Archive for August, 2022

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம்-சூர்ணிகை —308–320–

August 6, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

சூரணை -308-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் –

தான் ஹித உபதேஸம் பண்ணும் போது -இத்யாதி –
இங்குத் தான் என்கிறது -கீழில் ப்ரபந்தத்தாலே ப்ரதிபாதிக்கப் பட்ட உபாய உபேயங்களிலும்
ததேக ப்ரயோஜனத்வ பர்யந்தமான கைங்கர்யத்திலும்
தத் பூர்வ பாவிகளான ஞான தசை தொடக்கமான பாவ விசேஷங்களிலும்
அத்யந்தம் நிஷ்ணாதனாய் அக்ருத்ய கரணம் தொடங்கி ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களான நிஷித்த அனுஷ்டானங்களிலே நிவ்ருத்தனான தான்
ஆச்சார்ய பதத்துக்கு ப்ராப்தனாகையாலே தன்னளவிலே உப சன்னனாய் ஆஸ்ரயிக்கும் ஆத்ம குணோ பேதனான ஸிஷ்யனுக்கு ஹித உபதேசம் பண்ணும் போது ஏவம் விதனான
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
விபரீத பிரதிபத்தி பண்ணி -க்யாதி லாப பூஜா ஸா பேஷனாய் உபதேஸிக்கை
கீழ்ச் சொன்ன நிஷித்தங்களில் காட்டில் மிகவும் க்ரூர நிஷித்தம் என்கிறார் –

————–

சூரணை-309-

தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –
த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –
ஸஹ வாசத்தையும் –
பலமாக நினைக்கை —

தன்னை மாறாடி நினைக்கையாவது -இத்யாதி -ஸ்வ ஆச்சார்ய பரதந்த்ரனாய்க் கொண்டு அவனுக்கு சிஷ்யனான தான் தன்னை மாறாடி நினைக்கையாவது –
தஸ்மை ஸ வித்வான் தத்வதோ ப்ரப்ரூயாத் -என்கிறபடியே
காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி -என்று தொடங்கி
தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -என்னும் அளவாகவும்
தத் பாவ பாவமா பன்னையாய் பின்பு பிறருக்கு உபதேசித்தாப் போலே
ஸ்வ ஆச்சார்ய அவயவத் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேசியாதே உபதேஸ கர்த்ருத்வ மாத்ரத்தைக் கொண்டு
தன்னை ஆச்சார்யன் என்று நினைக்கை –

இனி ஸிஷ்யனை மாறாடி நினைக்கையாவது -பகவத் ப்ரஸாதத்தாலே நம்முடைய ஆச்சார்யனுக்கு இவனும் ஒரு சிஷ்யன் திருந்தினால் என்று இராதே
தனக்கு சிஷ்யன் என்று இருக்கை –

பலத்தை மாறாடி நினைக்கை யாவது -த்ருஷ்ட பிரயோஜனம் தொடக்கமான பல விசேஷங்களை -சேஷ பூதனான சிஷ்யன் -என்று
அருளிச் செய்கிற யதா க்ரமத்திலே பலிக்கை அன்றிக்கே இப் பலங்கள் யுண்டாக வேண்டும் என்று தான் கணிசித்து உபதேஸிக்கை

ஆக இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
தன்னை மாறாடி நினைக்கை யாகிற க்யாதியும்
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாகிற பூஜையும்
பலத்தை மாறாடி நினைக்கை யாகிற லாபமும்
இம் மூன்றையும் குறித்து உபதேஸிக்கை இவ்வதிகாரிக்கு க்ரூர நிஷித்தம் என்றதாயிற்று –

—————

சூரணை -310-

நினையாது இருக்க -இந் நாலு பலமும்
சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –

இங்கனே யாகில் -இவ்வதிகாரி நினையாது ஒழிய லோகத்திலே இந்நாலு பலமும் பலித்துப் போகிற படி தான் எங்கனே என்று
சோத்யமாக சேஷ பூதனான -என்று தொடங்கி அத்தைப் பரிஹரிக்கிறார்
அவ்வாச்சார்யனுக்கு சேஷ பூதனான சிஷ்யன் -நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் -என்று நினைத்து
சரீர மர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் -என்கிறபடியே
ஸகலத்தையும் உபகாரகன் பக்கலிலே உபகரிக்கையாலே த்ருஷ்ட பலம் ஸித்திக்கும் –
இப்படி விலக்ஷணனான ஆச்சார்யனுடைய அபிமானத்திலே அந்தர் கதன் அன்றோ இவன் -கிம் ஆச்சார்ய வதோ லோகே துர் லபம் ஸூல போப்யஹம் -என்றும் எம்பருமான் திரு உள்ளம்பற்றி உஜ்ஜீவிப்பிக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் உண்டாம் –
இனி இந்த உபதேஷ்டாவினுடைய ஆச்சார்யன் நாம் செய்த கார்யம் இவ்வளவும் வர பகவத் கைங்கர்யம் ஆயிற்று என்று தன் திரு உள்ளத்தால் நினைத்து
உடையவரைத் திருக்கோட்டியூர் நம்பி பெருமாள் நமக்காவாரைத் தேடிக் கொள்கிறோம் என்ற அவரோ இவர் என்று
அணைத்துக் கொண்டு உகந்தாப் போலே உகக்கும் படி இவன் வர்த்திக்கையாலே ஆச்சார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் பலிக்கும்
ஆச்சார்யன் பக்கலிலே ஞான உப போகம் கொண்ட உபகார ஸ்ம்ருதியாலே இலை படுத்த இடத்திலே தலை படுக்குமா போலே
ஸஹ வாஸமும் தன்னடையே ஸித்திக்கும் என்கிறார் –

—————

சூரணை -311-

சாஷாத் பலமும்
ஆசார்யத்வமும்
சித்திக்கிற படி என் என்னில்
தன் நினைவாலும் –
ஈஸ்வரன் நினைவாலும் –
சித்திக்கும் –

ஸாஷாத் பலமும் -இத்யாதி -கீழ்ச் சொன்ன த்ருஷ்ட ப்ரயோஜ நாதிகள் இவ் வாச்சார்யன் நினைவாலே வாராது ஒழிந்த பின்பு இவனுக்கு இவை ஸாஷாத் பலங்கள் அல்லவாய் இருந்தன –
இனித்தான் -பிரயோஜனம் அநுத் திஸ்ய ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்று ஒரு சேதனற்கும் ப்ரயோஜனத்தை யுத்தேசித்து அல்லது ப்ரவ்ருத்தி கூடாமையாலே
இவ் வாச்சார்யனுடைய ப்ரவ்ருத்திக்குத் தன் நினைவாலே உத்தேசித்த ஸாஷாத் பலமேதாகக் கடவது –
இவன் தன்னை ஸிஷ்யனாக நினைத்து இருக்கையாலே உபதேஷ்டாவான இவனுக்கு ஆச்சார்யத்வம் ஸித்திக்கிற வழியேதாகக் கடவது என்ன
தன் நினைவாலும் ஈஸ்வரன் நினைவாலும் ஸித்திக்கும் என்கிறார் -அவை ஸித்திக்கிற படி தான் எங்கனே என்னில்
இவ்வாச்சார்யன் உபதேஸ காலத்திலே அஸ்மத் குருவின் பொருட்டு நமஸ்ஸைப் பண்ணு என்று சிஷ்யனைக் குறித்து
விதிக்கையாலே தன்னாச்சார்ய விஷயத்தில் தன் நினைவாலே வருகிற பலமான மங்களா ஸாஸனம் ஸித்தித்து விடும் –
இனி இப்படி உபதேஸிக்கிறவனுக்கு ஈஸ்வரன் நினைவாலே ஆச்சார்யத்வம் ஸித்திக்கும் –
ராஜா ஒருவன் கையிலே ராஜ சிஹ்னத்தைக் கொடுத்துச் செல்லாத ராஜ்யத்தைச் செலுத்திக் கொள்ளுமா போலே
விலக்ஷணமான ஞான அனுஷ்டானங்களை யுண்டாக்கி –
வீசும் சிறகால் பறத்தீர்–பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கிற பர ப்ரதிபாதன சாமர்த்யத்தையும் யுண்டாக்கி –
இப்படி இவனுக்கு ஆச்சார்ய பதத்தைக் கொடுக்கையாலே ஈஸ்வரன் நினைவாலே ஸித்திக்கும் என்கிறது –

———————-

சூரணை -312-

இப்படி ஒழிய உபதேசிக்கில்
இருவருக்கும்
ஸ்வரூப சித்தி இல்லை –

ஆக -இவ்வாச்சார்யன் உக்த க்ரமத்திலே -க்யாதி -லாப -பூஜா நிரபேஷமாக உபதேஸியா விடில் -சதாச்சார்யன் அல்லாமையாலே
ஆச்சார்ய ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
ஸதாச்சார்ய உபதேசம் பெறாமையாலே ஸிஷ்யத்வ ஸ்வரூப ஸித்தி இல்லாமையாலும்
இப்படி ஒழிய உபதேஸிக்கில் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி இல்லை என்று
த்ருடீ கரித்து அருளிச் செய்கிறார் –

—————–

சூரணை -313-

ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல்
கிருபையும்
ஸ்வாசார்யன்  பக்கல்
பாரதந்த்ர்யமும் வேணும் –

ஆனால் இருவருக்கும் ஸ்வரூப ஸித்தி யுண்டாம்படியான இந்த சிஷ்யாச்சார்ய லக்ஷணம் தான் இருக்கும் படி எங்கனே என்ன
ஆச்சார்யனுக்கு என்று தொடங்கி -ஆச்சார்ய லக்ஷணத்தையும் அருளிச் செய்கிறார் மேல் -ஆச்சார்யனுக்கு சிஷ்யன் பக்கல் கிருபையும் -இத்யாதி –
இப்படி க்யாதி லாப பூஜா நிரபேஷனாய் ஈஸ்வரனாலே ஆச்சார்ய பதம் பெற்ற தான் தன்னைச் சேர்ந்த ஸிஷ்யனுக்கு உபதேஸிக்கும் இடத்தில்
அவ்வாச்சார்யனுக்கு ஸம்ஸார தாப அர்த்தனான ஸிஷ்யன் பக்கல் ஐயோ என்கிற கிருபையும்
ஹித உபதேஸ காலத்தில் ஸ்வாச்சார்யனானவன் தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே இருந்து உபதேஸிக்கிறான் என்றும்
அவனுக்குப் பரதந்த்ரனாய்க் கொண்டு உபதேஸிக்கையும் இவ்வதிகாரிக்கு வேணும் என்கிறார் –

—————-

சூரணை -314-

கிருபையாலே
சிஷ்யன் ஸ்வரூபம் சித்திக்கும் –
பாரதந்த்ர்யத்தாலே
தன் ஸ்வரூபம் சித்திக்கும் –

இவை எதுக்காக வேண்டுகிறது என்ன அந்த சிஷ்யாசார்யர்களுடைய ஸ்வரூபத்துக்காக என்கிறார் –
கிருபையால் என்று தொடங்கி –

———-

சூரணை -315-

நேரே ஆசார்யன் எனபது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –

நேரே இத்யாதி -நேரே ஆச்சார்யன் என்றது பூர்ண வஞ்சகனான ஆச்சார்யனும் உண்டாக மேலே அருளிச் செய்கையாலே
ஸாஷாத் ஸ்வரூப உத்தாரகனான ஆச்சார்யனாகச் சொல்லுவது -ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே
திருமந்திரம் ஸகல புருஷார்த்த ஸாதனமாய் இருந்ததே யாகிலும் ஸம்ஸார நிவர்த்தக முகேந அப்பெரிய திரு மந்த்ரத்தை உபதேஸித்தவனை என்கிறார் –
ஸம்ஸார நிவர்த்தகமான த்வயத்தை உபதேஸித்தவனை என்னாது ஒழிந்தது அப்பெரிய திருமந்திரத்தில்
ப்ரணவ விவரமான நமஸ்ஸினுடையவும் நாராயண பதத்தினுடையவும் விவரணமாய்க் கொண்டு
த்வயத்தில் பூர்வ உத்தர வாக்யங்கள் இருக்கையாலே –

———–

சூரணை -316-

சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –

ஆனால் நேரே ஆச்சார்யன் இவனாகில் வஞ்சகரான ஆச்சார்யர்கள் யார் என்ன -அவர்களைச் சொல்லா நின்று கொண்டு
மந்த்ர சோதனத்தையும் பண்ணுகிறார் -சம்சார வர்தகங்களுமாய்-என்று தொடங்கி
ஆச்சார்ய சோதனம் பண்ணினால் அவனாலே உபதேஸிக்கப் படும் மந்த்ர சோதனமும் பண்ண வேணும் இறே
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களைக் கொடுக்கும் -மதந கோபாலாதி மந்த்ரங்கள் ஸம்ஸாரத்தைப் பூண் கட்டிக் கொடுக்குமவையாய்
பெரிய திருமந்திரம் போல் அன்றிக்கே ஷுத்ரங்களுமான அம்மந்திரங்களை உபதேஸித்தவர்களுக்கு
ஆச்சார்யத்வ மாத்ரம் உண்டே யாகிலும் ஆச்சார்யத்வ பூர்த்தி இல்லை என்கிறார் –

—————

சூரணை -317-

பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பலத்வாரா –

சூரணை-318-

சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –

சூரணை -319-

இது தான் ஒவ்பாதிகம் –

சூரணை -320-

சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –(அத்தை உபபாதிக்கிறார் )

ஆனாலும் பகவத் மந்த்ரங்களை -ஷுத்ரங்கள்-ஸம்ஸார வர்த்தகங்கள் -என்னலாமோ என்னில் -பகவத் மந்த்ரங்களை இத்யாதி –
மந்த்ரங்களினுடைய வைபவத்துக்குக் குறை இல்லை –
ஐஸ்வர்யார்த்தி கோபால மந்த்ர உபாஸகனாயும்
வித்யார்த்தி ஹயக்ரீவ மந்த்ர உபாஸகனாயும்
விஜயார்த்தி ஸூ தர்சன நரஸிம்ஹ மந்த்ர உபாஸகனாயும்
இப்படிப் போரக் காண்கையாலே ஷுத்ர பல ப்ரதத்வ த்வாரேண -அத்தை ஷுத்ரங்கள் -ஸம்ஸார வர்த்தகங்கள் -என்கிற இத்தனை என்கிறார் –

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- மூன்றாம் பிரகரணம் –5-பிரபன்ன தினசரியா பிரகரணம்-சூர்ணிகை -244–307-

August 6, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

சூரணை-244-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் –
ஜ்ஞான தசையில் -ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும் –
பிரேம தசையில் த்ட்டு மாறிக் கிடக்கும் –

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ –என்று தொடங்கி
மங்களா ஸாஸனமும் அனுகூல ஸஹ வாஸமும் பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும் சதாச்சார்ய ப்ரஸாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்று இத் தின சரிதையிலே ப்ரஸ்த்துதமான இந்நாலு அர்த்தத்தையும் சோத்ய பரிஹார ரூபேண விஸ்தரித்து அருளிச் செய்கிறார் மேல்
எங்கனே என்னில் -மங்களா ஸாஸனம் இத்யாதி

ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சக்தியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்துள்ள ஸர்வ ரக்ஷகனுக்கு
அஞ்ஞனாய்-அஸக்தனாய் -அபூர்ணனாய்க் கொண்டு -தத் ஏக ரஷ்ய ஸ்வரூபனான தான் ரஷா ரூபமான மங்களங்களைப் பிரார்த்திக்கை தன் ஸ்வரூபத்துக்குச் சேராதது அன்றோ என்று சோத்யமாக
ஞான தசையில் -என்று தொடங்கி அத்தைப் பரிஹரிக்கிறார் -அதாவது

அவ்வதிகாரிக்கு -அகாரார்த்தா யைவ ஸ்வ மஹம் -என்று பிரதமத்திலே பிறக்கும் ஞான தசையில் தான் ரஷ்யனாகவும் அவன் ரக்ஷகனாகவும் பிறக்கும் அனுசந்தானம் யதா வஸ்திதமாய் இருக்கும் –
அந்த ஞானத்தினுடைய பரிபாக அவஸ்தையான ப்ரேம தசையில் வந்தால் அவ்வனுசந்தானம் விபர்யாஸ ஆஸ்ரய அவஸ்திதமாய் இருக்கும் –

—————–

சூரணை -245-

அவன் ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் அவனைக் கடகாகக் கொண்டு தன்னை நோக்கும் –
ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் தன்னைக் கடகாகக் கொண்டு அவனை நோக்கும் –

அவை தான் எங்கனே என்னில் -ஸர்வ பிரகார ரக்ஷகனான அவனுடைய ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்கிறபடியே
அவனே ரக்ஷகனாக அத்யவசித்துக் கொண்டு தன் ஸ்வரூபத்தைக் காக்கும் –
அவ்விலக்ஷண ரூபத்துக்கும் ப்ரகாசகமாய் அத்யந்த அபி ரூபமான அவனுடைய விக்ரஹத்தில்
புஷ்ப ஹாஸ ஸூ குமாரமான ஸுகுமார்யத்தை அனுசந்தித்தால்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே -என்றும்
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்றும்
இத்யாதியில் படியே தன்னை ரஷா சாதனமாக நினைத்து அவனைக் காக்கத் தேடும் –

—————-

சூரணை -246-

இவ் அர்த்தம் சக்கரவர்த்தி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் –
விஸ்வாமித்திரன் –
ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள் –
திருவடி –
மகா ராஜர் –
ஸ்ரீ நந்த கோபர்
ஸ்ரீ விதுரர்
பிள்ளை உறங்கா வில்லி தாசர்
தொடக்கமானவர்கள் பக்கலிலே காணலாம்-

உபய ஸ்வரூப அனுரூபமான இவ்வநுஷ்டானம் எங்கே கண்டோம் என்ன –
இது சிஷ்டாசார ஸித்தம் என்னும் இடத்தை சக்ரவர்த்தி ஸ்ரீ ஜனக ராஜன்-என்று தொட்ங்கிப் பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பிக்கிறார்

பெருமாள் பிராட்டியைத் திருமணம் புரிந்து மீண்டு எழுந்து அருளா நிற்க மத்யே மார்க்கே பரஸூ ராமன் -என் வில் வலி கண்டு போ -என்று
பெருமாளோடே எதிரிட்ட தசையிலே சக்ரவர்த்தி முன்பே தாடகா தாடகேயருடைய நிரசன பிரகாரத்தைக் கேட்டிருக்கச் செய்தேயும்
அப்பரஸூராமனை -ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தஸ் த்வம் ப்ராஹ்மணஸ் ச மஹா யஸா பாலானாம் மம புத்ராணாம் அபயம் தாது மர்ஹசி -என்று
பெருமாள் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே சரணம் புகுந்து அவன் தோற்றுப் போனமை கேட்டிருக்கச் செய்தேயும்
கதோ ராம இதி ஸ்ருத்வா ஹ்ருஷ்ட ப்ரமுதிதோ ந்ருப புனர் ஜாதம் ததா மேநே ஸூத மாத்மாந மேவ ச -என்று
தானும் பெருமாளும் மறு பிறவி பிறந்ததாக நினைத்து இருக்கையாலும்

ஜனக ராஜன் பிராட்டியைப் பெருமாளுக்கு நீர் வார்த்துக் கொடுத்த தசையிலே தநுர் பங்கத்தால் வந்த சக்தியைக் கண்டு வைத்தும்
ப்ரதீச்ச சை நாம் பத்ரம் தே -என்று
அச்சேர்த்திக்கு என் வருகிறதோ என்று மங்களா ஸாஸனம் பண்ணுகையாலும்

தலை நீர்ப்பாட்டிலே பெருமாள் வைபவம் எல்லாம் அறிந்து இருக்கிற பிராட்டி அவர் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே
பதி சம்மா நிதா சீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களான்ய பிதத்த்யுஷீ பூர்வாம் தீஸம்
வஜ்ர தர -என்று தொடங்கி-திக் பாலர்களை-அவருக்கு ரக்ஷகராக அபேக்ஷிக்கையாலும்

விஸ்வாமித்ரன் அப்பெருமாளை அத்வர த்ராணார்த்தமாக அழைத்துக் கொண்டு போகிற போது நடுவே
தாடகை பெரிய ஆர்ப்பரவத்தோடே யுத்த உன்முகையாய் வந்து தோன்ற
ஊன ஷோடஸ வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந -ந யுத்த யோக்யதா மஸ்ய பஸ்யாமி ஸஹ ராக்ஷசை -என்று
இவரைப் புறப்பட விடுகைக்கும் இசையாதே கண்ணழிவு சொன்ன சக்கரவர்த்திக்கு
அஹம் வேத்மி வஸிஷ்டோ வேத்தி -என்று அவருடைய ஸர்வ ஸக்தி யோகத்தைச் சொல்லி அழைத்துக் கொண்டு வந்தவன் –
அனந்தரம் தாடகையைக் கண்டவாறே அத்தை மறந்து –
விச்வாமித்ரோபி ப்ரஹ்ம ரிஷிர் ஹூங்காரேண அபி பர்த்ஸ்யதாம் ஸ்வஸ்தி ராகவயோரஸ்து ஜெயஞ்சைவ அப்ய பாஷத–என்று
த்ரிகாலஞ்ஞனானவன் அவர்களுக்கு மங்களங்களை ஆசாசிக்கையாலும்

ஐந்தர வியாகரண பண்டிதனான திருவடி பெருமாள் தோள் அழகிலே ஈடுபட்டு
ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந வி பூஷிதா -என்று
ஆபரணங்களாலே அரண் செய்ய வேண்டும்படி அதி ஸூந்தரமான திருத் தோள்களை அவற்றை ஒழிய இப்படி ஆவிஷ் கரிக்கைக்கு அடி என் என்று அதி சங்கை பண்ணுகையாலும்

ஸூக்ரீவ மஹா ராஜர் பெருமாள் பக்கல் பரிவாலே சரணாகதரான ஸ்ரீ விபீஷணப் பெருமாளை
வத்யதா

—————–

சூரணை-247-

இளைய பெருமாளை ஸ்ரீ குகப் பெருமாள் அதி சங்கை பண்ண –
இருவரையும் அதி சங்கை பண்ணி –
ஸ்ரீ குகப் பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இறே —

இப்படி விசேஷஞ்ஞரே அன்றியே அவிசேஷஞ்ஞரையும் அதி சங்கை பண்ண வைக்கும் அவ்விஷய வை லக்ஷண்யம்
என்னும் இடத்துக்கு உதாஹரணம் காட்டுகிறார் -இளைய பெருமாள் என்று தொடங்கி -அதாவது –
ஸ்ரீ குஹப்பெருமாள் இடத்திலே பெருமாள் எழுந்து அருளின போது -அவர் பக்கல் பரிவாலே பங்காகப் படுத்து
அவரைப் பள்ளி கொள்ளப் பண்ணுவித்த அநந்தரம் அப் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் வெளிக் காவலாக நடை மதிள் இட்டால் போலே
கையும் வில்லுமாய்க் கொண்டு காவலாக வருகிற இளைய பெருமாளைக் கண்டு -ஒரு தம்பி இவரைக் காடேற ஓட்டினான்
இவர் என் செய்ய இப்படி இடம் பார்க்கிறாரோ என்று ஸ்ரீ குஹப்பெருமாள் அதி சங்கை பண்ணி அவர் இட்ட அடியிலே தாமும் அடி இட்டு
அங்கனே யாகில் அவரை அழித்தும் பெருமாளை நோக்கக் கடவோம் என்று பிடித்துக் கொண்டு வாரா நிற்க
அவர் ஞாதி -இவன் க்ரூர ஹ்ருதயனான வேடன் -இவ்விருவரும் இவரை என் செய்யப் புகுகிறார்களோ என்று அதிசங்கை பண்ணி
ஸ்ரீ குஹப்பெருமாளுடைய பரிகர பூதரானவர்கள் ஸ்வாமிகள் என்று பாராமல் இவ்விருவரையும் அழியச் செய்தாகிலும்
பெருமாளை நோக்குகையிலே உத்யுக்தரானார்கள் இறே என்கிறார் –

—————-

சூரணை -248-
ஒருநாள் முகத்தில் விழித்தவர்களை
வடிவு அழகு படுத்தும் பாடு ஆயிற்று இது —

ஒரு நாள் இத்யாதி -இப்படி இவர்களுக்குப் பரிவுண்டாயிற்று அவ் விஷயத்தில் சிரகால வாஸனையாலே ஈடுபட்டோ என்னில்
அங்கன் அன்று –
ராம கமல பத்ராஷ -ஸர்வ சத்த்வ மநோ ஹர -என்கிறபடியே
ஸர்வ சத்த்வ மநோ ஹரமான அவ்வழகிலே ஈடுபட்டு
ஸதா பஸ்யந்தி -பண்ணினார் படுவுற்றை ஒரு நாள் அது கண்ணுக்கு இலக்கான மாத்ரத்திலே பட்ட பாடு இறே இது என்கிறார் –

—————

சூரணை -249-

இவர்கள் நம்முடைய கோடியிலே-என்னும்படி ஆயிற்று ஆழ்வார்கள் நிலை –

இவர்கள் இத்யாதி -கீழ்ச் சொன்ன இவ் வதிகாரிகள் இவ் வர்த்தத்தில் ஆஸ்திகராய்
யதா அனுஷ்டானம் இல்லாத அஸ்மாதாதிகள் கோடியிலே அந்வயித்த மாத்ரம்
என்னும்படி யாயிற்று இவ் வர்த்தத்தில் யாதாவான பாவ பந்தமுடைய ஆழ்வார்களுடைய தசை –

—————

சூரணை-250-

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரியாழ்வார்-

ஆழ்வார்கள் எல்லாரையும் -இத்யாதி -இப்படி இவ் வர்த்தத்தில் அனுஷ்டாதாக்களான மற்றுள்ள ஆழ்வார்கள்
எல்லாரையும் போல் அல்லர் -கேவலம் ப்ரேம பரவசரான பெரியாழ்வார் –

——————

சூரணை -251-

அவர்களுக்கு இது காதா சித்தம் –-இவர்க்கு இது நித்யம் –

அது எங்கனே என்னில் -அவன் வடிவழகு அவர்கள் நெஞ்சில் உற்று இருந்தால் அத்தைத் தங்கள் அனுபவிக்க ஆசைப்படுவது ஒழிய
அவ்வடிவழகுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கை -அங்கும் இங்கும் -இத்யாதிகளிலே காதாசித்கமாக ஓரொருக்கால் உண்டாம் அத்தனை –
இப்பெரியாழ்வாருக்கோ -மல்லாண்ட திண் தோளுக்குப் பல்லாண்டு -என்று தொடங்கி
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் -என்றும்
மிடிக்கிலாமையால் நான் மெலிந்தேன் -என்றும்
உறகல் உறகல் -என்று தொடங்கி விஷ்ணு சித்தராகையாலே தம் திரு உள்ளத்திலே அவ்வஸ்துவை சேமம் கொண்டு
பள்ளியறை குறிக்கொண்மின் -என்று இத்யாதிகளாலே
பரிந்து நோக்குகையே பணி யாகையாலே இவருக்கு நித்யம் -என்கிறார் –

————–

சூரணை -252-

அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –

அவ்வளவும் அன்று -அவ்வாழ்வார்கள் -காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று ஆழங்கால் படுகிற
அவன் வைலக்ஷண்யம் தானே
அதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சுகிற இவருக்கு தரித்து நின்று மங்களா ஸாஸனம் பண்ணுகைக்கு
ஈடான நிலமாய் இருக்கும் –

————————

சூரணை -253-

அவர்களுக்கு-உபய சேஷத்வத்தையும் அழித்து-ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது –
விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –

அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து இத்யாதி -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவருக்கு உரியேனோ -என்றும்
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய் –
உனக்குத் திரு உள்ளமான படி செய்து அருளு என்று இருக்கும் படியான பகவத் சேஷத்வத்தை உடையரானவர்கள்
ஸ்வரூப விருத்தமான ஸ்வ ப்ரவ்ருத்திகளிலே இழிந்தும்
அவ்வதி ப்ரவ்ருத்திகள் ஆகாது என்று ததீயரை -உங்களோடு எங்கள் இடை இல்லை -என்று உபேக்ஷித்துப் போரும் படி
உபய சேஷத்வத்தையும் அழித்து -மங்களா ஸாஸனத்துக்கு வாய் திறக்க ஒட்டாத படி ஸ்வரூபத்தை மதி மயங்கப் பண்ணும்
வை லக்ஷண்யம் தானே -இப்பெரியாழ்வாருக்கு
உன் சேவடி செவ்வி திருக்காப்பு -என்றும்
மங்கையும் பல்லாண்டு -என்றும்
சுடர் ஆழியும் பல்லாண்டு -என்றும் -இத்யாதிகளாலே
பகவத் பாகவத விஷயங்களிலே மங்களா ஸாஸனத்தைப் பண்ண அவ்வுபய சேஷத்வ ஸித்திக்கும் ஹேதுவாய்
அம் மங்களா ஸாஸனம் சரமாவதி யாகையாலே அஸ் ஸ்வரூபத்தை பாரங்கதமாக்கும் என்கிறார் –

——————-

சூரணை -254-

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே எனபது –
5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —

இனி -பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –என்று தொடங்கி -இவருக்கு இது நித்யம் என்றது தன்னையே விசதமாக்குகிறார்
பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –இத்யாதி -அதாவது
அங்குல் யக்ரேண தான் ஹந்யாம் -என்றும்
கலக்கமில்லா நல் தவ முனிவர் -என்றும்
இத்யாதிகளாலே நிவ்ருத்த பயரான மஹா ராஜ பரங்குசாதிகளைப் போலே அன்றிக்கே
அவன் மல்ல வர்க்கத்தை அநாயாசேந அழித்த தன் மிடுக்கைக் காட்ட அது தனக்குப் பல்லாண்டு என்று பயப்படுவது
அநந்ய ப்ரயோஜனரான தமக்குப் பிரதிகூலரான கேவலரையும் ஐஸ்வர்யார்த்தி களையும்
மங்களா ஸாஸன அர்த்தமாக அழைத்து சங்கதராய் அவர்களோடே திருப்பல்லாண்டு பாடி அனுகூலராக்கிக் கொள்வது
கதே ஜலே சேது பந்தனம் பண்ணுவாரைப் போலே அன்று
பாழாளாகப் படை பொருதானுக்கு -இத்யாதிகளாலே
முன்பு அவன் பண்ணின அபதாநங்களுக்கு அக் காலத்தில் உதவப் பெறாத இழவுக்கு இன்று இருந்து வயிறு பிடிப்பது
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -என்று
அவ் விலக்ஷண வஸ்துவை ப்ராபித்த அநந்தரம் அந்த பிராப்திக்கு பலமும் இம் மங்களா சாஸனம் என்பது
அப் பலாதிகாரிகளாய் -அஸ்தானே பய சங்கிகளுமான அநிமிஷரைப் பார்த்து
உறகல் உறகல் -என்ற பாட்டின்படியே -உபதேசிப்பதாய்க் கொண்டு
இம் மங்களா சாஸனமே இவருக்கு விருத்தியாய் இருக்கும் என்கிறார் –

——————

சூரணை-255-

அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும்-தனிமையை தவிர்க்கை அன்றிகே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –

அல்லாதவர்களைப் போலே -இத்யாதி -இப்படி ப்ரயோஜனாந்தர பரரோடு -அநந்ய ப்ரயோஜனரோடு வாசியற இவர் உபதேசிக்கும் இடத்தில்
அல்லாத ஆழ்வார்கள் -ஆச்சார்யர்களைப் போலே உபதேசிக்கிற அர்த்தத்தைக் கேட்கிறவர்கள்
பகவத் விமுகராகையாலே -தனியரான ஸம்ஸாரிகளுடைய தனிமையைத் தவிர்ப்பிக்கைக்கும்
பகவத் குண அனுபவத்தில் போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்குத் துணைத் தேட்டமாம் படி
தனியராய் இருக்கிற வக்தாக்களான தங்களுடைய தனிமையைத் தவிர்ப்பிக்கைக்கும் அன்றியே
ஆளுமாளார்-என்கிற பாட்டின் படியே ஆழ்வாரை ஒழிய அநு சரர் இல்லாத படியாய் அத்விதீய ஸுகுமார்யத்தை யுடைய ஈஸ்வரன்
தனிமையைத் தவிர்க்கைக்காக வாய்த்து திருக்கோட்டியூர் நம்பி அஷட் கர்ணமாக உபதேசித்த அர்த்தத்தை அவ்வாச்சார்ய வார்த்த
அதி லங்கனம் பண்ணியே யாகிலும் பெரிய பெருமாளுடைய மங்களா ஸாஸன அர்த்தமாகப் பெரிய திரு மண்டபத்திலே பேர் ஓலக்கமாக வைத்து உபதேசித்த பாஷ்ய காரரும்
திருப் பல்லாண்டிலே அநந்ய ப்ரயோஜனரோடு ஓக்க ப்ரயோஜனாந்தர பரரையும் அழைத்து ஆள் தேடும் ஐவரும் உபதேஸிப்பது -என்கிறார் –

————–

சூரணை-256-

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்-பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு மங்களா சாசனத்தாலே –

அல்லாதார்க்கு -இத்யாதி -அல்லாத ஆழ்வார்கள்
நின்னலால் இலேன் காண் -என்றும்
என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ -என்றும் சொல்லுகையாலே
அவனைக் கண்டு அனுபவித்த போது சத்தை யுண்டாய்
அவ்வநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே சத்தா பலமான ஸம்ருத்தியுமாக இருப்பர்கள்
இப் பெரியாழ்வாருக்கு -மயர்வற மதி நலம் அருளப்பெற்ற அன்றே தொடங்கி மங்களா ஸாஸன ஏக தத்பரராய்ப் போரு கையாலே
அவ்விரண்டுமே மங்களா ஸாஸனத்திலே என்கிறார் –

——————–

சூரணை -257-

உகந்து அருளின நிலங்களை அநு சந்தித்தால்-ஊணும் உறக்கமும் இன்றிக்கே
இவருடைய யாத்ரையே-நமக்கு எல்லாம்-யாத்ரையாக வேணும் –

உகந்து அருளின நிலங்களில் -இத்யாதி -இப்படி இவ் வர்த்தம் சிஷ்டாசார ஸித்தமான பின்பு இதில் ஆஸ்திக் யத்தையும் ஆதரத்தையும்
யுடையோமாய்க் கொண்டு போருகிற நமக்கு எல்லாம் அத்யந்த விலக்ஷணனாய் வைத்து அதி ஸூ குமாரமான வடிவோடே
அர்ச்சாவதார ரூபியாய்க் கொண்டு அவன் உகந்து அருளின அருளின நிலங்களை அனுசந்தித்தால்
விசேஷித்து மங்களா ஸாஸனம் ஒழியச் செல்லாத விஷயத்தில் நமக்கு தேஹ தாரண அர்த்தமான ஊணுக்கும் உறக்கத்துக்கு உட் பட அவசரம் இன்றிக்கே
இவ் வாழ்வாருடைய மங்களா ஸாஸன யாத்ரையே தேஹ யாத்ரையாம்படி வர்த்திக்க வேணும் -என்று விதித்து அருளுகிறார் –
அன்றிக்கே
இவ்வதிகாரிக்கு -ஊணும் உறக்கமும் இன்றிக்கே -என்றது
ஸோஸ்நுதே -இத்யாதில் படியே
ஓவாத ஊணாக உண்ணப்படும் பகவத் குண அனுபவ ஸூக ரூபமாகிற உறக்கமும் இன்றிக்கே -என்றுமாம் –

————————-

சூரணை -258-

ஆகையால் மங்களா சாசனம் ஸ்வரூப அநு குணம்-

ஆகையால் இத்யாதி -ஆகக் கீழே -மங்களா ஸாஸனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ -என்று சங்கித்து ப்ரேம தசையிலே வரும்
மங்களா ஸாஸனம் ஸிஷ்டாச்சார ஸித்தமாகையாலே -அநந்ய ப்ரயோஜனர்க்கு எல்லாம் இதுவே அநுஷ்டேயம் என்று நிர்ணயித்து
இப்படி இது ஸ்வரூபத்தோடே சேருமதாகையாலே மங்களா சாஸனமே ஸ்வரூப அநு குணம் என்று பரிஹரித்துத் தலைக் கட்டுகிறார் –

—————-

சூரணை -259-

அனுகூலர் ஆகிறார்-
ஞான பக்தி வைராக்யங்களிட்டு மாறினாப் போல வடிவிலே தொடை கொள்ளலாம் படி
இருக்கும் பரமார்த்தர் —

இனி அநு கூலர் ஆகிறார் -என்று தொடங்கி -அநு கூல ஸஹ வாஸமும் -என்று கீழே சொன்ன
ஸஹ வாஸ யோக்யருமான சரம அதிகாரிகளுடைய வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –
இவ் வதிகாரிக்கு ஸஹ வாஸத்துக்கு அநுகூலராவார் விசதமான ஞானம் என்ன -அந்த ஞான விபாக தசையான பக்தி என்ன
அவ் விரண்டின் கார்யமாய் வருகிற இதர விஷய வைராக்யம் என்ன -இவை ஓரொன்றை அவ்விஷயத்திலே இட்டு மற்றை இரண்டையும் மாற்றிப் பார்த்தால் –
ஒரு பாத்ரத்திலே இருந்த பண்டத்தை ஒழித்து மற்ற ஒரு பண்டத்தை இட்டு அத்தைப் பூரித்துப் பார்த்தால் அது இருக்குமோ பாதி அவை ஓரொன்றே பரிபூர்ணங்களாய்
வசதி ஹ்ருதி ஸநாதநே ச தஸ்மிந் பவதி புமான் ஜகதோஸ்ய சவும்ய ரூப
ஷிதிர ஸமதிரம்ய மாத்ம நோந்த கதயதி சாருதயைவ சால போத -என்னுமா போலே
அவர்கள் திருமேனியிலே அவை தெரியக் கண்டு படி எடுத்துக் கொள்ளலாம் படி வர்த்திக்கிற மங்களா ஸாஸன கதாரகரான சரம அதிகாரிகள் என்கிறார் –

——————-

சூரணை -260-

ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்
அசல் செய் பொசிந்து காட்டுமாப் போலே
இவை இல்லாதார்க்கும்
இவர்களோட்டை சம்பந்த்தாலே வுறாவுதல்-தீரக் கடவதாய் இருக்கும்

ஆனால் இவர்களோட்டை ஸஹ வாஸம் சிலருக்கு உத்தாரக ஹேதுவாகக் கண்ட இடம் உண்டோ என்ன
துளஸீ மஹாத்ம்யத்தில் சொல்லுகிற கதை முதலானவற்றை ஹ்ருதீ கரித்து -ஒரு செய் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -அதாவது
ஒரு பாகவதனுடைய திரு மாளிகைக்கு பார்ஸ்வ வர்த்தியாய் இருப்பான் ஒரு ப்ராக்ருதன் காட்டிலே போய் விறகு ஒடித்துக் கட்டின அளவிலே
ஒரு துளஸீ வனத்தைக் கண்டு -நம் அசல் அகத்தில் இவனுக்கு ஆதரணீயம் என்று அத்தை ஆஹரித்த அளவிலே
இவனுக்கு அந்திம காலம் ப்ராப்தமாய் -அத்தைப் பற்ற எமதூதரும் வந்து ப்ரவேசிக்க
இவன் கையும் திருப்பள்ளித் தாமமுமான நிலையைக் கண்டு மேலிட மாட்டாதே காலனும் விறகு கட்டிலே பாம்பாய்ப் பிரவேசித்துக் கிடக்க
அத்தை அவன் வஹித்துக் கொண்டு வாரா நிற்க -அத்தைக்கு கண்டு அப்பாகவதனும் முந்துற அவ்விறகு கட்டைப் போக விடுத்து அதிலே கிடக்கிற பாம்பையும் அவனுக்கு காட்டி –
அவன் கையைப் பிடித்துக் கொண்டு திரு முன்பே சென்று இச்செய்தியை அவனுக்கு உணர்த்தித் திருவடிகளில் சம்பந்திப்பித்து உஜ்ஜீவிப்பித்தான் என்றது இறே
அப்படி ஒரு விளை நிலமானது நீர் நிரம்ப நின்றால் அத்தோடு ஒத்த நிலமும் அதில் பொசிவாலே தரித்துக் கிடக்குமா போலே
கீழ்ச் சொன்ன ஞான பக்தி வைராக்யங்கள் இல்லாதாருக்கும் அவற்றில் பூர்ணரான அவ்வதிகாரிகளோட்டை ஸம்பந்தத்தாலே
ஸம்ஸார வெக்காயத்தால் வந்த உறாவுதல் தீர்ந்து சத்தை தரிக்கும்படி யாய் இருக்கும் என்கிறார் –
கேதாரஸ் யேவ கேதாரஸ் ஸோத கஸ்ய நிரூ தக
உபஸ்நேஹேந ஜீவாமி ஜீவந்தீம் தாம் அநு ஸ்மரன்-என்றார் இறே பெருமாளும் –

————

சூரணை -261-

ஆறு நீர வர அணித்தானால் – அதுக்கு ஈடான அடையாளங்கள் உண்டாமா போலே –
பிராப்தி அணித்தானவாறே
இந்த ஸ்வபாவ விசேஷங்கள் தன்னடையே விளையக் கடவதாய் இருக்கும் –

இனி -ஆறு நீர வர அணித்தானால் – என்று தொடங்கி -அவர்களோட்டை ஸஹ வாஸம் இப்படி சத்தா ஹேதுவாம் அளவே யல்ல அவர்களுடைய
ஸ்வ பாவ விசேஷங்களும் தனக்கே பிரதிபன்னமாம் படி தன்னடையே பலித்து அறும் என்கிறார் –
அது எங்கனே என்னில் -காவேரி நீர் வர அணித்தானால் மணல் ஈர்க்கை முதலாக மற்றும் அதுக்கு ஈடான அடையாளங்கள்
ஸஹ்ய பர்வத ஸம்பந்த மாத்ரத்தாலே ஸம் பிரதிபன்னமாக உண்டாமா போலே இவ்வதிகாரிக்கும் பகவத் பிராப்தி அணித்தனவாறே
பரம ஆர்த்தரானவர்களுடைய உத்தமமான ஸ்வபாவ விசேஷங்கள் இவர்களுக்கும் ஸ்வயமேவ வரக்கடவதாய் இருக்கும் –

———————–

சூரணை -262-

இவற்றைக் கொண்டு சரம சரீரம் என்று- தனக்கே அறுதி இடலாய் இருக்கும் –

இவற்றை இத்யாதி -இஸ் ஸ்வ பாவ விசேஷங்களைக் கொண்டு அநாதி காலம் ஸம்ஸரித்துப் போந்த தனக்கே
இனி ஸம்ஸரிக்கைக்கு ஹேது வல்லாத சரம சரீரம் இது என்று ஸ்வயமேவ நிர்ணயிக்கலாய் இருக்கும் -என்கிறார் –

—————-

சூரணை -263-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –

ஆக -கீழ் –
ஸஹ வாஸ யோக்யரான அனுகூலருடைய லக்ஷணத்தையும் –
அஸ் ஸஹ வாசத்தால் வரும் பல விசேஷங்களையும்
அருளிச் செய்து
இனி பிரதிகூலராவார் -இத்யாதியாலே –
பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும் -என்று கீழ்ச் சொன்ன ஸஹ வாஸ யோக்யர் அல்லாத பிரதிகூலருடைய பேதங்களை ப்ரதிபாதிக்கிறார் –
பிரதிகூலராகிறார் -இத்யாதி -காண்கிற தேஹமே ஆத்மாவாக அபிமானித்து இருக்கும் அவர்களைத் தொடங்கி
ஒருவருக்கு ஒருவர் ஆதிக்யம் தோற்றும்படியான க்ரமத்திலே அவர்களை அருளிச் செய்கிறார் –

—————

சூரணை -264-

இவர்களுக்கு உத்தேஸ்யரும் –
உபாய உபேயங்களும் –
பேதித்து இருக்கும் –

இவர்களை ஸஹ படிக்கையாலே வந்த ஸாம்யத்தாலே அந்யோன்யம் அபேத சங்கையைத் தவிர்க்கைக்காக இவர்களுக்கு
உத்தேச்யரும் -உபாய உபேயங்களும் பேதித்து இருக்கும் என்கிறார் –

——————–

சூரணை -265-

1-தேக ஆத்மா அபிமானிகளுக்கு உத்தேச்யர் –தேக வர்த்தகரான மனுஷ்யர்கள் –
உபாயம்-அர்த்தம்
உபேயம் -ஐஹிக போகம்–

2-ஸ்வ தந்த்ரர்க்கு -உத்தேச்யர் -ஸ்வர்க்காதி போக ப்ரதர் –
உபாயம் -கர்ம அனுஷ்டானம் –
உபேயம்-ஸ்வர்க்காதி போகம்-

3-அந்ய சேஷ பூதர்க்கு உத்தேச்யர் -பிரம ருத்ராதிகள்
உபாயம் -தத் சமாஸ்ரயணம்
உபேயம் -தத் சாயுஜ்யம் –

4-உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேச்யன் -தேவதா அந்தர்யாமியான சர்வேஸ்வரன் –
உபாயம் -கர்ம ஞான பக்திகள் –
உபேயம் -பகவத் அனுபவம் –

5-ஸ்வ பிரயோஜன பரர்க்கு உத்தேச்யன் -நெஞ்சினால் நினைப்பான் யவன் -என்கிறவன் –
உபாயம் -ஸ்வ கீய ஸ்வீகாரம்
உபேயம் -ஸ்வார்த்த கைங்கர்யம் –

அந்த பேதம் தான் எங்கனே என்னில் –
தேஹாத்ம அபிமானிகளுக்கு ஆதரணீயர் தாரகாதிகளாலே அத்தேஹத்தை வர்த்திப்பிக்குமவர்கள்
அஸ்திரமான தேஹமே ஆத்மாவாக அத்யவசித்து இருக்கையாலே அஸ்திரமான அர்த்தமும்
புத்ர பஸ் வாத்ய ஐஹிக போகமும் -அவர்களுக்கு உபாய உபேயங்கள் என்கிறார்

ஸ்வ தந்த்ரருக்கு இத்யாதி –
இனி தேஹ அதிரிக்தனான ஆத்மா ஒருவன் உளன் என்று அவன் ஞாதாவாய் கர்த்தாவாய் இருக்கும் என்னும் இடம் ஸாஸ்த்ர ஸித்தமாகையாலே
அந்த ஸாஸ்த்ர ஞானத்தாலே தங்களை ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி இருக்குமவர்களுக்கும்
ஆதரணீயர் கீழ்ச் சொன்ன ஐஹிகத்தில் விலக்ஷணமான ஸ்வர்க்காதி போக ப்ரதரான அக்னி இந்த்ராதி தேவதைகள் –
இவர்களுக்கு உபாயம் -ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத=இத்யாதிகளால் சொல்லப்படுகிற ஸ்வ யத்ன ரூபமான கர்ம அனுஷ்டானம்
இவர்களுக்கு உபேயம் -ஸ்வ போக்த்ருத்வ ரூபமான ஸ்வர்க்காதி போகம்

அந்நிய சேஷ பூதர்க்கு -இத்யாதி
ஸ்வரூபம் ஸ்வ அதீனம் இல்லாமையை லோக வேதங்களிலே காண்கையாலே சேஷத்வத்தை இசைந்து அதில் ஆபாத ப்ரதீதி ப்ரஸித்தரான
பகவத் வ்யதிரிக்தருக்கு சேஷம் என்று இருப்பார்க்கு உத்தேச்யர் ஜகாத் ஸ்ருஷ்ட்டி யாதிகளிலே நியுக்தரான ப்ரஹ்மாதிகள்
இவர்களை ஆராதிக்கையும்
ஏதா ஸாமேவ தேவதா நாம் ஸாயுஜ்யம் -என்கிறபடியே இவர்களுடைய போக்ய ஸாம்யா பத்தியும் உபாய உபேயங்கள் என்கிறார் –

உபாயாந்தர நிஷ்டருக்கு -இத்யாதி –
அங்கன் இன்றியே ஸ்வரூபம் அநந்யார்ஹ சேஷம் என்னும் இடத்தை ஆச்சார்ய உபதேசாதிகளாலே அறிந்து வைத்து
அவனையே பற்றாதே இதர சாதன அனுஷ்டான பரரானவர்களுக்கு ஆதரணீயன்
அவ்வுபாயத்துக்கு
யஜ்ஜேந தாநேந -என்கிற கர்ம ப்ராதான்யத்தாலே வேதத்தில் பூர்வ பாகத்தில் ஆராத்யரான அக்னி இந்த்ராதி
தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஸர்வேஸ்வரன் –
இவர்களுக்கு உபாயம் -உபய பரிகர்மி ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோகைக லப்ய -என்கையாலே கர்ம ஞானாதிகள்
பேஜஷம் பகவத் ப்ராப்திர் ஏகாந்த அத்யந்திகீ மதா-என்கையாலே உபேயம் பகவத் அனுபவம் –

ஸ்வ ப்ரயோஜன பரர்க்கு -இத்யாதி –
சாதனாந்தரம் துஷ் கரத்வாதி தோஷ துஷ்டம் என்று தங்களுடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஈஸ்வரனே உபாயமாகத்
தங்கள் ஸ்வீ கரித்த ஸ்வ ப்ரயோஜன பரருக்கு ஆதரணீயன்-ஆஸ்ரிதர் நெஞ்சால் உகந்த த்ரவ்யங்களிலே
அப்ராக்ருத விக்ரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணிக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார ரூபியான ஸர்வேஸ்வரன்
இவனுக்கு உபாய உபேயங்கள் -அஹம் மமதா தூஷிதமான தான் பற்றும் பற்றும் தன் பேறாகச் செய்யும் கைங்கர்யமும் –

ஆனால் கீழ்ச் சொன்ன அநந்ய ப்ரயோஜனரான சாதனாந்தர நிஷ்டருக்கும்
தத் ஏக உபாயரான ஸ்வ ப்ரயோஜன பரருக்கும்
முக்த அவஸ்தையில் வந்தால் -அநந்ய சாதனனாய் -அநந்ய ப்ரயோஜனான விலக்ஷண அதிகாரியோபாதி
பலம் அவிசிஷ்டமான பின்பு உபேயம் பகவத் அனுபவ மாத்ரம் என்றும் -ஸ்வார்த்த கைங்கர்யம் என்றும் அவர்களுக்கு விசேஷித்துச் சொல்லுவான் என் என்னில்
உபாஸகனுக்கு ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தாலே ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பிறந்தால் அவ்வாத்மாவினுடைய
ஞாத்ருத்வ கர்த்ருத்வங்கள் முற்பட உதித்து -பகவத் சமாஸ்ரயண அனுரூபமாக அநந்தரம் தத் சேஷத்வ பாரதந்தர்யங்களும் உதிக்கையாலே
அவ் வுபாசனத்துக்குக் கர்த்தாவான தனக்கு நிரதிசய போக்யமான பகவத் ப்ராப்தியை புருஷார்த்தமாகக் கோலுகை அவ்வுபாசனத்துக்கு அபிப்ராயமாக ஸம்பாவிதமாகையாலும்
ஸ்வ பிரயோஜன பரனாகச் சொல்லுகிறவனும் ஏக பதத்தாலே கழி யுண்கிற ஸ்வீ காரத்தை ஸ்வ கீயமாக்குகையாலே
உபேய தசையிலும் ஸ்வார்த்த ரூப கைங்கர்யம் அவனுக்கு அபிப்ராயமாகக் கூடுகையாலும்
உபாய தசையில் இவ்வதிகாரிகளுக்கு உண்டான அபிப்ராயத்தை த்யோதிப்பித்த மாத்ரம் இத்தனை
இனி கைங்கர்ய தசையில் இவற்றை பிராயச்சித்தத்தாலும் புருஷகாரத்தாலும் கழித்துக் கொள்ளுகையாலே
பல விசேஷ தோஷம் இல்லை என்று அபிப்ராயம் –

————–

சூரணை-266-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்கு
மற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு –

முதல் சொன்ன மூவரும் -இத்யாதி –
தேஹாத்ம அபிமானிகள் என்றும் -ஸ்வ தந்த்ரர் என்றும் -அந்நிய சேஷ பூதர் என்றும் பிரதமத்திலே சொன்ன மூவரும்
ஷிபாம் யஜஸ்ரம ஸூபாநா ஸூரீஷ்வே வயோநிஷு -என்கிறபடியே
கேவலம் ஈஸ்வரனுடைய நிக்ரஹத்துக்கு விஷய பூதர்
அவசிஷ்ட ரான உபாசகனும் -ஸ்வ கத ப்ரபன்னனும்
ததாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே -இத்யாதிப்படியே பகவத் கிருபா விஷயங்கள் -என்கிறார் –

———————-

சூரணை -267-

மூவருடைய கர்மம்-அனுபவ விநாஸ்யம்-
நாலாம் அதிகாரிக்கு-பிராய சித்த விநாஸ்யம் –
ஐஞ்சாம் அதிகாரிக்கு-புருஷகார விநாஸ்யம் –

ஆனால் இவர்களுடைய இந்த அக்ருத்ய கரணங்கள் போம்படி எங்கனே என்ன
அவஸ்யம் அநு போக்தவ்யம் க்ருதம் கர்ம ஸூபா ஸூபம் நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -என்கையாலே
மூவருடைய கர்மங்களும் அனுபவ ஏக விநாஸ்யம் –
நாலாம் அதிகாரியான உபாசகனுக்கு பகவத் அனுபவ விரோதி ப்ராசீன கர்மங்கள் எல்லாம்
உத்தர பூர்வாகயோர் அஸ்லேஷ விநாஸவ் -என்றும்
இஷீக தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத -என்றும்
இத்யாதியில் சொல்லுகிறபடியே உபாஸன உபக்ரமத்திலே அவை நசிக்கையாலும்
அவ்வுபாசன ரூப பக்தி பரிபாகத்தோடே ப்ராரப்த சேஷமும் நசிக்கையாலும்
இவ்வதிகாரிக்கும் அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும் அவஸ்யம் ஸித்தமாய் இருக்க
பகவத் அனுபவ மாத்ர ருசி தோஷமும் சரம தசையில் பகவத் கிருபா அதிசயத்தாலே போகையாலும்
பிராயச்சித்த விநாஸ்யம் -என்கிறார் –
அஞ்சாம் அதிகாரியான ஸ்வ ப்ரயோஜன பரனுக்கு அத்தோஷம் புருஷகாரத்தாலே நசிக்கையாவது –
சேதனனாகையாலே இவன் நா நீட்டினானாகில் முத் திரு உள்ளம் பற்றாதே அத்தோஷத்தையும் வாத்சல்யத்துக்கு இரை யாக்கி யருளீர் என்று புருஷீ கரித்துப் போக்குகை -என்கிறார் –

————-

சூரணை -268-

உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –
கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –

ஆனால் இவனுக்குப் புருஷகாரமோ விரோதி நிவர்த்தகம் ஆகிறது என்கிற சங்கையிலே -உபாயம் ஸ்வீ கார காலத்தில் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

இதர ஸஹாய அஸஹமான ஸித்த உபாயம் தன்னை இஸ் ஸம்ஸாரியான சேதனன் ஸ்வீ கரிக்கும் இடத்தில் ஸர்வ முக்தி பிரசங்காதி பரிஹார அர்த்தமாகவும்
ஸ்வீ காரத்தினுடைய தார்ட்ய ஹேதுவாகவும் -சேதனனாகிற புருஷனையும் –
பிராட்டியாகிற புருஷகாரத்தையும் -அபேக்ஷித்திக் கொண்டு இருக்கும் –

கார்ய காலத்தில் இத்யாதி -இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கும் அளவில்
இவ்வுபாயம் கீழ்ச் சொன்ன இரண்டையும் அபேக்ஷியாது என்கிறார் –

இனித்தான்
ஸ்வீ காரத்தில் விசேஷண ப்ராதான்யமாய்
கார்ய காலத்தில் விசேஷ்ய ப்ராதான்யமாய்
போக தசையில் விஸிஷ்ட ப்ராதான்யமாய் -இருக்கும் இறே –

————

சூரணை -269-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்
பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –

இனிக் கீழ் ப்ரஸ்துதமான -ஸ்வ ப்ரயோஜனத்வம் -ஆழ்வார்கள் பாசுரங்களிலும் தோற்றுகையாலே அவர்களை வ்யாவர்த்திக்கைக்காக
ஸ்வ ப்ரயோஜனர் எல்லாரையும் என்று தொடங்கி சோத்ய பூர்வமாக அத்தைப் பரிஹரிக்கிறார் -எங்கனே என்னில் -ஸ்வ ப்ரயோஜன பரர் எல்லாரையும் -இத்யாதி –

இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -என்றும்
நான் கண்டு உகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாய் -என்றும்
கண்டு நான் யுன்னை யுகக்க -என்றும்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
இத்யாதிகளாலே தாங்கள் அவனை அநுபவிக்க ஆசைப்பட்ட ஆழ்வார்களையும் இவர்களோடு ஓக்க ஸ்வ ப்ரயோஜனர் என்று நினைக்கலாமா -என்னில் –

—————-

சூரணை-270-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது
ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–

அது ஒண்ணாது -அது எங்கனே என்னில் -பிரதிகூல விபாகம் பண்ணுகிற இவ்விடத்தில் ஸ்வ ப்ரயோஜனமாகச் சொல்லுகிறது
பல அனுபவத்துக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய துர் வாஸனா தோஷம் அடியாக வந்த ஸ்வ ப்ரயோஜனத்வத்தை –

——————

சூரணை -271-

ஆகையாலே தோஷம் இல்லை –

ஆகையால் இவனைப் பிரதிகூலன் என்ன தோஷம் இல்லை -என்கிறார் –

—————-

சூரணை -272-

விஷய தோஷத்தால் வருமவை எல்லாம் -துஸ் த்யஜயமாய் இறே இருப்பது —

இங்கனே யாகிலும் இந்த ஸ்வ பிரயோஜனம் அவிசிஷ்டமாகையாலே ஆழ்வார்களுக்கு அத்தோஷம் இல்லையான படி என் என்ன
விஷய தோஷத்தால் வரும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
அந்த விஷய தோஷமாவது –
அவர்கள் அனுபவத்துக்கு விஷயமானவனுடைய பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரியான அவனுடைய வயிர உருக்கான வை லக்ஷண்யம்
இவ்வைலக்ஷண்யம் அடியாக நா நீளுகிற அந்த ஸ்வ ப்ரயோஜனத்வம் தோஷம் இல்லை மாத்ரம் அன்றியே
ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே விடவும் முடியாது என்கிறார் -எங்கனே என்னில்
கீழில் துர் வாஸனையால் வரும் ஸ்வ ப்ரயோஜனத்வம் ஒரு ஆச்சார்ய முகத்தாலே இது ஸ்வரூப ஹானி என்று சிஷித்தவாறே த்யஜிக்கலாம்
விஷய வைலக்ஷண்யம் யாவதாத்ம பாவி யாகையாலே த்யஜிப்பிக்க நினைத்த அந்தரங்கரையும்
ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை -என்று த்யஜிக்கும் படி பண்ணா நிற்கும் இறே –

———————-

சூரணை -273-

ஊமையரோடு செவிடர் வார்த்தை –
கதம் அந்ய திச்ச்சதி-

இனி இவ்வர்த்தத்தில் ஆழ்வார்கள் ஆச்சார்யர்களுடைய பாசுரம் உண்டு என்னும் இடத்தை –
ஊமை யாரோடு செவிடர் வார்த்தை —
கதம் அந்நிய திச்சதி -என்று அருளிச் செய்கிறார் –
இத்தால் பகவத் விஷயத்தில் பக்தி பரவசராய் இருப்பார்க்கு இவ்விஷயத்தில் நின்றும் மீட்கச் சொல்லுவார் வார்த்தை
மூகரோடே பதிரர் வார்த்தை சொன்னவோ பாதி நிஷ் பிரயோஜனம் என்கிறது –
தவாம்ருதஸ் யந்திநி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதம் அந்நிய திச்சதி –
ஸ்த்திதேரவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நே ஷுரகம் ஹி வீக்ஷதே -என்றார் இறே ஆளவந்தாரும் –
இதில் -நிவேசிதாத்மா -என்றது உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளிலே வைக்கப்பட்ட நெஞ்சானது -என்றபடி –
கதம் அந்நியதிச்சதி -அந்த நெஞ்சானது அந்த போக்யத்தையை விட்டு மற்ற ஒன்றை எங்கனே புஜிப்பது என்றபடி –

—————–

சூரணை -274-

இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –

ஆகக் கீழ் ஸஹ வாஸ யோக்யர் அல்லரான பிரதிகூலருடைய ப்ரகார பேதங்களை அருளிச் செய்து
அதிலே ப்ரஸ்துதமான சங்கா பரிகாரங்களையும் பண்ணி
மேல் ஸதாச்சார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் என்றத்தை விவரிக்கிறார் -இப்படி இவை இத்தனையும் -என்று தொடங்கி –
இவ் வதிகாரி தான் இவை வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போருவது எங்கனே என்னில்
வித்யுக்தங்களான வக்தவ்ய -அவக்தவ்ய -ஜப்தவ்ய -பரிக்ராஹ்ய -பரித்யாஜ்ய -கர்தவ்யாதி களிலே இவன் ஸதா காலமும் நியதனாகவே
கீழ் தின சரிதையில் சொன்ன அனுஷ்டானங்கள் ஸ்வயமேவ ஸித்திக்கும் -என்கிறது -வஸ்ததவ்யம்-இத்யாதி –
மத் பக்தைஸ் ஸஹ வாஸோ தத ஸித்தவ் மயாபி வா -என்கையாலே
ஸத்யம் வத தர்மம் சர -என்று தொடங்கி -அந்தே வாஸியான தன்னை அநு சாஸித்துக் கொண்டு போருவான் ஒரு ஆச்சார்ய ஸந்நிதியும்
அழகாலும் ஆ ஸக்தியாலும் அவற்றிலே அத்யவசாய அபி ருசிகளை விளைவிக்கும் அர்ச்சாவதார ஸந்நிதியும்
இவனுக்கு வஸ்தவ்ய ஸ்தலம் என்றும்

இப்படி வஸிக்கும் இடத்தில் –
ப்ரத்யஷே குரவஸ் ஸ்துத்யா -என்றும்
குரும் ப்ரகாஸ யேத் தீமான் -என்றும் சொல்லுகையாலே
வக்தவ்யம் ஆச்சார்ய வைபவமும்
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து -என்றும்
திக ஸூசி மவிநீதம் -என்றும் இத்யாதிகளில் படியே –
அவ்விரண்டு சந்நிதியிலும் ஸ்வ நிகர்ஷமே சொல்லப்படும் என்றும் –

இவனுக்கு ஜப்தவ்யமும்-ஆசார்யாணாமஸாவஸா வித்யா பகவத்த-என்றும்
ராமானுஜ அங்கரி சரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத் ஸ யாமுன முநேஸ் ஸ ச நாத வம்ஸ்ய
வம்ஸ்யஸ் பராங்குச முநேஸ் ஸ ச ஸோபி தேவ்யா தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேஷ ணீய -என்றும்
த்வயம் அர்த்த அநு ஸந்தாநேந ஸஹ ஸ தைவம் வக்தா யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்க ஸூக மாஸ்வ -என்றும் அருளிச் செய்கையாலே
குரு பரம்பரா பூர்வகமான த்வயம் என்றும்

இவனுக்கு பரிக்ராஹ்யமும்
ஸூ வ்யாஹ் ருதாநி மஹதாம் ஸூக்ருதாநி ததஸ் ததஸ் சஞ்சின்வன் தீர ஆஸீத ஸில ஹாரீ ஸிலம் யதா -என்றும்
குரோர் வார்த்தாம் கதாம் சைவ -என்றும்
யான் யஸ் மாகம் ஸூ சரிதாநி தாநி த்வயோபாஸ்யாநி -என்றும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட தாத்தா தேவே தரோ ஜன ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அநு வர்த்ததே -என்றும் சொல்லுகையாலே
பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்த நல் வார்த்தைகளும்
பஞ்ச கால பராயண ரானவர்களுடைய அநுஷ்டான விசேஷங்களும் என்றும்

இவனுக்குப் பரித்யாஜ்யமும் -ஸ்ருத வான் வா குலீநோ வா தபஸ்வீ வா பராசர த்வய அதிகாரீ நோ சேத் தம் தூரத பரிவர்ஜயேத்-என்கையாலே
கீழ் யுக்தமான அனுஷ்டான விசேஷங்களில் அதிக்ருதர் அல்லாத அவைஷ்ணவர்களோடே பண்ணும் ஸஹ வாஸமும்
அனுஷ்டானத்துக்கு விரோதியான துரபிமானமும்

இவனுக்குக் கர்த்தவ்யமும் -ஆச்சார்ய அதீநோ பவ -என்றும் –
மத் பக்தைஸ் ஸததம் யுக்தஸ் தேஷ் வேகஸ்ய வஸே ஸ்திதஸ் தஸ்ய அநு ஸாஸனம் குர்வன் மத் சாதர்ம்யாய கல்பதே -என்றும்
அர்ச்ச நீயஸ்ய வந்த்யஸ் ச கீர்த்த நீயஸ் ச ஸர்வதா த்யாயேஜ் ஜபேன் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்ச யேந் நர -என்றும்
தாமர்ச்ச யேத்தாம் பிரணமேத் தாம் யஜேத் தாம் விசிந்தயேத் -என்றும் சொலுகையாலே
ஆச்சார்ய கைங்கர்யமும்
அவனுக்கு உகப்பாய் வரும் திரு விளக்கு எரிக்கை -திருமாலை எடுக்கை -தொடக்கமான பகவத் கைங்கர்யமும் –
என்றும் இப்படி இவன் இதிலே நிஷ்ணாதனாய்க் கொண்டு வர்த்திக்கவே கீழ்ச் சொன்ன தினசரிதா விஹிதமான அனுஷ்டானங்கள்
இவனுக்கு ஸ்வயமேவ ஸித்திக்கும் என்று
ஆக இவ்வளவால்
அத்தினசரிதையிலே சங்கித்துச் சொன்ன சோத்யங்கள் நாலையும் பரிஹரித்து அருளினார் ஆய்த்து-

—————-

சூரணை -275-

கீழ் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே –
ஆசார்ய கைங்கர்யம் அறிவது – சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் —

இனி இவன் அங்கு கைங்கர்யங்களைப் பண்ணும் இடத்தில் எம் முகத்தால் பண்ணுவான் என்னும் ஆகாங்க்ஷையிலே –
கீழ்ச் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
இங்கு கீழ்ச் சொன்ன என்கிறது வக்தவ்யமான மேலில் பாசுரத்துக்குக் கீழே யான பாசுரம் தன்னை –
அதில் இவன் பகவத் கைங்கர்ய அனுஷ்டானம் அறிவது –
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா -என்கிற ஸ்ருதி ரூபமான கேவல ஸாஸ்த்ர முகத்தாலே
ஆச்சார்ய கைங்கர்யம் அறிவது -குருரேவ பரம் ப்ரஹ்ம –
அர்ச்ச நீ யஸ்ய வந்த்யஸ் ச -இத்யாதிகளான
ஸாஸ்த்ர முகங்களாலும்
அவ்வாச்சார்யன் தான் ஸ்வாச்சார்ய விஷயத்தில் தன்னுடைய அநு வர்த்தன க்ரமத்தை ஸ ப்ரகாரமாக அருளிச் செய்கையாலும்
இவனுக்கு அறியலாம் என்கிறார் –

—————

சூரணை -276-
கைங்கர்யம் தான் இரண்டு –

இனி மேல் -கைங்கர்யம் தான் இரண்டு -என்று தொடங்கி -கீழே கைங்கர்யம் ப்ரஸ்துதமாகையாலே
இங்கே சதுர்த்யர்த்தமான கைங்கர்யத்தை விசதமாக அருளிச் செய்கிறார் –
கைங்கர்ய தசை போலே -என்னும் அளவும் –

——————

சூரணை -277-

அதாவது
இஷ்டம் செய்கையும்-
அநிஷ்டம் தவிருகையும் –

இனி -அதாவது இஷ்டம் செய்கையும் -அநிஷ்டம் தவிருகையும் -என்று
இவன் கைங்கர்யம் செய்கையாவது -ஆச்சார்யனுக்கும் எம்பெருமானுக்கும் இஷ்டமானது செய்கையும்
அநிஷ்டமானது தவிருகையும் என்று பிரதமத்தில்
கைங்கர்ய வேஷம் இருக்கும்படியை ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

————–

சூரணை -278-

இஷ்ட அநிஷ்டங்கள்
வர்ண ஆஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
அவலம்பித்து இருக்கும் –

அவர்களுடைய இஷ்ட அநிஷ்டங்கள் தான் எத்தைப் பற்ற வருகின்றனவோ என்ன –
இக் கைங்கர்யத்திலே அதிக்ருத்தனான இவ் வதிகாரியினுடைய வர்ணாஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும் பற்றிக் கொண்டு அவர்களுக்கு அவை உண்டாம் என்கிறார் –
அது என் என்னில் -இக் கைங்கர்யம் தன்னை -ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஞ்ஞா -என்ன
ஈஸ்வரன் -என்ன -ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்ற சதாச்சார்யன் -என்ன –
இவ்வுபயருக்கும் ஓக்கச் சொல்லிக் கொண்டு போகையாலே
இவன் வர்ணாஸ்ரமங்களுக்குச் சொன்ன அனுஷ்டானங்களைச் செய்கையும்
அவற்றுக்குச் சேராத அநிஷ்டங்களைத் தவிருகையும்
அவ் வாச்சார்யனுக்கும் ஈஸ்வரனுக்கும் அத்யந்தம் உகப்பாய் இருக்கும் என்று கருத்து –
அங்கன் அன்றாகில் கீழே உத்க்ருஷ்ட ஜன்மாக்களாக ஸாதித்த இவர்கள் அளவில் உகப்பாலே
முன்புள்ளாரும் வர்ணாஸ்ரம விருத்தமான கொள் கொடை பண்ணுதல் –
அவ் வுத்க்ருஷ்ட ஜன்மாக்கள் தான் ஸ்ரீ புருஷ ஸூக்தாதி வைதிக மந்த்ரங்களாலே பகவத் ஸமாராதநத்திலே
ப்ரவ்ருத்தரானார்கள் என்றாதல் கேட்க வேணும் இறே –
அன்றிக்கே -இக் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமான ஆத்மாவினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தையே நிரூபித்துப் பார்த்தால்
வர்ணாஸ்ரமங்கள் மாத்ரத்தையே அவலம்பித்துக் கொண்டு வருமவை அவர்களுக்கு அநிஷ்டங்களாய் கேவல ஆத்ம ஸ்வரூபத்தை
அவலம்பித்துக் கொண்டு வருமாவை இஷ்டங்களாய் இருக்கும் என்று அருளிச் செய்வர்கள் –

———————–

சூரணை -279-

புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே-

ஆனால் முதல் சொன்ன அர்த்தத்தோடே -புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே-என்கிற பாசுரத்தில் அர்த்தம் –
சங்கதமாகிற படி என் என்னில் -இவ்வளவில் ருசி பிறந்து லௌகிகருக்கு ஆதரணீயமான வர்ணமும் கால் கட்டாம் என்று அஞ்சுகிற இவ்வதிகாரி
வர்ணாஸ்ரமங்களுக்கும் ஆத்ம ஸ்வரூபத்துக்கும் சேராததாய் -அத ஏவ -ஆச்சார்யனுக்கும் எம்பெருமானுக்கும் அநிஷ்டமான பாபத்தை
முதல் தன்னிலே பண்ணான் இறே என்று இவ்வதிகாரிகள் அநிஷ்டங்களில் இழியாமையை சாதிக்கிறது –

—————

சூரணை -280-

இவன் புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் –
அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் –
அவனுக்கு அது கிடையாது
இவன் அது செய்யான் –

மேல் -இவன் புண்யத்தைப் பாபம் என்கிறது -இவ்வதிகாரிக்கு மோக்ஷ பலமான கைங்கர்ய விரோதியாகையாலே
ஈஸ்வரன் இவனுடைய பாபத்தைப் புண்யம் என்று இருக்கிறது –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் -என்று இருக்கும் வத்சலனாகையாலே
இனி அவனுக்கு அது கிடையாது -என்றது அநிஷ்ட ப்ரவ்ருத்தி ரூபமான பாபம் இவ்வதிகாரிக்கு ஸம்பாவிதம் அல்லாமையாலே –

———————-

சூரணை -281-

கைங்கர்யம் தான் பக்தி மூலம்  வர வேணும்
அல்லாத போது
பீதி மூலமாய் வர வேணும் —

கைங்கர்யம் தான் இத்யாதி -இப்படி யுக்த லக்ஷணோ பேதமான இக்கைங்கர்யம் தான் -என்றபடி –
பக்தி மூலம் இல்லாத போது பீதி மூலமாகிலும் வேணும் -என்று இக் கைங்கர்யத்துக்குக் கீழ் நின்ற நிலையைப் பற்ற
ஓர் ஓவ்ஜ்வல்ய ரூப தஸா விசேஷத்தை ப்ரதிபாதிக்கிறார் -அதாவது
சத்தா ப்ரயுக்த சம்பந்த கார்யமான பக்தி மூலமாகப் பண்ணும் கைங்கர்யமே பிராப்தம்
ப்ரக்ருதி வஸ்யதையாலே அது கூடா விடில்
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா என்கிற பகவத் ஆஜ்ஞா அதி லங்கன பீதி மூலமாகவும்
அந்தே வாஸிந மநு சாஸ்தி -என்று ஆச்சார்யனுடைய அனுஸான லங்கன பீதி மூலமாகவும்
லோக அபவாத பீதி மூலவாகவும் ஆகிலும்
அனுஷ்ட்டிக்கப்படும் என்கிறார் –

——————–

சூரணை -282-

அதுவும் இல்லாத போது
அதிகாரத்திலும்
உபாய
உபேயங்களிலும்
அந்வயம்  இன்றிக்கே ஒழியும்-

அதுவும் இல்லாத போது -இத்யாதி -அந்த பீதி மூலமாகிலும் அனுஷ்டியாத போது
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி -என்கையாலே சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூப ஸத் பாவம் இல்லாமையாலும்
அதிகாரத்தில் அந்வயம் இன்றிக்கே ஒழியும்
அவனுடைய கிருபையும் உகப்பும் இவனுக்கு இல்லாமையாலே உபாயத்திலும் உபேயத்திலும் அந்வயம் இன்றிக்கே ஒழியும் -என்கிறார் –

—————-

சூரணை -283-

கைங்கர்யம் தன்னை
பல சாதனம் ஆக்காதே
பலமாக்க வேணும்

கைங்கர்யம் தன்னை இத்யாதி -இத்தால் கைங்கர்யம் தனக்கே அநந்ய ப்ரயோஜனத்வ ரூப தஸா விசேஷத்தையும் அருளிச் செய்கிறார் -அதாவது –
உக்தமான உபய பிரகாரத்தையும் உடைத்தான கைங்கர்யம் தன்னை ப்ரீண புத்தயா பண்ணும் உபாசகனைப் போலே ஒரு பலத்தை உத்தேசித்து
இத்தை சாதனமாகப் புத்தி பண்ணாதே-பதியது ஏத்தி எழுவது பயனே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே -என்றும்
இத்யாதியில் படியே -கேவலம் பகவத் ப்ரிய ரூப கைங்கரியமேயாக பிரதிபத்தி பண்ண வேணும் –

————

சூரணை -284-

அதாவது
தான் கை ஏலாதே
அவனை கை ஏற்கப்
பண்ணுகை–

அதாவது -அப்பல ரூப கைங்கர்யமாவது –
தான் கை ஏலாதே அவனைக் கை ஏற்கப் பண்ணுகை –
தேஹி மே ததாமி தே -என்று தான் அவன் பக்கல் அபேக்ஷியாதே
யா க்ரியாஸ் ஸம் ப்ரயுக் தாஸ்யு ஏகாந்த கத புத்திபி
தாஸ் ஸர்வாஸ் சிரஸா தேவா ப்ரதி க்ருஹ்ணாதி வை ஸ்வயம் -என்று
அவன் தானே உகந்து அர்த்தித்து குச்சியால் ஏற்கும்படி அநந்ய பிரயோஜநனாய்ப் பண்ணுகை-
பலார்த்தீ பஜதே யோ மாமன்வஹம் காம லோலுப ஸ்ரத்தயாபி துராசாரோ ந ஸ ப்ருத்யஸ் ச வை வணிக் -என்னா நின்றது இறே –

———–

சூரணை -285-

கொடுத்தக் கொள்ளாதே
கொண்டதுக்கு
கைக் கூலி கொடுக்க வேணும் –

மேல் -கொடுத்துக் கொள்ளாதே -என்று தொடங்கி -கைங்கர்யத்துக்குக் கீழ்ச் சொன்ன அநந்ய ப்ரயோஜனத்வ தஸா விசேஷத்தால் வரும் அளவு அன்றிக்கே
தத் ஏக ப்ரயோஜனத்வ தஸா விசேஷத்தாலே வரும் ஓவ்ஜ்வல்யத்தையும் அருளிச் செய்கிறார் -கொடுத்துக் கொள்ளாதே -இத்யாதி –
இத்தால் இப்படி -தேஹி மே ததாமி தே -என்னாதே
அநந்ய ப்ரயோஜனத்வம் மாத்ரம் அன்றிக்கே
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்கிறபடியே
ததேக ப்ரயோஜனனாய்க் கொண்டு இட்ட த்ரவ்யத்தை அவன் அங்கீ கரித்ததுக்கு அந்த உபகார ஸ்ம்ருதியாலே கைக்கூலி கொடுத்து
அத்தைக் கூலி கொண்டதுக்கும் கைக்கூலி கொடுக்க வேணும் என்கிறார் –

—————

சூரணை -286-

ஸ்ரீ விதுரரையும்
ஸ்ரீ மாலா காரரையும்
கூனியையும் போலே
கிஞ்சித்கரித்தால்
ஸ்வரூபம் நிறம் பெறுவது –

ஸ்ரீ விதுரரையும் இத்யாதி -இத்தால் ததேக ப்ரயோஜனத்வ ரூப கைங்கர்யத்தில்
அனுஷ்டாதாக்களும் உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

———–

சூரணை -287-

1-மடி தடவாத சோறும் –
2-சுருள் நாறாத பூவும் –
3-சுண்ணாம்பு தடவாத- படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-

மடி தடவாத சோறும் –இத்யாதி -மடி தடவாத சோறாவது -ஒருவனுக்கு ஒருவன் சோறு இடும் போது ப்ரத்யுபகாரம் எவ்வளவு செய்தால் இவன் திருப்தனாம் என்னும்
சித்த வ்யதையோடே இருக்குமவனுடைய மிடறு பிடித்தால் போலே அவன் பக்கல் பிரதியுபகாரங்களைக் குறித்து வார்த்தை சொல்லாதே இடுமது –
சுருள் நாற்றமும் சுண்ணாம்பும் பூவுக்கும் சாந்துக்கும் அவத்யகரங்கள் யாகையாலே இப்பாசுரங்களை இட்டு ப்ரயோஜனத்வ ரூப தோஷத்தைத் தோற்றுவித்து
இஸ் ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி ரூப கைங்கர்யம் இறே இவர்கள் பண்ணிற்று என்கிறார் -எங்கனே என்னில்
புக்தவத்ஸூ த்விஜாக்ர் யேஷு நிஷண்ண பரமாஸநே விதுர அந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச -என்றும்
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -என்றும்
ஸூகந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராநநே ஆவயோ காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம் -என்றும்
இப்படிகளைச் சொல்லா நின்றது இறே –

————

சூரணை -288-

கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும்
ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் —

சூரணை -289-

முன்பே நாலு தசை உண்டு –

இனி -கைங்கர்ய தசை போலே -என்று தொடங்கி
கீழே -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் -என்று ப்ரஸ்துதமான கைங்கர்யத்தை
இஷ்டம் செய்கையும் அநிஷ்டம் தவிருகையும் -என்றும்
பக்தி மூலம் அல்லாத போது பீதி மூலமாகிலும் வர வேணும் -என்றும்
அநந்ய பிரயோஜனமாக வேணும் -என்றும்
ததேக பிரயோஜனமாக வேணும் -என்றும்
இப்படி நாலு பிரகாரத்தாலே கைங்கர்ய தசையை உஜ்வலமாக்கி –
இனி மேல் –
கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும் இவ்வதிகாரியுடைய ஸ்வரூபத்தை உஜ்ஜவலமாக்க வேணும் என்று
கைங்கர்யத்துக்குப் பூர்வபாவிகளாய் வரும்
ஞான தசை
வரண தசை
பிராப்தி தசை
ப்ராப்ய அனுபவ தசைகளை
சோதியா நின்று கொண்டு இப்படி சாதுர்யேண வரும் ஸ்ருங்கலா பத்தமான அர்த்த விசேஷங்களை அருளிச் செய்கிறார் மேல் –

——————

சூரணை -290-

அதாவது
1-ஞான தசையும் –
2-வரண தசையும் –
3-பிராப்தி தசையும் –
4-பிராப்ய அனுபவ தசையும் –

அதாவது -ஞான தசையும் -இத்யாதி -கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவியாய் வரும் நாலு தசையுமாவது
ஆச்சார்யன் இவனுக்கு அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகிற ஞான தசையும்
ஞானான் மோக்ஷம் ஆகையாலே -அந்த மோக்ஷ உபாயத்தை விவரிக்கிற வர்ண தசையும்
அந்த வர்ண தசையின் பலமாக வருகிற பகவத் ப்ராப்தி தசையும்
தத் பலமான ப்ராப்ய அனுபவ தசையும் -என்கிறார்
இவ்வநுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் இறே கீழ் சோதிதமான கைங்கர்யம் தான் இருப்பது –

—————

சூரணை -291-

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடும் –
வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும் –
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும் –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும் —

யுக்தமான நாலு தசையிலும் இவன் ஸ்வரூபத்தை உஜ்ஜவலமாக்கும் படி என் என்ன -ஞான தசையில் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
சதாச்சார்யன் ப்ரக்ருதி ஆத்ம விவேக பூர்வகமாக த்யாஜ்ய உபாதேய விபாக ஞானத்தை உண்டாக்கும் தசையில்
தத் வித்தி பிரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா-என்கிறபடியே
ப்ரணிபாத பரி ப்ரஸ்நாதி தத் பரனாய்க் கொண்டு தத்வ ஹித புருஷார்த்தங்களில் அடியேன் அறிவது ஒன்றும் இல்லை என்று
தன் அஞ்ஞானத்தை விண்ணப்பம் செய்கையும்
வர்ண தசையில் அபூர்த்தியை முன்னிடுகையாவது உபாய வர்ண தசையில்
ந தர்ம நிஷ்டோஸ்மி –
ஸத் கர்ம நைவ கில கிஞ்சித் சஞ்சிநோமி வித்யாப்யவத்ய ரஹிதா ந ஹி வித்யதே மே
கிஞ்ச த்வதஞ்சித பதாம்புஜ பக்தி ஹீந பாத்ரம் பவாமி பகவன் பவதோ தயாயா -என்றும் –
குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதிகளில் படியே –
தன்னுடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ ரூபமான அபூர்த்தியை விண்ணப்பம் செய்கையும்
பகவத் ப்ராப்தி தசையில்
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
தரியேன் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும் இத்யாதிகளில் படியே
தன் ஆர்த்தியின் அதிசயத்தை விண்ணப்பம் செய்கையும்
ப்ராப்யமான பகவத் அனுபவ தசையில் அவ்வனுபவ ஜெனித ப்ரீதியாலே
ஒழிவில் காலத்தில் படியே கைங்கர்யத்தில் அபி நிவேசத்தை விண்ணப்பம் செய்கையும் –

—————

சூரணை-292-

அஞ்ஞானம் போவது ஆசார்ய ஞானத்தாலே –
அபூர்த்தி போவது ஈஸ்வர பூர்தியாலே –
ஆர்த்தி போவது அருளாலே –
அபிநிவேசம் போவது அனுபவத்தாலே –

இப்படி இவன் இவற்றை முன்னிட்டால் இவை இவனுக்கு சமிப்பது எத்தாலே என்ன -அவற்றைச் சொல்லுகிறது -அஞ்ஞானம் போவது -என்று தொடங்கி
காலை நன் ஞானத்துறை படிந்தாடி கண் போது செய்து -என்கையாலே
இவனுடைய அஞ்ஞானம் போவது ஆசார்ய ஞானத்தாலே

குண துங்க தயா தவ ரங்க பதே ப்ருஸ நிம்ந மிமம் ஜன முன்னமய யதபேஷ்ய மபேஷி துரஸ்ய ஹி தத் பரி பூரணமீஸி துரீஸ் வரதா -என்றும்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்றும் சொல்லுகையாலே
இவனுடைய அபூர்த்தி போவது ஸர்வேஸ்வரனுடைய பூர்த்தியாலே –

உன்னடி சேர் வண்ணம் அருளாயே -என்றும்
இத்யாதிகளில் படியே இவனுடைய ஆர்த்தி போவது பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –

மாறுளதோ இம்மண்ணின் மிசையே –
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே –
இனி என்ன குறை எழுமையுமே -இத்யாதிகளில் படியே –
இவனுக்கு முன்பு அனுபவிக்கப் பெறாத அபி நிவேசம் போவது பரிபூர்ணமான பகவத் அனுபவத்தாலே –
அல்லது -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமான -விஷயத்தில் அபி நிவேசம் மாறாது இறே –

சூரணை -293-

அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் –
அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி –
ஆர்த்திக்கு அடி அலாபம் –
அபிநிவேசதுக்கு அடி அழகு –

சூரணை -294-

ஆர்த்தியும் அபிநிவேசமும் இருக்கும் படி
அர்ச்சிராதி கதியிலே சொன்னோம் –

இப்படிப் போக்க வேண்டும்படியான இஸ் ஸ்வ பாவ விசேஷங்கள் இவனுக்கு ஸம்பவிக்கைக்கு அடி என் என்ன
அஞ்ஞானத்துக்கு அடி இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
முன் செய்த முழு வினையால் திருவடிக்கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதே -என்றும்
மாதரார் வன முலைப் பயனே பேணினேன் –பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன்-என்றும்
பாவமே செய்து பாவியானேன் மற்றேலொன்று அறியேன் -என்றும் இத்யாதிகளில் படியே –
ஆர்த்திக்கு அடி பகவத் அனுபவ அலாபம் -என்றும்

வேங்கடத்து எந்தை தந்தை தந்தைக்கு வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்கையாலே
அபி நிவேசத்துக்கு அடி அவன் வடிவழகு என்றும் அருளிச் செய்து –
இவ்விடத்தில் ஸங்க்ரஹேண சொன்ன ஆர்த்தியினுடைய பிரகாரத்தையும் அபி நிவேசத்தினுடைய பிரகாரத்தையும் தாம் அருளிச் செய்த
அர்ச்சிராதி கதி என்கிற பிரபந்தத்திலே விஸ்தரேண காணலாம்படி சொன்னோம் -என்கிறார் –

————

சூரணை -295-

இவன் தனக்கு
நாலு தசை போலே
நாலு குணம் உண்டு –

இவன் தனக்கு இத்யாதி -கீழ்ச் சொன்ன கைங்கர்ய தசையிலும்-தத் பூர்வ பாவிகளான நாலு தசையிலும்
உஜ்ஜ்வல ஸ்வ ரூபமான தனக்கு இப்படி ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவாக நாலு தசையும் யுண்டானாப் போலே
ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவான நாலு குணமும் யுண்டு என்கிறார் –

——————-

சூரணை-296-

அதாவது
ஞானமும்
அஞ்ஞானமும்
சக்தியும்
அசக்தியும் –

அவை எவை என்ன –
ஞானமும் அஞ்ஞானமும் சக்தியும் அசக்தியும் -என்கிறார் –

—————

சூரணை -297-

இது தான்
அவனுக்கும் உண்டு —

இவை தான் இவனுக்கே அசாதாரணமாய் வரும் குணங்களோ என்னில் அன்று
கீழே ப்ரஸ்துதமான கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான எம்பெருமானுக்கும் யுண்டாகையாலே
இது தான் அவனுக்கும் உண்டு என்கிறார் –

—————-

சூரணை -298-

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –

ஓவ்ஜ்ஜ்வல்ய ஹேதுக்களான இவ்விருவருடைய குணங்களுக்கும் விஷயங்கள் எவை என்ன –
அவனுடைய ஞானத்துக்கு இலக்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
சர்வஞ்ஞனான எம்பெருமானுடைய விஸருங்க லமான ஞானத்துக்கு விஷயம் இவ் வதிகாரியுடைய ஆத்ம குணங்கள் என்றும்
அவிஞ்ஞாதா ஹி பக்தாநாம் அகஸ் ஸூ கமலேக்ஷண ஸதா ஜகத் ஸமஸ்தம் ச பஸ்யன்நபி ஹ்ருதி ஸ்தித -என்றும்
அவிஞ்ஞாதா ஸஹஸ்ராம் ஸூ -என்றும்
குன்று அனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் -என்றும் சொல்லுகிறபடியே
அவனுடைய அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய ப்ரக்ருதி வஸ்யதையால் வந்த தோஷம் என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீ ஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீநம் -என்கையாலே
ஸர்வ சக்தியானவனுடைய சக்திக்கு இலக்கு இரும்பைப் பொன்னாக்குவரைப் போலே
நித்ய ஸம்ஸாரியான இவனை நித்ய ஸூ ரிகளோடே ஒரு கோவையாக்கி ரக்ஷிக்கும் ரக்ஷணம் என்றும்
ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய க்ருதாத்மநா -என்றும்
நத்யஜேயம் கதஞ்சன -என்றும் இருக்குமவனாகையாலே
அவனுடைய இந்த அசக்திக்கு இலக்கு இவனை எத்தசையிலும் விடுகையும் என்கிறார் –

——————–

சூரணை -299-

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —

ஆனால் இவ்வதிகாரி தன்னுடைய குணங்களுக்கு விஷயம் எவை என்னில் -இவனுடைய ஞானத்துக்கு இலக்கு இத்யாதி –
குரோர் குரு தரன் நாஸ்தி குரோர் அந்யன்ன பாவயேத் -என்கையாலே
சதாசார்ய லப்தமான இவனுடைய ஞானத்துக்கு விஷயம் மஹா உபகாரகனான அவ்வாச்சார்யனுடைய ஸத் குண ஸமூஹம்
இவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம் அவ்வாச்சார்யன் எடுத்த திருமேனிக்கு அனுரூபமான சேஷ்டிதங்களில்
ப்ரக்ருதி வாசனையால் வந்த தோஷங்கள் -அதாவது –
அத்தை அவதார சேஷ்டிதங்களோ பாதியாக நினைக்க வேண்டுகையாலே –
ஆச்சார்ய அதீநநாய் இருக்கிற இவனுடைய சக்திக்கு விஷயம் அவனுக்கு இஷ்ட தமமான கைங்கர்யம்
இவனுடைய ஒரு ப்ரவ்ருத்தி யோக்யதை இல்லாத அசக்திக்கு விஷயம் ஆச்சார்யனுக்கு அநிஷ்டமாய் ஸாஸ்த்ர விருத்தங்களுமான நிஷித்த அனுஷ்டானம் -என்கிறார் –

——————-

சூரணை -300-

நிஷித்தம் தானும்
நாலு படியாய் இருக்கும் –

இப்படிப்பட்ட நிஷித்த அனுஷ்டானம் தான் இருக்கும் படி எங்கனே என்ன
அவையும் நாலு படியாய் இருக்கும் என்கிறார் –

—————-

சூரணை-301-
அதாவது
அக்ருத்ய கரணமும்
பகவத் அபசாரமும்
பாகவத அபசாரமும்
அசஹ்ய அபசாரமும் —

அவை தான் எவை என்னில்
அக்ருத்ய கரணமும் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

———————-

சூரணை -302-

அக்ருத்ய கரணம் ஆவது –
பர ஹிம்சை -பர ஸ்தோத்ரம் -பர தார பரிக்ரகம் -பர த்ரவ்ய அபஹாரம் –
அசத்திய கதனம் -அபஷ்ய பஷணம்-துடக்கமானவை –

இனி அக்ருத்ய கரணமாவது -இத்யாதியாலே
ஸாஸ்த்ரங்களிலே பரக்க ப்ரதிபாதிக்கப் படுகிற பர ஹிம்ஸாதி நிஷித்த அனுஷ்டானங்களை
ஸங்க்ரஹேண ப்ரதிபாதிக்கிறார் –

—————-

சூரணை -303-

பகவத் அபசாரமாவது –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையும் –
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் – மனுஷ்ய சஜாதீயதா புத்தியும் –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரமும் –
அர்ச்சா அவதாரத்தில் உபாதான நிரூபணமும் –
ஆத்ம அபஹாரமும் –
பகவத் த்ரவ்ய அபஹாரமும் -துடக்கமானவை-

பகவத் அபசாரமாவது –இத்யாதி –
யேது சாமான்ய பாவேன மன்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டிநோ ஞ்ஞேயாஸ் சர்வ கர்ம பஹிஷ்க்ருதா-என்றும்
யஸ்து நாராயணம் தேவம் சாமான்யே நாபிமன்யதே ச யாதி நரகம் கோரம் யாவச் சந்திர திவாகரம் -என்றும் சொல்லுகையாலே –
ஸர்வ நியாந்தாவான ஸர்வேஸ்வரனை அவனுடைய ஈஸிதவ்ய ஏக தேச பூதரான தேவதாந்தரங்கோளோடே சமானமாக நினைக்கையும்

ராம கிருஷ்ணாதிகளான அவதாரங்களில் -ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றபடி
அவை பரனாமவனாதல் பாவியாதே லோக மர்யாத அநு வர்த்தனம் பண்ணின மாத்ரத்தைக் கொண்டு
மனுஷ்ய ஸஜாதீயனாக அத்யவசிக்கையும்

அக்ர ஜன்மாவானவன் மாம்ஸாதிகளாலே ஆராதிக்கையும்
துரீய ஜன்மாவானவன் வைதிக மந்த்ரங்களாலே ஆராதிக்கையும்
உத்தம ஆஸ்ரமியானவன் தாம்பூலாதிகளைக் கொண்டு ஆராதிக்கையும்
எம்பெருமானுக்கு அநிஷ்டமாகையாலே -வர்ணத்துக்கும் ஆஸ்ரமத்துக்கும் சேராத உபசாரங்களும்

யோ விஷ்ணவ் ப்ரதிமாகாரே லோஹ பாவம் கரோதி யோ குரவ் ச மாநுஷம் பாவம் உபவ் நரக பாதிநவ் -என்றும்
தஷாபி நீசைஸ் ஸூஹ்ருதான வித்யான் பாஷாணம் ருத்தாரு மயாம்ஸ் ச தேவான் வதந்தி யே மாதவ நிந்த காஸ்தே பூர்ணஸ் ஸதா நந்த மயோ ஹி விஷ்ணு -என்றும்
சொல்லுகையாலே அர்ச்சாவதாரத்திலே தாரு லோகாத் யுபதான நிரூபணம் பண்ணுகையும்

யோ அந்யதா சந்தமாநம் யோ அந்யதா ப்ரதிபத்யதே கிந்தேந ந க்ருதுதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா –என்றும்
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -என்றும் சொல்லுகையாலே –
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷமான ஆத்மாவை ஸ்வ தந்த்ரம் என்று இருக்கையும்

அமுது படி சாத்துப்படி முதலான பகவத் த்ரவ்ய அபஹாரம்-தொடக்கமானவை பகவத் அபசாரம் என்கிறார் –

—————-

சூரணை -304-

பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –
அபஹரிக்கிறவர்களுக்கு சஹகரிக்கையும் –
அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும்
அயாசிதமாகவும்  பரிக்கிரகையும் –
பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும்–

இப்படி பகவத் த்ரவ்யத்தை அபஹரியாது ஒழியும் அளவேயோ வேண்டுவது என்னில் -பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –இத்யாதி -அங்கன் அன்று
இந்த பகவத் த்ரவ்யத்தைத் தானே அபஹரித்து ஜீவிக்கும் அளவன்றிக்கே -பகவத் த்ரவ்ய அபஹாரம் பண்ணுகிறவர்களுக்கு
ஏதேனும் ஒரு படியாலே ஸஹ கரித்து அவ்வழியாலே தான் ஜீவிக்கையும்
நாம் அபஹரிக்கிறோம் அன்று இறே என்று அவர்கள் பக்கல் யாசித்து வாங்கி ஜீவிக்கையும்
இனித்தான் நாம் யோசித்தோம் அன்று இறே என்று அவர்கள் தாங்களே தருமவற்றை வாங்கி ஜீவிக்கையும்
எம்பெருமானுக்கு அத்யந்த அநபிமதம் -என்கிறார் –

————–

சூரணை -305-

பாகவத அபசாரமாவது
அஹங்கார அர்த்த காமங்கள்  அடியாக
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பண்ணும் விரோதம் –
அநந்தரம் -பாகவத அபசாரத்தை விவரிக்கிறார் –

பாகவத அபசாரமாவது-இத்யாதி -ஸ்வரூப விருத்தமான அஹம் மாநம் அடியாகவும் -அத்யந்த த்யாஜ்யமாய்த்
தன்னுடைய மமதா விஷயமான அர்த்த காமங்களை அவர்களும் ஆதரித்தார்கள் என்னும் இவ்வளவையும் கொண்டு
அர்ச்சாயாமேவ மாம் பஸ்யன் மத் பக்தேஷு ஸதா த்ருஹன் விஷதக்தை ரக்நி தக்தை ஆக ஸைர் ஹந்தி மாமசவ் -என்னா நிற்க –
இப்படி எம்பெருமானுக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விருத்தா சரணமும் பாகவத அபசாரம் ஆவது என்கிறார் –

————————–

சூரணை -306-

அசஹ்ய அபசாரம் ஆவது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் –
அசஹமானனாய் இருக்கையும் –
ஆசார்ய அபசாரமும் –
தத் பக்த அபசாரமும் –

அஸஹ்ய அபசாரமாவது -இத்யாதி -இதில் நிர்நிபந்தனமாகை யாவது தன்னுடைய அர்த்த காமங்களுக்குப் பண்ணும் விரோத நிபந்தநமாகை யன்றிக்கே
கேவலம் பகவத் பாகவத விஷயங்களைக் கண்ட மாத்ரத்திலே -ஹிரண்யனைப் போலே -அஸூய பரனாய்க் கொண்டு அஸஹமானனாக இருக்கையும்
தன்னுடைய ஆத்ம உஜ்ஜீவநாத் அகில சம்பத்துக்கும் அடியான ஆச்சார்யன் பக்கல் பண்ணும் அபசாரமும்
உயிர் நிலையிலே எறட்டினால் போலே அவன் உகந்த விஷயங்களிலே ஞாதி ஸ்பர்த்தை போலே பண்ணும் அபசாரங்களும்
அஸஹ்ய அபசாரமாவது என்கிறார் –

————–

சூரணை -307-

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய்
இருக்கும்–

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்-இத்யாதி –
இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரம் ஆகையாவது -அக்ருத்ய கரணம் ப்ராயச்சித்தத்தாலே நசிக்கும் –
அத்தைப் பற்ற குரூரமான பாகவத அபசாரம் அவர்கள் தங்களையே க்ஷமை கொண்டவாறே நசிக்கும் -அது எங்கனே என்னில்
அம்பரீஷ சக்ரவர்த்தி பாரண காலத்திலே தனக்கு அதிதியாய் வந்த துர்வாஸர் வருவதற்கு முன்பே த்வாதஸீ கழியப் புகுந்த வாறே துளஸீ பாரணத்தைப் பண்ண –
தன் நிமித்தமாக குபிதனாய் வந்த துர்வாஸர் சபிக்கப் புக-
அவனும் ஆழ்வானைத் த்யானம் பண்ண -அவ்வாழ்வானும் துர்வாஸரைத் தொடர -அவனும் ஷீராப்தி பர்யந்தமாக தட்டித் திரிந்து
மீண்டும் அம்பரீஷன் பக்கலிலே வந்து
அஹோ அநந்தா தாஸாநாம் மஹாத்ம்யம் த்ருஷ்டமத்ய மே -என்று வந்து விழ
அவ்வபசாரத்தைத் தானும் க்ஷமித்து அத்திருவாழி ஆழ்வானையும் க்ஷமை கொண்டான் இறே –
இனி அதிலும் குரூரமான அஸஹ்ய அபசாரம் நிர் நிபந்தனமாக வருகையாலே அறிந்து ஷமிக்கைக்கு விஷயம் இன்றிக்கே
தன் நெஞ்சிலே கிடந்து புழுங்கி விடுவது ஒன்றாகையாலும்
தனக்கு அஞ்ஞாத ஞாபனம் முதலாக அகில சம்பத்துக்கும் மூலமான ஆச்சார்ய விஷயத்திலும் -அவன் உகந்த விஷயத்திலும் பண்ணும் அபசாரம் ஆகையாலே
இது மிகவும் ஸ்வரூப நாஸகரம் –
ஆகையால் இப்படி ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களாய் -அக்ருத்ய கரணம் தொடக்கமான இவ்வபசாரங்கள் இவ்வதிகாரிக்கு
பகவத் கிருபா விரோதிகளுமாய் -பகவன் முகோல்லாஸ விரோதிகளுமாகையாலே
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய் -இருக்கும் என்கிறார் -எங்கனே என்னில்
நா விரதோ துஸ் சரிதான் நஜா சாந்தோ நா ஸமாஹித நா சாந்த மானஸோ வாபி ப்ரஞ்ஞா நேநைந மாப்நுயாத் -என்கையாலே –

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –32– தாரிகாவின் மூன்று நிலைகள் —

August 2, 2022

அடுத்து அவளுடைய ஸ்தூலமான நிலை போன்றவற்றைக் குறித்து நான் கூற கேட்பாயாக –

யா ஹி ஏஷா பரமா வித்யா தாரிகா பாவ தாரிணீ
ஸ்தூலம் ஸூஷ்மம் பரம் சேதி தஸ்யா ரூப த்ரயம் ய ஸ்ருணு –1-

சக்தியின் மூன்று நிலைகளான ஸ்தூலம் ஸூஷ்மம் பரம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ப்பாயாக
இது உயர்ந்த தாரிகா என்னும் மந்திரமாகும் -இது உபாஸகனைக் காப்பதாகும் –

பஞ்ச வர்ணம் சதுர் வர்ணம் இதி ஸ்தூலத் மகம் வபுஸ்
த்ரி வர்ணா ஸூஷ்ம ஸம்ஜ்ஞா மே பரா விஷ்ணு மயீ ஸ்திதா –2-

ஸ்தூல வடிவமானது -ஐந்து அல்லது நான்கு ஒலிகளைக் கொண்டதாக உள்ளது இது ஹ்ரீம் என்பதாகும்
ஸூஷ்ம நிலையானது மூன்று ஒலிகளைக் கொண்டதாகும் -இது ஈம் என்பதாகும்
பரம நிலையானது விஷ்ணு என்னும் ஒலியைக் கொண்டதாகும் இது ஈ என்பதாகும் –

இமாஸ்திஸ்ரோ ஹி அவஸ்தா மே ப்ரத்யேகம் து த்ரிதா த்ரிதா
ஸ்தூலே து யா பராவஸ்தா பரமாத்மாஸ்ரயா து ஸா –3-
அசேஷ புவந ஆதார விஷ்ணு வ்யாபி சமாஸ்ரயா
போக்த்ரு போக்யாத்மிகா சேயம் தஸ்யா ரூபம் நிபோத மே –4-

எனது இந்த ஒவ்வொரு நிலையும் மூன்றாய்ப் பிரிக்கப் படுகின்றன
ஸ்தூலத்தில் உள்ள பரம நிலையானது
அசேஷ புவன ஆதரம் -ர
விஷ்ணு -ஈ
மற்றும் வ்யாபின் ஆகியவற்றுடன் இணைந்த பரமாத்மன் -ஹ
என்ற ஒலியைக் கொண்டதாகும்
இதுவே ஹ்ரீம் என்கிறதுகாக்கிறது
இந்த நிலையானது அனுபவிப்பவன் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது

அதன் ரூபத்தை அடுத்து நான் வர்ணிக்கக் கேட்ப்பாயாக –

அசேஷ புவன ஆதார நிலய வ்யாபி ஜன்மநா
பரமாத்மாதி கேநைவ லலாட தடமேயுஷா –5-
ஆக்ரம்ய வைஷ்ணவம் ரூபம் ஸ்வே புனஸ் ப்ரதி திஷ்டதி
தார காரண நாதேந சோபமாநா ஹரி ப்ரியா –6-

ஸ்ரீ ஹரியின் பிரியையாக உள்ளவள் நான்
சஹஸ்ரார சக்ரம் எனப்படும்நெற்றிப்பகுதியின் பின்புறம் உள்ளாள்
இவள் அசேஷ புவன ஆதரம் -வ்யாபின் -பரமாத்மன் -ஆகிய ஒலிகளில் புறப்பட்டு
விஷ்ணு ரூபம் அடைந்து
அதன் பின்னர் தனக்கு உரிய ரூபம் எடுக்கிறாள்
இந்த ரூபமானது தாரா வெளிப்படும் நாதத்துடன் கூடியதாக உள்ளது –

போக்த்ரு போக்யாதிகம் ஸர்வம் புவனம் பிப்ரதீதியா
வ்யாபிநம் ஸர்வதோ தேவீ பரமாத்மாநம் ஆஸ்ரிதா –7-

போக்தா போக உபகரணங்கள் நிறைந்த இந்த உலகை தாரிகா தேவி தனது ஞானத்தால் சூழ்ந்த படி
பரமாத்வாவிடம் அண்டிய படி உள்ளாள்

தாவத்தயா ஸ்திதா விஷ்ணு ரூபா ஸ்தூலா கதி பரா
பஞ்ச க்ருத்ய கரீ சக்தி த்ரிவித ஐஸ்வர்ய ப்ரும்ஹிதா –8–
பிராணயந்தி ஸ்ரியா தேவம் ஜ்ரும்பா மாணோத் அதி பரபம்
ஆச்ரித்ய ஹி அநலம் பவமியம் ஸூஷ்மா கதிர் மதா–9-

அந்த தாரிகாதேவி ஸ்தூல நிலையில் விஷ்ணு ரூபம் கொண்டு அதிலேயே நிலைக்கிறாள்
ஸூஷ்ம நிலையிலே
ஸ்ருஷ்ட்டி முதலான ஐந்து செயல்களை செய்தபடி மூன்று வித ஐஸ்வர்யங்களுடன்
சமுத்திரம் போன்று ஓங்கி க்ரியா சக்தியின் அக்னி ரூபம் அண்டுகிறாள்

ஸ்ருஷ்ட்யாதிகம் விதாயாத வ்யோமஸ்தாம் பரமாஸ்திதா
ஸர்வ ஆச்சர்ய கரீ தேவீ ஸ்ருஷ்டி ஸ்திதி யந்தக்கரணம் –10-
ஸூர்யம் ஸமாஸ்ரிதா விஷ்ணும் கல யந்தீ ஜகத் ஸ்திதம்
கால பாவக தேஜோபி ஸ்தூல அஸ்தூல மயாத்துதா –11-

இப்படி ஸ்தூல ஸூஷ்ம நிலையில் உயர்ந்த நிலையில் உள்ளவளும் வ்யோமத்தில் -ம் -உள்ளவளும்
கால அக்னியின் -ர-துணையுடன் ஸூர்யன் -ஹ -விஷ்ணு -ஈ -ஆகிய ரூபங்களால் ஜகாத்தை நிலை பெறச் செய்கிறாள் –

கததா கத யஸ்திஸ்ரஸ் ஸ்தூலய மம வாஸவ
ஸூஷ்மா யாஸ்து கதீஸ் ஸ்திரஸ் ஸ்ருணு வ்ருத்ர நிஷுதந -12-

இப்படியாக எனது தாரகை நிலையுடைய மூன்று ஸ்தூலங்கள் குறித்துக் கூறப்பட்டன
வ்ருத்ரன் என்னும் அசுரனை அழித்தவனே -அடுத்து மூன்று ஸூஷ்ம நிலைகளைப் பற்றிக் கேள்

அகால கலாந ஸேயம் ஸூஷ்மா து பரமேஸ்வரீ
வ்யாபிநம் பரமாத்மா நம் ஸ்ரயந்தீ வர்த்ததே த்ருவா –13-

பரமேஸ்வரியின் ஸூஷ்ம ரூபமானது எப்போதும் நிலையாக –
வ்யாபிந் பரமாத்மா வின் அக்ஷரங்களில் உள்ளன
அதாவது ஹம்
இந்த நிலையானது காலத்திலேயே கட்டுப்படாததாகும் –

சுத்தோ வர்க்கஸ் தத அசுத்தோ த்வி விதம் ஸ்ருஜ்யம் உச்யதே
சுத்த இதரே ஸ்தித ஸ்தூலா சுத்தே ஸூஷ்மா ப்ரதிஷ்டிதா –14-

ஸ்ருஷ்டிக்கப்படும் அனைத்தும் சுத்தம் என்றும் அசுத்தம் என்றும் இரண்டு விதங்கள் –
ஸ்தூல ரூபம் அசுத்தத்தை உள்ளடக்கியும் ஸூஷ்ம ரூபம் சுத்தத்தை உள்ளடக்கியும் இருக்கும் –

திஸ்ரஸ் அப்யாஸாம் கதீ ஸம்யக் ஸ்தூலாயா இவ லக்ஷ்யேத்
பரா யா மே தனு சக்ர தஸ்யா ரூபம் நிஸாமய –15-

தாரிகையின் ஸ்தூல நிலைகள் போன்றே இந்த மூன்று ஸூஷ்ம நிலைகளும் தெளிவாகப் புலப்படுகின்றன
அடுத்து தாரிகையின் உயர்ந்த ரூபம் பற்றிக் கேள்

ஸர்வ வ்யாப்தி மதீ திவ்யா நிஷ்கலா ஸா நிரஞ்சநா
சா பரா மன்மயீ சக்தி கதிதா விஷ்ணு சம்ஜ்ஞயா –16-

அவள் எங்கும் நிறைந்தவளாகவும் திவ்யமாகவும் தோஷம் அற்றவளாகவும் உள்ளாள்
இந்த உயர்ந்த சக்தியான அவள் என்னை ஆத்மாவாகக் கொண்டவளாக
விஷ்ணு என்று அழைக்கப் படுகிறாள் -அதாவது ஈ –

ஏஷா ஸா வைஷ்ணவீ சத்தா ஸா ஏஷா அஹந்தா ஹரேர் மதா
ஏஷா ஸா யோகிநாம் நிஷ்டா ஸ ஏஷா சாங்யாத்மநாம் கதி –17-

அவளே விஷ்ணுவின் இருப்பாக உள்ளாள் -அவளே ஹரியின் நான் என்னும் நிலை
அனைத்து யோகிகளுக்கும் இவளே த்யான விஷயம்
சாங்க்ய -ஞான -நிலையின் கதியாக அவளே உள்ளாள் –

இயம் ஸா பரமா மூர்த்தி இயம் ஸா பரமா கதி
சக்தி குண்டலிநீ ச ஆத்யா ப்ரமரீ யோக தாயிகா –18-
அநா ஹதா ஹி ஆகோஷா ச நிர் மர்யாதா நதோத் கதா
ஸப்த ப்ரஹ்ம ததா சக்திர் மாத்ருகா யோநி உத்தமா –19-
காயத்ரீ ச கலா கௌரீ சசீ தேவீ ஸரஸ்வதீ
வ்ருஷாகபாயீ ஸத்யா ச ப்ராண பத்நீ யசஸ்விநீ –20-
இந்த்ர பத்நீ மஹாதேநு அதிதி தேவ நந்திநீ
ருத்ராணாம் ஐநநீ வஸூநாம் து ஹிதா ததா –21-
ஆதித்யா நாம் ஸ்வஸா நாபி அம்ருத தஸ்ய த்ருதி பரா
இடா ரதி ப்ரியா காரா கருதாத்ரீ மஹீ யஸீ –22-
மஹீ ச விஸ்ரு திஸ் சைவ த்ரயீ கௌஸ் ப்ரண வஸ்தலா
சக்திச்ச ப்ரக்ருதிச்சைவ மஹா ராஜ்ஜீ பயஸ்விநீ –23-
தாரா சீதா ததா ஸ்ரீஸ் ச காம வத்ஸா பிரியவ்ரதா
தருணீ ச வராரோஹ நிரூபா ரூப ஸாலி நீ –24-
அம்பிகா ஸூந்தரீ ஜ்யேஷ்டா வாமா கோரா மநோ மயீ
ஸித்தா ஸிந்தாந்திகா யோகா யோகிநீ யோக பாவிநீ –25-
ஏவ மாதீநி நாமானி ஸாஸ்த்ரே ஸாஸ்த்ரே மநீஷிபி
கதிதாநி ரஹஸ்யாநி ஸக்தே ஸித்தாந்த பாரகை –26-

அவளே உயர்ந்த ரூபமாகவும் உயர்ந்த நிலையை அடைவதற்கான வழியாகவும் உள்ளாள் –
சக்தி -குண்டலிநீ -ஆத்யா -ப்ரஹ்மரீ -யோக தாயிகா -அநாஹதா -அகோஷா -நிர்மர்யாதா -நதோத்கதா-
ஸப்த ப்ரஹ்மா -சக்திர் மாத்ருகா யோநி -உத்தமா -காயத்ரீ -கலா -கௌரீ -ஸசீ -தேவீ -ஸரஸ்வதீ –
வ்ருஷா கபாயீ -ஸத்யா -ப்ராண பத்நீ -யசஸ்விநீ -இந்த்ர பத்நீ -மஹா நேநு -அதிதி -தேவ நந்திநீ –
ருத்ரர்கள் மற்றும் வஸூ க்களுடைய தாய் -ஹிதா -ஆதித்யர்களுடைய ஸஹோதரி -அம்ருதத்தின் நாபி –
த்ருதி -இடா -ரதி -உயர்ந்த கருதாத்ரீ -மஹீ -விஸ்ருதி -த்ரயீ -கோ -ப்ரணவத்ஸலா -சக்தி -ப்ரக்ருதி –
மஹா ராஜ்ஜீ -பயஸ்விநீ -தாரா -ஸீதா -ஸ்ரீ -காம வத்ஸா -ப்ரியவ்ரதா -தருணீ -வராரோஹா -நிரூபா –
ரூபஸாலிநீ -அம்பிகா -ஸூ ந்தரீ -ஜ்யேஷ்டா -வாமா -கோரா -மநோ மயீ -ஸித்தா -சிந்தாந்திகா –
யோகா -யோகிநீ -யோக பாவி நீ -போன்ற பலவும்
அந்த சக்தியின் பல ரஹஸ்யப் பெயர்களாக பல்வேறு சாஸ்திரங்களில்
பல சான்றோர்களாலே கூறப்பட்டுள்ளன

ச ஏஷா சக்தி பரா திவ்யா த்ரிதா ரூபை அவஸ்திதா
ஸ்தூல ஸூஷ்ம பரத்வேந த்ரைதம் ஏதத் ப்ரதர்ச்யதே –27-

அந்த சக்தியானவள் மூன்று நிலைகளில் உள்ளாள் –
ஸ்தூலமாயும் ஸூஷ்மமாயும் உயர்ந்ததாகவும் உள்ள அவளுடைய
மூன்று வடிவங்கள் உனக்கு இப்போது கூறப்படுகின்றன –

அஸ்யா ஸ்வரூபம் ஈ ப்ரோக்தா சா அத்ரே தாவ திஷ்டதே
அப்ரமேய அதி ரூபேண தஸ்யா வ்யாக்யாம் இமாம் ஸ்ருணு –28-

ஈ என்னும் அக்ஷரமானது அவளுடைய ஸ்வரூபமாக உள்ளது
அதுவும் மூன்று விதங்களில் உள்ளது
அதன் உன்னதமான -அப்ரமேய -அதாவது அகார -வடிவத்தை இப்போது
நான் விளக்கக் கேட்ப்பாயாக

ஷாட் குண்யம் யத் பரம ப்ரஹ்ம வாஸூ தேவாக்யம் அவ்யயம்
சங்க்ருதாகில பேதம் தத் ஏகம் ஏவ யதா ததா –29-
அப்ரமேயாக்யயா தேவஸ் ததா யோகி ப்ரீர்யதே
வ்யாப்ய வ்யாபக பேதோ வா ஸ்ருஸ்ஜ்ய ஸ்ருஷ்டி விதாபி வா –30-
ந ததான்ய ப்ரமேயத்வம் ந கிஞ்சித் அஸ்ய வித்யதே
ததா ஸூந்யம் அவிகாரை ப்ரஸூப்தாம் இவ ஸர்வத–31-
ஷாட் குண்யம் ப்ரஹ்ம ஸம்ஸ்திதா விஷ்ணு ஸம்ஜ்ஞயா
அதரங்கார்ண வாகாரா சக்தி சக்தி மதோர் கதி -32-

பர ப்ரஹ்மமானது ஆறு குணங்களுடன் கூடியவனும்
எப்போதும் உள்ளவனுமாகிய வாஸூ தேவன்
அனைத்து பேதங்களையும் ஒன்றாகத் திரட்டி தன்னுள் அடக்குகிறான்
இத்தகைய திவ்யமான ரூபமே யோகிகளால் அப்ரமேயம் எனப்படுகிறது
அத்தகைய நிலையில் -பரவப்படும் பொருள் -பரவப்பட்ட பொருள் -என்கிற வேறுபாடோ
படைக்கப்பட்ட பொருள் -படைக்கின்ற பொருள் -என்கிற வேறுபாடோ இல்லை
அந்த நிலையில் அந்த வஸ்துவை அறிய இயலாது
ஆறு குணங்களுடன் கூடிய அந்த ப்ரஹ்மமானது ஆழ்ந்த உரக்க நிலையில் உள்ளதாக
ஸூ ன்யமாகவே அனைவராலும் உணரப்படுகிறது
அப்போது தாரிகா -விஷ்ணுவின் பெயரைத் தரித்தவளாக அலையற்ற சமுத்திரம் போன்று
சக்தியைக் கொண்ட வஸ்துவின் சக்தியாக அறியப்படுகிறான் –

ததா யதா புநர் ப்ரஹ்ம வாஸூ தேவாக்யம் அவ்ரணம்
உன் மிஷத் யாத்ம சங்கல்பாத் ததா ப்ரதம உச்யதே –33-

வாஸூ தேவன் என அழைக்கப்படும் அந்தத் தூய்மையான ப்ரஹ்மமானது
தன்னுடைய ஸங்கல்பம் காரணமாகவே மீண்டும் விழித்து எழுகிறது -இது பிரதமம் எனப்படும்

பிரததே ஹி யதா ப்ரஹ்ம ஸூத்த அஸூத் தாக்ய வர்த்மநா
மாயா நாம ததா த்வேஷா ப்ரஹ்ம ஸங்கல்ப ரூபிணீ –34-

அந்தப் ப்ரஹ்மம் ஸூத்தம் அஸூத்தம் -என்பதான ஸ்ருஷ்டியில் -தன்னை விரித்துக் கொள்ளும் போது
அந்தப் ப்ரஹ்மத்தின் சங்கல்பத்துக்கு நிகராக உள்ள சக்தியானது மாயா எனப்படுகிறாள்

சங்கர்ஷணாதி ஷித் யந்தஸ் தஸ்யா கர்பம் அவஸ்திதஸ்
யதா புநஸ் பரம் ப்ரஹ்ம ஸ்வ இச்சா ஸம்பாவதிதம் பிருதக்–35-
வியாப்ய வியாபக பேதேந ஸத்வி தீயம் அவஸ்திதம்
பஞ்ச பிந்துஸ் ததா தேவீ பஞ்ச க்ருத்ய விதாயி நீ –36-

ஸங்கர்ஷணன் தொடக்கமாக புல் பூண்டு முதலிய அனைத்து ஸ்ருஷ்டிகளும் அவளுடைய கர்ப்பத்தில் உள்ளன
ஒரு கட்டத்தில் ப்ரஹ்மமானது தனது இச்சையால்
வியாபிக்கும் பொருள் என்றும் வியாபிக்கப்படும் பொருள் என்றும் இரண்டாகப் பிரிகிறது
அப்போது ப்ரஹ்மத்தின் ஐந்து செயல்களைச் செய்யும் தேவியானவள் பஞ்ச பிந்து என்று அழைக்கப் படுகிறாள்

ப்ரஹ்மத்தின் ஐந்து செயல்களாவன -படைத்தல் காத்தல் அழித்தல் மயக்குதல் மற்றும் கடாக்ஷித்தல்

பராய இதி தே ப்ரோக்தோ மம தன்வா கதிஸ் த்ரயீ
ரூபம் ரூபம் விபஜ்யைஷா தத் தத் தத் வார்ண பேதி நீ –37-

இப்படியாக உள்ள எனது உயர்ந்த நிலை குறித்து உனக்கு உரைக்கப் பட்டது
அது பலவிதமான ரூபங்களை எடுப்பதாக உள்ளது
அந்த ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அக்ஷரத்தை -அதாவது
க தொடக்கமாக உள்ள ஒவ்வொரு அக்ஷரத்தை குறிப்பதாக வேறுபாட்டுடன் உள்ளது –

தத் தத் வாசகதாம் நீதா ஸ்வ காமாஜ் ஜகதீ தநு
தேஷு தேஷு ஹி தத் வேஷு ஸ்வாத்ம பூதா வதிஷ்டதே –38-

அந்த ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அக்ஷரமும் குறிக்கின்ற ஜகத்தின்
பல்வேறு வடிவங்களை உணர்த்துவதாகவும் உள்ளது
இப்படியாக ஒவ்வொரு தத்துவமும் எனது ஒவ்வொரு ரூபத்தைக் கொண்டதாகவே உள்ளது –

மத் அம்ச ஸூஷ்ம ரூபோ யோ மூட அக்னிரிவ தாரு ஷு
தத் தத் ரூப மநு ப்ராப்தா சேவ நீ நாம ஸாஸ்வதீ –39-

இப்படியாக ஒவ்வொரு அக்ஷரத்திற்கான ரூபங்களை எடுத்த பின்னர்
எனது ஸூஷ்ம ரூபங்கள் அந்த அந்த அக்ஷரத்தில் நித்தியமாக மறைந்து உள்ளன
அதாவது விறகுக்கட்டையில் அக்னி எவ்வாறு மறைந்து உள்ளதோ அதை போன்று ஆகும்

தத் தத் வர்ணோ பரா கேண தத் தத் வியக்தி வபுஸ் ஸ்வயம்
அதி தைவத பாவேந தத்ர யோம்ச பராத்மக –40-

வைஷ்ணவ சக்தி ரூபோ மே நியச்சன்ன வதிஷ்டதே
தத் தத் வாசகதாம் யாதி தேவீ சேயம நஸ்வரீ –41-

இப்படியாக ஒவ்வொரு அக்ஷரத்தின் அதிபதி தேவதையாக எனது பல்வேறு ரூபங்கள் உள்ளன
இதன் மூலம் விஷ்ணுவின் சக்தியாக உள்ள எனது உயர்ந்த நிலையானது
ஒவ்வொரு அக்ஷரத்தின் ஒலியிலும் அமைந்து உள்ளது
மேலும் அந்த அந்த அக்ஷரத்தின் ஓசை மற்றும் அமைப்பிற்கான அதிபதி தேவதையாகவும் உள்ளது –

அசேஷ புவநாதாரா யோகிநீ பரமேஸ்வரீ
கேவலஸ் தத்துவ வர்ணஸ்து த்ரை லோக்யை வர்யதாம் கத –42-

அனைத்து புவனங்களுக்கும் ஆதாரமாக உள்ளவளும் -பரமேஸ்வரீயுமாகிய யோகிநீ -என்னும் நான்
அந்த அந்த வர்ணங்களுக்கு -அக்ஷரங்களுக்கு -அடிப்படையாக அமைகிறேன்

தத் தத் ஸ்தூல மயம் தத்துவம் மதீயம் சக்தி ஸாஸ்வதம்
தத் தத் பாவாபிதாநேந தன் நியந்த்ருத்வ தர்சதே–43-

அவள் அனைத்து தூய்மையான தத்துவங்களை வெளிப்படுத்தும் அக்ஷரங்களால் உணர்த்தப்படுகிறாள்
மூன்று லோகங்களையும் ஆளவல்ல எஜமானத் தன்மையை அளிக்கிறாள்
ஒவ்வொரு ஸ்தூலமான தத்துவமும் எனது எப்போதும் உள்ள சக்தியே யாகும்
இது ஏன் என்றால் ஒவ்வொரு ஸ்தூலமான தத்துவமும் எனது நிலையையே வெளிப்படுத்துகின்றன –
அவற்றில் நானே ஆதிக்யம் செலுத்துகிறேன்

இயமே வேஸ்வரா தேவீ த்விதா ஸக்தா வதிஷ்டிதே
ஷாதி சாந்தம் புரா யத்தே தர்சிதம் ப்ரஹ்ம பஞ்சகம் –44-
ஷ இத்யாதி ஸ்வரூபேண த்ரைலோக்ய ஐஸ்வர்யதாம் கதா
ஸ்வரூபே நியமே சைவ த்வேதா ஸேயமவஸ்திதா –45–

ஒவ்வொரு வஸ்துவையும் நியமிக்கும் தேவியானவள் அவற்றுடன் இரண்டு முறையான உறவு முறையில் உள்ளாள்
அதாவது
நான் முன்பே உனக்கு கூறியதான
ஷ தொடங்கி ஸ முடிய உள்ள ஐந்து ப்ரஹ்மத்திலும் அவள் உள்ளாள்
இவ்விதமாக மூன்று லோகங்களையும் ஆளவல்ல எஜமானத் தன்மையை அளிக்கிறாள்
இரண்டு விதமான நிலையில் உள்ளாள்
அனைத்து வஸ்துக்களின் இருப்பாகவும்
அவற்றை நியமிப்பவளாகவும் உள்ளாள் –

தாரணா நாம் சதுஷ் கம் யத் வாதி யாந்த முதீ ரிதம்
தத்ர ஸூஷ்ம பர பாவே ஸ்தி தேயம் பூர்வவத் த்விதா –46-
த்ரைய வஸ்தோ மகார அயம் ப்ரோக்த சைதன்ய வாசக
தத்ராபி ஸூஷ்ம பரயோர்த்வ தேயம் தசயோர் த்வயோ -47-

வ காரம் தொடங்கி யகாரம் முடிய உள்ளதும் -முன்பு கூறப்பட்டதும் நான்கு தாரணைகளாக உள்ள சப்தங்கள்
முன்பு கூறப்பட்டதான தாரிகாவின் ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த நிலைகளைக் கொண்டதாக

அவளுடைய இரண்டு செயல்களை நிறைவேற்றுவதாக உள்ளன
சைதன்யத்தின் மூன்று நிலைகளைக் குறிப்பதாக ம அக்ஷரம் உள்ளதை முன்பே -கூறப்பட்டது
இதில் அவளுடைய ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த இரண்டு நிலைகளும் உள்ளாய்

மாயா ப்ரஸூதி த்ரை குண்ய ரூபோ யோ பார்ண உச்யதே
ஈ நாம பூர்வ வத் தேவீ தத்ர அபி தசயோர் த்வயோ -48

ப காரம் மூன்று தன்மைகளைக் கொண்ட மாயையைக் குறிக்கும்
மேலே கூறப்பட்ட இரண்டு நிலைகளில் உள்ள தாரிகா ஈ என்னும் அஷரத்தால் கூறப்படுபவளாகவும் உள்ளாள்

புத்தி அஹங்கார மநஸாம் யத் தூபம் பாதிகம் த்ரயம்
தத்ர அபி பூர்வவத் த்வேதா தேவீ யம் தசயோர்த்வயோ –49-

பகாரம் -புத்தி அஹங்காரம் மனம் – ஆகிய வற்றைக் குறிக்கும் -அதில் அவள் இந்த இரண்டு நிலைகளில் உள்ளாள் –

நாதிகே ணாதிகே சைவ ததேந்த்ரிய குணத்வயே
தசயோ ஸூஷ்ம பர யோரியம் த்வேதா வதிஷ்டதே –50-

நா -ணா -இவற்றால் குறிக்கப்படும் இந்த்ரியங்களில் தேவியானவள் ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த நிலைகள் ஆகியவற்றில் நிலையாக உள்ளாள்

ஞாதிகே ஙதிகே சைவ ஸ்தூல ஸூஷ்ம ஸ்வரூபகே
விபூதி பஞ்சகே தேவீ தசயோ பூர்வ வத் ஸ்திதா –51-

ஸ்தூல ஸூஷ்ம நிலையில் உள்ள இரண்டு ஐந்து விபூதிகளும் -தன்மாத்ரைகளும் பூதங்களும்
ஞா -ங-எழுத்துக்களால் குறிக்கப்பட்டு அவற்றிலும் அந்த இரண்டு நிலைகளிலும் தேவீ உள்ளாள்-

சப்தத்யா விததா பேதை ஸூத்த அஸூத்த மயாத்வநி
நடீவ ஸ்வய மயீ சக்திர் பிபர்தி பஹுதா வபு –52-

ஈ -என்னும் எழுத்தால் குறிக்கப் படுபவளும்
ஒரு நடிகையைப் போன்று பல்வேறு பாத்திரங்களை ஏற்பவளும்
ஸூத்த அஸூத்த பொருள்களில் எழுபது விதமான தத்துவங்களில் உள்ளாள்

இயத் வஸ்த்ருதிம் ஆபந் நாமீ மிமாம் பரமேஸ்வரீம்
விசிந்த்ய பரமம் யாதி பதம் விஷ்ணோ ஸ்தானம் –53-

இப்படிப்பட்ட பரமேஸ்வரியை ஆராதிப்பவன் உயர்ந்த நிலையான விஷ்ணுவின் இடத்தை அடைகிறான்

யதா யத்ர கதா ஸேயம் ஸூத்த அஸூத்தே ததாத்வநி
தத்ர தத்ர த்வஜ ஹதீ விஷ்ணோ ஸம்பந்தமீ ஸ்திதா –54-

இப்படி பட்ட ஈ அஷரத்தால் குறிக்கப்படும் அந்த சக்தியானவள்-ஸூத்த அஸூத்த ஸ்ருஷ்டிகளில் ஈடுபட்டாலும்
தனக்கும் விஷ்ணுவுக்கும் உள்ள சம்பந்தம் பிரியாமல் என்றுமே சேர்ந்தே உள்ளாள்

ஏக த்வி த்ரயாதி யோகேந ஸ்வர வ்யஞ்ஜந ரூஷிதா
ஸூத்த அஸூத் தாதவ வரகஸ்தா நாநா பேதோப பாதித–55-

அவள் பல ஸ்ருஷ்டிகளிலும் நிறைந்தவளாக -ஓன்று இரண்டு மூன்று என்று பல ஸ்வரங்கள் மற்றும்
வியஞ்ஜன வடிவங்களில் இருப்பவளாக பலவித பேதங்களுடன் உள்ளாள்-

ஜடோ பராக ஹீநயா அஸ்ய ஏவ புந ஸ் த்ரிதா
ஜேய ஸ்தூலாதி ரூபேண விபேதஸ் தத்த்வ சிந்தகை –56-

மேலும் உள்ளதான ஜ -ட -ஆகியவற்றுடன் சம்பந்தம் இல்லாததான அவளுடைய மூன்றுவிதமான பிரிவுகளை –
தத்வத்தைக் குறித்துச் சிந்தித்தபடி உள்ளவர்கள் அறிய வேண்டும்-

ஸ்ருஷ்டிக்ருத் ஸம்யுதா ஸ்தூலா ஸூஷ்மா வ்யாமேச ஸம்யுதா
நிரஞ்ஜநா பரா சேயமீ இத்யேவ அநு ராகிணீ –57-

ஸ்ருஷ்ட்டிக்ருதுடன்-அத்தியாவது-ஹ்-இணைந்து உள்ள போது அவள் ஸ்தூலமான நிலையில் உள்ளாள்
வ்யாமேசத்துடன் -அதாவது ம் -இணைந்து உள்ள போது அவள் ஸூஷ்மமான நிலையில் உள்ளாள்
அவள் ஈ -என்பதுடன் இணைந்த பொழுது தோஷம் அற்ற சக்தியாக உள்ளாள்

நிஷ்கம்பா தீப லேகேவ பத்நீ விஷ்ணோரியம் பரா
ஸர்வேஷூ ஆதார பத்மேஷு நிச்சல் ஏவ அவதிஷ்டதே–58-

மஹா விஷ்ணுவின் தர்மபத்னியான அவள் ஆதார பத்மங்களிலும் அசையாத தீபம் போன்று உள்ளாள் –

ஆபஸ்தி தேசாதா மூர்த்த ப்ரஹ்மயா நமநு வ்ரதா
ஏகேயம் உஜ்ஜ்வலா தீப்தா பாவாந ச யஸஸ்விநீ –59-
ப்ரஹ்ம ரந்த்ராத் விநிஷ் க்ரந்தா மஹா பத்மமுகே யுஷீ
ஓத ப்ரோதாத்மிகா சேயம் பரமா நந்தா வர்தமநி –60-
விலாப்ய மார்த்வயம் ரூபம் அம்ருதம் ப்லாவயேந் நரம்
மந்த்ராணாம் மந் மயா நாம் ஹி மந்த்ரைர் விஷ்ணு மயை ஸஹ –61-

வயிற்றின் அடிப்பாகம் தொடங்கி தலையின் உச்சி பாகம் முடிய ப்ரஹ்மத்தின் பாதையில் செல்கிற தேஜஸ் மிக்க ஒளிர்பவளான தூய்மைப்படுத்தும் சக்தியானவள்
தலையின் உச்சியில் உள்ள திவாரம் வழியே வெளியே செல்லுகிறாள்
இவ்வாறு வெளியேறும் அவள் உயர்ந்த தாமரையை அடைகிறாள்
உயர்ந்த ஆனந்தத்தின் பாதையாக உள்ள அவள் என்னையே சாரமாகக் கொண்டுள்ள அனைத்து மந்த்ரங்களுடைய சாரமாகவும்
மஹா விஷ்ணுவை சாரமாகக் கொண்டுள்ள அனைத்து மந்திரங்களின் சாரமாகவும் உள்ளாள்
அவளே உபாசகனுடைய இறப்பை அழித்து -மீண்டும் பிறக்காமல் செய்து -அம்ருதத்தால் நனைக்கிறாள்

ஸா மே நூந மநூந ஸ்ரீ ரிதி சங்க்யா பரா ஹி யா
தே ச சங்க்யா த்வயா மந்த்ரா ஜபாத் போக அபவர்கதா –62-

ஐநூறு எண்ணிக்கைகள் கொண்டதான அந்த உயர்ந்த மந்த்ரங்கள் மிகவும் சக்தி கொண்டவை ஆகும் –
இவற்றை சாங்க்யர்களுடைய அத்வயா மந்த்ரங்களுடன் சேர்த்துக் கூறும் போது
அவை இன்பம் மற்றும் மோக்ஷத்தை அளிக்கின்றன –

அஸ்யா ஏவ பரா யாஸ்து விப்ருஷ பரிகீர்த்திதா
யதா ஹி கிரண வ்ராதம் தேஜஸ்தவம் வியாப்ய திஷ்டதி -63-

யதா ஹி பார்த்திவான் பாவான் வியாப்ய ஸ்தைர்யம் வ்யவஸ்திதம்
நாநா விபவ ஸம்ஸ்தானம் நாநா ரஸந ஸம் ஸ்திதம் -64-

பாஹ்யாமாப் யந்தரம் சைவ பாவம் ஸப்த மயம் சமம்
வ்யாப்யைவமீ ஸ்திதா தேவீ விஷ்ணு பத்நீ யஸஸ்வி நீ –65-

இந்த்ர மந்த்ரங்கள் -தேவியின் துளிகளாக வர்ணிக்கப் படுகின்றன
எவ்விதம் தேஜஸ் நிறைந்த வஸ்துவில் ஒளியானது பரவி நிற்கின்றதோ -அதே போன்று
ஈ -என்னும் அக்ஷரத்தில் உள்ளவளும் அனைத்து விபவங்களிலும் பரவி நிற்பவளுமாகிய விஷ்ணுவின் பத்னியானவள்
அந்த விபாவங்களுடைய உள் மற்றும் புற இருப்பாக ஸப்த ப்ரஹ்மத்துடன் ஒன்றியவளாக இருக்கிறாள் –

ஸ்தூல ஸூஷ்மாதி பேத அயம் யதா வத் சக்ர தர்சித
தாரி காயா இதா நீம் த்வமங்காதீநி ஸ்ருணுஷ்வ மே –66-

சக்ரனே இப்படியாக தாரிக்காவின் ஸ்தூலம் மற்றும் ஸூஷ்மம் ஆகிய பல நிலைகள் குறித்து உனக்கு நான் கூறினேன்
அடுத்து அவளுடைய அங்க மந்த்ரங்கள் குறித்து உனக்குக் கூறுகிறேன்

ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -32- அத்யாயம் -ஸம்பூர்ணம் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம