பர்த்தாவின் திரு நாமம் ஸ்பஷ்டமாக அருளிச் செய்யாமல்
அருளிச் செய்துள்ளார்கள் அன்றோ –
வரம் தரும் மா மணி வண்ணன்
பேர் அருளாளன்
தேவாதி ராஜன்
அமரரர்கள் அதிபதி
இமையோர் தலைவா
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் -போல் இவனுக்கு மங்களா சாசனம்
பெரிய ஆள் பெருமாள் கோயில் அன்றோ -ஆகவே பரதவ சப்தங்கள் கொண்டே இவனுக்கு மங்களா சாசனம்
நீர்மையிலும் மிகப் பெரியவன் அன்றோ
பேர் அருளாளன் அன்றோ
ஆகவே வரதன் -பேர் அருளாளன் -வரம் தரும் மா மணி வண்ணன் -போன்றவற்றாலும் மங்களா சாசனம்
நாயகனைக் குறிப்பால் உணர்த்தும் பராங்குச நாயகி
என்னை மனம் கவர்ந்த ஈசனை
பேர் அருளாளன் சீர் பேசக் கற்றவன் தாம் நிரூபகம்
பாட்டுப் பித்தன் –
———–
திருவோணத்தான்
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
தேவ பிரானுக்கு
ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் மாறு இல் மா மணி வண்ணன்
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா
பறவை ஏறு பரம் புருடா
என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் பண் கடந்த தேசு பாவ நாச நாதனே –
திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு
——
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல் எந்தாய் !
பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
மறைப் பெரும் பொருளை வானவர் கோனை
கடல் நிற வண்ணன் தன்னை
உயர் மணி மகுடம் சூடி நின்றானை
காமனைப் பயந்தான் தன்னை
அல்லி மா மலராள் தன்னோடும்
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை
கோயிலின் உள்ளே மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை
கோயிலின் உள்ளே வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை
கோயிலினுள்ளே வானவர் கோனை
நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும்
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும் உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு அரியானை
திருத்தாய் செம்போத்தே திரு மா மகள் தன் கணவன் மருத்தார் தொல் புகழ் மாதவனை
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வர்
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன்
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறென்றும் கடல் கிடந்த கனியே என்றும்,
———–
அமரர்கள் அதிபதி
அருளாத நீர்
அருளாழி புட் கடவீர்
அருளாழி அம்மான்
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை-
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக் கண்ணனை நெடு மாலை
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத் தோளும் ஓர் நான்குடைத் தூ மணிவண்ணன் எம்மான் தன்னை
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான்
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும் மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னை
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பனை
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
அரியாய அம்மானை அமரர் பிரானைப் பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியான் ஊழி படைத்தான்
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம் முதல் தனி யுன்னை
——-
மூரி நீர் வண்ணன் -முதலாய நல்லான்
தேவாதி தேவன் எனப்படுவான்
உலகு ஏத்தும் ஆழியான் அத்தி ஊரான்
அத்தி யூரான் புள்ளை யூர்வான்
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ செங்கண் நெடுமால் திரு மார்பா
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா
அண்டர்கோன்
இமையோர் பெருமான்
ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இமையோர் தலைவா
பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம்கரிய பிரான் எம்பிரான்
வானோர் தலைமகனாம்
எம் மீசர் விண்ணோர் பிரானார்
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே
இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
————————–
ஸ்ரீ பெரியாழ்வார்
பேணிச் சீருடை பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்கு போதுவார்
ஆண் ஒப்பர் இவர் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே -1 -1 -3-
சாமுத்ரிக லஷணம் போவார் இவனைப் பார்த்து பும்ஸ்வத்த சாம்யம்
உடையவர்களில் இவனுக்கு சத்ருசர் இல்லை காண் என்பாரும் –
இவனுடைய லஷணம் இருந்தபடியால் திருவோணத்தான் ஆன சர்வேஸ்வரனுடைய லோகம் எல்லாம்
இவன் ஆளும் என்பாராய்-இப்படி பிரீதி வ்யஹாரம் பண்ணினார்கள் என்கை-
———
பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆள் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-1 –
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே
பகவத் அனுபவத்துக்கு முற்பாடரான -(நீதி வானவர் ) நித்ய ஸூரிகளுக்கு சேஷித்வேன பிரதானனாய்
அவர்களுடைய சத்தாதிகளுக்கும் தாரகாதிகளுக்கும் தானே ஹேதுவானவனை
———-
கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-
ஆசுர ப்ரக்ருதிகளான கம்சாதிகளை அழிய செய்கையாலே தேவர்களுக்கு உபகாரகன் ஆனவனுக்கு
——–
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கோவைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
மாறு இல் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுருகின்றாளே – 3-7-8- –
தேவோ நாம சஹஸ்ரவான் -என்கிறபடியே
(தேவ -திவி கிரீடா கிரீஷா ஸ்தோத்ரம் பண்ணத்தக்கவர் ஆனந்தம் கொண்டவர் -பல அர்த்தங்கள் உண்டே )
தன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களை உடையவனாய் –
அவை எல்லா வற்றிலும் மநோஹரமான வடிவு அழகை உடையனாய் –
அவனுடைய பிரகாரங்களை -அவற்றினுடைய ரஸ்யதையாலே-கலங்கி அடைவு கெட பேசா நிற்கும்
மாறில் -இத்யாதி
ஆகையால் ஒப்பு இல்லாத நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவன் விஷயமாக இவள் இப்படி பிச்சேறா நின்றாள்-
————
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலர் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே பாது காவல் வைக்கும் கொலோ – 3-8- 7-
———–
கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1- 1-
சகஸ்ர கிரணங்கள் ஆன ஆயிரம் ஆதித்யர்கள் சேர பிரகாசித்தால் போலே
இருக்கும் தேஜசை உடைத்தாய் –
ஆதி ராஜ்ய ஸூசுகமான ஒக்கத்தை உடைத்தான திரு அபிஷேகத்தை உடையவன் –
————
ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 -10-4 –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் பிரகாரமாக -தான் பிரகாரியாக இருக்கையாலே –
ஓன்று ஒழியாதபடி சகல லோகங்களும் நீயேயாய் – சர்வம் கல்விதம் பிரம -என்றும் –
புருஷ ஏவேதம் ஸ்ர்வம்-என்னக் கடவது இறே –
மூன்று எழுத்தாய முதல்வனேயோ-
அஷய த்ரயாத்மகமான -பிரணவத்துக்கு வாச்யனாய் கொண்டு -சர்வ காரண பூதனாய் இருக்கிறவனே
மூன்று எழுத்தாய -என்கிற -சாமாநாதி கரண்யம் -வாச்ய வாசக பாவ சம்பந்த நிபந்தனம் –
பிரணவம் தான் -சப்த பிரதான்யத்தாலே -ஜீவ பரமாய் – அர்த்த ப்ராதான்யத்தாலே பகவத்பரமாய் இறே இருப்பது –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ஓம் இத் ஏக அஷரம் பிரம வ்யாஹரந்மா மநுச்மான்-என்றும் சொல்லக் கடவது இறே –
அதில் பிரதம அஷரத்தில் பிரக்ர்த்யம் இறே சர்வ காரணத்வம் –
———–
நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களைவாயே – 5-1 -9-
உம்பர் கோன் –
இங்கு உள்ளார் ஸ்வரூபத்துக்கு அஞ்சியும் தண்டத்து அஞ்சியும் இறே ஏத்துவது
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை -என்று ராக ப்ராப்தமாக ஏத்துவார் அங்கு உள்ளார் இறே –
உலகு ஏழும் அளந்தாய்-
ஏத்த ஏழு உலகம் கொண்ட –
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் –
இந்த்ரனுக்காக உலகு ஏழும் அளந்தாய் -என்னுதல்
நான்முகனார் பெற்ற நாடு-என்கிறபடியே ப்ரஹ்மாவானவன் சதுர்தச புவனத்தையும் அளந்தாய் -என்னுதல்-
ஊழி யாயினாய்-
ஊழி -காலம் -ஸ்ருஷ்ட்டி -வாழ்த்துவார் பலராக -இத்யாதி –
ஆழி முன்னேந்தி –
விரோதி வருவதற்கு ஏற்கவே -திரு ஆழியை தரித்து –
கம்ப மா கரி கோள் விடுத்தானே-
கோள் முதலை துஞ்சக் குறித்து எறித்த சக்கரம் -என்கிறபடியே திரு ஆழியைக் கொண்டு
கார்யம் கொண்ட படி -கம்பம் -நடுக்கம் -நடுங்கா நின்றவர்களை என்னுதல் –
முதலை நீரிலே இழுக்க -ஆனை கரையிலே இழுக்க பட்ட அசைவு என்னுதல் –
மா -பெருமை -துக்கம் படாமாற்றாமைக்கு விரோதியை போக்கினவனே –
தட மலர் பொய்கை புக்கு நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் –
என் ஆர் இடரை நீக்காய் –
கோள்-சிறை -கோள் விட்டது -என்னக் கடவது இறே
காரணா –
மூன்று ஆபத்திலே ஒன்றிறே இது
இப்போது காரணத்வம் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் பெற்றதும் –
ஈஸ்வரத்வம் நிலை நின்றதுவும் இப்போது என்கை
———-
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –
பெரிய திருவடியை வாகனமாக உடைய புருஷோத்தமனே –
———-
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –
என் மனக்கடலில் வாழ வல்ல-
அது பனிக் கடல் ஆகையாலே குளிர்ந்து இருக்கும்
இது மனக் கடல் ஆகையாலே குளிர் கெட்டு இருக்கும்
அது ஊற்று மாறினாலும் இது ஊற்று மாறாது
பனிக் கடலையும் தனக்கு உள்ளே அடக்கும் கடல் இறே -பரவைத் திரை பல மோதி -இத்யாதி
இக்கடலை கண்ட வாறே பனிக் கடல் காட்டுத் தீயோடு ஒத்தது –
வாழ வல்ல–
செருக்கரான ராஜாக்கள் பழைய படை வீடை விட்டு -தாங்களே காடு சீய்த்து சமைத்த –
படை வீட்டிலே இறே ஆதாரத்தோடு இருப்பது –
சாதன தசை போலே அன்று இறே போக தசை
பனிக் கடலையும் விரும்புகைக்கு அடி -இவரை சேர்த்துக் கொள்ளுகைக்கு
யோக நிந்த்ரை சிந்தை செய்க்கைக்கு இறே –
மனக்கடலில் வாழ வல்ல –
வாழ வல்ல வாசு தேவா –
அக்கடல் எங்கும் வாழ்ச்சி இறே
கீழில் பாட்டில் -வாழச் செய்தாய் -என்று -ஸ்ரீ ஆழ்வாரை வாழ்வித்து அவ் வாழ்வு கண்டு
தான் வாழுகிற படி
மாய மணாளா நம்பீ –
இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே -குணங்களும் -திரு மேனியில் செவ்வியும் பூர்த்தி பெற்றது
————-
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண கடந்த தேசு மேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27-
விண் கடந்த சோதியாய் –
பரம பதத்துக்கு அவ்வருகாய் ஸ்வயம் பிரகாசமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை உடையையாய்
இத்தால் த்ரிபாத் விபூதியும் தனக்குள்ளே யாம்படியான ஸ்வரூபவைபவத்தை சொல்லுகிறது
விளங்கு ஞான மூர்த்தியாய்
ஞானம் விளங்குகிற மூர்த்தியை உடையையாய் -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக
உடைய ஜ்ஞானத்துக்கு பிரகாசமான திவ்ய விக்ரஹத்தை உடையையாய்
இந்த ஜ்ஞானம் ஷட் குணங்களுக்கும் உப லஷணம் –ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் –
என்னக் கடவது இ றே
பண் கடந்த தேசு பாவ நாச நாதனே –
சுருதியால் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனாய்
சம்சாரிகளுடைய தோஷத்தை போக்க வல்ல ஹேய பிரத்யநீகத்தை உடைய சர்வேஸ்வரனே
——-
திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே -103-
திருக்கலந்து சேரு மார்ப –
பிராட்டி தேவரீர் உடன் சம்ச்லேஷித்து -அந்த சம்ச்லேஷத்தில் அதி சங்கித்து –
அகலகில்லேன் இறையும் -என்று நித்ய வாஸம் பண்ணுகிற திரு மார்பை உடையவனே –
பக்தரோடு முக்தரோடு நித்யரோடு -வாசியற -ஈஸ்வரீம் சர்வ பூதாநாம் -என்கிறபடியே
சர்வருக்கும் அபாஸ்ரய பூதை யான பிராட்டி -தான் நித்ய சாபேஷை யாம் படி யன்றோ
தேவரீர் உடைய பெருமை –
தேவ தேவ தேவனே –
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே
ப்ரஹ்மாதிகளுக்கு மோஷ ருசி பிறந்தவன்று -ப்ராப்யரான நித்ய சூரிகளுக்கு
நித்ய அனுபாவ்யனாய்க் கொண்டு நிர்வாஹகன் ஆனவனே –
தேவரீரும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்தியிலே -எடுத்துக் கை நீட்டுகையே -யாத்ரையாய்
இருக்கும் நித்ய சூரிகளுக்கு நிர்வாஹகன் -என்கை-
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா –
ரிக் ப்ரசுரமான வேதத்தால் பிரதிபாதிக்கையையே ஸ்வபாவமாக உடையையாய் நின்ற
ஹேய ப்ரத்யநீகனே –
நீதி -ஒழுக்கம் -அதாகிறது -ஸ்வபாவம் –
ஹரீச்சதே லஷ்மீச்சபத்ன்யௌ -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய -என்றும்
அபஹதபாப்மா -என்றும் -இத்யாதி வாக்யங்களாலே –
1-ஸ்ரீ ய பதித்வம் -என்ன
2-ஸூ ரி போக்யதை -என்ன –
3-ஹேய ப்ரத்யநீகை -என்ன –இப்படிகளாலே வேதைக ஸமதிகம்யன் -என்கை-
———–
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்-
இவர் தாம் நின்ற நிலை குலைந்து பகவத் விஷயத்திலே நிற்கும் போதும் நித்ய ஸூ ரிகளுடைய யாத்ரையே யாய்த்து இருப்பது
தேவ பிரான்
நித்ய ஸூ ரிகளுக்குத் தன்னை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் உபகாரகன் –
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு-
யோகப்ரஷ்டர் ஊர்வசியினுடைய வடிவழகை வர்நிக்குமா போலே சொல்லுகிறார்
கோலமே தாமரைக் கண்ணன் ஓர் அஞ்சன நீலமே -என்று ஆழ்வார் சொல்லக் கேட்டிருக்கும் செவி ஏற்றாலே சொல்லுகிறார்
காண்பன் –
யோகப்ரஷ்டனுக்கு விஷயம் கண்ணுக்கு இலக்காமா போலே ஆழ்வாரை விட்டால் பகவத் விஷயமாய்த்து இவர் காண்பது
யான்
இப்படி சந்யசித்துப் போந்த நான்-
———————–
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்–1-1-6-
நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்–3-8-1-
பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப–4-3-1-
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே/ வாழ்ந்து ஒழிந்தேனே /அல்லல் தீர்ந்தேனே —
பாசுரங்கள் தோறும் உண்டே -கண்களால் தரிசித்து -காதால் மட்டும் கேட்டுப் போகாமல் க்ருதார்த்தன் ஆனேன் –
நாங்கையில் நடுவில் உள்ள திவ்ய தேசம்
ஹேம ரேங்கர் -செம் பொன் கோவில் -பேர் அருளாளன் -ஸ்ரீ காஞ்சி தேவ ராஜனே இங்கு –
மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே—4-3-2-
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே —4-3-5-
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6-
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7-
கோயிலின் உள்ளே மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-
கோயிலின் உள்ளே வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-9-
கோயிலினுள்ளே வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி–4-3-10
நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் –4-8-7-
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு அரியானை–7-6-6-
திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே –10-10-1-
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே -11-3-5-
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே–ஸ்ரீ திருக் குறும் தாண்டகம்-20-
அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,
சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,
நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே–திரு நெடும் தாண்டகம்-6
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறென்றும் கடல் கிடந்த கனியே என்றும்,
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித் தூ முறுவல் நகையிறையே தோன்ற நக்கு,
மெல் விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–திரு நெடும் தாண்டகம்-6
———————–
உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே! –– திருவாய்மொழி (1-1-1),
அதன் கடைசி வரிகள் “ துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!” என ஆழ்வார்
தனது நெஞ்சத்தை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.
தற்போது கலியனின் கனவில் ஆழ்வார் தோன்றி, தனக்கு விருப்பமானதைத் தெரிவித்தார்.
அதன்படி பார்த்தால் நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதல் நூறு பாடல்களை
வரதன் விஷயமாகவே அருளியது தெள்ளென விளங்குகிறது.
வரதனின் திருவடியன்றி வேறு புகலறியாத ஆழ்வார், தனது நெஞ்சத்தில் கைவைத்து,
தனது உள்ளக் கருத்தை உலகோர் அறிய வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
அதனால்தான் கலியன் வடித்த ஆழ்வாரின் சிற்பம், கைமாறிய கோலத்தில் காட்சி தந்தது.
இவ் வுண்மையை நன்கு தெளிவாகப் புரிந்து கொண்ட ஆலி நாடன், உடனடியாக ஆழ்வாரின் தெய்வீகத் திருவுருவை
நம்மாழ்வார் விரும்பிய நிலையிலேயே ப்ரதிஷ்டை செய்தார்.
அந்தத் திருவுருவமே இன்றும் நாம் சேவிக்கும் மகிழ்மாறனின் எழிலுருவம்.
————
அருளாத நீர் அருளி அவராவி துவரா முன்
அருளாழி புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டு இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே -1-4-6-
அருளாத நீர்-
ஏதத் விரதம் மம ( ‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ )
என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர்.
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேஷம் என்று அறிகிலோம்;
அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்.
அருள் ஆழி அம்மானை –
‘தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார்,’ என்னும்படி அருட் கடலானவன்.
இதனால், பெரிய திருவடியும் மிகை என்கிறாள்,
இனி அருளை இறைவனுக்கு அடைமொழியாக்காது, ஆழிக்கு அடைமொழியாக்கி,
ஆழி என்பதற்குச் சக்கரம் என்று கொண்டு,
அருளை நிரூபகமாகவுடைய திருவாழியைக் கையிலேயுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.
‘ஆயின், ஆழி அருளை நிரூபகமாக வுடையதாய் இருக்குமோ?’ எனின்,
அருளார் திருச்சக்கரம்’ என்ப ஆதலின், சர்வேஸ்வரனுக்கும் ‘கைக்குறியாப்பை வாங்குவது இங்கே யன்றோ!
சர்வேஸ்வரன் பக்கல் அருள் மறுத்தாலும் அருள் கூடு கட்டி நிற்கும் இடமன்றோ இது?
இப்பொருளால், ‘பெரிய திருவடி ஒருவனுமேயோ!
அங்குக் கையாளாக உள்ளார் அடைய நம் பரிகரம் அன்றோ?’ என்று தெரிவிக்கிறாள்.
———
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–1-7-4-
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை-
இறைவனை நுகரும் நுகர்ச்சிக்கு-பகவத் அனுபவ விஸ்ம்ருதிக்கு ப்ராக பாவத்தை யுடையராய் –
மறதி என்பதனை எப்பொழுதும் இல்லாதவர்களாய்,
அந்நுகர்ச்சிக்குப் பிரிவு வருமோ என்ற ஐயமும் இல்லாதவர்களாய்-பகவத் அனுபவத்துக்கு விச்சேத சங்கை இன்றிக்கே –
தாங்கள் பலராய் இருக்கின்ற நித்திய ஸூரிகட்குத்
தாரகம் முதலானவைகள் எல்லாம் தானேயாய் இருக்கின்றவன்.
இதனால், தான் அருளாத அன்று, தங்கள் -சத்தை கொண்டு -ஆன்மாவைக் கொண்டு ஆற்ற மாட்டாதாரை
ஒரு நாடாக வுடையவன் என்கிறார்.
————-
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக்
அமரர் சென்னிப் பூவான தான் என் சென்னிக்கு அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை -என்று
என் உச்சியுள்ளே வர்த்தியா நின்றான்
என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான் என்றுமாம்
உள்ளே நிற்கும்
இனி அவ்வருகு போக்கில்லை
தேவ தேவருக்குக்
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற இருப்பையும் நினைக்கிறிலன்
கண்ண பிராற்கு
உபகார சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
————-
வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும–2-7-13-
வண்ணம் மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தையுடைத்தாய்ப் பெரு விலையதான இரத்தினம் போலே இருக்கிற விக்கிரகத்தை உடையவனை.
‘நீலரத்தினம் போன்ற வடிவில் தேஜஸ்ஸை – ஒளியை உடையவன்’ எனலுமாம்.
வண்ணம் – நிறம்./ மா-கருமை. /இவ்வடிவழகினைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறார் மேல்:
அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவித்தாலும் தன் அழகினைப் பரிச்சேதிக்க ஒண்ணாதிருக்கின்றவனை.
கண்ணனை –
அவர்களே அனுபவித்துப் போகாமல் இங்குள்ளாரும் அனுபவிக்கும்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை.
நெடுமாலை –
ஒருவனை அங்கீகரித்தால் அவன் அளவில் முடிவு பெறாத வியாமோகத்தையுடையவனை.
———-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூ மணிவண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே–3-7-2-
ஆளும் பரமனை –
நாம் உகந்ததை உகக்கிறோம்: இவ்வாத்மாவை ஆளுமிடத்தில் இங்ஙனம் அவனைப் போன்று ஆள வல்லார் இலர்;
‘ஆயின், இவன் இவ்வாத்மாவை அடியார்க்கு ஆட்படுத்தி ஆள்வானோ?’ என்னில்,
‘அடியார்கட்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன்’ என்னக் கடவது அன்றோ?
‘இவ் வுகப்புக்கு அடி அவன்,’ என்கிறார்.
ததீயரை அடியாரை விரும்புவது அவன் அடியாக அன்றோ?
கண்ணனை –
ஆட்செய்து அடிமை கொள்ள வல்லார் அவனைப் போன்றார் இலர்.
‘அப்படி ஆட்செய்து அடிமை கொண்டானோ?’ என்னில்,
‘அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை’ என்றும்,
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை’ என்றும் சொல்லுகிறபடியே,
தான் தூதனாயும் சாரதியாயும் இருந்து அடிமை செய்தன்றோ அடிமை கொண்டது?
‘எதிர் சூழல் புக்கு ஒரு பிறவியிலே இவனை அடிமை கொள்ளுகைக்காகத் தான் பல பிறவிகளை எடுத்துத் திரிகின்றவன்’ என்றபடி.
ஆழிப் பிரான் தன்னை –
தான் தாழ நின்று ஆட்கொள்ளுமிடத்து, பகலை இரவாக்குகைக்கும்,
‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கைக்கும் பெருநிலை நிற்கும்-பரிகரத்தை- கருவியை உடையவனை.
ஸூதர்சனம் சிந்தித மாத்ரமா சு தஸ்யாக்ர ஹஸ்தம் ஸ்வயம் ஆருரோஹ ‘நினைத்த மாத்திரத்தில் உடனே
கண்ண பிரானுடைய திருக்கையில் உச்சியில் தானாகவே வந்து அடைந்தார்’ என்கிறபடியே,
ஒரு கையிலே ஏறி விரோதிகளை அழியச் செய்பவன் அன்றோ?
‘நினைவு அறிந்து காரியம் செய்யுமவன்’ என்பதாம்.
கையும் திருவாழியுமான அழகினை ஆஸ்ரிதற்கு ஆக்கி
அதனைக் கொண்டு விரோதியைப் போக்குவார்க்கு விரோதியைப் போக்கி
அது தன்னைக் கையில் கண்டு அனுபவிப்பார்க்கு அனுபவிப்பிக்கும் உபகாரகன் ஆதலின்,‘ஆழிப்பிரான்’ என்கிறார்.
தோளும் ஓர் நான்குடை –
விரோதி போக்குகைக்கும் அழகுக்கும் வேறொன்று வேண்டாதே, தோள்கள் தாமே அமைந்திருக்கை.
ஆயதாச்சா ஸூ வ்ருத்தாச்ச கிமர்த்தம் -‘நீண்டனவாயும் அழகோடு திரண்டனவாயும் இரும்புத்தூண்களை ஒத்தனவாயும்
எல்லா ஆபரணங்களாலும் (கண்ணெச்சில் வாராதபடி) அலங்கரிக்கப்படத் தக்கனவாயுமிருக்கிற திருத்தோள்கள்
என்ன பிரயோஜனத்திற்காக அலங்கரிக்கப்படவில்லை?’என்றான் திருவடி.
இதனால், ‘கோலின காரியத்தின் அளவல்ல இப்பாரிப்பு’ என்றபடி.
நான்கு
பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும் போது அனந்தாழ்வான் கண்டு,
‘பரமபதத்தில் சர்வேஸ்வரன் நாற்றோளனாயோ, த்வி- இரு தோளனாயோ எழுந்தருளியிருப்பது?’ என்ன,
‘ஏகாயநர் இரு தோளன் என்னா நின்றார்கள்; நம்முடையவர்கள் நாற்றோளன் என்னா நின்றார்கள்,’ என்ன,
‘இரண்டிலும் வழி யாது?’ என்ன,
‘இரு தோளனாய் இருந்தானாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது;
நாற்றோளன் என்று தோன்றிற்றாகில் பெருமாளைப் போலே இருக்கிறது,’ என்று அருளிச்செய்தார்;
நம்மளவு அன்றியே தெரியக் கண்டவர்கள் ‘கையினார் சுரிசங்கு அனல் ஆழியர்’ என்றார்கள் அன்றோ பெரிய பெருமாளை?
‘ஆயின், சாதாரண மக்களுக்கு அங்ஙனம் தோன்ற இல்லையே?’ எனின்,
ஆயர் பெண்களுக்கு நான்காய்த் தோன்றி, உகவாத கம்சன் முதலியோர்களுக்கு இரண்டாய்த் தோன்றுமாறு போலே கொள்க.
‘நான்காகத் தோன்றுகைக்கு நாற்றோளனாய் அவதரித்தானோ?’ எனின்,
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவிடத்து நாற்றோளனாய் அன்றோ வந்து அவதரித்தது?
உப ஸம்ஹர -‘மறைத்துக்கொள்க’ என்ன, மறைத்தான் மற்றைத் தோள்களை.
நிலாத்துக்குறிப் பகவர், பட்டரை நோக்கி, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நாற்றோளனாய் இருக்கும் என்னுமிடத்துக்குப் பிரமாணம் உண்டோ?’ என்ன,
தாமஸ பரமோ தாத சங்கு சக்ர கதா தர – ‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலேயுள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர்,
சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர்’ என்று உண்டாய் இருந்ததே?’ என்ன,
வேறு பதில் சொல்ல முடியாமையாலே -விக்ருதனாக -வேறுபட்டவராய் இருக்க,
‘பிரமாணப் போக்கு இதுவாயிருந்தது பொறுக்கலாகாதோ?’ என்று அருளிச் செய்தார்.
கற்பக தரு பணைத்தால் போல் அத்விதீயமான நான்கு தோள்களை யுடைய
தூ மணிவண்ணன் எம்மான் தன்னை –
பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கிற வடிவழகைக் காட்டி என்னைத் தனக்கே உரிமை–அநந்யார்ஹன் ஆக்கினவனை –
இதனால், சிலரை அகப்படுத்துகைக்குத் தோள்கள் தாமும் மிகையாம்படி இருக்கிற வடிவழகைத் தெரிவித்தபடி.
‘அடியார் பக்கல் அன்புடையராய்ச் செல்லும் இவர் இவனை ‘எம்மான்’ என்பான் என்?’ எனின்,
ததீயர் -அடியார் பக்கலிலே சென்ற மனத்தையுடையராய்ப்-அபஹ்ருதராய் – போவாரை நடுவே
வழி பறிக்கும் வடிவழகுடையவன் ஆதலின், ‘எம்மான்’ என்கிறார்.
அன்றியே, ‘அடியாரை விரும்பும்படி செய்ததும் இவ் வடிவழகாலே யாதலின், ‘எம்மான்’ என்கிறார்’ என்னலுமாம்.
————-
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் றனை
நா வியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே–4-5-4-
பிரான் –
உபகாரமே–சீலமாம்படி – இயல்பு என்னும்படி -இருக்குமவன்
ஆக, முதலடியில், முன்பு சில நாள்கள் ப்ரயோஜனாந்தர பரராய் (வேறு பிரயோஜனங்களைக் கருதினவர்களாய் ) இருந்து,
பின்பு தன்னையே பிரயோஜனமாக விரும்பினார் திறத்தில் உபகரிக்கும்படி சொல்லிற்று.
முதலிலேயே வேறு பிரயோஜனங்களில் நெஞ்சு செல்லாதபடி இருக்கின்ற
திருவனந்தாழ்வான் பெரிய திருவடி முதலானவர்களை உடையனாயிருக்கும் படி சொல்லுகிறது மேல் :
தூவி அம் புள் உடையான் –
‘தூவி’ என்ற அடைமொழியால்,
நினைத்த இடத்திலே கொண்டு ஓடுகைக்கு அடியான கருவியை யுடையவன் என்பதனையும்,
‘அம் புள்’ என்றதனால்,
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிணாங்க ஸோபி நா–ஸ்தோத்திர ரத்நம், 41. ‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின
தழும்பினாலே சோபிக்கிறவன்’ என்கிறபடியே, சோபிக்கிற அழகையுடையவன் ஆகையாலே வந்த
ஏற்றத்தை யுடையவன் என்பதனையும் தெரிவித்தபடி.
தூவி – சிறகு. அம் -அழகு.
அடல் ஆழி –
அஸ்த்தாநே பய சங்கை – ‘பரமபதத்திலும் கூட அவனுக்கு என்வருமோ என்று அச்சம் கொண்டிருப்பவன் ஆகையாலே,
எப்போதும் ஒக்க யுத்த உன்முகனாய் ( சந்நத்தனாய் )இருப்பவன்’ என்பார்
அடல் ஆழி’ என்கிறார். அடல் – மிடுக்கு.
(ஆங்கார வார மதுகேட்டு அழலுமிழும் பூங்கார ரவணையான் பொன்மேனி – யாங்காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான் வல்லரே யல்லரே? வாழ்த்து.’)
அம்மான் தன்னை –
‘பெரிய திருவடி திருத்தோளிலே பெயராதிருத்தல், திருவாழியைச் சலியாதே பிடித்தல் செய்ய வல்லவனே –
சர்வாதிகன் (எல்லார்க்கும் தலைவன் )ஆவான் என்பார்,
‘தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான்’ என்று ஒரு சேர அருளிச்செய்கிறார்.
———-
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே-
கலௌ கிருதயுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய கிருதே யுகே
யஸ்ய சேதஸி கோவிந்தோ ஹ்ருதயே யஸ்ய ந அச்யுத:”
எவனுடைய மனத்தில் கோவிந்தன் இருக்கிறானோ அவனுக்குக் கலியுகம் கிருதயுகமாக இருக்கிறது;
எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ அவனுக்குக் கிருதயுகம் கலியுகம் ஆகிறது”
என்கிறபடியே, கலி தோஷங்கள் ஒன்றும் வாராதபடி தன் அடியார்க்கு அருள் செய்யும்.
நாட்டுக்கு இட்ட அஃகம் அல்லவே யன்றோ அந்தப் புரத்துக்கு இடுவது.
மலியும் சுடர் ஒளி மூர்த்தி-
சுடர் என்றும் ஒளி என்றும் பரியாயமாய், இரண்டாலும் மிகுதியைச் சொல்லுகிறது.
மலிதல்-நிறைதலாய், மிக்க தேஜஸ்ஸாலே -ஒளியாலே நிறைந்த வடிவு என்றபடி.
இதனால், அருள் செய்யாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகைக் கூறியபடி.
மாயம் பிரான் கண்ணன் தன்னை-
ஆச்சரியமான குணங்களையும் சேஷ்டிதங்களையும் -செயல்களையுமுடைய கண்ணனை
ஆயிற்றுக் கவி பாடிற்று.
————-
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன் கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-
ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி-
முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து: என்றது,
காரண வாக்கியங்களில் உபாஸ்யனாக -உபாசிக்கத் தக்கவனாகச் சொல்லப் படுகிறான் தானே என்று
தன் பக்கலிலே நான் தெளியச் செய்து,’ என்றபடி.
அன்றிக்கே, ‘பரம பதத்தைப் போன்று, சம்சாரத்தையும் திருத்த நினைத்தோம்.
அதற்கு இவன் முதலாம் -அடி ஆம் இவன், என்று என் பக்கலிலே தன் ஸ்வரூபம் முதலானவைகளைத் தெளியச் செய்து என்னுதல்.
இங்கே அருளிச் செய்யும் வார்த்தை:
திருப் புற்றுக்குக் கிழக்கே கரிய மாணிக்காழ்வார் திரு முன் பின் -சோபாநத்திலே -படிக் கட்டிலிலே
ஆள வந்தார் எழுந்தருளி யிருக்க, உடையவர் திருப் புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு,
ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச் செய்தாராம்’ என்பது.
என் நா முதல் வந்து புகுந்து –
சர்வேஸ்வரன் ப்ரஹ்மாவை -கடாக்ஷித்து திருவருள் செய்ய- அவன் பின்னர்
மச் சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ரத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம’-ஸ்ரீராமா. பால. 2 : 31
முனிவரே! இந்தச் சரஸ்வதியானது என்னுடைய அருளாலேயே உமக்கு உண்டாயிற்று;
நீர் ராம சரிதம் முழுதினையும் செய்யும்,’ என்கிறபடியே
அவன் சரஸ்வதியை ஏவி, இப்படி நாலிரண்டு நிலை நின்றே அன்றோ ஸ்ரீ வால்மீகி பகவானைப் பேசுவித்தது?
அங்ஙனம் ஓர் இடையீடு இன்றிக்கே, என்னுடைய நாக்கிலே முற்பாடனாய் வந்து புகுந்து.
அன்றிக்கே, என் நாவுக்கு அடியாய் வந்து புகுந்து’ என்னுதல்.
நல் இன் கவி –
லக்ஷனோபேதமாய் – லக்ஷணங்கள் எல்லாம் நிறைந்தவனாய்,
அந்த லக்ஷணங்கள் கிடக்கச் செய்தே, சொல்லில் இனிமை தானே ஆகர்ஷகமாய் -கவர்ச்சி கரமாம்பாடி
இனியவான கவிகளை.
தூ முதல் பத்தர்க்கு –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான -சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்ய ஸூரிகளுக்கு,
கேட்டு ஆரார் வானவர்கள்’ திருவாய். 10. 7 : 11.-என்கிறபடியே அவர்கள் கொண்டாடும்படி சொன்ன.
அன்றிக்கே, ‘சம்சாரத்திலே தலை நின்ற முழுக்ஷூக்களுக்கு’ என்னுதல்.
தான் தன்னைச் சொன்ன –
தானே சொல்லுதல், நானே ஒரு படி சொல்லுதல் செய்கை அன்றிக்கே,
என் நா முதல் வந்து புகுந்து தான் தன்னைச் சொன்னான் ஆயிற்று.
என் வாய் முதல் அப்பனை –
எனக்கு வாயத்த காரணனான மஹோபகாரகளை.
அன்றிக்கே, ‘என் நா முதல்’ என்றது தன்னையே அனுபாஷித்து -பின் மொழிந்து,
என் வாக்குக்கு முதலான அப்பனை’ என்கிறார்.என்னுதல்.
என்று மறப்பேனோ –
முன்பு அநாதி காலம் மறந்து போந்ததாகில் இனி மேல் நினைக்கைக்குக் காரணமான காலத்தை எல்லாம்
மறக்கைக்கு உடலாக்கினால் தான் மறப்பனோ?’ என்றது,
முன்பு நினைக்கையில் உள்ள அருமையோ பாதியும் போரும் இனி மறக்கையில் உள்ள அருமையும்:
இனி ஏதேனும் ஒரு நாள் தான் என்னாலே மறக்கப்போமோ?’ என்றபடி.
————–
இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2-
பெருந்தாட் களிற்றுக்கு
பெரிய தாள்களை உடைய களிற்றுக்கு அருளின சர்வேஸ்வரன்
வடிவில் கனமும் நோவில் பாடு அற்ற ஒண்ணாமைக்கு காரணம் ஆதலின் -பெரும் தாள் -என்கிறார் –
அருள் செய்த பெருமான் -தருந்தானருள் தான்-
பெருமான் தான் தரும் அருள் தான் –
தரும் என்கிற இது – தந்த -தருகின்ற -தரும் -என முக்காலத்திலும் சொல்லலாய் இருக்கையாலே
தரும் அருள் -என்கிறார்
ஆஸ்ரிதற்கு -அடியாருக்கு செய்ததும் தமக்குச் செய்ததாக அன்றோ இவர் நினைத்து இருப்பது
ஆதலின் -கொடுத்த என்னாது – தரும் -என்கிறார்-
—————–
அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-
அம்மானை
சர்வேஸ்வரனை –
அமரர் பிரானைப்
நித்ய ஸூரிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுத்து அனுபவிப்பிக்கும் உபகாரகனை –
பெரியானைப் –
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள் தனக்கு அதீனமாய் உரிமைப் பட்டவையாய்
தன்னை அவர்களால் அளவிட்டு அறிய முடியாமல் இருப்பவனை –
பிரமனை முன் படைத்தானை –
பிரமனை முன்னே உண்டாக்கினவனை -ஜனகனாய் உள்ளவனை -–
——————–
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-
ஆழியான் –
ஸர்வேஸ்வரத்வ ஸூசகமான -பரத்வ சின்னமான திரு ஆழியைக் கையிலே உடையவன் –
ஆழி யமரர்க்கும் அப்பாலான் –
அத் திரு வாழி ஆழ்வானைப் போன்று கம்பீர ஸ்வபாவரான -பெருமிதத்தை உடைய நித்ய ஸூரிகளுடைய
ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாய் இருக்குமவன் –
ஊழியான் –
நித்ய ஸூரிகளும் தானுமாய் பரம பதத்தில் பேர் ஒலக்கமாய் இருப்பவன் –
இங்கு உண்டான கார்ய வர்க்கம் – பொருள்களின் கூட்டம் அடங்கலும் அழிந்து
காலம் சேஷமான -மாத்ரம் இருக்கும் காலத்திலேயே தான் வந்து தோற்றுமவன் –
ஊழி படைத்தான் –
காலோபலஷிதமான காலத்தாலே அழிக்கப் பட்ட எல்லா பொருள்களையும்
பஹுஸ்யாம் -சங்கல்பத்தாலே உண்டாக்கினவன் –
————-
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-
எனக்கு ஆரா அமுதமாய் –
தேவ ஜாதியினுடைய உப்புச் சாறு போலே அன்றியே-சதா ஸேவ்யமாய் – எப்பொழுதும் அனுபவிக்கத் தகுந்ததாய்
நித்ய ஸூரிகள் கூட அனுபவிக்கும் உன்னை-நித்ய சம்சாரியான – பிறவியிலே உழந்து திறக்கிற எனக்கு தந்தாய் –
எனது ஆவியை –
என்னுடையது என்னுமதுவே காரணமாக
அபிமத விஷயத்தில் -காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
என் உடம்பை விரும்பினாய் –
இன்னுயிரை –
பகவான் உடைய அபிப்ராயத்தாலே-தவதவ நாறுகிற படி –
தவ -பாரதந்த்ர்யம்
மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே
செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே -ப்ரக்ருதியோடே சம்பந்திக்கையாலே –
சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார் -என்னவுமாம்
——————
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தேயோ –
மூன்று உலகங்கள் தொடக்கமான ஓன்று ஒழியாமல் – எல்லாவற்றுக்கும்
மூன்று விதக் காரணங்களும் ஆனவனே
இதனால் -ரஷிக்க -காப்பாற்ற என்று புக்கால்-ரஷ்ய வர்க்கம் – காப்பாட்ட படுகின்ற பொருள்களின்-
ஸஹ கரிக்க – துணை வேண்டாதவனே -என்பதனைத் தெரிவித்த படி –
முதல் -நிமித்த காரணம்
தனி -ஸஹ காரி -துணைக் காரணம்
வித்து -உபாதான -முதல் காரணம்
முதல் தனி உன்னை –
பிரதானனாய் -முதன்மை பெற்றவனாய்
ஒப்பற்றவனாய்
குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து பரிபூர்ணனாய் – இருக்கின்ற நீயான உன்னை
——–
ஸ்ரீ பொய்கையார்
முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது —-15-
முதலாவார் மூவரே –
இவர் இவர் எம்பெருமான் என்று இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயராகை தவிர்ந்து முன்னம்
மூவரோடு சேரப் பெற்றோம் இறே-இனி இருவரைக் கழிக்க அமையும் இறே -என்று கருத்து –
அம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் –
இவர்கள் மூவருக்கும் அவ்வருகே ஒருவன் பிரதானன் ஆகிறானும் அன்று
அன்றிக்கேமூவரும் கூட பிரதானர் ஆகிராரும் அன்று
இனித் தான் மூவரும் கூட ஓன்று ஆகிராரும் அன்று –
அந்த மூவரிலும் வைத்து கொண்டு பிரதானனவன்
சஞ்சரியா நின்றுள்ள கடல் போலே இருந்துள்ள வடிவை உடையவன்
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு ஜீவவ்யதா நேன அந்தர்யாமியாயும்
தன் பக்கலிலே ஸ்வேன ரூபேணவும் நின்று ரஷிக்கிறான்-
முரி நீர் வண்ணன் –
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தண்டகம் -2-என்கிற அவற்றைக் கழித்து
மா கடல் உருவம் -என்கிற அத்தையே பிடிக்கிறார் –
முதலாய நல்லான் அருள் அல்லால் -நாம நீர் வையகத்துப் –
இதுக்கு அடங்க காரண பூதனுமாய்
இவற்றை உடையானும் ஆகையாலே
இவற்றின் பக்கல் வத்சலனுமாய் இருந்துள்ள
அவனுடைய அருள் அல்லது
பிரசித்தியை யுடைத்தான நீர் சூழ்ந்த பூமியில் உள்ள –
பல்லார் அருளும் பழுது –
பலருடைய பிரசாதமும் பழுது -வ்யர்த்தம்
இவனை ஒழிந்த மற்றை இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்கள் அருளோடு
வாசி யடைய வ்யர்த்தம்
அன்றிக்கே
நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது -என்றதாகவுமாம் –
பழுது தான் பலியாமையே அல்ல
பகவத் பிரசாதத்தையும் இழப்பிக்கும்
அத் தேவதைகள் உடைய உபேஷையும் இவ்வாத்மாவுக்கு பகவத் பிரசாதத்தோடு ஒக்கும்
திருவடி நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திரு -68-
மார்க்கண்டேயனை ருத்ரன் கை விட
ராவணன் தம்பியைக் கைவிடக் க்ருதார்த்தனானாப் போலே க்ருதார்த்தனாய்த்து இலனோ
தேவ தாந்தரங்களுக்கும்
உபாயாந்தரங்களுக்கும்
தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை
அவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்
தான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-
———–
ஸ்ரீ பூதத்தாழ்வார்
மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-
இவர் திரு உள்ளம் இப்படி அபி நிவேசித்த வாறே -பார்த்த இடம் எங்கும் தனக்கு வாஸ ஸ்தானமாய் இருக்கச் செய்தே
அவ்விடங்கள் போல் அன்றிக்கே இவர் திரு உள்ளத்தை தனக்கு இருப்பிடமாக ஆதரித்துக் கொண்டு வந்து புகுந்தானாய் இருக்கிறது –
இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகு போக்கு இன்றிக்கே இருக்கிற படி யாவது –
இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-
வேதங்களும் வைதிக புருஷர்களும் எல்லாம் -தமீச்வராணம் பரமம் மகேஸ்வரம் -ஸ்வே -6-7-என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் பிரசித்தமாகச் சொல்லப் படுகிறவன்
முன்பு ஒரு கால விசேஷத்திலே கேசி வாயைக் கிழித்த பிள்ளை -என்னுதல்
மனிச்சு என்னுதல் –
நெஞ்சிலே புகுராமைக்கு வரும் விக்நம் போக்குவானும் தானே
தேவாதி தேவன் எனப்படுவானாய் –மா கடல் நீர் உள்ளானாய்-மா வாய் பிளந்த மகனாய் -நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளானாய் –
வேங்கடத்தானவன் -மனத்து உளனானவன் –
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன்–என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –
——–
ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் திரு வத்தியூரிலே நின்றருளி
என்னுடைய சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் –
அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி-
என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-
திரு வத்தி யூரிலே நின்று அருளினவன் –
அத்தியூரான் என் நெஞ்சமேயான் –
திருப் பாற் கடலோடு ஒத்தது திரு வத்தி யூரும் –
ஆழியான் அத்தியூரான் என்னெஞ்சமேயான் –
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -பெரியாழ்வார் -5-4-10-என்னும்படியே –
———–
உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது —
அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-
அத்தி யூரான் புள்ளை யூர்வான்-
அவனே கருட வாஹனன் –
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் –
அணியப்பட்ட மணிகளையும் துத்தி என்று பொறியையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுமவன் -அனந்த சாயி -இவை இரண்டாலும் சர்வேஸ்வரன் -என்றபடி –
முத்தீ மறையாவான் –
மூன்று அக்னியையும் சொல்லா நின்றுள்ள வேதத்தாலே சமாராத் யதயா பிரதிபாதிக்கப் பட்டவன் –
பகவத் சமாஸ்ரயண கர்மங்களை பிரதிபாதியா நின்றுள்ள வேதங்கள் -அன்றிக்கே –
முத்தி மறையாவான் -என்றதாகில் மோஷத்தைப் பிரதிபாதிக்கிற வேதத்தாலே பிரதிபாத்யன் ஆனவன் –
மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் –
அரியன செய்து அபிமானியான ருத்ரனுக்கும் ஈஸ்வரனும் ஆனவன் –
பெரிய கடலிலே பிறந்த விஷத்தைப் பானம் பண்ணி அந்த சக்தி யோகத்தாலே தன்னை ஈஸ்வரனாக
அபிமானித்து இருக்கிற ருத்ரனுக்கும் ஈஸ்வரன் ஆனவன் –
விபூதியில் பிரசித்தரான ருத்ரனுக்கும் நிர்வாஹகன் ஆனவன் -தேவ ராஜன் -என்றபடி –
எங்கள் பிரான் –அத்தியூரான் –
அத்தி யூரிலே நின்று அருளின உபகாராகன் -எங்கள் பிரான் ஆகைக்காக அத்தி யூரான் ஆனான் –
————-
என்னை விஷயீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து
பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் –
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-
எங்கள் பெருமான் –
ஆஸ்ரிதரான எங்களுக்கு நாயகன் –
இமையோர் தலைமகன் நீ-
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
செங்கண் நெடுமால் திரு மார்பா –
இவை எல்லாம் நித்ய ஸூ ரிகளுக்கு போக்யமானபடி –
செங்கண் நெடுமால் –
ஸ்ருதி பிரசித்தமான கண்களை யுடையவன் –புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் –
வ்யாமோஹம் எல்லாம் கண்ணிலே தோற்றுகை -அவாப்த சமஸ்த காமன் கிடீர் குறைவாளன் ஆகிறான் –
திரு மார்பா –
ஸ்ரீ யபதியே -இமையோர் தலைமகனாய் வைத்து எங்களை அடிமை கொள்ளுகைக்கு அடி -பிராட்டி சம்பந்தம் –
—————
பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-
மாலே –
சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் –
நெடியானே-
அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –
கண்ணனே-
கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்-
விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே –
ஐஸ்வர் யத்துக்கு எல்லை இல்லாமை –
நித்ய ஸூரி களுக்கு அவ்வருகாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலை யுடையவனே –
அவர்களுக்கு தோள் மாலை இட்டு ஒப்பித்துக் காட்டினபடி –
————-
ஸ்ரீ பேயாழ்வார்
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே
நமக்கு பரம பிராப்யம் என்கிறார் –
தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-
தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான் –
கையிலே திவ்யாயுதங்களைப் பிடித்தால் ஓரிடத்தில் தோலக் கடவது அன்றிக்கே
வெல்லும் ஸ்வ பாவன் ஆனவன்
எடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும் புக்க போரில் எதிரிகளுக்குத் தோலாதே வெற்றியை யுடையவன் –
ஆண் பிள்ளை -என்றபடி –
சர்வ சக்தியைப் பற்ற வேண்டாவோ -பயம் கெடும் போது –
அட்ட புயகரத்தான் –
திரு அட்டபுயகரத்திலே எழுந்து அருளி இருக்கின்றவன் –
எட்டுத் திருத் தோள்களிலும்–எட்டுத் திவ்யாயுதம் உண்டு –அம்மிடுக்கோடே சந்நிஹிதன் ஆனான் –
அந்நான்று-குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த –
அனுஷ்டானமும் உண்டு –
அந்நான்று-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத் தசையிலே
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் –
மடுவிலே கிடந்தது முடிக்கக் கடவதான முதலை சிதிலமாம் படி –
குறித்தெறிந்த –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் திருவடிகளிலே படாமல் முதலை பிளப்புண்ணும் படி
எறிந்த –
அப்பதற்றத்தாலே கலங்காதே-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே
இலக்குத் தப்பாமே எறிந்த –
சக்கரத்தான் –
திரு வாழியை யுடையவன் –
தாள் முதலே நங்கட்குச் சார்வு –
பிரதானமான திருவடிகளே நமக்குப் புகலிடம் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸ்தோத்ர ரத்னம் -22-என்னும்படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு -உதவினவன் திருவடிகளே நமக்கு ஸூ பாஸ்ரயம்-
முதலே –
நம்முடைய சஹாயம் வேண்டா
உண்டானவன்று -பலியாமையே யன்று விரோதியேயாம் அத்தனை –
ஒன்றினுடைய விநாசம் ஒன்றுக்கு உத்பத்தி-ஸ்வாதந்த்ர்ய பார தந்த்ர்யங்களுக்கு
சஹாவ ஸ்தானம் இல்லை இறே –ஈரரசு உண்டோ
நங்கட்கு –
ஸ்வ பலம் அற்றார்க்கு –
———————————————
ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–-நான்முகன் திருவந்தாதி -4
தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் –
ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே
ஜடையிலே கங்கையை தரித்து-சாதகனான ருத்ரன்-சர்வ சேஷி யானவனோடு ஒக்க
சேஷித்வத்திலே கூறு உடையன் என்று-இதுவும் சேதனருக்கு புத்தி பண்ணப் படுமோ
வேறொருவர் இல்லாமை நின்றானை-
அஹம் சர்வச்ய ஜகத பிரபவ
பிரளயச்த தா -மத்த பரதரம் நாந்யத் கிஞ்சித ஸ்த்தி தனஞ்சய–என்னும்படி நின்றவனை
திருவடிகளை விளக்கின கங்கா ஜலத்தைத் தலையிலே தரித்து சாதகனான ருத்ரன் ப்ரஹ்மா ச
ர்வேஸ்வரன் உடன் ஒக்க ஈஸ்வரர்கள் என்னும் இதுவும் கொள்ளப் படுவதோ -அன்றிக்கே
ஜகத் ஐஸ்வர் யத்தை கூறுடையர் என்னும் இவ்வர்த்தம் கொள்ள முடியுமோ என்றுமாம்
வேறு -இத்யாதி
ஆதித்ய சன்னிதியில் நஷத்ரங்கள் யுண்டாய்-வைத்தே இல்லாதார் கணக்கானாப் போலே
தன்னுடைய உயர்த்திக்கு ஈடாக சகல பதார்த்தங்களும் யுண்டாய்
வைத்தே இல்லாதார் கணக்காம் படி நிற்பதும் செய்து தனக்கு பிரகாரமான
சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி
இருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத் திரளச் சொன்னேன்
எப்பொருட்கும் சொல்லானை –
அவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம் –
————-
இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-
இவையா வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்-
அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-நித்ய சூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்
அன்றிக்கே
அக்நி கொடுக்கும் ஹவிசை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நரசிம்ஹத்தின் யுடைய மிக்க வழகியவை –
————-
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-
இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம் என்று எனக்கு கை வந்தது –
இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன்
சர்வத்துக்கும் காரணன் நீ
இதுக்கு முன்பு அறிந்தனவும்
இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம் நீ இட்ட வழக்கு
நற்கிரிசை – நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்- அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
நன்கு அறிந்தேன் நான்-இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-
எம்பெருமான் உன்னை – இப்போது ருத்ரனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ –சகல ஜகத்துக்கும் காரண புதன் நீ –
கற்றவை நீ-இதற்கு முன்பு அறியப் பட்ட பொருள்கள் எல்லாம் நீ
கற்பவை நீ -இனி மேல் அறியப் படும் பொருள்களும் நீ
இனி அறிந்தேன்-என்பனவற்றை எல்லாம் அறிந்தேன்
நற்கிரிசை-நிர்ஹேதுக ரக்ஷணம் ஆகிய நல்ல வியாபாரத்தை யுடைய
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –நாராயணன் நீ -நன்றாகத் தெரிந்து கொண்டேன்
சகல பிரபஞ்சத்துக்கும் காரணனான நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி
சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும்
அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து
அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார்
தேவதாந்த்ர பரத்வ ப்ரமத்தை தவிர்த்து
ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப் பிரபந்தத்தின் முழு நோக்கு –
———–
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–
இமையோர் தலைவா –
இப்படி பிறந்தவன் குறைவாளனாய் இன்றிக்கே
அமரர்கள் அதிபதி
சூட்டு நன் மாலைப்படி ஒரு நாடாக தனக்கு என்று இருப்பவன் கிடீர்
அசங்குசித ஜ்ஞானரையும் துடிப்பித்துக் கொண்டு நிர்வாஹகனாய் இருக்கிறபடி –
————-
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-
பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் –
பொங்கா நின்ற மூன்று வகைப் பட்ட நீரை உடைத்தான கடல் சூழ்ந்த பூமிக்கு எல்லாம் உபகாரகன் –
பிரளய ஆபத்திலே ரஷித்தவன்-
விசும்புக்கும்பிரான் – இவர்களுக்கு ஜனகனான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாகனானவன்
மற்றும் நல்லோர் பிரான்-நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாகனானவன்
கோலம் கரிய பிரான்-இக் கண்ணுக்கு வளைத்து கொடுக்கும் உடம்பு –
நித்ய ஸூரிகளுக்கு முற்றூட்டாக அனுபவிக்க கொடுக்கும் உடம்பு
இவ் வடிவை காட்டி இறே அவர்களை பிச்சேற பண்ணுவது –
எம் பிரான்-அவர்களுக்கு நாயகன் ஆனாற் போலே எனக்கும் நாயகன் ஆனபடி
திரி தந்தாகிலும் –தேவ பிரானுடைய கரிய கோலத் திரு உருக் காண்பன் நான் –
என்றார் அன்றோ மதுரகவி ஆழ்வாரும்
———
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-என்கிறபடயே-தேனாக சொல்லப்பட்ட -விண் முதல் நாயகன் -என்னுதல் –
நீண் முடி இத்யாதி -பிரிந்த நாளில் ச்ரமம் எல்லாம் ஆறும்படியாய் காண் தேசம் இருப்பது –
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய நீண் முடி உண்டு -திரு அபிஷேகம் -அதில் வெண் முத்து வாசிகைஉண்டு-
வெளுத்த முத்து ஒழுங்கு -அத்தன்மையதாய்-அதின் படியை உடைத்தாய் –
திருமலை வ்ருத்தாந்தத்துக்கு ஸ்ரீ வைகுண்ட படியை திருஷ்டாந்தமாக சொல்லாம் படி யாய் ஆயிற்று –
—————
வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –
வானோர் தலைமகனாம் சீராயின நல் நோய் -என்கிறது –
சீராயின -கனவிய நோய் –ஒருவரால் பரிகரிக்கிறோம் என்று தொடங்க அரிய நோய்
தெய்வ நோய் -அப்ராக்ருதமான நோய்
நல் நோய் -கைக் கூலி கொடுத்து கொள்ள வேணும் நோய் –
அன்றிக்கே
நித்ய சூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையையும் -கல்யாண குணங்களையும் உடைய-
பர தேவதை அடியாக வந்த நோய் -என்னுதல்
————-
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –
அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து -பூமியிலே வந்து அவதரித்து –
தன் பக்கல் ஆசாலேசம் உடையாருடைய ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது-தரியாதானாய் –
அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு கண்டு அமுது செய்து –
தன்னை உகவாத சிசுபாலாதிகள் ஏசும்படியாய் இருக்கிறவர்-
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனான மேன்மையாலும் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள-த்ரவ்யத்தால் அல்லது தரியதானாய் இருக்கிற
சீலாதி அதிசயத்தாலும் ஆக என்னை-அனந்யார்ஹை ஆக்கினவர்
———–
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –
பார் அளந்த பேர் அரசே -இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது –
மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –
அளந்த -பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –
இருளார் வினை கெட இறே செங்கோல் நடத்துகிறது –
பேரரசே -எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே -செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –
எம் விசும்பரசே -பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –
பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –
எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே -உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி-என்னை அகற்றி-
முடிக்கைக்கும் தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –
என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன் என்று வைத்து பிரித்து -இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-
என்னோடு ஒப்பார் யார் -என்று இருக்கிறவன் ஆயிற்று –என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் –
என்னோபாதி இல்லையே -என்று இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்-
————
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன்சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 – –
ப்ரஹ்மாதிகள் தங்கள் துக்க-நிவ்ருத்திக்கு உடலாக தன்னை ஆஸ்ரிக்கிறவோபாதி-
தான் வேறு சிலரை ஆஸ்ரயநீயராக உடையன் அன்றிக்கே இருக்குமவன்
சர்வேஸ்வரனாய்-ப்ரஹ்மாதிகளுக்கும் கூட ஆஸ்ரயநீயனாய்-அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவன் –
———
———-
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்த (கருடன் மீதேறிய) வரதன், கஜேந்த்ர வரதனாக விளங்குகிறான்.
வடமொழியில் ‘ஹஸ்தீ’ என்றால் ‘யானை‘ என்று பொருள்.
யானையே மலையாக இருந்து எம்பெருமானைத் தாங்குவதால், வரதன் ‘ஹஸ்தீசன்’ – ‘யானைமலையரசன்‘.
மேலும் அஷ்டதிக்கஜங்கள் அவனை ஆராதித்ததனால் ‘ஹஸ்தீசன்‘.
ஹஸ்த நக்ஷத்ரத்தில் பிறந்ததினால் ‘ஹஸ்தீசன்’.. அனைவர்க்கும் வாரி வழங்குவதால் ‘ஹஸ்தீசன்’..
பின்னர் த்ரேதாயுகத்தில் முதலையால் கஷ்டமடைந்த யானையை மீட்டு பரதத்வ நிர்ணயம் –
வரதனைத் தவிர்த்து மற்றோர் தெய்வம் பரதைவமில்லை
இன்றும், தேவப் பெருமாள் ப்ரம்மோத்ஸவம் ஆறாம் திருநாள் மாலை புறப்பாட்டில்,
யானை மீது ஆரோகணித்து எழுந்தருளும் அழகு அவச்யம் சேவிக்க வேண்டியது.
அதில் யானை வாகனத்திற்குக் கால்கள் இல்லாமலிருப்பது ஓர் சிறப்பம்சம்
(முதலையால் இழுக்கப்பட்டுத் தண்ணீரில் கால்கள் மூழ்கியுள்ளதைக் காண்பிப்பதாக).
பர தத்வ நிர்ணயமாக ஏகாம்பரேச்வரர் திருக்கோயில் வாசலில் ஏசலும் நடைபெறுகிறது.
இதை யடி யொற்றியே ஏனைய விஷ்ணுவாலயங்களிலும் இவ் வழக்கம் இன்றளவும் பின்பற்றப் பட்டு வருகின்றது.
————-
பத்தி முதலாமவற்றில் பதி யெனக்குக் கூடாமல்
எத்திசையு முழன்றோடி இளைத்து விழும் காகம் போல்
முத்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி தன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே–– அடைக்கலப்பத்து (1), ஸ்ரீஸ்வாமி தேசிகன்
பகவத் ராமாநுஜர் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் ஸன்னிதியில் சரணாகதி செய்தாலும்,
அங்கும், அர்த்தி கல்பக, ஆபத்ஸக, ப்ரணதார்த்தி ஹர என்றே அநுஸந்தித்தார்.
அவரின் மறு அவதாரமான நம் ஸ்வாமி, வரதன் திருவடியில் நேரிடையாக சரணாகதி செய்து,
இதுவே மோக்ஷமெனும் பெரும் பயன் பெறும் வழியென்று காட்டினார்
இன்றைக்கும் இக்கலியில், தன் பக்தர்களுக்கு அபீஷ்டங்களை வாரி வழங்குபவனாக, ஸ்ரீஸ்வாமி சாதித்தபடி,
வாரண வெற்பின் மழை முகிலாகக், கேட்டதைக் காட்டிலும் அதிகமாகத் தருகிறான்.
மாம் மதீயம் ச நிகிலம் சேதனா சேதனாத்மகம் |
ஸ்வ கைங்கர்யோபகரணம் வரத ஸ்வீகுரு ஸ்வயம் ||–– ந்யாச தசகம் (7), ஸ்ரீ வேதாந்த தேசிகர்
———
ஸ்ரீமணவாளமாமுனிகள், தானருளிய ஸ்தோத்ரத்தில் குறிப்பிடுகிறார் :
ஸ்ரீகாஞ்சீ பூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபி பாஷிணே |
அதீத அர்ச்சா வ்யவஸ்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம் ||
——–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.