ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –32– தாரிகாவின் மூன்று நிலைகள் —

அடுத்து அவளுடைய ஸ்தூலமான நிலை போன்றவற்றைக் குறித்து நான் கூற கேட்பாயாக –

யா ஹி ஏஷா பரமா வித்யா தாரிகா பாவ தாரிணீ
ஸ்தூலம் ஸூஷ்மம் பரம் சேதி தஸ்யா ரூப த்ரயம் ய ஸ்ருணு –1-

சக்தியின் மூன்று நிலைகளான ஸ்தூலம் ஸூஷ்மம் பரம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ப்பாயாக
இது உயர்ந்த தாரிகா என்னும் மந்திரமாகும் -இது உபாஸகனைக் காப்பதாகும் –

பஞ்ச வர்ணம் சதுர் வர்ணம் இதி ஸ்தூலத் மகம் வபுஸ்
த்ரி வர்ணா ஸூஷ்ம ஸம்ஜ்ஞா மே பரா விஷ்ணு மயீ ஸ்திதா –2-

ஸ்தூல வடிவமானது -ஐந்து அல்லது நான்கு ஒலிகளைக் கொண்டதாக உள்ளது இது ஹ்ரீம் என்பதாகும்
ஸூஷ்ம நிலையானது மூன்று ஒலிகளைக் கொண்டதாகும் -இது ஈம் என்பதாகும்
பரம நிலையானது விஷ்ணு என்னும் ஒலியைக் கொண்டதாகும் இது ஈ என்பதாகும் –

இமாஸ்திஸ்ரோ ஹி அவஸ்தா மே ப்ரத்யேகம் து த்ரிதா த்ரிதா
ஸ்தூலே து யா பராவஸ்தா பரமாத்மாஸ்ரயா து ஸா –3-
அசேஷ புவந ஆதார விஷ்ணு வ்யாபி சமாஸ்ரயா
போக்த்ரு போக்யாத்மிகா சேயம் தஸ்யா ரூபம் நிபோத மே –4-

எனது இந்த ஒவ்வொரு நிலையும் மூன்றாய்ப் பிரிக்கப் படுகின்றன
ஸ்தூலத்தில் உள்ள பரம நிலையானது
அசேஷ புவன ஆதரம் -ர
விஷ்ணு -ஈ
மற்றும் வ்யாபின் ஆகியவற்றுடன் இணைந்த பரமாத்மன் -ஹ
என்ற ஒலியைக் கொண்டதாகும்
இதுவே ஹ்ரீம் என்கிறதுகாக்கிறது
இந்த நிலையானது அனுபவிப்பவன் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது

அதன் ரூபத்தை அடுத்து நான் வர்ணிக்கக் கேட்ப்பாயாக –

அசேஷ புவன ஆதார நிலய வ்யாபி ஜன்மநா
பரமாத்மாதி கேநைவ லலாட தடமேயுஷா –5-
ஆக்ரம்ய வைஷ்ணவம் ரூபம் ஸ்வே புனஸ் ப்ரதி திஷ்டதி
தார காரண நாதேந சோபமாநா ஹரி ப்ரியா –6-

ஸ்ரீ ஹரியின் பிரியையாக உள்ளவள் நான்
சஹஸ்ரார சக்ரம் எனப்படும்நெற்றிப்பகுதியின் பின்புறம் உள்ளாள்
இவள் அசேஷ புவன ஆதரம் -வ்யாபின் -பரமாத்மன் -ஆகிய ஒலிகளில் புறப்பட்டு
விஷ்ணு ரூபம் அடைந்து
அதன் பின்னர் தனக்கு உரிய ரூபம் எடுக்கிறாள்
இந்த ரூபமானது தாரா வெளிப்படும் நாதத்துடன் கூடியதாக உள்ளது –

போக்த்ரு போக்யாதிகம் ஸர்வம் புவனம் பிப்ரதீதியா
வ்யாபிநம் ஸர்வதோ தேவீ பரமாத்மாநம் ஆஸ்ரிதா –7-

போக்தா போக உபகரணங்கள் நிறைந்த இந்த உலகை தாரிகா தேவி தனது ஞானத்தால் சூழ்ந்த படி
பரமாத்வாவிடம் அண்டிய படி உள்ளாள்

தாவத்தயா ஸ்திதா விஷ்ணு ரூபா ஸ்தூலா கதி பரா
பஞ்ச க்ருத்ய கரீ சக்தி த்ரிவித ஐஸ்வர்ய ப்ரும்ஹிதா –8–
பிராணயந்தி ஸ்ரியா தேவம் ஜ்ரும்பா மாணோத் அதி பரபம்
ஆச்ரித்ய ஹி அநலம் பவமியம் ஸூஷ்மா கதிர் மதா–9-

அந்த தாரிகாதேவி ஸ்தூல நிலையில் விஷ்ணு ரூபம் கொண்டு அதிலேயே நிலைக்கிறாள்
ஸூஷ்ம நிலையிலே
ஸ்ருஷ்ட்டி முதலான ஐந்து செயல்களை செய்தபடி மூன்று வித ஐஸ்வர்யங்களுடன்
சமுத்திரம் போன்று ஓங்கி க்ரியா சக்தியின் அக்னி ரூபம் அண்டுகிறாள்

ஸ்ருஷ்ட்யாதிகம் விதாயாத வ்யோமஸ்தாம் பரமாஸ்திதா
ஸர்வ ஆச்சர்ய கரீ தேவீ ஸ்ருஷ்டி ஸ்திதி யந்தக்கரணம் –10-
ஸூர்யம் ஸமாஸ்ரிதா விஷ்ணும் கல யந்தீ ஜகத் ஸ்திதம்
கால பாவக தேஜோபி ஸ்தூல அஸ்தூல மயாத்துதா –11-

இப்படி ஸ்தூல ஸூஷ்ம நிலையில் உயர்ந்த நிலையில் உள்ளவளும் வ்யோமத்தில் -ம் -உள்ளவளும்
கால அக்னியின் -ர-துணையுடன் ஸூர்யன் -ஹ -விஷ்ணு -ஈ -ஆகிய ரூபங்களால் ஜகாத்தை நிலை பெறச் செய்கிறாள் –

கததா கத யஸ்திஸ்ரஸ் ஸ்தூலய மம வாஸவ
ஸூஷ்மா யாஸ்து கதீஸ் ஸ்திரஸ் ஸ்ருணு வ்ருத்ர நிஷுதந -12-

இப்படியாக எனது தாரகை நிலையுடைய மூன்று ஸ்தூலங்கள் குறித்துக் கூறப்பட்டன
வ்ருத்ரன் என்னும் அசுரனை அழித்தவனே -அடுத்து மூன்று ஸூஷ்ம நிலைகளைப் பற்றிக் கேள்

அகால கலாந ஸேயம் ஸூஷ்மா து பரமேஸ்வரீ
வ்யாபிநம் பரமாத்மா நம் ஸ்ரயந்தீ வர்த்ததே த்ருவா –13-

பரமேஸ்வரியின் ஸூஷ்ம ரூபமானது எப்போதும் நிலையாக –
வ்யாபிந் பரமாத்மா வின் அக்ஷரங்களில் உள்ளன
அதாவது ஹம்
இந்த நிலையானது காலத்திலேயே கட்டுப்படாததாகும் –

சுத்தோ வர்க்கஸ் தத அசுத்தோ த்வி விதம் ஸ்ருஜ்யம் உச்யதே
சுத்த இதரே ஸ்தித ஸ்தூலா சுத்தே ஸூஷ்மா ப்ரதிஷ்டிதா –14-

ஸ்ருஷ்டிக்கப்படும் அனைத்தும் சுத்தம் என்றும் அசுத்தம் என்றும் இரண்டு விதங்கள் –
ஸ்தூல ரூபம் அசுத்தத்தை உள்ளடக்கியும் ஸூஷ்ம ரூபம் சுத்தத்தை உள்ளடக்கியும் இருக்கும் –

திஸ்ரஸ் அப்யாஸாம் கதீ ஸம்யக் ஸ்தூலாயா இவ லக்ஷ்யேத்
பரா யா மே தனு சக்ர தஸ்யா ரூபம் நிஸாமய –15-

தாரிகையின் ஸ்தூல நிலைகள் போன்றே இந்த மூன்று ஸூஷ்ம நிலைகளும் தெளிவாகப் புலப்படுகின்றன
அடுத்து தாரிகையின் உயர்ந்த ரூபம் பற்றிக் கேள்

ஸர்வ வ்யாப்தி மதீ திவ்யா நிஷ்கலா ஸா நிரஞ்சநா
சா பரா மன்மயீ சக்தி கதிதா விஷ்ணு சம்ஜ்ஞயா –16-

அவள் எங்கும் நிறைந்தவளாகவும் திவ்யமாகவும் தோஷம் அற்றவளாகவும் உள்ளாள்
இந்த உயர்ந்த சக்தியான அவள் என்னை ஆத்மாவாகக் கொண்டவளாக
விஷ்ணு என்று அழைக்கப் படுகிறாள் -அதாவது ஈ –

ஏஷா ஸா வைஷ்ணவீ சத்தா ஸா ஏஷா அஹந்தா ஹரேர் மதா
ஏஷா ஸா யோகிநாம் நிஷ்டா ஸ ஏஷா சாங்யாத்மநாம் கதி –17-

அவளே விஷ்ணுவின் இருப்பாக உள்ளாள் -அவளே ஹரியின் நான் என்னும் நிலை
அனைத்து யோகிகளுக்கும் இவளே த்யான விஷயம்
சாங்க்ய -ஞான -நிலையின் கதியாக அவளே உள்ளாள் –

இயம் ஸா பரமா மூர்த்தி இயம் ஸா பரமா கதி
சக்தி குண்டலிநீ ச ஆத்யா ப்ரமரீ யோக தாயிகா –18-
அநா ஹதா ஹி ஆகோஷா ச நிர் மர்யாதா நதோத் கதா
ஸப்த ப்ரஹ்ம ததா சக்திர் மாத்ருகா யோநி உத்தமா –19-
காயத்ரீ ச கலா கௌரீ சசீ தேவீ ஸரஸ்வதீ
வ்ருஷாகபாயீ ஸத்யா ச ப்ராண பத்நீ யசஸ்விநீ –20-
இந்த்ர பத்நீ மஹாதேநு அதிதி தேவ நந்திநீ
ருத்ராணாம் ஐநநீ வஸூநாம் து ஹிதா ததா –21-
ஆதித்யா நாம் ஸ்வஸா நாபி அம்ருத தஸ்ய த்ருதி பரா
இடா ரதி ப்ரியா காரா கருதாத்ரீ மஹீ யஸீ –22-
மஹீ ச விஸ்ரு திஸ் சைவ த்ரயீ கௌஸ் ப்ரண வஸ்தலா
சக்திச்ச ப்ரக்ருதிச்சைவ மஹா ராஜ்ஜீ பயஸ்விநீ –23-
தாரா சீதா ததா ஸ்ரீஸ் ச காம வத்ஸா பிரியவ்ரதா
தருணீ ச வராரோஹ நிரூபா ரூப ஸாலி நீ –24-
அம்பிகா ஸூந்தரீ ஜ்யேஷ்டா வாமா கோரா மநோ மயீ
ஸித்தா ஸிந்தாந்திகா யோகா யோகிநீ யோக பாவிநீ –25-
ஏவ மாதீநி நாமானி ஸாஸ்த்ரே ஸாஸ்த்ரே மநீஷிபி
கதிதாநி ரஹஸ்யாநி ஸக்தே ஸித்தாந்த பாரகை –26-

அவளே உயர்ந்த ரூபமாகவும் உயர்ந்த நிலையை அடைவதற்கான வழியாகவும் உள்ளாள் –
சக்தி -குண்டலிநீ -ஆத்யா -ப்ரஹ்மரீ -யோக தாயிகா -அநாஹதா -அகோஷா -நிர்மர்யாதா -நதோத்கதா-
ஸப்த ப்ரஹ்மா -சக்திர் மாத்ருகா யோநி -உத்தமா -காயத்ரீ -கலா -கௌரீ -ஸசீ -தேவீ -ஸரஸ்வதீ –
வ்ருஷா கபாயீ -ஸத்யா -ப்ராண பத்நீ -யசஸ்விநீ -இந்த்ர பத்நீ -மஹா நேநு -அதிதி -தேவ நந்திநீ –
ருத்ரர்கள் மற்றும் வஸூ க்களுடைய தாய் -ஹிதா -ஆதித்யர்களுடைய ஸஹோதரி -அம்ருதத்தின் நாபி –
த்ருதி -இடா -ரதி -உயர்ந்த கருதாத்ரீ -மஹீ -விஸ்ருதி -த்ரயீ -கோ -ப்ரணவத்ஸலா -சக்தி -ப்ரக்ருதி –
மஹா ராஜ்ஜீ -பயஸ்விநீ -தாரா -ஸீதா -ஸ்ரீ -காம வத்ஸா -ப்ரியவ்ரதா -தருணீ -வராரோஹா -நிரூபா –
ரூபஸாலிநீ -அம்பிகா -ஸூ ந்தரீ -ஜ்யேஷ்டா -வாமா -கோரா -மநோ மயீ -ஸித்தா -சிந்தாந்திகா –
யோகா -யோகிநீ -யோக பாவி நீ -போன்ற பலவும்
அந்த சக்தியின் பல ரஹஸ்யப் பெயர்களாக பல்வேறு சாஸ்திரங்களில்
பல சான்றோர்களாலே கூறப்பட்டுள்ளன

ச ஏஷா சக்தி பரா திவ்யா த்ரிதா ரூபை அவஸ்திதா
ஸ்தூல ஸூஷ்ம பரத்வேந த்ரைதம் ஏதத் ப்ரதர்ச்யதே –27-

அந்த சக்தியானவள் மூன்று நிலைகளில் உள்ளாள் –
ஸ்தூலமாயும் ஸூஷ்மமாயும் உயர்ந்ததாகவும் உள்ள அவளுடைய
மூன்று வடிவங்கள் உனக்கு இப்போது கூறப்படுகின்றன –

அஸ்யா ஸ்வரூபம் ஈ ப்ரோக்தா சா அத்ரே தாவ திஷ்டதே
அப்ரமேய அதி ரூபேண தஸ்யா வ்யாக்யாம் இமாம் ஸ்ருணு –28-

ஈ என்னும் அக்ஷரமானது அவளுடைய ஸ்வரூபமாக உள்ளது
அதுவும் மூன்று விதங்களில் உள்ளது
அதன் உன்னதமான -அப்ரமேய -அதாவது அகார -வடிவத்தை இப்போது
நான் விளக்கக் கேட்ப்பாயாக

ஷாட் குண்யம் யத் பரம ப்ரஹ்ம வாஸூ தேவாக்யம் அவ்யயம்
சங்க்ருதாகில பேதம் தத் ஏகம் ஏவ யதா ததா –29-
அப்ரமேயாக்யயா தேவஸ் ததா யோகி ப்ரீர்யதே
வ்யாப்ய வ்யாபக பேதோ வா ஸ்ருஸ்ஜ்ய ஸ்ருஷ்டி விதாபி வா –30-
ந ததான்ய ப்ரமேயத்வம் ந கிஞ்சித் அஸ்ய வித்யதே
ததா ஸூந்யம் அவிகாரை ப்ரஸூப்தாம் இவ ஸர்வத–31-
ஷாட் குண்யம் ப்ரஹ்ம ஸம்ஸ்திதா விஷ்ணு ஸம்ஜ்ஞயா
அதரங்கார்ண வாகாரா சக்தி சக்தி மதோர் கதி -32-

பர ப்ரஹ்மமானது ஆறு குணங்களுடன் கூடியவனும்
எப்போதும் உள்ளவனுமாகிய வாஸூ தேவன்
அனைத்து பேதங்களையும் ஒன்றாகத் திரட்டி தன்னுள் அடக்குகிறான்
இத்தகைய திவ்யமான ரூபமே யோகிகளால் அப்ரமேயம் எனப்படுகிறது
அத்தகைய நிலையில் -பரவப்படும் பொருள் -பரவப்பட்ட பொருள் -என்கிற வேறுபாடோ
படைக்கப்பட்ட பொருள் -படைக்கின்ற பொருள் -என்கிற வேறுபாடோ இல்லை
அந்த நிலையில் அந்த வஸ்துவை அறிய இயலாது
ஆறு குணங்களுடன் கூடிய அந்த ப்ரஹ்மமானது ஆழ்ந்த உரக்க நிலையில் உள்ளதாக
ஸூ ன்யமாகவே அனைவராலும் உணரப்படுகிறது
அப்போது தாரிகா -விஷ்ணுவின் பெயரைத் தரித்தவளாக அலையற்ற சமுத்திரம் போன்று
சக்தியைக் கொண்ட வஸ்துவின் சக்தியாக அறியப்படுகிறான் –

ததா யதா புநர் ப்ரஹ்ம வாஸூ தேவாக்யம் அவ்ரணம்
உன் மிஷத் யாத்ம சங்கல்பாத் ததா ப்ரதம உச்யதே –33-

வாஸூ தேவன் என அழைக்கப்படும் அந்தத் தூய்மையான ப்ரஹ்மமானது
தன்னுடைய ஸங்கல்பம் காரணமாகவே மீண்டும் விழித்து எழுகிறது -இது பிரதமம் எனப்படும்

பிரததே ஹி யதா ப்ரஹ்ம ஸூத்த அஸூத் தாக்ய வர்த்மநா
மாயா நாம ததா த்வேஷா ப்ரஹ்ம ஸங்கல்ப ரூபிணீ –34-

அந்தப் ப்ரஹ்மம் ஸூத்தம் அஸூத்தம் -என்பதான ஸ்ருஷ்டியில் -தன்னை விரித்துக் கொள்ளும் போது
அந்தப் ப்ரஹ்மத்தின் சங்கல்பத்துக்கு நிகராக உள்ள சக்தியானது மாயா எனப்படுகிறாள்

சங்கர்ஷணாதி ஷித் யந்தஸ் தஸ்யா கர்பம் அவஸ்திதஸ்
யதா புநஸ் பரம் ப்ரஹ்ம ஸ்வ இச்சா ஸம்பாவதிதம் பிருதக்–35-
வியாப்ய வியாபக பேதேந ஸத்வி தீயம் அவஸ்திதம்
பஞ்ச பிந்துஸ் ததா தேவீ பஞ்ச க்ருத்ய விதாயி நீ –36-

ஸங்கர்ஷணன் தொடக்கமாக புல் பூண்டு முதலிய அனைத்து ஸ்ருஷ்டிகளும் அவளுடைய கர்ப்பத்தில் உள்ளன
ஒரு கட்டத்தில் ப்ரஹ்மமானது தனது இச்சையால்
வியாபிக்கும் பொருள் என்றும் வியாபிக்கப்படும் பொருள் என்றும் இரண்டாகப் பிரிகிறது
அப்போது ப்ரஹ்மத்தின் ஐந்து செயல்களைச் செய்யும் தேவியானவள் பஞ்ச பிந்து என்று அழைக்கப் படுகிறாள்

ப்ரஹ்மத்தின் ஐந்து செயல்களாவன -படைத்தல் காத்தல் அழித்தல் மயக்குதல் மற்றும் கடாக்ஷித்தல்

பராய இதி தே ப்ரோக்தோ மம தன்வா கதிஸ் த்ரயீ
ரூபம் ரூபம் விபஜ்யைஷா தத் தத் தத் வார்ண பேதி நீ –37-

இப்படியாக உள்ள எனது உயர்ந்த நிலை குறித்து உனக்கு உரைக்கப் பட்டது
அது பலவிதமான ரூபங்களை எடுப்பதாக உள்ளது
அந்த ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அக்ஷரத்தை -அதாவது
க தொடக்கமாக உள்ள ஒவ்வொரு அக்ஷரத்தை குறிப்பதாக வேறுபாட்டுடன் உள்ளது –

தத் தத் வாசகதாம் நீதா ஸ்வ காமாஜ் ஜகதீ தநு
தேஷு தேஷு ஹி தத் வேஷு ஸ்வாத்ம பூதா வதிஷ்டதே –38-

அந்த ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அக்ஷரமும் குறிக்கின்ற ஜகத்தின்
பல்வேறு வடிவங்களை உணர்த்துவதாகவும் உள்ளது
இப்படியாக ஒவ்வொரு தத்துவமும் எனது ஒவ்வொரு ரூபத்தைக் கொண்டதாகவே உள்ளது –

மத் அம்ச ஸூஷ்ம ரூபோ யோ மூட அக்னிரிவ தாரு ஷு
தத் தத் ரூப மநு ப்ராப்தா சேவ நீ நாம ஸாஸ்வதீ –39-

இப்படியாக ஒவ்வொரு அக்ஷரத்திற்கான ரூபங்களை எடுத்த பின்னர்
எனது ஸூஷ்ம ரூபங்கள் அந்த அந்த அக்ஷரத்தில் நித்தியமாக மறைந்து உள்ளன
அதாவது விறகுக்கட்டையில் அக்னி எவ்வாறு மறைந்து உள்ளதோ அதை போன்று ஆகும்

தத் தத் வர்ணோ பரா கேண தத் தத் வியக்தி வபுஸ் ஸ்வயம்
அதி தைவத பாவேந தத்ர யோம்ச பராத்மக –40-

வைஷ்ணவ சக்தி ரூபோ மே நியச்சன்ன வதிஷ்டதே
தத் தத் வாசகதாம் யாதி தேவீ சேயம நஸ்வரீ –41-

இப்படியாக ஒவ்வொரு அக்ஷரத்தின் அதிபதி தேவதையாக எனது பல்வேறு ரூபங்கள் உள்ளன
இதன் மூலம் விஷ்ணுவின் சக்தியாக உள்ள எனது உயர்ந்த நிலையானது
ஒவ்வொரு அக்ஷரத்தின் ஒலியிலும் அமைந்து உள்ளது
மேலும் அந்த அந்த அக்ஷரத்தின் ஓசை மற்றும் அமைப்பிற்கான அதிபதி தேவதையாகவும் உள்ளது –

அசேஷ புவநாதாரா யோகிநீ பரமேஸ்வரீ
கேவலஸ் தத்துவ வர்ணஸ்து த்ரை லோக்யை வர்யதாம் கத –42-

அனைத்து புவனங்களுக்கும் ஆதாரமாக உள்ளவளும் -பரமேஸ்வரீயுமாகிய யோகிநீ -என்னும் நான்
அந்த அந்த வர்ணங்களுக்கு -அக்ஷரங்களுக்கு -அடிப்படையாக அமைகிறேன்

தத் தத் ஸ்தூல மயம் தத்துவம் மதீயம் சக்தி ஸாஸ்வதம்
தத் தத் பாவாபிதாநேந தன் நியந்த்ருத்வ தர்சதே–43-

அவள் அனைத்து தூய்மையான தத்துவங்களை வெளிப்படுத்தும் அக்ஷரங்களால் உணர்த்தப்படுகிறாள்
மூன்று லோகங்களையும் ஆளவல்ல எஜமானத் தன்மையை அளிக்கிறாள்
ஒவ்வொரு ஸ்தூலமான தத்துவமும் எனது எப்போதும் உள்ள சக்தியே யாகும்
இது ஏன் என்றால் ஒவ்வொரு ஸ்தூலமான தத்துவமும் எனது நிலையையே வெளிப்படுத்துகின்றன –
அவற்றில் நானே ஆதிக்யம் செலுத்துகிறேன்

இயமே வேஸ்வரா தேவீ த்விதா ஸக்தா வதிஷ்டிதே
ஷாதி சாந்தம் புரா யத்தே தர்சிதம் ப்ரஹ்ம பஞ்சகம் –44-
ஷ இத்யாதி ஸ்வரூபேண த்ரைலோக்ய ஐஸ்வர்யதாம் கதா
ஸ்வரூபே நியமே சைவ த்வேதா ஸேயமவஸ்திதா –45–

ஒவ்வொரு வஸ்துவையும் நியமிக்கும் தேவியானவள் அவற்றுடன் இரண்டு முறையான உறவு முறையில் உள்ளாள்
அதாவது
நான் முன்பே உனக்கு கூறியதான
ஷ தொடங்கி ஸ முடிய உள்ள ஐந்து ப்ரஹ்மத்திலும் அவள் உள்ளாள்
இவ்விதமாக மூன்று லோகங்களையும் ஆளவல்ல எஜமானத் தன்மையை அளிக்கிறாள்
இரண்டு விதமான நிலையில் உள்ளாள்
அனைத்து வஸ்துக்களின் இருப்பாகவும்
அவற்றை நியமிப்பவளாகவும் உள்ளாள் –

தாரணா நாம் சதுஷ் கம் யத் வாதி யாந்த முதீ ரிதம்
தத்ர ஸூஷ்ம பர பாவே ஸ்தி தேயம் பூர்வவத் த்விதா –46-
த்ரைய வஸ்தோ மகார அயம் ப்ரோக்த சைதன்ய வாசக
தத்ராபி ஸூஷ்ம பரயோர்த்வ தேயம் தசயோர் த்வயோ -47-

வ காரம் தொடங்கி யகாரம் முடிய உள்ளதும் -முன்பு கூறப்பட்டதும் நான்கு தாரணைகளாக உள்ள சப்தங்கள்
முன்பு கூறப்பட்டதான தாரிகாவின் ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த நிலைகளைக் கொண்டதாக

அவளுடைய இரண்டு செயல்களை நிறைவேற்றுவதாக உள்ளன
சைதன்யத்தின் மூன்று நிலைகளைக் குறிப்பதாக ம அக்ஷரம் உள்ளதை முன்பே -கூறப்பட்டது
இதில் அவளுடைய ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த இரண்டு நிலைகளும் உள்ளாய்

மாயா ப்ரஸூதி த்ரை குண்ய ரூபோ யோ பார்ண உச்யதே
ஈ நாம பூர்வ வத் தேவீ தத்ர அபி தசயோர் த்வயோ -48

ப காரம் மூன்று தன்மைகளைக் கொண்ட மாயையைக் குறிக்கும்
மேலே கூறப்பட்ட இரண்டு நிலைகளில் உள்ள தாரிகா ஈ என்னும் அஷரத்தால் கூறப்படுபவளாகவும் உள்ளாள்

புத்தி அஹங்கார மநஸாம் யத் தூபம் பாதிகம் த்ரயம்
தத்ர அபி பூர்வவத் த்வேதா தேவீ யம் தசயோர்த்வயோ –49-

பகாரம் -புத்தி அஹங்காரம் மனம் – ஆகிய வற்றைக் குறிக்கும் -அதில் அவள் இந்த இரண்டு நிலைகளில் உள்ளாள் –

நாதிகே ணாதிகே சைவ ததேந்த்ரிய குணத்வயே
தசயோ ஸூஷ்ம பர யோரியம் த்வேதா வதிஷ்டதே –50-

நா -ணா -இவற்றால் குறிக்கப்படும் இந்த்ரியங்களில் தேவியானவள் ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த நிலைகள் ஆகியவற்றில் நிலையாக உள்ளாள்

ஞாதிகே ஙதிகே சைவ ஸ்தூல ஸூஷ்ம ஸ்வரூபகே
விபூதி பஞ்சகே தேவீ தசயோ பூர்வ வத் ஸ்திதா –51-

ஸ்தூல ஸூஷ்ம நிலையில் உள்ள இரண்டு ஐந்து விபூதிகளும் -தன்மாத்ரைகளும் பூதங்களும்
ஞா -ங-எழுத்துக்களால் குறிக்கப்பட்டு அவற்றிலும் அந்த இரண்டு நிலைகளிலும் தேவீ உள்ளாள்-

சப்தத்யா விததா பேதை ஸூத்த அஸூத்த மயாத்வநி
நடீவ ஸ்வய மயீ சக்திர் பிபர்தி பஹுதா வபு –52-

ஈ -என்னும் எழுத்தால் குறிக்கப் படுபவளும்
ஒரு நடிகையைப் போன்று பல்வேறு பாத்திரங்களை ஏற்பவளும்
ஸூத்த அஸூத்த பொருள்களில் எழுபது விதமான தத்துவங்களில் உள்ளாள்

இயத் வஸ்த்ருதிம் ஆபந் நாமீ மிமாம் பரமேஸ்வரீம்
விசிந்த்ய பரமம் யாதி பதம் விஷ்ணோ ஸ்தானம் –53-

இப்படிப்பட்ட பரமேஸ்வரியை ஆராதிப்பவன் உயர்ந்த நிலையான விஷ்ணுவின் இடத்தை அடைகிறான்

யதா யத்ர கதா ஸேயம் ஸூத்த அஸூத்தே ததாத்வநி
தத்ர தத்ர த்வஜ ஹதீ விஷ்ணோ ஸம்பந்தமீ ஸ்திதா –54-

இப்படி பட்ட ஈ அஷரத்தால் குறிக்கப்படும் அந்த சக்தியானவள்-ஸூத்த அஸூத்த ஸ்ருஷ்டிகளில் ஈடுபட்டாலும்
தனக்கும் விஷ்ணுவுக்கும் உள்ள சம்பந்தம் பிரியாமல் என்றுமே சேர்ந்தே உள்ளாள்

ஏக த்வி த்ரயாதி யோகேந ஸ்வர வ்யஞ்ஜந ரூஷிதா
ஸூத்த அஸூத் தாதவ வரகஸ்தா நாநா பேதோப பாதித–55-

அவள் பல ஸ்ருஷ்டிகளிலும் நிறைந்தவளாக -ஓன்று இரண்டு மூன்று என்று பல ஸ்வரங்கள் மற்றும்
வியஞ்ஜன வடிவங்களில் இருப்பவளாக பலவித பேதங்களுடன் உள்ளாள்-

ஜடோ பராக ஹீநயா அஸ்ய ஏவ புந ஸ் த்ரிதா
ஜேய ஸ்தூலாதி ரூபேண விபேதஸ் தத்த்வ சிந்தகை –56-

மேலும் உள்ளதான ஜ -ட -ஆகியவற்றுடன் சம்பந்தம் இல்லாததான அவளுடைய மூன்றுவிதமான பிரிவுகளை –
தத்வத்தைக் குறித்துச் சிந்தித்தபடி உள்ளவர்கள் அறிய வேண்டும்-

ஸ்ருஷ்டிக்ருத் ஸம்யுதா ஸ்தூலா ஸூஷ்மா வ்யாமேச ஸம்யுதா
நிரஞ்ஜநா பரா சேயமீ இத்யேவ அநு ராகிணீ –57-

ஸ்ருஷ்ட்டிக்ருதுடன்-அத்தியாவது-ஹ்-இணைந்து உள்ள போது அவள் ஸ்தூலமான நிலையில் உள்ளாள்
வ்யாமேசத்துடன் -அதாவது ம் -இணைந்து உள்ள போது அவள் ஸூஷ்மமான நிலையில் உள்ளாள்
அவள் ஈ -என்பதுடன் இணைந்த பொழுது தோஷம் அற்ற சக்தியாக உள்ளாள்

நிஷ்கம்பா தீப லேகேவ பத்நீ விஷ்ணோரியம் பரா
ஸர்வேஷூ ஆதார பத்மேஷு நிச்சல் ஏவ அவதிஷ்டதே–58-

மஹா விஷ்ணுவின் தர்மபத்னியான அவள் ஆதார பத்மங்களிலும் அசையாத தீபம் போன்று உள்ளாள் –

ஆபஸ்தி தேசாதா மூர்த்த ப்ரஹ்மயா நமநு வ்ரதா
ஏகேயம் உஜ்ஜ்வலா தீப்தா பாவாந ச யஸஸ்விநீ –59-
ப்ரஹ்ம ரந்த்ராத் விநிஷ் க்ரந்தா மஹா பத்மமுகே யுஷீ
ஓத ப்ரோதாத்மிகா சேயம் பரமா நந்தா வர்தமநி –60-
விலாப்ய மார்த்வயம் ரூபம் அம்ருதம் ப்லாவயேந் நரம்
மந்த்ராணாம் மந் மயா நாம் ஹி மந்த்ரைர் விஷ்ணு மயை ஸஹ –61-

வயிற்றின் அடிப்பாகம் தொடங்கி தலையின் உச்சி பாகம் முடிய ப்ரஹ்மத்தின் பாதையில் செல்கிற தேஜஸ் மிக்க ஒளிர்பவளான தூய்மைப்படுத்தும் சக்தியானவள்
தலையின் உச்சியில் உள்ள திவாரம் வழியே வெளியே செல்லுகிறாள்
இவ்வாறு வெளியேறும் அவள் உயர்ந்த தாமரையை அடைகிறாள்
உயர்ந்த ஆனந்தத்தின் பாதையாக உள்ள அவள் என்னையே சாரமாகக் கொண்டுள்ள அனைத்து மந்த்ரங்களுடைய சாரமாகவும்
மஹா விஷ்ணுவை சாரமாகக் கொண்டுள்ள அனைத்து மந்திரங்களின் சாரமாகவும் உள்ளாள்
அவளே உபாசகனுடைய இறப்பை அழித்து -மீண்டும் பிறக்காமல் செய்து -அம்ருதத்தால் நனைக்கிறாள்

ஸா மே நூந மநூந ஸ்ரீ ரிதி சங்க்யா பரா ஹி யா
தே ச சங்க்யா த்வயா மந்த்ரா ஜபாத் போக அபவர்கதா –62-

ஐநூறு எண்ணிக்கைகள் கொண்டதான அந்த உயர்ந்த மந்த்ரங்கள் மிகவும் சக்தி கொண்டவை ஆகும் –
இவற்றை சாங்க்யர்களுடைய அத்வயா மந்த்ரங்களுடன் சேர்த்துக் கூறும் போது
அவை இன்பம் மற்றும் மோக்ஷத்தை அளிக்கின்றன –

அஸ்யா ஏவ பரா யாஸ்து விப்ருஷ பரிகீர்த்திதா
யதா ஹி கிரண வ்ராதம் தேஜஸ்தவம் வியாப்ய திஷ்டதி -63-

யதா ஹி பார்த்திவான் பாவான் வியாப்ய ஸ்தைர்யம் வ்யவஸ்திதம்
நாநா விபவ ஸம்ஸ்தானம் நாநா ரஸந ஸம் ஸ்திதம் -64-

பாஹ்யாமாப் யந்தரம் சைவ பாவம் ஸப்த மயம் சமம்
வ்யாப்யைவமீ ஸ்திதா தேவீ விஷ்ணு பத்நீ யஸஸ்வி நீ –65-

இந்த்ர மந்த்ரங்கள் -தேவியின் துளிகளாக வர்ணிக்கப் படுகின்றன
எவ்விதம் தேஜஸ் நிறைந்த வஸ்துவில் ஒளியானது பரவி நிற்கின்றதோ -அதே போன்று
ஈ -என்னும் அக்ஷரத்தில் உள்ளவளும் அனைத்து விபவங்களிலும் பரவி நிற்பவளுமாகிய விஷ்ணுவின் பத்னியானவள்
அந்த விபாவங்களுடைய உள் மற்றும் புற இருப்பாக ஸப்த ப்ரஹ்மத்துடன் ஒன்றியவளாக இருக்கிறாள் –

ஸ்தூல ஸூஷ்மாதி பேத அயம் யதா வத் சக்ர தர்சித
தாரி காயா இதா நீம் த்வமங்காதீநி ஸ்ருணுஷ்வ மே –66-

சக்ரனே இப்படியாக தாரிக்காவின் ஸ்தூலம் மற்றும் ஸூஷ்மம் ஆகிய பல நிலைகள் குறித்து உனக்கு நான் கூறினேன்
அடுத்து அவளுடைய அங்க மந்த்ரங்கள் குறித்து உனக்குக் கூறுகிறேன்

ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -32- அத்யாயம் -ஸம்பூர்ணம் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading