ஸ்ரீ வெங்கதிரோன் குலம் –/ ஸ்ரீ சந்திர குலம்–

ஓம் தாசரதாய வித்மஹே
சீதாவல்லபாய தீமஹி
தன்னோ ராம ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷண ஹரே கிருஷண கிருஷண கிருஷண ஹரே ஹரே

சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:
தசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:

சித்திரை மாதத்தில் சுக்கிலபட்சத்தில் நவமி திதியில் மத்தியான நேரத்தில்,
ரகு குலத்தில் ராவணனை வதை செய்ய சாக்ஷாத் விஷ்ணுவானவர் ராமராக தோன்றினார்.

——-

ஸ்ரீ வெங்கதிரோன் குலம் —
சூரிய குலம் என்று காசியப முனிவருக்கும் அதிதீ தேவிக்கும் பிறந்த
விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனின் வம்சாவளிகளை குறிப்பிடுகின்றனர் .
சூரியனுக்கும் சந்தியா தேவிக்கும் வைவஸ்தமனு என்ற மகன் பிறந்தார் -இவர் தான் மனுஸ்மிதிரியை இயற்றியவர்.
விவஸ்வான் என்கிற சூரியன் முதல் மனிதனாக அறியப் பெறுகிறார்.
இவருடைய பெயரனான இச்வாகுவின் வழி வந்த அரச வம்சம் சூரிய குலமாக அறியப்பெறுகிறது.

இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் புகழ்பெற்றவர்கள்.
மகாபாரதப் போரில் பிரகதபாலன் என்பவரை அபிமன்யு கொல்ல இவ்வம்சம் அழிந்ததாக கூறுகின்றனர்.
சிலர் இவ்வம்சத்தில் மருத் என்பவர் பிழைத்து அவரால் வம்சம் தளைத்ததாகவும் நம்புவதுண்டு.

ஸ்ரீ ரகு வம்சம்
சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும்,
தசரதனின் தாத்தாவான ரகு என்பவரின் வம்சம் என அடையாளம் செய்ய ரகு வம்சம் என்று
அழைக்கப்படுக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

வம்ச பட்டியல்
1-சூரியன்
2-வைவஸ்தமனு
3-இச்வாகு

பிரம்மா-மரீசி-காஷ்யப்பர்-விவஸ்வான்(சூரியன்–ரகு)-வைவஸ்வதமனு-இக்ஷ்வாகு(அயோத்தியை நிருவியவர்)
இஷ்வாகு –கரும்பு போன்ற வில்லை ஏந்தி -சஸ்திரம் ஏந்தி பிரஜைகளை ரக்ஷணம் செய்ய வல்லவர் –

இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவா நஹமவ்யயம்|
விவஸ்வாந் மநவே ப்ராஹ மநு இக்ஷ்வாகவே ப்ரவீத் || கீதை 4-1||

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச்(சூரியன்) சொன்னேன்.
விவஸ்வான் (வைவஸ்வத) மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகுக்குக் கூறினான்

4-விகுட்சன்
5-புரஞ்சயன்
6-அனநேசு
7-பிருது
8-சாவஷ்தி
9-குவலயாசுவன்
10-யுவனாசுவன்
11-மாந்தாதா–இவனுக்கு 50 பெண்கள் -சவ்பரி சரிதம்
12-அம்பரீஷன்
13-புருகுச்சன்
14-திரிசங்கு – புருகுச்சன் பேரன்

குக்ஷி-விகுக்ஷி-பான்-அன்ரன்யா-ப்ருது-த்ரிஷங்கு(விஸ்வாமித்ரர் ஸ்வர்கம்)அரிச்சந்திரன்-ரோஹிதன்-பாகுகன்

மனித முயற்சிக்கு அப்பால் உள்ளவைகளுக்கு திரிசங்கு ஆசைப்பட்டான்.
அதனால் இறைவனின் நியதிக்கு எதிராக அவன் செயல்பட்டான்.
அப்படி அவன் செய்ததன் வீணான வேலையை நொந்து அப்போது அவன் சொன்னது:

தை³வமேவ பரம்ʼ மன்யே பௌருஷம்ʼ து நிரர்த²கம்|| 1.58.22||
தை³வேனாக்ரம்யதே ஸர்வம்ʼ தை³வம்ʼ ஹி பரமா க³தி:|

தை³வமேவ destiny alone, தெய்வ நியதி ஒன்றே
பரம் is all-powerful, முடிவான ஒன்று
மன்யே I am thinking, எனக்குத் தெரிந்தவரை
பௌருஷம் து the effort of a man, மனித முயற்சி
நிரர்த²கம் is in vain, வீணானது
ஸர்வம் everything, எல்லாமே
தை³வேன by destiny,
ஆக்ரம்யதே is occupied,
தை³வம் destiny, விதி
பரமா supreme, முடிவானது
க³தி: ஹி way indeed, சரியான வழி

இறைவனது ஆளுமையின் முன் மனிதனின் முயற்சி வெல்லமுடியாது.
ஆதலால் இறைவனின் வழியைப் பின்பற்றிச் செல்வதே அறிவார்ந்த செயல். அது ஒன்றே சரியான வழி.

இறைவனின் நியதிப்படி செல்லாது அதனை எதிர்த்துத் தன் வழியே செல்ல முயன்ற திரிசங்கு
தனக்கு மேலும் துன்பங்களை வரவழைத்துக் கொண்டான்.
நம்மால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செவ்வனே செய்வது ஒன்றே அறிவுடையவன் செயலாகும்.

15-அரிச்சந்திரன் – திரிசங்கின் மகன்
16-ரோஹிதன்
17-பாகுகன் -ரோஹிதன் பரம்பரை
18-சகரன்– ஸாகரம் -இவன் பெயரால்
19-அசமஞ்சன்
20-அம்சுமான்
21-பகீரதன்-மா முனி கொணர்ந்த கங்கை
22-அஸ்தமகன்
23-மூலகன்
24-கட்வாங்கன்-ஒரே முஹூர்த்தம் -பராங்கதி கண்டு கொண்டாரே -சுகர் பரிக்ஷித்துக்கு சொல்லிய வ்ருத்தாந்தம்
25-தீர்கபாகு

26-ரகு – தசரதனின் தாத்தா– ராகவன் இவன் பெயராலேயே
லகு ரகு -தளம் தடம் பணம் படம் போல் -எளிது
தந்தையான திலீபன் இவருக்கு பெயர் சூட்ட –கல்வி கேள்வி சுருதி அந்தம் அடையட்டும் -சிறந்து விளங்கட்டும்
ஷத்ரியன் யுத்தம் அந்தம் பார்க்கட்டும் என்று பெயர்
அம்மா ஸூ தக்ஷிணா –
ரகுவம்சம் காளிதாசர் பிரசித்தம்
ரகு ராக்ஷஸ சம்வாதம் பிரசித்தம் -அஜனுக்கு அரசு கொடுத்து காட்டில் தபஸ் -அந்தணன் வந்து ரக்ஷிக்க வேண்டி வர –சரணாகத ரக்ஷணம்
என் உணவை பறித்தாய் என்ன -என்னை வேண்டுமானால் கொள் —

27-அஜன் -தசரதனின் தந்தை
இந்து மதி இவரது தர்ம பத்னி
பூ மாலை மேல் விழுந்து இறக்க
வசிஷ்டர் -தேவ மாதா -உன் மேல் பூ மாரி விழுந்து சாப விமோசனம் பெற்றாள் -என்றார்

28-தசரதன்-60000 ஆண்டுகள் -ரிஷி சாபம் -ஓசை வந்த திக்கில் அம்பை பிரயோகம் செய்து –
சாந்தா மகள்-ரிஷ்ய சிங்கர் தர்ம பத்னி என்றும் சொல்வர்

29-இராமர்

துந்துமார்-விகுட்சன்-புரஞ்சயன்-அனநேசு-பிருது-சாவஷ்தி-குவலயாசுவன்-யுவனஷ்வா-மாந்தாதா-சுசந்தி-
துவசந்தி-பரத்-அஸித்-ஸாகரன்-அஸமஞ்சன்-அன்ஷுமான்-திலீபன்-பாகீரதன் (கங்கை-பூலோகம்)
அஸ்தமகன்-மூலகன்-தசரதன்-கட்வாங்கன்-தீர்கபாகு-காகுஸ்தன்-ரகு-ப்ரவ்ருத்-ஷம்கன்-
ஸூதர்ஷன்-அக்னிவர்மன்-சிஹ்ராக்-மேரு-பரஷுக்ஷுக்-அம்பரீஷன்-புருகுச்சன்-நகுஷன்-யயாதி-நபாங்-
அஜன்-தஸரதன்–ராமன்–லவன் மற்றும் குசன்.

இராமருக்கு – லவன், குசன்
லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது,
பரதனுக்கு தட்சன், புஷ்கரன்,
சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன்

லவன்
குசன்
அதிதி நிஷதன் நபன் புண்டரீகன் ஷேமதர்மா
இரணியநாபன்
புஷ்யன்
பிரகதபாலன்

தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும்
இந்து மத புராணங்களோ சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன
ஆனால் கலிங்கத்துப்பரணியில் வரும் சோழர் வம்ச வர்ணனை சோழர்களின் முன்னோர்களாக
சூர்ய வம்ச மன்னர்களையே குறிப்பிடுகின்றன.

———-

பிரம்மா
|
பிரம்மாவின் மகன் மரீசி
மரீசியின் மகன் காஸ்யபர்
காஸ்யபர் மகன் விவஸ்வான்(சூரியன்)
விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு
வைவஸ்வத மனு மகன் இஸ்வாகு (இவர்தான் அயோத்தியை உருவாக்கினார்).
இஸ்வாகு மகன் குக்ஷி.
குக்ஷி மகன் விகுக்ஷி
விகுக்ஷி மகன் பானன்
பானன் மகன் அனரன்யன்
அனரன்யன் மகன் பிருது
பிருது மகன் திரிசங்கு (இவருக்காகத் தான் விஸ்வாமித்திரர் சொர்க்கம் படைத்தார்)
திரிசங்கு மகன் துந்துமாரன்
துந்துமாரன் மகன் யுவனஷ்வன்
யுவனஷ்வன் மகன் மாந்தாதா
மாந்தாதா மகன் சுசந்தி
சுசந்தி மகன் துவசந்தி மற்றும் பிரசந்ஜித்
துவசந்தி மகன் பரதன்
பரதன் மகன் அஸித்
அஸித் மகன் சகரன்
சகரன் மகன் அசமஞ்சன்
அசமஞ்சன் மகன் அம்சுமான்
அம்சுமான் மகன் திலீபன்
திலீபன் மகன் பகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)
பகீரதன் மகன் காகுஸ்தன்
காகுஸ்தன் மகன் ரகு(காளிதாசன் ரகுவம்சமே)
ரகு மகன் பிரவர்த்தன்
பிரவர்த்தன் மகன் ஷங்கனன்
ஷங்கனன் மகன் சுதர்ஷன்
சுதர்ஷன் மகன் அக்னிவர்னன்
அக்னிவர்னன் மகன் சீக்ரகன்
சீக்ரகன் மகன் மேரு
மேரு மகன் பிரகஷ்ருகன்
பிரகஷ்ருகன் மகன் அம்பரீஷன்
அம்பரீஷன் மகன் நகுஷன்
நகுஷன் மகன் யயாதி
யயாதி மகன் நபாகன்
நபாகன் மகன் அஜன்
அஜன் மகன் தசரதன்
தசரதன் மகன்கள்ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன்

ராமன் மகன்கள் லவன் மற்றும் குசன். பரதன் மகன்கள் தஷகன் மற்றும் புஷ்கலன்.
லட்சுமணன் மகன்கள் அங்கதன்,சந்திரகேது.
சத்துருகனன் மகன்கள் சுபாகு,சூரசேனன்.
குசன் மகன் அதிதி
அதிதி மகன் புண்டரீகன்
புண்டரீகன் மகன் ஷேமதனுவா
தேவானீகன்
அகீனரு
குரு
பாரியாத்திரன்
பலன்
சலன்
உற்தன்
வச்சிரநாபன்
சங்கணன்
வியுஷிதாசுவன்
விசுவயஹன்
ஹிரண்யநாபன்
தனமன்
துருவசந்தி
சுதரிசன்
அக்னிவர்ணன்
சீக்கிரகன்
மரு(இவரே அடுத்து வரும் கிருத யுகத்தின் சூரிய வம்சத்தில் முதல் மன்னன் ஆவார்).
பிரசுசுரன்
சுசந்தி
அமர்ஷன்
ஸஹஹ்வான்
விசுவபவன
பிரகத்பலன்(இவரே சக்கர வியூகத்தில் அபிமன்யுவை எதிர்த்த 6 மகாரதர்களில் ஒருவராவார்.அபிமன்யுவால் கொல்லப்படுவார்.

இன்னும் பல…
ஆதாரம் :வால்மீகி இராமாயணம் அயோதியா காண்டம் சர்கம் 110 மற்றும் ஸ்ரீ விஷ்ணு புராணம்.

—————–

சந்திர குலம் அல்லது சந்திர வம்சம் என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும்.
வைணவர்களின் கடவுளான திருமால் சந்திர குலமான யது குலத்தில்
கிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சந்திர குலத் தோற்றம்
சந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அது புரூரவ சரிதை என்னும் நூலில் உள்ளது.
பிரகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள்.
வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிச் சென்றபோது ஒரு காட்டை அடைந்தான்.
அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது.
அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.

தேவ மகளிர் நீராடினர். அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘கேசி’ என்பவன் கவர்ந்துச் சென்றான்.
மகளிர் அலறினர். புரூரவன் ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான்.
தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்துவிட்டான்.

ஊர்வசி தேவலோகம் மீள வழி கேட்டாள்.
ஆடை இல்லாத நிலையில் புரூரவனைப் பார்க்க நேர்ந்தால் திரும்பலாம் என இந்திரன் வரமளித்தான்.
ஒருநாள் புரூரவன் ஊர்வசியோடு உறவு கொண்டிருக்கும் வேளையில் புரூரவனின் ஆடையைக் கவர்ந்து
வருமாறு இந்திரன் கந்தர்வர்களை அனுப்பினான். அவர்களும் அதனைச் செய்தனர்.
புரூரவன் தன் ஆடையை மீட்டுவரப் புறப்பட்டான். அப்போது ஒரு மின்னல்.
ஊர்வசி புரூரவனை அம்மணத்தில் பார்த்துவிட்டாள். உடனே தேவலோகம் சென்றுவிட்டாள்.

தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக் கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது.
இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள்.
புரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான்.
பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’.
இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.

சந்திர குல அரசர்கள்
தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும்
இந்து மத புராணங்களோ சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன.
தமிழக மூவேந்தர்கள் பின்வருமாறு அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளனர்.

சந்திர வம்சம்
சந்திரன்
புரூரவன்
ஆயு, தீமந்தன், அமவசு, சிராயு (தசதாயு),சுருதாயு (வசுமந்தன்)
இவர்களுள் ஆயுவின் மக்கள் ரஜி, அரம்பன், நகுஷன், க்ஷத்ர விருதன்,அநேநஸ்
இவர்களுள் நகுஷனுடைய மக்கள் உத்தபன், ஆயதி, யயாதி, யதி, சம்யாதி
துரஸ்வன்
வக்ரி
கோபானன்
காந்தன்
துர்யசித்தன்
குரு
துஷ்யந்தன்
பரதன்
பிரதிபன்
சாந்தனு
பீஷ்மர்
சித்திராங்கதன்
விசித்திரவீரியன்
விதுரன்
திருதராட்டிரன்
பாண்டு
விதுரன்
பாண்டவர்
கௌரவர்
அபிமன்யு
பரீட்சித்து
ஜனமேஜயன்
மூவேந்தர் சோழனைச் சூரிய குலம் என்றும்,
பாண்டியனைச் சந்திர குலம் என்றும்,
சேரனை அக்கினிக் குலம் என்றும் கொள்கின்றனர்

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

2 Responses to “ஸ்ரீ வெங்கதிரோன் குலம் –/ ஸ்ரீ சந்திர குலம்–”

  1. Vil Says:

    சூரிய, சந்திர மற்றும் நெருப்பு வம்சங்களின் திராவிட தோற்றம்

    வட திராவிட குலங்கள்
    1. பாணா, பில், மீனா
    பாணா, பில் மற்றும் மீனா ஆகியோர் திராவிட வில்லவர் மீனவர் குலங்களின் வடக்கு உறவினர்கள் ஆவர்.

    2. இயக்கர்
    இயக்கர் இலங்கையை காலனித்துவப்படுத்திய வட இந்திய திராவிட குலத்தவர். இயக்கர். கிபி 500 க்குப் பிறகு கேரளாவுக்குச் சென்றனர், மேலும் அவர்கள் ஈழவர் என்றும் அவர்களின் பிரபுத்துவம் இயக்கர் அல்லது யக்கர் என்றும் அறியப்பட்டது.

    3. கோண்ட் குலம்
    கோண்ட்டு குலங்கள் மத்திய மற்றும் வட இந்தியாவை ஆட்சி செய்தனர் மற்றும் அவர்களின் நாடு கோண்ட்வானா இராச்சியம் என்று அறியப்பட்டது. அவர்கள் சந்திராபூரில் தலைநகரைக் கொண்டிருந்தனர் மற்றும் அவர்களின் மன்னர்களுக்கு சாந்தா அல்லது சாண்டேலா என்ற பட்டம் இருந்தது

    இயக்கர்

    இயக்கர் என்பவர் பண்டைய வட இந்தியாவை ஆண்ட வட திராவிட மக்களின் பழங்குடியினர். இயக்கர், தமிழகத்தை ஆண்ட வில்லவர் குலத்திலிருந்து வேறுபட்டவர்கள்.

    இயக்கர், யக்கர், இக்ஷா, யக்ஷா, ராக்ஷஷா, ஹெல ஈழா போன்ற பெயர்களாலும் அறியப்பட்டவர்கள். இராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவன். இயக்கர் அரசர்களின் பட்டப்பெயர் வாகு அல்லது பாகு.

    ராவணன் கடைசியாக புகழ்பெற்ற இயக்க மன்னர். ராவணனின் தந்தை விஸ்ரவன். விஷ்ரவா புலஸ்தியரின் மகன் மற்றும் கிமு ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புகழ்பெற்ற முனிவர் அகஸ்திய முனியின் சகோதரர் ஆவார். அகஸ்தியர் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதினார். பொதிகை மலையில் தங்கியிருந்த அகத்தியர் வில்லவ நாடார்களின் ஆசிரியராக இருந்தார்.

    வில்லவர் மற்றும் பாணர் வம்சங்கள்

    வில்லவர் மற்றும் பாணர் குலங்கள் இந்தியாவின் பூர்வீக ஆட்சி குலங்கள். வில்லவர் மற்றும் அவர்களது வடக்கு உறவினர்களான பாணர் ஆகியோர் அசுர மன்னன் மகாபலியின் வம்சாவளியைக் கூறினர். வட இந்தியா பாணர்-பில்-மீனா குலங்களால் ஆளப்பட்டது. தென்னிந்தியாவை வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் போன்ற வில்லவர்-நாடாள்வார் வம்சத்தின் பல்வேறு துணைக்குழுக்கள் ஆட்சி செய்தன. வில்லவர் சேர, சோழ, பாண்டிய வம்சங்களை நிறுவினார். எல்லா வில்லவர் குலங்களின் இணைப்புக்குப் பிறகு நாடார் அல்லது நாடாள்வார் குலங்கள் தோன்றின.

    சூரிய சந்திர வம்சத்தின் பாண்டியன் தோற்றம்

    திராவிட பாண்டிய மன்னன் ஷ்ரத்த தேவா மனு சூரிய வம்சத்தை நிறுவினார். கிமு 1800 இல் ஒரு சுனாமியால் ஏற்பட்டிருக்கக்கூடிய இரண்டாவது பிரளயத்திற்குப் பிறகு, பாண்டிய தலைநகர் கபாடபுரம் வெள்ளத்தில் மூழ்கியது. ஷ்ரத்தா தேவ மனு ஆரிய பதிவுகளில் வைவஸ்வத மனுவாகவும் அறியப்பட்டார். மத்ஸ்ய புராணத்தின் சகாப்தத்தில் ஷ்ரத்தாதேவா திராவிட இராச்சியத்தின் அரசராக இருந்தார். ஆரியப் பதிவுகளில் ஷ்ரத்த தேவா மனு என்று அழைக்கப்படும் ஒரு திராவிட பாண்டிய ஆட்சியாளர் தனது குடும்பத்துடன் ஒரு படகில் ஏறி வெள்ளத்திலிருந்து தப்பினார் என்று கூறப்படுகிறது. படகு மலய மலைகளில் அதாவது மேற்கு தொடர்ச்சி மலைகளில் தரையிறங்கியது. அதற்கு பிறகு கபாடபுரம் மீண்டும் புனரமைக்கப்பட்டிருக்கலாம். கிமு ஆறாம் நூற்றாண்டில் ராமாயண காலகட்டத்தில் கபாடபுரம் அல்லது கவாடா என்னும் பாண்டியனின் நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இக்ஷவாகு -சூரிய வம்சம்

    திராவிட மன்னன் ஷ்ரத்தா தேவ மனுவின் மகன் இக்ஷவாகு என்று அழைக்கப்பட்டான். ஷ்ரத்தா தேவா மனு வட இந்தியாவின் இயக்கர் இளவரசியை மணந்து அவள் மூலம் பிறந்த மகன் முதல் சூரிய வம்ச மன்னன் இக்ஷவாகுவாக இருக்கலாம். வட இந்தியாவில் புதிதாக வந்த இந்தோ-ஆரியர்கள் கிமு 1100 ல் இக்ஷவாகு வம்சத்தின் குடிமக்களாக ஆனார்கள்.
    சோழ வம்சக் கல்வெட்டுகள் இக்ஷவாகு வம்சத்தை இக்குவாகு அதாவது இயக்கவாகு வம்சம் என்று குறிப்பிடுகின்றன.

    திராவிட இயக்கர் குலங்கள் மற்றும் வில்லவர்-பாண குலங்களின் ஒன்றியம் சூரிய வம்சத்தை நிறுவியது.
    வில்லவர்-பாண குலங்களின் மூதாதையர் மகாபலி ஆதலால் அவர்களின் பட்டப்பெயர் பலி.
    இக்ஷவாகு மன்னர்கள் இயக்கர் பட்டமான பாஹு மற்றும் வில்லவர்-பாண குலப் பட்டமான பலி ஆகியவற்றைப் பயன்படுத்தினர். பாகு + பலி = பாகுபலி

    கிமு 1800 இல் உத்தரப்பிரதேசத்தில் இக்ஷவாகு வம்சம் நிறுவப்பட்டபோது இந்தோ-ஆரியர்கள் சிந்து சமவெளியில் இருந்தனர். கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானின் மேல் சிந்து பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். இந்த காலம் ஆரம்ப வேத காலம் என்று அழைக்கப்படுகிறது.

    கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இக்ஷவாகு இராச்சியத்திற்கு வந்தனர். கிமு 1100 மற்றும் கிமு 500 க்கு இடையில் இந்தோ-ஆரியர்கள் இக்ஷ்வாகு இராச்சியத்தில் வசிப்பவர்கள் ஆனார்கள்.
    இக்ஷவாகு வம்சத்தின் தலைநகரம் அயோத்தி.

    சூரிய, சந்திர மற்றும் நெருப்பு வம்சங்களின் திராவிட தோற்றம்

    சூரிய வம்சத்தின் சின்னம்

    இக்ஷ்வாகு வம்சத்தின் சின்னம் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன்களாக இருக்கலாம். இடைக்கால அவுத் – அயோத்தி மாநிலத்தின் கொடிகளில் இரட்டை மீன் மற்றும் வில் மற்றும் அம்பு சின்னங்கள் இருந்தது. தற்கால உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் ஔத் மாநில சின்னத்தை அடிப்படையாகக் கொண்டது . அப்படித்தான் தற்கால உத்தரப்பிரதேச மாநிலச் சின்னத்தின் சின்னம் இரட்டை மீன் மற்றும் வில் அம்பு ஆகும். அது பண்டைய வில்லவர்-மீனவர் மக்களின் சின்னமாகும்.

    சூரிய வம்சத்தை நிறுவிய வம்சங்கள்

    சூரிய வம்சம் என்பது இயக்கர் மற்றும் பண்டைய பாண்டிய மன்னர்களின் வில்லவர்-மீனவர் வம்சத்தால் நிறுவப்பட்டிருக்கலாம். அரசர்கள் இக்ஷவாகு அல்லது இயக்கர் அரசர்களின் இக்குவாகு என்ற பட்டப்பெயரால் அறியப்பட்டனர்.
    வட இந்திய அசுர திராவிட வம்சங்களான பாணா, பில் மற்றும் மீனா ஆகியோரும் இதில் ஈடுபட்டிருக்கலாம்.

    இளா- சந்திர வம்சம்

    ஷ்ரத்தாதேவ மனுவின் மகள் ஆரியப் பதிவுகளில் இளா என்று அழைக்கப்படுகிறார். அது இளவரசி அல்லது ஈழாவின் குறுகிய வடிவமாயிருக்கலாம். ஷ்ரத்தா தேவா மனுவின் மகள் இளா சந்திர வம்சத்தின் முன்னோடி. வட இந்தியாவில் சந்திர வம்சத்தின் குடிமக்கள் யாதவர் மற்றும் நாகர்கள் ஆவர். நாகர்கள் இந்தோ-ஆரிய மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் அல்லது அதற்கு முன் இடம்பெயர்ந்திருக்கலாம்.

    அதே காலகட்டத்தில் நாக மன்னன் நஹுஷன் ஒரு போட்டி சந்திர வம்சத்தை நிறுவினார். நஹுஷனின் நாக குலத்திலிருந்து யாதவர்களும் நாகர்களும் தோன்றினர். பிற்காலத்தில் வட இந்தியாவின் திராவிட இளா சந்திர வம்சம் யாதவ வம்சத்துடன் இணைக்கப்பட்டது அல்லது யாதவ வம்சத்தால் மாற்றப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திரப் போரின் போது மதுரா யாதவர்களின் தலைநகராக இருந்தது. ஆனால் கி.மு. 500க்குப் பிறகு யாதவர்கள் மதுராவிலிருந்து காணாமல் போனார்கள்.

    கி.பி 800 வரை மதுரா வட இந்திய பாணப்பாண்டியன்களின் கோட்டையாக இருந்தது. மதுரா மன்னரின் மகன் ஜினதத்த ராயா, ஹோம்புஜாவைத் தலைநகராகக் கொண்டு கர்நாடகாவின் சான்றாரா பாண்டிய வம்சத்தை நிறுவினார்.

    தீ வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்களின் அசல் வம்சம் தீ வம்சமாக இருந்திருக்கலாம்.
    பாணா-பில்-மீனா குலங்கள் வில்லவர்-நாடாள்வார் குலங்களின் வடக்கு உறவினர்கள் ஆவர்.
    பண்டைய பாண்டிய வம்சமும் தீ வம்சத்தைச் சேர்ந்ததாக இருந்திருக்கலாம்.
    பாஞ்சால நாட்டைச் சேர்ந்த வன்னியர் போன்ற வடநாட்டுப் பாணர்களும் தீ வம்சத்தில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். வடக்கு பாணா-பில்-மீனா குலங்கள் கிமு 150 இல் சித்தியன் படையெடுப்பாளர்களுடனும், ஹூணர் மற்றும் ஹெப்தாலைட் படையெடுப்பாளர்களுடனும் கலந்தன. தீ வம்சம் மற்றும் சித்தியன், ஹூணா மற்றும் ஹெப்தாலைட் படையெடுப்பாளர்களின் பாணா-பில்-மீனா குலங்களின் கலவையால் ராஜ்புத்திரர் என்று அழைக்கப்படும் புதிய அரச வம்சங்கள் உருவாகின. பாணா-பில்-மீனா வம்சங்களிலிருந்துள்ள ராஜ்புத்திரர்களின் தோற்றம் காரணமாக, அவர்கள் தமக்கு தீ வம்சாவளியைக் கோரினர். பிற்கால ராஜபுத்திர ஆட்சியாளர்கள் தாங்கள் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவில் உள்ள நெருப்புக் குழியில் இருந்து வெளிப்பட்டதாகக் கூறினர்.
    ராஜபுத்திர குலங்கள் பாணா-பில்-மீனா குலங்களில் இருந்து பகுதி பூர்வீகம் இருந்தபோதிலும், அவர்களுக்கு விரோதமாக இருந்தன. இரண்டாம் ஆயிரத்தில் ராஜபுத்திரர்கள் துரோகத்தனமாக பெரும்பாலான பாணா-பில்-மீனா குலங்களை தோற்கடித்து அவர்களுடைய பிரதேசத்தை ஆக்கிரமித்தனர்.

    பாண்டிய இராச்சியத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய வம்சம் சேர, சோழ, பாண்டிய அரசுகளாகப் பிரிக்கப்பட்டது.
    வானவர் துணைக்குழு சோழ வம்சத்தை உருவாக்கியது, அவர்கள் சூரிய வம்சம் மற்றும் இக்ஷவாகு பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர். வில்லவர் இயக்கருடன் கலந்து சோழ வம்சம் உருவாகியிருக்கலாம். சோழ வம்சம் சூரிய வம்ச பரம்பரை எனக் கூறி தங்களை இக்குவாகு அதாவது இயக்க வாகு என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் பாண்டிய வம்சம் தாம் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர்.

    சேர வம்சம் தீ வம்சத்தில் இருந்து வந்ததாக தொடர்ந்து உரிமை கோரியது.

    பண்டைய குலங்களை அடையாளம் காணுதல்.

    வில்லவர்=நாடார்.
    பாணர்=பலிஜா நாயக்கர்,
    இயக்கர்=ஈழவர்,
    திரையர்=தீயர்.

    __________________________________________

    இக்ஷவாகு வம்சத்தின் சின்னம்
    இப்போது அது உத்தரபிரதேச மாநிலத்தின் சின்னமாக உள்ளது.

    https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Seal_of_Uttar_Pradesh.svg/2048px-Seal_of_Uttar_Pradesh.svg.png

    .

  2. Vil Says:

    வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா – மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    வில்லவர் மற்றும் பாணர்

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண – கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    வில்லவர் மற்றும் பாணர்

    வட இந்திய பாண குலங்கள்

    வட இந்திய பாணர்களுக்கு பாண, பாணிய, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    பல்லவ பாணர்

    பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

    பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    மீனா வம்சம்
    ___________________________________

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

    சத்தீஸ்கர் பாண இராச்சியம்

    பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

    திக்கம்கரின் பாண்டிய வம்சம்

    பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

    பாண வர்த்தகர்கள்

    இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
    பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

    பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

    முடிவுரை
    ____________________________________________

    இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
    பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

    சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

    ________________________________________________

    வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
    வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்

    https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

    .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading