தப:ஸ்வாத்⁴யாயனிரதம்ʼ தபஸ்வீ வாக்³விதா³ம்ʼ வரம் |
நாரத³ம்ʼ பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் || 1.1.1 ||
வான்மீகி முனிவர் “தபஸ்”, “ஸ்வாத்யாயம்” என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார்.
அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள்.
எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று
தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது.
மற்றெல்லாவற்றிலும் “ருதம், சத்யம், தவம்” என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து
மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை.
ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஒரு ஒழுங்கு முறையை
வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம்.
சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும்,
தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.
“தபஸ்” என்ற சொல்லே “தப்” என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. “தப்” என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது.
அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது.
தவம் என்பது தீவிர அனுஷ்டானத்திற்கும், பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும் கடந்து இருப்பது.
தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மீகி முனிவரே உள்ளார்.
ஒரு யோகியும், ஞானியுமான வால்மீகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி,
நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி
அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது;
அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே
அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார்.
இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.
“ஸ்வாத்யாயம்” என்ற சொல்லில் “ஸ்வ” என்றும் “அத்யாய” என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன.
அதற்கு “சுயமாகவே கற்றுக் கொள்வது” என்று பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்து கொண்டாலும்,
மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ
அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய
ஒரு பாகமாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும்.
அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும்.
மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும்.
வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதை தனது வாழும் நெறியில் காட்டும் போது தான்
அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும்.
காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான்.
இதைத்தான் உபநிடதங்களும் “ஸ்வாத்யாய ப்ரவச்சநேச” என்று கூறுகிறது.
அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது.
கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும்.
“தத்தம் குல வேதத்தை அத்யயனம் செய்தல், பிரணவம்- சாவித்திரி முதலான பவித்ரமான மந்திரங்களை சபித்தல் ,
கீதை முதலான வீடுபேறு பற்றிய நூல்களை சரியான ஆசார்யனின் உதவியோடு படித்தல்” என்று பாரம்பர்ய விரிவுரையாளர்கள் விளக்குவர்.
ஆக வால்மீகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.
———
கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம்ʼ லோகே கு³ணவான் கஸ்²ச வீர்யவான் |
த⁴ர்மஜ்ஞஸ்²ச க்ருʼதஜ்ஞஸ்²ச ஸத்யவாக்யோ த்³ருʼட⁴வ்ரத: || 1.1.2 ||
சாரித்ரேண ச கோ யுக்த: ஸர்வபூ⁴தேஷு கோ ஹித: |
வித்³வான் க: க: ஸமர்த²ஸ்²ச கஸ்²சைகப்ரியத³ர்ஸ²ன: || 1.1.3 ||
ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ⁴ த்³யுதிமான் கோ (அ)நஸூயக: |
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச ஜாதரோஷஸ்ய ஸம்ʼயுகே³ || 1.1.4 ||
மா நிஷாத³ ப்ரதிஷ்டா²ம்ʼ த்வமக³மஸ்²ஸா²ஸ்²வதீஸ்ஸமா: |
யத்க்ரௌஞ்சமிது²னாதே³கமவதீ⁴: காமமோஹிதம் || 1.2.15 ||
நிஷாத³ – O! Fowler, ஏ! வேடனே!
த்வம் – you, நீ
யத் for which reason, எதற்காக
க்ரௌஞ்சமிது²னாத் – from the pair of krauncha birds, ஜோடி கிரௌஞ்சப் பறவைகளில்
காமமோஹிதம் – when they were infatuated by love, காதல் களியாட்டத்தின்போது
ஏகம் = one, ஒன்றை
அவதீ⁴: – have killed, கொன்றாய்
(தத் for that reason), அதனால்
ஸா²ஸ்²வதீ: permanently, எப்போதும்
ஸமா: for long years, பல காலமாக
ப்ரதிஷ்டா²ம்ʼ glorious, பெருமையுடன்
மா க³ம: you will never get, உனக்குக் கிட்டாது.
“ஏ! வேடனே! காதலுடன் களித்திருந்த ஒரு ஜோடி கிரௌஞ்சப் பறவைகளைப் பிரித்து,
ஒன்றைக் கொன்றப் பாதகச் செயலால் நீ வெகுநாட்கள் வாழமுடியாது போவாய்!”–என்று சபித்தார்.
——–
கீர்த்திமந்த: ப்ரணிஹிதா: யதா²வசனகாரிண: |
தேஜ: க்ஷமாயஸ²:ப்ராப்தா ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிண: || 1.7.6||
கீர்த்திமந்த: renowned, கீர்த்தியுடன்
ப்ரணிஹிதா: fixing their attention on their thoughts, எண்ணங்களில் கவனம் செலுத்துவோராக
யதா²வசனகாரிண: doing in accordance with word, சொல்வதைச் செய்வோராக
தேஜ:க்ஷமாயஸ²:ப்ராப்தா: possessing splendour forgiveness and fame, அழகும், புகழும், மன்னிக்கும் ஆற்றலும் கூடியோராக
ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிண: speaking with a smile, இன்முகத்துடன் பேசுவோராக.
க்ரோதா⁴த்காமார்த²ஹேதோர்வா ந ப்³ரூயுரன்ருʼதம்ʼ வச: … || 1.7.7||
க்ரோதா⁴த் either in anger, கோவத்தினாலோ
காமார்த²ஹேதோர்வா or for the reason of pecuniary gains or for desire, பேராசையினாலோ, பணம் சம்பாதிக்கும் நோக்கிலோ
அன்ருʼதம் untruth or unjust, நேர்மைக்கும், நீதிக்கும் புறம்பாகவோ
வச: word, வார்த்தைகளை
ந ப்³ரூயு: do not utter, சொல்லாதவர்கள்.
குஸ²லா வ்யவஹாரேஷு ஸௌஹ்ருʼதே³ஷு பரீக்ஷிதா: |
ப்ராப்தகாலம்ʼ து தே த³ண்ட³ம்ʼ தா⁴ரயேயுஸ்ஸுதேஷ்வபி || 1.7.8||
தே those ministers, அந்த அமைச்சர்கள்
வ்யவஹாரேஷு in their dealings, தங்கள் பொறுப்புகளில்
குஸ²லா: competent, தலை சிறந்தோர்
ஸௌஹ்ருʼதே³ஷு in friendship, நட்பு வட்டாரத்தில்
பரீக்ஷிதா: tested, சரி பார்த்து
ஸுதேஷ்வபி even in the matter of sons, தங்கள் மகன்கள் விஷயத்திலும்
ப்ராப்தகாலம் appropriately, தக்கதொரு
த³ண்ட³ம் punishment, தண்டனை
தா⁴ரயேயு: used to impose, வழங்க வேண்டி.
தத:ப்ரீதோ த்³விஜஸ்²ரேஷ்ட²ஸ்தான் ஸர்வானித³மப்³ரவீத் |
அவஜ்ஞயா ந தா³தவ்யம்ʼ கஸ்யசில்லீலயா(அ)பி வா|| 1.13.30||
அவஜ்ஞயா க்ருʼதம்ʼ ஹன்யாத்³தா³தாரம்ʼ நாத்ர ஸம்ʼஸ²ய:|
தத: then, அப்போது
ப்ரீத: pleased, திருப்திப்பட்டு
த்³விஜஸ்²ரேஷ்ட²: best among brahmins, அந்தண சீலரான (வசிஷ்டர்)
தான் ஸர்வான் addressing all of them, அவர்களைப் பார்த்து
இத³ம் these words, இந்த வார்த்தைகளை
அப்³ரவீத் said, சொன்னார்
கஸ்ய சித் to any one, எவருக்கும்
அவஜ்ஞயா with insult, அவமரியாதையுடன்
லீலயாபி வா or casually, ஏனோ தானோ என்று
ந தா³தவ்யம் should not be gifted, அளிக்கப்படக் கூடாது
அவஜ்ஞயா with contempt, வெறுப்புடன்
க்ருʼதம் done, செய்தல்
தா³தாரம் donor, கொடுப்பவனுக்கு
ஹன்யாத் destroys, அழிவு தரும்
அத்ர in this aspect, இது பற்றி
ஸம்ʼஸ²ய: ந no doubt, ஐயம் வேண்டாம்.
தானம் அளிக்கும்போது தானம் பெறுபவரை அவமதிக்கும்படியோ, அல்லது அதை ஒரு தமாஷாகவோ செய்யக்கூடாது.
அப்படி வேண்டா வெறுப்பாகச் செய்யும் எவனுக்கும் தானத்தினால் வரும் நன்மை கிடைக்காது;
மாறாக அவனுக்கு நிச்சயமாக அது அழிவு தரும்.
——–
கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா சந்த்⁴யா ப்ரவர்த்ததே |
உத்திஷ்ட² நரஸா²ர்தூல கர்த்தவ்யம் தை³வமாஹ்நிகம் ||
(ஆம், இது அனைவரும் அறிந்த வெங்கடேச சுப்ரபாதத்தில் வரும் தொடக்க வரிகள்தான்.
ஆனால், எத்தனை பேருக்கு இது வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்லோகம் என்று தெரிந்திருக்குமோ?)
கௌஸல்யா ஸுப்ரஜா: O! Beloved son of Kausalya, (a son by whom Kausalya became a blessed mother),
கௌசல்யாவின்செல்ல மகனான (ஒரு மகனால் ஆசீர்வதிக்கப்பட்ட கௌசல்யாவின்)
ராம O!Rama, ராமனே!
பூர்வா ஸந்த்⁴யா the day-break, வைகறைப் பொழுது
ப்ரவர்ததே is commencing, புலர்ந்து விட்டது
நரஸா²ர்தூ³ல O!Best among men, புருஷோத்தமனே
உத்திஷ்ட² awake (fromsleep), உறக்கத்திலிருந்து எழு
தை³வம் oblations to gods, தெய்வத்திற்குச் செய்யவேண்டிய
ஆஹ்னிகம் religious rite to be performed every day at a fixed hour, நித்ய கர்மானுஷ்டானங்கள்
கர்தவ்யம் are required to be done, செய்யப்படவேண்டி காத்திருக்கின்றன.
கௌசல்யையின் செல்ல மகனே! வைகறைப் பொழுது புலர்ந்து விட்டது. புருஷர்களில் உத்தமனே! விழித்துக் கொள்.
இன்று நீ ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
———
மனித முயற்சிக்கு அப்பால் உள்ளவைகளுக்கு திரிசங்கு ஆசைப்பட்டான்.
அதனால் இறைவனின் நியதிக்கு எதிராக அவன் செயல்பட்டான்.
அப்படி அவன் செய்ததன் வீணான வேலையை நொந்து அப்போது அவன் சொன்னது:
தை³வமேவ பரம்ʼ மன்யே பௌருஷம்ʼ து நிரர்த²கம்|| 1.58.22||
தை³வேனாக்ரம்யதே ஸர்வம்ʼ தை³வம்ʼ ஹி பரமா க³தி:|
தை³வமேவ destiny alone, தெய்வ நியதி ஒன்றே
பரம் is all-powerful, முடிவான ஒன்று
மன்யே I am thinking, எனக்குத் தெரிந்தவரை
பௌருஷம் து the effort of a man, மனித முயற்சி
நிரர்த²கம் is in vain, வீணானது
ஸர்வம் everything, எல்லாமே
தை³வேன by destiny,
ஆக்ரம்யதே is occupied,
தை³வம் destiny, விதி
பரமா supreme, முடிவானது
க³தி: ஹி way indeed, சரியான வழி
இறைவனது ஆளுமையின் முன் மனிதனின் முயற்சி வெல்லமுடியாது.
ஆதலால் இறைவனின் வழியைப் பின்பற்றிச் செல்வதே அறிவார்ந்த செயல். அது ஒன்றே சரியான வழி.
இறைவனின் நியதிப்படி செல்லாது அதனை எதிர்த்துத் தன் வழியே செல்ல முயன்ற திரிசங்கு தனக்கு மேலும்
துன்பங்களை வரவழைத்துக் கொண்டான். நம்மால் எதைச் செய்ய முடியுமோ
அதைச் செவ்வனே செய்வது ஒன்றே அறிவுடையவன் செயலாகும்.
———–
இயம்ʼ ஸீதா மம ஸுதா ஸஹத⁴ர்மசரீ தவ|
ப்ரதீச்ச² சைனாம்ʼ ப⁴த்³ரம்ʼ தே பாணிம்ʼ க்³ருʼஹ்ணீஷ்வ பாணினா|| 1.73.27||
மம my, எனது
ஸுதா daughter, மகள்
தவ your, உனது
ஸஹத⁴ர்மசரீ with you observing righteous deeds, உன்னுடன் தர்மகாரியங்களைச் செய்ய
ஸீதா Sita, சீதை
இயம் this girl, இந்தப் பெண்
ஏனாம் her, அவளை
ப்ரதீச்ச² ச accept, ஏற்றுக்கொள்
தே ப⁴த்³ரம் prosperity to you, உனக்கு மங்களம் உண்டாக
பாணிம் her hand, அவளது கைகளை
பாணினா with your hand, உனது கைகளால்
க்³ருʼஹ்ணீஷ்வ hold, பற்றிக்கொள்.
எனது மகளான இந்த சீதை உனது தர்மகாரியங்கள் மேலும் நன்கு தொடர உறுதுணையாய் இருப்பாள்.
மங்களமே உங்களுக்கு உண்டாகட்டும். அவள் கையைப் பிடித்து ஏற்றுக்கொள்.
பதிவ்ரதா மஹாபா⁴கா³ சா²யேவானுக³தா ஸதா³|
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத்³ராஜா மந்த்ரபூதம்ʼ ஜலம்ʼ ததா³|| 1.73.28||
மஹாபா⁴கா³ highly fortunate, பாக்கியசாலியான
பதிவ்ரதா devoted, faithful and loyal wife, பக்தி, நேர்மை, நன்றியுடன் கூடிய மனைவி
ஸதா³ always, எப்பொழுதும்
சா²யா இவ like shadow, நிழலைப்போல
அனுக³தா follows, தொடர்வது
இதி thus, இப்படியாக
உக்த்வா having spoken, சொல்லிவிட்டு
ராஜா king, அரசன்
ததா³ then, அப்போது
மந்த்ரபூதம் sanctified with mantra, மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட
ஜலம் water, நீரால்
ப்ராக்ஷிபத் released, வார்த்தார்.
பக்தியுடனும், நன்றியுடனும், நேர்மையுடனும் உன்னுடன் வாழப்போகும் இந்தப் பாக்கியசாலியான சீதா
உன்னை எப்போதும் நிழல்போலத் தொடரட்டும், என்றிவ்வாறு மந்திரங்களுடன் சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அல்லவா?
வால்மீகியின் இலக்கணப்படி ஒரு நல்ல மனைவி என்பவள்
கணவனுக்கு இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு,
எப்போதும் உறுதுணையாக இருந்து தோள் கொடுக்கும் ஒரு நல்ல தோழியாவாள்.
———
நாஹமர்த²பரோ தே³வி! லோகமாவஸ்துமுத்ஸஹே |
வித்³தி⁴மாம்ருʼஷிபி⁴ஸ்துல்யம்ʼ கேவலம்ʼ த⁴ர்மமாஸ்தி²தம்|| 2.19.20||
தே³வி O devi, தேவி
அஹம் I, நான்
அர்த²பர: interested in wealth, செல்வத்தில் விருப்பம் கொண்டவனாக
ந not, இல்லை
லோகம் this world, இந்த உலகில்
ஆவஸ்தும் to follow, பின்பற்றி
உத்ஸஹே am striving, முயற்சி செய்கிறேன்
கேவலம் only, மட்டும்
த⁴ர்மம் righteousness, தர்மம்
ஆஸ்தி²தம் devoted to, முதன்மையாக
மாம் me, என்னை
ருʼஷிபி⁴: with ascetics, தபஸ்விகளோடு
துல்யம் similar, ஒன்றாக
வித்³தி⁴ you may know, தெரிந்து கொள்.
தேவி, செல்வத்திற்காக இந்த உலகில் வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்குக் கிடையாது.
தர்ம சிந்தனை ஒன்றே குறிக்கோளாக வாழும் தவச் சீலர்களுக்கு ஒப்பானவன் நான், இதைத் தெரிந்து கொள்.
——–
அஹம்ʼ தாவன்மஹாராஜே பித்ருʼத்வம்ʼ நோபலக்ஷ்யே|
ப்⁴ராதா ப⁴ர்தா ச ப³ந்து⁴ஸ்²ச பிதா ச மம ராக⁴வ:|| 2.58.31||
அஹம் I,
மஹாராஜே in that great king, அந்தப் பேரரசரான
பித்ருʼத்வம் fatherhood, தந்தைப் பதவி
நோபலக்ஷ்யே I do not see, நான் கருதவில்லை
மம to me, எனக்கு
ராக⁴வ: Rama alone, ராமன் ஒருவனே
ப்⁴ராதா ச brother, சகோதரன்
ப⁴ர்தாச also protector, காப்பாளனும்
ப³ந்து⁴ஸ்²ச friend, தோழன்
பிதா father, தந்தை.
அந்தப் பேரரசரான தசரதரை என் தந்தையாக நான் கருதவில்லை.
ராமன் ஒருவனே எனது சகோதரன், காப்பாளன், தோழன், மற்றும் தந்தை.
—————
தம்ʼ ப்ரேக்ஷ்ய ப⁴ரத: க்ருத்³த⁴ம்ʼ ஸ²த்ருக்⁴னமித³மப்³ரவீத்|
அவத்⁴யா ஸ்ஸர்வபூ⁴தானாம்ʼ ப்ரமதா³: க்ஷம்யதாமிதி|| 2.78.21||
ப⁴ரத: Bharata, பரதன்
க்ருத்³த⁴ம் enraged one, கோபத்தில் இருந்தவன்
தம் ஸ²த்ருக்⁴னம் addressing that Satrugna, சத்ருக்னனைப் பார்த்து
இத³ம் these words, இந்த வார்த்தைகளை
அப்³ரவீத் said, சொன்னான்
ப்ரமதா³: women, பெண்மணிகள்
ஸர்வபூ⁴தானாம் in all beings, எந்த சீவராசியிலும்
அவத்⁴யா: should not be killed, கொல்லப்படக் கூடாது க்
ஷம்யதாம் may be pardoned, மன்னித்து விடலாம்.
கோபத்தில் இருந்த சத்ருக்னனைப் பார்த்து பரதன்
“எந்தப் பெண்மணியையும் கொல்லக் கூடாது, அவளை மன்னித்துவிடு” என்றான்.
—————-
ஏழையானாலும், செல்வந்தன் ஆனாலும் எப்போதும் கணவனுடனேயே இருப்பேன் என்று திருமணம் புரிந்து
கொள்ளும்போது செய்த சத்தியத்திற்கு ஏற்ப, நாடானாலும் காடானாலும் இராமருடன் தங்கி வாழும் சீதையின்
முடிவை வரவேற்று அனசுயா பெருமையாகப் பேசினாள்.
அவருத்³த⁴ம்ʼ வனே ராமம்ʼ தி³ஷ்ட்யா த்வமனுக³ச்ச²ஸி|| 2.117.21||
நக³ரஸ்தோ² வனஸ்தோ² வா பாபோ வா யதி³ வா ஸு²ப⁴:| …. 2.177.22||
த்வம் = you, நீ
தி³ஷ்ட்யா = with the grace of heaven, தேவர்களின் கருணையால்
வனே = in the forest, காட்டுக்குள்
அவருத்³த³ம் =constrained, குறுகிய
ராமம் = Rama,
அனுக³ச்ச²ஸி = you are also following, நீயும் வந்துள்ளாய்,
நக³ரஸ்த²: = in the city, நகரத்திலோ
வனஸ்தோ² வா = or in the forest, காட்டிலோ
பாபோ வா = or sinful, பாவமோ,
யதி³ வா = or அல்லது ,
ஸு²ப⁴: = virtuous, புண்ணியமோ.
(வருவது) நாடோ, காடோ, பாவமோ அல்லது புண்ணியமோ, ( உனது என்பதையெல்லாம் ) விட்டுவிட்டு
தேவர்களின் கருணையால் நீ இராமருடன் காட்டுக்குள் வந்துள்ளாய்.
————–
அவர் கைகேயிப் பற்றித் தாறுமாறாகப் பேசாதே என்று லக்ஷ்மணனைக் கோபித்துக் கொண்டார்.
ஸ தே(அ)ம்பா³ மத்⁴யமா தாத க³ர்ஹிதவ்யா கத²ஞ்சன|
தாமேவேக்ஷ்வாகுனாத²ஸ்ய ப⁴ரதஸ்ய கதா²ம்ʼ குரு|| 3.16.37||
தாத = dear, அன்பார்ந்த
மத்⁴யமா = middle, நடு
(அ)ம்பா³ = mother, தாயார்
கத²ஞ்சன = somehow, கண்டபடி
தே = to you, உனக்கு
ந க³ர்ஹிதவ்யா = not to be criticized, குறைகூறக் கூடாது
இக்ஷ்வாகுனாத²ஸ்ய = of the lord of Ikshvaku, இஷ்வாகு குல அரசனனைப் பற்றி
ப⁴ரதஸ்ய = Bharata’s, பரதனைப்
தாம் கதா²மேவே = about him, அவனைப் பற்றி
குரு = you may, பேசலாம்.
அன்பார்ந்த லக்ஷ்மணா! நம் சிறிய தாயார் கைகேயியைப் பற்றிக் கண்டபடி குறைகூறி எப்போதுமே பேசாதே.
இஷ்வாகு குல அரசனான பரதனைப் பற்றி நீ பேசலாம்.
ஒருவரைப் பற்றிப் புகழும்போது மற்றவரை மட்டம் தட்டிப் பேசுவது ஒரு அருவருக்கத்தக்க செயல்.
இங்கு இராமர் சொல்வதும், “யாரைப் பற்றியும் எப்போதும் இகழ்ந்து பேசக் கூடாது” என்பதாகும்.
—–
உத்தரம்ʼ நோத்ஸஹே வக்தும்ʼ தை³வதம்ʼ ப⁴வதீ மம|| 3.45.28||
வாக்யமப்ரதிரூபம்ʼ து ந சித்ரம்ʼ ஸ்த்ரீஷு மைதி²லி|
ஸ்வபா⁴வஸ்த்வேஷ நாரீணாமேவம்ʼ லோகேஷு த்³ருʼஸ்²யதே|| 3.45.29||
மைதி²லி = Mythili, மைதிலி!
உத்தரம் = reply, பதில்
வக்தும் = tell, சொல்
நோத்ஸஹே = not intending, உத்தேசம் இல்லை
ப⁴வதீ = yourself, தாங்கள்
மம = for me, எனக்கு
தை³வதம் = deity, தெய்வம்
அப்ரதிரூபம் = unworthy, வேண்டத் தகாத
வாக்யம் = word, வார்த்தைகள்
ஸ்த்ரீஷு = among women, பெண்களிடம்
சித்ரம் = wonder, ஆச்சரியமாக
ந = not, இல்லை
ஏஷ: = such, அது
நாரீணாம் = womens’, பெண்களின்
ஸ்வபா⁴வஸ்த் = nature, இயற்கை
லோகேஷு = in the world, இந்த உலகில்
ஏவம் = likewise, அதே போல
த்³ருʼஸ்²யதே is seen, பார்க்கப்படுகிறது
மைதிலி! உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. என்னைப் பொறுத்தவரை
தாங்கள் பூசிக்கவேண்டிய தெய்வத்தின் அம்சம். நீங்கள் பேசிய வேண்டத் தகாத வார்த்தைகள் போன்றதைப்
பெண்களிடம் எதிர்பார்ப்பது இயற்கையே என்பதால், அதை நான் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இல்லை.
——-
ததோ(அ)க்³னிம்ʼ தீ³ப்யமானம்ʼ தௌ சக்ரதுஸ்²ச ப்ரத³க்ஷிணம்|| 4.5.15||
ஸுக்³ரீவோ ராக⁴வஸ்²சைவ வயஸ்யத்வமுபாக³தௌ|
தத: = then, அப்போதே
தௌ = both of them, அவர்கள் இருவரும்
தீ³ப்யமானம் = blazing, எரியும்
அக்³னிம் = fire, அக்னி
ப்ரத³க்ஷிணம் சக்த: = went round in great reverence, சகல மரியாதைகளுடன் சுற்றிவந்தார்கள்
ஸுக்³ரீவ: = Sugriva, சுக்ரீவன்
ராக⁴வஸ்²சைவ = and Raghava also, இராமரும்
வயஸ்யத்வம் = friendship, நட்பை
உபாக³தௌ = both established, உறுதி செய்துகொண்டார்கள்.
உடனே அவர்கள் இருவரும் அக்னி வளர்த்து, அதனை சகல மரியாதைகளுடன் சுற்றிவந்தார்கள்.
இப்படியாக இராமரும், சுக்ரீவனும் தங்கள் நட்பை பண்டைய வழக்கப்படி உறுதி செய்துகொண்டார்கள்.
———–
சிறப்பு கொண்ட மழைக் காலத்து வனப்புகளை வால்மீகியும் எதுவும் சொல்லாது விட்டு விடுவாரா?
வானில் விரியும் நிறங்களும், பறவைகள் எழுப்பும் இசைக் கூவலும், வண்டுகளின் ரீங்காரமும்,
மிருகங்களின் களியாட்டமும் வானிலிருந்து விழும் மழை நீரைப் பார்த்ததும் நடக்கும் ஒத்திகை பார்க்காத
இயற்கை நாடகங்கள். கிஷ்கிந்தா காண்டத்தில் வால்மீகியின் வர்ணனையைப் பற்றித் தெரிந்துகொள்ள,
அதன் 28-வது அத்தியாயத்தில் உள்ள 66 செய்யுட்களில் மாதிரிக்கு ஒன்று என்று கீழே 36-வது செய்யுளைப் பார்ப்போம்.
ஷட்பாத³தந்த்ரீமது⁴ராபி⁴தா⁴னம்ʼ ப்லவங்க³மோதீ³ரிதகண்ட²தாலம்|
ஆவிஷ்க்ருʼதம்ʼ மேக⁴ம்ருʼத³ங்க³னாதை³ர்வனேஷு ஸங்கீ³தமிவ ப்ரவ்ருʼத்தம்|| 4.28.36||
வனேஷு – in the forest, காட்டினில்
ஷட்பாத³தந்த்ரீமது⁴ராபி⁴தா⁴னம் – the sweet humming sounds of bees like the music of string instruments,
ரீங்கரிக்கும் வண்டுகளின் இனிய ஓசை தந்திக் கருவிகளின் இசை போல
ப்லவங்க³மோதீ³ரிதகண்ட²தாலம் – the noises of frogs sounding like the beating of trumpets to keep
the rhythm with the beating of drums of thunder clouds,
இடிஇடிக்கும் மேள ஓசைக்கு ஒத்தாக துந்துபியின் பிளிறல் போல் தவளைகளின் கத்தலும்
மேக⁴ம்ருʼத³ங்க³னாதை³: – sounds of clouds like the sounding like the beating of drums,
மேகங்கள் ஊடே வரும் இடியின் ஓசை மேளம் கொட்டுதல் போலவும்
ஆவிஷ்க்ருʼதம் – manifested, காணப்பட்டன
ஸங்கீ³தம் – musical event, இன்னிசைக் கச்சேரி
ப்ரவ்ருʼத்தம் இவ – as if commenced, தொடங்கியது போல
(இந்த வால்மீகியின் ஸ்லோகத்திற்கு மூல ஆசிரியர் எழுதியிருக்கும் ஆங்கிலக் கவிதையையும் தந்து,
அதனால் எனக்குள் ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியையும் அதன் கீழே தமிழில் வரைந்திருக்கிறேன். கவிஞர்கள் மன்னிப்பாராக.)
The buzzing bees hummed and sang
Like the tunes, one plays on strings
Frogs in ponds and paddy fields
Croaked and chorused rhythmic beats
Clouds from distant mountains tops
Drum like boomed their thunderous noise
That was the concert monsoon gave
To Rama and his brother in Prasravana cave
ர்ர்ர்ரர்… என்று சுற்றிச் சுழலும் வண்டுகள் ரீங்கரிக்கும் ஓசைதான் யாழினின்று வரும் நாதமோ?
கிர்..கிர்..கிர்… என்று வயலிலும் குளக்கரையிலும் கத்தும் தவளைகள் அதற்குத் தரும் தாளமோ?
மலை உச்சியைத் தவழும் மேகங்களின் உரசலால் ஒளிரும் இடிதான் காது பிளக்கும் மேளமோ?
இவைதான் பிரஸ்ரவண மலைக் குகைவாசிக்கு இயற்கை தரும் இன்னிசை ஜாலமோ?
——————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply