Archive for April, 2020

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –36–அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் இத்யாதி —

April 13, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இராமானுசன் மன்னு மலர்த் தாள் அயரேன்-என்றீர் –
நாங்களும் இவரை ஆஸ்ரயிக்கும்படி இவர் தம்முடைய ஸ்வபாவம் இருக்கும்படி சொல்லீர் என்ன –
அதை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இராமானுசன் மன்னு மலர்த்தாள் அயரேன் -என்றீர் -நாங்களும் அவரை ஆஸ்ரயிக்கப் பார்க்கிறோம் –
அவருடைய ஸ்வபாவம் இருந்தபடி சொல்லிக் காணீர் என்று கேட்க –
பிரதி பஷத்துக்கு பயங்கரனான திரு வாழி யாழ்வானை-ஆயுதமாக வுடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும் சேஷி யானவன் –
உபய சேனா மத்யத்திலே பந்து ஸ்நேகத்தாலே அர்ஜுனன் யுத்தா நிவர்த்தனான அன்று –
கடலிலே அழுந்தி தரைப் பட்டு கிடக்கிற ரத்னங்களை கொண்டு வந்து-உபகரிப்பாரைப் போலே –
வேதாந்த சமுத்ரத்திலே -குப்த்தங்களாய்-ச்லாக்யங்களான அர்த்தங்களை-ஸ்ரீ கீதா சாஸ்திர முகேன – உபகரித்து அருளின பின்பும் –
இந்த கலி காலத்திலே லௌகிக ஜனங்கள் அவசாதத்தாலே கிடக்க –
அந்த கீதா ரூபமான அத்யந்த சாஸ்த்ரத்தை வியாக்யானம் பண்ணி உபதேசிகைக்கு-அந்த லௌகிக ஜனங்களை
ஸ்ரீ பத்ரிகாச்ரமம் அளவும் பின் தொடர்ந்த மகா குணம் உடைய பேர் இல்லை கிடீர்-என்று கொண்டு
இப்படி இருந்துள்ள எம்பெருமானார் உடைய ஸ்வபாவம் இது என்று அருளிச் செய்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் -என்றீர்-
நாங்களும் இவரை ஆசரிக்கும் படி இவர்தம்முடைய ஸ்வபாவம் இருக்கும் படி சொல்லீர்
என்பாரை நோக்கி எம்பெருமானார் ஸ்வபாவத்தை அருளிச் செய்கிறார் –

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

பத உரை –
அடல் கொண்ட -பலம் வாய்ந்த
நேமியன் -திரு வாழியை உடைய
ஆருயிர் நாதன் -அருமையான எல்லா ஜீவாத்மாக்களுக்கும் சேஷியான சர்வேஸ்வரன்
அன்று -அக்காலத்தில்
ஆரணச் சொல் -வேத சப்தமாகிற
கடல் கொண்ட-சமுத்ரம் தன்னுள்ளே வைத்துக் கொண்டு இருக்கிற
ஒண் பொருள்-சீரிய பொருள்களை
கண்டு -பார்த்து
அளிப்ப -ஸ்ரீ கீதை வாயிலாக கொடுத்து அருள
பின்னும் -அதன் பிறகும்
காசினியோர் -பூமியில் உள்ளவர்கள்
இடரின் கண் -சம்சார துக்கத்திலே
வீழ்ந்திட -விழுந்து அழுந்திட
தானும் -எம்பெருமானாரைகிய தானும்
அவ் ஒண் பொருள் கொண்டு -சர்வேஸ்வரன் முன்பு அருளிச் செய்த அந்த சீரிய அர்த்தத்தைக் கொண்டு
அவர் பின் -அந்த பூமியில் உள்ளவர்களுக்கு பின்னே
படரும்குணன் -தொடர்ந்து செல்லலும் குணத்தை உடையரான
எம்ராமானுசன் தன்-எங்கள் எம்பெருமானாருடைய
படி-ஸ்வபாவம்
இது -இத்தகையது –

‘விரோதி நிரசன சக்தியை உடைத்தான திரு வாழியை உடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும்-சேஷியானவன்-
அஸ்த்தானே சிநேக காருண்யா தர்ம அதர்ம தியாகுலனாய் -கீதார்த்த சங்க்ரஹம் -கொண்டு-அர்ஜுனன் சோகா விஷ்டனான அன்று –
அவனை வ்யாஜீகரித்து –
பெரும்கடலிலே மறைந்து கிடக்கும் பெரு விலையனான -ரத்னங்கள் போலே வேத சப்தமாகிற சமுத்ரத்துக்கு உள்ளே
ஒருவருக்கும் தெரியாதபடி -மறைந்து கிடக்கிற விலஷனமான அர்த்தங்களை -தர்சித்து –
சகல சேதனருடைய உஜ்ஜீவன அர்த்தமாக ஸ்ரீ கீதா முகேன உபகரித்து அருள –
பின்னையும்
பூமியில் உள்ளவர்கள் சம்சார துக்கத்தில் அழுந்தி தரைப்பட-
தாமும் முன்பு சர்வேஸ்வரன் அருளி செய்த அந்த விலஷனமான அர்த்தத்தைக் கொண்டு இது கைக் கொள்ளும் அளவும் –
அவர்களைப் பின் தொடரா நின்ற குணத்தை உடையராய் இருப்பராய் –எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த
எம்பெருமானார் உடைய ஸ்வபாவம் இது –

ஆருயிர் நாதன் என்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப –என்று பாடமான போது –
அடல் கொண்ட நேமியனான சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்று கொண்டு –
வேதத்தில் மறைந்து கிடக்கிற அர்த்தத்தை -தர்சித்து -ஸ்ரீ கீதா முகேன அருளி செய்த -என்ற பொருளாக கடவது –
அடல்-மிடுக்கு
காசினி-பூமி
இடரின் கண் -என்றது -இடரின் இடத்திலே என்கை-
படி -ஸ்வபாவம்–

ஸ்ரீ கீதா பாஷ்யம் அருளி -ஸ்ரீ கீதா சாரம் சரம ஸ்லோகம் அர்த்தம் பெற 18 தடவை திருக் கோஷ்டியூர் நம்பி இடம் பெற்று
அதன் ஏற்றம் நமக்கு காட்டி அருளி -ஆசை உடையோர் அனைவருக்கும் உபதேசித்து அருளி –
வேத கடல் கொண்ட வஸ்து –கீதாச்சார்யர் -இரண்டாவது கடல் கடைந்து அமிர்தம்–
சர்வ உபநிஷத் பசு –கன்றுக்கு குட்டி அர்ஜுனன் கீதை பால் -நமக்கு –
பின்னும் -கருட வாஹனனும் நிற்க -நாம் நம் கார்யம் செய்து கொண்டே இருக்க –
அத்தை கடைந்து -கீதா சாரம் -ஸ்வாமி அருளி -தானும் -அவனே ஸ்வாமியாக ஆவிர்பவித்து –

அவர் கண் படரும் குணன் –
சம்சாரிகளை விடாமல் -திவ்ய தேசங்கள் எல்லாம் -நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விட்டேன் –
எங்கும் இருப்பார் -பரகால பராங்குச யதிராஜர் எல்லா கோயில்களிலும் பிரதிஷ்டை உண்டே –
தத்வ ஹித புருஷார்த்தங்கள் அனைத்தும் நமக்கு தெளிய அருளி –18 சொல்லி அத்தாலே கலங்கிய அர்ஜுனனுக்கு
சரணாகதி சாஸ்திரம் வழங்கி –சர்வ தர்மான் இத்யாதி – சோகம் போக்கி என்றுமாம் – அங்கு ஒருவன் -இங்கே நாம் அனைவரும் –
அதனாலே தானும் -ஸ்வாமி –பின்னும் தானும் -அவ் ஒண் பொருள் கொண்டு -இரண்டு உம்மை தொகை –
ஸ்வாமி பெருமை காட்ட -கலி யுகம் -பாப பிரசுரம் -தோஷம் பூயிஷ்டர் நாம் –

அடல் கொண்ட நேமியன் –
மடுவின் கரையில் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை பாதித்த முதலையும்-
அஸ்வத்தாமா ப்ரேரிதமாய் கொண்டு பரிஷித்தை பாதிக்க ப்ரஹ்மாச்த்ரமும் துடக்கமான ஆஸ்ரித விரோதிகளுக்கு
அத்யந்த பயங்கரமான ஆகாரத்தை உடையவனாய் –
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழி – என்கிற-திரு வாழி யாழ்வானை பிரதானமான ஆயுதமாக உடையனாய் –
அடல் -மிடுக்கு –

அடல் கொண்ட நேமியன்
அடல்-மிடுக்கு-அதாவது விரோதிகளை அழிக்கும் திறன் –நேமி -சக்கரம் –
நல்லவர்கள் இறைவனை அனுபவிப்பதற்கு இடையூறாக உள்ள பாபங்கள் என்னும் விரோதிகளை-
அழிக்கும் திறமையை இங்கு கருதுகிறார் –
நம் மேல் வினை கடிவான் எப்போதும் கை கழலா நேமியான் –பெரிய திருவந்தாதி -86 – எனபது காண்க –

ஆர் உயிர் நாதன் –
பதிம் விச்வச்யாத்மேச்வரம் – உதாம்ர்தத் வச்யேசானா -என்றும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் சொல்லுகிறபடியே – சகல-ஆத்மாக்களுக்கும் நாதனாய் –
நாத்ர்யாச்ஞாயம் -என்கையாலே -சகல அர்த்தங்களும் யாசிக்கப்படுபவனாய் –
ஏகோ பஹூனாம் யோவிததாதி காமான் -என்கிறபடியே சமஸ்த புருஷார்த்த பிரதனானவன் –

ஆருயிர் நாதன் –
எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி -விச்வத்திற்கு பத்தி -என்றது வேதம் –
நேமியன் ஆகையாலே -ஆருயிர் நாதன்-என்க-
நேமி-இறைவனது பரத்வத்துக்கு உரிய குறி-
தமஸ பரமோதாதா சங்க சக்ர கதாதர –
பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் பட்ட இறைவன் சங்கு-சக்கரம் கதை இவைகளை எந்தினவன் -என்றது காண்க –
பர வாசுதேவன்
ஆதலின் எல்லா உயிர்க்கும்-அவன் சேஷியானன்
நேமியன்
என்கையாலே காசினியோரை இடரினின்றும் எடுக்கும் திறன் உடைமையும் –
நாதன்-
என்கையாலே -எடுத்தாக வேண்டிய உறவு முறையும் காட்டப் பட்டன –

அன்று –
குரு பாண்டவர்கள் யுத்த சன்னத்தரான அளவிலே –
பித்ரீ நத பிதாமகன் மாதுவக்னச்வசுரான்-ப்ராத் ரீன் புத்ரான் பௌத்த்ரன் சகீம்ஸ்ததா-இத்யாதி யாலே சொல்லப்படுகிற
பந்து வர்க்கத்தை எல்லாம்-உபய சேனையிலும் அர்ஜுனன் பார்த்து –
எஷாமர்த்தம் கான்க்ஷித தமனோ ராஜ்ஜியம் போகஸ் சூகாநிச-தம் இமே வசதி தாயுத்தே ப்ரானாஸ் யுக்த்வாத நாநிச –
ஆச்சார்யா பிதர புத்ரா யேதான் நஹந்து மிச்சாமி-க்ந்தோபி மது சூதனா -என்று
பந்து ஸ்நேகத்தாலே தர்மத்திலே அதர்ம புத்தி பண்ணி –
விசர்ஜய சசரம்சாபம்-சோகசம் விக்நமா நாசா -என்று சோகித்து -யுத்தான் நிவர்த்தன் ஆன அன்று-

அன்று –
போர்க் களத்திலே -நிற்கும் எதிரிகளை உறவினராகப் பார்க்கும் அன்பும் –
வீணில் மடியப் போகிறார்களே-என்ற கருணையும் –
ஷத்ரியனுக்கு உரிய தர்மமான போரை அதர்மம் என்னும் மதி மயக்கமும்-உடையவனாய்
அர்ஜுனன் கலங்கிய வேளையில் -என்றபடி

ஆரணச் சொல் கடல் கொண்ட-ஒண் பொருள் கண்டு அளிப்ப –
சமுத்திர மத்யத்திலே -மறைந்து கிடக்கிற -தரைப்பட்டு கிடக்கிற-மகா ரத்னங்களை எடுத்துக் கொண்டு வந்து
உபகரிப்பாரைப் போலே -கடல் போல் கம்பீரமாய் இருந்துள்ள வேதாந்த வாக்யங்களிலே –
தாவான் சர்வேஷு வேதேஷு ப்ராஹ்மானச்ய விஜானதா -என்னும் படியாக –
ரகஸ்ய தமமாய் -விலஷண அர்த்தங்களை அடைவே கடாஷித்து –கீதா சாஸ்திர முகேன உபதேசித்து-ரஷித்து அருள –
அன்றிக்கே –
அன்று -கார்ப்பண்யா தோஷா பகுதஸ் ஸ்வபாவ ப்ரச்சாமித்வா தர்ம சம்முட சேதா –
யச்ச்ரேயஸ் யாநிச்சிதம்ப்ருஹி தன்மே – சிஷ்யச்தே ஹம்சாதி மாம்த்வாம் பிரபன்னம் -என்று அர்ஜுனன்-உபசத்தி பண்ணினவாறே –
அவனுக்கு மோஷ உபாயமாக -கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும்-பக்தி யோகத்தையும் அவதார ரகஸ்யத்தையும் –
புருஷோத்தம வித்தை தொடக்கமான வற்றையும் உபதேசிக்க-
அவை எல்லாம் துஸ் சகங்கள் என்றும் சப்ரமாதங்கள் என்றும் விளம்ப பலப்ரதங்கள் என்றும் ஸ்வரூப விரோதிகள் என்றும் நினைத்து
அர்ஜுனன் சோக விசிசிஷ்டனான அன்று-

ஆரண சொல் கடல் கொண்ட-ஒண் பொருள் கண்டு அளிப்ப –
வேதாந்த வாக்யங்கள் ஆகிற சமுத்ரத்திலே -தஸ்மான் நியாச மோஷம் தபஸா-மதிரிக்த மாஹூ -என்றும் –
வேதாந்த விஞ்ஞான சூநிச்சிதர்த்தாஸ் சந்நியாச யோகாத்ய தயச்சுத்த சத்வா –
தி பிரம லோகேது பராந்தகாலே பராம்தாத்பரி முச்யந்தி சர்வே -என்றும் –
ந கர்மணா ந ப்ரஜயாத நே நத்யா-கே நை கே அமர்த்தவ மானச -என்றும் -இத்யாதிகளிலே
குக்ய தமமாக பிரதிபாதிக்கப்படுகிற-விலஷண அர்த்தங்களை எல்லாம் -கண்டு திரட்டி –
மன்மனாபவ மத பாகத்த -என்றும் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்
இரண்டு ஸ்லோகத்தாலே சகல சேதனருடையவும் உஜ்ஜீவன அர்த்தமாக -அர்ஜுன வயாஜேன பிரபத்தி-உபதேசம் பண்ணியும்
லோகத்தை எல்லாம் ரஷிக்க என்னவுமாம் –

ஆரணச் சொல் –கண்டு அளிப்ப
பெரும் கடலிலே ரத்னங்கள் மறைந்து கிடப்பது போலே வேத சப்த ராசி -என்கிற சமுத்ரத்திலே –
பல சீரிய பொருள்களும் மறைந்து கிடக்கின்றன -பல விதமான அந்த வேதாந்த ரத்னங்களை-கண்டு எடுத்து
சம்சாரம் என்னும் இடரின் கண் வீழ்ந்த காசினியோர்க்கு கீதா சாஸ்திரம் என்கிற-பேரிலே கொடுத்து அருளினான்

பின்னும் –
பிற் காலத்திலான கலி யுகத்திலும் –

காசினியோர் –
பூ லோகத்தில் உள்ள சேதனர் எல்லாரும் –
காசினி -பூமி –

இடரின் கண் வீழ்ந்திட –
சம்சார துக்கத்தில் விழுந்து- அழுந்தி தரைப்பட்டு கிடக்க –
த்வாபரத்தில் அர்ஜுனன் ஒருவனே இடர் பட்டான் -இந்த கலி யுகத்தில் ஒரு லோகம்-காணும் இடர் பட்டது –
இத்தைக் கண்டு பொறுக்க மாட்டாத தம்முடைய கிருபையாலே –

சர்வேஸ்வரன் அங்கனம் கொடுத்தான் அதனைக் கையாள-அறியாது -அக்காசினியோர் மீண்டும்
இடரின் கண் வீழ்ந்து விட்டனர் –
பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட -என்கையாலே –
முன்னும் அவர்கள் இடரின் கண்-வீழ்ந்து கிடந்தமை புலனாகிறது –
ஆக -அர்ஜுனனை வியாஜமாக கொண்டு உலகிற்கு ஆருயிர் நாதன்-கீதை அருளினான் -என்றது ஆயிற்று –
எல்லாம் அறிந்த இறைவனும் -விலஷனமான வேதங்களை ஆராய்ந்து – கண்டு அளித்தான் -என்பது தோன்ற –
கண்டளிப்ப-என்கிறார் –
நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன் -என்றார் நம் ஆழ்வாரும்
த்ரை குணிய விஷயா வேதா -சத்வம் ரஜஸ் தமஸ் என்னும் மூன்று குணங்களை உடைய மக்களுக்கு-ஏற்ப
விஷயங்களை சொல்வன வேதங்கள்-என்றபடி –
அவரவருடைய குணங்களுக்கு ஏற்ப –அவரவர்களுக்கு வேண்டிய பல திறத்தனவான விஷயங்களை உடைய வேதத்தை-
விலை உயர்ந்த ரத்னங்களையும் சிப்பி போன்ற எளிய பொருள்களையும் கொண்ட-கடலாக உருவகம் செய்கிறார் –

ஆருயிர் நாதன் -என்று பாடம் ஓதுவாரும் உண்டு –
அப்பொழுது என்று என்பதை
பொருள் என்பதுடன் கூட்டி-
அடல் கொண்ட நேமியனான சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்ற கடல் கொண்ட
ஒண் பொருளைக் கண்டு அளிப்ப -என்று கூட்டிப் பொருள் கொள்க –
சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்னும் பொருளே-ஆரண சொற்கடலில் கண்டு அளித்த பொருள் ஆயிற்று –
பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட-
சர்வ சக்தனும் -இயல்பான சேஷித்வ ரூபமான உறவு முறை வாய்ந்தவனுமான சர்வேஸ்வரன்
கண்டு அளித்த பின்னரும் -இடரின் கண் காசினியோர் வீழ்ந்தனரே -இது என்ன விந்தை -என்கிறார் –

தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
எம்பெருமானாரும் அந்த ச்லாக்கியமான கீதா சாஸ்தரத்துக்கு வியாக்யானம் பண்ணி யருளி அத்தைக் கொண்டு –
அன்றிக்கே –
திருக் கோட்டியூர் நம்பியை பதினெட்டு தரம் அனுவர்த்தித்து பரம குக்யம் என்று அவரால் உபதேசிக்கப் பெற்ற-
சரம ஸ்லோக அர்த்தத்தை கொண்டு என்றுமாம் –

அவர் பின் படரும் குணன்
ஸ்ரீ பத்ரிகாச்ரமம் ஈறாக இந்த-பூ லோகத்தில் உள்ள சேதனர் எல்லாருக்கும் போதித்து
பின் தொடர்ந்தவருடைய சம்சார துக்கத்தை-போக்க கடவதான கிருபா குணத்தை உடையரான –
அங்கன் அன்றிக்கே –
பின்னும் தானும் அவ் ஒண் பொருள் கொண்டு
பின்னும் தானும் என்னும் இரண்டு பதத்திலும் -சகாரங்களைப் பிரயோகித்தது –
அந்த த்வாபர காலம் புண்ய-பிரசுரமானது –
அதிகாரி ஞானாதிகனான அர்ஜுனன் –
உபதேஷ்டா பர ப்ரஹ்ம பூதனானவன் -ஆகையாலே அது அரிது அன்று
இந்த கலி காலம் பாப பிரசுரமானது –
அதிகாரிகள் தோஷ பூயிஷ்டரான சர்வ வர்ண ஜனங்களும் -ஆகையாலே இவர்-லோகத்தை எல்லாம்
ரஷித்ததுவே அரிது என்னும் இடம் தோற்றுக்கைக்காக-

தானும் –
எம்பெருமானரும் –
அவ் ஒண் பொருள் கொண்டு –
திருக் கோஷ்டியூர் நம்பி பக்கல் பதினெட்டு தரம் எழுந்து அருளின அளவிலே அவரும் சூழரவு கொண்டு-
குக்ய தமம் என்று நியமித்து சரம ஸ்லோக அர்த்தத்தை நியமித்தவாறே
அந்த ஸ்லோக அர்த்தத்தை கொண்டு-அவர் பின் படரும் குணனை –
காசியின் உள்ள ஜனங்களை அதிகார ந அதிகாரவிபாகம் அற -தாமே வந்து-தொடர்ந்து –
அந்த சரம ஸ்லோக அர்த்தத்தை பூரி தானமாக கொடுத்த கிருபா வாத்சல்ய ஔதார் யாதி குணங்களை உடைய-

எம் இராமானுசன் தன் –
இப்படிப் பட்ட கல்யாண குணமான திவ்ய மங்கள விக்ரகத்தை நமக்கு முற்றூட்டாக கொடுத்து அருளின-
எம்பெருமானார் தம்முடைய படி இதுவே –ஸ்வபாவம் இதுவே –
படி
ஸ்வபாவம் -ஏதாவா நஸ்ய மஹிமா –என்கிற படியே ஆய்த்து .

தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
கீதை சொன ஆருயிர் நாதன் –
அர்ஜுனன் சோகத்தை பார்த்து அந்த வாசத்தில் கீதை யருளினான்-
கீதா பாஷ்யம் அருளிய எம்பெருமானார் காசினியோர் இடரைக் கண்டு அவ் ஒண் பொருளையே விளக்கி யருளினார் –
சர்வ சக்தனும் முயன்றும் காசினியோர்க்கு பயன்படாமல் போயிற்று –
எம்பெருமானார் தம் பரம கிருபையினால் அவ் விஷயத்திலே முயன்று -வெற்றி காண முற்படுகிறார் –

அவர் பின் படரும் குணன் –
கீதாசார்யன் தன் சிஷ்யனாக ஆன அர்ஜுனனை நோக்கி உலகிற்காக உபதேசித்து ஓய்ந்தான் –
ஸ்ரீ கீதா பாஷ்யாசார்யாரோ சிஷ்யர் ஆவதை எதிர்பாராது –
காசினியோர் எல்லாம் இவ் ஒண் பொருளை-இழக்கல் ஆகாது என்று அவர்கள் அறிந்து கைக் கொள்ளும் அளவும் –
அவர்களைப் பின் தொடர்ந்து – அவ் ஒண் பொருளை ஓயாது உணர்த்திக் கொண்டு இருக்கிறார் –
சிஷ்யன் ஆசார்யனை பின் படர்வது போய் –ஆசார்யன் கிருபா மாத்திர பிரசன்னரராய் பின் படர்ந்து உபதேசிக்கிறார் –
இங்கனம் பின் படர்தல்-ஒரு பயன் கருதி அன்று -இதுவே ஸ்வபாவம் -என்கிறார் –
சிஷ்யன் கால் அடியில் இருந்து உபதேசித்தான் கீதாசார்யன் –
கீதா பாஷ்யாசார்யர் -காசினியோரைப் பின் தொடர்ந்து ஏற்கும் அளவும் உபதேசிக்கிறார் –

அடல் கொண்ட நேமியன் அளிப்ப
கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ரஷ்டு மஹம் ததைவ -என்று
கிரீடம் அணிந்தவனும் கதை ஏந்தினவனும் சக்கரக் கையனுமான உன்னை முன் போலவே-நான் காண விரும்புகிறேன் –என்று
விஸ்வரூபம் சேவித்த பிறகு அர்ஜுனன் பழைய படி-கையும் சக்கரமும் ஆக உன்னைக் காண விரும்புகிறேன் என்கையாலே –
அடல் கொண்ட நேமியனாக-சேவை தந்து கண்ணன் கீதை உபதேசித்தான் என்று தெரிகிறது –
அடல் கொண்ட நேமியன் தன் நேமியினாலேயே துர் யோதநாதியாரை வெல்லலாம் ஆயினும்-
கையில் ஆயுதம் உபயோக்கிகலாகாது என்ற பிரதிக்ஜையை ஏற்பப் போரிடும்படி அர்ஜுனனைத்-தூண்டுவதற்காக
கீதா சாஸ்திரம் உபதேசிக்க வேண்டியது ஆயிற்று -என்க
அடல் கொண்ட நேமியன் ஆரண சொற்பொருளை கண்டு அளித்தது பயன் படாது போயிற்று –
கையிலே ஆயுதம் பிடிப்பவன் வேதர்த்தத்தை உபதேசித்தால் அது எங்கனம் பயப்படும் -என்று-
ரசமான பொருளும் இங்கே தோன்றுவதை சுவைத்து இன்புருக –

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே -பெரியாழ்வார் திருமொழி —-3-3-5-

பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ-நாச்சியார் திருமொழி –9-9-

செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-

பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை–பெரிய திருமொழி–2-3-1-

இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-

மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –முதல் திருவந்தாதி–8-

வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –முதல் திருவந்தாதி-–37-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –நான்முகன் திருவந்தாதி–71–

போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே –திருவாய்மொழி–4-6-1-

மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-

வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர்
முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யாள வந்து
இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–-இராமானுச நூற்றந்தாதி-51-

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணம் இவை யுமக்கு என்று இராமானுசன் உயிர்கட்க்கு
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ்வார் உயிருக்கே–-இராமானுச நூற்றந்தாதி-67-

ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே –இராமானுச நூற்றந்தாதி-68-

ஸ்ரீ கீதா பாஷ்ய அவதாரிகை
ஸ்ரீ யபதி–நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந்ர-ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண அனந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம் –
ஸ்வபாவிக அனவதிக அதிசய ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ப்ரப்ருத்ய அசங்க்யேய கல்யாண குண கண மஹோ ததி-
ஸ்வ அபிமத அநுரூப ஏக ரூப அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய நிரவத்ய நிரதிசய உஜ்வல்ய ஸுந்தர்ய
ஸுகுமார்ய லாவண்ய யவ்வனத்தி அனந்த குண நிதி -திவ்ய ரூப
ஸ்வ உசித விவித விசித்திர அனந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய அபரிமித திவ்ய பூஷண
ஸ்வ அநு ரூப அசங்க்யேய அசிந்த்ய சக்தி நித்ய நிரவத்ய நிரதிசய கல்யாண திவ்ய திவ்யாயுத
ஸ்வாமி மத் அநு ரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாத்யா அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண ஸ்ரீ வல்லப
ஸ்வ சங்கல்ப அநுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதச அசேஷதைகரதி ரூப
நித்ய நிரவத்ய நிரதிசய ஞான கிரியை ஐஸ்வர்யாத்
அனந்த குண கணா அபரிமித ஸூரிபிர் அனவரத அபிஷ்ருத சரண யுகல
வாங்மனச அபரிச்சேதய ஸ்வரூப ஸ்வபாவ
ஸ்வ உசித விகித விசித்திர அனந்த போக்ய போக உபகரண போக ஸ்தான சம்முத்த அனந்த ஆச்சர்ய அனந்த மஹா விபவ
அனந்த பரிமாண நித்ய நிரவத்ய அஸாக்ஷர பரம வ்யோம நிலய
விவித விசித்திர அனந்த்ய போக்ய போக்த்ரு வர்க்க பரி பூர்ண நிகில ஜகத் உதய விபவ லய லீல
பரம் ப்ரஹ்ம புருஷோத்தம பர நாராயண
ப்ரஹ்மாதி ஸ்தவாரந்த அகிலம் ஜகத் ஸ்ருஷ்ட்வா
ஸ்வரூபேண அவஸ்தித தக்ஷ ப்ரஹ்மாதி தேவ மனுஷ்யானாம் த்யான ஆராத்யானாம் கோசார
அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய உதாரய மஹோ ததி ஸ்வ மே ரூபம் தத் தத் சஜாதீய ஸம்ஸ்கானம் ஸ்வ ஸ்வபாவம் அஜஹதேவ குர்வன்
தேஷூ தேஷூ லோகேஷ் வவதீர்ய அவதீர்ய தைஸ்தைராராதித தத் அதிஷ்டான ரூபம் தர்மார்த்த காம மோஷாக்க்யம் பலம் பிரயச்சன்
பூபார அவதாரனதேசேன அஸ்மதாதீநாம் அபி ஸமாச்ரயணித்வாய அவதிர்யோர்வ்யாம் சகல மனுஷ நயன விஜயதாம் கத
பராவர நிகில ஜன மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டிதானி குர்வன் பூதநா சாக்கடை யமார்ஜுன அரிஷ்ட ப்ரிலம்ப தேனுக காலீய கேசீ
குவலாயாபீட சாணூர முஷ்டிக தோசல கம்சாதீன் நிஹத்ய
அனவதிக தயா ஸுஹார்த்த அநு ராக கர்ப்ப அவலோகந ஆலாபம்ருதை-விஸ்வமாப் யாயியின் நிரதிசய ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண கணா
விஷ்ட தாரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் பூதான் க்ருத்வா-

ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதிகளை அவதாரிகையில் விவரித்து அருளி
ச பகவான் புருஷோத்தம -அந்த–கீழே சொன்ன பெருமைகள் எல்லாம் -ச -ஒரே எழுத்தால்
பகவான் – கல்யாண குணங்களுக்கு இருப்பிடமான –
புருஷோத்தமன் -வைலக்ஷண்யம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
அபுருஷன் அசித் -புருஷன் உத் புருஷன் உத்தர புருஷன் உத்தம புருஷன் -ஐந்து விரல்களும் காட்டுமே
சர்வேஸ்வரேஸ்வர- ராமானுஜர் இப்படி தான் அவனை எங்கும் அருளிச் செய்வார்-
பாண்டு தனய-வ்யாஜேந -பரம புருஷார்த்த மோக்ஷ சாதனதயா பக்தி யோகம் –ஞான கர்மயோகம் அங்கமாகக் கொண்டது
ஞான கர்ம அநுக்ரஹீதமான பக்தி யோகம் –வித்யாஞ்ச அவித்யாஞ்ச -இரண்டாலும் பரிஷ்காரம் பண்ணிய உள்ளத்துடன் –
அவித்யா என்று ஞானம் விட வேறு பட்ட கர்மயோகம் –
ஸூ விஷயம் -தன்னிடம் பக்தி -மறந்தும் புறம் தொழா மாந்தர் -அநந்யார்ஹத்வம்-ஆனை துரத்தினாலும் ஆனைக்கால் நுழையாதவர்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –35– நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை- இத்யாதி —

April 13, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் உம்மளவில் செய்த விஷயீகாரத்தை பார்த்து -கர்மம் எல்லாம் கழிந்தது –என்றீரே யாகிலும் –
பிரக்ருதியோடே இருக்கையாலே -இன்னமும் அவை வந்து ஆக்ரமிக்கிலோ-என்ன -இனி –
அவற்றுக்கு வந்து என்னை அடருகைக்கு வழி இல்லை என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் உம்மை நிர்ஹேதுகமாக அங்கீகரித்து அருளின ராஜகுல மகாத்ம்யத்தால்-களித்து –
அநாதியான கர்மங்கள் என்னை -பாதிக்க மாட்டாது என்றீர் -நீர் ப்ரக்ருதி சம்பந்தததோடு இருக்கிற-காலம் எல்லாம் –
நா புக்தம் ஷீயதே கர்ம -என்கிறபடியே கர்மபல அனுபவமாய் அன்றோ இருப்பது -என்ன –
தேவதாந்திர பஜனம் அசேவ்ய சேவை தொடக்கமான விருத்த கர்மங்களை அனுஷ்டித்தால் அன்றோ-
அநாதி கர்மம் மேல் யேருகைக்கு அவகாசம் உள்ளது -அவற்றை சவாசனமாக விட்டேன் –
ஸ்ரீ எம்பெருமானார்-திருவடிகளை சர்வ காலமும் விச்மரியாதே வர்த்தித்தேன் –
இப்படியான பின்பு க்ரூர கர்மங்கள்-என்னை வந்து பாதிக்கைக்கு வழி இல்லை -என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

பிரகிருதி சம்பந்தத்தாலே இன்னமும் வினைகள் உம்மை அடர்க்காவோ என்னில் –
அவை என்னை அடர்க்க வழி இல்லை என்கிறார் –

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

பத உரை –
ஒரு தெய்வம் -வேறு ஒரு தெய்வத்தை
நயவேன் -ஆசைப்படேன்
நானிலத்தே -இவ் உலகத்திலே
சில மானிடத்தை -சில அற்ப மனிதர்களை
புயலே என –மேகம் போலே பொழிகிறவனே என்று
கவி போற்றி செய்யேன் -கவி பாடிப் புகல மாட்டேன்
பொன்னரங்கம் என்னில் -அழகிய திருவரங்கம் என்னும் பேச்சிலே
மயலே பெருகும் -காதல் மையல் வளரும்
இராமானுசன் -எம்பெருமானாருடைய
மன்னும் -ஒன்றோடு ஓன்று பொருந்தும்
மா –சீரிய
மலர்த்தாள்-தாமரை போன்ற திருவடிகளை
அயரேன்-மறவேன்
அருவினை-தொலைக்க அரிய கருமங்கள்
எவ்வாறு-எப்படி
என்னை இன்று அடர்ப்பது -என்னை இப்பொழுது பற்றிப் பிடித்து கொள்வது –

புறம்பு ஒரு தெய்வத்தை விரும்பேன்
இந்த லோகத்தில் சில சூத்திர மனுஷ்யரை புயலே -என்று அவர்களுடைய ஒவ்தார்யத்துக்கு-மேகத்தை ஒப்பாக கவி சொல்லி ஸ்துதியேன்-
ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ கோயில் என்னும் பிரசங்கத்திலே காதல் மையல் அபிவ்ருத்தமாக நிற்கும்-ஸ்ரீ எம்பெருமானார் உடைய
பரஸ்பரம் பொருந்திய பரம பூஜ்யமாய் போக்யமான திருவடிகளை விஸ்மரியேன் –
ஆதலால்-அறுக்க அரியதான கர்மங்கள் எவ் வழியாலே என்னை இன்று அடர்ப்பது –
அப்ராப்த தேவதா ப்ராவண்யமும் அசேவ்ய சேவையும் அப்ராப்த விஷய ஸ்ம்ருதியும் ஆயிற்று கர்மம்-அடறுகைக்கு வழி –
இவை ஒன்றும் எனக்கு இல்லாமையால் கர்மத்துக்கு என்னை ஒரு-வழி யாலும் அடர்க்கப் போகாது என்று கருத்து –

கவி போற்றி செய்யேன் -என்ற இது-
கவி செய்யேன் –போற்றி செய்யேன் -என்று பிரித்து யோஜிக்க்கவுமாம் –
அப்போதைக்கு கவி செய்கையாவது –
அவர்களை கவி பாடுகை –
போற்றுகை யாவது -கேவலம் புகழுகை
நயவேன் -என்றது -விரும்பேன் -என்றபடி /புயல்-மேகம் / மையல்-ப்ராந்தி /அயர்வு -மறுப்பு-

மனசால் உடையவர் திருவடி மறக்கேன் -என்கிறார் -பாதுகே யதிராஜ்ய பதச்சாயா நிழலை விடாமல் –
நேராக திருவடி சேவை துர்லபம் அன்றோ –
அத்த பத்தர் சுற்றி வாழும் அரங்கம் -வாய் வார்த்தை யாதிருச்சிகமாக சொன்னாலும் மையல் கொள்ளும் –
மன்னு மா மலர் தாள் –சென்னியில் சூடி -தேன் பால் கன்னல் அமுது –அஞ்சுவை அமுதம் -ஐந்து கருத்துக்கள் ஒரே பாசுரத்தில் –
1-ஸ்ரீ திவ்ய தேச மஹிமை /2-ஸ்ரீ திருவரங்கம் வேர் பற்று /3-ஸ்ரீ ஸ்வாமியின் மையல் /4- அஸேவ்ய சேவை கூடாது /
5-ஆச்சார்யருக்கு மேற்பட்ட தெய்வம் இல்லை
இப்படி இருந்தால் பாபங்கள் அணுகா —

பஞ்சா அமிர்தம் போல எல்லா திரு கோலப் பெருமாளையும் சேவிக்க
ஸ்ரீ திரு வல்லிக்கேணி மங்களா சாசனம் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்
ஐ சுவை அமுதம்-தேன் பால் கன்னல் அமுது அனைத்தும் கலந்த சுவை போல-
அதனால் தன் சக்கரை பொங்கல் இங்கே விசேஷம்

நயவேன் ஒரு தெய்வம்
ஸ்ரீ எம்பெருமானாரை ஒழிய மற்று ஒருவரை பர தேவதை அன்று-ஆதரிக்கிறேன் அல்லேன் –
நயவேன் என்றது -விரும்பேன் என்றபடி
ஸ்ரீ நான்யம்வதாமி -ந பஜாமி-ந சிந்தயாமி -நான்யம் ஸ்மராமி ந ஸ்ருனோமி ந சாஸ்ரயாமி –
முக்த்வாத்வ தீய சரணாம் புஜ மாதரேன ஸ்ரீ ஸ்ரீ நிவாச புருஷோத்தம தேஹிதாச்யம் –என்றும் –
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம்-நாடுதிரே -என்றும் –
மற்றைத் தெய்வம் விளம்புதிரே -என்றும் சொல்லுகிறபடியே
பிரதம பர்வ-பர்யந்தம் அத்யாவசியம் இன்றிக்கே –
குரோர் அன்யம் ந பாவயேத் –
தேவு மற்று அறியேன் என்கிறபடியே -ஸ்ரீ எம்பெருமானாரை பர தேவதையாக அத்யவசித்து-இருந்தேன் என்றபடி –

உன்னை ஒழிய வேறு ஒரு தெய்வம் மற்று அறியா -மன்னு புகழ் சேர் வடுக நம்பி
தன்னிலையை என் தனக்கு நீ தந்து எதிராசா என் நாளும் உன் தனக்கே ஆட் கொள்ளு உகந்து -என்று-
இது தன்னை ஸ்ரீ ஜீயரும் பிரார்த்தித்து அருளினார் இறே –
த்ர்ணீ க்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிய -ஸ்ரீ ராமானுஜ-பதாம் போஜ சமாச்ரயண சாலின -என்னக் கடவது இறே –

நானிலத்தே சில மானிடத்தை புயலே என கவி போற்றி செய்யேன் -என்றும்
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்றும்
மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்றும் –
ஷோணீ கோண சதாம்ச பால நமவஹா துர்வார கர்வான-லஷூப் யத் சூத்ர நரேந்திர சாடுரச நாதன்யான் நமன்யமஹோ –
யம்கம்சித் புருஷா தமம்கதி பயாக்ராமே-சமல்பார்த்ததம் – என்றும் சொல்லுகிறபடி –
சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதையான -மகா பிருத்வியிலே –
ஒரு ஷூத்ரனைக் குறித்து -ஜல ஸ்தல விபாகம் அறசர்வ விஷயத்திலும் வர்ஷிக்கும் வர்ஷூ-கலாவஹம் போலே
இருப்பான் ஒருவன் என்று அவனுடைய ஔதார்யத்தை கவி பாடி-பிரபந்தீகரித்தும் –
வாசா ஸ்துத்திதும் -இப்படி அப்ராப்தரை சேவியேன் –
புயல்-மேகம் -போற்றுதல்-புகழ்தல் –

அன்றிக்கே –
தாம் சரம பர்வ நிஷ்டர் ஆகையாலே -சர்வேஸ்வரனைக் கூட தேவதாந்திர தோடு ஒக்க-அநாதரித்து -கணிசித்து –
ஸ்ரீ வேங்கடாசல சிகராலய காள மேகம் -என்று அவரைப் போலே ஸ்துதியாதே –
தேவு மற்று அறியேன் -குரோர் அந்ய ந பாவயேத் -என்கிறபடி இருக்க கடவேன் -என்னவுமாம்
இப்படி இவ்வளவும் -தேவதாந்தரங்களும் -நீச மனுஷ்யரும் -அப்ராப்தர் ஆகையாலே –அவர்களை திரச்கரித்தும் –
பிராப்த விஷயனான சர்வேஸ்வரனை -ஸ்வ தந்த்ரன் ஆகையாலே –பந்த மோஷங்கள் இரண்டுக்கும் -பொதுவானவன் என்னும்
சம்சயத்தால் -அவனை அநாதரித்தும்- பிரதி கூல்ய வர்ஜனம் பண்ணினீர் –
ஆனாலும் சிறிது ஆநு கூல்ய சரணம் என்று பேர் இடலாவது ஒரு-வியாஜ்யம் உம்மிடித்தில் உண்டோ -என்ன –
உண்டு என்கிறார் -அது என் என்ன –

எம்பெருமானாரே தெய்வம் என்பர்
கண்ணனைக் காட்டித் தரினும் வேண்டேன் என்று இருப்பார் –
இத்தகைய நிலை வடுக நம்பிக்கும் வாய்த்து இருந்தது –
அந்நிலையை ஸ்ரீ மணவாள மா முனிகள்-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி -தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும் உன் தனக்கே ஆட்கொள் உகந்து -என்று வேண்டுகிறார் –

நயவேன் ஒரு தெய்வம்
தேவு மற்று அறியேன் -என்னும் ஸ்ரீ மதுர கவிகளைப் போலே கூறுகிறார் –
பிரதம பர்வத்தில் ஊன்றியவர்கள் -வாசுதேவம் பரித்யஜ்ய யோன்யம் தேவமுபாசதே
த்ருஷிதோ ஜாஹ்ன வீதீரே கூபம் கநதி துர்மதி -என்று
எங்கும் வியாபித்து விளங்கும் ஸ்ரீ வாசுதேவனை விட்டு -எவன் வேறு தெய்வத்தை உபாசிக்கிறானோ –
அந்த மதிகேடன் -கங்கை கரையில் விடாய் தீரக் கிணறு வெட்டுகிறான் -என்றபடி-
தொடர்பு இல்லாதவராய் -துர்லபராய் -பாடுபட்டு வழி பட வேண்டியவராய் -உள்ள
திரு இல்லாத் தேவரை -உபேஷிப்பர் –
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்-என்பர்
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் -என்று இருப்பார் –
ஸ்ரீ அமுதனாரோ -ஸ்வ தந்த்ரனாய் -சம்சார பந்தத்துக்கும் மோஷத்துக்கும் காரணமான ஸ்ரீ சர்வேஸ்வரனையே உபேஷிப்பர்

நானிலத்தே –கவி போற்றி செய்யேன் –
கவி வாணர் -ஆசை தீர்ந்து மீண்டும் பிறர் இடம் குறை வேண்டிப் போக வேண்டாதபடி கொடுக்கும் தரம் பெற்ற-
செல்வம் உள்ளவர்கள் இல்லாத இடம் இது என்னும் கருத்துடன் –நானிலத்தே -என்கிறார் –
இம் மண்ணுலகில் செல்வர் இப்போதில்லை நோக்கினோம் -திருவாய்மொழி -3-9-6-என்று ஸ்ரீ நம் ஆழ்வார் அருளியதை இங்கு நினைவு கூர்க-

மானிடரை என்று உயர் தினையால் கூறுதற்கும் அருஹதை அற்றவர் என்று கருதி –
சில மானிடத்தை –என்று
அஃறிணையால் கூறுகிறார் –
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -திருவாய் மொழி – 3-9 9- -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
அசேதனங்களை சொல்லும் படியிலே சொல்லுகிறார் –
தன்னை மெய்யாக அறியாதவன் அசித் பிராயன் இறே-3-9 2- – என்பது ஈடு
கொடுக்கும் திறன் இல்லாத மானிடத்தை புயலே -என்று-கூறவே -அது பொய்யாயிற்று –
பிழைப்புக்காக அங்கனம் பொய் கூறுவர் பிறர் பயன் எதிர் பாராது-வழங்குதலும் வரையாது வழங்குதலும்
கொடுக்கப் பெறாத பொது உடம்பு வெளுத்தாலும் உள்ள புயலுக்கு ஒப்பானவனே என்று கூசாது போய் பேசுவர் –
மாரியனைகை மால்வரை யொக்கும் திண் தோள் என்று
பாரிலோர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே – என்னும் திருவாய் மொழியும் இங்கு காண்க –

இவ்வாறு கவி போற்றி செய்யேன் –
கவியால் போற்றி செய்யேன் -கவிகள் சொல்லித் துதியேன்-என்றபடி –
இனி கவி செய்யேன்–போற்றி செய்யேன்-என்னவுமாம் –
கவி செய்கையாவது -அவர்களை கவி பாடுகை
போற்றுகை யாவது -அல்லாத சொற்களால் புகழுகை –

பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி-வணங்கு நல் தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே-என்கிறபடியே
தத் விஷயமான பக்தி -ததீய பர்யந்தமாய் -திருவரங்கம் -என்று யாதார்ச்சிமாக-சொன்னாலும் –
தத் பக்தி பாரவச்யத்தாலே -காதல் மையல் மென்மேலும் பெருகி வாரா நிற்கும் –
மையல்-பிராந்தி –

பொன்னரங்கம் –அயரேன் –
கீழ் பிரதி கூலிம் தவிர்ந்தமை கூறப்பட்டது
இனி ஆனுகூல்யம் சொல்லப்படுகிறது
பொன்னரங்கம் –
பொன் போலே விரும்பத்தக்க அரங்கம்-
அந்தப் பேச்சிலேயே ஸ்ரீ எம்பெருமானார்க்கு மையல் பெருகுகிறதாம் –
அந்த துறவிக்கும் –பொன் -என்று தொடங்கும் போதே-மையல் பெருகி விடுகிறது –
மையல்-வியாமோகம்-

மாந்தற்கு வியாமோகம் பொன்னிலே
இத்துறவி வேந்தற்கு வியாமோகம் பொன்னரங்கத்திலே
உலகில் அனைத்தையும் த்ருணமாக அற்பமாக -இவர் மதிப்பது அச்யுதனுடைய பொன்னடிகளிலே-உள்ள
வ்யாமோகத்தாலே என்கிறார் ஸ்ரீ ஆழ்வான் –
அச்யுத பதாம் புஜ யுக்மருக்ம வ்யாமோஹத –என்பது அவரது திரு வாக்கு –
பொன்னரங்கத்தில் மயல் பெருகுகிறது என்கிறார் அவர் சிஷ்யரான ஸ்ரீ அமுதனார் –

இனி திருவரங்கம் என்னும் பொருளில்
பொன்னரங்கம் என்றார் ஆகவுமம் –
பொன் -திரு அவளுடைய அரங்கம் -நாட்டியம் ஆடும் இடம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் என்க-
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே -ஸ்ரீ நாச்சியார் திரு மொழி -11 9- – என்னும் இடத்தில்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -அவ்வூரின் பேரும் பெரிய பிராடியாருக்கு ந்ருத்த ஸ்த்தானம் -என்று-
வியாக்யானம் அருளி செய்து இருப்பது இங்கு அறியத் தக்கது –
ஸ்ரீ பிராட்டி பிறந்தகத்தையும் –புக்ககத்தையும் -மறந்து -மக்களாகிய நம்மை காப்பதற்கு தக்க இடமாய் இருத்தல் பற்றி
இவ்விடம் பெரும் களிப்புடன் களிநடம் புரிவதாக பெரியோர் பணிப்பர் –
மக்களை பிராட்டி காப்பது புருஷகாரம் எளிதில் பலிக்கும் இடம் ஆயிற்று ஸ்ரீ திருவரங்கம் –

ஏனைய இடங்களில் ஸ்ரீ பெருமாளுக்கு பிராதான்யமாக அவர் ஸ்வா தந்த்ரியம் தலை தூக்கி நிற்றல் கூடும்
அதனை அடக்கி கருணையைத் தூண்ட வேண்டிய அருமை உண்டு ஸ்ரீ பிராட்டிக்கு -இங்கோ பிராட்டிக்கு
பிரதான்யமாய் -ஸ்வா தந்த்ரியம் தலை சாய்ந்து கருணை மீதூர்ந்து -இருத்தலின் களி நடம் கண்டு
பரவசம் அடைந்த பெருமாள் வாயிலாக மக்களை அளிப்பது மிக எளிதாய் உள்ளது -இவ்விடத்தில் –
அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே -ஸ்ரீ பெரிய திருமொழி -8 2-7 – – என்னும் ஸ்ரீ திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தி
வ்யாக்யானத்தில் -நகச்சின்னா பராத்யதி -என்னும் பெண்ணரசி இறே-என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை-
அருளிச் செய்து இருப்பது அறிதற்கு உரியது –

ஆக அரும் தவனாகிய ஸ்ரீ எம்பெருமானார் -தாம் கைக் கொண்ட சரணாகதி -தம் தொடர்பு உடையார் அனைவர் திறத்தும் –
பலிப்பதற்கு ஸ்ரீ பிராட்டி உறு துணையாய் இருந்தமை பற்றி
பொன்னரங்கம் என்னும் போதே மையல்-பெருகுவாராய் ஆயினார் -என்க
இனி ஸ்ரீ இறைவன் திரு நாமங்கள் பல இருக்க ஸ்ரீ பொன்னரங்கம் என்னும் ஊரின் பேரிலே
ஸ்ரீ எம்பெருமானாருக்கு- மயல் பெருக காரணம் –
தம் ஆசார்யராகிய ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் உகந்த திருப் பேராய்-இருத்தலே என்பர் பெரியோர் –
இவ் விஷயம் ஸ்ரீ பெரிய ஜீயரால் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -4 4-1 – – வ்யாக்யானத்தில்
ஓர் ஐதிஹ்யம் மூலம் நன்கு விளக்கப் பட்டு உள்ளது –
அது இது –ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சரம காலத்தில்- ஸ்ரீ உடையவர் எழுந்து அருளி –
இப்போது திரு உள்ளத்தில் அனுசந்தானம் எது -என்று கேட்க –
ஸ்ரீ பகவன் நாமங்களாய் இருப்பன அநேகம் திரு நாமங்கள் உண்டாய் இருக்க –
ஸ்ரீ திருவரங்கம்-என்கிற நாலைந்து திரு அஷரமும் கோப்பு உண்ட படியே -என்று நினைத்து இருந்தேன் காணும் –
என்று அருளிச் செய்ய –
அத்தை ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் விரும்பின திரு நாமம் என்று ஸ்ரீ உடையவர் விரும்பி இருப்பர் –

இராமானுசன் –
இப்படிப் பட்ட ஸ்ரீ எம்பெருமானாருடைய –

மன்னு மா மலர் தாள் –
இவருடைய திருவடிகளுக்கும் –
மன்னு மா மலர் என்று -நித்தியமாய் மகத்தாய் -விகசிதமான-புஷ்பத்தை போலியாக அருளிச் செய்தது –
லோகத்தில் சாதாரண புஷ்பத்தை எடுத்து சொல்லிற்று அன்று –
லோகத்துக்கு புஷ்பத்துக்கு விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் -தொடக்கமானவை –
ஒரு கால விசேஷத்தில்-உண்டாய் – ஒரு காலத்தில் இல்லாதே ஒழியும் இறே –
அப்படி அன்றிக்கே –
யாவதாத்மா பாவியாய் கொண்டு-இருப்பதாய் -விகாசமும் பரிமளமும் மாறாதே மென்மேலும் பெருகி வரும்படி –
அவற்றை உடையதாய் – லோகத்தாரை எல்லாம் ஸ்வ வசமாக்கிக் கொள்ளுகைக்கு ஈடான மகத்துவத்தை
உடைத்தான தொரு-புஷ்பம் கிடைத்தால் அத்தை அவர் திருவடிக்கு ஒரு போலியாக சொல்லலாம் என்றபடி –

அயரேன்-
குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்றும் –
த்யா யேத்ஜ பேத் நமேத் பக்த்யா -என்கிறபடியே-
அத் திருவடிகளை சர்வதா த்யானம் பண்ணிக் கொண்டு -விச்மரியேன் –
அயர்வு -மறுப்பு –
எனாத வந்தோ ஹி பவந்தி லோகே தி நாத் மகார்யாணி சமாரபந்தே -என்கிறபடியே என்னுடைய-பரத்தை எல்லாம்
ஸ்ரீ எம்பெருமானார் பரித்த பின்பு -நிர்ப்பரனாய் இருக்கிறேன் என்று கருத்து –

ஆன பின்பு –
அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே –
அருவினை -அனுபவ பிராயாச்சித்தங்களாலும்-போக்க அரியதாய் -அநாதி காலம் தொடங்கி பண்ணப்பட்ட
புண்ய பாப ரூப கர்மங்கள் வந்து
என்னை –
யேன யத்ர சபோக்தவ்யம் சுகம் வா துக்கமே வா சத்தத்த்ராஜ்வா பத்வை வபலாத் தேவே ந நீயதே –என்கிறபடியே –
இத்தனை நாளும் ஸ்வ ஸ்வ பலங்களை அனுபவித்து -சம்சாரத்திலே மூட்டினாலும்-
இப்போது ஸ்ரீ எம்பெருமானாருடைய சம்பந்தம் ஆகிற ராஜ குல மகாத்மயம் உடைய என்னை –

இன்று-
இப்போது

எவ்வாறு அடர்ப்பது –
எந்த உபாயத்தாலே பாதிப்பது -வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்கிறபடியே –
சிம்ஹத்தை கண்ட சூத்ர ம்ருகங்களைப் போலே-கண்டு ஓடிப் போகிற கர்மங்களுக்கு –
சும்மனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே
இரு செவி அறியாதபடி போக வேண்டி இருக்கை ஒழிய என்னைப் பாதிக்க வழி இல்லை என்றது ஆய்த்து –
நயவேன் பிறர் பொருளை -என்கிற பாட்டிலே இவ் அர்த்தத்தை பிரதம பர்வ நிஷ்டரும் அருளிச் செய்தார் இறே –

மலர்த் தாள் அயரேன்
குருபாதாம் புஜம் த்யாயேத் -குருவின் திருவடித் தாமரையை த்யானம்செய்ய வேண்டும் -எனபது அனுஷ்டானத்தில்-வந்த படி –

அரு வினை -இன்று அடர்ப்பதுவே –
வினைகள் அடர்ப்பதற்கு மூன்று வழிகள் உண்டு -அவற்றில்
முதலாவது -இயல்பான தொடர்பு அற்ற -அப்ராப்தமான –வேறு தெய்வங்கள் இடம் ஈடுபாடு –
அது நானிலத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இல்லாத வேறு ஒரு தெய்வத்தை-நயவாமையாலே-என்னிடம் இல்லை-
இனி இரண்டாவது வழி சேவிக்கத் தகாத அற்ப மனிதர்கள் இடம் பொருள் வேண்டி அவர்களைப் போற்றுதல்-
சில மானிடத்தை புயலே எனப் போற்றாத என்னிடம்-அதுவும் இல்லை –
இனி மூன்றாவது வழி -சப்தாதி விஷயங்களை நினைப்பதாகும் –
அதுவும் –மன்னு மா மலர்த்தாள்-அயராத -என்னிடம் இருப்பதற்கு இல்லை –
இனி எவ்வாறு அருவினை என்னை அடர்ப்பது -என்கிறார் –

பிராப்தத்தைச் செய்து அபிராப்தத்தைச் செய்யேன் என்று இருக்கிற என் பக்கல் பாபத்துக்கு வரப் போமோ -என்கிறார் –

உமக்கும் உம்முடைய கரணங்களுக்கும் பகவத் விஷயத்திலே இதர விஷயங்களைக் கடைக் கணியாத படி ப்ராவண்யம்
உரைத்தாலும் துர்வாசனையாலே அவை வந்து மேலிடில் செய்வது என் -என்ன -நான் நின்ற நிலை
இதுவான பின்பு எங்கனே அவை வந்து மேலிடும் படி -என்கிறார் –

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை —–64–ஸ்ரீ பொய்கை யாழ்வார் –
1-பிறர் பொருளை விரும்பேன்-/2-கீழாரோடு சேரேன் / 3–மேலார்கள் உடனேயே பழகுவேன் –
4–திருமாலின் அரிய சீர்மை கண்டு வியக்க மாட்டேன் –/ 5-திருமாலை அல்லது வேறு தெய்வத்தை ஏத்த மாட்டேன் –

நயவேன் பிறர் பொருளை –
பிறர் பொருளை ஆசைப்படேன் –த்ரவ்யத்துக்கு உத்கர்ஷமாவது-த்ரவ்யம் தன்னுடைய
நன்மையாலும் -உடையவனுடைய நன்மையாலும் —
த்ரவ்யம் பரிணாமியான அசித் அன்றிக்கே ஆத்ம த்ரவ்யமாய் இருந்தது -யஸ் யாத்மா சரீரம் –பதிம் விஸ்வஸ்ய
என்று ஓதப்படுகிறவன் உடையவன் —
உத்க்ருஷ்டமான ஆத்மாவை -என்னது -என்று இரேன் –

நள்ளேன் கீழரோடு–
ஆத்மாவை என்னது என்று இருக்குமவர்களோடு -இவர்களே கீழார் ஆகிறார் -அவர்களோடு கிட்டேன்
தங்கள் படி ஆக்கிக் கொள்வர் என்று

உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் –
உத்தமர் என்னும் அவர்களோடு அல்லது உசாவேன்

வியவேன்-திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்–
ஸ்ரீ யபதியைக் கண்டு அல்லது விஸ்மயப் படேன் –
அவனை அல்லது வேறு சிலரை தெய்வம் என்று ஸ்துதியேன் –
வியவேன்-திரு மாலை-ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யத்தை அர்த்த வாதம் என்று இரேன்

வருமாறு என் என் மேல் வினை —-
அவசியம் அநு போக்தவ்யம்– என்கிற வசனத்தைக் கொண்டு என் பக்கலிலே வர போமோ பாபத்துக்கு -என்கிறார் –
க்ருதக்ருத்யன் என்கிறார் –
ஸ்ரீ எம்பெருமான் விரும்பும் ஆத்மாவை அபஹரியேன் -ராவணன் செயலைச் செய்யேன்
கீழார் அவனுக்கு கூட்டுப்படும் மாரீச பிரப்ரு த்திகள்
உயர்ந்தவர் விச்வாமித்திராதிகள் -மஹா தமாநசது –
பெரியோர் -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய-ப்ரஹ்மாதிகளைக் கண்டால் அடுப்படைக் கல்லாக நினைத்து இருக்கும் அத்தனை –
திரு மாலை யல்லது வியவேன் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை –அவசியம் அநு போக்தவ்யம்–என்கிறவை என்னை நலியவோ

உத்தம புருஷஸ் த்வந்ய–என்கிறபடியே
சர்வ விசஜாதியனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஆத்ம த்ரவ்யத்தை என்னது என்று விரும்பேன் –
பிறரதான ஆத்மாவை என்னது என்று இருக்கும் தாழ்ந்த சம்சாரிகளோடு செறியேன் –
உத்துங்கமான ஆத்ம வஸ்து சர்வ உத்தமனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடையது என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒழிய ஏதேனும் ஒன்றை உசாவேன் –
சர்வாதிகனான ஸ்ரீ யபதியை ஒழிய புறம்பே சிலரை ஆசிரயணீய தேவதைகள் என்று புத்தி பண்ணி வாய் விட்டுப் புகழேன்
இவ்வாகாரங்கள் நமக்கு உண்டாயத்தே என்று ஆச்சர்யப் படேன் –
இப்படியான பின்பு பகவத் அனுபவ பாத்ரரான நம்முடைய மேல் தன் நிக்ரஹ ரூபமான பாபம் வந்து மேலிடும் படி எங்கனே –

ஸ்ரீ திருமாலை அல்லது வியவேன்–
அவனை அல்லது தைவம் அன்று ஏத்தேன்–என்னவுமாம் –

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி ——முதல் திருவந்தாதி-–11-

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம் ——-63-

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால் ——-65–

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் ——95-

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது————இரண்டாம் திருவந்தாதி—–21-

பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே!
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்,
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ் சோலை
அயன் மலை அடைவது அது கருமமே–2-10-3-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்!
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே–3-9-4-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான் கிலேன்;
மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே–3-9-7-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ விஷ்ணு புராண அந்தர் கத–முதல் அம்சம் -12-அத்யாயம் -ஸ்ரீ துருவ ஸ்துதி-

April 13, 2020

பூமிர் ஆபோ அநலோ வாயு கம் மநோ புத்திரேவ ச
பூதாதி ஆதி ப்ரக்ருதி யஸ்ய ரூபம் நதோஸ்மி தம் -1–

ஸூத்த ஸூஷ்ம அகில வ்யாபீ ப்ரதானாத் பரதஸ் புமாந்
யஸ்ய ரூபம் நமஸ் தஸ்மை புருஷாய குணாத்மநே–2-

பூதாதி நாம் சமஸ்தாநாம் கந்தாதி நாம் ச சாஸ்வத
புத்த்யாதீ நாம் பிரதானஸ்ய புருஷஸ்ய ச யஸ் பர-3-

தம் ப்ரஹ்ம பூதம் ஆத்மா நம் அசேஷ ஜகத் பதிம்
ப்ரபத்யே சரணம் ஸூத்தம் த்வத் ரூபம் பரமேஸ்வர -4-

பிருஹத் வாத் ப்ரஹ்மணத் வாத் ச யத் ரூபம் ப்ரஹ்ம சம்ஜ்ஜிதம்
தஸ்மை நமஸ்தே சர்வாத்மந் யோகி சிந்த்யா விகாரிணே -5-

சஹஸ்ர சீர்ஷா புருஷா சஹஸ்ராக்ஷ சஹஸ்ர பாத்
சர்வ வ்யாபீ புவ ஸ்பர்ஸாத் அத்யதிஷ்டாத் தாசங்குலம் -6-

யத்ய பூதம் யச்ச வை பவ்யம் புருஷோத்தம தத் பவாந்
த்வத்தோ விராட் ஸ்வராட் சம்ராட் த்வத் தஸ்சாபி அதி பூருஷ -7-

அத்யரிச்சத் சோ தஸ்ய திர்ய கூர்த்வம் ச வை புவ
த்வத்தோ விஸ்வமிதம் ஜாதம் த்வத்தோ பூதம் பவிஷ்யதி -8-

த்வத் ரூப தாரிணஸ் சாந்தஸ் சர்வ பூதம் இதம் ஜகத்
த்வத்தோ யஜ்ஜ சர்வ ஹுதா ப்ருஷ தாஜ்யம் பஸூர்த் விதா-9-

த்வத்தோ ருசோ தஸ் சாமாநி த்வத்தஸ் சத்தாம் ஜஜ்ஜிரே
த்வத்தா யஜும்ஷி அஜாயந்த த்வத்தோசர்வ ச ஏகாதோத தஸ்-9-

காவஸ் த்வத்தஸ் ஸர்வ பூதா த்வத்தோ ஜா அவ்யோ ம்ருதோ
த்வந் முகாத் ப்ராஹ்மணா பாஹவோ தவ ஷத்ரம் அஜாயத-11-

வையாஸ்யா தவோருஜோ ஸூத்ரா தவ பத்ப்யாம் சமுத்ததா
அஷனோ ஸூர்ய அநல ப்ராணாத் சந்த்ரமா மநஸஸ் தவ -12-

ப்ரானோ ந ஸூஷிராத் ஜாத முகாத் அக்நி அஜாயத
நாபி தோ ககநம் த்யவ்ஸ்ச சிரஸ சம்வர்த்த-13-

திஸஸ் ஸ்ரோத்ராத் ஷிதி பத்ப்யாம் த்வத் தஸ் சர்வ மபூதிதம்
ந்யக்ரோத ஸூ மஹாந் அல்பே யதா பீஜே வ்யவஸ்தித
சம்யமே விஸ்வம் அகிலம் பீஜ பூதே ததா த்வயி -14-

பீஜாத் அங்குர ஸம்பூதோ ந்யக்ரோத் யஸ்து சமுச்சிரத
விஸ்தாரம் ச யதா யாதி த்வயா ஸ்ருஷ்டம் ததா ஜகாத் –15-

யதா ஹி கதலீ நாந்யா த்வத் பத்ராத் அத த்ருச்யதே
ஏவம் விஸ்வஸ்ய நான்யஸ்த்வம் த்வத் ஸ்தாயீஸ்வர த்ருச்யதே -16-

ஹலாதிநீ சந்திநீ சம்வித் த்வய்யேகா சர்வ ஸம்ஸ்திதவ்
ஹலாத தாபகரீ மிஸ்ர த்வயி நோ குண வர்ஜித-17-

ப்ருதக் பூதைக பூதாய பூத பூதாய தே நம
ப்ரபூத பூத பூதாய துப்யம் பூதாத்மநே நம -18-

வ்யக்தம் ப்ரதான புருஷவ் விராட் சம்ராட் ஸ்வராட் ததா
விபாவ்யதே அந்தக் கரணே புருஷேஷ் வஷ்யோ பவாந்-19-

சர்வஸ்மிந் சர்வ பூதஸ் தவம் ஸர்வஸ் சர்வ ஸ்வரூப த்ருத்
சர்வம் த்வத்த ததஸ்த த்வம் நமஸ் சர்வாத்ம நே ஸ்து தே -20-

சர்வாத்ம கோசி ஸர்வேச சர்வ பூதஸ்தி தோ யதஸ்
கதயாமி தத கிம் தே சர்வம் வேத்சி ஹ்ருதி ஸ்திதம் -21-

சர்வாத்மந் சர்வ பூதேஸ சர்வ சத்த்வ ஸமுத்பவ
சர்வ பூதோ பவாந் வேத்தி சர்வ சத்த்வ மநோ ரதம் -22-

யோ மே மநோ ரதோ நாத சபலஸ் ச த்வயா க்ருதஸ்
தபஸ் ச தப்தம் சபலம் யத் த்ருஷ்டோசி ஜகத் பதே -23–

ஸ்ரீ துருவ ஸ்துதி சம்பூர்ணம் –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ துருவ பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –34-நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை – இத்யாதி —

April 12, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

அவதாரிகை –
கலி தோஷ அபிபூதமான ஜகத்தை ரஷித்தமையை சொல்லி -இவரை -ஆஸ்ரயிப்பார்க்கு-ஆத்ம குணாதிகள்
தானே வந்து சேரும் என்னும் அத்தையும் –
இவருடைய ஆத்ம குணோத்-பாதகத்வ ஹேதுவான சகாய பலத்தையும் அருளிச் செய்தார் கீழ் இரண்டு பாட்டாலே –
இப்பாட்டிலே –
இப்படி கலி தோஷத்தைப் போக்கி -லோகத்தை ரஷித்த அளவிலும் – ஸ்ரீ எம்பெருமானார் குணங்கள் பிரகாசித்தது இல்லை-
என் கர்மத்தைக் கழித்த பின்பு வைலஷண்யத்தை தரித்தது -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ் இரண்டு பாட்டாலே –
கலியினுடைய க்ரௌர்யத்தாலே க்லேசப்பட்ட லோகத்தை ரஷித்த –ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு
ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கள் தன்னடையே வந்து சேரும்-என்றும் –
அவர் தாம் அந்த ரஷணத்துக்கு உறுப்பான வைபவத்தை உடையவர் என்றும் பிரதி பாதித்து
இப்பாட்டிலே –
அப்படிப்பட்ட ரஷணத்திலே ஸ்ரீ எம்பெருமானார் உடைய பிரபாவம் பிரகாசித்தது இல்லை –
என்னுடைய ஆசூர க்ருத்யங்களை யம லோகத்தில் எழுதி வைத்த புஸ்தக பாரத்தை எல்லாம்-தஹித்த பின்பு காணும்
அவருடைய கல்யாண குண வைபவத்துக்கு ஒரு பிரகாசம் லபித்தது -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்தமையும் –
ஆஸ்ரயிப்பார்க்கு ஆத்ம குணாதிகள் தாமே வந்து சேருதலும் –
ஆத்ம குணங்களை உண்டாக்குவதற்கு-இவருக்கு ஏற்ப்பட்டு உள்ள சகாய பலமும் -கீழ் இரண்டு பாட்டுக்களாலும் கூறப் பட்டன –
இந்தப் பாட்டில்
இப்படிக் கலியை செறுத்து உலகை ரஷித்த படியால் ஸ்ரீ எம்பெருமானார் குணங்கள்-பிரகாசிக்க வில்லை –
என் வினை யனைத்தையும் விலக்கிய பின்னரே அவை பிரகாசித்தன -என்கிறார் –

ஈசன் வானவர்க்கு என்பான் என்றால் அது தேசமோ திரு வேங்கடத்தானுக்கு .
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே.-ஆழ்வார்-…அது போல-
அந்தாமத்து அன்பு செய்-ஆவி சேர் அம்மான்-கலந்து சேர்ந்த பின்பு தான் விலஷணம் ஆனது என்று ஆழ்வார் அருளியது போல .
ஆவி சேர்ந்த பின்பு தான் அம்மான் ஆனான்
தளிர் புரையும் திருவடி என் தலை மீது ..திரு மங்கை ஆழ்வார் கிட்டியதும் சருகாய் இருந்தது தளிர் விட-
அகில ஜகத் நாதன் அஸ்மின் நாதன்-ஸ்ரீ ரெங்க நாத மம நாத
தம் வினைகள் பாரம் -குறித்து அதைப் போக்கியதே கலியை கெடுத்ததை விட சுவாமிக்கு புகழ் என்கிறார்

நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –

பத உரை –
இராமானுசன் தன் -எம்பெருமானார் உடைய
நயப் புகழ்-விரும்பத் தக்க குணத் திரள்
நிலத்தை -உலகத்தை
செறுத்து -நிலை குலையச் செய்து
உண்ணும் -துன்புறுத்தும்
நீசக் கலியை -கீழ்த் தரமான தன்மை கொண்ட கலியினுடைய
நினைப்பரிய -நெஞ்சினாலும் இவ்வளவு என்று நினைக்க முடியாத
பலத்தை -வலுவை
செறுத்தும் -தொலைத்தும்
பிறங்கியது இல்லை -விளங்கியது இல்லை
என்-என்னாலே
செய்-செய்யப்பட்ட
வினை-பாபங்களை
தென் புலத்தில் -யம லோகத்தில்
பொறித்த -எழுதி வைத்த
அப்புத்தகச் சும்மை -அத சுவடிச் சுமையை
பொறுக்கிய பின் -கொளுத்திய பின்
நலத்தை -விளங்கும் சிறப்பை
பொறுத்தது -தாங்கிக் கொண்டது-

வியாக்யானம் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய ஸ்ப்ருஹநீயமான குண ஜாதம் –
லோகத்தை அபிபவித்து ஹிம்சியா நின்று உள்ள ஹேயமான கலியை மனஸ்சாலே பரிச்சேதிக்க அரிதாய் இருந்துள்ள பலத்தை –
தேஜஸ் சகாசத்தில் திமிரம் போலே அபிபூதமாம்படி பண்ணின வளவிலும் பிரகாசித்தது இல்லை –
என்னாலே உண்டாக்கப் பட்ட பாபங்களை யம லோகத்திலே எழுதி வைத்த அந்தப் புஸ்தக பாரத்தை-தஹித்த பின்பு
ஔ ஜ்ஜ்வல்ய ரூபமான வைலஷண்யத்தை தரித்தது –
பிறங்குதல்-பிரகாசித்தல்
தென் புலம் -யம புரம்
சும்மை-சுமை
பொறுத்தல்-தஹித்தல்
நயம்-விருப்பம்–

பொறித்த -கல் வெட்டு போலே செய்த கர்மங்கள் -நைச்சிய அனுசந்தானம் –
புண்யம் தாமரை -விகாசம் அடைய -பாபம் ஆகிய இருள் போக்க ஸ்ரீ ராமானுஜ திவாகரன் –

நிலம்-
தர்மார்த்த காம மோஷ புருஷார்த்தங்களுக்கு எல்லாம் விளை நிலமான மகா பிருத்வி
க்ருத த்ரேதா த்வபாரதி யுகங்களிலே -சாதுர்வர்ண மயா ஸ்ரஷ்டா குண கர்ம விபாக -என்று சொல்லப்படுகிற-
தம் தம் மரியாதைகளில் நடந்து -ஸூகோத்தரமாக பகவத் ஆஜ்ஜா பரிபாலனம் பண்ணிக் கொண்டு போருகிற பூமி –என்றபடி –
நிலத்தை –
அந்த பூமியிலே வர்த்திக்கிற சேதனரை –

செறுத்து –
அந்த மரியாதை எல்லாம் மூலையடியே-நடத்திக் கொண்டு பூர்வ காலத்துக்கு விபரீதமாக
எல்லாரையும் துக்காகுலராம் படி பண்ணி –
உண்ணும் –
லோகத்தாரை எல்லாம் ஸ்வ வசமாக கொண்டு சாம்ராஜ்யம் பண்ணி நிற்கிற கலி
தான் லோகத்தை-அழித்த பிரகாரத்தை கீழில் பாட்டில் பரக்க சொன்னோம்-

நிலம்-
தர்மம் அர்த்தம் காமம் புருஷார்த்தம் -விளை நிலம் ஆன மகா ப்ருத்வி– கொண்டாடுகிறார்
ஸ்ரீ ராமன் ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ ஆழ்வார் திருவடி பட்ட இடம்.என்பதால்–இதுவும் அவன் விபூதி தானே
கலி படுத்தும் பாட்டால் நிலத்தை பழிக்க கூடாது
வைபவம் நிறைய கர்ம பூமி–வர்ண ஆஸ்ரம பிரிவின் படி நடந்து ஞானம் பெற்று பக்தி வளர்க்க -ஹேதுவான நிலம்
செல்வ செழிப்பு, ஆரோக்யமாக, பயம் நீங்கி ,இளையவர் மரிப்பதை பார்க்க வேண்டாத படி
தான தான்யம் நிறைந்து ஆனந்தமாக இருந்தார்கள்.
பகவத் ஆணை படி நடந்த காலம்..-முன்பு உள்ள யுகங்கள்
இவற்றை மூலை அடி பண்ணி விபரீதமாக துக்கமே அனுபவித்து சாம்ராஜ்யம் பண்ணி வச படுத்தி கொண்டு
நிலத்தை செறுப்பதே சோறு கலிக்கு

நீசக் கலியை –
மனுஷ்யரிலே சண்டாளரைப் போலே காணும் யுகங்களிலே அதி ஹேயமான கலி யுகமும் –
நீசக் கலியை –
நீசமான கலி யுகத்தின் உடைய –

நினைப்பரிய பலத்தை –
அப்ராப்ய மனச சஹா -என்னுமா போலே எத்தனையேனும் தரம் உடையார்க்கும்-அந்த யுகத்தின் உடைய க்ரௌர்யம்
தட்டாதபடி வர்த்திப்போம் என்று நினைத்து இருக்கவும் அரியதாய் இருக்கிற பலத்தை –
மனசால் பரிச்சேதிக்க அரிதாய் இருக்கிற பலத்தை -என்றபடி –
மகா பல-என்று சொல்லப்படுகிற-ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய பலத்தை பரிச்சேதிக்கிலும்
இதனுடைய பலத்தை பரிச்சேதிக்க ஒண்ணாது காணும் –

செறுத்தும் –
பாஸ்கரன் உதித்து அந்தகாரத்தை சவாசனமாக போக்கினது போலே -கலி தோஷத்தை நிவர்த்திப்பித்த அளவிலும் –
பொலிக பொலிக பொலிக போயிற்று வல் உயர் சாபம் நலியும் நரகமும்-நைந்த நமக்கு இங்கி யாதொன்றுமில்லை –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று மயர்வற-மதி நலம் அருளப் பெற்றவரும்
இவருடைய அவதாரத்தைக் கொண்டாடினார் இறே –
ஸ்வ புருஷம் மபிவீஷ்ய பாசாஹச்துவம் வததியம் கிலதச்ய கர்ண மூலே -என்றும்
பரிஹர மதுசூதன பிரபன்னா ப்ரபுரகம் அன்யக்ர்ணா ந வைஷ்ணவானாம் –என்றும்
பவ சரணம் இதீரயந்தியே வைத்ய ஜடதூரதரென தானபாபான் -என்றும்
நகலு பாகவதாயாம் விஷயம் நச்சந்தி -என்கிறபடியே
இவர் அவதரித்து -எல்லாரையும் பிரபத்தி மார்க்கத்திலே-நடப்பித்து -பாகவதாரகப் பண்ணி –
கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழி தருகின்றோம்-நமன் தமர் தலைகள் மீதே -என்கிற பிரகாரத்திலே
கலியினுடைய வெக்காயம் தட்டாதபடி லோகத்தை எல்லாம் -ரஷித்த அளவிலும் என்றபடி-

நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலி –
நிலம்-நிலத்தில் உள்ள சேதனர் செறுக்கப் படுபவர் அவரே ஆதலின் கலி நீசனாதற்கு ஹேது நிலத்தை செறுத்து உண்ணுதல்
உண்ணல்-கபளீகரித்தல் ஆவது -உலகைத் தன வசம் ஆக்குதல்
காலம் ஆதலின் உலகத்தை தன வசத்திலே ஆக்கி வியாபகமாய் இருத்தல் பொருந்தும் –
கிருதாதிகள் நிலத்தில் வியாபிக்கும் அவை அன்றி செறுத்து உண்பவை அல்ல –

செறுத்தல் ஆவது –
வர்ண ஆஸ்ரம மரியாதைதையும் இறைவனை வழி படும் நெறியையும் குலைத்தல் –
வர்ண ஆஸ்ரம ஆசார வதீ பிரவ்ருத்திர் நகலவ் ந்ருனாம்-என்று வர்ண ஆஸ்ரமங்களை பொறுத்த நடவடிக்கை
மானிடர்க்கு கலி காலத்தில் இல்லை -என்று சரீரத்தோடு கூடிய நிலைக்கு ஏற்ப வகுக்கப்பட்ட அறநெறி வரம்பும் –
விசிஷ்ட வேஷ மரியாதையும் –
கலவ ஜகத்பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டார மீச்வரம்
நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோபஹதா ஜனா -என்று
மைத்ரேயரே -உலகின் தலைவனும் அனைத்தையும் படைத்தவனும் -ஈஸ்வரனும் ஆகிய விஷ்ணுவை-
பாஷண்டர்களால் கெடுக்கப்பட்ட ஜனங்கள் கலி காலத்தில் பூஜிக்க மாட்டார்கள்-என்று-
சரீர தொடர்பு அற்ற பரிசுத்த ஆத்ம தத்துவத்துக்கு ஏற்ப வகுக்கப்பட்ட நெறி முறையும் –
நிஷ்க்ருஷ்ட வேஷ மரியாதையையும் -குலைக்கப்படுவது கலியினால் அன்றோ –
இருவகை மரியாதையையும் குலைத்தலின் கலி நீசனாயினான் –
வர்ண தர்மங்கள் விட்டவரும்-நெடும் தகையை நினையாதவரும் நீசர் அன்றோ –
விடச் செய்தவனும் நினைக்க ஒட்டாதவனும்-நீசனாகக் கேட்க வேணுமோ –
செறுத்தல்
உணவாய் -தாரகமாதல் பற்றி உண்ணும் -என்கிறார் -ஆகவுமாம்-
கலியை-உருபு மயக்கம்

நினைப்பரிய பலத்தைச் செலுத்தும் பிறந்கியது இல்லை –
நிலத்தை எல்லாம் செறுத்து உண்ணும் கலியாதலின் அதன் பலம் நினைப்பு அரியதாயிற்று –
உலகு உண்டவன் பலத்தை பரிச்சேதித்தாலும் உலகைச் செறுத்து உண்ணும் இதன் பலம் பரிச்சேதிக்க வரிது–
இறைவனாலும் காக்க முடியாத படி அன்றோ இது செறுகிறது
இத்தகைய கலியின் பலத்தை செறுத்து அதை ஒடுக்கினால் இராமானுசன் புகழ் எவ்வளவு பிறந்கியதாக வேண்டும் –

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழி தரக் கண்டோம் -திரு வாய் மொழி -5 2-1 – – என்று
ஸ்ரீ நம் ஆழ்வாரும் இவரால் கலி கெடுவதை அருளிச் செய்தார் –
பகவன் நாமத்தை அண்டை கொண்டவர்க்கே கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நமன் தமர் தலைகள் மீது நாவல் இட்டு உழி தர முடியுமானால் ஸ்ரீ இராமானுசனை அண்டை கொண்டவர்க்கு கேட்க வேணுமா –
இவ்வாறு கலியின் மிடுக்கை ஒடுக்கியதால் இராமானுசன் புகழ் பிறந்கியது இல்லையாம்-
ஏன் எனில் அவருக்கு இது ஒரு பெரிய காரியம் அன்றாம் –
பின்னையோ எனின் –

இராமானுசன் தன் நயப் புகழே –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய-ஸ்ப்ர்ஹநீயமான கல்யாண குணங்கள் –
நயம் –
விருப்பம் –
பிறந்கியது இல்லை -பிரகாசித்தது இல்லை பின்னை எத்தாலே பிரகாசித்தது என்றால் –

என் பெய் வினை –
அநாதி காலமே தொடங்கி இவ்வளவாக –தேப்யோ ப்யதி காநிதான்ய ஹமபி சூத்ர கரோமிஷனாத்-என்றும் –
யாவச்ச்சயம் சதுரிதம் சகலச்ய-ஜந்தோ தாவச்சதத் தத்தி கஞ்சமா மாச்திசத்யம் -என்றும் சொல்லப்படுகிற
ஹேய உபாதேய விவேக-சூன்யனான என்னாலே உண்டாக்கப்பட்ட
அக்ருத்த்ய கரணமும் க்ருத்த்ய அகரணமும் தொடக்கமான பாபங்களை

பெய்கை –
உண்டாக்குகை –

தென் புலத்தில் –
தஷிண திக்கில் பாதக ஸ்தலமாய் கொண்டு இருக்கிற யம லோகத்திலே
தென்புலம் –
யம புரம் –
பொறித்த –
சித்ர குப்தனாலே எழுதப்பட்ட –அப் புத்தக சும்மை -அந்த புஸ்தக பாரங்களை
சும்மை-
பாரம் -இத்தால் பகவத அபசார – பாகவத அபசார -அசஹ்யா அபசார ரூபமாய் -சமசித்த பிராரப்த காமி-ரூபமாய்
இருக்கிற கர்மங்களினுடைய அபரிமிதத்வத்தை சொல்லிற்று ஆய்த்து –

பொறுக்கிய பின் –
அந்த-பாபங்களை எல்லாம் பிரிகதிர் படாதபடி தஹித்த பின்பு –
பொறுக்குதல்-
தஹித்தல் –

நலத்தை-பொறுத்தது –
பாபத்வாந்த ஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமாவ் ராமானுஜ திவாகர -என்கிறபடியே-
பிரகாசத்தைப் பெற்றது அப்போது -என்றபடி –

என் பெய் வினை பொறுத்தது –
இவரால் வினைகள் ஒவ் ஒன்றாக செய்யப்படுவன அல்ல –
ஒரு பொழுதில் பல வினைகள் பெய்யப்படுகின்றனவாம் –
யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹா ஷனார்த்தே-என்று-
பதினாயிரம் ப்ரஹ்ம கல்ப காலம் அனுபவித்தாலும் -தீராத பாபத்தை அரை நொடியில் இங்கு-
ஒரு பிராணி சிருஷ்டி செய்து விடுகிறது -என்றபடி
இவர் செய்த வினைகள் யம புரத்தில் சித்ர குப்தனால் புத்தகத்தில் எழுதப்படுகின்றன –
அங்கனம் எழுதப்பட்ட புத்தகங்கள் சுமை சுமையாக இருக்கின்றனவாம் –
அவை எல்லாவற்றையும் ஒரு நொடியில் கொளுத்தி விட்டது –

இராமானுசன் தன்னைப் புகழ்-
இது யாராலும் செயற்கரிய செயல் ஆதலின் இச் செய்கையால் நலத்தை-பொறுத்தது –
இவ் வுலகில் உள்ள அனைவரும் செய்த வினைகள் அனைத்தும் சேர்ந்தாலும் -என் வினைக்கு ஈடாக மாட்டா —
ஆதலின் கலியைச் செறுத்து நிலத்தாரைக் கலியின் கொடுமையிலிருந்து விடுவித்ததனால்-
ஸ்ரீ எம்பெருமானார் புகழ் பிறந்கியது இல்லை-
யம லோகத்தில் சுமை சுமையாக புத்தகத்தில்-எழுதப் பட்ட என் வினைகளைப் பொசுக்கியதாலேயே
அது பெருமை பெற்று விளங்குகிறது-எனபது ஸ்ரீ அமுதனார் கருத்து-

தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும் திண் கழற்கால் அசுரர்–ஸ்ரீ திருவாய் மொழி-3-5-2-

இடகி லேன் ஒன்று; அட்ட கில்லேன்; ஐம்புலன் வெல்ல கிலேன்;
கடவ னாகிக் காலந்தோறும் பூப் பறித்து ஏத்த கிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல் வினையேன்–4-7-9-

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்–7-1-2-

தீர் மருந் தின்றி ஐவர் நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை–7-1-5-

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமை—-பெரிய திருமொழி–1-6-8-

உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா–7-4-8-

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-8-

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி முதல்வா -11-8-5-

தண்ணன இல்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணோடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமுமாகி நின்றாய்
எண்ணலாம் போதே உன்னாமம் எல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-10 6-

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5 1-3 –

சித்தர குத்தன் எழுத்தால் தென் புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
முத்து திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே –5 2-2-

இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2–நான் இந்த்ரியங்களுக்கு கட்டுப்பட்டு இருந்த தன்மையை-இந்திரிய வஸ்யதையை –
தன் அழகாலே தவிர்த்து-என்னை அங்கீகரித்த உபகாரத்துக்கு ஒவ்வாது
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தை நீக்கிய தன்மையும்-ஆபந் நிவாரணமும் -என்கிறார்-

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க் கொள்ள
செவ்வாய் முறுவலோடு என துள்ளத் திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-அவன் தம்மோடு கலந்த கலவியினாலே ஹ்ருஷ்டானாய் -உவகையனாய்
அது தன் பேறாக முறுவல் செய்த திருப் பவளத்தை அனுபவித்துப் ப்ரீதர் ஆகிறார் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –33-அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி -இத்யாதி —

April 11, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் சொல்லுகிறபடியே -மனஸ் தத்வாதிகளுக்கு அபிமாநிகளாய்-இருக்கிற
ஸ்ரீ திரு வாழி முதலான திவ்ய ஆயுதங்களினுடைய ப்ரசாதத்தாலே-இந்திரிய ஜயாதிகள்-உண்டாக வேண்டி இருக்க –
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கவே இவை எல்லாம் உண்டாம் என்கிறது –
என் கொண்டு -என்ன –
அந்த ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களும் லோக ரஷண அர்த்தமாக ஸ்ரீ எம்பெருமானார் பக்கலிலே யாயின-என்கிறார் –
அதவா –
அவை எல்லாம் லோக ரஷண அர்த்தமாக ஸ்ரீ எம்பெருமானாராய் வந்து திருவவதரித்தன –என்னவுமாம் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இலைகளாலே நெருங்கி இருக்கிற -தாமரைப் பூவிலே அவதரித்த ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான-
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திருக்கையிலே ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்கிற ஸ்ரீ திரு ஆழி ஆழ்வானும் –
அவனோடு ஒரு கோர்வையாய் இருக்கிற ஸ்ரீ நந்தகம் என்னும் -பேரை உடைத்தான ஸ்ரீ கட்கமும் –
ஆஸ்ரித ரஷணத்தில் பொறுப்பை-உடைத்தான ஸ்ரீ கதையும் – அதி ச்லாக்யமான ஸ்ரீ சார்ங்கமும் –
புடையாலே தர்சநீயமாய் ஸ்ரீ வலம்புரி என்னும் பேரை-உடைத்தான ஸ்ரீ பாஞ்ச சந்யமும் –
கலி தோஷாபிபூதமாய் காணப்படுகிற இந்த லோகத்தை ரஷிப்பதாக ஸ்ரீ எம்பெருமானார்
அதிகரித்த கார்யத்துக்கு சஹா காரியர்களாக கொண்டு -அவர் பக்கலிலே ஆய்த்து என்கிறார் –
அன்றிக்கே
ஸ்ரீ பஞ்ச-ஆயுதங்களும் ஸ்ரீ எம்பெருமானாராய் வந்து திரு அவதரித்து அருளின -என்கிறார் ஆகவும்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

புலன் அடக்கம் முதலானவை மனம் முதலிய தத்துவங்களுக்கு அபிமானியான
ஸ்ரீ திரு வாழி யாழ்வான் முதலிய ஸ்ரீ திவ்ய ஆயுதங்களினுடைய ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்க –
ஸ்ரீ எம்பெருமானாரை சேரவே இவை எல்லாம் உண்டாகும் எனபது எங்கனம் பொருந்தும் என்ன –
அந்த ஸ்ரீ திவ்ய ஆயுதங்களும் ஸ்ரீ எம்பெருமானார் இடத்திலேயே உள்ளன -என்கிறார் –

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் ஸ்ரீ வல்லபன் ..
முதலில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -ஆரம்பித்தார் ..கடைசியிலும் சொல்லுவார்.-
ஒவ் ஒரு திருவாய் மொழியிலும் -7 வது- பாசுரமாக கொண்டு போனால் ஸ்ரீ திரு வாய் மொழி-முழுவதிலும் புதுசாக சாராம்சம் கிடைக்கும்-
பூ மன்னு-1-/ அலர்மகள் கேள்வன் -33-/வானம் கொடுப்பது மாதவன் -66-/ பங்கய மா மலர்ப் பாவை -108-/
ஸ்ரீ திருமகள் சம்பந்தம் விடாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –

பத உரை –
அடை ஆர் -இலை நிறைந்துள்ள
கமலத்து -தாமரைக் கொடியினுடைய
அலர் மகள் -பூவிலே தோன்றியவளான பிராட்டிக்கு
கேள்வன் -கணவனுடைய
கை-கையிலே உள்ள
ஆழி என்னும் -சக்கரம் என்று பேர் பெற்ற
படையோடு -திவ்ய ஆயுதத்தோடு
நாந்தகமும் -நந்தகம் என்னும் திரு வாளும்
படர்-காத்தலில் பரவி நிற்கும்
தண்டும் -ஸ்ரீ கதையும்
ஒண் -விளங்குகிற
சார்ங்க வில்லும் -ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லும்
புடை ஆர் -பக்கத்தில் பருத்த
புரி சங்கமும் -வலம் புரியாய் அமைந்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்ற சங்கமும்
இந்தப் பூதலம் -இந்த பூமியை
காப்பதற்கு என்று -ரஷிபதர்க்கு என்று
இந் நிலத்தே -இப்பூமியிலே
இராமானுச முனி இடையே -எம்பெருமானார் இடத்திலே
ஆயின -இருப்பனவாக உள்ளன –

வியாக்யானம்
இலை நெருக்கத்தை உடைத்தான தாமரையினுடைய பூவை ஜன்ம பவனமாக வுடையளான-
ஸ்ரீ பிராட்டிக்கு வல்லபனானவனுடைய திருக் கையிலே வர்த்திப்பதாய் –
சல ஸ்வரூப மத்யந்த ஜவே நாந்தரிதா நிலம்-சக்ர ஸ்வரூபஞ்ச மனோ தத்தே விஷ்ணு கரே ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1 22-71 – –
என்கிறபடியே –மனஸ் தத்வ அபிமானியாய் இருக்கிற ஸ்ரீ திரு வாழி என்று-பிரசித்தமான ஸ்ரீ திவ்ய ஆயுதத்தோடே-

பிபர்த்தி யச்சாசி ரந்த மச்யுதோ த்யந்த நிர்மலம்-வித்யா மயந்துயத் ஜ்ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் – 1-22 74- –என்கிறபடியே –
ஜ்ஞான அபிமானி யான திரு வாளும்–

புத்திரத் யாஸ்தே கதா ரூபேண மாதவே -ஸ்ரீ விஷ்ணு புராணம் – 1-22 69- – –என்கிற படியே –
புத்ய அபிமானியாய் ரஷணத்திலே பரந்து இருக்கும் ஸ்ரீ கதையும் –

பூதாதி மின்த்ரியாதிஞ்ச த்விதா ஹன்கார மீச்வர-பிபர்த்தி சங்க ரூபேண சாரங்க ரூபேண ச ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் – 1-22-70 –
என்கிற படியே இந்திரிய காரணமான சாத்விக அஹங்கார அபிமானியாய் இருக்கிற-விலஷணமான
ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு நாமத்தை உடைய திரு வில்லும்

பூத காரணமான தாமச அஹங்கார அபிமானியாய் மிக முழங்கு கைக்கு உறுப்பாம்படி
புடை பருத்து தர்சநீயமான சந்நிவேசத்தை உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும்

இந்தப் பூதலத்தை ரஷிக்கைக்காக வென்று -இந்தப் பூதலத்திலே ஸ்ரீ எம்பெருமானார் பக்கலிலே ஆயின –
இவர் பக்கலிலே ஆகையாவது –
இவர் நினைவைக் கடாஷித்து நின்று அதிகரித்த கார்யத்துக்கு சஹகரிக்கை –
அடையார் கமலம் -என்று தொடங்கி–புடையார் புரி சங்கமும் –
பூதலம் காப்பதற்கு -என்று இந்நிலத்தே இராமானுச முனி இடையே ஆயின -என்று அந்வயம் –
மற்றைப் பஷத்தில்
அடையார் கமலம் -என்று தொடங்கி –புடையார் புரி சங்கமும் இந்தப் பூமியை ரஷிக்க வேணும் என்று-
இந்த பூமி தன்னிலே நடுவே ஸ்ரீ எம்பெருமனாராய் அவதரித்தன -என்கை-
இத்தால்-இவருடைய விரோதி நிரசன சாமர்த்த்யத்தைப் பற்ற ஸ்ரீ பஞ்ச ஆயுத ஆவேச அவதாரம் என்று-
பிரபாவ கதனம் பண்ணினார் ஆயிற்று
அடை-இலை
படை-ஆயுதம்
படர்தல்-பரம்புதல்–

ஆழி -மனஸ் தத்வம் / கட்கம்-நந்தகம் -வாள்-கத்தி -அசி -ஞானம் -அஞ்ஞானம் உறை /
தண்டு -கதை -கௌமோதிகம் புத்தி தத்வம் -உறுதி /சார்ங்கம் -வில் சாத்விக அஹங்காரம் /
சங்கம் -பாஞ்ச ஜன்யம் -தாமச அஹங்காரம் அபிமானி /
இடை -சஹகாரி என்றுமாம் –
விரோதிகளுக்கு ஆயுதம் ஆஸ்ரிதற்கு ஆபரணம் இரண்டு ஆகாரங்களும் ஸ்ரீ ஸ்வாமிக்கு உண்டே –

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் –
தாமரை தான் -கம்பீராம்பஸ் சமுத்பூதமானால் –செவ்வி நாற்றம் -குளிர்த்தி முதலான குணங்கள் எல்லாம் மிகுந்து
இலை நெருக்கத்தை உடைத்தாய் இருக்கும் இறே
அப்படிப் பட்ட தாமரை பூவின் உடைய பரிமளம் தான் -ஒரு வடிவு கொண்டால் போல் இதிலே ஈடுபட்டு-
விட மாட்டாதே திரு வவதரித்த ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான -ஸ்ரீ பரவாசுதேவனுடைய –அடை-இலை –

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் –
அலர் மகளான ஸ்ரீ பிராட்டியினுடைய சந்நிதியாலே ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் அழிப்பனவாக ஆகவில்லை-
அளிப்பவன வாயின –
இவள் இல்லாத போது ஆயுதங்கள் இராவணாதியரை அழித்தன –
உள்ள போது ப்ருஹ்மாஸ்த்த்ரமும் காகத்தை அழிக்க வில்லை –
காகம் காக்கப் பெற்றது –கருணை வடிவினளான இவள் சந்நிதியில் கேள்வன் காருணிகனாக அன்றோ இருக்கிறான் –

அலர் மகள் கேள்வன்–
இவள் இருந்தால் அளிக்கும்- இல்லை என்றால் அழிக்கும் என்பதால்
அஸ்த்ரமே பூஷணம் இவள் இருந்தால் இல்லை என்றால் தானே ஆயுதம் என்பதால்
இங்கு அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -சொல்லி ஆரம்பிக்கிறார் .

கை யாழி என்னும் படையோடு –
திருக் கையிலே நிரந்தரமாக இருந்துள்ள ஸ்ரீ திருவாழி என்கிற ஆயுத விசேஷத்தோடே –
சல ஸ்வரூப மத்யந்த ஜவே நாந்தரிதா நிலம் சக்ர ஸ்வரூபஞ்ச்சமனோ தத்தே விஷ்ணு கரஸ்த்திதம் -என்று
ஸ்ரீ அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் சொல்லுகிறபடியே –மனஸ் தத்தவ அபிமானியாய் –கம்பீர ஸ்வபாவனான
ஸ்ரீ திருவாழி ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் கணிசிக்கப்பட -என்றபடி –
விரோதிகளால் ஆஸ்ரிதர் நலிவு பட்டு -ஸ்ரீ கஜேந்த்திரன் ஆழ்வானை போல கூப்பிட –
அக் கூப்பீடு கேட்டு ஆயுதம் வரக் கொள்ளில் பணிப்படும் என்று –
எப்போதும் ஆசிலே கையை வைத்து கொண்டே இருக்கிறான் காணும் –படை -ஆயுதம்-

கை யாழி என்னும் படையோடு –
எப்போதும் கை கழலா நேமியாய்க் கையார்ந்து இருக்கையாலே –கை யாழி-என்கிறார் –
இத் திரு வாழி ஆழ்வான் மனம் என்னும் தத்துவத்திற்கு அபிமானியாய் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
ஸ்ரீ அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் பிரசித்தம்

நாந்தகமும்
பிபர்த்தியஸ் சாசிரத்ன மச்யுதோத் யந்தநிர்மலம் – வித்யா மயந்து தத்ஜ்ஞா நமவித்யாசர்-மசம்ச்த்திதம் -என்கிறபடியே
ஞான அபிமாநியாய் ஸ்ரீ நந்தகம் என்னும் பேரை உடைத்தான
நாந்தகமும் –
ஸ்ரீ நாந்தகம் என்னும் ஸ்ரீ திரு வாள்-ஞானத்திற்கு அபிமானியாய் பிரசித்தம்

திரு வாளும் –படர் தண்டும் –
புத்தி ரப்யாச்தே கதா ரூபேண மாதவே -என்கிறபடியே புத்த்யபிமானி யாய் –
ஆஸ்ரித விரோதிகளான பிரதி பஷத்தை சிஷிக்கும் போது -அதி விபுலமாய் தோன்றும் –ஸ்ரீ கதையும் –படர்தல்-விபுலத்வம் –
படர் தண்டும்
புத்தி தத்துவத்திற்கு அபிமானியாக -ஸ்ரீ கௌமோதகி -என்னும் ஸ்ரீ கதை பிரசித்தம் –
காத்தலில் முற்பட்டு நிற்றலின் –படர் தண்டு -என்கிறார் –

ஒண் சாரங்க வில்லும் புடையார் புரி சங்கமும்
பூதாதிமிந்த்ரியாதி சாத்வித-அஹங்காரம் ஈஸ்வர பிபர்த்தி சங்கு ரூபேண சாரங்க ரூபேண ச ஸ்த்திதம் -என்கிறபடியே
இந்திர-காரணமான சாத்விக அஹங்கார அபிமானியாய் -அத்யந்த விலஷணமாய்
ஸ்ரீ சார்ங்கம் என்னும் பேரை-உடைத்தானை ஸ்ரீ திரு வில்லும் –
பூத கரணமான தாமச அஹங்கார அபிமானியாய் -மிகவும் முழங்குகைக்கு உறுப்பாயும் படி புடை பெருத்து
தர்சநீயமான சமஸ்தானத்தை உடைய ஸ்ரீ வலம்புரி யான ஸ்ரீ பாஞ்ச சந்யமும் –
ஒண்மை -அழகு
புடை-இடம் –
புரி -வலம்புரி அதாவது தஷினாவர்த்தம்
ஒண் சாரங்க வில்லும் புடை ஆர் புரி சங்கமும் –
இந்திரிய காரணமான சாத்விக அஹங்காரத்திற்கு அபிமானயாய் ஸ்ரீ சாரங்க வில் விளங்குவது பிரசித்தம் –
பூத காரணமான தாமச அஹங்காரத்திற்கு அபிமானியாக ஸ்ரீ பாஞ்ச சன்னியம் என்னும் ஸ்ரீ சங்கம்-விளங்குவது பிரசித்தம் –
நன்கு முழங்குகைக்கு உறுப்பாக புடை பருத்து இடமுடைத்தாய் இருத்தல்-பற்றி புடை ஆர்ந்ததாக சங்கை விசேடிக்கிறார் –

ஸ்ரீ கௌஸ்துபம் -ஆத்மா
ஸ்ரீ வத்சம் -பிரதானம் -மூல பிரகிருதி
புத்தி -ஸ்ரீ கதை
சாத்விக அகங்காரம் -ஸ்ரீ சார்ங்கம்-சார்ங்கம் உதைத்த சர மழை போல..
தாமச அகங்காரம் -ஸ்ரீ சங்கு -முழங்குதற்கு புடை பெருத்து வலம் புரி –
ஆழி போல் மின்னி -ஸ்ரீ சக்கரம்-மனசு
ஸ்ரீ வன மாலை -பஞ்ச பூதங்கள்
தன் மாத்ரைகள் முத்து மாணிக்கம் மரகதம் வைரம் நீலம்
அம்பு- இந்த்ரியங்கள்
கத்தி- ஞானம்
உறை அவித்யை அஞ்ஞானம்

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் – ஸ்ரீ பாஞ்ச சன்யம் அம்சம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் -ஸ்ரீ கதை அம்சம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் – ஸ்ரீ நந்தகம்-ஸ்ரீ கட்கம் அம்சம்
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -ஸ்ரீ சக்கரம் அம்சம்
ஸ்ரீ திரு மங்கை- ஆழ்வார் – ஸ்ரீ சார்ங்கம் அம்சம்

இந்தப் பூதலம் காப்பதற்கு என்று –
பரிதர்ச்ய பானமாய் கீழில் பாட்டில் போல் கலி சாம்ராஜ்யம் பண்ணி
வேத மார்க்கத்தை மூலையடியே நடத்திக் கொண்டு போருகிற-இருள் தரும் மா ஞாலத்தை ரஷிக்கைக்காக -என்று –
இந்த பூதலம் –
கீழ்க் கூறியபடி செறு கலியால் வருந்திய ஞாலம் என்றபடி-இந்நிலத்தே ஆயின
விண்ணாட்டவரான ஸ்ரீ திவ்ய ஆயுத புருஷர்கள் அருவருக்கத் தகுந்த இந்த உலகத்தில் ஆயினவே என்றபடி –

இடையே
மத்யே வந்து –
இந்நிலத்தே -ஸ்ரீ நித்ய சூரிகளான இவர்கள் அத்யந்த ஹேயமாய் அருவருக்கும் படியான இந்த-லோகத்திலே-

இராமானுச முனி யாயின
ஸ்ரீ எம்பெருமானார் தாம் மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற இந்த-ஜகத் ரஷண கார்யத்துக்கு
தாங்கள் சக கரிக்கைக்காக-இவர் பக்கலிலே ஆயின –ஸ்ரீ எம்பெருமானார்க்கு-கை யாளாக இருந்தன என்றபடி –
அன்றிக்கே-
இந்த லோகத்தை ரஷிக்கைகாக ஸ்ரீ பஞ்சாயுதங்களும்-தாங்களே வந்து லோகத்திலே –ஸ்ரீ எம்பெருமானாராய் அவதரித்தன -என்னவுமாம் –
பிரதயன் விமதேஷூ தீஷ்ணா பாவம் பிரபுரச்மத் பரி ரஷனே எதீந்திர-அப்ர்தக் பிரதிபன்ன அன்மயத்-
வைர வவர்த்தே பஞ்சபி ராயுதைர் முராரே -என்று இவ் அர்த்தத்தை ஸ்ரீ அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

இராமானுச முனி இடையே யாயின –
ஸ்ரீ இராமானுச முனிவன் -உலகினை காப்பதையே எப்போதும் மனனம் செய்து -கொண்டு இருப்பவர் –
அவரது காக்கும் நினைவுக்கு ஏற்ப துணை புரிதலே ஸ்ரீ இராமானுச முனி பக்கலிலே-ஆயினமை-என்க-
இனி
இடையே -என்பதற்கு -நடுவே -என்று பொருள் கொண்டு –
இந்நிலத்தே இடையே இராமானுச முனி யாக ஆயின – -வந்து அவதரித்தன என்று பொருள் கொள்ளலுமாம் –
இதனால் பகை களைந்து காப்பதில் உள்ள திறமையைப் பற்ற ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களின் ஆவேச அவதாரமாக
ஸ்ரீ எம்பெருமானாரின் பிரபாவத்தை வருணித்தார் ஆயிற்று –

இடையே
நடுவே-பராங்குச பரகால யதிவராதிகள்
இடையே-
ஆழ்வார் ஆச்சார்யர் நடுவில் இடையே தோன்றினார்.

ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ஸ்ரீ யதிராஜ சப்ததியில் –
பிரதயன் விமதேஷூ தீஷணபாவம் பிரபுர ஸமத் பரி ரஷன
யதீந்திர அப்ருதக் பிரதிபன்ன யன் மயத்வை வவ்ருதே பஞ்ச-ப்ராயுதைர் முராரே -என்று தனிப் பட்டு தோன்றாது –
ஸ்ரீ எம்பெருமானார் மயமாகவே பஞ்ச ஆயுதங்களும் வளம் பெற்றன –
அத்தகைய ஸ்ரீ யதிராஜர் பிற மத விஷயங்களில் தம் கொடிய தன்மையை வளர்ப்பவராய்
நம்மைக் காப்பாற்றுவதில் திறன் படைத்தவராக இருக்கிறார் -என்று அருளிச் செய்தது –
இந்த நிர்வாஹத்திற்கு ஏற்புடையதாக உள்ளது –
ஒரே திரு மேனியில் ஐந்து ஆயுத புருஷர்களும்-ஆத்மாவாகவே இருப்பது இசையாமையாலே –
அவ் ஐவருடையவும் ஆவேச அவதாரமாகவே-ஸ்ரீ எம்பெருமானாரைக் கொள்வது ஸ்ரீ மணவாள மா முனிகளின் திரு உள்ளம் –
இங்கனம் கொண்டால்-ஸ்ரீ ஆதி சேஷனுடைய சாஷாத் அவதாரமாகவும் –
ஸ்ரீ பஞ்ச ஆயுத ஆழ்வார்கள் முதலியவர்களின்-ஆவேச அவதாரமாகவும் கொள்வதில் யாதொரு முரண்பாடும் இல்லை -என்று உணர்க –

படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -1-

சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கை களாலே வந்து அச்சோவச்சோ -1-8-2-

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம் ஏந்து பெருமை யிராமனை–4-1-2-

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் –4-7-5-

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனற் சங்கம் கொலை யாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கத்திக் கருடன் என்னும் வென்றிக் கடும் பரவையிவை யனைத்தும் புறம் சூழ் காப்ப –பெருமாள் திருமொழி ––1-8-

வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல் என்னும் -திரு வாய் மொழி–7-2-6-

அமர்கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன்–8-10-9-

திருப் புளிங்குடியாய் காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம்மிடர் கடிவானே -9-2-6-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –32-பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்-இத்யாதி —

April 11, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ இராமா னுசனனைப் பொருந்தினம் -என்று இவர் ஹ்ருஷ்டராகிற வித்தைக் கண்டவர்கள் –
நாங்களும் –இவ்விஷயத்தை லபிக்கப் பார்க்கும் அளவில்
எங்களுக்கு உம்மைப் போலே ஆத்ம குணங்கள்-ஒன்றும் இல்லையே என்ன –
ஸ்ரீ எம்பெருமானாரை சேரும் அவர்களுக்கு ஆத்ம குணாதிகள் எல்லாம் தன்னடையே வந்து சேரும் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ இராமானுசரைப் பொருந்தினமே என்று இவர் ஹ்ருஷ்டரான -இத்தை கண்டவர்கள் -நாங்களும்-
இவ் விஷயத்தை லபிக்கப் பார்க்கும் அளவில் -எங்களுக்கு உம்மைப் போலே ஆத்ம குணங்கள் ஒன்றுமே இல்லையே என்ன –
ஸ்ரீ எம்பெருமானாரை சேருமவர்களுக்கு ஆத்ம குணங்கள் முதலியனவை எல்லாம் தன்னடையே-வந்து சேரும் என்கிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ இராமானுசனைப் பொருந்தினமைக்கு இவர் களிப்பதைக் கண்டவர்கள் -நாங்களும் இங்கனம் களிக்க-கருதுகிறோம் –
ஆயின் -எங்களிடம் ஆத்ம குணங்கள் சிறிதும் இல்லையே -அவை உம்மிடத்தில்-போலே இருந்தால் அன்றோ –
நாங்கள் ஸ்ரீ இராமானுசனைப் பொருந்த இயலும் என்று கூற –
ஸ்ரீ எம்பெருமானாரைச் சேரும் அவர்களுக்கு ஆத்ம குணங்கள் எல்லாம் தாமே வந்து அமையும் -என்கிறார்-

ஸ்ரீ ஸ்வாமியை சேரும் அவர்களுக்கு ஆத்ம குணங்கள் எல்லாம் தன்னடையே வந்து சேரும்.
விட்டு விட்டே பற்றனும்-ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும்.பேசிக்கொண்ட ஐதிக்யம்
கொஞ்சம் வைராக்கியம் வந்து திருவடி பற்றிய பின் தன் அடைவே போகும் என்றாரே
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்குவார்-இல்லாதார்க்கு அன்றோ நீ இரங்கணும்

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

பத உரை –
செறு கலியால்-நெறி முறையை குலைக்கின்ற கலி தோஷத்தினால்
வருந்திய -துன்புற்ற
ஞாலத்தை-நிலத்தை
வண்மையினால்-தன் பால் உள்ள வள்ளல் தன்மையினால்
வந்து எடுத்து -அவதரித்து கை தூக்கி விட்டு
அளித்த -காப்பாற்றின
அரும் தவன் -அரிய தவத்தை உடைய
எங்கள் இராமானுசனை -எங்களைச் சேர்ந்த ஸ்ரீ எம்பெருமானாரை
அடைபவருக்கு -சேரும் அவர்களுக்கு
பொருந்திய -தங்கள் தன்மைக்கு இசைந்த
தேசும் -மதிப்பும்
பொறையும் -பொறுமையும்
திறலும் -சாமர்த்தியமும்
புகழும் -கீர்த்தியும்
நல்ல -விலஷணமான
திருந்திய -திருத்தம் பெற்ற
ஞானமும் -அறிவும்
செல்வமும் -தனமும்
சேரும் -தாமாகவே வந்து சேரும்-

வியாக்யானம் –
அபிபவியா நின்று உள்ள கலி தோஷத்தாலே துக்கப்பட்ட பூமியை -இத்தலையிலே அர்த்தித் வாதி நிரபேஷமாக
தம்முடைய ஒவ்தார்யத்தாலே -வந்து -நிமக்நோத்தாரணம் பண்ணி -ரஷித்தவராய் -பிரபன்ன ஜன கூடஸ்தர் ஆகையாலே –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-தைத்ய நாரரா -என்கிறபடியே
சர்வ தபச்சுக்களிலும் மேலாய்க் கொண்டு -துர்லபமாய் இருக்கிற சரணாகதி ரூப தபஸ்ஸை உடையராய்-
எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த-ஸ்ரீ எம்பெருமானாரை-சேரும் அவர்களுக்கு
ஸ்வரூப அனுரூபமான மதிப்பும்-
வியசன சுகங்களில் அனவ சாதா நுத்தர்ஷ-ஹேதுவான ஷமா குணமும் –
ஜிதேந்த்ரியத்வ ரூபமான பராபிபவன சாமர்த்த்யமும்-
குணவத்தாப்ரதையும்-
தத்வ ஹித புருஷார்த்தங்களை விஷயமாக வுடைத்தாய் ஆகையாலும்-கட்டளைப் பட்டு இருந்துள்ள ஜ்ஞானமும்-
தத் கார்யமான பக்தி ரூப சம்பத்தும்-
ரதிர் மதி –ஸ்ரீ குணரத்னகோசம் -17 – இத்யாதி -ஸ்லோகத்தின் படியே
ஸ்ரீ பிராட்டி கடாஷ லஷ்யமானவர்களுக்கு-அவை தானே மேல் விழும் என்றால் போலே-
இங்கும் அபேஷியாது இருக்க தானே வந்து சேரும் –
பொருந்துதல்-சேருதல்-அதாவது ஸ்வரூப அனுரூபத்வம் /தேசு-மதிப்பு–

ஸ்ரீ உடையவர் நித்ய விபூதியும் -இஹ பர லோக இன்பம் அருளுவார் –
அல் வழக்குகள் போக்கி அடியார்க்கு ஆட்படுத்த வல்லவர் அன்றோ –
ஆன்மிக இன்பம் இங்கே அருளி – வள்ளல் தன்மை –
காண் தகு தோள் அண்ணல் அடி இணை பூண்டதால் வந்த வள்ளல் தன்மை –
ஸ்ரீ உடையவர் -சரணாகதி அரும் தவம் உடையவர் -நமக்காக செய்து அருளி –
தன்னை முற்றூட்டாக திருமேனி அழகைக் காட்டிய வண்மையினால் எடுத்து அளித்த வள்ளல் தன்மை –
தன்னையே கொடுத்ததால் -எல்லாமே பெற்றோம் ஆவோம் -ஆறு -தேஜஸ் இத்யாதி உயர்ந்த நிலைக்குக் கூட்டி –
ஸ்ரீ வாமனன் போலே -நாம் அறியாமலே -கொடுத்தே தன்னைப் போலே மாற்றி –
கலியும் கெடும் -கண்டு கொண்மின் -ஸ்ரீ ராமானுஜ திவாகரன் -சரணாகதி தர்மம் எடுத்து –
ஸ்ரீ ரெங்க நாதன் திருவடிகளில் அளித்து -அவர்கள் கிருபையை எடுத்து நமக்கு அளித்தார் அன்றோ –
எடுத்து அளித்த பின்பு தான் எங்கள் ஸ்ரீ இராமானுசன் என்று அறிந்தோம் –
கலியை மாற்றியவர் பொருந்திய -தேஜஸ் -இத்யாதியாக மாற்றுவதை கேட்க வேணுமோ –
புலன்களை வெல்லும் திறல்-கைங்கர்ய திறல் -ஞானம் முடிந்த பக்தியும் கைங்கர்யமுமே செல்வம் –

செறு கலியால் வருந்திய ஞாலத்தை
கலேஸ் ஸ்வரூபம் மைத்ரேய யதிவாச்ச்ரோத்ய்மிச்சசி –தன்னிபோதசமாசே நவர்த்ததே யன் மகா முனே –
வர்ணாஸ்ரம ஆசார வதீப்ரவர்த்திர் நகலவ் ந்ர்னாம்-ந சாம யஜூர் ரிக் தர்ம வி நிஷ்பாத ந ஹெதுகீ –
விவாஹோ ந கலவ தர்ம்யான் ந சிஷ்ய குரு சம்ஸ்த்தித்தி-நதாம் பத்யக்ரா மோனைவ வஹ்னி தேவாத்மா க்ரம – என்று தொடங்கி-
பரித்யஷ்யந்தி பர்த்தாரம் நஹினம் ததாஸ்த்ரிய –பார்த்தா பவிஷ்யதி கலவ வித்தவா நேவாயோஷிதாம் –
ஸ்த்ரிய கலவ் பவிஷ்யந்தி ச்வைரின்யோ லலிதஸ்பர்ஹா –அனாவ்ர்ஷ்டி பயப்ராயா பிரஜா ஷூத்ப்ப்யாகாதரா –
பவிஷ்யந்தி ததா சர்வா கக நா சக்தத்ர்ஷ்டைய – அச்னான போஜி-நோ நாக்னி தேவதா திதி பூஜனம் –
கரிஷ்யந்தி கலவ் ப்ராப்ப்தே ந பைத்ரியாதிகா க்ரியா -பாஷண்ட சம்ஸ்ரிதாம் வர்த்திம்
ஆஸ்ரய இஷ்யந்த சம்சக்ர்தா -யதா யதா ஹி பாஷண்ட வ்ர்த்திர் மைத்ரேய லஷ்யதே –
ததா ததா கலேர் வர்த்தி ரனுமேயவிசஷனை –என்னும் அளவும் பிரதிபாதித்த படியே
அபிபவயாய் நின்றுள்ள -கலியாலே க்லேசப்படுகிற பூ லோகத்தை –
இருள் தரு மா ஞாலமான-பூ லோகத்தில் இருந்த சேதனரை என்றபடி

வண்மையினால் –
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹி நாம் ஷண பங்குர -தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட பிரிய தர்சனம் –என்னும்படி
ஞான மாந்த்யத்தாலே இத்தலையில் அபேஷை அன்றிக்கே இருக்க –
தம்முடைய பர துக்க அசஹிஷ்ணுத்வ லஷண-கிருபா மூலமான ஔதார்யத்தால்

வந்து-
பரம பதத்தில் நின்றும் கிருபா மாத்ர பிரசன்னராய் கொண்டு இந்த-லோகத்திலே எழுந்து அருளி –
புண்யம் போஜ விகாசாயா பாபத்வந்தஷாயா யச -ஸ்ரீமாநாவிர பூத் பூமவ் ராமானுஜ திவாகர –என்னக் கடவது இறே –
வெறிதே அருள் செய்வார் -என்கிறபடியே -நிர்ஹேதுகமாக வந்து அருளி –

எடுத்து அளித்த
1–சாஷாத் நாராயணோ தேவ க்ர்த்வாமர்த்யமா ஈம்தநூம் -மக்னானுத்தரதே லோகான் காருண்யாஸ்-சாஸ்திர பாணினா -என்கிறபடியாக
லோகத்தார் எல்லாரையும் அர்த்தித்வ நிரபேஷமாக-சம்சாரத்தில் நின்றும்-உத்தரிப்பித்து ரஷித்தவராய் –
2-ஸ்ரீ திரு கோஷ்டியூர் நம்பி குஹ்ய தமமாக உபதேசித்துப் போந்த ஸ்ரீ சரம ச்லோக அர்த்தத்தை-எல்லார்க்கும் பூரிதானம் பண்ணியும் –
3–ஸ்ரீ ரங்க நாயகியார் முன்னிலையாக ஸ்ரீ அழகிய மணவாளன் திருவடிகளில்-பிரபத்தி பண்ணியும் ரஷித்து அருளினவர் என்று பிரசித்தம் இறே-

அரும் தவன் –
சத்கர்ம நிரதாஸ் -சுத்தாஸ் சாங்க்ய யோகா விதச்ததா -நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி-
யத்யே நகா மகா மேன ந சாத்தியம் சாதநாந்தரை – முமுஷூணா யயத்சாக்கியர் நாயோ கேனசபக்தி –
தேன தேனாப்ய-தே தத்தத் நயா செனிவ மகா முனே -என்றும் சொல்லுகிறபடி –
தபச்சுக்களில் எல்லாம் வைத்துக் கொண்டு – உத்தமமான தபச்சாய் -வ்யாவசாயிகளுக்கு துர்லபமாய் –
பிரபத்தே ரன்யன் நமே கல்ப கோடி சகஸ்ரேனாபி-சாதனா நமச்தீதி மந்வான -என்று
தம்மாலே நிஷ்கரிஷிக்கப் பட்ட –சரணாகதி ரூப தபஸை உடையராய் –

எங்கள்
எங்களுடைய ஸ்வாமியான -எங்களுக்கு தம்மை முற்றூட்டாக கொடுத்து அருளின -என்னுதல்-
ஞாலத்தை எடுத்து அருளுகை ஒரு வ்யாஜமாய்-தம்மை எடுத்து அருளுக்கைக்காகவே வந்தார் என்று காணும்-இவர் அபிசந்தி –
அன்றிக்கே –
விநாயாச துஷ் க்ருதாம் -என்று பஹுவசனத்தாலே சொல்லி அநேகம் பேரை சம்ஹரித்தாலும் –
ஹிரண்ய ராவண கம்சாதிகளே ப்ரத்ய அவதாரத்திலும் பிரதானராய் இருக்குமா போலே –
லோகத்தாரை எல்லாரையும் உத்தரிப்பிக்க வேணும் என்று அவதரித்தார் ஆகிலும்
தம்மை ஒருவரையுமே-உத்தரிப்பிக்க வேணும் என்று -அவதரித்தாராக காணும் இவர் நினைத்து இருப்பது –

செறு கலியால்–அரும் தவன்
செறுகிற கலி-செறு கலி -வினைத் தோகை –இதனால் செறுதல் கலியின் இயல்பு என்பது தோற்றும்-
கலியின் கொடுமையினால் நெறி முறை கெட்டு ஞாலம் குலைந்து -கீழ் நிலையை அடைந்தது –
மேலே ஏற ஒண்ணாது அது வருந்தியது-
ஞாலம் என்பது ஆகு பெயராய் ஞாலத்தில் உள்ள -மாந்தரை உணர்த்திற்று –
ஞாலத்தார் அதோ கதி அடைந்து -வருந்திய நிலையில் வந்தார் ஸ்ரீ எம்பெருமானார் –
ஏனைய அவதாரங்கள் -தேவர் இரக்க வந்தவை –
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிய ஆச்சார்ய அவதாரமோ -இரப்பார் இல்லாமலே தானே வந்தது –
ஞானக் கை தந்து மேலே எடுப்பவர் ஏனைய ஆசார்யர்கள் –
மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்திர பாணி நா -அழுந்தினவர்களை சாஸ்திரக்-கையினால்
தூக்கி விடுகிறார் -என்று கூறப்படுவதும் காண்க –
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஆசார்யரோ தம் அரிய தவத்தின் வலுவினால் ஞாலத்தாரை எடுத்து-மீண்டும் விழாது -காத்து அருளுகிறார் –
அத்தகைய அரிய தவம் அவரது –
இங்கு தவம் என்பது –தான் வாட வாடச் செய்யும் தவம் அன்று –
தவங்களுள் சிறந்தது சரணாகதி -என்று சிறந்த தவமாக-ஓதப்படுகின்ற சரணாகதியே -என்க
ஸ்ரீ எம்பெருமானார் செய்த சரணாகதியின் பயனாக அவர் தொடர்பை எவ்வகையாலேனும் பெற்ற-
ஞாலத்தவர் உய்வு பெற்று விடுகிறார்கள்-
இவ் அரிய உண்மை அமுதனாரால் இங்கு உணர்த்தப் படுகிறது –
இதனை ஸ்ரீ வேதாந்த தேசிகன்-ஸ்ரீ மணவாள மா முனி போன்ற ஆச்சார்யர்கள் விளக்கிக் காட்டி உள்ளனர் –

இராமானுசனை
இப்படிப் பட்ட ஸ்ரீ எம்பெருமானாரை –

அடைபவர்க்கே-
சமாஸ்ரயணம் பண்ணினவர்களுக்கே –
ஷேமஸ் ச ஏவ ஹிய தீந்திர பவச்ரிதானாம்-என்னக் கடவது இறே –

எங்கள் இராமானுசன் –
ஞாலத்தாரை எடுத்து அளிக்க வந்தவர் -கீழ்க் கூறிய பாசுரப்படி -நினைப்பு இல்லாமலே –
நான் இருக்கும் போது –தம்மைப் பொருந்தும்படி -செய்து தம் அனுபவத்தை முற்றும் பெறும்படி -செய்தலின் -விசேடித்து –
எங்களுடைய-இராமானுசன் ஆகிறார் -என்கிறார் –
ஞாலத்தை எடுத்து அளிக்க வரினும் தம் போன்றார் வாழ்வுக்காகவே-ஸ்ரீ எம்பெருமானார் வந்ததாகக் கருதுகிறார் அமுதனார் -என்க–

பொருந்திய தேசும் –
ஸ்வரூபத்துக்கு தகுதியான பராபிபவன சாமர்த்தியமும் –
ஸ்ரீ சரஸ்வதி பண்டாரத்தில் இருந்த-மாயாவாதிகளையும் -ஸ்ரீ திரு நாராயண புரத்தில் இருந்த பௌத்தரையும் –
யாதவ பிரகாசன் யக்ஜா மூர்த்தி-தொடக்கமானவரையும் -பிரசங்க முகத்தாலே அபிபவித்தவருடைய மதிப்புக்கு போலியான மதிப்பு என்றபடி –
பொருந்துதல்-சேருதல் -அதாவது ஸ்வரூப அனுரூபத்வம் –
தேசு-மதிப்பு –

பொருந்திய தேசும் –
தேசு -மதிப்பு -ஏழைமை இன்மை –
அது பொருந்துவதாவது-இவன் தன்மைக்கு ஏற்ப்புடைத்தாய் இருத்தல் – –
தேஜ-என்பது தேசு -என்றாயிற்று -வட சொல் விகாரம் –
ஐம்பூதங்களில் மூன்றாம் பூதத்தையும் -பிறரை எதிர் பார்க்க வேண்டாத நிலையையும் –
பிறரை அடர்க்கும் திறனையும் -தேஜ -என்னும் சொல் கூறும் –
இவ்விடத்தில் பிறரை அடர்க்கும் திறனில் நின்றும்
தனித்து இராத பிறரால் அடர்க்கலாகாமை கருதப்படுகிறது –
ஏழைமை இல்லாமை -என்னும் மதிப்பினாலேயே -அமைவது ஆதலின் அம்மதிப்பையே இதன்-பொருளாக கொள்ளல் வேண்டும் –
தேஜ துர்ஜனை அனபிபவநீய த்வம்-என்று
தேஜசாவது தீயோரால் அடர்க்கபடாமை என்னும் கீதா பாஷ்யமும் – 16-3 – அதன்
சந்திரிகா வியாக்யானமும் காண்க –

பொறையும் –எத்தனை வயசன சுகங்கள் வந்து-மேல் விழுந்தாலும் அனவசாதானுதர்ஷங்களுக்கு உடலாய் –
விபதி தைர்ய மதாப்யுதயேஷமா-என்னும் படியான ஷமா குணமும் –

பொறையும் –
துயரம் நேரும் போது சோர்வின்மை -அனவசாத்திற்க்கும்
இன்பங்கள் நேரும் போது களிப்பினைக்கும் -அனுத்தர்ஷத்துக்கும் -ஹேதுவான பொறுமை-
கீழ் சொன்ன மதிப்புக்கு ஹேது இப்பொறை உடைமையே -என்க
பிறரால் துன்புறுத்தப் படும் போதும் -பிறர் திறத்து எத்தகைய மனோ விகாரமும் அற்று இருத்தலே –பொறை உடைமை —

திறலும் –
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களிலே -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றால் போலே
சகலவித கைங்கர்யங்களையும்-பண்ணித் தலைக் கட்டுகைக்கு உறுப்பான மனோ பலமும்-

திறலும் –
புலன்களை அடக்கும் சாமர்த்தியமே திரள் -என்க
பொறைக்கு புலன் அடக்கம் ஹேது என்று அறிக –

புகழும் –
சம தம ஆத்ம குணம் என்னுதல் –
சகல திக் அந்த வ்யப்தியான-கீர்த்தி என்னுதல்-

புகழும் –
இனி கீழ் கூறியவற்றால் ஏற்படும் பயன்கள் கூறப்படுகின்றன –
வாழ்வு எய்தி -ஞாலம் புகழும்படியான படியான புகழ் –
ஆத்ம குணம் வாய்ந்தவன் என்னும் புகழ்-புகழினால் பிறரும் இவரைப் பின்பற்றி உய்வர் ஆதலின் அது வேண்டுவது ஆயிற்று –

நல்ல திருந்திய ஞானமும் –
சேதனராய் இருப்பார்க்கு எல்லாம் சாதரணமாய் இருப்பதொரு ஞானம் உண்டு –
ஐகிஹா ஆமுஷ்ய விஷயங்களிலே அனுகூலமாயும் பிரதி கூலமாயும் இருக்கும் விஷயங்களையும்-
அவற்றுக்கு சாதனமாய் இருக்குமவற்றை அறிவிப்பிக்க கடவதாய் -அப்படி அன்றிக்கே -சதாசார்யா சமாஸ்ரயணம் பண்ணி –
குருகுல வாசாதிகளாலே அவனுக்கு முக மலர்த்தி உண்டாக்கி -அவனால் உபதேசிக்கப்பட்ட
தத்வ ஹித புருஷார்த்த-தத் யாதாம்ய ஞானமும் –
தத் வித்தி பிரணிபாதென பதிப்ரசேனசேவையா -உபதேஷ்யந்தி தேஜ்ஞானாம் ஜ்ஞானி ந ஜ்ஞாநீஸ் தத்வ தர்சனி – என்றும் –
மைத்ரேய பரிபப்ரச்ச்ச பிராணிபாத்ய அபிவாத்யச -என்றும் –
ஏதத் ஞானம் மிதிப்ரோக்தம் –என்றும்
செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான் -என்றும் சொல்லுகிறபடி –
சதாசார்ய ப்ரசாதத்தாலே-கட்டளைப்பட சம்யஜ்ஞானமும்-

நல்ல திருந்திய ஞானமும் –
அறிந்தேயாக வேண்டிய தத்துவ ஹித புருஷார்த்தங்களை பற்றியது ஆதலின் -ஞானம் நல்லது ஆயிற்று –
முறைப்படி கற்று உணர்ந்தமையால் அவற்றை உள்ளபடி காட்ட வல்லது ஆதலின்-திருந்தியதும் ஆயிற்று அந்த ஞானம் -என்க –

செல்வமும்
சாஹி ஸ்ரீ ரம்ர்தாசதாம் -என்றும் சொல்லப்படுகிற வேத வேதாந்த- பாரகத்வம் ஆகிற ஸ்ரீ யும் –
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்கிற கைங்கர்ய ஸ்ரீ யும் என்னுதல் –
நல்ல பதத்தால்-மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே -என்கிறபடி ஐகிஹ ஸ்ரீ யும் என்னுதல் –

செல்வமும் சேரும் –
கீழ் கூறிய ஞானத்தின் பயனான பக்தி -செல்வம் என்று-சொல்லப்படுகின்றது –
தனமாய தானே கை கூடும் -ஸ்ரீ முதல் திருவந்தாதி -43 -என்றார் ஸ்ரீ பொய்கையாரும் –
இவ் ஆத்ம குணங்கள் தேட வேண்டியவைகள் அல்ல –ஸ்ரீ எம்பெருமானாரைச் சேரும் அவர்க்கு தாமாகவே வந்து சேரும் என்கிறார் –
ஸ்ரீ ரங்க நாச்சியாரை அடைபவருக்கு பிராட்டி கடாஷிக்க முற்படும் போதே –
ரதி மதி முதலிய-நலம் எல்லாம் போட்டி இட்டு பலவாறு தாமே அவர்கள் உடைய வேண்டுதலை எதிர்பாராது-
வந்து மேல் விழுவதாக ஸ்ரீ பராசர பட்டர் அருளிய ஸ்ரீ குண ரத்ன கோச ஸ்லோகம் ஒப்பு-நோக்கத் தக்கதாகப்
ஸ்ரீ பெரிய ஜீயர் உரையிலே காட்டி உள்ளார் –

இவை எல்லாம் அஹம் அஹம்-மிகையாய் வந்து தன்னடையே சேரும் என்றது ஆயத்து .
கைங்கர்ய ஸ்ரீ யை -லஷ்மணஸ்ரீ யை -ஸ்ரீ ஸ்வாமி தன்னாலே தர முடியும்.
சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே ..
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள்
கைங்கர்யம் பண்ண அனுகூலராக -அகம் அகம் என்று இவை எல்லாம் வரும்.இவை தானே வந்து சேரும்-

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—இரண்டாம் திருவந்தாதி–37–

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —மூன்றாம் திருவந்தாதி–10–

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –பெரிய திருமொழி-–1-1-9-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்–ஸ்ரீ திருவாய் மொழி-–5-2-1-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –226–

April 11, 2020

க்ருதஞ்ஞதா பல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து -அங்கும் இங்கும் இல்லை என்று ஆறி இருக்காமல் –
செய் நன்றி பண்ண உந்தி-பிரதி க்ருதமானம் -ஆத்மாவை உணர்ந்து -தோள்களை ஆரத்தழுவி –
நியத பிரகாரம் -சரீரம் -நாமே நீர் -தன்மையை அவன் காட்ட உணர்ந்து -பிரகாரம் -அபிருத்தக் சித்தம் –
சீதா பிராட்டியை ஜனகர் சமர்ப்பித்தது போலே அஹந்தா அவளே – -அனைத்தும் அவனது சரீரம் என்று உணர்ந்து –
சமர்ப்பிக்க ஒன்றும் இல்லை என்று ஸமாஹிதரானார் –

ப்ராப்ய ப்ராபக ஆபாசகங்கள் ஒழிந்து முதல் படி
ப்ராப்யம் -திருவேங்கடம் நடுவில்
ப்ராப்யம் அவதி -திருவாறன் விளை -கீழே பார்த்தோம்
ப்ராப்யம் ஏக பரர் ஆக்குகிறார்
பயிலும் சேஷிகள் -நெடுமாற்கு அடிமை-அவர்களே போக்யம் -ததீய சேஷத்வம் -பாகவதர்கள் சேஷிகள் –
அவனுக்கே சேஷபூதன் -8-8-/-8–9-உகாரம் நமஸ் அர்த்தம்
ஆந்திர அபிப்ராயம் –பாகவத சேஷத்வம் பாரதந்தர்யம் -8-10-கொடு மா வினையேன்
அடியார் உடன் கூடும் இது அல்லாமல் பழுதே பலகாலம் போயின என்று அழுகிறார்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
செல்வச் சிறுமீர்காள் -முதலிலே ஆண்டாள்

சத்ய காமத்வம்-எட்டாம் பத்தில்

பதிகங்கள் சங்கதி –
திருவாறன் விளை–ஆனந்தமாக பாட -தன்னைப் பார்த்து -பாஹ்ய சம்ச்லேஷம் இல்லாமல் வியசனப்பட்டார் –
ஆஸ்ரித பாரதந்த்ரம் குணத்தில் சங்கை -அசேஷ பிரகாரத்வம் -ஸ்வரூபத்திலும் சங்கை–இரண்டும் தஞ்சமாக நினைத்து இருந்தாரே –
அதி சங்கை பண்ணக் கூடாது ஆழ்வீர்-உபகார பரம்பரைகளை காட்ட – ப்ராபக பிரதான பதிகம் –8-1-ஸமாஹிதரானார் –
தனது பாக்ய குறைவு –சீதாப் பிராட்டி போலே -முகம் காட்ட வில்லை –
தமக்கு அந்ய ருசி தவிர்ந்ததை அறிவித்து -அத்தனையும் விட்டேன் -8-2-ப்ராப்ய விரோதிகளும் ப்ராபக விரோதி களும் இல்லை
-8-2-4-பெருங்குளத்துக்கு ஒரு பாசுரம் -குடபால் நின்ற மாயக் கூத்தன்–மங்களா சாசனம் –
கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஓப்பான் -8-2-10–பாசுரம் வந்ததும்
பரிவர் இல்லையே கலங்கி -8-3-இதில் வருவார் செல்வார் திரு வாழ் மார்பன் –
அமர்ந்த திருக்கோலம் -ஒரே திவ்ய தேசம் மலையாள திவ்ய தேசங்களில் இது –
நீர் இருக்க சர்வரும் இருந்தது போலே என்று காட்டி அருள –
சுக்ரீவன் கலங்க வீர ஸுர்ய பராக்கிரமம் காட்டியது போலே -மஹா மதிகள் அச்சம் கெட -திருச் சிற்றாறு பதிகம் -8-4-
திகழ என் சிந்தையுள் இருந்தான் -பாசுரம் -அணைக்க முடியாமல் -மாயக்கூத்தா -ஒரு நாள் காண வாராய் -வாசத் தடாகம் போல் -8-5-
இது வரை ஆழ்வார் விடாய்–
மேலே-8-6- பெருமாளுக்கு ஆழ்வார் மேல் உள்ள விடாய் -இப்படி ஆழ்வாரை உருவாக்க எத்தனை ஜென்மங்கள் –
தண்டகாரண்ய ரிஷிகளைக் கண்டு வெட்கி பெருமாள் –
வந்து திருக் கடித்தானாம் நின்றார் -தங்குவீடாக –நாளை வதுவை மனம் -பரதனை ஆசுவாசப்படுத்தி பெருமாள் –
பாண்டவ தூதன் -விதுரர் போல்வார் ஆசுவாசப்படுத்த -குசஸ்தலம் தங்கி -வந்தது போலே
எல்லியும் காலையும் –8-6-திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –
பேற்றுக்கு கிருஷி பண்ணினது இது வரை -பக்தி உழவன்
கிருஷி பலித்தது வேலி போட்டு பாதுகாக்க -8-7–இருத்தும் வியந்து –மூன்று தத்துக்கு பிழைத்து வந்த குழந்தையை
தாய் பார்த்துக் கொண்டே இருப்பது போலே வியந்து இருத்தும் –
கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சை ஆளும் –
பிராதி கூல்யம் போக்கி –அனைத்தையும் அவனே பண்ணி -ஆழ்வார் கிடைப்பாரா தவித்தார் –
சுக்ரீவன் நாதம் இச்சதி -விபீஷணன் கிடைப்பானா -போலே –
கண்களால் பருகுமா போலே பார்த்தார் –
மெய்யே ஆஸ்ரித பாரதந்தர்யம் உடையவர் என்று தெளிந்தார் இத்தால்
இவர் அகலப் பார்க்கும் பிரகிருதி -ஆத்மாவின் வை லக்ஷண்யம் புரிய வைக்க -8-8–கண்கள் சிவந்து –
கரிய வாய் வாயும் சிவந்து -ஆழ்வாரைப் பெற்ற பின்பே சோகம் தீர்ந்து -தலை அசைய குண்டலங்கள் ஒளி வீச
அடியேன் உள்ளான் -இயத்தா ராஹித்யம்-படியே இது என்று குறைக்கலாம் படி அல்லன்-பராத்பரன் –
உணர்வில் உள்ளே இருத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே- பரமாத்மா ஸ்வரூபம் உணர்ந்தீரே ஆழ்வீர்
நியத பிரகாரம்–ஸ்ரீ கௌஸ்துபம் போலே அன்றோ பகவத் சரீரம் -நீர் பிரிந்து போக முடியாதே –
யானும் தானாய் ஒழிந்தானே–
இவ்வளவு நெருக்கம் இருக்க -சேஷ ரசம் அறிந்து -அடியேன் உள்ளான் -அடிமை தன்னை அனுபவிக்க
அநந்யார்ஹ சேஷத்வம் -பர்யந்தம் –வளர -தோழி பதிகம் -மண விலக்கு -குட்ட நாட்டுத் திருப்புலியூர் –இவர் நேர் பட்டாள்-
உகாரம் நமஸ் சப்தார்த்தம் -அநந்யார்ஹத்வம் சம்பந்தம் -அவனுக்கே -நான் எனக்கு உரியன் அல்லேன் -பாரதந்தர்யம் –
அதன் யாதாத்ம்யம் -ஆழ்ந்த பொருள் -ததீய சேஷத்வம் பர்யந்தம் -நெடுமாற்கு அடிமை -8-10-
பிரியா அடிமை -சயமே அடிமை தலை நின்றார் -கோதிலா அடிமை –
அம்மணி ஆழ்வான் கோசல சாம்ராஜ்யம் வந்தவருக்கு இந்த பதிகம் கால ஷேபம் பட்டர் சாதித்த ஐதிக்யம்

எட்டாம் பத்தால்-

கீழ் சொன்ன சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான –
போக்ய – போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே –
சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்வமரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –
சம்சார தோஷ அனுசந் தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக –
பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –
இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண –
(பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அற விலை செய்தனன் சோதீ – 8-1-10)
அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்-
இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து –( 8-6-8-7-)இனி
அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க –(8-8)
அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் –
பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி –
பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார் ..

(உப பத்தேச ச பொருந்துகிறபடியால் ப்ராபகமான ப்ரஹ்மமே ப்ராப்யம் -வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
இங்கு பிராப் யமான அர்ச்சா திவ்ய தேசமே பிராபகம் –
பாகவதர்களே ப்ராபகம்–அவதியையும் தாண்டி ஒன்றாக -திவ்ய தேசமே இருக்குமானால்
பாகவதர்கள் இருக்கச் சொல்ல வேணுமோ – கிம் புன நியாயம் )

——————————————-

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்
கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும்
கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
2-தலைச் சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல
பிரத்யு உபகாரமாக வேந்தர் தலைவன்
கன்யகா தானம் போலே ஆரத் தழுவி
அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே
அதீவ விளங்கிப் பணைத்து
3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார்
என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே
ப்ரீதி வர்த்தித்து
4-தித்திக்க உள்ளே உறைந்தது கண்டு கொண்டு இருந்து
அமானுஷ போகம் ஆக்கினவன்
5-மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய்
மறுவலிடாமல் சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்ய ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில் ..

(சத்யகாமன் -ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கி -பணைத்து -ப்ரீதி வர்த்தித்து -உறைந்து -கண்டு கொண்டு இருந்து –
அமானுஷ போகம் ஆக்கினான் -அங்கனம் ஆக்கினவனாகி நோய் மறுவலிடாமல் சிறியேன் என்றதன் பெருமையைக் காட்டினேன் –
காட்டக் கண்டு அனுசந்தித்த ஆழ்வார் ஸ்வ சாதன சாத்யஸ்தர் -இருகரையராகாமல் -அவர்களை ப்ராப்ய ஏக பரராக்குகிறார் -என்றபடி-

வேந்தர் தலைவன் -ஜனக மகாராஜன் / ஜென்ம பாசம் விட்டு-முதல் – சீதா குணங்களால் -வரை
ப்ரீதி வர்த்திக்க காரணங்கள் -சீதா பிராட்டி -ஆழ்வார் சாம்யம் சொல்லிற்று இத்தால் )

————————————–

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்-
அதாவது-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி-8-1-1- -என்றும் –
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே யாம்–8-3-6-என்றும் –
நேர்பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன்–8-9-11-என்றும் –
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த-8-10-11 -என்றும்
லஷ்மீ பிரப்ருதி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் -நித்ய ஸூரிகள் ஏவிற்றுச் செய்ய –
அவர்கள் சேஷ வ்ருத்திக்கும் -ஜ்ஞானாதிகளுக்கும் தானே விஷயமாய் –
தன்னோடு பொருந்தி பூர்ணமாய் கட்டளைப் பட்டு இருக்கிற லோக
த்ரயத்துக்கும் நிர்வாஹனாய் இருக்கும் என்னும் படி —
கீழ் சொன்ன சக்தி தன்னாலே நித்யமாக கல்பிக்க பட்ட -பத்னி பரிஜன ஸ்தான –
போக்ய போக உபகரணங்களை உடையவன் ஆகையாலே
சத்ய காமனாய் இருக்கிறவன்-

கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
அதாவது
உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ள வைத்தோம் -என்று
தான் இவரைக் கொண்டு வாசிகமான அடிமையும் விஸ்மரிக்கும் படி ஆக்கின –
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி -8-1-2–என்று
தன்னைக் கண்டால் கண்டு அனுபவிக்கப் பெறாமையால் வந்த கலக்கமும் –
அவ்வளவு இன்றிக்கே –
உமர் உகந்து உகந்து -8-1-4–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்—8-1-4-என்று
தன்னுடைய ஆஸ்ரித பாரதந்த்ரமாகிய குணத்திலும் –
இறந்ததும் நீயே -8-1-7–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்–8-1-7-என்று
தன்னுடைய சர்வ பிரகாரித்வம் ஆகிய ஸ்வரூபத்திலும் -பண்ணிய சங்கையும் –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்-8-1-9–என்று
சம்சார தோஷ அனுசந்தானத்தால் வந்த அச்சமும் நிவ்ருதம் ஆகும் படியாக
( கலக்கம் -குண சங்கை -ஸ்வரூப சங்கை -அச்சம் -நான்கும் தீரும் படி )

————————————-

2-தலை சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல பிரத்யு உபகாரமாக-
அதாவது-
தாள்களை எனக்கே தலை தலை சிறப்பத் தந்த-8-1-10- -என்னும்படி-
மலரடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன் அருளிய –7-10-5-
என்று பராசராதிகள் -முதல் ஆழ்வார்கள்- உண்டாய் இருக்க -தம்மைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட
பூர்வோ உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
(மலர் அடிப் போதுகளை பிரார்த்திக்க தாள்களை எனக்கே தலை சிறப்பத் தந்தானே )
அப்படி மிக சிறக்கும்படி உபகரித்ததில் தமக்கு உண்டான
க்ருதஜ்ஞ்தைக்கு பலம் சத்ருச பிரதுபகாரம் ஆக-

வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-
அதாவது
உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -7-9-10–என்று
கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே
நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –

வேந்தர் தலைவன் சனகராசன்-என்கிறபடி
ஷத்ரிய அக்ரேசனராய் -ஜ்ஞானாதிகனான ஜனக ராஜன் -மகோஸ்வரமான தனுர் பங்கம் பண்ணின
பெருமாள் ஆண் பிள்ளைத் தனைத்தை கண்ட ஹர்ஷத்தால் கலங்கி –
விஷ்ணோஸ் ஸ்ரீரீர அனபாயிநீ – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17–என்கிறபடியே -தத் அப்ருதக் சித்தையாய் –
ராகவத்வே பவத் சீதா – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-9-144–என்று தத் அவதார அனுகூலமாக அவதரித்த பிராட்டியை –

இயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே-( மமகாரம் விட்டவன் மமகாரம் )
பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று
அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –

தாளும் தோளுமாய் பணைத்துத் தோற்ற -பாவன பிரகர்ஷத்தாலே அணைத்துக் கொண்டு அத்ர ஆதரத்தோடு
அனந்யார்ஹமாக சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவைப் பெருகையாலே
அதீவ விளங்கிப் பணைத்து
அதீவ ராமச் சுசுபே –பால-77-30-என்றும்
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகத்மஜா -ஆரண்ய-37-18–என்றும்
அவளைப் பெற்று விளங்கினாப் போலே –
சோதி-8-1-10- -என்று
இவர் பேசும் படி இவர் தம்மது அல்லாத ஒன்றைத் தம்மதாகப் பிரமித்து கொடுத்தாப் போலே –
அவனும் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றாப் போலே பிரமித்து அத்யுஜ்வல்லனாய் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்-8-1-10- -என்னும்படி
சதசாகமாகப் பணைத்து-

————————————

3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார் என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து-
அதாவது –
ஸ்ரீ ஜனக மகா ராஜன் திருமகள் பெருமாளைக் கைப் பிடித்த பின்பு அவர் அளவில்
பிரேமத்தால் ஜன்ம பூமியான ஸ்ரீ மிதிலையை நினையாதாப் போலே –இவரும் –
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11-என்று
திருவடிகளைக் கிட்டுகையில் சங்கத்தாலே -புறம்புண்டான வழிய சங்கங்களை நிச் சேஷமாக விட்டு –

ஆத்வாரம் அனுவவ்ராஜ மங்களான்யா பிதத்யுஷீ -அயோத்யா-16-21-(ஆத்வாரம் -வாசல் அளவும் )-என்று
அவள் பெருமாள் உடைய வடிவழகைக் கண்டு மங்களா சாசனம் பண்ணினாப் போலே -இவரும் –
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-8-3-3-என்று
தமக்கு பரிகைக்கு ஒரு ஆளும் ஆளுகிறிலீர்–மலை சுமந்தார் போலே திரு ஆழியையும்
திரு பாஞ்ச சந்யத்தையும் தரிப்பார் தாமாய் இரா நின்றது என்று -அவன் சௌ குமார்யத்தைக் கண்டு பரிந்து –

அவள் பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து பயம் கெட்டு -துல்ய சீல-ஸூந்தர-16-5 -இத்யாதிப் படியே
தனக்கு அனுரூபரான இவரோடு பொருந்து அனுபவித்தாப் போலே -இவரும் –
வார் கடா வருவி–8-4-1-என்று தொடங்கி -அவன் சௌர்யாதிகளை அனுசந்தித்து -நிர்பரராய் –
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை யமர்ந்தேனே-8-4-10 -என்று
அவனோடு பொருந்தி அனுபவித்து –

விஸ்லேஷ தசையிலே -அவள் –
ஹி மகத நலிநீவ நஷ்ட சோபா வ்யசன பரம்பர யாதி பீட்ய மானா
சஹ சர ரஹீதேவ சக்ர வாகி ஜனக சுதா க்ருபாணாம் தசாம் பிரபன்னா -ஸூந்தர-16-30-என்று
நிர்க்க்ருணரும் இரங்க வேண்டும்படியான தசையைப் பிராப்தையானாப் போலே -இவரும் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -8-5-2–என்று
அவனைக் காண ஆசைப்பட்டு -திக்குகள் தோறும் பார்ப்பது -கூப்பிடுவது ஆகையாலே –
கண்ணும் வாயும் நீர் பசை அறும்படி ஆகையால் –

ஜனக குல சுந்தரியின் குணங்கள் எல்லாம் இவர் பக்கலிலே காண்கையாலே –
ப்ரியாது சீதா ராமஸ்ய தாரா பித்ரு க்ருதா இதி குணாத் ரூப குணச் சாபி ப்ரீதிர்ப் பூயோப் ப்யவர்த்தத–பால -77-25-என்று
குண தர்சனத்தாலே அவள் பக்கல் ப்ரீதி வர்த்தித்தால் போலே
இவர் அளவில் ப்ரீதி வர்தித்தது —

————————————————–

4-தித்திக்க உள்ளே உறைந்தது-
அதாவது –
மனஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித -பால -77-25 -என்று
எப்பொழுதும் அவள் நெஞ்சுக்கு இனிதாம்படி -இருந்தாப் போலே –
உள்ளும் தோறும் தித்திப்பான்–8-6-3–என்றும் ,
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2–என்று
அனுசந்திக்கும் தோறும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு
இவர் திரு உள்ளத்தில் நித்ய வாசம் பண்ணி –

கண்டு கொண்டு இருந்து அமானுஷ போகம் ஆக்கினவன்
அதாவது –
இருந்தான் கண்டு கொண்டு -8-7-2-என்று
தரித்திரன் தன லாபம் உண்டானால் பார்த்துக் கொண்டே இருக்குமா போலே
இவரைப் பெற்ற ப்ரீதியாலே -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்து –
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசன
புஞ்சானா அமானுஷான் போகான் சர்வ காம சம்ருத்திநீ –ஸூ ந்தர-33-17-
(திரு அயோத்தியில் -12-வர்ஷங்கள் பெருமாளுடன் அமானுஷ போகம் அனுபவித்து அவாப்த ஸமஸ்த காமாளக இருந்தேன் )-என்று
விஸ்லேஷ தசையிலும் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கலாம் படி -அவளை –
மானுஷம் அன்றிக்கே -திவ்யமாய் இருந்துள்ள போகங்களைப் புஜிப்பித்தாப் போலே -இவரையும் –
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன்-8-7-2–என்றும் –
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி நான் அறியேன் மற்று அருளே –8-7-7-
என்று வித்தராய்ப் பேசும்படி -அப்ராக்ருத போகங்களைப் புஜிப்பித்தவன்-

——————————————

5-மூன்று தத்துக்கு பிழைத்த -அருவினை நோய் மறுவலிடாமல் – சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது –
அருவினை நோய் மறுவலிடாமல்-
மருள் தானீதோ—8-7-3–என்றும்
பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் -8-7-6–என்றும்
அருள் தான் இனி யான் அறியேன் -8-7-3-என்றும்-
உகப்பு செல்லா நிற்கச் செய்தே –

மூன்று தத்துக்கு பிழைத்த — சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது
சிறியேனுடை சிந்தையுள் நின்று ஒழிந்தார் -என்று
தம் சிறுமையை அனுசந்தித்தவாறே –
1-வள வேழ் உலகிலே -1-5-
களவேழ் வெண்ணெய் தொட உண்ட கள்வா என்பேன் -அரு வினையேன் -என்றும் –
வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்றும் –
அடியேன் காண்பான் அலற்றுவன் இதினால் மிக்கு ஓர் அயர்ப்பு உண்டே -என்றும்-

2-பொரு மா நீள் படையிலே –1-10-
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் -என்றும் –

3-அம் தாமத்து அன்பிலே –2-5-
அல்லாவி உள் கலந்த -என்றும் –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை -என்றும் –

இப்படி மூன்று இடத்தில் வந்து பரிஹ்ருதம் ஆகையாலே -மூன்று தத்துக்கு இவர் பிழைத்த
அயோக்யதா அனுசந்தான வியாதி -மறுவலிட்டு இன்னும் இவர் அகலில் செய்வது என் என்று அஞ்சி –
இனி இவர் தாம் அகலுகிறது -வந்தேறியான அசித் சம்பந்தத்தை இட்டு -இது நமக்கு அனர்ஹம் என்று இறே –
இதனிடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகல ஒண்ணாதே என்று பார்த்து –

அது மறுவல் இடாதபடியாக –சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட-
அதாவது –
நமக்கு கௌஸ்துபம் போலவும்
ஸ்ரீ ஸ்தனம் போலவும்
தேஜஸ் கரமுமாய் போக்யமுமாய் இருக்கும் –
அப்ருக்து ஸித்த விசேஷணமாய்க் காணும் உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருப்பது என்று –
சிறிதாக இவர் அனுசந்தித்த ஆத்ம வஸ்துவின் வைலஷண்யத்தை –
யானும் தானாய் ஒழிந்தான்-8-8-4 -என்றும் –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து -8-8-4–என்று தனக்கு அப்ருதக் ஸித்த பிரகாரமாகவும்
நிரதிசய போக்யமுமாகவும் அனுசந்திக்கும் படி காட்டிக் கொடுக்க

(பிரகலாதன் -திரௌபதி -கஜேந்திரன்–மூன்று தப்புதல் பகவானுக்கு
விந்த்யாவாடம் -ஸ்ரீ ரெங்க விஷ விபத்து- கிருமி கண்ட சோழ ஆபத்து -மூன்றும் எம்பெருமானுக்கு )

——————————————————-

6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
அதாவது –
சென்று சென்று பரம் பரமாய் -8-8-5–என்கிறபடியே
தேக இந்திரியங்களில் வ்யாவிருத்தமாய் -ஞான ஆனந்த மயமாய் –

நினையும் நீர்மை யதன்றி வட்கிது நின்று நினைக்கப் புக்கால் -8-9-5-என்றும் –
அருமாயன் பேச்சின்றி பேச்சு இலள் -8-9-1–என்றும் –
அன்று மற்றோர் உபாயம் என் -8-9-10–என்றும் –
யதா நிரூபணம் பண்ணில் பிராட்டியோபாதி -அனந்யார்ஹமாய் –

அவ்வளவும் அன்றிக்கே –
மாகாயம் பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கமிலா அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட் பாடே —ஊழி தொரு ஊழி வாய்க்க தமியேற்கு –8-10-10-
என்று விலஷண விக்ரக யுக்தனான சர்வேஸ்வரனை விஸ்லேஷிக்க ஷமர் அல்லாத பாகவதர்களுடைய
சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்கள் எனக்கு சேஷிகள்-
இரு கரையர் -அன்றிக்கே அவர்களுக்கே ச பரிகரமாக அனந்யார்ஹனாய்ச் செல்லும்
நல்ல கோட் பாடு கால தத்துவமுள்ள அனையும் எனக்கு சித்திக்க வேண்டும் என்று –
இப்படி ததீய சேஷத்வ காஷ்டை அளவும் செல்ல நிற்கும் படி பரதந்த்ரமான
ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-

(தேகாதி இந்திரியங்கள் -காட்டில் விலக்ஷணமான ஞான ஆனந்த மயம்-8-8 -திருவாய் மொழி அர்த்தம்
அதுக்கும் மேலே அநந்யார்ஹ சேஷத்வம் ஸ்வரூபம்
ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யம் –நினையும் நீர்மை யது அன்று –
இந்த அளவு என்ற தன்மை நினைக்கவும் முடியாதே -8-9-திருவாய் மொழி அர்த்தம்
அதுக்கும் மேலே -அத்யந்த பாரதந்தர்யம் –
அவருக்கே குடிகளாம்–ததீய சேஷத்வ பரதந்த்ர ஸ்வரூபம் -8-10-நெடுமாற்கு அடிமை திருவாய் மொழி அர்த்தம்
இனிப் பிறவி யான் வேண்டேன் என்று உபக்ரமித்தவர் ஊழி ஊழி தோறும் பிறந்து
அவர்களுக்கே குடிகளாக செல்ல பிரார்த்தனை -இதுவே நல்ல கோட்ப்பாடு )

—————————————–

7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இரு கரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்யை ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில்
அதாவது
தம்முடைய சாதன சாத்தியங்களே தங்களுக்கு என்று இருக்கிறவர்கள்-
தத் விஷயம் பிராபகமும் ததீய விஷயம் பிராப்யமுமாய் -இரு கரையர் -ஆகாதபடி-
(அவன் உபாயம் -திவ்ய தேசம் உபேயம் -என்று உபாய உபேயங்களை வெவ்வேறாகக் கொள்ளாமல் -என்றபடி-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷணம் -411-)
திருக் கடித் தானத்தை ஏத்த நில்லா குறிக் கொள் மினிடரே -8-6-6–என்றும்-
கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ –
வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே இடர் கெட உள்ளத்து கொள்மின்-8-6-7–என்றும்-
திருக் கடித் தானத்தை ஸ்தோத்ரம் பண்ணின அளவில் -துக்கங்கள் எல்லாம் நிலை குலைந்து போம் –
இத்தை குறிக் கொள்ளுங்கோள் –சர்வேஸ்வரனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை
உபய விபூதியில் உள்ளார் எல்லாரும் அனுபவிக்கும் படியான திருக் கடித் தான நகரை
உங்கள் சமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சில் கொண்டு அனுசந்தியுங்கோள் என்று
கீழில் பத்தில்- பிராப்யமாக உபதேசித்த அர்ச்சாவதார பூமியே -துக்க நிவர்தகம் என்கையாலே –
பிராப்யமான விஷயமே பிராபகம் என்று தர்சிப்பித்து -பிராப்ய விஷயம் ஒன்றிலுமே –
தத் பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில் என்கை —

(நமஸ் சப்தம் -அவனுக்கே -ஆர்த்த -அடியாருக்கு அடியார் –திவ்ய தேசமே ப்ராப்யம் –
அடியாருக்கு அடியார் சரம காஷ்டை-இதில் அந்தர் கதம்-
கிம் புந நியாயம் -திவ்ய தேசமே என்பதால் அடியார் அடியார் எல்லை வரை வருமே
உபாதானமே நிமித்தம்-ஏக மேவ அத்விதீயம் சாந்தோக்யம் -உபபத்தேச்ச–ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம்
பிராப்யமும் பிராபகமும் ஒன்றே -இங்கு
ததீய விஷயம் -திவ்ய தேசம் -8-6-திருக்கடித்தானம் -ஏத்த இடர் நில்லா என்பதால் ப்ராபகம்-மண்ணவரும் விண்ணவரும் அடையும் இடம் –
திருவாறன் விளை கீழே -ஆகவே திவ்ய தேசங்கள் எல்லாம் என்றதாயிற்று –
அதன் காஷ்டை-எல்லை நிலம் -8-10- )

( அகாராரத்தம் -8-8-பிரணவம்
நமஸ் சப்தம் -8-9-
நமஸ் அர்த்தம் -8-10-
நாராயண ஆய அர்த்தம் -9-1-/9-2-/9-3-இப்படி ஆறுக்கும் சங்கதி ஈட்டில் உண்டே )

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –31-ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம்-இத்யாதி —

April 11, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

அநாதி காலம் அசங்க்யாதமான யோநிகள் தோறும் தட்டித் திரிந்த நாம் இன்று
நிர்ஹேதுகமாக ஸ்ரீ எம்பெருமானரை சேரப் பெற்றோமே என்று -ப்ரீதி பிரகர்ஷத்தாலே –
திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

லோகத்தில் ஒருவனுக்கு ஒரு நிதி லபித்தால் தன்னுடைய அந்தரனுக்கு சொல்லுமா போலே –
இவரும் தம்முடைய பந்த மோஷங்களுக்கு எல்லாம் பொதுவான மனசை சம்போதித்து
கலா முகூர்த்தாதி-ரூபமாய்க் கொண்டு வர்த்திக்கும் காலம் எல்லாம் தேவாதி தேகங்கள் தோறும் சஞ்சரித்து இவ்வளவும் போந்தோம் –
இப்போது ஒரு சாதனம் இன்றிக்கே -சுந்தர பாஹுவாய் -தமக்கு உபாகரகரான ஸ்ரீ பேர் அருளாளன் திருவடிகளின் கீழே-
அங்குத்தைக்கு -ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள பிரேமத்தை உடையரான ஸ்ரீ எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு
நிற்கப் பெற்றோம் கண்டாயே -என்று சொல்லி ஹ்ருஷ்டர் ஆகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

நெடும் காலம் பல பல பிறப்புகளில் புக்கு பெரும்பாடு பட்ட நாம்-இன்று
நினைப்பின்றியே ஸ்ரீ எம்பெருமானாரைச் சேரப் பெற்றோம் என்று
பெறும் களிப்புடன் தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

இந்த பிரபந்தத்தில் 9 திவ்ய தேசங்கள் —ஆழ்வார் அவதார ஸ்தலங்கள் -3–மங்களா சாசனம் செய்கிறார் ஸ்ரீ அமுதனார்
திரு மழிசை-மழிசைக்கு இறைவன் 1
திரு கொல்லி நகர் 1
திரு குறையலூர் 1
1-திரு குருகூர் மூன்று பாசுரங்கள்
2-திரு அரங்கம் 14 பாசுரங்கள்
3-திரு வேங்கடம் -2 பாசுரங்கள்
4-திரு கச்சி- 1 –
5-திரு கோவலூருக்கு -1-
6-திரு மால் இரும் சோலை -1-
7-திரு கண்ண மங்கை நின்றான்–1-
8-திரு பாற்கடல் 2-
9-திரு பரம பதம் -2-

இதில் அன்பாளன் பூண்ட அன்பு.திவ்ய ஆபரணங்கள் போல ஸ்வாமி அன்பு பூண்டான் தேவ பிரான்
மீனுக்கு உடம்பு எல்லாம் தண்ணீர் போல ஸ்வாமிக்கு அன்பு-

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

பத உரை
மனமே -நெஞ்சமே
நாளாய் -தினமாய்
திங்களாய்-மாதமாய்
ஆண்டுகளாய்-வருஷங்களாய்
நிகழ் காலம் எல்லாம் -நடந்து கொண்டு இருக்கிற காலம் எல்லாம்
ஈண்டு-திரண்டு
பல் யோநிகள் தோறும் -பலவகைப்பட்ட பிறவிகள் தோறும்
உழல்வோம் -கஷ்டப்பட்டு கொண்டு திரிந்த நாம்
இன்று-இப்பொழுது
ஓர் எண் இன்றியே -ஒரு நினைப்பு இல்லாமலே
காண் தகு-காண்பதற்கு தக்கவைகளாக உள்ள
தோள்-திருத் தோள்களை உடைய
அண்ணல் -ஸ்வாமியாய்
தென் -அழகிய
அத்தியூரர் -திரு வத்தியூரில் எழுந்து அருளி உள்ள ஸ்ரீ பேர் அருளாள பெருமான் உடைய
கழல் இணைக் கீழ்-ஒன்றுக்கு ஓன்று ஒத்த திருவடிகளின் கீழ்
பூண்ட-நன்கு செலுத்தின
அன்பாளன் -பக்தியை உடையவரான
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
பொருந்தினம் -சேர்ந்து நிலை நிற்கப் பெற்றோம்

வியாக்யானம் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கையாலே இரண்டு தசையிலும் கூடி நிற்கிற நெஞ்சே –
தினமாய்-மாசமாய் -சம்வத்சரங்களாய் -கொண்டு வர்த்தியா நின்றுள்ள -காலம் எல்லாம் –
தேவாதி பேதத்தாலும் -அதில் அவாந்தர பேதத்தாலும் -பரிகணிக்க ஒண்ணாதபடி -திரண்டு பல வகைப்பட்ட -யோநிகள் தோறும் –
ஒரு கால் நுழைந்த இடத்தே -ஒன்பதின் கால் நுழைந்து தட்டித் திரிந்த நாம்-
இன்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே -காணத் தகுதியாய் இருந்துள்ள-திருத் தோள்களை உடையராகையாலே –
ரூப குணத்தாலும் உத்தேச்யராய் -நமக்கு வகுத்த சேஷிகளாய் – தர்சநீயமான ஸ்ரீ திரு வத்தியூரிலே -நித்ய வாசம் பண்ணுகையாலே –
அவ்வூரைத் தமக்கு நிரூபகமாக-உடைய ஸ்ரீ பேர் அருளாள பெருமாள் உடைய -பரஸ்பர சத்ருசமான -திருவடிகளின் கீழே –
பிணிப்புண்ட-சிநேகத்தை உடையரான –ஸ்ரீ எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு நிற்கப் பெற்றோம் –
நிகழ்தல்-வர்த்தித்தல் / ஈண்டுதல்-திரளுதல் /யோனி-ஜாதி–

வரத வலித்ரயம் -தாமோதரன் / கனக வளை முத்திரை / ஸ்ரீ நிதிம்-சம்ப்ரதாயம் நிலை நிறுத்திய ஸ்ரீ தேவ பெருமாள் அன்றோ –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு நிதி -ஸ்ரீ ராமானுஜர் -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -நின்று வேலை செய்ய
ஸ்ரீ அரங்கன் படுத்துக் கொண்டே அனுபவிக்கும் -ராஜதானி -பூண்ட -ஆபரணம் -சென்னிக்கு அணியாக –
குடை -பிரசித்தம் -கொடைத்தன்மை என்றுமாம் -அஹம் ஏவ பர தத்வம் சொல்லி நிமிர்ந்த தோள்கள் –
தோற்று தாளில் -தாளும் தோளும் சமனிலாத பல பரப்பி -தாளில் விழுந்தால் தோள் அணைப்பு கிட்டும் –
வையம் கொண்டாடும் வைகாசி கருட சேவை –

ஆண்டுகள் நாள் திங்களாய் -நிகழ் காலம் எல்லாம் –
கலா முகூர்த்தம் க்ர்ஷ்டாச்சா ஹோராத்ரச்சா சர்வச -அர்த்தமாசாமா சாரிதவத்சம் வத்சரஸ் சகல்பதம் -என்றும் –
நிமேஷோ மாநுஷோயோசவ் மாத்ரா மாத்ர ப்ரமாணாத –தைரஷ்டாதசபி காஷ்டாத்ரி சத்காஷ்டா கலாச்ம்ரத்தா –
நாடிகாது பிரமானே னகலா தசசபஞ்சச -நாடிகாப்யா மதத்வ்யாப்யோ முஹூர்த்தொர்விஜச த்தம –
அஹோராத்ரா முஹூர்த்தாஸ்து த்ரிம்சன்மாசாஸ் துதைச்ததா -மாசைர்த்வாதச பிர்வர்ஷா-மகோராத்ரம் துதத்வி -என்றும்
சொல்லப்படுகிற – சர்வ காலமும் -ஆண்டுகள்-வத்சரங்கள் -நாள்-தினம் -திங்கள்-மாசம் –நிகழ்தல் -வர்த்தித்தல்

ஈண்டு பல் யோனிகள் தோறு உழல்வோம் –
தேவ மனுஷ்யாதி ஜாதிகள் -ஒவ் ஒன்றிலே தானே அநேகம் அநேகமாக-அவாந்தர ஜாதிகள் உண்டு –
அவை எல்லாவற்றிலும் ஒருக்கால் புகுந்ததிலே ஒன்பதின் கால் புகுந்து –
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே
அநாதிகாலம் பிடித்து -சஞ்சரித்து போந்தோம் –
ஈண்டுதல் -திரளுதல் /யோநி -ஜாதி -உழலுகை -தட்டித் திரிகை –

ஆண்டுகள்–உழல்வோம் –
தமது பண்டைய நிலையையும் எதிர்பாராது வாய்ந்த இன்றைய சீரிய நிலையையும் பார்த்து வியந்து-
தன் நெஞ்சினைப் பார்த்து பேசுகிறார் –
இரண்டு நிலைகளையும் தம்மோடு ஒக்க இருந்து நேரே கண்டதாதலின் நெஞ்சினைப் பார்த்து பேசுகிறார் –
காலம் எல்லாம் நாம் பிறந்த பிறவிகளுக்கு எல்லை இல்லை –
தேவர் மனிதர் விலங்கு தாவரம் -என்று பெறும் பிரிவுகளும்
அவற்றின் உட் பிரிவுகளுமாக என்ன ஒண்ணாத திரண்டு பல வகைப் பட்டு உள்ளன அப்பிறவிகள் –
ஒரே வகையான பிறவியே பலகால் எடுத்து தட்டித் தடுமாற வேண்டியது ஆயிற்று –
சில பிறவிகள் ஆண்டுக் கணக்கில் இருந்தன –
மற்றும் சில மாதக் கணக்கில் இருந்து மாய்ந்தன
வேறு சில நாள் கணக்கில் நசித்தன –
இப்படிப் பட்ட நம் பல் வகைப் பிறப்புகளிலும் இப் பிறப்பிலே ஸ்ரீ எம்பெருமானாரை பொருந்தும் பேற்றினை நம் பெற்றோம் -என்றபடி –
ஆய்-என்பதை ஆண்டுகள் -நாள் -என்பவற்றோடும் கூடிப் பொருள் முறைக்கு ஏற்ப
நாளாய் -திங்களாய் -ஆண்டுகளாய் –என்று அன்வயித்து பொருள் கொள்க –
பிறக்கும் போதே நசிக்கும் பிறப்புகளை சொல்லாது ஒழிந்தது உழலுகை நிகழும் காலமாய்-அமையாமை பற்றி -என்க –
உழல்வோம் -தன்மை பன்மை வினையால் அணையும் பெயர்

மனமே –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் -அறிவுக்கு பிரசவ த்வாரமான நீ அறிந்தாய் என்று –
அந்தரங்கமான மனசை சம்போதித்து அருளிச் செய்கிறார் –
ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே பிராமய மானேஸ்-ச்வகர்மபி ஜீவேது காகுலே -என்கிறபடி
இவ்வளவும் சஞ்சரித்துப் போந்தோம் –

இன்று-
இப்போது-

ஓர் எண் இன்றியே –
நான் ஒன்றை எண்ணிக் கொண்டு இராதே இருக்க –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-ஒரு சைதன்ய கார்யத்தையும் பண்ணாதே இருக்க

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-

காண் தகு தோள் அண்ணல் –
ஆயதாஸ்ஸ ஸூவ்ர்த்ததாச சபாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா என்கிறபடியே
இருந்துள்ள-திருத் தோள்களை உடையவராய் –
விந்த்யாடவியில் நின்றும் ஸ்ரீ காஞ்சி புரத்துக்கு துணையாக வந்து –
அஹம் ஏவ பரதத்வம் -என்று ஸ்ரீ திரு கச்சி நம்பி மூலமாக உபதேசித்த உபாகாரகனாய் –

தென் அத்தியூர் –
தர்சநீயமான – நகரேஷு காஞ்சி -என்னப்பட்ட ஸ்ரீ காஞ்சி புரத்திலே –
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரிஜாதம் -என்று தாமே அருளிச் செய்யும்படி
ஸ்ரீ ஹஸ்த கிரியில் எழுந்து அருளி வகுத்த சேஷியான ஸ்ரீ பேர் அருளப் பெருமாள் உடைய –

காண் தகு தோள் —பூண்ட அன்பாளன்
எதிர்பாராது இன்று வாய்த்த ஸ்ரீ எம்பெருமானாரைப் பொருந்தின சீர்மை விளக்கப் படுகிறது –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய அணி பூணாத தோள் அழகிலே ஈடுபட்ட சிறிய திருவடி போலே-
புறப்பாடாகி திரு மாலை களைந்ததும் -ஸ்ரீ பேர் அருளாளர் வெறும் தோள் அழகிலே ஈடுபட்டு ரசித்தார் ஸ்ரீ எம்பெருமானார் –
அவருக்கு காணத் தக்கவனவாய் இருந்தன அத் தோள்கள்-
அவ் அழகிய தோள்கள் அவரை அண்ணலாக காட்டிக் கொடுத்தன –
விந்திய மலைக் காட்டிலே -வேடன் வடிவிலே -தன் தோள் வலிமை காட்டி -அச்சம் ஒட்டி உற்சாகம் ஊட்டி –
தம்மை ஸ்ரீ அத்தியூரிலே -தன்னோடு கூட்டிக் கொண்டமை பற்றி ஸ்ரீ தேவப் பெருமாள்-அழகிய தோளிலே
ஸ்ரீ எம்பெருமானார் ஈடுபட்டமையைக் கூறுவதாகவும் கொள்ளலாம் –
இனி தரும் என்று
அண்டினவர் அனைவர் கோருமவை யனைத்தும் சேரும் வண்ணம் வழங்கும்-வரம் தரும் மணி வண்ணனான
ஸ்ரீ அத்தி யூரர் அலம் புரிந்த நெடும் தடக் கையின் அழகில் ஸ்ரீ எம்பெருமானார்-ஈடுபாட்டைக் கருதலுமாம்
தடக்கை -என்பதற்கு –
லோகம் அடங்க ஒதுங்கினாலும் விஞ்சி இருக்கும்படியான தோள் -என்பது-ஸ்ரீ பெரிய வச்சான் பிள்ளை வியாக்யானம் .

தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-

காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11-

தண் சேறை அம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உருகிக் கையாரத் தொழுவாரைக் கருதும் காலே –பெரிய திருமொழி -7-4-8-

தென் அத்தியூரர் –
ஸ்ரீ தேவப் பெருமாள் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ திருமலை -ஸ்ரீ அத்திகிரி -எனப்படும் –
அத்தி-யானை
திக் கஜங்கள் வழிபட்ட இடம் ஆதலின் –அத்தி கிரி -என்று பேர் பெற்றது –
திங் நாகைரர்ச்சி தஸ் தத்ர புரா விஷ்ணு ச்ச்நாதன-ததோ ஹஸ்திகிரீர் நாமக்க்யாதி ராஸீன் மகாகிரே -என்று-
அவ்விடத்தில் முற்காலத்தில் சனாதன புருஷனான ஸ்ரீ மஹா விஷ்ணு திக் கஜங்களால்-பூஜிக்கப் பட்டான் –
அதனால் பெருமை வாய்ந்த அம்மலைக்கு ஸ்ரீ அத்திகிரி -என்னும் பிரசித்தி ஏற்பட்டது – என்னும் புராண பிரமாணம் காண்க –
அத்தி கிரி உள்ள ஊர் ஆதலால் அது அத்தியூர் எனப்படுகிறது –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் -என்றார் ஸ்ரீ பூதத் ஆழ்வார் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் -என்னும்-பண்டைய வழக்கிலே
ஸ்ரீ பெருமாள் கோயில் எனப்படுவதும் இவ்வத்தி யூரே -பாரதம் பாடிய பெறும் தேவனார் –
தேனோங்கு நீழற் றிருவேம்கடம் என்றும்
வானோங்கு சோலை மலை என்றும் -தானோங்கு
தென்னரங்க மென்றும் திரு வத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர் -என்று கூறப் பட்டு உள்ளமை காண்க –
திருமலை என்பது திருவேம்கடம் ஆகிய திருமலையையும்
திரு மால் இரும் சோலை மலையாகிய தெற்குத் திரு மலையையும் குறிக்கும் ஆதலின்
அவ்விரு திருமலைகளையும் – பெரும் தேவனார் தம் பாடலில் குறிப்பிட்டு உள்ளார் –

வரம் தரு மா மணி வண்ணன் -அருளாளப் பெருமாள்-இடம் மணி மாடங்கள் சூழ்ந்து
அழகாய கச்சி -பெரிய திரு மொழி -2 9-3 – –என்று ஸ்ரீ திரு மங்கை மன்னன் அருளிச் செய்தபடி –
ஸ்ரீ காஞ்சி என்று ஊரை குறிப்பிடாது ஸ்ரீ அத்தியூர் என்று-குறிப்பிட்டு இருப்பது -கவனித்தற்கு உரியது –
பிரமதேவன் பூஜித்த இடம் ஆதலின் ஸ்ரீ காஞ்சி -என்று பேர் ஏற்பட்டது –
அப் பேரை விட விலங்கு இனங்களாகிய யானைகள் பூசித்த இடம் ஆதலின் ஸ்ரீ தேவப் பிரான் உடைய-எளிமையை விளக்குவதாக
அமைந்த ஸ்ரீ அத்தியூர் என்னும் பேரே சிறந்தது என்னும் கருத்துடன் அப்பேரினையே-கையாண்டார் -என்க
மேலும் ஸ்ரீ ஊரகம் ஸ்ரீ பாடகம் முதலிய பல ஸ்ரீ திருப்பதிகளைத் தன்னகத்தே கொண்ட நகருக்கு ஸ்ரீ காஞ்சி -என்பது
பொதுப் பெயராக-வழங்கப்படுகிறது –அத்தியூர் -என்பதோ -தேவப்பெருமாள் நித்ய வாசம் செய்யும் பகுதிக்கே சிறப்பு பெயராய்
அமைந்து உள்ளது -ஆதல் பற்றியும் அப்பெயரினையே கையாண்டார் -என்க
ஸ்ரீ அத்தியூரிலே நித்ய வாசம் பண்ணுதல் பற்றி அதனையே நிரூபகம் ஆக்கி ஸ்ரீ தேவப் பெருமானை ஸ்ரீ அத்தி ஊரர் -என்கிறார் –

அடியாரை அரங்கன் இடம் சேர வைத்த மகிழ்ச்சியால் பூரித்த தோள்கள்-
ஸ்வாமி காண் தகு தோள் அண்ணலை சேவித்தவனுக்கு தென் அத்தியூர் கழல் அடி இணை கீழ் பூண்டும் அன்பாளனாக ஆக்குவார்
திரி தந்தாகிலும் -தேவ பிரானை காண்பன் -.மேவினேன் அவன் பொன்னடி/ மீண்டு ஸ்வாமி அடிகளை பொருந்தினமே-

கழல் இணைக் கீழ் –
பாவனத்வ-போக்யத்வங்களுக்கு பரஸ்பர சதர்சமான திருவடிகளின் கீழே

பூண்ட அன்பாளன் –
சிரோ பூஷணமான ஸ்ரீ திரு அபிஷேகத்தை அலங்கரிக்கும் அவர்களைப் போலே தம்மாலே அலங்கரிக்கப்பட்ட
பக்தி பிரகர்ஷத்தை உடையரான –

கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
தோள் கண்டமை கூறப்பட்டது கீழே –தாள் கண்டமை கூறுகிறார் இங்கே –
கழல்கள் ஒன்றுக்கு ஓன்று இணையாகப் பொறுந்தி உள்ளன-அவற்றின் கீழ் அன்பு பூண்டார் ஸ்ரீ எம்பெருமானார்
அவன் தாள் இணைக் கீழ் புகும் காதலன் -திரு வாய் மொழி – 3-9 8– -என்றபடி
கழல் இணையின் கீழே பூண்ட அன்பை ஆளுகின்றார்-வாழ்ச்சி தாள் இணையக் கீழ் அன்றோ

பூண்ட அன்பு –
பூட்கை யாவது -வலிமை –வலிமை வாய்ந்த அன்பாவது விலகாது அடிக்கீழ் நிலை பெற்று இருத்தல்-
பிணிப்புண்ட சிநேகம் -என்று உரைப்பர் பெரிய ஸ்ரீ ஜீயர் –
தன்னைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்படி வலிமை பெற்று அவ்வளவு அமைந்து இருக்கிறது அன்பு ஸ்ரீ எம்பெருமானார் இடத்திலே –
திருவாளன் என்பது போலே அன்பாளன் என்கிறார் –
ஸ்ரீ திருவரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் போதும் ஸ்ரீ தேவப் பெருமாளையே
திரு வாராதனப் பெருமாளாகக் கொண்டு தென்னத்தி யூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளராய் அன்றோ ஸ்ரீ எம்பெருமானார் இருந்தார் –

இனி –
காண் தகு தோள் அண்ணல் என்பதை
ஸ்ரீ எம்பெருமானாருக்கு அடை ஆக்கலுமாம்-
இதனால் திரு மேனி குணமும்
அன்பாளன் என்பதனால்
ஆத்ம குணமும் அனுசந்திக்கப் படுகின்றன –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

பொருந்தினமே –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே என்றும் –
ஸ்ரீ ராமானுஜ பதாச்சாயா -என்றும் சொல்லுகிறபடியே
பொருந்தி விட்டோம் கண்டாயே -என்று-தாம் பெற்ற வாழ்வுக்கு ஹர்ஷித்துக் கொண்டு நின்றார் ஆய்த்து –

இராமானுசனைப் பொருந்தினமே
பொருந்திவிட்டோம்-இனிப் பிரிந்திடற்கு வழி இல்லை
மேவினேன் அவன் பொன்னடி -கண்ணி நுண் சிறு தாம்பு – 2- என்றபடி
இம்மையிலும் மறுமையிலும் பிரிவிலாது பொறுந்தி விட்டோம் என்றது ஆயிற்று –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –30- இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் இத்யாதி —

April 10, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி இவர் பிரார்த்தித்த இத்தைக் கேட்டவர்கள்-இவ்வளவேயோ -அபேஷை உமக்கு –
இனி பரம பத ப்ராப்தி-முதலானவையும் அபேஷிதங்கள் அன்றோ -என்ன –
ஸ்ரீ எம்பெருமானார் என்னை அடிமை கொண்டு அருளப் பெற்ற பின்பு-
சுகவாஹமான மோஷம் வந்து சித்திக்கில் என் –துக்க அவஹமான நரகங்கள் வந்து சூழில் என் –என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குண வைபவத்தை உள்ளபடி அறியும் பெரியோர்கள் உடைய-
திரள்களைக் கொண்டு -ஆனந்தத்தை பெறுவிக்குமதான -பாக்யம் உண்டாவது எப்போதோ -என்று இவர் அபிநிவேசிக்க –
இத்தைக் கண்டவர்கள் உம்முடைய அபேஷை இவ்வளவேயோ பின்னையும் உண்டோ என்ன –
அநாதியான சம்சார சாகரத்திலே-பிரமித்து திரிகிற -ஜந்துக்களுக்கு எல்லாம் ஸ்வாமியாய் –
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் என்று ஸ்ரீ பாஷ்ய முகேன அருளிச் செய்து –
பிரயோஜனாந்தர கந்த ரஹீதமான -ப்ரீதியோடு உபகரித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானார்
அடியேனை அடிமை கொண்டு அருளினார் –
இனி ஆனந்த அவஹமான பதம் வந்து ப்ராபித்தால் என்ன – அசங்க்யாதங்களான-துக்கங்கள் வந்து பிராபித்தால் என்ன –
இவற்றை ஒன்றாக நினைக்கிறேனோ என்று தம்முடைய அத்யாவசாய தார்ட்யத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இங்கனம் ஈட்டங்கள் கண்டு நாட்டங்கள் இன்பம் எய்திடல் வேண்டும் என்று இவர் ப்ரார்த்தித்ததைக்-கேட்டவர்கள்-
உமக்கு இவ்வளவு தானா தேட்டம் -வீட்டை அடைதல்-முதலிய பேறுகளில் நாட்டம் இல்லையா -என்று வினவ –
ஸ்ரீ எம்பெருமானார் என்னை ஆட் கொண்டு அருளப் பெற்ற பிறகு
இன்பம் அளிக்கும் வீடு வந்தால் என் -துன்பத்தினை விளைக்கும் நரகம் பல சூழில் என் -இவற்றில்
ஒன்றினையும் மதிக்க வில்லை -நான் என்கிறார் –

கிருபை தம் பேர் விழுந்தது ஸ்ரீ அமுதனாருக்கு என்று கொண்டு அடுத்த பாசுரம் அருளுகிறார்..
29 பாசுரத்துக்கும் 30 பாசுரத்துக்கும் இடையில் பாசுரம் இல்லை என்பதாலே கண்டு கொள்ளலாம்.
வண் துவாராபதி மன்னனை ஏத்துமின்–தொழுது ஆடி தூ மணி வண்ணன் -சொல்லாமலே எப்படி எழுந்தாள் ..
திரு நாமம் சொல்லுங்கள் என்று சொன்ன உடனே -எழுந்தாள்-செவி பட்டதே .

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

பத உரை
தொல் உலகில் -பண்டைய உலகத்தில்
மன்-நித்தியராய்
பல்-எண்ணற்றவராய்
உயிர்கட்கு -ஆத்மாக்களுக்கு
இறையவன்-சேஷியானவன்
மாயன் என -ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரன் என்று
மொழிந்த -நூல் அருளி செய்த
அன்பன் -அன்புடையவரும்
அனகன் -குற்றம் அற்றவருமான
இராமானுசன்-எம்பெருமானார்
என்னை ஆண்டனன் -என்னை அடிமையாக கொண்டு அருளினார்
இனி
இன்பம் தரு -இன்பத்தைக் கொடுக்கின்ற
பெரு வீடு -பெருமை வாய்ந்த மோஷம்
வந்து எய்தில் என் -வந்து கிட்டியதால் என்ன பயன்
எண்ணிறந்த -எண்ணிக்கை இல்லாத
துன்பம் தரு -துன்பத்தை விளைக்கும்
நிரயங்கள் பல -நரகங்கள் பலவும்
சூழில் என் -என்னை வந்து சூழ்ந்து கொண்டதனால் என்ன கெடு

பிரவாஹா ரூபேண பழையதாய் போருகிற ஜகத்தில் நித்தியராய் –
அசங்க்யாதரான ஆத்மாக்களுக்கு சேஷியானவன் – ஸ்வரூப ரூப குணங்களால் ஆசார்ய பூதனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-என்று –
ஸ்ரீ பாஷ்யாதி முகேன அருளி செய்த ஸ்நேஹத்தை உடையராய் -இப்படி ஸ்நேக ரூபமாக-உபதேசிக்கும் அது ஒழிய –
க்யாதி லாபாதிகளில் விருப்பத்துக்கு அடியான பாப சம்பந்தம் இன்றிக்கே-இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் –
என்னை அடிமை கொண்டு அருளினார் -ஆன பின்பு –
ஆனந்தாவஹமாய்-ஆத்ம அனுபவம் மாதரம் அன்றிக்கே -பரம புருஷார்த்த லஷணமான மோஷமானது – வந்து சித்திக்கில் என் –
அசங்க்யேய துக்காவஹமான நரகங்கள் பலவும் வந்து -தப்ப ஒண்ணாதபடி -வளைத்துக் கொள்ளில் என் –
இவற்றை ஒன்றாக நினைத்து இரேன் -என்று கருத்து –

நரகமே ஸ்வர்க்கமாகுமே -/எம்மா வீடு இத்யாதி -/பிராணவாகார விமானம் -ஸ்ரீ பாஷ்யாதி -சேஷி சேஷ பாவ சம்பந்தம் உணர்த்தி
மன் பல் உயிர் கட்கு இறையவன்-தத்வ த்ரயங்களும் -சொன்னபடி இத்தால் –

தொல் உலகில் மன் பல் உயிர்கட்கு –
ஏவம் சம்சர்த்தி சக்ரச்தே ப்ராம்யமானே ஸ்வ கர்மபி -என்கிறபடியே –
அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தம் உடைய -சம்சாரத்தில் நித்தியராய் -அசங்க்யாதராய் கொண்டு
வர்த்திக்கிற-ஆத்மாக்களுக்கு –

இறையவன்
யஸ் சர்வேஷூ பூதேஷு திஷ்டன் சர்வேஷாம் பூதானாமந்திர -ய சர்வ பூதாநா விந்தந்தி –
யஸ்ய சர்வே பூதாஸ் சரீரம் யஸ் சர்வேஷாம் பூதான மந்த ரோய மயதி-நத ஆத்மா அந்தர்யாம்யமர்த்த -என்றும்
சர்வேச்மைதேவாபலி மாவஹந்தி -என்றும் –
பீஷாச்மாத்வாத பவதே -பீஷோ தேதி சூர்யா பீஷாஸ் மாதகநிஸ் சேர்ந்தச்ச-மிர்த்யுத்தாவதி பஞ்சமா இதி -என்றும் –
அந்தர்பஹிஸ்ஸ சதத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித -என்றும் –
இத்யாதிகளில் சொல்லப்படுகிற வகுத்த சேஷியானவன் –

மாயன் என –
த்ர்விக்கிரம நரசிம்ஹாதி ரூபேண ஆவிர்பாவ ஜடாயு மோஷ பிரதான சேது பந்தன
அயோத்யாவாசி த்ர்குணா குல்மலாதி முக்தி ப்ராபண கோவர்த்தன உத்தரணாதி
ஆச்சர்ய-சேஷ்டிதங்களை உடையனான சர்வேஸ்வரன் என்று

மொழிந்த அன்பன்
ஸ்ரீ பாஷ்யாதி முகேன –லோகத்தார்க்கு எல்லாருக்கும் அருளிச் செய்தும் -உபதேசித்தும் -போந்த பரம ப்ரீதியை உடையவன் –

அநகன்
இந்த உக்தி உபதேசங்களாலே சில க்யாதி லாப பூஜைகளை அபேஷித்து இருந்தால் அது அரசமாய்த் தலைக் கட்டும் –
அப்படி அன்றிக்கே -பரிதி பிரேரராய் கொண்டு அவற்றை பண்ணி அருளினார் ஆகையாலே –அநகன் -என்று அருளிச் செய்கிறார் –

தொல் உலகில் மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த –
இதனால் ஸ்ரீ பாஷ்யத்தின் சாரத்தை சுருங்க சொல்லுகிறார் ஸ்ரீ அமுதனார்
தொல் உலகு –
என்பதனால் உலகு அநாதி என்று உணர்த்தப்படுகிறது –
ஆற்று ஒழுக்கு போலே தொடர்ந்து வருவது என்றபடி –
பிரகிருதி தத்துவத்தின் மாறுபாடாக ஆவதும் -அழிவதுமாய் -தொடர்ந்து படைக்கப்பட்டு பிரவாஹம் போலே வருகின்ற இவ் உலகிலே -என்றபடி –
இதனால் மாறுபடும் இயல்பினதாய் -இறைவனுக்கு உரிய அசித் தத்துவம் கூறப்பட்டது –
மன் பல் உயிர் –
என்பதனால் சித் தத்துவம் கூறப்படுகிறது
சித் தத்துவம் மாறு படாத ஸ்வரூபமாய் இருத்தலின் -நித்தியமாய் -அறிவுடையதாய்-அணு பரிமாணமாய் – இருப்பது –
மன் -என்பதனால்-
உயிரினுடைய ஸ்வரூபம் நித்யம் -என்று கூறப்படுகிறது –
பல் உயிர்கள் என்பதனால்-
சித் எனப்படும் ஜீவாத்மாக்கள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டு –பலவாய் இருத்தல்-புலப்படுத்தப் படுகிறது –
உயிர்கள் என்னும் பன்மையினாலே –
அவை ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டமை-புலப்படுமாயினும் -பல -என்று மிகை பட கூறியது –
ஆன்ம தத்துவம் உண்மையில் ஒன்றே -தேகங்கள் வேறு பட்டு-இருப்பது பற்றி அவற்றில் உள்ள ஆன்ம தத்துவம்
வேறு பட்டதாக காணப்படுகிறது -என்கிற -ஏகாத்ம வாதிகளின்-கொள்கையை உதறித் தள்ளுகிறது –
நித்யர்களுள் நித்யனாயும்-சேதனர்களுள் சேதனாயும்-பலர் உடைய விருப்பத்தை ஒருவனாய் இருந்து-நிறை வேற்றுகிறான் -என்று
வேதத்தில் நித்யரகவும் பலராகவும் ஜீவாத்மாக்கள் ஓதப்பட்டு உள்ளதை-அடி ஒற்றி -மன் பல் உயிர் கள்-என்றார் –
இந்த சுருதி ஆன்மாக்கள் உடைய நித்யத்வம் பஹூத்வம் காம விதானம் ஆக இம் மூன்றும்
வேறு ஒன்றினால் அறியப்படாமையால் -நித்தியர்களான பல சேதனருக்கு
காம விதானத்தை சேர விதிப்பதாக ஸ்ருத பிரகாசிகாகாரர் வியாக்யானம் செய்து இருப்பது-இங்கு அறிய தக்கது –
ஜீவர்கள் உடைய பேதம் உலகில் காணப் படுதலின் -அறியப் பட்டதே ஆயினும் –
பரிசுத்தமான அதாவது பிராகிருத தேக சம்பந்தம் அற்ற ஜீவாத்மாக்களின் பேதம் அறியப் படாமையின் –
அதனையும் சேர விதிப்பதே -இந்த ஸ்ருதியின் நோக்கம் என்று உணர்க –
இறைவன் -சேஷி –
அதாவது யாவற்றையும் தான் விருப்பபடி பயன் படுத்த கொள்ளும் உரிமை வாய்ந்தவன் –
இதனால் ஈஸ்வர தத்வம் பேசப்பட்டது-

ஆக தத்வ த்ரயமும் பேசப்பட்டது –இவைகளில் அசித்தும் சித்தும் உரிமைப்பட்டன -மாயன்-உரியவன் –
மாயன்-
ஆச்சர்ய படத் தக்க குணம் செய்கை இவைகளை உடையவன் –
தான் எத்தகைய மாறு பாடும் இன்றி -பிரியாது -தன்னோடு இணைந்த – பிரகிருதியை -உலகமாக மாறு படுத்தி –
பிரமன் முதல் மன் பல் உயிர் கட்கும் உடையவனாய் தான் எதனிலும் ஒட்டு அற்றவனாய் இருப்பது இறைவன் பால் உள்ள ஆச்சர்யம்-என்க
உயிர் அனைத்துக்கும் சர்வேஸ்வரன் சேஷி என்பதையே ஸ்ரீ பாஷ்யம் சாரமாக உணர்த்துகிறது-என்பர் ஸ்ரீ பாஷ்யம் வல்லோர் –

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவாபரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே -என்று
எவ்விடத்தில் ஸ்ரீ பர ப்ரஹ்மம் தெளிவாய் சேஷி-சேஷனை உடையவன்-உரியவன்-ஆக காணப்படுகிறதோ –
அந்த இரண்டாவது ஸ்ரீ ரங்க விமானம் போன்ற பிரணவ ஆகாரமான ஸ்ரீ பாஷ்யத்தை வந்தனை செய்கிறேன் –
என்னும் ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி இங்கே அனுசந்திக்க தக்கது –
ஸ்ரீ ரங்க விமானம் பிரணவ விமானம் –ஸ்ரீ பாஷ்யமும் பிரணவ வடிவமே –
பிரணவம் அ உ ம என்னும் மூன்று எழுத்துகளால் ஆகியது –
அ காரத்தால் சொல்லப்படும் சர்வேஸ்வரனுக்கே
ம காரத்தால் கூறப்ப்படும் ஜீவாத்மா சேஷப்பட்டது –
உயிர் இனங்களுக்கு சேஷி சர்வேஸ்வரன் எனபது பிரணவத்தின் பொருள் –
ஸ்ரீ பாஷ்யமும் -அ உ ம என்னும் எழுத்துக்களை முறையே
முதலிலும் -இடையிலும் -கடையிலும் -கொண்டு அமைக்கப் பட்டது –
அகில புவன -என்று முதலில் அ காரத்தில் தொடங்கியும் –
இடையில் மூன்றாம் அத்யாயத்தில் -மூன்றாம் பாதத்தில் -உக்தம் -என்னும் சொல்லில் உ காரத்தை அமைத்தும்
கடையில் சமஞ்ஜசம் என்று ம காரத்தில் முடித்தும் -ஸ்ரீ பாஷ்ய காரர் தம் நூல் பிரணவ அர்த்தத்தை உட் கொண்டது
என்பதை ஸூ சகமாக காட்டி இருப்பது இங்கு அறிய தக்கது –

அன்பன்
அன்பால் -தாய்-சீதை- மகனுக்கும் தம்பி தனயன் மகன் -பிரகலாதன் -இவர் ஆழ்வார் அடி பணிந்தார் -ஸ்வாமி
ஆகியவருக்குமே இந்த குணம் –.

அனகன் –
இங்கனம் ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து
மாயன் மன் பல் உயிர் கட்கு இறைவன் என்று பிரணவ அர்த்தத்தை உபதேசித்தது
அன்பின் செயலே அன்றி கியாதி லாப பூஜைகளைக் கோரிச் செய்த செயல் அன்று -என்கிறார்
பயன் கருதி உபதேசிப்பது பாபம் ஆதலின் அப் பாபம் அற்றவன் என்கிறார் –
அனகன் -அகம்-பாபம் அனகன் -பாபம் அற்றவன் -வட சொல்

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெ ருமானார் –

என்னை-
அதிகாரமில்லாத என்னை –
இவ்வளவும் பிரதி கூலித்து போந்த என்னை –

ஆண்டனனே –
பரகத ச்வீகாரமாக என்னை ஆளா நின்றார் –
ஆத்மாந்த தாச்யத்திலே அந்வயிப்பித்து உஜ்ஜீவிக்கும்படி-என்னை அடிமை கொண்டு அருளினார் –

என்னை -ஆண்டனனே
பரகத ஸ்வீகரமாய் -உய்வித்தார்..இது கிட்டிய பின்-

என்னை ஆண்டனனே
ஸ்ரீ எம்பெருமானார் என்னை அடிமை கொண்டதற்கு பிறகு வந்து எய்தும் பெரு வீட்டையும்
சூழும் பல நிரயங்களையும் பொருள் படுத்த மாட்டேன் என்று தம் மன உறுதியை வெளி இட்டபடி –
ஸ்ரீ நம் ஆழ்வார் எல்லாப் பொருள்களும் இறைவன் இட்ட வழக்கு என்கிற ஞானம் பிறந்த பிறகு-
பெருவீடு பெற்றில் என் -நரகம் எய்தில் என் -என்று தம் மன உறுதியை வெளி இட்டாலும் –
நரகம் ஆகிய-சம்சாரம் இந்த ஞானத்துக்கு விரோதி ஆகையாலே இங்கு இருக்க அஞ்சுகின்றேன் –
பரம பதத்துக்கு கொண்டு போக-வேணும் என்று இறைவனை இரக்கிறார் –

யானும் நீ தானே ஆவதோ மெய்யே-அரு நரகு-அவையும் நீ -ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை-நரகமே எய்தில் என் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும்-அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம் மன்னி வீற்று இருந்தாய்-அருளு நின் தாள்களை எனக்கே -8 1-9 – – எனபது அவர் அருளிய பாசுரம் –
அவருடைய உறுதிப் பாட்டினும் ஸ்ரீ அமுதனாருடைய உறுதிப்பாடு அதிசயிக்கத் தக்கதாக உள்ளது –
இவர் பேரனான ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஸ்ரீ திருவரங்கக் கலம்பகத்திலே –
நான் அந்த வைகுந்த நாடு எய்தி வாழில் என் ஞாலத்து அன்றி
ஈனந்த வாத நிரயத்து வீழில் என் யான் அடைந்தேன்
கோனந்தன் மைந்தனை நான்முகன் தந்தையைக் கோயிலச்சு
தானந்தனை எனக்காரா வமுதை அரங்கனையே -என்று பாடிய பாடலை இதனோடு ஒப்பிடுக –

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10—தாம் மநோ ரதித்த- நினைத்த படியே
திருவடிகளைத் தந்து அருளின மகா உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக இந்த ஆத்ம வஸ்துவை உனக்கு தந்தேன் என்கிறார் –
இப்போது திருவடிகளைக் கொடுக்கையாவது–
சம்சாரத்தோடு பொருந்தாத படியையும்
தன்னை ஒழிய செல்லாத படியையும்
தமக்குப் பிறப்பித்த நிலையைப் பிரகாசிப்பிக்கை—இது அன்றோ ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ அமுதனாருக்கு தந்து அருளினார் –

இப்படிப் பட்ட புருஷார்த்த காஷ்டை யைப் பெற்ற பின்
இன்பம் தரு பெரு வீடு எய்தில் என் –
அமர்தச்யை ஷசேது -என்றும்
ரசோவைச -ரசஹ்யேவாயோ லப்த்த்வா நந்தீபவதி -என்றும் –
நிரஸ்தாதிசயாஹ்லாத சூககர்வைக் லஷணா-என்றும்
நலம் அந்தம் இல்லாதோர் நாடு -என்றும் –
அந்தமில் பேரின்பம் -என்றும்
சொல்லுகிறபடியே ஆனந்த அவஹமாய் -ஆத்ம அனுபவம் போலே பரிமிதமாய் இருக்கை அன்றிக்கே –
பரம புருஷார்த்த லஷணம்-மோஷமானது – இங்கே மேல் விழுந்தால் என் -அத்தை சுகமாக கணிசித்து இருக்கிறேனோ-

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்திலேன் –
வீடு –
என்னும் வினையடி -முதல் நீண்டு -வீடு என்னும் பெயர் சொல்லாயிற்று —விடுதலை -அதாவது மோஷம் -என்றபடி –
மோஷமாவது இயல்பான அறிவினை மயக்கும் தன இரு வினைகளின்றும் -அறவே விடுபடுதல் -என்க-
பெரு வீடு
கைவல்யம்-அதாவது ஜீவான்ம தத்துவம் -தன்னந்தனியே -தன்னைத் தானே அனுபவித்து கொண்டு இருக்கும்
நிலையம் -மோஷம் ஆதலின் -அதனை விலக்குதற்காக –பெரு வீடு -என்கிறார் –
ஆத்மானு பூதிரிதி யாகில முக்தி ருக்தா -என்று ஆத்ம அனுபவ ரூபமான கைவல்யத்தை -ஸ்ரீ ஆழ்வான்-முக்தி என்பதை -காண்க .
அணு வடிவனான ஆத்மாவை அனுபவிப்பதால் உண்டான இன்பம் அளவு பட்டதாதலின் அது சிறு வீடாயிற்று –
அளவற்ற தன்மை வாய்ந்த பரம புருஷனை அனுபவிப்பதால் உண்டான ஆனந்தம் அளவிறந்ததாதலின் இது பெரு வீடாகிறது –
ஆத்ம அனுபவம் போலே அளவு படாமையாலே -பரம புருஷார்த்த ரூபமாய் இருக்கும் மோஷம் –
என்று அருளிய ஸ்ரீ எம்பெருமானார் -ஸ்ரீ ஸூக்தியை அடி ஒற்றி -பெரு வீடு -என்கிறார் –
இனி –பெரு வீடு -என்பது
பேர் இன்ப மயம் அன்றோ -முக்திர் மோஷோ மஹா நந்த -என்று-வீடும் -மோஷமும் -பேர் இன்பமும்
ஒரு பொருளானவாகப் படிக்க படுகின்றன -அன்றோ –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு-என்று திருவாய் மொழியும் உள்ளதே –
ஆக பெரு வீடு என்பதே அமையுமாய் இருக்க –
இன்பம் தரு –
என்று அடை மொழி இடுதல் மிகை யாகாதோ -எனின் –ஆகாது –
வீடு -எனபது தன் சொல் ஆற்றலால் கன்மன்களால் ஆய எல்லா துன்பங்களின் நின்றும் விடுதலையே குறிக்கும் –
அதனையே ஆதரம் தோற்ற – இன்பம் தருவது -என்று வேறு ஒரு வகையானும் கூறுதல் மிகை யாகாது –
ஏகமேக ஸ்வ ரூபேண பரேனச நிரூபிதம்-இஷ்ட ப்ராப்திர நிஷ்டச்ய நிவ்ருத்திச் சேதி கீர்த்யதே -என்று
ஒன்றே இயல்பான நிலையினாலும் -மற்று ஒன்றினை முன் இடுவதினாலும் நிரூபிக்கப் பட்டு-
இஷ்டமானது அடைதலாகவும் -அநிஷ்டமானது ஒழிதலாகவும் சொல்லப்படுகிறது -என்னும்
ரகஸ்யத்ர்ய சாரம் -மூல மந்திர அதிகாரம் -ஸ்ரீ தேசிகன் -ஸ்ரீ ஸூக்தி -இங்கு அறியத் தக்கது –
இங்கு மோஷம் ஒன்றே இன்பம் தருவது என்று இயல்பான நிலையினால் இஷ்டத்தை அடைதலாகவும்-
துன்பங்கள் ஒழிதல் என்று மற்று ஒன்றினை முன்னிடுவதினால் -அநிஷ்டம் ஒழிதலாகவும் –கூறப்படுகின்றது என்று உணர்க –

இனி -பாவாந்தரமபாவ -ஒரு பொருளின் இல்லாமை மற்று ஒரு பொருளின் வடிவமாய் இருக்கும் -என்னும்
சித்தாந்தமான கொள்கையின் படி துன்பங்களின் இல்லாமை இன்ப வடிவமாயே இருக்கும் அன்றோ -அதனை
வேறு ஒரு வகையால் பிரித்து கூறுவதனால் பயன் என் -எனின் -கூறுதும் –
இவ் உலகில் பிரதி கூலமான -அநிஷ்டமான -ஒரு பொருள் ஒழிதலால் ஆகிய இல்லாமை –
மற்று ஒரு-பிரதி கூலமான பொருள் வடிவமாகவும் -அன்றி -அனுகூலமும் -பிரதி கூலமும் அல்லாத ஒரு பொருளாகவும் இருத்தல் கூடும்
மோஷத்திலோ -அங்கன் அல்லாது -இஷ்டம் அல்லாதவை அனைத்தும் முழுதும் ஒழிந்து
விடுகையாலே மேல் முழுக்க இஷ்டமாகவே இருக்கும் –
ஆகையால்-முன்னைய துன்பங்களின் உடைய இஷ்டம் அல்லாமையும் –
பின்னைய வைகுண்ட ப்ராப்த்தி முதலியவை களின் இஷ்டமான தன்மையும் வெளிப்பட தோன்றும்படி -செய்வதற்காகப் பிரித்து
வேறு ஒரு வகையால் கூறுகிறார் -என்க –
இனி –
ஏனைய ஸ்வர்க்கம் போன்ற பயன்கள் போல் அல்லாது -இப் பெரு வீடு -இன்பமே தருவது –
துன்ப கலப்பு சிறிதும் அற்றது என்னும் கருத்துடன் –இன்பம் தரு பெரு வீடு -என்றார் ஆகவுமாம்-
இனி –
அத்வைதிகளின் உடைய மோஷத்தை -விலக்குவதற்காக -இன்பம் தரு-என்று பெரு வீட்டினை –
விசேடித்தத்தாகவுமாம் -அவர்கள் உடைய மதத்தில் இன்பமே பெரு வீடு -இன்பம் தருவது அன்று –
ஸ்ரீ அமுதனார் -இன்பம் தருவதாதலின் விரும்பப்படும் புருஷார்த்தமாக பெரு வீட்டினை காட்டுதலின்
அத்வைதிகளின் உடைய மோஷம் விலக்கு உண்டது -என்க –

முக்தியில் -நான்-என்ற தோற்றமும் இல்லை -அநுபூதி-மாத்ரமே எஞ்சி உள்ளது -என்னும் அத்வைத மத கொள்கையின் படி பார்க்கில் –
சம்சாரத்தில் உள்ள தாப த்ரயம் -மீளாதவாறு -அடியோடு -தீர்ந்து – சாந்தியை நான் பெற்றவனாக வேணும் -என்கிற
வேட்கை-மோஷத்தில் விருப்பம் -எவனுக்கும் ஏற்பட வழி இல்லை –
தனி அனுபூதியே உள்ளது -நான் என்பதே இல்லை -என்பதை அறிந்த பின் நான் சாந்தி பெற்றவனாக வேணும் என்று முயல மாட்டான் அன்றோ –
ஆக முக்தி பெறும் சாதனத்தை கைக் கொள்வார் எவருமே -இருக்க மாட்டார்கள் ஆதலின்
அதனைக் கூறும் வேதாந்த சாஸ்திரம் அனைத்தும் -பிரமாணமாக ஏற்க முடியாததாகி விடும் -என்று
ஸ்ரீ பாஷ்யத்தில் -அத்வைத மோஷம் -புருஷார்த்தம் ஆகாது -எனபது விளக்கப் பட்டு உள்ளமை ஈண்டு உணரத் தக்கது –
ததச்ச அதிகாரி விரஹா தேவ சர்வம் மோஷ சாஸ்திரம் அப்ரமாணம் ஸ்யாத்-எனபது ஸ்ரீ பாஷ்ய சூக்தி –
இதனால் அல்லல்கள் அனைத்தும் தொலைந்து கல்லினைப் போலே சுக துக்கங்கள் இல்லாது இருத்தல் மோஷம்
என்பார் கூற்றும் விலக்கு உண்டதாயிற்று –

எண்ணிறந்த துன்பம்
சங்க்யைக்கு நிலம் இல்லாத துன்பம் –
யாம்ச கிங்கர பாசாதி க்ரஹனம் தண்ட தாடனம்- யமச்ய தர்சனஞ் சோகர முக்ரமார்க்க விலோகனம் –
கரம்பவாலு காவாஹ் நியந்திர சஸ்த்ராதி பீஷணை –பிரத்யேக நரகேயஸ் சயாதநாத் விஜாதுச்சகா –
க்ரகசை பாட்யமா நா நா மூஷா யஞ்சாபி தஹ்யதாம்-குடாரைக்ர்த்தயமா நா நா பூமவ்சாபி நிகன்யதாம்-
சூலை ராரோப்ய மாணா நா வயாக்ரா வக்த்ரை -பிரவேச்யதாம் க்ர்த்தைரைஸ் சம்பஷ்ய மாணாநா –
த்வீபிபிஸ் சோப புஜ்யதாம் -க்வாத்யதாம் தைலமத்யேச க்லத்யதாம் ஷார க்ர்த்தமே –
உச்சானி பாத்யம நா நாம் ஷிப்யதாம் ஷேபயந்தரகை-நரகேயாநிது க்காநிபா பஹேதூத் ப்பவாவாநிச
ப்ராப்யந்தே நாரேகர்விப்ரதேஷாம் சங்க்யா நா வித்யதே -என்னும் படியான துக்கங்களை –

தரும்-நிரயம் பல சூழில் என் –
கொடுக்கும் நரகங்கள் ஒன்றும் சேஷியாதபடி -வந்து வளைத்து கொண்டாலும் என் –
இப்படிப்-பட்ட நரகங்களை ஒரு துக்கமாக நினைத்து இருக்கிறேனோ என்று தம்முடைய
த்ரட அத்யாவசாயத்தை-அருளிச் செய்தார் ஆய்த்து –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ஸ்ரீ ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலின –என்று
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்தார் இறே –

எண் நிறந்த —சூழில் என் –
எண்ணிறந்த -எண்ணிக்கையை கடந்த துன்பம் என்பதனோடு இதனை இயைக்க –
நரகேயானி துக்கா நிபாபஹேதூத் பவாநிச ப்ராப்யந்தே நாரகைர் விபர தேஷாம் சங்கா நவித்யதே – என்று
பாபம் செய்வதினால் உண்டான துக்கங்கள் நரகத்தில் எவைகள் உண்டோ-
உள்ளவர்களினால் அனுபவிக்கவும் -படுகின்றனவோ -அவைகட்கு எண்ணிக்கை இல்லை – என்னும் பிரமாணத்தை
அடி ஒற்றி -எண்ணிறந்த துன்பம்-என்கிறார் –
இனி
நெஞ்சினால் எண்ணிப் பார்க்கவும் முடியாத என்னலுமாம்-
நிரயம் -என்றாலே துன்பம் -தருதல் தானே தோற்றும் ஆயினும் –
துன்பம் தரு –
என்று விசேடித்து -இன்பத்தின் கலப்பு சிறிதும் அற்று -பேர் இன்பத்துக்கு எதிர் தட்டை துன்ப மயமானது என்னும் கருத்தினால் என்க –
துன்பமே தரும் நிரயம்-என்றது ஆயிற்று –
சூழின் -என்றமையால்-தப்ப ஒண்ணாது வளைத்துக் கொண்டு உள்ளமை -தோற்றுகிறது –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –29-கூட்டும் விதி என்று கூடும் கொலோ -இத்யாதி —

April 10, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் திவ்ய குணங்களை உள்ளபடி அறிந்து இருக்கும் அவர்கள் திரள்களை
என் கண்கள் களிக்கும்படி கூட்டக் கடவ -ஸூஹ்ருதம் இன்று கூடுமோ-என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே –
தம்முடைய வாக்கானது -ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களுக்கு-அனந்யார்ஹமாய் விட்டது என்று
அந்த சம்ருத்தியை சொல்லி -அவ்வளவிலே சுவறிப் போகாதே – மேல் மேல் பெருகி வருகிற அபிநிவேச அதிசயத்தாலே –
இப்பாட்டில் –
தர்சநீயமான -ஸ்ரீ திரு குருகைக்கு நிர்வாஹராய் –ஸ்ரீ திரு வாய் மொழி முகத்தாலே -தத்வ ஹித புருஷார்த்தங்களை –
சர்வருக்கும் உபகரித்து அருளின ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தி மயமான வேதமாகிற செந்தமிழ் தன்னை –
தம்முடைய பக்தி யாகிற கோயிலிலே-பிரதிஷ்டிப்பித்து கொண்டு இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை
உள்ளபடி-தெளிந்து இருக்கும் ஞாநாதிகர்கள் உடைய திரள்களை என் கண்கள் கொண்டு ஆனந்தித்து களிக்கும்படி-
சேரக் கடவதான பாக்யம் எப்போது லபிக்கும் என்று –ததீய பர்யந்தமான ப்ரீதியை பிரார்த்தித்து அருளுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

என் வாய் கொஞ்சிப் பரவும் ஸ்ரீ எம்பெருமானார் குணங்களை உள்ளபடி உணர்ந்து உள்ளவர்களின்-திரளை
என் கண்கள் கண்டு களிக்கும்படி செய்ய வல்ல பாக்கியம் என்று வாய்க்குமோ -என்கிறார் –

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –

பத உரை –
தென் குருகை பிரான்-அழகிய திரு நகரிக்கு தலைவரான நம் ஆழ்வார் உடைய
பாட்டு என்னும் -பாட்டு என்று பேர் பெற்ற-
வேதப் பசும் தமிழ் தன்னை -வேத வடிவமாம் செம் தமிழான திரு வாய் மொழியை
தன் பத்தி என்னும் -தம்முடைய பக்தி எனப்படும்
வீட்டின் கண் -இல்லத்திலே
வைத்த இராமானுசன் -வைத்து அருளிய எம்பெருமானார்
புகழ்-குணங்களை
மெய் உணர்ந்தோர் -உள்ளபடி அறிந்து இருக்கும் அவர்கள் உடைய
ஈட்டங்கள் தன்னை -குழாங்களை
என் நாட்டங்கள்-என்னுடைய கண்கள்
கண்டு -பார்த்து
இன்பம் எய்திட -ஆனந்தம் அடையும் படி
கூட்டும் -இப் பேற்றினை கை கூடும்படி செய்யும்
விதி-பாக்கியம்
என்று கூடும் கொல்-என்று கிட்டுமோ –

தர்சநீயமான ஸ்ரீ திரு நகரிக்கு நாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய பாட்டு என்று கொண்டு -பிரசித்தமாய் –
வேத ரூபமாய் -செம் தமிழால்-இருக்கிற ஸ்ரீ திருவாய் மொழியைத் தம்முடைய பக்தி யாகிற-வாசஸ் ஸ்தானத்திலே வைத்த
ஸ்ரீ எம்பெருமானார் உடைய -கல்யாண குணங்களை யாதாவாக-அறிந்து இருக்கும் அவர்களுடைய சமூஹங்கள் தன்னை
என்னுடைய த்ருஷ்டிகள் ஆனவை-கண்டு சுகத்தை ப்ராபிக்கும்படியாக -என்று கூடியும் –
இப் பேற்றை நமக்கு சேர்விப்பதான அவருடைய கிருபை இன்று கூடவற்றோ-
விதி-ஸூஹ்ருதம்
இவர் தமக்கு பேற்றுக்கு அடியான -ஸூஹ்ருதமாக நினைத்து இருப்பது அத்தலையில் கிருபையை இறே-
ஸ்ரீ இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை தத் காலத்திலே காணா நிற்கச் செய்தே –
இங்கன் சொல்லுவான் என் என்னில் –
காண்கிறது அன்று இவர்க்கு இப்போது அபேஷை –
கண்டால் கண்கள் அவிக்ருதமாய் இருக்கை அன்றிக்கே –இன்பம் எய்துகை –
அதுக்கடியான ப்ரேமம் ஸ்ரீ எம்பெருமானார் அருளாலே விளைய வேணும் இறே –
அத்தாலே சொல்லுகிறார் –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட் படுத்து -107 – என்று இறே மேலும்-இவர் பிரார்த்தனை-
ஈட்டம்-திரள்
நாட்டம்-திருஷ்டி

மனம் வாக்கு ஈடுபட்டமை முன்பு சொல்லி இதில் காயம் -கண்ணாலே மெய் உணர்ந்தோர் ஈட்டங்களை காண -ஈடுபடுகிறார் –

தென் குருகை பிரான் –
தென் -தர்சநீயுமான என்னுதல் -தெற்கு திக்கிலே இருக்கிறது என்னுதல் –
தென்-தர்சநீயமான-அழகு-தர்சனத்துக்கு தர்சநீயமான
ஆழ்வாரை காட்டி கொடுத்த மகாத்மயம் .தென் திசை நோக்கி கை கூப்புகிறோம்.-திரு வாய் மொழி தோறும்
குருகை -பரம பதத்தை சேர்க்கும் ஊர் என்னுதல் – பரம பதத்தோடு சமமான வைபவத்தை உடைய ஊர் என்னுதல் –
பிரான் -இப்படிப் பட்ட திரு நகரியிலே அவதரித்து லோகத்தார் எல்லாரும் உஜ்ஜீவிக்கும்படி –
தத்வ ஹித-புருஷார்த்த தத் யாதாத்ம்யங்களை-திவ்ய பிரபந்த முகேன – உபகரித்த நம் ஆழ்வார் உடைய –
அன்றிக்கே –
அவ்வூரிலே அவதரிக்கையாலே எல்லாருக்கும் அவர் உத்தேச்யமாய் இருக்கிற-வழியாலே அவ்வூருக்கு உபகாரகர் -என்னவுமாம்

பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை –
அவா வற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன -என்றும் –
தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற-முதல் தாய் சடகோபன் -என்றும் சொல்லுகிறபடியே
தென் குருகைப் பிரான் அருளிச் செய்த-பாட்டு என்று பிரசித்தமாய் -சாம வேத ரூபமாய் –
செந்தமிழாய் இருக்கிற திரு வாய் மொழியை –

பத்தர் பரவும் ஆயிரம் -1-5-11-
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம்-3-9-11-
பொய்யில் பாடல் ஆயிரம்–4-3-11-
தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன் ஒலி புகழ் ஆயிரம்–5-2-11-
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த நாமங்களாயிரம்–5-9-11-
குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை ஆயிரம்–6-3-11-
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல் தெளிவுற்ற ஆயிரம்–7-5-11-
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீர்த்தங்கள்–7-10-11-

தென் குருகை –பசும் தமிழ் தன்னை-
பாட்டாய பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து -திருவாய் மொழி – 10-6 2- – -என்றும்
குருகூர் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் -திருவாய் மொழி – -10 6-11 – – -என்றும்-
ஸ்ரீ குருகைப் பிரான் பாட்டு பிரசித்தம் –

தன் பத்தி என்னும் –
அத்தை விஸ்மரித்தால் -ஒரு ஷணம் ஒரு கல்பம் போலே இருக்கும்படி-பண்ணக் கடவதான -பரம பக்தி யாகிற அதுவும் –
தன் பக்தி –
எல்லாருடைய பக்தி போல் அன்றிக்கே –பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி அறிந்த
எம்பெருமானாருடைய ப்ரேமம் அவருடைய ஞான-வைசத்யத்துக்கு தகுதியாய் இருக்கும் இறே -இப்படிப் பட்ட பக்தி யாகிற

வீட்டின் கண் வைத்த –
கண் -சப்தமி -வீடு -ஆவாசஸ்தானம் -அநர்கமான ரத்னத்தை செப்பிலே வைத்து கொண்டு இருப்பாரைப் போலே
தம்முடைய பக்தி யாகிற மகா ஸௌதத்திலே வைத்துக் கொண்டு இருக்கிற

வீட்டின் கண்…ரத்னத்தை செப்பிலே வைப்பது போல
பக்தி தான் பொன் -திரு வாய் மொழி ரத்னம்–செப்பு பெட்டகத்தில் வைத்தால் போல..

தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த
திருவாய் மொழி விஷயமாக எம்பெருமானாருக்கு ஏற்பட்ட பக்தி -திரு வாய் மொழிக்கு குடி இருக்கும் இல்லமாக அமைந்தது –
திருவாய் மொழி அன்றி -இருப்புக் கொள்ளாத நிலையே-எம்பெருமானார் உடைய பக்தி -என்க –
அதனை இல்லமாக கொண்டது திருவாய் மொழி என்பது எப்பொழுதும்-பேர் அன்புடன் அனுசந்திகப் படுவது என்னும் கருத்து கொண்டது
இவ் இல்லத்துக்கு தனி சிறப்புண்டு –
அது தோன்ற-தன் பத்தி என்னும் வீடு -என்றார் –
பிறர் கன்னம் இட ஒண்ணாமை இவ்வீட்டுக்கு தனி சிறப்பு
பிறர்-
பிரமாணமான வேதத்தை தூஷிப்பவர்களும் பிரமேயான இறைவனைத் தூஷிப்பவர்களும் –
அவர்கள் கள்ளம் இடாமை யாவது
அவர்கள் காதில் விழாமை வீட்டில் பிறர் -திருடர்-கன்னமிட்டால்-உட் புக்குக் கெடுத்து விடுவர் அன்றோ –
எம்பெருமானார் பக்தி உடன் தாம் பேணி பிறர் கன்னம் இடாதாவாறு தம் சீடர்களுக்கு அதன் பொருளை உபதேசித்து
பிள்ளான் வாயிலாக உரை வரைந்தும் பிறர் கைபட்டுக் கெடாதவாறு-திருவாய் மொழியை தம் சம்ப்ரதாயத்துக்கு-
உரிய தாக்கியதை அமுதனார் இங்கனம் வருணிக்கிறார் -என்க –

திண்ணன் வீடு 2-2-1-
கனிவார் வீட்டு இன்பமே-2-3-5-
சீர்மை கொள் வீடு -2-8-10-
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -2-9-1-
சிறப்பில் வீடு -2-9-5-
கெடலில் வீடு -2-9-11-
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -3-3-7-
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகமே 3-10-11-
பசை அற்றால் அன்றே அப்போதே வீடு அதுவே வீடாமே -8-8-6-
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

இராமானுசன் புகழ் –
திருவாய் மொழியை-சதா காலஷேபம் பண்ணியும் –
அந்தரங்கருக்கு -சார்த்தமாக அத்தை உபதேசித்தும் –
அந்தப் பாசுரங்களைக் கொண்டு சாரீர சூத்ரங்களுக்கு வியாக்யானம் பண்ணியும் –
பிள்ளானை இட்டு அதுக்கு வியாக்யானம் பண்ணுவித்தும் –
இப்படிப் பட்ட வைபவத்தை உடையரான எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை

மெய் உணர்ந்தோர்
மெய்யாக தெளிந்து-கொண்டு இருக்கிற பெரியார்கள் உடைய –

ஈட்டங்கள் தன்னை –
சம்சேவிதஸ் சம்யமிசப்த சத்யாபீடைஸ் சதுஸ் சப்ததிபிஸ் சமேதை -அந்யை ரந்தை ரபி
விஷ்ணு பக்தைராச்தேதி ரங்கம் யதிசார்வ பவ்ம -என்கிறபடியே –
சப்த சதி சங்கயாதரான யதிகளும் -ஆழ்வான் முதலிய முதலிகளும் – ஏகாங்கிகளும் – அசங்கயாதரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் –
ஸ்ரீ ஆண்டாள் முதலான-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்த்ரீகளுமாய்க் கொண்டு திரளாய் இருந்துள்ள ததீயருடைய திரள்களை
ஈட்டம்-திரள்-

புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை –
புகழ் திருவாய்மொழியை வீட்டுன் கண் வைத்தமையால் வந்தது –
ஸ்ரீ கண்ணனைப் பெற்று எடுத்தாள் ஸ்ரீ தேவகி-
ஆயின் வளர்த்து விளையாட்டு ஒன்றும் கண்டிடப் பெற்று இலள்
அந்த ஸ்ரீ கண்ணனை வளர்த்தாள் ஸ்ரீ அசோதை
அத்தெய்வ நங்கை எல்லாம் பெற்றாள்
அது போல ஸ்ரீ திருவாய் மொழியை ஈன்று எடுத்த முதல் தாய் ஸ்ரீ சடகோபன்
அத்தாய் அதன் வளர்ச்சியை கண்டிலள்
அதனை வளர்த்த தாய் ஸ்ரீ இராமானுசன்
அதன் விளையாட்டு எல்லாம் கண்டிடப் பெற்ற பெருமையால் வந்தது அவரது புகழ்-
ஸ்ரீ கண்ணன் குழந்தையாய் இருந்தும் அதி மானுஷமாக விளையாடினது போல ஸ்ரீ திருவாய் மொழியும்
எளிய செம் தமிழாய் அமைந்தும் வட மொழியில் அமைந்து தெளிவு படாத மறைகளை தெளிவு படுத்தியும் –
ஸ்ரீ வேத வியாசர் இயற்றிய ப்ரஹ்ம ஸூத்தரதிற்கு உண்மைப் பொருளை உணர்த்தியும் –
கட்புலனாகாத ஸ்ரீ இறைவனை காணுமாறு முன்னே கொணர்ந்து நிறுத்தியும் –
அதி வேதமான -வேதத்தை விஞ்சின -விளையாட்டுக்கள் புரிவதை எல்லாம் கண்டிடப் பெற்றமையால்
அசோதை போல் ஸ்ரீ எம்பெருமானார் புகழ் படைத்தவர் -என்க –
ஈன்ற முதல் தாய் ஸ்ரீ சடகோபன்
அவரை அடுத்து வளர்த்த இதத்தாய் ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ இராமன்-ஈன்ற ஸ்ரீ சடகோபன்
ஸ்ரீ அனுசன்-அவரை அனுசரித்து வந்த இதத்தாய் ஸ்ரீ இராமானுசன் -என்று -அறிந்து இருப்பவர்கள் புகழை
மெய்யாக உணர்ந்தவர்கள் என்க –
ஈட்டங்கள் தன்னை –
ஏழு நூறு சந்நியாசிகளும் எழுபத்து நான்கு சிம்ஹாச நாதிபதிகளும் அளவு இறந்த ஸ்ரீ வைஷ்ணவர்களும்-
ஸ்ரீ திருவரங்கத்தில் ஸ்ரீ எம்பெருமானாரை சார்ந்து உள்ளமையின் ஈட்டங்கள் என்கிறார் –
தன்னை-ஒருமை பன்மை மயக்கம் –

என் நாட்டங்கள்-
சமாஸ்ரயண பர்யந்தம் ஈஷணத் த்ரயத்தையே பற்றி சுகிக்க நினைத்து இருக்கிற-என்னுடைய த்ருஷ்டிகள் –
நாட்டம் -த்ருஷ்டி –

கண்டு –
கண்ணாரக் கண்டு சேவித்து

இன்பம் எய்திடவே –
பண்ணின பின்பு பூர்வ காலத்திலே தேக சம்பந்திகளாய் கொண்டு வருகிற சுக துக்கங்களை காற்க்கடை கொண்டு
இந்த ஜ்ஞாநாதிகர்-உடைய திரள்களைக் கொண்டு ஆனந்தத்தைப் பெறும் படி –

என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே –
நாட்டங்கள் என்று வேண்டாது கூறினார் –
இவ் ஈட்டங்களை காணாத நாட்டங்கள் பயன் அற்றன என்று தோற்றற்கு –
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவதே -ஸ்ரீ பெருமாள் திருமொழி –2-1 –என்றார் ஸ்ரீ குலசேகரப் பெருமாள்-
எம்பெருமானார் காலத்திலே அவர் பக்கலிலே அமுதனார் இருப்பவர் ஆதலின் காண்கையில் அன்று இவர்க்கு தேட்டம்-
கண்டதும் களிப்பினால் கண்கள் மலர்ந்து இன்புறுதல் இவருக்கு தேட்டம் -இன்புறுதலுக்கு அடியான அன்புடைமை
ஸ்ரீ எம்பெருமானார் அருளாலே தமக்கு வாய்க்க வேணும் -என்கிறார் –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -என்று
மேலும் இவர் பிரார்த்திப்பது காண்க –

கூட்டும் விதி என்று கூடும் கொலோ
சேர்க்கும்-பாக்யம் எப்போது லபிக்க வல்லதோ –
விதி -ஸூஹ்ருதம் -இது தமக்கு பேற்றுக்கு அடியான ஸூஹ்ருதமாக நினைத்து இருப்பது
அத்தலையில் க்ருபை இறே –

கூட்டும் விதி –
என்றேனும் பேற்றினைச் சேர்விப்பதான விதி –
இவர் தமக்கு பேற்றுக்கு அடியான பாக்யமாக நினைத்து இருப்பது -ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையையே –
ஆகையால்-விதி -இங்கே ஸ்ரீ எம்பெருமானார் கிருபையையே -என்க –
தம்மாலும் ஸ்ரீ எம்பெருமானாராலுமே விலக்க இயலாமையின் கிருபையை விதி என்றார் –
கூட்டும் விதி -என்பதனால்-அதன் விளைவு தவிர்க்க ஒண்ணாதது என்பது புலனாகிறது
ஸ்ரீ நம் ஆழ்வாரும் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய் மொழி -5 1-1 – -என்று தவிர்க்க-இயலாமையை –
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே -என்று விளக்கி காட்டி-இருப்பது இங்கு உணரத் தக்கது –
என்று கூடும் கொலோ –
விதியின் விளைவில் ஐயம் இல்லை -பொறுத்து இருக்க முடியாமல் கூடுவது என்றோ-என்று-பதறுகிறார் –
பதினான்கு ஆண்டும் நிரம்பியதும் வருகிறோம் -என்று ஸ்ரீ பரதனுக்கு ஸ்ரீ இராமபிரான் கெடு-குறிப்பிட்டது போலே –
காலக் கெடு தெரிந்தால் ஆறி இருக்கலாம் -என்று கருதுகிறார் –

விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே -2-7-6-
சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே -4-5-7-
ஞான விதி பிழையாமே –மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே 5-2-9-

இராமானுசன் புகழ் –
மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை தத் காலத்திலே காணா நிற்கச் செய்தே இங்கனே சொல்லுவான் என் என்னில் –
காண்கிறதல் அன்று இப்போதைக்கு இவருடைய அபேஷை –
கண்டால் கண்கள் விக்ருதமாகை அன்றிக்கே -இன்பம் எய்துகை –
ப்ரேமம் –அதுக்கு அடியான ப்ரேமம் -எம்பெருமானார் அருளாலே விளைய வேணும் இறே -அத்தாலே சொல்லுகிறார் –
அன்றிக்கே
மெய் உணர்வாவது -அசங்குசித ஜ்ஞானம் –
அது ஒரு தேச விசேஷத்தாலே சேர்ந்த பின்பு வரக் கடவதாகையாலே -அப்படிப்பட்ட
ஞானாவை சத்யத்தை-உடையரானவர்களுடைய திரளை
இங்கே கண்டு பரி பூர்ண அனுபவம் பண்ணும்படியாக இப்பேற்றை-
நமக்கு சேர்விப்பதான அவருடைய க்ருபை எக்காலத்துக்கு கூட வல்லதோ என்னவுமாம் –
அத் திரள்கள் இவருக்கு சதா சேவ்யங்கள் ஆக இருந்தாலும் நித்ய அபூர்வங்களாயே இருக்கும் காணும் –
உன் தொண்டர்களுக்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி யங்கு ஆள் படுத்தே -என்று இறே-
மேலும் இவருடைய பிரார்த்தனை –

இங்கு -மெய் உணர்ந்தோர் -ஈட்டம் கண்டு
தேச விசேஷத்தில் கிடைக்க வேண்டியதை இவர்கள் இங்கே கண்டு அனுபவிக்க-
அப்படி பட்ட சேர்க்கை -ஆனந்தம் –நித்ய அபூர்வம்
அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதமாய் இருக்கும் படி கிருபை வேண்டுகிறார்–

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .