Archive for August, 2016

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-2–

August 21, 2016

பெரு விடாய் பட்டவன் சேர்ந்த தண்ணீர் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆஸ்யம் பிஹிதமானால் துடிக்குமா போலே
தமக்கு போக்யமான விஷயம் சந்நிஹிதமாய் விடாயும் மிக்கு இருக்கச் செய்தே
அபரிச்சின்ன விஷயம் ஆகையால் பரிச்சேதித்து அனுபவிக்க ஒண்ணாது ஒழிய
இது விஷய ஸ் வ பாவத்தால் வந்தது -நித்ய அனுபவம் பண்ணுவார்க்கும் ஒக்கும் இது என்று அறியாதே
கரண சங்கோச நிபந்தனம் என்று பார்த்து அவசன்னராய்
இப்பிரக்ருதி சம்பந்ததும் அற்று உன்னை பெறுகைக்காக நீ பண்ணின ஜகத் ஸ்ருஷ்டியும் ஸ்ருஷ்ட ஜகத்தில் நீ பண்ணின
அநேக அவதாரங்களும் எனக்கு கார்ய கரம் ஆயிற்று இல்லை -இனி நான் இழந்தே போம் அத்தனை ஆகாதே என்று
நை ராஸ்யத்தோடே முடிய புக-ஈஸ்வரன் வந்து முகம் காட்டி
நீர் இங்கனே படுகிறது என்-நித்ய அனுபவம் பண்ணுவார்க்கும் உள்ளது ஓன்று காணும் -இவ்வுடம்போடே நீர் அனுபவிக்க அன்றோ நாம் இங்கு வந்து நிற்கிறது
என்று வடக்குத் திருமலையில் நின்று அருளின படியை காட்டி சமாதானம் பண்ண -ஸமாஹிதராய் ப்ரீதியோடே தலைக் கட்டுகிறார் –

—————————————————————————————————-

உன்னை ஸமாச்ரயிக்கைக்குத் தந்த சரீரத்தை கொண்டு உன்னை ஸமாச்ரயியாதே அதன் வழியே ஒழுகி அநர்த்தப்பட்டேன்-
நான் உன்னை என்று காண்பது -என்று ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார்

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

எனக்காக கடலோடு கூடின பிரபஞ்சத்தை உண்டாக்கின பரம உதாரனே -அக்காலத்திலே உன் திருவடிகளில் சேர வற்றான சரீரத்தை
நீ தர அத்தைக் கொண்டு உன் திருவடிகளை பெற விரகு பார்க்க மாட்டாதே அதன் வழியே ஒழுகி துக்கப் படுகிற நான்
உன்னோட்டை விஸ்லேஷத்தாலே துஸ்சஹமாய்க் கொண்டு செல்லுகிற நாளில் பிரிந்து நோவு படுகைக்கு ஈடான பாபங்களை வேர் அறுத்து –

————————————————————————————————-

ஜல ஸ்தல விபாகம் இன்றிக்கே எல்லார் தலை மேலும் வைத்து அருளின திருவடிகளையும் தப்பின நான்
-உன் திருவடிகளில் சேர்வது என்று -என்று கூப்பிடுகிறார் –

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்-பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
என்னை சம்சாரத்தின் நின்றும் எடுத்து அருளுகைக்காக உன் அழகைக் கண்டாலும் ஈடுபடக் கடவது அன்றிக்கே
இருந்துள்ள மஹா பிருத்வியை அளந்து அருளின ஸ்ரீ வாமனனே-
சத்வாதி குண பேதத்தை உடைத்தாய் துரத்யையான ப்ரக்ருதி சம்பந்த ப்ரயுக்தமாய் தேவ மனுஷ்யாதி ரூபத்தினாலே
பலபடியான ஜென்மங்களில் அபி நிவிஷ்டனாய் விழுகிற நான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து-நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –
பழையதாய் ஈஸ்வரனான உன்னாலும் அறுக்க முடியாத படியான பாபத் தொடர்ச்சிகளை முதலிலே அறுத்து
உன்னுடைய பரம பூஜ்யமான திருவடிகளை சேர்ந்து நான் ப்ரதிஷ்டிதன் ஆவது என்றோ –

—————————————————————————————————

ஸ்ரீ வாமனான அக்காலம் தப்பினாரையும் விஷயீ கரிக்கைக்காக கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருள
அத்தையும் தப்பின நான் உன்னைப் பெரும் விரகு நீயே பார்த்து அருளாய் -என்கிறார் –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

என்னை விஷயீ கரிக்கைக்கு என்று வந்து திருவவதாரம் பண்ணி அருளி அஹிம்சா சாதனமான உளவு கோலைக் கொண்டு
பாரத சமரத்திலே சேனையை அடையாக கொன்று தறைப் படுத்தினவனே –

—————————————————————————————————-

எல்லாரையும் ரஷிக்கைக்காக நீ சர்வகதனாய் இருக்கிற இருப்பும் எனக்கு கார்யகரம் ஆயிற்றது இல்லை –
நான் உன்னைப் பெரும் வழி நீயே பார்த்து அருள வேணும் -என்கிறார் –

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-

ஸமஸ்த சேதனரையும் உன் பக்கலிலே சூழ்த்துக் கொள்ள வற்றான அத்யந்த வி லக்ஷண ஞானத்தை உடையையாய்
வ்ருத்தி நாசங்கள் இன்றிக்கே என்றும் எங்கும் என்னை அடிமை கொள்ளுகைக்காக வியாபித்தவனே
திருவடிகள் ஒழிய பாஹ்ய விஷயங்களில் நசை எல்லாம் அற்று உன் திருவடிகளில் நிரதிசய போக்யமான கைங்கர்யத்தை
இன்னும் ஓர் திருவவதாரம் பண்ணி யாகிலும் நான் பெறும்படி பண்ணி அருள வேணும் –

————————————————————————————————-

நீயே வந்து என்னை விஷயீ கரித்து தரிப்பியாய் யாகில் என் சாமர்த்தியத்தால் உன்னை பிராபிக்கைக்கு உபாயம் இல்லை
அத்யந்த போக்யமான உன் திரு அழகை நான் இழந்தே போம் அத்தனை யாகாதே -என்கிறார் –

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-

ராம கிருஷ்ண யாதிகளாய் திரு அவதாரம் பண்ணினால் போலே அன்றிக்கே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்தால் போலே யாகிலும்
வந்து பரம தயாளுவான நீ என் மனஸ்ஸூ சிதிலம் ஆகாதபடி பண்ணுகிறில்லை
என்னை அங்கீ கரியாமை யாகிற இதுவே உருச் செல்லுமாகில்
பூம் கொத்துக்களாலே நிறைந்து இருந்துள்ள காயாவின் கொழுவிய பூப் போலே இருக்கிற திரு நிறத்தைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே –

—————————————————————————————————–

மீளவும் சாபல அதிசயத்தாலே நிரதிசய போக்யமான உன்னுடைய திருவடிகளை நான் கிட்டுவது என்றோ -என்கிறார் –

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

போன காலம் எல்லாம் அல்ப யத்னமாய் பஹு பலமான புண்யங்களை பண்ணுவேன் என்னுதல் செய்திலேன்
அல்ப பலமாய் பஹ்வநர்த்தமான பாபத்தை பண்ணுவேன் அல்லேன் என்னுதல் செய்திலேன்
அல்பாஸ் வாதமான விஷய ரசங்களை அனுபவித்து சர்வ சக்தியான உன்னாலும் அப்ரதிசமாதேய தசையாம் படி அகன்றேன்
பிரளய காலத்திலே மங்கி அஸத் கல்பராய் அசங்க்யேயரான ஆத்மாக்களை கரண களேபரங்களோடே கூட்டி உண்டாக்கின அபரிமித சக்திகன் ஆனவனே –

——————————————————————————————————

திருவடிகளில் போக்யதையை அனுசந்தித்து பதறுகிற திரு உள்ளம் பதறாமைக்காக
அயோக்யரான நாம் அவனை ஆசைப்பட்டால் பிரயோஜனம் உண்டோ என்கிறார் –

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-

சம்யஞ்ஞானம் இன்றிக்கே அவித்யா கர்மாதி களைப் பிறப்பிக்கும் சம்சாரத்தில் அழுந்தி இருக்கிற நாம் நெஞ்சே
கால தத்வம் உள்ளதனையும் இருந்து இருந்து துக்கப்பட்டு
எல்லா காலத்திலும் ஓன்று ஒளியாமே எல்லா பதார்த்தங்களிலும் வியாபித்து இருப்பதும் செய்து இவர்களுடைய ஞானங்கள் எல்லாம்
அஸத் கல்பமாம் படி -விசதமான ஞான பிரபையை உடைய கிருஷ்ணனை பிராபிக்க விரகு உண்டோ –
எஞ்ஞான்று மேவுதும் -என்றுமாம் –

————————————————————————————————————–

உன்னைப் பெறுகைக்கு ஈடான விரகுகள் என் பக்கல் ஒன்றும் இன்றிக்கே இருக்கச் செய்தே உன்னைக் காண வேணும்
என்று கூப்பிடா நின்றேன் -எங்கே வந்து பலிக்கக் கூப்பிடுகிறேன் -என்கிறார் –

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-

துக்கத்தை விளைப்பதாய் அநாதி காலம் அனுசரித்து இருக்கிற த்வத் பிராப்தி விரோதிகளை ஏதேனும் ஒரு விரகாலே போக்கவும் மாட்டிற்று இலேன்
நிரந்தரமாக உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கவும் பெற்றிலேன்
எங்கும் பிரசித்தமான கல்யாண குணங்களை உடைய உன்னுடைய அழகை எனக்கு காட்டினவனே –

—————————————————————————————————————

ஸ்ரீ கிருஷ்ணனாயும் ஸ்ரீ வாமனனாயும் நீ லோகத்துக்கு பண்ணின மஹா அனுக்ரகத்துக்கு புறம்பு ஆனேன்
இனி நான் உன்னை பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ -என்று நிராசரார் ஆகிறார் –

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-

சம்சாரத்தில் நின்று அத்தோடு பொருத்தம் இல்லாமையால் பெரிய ஆர்த்தியோடே பல காலம் கூப்பிட்டு என்னுடைய
பாபத்தின் மிகுதியால் அவனைப் பெறுகைக்கு விரகும் அறியாதே நெடும் காலம் அலமரா நின்றேன் –
திரு உள்ளத்திலே பொருத்தத்தோடே கூட பசு நிரை மேய்ப்பதும் செய்து அது போலே அன்றிக்கே
தன்னுடைய திருவடிகளை எல்லார் தலை மேலும் படும்படி லோகத்தை எல்லாம் அளப்பதும் செய்து
இச் செயலால் லோகத்தை அடைய அடிமை கொண்டு இருக்கிறவனை அன்றும் தப்பின நான் இனிப் பெறுகைக்கு விரகு உண்டோ –

—————————————————————————————————————

இப்படி நிராசராய் முடிய புக்க ஆழ்வார் எம்பெருமான் தம்முடைய ஆர்த்தி எல்லாம் தீரத்
திருமலையிலே நின்று அருளின படியை காட்டி அருளக் கண்டு தரிக்கிறார் –

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-

கிட்டும் காலம் யமபடர் பாசத்தை வீசினால் படும் துக்கம் போலே இருக்கிற பகவத் விஸ்லேஷ ஜெனிதமான நிரதிசய துக்கம் எல்லாம் அகல –
வேதைக சமதி கம்யனாய் இருக்கிற கிருஷ்ணனை அவனுடைய பிரசாதத்தாலே சாஷாத் கரிக்கப் பெற்று
என்னுடைய மனஸ் ஸூ ம் நிலை நின்று ஆத்ம நித்யத்வமும் நிலை நின்றது –

————————————————————————————————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார் தம்மைப் போலே நோவு படாதே சம்சார விமோசனத்தை பெறுவர் என்கிறார் –

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-

தம்மைப் பெறுகையாலே பூர்ணமான ஐஸ்வர்யத்தை உடையனான வனை-தாம் உஜ்ஜீவிக்கையாலே சம்ருத்தமான
திருச் சோலையோடு கூடின திருநகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த நிர்த்தோஷமான சப்த சந்தர்ப்பத்தை உடைய
ஆயிரத்திலும் இத் திருவாய் மொழி யானது தன்னை அப்யசித்தார்க்கு ஆத்மாவுக்கு ப்ரக்ருதி சம்பந்த ஹேதுவான கர்மத்தைப் போக்கும் –

——————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-2–

August 21, 2016

பெரு விடாய் பட்டவன் ஸூ ஸம்ஸ்க்ருதமான தண்ணீர் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆஸ்யம் பிஹிதமானால் துடிக்குமா போலே
தமக்கு போக்யமான விஷயம் சந்நிஹிதமாய் ஆசையும் மிக்கு இருக்கச் செய்தே விஷயத்தின் பெருமையால்
தமக்கு விளாக்குலை கொள்ள ஒண்ணாது ஒழிய –
அத்தை பிரகிருதி சம்பந்த ஆயத்தமான கரண சங்கோச நிபந்தனம் என்று பார்த்து மிகவும் அசன்னராய்
இப்பிரக்ருதி சம்பந்தத்தை அறுத்து எல்லாரும் தன் திருவடிகளை பெறுகைக்காக எம்பெருமான் பண்ணின
ஜகத் ஸ்ருஷ்டியும் ஸ்ருஷ்ட ஜகத்தில் பண்ணின அநேக அவதாரங்களும் எனக்கு கார்ய கரம் ஆயிற்று இல்லை –
இனி நான் பிரகிருதி சம்பந்தம் அற்று எம்பெருமானை பெற விரகு இல்லை யாகாதே -என்று நை ராஸ்யத்தோடே முடிய புக்க ஆழ்வார்
அவ்வவதாரங்களில் தப்பினார்க்கும் இழக்க வேண்டாத படி திருமலையில் நின்று அருளின படியை காட்டி அருளக் கண்டு உஜ்ஜீவித்து ப்ரீதராய் முடிக்கிறார் –

——————————————————————————————–

உன்னை ஆஸ்ரயிக்கத் தந்த சரீரத்தைக் கொண்டு அதன் வழியே ஒழுகி அநர்த்தப் பட்டேன்
-நான் உன்னை என்று கிட்டக் கட வேன் என்று கூப்பிடுகிறார் –

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

முந்நீர் ஞாலம் படைத்த
மூ வகைப் பட்ட நீரை உடைய கடல் சூழ்ந்த பூமியைப் படைத்த கட்டளை -தான் தன் விசித்திர யோகம் தோற்ற இருக்கை –
அப ஏவ ச சர்ஜா தவ்-என்கிறபடியே முன்னே நீரைப் படைத்த என்றுமாம் –
தய நீய தசையைக் கண்டு -இவை கரணங்களை பெற்று கரை மரம் சேர வேணும் -என்று தயா பரதந்த்ரனாய் ஸ்ருஷ்டித்த படி –
கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டியாகிலும் யவ்கபத்யம் அனுக்ரஹக்ருதம் என்கை
எம் –
ஸ்ருஷ்ட்டி சர்வ சாதாரணம் ஆகிலும் இவர் தமக்காக என்று இருக்கிறார் -எங்கும் ஓக்க வர்ஷித்தாலும் அது கொண்டு
விளைத்துக் கொண்டவன் -எனக்காக -என்று இருக்குமா போலே
எல்லாருக்கும் ஓக்க அவன் செய்தாலும் க்ருதஞ்ஞான் எனக்காக -என்று இருக்கும் இ றே
முகில் வண்ணனே-
மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றிக்கே வர்ஷிக்கிறது பிரதியுபகாரம் கொள்ளுகைக்கு அன்று இ றே
பஹுஸ்யாம் என்று தன் பேறாக ஸ்ருஷ்டிக்கை –
அந்நாள் –
அசித் விசிஷ்டானாய் சோஸ்ய தசா பன்னனான நாள்
நீ –என்று இழவு உள்ளதாய் முகம் காட்டின நீ
தந்த –
திருவடிகளில் தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாம் உடம்பை அபகரித்து –
துர்லபோ மானுஷோ தேஹ -மானுஷ்யம் ப்ராப்ய -தன்னைப் பெறுகைக்கு உபகரணமும் தானே தர வேண்டி இருக்கிற படி
ஆக்கையின் வழி உழல்வேன்
விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் –
உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய்
கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை
வெந்நாள்-
ஞானம் பிறந்தால் இப்பிரக்ருதி சம்பந்தத்தோடே இருக்கிற நாள் அசோகவ நிகையிலே பிராட்டி இருந்தால் போலே
நோய் வீய-
நோய் என்று சரீர சம்பந்தம் ஆதல் -விஸ்லேஷம் ஆதல் -வீய முடிய
வினைகளை-
சரீர சம்பந்தத்துக்கு அடியானை பாபங்களை
வேர் அறப் பாய்ந்து-
சவாசனமாகப் போக்கி -பாய்ந்து என்று சினம் தோற்றுகிறது-
ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –
எந்நாள்-
இன்ன நாள் என்று ஓர் அவதி பெற்றார் ஆகிலும் அத்தை பற்றி கொண்டு இருப்பர்
யான் –
உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –
உன்னை-
என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை
இனி வந்து கூடுவேன்-
நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -என்கிறார் –

———————————————————————————————–

எனக்குத் தந்த கைம்முதலைக் கொண்டு உன்னைக் கிட்ட மாட்டாது ஒழிந்தால்
நீ அர்த்தியாய் வந்து கிட்டின அன்றும் -கிட்டப் பெற்றிலேன் -என்கிறார் –

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–

வன் மா வையம் அளந்த –
கடினமான மஹா பிருத்வியை ஸூ குமாரமான திருவடிகளாலே அளந்த -என்னுதல்
மஹா பலி மிடுக்காலே புக்கு அளக்க அரிதான பூமியை என்னுதல்
தம்தாம் பேற்றுக்கு அவன் அர்த்தியாய் வந்த சீலத்துக்கும் அழகுக்கும் நெகிழாத பூமி -என்னுதல் –
அளந்த —
இருந்தார் இருந்த இடங்களிலே சென்று அவர்கள் தலையிலே திருவடிகளை வைத்த படி –
அவர்கள் இரங்கா விட்டாலும் தன் இரக்கத்துக்கு பரிஹாரம் இல்லையே –
எம் வாமனா –
இவ்வவாதாரத்திலே உபகார ஸ்ம்ருதி தமக்கே யாய் இருந்த படி –
எனக்காக வந்து பிறக்க நான் இழந்தேன் -என்கிறார்
இப்படி வர நின்ற உன்னாலும் மீட்கப் போகாத படி -சம்சாரத்திலே கை கழிய போந்தேன் -என்கிறார் –
நின்-பன் மா மாயம் –
மம மாயா என்று உன்னுடையதாய் -தான் ஒன்றாய் இருக்க குண த்ரய பேதத்தை உடைத்தாய் துரத்யையாய் இருந்துள்ள ப்ரக்ருதி –
நீ முடித்த முடியை நான் அவிழ்க்கவோ -ஸூ கத்திலே சங்கிப்பிப்பது -பிரவ்ருத்தியிலே மூட்டுவது
-உணர்த்தி அறப் பண்ணுவது -ஆகிற குணங்களை தப்பவோ –
பல் பிறவியில் –
பிரகிருதி சம்பந்த ப்ரயுக்தமான தேவாதி பேதங்கள்
படிகின்ற யான்-
விழுகின்ற -என்னாத படி கின்ற -என்கிறது இவ்வனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே பொருந்தி இருக்கை –
வர்த்தமான நிர்த்தேசத்தால் இன்னம் தரை கண்டது இல்லை என்கை –
தொன் மா வல்வினைத் தொடர்களை –
அநாதியாய் அநேகமாய் சர்வ சக்திக்கும் நெஞ்சு உளுக்க வேண்டும் படி பிரபலமான
பாவத் தொடர்ச்சிகளை ஒன்றோடு ஓன்று அனுபந்தித்து இருக்கை –
முதல் அரிந்து-
வாசனையோடு போக்கி
நின் மா தாள் சேர்ந்து –
பிராப்தமாய் -ஸூ லபமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை
கிட்டி -என்கிற ஸ்தானத்தில் சேர்ந்து என்கிறது கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கை –
நிற்பது –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்று ஸூ ஸ் த்ரனாய் இருப்பது
எஞ்ஞான்று கொலோ-
இன்ன நாள் என்று ஓர் அவதி பெறிலும் பெற்றத்தோடு ஒக்கும் –

—————————————————————————————————

ஸ்ரீ வாமனான காலத்திலும் தப்பினாரையும் விஷயீ கரிக்கைக்காக ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரிக்க அத்தையும் தப்பினேன் என்கிறார் –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்-
ஹிம்ஸா சாதனம் இன்றிக்கே குதிரையை நடத்தக் கடவதான முட்கோலாலே கொலையை விளைத்து –
ஆஸ்ரித விஷயத்தில் வந்தால் எடுத்ததே ஆயுதமாய் இருக்கை -ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்றார்கள் –
அவர்கள் இசைந்து ஒன்றையே ஆயுதமாகப் கொண்டு உழக்கிப் பொகட்டான்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து -என்னக் கடவது இ றே –
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பாரத சமரத்திலே-இரண்டு தலையிலும் அஸூ ரா வேசத்தாலே பூ பாரம் ஆனார் எல்லாரையும்
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே -என்கிறபடியே அவர்கள் பக்கல் நன்மையே இல்லை யாகிலும் அங்கே பட்டார்க்கு வீர சுவர்க்கம் கிட்டும் தேசம் –
பீஷ்மாதிகள் காட்டுது தீ கிளர்ந்தால் போலே கிளர்ந்து வர அத்தை அவித்துக் கொண்டு ஒரு காள மேகம் பரவினால் போலே யாயிற்று
சாரத்ய வேஷத்தோடு தேரைக் கொண்டு உலாவின படி
எந்தாய் -பாண்டவர்களுக்கு உதவினதுவும் தமக்கு என்று இருக்கிறார்
பொல்லா வாக்கையின் –
துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது
எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இ றே
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி
புணர்வினை யறுக்கலறா
புணர்வினை- சரீர சம்பத்துக்கு அடியான கர்மம் என்னுதல் -சரீர சம்பந்தம் என்னுதல்
அறுக்க என்றால் போகாது -ராவண சிரஸ்ஸைப் போலே முளையா நிற்கும் என்கை –
சொல்லாய்-
தன்னால் பரிஹாரம் இல்லாத அன்று அர்ஜுனனுக்கு பயம் பிறந்த அன்று மா ஸூ ச என்றால் போலே எனக்கும் மா ஸூ ச என்னாய்
யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –
சிறையிலே கிடப்பாரைப் போலே பிரக்ருதியிலே கிடக்கிற நான் ஒரு தேச விசேஷத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும்
உன்னைக் கிட்டலாதொரு விரகு சொல்ல வேணும்
நான் கிட்டவும் வேணும் -நான் அறியில் இறாய்ப்பேன்-நான் அறியாதபடி சூழ்ச்சி யாகவும் வேணும்
இது இன்ன நாள் என்று சொல்லவும் வேணும் என்கிறார் –

—————————————————————————————————-

அவதாரங்களுக்கும் தப்பின அளவேயோ-ததாமி புத்தியோகம் தம் -என்கிறபடியே நினைவுக்கு வாய்த்தலையான
நெஞ்சிலே வந்து புகுந்து நல் வழி போக்குகைக்கு நிற்கிற நிலையும் எனக்கு கார்யகரம் ஆயிற்று இல்லை என்கிறார் –

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி
எல்லாரையும் சூழ்த்துக் கொள்ள வற்றாய்-விசததமமான ஞானத்தை உடையையாய்
என்றும்
இவன் இல்லாத காலத்திலும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி
எழுச்சி -விகாசம் / கேடு-குறைவு -சங்கோசம் -/சங்கோச விகாச ரஹிதமான ஞானம் -என்கை –
எங்கணும்-
எல்லா பதார்த்தங்களிலும்-கண் -இடம் –
நிறைந்த வெந்தாய்-
ஜாதி -வியக்தி தோறும் -பரிசாமாபியா வர்த்திக்குமா போலே
எந்தாய் -ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே வியாப்தியும் என்னை உத்தேசித்து என்கை –
உன் பக்கலிலே அகப்படுத்திக் கொள்ளுகைக்கு விரகு தேடி உணர்ந்து என்னை வியாபித்துக் கொண்டு நிற்கச் செய்தேயும்
விஷய பிரவணனாய் தப்பினேன் என்கை
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு
நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-
வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –
வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -ச்சாயா வா சத்துவம் அநு கச்சேத்–வா ஸூ தேவா தருச்சியா –என்னக் கடவது இ றே
சர்வம் பரவசம் துக்கம் -என்று விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று இட்டு தாழ்ச்சி என்கிறார்
யான் சேரும் வகையருளாய் வந்தே –
இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் –
அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது –
வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

—————————————————————————————————–

நீ முகம் தோற்ற வந்து அவதரித்து தரிப்பியா யாகில் உன் அழகை நான் இழந்தே போம் இத்தனையோ -என்கிறார் –

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-

வந்தாய் போலே வந்து –
நெடுநாள் இங்கே கால் தாள வேண்டும் ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் போல் அன்றிக்கே -ஆனைக்கு உதவினால் போல் ஆதல்
தூணிலே தோற்றினால் போலே யாதல் -வந்தாகிலும்
மென் மனத்தினை-
நினை தோறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும் -என்னும் மனசை
நீ
உரு அழிந்தவற்றையும் உண்டாக்க வல்ல நீ
சிந்தாமல் செய்யாய்-
நீராய் மங்கிப் போகாத படி பண்ணு கிறிலை
யிதுவே யிதுவாகில்-
உதவாது ஒழிகையே ஸ்வ பாவமாகச் செல்லுமாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த-எந்தாய் –
நீ உதவாது போது ஆறி இருக்கலாயோ உன் வடிவு இருக்கிறது –
கொத்துக்களாலே நிறைந்த காயாவினுடைய கொழுவிய பூ போலே இருக்கிற வி லக்ஷணமான வடிவு அழகைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே
உதவாது ஒழிய பார்த்த நீ உன் வடிவைக் காட்டிற்று ஏன்
யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–
உன்னைக் கிட்டுக்கைக்கும் கைம்முதல் இல்லாத நான் –
தஸ்யைக்ஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று நீயே அனுபவிப்பிக்கும் உன்னை -எங்கே கிட்டப் போகிறேன் –

——————————————————————————————————–

என்னைப் பார்த்தால் கிட்ட விரகு இல்லை -உன்னைப் பார்த்தால் தப்ப விரகு இல்லை
ஆனபின்பு நிரதிசய போக்யமான திருவடிகளைக் கிட்டுவது என்று என்கிறார் –

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

கிற்பன்
அல்ப யத்னமாய் பஹு பலமான ஸூ க்ருதத்தைச் செய் என்றால் ஓம் என்று இசைந்து இலேன்
மித்ர பாவத்தாலே அபுநாவ்ருத்தி லக்ஷணமான போகத்தை பெறலாம் என்றால் அத்தைச் செய்வேன் என்று இலேன்
கில்லேன் என்றிலன்-
இப்போது அல்பமாய் மேலே பஹ்வநர்த்தமாய் இருக்கிற விஷய ப்ராவண்யத்தை தவிர்க்கும் என்றால் -அத்தை தவிர்வேன் -என்று இலேன் –
இப்படி செய்கிறது எத்தனை நாள் போரும் என்ன
முன நாளால்
நீ விசேஷ கடாக்ஷம் பண்ணுவதற்கு முன்பு எல்லாம் –இந்த நெடு நாள் எல்லாம் நம்மை அகன்றது எத்தாலே என்ன
அற்ப சாரங்கள்
உன்னை இழப்பிக்க வேண்டுவது உண்டு -அனுபவிக்கலாவது ஓன்று இல்லை –
அவை
இப்படி இருப்பன அநேகம்
சுவைத்து
இவை எல்லா வற்றாலுமாக நா நனைய பெற்றதோ என்னில்
நாவில் பசை கொடுத்து கை கொடுத்து புஜிக்க வேண்டும்படி இருக்கை –
இத்தால் பெற்றது ஏது என்ன
அகன்று ஒழிந்தேன்
சர்வ சக்தியான உனக்கும் எட்டாதபடி கை கழிந்தேன்-நான் என்னை முடித்துக் கொண்டேன்
உடைய நீ எடுத்துக் கொள்ளில் கொள்ளும் இத்தனை
நீர் நின்ற நிலை அசமாதேயம் என்னும் படி யாய் இருந்ததீ என்ன
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா-
இல்லாத வென்று உண்டாக்கின உனக்கு உள்ளது ஒன்றுக்கு ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ
பல் பல்லாயிரம் -என்று ஜீவ அனந்த்யம் -உயிர் செய்கை யாவது சரீரத்தோடு சம்பந்திப்பிக்கை
பரமா -நிரவாதிக சக்தி உக்தன் ஆனவனே
நின் நற் பொற் சோதித் தாள் –
ப்ராப்தமாய் -அப்ராக்ருதமாய் ஸ் ப்ருஹணீயமாய்-நிரவாதிக தேஜோ ரூபமான திருவடிகளை –
நணுகுவது எஞ்ஞான்றே –
என்னைப் பார்த்தால் பெற விரகு இல்லை –
உன் சக்தியில் குறை இல்லை
இனி நாள் அறியும் அத்தனை என்கிறார் –

———————————————————————————————————–

நின் நல் பொற் சோதித் தாள் -என்று ப்ரஸ்துதமான போக்யதையை நினைத்து பதறுகிற திரு உள்ளத்தைக் குறித்து
அயோக்யரான நாம் அவனை ஆசைப் பட்டால் பிரயோஜனம் உண்டோ -என்கிறார் –

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி –
அநாதி காலம் மூலையடியே திரிந்த நாம் இனி அநந்த காலம் இருந்து க்லேசப் பட்டால் என்ன பிரயோஜனம் உண்டு
நெஞ்சே-
அநாதி காலம் எல்லாம் பண்ணின அதிக்ரமத்துக்கு கூட்டு நீ அன்றோ -நமக்கு குறை என் என்ன –
மெய்ஞ்ஞானம் இன்றி –
புருஷார்த்த உபயோகியான சம்யக்ஞ்ஞானம் இன்றிக்கே
வினையியல் பிறப்பு அழுந்தி-
அவித்யாதிகளை பிறப்பிக்கும் சம்சாரத்தில் மூழ்கி இருக்கிற நாம் –அவித்யாதிகள் அடியான பிறப்பில் அழுந்தி இருக்கிற நாம் என்றுமாம் –
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற-மெய்ஞ்ஞானச் சோதிக் –
இப்படி நாம் இருந்தாலும் அவன் அஸந்நிஹிதன் ஆனால் அஞ்ஞானாதல் ஆகப் பெற்றோம் ஆகிலுமாம் இ றே
சர்வ காலமும் சகல பதார்த்தங்களிலும் குறைவற வியாபித்து நிற்குமவனாய் விசதமமான ஞானத்தை உடைய கிருஷ்ணனை –
நினைவுக்கு வாய்த்தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை
கண்ணனை -மேவுதுமே
ஸூ லபன் என்றால் அவனைக் கிட்டப் போமோ -என்னுதல்-
நிர்வாஹகன் என்றால் அவனைக் கிட்டலாமோ என்னுதல் –
யதா பாடம் அன்வயமாதல் -எஞ்ஞான்றும் மேவுதல்-என்னுதல் –
ஏகோ அஹம் அஸ்மீதிசம் அந்நிய சேத்வம் நஹ்ருச்சயம் வேத்ஸி முனிம் புராணம் யோ வேதிதா கர்மண
-பாப கஸ்ய தஸ் யாந்தி கேத்வம் வ்ருஜி நம் கரோஷி –

———————————————————————————————————–

உன்னைக் கிட்டுக்கைக்காக என் பக்கல் ஒன்றும் இன்றிக்கே இருக்க காண வேணும் என்று கூப்பிடா நின்றேன்
-எங்கே பலிக்கக் கூப்பிடுகிறேன் -என்கிறார் –

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்-ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்-
இவ்வாத்மாவுக்கு நிரூபகமோ என்னும்படி பொருந்தின சாம்சாரிகமான துக்கத்தை விளைவிப்பதான தத் பிராப்தி விரோதிகளை
-தர்மேண பாபமப நுதி-என்று விகித அனுஷ்டானத்தாலே போக்கவும் மாட்டிற்று இலேன்
நிதித்யாசி திவ்ய -என்கிறபடியே அனவ்ரத பாவன ரூபமான பக்தியை பண்ணப் பெற்றிலேன் –
ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை என்றுமாம்
பாவு தொல் சீர்க் கண்ணா –
விதித–சத்ருக்கள் கோஷ்ட்டியிலும் பிரசித்தமாய் ஸ்வா பாவிகமான கல்யாண குணங்களை உடைய கிருஷ்ணனே
வென் பரஞ்சுடரே-
தாழ நின்று இவ் வடிவு அழகை எனக்கு முற்றூட்டாக்கி தந்தவனே -பரஞ்சுடர் உடம்பாய் -என்ன கடவது இ றே
கூவிகின்றேன் காண்பான் –
சாதனா அனுஷ்டானம் பண்ணி பலம் தாழ்த்தாரைப் போலெ கூப்பிடா நின்றேன்
எங்கு எய்தக் கூவுவனே –
ஒரு ஷூத்ரன் கூப்பீடு எங்கே பலிக்க -சாபலம் இ றே

—————————————————————————————————-

கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமன அவதாரத்தையும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தையும் சொல்லி அவற்றைத் தப்பின
நான் இனி கிட்ட என்று ஒரு பொருள் உண்டோ -என்று இன்னாதாகிறார் -நிராசர் ஆகிறார் என்றுமாம் –

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-

கூவிக் கூவிக்
சம்சாரத்தோடு பொருந்த மாட்டார் -கால் வாங்குகைக்கு யோக்யதை இல்லை -காண வாராய் என்று கூப்பிடுகிறார் –
ஒரு கால் கூப்பிட்டு பின்பு ஸ்வரூப ஞானத்தால் ஆறி இருக்க மாட்டாதே மேல் மேல் எனக் கூப்பிடுகிற படி
இவர் கூப்பிட்டால் ஈஸ்வரனுக்கு கை நீட்டி எடுக்க ஒண்ணாத தூற்றிலே யாயிற்று இவர் புக்கு நிற்கிறது –
கொடு வினைத் தூற்றுள் நின்று-
கொடிதான பாபத்தை விளைக்க வற்றாய் புக்க இடமும் புறப்பட்ட விடமும் தெரியாததான சம்சாரத்திலே யாயிற்று நிற்கிறது
பாவியேன் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஸ்ரீ வால்மீகி பகவான் ஆஸ்ரம பரிசரத்திலே கூப்பிட்டால் போலே சிலர் ஐயோ என்ன கூப்பிடுகிறேனோ -என்னுதல் –
உன்னைக் கிட்ட விரகு அறியாதே அலமருகைக்கு அடியான பாபத்தைப் பண்ணினேன் -என்னுதல் –
பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்-
நெடும் காலம் உன்னைப் பெறும் விரகு அறியாதே அலமரா நின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
ஆபத்துக்கு உதவாதானாயத் தான் படுகிறேனோ –
நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனான தன் கையிலே கோலைத் தந்து பசு மேய் என்றால் -ரக்ஷகரான நமக்கு
விஹிதம் இ றே -என்று இருக்கை அன்றிக்கே அலாப்ய லாபமாகப் பொருந்தி
அன்று -அதுவும் ஒரு காலமே
உலகு எல்லாம் தாவிய -அது ஓரூர் அளவேயோ தப்பவுமாம்
எல்லார் தலையிலும் திருவடிகளாம் படி சர்வ லோகங்களையும் அளந்த அன்று எம்மூலையிலே கிடந்தேன்
வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே
எல்லாரையும் அடிமை கொண்டவனை
அந்த தூளி தானத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்ட புகுகிறேன்
அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -என்று நிராசர் ஆகிறார் –

—————————————————————————————————–

இப்படி நிராசராய் முடிய புக்க அளவில் -அவதாரத்துக்கு பிற்பட்டார்க்கு அன்றோ நாம் திருமலையிலே வந்து நிற்கிறது
-என்று திருமலையில் வந்து நின்று அருளின படியைக் காட்டி அருள கண்டு தரிக்கிறார் –

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-

தலைப்பெய் காலம் நமன் தமர் –
யமபடர் கிட்டும் காலம் -ஏற்கவே முகம் காட்டினான் ஆகில் இவர் பாபம் பண்ணார் இ றே -மஸ்தக ஸ்தாயிநம்
பாசம் விட்டால்-
சரீர விஸ்லேஷத்துக்கு பாசம் வீசினால்
அலைப்பூண் உண்ணும் –
வாசனை இங்கே இழுக்க அவர்கள் சரீரத்தை விஸ்லேஷிப்பிக்க தடா படும் வியசநம்
அவ் வல்லல் எல்லாம் அகலக்
அவ்வல்லல் என்னும் அத்தனை -த்ருஷ்டாந்தம் இல்லை –
அந்த துக்கம் போலே இருக்கிற பகவத் விஸ்லேஷ ஜெனித துக்கம் எல்லாம் ஆதல் –
வசதி மனசி யஸ்ய சோ அவ்யயாத்மா புருஷ யாஸ்ய ந தஸ்ய த்ருஷ்ட்டி பாதே தவக திரதவா ம மாஸ்தி சக்ர ப்ரதிஹத வீர்ய பலஸ்ய சோ அந்நிய லோக்ய –
பகவத் அலாபமே யான பின்பு யம வஸ்யத்தையும் வந்தது அன்றோ –என்று பணிக்குமாம் ஆண்டான்
கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு-
பல கலைகளாலும் அறியப் படுபவன்
வேதைஸ் ச சர்வர் அஹமேவ வேத்ய -என்று வேதைக சமதி கம்யனான கிருஷ்ணனைக் கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் –
என் மனத்தினை நீ சிந்தாமல் செய்வாய் -என்று சிதிலமான நெஞ்சம் தான் தரித்தது
பெற்றது நீடுஉயிரே.–
உயிர் நீடு பெற்றது -எங்கு இனித் தலைப் பெய்வன்-என்று முடிய புக்க ஆத்ம வஸ்துவும் நித்யமாயிற்று
நித்ய வஸ்துவுக்கு நாசமாவது -தாஸ்ய அசித்தி
தாஸ்யமே நிரூபகம் ஆனால் தத் அலாபத்தில் நிரூப்பியமும் இல்லையாம் இ றே
ச்சேத்யாதி விஸஜாதீயம்-ஏன்னா பகவத் அலாபத்தில் அழியாது ஒழியுமோ –

—————————————————————————————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி அப்யசித்தார்க்கு சரீர சம்பத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார் –

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
உயிர் நீடு பெற்றது -என்று இவர் தரித்தவாறே அவன் எல்லா உயிர்களையும் எல்லா லோகங்களையும் உடையனானான் –
சர்வ ரக்ஷகனுக்கு ரஷ்யத்தில் ஓன்று குறையிலும் ரக்ஷகத்வம் ஓன்று ஓறு வாயாம் இ றே
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்-
இவர் உறாவின வாறே -அபி வ்ருஷா பரிம் லா நா -என்று திருச் சோலையும் உறாவி
இவர் தரித்தவாறே அகால பலி நோ வ்ருஷா -என்கிற படியேயாய் அங்கு உள்ள குயில்களும் ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு களிக்கும் படி யாயிற்று
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
செயிர் -குற்றம் -இல் -இல்லாமை -ஆக நிர்த்தோஷமான சப்த சந்தர்ப்பத்தை உடைய ஆயிரம்
இப்பத்துக்கு குற்றம் இல்லாமை யாவது -எங்கு இனித் தலைப் பெய்வன் -என்று மெய்யாய் இருக்கை
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–
சரீர சம்பந்த ஹேதுவான கர்மத்தைப் போக்கும் –

———————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-1–

August 20, 2016

திருமலையில் போக்யதையை அனுபவியா நிற்கச் செய்தே -வட மா மலை யுச்சி என்னுமா போலே திருமலைக்கு
அவயவ பூதராய் இருபத்தொரு கற்பக தரு பணைத்தால் போலே இருக்கிற அழகருடைய நிரதிசய ஸுந்தர்யத்தையும்
ஆபரண சேர்த்தியையும் வேதங்கள் வைதிக புருஷர்கள் ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானாருடைய -ஸ்தோத்ரங்களுக்கு
அபூமியான மேன்மையையும் -அவற்றையும் விளாக்கொலை கொள்ளும் படியான ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார் –
அந்தாமத்து அன்பிலும் அழகு சொல்லிற்று -இங்கும் அழகாய் இரா நின்றது -இரண்டுக்கும் வாசி என் என்னில்-
ஆடியாடிக்கு -அனந்தரமாகையாலே -ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் தான -என்று அடைவு கெட ஒப்பித்து வந்த அழகு இங்கு
-இவ் வழகினுடைய ஸூ கடிதத்வத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார் –

————————————————————————————————————————

அழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திரு அணிகலன்களும் உண்டான ஸூ கடித்த்வத்தை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
உனது முகச் சோதி முடிச் சோதியாய் மலர்ந்ததுவோ
உன் திரு முகத்தின் ஒளி முடிச் சோதியாய் மேல் நோக்கி விகசிதம் யாயிற்றோ
சாமான தர்மாத் சம்சயம் ஆகையால் உபய கோடியிலும் அனுவர்த்திக்கிறது -என்பர் பட்டர்
திரு அபிஷேகத்தின் ஒளியானது திரு முகத்தின் ஒளியாய்க் கொண்டு கீழ் நோக்கி சுழித்ததோ
சேஷித்வ ஸூ சகமான அழகை அனுபவித்து தம் சேஷத்வத்துக்கு அனுரூபமான திருவடிகளின் அழகை அனுபவிக்கிறார் –
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
திரு முகத்தின் அழகு நிலை கொள்ள ஒண்ணாமையாலே திருவடிகளில் வர வீசிற்று
அங்கண் அல்லது அழகுக்கு ஆவது உண்டாயாயாதல் -ஆசைக்கு அவதி உண்டாயாயாதல் அன்றே
திருவடிகளின் அழகு ஆசன பத்மமாய்க் கொண்டு விகசிதமாயிற்றோ
நீ நின்ற தாமரை அடிச்ச சோதியாய் அலர்ந்ததுவோ
திரு அபிஷேகத்தின் சம்சயம் இங்கே தீர வந்தார் -இங்கும் சம்சயமாய் இருந்தது
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்-கடிச்சோதி கலந்ததுவோ
திருவடிகளின் அழகு மேல் நோக்கித் தள்ள திரு வரையை அனுபவிக்கிறார்
உன்னுடைய ஸ் ப்ருஹணீயமான கடிப் பிரதேசத்தின் ஒளி ஸ் வா பாவிகமான அழகை உடைய திருப் பீதாம்பரமாயும் மற்றும் உள்ள ஆபரணங்களாயும் கலந்ததுவோ
கடி -தொடைப் பற்று –
நீரிலே நீர் கலந்தால் போலே ஏக த்ரவ்யம் என்னலாம் படி பரம்பிற்றோ-மற்றைப் படியுமாம்
படிச்சோதி -படி யாணி யான ஒளி என்றுமாம் -திரு மேனி என்றுமாம்
திருமாலே கட்டுரையே –
நித்ய அநபாயினியாய் நித்ய அனுபவம் பண்ணுகிற பிராட்டியும் அவளை அனுபவிப்பிக்கிற தேவரும் கூட எனக்கு அருளிச் செய்ய வேணும்
இன்று அனுபவிக்கப் புக்க இவரோடு நித்ய அனுபவம் பண்ணுகிற அவளோடு அவன் தன்னோடு வாசி இல்லை -ஐஸ் சம்சயம் அனுவர்த்திகைக்கு
கட்டுரையே
சொல்ல வேண்டும் என்றபடி
மருளில் வ ண் குருகூர் வ ண் சடகோபன் -என்ற தத்வ ஹிதங்களில் சம்சயம் அற்ற இவருக்கு இது ஒரு நித்ய சம்சயம் விளைந்தது
விஞ்ஞான பலமாய் விஷய வை லக்ஷண்யம் அடியாக பிறந்த சம்சயம் ஆகையால் நித்யமாகச் செல்லும் என்கை –

————————————————————————————————————–

இவ் வழகுக்கு உவமானம் உண்டோ -என்று பார்த்தார் -உபமானங்களுக்கு அவ்வருகாய் இருக்கையாலே உவமானம் இல்லை என்கிறார் –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-

கட்டுரைக்கில்-
சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது
தாமரை –
தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா
முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே -உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –
பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது
கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
பொன்னை உபமானமாக போராது என்கைக்காக சிக்ஷிக்கிறார் -காய்ச்சி உரைத்த வி லக்ஷணமான நன் பொன்-ருக்மஅபாம் -என்னக் கடவது இ றே
உன் திருமேனி ஒளி ஒவ்வாது-
பரஞ்சோதி ரூப சம்பத்ய–ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ் வங்கோ ஹா நூ மத -என்று தான் மதித்து இருக்கும் வடிவு
ஒட்டுரைத்து –
ஓட்டுகை -கூடுகை -அதாவது சேருகை-ஒப்புச் சொல்லி
இவ்வுலகு
மாஞ்சா க்ரோசந்தி-என்கிற நியாயத்தாலே லோகத்தில் உள்ளார் –பிராகிருத பதார்த்த வை லக்ஷண்யமும் அறிய மாட்டாதார்கள் –
உன்னைப் –
யாதோ வாசோ நிவர்த்தந்தே-என்று ஸ்ருதியும் மீளும்படியான உன்னை
புகழ்வெல்லாம் பெரும்பாலும்
ஸ்தோத்ரம் பண்ணுமது எல்லாம் -மிகவும் ப்ராயேண
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –
அவாசகமாய் -பட்டது உரைக்கை பட்டரை -விஷயத்தை பாராதே தோன்றிற்று சொல்லுகையாய்
புற்கென்றே காட்டுமால்-அவத்யவாஹமாமுமாம்-இப்படி ஆவான் என் என்னில்
-பரஞ்சோதி -ரத்னம் அறியாதான் ஒருவன் -குருவிந்தக் கல்லோடு ஒக்குமே இவ்வஸ்து -என்றால் அதுக்கு அவத்யமாம் இ றே
அப்படியே நீ சர்வ விசாஜீ தயமான அழகை உடையவன் ஆகையால் -நாராயண பரஞ்சோதி –

———————————————————————————————————————

அவர்கள் நம்மை உள்ளபடி அறியாமையாலே சொல்ல மாட்டாது ஒழிகிறார்கள்-
நம்மை உள்ள படி அறியும் உமக்குச் சொல்லத் தட்டு என் -என்ன -என்னாலும் முடியாது என்கிறார் –

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின்-
பரமாய் பரஞ்சோதி நீ -அழகால் எல்லாரிலும் மேற்பட்டு இருக்கையாலே பரஞ்சோதி நீ –தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி
நின்னிகழ்ந்து-உன்னை ஒழிந்து
மற்றோர்-பரஞ்சோதி யின்மையில் –
வேறு ஒரு பரஞ்சோதி இல்லாமையால்
படியோவி –
ஒப்பு ஓவி
நிழல்கின்ற-பரஞ்சோதி –
வர்த்திக்கிற பரஞ்சோதிஸ் நீ –
நின்னுள்ளே படருலகம் படைத்த எம்-பரஞ்சோதி
ஜகத் காரண ப்ரத்யுக்தமான பரஞ்சோதிஸ் ஸூ ம் உள்ளது -என்கை –
கோவிந்தா-
நீர்மையைப் பார்த்தால் பசுக்களோடும் பொருந்தும்படியாய் இருக்கை-
செவ்வே நெஞ்சே நினைப்பரிதால்-
ஸூலபதையால் வந்த தேஜஸ் ஸூ ம் உன்னது
அழகுக்கு மேற்பட்டார் இல்லாமையால் அழகால் வந்த தேஜஸ் ஸூ ம் உன்னது
லோகத்தில் உபமான ரஹிதர் நீயே யாகையாலே உபமான ராஹித்யத்தால் வந்த தேஜஸ் ஸூ ம் உன்னது
ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான தேஜஸ் சூம் உன்னது
பண்புரைக்க மாட்டேனே
பண்பு -படி -உன் படிகள் இவையான பின்பு என்னால் பேசப் போகாது என்கிறார் –

———————————————————————————————————————

இப்படி விலஷணனாய் உபநிஷத் ரகஸ்யனான உன்னை சம்சாரிகள் இழந்து க்லேசப் பட்டே போம் இத்தனை ஆகாதே என்று
அழகர் உடைய அழகின் மிகுதியே பேசுவிக்கப் பேசுகிறார் –

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் –
திரு நாபி கமலத்தை தலையாக உடைத்தான இம் மஹா பிருதிவி -உன் பக்கலிலேயான புஷப காச ஸூகுமாரமான
திரு மேனியில் நெஞ்சை வைக்க மாட்டாதே இருக்கச் செய்தேயும்
நின்-மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க-
உன் இடத்திலேயான -உன் பக்கலிலே யான -அன்றிக்கே -மாட்டு -என்று மாடாய் -நிதி போலே ஸ்லாக்க்யமான என்னுதல்-
மாட்டு என்று மட்டாய்-மத்வ உத்ஸ – என்று மதுஸ் யந்தி யாகையாலே நிரதிசய போக்யம்-என்னுதல் –
மலர்தலை மா ஞாலம் -என்கிறது மாட்டாமைக்கு நிபந்தம் -ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வங்கள்-என்கை
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய்
திரு உருவம் மனம் வைக்க மாட்டாதவையாய் ஒன்றோடு ஓன்று சேராதே பாஹ்ய சமய மதி பேதங்களை உண்டாக்கினாய்
பண்டே உன்னை அறிய மாட்டாதே சம்சாரிகளுக்கு இம் மதி பேதங்களை உண்டாக்கினாய் –
மலர்த்துழாய்- மாட்டே நீ மனம் வைத்தாய்-
உன் திரு உள்ளத்தையும் கால் தாழ பண்ண வல்ல திருத் துழாய் முதலான போக்கிய ஜாதங்களிலே பிரவணனாய்
மாடு – இடம் -அதன் பக்கலிலே –
மா ஞாலம் வருந்தாதே –
இம் மஹா பிருத்வி உன்னை இழந்து நோவு படாதே
பிரானே தமக்கு பகவத் விஸ்லேஷம் கிலேச கரமாய் இருக்கையாலே எல்லாருக்கும் இப்படி இருக்கும் என்று இருக்கிறார்
பண்டே அறிவில்லாத சம்சாரிகள் -அதுக்கு மேலே விலக்கடிகளும் உண்டாயிற்று -ரக்ஷகனான நீ போக பிரவணனாய்
-இனி சம்சாரிகளுக்கு க்லேசமேயோ சேஷித்தது –

———————————————————————————————————————–

அஞ்ஞான லோகம் மாட்டாதாகில் மயர்வற மதி நலம் உடைய உமக்குச் சொல்லக் குறை என் என்ன –
நீ சாவாதிகன் ஆயாகில் அன்றோ பேசலாவது என்கிறார் –

வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-

வருந்தாதே வருந்தவத்த-
யத்னத்தால் வந்தது அன்றிக்கே சகஜமாய் நிரதிசய தாபா பலம் என்று சொல்லாய் இருக்கை
வருந்தாதே வருமதாய் -தவ -என்று மிகுதியாகவுமாம் -நா காரணாத் காரணாத்வா-
மலர்கதிரின் சுடருடம்பாய்-
விகஸ்வர தேஜோ ரூபமாய் -அதில் மண் பற்றைக் கழித்த ஒளியை உடம்பாக உடையையாய்
வருந்தாத ஞானமாய் –
சஹஜ சாதர்வ ஜ்ஞத்யத்தை உடையையாய்
வரம்பின்றி முழுதியன்றாய்
எல்லை இல்லாத சகல பதார்த்தங்களையும் நிர்வஹிக்கிறவனே
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை-ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே
காலத் த்ரயத்திலும் லோகத்தை ஒருங்காக ஒருமடைப்பட ஒரு படியே ரஷிக்கிற உன்னுடைய குணங்களை எங்கே முடிய நான் பேசுவேன்
உலக்க முடிய -வி லக்ஷண விக்ரஹம் -சஹஜ சார்வஞ்தவம் -உடைமையை நிர்வஹிப்பான்
உடையவன் ஆகையால் எல்லாவற்றையும் உடைய உன் சர்வ ரக்ஷகத்வம் இவற்றை எங்கே நான் முடிவு காண –

——————————————————————————————————————

வேதங்கள் ஸ்துதிக்க வில்லையோ -அவ்வோபாதி நீரும் பேச மாட்டீரோ என்ன -அவையும் ஸ்துதியில் உபக்ரமித்து
முடிவு காண மாட்டாமையாலே மீண்டன இத்தனை -என்னால் பேசப் போமோ என்கிறார் –

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-

ஓதுவார் ஒத்து எல்லாம் –
ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது –
ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –
எவ்வுலகத்து எவ்வெவையும்-
ஊர்த்த லோகங்களில் உள்ளார் ஞானாதிகருமாய் -ஆயுஸ் சாலே அதிகருமாய் இருக்கையாலே
அவர்களுக்கு அனுரூபமாக அவ்வோ லோகங்களிலும் இந்த பேதங்களும் உண்டு
சாதுவாய்-
சப்தத்துக்கு சாதுத்வம் ஆவது -அர்த்தத்தை இருந்த படியே காட்டுகை –
சர்வ சப்தங்களும் அசித் ஜீவ விசிஷ்ட பரமாத்ம பர்யந்த அபிதானம் பண்ணுகை -சாதுவாகைக்காக என்றுமாம் –
நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை-
உன் கல்யாண குணங்களிலே அந்வயித்தன என்னும் இத்தனை அல்லது புறம்பு போயின வென்று சொல்ல ஒண்ணாது
கடலில் வர்ஷ பிந்து போலே புறம்பு போயிற்று என்னவும் ஒண்ணாது
எங்கும் வியாபித்தது என்னவும் ஒண்ணாது இருக்கை
தகை -அளவும் -அழகும் –
போது வாழ் புனந்துழாய் முடியினாய் –
பூ மாறாதே தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி மிகா நின்ற திருத் துழாயை திரு முடியில் உடையவனே
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் –
பூவிலே வர்த்திக்கிற பிராட்டி உன் சுவடு அறிந்த பின்பு அப்பூ நெருஞ்சி முள்ளாம் படி மார்பு படைத்தவனே –
என் சொல்லி நான் வாழ்த்துவனே –
சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் ஆகையால் அவ் வைஸ்வர்யத்தைப் பேசவோ –
பிராட்டி யோட்டைச் சேர்த்திக்கு நான் பாசுரம் இட்டுச் சொல்லவோ –

—————————————————————————————————-

உம்மால் தனியே முடியாதாகில் இருந்ததே குடியாகக் கூட்டிக் கொண்டு பேசுதல் -ஞானாதிகரான ருத்ராதிகள் ஏத்துதல் செய்தாலோ என்ன –
லோகம் அடங்கத் திரண்டு ஒருவர் ஏத்தின இடம் ஒருவர் ஏத்தாதே சர்வாதிகாரமாக ஏத்தினாலும் ஏத்தப் போகாதே -என்கிறார் –

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-

வாழ்த்துவார் பலராக-
வாழ்த்துவர் அசங்க்யாதர் ஆயிடுக -ஆனாலும் ஏத்த முடியாது -எத்தாலே என்னில்
நின்னுள்ளே நான்முகனை-மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
ஏகார்ணவத்திலே கண் வளர்ந்து -சதுர்தச புவனங்களையும் ஸ்ருஷ்ட்டி என்று சங்கல்பத்திலே சதுர்முகனை பிரதமத்திலே ஸ்ருஷ்டித்தாய்
த்வத் சர்ஷ்டனான ப்ரஹ்மாவாலே ஸ்ருஷ்டரான சங்குசித ஞான உன் பெருமையை பேச மாட்டார்கள் என்கை –
ஆனால் இவர்களை ஒழிய ஞானாதிகரான ருத்ராதிகளைக் கூட்டுக கொண்டாலோ என்ன -அவர்களுக்கும் நிலம் அன்று என்கிறது –
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
கேழ் என்று கிளர்த்தியாய் -பெருமையைச் சொல்கிறது –
சீர் -ஞானாதிகள் -சங்கராத் ஞானம் விச்சேத்
கிளர் தெய்வமாய்க்-அதிகார அனுரூபமான ஞானாதிகளாலே பெரிய தேவ ஜாதியாக
கிளர்ந்து-ஸ்தோத்ரத்திலே உத்யுக்தராய்
சூழ்த்து-
விரகாலே பிரயோஜகங்களிலே சொல்லி -சூழ்ந்து -என்றுமாம் –
அமரர் துதித்தால்
ஆயுஸாலும் அதிகர் ஆனவர்கள் ஸ்துதித்தால்-
உன் தொல் புகழ் மாசூணாதே –
ஸ்வாபாவிகமாய் கர்ம ஸ்பர்சம் இல்லாமையால் உஜ்ஜவலமான உன் குணங்கள் அழக்கு ஏறாதோ-
அன்றிக்கே வாழ்த்துவர் பலர் ஆகைக்காக என்னவுமாம்
அப்போது நீ செய்தாகிலும் வாய்த்ததில்லை என்கை
இந்த நிர்வாகம் சங்கேதமே யாகிலும் சொல்லிப் போருவது ஓன்று அன்று –

—————————————————————————————————

உபய பாவனை உடையனான ப்ரஹ்மாவை வனஸ்பதி கோடியிலே நிறுத்தி -ப்ரஹ்ம பாவனை ஏக மாவேயாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மா
உத்ப்ரேஷிதனாய் ஏத்தினாலும் உன்னுடைய வை லக்ஷண்யத்துக்கு திரஸ்காரமாம் அத்தனை -என்கிறார் –
வர்த்தமான சதுர்முகன் தானாகவுமாம் –

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

மாசூணாச் சுடருடம்பாய்
ஹேய ப்ரத்ய நீகமாய் சுத்த சத்வம் ஆகையால் நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்தை உடையையாய்
மலராது குவியாது –
க்ஷய வ்ருத்திகள் இன்றிக்கே ஏக ரூபமாய் என்னுதல் –
அரும்பினை அலரை-என்னுமா போலே செவ்வி மாறாத போக்யதையைச் சொல்லுதல்
மாசூணா ஞானமாய் –
ஹேய கந்தம் இல்லாத ஞானத்தை உடையையாய்
விக்ரஹத்துக்கு ஸ்வரூப அந்யதா பாவம் இல்லை -என்கை –
மலராது குவியாது என்ற இடம் -ஞானத்துக்கும் விக்ரஹத்துக்கும் பொது
முழுதுமாய் முழுதியன்றாய் –
அனுக்தமான குண விபூதி யாதிகளை உடையையாய் எல்லா வற்றையும் நிர்வஹிக்கிறவனே –
வரம்பின்றி முழுது இயன்றாய் -என்கிற இடத்தில் இவற்றை உடையவனே -என்கிறது -இங்கு இத்தை நிர்வஹிக்கிறவனே என்கிறது
மாசூணா வான் கோலத்தமரர் கோன்-
அசங்குசிதமாய் சமக்ரமாய் இருந்துள்ள ஞானாதி பூஷணங்களை உடையனான ப்ரஹ்மா என்னுதல்
கீழ்ச் சொன்ன ருத்ராதிகளால் உண்டான ஆதிக்யத்தால் ப்ரஹ்மா தன்னைச் சொல்லுதல்
வழிப்பட்டால் –
ஸ்தோத்ர ரூப பரிசரியையில் இழிந்தால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–
ஹேய ப்ரத்ய நீகமான உன் திருவடிகளின் விஸ்திருதமான ஒளி திரஸ்க்ருதம் ஆகாதோ
தம்முடைய சேஷத்வ அனுரூபமாக திருவடிகள் என்று இ றே திரு மேனியைச் சொல்லுவது –

————————————————————————————————–

இந்த மேன்மையும் விளாக் குலை கொள்ளும் ஆஸ்ரித வாத்சல்யத்தை அருளிச் செய்கிறார் –

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
அநேக காரியங்களில் ஏவா நின்றாலும் மழுங்கக் கடவது அன்றிக்கே எதிரிகள் மேலே படப்பட கூர்மை மிகா நின்றுள்ள வாயை உடைய திரு வாழியை –
வை -கூர்மை /நிதி -வாய் -நுனி என்றுமாம்
ஒரு வினை செய்ய வேண்டா -இச் சேர்த்தியே அமையும் என்னும் படி தர்ச நீயமாம் படி வல வருகே உடையையாய் –
வளத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்ன வேண்டும்படி இருக்கை –
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
ஆனையினுடைய ஆர்த்த த்வனி செவிப் பட்டவாறே கையில் திரு வாழியையும் மறந்து மதுவின் கரையிலே த்வரித்துக் கொண்டு வந்தான் –
இப்படி செய்ய வேண்டிற்று துக்க நிவ்ருத்தி மாத்திரமே யன்றிக்கே-தொழுதேனாக வல்லேனே என்று இருக்குமவன் என்கை –
காதல் களிறு -காதலே நிரூபகமாய் இருக்கை –
அளிப்பான் -அதின் கையில் பூ செவ்வி அழியாமே திருவடிகளிலே இடுவித்துக் கொள்ளுகைக்காக –
புள் ஊர்ந்து -நினைவுக்கும் அவ்வருகே போக வல்ல வேகம் உடையவனை குழை ச் சரக்காம் படி திருவடிகளாலே ப்ரேரித்து கொண்டு வந்தபடி
அவ்விடாய் தம்மதாய்-தமக்கு உதவ வந்து தோற்றினனாய் இருக்கிற படி
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
இடைவிடாமல் ஸ்ருஷ்ட்டி யாதிகள் பண்ணா நின்றாலும் அமோகமான சங்கல்ப ஞானத்தையே சாதனமாகக் கொண்டு
திரு நாபீ கமலம் அடியாக பிறந்த லோகத்தில் அடிமை யானார்க்கு
தொழும் பாயர்க்கு அளித்தால்
தொழும்பு -அடிமை -ஆயார்க்கு -ஆனார்க்கு -சம்சாரத்தில் நித்ய ஸூ ரிகள் பரிமாற்றத்தை உடையவர்க்கு என்கை
அளித்தால் -ரஷித்தால்
உன் சுடர்ச் சோதி மறையாதே –
மதுவின் கரையிலே அரை குலைய தலை குலைய வந்தாய் என்கிற நிரவதிக தேஜஸ் ஸூ மறையாதோ-
சிற்றாட் கொண்டான் மறையும் மறையும் என்று அநு பாஷித்தான் –

—————————————————————————————————

ப்ரஹ்மாதிகள் உன்னை ஈஸ்வரன் என்று அறிந்து ஏத்த இருக்கும் இது விஸ்மாயமோ என்கிறார் –

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
துஷ் பிரக்ருதிகளுக்கு மறையாய் -சத் ப்ரக்ருதிகளுக்கு வேதமாய் இருக்கும் –
வேதங்களில் சர்வாதிகனாகவும் நிரதிசய போக்யனாகவும் பிரகாசிக்கிறவனே –
முறையால்
ஸ் வாமித்வ ப்ராப்தியாலே என்னுதல்-பர்யாயேண-என்னுதல் –
இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
விஷம ஸ்ருஷ்டிக்கு அடியானை கர்ம விசேஷம் இ றே சேதனர் பண்ணி வைப்பது –
யவ்கபத்யம் அனுக்ரஹ கார்யம் என்கை –
போக மோக்ஷ சூன்யமாக கிடந்த அன்று இவற்றை உண்டாக்கி ஸ்ருஷ்டமான ஜகத்தை பிரளயம் கொள்ள மஹா வராஹமாய் இடந்து
திரிய பிரளயம் வர எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கி பின்னை வெளிநாடு காண உமிழ்ந்து மஹா பலி போல்வார்
பருந்து இறாயுமா போலே அபஹரிக்கில் எல்லை நடந்து மீட்டுக் கொண்டாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்-
பிறையை ஸீரோ பூஷணமாக உடையவன் ஆகையால் போக பிரதன் ஆகையும்-ஜடாதரன் ஆகையால் அந்த போகம் தபஸாலே சாத்தியம் என்கையும்-
சதுர்முகோ ஜாயதே -என்று உன்னாலே ஸ்ருஷ்டனாய் ருத்ரனுக்கும் கூட ஜனகனான ப்ரஹ்மாவும் ஷேத்ரஞ்ஞதயா ஸம்ப்ரதிபன்னனான இந்திரனும்
இறையாதல் அறிந்து -ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –
நீ ஸ்வாமி என்று அறிந்து ஏத்த அத்தாலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இது விஸ்மயமோ
உன்னாலே ஸ்ருஜ்யரான ப்ரஹ்மாதிகள் உன்னை ஸ்தோத்ரம் பண்ண நீ இருக்கும் இருப்பு உனக்கு அவத்யம் அன்றோ –

——————————————————————————————————–

நிகமத்தில் இது திரு வாய் மொழியைக் கற்றாரை உஜ்ஜீவிப்பித்து பின்னை சாம்சாரிக துக்கத்தை
எல்லாம் இது திருவாய் மொழி தானே போக்கும் என்கிறார் –

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-

வியப்பாய வியப்பில்லா –
புறம்பு விஸ்மய நீயங்கள் ஆனவை இவ்விஷயத்தில் விஸ்மய நீயங்கள் இன்றிக்கே இருக்கிற படி –
தங்களுடைய அங்கீகாரம் புறம்பு உள்ளார்க்கு ஏற்றமாய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகள் ஸ்தோத்ரம் பண்ணுகிறது
இவன் பெருமைக்கு ஆச்சர்யம் இன்றிக்கே இருக்கை-
மெய்ஜ்ஞான வேதியனை-
இவனைச் சொல்லும் போது சொல்லிற்று எல்லாம் மெய்யாம்படி இருக்கிற யதா பூத வாதியான வேதமே சொல்ல வேண்டாவோ
மெய்யான ஞானத்தை பிறப்பிக்கிற வேத ப்ரதிபாத்யனை
சயப்புகழார் பலர் வாழும் –
சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் இருக்கை -ஆழ்வார் உடன் சாம்யா பன்னராய் இருக்கை –
இப்படி இருப்பார் அநேகர் ஆழ்வாரை அனுபவித்து இருக்கை –
தடம் குருகூர் சடகோபன்-துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்-உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்
சாத்விகருக்கு அனுபவிக்கைக்கு பரப்பு உடைத்தான் திரு நகரி –
துயக்காவது -மனம் திரிபு -சம்சய விபர்யய ரஹிதமான சம்யக் ஞானத்தால் கண்டு ப்ரீதி பிரேரிதரராய் தொழுது
அந்த ப்ரீதி வழிந்த சொல்லான ஆயிரத்திலும் இப்பத்து
ஒலி முந்நீர் ஞாலத்தே –
ஒலியை உடைய முந்நீரை உடைய பூமியிலே -அசன்னேவ -என்று அஸத் கல்பரானவர்களை
சந்த மேனம் ததோ விது-என்று உஜ்ஜீவிப்பித்து பின்னை தத் விரோதியான ஜன்மத்தைப் போக்கும் –

————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-1–

August 20, 2016

திருமலையின் போக்யதையை அனுபவித்த ஆழ்வார் -வேதங்கள் வைதிக புருஷர்கள் ப்ரஹ்ம ருத்ரர்கள் தொடக்கமானவருடைய
ஸ்தோத்ராதிகளுக்கு அபூமியாய் -ஸமாச்ரிதர்க்கு அத்யந்த பராதீனராய் -வடமா மலை யுச்சி என்னுமா போலே
திருமலைக்கு அவயவமாய் இருபத்தொரு கற்பக தரு போலே இருக்கிற அழகருடைய
அபரிச்சேத்யமான ஸுந்தர்யாதிகளை அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார் –

——————————————————————————————————

அழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திரு அணிகலன்களும் உண்டான ஸூ கடித்த்வத்தை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

முடிச்சோதி என்று தொடங்கி-உன்னுடைய திரு முகத்தின் ஒளி முடிச்ச சோதியாய் விகசிதம் யாயிற்றோ –
திருவடிகளின் அழகு ஆசன பத்மமாமாயக் கொண்டு விகசிதம் யாயிற்றோ
படி -என்று தொடங்கி உன்னுடைய கடிப் பிரதேசத்தின் விலக்ஷணமான ஒளி ஸ்வாபாவிகமான அழகை
உடைத்தான திருப்பி பீதாம்பரமாயும் மற்றும் உள்ள திரு அணிகலன்களாயும் திரு மேனியில் கலந்ததோ
பிராட்டியும் நீயும் கூட எனக்கு அருளிச் செய்ய வேணும் –

——————————————————————————————————–

அழகருடைய அழகுக்கு ஒப்பாக போரு வன இல்லாமையால் லோகத்தார் பண்ணும் ஸ்தோத்ரம் அங்குத்தைக்கு
குண தானம் பண்ண மாட்டாத படி அத்யாவஹமாம் அத்தனை என்கிறார் –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-

சொல்லில் -உன்னோடு கூடுவன உரைத்து -சத்ருசங்கள்- மிகவும் இருந்தபடி ஒழிய
தோற்றிற்று சொல்லுகையாலே அவாசகமாய்-அவாத்யஹமுமாம் –
சிலவற்றை த்ருஷ்டாந்தமாக சொல்லி ஸ்துதிக்கும் ஸ்தோத்ரத்துக்கும் நிலம் அல்லாத அழகின் மிகுதியை உடையவனே –

————————————————————————————————————–

எம்முடைய படி வேறு சிலர்க்கு பேச நிலம் அல்லவாகில் நீர் பேசினாலோ என்னில் -எனக்கு முடியாது என்கிறார் –

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-

பரஞ்சோதி நீயே -அழகாலே எல்லாரிலும் மேம்பட்டு மிக்கு இருக்கையாலே
நின் இகழ்ந்து பின் என்று தொடங்கி -உன்னைத் தவிர மாற்று ஒரு பரஞ்சோதி இல்லாமையால் ஒப்புக்கு இன்றிக்கே வர்த்தியா நிற்கையாலும் பரஞ்சோதியாய்
இப்பிரபஞ்சத்தை எல்லாம் உன் சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்டிக்கையாலே ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான உத்க்ருஷ்ட தேஜஸையும்
உடையையாய் ஆஸ்ரித ஸூ லபன் ஆனவனே -பண்பு -படி –

————————————————————————————————————-

ஸமஸ்த சேதனரும் அத்யந்த வி லஷணனாய் உபநிஷத் ரகஸ்யனான உன்னை இழந்தே போம் அத்தனை ஆகாதே
என்று கொண்டு அழகர் உடைய திரு அழகின் மிகுதி சொல்லுவிக்கச் சொல்லுகிறார் –

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-

மாட்டாதே -என்று தொடங்கி -ப்ரஹ்மாதி பீபீலிக அந்தமான் ஸமஸ்த சேதனரும் பிரகிருதி சம்பந்த ப்ரயுக்தமான
தங்கள் அஞ்ஞானத்தாலே நிதி போலே ஸ்லாக்கியமாய் நிரதிசய போக்யமாய் இருந்துள்ள உன்னுடைய திருவடியை அனுசந்திக்கைக்கு
அறிவுடையார் இன்றிக்கே இருக்கச் செய்தே-அதுக்கு மேலே அறிவைக் கெடுக்கும் ஸ்வ பாவமாய் ஒன்றோடு ஓன்று சேராதே
பாஹ்ய சமய புத்தியை பிரவர்த்திப்பித்தாய் –
மலர்த்துழாய்-என்று தொடங்கி பேர் அளவுடைய உன்னுடைய திரு உள்ளத்தையும் கூட
அந்நிய பரமாக்க வல்ல திருத்த துழாய் முதலான போக்கிய ஜாதத்தாலே நீ ப்ரவண சித்தனனாய் –

———————————————————————————————————-

அஞ்ஞமான லோகம் மாட்டாதாகில் நீர் பேசினாலோ என்று எம்பெருமான் அருளிச் செய்ய –
நிஸ் ஸீமமான குண விபூதி யாதிகளை உடைய உன்னை என்னால் முடிய பேச முடியாது என்கிறார் –

வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-

யத்ன ஸித்தம் அன்றிக்கே சகஜமாய் உள்ள நிரதிசயதம பல ரூபமாய் விகஸ்வர தேஜோ ரூபமான திருவடியை உடையையாய்
யத்நேந சம்பாதிக்க வேண்டாதே-சகஜமான ஞானத்தையும் மற்றும் எல்லையில்லாத குண விபூதியாதி களையும் உடையையாய்க்
கால த்ரயத்தாலும் லோகத்தை ஒரு படியே ரஷிக்கிற உன்னுடைய குணங்களை -உலக்க -முடிய –

———————————————————————————————————-

வேதங்கள் எங்கனே நம்மை ஸ்துக்கிற படி -அப்படியே நீரும் நம்மை ஸ்துதிப்பீர் என்ன –
அவையும் உன்னை ஸ்துதிக்கையில் உபக்ராந்தமாய் நிவ்ருத்தமான அத்தனை -இங்கனே இருக்கிற உன்னை
அளவில்லாத நான் ஸ்துதிக்க விரகு உண்டோ என்கிறார் –

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-

லோகம் தோறும் தர தம பாவேந உண்டான அத்யேதாக்களுக்கு ஈடாக சிறுத்தும் பெருத்தும் இருக்கிற ப்ரதிபாதிகமான வேதங்கள்
எல்லாம் உன்னுடைய குண ஏக தேச விஷயம் ஆயிற்று ஒழிய புறம்பு போயிற்று இல்லை –
வேதங்கள் உன்னுடைய கல்யாண குண விஷயம் ஆயிற்று என்னும் இத்தனை யல்லது உன்னை உள்ளபடி
எல்லாம் அறிந்து பேசிற்று என்ன முடியாது என்றுமாம் –
பூவை உடைத்தாய் தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி மிகா நின்றுள்ள திருத் துழாயை திரு முடியில் உடையையாய்
நிரதிசய போகியையான பெரிய பிராட்டியார் நித்ய அனுபவம் பண்ணி வாழ்கிற திரு மார்பை உடையவனே –

—————————————————————————————————

இருந்ததே குடியாக -எல்லாரும் ஏத்துதல் -அதிக ஞானரான ருத்ராதிகள் ஏத்துதல் செய்தாலோ என்னில் –
த்வத் ஸ்ருஷ்டனான ப்ரஹ்மாவாலே ஸ்ருஷ்டராகையாலே சங்குசித ஞானரானவர்களுடைய ஸ்தோத்ரமும்
உன்னுடைய கல்யாண குணங்களுக்கு திரஸ்காரத்தைப் பண்ணும் அத்தனை -என்கிறார் –

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-

ஒருவர் ஏத்தின இடம் ஒருவர் ஏத்தாதே -சர்வாதிகாரமாக ஏத்தினாலும் ஏத்த முடியாதே
ஏகார்ணவத்திலே சயா நயனாய்க் கொண்டு -லோகங்களையும் படை என்று கொண்டு சதுர்முகனை உன் சங்கல்பத்தாலே முதலிலே படைத்தவனே
மிக்கு இருந்துள்ள ஞானாதி குணங்களை உடையரான ருத்ர முகரான தேவர்கள் ஸ்தோத்ர கரண சக்தியோடு உத்யுக்தராய்
ஒரோ பிரயோஜனங்களிலே உன்னுடைய குண சேஷ்டிதாதிகள் எல்லாம் அகப்படும்படி விரகுகளாலே கால தத்வம் உள்ளதனையும்
நின்று ஸ்தோத்ரம் பண்ணினால் -சூழ்ந்து -சூழ்ந்து என்னவுமாம் –

—————————————————————————————————-

உபய பாவனை உடையனான ப்ரஹ்மாவை வனஸ்பதி கோடியிலே நிறுத்தி அதிசயித ஞானனான
உத்ப்ரேஷிதனான ப்ரஹ்மா ஏத்தினாலும் உன்னுடைய வை லக்ஷண்யத்துக்கு திரஸ்காரமாம் அத்தனை -என்கிறார் –

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

ஹேய ப்ரத்ய நீகமாய் -சுத்த சத்வ மய தேஜோ ரூபமாய் சங்குசிதமாதல்-விகசிதமாதல் – செய்யாதே
நிரதிசய போக்யமாய்க் கொண்டு என்றும் ஏக ரூபமாய் இருக்கிற திரு மேனியை உடையையாய் -அவற்றை நிர்வஹிக்கும் ஸ்வபாவன் ஆனவனே –
அப்ராக்ருதமான ஞானாதி பூஷணங்களை உடையனாய் இருப்பான் ஓர் அமரர் கோன் உண்டாய் அவன் உன் திருவடிகளிலே
ஸ்தோத்ர ரூப பரிசரியைகளைப் பண்ணினால் சதுர் முகன் தான் ஆகவுமாம்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி-ஹேய பிரதி படமான உன்னுடைய திருவடிகளின் அழகு –

——————————————————————————————————

எம்பெருமானுடைய ஆஸ்ரித வாத்சல்யத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்கிறார் –

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

மழுங்காத கூர்மையை உடைய நேமியோடு கூடின திரு வாழியை தர்ச நீயமாம் படி வலவருகே தரியா நின்று கொண்டு
தொழ வேணும் என்னும் காதலை உடைய ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரக்ஷித்து அருளுகைக்காக
பெரிய திருவடியை ப்ரேரித்து நடத்திக் கொண்டு தோற்றினாயே-
அநேக கார்யங்களிலே பிரயோகித்தாலும் மழுங்கக் கடவது அன்றிக்கே மிகவும் உஜ்ஜவலமாகக் கடைவதான
உன்னுடைய சங்கல்ப ரூப ஞானத்தையே சாதனமாகக் கொண்டு
திரு நாபீ கமலத்தை அடியாக உடைய சம்சாரத்திலே அடிமை யானார்க்கு ரக்ஷை பண்ணினால்
பெரு முதலியாய் இருந்து வைத்து திருவடிகளை ஆச்ரயித்தார்க்கு தானே தடுமாறி கொண்டு வந்து உதவும் என்னும்
இவ் வழகிய தேஜஸ் ஸை இழந்தாய் ஆகாதே -தொழும்பு -அடிமை / ஆயார் -ஆனார் –

——————————————————————————————————–

வேதைக சமதி கம்யனாய் சர்வேஸ்வரனாய் இருந்த உனக்கு த்வத் த்ருஷ்டராய் உன்னாலே லப்த ஞானரான
ப்ரஹ்மாதிகள் ஈஸ்வரன் என்று அறிந்து ஏத்த இருக்கும் இது விஸ்மயமோ என்கிறார் –

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-

அநாஸ்ரிதற்கு தோற்றாமே ஆஸ்ரிதற்கு காட்டும் ஸ்வபாவமான வேத பிரதி பாத்யமான நிரதிசய யோக்கியதையை உடையையாய்
ஸ்வாமித்வ ப்ராப்தியாலே இவ்வுலகத்துக்கு ஸ்ருஷ்டியாதி உபகாரங்களை பண்ணினவனே –

———————————————————————————————————–

நிகமத்தில் இது திரு வாய் மொழியைக் கற்றாரை உஜ்ஜீவிப்பித்து பின்னை சாம்சாரிக துக்கத்தை
எல்லாம் இது திருவாய் மொழி தானே போக்கும் என்கிறார் –

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-

வேறு ஒரு ஆஸ்ரயத்தில் கண்டதாகில் விஸ்மயமாம் படி இருக்குமவை எல்லாம் இங்கே கண்டதாகில் விஸ்மயம் இல்லாத படியை உடையனாய்
யதாபூத வாதியான வேத ப்ரதிபாத்யனாய் உள்ளவனை -சயப் புகழ் -சம்சாரத்தை வென்ற புகழ்
துயக்கின்றி-சம்சய விபர்யய அஞ்ஞானங்கள் இல்லாத படி –

—————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-10-

August 19, 2016

எம்மா வீட்டில் -ஆழ்வார் தாம் அபேக்ஷித்து -எம்பெருமானும் தந்து அருள கடவனாக இசைந்த புருஷார்த்தத்தை –
இங்கே இவ்வுடம்போடே பெற வேணும் -என்று தாம் அபேக்ஷிக்க -எம்பெருமானும் இவருக்கு அடிமையில் பிறந்த விடாய்க்கு ஈடாக –
அடிமை கொள்ளுகைக்காக ஈடாக -திரு மலையைக் காட்டி அருளக் கண்டு அதி ப்ரீதராய்
இனி அடிமை தான் வேணுமோ -திருமலை தானே எனக்கு பரம ப்ராப்யம் என்கிறார் –

——————————————————————————————————————

திருமலையை பிராபிக்கையே நிரதிசய புருஷார்த்தம் என்கிறார் –

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-

கரண பாடவம் கெடுவதற்கு முன்னே திருமலை யோட்டை சம்பந்தத்தால் பிறந்த அழகாலே ஆச்சர்ய பூதனானவன்
போக்யதையின் மிகுதியால் விடாதே இருக்கிற கோயிலாய் நில மிதியால் வளரா நின்று வைத்து
நாள் தோறும் இளகிப் பதியா நின்ற திருகி சோலை சூழ்ந்து இருந்துள்ள திரு மலையை
திருமலையை ஒழிய இருக்கும் இருப்பாகிற அநர்த்த பாகிகள் அன்றிக்கே அத்தை பிராபிக்கையே சதிர் –

———————————————————————————————————————

திருமலையில் காட்டிலும் அத்தோடு சேர்ந்த திருப்பதியை அனுபவிக்கையே பரம பிரயோஜனம் -என்கிறார் –

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-

ஆத்ம குணங்களையும் வடிவு அழகையும் உடைய ஸ்த்ரீகள் உங்கள் பக்கல் பண்ணும் ப்ராவண்யத்தை ஜென்ம பிரயோஜனமாக நினையாதே
கம்பீர த்வனியை உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஏந்தின அழகாலே -அழகர் -என்னும் திரு நாமத்தை உடையவர்க்கு ஸ்ப்ருஹணீயமான கோயில்
சந்திரனுக்கு வருந்திப் போக வேண்டும் படி யாய் உயர்ந்து இருக்கை
ஏத்தி உஜ்ஜீவிக்கை
மாலிரும் சோலை யாகிற பதியை-என்றுமாம்

————————————————————————————————————————

திருமலையைச் சார்ந்த அயன் மலையை பிராபிக்கையே செய்ய அடுப்பது என்கிறார் –

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-

வர்ஷூகமான மேகம் போலே ஜல ஸ்த்தல விபாகம் இன்றிக்கே சர்வ ஸ்வதானம் பண்ணி வர்த்திக்கிற அழகருடைய கோயில்
போக்யத்தையாலும் இருட்சியாலும் புக்கார் மிகவும் மதி மயங்கும் படியான திருச் சோலை –

————————————————————————————————————————

கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதர் ஆனவர்கள் அடிமை செய்து வாழ்கைக்கு ஈடாம் படி சர்வேஸ்வரன் வர்த்தித்து
அருளுகிற திரு மலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசமான படி என்கிறார் –

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

ஆஸ்ரித ஆபத் சகனான கிருஷ்ணன் தன ஐஸ்வர்யத்தோடே உறைகிற கோயில்
மேக பதத்தில் காட்டிலும் உயர்ந்து அறப் பெருத்துள்ள திருச் சோலையை உடைத்தான திருமலை –

——————————————————————————————————————–

திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார் –

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

மிக்கு இருந்துள்ள பலத்தால் இதர புருஷார்த்த ப்ராவண்யமான பாபத்தை வர்த்திப்பியாதே
ஆஸ்ரித பரித்ராணமான பரம தர்மத்தில் மூளும் திரு வாழியை திவ்ய ஆயுதமாக உடையவனுக்கு ஸ்தானமாய்
ரமணீயமான சுனைகளாலே சூழப் பட்ட திரு மலையின் –

———————————————————————————————————————-

திருமலைக்கு போகக் கடவ மார்க்க சிந்தனை நல்லது என்கிறார் –

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-

இதர புருஷார்த்தங்களில் பிரவணர் ஆகாதே இதுவே நிரதிசய புருஷார்த்தம் என்று நினையுங்கோள் –
எட்டாத படி உறியில் இருந்த வெண்ணெய்யை அமுது செய்து அச் சுவடு அழியாமே வந்து நின்று அருளுகிற கிருஷ்ணனுடைய
கோயிலாய் நில மிதியாலே திர்யக்குகளும் கூட தம் தாமுடைய இனங்களை பிரியாத படியான திருமலைக்குப் போம் வழி
நெஞ்சிலே பட அத்தை நினையா நிற்கை
நெறி பட நினைகை-மிகவும் நினைக்கை என்றுமாம்-

———————————————————————————————————————-

திருமலை என்று அனுகூலிக்கையே வென்றி என்கிறார் –

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

இது புருஷார்த்தம் என்று நினையுங்கோள் -இதர புருஷார்த்தம் ஆகிற நரகத்தில் புகாதே-
ஸ்ரீ வராஹமாய் ஜகத்தை எடுத்து அருளினவனைக் காணப் பெற்றிலோம் என்னாதே-அவன் நித்ய வாஸம் பண்ணுகிற கோயிலாய்
தன் கோடுகளில் தேய்ந்து களங்கம் போம்படி சந்திரன் வந்து சேருகிற திருமலையை அனுகூலனாய்க் கொண்டு சேர்ந்து –

——————————————————————————————————————-

திருமலையைச் சென்று நிரந்தரமாக வலம் செய்கையே வழக்கு என்கிறார் –

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

நல்ல பலன்களை சம்பாதித்து ஷூத்ர விஷய ப்ராவண்யத்தாலே அந்த பலன்களை வ்யர்த்தம் ஆக்காதே
நம்மோடு ஓக்கத் திரு மலையை வலம் செய்யா நின்றுள்ள ஆச்சர்ய பூதனான கிருஷ்ணனுடைய கோயில்
வலம் செய்யும் பலதன் என்றுமாம்
எம்பெருமானோடு ஓக்க வலம் செய்யா நின்றுள்ள அயர்வறும் அமரர்களுடைய திருமலையை –

—————————————————————————————————————-

திருமலை யைத் தொழுவோம் என்று நினைக்கையே அமையும் என்று அத்யவசிக்கையே விஜய ஹேது என்கிறார் –

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

இதுவே நியாயம் என்று நினையுங்கோள் -இதர புருஷார்த்தங்களில் பிரவணராய் தலை மடாதே –
பூதனையை முடித்தவனுக்கு போக்யத்தையால் விட ஒண்ணாத படியாய் அசங்குசிதமாக வர்த்திக்கலாம் கோயில்
அழகரைப் போலே முக்தமான கஜ யூதர்கள் சேர்ந்த திருமலை

———————————————————————————————————–

பல படிகளாலும் திருமலையே பரம ப்ராப்யம் என்று உபக்ரமித்த படியே உபசம்ஹரிக்கிறார் –

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

நேர்பாடு என்று பார்த்து களவு காணுதல் -பஸ்யதோ ஹரத்தை யாதல் செய்யாதே
ஸ்ரீ கீதையாலே வேதார்த்தத்தை விரித்தவன் -வேதார்த்த பூதனான தன்னை ஆஸ்ரிதற்கு காட்டலாம் நிலம் என்று விரும்பின கோயில்
அங்கு உள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமாயே வர்த்திக்கும் படி இருக்கிற மாலிரும் சோலையாகிற நித்ய வசந்தமான திருமலையில் புகுகை பரம பிரயோஜனம்
மாதுறு மயில் -என்றது மார்த்த்வத்தை உற்ற மயில் என்னவுமாம் –

—————————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றாரை திரு வாய் மொழி தானே ஜென்மத்தை முடித்து அழகர் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் –

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

பலகாலும் ஸ்ருஷ்டிக்க விததம் ஆகா நின்றாலும் என்றேனும் ஒரு நாள் பிரயோஜனப் படும் என்று கருதி இந்த லோகத்தை
உண்டாக்கினவனுடைய கல்யாண குணங்களிலே அஞ்ஞான கந்தம் இல்லாத ஆழ்வார் தம்மில் காட்டிலும்
கேட்டார்க்குத் தெளிவு பிறக்கும்படி அருளிச் செய்த ஆயிரத்திலும் இது திரு வாய் மொழி –

————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-10-

August 19, 2016

எம்மா வீட்டில் இவர் அபேக்ஷித்த புருஷார்த்தத்தை பெறுகைக்கு திருமலையை ஆஸ்ரயிக்கிறார்-என்று ஆளவந்தார் நிர்வாகம் –
அங்கண் அன்றியே -எம்பெருமானார் -கீழ் தாம் நிஷ்கர்ஷித்த புருஷார்த்தம் -சரீர சமனாந்தரம் பரமபதத்தில் பெருமதாய் இருக்க
ஒல்லை என்றும் -காலக் கழிவு செய்யேல் என்றும் க்ரம பிராப்தி பற்றாதாராய் தவரிக்கிற இவர் படி இப்பிரக்ருதியோடே
அனுபவிக்க வேண்டும்படி இருக்கையாலே அதுக்கு ஏகாந்த தேசமாக திருமலையைக் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
-அடிமை தான் வேணுமோ -திருமலை தானே எனக்கு பரம பிராப்யம்-என்கிறார் –

—————————————————————————————————————————–

திருமலையை பிராபிக்கையே நிரதிசய புருஷார்த்தம் என்கிறார் –

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்-
கிளாரா நின்றுள்ள ஒளியை உடைத்த யவ்வனம் கழிவதற்கு முன்பே கரண படவம் உள்ள போதே –
பால்யம் போய் யவ்வனம் தலை வைக்கிற அளவிலே யவ்வனம் விஷயத்திலே மூட்டி நசிப்பதற்கு முன்பே என்றுமாம் –
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே சதா என்னக் கடவது இ றே
கோ ஜா நீதே கதா கஸ்ய ம்ருத்யு காலோ பவிஷ்யதி யுவைவதர்ம புத்திஸ் ஸ் யா தே கோ அநித்தியம் ஹி ஜீவிதம்
திருமலையை ஆஸ்ரயிப்போம் -என்ற பிறந்த ஸ்ரத்தை மாளுவதற்கு முன்னே என்றுமாம் –
வளர் ஒளி மாயோன்
ஏக ரூபமாக பிராமண பிரசித்தனாய் இருக்கச் செய்தே-திருமலையின் நில மிதியாலே வளரா நின்றுள்ள அழகை உடைய ஆச்சர்ய புதன்
மருவிய கோயில்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே விரும்பி வர்த்திக்கிற தேசம் –
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
வளரா நிற்கச் செய்தே இளகிப் பதியா நின்ற திருச் சோலை –
நாள் செல்லச் செல்ல கீழ் நோக்கி வயசு ஸூ புகா நிற்கை
முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருக்குமா போலே –
அடிமை செய்கிறவர்கள் கிளர் ஓளி இளமை உடையவர்கள் -அடிமை கொள்ளுகிறவன் –வளர் ஓளி மாயோன்
தேசம் வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –
தளர்வாகிறது திருமலைக்கு புறம்பாகை-
அந்த அநர்த்தம் இன்றிக்கே -திருமலையை அபாஸ்ரயமாக சென்று புகுவதுவே சதிர் –
இதர விஷயங்களை பற்றுகை இளிம்பு-சா ஹாநி

————————————————————————————————————-

திருமலை தான் வேணுமோ -அத்தோடு சேர்ந்த திருப்பதியை பரம பிரயோஜனம் என்கிறார் –

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-

சதிரிள மடவார் –
கிளர் ஓளி இளமையை உடையவர்களை இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள் –
கலவியால் வந்த ரசம் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க த்ரவ்யத்து அளவிலே உடம்பு கொடுக்குமவர்கள் –
இவ்வஞ்ஞானம் ஆகிற அநாத்ம குணத்தைக் கண்டு -அல்லென் -என்ன ஒண்ணாத படி பருவத்தை இட்டு மருட்டுவர்கள்
மடவார் -தாழ்ச்சியை மதியாது
ஸ்த்ரீகள் பக்கல் உங்களுக்கு உண்டான ப்ராவண்யத்தை பிரயோஜனமாக நினையாதே -என்னுதல்
அவர்கள் பிரவணை களாக பாவிக்கும் அத்தை மதியாதே என்னுதல்
பிரயோஜனம் இல்லாமையே அன்று -மேல் நரகம் -இங்கு பிறர் நாக்கு வளைக்கை
பக்தாநாம் தவம் -என்று நிரதிசய போக்யமாம் இருக்கும் விஷயம் அன்றே
அதிர்குரல் சங்கத்து அழகர்-
தன்னோட்டை அனுபவத்தால் முக்தர் சாம கானம் பண்ணுமா போலே முழங்கா நிற்ற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
கையிலே உடையவர் ஆகையால் வந்த அழகை உடையராகை
தம் கோயில்-
என்னது என்று அவன் திரு வவதரித்து வர்த்திக்கிற தேசம்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
சந்திரனுக்கும் தவழ்ந்து போக வேண்டும் படி உயர்ந்து இருக்கை
மாலிரும் சோலை யாகிற பத்தி என்றுமாம்
பதியது வேத்தி எழுவது பயனே
தொழுது எழு என்று தம்மைப் போலே என்று இருக்கிறார்
இதுவே பிரயோஜனம் -அல்லாதது பிரயோஜன சூன்யம் –

—————————————————————————————————————-

திருமலையைச் சார்ந்த அயன் மலையை பிராபிக்கையே கர்த்தவ்யம் என்கிறார் –

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-

பயனல்ல செய்து பயனில்லை-
பிரயோஜன சூன்யம் ஆனவற்றை செய்து பிரயோஜனம் இல்லை
செயலும் பயனும் இரண்டும் பிரயோஜனமாயிற்று தாம் பற்றின விஷயம் இருப்பது
ஸூ ஸூ கம் கர்த்தும் -என்னக் கடவது இ றே
சாதன திசையிலும் துக்க ரூபமாய் -பல வேளையிலும் துக்க மிஸ்ரமாய் இருக்கிற ஸ்வர்க்க தத் சாதனங்களை யாயிற்று இவர் நினைக்கிறது –
நெஞ்சே-
விஷயாந்தரங்களுக்கும் இவ்விஷயத்துக்கும் உண்டான நெடு வாசி உனக்கு அனுபூதம் இ றே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
வர்ஷூக மான மேகம் போலே ஜல ஸ்த்தல விபாகம் இன்றிக்கே சர்வ ஸ் வதானம் பண்ணி வர்த்திக்கிற தேசம் –
வர்ஷூக கலாவஹம் போலே இருக்கிற திரு மேனியை உடையவனாய் அவ்வடிவழகை வழங்கிக் கொண்டு
நிரந்தர வாசம் பண்ணுகிற கோயில் என்றுமாம் -தமக்கு ப்ராப்ய பிராப்பகங்கள் ஒருவனேயாய் இருக்கிற படி
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை-
போக்யதையாலும் இருட்சியாலும் புக்கார் மிகவும் மதி மயங்கும் படியான திருச் சோலை
ப்ராப்ய பூமியிலே கலக்கம் ஆகையால் ப்ராப்ய அந்தர்கதம் இ றே
அயன்மலை யடைவது அது கருமமே –
திருமலை யோட்டை சம்பந்தத்தையே தமக்கு பேராக உடைய மலையை பிறப்பிக்கும் இதுவே பிராப்தம் என்கிறார்-

——————————————————————————————————————

ஆஸ்ரிதர் தங்கள் கர்மத்தை போக்கி அடிமை செய்து உஜ்ஜீவிக்கைக்காக ரக்ஷகன் வந்து
நித்ய வாஸம் பண்ணுகிற திருமலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசம் என்கிறார்-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே-
பிரபலமான கர்ம பாசத்தைப் போக்கி அடிமை செய்து உஜ்ஜீவிக்கைக்காக
பரித்ராணாயா ஸாதூனாம் -என்கிறபடியே விரோதிகளை போக்கி உஜ்ஜீவிப்பிக்கை இ றே அவதார பிரயோஜனம்
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
கோப கோபீ ஜன சங்குலம் அதீவார்த்தம் -என்று இடையரும் இடைச்சிகளும் நோவு பட -ஒரு மலையை எடுத்து நோக்கினவன்
அந்த ஐஸ்வர்யத்தோடே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கோயில்
பெரு மலை -பஞ்ச லக்ஷம் குடியும் நிழலிலே ஒதுங்கலாம் படி இ றே மலையின் பரப்பு
பீடு -பெருமை -அதாகிறது ஐஸ்வர்யம் –
ஒரு மலையை ஆதேயமாகக் கொண்டு ரஷித்தவன்-ஒரு மலையை ஆதாரமாகக் கொண்டு நோக்குவோம் என்று நிற்கிற இடம் –
வருமழை தவழும் மாலிரும் சோலை
ஊருக்கு மழை இரண்டு -நின்று நிரந்தரமாக வர்ஷிக்கும் மழையும் -கறுப்பது வெளுப்பதுமாய் வர்ஷிக்கும் மழையும் –
மழை -மேகம்
தவழும் -சமுத்வஹந்தஸ் சலிலாதிப்பாராம்-என்று கர்ப்பிணிகள் சுரம் ஏறுமா போலே யாயிற்று மேகங்கள் சஞ்சரிப்பது
மால் என்று பெருமை / இருமை என்றும் பெருமை -இத்தால் ஓங்கிப் பரந்த சோலையை உடைத்த திருமலை -என்கை –
திருமலை யதுவே யடைவது திறமே –
திருமலையை ஆஸ்ரயிக்கும் அதுவே செய்யக் கடவ பிரகாரம் -திறம் -பிரகாரம் –

—————————————————————————————————————–

திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார் –

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது-
திறம் – ஸமூஹம்-திறள் / வலம் -பலம் –
திரண்ட பலத்தாலே பிரயோஜ நான்தர பிராவண்யம் ஆகிற பாபத்தை கூடு பூரியாதே –
அற முயலாழிப் படையவன் கோயில்-
அறத்திலே முயலா நின்றுள்ள திரு வாழியை ஆயுதமாக உடையவன் வர்த்திக்கிற தேசம் –
அற முயலாழி-சர்வேஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனாகை –
லஷ்மணஸ்ய ச தீமத-என்னக் கடவது இ றே
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை-
ரமணீயம் பிரசந்நாம்பு சன்மனுஷ்ய மநோ யதோ-என்கிறபடியே தெளிந்து மநோ ஹரமாய் இருக்கை
-அதாகிறது இவர் திரு உள்ளம் போலே இருக்கை –
புறமலை சாரப் போவது கிறியே –
அயன் மலையைச் சூழ்ந்த புற மலையைக் கிட்டப் போமதுவே நல் விரகு என்கிறார் –
கிறியாவது -விரகு -அதாவது அஸாத்யமானத்தை அயத்நேந லபிக்கை-

——————————————————————————————————————–

திருமலைக்கு போம் மார்க்க சிந்தனையே நல் விரகு என்கிறார் –

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-

கிறியென நினைமின் –
நல் விரகு என்று புத்தி பண்ணுங்கோள்
கீழ்மை செய்யாதே-
இதுக்கு புறம்பான பிரயோஜனங்களில் பிரவணர் ஆகாதே –
கீழ்மை யாவது -பகவத் வியதிரிக்தங்களில் ப்ராவண்யம் இ றே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்-
உறியில் சேமித்து வைத்த -வெண்ணெய்யைக் குறி அழியாமே அமுது செய்த கிருஷ்ணன் அச் சுவடு அழியாமே வந்து நிற்கிற தேசம் –
இத்தால் அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதவன் என்கை –
மறியோடு பிணை சேர் –
மறி-என்று மான் -பிணை என்று இளமான்-மானானது தன் கன்றோடு சேர்ந்து வர்த்திக்கை –
மாலிரும் சோலை நெறி பட-
திருமலைக்கு போம் வழி நெஞ்சிலே பட -என்னுதல்
உங்கள் சத்தை உண்டாக என்னுதல் –
வதுவே நினைவது நலமே –
அத்தையே நினைக்குமது வி லக்ஷணம் -அத்தை ஒழிந்தது எல்லாம் பொல்லாதது என்கை –

———————————————————————————————————————

திருமலை என்று அனுகூலிக்கையே பிரபலம் என்கிறார் –

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

நலமென நினைமின் –
இத்தை வி லக்ஷணமான புருஷார்த்தம் என்று நினையுங்கோள்
நரகழுந்தாதே
இதற்கு புறம்பு ஆகை யாகிற நரகத்திலே புக்கு விழாதே
நிரயோ யஸ் த்வயா வி நா –ஏதைவ நிரயா-
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில் –
கல்பாதியிலே பூமியை உத்தரித்த ஆபத்சகனானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
மலமறு மதி சேர் மாலிரும் சோலை –
சாணையில் இட்ட மாணிக்கம் போலே -கொடு முடிகளில் தேய்ந்து ஓளி பெறா நின்றுள்ள சந்திரன் வந்து சேருகிற திரு மலை-
சம்சய ரஹிதமான ஸ்வரூப ஞானம் உண்டாம் தேசம் என்னவுமாம் –
வலமுறை எய்தி மருவுதல் வலமே —
ஸ்ரீ மதுரையைக் கிட்டின காலயவந ஜராசந்தாதி களைப் போலே அன்றியே அனுகூல முறையால் சென்று கிட்டு
அனுகூல வ்ருத்திகளை பண்ணுகையே பலவத்தரம் –
வலம் என்று வரம் என்னவுமாம் -வலம் என்னுதல் -ஸ்ரேஷ்டம் என்னுதல் –

————————————————————————————————————————

திருமலையைச் சென்று நிரந்தரமாக அனுகூலிக்கையே பிராப்தம் என்கிறார் –

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
கரண படாவத்தை உண்டாக்கி நாள் தோறும் அந்த பலத்தை இதர விஷயங்களுக்கு உறுப்பாக்கி வியர்த்தல் ஆக்காதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
தன்னையும் கொடுத்து -தன்னை அனுபவிக்கைக்கு ஈடான சக்தியையும் கொடுக்கும் ஆச்சர்ய பூதனான கிருஷ்ணன் வர்த்திக்கிற தேசம் –
ய ஆத்மதா பலதா-என்னக் கடவது இ றே
அழகர் பிராட்டிமாரோடு கூடே வலம் செய்கிற திருமலை என்றுமாம் –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை-
ராஜாக்கள் நகர சோதனைக்கு புறப்பட்டால் அந்தரங்கர் முகம் தோற்றாமல் திரியுமா போலே நித்ய ஸூரிகளும் அனுகூல வ்ருத்தி பண்ணுகிற தேசம்
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே
நாமும் திருமலையில் சென்று அவர்களோடு ஒரு கோவையாய் சர்வ காலமும் அனுகூல வ்ருத்திகளை பண்ணி
வர்த்திக்கும் இதுவே பிராப்தம் -என்கிறார் –

————————————————————————————————————-

திருமலையை தொழ நினைக்கவே அமையும் என்று அத்யாவசிக்கையே விஜய ஹேது என்கிறார் –

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

வழக்கென நினைமின் –
நான் சொல்லுகையாலே ஆப்தம் என்று இருக்கையை அன்றிக்கே இது ஸ்வரூப பிராப்தம் என்று நினையுங்கோள்
வல்வினை மூழ்காது
வ்யதிரிக்த விஷயங்களில் ப்ராவண்யம் ஆகிற வலிய பாபங்களில் புக்க அவகாஹியாதே
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
அழன்-என்று பிணமாய் -அத்தாலே பேய் என்றபடி / அழக்கொடி-என்று பேய்ப் பெண் என்றபடி
பூதனையை நிரசித்த ஸ்ரீ கிருஷ்ணன் -நம் விரோதிகளை போக்குகைக்கு விரும்பி வர்த்திகையாலே ஸ்லாக்க்யமான திருமலை
போக்யத்தையாலே விரும்பி அசங்குசிதமாக வர்த்திக்கிற தேசம் என்னவுமாம்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
செல்வாலும் இளமையாலும் அழகரோடு ஒத்த கஜ யூதர்கள் சேர்ந்து வர்த்திக்கிற தேசம்
லக்ஷனோ பேதமாய் இருபத்தொரு ஆணை நின்ற இடத்திலே ஆயிரம் ஆணைகள் வந்து சேரும் இ றே
அங்கு நிற்கிறதும் சோலை மலைக் களிறு இ றே
தொழக் கருதுவதே துணிவது சூதே –
திருமலையைத் தொழுவோம் என்று மநோ ரதித்து-அத்தையே பிரயோஜனமாக அத்யவசித்து இருக்குமதுவே விஜய ஹேது –

—————————————————————————————————–

பல படியாலும் திருமலையே பரம ப்ராப்யம் என்று உபக்ரமித்த படியே உபசம்ஹரிக்கிறார் –

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

சூதென்று களவும் சூதும் செய்யாதே
சூது -வெற்றி -நேர்பாடு என்று பார்த்து களவு காணுதல் -பஸ்யதோ ஹரணம் ஆதல் செய்யாதே ஆத்ம அபஹரணம் பண்ணுதல் –
ஈஸ்வரனே ரக்ஷகன் என்று இருக்கும் சாத்விகரை யுக்தி ஆபாசங்களாலே விச்வாஸத்தைக் குலைத்தல் செய்யாதே என்றுமாம் –
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
ஸ்ரீ கீதா முகத்தால் வேதார்த்தத்தை விஸதீ கரித்தவன் –
உபதேசத்தால் மீளாதாரை வடிவைக் காட்டி மீட்க்கைக்காக விரும்பி வர்த்திக்கிற தேசம்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
பேடையோடே கூடின மயில்கள் சேர்ந்து வர்த்திக்கிற திருமலை –
மாதென்று மார்த்தவமாய் ஸூ குமாரமான மயில் என்றுமாம்
அங்கு உள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமே யாய் வர்த்திக்கும் -என்கை
போதவிழ் மலையே புகுவது பொருளே –
பொது என்று பூவாய் -திருமலையை முட்டாக்கி இடப் பூத்துக் கிடைக்கும் அத்தனை –
நித்ய வசந்தமான திருமலையில் புகுகையே பிரயோஜனம் –

———————————————————————————————————————-

நிகமத்தில் -இது திருவாய் மொழி கற்றாரை இது தானே சம்சாரத்தை முடித்து அழகர் திருவடிகளிலே சேர்க்கும் என்கிறார் –

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்-
பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பாதே க்ருஷி பண்ணும் கார்ஷிகனைப் போலே-
கொடுத்த கரணங்களைக் கொண்டு அநர்த்தத்தை விளைத்துக் கொள்ள பின்னையும் கரணங்களைத் தந்த
ஜகத் காரண பூதனுடைய கல்யாண குணங்களிலே சேர்த்து
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
அஞ்ஞான கந்தம் இல்லாதாராய் சர்வ பிரகார வி லக்ஷணமான திரு நகரியை உடைய பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்தது
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
கேட்டார்க்குத் தம்மிலும் தெளிவைப் பிறக்கும் படி அருளிச் செய்தது –
தம்முடைய ஞானத்துக்கு ஆதி ஈஸ்வரன் -இவர்களுக்குத் தாம் அடியாக வந்தது –
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –
அருளே நிரூபகமான அழகர் திருவடிகளிலே சம்சாரத்தை முடித்துச் சேர்க்கும் –

———————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-9-

August 18, 2016

கீழில் திருவாய் மொழியில் ப்ராப்யமாகச் சொன்ன மோக்ஷத்தை இவருக்கு எம்பெருமான் கொடுப்பானாக உபக்ரமிக்க
இளைய பெருமாளும் ஸ்ரீ பரத ஆழ்வானும் போலே பகவத் பாரதந்தர்யத்தால் அல்லது செல்லாத படியை உடைய ஆழ்வார்
அப்படி அன்றிக்கே -தமக்கு -என்று ஒரு புருஷார்த்தத்தை கோலுமது-அஹம் மம என்கிற அபிமானத்துக்கு விஷயம் ஆகையால்
ஐஸ்வர்யாதிகள் ஹேயம் ஆனால் போலே ஹேயம் என்று பார்த்து அத்தை உபேக்ஷித்து
பரமபதஸ் தத்தனாய் ஸூ கியாகவும் -சம்சாரத்தில் தூக்கியாகவுமாம் இவற்றில் நிர்பந்தம் இல்லை
-உனக்கே யாய் இருக்கும் இருப்பு எனக்கு வேண்டுவது -என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அத்தை
ஈண்டு எனத் தந்து அருள வேண்டும் என்று எம்பெருமானை அபேக்ஷிக்கிறார் –

———————————————————————————————

எத்தனையேனும் உத்க்ருஷ்ட புருஷார்த்தமான ஸ்ரீ வைகுண்டத்திலும் எனக்கு அபேக்ஷை இல்லை
உன் திருவடிகளை என் தலையிலே வைக்கும் இத்தனையே வேண்டுவது என்கிறார்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வீட்டுத் திறமும்- வீட்டிடையாட்டம் / செப்பம் -சொல்லாம்
நின்-செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
உமக்குச் செய்ய வேண்டுவது என் -என்னில் அகவாய் சிவந்து புறம் கரியதாய் நிரதிசய போக்யமான
உன்னுடைய திருவடிகளை என் தலையிலே சேர்த்து அருள வேணும் –
ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்விதாய் பரம பூஜ்யமான பாத பத்மம் என்றுமாம் -ஒல்லை -ஈண்டென
கைம்மா துன்பம் கடிந்த பிரானே-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் ஆகிற மஹா உபகாரத்தை பண்ணினவனே -இது த்ருஷ்டாந்தம் –
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –
உம்முடைய அபேக்ஷிதம் செய்கைக்கு உறவு அறிய வேணும் இ றே என்னில் -நீ நாதன் -நான் அடியேன் –
உறும் என்று வேண்டுகிறேன் அல்லேன்–உகந்து அபேக்ஷிக்கிறேன்
இதே -இவ்வடிமையும் மற்று என்ன புருஷார்த்தமும் வேணும் என்னில் -இதுவே அமையும் –

————————————————————————————————————-

இப்புருஷார்த்தத்தை பெற்றேன் என்று நான் தேறும் படி ஈண்டு எனப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

பலகாலும் கேட்க்கிலும் நான் உன்னைக் கொள்வது இதுவே
இவ்வபி சந்தி எத்தனை நாளைக்கு நிற்கும் என்னில் -யாவதாத்மா பாவி –
இங்கனே இருக்கிற அடிமைச் சுவடு உனக்கு எங்கனே வந்தது என்னில்
ஸ்ரமஹரமான உன் திரு அழகை எனக்கு காட்டி அவ்வழியாலே நீ என்னை அடிமை கொள்ளுகையாலே
பெறுதற்கு அரிதான திருவடிகளை நான் பெற்றேன் என்னுமது அறியும்படி பண்ண வேண்டும்
ஞானம் என்று பக்தி யோகமுமாம்
ஞான பிரதானம் அமிழ்ந்தார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே -ஞானக் கை தா என்கிறார்
செய்கிறோம் என்ன ஒண்ணாது -செய்து கொடு நிற்க வேணும் –

—————————————————————————————————————

உத்க்ரமண தசையான துர்க்கதியிலும் நான் இளையாதே உன் திருவடிகளை ஏத்தும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

கையும் திரு ஆழியுமாய் இருக்கிற அழகைக் காட்டி எனக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தை தவிர்த்த
மஹா உபகாரகனான கிருஷ்ணனே –
மிக்க ஸ்லேஷம் மிடற்றை கட்டிலும்-

—————————————————————————————————–

உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யமே எனக்குத் தந்து அருள வேணும் என்கிறார் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

எல்லா காலத்திலும் எனக்கே அடிமை செய் -என்று நான் தரிக்கும் படி அருளிச் செய்து -என் ஹிருதயத்திலே வந்து
நிரந்தரமாக இருந்து அருளுவதும் செய்து –
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே-தனக்கே சேஷமாக என்னைக் கொள்ளும் இது
எனக்கு அசாதாரணமாக கிருஷ்ணனை நான் கொள்ளும் புருஷார்த்தம் –

————————————————————————————-

தேகமே ஆத்மா ஆகவுமாம்-தேஹ அதிரிக்தனாய் இருப்பான் ஒருவன் -ஆத்மா ஆகவுமாம் -அவ்விடத்தில் ஆதரம் இல்லை –
ஆஸ்ரித அர்த்தமான அநேக அவதாரங்களில் ஓன்று ஒழியாமே அனுபவிக்க வேணும் என்கிறார் –

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

——————————————————————————————

தேவாதி பதார்த்தங்களை தனித் தனியே நியத ஸ்வபாவங்கள் ஆகும் படி ஸ்ருஷ்ட்டித்தால் போலே -ப்ரீதி யுக்தமான மநோ வாக் காயங்கள் உடன் கூட
நானும் ப்ரீதி உக்தனாய்க் கொண்டு என்றும் உன்னை அனுபவிக்கும் படி பண்ண வேணும் என்கிறார் –

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

மகிழ் கொள் -ஆனந்த யுக்தம் / உலோகம் அலோகம்-சேதன அசேதனங்கள்
சோதி-சந்த்ர ஸூ ர்யர்கள் / மலர்ந்த வம்மானே-உண்டாக்கின சர்வேஸ்வரன்

————————————————————————————————

தம்முடைய அபி நிவேசத்தின் மிகுதியால் -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ளலாம் படி வர வேணும் என்கிறார் –

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

உன் திருவடிக்கு கீழ் நிரந்தர கைங்கர்யத்தை எனக்குத் தராதே இருந்து வைத்து
மறக்க ஒண்ணாத படி உன்னை என்னுள்ளே நிரந்தரமாகக் காட்டுகிறவனே –

———————————————————————————————————–

அத்ய அல்ப காலம் ஆகிலும் சேஷியாய் என்னோடே சம்ச்லேஷிக்கப் பெறில் பின்னை ஒருகாலமும் அதுவும் வேண்டா என்று
தனக்கு அடிமை செய்கையில் உள்ள விடாயாலே அருளிச் செய்கிறார் –

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

எல்லா காலமும் ஆகவுமாம்
விமலதயா வேத ப்ரதிபாத்யராய் ஞான பக்தாதிகளால் மிக்கு இருந்துள்ள அயர்வறும் அமரர்களுக்கு
நிரதிசய போக்யனான உன்னை எனக்கு காட்டினவனே –

—————————————————————————————————————

நிரதிசய போக்யமான இவ்வடிமையை அநாதி காலம் நான் இழந்தேன் என்று சோகிக்கிறார்-

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

நானும் உன் உடைமையும் உனக்கு சேஷமாய் இருக்கச் செய்தே இதுக்கு முன்பு போன காலம் எல்லாம் உனக்கு அடிமை என்னும் இடத்தை
அறியாதே நான் என்றும் என்னது என்றும் உண்டான விபரீத ஞானத்தை உடையேனாய் இருந்தேன்
யானே என்கிற இடத்தில் -அவதாரணைக்கு கருத்து –இவ் வஞ்ஞானம் பகவத் க்ருத்யம் அன்று -என் தோஷத்தால் வந்தது என்று
அயர்வறும் அமரர்கள் என்றும் அடிமை செய்து வாழா நிற்க நீயும் அவர்களை அடிமை கொண்டு செல்லா நிற்க
இஸ் சம்பந்தத்தில் எங்களுக்கும் அவர்களோபாதி பிராப்தி உண்டாய் இருக்க இழப்பதே என்று கருத்து –

——————————————————————————————————————

இவன் தானே வந்து ஸ்வ ப்ராப்யத்தை சாதித்திக் கொள்ளுகிறான் இ றே -என்று கை விடாதே -பிரதிபந்தகங்களை நீக்கி
என்னை ஈண்டென உன்தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டு அருள வேணும் என்கிறார் –

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு விக்நமான எருது ஏழையும் அடர்த்து அருளி
ஸ்ரீ ஜனகராஜன் திரு மக ளோட்டை சம்ச்லேஷத்துக்கு விக்நமாய்
அதி சம்ருத்தமான லங்கையை பஸ்மம் ஆக்கின வீர ஸ்ரீயாலே வந்த அதி உஜ்ஜவலத்தை உடையவனே
தேறாதே கொள்-
தேறேன்-என்ற பாடமான போது -தரியேன் என்கிறது
என்னை உன் திருவடிகளில் ஈண்டென சேர்த்து அருளி ஒரு நாளும் பிரியாத படி பார்த்து அருள வேணும் –

——————————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியில் ஸ்ராத்ததானார் இது திரு வாய் மொழியில் சொன்ன ப்ராப்யத்தை பெறுவார் என்கிறார் –

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

திரு வாழியைப் போலே தம்மையும் பிரியாதே அடிமை கொள்ளும் ஸ்வ பாவனான எம்பெருமானை
விடில் தரியாத தன்மையான ஆழ்வார் அருளிச் செய்த
அப்யசித்தார்க்கு அநர்த்த கந்தம் வராதபடி இருக்கிற ஆயிரத்துள் இப்பத்தும்

—————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-9-

August 18, 2016

கீழே ஈஸ்வரன் இவருக்கு மோக்ஷத்தைக் கொடுப்பானாய்ச் சமைந்து நிற்கிற படியைக் கண்டு தமக்கு பகவத் பார தந்தர்யத்தால்
அல்லது செல்லாத படியைப் பார்த்து –
எனக்கு என்று ஒரு புருஷார்த்தைக் கோலுமது மமகார விஷயம் ஆகையால் ஐஸ்வர்யார்யாதிகளோ பாதி ஹேயம் என்று அத்தை உபேக்ஷித்து
பரமபதஸ் தத்தனாய் ஸூ கியாகவும் -சம்சாரத்தில் தூக்கியாகவுமாம் இவற்றில் நிர்பந்தம் இல்லை
-உனக்கே யாய் இருக்கும் இருப்பு எனக்கு வேண்டுவது -என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்
இது தான் ஸ்வரூபம் அன்றோ அபேக்ஷிக்க வேணுமோ என்னில் புருஷார்த்தங்களுக்கும் சாதாரணமான பிரகிருதி சம்பந்தத்தோடே
இருக்கையாலே அபேக்ஷிக்கை பிராப்தம் –
அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூபமாய் இருக்கச் செய்தே-உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வீ காரம் வேண்டுமா போலே
உபேயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வரூப அனுகூலமான புருஷார்த்தத்தை அபேக்ஷிக்கை பிராப்தம்
இவருடைய இந்த ஸ்வரூப ஞானம் இராமாயண புருஷர்கள் பக்கலிலே காணலாம்
விலலாப சபா மத்யே ஜகர் ஹேச புரோஹிதம்-என்று ஸ்ரீ பரத ஆழ்வான்
பரவா நஸ்மி காகுத்ஸத-இத்யாதி -குருஷ்வமாம் அநு சரம் -என்று இளைய பெருமாள் –

——————————————————————————————————-

எத்தனையேனும் வி லக்ஷணமான பரம பதத்திலும் எனக்கு அபேக்ஷை இல்லை –
-உன் திருவடிகளை என் தலையிலே வைக்கும் இத்தனையே வேண்டுவது என்கிறார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்-
வீடு -மோக்ஷம் /நா வீடு -உத்க்ருஷ்டமான மோக்ஷம் -அவித்யா நிவ்ருத்தம் மாத்திரம் அன்று
எம்மா வீடு -எல்லா பிரகாரத்தாலும் உத்க்ருஷ்டமான மோக்ஷம் கிடீர் என்ன -ஆனாலும் அபேக்ஷை இல்லை –
வீட்டுத் திறமும் -வீட்டிடை யாட்டம் –
செப்பம்-செப்போம்-சொல்லோம்-
என் கருத்து அறிக்கைக்காக -நீ கொள் -என்றும் நாம் வேண்டா -என்றும் நிஷேத அர்த்தமாகவும் பிரசங்கிக்க காட்டுவோம் அல்லோம் –
ஒரு தமிழன் -எம்மா வீட்டு விகற்பங்களும் செவ்வியவாம் -என்றான் -அப் பக்ஷத்தில் சாலோக்ய ஸாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம்
-என்கிற இவை எல்லாம் இம் மோக்ஷத்தில் உண்டாகை-
உமக்குச் செய்ய வேண்டுவது என் என்ன –
நின்-செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
ப்ராப்யமாய் -அகவாய் சிவந்து -அதுக்கு பரபாகமான புறா வாயில் கறுப்பை உடைத்தாய் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம்
இவற்றாலே நிரதிசய போக்யமான திருவடிகளை –
ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்வியதாய் பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம்
என் தலையிலே கொக்குவாயும் படி கண்ணியும் போலே சேர்த்து அருள வேணும்
சேர்த்து -என்று ல்யப்பு அன்று -விதியாய் -சேர்த்து அருள வேணும் என்கை /ஒல்லை -ஈண்டென
கைம்மா துன்பம் கடிந்த பிரானே-
இது த்ருஷ்டாந்தம் -கைம்மா துன்பம் -என்னும் அத்தனை -பேச்சுக்கு நிலம் அன்று
பாய்மா -குதிரை / கைம்மா-ஆனை-இப்பேச்சாலே சொல்லிற்று துதிக்கை ஒழிய முழுகிற்று என்கை –
துன்பம் கடிந்த -பரமாபதமா பன்ன-என்கிற தசையில் -அதந்த்ரி தசமூ பதி ப்ரஹித ஹஸ்தம் -என்று
த்வரையோடு வந்து சவாசனமாக துக்கத்தைப் போக்கினவனே
பிரானே-அவனுக்கு உதவிற்று தமக்கு உதவிற்றாய் இருந்தபடி
நம்மோடு உமக்கு சம்பந்தம் ஏதாக அபேக்ஷிக்கிறீர் என்ன
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
நீ ஸ்வாமி -நான் சேஷ புதன் –
உத்க்ருஷ்டம் என்று வேண்டுகிறேன் அல்லேன்
நிஷித்தம் என்றாலும் விட ஒண்ணாத படி எனக்கு ராக பிராப்தம் -மற்ற என்ன வேணும் என்ன
ஈதே-உன் திருவடிகளை என் தலையிலே வைக்கும் இதுவே –

————————————————————————————————

இப்புருஷார்த்தத்தை பெற்றேன் நான் என்று தெளியும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

ஈதே யானுன்னைக் கொள்வது-
இவரை பல காலும் கேட்கவே தடுமாறி அகவாயில் கிடந்தது தெரியும் என்று திரியவும் கேட்கவே
ஈதே -இப்படி நிச்சயித்து எத்தைக் கொண்டேன் என்ன
யான் உன்னை -இரண்டு தர்மியையும் கொண்டு அறியும் அத்தனை
இது நம்மை அர்த்திப்பாரும் இல்லை -பாத்தாலே அதை நாம் கொடுத்து அறிவதும் இல்லை -உம்முடைய பக்கலிலே கண்டு அறியும் இத்தனை –
இது உமக்கு எத்தனை நாளைக்கு நிற்கும் என்ன
எஞ்ஞான்றும் –
யாவதாத்ம பாவி நிற்கும் –
இவ்வடிமைச் சுவட்டில் ருசியைப் பிறப்பித்தார் யார் என்ன
என்-மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
உன் வடிவு அழகு இ றே ருசி ஜனகம்
கருமையோடே கூடின ஒளியை உடைய மணி போலே இருக்கிற வடிவு அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே
அபேக்ஷை தான் என் என்ன
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்-கைதா-
ஸ்வ யத்தனத்தாலே காண்பார்க்கு கிட்ட அரிதான திருவடிகளை நீயே காட்டக் காண இருக்கிற நான் பெற்றேன் என்று தெளியும் படி பண்ண வேணும் –
ஞானக்-கைதா-
மயர்வற மதிநலம் அருள பெற்ற போதே பெற்றிலீரோ என்று நினைத்து இருக்குமது போராது
நான் உன்னைப் பெற்றேன் என்று இருக்கும் படி தெளிவாகிற கையைத் தர வேணும்
ஞானம் என்று பக்தியாய் -பக்தியால் நம்மைப் பெற வேண்டாவோ என்ன -அத்தையும் நீயே தந்து அருள வேணும் என்கிறார் என்றுமாம்
ஞான பிரதானம் அமிழ்ந்தார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஞானக் கை தா என்கிறார்
எம்பாருக்கு முதலியாண்டான் அருளிச் செய்த வார்த்தை -ஒருவன் கிணற்றில் விழுந்தால் இருவராக எடுக்கும்
காலக் கழிவு செய்யலே-
செய்கிறோம் என்ன ஒண்ணாது செய்து கொடு நிற்க வேணும் –

—————————————————————————————————–

காயிகமான அடிமையை வேண்டினார் முதலிலே -அனந்தரம் மாநஸமான அடிமையை வேண்டினார்
-இதில் வாசிகமான அடிமையை வேண்டுகிறார் –

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் –
விஷய ப்ராவண்ய ரூபமான துஷ் கர்மங்களை பண்ணாதே கோல் என்று பிரசாதத்தைப் பண்ணும் –
விஷய ப்ராவண்யத்தை மாற்றுவது சாஸ்த்ரா பிரதாநாதிகளாலேயோ- எண்ணில்
என்-கையார் சக்கரக் கண்ண பிரானே-
கையும் திரு வாழியுமான அழகையும் -ஸுலப்யத்தையும் காட்டி பாஹ்ய ருசியைத் தவிர்த்த மஹா உபகாரகனே –
ஐயார் கண்டம் அடைக்கிலும்-
ஐயருகை யாவது -சிலேஷ்மம் செறிகை-அது மிடற்றைக் கட்டிலும்
துர்க்கதா வபி ஜாதாயாம் -என்கிறபடி உத்க்ரமண தசையாய்ச் செல்லிலும்
நின் கழல்-எய்யாது ஏத்த-
உன் திருவடிகளை இளையாது ஏத்தும் படி –
துக்க நிவ்ருத்தியே யன்று எனக்கு வேண்டுவது -உன்னை அனுபவிக்க வேணும் என்கை –
இது ஒரு ஸூ க்ருத பலமே அன்றோ என்ன
அருளிச் செய் எனக்கே-
இவன் பெற்றிடுவான் என்று இரங்கி அருள வேணும் –
இது சர்வருக்கும் பிரயோஜனம் ஆகாதோ என்ன
எனக்கே -எனக்கு ஒருவனுக்கும் செய்து அருள வேணும் –

——————————————————————————————

மநோ வாக்யங்கள்-ஸ்வரூப அனுகூலமாக தேவர் பக்கலிலே பிரவணனாம் படி பண்ணி அருள வேணும் என்றார் -கீழ் மூன்று பாட்டாலே –
அதுக்கு அடியான உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யத்தை நிஷ் கர்ஷித்து அபேக்ஷிக்கிறார் இதில் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

எனக்கே யாட்செய்
ஆட செய் என்று -ஸ்வாதந்தர்யத்தை வியாவர்த்திக்கிறது
எனக்கே ஆடச்செய் -என்று விஷயாந்தர வ்யாமிச்ரத்தையை வியாவர்த்திக்கிறது
எக்காலத்தும்-
ஒழி வில் காலமெல்லாம் என்கிறபடியே -நித்தியமாக வேணும் –
என்று –
க்ரியதாமிதி மாம் வத-என்று ஏவிக் கொண்டு அருள வேணும் –
என்-மனக்கே வந்து –
தூரஸ்தன் ஆகாதே என் ஹிருதயத்திலே புகுர வேணும்
இடைவீடின்றி –
வேறு போக்கு இன்றியே நிரந்தரமாக வேணும் –
மன்னி-
திரு உள்ளத்தில் அந்நிய பரத்தை அன்றிக்கே ஸ்தாவர பிரதிஷ்டையாக வேணும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே-
இருந்து கொள்ளும் கார்யம் சொல்லுகிறது –
சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இ றே
அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ் ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை-
கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது –
முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –
எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது
தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –
எனக்கு அசாதாரணமான சிறப்பு -ப்ராப்தனாய் பவ்யனானவனைக் கொள்ளும் சிறப்பு –
ஸ்வரூப ஞானம் உடைய நான் கொள்ளும் சிறப்பு –
சிறப்பு ஆகிறது ஏற்றம் -அதாகிறது புருஷார்த்தம் –
தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டாய் -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

——————————————————————————————–

சரீர விஸ்லேஷம் பிறந்தால் உமக்கு ஸ்வரூபம் எது -ஸ்வரூப அனுரூபமாய் இ றே புருஷார்த்தம் இருப்பது என்ன
நான் யாராய் ஆகிறேன் -நான் ஆயிற்ற வஸ்து அத்தலைக்கே -யாய் யதுவே -எனக்கு வேண்டுவது என்கிறார் –

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

சிறப்பில் வீடு -ஸூ கை கதா நமான-மோக்ஷம்
ச்வர்க்க -பரிமித ஸூ கமான ஸ்வர்க்கம்
நரகம்-நிஷ்க்ருஷ்ட தூக்கமே யான நரகம்
இறப்பில் எய்துக –
சரீர விஸ்லேஷத்தில் -பிராபிக்க –
இத்தால் -தேஹாதி வியாதிரிக்தமாக ஆத்மாவும் உண்டாய் பரம பதாதிகளை அனுபவிக்கவுமாம்
எய்தற்க-பிராபியாது ஒழிக-தேஹாதிகளே யாகவுமாம் -இதில் ஒரு நிர்பந்தமும் இல்லை –
யானும்-ஸ்வரூப நிர்ணயித்தில் நிர்பந்தம் இன்றிக்கே-அத்தலைக்கே யாம் அதுவே பேறு-என்று இருக்கிற நானும் –
ச சப்தத்தால் நானும் இத்தைப் பெற்றேனாய் விடுவது காண் என்கிறார்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை-
ஜென்ம ஹேதுவான கர்ப்ப சம்பந்தம் இன்றிக்கே இருக்க அனுக்ரஹத்தாலே அசங்க்யேய அவதாரங்களை பண்ணும் சர்வேஸ்வரனை –
மறப்பு ஓன்று இன்றி –
அவதாரங்கள் -அவற்றில் உண்டான சேஷ்டிதங்கள் -இவற்றில் ஒன்றும் மறவாதே
இத்தலையில் உள்ள வெல்லாம் மறக்கலாம்
அத்தலையில் ஒன்றும் நழுவ ஒண்ணாது
என்றும் மகிழ்வேனே–
மகிழ்கை என்றும் அனுபவம் என்றும் பர்யாயம் -ப்ரீதி பூர்வகமாக என்றும் அனுபவிக்க வேணும் –

————————————————————————————————

தேவாதி பதார்த்தங்களை தனித் தனியே நியத ஸ்வபாவங்கள் ஆகும்படி பண்ணினால் போலே –
எனக்கும் உன்னையே அனுபவிக்கையே -ஸ்வபாவமாகப் பண்ண வேணும் என்கிறார் –
தேவாதி சர்வ ஸ்ருஷ்டியும் பண்ணின நீ ஸ்ருஷ்ட்டி பிரயோஜனமாக உன்னுடைய அனுபவத்தை
மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணும் படி எனக்குத் தர வேணும் என்கிறார் ஆகவுமாம் –

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

மகிழ் கொள் தெய்வம் –
மனுஷ்யாதிகளில் காட்டில் போக ஸ்ம்ருதியாலே ப்ரீதி உக்தரான தேவர்கள்
உலோகம்
ப்ரத்யக்ஷ ஸித்தமான அசித் அம்சம் -லோக்யத இதி லோக –
அலோகம்
ப்ரத்யக்ஷத்தால் காண ஒண்ணாத சேதன வஸ்து
மகிழ் கொள் சோதி
ப்ரகாசகத்வாதிகளாலே ப்ரீதி உக்தரான சந்த்ர ஆதித்யர்கள்
மலர்ந்த வம்மானே
பஹுஸ்யாம் -என்கிற படியே ஸூஷ்ம சித்த அசித் விசிஷ்டானாய்க் கொண்டு விஸ்திருதனான சர்வேஸ்வரன்
மகிழ் கொள் சிந்தை –
நீ என்றால் நெஞ்சு ப்ரீதி உக்தனாக வேணும் –
சொல்-
அந்த ப்ரீதி வழிந்த சொல் –
செய்கை
ப்ரீதி காரிதமான செயல்
கொண்டு என்றும்-மகிழ்வுற்று –
சர்வ காலமும் நானும் ப்ரீதி உக்தனாய்
உன்னை வணங்க வாராயே –
ப்ராப்தனான உன்னை முறையிலே அனுபவிக்க வேணும் –

——————————————————————————————

வாராய் என்ற போதே வரக் காணாமையாலே விஷண்ணராய்
பின்னையும் அபி நிவேசத்தாலே நான் உன்னைக் கிட்டும் படி வாராய் என்கிறார் –

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

வாராய்
வர வேணும் –
யுன் திருப்பாத மலர்க்கீழ்-
பிராப்தமுமாய் -பூஜ்யமுமாய்-போக்யமுமான -திருவடிகளின் கீழே
பேராதே
இடை விடாதே
நான்
ஸ்வரூப ஞானம் உடையனான நான்
வந்தடையும் படி
வந்து அடிமை செய்யும் படி
தாராதாய் என்கைக்கும் -கீழ் வாராய் -என்கைக்கும் பொது நடுவு சொன்னவிடம் -அந்நிய பர உக்தியில் ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –
தாராதாய் –
உன்னை தருகிறதில்லை -வாராத இன்னாப் போலே இத்தை நிரூபகமாகச் சொல்லுகிறார்
உன்னை என்னுள் வைப்பில் என்றும்-ஆராதாய்-
இது பெறாது ஒழிந்தால் -முகவாய் பெரிய திரு நாளாகச் செல்ல வேணுமோ
கிட்டா விட்டால் மறந்து பிழைக்க லாகாதோ
நிரதிசய போக்யனான உன்னை பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணாத போது தரிக்க மாட்டாத என்னுள்ளே நிரந்தரமாக பிரகாசிப்பிக்கிறவனே –
எனக்கு என்றும் எக்காலே-
எனக்கு எக்காலத்திலும் எல்லா அவஸ்தைகளிலும் –
எனக்கு என்றும் எக்காலமும் -உன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே யான் வந்து அடையும் படி -வாராய் –

———————————————————————————————

தம்முடைய விடாயாலே அத்யல்ப கல்பம் ஆகிலும் சம்ச்லேஷிக்கப் பெறில் பின்னை
ஒரு காலமும் அதுவும் வேண்டா வென்று அருளிச் செய்கிறார் –

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

எக்காலத்து –
எத்தனையேனும் கூறிட ஒண்ணாத அத்யல்ப காலத்திலும்
எந்தையாய் என்னுள் மன்னில் –
வகுத்த ஸ்வாமியாய் என்னோடு கலக்கப் பெறில்
மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்-
மற்று எக் காலத்திலும் இது தன்னையும் வேண்டா என்கிறார் -என்பர் ஆளவந்தார்
எக்காலம் என்றது -எல்லாக் காலத்திலும் என்றபடி
எக்காலத்திலும் ஈது ஒன்றும் ஒழிய மற்று ஒன்றும் வேண்டேன் என்கிறார் –என்று எம்பெருமானார்
இது யாருடைய பரிமாற்றம் என்ன
மிக்கார்
பகவத் ப்ரேமத்தால் அதிசயித்தவர்கள்
வேத விமலர்
வேதத்திலே நிர்மலராக ப்ரஸித்தர் ஆனவர்கள் –யத்ர ருஷய பிரதமஜா யே புராணா
விழுங்கும்
நித்ய அனுபவம் பண்ணும்
என்-அக்காரக் கனியே
அவர்களுக்கு சர்வ வித போக்யமும் தானே என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் –
அக்காராம் போலேயும் கனி போலேயும் இருக்கை –
அக்காராம் வ்ருஷ ஸ்தானே யாய் -அது கோட் புக்கு பலித்தால் போலே இருக்கை
அவர்களுக்கு நிரதிசய போக்யனான உன்னை எனக்கு காட்டினவனே
உன்னை யானே –
ப்ராப்தனாய் போக்யனான உன்னை -உன் போக்யத்தையிலே சபலனான நான் –

————————————————————————————————

இஸ் சம்பந்தத்தையும் உன் போக்யத்தையும் அநாதி காலம் இழந்தேன் என்கிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

யானே –
அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்
என்னை யறியகிலாதே
தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்
யானே என்தனதே என்று இருந்தேன்
ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்
இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இ றே இருப்பது
என்தனதே என்று இருந்தேன்
நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்
தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்
இருந்தேன் –
இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்
அர்த்த தத்வம் இங்கனே யன்றோ என்ன
யானே நீ
நானும் உனக்கு பிரகாரமே –
என்னுடைமையும் நீயே
என் உடைமையும் உனக்கு பிரகாரமே
இது எங்கே உள்ள பரிமாற்றம் என்ன
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –
வானில் உள்ளார் முறை அறிந்து ஏத்த
நீ -சேஷியான உத்கர்ஷத்தோடே இருக்குமவன் அல்லையோ –
மாஞ்சா க்ரோசந்தி போலே -எம் என்று தமக்கும் அவர்களோடே பிராப்தி உண்டாய் இருக்கிற படி

————————————————————————————————

என்னை விசுவாசியாதே பிரதிபந்தகங்களைப் போக்கி என்னை ஈண்டெனத் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேணும் என்கிறார் –

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

ஏறேல் ஏழும் வென்று
ஏறு ஏழையும் நிரசித்து – ஏல்-அசை-
நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தகமான ருஷபங்கள் ஏழையும் வென்றாய் –
ஏர் கொள் இலங்கையை-நீறே செய்த –
கட்டளை பட்டு அதி ஸம்ருத்தியான இலங்கையை பஸ்மசாத்கரித்த
நெடுஞ்சுடர்ச் சோதி
ராவணனை அழியச் செய்து வீர ஸ்ரீ உடன் நின்ற புகர்
அவர்களுடைய விரோதிகளை போக்கினால் போலே -என்னுடைய பிரதிபந்தகங்களையும் போக்க வேணும் –
தேறேல் என்னை
என் பக்கல் வந்தால் அவ்வளவு போராது-
என் கையில் என்னைக் காட்டித் தரில் நான் அனர்த்தத்தை விளைவித்துக் கொள்வான்
தேறேன் என்ற பாடமான போது -தெளியேன் என்னுதல்-தரியேன் -என்னுதல் –
உன் பொன்னடி சேர்த்து ஒல்லை-வேறே போக எஞ்ஞான்றும் விடலே-
என்னை நான் இசைந்த போதே சடக்கென உன் திருவடிகளில் சேர்த்து அருளி சர்வ காலமும் பிரியாத படி பார்த்து அருள வேணும் –

————————————————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழியில் ஸ்ராத்ததானார் இது தானே தாம் நிஷ்கர்ஷித்த ப்ராப்யத்தை பெறுவார் என்கிறார் –

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

விடலில் சக்கரத் தண்ணலை-
கையில் திரு ஆழியை விடாத சர்வேஸ்வரனை –
இது திரு வாழியை விடில் அன்றோ நான் ஆஸ்ரிதரைப் பிரிவது
எஞ்ஞான்றும் விடலே என்னக் கடவீரோ
மேவல்-விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-
அவன் விடிலும் அவனை விடில் தரியாத ஆழ்வார் அருளிச் செய்தது
வண்மை யாவது -இவ்வனுபவத்துக்கு பாசுரம் இட்டு உபகரித்த படி
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்-
அப்யசித்தார்க்கு அநர்த்த கந்தம் இல்லாத படி இருக்கிற ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இப்பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –
ஸ்ராத்தராய் இதிலே இழிவாருக்கு இது தானே -தனக்கே யாக என்னைக் கொள்ளும் இதே -என்று
நிஷ்கர்ஷித்த அஹங்கார கந்தம் இல்லாத பேற்றைக் கொடுக்கும் –

——————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -2-8-

August 18, 2016

தம்முடைய பரிகரத்தையும் தம்மைப் போலே ஆக்கி -இத்தால் போராது -என்று பார்த்து -முக்த ப்ராப்யமான
ஐஸ்வர்யத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருகையில் ஒருப்பட்டு இருக்கிற இருப்பைக் கண்டு அதி ப்ரீதராய்
சம்சாரிகள் படுகிற அநர்த்தத்தைக் கண்டு -எல்லாரும் ஈத்ருஸ போக பாகிகள் ஆக வேணும் என்று மோக்ஷ பிரதத்வத்தை உபதேசிக்க
-அது ராவணனுக்கு சொன்ன ஹிதம் போலே நிஷ்பலமாகையாலே
இவர்களை போலே ஆகாதே நாம் ததேக போகராகப் பெற்றோமே -என்று திருப்பித்தராய் முடிக்கிறார்
இது திருவாய் மொழி பரதவ உபதேசம் என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்
பல இடத்திலும் பரத்வம் சொல்லா நின்றது -மோக்ஷ பிரதத்வம் தனியே சொல்ல வேண்டுவது ஓன்று -அத்தைச் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்வார் –
இவை தான் ஒன்றை ஓன்று ஒழிந்து இராது -மோக்ஷ பிரதத்வம் சர்வேஸ்வரத்தோடே வ்யாப்தம்
சர்வேஸ்வரனாகில் மோக்ஷ பிரதனாய் இருக்கும்
மோக்ஷம் ஆகிறது -தனக்கு அசாதாரணமாய் முக்த ப்ராப்யமான தன்னுடைய ஐஸ்வர்யம்
அதாகிறது பிராட்டி திரு வனந்த ஆழ்வான் முதலான நித்ய ஸூ ரிகளை பரிகாரமாக உடைத்தாய்
அளவுடையார்க்கும் ஸ்வ யத்ன சாத்தியம் அன்றிக்கே தன்னாலே தன்னைப் பெறுவார்க்கு அநாயாஸ ஸித்தமாய்-நிரதிசய ஸூக ரூபமாய்
அபரிச்சேதயமாய் -அதி ஸ் ப்புடமாய் சர்வ உத்க்ருஷ்டமான ஐஸ்வர்யம் –

—————————————————————————————–

சர்வ சங்க்ரஹமாய் -இதிலே ஓர் ஒரு பதத்தைப் பற்றி மேலில் பாட்டுக்களும்-அவை தம்மைப் பற்றி எழுவனவும் ஆகின்றன மேல் –

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணை மேல்-
மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றை ஸ்வ பாவமாக உடைய திரு வனந்த ஆழ்வான் மேலே அணைவது-
சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரிக்க மாட்டாதாப் போலே
சேஷியும் திரு அநந்த ஆழ்வான் மேல் அணைந்து அல்லது தரியானாய் இருக்கிறபடி
பூம்பாவை
பூ என்று அழகு -பாவை என்று ஸ்த்ரீத்வம்
நிரவாதிகமான போக்யதையும் ஸ்த்ரீத்வத்தையும் உடையாளாய் இருக்கை
தேஹ குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் குறைவற்று இருக்கை
யாகம்-புணர்வது –
இவருடைய ரூப குணத்திலே துவக்குண்டு ஆத்ம குணத்து அளவும் செல்ல மாட்டாது இருக்கை
அணைவது புணர்வது -என்கையாலே போகம் ஒத்து இருக்கிற படி
ரம மாணா வநேத்ரய -மாதா பிதாக்கள் கூட இருக்கும் படுக்கையில் சம்பந்தமே ஹேது வாக ஏறும் புத்ரனைப் போலே
பிராட்டியும் அவனும் திரு அநந்த ஆழ்வான் மேலே இருக்க
தமேவம்வித் பாதே நாத்யாரோஹதி -என்கிறபடியே அதிலே ஏறி அவர்களை இவனை ணிக்கை இறே முக்த ப்ராப்யம் –
இருவரவர் முதலும் தானே
ந ப்ரஹ்ம ந ஈசான -என்று சுருதி பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு காரண பூதன்
காரணந்து த்யேயா -என்கிறபடியே உபாஸ்யனும் அவனே -ப்ரஹ்மாதிகளுக்கு காரணத்வம் இல்லை -பாவ நாத்ர யான்விதர் யாகையாலே
இணைவனாம் எப்பொருட்கும் –
தேவாதி சகல பதார்த்தங்களோடும் சஜாதீயனாய் அவதரிக்கும்
அவதார பிரயோஜனம் சொல்லுகிறது
வீடு முதலாம்-
மோக்ஷ ஹேதுவாகைக்காக அவதரிக்க வேண்டுகிறது
பரமபதம் சென்று அபேக்ஷிக்க நிலம் அல்லாமையாலே சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறது
உத்க்ருஷ்டன் ஆகில் வெகுண்டு அகலுவார்கள் -தாழப் பிறக்கில் காற்கடைக் கொள்ளுவார்கள்
சர்வ சாதாரணனன் மோக்ஷ பிரதன் ஆகைக்காக வந்து அவதரித்தால்-சர்வ முக்தி பிரசங்கியாதோ என்னில்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –
சம்சாரம் ஆகிறது ஒரு கடல் -அது நம்மால் கடக்க அரிது -ஒரு சர்வ சக்தியைப் பற்றி கடக்க வேணும் -என்று
நினைப்பார்க்கு ப்ரதி பூவாய்த் தலைக்கு கட்டிக் கொடுக்கும்
சர்வ பர நிர்வாஹகன் இறே– ப்ரதி பூ
விஷ்ணு போதம் என்கையாலே தெப்பம் என்னவுமாம் –

—————————————————————————————————–

வீடு முதலாம் என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு அவன் தானே செய்ய வேணுமோ –
-அவனோடே உண்டான சம்பந்தமே மோக்ஷ ப்ரதம் என்கிறார் –

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-
துரஸ்தமான துக்கத்தை உடைய ஜென்மம் முதலான சர்வ விகாரங்களையும் கடத்தும் –
நீந்தும்
நீந்தும் –என்றது நீத்தும் என்றபடி -நீந்தும் என்கிற வர்த்தமான நிரதேசத்தாலே துஸ்தரம் என்கை –
துயரில்லா வீடு முதலாம்-
துக்க கந்த ரஹிதமான மோக்ஷத்துக்கு ஹேதுவாம் -இது பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்றும் –
நீந்தும் துயரான எவ்வெவையும் இல்லா வீடு முதலாம் என்றுமாம் –
இவர் வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாத்ரத்தை அன்று –
ஸூக பாவைக லக்ஷனை யான பகவத் ப்ராப்தியை –
முக்திர் மோஷா மஹா நந்த -என்னைக் கடவது இ றே
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த-
இது த்ருஷ்டாந்தம் –
பரப்பு மாறப்பூத்து குளிர்ந்த நீரை உடைய பொய்கையில் முதலையாலே நலிவு பட்ட யானை இடரைப் போக்கின
பூந்தண் துழாய் என் தனி நாயகன் –
செவ்வியை உடைத்தாய் குளிர்ந்த திருத்த துழாயாலே அலங்க்ருதனான அத்விதீய நாயகன் –
இது திருத் துழாயின் குளிர் வாசனையால் யாயிற்று யானையை ஆசுவாசிப்பித்தது-
ஆணைக்கு உதவினதும் தமக்கு உதவிற்றாக நினைத்து இருக்கிறார்
புணர்ப்பே –
அவனோட்டை சேர்த்தி -சம்பந்தம்
தனி நாயகன் புணர்ப்பே –வீடு முதலாம் -என்று அந்வயம்-

———————————————————————————————————

இருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு ஸ்ரீ யபதியான அவனுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களை – எங்கும் காணலாம் -என்கிறார் –

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்-
ஸ்ருஷ்டிக்கு கடவ ப்ரஹ்மாவுக்கும் சம்ஹாரத்துக்குக் கடவ ருத்ரனுக்கும் நிர்வாஹகனாம் –
ததா தர்சித பந்தா நவ் -ஸ்ருஷ்டிம் தத கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே-
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி-
தன்னை உண்டாக்கின திரு நாபி கமலத்திலே இருந்தால் யாயிற்று -ஸ்ருஷ்டிக்கு ஷமன் ஆவது –
ருத்ரன் திரு மேனியில் வலப் பார்ஸ்வத்தைப் பற்றி இருந்தால் யாயிற்று ஜகத் சம்ஹாரத்துக்கு ஷமன் ஆவது –
இவர்கள் இருப்பை மாற்றினால் அதிகரித்த காரியத்துக்கு ஷமர் அல்லர் என்கை –
சாமா நாதி காரண்யத்தாலே அந்தர்யாமித்வம் சொல்லுகிறது –
புணர்ந்த தன்னுந்தி-என்கையாலே காரணத்வம் சொல்லிற்று –
ஆகத்து மன்னி-என்கையாலே திருமேனியைப் பற்றி லப்த ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லிற்று –
புணர்ந்த திருவாகித் தன் மார்வில்-
தன் மார்விலே சம்ச்லேஷிக்கப் பட்ட பெரிய பிராட்டியாரை உடையவன் –
கீழே நீர்மை சொல்லிற்றாய் -இத்தாலே மேன்மை சொல்லுகிறது
தான் சேர்- புணர்ப்பன் –
ஏகார்ணவத்திலே ஸ்ருஷ்ட்யர்த்தமாக கண் வளர்ந்த சேஷ்டிதத்தை உடையவன் என்னுதல்-
தனக்கு சத்ருசமான சேஷ்டிதங்களை உடையவன் என்னுதல் –
பெரும் புணர்ப்பு எங்கும் புலனே-
இப்படி பட்ட அதி மானுஷ சேஷ்டிதங்கள் எங்கும் பிரசித்தம் அன்றோ என்கை –

———————————————————————————————————

இப்படிப்பட்டவன் என்று அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அற்று மோக்ஷத்தை பெற வேண்டி இருப்பார்
-அவன் கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள் -என்கிறார் –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி-
ஐந்து விஷயங்களிலும் ப்ரவணமாம் ஐந்து இந்த்ரியங்களுக்கும் வஸ்யராகை தவிர்ந்து -சில பதார்த்தத்தை வறை நாற்றத்தைக் காட்டி
முடிக்குமா போலே -சப்தாதிகளிலே மூட்டி நசிப்பிக்கையாலே இந்திரியங்களை பொறி என்கிறது –
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்-
இவ் விபூதி அநந்த கிலேச பாஜநமாய் இருக்குமா போலே முடிவிறந்த போக்யதையை உடைத்தாய் இருக்கை-
நாடு -என்கையாலே -அவித்யாதி நிவ்ருத்தியாதிகள் அன்று -மோக்ஷம் என்கை –
புகுவீர் என்கையாலே -அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச பிராப்தியையும் -அதுக்கு இச்சையே அதிகாரம் என்னும் இடத்தையும் சொல்லுகிறது –
விரோதி வர்க்கம் செய்வது என் என்னில் –
அலமந்து வீய அசுரரைச் செற்றான்-
அஸூரசங்கங்களை தடுமாறி முடியும் படி நிரசித்தால் போலே நிரசிக்கும்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –
ஸ்மர்த்தவ்ய விஷய சாராஸ்யத்தாலே ஆச்ரயண தசையே தொடங்கி ரசியா நிற்கிற கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள்
ஓவாதே –
அபர்வணி கடல் தீண்டல் ஆகாதே -என்னுமா போலே இதுக்கு கால நியதி இல்லை என்கை
தமக்கு ரசித்த படியால் இடைவிடாமல் அனுபவியுங்கோள் -என்கிறார்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமவர் இறே

————————————————————————————————————-

இணைவனாம் எப்பொருட்க்கும்-என்கிற பதத்தை விவரித்துக் கொண்டு ஸ்ரீ ஹயக்ரீவாதி அவதாரங்களாலே ரஷிக்கும் என்கிறார் –

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட
நீந்தும் துயரில் காட்டில் தன்னேற்றம்
நிரந்தர துக்காவஹமான ஜென்மம் உட்பட -ஜென்மம் தொடக்கமாக –
மற்று எவ்வெவையும் –
மற்றும் உண்டான ஸ்திதி ஸம்ஹாராதி சர்வத்துக்கும்
மூவாத் தனி முதலாய்-
மூவாது ஒழிகை யாவது -முசியாது ஒழிகை –
இவன் தன்னைப் பெறுகைக்காக-கரண களேபரண்களைக் கொடுக்க -அவற்றைக் கொண்டு விஷய ப்ரவணராய்
அநர்த்தப் படா நின்றால்-நிஷ் ப்பலமாயிற்று-என்று முசியாது ஒழிகை
மூவுலகும் காவலோன் –
மேலும் கீழும் நடுவும் –
க்ருதகம் அக்ருதகம் க்ருதாக்ருதகம் –
காவலோன் –
சாஸ்திர ப்ரதா நாதிகளாலே ரஷிக்கை-
சாஷான் நாராயணோ தேவ -இத்யாதி
தன் மேன்மை குலையாதே நின்றோ ரக்ஷிப்பது என்னில்
மாவாகி யாமையாய் மீனாகி –
வித்யா ப்ரவர்த்தகமான அவதாரங்கள்
மானிடமாம்-
அனுஷ்ட்ட்டே யதார்த்த ப்ரகாசகமான ராம கிருஷ்ணாத் யாவதாரங்கள்
மர்யாதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதா சச -என்றும் –
யத்ய தாசாரதி ஸ்ரேஷ்ட-என்றும் சொல்லுகிறபடியே –
இப்படி செய்கின்றவன் தான் ஆர் என்னில்
தேவாதி தேவ பெருமான் –
ப்ரஹ்மாதிகளுக்கு ஆதி தேவர்களான நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகு ஆனவன் கிடீர் இப்படி தாழ நின்றான் என்கை –
இந்த்ராதிகளும் பூமியில் துர்க்கந்தாதிகள் பொறுக்க மாட்டாதே ஒரு யோஜனத்துக்கு அவ்வருகு இ றே நிற்பது –
என் தீர்த்தனே —
என்னை பிரயோஜ நான்தர பரதையை தவிர்த்தவன் –
நான் இழிந்து ஆடும் துறை என்றுமாம் –

—————————————————————————————————————–

தேவாதி தேவ பெருமான் என்னா நின்றீர் -இம் மேன்மையைப் ப்ரதிபாதித்துத் தர வேண்டாவோ வென்ன-
அர்ஜூனனே நிஷ்கர்ஷித்திலனோ-நாம் இன்று இருந்து சொல்ல வேண்டும் படி குறையாய்க் கிடந்ததோ-என்கிறார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

தீர்த்தன் –
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே க்ருஹீத்வா தர்ம பாநீயம் பாதம் நாதஸ்ய துஷ்டயே -ஷாளிதம் பரயா பக்த்யா பாத்யார்க்யாதி ப்ரர்ச்சித்தம்
ததம்புபதி தம் த்ருஷ்ட்வா தாதர சிரஸா ஹாரா -பாவ நார்த்தம் ஜடா மத்யே யோக்கியோ அஸ்மீத் யாவதாரணாத் வர்ஷாயுதா தன பஹூன் னமுமோச ததா ஹர -என்றும்
ஸ்வ ஸிரோத்ருதேந-என்றும் -ச சிவச் சிவோஸ்பூத்-என்றும் ருத்ரனை சுத்தனாய் சிவன் என்று சொல்லும்படி பண்ணினவன் –
உலகளந்த சேவடி மேல் –
அவனுடைய சர்வ ஸூ லபமான திருவடிகளில் -இது கிருஷ்ண அவதாரத்திலேயாய் இருக்க ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லுகிறது –
வரையாதே தீண்டுகை –இரண்டு அவதாரத்துக்கு ஒத்து இருக்கையாலே
பூந்தாமம்-சேர்த்தி –
அழகிய மாலையைச் சாத்தி -பூ மாலை என்னவுமாம்
யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
அந்த பூ மாலைகள் தன்னையே ருத்ரன் ஜடையில் கண்டு
அவையே -தஜ் ஜாதீயங்கள் அன்றியே அவை தன்னையே
சிவன் முடி மேல் -இவன் திருவடிகளில் இட்டத்தை அவன் தலையிலே கண்டான்
தான் கண்டு -அர்ஜுனன் தானே கண்டு -சுருதி யாலே யாதல் -ஆப்த வாக்யத்தாலே யாதல் அன்றிக்கே
அதாகிறது அர்ஜுனனுக்கு ஆர் அஸ்திர அபேக்ஷையாலே அத்தேவதையை அர்ச்சிக்க வேண்ட -அத்தை என் காலிலே இடு என்று இடுவித்துக் கொள்ள
ஸ்வப்னத்தில் அம்மாலையை சிரஸிலிலே தரித்துக் கொண்டு வந்து அஸ்திரத்தைக் கொடுத்துப் போயிற்று
பார்த்தன் தெளிந்து ஒழிந்த-
அவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்த்தேயும்-அதில் கலங்காதே சது பார்த்தோ மஹா ம நா என்கிற அர்ஜுனன் நிஷ் கர்ஷித்தான் அன்றோ
பைந்துழாயன் பெருமை
சர்வாதிகனுடைய பரத்வம் -சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திருத் துழாயை உடையனாகை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே
இது பின்னை சிலரால் ஆராய வேண்டும்படி இருந்ததோ –

—————————————————————————————————————

ஒரு தேவதை இவனை அனுவர்த்தித்தது -என்ற ஏற்றம் சொல்ல வேணுமோ -இவ்விபூதி இவனுக்கு அசாதாரணம் என்னும் இடத்துக்கு
தனித்தனியே பூரணமான உபபத்திகள் அநேகம் அன்றோ என்கிறார் –

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
கிடந்து – திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியாதல் –
அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா பிரதிசிஸ்யே மஹோததே -என்று கடல் கரையிலே கண் வளர்ந்து அருளின படியாதல்
இருந்து -உடஜே ராம மாசீ நம் அபித பாவ கோபமம்-என்று சித்ர கூடத்தில் இருப்பு
நின்று -அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தனுரூர்ஜிதம் ராமம் ராமாநுஜஞ்சைவ பர்த்துச்சைவா நுஜம் சுபா -என்று ராவண வதம் வீர ஸ்ரீயோடே நின்ற நிலை –
அளந்து -மஹா பாலி அபஹரித்த பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
கேழலாய்க் -பூமியை பிரளயம் கொள்ள -தன் மேன்மை பாராதே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு
கீழ்ப் புக்கு-இடந்திடும்-
அண்ட புத்தியில் புக்கு ஒட்டு விடுவித்துக் கொண்டு ஏறின படி
தன்னுள் கரக்கும்-
பிரளய ஆபத்தில் பிரளயம் தனக்கு தெரியாத படி திரு வயிற்றில் வைத்துக் காக்கும் –
உமிழும்-
இவை என் பட்டனவோ என்று உமிழ்ந்து பார்க்கும் –
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும்-
அவளோட்டை ஸ்பர்சத்தாலே மிகவும் பெரும் தோளால் ஆரத் தழுவும்
பெருமைக்கு மேலே -தடம் என்றும் பெருமையாய் அறப் பெரும் தோள் என்றபடி
பார் என்னும்-மடந்தையை-
பூமிக்கு அபிமானியான பிராட்டியை -பூமியை பிரகாரமாக உடையவள் ஆகையால் -தத்வாசி சப்தத்தால் இவளை சொல்லுகிறது
மடந்தையை–நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவளை
மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –
சர்வேஸ்வரன் பண்ணுகிற வ்யாமோஹம் -எத்தனையேனும் அளவுடையார்க்கும் காணப் போகாது –
ப்ரஹ்மாதிகளுக்கு பிராப்தி இல்லாமையே அன்றிக்கே இவனுடைய வியாமோஹ அதிசயம் பரிச்சேதிக்கவும் மாட்டார்கள் –

—————————————————————————————————————–

ஸ்வ யத்தனத்தாலே காண்பார்க்கு அவனுடைய ஒரோ அற்புத கர்மங்கள் தான் எவ்வழியாலே பரிச்சேதிக்கப் படுவது -என்கிறார் –

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை –
சர்வேஸ்வரனாய் வைத்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு ஸூலபனானவனை ஸ்வ யத்னத்தால் காண்பார் யார்
என் காணுமாறு-
காணும் பிரகாரம் என்
காண்போம் என்னுமவர்கள் தான் எவ்வழியால் பரிச்சேதிப்பது
ஊண் பேசில்
ஊண் படி சொல்லில்
எல்லா வுலகுமோர் துற்றாற்றா-
சர்வ லோகங்களும் ஓர் அவதானத்துக்குப் போராது-இது அபரிச்சேதயத்தைக்கு உதாஹரணம்
சேண் பால் வீடோ –
உயர்த்தியே ஸ்வ பாவமாக உடைத்தான பரம பதம் என்ன
வுயிரோ
முக்தாத்மாக்கள் என்ன
மற்று எப்பொருட்கும்
மாற்று உண்ட தேவ திர்யக் யாதி சகல பதார்த்தங்களுக்கும்
ஏண்பாலும் சோரான்
எட்டுத் திக்குக்களிலும் உள்ளாரை விடான் என்னுதல் –
எண்ணப் பட்ட இடம் தோறும் விடான் என்னுதல்
பரந்துளான் எங்குமே –
எல்லாப் பதார்த்தங்களிலும் பரிசாமாப்ய வியாபித்து உளனாம்
வியாபித்து இருக்கும் சர்வ வியாபக வஸ்துவை -வியாபங்களிலே ஓன்று பரிச்சேதிக்க வற்றோ என்கை –

—————————————————————————————————————-

சகல பதார்த்தங்களிலும் ஒருவனே பரிசமாப்ய வர்த்திக்கும் -என்றால் இது கூடுமோ என்ன-
-அநுபூத அம்சத்தில் சம்சயத்தை பண்ணினால் ஹிரண்யன் பட்டது படுவர்கள் என்கிறார் –

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எங்கும் உளன் கண்ணன் –
சர்வேஸ்வரன் சர்வகதன் என்றான் -இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு –
மயா ததாமிதம் சர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்தி நா -என்றும்
நத தஸ்தி விநாயத் ஸியாத் மயா பூதம் சராசரம் -என்று அவன் தானே சொன்னதை யாயிற்று இவன் சொல்லிற்று –
என்ற மகனைக் காய்ந்து
இவ்வர்த்தத்தை சத்ருக்கள் சொல்லிலும் ஆதரிக்க வேணும்
இவன் பருவத்தாலும் சம்பந்தத்தாலும் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் ஆதரிக்க வேணும் –
இப்படி இருக்க அதிக்ருத்யனாய்
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
சர்வகதன் -என்று நீ சொன்னவன் இங்கும் உண்டோ என்று தான் இருந்த தூணைத் தட்ட
அளந்து இட்ட தூண் இ றே
தனக்கேற இல்லை என்று சம்பிரதி பன்னமான தூண் இ றே –
அங்கு அப்பொழுதே
அத் தூணிலே பிரதஞ்ஞா சமயத்திலே
அவன் வீயத் தோன்றிய-
சீற்றத்தோடே வந்து தோற்றிய தோற்றரவிலே பிணம் ஆனான்
என்-சிங்கப்பிரான் –
ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உதவினது தமக்கு உதவிற்றாய் இருக்கிற படி
பெருமை யாராயும் சீர்மைத்தே –
பரத்வம் -சிலரால் அறியும் அளவே –

—————————————————————————————————————-

வழி பறிக்கும் இடத்திலே தம் கைப் பொருள் கொண்டு தப்புவாரைப் போலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டராகிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சீர்மை கொள் வீடு -ச்வர்க்க நரகு ஈறா
சீர்மையை உடைத்தான பரம பதம் -ஸ்வர்க்கம் -நரகம் இவை முடிவாக
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
ஈராக் பாட்டை உடைய தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான சகல பதார்த்தங்களுக்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
த்ரிவித காரணமும் தானே யாய்
தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசத்-என்கிறபடியே சர்வ சப்த வாச்யனாய் ஜகதாகாரேண அத்விதீயனாய் நிற்கை
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
பரமபதத்தில் வர்ஷூ கலாவாஹம் போலே -ஸ்ரமஹரமான வடிவோடே அத்விதீயனாய் எழுந்து அருளி இருக்குமவன்
கிருஷ்ணனாய் எனக்கு உபகரிக்கையாலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

—————————————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய்மொழியைக் கற்றவர்கள் இதில் சொன்ன முக்த ப்ராப்யமான ஐஸ்வர்யத்தை பெறுவார்கள் -என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

கண்டலங்கள் செய்ய –
பூதலம் -என்னுமா போலே கண்ணில் பரப்பை நினைக்கிறது
விஸ்திருதமாய் சிவந்த திருக் கண்களை உடையவன்
கருமேனி யம்மானை-
இதுக்கு பரபாகமாய் ஸ்ரமஹரமான வடிவு அழகை உடைய சர்வேஸ்வரனை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
வண்டுகள் தேனிலே அலையா நின்ற சோலையை உடைய திரு வழுதி வள நாட்டை உடையவர்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
தலையான பண்ணிலே சொன்னது என்னுதல் –
பண்ணின் மேலே சொன்னது என்னுதல்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –
தலையான விண்ணிலே என்னுதல் -விண்ணின் மேலே என்னுதல்
சாம்சாரிகமான சங்கோசம் எல்லாம் தீருகையாலே வீறு பட இருந்து –
எனக்கும் என் பரிகரத்துக்கும் தருவானாய்ச் சமைந்து இருக்கிற பரமபதத்தை ஆளப் பெறுவார் –

——————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-8-

August 18, 2016

தம்முடைய பரிகரத்தையும் தம்மைப் போலே யாக்கி -இத்தால் போராது என்று பார்த்து அருளி -தனக்கு அசாதாரணமாய் –
பரியங்க வித்யையில் சொல்லுகிறபடியே பெரிய பிராட்டியாரையும் தனக்கு பரியங்க பூதனான
திரு வனந்த ஆழ்வான் தொடக்கமான -அயர்வறும் அமரர்களையும் பரிகாரமாக உடைத்தாய்
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளுக்கும் -ஸ்வ பாஹு பலத்தால் துஷ் ப்ராபமாய் –
ஓர் அளவும் இல்லை யாகிலும் திருவடிகளையே பற்றினார்க்கு அநாயாசேன பெறலாய் துக்க கந்த ரஹிதமாய் -அத்யந்த ஸூக ரூபமாய்
நிரதிசய மங்களமாய்-அனுபவிப்பார்க்கு அதி ஸ்ப்புடமாய்-அபரிச்சேதயமாய் -உத்தமமாய் உள்ள முக்த ப்ராப்யமான தன்னுடைய ஐஸ்வர் யத்தை
சர்வேஸ்வரன் ஆகையால் அபேக்ஷித சம்விதான ஷமனாய் யுள்ள-ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் தமக்கும் தம்பரிகரத்துக்கும்
தருகையில் உபக்ரமித்து அருளுகிற இருப்பைக் கண்டு அதி ப்ரீதரான ஆழ்வார் -எல்லாரையும் ஈத்ருஸ போக பாகிகள் ஆக்க வேணும் என்று பார்த்து அருளி –
அவனுடைய மோக்ஷ பிரதத்வத்தையும் -அதுக்கு உறுப்பாக ஐஸ்வர் யத்தையும் உபதேசித்து –
நானும் இவர்களை போலே யாகாதே ததேக போகனாய்க் கொண்டு அவனைப் புஜிக்கப் பெற்றேன் என்று திருப்பித்தராய் முடிக்கிறார் –

———————————————————————————————————————————–

இது திருவாய் மொழியில் பிரதிபாதிக்கிற அர்த்தத்தை சங்ஷேபிக்கிறார்-

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

பெரிய பிராட்டியாரும் எம்பெருமானும் திரு வனந்த ஆழ்வான் மேல் இருக்கும் இருப்பை காண்கை முக்த ப்ராப்யம் என்று கருத்து –
ஆகம் -உடம்பு
இருவரவர் -பிரசித்தமான ப்ரஹ்ம ருத்ரர்கள்
தேவ மனுஷ்யாதி ஸமஸ்த ஐந்து சஜாதீயனாய் வந்து
திருவவதாரம் பண்ணி
மோக்ஷ பிரதன் ஆம்
துஸ்தரமான சம்சாரத்தை கடக்க வேணும் என்று இருக்கும் ஆஸ்ரிதர் பரம் எல்லாம் தானே நிர்வஹிப்பான் ஆகை

————————————————————————————————————-

வீடு முதலாம் என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு -எம்பெருமான் தானே வேணுமோ
-அவனோடு உள்ள சம்பந்தமே மோக்ஷ ப்ரதம் என்கிறார் –

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-

கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான் ஜென்ம மரணாதிகள் ஒன்றும் இல்லாத மோக்ஷத்துக்கு அடியாம்-
பூத்துக் குளிர்ந்த நீரை உடைய பொய்கையில் முதலையாலே நலிவு பட யானையினுடைய இடரைப் போக்கின
நிரதிசய போக்யனாய் என்னை அநந்யார்ஹமாக அடிமை கொண்ட எம்பெருமானோட்டை சம்பந்தம் –
இங்கே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத் நிவாரணம் த்ருஷ்டாந்தயா சொல்லிற்று

————————————————————————————————————-

இருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு ஸ்ரீ யபதியான எம்பெருமானுடைய
ஐஸ்வர்ய ஸூ சகமான சேஷ்டிதங்களை எங்கும் பிரத்யஷிக்கலாம் -என்கிறார் –

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் திரு நாபி கமலத்திலும் திரு உடம்பிலுமாக
இடம் கொடுத்து அவர்களுக்கும் நிர்வாஹகனாய் –
உந்திக்குப் புணர்ப்பாவது -ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமாகை-
தன் மார்விலே சம்லிஸ்ஷ்டை யான பெரிய பிராட்டியாரை உடையனாய் ஏக ஆர்ணவத்திலே ஸ்ருஷ்ட்யர்த்தமாக
சயனனாய் இருந்துள்ளவனுடைய பெரும் தொழில் –
தான் தனக்கு சத்ருசமான சேஷ்டிதங்களை உடையவன் என்றுமாம் –

——————————————————————————————————–

ஷூத்ரமான விஷய ஸூ கங்களை விட்டு நிரதிசய ஸூக ரூபமான மோக்ஷ புருஷார்த்தத்தை
வேண்டி இருப்பீர் எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

ஐந்து விஷயங்களிலும் ப்ரவணமாம் ஐந்து இந்த்ரியங்களுக்கும் வஸ்யராகையைத் தவிர்ந்து நிரதிசய போக்யமான
திரு நாட்டிலே புக வேண்டி இருப்பீர் –
உங்களுடைய ஸமாச்ரயண விக்னங்களை நிஸ் சேஷமாக போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானுடைய ஸமாச்ரயிக்கும் தசையில்
ஸாத்ய தசையில் போலே இனிதாய் இருந்துள்ள கல்யாண குணங்களிலே நிரந்தரமாக பிறவனார் ஆகுங்கோள் –

———————————————————————————————————–

ஸ்ரீ ஹயக்ரீவாதி ரூபத்தினாலே திருவவதாரம் பண்ணி அருளி தன்னாலே ஸ்ருஷ்டமான ஜகத்தை எல்லாம்
ரஷித்து அருளா நிற்கும் என்று கொண்டு -முதல் பாட்டில் ப்ரஸ்துதமான சர்வ சஜாதீயத்தை விவரிக்கிறார் –

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

நிரந்தர துக்காஹாமான ஜென்மம் அகப்பட மற்றும் எல்லாவற்றுக்கும் நிஷ் பலம் என்று கை விடாத காரணமாய்
ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் ஆதி தேவராய் உள்ள அயர்வரும் அமரர்கள் அதிபதி யானவன் –
என்னை பிரயோஜனாந்தர பரதையை தவிர்த்தவன் –

——————————————————————————————————————–

அர்ஜுனன் ஆராய்ந்த பகவத் பரத்வம் இன்னமும் சிலர் ஆராய வேண்டும்படி யாய் இருந்ததோ என்கிறார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

திருவடிகளின் நின்றும் புறப்பட்ட கங்கா ஸ்பர்சத்தாலே ருத்ரன் சித்தனாய் -சிவன் என்னும் பேரை உடையனாம் படி பண்ணின
எம்பெருமானுடைய சர்வ ஸூ லபமான திருவடிகளில் அழகிய பூ மாலைகளை சாத்தி
அர்ஜுனன் இப்படி ஆராய்ந்த பகவத் பரத்வம் –

———————————————————————————————————————–

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

பகவத் ஐஸ்வர்ய சாதனத்தில் ஒரோ ஒன்றே நிரபேஷ சாதனமான ஷீரார்ணவ சயனாதிகள் ஆகிற உபபத்திகளை சொல்ல வேணும்
-என்று உபக்ரமித்த ஆழ்வார் -அவற்றினுடைய அனந்தயத்தாலே ஒருவருக்கும் அறிய முடியாது என்கிறார் –
கேழல் -வராஹம்
பார் என்னும் மடந்தையை -பூமிக்கு அபிமானியான பிராட்டியை
மால் -சர்வேஸ்வரன்
செய்கின்ற மால் -பண்ணுகிற வ்யாமோஹம் –

————————————————————————————————————————

அவனுடைய அத்புத கர்மங்கள் தனித்தனியும் எத்தனையேனும் அளவுடையார்க்கும் பரிச்சேதிக்க முடியாது என்கிறார் –

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

சர்வேஸ்வரனான கிருஷ்ணனைக் காண்கைக்கு அளவுடையார் இல்லை –
-எத்தனையேனும் அளவுடையார்க்கும் காண ஒண்ணாத படி அபரிச்சேதயமாய் இருக்கும் அவன் படி –
பிரளய காலத்தில் திரு வயிற்றிலே ஜகத்தை வைக்கிற போது ஜகத்து எல்லாம் கூட ஓர் அவதானத்துக்கும் போந்தது இல்லை
-இது அபரிச்சேதயைதைக்கு உதாஹரணம் –
உயர்த்தியே ஸ்வ பாவமாக உடைத்தான பரமபதஸ்தரான நித்ய ஸூ ரி ப்ரப்ருதிகள் என்ன -முக்தாத்ம ஸ்வரூபம் என்ன –
பத்தரான திர்யக்காதிகள் அகப்பட எல்லா பதார்த்தங்களுக்கும் ஓர் இடமும் விடாதே எங்கும் வியாபித்து உளனாம் –

———————————————————————————————————————–

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எம்பெருமானுடைய சர்வகத த்வத்தை இசையாதார் இசையை வேண்டும்படியாக ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்காக அபேஷா சமகாலத்திலே
தூணிலே வந்து தோற்றி அருளின ஸ்ரீ நரசிம்ஹத்தின் உடைய பெருமை ஒருவராலும் ஆராயும் அளவு அல்ல -என்கிறார் -வீய -முடிய –

———————————————————————————————————–

அல்லாதார் செய்யப்படி செய்கிறார் -உபய வித மஹா விபூதிகனாய் இருந்த எம்பெருமானை நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

பரமபதம் ஸ்வர்க்கம் நரகம் இவை முடிவாக ஈரப்பாடு உடைத்தான தேவர்கள் நடுவாக மாற்று உண்டான சகல பதார்த்தங்களுக்கும்
-த்ரிவித காரணமும் தானே யாய்க் கொண்டு சர்வ கதனாய்
சம்சாரிகளோடு வியாவ்ருத்தனாய் திரு நாட்டிலே வ்ரஷூகலாவஹம் போலே இருக்கிற
திரு நிறத்தை உடையனாய் என்னை விஷயீ கரித்த கிருஷ்ணனை

———————————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றவர்கள் இது திருவாய் மொழியில் சொன்னபடியே எல்லாபடியாலும்
விலக்ஷணமான முக்த ப்ராப்யமான ஐஸ்வர்யத்தைப் பெறுவார் என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

ஆழ்வாரோட்டை கலவியாலே விஸ்திருதமாய் சிவந்த திருக் கண்களையும் நிறம் பெற்ற திரு மேனியையும் உடையனான சர்வேஸ்வரனை
பகவத் விஷயீ காரத்தாலே புஷ்டம் ஆகையால் வண்டுகள் தேனிலே அலையா நின்ற திருகி சோலையை உடைய திரு வழுதி வள நாட்டை உடையரான
பண்டலையில் -பண்ணின் மேல் / விண்டலையில் -விண்ணின் மேலே –

———————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-