தகவல் போதுமானதாக இருக்கும்.

நான் ஏற்கனவே சத்வித்யா மற்றும் ஆனந்தமய வித்யாவை கையாண்டுள்ளேன். பட்டியலின் முழுமைக்காக நான் அவர்களின் பெயர்களை இங்கே மீண்டும் சொல்கிறேன் மற்றும் முடிவில் நயாச வித்யாவின் சில விவரங்களை கொடுக்க முயற்சிக்கிறேன்.

பிரம்ம வித்யாவின் பெயர்

அது குறிப்பிடப்பட்டுள்ள உபநிடதத்தின் பெயர்

இந்த வித்யா விவாதிக்கப்படும் அல்லது கையாளப்படும் ஸ்ரீ பாஷ்யத்தில் உள்ள அதிகாரத்தின் பெயருக்கான பலா அல்லது பழம்.

சத்வித்யா. உத்தாலக ஸ்வேதகேதுவிற்கு உபதேசம் செய்கிறார்

சாந்தோக்யா – 6 வது அத்தியாயம்

மோட்ச பலம்

இக்ஷத்யாதிகாரணா

ஆனந்த வித்யா அல்லது ஆனந்தமய வித்யா. இது எந்த உடலுக்கும் உபதேசிக்கப்படவில்லை.

தைத்தரிய உபநிடதம். ஆனந்தவல்லி

மோட்ச பலம்

ஆனந்தமயதிகரண

அந்தராதித்ய வித்யா

சந்தோக்ய இஸ்த் அத்தியாயம், 6வது காண்டம், 6வது மந்திரம்

இது உத்கீத வித்யாவின் ஒரு பகுதியாக இருப்பதால் மோட்ச பலம் இல்லை.

அந்தராதிகாரனா

ஆகாஷ வித்யா

சந்தோக்யா இஸ்த் அத்தியாயம், 9வது காண்டா

இது உத்கீத வித்யாவின் ஒரு பகுதியாக இருப்பதால் மோட்ச பலம் இல்லை.

ஆகாச அதிகாரம்

பிராண வித்யா

சாந்தோக்யா 1-11-5

இது உத்கீத வித்யாவின் ஒரு பகுதியாக இருப்பதால் மோட்ச பலம் இல்லை.

பிராணாதிகரணம்

காயத்ரி ஜோதிர் வித்யா

சாந்தோக்யா 3-12

மோட்ச பலம். இங்கே ஸ்வர்க லோகத்தை அடைவது என்பது மோட்சத்தைக் குறிக்கிறது

ஜோதிராதிகரணம்

பிரதர்தன வித்யா

கௌசிதகி உபநிஷத் 3 வது அத்தியாயம்

மோட்ச பலம். இந்த வித்யாவை நாடுபவர் முதலில் இந்திரனின் ஸ்வர்க லோகத்தை அடைந்து அங்கு கணிசமான காலம் தங்கி ஸ்ரீ வைகுண்டத்திற்கு செல்கிறார்.

இந்திர பிராணாதிகரணம்.

சாண்டில்யா வித்யா

சாந்தோக்யா 3-14

அக்னிரஹஸ்யம் பிருஹதராயனக உபநிஷத் 7-6-1

மோட்ச பலம்

ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்

நசிகேத வித்யா. யம பகவான் இந்த வித்யாவை நாச்சி கேதாக்களுக்கு உபதேசிக்கிறார்

கடோபநிஷத்

மோட்ச பலம்

அத்ராதிகரணம்

உபகோசலா வித்யா. சத்யகாம முனிவர் உபகோசலைக்கு இந்த வித்யாவை உபதேசிக்கிறார்.

சந்தோக்யா 4வது அத்தியாயம். 10 முதல் 15 கந்தாக்கள்

மோட்ச பலம்

அந்தர அதிகாரம்

அந்தர்யாமி வித்யா

பிருஹதாரண்யகம் 5 வது அத்தியாயம் மற்றும் 7 வது பிராமணம் சுபலோபநிஷத்

மோட்ச பலம்

அந்தர்யாமி அதிகாரம்

அக்ஷரா பரா வித்யா

முண்டக உபநிடதம்

மோட்ச பலம்

அத்ரஸ்யத்வாதி அதிகரணம்

விஸ்வாணர வித்யா. அஸ்வபதி மன்னன் இந்த வித்யாவை ஆறு முனிவர்களுக்கு கற்பிக்கிறான்

சாந்தோக்யா – 5-11-24

மோட்ச பலம்

விஸ்வநாதிகரணம்

பூம வித்யா. சனத்குமார முனிவர் நாரத முனிவருக்கு இந்த வித்யாவை உபதேசிக்கிறார்.

சாந்தோக்யா 7வது அத்தியாயம்

மோட்ச பலம்

பூமதிகரணம்

கார்கி அக்சரா வித்யா

பிருஹதாரண்யகம் 5-8-8

மோட்ச பலம்

த்ரிமாத்ரா பிரணவ வித்யா

பிரஸ்னோபநிஷத் 5-5

மோட்ச பலம்

ஏக்ஷதிகர்மாதிகரணம்

தஹரா வித்யா

சாந்தோக்யா 8வது அத்தியாயம்

மோட்ச பலம்

தஹராதிகரணம்

அங்குஷ்டா ப்ரமிதா வித்யா

கடோபநிஷத்

மோட்ச பலம்

பிரமிதாதிகாரணம்

ஜோதிஷம் ஜோதிர் வித்யா

பிருஹதாரண்யக உபநிஷத் 6-4-16

மோட்ச பலம்

மத்வாதிகாரணம்

மது வித்யா

சாந்தோக்யா 3-1

மோட்ச பலம்

மத்வாதிகாரணம்

சம்வர்க வித்யா. ராஜா ஜனஸ்ருதிக்கு ரைக்வா முனிவர் இந்த வித்யாவை உபதேசிக்கிறார்.

சாந்தோக்யா 4-3

மோட்ச பலம்

அப சூத்ராதிகரணம்

ஆகாச வித்யா

சாந்தோக்யா 8வது அத்தியாயம்

மோட்ச பலம்

அர்த்தாந்தர வ்யாபதேசாதிகரணம்

பாலகி வித்யா

கௌசிதகி உபநிடதம். பிருஹதாரண்யக உபநிஷத்

மோட்ச பலம்

ஜகத்வா சித்வாதிகாரணம்

மைத்ரேயி வித்யா

பிருஹதாரண்யக உபநிஷத் 4-4

மோட்ச பலம்

வாக்ய அன்வயாதிகாரணம்

பஞ்சாக்னி வித்யா. மன்னன் பிரவாஹனா இந்த வித்யாவை அருணி முனிவருக்கு உபதேசிக்கிறார்.

சாந்தோக்ய உபநிடதம் 5-3

மோட்ச பலம் முதலில் தன்னை மகிழ்வித்து பின்னர் ஸ்ரீ வைகுண்ட பய லோகத்தில் பைன் தம்பதிகளுக்கு சேவை செய்கிறார்.

தடந்தரா பிரதிபத்தி அதிகாரம்

புருஷ வித்யா

தைத்திரீய உபநிஷதம்

மோட்ச பலம்

புருஷ வித்யாதிகாரனா

அக்ஷிஷ்டா ஸத்ய பிரம்ம வித்யா

பிருஹதாரண்யகம் உபநிஷத் 5-7

மோட்ச பலம்

இஸவாஸ்ய வித்யா

இஸவாஸ்ய உபநிஷத்

மோட்ச பலம்

உஷஸ்திகஹோலா வித்யா. யக்ஞ வல்கிய முனிவர் இந்த வித்யாவை உஷஸ்தருக்கும் கஹோலாவுக்கும் உபதேசிக்கிறார்.

பிருஹதாரண்யகா 5-4 மற்றும் 5-5

மோட்ச பலம்

அந்தரத்வாதிகாரணம்

பர்யங்கா வித்யா

கௌஷிதகி 1வது அத்தியாயம்

மோட்ச பலம்

வ்யாஹ்ரிதி வித்யா

பிருஹதாரண்யக உபநிஷத் 7-5-1

மோட்ச பலம்

நியாச வித்யா

தைத்தரிய உபநிஷத், ஸ்வேதஸ்வர உபநிஷத்

மோட்ச பலம்

நியாசவித்யாவின் விவரங்கள்:

மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பிரம்ம வித்யாக்களிலும், ஸ்ரீ ந்யாச வித்யா மிக உயர்ந்தது மற்றும் ரஹஸ்யத்ரயசாரத்தில் ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் பக்தி யோகம் 1/107 நியாச வித்யாவுக்கு சமமாக இருக்க முடியாது என்றும் இந்த நியாச வித்யா பிரபத்தி அல்லது சரணாகதி என்றும் கூறுகிறார்.

தைத்திரீய உபநிஷதம், இந்த ந்யாஸ வித்யா எல்லாவிதமான தவங்களையும் விட மேலானது என்று கூறுகிறது. நான்கு தலைகள் கொண்ட பிரம்மாவைப் படைத்து, அவருக்கு வேதங்களை உபதேசித்த பகவான் ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளில் நான் சரணடைவேன் என்று ஸ்வேதஸ்வர உபநிஷதம் கூறுகிறது. இங்கு சரணாகதி என்பது பிரபத்தி செய்யும் ஒருவரின் ஆன்மாவைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லது சுமையை ஒப்படைப்பதாகும். இது பர சமர்ப்பணம் எனப்படும். ஆன்மாவைப் பாதுகாப்பது என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணன் அவருக்கு மோட்சத்தை அளித்து, அவருக்கும் அவரது மனைவியான மகாலட்சுமிக்கும் எல்லாச் சேவைகளையும், எல்லா நேரங்களிலும் செய்ய வைக்கிறார்.

ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கீதாச்சார்யா, அர்ஜுனன் மோட்சத்தை அடைவதற்குத் தடையாக இருக்கும் அவனது பாவங்கள் அனைத்தையும் (புண்யா மற்றும் பாபா) கழுவ அவனது பாதத்தில் பிரபத்தி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். அர்ஜுனன் பிரபத்தி செய்து மோட்சத்தை அடையாத போது இது நம் அனைவருக்கும் பொருந்தும். ஸ்ரீ பகவத் கீதையில் மேற்கண்ட நிபந்தனை சரமஸ்லோகம் என்று அழைக்கப்படுகிறது. நாம் அனைவரும் மேற்கூறிய நியதியின் பலனைப் பெற்று, ஒரு ஆச்சார்யா மூலம் பிரபத்தி செய்து வருகிறோம், நிச்சயமாக நாம் நித்திய பேரின்பமான மோட்சத்தை அடைவோம்.

பரத முனியின் கூற்றுப்படி, பிரபத்தியின் அடிப்படை வரையறை என்னவென்றால், எந்தவொரு நபரும் எந்தவொரு பொருளையும் அடைய விரும்பினால், அது வேறு எந்த வகையிலும் சாத்தியமில்லாதபோது, ​​​​அவர் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பிரார்த்தனை செய்து, அதை அடையச் செய்கிறார். விஷயம்.

பக்தியோகம் அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படுவது போல, இந்த பிரபத்தி ஐந்து துணைகளைக் கொண்டுள்ளது, இது பஞ்சாங்க யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபத்தி செய்வதற்கான அடிப்படை தகுதி காரணிகள் அகிஞ்சன்யா மற்றும் அனன்யா கதிகத்வா ஆகும். அகிஞ்சன்யா பக்தி யோகம் செய்யும் திறனில் முழுமையடைந்து, இந்த இயலாமையின் காரணமாக பரிதாபமாக மாறுகிறார். அனன்யா கதிகத்வா என்றால், பைன் தம்பதிகளான பகவான் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் மஹாலக்ஷ்மி (இருவரும் ஒரு தனித்துவம்) அடைய வேறு எந்த பொருளும் இல்லை.

ஜாதி, மத, நிற, பாலின வேறுபாடு இல்லாமல் இந்த பிரபத்தியை அனைவரும் செய்யலாம். பிராபத்தியை விலங்குகள், மரங்கள் மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களுக்கு கூட செய்யலாம், ஏனெனில் இவை அனைத்திலும் ஜீவாக்கள் (ஆன்மாக்கள்) உள்ளன.

ஸ்ரீமத் ரஹஸ்யத்ராய சாரா ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் பிரபத்தி யோக்யாதிகாரத்தில், பிரபத்தி அல்லது நியாசவித்யா செய்யத் தகுதி பெறுவதற்கு பின்வரும் நான்கு காரணிகளைக் குறிப்பிடுகிறார். அவர்கள்

i) பக்தி யோகா செய்ய உத்திர உடல் இயலாமை. இது பக்தி யோகத்திற்கு முன்நிபந்தனையான கர்ம யோகத்தைச் செய்ய இயலாமையைக் கூறுகிறது.

ii) பக்தி யோகம் செய்வதற்குத் தேவையான அளவு அறிவு இல்லை. பக்தி யோகத்திற்கு முன்நிபந்தனையான ஞான யோகம் செய்யும் திறனை இது கூறுகிறது. இது அறிவின் ஒரு வடிவமான தியானத்திற்குத் தேவையான மனதை ஒருமுகப்படுத்த இயலாமையைக் குறிக்கலாம்.

iii) பிராமணர், க்ஷத்திரியர் அல்லது வைசியரை விட தாழ்ந்த சாதியில் பிறந்தவர் அல்லது நியாயமான பாலினத்தைச் சேர்ந்தவர்.

iv) மோட்சத்தை அடைவதில் தாமதம் ஏற்படுவதைத் தாங்க முடியாது, ஏனென்றால் பக்தி யோகத்தில் பக்தி யோகம் செய்யும் நபர் அந்த ஜென்மத்தின் அல்லது பிறப்பின் முடிவில் மோட்சத்தை அடைவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் பிரபத்தியில் அந்த பிறப்பின் முடிவில் மோட்சத்தை அடைவது உறுதி அல்லது அது நிச்சயமாக நூறு சதவீதம்.

பிரபத்தி செய்ய தகுதியுடையவர்களில் பதினைந்து வகையினர் உள்ளனர்.

i) மேற்கண்ட நான்கு காரணிகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்ட நான்கு வகை நபர்கள்.

ii) மேற்கண்ட நான்கு காரணிகளில் ஏதேனும் இரண்டைக் கொண்ட ஆறு வகை நபர்கள்.

iii) மேற்கண்ட நான்கு காரணிகளில் ஏதேனும் மூன்றைக் கொண்ட நான்கு வகை நபர்கள்.

iv) மேற்கூறிய அனைத்து காரணிகளையும் கொண்ட ஒரு வகை நபர்கள்.

பிரபத்தி செய்வது மிகவும் எளிமையான காரியம், அது 30 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது மற்றும் பக்தி யோகத்தை பல வருடங்கள் மற்றும் பல பிறவிகளில் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய ஒரு முறை. பல ஆண்டுகளாக பக்தி யோகத்தை நாடிய ஒருவருக்கு குறுகிய கால பிரபத்தி எப்படி அதே மோட்சத்தை அளிக்கும் என்று பிரபத்தியின் பலன் குறித்து சில சந்தேகங்கள் எழுகின்றன. ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஐந்து சந்தேகங்களை எழுப்பி, உறுதியான விளக்கங்கள் அல்லது பதில்களைத் தருகிறார். இதுவே சங்கபஞ்சகம் எனப்படும்.

சந்தேகம் நான்:

சிவன், இந்திரன், நான்கு தலை பிரம்மா, அய்யப்பன், மாரியம்மன் போன்ற தெய்வங்கள் விரைவில் பிரார்த்தனை செய்யும் நபர்களுக்கு பலன்களை வழங்கும்போது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணன் கணிசமான தாமதத்திற்குப் பிறகு பலன்களை வழங்கும்போது, ​​​​அவர் எப்படி பலனை அல்லது மோட்சத்தைத் தருவார்? பிரபத்தி செய்யும் நேரத்தில் ஒரு நபர் பிரார்த்தனை செய்யும் நேரத்திற்குள் பிரபத்தி செய்வது மற்றும் பிரபத்தி செய்பவர் எண்ணற்ற பாவங்களைச் செய்தபோது. இதனுடன் பகவான் ஸ்ரீமன் நாராயணன் எல்லாம் அறிந்தவர் மற்றும் மனிதர்கள் செய்யும் பாவங்களை அறிந்தவர் மற்றும் அவர் எப்போதும் தடியை பிடித்தபடி தண்டதாரராக இருப்பதால் பாவம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வல்லவர். மேலும் அவர் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப (பாபா மற்றும் புண்ணிய கர்மாக்கள்) துக்கம் மற்றும் மகிழ்ச்சியின் பலன்களைத் தருகிறார்.

பதில்: பகவான் ஸ்ரீமன் நாராயணன் தனக்கு நிகராகவோ அல்லது உயர்ந்தவராகவோ இல்லாதவர், அந்த நபர்களின் அனைத்து பாவங்களையும் புறக்கணித்து, அனைத்து பாவங்களையும் மன்னிப்பதற்காக ஒரு நபரின் புருஷகர் அல்லது பரிந்துரையின் காரணமாக அந்த நபர்களை கருணையுடன் பார்க்கிறார். மோட்சத்திற்காக செய்யப்படும் பிரபத்தியின் விஷயத்தில், மகாலக்ஷ்மி தேவி புருஷராக மாறி, பாவங்களை மன்னித்து, கருணையுள்ள தோற்றத்தை நீட்டிக்க இறைவனிடம் பரிந்துரைக்கிறார்.

சந்தேகம் II: தனது குறுகிய காலப் பிரபத்திக்காக எண்ணற்ற பாவங்களைச் செய்த ஒரு மனிதனுக்கு எல்லையற்ற ஆனந்தமான மோட்ச பலனை பகவான் ஸ்ரீமன் நாராயணனால் எப்படி வழங்க முடியும்?

பதில்: பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கும் தனி ஆன்மாவுக்கும் இடையே “சேஷி சேஷ” உறவு இருக்கிறது. “சேஷி” என்பது சேஷா அல்லது வேலைக்காரனிடம் சேவையை எதிர்பார்க்கும் ஸ்வாமி அல்லது மாஸ்டர். ஆகவே, தனக்கும் மகாலட்சுமிக்கும் என்றென்றும் சேவை செய்ய ஆட்கள் தம்மிடம் வர வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார். இந்த அம்சம், பிரபத்தி செய்பவருக்கு எல்லையற்ற நித்திய பேரின்பத்தை அளிக்கச் செய்கிறது.

சந்தேகம் III: மிகச்சிறிய மற்றும் அற்பமான பிரபத்தியின் செயலுக்கு உச்ச பகவான் எவ்வாறு மோட்சத்தை வழங்குகிறார் என்ற சந்தேகம் இன்னும் எழுகிறது?

பதில்: இறைவன் தயா மற்றும் வாத்சல்யா போன்ற நல்ல குணங்கள் கொண்டவர். வாத்சல்யா என்றால், புதிதாகப் பிறந்த கன்றின் மீது பசுவைப் போன்ற ஒரு தனிமனிதரிடம் காட்டப்படும் அளவற்ற பாசம். தயா அல்லது காருண்யா என்பது ஒரு குணத்தால் இறைவன் ஒரு நபரின் துயரத்தில் வரம்பற்ற இரக்கத்தை வெளிப்படுத்துகிறார், மேலும் அதில் இருந்து எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் துயரத்திலிருந்து விடுபட விரும்புவார். வாத்சல்யா என்றால் ஒரு தனிமனிதனின் குறைபாடுகளை புறக்கணிப்பது என்றும் பொருள். இந்த குணங்கள் பிரபத்தியின் சிறிய செயலுக்கு மோட்சத்தை வழங்க இறைவனை செய்கிறது.

சந்தேகம் IV: இறைவன் எவ்வாறு தாமதமின்றி மோட்சத்தை வழங்க முடியும்?

பதில்: உன்னதமான உயிரினம் விருப்பத்தின் வியாபர அல்லது செயலை (வியாபாரம்) கொண்டுள்ளது மற்றும் அவரது வலுவான மற்றும் அசைக்க முடியாத விருப்பத்தை எந்த உடலாலும் மாற்ற முடியாது. இது சத்ய சங்கல்பம் எனப்படும். இது பிரபத்தி செய்யும் போது ஒரு தனி ஆன்மாவால் ஜெபிக்கப்படும் நேரத்தில் தாமதமின்றி மோக்ஷத்தை வழங்குகிறது. இச்சூழலில் பிரப்பன்னங்களில் இரண்டு பிரிவுகள் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் (பிரபத்தி செய்பவர் பிரப்பண்ணா என்று அழைக்கப்படுகிறார்). டிரிப்த பிரபன்னங்கள் மற்றும் ஆர்த்தி பிரப்பன்னங்கள் ஆகியவை பிரிவுகள். ஒரு துளிர் பிரப்பண்ணன் தனது வாழ்க்கை அல்லது ஜென்மத்தின் முடிவில் மோட்சத்தை விரும்புகிறான். சம்சாரத்தில் வெறுப்பு அல்லது கோபம் கொண்ட ஆர்த்தி பிரப்பண்ணா, பிரபத்தி செய்தவுடன் மோட்சத்தை விரும்புகிறார். பிரபத்தியின் போது ஜெபிக்கும் நேரத்தில் த்ருப்தப் பிராபத்தி மற்றும் அர்த்தப் பிராபத்தி மற்றும் மோட்சத்தை எந்த தாமதமும் இல்லாமல் பகவான் ஏற்றுக்கொள்கிறார்.

சந்தேகம் V: பிரபத்தி செய்பவர்களுக்கு எந்த பாகுபாடும் இல்லாமல் இறைவன் எப்படி மோட்சத்தை வழங்க முடியும்?

பதில்: பிரபத்தியை ஏற்றுக்கொள்வதில் இறைவனால் பெறப்பட்ட ஒரு நோக்கம் அல்லது பிரயோஜனம் உள்ளது. அவருக்குக் கீழ் அடைக்கலம் புகும் எந்தவொரு நபரும் உண்மையான பக்தன் அல்லது அஷ்ரிதமாக மாறுகிறார். உண்மையான பக்தனாக வரும் தனிமனிதனைப் பாதுகாப்பதே அவனது முக்கிய நோக்கம். எனவே பிரபத்தி செய்பவர்களுக்கு மோட்சம் வழங்குவதில் எந்த பாகுபாடும் இல்லை.

பிரபத்தி யோகத்தின் ஐந்து துணைகள்

ஏற்கனவே சொன்னது போல் பிரபத்தி ஒரு பஞ்சாங்க யோகம். அங்கங்கள் அல்லது துணைகள் ஆகும்

i)அனுகுலஸ்ய சங்கல்பம்:- இறைவனின் பாதத்தில் பிரபத்தி செய்பவன் எப்பொழுதும் இறைவனுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் எப்போதும் இறைவனின் கட்டளைகளைக் கொண்ட சாஸ்திரங்களின்படி செயல்பட வேண்டும் என்று அர்த்தம். நித்ய நைநித்திக கர்மானுஷ்டானத்தைச் செய்வதே கிருத்ய கரணம் என்றும் பொருள்படும்.

மேலும் உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்கள் பரமாத்மாவின் உடல்கள். அவர்களுக்கு சாதகமாக செயல்படும்

ii) ப்ரதிகுலஸ்ய வர்ஜனம்:- பரமாத்மாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்வதைத் தவிர்த்தல். தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்யாத அக்ரித்ய அகரணம் என்றும் இதற்குப் பொருள். பரமாத்மாவின் ஆணைகள் அல்லது கட்டளைகளில் கல்வெட்டுகள் அல்லது சாத்திரங்கள் உள்ளன, அவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. மேலும் ஒருவன் தன் சுயத்தின் தலைவன் என்று நினைப்பதைத் தவிர்ப்பதும் ப்ரதிகுலஸ்ய வர்ஜனம் ஆகும். உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களுக்கு ஒருவர் தீங்கு செய்யக்கூடாது என்பதையும் இது குறிக்கிறது.

iii)ரக்ஷிஷ்யதி இதி விஸ்வாச:- இது பிரபத்தியின் மிக முக்கியமான அங்கமான மகாவிஸ்வாசம் என்றும் அழைக்கப்படுகிறது. விஸ்வாசம் என்பது நம்பிக்கை. நமது பிரபத்தியை ஏற்றுக்கொண்ட பிறகு, உன்னதமானவர் மீதும், அவர் பலனை வழங்குவதிலும் ஒருவருக்கு முழுமையான மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்.

iv) கோப்த்ரித்வா வாரணம்:- இதன் பொருள் பரமாத்மாவை நமது பிராபத்திக்கு பதில் மோட்சம் அளித்து நமது ஆன்மாக்களுக்கு (ஜீவாக்களின்) பாதுகாவலராக இருக்குமாறு வேண்டுதல். நாம் உண்மையில் விரும்புவதை பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் பணிவான சமர்ப்பணம் செய்வதும் இதன் பொருள்.

v) கர்பண்யா:- இது நமது அடக்கத்தை குறிக்கிறது. அதுவே உபயந்தரம் எனப்படும் பக்தி யோகத்தைச் செய்ய இயலாது, அடைய வேண்டிய பொருள் பகவான் ஸ்ரீமன் நாராயணனையும் அவரது துணைவியான மஹாலக்ஷ்மியையும் தவிர வேறெதுவும் இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. பிரபத்தியைத் தவிர வேறு வழிகள் இல்லாதது அகிஞ்சன்யா எனப்படும் உபயந்தர சூன்யத்வா எனப்படும். பைன் ஜோடியைத் தவிர மற்ற மோட்சத்தில் அடைய வேண்டிய பொருள் இல்லாதது ப்ராப்யந்தர சூன்யத்வா என்று அழைக்கப்படுகிறது, இது அனன்யகாதி கத்வம் என்று அழைக்கப்படுகிறது. எனவே கார்பண்யம் மேற்கூறியதைக் குறிக்கிறது.

மேற்கூறிய ஐந்து துணைகளையும் சிந்தித்த பின் மனச் செயலாகிய சமர்ப்பணம் என்ற அங்கியைச் செய்ய வேண்டும். மூன்று சமர்ப்பணங்கள் உள்ளன

i) ஸ்வரூப சமர்ப்பணம் – ஜீவாத்மாவின் உள்ளார்ந்த தன்மை பரமாத்மாவால் கொடுக்கப்பட்டது, அது அவருக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும்.

ii) பர சமர்ப்பணம் – ஜீவாத்மாவை (ஆன்மாவை) காக்கும் பொறுப்பை அல்லது சுமையை பகவான் ஸ்ரீமன் நாராயணனின் தாமரை பாதத்தில் வைப்பது.

iii) பல சமர்ப்பணம் – ஸ்ரீ வைகுந்தத்தை அடைந்த பிறகு முக்தாத்மா அங்குள்ள தெய்வீக தம்பதிகளுக்கு நித்திய சேவை செய்கிறார், பைன் தம்பதியினர் இந்த சேவையால் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மோட்ச பலத்தின் உண்மையான அனுபவிப்பவர்கள் பைன் தம்பதிகள் மற்றும் இந்த இன்பம் முக்தாத்மாவை நித்திய பேரின்பத்தை அடையச் செய்கிறது. எனவே மோட்சத்தின் பலனை பைன் தம்பதியினருக்கும் வழங்க வேண்டும், இது பல சமர்ப்பணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பிரபத்தியில் சில முக்கிய புள்ளிகள் உள்ளன

i) பகவான் ஸ்ரீமன் நாராயணன் என்பது சுத்தோ பய அல்லது தயாராக உள்ளது. எனவே, ஒருவரின் காலடியில் செய்யப்படும் பிரபத்தியால் மகிழ்ந்த பிறகு, அவர் மோட்சத்தை வழங்குபவர்.

ii) உபநிடதங்களில் நிறுவப்பட்டுள்ள பக்தி யோகத்தை ஒருவரால் செய்ய முடியாது என்பதால், பிரபத்தி செய்பவர் பக்தி யோகத்தின் இடத்தில் பரமாத்மாவை வைத்து பர சமர்ப்பணம் செய்கிறார். பக்தியோக ஸ்தானத்தில் பரமாத்மாவைக் கோரும் உபயந்தர ஸ்தான நிவேஷம் என்று அழைக்கப்படுகிறது.

iii) பிரபத்தி செய்யும் போது சிந்திக்க வேண்டிய நல்ல குணங்கள். முதலில் புருஷகர (பரிந்துரை செய்பவர்) பிரபத்தி, அந்த நபரை நோக்கி ஸ்ரீமன் நாராயணனின் கவனத்தை ஈர்ப்பதற்காக மகாலட்சுமி தேவியின் பாதத்தில் செய்யப்படுகிறது.

புருஷகர பிரபத்தி செய்வதற்கு, மகாலட்சுமி தேவியின் குணங்கள்

(அ) ​​சத்யத்வா, ஞானத்வா, அனந்தத்வா, ஆனந்தத்வா, அமலாத்வா மற்றும் விஷ்ணு பத்னித்வா. இவை மஹாலக்ஷ்மியின் ஸ்வரூப நிருபக தர்மங்கள் (பண்புகள்).

(ஆ) பிரபத்தி செய்வதற்கு உதவியாக இருக்கும் பண்புக்கூறுகள். இவை உபயத்வ உபயுக்த குணம் எனப்படும்: இது இல்லாமல் மஹாலக்ஷ்மியோ அல்லது பரமாத்மாவோ சித்தோபாயாகவோ அல்லது தயாராகவோ இருக்க முடியாது. அவர்கள் எண்ணிக்கையில் பன்னிரண்டு பேர்.

வாத்சல்யா – பிரபத்தி செய்யும் தனிமனிதனின் கறையைப் புறக்கணிப்பது அல்லது பார்க்காமல் இருப்பது.

ஸ்வாமித்வா – மாஸ்டர்

சௌசில்யா – பக்தர்களுடன் இலவச மிங்லிங்.

சௌலப்யா – எளிதில் அணுகக்கூடியது

சர்வஜ்ஞாத்வா – எல்லா விஷயத்தையும் அறிவது.

சத்ய சங்கல்பத்வா – வலுவான மற்றும் அசைக்க முடியாத விருப்பம்.

பரமகாருணிகத்வா – எந்த ஒரு பிரதிபலனையோ அல்லது பலனையோ எதிர்பார்க்காமல் பக்தர்களின் துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆழ்ந்த கருணை கொண்டவர்.

கிருதக்னத்வா – நன்றியுணர்வைக் கொண்டிருத்தல்.

ஸ்திரத்வா – பக்தர்களைப் பாதுகாப்பதில் வலுவான விருப்பம்.

பரிபூர்ணத்வா – அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்தல்.

ஸர்வசக்தித்வா – சர்வ வல்லமையுள்ளவர்.

பரமோதரத்வா – எந்த ஒரு பொருளையும், ஒவ்வொரு பொருளையும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம்.

மேற்கண்ட பண்புகள் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கும் பொருந்தும், அவருடைய தாமரை பாதத்தில் பிரபத்தி செய்யும் போது சிந்திக்க வேண்டும். பரமாத்மா விஷயத்தில் விஷ்ணு பத்னித்வத்திற்குப் பதிலாக ஸ்ரீயாபதித்வம் கருதப்பட வேண்டும். சிவன், முருகன், விநாயகர், அய்யப்பன் போன்ற தேவதாந்திரர்களுக்குத் தொடர்ந்து அர்ப்பணம் செய்தாலும், பிரம்மவித்துகளுடன் பாவம் செய்தாலோ, அபசாரம் செய்தாலோ, பகவான் ஸ்ரீமன் நாராயணர் செய்யும் பிரபத்தியை ரத்து செய்வார் என்பது இந்தச் சூழலில் குறிப்பிடத்தக்கது. மற்றும் பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் அதீத பக்தி கொண்டவர்கள்.

மூன்றாம் அத்தியாயத்தில் மூன்றாம் காலாண்டாகிய குணோபசம்ஹார பாதம்.

மேலே உள்ள பக்தி யோகம் மற்றும் நியாசவித்யா (பிரபத்தி யோகம்) ஆகியவற்றின் வெளிச்சத்தில் இந்த பாதம் இப்போது கையாளப்படும். இந்த பாதத்தில் முன்பு குறிப்பிடப்பட்ட பிராண வித்யா மற்றும் உத்கீத வித்யாவுடன் பிரம்ம வித்யாக்களும் கருதப்படுகின்றன. பிராண வித்யா என்பது முக்ய பிராணன் அல்லது நாம் சுவாசிக்கும் காற்றின் தியானம். உத்கீதா என்பது பல வழிகளில் தியானிக்கப்படும் பிரணவமாகும். இந்த இரண்டு வித்யாக்களும் உபநிடதங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதால், வேறு எங்கும் இல்லாததால், உபநிடதங்களின் விளக்கமான பிரம்ம சூத்திரங்களில் அவற்றைக் கையாள்வது பொருத்தமானது என்று சூத்ரகாரர் கருதினார். உபசம்ஹாரம் என்றால் பண்புகளை ஒருங்கிணைத்தல் அல்லது இணைத்தல்.

அதாவது வைஸ்வானர வித்யா, தஹர வித்யா என ஒன்றுக்கு மேற்பட்ட உபநிடதங்களில் குறிப்பிட்ட பிரம்மா வித்யாவைக் குறிப்பிட்டு, அதே மோக்ஷ பலத்திற்கு இரண்டு அல்லது மூன்று உபநிடதங்களில் ஒரே பெயரில் வித்யா இருப்பதாக நிறுவப்பட்டால், ஒன்றில் கல்யாண குணங்கள் குறிப்பிடப்படுகின்றன. மற்றொன்றில் குறிப்பிடப்படாதவை மற்றொன்றில் குறிப்பிடப்பட்டுள்ள கல்யாண குணங்களுடன் சேர்த்து அவைகளை கூட்டாக தியானிக்க வேண்டும்.

இந்த பாதத்தில் அதிக எண்ணிக்கையிலான அதிகாரங்கள் உள்ளன, அதாவது 26. ஒவ்வொரு அதிகாரத்திலும் வந்த முடிவு சுருக்கமாக தெரிந்தால் போதும். இப்போது அதிகாரங்களை ஒவ்வொன்றாகக் கருதலாம்.

1) முதல் அதிகாரம் சர்வ வேதாந்த பிரத்யய அதிகாரம்.

இந்த முதல் அதிகாரத்தில் பல உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விஸ்வாணர வித்யா ஒன்றா என்பதுதான் விவாதத்திற்குரிய தலைப்பு.

மற்ற உபநிடதங்களில் மேற்கூறிய வித்யா முற்றிலும் வேறொரு சூழலில் சொல்லப்பட்டால் அவை வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

சர்வவேதாந்த ப்ரத்யாயம் சோதனாதி அவிசேஷத்” என்ற முதல் சூத்திரத்தில் சூத்ரகாரர் மேற்கண்ட வித்யா ஒன்றே என்கிறார்.

சூத்திரத்தின் பொருள்,

சர்வ வேதாந்த ப்ரத்யம் – பல உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வித்யா ஒன்றுதான் காரணம்

சோதனாதி அவிஷேஷாத் – அவிஷேஷத் என்றால் ஒன்று மற்றும் அதே சோதனாதி என்றால் உந்துதல், பழம், தியானப் பொருளின் தன்மை மற்றும் பெயர்.

ஒவ்வொரு வித்யாவிலும் பக்தி யோகா அல்லது தியானம் செய்வதற்கு ஒரு கட்டளை அல்லது உந்துதல் இருக்க வேண்டும். பழம் அல்லது மோக்ஷ பலன் ஒன்றுதான் இருக்க வேண்டும். பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய தியானப் பொருளின் தன்மையும் பண்புகளும் ஒன்றாக இருக்க வேண்டும். வித்யாவின் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

பல உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட வித்யா ஒன்றே ஒன்று எனும்போது, ​​உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தியானப் பொருளின் பண்புகளைச் சேர்ப்பதாக இருக்கும் உபசம்ஹாரம் எழுகிறது. வித்யாவை நிரூபிப்பதற்காக எதிராளியின் வித்யாவை மறுபரிசீலனை செய்வதற்கான காரணம், வித்யாவைக் கற்கும் மாணவர் வேறுபட்டால், அதே வித்யாவை இயற்கையாகவே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். ஒரே கணிதப் பாடம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு தொகுதி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதைப் போன்றது இது.

சாந்தோக்ய, தைத்தரியா மற்றும் பிருஹதாரண்யகாவில் குறிப்பிடப்பட்டுள்ள தஹராதிகரணம் கூட ஒன்றே.

2) இரண்டாவது அதிகாரம் அன்யதத்வாதிகரணம் எனப்படும்.

விவாதத்திற்கான தலைப்பு உத்கீத வித்யா. உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உத்கீத வித்யா மற்றும் பிராண வித்யா பற்றி ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி இங்கு மட்டுமே விவாதிக்கப்பட்டு விளக்கப்பட வேண்டும்.

இந்த உத்கீத வித்யா சாண்டோக்ய மற்றும் பிருஹதாரண்யக உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உபநிடதங்களில் சொல்லப்பட்ட இந்த உத்கீத வித்யா ஒன்றா என்பது சந்தேகம்.

சாந்தோக்யாவில், தியானத்தின் பொருள் உத்கீதத்தின் ஒரு உறுப்பு ஆகும், இது முக்ய பிராணன் (நாம் சுவாசிக்கும் காற்று) என்று கருதப்பட வேண்டும், மேலும் பிருஹதாரண்யகத்தைப் போலவே தியானம் முழு உத்கீதத்தின் மீதும் முக்ய பிராணாகக் கருதப்படுகிறது. தியானத்தின் பொருள்களில் வேறுபாடு இருப்பதால் சாண்டோக்யத்தில் உள்ள உத்கீத வித்யா பிருஹதாரண்யத்தில் இருந்து வேறுபட்டது.

3) மூன்றாவது அதிகாரம் சர்வ அபேதாதிகரணம்.

இந்த அதிகாரத்தில் பிராண வித்யா விவாதிக்கப்படுகிறது. பிராண வித்யா சாந்தோக்யா, பிருஹதாரண்யகா மற்றும் கௌஷிதகி உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது. பிருஹதாரண்யகா மற்றும் சாந்தோக்யாவில் பிராண வித்யா ஒரே மாதிரியாக உள்ளது மற்றும் கௌஷிதகி உபநிடதத்தில் சிறிய வேறுபாடு உள்ளது.

எனவே கௌஷ்டகியில் பிராண வித்யா சாண்டோக்யத்திலும் பிருஹதாரண்யத்திலும் உள்ளதா இல்லையா என்பது சந்தேகம்.

கௌஷிதகியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்ய பிராணனின் குணங்கள் அல்லது பண்புக்கூறுகள் மற்ற இரண்டில் இருந்து வேறுபட்டிருப்பதால் அல்ல என்கிறார் பூர்வபக்ஷி.

சித்தாந்தம் என்னவென்றால், மூன்றிலும் கூறப்பட்ட பிராணவித்யா ஒன்றே, கௌஷிதகியில் குறிப்பிடப்பட்டுள்ள குணங்கள் மற்ற இரண்டில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுக்கு முரணானவை அல்ல.

ஸர்வ அபேதாத் அந்யத்ர இமே ஸூத்ரம். அதாவது குணங்களில் வேறுபாடு இல்லாத அபேதத்தால் பிராண வித்யா ஒன்றே, கௌஷிதகியில் சொல்லப்பட்ட குணங்கள் சாண்டோக்யத்திலும் பிருஹதாரண்யத்திலும் சேர்த்து (உபசம்ஹாரம்) தியானம் செய்ய வேண்டும்.

இங்கே உபநிடதம் ஒரு கதையைக் கூறுகிறது. பிராணன் அல்லது இந்திரியங்கள் தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அறிய விரும்பினர். மேற்கூறியவற்றைத் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் தங்கள் பேச்சாளர்களை பிரம்மாவிடம் (நான்கு தலை பிரம்மா) அனுப்பினார்கள். பிரம்மா அவர்களை ஒவ்வொன்றாக உடலை விட்டு ஒரு வருடம் வெளியே இருக்கவும், உடலின் செயல்பாட்டைப் பார்க்கவும் கூறினார். முதலில் பேச்சு என்ற வஜிந்த்ரியம் ஒரு வருடம் உடலை விட்டு வெளியேறி அந்த நபர் ஊமையாக மாறினார். உடலின் மற்ற உறுப்புகள் சாதாரணமாக இயங்கின.

பின்னர் கண்கள் உடலை விட்டு வெளியேறின, நபர் குருடனாகிவிட்டார், மற்றபடி உடலின் செயல்பாடு சாதாரணமானது மற்றும் பார்வையைத் தவிர அனைத்து அளவுருக்களும் சாதாரணமாக செயல்பட்டன. பிறகு கண்கள் திரும்பின. பின்னர் காதுகள் விட்டு, நபர் காது கேளாதவராக மாறினார், மற்ற அளவுருக்கள் சாதாரணமாக செயல்பட்டன. பின்னர் காதுகள் திரும்பின. பிறகு மனம் விட்டுப் போனது அப்படியே நடந்தது.

ஆனால் மனம் இல்லாமல் உடல் எப்படி இயங்கும் என்ற கேள்வி எழலாம். குழந்தைகள் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பதால் மனதை ஒருமுகப்படுத்தி எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதே பதில். புத்திசாலி போல் உடல் செயல்பட்டது. மனம் திரும்பியது. நாம் சுவாசிக்கும் காற்றாகிய முக்ய பிராணன் உடலை விட்டு வெளியேறியதும், மற்ற எல்லா புலன்களையும் தன்னுடன் சேர்த்து உடலை விட்டு வெளியேறச் செய்தது. மூச்சு நின்று உடல் சிதைய ஆரம்பித்தது.

பின்னர் அனைத்து இந்திரியர்கள் மற்றும் முக்ய பிராணன் திரும்பி வந்தனர், மேலும் அனைத்து இந்திரியங்களும் முக்ய பிராணனை தங்கள் தலைவனாக அல்லது தலைவராக ஏற்றுக்கொண்டனர். பிறகு வகிந்த்ரியா முக்ய பிராணனிடம் வசிஷ்டனாக இருப்பதால் தான் முக்ய பிராணனும் வசிஷ்டனாக இருக்கிறான் என்று சொன்னாள். கண்கள் முக்ய பிராணனை பிரதிஷ்டை என்று சொன்னது, காதுகள் சம்பத் என்று சொன்னது. ஆயத்தனம் என்று மனம் சொன்னது. பிராண வித்யாவில் தியானிக்க வேண்டிய குணங்கள்

ஜ்யேஷ்டாதவம் – முதுமை

ஷ்ரேஷத்வம் – மேன்மை

வசிஷ்டத்வம் – பேச்சுத்திறன் அல்லது பேச்சுத்திறன் காரணமாக மேன்மை அடையப்படுகிறது.

ப்ரதிஷ்டத்வம் – கூட மனது

சம்பத்வம் – கற்றறிந்தவராக மாறுதல்

ஆயதனத்வம் – அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் உடல்.

மேற்கூறிய கதை உபநிடதங்களில் பிராண சம்வதா என்று அழைக்கப்படுகிறது.

உத்கீதா மற்றும் பிராண வித்யாக்கள் பிரம்ம வித்யாக்கள் அல்ல, எனவே இந்த இரண்டு வித்யாக்களுக்கும் மோட்ச பலம் உள்ளது.

4) அடுத்த அதிகாரம் ஆனந்தாதிகரணம்.

ஒவ்வொரு பிரம்ம வித்யாவிலும் கட்டாயமாக தியானிக்க வேண்டிய கல்யாண குணங்கள் விவாதத்திற்குரிய தலைப்பு. இந்த கல்யாண குணங்கள் ஸ்வரூப நிருபக தர்மம் எனப்படும். பூர்வபக்ஷி கூறுகிறது, இந்தக் கல்யாண கினாக்கள் எந்த பிரம்ம வித்யாவுடனும் இணைக்கப்படாதபோது அவற்றைத் தியானிக்க வேண்டிய அவசியமில்லை.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு பிரம்ம வித்யாவிலும் உபஸ்யாவாக (தியானத்தின் பொருள்) இருக்கும் போது மற்றும் சில குணங்களை நினைக்காமல் அவரது உள்ளார்ந்த இயல்பை உணர முடியாதபோது, ​​​​இந்த குணங்கள் ஒவ்வொரு பிரம்ம வித்யாவிலும் முக்கியமாக தியானிக்கப்பட வேண்டும் என்று சூத்ரகாரர் கூறுகிறார். இந்த கல்யாண குணங்கள் ஸ்வரூப நிருபக குணங்கள் அல்லது தர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சத்யத்வா, ஞானத்வா, அனந்தத்வா, ஆனந்தத்வா, அமலாத்வா மற்றும் ஸ்ரீயா:பதித்வா ஆகிய ஆறு. அமலாத்வா மற்றொரு அதிகாரத்தில் கையாளப்படும். ஸ்ரீயா:பதித்வா இங்கே வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது மறைமுகமாக உள்ளது.

5) அடுத்த அதிகாரம் கார்யாக்யனாதிகரணம் எனப்படும்.

இது பிராண வித்யா கையாளப்பட்ட சர்வபேதாதிகாரணத்தின் தொடர்ச்சியாகும்.

இந்திரியர்கள் முக்ய பிராணனைத் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டபோது, ​​முக்ய பிராணன் அவர்களிடம் என் ஆடை என்ன என்று கேட்கிறான். தண்ணீர்தான் அதன் ஆடை என்றும், அதனால்தான் உணவு உண்ணும் போது உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்பும் அச்சமனம் செய்வார்கள் என்றும் பதிலளித்தனர். எனவே பிராண வித்யா பயிற்சி செய்பவர்கள் உணவுக்கு முன், உணவுக்குப் பின் செய்யும் ஆச்சமனத்தை முக்ய பிராணனின் ஆடையாகக் கருத வேண்டும். இந்த பிராண வித்யா பிரம்ம வித்யாவுடன் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை.

6) ஆறாவது அதிகாரம் சமனாதிகரணம் எனப்படும்.

இது அக்னிரஹஸ்யத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாண்டிலய வித்யாவைப் பற்றியது. இது மீண்டும் பிருஹதாரண்யக உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கல்யாண குணங்களில் ஓரளவு வேறுபடுகின்றன. எனவே மேற்கூறிய இரண்டு உபநிடதங்களில் உள்ள இந்த சாண்டில்ய வித்யா ஒன்றே ஒன்றா என்ற சந்தேகம் எழுகிறது. ஒன்றில் உள்ள இந்த வித்யாவின் அமைப்பு மற்றொன்றிலிருந்து வேறுபட்டது என்பதால் எதிராளி இது வேறு என்கிறார். இந்த சாண்டில்ய வித்யா இரண்டிலும் ஒன்றே என்று சூத்ரகாரர் தனது தீர்ப்பில் கூறுகிறார்.

7) அடுத்த அதிகாரம் சம்பந்தாதிகாரணம் எனப்படும்.

பிருஹதாரண்யகத்தில் சூரிய மண்டலத்தில் (ஆதித்ய மண்டலம்) பகவான் ஸ்ரீமன் நாராயணனின் உபாசனை (தியானம்) மற்றும் வலது கண் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிராமணன் அல்லது பரமாத்மா வ்யாஹ்ருதி சரிராக (பு, புவ, சுவ, மஹர், ஜன, தப மற்றும் சத்ய லோகங்களைத் தன் சரீரங்களாகக் கொண்ட வ்யாஹ்ருதிகளைக் கொண்டவர்) என்று குறிப்பிடப்படுகிறார், மேலும் அவருக்கு சத்யா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

ஆதித்யத்தில் இறைவனைத் தியானிப்பதும், வலது கண்ணில் உள்ள இறைவனைத் தியானிப்பதும் வேறு ஒன்றா என்பது சந்தேகமே.

பூர்வபக்ஷ சூத்திரம் “சம்பந்ததேவம் அன்யத்ராபிக்” ஒன்றுதான் என்று கூறுகிறது, அதே சமயம் சித்தாந்த சூத்திரம் “நவ விசேஷத்” இரண்டும் வெவ்வேறு குணாதிசயங்கள் (ரூபம்) வேறுபட்டவை என்று கூறுகிறது.

8) அடுத்த அதிகாரம் சம்ப்ருதி அதிகாரம்.

ரணயானி சகா மற்றும் சில கிலா ஸ்ருதிகளில் உபாசனா குறிப்பிடப்பட்டுள்ளது. கிலா ஸ்ருதி என்பது உபநிடதத்தின் ஒரு பகுதியாகும், அதில் அதன் முந்தைய பகுதி மற்றும் அடுத்தடுத்த ப்ரோஷன்கள் காணவில்லை மற்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரம்மன் (பரமாத்மா) மேன்மையானவர் என்றும், அவரது வீரத்திற்கு பெயர் பெற்றவர் என்றும், அவர் முழு பிரபஞ்சத்தையும் ஆதரிப்பவர் என்றும் இங்கு கூறப்படுகிறது. இந்த உயர்ந்த பிரம்மன் முழு ஸ்வர்கலோகத்தையும் (தயுலோகம் என்றும் அழைக்கப்படும்) சூழ்ந்துள்ளது.

ஒவ்வொரு வித்யாவிலும் பிரம்மனின் மேற்கண்ட அம்சங்கள் (பண்புகள்) தியானிக்கப்பட வேண்டுமா என்பது இங்கு சந்தேகம். பூர்வபக்ஷி அவர்கள் எந்த குறிப்பிட்ட பிரம்ம வித்யாவிலும் இணைக்கப்படாததால் அவர்கள் தியானிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

“சம்ப்ருதித்யு வ்யாப்திச்ச அதா” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரர் தனது தீர்ப்பில், மேற்கூறிய குணங்கள் அல்லது பண்புகளை அல்பஸ்தானிய வித்யாக்கள் எனப்படும் வித்யாக்களில் தியானிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார், அதில் பரமாத்மா உபாசகரின் அந்தர்யாமியாக தியானிக்கிறார். அந்தர்யாமி இதயத்தில் மிகச் சிறிய இடத்தில் வசிக்கிறார், அங்கு மேலே குறிப்பிடப்பட்ட அம்சம் அல்லது பண்பு என்னவென்றால், பரமாத்மா முழு ஸ்வர்க லோகத்தையும் உள்ளடக்கியது அல்லது அதை ஆகாசம் என்று கூட சொல்லலாம். இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை. அல்பஸ்தான வித்யாக்கள் சாண்டில்ய வித்யா, தஹர வித்யா போன்றவை. எனவே இந்த வித்யாக்களில் மேலே கூறப்பட்ட தியு வியாப்தி (சொர்க்கத்தை சூழ்ந்துள்ள) அம்சத்தை தியானிக்கக் கூடாது.

9) அடுத்த அதிகாரம் புருஷ வித்யாதிகரணமாகும், இது தைத்திரிய உபநிடதத்திலும் சாந்தோக்யோபநிஷத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தைத்திரீய உபநிடதத்தில் உள்ள புருஷ வித்யா நியாச வித்யாவிற்குக் கீழானது மற்றும் பலம் மோட்சமாகும்.

சந்தோக்யாவில் உள்ள புருஷ வித்யா தியானம் செய்பவரின் நீண்ட ஆயுளை நீட்டிப்பதாகும்.

மேற்கூறிய இரண்டு உபநிடதங்களிலும் உள்ள வித்யா ஒரே பெயரைக் கொண்டிருப்பதால் அவை ஒன்றாக இருக்க வேண்டும் என்று பூர்வபக்ஷி கூறுகிறது. சூத்ரகாரர் “புருஷ வித்யாயம் அபிச்ச இடரேஷம் அனாம்நாந்த்” என்ற சூத்திரத்தில் தனது தீர்ப்பை வழங்குகிறார், மேலும் தைத்தரிய உபநிடதத்தில் உள்ள மேற்கூறிய புருஷ வித்யா சாண்டோக்யத்தில் உள்ள புருஷ வித்யாவிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் பலாக்கள் வேறுபட்டவை என்று கூறுகிறார்.

10) அடுத்த அதிகாரம் வேதாத்யாதிகாரணம்.

வேதத்தின் ஒரு குறிப்பிட்ட கிளையின் பாராயணத்தின் தொடக்கத்தில், அந்த கிளையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ஒரு சாந்தி பாதத்தை பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் கூற வேண்டும். அந்த கிளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரம்ம வித்யாவிற்கு மிக அருகில் இந்த சாந்தி பாதம் உள்ளது. இந்த சாந்தி பாதை கிளைக்கு கிளை மாறுபடும். எந்த ஒரு குறிப்பிட்ட சகா அல்லது கிளையின் சாந்தி பாதம் பிரம்ம வித்யாவின் துணை அல்லது அங்கமா இல்லையா என்பது சந்தேகம்.

பூர்வபக்ஷி சாந்தி படா என்பது பிரம்ம வித்யாவின் ஒரு பகுதி மற்றும் துணை அல்லது துணை என்று வாதிடுகிறது. அவர் மேலும் கூறுகையில், சில சாந்தி பதங்கள் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் போது, ​​சன்னோ மித்ர சம் விருணா போன்ற மந்திரங்கள்; மற்றும் sahanava vathu வேறு எந்த பயனும் இல்லை எனவே அவர்கள் வித்யா பகுதியாக இருக்க வேண்டும்.

இந்த சாந்தி பதங்கள் பிரம்ம வித்யாக்களுக்கு துணை (அங்கா) இல்லை என்று சித்தாந்த சூத்ரகாரரின் வாதம் அவரது சூத்திரமான ”வேதாதி அர்த்த பேதத்தில்” கூறுகிறது.

11) அடுத்த அதிகாரம் ஹனி அதிகாரம்”

இந்த அதிகாரத்தில் ஒரு பக்தி யோக நிஷ்டை அல்லது பிரபன்னனின் ‘புண்யா’ மற்றும் ‘பாப கர்மா’ ஆகியவை இந்த மரண உடலை விட்டு வெளியேறி மோட்சத்திற்குச் செல்வதற்கு சற்று முன்பு விவாதிக்கப்படுகின்றன. இது சம்பந்தமாக பல உபநிடத நூல்கள் உள்ளன.

(அ) ​​ஒரு நபர் (பக்தியோகநிஷ்டை அல்லது பிரபன்னா) தனது கர்மா அல்லது பாவங்களை (பாவங்களில் புண்ணியங்களும் அடங்கும், ஏனெனில் அவை மோட்சத்தை அடைவதையும் தடுக்கின்றன) குதிரை முடிகளை உதிர்வது போலவும், சந்திரனைப் போல அவர் தனது மரண சரீரத்திலிருந்து வெளியே வருவார் என்றும் சாந்தோக்கியம் கூறுகிறது. கிரகணத்திற்குப் பிறகு ராகுவின் பிடியில் இருந்து வெளியே வந்து, அக்ரிதம் (உருவாக்கப்படவில்லை) எனப்படும் வைகுண்ட பய லோகத்தில் நுழைகிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் நித்ய விபூதி எனப்படும் வைகுண்ட பைய லோகத்திற்கு ஆக்கமோ அழிவோ இல்லை.

நாம் வாழும் ஒரு பிரம்மாண்டமான உலகங்களை உள்ளடக்கிய பிரபஞ்சம் லீலா விபூதி என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த விபூதி பகவான் ஸ்ரீமன் நாராயணனால் உருவாக்கம் மற்றும் அழிவுக்கு உட்பட்டது. விபூதி என்றால் செல்வம் அல்லது ஐஸ்வர்யம். ஸ்ரீமன் நாராயண பகவான் உபய விபூதி நாதா என்று அழைக்கப்படுகிறார்.

(ஆ) முண்டக உபநிடதத்தில், பக்தி நிஷ்டையாகவோ அல்லது புண்ணியத்தை விட்டு பிரப்பன்னனாகவோ இருக்கும் வித்வான், ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தை அடைந்த பிறகு, பாப்பா பரமாத்மாவுடன் சமத்துவத்தை அடைகிறார் என்று கூறப்படுகிறது.

(இ) ஒரு வித்வானின் மகன்கள் (பக்தி நிஷ்டா அல்லது பிரபன்னர்கள்) தங்கள் தந்தையின் சொத்துக்களும், அவருடைய கர்மாவின் புண்ணியப் பகுதியும் வித்வானின் நண்பர்களுக்கு மாற்றப்பட்டு, அப்பாவின் பங்கு எதிரிகளுக்கு மாற்றப்படும் என்று வேதத்தின் சத்யயானி கிளை கூறுகிறது. வித்வானின் எதிரிகள்.

(ஈ) கௌஷிதகி உபநிடதம், வித்வான் சுக்ருத (புண்யா) மற்றும் துஷ்க்ருத (பாபா) ஆகியவற்றைக் கொட்டுவதாகவும், அவனது நட்பு உறவினர்கள் புண்யத்தைப் பெறும்போது அவனது எதிரிகளான அவனது உறவினர்கள் பாபாவைப் பெறுவதாகவும் கூறுகிறது.

இங்கே புண்யாவையும் பாப்பாவையும் சிந்துவது ஹனி என்றும், அதைத் தனது நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு மாற்றுவது உபயனா என்றும் அழைக்கப்படுகிறது.

முன்பு குறிப்பிட்டுள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் பிரம்ம வித்யாவைப் பின்பற்றி பக்தி யோகம் செய்யும் போது, ​​தியானம் செய்யும் போது இந்த ஹனி மற்றும் உபயனாவை சிந்திக்க வேண்டும். ந்யாச வித்யாவைத் தவிர அனைத்து பிரம்ம வித்யாக்களிலும் இந்த சிந்தனை உபாசனா அல்லது தியானத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த சிந்தனை பக்தி யோகத்தின் துணை.

மேலே கூறப்பட்டுள்ளபடி, சில உபநிடத நூல்கள் புண்ய பாப கர்மாவை நீக்கும் ஹனியை மட்டுமே குறிப்பிட்டுள்ளன, மேலும் சில உபநிடதங்கள் புண்ய மற்றும் அப்பாவை முறையே நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு மாற்றும் உபயனை மட்டுமே குறிப்பிட்டுள்ளன, சில உபநிடதங்கள் ஹனி மற்றும் உபயனம் இரண்டையும் குறிப்பிட்டுள்ளன.

ஹனி மட்டும் நினைத்தால் போதுமா, அல்லது உபயனம் மட்டும் நினைத்தால் போதுமா அல்லது தியானத்தின் போது இரண்டையும் யோசிக்க வேண்டுமா என்பது இங்கு எழும் சந்தேகம்.

ஹனி அல்லது உபயனம் விகல்பம் என்றும் இரண்டும் சமுச்சயம் என்றும் அழைக்கப்படுகிறது.

உபநிடதத்தின் கட்டளைப்படி அது விகல்பமாகவோ அல்லது சமுச்சயமாகவோ இருக்கலாம் என்று பூர்வபக்ஷி கூறுகிறது.

ஹனி எப்பொழுதும் உபாயணத்திற்கு உட்பட்டவர் அல்லது உபயனத்திற்கு துணையாக இருப்பதால், அது சமுச்சயம் மட்டுமே என்றும் விகல்பம் அல்ல என்றும் சூத்ரகாரம் தீர்ப்பை வழங்குகிறது.

சூத்ரம் “ஹநௌது உபயன சப்த சேஷத்வத் குஷ ச்சந்தா, ஸ்துதி உபகனவத் ததுக்தம்”.

இந்த சூத்திரத்தில் பூர்வ மீமாம்சத்தின் நான்கு மாக்சிம்களை சூத்திரகாரர் மேற்கோள் காட்டுகிறார், அவற்றின் விவரங்கள் தேவையில்லை.

12) அடுத்த அதிகாரம் சாம்பராயதிகாரணம்.

மோட்சத்திற்குச் செல்லும் பக்தி நிஷ்டா அல்லது பிரபன்னன் புண்ணிய பாப கர்மாவை மரண உடலை விட்டு வெளியேறுகிறாரா அல்லது பிரகிருதி மண்டாவிற்கும் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்திற்கும் இடையில் உள்ள விரஜா நதிக்கரையில் துளிர்விடுகிறாரா என்பது இங்கே விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு. கௌஷிதகி உபநிடதத்தில் ஒரு கூற்றின் காரணமாக இந்த சந்தேகம் எழுந்தது, அங்கு முக்தாவாக மாறப்போகும் ஜீவன் விரஜாவின் அருகில் வந்து புண்ய மற்றும் பாப கர்மாவை விட்டுவிடுகிறான் என்று கூறப்படுகிறது. பிறிதொரு உரையில் இறப்பின் போது என்று கூறப்பட்டுள்ளது.

சூத்ரகாரர் “சம்பாரயே தார்த்தவ்ய பவத் ததாஹி அந்யே” என்று படிக்கும் சூத்திரத்தில் கூறுகிறார்.

சாம்பரே என்றால் சாவு சரீரத்திலிருந்து புறப்படும் நேரத்தில் என்று பொருள். எனவே முக்தாத்மாவாக மாறப்போகும் வித்வான் மரணத்திற்குப் பிறகு புண்ணிய பாப கர்மாவை அனுபவிக்க எதுவும் இல்லை என்பதாலேயே அந்த கர்மாவை மரண நேரத்தில் விட்டுவிடுகிறார் என்பது முடிவு. மரணத்திற்குப் பிறகு, அவர் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியே ஸ்ரீ வைகுண்டத்திற்குச் செல்வது, சூக்ஷ்ம சரீரத்தை (எந்த உடலுக்கும் தெரியாத சிறிய உடல்) எடுத்துக்கொள்வது என்பது அவர் செய்த பக்தி யோகம் அல்லது பிரபத்தியின் பலன் காரணமாகும். மோட்சத்திற்கு செல்லும் வழியில் சந்திரனுடன் உரையாடுவதற்கு வித்வானுக்கு சூக்ஷ்ம சரிரா தேவைப்படுகிறது.

13) அடுத்த அதிகாரம் அணியமதிகரணம்.

இந்த அதிகாரத்தில் பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்த வித்வான்கள் அனைவரும் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியே மோட்சத்திற்கு செல்கிறார்களா அல்லது உபகோசல வித்யா அல்லது பஞ்சாக்னி வித்யாவின்படி பக்தி யோகம் செய்தவர்கள் மட்டும் மோட்சத்திற்கு செல்கிறார்களா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. அர்ச்சிராடி மார்க்கம்.

உபகோசல வித்யா மற்றும் பஞ்சாக்னி வித்யாவில் மட்டுமே அர்ச்சிராதி மார்க்கம் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த ஐயம் எழுகிறது.

மோட்சத்திற்கு வேறு வழியில்லாததால் பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்தவர்கள் அனைத்து பிரம்ம வித்யா நிஷ்டைகளும் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியாகத்தான் மோட்சத்திற்குச் செல்கின்றனர் என்று சூத்ரகாரர் இந்த சந்தேகத்தை நீக்குகிறார். வித்வான் அர்ச்சிராதி கதி மூலம் மட்டுமே மோட்சத்திற்குச் சென்றால் மறுபிறவி இல்லை.

“அனியம்: சர்வேஷாம், அவிரோதா: சப்த அனுமனாப்யம்” என்பது சூத்ரம். பக்தி யோகம் செய்து உபகோசல வித்யா அல்லது பஞ்சாக்னி வித்யாவைச் செய்தவர்கள் மட்டுமே அர்ச்சிராதி மார்கத்தின் வழியாகச் செல்ல வேண்டும் என்று எந்த விதியும் இல்லை என்பதே இதன் பொருள்.

14) அடுத்த அதிகாரம் அக்ஷராத்யா திகரணமாகும்.

இந்த அதிகாரத்தில் அமலா என்ற ஸ்வரூப நிருபக கல்யாண குணம் அனைத்து பிரம்ம வித்யாக்களிலும் தியானிக்கப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

அமலா என்றால் களங்கமற்ற தன்மை அல்லது ஹேய பிரதி பாதத்வம். ஹேய என்றால் களங்கம்.

இந்த குணம் பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள உபநிடத உரையின் சாராம்சமாகும், அதில் யாக்ஞவல்கியர் முனிவர் கார்கி ஒரு பெண்ணுக்கு தனது கேள்விக்கு பதிலளித்தார்.

பதில்களில் ஒன்று பின்வருமாறு.

இந்தச் சூழலில் அக்ஷரம் எனப்படும் பரமாத்மாவைப் புரிந்து கொண்ட அல்லது உணர்ந்த பிராமணர்கள், திவ்யாத்மா ஸ்வரூபம் எனப்படும் பரமாத்மாவின் உள்ளார்ந்த தன்மையைப் பின்வருமாறு கூறுகிறார்கள் அல்லது அறிவிக்கிறார்கள்.

அஸ்துலம் – பெரிய அல்லது பெரிய அளவில் இல்லை

அனனு – அளவில் அணு இல்லை

அஹ்ரஸ்வம் – குறுகியதல்ல

அதிர்கம் – நீண்ட நேரம் இல்லை

அலோஹிதம் – சிவப்பு நிறத்தில் இல்லை

ஆஸ்நேஹம் – எண்ணெய் இல்லை

அச்சயம் – நிழல் அல்ல

அத்தமா – இருள் அல்ல

அவாயு – காற்று அல்ல

அனகாசம் – ஈதர் அல்ல

அசங்கம் – பற்றுதல் இல்லாமல்

அரசம் – சுவை இல்லாதது

அகந்தம் – வாசனை இல்லாதது

அச்சக்ஷுஷம் – கண்கள் இல்லாமல் அஸ்ரோத்ரம் – காதுகள் இல்லாமல் அவக் – பேச்சு உறுப்பு இல்லாமல்

அமானா – மனம் இல்லாமல் அதேஜஸ்கம் – ஒளி இல்லாமல் அப்ரணம் – மூச்சு இல்லாமல்

முகம் – வாய் இல்லாமல் அனந்தரம் – அகம் அல்ல (உள்ளே இல்லை)

அபஹ்யம் – வெளியில் இல்லை அந்த நகிஞ்சனா அஸ்னாதி – எதையும் சாப்பிடுவதில்லை

நாதத் அஷ்நாதா கச்சனா – எந்த உடலும் அதை உண்ண முடியாது.

ப்யாத்ம ஸ்வரூபத்தில் எந்தக் களங்கமும் இல்லை என்பதே மேற்கூறிய உரையின் தொகையும் பொருளும் ஆகும்.

“அக்ஷராதியம் து அவரோத சமன்யா தத் பாவாப்யாம் ஔபஸாதவத் தாதுக்தி” என்பது சூத்ரம். அக்ஷர தியம் என்பது அனைத்து வித்யாக்களிலும் தியானிக்கப்பட வேண்டிய மேற்கூறியதாகும்.

15) அடுத்த அதிகாரம் அந்தரத்வாதிகாரணம்.

விவாதத்திற்கான தலைப்பு பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள ஒரு பத்தியாகும், அதில் உஷஸ்த முனிவர் யாக்ஞவல்கிய முனிவரிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார், கோஹோல முனிவர் ஒரே மாதிரியான கேள்வியை எழுப்புகிறார் மற்றும் முனிவர் யஞான வல்கியர் பதிலளிக்கிறார். உஷஸ்தியின் கேள்வி பின்வருமாறு. தயவு செய்து சொல்லுங்கள், நேரடியான மற்றும் உணரக்கூடிய பிரம்மன் யார், எல்லா உயிர்களிலும் உள்ள ஆன்மா யார்?.

அதேபோல் கஹோலாவும் அதே கேள்வியை வைக்கிறார். ஆனால் யாக்ஞவல்கியரின் பதில்கள் வேறுவிதமாக இருந்தன. இந்த சூழலில் இரண்டு பிரம்ம வித்யாக்கள் உள்ளன. ஒன்று உஷாதஸ்தாவின் மற்றொன்று கஹோலா. இந்த இரண்டு வித்யாக்களும் ஒன்றா அல்லது வேறுபட்டதா என்பது கேள்வி.

பூர்வபக்ஷி இந்த இரண்டு வித்யாக்களும் வெவ்வேறு பதில்கள் வேறு என்று கூறுகிறார்.

இரண்டு விடைகளும் ஒரே பரமாத்மாவைக் குறிப்பதால் இந்த இரண்டு வித்யாக்களும் ஒன்றே என்று சூத்ரகாரர் கூறுகிறார்.

16) அடுத்த அதிகாரம் காமாதிகரணம்.

விவாதத்திற்கான தலைப்பு தஹர வித்யா ஆகும், இது சாந்தோக்யா மற்றும் பிருஹதாரண்யகா ஆகிய இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உபநிடதங்களில் இந்த தஹர வித்யா வேறுபட்டதா அல்லது இரண்டிலும் ஒன்றா என்பது சந்தேகம். சாண்டோக்யத்தில் ஆகாசம் என்று அழைக்கப்படும் பரமாத்மா எட்டு கல்யான குணங்களுடன் தொடர்புடையதாக இருப்பதால், பிருஹதாரண்யகத்தில் பரமாத்மா ஆகாசத்தின் மீது உறங்குவதாகவும், கல்யாண குண வசிஷ்வாவுடன் தொடர்புடையதாகவும் இருப்பதால், இது வேறுபட்டது என்று பூர்வபக்ஷி கூறுகிறார். வசித்வா என்றால் கட்டுப்படுத்தப்பட்டது.

இரண்டு உபநிடதங்களிலும் தஹர வித்யா ஒன்றே என்று சூத்ரகாரர் தீர்ப்பை வழங்குகிறார். எனவே சாண்டோக்யத்தில் கூறப்பட்டுள்ள 8 பண்புகளுடன் வசித்வா போன்ற பண்புகளைச் சேர்த்து பின்னர் தியானம் செய்ய வேண்டும்.

17) அடுத்த அதிகாரம் தண்ணிர்தனாதிகாரம்.

இது உத்கீத வித்யாவைப் பற்றியது. இந்த வித்யா பிரணவ தியானம். மேன்மையான அல்லது மேன்மையான பலன்களைப் பெறவும், விரைவான பலன்களைப் பெறுவதற்கான தடைகளை நீக்கவும் இந்த வித்யா யாகத்தின் துணையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உத்கீத வித்யா செய்வது கட்டாயமா அல்லது விருப்பமா என்பது இங்கு எழும் சந்தேகம்.

பூர்வ மீமாம்சத்தில் இரண்டு மாக்சிம்கள் உள்ளன. முதலாவது “கோதநேன பசுகம: ப்ரணயேத்” எனப்படும். ஒருவருக்கு பசுக்களை பரிசாக அளிக்க விரும்பினால், அவர் அரிசி மாவு அல்லது கோதுமை மாவின் பச்சரிசியான புரோடாஷத்தை தயார் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பால் கறக்க பயன்படும் பாத்திரத்தில் இருந்து மாவு. மாவில் தண்ணீர் ஊற்றி பச்சரிசி தயாரிப்பது பிராணயாணம் எனப்படும். விருப்பமான ஒரு காரியத்தைச் செய்யும் சூழலில் இந்த மாக்சிம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பர்ணமாயீ ஜுஹூ” என்று மற்றொரு கோட்பாடு உள்ளது. ஜுஹு என்பது ஒரு யாகத்தில் பலி நெருப்புக்கு நெய் வழங்கப் பயன்படும் நீண்ட கை கொண்ட கரண்டி போன்றது. இது ஒரு குறிப்பிட்ட வகை மரத்தால் ஆனது. இது கட்டாயமானது மற்றும் விருப்பமானது அல்ல.

இந்த அதிகாரத்தில் உள்ள முடிவு என்னவென்றால், உத்கீத வித்யாவை ஒரு யாகத்தின் துணை அல்லது துணையாக செய்வது கோதோஹன நியாயம் அல்லது மாக்சிம் போன்ற விருப்பமானது.

18) அடுத்த அதிகாரம் பிரதான அதிகாரம் எனப்படும்.

தஹர வித்யாவில் ஸ்வரூப நிருபக குணங்கள் அல்லது தர்மங்களுடன் பகவான் ஸ்ரீமன் நாராயணனை தியானிப்பதோடு, அவருடைய எட்டு குணங்களையும் தியானிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எட்டு குணங்கள்,

அபஹத பாப்மா – பரமாத்மா எந்த பாவமும் கறையும் இல்லாதவர்.

விஜரா – அவருக்கு முதுமை இல்லை. விம்ருத்யு – அவனுக்கு மரணம் இல்லை.

விசோகா – அவருக்கு எந்த வருத்தமும் வருத்தமும் இல்லை. விஜிகிட்சா – அவருக்கு பசி இல்லை. அபிபாசா – அவருக்கு தாகம் இல்லை

சத்யகாமா – அவர் விரும்பும் எதையும் அடைய அல்லது அடையும் திறன் கொண்டவர்.

சத்யசங்கல்பம் – தான் விரும்பிய எதையும் செய்யும் திறன்.

இறைவனை தியானித்த பின் மேற்கண்ட 8 குணங்களை மட்டும் தியானம் செய்தால் போதுமா, மீண்டும் இந்த 8 குணங்களோடு இணைந்திருப்பதை நினைப்பது அவசியமா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது.

8 குணங்களை மட்டும் நினைத்தால் போதும் என்கிறது பூர்வபக்ஷி. மேற்கூறிய 8 குணங்களுடன் மீண்டும் பரமாத்மாவைத் தியானிக்க வேண்டும் என்று தனது சித்தாந்தத்தில் சூத்ரகாரர் கூறுகிறார்.

19) அடுத்த அதிகாரம் லிங்கபூயஸ்தவத் அதிகாரம் எனப்படும்.

இந்த அதிகாரத்தில் ஒரு நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகுதான், தியானிக்கப்பட வேண்டிய உயர்ந்தவர் யார் என்று சூத்ரகாரர் கூறுகிறார். விவாதத்திற்கு வரும் உபநிடதப் பகுதி தைத்தரிய உபநிடதத்தில் உள்ள நாராயண அனுவாகம். தஹர வித்யா சொல்லிய உடனேயே இந்த அனுவாகம் உபநிடதத்தில் வருகிறது. பூர்வபக்ஷி இந்த நாராயண அனுவாகம் தஹர வித்யாவிற்கு அடிபணிந்தவர் என்றும், ஸ்ரீமன் நாராயணனை தஹர வித்யாவில் மட்டுமே தியானிக்க வேண்டும் என்றும் வாதிடுகிறது. சூத்ரகாரர் தனது முடிவை “லிங்க பூயஸ்த்வத் தத் ஹி பத்லியாஸ் ததாபி” என்ற சூத்திரத்தில் கொடுக்கிறார்.

லிங்கம் என்றால் அறிகுறி அல்லது சின்னம். இந்த அனுவகத்தில் அக்ஷரம், சம்பு, இந்திரன், பிரம்மா போன்ற சொற்கள் குறிப்பிடப்பட்டு அவை ஸ்ரீமன் நாராயணன் என்று கூறப்படுகிறது. இந்திரன், சிவன் மற்றும் நான்கு தலை பிரம்மன் மற்றும் பிறர் போன்ற அனைவருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணரே அந்தர்யாமி என்று அர்த்தம். ஆகாஷா, பரஜ்யோதி போன்ற சில சொற்கள் நேரடியாக ஸ்ரீமன் நாராயணனைக் குறிக்கின்றன.

எனவே அனைத்து பிரம்ம வித்யாக்களிலும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று சூத்ரகாரர் கூறுகிறார்.

20) அடுத்த அதிகாரம் பூர்வ விகல்பாதிகரணம்.

இந்த அதிகாரம் சூழலுக்கு அப்பாற்பட்டது. இருப்பினும் இந்த குணோபசம்ஹார பாதத்தின் கருப்பொருளுக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் பொருத்தம் இல்லாத அக்னிரஹஸ்யத்தில் உள்ள ஒரு பகுதியை சூத்ரகார விவாதிக்கிறது. எனவே இந்த அதிகாரத்தின் விவரங்கள் தவிர்க்கப்படலாம்.

21) அடுத்த அதிகாரம் சரிரே பவதிகாரணம்.

ஒவ்வொரு பிரம்ம வித்யாவிலும் பின்வரும் மூன்று விஷயங்களைக் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

(அ) ​​பகவான் ஸ்ரீமன் நாராயணனுடைய உபஸ்யத்தின் தன்மை

(ஆ) உபாசனா அல்லது பிரம்ம வித்யாவின் தன்மை

(இ) உபாசகரின் இயல்பு அல்லது உபாசனை செய்யும் நபரின் (ஜீவா) இயல்பு.

இது அனுமானிகாதிகாரணத்தில் உள்ள ஒரு சூத்திரத்தின்படி “த்ராயணம் ஏவச்ச உபன்யாசஹ ப்ரஸ்ன:ச”. த்ராயணம் என்றால் மேலே சொன்ன மூன்று புள்ளிகள். இறைவன் தன் உடலாகிய ஜீவாவின் ஆன்மா என்று கூறப்படுவதால், தனிப்பட்ட ஆன்மாவின் தன்மையும் அறியப்பட வேண்டும். ஜீவனின் குணாதிசயங்களில் இரண்டு தொகுப்புகள் உள்ளன, அவர் சம்சாரத்தில் இருக்கும்போது ஒரு தொகுப்பு மற்றும் அவர் வைகுண்ட ப்ய லோகத்தில் இருக்கும் போது மற்றொரு தொகுப்பு.

அவன் இவ்வுலகில் அல்லது சம்சாரத்தில் இருக்கும் போது உள்ள குணாதிசயங்களின் தொகுப்பு (அ) அறிவது (ஆ) செய்வது (இ) அனுபவிப்பது.

மோட்சத்தில் இருக்கும் போது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணனின் எட்டு குணங்கள் அவர் திவ்ய பர்யங்கா அல்லது சிம்ஹாசனத்தில் ஏறியவுடன் மலரும், அதில் பைன் தம்பதிகள் அமர்ந்துள்ளனர். அபஹதபாப்மா, விஜரா, விம்ருத்யு, விசோக:, விஜிகிட்ச, அபிபாச, சத்ய காமம், சத்ய சங்கல்பம் ஆகிய எட்டு குணங்களாகும்.

உபாசனை அல்லது தியானத்தின் போது தியானம் செய்பவர் தன்னை அறிபவராகவும், செய்பவராகவும், அனுபவிப்பவராகவும் நினைக்க வேண்டுமா அல்லது மேற்கூறிய எட்டு குணங்களை உடையவராக தன்னை நினைத்துக் கொள்வதா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. பூர்வபக்ஷி ஜீவா என்பது முதல் குணாதிசயங்களுடன் சிந்திக்கப்பட வேண்டும் என்று கூறும்போது, ​​சூத்ரகாரர் “வியாதிரேகா: தத்பவ பவித்வாத் நது உபலப்திவத்” என்ற சூத்திரத்தில் கூறுகிறார்.

வியாதிரேகா என்றால் வேறுபட்டது, அதாவது ஜீவா என்பது தியானத்தின் போது அவர் இருக்கும் குணாதிசயங்களிலிருந்து வேறுபட்ட பண்புகளுடன் சிந்திக்கப்பட வேண்டும். எனவே மோட்சத்தில் மலரும் எட்டு குணங்களோடுதான் அவர் நினைக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.

22) அடுத்த அதிகாரம் அங்கவபத்தாதிகாரணம்.

இது மீண்டும் உத்கீத வித்யாவுடன் தொடர்புடையது மற்றும் பிரம்ம வித்யாவுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை. எனவே இந்த அதிகாரத்தின் விவரங்கள் தவிர்க்கப்படலாம்.

23) அடுத்த அதிகாரம் பூமாஜ்யாயஸ்த்வாதிகாரன்.

இது வைஸ்வானர வித்யாவைக் குறிக்கிறது. வைஸ்வானர வித்யாவில் இரண்டு வகையான உபாசனைகள் உள்ளன.

(1) வைஸ்வானர புருஷனின் ஒவ்வொரு உறுப்பின் உபாசனா, இது வ்யஸ்த உபாசனா என்று அழைக்கப்படுகிறது.

(2) சமஸ்தோபாசனம் எனப்படும் முழு வைஸ்வாநர புருஷரின் உபாசனா.

வியஸ்தா உபாசனம் செய்ய வேண்டுமா அல்லது சமஸ்தோப் ஆசனம் மட்டும் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. வியாஸ்தோ பாசானம் செய்ய வேண்டும் என்று பூர்வபக்ஷி கருத்து தெரிவிக்கிறார். வ்யஸ்தா உபாஸனத்தை விடச் சிறந்த சமஸ்தா பாசனம் செய்ய வேண்டும் என்று சூத்ரகாரர் கூறுகிறார். உண்மையில் வ்யஸ்தா உபாஸனத்தின் பலன்கள் உபாசகர்களின் ஆன்மாக்களுக்கு மிகவும் ஆபத்தானவை மற்றும் மோட்சத்தின் பலனை அல்லது நித்திய பேரின்பத்தை அவர்களால் ஒருபோதும் அடைய முடியாது.

24) அடுத்த அதிகாரம் சப்தாத்பேதாதி கரணம் எனப்படும்.

இங்கு முன்னர் பட்டியலிடப்பட்ட 32 பிரம்ம வித்யாக்கள் ஒன்றா அல்லது அவை வேறுபட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

பூர்வபக்ஷி, பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய தியானத்தின் பொருளால் எல்லா வித்யாக்களும் ஒன்றே என்று வாதிடுகிறது.

சூத்ரகாரரின் முடிவு அனைத்து வித்யாக்களும் வேறுபட்டவை, ஏனென்றால் தியானம் செய்ய வேண்டிய பண்புகள் அல்லது கல்யாண குணங்கள் வித்யாவிற்கு வித்யாவிற்கு மாறுபடும்.

25) அடுத்த அதிகாரம் விகல்ப திகரணம் எனப்படும்.

மோட்சத்தை அடைய விரும்பும் ஒருவர் 32 பிரம்ம வித்யாக்களையும் ஏற்று உபாசனை செய்ய வேண்டுமா அல்லது தியானம் செய்ய வேண்டுமா அல்லது ஏதாவது ஒரு வித்யாவை ஏற்று உபாசனை செய்தால் போதுமா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது.

ஒவ்வொரு பிரம்ம வித்யாவிலும் மோட்சத்தின் பலன் அல்லது நித்திய ஆனந்தத்தின் பலன் ஒன்றே என்பதால் உபாசகர் தியானத்திற்கு ஏதேனும் ஒரு வித்யாவை ஏற்றுக்கொண்டால் போதும் என்று சூத்ரகாரர் “விகல்ப: ஒரு விசிஷ்டா பலத் வத்” என்ற சூத்திரத்தில் தீர்ப்பை வழங்குகிறார். அனைத்து வித்யாக்களும் உபாசனைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஒரு நபர் அனைத்து வித்யாக்களையும் ஏற்று உபாசனை செய்வது நடைமுறையில் சாத்தியமற்றது என்றால் சிறப்பு சாதனை எதுவும் இல்லை.

26) இந்தப் பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் யதாஸ்ரயபாவாதிகாரணம் எனப்படும்.

இந்த அதிகாரம் நடைமுறையில் இந்த பாதத்தில் உள்ள தன்னிர்தனா நியமதிகாரனா 17 வது ஒரு யாகத்தில் உத்கீத வித்யா செய்வது கோதோஹன நியாயத்தின் படி விருப்பமானது என்று கூறப்பட்டது. ஒவ்வொரு யாகத்திலும் உத்கீத வித்யா கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த பூர்வபக்ஷி தனக்கு ஆதரவாக மேலும் சில புள்ளிகளை எழுப்பியதால் மறுமொழி தவிர்க்க முடியாததாகிவிட்டது.

சூத்ரகரா அனைத்து புள்ளிகளுக்கும் பொருத்தமான பதில்களை அளிக்கிறது மற்றும் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதிப்படுத்துகிறது.

3 வது அத்தியாயம் சாதனா அத்யாயா என்று அழைக்கப்படுகிறது, அதாவது மோட்சத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் கையாளும் அத்தியாயம். இந்த அத்தியாயத்தின் 3 வது காலாண்டில் மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையாக பக்தி யோகம் நிறுவப்பட்டது, இது பகவான் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றிய தீவிர தியானமாகும், இது அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படும் எட்டு நிலை பயிற்சியாகும். இந்த பக்தி யோகம் பிரம்ம வித்யா என்றும் அழைக்கப்படுகிறது, இது உபநிடதங்களில் 32 வெவ்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. பிரம்ம வித்யாவின் 32 வடிவங்களில் 31 பிரம்ம வித்யாக்கள் பக்தி யோகாவுடன் நேரடியாக தொடர்புடையவை, இல்லையெனில் அஷ்டாங்க யோகா என்று அழைக்கப்படுகிறது. 32 வது பிரம்ம வித்யா நியாசவித்யா என்று அழைக்கப்படுகிறது, இது பிரபத்தி அல்லது சரணாகதி என்று அழைக்கப்படுகிறது, இது ஐந்து துணை அல்லது அங்கங்களைக் கொண்டுள்ளது.

31 பிரம்ம வித்யாக்களில் கூட பஞ்சாக்னி வித்யா என்று ஒரு பிரம்ம வித்யா உள்ளது.

பஞ்சாக்னி வித்யாவில் தியானத்தின் பொருள் அவனது சுயமே, அவர் பிரம்மனை (ஸ்ரீமன் நாராயணனை) தனது ஆத்மாவாகக் கொண்டவராக தியானிக்கப்பட வேண்டும். இது பிரம்மத்மக ஸ்வாத்ம உபாஸனம் எனப்படும். பரமாத்மா ஆத்மா அல்லது ஆத்மா என்றும் ஜீவாத்மா அவரது உடல் என்றும் இதன் பொருள். மற்ற 30 பிரம்ம வித்யாக்களில், தியானத்தின் பொருள் பகவான் ஸ்ரீமன்நாராயணன் தியானம் செய்பவர் அல்லது தனிப்பட்ட ஆன்மாவைத் தனது உடலாகக் கொண்டவர். இதுவே ஸ்வாத்மா சரிரக பரமாத்ம உபாஸனம் எனப்படும். எனவே பஞ்சாக்னி வித்யாவிற்கும் மற்ற 30 பிரம்ம வித்யாக்களுக்கும் தியான முறையில் வித்தியாசம் உள்ளது என்பது மேற்கூறியவற்றிலிருந்து தெளிவாகிறது. நியாசவித்யா அல்லது பிரபத்தியில் ஆன்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் சரணடையும் தியானம் இல்லை, இந்த பிரபத்தியில் ஸ்வரூப சமர்ப்பணம், பர சமர்ப்பணம், பல சமர்ப்பணம் ஆகிய மூன்று சமர்ப்பணங்கள் உள்ளன. தன் சுயத்தின் அடிப்படை மற்றும் உள்ளார்ந்த தன்மையை பரமாத்மாவுக்கு வழங்குவது ஸ்வரூப சமர்ப்பணம் எனப்படும். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் சம்சார பந்தத்திலிருந்து விடுவிப்பதன் மூலம் தனது சொந்த ஆன்மாவைப் பாதுகாக்கும் பொறுப்பை பாரத சமர்ப்பணம் ஒப்படைக்கிறது.

பல சமர்ப்பணம் என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்குப் பலத்தை சமர்ப்பணம் செய்வதாகும். மோட்சத்தை அடைந்த பிறகு முக்தி பெற்ற ஆன்மா அல்லது முக்தாத்மா ஸ்ரீ வைகுண்ட பியாநகரில் உள்ள பைன் தம்பதிகளுக்கு நித்திய சேவை செய்கிறார். பைன் தம்பதியினர் இந்த சேவையில் மகிழ்ச்சி அடைகிறார்கள், மேலும் அவர்கள் மோட்சத்தை அடையும் தனிப்பட்ட ஆத்மாவின் பலனை அனுபவிப்பவர்களாக மாறுகிறார்கள். முக்தாத்மாவும் சேவை செய்வதன் மூலம் இந்த நித்திய சுகத்தை அனுபவிக்கிறார். தனிப்பட்ட ஆன்மாவின் உள்ளார்ந்த மற்றும் இயற்கையான பண்புகள் (அ) அறிதல் (ஆ) செய்தல் (இ) அனுபவிப்பது (ஈ) சுயமாக ஒளிர்வது (இ) எந்த உதவியும் இல்லாமல் தன் சுயத்தை அறிவது (எஃப்) அணு அளவில் இருப்பது (ஜி) நித்தியமானது ( h) inpisible (I) உடலிலிருந்து வேறுபட்டது (j) புலன்களிலிருந்து வேறுபட்டது.

மேற்கூறியவற்றின் பின்னணியில் மற்றும் முந்தைய குண உபசம்ஹார பாதத்திலிருந்து நூலை எடுத்து இந்த அத்தியாயத்தின் கடைசி பாதம் தொடங்குகிறது. பக்தி யோகாவுக்குத் தேவையான துணைப் பொருட்களைக் கையாளும் இந்த பாதம் அங்க பாதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாதத்தில் 15 அதிகாரங்கள் உள்ளன. முதல் அதிகாரம் 20 சூத்திரங்களைக் கொண்ட புருஷார்த்த அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ பாஷ்யத்தில் உள்ள 156 அதிகாரங்களில் இந்த அதிகாரத்தில் அதிக எண்ணிக்கையிலான சூத்திரங்கள் உள்ளன, அதாவது 20. ஸ்ரீ பாஷ்யத்தில் உள்ள வேறு எந்த அதிகாரத்திலும் இந்த எண்ணிக்கையில் இல்லை.

புருஷார்த்தம் என்றால் உச்ச இலக்கு அல்லது மோட்சம். புருஷார்த்தத்தை அடைவதற்கு கர்மா அல்லது பிரம்ம வித்யா புருஷார்த்தத்திற்கான வழிமுறையா என்பது இந்த அதிகாரத்தில் உள்ள விவாதம்.

பிரம்ம சூத்திரங்களின் ஆசிரியர் அல்லது இயற்றிய முனிவர் பதராயணன் இந்த அதிகாரத்தைத் தொடங்குகிறார். புருஷார்த்த அதா: சப்தாதிதி பாதராயண என்று சித்தாந்த சூத்திரத்துடன்.

பக்தி யோகமாகவோ அல்லது பிரபத்தியாகவோ இருக்கும் பிரம்ம வித்யாவின் மூலம் புருஷார்த்தம் அல்லது உயர்ந்த இலக்கு அடையப்படுகிறது என்பதே இந்த சூத்திரத்தின் பொருள்.

இங்கு ஜைமினி முனிவர் வருகிறார், அவர் இந்த அதிகாரத்திற்கு எதிரி அல்லது பூர்வபக்ஷி ஜைமினி முனிவர் பாதராயனின் சீடர் என்று கூறப்படுகிறது. ஜைமினி ஒரு நாத்திகர் என்றும் கடவுள் மற்றும் பிற வான கடவுள்கள் இருப்பதை நம்பவில்லை என்றும் ஒரு கருத்து உள்ளது. இந்தக் கருத்து வலுவாக மறுக்கப்பட்டு, ஜைமினி முனிவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்று நிறுவப்பட்டது, ஏனெனில் ஜைமினி முனிவர் பிரம்ம சூத்திரங்களின் பல இடங்களில் பத்ராயனால் மேற்கோள் காட்டப்பட்டதால், ஜைமினி முனிவர் பிரம்மன் பற்றிய பதராயனின் கருத்துக்களை ஆதரிக்கிறார்.

இங்கு ஜைமினி ஆறு சூத்திரங்களில் பிரம்ம வித்யா கர்மாவிற்கு துணை/அடிப்படையானது என்றும் கர்மா வித்யாவிற்கு துணை இல்லை என்றும் கூறுகிறது. இங்கு கர்மா என்றால் தினசரி சடங்குகள் மற்றும் யாகங்கள் என்று பொருள்.

ஜைமினி முன்வைத்த காரணங்கள்

i) அஸ்வபதி மன்னனும், ஜனகச் சக்கரவர்த்தியும் பிராமணீஷ்டர்களாக இருந்தாலும் புகழ்பெற்ற கர்மநிஷ்டர்கள். பிரம்ம வித்யை செய்பவன் பிரம்மநிஷ்டா, கர்ம யோகம் செய்பவன் கர்மநிஷ்டம்.

ii) உத்கீத வித்யாவில், உத்கீத வித்யாவைப் பயிற்சி செய்வதோடு கர்மாவாகிய யாகத்தைச் செய்பவர் சிறந்த மற்றும் அதிக திறன் அல்லது சக்திவாய்ந்த பலன்களை அடைவார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே வித்யா கர்மாவின் துணை.

iii) வித்யாவும் கர்மாவும் எப்பொழுதும் ஒன்றாகச் செல்வதாகவும், தர்க்கரீதியான பகுத்தறிவின் மூலம் வித்யா கர்மாவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

iv) சந்தோக்யோபநிஷத்தின் கடைசி பத்தியில் பிரம்ம வித்யா பயிற்சி செய்பவர் கர்மா செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே வித்யா கர்மாவின் துணையாகத் தோன்றுகிறது.

v) ஈஷாவாஸ்ய உபநிடதத்தில் ஒரு மனிதன் கர்மாவை மட்டுமே செய்து 100 வருடங்கள் இவ்வுலகில் வாழ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே வித்யாவால் உயர்ந்த இலக்கை அடைய முடியாது. எனவே வித்யா கர்மாவின் துணை.

இப்போது சூத்ரகார முனிவர் பாதராயணன் மேற்கூறிய விஷயங்களை மறுத்து, கர்மா வித்யாவுக்குத் துணை என்றும், பிரம்ம வித்யாவினால்தான் முக்தி அடையும் என்றும் நிறுவத் தொடங்குகிறார். மறுப்பு புள்ளிகள் பின்வருமாறு.

i) பரமாத்மா அனைத்து அம்சங்களிலும் ஜீவாத்மாவை விட உயர்ந்தவர், மேலும் ஜீவன் பிரம்ம வித்யாக்களில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி பரமாத்மாவை தியானிக்காத வரை அவன் முக்தியை அடைய மாட்டான். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள முறைப்படி கர்மயோகம் செய்தால் மட்டுமே பிரம்ம வித்யாவைப் பயிற்சி செய்ய முடியும்.

ii) பிரம்ம வித்யாவால் செய்யப்படும் கர்மா பல நோக்கங்களைக் கொண்டது மற்றும் கர்மா எப்போதும் பிரம்ம வித்யாவிற்கு துணையாக இருக்க வேண்டியதில்லை. நாம் எந்த நோக்கத்திற்காக வேதங்களைக் கற்றுக்கொள்கிறோம், எந்த நோக்கத்திற்காக கர்மா செய்கிறோம் என்று கவஷேயர்கள் போன்ற முனிவர்கள் கூறுகிறார்கள் என்று சில உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது. கர்மா என்பது பிரம்மவித்யாவின் இன்றியமையாத துணை அல்ல என்பதை இது குறிக்கிறது.

iii) மேலும் கர்மத்தை அதன் பலனை எதிர்பார்க்காமல் செய்வது பிரம்ம வித்யாவுக்கு துணை என்றும் அந்த கர்மாவை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதன் பலனை எதிர்பார்த்து செய்யப்படும் கர்மா பிரம்ம வித்யாவிற்கு எதிரானது, அதன் பலன் மோட்சம் (நித்திய ஆனந்தம்).

எனவே பிரம்ம வித்யா கர்மாவுக்கு துணையாக இருக்க முடியாது.

iv) உத்கீத வித்யா கர்மாவின் துணை என்ற உபநிஷத வாக்கியத்தை பிரம்ம வித்யாவிற்குப் பயன்படுத்த முடியாது. உத்கீத வித்யா பிரம்ம வித்யா அல்ல.

v) வித்யாவும் கர்மாவும் எப்பொழுதும் ஒன்றாகச் செல்கின்றன என்ற உபநிடதக் கூற்று, வித்யா கர்மாவுக்கு அங்கம் என்று குறிப்பாகக் கூறவில்லை. அங்க என்றால் துணை, துணை அல்லது கீழ்நிலை என்று பொருள். பிரம்ம வித்யா மோட்சத்தின் சொந்த பலனுக்காக உள்ளது, அதே நேரத்தில் கர்மா அதன் சொந்த பலனுக்காக உள்ளது. ஜோதிஷ்டோம யாகம் ஸ்வர்க லோகத்தை அடைவதற்கானது. புத்திர காமேஷ்டியாக என்பது ஒரு மகனைப் பெறுவதற்காக. கரீரீஷ்டி என்பது மழையைப் பெறுவதற்காக.

இந்த அதிகாரத்தில் சூத்ரகாரர், யாகங்கள் போன்ற எந்த கர்மாவையும் அணுகாத சந்நியாசிகள் அல்லது காவி அங்கி அணிந்த சந்நியாசிகளும் கூட பக்தி யோகம் அல்லது பிரம்ம வித்யாவைப் பயிற்சி செய்யத் தகுதியுடையவர்கள் என்று கூறுகிறார்.

எனவே பிரம்ம வித்யா ஒருபோதும் கர்மத்திற்கு அங்கமாக இருக்க முடியாது என்பது முடிவு.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் “ஸ்துதிமாத்ரா அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரமும் அடுத்த அதிகாரமும் சூழலுக்கு அப்பாற்பட்டவை மற்றும் இந்த பாதத்தின் கருப்பொருளுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை. இந்த பாதத்தின் கருப்பொருள் பிரம்ம வித்யாவின் அத்தியாவசிய துணைகளை கருத்தில் கொள்வதாகும்.

இந்த அதிகாரத்திற்கும் முந்தைய அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பை பின்வருமாறு எழுதலாம்.

முந்தைய அதிகாரத்தில் சந்தோக்யோபநிஷத் பிரம்மா சம்ஸ்தாவின்படி பிரம்மநிஷ்டா என்று அழைக்கப்படும் ஒருவர் மோட்சத்தை அடைவார் என்று கூறப்பட்டது. பிரம்மநிஷ்டா என்றால் பிரம்ம வித்யா அல்லது பக்தி யோகம் செய்பவர் என்று பொருள். மேற்குறிப்பிட்ட வாசகம் பிரம்மநிஷ்டையைப் போற்றும் விதமாகவும், பிரம்மச்சாரி (இளங்கலை), கிருஹஸ்தா (திருமணமானவர்), வானபிரஸ்தம் (வீடு அந்தஸ்தைத் துறந்து காட்டில் வசிப்பவர்) ஆகிய நான்கு ஆசிரமங்களில் இருப்பவர்கள் என்ற உண்மையை நினைவுபடுத்துவதற்காக இது செய்யப்பட்டது. மற்றும் காவி அங்கி அணிந்த சந்நியாசிகள் பக்தி யோகா அல்லது பிரபத்திக்கு தகுதியுடையவர்கள். ஆசிரமங்களைக் குறிப்பிடுவது பிரம்மனைப் போற்றுவதற்காகத்தான்.

அதேபோல் உத்கீத வித்யாவில் சாரங்களுக்கிடையில் சாரமாக இருக்க பிரணவத்தை போற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது வெறும் பிரணவத்தின் துதியா அல்லது சாரங்களுக்கிடையில் சாரமான மேற்கூறிய அம்சத்தைக் கருத்தில் கொண்டு பிரணவத்தை தியானிக்க வேண்டுமா என்ற சந்தேகம் எழுகிறது. உபநிஷத வேதம் எப்பொழுதும் சில புதிய அல்லது புதுமையான விஷயங்களைச் சொல்வது போல், பிரத்யக்ஷ அல்லது அனுமன பிரமாணத்தால் நிறுவப்படாத, மேற்கூறிய அம்சத்துடன் பிரணவத்தை தியானிக்க வேண்டும் என்று சூத்ரகாரம் தீர்ப்பை வழங்குகிறது. இந்த அதிகரணம் இரண்டு சூத்திரங்களைக் கொண்டது.

மூன்றாவது அதிகாரத்திற்கு பரிப்லவர்தாதிகாரன் என்று பெயர். முன்பு குறிப்பிட்டது போல் தின்னங்களும் சூழலுக்கு அப்பாற்பட்டவை. பரிப்லவம் என்றால் முகஸ்துதி அல்லது புகழ்ச்சி என்று பொருள்.

உபநிடதங்களில் எப்போதும் ஒரு பிரம்ம வித்யாவுடன் ஒரு கதை மாறாமல் இணைக்கப்பட்டுள்ளது. இந்திரன் பிரதர்தனனுக்கு உபதேசித்த பிரதர்தன வித்யாவில், ஒரு மனிதன் இந்திரனைச் சந்திக்க சொர்க்கத்திற்குச் செல்கிறான் என்று ஒரு கதை உள்ளது. இந்திரன் தன்னிடம் இருந்து உதவி பெற்றதன் மூலம் பரஸ்பர சைகையாக பிரதர்தனிடம் ஒரு வரம் கேட்கிறான். அதே போல சத்வித்யாவில் ஸ்வேதகேதுவின் கதை சொல்லப்படுகிறது. பிரம்ம வித்யாக்களுடன் இணைக்கப்பட்ட இந்தக் கதைகள் வெறும் கதை மதிப்பைக் கொண்டிருக்கின்றனவா அல்லது பிரம்ம வித்யாக்களின் ஒருங்கிணைந்த பகுதியா மற்றும் பிரம்மவித்யாக்களைப் பயில்பவர்களைப் புகழ்வதற்காகவே உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. அஸ்வமேத யாகத்தில் ஒவ்வொரு நாளும் சில வேத மந்திரங்களைச் சொல்லி மன்னன் முகஸ்துதி செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கதைகள் பிரம்ம வித்யாக்களைப் போற்றுவதாகவும், மோட்சத்தை அடைய இந்த பிரம்ம வித்யாக்களை நாடுவதற்கு அவை மக்களைத் தூண்டுவதாகவும் இந்தச் சூழலில் சூத்ரகாரர் தெளிவாகக் கூறுகிறார்.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் “அக்னிந்தனாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இது முதல் அதிகாரத்துடன் நேரடித் தொடர்பு கொண்டது.

நான்காவது ஆசிரமத்தைச் சேர்ந்த காவி வஸ்திரம் தரித்த துறவிகளும் மோட்சம் பெற உபாசனை அல்லது பக்தி யோகம் செய்யத் தகுதியுடையவர்கள் என்று முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், ஒரு துறவி அல்லது சன்யாசி அக்னி அல்லது நெருப்புடன் தொடர்புடைய எந்த கர்மாவையும் செய்ய தகுதியற்றவராக இருக்கும்போது, ​​கர்மாவை பக்தி யோகம் செய்வதற்கு நேரடி மற்றும் தொடர்ச்சியான முன்நிபந்தனையாக இருக்கும்போது, ​​மோட்சத்தை அடைவதற்கு ஒரு சன்யாசி எப்படி பக்தி யோகம் செய்ய தகுதியுடையவராவார்? .

சன்யாசிகள் உபாசனம் அல்லது பக்தி யோகம் செய்யத் தகுதியுடையவர்கள் என்று உபநிடதம் தெளிவாகக் கூறும்போது, ​​அக்னியுடன் தொடர்புடைய கர்மா அவர்களுக்குப் பொருந்தாது, அது கிருஹஸ்தர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சூத்ரகாரர் கூறுகிறார். எனவே சன்யாசிகள் அக்னியுடன் தொடர்புடைய கர்மாவைச் செய்யாமல் பக்தி யோகத்தைச் செய்யலாம்.

தற்செயலாக, சன்யாசிகள் கர்மா செய்வதிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை என்பதை இந்தச் சூழலில் கவனிக்க வேண்டும். நமது விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தில் (ஸ்ரீ பகவத் ராமானுஜ தரிசனம்) சன்யாசிகளுக்கு புனித நூல் (யஜ்ஞோ பவிதா), டஃப்ட் (சீகா), ஊர்த்வபுந்த்ரா, புண்ட்ரா என்பது நெற்றியில் ஒரு குறி. மேல்நோக்கிய திசையில் இருந்தால் அது ஊர்த்வபுந்த்ரா (ஊர்த்வா என்றால் மேல்நோக்கி) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர்த்வ புண்ட்ரா விஷ்ணு பாத வடிவத்தில் இருக்க வேண்டும் (ஸ்ரீமன் நாராயணனின் பாதங்கள்). எனவே ஊர்த்வ புண்ட்ரா என்பது திருமனை (புனித பூமி) பயன்படுத்தி வெள்ளை நிறத்தில் இரண்டு வெளிப்புற மேல்நோக்கி அடையாளங்களைக் கொண்டுள்ளது மற்றும் இடையில் ஸ்ரீ சொர்ணம் என்று அழைக்கப்படும் மஞ்சள் அல்லது சிவப்பு குறி உள்ளது. ஸ்ரீ வைஷ்ணவ சன்யாசிகளுக்கு திரிதாண்டா என்ற மூன்று குச்சிகள் உண்டு. இது அத்வைதி சந்நியாசிகளுக்கு நேர் எதிரானது. அவர்களிடம் புனித நூல் மற்றும் கட்டி இல்லை,

அவர்கள் பாஸ்மா (சாம்பல்) அணிந்திருக்கிறார்கள், அவர்களிடம் ஏகதண்டா என்ற ஒரே ஒரு குச்சி மட்டுமே உள்ளது. ஸ்ரீ வைஷ்ணவ சந்நியாசிகள் தினமும் மூன்று முறை சந்தியாவந்தனம் மற்றும் அஷ்டாக்ஷர ஜபம் செய்வது வழக்கம். அர்ச்ச வடிவில் அல்லது சாளக்கிராமத்தில் இருக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை வழிபடுகிறார்கள்.

அத்வைதி சந்நியாசிகள் சந்தியாவந்தனம் செய்வதில்லை. எனவே சன்யாசிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவைச் செய்த பிறகு பிரம்ம வித்யாவைப் பயிற்சி செய்யலாம்.

ஐந்தாவது அதிகாரம் சர்வபேக்ஷாதிகாரணம் எனப்படும். பக்தி யோகம் செய்வதற்கு சன்யாசிகள் அக்னியுடன் தொடர்புடைய கர்மாவைச் செய்யத் தேவையில்லை என்று முந்தைய அதிகாரத்தில் கூறப்பட்டபோது, ​​கிரிஹஸ்தனுக்கு (வீடு வைத்திருப்பவருக்கு) மேற்கூறியவை தேவையா என்ற கேள்வி எழுகிறது. அக்னிஹோத்ரா மற்றும் யாகங்கள் போன்றவை.

பிராமணர்கள் (பிராமணர்களில் க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களும் அடக்கம்) பிரம்மனை (ஸ்ரீமன் நாராயண பகவான்) அறிந்துகொள்ளும் ஆசையைப் பெறுகிறார்கள், பின்னர் அவர்கள் வேதம் ஓதும்போதும், யாகங்கள் செய்யும்போதும், தகுதியானவர்களுக்கு அர்ப்பணம் செய்யும்போதும், தியானிப்பார்கள் என்றும் பிருஹதாரண்யக உபநிஷதம் தெளிவாகக் கூறுகிறது. மற்றும் உண்ணாவிரதம். இந்த விஷயங்கள் தியானம் செய்பவர்களின் மனதைத் தூய்மைப்படுத்துகின்றன, இது தியானத்திற்குத் தேவையான ஒருமுகத்தை அடையத் தேவையானது. எனவே மேற்கண்டவை தியான அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள். எனவே பக்தி யோகத்தை நாடுவதற்கு க்ரஹஸ்தர்களுக்கு யாகங்களின் வடிவில் கர்மங்களைச் செய்வது அவசியம்.

எனவே மேற்கூறிய உபநிடதக் கூற்றின் அடிப்படையிலான சூத்ரகாரம் மேற்கூறிய உண்மையை மீண்டும் வலியுறுத்துகிறது மற்றும் மேற்கூறியவற்றிற்கு அழகான உதாரணத்தையும் தருகிறது. குதிரை சவாரி செய்யும் ஒரு நபர் பயணிப்பதற்கான ஒரு வழியாக இருந்தாலும், அதற்கு சில கூடுதல் பொருத்துதல்கள் அல்லது ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. ஒரு பிரேக்கைப் பயன்படுத்துவதற்கும் அதை வேகப்படுத்துவதற்கும். இங்கும் பக்தி யோகம் என்பது மோட்சத்திற்கான ஒரு வழிமுறையாகும், மேலும் பக்தி யோகத்தைப் பெறுவதற்கு கூடுதல் துணை அல்லது அங்கம் தேவைப்படுகிறது.

வாக்யார்த்த ஞானம் எனப்படும் தத்வமசி என்ற உபநிடத வாக்கியத்தின் அறிவு மோட்சத்திற்கான வழிமுறையாக இருக்க முடியாது என்றும், உபாசனாத்மக ஞானம் என்று அழைக்கப்படும் தியானத்தின் அறிவு மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையாகும் என்றும் ஸ்ரீ பகவத் ராமானுஜம் இந்தச் சூழலில் தெளிவாகக் கூறுகிறார். பிரபத்தி கூட அறிவின் வடிவில் உள்ளது.

இந்த பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் ஷமடமாதி அதிகாரம் எனப்படும். ஷமம் என்றால் கண்கள், காதுகள், மூக்கு, தோல், நாக்கு, பிறப்புறுப்பு, பேச்சு போன்ற வெளிப்புற புலன்களை அல்லது இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவது என்று பொருள். தமம் என்றால் மனதைக் கட்டுப்படுத்துவது. வேறு சில சூழல்களில், தமா என்றால் வெளிப்புற புலன்களின் கட்டுப்பாடு மற்றும் ஷமா என்றால் மனதைக் கட்டுப்படுத்துதல். பக்தி யோகப் பயிற்சிக்கு புலன்களைக் கட்டுப்படுத்துவது அவசியமா என்பதுதான் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு, அதே சமயம் புலன்களைக் கட்டுப்படுத்துவது சந்நியாசிகளால் எளிதில் சாத்தியமாகும், ஏனெனில் அவர்களுக்கு சந்தியா வந்தனங்கள் மற்றும் இறைவனை வணங்குவதைத் தவிர அதிக கர்மாக்கள் இல்லை. க்ரிஹஸ்தர்களின் விஷயத்தில் அது கடினமானது, ஏனென்றால் அவர்களின் புலன்கள் யாகங்கள் போன்ற கர்மாக்களை செய்வதில் ஈடுபட்டுள்ளன.

பிருஹதாரண்யக உபநிடதம் கூறுகிறது “எனவே, மேற்கூறியவாறு அறிவைப் பெற்றவர், தனது மனதைக் கட்டுப்படுத்தியவர், தனது வெளிப்புற புலன்களைக் கட்டுப்படுத்தியவர், அனைத்து ஆசைகளிலிருந்தும் விடுபட்டவர் (தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்யாமல்), சகிப்புத்தன்மை அல்லது பொறுமையுடன், இணக்கமான அல்லது அமைதியானவர். மனம், தன் சுயத்தின் (ஜீவாத்மா) பரமாத்மா அல்லது உள் ஆன்மாவை (அந்தர்யாமி) காண்கிறது. இந்த தரிசனமே தியானம்.”

இந்த அதிகாரத்தில் உள்ள சூத்ரகாரரின் வாதம் என்னவென்றால், உபாசனை (தியானம்) செய்யும் போது ஒரு நபர் மனம் உட்பட தனது புலன்களைக் கட்டுப்படுத்த முடியும், இருப்பினும் நிச்சயமாக அவரது புலன்கள் கர்மாவின் செயல்பாட்டின் போது ஈடுபட்டுள்ளன. எனவே முடிவு ஷமா மற்றும் தமா என்பது பக்தி யோகாவின் அங்கங்கள் (துணை அல்லது துணை பொருட்கள் அல்லது பொருட்கள்).

இந்தப் பாதத்தில் ஏழாவது அதிகாரம் சர்வண்ண அனுமதி அதிகாரம்.

இங்கு அன்ன என்றால் உணவு. பிரம்ம வித்யா அல்லது பக்தி யோகம் செய்யும் பிராமணீஷ்டா சாப்பிடும் உணவின் மீது இந்த அதிகாரம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

சாந்தோக்யோபநிஷத் கூறுகிறது “உணவு தூய்மையாகவும் குறைபாடுகளற்றதாகவும் இருந்தால், சத்வ குணம் அதிகரிக்கும். சத்வ குணம் அதிகரித்தால் துருவனு ஸ்மிருதி உண்டாகும். இந்த துருவனு ஸ்மிருதியே பக்தி யோகம்”.

பகவத் கீதையில், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒருவர் உண்ணும் உணவு சாத்விகம், ராஜஸம் மற்றும் தாமஸம் என மூன்று வகைப்படும் என்று கூறுகிறார்.

சாத்விக உணவு பின்வருமாறு. நீண்ட ஆயுளையும், புத்திசாலித்தனத்தையும், வீரியமுள்ள ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கும் உணவு, இனிப்பானது, சாதுவானது, நீடித்தது, இயற்கையாக ஏற்றுக்கொள்ளக்கூடியது, உண்ணக்கூடியது.

பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கிக் கூறும் ஸ்லோகத்தில், பின்வரும் தொழில்நுட்பச் சொற்கள் உள்ளன.

ரஸ்ய:, ஸ்நிக்தா:, ஸ்திர:, ஹৃத்யா:

(அ) ​​பால், சர்க்கரை மற்றும் இனிப்பு சுவை கொண்ட பிற பொருட்கள் ரஸ்யா வகையின் கீழ் வருகின்றன:

(ஆ) வெண்ணெய், சாத்விக் பொருட்கள் மற்றும் பிற கொழுப்புப் பொருட்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் ஸ்நிக்தா வகையின் கீழ் வருகின்றன:

(இ) நீண்ட காலம் உடலைத் தாங்கி வலிமையைத் தரும் உணவுகள் ஸ்திரம் எனப்படும்.

(ஈ) கெட்ட அல்லது தூய்மையற்ற உணவுகள் “ஹ்ருத்யா:” வகைக்குள் அடங்கும்

உண்ணக்கூடியவை நான்கு வகைப்படும்

(அ) ​​பக்ஷ்யா – விழுங்குவதற்கு முன் மெல்லப்பட வேண்டியவை.

(ஆ) போஜ்யா – நேரடியாக விழுங்கப்பட்டவை.

(இ) லேஹ்யா – நக்கப்பட்டவை

(ஈ) சோஸ்யா – உறிஞ்சப்பட்டவை.

(இ) ஜாதரங்கனிக்கு (ஜாமீன் சாறு) அந்தர்யாமியாக நான்கு விதங்களில் உணவை ஜீரணிக்க ஏற்பாடு செய்வதாக கீதாச்சாரியார் (கிருஷ்ணர்) கூறுகிறார்.

ராஜசா உணவு விவரம் வருமாறு..

கசப்பான, அமிலம், உப்பு, அதிக சூடான, கடுமையான, உலர்ந்த மற்றும் எரியும் உணவுகள் துன்பம், துக்கம் மற்றும் நோய்

தாமச உணவு விவரம் வருமாறு..

பாதி சமைக்கப்பட்ட, சுவை இழந்த, அழுகிய, பழுதடைந்த, மாசுபட்ட மற்றும் தூய்மையற்ற உணவுகள்.

ஒரு பிராமணிஷ்டா சாத்விக உணவை மட்டுமே எடுக்க வேண்டும், ராஜஸம் அல்லது தாமஸம் அல்ல.

நாம் உண்ணும் உணவு ஜாதி துஷ்டம், ஆஷ்ரய துஷ்டம், நிமித்ததுஷ்டம் ஆகிய மூன்று தோஷங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்ய லகுசித்தாந்தத்தில் கூறுகிறார்.

ஜாதிதுஷ்டா என்றால் சில வகையான தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடக்கூடாது.

உதாரணமாக ராகி, வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம், சுரைக்காய், முட்டைக்கோஸ், முருங்கை, தக்காளி, விலங்குகள் மற்றும் பறவைகளின் இறைச்சி. இவற்றை உண்ணக் கூடாது.

ஆஷ்ரய துஷ்டம் என்றால் உடைமையில் உள்ள உணவு அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சொந்தமானது.

நிமித்த துஷ்டம் என்றால் முடியுடன் தொடர்புடைய உணவு, பிறர் உண்ணும் உணவு போன்றவை.

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆஹாரணியம் எனும் புகழ்பெற்ற தெய்வத்தமிழில் அருமையாகக் கூறியுள்ளபடி உண்ண வேண்டிய மற்றும் உண்ணக் கூடாத பொருட்களின் முழுமையான பட்டியல் வாசகர்களின் தகவலுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நேரம் இல்லாததால், இந்த பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வழிகாட்டியாக செயல்படுகிறது.

இந்த அதிகாரத்தில், பிராண வித்யா நிஷ்டை (முக்கிய பிராணனை தியானம் செய்பவர் பிராண வித்யாநிஷ்டா என்று அழைக்கப்படுகிறார்) எதையும் சாப்பிட முடியுமா அல்லது அதில் ஏதேனும் கட்டுப்பாடு உள்ளதா என்பதுதான் விவாதத்திற்குரிய முக்கிய அம்சம். அல்லது முக்கியமான சூழ்நிலையில் மட்டுமே எல்லாவற்றையும் சாப்பிட முடியும்.

பூர்வபக்ஷி அல்லது எதிர்ப்பாளர் சாண்டோக்யோபநிஷத்தில் பிராண வித்யானிஷ்டம் எந்தப் பொருளையும் உண்ணலாம் என்று கூறப்பட்டுள்ளது, அதற்கு ஒரு போர்வை அனுமதி உள்ளது.

கடுமையான பட்டினி அல்லது பட்டினியால் ஒரு நபர் சரியான உணவு கிடைக்காமல் மரணத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு வருவதே முக்கியமான சூழ்நிலை.

உஷஸ்தி முனிவர் ஒரு பிராமணிஷ்டா குருதேசத்தில் கடுமையான பஞ்சத்தின் காரணமாக உணவு எதுவும் கிடைக்காமல், தனது மனைவியுடன் மக்கள் யானைகளின் மீது ஏறிக்கொண்டிருந்த ஒரு கிராமத்திற்கு வந்தபோது சூத்திரகாரர் கூறுகிறார். அவர் கடும் பசியால் அவதிப்பட்டதால், நிலைமை மோசமாகியது. அவர் மஹவுட்டாக இருந்த ஒருவரை அணுகி, தான் சாப்பிடும் சமைத்த தரம் குறைந்த உளுந்து வகையைத் தனக்குத் தருமாறு கெஞ்சினார். உஷஸ்தி தன் உயிரைக் காப்பாற்ற அதை சாப்பிட்டாள். ஆனால் மேற்படி நபர் உஷஸ்தி கொடுத்த தண்ணீரைக் குடிக்கச் சொன்னபோது. உஷஸ்தி தண்ணீர் எடுக்க மறுத்துவிட்டார், ஏனென்றால் அது அந்த மகான் ஏற்கனவே குடித்த தண்ணீரின் மீதமுள்ள பகுதி. மேற்கூறியவற்றை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்று அந்த மகான் உஷஸ்தியிடம் கேட்டபோது, ​​உஷாஸ்தி சாப்பிடாமல் இருந்திருந்தால் இறந்துவிடுவேன் என்று பதிலளித்தார். மறுநாளும் அதே நெருக்கடியான சூழ்நிலை உருவானது, முந்தைய நாள் சாப்பிடாத பகுதியை மனைவி சேமித்து வைத்திருந்த கோதுமையை அவர் சாப்பிட்டார். இந்தக் கதை சாந்தோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. பிராண வித்யாநிஷ்டத்தை விட உயர்ந்த உஷஸ்தி ஒரு பிராமணீஷ்டா சாப்பிடக்கூடாததை உண்ணும் போது, ​​இக்கட்டான சூழ்நிலையில், பிராணவித்யாநிஷ்டை எதையும் சாப்பிட முடியாது என்று சூத்ரகாரம் முடிவு செய்கிறது.

எனவே சிக்கலான சூழ்நிலையில் தனியாக எதையும் சாப்பிட அனுமதிக்கப்படுகிறது மற்றும் சாதாரண காலங்களில், மேலே விரிவாக விளக்கப்பட்டுள்ளபடி உணவில் முழுமையான கட்டுப்பாடு உள்ளது.

இந்தப் பாதத்தில் எட்டாவது அதிகாரம் விஹிதத்வாதிகரணம் எனப்படும். இந்த அதிகாரத்தில் எழும் சந்தேகம் என்னவென்றால், பக்தி யோகத்தை நாடாத ஒரு எளிய ஆசிரமம், பக்தி யோகத்திற்கு துணை, துணை அல்லது துணை என்று சொல்லப்பட்டிருக்கும் போது சந்தியாவந்தனம் மற்றும் யாகங்கள் உள்ளிட்ட பிற சடங்குகளைச் செய்ய வேண்டுமா என்பதுதான். இவற்றை ஒரு சாதாரண ஆசிரமம் செய்ய வேண்டுமென்றால் நித்ய அனித்ய சம்யோக விரோதம் என்ற தோஷம் உண்டாகிறது என்று கூறப்படுகிறது.

இதன் பொருள் என்னவென்றால், மேற்கூறிய கர்மாக்கள் ஆசிரமத்திற்காக இருந்தால், அவை மரணம் வரை எப்போதும் செய்ய வேண்டும். பின்னர் அது “நித்யம்” (என்றென்றும்) ஆகிறது. மோட்சத்தின் பலனை விரும்பும் வித்யாவிற்காக அவை செய்யப்பட்டால் அது அனித்யாவாக மாறும், ஏனென்றால் தனிப்பட்டவர் மோட்சத்தின் பலனை விரும்பாவிட்டால், அவர் இந்த கர்மாவைச் செய்ய வேண்டியதில்லை. எனவே அதே கர்மா ஒரு வகை நபர்களுக்கு நித்யாவாகவும் மற்றொரு வகை நபர்களுக்கு அனித்யாவாகவும் மாறும். எனவே ஒரே கர்மா நித்யா மற்றும் அனித்யா என்ற இரண்டு முற்றிலும் எதிர் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது நித்ய அனித்ய சம்யோகம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு குறைபாடாகும். எனவே பூர்வபக்ஷி இந்த குறையை போக்க மேற்கண்ட கர்மாக்களை கேவல ஆசிரமம் (பிரம்மவித்யா அல்லது பக்தி யோகத்தை நாடாத எளிய ஆசிரமம்) செய்ய வேண்டியதில்லை என்று கூறுகிறார்.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “விஹிதத்வாச்ச ஆஸ்ரம கர்மபி” என்று சூத்ரகாரர் கூறுகிறார், அதாவது ஒருவர் பிரம்ம வித்யாவை நாடுகிறாரா இல்லையா என்பதை அவர் தனது ஆசிரமத்தின் ஒருங்கிணைந்த பகுதியான மேற்கண்ட கர்மாக்களை செய்ய வேண்டும். ஆசிரமத்தில் பிரம்மச்சரியம் (மீதமுள்ள இளங்கலை) கடுமையான பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது, க்ரிஹஸ்தா (திருமணமான பின் இல்லறம், வன பிரஸ்தா (காட்டில் வசிப்பது) என நான்கு நிலைகள் உள்ளன. சன்யாசி அல்லது காவி அங்கி அணிந்த துறவி. ஆசிரமத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், வேதம். கட்டாயமாகச் செய்ய வேண்டிய சில கர்மாக்களை நியமித்தல்.ஒவ்வொரு ஆசிரமத்திற்கும் விதிக்கப்பட்ட கர்மாக்கள் ஆஷ்ரமகர்மா எனப்படும்.எனவே அதே கர்மங்கள் ஒரு பிரம்ம வித்யாநிஷ்டத்திற்கு பிரம்ம வித்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.அதனால் “வினியோக பிருதக்த்வம்” என்று ஒன்று உள்ளது.வினியோகம் என்றால் பயன்பாடு அல்லது பயன்பாடு.

ஆனால் ஆசிரமத்தில் இல்லாமல் ஒருவர் பிரம்ம வித்யானிஷ்டா ஆக முடியாது.

ஒரு ஆசிரமம் ஒரு பிரம்ம வித்யானிஷ்டாவாக இருந்தால், இருவருக்கும் ஒரே மாதிரியான கர்மாக்கள் போதுமானதாக இருக்கும், மேலும் அவர் அதை மீண்டும் செய்ய வேண்டியதில்லை என்று சூத்ரகாரர் மேலும் கூறுகிறார். இந்த நித்ய நைமித்திக கர்மாக்கள் பாவங்களைக் கழுவி, தியானம் செய்வதற்கு மிகவும் அவசியமான மனத்தூய்மையை அளிக்கும்.

இந்த பாதத்தில் உள்ள ஒன்பதாவது அதிகாரம் “விதுராதிகரணம்” எனப்படும். விதுர என்றால் விதவை. அவர் மனைவி இறந்து போனவர். அவர் தனது மனைவியை இழந்ததால், யாகங்கள் மற்றும் பிற யாகங்கள் செய்ய தகுதியற்றவர் என்பதால் அவரை க்ரிஹஸ்தா ஆசிரமம் என்று அழைக்க முடியாது. எப்படியிருந்தாலும், அவர் சந்தியா வந்தனம் மற்றும் பிற நித்ய நைமித்திக கர்மாக்களை செய்ய வேண்டும். மூன்று முறை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம் தவிர, மற்ற நித்ய கர்மாக்கள் ஸ்னானங்க தர்ப்பணம், தேவர்ஷி கந்தர்ஷி தர்ப்பணம், பகவான் ஸ்ரீமன் நாராயணனை (திருவாராதனம்) வழிபடுதல்.

நைமித்திக கர்மாக்கள் என்பது தாய், தந்தையருக்கு ஆண்டு தோறும் நடைபெறும் சடங்குகள், அமாவாசை தர்ப்பணம், சங்கரமண தர்ப்பணம், மஹாளய தர்ப்பணம், ஏகாதசி உபவாசம், துவாதசி பரணம், ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ ந்ரிசிம்ம ஜெயந்தி, ஆச்சார்யர்களின் பிறந்தநாள், கிருத்பகார தீபத்மாவாபகாரம், உத்ஸர்யக் கிருத்திகை, உத்ஸவ கர்மங்கள். , அஷ்டக மற்றும் அன்வாஷ்டக தர்ப்பணங்கள். விதுரர்கள் (விதவைகள்) வைஸ்வதேவா மற்றும் பஞ்சமஹா யக்ஞோபாஸனோ செய்ய தகுதியற்றவர்கள். இவை அனாஷ்ரமிகள். அதேபோல பிரம்மச்சரிய ஆசிரமத்தை கைவிட்டவர், ஆனால் திருமணம் செய்து கொள்ள மணமகள் கிடைக்காததால் க்ரிஹஸ்தா ஆசிரமத்தை எடுக்க முடியாமல் போனவர் அனாஷ்டிரா. அதேபோல் க்ரிஹஸ்தா ஆசிரமத்தை விட்டு வெளியேறி, பல்வேறு காரணங்களால் வானபிரஸ்த ஆசிரமத்தை எடுக்க முடியாமல் போனவர்களும் அனாசிரமங்கள்தான்.

கலியுகத்தில் வனபிரஷ்ட ஆசிரமத்தில் இருப்பவர்கள் மிகவும் அரிதானவர்கள் மற்றும் உண்மை இல்லை. சன்யாச ஆசிரமத்தை எடுக்க முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறியவர்களும் சன்யாச ஆசிரமத்தை எடுக்க முடியாமல் போனவர்களும் அனாசிரமங்கள்தான்.

இப்போது இந்த அதிகாரத்தில் உள்ள கேள்வி, மேலே குறிப்பிட்டுள்ள அனாசிரமங்கள் பக்தி யோகம் செய்ய தகுதியுடையதா என்பதுதான். இந்த சந்தேகத்திற்கு காரணம், எந்த ஆசிரமத்திற்கும் விதிக்கப்பட்ட கர்மாக்களை செய்ய அனாசிரமங்கள் தகுதியற்றவர்கள் என்றால் அவர்கள் பக்தி யோகம் செய்வதற்கு தகுதியானவர்கள் என்று கருத முடியாது.

அந்தரா ச அபிது தத் த்ருஷ்டே:” என்ற சூத்திரத்தில், அனாசிரமங்களும் பிரம்ம வித்யாவைப் பயிற்சி செய்து மோட்சத்தை அடையத் தகுதியானவர்கள் என்று சூத்ரகாரர் கூறுகிறார். அந்தரம் என்றால் இடையில் என்று பொருள். இரண்டு ஆசிரமங்களுக்கு இடையில் இருப்பவர்கள் அனாசிரமங்கள் மற்றும் அவர்களும் தியானம் செய்ய தகுதியுடையவர்கள். ஆனால், இந்த அனாசிரமங்கள் கர்மங்களைச் செய்யத் தகுதியில்லாதபோது, ​​உபாஸனம் செய்வதற்கு இன்றியமையாத முன்நிபந்தனையான பாவங்களைக் கழுவி, மனத்தூய்மையை எவ்வாறு அடைவது என்பது இன்னும் சந்தேகம். மேற்கூறிய விஷயத்திற்கு சூத்ரகாரர் பதிலளிக்கிறார், இந்த அனாஷமிகள் காயத்ரி மந்திர ஜபம், அஷ்டாக்ஷர மந்திர ஜபம் போன்றவற்றைச் செய்து, உபாசனை செய்வதற்கு முன்னோடியாக இருக்கும் மனதைத் தூய்மைப்படுத்தலாம்.

இந்தச் சூழலில் நீண்ட காலம் அனாஸ்ரமியாக இருப்பது புத்திசாலித்தனமோ நியாயமோ இல்லை என்றும், முடிந்தவரை சீக்கிரம் ஆசிரமமாக மாற முயற்சிப்பது நல்லது என்றும் சூத்ரகாரா கவனிக்கிறார்.

இந்த பாதத்தில் உள்ள பத்தாவது அதிகாரம் “தத் பூதாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. “ஆஷ்ரம பிரஷ்தா” என்று அழைக்கப்படும் மற்றொரு வகை நபர்கள் உள்ளனர். ஒரு நபர் தனது ஆசிரமத்திலிருந்து வழுக்கினாலோ அல்லது விலகினாலோ “ஆஷ்ரம பிரஷ்டா” என்று அழைக்கப்படுகிறார்.

“ஆசிரம பிரஷ்டங்கள்” என்ற மூன்று துணைப் பிரிவுகள் இருக்கலாம். முதல் பிரிவில் பிரம்மச்சரிய ஆசிரமத்தில் இருந்து தவறி விழுந்தவர்கள் உள்ளனர். அதாவது ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பதாக சபதம் செய்கிறார். அவர் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று அழைக்கப்படுகிறார். சில காலத்திற்குப் பிறகு அவர் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வளர்த்து, ஒரு திருமணத்தில் நுழைந்தால், அவர் ஒரு “ஆசிரம பிரஷ்டர்”.

ஒரு கிருஹஸ்தா சபதம் செய்து வன பிரஸ்தாவாக காட்டிற்கு செல்கிறார். சிறிது நேரம் கழித்து அவர் தனது வீட்டிற்கு திரும்பி வந்தால் “ஆசிரம பிரஷ்டர்” ஆகிறார், அதே போல் காவி வஸ்திரம் அணிந்த சன்யாசி மீண்டும் க்ரிஹஸ்தா ஆசிரமத்திற்கு வந்தால் அவரும் ‘ஆசிரம பிரஷ்டர்’ ஆவார்.

இப்போது இந்த அதிகாரத்தில் உள்ள கேள்வி என்னவென்றால், மேற்கண்ட மூன்று வகை ஆசிரம பிரஷ்டங்களும் பிரம்மோபாசனம் (பக்தி யோகம்) செய்ய தகுதியானவர்களா என்பதுதான். இந்த ஆசிரம பிரஷ்டர்கள் உபாசனை செய்ய தகுதியுடையவர்கள் என்று பூர்வபக்ஷி கூறுகிறது, ஏனென்றால் அவர்கள் தானங்கள் (பிரசாதங்கள்) செய்து உபாசனை செய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் ஆசிரமப் பிரஷ்டர்கள் உபாசனை செய்யத் தகுதியற்றவர்கள் என்று சூத்ரகாரர் கூறுகிறார், ஏனென்றால் அவர்கள் சுத்திகரிக்கப்படுவதற்கு எந்தப் பிராயச்சித்தத்தையும் வேதங்கள் குறிப்பிடவில்லை. அவர்கள் ஆத்மஹாஸ் என்று அழைக்கப்படுகிறார்கள், அதாவது அவர்கள் தங்கள் ஆத்மாக்களை மீட்பதற்கு அப்பால் கெடுத்துவிட்டார்கள் என்று அர்த்தம்.

மோட்சத்தை அடைவதற்கு ஒரு ஆச்சார்யா மூலம் பிரபத்தி செய்யத் தகுதியுடையவர்களா என்ற சந்தேகம் இந்தச் சூழலில் எழுகிறது. இது விவாதத்திற்குரிய விஷயம். பிரபத்தியை ஒருவராலும், எந்தப் பாகுபாடுமின்றிச் செய்ய முடிந்தால், ஆசிரமப் பிரஷ்டர்களும் பிரபத்தியைச் செய்யத் தகுதியுடையவர்கள் என்று சிலர் கருதுகின்றனர்.

இந்த பாதத்தில் பதினோராவது அதிகாரம் “சுவாமி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரம் சூழலுக்கு அப்பாற்பட்டது. முந்தைய இரண்டு அதிகாரங்களில் உபாசனை செய்யத் தகுதியானவர்கள் யார், உபாசனை செய்யத் தகுதியற்றவர்கள் யார் என்று விவாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் யார் உத்கீத வித்யா உபாசனை செய்ய வேண்டும், யார் உத்கீத உபாசனை செய்யக்கூடாது என்று முடிவு செய்வது பொருத்தமாக இருந்தால், சூத்ரகாரர் நினைத்தார். உத்கீத உபாசனா என்பது பிரணவத்தின் தியானமாகும், மேலும் இது சிறந்த மற்றும் விரைவான பலன்களைப் பெறுவதற்காக யாகத்திற்கு ஒரு துணையாக செய்யப்படுகிறது.

ஒரு யாகத்தில் விரும்பிய பலன்களைப் பெறுவதற்கு யஜமானா அல்லது யாகத்தை ஊக்குவிப்பவர் இருக்கிறார். வேதங்களிலும் உண்மையில் யாகம் செய்வதிலும் புலமை பெற்ற ரித்விக்களின் உதவியுடன் யாகம் செய்கிறார். ஹோதா, அத்வர்யு, உத்கதா, பிரஸ்தோதா, ப்ரதிஹார்த்தா, பிரம்மா ஆகிய ரித்விக்களின் பெயர்கள் யாகத்தில் பல்வேறு குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளன.

யஜமானா ரித்விக்களுக்கு அவர்கள் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு ஊதியமாக பணம் கொடுக்கிறார். இந்தப் பணம் யஜமானுக்கும் ரித்விக்களுக்கும் இடையிலான முந்தைய புரிதலின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உத்கீத வித்யாவை உத்கதா செய்ய வேண்டும்.

இப்போது இந்த அதிகாரத்தில் உள்ள கேள்வி என்னவென்றால், உத்கீத உபாசனையை யார் செய்ய வேண்டும், அதாவது யஜமானா அல்லது ரித்விக் குறிப்பாக உத்கதா.

பதராயண முனிவரின் சீடரான ஆத்ரேய முனிவர், யாகத்தின் பலனை அனுபவிப்பவராக இருப்பதால், யஜமானன் உத்கீத வித்யா உபாசனை செய்ய வேண்டும் என்று கருத்து கூறுகிறார். தஹர வித்யா போன்ற பிரம்ம வித்யா உபாசனைகளில் மோட்ச பலனை விழைபவர் மோட்சத்தை அடையப் போவதால் உபாசனை செய்ய வேண்டும் என்பதே இதற்குக் காரணம். அதே போல யாகத்தின் பலனை விரும்பும் யஜமானும் உத்கீத வித்யா செய்ய வேண்டும்.

ஆத்ரேய முனிவரின் இந்த விவாதம் இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “ஸ்வாமின: பல ஸ்ருதே: ஏதி ஆத்ரேய:” என்று வாசிக்கிறது.

ஸ்வாமி என்றால் யஜமானன். சூத்ரகாரரின் மற்றொரு சீடரான ஆடுலோமி முனிவர், ஆத்ரேயாவின் கருத்துடன் அவர் உடன்படவில்லை என்று கூறுகிறார், மேலும் ரித்விக் ஆன உத்கதா இந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக பணம் செலுத்தப்படுவதால் யஜமானாவின் சார்பாக உத்கீத உபாசனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். மோட்ச பலனை விரும்புபவரே பிரம்மோபாசனம் செய்கிறார் என்ற வாதம் சரியல்ல, ஏனென்றால் மற்றவருக்காக மற்றொருவர் பிரம்ம வித்யா செய்யலாம் என்று சாஸ்திரங்களில் எங்கும் கூறப்படவில்லை.

சூத்ரகாரம் ஆடுதோமி வெளிப்படுத்திய கருத்துடன் ஒத்துப்போகிறது, அது சித்தாந்தம்.

இந்த பாதத்தில் உள்ள பன்னிரண்டாவது அதிகாரம் “சஹகாரி அந்தரவிதி அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது சககாரி என்றால் உதவி அல்லது அங்கம்.

பிருஹதாரண்யக உபநிடதத்தில், பிரம்மோபாஸனையை நாடுபவன் ஒரு புலமை வாய்ந்த பண்டிதனாக (பண்டிதனாக) இருக்க வேண்டும் என்றும், அவனுடைய ஆழ்ந்த புலமையை வெளிக்காட்டவோ, வெளிப்படுத்தவோ கூடாது, சிறுவனைப் போல நடந்து கொள்ள வேண்டும், பிறகு பகவான் ஸ்ரீமன் நாராயணனை நினைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திவ்ய மங்கள விக்ரஹம் என்று அழைக்கப்படும் அவரது அசாதாரணமான அழகான வடிவம். திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பற்றிய இந்த எண்ணம் மௌன என்று அழைக்கப்படுகிறது, அதாவது மனன சீலத்வம்:. எனவே இந்த மௌனா பக்தி யோகத்திற்கான மற்றொரு அங்கமாகும்.

இந்த பாதத்தில் உள்ள பதின்மூன்றாவது அதிகாரம் அனவிஷ்கராதிகாரணம் எனப்படும். பிருஹதாரண்யக உபநிடதத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில் பிரம்ம வித்யாவைச் செய்பவர் முதலில் வேதத்தில் ஆழ்ந்த புலமையைப் பெற்று ஒரு சிறுவனைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் அவர் தனது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தவோ, வெளிப்படுத்தவோ அல்லது காட்டவோ கூடாது, மேலும் அவர் மற்றவர்களுடன் சுதந்திரமாக கலக்க வேண்டும். இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், இளமைப் பையனைப் போல நடந்துகொள்ள வேண்டிய ஒரு பிராமணீஷ்டா சீரியஸ் இல்லாமல் விளையாட்டுத்தனமாக, தனக்கு நேர்ந்த எதையும் தின்றுவிட முடியுமா அல்லது தன் மகத்துவத்தை வெளிக்காட்டாமல் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா என்பதுதான்.

பூர்வபக்ஷி விளையாட்டாகவும் எதையும் உண்ணவும் முடியும் என்று வாதிட்டாலும், பிரம்மவித் தன் மகத்துவத்தை வெளிப்படுத்தாமல், ஆடம்பரத்தை கவனமாக தவிர்க்க வேண்டும் என்று சூத்ரகாரர் கூறுகிறார்.

இந்த பாதத்தில் பதினான்காவது அதிகாரம் “ஐஹிகதிகரணம்” ஆகும். உபாசனையின் பலனைப் பெறுவதற்கான இந்த நேரத்துக்கு அடுத்ததாக இந்த அதிகாரத்திலும் அதிகாரத்திலும் விவாதிக்கப்படுகிறது.

இச்சூழலில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரம்மோபாசனம் இரண்டு வகைப்படும். ஒன்று மோட்சத்தை அடைவதற்காக மற்றொன்று வார்த்தை சுகத்தைப் பெறுவதற்காக. பிந்தையது ஐஹிகா ஃபாலா.

பகவத் கீதையில் பகவான் கீதாச்சாரியார் தன்னை தியானிப்பவர்களில் நான்கு வகையினர் இருப்பதாக கூறுகிறார். அவர்கள்

(1) தங்கள் உடமைகளை இழந்ததால் ஆழ்ந்த துயரத்தில் இருப்பவர்கள் மற்றும் அவற்றை மீண்டும் பெற விரும்புபவர்கள்.

(2) இதுவரை அனுபவிக்காத புதிய பொருள் பலன்களைப் பெற விரும்புபவர்கள்.

(3) தங்கள் சொந்த ஆத்மா அல்லது ஆன்மாவை அனுபவிக்க விரும்புபவர்கள்.

(4) மோட்சத்தை அடைய விரும்புபவர்கள்.

மேற்கூறிய அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற பிரம்மோபாசனம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பிரம்மோபாசனம் முதல் மூவருக்கும் இருக்கும் போது அது எய்ஹிக பலனுக்கு உபாசனம் எனப்படும்.

எய்ஹிக பலனைப் பெற, தனது உபாசனாவிற்கு எப்போது பலன் கிடைக்கப் போகிறது என்பதுதான் இப்போது விவாதத்திற்கான தலைப்பு. இந்த விஷயத்தில் மூன்று கருத்துக்கள் உள்ளன.

(1) உபாசனை முடிந்த உடனேயே.

(2) இந்த ஜென்மத்தில் அல்லது பிறப்பிலேயே

(3) அடுத்த பிறவியில்

எனவே உபாசனை முடிந்தவுடன் அந்த பலனை விரைவில் பெற வேண்டும் என்கிறது பூர்வபக்ஷி. மேற்கூறியவற்றிற்கு பிரம்மோபாசனம் செய்பவருக்கு ஐஹிக பலன் கிடைக்கும் என்று சூத்ரகாரம் கூறுகிறது. உபாசனை முடிந்த உடனேயே, அவரது தொகுதிகளின் பாபா கர்மாவான வேறு எந்த வலுவான கர்மாவையும் வழங்கவில்லை. ஒரு தொகுதி இருந்தால், அந்தத் தொகுதி அழிக்கப்பட்ட பிறகு அந்த நபர் அய்ஹிகா பலாவைப் பெறுவார்.

ஒரு யாகத்தில் உத்கீத வித்யா செய்தால், தடை நீங்கி, தாமதமின்றி பலன் கிடைக்கச் செய்யும் என்பதால், அந்தத் தொகுதியின் இருப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என்று சூத்ரகாரர் கூறுகிறார்.

இந்த பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் முக்தி பலாதிகரணம் என்று அழைக்கப்படுகிறது. மோட்சத்திற்காக பிரம்மோபாசனம் செய்யும் ஒருவருக்கு மோட்ச பலன் கிடைக்கும் நேரம் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் மோட்ச பலனை பெறுவது கூட தாமதமாகலாம் அல்லது அவர் செய்த வலுவான “அப்பா” காரணமாக தடைபடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வலிமையான பாபா “பிரம்மவித் அபச்சாரா” அதாவது உபாசனை செய்பவர் பிரம்ம வித்தை மதிக்காதவராக இருக்கலாம் மற்றும் இந்த பிரம்ம விடாபச்சாரம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அது மோட்ச பலனை கூட ரத்து செய்யலாம். எனவே மோட்சத்தை அடைவதற்காக பக்தி யோகம் மற்றும் பிரபத்தியை நாடுபவர்கள் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் பிரம்மவிதபாசாரத்தை கவனமாக தவிர்க்க வேண்டும்.

இந்த மூன்றாவது அத்தியாயம் முடிவடைகிறது என்பதைக் குறிக்க, சூத்திரத்தில் உள்ள ததவஸ்தா த்ருதே: என்ற வார்த்தை இரண்டு முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.

நான்கு அத்தியாயங்களில் இதுவரை மூன்று அத்தியாயங்கள் மூடப்பட்டு, கடைசி அத்தியாயம் இப்போது விவாதிக்கப்படுகிறது. கடைசி அத்தியாயம் “பல அத்யாய” என்று அழைக்கப்படுகிறது, அதாவது முமுக்ஷு என்று அழைக்கப்படும் ஒரு நபர் (சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மக்ஷத்தை அடைய விரும்புபவர் மற்றும் பக்தி யோகம் அல்லது பக்தி யோகம் செய்தவர்) அனுபவிக்கப் போகும் பலன்கள். பிரபத்தி.

ஏற்கனவே கூறியது போல் பக்தி யோகம் என்பது மூன்றாம் அத்தியாயத்தின் மூன்றாம் காலாண்டில் விவரிக்கப்பட்டுள்ளபடி சாதனா சப்தக எனப்படும் ஏழு துணைகளுடன் கர்ம யோகம் மற்றும் ஞான யோகம் செய்தபின் அஷ்டாங்க யோகம். இந்த கலியுகத்தில் பக்தி யோகத்தை அதன் கடினத்தன்மை மற்றும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுத்தும் திறனின் காரணமாக யாரும் அதை நாடவில்லை என்றும் கூறப்பட்டது.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ வைகுண்ட கத்யாவில் மோட்சத்தை அடைய ஆயிரம் கோடி கல்பங்களுக்குப் பிறகும் பிரபத்தியைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் அது ஆத்மார்த்தமாக கருதப்படக்கூடாது, பக்தி யோகமானது முந்தைய யோகங்களான துவாபர யுகம், திரேதா யுகம் மற்றும் கிருத யுகம் ஆகியவற்றில் எந்த உடலாலும் செய்யப்படவில்லை. இந்த மூன்று யுகங்களிலும் பக்தி யோகம் செய்வதற்கு ஏற்ற சூழல் இருந்தது. திரேதா யுகத்தில் தண்டகாரண்யத்தில் (வனத்தில்) இருந்த முனிவர்கள் துவாபர யுகத்தில் கோபியராகப் பிறந்த பிறகுதான் பக்தி யோகத்தால் மோட்சத்தை அடைந்தார்கள். இதேபோல் தர்ம வியாதாவும் (வேட்டையாடும்) சபரியும் பக்தி யோகத்தால் மோட்சத்தை அடைந்தனர், இது அவர்கள் முந்தைய பிறவிகளில் பிராமண, க்ஷத்திரியர் அல்லது வைசியர் ஆகிய மூன்று சாதிகளில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருப்பார்கள்.

அர்ச்ச வடிவில் (அர்ச்ச வடிவம் என்பது ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள தெய்வ வடிவிலோ அல்லது சால கிராம வடிவிலோ இருக்கும் வழிபாட்டிற்குரிய வடிவம் என்று பொருள்படும்) பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாத தாமரைகளில் உள்ள பிரபத்தியை மட்டுமே நாம் அனைவரும் மோட்சத்தை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் வீடுகளில் சிலை வடிவம்) ஒரு ஆச்சார்யா மூலம்.

இந்த 4வது அத்தியாயத்தில் அவ்ரித்தி பாதம், உத்க்ராந்த பாதம், கதி பாதம் மற்றும் பல பாதங்கள் என நான்கு பாதங்கள் உள்ளன.

அவ்ரித்தி பாதத்தில் பக்தி யோகா செய்யும் முறை கையாளப்படுகிறது. அவ்ரித்தி என்றால் பக்தி யோகம் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும், பிரபத்தியைப் போல இது ஒரு முறை அல்ல.

மோட்சத்தை அடைவதற்கான பக்தி யோகமான பக்தி யோகத்தை சாதனா அத்யாயா என்ற 3 வது அத்தியாயத்தில் கையாள வேண்டியிருக்கும் போது, ​​அதைச் சமாளிக்க இந்த அத்தியாயத்தில் முதல் பாதத்தை சூத்ரகாரர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பதிலுக்கு பக்தி யோகம் செய்வது என்பது திவ்ய மங்கள விக்ரஹம் என்றும், பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மங்கள குணங்கள் (கல்யாண குணங்கள்) என்றும் அழைக்கப்படும் மங்களகரமான வடிவத்தை தியானிப்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பகவான் ஸ்ரீமன் நாராயணனை அவரது ஸ்வரூப (உள்ளார்ந்த இயல்பு) ரூபம் (திவ்ய மங்கள விக்ரஹம்), குண (மங்கள குணங்கள்) விபூதி (முழு பிரபஞ்சத்தின் லீலா விபூதியின் உரிமை) மற்றும் நித்ய விபூதி (ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்) ஆகியவற்றைக் கொண்டு மகிழ்வதாகும். ) மற்றும் ஈஸ்வர்யா (இரண்டு விபூதிகளையும் கட்டுப்படுத்துதல்). மனதிலுள்ள இந்த இன்பமே தியானத்தின் பலன்களில் ஒன்றாகும்.

இந்த அவ்ரித்தி பாதத்தில் பதினொரு அதிகாரங்கள் உள்ளன. முதல் அதிகாரம் அவ்ரித்தி அதிகாரம் எனப்படும். இந்த அதிகாரத்தில் பரமாத்மா தியானம் ஒரு முறை செய்ய வேண்டுமா அல்லது மீண்டும் மீண்டும் செய்ய வேண்டுமா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. இந்த விவாதத்தின் முன்னோடியாக, தியானம் செய்பவருக்கு மோட்சத்தின் பலனைத் தியானம் அளிக்கிறது என்ற உண்மையை நிறுவ மூன்று உபநிடத கூற்றுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

பூர்வபக்ஷி என்றும் அழைக்கப்படும் எதிரி, தியானம் ஒரு முறை செய்யக்கூடியது என்று கூறுகிறார், ஏனெனில் எந்த உபநிடத அறிக்கைகளிலும் இது மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. பழங்கள் இரண்டு வகை என்று கூறுகிறார். முதலாவது காணக்கூடிய பழம் என்றும் இரண்டாவது கண்ணுக்கு தெரியாத பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்வர்கலோகம் அல்லது மோட்சத்தை அடைவது கண்ணுக்குத் தெரியாத பலன், வார்த்தை இன்பத்தை அடைவது புலப்படும் பலன். கண்ணுக்குப் புலப்படும் பலனை அடைவதற்கான வழிமுறைகள், அத்ரிஷ்ட பலம் என்று அழைக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத பலன் விஷயத்தில் அவ்வாறு இல்லாத நிலையில் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும். எனவே மோட்ச தியானத்தின் கண்ணுக்கு தெரியாத பலனுக்காக ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும் என்று பூர்வபக்ஷி தனது வாதத்தை முடிக்கிறார். [பூர்வபக்ஷி அரிசி பெறுவதற்கு உமியை அகற்றுவதற்காக மீண்டும் மீண்டும் செய்யப்படும் நெல் உமியை உதாரணம் காட்டுகிறது. இது தெரியும் பழம் அல்லது த்ரிஷ்ட பலா.]

சூத்ரகார முனிவர் பதராயணன் “அவ்ரித்தி அசக்ரித் உபதேசத்” என்ற சூத்திரத்தில் கூறுகிறார். பிரம்ம வித்யா என்றும் அழைக்கப்படும் பக்தி யோகத்தை உபநிடதத்தைப் பிரசங்கிப்பதால் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்பதே இந்த சூத்திரத்தின் பொருள். இதற்கு பின்வருமாறு விரிவுபடுத்தல் தேவைப்படுகிறது. தைத்தரிய உபநிடதம் “பிரம்மவித் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் பிரம்மத்தை அடைகிறது” என்று கூறுகிறது. வித் என்றால் அறிதல். இந்த அறிதல் பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் பக்தி உணர்வுடன் உள்ளது. பக்தி உணர்வுடன் பிரமனை அறிவது வேதனம் எனப்படும். இந்த வேதம் உபாசனா அல்லது தயானா என்ற வார்த்தைகளுக்கு ஒத்ததாக இருக்கும் என்று உபநிடதப் பகுதிகள் உள்ளன. தயானம் என்ற சொல் “தியே சிந்தயம்” என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது, அதாவது தியானம் சிந்தனை என்று பொருள்படும் இந்த சிந்தனை ஒரு தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் ஒரு முறை செயல்பாடு அல்ல.

சூத்ரத்தில் அவ்ரித்திஹ் அசக்ரித் என்பதை அஸக்ருத் அவ்ரித்தி என்று கருத வேண்டும். சக்ரித் என்றால் ஒரு முறை. அசக்ரித் என்றால் தொடர்ச்சியாக அல்லது மீண்டும் மீண்டும் என்று பொருள். எனவே வேதனம் என்பது தியானம், ஸ்ரீமன் நாராயணனைத் தியானம் என்ற பக்தி யோகம் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.

இந்த பாதத்தில் உள்ள அடுத்த அதிகாரம் ஆத்மத்வ உபாசனாதிகரணம் எனப்படும். இதில், தியானத்தின் பொருளான பரமாத்மாவை உபாசகராகிய ஜீவா (ஆன்மா) விலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக தியானிக்க வேண்டுமா அல்லது பரமாத்மா ஆன்மா மற்றும் ஜீவன் அவரது உடல் என்ற உறவுமுறையாக இருக்க வேண்டுமா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. தியானம் செய்தார்.

பூர்வபக்ஷி, தியானம் செய்பவர் அல்லது உபாசகராக இருக்கும் ஜீவாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக பரமாத்மாவை தியானிக்க வேண்டும் என்று வாதிடுகிறது. பரமாத்மா ஜீவாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பது அவருடைய நியாயம். பரமாத்மா ஜீவாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று கூறும் பல பிரம்மசூத்திரங்கள் உள்ளன.

பூர்வபக்ஷியின் வாதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, சூத்ரகாரர் “ஆத்மேதிது உபகச்சந்தி கிரஹயந்திச்சா” என்ற சூத்திரத்தில் கூறுகிறார், அதாவது உபாசகர் அல்லது தியானம் செய்பவர் எப்போதும் பரமாத்மாவைத் தனது ஆத்மாவாகத் தியானிக்க வேண்டும், ஏனெனில் பிருஹதாரண்யக உபநிடதத்தில் உள்ள அந்தர்யாமி பிராமணம் உள்ளிட்ட உபநிஷத நூல்கள் அவ்வாறு கூறுகின்றன. அந்தர்யாமி பிராமணத்தில் ஜீவா உடல் என்றும் பரமாத்மா ஆத்மா என்றும் தெளிவாக உச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரம் பிரதீகாதிகாரணம் எனப்படும். இதுவும் இதற்கு அடுத்துள்ள அதிகாரமும் சூழலுக்கு அப்பாற்பட்டவை. ஆனால் இந்த இரண்டு அதிகாரங்களும் முந்தைய அதிகாரங்களில் இருந்து எழுந்த சில சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காக உண்டானது.

மூன்றாம் அத்தியாயத்தின் மூன்றாம் காலாண்டில் பிரதீகா உபாசனை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதீகா என்றால் உடலின் உறுப்பு அல்லது அவயவ என்று பொருள். மனதை நினைத்து அல்லது பிரம்மமாக கருதி தியானிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது பிரதீகா உபாசனை எனப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பொருளை பிரம்மமாக நினைத்து தியானம் செய்வது ப்ரதீக உபாசனை என்றும் அது த்ரிஷ்டிவிதி என்றும் அழைக்கப்படுகிறது (பிரம்மனாக ஒரு பொருளைப் பார்ப்பது). இந்த உபாசனை பிரம்ம வித்யா அல்ல, இந்த உபாசனையால் மோட்சத்தை அடைய முடியாது. இந்த உபாசனையின் பலன் வார்த்தையால் மட்டுமே உள்ளது, அது இந்த உலகத்திலேயே அனுபவிக்கக்கூடிய ஒரு கனியாகும். முக்யபிரான் அல்லது மூச்சு தியானம் கூட ப்ரதீக உபாசனை. இப்போது இங்கு எழும் சந்தேகம் என்னவென்றால், பிரம்ம வித்யாவில் பரமாத்மாவை ஆத்மாவாகவும், உபாசகரை ஜீவனாகவும் நினைத்து தியானம் செய்ய வேண்டும்.

பூர்வபக்ஷி (எதிர்ப்பவர்) ப்ரதீக உபாசனையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரு உபாசனா என்று வாதிடுகிறார், மேலும் தியானத்தின் பொருளை ஆத்மா அல்லது ஆத்மாவாகக் கருதும் அதே விதி இங்கேயும் பொருந்தும். இதை சூத்ரகாரர் தனது “ந ப்ரதீகே ந ஹி ச:” என்ற சூத்திரத்தில் மறுத்துள்ளார், அதாவது ப்ரதீக உபாசனத்தில் மேற்கண்ட விதி பொருந்தாது, ஏனென்றால் தியானம் செய்பவருக்கு பிராதீகம் ஆத்மாவாகவோ அல்லது ஆத்மாவாகவோ இருக்க முடியாது. இருப்பினும் ஒரு பொருளை பிராமணனாக நினைப்பது எப்போதும் மேலானது என்று சூத்ரகாரர் கூறுகிறார். அன்றாட வாழ்வில், தாழ்வான பொருளை உயர்ந்ததாகக் கருதுவது எப்போதும் நல்ல பலனைத் தரும், மேலும் உயர்ந்த பொருளை உட்புறமாகக் கருதுவது விரும்பத்தகாத விளைவை ஏற்படுத்தும். இதற்கான நடைமுறை உதாரணம், வேலைக்காரனை எஜமானாக நினைப்பது சில நேரங்களில் நல்ல பலனைத் தருகிறது, அதே நேரத்தில் ஒரு எஜமானனை வேலைக்காரனாக நினைப்பது பேரழிவு தரும்.

அடுத்த அதிகாரம் ஆதித்யாதிமதி அதிகாரம். மேற்கூறியவாறு இதுவும் சூழலுக்குப் புறம்பானது என்றாலும், முந்தைய அதிகாரத்தின் முடிவில் இருந்து எழும் தெளிவான புள்ளிக்கு இந்த அதிகாரத்தை சூத்திரகாரர் உள்ளடக்கியுள்ளார். உட்புறப் பொருளை உயர்ந்த பொருளாகக் கருதி தியானிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இங்கே விவாதத்திற்கு வரும் உபநிடத உரை சாண்டோக்யோபநிஷத்தின் முதல் அத்தியாயத்தின் 3வது துணைப்பிரிவில் பிரகாசிப்பவனை உத்கீதாவாக தியானிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிரகாசிப்பவர் சூரியன் உத்கீதை பிரணவம் மற்றும் உத்கீத வித்யா என்பது பிரணவத்தை பல வழிகளில் தியானிப்பதாகும், இது சந்தோக்யோபநிஷத்தின் முதல் இரண்டு அத்தியாயங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. உத்கீத வித்யாவுடன் ஒரு யாகம் (யாகம்) செய்தால், அது யாகத்திற்கு விரைவான மற்றும் சிறந்த பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.

இப்போது கேள்வி ஆதித்யா (சூரியன்) மற்றும் உத்கீத வித்யா ஆகியவற்றுக்கு இடையே உயர்ந்தது. பூர்வபக்ஷி, உத்கீத வித்யா ஆதித்யாவை விட மேலானது என்று வாதிடுகிறார், ஏனெனில் இது ஒரு யாகத்தில் விரைவான மற்றும் சிறந்த பலன்களை அடைவதற்கான வழிமுறையாகும், மேலும் ஆதித்யாவிலிருந்து எந்த பலனும் இல்லை. எனவே ஆதித்யாவை உத்கீதராகக் கருதி தியானிக்க வேண்டும். இதை சூத்ரகாரர் “ஆதித்யாதிமதா ய:ச அங்க உபபத்தே:” என்ற சூத்திரத்தில் மறுக்கிறார், அதாவது உத்கீதையை விட ஆதித்யன் ஒருவரே உயர்ந்தவர், ஏனென்றால் ஆதித்யாவை (சூரிய பகவானை) வழிபடுவதன் மூலம் நாம் விரும்பும் பலன்கள் செய்யப்படும் யாகங்களுக்கு கிடைக்கும். எனவே உத்கீதையை ஆதித்யமாகக் கருதி தியானிக்க வேண்டும்.

ஐந்தாவது அதிகாரம் அசீனாதிகரணம் எனப்படும். இந்த அதிகாரத்தில் எந்த நிலையில் தியானம் செய்ய வேண்டும் என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. தோரணை உட்கார்ந்து, நின்று, நடைபயிற்சி அல்லது தூங்கும். இந்த அதிகாரம் இரண்டாம் அதிகாரத்துடன் மற்றும் அதன் தொடர்ச்சியாக நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட தோரணையில் மட்டுமே தியானம் செய்ய வேண்டும் என்று உபநிடத நூல்களில் குறிப்பிட்ட எதுவும் கூறப்படவில்லை என்று பூர்வபக்ஷி கூறுகிறார். “ஆசீனா: சம்பவத்” என்ற சூத்திரத்தில், உட்கார்ந்த நிலையில் மட்டுமே மனச் செறிவு சாத்தியமாகும் என்றும், தியானத்திற்கு இந்த மனச் செறிவு மிகவும் அவசியம் என்றும் சூத்ரகாரர் கூறுகிறார். நிற்கும் மற்றும் நடக்கும் தோரணைகளில், தனி நபர் கவனம் செலுத்தப்படுகிறது. தூங்கும் நிலையில் தியானம் செய்பவர் தூங்கச் சென்றால் தியானம் தடைபடுகிறது.

இந்த அதிகாரத்தின் மூன்றாவது சூத்திரத்தில் ஆழ்ந்த தியானத்திற்கு உடலை அசைக்கவோ அசைக்கவோ கூடாது என்று சூத்ரகாரர் கூறுகிறார். இந்த அதிகாரத்தின் நான்காவது அல்லது ஐந்தாவது சூத்திரங்களில் ஸ்ரீ பகவத் கீதையில் உள்ள சில ஸ்லோகங்களையும், தியானம் செய்யும் இடம் மற்றும் இருக்கைக்கான விவரக்குறிப்புகளைக் கொண்ட ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் உள்ள ஒரு வாசகத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை, அந்த இடம் அலைகள் இல்லாமல் சமன் செய்யப்பட வேண்டும். இது விரும்பத்தகாதவர்கள் தொடாத மிகவும் தூய்மையான இடமாக இருக்க வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட மர இருக்கையில் தியானம் செய்ய வேண்டும். கூர்மா ஆசனம் என்று அழைக்கப்படும் மர இருக்கை மிகவும் உயரமாகவும் அதே சமயம் மிகவும் தாழ்வாகவும் இருக்கக்கூடாது. மர இருக்கையின் மேல் தர்பா புல் பரப்பப்பட வேண்டும், மானின் தோலை அதன் மேல் ஒரு துணியை வைக்க வேண்டும். முழு விஷயமும் தியானிப்பவருக்கு குஷனிங் விளைவை அளிக்கிறது.

தியானம் செய்யும் இடம் நெருப்பு, நீர் அருகில் இருக்கக் கூடாது. இது மணலாக இருக்கக்கூடாது மற்றும் கூழாங்கற்கள் (சிறிய கல் துண்டுகள்) இருக்கக்கூடாது. செறிவைத் தொந்தரவு செய்யும் எந்த ஒலியும் இருக்கக்கூடாது. தியானம் செய்யும் நேரமும் இடமும் மனச் செறிவுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

ஆறாவது அதிகாரம் அப்ராயண அதிகாரம் எனப்படும். தியானம் எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் அல்லது எந்த நாள் வரை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இந்த அதிகாரம் பதில் அளிக்கிறது.

பூர்வபக்ஷி தியானத்தை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்றாலும், பகவான் ஸ்ரீமன் நாராயணனின் தாமரை பாதங்களில் இடைவிடாமல் சிந்தனை ஓட்டம் ஒரு நாள் செய்தால் போதும். பூர்வபக்ஷியின் சதத்தை மறுப்பதற்காக சூத்ரகாரர் “அப்ராயநாத் தத்ரபிஹி த்ரிஷ்டம்” என்ற சூத்திரத்தில் கூறுகிறார், அதாவது தியான வடிவில் இருக்கும் இந்த பக்தி யோகத்தை ஜீவா மரண சரீரத்திலிருந்து பயணம் செய்யும் நாள் அல்லது புறப்படும் நாள் வரை செய்ய வேண்டும்.

எனவே அப்ரயநாத் என்றால் சாகும் வரை. பிரயானம் என்றால் கடைசி பயணம். இந்த பக்தி யோகத்தை வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும் என்று சந்தோக்யோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கே ஒரு நுணுக்கமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஸ்ரீ பாஷ்யத்தில் சாகும் வரை பக்தி யோகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பக்தி யோகத்தில் பக்தி யோகநிஷ்டை (மோட்சத்தை அடைவதற்காக பக்தி யோகத்தை நாடுபவர்) மோட்சத்தை அடைவதற்கு முன்பு பக்தி யோகத்தைத் தொடங்கிய பிறகு எத்தனை பிறவிகள் எடுக்கிறார் என்பதை விலையாகக் கூற முடியாது. ஸ்ரீ பாஷ்யத்தில் மரணம் வரை என்ற சொல், பக்தி யோகநிஷ்டை மோட்சத்தை அடைந்த உடனேயே மரணத்தைக் குறிக்க வேண்டும். ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய சாராவின் உபய விபாக அதிகாரத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகர், அப்ராயணத்தில் உள்ள வார்த்தை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு பயணம் செய்யும் நாள் வரை என்று தெளிவாகக் கூறுகிறார்.

இந்த பாதத்தில் ஏழாவது அதிகாரம் ததாதிகமதிகாரணம் எனப்படும். இந்த அதிகாரத்தில் இருந்து இந்த பாதத்தின் இறுதி வரை, இந்த உலகத்திலேயே பக்தி யோகநிஷ்டையால் அனுபவிக்கப்படும் பலன்கள். பக்தி யோகம் தொடங்கும் தருணம் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மன உணர்வாகும். இது தர்சன சமன அகரா எனப்படும். அதாவது ஸ்ரீமன் நாராயணனை நிஜமாகவே தன் நிர்வாணக் கண்களால் தரிசிக்கும் போது ஒருவருக்கு ஏற்படும் அனுபவத்திற்கு நிகரான அனுபவத்தை ஒருவர் மனதில் பெறுகிறார்.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு பின்வருமாறு. பக்தி யோகத்தை ஆரம்பிக்கும் முன் பக்தி யோகநிஷ்டை செய்த பாவங்களையும், பக்தி யோகம் தொடங்கிய பிறகு அவன் செய்த தற்செயலான பாவங்களையும் அவனைத் தொடாதது பற்றி சில உபநிஷத கூற்றுகள் உள்ளன.

ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ ராமானுஜர் உபநிடதங்களில் முந்தையதற்கு இரண்டு கூற்றுகளையும் பிந்தையதற்கு இரண்டு கூற்றுகளையும் மேற்கோள் காட்டுகிறார்.

இந்த பாதத்தில் உள்ள எட்டாவது அதிகாரம் இடராதிகாரன் எனப்படும்.

பக்தி யோகத்திற்கான முதல் வெகுமதியாக நித்திய பேரின்பமாகிய மோட்சத்தை அடைவதற்காக பக்தி யோகத்தைத் தொடங்குபவருக்கு, உபாசகர் (தியானம் செய்பவர் அல்லது பக்தி யோகம் செய்பவர்) செய்த பாவங்களை பகவான் ஸ்ரீமன் நாராயணன் சித்தரிக்கிறார் என்று முந்தைய அதிகாரத்தில் நிறுவப்பட்டது. உபாசனையின் ஆரம்பம் மறைந்துவிடும், அவர் செய்த கவனக்குறைவான பாவங்கள் அவரைத் தொடாது. அதாவது பகவான் ஸ்ரீமன் நாராயணன் உபாசகருக்கு தற்செயலான பாவங்கள் செய்ததற்காக எந்த தண்டனையும் கொடுக்க மாட்டார்.

பக்தி யோகத்தைத் தொடங்குவதற்கு முன்பு உபாசகர் செய்த அதே ஒப்புமை புண்ணியத்தை (நற்செயல்கள்) சூத்ரகாரர் கூறுகிறார், மேலும் தொடங்கிய பிறகு அதுவும் மறைந்துவிடும், ஏனெனில் புண்ணியமும் மோட்சத்தை அடைவதற்கு ஒரு தடையாக உள்ளது. மோட்சத்தை அடைய வேண்டுமானால் புண்ணியமோ, பாபாவோ இருக்கக்கூடாது. புண்ணியத்திற்கும் பாபாவிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், உபாசகர் உபாசனையின் முடிவில் தனது மரண உடலை விட்டு வெளியேறிய பிறகு புண்யம் மறைந்துவிடும். இதற்குக் காரணம், உபாசகருக்குப் புண்ணியத் தேவை, ஏனெனில் அவருடைய புண்ணியத்தால் மட்டுமே மழை பெய்யும், மேலும் இந்த மழையானது உபாசகருக்கு உபாசனையின் போது அவரது உடலைத் தக்கவைக்க உணவு அளிக்கும் பயிர் சாகுபடிக்காகும்.

இந்த பாதத்தில் உள்ள ஒன்பதாவது அதிகாரம் “அனாரப்த காரியாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. உபாசனை தொடங்குவதற்கு முன் செய்த புண்ணியமும், பாபாவும் முழுவதுமாக மறைந்து விடுகிறதா இல்லையா என்பதுதான் விவாதத்திற்கான தலைப்பு. இந்த விஷயத்தில் சந்தேகத்திற்கு இடமுள்ளது, ஏனெனில் பாபா முற்றிலும் மறைந்து விடுகிறார் என்று உபநிடதப் பகுதி கூறுகிறது. புண்யா மோட்சத்தை அடைவதற்கான ஒரு தடையாக இருப்பதால் பாபா என்றும் கணக்கிடப்படுகிறது. புண்ணியமும், பாபாவும் முற்றாக அழிந்தால் உபாசகர் ஒரு கணம் கூட இவ்வுலகில் இருக்க முடியாது. எனவே பாப்பா மற்றும் புண்யாவின் எந்த பகுதி மறைந்துவிடும், எந்த பகுதியை அவர் அனுபவிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு ஜென்மத்திலும் அல்லது பிறப்பிலும் ஒரு தனிமனிதன் பெறுகின்ற புண்ணியமும், பாபமும், அவை குவிந்து அல்லது மலையாகக் கட்டப்படும் சஞ்சிதா எனப்படும், இது இன்னும் பலன்களைத் தரத் தொடங்காத பலன் என்று அழைக்கப்படுகிறது. புன்யாவின் ஃபாலா மகிழ்ச்சியாக இருக்கிறது, அங்கு அப்பாவின் பலா துன்பம் அல்லது மன மற்றும் உடல் இரண்டிலும் துன்பம். சஞ்சிதா என்றால் சேமிக்கப்பட்ட அல்லது குவிக்கப்பட்ட. இது அனரப்த காரியம் எனப்படும். இந்த சஞ்சிதத்திலிருந்து புண்யா மற்றும் பாப்பாவின் ஒரு பகுதி பலா கொடுக்க ஆரம்பித்தால், இந்த பகுதி ஆரப்தகார்யா அல்லது பிராரப்தா என்று அழைக்கப்படுகிறது. இது சஞ்சிதாவைப் போன்ற ஒரு கிரான்ரியில் பல ஆண்டுகளாக நெல் சேமித்து வைப்பது போன்றது, அதில் இருந்து ஒரு பகுதியை எடுத்து, அன்றாடப் பயன்பாட்டிற்கு அரிசியாகக் கொட்டுகிறது. இது பிராரப்தத்தைப் போன்றது.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் விரும்பும் பாபாவின் மறைவு சஞ்சித பாபா என்ற அனரப்த காரியத்திற்கு மட்டுமே பொருந்தும், ஆரப்த காரியம் (பிராரப்தம்) அல்ல என்பதை இந்த அதிகாரத்தில் உள்ள சூத்ரகாரம் தெளிவாகக் கூறுகிறது. மேற்கூறியவற்றிற்கு சூத்ரகாரரால் குறிப்பிடப்பட்ட காரணம், சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது அத்தியாயத்தில் உள்ள ஒரு பகுதி, அதில் ஒரு உபாசகர் புண்ணிய பந்தத்திலிருந்து விடுவிக்கப்படும் வரை மோட்சத்தை அடைய முடியாது என்று கூறப்பட்டுள்ளது, பாபா. தடாதிகமாதிகாரணத்தில் சாந்தோக்யோபநிஷத்தில் உள்ள உபநிஷதப் பகுதியின்படி, உபாசனை (பக்தி யோகம்) தொடங்குவதற்கு முன்பு உபாசகர் செய்த பாவங்கள் (புண்ய மற்றும் பாபா) பஞ்சு மூட்டைகள் நெருப்பில் அழிந்து போவது போல் அழிந்துவிடும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய இரண்டு அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தெரிகிறது.

இந்த பாதத்தில் உள்ள பத்தாவது அதிகாரம் அக்னிஹோத்ர த்யாதிகரணம் எனப்படும். இதில் ஒரு உபாசகரின் புண்ய மற்றும் பாப கர்மாவை அகற்றுவதால் எழும் மற்றொரு விஷயமும் விவாதிக்கப்படுகிறது.

8வது அதிகாரத்தில் பக்தி யோகம் தொடங்கிய பிறகு உபாசகர் செய்யும் புண்ணிய கர்மா உபாசகரைத் தொடாது, அது உபாசகருக்கு எந்தப் பலனையும் தராது, ஏனெனில் புண்ணியமும் உபாசகர் மோட்சத்தை அடைவதற்குத் தடையாக உள்ளது. பக்தி யோகம் தொடங்கிய பிறகு செய்யப்படும் இந்த புண்ணிய கர்மா உபாசகருக்கு எந்தப் பயனும் இல்லாதபோது இந்த புண்ணிய கர்மாவை ஏன் செய்ய வேண்டும் என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. இந்த புண்ணிய கர்மா நித்ய நைமித்திக கர்மாவின் வடிவத்தில் உள்ளது (நித்யா என்றால் தினசரி செய்யப்படும் மற்றும் நைமித்திகை என்பது ஏகாதசி, மாமனார் மற்றும் தாயாரின் அமாவாசை விழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் செய்யப்படுகிறது). உபாசனை செய்வதற்கு ஒவ்வொரு நாளும் எழும் தடையை போக்க கல்ப சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி அக்னி ஹோத்ரா தினமும் செய்ய வேண்டும்.

புண்ணிய கர்மா உபாசகருக்கு எந்த பலனையும் கொடுக்காதபோது பூர்வபக்ஷி அல்லது எதிர்ப்பாளர் தக்த் என்று வாதிட்டார், அதைச் செய்யவே தேவையில்லை. எனவே “அக்னிஹோத்ராதிது தத் காரியய ஏவ தத் தர்சநாத்” என்ற சூத்திரம் மேற்கூறியவற்றுக்குப் பதிலளிக்கிறது. உபாசனை செய்வதற்கு தினமும் ஏற்படக்கூடிய தடைகளை போக்க அக்னிஹோத்ரம் முதலியவற்றை தினமும் செய்ய வேண்டும். முதலியன வர்ண அத்ரம தர்மம் இரண்டும் நித்ய நைமித்திக கர்மாவைக் குறிக்கும்.

இந்த அக்னிஹோத்ரா தினமும் (ஒரு நாளைக்கு இரண்டு முறை) செய்ய வேண்டிய உபாசனை போன்றது. இந்த அக்னிஹோத்ரா எந்த யாகம் மற்றும் பிற நித்ய நைமித்திக கர்மாக்கள் செய்ய முன் தேவை. எனவே உபாசனை தடையின்றி தொடர அக்னிஹோத்ரத்தை தினமும் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.

இந்தச் சூழலில் ஒரு கேள்வி எழுகிறது, அக்னிஹோத்ரா போன்ற புண்ணிய கர்மாக்கள் இடையூறு இல்லாத உபாசனை (தியானம் அல்லது பக்தி யோகம்) ஏற்படுத்தும் வடிவத்தில் பலா (பழங்களை) கொடுக்கும்போது, ​​உபாசகரின் எந்த புண்ணியமானது உபாசகரின் நண்பர்களுக்கு மாற்றப்படுகிறது. உபாசகர் (உபாசகர் வித்வான் என்றும் அழைக்கப்படுகிறார்) மரணத்தின் போது அவரது புண்ணியமானது அவரது நண்பர்களுக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்ட உபநிடதப் பகுதியின் (ஷத்யான உபநிஷத்) இந்தச் சூழலில் இந்தக் கேள்வி பொருத்தமானதாகிறது. மற்றும் அவரது அப்பா தனது எதிரிகளுக்கு (எதிரிகளுக்கு) மாற்றப்படுகிறார்.

இந்த அதிகாரத்தின் இரண்டாவது சூத்திரத்தில் சூத்ரகாரரே மேற்கண்ட சந்தேகத்தை தெளிவுபடுத்துகிறார். இந்த சூத்திரத்தில், உபாசகரின் புண்ணிய கணக்கில் ஒரு குறிப்பிட்ட பகுதி உள்ளது, அதன் பலனை உபாசகர் அனுபவிக்கவில்லை, ஏனெனில் புண்யத்தின் ஒரு பகுதி உபாசகருக்கு பலன்களை வழங்கத் தவறியது. அதே. உபாசகர் செய்த கடுமையான பாவத்தின் அடிப்படையில் பகவான் பரமாத்மாவின் விருப்பத்தால் இந்தத் தடை ஏற்படுகிறது. உபாசகர் இறக்கும் நேரத்தில் இந்த மகிழ்ச்சியற்ற மற்றும் தடுக்கப்பட்ட புண்ணியமானது உபாசகரின் நண்பருக்கு மாற்றப்படுகிறது.

இந்த பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் “இதர க்ஷபநாதி கரணம்” என்று அழைக்கப்படுகிறது. உபாசகர் எப்போது மோட்சத்தை அடைகிறார் என்பதுதான் இங்கு விவாதிக்கப்படும் தலைப்பு. அதாவது, உபாசகர் எந்தப் பிறவியில் உபாசனை (தியானம்) செய்தாரோ அதே பிறவியில் (ஜன்மா) மோட்சத்தை அடைகிறாரா அல்லது அவர் பக்தி யோகம் அல்லது உபாசனையைத் தொடங்கிய பிறப்பிலிருந்து பல பிறவிகள் (ஜன்மாக்கள்) எடுத்த பிறகு அதுதான். இந்தச் சூழலில் மூன்றாவது சந்தேகமும் உள்ளது. புண்ணிய பாப கர்மா பலன்களைத் தரத் தொடங்கிய பிறவியின் முடிவில் மோட்சத்தை அடைவாரா என்பதுதான் அது.

மேற்கூறிய ஐயங்களைத் தோற்றுவிக்கும் உபநிடத உரை, சந்தோக்யோபநிஷத்தின் 6வது அத்தியாயத்திலும், சந்தோக்யோபநிஷத்தின் 8வது அத்தியாயத்திலும் உள்ள ஒரு பகுதி. 6வது அத்தியாயத்தில், உபாசகர் மோட்சம் பெறுவதில் தாமதம், புண்ய மற்றும் பாபா இரண்டையும் உள்ளடக்கிய பிராரப்த கர்மாவின் பிடியில் இருந்து விடுபடாதது என்று கூறப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உபாசகர் தனது பிராரப்த கர்மா முடிவடையும் தருணத்தில் மோட்சத்தை அடைகிறார் அல்லது புண்யா மற்றும் பாபாவின் பலனை அனுபவித்து சோர்வடைகிறார். புண்ணியத்தின் பலன் மகிழ்ச்சியின் இன்பம் மற்றும் பாபாவின் பலன் துன்பம் என்பதை இந்த சூழலில் கவனிக்க வேண்டும். இந்த துன்பம் தாபத்ரய எனப்படும் மூன்று வகையாகும்.

முதலாவதாக உடல் மற்றும் மனது தொடர்பான ஆத்யாத்மிகா என்று அழைக்கப்படுகிறது. உடம்பின் துன்பம் நோய்களால் தான். மனத் துன்பம், மன அழுத்தம், வேதனை அல்லது பதற்றம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

இரண்டாவது ஆதிபௌதிகா என்பது அவரது உறவினர்கள், நண்பர்கள், எதிரிகள் மற்றும் சுற்றுப்புறங்களால் ஏற்படும் உடல் மற்றும் மன துன்பங்கள் ஆகும்.

மூன்றாவதாக, பொல்லாத மழை, வெள்ளம், கடும் வறட்சி, சூறாவளி புயல், நில நடுக்கம், கடல் அலைகள் போன்ற இயற்கைச் சீற்றங்களை உண்டாக்கும் பரமாத்மாவின் சித்தமாகிய உடலும் மனமும் துன்பம் அடைவதே ஆதிதைவிகா எனப்படும். பேரழிவுகள்.

ஒருவரின் பிராரப்தம் முடிவுக்கு வந்துவிட்டால் அல்லது சோர்வடைந்துவிட்டால், அவர் இந்த உலகில் ஒரு கணம் கூட இருக்க முடியாது.

மேலே கூறப்பட்ட சாண்டோக்யோபநிஷத்தின் இரண்டாவது பகுதி, குதிரை வெளிவரும் சந்திரனைப் போல, பாபாவை உதிர்த்துவிட்டு, பிரம்மலோகம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ வைகுண்டப்ய லோகத்தில் பரமாத்மாவை அடைவேன் என்று உபாசகர் கூறியதைக் குறிக்கிறது. கிரகணத்தின் போது ராகுவின் பிடிகள் மற்றும் இந்த மரண உடலை உதிர்த்த பிறகு.

பூர்வபக்ஷி, உபாசகர் அங்கு உபாசனையைத் தொடங்கிய பிறப்பின் (ஜென்மா) முடிவில் மோட்சத்தை அடைகிறார் என்று வாதிடுகிறார், இதன் பொருள் மேலே குறிப்பிடப்பட்ட சாண்டோக்யோபனிஷத்தின் 6 வது அத்தியாயத்தில் உள்ள பகுதி அவர் உபாசனையைத் தொடங்கிய பிறப்பின் முடிவைக் குறிக்கிறது.

“போகேன து இதரே க்ஷபயித்வா அத ஸம்பத்யதே” என்ற சூத்திரத்தில் மேற்கூறிய வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், உபாசகர் (போகேன) பிராரப்தத்தின் பலன்களை அனுபவித்த பிறகு (அத ஸம்பத்யதே) மோட்சத்தை அடைகிறார் (எதரே அதாவது ஆரப்தா, அதாவது பலன்களைத் தரத் தொடங்கிய திரண்ட புண்ணிய பாப கர்மாவின் பகுதி) பின்னர் சோர்வடைகிறார். இந்த பிராரப்த (க்ஷபயித்வா).

இந்த சூத்திரத்தின்படி உபாசகர் உபாசனை (தியானம் அல்லது பக்தி யோகம்) செய்ய ஆரம்பித்த ஒரு பிறவியிலேயே தனது பிராரப்தத்தை தீர்ந்துவிடலாம் அல்லது பல பிறவிகள் எடுத்து புண்ணிய மற்றும் பாபாவின் புண்ணியங்களை அனுபவித்து பிராரப்தத்தை கழிக்க வேண்டும். பிராரப்தம் தீர்ந்து மோட்சத்தை அடைவதற்கு முன் அவர் எத்தனை பிறவிகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து கடினமான மற்றும் வேகமான விதி எதுவும் இல்லை.

முந்தைய ஐந்து அதிகாரங்களில் வந்த முடிவுகளைக் கீழே சுருக்கமாகக் கூறலாம்.

உபாசகர் அல்லது பக்தி நிஷ்டையில் புண்ய பக கர்மாவை அகற்றும் முறை.

முதல் வகைப்பாடு: புண்ய பாபா கர்மா பின்வரும் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

(அ) ​​புண்ய மற்றும் பாபா கர்மாவின் பலன்கள் ஏற்கனவே அனுபவித்து வருகின்றன.

(ஆ) புண்ய மற்றும் பாபா கர்மாவின் பலன்கள் அனுபவிக்கப்படுகின்றன.

(இ) புண்யா மற்றும் பாபா கர்மாவின் பலன்கள் அனுபவிக்கப் போகின்றன.

(ஈ) புன்யா மற்றும் பாப்பா கர்மாவின் பலன்கள் தடையின் காரணமாக அனுபவிக்க முடியாது. உபாசகர் இறக்கும் போது இந்த வகையில் உள்ள புண்யா நண்பர்களுக்கும், அப்பா எதிரிகளுக்கும் மாற்றப்படுகிறார்.

இரண்டாவது வகைப்பாடு: உபாசனை தொடங்குவதற்கு முன் செய்யப்படும் புண்யா மற்றும் பாபாவை பூர்வாகா என்று அழைக்கப்படுகிறது. இந்த பூர்வகா மீண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது (1) தத்தா பலம்- பழங்கள் ஆல்ரடி வழங்கப்பட்டு அனுபவித்தது. (2) அடட்டா பலம் – புன்யா மற்றும் பாப்பா இன்னும் பழங்களை கொடுக்கத் தொடங்கவில்லை.

அடாத்த பலம் (1) தகுந்த பிராயச்சித்தம் அல்லது பிராயச்சித்தம் செய்வதன் மூலம் மறைந்தது என மேலும் வகைப்படுத்தப்படுகிறது.

(2) மறைந்து போகாதது. இதற்கு அவினாஷ்ட பலம் என்று பெயர். இந்த அவினாஷ்ட பலம் மீண்டும் (1) பிராரப்த பலம் – பலன் கொடுக்க ஆரம்பித்தது என வகைப்படுத்தப்படுகிறது. (2) அப்ரஆரப்த பலம் – இன்னும் பலன் கொடுக்கத் தொடங்காதது.

உபாசகர் உபாசனை (பக்தி யோகா) தொடங்கும் போது இது மறைந்துவிடும், வேறுவிதமாகக் கூறினால் அது உறைந்துவிடும். உபாசகருக்கு இந்த வகை புண்ணியமும், பாபாவும் பலன் கொடுக்கக் கூடாது என்று பகவான் ஸ்ரீமன் நாராயணன் விரும்புகிறார் என்பதே இதன் உண்மையான அர்த்தம்.

பிராரப்த பலா மீண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது

(1) வித்யானுகுலம் – உபாசனைக்கு சாதகமானது மற்றும் அதை ஊக்குவிக்கிறது.

(2) அனனுகுலம் – உபாசனைக்கு சாதகமாக இல்லாதது.

இந்த அனனுகுலம் மேலும் (1) புத்திபூர்வம் – தெரிந்தே செய்யப்படுகிறது. (2) அபுத்தி பூர்வம் – தெரியாமல் செய்யப்பட்டது.

தற்செயலாக செய்யப்படும் இந்த குறிப்பிட்ட வகையின் இந்த பாப்பா பகுதி உபாசகரைத் தொடாது, அதாவது அவர் அறியாமல் செய்யப்படும் பாபாவின் பலனை அனுபவிக்க வேண்டியதில்லை. உபாசகருக்கு அனுகூலமான உபாசனை தொடங்கிய பின் அறிந்தும் அறியாமலும் செய்த புண்ணியமானது, பயிர் சாகுபடிக்குத் தேவையான மழையை உண்டாக்குவதன் மூலம் அவருக்குப் பலன்களைத் தரும்.

மோட்சத்தை அடைவதற்கு உபாசனம், தியானம் அல்லது தியானம் என்று அழைக்கப்படும் பக்தி யோகம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதைக் கையாளும் முதல் காலாண்டு அவ்ரித்தி பாதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாதத்தின் பதினொரு அதிகாரங்களில் கடைசியாக, தியானம் செய்பவர் என்று அழைக்கப்படும் உபாசகர் ஒரு பிறவியில் அல்லது பல பிறவிகளில் வெற்றிகரமாக உபாசனையை முடித்துவிடுகிறார், அந்த காலகட்டத்தில் அவர் பிராரப்த கர்மாவின் பலனை அனுபவிக்கிறார். பிராரப்த கர்மா முடிவடையும் தருணத்தில், உபாசனை முடிவடைகிறது மற்றும் உபாசகர் தியானம் செய்பவர் மரண உடலை விட்டு வெளியேறி, அர்ச்சிராதி மார்கா என்ற பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தை அடையத் தயாராகிறார்.

அபியுபகத பிராரப்தம் முடிவடையும் போது, ​​பிரபஞ்சனின் விஷயத்தில் கூட, அவரும் மரண உடலை விட்டு வெளியேறி, அர்ச்சராதி மார்க்கத்தின் மூலம் ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தை அடையத் தயாராகிறார்.

ஜீவாத்மா உடலில் இருந்து வெளியேறுவது உத்க்ராந்தி என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த உத்கிராந்தி ஒரு பேக்கிங் செயல்முறைக்கு முன்னதாகவே உள்ளது. இந்த பேக்கிங் செயல்முறை இந்த இரண்டாவது பாதத்தில் விரிவாகக் கையாளப்படுகிறது, இது உத்கிராந்தி பாதம் என்று அழைக்கப்படுகிறது.

வெளியில் எதுவும் தெரியாததால் உடலுக்குள் நடக்கும் பேக்கிங் செயல்முறையை விரிவாகக் கையாள்வது அவசியமா என்ற கேள்வி எழலாம். பதில் என்னவென்றால், சந்தோக்யோபனிஷத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி இதைப் பற்றி குறிப்பாகக் குறிப்பிடுகிறது மற்றும் பிரம்மசூத்திரங்கள் உபநிடத பத்திகளின் சரியான விளக்கத்திற்காகக் குறிக்கப்பட்டவை என்பதால், சூத்ரகார முனிவர் பதராயணன் முறையான பேக்கிங் வரிசைக்கு சூத்திரங்களை இயற்ற முடிவு செய்தார்.

இந்த பாதம் விசிஷ்டாத்வைதத்திற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் சூத்ரகாரரே அத்வைதின்களின் ஜீவன் முக்த வாத (வாத என்றால் மூலோபாய அறிக்கை) தெளிவான சொற்களில் கண்டனம் செய்கிறார்.

இந்த பாதத்தில் பதினொரு அதிகாரங்கள் உள்ளன. முதல் அதிகாரம் வகாதிகரணம் எனப்படும். விவாதத்திற்கு வரும் உபநிடதப் பகுதி சாந்தோக்யோபனிஷத்தில் உள்ள சத்வித்யாவில் (6வது அத்தியாயம்) இருந்து வருகிறது. இந்த பத்தியின் பொருள் என்னவென்றால், ஜீவா உடலை விட்டு வெளியேற (புறப்படுவதற்கு) தயாராகும் போது அவரது பேச்சு உணர்வு உறுப்பு மனத்துடன் இணைந்து கொள்கிறது. பிறகு மனம் முக்ய பிராணன் அல்லது மூச்சுடன் இணைந்து வருகிறது, பின்னர் முக்ய பிராணன் ஜீவனுடன் இணைந்து வருகிறது, பிறகு இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன், ஜீவன், தேஜஸ் சேருங்கள், இவை ஜீவனுடன் இதயத்தில் வசிக்கும் அந்தர்யாமியாகிய பரமாத்மாவுடன் இணைந்து வரும். . இங்கு இணைதல் என்றால் இணைப்பு அல்லது ஒன்றியம். இங்கே மேலே மேற்கோள் காட்டப்பட்ட உபநிடத உரையில் சம்பத்தி என்ற வார்த்தை உள்ளது. இந்த வார்த்தைக்கு இணைதல் என்று பொருள்.

இங்கு எழும் சந்தேகம், பேச்சு தானே மனத்துடன் இணைகிறதா அல்லது பேச்சு உறுப்புடன் இணைகிறதா என்பதுதான். பேச்சானது மனத்தால் கட்டுப்படுத்தப்படுவதால், பேச்சு மட்டும் மனத்துடன் இணைக்கப்படுகிறது என்று எதிர்ப்பாளர் வாதிடுகிறார். பூர்வபக்ஷி என்ற எதிரியானவர், இணைதல் என்றால் இணைதல் என்றும், இந்த இணைவு இணைவதற்குக் காரணமான காரியத்துடன் நடைபெற வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார். காரண காரியக் கோட்பாடாக இருக்கும் கரண மற்றும் காரியக் கோட்பாட்டில் காரியம் மறைந்து விடுகிறது அல்லது காரத்தில் கரைந்து விடுகிறது. இங்கே பேச்சு உறுப்புக்கு மனம் காரணமல்ல, அதற்கு முன் பூர்வபக்ஷி, பேச்சு உறுப்பு மனத்துடன் இணையவில்லை, எனவே பேச்சு மட்டுமே மனத்துடன் இணைகிறது என்று வாதிடுகிறது.

இதை “வாக் மனஸி தர்சநாத் சப்தச்ச” என்ற சூத்திரத்தில் சூத்ரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், சூத்திரத்தில் உள்ள “வாக்” என்ற வார்த்தை வஜிந்த்ரியாவைக் குறிக்கிறது, அதாவது வாஜிந்த்ரியம் ஆகும். மேற்கூறியவற்றை ஆதரிக்கும் உபநிடத பத்தியில் “சம்பத்யதே” என்ற வார்த்தை உள்ளது, எனவே முழு அர்த்தத்தைப் பெற இந்த வார்த்தையை சூத்திரத்தில் சேர்க்க வேண்டும். எனவே முழு அர்த்தம் என்னவென்றால், சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு காரணங்களால் பேச்சு உறுப்பு மனத்துடன் இணைக்கப்படுகிறது.

முதல் காரணம் தர்சனம், இரண்டாவது காரணம் சப்தாச்சா. இந்த இரண்டு காரணங்களின் பொருள் என்னவென்றால், பேச்சு உறுப்பு மனத்துடன் இணைந்தாலும், மரண உடலை விட்டு வெளியேறப் போகிறவர் பேச்சு குறைவாக இருந்தாலும், அந்த நபரில் சில மன செயல்பாடுகள் தெரியும். சப்தச்சா என்பது மேலே குறிப்பிடப்பட்ட உபநிடதப் பகுதி, அதில் பேச்சு உறுப்பு மனத்துடன் தொடர்பு கொள்கிறது என்று கூறப்பட்டது.

இந்த அதிகாரத்தில் உள்ள இரண்டாவது சூத்திரம், பேச்சு உறுப்பைப் போலவே மற்ற இந்திரியங்களும் (இந்திரியங்களும்) மனதில் வந்து சேர்வதால், பத்து இந்திரியங்களும் மனத்துடன் இணைந்துள்ளன என்று கூறுகிறது. ஞான இந்திரியங்கள் (அறிவு அல்லது உணர்வைக் கொடுக்கும் புலன்கள்) கண்கள், காதுகள், மூக்கு தோல் மற்றும் நாக்கு. கர்ம இந்திரியங்கள் (செயல் சார்ந்த) கைகள், கால்கள், பேச்சு உறுப்பு, பிறப்பு உறுப்பு மற்றும் வெளியேற்ற உறுப்பு ஆகும்.

இந்தப் பாடலில் இரண்டாவது அதிகாரம் மனோதிகரணம்.

எல்லா இந்திரியங்களும் சென்று மனதைச் சேர்ந்த பிறகு, மனமும் அனைத்து இந்திரியங்களோடு சேர்ந்து முக்ய பிராணனுடன் (மூச்சு) சேருகிறது என்று இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. “தன்மன பிராண உத்தராத்” என்பது சூத்திரம். அதாவது “உத்தரத்” என்ற காரணத்தால் அனைத்து இந்திரியங்களுடனும் மனம் பிராணனுடன் இணைகிறது, அதாவது “வாக்மனசி ஸம்பத்யதி” என்ற உபநிடதப் பகுதிக்கு அடுத்ததாக மன: பிராணே என்ற உரை உள்ளது. எனவே உத்தரம் என்றால் அடுத்தது.

இந்த அதிகாரத்தில் மேலும் ஒரு சந்தேகம் தீர்ந்தது. “அன்னமயம் ஹி சௌம்ய மன” என்ற உபநிடத உரையில் மனதிற்கு உணவே காரணம் என்று தோன்றுகிறது என்பது சந்தேகம். “தா அன்னம் அஸ்ருஜந்தா” என்ற உரையிலிருந்து உணவுக்கு நீர் காரணம். மேலும் “அபோமய பிராணன்” என்ற உரை பிராணனுக்கு நீர்தான் காரணம் என்று கூறுகிறது. எனவே, இந்த நூல்களிலிருந்து, மனம் தண்ணீருடன் இணைகிறது என்று சொல்வது இயற்கையானது, ஏனென்றால் தண்ணீரே மனதிற்கு இறுதிக் காரணம், எந்தவொரு விஷயமும் அதன் காரணத்தில் ஒன்றிணைந்து அல்லது கரைந்துவிடும் என்று முன்பே கூறப்பட்டது. அதனால் புலன்களுடன் மனமும் தண்ணீருடன் இணையும். இந்த சந்தேகம் எதிராளியின் வாதமாக மாறுகிறது. “அன்னமயம் ஹி சௌம்ய மன:” என்ற உரைகளால் இந்த சந்தேகம் நிவர்த்தி செய்யப்படுகிறது அல்லது எதிராளியின் வாதம் மறுக்கப்படுகிறது. மற்றும் அபோமய பிராணன்” உணவு மனதிற்கு காரணம் என்றும் நீர் பிராணனுக்கு காரணம் என்றும் கூறாதீர்கள் ஆனால் உணவு மனதின் திருப்திகரமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது என்றும் நீர் முக்ய பிராணன் அல்லது சுவாசத்தின் திருப்திகரமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது என்றும் கூறுகின்றனர். எனவே இந்திரியங்களும் மனமும் உடலிலிருந்து ஜீவா வெளியேறும் முன் முக்ய பிராணனுடன் இணைகின்றன.

இந்த பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரம் அதியக்ஷாதி கரணமாக அழைக்கப்படுகிறது. பேக்கிங் செயல்பாட்டின் அடுத்த படி, இந்திரியங்கள், மனம் மற்றும் முக்ய பிராணன் ஆகியவை ஜீவாவுடன் இணைந்து பெறுகின்றன. இது சம்பந்தமாக சந்தேகத்திற்கு இடமான சாண்டோக்யோபநிஷத்தில் “ப்ராண: தேஜசி, தேஜ: பரஸ்யம் தேவதாயம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பத்தியில் ஜீவாவைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். எனவே, இந்திரியங்கள் மற்றும் மனதுடன் பிராணன் (முக்ய பிராணன்) நேரடியாக தேஜஸ் அல்லது வேறுவிதமாகக் கூறினால் ஐந்து பூதங்களுடன் (கூறுகள்) இணைகிறது என்று எதிர்ப்பாளர் வாதிடுகிறார்.

பூர்வபக்ஷியின் மேற்கூறிய வாதத்தை மறுப்பதில் சூத்ரகாரர் சூத்திரத்தில், “சோத்யக்ஷே ததுபகமா திப்ய:” என்று கூறுகிறார், முக்ய பிராணன் இந்திரியங்களின் அதிக்ஷா அல்லது தலைவனான ஜீவாவுடன் ஐக்கியமாகிறது. உபகம என்றால் தொடர்பு. அனைத்து இந்திரியங்களும் ஜீவாவுடன் இணைந்ததாக அறிவிக்கும் உபநிடதப் பகுதி உள்ளது. மற்ற இரண்டு உபநிடத கூற்றுகளின்படி ஜீவாவுடன் சேர்ந்து முக்ய பிராணன் உடலிலிருந்து வெளியேறுகிறது என்பதை இந்தச் சூழலில் குறிப்பிடுகிறது. எனவே இந்திரியங்கள், மனம் மற்றும் முக்ய பிராணன் ஆகியவை தேஜஸுடன் இணைவது ஜீவா மூலம். இது யமுனா நதி கடலில் கலக்கிறது என்ற கூற்றுக்கு ஒப்பானது. ஆனால் உண்மையில் யமுனா கடலில் கலக்கும் கங்கை நதியில் கலக்கிறது.

நான்காவது அதிகாரம் பூதோதிகாரணம் எனப்படும். இந்த அதிகாரத்தில் முக்ய பிராணன் பூத தேஜஸ் தனியே இணைகிறதா அல்லது ஈதர் (ஆகாயம்), காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய அனைத்து பூதங்களுடனும் இணைகிறதா என்ற சந்தேகம் நீங்குகிறது. பூர்வபக்ஷி வாதிடுகையில், முக்ய பிராணன் தேஜஸைத் தனியாகச் சேர்கிறது, மற்ற எல்லா பூதங்களுடனும் சேர்வதில்லை, ஏனென்றால் சாண்டோக்யோபனிஷத்தின் 6 வது அத்தியாயம் “ப்ராண: தேஜசி” என்று குறிப்பிடுகிறது, அதாவது முக்ய பிராணன் தேஜஸை (நெருப்பை) மட்டுமே இணைக்கிறது, மற்ற பூதங்களுடன் அல்ல. சூத்ரகாரர் “பூதேஷு தச்ச்ருதே:” என்று சூத்திரத்தில் கூறுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், அனைத்து இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன் மற்றும் ஜீவன் அனைத்து பூதங்களுடனும் இணைகின்றன, ஏனெனில் மேலே கூறப்பட்ட பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு குறிப்பிட்ட உபநிடத பகுதி உள்ளது. இந்த பத்தியில் ஜீவா அனைத்து பூதங்களுடனும் தொடர்பு கொண்டு உடலுக்குள் நகர்கிறது என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு பூதத்துடனும் ஒன்றன் பின் ஒன்றாக ஜீவா தொடர்பு கொள்ள முடியும், மேலும் அவர் அனைத்து பூதங்களுடனும் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று எதிராளி மீண்டும் மற்றொரு கருத்தை எழுப்புகிறார். “நைகஸ்மின் தர்ஷா யதோஹி” என்று படிக்கும் இரண்டாவது சூத்திரத்தில் சூத்ரகாரர் இந்தக் கருத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. ஒவ்வொரு பூதமும் தன்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. எந்த வேலையும் செய்ய முடியும் என்பதற்காக மற்ற நான்கு பூதங்களுடன் கலக்க வேண்டும். இது பஞ்சீகரணம் என்று அழைக்கப்படுகிறது பஞ்சீகரணாவில் என்ன நடக்கிறது என்றால், ஒவ்வொரு பூதத்திலும் அந்த பூதத்தில் 50% உள்ளது, மீதமுள்ள 50% மற்ற நான்கு பூதங்களைக் கொண்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் 12.5% ​​பங்களிக்கின்றன. இதுவே பஞ்சீகரணத்தின் கொள்கை. சாண்டோக்யோபனிஷத்தில் இது திரிவ்ரித் கரணம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகிய மூன்று பூதங்களை மட்டுமே குறிப்பிடுகிறது, அதில் இந்த உறுப்புகள் (பூதங்கள்) ஒவ்வொன்றும் 50% சொந்தமாக இருக்கும், மீதமுள்ள 50% மற்ற இரண்டு பூதங்களை 25 இல் கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் %. எனவே இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பூதங்களின் கலவையாகும். எனவே உபநிடத உரையில் “பிராண:

எனவே, இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன் மற்றும் ஜீவா ஆகிய ஐந்து பூதங்களோடும் ஒரே பொதியில் வருகிறது.

இந்த பாதத்தில் ஐந்தாவது அதிகாரம் அஸ்ருத்யுப க்ரமதிகாரணம் எனப்படும். இந்த அதிகாரத்தின் முக்கிய நோக்கம் ஜீவன் முக்தி (இந்த உலகில் வாழும் போது விடுதலை) வாதத்தை கண்டிப்பதாகும். இந்த ஜீவன் முக்திவாதம் அத்வைதின்களால் முன்வைக்கப்பட்டது. நபர்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன.

முதல் வகை உபாசகர், வித்வான் அல்லது தியானம் செய்பவர், ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் மோட்சம் (முக்தி) அடைவதற்காக உபாசனை அல்லது சரணாகதி செய்தவர். இரண்டாவது பிரிவினர் மோட்சத்தை விரும்பாத அவித்வான் என்று அழைக்கப்படுகிறார்கள், எனவே உபாசனை அல்லது சரணாகதி செய்யவில்லை.

இங்கு எழும் கேள்வி என்னவென்றால், ஜீவா மரண உடலில் இருந்து வெளியேறும் முன் மேலே விவரிக்கப்பட்ட பேக்கிங் செயல்முறை வித்வானுக்கும் அவித்வானுக்கும் ஒன்றா அல்லது வேறுபட்டதா என்பதுதான்.

பூர்வபக்ஷி மேலே உள்ள பேக்கிங் செயல்முறை அவித்வானுக்கு மட்டுமே (உபாசகர் அல்ல) என்று கூறுகிறார், மேலும் வித்வான் இங்கேயே மோட்சத்தை அடைகிறார், அதுவே ஜீவன் முக்தியாகும்.

பூர்வபக்ஷியின் இந்த வாதத்தை, இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “சமனாச்ச அஸ்ருத்யு பக்ரமாத் அமிர்தத்வம் ச அனுபோஷ்ய” என்று சூத்ரகாரர் மறுத்துள்ளார்.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. சமணனும் ஒன்றே. அதுவே இந்திரியங்கள் மனதையும், மனம் முக்ய பிராணன், முக்ய பிராண ஜீவாத்மாவையும், பிறகு பூத சூக்ஷ்மங்களையும் (சூக்ஷ்மம் என்றால் அணு அளவு) சேர்வதும், இறுதியாக பரமாத்மாவைச் சேர்வதும் வித்வான்களுக்கும் அவித்வான்களுக்கும் ஒன்றுதான்.

இந்த அதிகாரம் அடுத்த அதிகாரத்திற்குப் பிறகு வந்திருக்க வேண்டும், அதில் ஜீவனும் மற்ற விஷயங்களுடன் சென்று வித்வானின் (உபாசகர்) உடலின் இதயத்தில் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவிடம் சென்று சேரும். இதேபோல் அவித்வான் விஷயத்திலும். சூத்ரகாரர் இந்த அதிகாரத்தை முன்னரே கையாண்ட ஜீவன் முக்தி வேதத்தை மறுதலிக்கும் அவசரத்தில் இருந்ததால்.

அஸ்ருத்யு பக்ரமத் என்றால் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு செல்லும் பாதை தொடங்கும் வரை. இந்த பாதை அர்ச்சிரடி மார்கா என்று அழைக்கப்படுகிறது. ஜீவா மூர்த்தன்யனாடி சுஷும்னா நாடி அல்லது பிரம்ம நாடி என்று அழைக்கப்படும் நாடிக்குள் நுழைவதன் மூலம் இந்த பாதைக்கு வருகிறார். நாடி என்றால் நாடித்துடிப்பு அல்லது உடலில் உள்ள எந்த ஒரு குழாய் உறுப்பு. இதயத்தில் 101 நாடிகள் உள்ளன. நாபி (தொப்புள்) முதல் தலை வரை செல்லும் அந்த 101வது நாடி மேலே குறிப்பிட்டபடி மூர்த்தன்ய நாடி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடி அர்ச்சிராடி மார்க்கத்திற்கு வழிவகுக்கிறது. எனவே ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்திற்கு செல்லும் வித்வான் முதலில் மூர்தான்ய நாடிக்குள் நுழைய வேண்டும், அந்த நாடியின் வழியே தான் ஜடத்திலிருந்து வெளியேறி அர்ச்சிராதி மார்க்கத்தின் தொடக்கப் புள்ளிக்கு வர வேண்டும். எனவே “அஸ்ருத்யு பக்ரமதி” என்ற வார்த்தையின் ஒட்டுமொத்த அர்த்தம் வித்வான் (ஜீவா) மூர்த்தன்யனாதிக்குள் நுழைவது வரை.

சொர்க்கம் அல்லது நரகத்தை இலக்காகக் கொண்ட அவித்வான் உடலில் இருந்து மேலே குறிப்பிட்டுள்ள 100 நாடிகளில் ஏதேனும் ஒன்றின் வழியாகப் புறப்படுகிறார்.

ஆகவே, மேலே கூறப்பட்டவற்றின் கூட்டுத்தொகை மற்றும் பொருள் என்னவென்றால், உடலுக்குள் நடக்கும் நிகழ்வுகளின் வரிசை (பேக்கிங் செயல்முறை) நாடிகளுக்குள் நுழையும் வரை வித்வானுக்கும் அவித்வானுக்கும் ஒன்றே.

சூத்திரத்தில் இன்னும் மூன்று வார்த்தைகள் உள்ளன, அவை விரிவுபடுத்தப்பட வேண்டும். வார்த்தைகள் அம்ருʼதத்வம் ச அநுபோஷ்ய । இச்சொற்களின் பொருளை விளக்குவதற்கு கடோபநிஷத்தில் உள்ள மற்றொரு பகுதியை ஆராய வேண்டும். பத்தி உள்ளது

“யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காம:

யேஸ்ய ஹ்ருதி ஸ்ரீத:| அத மர்த்யா:

அமிர்தோ பவதி அத்ர ப்ரஹ்ம சமஷ்ணுதே||”.

இந்த பத்தியின் பொருள் என்னவென்றால், ஒரு உபாசகர் (வித்வான்) தனது இதயத்திலிருந்து தனது ஆசைகளை உதிர்த்தால், அவர் இங்கேயே ஒரு முக்தா (முக்தா) போல் ஆகிறார், உண்மையில் முக்தா அல்ல. எனவே அம்ருதத்வத்தின் உண்மையான பொருள் என்னவென்றால், உபாசகருக்கு பக்தி யோகம் தொடங்கிய பிறகு அவர் செய்த அஜாக்கிரதையான பாவங்கள் தீண்டாது, பக்தி யோகம் தொடங்குவதற்கு முன்பு அவர் செய்த பாவங்கள் அழிந்துவிடும். உபாசனையின் பலன்களில் இதுவும் ஒன்று.

அநுபஷ்ய என்றால் அவன் உடல் எரிவதற்கு முன் மேற்கூறிய அம்ருதத்வத்தை அடைகிறான், அதாவது அவன் இறப்பதற்கு முன். இந்த அதிகாரத்தில் சூத்ரகாரர் கூறும் வேறு சில முக்கிய குறிப்புகளும் உள்ளன. அவர்கள்

(அ) ​​வித்வான் அல்லது உபாசகரின் பிராரப்த கர்மா மரண சரீரத்தை விட்டு வெளியேறும் நேரத்தில் முடிவுக்கு வந்தாலும், ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தில் அவர் பரமாத்மாவை அடையும் வரை சம்சாரத்தின் பந்தம் தொடர்கிறது.

இது, இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை ஜனாதிபதித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அழைப்பது போலத்தான், அவர் பதவியேற்கும் வரை ஜனாதிபதியாக அல்ல. எனவே ஜீவன் முக்தா என்ற கருத்து முற்றிலும் தவறானது.

(ஆ) வித்வான் மரண உடலை விட்டு வெளியேறிய பிறகு, ஸ்ரீக்கு இடையே உள்ள விரஜா நதி வரை தனது பயணத்திற்காக ஒரு சூக்ஷ்ம சாரிராவை (மற்றவர்களால் பார்க்க முடியாத மற்றும் மிக நிமிட அளவிலும் அணு அளவிலும் சொல்லலாம்) எடுத்துக்கொள்கிறார். வைகுண்ட பை லோகம் மற்றும் பிரகிருதி மண்டலம் என்று அழைக்கப்படும் பிரபஞ்சம். ஜீவாவாகிய வித்வான் தனது அணு அளவு கொண்ட அர்ச்சிராதி மார்க்கத்தில் (ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு செல்லும் பாதை) சூட்சம சரித்திரம் இல்லாமல் பயணிக்க முடியும் என்றாலும், வழியில் சந்திரனுடன் உரையாடுவதற்கு அவருக்கு அதுவே தேவைப்படுகிறது. இந்த உரையாடல் கௌஷிதகி உபநிஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(இ) மேலே குறிப்பிடப்பட்ட உபநிஷதப் பகுதியான “யதா ஸர்வே ப்ரமுச்யந்தே” என்பது மரணத்திற்குப் பின் “அம்ருதத்வம்” என்பதைக் குறிக்கவில்லை, ஆனால் அது வித்வான் உயிருடன் இருக்கும்போதே குறிக்கிறது.

(ஈ) வித்வான் மரண உடலை விட்டு சூக்ஷ்ம சரீரத்துடன் வெளியேறியதற்கான காரணத்தை சூத்ரகாரர் கூறுகிறார். ஜீவா உடலில் இருக்கும் போது உடல் முழுவதும் சூடாக இருக்கும். ஜீவா உடலை விட்டு வெளியேறும்போது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே சூடாகவும், மீதமுள்ள பகுதி குளிர்ச்சியாகவும் இருக்கும். எனவே இது சூக்ஷ்ம சரீரத்தின் இருப்புக்கான தெளிவான அறிகுறியாகும்.

இந்தப் பாதத்தில் உள்ள ஆறாவது அதிகாரம் பரசம்பத்தி அதிகாரம் எனப்படும்.

இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன், ஜீவா மற்றும் பூத சூக்ஷ்மங்கள் அடங்கிய பொதியானது, உடலுக்குள் அந்தர்யமின் (உள் ஆன்மா) வடிவில் இருக்கும் பரமாத்மாவுடன் இணைந்து வருகிறதா அல்லது அவை வெவ்வேறு லோகங்களுக்கு அல்லது உலகங்களுக்குச் செல்கிறதா என்பதுதான் விவாதத்திற்கான தலைப்பு. யாகங்களின் வடிவத்தில் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப அல்லது ஸ்ரீமன் நாராயணனைத் தவிர (உயர்ந்த உயிரினம்) மற்ற பொருட்களின் மீது அவர்களின் தியானத்தின் படி. உதாரணமாக ஜோதிஷ்டோம யாகம் செய்த ஒருவர் ஸ்வர்க லோகத்திற்குச் சென்று அங்குள்ள இன்பங்களை அனுபவிக்கிறார். அதேபோல, பூம வித்யாவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நாம, வாக் போன்றவற்றை ஒருவர் தியானித்தால், அத்தகைய தியானங்களுக்கு விதிக்கப்பட்ட லோகங்களுக்குச் செல்வார். விஷயம் என்னவென்றால், அந்த லோகங்களும் பரமாத்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளன, மேலே குறிப்பிட்டுள்ளபடி ஒரு நபர் தனது செயல்கள் மற்றும் தியானத்தின்படி அந்த லோகங்களுக்குச் சென்றால்,

எனவே இந்த அதிகாரத்தின் பூர்வபக்ஷி, “தேஜ: பரஸ்யம் தேவதாயம்” என்ற உபநிடதப் பகுதி, இந்திரியங்கள், மனம் மற்றும் முக்ய பிராணன் போன்ற பிற விஷயங்களுடன் ஜீவா மற்றும் பூத சூக்ஷ்மங்களைக் குறிக்கிறது என்று வாதிடுகிறது.

பூர்வபக்ஷியின் இந்த வாதத்தை சூத்ரகாரர் “தானி பரே ததா ஹி ஆஹா” என்ற சூத்திரத்தில் மறுத்தார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. தனி என்றால் இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன், ஜீவா மற்றும் பூத சூட்சுமங்கள். பரே என்றால் பரமாத்மா. “தேஜ: பரஸ்யம் தேவதாயம்” என்ற உபநிடத உரையின்படி மேலே கூறப்பட்டவை பரமாத்மாவுடன் இணைந்து வருகின்றன, இது ஜீவா மற்றும் பிறருடன் அந்தர்யாமி பரமாத்மாவுடன் தொடர்பு கொள்ளும் பூத சூக்ஷ்மங்களைக் குறிப்பிடுகிறது.

பரமாத்மாவுடன் ஜீவாவின் இந்த இணைவு அல்லது சங்கமம், அவர் கடைசியாக இருக்கும் இந்த மரண சரீரத்தில் தங்கியிருந்த காலத்தில் முறையே தனது அப்பா மற்றும் புண்ணியத்தின்படி துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவித்த பிறகு சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அவன் மோட்சத்தை அடைகிறான். ஒரு அவித்வானுக்கும் (உபாசகர் அல்ல) பரமாத்மாவுடன் இணைவது இந்த பிறவியில் கடுமையான துன்பங்கள் மற்றும் இன்பங்களை அனுபவித்து ஓய்வெடுப்பதற்கும், அதன் பிறகு அவர் நல்ல செயல்களைச் செய்திருந்தால் சொர்க்கத்திற்குச் செல்கிறார் அல்லது அவர் கொடூரமான செயல்களைச் செய்தால் நரகத்திற்குச் செல்கிறார். பாவங்கள்.

இந்தப் பாதத்தில் ஏழாவது அதிகரணம் அவிபாகாதிகரணம் எனப்படும்.

ஜீவா மற்றும் பரமாத்மாவுடன் இணைந்த பிற விஷயங்கள் பரமாத்மாவில் இணைவதா அல்லது வெறும் ஐக்கியமா என்பதுதான் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்படும் தலைப்பு. தொழிற்சங்கத்தின் இந்த விஷயத்தில், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டு வேறுபட்ட நிறுவனங்கள் மற்றும் பிரிக்கக்கூடியவை. இணையும் விஷயத்தில் ஜீவாத்மாவும் மற்றவைகளும் பரமாத்மாவுக்குள் இணையும், ஏனென்றால் அவை அனைத்திற்கும் பரமாத்மாவே காரணம். பூர்வபக்ஷி, பரமாத்மாவில் உள்ள அனைத்து விஷயங்களின் கலவையாகும், காரணத்தில் விளைவு இணைவது என்று வாதிடுகிறது.

சூத்ரகாரர் “அவிபாகோ வசனத்” என்ற சூத்திரத்தில் இந்த வாதத்தை மறுக்கிறார், அவிபாகா என்றால் இந்திரியங்கள், மனம், முக்ய பிராணன், ஜீவா மற்றும் பூத சூக்ஷ்மங்கள் பரமாத்மாவுடன் ஒன்றிணைவது, இவை பரமாத்மாவுடன் தொடர்பு கொள்கின்றன, அதாவது அவை அந்தந்த அடையாளங்களை இழக்காமல் பிரிக்க முடியாதவை.

வச்சநாத் என்பது உபநிடதப் பகுதியான “தேஜ: பரஸ்யம் தேவதாயம்” என்பது சூத்ரகாரரின் மேற்கூறிய முடிவிற்கான காரணத்தைத் தருகிறது.

மேற்கண்ட உபநிடதப் பகுதி வாங்மனசி ஸம்பத்யதே என்று தொடங்குகிறது. சம்பத்யதே என்ற சொல்லில் உள்ள “சம்பத்தி” என்றால் சங்கமம் என்று பொருள். “மன:ப்ராணே” என்ற பத்தியின் அடுத்த பகுதியில் இந்த வார்த்தை மீண்டும் மீண்டும் வருகிறது, இது “மனா: ப்ராணே ஸம்பத்யதே” என்று தெளிவாக விரிவுபடுத்தப்படுகிறது, மேலும் “ப்ராண: தேஜசி” “ப்ராண: தேஜசி ஸம்பத்யதே” என்று விரிவுபடுத்தப்படுகிறது. எனவே அடுத்த பகுதியில் “தேஜ பரஸ்யம் தேவதாயம்” தேஜ:பரஸ்யம் தேவதாயம் ஸம்பத்யதே என தானாகவே விரிவடைகிறது. எனவே, “சம்பத்தி” என்ற வார்த்தையானது, வேறுபட்ட தனித்துவங்களின் பிரிக்க முடியாத ஐக்கியத்தை தெளிவாகக் குறிக்கிறது.

இந்தப் பாதத்தில் உள்ள எட்டாவது அதிகாரம் “தாடோகோதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது.

பரமாத்மாவுடன் இதுவரை கூறப்பட்ட நிறுவனங்களின் சேர்க்கை வரை மற்றும் உள்ளடக்கியது வித்வான்கள் மற்றும் அவித்வான்கள் இருவருக்கும் பொதுவானது. இந்த அதிகாரத்தில் இருந்து வார்டுகளுக்கு இடையே வேறுபாடு தொடங்குகிறது.

ஏற்கனவே கூறியது போல் ஒரு மனிதனின் இதயத்தில் 101 நாடிகள் (துடிப்புகள் அல்லது குழாய் உறுப்புகள்) உள்ளன. 101வது நாடி சுஷும்னா நாடி, மூர்த்தன்ய நாடி அல்லது பிரம்ம நாடி என்று அழைக்கப்படுகிறது. வித்வான் (ஜீவா) இந்த நாடி வழியாக தனது மரண சரீரத்திலிருந்து வெளியே வந்து ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தின் தொடக்கப் புள்ளிக்கு வருகிறார்.

வித்வான் பிரம்ம நாடியிலும், அவித்வான்கள் மற்ற நாடிகளிலும் பிரவேசிக்க வேண்டும் என்று ஏதேனும் நிபந்தனையோ அல்லது நிபந்தனையோ உள்ளதா என்பதுதான் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு. பூர்வபக்ஷி அப்படியொரு நிலை இல்லை என்று கூறுகிறது, ஏனென்றால் அந்த நேரத்தில் 101 நாடிகளில் குறிப்பிட்ட பிரம்ம நாடியை உடலில் இருந்து ஜீவா கண்டறிவது மிகவும் கடினம், ஏனென்றால் நாடிகள் பல மற்றும் மிக நிமிடம் மற்றும் அது போன்ற எந்த நிலையும் இல்லை. மேலே. மேலும் உபநிஷதப் பகுதியில் “ஷதம் சைக ஹ்ருதயஸ்ய நாத்யா: தாஸம் மூர்தனம் அபி நிஸ்ஸ்ருதைகா, தயா ஊர்த்வமயன் அம்ருதத்வமேதி விஸ்வாங்கண்ய உத்க்ரமணே பவந்தி” என்று கூறுகிறார்.

வித்வான் மூர்தான்ய நாடியில் (பிரம்ம நாடி) நுழைவது முற்றிலும் தற்செயலானது.

பூர்வபக்ஷியின் இந்த பார்வையை சூத்ரகாரர் “தாடோகோக்ரஜ்வலனம் தத் ப்ரகாஷித துவார: வித்யா சாமர்த்யாத் தத் சேஷகதி அனுஸ்மிருதி யோகச்ச ஹர்தனு க்ரிஹித ஷதாதிகாயா” என்ற சூத்திரத்தில் ஏற்கவில்லை. 545 பிரம்ம சூத்திரங்களில் மேலே உள்ள சூத்திரம் மிக நீளமானது. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

வித்யாஸமர்த்யாத் – பரமாத்மாவின் மீது ஆழ்ந்த தியானத்தின் மூலம் சக்தி பெறப்பட்டது.

தத் ஷேஷா கதி (அனுஸ்மிருதி யோகச்சா) – வித்வான் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்திற்குச் செல்லும் அர்ச்சிராதி மார்கத்தின் தியானத்தில் மகிழ்ச்சியடைந்த பிறகு, ஒவ்வொரு நாளும் செய்யப்படும் முக்கிய தியானத்திற்குக் கீழ்ப்பட்டதாக தியானம் செய்யப்பட்டது.

ஹர்தனா – ஹர்தா என்பது தியானம் செய்பவரின் இதயத்திலும் அவராலும் வசிக்கும் பரமாத்மா.

அனுக்ரிஹித:- வித்வான் (ஜீவா) அருளப்பட்டவர்.

ஓகா: ஆக்ரே – ஜீவா வசிக்கும் இதயத்தின் மேல்நோக்கிய திசையில்.

ஜ்வலனம் ப்ரகாசித துவார: ஷதாதி காய – பரமாத்மாவான தீபம் மூர்தான்ய நாடியாகிய 101வது நாடிக்கு செல்லும் பாதையில் ஜீவா சிரமமின்றி பிரவேசிக்க உதவும்.

வித்வானின் உடலில் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா உபாசனை அல்லது தியானத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார், இதில் அர்ச்சிராதி மார்காவும் முக்கிய தியானத்திற்குக் கீழ்ப்பட்டதாக தியானம் செய்யப்பட்ட வித்வானை (உபாசகர் அல்லது தியானம் செய்பவர்) அருளுகிறார். இதயத்தின் உச்சியில் இருந்து 101வது நாடிக்கு செல்லும் பாதையை ஒளிரச் செய்து, ஜீவா எந்த சிரமமும் இன்றி அதற்குள் நுழைய உதவுகிறது. பக்தி யோகத்திற்குப் பதிலாக பிரபத்தி செய்த பிரபன்னருக்கும் இது பொருந்தும்.

எனவே இந்த சூத்திரம் பூர்வபக்ஷி உருவாக்கிய குழப்பத்தை நீக்குகிறது மற்றும் வித்வான் 101 வது நாடி வழியாக மட்டுமே உடலை விட்டு வெளியேறுகிறது என்று வலியுறுத்துகிறது.

இந்த பாதத்தில் உள்ள ஒன்பதாவது அதிகாரம் ராஷ்மி அதிகாரம் எனப்படும்.

சாந்த சரீரத்திலிருந்து 101 வது நாடி வழியாக வெளிவரும் வித்வான் (ஜீவா) அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று சூரியக் கதிர்களைத் தொடர்ந்து ஆதித்ய மண்டலத்திற்கு (சூரிய மண்டலம்) வருவதாக ஒரு உபநிஷதப் பகுதியின் (சாந்தோக்யோபனிஷத்) படி, “அத யாத்ர ஏதஸ்மாத்” என்று வாசிக்கப்படுகிறது. சரீரத் உத்க்ரமதி அத ஏதைரேவ ரஷ்மிபி: ஊர்த்வம் ஏ க்ரமதே”.

பூர்வபக்ஷி, இரவில் சூரியக் கதிர்கள் இல்லாதபோது, ​​உடலை விட்டுப் பிரிந்த ஒரு வித்வான் எப்படி சூரியக் கதிர்களுடன் செல்வார் என்று ஆச்சரியப்படுகிறார், எனவே அவர் சூரியக் கதிர்களுடன் செல்ல வேண்டும் என்று கடினமான மற்றும் வேகமான விதி எதுவும் இல்லை என்று கூறுகிறார். ஆதித்ய மண்டலத்தை அடைகிறது.

மேற்கூறிய உபநிடத உரையின்படி வித்வானின் பிரிந்த ஆன்மா சூரியக் கதிர்களுடன் செல்கிறது என்று பொருள்படும் “ரஷ்மி அனுசாரி” சூத்திரத்தில் பதராய முனிவரான சூத்ரகாரர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. இரவில் சூரியக் கதிர்கள் இல்லை என்று பூர்வபக்ஷி வெளிப்படுத்திய கருத்தைப் பற்றி, சூத்ர காரர் இரவில் சூரியக் கதிர்கள் இருப்பதாக சூத்திரத்தில் தெளிவாக இல்லாவிட்டாலும் கூறுகிறார். இந்த சூரியக் கதிர்களின் காரணமாக, கடுமையான கோடையில் மட்டுமே வெப்பம் காரணமாக நாம் வீக்கம் அல்லது வியர்வையை அனுபவிக்கிறோம். குளிர்காலத்தில் இந்த சூரியக் கதிர்களின் தாக்கம் மேகமூட்டமான அல்லது சீரற்ற காலநிலையின் போது சூரியனைப் பார்க்காதது போல் தடுக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சாண்டோக்யோபனிஷத்தின் பத்தியால்தான் வித்வான் (ஜீவா) சூரியக் கதிர்களுடன் செல்கிறது என்பது தெளிவாகிறது.

இந்த பாதத்தில் உள்ள பத்தாவது அதிகாரம் “நிஷாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. ஒரு வித்வான் இரவில் இறந்தால் அவன் சூரியனின் கதிர்களுடன் மட்டுமே செல்வான் என்று முந்தைய அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. இதையும் மீறி பூர்வபக்ஷி மற்றொரு கருத்தை எழுப்புகிறார், எனவே இந்த தனி அதிகாரம்.

மரணத்திற்கு உகந்த நேரம் பகல் நேரம், பிரகாசமான பதினைந்து நாட்கள் (சுக்ல பக்ஷம்) உத்தராயணம் (சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்கள்) மற்றும் மேலே குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் இறந்தால் அவர் சொர்க்கம் செல்வார் என்றும் மரணத்தின் நேரம் இரவு, இருண்ட பதினைந்து நாட்கள் (கிருஷ்ண பக்ஷம்) மற்றும் தட்சிணாயனம் (சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்கள்) நபர் நரகத்திற்குச் செல்கிறார். எனவே ஒரு வித்வான் இரவில் இறந்தால் அவர் மோட்சத்தை அடைய மாட்டார் என்று பூர்வபக்ஷி வாதிடுகிறார்.

“நிஷிநேதி சேத்ந சம்பந்தஸ்ய யாவத் தேஹபவித்வாத் தர்சயதிச்ச” என்ற சூத்திரத்தில் இந்தக் கண்ணோட்டத்தை சூத்ரகாரர் நிராகரித்துள்ளார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

நிஷி – வித்வானின் மரணம் இரவில் நிகழ்ந்தால், அதைச் சொன்னால் மேலும்

நேத்தி சேத் – அவனால் முக்தி அடைய முடியாது

நா – அப்படியல்ல வித்வான் மோட்சத்தை அடைவான்.

யாவத் தேஹபவித்வாத் – உடல் இருக்கும் வரை பிராரப்த கர்மா உள்ளது, அதாவது பிராரப்த கர்மாவின் முடிவும் உடலின் வீழ்ச்சியும் எப்போதும் ஒத்துப்போகின்றன. உபாசனை அல்லது சரணாகதி செய்த வித்வானின் கடைசிப் பிறவி இதுவாக இருப்பதால், இந்த ஜென்மம் அல்லது பிறப்பின் முடிவு பிராரப்த கர்மாவின் முடிவோடு ஒத்துப்போகிறது.

இச்சூழலில் ஸ்ரீ ஸ்வாமி பாஷ்யகாரர் (முனிவர் ஸ்ரீ பகவத் ராமானுஜ) உபாசகர் விஷயத்தில் உபாசனை (பக்தி யோகா என்றால் தியானம்) தொடங்கும் வரை பிராரப்தத்தைத் தவிர மற்ற புண்ய பாப கர்மாக்கள் திரட்டப்பட்டதாக விளக்குகிறார். அல்லது பரமாத்மாவின் விருப்பப்படி சொர்க்கம் அழிந்தது. உபாசனை தொடங்கிய பிறகு செய்யும் கவனக்குறைவான “புண்ய-பாபா” உபாசகரை அவர்கள் தொடாததால் அவருக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. உபாசனையின் போது பிராரப்த கர்மா மட்டுமே எஞ்சியிருக்கும், அது எப்போது முடிவடைகிறது என்பதை பரமாத்மாவைத் தவிர வேறு எந்த உடலுக்கும் தெரியாது. இரவில் அது முடிந்தாலும், வித்வான் நரகத்திற்குச் செல்வதில்லை, ஏனெனில் அவர் நரகம் செல்ல வைக்கும் பாவங்கள் மேலே குறிப்பிட்டபடி அழிக்கப்படுகின்றன.

ஒரு ஆச்சார்யா மூலம் சரணாகதி அல்லது பிரபத்தி செய்த பிரப்பண்ணனுக்கு அபியுபகத பிராரப்தத்தைத் தவிர மற்ற புண்ணிய பாப கர்மாக்கள் அனைத்தும் சரணாகதி செய்யும் போது அழிந்து விடும் .

இந்த பிறவி அல்லது ஜென்மத்தில் துன்பம் மற்றும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக எஞ்சியிருக்கும் அபியுபகதா. இந்த அபியுபகதா பிராரப்தம் எப்போது முடிவடைகிறது, மேலும் வித்வானாகிய பிரபன்னனின் மரணத்துடன் மரண சரீரம் எப்போது விழுகிறது என்பது பரமாத்மாவைத் தவிர வேறு எந்த உடலுக்கும் தெரியாது.

தர்ஷயதிச்சா – “தஸ்ய தவதேவாச்சிரம் யவத்ந விமுக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே” என்று சந்தோக்யோபநிஷத்தின் கூற்றுகளில் மேற்கண்ட உண்மை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், மோட்சத்தை அடைவதில் தாமதம் என்பது பிராரப்த கர்மாவின் முடிவில்லாததால் ஏற்படுகிறது, அது முடிந்தவுடன் வித்வான் மோட்சத்திற்கு (நித்திய ஆனந்தம்) செல்கிறார்.

அதனால் வித்வான் இரவில் இறந்தாலும் மோட்சத்தை அடைகிறான்.

இந்த பாதத்தில் (11வது) கடைசி அதிகாரம் “தக்ஷிண யாந்திகரணம்” என்று அழைக்கப்படுகிறது. தக்ஷ்ணாயனத்தில் இறக்கும் வித்வானுக்கு இரவில் மரணம் நேர்ந்தால் மோட்சம் அடைவது என்ற மேற்கூறிய உச்சரிப்பு நல்லதாக இருந்தாலும், இந்த அதிகாரத்தில் தெளிவுபடுத்தப்பட்ட தைத்தரிய உபநிஷத்தின் கடைசி அனுவகத்தின் ஒரு பகுதியால் கூடுதலாக ஒரு சந்தேகம் இருக்கிறது. . “அத்தயா : தக்ஷிணா ப்ரமியதே பித்ருணாம் ஏவ மஹிமானம் கத்வா சந்த்ர மாஸ: சாயுஜ்யம் கச்சதி” என்பது அந்த பகுதி. தக்ஷ்ணாயனத்தில் இறந்த வித்வான் பித்ரு லோகத்திற்குச் சென்று சந்திரனை அடைகிறார் என்பது இப்பகுதியின் பொருள். சந்திரனை அடைபவன் மீண்டும் இவ்வுலகில் பிறப்பான், அவன் மோட்சத்திற்குச் செல்லமாட்டான் என்றும் மற்றொரு பத்தியில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட வாதத்தை சூத்ரகாரர் “அதாஷ அயநேபி தக்ஷிணே” என்ற சூத்திரத்தில் நிராகரித்துள்ளார். இந்த சூத்திரத்தின் பொருள் மிகவும் எளிமையானது, இது பின்வருமாறு.

முந்தைய அதிகாரத்தில் விளக்கப்பட்ட அதே காரணத்திற்காக, வித்வான் தட்சிணாயனத்தில் இறந்தாலும் மோட்சம் அடைவார். இவ்வுலகில் மறு பிறவி எடுப்பது உபாசனையோ சரணாகதியோ செய்யாதவர்களுக்குப் பொருந்தும். தைத்தரிய உபநிஷத்தின் மேற்கூறிய பகுதி “தஸ்மாத் ப்ராஹ்மணோ மஹிமானம் அப்னோதி” என்று தெளிவாக உச்சரிக்கிறது. சந்திரனுக்குச் செல்லும் தக்ஷ்ணாயனத்தில் இறக்கும் வித்வான் இறுதியில் பிரம்மத்தை (மோட்சம்) அடைகிறார் என்பது இதன் பொருள். அவர் சந்திரனை அடைவது சிறிது காலத்திற்கு மட்டுமே, அது ஓய்வெடுக்க மட்டுமே. உத்தராயணத்திற்காக காத்திருந்த பீஷ்மர் மோட்சத்திற்கு செல்லவில்லை. அவர் தேவலோகத்தில் (சொர்க்கத்தில்) ஒரு “வாசு” ஆக இருந்தார், அங்கு அவர் ஒரு சாபத்தின் காரணமாக இங்கு பிறந்தார். அவர் இறந்தவுடன், தேவலோகத்தில் வசு என்ற தனது அசல் நிலைக்குத் திரும்பினார். உத்தராயணம் மரணத்திற்கு உகந்த நேரம் என்பதைக் குறிக்க அவர் உத்தராயணத்திற்காக காத்திருந்தார்.

பகவத் கீதையின் 8 வது அத்தியாயத்தில் ஒரு வித்வான் பகலில் இறந்தால், சுக்லபக்ஷம் மற்றும் உத்தராயணத்தில் அவர் மோட்சத்திற்கு செல்கிறார், இரவில் இறந்தால், கிருஷ்ண பக்ஷம் மற்றும் தக்ஷிணாயனம் என்று அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் என்று மற்றொரு சந்தேகம் எழுகிறது. இன்னொரு பிறவி எடுக்க மீண்டும் இங்கு வருகிறார்.

“யோகினா: ப்ரதி ஸ்மர்யதே ஸ்மர்தேச்ச ஏதே” என்ற சூத்திரத்தில் இந்த சந்தேகத்தை சூத்ரகாரர் தீர்த்து வைத்துள்ளார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், பகவான் கிருஷ்ணர் இறந்த நேரத்தைக் குறிப்பிடவில்லை, ஆனால் அர்ஜுனனிடம் இரண்டு வழிகள் இருப்பதைக் குறிப்பிட்டார், ஒன்று தூமாதி மார்கா அல்லது பித்ரு யான மார்கா சொர்க்கத்திற்கு செல்லும், மற்றொன்று அர்ச்சிராதிமார்கா அல்லது தேவயான மார்கா ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு செல்லும். .

எனவே தூமாதி மார்க்கத்தின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் நபர், ஸ்வர்க லோகத்தில் உள்ள இன்பங்களை அனுபவித்துவிட்டு இன்னொரு பிறவி எடுக்க மீண்டும் இங்கு வருகிறார்.

அர்ச்சிராதி மார்கமாக ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்குச் செல்லும் வித்வான் மீண்டும் இங்கு வரமாட்டார், அவர் பைன் தம்பதிகளுக்கு நித்திய சேவை செய்து அங்கே நித்திய ஆனந்தத்தை அனுபவிப்பார்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த கடைசி அத்தியாயம் பல அத்யாயா என்று அழைக்கப்படுகிறது, இது உபாசனையின் போது (தீவிர தியானம் அல்லது பக்தி யோகா) மற்றும் வைகுண்ட திவ்ய லோகத்தை அடைந்த பிறகு உபாசகர் அனுபவிக்கும் பலன்களைக் குறிக்கிறது.

உபாசகர் (தியானம் செய்பவர்) மற்றும் பிரப்பண்ணா (ஆச்சாரியார் மூலம் மகாலட்சுமி தேவியின் தாமரை பாதங்களில் புருஷகர பிரபத்தி செய்து, பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் சரணாகதி செய்தவர்) அர்ச்சிராதி கதி எனப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியாக ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை அடைகிறார்கள். இந்த அர்ச்சிராதி கதி தேவயான மார்கா என்றும் அழைக்கப்படுகிறது. அர்ச்சிராதி கதி பற்றிய விவரங்கள் இந்த பாதத்தில் கையாளப்பட்டதால் இந்த பாதம் கதி பாதம் என அழைக்கப்படுகிறது. இந்த பாதத்தில் ஐந்து அதிகாரங்கள் உள்ளன. கதி என்றால் பயணம். பாதை என்றும் பொருள்படும். பிரகிருதி மண்டலம் (நாம் வாழும் லீலா விபூதி) மற்றும் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகமாகிய நித்ய விபூதி ஆகியவற்றைக் குறிக்கும் விரஜா நதிக்கரை வரை முக்தி பெற்ற ஆத்மாவை (முக்தா ஆத்மா) நடத்துவதற்காக பகவான் ஸ்ரீமன் நாராயணன் அதிவாஹிகங்கள் எனப்படும் பன்னிரண்டு வான தெய்வங்களை நியமித்துள்ளார்.

பன்னிரண்டு வான தெய்வங்கள்,

1. நெருப்பின் கடவுள் அர்ச்சிஸ் அல்லது ஜ்வலனா என்று அழைக்கப்படுகிறார்.

2. பகலின் கடவுள் (இரவு அல்ல) ஆஹா: அல்லது திவாசா என்று அழைக்கப்படுகிறார்

3. பௌர்ணமி (முழு நிலவு) அல்லது ஜ்யோத்ஸ்ன பக்ஷத்துடன் முடிவடையும் சுக்ல பக்ஷம் என்றும் அழைக்கப்படும் அபூர்ய மன பக்ஷா என அழைக்கப்படும் பிரகாசமான பதினைந்து நாட்களின் கடவுள்.

4. சூரியன் தெற்கிலிருந்து வடக்கே பயணிக்கும் ஆறு மாதங்களின் கடவுள் உத்தராயணம் அல்லது ஷட்டாங்கேதி மாசம் என்று அழைக்கப்படுகிறது.

5. ஆண்டின் கடவுள் (12 மாதங்கள்) சம்வத்சரா அல்லது வெறும் வட்சரா என்று அழைக்கப்படுகிறார்.

6. வாயு அல்லது பாவனா என அழைக்கப்படும் காற்றின் (காற்று) கடவுள்.

7. சூரிய கடவுள் சூரியன், ஆதித்யா அல்லது தபனா என்று அழைக்கப்படுகிறார்.

8. சந்திரமாசா என்று அழைக்கப்படும் சந்திரன் கடவுள், வெறும் சந்திரா அல்லது பிரலேயம்சு

மேலே உள்ள ஒவ்வொரு கடவுளுக்கும் அவரவர் பிரதேசம் உள்ளது மற்றும் விடுவிக்கப்பட்ட ஆன்மா ஒவ்வொரு பிரதேசத்திலும் அவருக்கு ஒரு சடங்கு வரவேற்பு, ஓய்வு மற்றும் அவர்களின் விருந்தோம்பலை அனுபவித்த பிறகு அந்தந்த கடவுளால் ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொன்றுக்கு நடத்தப்படுகிறது.

9. மின்னலின் கடவுள் மற்றும் அவர் வித்யுத் புருஷன் அல்லது அமனவ புருஷன் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் விரஜா நதிக்கரையின் பிரகிருதி மண்டலம் வரை முக்தாத்மாவை வழிநடத்துகிறார்.

10. நீரின் வருண கடவுள்

11. தேவர்களின் அரசன் இந்திரன்.

12. நான்கு தலை பிரம்மன் பிரஜாபதி

வருணன், இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகிய கடவுள்கள் அமானவ புருஷருடன் அந்தந்த பிரதேசங்களின் இறுதி வரை மட்டுமே செல்கிறார்கள், அவர்கள் மேலே குறிப்பிட்டபடி விரஜா நதி வரை முக்த ஆத்மாவை அழைத்துச் செல்கிறார்கள்.

இந்த பன்னிரண்டு அதிவாஹிகங்கள் தவிர, பகவான் ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீ வைக்கும்டத்திற்கு முக்த ஆத்மாவை நடத்துகிறார். அதிவாஹிகர்களின் பட்டியலில் நெருப்புக் கடவுள் முதன்மையானவர், அதனால்தான் இந்த பாதை அர்ச்சிராதி கதி என்று அழைக்கப்படுகிறது.

பிரபஞ்சத்தில் எண்ணற்ற பிரம்மாண்டங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொரு பிரம்மாண்டத்திற்கும் நான்கு தலை பிரம்மன் தலைமையில் பதினான்கு லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரம்மாண்டத்திற்கும் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு செல்லும் அர்ச்சிராதி கதி உள்ளது.

பரமபத சோபனத்தில் ஸ்ரீ ஸ்வாமி தேசிகன், வான தெய்வங்களான பன்னிரண்டு அதிவாஹிக புருஷர்களைப் பற்றி இரண்டு கருத்துகள் இருப்பதாகக் கூறுகிறார். முதல் பார்வை அவர்கள் புண்ய மற்றும் பாப கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள், எனவே அவர்கள் கர்ம வஷ்யர்கள். இரண்டாவது கருத்து என்னவென்றால், இவை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தைச் சேர்ந்தவை மற்றும் அனந்தம், கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்யசூரிகளின் குழுவின் ஒரு பகுதியாகும்.

அமானவ புருஷர் மின்னல் கடவுளிலிருந்து (வித்யாத் புருஷர்) வேறுபட்டவர் என்றும், இந்த அமானவ புருஷர் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் முக்த ஆத்மாவைக் கொண்டு வர பகவான் ஸ்ரீமன் நாராயணனால் அனுப்பப்படுகிறார் என்றும் ஒரு கருத்து உள்ளது.

ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் அல்லது நித்ய விபூதியில் உள்ள ஒவ்வொரு பொருளும் அப்ரக்ருதம் என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அது நூறு சதவிகிதம் சத்வ குணத்தால் ஆனது, எனவே இது சுத்த சத்வம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பிரபஞ்சம் அல்லது பிரகிருதி மண்டலத்தில் உள்ள அனைத்தும் சாத்விக குணம், ராஜச குணம் மற்றும் தாமச குணம் ஆகியவற்றின் கலவையால் ஆனது என்பதால் பிரக்ருதமாகும். இப்போது இந்த பாதத்தில் உள்ள அதிகாரங்கள் கையாளப்படுகின்றன.

இந்த பாதத்தில் உள்ள முதல் அதிகாரம் அர்ச்சிராதி அதிகாரம் எனப்படும். இந்த அதிகாரத்தில் பல உபநிடத நூல்கள் விவாதத்திற்கு வருகின்றன. அர்ச்சிராதி கதியைக் குறிப்பிடும் உபநிடதங்கள் சாந்தோக்ய, கௌஷிதகி மற்றும் பிருஹதாரண்யக உபநிடதங்கள்.

சாந்தோக்ய உபநிடதத்தில் இந்த அர்ச்சிராதி கதி நான்காவது அத்தியாயத்தின் 14 வது உப பீஷனில் உபகோசல வித்யாவின் முடிவில் மீண்டும் ஐந்தாவது அத்தியாயத்தில் பஞ்சாக்னி வித்யாவின் முடிவில் கூறப்பட்டுள்ளது. மீண்டும் எட்டாவது அத்தியாயத்தின் ஆறாவது உபபீடத்தில் அர்ச்சிராதி கதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. கௌஷிதகி உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் அர்ச்சிராதி கதி கூறப்பட்டுள்ளது. பிருஹதாரண்யக உபநிடதத்தின் இரண்டு இடங்களில் அர்ச்சிராதி கதி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள அர்ச்சிராதி கதியின் வரிசையிலும் வடிவத்திலும் உபநிடதத்திலிருந்து உபநிடதத்திற்கு சில மாறுபாடுகள் உள்ளன. அர்ச்சுனன் கதியின் வரிசையும் வடிவமும் ஒன்றா அல்லது மாறுபடுகிறதா என்பதுதான் இங்கு எழும் சந்தேகம். எதிரி (பூர்வபக்ஷி) பல்வேறு உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அர்ச்சிராதி கதி வெவ்வேறு வரிசை மற்றும் வடிவங்களைக் கொண்டிருப்பதாக வாதிடுகிறார், எனவே விடுவிக்கப்பட்ட ஆத்மா ஒரே ஒரு வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அவர் தனது விருப்பத்தின்படி எந்த வழியையும் தேர்வு செய்யலாம்.

வரிசை மற்றும் வடிவத்தின் மாறுபாடுகள் சுருக்கமாக கீழே விளக்கப்பட்டுள்ளன.

உபகோசல வித்யா மற்றும் பஞ்சாக்னிவித்யா முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள அர்ச்சிராதி கதி ஒரே மாதிரியாக உள்ளது. சாந்தோக்யத்தின் எட்டாவது அத்தியாயத்தில், முந்திய பாதத்தில் ராஷ்மி அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளபடி, முக்தியடைந்த ஆன்மா சூரியக் கதிர்களைத் தொடர்ந்து மேல்நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.

கௌஷிடகி உபநிடதத்தில் அர்ச்சிராதி கதி பின்வரும் வரிசை மற்றும் வடிவத்தைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

விடுதலை பெற்ற ஆன்மா, பிரம்ம நாடி (சுஷும்னா நாடி அல்லது மூர்தான்ய நாடி) வழியாக மரண சரீரத்திலிருந்து வெளியேறிய பிறகு தேவயான மார்காவிற்கு வந்து, பின்னர் அக்னி லோகத்திற்கும் பின்னர் வாயு லோகத்திற்கும் நுழைகிறது. வாயு லோகத்திலிருந்து வருண லோகத்துக்கும் பிறகு ஆதித்ய லோகத்துக்கும் வருகிறார். ஆதித்ய லோகத்திலிருந்து இந்திர லோகத்துக்கும், பிறகு பிரஜாபத்து லோகத்துக்கும் வருகிறார். பிரஜாபதி லோகத்திலிருந்து கடைசியாக ஸ்ரீ வைகுண்ட பய லோகமான பிரம்மலோகத்தில் பிரவேசிக்கிறார்.

பிருஹதாரண்யக உபநிடதத்தின் இரண்டாவது உபநூல் பஞ்சாக்னி வித்யாவைக் கையாள்கிறது, அதன் முடிவில் அர்ச்சிராதி கதி பின்வருமாறு விவரிக்கப்படுகிறது.

நெருப்புக் கடவுள், பகலின் கடவுள், பிரகாசமான பதினைந்து நாட்களின் கடவுள், உத்தராயண கடவுள், தேவலோகம் (இங்கு தேவலோகம் என்றால் வாயு, காற்றின் கடவுள், ஏனெனில் வீசும் காற்று தேவர்களின் குடியிருப்பு என்று கூறப்படுகிறது), சூரிய கடவுள், மின்னல் கடவுள். மானஸ புருஷா. இந்த மானஸ புருஷன் பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனுக்கு முக்தாத்மாவை நடத்துகிறார். இந்த மானச புருஷன் பிரம்மனால் உருவாக்கப்பட்ட ஒருவன், அவனே அமனவ புருஷன். அதே பிருஹதாரண்யக உபநிடதத்தின் ஏழாவது அத்தியாயத்தில், முந்தையதை விட வடிவ மாற்றத்துடன் அர்ச்சிராதி கூறப்பட்டுள்ளது.

இதன்படி முக்தியடைந்த ஆன்மாவாகிய உபாசகர் இவ்வுலகை விட்டுச் சென்று பிறகு காற்றின் கடவுளிடம் செல்கிறார். அப்போது இந்த காற்றின் கடவுள் சக்கர ரதத்தின் துளை போன்ற ஒரு சிறிய திறப்பை ஏற்படுத்துகிறார், மேலும் முக்த ஆத்மா இந்த திறப்பிலிருந்து வெளியே வந்து சூரிய கடவுளை அடைய மேலே செல்கிறது. இசைக்கருவியான ஆடம்பரத்தில் உள்ள துளையைப் போன்ற ஒரு திறப்பை சூரியன் ஏற்படுத்துகிறது. அந்த துளை வழியாக அவர் வெளியே வந்து சந்திரனை (சந்திரமாஸ்) அடைய மேலே செல்கிறார். சந்திரன் ஒரு டிரம்மில் (துண்டுபி) ஒரு துளை போன்ற ஒரு திறப்பை உருவாக்குகிறது. அவர் இந்த திறப்பிலிருந்து வெளியே வந்து ஸ்ரீ வைகுண்ட பய லோகத்தை அடைய மேலே செல்கிறார். ஸ்ரீ வைகுண்ட பய லோகம் குளிர் இல்லை அல்லது அதிக வெப்பம் இல்லை என்று இந்த சூழலில் கூறப்படுகிறது. உபநிடதத்தில் அஹிமம் (பனி அல்ல) என்று கூறப்படுகிறது. துக்கம் இல்லை.

மேலே குறிப்பிட்டுள்ளபடி வரிசையிலும் வடிவத்திலும் மாறுபாடுகள் இருக்கும் போது பூர்வபக்ஷி, முக்தி பெற்ற ஆன்மா தானாக எந்த மார்க்கத்தையும் தேர்ந்தெடுத்து ஸ்ரீ வைகுந்தத்தை அடையலாம் என்று வாதிடுகிறார்.

பூர்வபக்ஷியின் இந்த வாதத்தை மறுத்து பாதராயண முனிவரான சூத்ரகாரர் “அர்ச்சிராதின தத் ப்ரதிதே:” என்ற சூத்திரத்தில் கூறுகிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், அர்ச்சிராதி மார்கா என்பது உபநிடதங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரே ஒரு மார்கா ஆகும், மேலும் முக்தாத்மா இந்த வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு செல்கிறது, மேலே விவரிக்கப்பட்ட வரிசை மற்றும் வடிவங்களில் உள்ள மாறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், உச்சரிக்கப்படுகிறது. குணோபசம்ஹார பாதம் மூன்றாவது அத்தியாயத்தில் மூன்றாவது பாதம்.

குண உபசம்ஹார பாதத்தின் பொருள் என்னவென்றால், ஒன்றுக்கு மேற்பட்ட உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள ஒரு பிரம்ம வித்யாவை ஒன்றாக உண்ணும் போது, ​​ஒரு உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள பகவான் ஸ்ரீமன் நாராயணனின் குணங்கள் அல்லது குணங்கள் மற்றொன்றில் குறிப்பிடப்பட்டவைகளுடன் சேர்க்கப்பட வேண்டும். தியானம் செய்தார். அதுபோலவே இங்கும் அர்ச்சிராதி கதி ஒன்றே என்று நிலைநிறுத்தப்படும்போது, ​​ஒன்றில் விடுபட்ட ஆதிவாசிகளையும் மற்றொன்றில் குறிப்பிடப்பட்ட மற்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உபசம்ஹாரம் என்றால் சேர்த்தல்.

இப்படிச் செய்தால் பன்னிரண்டு அதிவாஹிகங்கள் அடங்கிய அர்ச்சிராதி கதியின் வரிசையும் வடிவமும் இந்தப் பாதத்தின் தொடக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இருக்கும்.

இரண்டாவது அதிகாரம் “வாய்வாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தில் சாண்டோக்ய மற்றும் பிருஹதாரண்யக உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மாறுபாடுகள் காரணமாக வரிசை தீர்மானிக்கப்படுகிறது.

சாந்தோக்யோபனிஷத்தில் சூரியக் கடவுள் ஆண்டின் கடவுளுக்குப் பிறகு குறிப்பிடப்பட்டுள்ளது. பிருஹதாரண்யகத்தில் வாயுவான தேவலோகம் வருடத்தின் கடவுளுக்கும் சூரியக் கடவுளுக்கும் இடையில் வைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சிராதி கதியில் அதிவாஹிகங்களின் ஒரு குறிப்பிட்ட வரிசையை அல்லது வரிசையை சரிசெய்ய கடினமான மற்றும் வேகமான விதி எதுவும் இல்லை என்று பூர்வபக்ஷி கருத்து தெரிவிக்கிறார், ஏனெனில் மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு உபநிடதமும் அதன் சொந்த ஒழுங்கைப் பின்பற்றுகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரம்ம வித்யாவை ஏற்றுக்கொண்ட உபாசகர் தேர்ந்தெடுக்கிறார். அந்த உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அர்ச்சிராதி மார்க்கம்.

மேலும் தேவலோகமும் வாயுவும் வேறு வேறு என்கிறார். சூத்ரகாரர் “வாயும் அப்தத் அவிஷேஷவிஷே ஷப்யம்” என்ற சூத்திரத்தில் பூர்வபக்ஷியின் மேற்கூறிய வாதத்தை நிராகரிக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், இரண்டு காரணங்களால் காற்றின் கடவுளான வாயுவை ஆண்டின் கடவுளுக்கு மேலேயும் சூரிய கடவுளுக்குக் கீழேயும் வைக்க வேண்டும்.

முதல் காரணம் அவிசேஷம் அதாவது பொது. அதாவது பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ள தேவ லோகம் என்றால் தேவர்களின் லோகம் என்று பொருள். தேவர்கள் சொர்க்கத்தில் வாழ்பவர்கள் (ஸ்வர்க லோகம்). எனவே இந்த தேவ லோகம் பொதுவாக வாயு என்று பொருள்படும். இரண்டாவது காரணம் விசேஷம் அதாவது குறிப்பிட்டது. தேவ லோகத்தின் இடத்தில் வாயு பற்றிய குறிப்பிட்ட குறிப்பு உள்ளது. எனவே தேவ லோகம் என்றால் வாயு என்பது தெளிவாகிறது.

மேலும் வருடத்தின் கடவுள் உத்தராயணக் கடவுளுக்கு மேலே இருக்க வேண்டும். ஏனென்றால், அதிக காலம் கொண்ட வருடம் உத்தராயணத்திற்குப் பிறகு வர வேண்டும், அது ஒரு குறுகிய காலமாகும். பிருஹதாரண்யக உபநிடதத்தில் தேவலோகம் உத்தராயணக் கடவுளுக்குப் பிறகு வருகிறது. இப்போது உபநிடதத்தின்படி இரண்டு ஆணைகள் உள்ளன, ஒன்று “பதாக்ரமம்” என்று அழைக்கப்படுகிறது, மற்றொன்று “அர்த்தக்ரம்” எனப்படும் தர்க்க வரிசை, இது பகுத்தறிவின் படி உள்ளது. எனவே, தர்க்க வரிசை (அர்த்த க்ரமம்) பட க்ரமாவை விட சக்தி வாய்ந்தது என்று ஒரு மாக்சிம் இங்கே வருகிறது. எனவே வருடத்தின் கடவுளுக்கும் சூரியனுக்கும் இடையில் வாயு வருகிறது. படக்ரமா என்பது உபநிடதத்தின் கூற்றில் உள்ள வார்த்தைகளின் வரிசை அல்லது வரிசையைக் குறிக்கிறது.

இந்தப் பாதத்தில் மூன்றாவது அதிகாரம் வருண அதிகாரம் எனப்படும். விவாதத்திற்கு வரும் உபநிடத உரை கௌஷிதகி உபநிடதத்தில் உள்ள ஒரு பத்தியாகும், அதன் படி விடுவிக்கப்பட்ட ஆன்மா தேவயானை பாதையில் (மார்கா) வந்து அக்னி லோகத்தில் நுழைகிறது. அக்னி லோகத்திலிருந்து வாயு லோகத்துக்குச் செல்கிறார், பிறகு வாயு லோகத்திலிருந்து வருண லோகத்துக்குச் செல்கிறார், அங்கிருந்து சூரியக் கடவுளுக்கும், பிறகு இந்திர லோகத்துக்கும், பிறகு பிரஜாபதி லோகத்துக்கும் செல்கிறார். பிரஜாபதி லோகத்திலிருந்து பிரம்ம லோகம் எனப்படும் ஸ்ரீ வைகுண்டத்திற்குச் செல்கிறார்.

முந்தைய அதிகாரத்தில் தேவ லோகம் வாயு என்றும், அவர் வருடத்தின் கடவுளுக்கும் சூரிய கடவுளுக்கும் இடையில் வருகிறார் என்றும் நிறுவப்பட்டது. மேற்கூறிய கௌஷிதகி உபநிடதத்தில் அதிவாஹிகர்களான வருணன், இந்திரன், பிரஜாபதி என்று குறிப்பிடும் போது இந்த மூன்றையும் அர்ச்சிராதி கதியின் வரிசையில் அல்லது வரிசையில் எங்கு வைப்பது என்ற கேள்வி எழுகிறது.

பூர்வபக்ஷியின் முடிவில் மின்னலின் கடவுள் வரும்போது அவர் வித்யுத் புருஷன் என்று அழைக்கப்படுகிறார் என்று கூறுகிறார். இந்த வித்யுத் புருஷரும் அமானவ புருஷரே ஆவார், அவர் முக்த ஆத்மாவை பிரம்மனுக்கு (பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு) நடத்துகிறார். எனவே இந்த வரிசையில் வருணன் மற்றும் இந்திரன் மற்றும் பிரஜாபதியை வைப்பதற்கு இடைவெளி இல்லை. ஆனால் உபநிடத அறிக்கையை புறக்கணிக்கக்கூடாது, இல்லையெனில் அது அர்த்தமற்றதாகிவிடும். உபநிடதங்கள் உட்பட வேதங்களில் குறைவான அர்த்தம் கொண்ட ஒரு எழுத்து கூட இல்லை, எனவே அதை புறக்கணிக்கவோ நிராகரிக்கவோ கூடாது.

பூர்வபக்ஷி மேலும் வாதிடுகையில், வாயு லோகத்திற்கு அடுத்ததாக வருண லோகம் என்று கௌஷிதகி கூறுவதால், ஏற்கனவே நிறுவப்பட்ட ஒழுங்கை மீறி வருண இந்திரனையும் பிரஜாபதியையும் வாயுவுக்கு அடுத்ததாக வைப்பது மட்டுமே சரியானது (பொருத்தமானது).

பூர்வபக்ஷியின் இந்த பார்வையை சூத்ரகாரர் “ததித: ஆதி வருண: சம்பந்தாத்” என்ற சூத்திரத்தில் மறுத்துள்ளார். இதன் பொருள், வருணனை வித்யுத் புருஷனுக்கு (மின்னல் கடவுள்) மேலே வைக்க வேண்டும், ஏனென்றால் மழையின் கடவுளான வருணனுக்கும் நீர் தாங்கும் மேகத்தின் காரணமாக ஏற்படும் மின்னலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ததீத் என்றால் மின்னல். வருணனை “வித்யுத் புருஷனுக்கு” மேல் வைக்கும்போது இயற்கையாகவே இந்திரன் மற்றும் பிரஜாபதியும் வருணனுடன் மற்றும் அவனுக்கு மேலே இருக்கிறார்கள்.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் அதிவஹிகதிகரணம் எனப்படும். அர்ச்சிராதி மார்க்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னிரண்டு ஸ்தானங்களும் அந்த வழித்தடத்தில் உள்ள இடங்களா அல்லது நிலையங்களா என்பதுதான் இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு. அதுவே பாதை அல்லது இன்பம் தரும் இடங்களின் குறிகாட்டிகள் அல்லது ஸ்ரீ வைகுந்தத்திற்கு முக்த ஆத்மாவை நடத்தும் அதிவாஹிகர்கள். ஒருவர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் வழியைக் கேட்டால், அந்த நபருக்கு அவர் செல்ல வேண்டிய பாதை மற்றும் பாதையில் நிரந்தர அடையாளங்கள் கூறப்படுவது வழக்கம். மற்றொரு பார்வை என்னவென்றால், அவை மகிழ்ச்சிக்கான இடங்களாக இருக்கலாம். மேற்கூறிய நிறுவனங்களில் உள்ள முக்கிய ஆட்சேபனைகள் பாதையின் குறிகாட்டிகளாக பகல் (ஆஹாஸ்), பிரகாசமான கோட்டை இரவு (சுக்ல பக்ஷா), உத்தராயணம் (ஆறு மாதங்கள்) மற்றும் ஆண்டு ஆகியவை நேரத்தின் அலகுகள் மற்றும் அவை வெளிப்படையாக பாதையின் குறிகாட்டிகளாக இருக்க முடியாது. . இந்த நாட்கள், இரவுகள், பதினைந்து நாட்கள், இரட்டை மாதங்கள் (ருதவா), ஆண்டுகள் லோகங்கள் அல்லது உலகங்கள் என்று கூறப்படுவதால் அவை இன்பமான இடங்களாக இருக்கலாம். அதனால்தான் கௌஷிதகி உபநிடதம் அக்னிலோகம், வாயு லோகம் போன்றவற்றைக் கூறுகிறது.

எனவே பூர்வபக்ஷி பன்னிரண்டு நிறுவனங்களை லோகங்கள் என்று குறிப்பிடுகிறது, அவை இன்பம் தரும் இடங்களாகும்.

“அதிவாஹிகா: தல்லிங்காத்” என்ற சூத்திரத்தில் கூறும் சித்ரகாரர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், இந்த 12 நிறுவனங்களும் “தல்லிங்கத்” என்ற காரணத்தால் அதிவாஹிகங்கள். முக்தி பெற்ற ஆன்மாக்கள் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அதிவாஹிகர்கள் முக்தியடைந்த ஆத்மாக்களைப் பெறுவதற்கும், விராஜ நதி வரை நடத்துவதற்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனால் நியமிக்கப்பட்டார்கள் என்பது இந்த வார்த்தையின் பொருள். வித்யுத் புருஷரைப் பற்றி உபநிடதம் கூறுகிறது “ச ஏனன் பிரம்ம கமாயதி” அதாவது வித்யுத் புருஷன் முக்தியடைந்த ஆத்மாவை பிரம்மன் வரை நடத்துகிறான். “நடத்துகிறது” என்ற இந்த வார்த்தை மற்ற பதினொரு அதிவாஹிகர்களுக்கும் நன்றாகப் பொருந்தும்.

இந்த பாதத்தில் உள்ள கடைசி மற்றும் ஐந்தாவது அதிகாரம் சில முக்கிய புள்ளிகளைக் கொண்ட காரியாதிகரணம் என்று அழைக்கப்படுகிறது. இது வரை ஆதிவாஹிகர்கள் குழு வித்வான் (முக்தி பெற்ற ஆன்மா) உபாசகர் (பக்தி யோகம் செய்தவர்) மற்றும் பிரபன்னை (ஸ்ரீ வைகுண்ட மோட்சத்திற்கு ஒரு ஆச்சார்யர் மூலம் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் பிரபத்தி செய்தவர்) நடத்துகிறது. திவ்ய லோகம்.முக்தாத்மா ஸ்ரீ வைகுண்டத்திற்கு மட்டுமே செல்கிறது என்ற உண்மையையும் இந்த அதிகாரம் நிறுவுகிறது.இப்போது ஒரு சந்தேகம் எழுகிறது 1. ஹிரண்ய கர்பா என்றும் அழைக்கப்படும் சதுர் முக லோகத்திற்கு அதிவாஹிகர்கள் குழு வித்வானை நடத்துகிறார்களா (2) வித்வான் ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்திற்கு நடத்தப்படுகிறார் (3) பரமாத்மா யாரை ஆத்மா அல்லது ஆத்மாவாக இருக்கிறாரோ அவரைப் பற்றி தியானம் செய்த பிரத்யகாத்மா (ஜீவா) அருகில் அவர்கள் அவரை நடத்துகிறார்கள்.

முதல் சூத்திரம் “கார்யம் பதரி அஸ்ய கதி உப்பத்தே:” என்பது பூர்வபக்ஷியின் பார்வையை உள்ளடக்கிய பூர்வபக்ஷ சூத்திரம், இந்த அதிகாரத்தில் பதராய முனிவரின் சீடர்களில் ஒருவரான பதரி முனிவர் (வேதவியாசர் என்றும் அழைக்கப்படுகிறார்). பாதராயணன் இந்த அதிகாரத்தின் சூத்திரங்களை இயற்றியபோது பதரி மற்றும் ஜைமினி முனிவர்கள் அவர் பக்கம் இருந்தனர். பதராயணன் மரியாதை நிமித்தமாக, சித்தாந்த சூத்திரங்களின் வடிவத்தில் தனது சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் முன் மற்றவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்.

இங்கு காரியம் என்ற வார்த்தைக்கு ஹிரண்யகர்பா (நான்கு தலை பிரம்மா) என்று பொருள், ஏனெனில் அவர் தனது தொப்புளில் பகவான் ஸ்ரீமன் நாராயணனால் உருவாக்கப்பட்டவர். கரணம் படைப்பவன், காரியம் என்பது படைக்கப்பட்டது.

பர பிராமணன் அல்லது வெறும் பிராமணன் எல்லா இடங்களிலும் எப்பொழுதும் எப்பொழுதும் அடையக்கூடியதாகவோ அல்லது அடையக்கூடியதாகவோ இருக்கும் போது, ​​ஆதிவாஹிகவாதிகள் முக்தியடைந்த ஆத்மாவை ஸ்ரீ வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது பதரியின் பார்வை உள்ளது. மறுபுறம் அதிவாஹிகர்கள் வித்வானை ஹிரண்ய கர்ப லோகத்திற்கு நடத்துகிறார்கள், இது சத்ய லோகம் என்றும் அழைக்கப்படுகிறது. பதரி முனிவர் தனது கருத்துக்கு ஆதரவாக மற்றொரு கருத்தை மேற்கோள் காட்டுகிறார். “புருஷ அமன்வ: எத்ய பிரம்ம லோகான் கமாயதி” என்ற உபநிடதப் பகுதியில், பன்மை லோகம் ஹிரண்யகர்ப லோகங்களைக் குறிக்கிறது, ஏனென்றால் எண்ணற்ற அந்தஸ்கள் உள்ளன, மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு சத்ய லோகம் உள்ளது, இது ஹிரண்ய கர்ப லோகம். மேலும் உபநிடதத்தின் “பிரஜாபதே: சபாம் வேஷ்ம ப்ரபத்யே”, அதாவது, ஹிரண்ய கர்பாவாகிய பிரஜாபதியின் வாசஸ்தலத்தில் முக்தி பெற்ற ஆத்மா நுழைகிறது.

அப்போது பதரியிடம் ஒரு கேள்வியை வைக்கிறோம். வித்வான் பிரம்மனிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறார் என்று உபநிடதம் தெளிவாகக் கூறும்போது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மனை எப்படி ஹிரண்ய கர்பா என்று அழைக்க முடியும் என்பதுதான் கேள்வி. ஸ்ரீ வைகுண்ட ப்ய லோகத்திற்கு ஹிரண்ய கர்ப லோகம் அருகாமையில் இருப்பதால், பிரம்மனை ஹிரண்ய கர்பா என்று அழைக்கலாம் என்று பதரி பதிலளிக்கிறார். மீண்டும் பதாரி தனது வாதத்திற்கு ஆதரவாக மற்றொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடுகிறார். கார்யம் என்று அழைக்கப்படும் அல்லது உருவாக்கப்பட்ட ஹிரண்ய கர்பத்தை தியானிப்பவர்கள் அனைவரும் ஹிரண்ய கர்ப லோகத்தை (சத்ய லோகம்) அடைந்து நான்கு தலை பிராமணரின் (ஹிரண்ய கர்பா) பதவிக்காலம் முடியும் வரை அங்கேயே இருப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.

நான்கு தலைகள் கொண்ட பிரம்மாவின் பதவிக் காலம் 2×1017 ஆண்டுகள் ஆகும், இது “த்விபரார்தா” (இரண்டு பரார்தாக்கள்) என்று அழைக்கப்படுகிறது. ஒரு பரார்டா என்பது 1×1017 ஆண்டுகள். பிரம்மாவின் ஆயுட்காலம் (பதவியின் காலம்) அவரது நாட்காட்டியின்படி 100 ஆண்டுகள் ஆகும், இது நமது காலண்டரின்படி 2×1017 ஆண்டுகள் ஆகும். நமது ஆண்டாவில் இருக்கும் பிரம்மா தனது நாட்காட்டியின்படி 50 வயதைத் தாண்டிவிட்டார், அதாவது ஒரு பரார்தா, அவர் இரண்டாவது பரார்தாவில் இருக்கிறார். அவர் தனது 51வது ஆண்டு முதல் மாதம், 26வது நாள் காலை என்று துல்லியமாகச் சொல்கிறது. எனவே சதுர் முக பிரம்மத்தின் ஒரு வினாடி நமது 63419583 ஆண்டுகளுக்கு (6 கோடியே 34 லட்சத்து 19 ஆயிரத்து 583 ஆண்டுகள்) சமம்.

அவரது பதவிக்காலத்தின் முடிவில் இங்கு பிரளயம் ஏற்படும், மேலும் பிரளயத்தின் காலம் 2×1017 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் ஒவ்வொரு நாளும் சங்கல்பத்தில் “ஆத்ய பிராமண: த்விதிய பரார்தே ஸ்வேத வராஹ கல்பே முதலியவை” என்று சொல்கிறோம்.

எனவே அவரது லோகத்தில் கூடியிருக்கும் ஹிரண்ய கர்ப தியானம் செய்பவர்கள் ஹிரண்ய கர்பத்துடன் ஸ்ரீ வைகுண்டம் செல்கிறார்கள்.

பதரி முனிவரின் கருத்துக்கு ஆதரவாக கூர்ம புராணத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது, இது பிரளய காலத்தில் சத்ய லோகத்தில் கூடியிருக்கும் அனைவரும் ஹிரண்ய கர்பத்துடன் ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு செல்கிறார்கள் என்று கூறுகிறது.

ஆக முடிவாக, அதிவாஹிகர்களின் குழு வித்வானை (விமோசனமான ஆன்மா) ஹிரண்ய கர்ப லோகத்திற்கு நடத்துகிறது, ஸ்ரீ வைகுண்டம் அல்ல என்பது பதரியின் வாதம்.

இப்போது பதராயனின் சீடரான ஜைமினி முனிவர் பதரியின் கருத்தை மறுத்து இது சம்பந்தமாக தனது கருத்தை முன்வைக்க எழுந்தார்.

பதாரி தனது பார்வையை ஐந்து சூத்திரங்களின் மூலம் முன்வைத்தார், அதன் சுருக்கத்தை முந்தைய பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜைமினியின் பார்வை மூன்று சூத்திரங்களில் அடங்கியுள்ளது.

முதல் சூத்திரம் “பரம் ஜைமினி: முக்யத்வாத்”. பிரம்மா என்ற வார்த்தையின் அர்த்தம் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே குறிக்கிறது மற்றும் அது ஹிரண்ய கர்பத்தைக் குறிக்கவில்லை, ஏனெனில் பிரம்மா என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் உயர்ந்த உயிரினம். பகவான் ஸ்ரீமன் நாராயணர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றாலும், மோட்சம் அல்லது முக்தியின் உண்மையான அர்த்தம், முக்தி பெற்ற ஆன்மா (அ) இந்த மரண சரீரத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும் (ஆ) சூக்ஷ்ம சரீரத்தை (எவருக்கும் காண முடியாத ஒரு நிமிட உடல்) சந்திரனுடன் உரையாடுவதற்குத் தேவையானது (இ) அர்ச்சிரடி மார்கா வழியாக விரஜா நதியின் இந்தப் பக்கத்தை அடைதல் (ஈ) சூக்ஷ்ம சரிராவைக் கொட்டவும் (இ) விரஜா நதியைத் தன் விருப்பத்தால் கடக்கவும் (இ) விரஜாவின் எதிர்க் கரையை அடையவும் (ஊ) ஸ்ரீ வைகுண்ட பியா நகரில் உள்ள பைன் தம்பதியினரின் அருகில் சென்று அவர்களுக்கு நித்திய சேவை செய்யுங்கள்.

ஆக பிரம்ம லோகம் என்றால் பிரம்மன் தானே லோகம் அதாவது ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் முழுவதும் பிரம்ம லோகம் என்று அழைக்கப்படுகிறது. மீமாம்ச சாஸ்திரத்தில் உள்ள ஒரு மாக்சிம் படி முன்பு குறிப்பிடப்பட்ட “பிரம்ம லோகன்” என்ற பன்மை உலகத்திற்கு இந்த சூழலில் எந்த சம்பந்தமும் இல்லை.

ஜைமினி மேலும் கூறுகிறார், சாண்டோக்ய உபநிஷத்தின் 8 வது அத்தியாயத்தில் உள்ள உபநிடதப் பகுதி, வித்வானான (முக்தி பெற்ற ஆத்மா) தனிப்பட்ட ஆன்மா (சம்ப்ரசாதா என்று அழைக்கப்படுகிறது) மரண உடலை விட்டு வெளியேறி, இந்த சூழலில் பரம்ஜோதி என்று அழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயணனை அடைகிறது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனவே விடுதலை பெற்ற ஆன்மா ஹிரண்ய கர்ப லோகத்திற்குச் செல்லும் கேள்வியே இல்லை.

மேற்கூறிய ஜைமினிக்கு கூடுதலாக, பதரி தனது வாதத்தில் மேற்கோள் காட்டிய “பிரஜாபதே: சபம் வேஷ்ம ப்ரபத்யே” என்ற உபநிடத கூற்று ஒருபோதும் ஹிரண்ய கர்ப லோகத்தைக் குறிக்கவில்லை, ஏனெனில் மேலே உள்ள உபநிடத நூல்கள் ஸ்ரீ வைகுண்டப்ய லோகத்தை மட்டுமே குறிக்கின்றன.

ஜைமினியின் மேலும் இரண்டு சூத்திரங்கள் அவரது மேற்கூறிய கருத்துக்களைக் கொண்டவை “தர்சன ச்சா மற்றும் நச்ச காரியே பிரத்யபிசந்தி:”.

பதரி மற்றும் ஜைமினி ஆகிய இருவரின் வாதங்களையும் கேட்டபின், பதராய முனிவர், பதரி மற்றும் ஜைமினி இருவரின் கருத்துக்களையும் நிராகரித்து இரண்டு சூத்திரங்களில் தனது சொந்த தீர்ப்பை வழங்குகிறார்.

பதரியின் பார்வை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது மற்றும் ஜைமினியின் பார்வை ஓரளவு நிராகரிக்கப்பட்டது.

பாதராயனின் முதல் சூத்திரம் “அப்ரதி கலம்பனான் நயதீதி பாதராயண: உப்யதாச்ச தோஷத் தத் க்ரதுஷா”. மேற்கண்ட சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. பகவான் ஸ்ரீமன் நாராயணனின் தியானம் செய்பவர்கள் பின்வரும் இரண்டு வகைகளில் உள்ளனர்.

(1) பிரதிகலம்பனங்கள்

(2) அப்ரதிகலம்பனங்கள்

பிராத்திகா என்றால் உறுப்பு அல்லது அவயவ என்று பொருள். இது எந்த உயிரற்ற பொருளையும் குறிக்கிறது. பிராத்திகாவை பிரம்மனாக (பரமாத்மா) கருதி தியானம் செய்யலாம். இது த்ரிஷ்டிவிதி (திரிஷ்டி என்றால் பார்வை) அல்லது பிரம்ம திருஷ்டி உபாஸனம் என்று அழைக்கப்படுகிறது.

பிராட்டிகாவை பிராமணமாக பார்க்காமல் தியானம் செய்யலாம். இதற்கு கேவல உபாசனம் என்று பெயர். ப்ரஹ்மத்ருஷ்டியுடன் அல்லது ப்ரஹ்மத்ருஷ்டி இல்லாமல் பிராத்திகா தியானம் செய்பவர்கள் பிரதிகலம்பனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பிரதிகலம்பனங்களுக்கு மோட்ச பலம் இல்லை, ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்குச் செல்ல மாட்டார்கள். எனவே ஆதிவாஹிகர்கள் அவர்களை அர்ச்சிராதி வழித்தடத்தில் ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு நடத்துவதில்லை.

சந்தோக்யோபநிஷத்தின் ஏழாவது அத்தியாயத்தில் சனத்குமார முனிவர் நாரத முனிவருக்குப் பதினைந்து உள்ள பிராத்திகா பொருட்களைக் கூறுகிறார். அவை நாம (பெயர்), வாக் (பேச்சு), மன (மனம்), சங்கல்பம் (உறுதி), சித்தம் (ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது மனதை ஒருமுகப்படுத்துதல்), தியானம் (தியானம்), விக்னனம் (புலன்களால் உணரப்படும் ஒரு பொருளைப் பற்றிய அறிவு, அனுமானம் அல்லது வேதங்களைக் குறிப்பிடுவதன் மூலம் பெறப்பட்டது). பலம் (தசை சக்தி) அதாவது ஒருவர் தனது குரு அல்லது ஆச்சார்யாவைக் காணும் போது திடீரென எழுந்து அவரது பாதங்களில் பணிந்து வணங்குகிறார்., அன்னம் (உணவு), ஆப: (நீர்), தேஜ: (தீ அல்லது வெப்பமான சூரியன்), ஆகாச: ( வானம்), ஸ்மர: (நினைவு அல்லது நினைவு), ஆஷா (ஆசை), பிராண: (மூச்சு).

மேற்கூறிய பதினைந்து பொருட்களையும் பிரம்மதருஷ்டியுடன் அல்லது அவை இல்லாமல் தியானம் செய்தால், அவர்கள் உலகப் பலன்களைப் பெறுகிறார்கள், எனவே மேற்கண்ட தியானம் பிரம்ம உபாசனை அல்ல, அவர்கள் மோட்சத்தை அடைய மாட்டார்கள். மேற்கண்ட வகையைச் சேர்ந்தவர்கள் பிரதிகலம்பனர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

மோட்சத்தை அடைவதற்காக தியானம் செய்பவர்கள் அப்ரதிகலம்பனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறார்கள். முதல் வகையானது பிரம்மனை (பகவான் ஸ்ரீமன் நாராயணனை) நேரடியாக தியானிப்பவர்களை உள்ளடக்கியது, இதில் உபாசகர் (தியானம் செய்பவர்) பரமாத்மா அல்லது பிரம்மனின் உடலாகும். மூன்றாம் அத்தியாயத்தின் மூன்றாம் காலாண்டில் விவரிக்கப்பட்டுள்ள 30 வகையான பிரம்ம வித்யாக்களில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொண்டு அவை “ஸ்வாத்மா சாரிரக பரமாத்ம உபாசக:” என்று அழைக்கப்படுகின்றன. 31வது பிரம்மவித்யா நியாச வித்யா இது பிரபத்தி அல்லது சரணாகதி. இந்த நியாச வித்யா நிஷ்டைகள் இந்த வகையின் கீழ் வருகின்றன. “ஏஷ ஸம்ப்ரஸாதா: அஸ்மத் ஸரீரத் உதாய பரம்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேன ரூபேண அபிநிஷ் பத்யதே” என்ற உபநிஷத உரையின்படி ஆதிவாஹிகர்களின் குழுவால் நடத்தப்படும் அர்ச்சிராதி மார்கத்தின் மூலம் இவை மோட்சத்தை அடைகின்றன.

பதரியின்படி மேற்கூறிய வகை உபாசகர்கள் மோட்சத்திற்குச் செல்லவில்லை என்றால், மேற்கூறிய உபநிடத உரையின் அர்த்தம் குறைகிறது.

இரண்டாவது பிரிவினர் தங்கள் தனிப்பட்ட ஆன்மாக்களைப் பற்றி தியானிப்பவர்கள், யாருக்காக பிராமணன் உயர்ந்த ஆன்மாவாக இருக்கிறான். இவை “பிரம்மாத்மா கா ஸ்வாத்மா உபாசக:” அல்லது “பஞ்சாக்னி வித்யா நிஷ்டைகள்” என்று அழைக்கப்படுகின்றன.

இந்த பஞ்சாக்னி வித்யா நிஷ்டைகளும் “தத் ய ஏத்தம் விது: யே சேமே ஆரண்யே ஸ்ரத்தா தப இத்யுபாஸதே தி அர்ச்சிஷம் அபிஸம்பவந்தி” என்ற உபநிஷத உரையின்படி மோட்சத்தை அடைகின்றன.

மேற்கூறியவற்றின் பொருள்

தேத்ய எத்தம் விடு:- தங்களின் மரண சரீரத்துடன் தொடர்பில்லாத அந்தரங்க ஆன்மாக்களைப் பற்றி தியானிப்பவர்கள், பகவான் ஸ்ரீமன் நாராயணனையே பரமாத்மாவாகக் கொண்டவர்கள், பஞ்சாக்னி வித்யா நிஷ்டைகள் மற்றும் யேச்சேமே ஆரண்யே ஸ்ரத்தா தப ஏதி உபாசதே – “ஸ்வாத்மா சரீரக பரமாத்ம உபாசனா நிஷ்டா:”. ,

மேலே உள்ள அர்ச்சிஷம் அபிசம்பவந்த் – மோட்சத்திற்கு (ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்) செல்ல அர்ச்சிராதி மார்க்கத்திற்கு வாருங்கள்.

ஜைமினியின் படி இந்த பஞ்சாக்னி வித்யா நிஷ்டைகள் மோட்சத்திற்கு செல்லவில்லை என்றால் மேற்கூறிய உபநிடத உரையின் அர்த்தம் குறைவாக இருக்கும்.

பாதராயனின் சூத்திரத்தில் கடைசி வார்த்தை “தத்க்ரதுஷா”. அதாவது பரமாத்மாவின் வடிவம் மற்றும் தன்னை ஒரு உபாசகர் தியானிக்கிறார், அவர் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் இருவரையும் ஒரே வடிவத்தில் காண்பார்.

எனவே அப்ரதிகலம்பனர்கள் அர்ச்சிராதி மார்கத்தின் மூலம் மோட்சத்திற்குச் செல்கிறார்கள், திரும்பி வரமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

கடந்த அத்தியாயத்தின் கடைசி பாதத்தை எடுத்துக்கொள்வதற்கு முன், ஸ்ரீ வேதாந்த தேசிகத்தின் அதிகார சரவலியில் 3 வது பாதத்தைப் பற்றிய பின்வரும் முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொள்வோம்.

1) அதிகார சாராவளியின் 496வது ஸ்லோகத்தின் சிந்தாமணி விளக்கத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகரின் புகழ்பெற்ற மகனான ஸ்ரீ குமார வரதாச்சார்யா பின்வரும் அவதானிப்பைக் கூறுகிறார். வித்வான்களின் ஆன்மாக்களைப் பற்றிய சடங்குகள் மற்றும் பிற தொடர்புடைய சடங்குகள் (வித்வான்களில் மோட்சத்தை அடைய பக்தி யோகம் செய்தவர்கள் மற்றும் மோட்சத்தை அடைய பிரபத்தி அல்லது சரணாகதி செய்தவர்கள்) உடலை விட்டு வெளியேறிச் செல்வது. மோட்சத்திற்கு இன்னும் அவசியமில்லை, மேற்கூறியவற்றைப் பொறுத்தமட்டில் சடங்குகள் மற்றும் பிற இணைக்கப்பட்ட விழாக்கள் வித்வான்களின் மகன்களால் மிகவும் அவசியம். (வித்வான்களை சார்ந்தவர்களோ அல்லது உயிர் பிழைத்தவர்களோ மகன்கள் இல்லையென்றால்) ஏனெனில் அது அவர்களின் புனிதக் கடமையின் ஒரு பகுதியாகும். அவர்கள் துறவறம் செய்யாவிட்டால், அது அவர்களின் பங்கில் ஒரு பெரிய குறைபாடாக இருக்கும், மேலும் அவர்கள் கர்ம பிரஷ்டர்களாக (விதிக்கப்பட்ட கர்மாக்களை செய்வதிலிருந்து விலகல்) மற்றும் பாவங்களைச் சந்திக்க நேரிடும். மேலும் மேற்கண்ட செயல்கள் மகன்கள் மற்றும் பிற உயிர் பிழைத்தவர்களின் நலனுக்காக உள்ளது.

2) தன் சொந்த விருப்பத்திலோ அல்லது விருப்பத்திலோ இறக்கும் பாக்கியத்தைப் பெற்ற பீஷ்மர் இறப்பதற்காக உத்தராயணம் தொடங்கும் வரை காத்திருந்தார். தேவலோகத்தில் உள்ள எட்டு வசுகளில் ஒருவரான பீஷ்மர் சாபத்தின் காரணமாக இவ்வுலகில் பிறந்தார். எனவே மரணத்திற்குப் பிறகு அவர் வசுவின் அசல் நிலைக்குத் திரும்பினார், அவர் உடனடியாக மோட்சத்திற்குச் செல்லவில்லை. ஸ்ரீ வேதாந்த தேசிகர், அவர் மது வித்யா உபாசனை செய்துவிட்டு மோட்சத்திற்குச் சென்றதாகக் கூறுகிறார் (அதிகாரண சாராவளியில் உள்ள 32 பிரம்ம வித்யாக்களின் 498 மற்றும் 502 ஸ்லோகங்களில் மது வித்யாவும் ஒன்று).

3) ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப்பட்ட சிசுபாலனின் ஆன்மா, அவர் இறந்த உடனேயே ஸ்ரீ கிருஷ்ணரின் உடலுக்குள் நுழைந்தது. அவர் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியாக செல்லவில்லை. சிசுபாலனும் தண்ட வக்த்ராவும் தங்கள் முந்தைய பிறவியில் ராவணன் மற்றும் கும்பகர்ணன் மற்றும் அவர்கள் பகவான் ஸ்ரீராமனால் கொல்லப்பட்டனர். மீண்டும் ராவணனும் கும்பகர்ணனும் ஹிரண்ய கசிபு மற்றும் ஹிரண்யாக்ஷனாக இருந்தனர், இதில் ஹிரண்யாக்ஷ பகவான் ஸ்ரீ வராஹாவால் கொல்லப்பட்டார் மற்றும் ஹிரண்ய கசிபு பகவான் ஸ்ரீ நரசிம்மனால் கொல்லப்பட்டார். இந்த மூன்று தொடர்ச்சியான பிறவிகளிலும் அவர்கள் காரிய வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் விஷ்ணு லோகத்தின் வாசலில் பாதுகாவலர்களாக இருந்தபோது சனக, சனந்தனா முனிவர்கள் அளித்த சாபத்தின் காரணமாக பகவான் ஸ்ரீமன் நாராயணனை வெறுப்பவர்களாக ஆனார்கள். . ஸ்ரீமன் நாராயணனை தரிசனம் செய்ய தாங்கள் வந்த வாயிலில் மேற்கண்ட முனிவர்களை அனுமதிக்காததால் சாபம் பெற்றனர். அதனால் தொடர்ந்து மூன்று பிறவிகளின் முடிவில் தானாக மோட்சம் அடைந்தனர்.

4) பகவான் ஸ்ரீராமர் ஸ்ரீ வைகுண்டம் செல்லும் நேரத்தில் அயோத்தியில் வசிப்பவர்கள் அனைவரையும் சாந்தானிக லோகத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ ராமர் மற்றும் அவரது சகோதரர்களுடன் சரயு நதியில் நீராடி, பின்னர் உண்மையான அர்த்தத்தில் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் அல்லாத சாந்தானிக லோகத்திற்குச் சென்றனர். இந்த சந்தானிகா லோகம் சதுர் முக (நான்கு தலை பிராமணன்) எல்லைக்குள் உள்ளது. சந்தானிகா லோகத்திலிருந்து அவர்கள் சிறிது காலம் கழித்து ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்குச் சென்றிருக்கலாம். அயோத்தியில் வசிப்பவர்கள் என்றால் உயிருள்ள மற்றும் உயிருள்ள பொருட்களில் உள்ள உயிர்கள் என்று பொருள். பகவான் ஸ்ரீராமரின் பாதத்தில் ஸ்ரீ பரதன் செய்த பிரபத்தியின் பிரதிபலிப்பாக பகவான் ஸ்ரீராமர் அவர்களை மேற்கண்ட லோகத்திற்கு அழைத்துச் சென்றார். எனவே அயோத்தியில் வசிப்பவர்கள் அர்ச்சிராதி கதி வழியாகச் செல்வது ஒருபோதும் எழவில்லை.

5) புண்டரீகர் ஒரு நல்லொழுக்கமுள்ள நபராக இருந்தபோது, ​​பகவான் ஸ்ரீமன் நாராயணனே நேரில் வந்து அவரை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு அழைத்துச் சென்றார்.

6) பாஞ்சராத்ர சம்ஹிதைகளில் பிரம்மாண்டத்திற்குள் பல விபவ லோகங்களும், வியூஹ லோகங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

அங்கு வாழ்ந்து உபாசனை செய்பவர்கள் (பக்தி யோகம்) நேரடியாக மோட்சத்திற்கு (வைகுண்ட லோகம்) செல்வார்கள். அவர்கள் அர்ச்சிராதி மார்க்கம் வழியாக செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. வியூஹ லோகங்கள் ஸ்வேதத்வீபங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அவை பாற்கடலில் உள்ள தீவுகளாகும்.

7) ஸ்ரீ வேதாந்த தேசிகர் பரம பாத சோபனத்தில் அர்ச்சிராதி கதி பற்றிய மற்றொரு கருத்தைக் குறிப்பிடுகிறார். துவாரகை நகரில் கிருஷ்ணர் இருந்தபோது ஒரு பிராமணர் இருந்தார். பிராமணனுக்கு 10 குழந்தைகள் கிடைத்தன, அவர்கள் பிறந்த உடனேயே தரையில் தொட்டவுடன் திடீரென காணாமல் போனார்கள். ஒன்பதாவது குழந்தையும் காணாமல் போனபோது, ​​அந்த பிராமணர் கிருஷ்ணரைச் சந்திக்க வந்து, அவருடைய அவல நிலையை எடுத்துரைத்தார். அப்போது அர்ஜுனன், மேற்கூறியதைக் கேட்டு பிராமணனிடம் 10வது குழந்தையைக் காப்பாற்றுவதாகவும், காப்பாற்றத் தவறினால் அக்னி பிரவேசம் செய்வதாகவும் கூறினார். 10வது குழந்தை பிறக்கும் போது, ​​குழந்தை பிறந்த உடனேயே தப்பித்து விடக்கூடாது என்பதற்காக, தாயைச் சுற்றி தனது அம்புகளால் ஒரு கூண்டை மேம்படுத்தினார். ஆனால் குழந்தை பிறந்து தரையைத் தொட்ட உடனேயே காணாமல் போனது. அர்ஜுனனால் குழந்தையைக் காப்பாற்ற முடியாததால் அக்னி பிரவேசம் செய்ய முடிவு செய்தார். இதையறிந்த கிருஷ்ணர் தனது தேரில் ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு சென்றார். வைகுண்ட பை லோகத்தில் பத்து குழந்தைகளும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. இதையறிந்த கிருஷ்ணர் தனது தேரில் ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு சென்றார். வைகுண்ட பை லோகத்தில் பத்து குழந்தைகளும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. இதையறிந்த கிருஷ்ணர் தனது தேரில் ஸ்ரீ வைகுண்ட பை லோகத்திற்கு சென்றார். வைகுண்ட பை லோகத்தில் பத்து குழந்தைகளும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. வைகுண்ட பை லோகத்தில் பத்து குழந்தைகளும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. வைகுண்ட பை லோகத்தில் பத்து குழந்தைகளும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணனை தனது மனித அவதாரத்தில் தரிசனம் செய்வதற்காக மேற்கண்ட குழந்தைகளை அங்கு வர விருப்பம் தெரிவித்தார். கிருஷ்ணர் குழந்தைகளை அழைத்து வந்து பிராமணரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ வைகுண்டம் சென்ற எந்த உடலும் திரும்பி வர முடியாத நிலையில், குழந்தைகள் எப்படி ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து திரும்பி வருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி. ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட கேள்விக்கு பதிலளித்து, குழந்தைகள் அர்ச்சிராதி மார்கா அல்லது பாதை வழியாக ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தை அடையாததால் அவர்கள் திரும்பி வரலாம் என்று கூறுகிறார். எனவே அர்ச்சிராதி கதி மூலம் மோட்சத்திற்குச் சென்ற ஒருவர் (ஜீவா) திரும்பி வரமாட்டார் என்பது புள்ளி.

8) உபாஸனை செய்த சதுர்முகப் பிரம்மாவும், இந்திரனும் அந்தந்த இடங்களிலிருந்து அர்ச்சுனன் மார்க்கத்தில் சேர்ந்து அந்தந்த பதவிக் காலம் முடிந்து மோட்சம் செல்வார்கள்.

இந்த பாதத்தின் அதிகாரங்களை எடுத்துக்கொள்வதற்கு முன், ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் மற்றும் திவ்ய நகரத்தின் முழு அமைப்பையும் விளக்குவது அவசியம்.

கௌஷிதகி உபநிடதம், ஸ்ரீ மஹாபாரதத்தின் சாந்தி பர்வம், பஞ்சராத்ர சம்ஹிதைகள், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் மற்றும் ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீமத்ராஷ்ய பகவதியின் ஸ்ரீ வைகுண்ட கத்யம் ஆகியவை மேற்கூறியவற்றுக்கான ஆதாரங்கள். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் சாரா மற்றும் ஸ்ரீ பரமபத சோபனம்.

கௌஷிதகி உபநிஷத்தின்படி ஸ்ரீ வைகுந்தத்தின் விளக்கம் பின்வருமாறு.

பரம பாதத்தின் (ஸ்ரீ வைகுண்டம்) விளக்கத்தைக் கையாளும் முன் உபநிடதம், ஜட உடலை விட்டு வெளியேறுபவர்கள் சந்திரனுக்கு வருகிறார்கள் என்று கூறுகிறது. மூம் வரும் ஜீவாக்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தில் பக்தி யோகமோ அல்லது சரணாகதியோ செய்யாத ஜீவர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள். இந்த ஜீவர்கள் ஸ்வர்க லோகத்திற்குச் செல்கிறார்கள், ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகமான மோட்சத்திற்கு அல்ல. இந்த ஜீவாக்கள் அவித்வான்கள் அல்லது இஷ்டதிகாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பக்தி யோகம் அல்லது பிரபத்தி (சரணாகதி) செய்த இரண்டாவது வகை ஜீவர்கள் மோட்சத்திற்குச் செல்கிறார்கள். இந்த ஜீவர்கள் வித்வான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் சந்திரனுடன் உரையாடிய பிறகு அர்ச்சிராதி மார்க்கத்தின் மூலம் மோட்சத்திற்குச் செல்கிறார்கள். இவர்களை மோட்சதிகாரிகள் என்றும் அழைப்பர். இந்த சூழலில் அனைத்து ஜீவாக்களும் மூன்று வகைகளின் கீழ் வருகின்றன என்பதை நினைவூட்டுகிறது.

(அ) ​​அனிஷ்டாதிகாரி – பாவச் செயல்களை மட்டுமே செய்பவர்கள் – சந்திரனை அடையாமல் நரகத்திற்குச் செல்கிறார்கள் (நரகா)

(ஆ) யாகங்கள் உள்ளிட்ட அறச் செயல்களைச் செய்யும் இஷ்டதிகாரிகள் – அவர்கள் சந்திரனை அடைந்து பின்னர் பித்ருயானம் என்றும் அழைக்கப்படும் தூமாதி மார்க்கத்தின் மூலம் சொர்க்கம் (ஸ்வர்கம்) செல்கின்றனர்.

(இ) மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி பக்தி அல்லது பிரபத்தி செய்தவர்கள் சந்திரனுடன் உரையாடிய பிறகு அர்ச்சிராதி மார்க்கத்தின் மூலம் மோட்சத்திற்குச் செல்கிறார்கள்.

சந்திரனுடனான உரையாடல் பின்வருமாறு. ஐயம் காலத்தை உண்டாக்கும் மாதம், ருது, வருடம் மற்றும் யுகம் என அழைக்கப்படும் இருமாதம் என்று ஜீவா கூறுகிறது. ஒவ்வொரு ருதுவின் போதும் உருவாகும் பொருட்கள் அல்லது பொருட்களும் நான் தான். நானும் சதுர் முக தான். நீயும் நானே, இந்தச் சூழலில் “நான்” என்று சொல்லும் ஜீவாவுக்கு ஆத்மா அல்லது ஆன்மாவாகிய பரமாத்மாவையே இங்கு நான் குறிக்கிறேன். இங்கு இருக்கும் ஜீவாவின் இந்த பதிலால் சந்திரன் சமாதானம் அடைந்து, அவரை அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியாக ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு செல்ல அனுமதிக்கிறார் மோக்ஷாதிகாரி. ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில் நுழையும் போது “அவா” என்ற ஏரி உள்ளது. சாந்தோக்யோ உபநிடதத்தில் “அவா, நியா மற்றும் ஐரம்மதீயம்” என்று அழைக்கப்படும் மூன்று ஏரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேற்குறிப்பிட்ட ஏரிகளுக்கு வெகு தொலைவில் வித்வான்கள் அல்லது பிரம்மவித்தாக இல்லாதவர்களை விரட்டுவதற்காக லத்திகளை (தடிகள்) பிடித்தபடி பாதுகாவலர்கள் உள்ளனர். பக்தி யோகம் செய்தவர் பிரம்மவித். இந்த பாதுகாப்பு காவலர்கள் “முஹூர்தா” என்று அழைக்கப்படுகிறார்கள். லத்திகள் யாஷ்டீஸ் என்று அழைக்கப்படுகின்றன. அடுத்து “விராஜா” அல்லது “விஜரா” என்ற நதி உள்ளது. இது முதுமை (ஜரா) மற்றும் ஆசை (ராஜா) ஆகியவற்றிற்கு எதிரானது என்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

இந்த விரஜா நதி பிரகிருதி மண்டலம் மற்றும் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை வரையறுக்கிறது. பிரகிருதி மண்டலம் என்பது நாம் வாழும் பிரம்மாண்டம். பிரகிருதி மண்டலத்திற்கு விரஜா நதியின் எதிர்க்கரை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்.

உபநிடதம் மேலே குறிப்பிடப்பட்ட ஏரிகளுக்குப் பிறகு விரஜா நதி என்று சொன்னாலும், ஏரிகள் விரஜ நதிக்குப் பிறகு என்று அர்த்தம். இது ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ திவ்ய சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்திலும் ஸ்ரீமத் ரஹஸ்யசாரத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விரஜா நதிக்கரையில் சூக்ஷ்ம சரீரத்தை உதிர்த்த பிறகு, விடுதலை பெற்ற ஆத்மா (முக்தாத்மா) விரஜா நதியைக் கடந்து வைகுண்ட திவ்ய லோகத்தில் தனது சொந்த விருப்பத்திலோ அல்லது விருப்பத்திலோ நுழைகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், விடுதலை பெற்ற ஆன்மா விரஜா நதியில் நீராடுகிறது என்பது மற்றொரு கருத்து. பரமபத சோபனத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் மேற்கண்ட இரண்டு கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார் அவர்கள் “அர்ச்சிராதி” என்ற தனது ரஹஸ்யத்தில், விரஜா நதியில் தண்ணீரைத் தொட்ட பிறகு, அந்த முக்தாத்மா சூக்ஷ்ம சரீரத்தை வெளியேற்றுவதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தின் எல்லைக்குள் நுழைந்த பிறகு, முக்தாத்மா அப்ரகிருத சரீரத்தை (உடல்) பெறுகிறார், இது சத சதவீதம் சத்வ குணம் (சுத்த சத்வா) கொண்டது.

பின்னர் முக்தியடைந்த ஆன்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனின் உயிரற்ற அவதாரம் என்று சொல்லக்கூடிய புனிதமான அத்தி மரமான சோமசவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. முக்தியடைந்த ஆன்மாவை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தின் ஐந்நூறு அன்னைகள் பிரம்ம அலங்காரத்தால் அலங்கரிக்கிறார்கள், அதில் 100 அன்னைகள் தங்கள் கைகளில் முக்தாத்மாவை அணிவதற்காக மாலைகளை வைத்திருக்கிறார்கள், இரண்டாவது நூறு நிரம்பியவர்கள் கண்களில் பூசுவதற்கு அஞ்சனம் என்ற கருப்பு பசையை வைத்திருக்கிறார்கள். முக்தாத்மா, முக்தாத்மாவின் உடலில் பூசப்படும் பொடியை கையில் ஏந்தியிருக்கும் மூன்றாவது 100 நிம்ஃப்கள், முக்தாத்மாவுக்கு அதையே காணிக்கையாகக் கொடுப்பதற்காக நான்காவது 100 நிம்ஃப்கள் தங்கள் கைகளில் தோட்டிகளைப் பிடித்துள்ளனர் மற்றும் ஐந்தாவது 100 நிம்ஃப்கள் அவரை அலங்கரிக்க நகைகளை ஏந்தியிருக்கிறார்கள்.

எனவே 500 நின்மார்களும் முக்தாத்மாவுக்கு பிரம்ம அலங்காரம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவருக்கு அங்குள்ள அனைவராலும் வரவேற்பு அளிக்கப்பட்டது மற்றும் அவருக்கு பெரிய சடங்கு வரவேற்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் முக்தாத்மா “தில்யா” என்று அழைக்கப்படும் ஒரு மரத்தின் அருகே கொண்டு வரப்படுகிறார். ஸ்ரீ ரங்க ராமானுஜ ஸ்வாமிகள் கௌஷிதகி உபநிடதத்தின் வர்ணனையில், சோமவாசனம் என்று அழைக்கப்படும் புனித அத்தி மரம் (அஸ்வததா மரம்) சாந்தோக்யோபனிஷத்தில் உள்ள கூற்றுப்படி தில்ய விருட்சம் அல்லது மரம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் பரமபத சோபனாவில் தில்ய விருட்சம் (விருக்ஷம் என்றால் மரம்) சோமசவன அஸ்வத்த விருட்சத்திலிருந்து வேறுபட்டது என்று கூறுகிறார்.

பின்னர் முக்தாத்மா சலஜ்ய சம்ஸ்தானத்திற்கு வருகிறார். இந்த சலஜ்ய சம்ஸ்தானம் பிரகாரங்கள் என்றும் அழைக்கப்படும் சுவர்களைக் கொண்டுள்ளது. இது ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரகாரங்களைப் போலவே உள்ளது, இது ஸ்ரீ வைகுண்டத்தின் பிரதி என்பதால் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. சலாஜ்யா என்ற சொல் சலா மற்றும் ஜியா என பிரிக்கப்பட்டுள்ளது. சாலா என்பது பிராகாரம் மற்றும் ஜ்யா என்பது சண்டைக் கருவி.

பிரகாரத்தில் போர்க்கருவி வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு சலாஜ்யா என்று பெயர். ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்திற்கு அருகில் வரும் எதிரிகளை விரட்ட இந்த போர் கருவி தேவை.

மேற்கூறிய சாலஜ்யத்தைக் கடந்ததும் முக்தாத்மா அபராஜிதா என்ற ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகருக்குள் நுழைகிறார். பக்தி யோகம் அல்லது பிரபத்தி செய்யாதவர்களான அப்ரஹ்ம வித்யைகள் அணுகக்கூடியதாக இருப்பதால் இது அபராஜிதா என்று அழைக்கப்படுகிறது. அதை யாராலும் வெல்ல முடியாது என்றும் அர்த்தம்.

பின்னர் அவர் பிரம்மகந்தா, பிரம்மராசம் மற்றும் பிரம்மதேஜஸில் நுழைகிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பை மங்கள விக்ரஹத்தில் (உடலில்) உள்ள இனிமையான மணம் (பாரிஜாத மலரின் வாசனை), அதே சுவை மற்றும் ஒளி போன்ற அமிர்தமானது பையநகரம் (வைகுண்ட நகரம்) முழுவதும் பரவுகிறது என்பதே இதன் பொருள். பை மங்கள விக்ரஹத்தில் உள்ள ஒளியின் அளவு 10000 சூரியன்கள் ஒரே நேரத்தில் உதிக்கும் அளவிற்கு சமம் என்று கூறப்படுகிறது. எனவே முழு பியா நகரமும் நறுமணம், அமிர்தம் மற்றும் ஒளி ஆகியவற்றால் நிரப்பப்படுகிறது. எனவே பிரமலங்காரத்துடன் அப்ரகிருத சரீரத்துடன் பையநகரில் பிரவேசிக்கும் முக்தாத்மா மேற்கூறிய நறுமணமும், சுவையும், ஒளியும் உடையவராக இருப்பார்.

முக்தாத்மா பின்னர் இந்திரன் மற்றும் பிரஜாபதி என்ற இரண்டு காவலர்களால் பாதுகாக்கப்பட்ட பியா நகரின் பிரதான வாயிலுக்குள் நுழைகிறார். பின்னர் அவர் ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரின் பரந்த வீதிகள் வழியாக பெரிய ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார், அங்குள்ள ஒவ்வொரு உடலும் அவரை வரவேற்கிறது. அதன்பிறகு கோபுரம் போன்ற அமைப்பில் உள்ள தங்க விமானத்தின் அருகே வருகிறார். பிறகு பகவான் ஸ்ரீமன் நாராயணனின் மகிமைக்குள் நுழையுங்கள். இந்த மகிமையே பிரம்ம யஷஸ் எனப்படும். இதன் உண்மையான பொருள் என்னவென்றால், இறைவனின் மகிமை பைநகரம் முழுவதும் பரவியுள்ளது, மேலும் அங்குள்ள ஒவ்வொரு உடலும் இறைவனின் மகிமையைத் துதிக்கிறது மற்றும் முக்தாத்மாவும் இறைவனின் மகிமையைப் பாடத் தொடங்குகிறது. இறைவனைத் துதிப்பவர்கள் விபன்யவா என்று அழைக்கப்படுகின்றனர்.கௌஷிதகி உபநிஷத் யஷஸ் என்றால் இறைவனின் அருள் என்று பொருள்.

பின்னர் முக்தாத்மா ஆனந்தமய மண்டபத்தை அடைகிறது. இது கௌஷிதகி உபநிஷத்தில் “விபு பிரமிதம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டது. இது ஸ்ரீரங்கத்தில் உள்ள 1000 தூண்கள் கொண்ட மண்டபத்தைப் போன்றது. துவார பாலகர்களான வாயில் காவலர்கள் எண்ணிக்கையில் எட்டு பேர் மற்றும் பரிசாரகர்கள் எட்டு பேர். இந்த உதவியாளர்கள் பர்ஷதாஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த துவார பாலகர்களும் பர்ஷதாக்களும் முக்தாத்மாவை ஆனந்தமய மண்டபத்திற்குள் நுழையும் போது மிகவும் கருணையுடன் காட்சியளிக்கின்றனர். துவார பாலகர்கள் மற்றும் பர்ஷதாக்களின் பெயர்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ வைகுந்தத்தின் தளபதியான ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருத்மனுக்கு வணக்கம் செலுத்திய பிறகு, அங்கும் அங்கும் புதிதாக நுழையும் முக்தாத்மாவின் வருகையை அறிவிக்குமாறு ஆனந்தமய மண்டபத்தின் மேலாளர்களை வழிநடத்துகிறார். அப்போது அவன் நித்யசூரிகளின் நடுவே இருப்பான். நித்யா சூரிகள் சம்சாரத்தின் அடிமைத்தனத்தால் ஒருபோதும் பாதிக்கப்படாத ஜீவாக்களின் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்கள்.

பின்னர் அவர் பைன் மனிதர்கள், குடைகள் போன்ற சாதனங்கள், பைன் ஆயுதங்கள், பைன் நகைகள் போன்றவை ஆளுமைப்படுத்தப்பட்டு நிற்பதைக் காண்பார். அவர்களைப் பார்த்த பிறகு, அங்குள்ள பைன் தம்பதிகளுக்கு எல்லா வகையான நித்திய சேவைகளையும் செய்ய வேண்டும் என்ற வலுவான மற்றும் அசைக்க முடியாத ஆசையை அவர் பெறுகிறார், பின்னர் அவர் பைன் பர்யங்கா (சிம்மாசனம்) அருகே வந்து, பகவான் செய்த முயற்சியில் திருப்தி அடைந்த அனைத்து பூர்வாச்சாரியர்களையும் பார்க்கிறார். ஸ்ரீமன் நாராயணனை அவர்கள் மூலம் இவ்வுலகில் இருந்து ஸ்ரீ வைகுண்டத்திற்கு அழைத்து வருவதில் வெற்றியடைந்தார்.

கௌஷிதகி உபநிஷத் இந்த பர்யங்கா அல்லது சிம்ஹாசனத்தின் பெயரை “அமி தூஜா” என்று வழங்குகிறது. இந்த சிம்ஹாசனத்திற்கு நான்கு கால்கள் உள்ளன. மேற்கூறிய உபநிடதம் முன் உள்ள இரண்டு கால்கள் பூத மற்றும் பவிப்யாத் (கடந்த மற்றும் எதிர்காலம்) என்று கூறுகிறது. பின்புறத்தில் உள்ள இரண்டு கால்களுக்கு ஸ்ரீ மற்றும் இரா என பெயரிடப்பட்டுள்ளது. பாஞ்சராத்ர சம்ஹிதை இந்த நான்கு கால்களுக்கும் தர்ம பீடம், ஞான பீடம், வைராக்ய பீடம், ஐஸ்வர்ய பீடம் என்று பெயர்களை வழங்குகிறது.

இந்த சிம்ஹாசனத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணர் தனது மனைவியான மகாலட்சுமியுடன் அமர்ந்திருக்கிறார். சிம்ஹாசனத்தின் கால்கள் மற்றும் பிற பகுதிகள் தனித்தன்மை வாய்ந்தவை மற்றும் முக்தாத்மா இந்த ஆளுமைப்படுத்தப்பட்ட பைன் நிறுவனங்களைப் பார்க்கிறது.

பைன் சிம்ஹாசனத்தில் ஆயிரம் கோடி சூரியன் உதிக்கும் ஒளிக்கு சமமான ஒளியை உமிழும் தாமரை மலர் உள்ளது. எட்டு பக்கங்களிலும் தாமரை மலரின் எட்டு இதழ்கள் உள்ளன. இதழ்களின் பக்கவாட்டில் நிற்கும் எட்டு பைன் டாம்சல்கள் சௌரிகளை (சாமரஸ்) அசைக்கின்றன. அதே தாமரையின் கர்னிகையின் கிழக்குப் பகுதியில் அனுகிரஹா என்ற பெண் சாமரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறாள். சாமரங்களை அசைக்கும் எட்டு பெண்களின் பெயர்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட தாமரையின் மையத்தில் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளது.

கர்ணிகா எனப்படும் மிகப் பெரிய மற்றும் மிக உயரமான தாமரையில் ஒரு இலட்சம் தங்க மலைகள் கூட ஒரு அணு இடத்தை ஆக்கிரமிக்கும். இதன் மீது ஆதிசேஷா எனப்படும் ஆயிரம் தொப்பிகள் கொண்ட பாம்பின் சதுப்பு (நிர்மோகா எனப்படும்) அடங்கிய திவ்யயோகபர்யங்கா உள்ளது. ஹூட் ஃபானா என்று அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஆதிசேஷனை பல ஆயிரம் பாற்கடல்களின் மடிப்பின் விரிவாக்கம் (ஸ்ட்ரெட்ச்சிங்) என்று கருதலாம். (ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் ஒரு பாற்கடல் உள்ளது. பல ஆயிரம் பிரம்மாண்டங்கள் இருப்பதால் பல ஆயிரம் பாற்கடல்கள் உள்ளன). மேலே சொன்னது மீண்டும் ஒவ்வொரு பாற்கடலிலும் ஒரு ஆதிசேஷ பர்யங்கா என்று அர்த்தம். எனவே ஸ்ரீ வைகுண்ட பையநகரில் உள்ள திவ்ய யோகப் பர்யங்கம் பல ஆயிரம் ஆதிசேஷ பர்யங்கங்களை இணைத்துள்ளது. இது திவ்ய யோக பர்யங்கா அல்லது ஆதிசேஷ பிரயானகத்தின் அடிப்படை பகுதி எல்லையற்றது அல்லது அளவிட முடியாதது என்று கூறுகிறது.

நித்யசூரிகளில் ஒருவரான இந்த ஆதிசேஷர், முதல் திருவந்தாதியில் உள்ள ஒரு பாசுரத்தின்படியும், ஸ்தோத்ர ரத்னத்தில் உள்ள ஒரு ஸ்லோகத்தின்படியும் அங்குள்ள பைன் தம்பதிகளுக்கு பல வகையான கைங்கர்யங்களைச் செய்ய பல வடிவங்களை எடுத்துக்கொள்கிறார். ஆதிசேஷ பர்யங்கத்தின் பரப்பளவு மிகப் பெரியது என்றும், திவ்ய யோகப் பர்யங்கத்தில் அமர்ந்திருக்கும் திருவித பரிசேத ரஹித பகவான் ஸ்ரீமன் நாராயணனும் மிகக் குறுகிய இடத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைப்பை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது, மோட்சம் அடைந்த பிறகு அதையே பார்க்கிறோம்.

“திரிவிதா பரிச்சேத ரஹித” என்ற வார்த்தையின் அர்த்தம் பின்வருமாறு.

பரிச்சேதா என்றால் எல்லை. பரிச்சேத ரஹிதா என்றால் வரம்பு இல்லாமல் அல்லது வேறு வார்த்தைகளில் வரம்பற்றது. திரிவிதம் என்றால் இடம், நேரம், வாஸ்து என மூன்று வகைப்படும்.

எனவே பகவான் ஸ்ரீமன் நாராயணனும் அவரது மனைவி மகாலட்சுமியும் இடம், நேரம் மற்றும் வாஸ்து தொடர்பாக வரம்பற்றவர்கள். வாஸ்து என்றால் இருப்பது அல்லது பொருள். ஸ்ரீமன் நாராயணா மற்றும் மஹாலக்ஷ்மி இருவரும் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் மற்றும் எல்லையற்ற பிரம்மாண்டங்களைக் கொண்ட லீலா விபூதி ஆகிய இரண்டிலும் உள்ள ஒவ்வொரு உயிரினத்திலும் அல்லது பொருளிலும் அந்தர்யாமிகள் (உள் ஆத்மாக்கள்). ஒவ்வொரு பிரம்மாண்டமும் நாம் வாழும் பூலோகம் உட்பட பதினான்கு உலகங்களைக் கொண்டுள்ளது.

இப்போது முக்தாத்மா ஆனந்தா அல்லது திரு ஆனந்தாள்வான் என்று அழைக்கப்படும் ஆதிசேஷ பராயங்கரிடம் வருகிறார். ஆதிசேஷனுக்கு ஆயிரம் பேட்டைகள் உள்ளன, ஒவ்வொரு பேட்டையிலும் ஒரு ரத்தினம் அல்லது ரத்தினம் உள்ளது. ஒவ்வொரு ரத்தினமும் உமிழும் ஒளியால். புண்டரிகா அல்லது பரமபத அல்லது அயோத்தியாகிய வைகுண்ட திவ்யநகரம் முழுவதையும் ஆதிசேஷன் ஒளிரச் செய்கிறான். இந்த ஆதிசேஷ பர்யங்காவை அனந்த போகின் என்பார்கள்.

இந்த முக்தாத்மா ஆதிசேஷனின் இரண்டாயிரம் கண்களுக்கு இலக்காகிறது (ஒவ்வொரு பேட்டையிலும் இரண்டு கண்கள் மற்றும் 1000 பேட்டைகள் உள்ளன).

இப்போது முக்தாத்மா, ஆனந்த போக பர்யங்கா என்றும் அழைக்கப்படும் பய யோக பர்யங்கத்தில் அமர்ந்திருக்கும் பைன் தம்பதியினரின் அருகில் வருகிறார். ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தலைவர் ஸ்ரீமன் நாராயணரே. அகுமார யுவா என்று சொல்லக்கூடிய அவர் எப்போதும் 25 வயதுடையவர். இலட்சம் சூரியன்களுக்கு இணையான அளவற்ற ஒளியை உடையவன். ஸ்ரீமன் நாராயணனுக்கு நிகரான அனைத்து சிறப்பையும் உடைய மஹாலக்ஷ்மியுடன் ஸ்ரீமன் நாராயணன் அமர்ந்திருக்கிறாள், அவள் எல்லா அம்சங்களிலும் இறைவனுடன் ஐக்கியமாக இருக்கிறாள். எல்லையற்ற அருளின் திருவுருவம் மற்றும் இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்தவள்.

அதுபோலவே பூதேவியும், நீலாதேவியும் இறைவனுக்கு இன்பம் தந்து அவர்களுக்கு சேவை செய்கிறார்கள்.

இப்போது முக்தாத்மா பைன் தம்பதிகளான பூதேவி மற்றும் நீலா தேவியின் முன் நிற்கிறார்.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் அவருக்கு எல்லையற்ற ஆனந்தத்தையும் இன்பத்தையும் தருகிறார். முக்தாத்மாவின் அறிவு எல்லையற்றதாக மாறும், இது தர்ம பூத ஞான விகாசம் என்று அழைக்கப்படுகிறது. அவர் இறைவனின் திவ்ய மங்கள விக்ரஹத்தின் அழகையும் (பைன் மற்றும் இறைவனின் புனித உடல்) மற்றும் அதே அனைத்து உறுப்புகளையும் முழுமையாக அனுபவிக்கிறார். திவ்ய மங்கள விக்ரஹத்தின் பல்வேறு பாகங்களை அலங்கரிக்கும் ஆபரணங்களையும் அவர் அனுபவிக்கிறார்.

முக்தாத்மா உண்மையில் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் மஹாலக்ஷ்மியின் எல்லையற்ற கல்யாண குணங்களை (மங்கள குணங்கள்) தன் கண்களால் பார்க்கிறார்.

அப்போது முக்தாத்மா பகவான் ஸ்ரீமன் நாராயணன் தனது தாமரை பாதங்களை வைக்கும் ஸ்டாண்டிற்கு அருகில் வருகிறார். பின்னர் இறைவன் முக்தாத்மாவின் தலையில் தனது தாமரை பாதங்களை வைத்து, அவனால் மிகவும் விரும்பப்பட்ட அவருக்கு நித்திய சேவை (கைங்கர்யம்) செய்ய தகுதியுடையவராக ஆக்குகிறார்.

பிறகு திவ்ய யோக பர்யங்கத்தில் ஏறி மிதிக்கிறார். பின்னர் பைன் தம்பதியினர் அவர் மீதுள்ள ஆழ்ந்த பாசத்தால் அவரைத் தங்கள் மடியில் உட்கார வைத்து, ஸ்ரீ வைகுந்தம் வந்து அவர் அனுபவித்த சிறந்த செழுமையான பாக்கியத்தைப் பற்றிப் பேச வைக்கின்றனர். நீ யார் என்று இறைவன் கேட்கிறான். பின்னர் முக்தாத்மா பதிலளித்து, அவரை நித்ய சம்சாரியாக (என்றென்றும் சம்சார பந்தத்தில் இருக்கும்) அனுமதிக்காமல், அவரை ஸ்ரீ வைகுண்டத்திற்கு அழைத்து வந்து நித்ய சூரிகளில் ஒருவராக ஆக்கி, பைன் தம்பதிகள் அவருக்கு செய்த மிகப்பெரிய உதவியை ஒப்புக்கொள்கிறார்.

முக்தாத்மா மேலும் கூறுகிறார், அவர் காலங்காலமாக சம்சாரக் கடலில் மூழ்கினார். பிறகு பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பயத்ம ஸ்வரூபத்தின் அமிர்தக் கடலில் மூழ்கி, அவரிடமிருந்து பிரிக்க முடியாதவராக ஆனார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆன்மாவையும் உடலையும் பிரிக்க முடியாததால் அவர் உடலாகவும், இறைவன் ஆத்மாவாகவும் மாறினார். இறைவனின் உள்ளார்ந்த தன்மையை (திவ்யாத்மா ஸ்வரூபத்தை) உணர்ந்ததன் மூலம் அவர் தனது சொந்த உள்ளார்ந்த இயல்பை உணர்ந்தார். இறைவனின் விருப்பத்தால் அவர் செயல்களில் (பிரவிருத்தி மற்றும் நிவ்ருத்தி) தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது. இறைவன் தன் மீது பொழிந்த பாசத்தை அனுபவித்தான். இப்போது தான் அனுபவித்துக்கொண்டிருக்கும் மோட்ச ஆனந்தக் கடலில் ஐஸ்வர்ய இன்பமும் (இவ்வுலகில் ஜடப்பொருள் மற்றும் ஸ்வர்க லோகத்தில் அடையும்) இன்பமும், தன் சுயத்தை (கைவல்ய) அனுபவிக்கும் இன்பமும் அப்படியே இருக்கிறது என்கிறார். கைவிட.

மேற்கூறியவற்றைச் சொன்ன பிறகு, முக்தாத்மா பைன் தம்பதியரிடம், தான் அங்கு வந்த இடத்திலிருந்து மீண்டும் இந்த உலகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்.

மேற்கண்ட முக்தாத்மாவின் சமர்ப்பணத்தால் தெய்வீக தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். தாயும் தந்தையும் தங்கள் குழந்தையின் பேச்சில் மகிழ்ச்சி அடைவது போல. பிறகு பகவான் ஸ்ரீமன் நாராயணன் மஹாலக்ஷ்மியை நோக்கி, இருவரும் ஒரே தோற்றத்துடன் முக்தாத்மாவை அருளுகிறார்.

பின்னர் அபஹத பாப்மம் (குறைபாடு இல்லாதது), விஜரா (முதுமையால் துன்புறுத்தப்படாமல்), விம்ருத்யு (மரணத்தால் துன்புறுத்தப்படாமல்), விசோகா (துக்கம் இல்லாமல் இருப்பது), விஜிகிட்சா (பசி இல்லாமல் இருப்பது), அபிபாஸ (இல்லாதது) என்ற எட்டு குணங்கள். தாகம்), சத்ய காமம் (அவர் விரும்பியதை அடையும் திறன் கொண்டவராக) மற்றும் சத்ய சங்கல்பம் (அங்கு இறைவனின் விருப்பத்திற்கு உட்பட்டு தான் செய்ய விரும்புவதைச் செய்யும் திறன்) அங்கு மலரும். இது குணாஷ்டக அவிர்பவ எனப்படும். அவர் சர்வஜ்ஞராகவும் (சர்வஞானமாக) மாறுகிறார், இது வேறுவிதமாகக் கூறினால் தர்ம பூத குணவிகாசம்.

பின்னர் அவர் பைன் ஜோடியின் தொடர்ச்சியான இன்பத்தால் பரபக்தி என்ற தெய்வீக தம்பதியினரின் மீது தீவிர அன்பை வளர்த்துக் கொள்கிறார், மேலும் இந்த பரபக்தி பர ஞானத்திற்கு வழிவகுக்கிறது, இது அவர் பெறும் ஆழ்ந்த அறிவாகும், இது பரம பக்திக்கு வழிவகுக்கிறது, இது மோட்சத்தின் முடிவில்லாத மற்றும் நித்திய இன்பமாக மாறும். பிரம்மாண்டா என்றும் அழைக்கப்படும் ஆனந்தா, அங்குள்ள பைன் தம்பதிகளுக்கு தொடர்ந்து சேவை செய்வதன் மூலம் அவர் அடையும் எல்லையற்ற ஆனந்தம் அல்லது இன்பம். இவ்வாறு அவர் பிரணவத்தின் மூன்றாவது எழுத்தான “மா” இல் சித்தரிக்கப்பட்டுள்ளபடி பைன் தம்பதியினருக்கு ஷேஷத்வா (அடிபணிதல்) மற்றும் தசாத்வா (கீழ்ப்படிதல் மற்றும் அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன்) ஆகியவற்றின் உள்ளார்ந்த மற்றும் உள்ளார்ந்த தன்மையை செயல்படுத்துகிறார்.

பின்னர் முக்தாத்மா தனது சொந்த விருப்பத்தால் பல உடல்கள் அல்லது வடிவங்களை இறைவன் அல்லது பரமாத்மாவின் விருப்பத்திற்கு உட்பட்டு பைன் தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் செய்கிறார்.

எனவே அவரது நித்திய பேரின்பம் பைன் தம்பதியினருக்கு எல்லா இடங்களிலும் (சர்வதேசம்), எல்லா நேரங்களிலும் (சர்வகலா), மற்றும் அனைத்து நிலைகளிலும் (சர்வஸ்தௌசிதா) மற்றும் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் (சர்வவித கைங்கர்யா) செய்து வருகிறது.

ஆதார சக்தி க்ரம:

ஸ்ரீ பகவத் ராமானுஜரால் நித்ய கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார சக்தி க்ரமத்தில் உள்ளபடி, ஸ்ரீ வைகுண்ட பை லோகத்தின் முழு அமைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) ஆதார சக்தி (ஆதரவு சக்தி)

2) மூல பிரகிருதி (முதற்பொருள்)

3) அகில ஜகத் ஆதார கூர்ம ரூபி

நாராயணா (ஆமை வடிவில் உள்ள ஸ்ரீமன் நாராயணன் பிரபஞ்சம் முழுவதையும் ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. எல்லையற்ற பிரம்மாண்டங்கள் மற்றும் வைகுண்டப்ய லோகத்தை உள்ளடக்கிய நித்ய விபூதிகளை உள்ளடக்கிய பிரபஞ்சமான லீலா விபூதி இரண்டிற்கும் இந்த ஆதரவு பொதுவானதாகத் தோன்றுகிறது.

4) அனந்த நாகராஜா – ஆதிசேஷன் முழு பிரபஞ்சத்தையும் ஆதரிக்கிறார் என்று கூறப்படுகிறது.

5) பூமி (பூலோகம்) மேற்கூறியவை ஒன்றின் மேல் ஒன்றாகக் கற்பனை செய்ய வேண்டும்.

6) ஒரு கண்டத்திற்கு சமமான ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்

7) ஸ்ரீ வைகுண்ட திவ்ய ஜன பாதம் – ஒரு நாட்டிற்கு சமமானது.

8) ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரம் – ஒரு நகரத்திற்குச் சமம்.

9) ஸ்ரீ வைகுண்ட திவ்ய விமானம்

10) ஆனந்த மாயா மண்டபரத்னா

11) மண்டபத்திற்குள் அனந்த நாகராஜா (ஆதிசேஷா).

12) தென்கிழக்கில் உள்ள திவ்ய சிம்ஹாசனின் காலின் தர்ம பீட பாத பெயர் (அக்னேயா)

13) தென்மேற்கில் உள்ள காலின் ஞான பீடப் பெயர் (நிரு ருத்தி)

14) வைராக்ய பீட பாத – வடமேற்கில் உள்ள காலின் பெயர் (வயவ்யா).

15) ஈஸ்வர்ய பீட பாத – வடகிழக்கில் உள்ள காலின் பெயர் (ஈசன்யா).

16) அதர்மம் – இது கிழக்குப் பக்கத்தில் உள்ள திவ்ய சிம்ஹாசனத்தின் தடிமனின் பெயராகத் தோன்றுகிறது.

17) அஜ்னானா – தெற்குப் பக்கத்தில் உள்ள பெயர்

18) அவைராக்யா – மேற்குப் பக்கத்தில் உள்ள பெயர்

19) அனீஸ்வர்யா – வடக்குப் பக்கத்தில் பெயர்

20) இறைவனுக்கு அனைத்து வகையான சேவைகளையும் செய்வதில் ஆர்வமுள்ளவர் அனந்தம்.

21) மேலே தாமரை மலர். (குறிப்பு: – பரம பாத சோபனத்தில் சிறிது மாறுபாடு தெரிகிறது, ஆதிசேஷனுக்கு மேல் பத்மம் என்று சொல்லப்பட்டது. இந்த வரிசையில் ஆதிசேஷனுக்கு மேல் என்று தோன்றுகிறது).

22) விமலச்சமர ஹஸ்தா – தாமரையின் கிழக்கு இதழில் உள்ள சாமர அலைவரிசையின் பெயர்.

23) உட்கர்ஷினை சாமர ஹஸ்தா – தென்கிழக்கு இதழில் உள்ள சாமர அலைவரிசையின் பெயர்.

24) ஞான சாமரஹஸ்தா – தெற்குப் பக்க இதழில்.

25) கிரியா சாமர ஹஸ்த – தென் மேற்கு இதழில்

26) யோக சாமர ஹஸ்த – மேற்கு இதழில்

27) பிரஹ்வ சாமர ஹஸ்த – வடமேற்கு இதழில்

28) சத்திய சாமர ஹஸ்த – வடக்கு இதழில்.

29) ஈசன சாமர ஹஸ்த – வடகிழக்கு இதழில்.

30) அனுகிரஹா சாமர ஹஸ்தா – கர்ணிகாவின் கிழக்குப் பகுதியில் தாமரையின் அடிப்பகுதி.

31) ஜகத் பிரகிருதி யோக பீட – இதுவே பாற்கடல் உட்பட அனைத்து பிரம்மாண்டங்களுக்கும் காரணம் என்று தோன்றுகிறது.

32) திவ்ய யோகா பீட பர்யங்கா – ஒரு சோபா

33) சஹஸ்ர பாண மண்டித அனந்த நாகராஜர் – இதிலிருந்து 1000 முகடு கொண்ட ஆதிசேஷர் மேற்கண்ட யோக பீடத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

34) பாத பீட அனந்த நாகராஜ் – இறைவன் தனது பாதங்களை வைக்கும் பீடம். ஆதிசேஷனின் ரூபங்களில் இதுவும் ஒன்று.

35) அனந்த, கருடன், விஷ்வக்சேனர் – நித்ய சூரிகள் பத்மாசனங்களில் அமர்ந்துள்ளனர்.

36) அஸ்மத் குரவ: – மோட்சம் பெற்ற நமது பூர்வாச்சார்யர்கள் அனைவரும். அவர்கள் யோக பீடத்தின் வடமேற்குப் பகுதியில் அமர்ந்துள்ளனர்.

37) பகவான் ஸ்ரீமன் நாராயண யோக பீட பர்யங்கத்தில் அமர்ந்துள்ளார்

38) மஹாலக்ஷ்மி இறைவனின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பாள்.

39) பூமி – இறைவனின் இடது பக்கம் பூதேவி.

40) நீலா – இறைவனின் இடது பக்கத்தில் நீலாதேவி.

41) கிரீட மகுடாதி பதி – இறைவன் தலையில் அணிந்திருக்கும் கிரீடம்.

42) கிரீட மாலா அபீடகாத்மா – இறைவன் எப்போதும் கிரீடத்தையும் மாலைகளையும் அணிந்திருப்பான். அவர்களால் இறைவனுக்கு சில வலிகள் அல்லது பிரச்சனைகள் ஏற்படலாம். அந்த வலியை ஏற்படுத்தாத அப்பேடகாத்மா என்று ஒரு பைன் நபர் இருக்கிறார்.

43) தட்சிண குண்டல மகர – முதலை வடிவில் இருக்கும் இறைவனின் வலது காது வளையம்.

44) வாம குண்டல மகர – இறைவனின் இடது காது வளையம்.

45) வைஜயந்தி வனமாலா – இறைவன் அணிந்திருக்கும் மாலை அல்லது வான மாலை வைஜயந்தி எனப்படும்.

46) துளசி – இறைவனும் துளசி மாலையை அணிந்துள்ளார்.

47) ஸ்ரீ வத்ச ஸ்ரீநிவாசா – மகாலட்சுமி அமர்ந்திருக்கும் இறைவனின் மார்பில் வெள்ளை முடிகள்.

48) ஸ்ரீ கௌஸ்துப சர்வ ரத்னாதி பதி – கௌஸ்துப என்பது இறைவனின் மார்பில் உள்ள ரத்தினம் அல்லது ரத்னா. இது மிக முக்கியமான மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினம்.

49) காஞ்சி குணோஜ்வல பீதாம்பர – இடுப்பிற்குக் கீழே இறைவன் அணிந்திருக்கும் மஞ்சள் நிற தூய பட்டு வஸ்திரம் மற்றும் இடுப்புப் பட்டை தங்கத்தால் ஆனது.

50) சுதர்சன ஹெத்திராஜா – இறைவன் தனது வலதுபுறத்தில் வைத்திருக்கும் ஆயுத வட்டு.

51) நந்தக க்ஷத்காதிபதி – இறைவன் தாங்கிய நந்தக எனப்படும் ஆயுதம்.

52) பத்மா – இந்த தாமரை ஆயுதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

53) பாஞ்ச ஜன்ய சங்கதி பதி – பாஞ்சஜன்யம் என்பது இறைவன் இடது கையில் வைத்திருக்கும் சங்கு.

54) கௌமோதகி கடாதிபதி – இறைவன் வைத்திருக்கும் கௌமோதகி என்ற ஆயுதம்.

55) சர்ங்காய சப்பாத்தி பதி – சர்ங்கா என்ற ஆயுத வில்.

56) பகவத் பதரா விந்த சம்வாஹினி – இறைவனின் பாதங்களை மசாஜ் செய்யும் அல்லது ஷாம்பு செய்யும் பெண் பணிப்பெண்கள்.

57) அனந்த நாகராஜா – மீண்டும் ஆதிசேஷர் மற்றொரு வடிவில் இறைவனின் பின்புறம் இருக்கிறார்.

58) பகவத் பரிஜனங்கள் – இறைவனுக்கு சேவை செய்யும் மற்ற பணியாளர்கள்.

59) பகவத் பாதுகா – இறைவனின் புனித செருப்பு.

60) பகவத் பரிச்சதாஸ் – குடை போன்ற பிற சாதனங்கள்.

61) வைனதேய – கருத்மன் முன் அமர்ந்து.

62) பகவத் விஷ்வக்சேனர் – இறைவனின் வடகிழக்கு திசையில் அமர்ந்து தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.

63) கஜானனா – விஷ்வக்சேனரின் உதவியாளர்.

64) ஜயத்சேனா – விஷ்வக்சேனரின் உதவியாளர்.

65) ஹரிவக்த்ரா – விஷ்வக்சேனரின் உதவியாளர்.

66) கால பிரகிருதி சம்ஞா – விஷ்வக்சேனரின் உதவியாளர்.

67) சந்தா மற்றும் பிரசாந்த் – கிழக்குப் பகுதியில் கேட் கீப்பர்கள்.

68) பத்ரா மற்றும் சுபத்ரா – தெற்கு பக்கத்தில் வாயில் காவலர்கள்.

69) ஜெய விஜய – மேற்குப் பகுதியில் வாயில் காவலர்கள்.

70) தத்ரா மற்றும் விதத்ரா – வடக்குப் பக்கத்தில் வாயில் காவலர்கள்.

மேற்கூறிய காவலர்கள் அனைவரும் சங்கம், சக்கரம் மற்றும் கடம் ஆகியவற்றைப் பிடித்திருக்கும் நான்கு கைகளைக் கொண்ட துவார பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

71) குமுதா கணாதி பதி சவாஹன பரிவார பிரஹரண – கிழக்குப் பகுதியில் பரிஷதா.

72) குமுதாக்ஷ கணாதிபதி – சவாஹன பரிவார பிரஹரண – தென்கிழக்கு பக்கத்தில்.

73) புண்டரிகாக்ஷ கணாதிபதி – சவாஹன பரிவார பிரஹரண – தெற்கு பக்கத்தில்.

74) வாமன கணாதி பதி – சவாஹன பரிவார பிரஹரண – தென் மேற்குப் பகுதியில்.

75) சங்குகர்ண கணாதிபதி – சவாஹன பரிவார பிரஹரண – மேற்குப் பக்கத்தில்.

76) சர்பநேத்ர கணாதிபதி – சவஹான பரிஹார பிரஹரண – வடமேற்கு பகுதியில்.

77) சுமுக கணாதிபதி – சவாஹன பரிஹார பிரஹரணம் – வடக்குப் பக்கத்தில்.

78) சுப்ரதிஷ்டய காந்திபதி – சவஹான பரிவார பிரஹரண – வடகிழக்கு பக்கத்தில்.

மேற்கூறிய எட்டு பேரும் பரிஷதாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், மேலும் அவை இறைவனின் படைவீரர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாகத் தோன்றுகின்றன. அவர்கள் வாகனங்களுடன் (வாகன அமைப்பு) மற்றும் பரிவாரத்துடன் (தங்கள் சொந்த மக்களைக் கொண்டவர்கள்) உள்ளனர். பிரஹரணம் என்றால் ஆயுதங்கள். மேற்கூறிய அனைத்து பரிஷத்களும் ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்தியிருப்பதால், இந்த ஏற்பாடு ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகத் தெரிகிறது.

ஸ்ரீ ராமானுஜர் நித்ய கிரந்தத்தில், வைகுண்ட பை லோகம் மற்றும் பையநகரில் உள்ள அனைத்து 78 பைன்களும் மற்றும் பொருட்களும் ஸ்ரீமன் நாராயணனின் தினசரி வழிபாட்டின் போது (திருவாராதனம்) வீடுகளில் செய்யப்படும் போது சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும் என்று கூறுகிறார். ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ வைகுண்ட காத்யா மேற்கூறியவற்றின் விரிவான விளக்கமாகும்.

ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தின் விளக்கத்தின் தொடக்கத்தில் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தின் மற்றொரு பெயரான பரம வ்யோமத்தின் இருப்பிடம் பின்வருமாறு கூறுகிறார்.

14 லோகங்கள் அல்லது உலகங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டம் உள்ளது. பிரம்மாண்டத்தின் மேல் பிரம்மாண்டத்தைப் போல் பத்து மடங்கு பெரிய (பெரிய) உறை உள்ளது. இதுபோன்ற ஏழு அட்டைகள் ஒவ்வொன்றும் முந்தையதை விட 10 மடங்கு பெரியதாகவும் மற்றொன்றுக்கு மேலேயும் உள்ளன. மேலே விரஜா நதி உள்ளது மற்றும் விரஜா நதியின் மறுகரை ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் ஆகும், இதன் விளக்கம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ வைகுண்டத்தின் இந்த அமைப்பு நான்கு தலை பிரம்மா மற்றும் மற்றவர்களால் மனத்தாலோ அல்லது வார்த்தைகளாலோ கூட அணுக முடியாது. ஏற்கனவே இருக்கும் நித்ய சூரிகள் மற்றும் முக்தர்களின் இயல்பை பிரம்மா, ருத்திரன், சனகன், சனந்தனா போன்றவர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஸ்ரீ ஆளவந்தார் கூட ஸ்ரீ வைகுண்ட பைய லோகத்தைப் பற்றி ஸ்த்ர ரத்னத்தில் அழகாகவும் சுருக்கமாகவும் விளக்குகிறார்.

ஸ்ரீ வைகுண்ட பய லோகத்தின் மேற்கூறிய விளக்கத்தின் வெளிச்சத்தில், கடைசி பாதத்தில் ஆறு அதிகாரங்களை கையாள்வோம்.

முதல் அதிகாரத்திற்கு சம்பத்யவிர்பவதி கரணம் என்று பெயர். விவாதத்திற்கு வரும் உபநிடதப் பகுதி சந்தோக்யோபநிஷத்தின் 8வது அத்தியாயத்தில் உள்ளது.

இறவா உடலை விட்டு உபாசனை அல்லது பிரபத்தி செய்த ஜீவன் வைகுண்ட பய லோகத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனை அடைகிறான், முன்பு செயலற்ற நிலையில் இருந்த அவனது உள்ளார்ந்த தன்மை மலர்கிறது என்று இந்த பகுதி கூறுகிறது.

அபஹத பாப்ம, விஜர:, விம்ருத்யு’ விசோகா, அவிஜிகத்ஸ:, அபிபாச, சத்ய காம:, சத்ய சங்கல்பம் ஆகிய எட்டு குணாதிசயங்களே அவனது உள்ளார்ந்த இயல்பு. (குறிப்பு: மேலே உள்ள எட்டு பண்புகளின் பொருள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது).

மேற்கூறியவற்றைத் தவிர தர்ம பூத ஞான விகாசம் இருக்கும், அதாவது சர்வ ஞானம் (சர்வ ஞானம்) என்று பொருள். அவனது பேரின்பம் எல்லையற்றதாகவும் நித்தியமாகவும் மாறும் என்று கூறுவதற்கு இது சமம்.

ஒரு முக்தாத்மாவுக்குப் புதிதாக ஏதாவது கிடைக்காவிட்டால், புண்ணிய பாப கர்மா மலரினால் ஏற்கனவே இருந்த மற்றும் செயலற்ற நிலையில் உள்ள அம்சங்கள் மட்டுமே, மோட்ச சாஸ்திரம் (மோட்சத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் கையாளும் வேதங்கள்) அர்த்தத்தை குறைக்கிறது என்று எதிரி (பூர்வபக்ஷி) வாதிடுகிறார். அல்லது நோக்கம் குறைவாக உள்ளது மற்றும் ஜீவாவின் தன்மை (ஆத்மஸ்வரூபம்) இலக்கு குறைவாகிறது. ஒரு நபர் அடைய விரும்பும் புருஷார்த்தம் இலக்கு

அவர் மேலும் கூறுகிறார், உடல் மற்றும் புலன்களின் செயல்பாடுகள் செயலற்ற நிலையில் இருக்கும்போது நல்ல தூக்க நிலையில் ஆத்மா (ஜீவா) அடையும் இலக்கை (புருஷார்த்தம்) காண முடியாது. துக்கத்தின் முடிவு மட்டும் புருஷார்த்தம் என்று சொல்ல முடியாது. ஜீவாவின் உள்ளார்ந்த இயல்பை மலரச் செய்வதை மோட்சம் என்று அழைக்க முடியாது என்று அவர் மேலும் வாதிடுகிறார். மோட்சத்தில் முக்தாத்மா நித்தியமான மற்றும் எல்லையற்ற பிரம்ம ஆனந்தத்தை அடைகிறது என்று கூறப்படுகிறது. எனவே பூர்வபக்ஷி மோட்சத்தில் சில புதியது அடையப்படுகிறது என்று கூறி முடிக்கிறார்.

இந்த அதிகாரத்தின் முதல் சூத்திரத்தில் “சம்பத்ய அவிர்பவ: ஸ்வேன சப்தாத்” என்று பூர்வபக்ஷியின் மேற்கூறிய வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. அர்ச்சிராதி கதியின் மூலம் மோட்சத்திற்குச் சென்று, பகவான் ஸ்ரீமன் நாராயணனை அடையும் பிரத்யகாத்மா, “ஏஷ ஸம்ப்ரஸாதா: அஸ்மத் சரிராத்” என்ற உபநிஷத வாக்கியத்தால், எந்தப் புதிய வடிவமும் (அம்சம்) இல்லாமல், தன் உள்ளார்ந்த இயல்பு (ஸ்வஸ்வரூப அவிர்பவ) மலர்வதைப் பெறுவார். ஸமுத்தாய பரம்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே.”

மேலே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வார்த்தைகள், புதிய வடிவமோ அம்சமோ உருவாகவில்லை என்றும், இந்தக் காலங்களிலெல்லாம் செயலற்ற நிலையில் இருந்த இயல்புதான் மலரும் என்றும் கூறுகிறது. அங்கு ஒரு புதிய அம்சம் உருவாகிறது என்ற வாதம், உபநிடதப் பகுதியில் உள்ள “ஸ்வேனா” என்ற வார்த்தை அர்த்தமற்றதாகிவிடும். புதிய அம்சம் எதுவும் இல்லாவிட்டாலும், செயலற்ற நிலையில் இருந்த அவரது உள்ளார்ந்த அல்லது உள்ளார்ந்த இயல்பை மட்டுமே அவர் பெறுகிறார்.

பூர்வபக்ஷியின் வாதத்திற்கு, உள்ளார்ந்த இயல்பு எப்போதும் இருந்தது, “உபசம்பத்யா” என்ற இந்த வார்த்தை அர்த்தமற்றதாகிறது, அதாவது “முக்தா: ப்ரதிக்னாநாத்” என்று இரண்டாவது சூத்திரத்தில் சூத்ரகாரர் பதிலளிக்கிறார். இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், முக்தாத்மா புண்ணிய பாபா கர்மாவின் காரணமாக அவர் பெற்ற உடலில் இருந்து விடுதலை பெறுகிறார். உள்ளார்ந்த குணம் என்றென்றும் இருந்தபோதிலும், அது கர்ம ரூப அவித்யாவின் கணக்கில் செயலற்றதாக இருந்தது, அது புண்ய பாப கர்மா ஆகும். இந்த கர்மா முடிவடைந்ததும், செயலற்ற நிலையானது உள்ளார்ந்த அல்லது உள்ளார்ந்த ஸ்வரூபத்தின் (இயற்கையின்) தானாகவே பிரகாசிக்க வழிவகுக்கிறது. சூத்திரத்தில் உள்ள “பிரதி ஞானத்” என்ற வார்த்தை குறிப்பாக இந்திரனுக்கும் பிரஜாபதிக்கும் இடையேயான உரையாடலைக் குறிக்கிறது (சந்தோக்யோபனிஷத்தின் 8வது அத்தியாயத்தில் நான்கு தலை பிராமணன்.

இந்திரன் ஆன்மீக அறிவைப் பெறுவதற்காக பிரஜாபதியிடம் செல்கிறான். பூயா: (திரும்பத் திரும்ப) வியாக்யாஸ்யாமி (நான் விரிவாகக் கூறுகிறேன்) என்று கூறி பிரஜாபதி இந்திரனிடம் உண்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

இந்த பிரத்யகாத்மா (ஜீவா) விழிப்பு நிலை, கனவுகளைக் கண்டறிவதற்கான கட்டம் மற்றும் நல்ல தூக்கத்தின் கட்டம் (கோமா நிலை) ஆகிய மூன்று கட்டங்களில் இருந்து விடுவிக்கப்பட்டது, வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும். மேலும் புண்ணியத்தாலும், பாப கர்மாவாலும் பாதிக்கப்பட்ட இந்த உடலிலிருந்து விடுபடுவது, இவ்வுலகில் உள்ள பொருள்கள் மற்றும் ஆளுமைகளின் மீது அன்பு மற்றும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த விடுதலைக்குப் பிறகு, பிரத்ய காத்மா மோட்சத்தில் பரமாத்மாவை அடைகிறது, இது ஸ்வரூப அவிர்ப்பத்திற்கு (அவரது உள்ளார்ந்த இயல்பை மலரச் செய்யும்) வழிவகுக்கும் என்று கூறப்பட்டது.

இந்த அதிகாரத்தின் மூன்றாவது சூத்திரத்தில் சூத்ரகாரர் “ஆத்மபிரகாரநாத்” என்று கூறுகிறார், அதாவது இந்த ஆத்மா (பிரத்ய காத்மா அல்லது ஜீவா) ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி எட்டு பண்புகளை (குணங்கள்) உடையவர். இந்த எட்டு குணங்களும் குணாஷ்டகம் எனப்படும். பிரஜாபதி இந்திரனுக்கு உபதேசித்ததிலும் இது தெளிவாகிறது.

ஜீவன் சம்சார பந்தத்தில் இருந்தபோது இந்த எட்டு குணங்களும் செயலற்று இருந்தன, ஜீவன் பரமாத்மாவை மோட்சத்தில் அடைந்தவுடன் அவை பிரகாசிக்கின்றன. எனவே இந்த எட்டு குணங்களும் புதியவை அல்ல, அவை எப்போதும் இருந்தன. இந்த விடயத்தை பகவான் சௌனகா பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

(அ) ​​ரத்தினம் அல்லது ரத்னாவில் பளபளப்பு எப்போதும் இருக்கும் மற்றும் அதன் உள்ளார்ந்த இயல்பு. அழுக்கு அல்லது தூசியால் மூடப்பட்டிருக்கும் போது அந்த பளபளப்பு அல்லது பிரகாசம் இருக்காது. அதை சுத்தம் செய்து அழுக்குகளை அகற்றினால் அதன் பளபளப்பு தானாகவே மாறும். அதே போல ஆத்மாவின் விஷயத்தில் அழுக்கு புண்ணிய பாப கர்மா ஆகும், இது எட்டு குணங்களின் பிரகாசத்தை பாதிக்கிறது. இந்த கர்மா மோட்சத்திற்கு செல்லும் போது இந்த குணங்கள் தானாகவே பிரகாசிக்கும்.

(ஆ) கிணறு தோண்டும்போது, ​​சூரிய ஒளியை நீர் பார்ப்பதைத் தடுக்கும் பூமியின் அடுக்குகள் அகற்றப்படும். ஆனால் நிலத்தடி நீர் புதிதாக உருவாக்கப்படவில்லை, அது எப்போதும் உள்ளது. ஜீவா விஷயத்திலும், பூமியின் அடுக்குகள் கர்மாவைப் போலவே இருக்கின்றன.

(இ) மேற்கூறிய இரண்டு எடுத்துக்காட்டுகளைப் போலவே, ஆத்மாவின் (புண்ய பாப கர்மா) ஹேய குணங்களின் முடிவுக்குப் பிறகு, எட்டு குணங்களும் தானாகவே பிரகாசிக்கின்றன, அவை புதிதாக உருவாக்கப்படவில்லை.

இந்த பாதத்தில் உள்ள இரண்டாவது அதிகாரம் “அவிபாகேன த்ருஷ்டதவதி கரணம்” என்று அழைக்கப்படுகிறது. முக்தாத்மா பரமாத்மாவை (பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய பரம் ஜோதி என்றும் அழைக்கப்படுகிறார்) தனித்தனியாக அனுபவிக்கிறதா அல்லது பிரிக்க முடியாத ஒரு பொருளாக அனுபவிக்கிறதா என்பதுதான் எழும் கேள்வி.

பூர்வபக்ஷி தனது வாதத்திற்கு ஆதரவாக தோன்றும் சில உபநிடத நூல்களை மேற்கோள் காட்டி பரமாத்மாவை வேறுபட்ட அல்லது தனித்தனியாக அனுபவிக்கிறார் என்று கூறுகிறார். உபநிடத நூல்கள் அவருடைய நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன

(அ) ​​முக்தாத்மா பிரம்மனை (ஸ்ரீமன் நாராயணனை) அடைந்த பிறகு, மங்களகரமான பண்புகளுடன் அவரை அனுபவிக்கிறது என்று தைத்திரீய உபநிஷதம் கூறுகிறது.

(ஆ) முக்தாத்மா மோட்சத்தை அடைந்து, பிரபஞ்சத்திற்கு காரணமான இறைவனின் அற்புதமான பிரகாசத்தை அங்கு காணும்போது அவருக்கு சமமானதாக முண்டக உபநிடதமும் கூறுகிறது.

(இ) பகவத்கீதையில் பகவான் ஸ்ரீ வைகுண்டத்தில் முக்தாத்மாவை அடைந்த பிறகு இறைவனிடம் உள்ள எட்டு குணங்களும் மலரும் என்று கூறுகிறார்.

மேற்கூறிய அனைத்து கூற்றுகளிலும் முக்தாத்மா இறைவனை பிரிக்க முடியாத ஒரு பொருளாக அனுபவிக்கிறது என்று குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லை. எனவே முக்தாத்மா இறைவனை தனித்தனியாக அனுபவிக்கிறது என்கிறது பூர்வபக்ஷி.

இதை “அவிபாகேன த்ரிஷ்டத்வாத்” என்ற சூத்திரத்தில் சூத்ரகாரர் மறுக்கிறார்.

முக்தாத்மா பரமாத்மாவைப் பிரிக்க முடியாத ஒரு பொருளாக அனுபவிக்கிறது என்பதே இந்த சூத்திரத்தின் பொருள். பரமாத்மா ஆத்மா மற்றும் ஜீவாத்மா அவரது உடல் என்ற பொருளில் பிரிக்கலாம். உடலும் உள்ளமும் பிரிக்க முடியாதவை. முக்தாத்மா உண்மையில் பரமாத்மாவைத் தன் ஆத்மாவாகவும், அவனைத் தன் உடலாகவும் பார்க்கிறார். முக்தாத்மா மோட்சத்திற்கு வருவதற்கு முன், அதாவது சம்சாரத்தில் இருக்கும் போது தான் உபநிஷத வாக்கியங்களின்படி பரமாத்மாவின் சரீரம் என்று அறிகிறான். ஆனால் மோட்சத்தை அடைந்த பிறகு அவர் உண்மையில் இதைப் பார்க்கிறார். அதுதான் தனக்கும் பரமாத்மாவுக்கும் இடையே உள்ள உடல் மற்றும் ஆன்மா உறவு. மேற்கூறியவற்றைப் பறைசாற்றும் உபநிடத வாக்கியங்கள்

(அ) ​​தத்வமசி என்றால் மேலே சொன்ன ஸ்வேதகேதுவான “த்வம்” பரமாத்மாவாகிய “தத்”வை ஆன்மாவாகக் கொண்டுள்ளது.

(ஆ) அயம் ஆத்மா பிரம்மம் அதாவது பரமாத்மாவாகிய இந்த பிரம்மன் ஒவ்வொரு பொருளுக்கும் ஆத்மாவாக இருக்கிறார்.

(இ) ஐததாத்ம்யம் ஏதம் ஸர்வம் – லீலா விபூதியில் உள்ள ஒவ்வொரு ஜீவனுக்கும் (ஜீவா) மற்றும் நித்ய விபூதி பரமாத்மா ஆன்மாவாகும்.

(ஈ) சர்வம் கலு ஏதம் பிரம்மம் – ஒவ்வொரு உணர்வும் மற்றும் உணர்வு இல்லாத உயிரினமும் பிரம்மம், அதாவது பிரம்மத்தை ஆத்மா அல்லது ஆத்மாவாக கொண்ட பிரம்மத்மகம்.

மேற்கண்ட கூற்றுகளில் பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இடையே உள்ள ஆன்மா மற்றும் உடல் உறவு பற்றி குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் அவை சமாநிதிகாரண்ய அறிக்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை அபேத ஸ்ருதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சமனாதிகரணத்தின் பொருள் பின்வருமாறு.

இரண்டு வார்த்தைகள் டூ-கெதர் என்று குறிப்பிடப்பட்டு அவை வழக்கில் இருக்கும் போது (சமஸ்கிருதத்தில் விபக்தி என்று அழைக்கப்படுகிறது) பிறகு ஒரு சொல் உரிச்சொல் மற்றும் மற்றொரு சொல் பெயர்ச்சொல் என்று பெயரடை தகுதி பெறுகிறது. ஆன்மா மற்றும் உடல் கோட்பாட்டில் ஆன்மா என்பது பெயர்ச்சொல் மற்றும் உடல் என்பது பெயரடை. பின்னர் அந்த இரண்டு சொற்கள் சமனாதிகாரண்ய சொற்கள் எனப்படும். எனவே மேலே உள்ள உபநிடத கூற்றுகள் ஆன்மா மற்றும் உடல் உறவு மறைமுகமாக உள்ளது.

ஆன்மாவையும் உடலையும் வெளிப்படையாகக் குறிப்பிடும் வேறு சில உபநிடத நூல்களும் உள்ளன. அவர்கள்

(அ)ய: ஆத்மநிதிஷ்டான் ஆத்மந: அந்தர:யம் ஆத்மா நவேதா யஸ்ய ஆத்மா சரீரம்  ய: ஆத்மாநாம் அந்தர: யமயதி சதே ஆத்மா அந்தர்யாமி அம்ருதா:

(பரமாத்மாவைக் குறிப்பிடுவது) ஆத்மாவுடன் (ஜீவாத்மா) வசிப்பவர் மற்றும் ஜீவாத்மா அறியாத ஆத்மாவிலிருந்து வேறுபட்டவர், ஜீவாத்மா என்பது உடல் யாருக்கு அந்தர்யாமி (உள் ஆத்மா) என்பது இதன் பொருள்.

(ஆ) அந்த: ப்ரவிஷ்டா: சாஸ்தா ஜனனம் சர்வாத்மா – பரமாத்மாவாகிய ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு விஷயத்திலும் அந்தர்யாமியாக நுழைந்து ஜீவாத்மாவின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறார். அவர் அனைவருக்கும் ஆத்மா அல்லது ஆன்மா.

மேற்கூறியவற்றைத் தவிர, பரமாத்மா என்பது ஜீவாத்மாவின் அந்தர்யாமி என்று பொருள்படும் வாக்யான வாயாதிகரணத்தின் “அவஸ்திதே: ஏதி காஷா கிருத்ஸ்னா” என்று வாசிக்கப்படும் பிரம்ம சூத்திரம் உள்ளது. எனவே மேற்கூறியவற்றிலிருந்து முக்தாத்மா பரமாத்மாவைப் பிரிக்க முடியாமல் அனுபவிக்கிறது என்பது உறுதியாகிறது.

இந்த பாதத்தில் உள்ள மூன்றாவது அதிகாரம் “பிரம்ம அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த அதிகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு இந்த பாதத்தில் உள்ள முதல் அதிகாரத்துடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது. குணாஷ்டக அவிர்பவம் எனப்படும் பரமாத்மாவை அடைந்தவுடன் முக்தாத்மாவுக்கு எட்டு குணங்கள் மலரும் என்று முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த குணாஷ்டக அவிர்பவம் மட்டுமே மோட்சத்தின் முக்கிய அம்சமா அல்லது தர்மபூத ஞானம் எல்லையற்றதாக மாறுமா அல்லது இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லையா என்பது கேள்வி.

சூத்ரகார முனிவர் பதராயணன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது அவருடைய சீடர்களில் ஜைமினி மற்றும் ஓதுலோமி என்று இரண்டு பேர் அவருக்கு அருகில் இருந்தனர். இறுதித் தீர்ப்பான தனது சொந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்கு முன், மேற்கூறிய இரண்டின் பார்வைப் புள்ளிகளையும் சூத்ரகாரர் வெளிப்படுத்தினார்.

அவர் ஜைமினியிடம் தனது பார்வையை சொல்லும்படி கேட்டபோது, ​​அவர் தனது கருத்தைச் சொன்னார், சூத்திரகாரர் அதை சூத்திர வடிவில் வைத்தார். ஸூத்ரம் “பிரம்மேண ஜைமினி உபன்யாஸாதிப்ய:”. இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், முக்தாத்மாவிற்கு குணாஷ்டக அவிர்பவம் மட்டுமே முக்கிய அம்சம், ஏனென்றால் தஹர வித்யாவில் பிரஜாபதி இந்திரனுக்கு ஆன்மீக அறிவை அளிக்கும்போது ஜீவாத்மா பரமாத்மாவை அடையும்போது குணாஷ்டக அவிர்பவம் இருப்பதாகவும், சத்ய சங்கல்பத்தின் தொடர்ச்சியாக அவர் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. அங்குள்ள பைன் தம்பதிக்கு கைங்கர்யா.

ஔதுலோமி வெளிப்படுத்திய பார்வையானது “சிதி தன்மாத்ரேண ததக்த்மத்வாத் ஏதி ஔதுலோமி:” என்று படிக்கும் ஒரு சூத்திரமாக உருவாக்கப்பட்டது.

முக்தாத்மாவிற்கு அவனது தர்ம பூத ஞானம் விரிவடைந்து எல்லையற்றதாகிறது என்பதே இந்த சூத்திரத்தின் பொருள். அவரது வாதத்திற்கு ஆதரவாக அவர் பிருஹதாரண்யக உபநிடதத்தின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டுகிறார், அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“ஸ யதா சைந்தவ கானா அனந்தர: அபாஹ்ய:

கৃத்ஸ்நாஹ்ரஸா ஜ்ஞாந ஏவঃ ஏவம்வே அரே

அயம் ஆத்மா அநந்தர: அபஹ்ய: கৃத்ஸ்ந:

ப்ரஜ்ஞானகானா ஏவா, விஜ்ஞான கானா ஏவ”

மேற்கூறியவற்றின் பொருள் என்னவென்றால், உப்புக் குவியலில் உள்ளும், புறமும், எல்லாப் பக்கமும் ஒரே சுவை இருப்பது போல, ஜீவாத்மாவின் விஷயத்திலும் அவன் ஞான குணகனாக இருக்கிறான், அதாவது உள்ளேயும், வெளியேயும், புறமும் தர்ம பூத ஞானம் கொண்டவன். அனைத்து பக்கங்களிலும். எனவே இந்தப் பகுதி, தர்ம பூத ஞானத்தின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கிறது. “விஜ்ஞான கானா ஏவ” என்று கூறப்படுவதால், தர்ம பூத ஞானத்தின் எல்லையற்ற தன்மையைத் தவிர வேறு எந்த அம்சமும் முக்தாத்மாவில் இல்லை என்று ஓதுலோமி கூறுகிறார்.

இந்தச் சூழலில் ஜீவாத்மாவுக்கு இரண்டு ஞானங்கள் (அறிவு) இருப்பதைக் கவனிக்க வேண்டும். முதலாவது தாமி ஞானம் என்று அழைக்கப்படுகிறது, அது “நான்”. ஜீவாத்மா வேறு எந்த உதவியும் இல்லாமல் தன்னை உணர்ந்து கொள்கிறது என்பதே இதன் பொருள். பரமாத்மாவின் தர்மம் ஜீவாத்மாவின் தர்மிஜ்ஞானம். இந்த அம்சத்தில் மட்டும் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா இரண்டும் சமம்.

தர்ம புத்க ஞானம் என்பது ஜீவாத்மா, சம்சாரத்தில் இருக்கும் போது பொருட்களை தனது புலன்களின் மூலம் மட்டுமே உணரும் அறிவாகும், மேலும் இது தனது கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகிய ஞானேந்திரியங்கள் மூலம் புலன் உணர்வு (கரண ஜன்ய ஞானம்) என்று அழைக்கப்படுகிறது. சம்சாரத்தில் ஜீவாத்மாவின் தர்ம பூத ஞானத்தின் இந்த அளவு அவரவர் புண்ணிய பாபா கர்மாவைப் பொறுத்து தனிமனிதனுக்கு மாறுபடும். யோகிகளுக்கு, இந்த தர்ம பூத ஞானமானது யோகஜன்ய ஞானம் அல்லது ட்ரை கலிகா ஞானம் (திரைகால என்றால் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்) என்று அழைக்கப்படும்.

பரமாத்மா மற்றும் நித்ய சூரிகளுக்கு இந்த தர்ம பூத ஞானம் எப்போதும் எல்லையற்றது. ஜீவாத்மாவிற்கு அது ஓதுலோமி கூறியது போல் மோட்சத்தில் மட்டுமே எல்லையற்றதாகிறது.

ஜைமினி மற்றும் ஔதுலோமி ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டபின், சூத்ரகாரர் இந்த அதிகாரத்தின் மூன்றாவது சூத்திரத்தில் “ஏவமபி உபன்யாஸத் பூர்வபாவத் அவிரோதம் பாதராயண:” என்று தனது தீர்ப்பை வழங்குகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், ஜைமினி மற்றும் ஔதுலோமி வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை, எனவே ஒரு முக்தாத்மா பிரம்ம குணங்கள் எனப்படும் எட்டு குணங்களைக் கொண்டிருக்க முடியும், அவை பைன் தம்பதிகள் அமர்ந்திருக்கும் முக்தாத்மாவால் ப்ய பர்யங்கா ஏறிய பிறகு மலர்கின்றன. அதே நேரத்தில் அவரது தர்ம பூத ஞானம் (கருத்துணர்வின் அறிவு) எல்லையற்றதாகிறது. எனவே ஒரு முக்தாத்மாவுக்கான மோட்சத்தில் உள்ள தர்ம பூத ஞானம் கரண ஜன்ய ஞானமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் அவர் புலன்கள் இல்லாமல் கூட விஷயங்களை அறிய முடியும். “விஞ்ஞான ஞானேவ” (தர்மபூத ஞானம் மட்டுமே எல்லையற்றதாக மாறும், எட்டு குணங்கள் அல்ல) என்பதை வலியுறுத்துவது ஜீவாத்மா ஜடா அல்ல என்று மட்டுமே அர்த்தம். ஜடா என்றால் உணர்வு இல்லாதது. ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர் மோட்சத்தில் முக்தாத்மாவின் தர்மி ஞானமும் விரிவடைகிறது என்று கூறுகிறார்.

இந்த பாதத்தில் நான்காவது அதிகாரம் “சங்கல்பாதிகரணம்” என்று அழைக்கப்படுகிறது. முக்தாத்மாவைப் பற்றி சாண்டோக்யோபநிஷத் பின்வருமாறு கூறுகிறது.

1) “ஸ: உத்தம புருஷ:- ஸதத்ர பர்யேதி ஜக்ஷாத் க்ரீடன் ராமமான ஸ்த்ரீபிர்வா யனைர்வ நோபஞ்சனம் ஸ்மரன் ஏதம் சரீரம்”.

மேற்கூறியவற்றின் பொருள் பின்வருமாறு. முக்தாத்மா ஒரு உயர்ந்த நபராக (உத்தம புருஷன்) மாறுகிறார். அவர் எல்லா பக்கங்களிலும் இருந்து பரமாத்மாவை அனுபவிக்கிறார், அவர் பைன் ஜோடியை சுற்றி வருகிறார், அதாவது அவர் பிரதக்ஷிணம் செய்கிறார். ஜக்ஷத் என்றால் சாப்பிடுவது அல்லது சிரிப்பது. ஜக்ஷா (பக்ஷா ஹஸனயோ:) என்பது வேர். இங்கு உண்ணுதல் என்பது பொருத்தமாக இல்லை என்று அர்த்தம் பொருந்தாது. சிரிப்பதற்குப் பதிலாக புன்னகை என்று சொல்லலாம். ஏனென்றால் அவர் ரசிக்கும் பிரம்மானந்தம் இதன் வெளிப்பாடாகவே அவர் புன்னகைக்கிறார் என்று சொல்லலாம். கிரீடான் என்றால் விளையாடுதல் அல்லது நடனமாடுதல் என்று பொருள். இவையும் மேற்கண்ட ஆனந்தத்தின் வெளிப்பாடுகளே. ராமமண: என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சி என்று பொருள். மேலே உள்ள மற்ற சொற்களுக்கு நேரடி அர்த்தம் இருக்க முடியாது. முக்தாத்மா பைன் தம்பதிகளுக்கு எப்பொழுதும் மற்றும் எல்லா நேரங்களிலும் எல்லா வகையான சேவைகளையும் செய்கிறார் என்பதே மேற்கண்ட பத்தியின் கூட்டுத்தொகை மற்றும் பொருள்.

 

2)“ஸ: யதி பித்ரி லோக காமோ பவதி

ஸங்கல்பா தே3வ பிதர: ஸுமுத்3ஷ்டந்தி

தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ ভவதி ॥

ஸ: யதி மாத்ரு லோக காமோ பவதி

ஸங்கல்ப தேவ மாதர: ஸமுத்திஷ்டேந்தி” இத்யாதி.

முக்தாத்மா தனது தந்தையர், தாய்மார்கள் மற்றும் தனது முந்தைய பிறவிகளின் மற்ற உறவினர்களைப் பார்க்க விரும்பினால் மற்றும் விரும்பினால், அவர்கள் அவர் முன் தோன்றுவார்கள். ராம அவதாரம், கிருஷ்ண அவதாரத்தின் போது பகவான் ஸ்ரீமன் நாராயணன் தசரதர், வாசுதேவர் மற்றும் பிறரைத் தனது தந்தையாகத் தேர்ந்தெடுத்தது போல், முக்தாத்மாக்களும் இந்த உலகில் ஸ்ரீமன் நாராயணனின் ஒப்புதலுடன் அவதாரங்கள் அல்லது அவதாரங்களை எடுக்கலாம். பின்னர் அவர்கள் தங்கள் சங்கல்பம் அல்லது விருப்பத்திலிருந்து தாய் மற்றும் தந்தையைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த அதிகாரத்தில் ஒரு முக்தாத்மாவின் முந்தைய பிறவிகளின் தந்தை மற்றும் தாய் போன்றவர்களின் தோற்றம் அவரது சொந்த விருப்பத்திற்கு புறம்பாக உள்ளதா அல்லது அதற்கு சிறப்பு உடல் உழைப்பு தேவையா என்பது விவாதத்திற்குரிய தலைப்பு. பூர்வபக்ஷி கூறுகிறது இந்த உலகில் நாம் பார்ப்பது போல் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யத் தயாராக இருக்கும் ஒரு அரசன் உடல் உழைப்பைச் செய்கிறான்.

“சங்கல்ப தேவா தத் ஸ்ருதே:” என்ற சூத்திரத்தில் பூர்வபக்ஷியின் மேற்கண்ட வாதத்தை சூத்ரகாரர் மறுக்கிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், முக்தாத்மா தனது சொந்த விருப்பத்தின் மூலம் சங்கல்பம் செய்கிறார், ஏனெனில் உபநிடதமே “சங்கல்பதேவ பிதர: ஸமுத் திஷ்தந்தி” என்ற பத்தியில் கூறுகிறது மற்றும் கூடுதலாக உடல் முயற்சிகள் தேவை என்று எந்த உபநிடத உரையும் இல்லை. ஒரு காரியத்தை செய்து முடிக்க சங்கல்பத்திற்கு.

இந்த அதிகாரணத்தில் “அத: ஏவ ச அனந்யாதிபதி:” என்று மற்றொரு சூத்திரம் உள்ளது. இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், முக்தாத்மா தனது சொந்த விருப்பப்படி ஒவ்வொரு காரியத்தையும் செய்யும் போது அவர் இனி விதிநிஷேதத்திற்கு ஆளாகமாட்டார். விதி என்பது ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யும்படி கட்டளையிடுவது. நிஷேதா என்பது ஒரு நபருக்கு ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய வேண்டாம் என்று கட்டளையிடுவது. முக்தாத்மா விதி நிஷேதத்திற்கு உட்பட்டால், அவனால் செயல்பட முடியாது, சித்தம் வீணாகிவிடும். சித்தம் என்பது சத்ய சங்கல்பம். அவருடைய சத்ய சங்கல்பம் செயல்படத் தவறினால் அவர் முக்தாத்மாவாக இருக்க மாட்டார். எனவே அனன்யாதி பதி என்றால் சத்ய சங்கல்பம். ஒரு முக்தாத்மாவின் சத்ய சங்கல்பம் அவருக்கு முழுமையான சுதந்திரம் இல்லாததால் பரமாத்மாவின் விருப்பத்திற்கு உட்பட்டது. இந்தச் சூழலில் ஒரு முக்தாத்மா ஸ்வராத் ஆகிறது என்று சாண்டோக்யோபநிஷத் கூறுகிறது. ஸ்வராத் என்றால் முக்தாத்மா புண்ய, பாப கர்மாவிலிருந்து விடுபடுகிறது.

இந்த பாதத்தில் உள்ள ஐந்தாவது அதிகாரம் “அபவ அதிகாரம்” என்று அழைக்கப்படுகிறது. ஒரு முக்தாத்மாவுக்கு உடல் இருக்கிறதா இல்லையா அல்லது அவர் உடலுடன் இருக்க முடியுமா அல்லது உடல் இல்லாமல் இருக்க முடியுமா என்பது விவாதத்திற்கான தலைப்பு. பலவிதமான கைங்கர்யங்களை ஒரே நேரத்தில் செய்வதற்கு பல உடல்கள் தேவை. சூத்ரகாரர் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன் தன் சீடர்கள் இருவரின் கருத்துக்களைப் பெறுகிறார்.

முதலாவதாக, பதரி, உடல் முக்தாத்மாவுக்காக இல்லை என்று கூறுகிறார், ஏனென்றால் உடல் இன்பத்தையும் துக்கத்தையும் அனுபவிக்க வேண்டும், அதாவது புண்ணிய பாப கர்மாவின் பலனை அனுபவிப்பதற்காக. மோட்சத்தில் புண்ய பாப கர்மா இல்லை.

எனவே முக்தாத்மாவிற்கு உடல் இல்லை என்கிறார் பதரி.

பதரியின் பார்வையைக் கொண்ட சூத்திரம் “அபாவம் பதரி: அஹஹி ஏவம்”. அபவம் என்றால் உடல் இல்லை. இரண்டாவது பார்வை ஜைமினியின் கருத்து, முக்தாத்மா பைன் தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் பல வடிவங்களில் கைங்கர்யம் செய்ய எத்தனை உடல்களை எடுத்துக்கொள்கிறது என்று கூறுகிறார்.

இது சாண்டோக்யாவின் உபநிடத உரையின்படி, “ச: ஏகத பவதி, த்ரிதா பவதி, பஞ்சத பவதி, சப்ததா பவதி போன்றவை. அதாவது முக்தாத்மா பகவான் ஸ்ரீமனுக்கு பல வகையான சேவை செய்ய ஒரு உடல், மூன்று உடல்கள், ஐந்து உடல்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அங்கே நாராயணனும் மகாலட்சுமியும். மேலே உள்ள ஸ்ருதியின் (உபநிஷத உரை) ஜீவாவை துண்டு துண்டாக வெட்ட முடியாது என்பதால், இப்படித்தான் இருக்க வேண்டும்.

ஜைமினியின் பார்வையைக் கொண்ட சூத்திரம் “பாவம் ஜைமினி: விகல்ப அமநாத்”. பாவம் என்றால் உடல் இருக்கிறது அல்லது முக்தாத்மாவிற்கு உடல்கள் உள்ளன, ஏனெனில் மேற்கண்ட ஸ்ருதி அப்படிச் சொல்கிறது.

மேற்கூறியவர்களின் கருத்துக்களைக் கேட்டபின், சூத்ரகாரர் தனது தீர்ப்பில் “த்வாதஷாஹ வத் உபாய விதம் பாதராயண: அத:” என்று கூறுகிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் என்னவென்றால், முக்தாத்மா உடலுடன் இருக்க முடியும் என்றும், சத்யாகாவின் உச்சரிப்பைக் காட்டி உடல் இல்லாமல் இருக்கலாம் என்று பதராயணன் கூறுகிறார். சத்ர யாகம் என்று அழைக்கப்படும் ஒரு யாகம் உள்ளது, இது பன்னிரண்டு நாட்கள் செய்யப்படுகிறது, எனவே இது துவாதஷா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யாகம் பல நபர்களால் அல்லது ஒரு நபரால் செய்யப்படலாம். மனித குலத்தின் நலனுக்காக பலரால் நடத்தப்பட்டால் அது சாத்திரம் எனப்படும். சந்ததியைப் பெறுவதற்காக ஒரு தனி நபரால் நடத்தப்பட்டால் அது அஹீனம் எனப்படும். ஒரே யாகம் மனிதகுலத்தின் நலனுக்காக அல்லது சந்ததியைப் பெறுவதற்கான சங்கல்பத்தில் உள்ள வேறுபாட்டின் காரணமாக இரண்டு பெயர்களைப் பெறுவது போல, ஒரு முக்தாத்மா கைங்கர்யம் செய்வதற்கு உடலையோ அல்லது உடல்களையோ சொந்தமாக வைத்திருக்க விரும்புகிறது அல்லது உடல் இல்லாமல் இருக்க விரும்புகிறது. பைன் தம்பதியினரின் மங்களகரமான பண்புகளை (கல்யாண குணங்கள்) அனுபவிப்பது. இறைவன் மற்றும் அவரது துணைவியின் கல்யாண குணங்களை அனுபவிக்க உடல் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முக்தாத்மா கைங்கர்யம் செய்ய முடிவு செய்தால், ஒரு குறிப்பிட்ட கைங்கர்யம் அல்லது பல கைங்கர்யங்களை ஒரே நேரத்தில் செய்வதைப் பொறுத்து அவர் உடல் அல்லது உடல்களை எடுத்துக் கொள்வார்.

அடுத்த சூத்ரம் “தன்வபாவே சந்தியாவத் உபபத்தே:”. இதன் பொருள் ஒரு குறிப்பிட்ட நாளில் முக்தாத்மா உடல் இல்லாமல் கல்யாண குணங்களை அனுபவிக்க முடிவு செய்தால், பரமாத்மாவுக்கு அவரது சேவை தேவைப்பட்டால், பரமாத்மா தனது விருப்பப்படி உடலை அல்லது உடல்களை உருவாக்கி அவரை நினைவுபடுத்துகிறார். இது பரமாத்மா தனது கனவில் ஜீவா அனுபவிக்கும் பொருட்களை உருவாக்குவதைப் போன்றது. பிறகு முக்தாத்மா பகவான் ஸ்ரீமன் நாராயணனால் உருவாக்கப்பட்ட அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கிறார்.

அடுத்த சூத்திரம் “பாவே ஜாக்ரத்வத்”. முக்தாத்மா கைங்கர்யம் செய்வதற்காக தனது உடலையோ அல்லது உடலையோ உருவாக்கும் போது, ​​இந்த உலகில் ஒரு நபர் தனது விழித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு பொருளையும் அனுபவிப்பது போல அவர் மோட்ச ஆனந்தத்தை அல்லது பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறார். ஏற்கனவே கூறியது போல், பரமாத்மா தசரதனையும், வாசுதேவரையும் அவதாரங்களின் போது தந்தையாக உருவாக்குவது போல, முக்தாத்மா பரமாத்மாவின் சங்கல்பத்திற்குள் இருக்கும் அவதாரங்களை எடுப்பதற்காக தந்தையையும் தாயையும் உருவாக்குகிறார்.

அடுத்த சூத்திரம் “பிரதீபாவத் அவேஷ: ததேஹி தர்ஷயதி”. அணு அளவுள்ள ஜீவா எப்படி மோட்சத்தில் பல உடல்களை ஏற்று கைங்கர்யம் செய்ய முடியும் என்ற சந்தேகத்தை போக்கவே இந்த சூத்திரம். ஒரு இடத்தின் ஒரு மூலையில் எரியும் ஒளியானது முழுப் பகுதியையும் ஒளிரச் செய்வது போல ஜீவா (முக்தாத்மா) தனது எல்லையற்ற தர்ம பூத ஞானத்தால் பல உடல்களை ஏற்று கைங்கர்யம் செய்ய முடியும் என்று கூறும் சூத்ரகாரரால் இந்த சந்தேகம் தீர்க்கப்படுகிறது. இதயத்தில் இருக்கும் ஜீவா தனது தர்ம பூத ஞானத்தின் மூலம் முழு உடலின் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகிறது. அதுபோலவே பல உடல்களின் செயல்பாடுகளையும் அவர் தனது தர்ம பூத ஞானத்தின் மூலம் கட்டுப்படுத்துகிறார்.

அடுத்து இன்னொரு கேள்வி எழுகிறது. பரமாத்மாவை அடைந்த பிறகு ஜீவாவுக்கு எந்த உணர்வும் இல்லை என்று ஒரு உபநிடதப் பகுதி கூறுகிறது. அப்படியானால், முக்தாத்மா பரமாத்மாவை அடைந்த பிறகு மோட்சத்தில் எப்படி சர்வஞானமாக (சர்வஞானம் அதாவது தர்ம பூத ஞானம் எல்லையற்றதாக) ஆக முடியும். “ஸ்வப்யாய ஸம்பத்யோ: அன்யதரபேக்ஷம் அவிஷ்கிருதம் ஹி” என்ற சூத்திரத்தில் உள்ள சூத்ரகாரர், மேற்கூறிய உபநிடதப் பகுதி முக்தாத்மாவைக் குறிக்கவில்லை, ஆனால் அது நல்ல தூக்கத்தில் இருக்கும் ஜீவா நிலை அல்லது அவர் இறக்கும் போது இந்த மரண உடலை விட்டு வெளியேறும் நிலையைக் குறிக்கிறது. சுகமான உறக்கத்தின் போது ஜீவன் பரமாத்மாவுடன் மட்டுமே இருப்பான் என்பதும், இறக்கும் போது பரமாத்மா பிரம்ம நாடி மூலம் ஜீவனை நடத்துவதும், இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜீவன் எந்த அறிவும், உணர்வும் இல்லாமல் இருப்பான் என்பதும் இந்தச் சூழலில் கவனிக்கப்பட வேண்டும்.

இந்த பாதத்தில் உள்ள கடைசி அதிகாரம் மற்றும் ஸ்ரீ பாஷ்யத்தில் உள்ள கடைசி அதிகாரம் “ஜகத் வியாபர வர்ஜாதிகர்ணம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த அதிகாரணத்தில், பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் நித்ய சூரிகள் மற்றும் முக்தாத்மாக்கள் எந்தப் பங்கையும் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை சூத்ரகாரம் முற்றிலும் நிராகரிக்கிறது. இது பரமாத்மா அல்லது பரபிரம்மன் அல்லது வெறும் பிரம்மா என்று அழைக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் (அவரது மனைவிக்கும் படைப்பில் பங்கு உண்டு) பிரத்தியேகமான பண்பு. தைத்தரிய உபநிடதம் பிரம்மனை பிரபஞ்சத்தை உருவாக்குபவர், பாதுகாவலர் மற்றும் அழிப்பவர் என்று தெளிவாக வரையறுக்கிறது. இந்த வரையறை அல்லது பிரத்தியேகப் பண்பு வேறு யாருக்கும் பொருந்தாது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களுக்கு ஜகத் வியாபரம் என்று பெயர்.

ஸ்ரீ வேதாந்த தேசிகா ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயசரரின் பரிபூர்ண ப்ராஹ்மனு பவதி காரத்தில் பகவான் ஸ்ரீமன் நாராயணனுடைய பிரத்தியேகமான பதினான்கு பண்புகளை அடையாளம் காட்டுகிறார். ஸ்ரீமன் நாராயணன் மஹாலக்ஷ்மியையும் உள்ளடக்குகிறார். பதினான்கு குணாதிசயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, அவை நித்யா சூரிகள், முக்தாத்மாக்கள் மற்றும் சம்சாரத்தின் அடிமைத்தனத்தில் உள்ள ஜீவர்களுக்கு பொருந்தாது.

1) ஜகத் காரணத்வா – பிரபஞ்சத்தின் காரணம்

2) மோட்ச பிரதத்வா – மோட்சத்தை வழங்குபவர்

3) சர்வ தாரத்வா – லீலா விபூதி மற்றும் நித்ய விபூதி இரண்டையும் ஆதரிப்பவர்.

4) சர்வ நியந்திரத்வா – ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துபவர்.

5) சர்வ ஷேஷித்வா – அனைவருக்கும் எஜமானர்

6) சர்வ சரிரித்வா – உணர்வு மற்றும் உணர்வு இல்லாத அனைத்து உயிரினங்களையும் தனது உடல்களாகக் கொண்டிருப்பதுடன், அவர் அனைத்திற்கும் ஆத்மாவாக இருக்கிறார்.

7) சர்வ சப்தவாச்யத்வா – அனைத்து வார்த்தைகளும் (சப்தாஸ்) அவருடைய பெயர்கள் மட்டுமே.

8) சர்வ வேத வேத்யத்வா – அவர் அனைத்து வேதங்களின் மூலமாகவும் அறியப்படுகிறார் அல்லது அனைத்து வேதங்களும் அவரை மட்டுமே குறிப்பிடுகின்றன.

9) சர்வ லோக சரண்யத்வா – அவர் அனைத்து லோகங்களின் பாதுகாவலர் அல்லது அவர் அனைத்து லோகங்களுக்கும் அடைக்கலம்.

10) சர்வ முமுக்ஷு உபஸ்யத்வா – மோட்சத்தை அடைய விரும்பும் அனைவராலும் தியானிக்கப்படுகிறார்.

11) சர்வ பல பிரதாத்ரித்வம் – தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் உட்பட அனைத்து பலன்களையும் வழங்குபவர்.

12) சர்வ வியாப்தத்வா – ஒவ்வொரு பொருளையும் வியாபித்திருப்பது அல்லது உள்ளடக்கியது.

13) ஞானம், ஆனந்த ஸ்வரூபத்வா – அவரது உள்ளார்ந்த இயல்பு எல்லையற்ற அறிவு மற்றும் எல்லையற்ற பேரின்பம்.

14) லட்சுமி சகாயத்வா – மகாலட்சுமியின் மனைவி.

பூமி நீல நாயகத்வா, ஆதிசேஷ பர்யங்கத்வா, கருட த்வஜத்வா, புண்டரீக க்ஷத்வா, சில கூடுதல் பண்புகள் உள்ளன.

“நிரஞ்சன: பரமம் ஸம்ய முபைத்” (இந்த உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத முக்தாத்மா எல்லா வகையிலும் பரமாத்மாவுடன் சமத்துவம் அடைகிறான்) என்று முண்டக உபநிஷத்தின்படி முக்தாத்மா எல்லா வகையிலும் பரமாத்மாவுடன் சமமாகிறது என்று இந்த அதிகாரத்தின் பூர்வபக்ஷி கூறுகிறது. ஜகத் வியாபாரத்தில் சங்கல்பத்தின் பங்கு இருக்கும். பூர்வபக்ஷியின் இந்த வாதத்தை சூத்ரகாரர் “ஜகத் வியாபர வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத் வச்ச” என்ற சூத்திரத்தில் மறுக்கிறார்.

இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு.

முக்தாத்மாவுக்கு ஜகத் வியாபாரம் இல்லை. ஜகத் வியாபர என்பது அனைத்து உணர்வு மற்றும் உணர்ச்சியற்ற உயிரினங்களின் உள்ளார்ந்த இயல்பு (ஸ்வரூப) தொடர்ச்சியான இருப்பு (ஸ்திதி) மற்றும் செயல்பாடுகளை (பிரவிருத்தி) கட்டுப்படுத்துவதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது பிரபஞ்சத்தின் உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் அழிவு.

தத்வர்ஜம் என்றால் முக்தாத்மாவை மறைத்து சம்சாரத்தை உண்டாக்கிய புண்ணிய, பாப கர்மங்களில் இருந்து விடுபட்டு, ஜகத் வியாபரத்தில் பங்கு இல்லாமல் தனக்கு முக்த ஐஸ்வர்யமான ஸ்ரீ வைகுண்டத்தில் பரமாத்மாவை அனுபவிக்கிறார்.

ஜகத் வியாபரத்தில் அவருக்குப் பங்கு இல்லாததற்குக் காரணம் பிரகாரநாத், அதாவது பிரபஞ்சத்தின் காரணமான பர பிரம்மத்தைக் கையாளும் உபநிடதப் பகுதிகளின் சூழல். பத்திகள் ஆகும்

(அ)யதோவ ஏமாநி ভூதாநி ஜயந்தே, யேந

ஜதாநி ஜீவந்தி, யத் ப்ரயந்தி அபி

சம்வி சாந்தி, தத் விஜிஜ்ஞாஸக்வ தத் ப்ரம்மம்.

பிரபஞ்சத்தைப் படைத்து, அழித்து, மோட்சத்தைத் தருபவன் பிரம்மம், அது அறியப்பட வேண்டியது. இது முக்தாத்மாவிற்கு ஒருபோதும் பொருந்தாத பிரம்மத்தின் பிரத்தியேக வரையறையாகும்.

(ஆ)ஸதேவ ஸௌம்ய ஏதம் அக்ரே ஆஸீத்

ஏகமேவ, அத்விதீயம், ததைக்ஷதா பஹுஸ்யம்.

ப்ரஜா யேயேதி தத் தேஜோ அஸ்ருஜாத்

சிருஷ்டிக்கு முன், சத் என்று அழைக்கப்படும் மனைவி மகாலட்சுமியுடன் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே இருந்தான். கூடவிருந்த ஸ்ரீமன் நாராயணா மற்றும் மகாலட்சுமி இருவருமே தனி ஒருவராகவே இருந்தார்கள், இரண்டாவதாக இல்லை. இந்த நிறுவனம் விரும்பி பூதங்களை உருவாக்கியது.

(இ) ப்ரஹ்மவ ஏதம் அக்ரே ஆசீத் – சிருஷ்டிக்கு முன் ஸ்ரீமன் நாராயணனாகிய பிரம்மன் இருந்தான்.

(ஈ) ஆத்மவ ஏதம் ஒப்புக்கொள் ஆசீத் – ஆத்மா சிருஷ்டிக்கு முன் இருந்த ஸ்ரீமன் நாராயணன்.

(இ) ஏகோ ஹவை நாராயண ஆசீத் – சிருஷ்டிக்கு முன் நாராயணன் மட்டுமே இருந்தான் (நாராயணன் மகாலட்சுமியையும் உள்ளடக்கியது).

மேற்கூறிய பகுதிகள் ஸ்ரீமன் நாராயணனையே பிரபஞ்சத்தின் ஒரே காரணமாகக் கூறுகின்றன. அவர் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்துவது உபநிடதப் பகுதியில் “யா: ஆத்மனி திஷ்டன்” முதலியவற்றில் கூறப்பட்டுள்ளது. (குறிப்பு: இதன் பொருள் முன்பு விளக்கப்பட்டது).

அஸந்நிஹிதத்வாச்ச – மேற்கூறிய எல்லா உபநிஷதப் பகுதிகளிலும் முக்தாத்மாவைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

இந்த அதிகாரத்தில் உள்ள இரண்டாவது சூத்திரம் “பிரத்யக்ஷா உபதேசத் ந ஏதி சேத் ந அதிகாரிக மண்டலஸ்த உக்தே:” என்று கூறுகிறது.

ஜகத் வியாபரத்தில் முக்தாத்மாவின் பங்கு உள்ளது என்று கூறுவதற்கு இரண்டு உபநிடதப் பகுதிகள் இருப்பதாக பூர்வபக்ஷி இன்னும் கூறுகிறது. இது மேலே உள்ள சூத்திரத்தில் எதிர்க்கப்படுகிறது.

அவருடைய கருத்து உபநிடதப் பகுதி

(அ) ​​ஸ: ஸ்வரத் பவதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமாச்சரே பவதி.

(முக்தாத்மா முழுமையான சுதந்திரத்தைப் பெறுகிறார், மேலும் அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்).

(ஆ) எமன் லோகன்னி காமருப்யனு சஞ்சரன்

முக்தாத்மா அனைத்து லோகங்களிலும் சுதந்திரமாக பயணிக்கிறது, மேலே குறிப்பிட்டுள்ள லோகங்களின் மீதான அவரது முழுமையான கட்டுப்பாட்டின் காரணமாக ஜகத் வியாபத்தில் முக்தாத்மாவின் பங்கைக் குறிக்கிறது.

மேலே உள்ள சூத்திரத்தில், பிரத்யக்ஷ உபதேசத்ன எதிச்சேத் என்ற வார்த்தைகள் ஜகத் வியாபரத்தில் உள்ள முக்தாத்மாவை நேரடியாகக் குறிப்பிடுகின்றன, மேலும் முக்தாத்மாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூற முடியாது.

இது “ந அதிகாரிகா மண்டலஸ்தா உக்தே:” என்ற வார்த்தையில் மறுக்கப்படுகிறது.

பூர்வபக்ஷியின் வாதம் சரியல்ல, ஏனென்றால் ஆதிகாரிக மண்டலத்தில் (ஹிரண்ய கர்ப லோகங்கள், பரமாத்மாவால் இயக்கப்பட்ட பதவிகளை வகிக்கும் நான்கு தலை பிராமணன், எனவே ஆதிகாரிகா என்று அழைக்கப்படும்) முக்தாத்மா அந்த லோகங்களில் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கிறார். பகவான் ஸ்ரீமன் நாராயணனின் கட்டுப்பாடு அல்லது அதிகார எல்லைக்குள். இந்த கட்டுப்பாடு பரமாத்மாவின் விபூதி என்று அழைக்கப்படுகிறது. (குறிப்பு: நம் கருத்துப்படி ஸ்வராத் என்றால் புண்ய பாப கர்மாவிற்கு கட்டுப்படாதது).

இந்த அதிகாரத்தில் மூன்றாவது சூத்திரம் “விகாரவர்த்திச்ச ததாஹி ஸ்திதிம் ஆஹா”. ஹிரண்ய கர்ப்ப லோகங்கள் போன்றவற்றில் முக்தாத்மா இன்பங்களை அனுபவிக்கும் பட்சத்தில் சம்சாரத்தில் உள்ள ஜீவாத்மாக்கள் போல் இன்பம் வரம்பிட வேண்டும் என்று பூர்வபக்ஷி கூறுவதே மேற்கண்ட சூத்திரத்திற்குக் காரணம். பூர்வபக்ஷியின் இந்த வாதம் மேலே உள்ள சூத்திரத்தில் மறுக்கப்படுகிறது.

விகார ஆவர்த்தி என்றால் பிறப்பு இறப்பு இல்லாதது. எனவே பரமாத்மா தானே விகாரவர்த்தி. அவர் அனைத்து விகாரங்களும் (மாற்றங்கள்) இல்லாதவர் மற்றும் களங்கமற்றவர். அவர் அனைத்து கல்யாண குணங்களின் களஞ்சியமாக இருக்கிறார். அவர் சவிபூதி ஆவார், இது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து லோகங்களும் படைப்பு மற்றும் அழிவின் விகாரத்திற்கு உட்பட்டது, அவருடைய முழு கட்டுப்பாட்டில் உள்ளது. முக்தாத்மாவுக்கு மேற்கூறிய லோகங்களின் மீது கட்டுப்பாடு இல்லை ஆனால் பரமாத்மாவின் விபூதிக்குள் அவற்றைப் பார்ப்பதால் அங்குள்ள சுகங்களை மட்டுமே அனுபவிக்கிறான். இது உபநிடதப் பகுதிகளிலிருந்து தெளிவாகிறது

(அ) ​​யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மிந்

அத்ருஷ்யே, அனந்த்ம்யே, அனிருக்தே

அநிலயநே அபயம் ப்ரதிஷ்டம் விந்ததே.

அத்ரிஷ்யே – பரமாத்மாவின் பயத்ம ஸ்வரூபத்தை நமது நிர்வாணக் கண்களால் உணர முடியாது. இதன் மூலம் அவர் உணர்ச்சியற்ற பொருள் அல்ல.

அநாத்மியே – பரமாத்மா தனது பயத்ம ஸ்வரூபத்தில் சரீர பிரகாரம் இல்லாமல் இருக்கிறார்.

அனிருக்தே – பயத்ம ஸ்வரூபத்திற்கு ஜாதி, மதம் அல்லது நிறம் இல்லை, எனவே அவரை தேவ, மனுஷ்ய, திரியாக் (விலங்கு) அல்லது ஸ்தாவர (உணர்வற்ற பொருள்) என்று அழைக்க முடியாது. இதன் மூலம் அவர் முக்தாத்மா இல்லை.

அணிலயனே – அவன் ஆதரவில்லாமல் இருக்கிறான், அதாவது எல்லா விஷயத்தையும் ஆதரிக்கிறான், தன்னையும் ஆதரிக்கிறான். இதன் மூலம் அவர் நித்யா சூரி இல்லை.

ப்ரதிஷ்டம் – மேற்கண்ட குணாதிசயங்களைக் கொண்ட பரமாத்மாவைத் தொடர்ந்து தியானிக்கத் தகுதியானவர்.

மேலே விளக்கப்பட்ட பரமாத்மாவை தியானிப்பவர் தியானிக்கும்போது, ​​அவரை அடைந்து மீண்டும் சம்சார பயம் இல்லாமல் இருப்பார்.

(இ) ரஸம்ஹி ஏவ அயம் லப்த்வா ஆநந்தி பவதி.

– ரசம் என்றால் பரமாத்மா தானே. முக்தாத்மா பரமாத்மாவை அடைந்து ஆனந்தி எனும் நித்திய ஆனந்தத்துடன் ஆகிறது.

(ஈ) தஸ்மின் லோக: ஸ்ரீத: ஸர்வே – பரமாத்மாவில் எல்லா லோகங்களும் உள்ளன.

ஜகத் வியாபரத்தில் முக்தாத்மாவின் பங்கு இருப்பதற்கான சாத்தியத்தை மேற்கண்ட பகுதிகள் தெளிவாக நிராகரிக்கின்றன.

இந்த அதிகாரத்தில் நான்காவது சூத்திரம் “தர்ஷயதாஷ ஏவம் ப்ரத்யக்ஷ அனுமனே”.

இந்த சூத்திரத்தில், ஜகத் வியாபரத்தில் முக்தாத்மாவின் பங்கு இருப்பதை நிராகரித்த சூத்ரகாரர், பகவத் கீதையில் உள்ள பல உபநிடதப் பகுதிகளையும் ஸ்லோகங்களையும் மேற்கோள் காட்டி, ஜகத் வியாபரத்தில் பரமாத்மாவுக்கு மட்டுமே முழுமையான மற்றும் தீர்க்கமான பங்கு உண்டு என்பதை தெளிவாகவும் பிரத்தியேகமாகவும் நிறுவுகிறார் (சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறார்). .

சூத்திரத்தில் உள்ள தர்ஷயதா என்ற வார்த்தையின் அர்த்தம் நிறுவுகிறது அல்லது காட்டுகிறது.

பிரத்யக்ஷா என்பது உபநிடதப் பகுதிகள் அல்லது ஸ்ருதியின் நூல்கள்.

அனுமனே என்றால் ஸ்மிருதியில் இருந்து வரும் ஸ்லோகங்கள், இந்த விஷயத்தில் ஸ்ரீ பகவத் கீதை. ஸ்ருதி நூல்கள் ஆகும்

(அ) ​​பீஷ ஸ்மாத் வத: பவதே, பீஷோ தேதி சூர்யா: பிஷா ஸ்மத் அக்னி ஷ இந்த்ராஷ- மிருத்யு: தவதி பஞ்சம:” – பரமாத்மாவை நோக்கிய பயத்தின் காரணமாக, காற்று வீசும் கடவுள், சூரியன் பிரகாசிக்கிறார், சந்திரன், அக்னி மற்றும் யமா தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்தந்த கடமைகளை செய்கிறார்கள்.

(ஆ) ஏதஸ்யவ அக்ஷரஸ்ய ப்ரஷாஸனே கர்கி ஸூர்ய சந்த்ரமாஸ வித்ரு தௌ திஷ்டதா:- சூரியனும் சந்திரனும் அந்தந்த நிலையில் உள்ளன, ஏனென்றால் அவை பகவான் ஸ்ரீமன் நாராயணனாகிய அக்ஷரனின் கட்டளைக்குள் உள்ளன.

(இ) ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூதாதி பதி: ஏஷ பூத பல: ஏஷசேது: விதாரண: ஏஷாம் லோகனம் ஆசம் பேதயா. (ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துபவர், எல்லா உயிரினங்களையும் காப்பவர், சம்சாரத்திற்கும் மோட்சத்திற்கும் பாலமாக இருக்கிறார், ஒன்று மற்றொன்றுடன் கலக்காதபடி அனைத்து லோகங்களையும் ஆதரிப்பவர் அவர் உயர்ந்தவர்).

ஸ்மிருதிகள் (பகவத் கீதையின் ஸ்லோகங்கள்).

அ) மாயாதக்ஷேண ப்ரகிருதி: ஸுயதே சசராச்சரம்.

(கீதா சார்யா கூறுகிறார்: “என் விருப்பத்தாலும், நான் பிராகிருதத்தின் அந்தர்யாமியாக இருப்பதாலும், ஜீவாத்மாக்களின் புண்ணிய பக்க கர்மாவைப் பொறுத்தும் இந்த உலகம் உருவாகிறது.

b)விஷ்டப்யஹம் இদம் கৃத்ஸ்னம் ஏகாம்ஷேண ஸ்திதோ ஜகத்.

கீதாச்சார்யா கூறுகையில், என்னுடைய மகத்துவத்தின் ஒரு அணுவானது முழு பிரபஞ்சத்தையும் தாங்கி நிற்கிறது.

முக்தாத்மாவின் குணாஷ்டகம் அவரது உள்ளார்ந்த இயல்பு (ஸ்வபாவிகா குணம்) என்றாலும், அது பரமாத்மாவின் விருப்பத்திற்கு உட்பட்டது. ஜீவன் பிறப்பு இறப்புக்கு உட்படாமல் நித்தியமாக இருப்பது பரமாத்மாவின் நிரந்தர சித்தத்திற்கு உட்பட்டது.

இந்த அதிகாரத்தில் உள்ள ஐந்தாவது சூத்திரம் “போக மாத்ரா சாம்ய லில்ங்கச்சா”.

இந்த சூத்திரத்தில், பரமாத்மா மற்றும் முக்தாத்மாவைப் பொறுத்தமட்டில் சமத்துவம் இன்பத்தின் அம்சத்தில் மட்டுமே உள்ளது என்றும் பரமாத்மாவின் பிரத்யேக செயல்பாடாக இருக்கும் ஜகத் வியாபரத்தில் இல்லை என்றும் சூத்ரகாரர் கூறுகிறார்.

முக்தாத்மா பரமாத்மாவின் உண்மையான மற்றும் உள்ளார்ந்த தன்மையை அனுபவிக்கிறது. “ச: அஷ்னுதே ஸர்வான் கமான் ஸஹ பிராமண விபச்சிதா” என்ற உபநிடத உரையிலிருந்து இந்தக் கருத்து தெளிவாகிறது. ஸ்ரீ வைகுந்தத்தில் பரமாத்மாவை அடையும் உபாசகர் அல்லது பிரபன்னா இறைவனையும் அவருடைய அருளும் பண்புகளையும் அனுபவிக்கிறார் என்பது இதன் பொருள்.

எனவே முக்தாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே உள்ள பரம சம்யம் (சமத்துவம்) என்று கூறும் ஸ்ருதி உரை முக்தாத்மாவுக்கும் ஜகத் வியாபரத்துக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் விளங்க வேண்டும்.

545 வது பிரம்ம சூத்திரம் மற்றும் கடைசி பிரம்மா சூத்திரம் இந்த அதிகாரத்தில் உள்ள கடைசி சூத்திரம் பின்வருமாறு கூறுகிறது.

“அனவிருத்தி: சப்தத் அனவ்ரித்தி சப்தத்”.

சாரிரக மீமாம்ச சாஸ்திரம் அல்லது பிரம்ம மீமாம்ச சாஸ்திரத்தின் முடிவைக் குறிக்க சூத்திரம் இரண்டு முறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுள்ளது. மீமாம்ச சாஸ்திரத்தில் ஒரு சூத்திரத்தில் ஒரு வார்த்தையை இரண்டு முறை திரும்பத் திரும்பச் சொன்னால் அது ஒரு அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது என்று ஒரு மரபு உள்ளது. சூத்திரமே திரும்பத் திரும்பச் சொன்னால் அது சாஸ்திரத்தின் முடிவு.

சூத்ரகாரர் ஒரு சந்தேகத்தைத் தீர்க்க இந்த சூத்திரத்தை உருவாக்கினார்.

சந்தேகம் வருமாறு:-

ஒரு முக்தாத்மாவால் ஸ்ரீ வைகுண்டத்தில் எல்லையற்ற மற்றும் நித்திய ஆனந்தத்தை அடையும் முக்த ஐஸ்வர்யம் பரம புருஷரின் (பகவான் ஸ்ரீமன் நாராயணனின்) விருப்பத்திற்கு உட்பட்டால், பரம புருஷர் முக்தாத்மாவை எங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டும் என்று கேட்க வாய்ப்பு அல்லது சாத்தியம் உள்ளது. அவர் அங்கு வந்தார். அதாவது சம்சாரத்தில் மீண்டும் ஒரு பிறவி எடுத்து துன்பம் அடைவது. இது மீண்டும் சம்சாரத்திற்கு வருவது அவ்ரித்தி அல்லது புனரவிருத்தி எனப்படும்.

இந்த சந்தேகம் இந்த சூத்திரத்தில் நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்த சூத்திரத்தின் பொருள் பின்வருமாறு. அனவிருத்தி – திரும்பி வராததால்

சப்தாத் – சாண்டோக்யோபநிஷத்தின் 8வது அத்தியாயத்தில் உள்ள இறுதிப் பகுதி, முக்தாத்மா சம்சாரத்திற்கு திரும்ப வராது என்று கூறுகிறது. இந்த சூத்திரத்திற்கு ஸ்ரீ பகவத் ராமானுஜரின் விளக்கம் பின்வருமாறு:-

பகவான் ஸ்ரீமன் நாராயணன் மாசற்ற (நிகில ஹேய பிரத்யானிகா) மங்களகரமான பண்புகளின் களஞ்சியமாக (கல்யாணீகதனம்), பிரபஞ்சத்தின் காரணத்தைப் போலவே (ஜகத் ஜென்மதி கரணம்) அவர் அனைத்து உணர்வு மற்றும் உணர்வு இல்லாத உயிரினங்களிலிருந்து (சம்ஸ்தா வஸ்து விலக்ஷணம்) எல்லையற்ற பரிவு கொண்டவர். தனக்குச் சமமானவர்களோ அல்லது அவருக்கு உயர்ந்தவர்களோ இல்லாத (நிரஷ்ட சாம பயதிக சம்பவனா) தனக்குக் கீழ் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு (அஷ்ரித வாத்சல்ய ஏகஜலதி) கருணையின் (பரம கருணிகா) அவதாரம், பர பிராமணர் என்றும் பரம புருஷர் என்றும் அழைக்கப்படும் (நிரஸ்த சம பயதிக சம்பவனா) உபநிடதங்களில் உண்ணப்படுகிறது. பிரம்ம பிதான: பரம புருஷ, அஸ்தீதி சப்தாத் அவகம்யதே).

அதுபோலவே வர்ண ஷ்ரம தர்மம் எனப்படும் அறக்கடமைகளை அனுதினமும் செய்துவிட்டு, தியானத்துடன் இறைவனை வழிபட்டவர்களிடம் மகிழ்ந்து பகவான் ஸ்ரீமந் நாராயணர் இருக்கிறார் என்பதும் உண்மை.

(ஏவம் ஆஹ: ஆஹ: அனுஷ்டியமான வர்ணாஷ்ரம தர்மானு க்ரிஹித தது பாசனரூப தத் ஸமாராதன ப்ரீத) பழங்காலத்திலிருந்தோ அல்லது ஆரம்பிக்காமலோ திரட்டப்பட்ட வரம்பற்ற புண்ணிய மற்றும் பாப கர்மாவின் பிடியில் இருந்து அவர்களை விடுவித்து, முடிவில்லாத மற்றும் முடிவில்லாத பேரின்பத்தை அடையச் செய்தல். ) ஸ்ரீ வைகுந்தத்தில் உள்ள உள்ளார்ந்த இயல்பு அவர்களை மீண்டும் சம்சாரத்திற்கு வர அனுமதிக்காது என்பது உபநிடதப் பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது.

(உபாஸநேன அநாதிகால ப்ரவ்ரித்த அனந்த துஷ்க்ருத கர்ம சஞ்சய ரூப அவித்யம் வினிவர்த்ய ஸ்வ யதாத்ம்ய அனுபவ ரூப அநவாதிக அதிஷய ஆனந்தம் ப்ரபய்ய புனர்ண வர்த யதி இதி சப்தத் அவகம்யதே).

தியானம் செய்பவர் அல்லது பிரபன்னன் இறக்கும் வரை இவ்வுலகில் தங்கியிருப்பவர் பிரம்ம லோகத்தை (வைகுண்டத்தை) அடைவார், திரும்ப வரமாட்டார், திரும்பி வரமாட்டார் என்பது உபநிஷத வாசகத்தின் பொருள். புனர வர்த தி எத்யாதிகா). (குறிப்பு: வார்த்தை இரண்டு முறை திரும்ப வராது என்பது பிரம்ம வித்யா அல்லது உபநிடதத்தின் முடிவைக் குறிக்கிறது.)

பகவான் கீதாச்சாரியார் அதே வரியில் கூறுகிறார், உபாசனையோ, பிரபத்தியோ செய்த மகாத்மாக்கள், உன்னதமான என்னை அடைந்த பிறகு, இந்த சம்சாரத்திற்கு மீண்டும் வரமாட்டார்கள்.

சதுர்முக பிரம்ம லோகத்திலிருந்து லோகங்களில் உள்ள ஜீவாத்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு உட்பட்டவை. ஓ! அர்ஜுனா அவர்கள் என்னை ஸ்ரீ வைகுண்டத்தில் அடைந்த பிறகு மீண்டும் இங்கு பிறக்க மாட்டார்கள்.

(பகவத ஸ்வயமேவ உக்தம் – மாமுபேத்ய புனர்ஜன்ம துகாலயம் ஆஷாஷ்வதம், நாப்நுவந்தி மஹாத்மனா: ஸம்ஸித்திம் பரமாம் கதா:

ஆப்ரஹ்மபுவநாத் லோகஹ் புனரவர்த்தின: அர்ஜுனா – மாமுபேத்ய து கவுந்தேய புனர்ஜனம நவித்யதே ஏதி).

மேலும், புண்ய பாப கர்மாவிலிருந்து விடுபட்டு, தர்ம பூத ஞானம் என்ற எல்லையற்ற அறிவைப் பெற்ற முக்தாத்மா, தனது ஒரே நிலையான விருப்பமாகிய பரபிரம்ம பகவான் ஸ்ரீமந் நாராயணனின் இன்பத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடனும் அர்ப்பணிப்புடனும் இருப்பவர். பரமாத்மாவின் எல்லையற்ற இன்பத்தைத் தவிர வேறெந்த ஆசையும், வேறு எந்த ஆசையையும் நிறைவேற்றுவதற்கு அவன் எந்த முயற்சியும் எடுக்காதபோது, ​​அவன் இந்த சம்சாரத்தில் மறுபிறவி எடுப்பதில் சந்தேகம் எழவே இல்லை.

(நச்ச வுச்சின்ன கர்ம பந்தஸ்ய அ சம்குச்சித ஞானஸ்ய பரப்ரஹ்மனே பவ ஸ்வபாவைகஸ்ய ததேக ப்ரியஸ்ய அநவாதிகதி சயானந்தம் ப்ராஹ்மனு பவதா: அன்யா அபேக்ஷா த தர்தா அ ஸம்பவத் புனர் அவ்ரித்தி சங்கா).

அதே சமயம் தனக்கு மிகவும் பிரியமான ஞானியான முக்தாத்மாவைப் பெற்ற பிறகு அசைக்க முடியாத சித்தம் கொண்ட பரம புருஷரான ஸ்ரீமன் நாராயணனை மீண்டும் சம்சாரத்திற்கு அனுப்ப நினைக்க மாட்டார்.

(குறிப்பு: இங்கு மிகவும் அன்பான ஞானி என்பது பரமாத்மாவை எப்போதும் தனக்கு ஆதரவாகவும், ஊட்டமளிப்பவராகவும், ஆழ்ந்த இன்பப் பொருளாகவும் கருதுபவர் என்று பொருள்).

(நச்ச பரம புருஷ சத்ய சங்கல்ப: அத்யர்த ப்ரியம் ஞானினம் லப்த்வா கதாசித் அவர்த யிஷ்யதி).

பகவான் கீதாச்சார்யா ஒரு ஞானியிடம் நான் மிகவும் பிரியமானவன், ஞானியும் எனக்கு மிகவும் பிரியமானவர் என்று கூறுகிறார். என்னிடம் பக்தி செய்பவர்கள் மிகவும் தாராளமானவர்கள். ஆனால் ஞாநியை எனது ஆதரவாளராகவே கருதுகிறேன். நான் இல்லாமல் ஞானி இருக்க முடியாது என்பதால் அவர் என்னை அடையும் உயர்ந்த பொருளாக கருதுகிறார். ஞானி பல பிறவிகளுக்குப் பிறகு என்னை அடைந்து ஒவ்வொரு பொருளையும் வாசுதேவாக நினைக்கிறார்.

(ப்ரியோஹி ஜ்ஞாநிந அத்யர்தம், அஹம் மம சச்ச ப்ரிய:

உதாரா: ஸர்வ ஏவைத் கணீது ஆத்மாவ மேமதம்

அஸ்থிதঃ ஸஹி யுக்தம மாமேவ அநுத்தமம் গதிம் ॥

বஹூநாம் ஜன்மனம் அந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபদ்யதே

வாசுதேவ: ஸர்வம் ஏதி ஸமாஹாத்மா ஸுதர்லப: ஏதி).

சூத்திரத்தின் மறுபிரவேசம் இந்த சாரிரக மீமாம்ச சாஸ்திரத்தின் முடிவைக் குறிக்கிறது மற்றும் இந்த சாஸ்திரத்தில் உள்ள ஒவ்வொரு விஷயமும் பொருத்தமானது அல்லது சரியானது.

எனவே மிகவும் புனிதமான உரை ஸ்ரீ பாஷ்ய மேற்கூறியவற்றுடன் முடிவடைகிறது.

ஏற்கனவே கூறியது போல், ஸ்ரீ பாஷ்யம் சமன்வய அத்யாயா, அவிரோதா அத்யாயா, சாதனா அத்யாயா மற்றும் பலா அத்யாயா என்று நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

இந்த நான்கு அத்தியாயங்களும் ஸ்ரீமன் நாராயணனின் நான்கு கல்யாண குணங்களைக் குறிப்பிடுகின்றன, அவை கீழே உள்ளன.

காரணத்வம் – பிரபஞ்சத்தின் காரணம்.

அபத்யத்வம் – அவர் பிரபஞ்சத்தின் காரணமாக இருப்பதில் பொருத்தமற்ற அல்லது ஆட்சேபனைக்குரிய எதுவும் இல்லை.

உபயத்வம் – அடையும் பொருள்

உபேயத்வா – அடையும் பொருள்.

பதினாறு பாதங்களில் குறிப்பிடப்பட்ட கல்யாண குணங்களும் முன்பு குறிப்பிடப்பட்டுள்ளன.

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் அதிகார சாராவளியில் இந்த அதிகாரங்களில் உள்ள ஸ்ரீமன் நாராயணனின் 156 அதிகாரங்களும் கல்யாண குணங்களும் உள்ளன.

ஸர்வேஷாம் ஸமஸ்தா ஸந் மங்গலாநி ভவந்து ।

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து

————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியா

 

ஸ்ரீ சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும்–ஸ்ரீ எஸ்.கோகுலாச்சாரி ஸ்வாமிகள்-

July 7, 2023

1. ஸ்ரீஸூதர்சன ஜெயந்தி

ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீசக்கரத் தாழ்வார் அவதாரத் திருநாள்,
ஸ்ரீஸூதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும்.
இவரை தரிசித்தாலே பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும்.
ஸூ என்றால் நன்மை, புனிதம் என்று பொருள்.
தரிசித்தால் நன்மையும் செல்வமும் தரக் கூடியவர்
என்பதால் இவருடைய திருநாமமே ஸூ +தர்சனம் = ஸூ தர்சனம் ஆயிற்று.
ஆயுதங்களில் திருக்கையில் இருந்து நீங்கி, எதிரியை வீழ்த்திவிட்டு திரும்பவும்
பெருமாள் திருக்கரம் வந்து சேரக்கூடிய ஒரே ஆயுதம் இந்த சக்கரமே.

2. ஐந்து ஆயுதங்களில் முக்கியமானவர்

பெருமாளின் ஐந்து ஆயுதங்களில் முக்கியமானவர் ஸ்ரீசக்கரம் என்னும் ஸ்ரீஸூதர்ஸனர்.
எம்பெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்!
அவர் தம் வலத் திருக் கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீசுதர்ஸனர், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறார்.
அவர் அருளால் சித்திக்காதது எதுவுமில்லை.
பெருமாளுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், சக்கரத்தாழ்வாரின் பெயரை,
தன்னுடைய திருநாமமாகக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். ‘
‘ஆழியான்’’ என்று பெருமாளுக்குப் பெயர்.

சக்கரத்தாழ்வாரை ஆறின் மடங்குகளான எண்ணிக்கையில் 6,12,24,48 என்று வலம் வருதல் நலம்.
சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தீயவர்களை அழிக்கும் போது மறச் சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்),
நல்லவர்களுக்கு அறச் சக்கரமாகவும் (தர்மச் சக்கரம்) இருப்பது, இதன் சிறப்பு.

3. ஸ்ரீஸூதர்சனருக்கு தனிச் சந்நதி

சில கோயில்களில் ஸ்ரீஸூதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு.
திருவரங்கம், மதுரைக்குப் பக்கத்தில் திருமோஹூர் திருத்தலங்களில் ஸ்ரீஸூதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு.
திருமோகூரில் எழுந்தருளியுள்ள காள மேகப் பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர்.
சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம்.
அனைத்து பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர்
இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார்.

மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது
இங்கு மட்டுமே. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும்,
மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதிதேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று நேத்ரங்களுடன்,
சிரசில் அக்னிக்ரீடம் தாங்கி, பதினாறு கரங்கள்-பதினாறு திவ்யாயுதங்களுடன்
ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.
சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மர் காட்சி தருகிறார்.

4. திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் தம்முடைய முதல் பதிகத்திலேயே,
‘‘ஆழியான் அருளால், எனக்கு நாராயண நாமம் கிடைத்தது.
அந்த நாராயண நாமத்தால் மற்ற எல்லாம் கிடைத்தன’’ என்று பாடுகின்றார்.

வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெ விசும்பணவும்,
பன்றியா யன்று பாரக கீண்ட பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

5. ஸூதர்சன ஆழ்வார்

எம்பெருமானிடத்திலே ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை ஆழ்வார்கள் என்று அழைப்போம்.
ஸூ தர்சனர் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அகலாத பக்தி கொண்டு ஆழ்ந்து இருப்பதால்
இவரை ஸூதர்சன ஆழ்வார் என்று அழைப்பார்கள்.
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு.
அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள்
சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை
இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள்
சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.
இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது.
இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர்.
ஸ்ரீமகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை
ஸ்ரீஸூதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார்.
உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா ஸூதர்ஸனமே’ என்கின்றனர்.
எவ்வித அழுத்தமும் இல்லாத ஸூன்யப் பாதையில் செல்வதால் ஸூதர்சன சக்கரத்தால்
எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறதுஸ்ரீ விஷ்ணு புராணம்.

6. வெற்றி வீரர்

ஆயிரம் கோடி ஸூரிய பிரகாசம் உடையவர். வெற்றி வீரர்.
பெருமாள் நினைத்ததை நிறைவேற்றிக் கொடுப்பவர்.
அடியார்களை அனவரதமும் ரஷிப்பவர்.
சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர,
ஸூதர்ஸனர்,
சக்கர பாணி,
சக்கர ராஜன்,
நேமி,
திகிரி,
ரதாங்கம் என்றும் போற்றுவர்.
சக்கரத்தானை திருவாழி யாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.
இவருக்கு ‘‘ஹேதி ராஜன்” என்ற திரு நாமமும் உண்டு.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்று போற்றுகிறார்.
அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.

7. பெரியாழ்வார்

ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார்.
திருமழிசையாழ்வார் சங்கு சக்கரத்தோடு பெருமாள் நிற்கக் கூடிய அழகை,
‘‘வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்” என்ற பாடலில் குறிப்பிடுகின்றார்.
தமது திருச்சந்த விருத்தத்திலும் நான்முகன் திருவந்தாதியிலும் சக்கரத்தாழ்வாரைப் போற்றுகின்றார்.

தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்
ஆருமறியார் அவன் பெருமை, – ஓரும்
பொருள் முடிவு மித்தனையே எத் தவம் செய் தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால்.

“அருள் முடிவது ஆழியான் பால்” என்று பாடி,
அப்படிப்பட்ட “ஆழியான் பெருமையை யார் அறிவார்?” என்றும் போற்றுகின்றார்
ஆழி என்கின்ற சொல்லுக்கு சக்கரம் என்று ஒரு பொருள்.
கடல் என்று ஒரு பொருள்.
இரண்டுமே எம்பெருமானுக்கு சேர்த்தியாக இருப்பது.
பெரியாழ்வார் ‘‘வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’’ என்று இவரை வாழ்த்துகிறார்.
மேலும் “என்னையும் என் உடமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு” என்று குறிப்பிடுகிறார்.
ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில், “சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’’ என்றே பெருமாளை பாடுகிறார்.
நம்மாழ்வார் ‘‘சுடராழி வெண்சங்கேந்தி வாராய்” என்று பாமாலை சூட்டுகிறார்.
ஸ்ரீ தேசிகன் ‘‘ஸூதர்ஸந அஷ்டகம்’’ என்ற ஸ்தோத்ர மாலையிலும் இவரை போற்றி யுள்ளார்!

8. ஒவ்வொரு அவதாரத்திலும்…

எம்பெருமானுடைய ஒவ்வொரு அவதாரத்திலும் ஏதோ ஒருவகையில் இவரும் அவதாரம் செய்து
நேரடியாகவோ மறைமுகமாகவோ எம்பெருமானுடைய சங்கல்பத்தை நிறைவேற்றுபவர்.
மகா விஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து ஸூதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது,
எதிரிகளை அழித்ததும் தெரியாது,
மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்து கொள்வதும் தெரியாது.
எல்லாமே கணப் பொழுதில் அரங்கேறி விடும்.
ஒரு வேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரமம் மிக்கவனாக இருந்தால்,
ஸூதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்.
அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்!
இதை ‘ரன்ஸகதி’-ரதாங்கதி என்பர்.

ஸூதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை
ஸூதர்சனச் சக்கரத்தின் வடிவம் சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக் கூடியது.
அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.
மத்ஸ அவதாரத்தில் மீனாக அவதரித்த பகவானின் பல்லாக இருந்தவர்.
கூர்மாவதாரத்தில் மந்திர மலையை ஸூதர்ஸனம் கொண்டே பெயர்த்தெடுத்தனர்;
எம்பெருமானுடைய
வராக அவதாரத்தில் அவருடைய கோரைப் பற்களாக அவதரித்தவர்.
நரஸிம்ஹ அவதாரத்தில் திரு நகங்களாக இருந்தவர்

9. இரணியனை சம்ஹாரம் செய்தவர்

நரசிம்ம அவதாரத்தில் பகவான் இரு கைகளில் கூர்மையான நகங்களாக இருந்து இரணியனை சம்ஹாரம் செய்தவர்.
வாமனாவதாரத்தில் சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்திய தர்பையாக இருந்தவர்.
இதை பெரியாழ்வார் இப்படி உறுதி செய்கிறார்.

‘‘மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்,
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய,
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே என்று பாடுகிறார்

பரசுராம அவதாரத்தில் கூர் மழுவாக இருந்தவர்.
ராமாவதாரத்தில் ஜுவாலா மூர்த்தியாகி பாணங்களில் புகுந்து எதிரிகளை சுட்டெரித்தவர்.
துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து, விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி,
துர்வாசரின் கர்வத்தை அடக்கியது சக்கரமே.

10. சிசுபாலன் வதம்

பூரணமான அவதாரமான கண்ணன் அவதாரத்தில் நினைத்தபோது வந்து நின்றவர்.
பிரத்யட்சமாகவே காட்சி தந்தவர்.
எட்டாம் நாள் போரில் கண்ணன் வகுத்தும்
13-ம் நாள் போரில் துரோணர் வகுத்ததும்
சகட சக்கர வியூகங்களே.
மகாபாரதத்தில் சிசுபாலன் வதம் சக்கரத்தால் தான் நடந்தது.
பீஷ்மரின் வேண்டுகோளுக்கிணங்க சக்கரக் கையனாக யுத்த களத்தில் காட்சி தந்தார்.
அதைப் போலவே ஜெயத்ரதனை அழித்திட, சக்கரத்தால் ஸூரியனை மறைத்தார்.
இப்படி கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யட்சமாக எம்பெருமானோடு இருந்தவர் சக்கரத்தாழ்வார்.

11. கஜேந்திரனைக் காக்க

ஆதி மூலமே என்றழைத்த கஜேந்திரனைக் காக்க
எம்பெருமான் திருக் கரத்திலிருந்து சீறிக் கிளம்பி காத்தது
சக்கரத் தாழ்வார் தான்!

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கரா வதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப் புள் ளூர்ந்து சென்று நின்றாழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே.

மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே, புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு போய்
ஒரு நீர் நிலையில் இறங்கியது கஜேந்திரன் என்கிற யானை. தனது துதிக்கையை உயரத் தூக்கிக்
கூச்சலிடும்படியாக முதலையானது அவ்யானையின் காலைத் கௌவிக்கொண்டது.
அந்த யானையினுடைய மன வருத்தம் தீரும்படி கருடனை வாகனமாகக் கொண்டு,
பொய்கைக் கரையிலே எழுந்தருளி, அங்கே சக்கரத்தை முதலையின் மீது பிரயோகித்த பெருமா
தேன் மாறாத சோலைகளை யுடைய திருவல்லிக்கேணியில் கண்டேன்-என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

12. அம்பரீஷனை

துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து விஷ்ணு பக்தனான அம்பரீஷனை காப்பாற்றி
துர்வாசரின் கர்வத்தை அடக்கியது சுதர்சன சக்கரம்தான்!
`நாராயணீயம்’ முப்பத்து மூன்றாவது தசகம் அம்பரீஷ மன்னரின் வரலாற்றைக் கூறுகிறது.
அம்பரீஷன். நாராயணனின் பரம பக்தனாகவும், சிறந்த அரசனாகவும் இருந்தான்.
ஏகாதசி விரதத்தைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்து வந்தான்.

ஒருமுறை, ஏகாதசி விரதம் முடிந்த மறுநாள் துவாதசி யன்று, துர்வாச முனிவர் அம்பரீஷனைச் சந்திக்க வந்தார்.
துர்வாசரை தன்னோடு உணவு உண்ண அழைத்தான் அம்பரீஷன்.
நீராடி விட்டு வருவதாகச் சென்றார் துர்வாசர்.
வெகு நேரம் அவர் திரும்பவில்லை.
உரிய நேரத்தில் விரதத்தை முடிக்காவிட்டால், தெய்வக் குற்றம் ஆகிவிடுமே என்று அம்பரீஷன் தவித்தான்.
மற்ற முனிவர்கள் அறிவுரைப்படி சிறிது துளசி தீர்த்தத்தை பருகி துர்வாசருக்காகக் காத்திருந்தான்.

அந்த வேளையில் வந்த துர்வாசர், தான் வரும் வரை பொறுக்காமல் விரதத்தை
முடித்துக் கொண்ட அம்பரீஷனைப் பலவாறு ஏசினார்.
கோபத்தின் தலையில் ஏற தன்னிலை மறந்து, தன்னுடைய தலைமுடியில் ஒன்றை எடுத்து
அம்பரீஷனை நோக்கி வீசி எறிந்தார் துர்வாசர்.
அந்த முடி கொடிய பூதமாக மாறி, அம்பரீஷனை கொல்லப் பாய்ந்து வந்தது.
தன்னுடைய பக்தனைக் கொல்லவரும் சக்தி வாய்ந்த பூதத்தை அழிக்
தன்னுடைய ஸூதர்சன சக்கரத்தை ஏவினார் ஸ்ரீமந் நாராயணர்.

ஸ்ரீசக்கரம் பூதத்தையும் கொன்று துர்வாசரையும் துரத்தியது.
இதனால் பயந்து போன அவர் வைகுண்டத்தை அடைந்து, திருமாலின் பாதத்தைப் பற்றினார்.
‘போட்ட இடத்தில தேடு. அம்பரீஷன் மன்னித்தால் மட்டுமே ஸ்ரீசக்கரம் சாந்தியாகும்’ என்று திருமால் கூறினார்.
அதன்படி அம்பரீஷனை சரண் அடைந்தார் துர்வாசர்.

13. எந்த தீய சக்தியையும் அழிக்க வல்லவர்

ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் சேவித்து சந்நதி வலம் செய்தால்,
நமக்கு நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்டலட்சுமிகளையும், எட்டு திக்குகளையும்
வணங்கிய பலனுடன், பதினாறு வகையான பேரருளும் கிட்டும்.
உலகில் உள்ள எந்த தீயசக்தியையும் எதிர்த்து அழிக்கவல்லவர் இந்த மஹாசுதர்ஸனர்!
மந்திர, தந்திர, யந்திர, அஸ்திர, சஸ்திர ஆகிய அனைத்தையும் அழித்து
நல்லோரை துயரிலிருந்து காக்கவல்லவர் மஹாசுதர்ஸனர்.
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும்.
அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால்,
அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்னைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார்.

14. நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும்

ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால்,
நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
அவர் அவதார தினத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும்.
அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம்
தரிசிக்கும் போது அவருடைய காயத்திரி மந்திரம் சொல்வது சிறப்பு.

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தன்னோ: சக்ர ப்ரசோதயாத்

15. பல்வேறு தத்துவங்களை எடுத்துக் காட்டுகின்றது

இந்தச் சக்கரம் என்பது பல்வேறு தத்துவங்களை எடுத்துக் காட்டுகின்றது.
யோக சாஸ்திரத்தில் நம் உடம்பில் ஆதாரமாக ஆறு சக்கரங்கள் இருப்பதாக சொல்லுகின்றார்கள்.
இதிலே ஆன்ம உணர்வு பெற்று எம்பெருமானை சாட்சாத்காரம் செய்ய வேண்டும் என்று சொன்னால்,
இந்த சகஸ்ராரம் என்கின்ற சக்கரத்திற்குச் செல்ல வேண்டும்.
சக்கரம் என்பது ஒரு புள்ளியில் தொடங்கி அதே புள்ளியில் முடிவது.
சக்கரத்தைப் பொருத்தவரை அதனுடைய மையத்திலிருந்து சக்கரத்தின் தூரம் (ஆரம்)
எல்லா இடங்களிலும் ஒரே தூரத்திலே இருக்கும்.
தொடங்கிய புள்ளியே முடிவாகும்.
முடிவான புள்ளியே தொடக்கமாகவும் இருப்பது சக்கரத்தின் தத்துவம்.
ஆனால், எங்கே தொடக்கம் எங்கே முடிவு என்பதுதான் யாருக்கும் தெரியாது.

இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்.
வாழ்க்கைப் பயணத்தின் ஒரே மாதிரி எதுவும் இருந்தது இல்லை.
எந்த சரித்திரமும் ஒரு உச்சிக்குச் சென்று பிறகு வீழ்ச்சி அடைந்து விடும்.
எந்த வீழ்ச்சியும் அதுல இருந்து ஒரு உச்சிக்குச் சென்று விடும்.
சக்கரத்தின் புள்ளிக்கு கீழேதொட்டு மறுபடி சுழலும்போது அது உச்சிக்குச் சென்று மறுபடி இறங்கும்.
சகட யோகம் என்பார்கள். நிலையற்ற நிலை.
அது தானே பெரும்பாலானவர்க்கு வாழ்க்கை.
உச்சிக்குச் செல்வதும் கீழே இறங்குவதுமாக இருந்தால் தான் சக்கரம் சுழல்வது என்று பொருள்.

16. ஜோதிடத்தில் சுதர்சனர்

12 ராசிகள் இருக்கட்டும், கிழமைகள் இருக்கட்டும், ஒரு நாளின் நேரமாக இருக்கட்டும்,
எது முடியுமோ அங்கே இருந்துதான் தொடக்கம்.
அந்த நாளின் முடிவும் அடுத்த நாளின் தொடக்கமும் ஒரே புள்ளிதான்.
நம்முடைய உடம்பும் அப்படித்தான்
ஒவ்வொரு நிமிடமும் செல்கள் அழிகின்றன. புதிய செல்கள் பிறக்கின்றன.

இவை இரண்டும் நடந்தால்தான் ஒரு மனிதன் உயிரோடு இருக்கின்றான்; இயங்குகின்றான் என்று பொருள்.
ஆனால் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை
அதைப் போலவே சக்கரம் வேகமாகச் சுழலுகின்ற பொழுது நீங்கள் சக்கரத்தை உற்று கவனித்தால்
அதனுடைய சுழற்சி உங்கள் கண்களுக்கு தெரியாது
அது நிற்பது போலவே தெரியும்
அதைப் போலவே இந்த வாழ்க்கையும் வேகமாக சுழல்வதை நாம் உணர்வதில்லை.

17. சக்கரத்தின் தத்துவம்

ஜனனமும் மரணமும்கூட ஒரு சக்கரத்தைப் போலத்தான்.
ஆதிசங்கரர் புனரபி ஜனனம் புனரபி மரணம் பாடினார்.
ஒரு மனிதன் தூங்கப் போகும் போது அவன் விழித்து இருப்பதில்லை விழித்திருக்கும் பொழுது அவன் தூங்குவதில்லை
ஆனால் இவை இரண்டுமே அவன் வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன
அவன் கனவு காண்கின்ற பொழுது அது நினைவாக இருப்பதில்லை.
அவன் நினைவில் இருக்கின்ற பொழுது அவன் கனவு காண்பதில்லை.

இவை இரண்டும் இரண்டு புள்ளிகள் என்று சொன்னாலும்கூட,
ஒரு புள்ளியின் தொடக்கத்திலேயே அடுத்த புள்ளியும் பொருந்தி இருக்கிறது,
அதுதான் சக்கரத்தின் தத்துவம்.
உறக்கத்தின் முடிவு விழிப்பு. விழிப்பின் முடிவு உறக்கம்.
திருவள்ளுவர் இதை மிக அழகாகச் சொல்லுவார்.
மரணம் கூட தத்துவத்திற்கு உட்பட்டதுதான்.
உறங்குவது போல சாக்காடு
உறங்கி விழிப்பது போல பிறப்பு என்று மிக அழகாகச் சொல்லுவார்.
இந்த சக்கரத்தின் உடைய தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால் வாழ்க்கை குழப்பமின்றி இனிதாக இருக்கும்.

18. சுழலச் செய்பவன் இறைவன்

எல்லாவற்றையும் இயக்குபவன் எம்பெருமான்.
சக்கரம் எப்பொழுதும் தானாகச் சுற்றுவதில்லை.
அதைச் சுழலச் செய்வதற்கு ஒரு ஆற்றல், ஒரு மையப்புள்ளி, ஒரு அச்சாணி, வேண்டும்.
அதை சுழலச் செய்பவன்தான் இறைவன்.
அண்ட சராசரங்கள் அனைத்தும் சுழன்று கொண்டே இருக்கின்றன என்றுதான் விஞ்ஞானமும் சொல்லுகின்றது.
இயக்கம் சுழற்சி இல்லாது போனால் அவை இல்லை என்று பொருள்.
நட்சத்திரங்களை எடுத்துக் கொ
ஸூரியனை எடுத்துக் கொள்ளுங்கள்.
அண்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
எதை எடுத்துக் கொண்டாலும் அந்தரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கின்றன.
காரணம் அதற்கென்று ஒரு விசையை எம்பெருமான் கொடுத்திருக்கின்றான்.

19. லயம், பிரளயம்

விசை குறைகின்றபோது மறுபடியும் அவன் விரலிலே வந்து அமர்கின்றது.
மறுபடியும் இருக்கும் வரை அது காத்திருக்கிறது.
இதைத்தான் நாம் தத்துவத்தில் லயம், பிரளயம் என்று சொல்லுகின்றோம்.
சக்கரத்தின் சுழற்சி வேகம் குறைகின்ற போது ஏதோ ஒரு புள்ளியில் – ஆதாரத்தில் போய் தான் இறங்க வேண்டும்.
அப்பொழுதுதான் மறுபடியும் அது இயங்க முடியும். சொல்ல முடியும்.
அந்த ஆதாரம்தான் ஸ்ரீமன் நாராயணன்.

20. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே

ஸ்ரீமன் நாராயணன் கையில் இருக்கக்கூடிய சக்கரம்தான் சக்கராயுதம்.
அவன் ஆட்டுவிக்கும் போது அது ஆடுகிறது.
அது ஆடுகின்றபோது உலக உயிர்கள் ஆடுகின்றன; இயங்குகின்றன.
இது சக்கரத்தின் இயக்கம்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளுகின்ற பொழுது நம்முடைய ஆன்மா விழிப்பு அடைகிறது.
எவன் சுழற்றினானோ அவனைக் கண்டு கொள்ளுகின்றது. அவன் யார் என்பதை உணர்ந்து விடுகின்றது.
அந்த ஞானத்தை தருவதுதான் இந்த சக்கரம்.
தர்சனம்-ஞானம்–.-ஸூதர்சனம் என்றால் நல்ல ஞானம் அதாவது மெய்ஞ் ஞானம் அல்லவா?

21. ஆழியான் அவனே…

பெருமாளும் சக்கரமும் ஒன்றே.
சக்ரத்தாழ்வார் நிற்கும் நிலைக்கு… ‘‘ப்ரத்யாலீடம்’’ என்று பெயர்!!
இடது திருவடியை முன்புறம் நீட்டி, வலது திருவடியை பின்புறம் சுருக்கி வைத்துக் கொண்டு நிற்கும் நிலையைப் ஆர்த்திருக்கலாம்.
அதற்காகத்தான் பின்புறம் கண்ணாடி வைத்திருக்கிறார்கள்.
சக்ரத்தாழ்வாரின் பின்புறத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி இருப்பார்.!
முன்புறம் சக்கரத்தாழ்வார் மனித உருவத்தில் இருப்பர்.
பின்புறம் நரஸிம்ஹராக இருப்பர்.
முன்னே. நின்ற திருக்கோலம் அல்லது வேகமாக ஓடும் கோலத்தில் இருப்பார்.

பின்னே வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இருப்பார்.
இரண்டும் ஒரே தத்துவமே!
நரசிம்மர் தமது நான்கு திருக்கரத்திலும் சக்ரமே வைத்திருப்பார்.!
இருவரும் நமக்கு வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுப்பதிலும்,
துன்பங்களைப் போக்குவதிலும் ஒருவராக இருப்பார்கள்.
ஈருருவம் ஒன்றை இசைந்து என்று இந்தக் கோலத்தைச் சொல்லலாம்.

22. பிரளயத்தில் உலகைத் தாங்குகிறார்

ஸ்ரீமந் நாராயணனுக்கு இரண்டு சக்திகள் உண்டு.
1. இச்சா சக்தி (விருப்பம்)
2. க்ரியா சக்தி (செயல்)
இச்சா சக்தியாகத் திகழ்பவள் அகலகில்லேன் என்று அவன் மார்பில் உறையும் ஸ்ரீமஹாலட்சுமி தாயார்!
க்ரியா சக்தியாகத் திகழ்பவர் தான் ஸ்ரீசுதர்சனத்தாழ்வார்!
எம்பெருமானின் நினைப்பதை நிறைவேற்றுபவர் சக்கரத்தாழ்வார்!
ஸூதர்சனமே எல்லாவற்றிற்கும் ஆதாரம்!
பிரளய காலத்தில் எம்பெருமான்
இதனை லயம் என்பார்கள்.
உயிர்கள் அழியாத அந்த நிலையில் இந்த சித்தும் அசித்தும் மஹாராத்ரி என்ற ஸங்கல்பத்தால் தாங்கப்படுகிறது!
மஹாராத்ரி தரம் தான் ஸூதர்சனர்.

23. ஸூதர்சன சக்கரத்தில் பல வகைகள்

ஸூதர்சன சக்கரத்தில் பல வகைகள் உண்டு.
இரண்டு அரங்கள் கொண்டது. உஷஸ் சக்ரம்!
மூன்று ஜ்ஞான ஸ்வரூபமாக இருப்பது உதய சக்ரம்.
ஆறு அரங்கள் கொண்டது விஷ்ணு சக்ரம்!
எட்டு அரங்கள் கொண்டது நாராயண சக்ரம்!
32, 100 ஆரங்களும் உண்டு!
இது தவிர ஐச்வர்ய சக்ரம், மஹாசக்ரம், மஹா சுதர்சன சக்ரம், ஸஹஸ்ரார சக்ரம் என்றெல்லாம் உண்டு!
இந்த மஹா ஸூதர்சன சக்ரமானது, 12 அரங்களுடன் இருக்கும்!
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் வீற்றிருக்கும் இடமானது ஆயிரம் அரங்களுடன் கூடிய
எம்பெருமானின் சங்கல்பமான ஸ்ரீ ஸூதர்சனத்தால் தாங்கப் படுகிறது!!!

24. ஸூதர்சன ஜ்வாலா

சக்கரம் கோடி ஸூரிய பிரகாசமாக ஜொலிக்கும்.
அதன் ஜிவாலைக்கு “சௌதர்ஸ்ரீநி ஜ்வாலா!” என்று பெயர்!
சக்கரத்தாழ்வாரின் தலை நெருப்பு போல ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
பாதங்கள் சக்கரத்தைப் போல சுழன்று அருள் செய்ய எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கும்.
ஸூதர்சன ஜ்வாலையை த்யானித்தாலே நம்முடைய விருப்பங்கள் நிறைவேறும்
இவரது அவயவங்கள்… அரம்! அக்ஷம்! நாபி! நேமி!
சக்ரத்தாழ்வாரை ஆராதனை செய்யலாம். த்யானம் செய்யலாம்.
அவரை. ஹோமங்களினாலும், பீஜாக்ஷரங்களினாலும் துதிக்க நம் கொடுமையான துயர்கள் எல்லாம் போய்விடும்!

சக்ரத்தாழ்வாரின் கிரணங்கள் அஜ்ஞானமாகிய நம் பாவத்தைப் போக்கி விடும்!
குடைகளில் கம்பிகள் போல சக்ரத்தில் இருக்கும் அரங்களை தியானிக்க
நமக்கு வாக்கு பலிதமும் கவி கேள்விகளில் பாண்டித்துவமும் கிடைக்கும்.
எதிர்மறை எண்ணங்களை அகற்றி, நம் மனதை நல்ல விஷயங்களில் ஈடுபடச் செய்வர்!
அடியார்களோடு இருக்கும்போது….எம்பெருமானைத் தவிர வேறு சிந்தனைகள் நம்மை அண்டாது!
அவரது ஆராதனைகள் நம் ஸம்ஸாரத்தில் உள்ள பாபங்களை எல்லாம் போக்கி விடும்!
ஞானத்தைக் கொடுக்கும்!
ஸூதர்சன வழிபாடு நல்ல வம்ச வ்ருத்தியையும், ஆயுள் ஆரோக்ய அஷ்ட ஐச்வர்யங்களையும்,
நோயற்ற வாழ்வையும் கொடுக்கும்!

25. சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்?

ஸூதர்ஸனரின் பின்புறம் யோக நரசிம்ம மூர்த்தியைக் காணலாம்.
இவரை ஸூதர்ஸன நரசிம்மம் என்பர்.
பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததாலும்
கருடருடன் வராத காரணத்தாலும்
இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்ப
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லி விட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.

அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.
நாளையென்பது நரசிம்மருக்கு கிடையாது என்பர்.
துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய
சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது மிகச் சிறப்பு.
இதன் அடிப்படையில் தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருப்பார்.

26. சக்ரத்தாழ்வார் ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்வதன் மூலம் சக்கரத்தாழ்வாரின் பரிபூரண அருளைப் பெறலாம்.

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜன வல்லபாய ஓம் பராய பரம புருஷாய பரமாத்மனே!
மம பர கர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாத ப்ரதி வாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா ஸூதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரி வ்ருதாய ஸர்வ திக் க்ஷோபன
கராய ஹும் பட் பர ப்ரஹ்மணே ஸ்வாஹா

மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும்
எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது.
நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து
நமக்கான தடைகளை யெல்லாம் தகர்த் தருள்வார் சக்கரத்தாழ்வார்.

27. சக்கரத்தாழ்வார் பற்றி ஜோதிட ரகசியங்கள்!

பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார்
திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்.
சங்கு, சக்கர, கதா பாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக் கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார்.
ஆனால், சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு.
ஸ்ரீ பெரியாழ்வார் வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்றும்
ஸ்ரீ தேசிகனும் ஸூதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றி யுள்ளார்.

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின் போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து
சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் ஸூதர்சனர்.
ராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க
கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், ஸூதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்.

ஸூதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார்.
காசி நகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, `நானே உண்மையான வாஸூ தேவன்’ என்று
பௌண்டரக வாஸூதேவன் என்ற வலிமை மிக்க மன்னன் கூறி வந்தான்.
கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தா
கருடன் மேல் ஏறிச் சென்ற கண்ணன் ஆழியினால் அவனை வென்றான்.

28. ஜோதிடத்தில் சக்கரத்தாழ்வார்

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும்.
செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும்
செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார்
சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரத்தினை குறிக்கும் செவ்வாயின் சக்கரத்தாழ்வாருக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும்.

செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட ஸ்ரீசக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம்
மற்றும் ஸ்வரூபம் என்பதால் புதனின் காரகத்தையும் கொண்டிருக்கின்றார்.
ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால்
நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்னைகளை
சந்தித்து வருபவர்கள் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபடுவது,
ஸூதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வது,
ஸூதர்சன ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும்.
மேலும் புற்று நோய் போன்ற உயிர்க் கொல்லி நோய் உடையவர்கள்
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரண பயம் போகும்.

29. ஸூதர்சன உபாசனை

ஸூதர்ஸன உபாஸனை மிகவும் சக்தி வாய்ந்தது.
இவரை எந்திர ரூபத்தில் வழிபடும் முறையும் உள்ளது.
ஸூதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும்.
போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும்.
எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது.
பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர்.
பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தைப் போக்கிக் காப்பவர் ஸூதர்சனர்.

ஸ்வாமி தேசிகன் இயற்றியுள்ள ஸூதர்ஸன அஷ்டகம் பலராலும் ஜபிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூர நாராயண ஜீயரின் ஸுதர்ஸன சதக பாராயணமும் மிகவும் சக்தி வாய்ந்தது.
இவற்றைப் பாராயணம் செய்தும்,ஸூதர்சனர் சந்நதியில் நெய் விளக்கேற்றியும்,
பலமுறை வலம் வந்தும் சுதர்சனரின் அருளைப் பெறலாம்.
சிவன் கோயில்களில் சிவாம்சமான பைரவரை போன்றே விஷ்ணுவின் அம்சமான சக்கரத்தாழ்வார்
நமது சகல துன்பங்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

30. நவக்கிரகங்களின் அனுக்கிரகம்

பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்களுக்குப் பதிலாக, பெருமாளையும் சக்கரத்தாழ்வாரையும்
தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களின் அனுக்கிரகம் கிடைத்துவிடும் என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரம்
புதனின் வீடான கன்னி மற்றும் துலா ராசியில் வருவதால்
சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு
சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம்.
ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில்,
சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக் கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ ஹனுமத் விம்சதி /ஸ்ரீ ஏக முக ஹனுமத் கவசம்- / ஶ்ரீ ஹனுமத் ஸ்தோத்ர-ஸ்ரீ வ்யாஸ தீர்த விரசிதம்–

July 7, 2023

கலியுகாதி 4610-விபவ வருஷம் மாசி ஸ்வாமி திருவவதாரம்

பிதா மஹஸ் யாபி பிதா மஹாய தாதேத்ய மந்த்ர கஞ்சிது வந புவி துஷித தோய பிந்தும் யயாஸே
புராய மாஹ தாதேதி பகவான் வேங்கடேஸ்வர

பூரி ஸ்ரீ சைல பூர்ணஸ்ய தஸ்ய தேஹிமே தாதா பானீயமிதி ப்ராஹ்ய மீஸ்வர
வேங்கடேசஸ் ததஹ தஸ்ய தாதாசார்யா பிதா பவத்

இந்த ஸ்வாமி தனியன்
ஸ்ரீ சைல பூர்ண குல வாரிதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ குரு வர்ய பாதாப்ஜ ப்ருங்கம்

ஜேயோ குணாம்பு நிதிம் ஆஸ்ரித பாரி ஜாதம்
ஸ்ரீ தாதயார்ய மந கம் சரணம் ப்ரபத்யே

———–

காஞ்சீபுரத்திற்கு அருகில் ஐயங்குளம் என்று இந்நாட்களில் வழங்கப் பெறும் ஐயங்கார் குளம் என்ற சிற்றூரில்
மிகப் பெரிய குளக் கரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீமத் ராம பக்த ஹனுமானைப் பற்றி –
16நூற்றாண்டில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ காஞ்சி தேவாதிராஜன் ஸந்நிதி நிர்வாஹகரான ஸ்ரீ லஷ்மீ குமார தாதாசார்ய ஸ்வாமிகள்
அருளிச் செய்த இந்த ஸ்துதி நூல் சென்னைப் பல்கைலக் கழக ஓாியண்டல் research magazine 1948-49ல்
இந்த ஸ்லோகங்கள் வெளியிடப் பட்டுள்ளன-

குணாபிராமம் இந்திரா குமார தாதா வாரிதி
ப்ரஸித்திமாத் ரமா தடாக தீரசீம்நி மாருதிம்
முதாதி ருஹ்ய மாதவோ வ்ருஷாசலஸ்தல அதிபதி
ப்ரகல்பதே நிகாம மாத்ர பால நாய தேஹி நாம்-1

குணங்களால் அழகியவரும், லஷ்மீ ஸரஸ் என்னப்பட்ட ஸ்ரீஐயங்கார் குளத்தின் கரையில் உறைபவருமாகிய
ஸ்ரீ ஹனுமானின் மேல் திருமலை எம் பெருமான் ஸ்ரீ மாதவன் ஏறி எழுந்து அருளி
ஸ்ரீ வேங்கடாசலத்தை விட மேலான மகிழ்வுடன் இங்கு உலகில் உள்ளோரைப் பாது காக்க அமைந்துள்ளார்

ஆதி ருஹ்ய ரகூத் வஹோ ஹரிம் ப்ராக்
சிஷாம் அக்ருதா துநா து சோயம்
க்ருத தார்கா ஸமுத்ர தீர கேளிம்
தமதிஷ் தயா தநோதி தின ரக்ஷணம்–2-

முன்பு ஸ்ரீராமாவதார காலத்தில் இந்த ஹனுமானின் மேல் எழுந்து அருளி இருந்து
இலங்கையில் எதிாிகளை அழித்தார் எம் பெருமான்,
அவரே இப்போது ஸ்ரீதாத தேசிகனால் அமைக்கப் பெற்ற
குளக் கரையில் எளியவர்கைளக் காக்க எழுந்து அருளி உள்ளார்

கர்மா நுருதய வ்ருஷ பூப்ருதி யா கரோதி
ந்ர்நாம் ஹிதாநி ச து தந் நிரபேஷ ஏவ
யத் ஸர்வமிஷ் தமிஹ புஷ்யாதி வேங்கடேச
தத் வைபவம் கில ரமாத்மஜ தாத ஸிந்தோ–3-

திருமலையில் உறையும் எம்பெருமான் அவரவர் செய்த நல்வினை தீவினைகளுக்கு தக்கபடி பயன் அருள்கிறார்
ஆனால் அவரே இங்கு ஐயங்குளத்தில் வேண்டிய நற் பயன்களைஏ அருள்கிறார்
இது ஸ்ரீ தாதாச்சார்யரின் வைபவமே

krIDAsaraH kimapi tAtasamudra nAma
lakshmyAH prasannalaghu SItalamarpayantyAH |
anyadvidheyamanavekshya sutAnamushyAH
prItyai murAriravati plavagAdhirUDhaH ||–4-

ஸ்ரீ ஹநுமத் வாஹனத்தில் இங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான் ,
தாதா ஸமுத்ரம் என்ற பெயருள்ள
இக் குளக் கரையில் எதையும் எதிர்பாராமல் ஸ்ரீலஷ்மியின் குமாரர்களான நம் போன்றோரை –
பெரிய பிராட்டி யாாின் ப்ரீதிக்காகவே காத்து அருள்கிறார் –

SrISailapUrNamavati sma ghaTAmbu hrshTo
yaH pUrvamanjanagirau sa pumAnidAnIm |
sthitvA samIrabhuvi pAti ramAkumAratAtAmburASimudito janamaindireyam ||–5

திரு வேங்கட மா மலையில் முன்பு பெரிய திருமலை நம்பிகள் அருளிய தீர்த்தத்தால் மகிழ்வெய்திய
திரு வேங்கட முடையான்,
இப்போது ஐயங்குளத்தின் கரையில் வீற்று இருந்து லஷ்மீ குமாரர்களான நமது ரக்ஷணத்தைச் செய்து அருள்கிறார்

hariH purA mAmadhiruhya dAruNam
cakAra karmeti samIra janmanaH |
Sucam nirAkartumivASritaH sa tam
Subham nrNAm sauti ramAsarastaTe ||-6

இங்குள்ள ஹனுமான், ”முன்பு ராமாவதார காலத்தில் அடியேன் மேல் ஏறி நின்று கொடுமையான
யுத்தம் செய்து அரக்கர்களை அழித்தார்.
ஆனால் இப்போது – ஐயோ ! இப்படி அழித்தோமே !” என்று
வருத்தம் தீர இந்த ஐயங்குளக் கரையில் மக்களை அருள் பாலிக்கிறார்.

SaureH ramAtanaya tAta samudratIre
bhAvastaTAdapi bhavAtmajapushkariNyAH |
santanvate hi purushAH samadarSino’pi
prAyeNa sUnushu nijeshvapi pakshapAtam ||–7-

திரு வேங்கடமுடையானுக்குத் திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ் கரிணியை விட
இந்த ஐயங்குளம் உயர்ந்தது என்கிற எண்ணம் ஏன் எனில்
லஷ்மியின் குமாரர் ஏற்படுத்தியது இக் குளம்,
லஷ்மியோ எம்பெருமானின் திருத்தேவியார்
தன் மக்களிடத்தில் பெற்றோருக்கு எப்போதுமே பக்ஷ பாதம் உண்டே !

SlAghyatarakshIrAbdhi SrItAtasamudrayoriyAnbhedaH |
nidrAti tatra nityam SrIpatiranukUlamatra jAgarti ||–8-

உயர்ந்தவை களான திருப் பாற்கலுக்கும் இந்த ஐயங்குளத்துக்கும் இதுவே விசேஷம்,
திருப் பாற் கடலில் எம் பெருமான், பிராட்டியுடன் துயில் கொள்கிறார். இங்கு விழிப்புடன் உள்ளார்.

phaNisarasI taTabhagAt adhiko lakshmIsaras taTAbhogaH |
gajavaradaH kila tasmin krIDati hariratra sarvavaradAyI ||–9-

காஞ்சீபுரம் ஸ்ரீ வரதனின் அனந்த ஸரஸின் கரையைவிட இந்த ஐயங்குளத்துக்குப் பெருமை அதிகம்.
கஜேந்தர வரதர் அங்கு விளையாடுகிறார்.
இக் கோவிலில் எல்லோரு க்கும் எல்லா வகையான வரங்களையும் அளிக்கிறார்.

rAmacandrodayArambhe yaH suvelAtivartanam |
cakre samudrastam vande SrIsarastIra pAvanim ||–10-

சந்த்ரோதயம் ஆகும் நேரத்தில் கடல் பொங்கி வரும்
அதே போல் ஸ்ரீ ராமச்சந்த்ரனின் உதய காலத்தில்
(ஸ்ரீ ராமருக்கு வளர் பிறை போல் வளர்ச்சி ஏற்பட்ட போது ) எந்த ஹனுமான் மிகப் பெரிய உருவில்
வளர்ந்து ஸுவேவ மலையைக் கடந்து கடலைத் தாண்டி னாரோ – அவரே இந்த ஐயங்குளக் கரையில் விளங்குகிறார்.

taTasImani tAtasindhu bandhoramitam krIDati bhAgyamanjanAyAH |
akarot sahasA yadakshaSikshAm
niyamenaiva nijena bAhudhAmnA ||–11

ஸ்ரீ தாதாசார்யர் ஏற்படுத்திய கடைலப் போன்ற இக்குளக் கரையில் – அஞ்சனா தேவியின் பாக்யமே
உரு எடுத்து வந்ததைப் போன்றுள்ள ஸ்ரீ ஹனுமான் விளை யாடி வருகிறார்.
இவர் முன்பு அக்ஷ குமாரன் என்ற ராவணனின் மகனைத் தமது புஜ பலத்தால் அடக்கி அழித்தார்-

namata ramAkamalAkara laharI parivAha saraNi vAstavyam |
hari sArvabhauma mAnata bharaNodyata SauribhAra dhaureyam || -12

எம் பெருமானைத் தமது தோள்ள்களில் தாங்கி நிற்குமவரும்,
ஸ்ரீ லஷ்மீ ஸரஸ் என்கிற ஐயங்குளக்கரையில் உறைபவருமான குரங்கின் தலைவருமான ஸ்ரீ ஹநுமானை வணங்குவீர்

nijatanu kanakAdrimetya nAthe viharati vallabhayA samam prahrshTe |

hariravati jaganti tAtasindhoh adhitaTam Atmasu bhrtyatAnurUpam ||–13-

மேரு மலையைப் போன்ற தமது உடல் மேல் ஏறி எம்பெருமான் பிராட்டியுடன் அருள் பாலித்து வரும் போது
இந்த ஐயங்கார் குளக் கரையில் தமது தாஸ்யத்துக்குத் தக்க படி இருந்து இந்த ஹனுமான் மூ வுலகையும் பாதுகாத்து வருகிறார்

caturbhujaH SrIsarasI harIndrahastena datte varamASritAnAm |
yadarthine bhrtyamukhena dAnam
prAyaH prabhUNAm prakritiH svabhAvaH ||–14-

நான்கு தோள்களுடன் கூடிய எம்பெருமான் ஸ்ரீ லஷ்மீ ஸரஸ் என்னப்பட்ட
இந்த ஐயங்குளக்கரையில் உள்ள ஹநுமாாின் திருக் கையால் – தன்னை அண்டியவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிக்கிறார்.
பிரபுக்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விரும்பியதைத் தமது வேலை யாட்கள் மூலம் கொடுப்பது என்பது இயல்பே அன்றோ ?

idam prakarshAya hareryadArtAn
samrakshati SrIs-sarasI hanUmAn |
maheSvarANAm mahate guNAya
prakalpate bhrtyajanaprabhAvaH ||–15-

இந்த லஷ்மீ ஸரஸ்ஸின் கரையில் உள்ள ஹநுமான் தொல்லையில் சிக்கியவர்களை நன்கு காப்பாற்றுகிறார்
என்ற இது தகும் ஏன் எனில்
ஒரு வேலையாளுக்கே இவ்வளவு பெருமைகள் உண்டு என்றால்
தலைவர்களான தேவதைகளுக்குப் பெருமைகள் அதிகம் என்று தேறி இது பெரும் குணம் ஆகுமே –

SrI sUnutAtaguru sindhu taTAnjaneye
sampratya Sesha janatAvana jAgarUke |
lakshmyA harirviharate yadesha
sItA-viyogadinaklupta tapovilAsaH ||–16-

லஷ்மீ குமார தேசிகனால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஐயங்குளக்கைரயில் இருக்கும் ஸ்ரீ ஹநுமான்
விழிப்புடன் என்றும் எழுந்து அருளி இருக்கிற படியால் –முன்பு ஸ்ரீ ஸீதா தேவியைப் பிரிந்து அதனால்
ஏற்பட்ட வருத்தம் தீர ஸ்ரீ ஹாியானவர் ஸ்ரீ லஷ்மியுடன் விளையாடி வருகிறார்.

prAyaH tulyaH pAdukAyamihApi
nyAsaH sItAnAyakAnghres tathApi |
dhAtrI rakshAm sA tatA neti kim vA
lokAn pAti SrItaTAkAnjaneyaH ||–17-

ஸ்ரீ ஸீதா நாயகரான ஸ்ரீராமபிரானின் பாது கைகளிடம் பரந்யாஸம் செய்வது போன்றதே – \இந்த
ஐயங்குளத்து ஸ்ரீ ஹநுமாாிடம் செல்வது ,
உலகை எல்லாம் தாங்கும் அந்தப் பாதுகை நமக்குப் பாதுகாப்பை
அளிப்பது போன்று இந்தக் குளக்கரை ஆஞ்சநேயரும் செய்கிறார்

indirA suhrdabheda bhAvanAsantateriva tadAtmatAm vahan |
tantanIti kamalAsaras taTI
gandhavAha tanayo janAvanam ||-18-

பெரிய பிராட்டியார் வல்லபரான ஸ்ரீ மன் நாராயணனே இந்த ஹநுமான் என்று அவரோடு ஓன்றியபடி
தியானித்து வருபவராகச் சொல்லப்படும் இவர் ஸ்ரீ லஷ்மீ ஸரஸ்ஸின் கரையில் இருந்து கொண்டு
மக்களை ரசிப்பதை நன்கு செய்து வருகிறார் –

nArAyaNIyena mahobhareNa
naTatprakarsho jagatAm trayANAm |
karoti rakshAm kalaSAbdhi kanyA
sarastaTI mAruti sArvabhaumaH ||–19-

நாட்டியம் ஆடி வருவது போன்ற நிலையில் ஸேவை யாகும்-இந்த ஐயங்குளக் கரையிலுள்ள
மாருதியானவர், எம்பெருமான் நாராயணனின் அநு ப்ரவேசத்தால் மூ உலகையும் ரக்ஷித்து அருள்கிறார்

kamsAri tejobharavaibhavena
samsAriNAmesha tanoti rakshAm |
ramAsarasyAm raghuvIrasenA
nAsIra sImAbhaTa sArvabhaumaH ||–20-

ஸ்ரீராம பிரானின் ஸேனைத் தலைவரான இந்த ஹநுமான், கம்ஸனைக் கொன்ற ஸ்ரீ கண்ண பிரானின் தேஜஸ்ஸைத் தாங்கி
வருபவராய், இக் குளக்கரையில் ஸம்ஸாாிகளான நமக்குப் பாதுகாப்பை யளிக்கிறார்

itIndirA taTAkatIra vAyusUnu vimSatim
ramAkumAra tAtayAryanirmitAm paThanti ye |
dhanam yaSo balam sutAt arogatAyushI sukham
labheyureva mAnavAH krpAbharAdramApateH ||–21-

இப்படி ஸ்ரீ லஷ்மீ ஸரஸ் என்னப்பட்ட ஐயங்குளம் கரையில் உள்ள வாயு புத்ரரான ஸ்ரீஹநுமானைப் பற்றி
ஸ்ரீ லஷ்மீ குமார தாதாசார்யரால் எழுதப்பட்ட இருபது ஸ்லோகங்களை எவர் பக்தியுடன் படிக்கிறார்களோ
அவர்கள் செல்வம், புகழ், வலிமை , மக்கள், நோயற்றவாழ்வு , நீண்ட ஆயுள், நன்மைகள் ஆகிய இவற்றை
ஸ்ரீ லஷ்மீபதியான எம் பெருமானின் அருளால் அடைவர். இது திண்ணம்

yathA harirbhAsurapuNyakoTyAm
yathA ca gaurI varakAmakoTyAm |

tathA mahodArakumAratAta
kalyANakoTyAm kamalA samindhe ||–22-

ஸ்ரீ அத்திகிாிவரதர், ஒளிவீசி வரும் புண்ய கோடி விமானத்தில் விளங்கி வருவது போன்றும்
காம கோடியில் விளங்குவது போன்றும் ,
எல்லோருக்கும் விரும்பிய நல்லனவற்றை வாாி வழங்கிய கல்யாண கோடி என்ற பெயர் பெற்ற –
ஸ்ரீ லஷ்மீ குமார தாதாசார்யரால் ஏற்படுத்தப்பட்ட
இந்த இடத்தில் பெரிய பிராட்டி யாகிய ஸ்ரீ லஷ்மீதேவி விளங்கி வருகிறார்.

kurvanti brAhmaNAnAm tu kalyANa Satamanvaham |
tasmAt kalyANA koTIti satyanAmA prakASate ||23||

தினம் தோறும் அந்தணர்களுக்கு நூற்றுக் கணக்கான மங்களங்களைச் செய்து வருவதால்
கல்யாண கோடி என்ற பெயர் பொருந்தும் படி இது விளங்கி வருகிறது

————-

ஸ்ரீ ஏக முக ஹனுமத் கவசம்

ஸ்ரீ ஏக முக ஹனுமத் கவசம் [ஒரு முகத்துடன் அனுமனுக்கு கவசம்]-மொழிபெயர்த்தவர் பி.ஆர்.ராமச்சந்தர்

[இந்த கவசத்தை சிவபெருமான் பார்வதி தேவிக்கு சொல்லியிருக்கிறார்.
பகவான் முதலில் ஹனுமானிடம் பன்னிரண்டு பெயர்களைக் கொண்ட ஒரு பிரார்த்தனையைச் சொல்கிறார்,
பின்னர் விபீஷணனுக்கு ராமர் கற்பித்த ஹனுமான் கவசத்தை மேற்கோள் காட்டுகிறார்.
அனுமனின் மற்ற கவசங்களைப் போல அல்லாமல், இது ஒரு எளிய பிரார்த்தனையே தவிர தாந்த்ரீக உரை அல்ல.]

யேகத சுகமாஸ்ஸேனம் சங்கரம் லோக சங்கரம்,
பப்ரச்ச கிரிஜா காண்டம் கற்பூர தவலம் சிவம் 1

ஒரு சமயம் மக்களின் கடவுளான சிவபெருமான்,
கிரிஜாவின் மனைவியாக இருந்தவர். கற்பூரம் போன்ற வெண்மையானது
பார்வதி தேவியிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது.

ஸ்ரீ பார்வதியுவாச்சா:-
(பார்வதி தேவி சொன்னாள்)

ভগவாந் தேவ தேவேச, லோக நாதா, ஜகத் ப்ரபோ,
ஸோககுலநாம் லோகாநாம் கேன ரக்ஷ பவேத் த்ருவம். 2

சங்க்ரமே, சங்கதே, கோரே பூத ப்ரேதாதிகே, பயே,
துகா தாவாக்னி சந்தப்த சேத்தாசம், துக்க பாகினம், 3

ஓ கடவுளே, கடவுளின் கடவுளே, உலகத்தின் ஆண்டவரே, பிரபஞ்சத்தின் அதிபதியே,
துக்கத்தால் பீடிக்கப்பட்ட மக்கள் எப்படி என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள்?

போரில், துக்கத்தில், பயந்த பேய்களிடம் இருந்து, இறந்த பயத்தில் இருந்து, துக்கத்தின் எரியும் நெருப்பில் இருந்து
எப்படித் தங்களைக் காத்துக்கொண்டு, மனதைக் கெடுத்து, துக்கத்திலிருந்து விடுபடுவார்கள்?

ஸ்ரீ மஹாதேவ உவாச்ச:- (சிவபெருமான் கூறினார்:- ) 

ஸ்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி, லோகாநாம் ஹித கம்யயா, விபீஷணாய ராமேண ப்ரேமேண ததம் ச யத் பூரா. 4

உலக நன்மைக்காக,
நீண்ட காலத்திற்கு முன்பு விபீஷணனுக்கு ராமர் கூறியதைக் கேளுங்கள்.

கவச்சம் கபி நாதஸ்ய, வாயுபுத்ரஸ்ய ধீமத,
குஹ்யம் ததே ப்ரவக்ஷ்யாமி விஶேஷ ச்ருணு ஸுந்দரீ । 5

ஓ அழகானவரே, வானரப் பெருமானின் கவசத்தைக் கேள்,
அவர் வாயு பகவானின் மிகவும் வீரம் மிக்க மகனாக இருந்தார்,
இது இரகசியமானது ஆனால் சிறப்பாக என்னால் கூறப்பட்டது.

உத்யதித்ய சங்கச முதார புஜ விக்ரமம்,
கந்தர்ப கோடி லாவண்யம், சர்வ வித்யா விசாரதம். 6

அவர் ஒரு உதய சூரியனைப் போன்றவர், மிகவும் தொண்டு செய்யும் வீரராக இருந்தார்,
அவர் மிகவும் அழகாகவும், மிகவும் கற்றறிந்தவராகவும் இருந்தார்.

ஸ்ரீ ராம ஹ்ருதயானந்தம் பக்த கல்ப மஹீருஹம்,
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மருதத்மஜம், 7

ராமனின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருபவன்,
பக்தர்களுக்கு விருப்பத்தைத் தரும் மரமாக இருப்பவன்,
காப்பவன், ஆசீர்வதிப்பவன், பயத்தைப் போக்குபவன்,
அவன் அன்பே, காற்றின் மகனே.

ஹனுமான் அஞ்சனி விரைவில் வாயுபுத்ரோ மஹா பலா,
ரமேஷ்தா, பால்குன சகா, பிங்காக்ஷோ, அமித விக்ரமா. 8

அவனே அனுமன், அவனே அஞ்சனாவின் மகன்,
அவனே காற்றுத் தெய்வத்தின் மகன், அவனே மிகவும் வலிமையானவன்,
அவனே இராமனுக்குப் பிரியமானவன். , அர்ஜுனனின் நண்பன் அவனே,
சிவந்த கண்களை உடையவன், அளவிலா வீரம் உடையவன்

உதாதிக்ரமணாஶ்சைவ, சீதாசோக வினாசனம்,
லக்ஷ்மணா ப்ராணா ததா ச தாச க்ரீவஸ்ய தர்ப்பஹா. 9

கடல் கடந்தவர், சீதையின் துக்கத்திற்கு முடிவு கட்டியவர்,
லட்சுமணனுக்கு உயிர் கொடுத்தவர், ராவணனின் அகந்தையை புண்படுத்தியவர்.

ஏவம் த்வாதஸ நாமாநி கபீந்த்ரஸ்ய மஹாத்மனா,
ஸ்வ காலே ப்ரபோதே ச யத்ர காலே ச படேத், 10

தஸ்ய ஸர்வ பயம் நாஸ்தி, ரணே ச விஜயீ பவேத்,
ராஜத்வாரே கஹ்வாரே ச பயம் நாஸ்தி கதாச்சனா. 11

குரங்குகளின் அரசனின் இந்தப் பன்னிரெண்டு பெயர்களையும் ஓதினால்,
நம் காலத்திலோ, எழுந்த பின்னரோ, பயணத்தின்போதோ,
நம் பயங்கள் அனைத்தும் அழிந்து, எல்லாப் போர்களிலும் வெற்றி பெறுவோம்,
வாயிலில் பயப்படமாட்டோம். ராஜா அல்லது வன குகையில்.

உள்ளங்ய சிந்தோ சலிலம் சலிலம்,
யா சோக வஹ்நிம் ஜனகத்மஜய,
ஆதாய தேனைவ தாதா லங்காம்,
நமாமி தாம் ப்ராஞ்சலிர் ஆஞ்சநேயம். 12

கடலின் பெருங்கடலைக் கடந்தவரும், சீதையின் துயரத் தீயை அணைத்தவரும், அதன்பின் இலங்கைக்குத் தீ மூட்டியவருமான

அஞ்சனாவின் மகனுக்கு நான் கைகூப்பி வணங்குகிறேன் .

ஓம் நமோ ஹனுமதே சர்வ சர்வக்ரஹன், பூத, பவிஷ்யத் வர்த்தமானன், சமீபஸ்தான் சர்வ கால துஷ்ட புத்தின் உச்சதாய உச்சதாய, பர பாலன் க்ஷோபாய க்ஷோபாய, மம சர்வ காரியணி சாதாய சாதாய.

ஓம், அனுமனுக்கு நமஸ்காரம், அனைத்து கிரகங்கள், பிசாசுகள், கடந்த, நிகழ்கால மற்றும் எதிர்காலம் மற்றும் அருகில் இருக்கும் தீய சக்திகளால் ஏற்படும் அனைத்து மோசமான விளைவுகளும் விரட்டப்படட்டும். பிறர் பலம் குறையட்டும், என் செயல்கள் அனைத்தும் வெற்றியை அடையட்டும்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் பட் கே கே கீ,

ஓம் சிவ சிதிம் ஓம் ஹ்ராம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரூம்,
ஓம் ஹ்ரைம், ஓம் ஹ்ரௌம் ஓம் ஹ்ர ஸ்வாஹா

(இவை மந்திர மந்திரங்கள் மற்றும் மொழி பெயர்க்க முடியாது.)

பர க்ருத்ய யந்திர மந்திரம் பரஹங்கர பூத ப்ரேத பிசாச த்ருஷ்டி சர்வ விக்ன லெட்வர் ஜானய சேவநி துர் ஜனய சேவக்ரயாய

, பிறர் செய்யும் தீய வசீகரம் மற்றும் கோஷங்கள், மற்றவர்களின் பொறாமை, பேய், பிணம் மற்றும் பிசாசுகளின் விளைவு மற்றும் தீயவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து தடைகளும், தீய அறிவு மற்றும் அனைத்து பெரிய பயங்களும் குணமாகட்டும், குணமாகட்டும்.

பந்தா பந்தா, லுண்ட லுண்டா, விழுஞ்ச விழுஞ்ச, கிளி கிளி சர்வக யந்த்ராணி துஷ்ட வச்சம் ஓம் பட் ஸ்வாஹா.

மற்ற வசீகரங்களின் தீய வடிவமைப்புகளைக் கட்டி, திறம்படச் செய்யட்டும். தீக்கு நீக்கம்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ஹனுமத் கவச்ச ஸ்தோத்ர மஹா மந்திரஸ்ய, ஸ்ரீ ராமச்சந்திர ரிஷி, ஸ்ரீ ஹனுமான் பர்மாத்ம தேவதா, அனுஷ்டுப் சந்தா, மருதாத்மஜ இதி பீஜ அஞ்சனா சூரிதி சக்தி, லக்ஷ்மண பிராண இதி கீலகம், ராம தூத கமந்த, ஹநுதயேதி அஸ்த்வ அஸ்த்வமேதி வணக்கம் மந்திரம், ஸ்ரீ ராமச்சந்திரா ப்ரேரணயா ராமசந்த்ர ப்ரீத்யர்தம் மம மானஸ ஸகல காமனா சித்யர்தம் ஜபே விநியோக,

ஓம் ஹனுமனின் கவசத்தின் பெரும் கோஷத்திற்கு, முனிவர் ஸ்ரீ ராமச்சந்திரர், கடவுளை தெய்வீக ஹனுமான், மீட்டர் அனுஷ்டுப். விதை வாயுவின் மகன், வலிமை அஞ்சனாவின் மகன், ஆணி லக்ஷ்மணனுக்கு உயிர் கொடுப்பவன், அம்பு ராமனின் தூதுவன், கவசமே கடவுள் அனுமான், மந்திரம் சிவந்த கண் உடையவன், வீரம் மிக்கவன். , ஸ்ரீராமர் மகிழ்வதற்காகவும், என் மனதின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுவதற்காகவும் ராமரின் கட்டளையால் இது பாடப்படுகிறது.

அத கர ந்யாஸ
(இப்போது கை அடையாளங்கள்)

ஓம் ஹ்ராம் அஞ்சனிசுதாய அங்கஷ்டப்யம் நம
ஓம் ஹ்ரேம் ருத்ர மூர்த்தயே தர்ஜனீப்யாம் நம ஓம் ஹ்ரூம்
ராம தூதாய மத்யமாப்யாம் நம
ஓம் ஹ்ரைம் வாயு புத்ராய அனாமிகாப்யாம் நம
ஓம் ஹ்ரௌம் அக்னிஷ்த்ரபயமிகாப்யாம்
ஓம் ஹ்ரஹ் பிரம்மாஸ்திர நிவாரணாய கர தல கர ப்ருஷ்டபுயாம் நம
இதி கர ந்யாஸ

ஓம் ஹ்ராம் வணக்கம் அஞ்சனா மகனுக்கு கட்டை விரலில் ஓம்
ஹ்ரீம் நமஸ்காரம் ருத்ர மூர்த்திக்கு முன் விரல் மூலம்
ஓம் ஹ்ரூம் நமஸ்காரங்கள் ராம தூதருக்கு நடுவிரல் மூலம்
ஓம் ஹ்ரைம் குமாரனுக்கு வணக்கம் விரல்
ஓம் ஹ்ரூம் சுண்டு விரல் மூலம் தனக்குள் நெருப்பை வைத்திருப்பவருக்கு நமஸ்காரம்
ஓம் ஹ்ரஹ் வணக்கம் உள்ளங்கை முழுவதும் பிரம்மாஸ்திரத்தை குணப்படுத்துபவர்.

அதா ஹ்ருதயதி ந்யாஸ
(இப்போது இதயத்தில் உள்ள அடையாளங்கள்)

ஓம் ஹ்ராம் அஞ்சனி சுதாய ஹ்ருதயாய நம
ஓம் ஹ்ரீம் ருத்ர மூர்த்தயே சிரஸே ஸ்வாஹா
ஓம் ஹ்ரூம் ராம தூதாய ஷிகாயை வஷட்
ஓம் ஹ்ரைம் வாயுபுத்ராய கவச்சாய ஹோம்
ஓம் ஹ்ரௌம் அக்னிகர்பய நேத்ர த்ரயாய வௌஷட்
ஓம் ஹ்ரஹ் பிரம்மாஸ்திர நிவாரணய அஸ்த்ராய ஃபட்
இதி ஹ்ருதயதி ஷடங்க ந்யாஸ

ஓம் ஹ்ராம் அஞ்சனாவின் மகனே என்று உச்சரித்து இதயத்தைத் தொட்டு
ஓம் ஹ்ரீம் ருத்ரமூர்த்தி என்று ஜபித்து, ஓம் ஹ்ரீம் ருத்ரமூர்த்தி என்று உச்சரித்து, ஓம் ஹ்ரீம் ருத்ரமூர்த்தி என்ற தலையைத் தொட்டு ஓம் ஹ்ரூம் குமாரன் ராம சந்தானத்தின்
தலையைத் தொடவும்.
மற்றும் கற்பனை செய்து கொள்ளுங்கள் அது உங்கள் கவசம்
ஓம் ஹ்ரௌம் என்று கோஷமிடுங்கள் ஓம் ஹ்ரௌம் அவரில் நெருப்பு உள்ளவர் ஓம் ஹ்ரஹ் என்று ஜபிக்கவும்
பிரம்மாஸ்திர

அதா தியானம்
பிறகு தியானம்

த்யாயேத் பல திவாகர த்யுதிநிபம் தேவாரி தர்ப்பபாஹம்,
தேவேந்திர பிரமுகம், ப்ரஸத யஸ்ஸம் தேதேப்யமானம்
ஸுவ்யத்யமஸ்தாமஸ்தா ருச்ச, தத்வ பிரியம்,
ஸம்ரக்தருணா லோச்சநம் பவநஜம் பீதாம்বரலாங்க்ருধம் । 1

இளம் சூரியனைப் போன்றவனும், தேவர்களின் பகைவர்களின் பெருமையை அடக்கியவனும்,
தேவேந்திரனால் போற்றப்படுபவனும், பெரும் புகழை உடையவனும், ஒளியைப் போலப் பிரகாசிப்பவனும்,
சுக்ரீவன் உட்பட எல்லா வானரங்களோடும் இருப்பவனும், விரும்புபவனும் அவனைத் தியானிக்கிறேன். மிகவும் தெளிவான தத்துவ சிந்தனைகள்,
சிவந்த கண்கள் கொண்டவர், காற்று கடவுளின் மகன் மற்றும் மஞ்சள் பட்டு அணிந்தவர்.

உத்யாத்மார்தாண்ட கோடி பிரகட ருசி யுத்தம், சாரு வீரசனஸ்தம்,
மௌஞ்சி யஜ்ஞோபவீதாபரண ருசி ஷிகம் ஶோபிதம் குண்டலங்கம்,
பக்தானம் இஷ்டதம் தம் ப்ராந்த முனி ஜனம், வேத நாதா ப்ரமோதம்,
த்யாயேத்பத ப்லஹோ গ்வாம்থா ব்ধோ গ்ভூலஹே ব்ধாமே வர்தீம். 2

வானர குலத்தின் அதிபதியும், மண்ணுலகில் உள்ள உயிர்களுக்கு நன்மை செய்பவரும்,
ஒரு கோடி சூரியன்களின் பிரகாசம் கொண்டவரும், அழகான வீரம் மிக்க வீரரும்,
புனித நூலும், மான் தோலும் அணிந்தவருமான, பணிவான கடவுளை நான் தியானிக்கிறேன். ஒரு தும்பிக்கை உடையவன், அவன் காதில் பிரகாசிப்பவன்,
தன் பக்தர்களை விரும்புபவன், முனிவர்களால் வணங்கப்படுபவன், வேதம் ஓதுவதை விரும்புபவன்.

வஜ்ரங்கம் பிங்க கேசாத்யம், ஸ்வர்ண குண்டல மண்டிதம்,
நிகுடம் உப சங்கம்ய பரா வார பராக்ரமம் 3

ஸ்பதிகாபம் ஸ்வர்ண காந்திம் த்விபூஜம் ச க்ருதாஞ்சலிம்,
குண்டல த்வயா சம்ஷோபி முகாம்புஜம் ஹரிம் பஜே. 4

வைரம் போன்ற உடம்பை உடையவனும்,
சிவந்த கூந்தலை உடையவனும், பொன் நிறக் காதுகளை அணிந்தவனும்,
எளிதாய் பார்க்க முடியாதவனும், வீரம் மிக்கவனுமான அந்த ஹரியைப் பற்றி நான் பாடுகிறேன்.
ஸ்படிகம் போன்றவர், தங்கம் போல் பிரகாசிப்பவர்,
வணக்கம் சொல்லும் இரண்டு கைகளை உடையவர், இரண்டு காதுகளை உடையவர்,
மற்றும் மிகவும் பிரகாசிக்கும் தாமரை போன்ற முகத்தை உடையவர்.

சவ்ய ஹஸ்தே கதாயுக்தம் வாம ஹஸ்த கமண்டலும்,
உத்யத் தக்ஷிணோதோர் தண்டம், ஹனுமந்தம் விசிந்தயேத், 5

வலது கையில் சூலாயுதத்தை ஏந்தியவனும், இடது கையில் தண்ணீர் பானையை ஏந்தியவனும், தெற்கே உயர்ந்து நிற்கும்

ஹனுமானைப் பற்றி நினைக்கிறேன் .

அத மந்த பிறகு ஓம் ஹனூமதே ஷோபிதானனாய யசோலங்க்ருதய, அஞ்சனி கர்ப்ப ஸம்பூதாய, ராம லக்ஷ்மண அநதகயா, கபி சைன்ய பிரகாச பர்வதோத் படனாய சுக்ரீவ சாஹ்ய காரண பரோச்சாதனாய குமார ப்ரஹ்மச்சார்ய গம்பரேம்গ்ரயாஹம் ஓம் ஹநூமதே ஷோபிதாநாய யசோலங்ருதயா என்ற கீர்த்தனைகள் . ஸ்வாஹா

ஓம் ஹனுமான் ஜொலிப்பவர், புகழால் அலங்கரிக்கப்பட்டவர், அஞ்சனாவுக்குப் பிறந்தவர், வானரப் படையில் ஜொலிப்பவர், ராமர் மற்றும் லக்ஷ்மணர்களுக்கு இன்பம் தருபவர், மலை ஏறியவர், சுக்ரீவப் பெருமானுக்கு உதவி செய்தவர். பிரம்மச்சரியம், ஓம் ஹ்ரீம் தயவு செய்து அனைத்து கிரகங்களாலும் ஏற்படும் தோஷங்களை குணப்படுத்துங்கள்.

ஓம் நமோ ஹனுமதே யேஹி, யேஹி யேஹி ஸர்வ கிரஹ பூதாநாம், சாகினி டாகினீநாம், விஷம துஷ்டானம் சர்வேஷாம் ஆகர்ஷய ஆகர்ஷய, மர்தய மர்தாய, சேதாய சேதாதா, மாராய மாராய, ஸோஷ்ய சோஷய, பிரஜ்வாலா ப்ரஜ்வாலா மந்த்தாய ப்ரஜ்வாலா ஜ்ஞாதா ஜ்ஞாய வார சதுர்த்திக ஜ்வர, பிரம்ம ராக்ஷஸ , பிசாச சேதன க்ரியா, விஷ்ணு ஜ்வர, மஹேஸ்வர ஜ்வரன் சிந்தி சிந்தி, பிந்தி பிந்தி அக்ஷி சூலே சிரோப்யந்தரே ஹ்யாக்ஷி சூலே குல்மா சூலே பிதா சூலே பிரம்ம ராக்ஷஸ குல பிரபல நாக குல வினிர்- விஷத்ஜாதிதி.(த்வி வரம் ஜப்த்வா)

இந்த உலகத்தை ஈர்க்கவும் , அடிக்கவும், அடிக்கவும், வெட்டவும், வெட்டவும், கொல்லவும், கொல்லவும், அவர்களை பலவீனப்படுத்தவும், பலவீனப்படுத்தவும், மேலும் விரைவாக எரிக்கவும், விரைவாக எரிக்கவும், இந்த உலகத்தின் பேய்கள் அனைத்தும், இறந்தவர்களின் பேய்கள், குறும்புக்கார கெட்ட மனிதர்கள்
பிரேக், பிரேக், பியர்ஸ் பியர்ஸ், பேய்க் க்ரூப், பிசாசுக் கூட்டங்கள், பிசாசினால் ஏற்படும் காய்ச்சல், இறந்தவர்களால் ஏற்படும் காய்ச்சல், நான்காவது வகை காய்ச்சல், பிரம்மா ராக்ஷஸர்கள், பேய்களால் வெட்டப்படும் செயல், விஷ்ணுவால் ஏற்படும் காய்ச்சல், சிவனால் ஏற்படும் காய்ச்சல்.
கண், தலை வயிறு, ஆசனவாய், பித்தம் மற்றும் பிரம்ம ராட்சசர்களாலும், பிரசித்தி பெற்ற சர்ப்பங்களாலும் ஏற்படும் நோய்கள் விரைவில் குணமாகும்.(இவற்றை இரண்டு வாரங்கள் ஜபிக்கவும்)

ஓம் ஹ்ரீம் பட் க்ஹே ஸ்வாஹா
(கோஷம்)

ஓம் நமோ ஹனுமதே பவனா புத்ர வைஸ்வானர முக பாப த்ருஷ்டி, ஷோட த்ருஷ்டி , ஹனுமதே ஆக்னா புரே ஸ்வாஹா.

பாவப் பார்வையுடனும், தேடும் பார்வையுடனும் இருப்பவர்களை எரிக்கும் காற்றின் மகனான அனுமனுக்கு நெருப்பில் அர்ச்சனைகள்.

ஸ்வக்ருஹே த்வாரே பட்டகே திஷ்ட திஷ்டேதி தத்ர ரோக மாயம் ராஜ குல மாயம் நாஸ்தி தஸ்யோசரண மாத்ரேண ஸர்வே ஜ்வர நஸ்யந்தி,ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் গே গே ஸ்வாஹா.

எங்கள் சொந்த வீட்டில், கேட் அருகே, ஒரு தட்டில் வைத்து, “ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் க்ஹே ஸ்வாஹா” என்று கோஷமிடுவது. நோய்களும் காய்ச்சலும் என்றென்றும் நீங்கும்.

ஸ்ரீ ராமச்சந்திர உவாச்ச:
பகவான் ராமச்சந்திரர் கூறினார்:-

ஹனுமான் பூர்வதா பாது,
பாது தக்ஷிணே பவநாத்மஜா,
ப்ரதீச்யம் பாது ரக்ஷஸோக்ஞா,
ஸௌம்யம் சாகர பரகா. 1

கிழக்கு அனுமனால் பாதுகாக்கப்படட்டும்,
தெற்கு காற்றின் மகனால் பாதுகாக்கப்படட்டும்,
மேற்கு ராட்சசர்களைக் கொன்றவரால் பாதுகாக்கப்படட்டும்,
மேலும் வடக்கைக் கடலைக் கடந்த

உதீச்யம் ஊர்த்வாகப் பாத்து.
கேசரி ப்ரியா நந்தனா, அதஸ்து
விஷ்ணு பக்தஸ்து பாது,
பாது மத்யம் து பவனி. 2

மேற்கையும் மேலேயும் கேசரியின் செல்ல மகனால் பாதுகாக்கப்படட்டும்,
நடுப்பகுதியும் கீழ் பகுதியும் விஷ்ணுவின் பக்தனால் பாதுகாக்கப்படட்டும்.

லங்கா விதாஹக பாது ஸர்வபத்ப்யோ நிரந்தரம்,
சுக்ரீவ சசிவ பாது மஸ்தகம் வாயு நந்தன. 3

லங்காவை எரித்தவன் என்னை எல்லா இடர்களிலிருந்தும் காக்கட்டும்,
சுக்ரீவனின் மந்திரியும், காற்றின் மகனும்,
என் தலையை நிரந்தரமாக காக்கட்டும்,

ஃபாலம் பாதுமஹா வீரோ, ப்ரூவோர் மத்தியே நிரந்தரம்,
நேத்ரே சாயாபஹாரிச்ச பவனா பிளவாகேஸ்வரா. 4

நிழலைத் திருடியவனைக் கொன்றவனும், குரங்குகளின் தலைவனுடைய பரிசுத்தமானவனும் என் நெற்றியைக்
காக்கட்டும்.

புருவங்களுக்கு நடுவில் உள்ள இடத்தைப் போலவே என் கண்களையும் எப்போதும் பாதுகாக்கவும் .

கபாலே கர்ண மோளே ச பாது ஸ்ரீ ராம கிங்கரா,
நாசக்ரம் அஞ்சனி சூனு, பாது வக்த்ரம் ஹரீஸ்வரா. 5

ராமனின் அடியான் என் தலையையும்,
என் காதுகளின் வேர் பகுதியையும்,
அஞ்சனாவின் மகன் என் தொண்டை நுனியையும்,
வானர அரசன் என் கழுத்தையும் காக்கட்டும்.

வாச்சம் ருத்ர ப்ரியா பாது ஜிஹ்வாம் பிங்கல லோச்சனா,
பாது தேவா பல்குணேஷ்ட ஶுபுகம் தைத்ய தர்பஹா. 6

ருத்ரனுக்குப் பிடித்தவனே என் வார்த்தைகளைக் காக்கட்டும்,
என் நாவை சிவந்த கண் கொண்டவனே காக்கட்டும்,
அர்ஜுனனின் நண்பனான கடவுளால் என் கன்னம் பாதுகாக்கப்படட்டும்,
அதே போல் அகந்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தவனும். அசுரர்கள்.

பாது காண்டம் ச தைத்யாரி, ஸ்கந்தௌ பாது சுரர்ச்சித,
பூஜௌ பாது மஹா தேஜ, கரௌ ச சரணயுதா, 7

என் கழுத்தை அசுரர்களின் பகைவர் காக்கட்டும்,
தேவர்களால் வழிபடப்படுபவரால் என் தோள்கள் பாதுகாக்கப்படட்டும்
. தோள்கள், கால்களை ஆயுதமாகப் பயன்படுத்துபவரால் என் கைகள் பாதுகாக்கப்படட்டும்,

நகான் நகாயுதா பாது குக்ஷௌ பாது கபீஸ்வரா,
வக்ஷௌ முத்ராபஹாரி ச பாது பார்ஸ்வே புஜாயுதா. 8

நகங்களை ஆயுதமாகப் பயன்படுத்துபவனால் என் நகங்கள் காக்கட்டும்,
குரங்கு கடவுள் என் வயிற்றைக் காக்கட்டும்,
ராமனின் மோதிரத்தை எடுத்தவன் என் மார்பைக் காக்கட்டும்,
என் பக்கங்களை ஆயுதமேந்திய பெரியவனே காக்கட்டும்.

லக விபஞ்சன பாது ப்ருஷ்ட தேஸே நிரந்தரம்,
நாபிம் ச ராம ধூதஸ்ய, கடிம் பத்வநிலாத்மஜா ॥ 9

லங்காவை எரித்தவன் எப்போதும் என் முதுகைக் காக்கட்டும்,
ராமனின் தூதனால் என் தொப்பை காக்கட்டும்,
காற்றின் மகன் என் இடுப்பைக் காக்கட்டும்.

குஹ்யம் பாது மஹா ப்ராக்னோ, லிங்கம் பாது ஶிவ ப்ரியா,
ஊரும் ச ஜ்ஞுநி பாது லங்கா ப்ரஸாத பஞ்ஜனா. 10

பேரறிஞரால் என் அந்தரங்க உறுப்புகள் பாதுகாக்கப்படட்டும்,
சிவபெருமானை விரும்புபவரே என் ஆண்குறியைக் காக்கட்டும்,
லங்காவின் கட்டிடங்களை அழித்தவரால் என் முழங்கால்களும் தொடைகளும் பாதுகாக்கப்படட்டும்.

ஜங்கே பாது கபி ஸ்ரேஷ்டோ, குல்ஃபௌ பாது மஹா பாலா,
அச்சலோதாரக பாது பாது பாஸகர ஸந்நிபா. 11

என் கன்றுகள் மிகப் பெரிய குரங்கால் பாதுகாக்கப்படட்டும்,
என் கணுக்கால் மிகவும் வலிமையான குரங்கால் பாதுகாக்கப்படட்டும்.
மலையைத் தாங்குபவனும் சூரியனுக்கு அருகில் இருப்பவனும் என் பாதங்களைக் காக்கட்டும்.

அங்ஞாம் அமித சாத்வாத்யா பாது பதங்குலிஸ்ததா,
ஸர்வாங்கனி மஹா சூர, பாது ரோமணி சாத்மவித். 12

எல்லையில்லா ஆற்றல் கொண்டவரால் என் உடல் உறுப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்படட்டும்,
அவர் என் கால் விரல்களையும் காக்கட்டும்,
அனைத்தையும் அறிந்தவரால் என் உடல் அனைத்தும் பாதுகாக்கப்படட்டும்,
ஆன்மாவைக் கட்டுப்படுத்துகிறவரால் என் முடிகள் அனைத்தும் பாதுகாக்கப்படட்டும்.

ஹனுமத் கவச்சம் யஸ்து படேத் வித்வாந் விசக்ஷணா,
ஸ ஏவ புருஷ ஸ்ரேஷ்டோ பக்திம் முக்திம் ச விந்ததி. 13

அனுமனின் இந்தக் கவசத்தை எவன் ஒருவன் தெளிவாகப் புரிந்து கொண்டு படிப்பானோ,
அவன் மிகுந்த பக்தி கொண்டவன் மகிழ்ச்சியையும் முக்தியையும் அடைவான்.

த்ரிகாலம் ஏக காலம் வ பதன் மாச த்ரியம் நர,
ஸர்வாந் ரிபூந் க்ஷணாஜ்ஜித்வா ச புமாந் ஶ்ரியம் அப்நுயாத். 14

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று முறை படித்தால்,
ஒரு நொடியில் அவர் தனது எதிரிகள் அனைவருக்கும் எதிராக வெற்றி பெறுவார்,
மேலும் அந்த மனிதர் அனைத்து செல்வங்களையும் தனக்காக ஆக்கிக் கொள்வார்.

மத்ய மாறாக ஜலே ஸ்தித்வா சப்த வரம் படேத் யதி,
க்ஷய அபஸ்மர குஷ்டதி தப த்ரய நிவாரண. 15

நள்ளிரவில் ஏழு வாரங்கள் தண்ணீரில் நின்று படித்தால்,
காசநோயால் ஏற்படும் மூன்று துன்பங்களிலிருந்து விடுபடுவார். கால்-கை வலிப்பு மற்றும் தொழுநோய்.

அஸ்வத மூலே அர்க வரே ஸ்தித்வா பததி யா பூமான்,
அச்சலாம் ஶ்ரியமாப்நோதி சங்க்ராமே விஜயம் ததா. 16

ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலமரத்தடியில் அதைப் படிப்பவர் அந்தப் பெரியவர்.
செல்வம் போன்ற மலையைப் பெற்று போரில் வெற்றி பெறுவான்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் ஆரோகதா,
ஸுதார்த்யம் வாக் ஸ்பூரத்வாம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத். 17 அனுமனை தியானித்தால்

ஞானம், வலிமை, புகழ், தைரியம், அச்சமின்மை, நோயிலிருந்து விடுபடுதல்,
மகத்தான இருப்பு மற்றும் வார்த்தைகளில் தேர்ச்சி ஆகியவை ஒருவருடையதாக இருக்கும்.

மரணம் வைரிணம் சத்ய சரணம் ஸர்வ ஸம்பதம்,
ஸோகஸ்ய ஹரணே தக்ஷம் வந்தே தாம் ரண தாருணம். 18

பெரியவரைப் போரில் வழிபடுபவர்,
மந்திரங்களையும், பகைவர்களையும் வெல்வார்,
எல்லாச் செல்வங்களும் அவர் முன் பணிந்து,
எல்லாத் துன்பமும் அவரை விட்டு நீங்கும்.

லிகித்வா பூஜயேத் யஸ்து ஸர்வத்ர விஜயீ ভவேத்,
யா கரே தாரயே நித்யம் ஸபுமான் ஶ்ரியமாப்நுயாத். 19

அதை எழுதுபவர் அல்லது வழிபடுபவர் எங்கும் வெற்றி பெறுவார்,
அதைக் கையில் அணிபவர் பெரும் செல்வந்தராவார்.

ஸ்தித்வா து பந்தேன யஸ்து ஜபம் காரயாதி த்விஜை,
தத் க்ஷணாத் முக்தி மாப்நோதி நிகதாது தாதைவ ச. 20

ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு, இருமுறை பிறந்தவர்களால் இதைப் படித்தால்,
அவர் உடனடியாக சுதந்திரம் பெறுவார், மேலும் தொடர்ந்து அப்படி இருப்பார்.

ய இதம் ப்ரதர் ​​உதய படேச்ச கவச்சம் சதா,
ஆயுர் ஆரோக்ய சந்தானைஸ்தஸ்ய, ஸ்தவ்ய ஸ்தவோ பவேத். 21

இதை எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் படிப்பவர்
நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், குழந்தைகளையும் பெறுவர், புகழ் பெற்றவர்களால் புகழப்படுவார்.

இதம் பூர்வம் பதித்வா து ராமஸ்ய கவச்சம் ததா,
பதநீயம் நரை பக்த்யா நைகமேவ படேத் கதா. 22

ஹனுமத் கவச்சம் சத்ர ஸ்ரீ ராம கவச்சம் வினா,
யே பதந்தி நர்ச்சத்ர பதனம் தத் வ்ருதா பவேத். 23

தஸ்மாদ் ஸர்வை பதநீயம் ஸர்வধா கவச்ச த்வயம்,
ராமஸ்ய, வாயு புத்ரஸ்ய ஸদ்ভக்தைஶ்ச விசேஷதঃ| 24

இதைப் படிக்க வேண்டும், ராமரின் கவசம் முன்பு படிக்க வேண்டும்,
இதைத் தனியாகப் படிக்காமல் பக்தி கொண்ட மனிதர்கள்.
அதற்குப் பதிலாக ராமரின் கவசத்தைப் படிக்காமல் அனுமனின் கவசத்தைப் படித்தால்,
அப்படிப்பட்ட மனிதர்களின் வாசிப்பு வீணாகிவிடும்.
எனவே படிக்க விரும்புவோர் இரண்டு கவசங்களையும் ஒன்றாகப் படிக்க வேண்டும்,
ஏனெனில், ராமர் மற்றும் அனுமன் கவசத்தை பக்தியுடன் வாசிப்பது சிறப்பாகும்.

இதி ஸ்ரீ ராம க்ருதை யேக முக ஹனுமத் கவச்சம் ஸம்பதம்

ராமர் எழுதிய ஒற்றை முகம் கொண்ட அனுமனின் கவசம் இவ்வாறு முடிகிறது.

————–

ஶ்ரீஹனுமத்ஸ்தோத்ரம் வ்யாஸதீர்த விரசிதம்

நமாமி தூதம் ராமஸ்ய ஸுகதம் ச ஸுரத்ருமம் ।
பீனவ்ருத்தமஹாபாஹும் ஸர்வஶத்ருனிபர்ஹணம் ॥ 1॥

நாநாரத்னஸமாயுக்தகுண்டலாதிவிபூஷிதம் ।
ஸர்வதாபீஷ்டதாதாரம் ஸதாம் வை த்ருடமாஹவே ॥ 2॥

வாஸினம் சக்ரதீர்தஸ்ய தக்ஷிணஸ்தகிரௌ ஸதா ।
துங்காம்போதிதரங்கஸ்ய வாதேன பரிஶோபிதே ॥ 3॥

நாநாதேஶாகதை꞉ ஸத்பி꞉ ஸேவ்யமானம் ந்ருபோத்தமை꞉ ।
தூபதீபாதிநைவேத்யை꞉ பஞ்சகாத்யைஶ்ச ஶக்தித꞉ ॥ 4॥

பஜாமி ஶ்ரீஹனூமந்தம் ஹேமகாந்திஸமப்ரபம் ।
வ்யாஸதீர்தயதீந்த்ரேண பூஜிதம் ப்ரணிதானத꞉ ॥ 5॥

த்ரிவாரம் ய꞉ படேந்நித்யம் ஸ்தோத்ரம் பக்த்யா த்விஜோத்தம꞉ ।
வாஞ்சிதம் லபதே(அ)பீஷ்டம் ஷண்மாஸாப்யந்தரே கலு ॥ 6॥

புத்ரார்தீ லபதே புத்ரம் யஶோ(அ)ர்தீ லபதே யஶ꞉ ।
வித்யார்தீ லபதே வித்யாம் தனார்தீ லபதே தனம் ॥ 7॥

ஸர்வதா மாஸ்து ஸந்தேஹோ ஹரி꞉ ஸாக்ஷீ ஜகத்பதி꞉ ।
ய꞉ கரோத்யத்ர ஸந்தேஹம் ஸ யாதி நிரயம் த்ருவம் ॥ 8॥

இதி ஶ்ரீவ்யாஸ தீர்த விரசிதம் ஹனுமத் ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ லக்ஷ்மி குமார தாத தேசிகன் ஸ்வாமிகள்

July 7, 2023

கலியுகாதி 4610-விபவ வருஷம் மாசி ஸ்வாமி திருவவதாரம்

பிதா மஹஸ் யாபி பிதா மஹாய தாதேத்ய மந்த்ர கஞ்சிது வந புவி துஷித தோய பிந்தும் யயாஸே
புராய மாஹ தாதேதி பகவான் வேங்கடேஸ்வர

பூரி ஸ்ரீ சைல பூர்ணஸ்ய தஸ்ய தேஹிமே தாதா பானீயமிதி ப்ராஹ்ய மீஸ்வர
வேங்கடேசஸ் ததஹ தஸ்ய தாதாசார்யா பிதா பவத்

இந்த ஸ்வாமி தனியன்
ஸ்ரீ சைல பூர்ண குல வாரிதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ குரு வர்ய பாதாப்ஜ ப்ருங்கம்

ஜேயோ குணாம்பு நிதிம் ஆஸ்ரித பாரி ஜாதம்
ஸ்ரீ தாதயார்ய மந கம் சரணம் ப்ரபத்யே

———–

ஸ்ரீ லக்ஷ்மி குமார தாத தேசிகன் (1571–1643) ஸ்ரீ வைஷ்ணவத்தில் உள்ள இந்து பாரம்பரியத்தில் ஒரு முக்கிய வைஷ்ணவ துறவி மற்றும் குரு ஆவார் .
ஸ்ரீ லக்ஷ்மி குமார ததா தேசிகன் பகவான் நாராயணனின் பக்தர்,
குறிப்பாக ராமர் மற்றும் வைஷ்ணவ குரு  ஆச்சார்யர் ஸ்வாமி வேதாந்த தேசிகர்.
கொட்டிகன்னிகாதன திருமலை எதிர் இம்மதி ராயதுர்கம் ஸ்ரீ லக்ஷ்மி குமார ததா தேசிகன் என்ற திருநாமத்தை உடையவர்..
அவர் விஜயநகரப் பேரரசின் அரசரான வெங்கடபதிராயரின் அரச குருவான “ராஜ குரு” ஆவார்.
ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருமலை, மேல்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட திவ்ய தேசக் கோயில்களின் “மேலாளர்-ஜெனரலாக” இறந்தார்.
ஸ்ரீ ராமானுஜரின் வைஷ்ணவத்தின் பரம்பரையில் அவர் மிகப் பெரிய ஆச்சார்யர்களில் ஒருவராக பதிவு செய்யப்பட்டுள்ளார் .

ஸ்ரீ லக்ஷ்மி குமார ததா தேசிகன் புகழ்பெற்ற ஸ்ரீ பஞ்ச மத பந்தன ததா தேசிகனின் வளர்ப்பு மகன்.

ஸ்ரீ குமார ததா தேசிகன் தூபுலின் மிகவும் பிரபலமான ஆச்சார்ய புருஷ ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகனிடமிருந்து
(வேதாந்த தேசிகன்) தனது தோற்றத்தைக் கண்டுபிடித்தார்.
ஸ்ரீ குமார ததா தேசிகன் 22வது தலைமுறை ஸ்ரீமன் நாதமுனிகளின் (நாதமுனி) காலவரிசையில் வருகிறார்.
தமிழ்நாட்டில் (இந்தியா) கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ சாரங்கபாணி கோவிலின் அதிபதியான ஸ்ரீ கோமளவல்லி என்று
அழைக்கப்படும் தெய்வீக தாய் தேவி ஸ்ரீ லக்ஷ்மி தேவியால் அவருக்கு தெய்வீக அறிவு கிடைத்ததாக நம்பப்படுகிறது.
ஸ்ரீ குமார ததா தேசிகன் முதலாம் மற்றும் இரண்டாம் வெங்கடபதி ராயர்களின் (ஸ்ரீரங்க ராயராக அறியப்பட்டவர்) ராஜ குருவாகவும்,
ஸ்ரீ விஜயநகரப் பேரரசின் முதலமைச்சராகவும் இருந்தார்.
குமார ததா தேசிகனுக்கு முன், அவரது தந்தை ஸ்ரீ சுந்தர ததா தேசிகன் மற்றும் தந்தைவழி மாமா
ஸ்ரீ பஞ்ச மத பந்தன ததா தேசிகன் ஆகியோர் விஜயநகர இராச்சியத்தின் அரசவைகளை ராஜ குருக்கள்
அல்லது தெய்வீக ஆசான்களாக அலங்கரித்து வந்தனர்.

ஸ்ரீ ததா தேசிகன் தனது ஆட்சியில் விஜயநகரத்திலிருந்து ஒரு பெரிய படையை வரவழைத்து,
ஸ்ரீ ரங்கம், காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிரும் சோலை ஆகிய திவ்ய தேசங்களில் இருந்து அநீதி இழைத்தவர்களை விரட்டினார்.
கும்பகோணம் மற்றும் பல இடங்களில் சிறந்த தத்துவஞானி ஸ்ரீ ராமானுஜாச்சாரியார்
மற்றும் தூப்புல் சுவாமி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி
வழிபாடுகள் மற்றும் நடத்தைகளை மீட்டெடுத்தனர்.
ஸ்ரீ தத்தா டெய்ஸ்கன் இந்த இடங்களில் தனது வாரிசுகளை நியமித்து, இந்த கோயிலுக்கு ஏராளமான மானியங்களை வழங்கினார்,
கோயில் செயல்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தினார்.
ஸ்ரீ ததா தேசிகன் காஞ்சிபுரம் திருமலை திருப்பதியின் ‘மூலவர் விமானம்’ (கருவறையின் மேல் உள்ள
பிரமிடு அமைப்பு) மீது தங்க முலாம் பூசப்பட்டது மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் கட்டுமானப் பகுதிகளைப் புதுப்பித்தது.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் 100 தூண்கள் கொண்ட மண்டபத்தைக் கட்டினார். மேற்படி கோவிலின் பல்வேறு சிவாலயங்களையும் புனரமைத்தார்.
ஆளவந்தார் திருமுத்திரத்தில் (ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலின் சுற்றுப் பாதை) சுமார் 15 கல்வெட்டுகள் உள்ளன.
காஞ்சிபுரம் கோயில்கள், திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், ஸ்ரீ ரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களில்
பல வரலாற்றுச் சான்றுகள் மற்றும் தொல்பொருள் சான்றுகள் உள்ளன.

அவர் விஜயநகரப் பேரரசின் அரசர்களுக்கு தர்மம்எனப்படும் நீதியான பாதையில் வழிகாட்டினார் .
இராஜ குரு மற்றும் மாநில முதல்வர் ஆகிய இரட்டைப் பதவிகளை வகித்த ஒரே நபர் இவர்தான்.
தென்னிந்தியா மற்றும் ஸ்ரீவைஷ்ணவத்தின் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதில் ஸ்ரீ ததா தேசிகனின் பங்களிப்பு
சந்திரகிரி போன்ற இராச்சியத்தின் கோட்டைகளில் கிடைக்கும் பல குறிப்புகளில் இருந்து அறியலாம்.
ஸ்ரீ ததா தேசிகன் தனது வாழ்நாளில், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு நீதியின்
நெறிமுறைகளைப் பின்பற்றி கல்வி கற்பிப்பதற்காக பண்டைய பாரதத்தை சுற்றி வந்தார்.
இந்து மதத்தின் பல்வேறு சம்பிரதாயங்கள் அல்லது நடைகள் காரணமாக அவர் பல தத்துவவாதிகள் மற்றும் புனிதர்களால் குறிப்பிடப்படுகிறார்.
பெரிய சமகால எழுத்தாளரும் தத்துவஞானியுமான அடையாபலத்தைச் சேர்ந்த ஸ்ரீ அப்பய தீட்சிதர்
ததா தேசிகனை தனது பல படைப்புகளில் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
ததா தேசிகனை தெய்வீக அவதாரமாகக் கருதினார்.

ஸ்ரீ ததா தேசிகன், காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள அய்யங்கார் குளத்தில்,
“தாதா சமுத்திரம் – ஸ்ரீ லக்ஷ்மி சரஸ் ஸ்ரீ மாருதி – ஸ்ரீ சஞ்சீவிராயர் கோவில்” என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்தில்,
ஸ்ரீ ஹனுமானுக்காக 150 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு கொண்ட ஒரு கோவில் தொட்டியைக் கட்டினார் .
“தாதா சமுத்திரம்” என்றால் “ஸ்ரீ தாதா பெருங்கடல்” என்று பொருள்.
ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை “நடபவி உத்ஸவம்” என்று பெயரிடப்பட்ட திருவிழாவின் போது வருகை தருகிறார். 

ஸ்ரீ தாதா தேசிகன் பகவான் ஸ்ரீ ராமரின் மிகவும் பக்தி கொண்டவர் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஒருமுறை ஸ்ரீ தாதா தேசிகன் தனது அறிவுக்கு வெகுமதியாகவும், பல்வேறு அரசர்களின் காணிக்கையாகவும்
தனக்குக் கிடைத்த செல்வங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார்.
அவற்றை காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார்.
காஞ்சியின் எல்லையை அடைந்த போது, ​​இரவு வெகு நேரமாகி விட்டது.
எனவே தாதா தேசிகன் தனது சீடர்களுடன் சிறிது காலம் தங்கி, சூரியன் உதித்தவுடன் பயணத்தைத் தொடர முடிவு செய்தார்.
எனவே புதையல் அனைத்தும் ஒரு மரத்தின் அருகே வைக்கப்பட்டு, தாதா தேசிகன் தனது சீடர்களுடன் தூங்கினார்.
அங்கு குவிந்து கிடக்கும் செல்வத்தை அறிந்த திருடர்கள் கூட்டம் கொள்ளை யடிக்க அங்கு வந்தனர்.
அதனால் யாருக்கும் தெரியாமல் அங்கு வந்து யாருக்கும் தெரியாமல் அங்கு கிடைக்கும்
அனைத்து வளங்களையும் மூட்டை கட்டி வைக்க ஆரம்பித்தனர்.
அதற்குள், உடனே ஒரு மூத்த குரங்கு தலைமையில் குரங்குகள் குழு ஒன்று அங்கு வந்து
திருடர்களை மிக மோசமாக அடித்து பொக்கிஷங்களை விட்டு விரட்டியது.
குரங்குகள் புதையலை காக்க ஆரம்பித்தன.
இதனால் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய பொக்கிஷம் கொள்ளையடிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டது. ஒரு அதிசயமாக, தாதா தேசிகன் ஒரு கனவில் தோன்றினார்,
அவருக்கு நடந்த முழு நிகழ்வுகளும் காட்டப்பட்டு ஸ்ரீ ஹனுமனின் தரிசனத்தைப் பெற்றன.
தாதா தேசிகன், அது வேறு யாருமல்ல, ஹனுமான் தான் இறைவனின் உண்மைப் பணியாளர் என்பதை உணர்ந்தார்
அவரை காப்பாற்ற ராமர் அங்கு வந்தார்.
அதனால் தாதா தேசிகன் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்,
அவருடைய கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.
உடனே கண்விழித்த அவர், மயங்கி விழுந்த திருடர்கள் பலமாக அடிக்கப்படுவதையும்,
புதையலை குரங்குகள் கும்பல் பாதுகாப்பையும் பார்த்தார்.
தாதா தேசிகனும் தன் பொக்கிஷங்கள் காப்பாற்றப்பட்டதைக் கண்டான்.
அவர் பக்தியில் மூழ்கி, சேமித்த தொகையில் ஒரு பகுதியை ஸ்ரீ ராமர் , ஸ்ரீ சீதா, ஸ்ரீ லக்ஷ்மணர்
ஆகியோருடன் இணைந்து ஹனுமானுக்கு  ஒரு அற்புதமான கோயிலைக் கட்டுவதற்குச் செலவு செய்தார்.
கட்டப்பட்ட கோயிலுக்கு அருகில் மிகப் பெரிய ஏரியைக் கட்டி, அதற்கு ‘ஸ்ரீ லட்சுமி’ என்று பெயரிட்டார்
சரஸ்’, அதாவது கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோவிலின் ஸ்ரீ கோமளவல்லி என்ற திருநாமத்தால்
அவரது தாயாராக இருந்த ‘லட்சுமி தேவியின் குளம்’ அவருக்கு தாய்ப்பாலை ஊட்டி
காஞ்சிபுரம் ஸ்ரீ பெருந்தேவித் தாயார் அவரைக் காப்பாற்றினார்.

அவரது வாழ்நாள் முழுவதும் மற்றும் அவரே அவருக்கு பல்வேறு கலைகள் மற்றும் தத்துவங்களின் ஆசிரியராக இருந்தார்.
ஆனால் பிற்காலத்தில் இந்த ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் கடல் போல் கம்பீரமாக காட்சியளித்ததால்,
இந்த பெரிய ஆச்சார்யாவின் நினைவாக இந்த ஏரி “ஸ்ரீ தாதா சமுத்திரம்” என்று அழைக்கப்பட்டது.
இன்றைய நாட்களிலும் கூட, இந்தியாவின் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட “ஸ்ரீ சஞ்சீவிராய” என்று அழைக்கப்படும்
அனுமனின் இந்த வடிவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய கோவிலாக இது உள்ளது .
ஸ்ரீ தாதா தேசிகன் இந்த அனுமனைப் போற்றும் வகையில் “ஸ்ரீமத் ஹனுமத் விம்சதி” என்ற புகழ்பெற்ற இலக்கியப் படைப்பையும் இயற்றியுள்ளார்,
இது கல் பலகைகளில் பொறிக்கப்பட்டு பிரகாரங்களில் வைக்கப்பட்டுள்ளது.(பிரதான கோவிலை சுற்றியுள்ள வட்ட சுற்று)
விஜயநகர பேரரசின் அப்போதைய மன்னரால். பின்னர் இந்த கோவிலின் சுற்றுப்புறம் முழுவதும்
ஸ்ரீ தாதா தேசிகனின் நினைவாக “ஸ்ரீ தாதா ஐயங்கார் குளம்” என்று அழைக்கப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிறிய கிராமம் இன்றைய காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இலக்கியப் பங்களிப்பு
ஸ்ரீ ததா தேசிகன் அவர்கள்
“ஸ்ரீ ஹனுமத் விம்சாதி”,
“நிகம பரிமளம்”,
“ஸ்ரீ பாண்டுரங்க மகாத்மியம்”,
“ஸ்ரீ தேசிக பிரபந்த ஈடு”
மற்றும் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் பல இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்.
இந்தப் படைப்புகள் திருமலை திருப்பதி தேவஸ்தான நூல்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீ ததா தேசிகனின் மகத்துவத்தைப் பற்றி இயற்றப்பட்ட “ஸ்ரீ ததா விம்சதி” என்ற நூல்
இந்த அறிவாளியின் பல்வேறு செயல்களையும் தெளிவாகப் பதிவு செய்கிறது.

ஸ்ரீ ததா தேசிகன் ஸ்ரீ வைஷ்ணவத்தின்பல்வேறு தத்துவ உண்மைகளை நிரூபிக்க பல்வேறு இலக்கியப் படைப்புகளையும் இயற்றியுள்ளார் .
ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் மற்றும் ஸ்வாமி வேதாந்த தேசிகன் ஆகியோரின் மீது அவருக்கு இருந்த பக்தி
அவரது படைப்புகளில் இருந்து மிகவும் அறியப்படுகிறது.
சமஸ்கிருதம், தமிழ், பிராக்ருத மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
“ஸ்ரீ தேசிக பிரபந்த ஈடு” அவர் தமிழ் இலக்கியத் திறமையில் தேர்ச்சி பெற்றதற்குச் சான்றாக விளங்குகிறார்.
சுவாமி வேதாந்த தேசிகனின் தமிழ்ப் படைப்புகளுக்கு வழி காட்டியாக நிற்கிறது .

தத்துவம்
ஸ்ரீ தாதா தேசிகன் நவீன வைணவத்தின் வடகலைப் பிரிவைப் பின்பற்றினார்
மற்றும் அவரது சிந்தனைகள் அவரது படைப்புகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன.
அவர் தூப்புல் (வேதாந்த தேசிகா) சுவாமி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனின் நேர்மையான சீடராக இருந்தார்
மற்றும் அவரது அடி படிகளைப் பின்பற்றினார்.
சீதை, லக்ஷ்மணன், பரதன், சத்ருகனா, அனுமன் ஆகியோருடன் ஸ்ரீராமனைத் தன் தனிக் கடவுளாகக் கொண்டு,
தங்கப் பெட்டியில் வைத்து, தான் பயணித்த இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்றார்.
ஸ்ரீ தாதா தேசிகன் உண்மை, பக்தி, உயர்ந்த அறிவு மற்றும் இலக்கியத்தின் உருவகமாக கருதப்பட்டார்.
அவர் “ஆச்சார்ய மஹானுபவ” என்று போற்றப்பட்டார்,
இது “சிறந்த ஆசிரியர் மற்றும் தத்துவ ஞானி”.
ஸ்ரீ ததா தேசிகன் நம்மாழ்வார் தொடங்கி சுவாமி வேதாந்த தேசிகர் வரையிலான ஆசிரியர்களின் வம்சாவளியால் உருவாக்கப்பட்ட
வைணவத்தின் நெறி முறைகளையும் அதன் தத்துவ விழுமியங்களையும் கடைப் பிடித்தார்.
ஸ்ரீ வைஷ்ணவம் பழங்காலத்திலிருந்தே பரந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தாலும்,
இந்து நாட்காட்டியால் குறிக்கப்பட்ட இந்த கலி யுகத்தின் பொறுப்புக் கூறல் என்பது
ஸ்ரீமன் நாராயணனால் அனுப்பப்பட்டதாக நம்பப்படும் துறவிகளான ஆழ்வார்களின் போதனைகளிலிருந்து தொடங்குகிறது.
கடவுள்-தலைவரே, இந்த பொருள் முதல்வாத உலகின் மக்களை மாயாவின் குறைபாடுகளிலிருந்து
விடுவிப்பதற்காக, ‘மாயை’க்கு சமமான சொல்.
ஸ்ரீ ததா தேசிகன் அவர்களின் சிறந்த அறிவுக்காகவும், மிகவும் எளிமையாகவும்,
பெருமையற்றவராகவும் இருந்ததற்காகப் புகழ்ந்து கொண்டாடப் பட்டார்.

ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் ‘வேதார்த்த சங்கிரஹம்’, ஸ்வாமி வேதாந்த தேசிகரின் படைப்புகள்
ஸ்ரீ தாதா தேசிகனின் படைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் விசிஷ்டாத்வைதத்தின் முக்கிய கருத்துக்கள்: தத்துவம், ஹிதம் மற்றும் புருஷார்த்தம்;
உபாயம் மற்றும் உபேயம் ; சித், அசித், ஈஸ்வர; காரியம், காரணத்தின் கருத்துக்கு உள்ள உண்மை;
ஸ்ரீ தாதா தேசிகனின் “நிகம பரிமளம், லக்ஷ்மி நியுதம், பஞ்சக்ரந்தி நிபாஹாரம், சப்தகிரந்தி நிபாஹாரம்,
மற்றும் சாத்விக பிராமண வித்யா விலாசம்” போன்ற படைப்புகளில் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
ஸ்வாமி வேதாந்த தேசிகரின் படைப்புகளுக்கு வழிகாட்டியாக விளங்கும் “ஈடு” படைப்புகள் என்ற தலைப்பில் வரும்
“ஸ்ரீ தேசிக பிரபந்த ஈடு” என்ற விளக்க உரையை ஸ்ரீ ததா தேசிகன் எழுதியது பாராட்டிற்குரியது.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ‘திருவாய்மொழி’ என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரின் படைப்புகளுக்கு வழிகாட்டியாக
‘சுவாமி திருக்குருகைப் பிரான் பிள்ளான் ‘ என்பவர் எழுதிய
“திரு ஆறாயிரப் படி ” (புனித 6000 வசனங்கள்) இதே போன்ற ஈட்டுப் படைப்பாகும்.
ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் ‘அபிமான புத்திரன்’ ( வளர்ப்பு மகனுக்கு சமமான சொல்) என்று மீண்டும் கருதப்படும்
‘சுவாமி திருக்குருகைப் பிறந்த பிள்ளானின் ‘தந்தை வழி குடும்பப் பரம்பரையில்
ஸ்ரீ தாதா தேசிகன் வருகிறார் என்பது பாராட்டத்தக்கது.
இவ்வாறு ஸ்ரீ தாதா தேசிகன் எனப் போற்றப்படுகிறார்.

தஸ்மை தர்ம ஸ்வரூபாய, நிர்மலோதர கீர்த்தயே
ஸ்ரீ லக்ஷ்மி குமார தாதாயார்ய தேசிகாய நமோன் நமঃ

நீதி தர்மம் மற்றும் எண்ணிலடங்கா வீரத்தின்
திரு வுருவமான ஸ்ரீ தாதா தேசிகனை” நாம் வணங்குகிறோம்

ஸ்ரீ தாதா தேசிகர் விஜயநகரப் பேரரசின் அரச ஆசானாகவும் உயர்ந்த மரியாதையுடனும் புகழுடனும் போற்றப்பட்டார்.
அவர் விஜயநகரப் பேரரசின் ‘ராஜ குரு’ – ‘அரச ஆசிரியர்’.
மன்னன் இந்த புராணத்தின் பங்களிப்புகளை ஆதரித்து, இந்தியாவில் உள்ள இந்துக் கடவுளான விஷ்ணுவுக்கு வழங்கப்படும் 108 கோயில்களான அவர்களின் பேரரசில் உள்ள
அனைத்து திவ்ய தேசக் கோயில்களின் “ஸ்ரீ காரிய துரந்தரர்” என்று அழைக்கப்படும் “மேலாளர்-ஜெனரல்” ஆக்கினார்.
ஆச்சார்யாவுடன் காஞ்சிபுரத்தில் தளம் உள்ளது.
மேலும் சுவாமி தாதா தேசிகன் காஞ்சிபுரத்தின் “ஸ்ரீ காரியம்”
(“தர்ம கர்த்தா-கப்பல்” என்ற பேச்சு வழக்கில் அறியப்படுகிறது) அலுவலகத்தை மரபுரிமையாகப் பெற்றார்.

மேலும் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் தாய் மாமாவான “திருமலை நம்பி”,
திருமலையின் “தாத்தாச்சாரியார்” என்ற பட்டம் பெற்ற குடும்பம் ஸ்ரீ ராமானுஜரை பின்பற்றுபவர்கள்.
மற்றும் சுவாமி வேதாந்த தேசிகா மற்றும் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவை ஆண்ட
பல்வேறு வம்சங்களின் ராஜா குருக்களாக (தெய்வீக போதகர்கள்) பணியாற்றினார்.
சாளுவ, துளுவ, சங்கம வம்சங்கள் உட்பட விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர்களுக்கு
ஸ்ரீ ததா தேசிகனின் தந்தை வழிப் பரம்பரை இராஜ குருக்களாக இருந்தது.
ஹொய்சலா மற்றும் சாளுக்கிய பேரரசுகள் கூட சதாமர்ஷன மகரிஷியின் கோத்திரத்தைச் சேர்ந்த
அந்தந்த பேரரசுகளின் முக்கியமான ஆச்சார்ய குலமாக “தாதாச்சார்யா” என்ற பட்டத்துடன்
இந்த பெரிய மனிதர்களைப் பற்றிய குறிப்புகளைக் காட்டுகின்றன.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, விளாங்குப்பம், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சந்திரகிரி மற்றும் நவீன தமிழகத்தின்
சில பகுதிகள் உட்பட பல்வேறு விஜயநகரப் பேரரசு பிரதேசங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட நாயக்க ஆட்சியாளர்களுக்கு
சுவாமி தாதா தேசிகனின் வழித் தோன்றல்கள் தொடர்ந்து அரச ஆசான்களாக இருந்தனர்

மனித நேயம்
இந்த பெரிய ஆச்சார்யாவின் ஏழைகள் மற்றும் துன்பங்கள் மீதான அன்பு, அவர்களின் வாழ்க்கையில்
அவர்களை வளர்ப்பதற்கு அவர் செய்த சிறந்த தாராளமான பங்களிப்புகளால் நன்கு அறியப்பட்டது.
அவர் நிறைய “அன்ன சத்திரங்கள்” – “உணவு மண்டபங்கள்” நிறுவினார்
மற்றும் அந்த கோவில்களுக்கு தினமும் வரும் பக்தர்களுக்கு உணவளிக்க பல்வேறு கோவில்களில்
“தேசாந்திரி கட்டளை” என்று அழைக்கப்படும் “பயணிகளுக்கு சேவை செய்யும் ஆணை” நிறுவப்பட்டது.
அவர் நிறைய ஏழை ஜோடிகளின் திருமணத்திற்கு நிதியுதவி செய்தார்,
எனவே “கோஷ்டி” என்று அழைக்கப்படும் ஒரு பெரிய கூட்டத்தில் கிட்டத்தட்ட பத்து மில்லியன் ஜோடிகளுக்கு
அல்லது உண்மையில் ஜோடிகளுக்கு உதவியதற்காக அவரை மதிக்கும்
“கோடி கன்னிகாதனா” என்ற கௌரவப் பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டார்!
அவர் “உபய வேதாந்த சாரியார்” என்று போற்றப்பட்டார்,

சந்ததியினர்
இன்றும் ஸ்ரீ கோடி கன்னிகாதன ஸ்ரீ லக்ஷ்மி குமார தததா தேசிகனின் வழித்தோன்றல்கள்
பல்வேறு திவ்ய தேசங்களில் தத்துவ விழுமியங்கள் மற்றும் செழுமையான இந்திய கலாச்சாரத்தின்
ஆசிரியர்களாக வாழ்ந்து அவர்களுக்குக் கட்டுப்பட்ட பல நீதியான செயல்களைத் தொடர்கின்றனர்.
காஞ்சிபுரம் பேரருளாளன் கோவில் வரதராஜப் பெருமாள் கோவில் என்று உள்ளது.
அவர்கள் கோவில் மரியாதைகளை வழங்குவதற்கான நெறிமுறையில் உள்ள பிரதான ஆச்சார்ய புருஷர்கள்.
பின்னோக்கிப் பார்த்தால், திருமலை நம்பியின் மகனான திருக்குருகைப் பிரான் பிள்ளான் ராமானுஜரால்
அவருக்குப் பிறகு விசிஷ்டாத்வைத தத்துவத்தைப் பரப்பிய 74 பீடாதிபதிகளில் முதன்மையானவராகவும், நியமிக்கப்பட்டார்.
ராமானுஜரால் திருவாய்மொழிக்கு விளக்கம் எழுதுவதற்குத் தகுதியானவராகவும் பிள்ளான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறு ராமானுஜரின் கட்டளையின் பேரில் பிள்ளான் கொண்டு வந்த திருவாய்மொழியின் சிறுகுறிப்பு,
திவ்யப் பிரபந்தத்தில் தமிழ் மற்றும் சமஸ்கிருத சொற்களின் நேர்த்தியான கலவையான
மணிப் பிரவாளத்தில் முதல் பொலிவாகப் புகழ்பெற்ற ‘ஆறாயிரப்படி ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிள்ளானுக்குப் பிறகு, ஐந்தாம் தலைமுறை தாத்தாச்சாரியார்களில் திருமலை ஸ்ரீநிவாசாச்சாரியார் தேவராஜ ஸ்வாமி
கோவிலின் (காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்) ஸ்ரீ காரியமாக வேதாந்த தேசிகரால் நிறுவப்பட்டது.
அன்றிலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் தாத்தாச்சாரியார்களின் விடாமுயற்சி மற்றும் பக்தியுடன்
ஸ்ரீ காரியம் அலுவலகம் நிறுவன மயமாக்கப் பட்டது.
லக்ஷ்மி குமார ததா தேசிகன் தனது முன்னோர்களிடமிருந்து இந்த அங்கியை மரபுரிமையாகப் பெற்றார்
மற்றும் கோயில் ஆண்டுகளில் சகாப்தமாக பங்களிப்பு செய்தார்.
அவர் ஸ்ரீ காரிய துரந்தரா – கோவில் விவகாரங்களின் முழுமையான அர்ப்பணிப்பு
மற்றும் அதிகாரத்தை குறிக்கும் ஒரு சொற்றொடர்.
அதே நேரத்தில் அவர் விஜயநகர மன்னர் வெங்கடபதி தேவ மகாராஜின் ராஜ குருவாகவும் இருந்தார்.
காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஐயங்கார்குளம் என்ற ஊரில், ஸ்ரீராமர் மற்றும் அனுமனுக்கு குளம் மற்றும் கோவில் கட்டினார்.

நவீன கால நகரமான காஞ்சிபுரத்தில், ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலின் ஸ்ரீ வேதாந்த தேசிகன் சந்நிதியில்
ஸ்ரீ லக்ஷ்மிகுமார தாதா தேசிகனின் ஆறு அடி சிலை மற்றும் அவரது துணைவியார் ஸ்ரீ கமலா அம்மங்கர் அவர்களின்
ஆச்சாரியார் ஸ்ரீ ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகனுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.
ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பிரதான தெய்வம் ஊர்வலம் தொடங்கும் போதெல்லாம்  இந்த ஆச்சார்யர்களுக்கு மரியாதை –
ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் மற்றும் ஸ்வாமி ஸ்ரீ லக்ஷ்மி குமார ததா தேசிகன் ஆகியோருக்கு “சடாரி” –
மத கிரீடம் வடிவ அமைப்பில் முத்திரைகள் வழங்கப்படுகின்றன.
அதில் “தீர்த்தம்” -புனித நீர் மற்றும் “மாலை” “மரியாதை” – “மரியாதை” ஆகியவற்றுடன் கூடிய விஷ்ணுவின் தாமரை பாதங்கள் .

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –